தஞ்சை மீரான்
unread,Jan 28, 2008, 8:46:20 AM1/28/08Sign in to reply to author
Sign in to forward
You do not have permission to delete messages in this group
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to தமிழ் அமுதம்
அன்பர்களே / நண்பர்களே,
வாழ்வில் எதை எதையோ பிடிக்க அல்லது சாதிக்க வேகம் வேகமாய் சென்று
கொண்டிருக்கின்றோம். இந்த பூமி வாழ்க்கை மிகவும் சிறியதான ஒன்று.
பிறந்தவர்கள் எல்லோருமே மரணிக்க கூடியவர்களாகவே இருக்கின்றோம். மரணம்
என்பது இந்த உலகில் யாரையும் விட்டு வைக்க போவதில்லை.
"ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா"
யாருக்கு எந்த வயதில் அல்லது எந்த பொழுதில், எந்த இடத்தில் அல்லது
தருணத்தில் மரணம் வரும் என்றே சொல்ல முடியாது. அது எந்த ழ்நிலையிலும்
வரலாம். அப்படி ஒரு வாழ்க்கைதான் இங்கே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
அல்லது இயங்கி கொண்டிருக்கின்றோம். இந்த பதிவில் நான் கடவுளை பற்றி சொல்ல
வரவில்லை. ஒவ்வொரு மனிதனும் தன் மரணத்தை அதிகம் அதிகம் நினைத்தாலே
போதும், தன்னோட மனசில் ஒரு இரக்கம் தானாய் வளரும். பிறரை அன்பாய் பார்க்க
தோன்றும். போலி கெளரவங்கள் தன்னிடமிருந்து தானாய் மறையும்.
மரணம் வரும் வேலை : கருவில் கலைந்த குழந்தை, இறந்தே பிறக்கும் குழந்தை,
பிறந்த உடன் இறக்கும் குழந்தை, ஓரிரு வயதில் அறியாமல் ஏதேனும் எடுத்து
திண்று அல்லது விழுங்கி, இறக்கும் குழந்தை. விபத்தில் பலியாகும்
மனிதர்கள். இயற்கை சீற்றத்தில் அழியும் மனிதர்கள். ஒரு காரியத்தை செய்ய
துவங்கி அது முடிவடைவதற்குள் உயிர் பிரியும் தருணங்கள் (உணவு
உண்ணும்போதோ, கழிவறையில் இருக்கும்போதோ, பயண ஆரம்பத்திலோ, இடையில் அல்லது
முடிவில் மற்றும் தற்கொலை சாவுகள், கொலைகள் என்று நாம் பார்த்த மரணங்களை
அதிகம் அதிகம் பட்டியல் இடலாம்.
எந்த நேரமும் தனது மனதை சாந்தமாக அல்லது திருப்தியாக மேலும் மகிழ்ச்சியாக
வைத்து கொள்ளுங்கள். அதாவது நமது இன்றைய வாழ்வுவரை நாம் இந்த உலகில்
எல்லாவற்றையும் நிறைவேற்றியவர்களாக இருக்கிறோம்.
நமக்கு இந்த உலகில் கிடைக்க வேண்டிய எல்லாமே கிடைத்துவிட்டது.
எல்லாவற்றையும் அனுபவித்து முடித்துவிட்டோம் என்ற மனநிலையை உருவாக்கி
கொள்ளுங்கள். இது ஏனெனில் நமது ஆத்மா, நாம் உயிரோடு இருக்கும்போதே சாந்தி
பெறும், அமைதி பெறும் என்பதனால் இதை சொல்கிறேன்.
முக்கியமாக நான் சொல்ல வந்த செய்தி என்னவெனில் (மார்க்கம் சம்பந்தபட்ட
கேள்வி / பதில் நிகழ்ச்சி ஒன்றில் ஒருவர் தனது வீட்டு குளியல் அறையில்
அல்லது ஏதோ ஒரு தனிமையான இடத்தில் ஒரு மனிதன் ஆடை அணிந்து கொண்டுதான்
குளிக்க வேண்டுமா? அல்லது ஆடை இல்லாமல் (நிர்வாணமாக) குளிக்கலாமா? என்ற
கேள்விக்கு, அந்த அறிஞர் அதற்கு பதில் தருகிறார். தனிமையான ஒரு அறையில்,
மறைவான ஒரு இடத்தில் ஆடை இல்லாமலும் குளிக்கலாம், அது ஒரு குற்றம் இல்லை.
ஆனால் அந்த சமயம் மரணம் வந்து உங்களை தழுவி விட்டால் அல்லது இறக்க
நேரிட்டால், கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். நமது உடலை (மானத்தை) இந்த
உயிர் இருக்கும்வரை நாம் பாதுகாக்கிறோம். அதுபோல மரணத்திற்கு பிறகு நாம்
நமது உடலை மறைத்திருப்பதும் ஓர் நல்ல விசயம் இல்லையா? ஆகவே எந்நேரமும்
தனது உடலில் உடையை பேணுவது நல்லது.
இன்னொரு முக்கிய செய்தி அன்பர்களே, நம்மிடம் எது இருந்தாலும்,
இல்லாவிட்டாலும் நமது தொடர்புடைய வீட்டு விலாசம், அலுவலக விலாசம், நமது
தொடர்பில் (நெருங்கிய உறவினர் அல்லது நண்பர்கள்) தொலைபேசி எண்களை
நம்முடன் எந்நேரமும் வைத்திருப்பது மிகவும் அவசியமாகும். நாம் எந்த
இடத்தில் இருந்தாலும் சரியே, நமக்கு தெரிந்த அல்லது தெரியாத எந்த ஒரு
இடத்தில் இருந்தாலும், அவசர உதவிக்கு நம்மிடம் நம்மை அடையாளம் காட்ட
கூடிய, அவசரத்திற்கு அழைக்க கூடிய விலாசம் மற்றும் எண்கள் இருப்பது மிக
மிக அவசியமான ஒரு நிலை ஆகும்.
குறிப்பு : குழுமத்தில் இந்த மடலை படிக்க முடியாதவர்களுக்கு எனது வலை
பக்கத்திலோ அல்லது தனி மடலிலோ இந்த பதிவு சென்றிருக்கும் என்று
நம்பிக்கை கொள்கிறேன்.