இளங்கோ அடிகள் சிலை பாருங்கள்.
இளங்கோ *அடிகள்* தன் காப்பியத்தில் ஹீரோவைச்
சமணராகப் படைத்துள்ளார். அந்த நாவலில்,
ஹீரோ கோவலனைக் கொலைதண்டனை
பெறச் செய்வது ஏன்? நடைமுறையில் இருக்கும்
கொலைத்தண்டனை தவறு என்று காட்டுதற்காக.
http://nganesan.blogspot.com/2011/09/kural-550-and-deathsentence.html
செந்தமிழ் மரபில் வள்ளுவர் போல இன்னொரு பெரிய சமண ஆசிரியர் இளங்கோ
அடிகள். இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரத்தில் குற்றம் ஒன்றும் செய்யாத
கோவலன் அரசனது ஆணை மேற்கொண்டு பொற்கொல்லனால் கொலைத்தண்டனை அனுபவிப்பதில்
நிரபராதிகள் கொல்லப்படுவதைக் காட்டி உள்ளார். தூக்குதண்டனைக்கு எதிராகக்
குரலெழுப்பவே கோவலன் அநியாயமாகக் கொல்லப்படுவதாகத் தாம் எழுதிய
காப்பியத்தில் படைத்துள்ளார். கொலைத்தண்டனை அக்காலத்தில் இருந்தது
என்பதற்காக, இளங்கோ அடிகள், திருவள்ளுவர் போன்றவர்கள் அதனை ஆதரித்துப்
பரிந்துரை செய்தார்கள் என்பது அவர்களில் மனிதநேயத்தைக் குறைத்து
மதிப்பிடுவதாகும். இளங்கோவின் குரல் தூக்கு தண்டனையின் அபாயத்தைக் காட்ட
எழுந்த குரல்
கோவலனைச் சமணன் என்று கொலைக்களக் காதையில் பாடுகிறார் இளங்கோ அடிகள்.
”சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின்
நாத்தூண் நங்கையொடு நாள்வழிப் படூஉம்
அடிசி லாக்குதற் கமைந்தநற் கலங்கள்
நெடியா தளிமின் நீரெனக் கூற” - கொலைக்களக் காதை (சிலம்பு)
சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின் - அடிகள் சாவக நோன்புடையராகலான்,
நாத்தூண் நங்கையொடு நாள் வழிப்படூஉம் அடிசில் ஆக்குதற்கு - நாத்தூணாகிய
ஐயையொடு பகற்பொழுதே உண்ணும் உணவினைச் சமைப்பதற்கு, அமைந்த நற்கலங்கள்
நெடியாது அளிமின் நீர் எனக் கூற - பொருந்திய நல்ல கலங்களை நீட்டியாது
நீவிர் அளிமின் என்று சொல்ல ;
சாவகநோன்பி - துறவாது விரதங்காப்போர். அடிகள் என்றது ஈண்டுக்
கோவலனை. நாத்தூண் - கணவனுடன் பிறந்தாள். நாத்தூணாகிய நங்கை. இனி,
நாத்தூணும் நங்கையும் எனலுமாம் ; ஈண்டு நாத்தூண் - ஐயை ; நங்கை - கண்ணகி,
நாள்வழிப்படூஉ மடிசில் - காலத்திலே ஆக்கும் அடிசில் எனலுமமையும். நற்கலம்
- புதுக்கலம். அமைந்த நற்கலம் என்றது தாங்கள் ஆளும் கலமன்றி
மேன்மக்களாளும் கலத்தினை. நெடித்தல் - நீட்டித்தல்
இடைக்குலமடந்தை ஆய்ச்சியர் தம்மொடு மனைப்படுத்துக் கூடி
நீராட்டித் தொழுது (என்று) அளிமின் எனக் கூற என்க. (பெருமழைப் புலவர்
உரை).
------
விரிவாக, இளங்கோ அடிகள் தந்த காப்பியத்தில் சமணம் பற்றி அறிய:
http://www.tamilvu.org/courses/degree/p202/p2023/html/p2023l21.htm
&
http://banukumar_r.blogspot.com/2011/01/blog-post.html
நா. கணேசன்
இன்றைய காலத்திலும் இது நிகழ்கிறது:
தைவான் சீனாவில் ஒறுத்தல் நாகரீகமடைய
இது போன்ற நிகழ்வுகள் உதவும். ஏற்கெனவே,
ஐரோப்பாவின் நாடுகள் ஏற்றுக்கொண்டுவிட்டன.
Death penalty dilemma dividing Taiwan
http://www.bbc.co.uk/news/world-asia-18202396
பொதுமறை தந்தவர்கள் சமணர்கள்.
சமணம் உலகத்தின் மிகப் பழைய சமயம்
என்பார்கள் மேலைநாட்டின் சமயவியல் வரலாற்றறிஞர்கள்.
நா. கணேசன்
https://groups.google.com/group/vallamai/msg/fa344f87ae48626c
http://www.tamilvu.org/courses/degree/p202/p2023/html/p2023l21.htm
ஆம், மருந்துக்குக்கூடத் தேன் சேர்க்க மாட்டார்கள்;
ஆனால் வள்ளுவர் பெருமான் ஏனோ பாலோடு
தேனைக் கலக்கிறார் -
பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்
( குறள் 1121)
தேவ்
> &http://banukumar_r.blogspot.com/2011/01/blog-post.html
>
> நா. கணேசன்
>
> நா. கணேசன்
-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\
> மருந்துக்குக்கூடத் தேன் சேர்க்க மாட்டார்கள்; ஆனால் வள்ளுவர் பெருமான் ஏனோ
> பாலோடு தேனைக் கலக்கிறார்//
> இதெல்லாம் சமணத்துக்கு எதிராக கொண்டு வரப்பட்ட வெற்று கற்பிதம் தேவ்
> சார். தேவையற்று சிரிப்பதைக் கூட சமணம் மறுக்கிறது என்பது பலருக்கு தெரியாது.
> தேவையெனில் சத்திரியர்களை ஊக்குவித்து போர் தொழிலுக்கும் அது ஆதரவு தந்ததுண்டு.
>
வடக்கே இருந்து தமிழுக்கு வந்த சமணத்தை ஏற்பதை ஏற்றவர்கள் வள்ளுவர்
போன்றோர்.
உழவு செய்யக் கூடாது என்று ஒரு விளிம்புநிலையில் ஒரு வலிய சமணத் துறவி
எழுதினால், தமிழ்மறை, உலகப் பொதுமறை எழுதும் வள்ளுவர் தன் தொழிலே ஆகாது
என்று அறிவிக்கவா முடியும்? வேளாண்மையை விட்டுவிட்டால் மனிதகுலம்
எப்படிப்
பெருகி உயிர்வாழ்வது? கரும்பின் தேனைத் தேன்பாகு என்கிறோம்.
’தொட்டால் மணக்கும் ஜவ்வாது
சுவைத்தால் இனிக்கும் தேன்பாகு’
மலரின் தேன் வேண்டாம் என்றால் கரும்பின் தேன் சேர்த்தலாமே.
மேலும் இக்குறள் காமத்துப் பாலைச் சேர்ந்தது. சங்க இலக்கியம் படித்தால்
தெரியும்,
தேன்/தேறல் கள் குடி எப்படி இருந்தது என. பூவின் கள்/மது மாத்திரம் தேன்
அல்ல.
கரும்பின் தேன் தேன்பாகு, தேறல் என்பது உண்டு. ’ஆனின் நெய்யை,
கரும்பினின் தேறலை’
- திருவாசகம்.
வள்ளுவர் தமிழ்ச் சமுதாயம் எப்படி மாற வேண்டும்? ஒருதார மணம்,
கள்ளுண்ணாமை,
ஜீவஹிம்சை இன்மை, துறவு, ... என்ற சமண மேனோக்கங்களைத் தமிழர்
கைக்கொள்ள விருப்பிப் பொதுமறை செய்கிறார். நாலடியை வேளாண்வேதம்
என்பதற்குப்
பாடல்கள் உள்ளன. எல்லாப் 18 கீழ்க்கணக்கும் வேளாண்மறை என்று குறிப்பதும்
உண்டு.
விவசாயி வள்ளுவர் வேடன் முயல் அடிப்பதைப் பார்க்காமலா இருந்திருப்பார்?
முயலுக்கும், யானைக்கும் உள்ள எடை வித்தியாசத்தை சத்திரிய மரபினருக்குச்
சொல்கிறார்.
கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது
களித்தொறுங் கள்ளுண்டல் வேட்டற்றாற் காமம்
வெளிப்படுந் தோறும் மினிது.
(காமம் அலரால் வெளிப்பட வெளிப்பட இனியதாதல், கள்ளுண்பவர் கள்ளுண்டு மயங்க
மயங்க அக்கள்ளுண்பதையே விரும்பினாற் போன்றது -முவ)
இக்குறளைப் படித்து, வள்ளுவர் கள்ளுண்டால் களிப்பு வரும், காமம் அலரால்
இனிதாதல்
போல். எனவே கள் உண்ணலாம் என்று சொன்னார் என்பது போல் உள்ளது.
அரசன் மனித உயிரைக் கொல்லலாம் என்று வள்ளுவர் சொல்லியுள்ளார் என்று
முரசறைதல். அது “ஒன்றாக நல்லது கொல்லாமை” என்ற தமிழ்மறைக்கு
நேர்மாறானது. மனுநீதியா வள்ளுவர் பாடியுள்ளார்?
வள்ளுவர் வாழ்ந்த காலத்தில் காடுகள் மிகுதி, காட்டுத் தீ பரவி
விலங்குகள் அழியும். அவற்றின் கறி வேகும், நிணம் தகிக்கும்
காட்சியைத் தமிழ் அகமரபில் அழகாய்ப் பாடியுள்ளார்:
1260. நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க் குண்டோ
புணர்ந்தூடி நிற்பேம் எனல்.
இந்தக் அகக் குறளைப் படித்து, வள்ளுவர் கொள்கை
கொழுப்புடன் கூடிய ஊனை Barbeque http://en.wikipedia.org/wiki/Barbeque
செய்யச் சொல்கிறார் வள்ளுவர் என்பதா:?
அக இலக்கிய மரபு தமிழின் சிறப்பு. அதற்காக 25 அத்தியாயம் குறளில்
வள்ளுவர்
சேர்த்துகிறார். இதில் இன்னொரு சிறப்பும் இருக்கிறது - பலர் அறியாதது.
ஐந்திணைக் கோட்பாடு இருக்கிரது. ஒரு திணைக்கு 50 குறள்.
காமத்துப்பாலில் ஐந்திணை பற்றி இணையத்தில் இருக்கிறதா எனப் பார்க்கணும்.
நா. கணேசன்
உண்மை. விவசாயி வள்ளுவருக்கு தேனில் வகைகள் பல தெரியும்.
3 உதாரணம் தருகிறேன். பூத் தேன், பனைத் தேன், கரும்புத் தேன்.
(1) இதில் வள்ளுவர் கரும்பின் தேனைச் சொல்லியிருக்கலாம் என்பதற்குச்
சங்கச் சான்றோர் செய்யுளில் ஆதாரம் இருக்கிறது. வள்ளுவர் வாக்கு
குறுந்தொகைச் செய்யுளைப் பிரதிபலிக்கிறது எனலாம்.
”பாலொடு தேன் கலந்து அற்றே பணிமொழி
வால் எயிறு ஊறிய நீர்” (1121)
இதைப் பாடுதற்கு முன்னரே தமிழில் கரும்புத் தேனுடன் ஒப்பிடும்
செய்யுள் குறுந்தொகையில் காண்க.
”கரும்பின் காலெறி கடிகைக் கண் அயின்று அன்ன -
வால் எயிறு ஊறிய வசை இல் தீ நீர்க் கால் அமை
குறுந்தொடிக் குறுமகள்” - காலெறி கடிகையார், குறுந்தொகை 267.
அதாவது, கரும்பின் அடிப்பகுதியை வெட்டும் இரும்பு மழு
கரும்புத் தேனைச் சுவைத்தது போல, காதலியின் எச்சில்
தேனாய்ச் சுவைத்தது என்கிறான் தலைவன்.
சேக்கிழார் பெரியபுரானத்தில் கரும்பின் தேன் பற்றிப்
பாடுகிறார்:
விரும்பு மென்கணுடையவாய் விட்டுநீள்
கரும்பு தேன்பொழி யுங்கண மங்கலம்
விரும்புதற்குரிய மெல்லிய கணுக்களைக் கொண்டு,
நீளமாக வளர்ந்தும் இருக்கிற கரும்புகள் பொழியும்
தேன் வளப்பம் கொண்ட கணமங்கலம் - என்பது பொருள்.
முட்டில்பல் போகத் தொருதனி நாயகன் மூவுல குக்குரிய,
கட்டியைத் தேனை அமுதைநன் பாலைக் கனியைக் கரும்புதன்னை,
மட்டவிழ் தண்ணந்து ழாய்முடி யானை வணங்கி அவன்திறத்துப்
பட்டபின்னை,இறை யாகிலும் யானென் மனத்துப் பரிவிலனே.
வெல்லத்தின் பின்னால் வரும் தேன் கரும்பினது என்றும் சொல்லலாம்.
அந்த அடியின் கடைசியில் கரும்பைத்தான் சொல்கிறார் ஆழ்வார்.
(2) மலர்த் தேன் எடுத்தல் பிரபலம். இதனைச் சீவ இம்சை
எனச் சமணத் துறவியர் உண்ண மாட்டார்கள்.
(3) பனைத் தேன். இதனை கிராமங்களில் பனந்தேன் என்பது பெருவழக்கு.
கருப்பங்கட்டி - வெல்லம். ஆனால் பாகாக இருப்பது பனைத் தேன்
(அ) பனந்தேன்.
http://www.manaosai.com/index.php?option=com_content&view=article&id=341:2009-12-30-22-46-05&catid=29:2009-07-02-22-33-23&Itemid=70
”பாலொடு தேன் கலந்து அற்றே பணிமொழி
வால் எயிறு ஊறிய நீர்” (1121)
ஆக, பொதுமறை தந்த வள்ளுவப் பெருமான் பனந் தேனையோ, கருப்பன் தேனையோ
பாடியிருக்கிறார். சங்கச் சான்றோர் வழியில் (காலெறி கடிகையார் செய்யுள்
காண்க),
கரும்புத் தேன் குறள் 1121 எனக் கருதுகிறேன்.
நா. கணேசன்
http://groups.google.com/group/tiruvalluvar/msg/6b1cbc66b1fc7a5f
(சம்பந்தர் சமணர்களைக் கழுவேற்ற உழைத்தவர். அவர் பல்துலக்காதவர்
சமணர்கள் என்று பாடுகிறார். ஆனால் வாலெயிறு எனப்
பாடும் வள்ளுவர் காதலர் intimacy-ல் பல்விளக்கா விட்டால்
பாக்டீரியா உற்பவிக்கும் துர்நாற்றமும், 30 வயதில் பொக்கைவாய்
ஆகும் என்பதை அறிந்தவர்.)
மேப்பிள் தேன்:
http://en.wikipedia.org/wiki/File:Maple_syrup.jpg
மேப்பிள் தேன் பற்றி அறிய,
http://en.wikipedia.org/wiki/Maple_syrup
Nearing, Helen; Nearing, Scott (2000). The maple sugar book (50th
anniversary ed.). Chelsea Green Publishing. ISBN 978-1-890132-63-7.
விலைஉயர்ந்த கடைகளில் தென்னிந்தியாவில் மேப்பிள் தேன் கிடைக்கலாம்.
நா. கணேசன்
பனந்தேன் பற்றி அறிய,
http://www.manaosai.com/index.php?option=com_content&view=article&id=341:2009-12-30-22-46-05&catid=29:2009-07-02-22-33-23&Itemid=70
.
>
> ”பாலொடு தேன் கலந்து அற்றே பணிமொழி
> வால் எயிறு ஊறிய நீர்” (1121)
>
How're you?
தமிழ் தன் சொல்வளத்தை இழந்துவருகிறது.
எல்லா திராவிட மொழிகளிலும் பார்க்க வேண்டும்.
தே-/தீ- என்பது தேனின் வேர். இனிமை எனப் பொருள்.
தேங்கனி, தேனிசை, தேம்பா அணி (காப்பியம்),
தீஞ்சுவை, தீந்தமிழ், ...
தேன் = sugar liquid.
இந்தியா வந்தபோது, அலெக்சாண்டரின் சேனாபதி
கரும்பைக் கண்டு வியந்து சொல்லியுள்ளார்:
’தேனீக்களே இல்லாமல் தேனை அள்ளித்தரும் ஓர் அற்புதச் செடி’
”ஞானக் கரும்பின் தெளிவைப், பாகை,
நாடற் கரிய நலத்தைநந்தாத் தேனைப்,
பழச்சுவை ஆயினானனை” - திருவாசகம்
இங்கே மூன்று நிலைகளைச் சொல்கிறார்.
தெளிவான சாறு, இளகலான தேன் பாகு,
வெல்லக் கட்டிக்கு முன்பு உள்ள
highly viscous நிலையில் ‘நந்தாத் தேன்’
என்கிறார். நந்து-நத்து (நத்தை.
நந்திக்கடல் (முள்ளிவாய்க்கால்) )
பின்னர் முப்பழத்தின் சுவை என்கிறார்.
பனைதரும் பனந்தேனிலும் இம் மூநிலைகள்
தெளிவு, பாகு, கெட்டித் தேன் உண்டு.
கரும்புத் தேன் இப்போது நகரங்களில்
தெரியாவிடினும், தமிழ் இலக்கியமும், கிராமங்களும்
காட்டிக் கொண்டுதான் உள.
பறிப்ப வேரொடு முன்றில் வாய்ப் படர் பசும் கொடியைக்
கறிப்ப நாகு இளம் காய் எலாம் கரும்பு தேன் கவிழ - திருவிளையாடற்.
தேவாரம் பாருங்கள்:
கரும்பு தேன்கட்டியும், கதலியின் கனிகளும்,
அரும்பு நீர் முகலியின் கரையினில், அணி மதி
ஒருங்கு வார்சடையினன், காளத்தி ஒருவனை,
விரும்புவார்அவர்கள்தாம் விண்ணுலகு ஆள்வரே.
கரும்பின் தேனால் ஆகிய கருப்பங்கட்டி(வெல்லம்)யும், வாழைக் கனிகளும் ....
நா. கணேசன்
On Jun 10, 9:31 am, "Gopalakrishnan (Gopi)" <hig...@gmail.com> wrote:
> கரும்பிலிருந்து வெல்லம் செய்யும் போது கட்டியாகும் பதத்துக்கு முன் வரும்
> பாகை "தேம்பாவு" (தேன் + பாகு) என்று எங்கள் பகுதியில் சொல்வர். சிறு வயதில்
> எங்கள் வீட்டில் இந்த "தேம்பாவில்" வெள்ளைப் பணியாரம் ஊற வைத்து
> சாப்பிட்டிருக்கிறேன்.
>
> எனவே கரும்பு தேன் என்ற சொல் சில தலைமுறைகள் முன் வரை அன்றாட வாழ்விலேயே
> புழக்கத்தில் இருந்திருக்கலாம் என்பது எனது அறிதல்.
>
> 2012/6/10 N. Ganesan <naa.gane...@gmail.com>
> >http://www.manaosai.com/index.php?option=com_content&view=article&id=...
>
> > .
>
> > > ”பாலொடு தேன் கலந்து அற்றே பணிமொழி
> > > வால் எயிறு ஊறிய நீர்” (1121)
>
> > > ஆக, பொதுமறை தந்த வள்ளுவப் பெருமான் பனந் தேனையோ, கருப்பன் தேனையோ
> > > பாடியிருக்கிறார். சங்கச் சான்றோர் வழியில் (காலெறி கடிகையார் செய்யுள்
> > > காண்க),
> > > கரும்புத் தேன் குறள் 1121 எனக் கருதுகிறேன்.
>
> > > நா. கணேசன்
> >http://groups.google.com/group/tiruvalluvar/msg/6b1cbc66b1fc7a5f
>
> > > (சம்பந்தர் சமணர்களைக் கழுவேற்ற உழைத்தவர். அவர் பல்துலக்காதவர்
> > > சமணர்கள் என்று பாடுகிறார். ஆனால் வாலெயிறு எனப்
> > > பாடும் வள்ளுவர் காதலர் intimacy-ல் பல்விளக்கா விட்டால்
> > > பாக்டீரியா உற்பவிக்கும் துர்நாற்றமும், 30 வயதில் பொக்கைவாய்
> > > ஆகும் என்பதை அறிந்தவர்.)
>
> > --
> > You received this message because you are subscribed to the Google
> > Groups "tamil_ulagam" group.
> > To post to this group, send email to tamil_...@googlegroups.com
> > To unsubscribe from this group, send a blank email to
> > tamil_ulagam...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/tamil_ulagam?hl=en
தேம்:தேன் = இனிமை
தேம்/தேன் < தே-/தீ-
தேம்குழல் (தேங்குழல்) - கன்னடத்தில் தேனுகுழல் என்கின்றனர்.
தேம்காய் - தேங்காய் - இனிய காய்.
தேத்தடை = தேம் + அத்து + அடை.
தேனுக்குப் பழந்தமிழில் தேம் என்றும் பெயர்.
தேம்/தேன் < தே- என்ற் காட்டும் proof
தேத்திறால் tē-t-t-iṟāl , n. < தேம்¹ + இறால். Honeycomb; தேனிறால்.
(தொல். எழுத். 344, உரை.)
தேப்பானை - தேன் பெய்த பானை - நன்னூல் உரை (மயிலைநாதர்)
தேப்பெருமாள் - இனிய பெருமாள் (காஞ்சியில்)
தேம்¹ tēm , n. 1. Sweetness, pleasantness; இனிமை. தேங்கொள் சுண்ணம்
(சீவக. 12). 2. Fragrance, odour; வாசனை. (பிங்.) தேங்கமழ் கோதை (பு. வெ.
12, 7). 3. Honey; தேன். தேம் படு நல்வரை நாட (நாலடி, 239). 4. Honey
bee; தேனீ. தேம்பாய் கடாத்தொடு (பதிற்றுப். 53, 17). 5. Toddy; கள்.
(சூடா.) 6. Must of an elephant; மதம். தேம்படு கவுள . . . யானை
(முல்லைப். 31). 7. Oil; நெய். தேங்கலந்து மணிநிறங் கொண்ட மாயிருங்
குஞ்சியின் (குறிஞ்சிப். 111). 8. see தேமம். Loc.
தேமா¹ tē-mā
, n. < தேம் + மா. 1. [M. tēṇ- māvu.] Sweet mango, 1. tr., Mangifera
indica; மாமரவகை. பன்றிக்கூழ்ப் பத்தரிற் றேமா வடித் தற்றால் (நாலடி,
257). 2. A technical term for the metrical foot of nēr-nēr தேமாங்கனி
tē-māṅ-kaṉi
, n. A technical term for the metrical foot of nēr-nēr-nirai, (- -
̮̮); நேர் நேர் நிரை என்ற சீரைக் குறிக்கும் வாய் பாடு (காரிகை, உறுப்.
4.)
More later,
N. Ganesan
மரபு வழிப்பகுப்பை வள்ளுவர் ஒப்புக்கொள்கிறாரா ?
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ன ஆயிற்று ?
‘ஒன்றாக நல்லது கொல்லாமை’ ஒரு மரபினருக்கு
இல்லை என்று ஆனதா ?
உமது பகுப்புப் படியே கொடியோரின் உயிர் பறித்தலை
(வேந்து ஒறுத்தல்) அரச மரபினருக்குச் சொன்னது என எடுத்துக்
கொள்வதில் என்ன தடை ?
தேவ்
> கொழுப்புடன் கூடிய ஊனை Barbequehttp://en.wikipedia.org/wiki/Barbeque
On Jun 10, 7:57 pm, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> உமது பகுப்புப் படியே கொடியோரின் உயிர் பறித்தலை
> (வேந்து ஒறுத்தல்) அரச மரபினருக்குச் சொன்னது என எடுத்துக்
> கொள்வதில் என்ன தடை ?
>
ஒறுத்தல் என்றால் தண்டித்தல் என்று பொருள். கொல்லுதல் அல்ல.
அரச மரபினருக்கும் எல்லோருக்கும் ஒரு தார மணத்தை வலியுறுத்துகிறார்.
'ஒன்றாக நல்லது கொல்லாமை' என்கிறார், அதை நினைவில் கொன்டால் ஒறுத்தல்
எப்படி ஆற்றவெண்டும் எனப் புரியும். யசோதரகாவியம் போன்றவற்றில் கொல்லாமை
வலியுறுத்துகிறார்கள்.
நா. கணேசன்
உமது பகுப்புப் படியே கொடியோரின் உயிர் பறித்தலை
(வேந்து ஒறுத்தல்) அரச மரபினருக்குச் சொன்னது என எடுத்துக்
கொள்வதில் என்ன தடை ?
ஒறுத்தல் என்றால் தண்டித்தல் என்று பொருள். கொல்லுதல் அல்ல.
'ஒன்றாக நல்லது கொல்லாமை'
பாஹுபலி என்பதற்கு ‘வலிமை மிக்க தோள்’
என்று ஜைநர்களே பொருள் கூறுகின்றனர்.
கடிதோச்சி மெல்ல எறிவதற்கும் வலிமையான
தோள் வேண்டும்போல :))
தேவ்
On Jun 10, 8:37 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2012/6/11 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
> > ஒறுத்தல் என்றால் தண்டித்தல் என்று பொருள். கொல்லுதல் அல்ல.
>
> கொலையிற் கொடியோரை வேந்தொறுத்தல்
>
> வேந்து, கொடியோரைக் கொலையினினொறுத்தல் என்பது அன்வயம். இங்க பாதி அங்க பாதி
> புட்டுக்கக் கூடாது.
>
அன்வயிக்காமல் நேரான பொருள் குறளுக்கு இருக்கிறது. கொலைதண்டனை அவற்றில்
இல்லை.
அன்புடன்
நா. கணேசன்
This does not say Jains are prescribing death sentence.
There is no adoration of death sentence in Jaina works.
In fact, Cilappathikaram shows that death sentence
is faulty and can punish the innocent, Kovalan in that novel.
...................................... நீள்வெங் கழுவூர்ந்தும்
குஞ்சிக் களியானைக் கோட்டா லுழப்பட்டும்
...................................
கணேசர் சீவக சிந்தாமணியைச் சமண நூல்
இல்லையென மறுக்கிறார்
தேவ்
அன்வயிக்காமல் நேரான பொருள் குறளுக்கு இருக்கிறது. கொலைதண்டனை அவற்றில்
இல்லை.
அன்புடன்
-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\
கொலை என்ற வார்த்தையை திருக்குறளில் பலமுறை பயன்படுத்தியுள்ளதால் திருவள்ளுவர் சமணரல்ல. கொல்லாமையை வலியுறுத்துவதால் இந்துவும் அல்ல... இதிலிருந்து அவர் வேறு ஏதோ ஒரு மதத்தை சார்ந்தவர் என்பது தெரிகிறது :))
( இந்து மதக் கோட்பாடுன்னா முதல்ல என்ன ? )
இந்து சமயம் கொல்லாமையை வலியுறுத்துவதில்லை
என்பது தவறான புரிதல்;
Hinduism views in a practical way;
Strict nonviolence is totally impossible
in normal life
தேவ்
On Jun 10, 11:10 pm, Prakash Sugumaran <prakash...@gmail.com> wrote:
> கொலை என்ற வார்த்தையை திருக்குறளில் பலமுறை பயன்படுத்தியுள்ளதால் திருவள்ளுவர்
> சமணரல்ல. கொல்லாமையை வலியுறுத்துவதால் இந்துவும் அல்ல... இதிலிருந்து அவர்
> வேறு ஏதோ ஒரு மதத்தை சார்ந்தவர் என்பது தெரிகிறது :)) ( இந்து மதக்
> கோட்பாடுன்னா முதல்ல என்ன ? )
>
> 2012/6/11 Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
>
>
>
>
>
>
>
>
>
>
>
> > 2012/6/11 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
> > அன்வயிக்காமல் நேரான பொருள் குறளுக்கு இருக்கிறது. கொலைதண்டனை அவற்றில்
> >> இல்லை.
>
> >> அன்புடன்
>
> > அப்படியானால், குறளில் உள்ள ‘கொலையில்’ என்ற சொல்லை எங்கே கொண்டுபோய்க்
> > கூட்டுவது? அதன் பொருள் என்ன? ‘கொலையில்’ என்ற சொல் ஏன் அந்தக் குறளில்
> > பயன்படுத்தப்பட்டுள்ளது?
>
> > --
> > அன்புடன்,
> > ஹரிகி.
>
> > -- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\
>
> --
> எஸ். ப்ரகாஷ்
> prakash sugumaran
>
> visit my Bloghttp://thamizharkoodu.blogspot.com/
> My Facebookhttp://www.facebook.com/#!/prakashvlr
> My New Short Story in Vallamaihttp://www.vallamai.com/special/?p=192
> தமிழ்நாடு சுத்தலாம் வாங்க வாங்க..
> (tamilnadu travel guide)http://www.tamilnadutravelguide.com/
I have some questions:
Kannagi madurai erithal, is this really true or Madhurai Kannagiyal
erinthathu, is that true ?
I am not really sure about how samanargal can be non violent, if they
aided kings by advising them to conquer new territories and implement
the jain rules.
A threat or an ordinance passed by a king to his common folk is
violence, which is acceptable in monarchy.
Also, I am curious do you mean to say Celtic tribes are the reason for
Hindutva ? Prior to that they were primarily nomads.
Celts lived in somewhere 700 BC to 600 AD. If they are the ones who
came to India that seems odd, coz Mohenjo-daro was abandoned by 1800,
which was a patron of vedic rituals.
Please do correct me if I am wrong, I am curious to know a lot of truths.
- R
2012/6/8 Prakash Sugumaran <praka...@gmail.com>:
--
Ravi Venugopal
US: +1 248 854 5310
Ind: +919840739001
Life is nothing but a string of memories!
>>> இளங்கோ *அடிகள்* தன் காப்பியத்தில் ஹீரோவைச்
சமணராகப் படைத்துள்ளார். அந்த நாவலில்,
ஹீரோ கோவலனைக் கொலைதண்டனை
பெறச் செய்வது ஏன்? நடைமுறையில் இருக்கும்
கொலைத்தண்டனை தவறு என்று காட்டுதற்காக <<<
கணேசர் ஐயா இப்படிச் சிரமப்பட்டுத் துப்பறிந்து கண்டுபிடிக்க
இடம் கொடுக்காமல் இளங்கோ அடிகள் தெளிவாக
நூற்பயன் சொல்லிவிட்டார் -
”அரசியல் பிழைத்தோர்க்கு அறம்கூற்று ஆவதூஉம்,
உரைசால் பத்தினிக் குயர்ந்தோர் ஏத்தலும்,
ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம்,
சூழ் வினைச் சிலம்பு காரண மாகச்
சிலப்பதி காரம் என்னும் பெயரால்
நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்”
’நடைமுறையில் இருக்கும் கொலைத்தண்டனை
தவறு என்று காட்டுதற்காகச் சிலம்பை எழுதினேன்’
என்று அடிகளார் சொல்லவில்லை.
இன்னா செய்யாமையை மட்டுமே சிலம்பு வலியுறுத்துவதாக
இருந்தால் மதுரை எரியுண்டதை நியாயப்படுத்த
முடியாமல் போகும். மேலும் அந்நூல் வருணிக்கும்
வேறு சில பகுதிகளும் பொருளற்றவையாகும்.
எரியூட்டிய கண்ணகியை உரைசால்
பத்தினி என்றே சிலம்பு போற்றுகிறது.
அரசியல் பிழை என்று கூறப்படுவது
பாண்டியன் ஆராயாமல் விசாரணை இன்றித்
தீர்ப்பு வழங்கியதை
On Jun 10, 11:10 pm, Prakash Sugumaran <prakash...@gmail.com> wrote:
> கொலை என்ற வார்த்தையை திருக்குறளில் பலமுறை பயன்படுத்தியுள்ளதால் திருவள்ளுவர்
> சமணரல்ல. கொல்லாமையை வலியுறுத்துவதால் இந்துவும் அல்ல... இதிலிருந்து அவர்
> வேறு ஏதோ ஒரு மதத்தை சார்ந்தவர் என்பது தெரிகிறது :)) ( இந்து மதக்
> கோட்பாடுன்னா முதல்ல என்ன ? )
>
விடிய, விடிய ராமாயணம் கேட்ட கதையாய் இருக்கு. கொலையில் என்ற சொல்லை
எங்கே கூட்டுவது எனத் தெரியாதா புலவர்களுக்கு?
நா. கணேசன்
> 2012/6/11 Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
>
>
> > 2012/6/11 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
> > அன்வயிக்காமல் நேரான பொருள் குறளுக்கு இருக்கிறது. கொலைதண்டனை அவற்றில்
> >> இல்லை.
>
> >> அன்புடன்
>
> > அப்படியானால், குறளில் உள்ள ‘கொலையில்’ என்ற சொல்லை எங்கே கொண்டுபோய்க்
> > கூட்டுவது? அதன் பொருள் என்ன? ‘கொலையில்’ என்ற சொல் ஏன் அந்தக் குறளில்
> > பயன்படுத்தப்பட்டுள்ளது?
>
> > --
> > அன்புடன்,
> > ஹரிகி.
>
> > -- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\
>
> --
> எஸ். ப்ரகாஷ்
> prakash sugumaran
>
> visit my Bloghttp://thamizharkoodu.blogspot.com/
> My Facebookhttp://www.facebook.com/#!/prakashvlr
> My New Short Story in Vallamaihttp://www.vallamai.com/special/?p=192
> தமிழ்நாடு சுத்தலாம் வாங்க வாங்க..
> (tamilnadu travel guide)http://www.tamilnadutravelguide.com/
On Jun 11, 12:06 am, Dhivakar <venkdhiva...@gmail.com> wrote:
> திருவாளர் நாசா நா.கணேசன லட்சம் முறை இம்போசிஷன் எழுதினால் கூட இளங்கோவையும்
> திருவள்ளுவரையும் சமணராக ஏற்றுக்கொள்ள அவர் எழுதிய சிலப்பதிகாரத்தில் எந்த வித
> ஆதாரமில்லை.
சரித்திர ஆராய்ச்சியாளர் திவாகர் சார்,
சிலம்பில் எந்த ஆதாரமும் இல்லையா?
இழையின் முதல் மடலில் உள்ள தொடுப்பு
தமிழறிஞர் கூற்று.
http://www.tamilvu.org/courses/degree/p202/p2023/html/p2023l21.htm
நா. கணேசன்
https://groups.google.com/group/vallamai/msg/fa344f87ae48626c
On Jun 10, 10:13 pm, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> On Jun 10, 9:31 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>
> >>> There is no adoration of death sentence in Jaina works <<<
>
> ...................................... நீள்வெங் கழுவூர்ந்தும்
> குஞ்சிக் களியானைக் கோட்டா லுழப்பட்டும்
> ...................................
>
> கணேசர் சீவக சிந்தாமணியைச் சமண நூல்
> இல்லையென மறுக்கிறார்
>
??
சமணர் இளங்கோ அடிகள் கொலைதண்டனை பிழையாக முடியும்
என்று காட்ட தன் காப்பியம் செய்தார்.
சமணக் காப்பியம் சீவக சிந்தாமணி விருத்தத்தின் ஈற்றடியிலும்
இதே செய்தி உள்ளது. அரசர்கள் கொடுக்கும் கழுவேற்றம்,
கொலைதண்டனை மாந்தர்க்கு துன்பத்தில் ஆழ்த்துகின்றன
என்கிறார் சிந்தாமணி தந்த தேவர்.
குஞ்சிக் களியானைக் கேட்டா லுழப்பட்டுந்
துஞ்சிற்று உலகு அந்தோ துன்பக் கடலுள்ளே
திருவள்ளுவ தேவர் கொலை செய்பவர்களைக் கொல்லச்
சொல்லவில்லை.
----------------
தமிழ் சமணம் பற்றி யுனிவெர்ஸிட்டி புஸ்தகங்கள் படிக்க
பரிந்துரை. இல்லாவிட்டால், சர்ச் எவாஞ்சலிஸ்ட் போல்
70, 80 வருடம் முன் எழுதிய ஒருவரின் பேச்சுகளை
நீங்கள் மேற்கோள் காட்டுவதற்கு பதில் சொல்ல அவசியமில்லை.
தமிழறிஞர்கள் முடிபு குறள், சிலம்பு, சிந்தாமணி பற்றி
எழுதி உள்ளனர். அதைத் தந்துள்ளேன்.
நா. கணேசன்
விடிய, விடிய ராமாயணம் கேட்ட கதையாய் இருக்கு. கொலையில் என்ற சொல்லை
எங்கே கூட்டுவது எனத் தெரியாதா புலவர்களுக்கு?
நா. கணேசன்
அதைத்தான் எதிர்பார்த்தேன் :))
அரசர்கள் கொலைத் தண்டனை கொடுத்துள்ளனரா ,
இல்லையா ? துன்புறுத்தியாவது தீயோரைத்
திருத்துவதும், பிறருக்கு எச்சரிக்கை செய்வதும்தானே
தண்டனை தருவதன் நோக்கம் ?
திருடன்தானே போலீஸுக்குப்
பயப்பட வேண்டும் ! நன்னெறி
செல்வோர் யாருக்கு அஞ்ச வேண்டும் ?
> 70, 80 வருடம் முன் எழுதிய ஒருவரின் பேச்சுகளை
> நீங்கள் மேற்கோள் காட்டுவதற்கு பதில் சொல்ல அவசியமில்லை.<<<
ஏன் ? அவர் தமிழறிஞர்
இல்லையா ? அவர் தமிழறிஞர்
இல்லையென நிரூபிக்க முடியுமா ?
உமக்குப் பாதகமாக இருப்பதால்
நழுவப் பார்ப்பது வள்ளுவம்
சொல்லும் நடுவு நிலைமைக்கு
முரண் இல்லையா ?
தேவ்
உமக்குப் பாதகமாக இருப்பதால்
நழுவப் பார்ப்பது வள்ளுவம்
சொல்லும் நடுவு நிலைமைக்கு
முரண் இல்லையா ?
On Jun 11, 7:53 am, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> On Jun 11, 6:51 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:>>>> அரசர்கள் கொடுக்கும் கழுவேற்றம், கொலைதண்டனை
>
> மாந்தர்க்கு துன்பத்தில் ஆழ்த்துகின்றன
> என்கிறார் சிந்தாமணி தந்த தேவர் <<<<
>
> அதைத்தான் எதிர்பார்த்தேன் :))
> அரசர்கள் கொலைத் தண்டனை கொடுத்துள்ளனரா ,
> இல்லையா ? துன்புறுத்தியாவது தீயோரைத்
> திருத்துவதும், பிறருக்கு எச்சரிக்கை செய்வதும்தானே
> தண்டனை தருவதன் நோக்கம் ?
>
> திருடன்தானே போலீஸுக்குப்
> பயப்பட வேண்டும் ! நன்னெறி
> செல்வோர் யாருக்கு அஞ்ச வேண்டும் ?
>
> > 70, 80 வருடம் முன் எழுதிய ஒருவரின் பேச்சுகளை
> > நீங்கள் மேற்கோள் காட்டுவதற்கு பதில் சொல்ல அவசியமில்லை.<<<
>
> ஏன் ? அவர் தமிழறிஞர்
> இல்லையா ? அவர் தமிழறிஞர்
> இல்லையென நிரூபிக்க முடியுமா ?
>
I don't see these as University level researches.
sincerely
N. Ganesan
http://www.tamilmurasuaustralia.com/2012/06/36.html
நா. கணேசன்
கொலைதண்டனை தரும் தவற்றை இளங்கோ அடிகளும்
கோவலன் மரணத்தில் காட்டியுள்ளார்.
விடிய, விடிய ராமாயணம் கேட்ட கதையாய் இருக்கு. கொலையில் என்ற சொல்லை
எங்கே கூட்டுவது எனத் தெரியாதா புலவர்களுக்கு?
நா. கணேசன்
ஆமாம் தெரியவில்லை. சீதைக்கு ராமன் சித்தப்பாவா இல்லையா என்று தெரியவில்லை. அதனால்தான் ஆஞ்சநேயரிடம் கேட்கிறேன். ஆஞ்சநேய மூர்த்தி வந்து கூட்டிச் சொல்லட்டுமே! சமாளிப்பு எதற்கு?
ஏன் ? அவர் தமிழறிஞர்I don't see these as University level researches.
> இல்லையா ? அவர் தமிழறிஞர்
> இல்லையென நிரூபிக்க முடியுமா ?
>
I know Arumuka Navalar's scholarship, and it is refered to in
University researches.
I don't see these as University level researches.
sincerely
> I know Arumuka Navalar's scholarship, and it is refered to in
> University researches.
>
http://nganesan.blogspot.com/2012/03/amudhabharathi.html
இன்று படித்த குறள் விளக்கம் ஈர்த்தது.
இன்று பார்த்த குறள் விளக்கம். ஈழத் தமிழில்.
உ என்ற சுட்டு (medial deixis) தமிழ்நாட்டில் மறைந்தாலும்
இலங்கையில் இருக்கிறது.
http://www.tamilmurasuaustralia.com/2012/06/36.html
கொலைதண்டனை தரும் தவற்றை இளங்கோ அடிகளும்
மன்னிக்கனும்,
கொட்டைப்பாக்கு வீசை எவ்வளவுன்னு கேட்டா எட்டையபுரத்துக்கு வழி இந்தா இந்தப் பக்கம்னு சொல்ற மாதிரி இருக்கு. நேரடியா இது தான் அர்த்தம்னு உங்களோட எழுத்தில் சொல்லுங்க.
On Jun 11, 9:13 pm, ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com> wrote:
> மன்னிக்கனும்,
>
> கொட்டைப்பாக்கு வீசை எவ்வளவுன்னு கேட்டா எட்டையபுரத்துக்கு வழி இந்தா இந்தப்
> பக்கம்னு சொல்ற மாதிரி இருக்கு. நேரடியா இது தான் அர்த்தம்னு உங்களோட
> எழுத்தில் சொல்லுங்க.
>
> Iyappan Krishnan
>
> http://www.flickr.com/iyappanhttp://photography-in-tamil.blogspot.comhttp://kaladi.blogspot.com
> *<>*aham brahmasmi *<>*
> *>*<*
> Dont argue with ppl who says "World is flat" but advice them not to reach
> the edge of the world
> *>*<*
> **
சரிங்க சார். என் எழுத்தில் நிறைய எழுதியுள்ளேன். இணையத்திலும்,
வலைப்பதிவிலும்.
நீங்கள் பார்க்கலாம்.
நாவலர் புஸ்தகம் படிச்சிருக்கீங்களா? :-)
படித்துப் பாருங்க, என்ன எழுதியுள்ளார்-னு தெரியும்.
BTW, I've read Navalar quite well, and it is recorded
in prestigious University researches.
நா. கணேசன்
சரிங்க சார். என் எழுத்தில் நிறைய எழுதியுள்ளேன். இணையத்திலும்,
வலைப்பதிவிலும்.
நீங்கள் பார்க்கலாம்.
நாவலர் புஸ்தகம் படிச்சிருக்கீங்களா? :-)
படித்துப் பாருங்க, என்ன எழுதியுள்ளார்-னு தெரியும்.
BTW, I've read Navalar quite well, and it is recorded
in prestigious University researches.
On Jun 11, 9:46 pm, ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com> wrote:
> 2012/6/12 N. Ganesan <naa.gane...@gmail.com>
நன்றி ஐயா :)
எனக்கு அமுதபாரதி எழுத்து, நாவலர் எழுத்து - ஒன்றும் தெரியாதுங்க.
யுனிவெர்சிட்டி ரிஸெர்ச், யுனிகோட் ரிஸெர்ச் ...எல்லாம் இந்த இழையில்தான்
கத்துக்கணும்.
அன்புடன்,
நா. கணேசன்
> நன்றி ஐயா :)
>
> உங்கள் எழுத்துகளை அகத்தியர் குழுமம் முதற்கொண்டே படித்து வருகிறேன். நன்றி
>
> -- ஐயப்பன் கிருஷ்ணன்
நன்றி ஐயா :)
எனக்கு 2 நாவலர் எழுத்துக்கள் தெரியும்.
ஒரு நாவலரைப் பத்தி வல்லமையில் எழுதினேன்.
5 தடவை தமிழ்நாட்டு முதல்வரா இருந்தவர் மேற்கோள் காட்டினார்
என்று தகவல் வந்தது. அந்த நாவலரின் தமிழ்ப்பணி,
http://nganesan.blogspot.com/2012/06/tiruvalluvar-tirunaal-navalar.html
நா. கணேசன்
நன்றி ஐயா :)
எனக்கு அமுதபாரதி எழுத்து, நாவலர் எழுத்து - ஒன்றும் தெரியாதுங்க.
யுனிவெர்சிட்டி ரிஸெர்ச், யுனிகோட் ரிஸெர்ச் ...எல்லாம் இந்த இழையில்தான்
கத்துக்கணும்.
அன்புடன்,
நா. கணேசன்
-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\
தமிழ் இலக்கண வரையறைக்குள் திருக்குறள் முழுமையாக பொருந்துகிறதா எனில் சந்தேகமே.
( இலக்கணத்தில் நான் ரொம்ப வீக் என்பதால் சப்பை கட்டு கட்டவில்லை என்பதை கருத்தில் கொள்ளவும் )
திருக்குறளில் இந்து, மதம், கோட்பாடு எனும் வார்த்தை பிரயோகங்கள், அர்த்த பாவங்கள் எங்காவது உள்ளதா ?
-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\
திருக்குறளில் இந்து, மதம், கோட்பாடு எனும் வார்த்தை பிரயோகங்கள், அர்த்த பாவங்கள் எங்காவது உள்ளதா ?//
-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\
Follow my blogs on http://tnelango.blogspot.com/
இளங்கோ
-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\
வள்ளுவம் சுட்டும் ‘நெறி’ என்பதன் பொருள் என்ன ?
எழுத்துஅசை சீரடி சொற்பொருள் யாப்பு
வழுக்கில் வனப்பு அணிவண்ணம் - இழுக்கின்றி
என்றெவர் செய்தன எல்லாம் இயம்பின
இன்றிவர் இன்குறள்வெண் பா
- நச்சுமனார்
எழுத்து, அசை, சீர், அடி, யாப்பு, வனப்பு, அணி, வண்ணம்
எல்லாம் அமைய வழு இல்லாமல் திருக்குறள் அமைந்துள்ளது.
தொடை
தொடுக்கப்படுவது தொடை எனப்படும். இரண்டு அடிகள் தொடர்ந்து வரும்போது செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை (திருக்குறள் -411)
கற்க கசடறக் கற்பவை
கற்றபின் நிற்க அதற்குத் தக (திருக்குறள்-391)
வினையெச்சத்தில் திரிபு நிகழ்வதற்கு எடுத்துக்காட்டாக -
திரு ப்ரகாஷ் சுகுமாரனின் இக்கருத்துக்கு
ஆதாரம் இல்லை.
ஹரிஹி,
ரகளை பண்ணுகிறீர்களே ஐயா! அடுக்குமா? இது தர்மமா?
ஊரோடு ஒத்து வாழவேண்டாமா? உடனொத்தஎத்தனை பேர் இல்லை, சமத்தா வாயை மூடீண்டு?
எங்கள் பாட்டனார் அடிக்கடி கூறும் குறைகளைக் கேட்டுக் கொண்டு
என் தாயார் மிக்க பொறுமையுடன் இருந்து வந்தார். ஒருநாள் என்னையும்
அழைத்துக் கொண்டு ஓர் ஊருக்குச் செல்லுகையில் இடையே மணஞ்
சேரியென்னும் கிராமத்தில் தங்க நேர்ந்தது. அப்பொழுது மாலை நேரம்.
நாங்கள் தங்கியிருந்த வீட்டுத் திண்ணையில் தாவளியைப் போர்த்துக்கொண்டு
ஒரு கிழவர் உட்கார்ந்திருந்தார். அவர் சந்தியாவந்தனம் செய்வதற்காகத்
தீர்த்தம் கொண்டு வரும்படி தம் பேரனை ஏவினார். அவன் பஞ்ச
பாத்திரத்தில் தீர்த்தம் கொண்டு வந்து வைத்துவிட்டு உத்தரணியைக்
காணவில்லை என்றான். கிழவருக்குக் கோபம் வந்து விட்டது. ’’போய்
நான்னாத் தேடிப் பாரு. அவள் அங்கே வெந்நீரடுப்புக்குள்ளே சாம்பல்லே
செருகியிருப்பா, பாரு’’ என்று சொல்லும் போதே அந்தத் தொனியிலே அவர்
சினம் வெளிப்பட்டது. ‘அவள்’ என்றது அவருடைய மருமகளைத் தானென்பது
நிச்சயம்.
-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\
ஹரிகி ஐயா, உண்மையாகவே எனக்கும் இலக்கணத்துக்கும் ரொம்ப தூரம். எனக்கு அதில் நம்பிக்கையோ, திருப்தியோ, மொழியின் கருத்தியலாக்க முழுமையோ இதுவரை ஏற்பட்டதில்லை.. உங்கள் மொழி நடையில் ( இலக்கண விரிவுரையில் அல்ல ) சில முழுமைகளை காண்பதால் மட்டுமே குறள் குறித்த விளக்கம் பற்றி உங்களிடம் கேட்டேன்.. மொழியைக் கொண்டு புரிதலே தவிர, மொழி இலக்கணங்களைக் கொண்டு மொழிகளின் புரிதல் இல்லை என்பது என் நிலைப்பாடு. ( ஆரியன் ; அனாரியன் :)) )இலக்கணம் இல்லாத மொழிப் பயன்பாடு இல்லை என்பது உங்கள் கருத்தெனில்.. மன்னிக்கவும் நான் மாறுபடுகிறேன். ஏனெனில் இலக்கணங்கள் வகுக்கப் பட்டதே மொழிகள் உருவான பிறகு அதை அழகுபடுத்தத்தான்.
( இலக்கணத்தில் நான் ரொம்ப வீக் என்பதால் சப்பை கட்டு கட்டவில்லை என்பதை கருத்தில் கொள்ளவும் )
திருக்குறளில் தமிழ் என்னும் பெயர் எங்காவது பயன்படுத்தப்பட்டுள்ளதா? அதற்கு எது பொருந்துமோ, அது இதற்கும் பொருந்தும்//ஆகச் சிறந்த பதில் என்றாலும்.. ஆனால் இது நிச்சயம் கேள்விக்கான பதில் இது இல்லை.
பல இலக்கியங்களில் தமிழ் எனும் சொல்லே இல்லை//:)) தேவ்ஜி இது வேறு. எனக்கு நானே திரு போடுவது போல.
(கணேசர் ஒருத்தர்தான் என்று நினைத்தேன். இல்லை என்று தெரிகிறது.:))) //கணேசர்களும் பலர், கிருஷ்ணர்களும் அநேகர்.. ஆனால் குறளுக்கான உங்கள் விளக்கத்தை இன்னும் சொல்லவே இல்லையே..
இந்த இலக்கணப்படி வள்ளுவர் எழுதியுள்ளார்.
கொலையிற் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனோடு நேர்.
பதவுரை: கொலையின் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைங்கூழ் களை கட்டதனோடு நேர்
= கொலை செய்யும் கொடியவர்களை அரசன் அப்புறப்படுத்துவது பயிர்களுக்குக்
களை பறிப்பதோடு ஒத்தது. (1954-ல் அச்சாகிய
உரை).
வள்ளுவர் முள்மரம் கொல்க என்றவர்.
கொல்லச் சொல்லியிருந்தால்,
இலக்கணம் இடங்கொடுக்கும்:
கொலையிற் கொடியாரை வேந்துகொல்தல் பைங்கூழ்
களைகொல் லலோடு நேர்.
நா. கணேசன்
பதவுரை: கொலையின் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைங்கூழ் களை கட்டதனோடு நேர்
= கொலை செய்யும் கொடியவர்களை அரசன் அப்புறப்படுத்துவது பயிர்களுக்குக்
களை பறிப்பதோடு ஒத்தது. (1954-ல் அச்சாகிய
உரை).
On Jun 13, 8:19 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> அறத்தில் பெரியவரை அரசு பாராட்டும்.
> தீதில் கொடியவரை அரசு தண்டிக்கும்.
>
பிரகாஷ்,
மேற்கண்ட 2 வாக்கியங்கள் தமிழில் சரியா இருக்கா?
எதற்கும் தமிழ் இலக்கணப் புலவர்களையும் கேட்டுப் பாருங்கள்.
அன்புடன்
நா. கணேசன்
கொலையிற் கொடியாரை வேந்துகொல்தல் பைங்கூழ்
களைகொல் லலோடு நேர்.
வேந்து, கொடியாரைக் கொலையில் ஒறுத்தல், பைங்கூழ் களைகட்டதனொடு நேர்.
-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\
On Jun 13, 10:01 pm, Prakash Sugumaran <prakash...@gmail.com> wrote:
> அறத்தில் பெரியவரை அரசு பாராட்டும்.
> தீதில் கொடியவரை அரசு தண்டிக்கும்.
>
> பிரகாஷ், மேற்கண்ட 2 வாக்கியங்கள் தமிழில் சரியா இருக்கா? எதற்கும் தமிழ்
> இலக்கணப் புலவர்களையும் கேட்டுப் பாருங்கள்.
>
> கணேசன் ஐயா.. மிகச் சரியே. அறத்தில் பெரியவரை அரசு பாராட்டும். தீதில்
> கொடியவரை அரசு (கொன்றும்) தண்டிக்கும். தண்டித்தும் திருத்தும். மனமிருந்தால்
> மார்க்கமு(மு)ண்டு :))
>
கொன்றால் திருத்த முடியாது. எனவே தான் ஒறுத்தல் என்கிறார், கொல்லல்
என்கிறாரில்லை.
கொல்வதால் வரும் துன்பங்களை மற்ற சமண இலக்கியங்களும் சொல்கின்றன.
தீர்க்கதர்சி
வள்ளுவர் - உலக நாடுகள் என்ன செய்கின்றன என்று பார்க்கவும்.
நா. கணேசன்
-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\
இத் தொடர்கள் தமிழ்
இலக்கணத்துக்குஏற்பானால், தமிழ் தெரிந்த வள்ளுவர் கொலையில் கொடியவர் என்றதன் பொருள்
புரியும்.
-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\
A very pointed exposure !நன்றி திரு ஹரிகிருஷ்ணன்.
இன்னும் பல குறள்களுக்குப் பொருள் சமண உரையிலே வேறாக இருக்கிறது,
சிலவற்றைப் பற்றி ஏற்கெனவே எழுதியுள்ளேன்.
இலக்கணம் தெரிந்தவர்கள் எழுதிய உரைகள் இருக்கின்றன.
நா. கணேசன்