SK > தேறல் அருந்தும் தந்தைக்கு ஒரு மகள் அயிலை மீனை வஞ்சி விறகில் சுட்டுக் கொடுத்ததாக இலக்கியத்தரவு ஒன்று உண்டு. மீனைச் சுட அடுப்பு பயன்படுத்தப்படவில்லை என்பது வெளிப்படை.> ஏனென்றால் வஞ்சி ஒரு கொடி. அதிலிருந்து சுள்ளி மட்டுமே கிடைக்க இயலும். நாலு சுள்ளியை மூட்டினால் பச்சை மீன் வெந்து விடும்.
216. மருதம்
[தலைமகட்குப் பாங்காயினார் கேட்பத் தனக்குப் பாங்காயினார்க்குப் பரத்தை சொல்லியது.]
| நாண்கொள்நுண் கோலின் மீன்கொள் பாண்மகள் 2தான்புன லடைகரைப் படுத்த வராஅல் நாரரி நறவுண் டிருந்த தந்தைக்கு வஞ்சி விறகிற் சுட்டுவா யுறுக்குந் | |
| 5. | தண்டுறை ஊரன் பெண்டிர் எம்மைப் பெட்டாங்கு மொழிப என்ப அவ்வலர்ப் |
(சொ - ள்.) 1-6. நாண் கொள் நுண்கோலின் மீன்கொள் பாண் மகள் - கயிற்றினைக்கொண்ட நுண்ணிய தூண்டிற் கோலால் மீனைப் பிடிக்கும் பாணரது மகள், புனல் அடைகரைபடுத்த வராஅல்-புனலை அடுத்த கரையில் அகப்படுத்திய வரால்மீன், நார் அரி நறவு உண்டு இருந்த தந்தைக்கு - பன்னாடையால் அரிக்கப்பெற்ற தன்னையுண்டு களித்திருந்த தன் தந்தைக்கு, வஞ்சி விறகில் சுட்டு-வஞ்சிமரத்தின் விறகினாற் சுட்டு, வாய் உறுக்கும் - வாயில் உண்பிக்கும், தண் துறை ஊரன் பெண்டிர் - குளிர்ந்த துறையினையுடைய ஊரனது பெண்டிர்கள், எம்மைப் பெட்டாங்கு மொழிப என்ப- எம்மைத் தம் மனம் விரும்பியபடி யெல்லாம் இகழ்ந்துரைப்பர் என்பார்கள்; http://www.tamilvu.org/slet/l1270/l1270exp.jsp?x=477&y=478&bk=216&z=l1270636.htm
வஞ்சி கொடி மட்டுமல்ல. வஞ்சி மரமும் உள்ளது. கோட்டை அருகே வஞ்சி மரங்கள் நின்றதாக, சிலம்பிலும் பார்த்த நினைவு. அது எப்படி என்றாலும்,வஞ்சி மர விறகைத்தான் அயிலை மீனைச் சுடப் பயன்படுத்தியுள்ளாள் என்பது தெளிவு,நா. கணேசன்
அரவக்குறிச்சியில் ஸ்ரீபுராணம் கூறும் தீர்த்தங்கரர் சிற்பம்
(தமிழ்ச் சமணர்களின் ஆய்விதழ், முக்குடையில் மே மாதம், 2018-ல் அச்சான கட்டுரை.)
https://www.vallamai.com/?p=87447&
கடல் பிறக்கோட்டிய குட்டுவன் சிலப்பதிகாரத்தின் செங்குட்டுவனுக்கு முன்னோன் என்பார் பேரா. கா. சு. பிள்ளை. இந்தச் சேரமன்னனைப் பரணர் பதிற்றுப்பத்தில் ஐந்தாம் பத்தாகப் பாடினார். அதில் குடவனாறும், ஆன்பொருனையும், காவிரியும் கலக்கும் முக்கூடல் போன்றவன் என்று போற்றியுள்ளார்.
செங்குணக்கு ஒழுகும்-நேர் கிழக்காக ஓடும்; கலுழி மலிர் நிறைக் காவிரி யன்றியும்-கலங்கலாகிய நிறைந்த வெள்ளத்தையுடைய காவிரியை ஒப்பதே யன்றி; பூவிரி புனல் ஒரு மூன்றுடன் கூடிய கூடல் அனையை-பூக்கள் விரிந்த புனலையுடைய ஆறுகள் மூன்றும் கூடிய முக்கூடலையும் ஒப்பாவாய்.
செங்குட்டுவனும் செம்மை நெறிக்கண் ஒழுகி நாடு வளம் பெருகத் தண்ணளி சுரந்து இனிது புரத்தல் பற்றி, “காவிரி அனையை” என்றார். மூன்று ஆறுகள் கூடுமிடத்து மூன்றிடத்துப் பொருள்களும் ஒருங்கு தொகுவதுபோல், கடல்பிறக் கோட்டிக் கடல்படு பொருளும், சேரநாடுடைமையால் மலைபடு பொருளும் பழையன் முதலியோரை வென்று, காவிரி செங்குணக்கு ஒழுகும் நாடுடைமையால் அந்நாட்டுப் பொருளும் என்ற மூவகைப் பொருளும் ஒருங்கு தொக நிற்கின்றனை என்பார். “பூவிரி புனலொரு மூன்றுடன் கூடிய கூடல் அனையை” என்றார். மூன்றுடன் கூடிய கூடலைப் பழைய உரைகாரர், “அக் காவிரி தானும் ஆன் பொருநையும் குடவனாறும் என இம்மூன்றும் சேரக்கூடிய கூட்டம்” என்பர்.
“எழு உறழ் திணி தோள் இயல் தேர் குட்டுவன் வரு புனல், வாயில் வஞ்சியும்” என்கிறது சிறுபாணாற்றுப்படை. இதன் பிரதிபேதமாக “. (பி-ம்.) ‘புனல் வஞ்சி வாயிலும் வறிதே’” என்றும் இருக்கிறது (உவேசா பதிப்பித்த பத்துப்பாட்டு). வரு புனல் வாயில் வஞ்சியும் வறிது – பெருகுகின்ற நீரையும், கோபுர வாயிலையுமுடைய வஞ்சியென்னும் ஊரும் தரும் பரிசில் சிறியதாயிருக்கும் என்பது நச்சினார்க்கினியர் உரை. சேரர்களின் ராஜதானி நகரமாக வஞ்சிக் கருவூர் விளங்கியுள்ளது. அமராவதி ஆற்றின் நீர்வளத்தைக் கொண்டதாக உள்ளது.
வஞ்சி ஈந்த வியத்தகு பொன் அணி [தவம் செய்த தவம்; இரா.நாகசாமி]திரு கணேசன் ஐயா,வஞ்சி மரத்தின் இலை பற்றி இரு வேறு கருத்துகள் இங்கு காண்கின்றேன். இன்னும் சற்று விளக்கமாக கூறி என் ஐயம் போக்கிட வேண்டுகிறேன்.1. நீள் இலை வஞ்சி2. புல்லிய சிறு இலைகளைக் கொண்டது வஞ்சிமரம்அன்புடன்,சண்முகானந்தம்
