நகைச்சுவைக் கலை

1,139 views
Skip to first unread message

ramaNi

unread,
Jan 19, 2015, 11:33:40 PM1/19/15
to santhav...@googlegroups.com
==============================================
நகைச்சுவைக் கலை
==============================================
செய்யுளாகவும் உரைநடையாகவும் இலக்கியத்திலும் இணையத்திலும் காணும் 
நகைச்சுவைப் பிரயோகங்களை இந்த இழையில் சேகரிப்போம். கடிஜோக்குகளையும்
மற்ற slapstick வகை துணுக்குகளையும் தவிர்த்தல் நன்று.

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, ஒரு சமயம் சிரங்கு தொல்லையால் வேதனையுற்றார்.
பல மருந்துகள் போட்டும் சிரங்கு ஆறாமல் இருந்தன. அந்த வேதனையைத் தாங்க முடியாமல் 
அவதிப்படும் சமயத்தில், சில நகைச்சுவைப் பாடல்களைப் பாடினார். 
அப்படி அவர் பாடிய நகைச்சுவைப் பாடல்களில் ஒன்று:

முத்துப் பவழம் முழுவயிரம் மாணிக்கம்
பத்தியொளி வீச பதக்கமெல்லாம் - சித்தன்
சிரங்கப்ப ராயன் சிறியேன் எனக்குத்
தரங்கண்டு தந்த தனம்.

*****

அரசனைப் புகழ்ந்து பாடி பரிசு பெறுவதற்காகப் புலவர் ஒருவர் அவைக்குள் வந்தார். 
சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் மன்னரைப் பார்த்து, 
"பாராளும் மன்னனிவன் ஆனையும் தின்பான்; பூனையும் தின்பான்" என்றார்.

அரசனுக்கு அதிர்ச்சி, "நிறுத்தும் புலவரே! இதுதான் புகழ்ந்து பாடும் லட்சணமா?" என்றான் கோபத்துடன்.

அதற்குப் புலவர், "மன்னா! தாங்கள் ஆ+நெய், அதாவது பசுவின் நெய்யையும், பூ + நெய் அதாவது 
பூவிலிருந்து கிடைக்கும் தேனையும் உண்பீர்கள் என்றுதான் சொன்னேன். வருந்தற்க" என்றார்.

பரிசும் பெற்றுச் சென்றார்.

*****

கோயில் தர்மகர்த்தா ஒருவர் கோயிலில் வேலை பார்த்த ஏழை ஓதுவார் ஒருவருக்கு 
ருத்திராட்ச மாலையில் தங்கத்தால் ஆன ஒரு வில்லையும் இணைத்துப் பரிசு ஒன்று அளித்தார். 

சில நாட்களில் அந்த ஓதுவார் கழுத்தில் அந்த வில்லையைக் காணவில்லை.

தர்மகர்த்தா அவரிடம், "எங்கே தங்க வில்லையைக் காணவில்லை?" என்று கேட்டார்.

அதற்கு ஓதுவார், "தங்கவில்லை அய்யா" என்றார்.

*****

ஒரு முறை திருமுருக கிருபானந்த வாரியார், கதா காலஷேபம் பண்ணும் போது 
முருகனின் தந்தை பெயர் என்ன என்று அங்கு வந்திருந்த சிறுவர்களை கேட்டார். 
"திருவிளையாடல்" சினிமா வந்த சமயம் அது. ஒரு பையன் "சிவாஜி" என்று கூற 
கூட்டத்தில் பலத்த சிரிப்பு. பையனின் முகத்தில் இனம் தெரியா குழப்பம். 
வாரியாரும் ’அழகாக மரியாதையாக, "சிவா ஜி" என கூறுகிறான்.எனக் கூற 
கூட்டத்தில் பலத்த கரகோஷம். 

*****

சங்க காலத்து தனிப் பாடல் திரட்டில் காணப்படும், பாடல் வடிவில் உள்ள ஒரு விடுகதை. 
இது சுந்தரகவிராயர் என்பவரால் பாடப்பட்ட பாடல். தமிழ்நயத்துடன், மரம் என்ற சொல் 
மீண்டும் மீண்டும் வருமாறு அமைக்கப்பட்ட பாடல். ஆனால் இங்கே மரம் என்ற ஒரே சொல்லால், 
வெவ்வேறு பொருள் வரும்படி பாடல் அமைக்கப்பட்டுள்ளது.

மரமது மரத்திலேறி மரமதைத் தோளில் வைத்து
மரமது மரத்தைக் கண்டு, மரத்தினால் மரத்தைக் குத்தி,
மரமது வழியே சென்று, வளமனைக் கேகும் போது
மரமது கண்ட மாதர் மரமுடன் மரமெடுத்தார்.

மரமது - அரச மரம் (அரசு) - இங்கே அரசு என்பது அரசனைக் குறிக்கிறது.
மரத்திலேறி - மா மரம் = மா என்பது குதிரை எனப் பொருள் படுகின்றது.
மரமதைத் தோளில் வைத்து - வேல மரம் (வேல்)
அதாவது அரசன் குதிரையிலேறி, வேலைத் தோளில் வைத்துச் செல்கின்றான். அப்போது,
மரமது - மீண்டும் அரசு
மரத்தைக் கண்டு - வேங்கை மரம் - இங்கே வேங்கை என்பது வேங்கைப் புலியைக் குறிக்கிறது.
மரத்தினால் - மீண்டும் வேல் -
மரத்தைக் குத்தி - மீண்டும் வேங்கை
அதாவது அரசன் வேலினால் புலியைக் குத்துகின்றான். பின்னர்,
மரமது வழியே சென்று - மீண்டும் அரசு, வளமனைக்கேக்கும்போது, அதாவது அரசன் வீடு நோக்கிச் செல்லும்போது,
மரமது கண்ட மாதர் - மீண்டும் அரசு, அதாவது அரசனைக் கண்ட பெண்கள்,
மரமுடன் - ஆல் மரம்
மரமெடுத்தார் - அத்தி மரம்
அதாவது ஆல் + அத்தி = ஆலத்தி, அரசனைக் கண்ட பெண்கள் ஆலத்தி எடுத்தார்.

இப்பாடலின் பொருளை முழுமையாகக் கூறுவதாயின்:
அரசன் ஒருவன், தன் தோளிலே வேலை ஏந்தி, குதிரையில் ஏறி, வேட்டைக்குச் சென்றான். 
அங்கு ஒரு வேங்கைப்புலியைக் கண்டு, தன் வேலால் குத்திக்கொன்றான். பின்னர் அரசன் 
தனது அரண்மனைக்குச் சென்றான். புலியைக் கொன்று வெற்றிவீரனாகத் திரும்பிவரும் 
அரசனைக் கண்ட பெண்கள் அரசனுக்கு ஆலத்தி (ஆரத்தி) எடுத்து வரவேற்றனர்.

*****

p balakrishnan

unread,
Jan 20, 2015, 5:27:57 AM1/20/15
to santhav...@googlegroups.com
வாரியார் சுவாமிகள் புரசைப்பாக்கம் கங்காதரேஸ்வரர் கோயிலில் ஒருமுறை
சொற்பொழிவாற்றும்போது கூறியது: கணவன் ஆபீஸ் வேலைமுடிந்து வீட்டுக்குள் வரும்போது ‘கம...
கம’ன்னு கூப்பிட்டுக்கிட்டே வரான். ஏன்னா நாட்ல இப்போ லா இல்லை. - அரிமா இளங்கண்ணன்

On Tue, 20 Jan 2015 10:03:42 +0530 ramaNi wrote
>==============================================நகைச்சுவைக்
கலை==============================================செய்யுளாகவும் உரைநடையாகவும்
இலக்கியத்திலும் இணையத்திலும் காணும்நகைச்சுவைப் பிரயோகங்களை இந்த இழையில்
சேகரிப்போம். கடிஜோக்குகளையும்மற்ற slapstick வகை துணுக்குகளையும் தவிர்த்தல் நன்று.
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, ஒரு சமயம் சிரங்கு தொல்லையால் வேதனையுற்றார்.பல
மருந்துகள் போட்டும் சிரங்கு ஆறாமல் இருந்தன. அந்த வேதனையைத் தாங்க முடியாமல்அவதிப்படும்
சமயத்தில், சில நகைச்சுவைப் பாடல்களைப் பாடினார்.அப்படி அவர் பாடிய நகைச்சுவைப் பாடல்களில்
ஒன்று:
முத்துப் பவழம் முழுவயிரம் மாணிக்கம்பத்தியொளி வீச பதக்கமெல்லாம் - சித்தன்சிரங்கப்ப ராயன்
சிறியேன் எனக்குத்தரங்கண்டு தந்த தனம்.
*****
அரசனைப் புகழ்ந்து பாடி பரிசு பெறுவதற்காகப் புலவர் ஒருவர் அவைக்குள் வந்தார்.சிம்மாசனத்தில்
அமர்ந்திருக்கும் மன்னரைப் பார்த்து,"பாராளும் மன்னனிவன் ஆனையும் தின்பான்; பூனையும் தின்பான்"
என்றார்.
அரசனுக்கு அதிர்ச்சி, "நிறுத்தும் புலவரே! இதுதான் புகழ்ந்து பாடும் லட்சணமா?" என்றான்
கோபத்துடன்.
அதற்குப் புலவர், "மன்னா! தாங்கள் ஆ+நெய், அதாவது பசுவின் நெய்யையும், பூ + நெய்
அதாவதுபூவிலிருந்து கிடைக்கும் தேனையும் உண்பீர்கள் என்றுதான் சொன்னேன். வருந்தற்க" என்றார்.
பரிசும் பெற்றுச் சென்றார்.
*****
கோயில் தர்மகர்த்தா ஒருவர் கோயிலில் வேலை பார்த்த ஏழை ஓதுவார் ஒருவருக்குருத்திராட்ச
மாலையில் தங்கத்தால் ஆன ஒரு வில்லையும் இணைத்துப் பரிசு ஒன்று அளித்தார்.
சில நாட்களில் அந்த ஓதுவார் கழுத்தில் அந்த வில்லையைக் காணவில்லை.
தர்மகர்த்தா அவரிடம், "எங்கே தங்க வில்லையைக் காணவில்லை?" என்று கேட்டார்.
அதற்கு ஓதுவார், "தங்கவில்லை அய்யா" என்றார்.
*****
ஒரு முறை திருமுருக கிருபானந்த வாரியார், கதா காலஷேபம் பண்ணும் போதுமுருகனின் தந்தை
பெயர் என்ன என்று அங்கு வந்திருந்த சிறுவர்களை கேட்டார்."திருவிளையாடல்" சினிமா வந்த சமயம்
அது. ஒரு பையன் "சிவாஜி" என்று கூறகூட்டத்தில் பலத்த சிரிப்பு. பையனின் முகத்தில் இனம்
தெரியா குழப்பம்.வாரியாரும் ’அழகாக மரியாதையாக, "சிவா ஜி" என கூறுகிறான்.எனக்
கூறகூட்டத்தில் பலத்த கரகோஷம்.

*****
சங்க காலத்து தனிப் பாடல் திரட்டில் காணப்படும், பாடல் வடிவில் உள்ள ஒரு விடுகதை.இது
சுந்தரகவிராயர் என்பவரால் பாடப்பட்ட பாடல். தமிழ்நயத்துடன், மரம் என்ற சொல்மீண்டும் மீண்டும்
வருமாறு அமைக்கப்பட்ட பாடல். ஆனால் இங்கே மரம் என்ற ஒரே சொல்லால்,வெவ்வேறு பொருள்
வரும்படி பாடல் அமைக்கப்பட்டுள்ளது.
மரமது மரத்திலேறி மரமதைத் தோளில் வைத்துமரமது மரத்தைக் கண்டு, மரத்தினால் மரத்தைக்
குத்தி,மரமது வழியே சென்று, வளமனைக் கேகும் போதுமரமது கண்ட மாதர் மரமுடன் மரமெடுத்தார்.
மரமது - அரச மரம் (அரசு) - இங்கே அரசு என்பது அரசனைக் குறிக்கிறது.மரத்திலேறி - மா மரம் =
மா என்பது குதிரை எனப் பொருள் படுகின்றது.மரமதைத் தோளில் வைத்து - வேல மரம்
(வேல்)அதாவது அரசன் குதிரையிலேறி, வேலைத் தோளில் வைத்துச் செல்கின்றான்.
அப்போது,மரமது - மீண்டும் அரசுமரத்தைக் கண்டு - வேங்கை மரம் - இங்கே வேங்கை என்பது
வேங்கைப் புலியைக் குறிக்கிறது.மரத்தினால் - மீண்டும் வேல் -மரத்தைக் குத்தி - மீண்டும்
வேங்கைஅதாவது அரசன் வேலினால் புலியைக் குத்துகின்றான். பின்னர்,மரமது வழியே சென்று -
மீண்டும் அரசு, வளமனைக்கேக்கும்போது, அதாவது அரசன் வீடு நோக்கிச் செல்லும்போது,மரமது
கண்ட மாதர் - மீண்டும் அரசு, அதாவது அரசனைக் கண்ட பெண்கள்,மரமுடன் - ஆல்
மரம்மரமெடுத்தார் - அத்தி மரம்அதாவது ஆல் + அத்தி = ஆலத்தி, அரசனைக் கண்ட பெண்கள்
ஆலத்தி எடுத்தார்.
இப்பாடலின் பொருளை முழுமையாகக் கூறுவதாயின்:அரசன் ஒருவன், தன் தோளிலே வேலை ஏந்தி,
குதிரையில் ஏறி, வேட்டைக்குச் சென்றான்.அங்கு ஒரு வேங்கைப்புலியைக் கண்டு, தன் வேலால்
குத்திக்கொன்றான். பின்னர் அரசன்தனது அரண்மனைக்குச் சென்றான். புலியைக் கொன்று
வெற்றிவீரனாகத் திரும்பிவரும்அரசனைக் கண்ட பெண்கள் அரசனுக்கு ஆலத்தி (ஆரத்தி) எடுத்து
வரவேற்றனர்.
*****




--
>
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
>
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
>
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
>
santhavasanth...@googlegroups.com.
>
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
>
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
>
---
>
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
>
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to
santhavasanth...@googlegroups.com.
>
To post to this group, send email to santhav...@googlegroups.com.
>
For more options, visit https://groups.google.com/d/optout.
>

Get your own FREE website, FREE domain & FREE mobile app with Company email.  
Know More >

Subbaraman NV

unread,
Jan 20, 2015, 5:35:33 AM1/20/15
to santhav...@googlegroups.com

True!!!!!

M. Viswanathan

unread,
Jan 20, 2015, 5:51:58 AM1/20/15
to Santhavasantham
சிந்தனைக்கு வித்து சிரிப்பு.
அன்பன்,
மீ.வி.

ramaNi

unread,
Jan 20, 2015, 10:33:00 PM1/20/15
to santhav...@googlegroups.com
ஓலைபின்னும் வேலைகிடைப்பதும் அரிது

சுந்தரகவிராயர் என்ற புலவரிடம் அறிவுச்செல்வம் கொட்டிக்கிடந்தது. 
ஆனால் பொருட்செல்வமோ தட்டுத்தடுமாறியது. வாழ்க்கைக்குத் தேவையான 
பொருளுக்காக இடையிடையே இடர்ப்பட்டார். அப்போது வறுமை கொடுத்த 
அநுபவத்தை புலமையால் கவிதையாக வடித்தார். வறுமை அவரோடு அழிந்தது. 
அவரது புலமையோ இன்றும் அவர் பெயர்சொல்லி நிலைத்து நிற்கிறது.

ஒரு மனிதனுக்கு வறுமை வந்தால் அவன் அநுபவிப்பதற்கு எவையெல்லாம் 
அரிதாகும் என்பதை பாடலில் பாருங்கள். இப்பாடலில் அரிதாம் என்ற சொல்லை 
ஐந்து இடத்திலும் அரிதாகும் என்ற சொல்லை ஓரிடத்திலும் வைத்து பாடலைப் புனைந்துள்ளார்.

அன்னம்‌உணற்கு அரிதாம் ஆமாறுமூன்றும் அரிதாம்
பன்னம் அரிதாம் பகலின்கண் - துன்நிசியில்
நேயம் அரிதாகும் நித்திரைக்கும் பாய்‌அரிதாம்
காயக்கு அரிதாம் கலை”

ஒரு மனிதனுக்கு வறுமை வந்தால், உண்ணும் சோறு அரிதாய்ப் போய்விடும். 
கல்வியறிவைப் பெறத் தேவையான கேள்விகேட்டல், விமர்சித்தல், எண்ணிப்பார்த்தல் 
ஆகிய சித்தியடையும் வழிகள்  மூன்றும் அரிதாய்ப் போகும். பகலில் ஓலைபின்னும் 
வேலை கிடைத்தலும் அரிதாகும். நடு‌இரவில்  காதல் மனையாளின் அன்பு  
கிடைப்பதும் அரிதாய்விடும். படுத்துத்தூங்க பாய் கிடைப்பதும் அருமையாகும். 
இவை மட்டுமல்ல உடலை  மறைக்க ஆடை கிடைப்பதும் அரிதே என்கிறார். 
இது அவரது அநுபவ உண்மை.

சொல்விளக்கம்:
௧. அன்னம் - சோறு
௨. ஆமாறு - சித்தியடையும் வழி
௩. பன்னம் - ஓலைபின்னும் வேலை
௪. துன்நிசி - நடு‌இரவு
௫. நேயம் - அன்பு
௬. காயம் - உடல்
௭. கலை - ஆடை

*****
 

Ramamoorthy Ramachandran

unread,
Jan 21, 2015, 2:10:41 AM1/21/15
to santhav...@googlegroups.com
பொம்மை என்ற வார இதழில் வந்த நாகேஷின் 
 நகைச்சுவை பதில்:
கே: நீங்கள் முருகனாகவும், கே ஆர் விஜயா வள்ளியாகவும் 
சாவித்திரி  தெய்வானை யாகவும் நடித்தால்?...
ப: மயில் செத்துப் போகும்!

--

Ramamoorthy Ramachandran

unread,
Jan 21, 2015, 2:22:52 AM1/21/15
to santhav...@googlegroups.com
ஓர் அலுவலகத்தில் ஒருவர் பிற்பகல் இடைவேளைக்குப் பின் 
எங்கோ சென்று விட்டு தாமதமாக வந்தார்.
மானேஜர் ; எங்கே போனீங்க 
பணியாளர்: சலூனுக்கு 
மானேஜர் : எதற்கு?
பணி: முடி வெட்டிக் கொள்ள!
மா:  ஆபீஸ்  நேரத்திலா?
பணி: ஆமாம் ஆபீஸ் நேரத்தில் முடி வளர்கிறதே?
மா: வீட்டிலேயும்  உமக்கு முடி வளர்கிறதே!
அப்போது  வெட்டிக் கொள்ளலாமே?
பணி:  நான்  ஆபீஸ் நேரத்தில்  வளர்ந்த முடியை மட்டுமே , 
          வெட்டிக்கொண்டேன் !

Iyappan Krishnan

unread,
Jan 21, 2015, 2:37:05 AM1/21/15
to சந்தவசந்தம்
கார் என்று பேர் பெற்றாய் ககனத்தே உறும்போது
நீர் என்று பேர் பெற்றாய்! நீணிலத்தில் வந்ததன் பின்
வார் என்றும் மென் கொங்கை ஆய்ச்சியர்கை வந்ததன் பின்
மோர் என்று பேர் பெற்றாய்! முப்பேரும் பெற்றாயே!

-- மிஸ்டர் காளமேகம்

N. Ganesan

unread,
Jan 21, 2015, 3:27:06 AM1/21/15
to santhav...@googlegroups.com


On Tuesday, January 20, 2015 at 11:10:41 PM UTC-8, Trichy Pulavar Ramamoorthy wrote:
பொம்மை என்ற வார இதழில் வந்த நாகேஷின் 
 நகைச்சுவை பதில்:
கே: நீங்கள் முருகனாகவும், கே ஆர் விஜயா வள்ளியாகவும் 
சாவித்திரி  தெய்வானை யாகவும் நடித்தால்?...
ப: மயில் செத்துப் போகும்!

எம். எஸ். விஸ்வநாதனின் சங்கீதம் மீதான ஒருமுகச் சிந்தனையை
நகைச்சுவையாக ஒரு கதை சொல்லி விளக்குகிறார் கவிஞர் கண்ணதாசன்.
கேட்டுப் பாருங்கள்,

நா. கணேசன் 

Iyappan Krishnan

unread,
Jan 21, 2015, 3:29:32 AM1/21/15
to சந்தவசந்தம்
கி.வா.ஜ அவர்களின்  சிலேடை நகைச்சுவை மிகவும் அருமையானது

அவற்றில் சில :


 சில பேருக்கு வாய் பேசிக் கொண்டிருக்கும் போதுகூட கைகள் தானாக ஏதாவது (குரங்குச்) சேட்டை செய்து கொண்டிருக்கும். அப்படிப்பட்ட இயல்புடைய ஒரு பேச்சாளர் கி.வா.ஜ. அருகில் ஒரு விழா மேடையில் அமர்ந்திருந்தார். கி.வா.ஜ.வுககும், அவருக்கும் மாலை போட்டு மரியாதை செய்தார்கள். கி.வா.ஜ.வுடன் பேசியபடி இருந்த அவரது கரங்கள் மாலையிலிருந்து ரோஜாவின் இதழ்களை ஒவ்வொன்றாகப் பிய்த்துப் போட்ட வண்ணம் இருந்தன. இயல்பாக அவர் செய்து கொண்டிருந்த இந்தச் செயல் கி.வா.ஜ.வுக்குச் சங்கடமாக இருந்ததால் அவரால் சரியாகப் பேச முடியவில்லை. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் வந்து, ‘‘ஐயா, ஆரம்பிக்கலாமா?’’ என்று கி.வா.ஜ.விடம் கேட்டார். உடனே பளிச்சென்று ஒரு பன்ச் அடித்தார் கி.வா.ஜ..- - ‘‘நான் இனிமேல்தான் ஆரம்பிக்க வேண்டும். இவர் ஏற்கனவே ஆரம் பிய்த்துக் கொண்டிருக்கிறார்’’ என்று.


--கிவாஜ வின் சிலேடைகள்.

Iyappan Krishnan

unread,
Jan 21, 2015, 3:52:20 AM1/21/15
to சந்தவசந்தம்

இங்கே கொஞ்சம் கி.வா.ஜ சிலேடைகள் தொகுப்பு உள்ளது



N. Ganesan

unread,
Jan 21, 2015, 3:52:36 AM1/21/15
to santhav...@googlegroups.com


On Monday, January 19, 2015 at 8:33:40 PM UTC-8, ramaNi wrote:
==============================================
நகைச்சுவைக் கலை
==============================================
செய்யுளாகவும் உரைநடையாகவும் இலக்கியத்திலும் இணையத்திலும் காணும் 
நகைச்சுவைப் பிரயோகங்களை இந்த இழையில் சேகரிப்போம். 

 அரசவையில் பாலபத்திர ஓணாண்டிப் புலவன்,

Ramamoorthy Ramachandran

unread,
Jan 21, 2015, 8:33:35 AM1/21/15
to santhav...@googlegroups.com
மன்னிக்க  வேண்டும் ரசனையைக் கீழே தள்ளாத 
நகைச்சுவைகள்; எவரையும் புண்படுத்தாமல் 
சிரித்து மகிழச் செய்யும் நகைச்சுவைகள் மிக 
மிகக் குறைவே! 
ஓணாண்டிப்  புலவர் என்பதன் பொருள் புலவரை
உயர்ந்தவராக்குமா? தாழ்த்துமா?
அன்புடன் புலவர் இராமமூர்த்தி. 

N. Ganesan

unread,
Jan 21, 2015, 8:45:50 AM1/21/15
to Santhavasantham
2015-01-21 5:33 GMT-08:00 Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com>:
மன்னிக்க  வேண்டும் ரசனையைக் கீழே தள்ளாத 
நகைச்சுவைகள்; எவரையும் புண்படுத்தாமல் 
சிரித்து மகிழச் செய்யும் நகைச்சுவைகள் மிக 
மிகக் குறைவே! 
ஓணாண்டிப்  புலவர் என்பதன் பொருள் புலவரை
உயர்ந்தவராக்குமா? தாழ்த்துமா?
அன்புடன் புலவர் இராமமூர்த்தி. 

ஓணாண்டிப் புலவர் என்று சொல்வது தாழ்த்தும்.

கம்பர் சொன்னதாகச் சொல்லும் “கன்னா பின்னா ....
மண்ணுண்ணி மாப்பிள்ளையே ...” என்னும் நாட்டார்கதையை
சினிமாவில் பயன்படுத்தியுள்ளனர். அவ்வளவே.
கிவாஜ முன்பு “கன்னா பின்னா .... “ கதையை எழுதியுள்ளார்.
கிடைத்தால் சிறப்பாக இருக்கும். நாட்டுப்புற
மக்கள் தமிழின் இரட்டுறமொழிதல் என்பதை கம்பர் மீது
சொல்லி உயர்த்தி மகிழ்ந்திருக்கிறார்கள். இன்றைய
சினிமாவோ ஓணாண்டி என்று நையாண்டியாய்த் தாழ்த்துகிறது :(

அன்புடன்
நா. கணேசன் 

Subbaier Ramasami

unread,
Jan 21, 2015, 8:54:43 AM1/21/15
to சந்தவசந்தம்
புலவனை அவமானப்படுத்தும் நகைச்சுவையைத் தவிர்த்திருக்கலாம்.

இலந்தை

Iyappan Krishnan

unread,
Jan 21, 2015, 9:37:17 AM1/21/15
to சந்தவசந்தம்
கி.வா.ஜ அவர்களின் சிலேடை - புத்தகம் படிக்க இங்கே கிடைக்கிறது.


நன்றி - தமிழ் இணைய நூலகம் 

சொ. வினைதீர்த்தான்

unread,
Jan 21, 2015, 12:30:03 PM1/21/15
to santhavasantham
குறளிலும் இன்புறத்தக்க கருத்துக்கள் கூறும் குறட்பாக்கள் உண்டு. ந்ண்பர்கள் அறிந்தவையே அவை.

பேதையர் கேண்மை மிகவும் இனிமையானதாம். ஏனென்றால் அவர்கள் பிரிந்து சென்றால் வருத்தம் ஏற்படாததல்லவா?

கயவரும் தேவரும் ஒத்தவராம். தேவர்களைப்போல கயவரும் மனம் போன போக்கில் தாம் விரும்பினதை செய்தலாலாம்.
அறிஞரை விட கயவர் திருவுடையராம். அறிஞருக்கு கவலை இருக்க வாய்ப்பு உண்டு. கயவருக்குத்தான் நெஞ்சத்தில் கவலையில்லையே!

ஒருத்தி சொன்னாளாம் நான் கண்ணுக்கு மை தீட்ட மாட்டேனென்று; கண்ணிலே இருக்கின்ற காதலனுக்கு உறுத்துமென்று!
மற்றொருத்தி கூறினாளாம் சூடா எதையும் குடிக்க மாட்டேன்னு; நெஞ்சத்திலே இருக்கிற காதலரை அது சுட்டுப்புடுமாம். 
பூவை தலையிலே வச்சாளாம் ஒருத்தி. இடுப்பு ஒடிஞ்சு செத்துட்டாளாம். பாவி பூவின் காம்பை எடுக்காம வச்சுட்டாளாம்!
விண்மீன்கள் எல்லாம் அந்தப்பக்கமும் இந்தப்பக்கமும் ஒரு நிலையில் இல்லாமல் கலங்கினவாம். தலைவியின் முகத்திற்கும் சந்திரனுக்கும் வித்தியாசம் புரியாமல் தான்!
தலைவியை பார்த்துவிட்டு குவளை பூ படக்குன்னு தலையை தொங்கப்போட்டுச்சு; அவளுடைய கண்ணுக்கு இணையாக மாட்டம்னு.
ஒருத்தன் தன் கண்ணின் பாவையை போகச்சொன்னானாம்; அவன் காதலியை அமரவைக்க இடம் வேணும்ல! 

உன்னை நினைச்சேன் என்றானாம்; மறந்தியான்னு அழுதாளாம்.
இந்தப்பிறவியில் பிரியமாட்டேன் என்றானாம். அடுத்து பிறப்பில் பிரிவு நேருமோன்னு கண் கலங்கினாளாம்.

தும்மிய கதையெல்லாம் சொன்னால் இந்த பதிவு நீண்டுவிடும்!. வள்ளுவர் தான் எச்சரித்துள்ளாரே, “கல்லாதவரும் மிகவும் நல்லவரென்று;’ எதுவரை? சந்தவசந்தம் பெரியோர்கள் முன்னிலையில் பேசாது அமைதியாக இருக்கும்வரையாம். ஆதலால் முடித்துக்கொள்கிறேன்.
நன்றி.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

2015-01-21 20:07 GMT+05:30 Iyappan Krishnan <jee...@gmail.com>:

Message has been deleted

ramaNi

unread,
Jan 21, 2015, 8:26:30 PM1/21/15
to santhav...@googlegroups.com
சமயத்தில் ஒத்துழையா - சிலேடை

கோவை வானொலிக்காக நடந்த நிகழ்ச்சியில் திருக்குறள்.பெ.இராமையா அவர்கள் 
பங்கேற்றபோது, அவரிடம் ஒரு புலவர், ”மின்சாரத்திற்கும் சம்சாரத்திற்கும் 
சிலேடையாக ஒரு வெண்பாவைப் பாடவேண்டும்” என்றார்.

பளிச்சென்று ஆரம்பித்த சிலேடைப் பாடலின் முதல் வரி, அனைவரையும் சிரிப்புக் கடலில் ஆழ்த்தியது.

சமயத்தில் ஒத்துழையா ஷாக்-கடிக்கும் தொட்டால்
இமைசிமிட்டும் இன்பமதை ஊட்டும் - நமைஉயர்த்தும்
தன்சாரம் குன்றாத தன்மையால் எஞ்ஞான்றும்
மின்சாரம் சம்சார மே!’

’சமயத்தில் ஒத்துழையா...’ என்பதில் ‘மின்சாரம்,சம்சாரம் இரண்டுமே எந்த நேரத்தில் 
காலை வாரும் என்று சொல்ல முடியாது. எதிர்பாரத நேரத்தில் தகராறு செய்து 
நமக்கு அதிர்ச்சியை (tension) உண்டாக்கும்.

’ஷாக் அடிக்கும் தொட்டால்...’ என்பது அடுத்த வரி, தகராறு செய்யும் சமயத்தில் 
இரண்டின் மீதும் கையை வைக்காதே. பட்...டென்று அடித்து விடும்.

’இமைசிமிட்டும்...’ அதிக அழுத்தம் (ஹைவோல்ட்), குறை அழுத்தம் காரணமாக 
மின்சார விளக்குகள் ‘ப்ளிச்..’ என எரிவதும், மங்கலாக ஒளிர்வதும் இயற்கை.
அதுபோல் வீட்டுக்கு வரும் விருந்தினரைப் பொறுத்து சுறுசுறுப்பாய் இயங்குவதும், 
மந்தமாய் இருப்பதும் சம்சாரத்தின் இயற்கை. அதாவது பிறந்த வீட்டுச் சொந்தங்களாகிய
அப்பா, அம்மா, அண்ணன், தங்கை என்று வந்தால் சுறுசுறுப்பாய்ப் ‘ப்ளிச்’சென்று மின்னும். 
புகுந்த வீட்டுச் சொந்தங்களாகிய மாமியார்,நாத்தனார் என்று வந்துவிட்டால் மந்தமாகி விடும்’.

’இன்பமதை ஊட்டும்..’ வீட்டில் மின்விசிறி சுழல, மின் அடுப்பு எரிய,
குளிர்பெட்டி குளிர, விளக்குகள் ஒளிர, மின்சாதனப் பொருட்கள் இயங்க என 
எல்லாவற்றிற்கும் மின்சார ஓட்டம் சீராக இருந்தால் நமக்கு இன்பமான 
மனநிலை தரும். அதேபோல் ஒரு குடும்பத்தின் அத்தனை இன்பங்களுக்கும் 
காரணமாய் இருந்து நமக்கு இன்பத்தை தருவது சம்சாரமே.

’நமை உயர்த்தும்...’ ஒரு வீட்டின் உயர்வுக்கும் நாட்டின் பொருளாதார உயர்வுக்கும் 
மின்சக்தி ஓர் அடிப்படைத் தேவை. அதேபோல் ஒரு குடும்பத்தின் உயர்வுக்கு 
சம்சாரம் ஓர் அடிப்படைத் தேவை

’தன்சாரம் குன்றாத தன்மையால்’ நேரம் கருதியோ, ஆளைக் கருதியோ 
மின்சாரம் தன் ஆற்றலைக் குறைத்துக் கொள்வது கிடையாது. 240-வோல்ட் 
மின்சக்தி என்றால் யார், எப்போது தொட்டாலும் ஒரே மாதிரிதான் 
மின் அதிர்ச்சி இருக்கும். அதேபோல் இல்லத்தில் எப்போதும் தன் 
மதிப்புக் குறையாமல் பார்த்துக் கொள்வது சம்சாரத்தின் இயல்பாக இருக்கும்.

மேற்கூறிய காரணங்களால் மின்சாரமும் சம்சாரமும் ஒரே இயல்புடையவை
என பாடலை முடித்தார்.பதின்கவனகர் திரு.இராமையா பிள்ளை.

*****
 

N. Ganesan

unread,
Jan 21, 2015, 10:11:29 PM1/21/15
to santhav...@googlegroups.com
ஏசுநாதர் ஏன் வரவில்லை?
பாரதிதாசன்

தலை, காது, மூக்கு, கழுத்துக், கை, மார்பு, விரல்.
           தாள், என்ற எட்டுறுப்பும்
    தங்கநகை, வெள்ளிநகை, ரத்தினமிழைத்தநகை,
           தையலர்கள் அணியாமலும்,

விலைகுறையும் ஆடைகள் அணிந்துமே கோயில்வர
          வேண்டுமென்றே பாதிரி
    விடுத்த ஓரு சேதியால் விஷமென்று கோயிலை
         வெறுத்தார்கள் பெண்கள், புருஷர்! 

நிலைகண்ட பாதிரிபின் எட்டுறுப்பே யன்றி
          நீள்இமைகள், உதடு, நாக்கு
     நிறைய நகை போடலாம், கோயிலில் முகம்பார்க்க
          நிலைக்கண்ணா டியும்உண்டென

இலைபோட் டழைத்ததும், நகைபோட்ட பக்தர்கள் 
         எல்லாரும் வந்துசேர்ந்தார்;
     ஏசுநாதர்மட்டும் அங்குவர வில்லையே,
         இனிய பாரததேசமே!

ramaNi

unread,
Jan 21, 2015, 10:22:45 PM1/21/15
to santhav...@googlegroups.com
ஏசுநாதரின் ஆலயத்திலும் மடங்களிலும் இல்லாத ஆடம்பரமா?
ரமணி

Ramamoorthy Ramachandran

unread,
Jan 21, 2015, 10:52:36 PM1/21/15
to santhav...@googlegroups.com
ஒரு மூத்த பெண்மணி ;; டாக்டர் நான் இன்னும் இளமையுடன் 
விளங்க மருந்து கொடுங்கள் 
டாக்டர் : இந்த 100 மாத்திரைகளை தினம் ஒரு மாத்திரை வீதம் 
சாப்பிடுங்கள்.(ஒரு மாதம்  கழித்து  ஓர் இளம்பெண் கைக்குழந்தை 
யுடன் வந்தாள்)
  ''டாக்டர்! நீங்கள் கொடுத்த மாத்திரையை நான் சாப்பிட்டேன் 
இப்போது இப்படி ஆகிவிட்டேன்! ஆனால் என் கணவர் இந்த 
மாத்திரையை எனக்குத் தெரியாமல் இரண்டிரண்டு சாப்பிட்டு 
இப்போது இப்படிக் கைக்குழந்தை ஆகி விட்டார். மீண்டும் 
இவர் பழைய தோற்றம் பெற மருந்து தாருங்கள்!'' என்றாள்!

அன்புடன் புலவர் இராமமூர்த்தி. 

--

ramaNi

unread,
Jan 21, 2015, 11:03:58 PM1/21/15
to santhav...@googlegroups.com
செய்குத் தம்பி பாவலர்

தமிழறிஞர், அவதானக் கலைஞர், செய்குத் தம்பி பாவலர் அவர்களின் சுவையான சிலேடைகள் 
மிக ரசிக்கத்தக்கவை. அவற்றில் சில...

1. ஒருமுறை நண்பர் ஒருவரது இல்லத்தில் நடந்த திருமணத்துக்குப் பாவலரால் செல்ல 
இயலவில்லை. மறுமுறை அந்த நண்பரைச் சந்திக்க நேர்ந்த போது திருமணத்துக்கு வர 
இயலாமைக்கு வருத்தம் தெரிவித்த பாவலர்,

'முகப்பருவரலால் மிகப்பருவரலுற்றேன். வர இயலவில்லை" என்றார்.

'முகத்தில் பரு வந்த காரணத்தால், மிகத் துன்பமுற்றேன்' என்று பருவரல் (துன்பம்) என்னும் 
சொல்லை சிலேடையாக க் கூறி அனைவரையும் ரசிக்க வைத்தார்.

2. ஒரு சமயம் பாவலர் தன் நண்பர்களோடு பேசிக் கொண்டிருக்கும் போது 'கொல்லாமை' 
என்னும் சொல் கையாளப்பட்டது.

அச்சொல்லை, கொல்+ஆ+மை எனப்பிரித்து, ஆ=பசு, மை=செம்மறி ஆடு என்று பொருள் கூறி, 
கொல்லாமை என்றால் பசுவையும், செம்மறி ஆட்டையும் 'கொல்' என்று பொருள் வருவதாகக் கூறி 
அனைவரையும் சிரிக்க வைத்தார்.

3. எப்போதும் பெருமை நாயகம் புகையிலைச் சுருட்டையே விரும்பிப் புகைக்கும் 
பழக்கமுடையவர் பாவலர். ஒரு சமயம் அவர் அதைப் பற்றவைக்கும்போது அணைந்து கொண்டே 
யிருந்த து. அப்போது அவர் கூறினார் :

'பெருமை நாயகம் புகையிலை, பெருந்தீ வைத்தும் புகையிலை!'

அவரது சிலேடையை ரசித்து அனைவரும் சிரித்தனர்.

*****
 

Ramamoorthy Ramachandran

unread,
Jan 22, 2015, 12:11:15 AM1/22/15
to santhav...@googlegroups.com
 அருமை! தொடரட்டும்...
அன்புடன் புலவர் இராமமூர்த்தி .

--

ramaNi

unread,
Jan 22, 2015, 12:18:20 AM1/22/15
to santhav...@googlegroups.com
பனிக்காலம்

பண்டைய புலவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் போது அதிக சிலேடை நயம் ததும்ப 
பேசிக்கொள்ளுவது உண்டு . அதனைக் கேட்போருக்கு முதலில் புரியவில்லை என்றாலும் ,
அதன் பொருள் தெரிந்த பின்பு அப்பொருளினைச் சுவைத்து மகிழ்வர்.

ஒருமுறை யாழ்பாணத்துப் புலவரும் உரைநடையின் தந்தை என்று சிறப்பிக்கப்படுபவருமான 
ஆறுமுக நாவலர் அவர்கள் , மீனாட்சி சுந்தரம் பிள்ளை(உ.வே.சா வின் ஆசிரியர்) அவர்களை 
மதுரையில் சந்தித்தார்.அப்போது இருவரும் அளாவி மகிழ்ந்தனர். மறுநாள் காலை அவர்கள் 
இருவரும் தம் மாணக்கருடன் ஆற்றுக்கு நீராடச் சென்றனர்.அது பனிக்காலம். பனிக்கொடுமையால் 
மிகுதியாக வாடிய ஆறுமுக நாவலர் அவர்கள் பிள்ளையை நோக்கி ஐயா பனிக்காலம் 
மிகக் கொடிது என்றார்.

உடனே பிள்ளை அவர்கள் ஆம் என்று கூறாமல்.நான் பனிக் காலம் நல்லது என்பேன் என்றார்.

மாணவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.ஆறுமுக நாவலரோ பனிக் காலம் கொடுமை என்று கூற 
பிள்ளை அவர்களோ பனிக்காலம் நல்லது என்று கூறுகிறார்களே ஏதேனும் உட்பொருள் இருக்குமோ 
என்று எண்ணி மாணவர்கள் அவரை நோக்க பிள்ளை அவர்க்ள நான் ஆறுமுக நாவலர் அவர்கள் 
கூறியதை மறுக்கவில்லையே ,அவர் பனிக்காலம் மிகக் கொடிது என்றார்.

பனிக்கு ஆலம் மிகவும் நல்லது என்றேன் நான்.ஆலம் என்றால் விடம் தானே! இப்பனிக் கொடுமைக்கு
விடம் நல்லது என்பது தானே என் உரை என்றார். (விடம் = சுக்கின்தோல். சீரமிர்தம் )

ஒரு எளிய உரையாடலுக்குள் இத்தனைப் பொருள் பொதிந்துள்ளதா என்று மாணவர்கள் வியந்தார்களாம்.

*****

N. Ganesan

unread,
Jan 22, 2015, 8:44:19 AM1/22/15
to santhav...@googlegroups.com

ஒருநாள் இரவு மதுரையில் பசியால் வாடிக்
கொசுக்கடியால் தொல்லைபட்டபோது காளமேகம் பாடியது:

மசகம் இசைகாட்ட மாடுமணி காட்ட
நிசியும் ஒருக்காலை நீட்டப் - பசியால்
வாடினேன் வாடி மனம்தளர்ந்து நான்உன்னைத்
தேடினேன் தென்னவரா யா!

N. Ganesan

unread,
Jan 22, 2015, 7:52:43 PM1/22/15
to santhav...@googlegroups.com
ராசாமகன் ஒருவன் வந்து வேடுவச்சி ஒருத்தியைப் பெண்கேட்க
அவர்கள் ராசா அரண்மனைக்குப் பெண்கொடுத்து பலர் பட்டபாடு
போதாதா? எங்களிடம் வந்து எச்சில்சோறு உண்டார் சிவபிரான்,
அதற்கப்புறம் அவர் பெற்ற பிள்ளை முருகன். அவன் எங்கள்
பெண் வள்ளியிடம் பல ஜாலமும், வேடமும் காட்டினான்.
போனால் போகுதென்று பெண் கொடுத்தோம் என்கிறான்
வேடர்குலத் தலைவன். வெங்கைக்கோவைச் சுவடிகளில்
கடைசியாக இருக்கும் தனிப்பாடல் இது. கற்பனைக்களஞ்சியம்
என்று புகழப்பெற்ற துறைமங்கலம் சிவப்பிரகாச அடிகள் பாடல்:

   பெற்ற பிள்ளை கொடுப்பரோ!

விற்றதார்? கலை பாதியோடு 
          வனத்திலே அழவிட்டதார்?
    வெஞ்சிறை புக விட்டதார்? 
           துகில் உரியவிட்டு விழித்ததார்?
உற்றதாரமும் வேண்டும் என்றினி 
            மன்னர் பெண்கொளல் ஒண்ணுமோ!
    உமியடா! மணமென்ற வாய்கிழித்து
           ஓலை காற்றில் உருட்டடா!
வெற்றியாகிய முத்தி தந்தருள்
           வெங்கை மாநகர் வேடர்யாம்!
    விமலரானவர் எமையடுத்து இனிது
            எங்கண் மிச்சில் மிசைந்தபின்
பெற்றவேலர் தமக்கு யாமொரு
           பெண் வளர்ப்பினில் ஈந்தனம் -
    பெற்றபிள்ளை கொடுப்பரோ! ஈதென்
           பேய் பிடித்திடு தூதரே!! 
                                                    - துறைமங்கலம் சிவப்பிரகாசர்


பிள்ளை - பெண்பிள்ளை - கொங்குநாட்டுவழக்கு.
நா. கணேசன்


ramaNi

unread,
Jan 22, 2015, 8:05:55 PM1/22/15
to santhav...@googlegroups.com
நாரணன் - பழைய சோறு சிலேடை

முக்கூர் ஸ்ரீ லக்ஷ்மி நரசிமாச்சாரியாரின் “குறைவொன்றும் இல்லை" முதல் பாகம்
படித்துக் கொண்டிருந்திருக்கும் போது, அதில் பழையதுக்கும்(பழைய சோறு) ஸ்ரீமன்
நாராயணனுக்கும் ஒரு கவிஞர் சிலேடை புனைந்திருப்பதாக எழுதியிருப்பதைப் படித்தேன். 
அதன் பொருள் மட்டும் கூறியிருக்கிறார். மூலப் பாடல் யாரிடம் இருக்கிறதோ தெரியாது. 
இந்தக் கருத்தை அடிப்படையாக வைத்து நாமே ஏன் ஒரு சிலேடை வெண்பா எழுதக்கூடாது 
என்று தோன்றிய எண்ணத்தின் எழுந்ததுதான் இந்த முயற்சி. வெறும் வெண்பாவாக எழுதினால் 
எல்லோருக்கும் ரசிக்காது என்பதனால், கூடவே ஒரு கற்பனைக் கதையும் கூட்டி எழுதினேன். 

மேலே கூறிய கருத்தில், நாராயணன் என்ற பொருளுக்கு விளக்கம் தருமிடத்தில் இந்தச்சிலேடை 
பற்றிக் குறிப்பிட்டதால், பழஞ்சோறும் நாராயணனும் என்ற தலைப்பு பொருந்தி வந்தது. 
அந்தப் பழம்பாடலில் கூறிய கருத்து என்ன? இதோ கீழே பார்க்கலாம். 

இது பழையது
அவனும் புராண புருஷன்
ராத்திரி முழுதும் சாதம் தண்ணீரிலே இருக்கிறது.
அவனும் ஜலத்திலேதான் படுத்துக்கொண்டிருக்கிறான்
பழையதின் பெருமை அதை அனுபவித்து உணர்ந்த சிலருக்கே தெரியும்
“என்னை உள்ளபடி உணர்கிறவர்கள் ஒரு சிலரே “ என்றான் பரமாத்மா கீதையிலே
பழையதை அதிகாலையில் சாப்பிடவேண்டும்
எம்பெருமானையும் அதிகாலையிலே தியானம் பண்ணவேண்டும்

மூலக் கருத்து இங்கிருந்து வந்தாலும், என்னுடைய பங்கிற்கு, அன்னம், மாவடு போன்றவற்றைச் 
சேர்த்து சற்றே மாற்றி அமைத்தேன்.

இப்போது பாடலின் பொருளைக் காண்போம்.

நீரில் கிடந்தவண்ணம் நிர்மலமாய்க் காட்சிதரும்
தாரணி வாழ்விக்கும் அன்னமாம்-சாரப்
பொருள்தேறும் போற்றும் பழமையால் சோறும்
எருதேழ் அடர்த்த இறை

நாராயணன்: 
நீரில் கிடந்த வண்ணம்- நீரில் பள்ளி கொண்டிருப்பான்; அல்லது நாரங்களையே தனது 
  இருப்பிடமாகக் கொண்டவன்; அதாவது நாராயணன்
நிர்மலமாய்க் காட்சிதரும்- குற்றமற்றவனாய் இருப்பவன்
தாரணி வாழ்விக்கும்- காத்தலாகிய தொழிலைச் செய்பவன்
சாரப்பொருள்தேறும் அன்னமாம்-ஹம்ஸாவதாரத்தில் வேதத்தின் சாரப்பொருளாகிய 
  வேதத்தை உபதேசம் செய்தவன்
போற்றும் பழமையால்- வேதங்கள், உபநிடதங்களால் 'புராண புருடோத்தமன்' என்று போற்றப்படுபவன்
எருதேழ் அடர்த்த இறை; ஏழு எருதுகளை அடக்கி நப்பின்னைப் பிராட்டியின் கைத்தலம் 
  பற்றிய கண்ணனாகிய எம்பெருமான் நாராயணன்.

பழைய சோறு:
நீரில் கிடந்த வண்ணம்- இரவெல்லாம் நீரில் கிடக்கும்
நிர்மலமாய்க் காட்சிதரும்- குற்றமற்றதுபோல் வெண்மையாய்க் காட்சி தரும்
தாரணி வாழ்விக்கும் அன்னமாம்- உலகத்தாரின் பசியைப் போக்கி வாழ்வுக்கு 
  ஆதாரமாய் இருக்கும் உணவாகும்
சாரப்பொருள்தேறும்-மக்கள் உணவில் முக்கிய பங்கு வகிக்கும் 
போற்றும் பழமையால்-பழமையான காரணத்தால் உண்பவர்கள் ''ஆஹா" என்று விரும்பி உண்பர்

வேறொரு இணைய இழையில் இதற்கு பின்னூட்டாக சிவசிவ என்ற அன்பர் ஒரு சிலேடை இட்டார். கீழே காண்க.

நீரில் துயில்கொள்ளும் காலை நினைப்பரன்பர்
பேரில் பெரும்தொன்மை கொண்டிருக்கும் - பார்பிசைந்(து)
உண்ணலுண்(டு) உள்ளியோர் பக்கமிருக் கும்காக்கும்
கண்ணன் பழையது காண். 

சௌந்தர்

*****
 

ramaNi

unread,
Jan 23, 2015, 8:08:12 AM1/23/15
to santhav...@googlegroups.com
மூதறிஞரின் சிலேடை

நேருவுடன் கருத்து வேறுபாடு கொண்டு மூதறிஞர் ராஜாஜி ' சுதந்திரா ' கட்சியை உருவாக்கினார் . 
அக்கட்சியின் முதல் மாநாடு தஞ்சை யாகப்பா திரையரங்குத் திடலில் விமரிசையாக நடந்தது .

மாநாடு முடிந்து 9.15 மணிக்கு ( இரவு ) தஞ்சை ரயிலடிக்கு வந்து விட்டார் ராஜாஜி . பயணிகள் 
ஒய்வறையில் உட்காராமல் கைத்தடியை ஊன்றியபடி நடைமேடையில் நின்றிருந்தார் . தஞ்சை நகர 
சுதந்திரா கட்சி பிரமுகர் சாமிநாதனும் பக்கத்தில் இருந்தார்.

கட்சித் தொண்டர்களில் சிலர் புகைவண்டி நிலைய கண்காணிப்பாளர் அறைக்குச் சென்று 
இரும்பு மடக்கு நாற்காலி வேண்டும் எனக் கேட்டனர்.அவர் யாருக்கு என அவர்களைத் திருப்பிக் 
கேட்டாராம் . தொண்டர்கள் மூதறிஞர் ராஜாஜி அவர்களை உட்கார வைக்கத் தான் என்றனர் . 
அவருக்கென்றால் நான் தரமாட்டேன் . ஏனெனில் என் வேலை போய் விடும் என 
தொண்டர்களிடம் சொன்னாராம் .

பின் தொண்டர்கள் ரயில் நிலையம் அருகிலுள்ள மருந்து கடையின் உரிமையாளர் ஒருவரிடமிருந்து 
பெற்றனராம் . தொண்டர்கள் அங்கும் இங்கும் அலைவதை கவனித்த ராஜாஜி சாமிநாதனைப் பார்த்து 
என்ன நடக்கிறது இங்கே எனக் கேட்டாராம் .

தங்களை உட்கார வைப்பதற்கு தான் தொண்டர்கள் நாற்காலியைத் தேடி அலைகிறார்கள் என்றாராம் 
சாமிநாதன்.  அப்போது ராஜாஜி ' சாமிநாதன் ... நம் கட்சிப் பிரமுகர்களோ ... தொண்டர்களோ எப்போதும் 
நாற்காலியைத் தேடி அலைய வேண்டாம் ' என்றாராம் .

*****


ramaNi

unread,
Jan 23, 2015, 11:31:12 PM1/23/15
to santhav...@googlegroups.com
வாரியார் பேச்சின் நகைச்சுவைகள்

இலக்கியன்:
கடைசிப் பிள்ளை

கிருபானந்தவாரியார் பாரதம் சொல்லிக் கொண்டு இருந்தார். சகாதேவன் பற்றி 
சொல்ல வேண்டி வந்தது.

"சகாதேவன் கடைசிப் பிள்ளை. கடைக்குட்டி. அவன் சிறந்த ஞானி. பொதுவாகவே 
கடைக்குட்டிகள் ஞானியாக இருப்பார்கள். காரணம் அப்பனுக்கு ஞானம் வந்த பிறகு 
பிறக்கிறவன் கடைக்குட்டி பிள்ளை :) அல்லது இவன் பிறந்த பிறகு அப்பன் ஞானியாகி 
விடுவான். என்ன ஞானம் என்கிறீர்களா? இனி குழந்தை பெறவே கூடாது என்ற ஞானம்."

இவ்வாறு விளக்கிய வாரியார் கூட்டத்தினரை பார்த்து, " இங்கே யாராவது கடைக்குட்டிப் 
பிள்ளைகள் இருக்கிறீர்களா?" என்று கேட்டார். 10 அல்லது 15 சிறுமியர்கள் எழுந்து நின்று 
தாங்கள் கடைக்குட்டிகள் என்றார்கள்.

வாரியர் வாயைப் பொத்திக் கொண்டு சிரித்துவிட்டு. "உட்காருங்க! யார் எந்த விஷயத்தை
 முடிவு செய்றதுன்னு கிடையாதா? உங்களோட அம்மா அப்பா என்ன முடிவுல இருக்காங்களோ. 
வீட்டுக்குப் போய் உதை வாங்காதீங்க" என்றார்.

*****

சொல்லின் செல்வர்

ஒரு ஊரில் கிருபானந்த வாரியார் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தார். 
அவர் மிகுந்த சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருந்தபோது பாதியில் 
ஒவ்வொருவராக எழுந்து போய்க் கொண்டிருந்தனர்.

அவர்களைப் பார்த்து வாரியார் சொன்னார், ''ராமாயணத்தில் அனுமனை 
சொல்லின் செல்வர் என்று குறிப்பிடுவார்கள். இந்த ஊரிலும் சொல்லின் செல்வர்கள் 
பலர் இருப்பதைப் பார்க்கிறேன்.''என்றார்.

போய்க்கொண்டிருந்தவர்கள் யாரை சொல்லப் போகிறார் என்று தெரிந்து கொள்ள 
ஆவலுடன் நின்றனர்.

வாரியார் தொடர்ந்தார், ''நான் நல்ல பல விஷயங்களைச் சொல்லின் அதைக் கேட்காமல் 
செல்பவரைத் தான் சொல்கிறேன் .''

*****

தர்மத்துக்கு என் சொத்து

ஒரு ஊரில் மிகப் பெரிய செல்வந்தர் வாழ்ந்து வந்தார். ஆனால் அவர் 
மிகவும் கருமியாக கஞ்சத்தனத்துடன் வாழ்ந்து வந்தார்.

அந்த ஊரில் நடைபெறும் கோவில் சீரமைப்பு, பள்ளிக் கட்டடம் கட்டுதல், 
கிராம மேம்பாடு போன்ற பல நல்ல செயல்பாடுகளுக்காக ஊர் பொதுமக்கள் 
பலமுறை போய் கேட்டும் ஒரு பைசா கூட கொடுக்காதவர்.

தீடிரென படுக்கையில் விழுந்தவர் சாகும் தருவாயை அடைந்தார். 
உடனே ஊர் பொதுமக்களை அழைத்து "எனக்குப் பிறகு எனது சொத்துக்கள்
 அனைத்தும் தருமத்திற்கே!" என்றார்.

ஊர் மக்களுக்கெல்லாம் அதிர்ச்சி, ஆச்சரியம்.

உடனே அங்கிருந்த ஊர் முக்கிய பிரமுகர் செல்வந்தரிடம், "ஐயா! உங்கள் 
சொத்துக்கள் அனைத்தும் தருமத்திற்கு தர ஒப்புக் கொண்டதற்கு மிக்க நன்றி! 
இந்த சொத்துக்களை கல்வி வளர்ச்சிக்காக உபயோகிக்கலாமா? அல்லது 
மருத்துவமனை கட்ட உபயோகிக்கலாமா?" என்று கேட்டார்.

அதற்கு அந்த பெரியவர் "அட நீங்க ஒண்ணு, இந்த சொத்துக்கள் அனைத்தும் 
எனது மனைவி தருமம் என்கிற தருமாம்பாளுக்கே சொந்தம்” என சொன்னாராம்.

*****

மழை வந்தது ஏன்?

வடசென்னையில் உள்ள விநாயகர் கோவிலில் வாரியார் சொற்பொழிவுக்கு
 ஏற்பாடு செய்திருந்தார்கள். ஏராளமான பக்தர்கள் சொற்பொழிவு நடைபெறும்
 இடத்தில் இடம் பிடித்து அமர்ந்து விட்டார்கள்.  வாரியார் வருகைக்காக 
அவர்கள் காத்திருந்தனர்.

அந்த நேரத்தில் திடீரென்று மழை. வந்தவர்கள் அனைவரும் கோவிலுக்குள் சென்று 
மிக நெருக்கமாக அமர்ந்திருந்தார்கள். சொற்பொழிவாற்ற வந்த வாரியார், 
தான் பேசும்போது, எடுத்த எடுப்பிலேயே அதுபற்றி குறிப்பிட்டு பேச ஆரம்பித்தார்.

"கந்தபுராண சொற்பொழிவு, கந்தபுராண சொற்பொழிவு என்று வால் போஸ்டரை 
வருணலோகம் வரை ஒட்டிவிட்டார்கள், நிகழ்ச்சி ஏற்பாடு செய்த அன்பர்கள்.

வருண பகவான் பார்த்தார்: “ஆ! சூர பத்மனின் சிறையில் இருந்து நம்மை விடுவித்த 
முதல்வன் (முருகன்) கதை அல்லவா இது? நாமும் கேட்க வேண்டுமே என்று அவரே 
வந்து விட்டார். அது தான் மழை!” என்று வாரியார் குறிப்பிடவும், எல்லோரும் 
வாய்விட்டு சிரித்து கைதட்டிவிட்டனர்.

கைத்தட்டல் அடங்கியதும், "நீங்கள் எல்லோரும் நெருக்கமாகவும், ஒற்றுமையாகவும் 
இருக்க வேண்டும். அதனால் தான், திறந்தவெளியில் இருந்த உங்களை நெருக்கமாக 
அமரும்படி செய்து விட்டார் வருண பகவான்" என்று வாரியார் மேலும் குறிப்பிட்டபோது, 
மீண்டும் கைத்தட்டல் எழுந்து அடங்கியது.

*****
 

ramaNi

unread,
Jan 24, 2015, 6:54:09 AM1/24/15
to santhav...@googlegroups.com
'பருவரல்' சிலேடை பற்றி செய்குதம்பிப் பாவலர் சொன்னதாக இணையத்தில் படித்ததைக் குறித்திருந்தேன்.
உண்மையில் அது தாண்டவராயத் தம்பிரான் அவர்களின் கடிதத்தில் உள்ளது என்று உ.வே.சா-வின்
'ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம்' புத்தகத்திலிருந்து தெரிகிறது.

நிழற்படம் கீழே:

ரமணி

ramaNi

unread,
Jan 24, 2015, 9:48:27 AM1/24/15
to santhav...@googlegroups.com
இரட்டைப் புலவரும் காளமேகமும்

நாணென்றால் நஞ்சிருக்கும் நற்சாபம் கற்சாபம்
பாணந்தான் மண்டின்ற பாணமே - தாணுவே
சீராரூர் மேவும் சிவனே நீயெப்படியோ
நேரார் புரமெரித்த நேர்.

ஆசு கவியால் அகில உலகும்
வீசு புகழ்க்காள மேகமே- பூசுரா
விண்கொண்ட செந்தழலில் வேகுதே ஐயையோ!
மண்தின்ற பாணம்என்ற வாய்.'

மேலுள்ள இரண்டு வெண்பாக்களைப் பற்றிய வரலாறு இங்கே:

*****


N. Ganesan

unread,
Jan 24, 2015, 2:58:34 PM1/24/15
to santhav...@googlegroups.com, சௌந்தர், மின்தமிழ், vallamai


On Thursday, January 22, 2015 at 5:05:55 PM UTC-8, ramaNi wrote:
நாரணன் - பழைய சோறு சிலேடை

முக்கூர் ஸ்ரீ லக்ஷ்மி நரசிமாச்சாரியாரின் “குறைவொன்றும் இல்லை" முதல் பாகம்
படித்துக் கொண்டிருந்திருக்கும் போது, அதில் பழையதுக்கும்(பழைய சோறு) ஸ்ரீமன்
நாராயணனுக்கும் ஒரு கவிஞர் சிலேடை புனைந்திருப்பதாக எழுதியிருப்பதைப் படித்தேன். 
அதன் பொருள் மட்டும் கூறியிருக்கிறார். மூலப் பாடல் யாரிடம் இருக்கிறதோ தெரியாது. 

முக்கூரார் எழுதிய வாசகங்கள் தரமுடியுமா? தந்தால் மூலப் பாடலைத் தேட எளிதாயிருக்கும்.

நாரணன், பழையசோறு, இன்னுஞ் சிலவற்றை இணைத்து அந்தகக்கவி வீரராகவமுதலியார்
பாடிய பாடல் தெரியும்:

இவர் கட்டுச்சோற்றை நாய் கவர்ந்த போது, இவர் கூறிய கட்டளைக்கலித்துறை.

சீராடை யற்ற வயிரவன் வாகனஞ் சேரவந்து 
பாராரு நான்முகன் வாகனந் தன்னைமுன் பற்றிக்கவ்வி 
நாரா யணனுயர் வாகன மாயிற்று நம்மைமுகம் 
பாரான்மை வாகனன் வந்தே வயிற்றினிற் பற்றினனே

மைவாகனன் - அக்கினி

In English,
"The following verse is also from Andhakak Kavi Veeraraaghava Mudaliar, a blind poet.  While on travel, he had a bundle of food.
But as soon as he kept it down a dog came and picked the food and rushed like an eagle swiftly.  He had no food and his food
was burning with acute hunger.  This simple incident, he expresses beautifully in a verse using various similes.


சீராடை அற்ற வைரவன் வாகனம் சேர வந்து
பாராரு நான் முகன் வாகனம் தன்னை முன் பற்றிக் கௌவி
நாராயணன் உயர் வாகனம் ஆயிற்று நம்மை முகம்
பாரான்மை வாகனன் வந்தே வயிற்றினில் பற்றினனே.

The one who does not have proper clothing, (Bhairva, Siva), his vehicle (dog) came swiftly and took away by bundle of food, annam.
This the poet says as the vehicle of four faced Brahma (annam) was lost.  That dog then ran away quickly as eagle, which is the
vehicle of Narayana.  And I am suffering from fiery hunger. Here the poet says the mai vakanan - one who has got the vehicle
of goat, the Agni.  The hunger is making suffer as if agni (fire) is catching his stomach.  O Lord, will you not show compassion to me?

Arunachala Siva.   "
---------------------------

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jan 24, 2015, 5:21:51 PM1/24/15
to santhav...@googlegroups.com, rsou...@gmail.com, minT...@googlegroups.com, vall...@googlegroups.com, MarabinMaindan Muthiah

கோவைக் கவிஞர் மரபின்மைந்தன் முத்தையா
பழைய சோற்றுக்கும், நாரணனுக்கும் 3 வெண்பா தந்தார்கள்:

கொண்டதோ குள்ளவுரு கேட்டதோ மூன்றடி
அண்டங்கள் எல்லாம் அபகரித்தோன் -விண்டதோ
பண்டோர் இரணியனை பின்னர் சிவதனுசை
உண்டதோ அண்டவுருண் டை.

மொத்தப் பிரபஞ்சங்கள் முக்கி விழுங்கியவன்
சத்தமின்றி வெண்ணெயும் சேர்த்துண்டான் -வித்தகன்
வஞ்சமுலைப் பாலுண்டான் வஞ்சியாம் ராதையைக்
கொஞ்சி இதழுண்ணுங் கோ.

2015-01-24 9:40 GMT+05:30 MarabinMaindan Muthiah <marabin...@gmail.com>:
சாதம் பழையதொக்கும் சாரங்கா வல்வினையின்
சேதம் பழையதடா சீர்மிக்க - பாதம்
பலதோஷம் தீர்க்கும் பழையதே யன்றோ
ஜலதோஷம் இல்லாத ஶ்ரீ 

துய்த்தருள்க! Enjoy!
நா. கணேசன்

ramaNi

unread,
Jan 24, 2015, 10:20:35 PM1/24/15
to santhav...@googlegroups.com
சிலேடைச் சிதறல்
(http://minnalvarigal.blogspot.com/2011/12/blog-post_07.html)கள்

ஒரு மடாதிபதி தமிழ்ப் புலவர்களை எல்லாம் அழைத்து விருந்து ஒன்று 
வைத்தாராம். எல்லா ஊர்களில் இருந்தும் புலவர்கள் வந்து விருந்தில் 
அமர்ந்தனர். ஸ்ரீவைகுண்டம் என்ற ஊருக்குப் பக்கத்தில் கடைமடை 
என்ற ஊர் இன்றைக்கும் இருக்கிறது. அவ்வூரைச் சேர்ந்த புலவர் ஒருவர் 
விருந்திற்கு மிகத் தாமதமாக வந்து சேர்ந்தார்.

மடாதிபதி அவரை வரவேற்கும் விதமாக, “வாரும் கடைமடையரே!’ 
என இருபொருள்பட அழைத்தாராம்.  வந்த புலவர் லேசுப்பட்டவரல்ல... 
அவரும் பதிலுக்கு, “வந்தேன் மடத்தலைவரே...” என்றாராம். 

*****

பெரும் புலமை பெற்ற ஒருவர் பாட்டுப் பாடுவதிலும் வல்லமை பெற்றிருந்தார். 
அவர் தன் ஊரில் கடைத்தெருவுக்கு ஒருநாள் வந்தபோது, அவரைப் பற்றிக் 
கேள்விப்பட்டிருந்த கிராமத்து ஆசாமி ஒருவன் அவரை நெருங்கி, 
'ஐயா, நான் உங்களைப் பாடையில பார்க்கணும்' என்றானாம். 
'பாடும்போது பார்க்க வேண்டும்' என்பதை அப்படிச் சொல்லியிருக்கிறான். 
அவரும் அசராமல், 'அப்ப சாகையில வந்து பார்' என்றாராம். 'சாகை' (ஜாகை) 
என்பது இருப்பிடத்தைக் குறிக்கும். வீட்டில் வந்து பார் என்பதை இப்படி 
அழகாக சிலேடையில் கூறிச் சென்றுள்ளார் புலவர்.

*****

வயதான புலவர் ஒருவர் கம்பு ஒன்றினை ஊன்றிக் கொண்டு தள்ளாடியபடி 
வந்து  கொண்டிருந்தார். அவரைக் கண்ட கஞ்சப்பிரபு ஒருவர் கேலியாக, 'வாரும் கம்பரே...' 
என்றாராம். கம்பரைப் போன்ற புலவர் என்றும் கம்பை ஊன்றியவரே என்றும் பொருள் 
கொள்ளும்படி அவர் பேச, இவரும் உடனே தயங்காது கம்பைச் சற்று ஓங்கி, 
'அடியேன் வணக்கம்' என்றாராம்.

*****
 

ramaNi

unread,
Jan 24, 2015, 10:36:37 PM1/24/15
to santhav...@googlegroups.com, rsou...@gmail.com, minT...@googlegroups.com, vall...@googlegroups.com
முக்கூராரின் பழைய சாத வருணனை இங்குள்ளது. ஆயின், கவிதை பற்றிய குறிப்பு இல்லை.

ரமணி

N. Ganesan

unread,
Jan 25, 2015, 9:37:06 PM1/25/15
to santhav...@googlegroups.com, rsou...@gmail.com, minT...@googlegroups.com, vall...@googlegroups.com


On Saturday, January 24, 2015 at 7:36:37 PM UTC-8, ramaNi wrote:
முக்கூராரின் பழைய சாத வருணனை இங்குள்ளது. ஆயின், கவிதை பற்றிய குறிப்பு இல்லை.

ரமணி

நன்றி, திரு. இரமணி.

நா. கணேசன்
 

N. Ganesan

unread,
Jan 25, 2015, 9:46:33 PM1/25/15
to santhav...@googlegroups.com, minT...@googlegroups.com, vall...@googlegroups.com


On Sunday, January 25, 2015 at 6:37:06 PM UTC-8, N. Ganesan wrote:


On Saturday, January 24, 2015 at 7:36:37 PM UTC-8, ramaNi wrote:
முக்கூராரின் பழைய சாத வருணனை இங்குள்ளது. ஆயின், கவிதை பற்றிய குறிப்பு இல்லை.


இங்கே பயன்பட்டுள்ளது,
பகவானும் பழைய சாதமும்: சிவாலயங்களில் சிவலிங்கத்துக்கு அன்னாபிஷேகம் செய்கிறார்கள். இதுபோல் பெருமாளையும் பழைய சாதத்துடன் ஒப்பிடுவார்கள். பழையது சாப்பிடும் பழக்கம் இப்போதும் சிலரிடம் இருக்கிறது. கிராமங்களுக்குப் போனால், முதல்நாள் மீந்துபோன சோறை, தண்ணீரில் போட்டு விடுவார்கள். காலையில் எழுந்ததும், சோறு ஊறிய நீரைக் குடிப்பார்கள். இதற்கு "நீராகாரம் என்று பெயர். பின், பழைய சாதத்தை சாப்பிடுவார்கள். இது காலை வெயிலைத் தாங்கும் சக்தியைத் தரும். "பழையதும் பகவானும் ஒண்ணு தான். எப்படி தெரியுமா? பழையதும் விடிய விடிய ஜலத்தில் கிடக்கிறது. நாராயணன் கடலிலேயே படுத்திருக்கிறார். பழையதை காலையில் சாப்பிட வேண்டும். பகவானையும் காலையில் வணங்க வேண்டும். பழையதைப் போல நாராயணனும் நாரம் (தண்ணீர்) சூழ இருக்கிறார். நாரம் சூழ உள்ளதால் தான் அவனை "நாராயணன் என்கிறோம்.
 
நாளப்பன்/நாளணன் > நாரணன். நள்/நாள்- ‘கருமை, இருள்’ என்னும் தாதுவேர்.

N. Ganesan

unread,
Jan 25, 2015, 9:58:55 PM1/25/15
to santhav...@googlegroups.com, minT...@googlegroups.com, vall...@googlegroups.com


On Saturday, January 24, 2015 at 7:36:37 PM UTC-8, ramaNi wrote:
முக்கூராரின் பழைய சாத வருணனை இங்குள்ளது. ஆயின், கவிதை பற்றிய குறிப்பு இல்லை.


இங்கே பயன்பட்டுள்ளது,
பகவானும் பழைய சாதமும்: சிவாலயங்களில் சிவலிங்கத்துக்கு அன்னாபிஷேகம் செய்கிறார்கள். இதுபோல் பெருமாளையும் பழைய சாதத்துடன் ஒப்பிடுவார்கள். பழையது சாப்பிடும் பழக்கம் இப்போதும் சிலரிடம் இருக்கிறது. கிராமங்களுக்குப் போனால், முதல்நாள் மீந்துபோன சோறை, தண்ணீரில் போட்டு விடுவார்கள். காலையில் எழுந்ததும், சோறு ஊறிய நீரைக் குடிப்பார்கள். இதற்கு "நீராகாரம் என்று பெயர். பின், பழைய சாதத்தை சாப்பிடுவார்கள். இது காலை வெயிலைத் தாங்கும் சக்தியைத் தரும். "பழையதும் பகவானும் ஒண்ணு தான். எப்படி தெரியுமா? பழையதும் விடிய விடிய ஜலத்தில் கிடக்கிறது. நாராயணன் கடலிலேயே படுத்திருக்கிறார். பழையதை காலையில் சாப்பிட வேண்டும். பகவானையும் காலையில் வணங்க வேண்டும். பழையதைப் போல நாராயணனும் நாரம் (தண்ணீர்) சூழ இருக்கிறார். நாரம் சூழ உள்ளதால் தான் அவனை "நாராயணன் என்கிறோம்.
 
நாளப்பன்/நாளணன் > நாரணன். நள்/நாள்- ‘கருமை, இருள்’ என்னும் தாதுவேர்.


உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும்வெற் றிலையுமெல்லாம்

கண்ணன், எம்பெருமான் னென்றென் றேகண்கள் நீர்மல்கி,

மண்ணினுள் அவன்சீர் வளம்மிக் கவனூர் வினவி,

திண்ண மென்னிள மான்புகு மூர்திருக் கோளூரே.

ramaNi

unread,
Jan 25, 2015, 10:00:26 PM1/25/15
to santhav...@googlegroups.com, rsou...@gmail.com, minT...@googlegroups.com, vall...@googlegroups.com
ராமநாதபுரம் சேதுபதி மன்னரின் சபையில் ஒருநாள் தமிழ்ப் புலவர் சபை கூடியிருந்தது. 
எல்லாப் பகுதிகளில் இருந்தும் புலவர்கள் வந்திருந்தனர். மன்னரும் சபைக்கு வந்து 
அமர்ந்தார். சபை தொடங்குவதற்குமுன் தாமதமாக வேம்பத்தூரைச் சேர்ந்த 
'வெண்பா பாடுவதில் புலி' என்று அழைக்கப்பட்ட பிச்சுவையர் வந்து சேர்ந்தார்.

அவரைப் பார்த்த மன்னர் சிலேடையாக, 'வேம்புக்கு இங்கு இடமில்லை' என்றாராம். 
'வேம்பு' என்றால் கசப்பு. இந்த இனிய சபையில் கசப்புக்கு இடமில்லை என்றும், 
வேம்பத்தூரைச் சேர்ந்த உமக்கு இடமில்லை என்றும் இருபொருள் கொள்ளலாம்.

புலவர் விடுகிற ரகமா என்ன..? சட்டென்று சற்றும் தயங்காது வெகுவேகமாக வந்து 
மன்னரின் சிம்மாசனத்தின் அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு, 
'வேம்பு அரசோடுதான் இருக்கும்' என்றாராம். அதாவது வேம்பு என்று தன்னை 
மன்னன் சொன்னதும், அரசனும், வேம்பாகிய தானும் சேர்ந்தே இருப்போம் என்றும், 
வேப்ப மரமும், அரச மரமும் சேர்ந்து இருந்தால் அது கோவிலாகும் என்றும் 
இருபொருள்படக் கூறினாராம். சபையே வியந்து சிரிக்க, மன்னரும் சிரித்து மகிழ்ந்தாராம்.

*****

பேரறிஞர் அண்ணா அவர்கள் ஒரு கூட்டத்தை முடித்துவிட்டு அடுத்த கூட்டத்தில் 
பேசுவதற்கு அவசரமாகக் கிளம்பினார். அவரோடு சில நண்பர்களும் காரில் 
ஏறிக் கொண்டனர். அண்ணா, டிரைவரிடம், “தம்பி, விரைவாக வண்டியை 
ஓட்டுவாயா?” என்று கேட்டார்.

டிரைவரும் உடனே, “கவலைப்படாதீங்கய்யா... ஒரு நொடியில கொண்டு போய் 
விட்டுடறேன் பாருங்க...” என்றிருக்கிறார். அவர் காரை மிக வேகமாக ஓட்டிச் 
சென்றதில் சாலையில் ஒரு பள்ளம் இருப்பதைக் கவனிக்காமல் போக, கார் பள்ளத்தில் 
இறங்கி உருண்டது. அனைவரும் காரைவிட்டு வெளியே வர, நல்லவேளையாக 
யாருக்கும் அதிகமாகக் காயம் இல்லை.

அனைவரும் கோபமாக டிரைவரை திட்டத் தொடங்க, அண்ணா அவர்களை 
கையமர்த்தி விட்டு இப்படிக் கூறினாராம்: ”நாம கிளம்பறப்பவே அவர்தான் 
சொன்னார்ல... ஒரு ‘நொடி’யில விடறேன்னு. சொன்னபடி விட்டுட்டார். விடுங்க...” 
நொடி என்பதற்கு வினாடி, பள்ளம் என்று இரு பொருள் உண்டு. இப்படி 
அண்ணா சொன்னதும் அனைவரும் கவலை மறந்து சிரித்து விட்டார்களாம்.

*****

கவியரசு வைரமுத்து ஒருமுறை தன் சொந்த ஊரான வடுகபட்டிக்கு வந்திருந்தார். 
அவர் என் இனிய நண்பர் ஆதலால் நான் அவரை அடிக்கடி சந்தித்துப் பேசுவது 
வழக்கம். அவருக்கு கவிதையைப் போலவே நகைச்சுவை உணர்வும் அதிகமுண்டு. 
நானும் அவரும் நண்பர்களும் காரில் வரும்போது மதுரையில் ஓரிடத்தில் பொங்கல் 
வைத்து விழாக் கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

“மதுரை இன்றைக்கும் கிராமம்தான்” என்று கவிஞர் ஆச்சரியத்தோடு சொல்ல, 
“அந்த போஸ்டரைப் பாருங்கள். இன்றிரவு கரகாட்டமும், பட்டிமன்றமும் நடைபெறும் 
என்று போட்டிருக்கிறார்கள்” என்று நான் சுட்டிக் காட்டினேன்.

“இப்போதெல்லாம் இரண்டும் ஏறத்தாழ ஒன்றுதான்” என்று ஒரு நண்பர் சொன்னார்.
 உடனே வைரமுத்து, “இரண்டுக்குமே தலையில் ஏதாவது இருந்தால்தான் நல்லது” 
என்றார் சிரிப்போடு. 

கார் ஓட்டிய டிரைவர் உட்பட அனைவரும் சிரித்து விட்டோம். அவர் சிலேடையாகக் 
கூறிய செய்தியை நினைத்து வியந்தோம்.

*****
 

N. Ganesan

unread,
Jan 25, 2015, 10:06:59 PM1/25/15
to santhav...@googlegroups.com, minT...@googlegroups.com, vall...@googlegroups.com


On Sunday, January 25, 2015 at 7:00:26 PM UTC-8, ramaNi wrote:
ராமநாதபுரம் சேதுபதி மன்னரின் சபையில் ஒருநாள் தமிழ்ப் புலவர் சபை கூடியிருந்தது. 
எல்லாப் பகுதிகளில் இருந்தும் புலவர்கள் வந்திருந்தனர். மன்னரும் சபைக்கு வந்து 
அமர்ந்தார். சபை தொடங்குவதற்குமுன் தாமதமாக வேம்பத்தூரைச் சேர்ந்த 
'வெண்பா பாடுவதில் புலி' என்று அழைக்கப்பட்ட பிச்சுவையர் வந்து சேர்ந்தார்.

அவரைப் பார்த்த மன்னர் சிலேடையாக, 'வேம்புக்கு இங்கு இடமில்லை' என்றாராம். 
'வேம்பு' என்றால் கசப்பு. இந்த இனிய சபையில் கசப்புக்கு இடமில்லை என்றும், 
வேம்பத்தூரைச் சேர்ந்த உமக்கு இடமில்லை என்றும் இருபொருள் கொள்ளலாம்.

புலவர் விடுகிற ரகமா என்ன..? சட்டென்று சற்றும் தயங்காது வெகுவேகமாக வந்து 
மன்னரின் சிம்மாசனத்தின் அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு, 
'வேம்பு அரசோடுதான் இருக்கும்' என்றாராம். அதாவது வேம்பு என்று தன்னை 
மன்னன் சொன்னதும், அரசனும், வேம்பாகிய தானும் சேர்ந்தே இருப்போம் என்றும், 
வேப்ப மரமும், அரச மரமும் சேர்ந்து இருந்தால் அது கோவிலாகும் என்றும் 
இருபொருள்படக் கூறினாராம். சபையே வியந்து சிரிக்க, மன்னரும் சிரித்து மகிழ்ந்தாராம்.

*****

பங்கா இழுத்த பாவலர்

மரபு விக்கியில் இருந்து

எழுதியவர்: உ.வே.சாமிநாதய்யர்

தட்டச்சு செய்து அளித்தவர்: திருமதி கீதா சாம்பசிவம் 


சிலருக்குச் சிலவகையான ஆற்றல்கள் எளிதில் அமைந்து விடுகின்றன. அத்தகைய ஆற்றல்கள் வேறு சிலருக்கு மிக முயன்றும் சிறிதும் வரமாட்டா. செய்யுளியற்றும் ஆற்றலும் அவ்வகையானதே. சிலர் யாப்பிலக்கணம் முதலியவற்றை நன்றாக ஆராய்ந்து அறிந்திருந்தாலும், இனிய ஓசையுடைய செய்யுட்களைப் பிழையின்றி இயற்றுவதில் தடுமாறுகிறார்கள். பிறர் செய்யுட்களிலுள்ள பிழைகளை எடுத்துக்காட்டும் இயல்புடைய சிலர் பிழையற்ற சில பாடல்களையேனும் இயற்றும் ஆற்றலை அடைந்திலர். வேறு சிலரோ இலக்கண இலக்கிய நூல்கள் பலவற்றை ஆராயாவிடினும் மனத்தில் தோற்றிய கருத்துக்களை அழகுபெற அமைத்துச் செய்யுள் செய்துவிடுகிறார்கள்.

தமிழ்நாட்டில் தம்முடைய மனக்கருத்தைச் செய்யுளில் அமைத்து விரைவில் வெளியிடும் ஆற்றல் வாய்ந்த பல புலவர்கள் இருந்து புகழ் பெற்று விளங்கியதுண்டு. காளமேகத்தைப் போன்ற ஆசுகவிகள் பலர் இவ்வகையில் தலைசிறந்து விளங்கியவர் ஆவர். அவர்களுடைய செயல்களும், பலவகையான செய்யுட்களிற் பாடிய வரலாறுகளும் யாவராலும் விருப்பத்துடன் கேட்டு இன்புறற்குரியன. அத்தகைய தனிப்பாடல்களும் அவற்றைப் பற்றிய வரலாறுகளும் நாட்டில் அங்கங்கே கர்ணபரம்பரையாக வழங்கிவருதல் அறிஞர்கள் அறிந்ததே.

சற்றேறக்குறைய இருபத்தைந்து வருஷங்களுக்கு முன் வேம்பத்தூரில் இருந்து விளங்கிய சிலேடைப்புலி பிச்சுவையரென்னும் வித்துவானைப் பலர் அறிந்திருத்தல் கூடும். அவர் மிக்க புகழ் பெற்ற கவிராசபண்டிதருடைய பரம்பரையில் தோன்றியவர்; விரைவிற் செய்யுளியற்றும் வன்மையுடையவர்;

*இராமநாதபுர மன்னராக இருந்து விளங்கிய ஸ்ரீபாஸ்கரஸேதுபதியவர்கள் விருப்பத்தின்படி ஒரு மணிநேரத்தில் பன்னிரண்டு சிலேடைகளைப் பாடி அம்மன்னரால் வழங்கப் பட்ட ஐயாயிரம் ரூபாய் ஸம்மானத்தைப் பெற்றவர். அவருடைய குமாரர்களுள் மூத்தவர் மகாதேவபாரதி என்பவர்; அவரும் விரைவிற் செய்யுள் இயற்றுவார். இப்பொழுது மதுரையில் இவர் செளக்கியமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இவரைப் பற்றிய வரலாறு ஒன்று வருமாறு:-


காலஞ்சென்ற ஸ்ரீ பா. ராஜராஜேசுவர ஸேதுபதிமன்னரவர்கள் ஏறக்குறைய 22 வருஷங்களுக்கு முன்பு இராமநாதபுரத்தில் மிகவும் சிறப்பாக நவராத்திரிவிழாவை நடத்தினார்கள். அவர்களுடைய குலதெய்வமாகிய ஸ்ரீராஜராஜேசுவரிக்கு நித்திய நைமித்தியங்கள் அலங்காரங்கள் முதலியன மிக மேன்மையாக நடைபெற்றன. மன்னரவர்கள் விருப்பத்தின்படி இந்நாட்டின் பல  பாகங்களிலிருந்த ஸம்ஸ்கிருத பண்டிதர்களும் தென்மொழிப்புலவர்களும் ஸங்கீத வித்துவான்களும் வந்திருந்தார்கள். நானும் சென்றிருந்தேன். நாள்தோறும் தமிழ்வித்துவான்கள் அம்பிகை விஷயமாகப்பல செய்யுட்களை இயற்றிக் கூறிச் செவிக்குணவை அளித்தார்கள். வடமொழி வித்துவான்கள் தேவிவிஷயமாகவுள்ள வடமொழி ஸ்தோத்திரங்களையும் வேறு சுலோகங்களையும் எடுத்துச் சொல்லிப்பிரசங்கம் செய்தார்கள். வாய்ப்பாட்டிலும் மிருதங்கம் முதலிய வாத்தியங்களிலும் வல்ல ஸங்கீத வித்துவான்கள் ஊக்கத்தோடு தங்கள் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தி யாவரையும் மகிழ்வித்து வந்தார்கள்.

அந்த விழாநாட்களிலெல்லாம் வித்துவான்களுடைய பேச்சுக்களையும் பாட்டுக்களையும் இனிய ஸங்கீதத்தையும் கேட்பதிலேயே மற்ற ஜனங்களுக்குப் பொழுதுபோயிற்று. மன்னரவர்களும் அவ்வித்துவான்களுக்கு ஏற்ற வசதிகளை அமைத்து ஆதரித்து வந்தனர்.

அப்போது ஒருநாள் பாஸ்கரஸேதுபதியவர்களின் மாப்பிள்ளையவர்களது மாளிகையில் பல வித்துவான்கள் கூடிப் பேசிக்கொண்டிருந்தார்கள். நானும் இருந்தேன். ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் அநுபவத்தை மகிழ்ச்சியுடன் எடுத்துக் கூறினர். அப்பொழுது காலை 9 மணியிருக்கும். இயல்பாகக் காற்று இல்லாமையால் வெப்பமாக இருந்தது. அம்மாளிகையில் பெரிய பங்காக்கள் இருந்ததைக் கண்ட நான், "பங்கா இழுப்பவன் இல்லையோ?" என்ரு கேட்டேன். உடனே அக்கூட்டத்திலிருந்த மகாதேவ பாரதியார் திடீரென்றெழுந்து அங்கிருந்த பங்காவின் கயிறுகட்டியிருந்த நிலைக்கு அப்புறம் விரைந்து சென்றார். நிலையின் மேலுள்ள துவாரத்தின் வழியாக வெளியில் விடப்பட்டிருந்த கயிறு முடியப் பட்டிருந்தது. சென்ற பாரதியார் எழும்பி அந்த முடிச்சை எட்டிப் பிடித்துக் கொண்டார். பங்காக்காற்றை அநுபவிக்க, அறிந்த அவர் அதனை இழுக்கும் முறையை அறியாமல், எப்படியாவது பங்காவை இழுத்து விரைவில் வெப்பத்தைப் போக்கவேண்டுமென்பதை எண்ணி அவசரமாக அந்தக் கயிற்று முடிச்சைக் கையில் பிடித்து இழுத்தார். அது கீழே வந்தது; பின்பு மேலே போயிற்று. அதைப் பிடித்துக்கொண்டிருந்த பாரதியார் அதைவிட்டுவிட்டால், மறுபடியும் பிடித்து இழுக்க நேரமாகுமென்றெண்ணி அது மேலே போகும்பொழுது அதைப் பிடித்துத் தொங்கிக் க்கொண்டே தாமும் மேலே எழும்பிப் போனார். நிலை உயரமானது; அவரோ மெல்லிய தேகத்தையுடையவர். இப்படிக் கீழே வருகையில் இழுத்தும் மேலே போகையில் உடன் மேலே சென்றும் தம்மையே மறந்து பங்காவை இழுத்துக்கொண்டிருந்த அவரது நிலைமையை யாவரும் கண்டு வியப்புற்றனர். உடனே பங்காக்காரன் வந்துவிட்டான். அவன் கயிற்றை அவரிடமிருந்து வாங்கிக் கொண்டு வழக்கம்போல முடிச்சை அவிழ்த்துக் கயிற்றை நெடுகவிட்டு இழுக்க ஆரம்பித்தான். மகாதேவபாரதியார் அவனுடைய செயலைச் சிறிதுநேரம் கூர்ந்து கவனித்துவிட்டு எங்களை நோக்கிவந்தார்; "உயர்குலத் தோன்றலும் கவிஞருமாகிய நீர் இப்படிச் செய்யலாமா? உமக்கு முன்பு பழக்கம் இல்லையே!" என்று சொன்னேன். அவர் உற்சாகத்தோடும் உவகையோடும், "பங்கா இழுப்பதென் முன்னோர்கள் செய்திட்ட பாக்கியமே" என்று பாட்டாக விடையளித்தார். அது ஒரு கட்டளைக்கலித்துறையின் ஈற்றடியாவதற்கு ஏற்றதாக இருத்தலை யறிந்து, "பாட்டைமுடித்துச் சொல்லவேண்டும்" என்றேன். உடனே அவர் சற்றும் தயங்காமல்,

"கொங்கார் பொழில்புடை சூழ்முகவாபுரிக்கொற்றவனாம்
மங்காத கீர்த்தி வளர்பாற் கரமுகில் மாப்பிளையின்
சிங்கார மாளிகையிற்புல வோர்க்குச் சிரத்தையுடன்
பங்கா விழுப்பதென் முன்னோர்கள் செய்திட்ட பாக்கியமே"

என்ற கட்டளைக்கலித்துறையைச் சொல்லித் தமது பரம்பரைப் பெருமையை விளக்கினார். அங்கிருந்த யாவரும் அவருடைய ஆற்றலையும் வித்துவான்களிடத்தில் அவருக்கிருந்த அன்பையும், வியந்து பாராட்டினார்கள். அன்று மாலை ஸ்ரீராஜராஜேசுவர ஸேதுபதியவர்கள் வீற்றிருந்த சபையில் இந்த நிகழ்ச்சியை நான் தெரிவித்தபோது அவர்கள் கேட்டு மகிழ்ந்தார்கள். மகாதேவ பாரதியார் பங்கா இழுக்கும்பொழுது கீழே வருவதும் கயிறு மேலே செல்கையில் தாமும் மேலே செல்வதுமாகிய அந்தக் காட்சி இன்றும் என் கண்முன் நிற்கின்றது.

*அம்மன்னரவர்கள் செய்த நன்றிய மறவாமைக்கு அடையாளமாகப் பிச்சுவையர் தம் குமாரர் ஒருவருக்குப் பாஸ்கரையரென்ற பெயரையும், அந்த நிதியைக் கொண்டு வாங்கிய நிலத்திற்குப் பாஸ்கரன்செய் என்ற பெயரையும் இட்டனர். 

N. Ganesan

unread,
Jan 26, 2015, 10:14:31 AM1/26/15
to santhav...@googlegroups.com, minT...@googlegroups.com, vall...@googlegroups.com
A folk story narrated first in print by Veerasamy Chettiar in Vinodha Rasa Manjari. This is what becomes Onandi Pulavan episode in Vadivelu's movie, 23rd Pulikesi (in which a Tamil poet is not portrayed positively).

வீராசாமி செட்டியார் முதலில் அச்சிடுவித்த நாட்டார்கதை. அதைப் பலரும் எழுதியுளர். 

மூடனையும் வித்வானாக்கிய தர்மம்: கம்பரிடம் சோழமன்னன் கண்டு பரவசம்

முழு மூடன் ஒருவனை கவிச் சக்கரவர்த்தி கம்பர் ஒரு பெரும் வித்வானாக ஆக்கிய நிகழ்வு ஒன்று அவரின் வாழ்வில் நடந்துள்ளது. இதனைக் கண்டு சோழ மன்னன் பரவசமடைந்து இத்தகைய தர்மத்தை தங்களிடம்தான் கண்டோம் என்று கூறி மகிழ்ந்தான். அதுபற்றி இங்கு பார்ப்போம்.

கவிச்சக்கரவர்த்தி கம்பர் வாழ்ந்த காலத்தில் ஒரு விறகு வெட்டியும் அவன் மனைவியும் வாழ்ந்து வந்தனர்.

அக்காலத்தில் கவிஞர்கள் சோழ மன்னர் மீது கவிபாடிப் பரிசில்கள் பெறுவதை அந்த விறகு வெட்டியின் மனைவி பார்த்து “இவர்களெல்லாம் கஷ்டப்பட்டு எந்த வேலையும் செய்யாமல் பாட்டுப்பாடி பணம் சம்பாதித்து சுகமாக வாழ்கிறார்களே, நம் கணவன் மட்டும் காட்டுக்குள்ளே போய் காலில் கடும் முள் தைக்க கஷ்டப்பட்டு விறகு வெட்டி மாடாக உழைத்துக் கூட அரை வயிற்றுக் கஞ்சிக்கே கஷ்டப்பட வேண்டியிருக்கிறதே. இவ்வளவு காலமும் இது எனக்குத் தெரியாமல் போயிற்றே” என்று தனக்குள்ளேயே சிந்தித்து கவிபாடுவது இலகுவான காரியம் என்று நினைத்து கணவன் வந்ததும் அவரிடம் “நீங்கள் இனிமேல் காட்டுக்கு விறகு வெட்டப் போக வேண்டாம். அரசரிடம் போய் பாட்டுப்பாடுங்கள். நமக்கு பெருந் தொகைப்பணம் கிடைக்கும். கஷ்டப்படாமல் சந்தோஷமாக வாழலாம் என்று கூறினாள்.

அதைக்கேட்டு முழு மூடனான அந்த விறகு வெட்டி “எனக்குப் பாட்டுத் தெரியாது. இருந்தாலும் சீக்கிரமே கற்றுக்கொள்வேன். இப்பொழுதே போய் பாட்டு கற்றுக் கொண்டு வருகிறேன் என்று கூறிப் புறப்பட்டான்.

அவன் வீதியில் இறங்கிச் செல்லம் போது ஓரிடத்தில் சில பிள்ளைகள் பொம்மைகளை வைத்து விளையாடிக் கொண்டு ‘மண்ணுண்ணி மாப்பிள்ளையே’ என்று சொல்லக் கேட்டு அதை மனதில் பாடம் செய்து கொண்டான். அங்கிருந்து தொடர்ந்து செல்லும் போது ஒரு காகம் ‘கா’ என்று கரைவதைக் கேட்டு ‘காவிறையே’ என்றும் ஒரு சோலையில் குயில் கூவுவதைக் கேட்டு ‘கூவிறையே’ என்றும் மனனம் செய்துகொண்டான். மேலும் தொடர்ந்து செல்கையில் ஒரு பிள்ளையார் கோவில் அருகில் பெருச்சாளியொன்று ஓடுவதைக் கண்டு அதைக் கல்லால் அடிக்கப் போய் “உங்கப்பன் கோவில் பெருச்சாளி’ என்று கூறி அதையும் பாடம் செய்து கொண்டான். பின்னர் திரும்பி வரும் போது அவனுடைய நண்பர் ஒருவர் கண்டு “எங்கே போய் வருகிறாய்?’ என்று கேட்க விறகுவெட்டி “பாட்டுக் கற்றுக்கொண்டு வரப் போனேன். நீயும் எனக்குக் கொஞ்சம் பாட்டு கற்பித்துவிட்டுப் போ’ என்று கூறினான். அதற்கு நண்பன் அலட்சியமாக ‘இதென்ன பெரிய வேலையா? கன்னா, பின்னா, மன்னா, தென்னா, என்று பாட வேண்டியதுதானே என்று கூறிவிட்டுப் போக இவன் அதையும் பாட்டென்று நினைத்து முன்பு மனனம் செய்ததோடு சேர்த்து மனனம் செய்து கொண்டான். பின்னர் ‘இவ்வளவும் போதும் என்று நினைத்து வீட்டுக்குப் போய் மனைவியிடம் தான் கற்ற பாடலைச் சொல்ல அவள் இவனை விட சிறிது புத்திசாலியாகையால் இதில் சோழ மன்னனின் பெயர் இல்லை. அது அவசியம் இருக்க வேண்டுமென்று சொல்ல ‘சோழங்கப் பெருமானே’ என்ற சொல்லையும் தான் ஏற்கனவே மனனம் செய்து வைத்திருந்த பாடலோடு சேர்த்துக் கொண்டான். பின்னர் சிறிதும் அச்சமின்றி அரச சபைக்குச் சென்றான். அங்கு கம்பரைக் கண்டு வணக்கம் தெரிவிக்க அவர் அவனை யார் என்று கேட்க அவன் ‘நான் அரசர் மீது பாட்டுப்பாட வந்திருக்கிறேன்’ என்று கூற கம்பர் இவன் விறகுவெட்டி என்னைப் பற்றி யாரோ சொல்லக் கேட்டு வந்திருக்கிறான். நம்பி வந்தவனைக் கைவிடலாமா? என்று நினைத்து அவனுக்கு அரசனைக் காட்டி ‘கும்பிடு’ என்ற கூறினார்.

பின்னர் கம்பர், அரசர் முதலானவர்களைப் பார்த்து ‘பெரியோர்கள் இப்படித்தான் நீறுபூத்த நெருப்பைப் போல் இருப்பார்கள். அவர்களை யாரால் ஆராய முடியும்? என்று கூறி சட்டென்று எழுந்து தான் இருந்த ஆசனத்தில் அவனை அமரச் செய்து உபசரித்தார். பின்னர் அவனிடம் ‘எங்கே நீ பாடிய பாடலைக் கூறு” என்றார். அவன் சிறிதும் அச்சமின்றி தைரியத்துடன் பாடலானான். அது இப்படி அமைந்தது.

“மண்ணுண்ணி மாப்பிள்ளையே!

காவிறையே, கூவிறையே,

உங்கப்பன் கோவிற் பெருச்சாளி,

கன்னா, பின்னா, மன்னா, தென்னா,

சோழங்கப் பெருமானே’

என்று பாட சபையோர் அவனைப் பார்த்துக் கேவலமாகச், சிரித்தார்கள்.

கம்பர் சபையிலிருந்த ஒட்டக் கூத்தர் முதலான வித்வான்களைப் பார்த்து,

“இது வெண்பா முதலிய பாக்களிலாவது, பாவினங்களிலாவது எதனோடு சம்பந்தப்பட்டது? இதன் பொருள் என்னவென்று ஆராய்ந்து சொல்வதல்லவே வித்வான்களின் சாமர்த்தியம். அதைவிட்டு நகைப்பதா?

பாடியவரைக் கேட்டால் நிமிடத்துக்குள் பொருள் சொல்லிவிடுவார். ஆனாலும் பாடியவரே பொருள் சொல்வது சம்பிரதாயம் அல்லவே. அதைப் பற்றி இவரைச் சொல்லச் சொல்வது நியாயமும் அல்லவே. அது மட்டுமல்லாமல் நாம் வித்வான்களாக இருந்துகொண்டு பிறரைப் பொருள் சொல்லக் கேட்டால் அதில் நமக்கு என்ன பெருமை இருக்கிறது? நம்மில் ஒருவர் பொருள் சொல்வதுதானே நடைமுறை என்றார்.

கம்பர் இப்படிக் கூறியதும் சபையிலிருந்த ஏனைய வித்வான்கள் “அவன் யாரோ பைத்தியக்காரன் வாயில் வந்தபடி எதையோ தாறுமாறாகக் குளறினால் அதைப் பாடலென்றும் அதற்குப் பொருள் சொல்ல வேண்டும் என்றும் கூறுகிறாரே. அவனைவிட இவர் அல்லவா பைத்தியக்காரனாக இருக்கிறார். பொருள் சொல்லுங்கள் என்று சோதனை செய்வதுபோல் நம்மிடம் ஏன் கேட்க வேண்டும். சொல்லக் கூடியதாக இருந்தால் இவரே சொல்ல வேண்டியதுதானே என்று நினைத்து ‘தாங்களே சொல்லலாம்’ என்று கூறினார்கள். அதற்குக் கம்பர் ‘உங்களுக்குள் நானும் ஒருவனாகையால் நான் சொல்வது நீங்கள் சொல்வதுதான்’ என்று சொல்லி பொருள் கூறத் தொடங்கினார். இப்பாடல் இடையிடையே சில சீர் குறைந்தியல்வதனால் இது இணைக்குறள் ஆசிரியப்பாவாகும் இதன் பொருள்.

மண்- பூமியை, உண்ணி- உண்டவனே

மா- இலக்குமியின், பிள்ளையே- புதல்வனே

கா- கற்பகத்திற்கு, இறையே தலைவனே

கூ- பூமிக்கு, இறையே, அரசனே

உங்கப்பன்- உங்கள் தந்தை

கோ- இராஜன், வில்- விற்போரில்

பெரிசு- பெரிதாகிய,

ஆளி- சிங்கம் போல்வாய்.

கன்னா- கன்னனே, பின்னா- தர்மனே,

மன்னா- நிலை பெற்றவனே

தென்னா- பாண்டியனை ஒத்தவனே

சோழங்கம்- சோழதேசமாகிய அங்கத்தையுடைய

பெருமானே- பெருமையுடையானே

என்று பொருள்படுகிறது.

அதாவது:-

மகாவிஷ்ணு பிரிதிவிபதி என்றபடி உலகாள்பவனாதலால், நீ விஷ்ணு அம்சம் பெற்றாய் என்பதாக மண்ணுண்ணி என்றும்,

குறைவற்ற செல்வமுடையாய் என்பதாக மிக்க செல்வமுடையவர்களை இலட்சுமி புத்திரனென்பது உலக வழக்கு என்பதால் மாப்பிள்ளையே என்றும்,

போகத்தால் சுரேந்திரனை, ஒப்பாய் என்பதாக காவிறையே என்றும்,

மக்களாய்ப் பிறந்தவர்களில் மிகச் சிறந்தோனாதலால் நரேந்திரனே என்பதாக கூவிறையே” என்றும்,

நீயேயன்றி உனது தந்தை முதலியோரும் அரசாளப் பெற்றவர்கள்தான் என்பதாக உங்களப்பன் கோ என்றும்

விற்போரில் சிங்கம் போல புறங்கொடாது பகைவரை வெல்வாய் என்பதாக

விற்பெருச்சாளி என்றும்,

பெருங்கொடை வள்ளலே என்பதாக

“கன்னா என்றும்,

பொறுமையில் கன்னனுக்குப் பின்னோனாகிய தருமனே என்பதாக பின்னா என்றும் நெடுங்காலம் அழிவின்றி வாழ்வாய் என்பதாக ‘மன்னா’ என்றும்,

தமிழ்ப்புலமையில் பாண்டியராஜனைப் போல்வாய் என்பதாக ‘தென்னா’ என்றும், மலை, கடல், நாடு தசாங்கத்தில் ஒன்றாகிய நாட்டில் பெரியோய் என்பதாக சோழங்கப் பெருமானே’ என்றும், கூறினார்.

கம்பர் இப்படி விளக்கமளித்து அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.

குலோத்துங்க சோழராஜன் விறகு வெட்டியின் பாடல் எப்படியிருந்தபோதிலும் கம்பர் அதற்கு இவ்வாறாக நுட்பித்து பொருள் சொல்,லியதால் அவனுக்காக இல்லாவிட்டாலும் கம்பருக்காகவாவது அவனைப் பெருமைப்படுத்த வேண்டும் என்று எண்ணங்கொண்டார்.

பின்னர் அவனுக்கு சகல வெகுமதிகளும் கொடுத்தும் அவனை கெளரவித்தும் அனுப்பினார்.

அது கண்டு கம்பர் நாம் முழு மூடனை சபையில் மகாவித்துவானென்று சொல்லி அவன் குளறலையும் பாடலென்று பிரசங்கித்து அவனுக்கு வெகுமதிகள் கிடைக்கச் செய்துள்ளோம். அரசன் இதற்குப் பின்னரும் அவனது வாக்கைக் கேட்க வேண்டும் என்று என்றாவது ஒருநாள் அவனை வரவழைத்துவிட்டால் அச்சமயம் அவனைப்பற்றித் தெரிந்துவிடும். அதனால் நம் கெளரவத்துக்கும் குறைவாகும் என்று எண்ணி அவனை வரவழைத்து அன்று முதல் அவனுக்கு இலக்கண, இலக்கியத்துடன் கல்வி பயிற்றலானார். அதிசீக்கிரத்திலேயே அவனும் ஒரு மகா சமர்த்தனாக வித்வானாக உருவானான்.

அதன் பின்னர் அவனை ஒருநாள் சோழ மன்னனின் சபைக்கு வரவழைத்து அவன் வாயினாலேயே பாடவைத்தார். அவன் வாக்கைக் கேட்டு மன்னன் பூரித்துப் போனான். அதையடுத்துத்தான் சோழமன்னன் கம்பரிடம்” இந்த தர்மத்தை தங்களிடம்தான் கண்டோம்” என்று பரவசத்துடன் கூறினான்.

அதுமட்டுமன்றி கம்பருக்கு அதுநாள் வரை இருந்து வந்த கெளரவத்தைவிட மேலும் கெளரவமளித்துப் பாராட்டினான்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

http://www.dinamani.com/specials/kannottam/article723100.ece

கன்னா பின்னா கவிராயர்

Byபுலவர் சு.சுப்புராமன்

First Published : 17 April 2011 02:42 AM IST

தமிழகத்தை மூவேந்தர்கள் ஆண்ட காலத்தில், தமிழ்ப் புலவர்கள் அமிழ்தினும் இனிய கவிதைகளை இயற்றியுள்ளனர். கவிச்சக்ரவர்த்தி கம்பர், குலோத்துங்க சோழனது அவைப் புலவராய் இருந்து பல்வேறு பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற்றார். அக்காட்சிகளைக் கண்டு மகிழ்ந்த ஒருவன், தானும் அதுபோன்ற கவிதைகளை எழுதிப் பரிசுபெற விரும்பினான்.

தன் கருத்தை மனைவியிடம் தெரிவித்தான். பல நாள்களாக முயன்றும் கவிதை ஒன்றும் அவன் மனதில் உதயமாகவில்லை. மனைவியோ, ""வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடக்காமல் சோலை, ஆறு, கடல் என்று இயற்கைக் காட்சிகளைக் கண்டு ரசித்தால்தானே கவிதை வரும்'' எனக் கூறிக் கணவனை அனுப்பி வைத்தாள்.

கையில் சில ஏடுகளையும், எழுத்தாணியையும் எடுத்துக்கொண்டு அவன் புறப்பட்டான். வீடு கட்டுவதற்காக தெருவில் மணலைக் குவித்திருந்தனர். அங்கு ஆணும் பெண்ணுமாகச் சிறுவர்கள் சிறு வீடுகட்டி விளையாடிக் கொண்டிருந்தனர். ஒரு சிறுவனையும் சிறுமியையும் சேர உட்காரவைத்து இலை, பூ, தழைகளாலான மாலைகளை இருவர்க்கும் அணிவித்து ஒரு திருமணத்தையே நடத்திவிட்டார்கள். சிரட்டையில் ஈரமணலைச் சேர்த்து குழிப்பணியாரங்களைச் செய்து மணமக்களுக்கு விருந்தாகப் படைத்தார்கள். மணமக்களாக இருந்த சிறுவர்களும் எடுத்து உண்பதுபோல பாவனை செய்தனர். கூடியிருந்த சிறுவர்கள் "மண்ணுண்ணி மாப்பிள்ளையே! மண்ணுண்ணி மாப்பிள்ளையே!' என்று கேலிக்குரல் எழுப்பினர்.

கவிதை எழுதச் சென்றவனுக்கு இது காதில் விழுந்தது. "ஆகா! அருமையான வரிகளாக இருக்கிறதே!' என்று அதையே கவிதைக்கு முதல் வரியாக எழுதிக் கொண்டான். தொடர்ந்து சிந்தித்த வண்ணம் ஊரை அடுத்துள்ள சோலையை அடைந்து, அங்கிருந்த பழைய கோயிலருகே அமர்ந்தான்.

சோலையில் காகங்கள் கரைந்தன; குயில்கள் கூவின. இதனைக் கவிதையின் இரண்டாவது அடியாக "கா இறையே, கூ இறையே' என்று சேர்த்தான். அந்நேரத்தில், கோயிலருகே ஒரு பெருச்சாளி ஓடியதைக் கண்டான். உடனே, "உங்கப்பன் கோயில் பெருச்சாளி' என்றான். அதையும் கவிதையில் மூன்றாம் வரியாக எழுதிக்கொண்டான். அதன்பின் வெகுநேரம் சிந்தித்தும் ஒன்றுமே தோன்றவில்லை. வீட்டுக்குப் புறப்பட்டான். வழியில் ஒருவன் எதிரே வந்தான். அவனை நிறுத்தித் தன் கவிதையை வாசித்துக் காட்டி, ""எப்படி என் கவிதை?'' என்று கேட்டான்.

""என்ன கவிதை எழுதியிருக்கிறாய்? கன்னா பின்னா மன்னா தென்னா என்று'' என அவன் பதில் சொல்லிப்போனான்.

"ஆகா! இதுவும் நன்றாக இருக்கிறதே' என்று அதனையும் நான்காம் அடியாக இணைத்தான். வீட்டுக்கு வந்ததும் மனைவியிடம் கவிதையைப் படித்துக் காட்டினான். கேட்டவள் முகத்தில் மலர்ச்சி இல்லை. ""இவ்வளவு எழுதியும் சோழ மன்னனைப் பற்றி ஒரு வரிகூட இல்லையே'' என்று சலித்துக்கொண்டாள். இருவரும் வெகுநேரம் யோசனை செய்து "சோழங்கப் பெருமாளே' என்று இறுதி அடியாகச் சேர்த்தார்கள்.

புதிய கவிஞன், கவிதை எழுதிய ஓலையைக் கையில் ஏந்தி ஏறுநடை போட்டு அரண்மனையை நோக்கி விரைந்தான். பரிசுடன் திரும்புமாறு மனைவி அனுப்பி வைத்தாள்.

புதிய கவிஞனின் வருகையை வாயில் காவலன் அரசனுக்குத் தெரிவிக்க அழைப்பும் வந்தது. அவையில் கம்பர் முதலான புலவர் பலர் இருந்தனர். புதிய கவிஞரை வரவேற்ற அரசன், கவிதையை வாசிக்குமாறு கூறினான். கவிதையைக் கேட்டதும் சபையினர் சிரித்தனர். கம்பர் மட்டும் அமைதியாக இருந்தார்.

கம்பரை நோக்கிய மன்னன், ""கம்பரே! தங்களுக்கு இந்தப் பாடல் புரிகிறதா?'' என்று கேட்டான்.

புதிதாகக் கவிதை எழுதியவரின் முயற்சியைப் பாராட்ட எண்ணிய கம்பர், அக்கவிதைக்குச் சிறப்பான பொருளையும் விளக்கினார்.

கண்ணன், மண்ணை உண்டபோது அசோதை (யசோதை) வாயைத் திறந்து காட்டுமாறு கேட்க, "உலகமே கண்ணனது வாயில் தெரிந்தது' என்பது புராணக்கதை. "அந்தக் கண்ணனாகிய திருமாலைப்போல மக்களைக் காப்பவன் அரசன்' என்ற பொருளை முதல்வரி காட்டுகிறது.

"கா இறையே' என்பது சோலைகளுக்குத் தலைவன்; "கூ இறையே' என்பது நிலவுலகுக்குத் தலைவன் என்று பொருள்படும். "உங்கப்பன் கோயில் பெருச்சாளி' என்றால், "உங்கள் தந்தை இந்த அரண்மனையில் இருந்து ஆண்ட பெரிய சிங்கம் போன்றவர். நீயும் சிங்கக்குட்டி போன்றவர். "கன்னா! பின்னா! மன்னா! தென்னா!' என்பவை கொடையில் கர்ணனே! அவனையடுத்த தர்மனே! மன்னவனே! தென்னவனே! சோழநாட்டுக்குத் தலைவனே! என்று புகழ்ந்து பாடியுள்ளார். இக்கவிதை மூலம் மன்னன் மக்களைக் காக்கும் திறனையும், நாட்டு வளத்தையும், வீர மரபில் தோன்றிய மாவீரன் என்பதையும், கொடையில் சிறந்தவன் என்பதையும் இப்புலவர் தெளிவாக்குகிறார்'' என்று கம்பர் எடுத்துரைத்தார்.

கம்பர் கூறிய பொருளைக் கேட்டவுடன் மன்னன் மகிழ்ந்து, அப்புதிய கவிஞனுக்குப் பரிசு வழங்கிப் பாராட்டினான். பாடலை இயற்றிய புலவர் பெயர் தெரியவில்லை. கம்பரின் பெருமையை விளக்க இப்படியொரு கவிதை தனிப்பாடலாக நமக்குக் கிடைத்துள்ளது. பாடல் இதுதான்.

""மண்ணுண்ணி மாப்பிள்ளையே

மண்ணுண்ணி மாப்பிள்ளையே!

கா விறையே கூ விறையே!

உங்கப்பன் கோயில் பெருச்சாளி,

கன்னா பின்னா மன்னா தென்னா

சோழங்கப் பெருமாளே''

(தனிப்பாடல்)

ramaNi

unread,
Jan 27, 2015, 11:50:15 AM1/27/15
to santhav...@googlegroups.com, rsou...@gmail.com, minT...@googlegroups.com, vall...@googlegroups.com
சொல்லின் செல்வர்!

ஒரு புலவர் தன் நண்பரான மற்றொரு புலவரைக் காண அவர் வீட்டுக்குச் சென்றார்.
அப்புலவர் வீட்டில் அடுப்பின் முன் அமர்ந்து சட்டியில் மாவு வறுத்துக் கொண்டிருந்தார்.

முதல் புலவர் கேட்டார்”என்ன நண்பரே,மாவு வறுத்துக் கொண்டிருக்கிறீர்கள்” என்று.

இரண்டாமவர் பதில் சொன்னார்—

“சங்கரன் பிள்ளை சட்டியில் மாவறுத்தல் நடப்பதுதானே” சங்கரன் பிள்ளை என்ற 
பெயருடைய அவர் சட்டியில் மாவு வறுப்பது எப்போதும் நடப்பதுதானே என்பது 
வெளிப்படையான பொருள்.

ஆனால் அவர் வேறொன்றையும் சொல்லியிருக்கிறார்!

“சங்கரனின் பிள்ளையாகிய முருகன்,சஷ்டியன்று மாமரமாக நின்ற சூரபத்மனை 
அறுப்பது,நடப்பதுதானே!”

என்ன சொல் நயம்!

*****

இது இன்னொரு புலவரைப் பற்றியது.அவர் ஒரு ஜமீந்தாரைக் காணச்சென்றார். 
அவருடன் பேசிக் கொண்டிருந்தபோது ஜமீந்தாரின் மனைவி அங்கு வந்தாள்.
அவள் மிக நல்லவள்.அவளைப் புலவர் தன் சகோதரியாகவே நினைத்தார்.

எனவே கேட்டார்”தங்கச்சி வந்தியா?”

கேட்டவுடன் தன் தவறை உணர்ந்தார். இது ஜமீந்தாருக்குப் பிடிக்கவில்லை 
என்பதை முகக்குறிப்பால் உணர்ந்த அவர் சொன்னார்—

“அம்மா தலையில் மஞ்சள் மலர் சூடியிருக்கிறார்கள் .அது தங்கச் 
சிவந்திப்பூவா- தங்கச் சிவந்தியா என்று கேட்டேன்”தன் சொல் நயத்தால் 
நிலைமையைச் சரியாக்கி விட்டார்! 

*****

ramaNi

unread,
Jan 27, 2015, 7:54:56 PM1/27/15
to santhav...@googlegroups.com, rsou...@gmail.com, minT...@googlegroups.com, vall...@googlegroups.com
சில நாட்களுக்கு முன் ஒரு திருமணத்துக்குச் சென்றிருந்தேன்.

ஒரு தட்டில் வெற்றிலை,தூள் பாக்குடன் ஒரு பக்கமாகக் கொஞ்சம் பன்னீர்ப் 
புகையிலையும் வைத்திருந்தனர்.மண்டபத்தில் புகை வெளியேற வழிஇன்றி 
சூழ்ந்திருந்தது.

ஒருவர் பாக்கு என்று நினைத்துப் புகையிலையை வாயில் போட்டுக் கொண்டு 
அவதிப் படுவதைப் பார்த்த ஒரு நபர் கேட்டார்—

“புகையில தெரியலியா?”

புகையில்,புகையிலை என்பது தெரியவில்லையா என்பதை நயம்படக் கேட்டார்!

*****

சிறிது நேரத்துக்குப் பின் யாரோ அவரிடம் அடையாறுக்கு வழிகேட்க அவர் 
முதலில் வலது புறமும் பின் இடது புறமும் கை காட்டிச் சொன்னார்—

“இப்படிப் போனால்,அடையார்;அப்படிப் போனால் அடையார்!”

வழி கேட்டவர் ’ஙே’ என்று விழிக்க,இவர் சொன்னார்--

-”முதலில் சொன்னது அடையார் என்ற இடத்தை,பின்னர் சொன்னது 
எதிரே போனால் அடையாரை அடைய மாட்டார் என்ற பொருளில்”

*****
 

Siva Siva

unread,
Jan 27, 2015, 8:23:47 PM1/27/15
to santhavasantham
நீங்கள் இட்டதைப் படித்ததும் நினைவிற்கு வந்த ஒரு விஷயம்!

அடையாறு என்பதை அடையார் என்றும்
திருநள்ளாறு என்பதைத் திருநள்ளார் என்றும்

இக்காலத்தில் தமிழ்நாட்டில் பல இடங்களில் எழுதக் காண்கின்றேன்.

இந்நாளில் தமிழ்நாட்டில் எப்படித் தமிழ் வாழ்கின்றது!


ramaNi

unread,
Jan 27, 2015, 8:32:52 PM1/27/15
to santhav...@googlegroups.com
டாமில் வாள்க!
ரமணி

அவனடிமை

unread,
Jan 27, 2015, 10:15:34 PM1/27/15
to santhav...@googlegroups.com
கோழிக்கோடு - കോഴിക്കോട് - is Kozhikode
ஆலப்புழா - ആലപ്പുഴ - is Alappuzha

But, தமிழ்நாடு - is Tamilnadu

No Thamizh people seem to be bothered about this although they are very proud of the letter ழ

p balakrishnan

unread,
Jan 28, 2015, 5:46:06 AM1/28/15
to santhav...@googlegroups.com
சிலேடைகள் சிறப்பாக உள்ளன. பாராட்டுகிறேன்.

நாராயணன் என்றதும் கவி காளமேகம் பாடிய பாடல் ஒன்று நினைவுக்கு வந்தது:
கம்பர் குறுக்கல் விகாரம் வைத்துப் பாடியதைக் காளமேகப் புலவர் ஏளனம் செய்தது;

நாரா யணனை நராயணனென் றேகம்பன்
ஓராமற் சொன்ன உறுதியால் - நேராக
வாரென்றால் வர்ரென்பேன் வாளென்றால் வள்ளென்பேன்
நாரேன்றால் நர்ரென்பேன் நன்.

-அரிமா இளங்கண்ணன்


On Fri, 23 Jan 2015 06:36:00 +0530 ramaNi wrote

>நாரணன் - பழைய சோறு சிலேடை(http://www.mayyam.com/talk/showthread.php?7783-pazhanchORum-narayananum-(Soundhar)/page2)
முக்கூர் ஸ்ரீ லக்ஷ்மி நரசிமாச்சாரியாரின் “குறைவொன்றும் இல்லை" முதல் பாகம்படித்துக் கொண்டிருந்திருக்கும் போது, அதில் பழையதுக்கும்(பழைய சோறு) ஸ்ரீமன்நாராயணனுக்கும் ஒரு கவிஞர் சிலேடை புனைந்திருப்பதாக எழுதியிருப்பதைப் படித்தேன்.அதன் பொருள் மட்டும் கூறியிருக்கிறார். மூலப் பாடல் யாரிடம் இருக்கிறதோ தெரியாது.இந்தக் கருத்தை அடிப்படையாக வைத்து நாமே ஏன் ஒரு சிலேடை வெண்பா எழுதக்கூடாதுஎன்று தோன்றிய எண்ணத்தின் எழுந்ததுதான் இந்த முயற்சி. வெறும் வெண்பாவாக எழுதினால்எல்லோருக்கும் ரசிக்காது என்பதனால், கூடவே ஒரு கற்பனைக் கதையும் கூட்டி எழுதினேன்.
மேலே கூறிய கருத்தில், நாராயணன் என்ற பொருளுக்கு விளக்கம் தருமிடத்தில் இந்தச்சிலேடைபற்றிக் குறிப்பிட்டதால், பழஞ்சோறும் நாராயணனும் என்ற தலைப்பு பொருந்தி வந்தது.அந்தப் பழம்பாடலில் கூறிய கருத்து என்ன? இதோ கீழே பார்க்கலாம்.
இது பழையதுஅவனும் புராண புருஷன்ராத்திரி முழுதும் சாதம் தண்ணீரிலே இருக்கிறது.அவனும் ஜலத்திலேதான் படுத்துக்கொண்டிருக்கிறான்பழையதின் பெருமை அதை அனுபவித்து உணர்ந்த சிலருக்கே தெரியும்“என்னை உள்ளபடி உணர்கிறவர்கள் ஒரு சிலரே “ என்றான் பரமாத்மா கீதையிலேபழையதை அதிகாலையில் சாப்பிடவேண்டும்எம்பெருமானையும் அதிகாலையிலே தியானம் பண்ணவேண்டும்

மூலக் கருத்து இங்கிருந்து வந்தாலும், என்னுடைய பங்கிற்கு, அன்னம், மாவடு போன்றவற்றைச்சேர்த்து சற்றே மாற்றி அமைத்தேன்.
இப்போது பாடலின் பொருளைக் காண்போம்.
நீரில் கிடந்தவண்ணம் நிர்மலமாய்க் காட்சிதரும்தாரணி வாழ்விக்கும் அன்னமாம்-சாரப்பொருள்தேறும் போற்றும் பழமையால் சோறும்எருதேழ் அடர்த்த இறை
நாராயணன்:நீரில் கிடந்த வண்ணம்- நீரில் பள்ளி கொண்டிருப்பான்; அல்லது நாரங்களையே தனது இருப்பிடமாகக் கொண்டவன்; அதாவது நாராயணன்நிர்மலமாய்க் காட்சிதரும்- குற்றமற்றவனாய் இருப்பவன்தாரணி வாழ்விக்கும்- காத்தலாகிய தொழிலைச் செய்பவன்சாரப்பொருள்தேறும் அன்னமாம்-ஹம்ஸாவதாரத்தில் வேதத்தின் சாரப்பொருளாகிய வேதத்தை உபதேசம் செய்தவன்போற்றும் பழமையால்- வேதங்கள், உபநிடதங்களால் 'புராண புருடோத்தமன்' என்று போற்றப்படுபவன்எருதேழ் அடர்த்த இறை; ஏழு எருதுகளை அடக்கி நப்பின்னைப் பிராட்டியின் கைத்தலம் பற்றிய கண்ணனாகிய எம்பெருமான் நாராயணன்.
பழைய சோறு:நீரில் கிடந்த வண்ணம்- இரவெல்லாம் நீரில் கிடக்கும்நிர்மலமாய்க் காட்சிதரும்- குற்றமற்றதுபோல் வெண்மையாய்க் காட்சி தரும்தாரணி வாழ்விக்கும் அன்னமாம்- உலகத்தாரின் பசியைப் போக்கி வாழ்வுக்கு ஆதாரமாய் இருக்கும் உணவாகும்சாரப்பொருள்தேறும்-மக்கள் உணவில் முக்கிய பங்கு வகிக்கும்போற்றும் பழமையால்-பழமையான காரணத்தால் உண்பவர்கள் ''ஆஹா" என்று விரும்பி உண்பர்
வேறொரு இணைய இழையில் இதற்கு பின்னூட்டாக சிவசிவ என்ற அன்பர் ஒரு சிலேடை இட்டார். கீழே காண்க.
நீரில் துயில்கொள்ளும் காலை நினைப்பரன்பர்பேரில் பெரும்தொன்மை கொண்டிருக்கும் - பார்பிசைந்(து)உண்ணலுண்(டு) உள்ளியோர் பக்கமிருக் கும்காக்கும்கண்ணன் பழையது காண்.
சௌந்தர்
*****



--
>
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
>
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
>
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
>
santhavasanth...@googlegroups.com.
>
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
>
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
>
---
>
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
>
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
>
To post to this group, send email to santhav...@googlegroups.com.
>
For more options, visit https://groups.google.com/d/optout.
>

Get your own FREE website, FREE domain & FREE mobile app with Company email.  
Know More >

ramaNi

unread,
Jan 28, 2015, 8:40:49 PM1/28/15
to santhav...@googlegroups.com
இரு கை போதாது!
(https://pilavadipsastha.wordpress.com/2004/06/15/சிலேடைச்-செல்வம்-5/)

உமையாள்புரம் சிவராமன் ஒரு கச்சேரிக்காகக் கோவை நகருக்கு வருகை
புரிந்திருந்தார். சங்கீத அன்பர் ஒருவர் அவரை வீட்டில் விருந்துக்கு அழைத்தார்.

இலை போடப்பட்டது. மேஜைச் சாப்பாடு அல்ல. தரையில்தான். எல்லோரும்
இலை முன்னால் அமர்ந்திருந்தார்கள். மடிப்புக் கலையாத வெள்ளை வேட்டி
கட்டிக்கொண்டு வந்திருந்த உமையாள்புரம் சிவராமன் அமராமல் நின்று கொண்டே
இருந்தார். அவர் நிற்கக் காரணம், உணவு வகைகள் எல்லாவற்றையும் ஏற்பாடு
செய்த சங்கீத அன்பர் மறந்து போய் தரைச் சாப்பாட்டுக்கு முக்கியமான ஒரு
பொருளை ஏற்பாடு செய்யாததுதான்.

‘ஏன் நிற்கிறீர்கள்?’ என்று தயங்கியவாறே சிவராமனைக் கேட்டார் அவர்.

”மேஜைச் சாப்பாடு என்றால் சாப்பிட எனக்கு, இரு கை போதும், தரைச்சாப்பாடு 
என்றால் இரு கை போதாது. பல கை வேண்டும்” என்றார் சிவராமன்.

மறதியால் கிடைத்த சிலேடையை ரசித்தவாறே, உட்காரப் பலகையைக்
கொண்டுவந்து போட்டார் அந்த சங்கீத அன்பர்.

*****
 

ramaNi

unread,
Jan 29, 2015, 8:12:32 PM1/29/15
to santhav...@googlegroups.com
ஒரு வாலைப்பெண்

ஓர் வாலைப் பெண்ணின் கதையைச் சொல்கிறேன். இப்பெண்ணைப்
பற்றிப் பாடியவர் சென்ற நூற்றாண்டில் இருந்த முத்துக்குமாரு என்பவர்.
அப்பாடல்:

“முடிவிலாதுறை சுன்னாகத்தான்
முந்தித் தாவடி கொக்குவில் மீது வந்து
அடைய ஓர் பெண் கொடிகாமத்தான் அசைத்
ஆனைக்கோட்டை வெளிக்கட்டுடை விட்டாள்
உடுவிலான் வரப் பன்னாலையான் மிக
உருத்தனன் கடம்புற்ற மல்லாகத்தில்
இடைவிடாதனையென்று பலாலிகண்
சோரவந்தனள் ஓர் இளவாலையே”

இப்பாடலில் யாழ்ப்பாணத்திலுள்ள பதினொரு ஊர்களின்
(சுன்னாகம், தாவடி, கொக்குவில், கொடிகாமம், ஆனைக்கோட்டை,
கட்டுடை, உடுவில், பன்னாலை, மல்லாகம், பலாலி, இளவாலை)
பெயர்களிருக்கின்றன. ஆனால், இவற்றின் கருத்து வேறுவிதமானது.
கருத்தைப் பார்ப்போம்.

பல துறைகளையுமுடைய வெள்ளிமலைக்குத் (சுல் + நாகம் – வெள்ளிமலை)
தலைவனானவன் முந்தித் தாவுகின்ற பாதங்களையுடைய குதிரை
(கொக்கு – குதிரை) மீது வந்து குறித்த இடத்திற் சேர, ஒரு பெண் கொடி
போன்ற அழகையுடையாள், அசைந்து மார்புக்கட்டை அவிழ்த்து விட்டாள்.
நட்சத்திரக்கூட்டங்களுக்குத் தலைவனான சந்திரன் தோன்ற கருப்புவில்லை
உடைய மன்மதன் மிகுந்த கோபமடைந்தனன். கடப்ப மாலையைத் தரித்த
மார்பகத்தில், இடைவிடாதனையென்று, தனது ஆவி போன்ற கண்களிலிருந்து,
ஆனந்தக் கண்ணீர் சொரிய ஓர் வாலைப் பெண் வந்து சேர்ந்தாள்.

*****

இதே போன்று தமிழ்நாட்டில் ஒரு புலவர் பாடியிருக்கிறார். அவர் ஊர்களின்
பெயர்களை வைத்துப் பாடவில்லை. ஒரு கிழமையிலுள்ள ஏழு நாட்களையும்
ஒழுங்காக அமைத்துப் பாடுகிறார். தமிழ்நாட்டில் “தளசிங்கமாலை” என்ற
நூலிலுள்ளது அப்பாடல்.

“ஞாயிறு போய்விழத் திங்கள் வந்தெய்திடச்செவ்
வாயனல் சோரப் புதன் அம்பு தூவ நல்வியாழன் வர
வேயுறு வெள்ளி வலை சோர, நானுன்னை மேவுதற்குத்
தாய் சனியாயினளே, ரகுநாத தளசிங்கமே”

இப்பாடலின் பொருள்:
சூரியன் அஸ்தமிக்கச் சந்திரன் தோன்ற, சிவந்த வாயிலிருந்து
விரக தாபத்தினால் வெப்பக்காற்று வீச, மன்மதன் பாணமெய்ய,
தென்றல் வீச, மூங்கிலையத்த அழகிய வளையங்கள், விரக
தாபத்தினால் சோர்ந்து விழ, நான் உன்னை வந்து சேர்வதற்குத்
தாய் குறுக்கே நிற்கின்றாளே என்பதாம்.

இதில் ஒரு கிழமையின் ஏழு நாட்களும், ஒழுங்காக வந்துள்ளமை
காண்க. இது “தாய் துஞ்சாமை” என்னும் அகப்பொருட் குறையச்
சுட்டும் பாடலாகும்.

இவ்வகைச் செய்யுள்களை “நாமாந்திரிகை” என்னும் யாப்பு
வகையில் அடக்குவர்.

*****

ramaNi

unread,
Jan 30, 2015, 9:05:21 PM1/30/15
to santhav...@googlegroups.com
காவடிச் சிந்து புகழ் சென்னிக்குளம் அண்ணாமலை ரெட்டியார்

அண்ணாமலை நகைச்சுவையாகப் பேசுவதில் வல்லவர் இரு பொருள்படப்பேசி, 
கேட்பவர்க்கு இன்பம் தருவார். உதவி என்று வந்தவர்க்கு ஊற்றுமலையரசரிடம் கூறி 
உதவி கிடைக்கச் செய்வார். 

ஒருமுறை ஓர் ஏழை வந்து அண்ணாமலையிடம் 'என் வீட்டில் சாமி கும்பிடவேண்டும். 
அதற்கு அரிசியும் ஓர் ஆடும் வேண்டும். அரசா¢டம் கூறி, அவை கிடைக்கச் செய்ய வேண்டும்' 
என்று வேண்டிக்கொண்டான்.

உடனே அண்ணாமலை, "ஒன்று நடக்கும்; இன்னொன்று நடக்காது'. என்றார். அதைக் கேட்ட 
அவன், நாம் கேட்டதில் ஒன்றுதான் கிடைக்கும் போலும்! என்று எண்ணி முகம் வாடி நின்றான். 
"ஐயா எப்படியாவது இரண்டும் கிடைக்கச் செய்யவேண்டும்" என்று கெஞ்சினான்.

அந்த ஏழையின் வருத்தத்தை உணர்ந்து, "நீ கேட்கும் இரண்டில் ஆடு ஒன்றுதான் நடக்கும். 
அரிசி நடக்காது அல்லவா! இதைத்தானே சொன்னேன். நீ ஏன் வருந்த வேண்டும்?" என்றார் 
இதைக் கேட்ட ஏழை அவர் சொல்லாற்றல் கண்டு மகிழச்சியடைந்தான். பின்னர் அரசரிடம் 
அவனை அழைத்துச்சென்று அவனுக்கு உதவி கிடைக்கும்படி செய்தார்.

*****

பிறிதொருமுறை அண்ணாமலை, ஊற்றுமலை அரசருடன் உலாவச் சென்றார். 
அரசர் முன்பே போய்விட்டார். அண்ணாமலை பின் தங்கிவிட்டார். அரசர், 
'ஏன் தாமதம்?' என்று வினவினார்.

'முட்டாளுடன் வந்ததால் தாமதமாகி விட்டது' என்றார் அண்ணாமலை.

தம்மை இவ்வாறு முட்டாள் என்று கூறமாட்டாரே என்று தயங்கினார் அரசர். 
உடனே அண்ணாமலை, ஆம்! முள் தாளுடன் (காலுடன்) வந்துவிட்டது. அதனால் 
தாமதம் ஆகி விட்டது' என்று விளக்கினார். அரசர் மகிழ்ந்து பாராட்டினார்.

*****

ஒருமுறை ஊற்றுமலை அரசர் தாமே கவிஞரைக் காணவந்தார், அரசரைக்கண்டு 
மகிழ்ந்த அண்ணாமலை, "வாடா மருதப்பா! வாடிவிட்டேன் பார்த்தாயா!" என்று வரவேற்றார். 
அங்கிருந்தவர்கள் திகைப்புற்றனர். அரசரை மரியாதை யில்லாமல் வாடா என்று அழைக்கின்றாரே 
என்று எண்ணினர். அவர்களின் திகைப்பை அறிந்த அண்ணாமலை, "நான் அரசரை 
மரியாதையில்லாமல் வாடா என்று அழைப்பேனா? வாடா(த) மருதப்பா என்றல்லவா 
அழைத்தேன். இன்பம் துன்பம் எதுவந்தாலும் வாடாமலிருப்வர் நம் அரசர் அல்லவா?" என்று 
விளக்கம் கூறினார். பிணியால் மெலிந்து மரணப் படுக்கையில்இருக்கும்போதும் கவிஞர்பால் 
மிளிரும் நகைச்சுவையைக் கண்டு அரசர் உட்பட அனைவரும் வியந்தனர்.

*****
 

ramaNi

unread,
Jan 31, 2015, 9:24:39 PM1/31/15
to santhav...@googlegroups.com
இன்றைய இலக்கிய வழக்கில் ஒரு நகைச்சுவைக் கதை.

புதிரோ புதிர் - நகைச்சுவைக் கதை
சொ.ஞானசம்பந்தன்

(வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் அலுவலர் பல வீடுகளுக்குச் சென்று விட்டு ஒரு பாட்டியின் இல்லத்துக்குப் போகிறார். பாட்டி திண்ணை மீது கால்களை நீட்டி அமர்ந்துள்ளார்)

“பாட்டி, தேர்தல் வருகிறது. வாக்காளர் பட்டியல் தயாரிக்கிறேன். உங்கள் பெயர் என்ன?”

”அதை நான் சொல்லக் கூடாது.”

“என்ன, பாட்டி? கணவன் பெயரைக் கூட இப்போது சொல்கிறார்கள். நீங்கள் உங்கள் பெயரையே சொல்ல மாட்டீர்களா?”

“என் பெயரும் மாமியார் பெயரும் ஒன்று. அதை எப்படி சொல்லுவேன்?”

“இப்படிக் கூட ஒரு கஷ்டமா? இத்தனை வயதான பிறகு என்ன பாட்டி? சும்மா சொல்லலாம். சொல்லுங்கள்.”

“வயதாகிவிட்டால் மட்டு மரியாதை போய் விட வேண்டுமா? இந்தக் காலத்துப் பிள்ளைகள் முளைத்து மூன்று இலை விட்டதும், அப்பனையே பேர் சொல்லிக் கூப்பிடுகின்றன. நான் அந்தக் காலத்து மனுஷி. சொல்ல மாட்டேன்.”

“அப்படியானால் ஒரு ஹிண்ட் கொடுங்கள்.”

“இண்டாவது இடுக்காவது? என்னடாப்பா உளறுகிறாய்?”

”இண்டுமில்லை, இடுக்குமில்லை. ஹிண்ட்! அதாவது ஒரு குறிப்பு. எதையாவது சொல்லுங்கள். அதை வைத்து நான் கண்டுபிடிக்கிறேன்.”

(மனதுக்குள்: நல்ல வேலை கிடைத்தது நமக்கு)

“கடலில் என்ன அடிக்கிறது?”

“காற்று.”

“அதில்லை. கரையில் வந்து மோதுமே? அது!”

”அதுவா? அலை! அலையா உங்கள் பெயர்? புதுமையாக இருக்கிறதே!”

‘அவசரக் குடுக்கை! இன்னும் சொல்வதைக் கேள்.”

“சொல்லுங்கள்.”

“கீழே என்பதற்கு மாற்றமாய் என்ன சொல்லுவோம்?.”

”மேலே!”

“அதைச் சுருக்கு.”

“மேல்.”

”இரண்டையும் சேர்.”

“மேலே மேல்! இப்படி ஒரு பெயரா?”

“சீ! முன்னே ஒன்று கண்டுபிடித்தாயே, அதையும் இதையும் சேர்.”

“முன்னே என்ன கண்டுபிடித்தேன்? ஆங்! அலை! அப்போ “அலைமேல்”

“கொஞ்சம் மாற்று.”

“அலமேல்.”

“அது தான்.”

“அப்பாடா! ஒரு வழியாய்க் கண்டுபிடித்தாயிற்று!”

“இன்னும் இருக்கிறது.”

‘ஐயையோ! இன்னுமா?”

“ஏண்டாப்பா? வீடான வீட்டிலே அவச் சொல் சொல்லவா வந்தே? நீ போ. இனி மேல் ஒன்றும் சொல்லமாட்டேன்.”

(இந்த மாதிரி நாலு கிழம் இருந்தால் நாம் கணக்கெடுத்து வாழ்ந்தாற் போலத்தான்.)

”உன்னைப் பெற்றவளை எப்படிக் கூப்பிடுவே?”

“அம்மா.”

“அதையுஞ் சேர்த்துக் கொள்.”

“அலமேல் அம்மா.”

”சரி.”

(இந்த அம்மாவைச் சேர்க்காவிட்டால் குடியா முழுகிவிடும்?)

“இப்போ, வீட்டுக்காரர் பேரைச் சொல்லுங்கள்.”

“அதை எப்படி நான் சொல்லுவேன்?”

“நீங்கள் எங்கே சொல்லப் போகிறீர்கள்? நான் தான் கண்டுபிடிக்க வேண்டும்.”

‘இண்டு வேண்டுமா?”

“ஆமாம்.”

“குரங்கு இருக்கிறதல்லவா?”

“என்னிடமா? நான் என்ன குரங்காட்டியா?”

‘சீ! நான் ஒன்று சொன்னால், நீ ஒன்று சொல்கிறாய். நீ போய்ச் சேரு.”

”கோபித்துக் கொள்ளாதீர்கள், பாட்டி. சொல்லுங்கள்.”

“குரங்குக்கு வேறு பேர் சொல்லு.”

“வேற பேரா?”

(இனிமேல் கையோடு அகராதி கொண்டு வர வேண்டும்).

”வேறே பேரென்ன? வானரம், மாருதி, கடுவன், மந்தி......”

“கடலைத் தாண்டுச்சே?”

”அனுமார்!”

“ஆங்! அதைக் கொஞ்சம் மாற்று.”

“அனுமாரை எப்படி மாற்றுவது?”

“ஆரம்பம் அது தான். கடைசியை மாற்று.”

“அனு, அனு, அனு.......”

“நல்ல மக்கு நீ! வயிற்றில் பசியில்லை, என்ன சொல்லுவோம்?”

“மந்தமாய் இருக்.”

‘அதான் இப்போது கண்டுபிடி.”

“அனுமந்தம்! அனுமந்தன்!”

”அதான்”.

”அம்மாடி! நான் வருகிறேன் பாட்டி.”

(தேர்தலைச் சபித்துக் கொண்டே அலுவலர் போகிறார்)

(பி.கு. 1976 ல் ஆனந்த விகடனில் எழுதியது)

*****


N. Ganesan

unread,
Feb 1, 2015, 12:33:13 AM2/1/15
to Santhavasantham, sgnanasa...@gmail.com
2015-01-31 18:24 GMT-08:00 ramaNi <sai...@gmail.com>:
இன்றைய இலக்கிய வழக்கில் ஒரு நகைச்சுவைக் கதை.

புதிரோ புதிர் - நகைச்சுவைக் கதை
சொ.ஞானசம்பந்தன்

அருமை! திரு. ஞானசம்பந்தன் வலைச்சுவடியை அறிமுகம் செய்ததற்கு நன்றி!

திரு. சொ. ஞானசம்பந்தன் மாதிரி அனுபவமிக்க பலரும் வலைப்பதிவுலகுக்கு வரவேணும்.

நா. கணேசன் 

N. Ganesan

unread,
Feb 1, 2015, 11:38:10 AM2/1/15
to santhav...@googlegroups.com, sgnanasa...@gmail.com
மாயூரம் வேதநாயகர் நகைச்சுவைக்குப் பேர்போனவர். கோபாலகிருஷ்ணபாரதி ஒரே ஒரு மனுஷரைத்தான் பாராட்டி
கீர்த்தனை பாடினார். அப்பாட்டுடைத் தலைவர் வேதநாயகம்பிள்ளை.

பஞ்சம் தீர்த்த சுப்பிரமணிய தேசிகர்:
படிபடியாகப் பொன்கொட்டி நெற்கொள்ளும் இப்பஞ்சத்திலே
பிடிபிடியாக மணியும் கனகமும் பெட்புறுவோர்
மடிமடியாகக் கட்டிச் செல்லத்தந்தான் பெரும்வள்ளலென்றே
குடிகுடியாகத் தொழும் சுப்ரமண்ய குணாகரனே

படிப்படியாக தங்கத்தைக் கொட்டிக் கொடுத்து அதற்கு ஈடாக நெல்லைப் பெற்றுச் செல்லும் பஞ்சக் காலத்தில் வாரி வழங்கிய சுப்பிரமணிய தேசிகரை நன்றியோடு பாராட்டிப் பாடுகின்றார் வேதநாயகர். மக்கள் என்னும் யானையைப் பஞ்சம் என்னும் முதலை பிடித்து அலைக்கழிக்கின்றது. எனவே விஷ்ணு சக்கராயுதத்தை ஏவியதைப் போல சுப்பிரமணிய தேசிகர் வட்டம் என்று வழங்கப்படும் வட்டமான காசினைக் கொண்டு பஞ்சத்தின் தலையைத் துண்டித்து மக்களைக் காத்தார் என்ற பொருளமைந்த இவரின் தனிப்பாடல் இதோ, கரியொத்தன பல்லுயிர்களைப் பஞ்சக் கராம்அடிக்க அரியொத்தனன் சுப்பிரமணி ஐயன் அரிச்சக்கரம் சரியொத்தன அவன் ஈந்திடும் பொன்வெளிச் சக்கரமே. (தனி- 19)
1870 வாக்கில் தமிழகத்தில் எங்கே பார்த்தாலும் விஷபேதியின் கொடுமை பரவியிருந்தது. அரசாங்கம் அந்நோய் பரவாதபடி மருந்து மாத்திரைகளைக் கொடுத்தது. வேதநாயகரும் தம்மாலான உதவிகளைச் செய்தார். அன்றியும் பேதிக்குரிய மருந்தை வாங்கிக் கிராமந்தோறும் கொடுத்து நோயிலிருந்து மக்களைக் காக்க வேண்டுமென்று வேதநாயகர் சுப்பிரமணிய தேசிகருக்குக் கவிமடல் எழுதி வேண்டிக் கொள்கிறார். இலக்கண மெய்க்கு அரை மாத்திரை யாம் இவ்வளவும் இன்றிமலக்கண் விளைபிணியாற் பலர் மாய்ந்தனர் மண்டும் இந்நோய்விலக்க அருள்புரி… சுப்பிரமணி யானந்த நின்மலனே
ஆதீனத்தோடு தமக்கிருந்த நட்பை மக்கள் சேவைக்குப் பயன்படுத்தும் வேதநாயகரின் மக்கள் தொண்டு மகத்தானது. தமிழ்இலக்கணத்தில் மெய்எழுத்துக்குக் கூட அரை மாத்திரை இருக்கிறது, மனித மெய்க்கு அந்த அரை மாத்திரை கூட இல்லாத அவலநிலையை நயமாக எடுத்துக் கூறும் கவிதை அவரின் மனிதநேயத்துக்குச் சான்று.

மழையோ வெய்யிலோ மக்கள் துன்புறக் கூடாது:
வேதநாயகர் மழை பெய்யாமல் மக்கள் துன்புற்ற போது மழைவேண்டிப் பாடினார், கடும் வெய்யிலால் மக்கள் துன்புற்ற போது கதிரவனைக் கண்டித்துப் பாடினார். மொத்தத்தில் மக்கள் நொந்தால் மாயூரரின் மனம் நோகும், கவிதை பிறக்கும். ஒரு கோடைக்காலம். கோடையின் வெப்பத்தில் மக்கள் துடித்தனர், வேதநாயகருக்குச் சூரியன் மேல் கடுங்கோபம். கதிரவனே உன்பாகன் முடமா? உன் குதிரைகள் முடமா? உன்னுடைய ஆகாய வழி தூர்ந்துவிட்டதா? ஏன் இப்படி எரிகிறாய்? உனக்கு யார் இங்கே விருந்துவைத்து அழைத்தார்கள்? கோபமும் கிண்டலுமாக கவி படைக்கிறார், பாடல் இதோ,

பகலே பாகன்போல் பரிகள் முடமோ
அகல்வான் வழிதூர்ந் ததுவோ - அகலா
திருந்தாய் திரிந்தாய் எரிந்தாய் விரிந்தாய்
விருந்தார் புரிந்தார்கள் மேல்.

தொடர்ந்து மழை இல்லாமையால் கடும் பஞ்சம். மழை பெய்யாதா? என்று மக்கள் எல்லாம் ஏங்கிக் கிடக்கிறார்கள். உதவி செய்கிறேன் என்று சொல்லிச் செய்யாத கருமிகளைப் போல மழை பெய்வதுபோல் போக்குக் காட்டிப் பெய்யாமல் பொய்த்து விடுகிறது.(தனி.35) உண்ணீர் இலாமையினால் உள்நீரும் வற்றியழக் கண்ணீரும் வற்றியது (தனி. 37) என்றெல்லாம் பாடும் வேதநாயகர், மேகத்திற்குத் தக்கதொரு ஆலோசனை கூறுகின்றார். வாரியுண்டு வாரிமொண்டு வாரியுண்டு வானிருண்டுபேரிகொண்டு நீதிரண்டு பெய் (தனி. 34)
(வாரி - கடல்), நீர் நிறைந்த கடல் எதிரே இருக்கிறது அதிலுள்ள நீரை வாரி முகந்து அள்ளிக் குடித்து வானில் கருமேகமாகச் சூழ்ந்து இடிமுழக்கம் செய்து மழையே நீ பெய்வாயாக என்கிறார். வாரியுண்டு வாரிமொண்டு வாரியுண்டு வானிருண்டு சோகத்திலும் சொல்நயமிக்க கவிதைகள் பிறப்பது வேதநாயகரின் கவித்திறனுக்குச் சான்று.

மாமிசமுண்ணும் பார்ப்பனர்களைப் பழித்தார்:
வேதநாயகர் காலம், ஆங்கிலக் கல்வியும் அதன்வழி ஐரோப்பிய நாகரீகமும் தமிழ் மக்களின் வாழக்கை முறைகளில் பெரிய அளவில் தாக்கத்தை உண்டாக்கிய காலம். ஐரோப்பிய மோகத்தால் நிலை தடுமாறிய பிராமண இளைஞர்கள் பலர் மாமிசம் உண்ணுதல், மது குடித்தல் போன்ற பழக்கங்களுக்கு ஆளாகி அதுவே நாகரீகம் என மயங்கிய காலம். இந்தச் சூழலில் நீதிநூல் பாடிய வேதநாயகரால் சும்மாயிருக்க முடியுமா? நகைச்சுவையாகப் பாடுவதுபோல் தம் கடும் கண்டனத்தைப் பதிவு செய்கிறார்.

ஆரணவாயினர் மாடாடுகளை அடித்து அவித்துப்
பாராணஞ் செய்ய பழகிக் கொண்டார் மதுபானத்திலும்
பூரணராயினர் இன்னவர்க் கிந்தத் துர்புத்தித் தந்த
காரணங் கண்டயற்கோர் சிரங்கொய்தனன் கண்ணுதலே.

வேதம் ஓதுகிற வாயால் மாமிசம் உண்பதும் மது குடிப்பதுமாக வாழும் பிராமணர்களுக்கு இந்த துர்புத்தி தந்த பிரம்மனை தண்டிக்கவே சிவன் அவர் தலையில் ஒன்றைக் கொய்து விட்டானாம். இது பரவாயில்லை, இந்தப் பாடலைப் பாருங்கள்.

ஊன் தூக்கி யுண்ணும் பிராமணர்க்கஞ்சி உமாபதியும்
மான் தூக்கினான் கையில் வேலவன் தூக்கினான் வாரணத்தை
மீன்தூக்கினான் கொடியாக உருவிலி மேடமது
தான்தூக்கவே அதிலேறிக் கொண்டான் அந்த சண்முகனே.

சிவன் ஏன் மானைக் கையில் வைத்துக்கொண்டான் தெரியுமா? முருகன் கோழியை ஏன் தன் கொடியில் பத்திரப் படுத்திக்கொண்டான் தெரியுமா? மன்மதன் ஏன் மீனைத் தன் கொடியில் வைத்துக்கொண்டான் தெரியுமா? முருகன் ஏன் ஆட்டைத் தன் வாகனமாக்கிக் கொண்டான் தெரியுமா? எல்லாம் மாமிசம் உண்ணும் பிராமணர்களிடமிருந்து இவற்றைக் காப்பாற்றத்தான். பாடலில் நகைச்சுவையும் நையாண்டியும் இருந்தாலும் வேதநாயகரின் கண்டிப்பும் அறிவுரையுமே மேலோங்கி இருப்பதை உணர்ந்தால் அவரின் சமூகப்பற்று நமக்கு விளங்கும்.

நகைச்சுவை உணர்வாளர் வேதநாயகர்:
வேதநாயகரின் குடும்ப வாழ்க்கையும் அரசுப் பணியும் நெருக்கடி மிக்கதாய் இருந்தபோதும் இயல்பாகவே அவர் நகைச்சுவை உணர்வு மிக்கவர் என்பதற்கு அவரின் இரண்டு நாவல்களுமே சான்று. மிகச் சிறந்த நகைச்சுவைப் படைப்பாக அவர் பிரதாப முதலியார் சரித்திரத்தைப் படைத்திருந்தார். தனிப்பாடல்களிலும் அவரின் நகைச்சுவை உணர்வு இயல்பாக வெளிப்பட்டிருப்பதைக் காணமுடியும். தன் வீட்டிலிருந்த வண்டி மாடு ஒன்றை அவர் வருணிக்கும் பாடல் நல்ல நகைச்சுவைப் பாடலுக்குச் சான்று,

இட்டமுடன் முதலியார் வாங்கிவந்த காளை தினமிருபோர் தின்னும்
சட்டமுடன் கொள்ளுண்ணும் புல்லுண்ணுமதைப் பண்டிதனில் பூட்டகிட்டவரின் முட்டவரும் தொட்டவர் மேலேகழியும் கீழேவீழும்
எட்டாள்கள் தூக்கிடினும் தடிகொண்டு தாக்கிடினும் எழுந்திராதே.

இது போல் நாவிதரைப் புகழ்ந்து அவர்பாடிய பாடலும் படித்துப் படித்து
இன்புறத் தக்கது.

முடிப்பாகச் சில வரிகள்:
ஓய்வு பெற்று மயிலாடுதுறையில் நிலையாகத் தங்கியபோது 1873-ஆம் ஆண்டில் வேதநாயகர் மயிலாடுதுறை நகராட்சிக்கு நியமனத் தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருடைய நகராட்சிப்பணிகளில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது, பெண்களுக்குக் கல்வி கற்பிக்கப் பள்ளிக்கூடம் ஒன்றை அவர் தொடங்கியதுதான். பெண்கல்வி குறித்துக் கவிதைகள் எழுதுவதோடு நில்லாமல் வாய்ப்பு கிடைத்தபோது அதனைச் செயல்படுத்தியும் காட்டிய பெருமை அவருக்கு உண்டு. மரபுக் கவிதை, மொழிபெயர்ப்பு, உரைநடை, இசைத்தமிழ் என்ற பல்வேறு இலக்கிய வடிவங்களிலும் படைப்புகள் படைத்துப் பெண்கல்வி, பெண்விடுதலை, சமூக முன்னேற்றம், தமிழ்ப்பணி என்று பல தளங்களிலும் அவரின் ஆக்கப்பணிகள் நடைபெற்றுள்ளன. ஆங்கிலக் கல்வியால் முதல் இந்திய நீதிபதியாகப் பணியாற்றிப் பெருமைபெற்ற வேதநாயகருக்கு அவர் காலத்திலேயே ஆங்கில மொழியின் ஆதிக்கம் கவலை அளித்திருக்கிறது. ஆங்கிலம் தலையெடுக்க, ஏன் என்று கேட்பவர் இல்லாமல் தமிழ் என்னாகுமோ? என்று வேதநாயகர் வேதனையடைந்திருக்கின்றார். அதனால்தான், வாவென்று உதவ வரும் சுப்பிரமணிய வரோதயனே தான்என்று வெண்ணரன் பாடையிந் நாட்டில் தலையெடுக்க ஏனென்று கேட்பவ ரில்லாத் தமிழை யினிதளிக்க நானென்று கங்கணங் கட்டிக் கொண்டாய் இந்த நானிலத்தே என்று வெண்ணரன் பாடை- ஆங்கிலம் தலையெடுக்க ஏன்என்று கேட்பாரில்லாத் தமிழ் என்று தமிழ் குறித்துக் கவலைப்பட்ட முதல் தமிழராகத் தன்னைப் பதிவு செய்கிறார் வேதநாயகர்.வேதநாயகரின் ஞானம்:ஒரு படைப்பாளிக்குத் தம் படைப்புகள் குறித்த ஒரு கர்வம் இயல்பாகவே அமைந்திருக்கும். அதிலும் தம் காலத்து மெத்தப் படித்தவர்கள் எல்லாம் தம்மைப் புகழ்ந்து பாடிச் சிறப்பிக்கும் பேறு பெற்ற ஒரு படைப்பாளிக்கு இத்தகைய கர்வம் வருவது இயல்பே. ஆனால் வேதநாயகர் இதிலும் வேறுபட்டு நிற்கிறார். தம் நெஞ்சுக்குக் கூறுவதுபோல், பொதுவாகக் கவிதைகள் குறித்தும் கவிஞர்கள் குறித்தும் அவர் கூறும் நீதிநூல் பாடல் ஒன்று, மிகுந்த கவனத்திற்குரியதாக இருக்கின்றது.அப்பாடல் இதோ,என்னநீ வருந்திக் கவிபாடினும் எடுத்த கற்பனை முன்னோர்சொன்னதே அலால் நூதனம் ஒன்றிலைத் தொன்மை நூல் பலவாகும்முன்னம் நூலெலாம் தந்தவன் நீஅலை முற்றுணர்ந்தனை அல்லைஉன்னின் மிக்கவர் பலர் உளார் கல்வியால் உள்ளமே செருக்கு என்னே! (நீதி நூல்-313) உன்னின் மிக்கவர் பலர் உளார் கல்வியால், உள்ளமே செருக்கு என்னே! என்ற வேதநாயகரின் நீதிநூல் பாடலடி அவர் தம் நெஞ்சுக்குக் கூறியதாகப் பாடப்பட்டிருப்பினும், உலகோர் யாவர்க்குமான அறிவுரையாகவே அதனைக் கொள்ளல் சிறப்பு.

N. Ganesan

unread,
Feb 1, 2015, 12:18:34 PM2/1/15
to santhav...@googlegroups.com
ஆறகழூர் பொன். வெங்கடேசனுக்காக ஆறை வாணர்கள் பற்றிய பாடல்களைப் படித்துக்கொண்டிருந்தேன். அப்போது ~125 வருடத்துக்கு முந்தைய சிலேடைவெண்பாவில்  ”வாய்ச்சவடால்” என்னும் மரபுச்சொலவடையின் இலக்கிய ஆட்சி கிடைத்தது. இவ் வெண்பாவுடன் பாரதியார் பாடிய மறவன் பாட்டுப் பொருளையும் சிந்திக்கலாம். மைலாப்பூர் லாபி என்று புகழ்பெற்ற வக்கீல்கள் சென்னை ராஜதானியை ஆளுமை கொண்ட காலம் அது. அதன் எதிர்வினையாக திராவிட இயக்கம் தோன்றி வளர்ந்தது தமிழ்நாட்டு அரசியல் வரலாறு, பாரதியார் போலீஸ், லாயர் எல்லா பணிகளையும் ஆக்கிரமிப்பைச் சொல்லியுள்ளார். 

வேங்கடரமண ஐயங்கார்

[கொங்குவள நாட்டில் விசயமங்கலத்திற்கு அண்மையில் உள்ள நடுப்பட்டி என்னும் சீனிவாசபுரத்தில் வைணவ அந்தணர் குலத்தில் 1865ஆம் ஆண்டிற் பிறந்தவர். இவர் சதகம் பதிகம் முதலிய பல சிறு நூல்கள் பாடியுள்ளார். வேடிக்கையாகவுஞ் சிலேடையாகவும் பாடுவதில் வல்லவர்.]

நாய்க்கும் வக்கீலுக்கும் சிலேடையாகப் பாடியது

எச்சிக் கலையும் எடுத்துப்பீ சாப்பிடலால்
இச்சித் துலாவோ டிருத்தலால் - மெச்சுதுரை
மக்கள்பாற் சென்று வாய்ச்சவடால் ஆடலால்
குக்கலும்வக் கீலெனவே கொள்.

வக்கீல்:
பீசாப் பிடுதலால், இச்சித்து லாவோடு இருத்தலால்,
வெள்ளையரிடம் வாய்ச்சவடால் ஆடலால்.

நாய் நாக்கைச் சவட்டுதல் (< சவள்-; வளைத்து)
- வாய்ச்சவடால் ஆடல். 

இவ் வெண்பாவின் கருப்பொருளைப் பாரதியார் மறவன்
பாட்டில் விரித்துப் பாடியுள்ளார்.

சோதிட அறிவால் தம்முடைய இறுதிநாளை
அறிவித்தது.

தராதலத்தில் சிறந்தநடுப் பட்டிவாழ்நா
  ராயணன்மெய்த் தவத்தால் மேவும்
வரோதயனாம் வேங்கட்ட ரமணனவன்
 மாண்புடைய வையம் நீத்து
குரோதனவாண் டைப்பசியில் ஈரொன்றாம்
  நாளில்வரு குருவா ரத்தில்
சிரோதயமாம் வைகுண்டப் பதியவந்தன்
  பொன்னடியைச் சேர்ந்தான் மாதோ!

உசாத்துணை: தனிப்பாடல் திரட்டு, தொகுதி மூன்று,
திருநெல்வேலித் தென்னிந்தியச் சைவசித்தாந்த
நூற்பதிப்புக் கழகம். 1964.

நா. கணேசன்

அண்மையில் மறைந்த விழுப்புரம் ரா. அ. பத்மநாபன் முயற்சியால் ஆஷ் துரை கொலைக்கேஸில் மிகவும் பேசப்பட்ட ‘மறவன் பாட்டு’ பாரதியார் பாடலுக்கு முன்மாதிரியாக பல ஆண்டுகள் முன்னால் வேங்கடரமணையங்கார் வெண்பாவில் சொல்லியுள்ளார். ஆனால், பாரதி வேங்கடரமணையங்கார் வெண்பாக் கேட்டிருக்க வாய்ப்பில்லை.

  16. ஆதாரம்: பாரதி புதையல் 3 -- பக்கம் 8-9 

மறவன்பாட்டு

மண்வெட்டிக் கூலிதின லாச்சே! -- எங்கள் 
   வாள்வலியும் வேல்வலியும் போச்சே! 1
விண்முட்டிச் சென்றபுகழ் போச்சே! -- இந்த 
   மேதினியில் கெட்டபெய ராச்சே.

N. Ganesan

unread,
Feb 1, 2015, 3:52:58 PM2/1/15
to santhav...@googlegroups.com, mintamil, vallamai, housto...@googlegroups.com
உவேசா, குறிஞ்சிப்பாட்டு நூலின் சில அடிகள் தருமபுர ஆதீனச் சுவடிகளிலே கிடைத்ததை ‘உதிர்ந்த மலர்கள்’ கட்டுரையில் அருமையாகச் சொல்லியுள்ளார். ஆதீனகருத்தர் ஸ்ரீமத் தேசிகரிடம் அறிமுகம் செய்யும்போது தருமையின் சம்பந்த சரணாலயரைக் குறிப்பிட்டுப் பேசியுள்ளார். 

கோவையிலே 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலே பெரியபுராணத்திற்குப் பேருரை வரைந்த சிகேஎஸ் துறவியானபோது சம்பந்தசரணாலயர் என்றே பெயர் பூண்டிருந்தார். சம்பந்தசரணாலயர் விளக்கத்தாலேயே தேவாரம் போன்ற திருமுறைகளில் விடங்கர் என்று நக்கபிரானை அழைப்பது விளங்கிற்று. சங்க இலக்கியங்களில் பல நூல்களில் குறிப்பிடும் இடங்கர் என்னும் முதலையின் மூலப்பெயர் விடங்கர் என்று எழுதக் காரணம் ஆனது சம்பந்தசரணாலயர் (கோவை) விளக்கங்களாலே தான். விடங்கர்/இடங்கர்:

மைசூர் மகாராசா தருமைச் சம்பந்தசரணாலயரை அண்டங்காக்கை எனவழைத்ததும், நட்புப் பூண்டு ஆதரித்ததும், சம்பந்தசரணாலய தம்பிரான் மன்னரை ’அண்டங்காக்கை தாங்கள் தான்’ என்று சொன்ன
புலமையும் இவர்கள் வரலாற்றால் அறிகிறோம்.

நா. கணேசன்

மைசூர் மன்னரை சம்பந்த சரணாலயர் அண்டங்காக்கை எனவழைத்தது:

திருக்கயிலாயப் பரம்பரை தருமபுர ஆதீனத்தின் ஆறாம் பட்டம் மகா சன்னிதானமாக இருந்தவர் திருஞான சம்பந்த தேசிக சுவாமிகள். அவருடைய திருவருளையும் குருவருளையும் பெற, சிறு வயதிலேயே அங்கு வந்து சேர்ந்தார் ஒர் அன்பர். அவர், திருமடத்தில் உள்ள அடியார்களுக்குத் தொண்டு செய்வதையே பெரும்  புண்ணியமாகக் கருதி வந்தார். அவரது பிறப்பு, தாய் - தந்தை, ஊர் முதலான விவரங்களை அறியமுடியவில்லைதி ஆதீனத்தில் உள்ள அடியார்கள் இடும் பணியை மிகவும் மகிழ்ச்சியுடன் செய்து வந்தார் அவர். அந்த ஆதினத்தில் இருந்த வெள்ளியம்பலவாணத் தம்பிரான் என்பவரிடம் இவர் இலக்கண - இலக்கிய நூல்களையும் சித்தாந்தங்களை சித்தாந்தங்களைம் கற்றுத் தேர்ந்தார்.

இவரது பக்தி, கல்வியறிவு, ஒழுக்கம், தொண்டு மனப்பான்மை ஆகியவற்றைக் கண்டு  மகிழ்ந்தார் மகா சன்னிதானம். அவரிடம் அந்த அன்பரும் ஞானோபதேசம் பெற்று நிஷ்டை புரிந்து ஒழுகினார்.தம்முடைய ஞானாசார்யரிடம் இணையற்ற அன்பும் பக்தியும் பூண்டதால் அந்த அன்பரின் திருநாமம் சம்பந்த சரணாலயர்என்றாகியது.  புலமை, ஒழுக்கம், ஞானம், தவம் ஆகியவற்றில் சிறந்து விளங்கிய சம்பந்த சரணாலயரின் புகழ் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது,  மைசூர் முதலிய பிரதேசங்களுக்கும் பரவியது. பல இடங்களில் இருந்தும் தருமபுரம்  மகா சன்னிதானத்தைத் தரிசிக்க வருவோர்  அனைவரும் சம்பந்ந  சரணாலயரின் பெருமையையும் உணர்ந்து, அவரை பாராட்டிச் சென்றார். அப்படிச் சென்று வந்த ஒருவர் வாயிலாக சம்பந்த சரணாலயரை உடனே தரிசிக்க வேண்டும் என்று விரும்பினார் மைசூர் மன்னராக இருந்த பெட்ட தசாமராலு உடையார். தமிழ் நூல்களில் ஆர்வமும் அறிவும் பெற்றிருந்த இவர், தமது விருப்பத்தை சுவாமிகளுக்குத் தக்கார் வாயிலாக தெரிவித்தார்.

மைசூர் மன்னரின் விருப்பத்தை அறிந்த சம்பந்த சரணாலயர் அவரைச் சந்திக்கச் சம்மதம் தெரிவித்தார். தமது ஞானாசார்யரிடம் விடைபெற்று மைசூர் வந்தார். மன்னர் பெட்ட தசாமராலு உடையாரைச் சந்தித்தார். இருவரும் நிறைய விஷயங்கøளிப் பகிர்ந்து கொண்டார்கள். சுவாமிகளின் துறவு மற்றும் ஒழுக்கத்தில் மன்னரின் உள்ளம் மிகவும் ஈடுபாடு கொண்டது. எனினும் அவருடைய கரிய திருமேனியைப் பார்த்த மன்னர், அண்டங்காக்கை போல் உள்ளீரே ... என்று வேடிக்கையாகக் கூறினார். உடனே சம்பந்த சரணாலயர் புன்னகையுடன், தாங்களே அண்டங்காக்கைக்குப் பிறந்தவர்தானே...! எனச் சாதுர்யமாகக் கூறினார்.

சம்பந்த சரணாலாயரிடம் இப்படியொரு பதிலை எதிர்பார்க்காத மன்னர் சற்று திகைத்துத்தான் போனார். அவரது எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்ட சம்பந்த  சரணாலயர், அண்டம் என்றால் உலகம்காக்கை என்றால் காப்பதற்கு என்று பொருள். அதனால் தான் அப்படிச் சொன்னேன்! என்று விளக்கம் தர... அவரின் சொல்நயத்தையும் பொருள் நயத்தையும் உணர்ந்து மகிழ்ந்தார் மன்னர்.

சம்பந்த சரணாலயரின் பேச்சிலும் செயல்பாட்டிலும் தனிச்சிறப்பைக் கண்ட மன்னர் , அவரை தெய்வமாகப் போற்றினார். அவரைச் சிலகாலம் தம்முடன் தங்கியிருக்க வேண்டினார். மன்னரின் விருப்பப்படி சம்பந்த சரணாலயரும் அங்கே தங்கினார். அவ்வாறு இருந்த காலத்தில், தமக்கென்று எதுவும் வேண்டாம் என்று  சொல்லிவிட்டு, தினமும் பிச்சை எடுத்து உண்ணுவதை வழக்கமாகக் கொண்டிருந்த இவரது வைராக்கியம் மன்னருக்குப் பெரும் வியப்பை ஏற்படுத்தியது.


உவேசா, குறிஞ்சிப்பாட்டில் தொலைந்த அடிகளைக் கண்டது.
உதிர்ந்த மலர்கள்:

அங்கே ஆதீனத் தலைவர்களாகிய ஸ்ரீ மாணிக்கவாசக தேசிகர் ஒரு சாய்வு நாற்காலியிலே சாய்ந்து கொண்டிருந்தனர். நான் அவர் அருகிலே போய்க் கையுறையாகக் கொண்டு வந்திருந்த கற்கண்டுப் பொட்டலத்தை அவருக்குமுன் வைத்துவிட்டு நின்றேன். என்னைக் கண்டபோது அவர் ஒன்றும் பேசவில்லை. வெறுப்பின் அறிகுறியாக இருக்கலாமென்றெண்ணினேன்; 'திருவாவடுதுறை 
மடத்திற்கு வேண்டியவர் இங்கே வரலாமா? எதற்காக வந்தீர்?' என்று கடுமையாகக் கேட்டுவிட்டால் என் செய்வது என்ற அச்சம் வேறு என் உள்ளத்தில் இருந்தது. பேசாமல் அரை மணி நேரம் அப்படியே நின்றேன். தேசிகர் ஒன்றும் பேசவில்லை.


நான் மெல்லப் பேசத் தொடங்கினேன்; "நான் கும்பகோணம் காலேஜில் தமிழ்ப் பண்டிதராக இருந்து வருகிறேன். தமிழ் நூல்களை ஆராய்ந்து  பதிப்பிக்கத் தொடங்கியிருக்கிறேன். இப்பொழுது பதிப்பிப்பதற்காகப் பத்துப்பாட்டு என்னும் சங்க நூலொன்றை ஸித்தம் செய்துகொண்டிருக்கிறேன். அதில் இடையிலே ஒரு பாகம் சிதைவாக இருக்கிறது. பல இடங்களில் தேடித் தொகுத்த சுவடிகளில் அந்தப் பாகம் காணப்படவில்லை. இந்த ஆதீனத்தின் பெருமையை நான் நன்றாக உணர்ந்தவன். இந்த ஆதீன வித்துவானாக இருந்த சம்பந்த சரணாலயர் இயற்றிய கந்தபுராணச் சுருக்கத்தைப் படித்து இன்புற்றிருக்கிறேன். கவிதா சார்வபௌமராகிய ஸ்ரீ சிவப்பிரகாச  சுவாமிகளுடைய ஆசிரியர் இந்த மடத்தில் இருந்த வெள்ளியம்பலவாண முனிவரென்பரே. இன்னும் பல வித்துவான்கள் இந்த மடத்தின் ஆதரவு பெற்றுச் சிறந்த நிலையில் இருந்தார்கள்; பல நூல்களை இயற்றியிருக்கின்றார்கள்; ஆதலால் இங்கே பழங்காலந் தொடங்கிப் பல அருமையான ஏட்டுச் சுவடிகள் இருக்கும். அவற்றைப் பார்க்க வேண்டுமென்ற அவா எனக்கு நெடுநாட்களாக  இருந்தது. இப்பொழுது ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது. இந்த இடத்திற்கு வந்தால் சிதைந்த பாகம் கிடைக்குமென்று எண்ணி வந்தேன். ஸந்நிதானம் கட்டளையிட்டால் நான் வந்த காரியத்தைக் கவனித்துக்கொண்டு செல்வேன்.
மடத்துக் காரியஸ்தர்கள் சிலரும் உடன் இருந்தால் நான் விரைவில் ஏட்டுச் சுவடிகளைப் பார்க்க அனுகூலமாக இருக்கும். இந்த உபகாரத்தினால் தமிழுக்கும் பெரிய சிறப்பு ஏற்படும். ஸந்நிதானத்தின் நன்றியை என்றும் மறவாமல் இருப்பேன்" என்று சொன்னேன்.


இவ்வளவையும் கேட்ட பிறகு அவர் தலை நிமிர்ந்தார். 'என்ன சொல்லுவாரோ?' என்று அப்பொழுதும் என் நெஞ்சம் படபடத்தது. தலை நிமிர்ந்தபடியே அவர் சிறிது நேரம் இருந்தார். ஏதோ யோசிப்பவர் போலக் காணப்பட்டார். பிறகு, "நாளை வரலாமே" என்று அவர் வாக்கிலிருந்து வந்தது. 'பிழைத்தேன்' என்று நான் எண்ணிக்கொண்டேன்; 'இந்த மட்டிலும் அனுமதி கிடைத்ததே' என்று  மகிழ்ந்தேன். "உத்தரவுப்படியே செய்கிறேன்" என்று சொல்லி மறுநாள் வருவதாக விடைபெற்றுக்கொண்டு பொன்னுசாமி செட்டியாருடன் மாயூரம் சென்றேன். தருமபுரம் மாயூரத்திற்கு அருகில் தான் இருக்கிறது.


மாயூரத்தில் அக்காலத்தில் சிறந்த தமிழ் வித்துவானும் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களுடைய மாணாக்கரும் முன்ஸீப் வேலையில் இருந்து உபகாரச் சம்பளம் பெற்றவருமாகிய வேதநாயகம் பிள்ளை இருந்தார். அவர் வீட்டிற்குப் போனேன். அவர் நோய்வாய்ப்பட்டு மிகவும் மெலிந்திருந்தார். அவரது உடல்நிலை கண்டு வருந்தினேன். அவர், "நான் இப்பொழுது வியாதியோடு சண்டை போடுகிறேன்; என்னோடு அது சண்டை போடுகிறது. யார் ஜயிப்பார்களோ தெரியவில்லை" என்று சொன்னார். வியாதியே ஜயித்ததனால் அதன் பின் சில மாதங்களில் அவர் இவ்வுலக வாழ்வை நீத்தார்.


ramaNi

unread,
Feb 2, 2015, 8:25:07 AM2/2/15
to santhav...@googlegroups.com
நையாண்டிப் பாடல்
(http://ta.wikipedia.org/wiki/நையாண்டிப்_பாடல்)

1. பொருத்தமில்லாத திருமண சம்பந்தம் ஒன்று பேசப்படும் போது
    காக்கொத்தரிசாம்
    கண்ணுழுத்த செத்த மீனாம்
    போக்கற்ற மீரானுக்குப்
    பொண்ணுமாகா வேணுமாம்.
    கச்சான் அடிச்ச பின்பு
    காட்டில் மரம் நின்றது போல்
    உச்சியில நால மயிர்
    ஓரமெல்லாம் தான் வழுக்கை.

2. அந்நியர் ஆட்சியின் போது அதற்கெதிராக
    என்ன பிடிக்கிறாய் அந்தோனி
    எலி பிடிக்கிறேன் சிஞ்ஞோரே
    பொத்திப் பொத்திப் புடி அந்தோனி
    பூறிக் கொண்டோடிற்று சிஞ்ஞோரே
    கோண ஆகாண மலையேறி
    கோப்பிப் பழம் பறிக்கையிலே
    ஒரு பழம் குறைஞ்சதெண்டு
    ஓலம் வைச்சான்வெள்ளைத் துரை.

*****

நந்திவர்மரின் பாணன்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி

    பேணி இசை வளர்க்கும் நந்திபெம்மான் பேரரங்கில்
    ஏணொலி நென்னல் இரவெழலும் - பாணகேள்!
    "பேய்"என்றாள் அன்னைதான், பேதையென் தங்கையும்
    "நாய்"என்றாள், "நீ"யென்றேன் நான்!

"இசையைப் பேணி நன்றாக வளர்க்கும் நந்திவர்ம பெருமானுடைய 
இசைப் பேரரங்கில் நேற்று இரவு பயங்கர கூச்சல் எழுந்தது. அவ்வாறு 
எழுந்தவுடன் பயந்துபோய்க் குழப்பத்துடன் 'இந்தச் சப்தத்தைப் போடுவது 
பேய்', என்று என் தாய் சொன்னாள். பேதையாகிய என் தங்கையோ 
'நாய்' என்றாள். "'பேயுமில்லை; நாயுமில்லை. நீதான் பாடுகிறாய்' என்றேன் நான்"

*****
 

ramaNi

unread,
Feb 2, 2015, 7:38:38 PM2/2/15
to santhav...@googlegroups.com
கல்கியின் கனவு

விவேகானந்தர் ஜீவிய சரித்திரம் என்ற புத்தகத்தில், சுவாமிகளின் பால்ய மனோரதம் இன்னதென்பதை 
நான் படித்தபோது எனக்கேற்பட்ட உணர்ச்சியை வர்ணிக்க முடியாது.

ஆ! குழந்தை நரேந்திரனின் ஆசை யாது?
கையில் சவுக்கு வைத்துக்கொண்டு, சொடுக்கிச் சொடுக்கி, குஷியாக ஜட்கா வண்டி ஓட்ட வேண்டும் 
என்பதுதான்.

நரேந்திரனால் ஜட்கா வண்டிக்காரனாக முடிந்ததா? அந்தோ! இல்லை. பின் என்ன பயன்?

சுவாமி விவேகானந்தருக்கே பாலிய மனோரதம் நிறைவேறவில்லை என்றால், சாதாரண மனிதர்கள் பற்றிக் கூறவே 
வேண்டியதில்லை.

ராமசாமி, அரங்கசாமி, முனிசாமி, குமாரசாமி, கிருஷ்ணன், உஸ்மான், ரங்கன், நான் ஆகியோர் 
சிறுபையன்களாயிருந்தபோது ஒரே சந்தின் மூலையில் ஒருங்கு கூடி கோலி விளையாடியவர்கள். 
அக்காலத்தில் ஒரு நாள், நாங்கள் மேற்கொள்ளவிருக்கும், ஒவ்வொருவரின் மனோரதமும் இன்னதென 
வெளியிடலானோம்.

ஆ! அவற்றை இப்போது எண்ணிப் பார்க்கும்போது, எனது நண்பர்களில் ஒருவருடைய மனோரதமாவது 
நிறைவேறியிருப்பதை நான் காணவில்லை.

ராமசாமி ஆசைப்பட்டதெல்லாம் என்ன? பியூன் வேலை
தான். டங், டங், டங் என மணியடித்து விட்டு, பிள்ளைகள் – வாத்தியார்கள் எல்லோரும் அறைகளுக்குள் 
போனதும் தாழ்வாரத்தில் தூணில் சாய்ந்தபடி சிவனே என்று தூங்க வேண்டுமென்பது தான் அவர் 
மனோரதமாயிருந்தது.

இது நிறைவேறிற்றா? இல்லை.
இந்த இன்பகரமான வாழ்க்கையை விட்டு, ஸர் ஸி.பி. ராமஸ்வாமி ஐயர், கே.சி.ஐ.இ. என்ற நீளப் பெயர் 
தாங்கி, வைஸ்ராய்களும் கவர்னர்களும், ராஜாக்களும், ராணிகளும் கூப்பிடும் இடத்துக்கெல்லாம் கை 
கட்டிக் கொண்டு ஓடும்படியான கதிதான் அவர் தலையில் எழுதியிருந்தது. வாழ்க்கையின் கொடுமை அப்படி!

அரங்கசாமியின் மனோரதம் பிரமாதமில்லை. சத்திர மணியக்காரர் உத்தியோகந்தான். இதாவது நிறைவேறிற்றா? 
எல்லா ஏற்பாடுகளும் நடந்து, முடிவில் கிடைக்கலாம் என்ற நிலைமை ஏற்பட்ட சமயத்தில், திடீரென்று கை 
நழுவிப் போய்விட்டது. ஆசாபங்கமுற்ற நண்பர் அரங்கசாமி அய்யங்கார் கடைசியில் போயும் போயும் 
‘ஹிந்து’ பத்திரிகை எடிட்டர் ஆக நேர்ந்தது!

முனிசாமியின் சமாசாரமென்ன? தாலுகா கச்சேரி டபேதார் ஆக வேண்டுமென்று அத்தியந்த ஆசை கொண்டு 
இராப்பகல் அதே சிந்தனையாய் இருந்தார் பேர்வழி. அந்த ஆசை நிறைவேறவில்லை.

பல அவஸ்தைகள் பட்டு, கடைசியில் கேவலம் மந்திரி உத்தியோகமும் பார்க்க நேர்ந்தது. ஆண்டவனே! டபேதார் 
உத்தியோகம் மட்டும் ஆகியிருந்தால், மந்திரி வேலையிலிருந்து பாதியில் தள்ளிவிட்டார்களே, அந்த மாதிரி 
தள்ளியிருக்க முடியுமா?

குமாரசாமி கிராம கணக்குப்பிள்ளையாக ஆசைப்பட்டார். முடிவில், கல்வி மந்திரியாகத்தான் அவரால் 
முடிந்தது. நாமொன்று நினைக்கத் தெய்வமொன்று நினைக்குமென்பது பொய்யா?

கிருஷ்ணன் ஒரு டீக்கடை வைத்து நடத்த வேண்டுமென்று விரும்பியிருந்தார். நடக்கவில்லை. திவான் 
வேலையும், அதுவும் இதுவும் பார்த்துத் திண்டாடித் தெருவில் நின்றுவிட்டு, கடைசியில் ஏழு வருஷமாய் 
லா மெம்பர் வேலையிலே உட்கார்ந்திருந்தார்.
ஆ! வாழ்க்கையில் இவருக்கு இருக்கக்கூடிய ஏமாற்றத்தை எண்ணும்போது எனக்குக் கண்ணீர் 
பெருகுகிறது.

நண்பர் உஸ்மான், வெற்றிலை வியாபாரம் பண்ண ஆசை கொண்டிருந்தார். அது கைகூடாமல், ஹோம் 
மெம்பர் ஸ்தானத்தில் அல்லாவின் அருளைத் தியானித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார்.

ரங்கன் மனோரதம் என்ன? பழக்கடை வைத்துக் கொண்டு, ஒட்டு மாம்பழங்களைக் கூரிய கத்தி வைத்துக் 
கொண்டு, நைஸ், நைஸாக அறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதுதான். அதற்குப் பதிலாக ஆசாமி 
மனிதர்களுடைய தேகங்களை அறுத்துத் தள்ளிக் கொண்டிருக்கிறார்.
ரங்காச்சாரி என்றதும் குழந்தைகள்கூடப் பயப்படும்படியான நிலைமைக்கு வர நேர்ந்துவிட்டது. பாவம்!

ஆதாரம் : ஆனந்த விகடன் 10.6.1933
தம்பி தயங்காதே…

*****


Iyappan Krishnan

unread,
Feb 2, 2015, 10:01:01 PM2/2/15
to சந்தவசந்தம்

2015-02-03 6:08 GMT+05:30 ramaNi <sai...@gmail.com>:
ஆதாரம் : ஆனந்த விகடன் 10.6.1933
தம்பி தயங்காதே…

​சில துணுக்குகள் நல்ல நகைச்சுவையாகவும், சிலது பேருக்கு நகைச்சுவையாகவும், சிலது பேருக்கு நகைச்சு   வைங்கற மாதிரியும் இருந்தாலும்  பல பழைய நல்ல கட்டுரைகள், தகவல்கள் இந்த இழையில் கிடைக்கின்றன.  ஆரம்பித்து தொடர்ந்து பங்களிக்கும் இரமணி சாருக்கு வாழ்த்துகளும் நன்றியும். ​ ஆனந்த விகடன் கட்டுரை அருமை.


​அன்புடன்​

Iyappan Krishnan

*>*<*
உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்.
நிலைபெறுத்தலும். நீக்கலும். நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார்-அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.

ramaNi

unread,
Feb 3, 2015, 11:02:31 PM2/3/15
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, ஐயப்பன்.
ரமணி

ramaNi

unread,
Feb 3, 2015, 11:02:48 PM2/3/15
to santhav...@googlegroups.com
தம்பி தயங்காதே

நாகர்கோவிலில் பெரிய இலக்கிய விழா நடைபெற்றது.

பசும்பொன்முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் கடல்மடை திறந்ததெனச் சொல்மாரி பொழிந்தார். அவர் 
பேசும்போது, “ஆயிரத்தெட்டு நரம்புகளுள்ள இந்த உடம்பிலே முப்பத்து மூவாயிரம் தடவை மூச்சுவிடும் 
மனித உடலிலே, நாளொன்றுக்கு நாலாயிரம் தடவை இமைக்கும் கண்களிலே..” என இந்த மாதிரி புள்ளி 
விவரங்களை அடுக்கி, சபையோரைத் திணற அடித்துவிட்டார்.

அடுத்தபடியாகப் பேச வேண்டியவன் நான். தேவருக்காக எழுந்த கரகோஷம் இன்னும் அடங்கவில்லை. அவரது 
பேச்சே எல்லோருடைய காதிலும் ரீங்காரம் செய்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நான் மைக்கின் 
முன் வந்து நின்றேன்.

“தலைவர் அவர்களே, சபையோர்களே” என்று எதுவும் சொல்லவில்லை.

“ஆயிரத்து ஐநூற்று ஐம்பத்தி ஐந்து கால்கள் உள்ள இப்பந்தலிலே, மூவாயிரத்து முன்னூற்று முப்பத்தி 
மூன்று தென்னங்கீத்து வேய்ந்துள்ள இக்கொட்டகையில் பதினாராயிரத்துப் பதினைந்து பேரே உள்ள 
இந்தக் கூட்டத்தில்…” என ஆரம்பித்தேனோ இல்லையோ, ‘கலகல’
வென்று சிரிப்பொலியும் கரகோஷமும் என்னை மேற்கொண்டு பேச முடியாமல் செய்துவிட்டன.

முத்துராமலிங்கத் தேவர் கோபப்படுவாரோ என்று அச்சத்துடன் அவரைத் திரும்பிப் பார்த்தேன்.
தேவர் சட்டென்று எழுந்து, “தம்பி தயங்காதே, பேசு. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு. நீ நம்ம 
ஜில்லா என்பதில் எனக்கு ரொம்பப் பெருமையாக இருக்கிறது” என்று கூறி, தான் மேலே போர்த்தியிருந்த 
கதர் சால்வையை எடுத்து எனக்குப் போர்த்தினார்.

– சின்ன அண்ணாமலை

*****
 

ramaNi

unread,
Feb 3, 2015, 11:16:27 PM2/3/15
to santhav...@googlegroups.com
நல்லதோர் நகைச்சுவைக் கட்டுரை இங்கே:
முருகா முருகா

ரமணி


ramaNi

unread,
Feb 4, 2015, 6:26:27 AM2/4/15
to santhav...@googlegroups.com
காதல் பிரசாரம்

கவிஞர் கந்தசாமிக்குக் கவிதை என்றால் ரொம்பப் பிரியம். ஆனால் அவருக்கு வாய்த்தது, ஒரு செய்தித் தாளில் 
நிருபர் உத்தியோகம்.

தேர்தல் நேரத்தில் ஊரெல்லாம் சுற்றித் திரிந்து பிரசாரக் கூட்டங்களில் செய்தி சேகரித்தவர், மாலையில் 
வீடு திரும்பும் வழியில் காதலியைச் சந்திக்கிறார். அதே ஞாபகத்தில் வெண்பாக்களைப் பொழிகிறார்.

எலக்‌ஷன் ரிசல்ட் வருவதற்குள், அவருடைய காதலுக்குப் பச்சைக் கொடி காட்டப்படவேண்டும் என்று 
நீங்களும் பிரார்த்தனை செய்யுங்கள்!

01. தாமரை

தாமரைப்பூ போன்ற தளிர்முகத்தைப் பார்த்ததனால்
மாமனிவன் கொஞ்சம் மரைகழன்றான், பூமகளே,
புன்சிரிப்பால் நெஞ்சில் புயல்மூட்டும் பேரழகே,
என்னவளே, பக்கம் இரு!

02. கை

கையழகைக் கண்டே கவிஞனாய் ஆகிவிட்டேன்,
ஐயமென்மேல் வேண்டாமென் ஆரணங்கே, பையவந்து
என்கரத்தைப் பற்றிக்கொள், எங்கெங்கோ இட்டுச்செல்
சின்னவள்நீ என்வாழ்க்கைச் சீர்

03. இரட்டை இலை

இரட்டை இலைபோல் எழில்புருவ வில்லால்
மிரளவைக்கும் மான்விழியே, மீனே, வரம்கொடுப்பாய்,
உன்னோடு நூறாண்டு ஒன்றாக வாழ்ந்திடவே,
பொன்னே, கருணை புரி!

04. உதய சூரியன்

உதிக்கின்ற சூரியன்போல் ஒவ்வொரு நாளும்
கதியென்(று) உனைநினைப்பேன் கண்ணே, கொதிக்கின்ற
நெஞ்சைத் தணியவைப்பாய் நேரிழையே, வானவில்லே,
அஞ்சுகமே, என்னை அணை

05. முரசு

முரசுகொட்டி ஊரை முழுதும் அழைத்துக்
கரம்பிடிப்பேன் உன்னைக் கனியே, சரம்சரமாய்
முத்தங்கள் தந்தபடி மூழ்கியே காதலினில்
முத்தெடுப்போம் இன்பத்தேன் மொண்டு

06. மாம்பழம்

மாம்பழக் கன்னத்தில் மச்சானென் முத்திரையைப்
பூம்பாவாய், ஏற்றுக்கொள் புன்சிரித்து, நாம்வாழும்
இல்லறத்தின் அச்சாரம், இச்சென்னும் இம்முத்தம்,
நல்லழகீ, நாலுமுத்தம் நல்கு

07. பம்பரம்

பம்பரம்போல் உன்னால் பதறிமனம் சுற்றுதடி
உம்மென்(று) இருந்தால் உனக்கழகா? செம்பருத்திப்
பூப்போல் சிவந்தவளே, பொல்லாத மௌனம்ஏன்?
காப்பாற்று, நீயே கதி!

08. கதிர் அரிவாள்

கதிர்அரிவாள் கொண்டென் களைகளை நீக்கி
மதிமிகுந்தோன் ஆக்கினாய் மானே, சுதிவிலகா
நல்லிசைபோல் என்றென்றும் நாம்வாழ்வோம் கண்மணியே
இல்லையொரு துன்பம் இனி

09. சுத்தியல்

சுத்தியல்போல் உன்னுடைய சுட்டுவிழித் தாக்குதலால்
அத்திமரப் பூவே அயர்கின்றேன், சத்தியமாய்
நான்பிழைக்க நீவேண்டும், நல்லவளே இங்குவந்து
தேன்குரலால் என்னுயிரைத் தேற்று!

10. துடைப்பம்

துடைப்பம் எடுக்காதே, தூயதுஎன் அன்பு,
உடை,உடல்மேல் காமமில்லை, உண்மை! அடைமழைபோல்
உள்பொங்கும் நேசத்தால் உன்முன்னே நான்வந்தேன்
கள்ளமில்லாக் காதலிது காண்

***
என். சொக்கன் …
24 03 2014

*****

Pas Pasupathy

unread,
Feb 4, 2015, 6:01:30 PM2/4/15
to Santhavasantham
சொக்கனின் வெண்பாக்கள் அருமை! 

(  ஒரு தகவல்: இவர் ” தினமொரு கவிதை” என்ற ஒரு  குழு நடத்தி வந்தார்...2010 வரை என்று நினைவு. அதில்தான் இலந்தை “ விருத்தம் எழுத வருத்தம் எதற்கு “ என்ற  தொடரை எழுதினார். )  

2015-02-04 6:26 GMT-05:00 ramaNi <sai...@gmail.com>:
காதல் பிரசாரம்

!

10. துடைப்பம்

துடைப்பம் எடுக்காதே, தூயதுஎன் அன்பு,
உடை,உடல்மேல் காமமில்லை, உண்மை! அடைமழைபோல்
உள்பொங்கும் நேசத்தால் உன்முன்னே நான்வந்தேன்
கள்ளமில்லாக் காதலிது காண்

***
என். சொக்கன் …
24 03 2014

*****

ramaNi

unread,
Feb 4, 2015, 9:15:46 PM2/4/15
to santhav...@googlegroups.com
தினமொரு கவிதை குழுவின் இணைய முகவரி கிடைத்தால் பார்க்கலாமே?
ரமணி

ramaNi

unread,
Feb 4, 2015, 9:17:27 PM2/4/15
to santhav...@googlegroups.com
வீட்டுக்குப் போகும் காட்டாறு

ஒரு மூங்கில் வெட்டுபவர் ஒருநாள் தனது பத்து வயது மகனையும் அழைத்துக் கொண்டு காட்டுக்கு 
மூங்கில் வெட்டச் சென்றார். பையனோ விடாமல் வழியெல்லாம் அவரைக் கேள்விகளால் துளைத்தெடுத்துக் 
கொண்டே வந்தான். அவரும் பொறுமையாகப் பதில் சொல்லிக் கொண்டே வந்தார்.

மூங்கிலை வெட்ட ஆரம்பித்தார். பையன் அப்போதும் கேள்விகள் கேட்டான். "நாம அப்புறம் பேசிக் 
கொள்ளலாம். நீ நல்ல பையனாம். அப்பா வெட்டுற மூங்கிலையெல்லாம் எடுத்து அடுக்கி வைப்பியாம்” 
பையனும் மகிழ்ச்சியுடன் தலையசைத்தான்.

அவர் மூங்கில் வெட்ட ஆரம்பித்தார். "அப்பா… அப்பா… ” என்றான் பையன்.

"என்னடா?" கோபத்துடன் கேட்டார்.

"இந்தக் காட்டாறு எங்கே போகுது?"

"நம்ம வீட்டுக்குத்தான்"

பையன் அதற்குப் பிறகு கேள்விகள் கேட்கவில்லை.

மாலையானது. மூங்கில் வெட்டுபவர் பையனின் கையைப் பிடித்துக் கொண்டு "வா, போகலாம். நான் 
வெட்டிய மூங்கிலையெல்லாம் எங்கே அடுக்கி வைச்சிருக்க?" என்று கேட்டார்.

பையன் சொன்னான்: "நீங்க வெட்டினதை எல்லாம் ஆற்றிலே போட்டுட்டேன். இந்நேரம் அது நம்ம 
வீட்டுக்குப் போயிருக்கும்"

*****
 

அவனடிமை

unread,
Feb 4, 2015, 10:01:44 PM2/4/15
to santhav...@googlegroups.com
பெங்களூரு வாசியான திரு சொக்கனின் விடாத வேண்டுகோளும் ஹரிகி அவர்கள் இப்போது நடத்திக் கொண்டிருக்கும் கம்பராமயாணம் முற்றோதலைத் தொடங்கியதற்கு ஒரு முக்கிய காரணம் என்று தென்றலில் அன்னாரின் (ஹரிகி அவர்களின்) நேர்காணலில் படித்த ஞாபகம். திரை இசைப் பாடல்களைப் பற்றி ‘நாலு வரி நோட்’ என்று ஒரு கட்டுரைத் தொடர் இட்டு, பின்னர் அதையே புத்தகமாகவும் வெளியிட்டு இருக்கிறார். தமிழில் நல்ல ஆர்வம், திறமை உடைய இளைஞர். 

On Wednesday, February 4, 2015 at 3:01:30 PM UTC-8, பசுபதி wrote:
சொக்கனின் வெண்பாக்கள் அருமை! 

(  ஒரு தகவல்: இவர் ” தினமொரு கவிதை” என்ற ஒரு  குழு நடத்தி வந்தார்...2010 வரை என்று நினைவு. அதில்தான் இலந்தை “ விருத்தம் எழுத வருத்தம் எதற்கு “ என்ற  தொடரை எழுதினார். )  

N. Ganesan

unread,
Feb 7, 2015, 8:33:50 AM2/7/15
to santhav...@googlegroups.com, மின்தமிழ், vallamai
லாடு லட்டுச் சுமை - உ.வே.சாமிநாதையர் 
______________________________ 

இராமநாதபுரம் ஜில்லா வேம்பத்தூர் வாசியான சிலேடைப்புலி பிச்சுவையரைப்  பற்றிப் பலர் கேட்டிருப்பார்கள்.  அவர் வியக்கத்தக்க வண்ணம் அதிவிரைவில்  கவிபாடும் ஆற்றலையுடையவர். திருவாவடுதுறையில் சின்னப்பட்டத்திலிருந்த  ஸ்ரீ நமச்சிவாய தேசிகரவர்களிடம் பாடம் கேட்டவர்.  இராமநாதபுரம் ராஜா ஸ்ரீ  பாஸ்கர ஸேதுபதி அவர்களால் மிகவும் ஆதரிக்கப்பெற்றவர்.  அவரிடம்  சுப்பையரென்னும் ஓரிளைஞர் அடிக்கடி வந்து பாடங்கேட்டு வந்தார்.  பிச்சுவையர் வெளியூருக்குப் போகையில் சுப்பையரையும் அழைத்துச்  செல்வதுண்டு. 

அக்காலத்தில் ஊற்றுமலையில் ஜமீன்தாராக இருந்தவர் ஹ்ருதயாலய  மருதப்பத்தேவர் என்பவர்.  அவருடைய கல்வியறிவும் ஆற்றலும் நற்குணங்களும் மிக உயர்ந்தவை.  தமிழ் வித்துவான்களிடத்தும் ஸங்கீத  வித்துவான்களிடத்திலும் அவருக்கிருந்த அன்பு யாவராலும் மறக்க இயலாதது.  வீண்காலம் போக்காமல் காலவரையறைப்படி ஒழுங்காக எல்லா வேலைகளையும்  திருத்தமுறச் செய்வார்.  தம்முடைய ஜமீன் ஸம்பந்தமான வேலைகளையும் மற்ற  காரியங்களையும் அவ்வப்போது செய்வதால் உண்டாகும் அயர்ச்சியை அவர் தமிழ் நூலாராய்ச்சியால் ஆற்றிக் கொள்வார்.  தினந்தோறும் கலையில் 8-மணி முதல் 10- மணி வரையிலும், மாலையில் 2-மணி முதல் 4-மணி வரையிலும் புலவர்களைக் கொண்டு நல்ல தமிழ் நூல்களை வாசிக்கச் செய்து கேட்பதும் அப்புலவர்கள் அங்கங்கே  கூறும் நயமான பொருள்களையறிந்து உவப்பதும் தாமே எடுத்துக் கூறுவதும்  அவருக்கு இயல்பு.  இதற்கென்றே தம்முடன் சில புலவர்களை வைத்து ஆதரித்து வந்தார். 

ஊற்றுமலை ஜமீன்தார்களுக்குக் குலதெய்வமாகிய நவநீத கிருஷ்ண ஸ்வாமியின்  ஆலயம் அவ்வூரில் இருக்கிறது.  அங்கே நித்திய நைமித்திகங்கள் சிறப்பாக  நடைபெறும்.  பெரிய கோயில்களுக்கு நடைபெறுவனபோன்ற சிறப்புக்களை அங்கே பார்க்கலாம்.  அதற்குரிய நித்தியப் படித்தரம் பத்து வராகனென்று கேள்வி.  அந்தக் கோயிலின் நைவேத்தியங்களுக்கு ஒரு தனிச் சிறப்புண்டு.  பல  வர்க்கான்னங்களும், லாடு, லட்டு, ஜிலேபி, தேங்குழல் முதலிய பக்ஷியவகைகளும் கண்ணபிரானுக்கு நிவேதனம் செய்யப்படும்.  எல்லாம் புத்துருக்கு நெய்யிற் செய்யப்படுவன.  ஒரு லாடு உரித்த தேங்காயளவு இருக்கும்.  தேங்குழல் பெரிய சந்தனக் கல்லளவு இருக்கும்.  இவ்வளவு விசேஷமான நைவேத்தியங்களை ஒவ்வொரு நாளும் அங்கே காணலாம்.  உத்ஸவ காலங்களில் இவை பன்மடங்கு சிறப்பாக இருக்குமென்பதைச் சொல்லவும் வேண்டுமா? 

ஹ்ருதயாலய மருதப்பத்தேவர் புலவர்களிடம் காட்டும் அன்பைப் பலவகைகளில் அறியலாம்.  அவர்களுக்கு உரிய சம்மானங்களை அளிப்பதோடு நவநீத கிருஷ்ணனுடைய பிரசாதத்தையும் ஒவ்வொரு நாளும் அவர்கள் வெறுக்கும் வரையில் அளிக்கச் செய்வார்.  சில சமயங்களில் புலவர்களுக்குப் பக்ஷியங்களைக் கொடுத்தனுப்புவதும் உண்டு. 

நவநீதகிருஷ்ண ஸ்வாமியின் உத்ஸவத்துக்கு ஒரு சமயம் பிச்சுவையர் சுப்பையரையும் உடன் அழைத்துக்கொண்டு ஊற்றுமலை போயிருந்தார்.  அவரிடம் ஜமீன்தாருக்கு மிக்க அன்பு உண்டு.  அவருடைய சாதுரியமான செய்யுட்களைக் கேட்டுப் பொழுது போக்குவதில் ஜமீன்தார் சலிப்படைவதில்லை.  உத்ஸவம் நடந்த பிறகு பிச்சுவையர் தம் ஊருக்குப் புறப்பட்டார்.  வழக்கப்படி அவருக்கு அளிக்கவேண்டிய சம்மனங்களை அளித்த ஜமீன்தார், "உங்களுக்கென்று இரண்டு மூன்று நாள் பிரசாதங்களை எடுத்து வைக்கச் சொல்லியிருக்கிறேன்.  அவற்றைக் கொண்டுபோய் உங்கள் குழந்தைகளிடம் கொடுக்கவேண்டும்" என்றார். பிச்சுவையரிடம் அவை கொடுக்கப்பட்டன.  அவற்றை ஒரு மூட்டையாகக் கட்டி எடுத்துக் கொள்ளுகையில் உடன் வந்த இளைஞராகிய சுப்பையர், "நான் எடுத்து வருகிறேன்" என்று சொல்லி வாங்கிக்கொண்டார்.  சுமை சிறிது பெரிதாகவே இருந்ததால் சுப்பையர் அதைத் தம் தலையில் வைத்துத் தூக்கி வந்தார். 

வழியில், பிச்சுவையர் சிறிது தங்கிச் செல்ல நேர்ந்தது; "நீ முன்னே போ; நான் சற்று நேரத்தில் வந்துவிடுகிறேன்" என்று சொல்லி இவரை முன்னே அனுப்பினார்.  இவர் சிறிது தூரம் சென்றார்.  நடந்து வந்ததனாலே களைப்பு ஏற்பட்டது; பசியும் உண்டாயிற்று.  இவர் உடனே பக்ஷிய மூட்டையைக் கீழே வைத்தார்.  அதன் மணம் இவர் மூக்கைத் துளைத்தது; நாவில் நீர் ஊறிற்று. அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டே மூட்டையை அவிழ்த்துச் சிறிது சிறிதாகப் பக்ஷியத்தைச் சுவை பார்க்கலானார்.  அதன் சுவை இவரைத் தன்  வசப்படுத்திவிட்டது.  பின்னால் பிச்சுவையர் வருவாரென்ற நினைவில்லாமல் ஒரே  ஞாபகத்தோடு அந்த வேலையில் அவர் ஈடுபட்டிருந்தார். 

சிறிது நேரம் சென்றது.  "என்னடா பண்ணுகிறாய்?" என்ற குரலைக் கேட்டவுடன் சுப்பையர் திடுக்கிட்டார்.  இவர் பக்ஷியங்களை ஊக்கத்தோடு தின்றுகொண்டிருக்கும் காட்சியைப் பிச்சுவையர் பார்த்து வியந்தார்;  "என்னிடம் சொன்னால் நான் வேண்டாமென்றா சொல்லுவேன்?" என்று கேட்டார் அவர். 

சுப்பையர்:- நான் என்ன செய்வேன்!  கால் வலித்தது; பசியும் உண்டாயிற்று.  இப்படிச் செய்வதைவிட வேறு வழியேது? 

பிச்சுவையர், "அதற்காக இப்படி வழியிலே மூட்டையைப் போட்டுக்கொண்டா தின்னவேண்டும்?  சரி, மூட்டையைத் தூக்கு" என்று சொல்லிக் கொண்டே அதனைக்  கட்டிச் சுப்பையரிடம் கொடுக்கலானார். 

உடனே சுப்பையர் தம் கையிலிருந்த பக்ஷியங்களைத் தின்று கொண்டே, "இச்சுமையைப் பிச்சுவையா வென்றலையி லேற்றுவது மியல்பு தானோ?" என்றார்.  ஒரு பாட்டின் ஓரடியாக இருந்தது அது. 

பிச்சுவையர், "நீ செய்யுள் கூடச் செய்வாய் போலிருக்கிறதே!" என்று பின்னும் வியப்புடன் கூறினார். 

சுப்பையர்:- எல்லாம் உங்களுடைய ஆசீர்வாதந்தான். 

பிச்சுவையர்:- சரி, அப்படியானால் உன் கையிலுள்ள பக்ஷியத்தைத் தின்று  பூர்த்தி செய்து விட்டு அந்தச் செய்யுளையும் பூர்த்தி செய். 

சுப்பையர் அங்ஙனமே பூர்த்தி செய்தார்.  அந்தச் செய்யுள் வருமாறு:- 

(அறுசீர்க்கழிநெடிலடி யாசிரியவிருத்தம்) 

எச்சகமும் புகழ்படைத்த தொன்னூற்று மலைமருதப் 
...பேந்த்ரன் போற்றும் 
நச்சரவி னடிப்பவர்க்கு நைவேதித் திட்டதிவ்ய 
...லாடு லட்டு 
வச்சுவச்சுத் தின்றுதின்று வயிறுகுறை யாமன்மிக 
...வருந்தும் வேளை 
இச்சுமையைப் பிச்சுவையா வென்றலையி லேற்றுவதும் 
...இயல்பு தானோ. 

[இவ்வரலாறு பிச்சுவையரவர்களால் அறிந்தது] 

(முற்றும்) 

வணக்கம்.  சுப்பையரவர்கள் செய்த விருத்தத்தின் ஈற்றடியை வைத்து, லாடு- 
லட்டு சம்பவத்தையொட்டி நானும் ஒரு செய்யுள் முடித்திருக்கின்றேன். 
குற்றங்கள், கருத்துகள் தெரிவிக்குமாறு நேயர்களைக் கேட்டுக்கொள்கிறேன். 
நன்றி. 
******************** 
குச்சியவர் கைபிடித்தா மேய்ப்பவர்தம் உச்சிமிசைக் 
...குடையாய்க் குன்றேந்(து) 
அச்சிறுவற்(கு) இட்டவுயர் உண்டியடக்(கு) இம்மூட்டை 
...அடியேன் செய்த 
எச்சிலென நன்கறிந்தும் எஞ்சியதும் இனியுனக்கே 
...என்னா(து) இன்னும் 
இச்சுமையைப் பிச்சுவையா என்றலையில் ஏற்றுவதும் 
...இயல்பு தானோ.  - வெண்பாவிரும்பி, மே-11-2008

உச்சியிலே சுமைதூக்கி ஓச்சுகின்ற வெயிலதனில் உளையும் போது 
மெச்சவரும் வாசனையா வெறும்வயிற்றின் பசிதீர்க்கும், வேண்டிக் கொஞ்சம் 
பச்சணத்தை நான் தின்றால், பாட்டுக்குள் சுமையேற்றும் பழக்கத்தாலே 
இச்சுமையைப் பிச்சுவையர் என்தலயில் ஏற்றுவதும் இயல்பு தானோ? 

கச்சிதமாய் ஊற்றுமலைக் காரரிங்கு தான்கொடுத்த லாடுலட்டென் 
உச்சியினைத் தானழுத்தி உறுபசியை மேல்தூண்டை ஒருவாய் போட்டால் 
சச்சரவு செய்வதுபோல் தான்வந்தே தமிழ்ச்சுவையைத் தானேற்றாமல் 
இச்சுமையைப் பிச்சுவையர் என்தலையில் ஏற்றுவதும் இயல்பு தானோ? 

இலந்தை 

வச்சிரண்டு மூன்றுதின மானதெனின் வாடைவரும் லாடும் லட்டும்
உச்சிவெயில் காட்டுமிந்த உக்கிரத்தில் மேலுமிக ஊசு மென்று
பச்சணத்தின் பாங்கினைநான் பார்த்துமது தேகநலம் பாது காத்தும்
இச்சுமையைப் பிச்சுவையர் என்தலையில் ஏற்றுவதும் இயல்பு தானோ?

அனந்த்

--------------

சந்தவசந்தத்தினின்றும் தெரிவு:

நா. கணேசன்

N. Ganesan

unread,
Feb 7, 2015, 12:47:31 PM2/7/15
to santhav...@googlegroups.com

(அறுசீர்க்கழிநெடிலடி யாசிரியவிருத்தம்) 

எச்சகமும் புகழ்படைத்த தொன்னூற்று மலைமருதப் 
...பேந்த்ரன் போற்றும் 
நச்சரவி னடிப்பவர்க்கு நைவேதித் திட்டதிவ்ய 
...லாடு லட்டு 
வச்சுவச்சுத் தின்றுதின்று வயிறுகுறை யாமன்மிக 
...வருந்தும் வேளை 
இச்சுமையைப் பிச்சுவையா வென்றலையி லேற்றுவதும் 
...இயல்பு தானோ. 

[இவ்வரலாறு பிச்சுவையரவர்களால் அறிந்தது - உவேசா அவர்கள்] 

(முற்றும்) 

வணக்கம்.  சுப்பையரவர்கள் செய்த விருத்தத்தின் ஈற்றடியை வைத்து, லாடு- 
லட்டு சம்பவத்தையொட்டி நானும் ஒரு செய்யுள் முடித்திருக்கின்றேன். 
குற்றங்கள், கருத்துகள் தெரிவிக்குமாறு நேயர்களைக் கேட்டுக்கொள்கிறேன். 
நன்றி. 
******************** 
குச்சியவர் கைபிடித்தா மேய்ப்பவர்தம் உச்சிமிசைக் 
...குடையாய்க் குன்றேந்(து) 
அச்சிறுவற்(கு) இட்டவுயர் உண்டியடக்(கு) இம்மூட்டை 
...அடியேன் செய்த 
எச்சிலென நன்கறிந்தும் எஞ்சியதும் இனியுனக்கே 
...என்னா(து) இன்னும் 
இச்சுமையைப் பிச்சுவையா என்றலையில் ஏற்றுவதும் 
...இயல்பு தானோ.  - வெண்பாவிரும்பி, மே-11-2008

உச்சியிலே சுமைதூக்கி ஓச்சுகின்ற வெயிலதனில் உளையும் போது 
மெச்சவரும் வாசனையா வெறும்வயிற்றின் பசிதீர்க்கும், வேண்டிக் கொஞ்சம் 
பச்சணத்தை நான் தின்றால், பாட்டுக்குள் சுமையேற்றும் பழக்கத்தாலே 
இச்சுமையைப் பிச்சுவையர் என்தலையில் ஏற்றுவதும் இயல்பு தானோ? 

கச்சிதமாய் ஊற்றுமலைக் காரரிங்கு தான்கொடுத்த லாடுலட்டென் 
உச்சியினைத் தானழுத்தி உறுபசியை மேல்தூண்டை ஒருவாய் போட்டால் 

டை என்னும் தட்டுப்பிழையை ட என்று மற்றுவது சரிதானா?  நன்றி.

ramaNi

unread,
Feb 12, 2015, 10:42:47 AM2/12/15
to santhav...@googlegroups.com
அரசியல் புகைப்பட நகைச்சுவை

ramaNi

unread,
Feb 12, 2015, 8:39:48 PM2/12/15
to santhav...@googlegroups.com
வீரப்பலகாரம் வேண்டும்!
https://rammalar.wordpress.com/2009/08/13/வீரப்பலகாரம்-வேண்டும்/

ஒரு முறை சுப்பிரமணிய பாரதியார் பொதுக்கூட்டம் ஒன்றில் வீர உரை நிகழ்த்தினார். 
அங்கு கூடியிருந்த மக்கள் அவரது பேச்சை ரசித்துக் கேட்டனர்.

கூட்ட முடிந்தது.  விழா அமைப்பாளர் பாரதியாரிடம், தங்களுக்கு என்ன பலகாரம் 
வேண்டும்? -சொல்லுங்கள். பையனை அனுப்பி வாங்கி வரச் சொல்கிறோம்.” என்றார்.

உடனே பாரதியார், “எனக்கு வீரப்பலகாரம்தான் வேண்டும் ” என்றார்.

“வீரப்பலகாரமா? நாம் இதுவரை கேள்விப்படாததாக இருக்கிறதே?” என்று கூட்ட 
அமைப்பாளர் குழம்பிப் போனார். அங்கிருந்தவர்களும் விழித்தனர்.

உடனே பாரதி, “நான் சொல்வது உங்களுக்குப் புரியவில்லையா? பஜ்ஜி, மெதுவடை, 
இட்லி போன்ற பலகாரங்கள் எல்லாம் கோழைப் பலகாரங்கள்.வாயில் போட்டதும்,
சத்தம் போடாமல் சாத்வீகமாக உள்ளே போய்விடும்.

"ஆனால் பக்கோடா, முறுக்கு, சேவு போன்ற பலகாரங்கள் வீரப் பலகாரங்கள். 
இவைகளை வாயில் போட்டதும் “நொறுக்கு நொறுக்கு” என்றும் “கடக்கு முடக்கு” 
என்றும் பல்லிற்கு வீரமான வேலை கொடுக்கும் அல்லவா? எனவே இவை
வீரப் பலகாரங்கள்தனே?” என்றார்.

*****
 

Subbaraman NV

unread,
Feb 12, 2015, 8:57:02 PM2/12/15
to santhav...@googlegroups.com
Great! Thanks for sharing.

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
N V Subbaraman,
Editor, Young Poet,
12 / 1045 Jeevan Bhima Nagar,
Chennai - 600101

Visit http://www.youngpoet.org
Visit http://www.poemhunter.com/subbaraman-n-v/

Hari Krishnan

unread,
Feb 12, 2015, 10:16:12 PM2/12/15
to santhavasantham
2015-02-13 7:09 GMT+05:30 ramaNi <sai...@gmail.com>:
ஆனால் பக்கோடா, முறுக்கு, சேவு போன்ற பலகாரங்கள் வீரப் பலகாரங்கள். 
இவைகளை வாயில் போட்டதும் “நொறுக்கு நொறுக்கு” என்றும் “கடக்கு முடக்கு” 
என்றும் பல்லிற்கு வீரமான வேலை கொடுக்கும் அல்லவா? எனவே இவை
வீரப் பலகாரங்கள்தனே?” என்றார்.

அன்புள்ள திரு ரமணி,

ஆர்வத்துடன் பல கதைகளைப் பகிர்ந்து கொள்வது நன்றாக இருக்கிறது.  உங்களுடைய பல்வேறுபட்ட முயற்சிகளுக்கும் வெளிப்பாடுகளுக்கும் என் வாழ்த்தையும் சிரம் தாழ்ந்த மதிப்பையும் அளித்துப் போற்றுகிறேன்.

ஒருசில குட்டிக் கதைகள் அல்லது anecdotes மேற்போக்காகப் பார்க்கும் போது முதல் பார்வைக்கு நன்றாகவும், சற்றே மூழ்கிப் பார்த்தால் உள்ளீடு அற்றதாகவும் காட்சி தரும்.  அவற்றைத் தவிர்ப்பது நல்லது என்பது என்னுடைய சிற்றறிவுக்குப் படுவது.

மேலே குறிப்பிட்ட குட்டிக் கதை, என்னுடைய இருபதுகளில் நண்பர்கள் மத்தியில் காரசாரமாக விவாதிக்கப் பட்ட ஒன்று.  இங்கே உள்ள தினமணி முன்னாள் ஆசிரியர் பா கிருஷ்ணன் (பாகி) இதைப் பார்த்துப் படிக்க நேரிட்டால் அவருக்கும் இந்தச் சம்பவம் நினைவுக்கு வரும்.  அந்த வயதின் கொந்தளிப்பில் சற்று உணர்ச்சி வசப்பட்டும் இதை விவாதித்திருக்கிறோம்.  பாரதிக்குப் புகழ் சேர்ப்பதாக நினைத்துக் கொண்டு அவருடைய வாழ்க்கை ‘வரலாறு’ (வராதல்-ஆறு என்பதே பொருந்தும்) எழுதியவர்கள் நிறைய கைச்சரக்கை சேர்த்திருக்கிறார்கள்.  அவற்றிலொன்று இது.  இன்னொன்று, தாகூரை மதுரைக்கு வந்து, தான் பெற்ற நோபல் பரிசை மக்கள் முன்னிலையில் வைத்து, தன்னுடன் நேருக்கு நேர் விவாதித்து, வென்றால் நோபல் பரிசை அவர் எடுத்துக் கொள்ளலாம், தோற்றால் பாரதிக்கு அதைத் தந்துவிட வேண்டும் என்பதாக நண்பரொருவரிடம் சொன்னார் என்று பேசும் பதிவு.  இவற்றில் மேற்போக்காக பாரதியை உயர்த்திச் சொல்லும் முயற்சி இருந்தாலும், ஆழமற்ற சிந்தனை என்பதால், பாரதிக்குப் பெருமை சேர்ப்பதைவிடவும் பாரதியை சிறுமைப் படுத்துகின்றன என்பதை சற்றே அந்தக் கோணத்தில் சிந்தித்தால் ஒப்புக் கொள்ள முடியும்.

‘அதாவது என்ன சொல்ல வறீங்கன்னா, பாரதி தன் ஆயுளில் பஜ்ஜி மெதுவடை சாப்பிட்டதே இல்லை.  அவர் சாப்பிட்டதெல்லாம் முறுக்கு நொறுக்கு போன்ற பலகாரங்களே அப்படின்னு சொல்றீங்களா’ என்று கேட்டால் (எங்களிடம் இப்படி மடக்கியும் இருக்கிறார்கள்) சொல்வதற்கு பதில் எங்களிடம் இருக்கவில்லை.  உங்களிடம் இருக்கிறதா.

இதற்கு மேல் இன்னொன்று.  இது எந்தச் சமயத்தில் எங்கே நடந்த நிகழ்வு, பாரதி இப்படிச் சொன்னார் என்பதற்கு என்ன ஆதாரம்?  இந்தக் கேள்விக்கு பதில் இருக்கிறதா.  தாகூரை பொது மன்றத்தில் வாதத்துக்கு அழைத்தார் என்பது எப்படிச் சிறுபிள்ளைத்தனமாய் இருக்கிறதோ, அப்படித்தான் இதுவும் இருக்கிறது.  நிஜமாகவே பாரதி அவ்வாறு பேசியிருந்தால் அதுவும் சிறுபிள்ளைத்தனம் என்று சொல்வதில் எந்தத் தயக்கமும் இல்லை.  ஆனால் பாரதி அப்படிப் பேசியிருந்திருக்க முடியாது, அவனுடைய எழுத்து இதை அடையாளம் காட்டுகிறது. 

எனவே, சொல்ல விழைவது பாரதி பெருமை, சொல்லால் விளைவது பாரதிக்குச் சிறுமை என்றபடி பாரதிக்கு பெருமை சேர்க்காத இப்படிப்பட்ட புனைகதைகளைத் தவிர்த்து, ‘ஆளு கிடைக்கலன்னா தெனாலிராமன் தலைல ஏத்து‘ என்பதைப் போல, பாரதியை இன்னொரு தெனாலிராமன், விகடகவியாக மாற்றிவிடாமல் உள்ளதை உள்ளபடிப் புரிந்து கொள்ளக் கூடிய உண்மையான சம்பவங்களை மட்டுமே அவனைப் பற்றிப் பேசுகையில் சொல்வது நல்லது.

இந்தக் குட்டிக் கதையின் அபத்தத்தை நீங்களே ஒப்புக் கொள்வீர்கள்.  இது சந்தவசந்தத்தில் இடம் பெற்று, இங்கே உபசார மொழியாகப் பாராட்டும் பெற்றுவிட்டால், ‘பாரதியில் நெடுநாள் தோய்ந்தவர்களே இதைப் போற்றியிருக்கிறார்கள்’ என்ற குறிப்போடு பல குழுக்களுக்கு இது முற்செலுத்தப்பட்டு, கேவலப்படுத்தப்படும்.  அப்படியொரு எலிமென்ட் இங்கே நம்மிடையே இருக்கிறது.  இதன் பின்விளைவுகளைச் சற்று எண்ணிப் பார்த்தால், ஏற்கெனவே பல ஆதாரமற்ற செய்திகளால் கலங்கிய குட்டையாக இருக்கும் பாரதி வரலாறு, புனைவிலக்கியம் என்ற தகுதியிலிருந்தும் சறுக்கிவிடும்.  பிறகு இந்தக் கதைகளை வைத்து பாரதி என்ற ஆளுமை முழம் போடப்படும்.  அதுதான் சந்தவசந்தம் என்ற பாரதியறிஞர் அவையின் அங்கீகாரம் இதற்குக் கிடைத்து விட்டதே என்ற முகாந்திரமும் அதற்குத் துணை போகும்.

இதையெல்லாம் எண்ணிப் பார்த்தால் எனக்கு அச்சமாக இருக்கிறது.  தக்கன செய்யவேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.  இப்படிப்பட்ட கதைகளைக் கண்டால் கண்ட இடத்தில் கண்டிக்க வேண்டியது பாரதி அன்பர்கள் கடன் என்று பெரியவர்களுக்கு நான் நினைவூட்ட வேண்டிய அவசியமில்லை. 

யாரையும், குறிப்பாக உங்களை, புண்படுத்துவது என் நோக்கமில்லை.  அவ்வாறு கிஞ்சித்தும் புண்படுத்தியிருந்தால் நிபந்தனையற்ற மன்னிப்பை வேண்டுகிறேன்.  பாரதி அன்பர்களுக்கிடையே உயர்வு தாழ்வில்லை.




--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

ramaNi

unread,
Feb 12, 2015, 10:28:05 PM2/12/15
to santhav...@googlegroups.com
வணக்கம் ஹரிகி.

மனதின் மூலையில் ஒரு சந்தேகம் இருந்தும் அதை ஒதுக்கிவிட்டுச் 
செய்த பிழைக்கு வருந்துகிறேன். இன்னும் எச்சரிக்கை காட்ட முயல்கின்றேன்,
இனி வரும் பதிவுகளில்.

அன்புடன்,
ரமணி

*****

Subbaier Ramasami

unread,
Feb 12, 2015, 10:42:14 PM2/12/15
to சந்தவசந்தம்
பாரதியார் கதையிலே பல “புளுகுகள்” உண்டு. அவற்றில் இதுவும் ஒன்று என்பது எனது அபிப்பிராயம்.

இலந்தை


--

ramaNi

unread,
Feb 13, 2015, 11:55:27 PM2/13/15
to santhav...@googlegroups.com
திருக்குறள் பொழிப்புரை: சென்னைத்தமிழ் குறட்பாக்களில்
(இதுபோல் இன்னும் உரைநடையில் இங்கே:

121. அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.

பெர்சுங் களுக்கு மருவாதி கொட்த்துநட
வர்ச்சிகினு நிக்காதே மாமு.

127. யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

வார்த்தையைப் பார்த்துநீ வுட்லேன்னா வெத்தலைப்
பாக்குதான் போடுமும் வாய்.

140. உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லா ரறிவிலா தார்.

இன்னாநீ பட்ச்சாலும் சேந்துக்க ஊரோட
இல்லேன்னா பேஜாரு நீ.

200. சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஒம்வார்த்தை யூஸ்-இல்லே னாலூஸ்டாக் கூடாது
கம்முனு நீ-இரு மாமு.

391. கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

இன்னாநீ பட்ச்சாலும் நீபட்ச ஜோருக்கு
நின்னுநீ ஷோக்கா இரு.

396.. தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.

குழிதோண்ட்னா தண்ணி குபீர்னு வரல?
பொழியுண்டா பட்ச்சவ னுக்கு!

423. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

எவன்-எத்தச் சொன்னாலும் எட்துக்கா தேநீ
மவனேவுன் புத்தியையூஸ் பண்ணு.

505. பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்.

ஜபர்தஸ்தாக் கீறியோ சொங்கியா னாவோ
கபர்தார்-உன் டீலிங்ஸ்தான் மாமு!

510. தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்.

டுபாக்கூரை நம்பி தொயில்காரன் வுட்டா
தபால்னு வுயவேண்டி தான்.

517. இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்
ததனை அவன்கண் விடல்.

எவன்கைல இன்னாவே லைனுபாத்து வுட்டா
அவன்கரீட்டா அத்தமுடிப் பான்.

--ரமணி, 14/02/2015

*****
 

N. Ganesan

unread,
Feb 14, 2015, 9:23:20 AM2/14/15
to santhav...@googlegroups.com
பாரதியார் பரமானந்த நிலையில் வீராவேசமான பாடல்களைப் பாடியவர்
என்று பல கதைகள் உலவுகின்றன. இவற்றை எல்லாம் எக் குழுவுக்கும் யாரும்
அனுப்பமாட்டார்கள்.

நா. கணேசன்

 
 

N. Ganesan

unread,
Feb 14, 2015, 9:36:51 AM2/14/15
to santhav...@googlegroups.com


On Thursday, February 12, 2015 at 5:39:48 PM UTC-8, ramaNi wrote:
தினமணி ந்யூஸ்பேப்பரில் வீரப்பலகார கதை, அதை அடுத்து காந்தியை சந்தித்த கதை
எல்லாம் இருக்கிறது:

நா. கணேசன்
Message has been deleted

ramaNi

unread,
Feb 15, 2015, 7:59:54 AM2/15/15
to santhav...@googlegroups.com
நகைச்சுவைக் கவிதைகள்

001. புல் முளைத்து...
சீர்காழி அருணாசலக் கவிராயர்

வானவரு மிந்திரரு மால்பிரம ருஞ்செத்துப்
போனவிடம் புல்மளைத்துப் போயிற்றோ - ஞானமருள்
அத்த ரருணேச ரன்பாக நஞ்சதனைப்
புத்தியுடன் கொள்ளாத போது.

002. மொழி மாற்றுப் பொருள் கோள்
சீர்காழி அருணாசலக் கவிராயர்

சாரங்க பாணி தலையி லிரந்துண்டான்
சீரங்கம் பாதி சிவனாண்டான் - பாருங்கள்
பாற்கடலை யாண்டான் பசுபதிநா ராயணன்றான்
ஏற்கயிலை யாண்டா னிவன்.

003. உழுதுண்ணாதது ஏன்?
சுப்ரதீபக் கவிராயர்

ஒருமாடு மில்லாமல் மைத்துனனார்
. உலகமெலாம் உழுதே யுண்டார்
நரைமாடோ வொன்றிருக்க வுழுதுண்ண
. மாட்டாமல் நஞ்சை யுண்டீர்
இருநாழி நெல்லிருக்க இரண்டுபிள்ளை
. தானிருக்க இரந்தே யுண்டீர்
திருநாளும் உண்டாச்சே செங்கமலைப்
. பதிவாழும் தியாக னாரே.

*****

Balasubramanian N.

unread,
Feb 15, 2015, 4:43:46 PM2/15/15
to santhav...@googlegroups.com
My addition to this virappalakAram, in RAMMALAR WEB where I saw the wonderful mepisode, I gave immediately on that site: I present it below also, for due appreciation by Santha Vasantham members:
 
 

Balasubramanian N said,

பிப்ரவரி 15, 2015 at 12:48 முப

அது மட்டுமா? பாரதியார் அதோடு விடவில்லை.கர்ஜித்தார். என்னவென்று தெரியுமா? “என்னங்காணும், மனிதனை மனிதன் வணங்குவது நமக்கு ஏற்பில்லை. பஜ்ஜி, சொஜ்ஜி என்று ’ஜி’ போட்டு மரியாதையை தொனிக்க வைக்கும் பலகாரம் நாம் வேண்டோம். எம் கவிதைகளிலே யாம் ’டா’ போட்டு எழுதும் அதிகாரத்தொனியில், பக்கோடா, புரோட்டா எனும் பலகாரந்தான் ஏற்பு! ஓம் பராசக்தி!”எனக்கூறி எழும்பிக்குதித்தாராம்!

 


ramaNi

unread,
Feb 20, 2015, 8:26:40 AM2/20/15
to santhav...@googlegroups.com
சிவன் விஷ்ணு சம்பந்தம்
இராமசாமிக் கவிராயர்

4. தன்மனை யிரத மாக்கித் தன்மகன் வலவ னாக்கித்
தன்மகன் பேர னோடு தனக்குமைத் துனன்கா லாக்கித்
தன்னணை நாரியாக்கித் தானுமோ ரம்பு மானான்
தன்மனமி டங்கொண் டுய்த்த சங்கரன் றனக்கு மாயன்.

பொருள்:
திரிபுர சங்கார காலத்தில் விஷ்ணு தன் மனைவி பூதேவியைத் தேராக்கினார்;
தன் புதல்வன் அயனைத் தேரிப்பாக னாக்கினார்; தன் புதல்வனின் பேரனாகிய 
பகலவனையும் மைத்துனன் சந்திரனையும் தேர்ச் சக்கரங்களாக்கினார்;
தன் படுக்கையாகைய ஆதிசேஷனை நாணாக்கித் தானும் ஓர் ஒப்பற்ற கணையானார்;
இத்தனையும் செய்தார் விஷ்ணு, தன் மனக் கருத்தின்படி தனது இடப்பாகத்தில்
தன்னை வைத்துக் காப்பாற்றிய சிவனுக்கே.

*****

ramaNi

unread,
Feb 23, 2015, 8:56:28 AM2/23/15
to santhav...@googlegroups.com
ஊரின் பேரென்ன?
இராமசாமிக் கவிராயர்

5. முன்னொரு வூரின் பேரா முதலெழுத் தில்லா விட்டால்
நன்னகர் மன்னர் பேரா நடுவெழுத் தில்லா விட்டால்
கன்னமா மிருகத் தின்பேர் கடையெழுத் தில்லா விட்டால்
உன்னிய தேனின் பேரா மூரின்பேர் விளம்பு வீரே.

இந்தப் பாடலை இன்றைய நிலையில் இப்படி எழுதலாம்!

முன்னொரு நல்லூ ராமே முதலெழுத் தில்லா விட்டால்
பின்னைநாட் டைக்கொண் டான்பேர் நடுவெழுத் தில்லா விட்டால்
என்றுக ழன்ற தென்போம் கடையெழுத் தில்லா விட்டால்
இன்றுபோ தைச்ச ரக்கா மூரின்பேர் விளம்பு வீரே.

--ரமணி, 23/02/2015

*****

Subbaier Ramasami

unread,
Feb 23, 2015, 2:47:44 PM2/23/15
to சந்தவசந்தம்
அடடடா! அப்படியா பாலசுப்பிரமணியன்ஜி!
இலந்தை

N. Ganesan

unread,
Feb 28, 2015, 10:49:01 PM2/28/15
to santhav...@googlegroups.com

NSK & TAM,
"உம்முன்னு ஒரு வார்த்தை சொல்லம்மா"...
Film : Manonmani (1942)

Balasubramanian N.

unread,
Mar 1, 2015, 3:53:07 PM3/1/15
to santhav...@googlegroups.com

முன்னேயிணைத்தேன் வேற்றுமைஉருபினை. மூச்சை முட்ட நாறியதே!

பின்புறம் விகுதியாய் இட்டால் ’கெட்ட’ அசிங்கச்சொல்தான் நீள்கிறதே

இத்தகைச்சொற் பெயர்கொண்டோன் யாரென இசைத்திடுவாய் விமரிசையுடனே!


ramaNi

unread,
Jun 23, 2015, 12:21:08 PM6/23/15
to santhav...@googlegroups.com
ஐந்துதலை நாகம் குத்தினால்...

இரு புலவர்கள் ஒரு காட்டுப் பாதையின் வழியே சென்றுகொண்டிருந்தனர்.  
நடந்து கொண்டிருந்த ஒரு புலவர் காலில் நெருஞ்சி முள் ஒன்று குத்தியது. 
அவர் குனிந்து அதைப் பிடுங்கி எறிந்தார். நெருஞ்சி முள்ளுக்கு ஐந்து தலை நாகம் 
என்று ஒரு வழக்குப் பெயர் உண்டு.

உடனே அவர்‘ஐந்து தலை நாகம் ஒன்று என் காலைக் குத்தியது. என்ன செய்ய?’ என்றார்.

அதற்கு அடுத்தவர்,‘பத்துரதன் புத்திரனின் மித்திரனின் சத்துருவின்
பத்தினியின் காலை எடுத்துத் தேய் சரியாகிவிடும்’என்றார்.

அதாவது பத்துரதன் என்றால் தசரதன்.
தசரதனின் புத்திரன் என்றால் ராமன்.
ராமனின் மித்திரன்(நண்பன்) என்றால் சுக்ரீவன்.
சுக்ரீவனின் சத்துரு(எதிரி) என்றால் வாலி.
வாலியின் பத்தினி(மனைவி) என்றால் தாரை.
தாரையின் கால் எடுத்து என்றால் தாரை என்ற சொல்லில் உள்ள கால் நீக்குவது.

இந்த வாசகத்தின் பொருள்,
தசரதனின் மகனான ராமனின் நண்பன் சுக்ரீவன். அவன் எதிரி
வாலி. வாலியின் மனைவி தாரை. அந்தத் தாரை என்ற சொல்லில் உள்ள காலை நீக்கினால் தரை. முள் குத்திய காலைத் தரையில் தேய் என்பது பொருள்.

*****

ramaNi

unread,
Jun 23, 2015, 12:46:46 PM6/23/15
to santhav...@googlegroups.com
பொடிக்கவிகள்!

பிச்சைப் பாட்டு

உ.வே.சாமிநாதய்யர்
http://heritagewiki.org/index.php?title=பிச்சைப்_பாட்டு

 
Reply all
Reply to author
Forward
0 new messages