--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
>>என் குறிப்பு: ஈரசைச் சீர்களை இயற்சீர் என்று இவர் குறிப்பிடுவது முதன்முறையாக நான் >>கண்டேன்.
>>கழிநெடிலடியின் மேலெல்லை இருபது எழுத்து எனக் குறிப்பிடுவது சரியா? அனைத்துமே >>(கருவிளங்)காய்ச்சீர்களாக அமைந்த எண்சீர் விருத்தத்தில் 40 எழுத்துகள் வருமே!
ஈரசை கூடிய சீரியற் சீர் ; அவை
ஈரிரண் டென்ப இயல்புணர்ந் தோரே .... என்று இருக்க வேண்டும்.
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
--
முடிவுரையில்
சொன்னவற்றைப் பற்றி:
1)
/தாண்டகம்
என்பது ஒருவகை யாப்பே ஆகும்.
/
"தாண்டகம் என்பது
ஒருவகைத் தமிழ் யாப்பே ஆகும்"
என்றிருந்திருக்கவேண்டுமோ?
2)
/'பாசுரங்களில்
எச்சங்களாகத் தொடர்ந்து
செல்லும் போக்கு', அவற்றைப்
பாடுதற்குப் பின்பற்றிய
'ஒருவகை இசை மரபு',
ஆகிய தனித்தன்மைகளால்
தாண்டக யாப்பு முன்னாளில்
வேறுபடுத்தி அறியப்பட்டிருக்கலாம்.
/
அப்பர் திருத்தாண்டகங்கள்
இசையோடு பாடும் மரபினை உடையன.
ஆயின், 'எச்சங்களாகத்
தொடர்ந்து செல்லும் போக்கு'
என்பது பல திருத்தாண்டகப்
பதிகங்களுக்குப் பொருந்தினும்,
அவ்வாறு கூற இயலாத
வேறு பல திருத்தாண்டகப்
பதிகங்களும் உள.
உதாரணமாகச் சில
பாடல்கள்:
திருநாவுக்கரசர்
பாடிய திருத்தாண்டகங்களுக்குள்
கிடைக்கப்பெற்றனவற்றுள்
முதலாகப் பாடப்பெற்ற பதிகம்
'மறுமாற்றத்
திருத்தாண்டகம்'
(6.98).
6.98.1
நாமார்க்குங்
குடியல்லோம் நமனை யஞ்சோம்
..
நரகத்தி லிடர்ப்படோம்
நடலை யில்லோம்
ஏமாப்போம்
பிணியறியோம் பணிவோ மல்லோம்
..
இன்பமே யெந்நாளுந்
துன்ப மில்லை
தாமார்க்குங்
குடியல்லாத் தன்மை யான
..
சங்கரன்நற் சங்கவெண்
குழையோர் காதிற்
கோமாற்கே
நாமென்றும் மீளா ஆளாய்க்
..
கொய்ம்மலர்ச்சே
வடிஇணையே குறுகி னோமே.
6.95.2
வெம்பவரு
கிற்பதன்று கூற்றம் நம்மேல்
..
வெய்ய வினைப்பகையும்
பைய நையும்
எம்பரிவுந்
தீர்ந்தோம் இடுக்கண் இல்லோம்
..
எங்கெழிலென் ஞாயி
றெளியோ மல்லோம்
அம்பவளச்
செஞ்சடைமேல் ஆறு சூடி
..
அனலாடி ஆன்அஞ்சும்
ஆட்டு கந்த
செம்பவள
வண்ணர்செங் குன்ற வண்ணர்
..
செவ்வான வண்ணரென்
சிந்தை யாரே.
6.95.10
சங்கநிதி
பதுமநிதி யிரண்டுந் தந்து
..
தரணியொடு வானாளத்
தருவ ரேனும்
மங்குவார்
அவர்செல்வம் மதிப்போ மல்லோம்
..
மாதேவர்க் கேகாந்த
ரல்லா ராகில்
அங்கமெலாங்
குறைந்தழுகு தொழுநோ யராய்
..
ஆவுரித்துத் தின்றுழலும்
புலைய ரேனும்
கங்கைவார்
சடைக்கரந்தார்க் கன்ப ராகில்
..
அவர்கண்டீர் நாம்வணங்கும்
கடவு ளாரே.
6.6.4
அரும்பித்த
செஞ்ஞாயி றேய்க்கும் மடி
..
அழகெழுத லாகா அருட்சே
வடி
சுரும்பித்த
வண்டினங்கள் சூழ்ந்த வடி
..
சோமனையுங் காலனையுங்
காய்ந்த வடி
பெரும்பித்தர்
கூடிப் பிதற்றும் மடி
..
பிழைத்தார் பிழைப்பறிய
வல்ல வடி
திருந்துநீர்த்
தென்கெடில நாடன் னடி
..
திருவீரட் டானத்தெஞ்
செல்வன் னடி.
----
கீழ்க்காணும்
நூல்களிலும் திருத்தாண்டகம்
பற்றிய குறிப்புகளைக்
காணலாம்.
a)
http://www.thevaaram.org/katturai/28.html
தருமை
ஆதீனம் வெளியிட்ட ஆறாம்
திருமுறை உரைநூலின் முன்னுரைகளில்
காண்பது: ".....நாவரசர்
அருளிய தேவாரம் நம்மை இறைவன்
திருவருளிலே அழுந்தச் செய்யும்
மந்திரங்கள். தேவாரத்
திருமுறைகள் பண்ணாங்கம்,
சுத்தாங்கம் என இரண்டு
பிரிவுகள் உடையன. அவற்றுள்
பண்ணாங்கம் தாள அமைப்புடன்
கூடிய பதிகங்களாகும்.
திருநாவுக்கரசர்
தேவாரத்தில் திருவிருத்தம்,
திருத்தாண்டகம் ஆகியன
சுத்தாங்கமாகப் பாடுவதற்கு
உரியன. .... ... திருவிருத்தம்
நான்காம் திருமுறையில்
அமைந்துள்ளது. திருத்தாண்டகம்
ஆறாம் திருமுறையாக விளங்குகிறது.
பன்னிரு திருமுறைகளில்
தாண்டகம் என்ற யாப்பு வகையில்
திருமுறை அருளியவர் திருநாவுக்கரசு
சுவாமிகளே ஆவார். அதனால்
இவர் தாண்டக வேந்தர்,
தாண்டகச் சதுரர் எனப்
போற்றப்படுகிறார். இறைவன்
புகழை விளங்க விரித்துரைக்கும்
முறையில் தாண்டக யாப்பு வகை
இவருக்குப் பெரிதும் துணை
செய்துள்ளது. ....."
b) என்னிடம்
உள்ள பதிப்பில் வெள்ளைவாரணனாரின்
'பன்னிரு திருமுறை
வரலாறு - பாகம்-1'
பக்கங்கள் 298-303-ல்
தாண்டக விளக்கங்கள் உள்ளன.
(These correspond to pages 419-425 (pages 435-441 in the pdf file) on the edition that is available
on tamilvu.org. I have attached those pages).
c)
http://www.tamilvu.org/slet/l4100/l4100uri.jsp?song_no=1363&book_id=120&head_id=7&sub_id=1477
பெரிய
புராணத்தில்:
‘நாமார்க்குங்
குடியல்லோ' மென்றெடுத்து
நான்மறையின்
கோமானை
நதியினுடன் குளிர்மதிவாழ்
சடையானைத்
தோமாலைச்
செந்தமிழின் செழுந்திருத்தாண்
டகம்பாடி
"யாமாறு
நீரழைக்கு மடைவிலமென்
றருள்செய்தார்.
சிவக்கவிமணி
C. K. சுப்பிரமணிய
முதலியார் விளக்க உரையிற்
காண்பது:
தேமாலைச்
செந்தமிழின் செழுந் திருத்தாண்டகம்
- திருத்தாண்டகப்
பதிகத்தைப் பற்றிக் கூறநேர்ந்த
இடம் இதுவே முதலாதலின் அதன்
தன்மையை இவ்வாறு விரித்தனர்.
தேம் - சொல்லினிமையும்
ஓசையினிமையும், மாலை
- ஒரு பாட்டினுள்ளே
பல பெயரும் தொடர்ந்துவந்து
ஓரிடத்து முடிபுறும் தன்மையும்,
செந்தமிழ் - நிரம்பிய
தமிழினிமையும், இன்
- பொருளினிமையும்,
செழுமை - பயனினிமையும்,
திரு - இறைவனது
தன்மை பற்றிய நிலையும்,
தாண்டகம் - யாப்பும்
பண் வகையும் உணர்த்தின.
இங்குக் கூறிய அடைமொழிகள்
தாண்டகங்கட்குப் பொதுவாகவும்,
இப்பதிகத்துக்குச்
சிறப்பாகவும் உரியன.
தேவாரத்தினைத் தாண்டகச்
செய்யுளால் திருநாவுக்கரசர்
ஒருவரே யருளியிருத்தலால்
அவர்க்குத் தாண்டகவேந்தர்
என்று பெயராயிற்று.
பகுதி-5[சென்ற பகுதியின் தொடர்ச்சி]
2380.சடையானை
யெவ்வுயிர்க்குந் தாயா
னானைச்
..
சங்கரனைச்
சசிகண்ட மவுலி யானை
விடையானை
வேதியனை வெண்ணீற் றானை
..
விரவாதார்
புரமூன்று மெரியச் செற்ற
படையானைப்
பங்கயத்து மேவி னானும்
..
பாம்பணையிற்
றுயின்றானும் பரவுங் கோலம்
உடையானை
"யுடையானே
தகுமோ விந்த
..
லொள்ளிழையா
ளுண்மெலி?"வென்
றெடுத்துப் பாட,
"பித்தா பிறைசூடீ" "கூற்றா யினவாறு" முதலிய பல பதிகங்களின் வரலாறுகள் கூறுமிடத்தும், அவ்வப்பண்களமையும் பதிகயாப்பும் சந்தமும் அமையப் பாடிக் காட்டியருளும் மரபு ஆசிரியர் திருத்தாண்டகப் பண்ணினைப்பற்றி மட்டும் எங்கும் பதிக வரலாறுகள் கூறுமிடத்துப் பாடாராயினர்; தாண்டகவேந்து - தாண்டகச் சதுரர் என்று ஆளுடைய அரசுகளுக்குரிய சிறப்புரிமை பற்றி அஞ்சிய நிலைபோலும்; ஆனால் தாண்டகப்பண்ணினைப் பற்றாத இவ்விடத்து அப்பண்ணின் சந்தமும் யாப்பும் அமையப் பாடியருளுதல் குறிக்கத் தக்கது; இவ்வரலாற்றின் தகுதிக்கேற்ற நிலைபோலும். இப்பாட்டுத் திருத்தாண்டகச் சுவை கொண்டது. உரைத்துப் பாட - என்பதும் பாடம். இதுபோன்ற மற்றொரு இடம் "வானாகிநிலனாகி" என்ற (புரா - 56) பாட்டு. வேறு எங்கும் இவ்வாறு பாடியருளாதது அப்பண்ணின் சிறப்பமைதியினையும், அதன்கண் ஆசிரியர் கொண்டருளிய அளவில்லாத பத்தி நிலையினையும் குறிப்பன.