வ உ சிதம்பரம் பிள்ளை

211 views
Skip to first unread message

Bharathi Pitthan

unread,
Oct 27, 2015, 4:26:34 AM10/27/15
to santhav...@googlegroups.com
சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியாரின், "சென்னிகுள நகர் வாசன்" எனும்
காவடிச்சிந்தின் மெட்டு!
""""""""""""""""""""""""""""""""
வ. உ. சிதம்பரம் பிள்ளை
======================

வங்கக்கடல் தலை வணங்க- நல்ல
வாழ்த்தொலிகள் எங்கும் முழங்க- பொங்கும்
கடல்மீதினில் கலமோட்டிய உரமேறிய உளமேயது
வெள்ளை தமிழ்ப் பிள்ளை!

கத்துங் கடலலை தழுவும்- அந்த
முத்து நகர்க்கருகினிலே- வெள்ளை
திமிரானவர் தனைமாய்த்திடுந் திறனாய்ச்சிதம் பரனாரவர்
பிறந்தார் உள்ளம் நிறைந்தார்!

மேலை வணிகரைப் போலே- வந்து
மேவிய வெள்ளையராலே- சொந்தப்
புவிமீதினில் அடிமையெனுந் தளைமேவிடும் படிவாழ்ந்தவர்
வெந்தார் உளம் நொந்தார்!

அன்னை படுந்துயர் கண்டு- பெரும்
ஆத்திரம் நெஞ்சினில் கொண்டு- அவள்
விழிநீரினை கரமேந்திய உரவோர்பலர் அவரோடிவர்
நின்றார் விதி வென்றார்!

மண்ணை யிழந்ததும் முறையோ- தன்
மான மிழப்பதும் சரியோ- என்றே
திரையாடிடும் நிறையாழியில் கலமோட்டியே புகழ்மாலைகள்
பூண்டார் மனம் ஆண்டார்!

சாதிகள் இல்லையென் றோதி- நல்ல
சாத்திரம் சொன்னானவ் வேதி- அத்தை
மனமேற்றிய குணசீலனாய் பொதுமானுடம் தவமேயென
நோற்றார் இனம் தூற்றார்!

வெற்றிக் கனலினை மூட்டி- வைத்தார்
வெள்ளையரைப் பயம் காட்டி- அன்றே
கொடியோர்பரங் கியராலவர் பலவேதனை அடைந்தேமனம்
தேர்ந்தார் உடல் சோர்ந்தார்!

மாட்டினும் கீழிந்த நாடன்- என்றே
பூட்டி வைத்தான் வெள்ளை மூடன்- அங்கே
இணைமாடுகள் தனைபோலிவர் உடல்நோகவே சிறைசெக்கினை
இழுத்தார் நெஞ்சம் வலுத்தார்!

வல்லோர் தமைநட்பில் கூடி- மன
வன்மையினால் பகை சாடி- தம்கை
பொருள்யாவையும் இழந்தார்பெரும் அருளால்மனம் நிறைந்தார்தமை
போற்று தொழு தேற்று!

நாட்டின் நலந்தன்னை காத்தார்- அவர்
நமக்கென்றே தன்னுயிர் நீத்தார்- எந்நா
தமிழாலவர் புகழ்பாடிட தகையானதும் எனக்கே பெரும்
பேறு இல்லை வேறு!

Ramamoorthy Ramachandran

unread,
Oct 27, 2015, 10:16:08 AM10/27/15
to santhav...@googlegroups.com
ஓரடி குறைகிறதே! 
தன்னத்  தனதனத்  தானா- தன 
தான தனத்தனத்  தானா - தன 
தனனானன  தனனானன தனனானன தனனானன  
தானத்  தனத்தனத் தானா - தன 
தந்தனத் தானனத் தானா.
என்பது சந்தக் குழிப்பு.
நாட்டு  நலந்தனைக்  காத்தார்!;- அவர் 
நல்லவர் கூட்டத்தைச் சேர்த்தார் - இனி 
நடவாதவர் படையாடல்கள் நடவாதவர் தடைவேலைகள் 
நம்மவரே  இங்கு  வாரீர்!  -என்ற 
நல்லவர் பக்கமே  சேரீர் !

என்று அமைந்தால் நல்லது! 
பிழையிருந்தால் பொறுத்தேற்க!
அன்புடன் புலவர் இராமமூர்த்தி.


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Oct 27, 2015, 10:22:42 AM10/27/15
to சந்தவசந்தம்


On Tuesday, October 27, 2015 at 7:16:08 AM UTC-7, Trichy Pulavar Ramamoorthy wrote:
ஓரடி குறைகிறதே! 

இரண்டிரண்டு அடிகளுக்கு ஒரே எதுகையை அண்ணாமாலி ரெட்டியாரின் பாடலில்
காண்கிறேன்.

நா. கணேசன்

Bharathi Pitthan

unread,
Oct 27, 2015, 1:51:29 PM10/27/15
to santhav...@googlegroups.com
பாடல்: சென்னிகுல நகர் வாசன்
வரிகள்: அண்ணாமலை ரெட்டியார்
ராகம்: காவடிச் சிந்து
தாளம்: ஆதி
சென்னிகுல நகர் வாசன் - தமிழ்த்
தேரும் அணணாமலை தாசன் - செப்பும்
ஜகமெச்சிய மதுரக்கவி அதனைப்புய வரையில்புனை
தீரன் அயில் வீரன்

வண்ண மயில் முருகேசன் - குற
வள்ளி பதம் பணி நேசன் - உரை
வரமே தரு கழுகாசல பதிகோயிலின் வளம்நான்வர
வாதே சொல்வன் மாதே

சன்னிதியில் துஜஸ்தம்பம் - விண்ணில்
தாவி வருகின்ற கும்பம் - என்னும்
சலராசியை வடிவார்பல கொடிசூடிய முடிமீதினில்
தாங்கும் உயர்ந் தோங்கும்

அருணகிரி நாவில் பழக்கம் - தரும்
அந்தத் திருப்புகழ் முழக்கம் - பல
அடியார்கணம் மொழிபோதினில் அமராவதி இமையோர்செவி
அடைக்கும் அண்டம் புடைக்கும்

கருணை முருகனைப் போற்றி - தங்கக்
காவடி தோளின்மேல் ஏற்றி - கொழும்
கனலேறிய மெழுகாய்வரு பவரே வருமேகதி
காண்பார் இன்பம் பூண்பார்.

மேதகையாரின் பாடலில், முடுகியலில் வல்லின வண்ணம் பயின்று வருவதாலும்,
நான் மெல்லின இடையின வண்ணம் வர தொடுத்ததாலும் உச்சரிப்பில் வேறுபாடு
தெரிகிறதேயன்றி, சந்தக்குறை இருப்பதாகத் தெரியவில்லை ஐயா!
பெரியோர்கள்தாம் ஆய்ந்துரைக்க வேண்டும்!

On 10/27/15, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
>
>
> On Tuesday, October 27, 2015 at 7:16:08 AM UTC-7, Trichy Pulavar
> Ramamoorthy wrote:
>>
>> ஓரடி குறைகிறதே!
>>
>
> இரண்டிரண்டு அடிகளுக்கு ஒரே எதுகையை அண்ணாமாலி ரெட்டியாரின் பாடலில்
> காண்கிறேன்.
>
> நா. கணேசன்
>
>
>> தன்னத் தனதனத் தானா- தன
>> தான தனத்தனத் தானா - தன
>> தனனானன தனனானன தனனானன தனனானன
>> தானத் தனத்தனத் தானா - தன
>> தந்தனத் தானனத் தானா.
>> என்பது சந்தக் குழிப்பு.
>> நாட்டு நலந்தனைக் காத்தார்!;- அவர்
>> நல்லவர் கூட்டத்தைச் சேர்த்தார் - இனி
>> நடவாதவர் படையாடல்கள் நடவாதவர் தடைவேலைகள்
>> நம்மவரே இங்கு வாரீர்! -என்ற
>> நல்லவர் பக்கமே சேரீர் !
>>
>> என்று அமைந்தால் நல்லது!
>> பிழையிருந்தால் பொறுத்தேற்க!
>> அன்புடன் புலவர் இராமமூர்த்தி.
>>
>> 2015-10-27 13:56 GMT+05:30 Bharathi Pitthan <bharath...@gmail.com
>> <javascript:>>:
>>> email to santhavasanth...@googlegroups.com <javascript:>.
>>> To post to this group, send email to santhav...@googlegroups.com
>>> <javascript:>.

Pas Pasupathy

unread,
Oct 27, 2015, 3:15:21 PM10/27/15
to Santhavasantham


சென்னி குளநகர் வாசன், - தமிழ்
          தேறுமண் ணாமலை தாசன் - செப்பும்
     செகமெச்சிய மதுரக்கவி யதனைப்புய வரையில்புனை
          தீரன்; அயில் வீரன்.

வன்ன மயில்முரு கேசன், - குற

          வள்ளி பதம்பணி நேசன் - உரை
     வரமேதரு கழுகாசல பதிகோயிலின் வளம்நான்மற
          வாதே சொல்வன் மாதே!  


இது ஒரு கண்ணி. ( அளவொத்த இரு அடிகள்.) முதல் இரண்டு வரிகளைக் கவனிக்கவும். வெண்டளை, எழுத்தெண்ணிக்கையையும் கவனிக்கவும்.
எதுகை, மோனை இவற்றையும் கவனித்தால் இதன் யாப்புத் தெரியும். 



Bharathi Pitthan

unread,
Oct 27, 2015, 4:03:03 PM10/27/15
to santhav...@googlegroups.com
நான் அனைத்தையும் தனித்தனி கண்ணிகளாக கணக்கிட்டேனையா!
அதனால்தான் அவ்வொரு அடிக்குள்ளேயே மோனையாயினும், எதுகையாயினும் வரத் தொடுத்தேன்.
பிழைதானோ?!

On 10/28/15, Pas Pasupathy <pas.pa...@gmail.com> wrote:
> சென்னி குளநகர் வாசன், - தமிழ்
> தேறுமண் ணாமலை தாசன் - செப்பும்
> செகமெச்சிய மதுரக்கவி யதனைப்புய வரையில்புனை
> தீரன்; அயில் வீரன்.
>
> வன்ன மயில்முரு கேசன், - குற
> * வள்ளி பதம்பணி நேசன்* - உரை

Pas Pasupathy

unread,
Oct 27, 2015, 4:51:30 PM10/27/15
to Santhavasantham
பரவாயில்லை. ஒரு வேறுபாடு என்று இப்போது கொள்ளலாம்.

அன்னை படுந்துயர் கண்டு- பெரும்
>>> ஆத்திரம் நெஞ்சினில் கொண்டு-  

இது மூலம் மாதிரி அதே ஓசையில் சிறப்பாக  இருப்பதைப் பார்க்கவும். காரணம்: யாப்பு. 

வங்கக் கடல்தலை வணங்க- நல்ல
>>> வாழ்த்தொ லிகள்எங்கும் முழங்க-

ஆனால் இதில் ( இதைப்போல் வேறு சில கண்ணிகளில் )  வெண்டளை தட்டல், எழுத்தெண்ணிக்கை வேறுபாடு கவனிக்கவும். அதனால், பாடல் முழுதும் ஒரே சந்தம் வரவில்லை என்று காது சொல்கிறது. 

அண்ணாமலை ரெட்டியார் பலவித சந்தங்களில் பாடியிருக்கிறார்.

அடுத்த முயற்சியில், ஒரு மூலத்தை ...அதன் யாப்பை முழுதும் கவனித்துவிட்டு, முயன்றால் ஓசை மேலும் சிறப்பாக வரும் என்று எண்ணுகிறேன். தளை, எழுத்தெண்ணிக்கை, எதுகை, மோனை... யாவற்றையும் கவனிக்கவும். யாப்புப் புலப்படும். 

பாராட்டுகள்! 

Bharathi Pitthan

unread,
Oct 27, 2015, 8:50:36 PM10/27/15
to santhav...@googlegroups.com
தங்களின் அருள் என்னை வழி நடத்தும்!
தங்கள் பதம் பணிந்து, தாங்கள் காட்டிய வழியில் நடப்பேன்!

On 10/28/15, Pas Pasupathy <pas.pa...@gmail.com> wrote:
> பரவாயில்லை. ஒரு வேறுபாடு என்று இப்போது கொள்ளலாம்.
>
> அன்னை படுந்துயர் கண்டு- பெரும்
>>>> ஆத்திரம் நெஞ்சினில் கொண்டு-
>
> இது மூலம் மாதிரி அதே ஓசையில் சிறப்பாக இருப்பதைப் பார்க்கவும். காரணம்:
> யாப்பு.
>
> வங்கக் கடல்தலை *வணங்க-* நல்ல
>>>> வாழ்த்தொ* லிகள்எங்கும் முழங்க-*

Ramamoorthy Ramachandran

unread,
Oct 27, 2015, 11:01:55 PM10/27/15
to santhav...@googlegroups.com
சின்னஞ்சிறு ஐயம், பெரிய பயனை விளைவிக்கும்!
சிலர் உள்ளத்தில் படிந்த மெட்டுக்கேற்பப் பாடல் எழுதி விடுவார்கள்!
அதில் சிறு தடுமாற்றம் எதுகை, மோனை, யாப்புத் தவறுகள்.
நிகழ்ந்து விடுகின்றன.  அன்பர் பாரதிநேசன் காவடிச்சிந்து 
பாராட்டுதற்குரியது.பசுபதியார் விளக்கங்களுக்கு நன்றி.
அன்புடன் புலவர் இராமமூர்த்தி. 

N. Ganesan

unread,
Oct 28, 2015, 10:00:37 AM10/28/15
to சந்தவசந்தம்
அன்புத் தம்பி பாரதிபித்தன்,

வணக்கம். இதே யாப்பில், சந்தத்தில், இரண்டிரண்டு அடிக்கு ஓரெதுகை
அமைந்து கப்பலோட்டிய தமிழர் மீது ஒரு காவடிச்சிந்து தரமுடியுமா?
தந்தால், வ.உ.சி மீது எழுந்த பாடல்களில் சிறப்பான ஒன்றாகும்.

வாழ்க வளமுடன், வளர்க தமிழுடன்.

நன்றி,
நா. கணேசன்

சென்னி குளநகர் வாசன், - தமிழ்
          தேறும் அண்ணாமலை தாசன் - செப்பும்

     செகமெச்சிய மதுரக்கவி யதனைப்புய வரையில்புனை
          தீரன்; அயில் வீரன்.

வன்ன மயில்முரு கேசன், - குற
          வள்ளி பதம்பணி நேசன் - உரை
     வரமேதரு கழுகாசல பதிகோயிலின் வளம்நான்மற
          வாதே சொல்வன் மாதே!

கோபுரத் துத்தங்கத் தூவி, - தேவர்
          கோபுரத் துக்கப்பால் மேவி, - கண்கள்
     கூசப்பிர காசத்தொளி மாசற்று விலாசத்தொடு
          குலவும் புவி பலவும்.

நூபுரத் துத்தொனி வெடிக்கும் - பத
          நுண்ணிடை மாதர்கள் நடிக்கும் - அங்கே
     நுழைவாரிடு முழவோசைகள் திசைமாசுணம் இடியோ என
          நோக்கும் படி தாக்கும்.

சந்நிதி யில்துஜஸ் தம்பம், - விண்ணில்
          தாவி வருகின்ற கும்பம் - எனும்
     சலராசியை வடிவார்பல் கொடிசூடிய முடிமீதிலே
          தாங்கும்; உயர்ந் தோங்கும்.

உன்னத மாகிய இஞ்சி,-பொன்னாட்டு
          உம்பர் நகருக்கு மிஞ்சி - மிக
     உயர்வானது பெறலால், அதில் அதிசீதள புயல்சாலவும்
          உறங்கும்; மின்னிக் கறங்கும்.


அருணகிரி நாவில் பழக்கம் - தரும்
          அந்தத் திருப்புகழ் முழக்கம், -பல

     அடியார்கணம் மொழிபோதினில் அமராவதி இமையோர்செவி
          அடைக்கும்; அண்டம் உடைக்கும்.

கருணை முருகனைப் போற்றித்-தங்கக்
          காவடி தோளின்மேல் ஏற்றிக் - கொழும்
     கனல்ஏறிய மெழுகாய்வரு பவர் ஏவரும், இகமேகதி

N. Ganesan

unread,
Oct 28, 2015, 10:07:18 AM10/28/15
to சந்தவசந்தம்


On Tuesday, October 27, 2015 at 8:01:55 PM UTC-7, Trichy Pulavar Ramamoorthy wrote:
சின்னஞ்சிறு ஐயம், பெரிய பயனை விளைவிக்கும்!
சிலர் உள்ளத்தில் படிந்த மெட்டுக்கேற்பப் பாடல் எழுதி விடுவார்கள்!
அதில் சிறு தடுமாற்றம் எதுகை, மோனை, யாப்புத் தவறுகள்.
நிகழ்ந்து விடுகின்றன.  அன்பர் பாரதிநேசன் காவடிச்சிந்து 
பாராட்டுதற்குரியது.பசுபதியார் விளக்கங்களுக்கு நன்றி.
அன்புடன் புலவர் இராமமூர்த்தி. 

பாரதி போற்றிய வ.உ.சி பிறந்த வண்டானம் ‘பெலிக்கன்’ பறவை
பெயரால் அமைந்த ஊர். வண்டானம் - ஊரும், பேரும்.
பெலிக்கனுக்கு அமைந்திருந்த அருமையான காரணப்பெயர்
வண்டா/வண்டான் என்னும் சொல்லை இழந்துநிற்கிறது இன்றைய பேச்சுத்தமிழ்:

உவேசா எழுதிய வண்டானம் கவிஞர் பற்றிய கட்டுரையை வெண்பாவிரும்பி தந்தார்.

நா. கணேசன் 

Pas Pasupathy

unread,
Oct 29, 2015, 8:24:46 PM10/29/15
to Santhavasantham
>>தங்களின் அருள் என்னை வழி நடத்தும்!
>>தங்கள் பதம் பணிந்து, தாங்கள் காட்டிய வழியில் நடப்பேன்! 

இப்படி இரண்டு நாள்களுக்கு முன் எழுதிய கவிஞர், இளைஞர்,  பாரதி பித்தன் ( பாஸ்கர்) ஒரு சாலை விபத்தில் இன்று அகால மரணமடைந்தார் . பலருக்கும் அதிர்ச்சி தந்த தகவல் இது.

அவர் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள். 

 வேறென்ன சொல்வது?  மனம் இன்னும் இதை எற்றுக்கொள்ள மறுக்கிறது. 

பசுபதி 

Ramamoorthy Ramachandran

unread,
Oct 29, 2015, 8:32:11 PM10/29/15
to santhav...@googlegroups.com
செய்தியை நம்ப என் மனம் மறுக்கிறது. 
இனிய சிந்துப்பாக்களுடன் நம்மிடையே கடந்த 
வாரம் நம்முடன் உரையாடிய பாரதி பித்தன் 
அமரராகி விட்டாரா? அவர் ஆன்மா சாந்தி அடையப் 
பிரார்த்திப்போம். புலவர் இராமமூர்த்தி.

--

ramaNi

unread,
Oct 29, 2015, 8:42:40 PM10/29/15
to சந்தவசந்தம்
விதி எப்படியெல்லாம் விளையாடுகிறது! அவர் ஆன்மாவுக்கு ஆண்டவன் நற்கதி அருளப் பிரார்த்திக்கிறேன். அவர் குடும்பத்தார்க்கு இந்த இழப்பைத் தாங்கும் சக்தியையும் ஆண்டவன் அருளட்டும்.

ரமணி

Hari Krishnan

unread,
Oct 29, 2015, 9:08:24 PM10/29/15
to santhavasantham
2015-10-30 5:54 GMT+05:30 Pas Pasupathy <pas.pa...@gmail.com>:
>>தங்களின் அருள் என்னை வழி நடத்தும்!
>>தங்கள் பதம் பணிந்து, தாங்கள் காட்டிய வழியில் நடப்பேன்! 

இப்படி இரண்டு நாள்களுக்கு முன் எழுதிய கவிஞர், இளைஞர்,  பாரதி பித்தன் ( பாஸ்கர்) ஒரு சாலை விபத்தில் இன்று அகால மரணமடைந்தார் . பலருக்கும் அதிர்ச்சி தந்த தகவல் இது.

அவர் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள். 

 வேறென்ன சொல்வது?  மனம் இன்னும் இதை எற்றுக்கொள்ள மறுக்கிறது. 

விபத்து மரணம் என்றால் என்னென்னவோ பழைய ரணங்களெல்லாம் மனத்தில் எழுகின்றன.  இறைவா! கவிதையோடு உலவிக்கொண்டிருந்த ஒரு ஜீவனுக்கு நற்கதி கொடு. அவரைச் சார்ந்திருப்பவர்களுடைய வாழ்க்கையை வழிநடத்து.


--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

Subbaier Ramasami

unread,
Oct 29, 2015, 9:47:56 PM10/29/15
to சந்தவசந்தம்
நல்ல கவிஞர் . மறைந்துவிட்டார் என எண்ண உள்ளம்  மறுக்கிறது.   அவரது  ஆன்மா இறையடி நீழலில் நிலைபெறுக!

இலந்தை

--

Siva Siva

unread,
Oct 29, 2015, 10:20:56 PM10/29/15
to santhavasantham
பாரதிப் பித்தன் (பாஸ்கர்) தமிழ்மேல் ஆழ்ந்த காதல் கொண்டிருந்தவர்.
(அவரது சுய அறிமுகம் இங்கே: https://groups.google.com/d/msg/santhavasantham/vWhPRxqSfzs/iwGyaTaFq9QJ )

இப்பிரிவைத் தாங்கும் சக்தியை அவர் குடும்பத்தினர்க்கு இறைவன் அளிப்பானாக!

Lalitha & Suryanarayanan

unread,
Oct 29, 2015, 10:38:49 PM10/29/15
to santhav...@googlegroups.com
பாதைவழி விபத்தொன்றில் பாவலனும் அழிவதோ அந்தோ அந்தோ
போதைதரு கவியியற்றும் புலவனும் அழிவதோ அந்தோ அந்தோ
காதையதும் வடிக்கின்ற கவிஞனவன் மறைவதோ அந்தோ அந்தோ
தீததுவும் செப்பமுடைக் கவியவனைத் தீண்டுவதோ அந்தோ அந்தோ.


நேரசையும் நிரையசையும் நிறைநெஞ்சம் நீங்கியதோ அந்தோ அந்தோ
பாரதிமேல் பித்தானான் பார்விட்டுப் போவதுவோ அந்தோ அந்தோ
சீரதிரக் காவடியும் செய்தளிக்கச் சென்றனனோ அந்தோ அந்தோ
யாரழைத்தார் யாப்பறிந்தான் இப்படியும் இறப்பதுவோ அந்தோ அந்தோ

கரும்பெனவே கவிதையினைக் கண்டவனும் கடந்தானோ அந்தோ அந்தோ
அரும்பெனவே மணம்வீசும் அழகுதமிழ் அழிந்தானோ அந்தோ அந்தோ
விருந்தெனவே கவிசிந்த விண்ணுலகம் சென்றனனோ அந்தோ அந்தோ
இருந்துதமிழ் இனிவருநாள் இவனில்லம் காத்திடவே வேண்டும் வேண்டும்.


சிவசூரி.


2015-10-30 5:54 GMT+05:30 Pas Pasupathy <pas.pa...@gmail.com>:

Swaminathan Sankaran

unread,
Oct 29, 2015, 10:41:29 PM10/29/15
to santhav...@googlegroups.com
கொடுமை!
பாரதிப்பித்தன் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

சங்கரன் 

2015-10-29 20:24 GMT-04:00 Pas Pasupathy <pas.pa...@gmail.com>:

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
 Swaminathan Sankaran

ramaNi

unread,
Oct 29, 2015, 10:46:37 PM10/29/15
to சந்தவசந்தம்
அழகிய இரங்கற்பா.
ரமணி

VETTAI ANANTHANARAYANAN

unread,
Oct 30, 2015, 12:11:06 AM10/30/15
to சந்தவசந்தம்
விதியின் இந்தக் கொடிய விளையாட்டை மனம் நம்ப மறுக்கிறது. இளம் துளிர்போல உற்சாகமும் தமிழ்/யாப்பு ஆர்வமும் கொண்டிருந்த இளைஞர் நம் எல்லாரையும் தம் எழுத்தால் கவர்ந்தவர் அவர். அவரது குடும்பத்தினருக்கு நம் அனுதாபங்களூம், இந்தத் துன்பத்தைத் தாங்க மன உறுதியைத் தாங்க இறைவனிடம் பிரார்த்தனைகளும் சேரட்டும்.

அனந்த்  

Kaviyogi Vedham

unread,
Oct 30, 2015, 12:45:28 AM10/30/15
to santhavasantham
ஆம்.. என் மனம் கவர்ந்த நற்கவிஞர் அவர்.
 காலனின் இளமையில்  உயிர்பறிக்கும் கொடுமை  அஞ்சத்தக்கது.
 அன்னார் ஆத்மா சாந்தியடைக,
 யோகியார்


வாழ்க.என் அன்பர்கள் அனைவரும்..!..
.தற்போதைய என் முகவரி(ஜனவரி 11 வரை), pl. write in English.
( My present Address Till 11th jany 2016)-
 Kaviyogi vedham,
c/o N. balasubramanyam,CEO,
Flat D 022,Royale Classic Garden,
 Hennur main Road, Bangalore-560043
(Near iCIC BAnk)
 செல் cel no--09686679017







N. Ganesan

unread,
Oct 30, 2015, 1:31:35 AM10/30/15
to சந்தவசந்தம்


On Thursday, October 29, 2015 at 9:45:28 PM UTC-7, yogiyaar wrote:
ஆம்.. என் மனம் கவர்ந்த நற்கவிஞர் அவர்.
 காலனின் இளமையில்  உயிர்பறிக்கும் கொடுமை  அஞ்சத்தக்கது.
 அன்னார் ஆத்மா சாந்தியடைக,
 யோகியார்


மிகக் கொடுமை. ஐயோ.

அன்னார் ஆத்மா சாந்தியடைக.

துயருடன்,
நா. கணேசன் 

GMAIL

unread,
Oct 30, 2015, 3:21:24 AM10/30/15
to santhav...@googlegroups.com
வலிக்கிறது.

அவரது குடும்பத்தினருக்கு எல்லா பலமும் சக்தியும் அருளும்படி இறைவனை வேண்டுவோம்.

அன்புடன்,
குமார் (சிங்கை)

Sent from my iPhone

Pas Pasupathy

unread,
Oct 30, 2015, 8:51:35 AM10/30/15
to Santhavasantham
பாஸ்கர் : சில   படங்கள் .
baskar.jpg
baskar_2.jpg
baskar_3.jpg

இராஜ.தியாகராஜன்

unread,
Oct 30, 2015, 9:58:43 AM10/30/15
to சந்தவசந்தம்
ஆம் அவரியற்கை எய்தி 3 மணி நேரத்தில் சேதி கிடைத்தது.  ஆனால் அந்தக் கவிஞர் கிருஷ்ணகிரி அருகில் விபத்தில் சிக்கி சேலம் மருத்துவமனையில், அதற்கு முன்னரே தீவிர சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டது, என்னுடைய உடல்நலம் கரணியமாக இணையம் வராததால்,   எனக்குத் தெரியாமல் போனது.   ஒரு வாரமுன்பு தான் பேசினேன் அவரிடம். என்ன வேதனையான விஷயமிது.   பாரதியின் மீதுள்ள பற்றினால், பாஸ்கர் என்று தன்னுடைய இயற்பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்ளாமல், கையில் பாரதியின் திருவுருவைப் பச்சைக் குத்திக் கொண்டு, பாரதிப்பித்தனாகவே கவியருவி பாரதிப்பித்தன் வாழ்ந்தார்.  பள்ளியிறுதி கூடத் தாண்டாத இவரின் யாப்பறிவு, ஒரு தமிழ் முதுகலைப் பட்டதாரிக்கு நிகராக எனக்குத் தோன்றியது. அவர்தம் துணைவி மீனா பாஸ்கர் தன்னந்தனியாக அந்தச் சிறு குழந்தைகளுடன் மிகுந்த அல்லல்கள் படாமல், அவர்களின் வாழ்வியல் வழிகாட்டியாக விளங்கிட வேண்டுமென பண்ணார் தமிழணங்கை வேண்டுகிறேன்.
2011இல் சரக்குந்து ஓட்டும் தன்னிலையைப் பற்றி அவரெழுதிய கவிதை கீழே.  படிக்கும் போதே கண்களில் நீர் திரள்கிறது.

பாரதிப் பித்தன்
30 July 2011 ·
=======================
புறப்படும் போது...
மனம் ஏங்கும்!
இன்னொரு நாள்
இருந்துவிட்டுப் போகலாமா என்று?!
பரிதாபத்தோடு வழியனுப்புவாள்
என் மனைவி!
அப்பா எப்ப வருவ?!
ஆரம்பத்திலேயே
முடிவுக்கான கேள்வி!
எல்லாவற்றையும்
முந்திக்கொள்கிறது பணம்!
முகமறிந்த கூட்டத்தைப் பிரிந்து,
முகமறியாக் கூட்டத்தோடு கலந்து,
தனியாளாய் உணர்ந்து,
பகல் இரவாகி,
இரவு பகலாகும் போது,
நான் வேறு ஊரில்!
வாகன ஓட்டிகள் நாங்கள்!
வசந்தத்தை தொலைத்துதான்
எங்கள் வாழ்க்கையை ஓட்டுகிறோம்!


On Tuesday, October 27, 2015 at 1:56:34 PM UTC+5:30, Bharathi Pitthan wrote:
Reply all
Reply to author
Forward
0 new messages