A Journey from Madras Through the Countries of Mysore, Canara and Malabar... |
அனைவருக்கும் வணக்கம். சிலப்பதிகாரத்தை வாசிக்கும்போது எனக்கு ஏற்பட்ட சில ஐயங்களைக் கீழே தந்துள்ளேன். மின்தமிழ் குழுமத்திலுள்ள தமிழறிஞர்களின் விளக்கத்தை எதிர்பார்க்கின்றேன். இது பற்றி முதலே குழுமத்தில் உரையாடியிருப்பின் மன்னிக்கவும்...
1. காடுகாண் காதை (196)
கோவலன் நாவிற் கூறிய மந்திரம்
பாய்கலைப் பாவை மந்திர மாதலின் ....
http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=50&auth_pub_id=54&pno=557இங்கே பாய்கலைப் பாவை எனப்படுவது கொற்றவையா?
வேட்டுவ வரி (70) யிலும் பாய்கலைப் பாவை என வருகிறது ..கோவலன் சமண மதத்தவர் என்பது பொதுவான கருத்து . அவர் ஏன் கொற்றவை மந்திரத்தைக் கூறவேண்டும் ?
ஏனெனின் , மதுராபதி தெய்வம் கூறும் முற்பிறப்புக் கதையில்
கட்டுரை காதை (155)
விரத நீங்கிய வெறுப்பின னாதலின்
ஒற்றன் இவனெனப் பற்றினன் கொண்டு
http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=50&auth_pub_id=54&pno=994இங்கே, வேறு மதம் ஆதலால் ஒற்றன் எனக் கொலைசெய்யப்படுகிறான் ... வேறு மதத்தவன் என எவ்வாறு அறியப்படுகிறான் ?இதுவே கோவலன் கொலைக்கு ஒரு காரணமாக இருக்குமா? ( விரத நீங்கிய வெறுப்பினன் , சாவக நோன்பிகள் )
6. உரைபெறு கட்டுரை
கொற்கையிலிருந்த வெற்றிவேற் செழியன் நங்கைக்குப் பொற்கொல்ல ராயிரவரைக் கொன்று.......
கொங்கிளங் கோசர் தங்கணாட்டகத்து நங்கைக்கு விழவொடு சாந்தி செய்ய ....
கயவாகு வென் பான் நங்கைக்கு நாட்பலி பீடிகை கோட்ட முந்துறுத் தாங்கு.....
சோழன் பெருங்கிள்ளி கோழியகத்து எத்திறத்தானும் வரந்தரு மிவளோர் பத்தினிக் கடவுளாகு மென நங்கைக்குப் பத்தினிக் கோட்டமுஞ் சமைத்து....
(http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=50&auth_pub_id=54&pno=63)இங்கே, கோசர் தங்கணாட்டகத்து நங்கைக்கு எனப்படுவதற்கு , கொங்கிளங் கோசர் நாட்டின் நங்கை எனப் பொருள்கூற முடியுமா? அதாவது கண்ணகி கொங்கு நாட்டிலிருந்து வந்தவரெனக் கூறமுடியுமா?இதற்கும்இருக்கும் தொடர்பு இருக்குமா?
வேட்டுவ வரி (47)
கொங்கச் செல்வி குடமலை யாட்டி
தென்குமரி வடபெருங்கல்
குணகுட கடலா எல்லை
(புறநானூறு,17:1-2)
(வடபெருங்கல் - வேங்கடமலை; குண - கிழக்கு; குட - மேற்கு.)
புறநானூற்றில் கூறியிருப்பது போலவே மதுரைக் காஞ்சியில் மாங்குடி மருதனாரும்,
தென்குமரி வடபெருங்கல்
குணகுட கடலா எல்லை
(மதுரைக்காஞ்சி:70-71
A Journey from Madras Through the Countries of Mysore, Canara and Malabar... |
நன்றி,
முகுந்தன்
நன்றி கணேசன் ஐயா,
>கொற்றவை எனும் தாய் தெய்வம் சமண சமயத்தவர்க்கும் உண்டு. அம்பிகா என்பர்.
சமணக் கொற்றவைக்கும் மானுக்கும் தொடர்புள்ளதா?
புறஞ்சேரியிறுத்த காதை
பாடும் பாணரிற் பாங்குறச் சேர்ந்து
ஆசில் கொள்கை அறவிபால் அணைந்தாங்கு
ஆடியல் கொள்கை அந்தரி கோலம் (105)
................
பாய்கலைப் பாவை பாடற் பாணி (111)இங்கேயிம் கோவலன் பாணருடன் சேர்ந்து பாய்கலைப் பாவைப் பாடலை யாழில் இசைக்கின்றார்..மேலும் வேட்டுவவரியில் கூறப்படும் பலி கேட்கும் கொற்றவையும் கோவலன் வணங்கும் கொற்றவையும் பாய்கலைப் பாவை எனத்தான் அழைக்கப்படுகிறாள்..
>நீறிடாமை காரணமோ?
இருக்கலாம்.. நீறிடாமையால் மதம் கண்டிருக்கலாம்...
>வடபெருங்கோடு
நீங்கள் கூறுவதுபோல வடபெருங்கோடு என்பது மேற்குத்தொடர்ச்சி மலையாயின்,
பன்மல ரடுக்கிய நன்மரப் பந்தர்
இலவந் திகையி னெயிற்புறம் போகித்
தாழ்பொழி லுடுத்த தண்பதப் பெருவழிக்
காவிரி் வாயிற் கடைமுகங் கழிந்து
குடதிசைக் கொண்டு கொழும்புனற் காவிரி
வடபெருங் கோட்டு மலர்ப்பொழில் நுழைந்து
காவதங் கடந்து கவுந்திப் பள்ளிப்
பூமரப் பொதும்பர்ப் பொருந்தி யாங்கண்
சிவப்பு நிறத்தால் காட்டப்படுவது கண்ணகி-கோவலன் செல்வழி அன்று, காவிரியின் பாதை எனக்கூறுகின்றீர்களா?
>அந்த அதிக (extra) மைல்களைக் கொண்டு
>வஞ்சியும், வடபெருங்கோடும் (ஸஹ்யாத்ரி) காட்டி மதுரைக்கு >அழைத்துச் சென்றான் கோவலன் எனப் புரிந்துகொள்ளலாம்.
புகார் தாண்டமுதலே வெயிலால் மிக வருந்திய கண்ணகியைக் கோவலன் வஞ்சிக்குக் கொண்டுசென்றிருப்பார் என நினைக்கவில்லை...
>நிச்சயம் கொங்குநாட்டுக்கு புகாரிலிருந்து வந்து அங்கிருந்து
>‘கொங்கச் செல்வி’ கண்ணகி மதுரை சென்றிருக்கவேண்டும்.
மற்றும் சீரங்கம் தாண்டி மேற்குத்திசை சென்றதாகக் குறிப்புகள் இல்லை என நினைக்கின்றேன்...
>வஞ்சி (இன்றைய கரூர்) தான் சேரர் தலைநகர் என
அறுதியிட்டுக் கூறமுடியுமா?அநேகமாக அக்காலத்தில் கரூர் மாந்தரஞ்சேரலின் கீழ் இருந்திருக்கவேண்டும். (கட்டுரை காதையில் வரும் பராசரனுக்குக் கொடைகொடுத்தவன் ? )உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
நன்றி,
முகுந்தன்
2016-07-10 19:24 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
On Wednesday, July 6, 2016 at 8:40:49 AM UTC-7, mukunthan wrote:அனைவருக்கும் வணக்கம். சிலப்பதிகாரத்தை வாசிக்கும்போது எனக்கு ஏற்பட்ட சில ஐயங்களைக் கீழே தந்துள்ளேன். மின்தமிழ் குழுமத்திலுள்ள தமிழறிஞர்களின் விளக்கத்தை எதிர்பார்க்கின்றேன். இது பற்றி முதலே குழுமத்தில் உரையாடியிருப்பின் மன்னிக்கவும்...
அன்பின் முகுந்தன்,சிலம்பில் உங்கள் ஐயங்கள் எனப் பார்த்ததும் வயதானவராக இருப்பார் என நினைத்தேன். இப்பொழுது தான் கண்டறிந்தேன்:தமிழ்நாட்டில் இளைஞர்கள் சிலம்பு பக்கமெல்லாம் போவது குறைவாக இருக்கும் காலகட்டமிது.பேராதனைப் பல்கலையில் படித்து கொழும்ம்பில் வாழும் உங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க வாழ்த்துக்கள்.பேராதனையில் பேரா. ஆ. வேலுப்பிள்ளை எனக்கு பல பத்தாண்டுகளாக நண்பராக விளங்கினவர்.மொழியியல், கல்வெட்டு, இலங்கையில் பௌத்தம், ... கரைகண்டவர். அண்மையில் தான் மறைந்தார் :(அவரைப் பற்றி எழுதக் கேட்டதன் விளைவு, அவர் அனுப்பிய ஒளிப்படங்கள்,வாழ்க வளமுடன்,நா. கணேசன்--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/IPn8083EQLQ/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
சதகர்ணியை நூற்றுவகன்னர் என தமிழ்ப்படுத்திய இளங்கோ கர்ணகியை கன்னகி எனாமல் கண்ணகி என்பாரா?
///
வடபெருங் கோடு, வடபெருங் கல் என்பன தமிழகத்து எல்லைகளைக் குறிக்கும் stock phrases.
///வடபெருங் கோடு, வடபெருங் கல் என்பது stock phrases என்பது சரி... ஆனால் இந்த இடத்தில் தமிழகத்தின் எல்லையைக் குறிப்தாகக் கொள்ளத் தேவையில்லைஇங்கு வடபெருங் கோடு = (திருச்சி) மலைக்கோட்டை எனவே பொருள் கொள்ள எனக்கு விருப்பமாக இருக்கிறது.
குடதிசைக் கொண்டு கொழும்புனற் காவிரிவடபெருங் கோட்டு மலர்ப்பொழில் நுழைந்து
கொழும் புனற் காவிரி வடபெருங் கோட்டு மலர்ப் பொழில் நுழைந்து - வளவிய நீரினையுடைய காவிரியின் பெரிய வடகரைக்கணுள்ள சோலையினைக் கடந்து ;நுழைதல் - கழிதல். அன்றிச் சோலை தாழ்ந்திருத்தலின் நுழைந்து போய் எனலுமாம்.
காவதங் கடந்து கவுந்திப் பள்ளிப்பூமரப் பொதும்பர்ப் பொருந்தி யாங்கண்
காவதம் கடந்து கவுந்திப் பள்ளிப் பூமரப் பொதும் பர்ப் பொருந்தி ஆங்கண் - காதமெனப்படும் எல்லையினைக் கடந்து சென்று கவுந்தியடிகள் எழுந்தருளிய பள்ளியின் அயலதோர் பொலிவினையுடைய மரம் செறிந்த சோலைக்கண் பொருந்த அப்பொழுதுஎன் வழியில் பொருள் கொண்டால்....காவிரி மலைக்கோட்டை மாநகர் சோலைக்குள் நுழைந்து, அதன் எல்லையைக் கடந்து கவுந்தி தங்கியிருந்த பள்ளி பகுதியை அடைகிறது....கவுந்தியின் பள்ளி சற்றே கிழக்கில் இருக்கிறது.
கண்ணகம் என்னும் தமிழ்ச்சொல் கர்ணகம் என்றானது என ஒத்துக்கொண்டேனே.கர்ணகீ > கண்ணகி, வர்ணம் > வண்ணம் போல.
மதுரைக்கு வடக்கே இருக்கும் திருச்சிராப்பள்ளி என்ற பெயரிலேயே பள்ளி இருக்கிறது
On Sunday, July 10, 2016 at 10:42:20 AM UTC-7, N. Ganesan wrote:ஆலமரம் > ஆலாமரம், புளியமரம் > புளியாமரம், புங்கமரம்> புங்காமரம்,அதுபோல், பேசுவழக்கு:சினப்பள்ளி > சினாப்பள்ளி = Trichinopoly
திருச்சி சமணர்கள் பள்ளி இருந்த இடம். அதை அழித்து மகேந்திரவர்மன் கோவில் எழுப்பினாராம். கல்வெட்டு சான்றுடன் சொல்பவர் சரித்திரப் பேரறிஞர் தி.வி. சதாசிவப் பண்டாரத்தார்``சிராப்பள்ளி`` என்றதன் பெயர்க்காரணத்தைப் பற்றி நமது சரித்திரப் பேரறிஞர் தி.வி. சதாசிவப் பண்டாரத்தார் அவர்கள் செந்தமிழில் எழுதிய சுருக்கக் கருத்து இங்கே தரப்பெறுகின்றது. சிராப்பள்ளிக் கோயில் கட்டியவன் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் நமது அப்பரடிகளை வருத்திச் சைவனான முதல் மகேந்திரவர்மனே. அவன் இத்தலத்து எட்டு சுலோகங்கள் அடங்கிய கல்வெட்டு ஒன்று அமைத்திருக்கிறான். அதில் தான் சைவனானதையும்(S.I.I. Vol. I No. 33, 34.) திருவதிகையில் அமண் பள்ளிகளையிடித்துக் குணபரேச்சுரம் கட்டியதையும் குறிப்பிடுகின்றான். குணபரன் என்பது மகேந்திரவர்மனையே குறிக்கும் பட்டப் பெயர். இதனைச் சிராப்பள்ளியிலும், செங்கற்பட்டு வல்லத்திலும் உள்ள குகைக் கோயிற்கல்வெட்டுக்கள் வலியுறுத்தும். அதைப் போலவே சிராப்பள்ளியாகிய இவ்விடத்தும் அமணப்பள்ளி ஒன்று பெரியதாக இருந்தது. அதனை இடித்தே இந்தக் கோயிலைச் சைவனான மகேந்திரவர்மன் கட்டினான்(S.I.I. Vol. I No. 33).
உச்சிப்பிள்ளையார் கோயிலின் பின்பாகத்தில் இன்றும் சமண முனிவர்களுடைய கற்படுக்கைகளைக் காணலாம். அவற்றில் அந்தந்தப் படுக்கையிலிருந்த சமணமுனிவர் பெயர்கள் குறிக்கப்பெற்றுள்ளன. அவைகள் கி.பி. 5 ஆம் நூற்றாண்டின் நிகழ்ச்சிகள். அவர்களில் ஒருவர் சிரா என்னும் பெயருடையவர் என்று ஒரு கற்படுக்கை அறிவிக்கிறது. ஆதலால் பள்ளிகோயிலானாலும், பெயர் போகாமல் சிராப்பள்ளி எனவே வழங்குகிறது.
..... தேமொழி
On Sunday, July 10, 2016 at 11:29:07 AM UTC-7, N. Ganesan wrote:
On Sunday, July 10, 2016 at 11:24:11 AM UTC-7, தேமொழி wrote:என்ற உங்கள் கேள்விக்கு.... திருச்சிப் பகுதியில் அக்காலத்தில் சமணம் செழித்திருந்ததை மயிலை. சீனி. வேங்கடசாமியும் குறிப்பிடுகிறார் என்பதை நீங்கள் கொடுத்த வரலாறு. தளத்தின் பக்கமே காட்டுகிறது.எல்லா ஊரிலும் சமணம் பார்க்கலாம். சினப்பள்ளி ஊர்ப்பேரே இருக்கிரதே. ஆனால், கொங்கு, கர்னாடகா போல் சமணம் மற்ற இடங்களில் உண்டா?முக்கிய கேள்வி:Trichinopoly - Madurai : is it 360 miles, i.e., 30 kaadam-s??அக்கால அளவையை குறித்து என்னால் உறுதியாக முடிவெடுக்க இயலவில்லை.இடக்குறிப்புகள் எதைக் குறிக்கின்றன என்று அதன் வழி முடிவெடுக்க விரும்பினேன்.
..... தேமொழி..... தேமொழி
நன்றி சிங்கநெஞ்சன் ஐயா,கோவலன் - கண்ணகி மதுரை செல்லும் வழியில் கொங்கு நாடு செல்லவில்லை என்பதே எனது கருத்தும்..
வடபெருங்கோடு என்பதுதான் என்னவென்பது சரியாகத் தெரியவில்லை..
On Monday, July 11, 2016 at 8:40:57 AM UTC-7, mukunthan wrote:நன்றி சிங்கநெஞ்சன் ஐயா,கோவலன் - கண்ணகி மதுரை செல்லும் வழியில் கொங்கு நாடு செல்லவில்லை என்பதே எனது கருத்தும்..
வடபெருங்கோடு என்பதுதான் என்னவென்பது சரியாகத் தெரியவில்லை..
| மஞ்சு சூழ் மலையின் மாணத் தோன்றும் என்றார். ஆனால், மலைநாட்டில் காவிரி பாயும் ஊர்களைச் சொல்லும்போது மாண, போல, ஒக்கும் என்றெல்லாம் சொல்லவில்லை. மலையில் தோன்றும் ஊர்களின் வெள்ளாமையைப் பேசுகிறார்.
|
| மங்குல் வானத்து மலையின் தோன்றும், ஊர் இடையிட்ட நாடுடன் கண்டு, காவதம் அல்லது கடவார் ஆகி, |
பல் நாள் தங்கி, செல் நாள் ஒரு நாள்- |
|
On Tuesday, July 12, 2016 at 3:17:52 AM UTC-7, mukunthan wrote:>கண்ணகியின் கேள்விக்கும் ஆறங்காதம் என விடையிறுத்தபின் தான்காவுந்தி யையையைக் கண்டடி தொழுகின்றனர்..
இது தவறுதான்.. மன்னிக்கவும்நன்றி.அன்பின் முகுந்தன். ஆற்றுக்கு வடக்கே யாரும் அணை கட்டார்.சமண அம்பிகாவும், பலிகேட்கும் அம்பிகாவும் ஒன்றா?- என்கிறீர்கள். நீங்களே யோசிங்க, தேடுங்க, சொல்லியிருக்கேன் பல வருஷமாய்.உங்கள் இழையின் முதல் மடலுக்கு விடைகள் கொடுத்துள்ளேன். பொறுமையாக என் மடல்களைப் படித்தால் விளங்கிவிடும்.நேரம் இருக்கும்போது விரிவாக, கோர்வையாக சொல்கிறேன்.Best wishes,N. Ganesan
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
அன்பிற்குரிய முகுந்தன்,வடபெருங்கோடு என்பது இந்த இடத்தில் மலையெல்லாம் கிடையாது. அது காவிரியாற்றின் வடக்கிலுள்ள பெரிய கரை. புகார் நகரத்தின் அகலம் ஒரு காதம். காவிரி ஊருக்கு நடுவில் ஓடுகிறது. ஓர் ஆற்றின் இரு கரைகளும் மேடுகளாகத்தான் இருக்கும். வடக்கேயுள்ள கரை சற்று அகன்ற மேடு. அவ்வளவுதான். (இங்கே சென்னையில் கூவம், அடையாறு இரண்டின் கரைகளும் மேடுகள் தான். பல இடங்களின் பெருங்கோடுகள் உள்ளன.) புகார் நகரின் ஊடே ஒரு காத தூரம் நடந்து ஊருக்குச் சற்று வெளியே வந்து அங்கேயுள்ள கவுந்தியின் பள்ளிக்கு வந்துசேருகிறார்கள். வடபெருங் குவட்டில் (குவடு>கோடு = கரை) உள்ள மலர்ப்பொழிலில் கவுந்தியின் பள்ளியுள்ளது. இதற்கு அப்புறம் மதுரைக்குப் புறப்படுகிறார்கள். இதுதான் உள்ளமை நிலை. இங்கு பலர் புரிந்துகொண்டது மெத்தச் சரி.நாசாக்காரர் விண்வெளிக்கதையெல்லாம் விடுவார். கொங்குநாட்டிற்கு எப்படியாவது இழுத்துப்போவார். இல்லாவிட்டால் அவருக்குப் பொழுதுபோகாது. கொங்கை விட்டால் தமிழகமே இல்லையென்றுவிடுவார். நாகசாமியின் உரைகளைக் கேட்டு நம் காதில் பூசுற்றப் பார்ப்பார். சிலப்பதிகாரம் ஒரு “நாவல்” என்பார். எதையும் உருப்படியாய் உணரவிட மாட்டார். அவர் பேச்சைக் கேட்டீர்களானால் தலைசுற்றிவிடும். நாசாக்காரர் ஒரு குழப்பவாதி. நீங்கள் இந்த இழையில் வேறு பங்காளர்களிடமிருந்து கருத்துக்கேட்டுப் பாருங்கள். பலனிருக்கும்.சிலப்பதிகாரம் என்பது சற்றே புனைவு கொண்டு பெரிதும் உண்மையாய் நடந்த கதை; ஒரு வரலாறு. அதை எங்கு வேண்டுமானாலும் மெய்ப்பிக்க முடியும்.
அன்புடன்,இராம.கி.
சிலப்பதிகாரம் கொஞ்சம் புனைவா? நிறையப் புனைவு கொண்ட ஒரு நாவல் அது.நீங்கள் சொன்னால் இது மாறிவிடாது. முதல் தமிழ் தேசிய நாவல் என்று சொல்லலாம்.நா. கணேசன்