தொடிப்புழுதி கஃசா உழக்கின் பிடித்து எருவும் வேண்டாது!

790 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Aug 5, 2014, 10:52:21 AM8/5/14
to santhav...@googlegroups.com
தொடிப்புழுதி கஃசா உழக்கின் பிடித்து எருவும் வேண்டாது!

தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும். - திருக்குறள்

வேளாண்மை பற்றிய முக்கியமான இந்தத் திருக்குறளில் தொடி, கஃசா, உணக்குதல் (= உழக்குதல்) என்ற பழைய சொற்கள் உள்ளன. அவற்றை இவ்விழையில் பார்ப்போம். உணக்குதல் என்றால் காய்ச்சுதல், சூடாக்குதல் என்ற பொருள் இக்குறளில் இல்லை.

எடை அளவைகளில் தொடி = ஒரு பலம், கஃசா = 1/4 பலம். தொடியைக் கால் பங்காக உழக்கினால் கிடைப்பது கஃசு.
அதாவது ஒரு பலம் எடையுள்ள மண்கட்டியை தொழி கலக்கி உழக்கினால் கால்-பலம் (கஃசு) ஆக மாறும். அப்பொழுது
குழை அடித்து (ஆவாரை போன்ற தழைகளை) அடியுரமாகப் போட்டு நன்றாக மிதித்துச் சேற்றில் அமிழ்த்துவர். இவ்வாறு 
இலைதழைகளுடன் சேற்றை நன்றாக உழக்கினால்(= உணக்கினால்)  எருவும் பின்னால் இடத் தேவை இராது என்கிறார் வள்ளுவர்.

உணக்குதல் என்று இக் குறளில் வள்ளுவர் குறிப்பிடுவது நெல் வேளாண்மையில் உழக்குதல் என்று பொருள்படும் சொல்.
முகத்தல் அளவையில் உழக்கு (= உணக்கு) ஓரு அளவை (measure) ஆகவே பயன்படுகிறது. ஒரு படி (அ) நாழி என்பது நான்கு உழக்கு
என்பது இதனால்தான். ஒரு படியை நான்கு பங்காக சிதைத்தால் வருவது உழக்கு. 

உணக்குதல் = உழக்குதல். அதாவது, கலக்குதல், சிதிலமாக்கல், மிதித்தல் to stir, agitate,trample down,  smash.  வயல் முழுதும் நீர் தேக்கி ஏர் கொண்டு இரண்டு மூன்று முறை சேறு குழையக் குழைய தொழி உழவு உழுதலை உணக்குதல் என்கிறார் வள்ளுவர்.  ”கொத்தல், உழக்கல், மிதித்தல், உழுதல் முதலியன நிலத்தைப் பண்படுத்தும் வினைகளின் பெயர்கள். வேளாளனது முக்கிய தொழிற்கருவி கலப்பை. இதை உழுபடை, கலனை, நாஞ்சில், தொடுப்பு, படை, படைவாள் என்பன கலப்பையின் பெயர்கள். ” (தமிழ் இந்தியா, ந. சி. கந்தையாபிள்ளை). நெல்லம்பயிர் அறுவடை முடிந்த பின்னர் களத்தில் நெற்கதிரைக் கடாவிட்டு உழக்குவர். இங்கே, உழக்குதல் - துவைத்தும் முறித்தும் அழிவுசெய்தல். 

நெல் பயிர்செய்தலுக்கு வயலைத் தயாரித்தல் 3 பகுதிகளை உடையது: (1) உழவு (2) தொழி உழக்கல் (3) பரம்பு அடித்தல். இதில் தொழி (சேறு) இலைதழைகளுடன் கலக்கி, கட்டிகள் இல்லாமல் harrowing செய்யும் பகுதியை உணக்குதல் என்கிறார் வள்ளுவர். 

தொழி உழக்கி (எந்திரம்):


Paddy field preparation typically involves (1) plowing to "till" or dig-up,  mix, and overturn the soil; (2) harrowing to break the soil clods into smaller  mass and incorporate plant residue, and (3) leveling the field. அதாவது, (1) உழவு  (2) தொழி உழக்கல் (3) பரம்பு அடித்தல்.

சோழவந்தான் அருகே வயலில் பரம்படித்தல்:

முருகேசபாண்டியன் வைகை அருகே நெல் வெள்ளாமை பற்றி அருமையாக எழுதுகிறார்:

(1) ஆழ்தல் ஆணி, (2) அழுங்கு என்பது அணுங்கு என்னும் எறும்புதின்னி. அதுபோல், ழ/ண மாற்றம் கொண்டது  உழக்கு-/உணக்கு-. ”தொடிப்புழுதி கஃசா உணக்கின்”- இங்கே சுணக்கு/சுணங்கு என்ற தாதுவேர் தரும் உணக்குதல்  - வாட்டுதல், சூடாக்குதல், காய்ச்சுதல் (உணக்கு < சுணக்கு) என்ற பொருள் வராது. அதனை இன்னும் விரிவாக அடுத்துக் காண்போம். உப்பு ‘salt' < சுப்பு (cf. சுவை) - இந்த உப்பு (salt) வேறு. உப்பு - ஊதுதல், பெருத்தல் வேறு அன்றோ? (1) உப்பு (salt) (2) உப்பு-தல் (to expand) - இரண்டும் ஒன்றாகுமா? அதுபோல் தான், வள்ளுவர் ‘தொடிப்புழுதி கஃசா உணக்குதல்’ என்பதை உணக்கு < சுணக்கு (=சூடாக்கு) என்று பொருள் சொல்வது பொருந்தவில்லை. இது பொருந்தாப் பொருள் தந்துவிடும்.

வள்ளுவர் மணக்குடவர் காலத்தில் தொழி உழக்குதல் “உணக்குதல்” என வழங்கியிருக்கிறது. அனைவருக்கும் தெரிந்த சொல்லாக வயல் உணக்குதல் இருப்பது காலப்போக்கில் அப்பொருள் மறையத் தொடங்கியதைப் பின்வந்தோர் உரைகள் காட்டிநிற்கின்றன.

தொடிப்புழுதி கஃசா உணக்கிற் பிடித்தெருவும் 
வேண்டாமற் சான்று படும்.

மணக்குடவர்:
ஒரு பலப்புழுதியைக் கஃசாக உணக்குவனாயின், ஒரு கையாற் பிடித்தது எருவும் இடவேண்டாமல் அமைந்து விளையும். மேற்கூறிய உழவு செய்யுந்திறன் கூறுவார் முற்படப் புழுதியுணக்க வேண்டுமென்றார்.

குறள், மணக்குடவரின் உணக்குதல் = உழக்குதல் (ஆழும் கூர்ப்பொருளை ஆணி என்கிறோமே. ரிக்வேதத்தில் உள்ள தமிழ்ச்சொல் ஆணி ‘lynch pin' < ஆழ்-தல்) எனப் பொருள்கொள்க. சுணக்கு:உணக்கு (சூடாக்கு, வாட்டு) என்ற சொல் இக்குறளில் இல்லை என்பது உழவரின் பட்டறிவு.

நா. கணேசன்

Ramamoorthy Ramachandran

unread,
Aug 5, 2014, 1:37:30 PM8/5/14
to santhav...@googlegroups.com
வணக்கம் உணக்குதல் என்பது காய வைத்துச் சுருக்குதல்
 என்ற பொருளில் சில பழைய இலக்கியங்களில்  வந்துள்ளன.
நிணச்சுறா அறுத்த உணக்கல் வேண்டி 
இனப்புள் ஒப்பும் எமக்கு நலன் எவனோ? 
என்ற பாடலின் இரண்டு வரிகள் பரதவர்களின் 
நெஞ்சுரத்தைக் காட்டும் உயர்ந்த வரிகள்!
இவளே, 
கானல் நண்ணிய காமர் சிறுகுடி 
மீனெறி பரதவர் மகளே!நீயே 
நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர் 
கடுந்தேர்ச் செல்வன் காதல் மகனே!
என்ற பாடலிலும் 
நம் வீட்டினர் காய்ந்து சுருங்கி விட்டது என்பதை 
உணங்கி விட்டது என்ற உலக வழக்கிலும் 
உணக்கல் உண்டு.
உழக்குதல் என்பது மிதித்து நசுக்குதல் என்ற  
பொருளில் வரும்! பண்டுதொட்டுத் 
 திருக்குறளில் அமைந்த சொல்லை மாற்ற வேண்டிய 
அவசியம் என்ன வந்தது?
அருள்கூர்ந்து பயனுடைய விளக்கங்களைத் தருக!
பயனில் சொல் பாராட்டாதீர்கள்! இது என் வேண்டுகோள்!
பிறகு உங்கள் இஷ்டம்!
அன்புடன் புலவர் இராமமூர்த்தி  .



--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Ramamoorthy Ramachandran

unread,
Aug 5, 2014, 1:41:50 PM8/5/14
to santhav...@googlegroups.com
இது நன்செய்ப் பயிர் பற்றிய குறள்  அன்று!
புன்செய்ப் பயிர் பற்றியது!
பிடித்தெருவும் வேண்டாது சாலப் படும் என்பது 
இரண்டாம் அடி!
அன்புடன் புலவர் இராமமூர்த்தி 

N. Ganesan

unread,
Aug 5, 2014, 2:34:48 PM8/5/14
to Santhavasantham
2014-08-05 10:37 GMT-07:00 Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com>:
வணக்கம் உணக்குதல் என்பது காய வைத்துச் சுருக்குதல்
 என்ற பொருளில் சில பழைய இலக்கியங்களில்  வந்துள்ளன.
நிணச்சுறா அறுத்த உணக்கல் வேண்டி 
இனப்புள் ஒப்பும் எமக்கு நலன் எவனோ? 
என்ற பாடலின் இரண்டு வரிகள் பரதவர்களின் 
நெஞ்சுரத்தைக் காட்டும் உயர்ந்த வரிகள்!
இவளே, 
கானல் நண்ணிய காமர் சிறுகுடி 
மீனெறி பரதவர் மகளே!நீயே 
நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர் 
கடுந்தேர்ச் செல்வன் காதல் மகனே!
என்ற பாடலிலும் 
நம் வீட்டினர் காய்ந்து சுருங்கி விட்டது என்பதை 
உணங்கி விட்டது என்ற உலக வழக்கிலும் 
உணக்கல் உண்டு.
உழக்குதல் என்பது மிதித்து நசுக்குதல் என்ற  
பொருளில் வரும்! பண்டுதொட்டுத் 
 திருக்குறளில் அமைந்த சொல்லை மாற்ற வேண்டிய 
அவசியம் என்ன வந்தது?
அருள்கூர்ந்து பயனுடைய விளக்கங்களைத் தருக!
பயனில் சொல் பாராட்டாதீர்கள்! இது என் வேண்டுகோள்!
பிறகு உங்கள் இஷ்டம்!
அன்புடன் புலவர் இராமமூர்த்தி  .


அன்பின் புலவர் ஐயா,

திருக்குறளை மாற்றவில்லை. மாற்றவும்கூடாது. 

உணக்குதல்- இதற்கு (1) < சுணக்குதல் (2) உழக்குதல்
என்னும் இரு பொருளும் உண்டு. இக்குறளில் உணக்குதல் என்பதற்கு உழக்குதல் என்ற பொருள் வேளாண்மையில் சிறந்த நெல் வேளாண்மையில் காட்டுகிறேன். உதாரணமாக, உப்பு (< சுப்பு-தல்) - இது உப்புதல் ( = to expand, to enlarge) என்பதினின்றும் வேறானது அல்லவா?

திருக்குறளை மாற்றுதல் என் நோக்கமன்று. மாற்றவும் கூடாது.

நன்றியுடன்,
நா. கணேசன்
 

p balakrishnan

unread,
Aug 5, 2014, 2:59:38 PM8/5/14
to santhav...@googlegroups.com
ஆராய்ச்சி, விளக்கம் அருமை.-இளங்கண்ணன்

On Wed, 06 Aug 2014 00:04:48 +0530 "N. Ganesan" wrote

>


2014-08-05 10:37 GMT-07:00 Ramamoorthy Ramachandran :


வணக்கம் உணக்குதல் என்பது காய வைத்துச் சுருக்குதல் என்ற பொருளில் சில பழைய
இலக்கியங்களில்  வந்துள்ளன.

நிணச்சுறா அறுத்த உணக்கல் வேண்டி இனப்புள் ஒப்பும் எமக்கு நலன் எவனோ? என்ற பாடலின் இரண்டு
வரிகள் பரதவர்களின் 
நெஞ்சுரத்தைக் காட்டும் உயர்ந்த வரிகள்!இவளே, கானல் நண்ணிய காமர் சிறுகுடி மீனெறி பரதவர்
மகளே!நீயே நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர் கடுந்தேர்ச் செல்வன் காதல் மகனே!


என்ற பாடலிலும் நம் வீட்டினர் காய்ந்து சுருங்கி விட்டது என்பதை உணங்கி விட்டது என்ற உலக
வழக்கிலும் உணக்கல் உண்டு.உழக்குதல் என்பது மிதித்து நசுக்குதல் என்ற  பொருளில் வரும்!
பண்டுதொட்டுத் 


 திருக்குறளில் அமைந்த சொல்லை மாற்ற வேண்டிய அவசியம் என்ன வந்தது?அருள்கூர்ந்து
பயனுடைய விளக்கங்களைத் தருக!பயனில் சொல் பாராட்டாதீர்கள்! இது என் வேண்டுகோள்!பிறகு
உங்கள் இஷ்டம்!


அன்புடன் புலவர் இராமமூர்த்தி  .

அன்பின் புலவர் ஐயா,

திருக்குறளை மாற்றவில்லை. மாற்றவும்கூடாது. 

உணக்குதல்- இதற்கு (1) < சுணக்குதல் (2) உழக்குதல்
என்னும் இரு பொருளும் உண்டு. இக்குறளில் உணக்குதல் என்பதற்கு உழக்குதல் என்ற பொருள்
வேளாண்மையில் சிறந்த நெல் வேளாண்மையில் காட்டுகிறேன். உதாரணமாக, உப்பு (< சுப்பு-தல்) -
இது உப்புதல் ( = to expand, to enlarge) என்பதினின்றும் வேறானது அல்லவா?



திருக்குறளை மாற்றுதல் என் நோக்கமன்று. மாற்றவும் கூடாது.

நன்றியுடன்,
நா. கணேசன்
 



2014-08-05 20:22 GMT+05:30 N. Ganesan :



தொடிப்புழுதி கஃசா உழக்கின் பிடித்து எருவும் வேண்டாது!


தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும். - திருக்குறள்
வேளாண்மை பற்றிய முக்கியமான இந்தத் திருக்குறளில் தொடி, கஃசா, உணக்குதல் (= உழக்குதல்)
என்ற பழைய சொற்கள் உள்ளன. அவற்றை இவ்விழையில் பார்ப்போம். உணக்குதல் என்றால்
காய்ச்சுதல், சூடாக்குதல் என்ற பொருள் இக்குறளில் இல்லை.



எடை அளவைகளில் தொடி = ஒரு பலம், கஃசா = 1/4 பலம். தொடியைக் கால் பங்காக உழக்கினால்
கிடைப்பது கஃசு.அதாவது ஒரு பலம் எடையுள்ள மண்கட்டியை தொழி கலக்கி உழக்கினால் கால்-பலம்
(கஃசு) ஆக மாறும். அப்பொழுது


குழை அடித்து (ஆவாரை போன்ற தழைகளை) அடியுரமாகப் போட்டு நன்றாக மிதித்துச் சேற்றில்
அமிழ்த்துவர். இவ்வாறு இலைதழைகளுடன் சேற்றை நன்றாக உழக்கினால்(= உணக்கினால்)  எருவும்
பின்னால் இடத் தேவை இராது என்கிறார் வள்ளுவர்.



உணக்குதல் என்று இக் குறளில் வள்ளுவர் குறிப்பிடுவது நெல் வேளாண்மையில் உழக்குதல் என்று
பொருள்படும் சொல்.முகத்தல் அளவையில் உழக்கு (= உணக்கு) ஓரு அளவை (measure) ஆகவே
Get your own FREE website, FREE domain & FREE mobile app with Company email.  
Know More >

N. Ganesan

unread,
Aug 5, 2014, 8:51:34 PM8/5/14
to santhav...@googlegroups.com
On Tuesday, August 5, 2014 10:41:50 AM UTC-7, Trichy Pulavar Ramamoorthy wrote:
இது நன்செய்ப் பயிர் பற்றிய குறள்  அன்று!
புன்செய்ப் பயிர் பற்றியது!
பிடித்தெருவும் வேண்டாது சாலப் படும் என்பது 
இரண்டாம் அடி!
அன்புடன் புலவர் இராமமூர்த்தி 


எருவே வேண்டியதில்லை என்கிறார். இலை தழைகளைத் தொழி கலக்கினபின் எரு தேவையில்லையே.
அடுத்த குறளில் நீர்பாய்ச்சுதல் பற்றிப் பேசுகிறார் வள்ளுவர். 
பூவுக்குத் தாமரை, மரத்துக்கு அரைசு, மாணவர்களில் முதல் தேர்வெண்
எடுப்போன், மாடுகளில் காமதேனு, .... என்பது போல்
நெல் வேளாண்மை என்று கருதலாம். பிடித்த எரு வேண்டாது
என்பது புஞ்சைப் (தண்செய் தஞ்சை ஆதற்போல், புன்செய் புஞ்சை) பயிருக்கு
மட்டுமில்லை. ஆவாரை போன்றவற்றின் இயற்கையுரத்தை இட்டுத்
தொழியை உழக்கினால் பின்னர் எரு வேண்டாது என்கிறார் தேவர்.

பொதுவாக, -ழ்-/-ண்-/-ட்- என்ற 2-ம் எழுத்து பயிலும் சொற்றொகுதிகள் பல.
இங்கே அவ்விதி , உழக்கல்/உணக்கல்/உடைத்தல் என்பதாக இயங்கக் காண்கிறோம்.
புஞ்சை நிலத்திலும் பலம் அளவு கட்டியை கஃசு அளவாக நாலில் ஒரு பங்கு ஆக
உடைத்தல் நன்மை பயக்கும். எல்லா வெள்ளாமைக்கும்
இக்குறளின் உணக்கலை  ”உழக்கல்”  என்று கொள்ளவியலும்

உணக்குதல் = கலக்குதல், சிதிலமாக்கல், உழக்குதல், நெருக்குதல் to stir, agitate,trample down,  smash. 
இப்பொருளில் ஆழ்வார் பாடும் ஒருபாடல்.

பிணக்கி யாவையும் யாவரும் பிழையாமல் பேதித்தும் பேதி யாதது,ஓர்

கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர்ஞான மூர்த்தியினாய்,

இணக்கி யெம்மையெந் தோழிமார் விளையாடப் போதுமின் என போந்தோமை,

உணக்கி நீவளைத் தாலென்சொல் லாருக வாதவரே?


உணக்குதல் = நெருக்குதல் - பழைய உரை.

அன்புடன்,
நா. கணேசன்


Ramamoorthy Ramachandran

unread,
Aug 5, 2014, 9:23:07 PM8/5/14
to santhav...@googlegroups.com
ஆழ்வார் பாடலிலும் உணக்கி என்றே வந்துள்ளது.
 எங்களை வாடச் செய்து என்பதே அதன் பொருள்.
அருள் கூர்ந்து உழக்கி என்ற சொல்லாட்சி வந்த  
பாடல்களை எடுத்துக் காட்ட வேண்டுகிறேன்.
அன்புடன் புலவர் இராமமூர்த்தி   

Ramamoorthy Ramachandran

unread,
Aug 5, 2014, 9:24:17 PM8/5/14
to santhav...@googlegroups.com
ஹ்ஹா! இல்லை தழை தான் உரம்!

N. Ganesan

unread,
Aug 5, 2014, 9:46:53 PM8/5/14
to santhav...@googlegroups.com


On Tuesday, August 5, 2014 6:24:17 PM UTC-7, Trichy Pulavar Ramamoorthy wrote:
ஹ்ஹா! இல்லை தழை தான் உரம்!


பேரா. ஆ. சிவசுப்பிரமணியன் இலை தழை உரம் பற்றிச் சொல்கிறார், பாருங்கள்:
வேளாண்மையிலும் ஆவாரஞ்செடிக்கு முக்கிய இடமுண்டு. இதைக் கிளைகளுடன் ஒடித்து, நெல் பயிரிடும் வயலில் தொழி கலக்கிய பின்னர் (சேறு கலக்கிய பின்னர்), அடி உரமாகப் போட்டு நன்றாக மிதித்துச் சேற்றில் அமிழ்த்தி விடுவர். இரண்டு நாட்கள் கழித்துப் பார்த்தால் காப்பி டிகாஷன் கொட்டியதுபோல் நிலம் காட்சியளிக்கும். நெல்லுக்குத் தேவையான தழைச்சத்தை வழங்குவதுடன் நெல் மணிகள் நன்றாகப் பிடிக்கவும் ஆவாரை உதவும். இதற்கு நேர்மாறாக ஆட்டுகிடை (பட்டி) போடுவதால் கிட்டும் தழைச் சத்து, நெற்பயிர் பசுமையாக வளர மட்டுமே உதவும். இவ்வுண்மையை வெளிப்படுத்தும் வகையில் 'ஆடு பயிர் காட்டும். ஆவாரை நெல் காட்டும்' என்ற பழமொழி உண்டு.

N. Ganesan

unread,
Aug 5, 2014, 9:54:42 PM8/5/14
to santhav...@googlegroups.com
On Tuesday, August 5, 2014 6:23:07 PM UTC-7, Trichy Pulavar Ramamoorthy wrote:
ஆழ்வார் பாடலிலும் உணக்கி என்றே வந்துள்ளது.
 எங்களை வாடச் செய்து என்பதே அதன் பொருள்.
அருள் கூர்ந்து உழக்கி என்ற சொல்லாட்சி வந்த  
பாடல்களை எடுத்துக் காட்ட வேண்டுகிறேன்.
அன்புடன் புலவர் இராமமூர்த்தி   


உழக்கி - சிதைத்து, மிதித்து, நெருக்கி என்னும் பொருளில் ஏராளமான பாடல்கள் உள.

(1)

தூவிரிய மலருழக்கித் துணையோடும் பிரியாதே,

பூவிரிய மதுநுகரும் பொறிவரிய சிறுவண்டே,

தீவிரிய மறைவளர்க்கும் புகழாளர் திருவாலி,

ஏவரிவெஞ் சிலையானுக் கென்னிலைமை யுரையாயே.

 

தூ விரிய மலர்உழக்கி துணையோடும் பிரியாதே

-

சிறகு விரியும்படி இருந்து புஷ்பங்களே மிதித்து தன் துணைவியைவிட்டுப் பிரியாமலிருந்து


(2)  இளம்பூரணர், பேராசிரியர் ஆகியோர் தந்துள்ள 
அளபெடை வண்ணம்:

தாஅள் தாஅ மரைமலர் உழக்கி
பூஉக் குவளைப் போஒ தருந்திக்
காஅய் செந்நெல் கறித்துப் போஒய்
மாஅத் தாஅள் மோஒட் டெருமை

N. Ganesan

unread,
Aug 6, 2014, 11:48:15 PM8/6/14
to santhav...@googlegroups.com
தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும். - திருக்குறள்

உரை: ஒரு பலம் (=தொடி) எடைகொண்ட மண்கட்டிகளைக் கால்பலம் (=கஃசு) என்ற அளவில் உழக்கி,  ஆவாரைபோன்ற இலைதழைகளைப் பரப்பித் தொழி கலக்கி நாற்று நட்டுப் பயிர் விளைத்தால் எருவும்கூடத்  தேவைப்படாது. உணக்குதல் என்று இக் குறளில் வள்ளுவர் குறிப்பிடுவது நெல்வேளாண்மையில் உழக்குதல்  என்று பொருள்படும் சொல். முகத்தல் அளவையில் உழக்கு (= உணக்கு) ஓரு அளவை (measure)யாகவே பயன்படுகிறது. ஒரு படி (அ) நாழி என்பது நான்கு உழக்கு என்பது இதனால்தான். ஒரு படியை நான்கு பங்காக சிதைத்தால் வருவது உழக்கு.  உணக்குதல் = உழக்குதல். அதாவது, கலக்குதல், சிதிலமாக்கல், மிதித்தல், நெருக்குதல் to stir, agitate,trample down, smash, condense  

குறிப்பு: தொழி = உணக்கிய(=உழக்கிய) சேறு. மாம்பழத் தோலைத் தொழிச்சுக்கொடு என்கிறோமே. தொழித்தல் - சிதைத்தல், பிரித்தல், உழக்கல். தொழித்தல் = உழக்கல். போரில் பகையை சினந்து உழக்குதலைத் தொழித்தல் என்கிறது சீவகசிந்தாமணி: ’சிங்கம்போல் தொழித்து ஆர்த்து’ (சீவக. 2306). தொழில் என்ற சொல்லே தொழி/தொளி என்ற அடிப்படையான விவசாய வேலையால் தோன்றிய சொல். ”உழாஅ நுண்தொளி உள்புக்கு அழுந்திய” (சிலம்பு). தொள்ளு- தோண்டுதல் தொளி/தொழி. தொழி உணக்குதலை/உழக்குதலைக் கூறும் வள்ளுவர் அடுத்த குறளிலே நீர்ப் பாசனமும் குறிப்பிடுகிறார்.

தொழி உழக்கி/உணக்கி (எந்திரம்):

Paddy field preparation typically involves (1) plowing to "till" or dig-up,  mix, and overturn the soil; (2) harrowing to break the soil clods into smaller  mass and incorporate plant residue, and (3) leveling the field. அதாவது, (1) உழவு (2) தொழி உழக்கல் (3) பரம்பு அடித்தல்.
சோழவந்தான் அருகே வயலில் பரம்படித்தல்:

வள்ளுவர் மணக்குடவர் காலங்களில் தொழி உழக்குதல் “உணக்குதல்” என வழங்கியிருக்கிறது. அனைவருக்கும் 
தெரிந்த சொல்லாக வயல் உணக்குதல் இருப்பது காலப்போக்கில் அப்பொருள் மறையத் தொடங்கியதைப் 
பின்வந்தோர் உரைகள் காட்டிநிற்கின்றன. மணக்குடவரோ, அவர் வழிச்செல்லும் பரிப்பெருமாளோ ”காயவிடுதல்” 
என்னும் பொருளைக் கூறவில்லை. 

எருவே வேண்டியதில்லை என்கிறார் திருவள்ளுவதேவர். இலைதழைகளைத் தொழி கலக்கினபின் எரு 
தேவையில்லையே. அடுத்த குறளில் நீர்பாய்ச்சுதல் பற்றிப் பேசுகிறார் வள்ளுவர்.  பூவுக்குத் தாமரை, மரத்துக்கு 
அரைசு, மாணவர்களில் முதல் தேர்வெண் எடுப்போன், மாடுகளில் காமதேனு, .... என்று ஓரினத்தில் சிறந்ததை 
எடுத்துக்காட்டுவது போல் நெல் வேளாண்மை பற்றி இக்குறளில் பேசுகிறார் எனலாம். பிடித்த எரு வேண்டாது 
என்பது புஞ்சைப் (தண்செய் தஞ்சை ஆதற்போல், புன்செய் புஞ்சை) பயிருக்கு மட்டுமில்லை. புன்செய்ப் பயிருக்கு 
உரமிடுதல் இல்லை, அது வானம்பார்த்த பூமியில் விளைவது. நன்செயிலும் ஆவாரை போன்றவற்றின் 
இயற்கையுரத்தை இட்டுத் தொழியை உழக்கினால் பின்னர் எரு வேண்டாது என்கிறார் வள்ளுவர்.
ழ/ண - இரண்டாம் எழுத்தாய் மாறுபாடுகள் உள்ள சொற்றொகுதிகள்:
பொதுவாக, -ழ்-/-ண்-/-ட்- என்ற 2-ம் எழுத்து பயிலும் சொற்றொகுதிகள் பல.
இக் குறளிலே அவ்விதி , உழக்கல்/உணக்கல்/உடைத்தல் என்பதாக இயங்கக் காண்கிறோம்.
புஞ்சை நிலத்திலும் பலம் அளவு கட்டியை கஃசு அளவாக நாலில் ஒரு பங்கு ஆக
உடைத்தல் நன்மை பயக்கும். எல்லா வெள்ளாமைக்கும் இக்குறளின் உணக்கலை  ”உழக்கல்”  என்று கொள்ளவியலும்

(1) ஆழ்தல் ஆணி, (2) அழுங்கு என்பது அணுங்கு என்னும் எறும்புதின்னி (Indian Pangolin). 
(3) நுழல்/நுணல் = ஒருவகை தவளை ஜாதி. மணலில் நுழைந்துள்ள வரிநுணல். ”வரிநுணல் கறங்கத் தேரை 
தெவிட்டக் கார்தொடங் கின்றே” (ஐங்குறுநூறு). (4) நிழல்:நிணல். சொன்முதல் நகரம்கெட்டு இணல் என்பது 
ஈழநாட்டு வழக்கு. நீரினின்றும் ஈரம், நுண்ணி உண்ணி(க்ருஷ்ணன்) ஆதற்போல் (5) தழ்- என்னும் வினைச்சொல் 
(தழ, தழ) தழல்/அழல் > தணல் (6) காணம் (=கொள்ளுக்காசு) < காழ் (கொள்ளு) (7) வேய் > வேழம்:வேணு 
‘மூங்கில்’ (8)  நாழ்- (நாழி - உட்டுளைப்பொருள்.) எனவே, bashful, flexible pipe/string - 
நாண்-. (9) விழ்- > விண்,  வீழ்- > வீணை. விண்-விண் என ‘ட்யூனிங் ஃபோர்க்’ போல *தாழ்ந்த* (விழு-/வீழ்-) 
ஓசை தருவது வீணை. (10) மண்ணுதல் - நீராட்டுதல். மலையாளம் இன்னும் மண்ணான் (தமிழ் அதை
வண்ணான் ஆக்கிற்று). ராஜ்யாபிஷேக நிகழ்ச்சியை தமிழ் கல்வெட்டுகள் மண்ணுமங்கலம் என்று 
குறிப்பிடுகின்றன. மண்ணுதல் = பால், தயிர், பன்னீர் அபிடேகமாடல். மழ்- மழை > மண்ணு- (11) பழுத்தல் 
கன்னடத்தில் பணுத்தல். etc. etc., ழ/ண மாறுபாடுகளை ஆராயின் த்ராவிடபாஷைகளின் பலசொற் பிறப்பு 
புரியும்.

இவை போல், ழ/ண மாற்றம் கொண்டது   உழக்கு-/உணக்கு-. 
”தொடிப்புழுதி கஃசா உணக்கின்”- இங்கே சுணக்கு/சுணங்கு என்ற தாதுவேர் தரும் உணக்குதல்  - வாட்டுதல், 
சூடாக்குதல், காய்ச்சுதல் (உணக்கு < சுணக்கு) என்ற பொருள் வராது. ஓர் உதாரணம் தருகிறேன். உப்பு ‘salt' 
< சுப்பு (cf. சுவை) - இந்த உப்பு (salt) வேறு. உப்பு - ஊதுதல், பெருத்தல் வேறு அன்றோ? 
(1) உப்பு (salt) 
(2) உப்பு-தல் (to expand) - DEDR 666 b
Ta. uppu (uppi-) to become big (as a seed), bloat, puff up (as the abdomen), rise (as leaven); uppal flatulence; upukku (upukki-) to swell, overflow; upparam flatulent distention of the abdomen (< Te.); (CTD) ubbu to become hot. Ko. ub- (uby-) (part of the body) swells; ubc- (ubc-) to coax child with pleasing words. To. ub- (uby-) to boil over; ? upum much; ? uporty pleasure, elation. Ka. urbu, urvu, ubbu to swell, increase, rise, be elated, be puffed up, become glad; n. state of being swollen, etc., height, elation, joy, pride; ubbisu to cause to swell, raise, rouse, puff up by flattering; ubbaḍiga, ubbudiga, ubbariga greatness; ubbaṭe, ubbaṭṭe swelling, increase, elation, greatness, boldness; ubbara, urbara swelling, increase, state of being swollen, risen, or full to overflowing, greatness, abundance; ubbike, ubbuvike swelling, etc.; ubiku to swell, rise, overflow. Tu. ubbuni, ubbēruni to swell, be elated with joy or puffed up with pride; uberuni to become thick; ubbara high, swollen, turbid. Te. ubuku to swell, heave, rise, jut, bulge, project, overflow, burst out; n. swelling, jutting, heaving, bulging, projection; ubbaramu swelling, inflation, increase, excess; ubbarincu to swell; ubbarimpu swelling (of the belly); ubbu to swell, be puffed up, grow stout, rise up, overflow, be overjoyed, elated; n. swelling, protuberance, joy, being puffed up with pride; ubbincu to inflate, cause to swell, flatter; uppena a swell of the sea, inundation, deluge; uppoṅgu to swell, burst forth, overflow, be overjoyed, elated. Konḍa ubi- (-t-) to swell, be inflamed, be bloated. Kur. ubkārnā to bubble up, gush up or out with force, swell up. / Cf. Pali ubbilla- elation, elated state of mind; ubbilāvita- happy, elated, buoyant; BHS udbilya-,

இரண்டும் ஒன்றாகுமா? அதுபோல் தான், வள்ளுவர் ‘தொடிப்புழுதி 
கஃசா உணக்குதல்’ என்பதை உணக்கு < சுணக்கு (=சூடாக்கு) என்று பொருள் சொல்வது பொருந்தவில்லை. 
காய்ச்சுவது/வாட்டுவது/சூடாக்கல் என்றால் பொருந்தாப் பொருள் தந்துவிடும்.

உணக்குதல்- இதற்கு (1) < சுணக்குதல் (2) உழக்குதல்
என்னும் இரு வேறுபட்ட பொருளும் உண்டு. இக்குறளில் உணக்குதல் என்பதற்கு உழக்குதல் என்ற பொருள் 
வேளாண்மையில் சிறந்த நெல் வேளாண்மையில் காட்டுகிறார். உதாரணமாக, உப்பு (< சுப்பு-தல்) - இது உப்புதல் ( 
= to expand, to enlarge) என்பதினின்றும் வேறானது அல்லவா? அழல் என்றால் தீ. “நீ அழல் வேண்டாம்” என்கிறபோது அழல் = அழுதல் என்ற பொருள். ஈவு = இரக்கம். ஆனால்,  “ஈவு இலாத தீவினைகள்” (திருவாய்மொழி). இங்கே நம்மாழ்வார் (வீவு >) ஈவு ”முடிவு” என்ற பொருளில் பாடியுள்ளார்.

சுஷ்ணம்/உஷ்ணம் என்ற வடசொற்கள் தோன்றுமிடம் தமிழின் சுள்-/சுண்-/சுட்- தாதுவேர் சுள்ளி, சூளை, சுண்ணம், சுண்ணாம்பு, சூடு, சுட்ட கறி, ... சுணக்கு/சுணங்கு > உணக்கு/உணங்கு. ”காய்ச்சுதல், சூடாக்குதல், வாட்டுதல்” என்னும் பொருளுடைய இந்த உணக்குதலும்,
வள்ளுவரின் உழவு அதிகாரத்தில் தொழி/தொளி உழக்குதல் என்னும் பொருளுடைய உணக்குதலும் வெவ்வேறானவை.

அன்புடன்,
நா. கணேசன்

Ramamoorthy Ramachandran

unread,
Aug 6, 2014, 11:48:55 PM8/6/14
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி ஒருமுறை மீள் பார்வை  பார்த்தது போலாயிற்று.
உழக்குதல்  சிதைத்தல் என்ற பொருளில் வந்தது. காய வைத்தல் 
என்ற பொருள் அதில் இல்லை! ஆவாரஞ்செடி தழை உரம் அதனை
 மிதித்து 'உழக்கி' எருவாக்குவார்கள்! அதன் பின் வேறோர்  எரு  
வேண்டுவதில்லை என்று நெல் வயல்  வேளாண்மை நடக்குமாயின் 
ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின் 
நீரினும்  நன்றதன்  காப்பு 
என்ற நஞ்சை வேளாண்மைக் குறளுக்குப் பொருளின்றிப் போய்விடும்!

புழுதியைக் காய வைத்து உணக்குதல் புன்செய் வேளாண்மை!
நிலத்தைக் காயப்போட்டால் அதுவே உரம்! அதன்பின் வேறோர் 
எரு வேண்டாம் என்பது வள்ளுவர் வேளாண்மை !
ஈரநிலம்  காய்ந்த நிலம் இவற்றை நஞ்சை புஞ்சை என்பர்!
இரண்டுக்கும்  குறள்  எழுதியவர் வள்ளுவப் பேராசான்!
குறிஞ்சி, முல்லை நிலங்களிலும் வேளாண்மை நிகழ்ந்தது!
புஞ்சை வேளாண்மையும் கடலை கொத்தவரை கம்பு சோளம் 
வரகு தினை  சாமை ஆகிய பயிர்களை வளர்க்கத் தேவை!
வானம் பார்த்த பூமியின் பயன் அது! 
ஏதோ யானைறிந்ததை எழுதினேன்!நன்றி 
அன்புடன் புலவர் இராமமூர்த்தி.


--

N. Ganesan

unread,
Aug 7, 2014, 12:09:36 AM8/7/14
to santhav...@googlegroups.com


On Wednesday, August 6, 2014 8:48:55 PM UTC-7, Trichy Pulavar Ramamoorthy wrote:
மிக்க நன்றி ஒருமுறை மீள் பார்வை  பார்த்தது போலாயிற்று.
உழக்குதல்  சிதைத்தல் என்ற பொருளில் வந்தது. காய வைத்தல் 
என்ற பொருள் அதில் இல்லை! ஆவாரஞ்செடி தழை உரம் அதனை
 மிதித்து 'உழக்கி' எருவாக்குவார்கள்! அதன் பின் வேறோர்  எரு  
வேண்டுவதில்லை என்று நெல் வயல்  வேளாண்மை நடக்குமாயின் 
ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின் 
நீரினும்  நன்றதன்  காப்பு 
என்ற நஞ்சை வேளாண்மைக் குறளுக்குப் பொருளின்றிப் போய்விடும்!

புழுதியைக் காய வைத்து உணக்குதல் புன்செய் வேளாண்மை!

ஒரு பலம் இருக்கிற மண்ணாங்கட்டியை காயவைத்து கால் பலம் கஃசு ஆக ஆக்கினால்
இறுகிக் கல்போலாகிவிடும்.

ஒருபலம் போல இருக்கிற கட்டிகளை பல்கால் உழக்கி கஃசு ஆக உடைத்து
வேளாண்மை செய்க என்கிறார்.

ஈரமாக இருக்கிற மண்ணாங்கட்டிகளை நாலில் ஒன்றாகக் காயவிட்டால்
இறுகிக் கல் போலாகி விடுமே. 

ஈரம் போவதற்குள் பல கால் உழக்கி கட்டிகளைச் சிதைத்து நாலில் ஒரு பங்கு
ஆக்குக என்கிறார். தழல்-தணல், நிழல்-நிணல், உழக்கு-உணக்கு, ....

நா. கணேசன்

N. Ganesan

unread,
Aug 7, 2014, 12:19:09 AM8/7/14
to santhav...@googlegroups.com

வள்ளுவர் சொல்வது 4-ல் 1-பங்கு ஆகக் (தொடிப்புழுதி கஃசு ஆக) வெயிலில் காயவிடுவது
என்பது பொருளானால் மிகப் பெரிய வறட்சி என்றுதான் கொள்ள வேண்டியுள்ளது.
ஒரு பலம் கொண்ட கட்டி 1/4 பலம் ஆவதாகக் காயவிட்டால் ஈரப்பசை எல்லாம்போய்
மிக இறுகிக் கல் போல் ஆகிவிடும். வெள்ளாளருக்கு இது பிரச்சினை ஆகிவிடும்.


நிழல்-நிணல், அழுங்கு-அணுங்கு, தழல்-தணல், ... என்பதுபோல் உழக்கு-உணக்கு என்றுகொண்டால்
ஒரு பலம் என உள்ள மண்ணாங்கட்டியை பல்கால் உழவால் சிதைத்து கால் பலம் அளவில் உள்ளதாக
மாற்றி வேளாண்மை செய்யமுடியும்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Aug 7, 2014, 9:46:32 AM8/7/14
to santhav...@googlegroups.com

அன்பிற்கினிய வித்வான் இராமமூர்த்தி ஐயா,

பரிப்பெருமாள் உரையில் உழவு என்ற அதிகாரம் இன்று
படித்தேன். அதன்பின் எழுதிய மடல் இது:

சுஷ்ணம்/உஷ்ணம் என்ற வடசொற்கள் தோன்றுமிடம் தமிழின் சுள்-/சுண்-/சுட்- தாதுவேர் சுள்ளி, சூளை, சுண்ணம், சுண்ணாம்பு, சூடு, சுட்ட கறி, ... சுணக்கு/சுணங்கு > உணக்கு/உணங்கு. ”காய்ச்சுதல், சூடாக்குதல், வாட்டுதல்” என்னும் பொருளுடைய இந்த உணக்குதலும்,
வள்ளுவரின் உழவு அதிகாரத்தில் தொழி/தொளி உழக்குதல் என்னும் பொருளுடைய உணக்குதலும் வெவ்வேறானவை.

உணக்குதல் (1) உஷ்ணம் ஆக்குதல் (2) உழக்கிச் சிதைத்தல் என்னும் 2 பொருள்களைக் கொண்ட ஒருசொல்.
இதனை homonym என்பர்.  Words with the same writing and pronunciation (i.e. are both homographs and homophones
are considered homonyms. தொடிப் புழுதி கஃசு ஆகப் பல்கால் உணக்கி உழவு செய்க என்று அறிவுறுத்தும் குறளில்
உணக்குதல் உழக்குதல் என்ற பொருளில் வருவது தெளிவு. 1 பலத்தை 1/4 பலமாகக் கடுமையான வெயிலில்
காய்ச்சினால் மண்ணாங்கட்டி இறுகிக் கல்லாங்கட்டி ஆகிவிடும். விவசாயம் செய்யமுடியாது. எனவே அவ்வுரை
தவிர்க்கத் தக்கதாம்.

பரிமேலழகர் ஆகட்டும், பரிப்பெருமாள் ஆகட்டும் - அவர்கள் எது ஒன்றுக்கொன்று தொடர்ச்சியான
குறள்கள் என்று ஒவ்வொரு அதிகாரத்திலும் வைத்துள்ளனர். உழவு என்ற அதிகாரத்தில் பரிமேலழகரும்,
பரிப்பெருமாளும், ஒன்றுக்கொன்று தொடர்ச்சியானது என்று ‘தொடிப்புழுதி’ எனத் தொடங்கும் குறளும்,
உடனே அடுத்து “ஏரினும் நன்றாம்” என்று வைத்துள்ளதை நோக்குக,  பரிப்பெருமாள் மணக்குடவரைப் பின்பற்றுபவர்:

பரிப்பெருமாள் உரை (பெரும்புலவர் வே. ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர் பெ. தூரன் மூலியமாகக் கொடுத்த ஏடுகள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இருந்தன. கா. ம. வேங்கடராமையா கவுண்டர் மறைந்து பலகாலம் சென்றபின்
பதிப்பித்தார்கள். அண்ணாமலையில் உள்ள கம்பன் ஏடுகளில் பெரும்பகுதியும் கவுண்டர் ஐயா அளித்தவையே. தகவல்: புலவர் செ. இராசு. ஈரோடு). அவ்வுரையை இங்கே படிக்கலாம்:

9. உழவு அதிகாரம் (பரிப்பெருமாள் உரைவரிசை)

சுழன்றுமேர்ப் பின்ன துலக மதனா
னுழன்று முழவே தலை    1031

எங்கெங்கோ சுழன்று உலகில் திரிந்தாலும் உழவே தலையான தொழில்.
அதில் வருத்தமிருந்தாலும் செய்க என்கிறார் வள்ளுவர்.
அடுத்த குறளில் அவ் உழவை எவ்வாறு செய்யணும் என்கிறார்.

தொடிப்புழுதி கைசா வுணக்கிற் பிடித்தெருவும்
வேண்டாமற் சான்று படும்   1032

பல்கால் உழவு செய்க. அதனால் துகள் துகளாக (புழுதி) ஆகுமாறு செய்க என்கிறார்.
ஒரு பலம் உள்ள கட்டிகளை காற்பலம் அளவான சிறு துகள்களாக உழக்கிச்
சிதைத்து உழுக என்றார். நிழல் - நிணல், தழல் - தணல், ... போல, ஈண்டு உணக்கின் = உழக்கின்.

கஃசு ஆக - பரிப்பெருமாள் கைசு (கயிசு) ஆக என்று தருகிறார். கஃசு கயிசு என்று
மக்கள் வழக்கில் ஆய்தவெழுத்து யகரமாக மெலிதற்கு அரிய சான்று இது.

ஏரினு நன்றா மெருவிடுதல் கட்டபி
னீரினு நன்றதன் காப்பு   1032

(1) தூள்தூளாக உழக்கி(உணக்கி) செய்யும் பல்கால் உழவு
(2) எரு (3) களைபறிப்பு (4) நீர்ப்பாசனம் (5) காப்பு (நோய், பூச்சி தாக்கல்,
பசுப் புகுதல் - இவற்றினின்றும் காத்தல்)

வேளாண்மையிம் முக்கியமான 5 செயல்களைக் கூறுகிறார் வள்ளுவர்.

செல்லான் கிழவ னிருப்பி னிலம்புலர்ந்
தில்லாளி னூடி விடும்  1033

1032-ஆம் குறளில் குறித்த 5 வேளாண்டொழிலும் நிலக்கிழான் தன் பூமிக்குச்
செல்லாது இருந்தால் மனையாளைப் போல, அவன் நிலமும் ஊடிவிடும் என்கிறார்.

அன்புடன்,
நா. கணேசன்

Ramamoorthy Ramachandran

unread,
Aug 8, 2014, 2:51:46 AM8/8/14
to santhav...@googlegroups.com
வணக்கம் பரிப்பெருமாள்  உரைப்படி, பலமுறை உழவு செய்து 
பலப்புழுதி  காற்பலம் ஆகச் செய்வது புன்செய் வேளாண்மையே! 
தொடிப்புழுதி- புன்செய் நிலம் குறித்தது. 
ஏரினும் நன்றால் -  நன்செய் நிலம் குறித்தது.
இரண்டும் நன்செய் வேளாண்மை என்றால் புன்செய் 
வெள்ளாமை குறித்து வள்ளுவர் ஏதும் கூறவில்லை 
என்றாகி விடுமே? வள்ளுவர் இருவகை நிலம் பற்றியும் 
எழுதியுள்ளார் என்று சொன்னால் என்ன குறை?
வள்ளுவருக்குப் புகழ் சேர்க்கலாமே!
மிக்க அன்புடன் புலவர் இராமமூர்த்தி.

உங்கள் மேற்கோளில் 
தொடிப்புழுதி  (கைசா) என்று நைசாக புதுச்சொல் 
ஏற்றியிருக்கிறீர்கள்! பிடித்தெருவும் வேண்டாது 
சால என்பதற்கு மாறாக சான்று  என்று ஒரு புதுச் 
சொல்  ஏற்றியிருக்கிறீர்கள்! உங்கள் உபயத்தால் 
திருக்குறள் செம்மை பெற்றால் சரிதான்!
அன்புடன் புலவர் 

N. Ganesan

unread,
Aug 8, 2014, 8:47:45 AM8/8/14
to santhav...@googlegroups.com
On Thursday, August 7, 2014 11:51:46 PM UTC-7, Trichy Pulavar Ramamoorthy wrote:
வணக்கம் பரிப்பெருமாள்  உரைப்படி, பலமுறை உழவு செய்து 
பலப்புழுதி  காற்பலம் ஆகச் செய்வது புன்செய் வேளாண்மையே! 
தொடிப்புழுதி- புன்செய் நிலம் குறித்தது. 
ஏரினும் நன்றால் -  நன்செய் நிலம் குறித்தது.
இரண்டும் நன்செய் வேளாண்மை என்றால் புன்செய் 
வெள்ளாமை குறித்து வள்ளுவர் ஏதும் கூறவில்லை 
என்றாகி விடுமே? வள்ளுவர் இருவகை நிலம் பற்றியும் 
எழுதியுள்ளார் என்று சொன்னால் என்ன குறை?
வள்ளுவருக்குப் புகழ் சேர்க்கலாமே!
மிக்க அன்புடன் புலவர் இராமமூர்த்தி.

உங்கள் மேற்கோளில் 
தொடிப்புழுதி  (கைசா) என்று நைசாக புதுச்சொல் 
ஏற்றியிருக்கிறீர்கள்! பிடித்தெருவும் வேண்டாது 
சால என்பதற்கு மாறாக சான்று  என்று ஒரு புதுச் 
சொல்  ஏற்றியிருக்கிறீர்கள்! உங்கள் உபயத்தால் 
திருக்குறள் செம்மை பெற்றால் சரிதான்!
அன்புடன் புலவர் 



புலவர் ஐயா,

தொடிப்புழுதி கைசா வுணக்கிற் பிடித்தெருவும்
வேண்டாமற் சான்று படும்   1032

கைசா என்று ஏற்றியவர் பரிப்பெருமாள் ஆவார். நான் அவ்வாறு செய்யவில்லை.
பரிப்பெருமாள் உரை நீங்கள் படித்திருப்பீர்கள். கா. ம. வேங்கடராமையா பதிப்பு
- அண்ணாமலைப் பல்கலை இங்கே இருக்கிறது:
http://tamilvu.org/library/nationalized/pdf/90-venkataramiya/thirukuralmulamumpariporuluraiyum.pdf
பரிப்பெருமாள் கொடுத்துள்ளபடி உழவு அதிகாரத்தின் 4 குறள்களைக் கொடுத்துள்ளேன்.

”தொடிப்புழுதி கைசா வுணக்கிற் பிடித்தெருவும்
வேண்டாமற் சான்று படும்   1032

பல்கால் உழவு செய்க. அதனால் துகள் துகளாக (புழுதி) ஆகுமாறு செய்க என்கிறார்.
ஒரு பலம் உள்ள கட்டிகளை காற்பலம் அளவான சிறு துகள்களாக உழக்கிச்
சிதைத்து உழுக என்றார். நிழல் - நிணல், தழல் - தணல், ... போல, ஈண்டு உணக்கின் = உழக்கின்.

கஃசு ஆக - பரிப்பெருமாள் கைசு (கயிசு) ஆக என்று தருகிறார். கஃசு கயிசு என்று
மக்கள் வழக்கில் ஆய்தவெழுத்து யகரமாக மெலிதற்கு அரிய சான்று இது.”

நா. கணேசன்

N. Ganesan

unread,
Aug 8, 2014, 9:00:48 AM8/8/14
to santhav...@googlegroups.com


On Thursday, August 7, 2014 11:51:46 PM UTC-7, Trichy Pulavar Ramamoorthy wrote:
வணக்கம் பரிப்பெருமாள்  உரைப்படி, பலமுறை உழவு செய்து 
பலப்புழுதி  காற்பலம் ஆகச் செய்வது புன்செய் வேளாண்மையே! 
தொடிப்புழுதி- புன்செய் நிலம் குறித்தது. 
ஏரினும் நன்றால் -  நன்செய் நிலம் குறித்தது.
இரண்டும் நன்செய் வேளாண்மை என்றால் புன்செய் 
வெள்ளாமை குறித்து வள்ளுவர் ஏதும் கூறவில்லை 
என்றாகி விடுமே? வள்ளுவர் இருவகை நிலம் பற்றியும் 
எழுதியுள்ளார் என்று சொன்னால் என்ன குறை?

இருக்கலாம். ஒரு பலம் கொண்ட கட்டியை 1/4 பலம்
ஆக்குதல் உழக்குதல் என்னும் வினைச்சொல்லுக்கு பொருந்துகிறது.
சூடாக்குதல் என்பதில்லை எனத் தமிழ்ச் சொற்களின்
மொழியியல் காட்டுகிறது. அழுங்கு என்பதை அணுங்கு என்பதுபோல்.
உழக்கு என்பதை உணக்கு என்றிருக்கிறார்கள். 75% வாட்டிக்
காயவிட்டால் புஞ்சை ஆனாலும், நஞ்சை ஆனாலும் கல்லாங்கட்டிகளே
மிஞ்சும் அல்லவா?

நா. கணேசன்

Ramamoorthy Ramachandran

unread,
Aug 9, 2014, 1:04:18 AM8/9/14
to santhav...@googlegroups.com
புன்செய் நிலத்துக்கு  அதிக உரம் தேவை. அதனால் பலமுறை உழுது 
மண்ணைப் புரட்டுவார்கள். புரளப் புரள மண்கட்டிகள்  காய்ந்தது 
(உணங்கி) உடைந்து  புழுதியாகும். அந்தப் புழுதியும் கால் பங்காக 
மீண்டும் உழுது புரட்டுவார்கள். அதுவும் போதாதென்று ஆடு மாடுகளை 
கிடை போடுவார்கள்.அவற்றின்  எருவும் புஞ்செய்க்குத்  தேவை. 
இந்த உரம்  கிட்டாத சூழலில் தொடிப்புழுதியைக்  க.:. சாக  உணக்குவர்.
இவ்வாறு திருக்குறள் வித்தகர்  கோயில்பட்டி இராமையா கூறக் 
கேட்டிருக்கிறேன். இவை எனக்குக் கேள்விதாம். அடியேன் வேளாண்மை 
 அறியேன். அன்புடன் புலவர் இராமமூர்த்தி.

N. Ganesan

unread,
Aug 9, 2014, 10:14:16 AM8/9/14
to Santhavasantham
2014-08-08 22:04 GMT-07:00 Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com>:
புன்செய் நிலத்துக்கு  அதிக உரம் தேவை. அதனால் பலமுறை உழுது 
மண்ணைப் புரட்டுவார்கள். புரளப் புரள மண்கட்டிகள்  காய்ந்தது 
(உணங்கி) உடைந்து  புழுதியாகும். அந்தப் புழுதியும் கால் பங்காக 
மீண்டும் உழுது புரட்டுவார்கள். அதுவும் போதாதென்று ஆடு மாடுகளை 
கிடை போடுவார்கள்.அவற்றின்  எருவும் புஞ்செய்க்குத்  தேவை. 
இந்த உரம்  கிட்டாத சூழலில் தொடிப்புழுதியைக்  க.:. சாக  உணக்குவர்.
இவ்வாறு திருக்குறள் வித்தகர்  கோயில்பட்டி இராமையா கூறக் 
கேட்டிருக்கிறேன். இவை எனக்குக் கேள்விதாம். அடியேன் வேளாண்மை 
 அறியேன். அன்புடன் புலவர் இராமமூர்த்தி.


அன்பின் புலவர் ஐயா,

எங்களுக்குப் பரம்பரையான தொழில் விவசாயம். இன்றும்
எனக்கும், எங்கள் உறவினர்களுக்கும் கொங்குநாட்டில் பூமிகள்
நிறைய இருக்கின்றன. இன்னொருவரிடம் வேலைக்குப்
போவது என்பது எங்கள் வீட்டில் நான் ஒருவன் மட்டுமே.
இப்பொழுது போன் கூப்பிடுதல் விலை குறைந்துவிட்டதால்
என் தோட்டத்தில் என்ன நடக்கிறது எனத் தெரிந்துகொண்டுதான்
இருக்கிறேன்.

நஞ்சை, புஞ்சை வெள்ளாமை உழவுகளை பிறந்த காலம்தொட்டுப் 
பார்த்திருக்கிறேன். ஏர் உழுது செல்லும்போது
மண் விண்டுவிடும். அதற்கு சால் என்று பெயர். 6 அல்லது 7
ஏர்கள் ஒன்றன்பின் ஒன்றாய் அடுத்தடுத்துச் செல்லும்.
அப்போது நிலத்தை விண்டு செல்வதால் அந்த 6 (அ) 7 சால்கள்
சேர்ந்த தொகுதிக்கு விளா (< விள்ளுதல்) என்றே பெயர்.
உழவர்களின் விளா பற்றிப் பாடுபவர் மாணிக்கவாசகரே.
நா. மகாலிங்கம் புரந்து ஔவை துரைசாமியார் எழுதிய
உரை அண்ணாமலையில் வெளிவந்தது. அதில் உரைவேந்தர்
சொல்கிறார்: ““புன் செய் விளவிப் பயனிலியாய்” எனப் பகர்கின்றார். விளவுதல், உழுதல். இக் கருத்தையே, “பாழ்ச்செய் விளாவிப் பயனிலியாய்க் கிடப்பேற்கு (குலாப்) என மணிவாசகர் கூறுவது காண்க. விளாவுதல் விளா எனவும் வழங்கும். “நுகமின்றி விளாக் கைத்து” (அதிசயம்) என்று திருவாசகம் ஓதுவது காண்க. ”

 ஓர் அணப்பு (< அணைப்பு) நிலத்தில் இத்தனை விளா
ஓட்டியாச்சு என்பர் உழவர்கள். இந்த விள்ளலை உணக்குதல்
என்கிறார் வள்ளுவர். அதாவது உழக்குதல். இந்த விளா என்ற சொல்
பள்ளியில் எழுத்துக் கற்கும்போது மணலை விளம்புதல் என்பதிலும்
இருக்கிறது. பச்சைத் தண்ணீர் நிரம்பிய மிடாவில் கொஞ்சம்
சுடுநீர் விட்டு குச்சியால்/கையால் விளாவுவதிலும் இந்த “விளா” இருக்கிறது.
அதாவது, உழவால் உழக்கி/உணக்கி மண்ணை விள்ளுவதுபோல்,
சுடுநீரையும், குளிர்நீரையும் கலத்தலை விளாவுதல் என்கிறோம்.

பருவ மழை பெய்தவுடன் ஏர் ஓட்டுதல் உரத்திற்காக அல்ல.
மண்ணை மிருது செய்வதற்காகத் தான். ஈரம் இருந்தால்
மறுச்சொழவு (மறித்த உழவு) ஓட்டுவதும் உண்டும், முதல் உழவு
தென்வடலாய் இருந்தால் மறுச்சொழவு கிழமேற்கே நடக்கும்.
தொடிப் புழுதி கஃசு (கைசு - பரிப்பெருமாள் தரும் பாடவேறுபாடு)
ஆக உணக்குவது இந்த விளா ஓட்டுதலைத் தான். மண்ணாங்கட்டிகள் 
அதாவது உழவினால் உணக்கல்/உழக்கல், சிதைதல்.
‘கொங்கத்து உழவு’ என்று உதாரணம் காட்டுகிறார் இளம்பூரணர்.
அரும்பத உரையாசிரியர் ”விளாக் கொண்டு உழும் உழவர்”
என்று சிலப்பதிகார உரையும் தருகிறார். மண்ணை விள்ளும்
விளா தொடிப்புழுதியை கஃசு ஆக உணக்கும்/உழக்கும் (=சிதைக்கும்).
கலியாணச் சீர்களில் நீர் விளாவுதல் என்பதும் இந்த உழவுத் தொழிலால்
பெற்ற சொல்லே. அதாவது விளா பண்ணையங்களில் சுற்றி வருவதுபோல,
நீரை எடுத்துச் சுற்றிலும் தெளிப்பது.
ஏர் எழுபது - கம்பர்:

ஆடுமாடுகளைப் பட்டி கிடத்துவது பருவமழைக்கு முன்பு, வேசை காலத்தில்.
பருவமழைக்குப் பின்னர் அன்று.(நீங்கள் அவ்வாறு எழுதியிருக்கிறீர்கள்).
வேசை காலத்தில் ஈரப்பசை போய் புழுதிக் காடாகக் கிடக்கும்.
புழுதிநாடு என்பதுதான் பூழிநாடு. அதன் தலைவர் குடும்பம்தான் பூழித்தேவர்.
பூலித்தேவன் - இந்திய விடுதலைப்போரை வெள்ளையருக்கு எதிராய்
முதன் முதலில் துவக்கியவர்களில் ஒருவன். பூழித்தேவர் என்பதுதான்
பூலித்தேவர் என்கின்றன பத்திரிகைகள்.

பட்டி கிடத்தி, பட்டிநோன்பு முடிந்தபின்னர் பருவமழை பெய்யத் தொடங்கினால்
ஏர்களால் விளா ஓட்டி தொடிப் புழுதியை கஃசு ஆக உழக்குவர்/உணக்குவர்.
உடனுக்கு உடனே தானியங்கள், நிலக்கடலை போன்றவற்றின் விதைப்பு நடக்கும்.
அடுத்த குறளில் வேளாண்மையில் நடக்கும் தொழில்கள வரிசைப்படுத்திச் சொல்கிறார்.

Homonym நிழல்-நிணல், தழல் - தணல், ... போன்றவை போன்ற உழக்கல் - உணக்கல் (அதாவது,
விளா ஏரோட்டம்) பருவமழை பெய்தவுடன் நடப்பது. கூடவே தானியங்களோ, நிலக்கடலை
போன்றனவோ, நெல் நடவோ உழவுத்தொழிலைக் கூர்ந்து கவனித்தால் இந்த
Homonym phenomenon விளங்கும். புஞ்சை வெள்ளாமையில் பருவமழை, ஏரோட்டம், விதைப்பு ... 
இப்படி நடக்கும் sequence-ல் காயவிடுதல் கிடையாது. நஞ்சை வெள்ளாமை என்று எடுத்தாலோ
காயவிடுதல் அறவே இல்லை.

நா. கணேசன்
 

N. Ganesan

unread,
Aug 9, 2014, 10:31:50 AM8/9/14
to santhav...@googlegroups.com
வேசை காலத்தில் புழுதிக் காடாகக் கிடக்கும் பூழி நாட்டு நிலங்களில்
பருவமழை பெயதவுடன் நடக்கும் வெள்ளாமை. மழை கிடைத்தவுடன்
ஏர்கள் பூட்டி விளா உழவு நடக்கும். அப்போது தொடிப் புழுதி கைசு ஆக உழங்கும்/உணங்கும்.
விதைப்பும் தொடங்கும். இதை வேளாண்மை அறிந்த எழுத்தாளர்
வர்ணிக்கும் அழகே அழகு. (அந்த 3000 ஆண்டு வாழ்க்கை தமிழ்நாட்டில்
முடிவு பெற்றுவருகிறது,) இங்கே படிக்கலாம்:

தொடிப்புழுதி கஃசா வுணக்கிற் பிடித்தெருவும்
வேண்டாமற் சாலப் படும்   

நஞ்சை ஆகட்டும் புஞ்சை ஆகட்டும் - பயிரிடும் காலத்தில்
நிலத்தைக் காயவிடுதல் இல்லை. ஈரம் போவதன்முன்
(அதாவது நிலம் காய்வதன்முன் பயிரிடவேண்டும், விதைப்பு
முடிக்க வேண்டும் என்பதே தொன்றுதொட்டு விவசாயிகளின் பாடு.)

உழவு என்ற அதிகாரத்தில் பயிர் வெள்ளாமை பற்றிப் பேசுகிறார்
வள்ளுவர். தரிசாகப் போட்டு பட்டிகாப்பதை இந்த அதிகாரத்தில்
உழவினை நன்கறிந்த வள்ளுவர் பாடவில்லை. கோடைமழை
வந்தவுடன் நடக்கும் உழவு, விளா, அதனால் 
தொடிப் புழுதி கஃசு ஆக உழக்குதல் - இவை குறளில் சொல்கிறார்.

N. Ganesan

unread,
Aug 9, 2014, 10:42:46 AM8/9/14
to santhav...@googlegroups.com


On Friday, August 8, 2014 10:04:18 PM UTC-7, Trichy Pulavar Ramamoorthy wrote:
புன்செய் நிலத்துக்கு  அதிக உரம் தேவை. அதனால் பலமுறை உழுது 
மண்ணைப் புரட்டுவார்கள். புரளப் புரள மண்கட்டிகள்  காய்ந்தது 
(உணங்கி) உடைந்து  புழுதியாகும். அந்தப் புழுதியும் கால் பங்காக 
மீண்டும் உழுது புரட்டுவார்கள். அதுவும் போதாதென்று ஆடு மாடுகளை 
கிடை போடுவார்கள்.அவற்றின்  எருவும் புஞ்செய்க்குத்  தேவை. 
இந்த உரம்  கிட்டாத சூழலில் தொடிப்புழுதியைக்  க.:. சாக  உணக்குவர்.
இவ்வாறு திருக்குறள் வித்தகர்  கோயில்பட்டி இராமையா கூறக் 
கேட்டிருக்கிறேன். இவை எனக்குக் கேள்விதாம். அடியேன் வேளாண்மை 
 அறியேன். அன்புடன் புலவர் இராமமூர்த்தி.


புலவர் ஐயா,

பூமியின் ஈரம் போவதற்குள் விதைப்பு முடிக்கவேணும்
என்று அல்லாடும் விவசாயி கதைசொல்லும் பாடல் தாங்கள் அறிந்ததே:

ஆவீன மழைபொழிய இல்லம் வீழ
   அகத்தடியாள் மெய்நோவ அடிமை சாக
மாவீரம் போகுதென்று விதைகொண் டோட
   வழியிலே கடன்காரன் மறித்துக் கொள்ளச்
சாவோலை கொண்டொருவன் எதிரே தோன்றத்
   தள்ளவொணா விருந்துவர சர்ப்பந் தீண்டக்
கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்கக்
   குருக்கள்வந்து தட்சணைகள் கொடும் என்றாரே! 

அமுதம் எனக் கிடைக்கும் மழையால் கிடைக்கும் ஈரத்தைப்
பயன்படுத்தி விதைவிதைப்பானா விவசாயி?
இல்லை, காயவிட்டு நிலத்தை வாட்டுவானா? 
பருவமழை, விதைப்புழவு நன்கறிந்த வள்ளுவர் நிலங் காய்தல்
செய்வான் உழவன் பயிரிடுங் காலத்தில் என்று பாடுவாரா?

தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும். - திருக்குறள்

நா. கணேசன்

N. Ganesan

unread,
Aug 9, 2014, 1:16:05 PM8/9/14
to santhav...@googlegroups.com

வள்ளுவர் குறளில் தொடிப் புழுதி கைசு ஆக உழக்குதல் (= உணக்குதல்
என்ற அக்காலப் பேச்சுத் தமிழைச் சொல்கிறார். இதுபோல் பல
பேச்சு வழக்குச் சொற்களை வள்ளுவரில் பார்க்கலாம். இக் குறளை
விவசாயிகள் புரிந்துகொள்வதைப் புறநானூற்றுப் பாடம் மூலம் விளக்கலாகும்.)

தாழ் என்றால் பனை. மதகைப் பனை வைத்து அடைப்பதை
‘அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்’ என்கிறார்.
இக் குறளிலே  பூட்டு (தாழ்), சாவி (தாக்கோல்) எல்லாம் இல்லை.
இதை மிக விளக்கி பாரதியார் கவிதை கொண்டு கவிஞர் ஹரிகி அவர்கள் முன்பு எழுதியிருந்தார்.

தாழ் = பனைமரம். இது சீதாளி (ஸ்ரீதாளம்), தாடி, Toddy, [தாடிக்கொம்பு (திண்டுக்கல் அருகே)], தாலி (வடமொழியில் பனைக்குப் பெயர்), மாங்கல்ய தாலி, ... - எல்லாவற்றிலும் இருக்கிறது அல்லவா?
தமிழகத்தின் விளைபொருள் என்று காட்டும் மிழகு ((த)மிழகு) மிளகு, மிரியம்
கன்னடத்தில் மெணசு (வள்ளுவர் தொடிப்புழுதியை உழக்குதலை உணக்குதல் என்பதுபோல, கன்னடத்தில் மிழகை மெணசு என்கின்றனர். வள்ளுவரைச் சமண சமயி என்பர். கன்னடத்தில் (1) மிழகு மிணசு/மெணசு போல (2) பழுத்தலைப் பணுத்தல் என்பர் கன்னடத்தில். அதுபோல், உழவரின் உழக்கலை உணக்கல் என்கிறார் வள்ளுவர். நாழி:நாளம், மிழகு:மிளகு, புழு:புள், பவழம்:பவளம் - இதெல்லாம் ழ:ள மாறுபாடுகள்.

தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும். - திருக்குறள்

இக் குறளின் உரையாக வேள் பாரி மீது பாடிய
புறநானூற்றுப் பாடல் 120-ஐப் பார்த்தருள்க.

”வெப்புள் விளைந்த வேங்கைச் செஞ்சுவற்
கார்ப்பெயற் கலித்த பெரும்பாட் டீரத்துப்
பூழி மயங்கப் பலவுழுது வித்திப்
பல்லி யாடிய பல்கிளைச் செவ்விக்
களைகால் கழலிற் றோடொலிபு நந்தி” புறம் 120

புழுதியை உழக்கி (அதாவது உணக்கி) பல்கால் உழுது
ஈரத்திலே விதைப்பதைப் புறநானூற்றுக் கவிஞரும்,
சில நூற்றாண்டுகள் சென்ற பின்னர் வள்ளுவரும் பாடுகின்றனர்.
Homonym என்னும் மொழியியல் கோட்பாட்டின் மூலம் 
உணக்கு - உழக்கு, நிழல் - நிணல், அழுங்கு - அணுங்கு, ... புரிந்துகொள்ளலாம்.

நா. கணேசன்

 
On Friday, August 8, 2014 10:04:18 PM UTC-7, Trichy Pulavar Ramamoorthy wrote:

p balakrishnan

unread,
Aug 9, 2014, 1:38:47 PM8/9/14
to santhav...@googlegroups.com
வணக்கம்.நல்ல கட்டுரை.சிறுவயது நினைவுகளைத் தூண்டியது.எங்கள் ஊரில் பாறைக்களம் பரந்து
விரிந்து இருக்கும்.சோளம்,உழுந்து, நெல் போன்ற தானியங்கள் சுத்தமாகப் பிரிபடும்.-அரிமா
இளங்கண்ண்அன்,லாஸ் ஏஞ்சல்ஸ்

On Sat, 09 Aug 2014 20:01:55 +0530 "N. Ganesan" wrote

>வேசை காலத்தில் புழுதிக் காடாகக் கிடக்கும் பூழி நாட்டு நிலங்களில்பருவமழை பெயதவுடன் நடக்கும்
வெள்ளாமை. மழை கிடைத்தவுடன்ஏர்கள் பூட்டி விளா உழவு நடக்கும். அப்போது தொடிப் புழுதி கைசு
ஆக உழங்கும்/உணங்கும்.விதைப்பும் தொடங்கும். இதை வேளாண்மை அறிந்த எழுத்தாளர்வர்ணிக்கும்
அழகே அழகு. (அந்த 3000 ஆண்டு வாழ்க்கை தமிழ்நாட்டில்முடிவு பெற்றுவருகிறது,) இங்கே
படிக்கலாம்:http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=1212

தொடிப்புழுதி கஃசா வுணக்கிற் பிடித்தெருவும்வேண்டாமற் சாலப் படும்
நஞ்சை ஆகட்டும் புஞ்சை ஆகட்டும் - பயிரிடும் காலத்தில்நிலத்தைக் காயவிடுதல் இல்லை. ஈரம்
போவதன்முன்(அதாவது நிலம் காய்வதன்முன் பயிரிடவேண்டும், விதைப்புமுடிக்க வேண்டும் என்பதே
தொன்றுதொட்டு விவசாயிகளின் பாடு.)
உழவு என்ற அதிகாரத்தில் பயிர் வெள்ளாமை பற்றிப் பேசுகிறார்வள்ளுவர். தரிசாகப் போட்டு
பட்டிகாப்பதை இந்த அதிகாரத்தில்உழவினை நன்கறிந்த வள்ளுவர் பாடவில்லை.
கோடைமழைவந்தவுடன் நடக்கும் உழவு, விளா, அதனால்தொடிப் புழுதி கஃசு ஆக உழக்குதல் - இவை
குறளில் சொல்கிறார்.
On Saturday, August 9, 2014 7:14:16 AM UTC-7, N. Ganesan wrote:2014-08-08 22:04 GMT-07:00
Ramamoorthy Ramachandran :




புன்செய் நிலத்துக்கு அதிக உரம் தேவை. அதனால் பலமுறை உழுது

மண்ணைப் புரட்டுவார்கள். புரளப் புரள மண்கட்டிகள் காய்ந்தது
(உணங்கி) உடைந்து புழுதியாகும். அந்தப் புழுதியும் கால் பங்காகமீண்டும் உழுது புரட்டுவார்கள்.
அதுவும் போதாதென்று ஆடு மாடுகளை
கிடை போடுவார்கள்.அவற்றின் எருவும் புஞ்செய்க்குத் தேவை.இந்த உரம்கிட்டாத சூழலில்
தொடிப்புழுதியைக் க.:. சாக உணக்குவர்.இவ்வாறு திருக்குறள் வித்தகர் கோயில்பட்டி இராமையா
கூறக்கேட்டிருக்கிறேன். இவை எனக்குக் கேள்விதாம். அடியேன் வேளாண்மை



அறியேன். அன்புடன் புலவர் இராமமூர்த்தி.

அன்பின் புலவர் ஐயா,
எங்களுக்குப் பரம்பரையான தொழில் விவசாயம். இன்றும்

எனக்கும், எங்கள் உறவினர்களுக்கும் கொங்குநாட்டில் பூமிகள்நிறைய இருக்கின்றன. இன்னொருவரிடம்
வேலைக்குப்போவது என்பது எங்கள் வீட்டில் நான் ஒருவன் மட்டுமே.இப்பொழுது போன் கூப்பிடுதல்
விலை குறைந்துவிட்டதால்

என் தோட்டத்தில் என்ன நடக்கிறது எனத் தெரிந்துகொண்டுதான்இருக்கிறேன்.
நஞ்சை, புஞ்சை வெள்ளாமை உழவுகளை பிறந்த காலம்தொட்டுப்பார்த்திருக்கிறேன். ஏர் உழுது
செல்லும்போது

மண் விண்டுவிடும். அதற்கு சால் என்று பெயர். 6 அல்லது 7ஏர்கள் ஒன்றன்பின் ஒன்றாய்
அடுத்தடுத்துச் செல்லும்.அப்போது நிலத்தை விண்டு செல்வதால் அந்த 6 (அ) 7 சால்கள்சேர்ந்த
தொகுதிக்கு விளா (< விள்ளுதல்) என்றே பெயர்.

உழவர்களின் விளா பற்றிப் பாடுபவர் மாணிக்கவாசகரே.

N. Ganesan

unread,
Aug 9, 2014, 7:27:07 PM8/9/14
to santhav...@googlegroups.com, tiruva...@googlegroups.com, housto...@googlegroups.com, thami...@googlegroups.com, vallamai, mintamil
On Saturday, August 9, 2014 10:38:47 AM UTC-7, pbalakrishnan1 wrote:
வணக்கம்.நல்ல கட்டுரை. சிறுவயது நினைவுகளைத் தூண்டியது. எங்கள் ஊரில் பாறைக்களம் பரந்து
விரிந்து இருக்கும்.சோளம்,உழுந்து, நெல் போன்ற தானியங்கள் சுத்தமாகப் பிரிபடும்.-அரிமா
இளங்கண்ணன்,லாஸ் ஏஞ்சல்ஸ்

தமிழகத்தின் விளைபொருள் என்று காட்டும் மிழகு {(த)மிழகு} மிளகு, மிரியம், மிர்ச்சி, கன்னடத்தில் மெணசு 
(வள்ளுவர் தொடிப்புழுதியை உழக்குதலை உணக்குதல் என்பதுபோல, கன்னடத்தில் மிழகை மெணசு 
என்கின்றனர். வள்ளுவரைச் சமண சமயி என்பர். கன்னடத்தில் (1) மிழகு மிணசு/மெணசு போல (2) பழுத்தலைப் 
பணுத்தல் என்பர் கன்னடத்தில். அதுபோல், உழவரின் உழக்கலை உணக்கல் என்கிறார் வள்ளுவர். நாழி:நாளம், 
மிழகு:மிளகு, புழு:புள், பவழம்:பவளம், ... - இதெல்லாம் ழ:ள மாறுபாடுகள்.

தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும். - திருக்குறள்

இக் குறளின் உரையாக வேள் பாரி மீது கபிலர் பாடிய
புறநானூற்றுப் பாடல் 120-ஐப் பார்த்தருள்க.

”வெப்புள் விளைந்த வேங்கைச் செஞ்சுவற்
கார்ப்பெயற் கலித்த பெரும்பாட் டீரத்துப்
பூழி மயங்கப் பலவுழுது வித்திப்
பல்லி யாடிய பல்கிளைச் செவ்விக்
களைகால் கழலிற் றோடொலிபு நந்தி” புறம் 120

புழுதியை உழக்கி (அதாவது உணக்கி) பல்கால் உழுது
ஈரத்திலே விதைப்பதைப் புறநானூற்றுக் கவிஞர் கபிலரும்,
வள்ளுவரும் பாடுகின்றனர். பயிர்செய்யத் தொடங்கும்போது
செய்ய வேண்டிய பல்கால் உழவை கபிலரும், வள்ளுவரும் பேசுகின்றனர்.
புஞ்சை, நஞ்சை வெள்ளாமையின் இவ்வுழவு உழக்கலாம்/உணக்கலாம்.
இக் குறளில் வாட்டுதல், காயவிடுதல் என்ற பொருள்வாராது. “ஆ ஈன மழை பொழிய .. 
மா ஈரம் போகுதென்று  விதை கொண்டோட” - பாடல் உங்களுக்கு நினைவிருக்கும். 
புழுதியை உழக்கி  (அதாவது உணக்கி) பல்கால் உழுது ஈரத்திலே விதைப்பதைப் 
புறநானூற்றுக் கவிஞரும், சில நூற்றாண்டுகள் சென்ற பின்னர் வள்ளுவரும் 
பாடுகின்றனர். Homonym என்னும் மொழியியல் கோட்பாட்டின் மூலம் 
உழக்கு - உணக்கு, நிழல் - நிணல், அழுங்கு - அணுங்கு (Indian Pangolin), ... புரிந்துகொள்ளலாம்.
விடிகாலையில் உழவர் உழுவதால் உஷத் காலம் எனப்படுகிறது. மான் கொம்பு சிந்து சமவெளி, குஜராத், 
மகாராஷ்ட்ரம் போன்ற மாநிலங்களில் கலப்பைக் கொழுவாகக் கிடைக்கிறது. உழுவதற்குப் பயன்படும் கொம்பு 
கொண்டதால்தான் உழை என்றால் மான் என்ற பொருள் செந்தமிழில் இருக்கிறது எனக் கருதுகிறேன். உஷா = 
உழை. (ழகரம் சகரமாதல் வாடிக்கை: விழா - விஷு, மிழா - மேஷ, கலூழ் - கலூஷ).

”தொடிப் புழுதி கஃசு ஆக உழக்கின்/உணக்கின்” - இதில் உள்ள திராவிடச் சொல் ”உணக்கு” (=உழக்கு) 
கடலுயிரி ஒன்றின் பெயராக இன்றும் இருக்கிறது. கடலில் இருந்து குதிக்கும் டோல்பின்கள் (dolphins) 
பழைய தமிழில் ஓங்கில் எனப் பெயர். கடல் தளத்திலிருந்து காற்றில் ஓங்கிக் குதிப்பதால் ஓங்கில்:

ஆனால், கடலிலேயே நீரை உழப்பிக் கொண்டிருக்கும் பன்றி போன்ற விலங்குக்குத் தமிழில் உணகுமீன் எனப் 
பெயர். கன்னடத்தில் உணசிமீனு என்று பெயர் (ஆதாரம்: கிட்டில் பாதிரியின் கன்னட அகராதி. பர்ரோ-எமெனோ 
த்ராவிட வேர்ச்சொல் அகராதி). இதனை ஆங்கிலத்தில் Porpoise என்பர். உணகுமீன்/உணசிமீன் ஓங்கில்போல் 
அடிக்கடி நீர்மட்டத்துக்கு மேல் ஓங்குவதில்லை. நாணமுள்ள விலங்கு நீரை உணக்கிக்கொண்டு (அதாவது, 
உழக்கிக்கொண்டு) கடலில் வாழ்தலால் இதற்கு உணசி என்று பெயர் கொடுத்துள்ளனர். வள்ளுவர் இப்பொருளில் 
உணக்கல்/உழக்கல் என்பதை உழவு அதிகாரத்தில் ஆள்கிறார். ‘அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்’ எனும் 
குறளில் தாழ் என்றால் மதகுகளை அடைக்கும் பனைமரம் என்ற விவசாயத்தின் கலைச்சொல்லை
ஆள்கிறார் வள்ளுவர். அதுபோல், உணசி ‘Porpoise’ என்னும் பெயர்போல, தமிழ்மறை உழவு அதிகாரத்தில் 
உழக்கு என்னும் வினைச்சொல்லை உணக்கு என்றே பயிரிடல் பருவத்துப் பணிகளை விவரிக்கும்போது 
பாவிக்கிறார். வேளாண்மை அறிந்தோர் இதை நன்கு உணர்வர்.

உணகு, உணசிமீன் ‘Porpoise' (உணசி < உழக்கு-)

உழப்பு என்பது உழவு. ’உழப்பு எருது பொன்றப் புடைத்து உழுது’ (சீவக. 2783). பலமுறை உழுதால் எல்லாம் வரும் என்பது பழமொழி. ‘உழப்பின் வாரா உறுதிகள் உளவோ?”. உழப்பு உழைப்பு (=முயற்சி) என்றாகி இருக்கிறது. உழவின் உழப்பு என்ற சொல்லில் இருந்து மற்ற எல்லாத் தொழில்களுக்கும் ‘உழைப்பு’ என்ற சொல்லைத் தமிழ் படைத்துக்கொண்டுள்ளது. உழப்பு - உழவு, கழப்பு - சோம்பல். முற்றுருவக அணியாக மனித வாழ்க்கையையே வேளாண்மையாகப் பட்டினத்தார் 11-ஆம் திருமுறையில் பாடுவதைப் பார்ப்போம். முதலிரு அடிகளில் பழமொழிகள் இரண்டைச் சொல்லித் தொடங்குகிறார்.

”உழப்பின் வாரா உறுதிகள் உளவோ?
கழப்பின் வாராக் கையுற வுளவோ?
அதனால்,
நெஞ்சப் புனத்து வஞ்சக் கட்டையை
வேரற அகழ்ந்து போக்கித் தூர்வைசெய்து
அன்பென் பாத்தி கோலி முன்புற
மெய்யெனும் எருவை விரித்தாங் கையமில்
பத்தித் தனிவித் திட்டு நித்தலும்
ஆர்வத் தெண்ணீர் பாய்ச்சிநேர் நின்று
தடுக்குநர்க் கடங்கா திடுக்கண் செய்யும்
பட்டி அஞ்சினுக் கஞ்சியுட் சென்று
சாந்த வேலி கோலி வாய்ந்தபின்
ஞானப் பெருமுளை நந்தாது முளைத்துக்
கருணை இளந்தளிர் காட்ட அருகாக்
காமக் குரோதக் களையறக் களைந்து
சேமப் படுத்துழிச் செம்மையின் ஓங்கி”

இந்த உழப்பு - பல்கால் உழவு. பல்கால் உழவு பற்றிச் சொல்கையில் உணக்கின்(=உழக்கின்) என்றார் வள்ளுவர். உணசி என்று Porpoise கடலுயிருக்கும் உழக்கல் என்ற வினைச்சொல்லிலேயே பெயர் அமைந்த அருமையும் காண்க. வல்சி < வல்கி < வடிகி (தெலுங்கில் வட்லு என்றால் நெல்)பற்றி விரிவாக எழுதியுள்ளேன். உணசி (Porpoise) < உணக்கு- < உழக்கு- Porpoise கடல் நீரை உழக்குதலான் உணசி என்ற பெயர்பெற்றது.

நா. கணேசன்


 
Reply all
Reply to author
Forward
0 new messages