குழந்தையர் தினம்

37 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Nov 13, 2014, 8:15:38 PM11/13/14
to santhav...@googlegroups.com, housto...@googlegroups.com
Here are two photos  of Pt. Nehru near Chennai.
One at Tirumalai temple where he wonders about the workmanship of the portrait bronze of Krishnadevaraya with his wives (The Hindu).
The next one is him at Mamallapuram with archaeologist, Dr. K. R. Srinivasan.

 













 
























N. Ganesan

Subbaraman NV

unread,
Nov 13, 2014, 8:20:06 PM11/13/14
to santhav...@googlegroups.com
Thanks aplenty for sharing the great photos. In connection with his birth day.pl. c  three of my tributes through another mail.
N V Subbaraman. 

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
N V Subbaraman,
Editor, Young Poet,
12 / 1045 Jeevan Bhima Nagar,
Chennai - 600101

Visit http://www.youngpoet.org
Visit http://www.poemhunter.com/subbaraman-n-v/

Subbaier Ramasami

unread,
Nov 13, 2014, 8:47:29 PM11/13/14
to சந்தவசந்தம்
இன்று நேரு தினம். அவரை நினைந்து...

ஜவஹர்லால் நேரு

 

வானத்தைத் தொட எண்ணி வளர்ந்தமலை மேரு

            வரலாற்றில் இமயமென உயர்ந்தவர் எம் நேரு

ஈனத்தை மனம் கொண்ட கொடியவனாம் வெள்ளை

            எதிரியினைக் கதறவைத்தார்  மோதிலால் பிள்ளை

தானெத்தைச் செய்தாலும் மக்களது நன்மை

            தனைக்கருதிச் செய்தவராம் நேருமனம் மென்மை

மானத்தை இழக்காமல் பாரதத்தின் வீச்சு

            வளர்ந்திடவே வைத்ததுகாண் நேருஜியின் பேச்சு

 

பொற்கிண்ணத்தில்பாலைத் தாதியர்கள் ஏந்தி

            பொழுதெல்லாம் கெஞ்சிடுவார் வாவாவா என்பார்

கற்கின்ற அறையினிலே ஆசிரியர் வந்து

            காத்திருப்பார் கற்பிக்க, மென்னிலவம் பஞ்சின்

பொற்பான மெத்தையினைப் பொறுப்பாகப் பார்த்துப்

            போட்டிடுவார் ஜவஹர்லால் தான்படுத்துக் கொள்வார்

பெற்றோரும் மற்றோரும் போற்றிவந்த பிள்ளை

            பின்னாளில் சிறையினிலே பெற்றதெல்லாம் தொல்லை

 

மண்சட்டி தனில்சோறு, வேகாத ரொட்டி

            வயிற்றைக் குமட்டிவரும் வேண்டாத நாற்றம்

புண்பட்ட தரைமீதில் எப்போதும் ஈரம்

            பொழுதெல்லாம் கடிகொசுக்கள் இரத்தம் குடிக்கும்

கண்கட்டி விட்டதுபோல் காரிருளில் ஆங்கே

            காலடியில் கருந்தேளும் பூரானும் நெளியும்

பண்பட்ட நேருமகன் அன்னைவிலங் கொடிக்கப்

            பட்டதுயர் எடுத்துரைக்க யாராலே கூடும்?

 

மனைவியினைப் பறிகொடுத்தார், தந்தையினைப் பிரிந்தார்

            மகள்மழலை கேட்பதற்கும் வகையின்றி இருந்தார்

தனிமையிலே சிறையினிலே அவர்கழித்த துன்பம்

            தடியடியின் பெருந்தாக்கம், இவையெல்லாம் பெற்றும்

எனதுதுயர் பெரிதில்லை, எந்நாடு வாழ்ந்தால்

            எனக்கதுதான் பேரின்பம் எனமுழக்கம் செய்தார்

இனியொருவர் நேருவைப்போல் இருப்பாரோ என்றே

            எல்லோரும் புகழ்ந்திடவே வாழ்ந்திருந்தார் அன்றே!

 

காந்திமகான் பாதையிலே கைவிளக்கு நேரு

            காலமெல்லாம் பாரதத்தைக் காத்துவந்த மேரு

பாந்தமுடன் மக்களின்மேல் மாறாத அன்பு

            படைத்ததுதான், நேரு,மகான் மிகச் சிறந்த பண்பு

ஏந்துபுகழ் பாரதமும் பெற்றிடவே வேண்டி

            எத்தனையோ தொழில்வளர்ச்சித் திட்டங்கள் போட்டார்

காந்தமென அவர்வாழ்ந்து மக்களைக் கவர்ந்தார்

            கண்ணியமாய் மக்களது நெஞ்சினில் சிறந்தார்.

 

 

1964 மே 27ம் தேதி நேரு மறைந்த பின்னர் அவரது அஸ்தியைக் கன்னியாகுமரிக் கடலில் கரைக்க எடுத்துவந்தனர். அந்த வண்டியில் பாடிக்கொண்டு செல்வதற்காக ஒரு பாடல் எழுதித் தரும் படி கேட்கபதற்காக என்னுடைய பேராசிரியர் .சீ.ரா வீட்டுக்கு வந்தார்கள். அவர் ஊரில் இல்லை. உடனே பாடல் வேண்டும் என்பதால் அப்பொழுது அவர் வீட்டில் தங்கியிருந்த என்னிடம் கேட்டார்கள். உடனே எழுதிக் கொடுத்தேன். அந்தப்பாடலைத் தான் உருக்கமாகப் பாடிக்கொண்டு சென்றனர். வானொலியிலும் அடிக்கடி ஒலிபரப்பபட்டது. அந்தப் பாடல் இதோ: )

 

 

ஏன்விட்டுச் சென்றாயோ?

 

ஏன்விட்டுச் சென்றாயோ ஐயா? - இன்னும்

இருப்பேன் இறவேன் என்பது பொய்யோ?   (ஏன்..)

 

பாரதத் தாயின் புதல்வா- நல்ல

பண்பே உருக்கொண்ட எங்கள் முதல்வா

தீரருள் தீரர் எம் நேரு - என்றே

தேசம் புகழ்ந்திட வாழ்ந்த எம் தேவா!

 

 

என்நாட்டு மக்களின் அன்பே - என்றன்

இதயம் நிறைத்தது என்றனை அந்த

அன்பும் மறந்திட லாச்சோ- அன்றி

ஆகும் செயல்கள் முடிந்திடப் போச்சோ?

 

அன்னை விலங்கை அறுத்தாய்- இன்று

அந்தோ உடம்பின் தளையை வெறுத்தாய்

கன்னல் சுவையின் நின் பேச்சும் - இளம்

காளைபோல் வீசும் யாம் எங்கினிக் காண்போம்?

 

 

விண்ணவர் நாட்டிலும் பூசல் - ஏதும்

மேவிடலாச்சோ சமரசம் செய்ய

எண்ணியோ உன்னை அழைத்தார்- எனில்

எங்களை விட்டுநீ ஏகிடலாமோ?

 

 

தேன்சிந்தும் மொழியும் எங்கே

சிந்தனைச் சிற்பி எங்கே

கானமும் எங்கே , துன்பம்

கனிந்திடும் போது முந்தி

ஏனெனும் குரலும் எங்கே

ஏறுபோல் நடையும் எங்கே

மானுட ஜோதி எங்கே

மாருதம் எங்கே எங்கே!

 

இந்திய மக்கள் அன்பே

இதயமாய்க் கொண்ட ஜோதி

சொந்தமாய் வானோர் வேண்டத்

தோன்றியே மறைந்த தம்மா

எந்தநாள் காண்போம் அம்மா?

இருளினைத் துரத்தி ஓட்டும்

அந்த நல் ஒளியும் போச்சே

அம்மவோ அம்ம அம்மா!

 

எங்கவன் சென்ற போதும்

என்றுமே நமது வாழ்வில்

பொங்கிடும் ஒளியாய் மாறிப்

புத்துயிர் கொடுப்பான் அம்மா!

இங்கு நம் உயிரே நேரு,

இந்தியப் பண்பின் மேரு

புங்கவன் வழியைப் போற்றிப்

போற்றியே வாழ்வோம் அம்மா!

 

Subbaraman NV

unread,
Nov 13, 2014, 8:50:37 PM11/13/14
to santhav...@googlegroups.com
அந்த ஒளி போனது பெரும் இழப்பு. அந்த ஒளியை மறைக்க, மறுக்க முற்படுபவரது முயற்சிகள் கொடுமை.
என் வி சுப்பராமன்

Subbaier Ramasami

unread,
Nov 13, 2014, 8:54:12 PM11/13/14
to சந்தவசந்தம்
ஜவஹர்லால் நேரு பற்றிக் குழந்தைப் பாடல்

 

ஜவஹர் தந்திரம்

 

பாலர்கள் நாலுபேர் கூடி- பந்து

            ஆடினர் ஓடினர் சாடி

நாலுபேர் மத்தியில் நேரு- ஆடும்

            ஆட்டமேதான் வெகு ஜோரு

 

பந்தினை எட்டி உதைத்தான்-போகும்

            பாங்கினைக் கண்டு குதித்தான்

பந்தின்பின் ஓடியே சென்றான்-அதில்

            பன்முறை கோல்போட்டு வென்றான்

 

போட்டிபோட்டான் ஒரு சிறுவன் - மனம்

            பொருமி நின்றான் ஒரு சிறுவன்

ஓட்டமாய் ஓடியே வந்து - பந்தை

            ஓங்கி உதைத்தானங் கொருவன்

 

சாலை மரத்தொரு பொந்து- அதைச்

            சார்ந்து விழுந்தது பந்து

பாலர்கள் ஓடியே சென்றார்- அதைப்

            பார்த்து மலைத்தனர் நின்றார்

*

பந்துக்குடையவன் தானழுதான் - சாமி

            பகவானை வேண்டி மிகத்தொழுதான்

இந்த நிலையினை நேரு பார்த்தான்- உடன்

            கொண்டுவா வாளியென் றாணையிட்டான்

 

பொந்தினை நாற்புறம் சுற்றிவந்தான்- அதில்

            பொத்தல்கள் இல்லையெனத் தெளிந்தான்

வந்தது வாளியவ் வாளியில்நீர் மொண்டு

            வாவெனச் சொன்னான் அவனும் சென்றான்

 

கொண்டுவந்தான் தண்ணீர் மொண்டுவந்தான் வாங்கிக்

            கொட்டினான் பொந்து நிறையும்வரை

தண்ணீர் ஏறஏறப் பந்து மிதந்தது

            தாவியே நேரு எடுத்துவிட்டான்.

 

சும்மா அழுவதால் என்னபயன்?- புத்திச் 

     சூட்டிகை யோடு செயல்படுக

தம்மாலே ஆகாததேதுமில்லை - நானும்

            சாதிப்பேன் என்று முயன்றிடுக

N. Ganesan

unread,
Nov 13, 2014, 8:55:59 PM11/13/14
to santhav...@googlegroups.com


On Thursday, November 13, 2014 5:47:29 PM UTC-8, Ram wrote:
இன்று நேரு தினம். அவரை நினைந்து...


ஆனந்தம்!

இப்பொழுதுதான் ஞாபகம் வருகிறது. முன்பு கேட்கவெண்டும் என நினைத்தேன்.
ஆ.சீ.ரா. நினைவுகள் புத்தகத்தில் சி.எஸ் காரோட்டியாக, நேரு இருப்பதுபோல்
ஒரு போட்டோ. பேரா. ஆ.சீ. ரா அருகே இருக்கிறார்.

அந்த போட்டோவின் ஹை-ரெசல்யூசன் படம் வேண்டும். நன்றி பல.

அ.சீ.ரா. அவர்களின் புத்தகம் ஒன்று கண்டேன் இணையத்தில். அதன் சுட்டி தேடி
அளிப்பேன்.

நா. கணேசன்
 
...

Subbaraman NV

unread,
Nov 13, 2014, 8:56:40 PM11/13/14
to santhav...@googlegroups.com
மிக நல்ல கவிதை; மிகச் சிறப்பான செய்தி!
என் வி சுப்பராமன்  

Kavingar Jawaharlal

unread,
Nov 14, 2014, 12:19:08 AM11/14/14
to santhavasantham
நல்ல பாடல்கள் இலந்தை !
பொற்கிழிக்கவிஞர்
டாக்டர். ச.சவகர்லால்
கைபேசி : +91- 9790846119

Subbaier Ramasami

unread,
Nov 14, 2014, 1:12:16 AM11/14/14
to சந்தவசந்தம்
I have enclosed the photo

--
ASR WITH NEHRU.jpg

Subbaier Ramasami

unread,
Nov 14, 2014, 1:34:45 AM11/14/14
to சந்தவசந்தம்
இங்கே இணைத்திருக்கும் புகைப்படத்திற்கு ஒரு பின்னணி உண்டு. 1954ம் ஆண்டு. நேரு தலைமையில் டெல்லியில் இந்திய மொழிகள் மாநாடு நடந்தது. தமிழ் மொழியைப்பற்ரிப் பேச அ.சீ.ரா அழைக்கப்பட்டிருந்தார்.  நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர் சேத் கோவிந்த தாஸ் என்பவர்.

எல்லா மொழியாளர்க பண்டிட்ஜிக்கு வேறொரு நிகழ்ச்சி இருப்பதால் ளும் பேசிய பிறகு தமிழுக்கு இடம் கொடுக்கப்பட்டது. முதலில் ஐந்து நிமிடம் பேசுங்கள் என்று சொன்னவர்கள் பேசத்தொடங்குமுன் 2 நிமிடம் பேசுங்கள் என்று சொல்லிவிட்டார்கள். பேராசிரியர் பேச எழுந்தார்.  ஆங்கிலத்தில் தொடங்கினார். அங்கிருந்த ஹிந்தி வெறியர்கள் ஹிந்தியில் பேசுங்கள் அல்லது தமிழில் பேசுங்கள் என்று கத்தினர். உடனே பேராசிரியர் எனக்கு ஹிந்தி தெரியாது. தமிழி பேசினால் உங்களுக்குப் புரியாது. பேசுவதற்கே அர்த்தமில்லாமல் போய்விடும் என்றனர் . உடனே நேருஜி எழுந்து நின்றார். பிறகு அமர்ந்தார். கூட்டத்தின் கூச்சல் அடங்கியது .  உடனே பேராசிரியர் நேருஜியைப்பர்ஹ்ட்து”pandidji This attitude of these people makes we southerners unhappy. The two minutes time allotted to me is over. wahat   SHALL I do now?  . என்றார்  ஐந்து நிமிடம் பேசுங்கள் என்றார் நேருஜி. தமிழின் பெருமை பற்றி நேரடியாகப் பேசத்தொடங்கினார். அவரது ஆங்கிலப்பேசும் சொல்லும் முறையும் நேருஜிய்aஇக் கவர்ந்து விட்டது. உடனே தனது செயலரை அழைத்து அடுத்த நிகழ்ச்சியை ரத்து செய்யச் சொன்னார்.”Professor take your own time. I would like to listen to you." என்றார். அன்று தமிழின் பெருமை பற்றி அரைமணி நேரம் பேசினார். நேருஜி வியந்து போனார். முந்திய இடுகையில் இருக்கும் படம் நேருஜி 1962ல் தூத்துக்குடிக்கு வந்த போது எடுக்கப்பட்டது. அப்பொழுது நான் படித்துக்கொண்டிருந்தேன்.   முதலமைச்சர் காமராஜ் பேராசிரியரை நேருஜிக்கு அரிமுகப்படுத்தினர். உடனே நேருஜிHe needs no introduction. I have heard him" என்றார். 
ASR NEHRU2.jpg

Kaviyogi Vedham

unread,
Nov 14, 2014, 1:37:34 AM11/14/14
to santhavasantham
arputh6am ponga..
 yogiyaar

வாழ்க அனைவரும் வளமுடனே 
என் குருஜி லஹரி பாபாஜி
ஆசியினால்.எம் ஆஸ்ரம  ‘இலக்கியவேல்’
 (மாதத்)தமிழ் ஏட்டை ரூ100- அனுப்பி(சந்தா)
வாங்கிப்பின்பு உங்கள் அற்புத,அழகியபடைப்பும் 
அனுப்புங்கள். ஓராண்டாக இது குருஜி அருளால்
சக்கைப்போடு போடுகிறது.
கவியோகி வேதம்(kaviyogi vedham)-
PL. visit my blog(for my poems etc)at http;//kaviyogi-vedham.blogspot.com/
kaviyogi vedham(yogiyaar)தலைவர்..
Founder, Sree Laharibabaji yogasram,
2/682, 10th cross St,...Renga reddy garden,
Neelankarai, Chennai-600115--செல் எண் 95000-88528
 

Subbaraman NV

unread,
Nov 14, 2014, 1:38:53 AM11/14/14
to santhav...@googlegroups.com
Great information; great sharing; thanks aplenty.
N V Subbaraman

2014-11-14 12:04 GMT+05:30 Subbaier Ramasami <elan...@gmail.com>:

M. Viswanathan

unread,
Nov 14, 2014, 2:38:45 AM11/14/14
to Santhavasantham
நல்ல பதிவு.
 மீ.வி.

M. Viswanathan

unread,
Nov 14, 2014, 2:46:38 AM11/14/14
to Santhavasantham
கவிமாமணி இலந்தையாரின் கவிதை தெளிந்த நீரோட்டம். நம் தேசந்த்தின் முகம் அதில் தெரிகிறது. நன்றி.
அன்பன், 
மீ.விசுவநாதன் 

சௌந்தர்

unread,
Nov 14, 2014, 5:39:59 PM11/14/14
to santhav...@googlegroups.com
மஹா பாரதத்தில் துரோணாசாரியார் குழந்தகள் கிணற்றில் போட்ட பந்தை அஸ்திரப் பிரயோகத்தால் எடுத்துக் கொடுத்த இடம் நினைவுக்கு வருகிறது.
சௌந்தர்


On Thursday, 13 November 2014 20:54:12 UTC-5, Ram wrote:
ஜவஹர்லால் நேரு பற்றிக் குழந்தைப் பாடல்

 

ஜவஹர் தந்திரம்

 

கொண்டுவந்தான் தண்ணீர் மொண்டுவந்தான் வாங்கிக்

N. Ganesan

unread,
Nov 14, 2021, 2:39:21 PM11/14/21
to Santhavasantham, housto...@googlegroups.com
நேரு குறித்து வாசிக்க வேண்டிய 29 தமிழ் கட்டுரைகள்*_

நேரு - இந்தியாவின் எதிர்காலத்தை கட்டி எழுப்பியவர்
https://goo.gl/ZmXEXy

ஏன் இந்தியாவில் ராணுவ ஆட்சி ஏற்படவில்லை?’ நேருவுக்கு நன்றி சொல்லுங்கள்!
https://goo.gl/RzfhDZ

நேருவின் நம்பிக்கை நமக்கு சொல்வது என்ன? - நேருவை தெரிந்துகொள்வோம்! - மினி தொடர்: பகுதி 1
https://goo.gl/aPbC7o

தாகூரும் காந்தியும் முரண்பட்ட புள்ளி! நேருவைத் தெரிந்துகொள்வோம்! - மினி தொடர்: பகுதி 2
https://goo.gl/a5HvTf

ஏன் நேரு டைரி எழுதத் தொடங்கினார்...? : நேருவைத் தெரிந்துகொள்வோம்! - மினி தொடர்: பகுதி 3
https://goo.gl/eM58tD

காந்தியை ஆய்வுக்கு உட்படுத்திய நேரு..! - நேருவைத் தெரிந்துகொள்வோம்! - மினி தொடர்: பகுதி 4
https://goo.gl/9MJpwD

*நேருவின் அரசியல் அறம்!..- நேருவைத் தெரிந்துகொள்வோம்! - மினி தொடர்: பகுதி-5
https://goo.gl/8qXwAa

நேரு இருக்காரே மச்சி! - நேருவைப் பற்றிய ஐந்து கற்பிதங்கள் (Ramachandra Guha's article in Tamil)
https://goo.gl/a8W0p7

நேரு: அழித்த தலைவரா? காத்த கடவுளா? (Manoj Joshi's article in Tamil)
https://goo.gl/T691Ek

நேரு 125 - விகடன்
https://goo.gl/b77GfK

சிறியன சிந்தியாத நேரு - மே 27 நினைவு தின சிறப்புப் பகிர்வு
https://goo.gl/CGljST

நேருவைத் துணைகொள்ளல்
https://goo.gl/OS5bK8

இந்தியாவும் உலகமும் - ஜவகர்லால் நேரு உரை
https://goo.gl/uaEqe9

போஸ் தூக்கிலிடப்பட்டாரா? நேரு தான் இதற்கு காரணமா?
https://goo.gl/O8u2Pf

நேரு, நேதாஜி - அரசியல் எதிரிகளா? - 1 (Early years)
https://goo.gl/kBkn10

நேரு, நேதாஜி - அரசியல் எதிரிகளா? - 2 (The friendship)
https://goo.gl/akRMwJ

நேரு, நேதாஜி - அரசியல் எதிரிகளா? - 3 (Conflict and crisis)
https://goo.gl/kGBx9G

நேரு, நேதாஜி - அரசியல் எதிரிகளா? - 4 (The afterlife of Bose-Nehru conflict)
https://goo.gl/qAeYjB

நேரு - ஒரு சமகாலத்தவரின் மதிப்பீடு! (About Walter Crocker's 'Nehru: A Contemporary Estimate')
https://goo.gl/5s3QJu

நேருவின் ஆட்சி: பதியம் போட்ட 18 ஆண்டுகள்!
https://goo.gl/M6sKDn

விதியோடு ஒரு ஒப்பந்தம் - விடுதலை பெற்ற அன்று நேரு ஆற்றிய உரை
https://goo.gl/pwULTN

நேருவின் வாழ்வில் பெண்கள்: தொடரும் சர்ச்சைகளும் உண்மைகளும்.

https://goo.gl/sDs9dh

இந்தியாவின் ஆன்மாவில் கலந்த நேரு! - திரு.வீரபாண்டியன்

https://goo.gl/LuAtNo

’இந்து நாடாக’ இந்தியா: நேரு - படேல் உறவில் பகைமை இருந்ததா?

https://bbc.in/2Kf7zkr
காஷ்மீர்: நேரு வெளிநாட்டில் இருந்தபோது சர்தார் படேல் சட்டப்பிரிவு 370ஐ ஏற்றுக்கொண்டாரா?

https://bbc.in/353tzH4

பிழைகள்..தோல்விகள்...மகத்தான சாதனைகள்... இந்தியா மறக்கக் கூடாத நேரு!

http://bit.ly/2OedXJK

இந்தியாவிற்கான பாதுகாப்பு கவுன்சில் இடத்தை சீனாவிற்கு தாரைவார்த்து துரோகம் செய்தாரா நேரு?

http://bit.ly/2pm9Y5G

நேரு குறித்த விமர்சனங்கள்

http://bit.ly/376NMgH

நேருவிடம் நமக்கு மிஞ்சியிருப்பது என்ன எனும் குஹாவின் கட்டுரையின் ஒரு பகுதி

http://bit.ly/2qQEWTI

--

lns2...@gmail.com

unread,
Nov 15, 2021, 9:48:42 AM11/15/21
to சந்தவசந்தம்
Lovely thread, great photos and touching reminiscences. Thanks to Ganesan, Ram avargal and everyone else.
Reply all
Reply to author
Forward
0 new messages