நம் சந்தவசந்தம் குழு பற்றியும் என்னுடைய பழைய பாடல் ஒன்றைப் பற்றியும் கீழ்க்காணும் தளத்தில் குறிப்பிட்டுள்ளதை இன்று எதேச்சையாகக் கண்டேன்: http://thiruppul.blogspot.ca/2009/08/blog-post_05.html
அனந்த்
நம் சந்தவசந்தம் குழு பற்றியும் என்னுடைய பழைய பாடல் ஒன்றைப் பற்றியும் கீழ்க்காணும் தளத்தில் குறிப்பிட்டுள்ளதை இன்று எதேச்சையாகக் கண்டேன்: http://thiruppul.blogspot.ca/2009/08/blog-post_05.html
அனந்த்
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
Nice.The content reminded me of the 'aRugununi paniyanaiy' thiruppugazh song.
செழுந்தமிழை முழுதும் விழை உளமகிழ ஒழுகுமொழி
திகழ்கவிதை ‘ழ;கரம் வரப் பழமரபில் பிழிந்தெழுத
செழிப்புவளர் மதம்கொழிக்கும் கொழுகொழுத்த வடிவுதரத்
திருவழகு மழகளிற்றைப் பிழையொழியக் கழல்பணிந்தேன்
எழில்வழியும் பொழிலிடையே எழுகதிரும் நுழையயிடம்
இலையெனவே சுழல்கருமை தழைதழுவி நிழல்பரப்பும்
இழியுமழை இழையிழையாய் பொழிந்துதரைப் புழுதியினை
இழுத்தழைத்து சுழித்திழைந்து கழனிபயிர் வளரவிடும்
விழுங்கதிரும் தழல்குறைத்து வளந்தழைக்கும் நிறங்குழைத்து
விரிவிசும்பில் ஒளிருகுடத் திசைப்பரப்பில் மெழுகிவிடும்
விரையெழிலி கரைகிழித்து ஒளிர்கனகக் சரிகையிடும்
இதனைமுனம் ‘உமைகவிதை” எனமொழிந்தான் கவித்தொழிலன்
விழலெனவே இழந்தழிந்து விடக்கவிதை வரைகுவனோ?
விதவிதமாய் வழுவிலதாய் இயற்கைதரும் வனப்பதிகம்
மிகக்குழைந்து அதைவழுத்தி மனம்நெகிழ்ந்து தொழுதிடுவேன்
விரைபொழுது கழிகணங்கள் விழுதுவிடும் நிலைபெறுக!
செழும்
தமிழ்
முழுதும்
விழை
மகிழ்
ஒழுகு
மொழி(பாஷை)
திகழ்
ழகரம்
பழ
பிழி
எழுத
செழிப்பு
தழைக்கும்
கொழு
கொழு
அழகு
மழ
பிழை
ஒழிய
கழல்
எழில்
வழியும்
பொழில்
எழு
நுழை
சுழல்
தழை
தழுவு
நிழல்
இழியும்
மழை
இழைஇழை
பொழிந்து
புழுதி
இழுத்து
அழைத்து
சுழித்து
இழிந்து
கழனி
விழும்
தழல்
கொழி
குழைத்து
மெழுகு
எழிலி
கிழித்து
மொழி-(சொல்)
தொழில்
விழல்
இழந்து
அழிந்து
வழு
குழைந்து
வழுத்தி
தொழுதிடு
பொழுது
விழுது
http://www.kaumaram.com/audio_k/sgtp0858.html
.. அனந்த்ஆஹா, என்ன அற்புதமான பாடல்! இதைச் சுட்டியதற்கு நன்றி. சந்தப்பாடல்கள், குறிப்பாக வண்ணப் பாடல்கள் இயற்ற விரும்பும் இக்குழுவிலுள்ளோர் இதைக் கட்டாயம் படிக்க வேண்டும். படித்து, இது போல ஆயிரக்கணக்கில் வண்ணம் படைக்கும் அருணகிரியாரின் ஒப்பற்ற புலமையை அறியவேண்டும்.
இந்திய இளைஞன்:
எல்லாமே இந்நாட்டில் மோசம்- எனக்(கு)
... என்றுதான் கிட்டுமோ அமெரிக்க வாசம்? (எல்லாமே..)
பள்ளிசெல் லும்அந்த நாளாய் - இந்தப்
... பாழும் நினைப்பெனைக் கொட்டுது தேளாய்
மெள்ள வளர்ந்திட்டேன் ஆளாய்- இந்த
... வேதனை யின்னும்தா ளேனிது கேளாய்:
எங்கும் நிறைந்திடும் ஊழல் - அதை
... எடுத்துரைத் தால்காவல் படையினர் சூழல்
பங்குச்சந் தைபடு தாழல் - பணம்
... போட்டவர் வாழ்க்கையும் பள்ளத்தில் வீழல்
துண்டுபோட் டோரெல்லாம் கூடி- நாட்டைத்
... துண்டாக்கிச் சேர்த்திடு வார்பலகோடி
கண்டு மனம்சலித் தாச்சு - இனிக்
... காணவோர் கேடுமில் லையென வாச்சு
அமெரிக்கா கானடா எல்லாம்- ஆகா!
... அமரர்கள் வாழ்கின்ற பூமியென் றெல்லாம்
'குமுத'த்தில் காணும்போ தெல்லாம்-குஷி
... கூடவே ஏறியென் வாயெல்லாம் பல்லாம்! (எல்லாமே...)
"கணினிப் படிப்பினை இன்றே -அஞ்சல்
... கல்லூரி மூலமாய் கற்றிட்டால் நன்றே;
பணிகள் பலவுள" என்றே- பல
... பேருஞ்சொன் னாரதைக் கேட்டுப்ப யின்றே
பாலொடு தேனோடும் வீதி - இளம்
... பாலகர்க் கும்மரி யாதைசெய் நீதி
பார்க்கு மெவருமோர் சாதி -என்று
... படித்ததை என்றன் மனத்தினில் ஓதி
அமெரிக்கா வந்துநான் சேர்ந்தேன் - அங்கென்
... ஆசைக் கனவை நினைவினில் கூர்ந்தேன்
செமையாய் நடந்தெல்லாம் பார்த்தேன் - வந்து
... சேர்ந்தாறு நாளுக்குள் கைக்காசு தீர்த்தேன் (அமெரிக்கா..)
நாட்கள் பலவான பின்னும் - நானும்
... நல்லதாய் ஒன்றையும் கண்டில்லை இன்னும்
ஆட்கள் பலர்துணை கொண்டு - மாதம்
... ஆறான பின்பொரு வேலையைக் கண்டு
இன்றோடு நம்துயர் போச்சு- அப்பா!
... என்றுநான் விட்டஅந் நிம்மதி மூச்சு
சென்று மறைவதன் முன்னே - என்றன்
... சீட்டைக் கிழித்துத்தந் தான்;விதி என்னே!
கணினிக்கு எமனென்ற ஆண்டு - தந்த
... கஷ்டமெல் லாம்என்றோ தீர்ந்தது கொண்டு
பணியாள் குறைப்பில்என் வேலை - நடு
... பாதியில் போகக்கண் டேன்தெரு மூலை (அமெரிக்கா..)
இந்திய நாட்டினை வைவேன் - ஐயோ!
... இப்போதிந் நாட்டினில் என்னதான் செய்வேன்?
சொந்த நிலமென்றும் மேலாம் - என்ற
... சொல்லதின் உண்மைக்கென் வாழ்வொரு கோலாம்
எல்லாமே அக்கரைப் பச்சை - என்ற
... எண்ணத்திலே எழவேண்டும் நம்இச்சை
நல்லவை உண்டெங்கள் நாட்டில் -என்ற
... நம்பிக்கை வித்தைவி தைப்போம்நம் வீட்டில்
எல்லாமே அக்கரைப் பச்சை – அதை
... ஏற்காமல் நெஞ்சில் வளர்ந்திடும் இச்சை
பொல்லாத தென்றுநான் கண்டேன் – இந்தப்
... போதனை கேட்டால் உமக்குயர் வுண்டே! (எல்லாமே அக்கரைப் பச்சை.. )
அனந்த்
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
முக்காலும் உண்மையிலும் உண்மை ஐயா!யானும் அமெரிக்காவில் (1999 முதல் 2004 வரை) இருந்திருக்கிறேன்; அங்குக் கண்ட நம் இந்திய இளைஞர்களின் வாழ்வியலை அப்படியே எழுதியுள்ளீர்கள், இந்த ஆனந்தக் களிப்புப் பாட்டில்; ஏற்றிடுவோம் என் வாழ்க்கையை எம் தாய்த்திருநாட்டில்!
"கணினிப் படிப்பினை இன்றே -அஞ்சல்
... கல்லூரி மூலமாய் கற்றிட்டால் நன்றே;
பணிகள் பலவுள" என்றே- பல
ஜனவரி 2001-ல் ’போரம் ஹப்’ (மன்ற மையம்) இணைய தளத்தில் எழுதிய ஒரு கவிதை கீழே, ’முன்னுரை’யோடு.
”இந்த வாரம் நிறைய (அலுவலக) வேலைகள் இருப்பதால் இணையம் பக்கமே போகக் கூடாதென்று நினைத்துக் கொண்டேன். ஆனால்.. முடியவில்லை! சன்னல் வழியே நோக்கிய போது அழகாகப் பறந்து சென்ற கனேடிய வாத்துகள் (Canada geese) என்னைக் கணினித் திரைக்குத் துரத்தின. அதன் விளைவு...
<> பாவம் பறவைகள்! <>
.... அனந்த்
வானில் திரியும் பறவைகாள் - உங்கள்
வாழ்க்கையை எண்ணி வருந்துகிறேன்!
தீனியை ஒன்றே தினந்தினமும் - நீர்
தேடி அலைந்துதிண் டாடுகின்றீர்!
மானிட ராகிய எங்களைப்போல் - இன்றி
வீணே கழிக்கிறீர் உம்பொழுதை
ஏனிந்தத் தீங்கினை ஈசனுமக் -கென்று(ம்)
இப்புவி தன்னில் இழைத்திட்டான்?
மானிட ரெங்கள் குழந்தையது -வந்த
நாள்முதல் நாங்கள் அதனிடத்தில்
தானினி வாழ்ந்திடத் தேவைபலப் - பல
தாமுண் டெனமிகத் தாகமுடன்
வானினும் நீண்டதோர் பட்டியலை -அது
வாயினாற் பேசுமுன் தந்திடுவோம்
தேனினும் மேலாங் குரலெடுத்து - அது
தா,தா தையெனச் சொல்லுமுன்னே
மேனிலப் பள்ளிக்(கு) அதையனுப்பி -அங்கு
வேகமாய்க் கல்வி விழுங்கவைப்போம்
மூனென வெண்மதி காட்டிநிதம் - அது
முற்றும் தமிழை மறக்கவைப்போம்
நானினி யாவரில் மேலெனவே - அதன்
நெஞ்சினில் எண்ண விதைவிதைப்போம்
நானில மீதினில் மென்மேலே - பணம்
நாலெண் விதத்தினில் சேகரிக்கக்
கூனியுந் தோற்கக் குறுக்குவழி - பல
கொடுத்தது கூவக் குதுகலிப்போம்
ஏனினி உம்முடன் வாதாடி - நான்
என்பொழு திங்ஙனம் வீண்செய்வேன்
மேனி அழிந்திடு முன்னர்நீர் - எம்
வாழ்முறை பற்றி வளமுறுவீர்!
(இது ’கோபுர தரிசனம்’ சிற்றிதழிலின் தீபாவளி மலரில் பின்னர் வெளிவந்தது- தீபாவளி மலர்களில் வந்த என்னுடைய கவிதைகளில் இது முதல். எல்லாக்கண்ணிகளும் ஒரே எதுகை பயில்வதைக் காணலாம்.)
..அனந்த்
... அனந்த்
நவம்பர் 6, 2002
முதல் ஆண்டு நிறைவு வாழ்த்து:
கருவாய் இலந்தை கனவாய் உதித்துக் கனியா கிச்சந்த அழகோடே
உருவாகி நிற்கும் உயர்வான இந்தக் குழுஇன் றுதிர்க்கும் மலர்வீசும்
பெருவாச மெங்கும் பெரிதாய்ப் பரந்து பெரியோர் எலோரும் இதைநாடி
வருமாறி றைவன் வழிகாட்ட வேண்டி வழிபாடு செய்வம் இதுநாளில்.
-------------
7-11-2006
ஐந்தாவது ஆண்டு நிறைவு வாழ்த்து
<> எங்கள் குழந்தை <>
(தீராத விளையாட்டுப் பிள்ளை மெட்டு**)
சந்த வசந்தக் குழந்தை - அதன்
சாதனை எங்குமே காணாத விந்தை
இலந்தை உருவினில் வந்து - தமிழ்
இன்பமுப் பாலில் மரபைக் கலந்து
பலவகைப் பாக்களை ஊட்டும் - இந்தப்
பாலனும் தன்கை வரிசையைக் காட்டும் (சந்த)
ஆண்டொன்று சென்றிடும் முன்னே - ஒரு
ஆயிரத் தோடுமுன் னூற்றுக்கும் பின்னே
நீண்ட இடுகைகள் போட்டு - நமது
நெஞ்சில் திருக்குறள் எண்ணிக்கை காட்டும் (சந்த)
மற்ற குழந்தைகள் கூடித் -தெரு
மண்ணில் களிக்கத் தமிழ்நூலைத் தேடிப்
பற்றிப் புரட்டி மகிழும் - அதைப்
பார்ப்பவர் நெஞ்சமும் பாகாய் நெகிழும் (சந்த)
புவியுள்ளோர்க் கேற்ற விருந்தாய் - எம்போல்
புலம்பெயர்ந் தோரின் பசிக்கு மருந்தாய்
கவிதை அரங்கங்கள் கூட்டும் - உடன்
கணிணி வழிஎங்கள் கண்முன்னே காட்டும் (சந்த)
வள்ளுவன் பேர்கேட்டால் துள்ளும் - மணி
மாலையைச் சூட்டி மகிழ்ச்சியும் கொள்ளும்
உள்ளில் உதித்திடும் பாட்டைச் - சந்த
ஓசைது லங்கத்தன் கைதட்டிக் காட்டும் (சந்த)
பாரதி யார்மடி தாவும் - அவர்
பாட்டைச் சுவைத்திடப் பாரோரை ஏவும்
தேரழுந் தூர்க்கம்பன் பேரைத் - தினம்
செப்பிடச் சொல்லிப் பணித்திடும் ஊரை (சந்த)
ஆறாவ தாண்டில் அடிகள் - வைக்கும்
அன்பே!உன் பேர்இன்னும் ஓங்கும் படியாய்ப்
பேறெல்லாம் பெற்றுநீ வாழ்க!- பிறைப்
பெம்மான் மகன்அருள் என்றென்றும் சூழ்க! (சந்த)
..அனந்த் 7-11-2006 (இணைப்பு: ஒலிப்பதிவு)
(தொடரும்)
11-ஆம் ஆண்டு நிறைவு
சத்தான அறிவுதரும் சத்துவசந்தம்
.. சாரமான செய்திதந்(து)அ சத்து(ம்)வசந்தம்
முத்தான கவிதைநிறை முத்துவசந்தம்
.. முதல்இணையத் தமிழ்மரபுக் கொத்துவசந்தம்
புலமைமிகு கவிமணியார் தந்தவசந்தம்
.. புதுமைகளைப் புகுத்துவதில் முந்துவசந்தம்
பலகவிஞர் மரபுதேடி வந்தவசந்தம்
.. பாசத்தினால் நமைப்பிணைக்கும் பந்தவசந்தம்
பெருங்கவிஞர் தாமும்கண்(டு)அ சந்தவசந்தம்
.. பேதமின்றி உறவுபேசும் சொந்தவசந்தம்
வருமெவர்க்கும் மகிழ்ச்சிஅள்ளித் தந்தவசந்தம்
.. வாழ்கஇன்னும் நூறுவருடம் இந்தவசந்தம்!
அனந்த்
5-11-2012
6-11-2008 ஏழாவது ஆண்டு நிறைவு வாழ்த்து
<> எங்கள் சேய் <>
இராகமாலிகை; தாளம்: திஸ்ர ஏகம்
-பைரவி-
செந்தமிழ்த் தாயின் சிறப்பினைச் செப்பிடச்
.. செல்வக் குழந்தையொன்று - இங்கு
வந்து பிறந்து வளர்ந்து வருகிறாள்
.. வண்ணக் களஞ்சியமாய்!
சந்தம் மணக்கத் தமிழ்மணக்க அலர்
.. தாமரை போலுதித்தாள் - அவள்
சொந்தம் எமக்கெனச் சொல்லிக் கவிஞர்கள்
.. தோளில் சுமந்துநின்றார் (எங்கள் சேய் எங்கள் சேய்)
-மோஹனம்-
முந்தை இலக்கிய வித்தகர் வந்துநல்
.. முத்துக்கள் பூட்டிநின்றார் - எழில்
சிந்தும் புதுவகைச் செல்வங்க ளும்அவர்
.. சேர்த்துக் கொணர்ந்துவந்தார்
எந்தத் திசையில் தமிழொலி கேட்கினும்
.. இன்ப நடம்புரிந்து - வந்த
இந்தக் குழந்தையின் இங்கிதம் கண்டவர்
.. ஈதென்ன மாயமென்றார் (எங்கள் சேய் எங்கள் சேய்)
-வசந்தா-
மாலைப் பொழுதினில் சோலை உலாவிடும்
.. மாருதம் போலிருந்த - சந்தக்
கோலக் குழந்தை 'வசந்தம்' எனும்பேரில்
.. வாசனை வீசிவந்தாள்
காலமெல் லாம்தமிழ் கற்றவர் ஊட்டிடும்
.. காவியத் தேனைஉண்டாள் - அவள்
சீலம் தெரிந்து பலரும் அவள்குழு
.. தேடித் திரண்டுவந்தார் (எங்கள் சேய் எங்கள் சேய்)
-சாரங்கா-
பாலப் பருவச் சிறுவர் விளையாடப்
.. *பாவைகள் நாடுகையில் - தமிழ்
சாலச் சிறந்திடும் பாவை விரும்பிடும்
.. தன்மை துலங்கநின்றாள்
கோலக் குயிலின் குரலிசை கேட்கையில்
.. கொள்ளை மகிழ்ச்சிகொள்வாள் - அதில்
ஞாலம் புகழ்தமிழ் நாதம் பயிலும்
.. நயங்கண்டு கூத்திடுவாள் (எங்கள் சேய் எங்கள் சேய்)
-காபி-
சிந்தை முழுதும் தமிழ்நினை வாம்அவள்
.. செய்கையெல் லாம்தமிழாம் - சொல்லும்
மந்திர மும்தமி ழாம்அவள் பேசிடும்
.. வார்த்தையெல் லாம்தமிழாம்
இந்த விதத்தில் இனிது வளர்ந்திவள்
.. ஏழு வருடங்களாய் - காண
வந்தோர் வியந்திட வண்ணக் கவிதைகள்
.. வாரி வழங்குகின்றாள் (எங்கள் சேய் எங்கள் சேய்)
- சிந்து பைரவி-
ஓதும் இயலிசை நாடகத் தில்தன(து)
.. உள்ளம் பறிகொடுப்பாள் - அதில்
சாதனை செய்தவர் யாவரையும் தலை
.. தாழ்த்தி வணங்கிடுவாள்
வாதம் புரிவதில் வல்லவள் ஆயின்
.. வரம்பினைத் தாண்டிநில்லாள் - பிறர்
ஏதும் குறைகள் எடுத்துரைத் தால்உடன்
.. ஏற்றுத் திருந்திடுவாள் (எங்கள் சேய் எங்கள் சேய்)
-சுருட்டி-
சூழும் உலகை இணையத் தளம்வழி
.. தொட்டுப் பலப்பலவாய் - என்றும்
வாழும் மரபும் புதுமையும் போற்றிடும்
.. வாசகங் கள்புனைவாள்
ஏழு வயதைக் கடந்துவிட் டாள்இன்று
.. எட்டினை எட்டுகின்றாள் - நீண்டு
வாழ்ந்து தமிழ்வளம் சூழ்ந்து தழைத்திட
.. வாழ்த்துக்கள் கூறிடுவோம்! (எங்கள் சேய் எங்கள் சேய்)
(*இங்கிதம்= இனிமை; பாவை= பதுமை; பொம்மை; பாடலில் 'சந்தம்', 'வண்ணம்', 'சிந்து' ஆகிய மரபுப் பாவினங்களையும் 'புதுவகை'ப் பாவினங்களையும் சுட்டும் வகையில் சில சொற்கள் இடப்பட்டுள்ளன).
இணைப்பு; இசை ஒலிப்பதிவு
-----------------------------------
ஒன்பதாவது ஆண்டு நிறைவு வாழ்த்து
தண்டமிழ்த் தேனமுதைச் சந்தமிகு கிண்ணத்தில்
உண்டிவ் வுலகோர் வியக்குவண்ணம் - பண்ணியற்றும்
பாலகன் இன்றுதன் பத்தாம் வருடத்தில்
காலடி வைக்கின்றான் காண்!
..அனந்த் 7-11-2010
24-12-2006
பாரதி கலைக்கழக ஆண்டுவிழா கவியரங்கம்
-----------------------------------------------
<> ஊருக்கு நல்லது செய்வோம் <>
...அனந்த்
ஊருக்கு நல்லது செய்வோம் - என்னும்
..உபதேச வாக்கைஎன் உள்ளத்தில் கொண்டு
நேராக இந்தியா வந்தேன் - அங்கு
..நேர்ந்த கதையைக் கவிதையில் தந்தேன்
வானூர்தி ஏறிநான் சென்னை - மண்ணில்
..வந்த கணமே துதிக்கையான் தன்னை
நான்நோக்கிக் கும்பிடும் இட்டேன் -அவன்
..நகைக்கும் ஒலிகேட்டு நான்திடுக் கிட்டேன்:
ஏனப்பா என்றன் குழந்தாய்! - இங்கே
..என்னென்ன சாதிக்கும் எண்ணத்தில் வந்தாய்?
ஆனைமு கத்தவன் கேட்டான் - என்றன்
..ஆதங்கம் யாவும் அவன்முன்னே போட்டேன்
ஐயாநான் நேசிக்கும் நாட்டில் - காணும்
.. அக்கிர மம்பிறர் கூறநான் கேட்டு
மெய்யாக வேஉளம் நொந்தேன் - என்றன்
.. வேதனை தீர்க்க விரைந்திங்கு வந்தேன்
வள்ளுவர் பாரதி காந்தி - இங்கு
..வாழ்ந்த பெருமிதம் நெஞ்சினில் ஏந்தித்
துள்ளி வளர்ந்தவன் அன்றோ - நாட்டின்
..தொல்லை களையாமல் ஓய்வதும் நன்றோ
லஞ்சமெனும் பெரும் பேயைப் - போதை
..லாகிரி வத்துக்கள் மூட்டிடும் தீயைக்
கொஞ்சமும் அஞ்சாது ஒழிப்பேன் - இந்தக்
..கொள்கையோ(டு) எஞ்சிய நாளைக் கழிப்பேன்
சாதி ஒழிப்பதாய்க் கூறிச் - செய்யும்
..சாகசத்தில் மக்கள் வாழ்க்கையே நாறி
வீதிக்கு வீதியோர் சாதி - என்ற
..வெட்கத்தை வெட்டி நிறுத்துவேன் நீதி
என்று பலப்பல வாறு - என்றன்
..எண்ணத்தைக் குஞ்சரன் முன்னில்நான் கூற
நன்றப்பா நீகொண்ட நோக்கம் - பல
..நாளாய் எனக்கும்தான் உள்ளதோர் ஏக்கம்
ஒன்றன்பின் ஒன்றாய் முளைக்கும் - பல
..ஊழலைக் கண்டென்றன் மேனி இளைத்தேன்
அன்றைய நாட்களைப் போன்று - என்னை
..அரச மரத்தின் அடியினில் ஊன்று
என்றவன் பேச்சுக்கு நானோர் - விடை
..ஏதும்சொல் லும்முன் மறைந்தெங்கோ போனான்!
குன்றனை யானுக்கே ”தண்ணீர் - காட்டும்”
..கோலத்தைக் கண்டதும் கொட்டினேன் கண்ணீர்!
...அனந்த்
ஜனவரி 2001-ல் ’போரம் ஹப்’ (மன்ற மையம்) இணைய தளத்தில் எழுதிய ஒரு கவிதை கீழே, ’முன்னுரை’யோடு.
”இந்த வாரம் நிறைய (அலுவலக) வேலைகள் இருப்பதால் இணையம் பக்கமே போகக் கூடாதென்று நினைத்துக் கொண்டேன். ஆனால்.. முடியவில்லை! சன்னல் வழியே நோக்கிய போது அழகாகப் பறந்து சென்ற கனேடிய வாத்துகள் (Canada geese) என்னைக் கணினித் திரைக்குத் துரத்தின. அதன் விளைவு...
<> பாவம் பறவைகள்! <>
.... அனந்த்
வானில் திரியும் பறவைகாள் - உங்கள்
வாழ்க்கையை எண்ணி வருந்துகிறேன்!
தீனியை ஒன்றே தினந்தினமும் - நீர்
தேடி அலைந்துதிண் டாடுகின்றீர்!
மானிட ராகிய எங்களைப்போல் - இன்றி
வீணே கழிக்கிறீர் உம்பொழுதை
ஏனிந்தத் தீங்கினை ஈசனுமக் -கென்று(ம்)
இப்புவி தன்னில் இழைத்திட்டான்?
(இது ’கோபுர தரிசனம்’ சிற்றிதழிலின் தீபாவளி மலரில் பின்னர் வெளிவந்தது- தீபாவளி மலர்களில் வந்த என்னுடைய கவிதைகளில் இது முதல். எல்லாக்கண்ணிகளும் ஒரே எதுகை பயில்வதைக் காணலாம்.)
..அனந்த்
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
<> அணை <>
அணையென்றேன் அயர்வதற்கோர் அணைதந்தாள் அதன்மேலும்
அணையென்றேன் ஆங்கிருந்த அகலணைத்தாள் அடிபெண்ணே!
அணையென்றேன் அன்பிற்கே(து) அணையென்றாள் ஐயோ!நீ
அணையென்றேன் அவளணைத்தாள் அம்மம்மா! அதன்சுகமே!
(அயர்வு என்பதற்குச் சோர்வு என்ற பொருள் போக உன்மத்தம், மனக்கவர்ச்சி என்ற பொருள்களும் உண்டு! முதலில் தலையணை, பின் விளக்கணைத்தல், அதன்பின் அன்புமொழி, இறுதியில் அணைப்பு... குறும்புக்காரப் பெண்தான்!)
மன்னுபுகழ்ப் பாவல! பாட்டுமே தந்ததய்யா!வென்னீரால் இன்பம் விரைந்து!
வாழ்க அனைவரும் வளமுடனேஎன் குருஜி லஹரி பாபாஜி
ஆசியினால்.கவியோகி வேதம்(kaviyogi vedham)-
<> அடியும் முடியும் <>
அடியே!என்(று) இந்நாள் அழைத்தால் உடனே
இடிபோல் இறங்கும் அடி! 1
.....
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
முன்குறிப்பு: வெண்பா, ஆசிரியப்பா, சிந்து, விருத்தம், குறள் வெண்செந்துறை என்பன போலச் சில மரபுப் பாடல்களுக்கு உண்டான பெயர்களைப் பற்றிச் சற்றுக் கிண்டல் செய்யப் பார்ப்போம். நம்மைக் கடிக்கும் பாம்பை நல்லபாம்பு என்று முரணாகச் சொல்வது போல, சில பாவகைகளின் பெயரிலும் தடுமாற்றம் இருப்பதைக் கீழே தந்துள்ள என்னுடைய பாடல்களில் சொல்வதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என நம்புகிறேன்! (முரண்படும் சொற்கள் மேற்கோள் குறிக்குள் காட்டப் பட்டுள்ளன.)
1. வெண்பா
கன்னங் 'கரிய' இருள்என் இமைகளைப்
பின்னிப் பிணைத்த பிரமைதந்த - என்னுணர்வை
நண்பாநான் கூறுதற்கு நாடிய பாவினம்
'வெண்பா'வாம் வெள்ளைநிறப் பா.
2. ஆசிரியப் பா
கற்கை நன்றெனும் சொற்படி நானும்
நிற்க விழைந்து நித்தம் வகுப்பில்
புத்தகக் குவியல்என் மத்தகம் தாங்க
வித்தக ஆசான் விளக்கும் கணிதக்
கோட்பா(டு) அனைத்துமென் குறுகிய மூளையை
நாட்பட நாட்பட நமுத்துப் போகுமா(று)
ஆக்கிய தாலே போக்கிட மிலாஅது
தூக்கம் என்னும் தாயவள் துணையை
நாடிய நாட்களின் நீடிய நினைவுகள்
வாடிடும் மனத்தினில் ஓடிடும் ஊற்றெனக்
காணுங் காலைஎன் களிப்பினை உடனே
'மாணவர்' பலரொடு மகிழ்வுடன் பகிர்ந்திட
'ஆசிரி ய'ப்பா இனத்தில்
பேசிட வந்தனன் முரணென் றறிந்துமே!
3. கலிப்பா
பொருகளத்தின் நடுவினிலே போர்புரியத் தான்மறுத்த
அருச்சுனற்(கு) அன்றளித்த அறிவுரையாய் ஆனபெரும்
'கிருதயுக'க் கிருட்டினனின் கீதையைநாம் சுளுவாகத்
தருவதற்குத் தேருவதேன் தரவு'கலி'க் கொச்சகமே?
4. வஞ்சிப்பா
வீறுகொண்டெழு வைரநெஞ்சுடை
'ஏறுநடையன்' ஏகும்எழிலைக்
கூற'வஞ்சி'யைக் கோரலெங்ஙனம்?
5. விருத்தம்
வெள்ளத் தெழுவெண் நுரைபோல
..மிதந்து நெஞ்சில் களியூட்டிக்
கள்ளப் பார்வை பரிமாறிக்
..காதல் வளர்க்கும் 'இள'வயதின்
துள்ளும் துடிப்பைத் தேன்உணர்வைச்
.. செப்ப யார்தாம் தெரிந்திடுவார்
அள்ளு கிழமாம் 'விருத்த'மெனும்*
...அமைப்பைக் கொண்ட பாவினையே?
*விருத்தம் = கிழத்தன்மை
... அனந்த், 2007
<> அடியும் முடியும் <>
அடியே!என்(று) இந்நாள் அழைத்தால் உடனே
இடிபோல் இறங்கும் அடி! 1
காட்டுக் குரலாளைப் பாடென்றால் காதில்விழும்
ஓட்டை,நான் ஓர்எடுத்துக் காட்டு! 2
காரோட்டும் காரிகையின் கோபம் தணியு(ம்)மட்டும்
ஓரமாய்த் தள்ளிஉட் கார்! 3
மதிபோல் முகத்தாள் மனம்நோகச் செய்தால்
அதிர்ந்தோடும் உன்நிம் மதி 4
தொலைக்காட்சி காண்பா ளுடன்வாழ்(வு) தோதாய்ச்
செலநீயும் பார்த்துத் தொலை! 5
மைவிழியாள் முன்நீ மிகையாய் வருணிக்கும்
பொய்மலிந்த பேச்சும்உண் மை! 6
ஆடும்சீட் டாட்டில்உன்பொய் அம்பலம் ஆகுமுனம்
ஓடாநீ ஓர்பலி ஆடு! 7
கூட்டுக் குழம்பைக் குறைசொல்லா துன்வாயைப்
பூட்(டு)இலையேல் போய்வீட்டைக் கூட்டு! 8
படிப்பதுபோல் பெண்ணழகைப் பார்க்குமுனக் கில்லாள்
அடிகாட்டும் வாசற் படி!
முடியா(து) எனநீ மொழிந்தால் அவள்கைப்
http://groups.google.ca/group/santhavasantham/browse_thread/thread/7427565e2b9a8519#
நெல்லை மாவட்டத்தில் தென்காசி அருகே ஆய்க்குடி என்னும் கிராமத்தில், 1981-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அமர் சேவா சங்கம் என்னும் ஒரு சேவை நிறுவனம், உடல், மன வளர்ச்சி குன்றியவர்களுக்குப் புதுவாழ்வு கொடுக்க மிகச்சிறப்பாகப் பணிபுரிந்து வருகிறது. (சங்க கால வள்ளல்களில் ஒருவனான ஆய் என்பவனின் இருப்பிடமாக இருந்த இவ்வூர் இன்று ஆயக்குடி, ஆயிக்குடி என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது). அமர் சேவா சங்கத்தின் தாபகரான திரு. இராமகிருஷ்ணன் என்பவரும், அவருடன் சேர்ந்து இந்நிறுவனத்தைப் பெரிய அளவில் பணிபுரிய வைப்பதற்குக் காரணமான திரு. சங்கரராமன் என்பவரும், தங்கள் கழுத்துக்குக் கீழ் உடல் இயக்கம் இல்லாமல் சக்கர நாற்காலிகளிலேயே தங்கள் வாழ்க்கையை நடத்தி வரும் மனிதக் கடவுளர்கள். சிறப்புக் குழந்தைகள் என்று அன்புடன் அழைக்கப்படும் உடல், மனக்குறைவு உள்ள நூற்றுக்கணக்கான சிறுவர்களும் இளைஞர்களும் தங்கும் விடுதிகள், பள்ளிகள், செயற்கை உறுப்புத் தொழிற்சாலை, மருத்துவமனை, இந்திரா காந்தி திறந்தவெளிப் பல்கலைக் கழகச் (open university) சிறப்புக் கல்வி மையம், கைத்தொழில்கள் (புத்தகம் கட்டுதல், குறிப்புப்புத்தகங்கள் தயாரித்தல், தையல்), கணினிப் பயிற்சித் தலங்கள் ஆகிய பன்முகமான வசதிகளுடன் தற்போது பெருமளவில் நடைபெற்றுவரும் இந்த சேவை மன்றம், பல தொண்டர்கள், சேவையாளர்கள் துணையுடன், இங்கு வளர்ந்து பயிற்சி பெற்ற இளைஞர்களைத் தற்சார்புள்ளவர்களாக (self-dependent, empowered) ஆக்கவும் செயல்பட்டு வருகிறது. அத்தோடு, சென்னை, பங்களூர் போன்ற இடங்களில் இவ்விளைஞர்கள் குறிப்பிட்ட துறைகளில் மேலும் பயிற்சி பெற வசதி செய்து கொடுக்கிறது. டொராண்டோ நகரில், திரு. சங்கரராமனின் தமக்கையார் அ.சே.சங்கத்திற்கான பொருளுதவிக்காகவும், சேவையாளர்களை அனுப்புவதற்காகவும், Handicare International (https://www.amarseva.org/) என்ற ஒரு அமைப்பைத் தொடங்கி வைத்துத் தமது கணவரின் துணையுடன் அதை மிகச் சிறப்பான முறையில் நடத்தி வருகிறார். அவரது உதவியால், அண்மையில், ஆய்க்குடியிலும் சென்னையில் உள்ள பயிற்சி இல்லத்திலும் சில வாரங்கள் தங்கி அமர் சேவா சங்கத்தின் பணிகளைக் கண்கூடாகப் பார்த்துப் பயன்பெறும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. கீழ்க்காணும் பாடல் சிலநாட்களுக்கு முன் ஆய்க்குடியில் நடந்த சிறப்புக் கல்விக் கூடத் திறப்பு விழாவை ஒட்டி அமைக்கப் பட்டது. நாளை இங்கு (டொராண்டோவில்) நடைபெற இருக்கும் நிதி திரட்டும் விழா நடக்கவிருக்கிறது.
<> ஆயக்குடியில் அமர சேவை <>
ஆயக் குடியென்னும் ஊரினிலே - ஒரு
.. மாயம் நடப்பதைக் கண்டுவந்தேன்
நேயம் நிறைநெஞ்சம் கொண்டவர்கள் - அன்பு
.. தோய நிகழ்த்தும்ஓர் விந்தை கண்டேன்!
ஊனமெ னும்சொல்லே ஊனப்பட்டு - எங்கோ
.. ஓடி ஒளிந்திட்ட காட்சிகண்டேன்
வானவர் போல வனப்புடனே - நன்கு
.. வாழத் தெரிந்தோர் உலவக் கண்டேன்!
எல்லா அவயவம் பெற்றிருந்தும் - ஈன
.. எண்ணத்தோர் போலன்றி அங்கம்பல
இல்லா இளைஞரும் மற்றவரும் - மன
.. ஏற்றம் ஒளிர்ந்திட வாழக் கண்டேன்!
எத்தனை யோவகைக் கட்டிடங்கள் - அவை
.. எல்லாம் இறைவனின் ஆலயங்கள்
சித்தத்தில் அன்பு நிறைந்தவர்கள் - அங்கு
.. சேர்ந்து புரிகின்றார் அற்புதங்கள்!
காசு பணத்தின் சலசலப்பை - அங்குக்
.. காணவில் லைஆனால் தேவதைகள்
பேசிச் சிரிக்கும் கலகலப்பின் - ஒலி
.. பேரலை யாகப் பரவக் கண்டேன்
எண்ண எண்ணஎன்றன் நெஞ்சுக்குள்ளே - எழும்
.. இன்பத்தைக் கூறிட வார்த்தையில்லை!
மண்ணில் அனைவரும் ஆயக்குடி - சேவா
.. மன்றத்தோர் போல மனம் பெறட்டும்!
அனந்த் 29-5-2009

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
<> கணினித் தெய்வம் <>
அனந்த் (கனடா)
கையிலே மையின் கறைகள்
.. கழுவினும் மாய்ந்தி டாமல்
பையிலும் பையி லுள்ள
.. பணத்திலும் வண்ணம் தீட்ட
ஐயகோ! கொடுமை என்றே
.. அலறிநான் நின்ற போது
பையவே வந்த தெய்வம்
.. பரிவுள கணினித் தெய்வம்!
எழுதிய தாளை வைத்த
..இடத்தினை மறந்து தேடி
அழுகிய குப்பை யோடு
..அதனைநான் கண்டு விம்மி
அழுதஅந் நிலையை மாற்றி
.. அடைக்கலம் தந்த தெய்வம்
தொழுதுநான் தினமும் வாயால்
.. துதித்திடும் கணினித் தெய்வம்!
நெஞ்சிலே கருத்தாம் வித்து
.. நிலைத்தபின் கவிதை, கோழிக்
குஞ்சுபோல் தலையைக் காட்டும்
.. கோலமிவ் வுலகோர் காண
அஞ்சலில் அனுப்பி வைக்க
.. அருளுமோர் தெய்வம் அந்த
விஞ்சையர் தமக்கும் கிட்டா
.. விந்தைஎம் கணினித் தெய்வம்!
யாஹுவா இல்லை இன்று
.. யாவரும் வியந்து போற்றி
ஆ,ஹுஎன் றேத்தும் அந்த
.. அதிசயக் கூகி ளோநாம்
வேகமாய் வேண்டும் செய்தி
.. மின்னலாய்க் கொண்டு சேர்த்து
வாகைநாம் சூடு மாறு
.. வைத்திடும் கணினித் தெய்வம்!
அமெரிக்க நாட்டில் வாழும்
.. அழகிரி சாமி, முத்து
சுமத்திராத் தீவில் உள்ள
.. சுப்புணி போன்றோர் இன்று
தமக்குள திறனை இந்தத்
.. தாரணி அறியச் செய்யும்
அமைப்பினை அளிக்கும் தெய்வம்
.. அரும்பெரும் கணினித் தெய்வம்!
அனைத்துல கெங்கு முள்ள
..ஆயிரம் தெய்வம் எல்லாம்
நினைத்ததைக் கொடுக்கக் கால
.. நேரமும் பார்த்தி ருக்கும்
மனத்திலே எண்ணம் தோன்றி
.. மறையுமுன் ஈந்து மண்ணில்
எனைத்தினம் வாழ வைக்கும்
.. இறையெனும் கணினித் தெய்வம்!
இணையமாம் வானில் நம்மை
.. ஏற்றிடும் விந்தைத் தெய்வம்
அணையெதும் இன்றி வாரி
.. அளித்திடும் அன்புத் தெய்வம்
மணம்செய உதவும் தெய்வம்
.. வரமெலாம் ஈயும் தெய்வம்
இணையிலாக் கணினித் தெய்வம்
.. எம்முடைத் தெய்வம், தெய்வம்!
ஹப் மாகஸீனில் ‘மரபில் நகைச்சுவை’ என்னும் தொடரில் இட்ட பாடல்களுக்கு இலக்கணக் குறிப்பும் தரப்பட்டது. இப்பாடலுக்கான:
இலக்கணக் குறிப்பு: இவை ஆறுசீர்கள் கொண்ட ஆசிரிய விருத்தப் பாவினத்தைச் சேர்ந்தவை. "கருவிளம், மா, மா, விளம், மா, மா" என்ற வாய்பாடு (சீர்களின் அமைப்பு) கொண்டவை. நான்கு அடிகளிலும் முதல்சீர் மட்டும் ஒரே மாதிரியாக (இங்கு, கருவிளம் ஆக) இருக்கவேண்டும். மற்றச் சீர்களில் இறுதி அசை மட்டும் ஒத்திருந்தால் போதும். இவ்வகைப் பாடல்களை முன்பு இங்கே பார்த்திருக்கிறோம்.
இலக்கணமல்லாத குறிப்பு: இறைவனை வழிபட உதவும் கருவியையே தெய்வமாக வழிபடும் விதத்தில் அமைந்த இப்பாடல்களில் சர்வ வல்லமை வாய்ந்த இணையமே இறைவன்/இறைவள். அவனை/அவளை அடையத் துணைபுரியும் கருவி கணினி என்பது கருத்து.
<><><><><><><>
”திண்ணை” மின்னிதழ், ஜனவரி 19, 2002 (”Y2K” bubble burst காலத்தில் எழுதியது)அனந்த்
<> அக்கரைப் பச்சை <>
இந்திய இளைஞன்:
எல்லாமே இந்நாட்டில் மோசம்- எனக்(கு)
... என்றுதான் கிட்டுமோ அமெரிக்க வாசம்? (எல்லாமே..)
பள்ளிசெல் லும்அந்த நாளாய் - இந்தப்
... பாழும் நினைப்பெனைக் கொட்டுது தேளாய்
மெள்ள வளர்ந்திட்டேன் ஆளாய்- இந்த
... வேதனை யின்னும்தா ளேனிது கேளாய்:
--
திருவிருக்குறள் பாவினம் பற்றிய பிறிதொரு இழையில் வஞ்சித்துறை அந்தாதி பற்றிப் பசுபதி குறித்திருந்தார். அவ்வகையில் முன்பு இட்ட (பிரதோஷப்) பாடல் ஒன்று:
திருச்சிற்றம்பலம்
<> எல்லாம் ஆனவன் <>
விண்ணூரும் விடையான்என்
எண்ணூரும் இறையோன்முக்
கண்ணாரும் கடவுள்நற்
பண்ணாரும் பதியானே 1
பதியாவான் பத்தர்க்குக்
கதியாவான் கருணைபாய்
நதியாவான் நல்லோர்வாய்த்
துதியாவான் தூயவனே 2
தூயவனாம் தொழுவோர்க்குத்
தாயவனாம் சாருமுளம்
மேயவனாம் மறையறியா
மாயவனாம் வரையோனே 3
வரைதனை அசைத்தோனைத்
தரைமிசை அடர்த்தோனோர்
நரைவிடை நயந்தோன்பூ
விரைகமழ் கழலோனே 4
கழலடி துணையென்று
விழுபவர் துயர்தீர்ப்போன்
அழலொரு விழிகொண்ட
பழையதொர் பரமாமே. 5
பரந்ததொர் சடையான்நல்
உரந்திகழ் விடையான்மான்
கரந்தனில் உடையான்இல்
இரந்துணும் இறையாமே 6
இறைஞ்சிடும் அடியார்க்குக்
குறைந்திடா தருள்வோன்உள்
மறைந்தென துணர்வாக
நிறைந்துள குருநாதன். 7
நாதமே உருவானோன்
வேதமுட் கருவானோன்
காதலோ டவன்நாமம்
ஓதுவோர் வினைதீர்ப்பான் 8
தீர்த்தமும் மதிபாதி
சேர்த்தமா முடியோன்ஓர்
வார்த்தையும் உரையாத
மூர்த்தியாம் குருவாவான் 9
ஆவினைந் துகந்தேற்பான்
காவென அடியார்கள்
கூவிடின் வருவானென்
பாவினுள் உறைவோனே. 10
(பாடல் 1. எண் = எண்ணம், மனம்; ஆர்தல்= அடைதல், பெறுதல், அனுபவித்தல், அணிதல். பாடல் 4. விரை = மணம், மலர், கலவைச் சாந்து)
யாப்பு: வஞ்சித்துறை அந்தாதி.
... அனந்த் 6-5-2013
--
”இரண்டு வகையான பாவகைகளை ஒரு கவிதையில் மாறிமாறிப் பயன்படுத்தும் உத்தியிது.இந்தப்பாடலில் எழுசீர்க் கண்ணி பல்லவிபோல் பயன்பட்டிருக்கிறது. அறுசீர்க் கண்ணி பலநிலைகளைப் படம்பிடிக்கிறது. ஒரே பல்லவி மாதிரி அமைப்பதைவிட ஒருவகைப்பாடல் ஒருநிலையைக் கூற இன்னொருவகை வேறொரு நிலையைக் கூற இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்பு பெற்றுச் செல்வது வேறொருவகை. அந்த வகையை பொருநை வெள்ளம் தொகுதியில் காலச் சக்கரம் கவிதையில் காணலாம். முதல் பாவகை காலை தொடங்கி மாலைவரை இயற்கைவர்ணனையைச் சொல்லும் இன்னொருபாவகை மனித வாழ்வில் குழந்தைப்பருவம் வரை இறப்புவரை சொல்லும். இரண்டும் ஒன்றுக்கொன்று பொருந்திவரும்”


--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
கலியுகத்துக் கற்பகத்தைக் கண்முன்னர் நானென்எலிநகர்த்திக் காண்கின்றேன் இங்கே - புலியெனவாய்ப்பைக்குள் பதுங்கிப்பின் பாய்கின்ற லேப்டாப்பென்கைக்குக் கிடைத்த கனி
வேறெதையோ தேடிக்கொண்டிருந்தபோது, நம் கவியோகியாரின் பழைய மடல் ஒன்று கண்ணில் தென்பட்டது. அதில், கணிணி-கவிதை தொடர்பு பற்றிய குறிப்பைக் கண்டேன்:
https://groups.google.com/forum/#!topic/santhavasantham/-tZ8I0oq-Ms
இதில் குறிப்பிடும் என் பேச்சின் ஒலிப்பதிவைக் கண்டுபிடிக்க இயலவில்லை.
அனந்த்
2011-ல், திருவனந்தபுரத்தில் ஸ்ரீ அனந்தபத்மநாப சுவாமி கோவிலில் மறைந்திருந்த தங்கக் குவியலைக் கண்டுபிடித்ததன் விளைவுகளை நினைத்து எழுதிய கவிதை கீழே:
கத்தும் கடலின் ஒலிதுயிலைக்
.. கலைத்தல் கண்டு காலமெல்லாம்
… கவலையின்றிக் கழிப்பதற்குக்
…. கார்வண் ணத்தான் வைகுந்தம்
ஒத்து வாரா தெனவுணர்ந்த
.. உடனே உலகின் ஓர்முனையில்
… ஒதுங்கி யிருக்கும் அனந்தபுரம்
…. உகந்த தென்றே தேர்ந்தெடுத்து
மொத்த மாகப் படுக்கையுடன்
.. முடுகி வந்து பக்தர்பலர்
… முன்னே சொகுசாய்த் தூங்குகையில்
…. மூடி மறைத்து வைத்திருந்த
சொத்தைக் காட்ட வேண்டுமென்று
.. தோன்றி அவற்றைத் திறந்துவிட,
… தூக்க மெல்லாம் தொலைந்ததம்மா!
…. தொல்லை அவனைச் சூழ்ந்ததம்மா!
அனந்த் 19-7-2011
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.