தாண்டகம்

91 views
Skip to first unread message

Siva Siva

unread,
Nov 2, 2010, 8:59:48 AM11/2/10
to santhavasantham
'கவிதை இயற்றுக் கலக்கு' இழையில் தாண்டகம் என்றால் 27 எழுத்துகளுக்கு மேற்பட்டு அமையும் என்று படித்த ஞாபகம். ஆனால் அப்பரின் திருத்தாண்டகங்களுள் அதனின் குறைந்த எழுத்துகள் உள்ள அடிகளும் பார்த்திருக்கிறேன். அவர் பாடல்களின் இலக்கண அமைப்பு வேறோ?

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=6&Song_idField=6001&padhi=001

அப்பர் தேவாரம் - 6.1.1

அரியானை அந்தணர்தம் சிந்தை யானை
    அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும்
தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்
    திகழொளியைத் தேவர்கள்தங் கோனை மற்றைக்
கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்
    கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற
பெரியானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
    பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=6&Song_idField=60770&padhi=077&startLimit=1&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

அப்பர் தேவாரம் - 6.77.1

பாட அடியார் பரவக் கண்டேன்
    பத்தர் கணங்கண்டேன் மொய்த்த பூதம்
ஆடல் முழவம் அதிரக் கண்டேன்
    அங்கை அனல்கண்டேன் கங்கை யாளைக்
கோட லரவார் சடையிற் கண்டேன்
    கொக்கி னிதழ்கண்டேன் கொன்றை கண்டேன்
வாடல் தலையொன்று கையிற் கண்டேன்
    வாய்மூ ரடிகளைநான் கண்ட வாறே.


--
http://nayanmars.netne.net/
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Pas Pasupathy

unread,
Nov 2, 2010, 6:13:50 PM11/2/10
to santhav...@googlegroups.com
27 எழுத்து இலக்கணம் யா.கலம் காலத்தில் தான் வந்தது.
வடமொழித்  தாக்கம் என்பர்.
 
(ஏன் 27? 27 எழுத்தடி =  பாடலில் 108 எழுத்துகள் என்பதால் என்பது என் கருத்து ) 
 
அப்பர் காலம் அதற்கு 3-4 நூற்றாண்டுகளுக்கு முன். அதனால் அப்பரின் 
‘திருத்தாண்டகம்’ யாப்பு வேறு இலக்கணம் தான். 
 
அது தரவு கொச்சகத்தின் ஒரு வகை.  தொல்காப்பியம் ஒவ்வொரு 
வகை அடிக்கும் எழுத்தெண்ணிக்கை கொடுத்துள்ளது. கழி நெடிலடிக்கு 
18-20 என்று சொல்லியிருக்கிறது. அதனால், அப்பர் பாடலை 
அடியெழுத்து 20-ஐத் ‘தாண்டி’ வந்த   பாடல் வகை என்று சொல்லலாம்.  
( அப்பர் அடியெழுத்துகள் 27-ஐ மீறவில்லை என்ற நினைவு. பார்க்கவும்.)
 
அதனால் தான் நான் அப்பரின் பாடலை என் கட்டுரையில் சான்றாகக்
கொடுக்கவில்லை!
 
 
ஆழ்வார் பாசுரங்களிலும் திருநெடுந்தாண்டகம், திருக்குறுந்தாண்டகம் என்று
உள்ளன. இம்மாதிரியே அவற்றையும் அணுக வேண்டும்.

 
2010/11/2 Siva Siva <naya...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--

Siva Siva

unread,
Nov 2, 2010, 8:36:55 PM11/2/10
to santhav...@googlegroups.com
// அப்பர் அடியெழுத்துகள் 27-ஐ மீறவில்லை என்ற நினைவு. பார்க்கவும். //

தேடியதில் கண்ட ஒரு பாடல்:

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=6&Song_idField=60400&padhi=040&startLimit=1&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

அப்பர் தேவாரம் - 6.40.1

அலையடுத்த பெருங்கடல்நஞ் சமுதா வுண்டு
    அமரர்கள்தந் தலைகாத்த ஐயர் செம்பொன்
சிலையெடுத்து மாநாகம் நெருப்புக் கோத்துத்
    திரிபுரங்கள் தீயிட்ட செல்வர் போலும்
நிலையடுத்த பசும்பொன்னால் முத்தால் நீண்ட
    நிரைவயிரப் பலகையாற் குவையார்த் துற்ற
மலையடுத்த மழபாடி வயிரத் தூணே
    யென்றென்றே நானரற்றி நைகின் றேனே.

15+13 = 28
12+12 = 24
13+14 = 27
14+11 = 25


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்


2010/11/2 Pas Pasupathy <pas.pa...@gmail.com>

Siva Siva

unread,
Nov 4, 2010, 10:28:21 PM11/4/10
to santhav...@googlegroups.com
தேடியதில் கண்டது:

http://www.thevaaram.org/thirumurai_1/ani/06aaraaichi12.htm

தாண்டக விளக்கம்:

இவற்றுள் தாண்டகம் என்ற செய்யுள் வகையை அப்பரடிகள் மிகச்சிறப்பாக எடுத்தாண்டுள்ளார். ஆறாம் திருமுறை முழுதும் இத்தாண்டக யாப்பாலேயே விளங்குகின்றன. இத்தாண்டகம் வடமொழி இலக்கணம் பற்றிவந்த செய்யுள் என்றும் இது தமிழ் யாப்பே யாகும் என்றும் இருவேறு கருத்துக்கள் உண்டு.

யாப்பருங்கல விருத்தி 2ம் சூத்திர விளக்கவுரையிலிருந்து (1) அளவியல் தாண்டகம் (2) அளவழித் தாண்டகம் என்ற இருவகைகள் அறியப்படும்.

பன்னிரு பாட்டியல் என்ற நூலிலிருந்தும் அதன் உரையி லிருந்தும் அறியப்படும் வகைகள் (1) குறுந்தாண்டகம் (2) நெடுந் தாண்டகம் என்ற இரண்டாம் ஒவ்வோரடியினும், `அறுசீரேனும்', `எண்சீரேனும்' வகையாக அமைத்து இயற்றப்பட்ட நான்கடிச் செய்யு ளால் ஆடவரையும் கடவுளரையும் புகழ்வது, தாண்டகம் என்பது பன்னிரு பாட்டியற் கருத்தாகும்.

இவற்றுள் அறுசீரடிப் பாக்களாலாயது குறுந்தாண்டகம்; எண் சீர்ப்பாக்களாலாயது நெடுந்தாண்டகம்.

"மூவிரண் டேனும் இருநான் கேனும்

சீர்வகை நாட்டிச் செய்யுளின் ஆடவர்

கடவுளர்ப் புகழ்வன தாண்டகம் அவற்றுள்

அறுசீர் குறியது நெடியதெண் சீராம்"

என்பது பன்னிருபாட்டியலார் கூற்று. (110)

"அறுசீர் எண்சீர் அடிநான் கொத்தங்

கிறுவது தாண்டகம் இருமுச் சீரடி

குறியது நெடிய திருநாற் சீரே"

என்பது பல்காயனார் வாக்கு.

"மங்கல மரபின் மானிடர் கடவுளர்

தம்புகழ் உரைப்பது தாண்டக வகையே"

"தாண்டகம் மானிடர் கடவுளர்க் குரித்தே"

என்பன மாபூதனார் நூற்பாக்கள்.

"அடிவரை நான்கும் எழுத்தெண்ணி

நேரடி வருவது தாண்டகம் ஆகும்"

என்பர் சீத்தலையார். இருபத்தேழெழுத்து முதலாக உயர்ந்த எழுத்தடி யினவாய் எழுத்தும், குருவும், லகுவும் ஒத்து வருவன அளவியல் தாண்டகம் எனவும், எழுத்தொவ்வாதும் எழுத்தலகு ஒவ்வாதும் வருவன அளவழித் தாண்டகம் எனவும் பெயர் பெறும் என்பது யாப்பருங்கல் விருத்தி உரைகாரர் விளக்கம் ஆகும்.

அப்பரடிகள் அருளிய தாண்டகங்கள், ஒற்றும் குற்றியலுகர மும் நீக்கி எழுத்தெண்ணி வகுக்கப்பட்ட ஐவகை அடிகளுள் கழி நெடிலடிக்கு மேலெல்லையாகிய இருபதெழுத்தென்னும் அளவி னைக் கடந்து இருபத்தேழெழுத்திற்கு உட்பட்டு வருவனவாகும்.

ஆனால் யாப்பருங்கல விருத்தி கூறும் இலக்கணம் இதனின் வேறுபட்டது என்பது மேலே காட்டப்பட்டது. யாப்பருங்கல விருத்தி உரையின் கருத்துப்படி இந்தயாப்பு அமையவில்லை என்பது அறிந்துணரத்தக்கது.

எனவே, தமிழ்ச் செய்யுள் இலக்கணத்தை அடியொற்றி யமைந்த திருத்தாண்டகப் பாவும், வடமொழித் தண்டக யாப்பினை அடியொற்றிப் புதியன புனைந்த யாப்பருங்கல விருத்தி உதாரணச் செய்யுள்களும் இலக்கண வகையால் தம்முள் வேறுபட்டன என்று உணர்தல் வேண்டும்.1

தாண்டக வேந்தராகிய அப்பரடிகள் இந்த வகையை மிக அழகுபடுத்தி இதனை நயம்பெறக் கையாண்டு விளக்கம் புரிந்துள் ளார். கி. பி. 7 ஆம் நூற்றாண்டிற்கு முன் அடைந்திராத செல்வாக்கை இவ்வகை யாப்புலகிற் பெறுவதாயிற்று.

பின்வந்த திருமங்கையாழ்வாரும் இந்த யாப்பை மேற் கொண்டு காத்தனர்.

தாண்டவமாடும் சிவன்தாள் மலரின்பம் நுகர்ந்த அடிகள் அப்பெருமான் புகழ்பாட இதனை மேற்கொண்டது வியந்து போற்று தற்குரியதாகும். இப்போது கிடைத்துள்ள அப்பர் திருத்தாண்டகங்க ளின் தொகை தொளாயிரத்து எண்பத்தொன்று (981) ஆகும் என்பது இங்கு அறியத்தக்கது.












2010/11/2 Pas Pasupathy <pas.pa...@gmail.com>

ka thamizhamallan

unread,
Nov 5, 2010, 1:10:55 AM11/5/10
to santhav...@googlegroups.com
தாண்டகம் பற்றிய தங்கள் தேடல் பாராட்டற்குரித்து.அந்த இலக்கணங்களே
முரண்பட்டுள்ளன என்பதை அறிக.
க.தமிழமல்லன்
5-11-10 அன்று, Siva Siva <naya...@gmail.com> எழுதியது:

> தேடியதில் கண்டது:
>
> http://www.thevaaram.org/thirumurai_1/ani/06aaraaichi12.htm
>
> தாண்டக விளக்கம்:
>
> இவற்றுள் தாண்டகம் என்ற செய்யுள் வகையை அப்பரடிகள் மிகச்சிறப்பாக
> எடுத்தாண்டுள்ளார். ஆறாம் திருமுறை முழுதும் இத்தாண்டக யாப்பாலேயே
> விளங்குகின்றன. இத்தாண்டகம் வடமொழி இலக்கணம் பற்றிவந்த செய்யுள் என்றும் இது
> தமிழ் யாப்பே யாகும் என்றும் இருவேறு கருத்துக்கள் உண்டு.
>
> *யாப்பருங்கல விருத்தி* 2ம் சூத்திர விளக்கவுரையிலிருந்து (1) அளவியல்

> தாண்டகம் (2)
> அளவழித் தாண்டகம் என்ற இருவகைகள் அறியப்படும்.
>
> பன்னிரு பாட்டியல் என்ற நூலிலிருந்தும் அதன் உரையி லிருந்தும் அறியப்படும்
> வகைகள் (1) குறுந்தாண்டகம் (2) நெடுந் தாண்டகம் என்ற இரண்டாம் ஒவ்வோரடியினும்,
> `அறுசீரேனும்', `எண்சீரேனும்' வகையாக அமைத்து இயற்றப்பட்ட நான்கடிச் செய்யு
> ளால் ஆடவரையும் கடவுளரையும் புகழ்வது, தாண்டகம் என்பது *பன்னிரு பாட்டிய*ற்

> கருத்தாகும்.
>
> இவற்றுள் அறுசீரடிப் பாக்களாலாயது குறுந்தாண்டகம்; எண் சீர்ப்பாக்களாலாயது
> நெடுந்தாண்டகம்.
>
> "மூவிரண் டேனும் இருநான் கேனும்
>
> சீர்வகை நாட்டிச் செய்யுளின் ஆடவர்
>
> கடவுளர்ப் புகழ்வன தாண்டகம் அவற்றுள்
>
> அறுசீர் குறியது நெடியதெண் சீராம்"
>
> என்பது *பன்னிருபாட்டிய*லார் கூற்று. (110)

>
> "அறுசீர் எண்சீர் அடிநான் கொத்தங்
>
> கிறுவது தாண்டகம் இருமுச் சீரடி
>
> குறியது நெடிய திருநாற் சீரே"
>
> என்பது *பல்காயனார்* வாக்கு.

>
> "மங்கல மரபின் மானிடர் கடவுளர்
>
> தம்புகழ் உரைப்பது தாண்டக வகையே"
>
> "தாண்டகம் மானிடர் கடவுளர்க் குரித்தே"
>
> என்பன *மாபூதனார்* நூற்பாக்கள்.

>
> "அடிவரை நான்கும் எழுத்தெண்ணி
>
> நேரடி வருவது தாண்டகம் ஆகும்"
>
> என்பர் *சீத்தலை*யார். இருபத்தேழெழுத்து முதலாக உயர்ந்த எழுத்தடி யினவாய்

> எழுத்தும், குருவும், லகுவும் ஒத்து வருவன அளவியல் தாண்டகம் எனவும்,
> எழுத்தொவ்வாதும்
> எழுத்தலகு ஒவ்வாதும் வருவன அளவழித் தாண்டகம் எனவும் பெயர் பெறும் என்பது
> *யாப்பருங்கல்
> விருத்தி* உரைகாரர் விளக்கம் ஆகும்.

>
> அப்பரடிகள் அருளிய தாண்டகங்கள், ஒற்றும் குற்றியலுகர மும் நீக்கி எழுத்தெண்ணி
> வகுக்கப்பட்ட ஐவகை அடிகளுள் கழி நெடிலடிக்கு மேலெல்லையாகிய இருபதெழுத்தென்னும்
> அளவி னைக் கடந்து இருபத்தேழெழுத்திற்கு உட்பட்டு வருவனவாகும்.
>
> ஆனால் *யாப்பருங்கல விருத்தி* கூறும் இலக்கணம் இதனின் வேறுபட்டது என்பது மேலே
> காட்டப்பட்டது. *யாப்பருங்கல விருத்தி* உரையின் கருத்துப்படி இந்தயாப்பு

> அமையவில்லை என்பது அறிந்துணரத்தக்கது.
>
> எனவே, தமிழ்ச் செய்யுள் இலக்கணத்தை அடியொற்றி யமைந்த திருத்தாண்டகப்
> பாவும், வடமொழித்
> தண்டக யாப்பினை அடியொற்றிப் புதியன புனைந்த *யாப்பருங்கல விருத்தி* உதாரணச்

VETTAI ANANTHANARAYANAN

unread,
Nov 5, 2010, 9:48:34 AM11/5/10
to santhav...@googlegroups.com
குற்றியலுகரப் புணர்ச்சியைக் கருதினால் (உண்டு+அமரர்கள்) முதலடியிலும் 27 எழுத்துக்களே உள. அரையடிக்கு 4 சீர் என்ற அமைப்பில் உள்ள ஓசை குறையாமல் இருக்க (படிக்கும்போது) முதல் அரையடியில் உண்டு என்று கொள்ளல் நன்றெனத் தோன்றுகிறது.
...அனந்த்
2010/11/2 Siva Siva <naya...@gmail.com>
--

VETTAI ANANTHANARAYANAN

unread,
Nov 5, 2010, 6:13:38 PM11/5/10
to santhav...@googlegroups.com

இத்தகைய பாடல்களில் குற்றியலுகரப் புணர்ச்சியைக் கருதாமலும் எழுத்தெண்ணலாம் என்பதற்குத் திருமங்கையாழ்வாரின் திருநெடுந்தாண்டகத்தில் ஒரு பாடலை எடுத்துக் காட்டாகத் தருவதைக் கண்டேன்:

பாருருவில் நீரெரிகால் விசும்பும் ஆகிப்

..பல்வேறு சமயமுமாய்ப் பரந்து நின்ற

ஏருருவில் மூவருமே என்ன நின்ற

..இமையவர்தம் திருவுருவே றெண்ணும் போது

ஓருருவம் பொன்னுருவம் ஒன்று செந்தீ

.. ஒன்றுமா கடலுருவம் ஒத்து நின்ற

மூவுருவும் கண்டபோ தொன்றாம் சோதி

.. முகிலுருவம் எம்மடிகள் உருவம் தானே

(என்ன அழகிய கருத்தும் சொல்லாட்சியும் கொண்ட பாடல்!)

இங்கு, இரண்டாம் அடியின் இரண்டாம் அரையடியின் ஈற்றில், ‘போது’ என்பதை உகரம் கெடாமல் எண்ணி, முதல் இரண்டு அடிகளிலும் 26 எழுத்துக்கள் உள்ளனவாகக் கொள்ளவேண்டும் என்று சோ.ந.கந்தசாமியின் நூலில் காண்கிறது.

தாண்டக யாப்பில், அரையடிகளின் இறுதிச்சீர் தேமாவாக அமைத்தல் மரபெனத் தெரிகிறது. (பொதுவாக) 3,7-ஆம் சீர்கள் மாச்சீராகவும் 1,2,5,6 சீர்கள் காய்ச்சீராகவும் அமைதல் சிறப்பென்பர். 
 
அனந்த் 

2010/11/5 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

Siva Siva

unread,
Nov 5, 2010, 10:43:06 PM11/5/10
to santhav...@googlegroups.com

அரையடியின் ஈற்றுச்சீர்கள் மா+தேமா ஆகாவிடில், எப்படிச் சீர் பிரிக்கவேண்டும்?

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=6&Song_idField=60070&padhi=007&startLimit=1&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

அப்பர் தேவாரம் - 6.7.1

செல்வப் புனற்கெடில வீரட்டமும்
    சிற்றேமமும் பெருந்தண் குற்றாலமும்
தில்லைச்சிற் றம்பலமுந் தென்கூடலும்
    தென்னானைக் காவும் சிராப்பள்ளியும்
நல்லூரும் தேவன் குடிமருகலும்
    நல்லவர்கள் தொழுதேத்து நாரை யூரும்
கல்லலகு நெடும்புருவக் கபால மேந்திக்
    கட்டங்கத் தோடுறைவார் காப்புக் களே.


இதை,

செல்வப் புனற்கெடில வீரட் டமும்
    சிற்றேம மும்பெருந்தண் குற்றா லமும்
தில்லைச்சிற் றம்பலமுந் தென்கூ டலும்
    தென்னானைக் காவும் சிராப்பள் ளியும்
நல்லூரும் தேவன்கு டிமரு கலும்
    நல்லவர்கள் தொழுதேத்து நாரை யூரும்
கல்லலகு நெடும்புருவக் கபால மேந்திக்
    கட்டங்கத் தோடுறைவார் காப்புக் களே.

என்று அடியின் ஈற்றசை நிரையில் வருமாறு பிரிக்கவேண்டுமோ?
அன்றேல்,

செல்வப் புனற்கெடில வீரட்ட மும்
    சிற்றேமமும் பெருந்தண் குற்றால மும்
தில்லைச்சிற் றம்பலமுந் தென்கூட லும்
    தென்னானைக் காவும் சிராப்பள்ளி யும்
நல்லூரும் தேவன் குடிமருக லும்
    நல்லவர்கள் தொழுதேத்து நாரை யூரும்
கல்லலகு நெடும்புருவக் கபால மேந்திக்
    கட்டங்கத் தோடுறைவார் காப்புக்க ளே.

என்று அரையடியின் ஈற்றுச்சீர்கள் காய்+நேர் என்று வருமாறு பிரிக்கவேண்டுமா?


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

VETTAI ANANTHANARAYANAN

unread,
Nov 6, 2010, 10:25:43 PM11/6/10
to santhav...@googlegroups.com
இப்பாடல் அ.ச. ஞானசம்பந்தன் பதிப்பித்த நூலிலும் 6 சீர் 4 அடித் தரவு சொச்சகமாகவே சீர் பிரிக்கப் பட்டுள்ளது. என்பது சோ.ந.க.-வின் நூலில் கண்டவை: அப்பர் போன்ற அருளாளர்கள் இயற்றியுள்ள தாண்டகம் என்பது ஒரு தனிப்பட்ட யாப்பு வகையைக் குறியாது, அதை இறைவன் அல்லது தலைவனைப் புகழ்ந்து பாடப்பெறும் ஒரு இலக்கிய வகையாக, ஒருவகைப் பிரபந்தத்தைக் குறிப்பதாகக் கொள்ளலாம். அவர்கள் இயற்றியுள்ள தாண்டகப் பாடல்களை ஆசிரிய கழிநெடிலடி விருத்த வகையைச் சேர்ந்ததாகக் கொள்ளலாம்.. உணர்ச்சி மேலீட்டால் அவர்கள் இயற்றி/பாடியவை திட்டமிட்டுக் கட்டளை எழுத்தெண்ணிக்கையாக அமைக்கப்பட்டவை அல்ல எனவும் கொள்ளலாம்.
 
முன்பு கண்டது போல, அவர்கள் காலத்திற்குப் பின் தாண்டகம் ஒரு யாப்பிலக்கண வகையாக விதிகளுடன் அமைந்தது.

 

அனந்த்    

2010/11/5 Siva Siva <naya...@gmail.com>

--

Siva Siva

unread,
Jul 2, 2012, 6:22:53 PM7/2/12
to santhav...@googlegroups.com
Happened to come across this today.

http://mohanawritings.blogspot.com/2011/07/blog-post.html

தாண்டக வேந்தரின் தனித்த கொடை

மோகனா - (முனைவர்ப் பட்ட ஆய்வாளர் - தமிழிலக்கியத்துறை, சென்னைப் பல்கலைக்கழகம்)



நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்என்று தாம் சார்ந்த சைவசமயக் கொள்கைக்காக அதிகாரத்தை நோக்கிக் குரலெழுப்பியவர் திருநாவுக்கரசர். பொதுவாக இலக்கிய உலகில் மடைமாற்றம் என்பது காலந்தோறும் இயல்பாக ஏற்படக் கூடியது. சூழல், ஆட்சிமுறை, யாப்பிலக்கணத்தில் புதுமை காணும் போக்கு, எளிமை, கூறவந்தப் பொருண்மை எனப் பல்வேறு கூறுகள் இம்மடைமாற்றத்திற்குக் காரணமாக அமைகின்றன. பக்தி இயக்கத் தோற்றமானது அக்கால மக்கட்சமூகத்தின் வாழ்நிலையில் மட்டுமன்றி இலக்கிய வகைமைகளுக்குள்ளும் பல புது மாற்றங்களை ஏற்படுத்தியது எனில் மிகையாகாது. அப் பக்திஇயக்கத்தின் தோற்றத்திற்கும் பரவலுக்கும் இசையினைத் துணையாகக் கொண்டு பல்வேறு அருள்மொழிகளைப் பதிகங்களாகப் பாடியவர்கள் தேவார ஆசிரியர்கள். அவர்களுள் சம்பந்தரும் நாவுக்கரசரும் யாப்பில் பல சோதனை முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். அம்முயற்சிகள் யாவும் தமிழுக்கு அளிக்கப்பட்ட யாப்புக் கொடைகளாக உள்ளன எனில் மிகையாகாது. திருநாவுக்கரசரைப் பொறுத்தவரையில் அவர் தாண்டக வேந்தர்என்றும் தாண்டக சதுரர்என்றும் போற்றப்படக் காரணம் அவருடைய திருத்தாண்டகப் பாடல்களே. அப்பாடல்கள் அனைத்தும் ஆறாம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

          தாண்டகம் என்ற சொல்லாடல் ஒரு குறிப்பிட்ட யாப்பு வடிவத்தைக் குறிப்பதாகவே தமிழ்ச்சூழலில் வழங்கப்பட்டுள்ளது. அந்தக் குறிப்பிட்ட யாப்பு வடிவத்தில் மட்டும் 99 பதிகங்களை நாவுக்கரசர் பாடியுள்ளார். இவருடைய தாண்டகம் என்கின்ற வடிவத்திற்கான வரையறைகளை நோக்குமிடத்து இருவேறான கருத்துநிலைகள் நிலவுகின்றன. ஒன்று அவை எண்சீர்களாலான ஆசிரிய விருத்தங்கள் மற்றொன்று மரபுநிலைப்பட்டு தொல்காப்பியர் கூறும் கொச்சக ஒரு போகின் ஒருவகை. தி.வே.கோபாலையர் தம் தேவார ஆய்வுத்துணையுள் இரண்டு காய்ச்சீர் இரண்டு மாச்சீர் இவை இரட்டித்து வரும் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் நெடுந்தாண்டகம் எனப்படும். இது பொதுவிலக்கணம் என்று வரையறுத்துவிடுகிறார். இதற்கு உதாரணமாக,
அரியானை யந்தணர்தஞ் சிந்தை யானை
                                              யருமறையி னகத்தானை யணுவை யார்க்குந்
தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்
                                              திகழொளியைத் தேவர்கடங் கோனை மற்றைக்
கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்
                                              கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற
பெரியானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
                                              பேசாத நாளெல்லாம் பிறவா நாளே                      (6:1:6255)
என்கிற பாடலைக் கூறமுடியும். இப்பாடல் காய் காய் மா தேமா  என்கிற வாய்பாடு இரட்டித்து வந்த எண்சீர் ஆசிரிய விருத்த அமைப்பினையுடையது. இவ்வாறான வரையறைக்கு உட்படாத பாடல்கள் குறித்து கூறும்போது காய்ச்சீர் சிறுபான்மையாகக் கனிச்சீர் ஆதலும் உண்டு என்றும் காய்ச்சீர் மாச்சீர் ஆதலும் உண்டு என்றும் நெடுந்தாண்டக யாப்பு பிழையாமல் வந்த பதிகங்கள் சிலவே என்றும் கூறுகிறார். இந்த வரையறை முற்றிலும் பொருந்துவது அல்ல. ஏனெனில் இவ்வாறான வரையறைகளுக்கு உட்படாமல் வேறுசில யாப்பமைப்புகளை உடைய பாடல்களும் திருத்தாண்டகத்தில் காணப்படுகின்றன. ஒரு அளவுகோலை வைத்துக் கொண்டு அனைத்துப் பாடல்களையும் அளவிட்டு விடமுடியாது. காட்டாகச்  சில போற்றித் திருத்தாண்டகப் பாடல்களைக் குறிப்பிடலாம்.
உடலின் வினைக ளறுப்பாய் போற்றி
                                  யொள்ளெரி வீசும் பிரானே போற்றி
படருஞ் சடையின் மதியாய் போற்றி
                                  பல்கணக் கூத்தப் பிரானே போற்றி
சுடரிற் றிகழ்கின்ற சோதீ போற்றி
                                  தோன்றியென் னுள்ளத் திருந்தாய் போற்றி
கடலி லொளியாய முத்தே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி                
        (6:56:6819)
என்கிற பாடலை நோக்குமிடத்து இது மேற்கூறிய வாய்பாட்டமைவில் அமையவில்லை. ஆனால் இதில் வேறொரு யாப்புக்கட்டமைப்பு காணப்படுகிறது. இது கட்டளை அடிகள் பெற்ற பாடல். நிரையசையில் தொடங்கிய அரைஅடிகள் யாவும் 11 எழுத்துக்களைப் பெற்றுள்ளன. நேரசையில் தொடங்கிய அரைஅடிகள் 10 எழுத்துக்களைப் பெற்றுள்ளன. நான்கு அடிகளும் எதுகை பெற்றும் அனைத்து அடிகளும் மோனை பெற்றும் அமைந்துள்ளன. முதலிரு சீர்களும் வெண்டளையால் பிணைக்கப்பட்டுள்ளன. இதனைக் கட்டளைக் கலிப்பாஎன்பர். இந்தப் பாவடிவத்திற்கான வரையறை காரிகை வரையிலான இலக்கணப் பனுவல்களில் இடம்பெறவில்லை. காரிகைக்குப் பிந்தைய காலத்தில் இலக்கணச்சூடாமணி, தொன்னூல்விளக்கம், அறுவகைஇலக்கணம், செய்யுளிலக்கணம், யாப்பதிகாரம், கவிஞராக, கவிபாடலாம், யாப்புநூல், எளிதாகப்பாடலாம், தென்னூல், பாவலர்பண்ணை ஆகியன இவ்வடிவத்திற்கான இலக்கணத்தைக் கூறுகின்றன. சோ.ந.கந்தசாமி, ய.மணிகண்டன் ஆகியோர் தத்தமது யாப்பியல் ஆய்வுகளில் இக்கட்டளைக் கலிப்பாவின் வடிவஅமைதி குறித்துப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

          இலக்கணநூல்களில் குறிப்பிடப்படாத நேரசையில் தொடங்கும் நாற்சீர் கொண்ட அரையடி பத்து எழுத்துக்களையும், நிரையசையில் தொடங்கும் நாற்சீர் கொண்ட அரையடி பதினோர் எழுத்துக்களையும் பெறும் அடியமைப்புகளும் இலக்கியங்களில் காணப்படுகின்றன என்று கூறுகின்ற ய.மணிகண்டன் உதாரணமாகச் சம்பந்தரின் தேவாரப் பாடலொன்றையும் (1:7:9) காட்டுகிறார்.  இவ்வடிவத்தினைக் ‘கட்டளைவிருத்தம்என்று யாப்புநூல் கூறுவது பொருத்தமாக உள்ளது என்றும் இவர் கூறுகிறார். அவ்வாறே இயற்சீர் நான்கினால் அமைந்த அடி நேரில் தொடங்கின் 11 எழுத்தும் நிரையில் தொடங்கின் 12 எழுத்தும் கட்டளையாகப் பெற்ற கட்டளைக் கலிப்பா வடிவத்தில் சம்பந்தர் பாடியுள்ள பாடல்களை எடுத்துக்காட்டி இவ்வமைப்புக்கு இவரே மூலவர் என்று சோ.ந.கந்தசாமி கூறியுள்ளார். மேலும் நேர் 10, நிரை 11 என்கிற அமைப்பிற்குப் பாரதியின் பாடலொன்றை எடுத்துக்காட்டி புதுவகையான கட்டளைக் கலிப்பாவினைப் பயின்றுள்ளார் பாரதியார்என்றும் சோ.ந.கந்தசாமி இவ்வடிவத்தினைக் குறித்துப் பேசியுள்ளார். ஆனால் இவ்வமைப்புக்கான மூலவடிவம் திருநாவுக்கரசரின் தாண்டகப்பாடல்களிலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தாண்டகம் என்பது ஒரு குறிப்பிட்ட யாப்பு வடிவத்தினைக் குறிக்கின்ற சொல்லாடலாகவே கருதப்பட்டு வந்ததாலும் வடமொழித் தாண்டக அமைப்பு குறித்த தமிழ் இலக்கண உலகப் (வீரசோழியம், யாப்பருங்கலம்) புரிதல்களாலும் இத்தகு புதுமைகள் கவனத்திற் கொள்ளப்படவில்லை என்றே தோன்றுகிறது. திருநெய்த்தானப் பதிகத்தில் உள்ள ஒரு பாடல்,
                                  ஆர்த்த வெனக்கன்ப னீயே யென்று
                                  மாதிக் கயிலாய னீயே யென்றும்
                                  கூர்த்த நடமாடி நீயே யென்றும்
                                  கோடி காமேய குழகா வென்றும்
                                  பார்த்தற் கருள்செய்தாய் நீயே யென்றும்
                                  பழையனூர் மேவிய பண்பா வென்றும்
                                  தீர்த்தன் சிவலோக னீயே யென்று
                                  நின்ற நெய்த்தா னாவென் னெஞ்சுளாயே              (6:41:6663)
இவ்வமைப்பினை உடையதே. ஸ்ரீகயிலாயப் போற்றித்திருத்தாண்டகப் பாடல்கள் (6:55,56,57), திருக்கருகாவூர் பதிகப்பாடல்கள் (6:15), திருவாரூர்ப் பதிகப் பாடல்கள் (6:25),  திருவாக்கூர் பதிகப்பாடல்கள் (6:21) சிலவும் இவ்வமைப்பினைக் கொண்டு அமைந்துள்ளன. சுமார் 17ஆம் நூற்றாண்டளவில் வடிவ வரையரைக்காகக் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட ஒரு பாவடிவத்திற்கான மூலம் நாவுக்கரசரின் தாண்டகப் பாடல்களில் அமைந்துள்ளது சிறப்பானது.  எனவே தாண்டகம் என்பதனை எண்சீர்களாலான வேறுபட்ட யாப்பு அமைப்பினைக் கொண்ட பாடல்களின் தொகுப்பைக் குறிக்கின்ற ஒரு சொல்லாடலாகவே கொள்ள இடமுள்ளது. நாவுக்கரசரின் இத்தாண்டகப்பாடல்கள் பிற்காலத்தில் தனித்த இலக்கிய வளர்ச்சிக்கும் யாப்பியல் புதுமைக்கும் வித்தாக அமைந்தன என்றால் அது மிகையாகாது.


2010/11/6 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages