Groups
Groups

Re: சிலப்பதிகாரம் - சில ஐயங்கள்

206 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Jul 9, 2016, 10:36:22 PM7/9/16
to மின்தமிழ், vallamai
On Wednesday, July 6, 2016 at 8:40:49 AM UTC-7, mukunthan wrote:
அனைவருக்கும் வணக்கம். சிலப்பதிகாரத்தை வாசிக்கும்போது எனக்கு ஏற்பட்ட சில ஐயங்களைக் கீழே தந்துள்ளேன்.  மின்தமிழ் குழுமத்திலுள்ள தமிழறிஞர்களின் விளக்கத்தை எதிர்பார்க்கின்றேன். இது பற்றி முதலே குழுமத்தில் உரையாடியிருப்பின் மன்னிக்கவும்...

1. காடுகாண் காதை (196)
கோவலன் நாவிற் கூறிய மந்திரம்
பாய்கலைப் பாவை மந்திர மாதலின் ....

http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=50&auth_pub_id=54&pno=557
இங்கே பாய்கலைப் பாவை எனப்படுவது கொற்றவையா?
வேட்டுவ வரி (70) யிலும் பாய்கலைப் பாவை என வருகிறது ..

கோவலன் சமண மதத்தவர் என்பது பொதுவான கருத்து . அவர் ஏன் கொற்றவை மந்திரத்தைக் கூறவேண்டும் ?


கொற்றவை எனும் தாய் தெய்வம் சமண சமயத்தவர்க்கும் உண்டு. அம்பிகா என்பர். சிங்க வாகனத்துடன்
கொற்றவையை சமணக் குகைகளில் நிறையப் பார்க்கலாம்.
எல்லோரா சமணக் குகையில் கொற்றவை,
etc. etc.,

சமணக் கொற்றவை - நளினி பல்பீர் கட்டுரை
 
ஏனெனின் , மதுராபதி தெய்வம் கூறும் முற்பிறப்புக் கதையில்
கட்டுரை காதை (155)
விரத நீங்கிய வெறுப்பின னாதலின்
ஒற்றன் இவனெனப் பற்றினன் கொண்டு

http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=50&auth_pub_id=54&pno=994

இங்கே, வேறு மதம் ஆதலால் ஒற்றன் எனக் கொலைசெய்யப்படுகிறான் ... வேறு மதத்தவன்  என எவ்வாறு அறியப்படுகிறான்  ?

இதுவே கோவலன் கொலைக்கு ஒரு  காரணமாக இருக்குமா? ( விரத நீங்கிய வெறுப்பினன் , சாவக நோன்பிகள் )


பார்க்கவேண்டும். நீறிடாமை காரணமோ?
கோவலன் - கண்ணகி பெயர்கள் கிருஷ்ணன் - லட்சுமி பெயர்கள் என மதுராபதி தெய்வம் சொல்லும் கதையில் இருக்கிறது.


6. உரைபெறு கட்டுரை
கொற்கையிலிருந்த வெற்றிவேற் செழியன் நங்கைக்குப் பொற்கொல்ல ராயிரவரைக் கொன்று.......
கொங்கிளங் கோசர் தங்கணாட்டகத்து நங்கைக்கு விழவொடு சாந்தி செய்ய ....
கயவாகு வென் பான் நங்கைக்கு நாட்பலி பீடிகை கோட்ட முந்துறுத் தாங்கு.....
சோழன் பெருங்கிள்ளி கோழியகத்து எத்திறத்தானும் வரந்தரு மிவளோர் பத்தினிக் கடவுளாகு மென நங்கைக்குப் பத்தினிக் கோட்டமுஞ் சமைத்து....

(http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=50&auth_pub_id=54&pno=63)

இங்கே, கோசர் தங்கணாட்டகத்து நங்கைக்கு எனப்படுவதற்கு , கொங்கிளங்  கோசர் நாட்டின் நங்கை எனப் பொருள்கூற முடியுமா?  அதாவது கண்ணகி கொங்கு நாட்டிலிருந்து வந்தவரெனக் கூறமுடியுமா?

இதற்கும்
வேட்டுவ வரி (47)
 கொங்கச் செல்வி குடமலை யாட்டி

இருக்கும் தொடர்பு இருக்குமா?



நல்ல வரிகளைக் காட்டியுள்ளீர்கள். கண்ணகை மற்ற நாட்டாரால் வழிபாடு பெற்றாலும் முதலில்
கொண்டாடியவர்கள் கொங்கர்களே. அதைப் பதிவு செய்கிறார் அடிகள்.

இவளோ, கொங்கச் செல்வி குடமலை யாட்டி
தென்றமிழ்ப் பாவை செய்த தவக்கொழுந்து
ஒருமா மணியாய் உலகிற் கோங்கிய
திருமா மணியெனத் தெய்வமுற் றுரைப்பப்

[...]
சாலினி கண்ணகிக்கு மேல் நிகழ்வது கூறினாள். கண்ணகி இன்னதன்மையளாதலைக் "கொங்கிளங் கோசர்" என்னும் உரை பெறு கட்டுரையா னறிக.

கொங்குத் தாராபுரத்தில் பரம்பரைக் கவிராயர்கள் உண்டு - மிதிலைப்பட்டிக் கவிராயர்கள் பாண்டிநாட்டில் இருப்பது போல.
சங்கரண்டாம்பாளையம் ஆதீனப்புலவர் கருந்தும்பிப் புலவர். கருந்தும்பிப் புலவர் மகன் பழனிச்சாமிப் புலவர் “கொங்கச் செல்வி”
என விரிவாக நூல் எழுதியுள்ளார். கிடைத்தால் படித்துப்பாருங்கள்.

ஒரு மாமணியாய் உலகிற்கு ஓங்கிய திருமாமணி - என்பது லக்ஷ்மியின் அவதாரமாக விளங்கும் கர்ணகியை (கர்ணகீ = தாமரைப் பொகுட்டு).
இதை விளக்கி மு. ராகவையங்கார் ஒரு நூற்றாண்டு முன்னர் நல்ல கட்டுரை எழுதியுள்ளார்.

கொங்கர்களுக்கு இன்றும் செல்லாண்டி அம்மன் முக்கியக் குலதெய்வம். இவள்தான் கண்ணகி என்பர் கொங்குப் புலவர்கள். உ-ம்: புலவர் அ,மு. குழந்தை,
கருந்தும்பிப்புலவர், மகாவித்துவான் வே. ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர், ....

புகார் நீங்கி மதுரை செல்லும்போது கொங்குநாட்டுக்கு வந்ததை இளங்கோ அடிகள் பாடுகிறார். நேற்றைய மடலில், தேவநேயப் பாவாணர்
“வடபெருங்கோடு” என்று இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரத்தில் கூறுவது மேற்குத் தொடர்ச்சி மலையே என எழுதியிருப்பதை
முனைவர் சிங்கநெஞ்சன் அவர்களுக்கு தெரிவித்தேன். தென்பெருங்கோடு என காவிரி தென்கரை குறிப்பதில்லை. படித்துப்பாருங்கள்.
கடைச்சங்க இலக்கியமான சிலம்பில் ‘வடபெருங்கோடு’ என்பதற்கு முன்னரே குறுங்கோழியூர் கிழார், மாங்குடி மருதனார் தமிழ்நாட்டு
எல்லைகளைக் குறிக்க அதேபொருளில் ‘வடபெருங்கல்’ என்கிறார். வட பெரும் கோடு (அ) கல் = Western Ghats.
மூன்று நாடுகளுக்கும் - சேர, சோழ, பாண்டிய நாடுகளுக்கு - பாத யாத்திரை செல்கின்றனர் கோவலன் - கண்ணகி தம்பதியர்கள்.

தென்குமரி வடபெருங்கல்
குணகுட கடலா எல்லை

(புறநானூறு,17:1-2)

(வடபெருங்கல் - வேங்கடமலை; குண - கிழக்கு; குட - மேற்கு.)

புறநானூற்றில் கூறியிருப்பது போலவே மதுரைக் காஞ்சியில் மாங்குடி மருதனாரும்,

தென்குமரி வடபெருங்கல்
குணகுட கடலா எல்லை

(மதுரைக்காஞ்சி:70-71


வடபெருங்கோடு/கல் - ஒரு stock phrase. தமிழ்நாட்டு எல்லைகளைக் குறிக்கப் புலவர்கள் கையாள்வது.

வஞ்சி (இன்றைய கரூர்) தான் சேரர் தலைநகர் என தொல்லியல் ஆய்வுகளும், ரா. ராகவையங்கார் சேரர் வஞ்சி ஆய்வு நூலும் காட்டிவிட்டன.
தன் தலைநகருக்கும், நாமக்கல், திருச்செங்கோடு பகுதிக்கும் வந்து “கொங்கச் செல்வி, குடமலையாட்டி” ஆகப்போகிற கண்ணகிக்கு அந்த
மலைநாட்டைக் காட்டுகிறார் காவிய ஆசான் என்க. 


இது எதனால் தெரிகிறது என்று ஆராய்வதற்கு காவதம் (= காவ்தம் > காதம்) எத்தனை தூரம் என ஆராய்ந்தால் புரிந்துகொள்ளலாம்.
கண்ணகி இன்னும் மதுரை எவ்வளவு தூரம் எனக் கேட்டபோது, மெல்ல நகைத்து 6, 5 காதம் என்கிறான் கோவலன். அதாவது 30 காதம்
என்றால் அஞ்சுவாள் என்று பிரித்து அஞ்சு ஆறு காதம் என்கிறான். காதம் சுமார் 10 மைல் என்கிறது சென்னைப் பேரகராதி. ஆனால்
காவதம்/காதம் 12 - 14 மைல் என்பது கல்வெட்டுக்களால் வெளியாகும் செய்தி. 10 - 12 - 14ல் ஒரு சராசரியாய் 12 மைல் என்று எடுத்தால்
கூட 30 காதம் 360 மைல் என்றாகும். பூம்புகாரும், மதுரையும் 360 மைலில் இல்லை. அது மிக அதிகம். அந்த அதிக (extra) மைல்களைக் கொண்டு
வஞ்சியும், வடபெருங்கோடும் (ஸஹ்யாத்ரி) காட்டி மதுரைக்கு அழைத்துச் சென்றான் கோவலன் எனப் புரிந்துகொள்ளலாம்.

காவதம் என்றும் > காதம் என்றும் (மூன்று) நாடுகாண் காதையில் குறிப்பிடுவது சமண நாட்டுச் சொல். கர்நாடகா கல்வெட்டுகளில்
Gaavada எனப்படும். காவதம் = காதம் நீட்டலளவை 12 - 14 மைல் என்கின்றனர் சரித்திர ஆசிரியர்கள். சென்னை அகராதி ~10 மைல் என்னும்.
ஆவரேஜ் ஆக, 12 மைல்எனலாம்.

See B. L. Rice, 1897, pg. 548, 

Mysore, by districts

"Gaavada or Gau = a distance of about 12 miles"

Foreign measures and their English values, 1864
Gavada or Day's Journey = 14.6 miles


Francis Buchanan, A Journey from Madras Through the Countries of Mysore, Canara and Malabar..., 1807
pg. 332
"for every Gau or Gavada of 4 cosses, which amount upon an average, I suppose, to between 12 and 14 miles."

A Journey from Madras Through the Countries of Mysore, Canara and Malabar...




A Journey from Madras Through the Countries of Mysore, Canara and Malabar...

 
நன்றி,

 
முகுந்தன்

N. Ganesan

unread,
Jul 9, 2016, 10:40:23 PM7/9/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, Singanenjam Sambandam
காவதம் (=காதம்) 12 மைல் என்றால், நிச்சயம் கொங்குநாட்டுக்கு புகாரிலிருந்து வந்து அங்கிருந்து
‘கொங்கச் செல்வி’ கண்ணகி மதுரை சென்றிருக்கவேண்டும்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jul 10, 2016, 12:13:25 PM7/10/16
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com


On Sunday, July 10, 2016 at 7:52:45 AM UTC-7, mukunthan wrote:
​நன்றி கணேசன் ஐயா,

>
​கொற்றவை எனும் தாய் தெய்வம் சமண சமயத்தவர்க்கும் உண்டு. அம்பிகா என்பர்.
சமணக் கொற்றவைக்கும் மானுக்கும் தொடர்புள்ளதா?

புறஞ்சேரியிறுத்த காதை
பாடும் பாணரிற் பாங்குறச் சேர்ந்து
ஆசில் கொள்கை அறவிபால் அணைந்தாங்கு
ஆடியல் கொள்கை அந்தரி கோலம் (105)
................
பாய்கலைப் பாவை பாடற் பாணி (111)​

இங்கேயிம் கோவலன் பாணருடன் சேர்ந்து பாய்கலைப் பாவைப் பாடலை யாழில் இசைக்கின்றார்..

மேலும் வேட்டுவவரியில் கூறப்படும் பலி கேட்கும் கொற்றவையும் கோவலன் வணங்கும் கொற்றவையும் பாய்கலைப் பாவை எனத்தான் அழைக்கப்படுகிறாள்..


>நீறிடாமை காரணமோ?
இருக்கலாம்.. நீறிடாமையால் மதம் கண்டிருக்கலாம்...


>வடபெருங்கோடு
நீங்கள் கூறுவதுபோல வடபெருங்கோடு என்பது மேற்குத்தொடர்ச்சி மலையாயின்,

பன்மல ரடுக்கிய நன்மரப் பந்தர்
இலவந் திகையி னெயிற்புறம் போகித்

தாழ்பொழி லுடுத்த தண்பதப் பெருவழிக்
காவிரி் வாயிற் கடைமுகங் கழிந்து

குடதிசைக் கொண்டு கொழும்புனற் காவிரி
வடபெருங் கோட்டு மலர்ப்பொழில் நுழைந்து
காவதங் கடந்து கவுந்திப் பள்ளிப்
பூமரப் பொதும்பர்ப் பொருந்தி யாங்கண்


சிவப்பு நிறத்தால் காட்டப்படுவது கண்ணகி-கோவலன் செல்வழி அன்று, காவிரியின் பாதை எனக்கூறுகின்றீர்களா?


அன்பின் முகுந்தன்,

வடபெருங் கோடு, வடபெருங் கல் என்பன தமிழகத்து எல்லைகளைக் குறிக்கும் stock phrases.
இதனைக் கருத்தில் கொண்டுதான் அடியார்க்குநல்லாரை விட்டுவிட்டுச் சரியான
பொருளை பாவாணர் கூறியுள்ளார்: வடபெருங்கோடு = மேற்குத் தொடர்ச்சி மலை.

சிங்கநெஞ்சன் ஐயா கொள்ளும் கோடு என்றால் நீர்க்கரை என்பது இளங்கோ அடிகள்
கொண்ட பொருளில்லை. ஏனெனில் காவிரி ஆற்றைப் பாருங்கள். இரண்டு கரைகளும்
ஒரே உயரந்தான். வேறுபாடு இல்லை. மேலும் சற்றே உயர்ந்த கரை என்றால்
நிவப்பு, நிவந்த கரை எனச் சொல்லியிருப்பார் அடிகள். அவ்வாறு காவிரிக் கரை இருமருங்கிலும்
இல்லை. 

எனவே தான், வடபெருங் கோடு = ஸ்ஹயாத்ரி மலைத் தொடர். தமிழ் தேசிய காப்பியம்
எழுதிய இளங்கோ அடிகள் நாடுகாண் காதையில் மூன்று நாடுகளையும் காப்பியத்
தலைவன் தலைவியை நடத்திக் காட்டுகிறார். ஒரு காதம் என்பது ஒரு நாள் நடை.
ஓராண் நடப்பது. நடந்து பழக்கம் இல்லாத கண்ணகியும் கூட வருவதால், ஒரு 45 நாள் கூட
எழுத்திருக்கும் 30 காதம் கடக்க. பொறுமையாக 3 நாடும் கண்டிருப்பர்.

ஒரு புத்த பிட்சுணி காகந்தி (புகார்) பட்டினத்தில் இருந்து வடமதுரையில் கி.பி. 2-ஆம்
நூற்றாண்டில் கொடுத்த தானக் கல்வெட்டு கிடைத்துள்ளது. அதுபோல, சமணக் குரத்தி
கவுந்தி அடிகளைப் பற்றி காவியம் முழுக்கப் பேசுகிறார் அடிகள். 
“கொங்கச் செல்வி, குடமலையாட்டி” என்று போற்றுவது சமண நாடுகள் ஆகிய கன்னாடு (இன்றைய கர்னாடகம்),
கொங்கு என்ன பொருள் என விரிவாகப் பார்ப்போம். தமிழ், கன்னட, சமண அறிஞர் (ஜெர்மனியில்
பேரா. Zydenbos) கவுந்தி  அடிகள் பற்றிய கட்டுரை படித்தேன். 

பொழில் என்று அடிகள் வடபெருங்கோட்டில் சொல்வது மேற்குத் தொடர்ச்சி மலைக்கே உரிய
ஒரு டெக்னிக்கல் வார்த்தை. அதுபற்றியும் பேசலாம். தெய்வம் என்று கண்ணகியை முதலில்
அழைத்தது கவுந்தி அடிகள் தான் என்பது அறிவீர்கள். அதற்கு சமண சமயப் பொருள் என்ன?
- இதைக் காட்டத் தான் கவுந்தி அடிகள் மேற்குத் தொடர்ச்சி மலையில் கண்ணகி - கோவலனை 30 காதம்
பிரயாணம் செய்யவைக்கிறார். 
 
தாழ் பொழில் உடுத்த, தண்பதப் பெருவழிக்
காவிரி வாயில் கடைமுகம் கழிந்து,
குட திசைக் கொண்டு, கொழும் புனல் காவிரி
வட பெரும் கோட்டு மலர்ப் பொழில் நுழைந்து

"கவுந்திஅடிகள் வாழும் பள்ளியை அடைதல்"

காவதம் கடந்து, கவுந்திப் பள்ளிப்
பூ மரப் பொதும்பர்ப் பொருந்தி-

"கண்ணகியின் வினாவும், கோவலன் உரைத்த விடையும"

ஆங்கண்,
இறும் கொடி நுசுப்போடு இனைந்து, அடி வருந்தி,
நறும் பல் கூந்தல் குறும் பல உயிர்த்து,
முதிராக் கிளவியின், முள் எயிறு இலங்க,
‘மதுரை மூதூர் யாது?’ என வினவ-
‘ஆறு-ஐங் காதம் நம் அகல் நாட்டு உம்பர்;
நாறு ஐங் கூந்தல்! நணித்து’ என நக்கு

பலரும் ‘அகல் நாட்டு உம்பர்’ என்பதை மறந்துவிட்டார்கள்.
அகல் நாடு என்பது கொங்குநாட்டு பேச்சு வழக்கு.
அதாவது, கொங்க்நாட்டைப் பார்த்தீர்களானால்
அகல் விளக்குப் போல் தோன்றும். காவிரி திரியாகவும்,
சுற்றிவர மலைகள் அகலின் விள்ம்பாகவும் இலங்குகிற நாடு கொங்குநாடு.
பார்க்க: புலவர் அ. மு. குழந்தை, கொங்குநாட்டு வரலாறு.
உம்பர் என்றால் உச்சி, உயரம். அகல் (விளக்கு) போல உள்ள
கொங்குநாட்டின் உச்சியாகிய மேற்குத்தொடர்ச்சி மலைகளில்
இருந்து, புருஷனைக் வினாவும் கண்ணகிக்கு சிரித்துக்கொண்டே
சொல்கிறான் 30 காதம் தான் என. அதாவது மதுரைக்கு வடக்கே ~360 மைல் 
தூரத்தில் கன்னாட்டுப் பகுதியில் இருந்து பேசிய வார்த்தைகள் இவை.

இந்த இடத்திலே “நம்” என்பது “உன்” என்ற கொங்கு வழக்கை ஆள்கிறார்
அடிகள். அவரே வஞ்சி ஊரர். பஸ் ஸ்டாண்டில் பார்த்து, “நம்ம வீட்டுகு போலாங்களா?”
என்றால், உங்கல் வீட்டுக்கு போகலாமா? - எனப் பொருள். 
இளங்கோ அடிகள் பின் வருவதை முன்னர் சொல்வார்: கவவுக்கை நெகிழாமல் ... முகூர்த்தத்தின்
போது சொல்கிறார். பின்னர் “கொங்கச் செல்வி, குடமலையாட்டி” ஆவதை துர்க்கா தேவி
கோட்டத்தில் கவுந்தி அடிகளுடன் தங்கி செல்கையில் “இவளோ! கொங்கச் செல்வி, குடமலையாட்டி!”
- அதாவது சமண சமயத்தின் படி கண்ணகி தெய்வம் என்றால் என்ன பொருள்? பார்ப்போம்.
அகல் நாட்டு உம்பர் ஆறைங் (30) காதம் - அதாவது, கொங்கு நாட்டு உச்சியிலே 30 காதம் (ஒரு காதம் = சராசரியாக, 12 மைல்).
 - மதுரைக்கு வடக்கே ஸஹ்யாத்திரி (வடபெருங்கோட்டில்) 360 மைல் தொலைவில் இருந்து பேசிய வார்த்தைகள் இவை.
சமண தேசத்தில் - இன்றும் கர்நாடகாவில் சமணம் சிறந்து வாழ்கிறது. மௌர்ய சக்ரவர்த்திகள் அரசாட்சியை
மக்களிடம் கொடுத்தபின்னர் வடக்கிருந்து உயிர்துறக்க வந்த நாடு கன்னாடு தான். கன்னடிய இலக்கியம் முதல் நூற்றாண்டுகளில்
எல்லாம் சமணம் தான். கவுந்தி/கந்தி, காவதம்/காதம் - கன்னட தேச சொற்கள். அங்கே தான் அடிகள் கூறும்
காவதம்/காதம் நீட்டலளவை நீளம் நமக்குப் புலனாகிறது. விபரங்கள் கொடுத்துளேன்.

காவிரிக்கு வடகரை மலைபோல உயரமானது எனவே கோடு. தென்கரை தாழ்ந்துள்ளது எனவே கரை என்றெல்லாம்
சொல்லமுடியாது. காவிரிக்கரையை திருச்சி வந்து பாருங்கள். இரண்டு கரையும் ஒரே உசரம்தான்.

பாவாணர் சரியாக விளக்கிவிட்டார்:


குமரியாறு குமரி (மகேந்திரம்) யென்னும் மாபெரு மலைத்தொடரி னின்று பிறந்தது. இப்போது மேற்குத் தொடர்ச்சிமலையென்றும் கடைக்கழக நூல்களில் குடமலையென்றும் வழங்கும் மலைத்தொடர், அக்காலத்தில் வடமலையென்றும் வடபெருங்கோடு என்றும் அழைக்கப் பட்டது. இலங்கை அக்காலத்தில் இந்தியாவொடு சேர்ந்தும், பொருநை (தாமிரபரணி) இலங்கையூடு சென்றும் இருந்தது. (பாவாணர்)

விரிவாகப் பின்னர் பார்ப்போம்,
நா. கணேசன்



>அந்த அதிக (extra) மைல்களைக் கொண்டு
>வஞ்சியும், வடபெருங்கோடும் (ஸஹ்யாத்ரி) காட்டி மதுரைக்கு >அழைத்துச் சென்றான் கோவலன் எனப் புரிந்துகொள்ளலாம்.
புகார் தாண்டமுதலே வெயிலால் மிக வருந்திய கண்ணகியைக் கோவலன் வஞ்சிக்குக் கொண்டுசென்றிருப்பார் என நினைக்கவில்லை...

>நிச்சயம் கொங்குநாட்டுக்கு புகாரிலிருந்து வந்து அங்கிருந்து
>‘கொங்கச் செல்வி’ கண்ணகி மதுரை சென்றிருக்கவேண்டும்.

மற்றும் சீரங்கம் தாண்டி மேற்குத்திசை சென்றதாகக் குறிப்புகள் இல்லை என நினைக்கின்றேன்...


>வஞ்சி (இன்றைய கரூர்) தான் சேரர் தலைநகர் என
அறுதியிட்டுக் கூறமுடியுமா?
(இதையும் பார்க்கலாம், எனக்கு உறுதியாகத் தெரியாது : http://valavu.blogspot.com/2010/05/8.html)

அநேகமாக அக்காலத்தில் கரூர் மாந்தரஞ்சேரலின் கீழ் இருந்திருக்கவேண்டும்.  (கட்டுரை காதையில் வரும் பராசரனுக்குக் கொடைகொடுத்தவன் ? )

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

நன்றி,
முகுந்தன்​
2016-07-10 19:24 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:


On Wednesday, July 6, 2016 at 8:40:49 AM UTC-7, mukunthan wrote:
அனைவருக்கும் வணக்கம். சிலப்பதிகாரத்தை வாசிக்கும்போது எனக்கு ஏற்பட்ட சில ஐயங்களைக் கீழே தந்துள்ளேன்.  மின்தமிழ் குழுமத்திலுள்ள தமிழறிஞர்களின் விளக்கத்தை எதிர்பார்க்கின்றேன். இது பற்றி முதலே குழுமத்தில் உரையாடியிருப்பின் மன்னிக்கவும்...


அன்பின் முகுந்தன்,

சிலம்பில் உங்கள் ஐயங்கள் எனப் பார்த்ததும் வயதானவராக இருப்பார் என நினைத்தேன். இப்பொழுது தான் கண்டறிந்தேன்:


தமிழ்நாட்டில் இளைஞர்கள் சிலம்பு பக்கமெல்லாம் போவது குறைவாக இருக்கும் காலகட்டமிது.
பேராதனைப் பல்கலையில் படித்து கொழும்ம்பில் வாழும் உங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க வாழ்த்துக்கள்.

பேராதனையில் பேரா. ஆ. வேலுப்பிள்ளை எனக்கு பல பத்தாண்டுகளாக நண்பராக விளங்கினவர்.
மொழியியல், கல்வெட்டு, இலங்கையில் பௌத்தம், ... கரைகண்டவர். அண்மையில் தான் மறைந்தார் :(
அவரைப் பற்றி எழுதக் கேட்டதன் விளைவு, அவர் அனுப்பிய ஒளிப்படங்கள்,

வாழ்க வளமுடன்,
நா. கணேசன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/IPn8083EQLQ/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

வேந்தன் அரசு

unread,
Jul 10, 2016, 12:54:02 PM7/10/16
to vallamai, மின்தமிழ், housto...@googlegroups.com
சதகர்ணியை நூற்றுவகன்னர் என தமிழ்ப்படுத்திய இளங்கோ கர்ணகியை கன்னகி எனாமல் கண்ணகி என்பாரா?

ஏற்கனவே அரைத்த மாவுதான். இனியும் அரைக்க விருப்பம் இல்லை.

10 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 12:13 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

N. Ganesan

unread,
Jul 10, 2016, 1:00:05 PM7/10/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com


On Sunday, July 10, 2016 at 9:54:03 AM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:
சதகர்ணியை நூற்றுவகன்னர் என தமிழ்ப்படுத்திய இளங்கோ கர்ணகியை கன்னகி எனாமல் கண்ணகி என்பாரா?

கண்ணகம் என்னும் தமிழ்ச்சொல் கர்ணகம் என்றானது என ஒத்துக்கொண்டேனே. 

கர்ணகீ > கண்ணகி, வர்ணம் > வண்ணம் போல.

கண்ணன் இருக்கிறான். அவன் புகழ் அகிலமறியும். எனவே, for disambiguation, நூற்றுவர் கன்னர் என்கிறார்.
க்ருஷ்ண > கண்ஹ (கண்ணையன்) - ப்ராகிருதம் > கண்ணன். இது பரவலாக இருப்பதால்
குந்திமகன் கன்னன், சதகன்னர்

N. Ganesan

unread,
Jul 10, 2016, 1:21:46 PM7/10/16
to மின்தமிழ், vallamai


On Sunday, July 10, 2016 at 10:08:57 AM UTC-7, தேமொழி wrote:
///
வடபெருங் கோடு, வடபெருங் கல் என்பன தமிழகத்து எல்லைகளைக் குறிக்கும் stock phrases.
///

வடபெருங் கோடு, வடபெருங் கல் என்பது  stock phrases என்பது சரி... ஆனால் இந்த இடத்தில் தமிழகத்தின் எல்லையைக் குறிப்தாகக் கொள்ளத் தேவையில்லை

இங்கு  வடபெருங் கோடு = (திருச்சி) மலைக்கோட்டை எனவே பொருள் கொள்ள எனக்கு விருப்பமாக இருக்கிறது.



குடதிசைக் கொண்டு கொழும்புனற் காவிரி
வடபெருங் கோட்டு மலர்ப்பொழில் நுழைந்து

கொழும் புனற் காவிரி வடபெருங் கோட்டு மலர்ப் பொழில் நுழைந்து - வளவிய நீரினையுடைய காவிரியின் பெரிய வடகரைக்கணுள்ள சோலையினைக் கடந்து ; 
நுழைதல் - கழிதல். அன்றிச் சோலை தாழ்ந்திருத்தலின் நுழைந்து போய் எனலுமாம்.

காவதங் கடந்து கவுந்திப் பள்ளிப்
பூமரப் பொதும்பர்ப் பொருந்தி யாங்கண்

காவதம் கடந்து கவுந்திப் பள்ளிப் பூமரப் பொதும் பர்ப் பொருந்தி ஆங்கண் - காதமெனப்படும் எல்லையினைக் கடந்து சென்று கவுந்தியடிகள் எழுந்தருளிய பள்ளியின் அயலதோர் பொலிவினையுடைய மரம் செறிந்த சோலைக்கண் பொருந்த அப்பொழுது

என் வழியில் பொருள் கொண்டால்....

காவிரி மலைக்கோட்டை மாநகர் சோலைக்குள் நுழைந்து, அதன் எல்லையைக் கடந்து கவுந்தி தங்கியிருந்த பள்ளி பகுதியை அடைகிறது....

கவுந்தியின்  பள்ளி சற்றே கிழக்கில் இருக்கிறது.

ஆனால், பிரச்சினை என்னவென்றால் திருச்சியில் இருந்து மதுரை 30 காதம் தொலைவில் இல்லையே.

காதம் = 12 மைல். முனைவர் காளைராசன் ஐயா காட்டும் பூவணப் புராணம் 12.5 மைல் என்கிறது காதத்தை.

மதுரைக்கு 360 மைல் வடக்கே சமண நாடாகிய கருனாடகத்து மேற்குத் தொடர்ச்சி மலை
இளங்கோ அடிகள் குறிக்கும் தூரத்துக்குப் பொருந்துகிறது.

பொழில் என்ற சொல்லின் அர்த்தம் என்ன? ஏன் கவுந்தி அடிகள் பார்வையில் தெய்வம் கண்ணகி?
கவுந்தி அடிகள் தான் கண்ணகியை தெய்வம் என முதலில் அடையாளம் காட்டினவர்.
ஏன் இளங்கோ அடிகள் 
“இவளோ,
கொங்கச் செல்வி! குடமலையாட்டி!”
என முதலில் வைத்துப் பாடுகிறார்? இந்நாடுகளில் சமணம் சிறப்பா? 

இக் கேள்விகள், பாவாணர் கூறும் வடபெருங்கோடு - மேற்குத்தொடர்ச்சி மலை என்பதாக விடைகள் தருகின்றன.

வட கரை உயரத்தில், தென் கரை கீழே என்பதெல்லாம் காவிரியைப் பார்த்தால் பொருந்துவதில்லை.

பாவும் உரையும் பருந்தும் நிழலும் எனப் பொருந்தவேண்டும் என்பார்கள். அதற்கு, வடபெருங்கோடு = மேற்குத் தொடர்ச்சி மலையே
இருக்கின்ற சான்றாதாரங்களால் உறூதியாகிறது.

30 காதம் - 360 மைல்கள் - என்பதால், இளங்கோ அடிகள் தெளிவுபடுத்திவிடுகிறார்.

நா. கணேசன்

 

 


தெற்கில் நின்று பார்த்தால்  இதுதான்  வட பெருங் கோடு   


..... தேமொழி

N. Ganesan

unread,
Jul 10, 2016, 1:24:11 PM7/10/16
to வல்லமை, mint...@googlegroups.com


தெற்கில் நின்று பார்த்தால்  இதுதான்  வட பெருங் கோடு   


திருச்சி மலை - சிறு குன்று. வட பெருங்கோடு என்று யாரும் கூறமாட்டார். இளங்கோ அடிகள் அவ்வாறு சொல்வாரா? மாட்டார். 


..... தேமொழி

DEV RAJ

unread,
Jul 10, 2016, 1:28:22 PM7/10/16
to வல்லமை
On Sunday, 10 July 2016 10:00:05 UTC-7, N. Ganesan wrote:
கண்ணகம் என்னும் தமிழ்ச்சொல் கர்ணகம் என்றானது என ஒத்துக்கொண்டேனே. 
கர்ணகீ > கண்ணகி, வர்ணம் > வண்ணம் போல.

கண்ணகம் > கர்ணகம், 
கர்ணகம் > கண்ணகம்
எது சரி ?

இரு சொற்களும் ஒரே பொருளைச் சுட்டுகின்றனவா ? 
இரு மொழி இலக்கியங்களிலிருந்தும் ஆதாரம் தருக


தேவ்


N. Ganesan

unread,
Jul 10, 2016, 1:40:36 PM7/10/16
to மின்தமிழ், vallamai


On Sunday, July 10, 2016 at 10:27:45 AM UTC-7, தேமொழி wrote:

மதுரைக்கு வடக்கே இருக்கும்  திருச்சிராப்பள்ளி என்ற பெயரிலேயே பள்ளி இருக்கிறது


ஆம். அதன் பழைய பெயர் திருச் சினப் பள்ளி. சினன் = ஜிநன். 
மக்கள் பேச்சுவழக்கில் திரு-சினப்பள்ளியை திரு-சினாப்பள்ளி என அழைத்தனர்.
ஆங்கிலேயர் அப்படியே பதிவு செய்துள்ளனர். இன்றும் Trichinopoly திரிசினாப்பள்ளி தான்


சைவர்கள் (உ-ம்: சம்பந்தர்) சினப்பள்ளியில் உள்ள ஜிநனை (சினனை) கழற்றிவிட்டுவிட்டு
சிராப்பள்ளி என்று ஆக்கினர். த்ரிசிரஸ் என்னும் அரக்கர்கள் என்னும் புராணங்களை புனைந்தனர்.

வேந்தன் ஐயா அவர்களுக்கு கோயமுத்தூர், தொண்டாமுத்தூர், குனியமுத்தூர், ... எல்லாம் புதிசு.
கோயம்புத்தூர் (< கோசம்புத்தூர். உயிர் < உசிரு, முயிரி < முசிறி, ஆயிரம் < ஆசிரம்/சாசிரம், ... போல)
என விளக்கமான ஒரு இழை உள்ளது.

Trichinopoly மிகப் பழைய சொல். திருச்சிராப்பள்ளி அதை மாற்றிய பெயராகும். 
Coimbatore, Trcihinopoly, .... தெரிவிக்கும் ஆழமான தமிழ்வரலாறுகள் சுவையானவை.

-------------------------

ஆனால், வடபெருங்கோடு என்று திருச்சிமலையை முத்தமிழ் விநோதர் இளங்கோ அடிகள்
ஒருக்காலும் பாடமாட்டார். சிறுகுன்று அது, பெருங்கோடு அல்ல,

மேலும், 30 காதம் (360 மைலிலும்) திருச்சியில் இருந்து மதுரை இல்லை.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jul 10, 2016, 1:42:16 PM7/10/16
to வல்லமை, mint...@googlegroups.com
ஆலமரம் > ஆலாமரம், புளியமரம் > புளியாமரம், புங்கமரம்> புங்காமரம்,
அதுபோல், பேசுவழக்கு:

சினப்பள்ளி > சினாப்பள்ளி = Trichinopoly

N. Ganesan

unread,
Jul 10, 2016, 2:09:08 PM7/10/16
to மின்தமிழ், vallamai


On Sunday, July 10, 2016 at 10:59:13 AM UTC-7, தேமொழி wrote:


On Sunday, July 10, 2016 at 10:42:20 AM UTC-7, N. Ganesan wrote:
ஆலமரம் > ஆலாமரம், புளியமரம் > புளியாமரம், புங்கமரம்> புங்காமரம்,
அதுபோல், பேசுவழக்கு:

சினப்பள்ளி > சினாப்பள்ளி = Trichinopoly

 
திருச்சி சமணர்கள் பள்ளி இருந்த இடம்.  அதை அழித்து மகேந்திரவர்மன் கோவில் எழுப்பினாராம்.  கல்வெட்டு சான்றுடன் சொல்பவர் சரித்திரப் பேரறிஞர் தி.வி. சதாசிவப் பண்டாரத்தார்





``சிராப்பள்ளி`` என்றதன் பெயர்க்காரணத்தைப் பற்றி நமது சரித்திரப் பேரறிஞர் தி.வி. சதாசிவப் பண்டாரத்தார் அவர்கள் செந்தமிழில் எழுதிய சுருக்கக் கருத்து இங்கே தரப்பெறுகின்றது. சிராப்பள்ளிக் கோயில் கட்டியவன் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் நமது அப்பரடிகளை வருத்திச் சைவனான முதல் மகேந்திரவர்மனே. அவன் இத்தலத்து எட்டு சுலோகங்கள் அடங்கிய கல்வெட்டு ஒன்று அமைத்திருக்கிறான். அதில் தான் சைவனானதையும்(S.I.I. Vol. I No. 33, 34.) திருவதிகையில் அமண் பள்ளிகளையிடித்துக் குணபரேச்சுரம் கட்டியதையும் குறிப்பிடுகின்றான். குணபரன் என்பது மகேந்திரவர்மனையே குறிக்கும் பட்டப் பெயர். இதனைச் சிராப்பள்ளியிலும், செங்கற்பட்டு வல்லத்திலும் உள்ள குகைக் கோயிற்கல்வெட்டுக்கள் வலியுறுத்தும். அதைப் போலவே சிராப்பள்ளியாகிய இவ்விடத்தும் அமணப்பள்ளி ஒன்று பெரியதாக இருந்தது. அதனை இடித்தே இந்தக் கோயிலைச் சைவனான மகேந்திரவர்மன் கட்டினான்(S.I.I. Vol. I No. 33).

உச்சிப்பிள்ளையார் கோயிலின் பின்பாகத்தில் இன்றும் சமண முனிவர்களுடைய கற்படுக்கைகளைக் காணலாம். அவற்றில் அந்தந்தப் படுக்கையிலிருந்த சமணமுனிவர் பெயர்கள் குறிக்கப்பெற்றுள்ளன. அவைகள் கி.பி. 5 ஆம் நூற்றாண்டின் நிகழ்ச்சிகள். அவர்களில் ஒருவர் சிரா என்னும் பெயருடையவர் என்று ஒரு கற்படுக்கை அறிவிக்கிறது. ஆதலால் பள்ளிகோயிலானாலும், பெயர் போகாமல் சிராப்பள்ளி எனவே வழங்குகிறது.


பிழைபட்ட செய்தி. அப்படி ஒரு கல்வெட்டும் திருச்சியில் இல்லை. சமணத் தொடர்பு தெரிகிறது - கற்படுக்கைகளால். ஆனால், சிரா என்ற பெயரை எப்படி விளக்குவது?
இதற்கு பண்டாரத்தார் இவ்வழி கண்டுள்ளார். ஆனால், சிரா என்று சினாப்பள்ளியில் எங்கும் கல்வெட்டில்லை. கி.பி. 6-ஆம் நூற்றாண்டு வரை கல்வெட்டுகளை துருவி
ஆராய்ந்த ஐராவதம் நூலிலும் இதத் தெளியலாகும். எத்தனையோ கல்வெட்டு நூல்கள் வந்துவிட்டன. எனவே, சிரா என்ற சொல்லே திருச்சி கல்வெட்டுகளில் கி.பி. 10 நூற்றாண்டுவரை இல்லை.


”சிராப்பள்ளியின் முன்னொட்டாக நிற்கும் 'சிரா' எனும் பெயர், இவ்வூர்க் குன்றின் குகைத்தளத்திலுள்ள கற்படுக்கைகளின் தலையணைப்பகுதி ஒன்றில் வெட்டப்பட்டிருப்பதாக இந்தியக் கல்வெட்டறிக்கையில் (பக்.78/1937-38) கூறப்பட்டுள்ளது. ஆனால் இப்பெயர், அதே அறிக்கையில் இக்குகைத்தளத்தில் கண்டறியப்பட்ட அனைத்துக் கல்வெட்டுகளும் பதிப்பிக்கப்பட்டிருக்கும் பகுதியில் (பக். 21-22, 1937-38) இடம்பெறவில்லை. கல்வெட்டறிஞர் ஐராவதம் மகாதேவன் குழுவினருள் ஒருவராகச் சென்று இக்குகைத்தளத்தில் ஆய்வு மேற்கொண்ட மைய ஆய்வாளர் மு.நளினி இப்படியொரு பொறிப்பு அக்குகைத்தளத்தில் காணப்படவில்லையென்று தெரிவித்துள்ளார். முந்து கண்டுபிடிப்புகள், அறிவிப்புகள், ஆய்வுகள் ஆகியவற்றின் நம்பகத்தன்மை இதனால் கேள்விக்குறியாவது உணர்க.”

சினாப்பள்ளி ஜிநனைத் தூக்கிவிட்டு சைவர் சிராப்பள்ளி எனப் பொருத்தியுளர்.

~NG
 

..... தேமொழி

N. Ganesan

unread,
Jul 10, 2016, 2:16:38 PM7/10/16
to வல்லமை, mint...@googlegroups.com, housto...@googlegroups.com
Some fellow, in British colonial period, wrote wrongly that ciraa is found in Trichinopoly inscription of 5th century CE. But no such inscription ever, just to cover the name, ciraappaLLi, this was inserted in 1938.
This info obviously misled Tiru. TVS Pandarathar aiya.

The ancient names, Trichinopoly, Coimbatore, ... tell a deeper story of Tamil history. ~ng

N. Ganesan

unread,
Jul 10, 2016, 5:05:15 PM7/10/16
to மின்தமிழ், vallamai


On Sunday, July 10, 2016 at 1:26:02 PM UTC-7, தேமொழி wrote:


On Sunday, July 10, 2016 at 11:29:07 AM UTC-7, N. Ganesan wrote:


On Sunday, July 10, 2016 at 11:24:11 AM UTC-7, தேமொழி wrote:

என்ற உங்கள் கேள்விக்கு.... திருச்சிப் பகுதியில் அக்காலத்தில் சமணம் செழித்திருந்ததை மயிலை. சீனி. வேங்கடசாமியும்  குறிப்பிடுகிறார் என்பதை நீங்கள் கொடுத்த வரலாறு.  தளத்தின் பக்கமே காட்டுகிறது.

எல்லா ஊரிலும் சமணம் பார்க்கலாம்.  சினப்பள்ளி ஊர்ப்பேரே இருக்கிரதே.  ஆனால், கொங்கு, கர்னாடகா போல் சமணம் மற்ற இடங்களில் உண்டா?

முக்கிய கேள்வி:
Trichinopoly - Madurai : is it 360 miles, i.e., 30 kaadam-s??


அக்கால அளவையை  குறித்து என்னால்  உறுதியாக முடிவெடுக்க இயலவில்லை.  

இடக்குறிப்புகள் எதைக் குறிக்கின்றன என்று அதன் வழி முடிவெடுக்க விரும்பினேன்.


இளங்கோ அடிகள் சமணர். கர்நாடகம் நன்கு அறிந்தவர். 
அவர்தான் கன்னடச் சொற்கள் ஆகிய காதம்/காவதத்தை தமிழில் முதலில் சொல்கிறார்.

அடிகள் குறிப்பிடும் காதம்/காவதம் எவ்வளவு தூரம் என கன்னட கல்வெட்டு, இலக்கியம்
மூலம் உறுதிசெய்யலாம். 10 - 14 மைல். சராசரியாக 360 மைல்கள். அதுவே,
வடபெருங்கோடு ஆகிய வெஸ்டெர்ன் காட்ஸ் - அகல் நாட்டு உம்பர் மலை -
மதுரைக்கு வடக்கே 360 மைலில் கோவலன் மனைவி கண்ணகியிடம் பேசுகிறான்
எனக் காட்டுகிறது.

நா. கணேசன்
 

..... தேமொழி  
 

..... தேமொழி


N. Ganesan

unread,
Jul 11, 2016, 12:18:29 PM7/11/16
to மின்தமிழ், vallamai


On Monday, July 11, 2016 at 8:40:57 AM UTC-7, mukunthan wrote:
நன்றி சிங்கநெஞ்சன் ஐயா,
​கோவலன் - கண்ணகி மதுரை செல்லும் வழியில் கொங்கு நாடு செல்லவில்லை என்பதே எனது கருத்தும்..


வடபெருங்கோடு என்பதுதான் என்னவென்பது சரியாகத் தெரியவில்லை..


சிங்கநெஞ்சன் ஐயாவை முன்பு கேட்ட கேள்விதான்.
நாடுகாண் காதையில் "வடபெரும்கோடு" வட கரை என்றால், ஏன் தென் கரையை "தென் பெரும் கோடு" என இளங்கோ அடிகள் பாடவில்லை? காவதம் = தொலைவு. நீண்ட தொலைவில், இருந்த கவுந்தி  அடிகளின் பள்ளி. அங்கிருந்து 30 காதம் எனக் கோவலனே கண்ணகியிடம் சொல்வதும் காண்க. காதம் = 10 - 14 மைல். அதாவது, மதுரைக்கு வடக்கே மேற்கு தொடர்ச்சி மலையில் 360 மைலில் கவுந்தியுடன் இருந்து பேசுகிறான் கோவலன்.

நா. கணேசன்
 
 

N. Ganesan

unread,
Jul 11, 2016, 4:11:01 PM7/11/16
to மின்தமிழ், vall...@googlegroups.com


On Monday, July 11, 2016 at 9:18:28 AM UTC-7, N. Ganesan wrote:


On Monday, July 11, 2016 at 8:40:57 AM UTC-7, mukunthan wrote:
நன்றி சிங்கநெஞ்சன் ஐயா,
​கோவலன் - கண்ணகி மதுரை செல்லும் வழியில் கொங்கு நாடு செல்லவில்லை என்பதே எனது கருத்தும்..


வடபெருங்கோடு என்பதுதான் என்னவென்பது சரியாகத் தெரியவில்லை..


வடபெருங்கோடு என்று என்பதைப் புரிந்துகொள்ள இளங்கோ அடிகள் திருச்சினப்பள்ளி (திருச்சி) வருமுன்
வர்ணிப்பதைப் பார்க்கவேண்டும். மேற்குத்தொடர் மலைகளிலே கவுந்தியைப் பார்த்து, அவரும் வருகிறேன்
என்றதால், கண்ணகிக்குத் துணையாய் இருக்கும் வாருங்கள் என்கிறான் கோவலன். மூவரும்
காவிரி அருகே உள்ள நாட்டுவளம், இயற்கைவளம் கண்டுவருகின்றனர். இன்றும் காவிரி குடமலையில்
பிறக்கும் இடத்தில் இருந்து திருச்சி வரும்வரை இயற்கை அழகு கொஞ்சுகிறது. பார்க்கிற எல்லாப் புள்ளினங்களையும்
தொகுத்துச் சொல்கிறார் அடிகள்.


கவுந்தி அடிகளைச் சந்திக்க மேற்குத் தொடர்ச்சி மலையைச் சார்ந்தது:
குட திசைக் கொண்டு, கொழும் புனல் காவிரி
வட பெரும் கோட்டு மலர்ப் பொழில் நுழைந்து
காவதம் கடந்து, கவுந்திப் பள்ளிப்
பூ மரப் பொதும்பர்ப் பொருந்தி-
 
மதுரை 30 காதம் (~360 மைல்) தூரத்தில் உள்ளது என அறிவித்தல்:

ஆங்கண்,
இறும் கொடி நுசுப்போடு இனைந்து, அடி வருந்தி,
நறும் பல் கூந்தல் குறும் பல உயிர்த்து,
முதிராக் கிளவியின், முள் எயிறு இலங்க,
‘மதுரை மூதூர் யாது?’ என வினவ-
ஆறு-ஐங் காதம் நம் அகல் நாட்டு உம்பர்;
நாறு ஐங் கூந்தல்! நணித்து’ என நக்குப் பொருந்தி-

(அகல் நாடு = கொங்கு நாடு. அதன் உயரத்தில் (அ) அப்பால் விளங்கும் மதுரை.
Pazhani, Tirumuurthi malai, Anaimalai hills)

திருச்சியை அடைவதன் முன்னர் மேற்குத் தொடர்ச்சி மலைகளின்
பழவிறல் முது  ஊர்களில் வேளாளர் வேளாண்மை.

வடபெருங்கோட்டு பள்ளியில் புறப்பட்டு தெற்கே மதுரை நோக்கி
வருகின்றனர். தூற்றாப் பொலியும், ஆலைப் புகையும் காவிரி
பாய்ந்து ஓடிவரும் மலைகளின் மேகங்களோடு சேர்கின்றன.

தலைக் காவேரி போன்ற இடங்களில் யாகங்கள் நடப்பதை
மஞ்சு சூழ் மலையின் மாணத் தோன்றும்
என்றார்.

ஆனால், மலைநாட்டில் காவிரி பாயும் ஊர்களைச் சொல்லும்போது
மாண, போல, ஒக்கும் என்றெல்லாம் சொல்லவில்லை.
மலையில் தோன்றும் ஊர்களின் வெள்ளாமையைப் பேசுகிறார்.

பரப்பு நீர்க் காவிரிப் பாவை-தன் புதல்வர்,
இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும்
உழவிடை விளைப்போர், பழ விறல் ஊர்களும்
பொங்கழி ஆலைப் புகையொடும் பரந்து
மங்குல் வானத்து மலையின் தோன்றும்
ஊர் இடையிட்ட நாடுடன் கண்டு

காவதம் அல்லது கடவார் ஆகி
பல் நாள் தங்கி, செல் நாள் ஒரு நாள்-

காவிரியின் புதல்வர் திருச்சியில் இருந்து பூம்புகார் மட்டும் வாழவில்லை.
குடமலையில் பிறந்து திருச்சி வரும்வரை உள்ள மலைநாட்டு
ஊர்களின் வளப்பத்தை வர்ணிக்கிறார் அடிகள்.

இவ்வடிகளில் தெளிவாக காவிரிப்பாவை புதல்வர்கள் என்று
குடமலைத் தோற்றம் முதல் கடலில் கலக்கும் எல்லா உழவர் குடிகளையும்
சொல்லிவிடுகிறார். யாராவது காவிரிப்பாவை தன் புதல்வர் திருச்சிக்கும்
கிழக்கேதான் என்று சொல்வார்களா? இன்றும் மேற்குத் தொடர்ச்சிமலைக்
காவிரி தன்புதல்வோர் விட்டால்தால் திருச்சிக்குக் கிழக்கே தண்ணீர் வருகிறது.

மலைநாட்டு ஊர்களைச் சொல்லுதலால் “வட பெரும் கோடு” ஸஹ்யாத்ரி
என்பது தெளிவு.

N. Ganesan

unread,
Jul 11, 2016, 8:49:53 PM7/11/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com
இன்னொரு கேள்வி: ஆயுநருக்கு எல்லாம்.

மலைநாட்டின் கண்ணே உள்ள காடும், ஊர்களும் தாண்டிக்,
கௌந்தி அடிகளும், கோவலன், கண்ணகி ஆற்றிடைக் குறையாகிய
அரங்கத்தில் தீர்த்தங்கரரைத் தொழுகின்றனர்:

மங்குல் வானத்து மலையின் தோன்றும்,
ஊர் இடையிட்ட நாடுடன் கண்டு,
காவதம் அல்லது கடவார் ஆகி,

பல் நாள் தங்கி, செல் நாள் ஒரு நாள்-

ஆற்று வீ அரங்கத்து, வீற்று வீற்று ஆகி,
குரங்கு அமை உடுத்த மரம் பயில் அடுக்கத்து,
வானவர் உறையும் பூ நாறு ஒரு சிறை-
பட்டினப் பாக்கம் விட்டனர் நீங்கா,
பெரும் பெயர் ஐயர் ஒருங்குடன் இட்ட
இலங்கு ஒளிச் சிலாதலம் மேல் இருந்தருளி,
பெருமகன் அதிசயம் பிறழா வாய்மைத்
தருமம் சாற்றும் சாரணர் தோன்ற-

அது எந்த அரங்கம்? மலைநாட்டின்  சீரங்கபட்டினமா? ஏனெனில் திருச்சி உறையூருக்குக்
கடைசியில் தான் செல்கின்றனர் மூவரும்.



இந்த அரங்கத்தின் அருகே ”குரங்கு அமை மரம் பயில் அடுக்கம்” பல உள்ளன.
வடபெரும் கோட்டின் மலைநாட்டு அரங்கம் இது என்க.


N D Logasundaram

unread,
Jul 12, 2016, 12:46:41 PM7/12/16
to mintamil, vallamai, Sivakumar M A, podhuvan sengai, Vasudevan Letchumanan, ara...@gmail.com, Maravanpulavu K. Sachithananthan
திரு முகுந்தன் 

வடபெருங்கோட்டு மலர்ப்பொழில் நுழைந்து 
என்பதில் "வடபெருங்கோட்டு" என்பது நுழையும் மலர்ப்பொழிலுக்குகொடுக்கப்படும்
சிறப்புப் பண்பு விளக்கம் 
கோ டு அல்ல கோ ட்டு  னும் சொல்லை  நுணுகி நோக்குக

காவிரியின் கடைமுகம் (இன்றைய கடைமுடி எனும் தேவரத்தலம் காவிரியின் கடைமுகத்தில் உள்ளது என்பர்) கடந்தவுடன் நுழையும் பொழில் வடபெருங்கோட்டுடன்  விளங்குவது எனக் கொள்வது பொருந்தும் விளக்கம் 
அல்லாது வேறு எங்கோ உள்ள வடபெருங்கோடு எனும் இடத்தில்  உள்ள பொழிலில் நுழைந்தார்எ னபது சிறிதாவது பொருந்துமா எனப்பார்க்கவும் 

அடுத்து
காதம் எனும் சொல் கன்னடமொழி என்றால் தகுமா? 

என்னிடமுள்ள 18 நிகண்டுக்களில் பார்த்த சிலவற்றில் நான்கினில் 
காதம் என்பதும் காவதம் என்பதும் ஒன்றாகும் எனவே உள்ளது 
காதம் = காவதம்  // திவாகரம் 1022
காதம் = காவதம்  // பிங்கலம் 715 
காதம் = காவதம் //சூ டாமணி நிகண்டு 412
காதம் = காவதம் //ஆசிரிய நிகண்டு/ 166
காதம் = காவதம் //நாமதீப  நிகண்டு/

மேலும் இச்சூத்திரங்களிலேயே 
கூப்பிடு தூரம் = குரோசம் என்கின்றன 

காதம் = மூன்று குரேச தூரம் //நாநார்த்ததீபிகை

நிகண்டுகளில் வருவது நேரடியான பொருந்தும்
 பொருள்களின் நிரல் 
------------------------------------
The normal intelligible outdoor range of the male human voice in still air is 180 m (590 ft 6.6 in).
The silbo, the whistled language of Spanish-speaking inhabitants
of the Canary Island of La Gomera, is intelligible under ideal conditions at 8 km (5 miles). There is a recorded case, under optimal acoustic conditions, of the human voice being detectable at a distance of 17 km (10.5 miles) across still water at night
-------------------------------
Also let's assume the human ear can only hear sounds till about 0 db ( falling leaf, again ideal healthy ear ) 
Therefore our man screaming at 90 db would ideally be audible till 32764ft. But due to our environment and variable air pressure and densities the sound usually gets dampened or absorbed and is only audible till a couple of hundred feet !
--------------------------------



காதம் நான்கும் கடுங்குரல் எடுப்பிப்  133  // ஒலி  செல்லும் தூரம் //
பூதம் புடைத்துஉணும் பூத சதுக்கமும்       
         சிலம்பு 5 புகாக்காண்டம் இந்திர விழவு ஊர் எடுத்த காதை

காவிரி வாயில் கடைமுகம் கழிந்து
குடதிசைக் கொண்டு கொழும்புனல் காவிரி
வடபெருங் கோட்டு மலர்ப்பொழில் நுழைந்து 35
காவதம் கடந்து கவுந்திப் பள்ளி           // தூரம்  //
        சிலம்பு புகாக்காண்டம் 10 நாடுகாண் காதை

மதுரை மூது¡ர் யாதுஎன வினவ
ஆறுஐங்காதம் நம் அகல்நாட்டு உம்பர்  // தூரம்  //
நாறுஐங் கூந்தல் நணித்துஎன நக்கு
தேமொழி தன்னொடும் சிறையகத்து இருந்த
காவுந்தி ஐயையைக் கண்டுஅடி தொழலும் 45
     சிலம்பு புகாக்காண்டம் 10 நாடுகாண் காதை

மங்குல் வானத்து மலையின் தோன்றும்
ஊர்இடை யிட்ட நாடுஉடன் கண்டு
காவதம் அல்லது கடவார் ஆகிப்   // தூரம்  //
பன்னாள் தங்கிச் செல்நாள் ஒருநாள்: 155
      சிலம்பு புகாக்காண்டம் 10 நாடுகாண் காதை

பாய்கலைப் பாவை பாடற் பாணி
ஆசான் திறத்தின் அமைவரக் கேட்டுப்
பாடற் பாணி அளைஇ அவரொடு
கூடற் காவதம் கூறுமின் நீரெனக்  // தூரம்  //
காழகிற் சாந்தம் கமழ்பூங் குங்குமம் 115
    சிலம்பு மதுரைக் காண்டம் 3 புறஞ்சேரியிறுத்த காதை

 மணிமேகலை

11. பாத்திரம் பெற்ற காதை
      மணிமேகலா தெய்வம் நீங்கிய பின்னர் 1
      மணிபல்லவத்திடை மணிமேகலை தான் 
      வெண் மணல் குன்றமும் விரி பூஞ்சோலையும் 
      தண் மலர்ப்பொய்கையும் தாழ்ந்தனள் நோக்கிக் 
      காவதம் திரிய கடவுள் கோலத்துத்   // தூரம்  //
      தீவதிலகை செவ்வனம் தோன்றி

13. ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை
      தெற்கண் குமரி ஆடிய வருவேன் 
      பொன் தேர்ச் செழியன் கொற்கை அம் பேர் ஊர்க் 
      காவதம் கடந்து கோவலர் இருக்கையின் 85  // தூரம்  //
      ஈன்ற குழவிக்கு இரங்கேனாகி

16. ஆதிரை பிச்சையிட்ட காதை
      போனார் தமக்கு ஓர் புக்கில் உண்டு என்பது 100
      யானோ அல்லேன் யாவரும் உணர்குவர் 
      உடம்பு ஈண்டு ஒழிய உயிர் பல காவதம்   // தூரம்  //
      கடந்து சேண் சேறல் கனவினும் காண்குவை

26 வஞ்சி மாநகர் புக்க காதை
     "இது நீர் முன் செய் வினையின் பயனால் 
      காசு இல் பூம்பொழில் கலிங்க நல் நாட்டுத் 
      தாய மன்னவர் வசுவும் குமரனும் 
      சிங்கபுரமும் செழு நீர்க் கபிலையும் 
      அங்கு ஆள்கின்றோர் அடல் செரு உறு நாள் 
      மூ இரு காவதம் முன்னுநர் இன்றி       // தூரம்  //
      யாவரும் வழங்கா இடத்தில் பொருள் வேட்டுப் 020
      பல் கலன் கொண்டு பலர் அறியாமல் 
      எல் வளையாளோடு அரிபுரம் எய்தி
      தோன்றாத் துடவையின் இட்டனன் போந்தேன்

     திருக்கோவையார்
கருங்கழி காதல் பைங்கானவில் தில்லை எம் கண்டர் விண்டார்
ஒருங்கழி காதர மூவெயில் செற்ற ஒற்றைச் சிலைசூழ்ந்(து)
அருங்கழி காதம் அகலும் என்றூழ் என்(று) அலந்துகண்ணீர் // தூரம்  //
வருங்கழி காதல் வனசங்கள் கூப்பும் மலர்க் கைகளே 190 

      திருமந்திரம்
முன்னிருந் தார்முழுது எண்கணத் தேவர்கள்
எண்ணிறந்து அன்பால் வருவர் இருநிலத்து
எண்இரு நாலு திசைஅந் தரம் ஒக்கப்
பன்னிரு காதம் பதஞ்செய்யும் பாரே 1881  தூரம்  //

விளைந்து கிடந்தது மேலைக்கு வித்தது
விளைந்து கிடந்தது மேலைக்குக் காதம்   தூரம்  //
விளைந்து விளைந்து விளைந்துகொள் வார்க்கு
விளைந்து கிடந்தது மேவுமுக் காதமே 2879 

கூப்பிடும் ஆற்றிலே வன்காடு இருகாதம்   தூரம்  //
காப்பிடு கள்ளர் கலந்துநின் றார்உளர்
காப்பிடு கள்ளரை வெள்ளர் தொடர்ந்திட்டுக்
கூப்பிட மீண்டதோர் கூரை கொண் டா§ 2900 

பதுங்கிலும் பாய்புலி பன்னிரு காதம்   தூரம்  //
ஒதுங்கிய தண்கடல் ஓதம் உலவ
மதுங்கிய வார்களி ஆரமுது ஊறப்
பொதுங்கிய ஐவரைப் போய்வளைத் தானே 2914

      11. 1307 ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி
பணிபடு நுண்ணிடை பாதம் பொறாபல காதம்என்று  தூரம்  //
தணிபடும் இன்சொற்க ளால்தவிர்த் தேற்குத் தழல்உமிழ்கான்
மணிபடு பொற்கழல் ஞானசம் பந்தன் மருவலர்போல்
துணிபடு வேலன்ன கண்ணியென் னோவந்து தோன்றியதே. 92

     12 -744 பெரியபுராணம் கண்ணப்ப நாயனார் புராணம்
பொங்கிய சின வில் வேடன் சொன்னபின் போவோம் அங்கே
இங்கிது தன்னைக் கொண்டு போதுமின் என்று தாமும்
அங்கது நோக்கிச் சென்றார் காவதம் அரையில் கண்டார்   தூரம்  //
செங்கண் ஏறு உடையார் வைகும் திருமலைச் சாரல் சோலை 3.3.95

      கல்லாடம் 86
இரண்டு ஐஞ்ஞூறு திரண்ட அக்காவதம்
சுற்றுடல் பெற்று துணைப்  பதினாயிரம் 5















நூ த லோ சு 
மயிலை 

2016-07-12 15:53 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:


On Tuesday, July 12, 2016 at 3:17:52 AM UTC-7, mukunthan wrote:
​>கண்ணகியின் கேள்விக்கும் ஆறங்காதம் என விடையிறுத்தபின் தான்காவுந்தி யையையைக் கண்டடி தொழுகின்றனர்..
இது தவறுதான்.. மன்னிக்கவும்

நன்றி.

அன்பின் முகுந்தன். ஆற்றுக்கு வடக்கே யாரும் அணை கட்டார். 
சமண அம்பிகாவும், பலிகேட்கும் அம்பிகாவும் ஒன்றா?- என்கிறீர்கள். நீங்களே யோசிங்க, தேடுங்க, சொல்லியிருக்கேன் பல வருஷமாய்.

உங்கள் இழையின் முதல் மடலுக்கு விடைகள் கொடுத்துள்ளேன். பொறுமையாக என் மடல்களைப் படித்தால் விளங்கிவிடும்.

நேரம் இருக்கும்போது விரிவாக, கோர்வையாக சொல்கிறேன்.

Best wishes,
N. Ganesan


 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Jul 15, 2016, 8:13:33 AM7/15/16
to மின்தமிழ், vall...@googlegroups.com


On Friday, July 15, 2016 at 5:07:07 AM UTC-7, இராம.கி wrote:
அன்பிற்குரிய முகுந்தன்,

வடபெருங்கோடு என்பது இந்த இடத்தில் மலையெல்லாம் கிடையாது. அது காவிரியாற்றின் வடக்கிலுள்ள பெரிய கரை. புகார் நகரத்தின் அகலம் ஒரு காதம். காவிரி ஊருக்கு நடுவில் ஓடுகிறது.  ஓர் ஆற்றின் இரு கரைகளும் மேடுகளாகத்தான் இருக்கும். வடக்கேயுள்ள கரை சற்று அகன்ற மேடு. அவ்வளவுதான். (இங்கே சென்னையில் கூவம், அடையாறு இரண்டின் கரைகளும் மேடுகள் தான். பல இடங்களின் பெருங்கோடுகள் உள்ளன.) புகார் நகரின் ஊடே ஒரு காத தூரம் நடந்து ஊருக்குச் சற்று வெளியே வந்து அங்கேயுள்ள கவுந்தியின் பள்ளிக்கு வந்துசேருகிறார்கள். வடபெருங் குவட்டில் (குவடு>கோடு = கரை) உள்ள மலர்ப்பொழிலில் கவுந்தியின் பள்ளியுள்ளது. இதற்கு அப்புறம் மதுரைக்குப் புறப்படுகிறார்கள்.  இதுதான் உள்ளமை நிலை. இங்கு பலர் புரிந்துகொண்டது மெத்தச் சரி.

நாசாக்காரர் விண்வெளிக்கதையெல்லாம் விடுவார். கொங்குநாட்டிற்கு எப்படியாவது இழுத்துப்போவார். இல்லாவிட்டால் அவருக்குப் பொழுதுபோகாது. கொங்கை விட்டால் தமிழகமே இல்லையென்றுவிடுவார். நாகசாமியின் உரைகளைக் கேட்டு நம் காதில் பூசுற்றப் பார்ப்பார். சிலப்பதிகாரம் ஒரு “நாவல்” என்பார். எதையும் உருப்படியாய் உணரவிட மாட்டார். அவர் பேச்சைக் கேட்டீர்களானால் தலைசுற்றிவிடும். நாசாக்காரர் ஒரு குழப்பவாதி. நீங்கள் இந்த இழையில் வேறு பங்காளர்களிடமிருந்து கருத்துக்கேட்டுப் பாருங்கள். பலனிருக்கும்.

சிலப்பதிகாரம் என்பது சற்றே புனைவு கொண்டு பெரிதும் உண்மையாய் நடந்த கதை; ஒரு வரலாறு. அதை எங்கு வேண்டுமானாலும் மெய்ப்பிக்க முடியும்.


ராமகி ஐயா, என்னைத் திட்டுவது ஒன்று தான் உங்கள் தொழிலா?

நீங்கள் சொல்வதைச் சொல்லுங்கள். என்னைப் பற்றி எழுதத் தேவையில்லை. 

சிலப்பதிகாரம் கொஞ்சம் புனைவா? நிறையப் புனைவு கொண்ட ஒரு நாவல் அது.
நீங்கள் சொன்னால் இது மாறிவிடாது. முதல் தமிழ் தேசிய நாவல் என்று சொல்லலாம்.

நா. கணேசன்
 
அன்புடன்,
இராம.கி.

வேந்தன் அரசு

unread,
Jul 15, 2016, 8:19:18 AM7/15/16
to vallamai, மின்தமிழ்


15 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 8:13 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:


சிலப்பதிகாரம் கொஞ்சம் புனைவா? நிறையப் புனைவு கொண்ட ஒரு நாவல் அது.
நீங்கள் சொன்னால் இது மாறிவிடாது. முதல் தமிழ் தேசிய நாவல் என்று சொல்லலாம்.

நா. கணேசன்
 

மதுரை எரிந்துபோன கதைகூட சென்குட்டுவனுக்கு தெரியவில்லை. என்றால் அது கட்டுக்கதை அல்லது தொன்மக்கதை.
 

N. Ganesan

unread,
Jul 15, 2016, 8:30:48 AM7/15/16
to வல்லமை, mint...@googlegroups.com
கண்ணகி கொங்கையில் என்ன பாஸ்பரஸா இருந்தது? - பெரியார்.

தமிழரின் சமயம் பெண்-மன்னன்- தலித் என அடிப்படையாகக் கொண்டது என்பது சங்க இலக்கியத்தால் வெளிச்சம் ஆகிறது.
கண்ணகியின் அணங்கு சென்று மதுரையை எரித்தது என இளங்கோ சொல்கிறார். 

நாடுகாண் காதை சோழன் ஆட்சிக் கீழே இருந்தததாகவும் குறிப்பிடுகிறார். காவிரி நீருக்கு தடங்கல் இல்லாமல் செய்ய
சோழர்கள் எப்போதும் அம்மன்னர்களை அடக்க முயன்றனர் என்பது வரலாறு. அதைப் பயன்படுத்தி
வடபெருங்கோடு - மதுரைக்கு வடக்கே ~360 மைல் - கவுந்தி அடிகளை சந்திப்பதும் சீரங்கபட்டினத்தில் அந்தர சாரணர்
வருகையும், தொழுகையும் எல்லாம் தன் நாவலில் குறிப்பிடுகிறார். கண்டவியூகம் போல அமைத்துள்ளார் இக் காதையை.

அகல்நாடு - அப்போதைய சேரநாடு, அதன் தலைநகர் வஞ்சி இருந்த கொங்கு. இதனைக் குறிப்பிடுகிறார். 
காவிரி அகல் (விளக்கு) நடுவே உள்ள திரி என்பதால் கொங்குக்கு அகல்நாடு என்றார். அவரும் அங்கேயும்,
முசிறி போன்ற ஊரிலும் வாழ்ந்தார் எனலாம்.

நா. கணேசன்
 
 
Reply all
Reply to author
Forward
0 new messages
Search
Clear search
Close search
Google apps
Main menu