திருவள்ளூர் ஶ்ரீ வீரராகவப் பெருமாள் துதி

58 views
Skip to first unread message

Anand Ramanujam

unread,
May 7, 2023, 12:05:47 PM5/7/23
to santhav...@googlegroups.com
திருவள்ளூர் ஶ்ரீ வைத்ய வீரராகவ ஸ்வாமி துதி
(கலி விருத்தம்)

எவ்வு யிர்க்கும் இருந்துணை யேயெனச்
செவ்வு றத்தொழும் சிந்தை உடையவர்
எவ்வு டற்பிணி எய்தினும் அஃதற 
எவ்வு ளீசன் இணையடி காக்குமே!

தல வரலாறு:
புரு எனும் முனிவரின் யாகத்தின் பயனாய்ப் பிறந்த சாலிஹோத்ரர் எனும் முனிவர் இங்கு தவம் செய்து வந்தார். தினமும் அதிதிக்குப் படைத்த பின்பு உண்பவரான சாலிஹோத்ர முனிவரின் அதிதியாகப் பெருமாளே வயோதிகர் வடிவில் வந்து உணவு பெற்றார். பசி தீராததாகக் கூறி முனிவரின் பங்கையும் உண்டு பசியாறிய பின்னர், உண்ட களைப்புத் தீர எங்கே படுப்பது என முனிவரிடம் வினவ, முனிவர் தம் ஆசிரமத்தைக் காட்டினார். அங்கே பெருமாளாக சயனித்தார். "படுக்க எவ்வுள்" என்று கேட்டதால் ஊர் பெயர் எவ்வுள்ளூர் என்றும் எவ்வுட்கிடந்தான் என்பது பெருமாள் திருப்பெயருமாயிற்று. 
(Source: Wikipedia)

குறிப்பு:
எவ்வுளீசன் = கிங்க்ருஹேசன் = கிம் + க்ருஹ + ஈசன் 

இரா. ஆனந்த்


Siva Siva

unread,
May 7, 2023, 2:37:04 PM5/7/23
to santhav...@googlegroups.com

/செவ்வு றத்தொழும் சிந்தை உடையவர்/
செவ்வ னேதொழும் - may be easier to follow.

V. Subramanian

Anand Ramanujam

unread,
May 7, 2023, 3:27:20 PM5/7/23
to santhav...@googlegroups.com
Thank you, will change it to செவ்வனே.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCOsbe2bVa48sspAuqdV57BdqbSKr36hjr2jOYsjQTA5sw%40mail.gmail.com.

Anand Ramanujam

unread,
May 11, 2023, 8:47:48 PM5/11/23
to santhav...@googlegroups.com
2.
திருநி றைந்திடும் சீரெழில் மார்வனை
அருளி லங்கிடும் அங்கண் அழகனை
திருவெவ் வுள்கிடந் தானையெம் சிந்தையில்
மருவு நாதனை வாழ்த்தி வணங்குவாம்.


3.
எண்ண ருஞ்சுவை யோடரு ளீந்திடும்
பண்ணொ ளிர்தமிழ்ப் பாசுர மானவன்
நண்ண ரும்பதம் நல்கிடும் எவ்வுளெம்
அண்ணல் என்ன அழிந்திடும் அல்லலே.


On Sun, May 7, 2023 at 12:05 PM Anand Ramanujam <anandbl...@gmail.com> wrote:

Siva Siva

unread,
May 11, 2023, 9:29:25 PM5/11/23
to santhav...@googlegroups.com
/எண்ண ருஞ்சுவை யோடரு ளீந்திடும்/
Nice phrase.

Anand Ramanujam

unread,
May 11, 2023, 9:48:10 PM5/11/23
to santhav...@googlegroups.com
Thank you!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

NATARAJAN RAMASESHAN

unread,
May 11, 2023, 10:43:32 PM5/11/23
to santhav...@googlegroups.com
மிகச் சிறப்பான பாசுரங்கள் திரு ஆனந்த்
களிநடம் புரியும் கலி விருத்தங்கள்
                  —தில்லைவேந்தன்

..

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Anand Ramanujam

unread,
May 12, 2023, 6:30:08 AM5/12/23
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. தில்லைவேந்தன்!

Anand Ramanujam

unread,
May 12, 2023, 9:19:45 PM5/12/23
to santhav...@googlegroups.com
4.
'காக்க' என்ற கரியின் கடுந்துயர்
போக்க வந்த பொருதிறல் ஆழியான்
பூக்க மழ்செம் பொழில்திரு வெவ்வுளூர்
சீர்க்க நின்ற திகழொளிச் செல்வனே.

5.
பேரொ ராயிரத் தானெம்பி ரான்பரன்
ஏரு டைதிரு எவ்வுள் இறையவன்
நார ணன்பட நாகணை யானருள்
வீர ராகவன் மெய்யடி யோங்களே.

இரா. ஆனந்த்

Siva Siva

unread,
May 12, 2023, 9:59:31 PM5/12/23
to santhav...@googlegroups.com
/பூக்க மழ்செம் பொழில்திரு வெவ்வுளூர்/

செம்பொழில் = ?

பூக்கள் நாறு  பொழில்திரு வெவ்வுளூர் ?

/ஏரு டைதிரு/
ஏரு டைத்திரு

Anand Ramanujam

unread,
May 13, 2023, 6:02:12 AM5/13/23
to santhav...@googlegroups.com
Thank you!

Since ‘நாறு’  has the opposite meaning  today, instead of using that word,  I would like to change the entire 3rd அடி of the 4th song as follows :

நீக்க மின்றி திருநிறை எவ்வுளூர்


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Anand Ramanujam

unread,
May 13, 2023, 6:35:08 AM5/13/23
to santhav...@googlegroups.com
விடப்பட்ட ஒற்றைத் திருத்திக்கொள்கிறேன்:

நீக்க மின்றித் திருநிறை எவ்வுளூர்

Anand Ramanujam

unread,
May 13, 2023, 9:41:35 AM5/13/23
to santhav...@googlegroups.com
'ஶ்ரீ வீரராகவப் பஞ்சகம்' இத்துடன் நிறைவுறுகிறது.

இப்பஞ்சகத்தின் அனைத்துப் பாடல்களையும் (சில மாற்றங்களுடன்) என் வலைப்பக்கத்தில் காணலாம்:


இப்பதிவின் இறுதியில் கலிவிருத்தத்தின் இலக்கணத்தையும் குறிப்பிட்டுள்ளேன். இக்குறிப்புகள் சரியாக உள்ளதா என்று தெரிவிக்குமாறு அவையினரை வேண்டிக்கொள்கிறேன்.

நன்றி,
இரா. ஆனந்த்

இமயவரம்பன்

குருநாதன் ரமணி

unread,
May 13, 2023, 10:17:58 AM5/13/23
to சந்தவசந்தம்
ஶ்ரீ வீரராகவப் பஞ்சகம் அருமை. 
கலிவிருத்த இலக்கணமாக நீங்கள் சொல்வது திருக்குறுந்தொகை அமைப்பு. யாப்பருங்கலம் சொல்லும் கலிவிருத்த இலக்கணம் இது: 
  அளவடி நான்கின கலிவிருத் தம்மே.
—யாப்பருங்கல விருத்தி, பக்.370, பதிப்பாசிரியர் மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை

அன்புடன்,
ரமணி

Anand Ramanujam

unread,
May 13, 2023, 10:42:52 AM5/13/23
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. ரமணி!

நீங்கள் சொல்வதுபோல் எனது குறிப்புகள் அனைத்து வகைக் கலிவிருத்தங்களுக்கும் பொருந்தா என்று அறிந்து கொண்டேன்.

எனவே, திருக்குறுந்தொகை அமைப்பைத் தழுவி எழுதப்படும் கலிவிருத்தங்களைக் கட்டளைக் கலிவிருத்தம் என்று கொள்ளலாமா?  

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Anand Ramanujam

unread,
May 13, 2023, 10:49:07 AM5/13/23
to santhav...@googlegroups.com
எனது பாவகையைக் ‘கட்டளைக் கலிவிருத்தம்’ என்று கொண்டு பதிவினைத் திருத்தியுள்ளேன்.

saidevo

unread,
May 13, 2023, 11:08:45 AM5/13/23
to santhav...@googlegroups.com
தேவாரத்தில் காணும் யாப்பு முறையான திருக்குறுந்தொகை கட்டளைக் கலித்துறை யாப்பு வகை என்றாலும் கட்டளைக் கலிவிருத்தப் பாடல்கள் திருக்குறுந்தொகை அமைப்பில் (முதற்சீர் குறிலீற்று மாச்சீர், இரண்டாம் நேரசைத் தொடக்கம் போன்றவை) இருக்க வேண்டுவதில்லை. விருத்த வகைகள் அனைத்துமே ஒரு குறிப்பிட்ட வாய்பாட்டில் அமையும் என்று கொள்ளலாம்.
ரமணி

Siva Siva

unread,
May 13, 2023, 11:32:27 AM5/13/23
to santhav...@googlegroups.com
A discussion on this meter - from 2008.

V. Subramanian

Ashok Subramaniam

unread,
May 13, 2023, 12:55:10 PM5/13/23
to santhav...@googlegroups.com
திருவள்ளூரில் 4 வருடங்கள் வசித்திருக்கிறேன். ஶ்ரீவீரராகவப் பெருமாளும், அங்கே வட கோடியில் இருக்கும் சிவன் கோயிலும் அருமையானவை. காய்கறி வளாகத்துக்கு எதிரே இருந்த ஒரு கடையின் “சீராளம்” மிக அறுமையாக இருக்கும்.. நாங்கள் வசித்த மோதிலால் வீதியும், ராகவா டவுன் பஸ்ஸும், அத்தெருவின் முக்கிலே இருந்த கலவல கன்னன்  செட்டியார் இந்து உயர் நிலைப் பள்ளியும் இன்னும் என் கண்முன்னே..  (71 முதல் 74, பின்பு 76-77களில்)

உங்கள் பஞ்சகம் அருமை.. அப்படியே காக்களூர் அனுமனைப் பற்றியும் எழுதிவிடுங்களேன்)

அன்புடன்
அசோக்

On Sat, May 13, 2023 at 7:49 AM Anand Ramanujam <anandbl...@gmail.com> wrote:
எனது பாவகையைக் ‘கட்டளைக் கலிவிருத்தம்’ என்று கொண்டு பதி திருத்தியுள்ளேன்.
--

Anand Ramanujam

unread,
May 13, 2023, 1:01:03 PM5/13/23
to santhav...@googlegroups.com
கட்டளைக் கலிவிருத்தப் பாடல்கள் எல்லாம் திருக்குறுந்தொகை அமைப்பில் இருக்க வேண்டுவதில்லை என்று தெளிவித்தமைக்கு நன்றி, திரு. ரமணி அவர்களே!

-- 
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Anand Ramanujam

unread,
May 13, 2023, 1:02:13 PM5/13/23
to santhav...@googlegroups.com
Thank you! The discussion is helpful to understand the meter.

-- 
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Anand Ramanujam

unread,
May 13, 2023, 1:15:36 PM5/13/23
to santhav...@googlegroups.com
அருமையான நினைவுகள், திரு. அசோக் அவர்களே!

நான் திருவள்ளூரில் பிறந்தவன். பதினான்கு வயது வரை (1989 வரை) அவ்வூரில்தான் (குளக்கரைத் தெருவில்) வசித்துவந்தேன்.  கலவல கன்னன் செட்டியார் பள்ளியில் தான் பயின்றேன். 
அதனால், திருவள்ளூரைக் குறித்துத் தங்கள் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டதைக் கண்டு  பெருமகிழ்வடைகிறேன்.

பஞ்சகத்தைக் குறித்து வாழ்த்துரைத்தமைக்கு நன்றி! காக்களூர் அனுமனையும் விரைவில் போற்றிப் பாடுவேன்!

அன்புடன்
ஆனந்த்

Anand Ramanujam

unread,
May 16, 2023, 7:32:30 AM5/16/23
to santhav...@googlegroups.com
பஞ்சகத்தை விரித்து மேலும் பாடல்கள் சேர்த்துப் பதிகமாக மாற்ற முயன்று வருகிறேன். புதிதாக சேர்க்கப்பட்ட இரண்டு பாடல்கள் பின்வருமாறு காண்க:

6.
சொற்ப தங்கள் கடந்தொளிர் சோதியைப்
பொற்பொ ருப்பினைப்  பொற்புறு ரூபனை
விற்பெரு விறல்  வீரனைப் பேரெவ்வுள்  
பற்ப நாபனைப் பாடிப் பணிவனே.

(பொருப்பு = மலை)

பதம் பிரித்து:
சொல் பதங்கள் கடந்து ஒளிர் சோதியைப்
பொன் பொருப்பினைப் பொற்பு உறு ரூபனைக்
விற்பெரு விறல்  வீரனைப் பேரெவ்வுள்  
பற்ப நாபனைப் பாடிப் பணிவனே.


7.
என்பெ லாமுரு கியுளெ ழுந்திடும்
அன்பி னாலகத் தாழ்ந்தருள் பாடுவார்
துன்பெ லாம்துடைக் கும்சுடர் நேமியான்
இன்பு லாவடி வெவ்வுள் இறைவனே.

(நேமி = திருச்சக்கரம்)

பதம் பிரித்து:
என்பெலாம் உருகி உள் எழுந்திடும்
அன்பினால் அகத்து ஆழ்ந்து அருள் பாடுவார்
துன்பெலாம் துடைக்கும் சுடர் நேமியான்
இன்பு உலாவு வடிவு எவ்வுள் இறைவனே.

இரா. ஆனந்த்



Siva Siva

unread,
May 16, 2023, 8:41:15 AM5/16/23
to santhav...@googlegroups.com
/விற்பெரு விறல்  வீரனைப் பேரெவ்வுள்  /
விற்பெ ருவ்விறல்  வீரனைப் பேரெவ்வுள்  
யாப்புக் கருதி, இங்கே வ் விரித்தல் விகாரம் பெற்றுவரவேண்டும் என்று எண்ணுகின்றேன்.

/என்பெ லாமுரு கியுளெ ழுந்திடும்/
3-ஆம் சீர் ?

V. Subramanian 

Anand Ramanujam

unread,
May 16, 2023, 10:13:27 AM5/16/23
to santhav...@googlegroups.com
நன்றி,

6-ஆம் பாட்டில் ‘ விற்பெருந் திறல் ‘ என்றும், 7-ஆம் பாடில் முதலடியை ‘ என்பெ லாமுள் ளுருகவெ ழுந்திடும்’ என்றும் மாற்ற விரும்புகிறேன்.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Anand Ramanujam

unread,
May 16, 2023, 7:13:01 PM5/16/23
to santhav...@googlegroups.com
பதிகத்தின் கடை மூன்று பாடல்கள்:

8.
அஞ்சி றைப்பற வையணிந் தேத்திடும்
கஞ்ச வார்கழல் கைதொழு வாரவர்
நெஞ்ச மேவி நிறைந்தருள் வார்த்திடும் 
மஞ்ச னாரிடம் வண்புகழ் எவ்வுளே.

(அம் சிறைப் பறவை = அழகிய சிறகை உடைய பறவை = கருடன்; கஞ்சம் = தாமரை; மஞ்சனார் = மைந்தனார்)

பதம் பிரித்து:
அம்  சிறைப் பறவை அணிந்து ஏத்திடும்
கஞ்ச வார்கழல் கைதொழுவார் அவர்
நெஞ்சம் மேவி நிறைந்து அருள் வார்த்திடும் 
மஞ்சனார் இடம் வண்புகழ் எவ்வுளே.

9.
தடவ ரைதனைத் தாங்கிநின் றாமையாய்க்
கடல்க டைந்தக ளைப்புகொ லோதிரு
இடமெ னக்கொண்டெவ் வுள்கிடந் தெம்பிரான்  
படவ ரவ்வணைப் பையத் துயின்றதே!

(படவரவ்வணை = நீட்டல் விகாரம்)
 
பதம் பிரித்து:
தட வரைதனைத் தாங்கிநின்று ஆமையாய்க்
கடல் கடைந்த களைப்பு கொலோ திரு
இடம் எனக்கொண்டு  எவ்வுள் கிடந்து எம்பிரான்  
பட  அரவு அணைப் பையத் துயின்றதே!

10.
இரவு நன்பகல் எப்பொழு தும்முன்றன்
குரைக ழற்புகழ் கூறுவன் எவ்வுளாய்!
அரவ மெல்லணைப் பள்ளிகொண் டாயருள்
பரவு மென்மனப் பள்ளியெந் நாள்கொலோ!

பதம் பிரித்து:
இரவு நன்பகல் எப்பொழுதும் உன்றன்
குரை கழல் புகழ் கூறுவன் எவ்வுளாய்!
அரவ மெல்லணைப் பள்ளிகொண்டாய் அருள்
பரவும் என்மனப் பள்ளி  எந்நாள் கொலோ!


 இரா. ஆனந்த்


Siva Siva

unread,
May 16, 2023, 8:58:01 PM5/16/23
to santhav...@googlegroups.com
பறவை அணிந்து ஏத்திடும் = ?

/களைப்பு கொலோ/
க் மிகும்.

/ படவரவ்வணை = நீட்டல் விகாரம் /
விரித்தல் விகாரம்.

/நன்பகல் /
நன்? நண்?

/அரவ மெல்லணை/
interesting to see the serpent bed being described as a soft bed!

V. Subramanian



Anand Ramanujam

unread,
May 16, 2023, 9:31:07 PM5/16/23
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி!

முதலடியைத் தெளிவுற அமைக்க இவ்வாறு மாற்ற விரும்புகிறேன்:
"அஞ்சி றைப்பற வையது தாங்கிடும்"

நன்பகல் = old form of நண்பகல்

“ நன்பகல் என்னும் பண்டை இலக்கிய வழக்கு இன்று, நண்பகல் என்று நடுப்பகலைக் குறித்தலும் திரிதலே”


I will change it to நண்பகல் as this is the popular usage.

மெல்லணை

ஆழ்வாரால் பூம்பட்டு என்று போற்றப்படுவது பாம்பணை:

சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்
நின்றால் மரவடியாம் நீள் கடலுள் - என்றும்
புணையாம் அணி விளக்காம் பூம் பட்டாம் புல்கும்
அணையாம் திருமாற்கு அரவு.

அதனால், மெல்லணை என்று குறிப்பிட்டேன்.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

சௌந்தர்

unread,
May 16, 2023, 9:38:24 PM5/16/23
to சந்தவசந்தம்
மெல்லணை என்பது சரியே. திருக்கோட்டியூர் பெருமாள் 'உரக மெல்லணையான்' என்றே அழைக்கப்படுகிறார்.
சௌந்தர் 

Anand Ramanujam

unread,
May 16, 2023, 9:48:18 PM5/16/23
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. செளந்தர்!

Siva Siva

unread,
May 16, 2023, 11:40:43 PM5/16/23
to santhav...@googlegroups.com
Thank you both for the references.

On Tue, May 16, 2023 at 9:38 PM சௌந்தர் <rsou...@gmail.com> wrote:

Anand Ramanujam

unread,
May 18, 2023, 6:50:18 PM5/18/23
to santhav...@googlegroups.com
இப்பதிகத்தின் அனைத்து பாக்களையும் கொண்ட தொகுப்பினை ஶ்ரீ வீரராகவ விருத்தமாக இங்கே காணலாம் :

நன்றி,
இரா. ஆனந்த்

Siva Siva

unread,
May 18, 2023, 7:06:53 PM5/18/23
to santhav...@googlegroups.com
Nice.

Some minor notes regarding the கட்டளைக் கலி விருத்தம் – இலக்கணக் குறிப்பு.

Sambandar thevaram 3.49.1 - kAdhalagi - may have some variation in some places due to its musical nature.

Some other verses may provide an exact match for illustration.
For example,
Appar - 5.1.1
அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம்
பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை
என்னம் பாலிக்கு மாறுகண் டின்புற
இன்னம் பாலிக்கு மோஇப் பிறவியே.

Periyapuranam
உலகெ லாம்உணர்ந் தோதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம் .
----

Also, regarding the point - "முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்."

I am not sure if it is a must. Some songs may have long vowel sound at the end of first seer.
மாமாத் தாகிய மாலயன் மால்கொடு
தாமாத் தேடியுங் காண்கிலர் தாள்முடி
ஆமாத் தூரர னேயரு ளாயென்றென்
றேமாப் பெய்திக்கண் டாரிறை யானையே.


V. Subramanian



Anand Ramanujam

unread,
May 18, 2023, 9:09:45 PM5/18/23
to santhav...@googlegroups.com
Thank you for mentioning the verses from Appar and Periyapuranam that exactly match the pattern of my songs.

I did not know that kAdhalagi song has some variation in some places due to the musical notes.

Also thanks for your reference to the song that has long vowel sound at the end of the first seer.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Anand Ramanujam

unread,
May 17, 2024, 9:47:42 PM5/17/24
to santhav...@googlegroups.com

அடியேன் எழுதிய ஶ்ரீ வீரராகவ விருத்தம், “எவ்வுள் கிடந்தான்” என்னும் மாத இதழில் வெளிவந்துள்ளது என்பதை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.


தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
May 17, 2024, 10:04:31 PM5/17/24
to சந்தவசந்தம்
அருமை ஐயா வாழ்த்துகள் 👍
ஓம் நமோ நாராயணா 🙏

On Saturday, May 18, 2024 at 7:17:42 AM UTC+5:30 Anand Ramanujam wrote:

அடியேன் எழுதிய ஶ்ரீ வீரராகவ விருத்தம், “எவ்வுள் கிடந்தான்” என்னும் மாத இதழில் வெளிவந்துள்ளது என்பதை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.


Anand Ramanujam

unread,
May 17, 2024, 10:05:41 PM5/17/24
to santhav...@googlegroups.com
நன்றி, திரு. தங்கவேல் 🙏

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ram Ramakrishnan

unread,
May 17, 2024, 10:43:55 PM5/17/24
to santhav...@googlegroups.com
அழகு. வாழ்த்துகள், திரு. இமயவரம்பன்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On May 18, 2024, at 07:17, Anand Ramanujam <anandbl...@gmail.com> wrote:



அடியேன் எழுதிய ஶ்ரீ வீரராகவ விருத்தம், “எவ்வுள் கிடந்தான்” என்னும் மாத இதழில் வெளிவந்துள்ளது என்பதை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

<b91348ca-2639-46fd-b6a5-5c3994b6edc3.jpg>


On Thu, May 18, 2023 at 6:50 PM Anand Ramanujam <anandbl...@gmail.com> wrote:
இப்பதிகத்தின் அனைத்து பாக்களையும் கொண்ட தொகுப்பினை ஶ்ரீ வீரராகவ விருத்தமாக இங்கே காணலாம் :

நன்றி,
இரா. ஆனந்த்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Anand Ramanujam

unread,
May 17, 2024, 10:50:38 PM5/17/24
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. ராம்கிராம்!

Siva Siva

unread,
May 17, 2024, 11:27:09 PM5/17/24
to santhav...@googlegroups.com
Nice.

V. Subramanian

On Fri, May 17, 2024 at 9:47 PM Anand Ramanujam <anandbl...@gmail.com> wrote:

அடியேன் எழுதிய ஶ்ரீ வீரராகவ விருத்தம், “எவ்வுள் கிடந்தான்” என்னும் மாத இதழில் வெளிவந்துள்ளது என்பதை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.



Anand Ramanujam

unread,
May 18, 2024, 7:02:05 AM5/18/24
to santhav...@googlegroups.com
Thank you! 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Arasi Palaniappan

unread,
May 18, 2024, 8:49:18 AM5/18/24
to santhav...@googlegroups.com
அற்புதமான கலி விருத்தங்கள்.

/பூக்க மழ்பைம் பொழில்திரு வெவ்வுளூர் /

என்று இருக்கலாமோ?

அரசி. பழனியப்பன் 

On Sat, 13 May 2023, 6:49 am Anand Ramanujam, <anandbl...@gmail.com> wrote:
4.
'காக்க' என்ற கரியின் கடுந்துயர்
போக்க வந்த பொருதிறல் ஆழியான்
பூக்க மழ்செம் பொழில்திரு வெவ்வுளூர்
சீர்க்க நின்ற திகழொளிச் செல்வனே.

5.
பேரொ ராயிரத் தானெம்பி ரான்பரன்
ஏரு டைதிரு எவ்வுள் இறையவன்
நார ணன்பட நாகணை யானருள்
வீர ராகவன் மெய்யடி யோங்களே.

இரா. ஆனந்த்

On May 11, 2023, at 8:47 PM, Anand Ramanujam <anandbl...@gmail.com> wrote:

2.
திருநி றைந்திடும் சீரெழில் மார்வனை
அருளி லங்கிடும் அங்கண் அழகனை
திருவெவ் வுள்கிடந் தானையெம் சிந்தையில்
மருவு நாதனை வாழ்த்தி வணங்குவாம்.


3.
எண்ண ருஞ்சுவை யோடரு ளீந்திடும்
பண்ணொ ளிர்தமிழ்ப் பாசுர மானவன்
நண்ண ரும்பதம் நல்கிடும் எவ்வுளெம்
அண்ணல் என்ன அழிந்திடும் அல்லலே.

On Sun, May 7, 2023 at 12:05 PM Anand Ramanujam <anandbl...@gmail.com> wrote:
திருவள்ளூர் ஶ்ரீ வைத்ய வீரராகவ ஸ்வாமி துதி
(கலி விருத்தம்)

எவ்வு யிர்க்கும் இருந்துணை யேயெனச்
செவ்வு றத்தொழும் சிந்தை உடையவர்
எவ்வு டற்பிணி எய்தினும் அஃதற 
எவ்வு ளீசன் இணையடி காக்குமே!

தல வரலாறு:
புரு எனும் முனிவரின் யாகத்தின் பயனாய்ப் பிறந்த சாலிஹோத்ரர் எனும் முனிவர் இங்கு தவம் செய்து வந்தார். தினமும் அதிதிக்குப் படைத்த பின்பு உண்பவரான சாலிஹோத்ர முனிவரின் அதிதியாகப் பெருமாளே வயோதிகர் வடிவில் வந்து உணவு பெற்றார். பசி தீராததாகக் கூறி முனிவரின் பங்கையும் உண்டு பசியாறிய பின்னர், உண்ட களைப்புத் தீர எங்கே படுப்பது என முனிவரிடம் வினவ, முனிவர் தம் ஆசிரமத்தைக் காட்டினார். அங்கே பெருமாளாக சயனித்தார். "படுக்க எவ்வுள்" என்று கேட்டதால் ஊர் பெயர் எவ்வுள்ளூர் என்றும் எவ்வுட்கிடந்தான் என்பது பெருமாள் திருப்பெயருமாயிற்று. 
(Source: Wikipedia)

குறிப்பு:
எவ்வுளீசன் = கிங்க்ருஹேசன் = கிம் + க்ருஹ + ஈசன் 

இரா. ஆனந்த்



--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Anand Ramanujam

unread,
May 18, 2024, 9:07:29 AM5/18/24
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. அரசி. பழனியப்பன்!

ஆம்! “பூக்க மழ்பைம் பொழில்திரு வெவ்வுளூர்” மிகப் பொருந்தும்!

சிறப்பான பரிந்துரைக்கு நன்றி!

Arasi Palaniappan

unread,
May 18, 2024, 9:13:34 AM5/18/24
to santhav...@googlegroups.com
மிக்க மகிழ்ச்சி. நன்றி 

அரசி. பழனியப்பன் 

Imayavaramban

unread,
Feb 14, 2026, 7:50:57 PM (4 days ago) Feb 14
to சந்தவசந்தம்
பல மாற்றங்களுடன் இப்பதிகத்தின் மீள் பதிவு:

வீரராகவப் பத்து
(பாவகை: கட்டளைக் கலிவிருத்தம்)

திரும டந்தை திகழ்மணி மார்பனை
அருள்நி றைந்த அணிமலர்க் கண்ணனை
அரவு றங்கும் அணையென எவ்வுளில்
அரசி ருந்த அழகனை வாழ்த்துவோம்.  (1)

எவ்வு யிர்க்கும் இதயத் துணைவனை
எவ்வி டர்க்கும் இனிய மருந்தினை
எவ்வி றைக்கும் இறைவனை ஈடிலா
எவ்வு ளீசனை ஏத்தி வணங்குவோம். (2)

எண்ணி லாநலம் ஈந்திடும் மாலவன்
பண்ணு லாந்தமிழ்ப் பாசுர நாயகன்
நண்ணு வார்க்கருள் நல்கிடும் எவ்வுள்எம்
அண்ணல் வாழ்கவென் றாலல்லல் ஓயுமே. (3)

‘காக்க!’ என்ற கரியின் கடுந்துயர்

போக்க வந்த பொருதிறல் ஆழியான்
ஆர்க்கும் வேள்வியின் ஆகுதி யோடுபூங்
காக்க மழ்ந்த கவினெவுட் செல்வனே. (4)

நார ணாவென நாவில் நவின்றிடப்
பார மாகிய பாவம் அறுப்பவன்
பாரெ லாம்புகழ் பாடும் திருவெவ்வுள்
வீர ராகவன் மெய்யடி யோங்களே.  (5)

(தொடரும்)

- இமயவரம்பன்

இமயவரம்பன்

unread,
Feb 15, 2026, 9:38:18 PM (3 days ago) Feb 15
to santhav...@googlegroups.com
வீரராகவப் பத்து (6-10)
(கட்டளைக் கலிவிருத்தம்)

சொற்ப தங்கடந் தோங்கிடும் தூயவன்,
அற்பு தன்,கழல் ஆர்த்திடும் தாளினன்,
விற்பெ ருந்திறல் வீரன், திருவெவ்வுள்  
பற்ப நாபனைப் பாடிப் பணிவமே.  (6)

என்பெ லாமிளைத் தேங்க, எழுந்ததோர்
அன்பி னாலே அகம்குழைந் தாடுவார்க்(கு)
இன்பெ லாம்தரு வான்,எவ்வுள் ளூரிலே
முன்பு வேத முனிக்கருள் தேவனே. (7)

சோதி வானவன் தொல்மறை ஆனவன்,
ஆதி தேவன்,அட் டாக்கர ரூபனாம்,
கோதை நாயகன், கோவலன், பாண்டவர்
தூதன் - பையத் துயிலிடம் எவ்வுளே. (8)

விரியும் வான்சுடர் வீறிரண் டானவன், 
அரவின் மேல்தவத்(து) ஆழ்ந்திடும் மாயவன்,
கருட வாகனன், கார்வணன், காதலின்  
மருவி வாழ்வது மாநகர் எவ்வுளே. (9)

இரவு நண்பகல் என்றிரு போதிலும்
உரகம் மேலொளிர் உன்பதம் ஓதுவேன்!
பரிவி னாலெவ்வுள் பள்ளிகொண் டாய்,உனைப்
பரவி னேன்மனப் பள்ளியெந் நாள்கொலோ! (10)

- இமயவரம்பன்
Reply all
Reply to author
Forward
0 new messages