Re: இராமாயணம் / கீமாயணம்.

153 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Oct 15, 2016, 9:58:09 AM10/15/16
to மின்தமிழ், vallamai
 singanenjan wrote:
>நான்  ஒரே ஒரு முறைதான் இவரது உரையைக் கேட்டிருக்கிறேன்.

>     இரத்தக் கண்ணீர் நாடகம் இவர் எழுதியதே. பின்னர் திரைப்படமான இரத்தக் கண்ணீர் நாடகத்திற்கு திரைக்கதை-வசனம் எழுதியவரும் இவரே. 

>இறுதிவரை கொள்கைப்பிடிப்போடு வாழ்ந்த இவர்  ,  கடந்த 2014ஆம் ஆண்டு , தனது   87ஆவது வயதில்   இயற்கை எய்தினார். 


இவ்வளவு நாள் வாழ்ந்தாரா திருவாரூர் தங்கராசு? தகவலுக்கு நன்றி. நானும் ஒருமுறை இவரது பேச்சைக் கேட்டுள்ளேன்.


கிண்டி எஞ்சினீரிங் கல்லூரியில் மாணவனாக இருக்கையில். 1978-ஓ, 1979-ஓ.

தமிழ்மன்றத்தில் அழைத்துவந்தார்கள். விழாநடத்த ஒரு தொகையும் அளித்தேன். பிஸ்கட், டீ, டாக்சி செலவினங்களுக்கு,


அப்போதுதான், எங்கள் இயக்குநர் பேரா. வா. செ. குழந்தைசாமி போன்றோர் எம்ஜிஆர் ஆணையாகிய எழுத்துச் சீர்மையை

கல்லூரிகளில் நடைமுறைப்படுத்திய காலம். எழுத்துச் சீர்மை குழுவில் திருவாரூர் தங்கராசையும் வைத்திருந்தார் எம்ஜிஆர்.


பெரியார் தந்த எழுத்துச் சீர்மை பாதிக்கிணறு தாண்டிய நிலையில் இருக்கிறது. தமிழ் விசைப்பலகையில்

பெரியார் முன்வைத்த எழுத்துச்சீர்மை வந்துவிட்டது. தமிழ் தட்டச்சு டைப்ரைட்டர் முறையில் இருந்து

விஞ்ஞான வழிக்கு வந்துவிட்டது. ஆப்பிள் ஐபோன் போன்றவற்றில் தமிழ்விசைப்பலகை. 


கிரந்த எழுத்தை சிலர் பயன்படுத்துவதுபோல, பெரியார் முன்வைத்த உ, ஊ சீர்மையும் ஃபாண்ட்ஸில்

கணினி, இணையம் பயன்படவேண்டும். திராவிட இயக்கங்கள் பெரியாருக்கு செய்யும் நீண்டகால

மரியாதை அவர் தமிழ் எழுத்தை நவீனமாக்கியதாகும்.


நா. கணேசன்



On Thursday, October 13, 2016 at 6:36:21 AM UTC-7, singanenjan wrote:

இராமாயணம் / கீமாயணம்.

‘நடந்தாய் வாழி திருச்சிராப்பள்ளி ‘ இழையில் , எம்.ஆர். ராதா நடித்த ராமாயணம் / கீமாயணம் பற்றிய குறிப்பு ஒன்று வருகிறது. அந்த நாடகம் திருவாரூர் தங்கராசு அவர்கள் எழுதிய நாடகம். இவர் எழுதிய ராமாயணம் பகுத்தறிவுப் புத்தகம், காங்கிரஸ் அரசால் தடை செய்யப்பட்டது. அதையே அவர் நாடகமாக எழுதினார். இராவணனை நாயகனாகக் கொண்ட அந்த நாடகம் கீமாயணம் என்றும் அழைக்கப்பட்டது. பல ஊர்களில் அரங்கேற்றப்பட்டது. திருச்சியில் எம்.ஆர். ராதா அவர்கள் பலமுறை அரங்கேற்றியிருக்கிறார்.

இந்த நாடகத்தை கடலூர் திராவிட கழகத்தினர் என் பெரியப்பா கே.எம். வேலு தலைமையில் அரங்கேற்றினர். என் பெரியப்பாதான் இராவணன் வேடமேற்று நடித்து புகழ் பெற்றார். நான் அப்போது குழந்தை, காட்சிகள் எதுவும் நினைவில்லை. ஆனால், நாடகத்தின் முதற்காட்சியில் கம்பீரமாகத் தோன்றும் இராவணன் பேசும் வசனம் (என் அப்பா சொல்லக் கேட்டு ) எனக்குத் தெரியும். அதை கீழே தருகிறேன்.

சிங்கத்தின் குகையிலே சிறு நரிகள்


செந்தாமரை ஓடையிலே முதலைகள்


தமிழகத்திலே ஆரியர்கள்.................


ஆடு மாடு  மேய்க்க வந்த ஆரியர் கூட்டம்


இன்று நாடு பிடிக்கத் தொடங்கி விட்டது.


இதை இப்படியே விட்டு விட்டால்


நாடு மோசக்காரர்களின் வேட்டைக்காடு   ஆகிவிடும்.


இதை ஒழிக்கத் திட்டம் தேவை .......”


என்பதே. தங்கராசு அவர்களின் எழுத்துக்கு இது ஓர் எடுத்துக் காட்டு.

Inline image 1



 

 

திருவாரூர் தங்கராசு சுயமரியாதைக்காரர். நல்ல எழுத்தாளர்.சிறந்த பேச்சாளர். பெரியாரின் தொண்டர். மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தவர்.  பெரியாருக்கு அடுத்தபடி , தொடர்ந்து இரண்டு மூன்று மணி நேரம் பேசி கருத்துகளைப் பரப்பும் திறம் படைத்தவர். நான்  ஒரே ஒரு முறைதான் இவரது உரையைக் கேட்டிருக்கிறேன்.

     இரத்தக் கண்ணீர் நாடகம் இவர் எழுதியதே. பின்னர் திரைப்படமான இரத்தக் கண்ணீர் நாடகத்திற்கு திரைக்கதை-வசனம் எழுதியவரும் இவரே. இறுதிவரை கொள்கைப்பிடிப்போடு வாழ்ந்த இவர்  ,  கடந்த 2014ஆம் ஆண்டு , தனது   87ஆவது வயதில்   இயற்கை எய்தினார். 

சி. ஜெயபாரதன்

unread,
Oct 15, 2016, 10:35:34 AM10/15/16
to mintamil, vallamai

////திராவிட இயக்கங்கள் பெரியாருக்கு செய்யும் நீண்டகால

மரியாதை அவர் தமிழ் எழுத்தை நவீனமாக்கியதாகும்.   ////


தந்தை பெரியார் தமிழ் எழுத்தை நவீனமாக்க தமிழ் எழுத்துச் சீர்மையைத் தானாக முன்னோடியாய் விரும்பிச் செய்தாரா என்பதற்கு ஆதாரங்கள் தேவை.  எனது யூகம் திராவிடக் கழகம் நடத்திவந்த "குடியரசு", "விடுதலை" இதழ் அச்சுக் கூடத்தில் இருந்த அச்சுக் கோப்பர் ஒருவரின் அரிய நுணுக்க ஆக்கம் என்பது.


சி. ஜெயபாரதன்


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Oct 15, 2016, 10:58:35 AM10/15/16
to வல்லமை, mint...@googlegroups.com


On Saturday, October 15, 2016 at 7:35:34 AM UTC-7, ஜெயபாரதன் wrote:

////திராவிட இயக்கங்கள் பெரியாருக்கு செய்யும் நீண்டகால

மரியாதை அவர் தமிழ் எழுத்தை நவீனமாக்கியதாகும்.   ////


தந்தை பெரியார் தமிழ் எழுத்தை நவீனமாக்க தமிழ் எழுத்துச் சீர்மையைத் தானாக முன்னோடியாய் விரும்பிச் செய்தாரா என்பதற்கு ஆதாரங்கள் தேவை.  எனது யூகம் திராவிடக் கழகம் நடத்திவந்த "குடியரசு", "விடுதலை" இதழ் அச்சுக் கூடத்தில் இருந்த அச்சுக் கோப்பர் ஒருவரின் அரிய நுணுக்க ஆக்கம் என்பது.


சி. ஜெயபாரதன்


அன்பின் திரு. ஜெயபாரதன்

பெரியாருக்கு ஒன்றுமே தெரியாது என்பது போல சிலர் இணையத்தில் எழுதிவருவதைப் பார்க்கிறேன்.
தமிழ் இணையப் பல்கலை நிறுவுனர்-முதல் தலைவர் வா.செ. குழந்தைசாமி பெரியார் எழுத்துச் சீர்மை
பற்றி உரை:
சொ. முருகப்பா (காரைக்குடி, சிங்கை), குத்தூசி குருசாமி போன்றோர் எழுத்துச் சீரமைப்பின் அவசியத்தை
புரிந்து செய்லபடுத்தியவர் பெரியார்.

கிரந்த எழுத்து ஐந்து யூனிகோட் தருகிறது. வேண்டுவோர் தாராளமாகப் பயன்படுத்தலாம் - அறிவியல் கட்டுரைகள்
எழுத. பெரியாருக்கும் விஞ்ஞானத்தின் தேவை தமிழர் வாழ்வில் என நன்கு தெரியும். அவர் மொழி பற்றி
முன்வைத்த முக்கிய கருத்து தமிழ் எழுத்தின் எளிமையாக்கம். அதற்கு உ, ஊ உயிர்மெய்கள் பிரித்து
மற்ற உயிர்மெய்கள் போல எழுதப்படுதல் தேவை. வேண்டுவோர் பயன்படுத்தலாம். 

மொழியைப் பொருத்தவரையில் அதன் எழுத்தை நவீனப்படுத்துவதன் அவசியத்தை நன்குணர்ந்து
தன் பத்திரிகை ‘குடியரசு’ இதழில் செயல்படுத்தியவர் பெரியார். இதற்காம பல ஆதாரங்கள் இருக்கின்றன,
பலவும் இணையம் ஆங்கிலத்தில் 26+ ஆண்டுகளாகவும், தமிழில் 16+ ஆண்டுகளாகவும் தந்துள்ளேன்.

த்ராவிட கக்ஷிகள் குடும்பநலம், தனிமனிதவழிபாடு என்று போய்விட்டன. அதற்கும் பெரியாருக்கும்
ஒரு தொடர்புமில்லை. வெள்ளைக்காரனிடம் இருந்து மிகக் கடினப்பட்டு சுதந்திரம் வாங்கிய 
ஆனானப்பட்ட காங்கிரஸே நாட்டில் காணோம். தமிழர்கள் 20 வருஷத்தில் ஆட்சியில் இருந்து கழற்றிவிட்டனர்.
அதுபோல் ஸ்வயநலம் மிக்க திராவிட கட்சிகள் 50 ஆண்டுகள் ஆட்சி நடந்துவிட்டது. இன்னும் 50 ஆண்டுகளா?
-எனப் பார்க்கணும். ஆனால், தமிழ் தேசியம் என்பதும் தெலுங்கர் வெறுப்பு என்று வந்தால் எத்தனை நாள்
ஓடும்? அது அவசியமா? - என்றெல்லாம் சிந்திக்க வேண்டியுள்ளது.

நா. கணேசன்

 

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

சி. ஜெயபாரதன்

unread,
Oct 15, 2016, 12:32:29 PM10/15/16
to vallamai, mintamil
////சொ. முருகப்பா (காரைக்குடி, சிங்கை), குத்தூசி குருசாமி போன்றோர் எழுத்துச் சீரமைப்பின் அவசியத்தை
புரிந்து செய்லபடுத்தியவர் பெரியார். /////

இதிலிருந்தே தெரிகிறது யார் மூலக் கர்த்தாக்கள் என்று .  ஈவேரா மூலக் கர்த்தா இல்லை,  சீர்மையை ஆதரித்தவரே. 

நன்றி நா. கணேசன்.

சி. ஜெயபாரதன்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Oct 15, 2016, 12:35:49 PM10/15/16
to வல்லமை, mint...@googlegroups.com


On Saturday, October 15, 2016 at 9:32:29 AM UTC-7, ஜெயபாரதன் wrote:
////சொ. முருகப்பா (காரைக்குடி, சிங்கை), குத்தூசி குருசாமி போன்றோர் எழுத்துச் சீரமைப்பின் அவசியத்தை
புரிந்து செய்லபடுத்தியவர் பெரியார். /////

இதிலிருந்தே தெரிகிறது யார் மூலக் கர்த்தாக்கள் என்று .  ஈவேரா மூலக் கர்த்தா இல்லை,  சீர்மையை ஆதரித்தவரே. 

நன்றி நா. கணேசன்.

உங்களுக்கு இப்போதுதான் தெரிகிறது. பலருக்கும் தெரிந்த, பலர் எழுதிய செய்தி இஃது.

நா. கணேசன்
 
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Oct 15, 2016, 12:47:22 PM10/15/16
to மின்தமிழ், vall...@googlegroups.com

On Saturday, October 15, 2016 at 9:32:29 AM UTC-7, ஜெயபாரதன் wrote:
////சொ. முருகப்பா (காரைக்குடி, சிங்கை), குத்தூசி குருசாமி போன்றோர் எழுத்துச் சீரமைப்பின் அவசியத்தை
புரிந்து செய்லபடுத்தியவர் பெரியார். /////

இதிலிருந்தே தெரிகிறது யார் மூலக் கர்த்தாக்கள் என்று .  ஈவேரா மூலக் கர்த்தா இல்லை,  சீர்மையை ஆதரித்தவரே. 

ஆமாம். ஒரு முன்னேற்றத்தை ஆதரிக்க ஒரு அரசியல்தலைவர் தேவை. ஈவேரா நாயக்கரும் நான் தான் எழுத்துச்சீர்மை
மூலக் கர்த்தா எனச் சொல்லவேயில்லை. ஈவேரா முன்வைத்த உ,ஊ உயிர்மெய் சீர்திருத்தம்:

தமிழ் இணையப் பல்கலை நிறுவுனர்-முதல் தலைவர் வா.செ. குழந்தைசாமி பெரியார் எழுத்துச் சீர்மை
பற்றி உரை:

இதுவும் பெரியார் தான் முன்வைத்தார் என்று சொல்லமுடியாது. 

தமிழோடு தொடர்புடைய மலையாளத்தில்
அந்நாட்டார் செய்த அறிவியல் இது. கிரந்தத்திலும் பழைய கல்வெட்டுகளைப் பார்த்தீர்களானால், தமிழ் போல
உ,ஊ ஒட்டிக்கொண்டிருக்கும். பிறகு சீர்மை ஆக்கினர். ஜு, ஹு, ஷு, ஸு, ஜூ, ஹூ, ஷூ,ஜூ என்று ...

சி. ஜெயபாரதன்

unread,
Oct 15, 2016, 1:08:15 PM10/15/16
to mintamil, vallamai

////திராவிட இயக்கங்கள் பெரியாருக்கு செய்யும் நீண்டகால

மரியாதை அவர் தமிழ் எழுத்தை நவீனமாக்கியதாகும்.  ////


////சொ. முருகப்பா (காரைக்குடி, சிங்கை), குத்தூசி குருசாமி போன்றோர் எழுத்துச் சீரமைப்பின் அவசியத்தை
புரிந்து செய்லபடுத்தியவர் பெரியார். /////

நண்பர் நா. கணேசன்,

மேலே நீங்கள் கூறிய இரண்டு விளக்கங்களும் ஒன்றா ?  எனக்கு அப்படித் தெரியவில்லை.  எழுத்துச் சீரமைப்பின் அவசியத்தை எடுத்துக் காட்டியவர் முதன்மை அல்லவா ? பெரியார் செயல்படுத்தியது பிற்பாடுதானே.

சி. ஜெயபாரதன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

சி. ஜெயபாரதன்

unread,
Oct 15, 2016, 1:12:21 PM10/15/16
to mintamil, vallamai, tamilmantram
பெரியார் சிலப்பதிகாரம், கம்ப இராமாயணம் போன்ற தமிழ் இலக்கியங்களை இழிவு செய்தபோது பாரதிதாசன் அவர்மீது பெருஞ்சினம் அடைந்தார்.

சி. ஜெயபாரதன்

2016-10-15 13:01 GMT-04:00 N. Ganesan <naa.g...@gmail.com>:


On Saturday, October 15, 2016 at 8:54:53 AM UTC-7, மாயோன் wrote:
//பெரியாருக்கு ஒன்றுமே தெரியாது என்பது போல சிலர் இணையத்தில் எழுதிவருவதைப் பார்க்கிறேன்.//
கணேசன் ஐயா, அவரின் மொழி குறித்த கருத்துகளை ஆழ்ந்து நோக்கினால் இது நன்றாக தெரியும். 
வாய்க்கு வருவதை அடித்து விடுவதும், அதை நவீனப் படுத்துதல் என சிலர் கூறுவதும் தான் நடக்கிறது. உயிரெழுத்துகள்  ஐ,ஔ வேண்டாம் என்றது, ஆங்கிலம் தான் அறிவு மொழி என்றது, திருக்குறள் போன்ற இலக்கியங்களைப் படிக்க சொல்லி, பிறகு படிக்க வேண்டாம் என சொல்லியது,அனைவரும் தாய்மொழியை விடுத்து ஆங்கிலத்தைப் பயன்படுத்த வேண்டும் என சொல்லியது,தமிழ் மொழியை மட்டும் குறிவைத்து இழிவுப்படுத்தியது,.... என பட்டியலிட்டால் அவரின் மொழி அறிவு பற்றி தெரியும். தனித்தமிழ் இயக்கம் செய்தவற்றை எல்லாம் விட்டுட்டு இராமசாமி நாயக்கர் தான் தமிழுக்கு தொண்டு செய்தார் என சொல்வது நகைச்சுவையாக நன்றாக இருக்கும்.

மறைமலை அடிகளும், ஈவேரா நாயக்கரும் ஒரே மேடையில் தமிழ், தமிழ்நாட்டு நிலைமை பற்றிப் பேசியுள்ளனர்.
பாரதிதாசன் இருவருக்கும் தாசனாக இறுதிவரை இருந்து தொண்டாற்றினார்.

நா. கணேசன்

--

N. Ganesan

unread,
Oct 15, 2016, 1:15:59 PM10/15/16
to வல்லமை, mint...@googlegroups.com


On Saturday, October 15, 2016 at 10:12:21 AM UTC-7, ஜெயபாரதன் wrote:
பெரியார் சிலப்பதிகாரம், கம்ப இராமாயணம் போன்ற தமிழ் இலக்கியங்களை இழிவு செய்தபோது பாரதிதாசன் அவர்மீது பெருஞ்சினம் அடைந்தார்.

இதற்கான கட்டுரை, பாடல்கள் உள்ளனவா?

அப்படியே இருந்தாலும், பெரியார் தொண்டராக இருந்தார் பாரதிதாசன். விலகி அண்ணா கட்சியில் சேரவில்லை.
 

சி. ஜெயபாரதன்
2016-10-15 13:01 GMT-04:00 N. Ganesan <naa.g...@gmail.com>:


On Saturday, October 15, 2016 at 8:54:53 AM UTC-7, மாயோன் wrote:
//பெரியாருக்கு ஒன்றுமே தெரியாது என்பது போல சிலர் இணையத்தில் எழுதிவருவதைப் பார்க்கிறேன்.//
கணேசன் ஐயா, அவரின் மொழி குறித்த கருத்துகளை ஆழ்ந்து நோக்கினால் இது நன்றாக தெரியும். 
வாய்க்கு வருவதை அடித்து விடுவதும், அதை நவீனப் படுத்துதல் என சிலர் கூறுவதும் தான் நடக்கிறது. உயிரெழுத்துகள்  ஐ,ஔ வேண்டாம் என்றது, ஆங்கிலம் தான் அறிவு மொழி என்றது, திருக்குறள் போன்ற இலக்கியங்களைப் படிக்க சொல்லி, பிறகு படிக்க வேண்டாம் என சொல்லியது,அனைவரும் தாய்மொழியை விடுத்து ஆங்கிலத்தைப் பயன்படுத்த வேண்டும் என சொல்லியது,தமிழ் மொழியை மட்டும் குறிவைத்து இழிவுப்படுத்தியது,.... என பட்டியலிட்டால் அவரின் மொழி அறிவு பற்றி தெரியும். தனித்தமிழ் இயக்கம் செய்தவற்றை எல்லாம் விட்டுட்டு இராமசாமி நாயக்கர் தான் தமிழுக்கு தொண்டு செய்தார் என சொல்வது நகைச்சுவையாக நன்றாக இருக்கும்.

மறைமலை அடிகளும், ஈவேரா நாயக்கரும் ஒரே மேடையில் தமிழ், தமிழ்நாட்டு நிலைமை பற்றிப் பேசியுள்ளனர்.
பாரதிதாசன் இருவருக்கும் தாசனாக இறுதிவரை இருந்து தொண்டாற்றினார்.

நா. கணேசன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Oct 15, 2016, 6:16:14 PM10/15/16
to வல்லமை, mint...@googlegroups.com

On Saturday, October 15, 2016 at 10:12:21 AM UTC-7, ஜெயபாரதன் wrote:
பெரியார் சிலப்பதிகாரம், கம்ப இராமாயணம் போன்ற தமிழ் இலக்கியங்களை இழிவு செய்தபோது பாரதிதாசன் அவர்மீது பெருஞ்சினம் அடைந்தார்.


I doubt this.

N. Ganesan
 

N. Ganesan

unread,
Oct 15, 2016, 6:26:06 PM10/15/16
to மின்தமிழ், vall...@googlegroups.com

On Saturday, October 15, 2016 at 7:35:34 AM UTC-7, ஜெயபாரதன் wrote:

////திராவிட இயக்கங்கள் பெரியாருக்கு செய்யும் நீண்டகால

மரியாதை அவர் தமிழ் எழுத்தை நவீனமாக்கியதாகும்.   ////


தந்தை பெரியார் தமிழ் எழுத்தை நவீனமாக்க தமிழ் எழுத்துச் சீர்மையைத் தானாக முன்னோடியாய் விரும்பிச் செய்தாரா என்பதற்கு ஆதாரங்கள் தேவை.  எனது யூகம் திராவிடக் கழகம் நடத்திவந்த "குடியரசு", "விடுதலை" இதழ் அச்சுக் கூடத்தில் இருந்த அச்சுக் கோப்பர் ஒருவரின் அரிய நுணுக்க ஆக்கம் என்பது.


சி. ஜெயபாரதன்


தி ஹிண்டு பத்ரிகையில் தங்கராசு மக்கள் பெயர்கள் கண்டேன். புதிய தலைவர்களை மாயோன் போன்றோர் உருவாக்க வேண்டும். செய்வார்கள் என்ற நம்பிக்கையுண்டு. NG


தங்கராசு எழுதிய ராமாயணப் பகுத்தறிவு புத்தகத்தை காங்கிரஸ் அரசு தடை செய்த போது, அதை நாடகமாக அரங்கேற்றினார். நாகரிகம் என்ற பெயரில் ஒழுக்கக் கேடாக நடந்து கொண்டால், என்ன விளைவு ஏற்படும் என்பதை ரத்தக்கண்ணீர் நாடகமாக எழுதி அதில் எம்.ஆர்.ராதாவை நடிக்க வைத்தார். பின்னர் இது திரைப்படமாக தயாரிக்கப்பட்டபோது அதிலும் எம்.ஆர்.ராதா நடித்தார். தங்கராசு திரைக்கதை, வசனம் எழுதினார். இவர் எழுதிய ‘அடியே காந்தா’என்ற வசனம், இன்றளவும் இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக உள்ளது. தங்கராசுவின் இயல் பான பாவனைகள்தான், எம்.ஆர்.ராதாவின் நடிப்பாக வெளிப்பட்டது.

மார்க்சிய பெரியாரிய பொது வுடைமைக் கட்சி பொதுச் செய லாளர் ஆனைமுத்து தங்கராசுவின் நண்பர். எம்.ஜி.ஆர். சுடப்பட்ட வழக்கில், நீதிமன்றத்தில் வாக்கு மூலம் கொடுத்த எம்.ஆர்.ராதா, ஆனைமுத்துவின் பொதுக் கூட்ட பேச்சைக் கேட்டு, அந்த உணர்ச்சியில்தான் இந்த செயலை செய்ததாகக் கூறினார்.

ஆனைமுத்து ‘தி இந்து’ நிருபரிடம் கூறும்போது, ‘1957ல் அரசியல் சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய 3,000க்கும் மேற்பட்ட பெரியார் இயக்கத்தினர் சிறையிலிருந்தபோது, அதை எதிர்த்து தங்கராசுதான் மாநிலம் முழுவதும் கூட்டங்கள் நடத்தினார். பெரியார் எத்தனைக் கூட்டங்களில் பங்கேற்றிருப்பாரோ, அந்த அளவுக்கு தங்கராசுவும் பங்கேற்றி ருப்பார்,’ என்றார்.

ரத்தக்கண்ணீர், பெற்ற மனம், தங்கதுரை என 3 பெரும் வெற்றிபெற்ற திரைப் படங்களுக்கு கதை, வசனம் எழுதிய தங்கராசுவுக்கு, சினிமா வாய்ப்புகள் வந்தபோதும், ‘நான் சினிமாக்காரன் அல்ல, பெரியார் இயக்கப் பிரச்சாரகர்’ என்று கூறி திரைப்படத் துறைக்கு செல்லவில்லை.

அவரது சுயசரிதை கருத்துகள், ‘தங்கராசுவின் நினைவலைகள்’என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளது. தொகுப்புப் பணியில் ஈடுபட்ட திருப்பூர் பெரியார் தி.க. மாவட்டச் செயலாளர் கருமலையப்பன் கூறும்போது, ‘தங்கராசு அய்யா, சிறுவயதில் நகைக் கடையில் பணியாற்றியபோது, இயக்கப் பணிக்கு செல்லும் அவசரத்தில் கடையை பூட்ட மறந்துவிட்டார். நல்ல வேளையாக கடையிலிருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைகள் திருடு போகவில்லை. அதனால் கடை முதலாளி, இயக்கப் பணிகளைப் பார் என்று அனுப்பிவிட்டார்.

ஆனால், அதே முதலாளி பிற்காலத்தில் தங்கராசு அவர்களை கடைக்கு மரியாதை நிமித்தமாக வரவழைத்தார். கிருஷ்ணகிரியில் தங்கராசு அய்யாவின் மேடைப் பேச்சால் கலவரம் ஏற்பட்டதாக, காங்கிரஸ் அரசு அவரைக் கைது செய்தது. அப்போது, தானே நீதிமன்றத்தில் வாதாடி, விடுதலையானார்’ என்றார்.

தி.க.விலிருந்து அண்ணா பிரிந்தபோது, அண்ணாவின் அவசரம் என்ற தலைப்பில், எம்.ஆர்.ராதாவின் பெயரில், தங்கராசுதான் புத்தகம் எழுதி வெளியிட்டார்.

பெரியார் தி.க. தலைவர் ஆனூர் ஜெகதீசன் கூறும் போது, ‘ஆங்கிலம் மற்றும் சமஸ் கிருதத் தில் மிகவும் புலமை வாய்ந்தவர் தங்கராசு. அவரது புத்தகங்கள், பல பல்கலைக் கழகங்களில், மாணவர்களின் ஆராய்ச்சி நூல்களாக பயன்பட்டுள்ளன’ என்றார். தங்கராசுவுக்கு காந்தரூபினி என்ற மனைவியும், மலர்க்கொடி, மண்டோதரி என்ற மகள்களும், புகழேந்தி என்ற மகனும் உள்ளனர். புகழேந்தி, தமிழக அரசின் செய்தித் துறையில் இணை இயக்குநராக உள்ளார்.

 

தேமொழி

unread,
Oct 16, 2016, 2:12:37 AM10/16/16
to மின்தமிழ், vall...@googlegroups.com
ஜெயபாரதன் ஐயா, கண்ணதாசனையும் பாரதிதாசனையும் கலந்துவிட்டாரோ என எனக்குத் தோன்றுகிறது.  

பாரதிதாசன் குறித்து மீண்டும்  தேடிப்பார்க்க வேண்டும்.  

தேடியதில் கிடைத்த மற்றொன்று...

இந்த   இழையின் கருத்துக்கு இணையான கருத்து கொண்ட வே. மதிமாறனின்   ஒரு பதிவு  கீழே.   


கவிஞர் கண்ணதாசன் கொஞ்சகாலம் நாத்திகராக இருந்தார்அப்போ,கம்பராமாயணத்தை எரிக்க முயன்றார்கெரசின்தீப்பெட்டிகையில்கம்பராமாயணம்கொளுத்த வேண்டியதுதான் பாக்கிஒரு நிமிசம்யோசிச்ச கண்ணதாசன்சரி அப்படி என்னதான் இருக்கு இதுல.ஒருவாட்டி படிச்சுட்டு எரிச்சிடலாம்னுபடிக்க முயன்றார்.


பின்னர் அவர் அந்த புத்தகத்தை எரிக்கவே இல்லைமுழுவதுமாகபடித்து முடித்த பிறகுஅந்தப் புத்தகத்தை வைத்து அதன் முன் விழுந்துவணங்கினார்நாத்திகராக இருந்த கண்ணதாசன் ஆத்திகராகமாறிட்டார்!


என்று நடிகர் ரஜினிகாந்த் ஒரு நிகழ்ச்சியில் இப்படியும் பேசியிருக்கிறார்.


[...]


கம்பராமாயணத்தை எரித்த பெரியார் இயகத்தவர்கள் எவரும் அதை படிக்காமல், எரிக்கவில்லை. இன்னும் சரியாக சொன்னால் படித்ததினால்தான் எரித்தார்கள்.

கருவூர் ஈழத்து அடிகள், குத்தூசி குருசாமி, திருவாரூர் தங்கராசு போன்ற மேதைகள் கம்பராமாயணத்தை கந்தலாக்கி தொங்க விட்டிருக்கிறார்கள்.

அது மட்டுமல்ல, கம்பராமாயணத்தை கரைத்துக் குடித்த ‘இந்து தமிழ் அறிஞர்களை’, நேருக்கு நேர் விவாதத்திற்கு அழைத்து தோற்கடித்து, கம்பராமாயணத்தின் மோசடிகளை அம்பலப்படுத்திய பெருமை பெரியார் இயக்கத்தையே சேரும்.

குறிப்பாக பெரியாரோடு இருந்தபோது அண்ணா கம்பராமாயணத்திற்கு எதிராக, தமிழ் அறிஞர்களான, ரா.பி.சேதுபிள்ளை, சோமசுந்தர பாரதியார் போன்றவகளோடு ஓரே மேடையில் விவாதித்து, கம்பராமாயணத்தின் யோக்கியதையை அம்பலப்படுத்தினார். அண்ணாவோடு விவாதிக்க முடியாமல் அவர்கள் இருவரும், ‘ரயிலுக்கு நேரமாச்சு..’ என்று பாதியிலேயே ஓடிய சம்பவங்கள்தான் தமிழகத்தில் உண்டு.

அதன் பிறகு கம்பராமாயண ரசிகர்கள், பக்தர்கள் யாரும் பெரியார் தொண்டர்களிடம் விவாததிற்கு வராமல் தூர இருந்து மண்ணை வாரி தூற்றி தங்கள் இயலாமையை வெளிப்படுத்தினார்கள்.

ஏனென்றால், ‘ரா.பி.சேதுபிள்ளை சோமசுந்தர பாரதியார் போன்ற தில்லாலங்கடிகளுக்கே இதுதான் நிலமை என்றால், நம் நிலை என்னவாகும்?’ என்ற பயமே காரணம்.

மற்றபடி பெரியார் இயக்கத்தவர்கள் யாரும், கம்பராமாயணத்தை படிக்காமல் எரிக்கவில்லை.

தமிழ் இலக்கிய, இலக்கணத்தில் பயிற்சி இல்லாத, பள்ளிக் கல்வியைக்கூட முறையாக படிக்காத பெரியார் தொண்டர்கள் கூட, ராமாயணத்தை உரைநடையாக படித்து, அதை புரிந்துகொண்டுதான் எதிர்த்தார்கள். எதிர்க்கிறார்கள்.

பெருமை பொங்க ராமாயணத்தை சிலாகித்து பேசுகிறவர்களின் பேச்சிலிருந்ததே, அவர்களின் வார்த்தைகளிலிருந்தே, எதிர்கேள்வி கேட்டு, அவர்களை அம்பலப்படுத்தியிருக்கிறார்கள்.


பெரியார் கற்றுத் தந்த, இந்த விவாத முறை, ‘தர்க்க அறிவு’ இந்தியாவிலேயே பெரியார் தொண்டர்களிடம் மட்டுமே உள்ள சிறப்பு.  


அதனால்தான் ராமனும், ராமாயணமும் அயோத்தியில், வடநாட்டில் அனுமாரைப்போல் தன் வாலில் பற்றிய தீயை நாடு முழுக்க பற்ற வைத்துக் கொண்டு இருக்கும்போது, தமிழ் நாட்டில் ‘வாலாட்டிய’ ராமனின் வாலை ஒட்ட நறுக்க முடிந்தது.

உண்மை இப்படி இருக்க, பெரியார் தொண்டர்கள் கண்மூடித்தனமாக ஒரு விசயத்தை எதிர்ப்பார்கள் என்கிற அர்த்ததில் ரஜினியிடம் சொன்ன எழுத்தாள கூமுட்டையின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மாறாக, வால்மீகி ராமாயணம், கம்ப ராமாயணத்தை ஆதரிக்கிறவர்கள்தான் அதை படிக்காமலேயே ஆதரிக்கிறார்கள். அதற்கு ரஜினியே உதாரணம்.

மற்றபடி, கம்பராமாயண எதிர்ப்பையும், பெரியார் பணியையும் மதிப்பீடுவதற்கு அளவுகோல் கண்ணதாசன் அல்ல; இந்து மதத்தையும், பார்ப்பனிய ஆதரவு நிலையையும், பெரியார் இயக்க எதிர்ப்பையும், சந்தர்ப்பவாதத்தையும் மதிப்பிடுவதற்கு வேண்டுமானால் கண்ணதாசனை சிறந்த உதாரணமாக காட்டலாம்.

முத்தையா என்ற தனது பெயரை கண்ணன் மீது கொண்ட பிரியத்தினால், கண்ணதாசன் என்று மாற்றி வைத்துக் கொண்டு கம்பராமாயணத்தை எரிக்க போனவரின் யோக்கியதை இப்படிதான் இருக்கும்.

கம்பராமாயணத்தின் மீது பெரியார் இயக்கத்தினர் கேட்ட கேள்விகள், பதில் சொல்வதற்கு நாதியற்று தலைமுறை தாண்டி இன்னும் அப்படியேதான் இருக்கிறது.

மாயோன்

unread,
Oct 16, 2016, 3:23:55 AM10/16/16
to vall...@googlegroups.com
//மறைமலை அடிகளும், ஈவேரா நாயக்கரும் ஒரே மேடையில் தமிழ், தமிழ்நாட்டு நிலைமை பற்றிப் பேசியுள்ளனர்.
பாரதிதாசன் இருவருக்கும் தாசனாக இறுதிவரை இருந்து தொண்டாற்றினார்.//

ஐயா,இராமசாமி நாயக்கர், முன்னுக்கு பின் முரணாக பேசியவர்; பல கருத்துகளில் அவர் முன்னர் தமிழ்,தமிழ்நாடு,தமிழருக்கு சார்பாகவும் பின் எதிராகவும் பேசியவர். மறைமலை அடிகளுடன் பேசிய பொழுது தமிழ் தெலுங்கு, கன்னடம்,மலையாளம் ஆகிய மொழிகளுக்கு தாய், திருக்குறளை அனைவரும் கற்கணும், என்றெல்லாம் பேசிவிட்டு பிறகு தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி, அதில் கெட என்ன இருக்கிறது, திருக்குறளில் கெட்ட நாற்றம் வீசுகிறது,... என்றெல்லாம் பேசியவர்.

அதிலும், தொல்காப்பியன் ஒரு ஆரியக் கைக்கூலி என்றெல்லாம் பேசியதை மக்களிடம் மறைப்பது உடன்பிறப்புகளின் தெளிவான விற்பனைத் திட்டம். ஒரு காலத்தில் பாரதிதாசன் அவர் தான் பெரியார் என பாட்டெழுதினார்; பிறகு ஆங்கில மொழியைக் கற்கணும்,அதில் தான் அனைவரும் பேச வேண்டும்  என இராமசாமியார் உளறிய பொழுது அதைக் கண்டித்தும் பாரதிதாசன் பாட்டெழுதினார்.


//தி ஹிண்டு பத்ரிகையில் தங்கராசு மக்கள் பெயர்கள் கண்டேன். புதிய தலைவர்களை மாயோன் போன்றோர் உருவாக்க வேண்டும். செய்வார்கள் என்ற நம்பிக்கையுண்டு. NG//
அவாளே தி இந்து என்று தானே தமிழில் எழுதறா; நீங்க என்ன இப்படி?

//ஜெயபாரதன் ஐயா, கண்ணதாசனையும் பாரதிதாசனையும் கலந்துவிட்டாரோ என எனக்குத் தோன்றுகிறது.  

பாரதிதாசன் குறித்து மீண்டும்  தேடிப்பார்க்க வேண்டும். //

மிழால் தமிழர் ஆயினர் அன்னவர்

தமிழை ஒழிக்கவும் தளரா துழைத்தனர்.

தமிழால் தமிழர்க்குத் தலைவர் ஆயினர்;
தமிழால் தலைமை அடைந்த அவர்கள்
'தமிழில் ஏதுளது' என்று சாற்றுவர்.

தமிழைப் பேசித் தலைவர் ஆயினர்
தமிழை எழுதித் தலைவர் ஆயினர்
'தமிழால் பயன் ஏது?" என்று சொன்னார்.

தமிழர் வாழத் தக்கவை ஆன
எல்லாக் கருத்தையும் இயம்பி வந்தனர்;
எல்லா உண்மையும் எடுத்துக் காட்டினர்
அரைநூற் றாண்டாய் அறிவு புகட்டினர்

அந்த அருமைத் தலைவரே இந்நாள்
ஆங்கிலம் தாயாய் அமைக என்றும்
தமிழால் உருப்படோம் என்றும் சாற்றினர்
தமிழர் தலைவர் தமிழாற் பேசியும்
தமிழால் எழுதியும் தந்த கருத்தினைத்
தமிழர் தங்கு தடையின்றி உணர்ந்தனர்
உணர்ந்துதாம் நன்னிலை உற்றனர் என்க.

இதனைத் தலைவரும் ஏற்றுக் கொள்வர்!
அன்றியும் அருமைத் தமிழே அன்றி
வேறுமொழி எமக்கு வராதென விளம்புவர்.
தமிழே தலைவ ராக்கியது, மற்றும்

தமிழே புகழ்பெறச் செய்த தென்பதை
எவரும் மறுக்க இயலா தன்றோ?
இப்படிப் பட்ட தலைவர் என்பவர்
தமிழில் இலக்கியம் இல்லை என்றனர்!

தலைவரைச் செய்தது தமிழ்இலக் கியமே
தமிழினம் படைத்தது தமிழ்இலக் கியமே
தமிழைத் திறம்படப் பேசவும் எழுதவும்
வைத்தது யாது? வண்டமிழ் இலக்கியம்!

தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணத்தை
உண்டு பண்ண உதவ வில்லை
என்று தமிழர் தலைவர் சாற்றுவர்;
அதே நேரத்தில் அந்தத் தலைவர்
முப்ப தாண்டாய் முளைத்த இலக்கியம்
எத்தனை ஆயிரம் என்பதை அறியார்!

-புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.
ம.பொ.சி. எழுதிய 'எனது பார்வையில் பாவேந்தர்' நூலிலிருந்து.


இதை நீங்கள் இணையத்தில் தேடிப் படிக்கலாம். பாரதிதாசன் தான் பாடியுள்ளார் அம்மா. நீங்கள் இராமசாமியாரை நல்லவர் என காண்பிக்க செயபாரதன் ஐயா சொன்னதை விட்டுட்டு  ஏன் கண்ணதாசனை இழுக்கறீங்க இங்கே 🤔🤔


கம்ப இராமாயணம் என்பது சமசுகிருத இராமாயணத்தின் 'Remake' என கம்பரே சொல்லியிருக்கிறார்; Remake செய்றப்போ ஒரு சில இடங்களில் தமிழருக்காக கதையை மாற்றி இருக்கிறார்.


இதை மறைமலை அடிகள் என்றோ எதிர்த்தாச்சு; அவர் சொன்னதை, மறுஆக்கம் செய்து தான் இராமசாமியாரும், அண்ணாதுரையும் பேசினார்கள். தனிமனித ஒழுக்கமில்லாத இந்த இருவரும் கம்பரை விமர்சித்தது எல்லாம் கொடூரம். கம்பரசம் என நூல் எழுதிய அண்ணாதுரை வால்மீகிரசம் என எழுதவில்லையே?? நன்றாக மேடைகளில் பேசிய,விவாதித்த அண்ணாதுரையின் பகுத்தறிவுக்கு இது கூட தெரியவில்லையா?



//பெரியார் கற்றுத் தந்த, இந்த விவாத முறை, ‘தர்க்க அறிவு’ இந்தியாவிலேயே பெரியார் தொண்டர்களிடம் மட்டுமே உள்ள சிறப்பு.  //


இதெல்லாம் உடன்பிறப்புகள் பல ஆண்டுகளாக சொல்லி தான் பிழைப்பு நடத்தி வருகிறார்கள்; பல ஆண்டுகளாக தமிழகத்தில் இருந்த அறிவு தான் இது. மெய்யாக பார்த்தால் உடன்பிறப்புகளுக்கு தான் இது இல்லை. எந்தவொரு விவாதத்திலும் சங்க இலக்கியங்களைப் பற்றி உடன்பிறப்புகள் பேசாமல் நழுவுவது ஊரறிந்த கருத்து.



//தமிழ் இலக்கிய, இலக்கணத்தில் பயிற்சி இல்லாத, பள்ளிக் கல்வியைக்கூட முறையாக படிக்காத பெரியார் தொண்டர்கள் கூட, ராமாயணத்தை உரைநடையாக படித்து, அதை புரிந்துகொண்டுதான் எதிர்த்தார்கள். எதிர்க்கிறார்கள்.//
இத்தகைய நூல்களை, சாத்திரங்களைக் குப்பை-அதையெல்லாம் மண்மூடி புதைக்கலாம் என எளிதாக வள்ளலார் முன்பே சொல்லி மக்களுக்கு புரியவச்சார்.


//மாறாக, வால்மீகி ராமாயணம், கம்ப ராமாயணத்தை ஆதரிக்கிறவர்கள்தான் அதை படிக்காமலேயே ஆதரிக்கிறார்கள். அதற்கு ரஜினியே உதாரணம்.

மற்றபடி, கம்பராமாயண எதிர்ப்பையும், பெரியார் பணியையும் மதிப்பீடுவதற்கு அளவுகோல் கண்ணதாசன் அல்ல; இந்து மதத்தையும், பார்ப்பனிய ஆதரவு நிலையையும், பெரியார் இயக்க எதிர்ப்பையும், சந்தர்ப்பவாதத்தையும் மதிப்பிடுவதற்கு வேண்டுமானால் கண்ணதாசனை சிறந்த உதாரணமாக காட்டலாம்.

முத்தையா என்ற தனது பெயரை கண்ணன் மீது கொண்ட பிரியத்தினால், கண்ணதாசன் என்று மாற்றி வைத்துக் கொண்டு கம்பராமாயணத்தை எரிக்க போனவரின் யோக்கியதை இப்படிதான் இருக்கும்.

கம்பராமாயணத்தின் மீது பெரியார் இயக்கத்தினர் கேட்ட கேள்விகள், பதில் சொல்வதற்கு நாதியற்று தலைமுறை தாண்டி இன்னும் அப்படியேதான் இருக்கிறது.//


நீங்கள் விவாதத்தைத் திசைத் திருப்பி இரசினி,கண்ணதாசன் என்றெல்லாம் கொண்டுவந்து இராமசாமி நாயக்கர் தான் நல்லவர் என நிறுவுகிறீர்கள் அம்மா.

நீங்கள் விவாதத்தைத் திசைத் திருப்பி இரசினி,கண்ணதாசன் என்றெல்லாம் கொண்டுவந்து இராமசாமி நாயக்கர் தான் நல்லவர் என நிறுவுகிறீர்கள் அம்மா.
இராமசாமி நாயக்கர் வசைச் சொற்களை வைத்து விமர்சிக்கிறேன் என பேசியதை இன்று காணொளியாக வெளியிட்டால் பல *Beep* ஒலிகள் தான் வரும். விமர்சிப்பதில் எளிதாக, வசைச் சொற்கள் இல்லாமல் இவருக்கு முன்பே வள்ளலார், மறைமலை அடிகள் போன்றோர் பேசியதை மறைத்து இராமசாமி நாயக்கர் தான் எல்லாவற்றையும் செய்தார் என சொல்வது விற்பனைக்கு நல்ல திட்டம். வரலாற்றுக்கு அல்ல.


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

சி. ஜெயபாரதன்

unread,
Oct 16, 2016, 9:38:01 AM10/16/16
to vallamai, மின்தமிழ்
///பெரியார் சிலப்பதிகாரம், கம்ப இராமாயணம் போன்ற தமிழ் இலக்கியங்களை இழிவு செய்தபோது பாரதிதாசன் அவர்மீது பெருஞ்சினம் அடைந்தார்.  ///
இது நான் மீண்டும் கூறும் வரிகள்.  கழகத்தார் இதுபோல் பாரதியாரையும் ஆரியர் என்று இகழும்போது அப்படி இகழாதீர் என்று கண்டித்தவரும் பாரதிதாசனே.

தந்தை பெரியார் தமிழகத்தில் சமூகப் புரட்சி செய்தாலும், அவரை அவரது பிரதான சீடர் அண்ணாத்துரையே பின்னேற்றத் திராவிடர் என்று ஒதுக்கிவிட்டுச் சென்றார்.

இந்திய விடுதலை வேண்டாம் என்று பிரிட்டன் காலைப் பற்றியர் பெரியார்.  சுதந்திர நாளைத் துக்கநாள் என்று தூற்றியவர் பெரியார்.  எல்லையற்ற திராவிட நாட்டை அமைக்கப் போராடியவர் பெரியார்.  குடியரசு முறையில் பாராளுமன்றச் சட்ட நீதி அமைப்புகளில் நம்பிக்கை இல்லாதவர்.  அதாவது இருபதாவது நூற்றாண்டைச் சேராத பகுத்தறிவுவாதி.  

பெரியாருக்குத் தலைமைத் தகுதியோ, பண்பாடோ [Leadership Qualities] கிடையாது ! இருந்தால் தி.மு.க, அ.தி.மு.க போன்றவை பிரிந்திருக்காது.  தமிழ்நாட்டில் கட்சிப் பிளவுகள் பெருக்கவும்,  ஜாதிப் பிரிவுகள் வலுக்கவும், ஜாதி, மதச் சண்டைகள் செழிக்கவும் காரணமான செல்வந்தர் தந்தை பெரியார் ஒருவரே !

சி. ஜெயபாரதன்.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

Jaisankar Jaganathan

unread,
Oct 16, 2016, 9:43:29 AM10/16/16
to vall...@googlegroups.com
ஜெயபாரதன் சார்,

பெரியார் இல்லையென்றால் சாதி ,மத சண்டைகள் குஜராத்தை விட மோசமாக இருந்திருக்கும். அவர் இருந்ததால் குறைந்திருக்குது என்று எண்ணுகிறேன்

N. Ganesan

unread,
Oct 16, 2016, 9:44:40 AM10/16/16
to வல்லமை, mint...@googlegroups.com


On Sunday, October 16, 2016 at 6:38:01 AM UTC-7, ஜெயபாரதன் wrote:
///பெரியார் சிலப்பதிகாரம், கம்ப இராமாயணம் போன்ற தமிழ் இலக்கியங்களை இழிவு செய்தபோது பாரதிதாசன் அவர்மீது பெருஞ்சினம் அடைந்தார்.  ///
இது நான் மீண்டும் கூறும் வரிகள்.  கழகத்தார் இதுபோல் பாரதியாரையும் ஆரியர் என்று இகழும்போது அப்படி இகழாதீர் என்று கண்டித்தவரும் பாரதிதாசனே.


திருக்குறள், பெரியபுராணம், சிலப்பதிகாரம், கம்ப ராமாயணம் - என்று எல்லாவற்றையும் கிண்டலாகவும், அறிவியல் வளர்ச்சிக்குப் பொருந்தாதன என்றும்
இழிவுபடுத்தி எழுதினார் பெரியார்.

திரு. மாயோன் காட்டும் பாடலில் சிலப்பதிகாரம், கம்பன் என்றெல்லாம் ஒன்றுகூட குறிப்பிட்டுப் பாரதிதாசன் சொல்லவில்லை. அவரது இயக்கக்காரர்கள்
- அண்ணாவைச் சொல்கிறாரா, பெரியாரைச் சொல்கிறாரா என்றும் தெளிவில்லை. எல்லோரையும் தான் சொல்கிறார் போல.
முடிவுரையாக, புத்திலக்கியம் 30 ஆண்டுகளாக உருவாவதைச் சொல்கிறார்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Oct 16, 2016, 9:56:17 AM10/16/16
to வல்லமை, மின்தமிழ்


On Sunday, October 16, 2016 at 12:23:55 AM UTC-7, மாயோன் wrote:
//தி ஹிண்டு பத்ரிகையில் தங்கராசு மக்கள் பெயர்கள் கண்டேன். புதிய தலைவர்களை மாயோன் போன்றோர் உருவாக்க வேண்டும். செய்வார்கள் என்ற நம்பிக்கையுண்டு. NG//
 
அவாளே தி இந்து என்று தானே தமிழில் எழுதறா; நீங்க என்ன இப்படி?


அன்பின் மாயோன்,

 தி ஹிண்டு பத்திரிகை தமிழர்க்கு செய்யும் நன்மைகளை அறிவீர்கள். இப்பொழுது தமிழிலும் தொடங்கியுள்ளனர்.
செக்குலரிஸத்தின் வாரிசாக இருப்பது ஹிண்டு ஒன்றுதான். ஹிண்டு படிச்சாச்சா? - என சென்னையில் கல்லூரி
நாட்களில் கேட்பதுண்டு. அதனால் எழுதினேன். இந்து என்றால் சமயத்தைக் குறிப்பதாக எனக்குத் தோன்றியதால்.

முன்பெல்லாம் சுப்ரமணியன்சாமி, துக்ளக் சோ, ஹிண்டு, குமுதம், விகடன், ... மட்டுமே தமிழர்களைப் பற்றி
எழுதியும், தில்லி தர்பாரில் பப்ளிக் ஒப்பினியன் உருவாக்கியும் வரும் பலம்வாய்ந்த மீடியா. இணையம்
தனியார்களுக்கும் கிடைத்திருக்கும் ஆற்றல். ஆனால், 8 கோடி தமிழரில் ஒரு 1000 பேர் தான் எழுதுகிறார்கள்.
சில லட்சம் பேர்களாவது எழுதினால் மதறாஸ் மீடியா போக்கை மாற்றமுடியும்.

அன்புடன்,
நா. கணேசன்

 

N. Ganesan

unread,
Oct 16, 2016, 12:36:41 PM10/16/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, minT...@googlegroups.com
கண்ணதாசன் பற்றி மாயோன், தேமொழி இவ்விழையில் குறிப்பிட்டனர். நாளை கவிஞர் நினைவுநாள்.

திருவாரூர் தங்கராசு, கவிஞர் கண்ணதாசன் - ஆரூர் மேடையில்:

”திருவாரூரில் நான் தலைமை ஆசிரியராக இருந்தபோது தமிழ் தேசியக் கட்சியின் முதல் மாவட்ட மாநாட்டைத் திருவாரூரில் நடத்த வேண்டுமென்று சம்பத் விரும்பினார். வேறுவழியில்லாமல் நானும் ஒப்புக்கொண்டு அதற்கான ஏற்பாடுகளில் தீவிர கவனம் செலுத்தலானேன்.

இரண்டு நாள் மாநாடாக நடந்தது. முதல் நாள் சமூக சீர்திருத்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராகத் தந்தை பெரியார், திருவாரூர் தங்கராசு ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களுடன் சம்பத், கண்ணதாசன் ஆகியோரும் பங்கேற்றார்கள். அப்போது ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ (ஸ்ரீதரின் படம்) வெளிவந்து சிறப்பாக ஓடிக்கொண்டிருந்தது. அதில் கண்ணதாசன் ‘முத்தான முத்தல்லவோ’ என்று குழந்தையின் பெருமையை சிலாகித்து ஒரு பாடல் எழுதியிருந்தார். அதில் ‘கடவுள் தந்த பொருளல்லவோ’ என்று ஒரு வரி. கடவுளின் அருளினால்தான் குழந்தை பாக்கியம் ஏற்படுகிறது என்கிற பொருளில் எழுதப்பட்ட வரி அது.

திருவாரூர் தங்கராசு பேசும்போது, ‘கடவுள் தந்த பொருள் என்று குழந்தையை வர்ணித்திருப்பது மூடநம்பிக்கையின் அடையாளம்,’ என்று பேசினார். அடுத்துப் பேசின கண்ணதாசன் ‘நான் எழுதியது சரிதான், கடவுள் நினைத்தால்தான் குழந்தை பிறக்கும். பெரியாருக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்பதைத் தங்கராசு ஏனோ மறந்துவிட்டுப் பேசுகிறார்’ என்று ஆணித்தரமாக வாதிட்டார். கவிஞர் என்ன இப்படிப் பேசுகிறாரே என்று கூட்டத்தினர் திகைத்தார்கள்.

– பக். 61, 62 திரும்பிப் பார்க்கிறேன் / பி. சி. கணேசன் “ http://www.tamilhindu.com/2009/08/subbu-column-27/


NG


N. Ganesan

unread,
Oct 16, 2016, 1:17:34 PM10/16/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, minT...@googlegroups.com
காந்தி, பெரியார் இருவரும் வணிகர் குடும்பத்தவர்கள். பொதுநலத்திற்காக காசு சேர்த்து பொறுப்பாகவும், எல்லோருக்கும் தெரியும் நிலையிலும் செலவிட்டவர்கள்.
பெரியார் மறைந்தபின்னர் பெரியார் டிரஸ்ட் மிகப்பெரிய வசதிகளுடன் இயங்குகிறது.

வே. ஆனைமுத்து, திருவாரூர் தங்கராசு தனிக்கட்சிகள் ஆரம்பிக்க வேண்டியதாயிற்று.

திருவாரூர் தங்கராசு உயிருடன் இருந்தபோது பெரியார் சொத்துகள் பற்றிய கேள்வி தினமணியில் வெளியான செய்தி:

-------------------------------------------------------

பெரியார் பெயரில் உள்ள சொத்துகளை ஜூன் 30-க்குள் அரசுடைமையாக்க வேண்டும்: பெரியார் திராவிடர் கழகம்
Last Updated on : 20th September 2012 12:36 PM  |   அ+அ அ-   |  
சென்னை, ஜூன் 11: பெரியாருக்கு சட்டப்படி வாரிசுகள் இல்லாததால் அவருடைய பெயரில் இருக்கும் சொத்துகளை தமிழக அரசு அரசுடமையாக்க வேண்டும். ஜூன் 30-ம் தேதிக்குள் இதைச் செய்யாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து விவாதிக்கப்படும் என்று பெரியார் திராவிடர் கழகம் கூறியுள்ளது.  

 பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் பெரியாரின் குடி அரசு இதழ் கட்டுரை தொகுப்பை சென்னையில் வெளியிடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

 இதில் பெரியார் திராவிடர் கழகத்தின் வழக்கறிஞர் துரைசாமி பேசியது:

  1978-ல் திருவாரூர் தங்கராசு பெரியாரின் சொத்துகள் அனைத்து திராவிடர்களுக்கும் சொந்தமானதாக இருக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார். அப்போது சட்ட நுணுக்கங்களைப் பயன்படுத்தியதால் அந்த வழக்கு தள்ளுபடியானது.

 பெரியார் தான் உருவாக்கிய பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவனத்தை சங்கங்களின் சட்டத்தின் கீழ்தான் பதிவு செய்தார். அறக்கட்டளையாக அதை பதிவு செய்யவில்லை. பெரியார் தனது பெயரில் உள்ள சொத்துகளை பத்திரம் மூலம் அந்த அமைப்புக்கு மாற்றவில்லை.

 அவரது பெயரில் உள்ள சென்னை பெரியார் திடல், ஈரோடு பெரியார் மன்றம், திருச்சி பெரியார் மாளிகை உள்ளிட்ட சொத்துகள் உள்ளன. அவருக்கு சட்ட வாரிசுகள் இல்லாததால் இந்து வாரிசுரிமைச் சட்டப்படி, அவை தமிழக அரசுக்கு போய்ச் சேர வேண்டும். எனவே, அரசு அவரது பெயரில் உள்ள சொத்துகளை அரசுடைமையாக்க வேண்டும்.

 ஜூன் 30-ம் தேதிக்குள் அதைச் செயல்படுத்த வேண்டும். அப்படியில்லை என்றால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.

 பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, துணைத் தலைவர் திருவாரூர் தங்கராசு, பொதுச் செயலாளர் விடுதலை ராசேந்திரன், செயலர் கோவை ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.  




சி. ஜெயபாரதன்

unread,
Oct 16, 2016, 1:30:48 PM10/16/16
to vallamai, mintamil, vannan vannan
\\\\\பெரியார் இல்லையென்றால் சாதி ,மத சண்டைகள் குஜராத்தை விட மோசமாக இருந்திருக்கும். அவர் இருந்ததால் குறைந்திருக்குது என்று எண்ணுகிறேன்///

பெரியார் தான் உருவாக்கிய திராவிடக் கழகத்துக்கு எந்த வித ஒழுக்க நெறிகளும், கொள்கைகளும் குறிப்பிடவில்லை.  பிளவுச் சண்டைகள் உண்டாக்கும் பிராமண வெறுப்பு, கடவுள் மறுப்பு தவிர வேறு எந்தப் பெரு முழக்கத்தையும் பெரியார் தமிழ் நாட்டில் பரப்பவில்லை.

முன்னேற்றத் திராவிடர் என்று சொல்லிக் கொண்ட அறிஞர் அண்ணாத்துரைதான் முதன்முதலில் "கடமை, கண்ணியம், கட்டுப்பாடு" என்ற முப்பெரும் நெறியைக் கடைப்பிடித்தார்.  ஆனால் அவரது வாரிசுகள் இப்போது அவற்றையும் காற்றில் பறக்கவிட்டன.

பெரியாரின் எந்த ஒழுக்க நெறி சண்டை போட்டுக் கொள்ளும் திராவிடக் கட்சிகளை எல்லாம் [திக, திமுக, அதிமுக] எப்போது ஒன்றுபடுத்தப் போகிறது ?  அன்றுதான் தமிழ்நாடு உன்னத மாகும்.

சி. ஜெயபாரதன்.  
2016-10-16 9:43 GMT-04:00 Jaisankar Jaganathan <jaisa...@gmail.com>:
ஜெயபாரதன் சார்,

பெரியார் இல்லையென்றால் சாதி ,மத சண்டைகள் குஜராத்தை விட மோசமாக இருந்திருக்கும். அவர் இருந்ததால் குறைந்திருக்குது என்று எண்ணுகிறேன்

--

சி. ஜெயபாரதன்

unread,
Oct 16, 2016, 3:27:52 PM10/16/16
to vallamai, mintamil, vannan vannan


இவர்தான் பெரியார் – இவரை, யார் தான் அறியார் என எழுதினார் வாலி. (பெரியாருக்கு நாளை பிறந்தநாள்) தனது சீர்திருத்த கொள்கைக்கு மாறாக பெரியார் திருமணம் செய்து கொண்டார் என வேதனை அடைந்தார் பாரதிதாசன். கவிதை, கட்டுரை மூலம் இதை குறித்து அவரது எண்ணங்களை பதிவு செய்தார். ராமருக்கு செருப்பு மாலை அணிவித்தாலும், நாயக்கரின் சில கொள்கைகளினால் அவர் மீது  மதிப்பு உள்ளது எனக்கு. ஆனாலும் அவரது திருமண விடயம், புரியவில்லை. அவர் தனி மனிதர், என்ன வேணாலும் செய்யலாம் என்ற சப்பைக்கட்டு விளக்கமில்லாமல், வேறேதினும் இருந்தால் சொல்லுங்கள்…..

திராவிட இயக்கம் பெரியாரின் கொள்கையை விட்டு செல்கிறது என பாவேந்தர் சொல்லி/ எழுதி / கவிபாடி உள்ளார். இதை சொன்னால்நண்பர் சொல்கிறார் : பெரியாரை, பெரியாரின் கருத்துக்களை மக்களிடம் சென்று சேர்க்கிற எத்தனையோ இயக்கங்கள் இருக்கு, தி.க. மட்டும் இல்ல ! சமூகத்துல பெரியார் ஆதரவாளர்னாலே தி.க. தான் நினைவுக்கு வரும்.. தி.மு.க முற்றிலும் வேறுபட்டக் கொள்கைகளை உடையது. 

கடவுள் இல்லை என்பவர் பெரியார். ஒன்றே குலம். ஒருவனே தேவன் -அண்ணா.

N. Ganesan

unread,
Oct 16, 2016, 6:09:48 PM10/16/16
to மின்தமிழ், vallamai


On Saturday, October 15, 2016 at 8:54:53 AM UTC-7, மாயோன் wrote:
//பெரியாருக்கு ஒன்றுமே தெரியாது என்பது போல சிலர் இணையத்தில் எழுதிவருவதைப் பார்க்கிறேன்.//
கணேசன் ஐயா, அவரின் மொழி குறித்த கருத்துகளை ஆழ்ந்து நோக்கினால் இது நன்றாக தெரியும். 
வாய்க்கு வருவதை அடித்து விடுவதும், அதை நவீனப் படுத்துதல் என சிலர் கூறுவதும் தான் நடக்கிறது. உயிரெழுத்துகள்  ஐ,ஔ வேண்டாம் என்றது, ஆங்கிலம் தான் அறிவு மொழி என்றது, திருக்குறள் போன்ற இலக்கியங்களைப் படிக்க சொல்லி, பிறகு படிக்க வேண்டாம் என சொல்லியது,அனைவரும் தாய்மொழியை விடுத்து ஆங்கிலத்தைப் பயன்படுத்த வேண்டும் என சொல்லியது,தமிழ் மொழியை மட்டும் குறிவைத்து இழிவுப்படுத்தியது,.... என பட்டியலிட்டால் அவரின் மொழி அறிவு பற்றி தெரியும். தனித்தமிழ் இயக்கம் செய்தவற்றை எல்லாம் விட்டுட்டு இராமசாமி நாயக்கர் தான் தமிழுக்கு தொண்டு செய்தார் என சொல்வது நகைச்சுவையாக நன்றாக இருக்கும்.


கடவுள் மறுப்பு என்ற பெரியார் கொள்கையை மறைமலை அடிகள் ஏற்கவில்லை.

பெரியார் கருத்துக்களை ஆழ்ந்து நோக்கவேண்டும். உங்களைப் போன்றோர் புதியதோர் பாதை படைக்கவேண்டும்.

“தமிழ் புனிதத்தன்மை உடையது; சிவன் பேசியது; தேவாரம் திருவாசகங்களைக் கொண்ட மொழி என்பதற்காக நான் காக்கப் போராடவில்லை. இருக்கின்ற மொழியில் இந்தத் தமிழ்மொழிதான் சிறந்ததாக இருக்கின்றது என்பதற்காகவே” என்பவரும் பெரியார் தான்.

“தமிழில் ஆரியம் புகுந்ததால்தான் மக்களிடையே காட்டுமிராண்டித்தனம் புகுந்துவிட்டது. இதில் பண்டிதர்கள் கவனம் செலுத்தவேண்டாமா? கவலை எடுத்துக் கொள்ள வேண்டாமா? வெளிநாட்டு மக்களெல்லாம் கட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலத்தில் கப்பலோட்டிக் கடல் கடந்து வாணிகம் நடத்திய தமிழர்களின் மரபில் இன்று ஒரு நியூட்டன் தோன்றவில்லை; ஒரு எடிசன் தோன்றவில்லை; ஒரு மார்க்கோனி தோன்ற முடியவில்லையே என்பதை அறிந்து கொள்ள வேண்டாமா?” என்றவரும் பெரியார் தான்.

"நான் தமிழுக்குத் தொண்டு செய்வது தமிழுக்காக என்று அல்ல. தாய்மொழியைப் பாதுகாத்தல் ஒவ்வொருவருடைய கடனாகும். நம் தமிழ் மொழி தாய்மொழி என்ற மட்டிலும் அல்லாமல் எல்லா வளப்பங்களும் கொண்ட சிறந்த மொழி. இந்தியாவிலேயே பழமை வாய்ந்த பண்பட்ட மொழியாகும். அப்படிப் பெருமைக்குரிய மொழிக்கு ஏற்படும் ஆபத்துகளை எதிர்த்தும் அது மேன்மை அடைய வேண்டும் என்றும் அதற்காகப் போராட்டங்கள் நடத்துகின்றோம்” என்று கூறியவரும் பெரியார் தான்.

“முதலாவதாகத் தமிழ் முன்னேற்றமடைந்து உலக மொழி வரிசையில் அதுவும் ஒரு மொழியாக இருக்க வேண்டுமானால் தமிழையும் மதத்தையும் பிரித்து விட வேண்டும். தமிழுக்கும் கடவுளுக்கும் உள்ள சம்பந்தத்தையும் கொஞ்சமாவது தள்ளி வைக்க வேண்டும்.” - இதுவும் பெரியார் புகன்றதே.

“தமிழில் (Creative Literature) ஆக்க இலக்கியங்கள் தோன்றவில்லை என்பது மட்டுமல்ல.; ஆக்க இலக்கியங்கள் அனேகமாக இல்லவே இல்லை. காரணம் புலவர்களுக்குப் பகுத்தறிவு பெறும் வாய்ப்பும், பகுத்தறிவு பெற்றவர்களுக்கு வயிற்றுப் பிழைப்பு காரணமாகத் துணிவு இல்லாமல் போகும்படியான நிலைமையும் இருப்பதால் - தமிழில் ஆக்க இலக்கியங்கள் தோன்றுவதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது” - என்றதும் பெரியார் தான்.

“நமது மேன்மைக்கு, நமது தகுதிக்கு, நமது முற்போக்குக்கு ஏற்ற மொழி தமிழை விட மேலான ஒரு மொழி இந்நாட்டிலில்லை என்பதற்காகவே தமிழை விரும்புகிறேனே தவிர, அது அற்புத, அதிசயங்களை விளைவிக்கக் கூடியது என்பதற்காக அல்ல. அற்புத சக்திகள் நிறைந்த மொழி என்று பிடிவாதம் செய்வது அறியாமைதான். அது தமிழ்ப் பண்புகூட அல்ல. தமிழில் அதிசயம், மந்திரம், சக்தி முதலிய சொற்களே இல்லை” - என்று விளக்கியவரும் பெரியார் தான்.

“தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று சொல்லக் காரணம் இன்றைக்கும் 2000 ஆண்டுகளுக்கு முன்பு எந்த மூடப் பழக்க வழக்கங்களில் இருந்து வந்தோமோ, அதில் தானே இன்றும் இருந்து இருந்து கொண்டிருக்கிறோம். அந்த பழக்க வழக்கங்களிலிருந்து நம்மை இன்னும் நாம் மாற்றிக்கொள்ளாமல் 2000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளவற்றையே உதாரணமாகக் காட்டிக் கொண்டு கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றி வந்தால் அதற்கு என்ன பொருள்? - என்று வினவி காட்டுமிராண்டி மொழி என்று சொன்னதற்கு விளக்கம் கூறியவரும் பெரியார் தான்.


நா. கணேசன் 

seshadri sridharan

unread,
Oct 17, 2016, 2:06:37 AM10/17/16
to vall...@googlegroups.com
2016-10-17 3:39 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
கடவுள் மறுப்பு என்ற பெரியார் கொள்கையை மறைமலை அடிகள் ஏற்கவில்லை. 

பெரியாரின் கொள்கைகளை ஏற்றோரின் 3 ஆம் தலைமுறை இதாவது, பேரர்கள் இன்று கடவுளை வழிபடுகின்றனர். இது பெரியாரின் கொளகை பழுதுடையது என்பதையே காட்டுகிறது. 

பெரியார் கருத்துக்களை ஆழ்ந்து நோக்கவேண்டும். உங்களைப் போன்றோர் புதியதோர் பாதை படைக்கவேண்டும்.

 பெரியாரின் பாதை வடுகருக்கு பட்டுக்கம்பளமும் தமிழருக்கு  முள்ளும் கல்லும் போன்றது. அதை வைத்து எந்த புதிய பாதையையும் போடமுடியாது. பெரியார் பாதையை தூர்ந்தெடுத்து அப்பால் எறிந்து விட்டு நல்ல தமிழ்ப் பாதையை சமைக்க வேண்டும். 

“தமிழ் புனிதத்தன்மை உடையது; சிவன் பேசியது; தேவாரம் திருவாசகங்களைக் கொண்ட மொழி என்பதற்காக நான் காக்கப் போராடவில்லை. இருக்கின்ற மொழியில் இந்தத் தமிழ்மொழிதான் சிறந்ததாக இருக்கின்றது என்பதற்காகவே” என்பவரும் பெரியார் தான். 


இப்படி பேசியது இந்தி எதிர்ப்பு காலத்தில் வேண்டுமானால் இருந்திருக்கலாம். அது 1930 களில். 1950 களில் அவரது கருத்து தமிழுக்கு எதிரானது. தெலுங்கர் தமிழகத்தில் தெலுங்கர் என அடையாளப்படாமல் அடையாளப்பட்டு ஒதுக்கப்படாமல் இருக்க  தமிழை அழித்தே ஆகவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு மேடையேறி தமிழை காரித் துப்பினார்.  

“தமிழில் ஆரியம் புகுந்ததால்தான் மக்களிடையே காட்டுமிராண்டித்தனம் புகுந்துவிட்டது. இதில் பண்டிதர்கள் கவனம் செலுத்தவேண்டாமா? கவலை எடுத்துக் கொள்ள வேண்டாமா? வெளிநாட்டு மக்களெல்லாம் கட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலத்தில் கப்பலோட்டிக் கடல் கடந்து வாணிகம் நடத்திய தமிழர்களின் மரபில் இன்று ஒரு நியூட்டன் தோன்றவில்லை; ஒரு எடிசன் தோன்றவில்லை; ஒரு மார்க்கோனி தோன்ற முடியவில்லையே என்பதை அறிந்து கொள்ள வேண்டாமா?” என்றவரும் பெரியார் தான்.

தமிழில் ஆரியம் 3% தான் ஆனால் அவர் ஆதரிக்கும் திராவிட மொழிகளில் ஆரியம் 80%  உள்ளது. தமிழை 3% கே துப்பினால் பிற திராவிட மொழிகள் மீது அவர் மூத்திரம் அல்லவா அடித்திருக்க வேண்டும். ஆனால் அவர் வாயே திறக்கவில்லையே. கண்டுபிடிப்பிற்கு  மொழிக்கும்  தொடர்புஇல்லை. அது மனத்தின் அவாத் தூண்டலால் வருவது.
ஆக தமிழனுக்கு தேவை அவாத் தூண்டலே ஆங்கில மொழி அறிவு அல்ல.
 

“முதலாவதாகத் தமிழ் முன்னேற்றமடைந்து உலக மொழி வரிசையில் அதுவும் ஒரு மொழியாக இருக்க வேண்டுமானால் தமிழையும் மதத்தையும் பிரித்து விட வேண்டும். தமிழுக்கும் கடவுளுக்கும் உள்ள சம்பந்தத்தையும் கொஞ்சமாவது தள்ளி வைக்க வேண்டும்.” - இதுவும் பெரியார் புகன்றதே.


மதம் என்பது அறிவியல் போல் ஒரு தனித்துறை. மதம் எப்படி அறிவியலுக்கு தடையாக இருக்க முடியும்? குச்சியால் மண்ணைப் பிளந்தவன் தான் கடப்பாறையையும் மண்வெட்டியையும் கண்டு பிடித்தான். மதமானாலும் அறிவியல் ஆனாலும்  அதை வெளிப்படுத்தும் ஒரு கருவி தான் மொழி. இது எல்லா மொழிகளுக்கும் பொருந்தும். வேண்டுமானால் மதத்தை விடச் சொல்லலாம் மொழியை கைவிடச் சொல்லலாமா? செருப்பு காலைக் கடித்தல் செருப்பை தான் தூக்கி எறியவேண்டும். அதற்காக காலையே வெட்டினால் இழப்பு நமக்கு தானே    

“தமிழில் (Creative Literature) ஆக்க இலக்கியங்கள் தோன்றவில்லை என்பது மட்டுமல்ல.; ஆக்க இலக்கியங்கள் அனேகமாக இல்லவே இல்லை. காரணம் புலவர்களுக்குப் பகுத்தறிவு பெறும் வாய்ப்பும், பகுத்தறிவு பெற்றவர்களுக்கு வயிற்றுப் பிழைப்பு காரணமாகத் துணிவு இல்லாமல் போகும்படியான நிலைமையும் இருப்பதால் - தமிழில் ஆக்க இலக்கியங்கள் தோன்றுவதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது” - என்றதும் பெரியார் தான்.

உலகில் எத்தனையோ நடையில் இலக்கியங்கள் பயில்கின்ற. அத்தனையையும் ஒரு மொழி கொண்டிருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அதன் தேவையை உணர்ந்து மக்கள் தாம் அந் நடையை கைக்கொள்ள வேண்டும். ஏன் இப்படி தமிழில் குறையை சுட்டுவதற்கு பெரியாரே ஒரு ஆக்க இலக்கியத்தை படைத்திருக்கலாமே? திறமை இல்லை என்பதால் தானே அவர் அதை செய்யவில்லை. அதற்கு திறமையை வளர்த்துக் கொள்வதே சிறந்த வழி. தமிழை பழிப்பது அதற்கு தீர்வாகாது. 
 

“நமது மேன்மைக்கு, நமது தகுதிக்கு, நமது முற்போக்குக்கு ஏற்ற மொழி தமிழை விட மேலான ஒரு மொழி இந்நாட்டிலில்லை என்பதற்காகவே தமிழை விரும்புகிறேனே தவிர, அது அற்புத, அதிசயங்களை விளைவிக்கக் கூடியது என்பதற்காக அல்ல. அற்புத சக்திகள் நிறைந்த மொழி என்று பிடிவாதம் செய்வது அறியாமைதான். அது தமிழ்ப் பண்புகூட அல்ல. தமிழில் அதிசயம், மந்திரம், சக்தி முதலிய சொற்களே இல்லை” - என்று விளக்கியவரும் பெரியார் தான்.


இது பிதற்றல் வாதம்.
 

“தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று சொல்லக் காரணம் இன்றைக்கும் 2000 ஆண்டுகளுக்கு முன்பு எந்த மூடப் பழக்க வழக்கங்களில் இருந்து வந்தோமோ, அதில் தானே இன்றும் இருந்து இருந்து கொண்டிருக்கிறோம். அந்த பழக்க வழக்கங்களிலிருந்து நம்மை இன்னும் நாம் மாற்றிக்கொள்ளாமல் 2000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளவற்றையே உதாரணமாகக் காட்டிக் கொண்டு கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றி வந்தால் அதற்கு என்ன பொருள்? - என்று வினவி காட்டுமிராண்டி மொழி என்று சொன்னதற்கு விளக்கம் கூறியவரும் பெரியார் தான்.


அவருடைய தெலுங்கு மொழிக்கு இரண்டாயிரம் ஆண்டுப் பெருமை இல்லை என்பதால் தமிழ்  மீது இப்படி பொறுமலாமா? மூடப்பழக்கம் மொழியால் வருவதன்று அது மூட நம்பிக்கையால், குருட்டு நம்பிக்கையால் வருவது. இதிலிருந்து பெரியார் ஒரு அடிமட்ட முட்டாள் என்பது நன்றாக விளங்குகிறது. ஒரு முட்டாள் முட்டாளை மட்டுமே உருவாக்க முடியும்  அறிவாளியால தான் ஒரு அறிவாளியை உருவாக்க முடியும். பெரியாருக்கு அறிவாளித் தகுதியே இல்லை பின் பகுத்தறிவு மட்டும் எங்கே இருந்து வரும் அவருக்கு? 

பரணப்பன் 

seshadri sridharan

unread,
Oct 17, 2016, 2:16:16 AM10/17/16
to vall...@googlegroups.com
உண்மையிலேயே தமிழில் அறிவியல்  வரவேண்டும் என்று பெரியார் விரும்பியிருந்தால் ஆங்கில அறிவியல் நூல்களை தமிழில் மொழிபெயர்க்கும் திட்டத்தை தொடங்கியிருக்கலாமே. அதற்கான நிதியை தன் செல்வக் குவிப்பில் இருந்தோ  அல்லது மக்களிடம் இருந்து திரட்டியோ தந்திருக்கலாம். 

பரணப்பன் 

சொ. வினைதீர்த்தான்

unread,
Oct 17, 2016, 2:23:25 AM10/17/16
to vallamai
2016-10-17 11:36 GMT+05:30 seshadri sridharan <ssesh...@gmail.com>:
தமிழில் ஆரியம் 3% தான் ஆனால் அவர் ஆதரிக்கும் திராவிட மொழிகளில் ஆரியம் 80%  உள்ளது. தமிழை 3% கே துப்பினால் பிற திராவிட மொழிகள் மீது அவர் மூத்திரம் அல்லவா அடித்திருக்க வேண்டும்.

  
 மூடப்பழக்கம் மொழியால் வருவதன்று அது மூட நம்பிக்கையால், குருட்டு நம்பிக்கையால் வருவது. இதிலிருந்து பெரியார் ஒரு அடிமட்ட முட்டாள் என்பது நன்றாக விளங்குகிறது. ஒரு முட்டாள் முட்டாளை மட்டுமே உருவாக்க முடியும்  அறிவாளியால தான் ஒரு அறிவாளியை உருவாக்க முடியும். பெரியாருக்கு அறிவாளித் தகுதியே இல்லை பின் பகுத்தறிவு மட்டும் எங்கே இருந்து வரும் அவருக்கு? 


கடுமையான சொற்களைப் பயன்படுத்த வேண்டாம் திரு சேசாத்ரி.
பெரியாரைக் குறித்து பல விமர்சனங்கள் படித்துள்ளேன். ஆனால் அவரை யாரும் முட்டாள் என்று சொல்லிப் படித்ததில்லை. வருத்தமாக உள்ளது
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.

மாயோன்

unread,
Oct 17, 2016, 5:31:39 AM10/17/16
to vall...@googlegroups.com
//அதற்காகப் பெரியார் இயக்கம் செய்தது என்பதே  இல்லாமல் போகுமா?  பெரியார் உழைப்பெல்லாம் பொய் என்று ஆகிவிடுமா?//
கீழ்வெண்மணிப் படுகொலைகள் நடந்த பொழுது எங்கே போனார்? நிலவுக்கு போய்விட்டாரோ?தமிழ் வெறுப்பு என்பது என்ன மாதிரியான உழைப்பு?

//யாரேனும் காமராஜர், இராஜாஜி நாட்டுக்குச்  செய்தவற்றை சொன்னால் அதற்கும் முன்னரே இதனைக் காந்தி சொல்லிவிட்டார் நேரு செய்துவிட்டார், இவர்கள் என்ன பெரிதாய் கிழித்தார்கள் என்று சொல்லமுடியுமா?//
காமராசர் செய்ததை கண்டிப்பாக காந்தியோ நேருவோ செய்யவில்லை. தனி மனித ஒழுக்கமில்லாத மோ.க.காந்தி,நேரு போன்றவர்களை உயர்த்தி வ.உ.சி,திலகர்,சு.ச.போசு போன்றோரை மறைக்கவில்லையா?.

//யாரேனும் மக்களுக்காக ஒரு மாறுதலைச் செய்தால் அதற்கான பாராட்டை தெரிவிப்பதில் தவறிருப்பதாக  எனக்குத் தெரியவில்லை.

அப்படிப் பாராட்டுபவர்கள் ஏமாற்றுக்காரர்களும் அல்ல உண்மை தெரியாதவர்களும் அல்ல.//
அம்மா,நீங்கள் இராமசாமி நாயக்கர் செய்த எல்லா செயல்களையும் சொல்லாமல், அவருக்கு முன்பிருந்த மக்களின் செயல்களை எல்லாம் மறைத்து, எல்லா நல்லவற்றையும் நாயக்கர் தான் செய்தார் என சொல்வது என்ன? நீங்கள் தெரிந்து சொல்கிறீர்களா, ஏமாற்ற சொல்கிறீர்களா என்றெல்லாம் எனக்கு தெரியாது; ஆனால் இது தவறு என்பதால் தான் விற்பனைத் திட்டம் என்று சொல்கிறேன். தமிழ்நாட்டில் தமிழர் எல்லாம் அறிவில்லாமல் இருந்தது போலவும், தனி மனித ஒழுக்கமில்லாத தமிழரல்லாத ஒருவர் தான் எல்லோருக்கும் நல்லது செய்தார் என்பது போலவும் செய்வது வரலாற்றை அழிப்பது தான்.
இப்படி செய்து தான் பலர் வரலாற்றில் இருந்து மறைந்துள்ளனர்.


//பெரியார் இல்லையென்றால் சாதி ,மத சண்டைகள் குஜராத்தை விட மோசமாக இருந்திருக்கும். அவர் இருந்ததால் குறைந்திருக்குது என்று எண்ணுகிறேன்//
😴😴😴
இராமசாமி நாயக்கர் வருவதற்கு முன்பு தமிழகம் எப்படி இருந்தது?
தனிமனித ஒழுக்கமில்லாமல் இராமசாமி நாயக்கர் இருந்த பொழுதே தமிழகத்தில் சாதியத்தை எதிர்த்த்தோர் பலரிருக்க நாயக்கருக்கு எல்லா நல்ல பெயரையும் கொடுப்பது விற்பனைக்கு நல்லது. வரலாற்றுக்கு அல்ல.


//திரு. மாயோன் காட்டும் பாடலில் சிலப்பதிகாரம், கம்பன் என்றெல்லாம் ஒன்றுகூட குறிப்பிட்டுப் பாரதிதாசன் சொல்லவில்லை. அவரது இயக்கக்காரர்கள்
- அண்ணாவைச் சொல்கிறாரா, பெரியாரைச் சொல்கிறாரா என்றும் தெளிவில்லை. எல்லோரையும் தான் சொல்கிறார் போல.
முடிவுரையாக, புத்திலக்கியம் 30 ஆண்டுகளாக உருவாவதைச் சொல்கிறார்//

'ஆங்கிலம் தாயாக' என்பது எல்லோரும் ஆங்கிலம் பயின்று, ஆங்கிலத்திலேயே பேச வேண்டும் என சொன்ன இராமசாமி நாயக்கரைத் தான் குறிக்கிறது. 

//இந்து என்றால் சமயத்தைக் குறிப்பதாக எனக்குத் தோன்றியதால்.//
ஐயா, இந்து என்பது தான் அந்த பத்திரிக்கையின் பெயர். அதை தமிழில் அச்சிடும் பொழுது, திரு.இராம் அவர்களே ஹிந்து என அச்சிடாமல் இந்து என்று தானே அச்சிடுகிறார். அதை மாற்ற வேண்டாம்-என்று சொல்கிறேன். 

--

மாயோன்

unread,
Oct 17, 2016, 6:02:16 AM10/17/16
to vall...@googlegroups.com
//கடவுள் மறுப்பு என்ற பெரியார் கொள்கையை மறைமலை அடிகள் ஏற்கவில்லை.

பெரியார் கருத்துக்களை ஆழ்ந்து நோக்கவேண்டும். உங்களைப் போன்றோர் புதியதோர் பாதை படைக்கவேண்டும்.//

மறைமலை அடிகள் இறை நம்பிக்கையாளர்; ஆனால் தமிழர் வேறு இந்துகள் வேறு என்று சொன்னவர். ஆரியத்தை பல ஆண்டுகளாக எதிர்த்தவர்-தமிழை நேசித்தவர்.

இராமசாமி நாயக்கர் ஒரு காலத்தில் இறை நம்பிக்கையாளர்; பிற்காலத்தில் இறை மறுப்பாளர். நான் ஒரு இந்து என்றவர். ஆரியத்தை எதிர்க்கிறேன் என்றவர்-ஆனால் எதிர்ப்பு என்பதெல்லம் வெறுப்பாக தான் இருந்தது. தமிழ் நல்ல மொழி என்றவர், பிறகு தமிழை பழித்தவர்.

//இருக்கின்ற மொழியில் இந்தத் தமிழ்மொழிதான் சிறந்ததாக இருக்கின்றது என்பதற்காகவே என்பவரும் பெரியார் தான்//
பிறகு, தமிழில் கெட என்ன இருக்கிறது என சொன்னவரும் இவர் தானே.

//“தமிழில் ஆரியம் புகுந்ததால்தான் மக்களிடையே காட்டுமிராண்டித்தனம் புகுந்துவிட்டது. இதில் பண்டிதர்கள் கவனம் செலுத்தவேண்டாமா? கவலை எடுத்துக் கொள்ள வேண்டாமா? வெளிநாட்டு மக்களெல்லாம் கட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலத்தில் கப்பலோட்டிக் கடல் கடந்து வாணிகம் நடத்திய தமிழர்களின் மரபில் இன்று ஒரு நியூட்டன் தோன்றவில்லை; ஒரு எடிசன் தோன்றவில்லை; ஒரு மார்க்கோனி தோன்ற முடியவில்லையே என்பதை அறிந்து கொள்ள வேண்டாமா?” என்றவரும் பெரியார் தான்.//
உலகில் என்ன நடக்கிறது என அறியாமல் இருந்தார் என்பதற்கு இது தான் சான்று; இராமன் விளைவிற்கு நோபல் பரிசு வழங்கியது 1930.

//நான் தமிழுக்குத் தொண்டு செய்வது தமிழுக்காக என்று அல்ல. தாய்மொழியைப் பாதுகாத்தல் ஒவ்வொருவருடைய கடனாகும். நம் தமிழ் மொழி தாய்மொழி என்ற மட்டிலும் அல்லாமல் எல்லா வளப்பங்களும் கொண்ட சிறந்த மொழி. இந்தியாவிலேயே பழமை வாய்ந்த பண்பட்ட மொழியாகும். அப்படிப் பெருமைக்குரிய மொழிக்கு ஏற்படும் ஆபத்துகளை எதிர்த்தும் அது மேன்மை அடைய வேண்டும் என்றும் அதற்காகப் போராட்டங்கள் நடத்துகின்றோம்” என்று கூறியவரும் பெரியார் தான்.//
தமிழ் வளர்ப்போரை தாய்மொழிப் பைத்தியம் என விளித்தவர் இவர் தானே. தொல்காப்பியன் ஓர் ஆரியக் கைக்கூலி.ஆரிய இலக்கணத்தையே தமிழுக்கு எழுதி வைத்தான் என பழித்தது இவர் தானே.

//“முதலாவதாகத் தமிழ் முன்னேற்றமடைந்து உலக மொழி வரிசையில் அதுவும் ஒரு மொழியாக இருக்க வேண்டுமானால் தமிழையும் மதத்தையும் பிரித்து விட வேண்டும். தமிழுக்கும் கடவுளுக்கும் உள்ள சம்பந்தத்தையும் கொஞ்சமாவது தள்ளி வைக்க வேண்டும்.” - இதுவும் பெரியார் புகன்றதே.//
சமயக் குறவர்கள் முதல் மறைமலை அடிகள் வரை தமிழை வளர்த்தோர் பலர் இறை நம்பிக்கையாளர்களே; இது பல சமயங்களில் இருந்த மக்களுக்கும் பொருந்தும். இதையெல்லாம் விடுத்து, சமசுகிருதம் திணித்த அயல் மொழி அரசர்களின் திணிப்பை அல்லவா தமிழகத்தில் இருந்து பிரித்திருக்க வேண்டும் என சொல்லணும்.

//தமிழில் (Creative Literature) ஆக்க இலக்கியங்கள் தோன்றவில்லை என்பது மட்டுமல்ல.; ஆக்க இலக்கியங்கள் அனேகமாக இல்லவே இல்லை. காரணம் புலவர்களுக்குப் பகுத்தறிவு பெறும் வாய்ப்பும், பகுத்தறிவு பெற்றவர்களுக்கு வயிற்றுப் பிழைப்பு காரணமாகத் துணிவு இல்லாமல் போகும்படியான நிலைமையும் இருப்பதால் - தமிழில் ஆக்க இலக்கியங்கள் தோன்றுவதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது” - என்றதும் பெரியார் தான்.//

தொல்காப்பியத்தில் உயிர்களின் வளர்ச்சி என நீங்கள் தேடினால் பல கட்டுரைகள் கிடைக்கும்; சங்க இலக்கியங்கள் யாவுமே ஆக்க இலக்கியங்கள் தான். இதை இராமசாமி நாயக்கர் படிக்கவே இல்லை என்பது தெளிவாகிறது. மேலும், பிற்கால இலக்கியங்களும் ஓரளவிற்கு ஆக்க இலக்கியங்களே. சமசுகிருத இலக்கியங்களைச் சாராமல், தமிழில் தான் பல நூற்றாண்டுகளுக்கு இலக்கியங்கள் வந்துள்ளன.


//“நமது மேன்மைக்கு, நமது தகுதிக்கு, நமது முற்போக்குக்கு ஏற்ற மொழி தமிழை விட மேலான ஒரு மொழி இந்நாட்டிலில்லை என்பதற்காகவே தமிழை விரும்புகிறேனே தவிர, அது அற்புத, அதிசயங்களை விளைவிக்கக் கூடியது என்பதற்காக அல்ல. அற்புத சக்திகள் நிறைந்த மொழி என்று பிடிவாதம் செய்வது அறியாமைதான். அது தமிழ்ப் பண்புகூட அல்ல. தமிழில் அதிசயம், மந்திரம், சக்தி முதலிய சொற்களே இல்லை” - என்று விளக்கியவரும் பெரியார் தான்.//
இந்தி வளர்க்க இந்தி பள்ளிக்கு நிலம் கொடுத்த நீங்கள் தமிழ் வளர்க்க ஒன்றும் செய்யவில்லை என தேவநேயப் பாவாணர் ஏன் கேட்டார்?
'தமிழை ஒதுக்கிவிட்டால் உனக்கு நட்டம் ஏது?' என இராமசாமி நாயக்கர் ஏன் எழுதினர்?
”யாருக்குப் பிறந்தாலும் மானம் தேவை. அது உன்னிடம் இருக்கிறதா, என்னிடம் இருக்கிறதா என்பதுதான் இப்பொழுது சிந்திக்க வேண்டிய தேவை. அதையும்விடத் தமிழ்மொழியிலும், தமிழ் சமுதாயத்திலும் இருக்கிறதா, இருப்பதற்குத் தமிழ் உதவியதா என்பதுதான் முக்கியமான, முதலாவதான கேள்வி?” என நாயக்கர் எழுதியதன் நோக்கம் என்ன?

//“தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று சொல்லக் காரணம் இன்றைக்கும் 2000 ஆண்டுகளுக்கு முன்பு எந்த மூடப் பழக்க வழக்கங்களில் இருந்து வந்தோமோ, அதில் தானே இன்றும் இருந்து இருந்து கொண்டிருக்கிறோம். அந்த பழக்க வழக்கங்களிலிருந்து நம்மை இன்னும் நாம் மாற்றிக்கொள்ளாமல் 2000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளவற்றையே உதாரணமாகக் காட்டிக் கொண்டு கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றி வந்தால் அதற்கு என்ன பொருள்? - என்று வினவி காட்டுமிராண்டி மொழி என்று சொன்னதற்கு விளக்கம் கூறியவரும் பெரியார் தான்.//

மெய்யாக பார்த்தால் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அன்று முதல் இன்று வரை மூடப்பழக்கங்கள் குறைவாக இருந்திருக்கிறது. இராமசாமி நாயக்கருக்கு தெளிவாக தமிழர் பழக்கங்களையோ திணித்த பழக்கங்களையோ வேறுபடுத்த தெரியாது. அதனால் இருப்பது எல்லாம் மூடப்பழக்கம் என சொல்லிட்டார். ஒரு சில பழக்கங்களுக்கு பின் இருக்கும் நோக்கத்தை அவர் அறிந்திருக்கவில்லை. மேலும், உயர்தனிச் செம்மொழி என தனித்தமிழ் இயக்கம் மக்களிடம் தமிழின் பெருமைகளைச் சேர்க்க முயன்ற பொழுது தமிழைக் காட்டுமிராண்டி மொழி என நாயக்கர் சொன்னதன் நோக்கம்மென்ன?

மாயோன்

unread,
Oct 17, 2016, 6:14:16 AM10/17/16
to vall...@googlegroups.com
//பெரியாரின் பாதை வடுகருக்கு பட்டுக்கம்பளமும் தமிழருக்கு  முள்ளும் கல்லும் போன்றது. அதை வைத்து எந்த புதிய பாதையையும் போடமுடியாது. பெரியார் பாதையை தூர்ந்தெடுத்து அப்பால் எறிந்து விட்டு நல்ல தமிழ்ப் பாதையை சமைக்க வேண்டும். //
ஐயா, பிராமணர் தமிழரல்ல என சொல்லிய அவர்-தமிழகத்தில் இருந்த பிற இன மக்கள் அனைவரையும் திராவிடர் என அழைக்க காரணம் அது தான்.

//இப்படி பேசியது இந்தி எதிர்ப்பு காலத்தில் வேண்டுமானால் இருந்திருக்கலாம். அது 1930 களில். 1950 களில் அவரது கருத்து தமிழுக்கு எதிரானது. தெலுங்கர் தமிழகத்தில் தெலுங்கர் என அடையாளப்படாமல் அடையாளப்பட்டு ஒதுக்கப்படாமல் இருக்க  தமிழை அழித்தே ஆகவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு மேடையேறி தமிழை காரித் துப்பினார்.  //
,மொழிவாரி மாநிலம் என பிரச்சனை  வந்த பொழுதும் இரட்டைக்குழல் துப்பாக்கி வாயடைத்து இருந்ததும்.

//ஏன் இப்படி தமிழில் குறையை சுட்டுவதற்கு பெரியாரே ஒரு ஆக்க இலக்கியத்தை படைத்திருக்கலாமே? திறமை இல்லை என்பதால் தானே அவர் அதை செய்யவில்லை. அதற்கு திறமையை வளர்த்துக் கொள்வதே சிறந்த வழி. தமிழை பழிப்பது அதற்கு தீர்வாகாது. //
🤔🤔

//அவருடைய தெலுங்கு மொழிக்கு இரண்டாயிரம் ஆண்டுப் பெருமை இல்லை என்பதால் தமிழ்  மீது இப்படி பொறுமலாமா? //
அவர் கன்னடன் என்று சொன்னதெல்லாம் பொய்யா🤔🤔

//கடுமையான சொற்களைப் பயன்படுத்த வேண்டாம் திரு சேசாத்ரி.
பெரியாரைக் குறித்து பல விமர்சனங்கள் படித்துள்ளேன். ஆனால் அவரை யாரும் முட்டாள் என்று சொல்லிப் படித்ததில்லை. வருத்தமாக உள்ளது//

வேசி மகன் என தமிழரைச் சொன்னவரை நாகரீகமாக முட்டாள் என்பதுடன் நிறுத்துவது கடுமையா🤔🤔

Jaisankar Jaganathan

unread,
Oct 17, 2016, 6:25:34 AM10/17/16
to vall...@googlegroups.com
மாயோனும் சேஷாத்ரியும் தமிழர்களை பெரியாருக்கு எதிராகவும் தெலுங்கர், கன்னடர்களுக்கு எதிராகவும் நிறுத்தவே முயல்வதாக தோன்றுகிறது.
--
regards,
jaisankar jaganathan

மாயோன்

unread,
Oct 17, 2016, 7:04:07 AM10/17/16
to vall...@googlegroups.com
//மாயோனும் சேஷாத்ரியும் தமிழர்களை பெரியாருக்கு எதிராகவும் தெலுங்கர், கன்னடர்களுக்கு எதிராகவும் நிறுத்தவே முயல்வதாக தோன்றுகிறது.//

அவர் செய்ததை/சொன்னதை நான் குறிப்பிட்டுள்ளேன்.
அவர் தமிழ் வெறுப்பை மறைக்க, இதை இப்படி எல்லாம் ஏன் சுற்றி விடுகிறீர்கள்?

சி. ஜெயபாரதன்

unread,
Oct 17, 2016, 7:18:51 AM10/17/16
to vallamai, tamilmantram, மின்தமிழ்
////“தமிழில் ஆரியம் புகுந்ததால்தான் மக்களிடையே காட்டுமிராண்டித்தனம் புகுந்துவிட்டது. இதில் பண்டிதர்கள் கவனம் செலுத்தவேண்டாமா? கவலை எடுத்துக் கொள்ள வேண்டாமா? வெளிநாட்டு மக்களெல்லாம் கட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலத்தில் கப்பலோட்டிக் கடல் கடந்து வாணிகம் நடத்திய தமிழர்களின் மரபில் இன்று ஒரு நியூட்டன் தோன்றவில்லை; ஒரு எடிசன் தோன்றவில்லை; ஒரு மார்க்கோனி தோன்ற முடியவில்லையே என்பதை அறிந்து கொள்ள வேண்டாமா?” என்றவரும் பெரியார் தான்./////

இந்த விஞ்ஞான உதாரணங்களை எழுதியவர் / குறிப்பிட்டவர் தந்தை பெரியாராக இருக்க முடியாது என்பது என் கருத்து.  ஆதாரங்கள் தேவை.

இவற்றைக் கீற்றில் அணிந்துரை உயர்வு நவிற்சியாய்ப் பண்ணையூரான் 2012 இல் எழுதியது.

/// விவரங்கள்
எழுத்தாளர்: பண்ணையூரான்
தாய்ப் பிரிவு: சமூகம் - இலக்கியம்
பிரிவு: கட்டுரைகள்
 
​சி. ஜெயபாரதன்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Oct 17, 2016, 9:27:53 AM10/17/16
to மின்தமிழ், vall...@googlegroups.com


On Monday, October 17, 2016 at 4:18:52 AM UTC-7, jayabarathans wrote:
////“தமிழில் ஆரியம் புகுந்ததால்தான் மக்களிடையே காட்டுமிராண்டித்தனம் புகுந்துவிட்டது. இதில் பண்டிதர்கள் கவனம் செலுத்தவேண்டாமா? கவலை எடுத்துக் கொள்ள வேண்டாமா? வெளிநாட்டு மக்களெல்லாம் கட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலத்தில் கப்பலோட்டிக் கடல் கடந்து வாணிகம் நடத்திய தமிழர்களின் மரபில் இன்று ஒரு நியூட்டன் தோன்றவில்லை; ஒரு எடிசன் தோன்றவில்லை; ஒரு மார்க்கோனி தோன்ற முடியவில்லையே என்பதை அறிந்து கொள்ள வேண்டாமா?” என்றவரும் பெரியார் தான்./////

இந்த விஞ்ஞான உதாரணங்களை எழுதியவர் / குறிப்பிட்டவர் தந்தை பெரியாராக இருக்க முடியாது என்பது என் கருத்து.  ஆதாரங்கள் தேவை.

இவற்றைக் கீற்றில் அணிந்துரை உயர்வு நவிற்சியாய்ப் பண்ணையூரான் 2012 இல் எழுதியது.

அப்படித் தெரியவில்லை. பெரியார் உரையில் என்று இருக்கிறது. எந்த உரை, எந்த ஆண்டு எனப் பார்க்கவேண்டும்.

ஈவேரா ஐரோப்பா சென்றுவந்தவர். நாளும் பத்திரிகைகள் படித்தவர். நியூட்டன், எடிசன், மார்க்கோனி எனக் கேள்விப்பட்டிருப்பார்.

நா. கணேசன்
 

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

சி. ஜெயபாரதன்

unread,
Oct 17, 2016, 9:55:32 AM10/17/16
to vallamai, மின்தமிழ்
///ஈவேரா ஐரோப்பா சென்றுவந்தவர். நாளும் பத்திரிகைகள் படித்தவர். நியூட்டன், எடிசன், மார்க்கோனி எனக் கேள்விப்பட்டிருப்பார்.///

ஐரோப்பா சென்றால் பெரியார் விஞ்ஞானி ஆகிவிடுவாரா ?

ஏன் ? அவர் காலத்தில் வாழ்ந்த ஐன்ஸ்டைனையும் தெரிந்திருப்பார் அல்லவா ? எல்லாவற்றுக்கும் ஆதாரம் காட்டுங்கள்.  

தேவதூதர் ஏசுநாதர் கதையும் இப்படித்தான் செத்தவரை உயிர்பித்தார், குருடருக்குப் பார்வை கொடுத்தார் என்று பிற்காலத்தில் தெய்வீக உயர்வு நவிர்ச்சியாய்ப் போனது.

சி. ஜெயபாரதன்.


To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Oct 17, 2016, 9:59:16 AM10/17/16
to வல்லமை, mint...@googlegroups.com


On Monday, October 17, 2016 at 6:55:32 AM UTC-7, ஜெயபாரதன் wrote:
///ஈவேரா ஐரோப்பா சென்றுவந்தவர். நாளும் பத்திரிகைகள் படித்தவர். நியூட்டன், எடிசன், மார்க்கோனி எனக் கேள்விப்பட்டிருப்பார்.///

ஐரோப்பா சென்றால் பெரியார் விஞ்ஞானி ஆகிவிடுவாரா ?

நான் கொடுத்த கட்டுரையில் பெரியார் விஞ்ஞானி என்றா இருக்கிறது?

சி. ஜெயபாரதன்

unread,
Oct 17, 2016, 10:02:13 AM10/17/16
to vallamai, மின்தமிழ்
///ஈவேரா ஐரோப்பா சென்றுவந்தவர். நாளும் பத்திரிகைகள் படித்தவர். நியூட்டன், எடிசன், மார்க்கோனி எனக் கேள்விப்பட்டிருப்பார்.///

ஏசுநாதர் சீடர்கள் போல, போகப்போக பெரியாருக்கும் பண்ணையூரான் போல புதிய கதைகட்டும் சீடர்கள் பெருகி, அவரை ஒரு விஞ்ஞானியாய் ஆக்கி விடுவார்.

சி. ஜெயபாரதன்

சி. ஜெயபாரதன்

unread,
Oct 17, 2016, 10:07:07 AM10/17/16
to vallamai, mintamil
///தமிழர்களின் மரபில் இன்று ஒரு நியூட்டன் தோன்றவில்லை; ஒரு எடிசன் தோன்றவில்லை; ஒரு மார்க்கோனி தோன்ற முடியவில்லையே என்பதை அறிந்து கொள்ள வேண்டாமா?” என்றவரும் பெரியார் தான்./////

///நான் கொடுத்த கட்டுரையில் பெரியார் விஞ்ஞானி என்றா இருக்கிறது?  ///

ஒரு விஞ்ஞானியாய் இல்லாது, விஞ்ஞான அறிவில்லாது பெரியார் நியூட்டன், எடிசன், மார்க்கோனி ஆகியோரைப் பற்றி எதுவும் சொல்ல முடியாது.

சி. ஜெயபாரதன்


To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Oct 17, 2016, 10:10:44 AM10/17/16
to மின்தமிழ், vall...@googlegroups.com


On Monday, October 17, 2016 at 7:07:13 AM UTC-7, jayabarathans wrote:
///தமிழர்களின் மரபில் இன்று ஒரு நியூட்டன் தோன்றவில்லை; ஒரு எடிசன் தோன்றவில்லை; ஒரு மார்க்கோனி தோன்ற முடியவில்லையே என்பதை அறிந்து கொள்ள வேண்டாமா?” என்றவரும் பெரியார் தான்./////

///நான் கொடுத்த கட்டுரையில் பெரியார் விஞ்ஞானி என்றா இருக்கிறது?  ///

ஒரு விஞ்ஞானியாய் இல்லாது, விஞ்ஞான அறிவில்லாது பெரியார் நியூட்டன், எடிசன், மார்க்கோனி ஆகியோரைப் பற்றி எதுவும் சொல்ல முடியாது.

ஈவேரா நியூட்டன், எடிசன், மார்க்கோனி சாதனைகளைக் கேட்டதே இல்லை என நீங்கள் சொல்லலாம்.
ஆனால், நம்பும்படியாக இல்லை.

சி. ஜெயபாரதன்

unread,
Oct 17, 2016, 10:23:03 AM10/17/16
to mintamil, vallamai
நண்பர் நா. கணேசன்,

நீங்கள் நாசா விண்வெளித் தேடல் ஆய்வகத்தில் இப்போது பணி செய்கிறீர்கள். மனிதர் நம்பும்படியாக உங்கள் கூற்றுக்கு ஆதாரங்கள் காட்டுங்கள். 

பண்ணையூரான் கட்டுக் கதையை நம்புவதற்கு அவரே ஆதாரம் காட்டவில்லை.

சி. ஜெயபாரதன்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Oct 17, 2016, 10:28:37 AM10/17/16
to மின்தமிழ், vall...@googlegroups.com


On Monday, October 17, 2016 at 7:23:09 AM UTC-7, jayabarathans wrote:
நண்பர் நா. கணேசன்,

நீங்கள் நாசா விண்வெளித் தேடல் ஆய்வகத்தில் இப்போது பணி செய்கிறீர்கள். மனிதர் நம்பும்படியாக உங்கள் கூற்றுக்கு ஆதாரங்கள் காட்டுங்கள். 

பெரியார் எடிசன், மார்கோனி கேட்டதில்லை என்று ஆதாரம் காட்டுங்கள்.
 
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

சி. ஜெயபாரதன்

unread,
Oct 17, 2016, 10:36:43 AM10/17/16
to vallamai, mintamil, tamilmantram
////பெரியாரைக் குறித்து பல விமர்சனங்கள் படித்துள்ளேன். ஆனால் அவரை யாரும் முட்டாள் என்று சொல்லிப் படித்ததில்லை. வருத்தமாக உள்ளது/////

கடவுள் நம்புவோர் யாவரும் முட்டாள்கள் என்று பன்முறை ஒரே சங்கை ஊதியவர் தந்தை பெரியார்.

கடவுள் நம்பிக்கையுள்ள திருவள்ளுவர், இளங்கோவடிகள், கம்பர், அப்பர், சுந்தரர், சம்பந்தர், வாசகர், காலிலியோ, கெப்ளர், காப்பர்நிக்கஸ், நியூட்டன், பாரதியார் இவரை எல்லாம் பெரியார் முட்டாள்கள் என்று இகழ்ந்தபோது எங்களுக்கும் நெஞ்சம் கொதித்தது.

சி. ஜெயபாரதன்.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

சி. ஜெயபாரதன்

unread,
Oct 17, 2016, 10:41:56 AM10/17/16
to vallamai, mintamil, tamilmantram
////“தமிழில் ஆரியம் புகுந்ததால்தான் மக்களிடையே காட்டுமிராண்டித்தனம் புகுந்துவிட்டது. இதில் பண்டிதர்கள் கவனம் செலுத்தவேண்டாமா? கவலை எடுத்துக் கொள்ள வேண்டாமா? வெளிநாட்டு மக்களெல்லாம் கட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலத்தில் கப்பலோட்டிக் கடல் கடந்து வாணிகம் நடத்திய தமிழர்களின் மரபில் இன்று ஒரு நியூட்டன் தோன்றவில்லை; ஒரு எடிசன் தோன்றவில்லை; ஒரு மார்க்கோனி தோன்ற முடியவில்லையே என்பதை அறிந்து கொள்ள வேண்டாமா?” என்றவரும் பெரியார் தான்./////

நண்பர் நா. கணேசன்,

மேற்கூறிய திருவாசகத்தை முதலில் வெளியிட்டது நீங்கள்.  ஆதாரம் காட்ட முடியவில்லை இதுவரை அதற்கு நீங்கள்.   

சி. ஜெயபாரதன்

seshadri sridharan

unread,
Oct 17, 2016, 10:42:25 AM10/17/16
to vall...@googlegroups.com
2016-10-17 15:55 GMT+05:30 Jaisankar Jaganathan <jaisa...@gmail.com>:
மாயோனும் சேஷாத்ரியும் தமிழர்களை பெரியாருக்கு எதிராகவும் தெலுங்கர், கன்னடர்களுக்கு எதிராகவும் நிறுத்தவே முயல்வதாக தோன்றுகிறது.

பெரியாரும் அவருடைய திராவிடமும் (கன்னட, தெலுங்கு, மலையாளம்) தமிழுக்கும் தமிழருக்கும் தமிழ்நாட்டிற்கும் தீங்கு . இவற்றை தமிழர் நெஞ்சங்களில் இருந்து விரட்டி அடிக்கவேண்டும்.  இவர்களை எதிர்த்து தமிழருக்கு ஒரு நன்மையையும் ஏற்படப்போவதில்லை. நீங்கள் கவலை கொள்வதை பார்த்தால் தமிழர் இல்லை போல் தெரிகிறதே?

பரணப்பன் 

N. Ganesan

unread,
Oct 17, 2016, 10:47:54 AM10/17/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, minT...@googlegroups.com


On Monday, October 17, 2016 at 7:41:57 AM UTC-7, jayabarathans wrote:
////“தமிழில் ஆரியம் புகுந்ததால்தான் மக்களிடையே காட்டுமிராண்டித்தனம் புகுந்துவிட்டது. இதில் பண்டிதர்கள் கவனம் செலுத்தவேண்டாமா? கவலை எடுத்துக் கொள்ள வேண்டாமா? வெளிநாட்டு மக்களெல்லாம் கட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலத்தில் கப்பலோட்டிக் கடல் கடந்து வாணிகம் நடத்திய தமிழர்களின் மரபில் இன்று ஒரு நியூட்டன் தோன்றவில்லை; ஒரு எடிசன் தோன்றவில்லை; ஒரு மார்க்கோனி தோன்ற முடியவில்லையே என்பதை அறிந்து கொள்ள வேண்டாமா?” என்றவரும் பெரியார் தான்./////

நண்பர் நா. கணேசன்,

மேற்கூறிய திருவாசகத்தை முதலில் வெளியிட்டது நீங்கள்.  ஆதாரம் காட்ட முடியவில்லை இதுவரை அதற்கு நீங்கள்.   

On Monday, October 17, 2016 at 6:55:32 AM UTC-7, ஜெயபாரதன் wrote:
///ஈவேரா ஐரோப்பா சென்றுவந்தவர். நாளும் பத்திரிகைகள் படித்தவர். நியூட்டன், எடிசன், மார்க்கோனி எனக் கேள்விப்பட்டிருப்பார்.///

ஐரோப்பா சென்றால் பெரியார் விஞ்ஞானி ஆகிவிடுவாரா ?

நான் கொடுத்த கட்டுரையில் பெரியார் விஞ்ஞானி என்றா இருக்கிறது?

நீங்கள் பெரியார் எடிசன், நியூட்டன், மார்க்கோனி கேட்டதேயில்லை என்று ஆதாரம் காட்டினால்
இக் கட்டுரையில் தவறு செய்துள்ளார்கள் எனலாம்.

“தமிழ் புனிதத்தன்மை உடையது; சிவன் பேசியது; தேவாரம் திருவாசகங்களைக் கொண்ட மொழி என்பதற்காக நான் காக்கப் போராடவில்லை. இருக்கின்ற மொழியில் இந்தத் தமிழ்மொழிதான் சிறந்ததாக இருக்கின்றது என்பதற்காகவே” என்பவரும் பெரியார் தான்.

“தமிழில் ஆரியம் புகுந்ததால்தான் மக்களிடையே காட்டுமிராண்டித்தனம் புகுந்துவிட்டது. இதில் பண்டிதர்கள் கவனம் செலுத்தவேண்டாமா? கவலை எடுத்துக் கொள்ள வேண்டாமா? வெளிநாட்டு மக்களெல்லாம் கட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலத்தில் கப்பலோட்டிக் கடல் கடந்து வாணிகம் நடத்திய தமிழர்களின் மரபில் இன்று ஒரு நியூட்டன் தோன்றவில்லை; ஒரு எடிசன் தோன்றவில்லை; ஒரு மார்க்கோனி தோன்ற முடியவில்லையே என்பதை அறிந்து கொள்ள வேண்டாமா?” என்றவரும் பெரியார் தான்.

"நான் தமிழுக்குத் தொண்டு செய்வது தமிழுக்காக என்று அல்ல. தாய்மொழியைப் பாதுகாத்தல் ஒவ்வொருவருடைய கடனாகும். நம் தமிழ் மொழி தாய்மொழி என்ற மட்டிலும் அல்லாமல் எல்லா வளப்பங்களும் கொண்ட சிறந்த மொழி. இந்தியாவிலேயே பழமை வாய்ந்த பண்பட்ட மொழியாகும். அப்படிப் பெருமைக்குரிய மொழிக்கு ஏற்படும் ஆபத்துகளை எதிர்த்தும் அது மேன்மை அடைய வேண்டும் என்றும் அதற்காகப் போராட்டங்கள் நடத்துகின்றோம்” என்று கூறியவரும் பெரியார் தான்.

“முதலாவதாகத் தமிழ் முன்னேற்றமடைந்து உலக மொழி வரிசையில் அதுவும் ஒரு மொழியாக இருக்க வேண்டுமானால் தமிழையும் மதத்தையும் பிரித்து விட வேண்டும். தமிழுக்கும் கடவுளுக்கும் உள்ள சம்பந்தத்தையும் கொஞ்சமாவது தள்ளி வைக்க வேண்டும்.” - இதுவும் பெரியார் புகன்றதே.

“தமிழில் (Creative Literature) ஆக்க இலக்கியங்கள் தோன்றவில்லை என்பது மட்டுமல்ல.; ஆக்க இலக்கியங்கள் அனேகமாக இல்லவே இல்லை. காரணம் புலவர்களுக்குப் பகுத்தறிவு பெறும் வாய்ப்பும், பகுத்தறிவு பெற்றவர்களுக்கு வயிற்றுப் பிழைப்பு காரணமாகத் துணிவு இல்லாமல் போகும்படியான நிலைமையும் இருப்பதால் - தமிழில் ஆக்க இலக்கியங்கள் தோன்றுவதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது” - என்றதும் பெரியார் தான்.

“நமது மேன்மைக்கு, நமது தகுதிக்கு, நமது முற்போக்குக்கு ஏற்ற மொழி தமிழை விட மேலான ஒரு மொழி இந்நாட்டிலில்லை என்பதற்காகவே தமிழை விரும்புகிறேனே தவிர, அது அற்புத, அதிசயங்களை விளைவிக்கக் கூடியது என்பதற்காக அல்ல. அற்புத சக்திகள் நிறைந்த மொழி என்று பிடிவாதம் செய்வது அறியாமைதான். அது தமிழ்ப் பண்புகூட அல்ல. தமிழில் அதிசயம், மந்திரம், சக்தி முதலிய சொற்களே இல்லை” - என்று விளக்கியவரும் பெரியார் தான்.

“தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று சொல்லக் காரணம் இன்றைக்கும் 2000 ஆண்டுகளுக்கு முன்பு எந்த மூடப் பழக்க வழக்கங்களில் இருந்து வந்தோமோ, அதில் தானே இன்றும் இருந்து இருந்து கொண்டிருக்கிறோம். அந்த பழக்க வழக்கங்களிலிருந்து நம்மை இன்னும் நாம் மாற்றிக்கொள்ளாமல் 2000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளவற்றையே உதாரணமாகக் காட்டிக் கொண்டு கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றி வந்தால் அதற்கு என்ன பொருள்? - என்று வினவி காட்டுமிராண்டி மொழி என்று சொன்னதற்கு விளக்கம் கூறியவரும் பெரியார் தான்.



 

சி. ஜெயபாரதன்
2016-10-17 10:35 GMT-04:00 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:
////பெரியாரைக் குறித்து பல விமர்சனங்கள் படித்துள்ளேன். ஆனால் அவரை யாரும் முட்டாள் என்று சொல்லிப் படித்ததில்லை. வருத்தமாக உள்ளது/////

கடவுள் நம்புவோர் யாவரும் முட்டாள்கள் என்று பன்முறை ஒரே சங்கை ஊதியவர் தந்தை பெரியார்.

கடவுள் நம்பிக்கையுள்ள திருவள்ளுவர், இளங்கோவடிகள், கம்பர், அப்பர், சுந்தரர், சம்பந்தர், வாசகர், காலிலியோ, கெப்ளர், காப்பர்நிக்கஸ், நியூட்டன், பாரதியார் இவரை எல்லாம் பெரியார் முட்டாள்கள் என்று இகழ்ந்தபோது எங்களுக்கும் நெஞ்சம் கொதித்தது.

சி. ஜெயபாரதன்.
2016-10-17 2:23 GMT-04:00 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>:


2016-10-17 11:36 GMT+05:30 seshadri sridharan <ssesh...@gmail.com>:


தமிழில் ஆரியம் 3% தான் ஆனால் அவர் ஆதரிக்கும் திராவிட மொழிகளில் ஆரியம் 80%  உள்ளது. தமிழை 3% கே துப்பினால் பிற திராவிட மொழிகள் மீது அவர் மூத்திரம் அல்லவா அடித்திருக்க வேண்டும்.

  
 மூடப்பழக்கம் மொழியால் வருவதன்று அது மூட நம்பிக்கையால், குருட்டு நம்பிக்கையால் வருவது. இதிலிருந்து பெரியார் ஒரு அடிமட்ட முட்டாள் என்பது நன்றாக விளங்குகிறது. ஒரு முட்டாள் முட்டாளை மட்டுமே உருவாக்க முடியும்  அறிவாளியால தான் ஒரு அறிவாளியை உருவாக்க முடியும். பெரியாருக்கு அறிவாளித் தகுதியே இல்லை பின் பகுத்தறிவு மட்டும் எங்கே இருந்து வரும் அவருக்கு? 


கடுமையான சொற்களைப் பயன்படுத்த வேண்டாம் திரு சேசாத்ரி.
பெரியாரைக் குறித்து பல விமர்சனங்கள் படித்துள்ளேன். ஆனால் அவரை யாரும் முட்டாள் என்று சொல்லிப் படித்ததில்லை. வருத்தமாக உள்ளது
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

Jaisankar Jaganathan

unread,
Oct 17, 2016, 11:31:11 AM10/17/16
to vall...@googlegroups.com
உங்க தமிழர் சர்டிபிகேட் எனக்கு தேவையில்லை. 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
regards,
jaisankar jaganathan

சி. ஜெயபாரதன்

unread,
Oct 17, 2016, 12:08:50 PM10/17/16
to vallamai
//“தமிழில் ஆரியம் புகுந்ததால்தான் மக்களிடையே காட்டுமிராண்டித்தனம் புகுந்துவிட்டது. இதில் பண்டிதர்கள் கவனம் செலுத்தவேண்டாமா? கவலை எடுத்துக் கொள்ள வேண்டாமா? வெளிநாட்டு மக்களெல்லாம் கட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலத்தில் கப்பலோட்டிக் கடல் கடந்து வாணிகம் நடத்திய தமிழர்களின் மரபில் இன்று ஒரு நியூட்டன் தோன்றவில்லை; ஒரு எடிசன் தோன்றவில்லை; ஒரு மார்க்கோனி தோன்ற முடியவில்லையே என்பதை அறிந்து கொள்ள வேண்டாமா?” என்றவரும் பெரியார் தான்.//

///உலகில் என்ன நடக்கிறது என அறியாமல் இருந்தார் என்பதற்கு இது தான் சான்று; இராமன் விளைவிற்கு நோபல் பரிசு வழங்கியது 1930. ///

கடந்த 50 - 60 ஆண்டுகளாக தமிழக அரசாங்கத்தைக் கைப்பற்றிய பெரியார் சீடர்களின் திராவிடப் பகுத்தறிவு ஆட்சியில் யாராவது தமிழர் சிறப்பாக விஞ்ஞான ஆய்வுகள் செய்து நோபெல் பரிசோ வேறு வெகுமதியோ பெற்றுள்ளாரா ?

சி. ஜெயபாரதன்

சி. ஜெயபாரதன்

unread,
Oct 17, 2016, 12:33:21 PM10/17/16
to mintamil, vallamai, tamilmantram
///“முதலாவதாகத் தமிழ் முன்னேற்றமடைந்து உலக மொழி வரிசையில் அதுவும் ஒரு மொழியாக இருக்க வேண்டுமானால் தமிழையும் மதத்தையும் பிரித்து விட வேண்டும். தமிழுக்கும் கடவுளுக்கும் உள்ள சம்பந்தத்தையும் கொஞ்சமாவது தள்ளி வைக்க வேண்டும்.” - இதுவும் பெரியார் புகன்றதே.////

தமிழையும், மதத்தையும் [இந்து மதம், கிறித்துவ மதம், இஸ்லாமிய மதம்] எப்படிப் பிரிப்பது ??

தமிழ் இலக்கியத்தை ஆயிரம் ஆண்டுகளாகப் பெருக்கியவர் இதிகாசப் / பக்திக் காவியங்கள் இயற்றிய கம்பர், அப்பர், சுந்தரர், சம்பந்தர், வாசகர், ஆண்டாள், வீரமாமுனிவர், பாரதியார் போன்றவரே.  இவரது படைப்புகளை எல்லாம் மதப்போர்வையில் சுருட்டிக் கடலில் எறிவோமா அல்லது பெரியார் போல் தீயிட்டு எரிப்போமா ?

இதுவா பெரியார் கூறிய தமிழ் இலக்கியத் தொண்டு ???

சி. ஜெயபாரதன்


2016-10-17 12:16 GMT-04:00 Suba <ksuba...@gmail.com>:


​அருமையான தொகுப்பாகத் தந்திருக்கின்றீர்கள்.

சுபா​


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

சி. ஜெயபாரதன்

unread,
Oct 17, 2016, 12:53:46 PM10/17/16
to mintamil, vallamai, tamilmantram
தேமொழி, 

////(x) தமிழில் ஆரியம் புகுந்ததால்தான் காட்டுமிராண்டித்தனம் புகுந்துவிட்டது. இதில் பண்டிதர்கள் கவனம் செலுத்த வேண்டாமா? கவலை எடுத்துக்கொள்ள வேண்டாமா? வெளிநாட்டு மக்கள் எல்லாம் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்தகாலத்தில் கப்பலோட்டிக் கடல் கடந்து வாணிகம் நடத்திய தமிழர்களின்மரபில் இன்று ஒரு நியூட்டன் தோன்றவில்லை; ஓர் எடிசன் தோன்றவில்லை; ஒரு மார்க்கோனி தோன்றமுடியவில்லையே என்பதை அறிந்து கொள்ள வேண்டாமா?[குறிப்பு 3] ////

அறிவியல் பற்றி பெரியார் எங்கே பேசினார், எப்போது எழுதினார் என்பதற்கு ஆதாரங்கள் என் கண்ணில் படவில்லை.  ஒரே செய்தியைப் பேராசிரியர் சுப்பு ரெட்டியார் முதலில் எழுதி இருக்கலாம்.  பிறகு அதைப் பண்ணையூரான் எடுத்தாண்டிருக்கலாம்.  ஆனால் ஆதாரம் எங்கே ? 


////[குறிப்பு 3] இதற்குத் தமிழாசிரியர்கள் என்ன செய்வார்கள்? அறிவியல் கல்விகற்க ஏற்பாடு செய்து அதனைக் கற்றவர்களை நோக்கிவிடுக்கப் பெறவேண்டிய வினாக்கள் இவை. இவண் குறிப்பிட்ட அறிவியல் அறிஞர்கள் கல்லூரிக் கல்வியின் விளைவால் இவற்றைக் கண்டுபிடிக்கவில்லை. அவர்களின் உள்ளுணர்வும் ஆயும் திறனுமே அவர்கட்குக் கைக்கொடுத்து உதவின. நான் கல்லூரியில் பயின்ற காலத்தில் எனக்கு கணிதம், அறிவியல் கற்பித்த ஆசிரியர்கள் கற்பிக்கும் முறையே எனக்கு இயல்பாக இருந்த உந்தலைத் தூண்டிக் கணிதத்திலும் அறிவியலிலும் அளவற்ற ஆர்வத்தை விளைவித்தது. எனது நூலக அறிவியல் படிப்பும் இவற்றிற்குக் கைகொடுத்து உதவியது.///

இவ்வரிகளில் வரும் கல்லூரியில் படித்த நபர் யார் ?  நிச்சயம் பெரியார் கல்லூரிக்குப் போகவில்லை.

சி. ஜெயபாரதன்.

2016-10-17 12:33 GMT-04:00 தேமொழி <jsthe...@gmail.com>:


On Monday, October 17, 2016 at 4:18:52 AM UTC-7, jayabarathans wrote:
////“தமிழில் ஆரியம் புகுந்ததால்தான் மக்களிடையே காட்டுமிராண்டித்தனம் புகுந்துவிட்டது. இதில் பண்டிதர்கள் கவனம் செலுத்தவேண்டாமா? கவலை எடுத்துக் கொள்ள வேண்டாமா? வெளிநாட்டு மக்களெல்லாம் கட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலத்தில் கப்பலோட்டிக் கடல் கடந்து வாணிகம் நடத்திய தமிழர்களின் மரபில் இன்று ஒரு நியூட்டன் தோன்றவில்லை; ஒரு எடிசன் தோன்றவில்லை; ஒரு மார்க்கோனி தோன்ற முடியவில்லையே என்பதை அறிந்து கொள்ள வேண்டாமா?” என்றவரும் பெரியார் தான்./////

இந்த விஞ்ஞான உதாரணங்களை எழுதியவர் / குறிப்பிட்டவர் தந்தை பெரியாராக இருக்க முடியாது என்பது என் கருத்து.  ஆதாரங்கள் தேவை.


ஜெயபாரதன் ஐயா, பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் எழுதிய "தந்தை பெரியார் சிந்தனைகள்"  நூலிலும் இக்கருத்து இருக்கிறது. அவர் பெரியாரின் உரைகளையும், கட்டுரைகளையும் திரட்டி ஆய்வு செய்து எழுதியவர்.

பெரியார் கூறியவற்றை:  
1.கடவுள் சமயம்
2.சமூகம்
3.மொழி

என்ற தலைப்புகளின் கீழ் பிரித்து அலசியுள்ளார்.  
( நாம் சராசரியாக 4 நாட்களுக்கு ஒருமுறை  2/3 பக்கங்கள் எனப் படிப்பதால் அப்பகுதிக்கு வர இன்னமும் பலநாட்கள் ஆகலாம்)


ஐயா, பெரியார் காலம் கடந்து சிந்தித்தவர் ...  அவரது சொற்களை அவரது வழிவந்தவர்களாலேயே செரிமானம் செய்ய முடிந்ததில்லை.  ஏதாவது ஓரிடத்தில் மிகுந்த வேறுபாட்டுடன் இருப்பார்கள்.  
எனக்கு அவர் இலக்கியம் பற்றி சொன்னவை தலையைச் சுற்றும்.  
படித்தால் அதனால் ஏதேனும் பயனிருந்தால் மட்டுமே படிக்க வேண்டும் என்ற கொள்கை கொண்ட பெரியாருக்கு இலக்கிய நயம், அழகு என்பதெல்லாம் கொஞ்சமும் புரிபடவில்லை என்பது எனது கருத்து.

ஆகவே, உங்களது கருத்து வியப்பளிக்கவில்லை.  ஆயினும் அவரை நீங்கள் அதற்கென்று குறைத்து மதிப்பிடுவதாகத் தோன்றுகிறது.

பண்ணையூரான் கொடுத்த அத்தனை மேற்கோள்களும் பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்   நூலில் இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக படித்து விவாதிப்போம்.  

உங்களுக்குத் தேவையான விஞ்ஞானி பற்றிய பகுதி படிக்க இங்கே சொடுக்கவும்: https://upload.wikimedia.org/wikipedia/commons/3/34/%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf#page=149

அதே பக்கம் படமாகவும்....பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் குறிப்பையும் படிக்கலாம். 


(x) தமிழில் ஆரியம் புகுந்ததால்தான் காட்டுமிராண்டித்தனம் புகுந்துவிட்டது. இதில் பண்டிதர்கள் கவனம் செலுத்த வேண்டாமா? கவலை எடுத்துக்கொள்ள வேண்டாமா? வெளிநாட்டு மக்கள் எல்லாம் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்தகாலத்தில் கப்பலோட்டிக் கடல் கடந்து வாணிகம் நடத்திய தமிழர்களின்மரபில் இன்று ஒரு நியூட்டன் தோன்றவில்லை; ஓர் எடிசன் தோன்றவில்லை; ஒரு மார்க்கோனி தோன்றமுடியவில்லையே என்பதை அறிந்து கொள்ள வேண்டாமா?[குறிப்பு 3]


[குறிப்பு 3] இதற்குத் தமிழாசிரியர்கள் என்ன செய்வார்கள்? அறிவியல் கல்விகற்க ஏற்பாடு செய்து அதனைக் கற்றவர்களை நோக்கிவிடுக்கப் பெறவேண்டிய வினாக்கள் இவை. இவண் குறிப்பிட்ட அறிவியல் அறிஞர்கள் கல்லூரிக் கல்வியின் விளைவால் இவற்றைக் கண்டுபிடிக்கவில்லை. அவர்களின் உள்ளுணர்வும் ஆயும் திறனுமே அவர்கட்குக் கைக்கொடுத்து உதவின. நான் கல்லூரியில் பயின்ற காலத்தில் எனக்கு கணிதம், அறிவியல் கற்பித்த ஆசிரியர்கள் கற்பிக்கும் முறையே எனக்கு இயல்பாக இருந்த உந்தலைத் தூண்டிக் கணிதத்திலும் அறிவியலிலும் அளவற்ற ஆர்வத்தை விளைவித்தது. எனது நூலக அறிவியல் படிப்பும் இவற்றிற்குக் கைகொடுத்து உதவியது.


..... தேமொழி 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

சி. ஜெயபாரதன்

unread,
Oct 17, 2016, 1:15:10 PM10/17/16
to mintamil, vallamai, tamilmantram
தந்தை பெரியார் கூறுவதுபோல், ஐம்பெரும் காப்பியங்களில் கிடைத்துள்ள சிறந்த சிலப்பதிகாரமும், மணிமேகலையும் மதக்காவியங்கள்தான்.  அவற்றையும் எரித்து விட்டால், பிறகு தமிழ்த்தாயின் எலும்புக்கூடுதான் மிஞ்சும்.

சி. ஜெயபாரதன் 

சி. ஜெயபாரதன்

unread,
Oct 17, 2016, 1:44:58 PM10/17/16
to mintamil, vallamai, tamilmantram
////இவற்றில் எங்குள்ளது என அறிய பெரியார் எழுதிய பேசிய கட்டுரைகள் அனைத்தையும்  மின்னாக்கம் செய்தாலே வழி பிறக்கும்.  

அத்துடன் இந்த நூலில் இருப்பது  மூன்று நாட்கள் நடத்தப்பட்ட தொடர் சொற்பொழிவு என்றும், தனது உரையை அந்த வடிவிலேயே,  அதாவது .... உரைவடிவிலேயே நூலாக பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் வெளியிட்டுள்ளார் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ////

நன்றி தேமொழி.
 
உதாரணங்களைக் கூறும் சொற்பொழிவைவிட மனிதர் எழுதும்போது, துல்லியமாக இருக்க முயல்வார்.  அறிவியல் மேதை பேரா. சுப்புரெட்டியார் பேச்சில் கூறிய நியூட்டன், எடிசன், மார்க்கோனி ஆகியோர் தன் சொந்த மேற்கோளாய் இருக்கலாம். 

சி. ஜெயபாரதன்

2016-10-17 13:25 GMT-04:00 தேமொழி <jsthe...@gmail.com>:


On Monday, October 17, 2016 at 9:53:46 AM UTC-7, jayabarathans wrote:
தேமொழி, 

////(x) தமிழில் ஆரியம் புகுந்ததால்தான் காட்டுமிராண்டித்தனம் புகுந்துவிட்டது. இதில் பண்டிதர்கள் கவனம் செலுத்த வேண்டாமா? கவலை எடுத்துக்கொள்ள வேண்டாமா? வெளிநாட்டு மக்கள் எல்லாம் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்தகாலத்தில் கப்பலோட்டிக் கடல் கடந்து வாணிகம் நடத்திய தமிழர்களின்மரபில் இன்று ஒரு நியூட்டன் தோன்றவில்லை; ஓர் எடிசன் தோன்றவில்லை; ஒரு மார்க்கோனி தோன்றமுடியவில்லையே என்பதை அறிந்து கொள்ள வேண்டாமா?[குறிப்பு 3] ////

அறிவியல் பற்றி பெரியார் எங்கே பேசினார், எப்போது எழுதினார் என்பதற்கு ஆதாரங்கள் என் கண்ணில் படவில்லை.  ஒரே செய்தியைப் பேராசிரியர் சுப்பு ரெட்டியார் முதலில் எழுதி இருக்கலாம்.  பிறகு அதைப் பண்ணையூரான் எடுத்தாண்டிருக்கலாம்.  ஆனால் ஆதாரம் எங்கே ? 

https://groups.google.com/d/msg/mintamil/YH7Nq8sKyk4/AdSfGpEWBQAJ



////“தமிழில் ஆரியம் புகுந்ததால்தான் மக்களிடையே காட்டுமிராண்டித்தனம் புகுந்துவிட்டது. இதில் பண்டிதர்கள் கவனம் செலுத்தவேண்டாமா? கவலை எடுத்துக் கொள்ள வேண்டாமா? வெளிநாட்டு மக்களெல்லாம் கட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலத்தில் கப்பலோட்டிக் கடல் கடந்து வாணிகம் நடத்தியதமிழர்களின் மரபில் இன்று ஒரு நியூட்டன் தோன்றவில்லை; ஒரு எடிசன் தோன்றவில்லை; ஒரு மார்க்கோனி தோன்ற முடியவில்லையே என்பதை அறிந்து கொள்ள வேண்டாமா?” என்றவரும் பெரியார் தான்./////




இந்த விஞ்ஞான உதாரணங்களை எழுதியவர் / குறிப்பிட்டவர் தந்தை பெரியாராக இருக்க முடியாது என்பது என் கருத்து.  ஆதாரங்கள் தேவை.


இவற்றைக் கீற்றில் அணிந்துரை உயர்வு நவிற்சியாய்ப் பண்ணையூரான் 2012 இல் எழுதியது.

ஆக, நீங்கள் பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் ஆய்வு குறித்தும் கேள்வி எழுப்புவது புரிகிறது ஐயா.

பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்  தனது உரைக்கு துணை செய்த நூல்களின் பட்டியலை 
கீழுள்ள பக்கத்தில் கொடுத்துள்ளார் 

இவற்றில் எங்குள்ளது என அறிய பெரியார் எழுதிய பேசிய கட்டுரைகள் அனைத்தையும்  மின்னாக்கம் செய்தாலே வழி பிறக்கும்.  

அத்துடன் இந்த நூலில் இருப்பது  மூன்று நாட்கள் நடத்தப்பட்ட தொடர் சொற்பொழிவு என்றும், தனது உரையை அந்த வடிவிலேயே,  அதாவது .... உரைவடிவிலேயே நூலாக பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் வெளியிட்டுள்ளார் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.  





////[குறிப்பு 3] இதற்குத் தமிழாசிரியர்கள் என்ன செய்வார்கள்? அறிவியல் கல்விகற்க ஏற்பாடு செய்து அதனைக் கற்றவர்களை நோக்கிவிடுக்கப் பெறவேண்டிய வினாக்கள் இவை. இவண் குறிப்பிட்ட அறிவியல் அறிஞர்கள் கல்லூரிக் கல்வியின் விளைவால் இவற்றைக் கண்டுபிடிக்கவில்லை. அவர்களின் உள்ளுணர்வும் ஆயும் திறனுமே அவர்கட்குக் கைக்கொடுத்து உதவின. நான் கல்லூரியில் பயின்ற காலத்தில் எனக்கு கணிதம், அறிவியல் கற்பித்த ஆசிரியர்கள் கற்பிக்கும் முறையே எனக்கு இயல்பாக இருந்த உந்தலைத் தூண்டிக் கணிதத்திலும் அறிவியலிலும் அளவற்ற ஆர்வத்தை விளைவித்தது. எனது நூலக அறிவியல் படிப்பும் இவற்றிற்குக் கைகொடுத்து உதவியது.///

இவ்வரிகளில் வரும் கல்லூரியில் படித்த நபர் யார் ?  நிச்சயம் பெரியார் கல்லூரிக்குப் போகவில்லை.
 
அதே பக்கம் படமாகவும்....பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் குறிப்பையும் படிக்கலாம்.
 


இவ்வாறு நான் குறிப்பிட்டுள்ளேன் ஐயா.   பெரியார் கருத்துக்களை ஆதரிக்கவோ, மறுக்கவோ செய்யும் பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் அவற்றை குறிப்புப் பகுதிகளாகவே கொடுத்துச் செல்கிறார். எனவே தனது கலூரிப் படிப்பை  பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் குறிப்பிடுகிறார். 

பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் மெத்தப்படித்தவர், அவரது கல்வியின் ஆழம்  (அறிவியல், தமிழிலக்கியம்) பலதுறைகளுக்கு விரிகிறது, பல பட்டங்களைப் பெற்று ~ 125 நூல்கள் எழுதியவர். அவரைப் பற்றி துணைநூல் பட்டியலுக்கு அடுத்த பக்கம் மற்றொரு இணைபாகப் படிக்கலாம். 


..... தேமொழி

சி. ஜெயபாரதன்

unread,
Oct 17, 2016, 1:50:28 PM10/17/16
to mintamil, vallamai, tamilmantram
தேமொழி,

தமிழ்நாட்டில் எல்லா மதங்களையும் [இந்து, கிறித்துவம், இஸ்லாம்] ஒழிக்க தமிழ் மத இலக்கியங்களை எல்லாம் நாம் பெரியார் கூறுவது போல் எரிக்க வேண்டுமா ?

சி. ஜெயபாரதன்

seshadri sridharan

unread,
Oct 18, 2016, 1:39:01 AM10/18/16
to vall...@googlegroups.com
2016-10-17 21:01 GMT+05:30 Jaisankar Jaganathan <jaisa...@gmail.com>:
உங்க தமிழர் சர்டிபிகேட் எனக்கு தேவையில்லை. 

சான்றிதழ் தேவை  என்றில்லை நீங்கள் "தமிழும் இல்லை தெலுங்கும் இல்லை" என்ற போதே புரிந்து கொண்டேன். தமிழர் அல்லாதவருக்கு வீட்டில் தமிழும் இல்லை வெளியே சென்றால் தம் வீட்டு மொழியும்அங்கில்லை என்ற நிலையில் தான் இப்படி எல்லாம் பிதற்றுவர். இப்படிப்பட்டவருக்கு எப்படி தமிழர் என்ற அடையாளத்தை கொடுக்க முடியும்?  ஆனால் திராவிட கருத்தியலார்  இப்படிப் பட்டவருக்கெல்லாம் தமிழர் என்ற பட்டம் தந்தார்கள். தமிழருக்கும் தமிழ்நாட்டிற்கும் கேடு சேர்த்தார்கள்.

பரணப்பன் 

Jaisankar Jaganathan

unread,
Oct 18, 2016, 1:44:51 AM10/18/16
to vall...@googlegroups.com
மட்டறுத்னர் கொஞ்சம் சேஷாத்ரியை கவனியுங்கள். நான் தமிழன். அதுக்காக இவரை ஆதரித்து பேசாதவர் எல்லாம் தெலுங்கர் என்ற விவாதத்தை ஏற்றுகொள்லவேண்டுமா?

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
regards,
jaisankar jaganathan

seshadri sridharan

unread,
Oct 18, 2016, 2:01:09 AM10/18/16
to vall...@googlegroups.com
2016-10-18 11:14 GMT+05:30 Jaisankar Jaganathan <jaisa...@gmail.com>:
மட்டறுத்னர் கொஞ்சம் சேஷாத்ரியை கவனியுங்கள். நான் தமிழன். அதுக்காக இவரை ஆதரித்து பேசாதவர் எல்லாம் தெலுங்கர் என்ற விவாதத்தை ஏற்றுகொள்லவேண்டுமா?

உங்களைப்போல் தான் பிராமணர்கள் தம்மை தமிழர் என்று கூறியும் ஆரியர் என்று தூற்றி ஒதுக்கப்பட்டனர்.  கூடி நின்ற தமிழர் அதை கைகொட்டி மகிழ்ந்தனர். பிராமணரும் நீங்களும் இப்போது ஒரே தட்டில் இருப்பதாகத் .தெரிகின்றது.

பரணப்பன்  

மாயோன்

unread,
Oct 18, 2016, 5:05:04 AM10/18/16
to vall...@googlegroups.com
//கடந்த 50 - 60 ஆண்டுகளாக தமிழக அரசாங்கத்தைக் கைப்பற்றிய பெரியார் சீடர்களின் திராவிடப் பகுத்தறிவு ஆட்சியில் யாராவது தமிழர் சிறப்பாக விஞ்ஞான ஆய்வுகள் செய்து நோபெல் பரிசோ வேறு வெகுமதியோ பெற்றுள்ளாரா ?//

செயபாரதன் ஐயா, சிவா ஐயாதுரை,வெங்கடராமன் இராமகிருட்டிணன் போன்றோர் தமிழகத்திற்கு வெளியில் போய் மின்னஞ்சலும் நோபல் பரிசும் பெற்றுள்ளனர். தமிழகத்தில் இருந்த அப்துல் கலாம், மயில்சாமி அண்ணாதுரை போன்றோர் உள்ளனர். அப்துல் கலாமின் பிறந்தநாளை அறிவியல் நாளாக சுவிட்சர்லாந்தில் அறிவித்துள்ளனரே. இது போல பிற மாநிலங்களில் இருந்து யாரேனும் உள்ளனரா என தெரியவில்லை எனக்கு.

இவர்களுக்கும் திராவிடக் கழகங்களுக்கு எந்தவொரு தொடர்பும் இல்லை; திராவிடக் கழகங்களால் தான் இவர்கள் எல்லாம் நற்பணி செய்தார்கள் என சொல்ல முடியாது.

--

N. Ganesan

unread,
Oct 23, 2016, 7:37:47 PM10/23/16
to மின்தமிழ், vallamai


On Friday, October 14, 2016 at 3:06:07 AM UTC-7, Jayabalan Mavanna wrote:

நான் பத்து வயதுச் சிறுவந்னாக இருந்த போது எங்களூரில் அதாவது செய்யாற்றில் ராதா நடித்த கீமாயணம் பார்த்தேன்.
போலீஸ் சூழ்ந்து இருந்தனர்.ராமாயணத்தைக் கேலி செய்வதுதான் நோக்கம்.கடத்தப்பட்ட சீதை நகைகளைக் கழற்றிக் கீழே போடுகிறாள்.அவற்றைக் கண்டெடுத்து வந்து ராமனிடம் காட்டி இவை சீதையின்  நகைகளா என்கின்றனர். அதற்கு ராமன், எனக்கென்னடா தெரியும்.என் தம்பியிடம் கேள்.அவனுக்குத்தான் தெரியும் அவள் எதை எதை எங்கு போட்டிருந்தாள் என்று.
நாடக விளம்பரத்திற்காக பிற்பகலில் நடிகர்கள் வீதிகளில் ஊர்வலமாக வருவர். அதில் ராதா வெள்ளைக் குதிரையில் பெருமிதமாக வருவார்.
நாடகத்தின் ஊடே ராதா பார்வையாளருடன் நேரிடையாக உரையாடுவார்.

திருவாரூர் தங்கராசு - பிற்கால வாழ்க்கை


கொளத்தூர் மணி தி.க உடைபட்டதைப் பேசுகிறார்:

நா. கணேசன் 

N. Ganesan

unread,
Nov 9, 2016, 9:40:57 PM11/9/16
to மின்தமிழ், vallamai


On Thursday, October 20, 2016 at 8:50:26 AM UTC-7, N. Kannan wrote:
இதன் பின்னால் ஒரு சுவாரசியமான உளவியல் உள்ளது. ஆங்கில மனத்தைப் புரிந்து கொண்டு ஆங்கிலேயர்களுக்கும், ஆங்கிலத்திற்கும் இன்றளவும் துணை போவ(ன) து தமிழகம் (சென்னைதான் அவர்களது பிரதான கேந்திரம்). ஆங்கிலேயர் இருந்த போதும், பின் விட்டுச் சென்றதும் “பிரித்தாளும் சூது”. தமிழர்கள் அதை அப்படியே ஏற்றுக்கொண்டு தங்களுக்குள் இனவாதம் பேசி தமிழ் வளர்ச்சியை கடந்த 60 ஆண்டுகளாக கிடப்பில் போட்டுவிட்டார்கள். இப்போது ஆரியன் தெலுங்கனாக மாறிவிட்டான்! இந்த இனவாதம் ஓர் காலமுரண். ஆனால் இந்தக் கொள்கைகளைப் பரப்பிய தமிழர்கள் ஹிட்லர் வாழ்ந்த காலத்தவர். அக்காலத்தில் இனவாதம் பேசுவது அரசியல் கொச்சையாகப் பார்க்கப்படவில்லை.

இதன் பாதிப்பு இந்தியாவில் எப்படியாவது போகட்டும். ஆனால் “இந்தியன்” என்றால் “தமிழன்” என்றிருந்த மலேசியாவில் இந்த இனவாதம் ஊடுருவி விட்டது (நன்றி நாம் தமிழர்). மொத்த ஜனத்தொகையில் 7.6% உள்ள இந்தியர்கள் (இதில் ஆகப்பெரும்பான்மை தமிழர்கள்) இப்போது உடைபடுகிறார்கள். தமிழ் பேசி தமிழனாய் வாழும் ஒரு தெலுங்களை நீ தமிழன் இல்லை எனும் போது அவன் நிலைகுலைந்து போகிறான். இங்குள்ள பள்ளிகளில் தமிழ் போதிப்பவர்கள் 60% மேல் தெலுங்கு வம்சாவளியினர்!


உண்மை. ’நாம் தமிழர்’ சீமான் கட்சியின் தாக்கம் சொல்கிறீர்கள். இதற்கு முன்னால் 20-ஆம் நூற்றாண்டு மத்தியில் நிகழ்ந்த நல்ல விஷயம் ஒன்றும் உண்டு,

இந்தியாவின் தாக்கம் மலாயா, சிங்கையில் எப்பொழுதும் தெரியும். தீபாவளி பண்டிகை 20-ஆம் நூற்றாண்டில் சென்னை பத்திரிகை உலகம் போன்றவை
பெரிதுபண்ணியபோது தீபாவளி மலேசியாவிலும் பெரிதாகத் தொடங்கியது. பட்டாசு செய்தல் சிவகாசியில் பெருந்தொழில் ஆயிற்று. கூடவே, தீப்பெட்டி, லேபல் அச்சடிக்கும்
லினோடைப். ... 

நா. கணேசன்
 
வாழ்த தமிழ் பேரினவாதம்!

நா.கண்ணன்

2016-10-19 10:41 GMT+08:00 தேனீ <ipohs...@gmail.com>:
"தமிழில் ஆரியம் புகுந்ததால்தான் மக்களிடையே காட்டுமிராண்டித்தனம் புகுந்துவிட்டது. இதில் பண்டிதர்கள் கவனம் செலுத்தவேண்டாமா? கவலை எடுத்துக் கொள்ள வேண்டாமா? "

இங்கே பெரியாரின் கொள்களைப் பற்றிய விமர்சனங்கள் பல உள்ளன. அதில் மேலே குறிக்கப் பட்ட கருத்தும் அடங்கும். 'மக்களிடையே காட்டுமிராண்டித்தனம்' எப்படி ஆரியர் புகுத்தினர்? வர்ணாசிரம கோட்பாட்டை இந்தியர் மீது புகுத்தி அதுவே கடவுள் நியதி என்று நம்பவும் வைத்து இந்தியாவில் வாழும் ஒவ்வொரு இனக்குழுக்களின் பண்பாட்டை ஊடுருவி மக்களைப் பிரித்தாண்டது வைதீக பண்பாட்டுக் கொள்கைகள்தாம். 

இது தமிழரிடையேயும் புகுத்தப் பட்டது. நீதிக் கட்சி ஆரம்பித்த நோக்கமே ஆரிய பிராமணர் எதிர்பை அடிப்படையாக கொண்டதுதான். அந்நாளில் தென் இந்தியர் மொழியால் பிரிந்து வாழவில்லை. பிந்நாளில் சமயவாதிகள் திராவிடச் சிந்தனைகளுக்கு உட்படாததால் நீதிக் கட்சியிலிருந்து பிரிந்து திராவிட கழகம் பெரியாரின் வழி தோன்றிற்று.

ஆரியர் சிந்தனையில் இருந்த காட்டுமிராண்டித்தனம் அவர்தம் புராணங்களின் வழி தெரியும். வடமொழி புராணத்தில் உள்ள கருத்தை அவ்வாரே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த கருத்துக்களைக் கற்றுணர்ந்தால் தெரியும். தமிழில் மொழிபெயர்த்தது நம் பண்பாட்டோடு இயைந்து இருக்க வேண்டி காட்டுமிராண்டித் தனமான கருத்தையும் சொற்களையும் நீக்கி விட்டு தமிழாக்கம் செய்தனர் சமய சான்றோர்.
 
வைதிகப் பண்பாட்டுச் சிந்தனைகளில் அடங்கியிருக்கும் காட்டுமிராண்டித்தனத்தை எடுத்துச் சொல்லியும் தென்னாட்டுச் சமயவாதிகள் திராவிடவாதிகளின் கருத்துகளுக்குச் செவி சாய்க்காததால் சமயவாதிகளும் திராவிட வாதிகளும் தத்தம் வழியே பிரிந்து சென்றனர். அதன் பின்னரே திராவிட வாதிகள் இந்து மத எதிர்ப்பு போராட்டத்தையும் கடவுள் மறுப்புக் கொள்கையயும் முன் வைத்தனர்.

 
தேனீ        


Reply all
Reply to author
Forward
0 new messages