மதிசூடி துதிபாடி - 18

53 views
Skip to first unread message

Siva Siva

unread,
Apr 25, 2026, 11:15:13 AMApr 25
to santhavasantham

As the - "மதிசூடி துதிபாடி - 17" - thread has more than 900 posts, (https://groups.google.com/g/santhavasantham/c/8op3k3Boy8g?hl=en  )
I am starting this new thread - மதிசூடி துதிபாடி - 18

After completing any ongoing set in the #17 thread, new songs can be posted in this thread.

V. Subramanian

Siva Siva

unread,
Apr 26, 2026, 5:52:36 PMApr 26
to santhavasantham

2020-05-11

வழுவூர்

-----------------

(எழுசீர்ச் சந்த விருத்தம் - தனதான தான தனதான தான தனதான தான தனனா)

(சம்பந்தர் தேவாரம் - 2.88.1 - "துளிமண்டி யுண்டு")

* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;


1)

வானோர்க்கி ரங்கி மலைவில்லை ஏந்தி மதில்மூன்றெ ரித்த ஒருவன்

தேனார்க்கும் வாச மலரோடு பாம்பு திரையாரும் ஆறு புனைவான்

தானோக்கும் அன்பர் வினைதீரு மாறு தயைசெய்யு(ம்) நல்ல தலைவன்

மானோக்கி அஞ்ச மதமாவு ரித்து வழுவூரில் நின்ற பரனே.


(தேன் - வண்டு); (ஆர்த்தல் - ஒலித்தல்); (ஆர்தல் - நிறைதல்; பொருந்துதல்);


2)

மதனாகம் வேவ நுதலால்வி ழித்த மணிகண்டன் ஆறு முகமார்

சுதனாரை நல்கி இமையோர்கள் உற்ற துயர்தீர்த்த நல்ல துணைவன்

கதநாகம் ஆறு தரிசென்னி மீது கடிநாறு கொன்றை புனைவான்

மதவார ணத்தை உரிசெய்து போர்த்து வழுவூரில் நின்ற பரனே.


(சுதன் - மகன்);

(கதம் - கோபம்); (கடி - வாசனை);

(வாரணம் - யானை);


V. Subramanian


On Sat, Apr 25, 2026 at 11:14 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

Saranya Gurumurthy

unread,
Apr 27, 2026, 7:45:01 PMApr 27
to சந்தவசந்தம்
தொண்டை நாட்டுத் தலங்கள்

237. (1). திருக்கச்சி ஏகம்பம்

சோகம் படராது தொண்டரைக் காத்தருள்வான்
ஏகம்பம் மேவும் இறை


238. (2). திருக்கச்சி மேற்றளி (பிள்ளைப்பாளையம்)

சேற்றினில் வீழ்ந்து சிதையாதே திருக்கச்சி
மேற்றளி மேயானை மெச்சு

சேறு - சம்சாரம் 


239. (3). திருவோணகாந்தன் தளி

வீணனாய் வாழ்ந்து வெதும்பாதே திருக்கச்சி
ஓணகாந் தன்தளியை ஓர்

ஓர்தல் - தொழுதல் / நினைத்தல்


240. (4). திருக்கச்சி அனேகதங்காவதம்

கனாவொத்த வாழ்வைக் கருதாதே கச்சி
அனேகதங் காவதத்தை அண்டு

அண்டுதல் - அடைதைல்


241. (5). திருக்கச்சிநெறிக்காரைக்காடு

குறிக்கோளில் லாமல் குலாவுதல் கேடு;
நெறிக்காரைக் காடனை நேடு


Regards,
Saranya

Siva Siva

unread,
Apr 27, 2026, 9:57:53 PMApr 27
to santhav...@googlegroups.com
/ குறிக்கோளில் லாமல் குலாவுதல் கேடு;
  நெறிக்காரைக் காடனை நேடு /

Did you not try to use கச்சி in the verse?

V. Subramanian

Saranya Gurumurthy

unread,
Apr 28, 2026, 2:52:10 AMApr 28
to santhav...@googlegroups.com
Actually I didn't try sir. Thank you for the suggestion. 

குறிக்கோளில் லாமல் குலவாதே; கச்சி
நெறிக்காரைக் காடனை நேடு

Have changed like this.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCMvLQrf1F_fS2oLCxkMFqTZRpoLezYbPzFWyrnmiO4Bxw%40mail.gmail.com.


--
Regards,
Saranya

Siva Siva

unread,
Apr 29, 2026, 9:06:51 AMApr 29
to santhavasantham

3)

நலியாத வண்ணம் அடியார்க்கு நாளு(ம்) நல(ம்)நல்கு கின்ற பெருமான்

பொலியார மாக அரவம்பு னைந்த புரிநூலன் இண்டை மதியம்

ஒலியார்த ரங்கம் உடையாறு சூடி ஒளிநீறு பூசும் ஒருவன்

வலியார்க ளிற்றை உரிசெய்து போர்த்து வழுவூரில் நின்ற பரனே.


(ஆரம் - மாலை);

(இண்டை - முடிமாலை); (தரங்கம் - அலை);


4)

பாதங்கள் ஏத்தி வழிபாடு செய்து பலதேவர் வேண்ட அவர்தம்

ஏதங்கள் தீர வடிவேலை ஏந்தும் இளையோனை நல்கும் இறைவன்

வாதங்கள் செய்த அமண்மாய வைகை நதியேடு நீந்த வருவான்

மாதங்கம் ஒன்றை உரிசெய்து போர்த்து வழுவூரில் நின்ற பரனே.


(ஏதம் - துன்பம்);

(மாதங்கம் - யானை);


5)

கல்லானை முன்பு பலர்முன்க ரும்பு களியோடு தின்ன வருவான்

கொல்லானை முன்னர் உழவார அன்பர் தமைநீங்கி ஓட அருள்வான்

நல்லானை ஏத்து விசயற்கு நாடு படையீந்த நாதன் உமைகோன்

வல்லானை தன்னை உரிசெய்து போர்த்து வழுவூரில் நின்ற பரனே.


(படை - ஆயுதம்);


6)

இனவீயெ டுத்து மணமாலை கட்டி இருதாளில் இட்டு மகிழ்வார்

இன(ம்)மாநி லத்தில் இடரார்பி றப்பில் இளையாத வண்ணம் அருள்வான்

முனமோர்பொ ருப்பை வளைவித்து மூன்று புரம்வேவ நக்க முதல்வன்

வனவார ணத்தை உரிசெய்து போர்த்து வழுவூரில் நின்ற பரனே.


(வீ - பூ);

(இனம் - இன்னம் - இன்னும் - மறுபடியும்; மேலும்);

(பொருப்பு - மலை);


V. Subramanian


On Sun, Apr 26, 2026 at 5:52 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

2)

Saranya Gurumurthy

unread,
May 1, 2026, 6:26:05 AMMay 1
to சந்தவசந்தம்
242. (6). திருக்குரங்கணில்முட்டம்

குரங்கணில் முட்டத்துக் கோன்தாள் பணிவார்க்(கு)
அரங்குதல் இல்லை அறி

அரங்குதல் - அழிதல்


243. (7). திருமாகறல் 

மோகம் அறுந்து முதல்வனுடன் கூடிட
மாகறல் மன்னை மதி


244. (8). திருவோத்தூர்

ஓத்தூர் உறையும் ஒளிசேர் சடையானை
ஏத்தாதார்க்(கு) என்றும் இழிவு


245. (9). திருவன்பார்த்தான் பனங்காட்டூர்

மனங்கூர்ந்(து) எழுவார்க்கு மாண்பருள்வன் பார்த்தான்
பனங்காட்டூர் மேயானைப் பாடு


246. (10). திருவல்லம்

வல்லத் தரையன் மலர்தாள் பணிபவர்
செல்லல் படாரெனச் செப்பு

செல்லல் - துன்பம் 


Regards,
Saranya

Siva Siva

unread,
May 1, 2026, 9:16:03 AMMay 1
to santhavasantham

7)

நெய்யார்ந்த தீப(ம்) மணமார்ந்த தூப(ம்) நிறையன்பு கொண்டு மலரும்

கையேந்தி வாழ்த்தும் ஒருமாணி கண்டு கருமேதி யானை முனிவான்

பையார்ந்த பாம்பை அணிமார்பன் எந்தை பனிவெற்பு மங்கை வெருவ

மையார்ந்த மேனி மதமாவு ரித்து வழுவூரில் நின்ற பரனே.


(மேதி - எருமை); (முனிதல் - கோபித்தல்);

(பை - பாம்பின் படம்);

(மை - கருநிறம்); (மதமா - யானை);


8)

கரையற்ற கோபம் எழவானில் ஓங்கு கயிலாயம் வீச வருகோன்

நிரையுற்ற பத்து முடிவாய ரற்ற விரலொன்றை ஊன்று நிமலன்

உரையற்ற மோன நிலையுற்று நால்வர் உடனான ஆல நிழலன்

வரையொத்த மேனி மதமாவு ரித்து வழுவூரில் நின்ற பரனே.


(நிரை - வரிசை);

(வரை - மலை);


V. Subramanian


On Wed, Apr 29, 2026 at 9:06 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

6)

Saranya Gurumurthy

unread,
May 2, 2026, 7:19:43 PMMay 2
to சந்தவசந்தம்
247. (11). திருமாற்பேறு

மாற்பே(று) உறைவானை வாழ்த்தி வணங்குவதே 
மேற்பேறாய் மெச்சப் படும்

மேற்பேறு - மேல் பேறு - மேலான - சிறந்த 


248. (12). திருஊறல் (தக்கோலம்)

ஊறல் உறைவான்தன் ஒண்கழல் ஏத்திட
ஊறில்லை யாமென்(று) உணர்


249. (13). திருஇலும்பையங்கோட்டூர்

இலும்பையங் கோட்டூர் இறைவனைப் போற்ற
அலம்பில்லை யாமே அறி

அலம்பு - வறுமை


250. (14). திருவிற்கோலம் (கூவம்)

விற்கோலம் மேயானை மெய்யன்பால் பாடியவன்
நற்கோலம் காண்பது நன்று

பாடியவன் - பாடி அவன்

251. (15). திருவாலங்காடு (பழையனூர்)

திருவாலங் காடுறையும் தேவன் அருளே
கருவூலம் ஆகும் நமக்கு


Regards,
Saranya

Siva Siva

unread,
May 2, 2026, 8:59:31 PMMay 2
to santhav...@googlegroups.com
See typo correction below.

On Sat, May 2, 2026 at 7:19 PM Saranya Gurumurthy <saranya.g...@gmail.com> wrote:

249. (13). திருஇலும்பையங்கோட்டூர்

இலும்பையங் கோட்டூர் இறைவனைப் போற்ற
அலம்பில்லை யாமே அறி

அலம்பு - வறுமை

==>  இலம்பையங் கோட்டூர்   



sankara dass nagoji

unread,
May 3, 2026, 3:13:15 AMMay 3
to சந்தவசந்தம்
சிவசிவா அவர்கள் 12 ஆண்டுகளாக, இணையத்தில், திருமுறை வகுப்புகள் நடத்தி வருகிறார். இன்றோடு ஒரு மாமாங்கம் நிறைவுறுகிறது. அருமையான விஷயம். என்ன ஒரு ஆர்வம், என்ன ஒரு கடப்பாடு! பாடல்களை ஆங்கில, ஹிந்தி இவற்றில் transliterate செய்து, பலருக்கும் பயன்படும்படி உதவி  செய்கிறார். 

முதல் வகுப்பு - 3-May-2014.
இதுவரை சொல்லிக் கொடுத்த மொத்தப் பதிகங்கள்  = 143
திருப்புகழ் திருவகுப்பு = 43
சம்பந்தர் = 53
அப்பர்  = 46
சுந்தரர்  = 21
திருவாசகம் = 13
9ஆம் திருமுறை = 4
11ஆம் திருமுறை = 6

வாழ்க அவர் சிவத்தொண்டு.

சங்கர தாஸ்.

Nagoji

unread,
May 3, 2026, 3:26:04 AMMay 3
to santhav...@googlegroups.com
See the class details here:




--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/JRTJ1E9mqVI/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/1e2a2874-49a4-48a6-b0a2-eba43c056ed1n%40googlegroups.com.

Siva Siva

unread,
May 3, 2026, 10:37:18 AMMay 3
to santhav...@googlegroups.com
Thanks.

V. Subramanian

Saranya Gurumurthy

unread,
May 3, 2026, 8:58:35 PMMay 3
to சந்தவசந்தம்
Thank you sir. Actually mixed with the other name எலுமியன்கோட்டூர் for இலம்பையங்கோட்டூர்.

Regards,
Saranya

Siva Siva

unread,
May 3, 2026, 10:58:36 PMMay 3
to santhavasantham

Final 3 songs of this padhigam:

9)

அலைமேற்கி டந்த திருமாலு(ம்) நாறும் அலர்மேலி னானும் அறியா

உலவாத சோதி உருவோடு யர்ந்த ஒருவன்சி வந்த சடையன்

இலைமூன்று காட்டும் அயில்வேலு(ம்) மானும் எரியுந்த ரித்த இறைவன்

மலைபோலெ திர்ந்த மதமாவு ரித்து வழுவூரில் நின்ற பரனே.


(அயில் - கூர்மை);


10)

பொய்க்கென்று(ம்) நாணம் இலராகி நீறு புனையார்க்கு நன்மை புரியான்

கைக்கின்ற நஞ்சை அமுதாக உண்டு கறையார்ந்த கண்டம் உடையான்

கைக்கொண்ட போது கழலிட்ட அன்பர் கலிதீர நல்கு வரதன்

மைக்கண்ணி அஞ்ச மதமாவு ரித்து வழுவூரில் நின்ற பரனே.


(கைத்தல் - கசத்தல்);

(போது - பூ); (கலி - துன்பம்; தரித்திரம்);


11)

படமஞ்சு கொண்ட அரைநாண ணிந்து பலியட்டு மென்று திரிவான்

கடனஞ்சை உண்டு மணிபோலி லங்கு கறையேற்ற கண்டம் உடையான்

நடனங்கள் ஆட இடுகானை நல்ல இடமென்று நாடும் இறைவன்

மடமங்கை அஞ்ச மதமாவு ரித்து வழுவூரில் நின்ற பரனே.


(பலி - பிச்சை); (அட்டுதல் - இடுதல்);


V. Subramanian


On Fri, May 1, 2026 at 9:15 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

8)

Saranya Gurumurthy

unread,
May 11, 2026, 8:59:02 PMMay 11
to சந்தவசந்தம்
252. (16). திருப்பாசூர்

பாசூர் உறையும் பரமனைப் பாடுவார்
கூசாரே கூற்றுவனைக் கண்டு

கூசுதல் - அஞ்சுதல்


253. (17). திருவெண்பாக்கம் (பூண்டி)

பண்பாடிப் பாதம் பணிவார்க்கு வீடருள்வான் 
வெண்பாக்கம் மேவிய வித்து


254. (18). திருக்கள்ளில்

கள்ளில் நகர்வாழ் கறைகண்டன் பக்தர்கள்
கள்ளத்தில் கட்டுப் படார்


255. (19). திருக்காளத்தி 

கண்ணப்பர்க்(கு) இன்னருள்செய் காளத்திப் பெம்மானை
வண்ணப்பா மாலையால் வாழ்த்து


256. (20). திருவொற்றியூர்

ஒற்றியூர் உத்தமனை ஓதும் அடியார்க்கு
வெற்றி அருள்வான் விழைந்து


Regards,
Saranya

Siva Siva

unread,
May 11, 2026, 10:01:35 PMMay 11
to santhav...@googlegroups.com
/  கறைகண்டன்    /

கறைக்கண்டன் 

V. Subramanian

Siva Siva

unread,
May 11, 2026, 10:35:28 PMMay 11
to santhav...@googlegroups.com

2020-06-16

நாரையூர்

-----------------

(வஞ்சித்துறை - தான தானனா - சந்தம்

(திருவிருக்குக்குறள் அமைப்பு)

(சம்பந்தர் தேவாரம் - 1.92.1 - "வாசி தீரவே")


1)

வேதம் ஓதிய .. நாதன் நாரையூர்ப்

போதன் தாள்தொழ .. ஏதம் இல்லையே.


2)

உம்பர் ஏத்திடும் .. நம்பன் நாரையூர்

இன்பன் அன்பர்தம் .. துன்ப(ம்) நீங்குமே.


3)

கானில் ஆடிடும் .. ஞானன் நாரையூர்

மானன் னாம(ம்)நம் .. ஊன(ம்) நீக்குமே.


கானில் ஆடிடும் ஞானன் -

நாரையூர் மான் நன்னாமம் நம் ஊனம் நீக்குமே -


V. Subramanian


Siva Siva

unread,
May 13, 2026, 9:10:41 AMMay 13
to santhav...@googlegroups.com

4)

நீறு பூசிபூ .. நாறு நாரையூர்

ஆறு சூடிபேர் .. கூறும் இன்பமே.


5)

எல்லை அற்றவன் .. நல்லன் நாரையூர்ச்

செல்வன் நாமமே .. சொல்ல இன்பமே.


6)

செக்கர் மேனியன் .. நக்கன் நாரையூர்

முக்கண் மூர்த்திபேர் .. துக்க(ம்) நீக்குமே.


7)

மதியன் வேணியில் .. நதியன் நாரையூர்ப்

பதிநன் னாமமே .. துதிமின் நன்மையே.


V. Subramanian


On Mon, May 11, 2026 at 10:35 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

3)

Siva Siva

unread,
May 14, 2026, 9:55:13 AMMay 14
to santhav...@googlegroups.com

Final 4 songs of this padhigam:

8)

வரையி டந்தவன் .. சிரமொர் பத்தடர்

அரவன் நாரையூர் .. பரவி உய்ம்மினே.


(வரை - மலை); (இடத்தல் - பெயர்த்தல்); (அடர்த்தல் - நசுக்குதல்);


9)

வேதன் மால்தொழு .. பாதன் ஏறமர்

நாதன் நாரையூர் .. ஓதி உய்ம்மினே


10)

பொய்யர் சொல்விடும் .. செய்யன் நாரையூர்

ஐயன் நாமமே .. உய்வு நல்குமே.


11)

மணிமி டற்றினன் .. அணிகொள் நாரையூர்

பணியும் அன்பர்தம் .. பிணிகள் நீங்குமே


V. Subramanian


On Wed, May 13, 2026 at 9:10 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

7)

Nagoji

unread,
May 14, 2026, 12:06:44 PMMay 14
to santhav...@googlegroups.com
aahaa! miga arumai!
-sdn

--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/JRTJ1E9mqVI/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
May 14, 2026, 3:42:47 PMMay 14
to santhav...@googlegroups.com
Thanks.

On Thu, May 14, 2026 at 12:06 PM Nagoji <nag...@gmail.com> wrote:
aahaa! miga arumai!
-sdn

On Thu, May 14, 2026 at 7:25 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

Final 4 songs of this padhigam:

...

Saranya Gurumurthy

unread,
May 15, 2026, 2:48:24 AMMay 15
to சந்தவசந்தம்
257. (21). திருவலிதாயம் (பாடி)

கலிதாபம் தீர்த்துக் கரையேற்றி ஆள்வான்
வலிதாயம் மேவும் மருந்து


258. (22). வடதிருமுல்லைவாயில்

வடதிருமுல் லைவாயில் வாகன் அருளால்
படர்தரும் தீவினை பாழ்

படர் - வருத்தம்


259. (23). திருவேற்காடு

வேற்கா டுறையும் விசிட்டனே நம்துணையென்(று)
ஏற்காதார்க்(கு) என்றும் இடர்

260. (24). திருமயிலை (மயிலாப்பூர்)

மயிலை நகருறை மாதேவன் பேரைப்
பயிலத் தொலையும் பவம்

பயிலுதல் - சொல்லுதல்


261. (25). திருவான்மியூர்

பான்மையைத் தீர்த்துப் பவத்தை அழித்தருள்வான்
வான்மியூர் மேவும் மருந்து

பான்மை - பழவினை
பவம் - பிறவிப்பிணி


Regards,
Saranya

Siva Siva

unread,
May 15, 2026, 9:05:07 AMMay 15
to santhav...@googlegroups.com
/ வடதிருமுல் லைவாயில்  /

You can also explore using the name without திரு as வடமுல்லைவாயில்.

/  ஏற்காதார்க்(கு)   /

I think it may come as ஏலாதார்க்கு /  ஏலார்க்கு.

V. Subramanian

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CALz5qbxuSbaoM2Gwt2ZFQAc9x4PDRB5Nihiu8jy9eXFt%2BZDk0A%40mail.gmail.com.

Siva Siva

unread,
May 15, 2026, 9:51:15 AMMay 15
to santhav...@googlegroups.com

2020-06-17

வழுவூர்

-----------------

(சந்த வஞ்சிவிருத்தம் - தனனா தனனா தனதானா - சந்தம். முதற்சீர் தானா என்றும் வரலாம்)

(சம்பந்தர் தேவாரம் - 1.37.1 - "அரவச் சடைமேல் மதிமத்தம்")


1)

இலைமூன் றுடைவேல் தனையேந்தி

மலைபோல் மதமா உரிமூடி

அலையார் சடையான் இடமென்பர்

மலரார் பொழில்சூழ் வழுவூரே.


(மதமா - மதமுடைய யானை); (உரி - தோல்);


2)

மதவேள் உடலைப் பொடிசெய்தான்

மதியோ டரவைச் சடைவைத்தான்

முதலாய்க் கடையாம் பெருமானூர்

மதுவீப் பொழில்சூழ் வழுவூரே.


(வீ - பூ);


V. Subramanian


Siva Siva

unread,
May 16, 2026, 9:01:02 AMMay 16
to santhav...@googlegroups.com

3)

அணையார் புரமூன் றெரிசெய்தாய்

துணைநீ எனவே தொழுவார்க்குப்

புணையாய் வருவான் இடமென்பர்

மணமார் பொழில்சூழ் வழுவூரே.


(அணையார் - பகைவர்);

(புணை - தெப்பம்);


4)

குளமாய் இருகண் கசியன்பர்

உளமே தளியா மகிழண்ணல்

இளமா விடையான் இடமென்பர்

வளமார் வயல்சூழ் வழுவூரே.


V. Subramanian


On Fri, May 15, 2026 at 9:50 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

2)

Saranya Gurumurthy

unread,
May 17, 2026, 1:15:55 AMMay 17
to சந்தவசந்தம்
Have modified as below 



258. (22). வடதிருமுல்லைவாயில்

வடமுல்லை வாயிலுறை வாகன் அருளால்
படர்தரும் தீவினை பாழ்

படர் - வருத்தம்

259. (23). திருவேற்காடு

உயர்திருவேற் காடுறையும் உத்தமனே நம்துணையென்(று)
இயம்பிடுவார்க்(கு) இல்லை இடர்


Regards,
Saranya

Saranya Gurumurthy

unread,
May 17, 2026, 1:19:28 AMMay 17
to சந்தவசந்தம்
262. (26). திருக்கச்சூர் (ஆலக்கோயில்)

கச்சூர் உறையும் கருணையனை மெச்சுவார் 
நச்சாரே நாசர்தம் நட்பு

நச்சுதல் - விரும்புதல்
நாசர் - அழியும் தன்மை உடையவர் 


263. (27). திருவிடைச்சுரம்

இடைச்சுரத்(து) எந்தைதன் இன்னருளே என்றும்
கடைக்காப்பாய் வந்திடும் காண்

கடைக்காப்பு - இறுதிக்காலத்தில் பாதுகாப்பு 


264. (28). திருக்கழுக்குன்றம் 

கழுக்குன்றப் பெம்மான் கழலைப் பணிவார்
வழுக்காரே வாய்மையிலி ருந்து


265. (29). திருவச்சிறுப்பாக்கம்

அச்சிறுப் பாக்கத்(து) அதிபன் அடியிணையை
உச்சியில் வைத்தல் உயர்வு


266. (30). திருவக்கரை

வக்கரை மேயானை வாழ்த்தார் பவக்கடலின்
அக்கரை காண்ப(து) அரிது

Regards,
Saranya

Siva Siva

unread,
May 17, 2026, 10:55:13 AMMay 17
to santhav...@googlegroups.com
/  கடைக்காப்பு - இறுதிக்காலத்தில் பாதுகாப்பு    /

As that word already has a different commonly understood meaning, maybe worth considering a tweak.

கடைக்காப்பு kaṭai-k-kāppu , n. < id. Last verse which is an invocation song the poem known as patikamபதிகத்தின் இறுதி முத்திரைப்பாட்டு.


/  வழுக்காரே வாய்மையிலி ருந்து /

Did you intend to say "வழுவாரே" ?

/  திருவச்சிறுப்பாக்கம்   /

No ப் in that name.

V. Subramanian

On Sun, May 17, 2026 at 1:19 AM Saranya Gurumurthy <saranya.g...@gmail.com> wrote:
...

Siva Siva

unread,
May 17, 2026, 9:43:18 PMMay 17
to santhav...@googlegroups.com

5)

அருமா விடமுண் டமுதீந்த

பெருமான் சடைமேற் பிறைசூடி

அருவாய் உருவாம் அரனூராம்

வருவார் மகிழும் வழுவூரே.


6)

பண்டங் கழலைத் தொழுதேத்தும்

வெண்டிங் களைவே ணியில்வைத்தான்

கண்டங் கரியான் இடமென்பர்

வண்டின் னிசைசெய் வழுவூரே.


(பண்டு - முன்பு); (அம் - அழகு); (வேணி - சடை);


7)

பறிமா மலரால் பணிவார்தம்

செறிதீ வினைதீர்த் தருள்தேவன்

பொறியார் அரவம் திகழ்மார்பன்

மறியார் கரனூர் வழுவூரே.


(பொறி - புள்ளி);


8)

செழுமா மலைபேர்த் தவன்வாடி

அழுமா றுநெரித் திசைகேட்டான்

தொழுவார்க் கருளும் தொழிலேந்தல்

மழுவாட் பரனூர் வழுவூரே.


V. Subramanian


On Sat, May 16, 2026 at 9:00 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

4)

Saranya Gurumurthy

unread,
May 18, 2026, 9:28:01 PMMay 18
to சந்தவசந்தம்
Ok sir.

Modified as below 



On Sun, May 17, 2026, 20:25 Siva Siva <naya...@gmail.com> wrote:
/  கடைக்காப்பு - இறுதிக்காலத்தில் பாதுகாப்பு    /

As that word already has a different commonly understood meaning, maybe worth considering a tweak.

கடைக்காப்பு kaṭai-k-kāppu , n. < id. Last verse which is an invocation song the poem known as patikamபதிகத்தின் இறுதி முத்திரைப்பாட்டு.

இடைச்சுரத்(து) எந்தைதன் இன்னருளே நம்மைக்
கடைத்தேற்றிக் காத்திடும் காண்



/  வழுக்காரே வாய்மையிலி ருந்து /

Did you intend to say "வழுவாரே" ?
Yes sir.


/  திருவச்சிறுப்பாக்கம்   /

No ப் in that name.

Ok sir.


V. Subramanian

On Sun, May 17, 2026 at 1:19 AM Saranya Gurumurthy <saranya.g...@gmail.com> wrote:
...
263. (27). திருவிடைச்சுரம்

இடைச்சுரத்(து) எந்தைதன் இன்னருளே என்றும்
கடைக்காப்பாய் வந்திடும் காண்

கடைக்காப்பு - இறுதிக்காலத்தில் பாதுகாப்பு 



கழுக்குன்றப் பெம்மான் கழலைப் பணிவார்
வழுக்காரே வாய்மையிலி ருந்து


265. (29). திருவச்சிறுப்பாக்கம்

அச்சிறுப் பாக்கத்(து) அதிபன் அடியிணையை
உச்சியில் வைத்தல் உயர்வு


Regards,
Saranya

Saranya Gurumurthy

unread,
May 18, 2026, 9:59:53 PMMay 18
to சந்தவசந்தம்
Also modified this

கழுக்குன்றப் பெம்மான் கழலைப் பணிவார்
வழுக்காரே வாய்மையிலி ருந்து

கழுக்குன்றப் பெம்மான் கழலைப் பணிவார்
இழுக்கா(று) அடையார் இயம்பு

Regards,
Saranya

Siva Siva

unread,
May 19, 2026, 5:46:29 PMMay 19
to santhav...@googlegroups.com
Good.

Siva Siva

unread,
May 19, 2026, 5:47:04 PMMay 19
to santhav...@googlegroups.com

Final 3 songs of this padhigam:

9)

நறைமா மலரான் அரிகாணா

இறையான் எழிலார் உமைபங்கன்

கறையார் மிடறன் கயிலாயன்

மறைநா வினனூர் வழுவூரே.


(இறையான் - இறைவன்);


10)

மதியீ னர்கள்சொல் புறனெல்லாம்

மதியா தடைமின் மகிழ்வெய்த

கொதியா வருகூற் றுதைசெய்தான்

மதிசூ டியிடம் வழுவூரே.


(கொதியா வரு - கொதித்து வந்த);


11)

பணிகின் றவர்தம் பய(ம்)நீக்கிப்

பிணிவல் வினைதீர்த் தருள்பெம்மான்

துணிவெண் பிறையன் சுடுநீற்றன்

மணிகண் டனிடம் வழுவூரே.


V. Subramanian


On Sun, May 17, 2026 at 9:43 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

8)

Siva Siva

unread,
May 20, 2026, 9:02:01 PMMay 20
to santhav...@googlegroups.com

2020-06-18

காழி (சீகாழி)

-----------------

(சந்த வஞ்சிவிருத்தம் - தானன தானன தானதனா)

(தானன என்பது தனதன என்றும், தானதனா என்பது தனதனனா/தானதானா என்றும் வரலாம்)

(சம்பந்தர் தேவாரம் - 1.112.1 - "இன்குரல் இசைகெழும் யாழ்முரலத்")


1)

அவ(ம்)மலி வேள்வியை அன்றுசெய்து

தவறிழை தக்கனைத் தலையரிந்தான்

கவுணியர்க் கமுதருள் காழிநகர்ச்

சிவனடி இணைதனைச் சிந்திநெஞ்சே.


2)

வனமலர் வாளிவன் மதனழிய

அனலுமிழ் கண்ணனை அதிசயனைக்

கனலெரி ஏந்தியைக் காழிநகர்ப்

புனலணி சடையனைப் போற்றுநெஞ்சே.


(வனம் - அழகு); (வாளி - அம்பு); (மதன் - காமன்);


3)

பொடியணி மேனியன் போர்விடையன்

கொடியிடை கூறமர் கொள்கையினான்

கடிமல ரான்தொழு காழிநகர்

அடிகளை அடிதொழ அறுமிடரே.


V. Subramanian


Saranya Gurumurthy

unread,
May 22, 2026, 5:25:47 AMMay 22
to சந்தவசந்தம்
267. (31). திருஅரசிலி (ஒழுந்தியாப்பட்டு)

அரசிலி அப்பனின் அந்தாள் பணிவார்
துரிசடை யாரென்று சொல்


268. (32). திருஇரும்பைமாகாளம்

வரம்பில்லா ஆனந்தம் வாய்த்திடச் செய்வான்
இரும்பைமா காளத்(து) இறை 


தொண்டை நாட்டுத் தலங்கள் நிறைவுற்றன


துளுவ நாட்டுத் தலம்

269. (1). திருக்கோகர்ணம்

கோகர்ணம் தன்னில் கொலுவிருக்கும் மாதொரு
பாகர்தாள் பாடுதல் பாங்கு

துளுவ நாட்டுத் தலம் நிறைவுற்றது


மலை நாட்டுத் தலம்

270. (1). திருவஞ்சைக்களம்

சஞ்சலம் தீர்ந்து சமாதி நிலையடைய
அஞ்சைக் களத்தை அடை

மலை நாட்டுத் தலம் நிறைவுற்றது


Regards,
Saranya

Siva Siva

unread,
May 22, 2026, 8:38:31 AMMay 22
to santhav...@googlegroups.com

4)

இமையவர் அமுதுண இருள்மிடறன்

அமலையை ஒருபுறம் அமர்பெருமான்

கமலனுக் கருளிய காழிநகர்

விமலனைத் தொழுதெழ வினையறுமே.


5)

விண்ணவர் தலைவனை வெண்மதியம்

தண்ணதி தாங்கிய சடையிறையைக்

கண்ணமர் நுதலனைக் காழிநகர்

அண்ணலை அடிதொழ அறுமிடரே.


6)

வாரணம் உரிசெய்த மைந்தனருள்

காரணம் கொண்டுருக் காட்டிடுவான்

காரிகை பங்கனைக் காழிநகர்ச்

சீரனை ஏத்திடத் திருவருமே.


7)

மறையணி நாவனை வாளரவம்

பிறையணி சடையுடைப் பிஞ்ஞகனைக்

கறையணி கண்டனைக் காழிநகர்

இறைவனை ஏத்திட இடர்கெடுமே.


V. Subramanian


On Wed, May 20, 2026 at 9:00 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

3)

Saranya Gurumurthy

unread,
May 23, 2026, 10:38:09 PMMay 23
to சந்தவசந்தம்
வடநாட்டுத் திருத்தலங்கள்


271. (1). திருப்பருப்பதம்

கருப்பொருளாய் எங்கும் கலந்திருக்கும் சீரார்
பருப்பதத் தானைப் பரவு


272. (2). இந்திரநீலப்பருப்பதம் (நீலகண்ட சிகரம்)

இந்திர நீலப் பருப்பதத்(து) எந்தையை
வந்தனைசெய் வார்க்குவரும் வாழ்வு


273. (3). அனேகதங்காவதம் (கௌரிகுண்டம்)

மனோதுக்கம் மாய்ந்திட வானார் இமயத்(து)
அனேகதங்கா வதத்தை அடை


274. (4). திருக்கேதாரம் (கேதார்நாத்)

பாதார விந்தம் பணிவார்க்(கு) அருள்செய்யும்
கேதார நாதனே கேள்

கேள் - உறவு/நட்பு 
 
275. (5). திருநொடித்தான்மலை (திருக்கயிலாயம்)

படைத்தல் முதலாய பஞ்சக் கிருத்தியம்செய்
நொடித்தான் மலையானை நோக்கு


வடநாட்டுத் தலங்கள் நிறைவுற்றன


தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் 275 மேலமைக்கப்பட்ட க்ஷேத்திரக் குறள் நிறைவுற்றது.


தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


திருச்சிற்றம்பலம்


Regards,
Saranya

On Fri, May 22, 2026, 14:55 Saranya Gurumurthy <saranya.g...@gmail.com> wrote:
267. (31). திருஅரசிலி 

Siva Siva

unread,
May 23, 2026, 10:44:33 PMMay 23
to santhav...@googlegroups.com
Nice set.

/ பஞ்சக் கிருத்தியம்செய்  /

No க் - as both are Sanskrit words, they combine as per Sanskrit rules.

V. Subramanian

Saranya Gurumurthy

unread,
May 23, 2026, 11:35:16 PMMay 23
to சந்தவசந்தம்
Thank you sir. 

Will modify the same.

Regards,
Saranya

On Sun, May 24, 2026, 08:14 Siva Siva <naya...@gmail.com> wrote:
Nice set.

/ பஞ்சக் கிருத்தியம்செய்  /

No க் - as both are Sanskrit words, they combine as per Sanskrit rules.

V. Subramanian

On Sat, May 23, 2026 at 10:38 PM Saranya Gurumurthy <saranya.g...@gmail.com> wrote:

 
275. (5). திருநொடித்தான்மலை (திருக்கயிலாயம்)

படைத்தல் முதலாய பஞ்ச கிருத்தியம்செய்

Siva Siva

unread,
May 24, 2026, 9:25:56 PMMay 24
to santhav...@googlegroups.com

Final 4 songs of this padhigam:

8)

தடவரை ஏந்திய தசமுகனைப்

படவிரல் ஊன்றிய படர்சடையன்

கடல்விடம் உண்ணியைக் காழிநகர்க்

கடவுளைக் கைதொழ இடர்கெடுமே.


9)

வேதனும் விண்டுவு(ம்) நண்ணரிய

பாதனை ஒண்மழுப் படையினனைக்

காதணி தோடனைக் காழிநகர்

நாதனை வாழ்த்திட நலிவறுமே.


(விண்டு - விஷ்ணு);


10)

பொய்யர்கள் மொழியவை பொருளலவே

மெய்யனை வெண்பொடி மேனியனைக்

கையினில் தீயனைக் காழிநகர்

ஐயனை அடிதொழ அறுமிடரே.


11)

பவனவன் அடியவர் பரவுவணம்

அவனியில் வருபவன் அன்புருவன்

கவினுறு பொழிலணி காழிநகர்ச்

சிவனடி தொழுதெழத் திருவருமே.


V. Subramanian


Siva Siva

unread,
May 26, 2026, 10:51:55 AMMay 26
to santhav...@googlegroups.com

2020-06-19

மயிலாடுதுறை

-----------------

(சந்தக் கலிவிருத்தம் - தனனா தனனா தனனா தனனா)

(இச்சந்தத்தை வடமொழியில் "தோடகம்" என்பர்)

(சம்பந்தர் தேவாரம் - 2.18.1 - "சடையா யெனுமால்")


1)

முதிரா மதிசேர் முடியிற் புனலார்

நதியாய் நரைவெள் விடையூர் தியினாய்

மதில்சூழ்ந் தழகார் மயிலா டுதுறைப்

பதியே பழவல் வினைதீர்த் தருளே.


2)

அணியா அரவம் புனைவாய் அடியைப்

பணிவா னவருக் கருளும் பரமா

மணிகோ புரமார் மயிலா டுதுறைத்

துணிமா மதியாய் துயர்தீர்த் தருளே.


3)

வளைமே ருவிலால் மதிலெய் தவனே

தளரா முலையாள் தழுவும் தலைவா

வளமார் பொழில்சூழ் மயிலா டுதுறை

இளமால் விடையாய் இடர்தீர்த் தருளே.


V. Subramanian


On Sun, May 24, 2026 at 9:25 PM Siva Siva <naya...@gmail.com> wrote:


Siva Siva

unread,
May 28, 2026, 9:00:27 AMMay 28
to santhav...@googlegroups.com

4)

அழலார் சடையாய் அதளா டையினாய்

குழையார் செவியாய் கொடிமேல் விடையாய்

மழைசேர் பொழில்சூழ் மயிலா டுதுறைக்

குழகா தொழுதேன் குறைதீர்த் தருளே.


5)

பெண்டங் கியமே னியுடைப் பெருமான்

அண்டம் பலவாக் கியொடுக் கிடுவாய்

வண்டின் னிசைசெய் மயிலா டுதுறைக்

கண்டங் கரியாய் கலிதீர்த் தருளே.


(பெண்டங்கிய - பெண் தங்கிய);


6)

திரியும் புரமூன் றெரிசெய் தவனே

எரிவன் கருநஞ் சமுதுண் டவனே

வரிவண் டறையும் மயிலா டுதுறைப்

புரிசெஞ் சடையாய் புகல்தந் தருளே.


7)

நறையார் மலர்தூ வியமா ணிநலம்

உறவே நமன்மார் பிலுதைத் தவனே

மறைநா வினனே மயிலா டுதுறை

இறைவா அடியேன் இடர்தீர்த் தருளே.


V. Subramanian


On Tue, May 26, 2026 at 10:51 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

3)

Siva Siva

unread,
May 29, 2026, 8:43:04 AMMay 29
to santhav...@googlegroups.com

Final 4 songs of this padhigam:

8)

மலைபேர் தசமா முகனார்த் தழவே

மலரார் கழலோர் விரலூன் றியருள்

மலையான் மருகா மயிலா டுதுறைத்

தலைவா துணைவா தமியேற் கருளே.


(ஆர்த்தல் - ஒலித்தல்);

(ஆர்தல் - ஒத்தல்);


9)

செழுமா மலரான் திருமாற் கரிதாய்

எழுசோ தியனே இடுமூண் மகிழ்வாய்

மழுவாட் படையாய் மயிலா டுதுறைத்

தொழுவார்க் கினியாய் துயர்தீர்த் தருளே.


10)

இதமற் றதைநன் றெனவந் துரைசெய்

அதமர்க் கருளா தவனே அரனே

மதமா உரியாய் மயிலா டுதுறை

முதல்வா முனைவல் வினைதீர்த் தருளே.


(முனை - முன்னை);


11)

நஞ்சார் மிடறா நசியா முதலே

பஞ்சேர் அடியாள் பிரியாப் பரமா

மஞ்சார் பொழில்சூழ் மயிலா டுதுறை

மஞ்சா பழவல் வினைமாய்த் தருளே.


(ஏர்தல் - ஒத்தல்);

(மஞ்சன் - மைந்தன் - வீரன்);


V. Subramanian


On Thu, May 28, 2026 at 9:00 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

7)

Ram Ramakrishnan

unread,
May 29, 2026, 9:15:40 AMMay 29
to santhav...@googlegroups.com
தோடகம் அருமை, திரு. சிவசிவா.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On May 29, 2026, at 08:43, Siva Siva <naya...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
May 29, 2026, 5:41:48 PMMay 29
to santhav...@googlegroups.com
Thanks.

V. Subramanian

On Fri, May 29, 2026 at 9:15 AM Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:
தோடகம் அருமை, திரு. சிவசிவா.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On May 29, 2026, at 08:43, Siva Siva <naya...@gmail.com> wrote:



Final 4 songs of this padhigam:

..

Siva Siva

unread,
May 31, 2026, 6:23:33 PM (12 days ago) May 31
to santhav...@googlegroups.com

2020-06-20

பாவநாசம்

(பாபநாசம் - தாமிரபரணிக்கரையில் உள்ள தலம்)

-----------------

(சந்தக் கலிவிருத்தம் - தான தானன தான தானன - சந்தம்)

(சம்பந்தர் தேவாரம் - 2.25.1 - "உகலி யாழ்கட லோங்கு பாருளீர்")


1)

அரண(ம்) மூன்றையும் அன்றெ ரித்தவன்

கிரண வெண்மதிக் கீற்றன் மேயது

மரணம் தீரமு தன்ன தாமிர

பரணி தாள்தொழு பாவ நாசமே.


2)

ஆய்ம லர்க்கணை ஐந்து தொட்டவேள்

காய்நு தற்கணன் கங்கை வேணியன்

மாய்வி லாதவன் மன்னும் ஊரது

பாய்பு னற்கரைப் பாவ நாசமே.


(ஆய்தல் - தெரிந்தெடுத்தல்);


V. Subramanian


Siva Siva

unread,
Jun 2, 2026, 9:08:49 AM (11 days ago) Jun 2
to santhav...@googlegroups.com

3)

வம்பு லா(ம்)மலர் வன்னி சூடினான்

உம்பர் வாழ்ந்திட ஓத நஞ்சுணி

கொம்ப னாளொரு கூறன் ஊரது

பைம்பு னற்கரைப் பாவ நாசமே.


(வம்பு - வாசனை); (உலாம் - உலாவும் - திகழும்);

(ஓதம் - கடல்); (உணி - உண்ணி - உண்டவன்);


4)

காடு வாழ்கணம் காண நள்ளிருள்

ஆடு கொள்கையன் அண்டர் நாயகன்

தோடு சேர்செவித் தூயன் ஊரது

பாடு நீரயல் பாவ நாசமே.


5)

மாயு(ம்) நாளென வந்த காலனே

சாயு மாறொரு தாளை வீசினான்

தாயும் ஆயவன் தங்கும் ஊரது

பாயு(ம்) நீரயல் பாவ நாசமே.


V. Subramanian


On Sun, May 31, 2026 at 6:23 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

2)

Siva Siva

unread,
Jun 3, 2026, 10:49:20 AM (9 days ago) Jun 3
to santhav...@googlegroups.com

6)

கறையி லங்கிய கண்டன் நீறணி

அறவன் அங்கணன் ஆல நீழலில்

மறைவி ரித்தவன் மன்னும் ஊரது

பறவை ஆர்பொழிற் பாவ நாசமே.


7)

மத்த(ம்) மாசுணம் வைத்த செஞ்சடைச்

சுத்த மாநதி சூடும் வித்தகன்

சத்தி பங்கமர் தந்தை ஊரது

பத்தர் சென்றடை பாவ நாசமே.


V. Subramanian


On Tue, Jun 2, 2026 at 9:08 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

5)

Siva Siva

unread,
Jun 5, 2026, 8:44:51 AM (8 days ago) Jun 5
to santhav...@googlegroups.com

Final 4 songs of this padhigam.


8)

மடமை யால்மலை பேர்த்த வன்றனை

அடர ஊன்றிய அண்ணல் நீரழற்

சடையில் வைத்தவன் தங்கும் ஊரது

படர்பொ ழிற்பதி பாவ நாசமே.


9)

நெடிய மாலயன் நேட நின்றவன்

பொடிய ணிந்தடி போற்றி னார்வினை

மடிய நல்கிடும் வள்ளல் ஊரது

படியெ லாந்தொழு பாவ நாசமே.


10)

மழுங்கு புத்தியர் மாய(ம்) நீங்குமின்

தொழுங்க ரந்திகழ் தொண்டர் வேண்டிய

வழங்கு வார்சடை வள்ளல் ஊரது

பழங்க ளார்பொழிற் பாவ நாசமே.


11)

உரக மாலையன் உண்ப லிக்கெனப்

பிரம னார்தலை ஏந்து பெற்றியன்

கரவி லாதளி கையன் ஊரது

பரவிப் பார்தொழு பாவ நாசமே.


V. Subramanian


On Wed, Jun 3, 2026 at 10:49 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

7)

Siva Siva

unread,
Jun 6, 2026, 8:00:49 AM (7 days ago) Jun 6
to santhav...@googlegroups.com

2020-06-20

பறியலூர் (பரசலூர்);

-----------------

(சந்தக் கலிவிருத்தம் - தானனா தானனா தானனா தானனா)

(சம்பந்தர் தேவாரம் - 3.35.7 - "கானலைக் கும்மவன் கண்ணிடந் தப்பநீள்")


1)

கண்ணில்நீர் வார்தரக் கைதொழும் பத்தரை

விண்ணிலேற் றும்பரன் வெண்மதிக் கண்ணியான்

வண்ணமார் பூக்களில் மாந்திவண் டூதிடும்

பண்ணறாச் சோலைசூழ் பறியல்வீ ரட்டனே.


2)

காட்டிலா டுங்கழல் கைதொழின் வல்வினை

வீட்டிவான் நல்குவான் வெண்குழைக் காதினன்

நாட்டமோர் மூன்றினான் நாடிவண் டார்த்திடும்

பாட்டறாச் சோலைசூழ் பறியல்வீ ரட்டனே.


V. Subramanian


Ram Ramakrishnan

unread,
Jun 6, 2026, 8:14:19 AM (7 days ago) Jun 6
to santhav...@googlegroups.com
அருமையான ஸ்ரக்விணி சந்தம், திரு. சிவாசிவா. ரசித்தேன் மிகவே.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jun 6, 2026, at 08:00, Siva Siva <naya...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Jun 6, 2026, 9:19:29 AM (7 days ago) Jun 6
to santhav...@googlegroups.com
Thanks.

V. Subramanian

இமயவரம்பன்

unread,
Jun 6, 2026, 11:46:08 AM (6 days ago) Jun 6
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
“ பண்ணறாச் சோலை” - மிக அழகு!

“வீட்டுதல்” - நீக்குதல் என்னும் பொருளில் வரும் இந்தச் சொல்லை இன்று அறிந்துகொண்டேன்.

Siva Siva

unread,
Jun 7, 2026, 8:00:28 AM (6 days ago) Jun 7
to santhav...@googlegroups.com
Thanks Anand.

3)

உம்பரார் வேண்டவே உன்னிடா தைம்மலர்

அம்பினால் தாக்குவேள் அன்றுநீ றாக்கினான்

செம்பிரான் வாளரா திங்கள்சேர் சென்னியன்

பைம்பொழில் சூழ்ந்திடும் பறியல்வீ ரட்டனே.


(உன்னுதல் - எண்ணுதல்); (வேள் - காமன்);

(வாள் - கொடிய);


4)

சங்கரா சம்புவே தாணுவே தாதையே

அங்கணா என்பவர்க் காரருள் செய்பவன்

பொங்கராத் தாரினன் பொற்சடைப் புண்ணியன்

பைங்கணே றேறினான் பறியல்வீ ரட்டனே.


V. Subramanian


Siva Siva

unread,
Jun 8, 2026, 10:20:45 PM (4 days ago) Jun 8
to santhav...@googlegroups.com

5)

வேலனைப் பெற்றவன் வேத(ம்)நான் கோதிய

ஆலனக் காரமாம் ஐயன்முக் கண்ணினன்

காலனைக் காலினால் காய்ந்தவன் கைதொழும்

பாலனைக் காத்தவன் பறியல்வீ ரட்டனே.


வேதம் நான்கு ஓதிய ஆலன் -

அக்கு ஆரம் ஆம் ஐயன் -


6)

பேரிடர் தீர்ந்திடப் பேணினார்க் காப்பவன்

போரிடும் வெங்கரித் தோலினைப் போர்த்தவன்

ஊரிடும் பிச்சையே ஊணெனக் கொண்டவன்

பாரிடஞ் சூழ்பரன் பறியல்வீ ரட்டனே.


பேரிடர் தீர்ந்திடப் பேணினார்க் காப்பவன் -

(பாரிடம் - பூதம்);


7)

சேவதே றுஞ்சிவன் தெண்புனல் கொக்கதன்

தூவலார் சென்னியன் தோற்றமும் கேடிலான்

காவலார் முப்புரம் வேவவே நக்கவன்

பாவையோர் பங்கினன் பறியல்வீ ரட்டனே.


(சே - எருது);

(தூவல் - இறகு);


V. Subramanian


On Sun, Jun 7, 2026 at 8:00 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

4)

Siva Siva

unread,
Jun 10, 2026, 9:19:00 AM (3 days ago) Jun 10
to santhav...@googlegroups.com

8)

தக்கதொன் றோர்கிலான் தான்வரைக் கீழ்மிகத்

துக்கமுற் றார்த்தழத் தூவிரல் வைத்தவன்

திக்கெலாம் ஆடையாம் சீர்த்தியன் மேனியில்

பக்கமோர் பாவையான் பறியல்வீ ரட்டனே.


(ஓர்தல் - சிந்தித்தல்); (ஆர்த்தல் - ஒலித்தல்);


9)

கந்தமார் போதனும் கண்ணனும் காண்கிலா

அந்தமில் சோதியான் ஐந்தொழில் செய்பவன்

செந்தமிழ்ப் பாடலைச் செப்பினார்க் கன்பினன்

பந்தமில் பாங்கினான் பறியல்வீ ரட்டனே.


(போது - பூ);

(பாங்கு - இயல்பு);


வி. சுப்பிரமணியன்

Siva Siva

unread,
Jun 11, 2026, 8:54:57 AM (yesterday) Jun 11
to santhav...@googlegroups.com

Final 2 songs of this padhigam:


10)

ஆய்தலைச் செய்கிலா அந்தகர் நீறிடாப்

பேய்மனப் பிட்டர்சொல் பேணிடேல் காமனைக்

காய்பவன் தாள்தொழும் பத்தரைக் காப்பவன்

பாய்புலித் தோலினான் பறியல்வீ ரட்டனே.


(பிட்டர் - பிரஷ்டர்);

(பவன் - என்றும் உள்ளவன்);


11)

பூத்திரள் கொண்டுதாள் போற்றிடாத் தக்கனார்

தீத்தொழில் செற்றவன் செவ்வணன் மூவரின்

மூத்தவன் முக்கணன் முன்னமோர் அத்திரம்

பார்த்தனுக் கீந்தவன் பறியல்வீ ரட்டனே.


(தீத்தொழில் - 1. தீய செயல்; 2. அக்கினி காரியம் - ஹோமம்; வேள்வி);

(செறுதல் - அழித்தல்);


வி. சுப்பிரமணியன்


On Wed, Jun 10, 2026 at 9:18 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

9)

Saranya Gurumurthy

unread,
Jun 11, 2026, 10:26:13 AM (yesterday) Jun 11
to சந்தவசந்தம்
மிகவும் அழகிய பதிகம்.

Regards,
Saranya

Siva Siva

unread,
11:15 AM (11 hours ago) 11:15 AM
to santhav...@googlegroups.com
Thanks.
V. Subramanian
Reply all
Reply to author
Forward
0 new messages