NilaRaseegan Sirukathaigal

31 views
Skip to first unread message

NilaRaseegan

unread,
Mar 8, 2008, 5:19:25 AM3/8/08
to panb...@googlegroups.com, முத்தமிழ், பிராவகம்-Piravakam


அத்தமக செம்பருத்தி.... (சிறுகதை)

 

புழுதிக்காட்டுல பூவு ஒண்ணு பூத்துச்சு.அத்தவயித்துல அழகா பொறந்தா ஆசமக செம்பருத்தி. செவசெவன்னு இருக்கும் அவ பாதம். இலவம் பஞ்சு மாதிரி மெத்து மெத்துன்னு இருக்கும் அந்த பட்டுப்பாதம்.

ரெண்டு தெருவுக்கு பந்தல் போட்டு நாப்பது கெடா வெட்டி எட்டு ஊருக்கு கறிச்சோறு போட்டு அசத்திபுட்டா அத்தக்காரி அஞ்சுகம்.

நாலு பந்தி சோறு தின்னுபுட்டு ரெண்டு சோடா குடிச்சப்பக்கூட தெரியாது செம்பருத்திதான் எம் பொஞ்சாதியா வரப்போறான்னு.......
 
***************************************************************************************************************************
ஆத்துதண்ணி போல வெரசா ஓடிப்போச்சு வருசம் பதினெட்டு.
 
ஆறடி உசர பனமரம் மாதிரி நல்லா வளர்ந்து நிக்கறேன்.
மயிலக்காள மாதிரி திமு திமுன்னு இருக்கும் என் தோளு ரெண்டும்.
மதுரக்கார அண்ணாச்சி வச்சிருக்கற ஜிம்முக்கு ஜம்முன்னு போறோம்லா!
 
செம்பருத்திய பத்தி சொன்னா புகையில வாயிலயும் மல்லியப்பூ வாசம் வீசும்.
செம்பருத்திய பார்க்கறதுக்கு வண்டிகட்டிகிட்டு வாரானுக மீசை மொளச் இளவட்ட பயலுக.
 
சோளக்காட்டு பொம்ம போல வெடவெடன்னு வளர்ந்து நின்னா..
மாமன் எம்மேல ஆசவச்சு  அழகா சமஞ்சு நின்னா..

வாய்க்காவோர ஆலவிழுதுல அவ ஊஞ்சல் ஆடுற அழக ரசிக்க ஊருகண்ணெல்லாம் போட்டி போடும்......

சைக்கிள் கம்பியில செம்பருத்திய ஒக்காரவச்சு என் நெஞ்சுல சாச்சுகிட்டு பெடல மிதிச்சா
ச்சும்மா பறக்கல்லா செய்யும் சைக்கிளு!
 
வயித்தெரிச்சலோட பார்க்கும் இருபதும் அறுபதும்.  கறுத்த பயலுக்கு செவத்த பொண்ணு கெடச்ச
வயித்தெரிச்சல்தான்.

செம்பருத்திக்கும் எனக்கும் ஓடக்கர அம்மன்கோவிலுல
கல்யாணம் நடந்துச்சு....

வானவில்லுகூட வாழ ஆரம்பிச்சேன்; வசந்தமுல்ல மாதிரி மலர ஆரம்பிச்சது
எங்க வாழ்க்க.
 
சாணியால வீடு மொழுகி,தட்டுபுட்டு சாமனுக்கு இடயில பாச்சா உருண்ட வாங்கிபோட்டு
ஒலக்குடிசைய வசந்த மாளிகையாக்கிபுட்டா வந்த ஒத்த நாள்ல!

கோவத்துல நான் கத்த ஆரம்பிச்சா மாமான்னு ஒரு வார்த்த அவ சொல்லி தலைய சாச்சு பார்ப்பா....படக்குன்னு பஸ்ஸ புடிச்சு பட்டணம் போயிரும் கோவமெல்லாம்.

****************************************************************************************************************

மூணு மாசங் கழிச்சு மாங்கா கேட்டா எம் மயிலு.
என்ன பாக்குறீய? நான் அப்பா ஆக போறன்னு சொல்லித்தான் தெரியனுமோ?

ஒலகத்துல அழகானது நிலாவும் இல்ல மழையும் இல்ல புள்ளய சுமக்குற
புள்ளத்தாச்சியோட முகந்தான்.

தங்கம்போல தகதகக்குற அழகுமுகம்; வைரம்போல மின்னலடிக்குது
அவமுகம்.

காள பொறக்குமோ பசு பொறக்குமோன்னு தெரியலை...

ஒம்பது மாசமாச்சு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமா நகர்ந்துச்சு..

வயக்காட்டுல நின்னாலும் தென்னந்தோப்புல நின்னாலும்
உள்ளுக்குள்ள அவ நெனுப்பு மட்டுந்தான் நிக்குது....
 
உள்ளூரு மருத்துவச்சிக்கு கையி நடுங்குதுன்னு மேலத்தெரு மாணிக்கம்பய
சொல்லிட்டு போனதால, பக்கத்தூரு கவர்மெண்டு ஆஸ்பத்திரியில்
செம்பருத்திய சேர்த்துபுட்டு வெளியில நிக்கறேன்...

முள்ளுகுத்தினா கூட தாங்கமாட்டா.. புள்ள பெக்குற வலிய
எப்படித்தாங்குவாளோன்னு படபடன்னு அடிக்குது நெஞ்சு...

பொம்பளைக்கு புள்ளய குடுத்துபுட்டு ஆம்பளைக்கு வலிய
குடுத்திருந்தா கையெடுத்து கும்பிட்டிருப்பேன் கடவுள....

அய்யோ அம்மான்னு கத்துறா என் உசிர சொமக்கற மகராசி...

தூரத்துல ஒரு வேதகோயில் சிலுவ தெரியுது

புள்ள நல்லா பொறந்தா நூறு தேங்கா உடைக்கிறேன்
சாமீ..

புள்ள பொறந்த சேதிய அழுக சத்தம் சொல்லிடுச்சு.

ஓடிப்போயி பார்த்தேன் கறுப்புகலருல காளகன்னு
கையி கால ஆட்டுது..

இம்புட்டு சின்னதாவா இருக்கும் மூக்கும் முழியும்?

கட்டியிருந்த வேட்டி அவுந்ததுகூட தெரியாம சந்தோசத்துல மெதக்க ஆரம்பிச்சேன்.

**************************************************************************************************************

புள்ளய எங்கையில கொடுத்துபுட்டு இடிய எங்காதுல
சொல்லுறா நர்சு...

புள்ள சத்தம் கேட்டநிமிசம் செம்பருத்தி சத்தம்
நின்னுடுச்சாம்...

அய்யோ! அம்மா! ஊர்காவல் முண்டக்கன்னியாத்தா!
இந்த எழவெடுத்த நர்சு சொல்றது நிசந்தானா?

உடம்பெல்லாம் வேர்த்து போச்சு,காலுரெண்டும் கிடுகிடுன்னு நடுங்குது.

என் செவப்புத்தங்கம் வெரச்சு கெடக்கே! மாமன்நான் பக்கத்துல வந்தாலே
படக்குன்னு எழுந்திரிப்பா....
மடைமடையா அழுவறேன் ஒரு அசைவும் இல்லயே!
.
யார் கண்ணு பட்டுச்சோ என் கண்ணு பட்டுப்போச்சே!
 
அழுது அழுது எங் கண்ணு ரெண்டும் தண்ணியில்லாத
வயலப்போல வறண்டு போயிருச்சு.

*************************************************************************************************************

பதினாறு நாள் விசேசம் முடிஞ்சுபோயாச்சு...

செம்பருத்திய பொதச்ச இடத்துல புல்லுபூண்டு
வளர்ந்தாச்சு..

கம்பியூட்டரு இருக்குன்னாக செகப்பு வெளக்கு
வேன்வண்டி இருக்குன்னாக

என்ன இருந்து என்னத்த செஞ்சாக..

வெள்ளச்சட்ட டாக்டரு மட்டும் இருந்தா போதுமா
வசதி ஏதும் இல்லைன்னா ஆசுபத்திரின்னு சொல்லலாமா?

புள்ள பெக்கற வசதி குறைவா இருந்த ஆசுபத்திரிய நம்பினதுக்கு
கை நடுங்கின மேலத்தெரு மருத்துவச்சிய
நம்பி இருக்கலாம்.

**************************************************************************************************************

 -நிலாரசிகன்.

 

 

 

 

 

 

 



--
அள்ளித்தர நட்புடன்,
நிலாரசிகன்.
"தமிழுக்கு நிலவென்று பேர்"
என் கவிதை புத்தகம் வாங்க -->
http://www.anyindian.com/product_info.php?products_id=212001
கவிதைகள் --> http://nilaraseegan.blogspot.com
மழலைகளுக்காக -->http://www.helptolive.org/

N Suresh, Chennai

unread,
Mar 8, 2008, 6:17:57 AM3/8/08
to panb...@googlegroups.com
அன்புள்ள தம்பி
 
கிராமத்து மொழியில் மிக அழகாக எழுதியுள்ளீர்கள்.
மிகவும் சந்தோஷமாகவும் பெருமையாகவும் உள்ளது.
தொடர்ந்து எழுதுங்கள். 
 
நல்வாழ்த்துகள்
 
பாசமுடன்
என் சுரேஷ்
 

NilaRaseegan

unread,
Mar 12, 2008, 9:13:50 AM3/12/08
to mutht...@googlegroups.com, panb...@googlegroups.com, பிராவகம்-Piravakam
முத்துப்பேச்சியும் குரோட்டன்ஸ் செடியும்..


நாளைக்கு காலைல 6 மணிக்கு ஒரு கொலை செய்யப் போறேன்.

+2 படிச்சுட்டு வேலை தேடி சென்னைக்கு வந்து நாலு மாசமா அலைஞ்சு திரிஞ்சும் ஒரு வேலையும் கிடைக்கல.

திருவல்லிக்கேணில ஒரு மேன்சன்ல தங்கி இருக்கேன். தங்கி இருக்கேன்னு சொல்றது தப்பு. நாலு பேரு தங்கி இருக்கற ரூம்ல அஞ்சாவதா ஒட்டிக்கிட்டு இருக்கேன். கொசுத்தொல்லை தாங்காம ராத்திரி பூரா கொசு அடிச்சுகிட்டே இருப்பேன் அதனால செல்லமா "கொசு" குமார் ஆக்கிட்டாங்க.

நேத்து காலையிலதான் சாஹீப் அண்ணன் எனக்கு அறிமுகமானார்். ஆறடி உயரம் இருப்பார். மாமிச மலைன்னு சொல்லலாம்.

இந்த ஏரியாவுல "பாய்"ன்னு சொன்னா அது சாஹீப்ங்கற அளவுக்கு ஆள் ரொம்ப பிரபலம்.

மேன்சனுக்கு பக்கத்துல இருக்கற டீ கடையிலதான் பார்த்தேன். ரெண்டு நிமிசம் பேசினோம்.

எலும்பும் தோலுமா இருக்கற என்னை பார்த்தா கொலை பண்ற மாதிரியா இருக்கும்?

முடியுமான்னு கேட்டார்..முடியாதுன்னு சொல்ல மனசு ஆசபட்டுச்சு. ஆனா வயிறு முடியும்னு சொல்லிடிச்சு.

இப்படி ஒருத்தர்கூட சேர்ந்து இப்படி ஒரு தொழில் நான் பண்ண போறத எப்படி தாங்குவா என் முத்துப்பேச்சி?


____________________________________________________________________________

எங்கூட ஒண்ணாப்புல இருந்து பத்தாப்பு வரைக்கும் படிச்சவதான் முத்துப்பேச்சி. அழகா இருப்பான்னு சொல்றதவிட லட்சணமா இருப்பா.

ஒரு நாள் அம்மன் கோவிலுக்கு வரச்சொன்னா.

"டேய் குமாரு உங்கிட்ட ஒண்ணு சொல்லனும்டா" தரைய பார்த்துக்கிட்டே கேட்டா முத்துப்பேச்சி.

"சொல்லுடி, என்ன ரொம்ப குழையுது சத்தம்?"

"இல்ல, நேத்து நல்லா மழை பெஞ்சுதில்ல, அப்போ பள்ளிக்கூடத்துக்கு வெளிய வந்து பார்த்தேன். நீ குரோட்டன்ஸ் செடி இருக்கற தொட்டிய தூக்கி மழை நனைக்காத இடத்துல வெச்சியே ஞாபகமிருக்கா?"

"ஆமா முத்து, மழையில ரொம்ப நேரம் நனஞ்சுதுன்னா அந்த செடி அழுகி போயிடும்னு ஓடி போய் அந்த செடிய காப்பாத்திட்டேன்"

"ஒரு செடி கஷ்டப்படக்கூடாதுன்னு எப்போ நீ நெனச்சியோ அப்போவே எனக்கு உன்னை ரொம்ப புடிச்சி போச்சுடா" சொல்லிவிட்டு தலைகவிழ்ந்து கொண்டாள் முத்துப்பேச்சி.

எனக்கு வார்த்தையே வரல. லேசா கால் நடுங்கிச்சு. வீட்டுக்கு ஓடியே போயிட்டேன்.

முதல்ல புடிச்சிருக்குன்னு சொன்னா, அப்புறம் காதலிக்கறேன்னு சொன்னா.

முத்துப்பேச்சியோட கம்மல்போலவே எல்லாத்துக்கும் தலையாட்டினேன். ஒரே சாதி பொண்ணு சேர்த்துவச்சிருவாங்க அப்படீங்கற நம்பிக்கை மட்டும் காரணமில்ல, எனக்கும் முத்துபேச்சின்னா உசிரு.

-------------------------------------------------------------------------------------------------------------------------


மனசெல்லாம் அவ ஞாபகம் மின்ன,மொட்டை மாடியில நின்னு நட்சந்திரங்கள பார்த்தேன்.

ஊர்ல பொட்டிகடை போட்டு பொழச்சுக்கலாம்னு முத்துபேச்சி சொன்னப்ப முடியாதுன்னு சொல்லிட்டு அவள நல்லா வாழ வைக்கணும்னு சென்னைக்கு வந்தேன்.

ஆனா இப்படி ஒரு தொழிலுக்கு நான் போகப்போறேன்னு தெரிஞ்சா எவ்வளவு வருத்தப்படுவா..

கொலை செஞ்சு சம்பாதிக்கறேன்னு தெரிஞ்சா என்னை விட்டு போயிடுவாளே! கடவுளே ஏன் எனக்கு மட்டும் இப்படி ஒரு விதி??

என் புலம்பல் மேகத்துக்கும் கேட்டுச்சோ என்னவோ, கண்ணீரா கொட்டுது மழை.

------------------------------------------------------------------------------------------------------------------------------

நாலுமணிக்கே எழுந்திட்டேன்.

முதல் நாள்ங்கறதால சாஹீப் அண்ணன் ஆள் அனுப்பறதா சொல்லி இருக்காரு.

ரத்தம் பார்க்க போறதுக்கு புதுச்சட்டை ஒரு கேடா? இருந்தாலும் தொழில்னு வந்தாச்சு... அம்மன்கோவில் திருவிழாவுக்கு எடுத்த மஞ்சக்கலரு சட்டைய மாட்டிகிட்டேன்.

"தம்பி, இங்க குமார் யாருப்பா" மீசையில் முகத்தை வைத்திருக்கும் ஒரு கறுப்பு உருவம் கனத்த குரலில் கேட்டது.

"நாந்தாண்ணே..."

"வா தம்பி போகலாம்"

அவருடன் பைக்கில் தொத்திக்கொண்டேன். உயிரை எடுக்கும் திசை நோக்கி பறந்தது யமன்கா....சே யமகா.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஒரு முட்டுச் சந்தில் வண்டியை நிறுத்தினார் மீசை.

விடியத் தொடங்கி இருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக மனித நடமாட்டம் ஆரம்பித்திருந்தது.

இறங்கி நடக்க ஆரம்பித்தோம்.

"சீக்கிரம் நட டா" அவசரப்படுத்தினார் மீசை.

முட்டுச் சந்தின் கடைசி பில்டிங்கில் சாஹீப் அண்ணன் உட்கார்ந்திருந்தார்.

"வாடா சட்டுபுட்டுன்னு காரியத்த முடிச்சிடணும் புரியுதா"  தடித்த குரலில் கட்டளை பிறந்தது.

"சரி....ண்ணா..."  உள்ளுக்குள் லேசான உதறல்.

"இந்தா இந்த கத்திய புடி,கழுத்துல ஒரே போடா போட்டுடனும்"  முதல் முறையாக கத்தி என் கையில் வந்தது.

கடவுளே என்னை மன்னிச்சிடு, முத்துப்பேச்சி நீயும் என்னை மன்னிச்சிடு மனதுக்குள் நினைத்துக்கொண்டே கழுத்தில் கத்தியை சொருகினேன்.

கண்கள் வெறித்து, கால்கள் இழுத்துக்கொண்டு இருநிமிடம் துடித்தது அந்த ஆடு.

வாயில்லா ஆட்டைக் கொன்று என் முதல்கொலை வெற்றிகரமாக முடிந்தது.

குடலை உருவி சுத்தம் செய்து கழிவு நீரை அருகிலிருந்த குரோட்டன்ஸ் செடியில் ஊற்றினேன்.

"உயிர்களைக் கொல்வது பாவம்" பள்ளிக்கூடத்தின் வேப்ப மரத்தடியில் முதுகில் சாய்ந்து கொண்டு முத்துப்பேச்சியும் நானும் படித்தது மனதில் விரிய ஆரம்பித்தது.

---------------------------------------------------------------------------------------------------------------------



-நிலாரசிகன்.


2008/3/10 விஜி சுதன் <vselva...@gmail.com>:


2008/3/9 Lavanya Sundararajan <lavanya.su...@gmail.com>:

முடிவில்லாத கேள்வியோடு ஒரு சிறுகதை. நல்லா இருக்கு. வட்டார வழக்கு கையாண்ட விதம் அருமை.

2008/3/8 NilaRaseegan <nilara...@gmail.com>:






--
என்றென்றும்
சுதனின்விஜி

"நாமார்க்கும் குடியல்லோம்"
நமனை அஞ்சோம்"


Help Ever Hurt Never
Love All Serve All


NilaRaseegan

unread,
Mar 18, 2008, 5:23:13 AM3/18/08
to mutht...@googlegroups.com, பிராவகம்-Piravakam, panb...@googlegroups.com
பைத்தியங்கள் (ஒரு பக்க கதை)

இரவு பதினோரு மணி. கிணற்றில் குழந்தை ஒன்று  விழுந்து விட்டது.

இதை முதலில் காலனியில் உள்ள எல்லோருக்கும் சொன்னது கந்தபழனி.

காலனியில் இச்செய்தி தீ போல் பரவி,கிணற்றை சுற்றி கூட்டம் கூடியது.

கிணற்றில் எந்த சத்தமும் கேட்கவில்லை. கிணற்று நீரில் எவ்வித அசைவும்
இல்லை.

தாய்மார்கள் தங்களது குழந்தையின் கைகளை இறுகப் பற்றிக்கொண்டார்கள்.

கிணற்றில் விழுந்த குழந்தை இறந்திருக்கும் என்றார் ஒருவர்.

இறந்துவிட்டால் பிணம்மிதக்குமே என்றார் மற்றொருவர்.

குழந்தை விழுந்ததை நீ பார்த்தாயா என்று கந்தபழனியை அதட்டினார்
ஒருவர்.

ஆம் என்பதுபோல தலையாட்டினான் கந்தபழனி.

அப்போ குழந்தை எங்கே என்று கேட்டார் மற்றொருவர்.

வானம் பார்த்து கைகாட்டினான் கந்தபழனி.

கந்தபழனியை கண்டு சிரித்தது நிலாக்குழந்தை.

சத்தமிட்டு சிரிக்கத் துவங்கினான் கந்தபழனி.

பைத்தியம் பேச்சைக்கேட்டு பைத்தியமானோமே என்று
நொந்தவாறு வீடு திரும்பினர் மற்ற பைத்தியங்கள்.

--நிலாரசிகன்.

2008/3/13 NilaRaseegan <nilara...@gmail.com>:
வாழ்த்திய அனைவருக்கும் எனது நன்றிகள்.

2008/3/13 Lavanya Sundararajan <lavanya.su...@gmail.com>:

அதைத் தானே சாப்பிட்டு வைக்கிறீங்க அப்பறம் கொல்லாமா என்ன செய்வான்.

NilaRaseegan

unread,
Mar 20, 2008, 6:09:40 AM3/20/08
to mutht...@googlegroups.com, பிராவகம்-Piravakam, panb...@googlegroups.com
ஊர்க்காசு (ஒரு பக்க கதை)


"என்னங்க எனக்கொரு சந்தேகம்" தடதடக்கும் ரயிலில் ஜன்னல் வழியே இயற்கை ரசிக்கும்
தன் கணவனிடம் மெதுவான குரலில் கேட்டாள் செண்பகம்.

முகத்தில் கேள்விக்குறியுடன் திரும்பி  "என்ன?" என்றார் ராதாகிருஷ்ணன்.

"நம்மள வழி அனுப்ப வந்த இரண்டு பசங்களுக்கும் நீங்க பணம் கொடுத்தீங்க இல்ல"

"ஆமா அதுக்கென்ன?"

"மூத்த பையன் வேலையில சேர்ந்து இரண்டு மாசமாச்சு அவனுக்கு 500 ரூபா கொடுத்தீங்க,
ஆனா  வேலை தேடிகிட்டு இருக்கற நம்ம சின்னவனுக்கு 100 ரூபாதான் கொடுத்தீங்க, எனக்கு புரியலங்க ஏன் அப்படி செஞ்சீங்க?" தன் சந்தேகத்தை கேட்டாள் செண்பகம்.

"செண்பகம், மூத்தவன் வேலைக்கு சேர்ந்து இரண்டு மாசமாச்சுல்ல அவனுக்கு பணத்தோட அருமை புரிஞ்சிருக்கும். 500 ரூபா கொடுத்தாலும் அளவாதான் செலவு செய்வான்.ஆனா இளையவனுக்கு இது முக்கியமான பருவம்.

வேலை தேடும்போது அதிகமா பணம் கொடுத்தா,அப்பாதான் பணம் தர இருக்காரேங்கற எண்ணம் வந்துடும். அதுக்குதான் அவனுக்கு கம்மியா கொடுத்தேன்" தீர்க்கமான குரலில் சொல்லும் தன் கணவனை கண்டு வியந்தாள் செண்பகம்.


-நிலாரசிகன்.

பைத்தியங்கள் கதைக்கு விமர்சனமளித்த அனைவருக்கும்
நன்றிகள்.


2008/3/18 விஜி சுதன் <vselva...@gmail.com>:
என்ன முத்தமிழில்...
 
கிணறு வாரமா?.....
 
:))))

 
On 3/18/08, NilaRaseegan <nilara...@gmail.com> wrote:
பைத்தியங்கள் (ஒரு பக்க கதை)

இரவு பதினோரு மணி. கிணற்றில் குழந்தை ஒன்று  விழுந்து விட்டது.

இதை முதலில் காலனியில் உள்ள எல்லோருக்கும் சொன்னது கந்தபழனி.

காலனியில் இச்செய்தி தீ போல் பரவி,கிணற்றை சுற்றி கூட்டம் கூடியது.

கிணற்றில் எந்த சத்தமும் கேட்கவில்லை. கிணற்று நீரில் எவ்வித அசைவும்
இல்லை.

தாய்மார்கள் தங்களது குழந்தையின் கைகளை இறுகப் பற்றிக்கொண்டார்கள்.

கிணற்றில் விழுந்த குழந்தை இறந்திருக்கும் என்றார் ஒருவர்.

இறந்துவிட்டால் பிணம்மிதக்குமே என்றார் மற்றொருவர்.

குழந்தை விழுந்ததை நீ பார்த்தாயா என்று கந்தபழனியை அதட்டினார்
ஒருவர்.

ஆம் என்பதுபோல தலையாட்டினான் கந்தபழனி.

அப்போ குழந்தை எங்கே என்று கேட்டார் மற்றொருவர்.

வானம் பார்த்து கைகாட்டினான் கந்தபழனி.

கந்தபழனியை கண்டு சிரித்தது நிலாக்குழந்தை.

சத்தமிட்டு சிரிக்கத் துவங்கினான் கந்தபழனி.


பைத்தியமா அவனுக்கா? !! அப்படித்தெரியலியே!! :)) நிலவையும் குழந்தையாய் எண்ணும் பிள்ளை மனசுக்காரன் இயற்கை நேசிப்பாளன்..:))

 



 



--

-~----------~----~----~----~------~----~------~--~---




--
என்றென்றும்
சுதனின்விஜி

"நாமார்க்கும் குடியல்லோம்"
நமனை அஞ்சோம்"


Help Ever Hurt Never
Love All Serve All


N Suresh, Chennai

unread,
Mar 20, 2008, 6:18:15 AM3/20/08
to panb...@googlegroups.com
நிலா ரசிகனே
 
என்ன ஆச்சு ஐயனே
 
நிறைய தலைப்பெல்லாம் கொடுத்தார்களே
எதைத் தேர்வு செய்தாயப்பா!!!!
 
எனக்கு பரிசெல்லாம் வேண்டாம்:-)
கசாலி தினமும் உந்தன் மடலை காத்திருக்கிறாரப்பா:-)

 

NilaRaseegan

unread,
Mar 20, 2008, 6:23:11 AM3/20/08
to panb...@googlegroups.com
வினை எச்சம் என்று தேர்வு செய்து நேற்று அறிவித்தும் விட்டேன். சுரேகா என்பவர் வெற்றியாளர்.

2008/3/20 N Suresh, Chennai <nsuresh...@gmail.com>:

N Suresh, Chennai

unread,
Mar 20, 2008, 6:38:09 AM3/20/08
to panb...@googlegroups.com
அறுதல் கீறுதல் எல்லாம் ஒன்னும் இல்லையோ???
எனக்கல்ல:-)

 

NilaRaseegan

unread,
Jun 4, 2008, 5:41:26 AM6/4/08
to mutht...@googlegroups.com, பிராவகம்-Piravakam, panb...@googlegroups.com
சைக்கிள் - சிறுகதை

போட்டி ஆரம்பமானது. வற்றிய குளத்தின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கம் வரை சென்று மீண்டும் தொடங்கிய இடத்திற்கு வரவேண்டும். செல்வராஜ்தான் ஜெயிக்கபோவதாக எல்லோரும் பேசிக்கொண்டனர். போன வருட கோடைவிடுமுறையில் நடந்த போட்டியில் என்னை ஜெயித்து முதல் பரிசான மூன்று "தேன்மிட்டாய்"  பாக்கெட்டுகளை வென்றவன் தான் செல்வராஜ். போனமுறை நான் தோற்றதற்கு காரணம் ராஜன் அண்ணன் கடையில் எடுத்து ஓட்டிய வாடகை சைக்கிள்.ஆனால் இப்போது நான் பயணிப்பது என் சைக்கிளில்.

போனவருடத்தை நினைத்துக்கொண்டிருந்தால் அதோ எனக்கு முன் மூச்சிரைக்க சைக்கிளை மிதிக்கும் செல்வராஜை என்னால் வெல்லமுடியாது.சோறு தின்பவன் மாதிரியா சைக்கிள் ஓட்டுகிறான்? போன வருட தோல்வியால் பள்ளிமுழுவதும் என்னை கிண்டல்செய்ததை மறக்க முடியுமா? இன்னும் சிறிது தூரம்தான்....இதோ அவனை நெருங்குகிறேன்... விடமாட்டேன்....வெற்றி! வெற்றி!

மூன்று தேன்மிட்டாய் பாக்கெட்டுகளை வாங்கிக்கொண்டு வீடுவந்தேன். நண்பர்கள் மத்தியில் என் புகழ் பரவியது.என் வெற்றிக்கு காரணம் என் புது சைக்கிள் என்று நினைத்தனர் நண்பர்கள்.சைக்கிள் வாங்கித்தந்த அப்பாவிற்கும், வெற்றி வாங்கித்தந்த சைக்கிளுக்கும் மனதால் நன்றி சொன்னேன்.

அப்பாதான் தினமும் என்னை பள்ளியில் கொண்டுவிடுவார்.பக்கத்து ஊரிலிருக்கும் பள்ளிக்கு என்னுடன் நடந்தே வருவார் அப்பா. பலநாட்களாக அழுது அடம்பிடித்தபின்னரே சைக்கிள் ஒன்றை வாங்கித்தந்தார். சைக்கிளுக்கு பூஜை போட்டு,சந்தனம்,குங்குமம் வைத்து பிள்ளையார்கோவில் வாசலில்தான் சைக்கிள்சாவியை என் கையில் தந்தார் அப்பா. "வேகமா ஓட்டக்கூடாதுப்பா...மெல்ல ஓட்டனும்" என்கிற அறிவுரையை அப்பா முடிக்கும் முன்பே பாதி தெருவை தாண்டியிருந்தது என் "டைகர்". என் சைக்கிளுக்கு நான் வைத்த செல்லபெயர் அதுதான்.

அதன்பின்னர் பக்கத்து தெரு மகேசனுடன் சைக்கிளில் ஒன்றாக பள்ளி செல்ல ஆரம்பித்தேன். தினம் தினம் யார் முதலில் பள்ளி சென்றடைவது என்கிற போட்டியில் மகேசனுக்கு எப்போதும் இரண்டாவது இடம்தான்.
பைக்கட்டை*  கேரியரில் வைத்து விழாமலிருக்க வலதுகையால் பிடித்துக்கொண்டே வேகமாக பெடலை அழுத்தி மிதிக்க வேண்டும். எதிர்க்காற்றில் ஓட்டுவது மிகவும் கடினம், சிலநேரம் காற்றை எதிர்க்கமுடியாமல் கீழே விழுந்தாலும் சமாளித்து முதலிடம் பெற்றிருக்கிறேன்.

மேடு பள்ளமென்று பாராமல் வேகமாக ஓட்டியதில் வாங்கிய இரண்டாவது மாதமே கிறீச்சிட ஆரம்பித்தான் டைகர்.
தேங்காய் எண்ணை விட்டுப் பார்த்தேன். ராஜன் அண்ணன் கடைக்கு சென்று கிரீஸ் வைத்து பார்த்தேன்  அப்பாவும் என்னென்னவோ செய்து பார்த்தார் டைகரின் கிறீச் சத்தம் மட்டும் ஓயவேயில்லை.
"வண்டிய வேகமா ஓட்டாதன்னு சொன்னா கேட்கறதே இல்ல..பாரு சைக்கிளு பாவம்போல கத்துது" என்று அடிக்கடி சொல்வார் அப்பா.

சைக்கிள் வாங்கிய ஒருவருடத்தில் ஐம்பது முறையாவது கீழே விழுந்திருப்பேன் ஆனால் ஒருமுறைகூட பலத்த அடி பட்டதில்லை. சைக்கிள் வந்த மகிழ்ச்சியில் நன்றாக படிக்கவும் ஆரம்பித்தேன். எப்பொழுதும் முதல்மூன்று இடத்தில் இருந்ததால் ஆசிரியர்களுக்கு பிடித்த மாணவனாக மாறினேன்.

"சைக்கிளு வீட்டுக்கு வந்த நேரம் எம் பேரனுக்கு நல்ல ராசி,நல்லா படிக்கிறான்ல புள்ள"  என்று வெத்தலையை இடித்துக்கொண்டே சொல்வார் பாட்டி. டைகர் என் வீட்டில் ஒரு உறுப்பினராக மாறிப்போனான்.

ஒருமுறைகூட சைக்கிளை ஓட்டியதில்லை ஆனாலும் தினமும் சைக்கிளை துடைத்து சுத்தம் செய்வார் அப்பா.

பள்ளிப்பருவம் முடித்து கல்லூரிக்காக சென்னைக்கு வந்தபின்பு எங்கள் வீட்டு மாட்டுக்காடியின் ஓரத்தில் நிரந்தரமாக நின்றுகொண்டிருந்தான் டைகர்.தூசி அண்டாமலிருக்க ஒரு பழைய போர்வையால் மூடிவைத்திருந்தார் அப்பா. ஒவ்வொரு முறையும் கடிதத்தில் மறக்காமல் சைக்கிளை பற்றி ஒருவரியாவது எழுதுவார்.

விடுமுறைக்காக ஊர் செல்லும்போதெல்லாம் கிராமத்து தெருக்களில் டைகரில் வலம் வந்து மகிழ்வேன்.
கல்லூரியின் இறுதி ஆண்டு படிக்கும்பொழுதுதான் அந்த சம்பவம் நேர்ந்தது. விடுதிக் காப்பாளர் என் அறைக்கதவை தட்டி அந்த துக்கச் செய்தியை சொன்னார்.

உடனே பஸ்பிடித்து ஊருக்கு வந்தேன். அம்மா மயக்க நிலையில் ஓரமாக அமர்ந்திருந்தார். அப்பாவின் சடலம் வீட்டு முற்றத்தில் வைக்கப்பட்டிருந்தது. எல்லோரும் அழுதுகொண்டிருந்தனர். என் அலறல் சத்தத்தில் ஓடிவந்து என்னைக் கட்டிக்கொண்டு அழுதாள் அம்மா. "ராசா உங்கப்பா போயிட்டாருடா..நம்மள அநாதையாக்கிட்டு போயிட்டாருடா.." அம்மாவின் குரல் அழுகின்ற பெண்களின் பெரும்சத்தத்தின் நடுவிலும் நெஞ்சில் அறைந்தது. தொண்டை வறண்டு மயங்கி விழுந்தேன்.

சவக்குழிக்கு சற்றுத்தொலைவில் என்னை அமர்த்தி மொட்டை அடித்தார்கள். தோளில் பானைநீர் சுமந்து மூன்றுமுறை சுற்றி வந்தபின் புதைகுழியில் மூன்று முறை மண் அள்ளிப் போட்டேன். கண்ணீருடன் வீடு வந்துசேர்ந்தேன்.

நான்கைந்து நாட்களில் சுற்றம்தவிர்த்து அம்மா,நான்,பாட்டி மட்டும் மிஞ்சியிருந்தோம்.

"அசதியா இருக்கு சந்தைக்கு சைக்கிள்ள போறேன்னு போனவருதான் மேலத்தெரு முனையில திரும்பும்போது தடுமாறி கீழே விழுந்துட்டாரு. மண்டையில அடிபட்டு அதேயிடத்துல உசுரு போயிருச்சு ராசா...மொத மொதலா சைக்கிள்ள போறாரேன்னு பெருமையா நினைச்சேன் இப்படி ஆயிடுச்சே" அப்பா இறந்த நாளிலிருந்து திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருந்தாள் அம்மா.

ராஜன் அண்ணன் கடைக்கு சைக்கிளை சென்று விற்றுவிட தீர்மானித்து, லுங்கியை மடித்துக் கட்டிக்கொண்டு மாட்டுக்காடியிலிருந்த சைக்கிளை வெளியிலெடுத்து வாசல் வந்து பெடலை மிதிக்க தொடங்கினேன்.

"சனியன் புடிச்ச சைக்கிளு அநியாயமா உங்கப்பன் உசிர வாங்கிருச்சே" பாட்டியின் புலம்பல் காதில் சன்னமாய் விழுந்தது.

எப்போதும் கிறீச்சிடும் சைக்கிள் இன்று சத்தமின்றி பயணித்துக்கொண்டிருந்தது.


-நிலாரசிகன்.

* பைக்கட்டு = School Bag

jmms

unread,
Jun 4, 2008, 5:57:40 AM6/4/08
to Pira...@googlegroups.com, mutht...@googlegroups.com, panb...@googlegroups.com
நல்ல நடை அருமையான கதை...நெஞ்சைத்தொட்ட வரிகள்..
 
 
 
சைக்கிள் என்றாலே எல்லாருக்கும் ஒரு அனுபவம் உண்டு போல..
 
 

--
  சாந்தி.  
த.த.ம (தங்கத் தமிழ் மகள் சங்கம்.)
இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால் கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம் எவ்வாறு அன்பை செலுத்த இயலும். Jesus Christ / The Holy Bible
நீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது.-- அன்னை தெரசா:
http://punnagaithesam.blogspot.com/
=============================

NilaRaseegan

unread,
Jun 4, 2008, 6:10:32 AM6/4/08
to mutht...@googlegroups.com, Pira...@googlegroups.com, panb...@googlegroups.com
நன்றி சாந்தி.

2008/6/4 jmms <jmms...@gmail.com>:

Tamizh Raseegai M

unread,
Jun 4, 2008, 1:32:07 PM6/4/08
to panb...@googlegroups.com
உண்மையை சொல்லனுமானால் கதையின் கரு எனக்கு பொல்லாதவன் படத்தை சற்று ஞாபகப்படுத்தியது...
ஆனால் கதையை கொண்டு சென்ற விதம்...இது நிலாவின் கதை என்று நிரூபித்துவிட்டது...:-)
வாழ்த்துக்கள் நிலா...:-)

sree Koushi

unread,
Jun 4, 2008, 11:07:15 PM6/4/08
to panb...@googlegroups.com
கதையின் நடை மற்றும் கொண்டு சென்ற விதம் மிகவும் அருமை....


வாழ்த்துக்கள் நிலா

என்றும் அன்புடன்
கௌசல்யா.

NilaRaseegan

unread,
Jun 17, 2008, 4:27:55 AM6/17/08
to mutht...@googlegroups.com, பிராவகம்-Piravakam, panb...@googlegroups.com
  சேமியா ஐஸ் - சிறுகதை


இன்னும் சற்று வேகமாக ஓட வேண்டும். அடுத்த தெருவிலிருந்து கேட்கிறது மணிச்சத்தம். கையில் வைத்திருக்கும் பிளாஸ்டிக் செருப்பு வியர்வையில் நனைந்துவிட்டது. கைநழுவி விழுந்துவிட்டால் அவ்வளவுதான் என்கிற எண்ணம் எழுந்தவுடன் இறுக்கமாக பிடித்துக்கொண்டு ஓடினேன்.

வெற்றுக்காலுடன் ஓடியதில் முள்ளொன்று குத்தி வலி உயிர்போனது. குனிந்து முள்ளை எடுக்க நேரமில்லை. நொண்டிக்கொண்டே அடுத்த தெருவிற்குள் நுழைந்து மூச்சு வாங்க நின்று பார்த்தேன்.

தூரத்தில் நின்றிருந்தார் முருகேசு அண்ணன். கைகாட்டிக்கொண்டே நொண்டி நொண்டி அவரிடம் சென்றேன்.
பிளாஸ்டிக் செருப்பைஅவரிடம் கொடுத்தேன். வாங்கி பார்த்துவிட்டு சைக்கிள் ஹேண்ட்பாரில் தொங்கிய கோணிப்பைக்குள் போட்டுக்கொண்டார்.

"ஒரு சேமியா ஐஸ் குடுங்கண்ணா" மூச்சுவாங்கிக்கொண்டே சொன்னேன்.

என் கையில் ஐஸ்ஸை தந்துவிட்டு  ஐஸ்வண்டியை தள்ளிக்கொண்டு போய்விட்டார்.

கையில் வாங்கியவுடன், போன வருட கோவில் திருவிழாவில் சேமியா ஐஸ் வாங்க தேவையான ஒரு ரூபாயை சேர்க்க நான் பட்டபாடு  நினைவுக்கு வந்தது.


இரண்டு மைல் தூரம் நடந்து சென்று ஊருக்கு வெளியே இருக்கும் கந்தசாமி அண்ணாச்சி தோட்டத்தின் வேலியோரம் விழுந்துகிடக்கும் நெல்லிக்காய்களை பொறுக்கி, வரும் வழியில் வாய்க்காலில் கழுவியெடுத்து, கோவில் வாசலருகே பழைய பேப்பர் விரித்து நெல்லிக்காய்களை விற்று ஒரு ரூபாய் சேர்த்துதான் சேமியா ஐஸ்வாங்கினேன்.

ரூபாய் இல்லாவிட்டால் கண்ணாடி பாட்டில்,பிளாஸ்டிக் செருப்பு,உடைந்த பிளாஸ்டிக் சாமான்கள் ஏதேனும் கொடுத்தால் ஐஸ் வாங்கலாம்.


உள்ளங்காலில் முள் உறுத்தியது. கையில் வழிகின்ற சேமியா ஐஸ்ஸை விறுவிறுவென்று தின்றுமுடித்து அருகிலிருந்த தெருவிளக்கு கம்பத்தில் சாய்ந்துகொண்டு உடைந்த முள்ளை விரல் நகத்தால் எடுத்தபோது "பளார்" என்று என் முதுகில் ஒரு அறை விழுந்தது.

வலியுடன் திரும்பி பார்த்தால், கண்கள் கோபத்தில் மின்ன,பத்தரகாளி போல் நின்றிருந்தாள் சின்னம்மா.எனக்குத் தெரியும் சின்னம்மாவிடம் சிக்குவேனென்று. ஆனால் இவ்வளவு சீக்கிரம் எதிர்பார்க்கவில்லை.


ஆடுகளுக்கு புல் அறுக்க மட்டும்தான் சின்னம்மா வீட்டை விட்டு வாய்க்கால் ஓர தோட்டத்திற்கு வருவாள். மற்றபடி எப்பொழுதும் அடுப்பங்கரையிலும் ஆட்டுக்காடியிலும்தான் இருப்பாள்.

அவளுக்கு எதற்கு பிளாஸ்டிக் செருப்பு?  சந்தைக்கு அப்பாவுடன் போகும்போதுகூட வெற்றுக்காலுடன் போவதுதான் சின்னம்மாவிற்கு பிடிக்கும். எதற்கும் உபயோகமில்லாத செருப்பால் இன்று ஒரு சேமியா ஐஸ்
என் வயிற்றுக்குள் இருக்கிறது. கூடவே முதுகில் விழுந்த அடியின் வலியும்.

சின்னம்மா கையில் சிக்கினால் வேப்ப மரத்தில் கட்டிவைத்து மிளகாய் பொடியால் அபிசேகம் பண்ணிவிடுவாள்.போன மாதம் கபடி விளையாடிவிட்டு விளக்குவைத்த பிறகு வீட்டிற்கு வந்ததற்கு இரவு இரண்டுமணிவரை வேப்பமரத்துடன் நின்றது நினைவுக்கு வந்தது. செத்தாலும் சின்னம்மாவிடம்  சிக்கக்கூடாது என்று ஓட ஆரம்பித்தேன்.  கொஞ்சதூரம் விரட்டிக்கொண்டு வந்தாள், பின் முடியாமல் இடுப்பில் கைவைத்து நின்று ஏதேதோ கெட்டவார்த்தையால் திட்டிவிட்டு திரும்பி போய்விட்டாள்.

இருட்ட ஆரம்பித்துவிட்டது. பள்ளிக்கூட மைதானத்தில் அமர்ந்திருந்தேன். பசி தாங்கமுடியாமல் வயிறு வலிக்க ஆரம்பித்தது. வீட்டிற்கு போனாலும் சோறு கிடைக்காது. மிளகாய் தூள் மட்டும் இனிப்பாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? பசியுடன் உறங்ககூடாது என்று பாட்டி சொன்னது ஞாபகம் வந்தது. சரி வருவது வரட்டும் வீட்டிற்கு போய்விடலாம் என்று முடிவெடுத்தேன்.

 
வீட்டை நெருங்க நெருங்க இதயம் துடிக்கும் சத்தம் காதுகளில் கேட்டது. வாசற்கதவை மெதுவாய் திறந்து உள்ளே சென்றேன். தோள்துண்டை சுருட்டி தலைக்கு வைத்து திண்ணையில் படுத்திருந்தார் அப்பா. நல்ல உறக்கத்தில் இருக்கிறார் என்பதை உரத்த குறட்டை சத்தம் சொல்லிற்று.

 
அடுப்பங்கரையின் ஓரத்தில் பாய்விரித்து படுத்திருந்தாள் சின்னம்மா. பக்கத்தில் தங்கச்சி பாப்பா வாயில் கைவைத்தபடியே உறங்கிக்கொண்டிருந்தது. சின்னம்மாவின் தலைக்குமாட்டிலிருந்த சோற்றுப்பானை என்னை கூப்பிடுவதுபோல் இருந்தது.

பூனைபோல் அடிமேல் அடியெடுத்து வைத்து சோற்றுப்பானையில் கைவைத்தேன்.
பானையை மூடியிருந்த அலுமினியத் தட்டு தவறி சின்னம்மாவின் கையில் விழுந்துவிட்டது. சட்டென்று எழுந்தவள் என்ன செய்தாள் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை.

இரண்டு மணிவரை வேப்பமரத்துடன் இருப்பவன் இன்று ஐந்துமணிவரை வேப்பமரத்தில் ஒண்டியிருந்தேன். பிள்ளையார் கோவில் பாட்டுச்சத்தத்தில் எழுந்துவிட்டேன். அசதியில் நின்றுகொண்டே உறங்குவது பழக்கமான ஒன்றுதான். ஆனாலும் கால்வலி விண் விண் என்றது.

ஐந்துமணிக்கு  சின்னம்மாவின் கெட்டவார்த்தைகளை வாங்கிக்கொண்டபின்னரே என் கட்டுகளை அவிழ்த்துவிட்டார் அப்பா. என்னவோ அறிவுரையெல்லாம் சொல்லியவாறே சோற்றை பிசைந்து ஊட்டினார். அரைப்பானை சோற்றை விழுங்கிவிட்டு திண்ணையில் படுத்துறங்கிவிட்டேன்.

திண்ணை சூடாக ஆரம்பித்த மதிய வேளையில் முழித்து சுவற்றில் பதிந்திருக்கும் கண்ணாடியில் என் முகம் பார்த்தேன். சின்னம்மா அடித்த அடியால் கன்னம் இரண்டும் தக்காளிபோல் சிவந்து வீங்கியிருந்தது.

தூரத்தில் எங்கோ ஐஸ்வண்டிக்காரரின் மணிச்சத்தம் கேட்டதில் மனதில் சேமியா ஐஸின் பிம்பம் பெரியதாய் தோன்ற வீட்டிற்கு வெளியே கிடந்த சின்னம்மாவின் புதுச்செருப்பைக் கண்டு சிரித்து ஆரம்பித்தேன்.

-நிலாரசிகன்.

 

J K

unread,
Jun 17, 2008, 4:48:59 AM6/17/08
to panb...@googlegroups.com
சூப்பட் கத.....
 
 
சின்ன வயதில் பண்ணிய விசயங்கள்...
 
நட்புடன்,

ஜே கே | J K

Shylaja N

unread,
Jun 17, 2008, 4:51:24 AM6/17/08
to panb...@googlegroups.com
கவிதை ்நிலா
கதையும் சொல்வதில்
 
மகிழ்ச்சி உலா!

 
2008/6/17, J K <nsjey...@gmail.com>:

எழில்

unread,
Jun 17, 2008, 5:33:53 AM6/17/08
to panb...@googlegroups.com
நல்ல கதை நிலா!!!!!
 
இப்பொழுதே ஊருக்கு போய் சேமியா ஐஸ் சாப்பிடவேண்டும் போல் இருக்கிறது!!!!!!


--
நட்புடன்,
எழில்

http://ezhilbharathi.blogspot.com/

sree Koushi

unread,
Jun 17, 2008, 5:36:53 AM6/17/08
to panb...@googlegroups.com
சிறு வயது  நினைவுகள் 
அலைகளாய் மனதுள்... :)

வாழ்த்துக்கள் நிலா....


என்றும் அன்புடன்
கௌசல்யா

jmms

unread,
Jun 19, 2008, 12:35:47 AM6/19/08
to mutht...@googlegroups.com, பிராவகம்-Piravakam, panb...@googlegroups.com
On 6/17/08, NilaRaseegan <nilara...@gmail.com> wrote:
  சேமியா ஐஸ் - சிறுகதை
 
 
ரொம்ப சோகமாய் இருந்தது..பாவம் சிறுவன்..அந்த வயதில் வரும் நியாயமான ஆசை...

NilaRaseegan

unread,
Jun 19, 2008, 11:31:06 PM6/19/08
to panb...@googlegroups.com, தமிழ் பிரவாகம், முத்தமிழ்

தனலட்சுமி டாக்கீஸ் - சிறுகதை

 

இடுப்பில் துண்டைக் கட்டிக்கொண்டு குளக்கரை படிக்கட்டில் தன்னுடைய வேட்டியை துவைத்துக்கொண்டிருந்தார் கட்டையன்.  மொறத்தூர் கிராமத்திலிருக்கும் தனலட்சுமி டாக்கீஸில் டிக்கெட் கொடுப்பவர்தான் கட்டையன். அவரது சொந்தப்பெயரான நாராயணன் அவருக்கே மறந்துபோகும் அளவிற்கு கட்டையனென்றே அழைத்தனர் ஊர்மக்கள். கொஞ்சம் குள்ளம் என்பதால் வந்த காரணப்பெயர்தான் கட்டையன். உருவு கண்டு எள்ளாத ஊர் ஏது?

 

துவைத்தெடுத்த வேட்டியை கடைசி சொட்டு தண்ணீர் வடியும்வரை பிழிந்துவிட்டு  தோளில் தொங்கபோட்டுக்கொண்டு வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

வீடு செல்லும் வழியில்தான் "தனலட்சுமி டாக்கீஸ்" இருக்கிறது. அதைக்கடப்பதற்கு முன் ஒருநிமிடம் நின்றார் கட்டையன். அவரது வாய் எதையோ முணுமுணுத்தது. கன்னத்தில் போட்டுக்கொண்டு வீடு நோக்கி நடந்தார். கட்டயனுக்கு கோவில் அந்த திரையரங்கம்தான். இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு திரையரங்கம் கட்டப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை கட்டையன்தான்

நுழைவுச்சீட்டு கொடுக்கும் பணியில் இருக்கிறார்.

 

தினமும் மாலை ஐந்து மணிக்கும், இரவு எட்டு மணிக்கும் என மொத்தம் இருகாட்சிகள் மட்டுமே கொண்ட கிராமத்து திரையரங்கம் என்பதால் மாலை நான்கு மணிக்குமேல் சுற்றியுள்ள கிராமத்து மக்கள் தனலட்சுமி டாக்கீஸை நோக்கி படையெடுப்பார்கள்.

 

நான்கரை மணிக்கெல்லாம் ஒலிப்பெருக்கியில் பாடல்கள் தொடங்கிவிடும்.

அந்த பாட்டுச்சத்தத்தை வைத்துதான் மணி என்னவென்று சொல்வார்கள் கடிகாரமில்லாத வீட்டு மக்கள்.

 

கட்டையனுக்கு திரையரங்கம் மீதுள்ள காதலால் அவருக்கு பிறந்த பெண்ணுக்கு தனலட்சுமி என்று பெயரிட்டார்.

கட்டையனுக்கும் அவர் மனைவிக்கும் அடிக்கடி வாய்ச்சண்டை நடக்கும். "எனக்கு சக்களத்தி இல்லைன்னு தியேட்டர கட்டிக்கிட்டீகளோ? நிதமும் அங்கேயே குடியிருக்கீக..பொட்டப்புள்ளைய பெத்துவச்சுக்கிட்டு நான் படுறபாடு எனக்கும் அந்த திருச்செந்தூரு முருகனுக்கும் மட்டும்தான் தெரியும்"  

 

"ஆமா நீயும் நானும் இளவட்டம் பாரு! கொஞ்சி குலாவ…இங்க கிடந்தா திண்ணையில கெடப்பேன்…அங்க கிடந்தா பெஞ்சுல கிடப்பேன்…அவ்வளவுதான்டி வித்தியாசம்…போயி கஞ்சு காச்சற வழிய பாரு"

 

எப்பொழுதும் தியேட்டரை விட்டுக்கொடுத்ததில்லை கட்டையன்.  படம்பார்க்க வருபவர்களுக்கு முறுக்கும்.அதிரசமும் செய்து தன் மகள் தனலட்சுமியிடம் கொடுத்தனுப்புவாள் கட்டையனின் மனைவி.

 

ஒரு நார்க்கூடையில் முறுக்கையும் அதிரசத்தையும் எடுத்துச்சென்று விற்று வருவாள் சிறுமி தனலட்சுமி. வறுமையென்றாலும் எப்பொழுதும் அதை வெளிக்காட்டியதில்லை கட்டையன். செய்கின்ற வேலையை நன்றாக செய்ய வேண்டும் என்பது மட்டுமே அவர் குறிக்கோள். படம் பார்க்க வருகின்றவர்கள்

அனைவருக்குமே கட்டையனின் சிரித்த முகம் பிடிக்கும்.

 

"என்ன மாமோய் நீங்களே ஹீரோ கணக்காதான இருக்கிய படத்துல நடிச்சா நாங்க பார்ப்போம்ல"  டிக்கெட் வாங்க வரும் குமரிகளின் கிண்டலுக்கெல்லாம் அசந்துவிடமாட்டார் கட்டையன்.

 

"வாடி என் மச்சினிச்சி….நீயும் என் கூட நடிச்சா நான் நடிக்க மாட்டேன்னா சொல்லுவேன்…வர்றியா ரெண்டுபேரும் டூயட்டு பாட  அமெரிக்கா போவலாம்" என்று மடக்கிப்பேசுவதில் வல்லவர்.

 

இன்பங்கள் மட்டுமே இருந்துவிடில் அது வாழ்க்கை அல்ல என்பதுபோல திரையரங்கின் சொந்தக்காரர் சில வருடங்கள் கழித்து திடீரென்று பட்டணத்திலிருந்து ஊர் வந்தார்.

 

தியேட்டரில் வேலைபார்க்கும் அனைவரையும் அழைத்து அந்த இடிபோன்ற செய்தியை சொன்னார்.

 

"எல்லாரும் நல்லாத்தான் வேல செஞ்சிய…ஆனா என்னத்த பண்றது முந்தி மாதிரி தியேட்டரால வருமானம் இல்ல… நானும் புள்ளக்குட்டிக்காரன் எத்தனை நாளைக்குத்தான் இதைக் கட்டிக்கிட்டு அழுவறது..அதான் தியேட்டர ஒரு கம்பெனிக்காரனுக்கு வித்துப்புட்டேன்…இதுல உங்க எல்லாத்துக்கும் சேர வேண்டிய சம்பளப் பணம் இருக்கு பிரிச்சு எடுத்துக்கிட்டு வேற வேலை இருந்தா பார்த்து பொழச்சுக்குங்க அப்பு,நான் வாரேன்" 

 

அவருடைய கார் கிளம்பிச்செல்லும் வரை ஒருவரும் அசைவில்லை. கட்டையன் வேப்பமரத்தில் சாய்ந்து உட்கார்ந்துவிட்டார். கண்ணிலிருந்து நிற்காமல் நீர் கசிந்துகொண்டிருந்தது.

 

மறுநாள் தனலட்சுமி டாக்கீஸ் மூடப்பட்டது. வீட்டிலேயே முடங்கிகிடந்தார் கட்டையன். முன்பு போல் யாரிடமும் பேசுவதில்லை. அடிக்கடி மூடப்பட்ட திரையரங்கின் இரும்புக் கதவின் கம்பிகளை பிடித்துக்கொண்டு கன்னம் பதித்து தியேட்டரை பார்த்தபடியே மெளனமாய் கண்ணீர் வடிப்பார்.

 

தன் மகளுக்கு திருமணம் செய்துவைத்தால் அந்த மகிழ்ச்சியில் மீண்டும் கட்டையன் சகஜநிலைக்கு வந்துவிடுவார் என்றெண்ணி அவசரமாக ஒரு மாப்பிள்ளை பார்த்து தனலட்சுமிக்கு திருமண ஏற்பாட்டை செய்தாள் கட்டையனின் மனைவி.

 

திருமண நாளும் வந்தது.

 

பட்டணத்திலிருந்து இரண்டு லாரி நிறைய கூலிஆட்கள் திரையரங்கம் முன்பு வந்து இறங்கினார்கள். மாலைச்சூரியனின் மஞ்சள் வெய்யிலில் அவர்களது கையிலிருந்த கடப்பாரைகளின் கூர்மை மினுங்கியது.

 

நெஞ்சு முழுக்க சோகமிருந்தும் பிள்ளையின் திருமணத்தை கண்டவுடன் சோகம் மறந்து சிரித்தபடியே திருமணத்திற்கு வருபவர்களை வரவேற்றுக்கொண்டிருந்தார் கட்டையன்.

அன்று மாலை தனலட்சுமியின் திருமண ஊர்வலம் நடந்தது.

ஊர்வலத்திற்கு எதிரே பெயர்த்தெடுத்த செங்கலும் மண்ணும் சுமந்தபடி வந்துகொண்டிருந்தன இரு லாரிகள்.

 

 

பின் கதைக்குறிப்பு:

 

ஏழை வர்க்கத்தின் மிக முக்கிய பொழுதுபோக்கு கிராமத்து கொட்டகைகளில் திரையிடப்படும் திரைப்படங்கள்தான். அவர்களுக்கு திரைப்படம் என்பது திருவிழாபோல..கேபிள் டிவிகளின் படையெடுப்பில் பல திரையரங்கங்கள் நஷ்டத்தில் மூடப்பட்டன. இந்த நொடி எங்கோ ஒரு திரையரங்கின் செங்கல் பெயர்க்கப்படலாம்.

நஷ்டத்தில் மூடப்பட்ட எங்கள் கிராமத்தின் "தனலட்சுமி டாக்கீஸ்"க்கும் இந்த நிமிடத்தில் எங்கோ மரணத்தை எதிர்கொள்ளும் திரையரங்கங்களுக்கும் இந்தக் கதை சமர்ப்பணம்.

 

-நிலாரசிகன்.



2008/6/19 jmms <jmms...@gmail.com>:

Gnaniyar

unread,
Jun 20, 2008, 12:29:44 AM6/20/08
to panb...@googlegroups.com, தமிழ் பிரவாகம், முத்தமிழ்

அன்று மாலை தனலட்சுமியின் திருமண ஊர்வலம் நடந்தது.

ஊர்வலத்திற்கு எதிரே பெயர்த்தெடுத்த செங்கலும் மண்ணும் சுமந்தபடி வந்துகொண்டிருந்தன இரு லாரிகள்.

 

 



கனத்து மனதுடன் படித்து முடித்தேன் நிலா

கவிதைகக் கருவிலிருந்து கதைகளையும் கதைக் கருவிலிருந்து கவிதையையும் பிரித்தெடுக்கும் அன்னப்பறவைதான் நீங்கள்.
நல்ல முடிவு...

ஸ்ரீ

unread,
Jun 20, 2008, 1:53:39 AM6/20/08
to panb...@googlegroups.com
கதை நல்லா இருக்கு நிலா... அப்படியே வாசம் பிடிச்சி கொண்டுவந்திருக்கீங்க.

எனக்கென்னவோ வெயில் படம்தான் திரும்பி ஞாபகம் வருகின்றது. அதில பசுபதி கட்டையன் போன்ற பாத்திரம், அருமையா செஞ்சிருப்பார்.

நன்றி...

2008/6/20 NilaRaseegan <nilara...@gmail.com>:



--
மிக்க அன்புடன்,

ஸ்ரீநிவாசன் அ. பால் ஜோசப்
http://www.sripauljoseph.com/

"நிற்பார் நிற்கநில் லாவுலகில் நில்லோம் இனிநாம் செல்வோமே
பொற்பால் ஒப்பாந் திருமேனிப் புயங்கன் ஆவான் பொன்னடிக்கே
நிற்பீர் எல்லாந் தாழாதே நிற்கும் பரிசே ஒருப்படுமின்
பிற்பால் நின்று பேழ்கணித்தாற் பெறுதற் கரியன் பெருமானே!" - மாணிக்கவாசகர்

எழில்

unread,
Jun 20, 2008, 2:34:08 AM6/20/08
to panb...@googlegroups.com
அருமையான கதை நிலா!!!!!!!

NilaRaseegan

unread,
Jun 23, 2008, 7:14:18 AM6/23/08
to Pira...@googlegroups.com, முத்தமிழ், பண்புடன்

                            தாய்மை -சிறுகதை

 

கையில் வெட்டரிவாளுடன் விறுவிறுவென்று தோட்டத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தான் கந்தசாமி. அழுக்கு வேட்டியின் இடுப்பு முடிச்சிலிருந்து நைந்த பீடி ஒன்றை எடுத்து வாயில் வைத்துக்கொண்டான். தலைப்பாகைக்குள் வைத்திருந்த தீப்பெட்டியை எடுத்து குலுக்கிப்பார்த்து திறந்தபோது உள்ளே ஒரே ஒரு உடைந்த தீக்குச்சி மட்டுமே இருந்தது. தீப்பெட்டியை தூர எறிந்துவிட்டு எதிரே வந்துகொண்டிருந்த  முதியவரை வழிமறித்தான்.

 

"நெருப்பு இருக்கா பெருசு?" கையில் அரிவாளுடன் நெருப்பு கேட்டால் யாருக்குத்தான் பயம் வராது? அதுவும் கண்கள் இரண்டும் சிவந்து உக்கிரத்துடன்  அரை பனைமர உயரத்தில் ஒருவன் கேட்டால் குலைநடுங்காமல் என்ன செய்யும்? தீப்பெட்டியை கொடுக்கும் போது கை நடுங்கியது பெரியவருக்கு. பீடிக்கு நெருப்பு வைத்துவிட்டு தீப்பெட்டியை அவரிடம் கொடுக்கும்போது "இன்னைக்கு இந்த பீடி எரியுற மாதிரி நாளைக்கு எம் பொஞ்சாதி எரிவா" என்று சொல்லிவிட்டு நடையை கட்டினான் கந்தசாமி. ஒன்றும் புரியாமல் நகர்ந்து சென்றார் பெரியவர்.

 

மனதிற்குள் பல கேள்விகள் இருந்தாலும் தன்னுடன் வேலை செய்யும் இருளப்பன் சொன்னது மட்டும் மீண்டும் மீண்டும் கந்தசாமியின் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது.

 

"என்ன கந்தா ஒம் பொஞ்சாதி அடிக்கடி நம்ம தோட்டத்து மோட்டார் ரூமுக்கு போயிட்டு வர்றா?  காலம் கெட்டு கெடக்குது அவ்வளவுதான் சொல்லுவேன்"

இருளப்பன் வைத்த தீ கந்தசாமியின் கண்களில் தெரிந்தது.

 

நடையின் வேகத்தை கூட்டினான். அரிவாளின் கைப்பிடியை இறுக்கிப்பிடித்திருந்தது கந்தசாமியின் வலதுகை. இவனுடைய வேகத்தைக் கண்டு

ஊர்க்கோடியில் தன் வீட்டுத் திண்ணையில் படுத்திருந்த வெட்டியான்  "ஊருக்குள்ள இன்னைக்கி ஒரு பொணம் விழுதுடோய்" என்று சந்தோஷமாக  சங்கில் படிந்திருந்த தூசியை பழைய துணியால் துடைக்க ஆரம்பித்தான்.

 

 

கந்தசாமியின் அக்காள் மகள்தான் காமாட்சி. கட்டினால் மாமாவைத்தான் கட்டுவேனென்று ஒத்தைக்காலில் நின்று கந்தசாமியை திருமணம் செய்துகொண்டவள். அவளா இப்படி? இருளப்பன் முதலில் சொன்னபோது நம்பாமல் அவன் சட்டையை பிடித்து சண்டைக்கு போய்விட்டான் கந்தசாமி.

 

ஆனாலும் மனசுக்குள் ஒரு குரல் ஒலித்துக்கொண்டே இருந்தது. எதற்காக தினமும் இரு முறை தோட்டத்திற்கு காமாட்சி போகவேண்டும். அதுவும் இந்த கருக்கல் நேரத்தில் அவளுக்கு அங்கே என்ன வேலை? தனக்குள் இருந்த சந்தேக மிருகம் மெல்ல வளர்ந்து பெரு உருவமாய் காட்சியளிக்க ஆரம்பித்தவுடன் குடிசைக்கூரையில் சொருகி வைத்திருந்த அரிவாளை எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்.

 

போன மாதம் நிறைமாத கர்ப்பிணியாக காமாட்சி இருந்தபோது இருந்த சந்தோசமும், இறந்தே குழந்தை பிறந்ததை தயக்கத்தோடும் கண்ணீரோடும் காமாட்சியிடம் சொன்னபோது கொஞ்ச நேரம் ஓவென்று அழுதவள் பின்னர் இவனைக் கட்டிப்பிடித்துக்கொண்டு "நீங்கதான் மாமா எனக்கு கொழந்த எல்லாமே" என்று அவள் உருகியபோது அடைந்த சந்தோஷமும் இப்போது அவளை வெட்டி எறிய போகின்ற நேரத்தில் கந்தசாமிக்கு நினைவுக்கு வந்தன.

 

தான் வேலைசெய்யும் தோட்டத்தின் முதலாளி நல்லவர்தான் ஆனால் அவரது மகன் தான் சரியில்லை என்பது கந்தசாமியின் நெடுநாளைய எண்ணம். வெளிநாட்டில் படித்தவன் என்பதால் எப்போதும் "டிப்-டாப்" ஆசாமியாக உலா வந்த முதலாளியின் மகனை ஊரிலுள்ள இளவட்ட பெண்கள் எல்லோரும்  பார்த்து வாய்பிளந்தார்கள். போன வாரம்கூட முதலாளியின் வீட்டுவேலைக்கு காமாட்சி போய்வரும்போது கையில் பெரிய பெளடர் டப்பா ஒன்றை கொண்டுவந்தாள். "பாரு மாமா எவ்ளோ வாசமா இருக்கு, நம்ம சின்ன மொதலாளி தந்தாக" வெள்ளந்தியாக அவள் சொன்னதை அன்று இவன் பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை.

 

 

 

இத்தனைநாட்கள் தன்னை முட்டாளாக்கிவிட்டாளே அந்த பாதகி என்று கருவிக்கொண்டே தோட்டத்தை வந்தடைந்தான் கந்தசாமி. தூரத்தில் மோட்டார் ரூம் தெரிந்தது.  அதற்குள்தானே இருக்கிறார்கள் இருவரும்? பெளடர் கொடுத்து மயக்கிய முதலாளியின் மகனின் தலையை இரண்டாக பிளக்காமல் இந்த அரிவாள் கீழே இறங்காது..

 

வரப்பில் விறுவிறுவென்று நடந்து மோட்டார் ரூம் நோக்கி முன்னேறினான்.

மோட்டார் ரூமின் கதவு சாத்தப்பட்டிருந்தது. சேற்றுக் காலால் ஓங்கி ஒரு மிதி மிதித்ததில் அந்த தகரக் கதவு படாரென்று திறந்துகொண்டது. சுவர்பக்கம் திரும்பி தன் ஆடையை சரிசெய்து கொண்டிருந்த காமாட்சி கதவு திறந்த சத்தத்தில் வெடுக்கென்று திரும்பி பார்த்தாள். கையில் அரிவாளும் கண்களில் வெறியுடனும் நின்றிருந்த கந்தசாமியை பார்த்தவுடன் ஆடிபோய்விட்டாள் காமாட்சி. பின் சுதாரித்து பேச ஆரம்பித்தாள்.

 

"என்னை மன்னிச்சுடு மாமா. உனக்கு தெரியாம இங்க வந்தது எந்தப்புதான். நம்ம குழந்த செத்தே பொறந்ததால மாரு கட்டி வலி எடுக்கும்போதெல்லாம்

வீட்டு புறவாசல் பக்கத்துல நின்னு தாய்ப்பாலை பீச்சி வெளியேத்துவேன். அப்போதான் ஒரு தெருநாய் நம்ம வீட்டு வேலிக்கு பக்கத்துல ஆறு குட்டி போட்டிருக்கறது தெரிஞ்சது.

போன வாரம் கார்பரேசன் கார படுபாவிங்க அந்த தெருநாயயும் நாலு குட்டிகளையும் பிடிச்சிட்டு போயிட்டாங்க.  பஞ்சாரத்துக்குள்ள ரெண்டு குட்டிங்க கிடந்ததால இந்த ரெண்டும் தப்பிச்சிடுச்சி. உனக்குதான் நாய்,பூனையெல்லாம் பிடிக்காதே. அதனாலதான் குட்டிகளை கொண்டு வந்து இந்த மோட்டார் ரூமுல   வச்சிருக்கேன். வீணா போற தாய்ப்பாலை இந்த குட்டிங்க ரெண்டும் குடிக்கிறத பார்க்கிறப்போ எவ்ளோ சந்தோசமா இருக்கு தெரியுமா?  அங்க பாரு மாமா" கடகடவென்று பேசிவிட்டு அந்த சிறிய அறையின் மூலையை நோக்கி கைகாட்டினாள் காமாட்சி.

 

சிறிய கிண்ணத்திலிருந்த தாய்ப்பாலை குடித்துக்கொண்டிருந்தன வெள்ளை நிறத்தில்  இரு நாய்க்குட்டிகள். அப்படியே சிலையாகி நின்றுவிட்டான் கந்தசாமி.

புல்லறுக்க வந்த மாமனின் கைகளில் எதற்கு வெட்டரிவாள் என்று புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தாள் காமாட்சி.

 

-நிலாரசிகன்.






Gnaniyar

unread,
Jun 23, 2008, 7:22:30 AM6/23/08
to panb...@googlegroups.com, Pira...@googlegroups.com, முத்தமிழ்

சிறிய கிண்ணத்திலிருந்த தாய்ப்பாலை குடித்துக்கொண்டிருந்தன வெள்ளை நிறத்தில்  இரு நாய்க்குட்டிகள். அப்படியே சிலையாகி நின்றுவிட்டான் கந்தசாமி.

புல்லறுக்க வந்த மாமனின் கைகளில் எதற்கு வெட்டரிவாள் என்று புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தாள் காமாட்சி.


படித்துவிட்டு அசந்தே போய்விட்டேன் நிலா...

என்ன ஒரு அருமையான கரு மற்றும் விறுவிறுப்பான கதையோட்டம்

ஆரம்பித்தில் பிடிக்கின்ற வேகம் இறுதி வரைக்கும் குறையவேயில்லை.


வாழ்த்துக்கள் நிலா

- ரசிகவ் ஞானியார்

NilaRaseegan

unread,
Jun 23, 2008, 7:24:57 AM6/23/08
to mutht...@googlegroups.com, panb...@googlegroups.com, Pira...@googlegroups.com
ஈரம் காய்வதற்குள் கிடைக்கின்ற
உங்களது வாழ்த்தில் அழகாகிறது என்
மாலைப்பொழுது.
நன்றி ரசிகவ்.

2008/6/23 Gnaniyar <ras...@gmail.com>:

எழில்

unread,
Jun 23, 2008, 7:25:01 AM6/23/08
to panb...@googlegroups.com
 நல்ல கதை நிலா!!!!
 


 

Raseem

unread,
Jun 23, 2008, 9:25:44 AM6/23/08
to panb...@googlegroups.com

ssssuuuuuuuuuuuperrrrrrrrrrrrrrrrrrrrrr

செல்வன்

unread,
Jun 23, 2008, 11:34:06 AM6/23/08
to panb...@googlegroups.com

முதலில் கிராம‌ம்,ப‌ம்ப் ரூம்,ம‌னைவியின் த‌வ‌றென கென்னின் சிறிது காமம் சிறுக‌தையை நினைவு கூர்ந்தாலும் க‌டைசியில் அழ‌கான‌ க‌விதையாக‌ முடிந்த‌து உங்க‌ள் சிறுக‌தை.

வாழ்த்துக்க‌ள் நிலா :)

--
அன்புட‌ன்
குட்டி செல்வ‌ன்

2008/6/23, Raseem <md.r...@gmail.com>:

ssssuuuuuuuuuuuperrrrrrrrrrrrrrrrrrrrrr

தணிகை&THANIGAI

unread,
Jun 23, 2008, 5:05:25 PM6/23/08
to panb...@googlegroups.com
கென்னோட கதை மாதிரி தோனுச்சு..ஆனா முடிவு வேறயா தானனிருக்கோனுமின்னு அப்பவே நினைச்சேன்..ஆனா கதையோட ஹாலிவுட் தொரத்தலில் முடிவை யூகிக்கவே முடியலை..கதையோட கலந்து கனத்துடுச்சு மனசும் முடிவும்...
 
 
நல்லா இருக்கு அண்ணா..

 

jmms

unread,
Jun 24, 2008, 1:40:01 AM6/24/08
to mutht...@googlegroups.com, Pira...@googlegroups.com, பண்புடன்
தாய்மை மிக அழகு..

NilaRaseegan

unread,
Jul 3, 2008, 2:36:23 AM7/3/08
to mutht...@googlegroups.com, பண்புடன், தமிழ் பிரவாகம்

ஒடோகொயிலியஸ் விர்ஜினியனுஸ்(Odocoileus virginianus ) – அறிவியல் புனைக்கதை

உலகப் புகழ் பெற்ற திருநெல்வேலி ஐ.ஐடியில் படித்த தனக்கு இப்படி ஒரு நிலைமை வந்ததை எண்ணி வருந்தினான் ஜேம்ஸ். உலகின் இளம் விஞ்ஞானி என்கிற பட்டமெல்லாம் தனக்கிருந்து என்ன பயன் என்று நொந்துகொண்டே ஹாலில் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான்.

ஜெனி மீது முதல் முறையாக கோபம் வந்தது.அதை விட அதிகமாக ஜெனியின் கொள்ளுப்பாட்டன் மீது கோபம் வந்தது. நேற்று டிஜிட்டல் நூலகத்தில் அவருடைய வலைப்பதிவை படித்ததிலிருந்து ஜெனியின் பிடிவாதம் அதிகமாகிவிட்டது. "உலகிலேயே அதிக ருசி கொண்ட மாமிசம் மான்கறிதான்" என்று ஜெனியின் கொள்ளுப்பாட்டன் தன்னுடைய வலைப்பதிவில் எழுதியதை படித்ததிலிருந்து தனக்கும் மான்கறி வேண்டும் என்று அடம்பிடித்தாள் ஜெனி.

 

பிற உயிர்களை கொன்றால் என்ன நடக்கும் என்கிற எண்ணம் வந்தவுடன் ஜேம்ஸுக்கு பயம் தொற்றிக்கொண்டது. இரு புறாக்களை வேட்டையாடி சமைத்து தின்றதால் முதுமை ஊசி போடப்பட்டு ஒரே நிமிடத்தில் நாற்பது வயதை அடைந்துவிட்ட தன்னுடைய பக்கத்து வீட்டுக்காரனின் முகம் ஞாபகத்திற்கு வந்தது. நாற்பது வயது ஆனவர்களுக்கு கட்டாய ஓய்வு கொடுத்துவிடுவார்கள். அதன் பிறகு அவர்கள் வசிக்கும் தெருவில் உள்ள மரங்களை பராமரிப்பது, ஒவ்வொரு தெருவிலும் உள்ள கழிப்பறைகளை சுத்தம் செய்வதும்தான் வேலை என்றாகிவிடும்.

 

ஜெனிக்காக மானை வேட்டையாடி பிடிபட்டால் நாளைக்கே நாற்பது வயதாக்கி விடுவார்கள். அதன்பிறகு இப்போது போல் மாதம் இருநூறு கோடி சம்பளம் கிடைக்காது. பென்சன் பணம் மாதம் இரண்டு கோடி ரூபாய் மட்டுமே கிடைக்கும்.

இரண்டு கோடிக்கு ஒரு பழைய கார் கூட வாங்க முடியாது. ஆனாலும் ஜெனிக்காக இதைச் செய்தே ஆக வேண்டும். அதுவும் அரசிடம் பிடிபடாமல் செய்தாகவேண்டும். காதலிக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

 

"ஹாய் டியர் என்ன ரொம்ப யோசனையில இருக்க?"

பின்புறமாக வந்து ஜேம்ஸைக் கட்டிக்கொண்டு அவன் முதுகில் கன்னம் பதித்தவாறே கேட்டாள் ஜெனி.

"நான் முடிவு பண்ணிட்டேன் ஜெனி. உனக்காக மானை வேட்டை ஆட போறேன்"

தீர்க்கமான குரலில் சொன்னான் ஜேம்ஸ்.

 

"வாவ்…எப்படி ஜேம்?"

 

"எப்படின்னு முடிவு பண்ணல ஆனா இன்னும் சரியா மூணு மாசத்துல என் செல்ல ஹனிக்கு மான்கறியை நானே ஊட்டிவிடுவேன்" என்றபடி அவளது இதழ்களை ஈரமாக்கினான்.

 

சொன்னதை செயல்படுத்த தினமும் பல மணி நேரம் உழைத்தான் ஜேம்ஸ். உலகில் மொத்தம் மிஞ்சியிருப்பது இரண்டு மான்கள் மட்டும்தான் என்கிற செய்தி படித்தவுடன் தன் மூதாதையர்களை திட்டித்தீர்த்தான். அந்த இருமான்களும் வல்லநாடு மலையில் வசிப்பதை அறிந்துகொண்டான். மலையை கண்காணிப்பதற்கென்றே ஒரு செயற்கைகோளை உருவாக்கி இருந்தது அரசு.

அந்த செயற்கைகோளை மீறி எப்படி அந்த மான்களை நெருங்குவது என்று யோசித்தான் ஜேம்ஸ்.

 

மின்னலென ஒரு எண்ணம் தோன்றியது. அதன் பிறகு இரண்டு வாரங்களாக ஜேம்ஸ் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. வீட்டிற்கு கீழே நூறு அடி ஆழத்திலிருந்த தன்னுடைய ரகசிய அறையில் மும்முரமாக ஒரு கண்டுபிடிப்பில் ஈடுபட்டிருந்தான் ஜேம்ஸ்.

 

இருவாரங்களாக ஜேம்ஸிடமிருந்து  எவ்வித தொடர்புமின்றி துடித்தாள் ஜெனி.

தன் படுக்கை அறையின் சன்னல் வழியே கடந்து செல்கின்ற தூரத்து பறவைகளை பார்த்துக்கொண்டே படுத்திருந்தாள் .

திடீரென்று தன் கன்னத்தில் யாரோ கிள்ளுவது போன்று உணர்ந்து வெடுக்கென்று எழுந்து நின்றாள். அந்த அறையில் அவளைத் தவிர யாருமில்லை.
சன்னமாய் அவள் காதருகே ஒரு குரல் கேட்டது. "ஹனி மை டியர் ஜெனி"

 

ஜேம்ஸ்ஸின் குரலைக் கேட்டவுடன் திடுக்கிட்டாள். "ஜேம்ஸ் வேர் ஆர் யூ"  பதட்டத்துடன் கேட்டாள் ஜெனி. திடீரென்று அவள் கண்ணெதிரே தோன்றினான் ஜேம்ஸ்.

 

"ஹே ஜேம்ஸ் நீ எப்படி இங்கே வந்தே?"

 

"வெரி சிம்பிள் டியர், இப்போ நான் நினைச்சா யார் கண்ணுக்கும் தெரியாம மறைய முடியும். ரெண்டு வாரமா இதுக்காகத்தான் என்னோட ரகசிய அறையில உழைச்சேன் ஜெனி. இதோ பார் இந்த ஆரஞ்சு கேப்ஸூலை சாப்பிட்டா உடனே கண்ணுக்கு தெரியாம மறஞ்சுடலாம். எப்போ திரும்பவும் சகஜ நிலைக்கு வரணுமோ அப்போ இந்த வயலட் கேப்ஸூல் சாப்பிடணும். இனிமே அந்த மான்கறி இந்த மானுக்குத்தான்" என்றபடி அவள் கன்னத்தில் தட்டினான்.

 

தில்லியிலிருந்து தன்னுடைய காரில் மூன்று நிமிடத்தில் நெல்லைக்கு வந்து சேர்ந்தான் ஜேம்ஸ்.  திருநெல்வேலியில் காரை நிறுத்திவிட்டு ஆரஞ்சு மாத்திரையை விழுங்கி, அங்கிருந்து வல்லநாடு வந்து மூன்று மணி நேரத் தேடலுக்கு பின்னர் ஐம்பதடி தூரத்தில் ஒரு மானைப் பார்த்தான். கொஞ்சம் தழைகளை எடுத்து அதற்குள் ஆரஞ்சு மாத்திரையை வைத்து மானுக்கு கொடுத்தான். அதை தின்றவுடன் மானும் மறைந்துபோனது.

 

ஜெனி வீட்டு வாசற்கதவில் பொருத்தியிருந்த கணினியிடம் உள்நுழைய அனுமதி பெற்று வீட்டு வாசலில் மானுடன் நின்றுகொண்டிருந்தான் ஜேம்ஸ்.

 

ஜெனி வீட்டு வேலைக்கார ரோபோ ஜேம்ஸிற்கு வணக்கம் சொன்னது.

 

"குட் ஈவ்னிங்"  என்றவாறே வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்த சோபாவில் மானை வைத்துவிட்டு ஜெனியைத் தேடினான். பின்னாலிருந்து ஒரு குரல் கேட்டது.

 

"அரசை ஏமாற்றி மானை கடத்த முயன்ற குற்றத்திற்காக உங்களுக்கு முதுமை ஊசி போடப்படும். பிற உயிர்களை கொல்வது சட்டப்படி குற்றம் என்று தெரிந்தும் அந்த குற்றத்தை ஊக்கப்படுத்தியதற்காக மூன்று முதுமை ஊசிகள் போடப்பட்டிருக்கிறது உங்கள் காதலி ஜெனிக்கு. நாளையிலிருந்து இந்தத் தெருவின் கழிவறைகளை சுத்தம் செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்" கரகரத்த குரலில் பேசிவிட்டு எழுந்து சென்ற மான் வடிவ ரோபோவைக் கண்டு உறைந்து நின்றான் ஜேம்ஸ். மெல்ல அவன் தோள் தொட்டாள் மூதாட்டி ஜெனி.

 

(வலைப்பதிவர் சிறில் அலெக்ஸ்  நடத்தும் அறிவியல் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது)


-நிலாரசிகன்.



2008/6/27 rajupandian raju <nambika...@gmail.com>:
கதை நல்லாருக்கு நண்பா! கடைசியில் ஏதேனும் திருப்பம் இருக்கும் கதை என்று நினைத்துக்கொண்டேதான் படித்தேன்,ஆனால் இப்படிப்பட்ட திருப்பம் கொடுப்பாய் என நினைக்கவில்லை! வாழ்த்துக்கள்

On 6/25/08, NilaRaseegan <nilara...@gmail.com> wrote:
வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.

2008/6/24 Dr. M. Sivasankar <sivasan...@gmail.com>:
நானும் முடிவை எதிர்பார்க்கவில்லை நிலா, ஆனால் எப்படியும் கள்ளத்தொடர்பு இருக்காது என்று யூகித்தேன், தல, இதையெல்லாம் ஏதேனும் வார இதழ்களுக்கும் அனுப்பலாமே? அற்புதமாக இருக்கின்றன, இல்லையென்றால் நிலா சிறுகதைகள் என்று அடுத்த தொகுப்பாக புத்தகமாக வெளியிடுங்கள் தலை....அற்புதம், வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்,
சிவா

2008/6/24 jmms <jmms...@gmail.com>:



--
Dr.M.Sivasankar, Wipro Technologies, Bangalore , India.
web: http://biosankar.4t.com
blog for tamil articles: http://srishiv.blogspot.com


 



--
அள்ளித்தர நட்புடன்,
நிலாரசிகன்.
"தமிழுக்கு நிலவென்று பேர்"
என் கவிதை புத்தகம் வாங்க -->
http://www.anyindian.com/product_info.php?products_id=212001
கவிதைகள் --> http://nilaraseegan.blogspot.com
மழலைகளுக்காக -->http://www.helptolive.org/



--
நட்புடன்
நம்பிக்கைபாண்டியன்
http://npandian.blogspot.com/

Shylaja N

unread,
Jul 3, 2008, 6:03:55 AM7/3/08
to panb...@googlegroups.com
தலைப்பு    எனக்கு   குழந்தையின்  மழலைபோல இருந்தது!!!!!  அப்புறம் அர்த்தம் தெரிஞ்சி
கதையை படிச்சேன்..(இப்போதான் நான் ஒரு மான் பதிவு போட்டேன்,
படிச்சீங்களா மேன்?:)(நிலாரசிகன்?:))
மான்கறி முயல்கறின்னு மக்கள் அவைகளைக்கொன்னுபோடறது என்ன தர்மமோ?
சிறந்த அறிவியல் கதை நிலா! பரிசு கிடைக்க வாழ்த்துகள்!

 
2008/7/3, NilaRaseegan <nilara...@gmail.com>:

Gnaniyar

unread,
Jul 3, 2008, 11:55:46 PM7/3/08
to mutht...@googlegroups.com, பண்புடன், தமிழ் பிரவாகம்


 
On 7/3/08, NilaRaseegan <nilara...@gmail.com> wrote:

ஒடோகொயிலியஸ் விர்ஜினியனுஸ்(Odocoileus virginianus ) – அறிவியல் புனைக்கதை


இந்த கணிப்பொறியின் அவசர உலகத்திலும் இப்படி யோசித்து எழுதுவதற்கும் நேரமிருக்கிறதா நிலா?

கண்டிப்பாக இந்தக் கதை முதல் பரிசு பெற்றுவிடும் என்ற நம்பிக்கையிருக்கிறது.

உருவாகிக்கொண்டிருக்கின்றான் இன்னொரு சுஜாதா

sree Koushi

unread,
Jul 6, 2008, 11:45:36 PM7/6/08
to panb...@googlegroups.com
சிறந்த அறிவியல் கதை நிலா...


என்றும் அன்புடன்
கௌசல்யா

NilaRaseegan

unread,
Jul 7, 2008, 4:59:07 AM7/7/08
to mutht...@googlegroups.com, பண்புடன், தமிழ் பிரவாகம்
வாழ்த்திய நண்பர்களுக்கு நன்றிகள் :)

2008/7/7 Gokul Kumaran <gokul...@gmail.com>:


On 6/17/08, NilaRaseegan <nilara...@gmail.com> wrote:
  சேமியா ஐஸ் - சிறுகதை
 
நீங்கள் சிறுகதை எழுதும் விதம் மிகவும் நேர்த்தியாக உள்ளது. நல்ல நடை.
 
வாழ்த்துக்கள்.
 
ப்ரியத்துடன்,
கோகுல்


NilaRaseegan

unread,
Jul 9, 2008, 5:33:23 AM7/9/08
to mutht...@googlegroups.com, பண்புடன், தமிழ் பிரவாகம்

                               "குப்பைக்காரன்"

                                                - அறிவியல் சிறுகதை

 

 

முதன் முதலாக செவ்வாய் கிரகத்திற்கு செல்கின்ற விண்வெளி வீரர்களின் பட்டியலில் தன் பெயர் இல்லை என்பதைக் கண்டவுடன்  வில்லியம்ஸுக்கு கோபம் தலைக்கேறியது. தன்னுடைய பிறந்த நாளான ஆகஸ்ட் 15ல் செவ்வாய் கிரகத்திற்கு செல்கின்ற வாய்ப்பு கிடைக்கும் என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தான். அவனுடைய மேலாளர் "உங்கள் பிறந்த நாளன்று ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது மிஸ்டர். வில்லியம்ஸ் "என்று போனவாரம்தான் கைகுடுத்துவிட்டு போனார். ஆனால் பயணம் செய்யப்போகும் ஏழு விண்வெளி வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டபோது தன்னுடைய பெயரைத் தேடித் தேடி

ஏமார்ந்து போனான்.

 

வில்லியம்ஸ் உலகப் புகழ் பெற்ற இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் பணிபுரியும் விஞ்ஞானி. விண்வெளி ஆய்வு மையத்தில் பணிபுரியும் விஞ்ஞானிகளிலேயே அதிபுத்திசாலியாக தானிருந்தும் மற்றவர்கள் "குப்பைக்காரன்" என்று தன்னை அழைப்பதை வில்லியம்ஸ் கொஞ்சமும் விரும்பவில்லை.இவனொன்றும் தெருவில் போடப்படுகின்ற குப்பைகளை அள்ளும் குப்பைக்காரன் அல்ல.

 

விண்வெளியில் பல நூறு கிலோ மீட்டர் உயரத்தில் சிறியதும் பெரியதுமாக பல லட்சம் ஓட்டை உடைசல்கள் பறந்து கொண்டிருக்கின்றன. இவை எல்லாம் செயலற்றுப் போன செயற்கைக்கோள்களின் கழன்ற உறுப்புகள். செயற்கைக்கோள்களைச் செலுத்திய ராக்கெட்டுகளின் உடைந்த பாகங்களும் இதிலடங்கும்.  இந்த விண்வெளிக்குப்பைகளை லேசர் கற்றை மூலமாக இங்கிருந்தே அழிப்பதுதான் வில்லியம்ஸின் வேலை.  

 

 

எரிகின்ற தீயில் எண்ணை ஊற்றுவதுபோல ஜடாயுவின் பயணம் செய்யப்போகும்

வீரர்களின் பட்டியலில் தன் பெயர் இல்லாததால் அவர்கள் அனைவரையும் பழிவாங்கும் கொடூர எண்ணம் வில்லியம்ஸுக்கு தோன்றியது.

உடனடியாக செயலில் இறங்கிவிட்டான். விண்வெளியில் ஒரு ராக்கெட்டின் உடைந்த பாகம் சுற்றிக்கொண்டிருப்பதை தொலைநோக்கியில் பார்த்தவுடன் அவனது மூளைக்குள் குடிகொண்டிருந்த  கொடூர எண்ணம் உடலெங்கும் பரவ ஆரம்பித்தது.

 

வழக்கமாக இது போன்ற குப்பைகளை லேசர் கற்றை செலுத்தி அழித்துவிடுவது இயல்பு. அதுதான் அவனது வேலையும் கூட. ஆனால் இப்போது அந்த உடைந்த ராக்கெட் துண்டை லேசர் கற்றை செலுத்தி தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் இறங்கினான் வில்லியம்ஸ். இரு வார கடும் முயற்சிக்குப் பின் வில்லியம்ஸ் விரும்புகின்ற இடத்திற்கெல்லாம் அந்த ராக்கெட் துண்டு பயணித்தது.

 

இதற்கிடையில், இவன் செய்கின்ற வேலையைக் கண்காணிப்பதற்கென்றே வடிவமைக்கப்பட்ட ரோபோவுக்குத் தெரியாமல் இதனை செய்தாகவேண்டும். ஏனெனில், ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை அந்த ரோபோ இவனது மேலாளருக்கு ரிப்போர்ட் அனுப்பும். ஆனால் அதிபுத்திசாலியான வில்லியம்ஸுக்கு அந்த இயந்திர மனிதனை கட்டுப்படுத்துவது பெரிய விசயமாக இருக்கவில்லை. ரோபோவுக்கு கட்டளைகளை பிறப்பிக்கும் கணினியில் புதிதாய் ஒரு புரோக்ராம் எழுதி ரோபோவை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தான்.

 

ஐம்பது வருடங்களுக்கு முன்பு அமெரிக்கா விண்ணுக்கு செலுத்திய கொலம்பியா ஓடத்தின் இறக்கை மீது ஏதோ ஒரு பொருள் மோதியதால் ஒரு இந்திய வம்சாவளிப் பெண் உட்பட ஏழு விஞ்ஞானிகளின் உயிர் பறிக்கப்பட்டது. அது ஒரு தற்செயலான நிகழ்வு.

 

அதே போல் இந்த உடைந்த ராக்கெட் துண்டை லேசர் கற்றை மூலமாக செலுத்தி

இந்தியா விண்ணிற்கு அனுப்ப இருக்கும்  "ஜடாயு" ஓடத்தில் மோதச்செய்துவிடுவதுதான் வில்லியம்ஸின் திட்டம். இதுவும் ஒரு தற்செயலான செயல் என்றே உலகம் எண்ணும். தனக்கு கிடைக்காத வாய்ப்பு தன்னை கேலி செய்யும் மற்றவர்களுக்கு கிடைப்பதா?

 

14/ஆகஸ்ட்/2053.

 

விண்வெளியில் தன் கட்டுப்பாட்டில் இருக்கும் உடைந்த ராக்கெட்துண்டு ஜடாயு மீது மணிக்கு 32 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் மோதும்படி கச்சிதமாக ஒரு புரோக்ராம் எழுதினான் வில்லியம்ஸ். அவனது இதழ்களில் கொடூரமான ஒரு புன்னகை உருவாயிற்று.

 

15/ஆகஸ்ட்/2053 அதிகாலை நான்கு மணி.

 

பெருத்த சத்தமுடன் விண்ணோக்கி கிளம்பியது ஜடாயு.

 

ஜடாயுவின் உள்ளே…

வில்லியம்ஸை சுற்றிலும் கவசமணிந்த சக பணியாளர்கள்  ஜடாயு விண்வெளி ஓடத்திற்குள் மிதந்தவாறு கண்ணடித்தார்கள். தன் காதுகளில் மாட்டப்பட்டிருந்த

ஸ்பீக்கரில் அவர்களுடைய பாட்டுச் சத்தம் சன்னமாக கேட்டது. "ஹாப்பி பேர்த்டே டு யூ".

 

-நிலாரசிகன்.

 


(வலைப்பதிவர் சிறில் அலெக்ஸ் நடத்தும் அறிவியல் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது)




2008/7/7 NilaRaseegan <nilara...@gmail.com>:

ஸ்ரீ

unread,
Jul 9, 2008, 10:00:16 AM7/9/08
to panb...@googlegroups.com
நல்ல கதை நிலா...

இருப்பினும் லேசரால் ஒரு பொருளை இயக்குவது என்பது இயலாதது என்று நினைக்கின்றேன். இருப்பினும் எதிர்காலத்தில் அப்படி நிகழ சாத்தியமிருக்கின்றது.

இன்னொன்று, ஒரு விண்கலத்தினுள் ஏறுவதற்குள் நிறைய விஷயங்களை செய்ய வேண்டும். அப்படி எதுவும் செய்யாமல் சட்டென்று வில்லியம்ஸை கொண்டு போவது சாத்தியமா???

நன்றி...

2008/7/9 NilaRaseegan <nilara...@gmail.com>:

--
மிக்க அன்புடன்,

ஸ்ரீநிவாசன் அ. பால் ஜோசப்

தீட்டாத ஓவியங்களும் தீராத எண்ணங்களும்... - http://tamil.sripauljoseph.com/

NilaRaseegan

unread,
Jul 9, 2008, 10:03:49 AM7/9/08
to panb...@googlegroups.com
//இன்னொன்று, ஒரு விண்கலத்தினுள் ஏறுவதற்குள் நிறைய விஷயங்களை செய்ய வேண்டும். அப்படி எதுவும் செய்யாமல் சட்டென்று வில்லியம்ஸை கொண்டு போவது சாத்தியமா???//

லாஜிக் இல்லாத கதை என்று வாசித்தால் அனைத்தும் சாத்தியமே :)

2008/7/9 ஸ்ரீ <sripau...@gmail.com>:

NilaRaseegan

unread,
Jul 15, 2008, 7:06:00 AM7/15/08
to panb...@googlegroups.com, முத்தமிழ், தமிழ் பிரவாகம்

மழை
(அறிவியல் புனைக் கதை)

இரண்டு நாட்களாக யாரிடமும் பேசவில்லை. எப்படி பேசுவது? பேசுவதற்கு ஆள் வேண்டுமே?
தொடர்ச்சியான மழையில் வெள்ளம் வந்ததில் மொத்த நாடும் அழிந்துபோனது. கடல் கொந்தளிப்பும் சேர்ந்துகொண்டதில் எங்கு பார்த்தாலும் தண்ணீர்.

ஆபத்து காலத்தில் பயன்படுமென்று நான் வாங்கி வைத்திருந்த ரப்பர் படகு இருந்ததால் தப்பிக்க முடிந்தது. துடுப்பு வலித்து வலித்து உள்ளங்கை மரத்துப்போய்விட்டது. இனியும் என்னால் இந்தப் படகை ஓட்ட முடியாது. எங்கே போகிறோம்,எங்கே சென்று சேருவோம் எதுவும் தெரியாமல் ஏதோ ஒரு நம்பிக்கையில் மிதந்து கொண்டிருக்கிறது என் படகு. பசி உயிர் போகிறது.

மயக்கம் வருவது போலிரு....... விழித்துப் பார்த்தபோது தூரத்தில் பச்சை பசேலென்று மரங்கள் தென்பட்டன. சிறிய தீவு போலிருந்தது. வேகவேகமாக படகை செலுத்தினேன்.

நிலம்! நிலத்தில் இறங்கி மரங்களை நோக்கி ஓடினேன். நிறைய மாமரங்கள் இருந்தன.மரத்தை சுற்றிலும் மாம்பழங்கள் விழுந்து கிடந்தன. பொறுக்கி எடுத்து சாப்பிட ஆரம்பித்தேன்.

ஏழு பழங்கள் உண்டுமுடித்தபின் பயணக்களைப்பில் அப்படியே படுத்து உறங்க ஆரம்பித்தேன். நான் விழிப்பதற்கு முன் என்னைப் பற்றி அடைப்புக்குறிக்குள் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

[என் பெயர் எக்ஸ். ஆங்கிலத்தில் டபிள்வியூக்கு பின் வரும் எக்ஸ். செயற்கை மழை உருவாக்க அமைக்கப்பட்ட சர்வதேச குழுவின் தலைமை விஞ்ஞானி.

கேல்சியம் குளோரைடு,கேல்சியம் கார்பைடு,கேல்சியம் ஆக்ஸைடு, அமோனியம் நைட்ரேடும் கலந்த கலைவையை காற்றில் செலுத்தினால்,காற்றில் உள்ள ஈரத்தன்மையை உறிஞ்சி மழை மேகத்தை உண்டுபண்ணும் தன்மை உடையவை. மாதம் நான்கு முறை எட்டுமணி நேரம் செயற்கை மழை பொழியவேண்டும் என்று அரசு ஆணை பிறப்பித்திருந்தது.

என் சிறுவயது முதலே பிற உயிர்களை கொன்று இன்பம் காண்பது எனக்கு பிடிக்கும். ஓணான்,அணில்,புறா,கிளி,குயில் இவையெல்லாம் சிறுவயதில் நான் வேட்டையாடி கொன்றது. பிற உயிர்கள் சாகும்போது கிடைக்கின்ற இன்பத்தை வார்த்தையால் வர்ணிக்க முடியாது. இதுதெரியாமல் இந்த குழுவிற்கு என்னை நியமித்தது இந்த அரசின் தவறு!. மாதம் நான்கு முறை உருவாக்க வேண்டிய மழையை தொடர்ந்து இரண்டு நாட்கள் பெய்வதுபோல் உருவாக்கிவிட்டு நான் மட்டும் தப்பித்துக்கொண்டேன். த்ரில்லாக பயணம் செய்ய வேண்டும் என்று எண்ணியதால் ஒரு ரப்பர் படகு மட்டும் எடுத்து வைத்துக்கொண்டேன்.ஓரிரு நாட்கள் பயணித்துவிட்டு உலகை அழித்தவன் நான் என்று சத்தம்போட்டு கத்திவிட்டு நானும் செத்துவிடவேண்டும் என்பதே என் திட்டம்.இப்போது நிம்மதியாக மாம்பழம் சாப்பிட்டுவிட்டு உறங்கிக்கொண்டிருக்கிறேன்]

உறக்கம் கலைந்து விழித்தபோது இருட்டிவிட்டிருந்தது. உலகை அழித்துவிட்டேன் என்றல்லவா நினைத்தேன். எப்படி இந்த இடம் மட்டும் எப்படி தப்பித்தது.இங்கே மட்டும் மழை பெய்யவில்லையா? கடலில் பெய்துகொண்டிருக்கும் மழை இந்த சிறிய தீவை மட்டும் நனைக்காமல் பெய்துகொண்டிருக்கிறதே!
ஆச்சர்யத்துடன் நடக்க ஆரம்பித்தேன். செடிகளையும் மரங்களையும் தவிர வேறொன்றும் இல்லை.
பூச்சிகளின் சத்தமும், உயர்ந்த மரங்களிடையே வசிக்கும் பறவைகளின் ஒலியும் கேட்டுக்கொண்டிருந்தன.
இவைகளை அழிக்க என்னால் இயலாமல் போய்விட்டதே என்று வருத்தம் ஏற்பட்டது.

கவலையுடன் ஒரு பாறையில் சாய்ந்து உட்கார்ந்தேன். பாறைக்கு அருகே இருந்த மரத்திற்கு பின் சலசலப்பு கேட்டது. ஒருவித பயம் தொற்றிக்கொண்டது. ஏதேனும் காட்டுமிருகமாக இருக்குமோ என்றெண்ணியபடி கையில் ஒரு நீண்ட குச்சியை எடுத்துக்கொண்டு அந்த மரத்தின் அருகே சென்றேன்.

அங்கே....

ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள். அவளது உடலை மூட்டுவரை நீண்ட கருங்கூந்தல் மூடியிருந்தது. வேறு உடைகள் இல்லை. அவள் அருகில் நீண்ட தாடியும் இறுகிய உடலுடன் ஒரு இளைஞன் நின்று கொண்டிருந்தான்.
இவர்கள் இருவரையும் கொன்று விட்டால் போதும். உலகை அழித்தவன் நான் என்கிற சந்தோசத்தில் நானும் மரித்துவிடலாம். சற்றுத் தொலைவில் கூரிய கல்லொன்று கிடந்தது. அதை எடுக்க வேகமாக ஓடியதில் கால் இடறி அந்த கல்லில் விழுந்துவிட்டேன். நெஞ்சிலிருந்து இரத்தம் கசிய ஆரம்பித்தது.

என் அருகில் அவர்கள் இருவரும் வந்து நின்றார்கள்..

மரண வலியுடன் "உன் பெயர் என்ன?" என்று அந்த இளைஞனை கேட்டேன்.

"இரண்டாம் ஆதாம்" என்று அவன் சொன்னதை கேட்க நான் உயிருடன் இல்லை.


-நிலாரசிகன்.


(வலைப்பதிவர் சிறில் அலெக்ஸ் நடத்தும் அறிவியல் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது)


2008/7/9 NilaRaseegan <nilara...@gmail.com>:
கவிதைகள் --> http://www.nilaraseeganonline.com/

ஸ்ரீ

unread,
Jul 15, 2008, 4:52:41 PM7/15/08
to panb...@googlegroups.com
அருமையான கதை நிலா... ஆனால் சில பொருட்குற்றங்கள் நெருடுகின்றன... மற்றவர்கள் ஏற்கனவே கூறிவிட்டதால் மேலும் கூறாமல் விடைபெறுகின்றேன்.

நன்றி...

2008/7/15 NilaRaseegan <nilara...@gmail.com>:

NilaRaseegan

unread,
Jul 21, 2008, 6:52:51 AM7/21/08
to Pira...@googlegroups.com, பண்புடன், முத்தமிழ்
ஏலியன் - விஞ்ஞான புனைக்கதை

என் மடியில் தலைவைத்து உறங்கிக்கொண்டிருந்தாள் என் பத்து வயது மகள் டிமோ. மணி இரவு பன்னிரெண்டை தாண்டியிருந்தது. ஜன்னல் வழியே சில்லென்ற காற்றும், ஏதோவொரு பூவின் வாசமும் மிதந்து வந்துது. நான் மிகுந்த குழப்பத்திலிருந்தேன். இரண்டு நாட்களாய் மண்டைக்குள் குடைச்சல். என் மனைவி மேலியனிடமும் சரியாக பேசவில்லை. என் வீட்டு நாயின் குரைப்புச் சத்தம் அவ்வப்போது கேட்டது. இரண்டு நாட்களுக்கு முன்னர் தூக்கமின்றி பின்னிரவில் வீட்டிற்கு பின்னால் உள்ள தோட்டத்தில் நடந்தபோது நான் கண்ட சில விநோதங்கள்தான் இதற்கெல்லாம் காரணம். என்னுடைய முப்பது வருட வாழ்க்கையில் அன்றுதான் அந்த விநோதமான கால்தடங்களை தோட்டத்தில் பார்த்தேன்.

முதலில் ஏதோவொரு மிருகத்தின் கால்தடமென்றே நினைத்தேன். மிருகங்களை பற்றிய ஆராய்ச்சியில் பத்துவருட அனுபவமுள்ள என்னால் அந்த கால்தடத்திற்கு எந்தவொரு மிருகமும் காரணமில்லை என்று உறுதியாக நம்ப முடிந்தது. அப்படியெனில்.....  அந்த தடங்களை புகைப்படம் எடுத்துவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டேன்.

என்னுடைய கணினியின் டிஜிட்டல் நூலகத்தை ஆராய்ந்தபோது நூறு வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட கால்தடமொன்றின் புகைப்படம் கிடைத்தது. அந்த புகைப்படத்திலுள்ள கால்தடமும் நான் எடுத்த புகைப்படத்திலுள்ள கால்தடமும் ஒத்துப்போனதை கண்டவுடன் துள்ளிக்குதித்தேன். என் சந்தேகம் சரிதான். ஒரு வேற்றுகிரக வாசியின் கால்தடம்தான் நான் தோட்டத்தில் பார்த்தது.

வேற்றுகிரக வாசியை உயிருடன் பிடித்துக்கொடுத்தால் மூன்று தலைமுறைக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்துகொடுக்கும். என் மகளை தேசத்தின் மிகச்சிறந்த பள்ளியில் சேர்க்கலாம். என் மனைவிக்கு மிக உயர்ந்த பரிசுப்பொருட்கள் வாங்கிக்கொடுக்கலாம்.  சிறகு முளைத்து பறக்க ஆரம்பித்தன என் கனவுகள்.

ஏலியனை பற்றி இணையத்தில் ஆராய்ந்ததில் ஏலியன்கள் பலமற்றவர்கள் என்ற செய்தி மனதிற்கு தெம்பூட்டியது.
உடனே செயலில் இறங்கினேன். என்னிடமிருக்கும் இரவுக்கேமிரா மூலமாக தினமும் தோட்டத்தை நோட்டமிட ஆரம்பித்தேன். நான்கு நாட்களுக்கு பின் அந்த வினோத உருவம் மெதுவாய் என் தோட்டத்திற்குள் நுழைந்து அங்கிருந்த மரத்தின் மீது விறுவிறுவென்று ஏறி பழம் பறித்து தின்ன ஆரம்பித்தது தெரிந்தது. மிகவும் குள்ள உருவம்.உடம்பில் ரோமங்கள் இல்லை. பெயர்தெரியாத ஏதோ ஒன்றால் இடுப்பை மறைத்திருந்தது. முகத்தில் இரண்டு கண்கள் இருந்தன. மூக்கு நீண்டிருந்தது. தலையில் மட்டும் கொஞ்சம் முடியிருந்தது. ஆச்சரித்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன். இப்படியும் ஒரு ஜீவனா? நிறைய புகைப்படங்கள் எடுத்தேன்.

மறுநாளிருந்து அந்த ஏலியனை பிடிக்க திட்டம் தீட்ட ஆரம்பித்தேன். இந்த குள்ள உருவத்தை பிடிக்க திட்டம் தேவையா என்று மனதிற்குள் தோன்றினாலும் நூறு வருடங்களுக்கு முன்பு அதாவது 2100ம் ஆண்டு ஏலியனுக்கும் என் முன்னோருக்கும் நடந்த மிகப்பெரிய போரில் ஏலியன்களால் உயிரிழந்த "தியாகிகள் சரித்திரம்"  புத்தகம் நினைவுக்கு வந்தது. ஏலியன்கள் நம் போன்று உடல்வலிமை இல்லாவிட்டாலும் நிறைய ஆயுதங்கள் வைத்திருப்பதாக அந்தப் புத்தகத்தில் எழுதியிருந்தது. ஒருவேளை இந்தக் குள்ளனும் ஏதேனும் ஆயுதம் வைத்திருந்தால்? மனதிற்குள் பலவாறு சிந்தனைகள் ஓடியது. முடிவில் அறுக்க முடியாத இழைகளால் ஆன வலையை வீசி பிடித்துவிட தீர்மானித்தேன்.

தோட்டத்து மரமொன்றின் உச்சியில் அந்த வலையை இலைகளுக்கு இடையில் மறைவாக விரித்தேன்.
அந்த வலையானது ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்க கூடியது. இன்று இரவு அந்த ஏலியன் மரத்தில் பழம் தின்ன வரும்போது அவனை ஒரே அமுக்காக அமுக்கிவிடலாம். அதன்பிறகு இந்த தேசத்தின் விரல்விட்டு எண்ணக்கூடிய பணக்காரர்களில் நானும் ஒருவன்.

வீட்டு பால்கனியில் அமர்ந்து உயர்ரக பைனாகுலர் மூலமாக அந்த மரத்தை கவனிக்க ஆரம்பித்தேன். என் அருகில் வந்து நின்றாள் டிமோ. அவளுக்கு இது வியப்பாகியிருக்க வேண்டும். தினமும் இரவானால் தனக்கு கதை சொல்கின்ற அப்பா இன்று ஏதோ விந்தையாக செய்கிறாரே என்று தோன்றியிருக்க வேண்டும்.

"அப்பா என்ன செய்றீங்க?" என்றவளை அணைத்துக்கொண்டே சொன்னேன்.

"இன்று உனக்கு ஒரு ஏலியனை  பரிசாக தரப்போகிறேன்"  என்னைக் கட்டிக்கொண்டு கன்னத்தில் ஒரு முத்தம் தந்துவிட்டு உறங்க போய்விட்டாள் டிமோ.

இரவின் இரண்டாம் பாதியில் எதிர்பார்த்தபடியே அந்த உருவம் மெல்ல மரத்தில் ஏறத்துவங்கியது. பழத்தை பறிக்க கையை நீட்டும் சமயத்தில் ரிமோட்டை இயக்கினேன். வலை விரிந்து அந்த உருவத்தை மொத்தமாக அமுக்கியது.
அங்கும் இங்கும் கையை அசைத்து ஏதேதோ செய்தது அந்த ஏலியன்.
வீட்டிலிருந்து இறங்கி வேகமாக ஓடிச்சென்று வலையை தரதரவென்று இழுத்துக்கொண்டு வந்து வீட்டினுள் போட்டேன். மிரட்சியான ஒரு பார்வையுடன் ஒடுங்கி இருந்தது அதன் உடம்பு.

உறங்கிக்கொண்டிருந்த டிமோவும்,என் மனைவி மேலியனும் சத்தம்கேட்டு எழுந்து வந்தார்கள்.

"இதுதான் ஏலியனா அப்பா" என்றாள் என் மகள் வியப்புக்குறையாமல்.

"ம் இதுதான் ஏலியன்" பெருமையுடன் சொன்னேன்.

"இந்த ஏலியன் எங்கிருந்து வந்திருக்கிறதப்பா?" ஆர்வமிகுதியில் கேட்டாள் டிமோ.

"இது Earth எனப்படும் கிரகத்திலிருந்து வந்திருக்கிறது. இனி நாம்தான் இந்த வெப்டியூன் கிரகத்தின் மிகப்பெரும் பணக்காரர்கள்" என்று சொல்லிவிட்டு சத்தமாக சிரிக்க ஆரம்பித்தேன்.


-நிலாரசிகன்.

[வலைப்பதிவர் சிறில் அலெக்ஸ் நடத்தும் அறிவியல் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது]



2008/7/16 கோகுலன் <gokula...@gmail.com>:
ஆஹா.. அறிவியல் புனைக்கதை.. எல்லா வகையான கவிதையிலும் கலக்குறீங்க நிலா..
--
நட்புடன்,

NilaRaseegan

unread,
Jul 30, 2008, 12:20:26 AM7/30/08
to mutht...@googlegroups.com, Pira...@googlegroups.com, பண்புடன்

                             அகல்யா – அறிவியல் புனைக்கதை

 

சடசடவென்று மழைத்துளிகள் விழ ஆரம்பித்தபோது மணி இரவு பதினொன்றுக்கும் மேலிருக்கும். இன்னும் பத்து கிலோ மீட்டர் தூரம் கடந்தாக வேண்டும். சைக்கிளை முடிந்த அளவிற்கு வேகமா மிதிக்க ஆரம்பித்தேன். சாலையின் இரு பக்கமும் கனத்த இருள் கவிந்திருந்தது. பெயர் தெரியாத பூச்சிகளின் சத்தமும், மழை எதிர்நோக்கும் தவளைகளின் சத்தமும் பெரிதாகிக்கொண்டே போனது. சைக்கிள் பஞ்சராகிவிட்டால் என்னாகும் என்பதை நினைத்துப் பார்க்கவே பயமாக இருந்தது. இவை எதைப்பற்றிய கவலையுமின்றி என் தோளை இறுகப்பற்றிக்கொண்டு ஏதோவொரு பாடலை பாடியபடி அமர்ந்திருந்தாள் அகல்யா.

 

அகல்யா என் உயிரில் கலந்துவிட்ட தேவதை. என்னுடன் கல்லூரியில் படித்தவள்.

பாறைமனதிற்குள் வேராக நுழைந்து இன்று விருட்சமாக மாறியவள். இன்று என் காதலி. நாளைய மனைவி. வழக்கமான சாதி பிரச்சினை என்றாலும் அவளது அப்பா ஊரின் மிகப்பெரிய மில்லுக்கு சொந்தக்காரர்.கொழுத்த பணம் படைத்தவர். அவரது கைகளில் சிக்கிவிடாமல் வெளியூர் சென்று வாழ முடிவெடுத்து இப்போது ஊரைவிட்டு சைக்கிளில் தப்பிச் செல்கிறோம். இன்னும் எட்டு கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் டவுனுக்கு சென்றுவிட்டால் தப்பிவிடலாம்.

 

அகல்யாவின் அப்பாவிற்கு இந்நேரம் தெரிந்து ஆட்களுடன் கிளம்பி இருப்பார்.

இவை எதைப்பற்றிய கவலையுமின்றி பாடிக்கொண்டிருந்தாள் அகல்யா.

 

"அகல் கொஞ்சம் பாடாம வாயேன் ப்ளீஸ்மா"

 

"அதெல்லாம் முடியாது பாடுறது என்  இஷ்டம்…நீ சைக்கிளை மிதி" சொல்லிவிட்டு சத்தமாக பாட ஆரம்பித்தாள். எனக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.

 

"ஏய் அறிவுகெட்டவளே ஒங்கப்பன் இந்நேரம் அரிவாளுடன் கிளம்பி இருப்பான். நானே மிதிக்க முடியாம சைக்கிள மிதிக்கிறேன். இதுல பாட்டு ஒண்ணுதான் முக்கியமா?"

 

"சரி நான் பாடலை. ஆமா நாம எங்கே போறோம்?"

 

இதற்குமேல் இவளிடம் பேசி பயனில்லை. எப்போது விளையாடுவது என்று தெரியாது! எனக்கு இதுவும் வேணும் இதுக்கு மேலயும் வேணும். நினைத்துக்கொண்டே சைக்கிளை வேகமாக மிதித்தேன். என் தோளில் சாய்ந்தவள் மெல்ல என் இடுப்பைக் கிள்ளினாள். விளையாட்டுக்காரி! மறுநிமிடமே என் கோபம் மறைந்தது.

 

"கிள்ளாத செல்லம் வலிக்குது"

 

"எப்போ என்னை இறக்கி விடுவ? எனக்கு உட்கார முடியல ரொம்ப வலிக்குது"

 

"கொஞ்சம் பொறுத்துக்கமா இன்னும் நாலு கிலோமீட்டர்தான்"

 

மழை நின்றிருந்தது. காற்று சிலுசிலுவென்று வீசிக்கொண்டிருந்தது.  அகல்யாவிற்கும் எனக்கும் நாளை திருமணம் என்பதை நினைத்து மனசெல்லாம் பூக்களாக மலர்ந்திருந்த நேரத்தில் டவுனை அடைந்தேன்.

 

டவுனிலிருக்கும் என் நண்பனின் தம்பி ஒருவனுடைய வீட்டிற்கு சென்று

கதவை தட்டியபோது நடு இரவு. கதவை திறந்து எங்களை அழைத்துக்கொண்டு மொட்டைமாடியில் உள்ள குடிசைக்கு அழைத்துச் சென்றான் நண்பனின் தம்பி.

 

"அண்ணே நீங்களும் அண்ணியும் இன்னைக்கு ஒருநாள் இங்க தங்கிக்கிங்க,நாளைக்கு மத்த விசயத்த பேசலாம்" சொல்லிவிட்டு கொட்டாவிவிட்டபடி போய்விட்டான்.

 

குடிசைக்குள் கிடந்த கட்டிலில் களைப்புடன் அமர்ந்தேன்.

 

"அகல்யா உங்க அப்பாவை ஜெயிச்சுட்டேன். இனி என் கண்மணியை என்னைவிட்டு பிரிக்க யாராலும் முடியாது நாளைக்கு நம்ம கல்யாணம்"

 

 அகல்யாவிடமிருந்து எந்த பதிலுமில்லை.

 

 

"இராத்திரி பதினோரு மணிக்கு வர்றேன்னு சொன்னவன் இன்னும் வரலையேன்னு பாக்குறியா தாயி…உங்க அப்பன என்ன கேணையன்னு நினைசுட்டானா அந்த பொடிப்பய? நேத்துதான் மெட்ராஸுல இருந்து உன்னைய மாதிரியே ஒரு ரோபோவ ஆர்டர் செஞ்சு வாங்கிட்டுவந்தேன். நீன்னு நெனச்சு அதை கூட்டிக்கிட்டு போயிட்டான். இந்நேரம் பாட்டரி தீர்ந்து அதுவும் செத்திருக்கும்" சொல்லிவிட்டு சிரித்தார் அகல்யாவின் அப்பா. கண்களில் நீர் தளும்ப நின்றிருந்தாள் அகல்யா.


[வலைப்பதிவர் சிறில் அலெக்ஸ் நடத்தும் அறிவியல் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது]


-நிலாரசிகன்.

 



2008/7/24 விஜி சுதன் <vselva...@gmail.com>


On 7/21/08, NilaRaseegan <nilara...@gmail.com> wrote:
ஏலியன் - விஞ்ஞான புனைக்கதை<<<
புனைகதை என்பதை சரியாகப் புரிய வைத்திருக்கின்றீர்கள் நிலவா...:)))


.


என் சந்தேகம் சரிதான். ஒரு வேற்றுகிரக வாசியின் கால்தடம்தான் நான் தோட்டத்தில் பார்த்தது. <<<
நிலவா வர வர......ரொம்ப திடுக்கிடும் திகில் கதையெல்லாம் எழுத ஆரம்பிச்சிட்டீங்க போல....


<<வேற்றுகிரக வாசியை உயிருடன் பிடித்துக்கொடுத்தால் மூன்று தலைமுறைக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்துகொடுக்கும். என் மகளை தேசத்தின் மிகச்சிறந்த பள்ளியில் சேர்க்கலாம். என் மனைவிக்கு மிக உயர்ந்த பரிசுப்பொருட்கள் வாங்கிக்கொடுக்கலாம்.  சிறகு முளைத்து பறக்க ஆரம்பித்தன என் கனவுகள்.<<<
 
நல்ல சொல்லாடல்...

ஏலியனை பற்றி இணையத்தில் ஆராய்ந்ததில் ஏலியன்கள் பலமற்றவர்கள் என்ற செய்தி மனதிற்கு தெம்பூட்டியது.
உடனே செயலில் இறங்கினேன். என்னிடமிருக்கும் இரவுக்கேமிரா மூலமாக தினமும் தோட்டத்தை நோட்டமிட ஆரம்பித்தேன். <<<
 
குறுக்கு விசாரணைகளுக்கு இடம் வைக்காமல் திட்டமிட்டுத்தான் கதையைச் செதுக்கி இருக்கீங்க.....

 மனதிற்குள் பலவாறு சிந்தனைகள் ஓடியது. முடிவில் அறுக்க முடியாத இழைகளால் ஆன வலையை வீசி பிடித்துவிட தீர்மானித்தேன்.

தோட்டத்து மரமொன்றின் உச்சியில் அந்த வலையை இலைகளுக்கு இடையில் மறைவாக விரித்தேன்.
அந்த வலையானது ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்க கூடியது.
 
 
வீட்டு பால்கனியில் அமர்ந்து உயர்ரக பைனாகுலர் மூலமாக அந்த மரத்தை கவனிக்க ஆரம்பித்தேன்.
"அப்பா என்ன செய்றீங்க?" என்றவளை அணைத்துக்கொண்டே சொன்னேன்.

"
"இந்த ஏலியன் எங்கிருந்து வந்திருக்கிறதப்பா?" ஆர்வமிகுதியில் கேட்டாள் டிமோ.

"இது Earth எனப்படும் கிரகத்திலிருந்து வந்திருக்கிறது. இனி நாம்தான் இந்த வெப்டியூன் கிரகத்தின் மிகப்பெரும் பணக்காரர்கள்" என்று சொல்லிவிட்டு சத்தமாக சிரிக்க ஆரம்பித்தேன்.<<<<
 
ஆஹா......கலக்கிட்டேபுள்ள.....
 
நிலவா ஒவ்வோர் வார்த்தைகளையும் பார்த்துப் பார்த்துச் செதுக்கி இருக்கீங்க....


-

--
என்றென்றும்
சுதனின்விஜி

"நாமார்க்கும் குடியல்லோம்"
நமனை அஞ்சோம்"




Swathi Swamy

unread,
Jul 30, 2008, 12:28:41 AM7/30/08
to mutht...@googlegroups.com, Pira...@googlegroups.com, பண்புடன்
:) காதலையும் பிரிக்குதா இந்த ரோபோ?
 
எனக்கு ஒரே ஒரு ஆசை...கல்யாணம் ஆகும் வரை பாட்டரி இருந்துதா இல்லையான்னு தெரியணும்.
 
அன்புடன்
சுவாதி

2008 ஜூலை 30 00:20 அன்று, NilaRaseegan <nilara...@gmail.com> எழுதியது:



--
சாவு நெருங்கி வரும் போதும் -
தமிழ் மானம் காத்திரடி பாப்பா!!

http://groups.google.com/group/Piravakam
http://santhappiravagam.blogspot.com/
http://jokes4smile.blogspot.com/
http://puthiyakalithokai.blogspot.com/

Ahamed Zubair A

unread,
Jul 30, 2008, 12:39:21 AM7/30/08
to panb...@googlegroups.com
காதலியின் உடல் வாசம் கூட தெரியாமல் என்னத்துக்கு இந்த நாயகன் காதலிக்கணும்...
 
அது ரோபோன்னு இல்லாம குளோனிங்னு இருந்திருந்தா காதலன் ஏமாந்து போயிருக்கலாம்..
 
அன்புடன்,
சுபைர்

2008/7/30 Swathi Swamy <mswat...@gmail.com>

NilaRaseegan

unread,
Jul 30, 2008, 12:44:55 AM7/30/08
to panb...@googlegroups.com
//காதலியின் உடல் வாசம் கூட தெரியாமல் என்னத்துக்கு இந்த நாயகன் காதலிக்கணும்...//

ஊரை விட்டு ஓடும்போது உடல்வாசம் பார்க்க நேரமிருக்குமா?
வரும்காலத்தில் ரோபோகூட குளோனிங் மாதிரி இருக்கலாம்னு ஒரு கற்பனைதான் நண்பரே :)
பின்னூட்டத்திற்கு நன்றி.

2008/7/30 Ahamed Zubair A <ahamed...@gmail.com>

NilaRaseegan

unread,
Aug 4, 2008, 6:21:05 AM8/4/08
to panb...@googlegroups.com, முத்தமிழ், தமிழ் பிரவாகம்

தூவல் - சிறுகதை

 

அந்தப் பேனாவின் முனை உடைந்ததை எண்ணி வருந்தியபடியே என் அறைநோக்கி நடந்துகொண்டிருந்தேன். பேனா என்றால் உயிர் எனக்கு. மொத்தமாக நான் சேகரித்த பேனாக்களின் எண்ணிக்கை ஐந்நூறைத் தாண்டும். மை பேனா,பால்பாயிண்ட் பேனா என்று பலவகை பேனாக்கள் என்வசம் இருந்தன.அறைக்கதவை திறந்து உள்சென்று அமர்ந்தேன். அறைத்தோழன் நல்ல உறக்கத்திலிருந்தான். உறங்க மறுத்தன என் கண்கள். நினைவுகள் மெல்ல பின்னோக்கி நகர ஆரம்பித்தன.

 

 பேனா கொண்டுவராமல் பள்ளிக்கு சென்றால் "பேனா(ய்) இல்லாமல் ஏன்னா(ய்) வந்தாய் போநா(ய்) வெளியே" என்று அழகாய்த் திட்டுவார் தமிழாசிரியர்.

அப்படி ஒரு நாள் பேனா இல்லாமல் சென்றதால் வகுப்பிற்கு வெளியே நிற்கவைத்திருந்தார். தொடர்ந்து அழுது கொண்டே நின்ற என்னிடம் வந்தவர் "வெளிய நிக்கிறதுக்காக இப்படி தொடர்ந்து அழுவலாமா? நாளைக்கு மறக்காம பேனா கொண்டுவந்துரனும் சரியா?" என்றவாறே என் தோளில்தட்டி வகுப்பிற்குள் சென்று அமர வைத்தார். வெளியே நின்றதற்காக அழுவதற்கு நான் என்ன மூக்கொழுகி குமாரா? இரண்டு வாரம் என் அப்பாவிடம் அடம்பிடித்து வாங்கிய "ஹீரோ" பேனா திருடுபோனதால் நான் அழுதேன் என்பது யாருக்கும் தெரியாது. உலகில் மிகச்சிறந்த பொருள் "ஹீரோ" பேனா தான் என்பது என்னுடைய எண்ணம்.

 

பன்னிரெண்டாம் வகுப்பு டியூசன் சென்டரில்தான் முத்துச்செல்வியை சந்தித்தேன்.எண்ணை தேய்த்து தலைசீவி இரட்டை ஜடைபின்னி பச்சைக்கலர் ரிபன்கட்டியிருப்பாள். எப்பொழுதாவது மரிக்கொழுந்தும் கனகாம்பரமும் அவள் கூந்தலை அழகாக்கும். என்னுடன் படித்தவர்கள் எல்லோரையும் விட முத்துச்செல்விக்கு என்னைத்தான் பிடித்திருந்தது. பெஞ்சிலிருந்து முன் பெஞ்சைக் கடந்துசென்று பிரம்பால் அடிவாங்கிவிட்டு திரும்பும்போதெல்லாம் அவள் கண்கள் கலங்கியிருக்கும். காரணம் டியூசன் சென்டரிலேயே நான் தான் அடிமுட்டாள். அடிக்கடி அடிவாங்கும் முட்டாள். எல்லோரும் நான் அடிவாங்குவதை ரசிக்கும்போது இவள் மட்டும் பரிதாபமாய் பார்த்ததால் எனக்கும் அவளை பிடித்துப்போனது. அவளை பிடித்ததற்கு மற்றும் ஒரு காரணம் அவளிடமிருந்த விலையுயர்ந்த "பார்க்கர்" பேனா. முதல் நாள் கணக்கு நோட்டும் இரண்டாம் நாள் பேனாவும் கடன் வாங்கினேன். கணக்கு நோட்டை மட்டும் திருப்பித்தந்துவிட்டு டியூசன் சென்டரை மாற்றிக்கொண்டேன். முத்துச்செல்வி இரண்டுநாள் உம்மென்று இருந்துவிட்டு பின் சகஜமாகிப்போனதாக கேள்விப்பட்டு பேனாவை பத்திரப்படுத்திக்கொண்டேன்.

 

கஷ்டப்பட்டு பன்னிரெண்டாம் வகுப்பில் தேறி கல்லூரிக்குள் நுழைந்த முதல் நாளில் கண்ணில் பட்டவள்தான் ரஞ்சனி. அவளைப் பார்த்தவுடனே பிடித்துப்போனது. இவள்தான் என் மனைவி என்று உள்ளுக்குள் மணியடித்தது. கொஞ்சம் கொஞ்சமாய் அவளிடம் பேச முயற்சித்து வெற்றி பெற்றேன் ஒரு மழைநாளில்.  குடையில்லாமல் நனைந்தபடி நடந்தவளுக்கு ஓடிச்சென்று குடைகொடுத்துதவி வள்ளல் ஆனேன். சில மாதங்களில் என் உற்றத்தோழியாக மாறியவள் என் பிறந்த நாள் பரிசாக ஃபாரீன் பேனா ஒன்றை பரிசளித்தாள். தங்க நிறத்தில் மினுமினுத்தது அந்தப்பேனா. அழகிய வேலைபாடுகளுடன்கூடிய மூடியில் சின்னதாய் ஒரு வெள்ளைக்கல் பதிக்கப்பட்டிருந்தது. பேனாவைக் கண்ட பரவசத்தில் ரஞ்சனியின் கைகளில் முத்தமிட்டுவிட்டேன். அன்று கோபித்துக்கொண்டு போனவள் அதன் பிறகு என்பக்கம் திரும்பவேயில்லை. மன்னிப்புக்கேட்டு நான்கு நாட்கள் அவள் பின்னால் அலைந்து சோர்ந்தபோது அவள் விட்டுச் சென்ற தங்கநிற பேனா மட்டுமே உடனிருந்தது.

 

கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு மும்பைக்கு வந்த ஒரு டெய்லர் கடையில் வேலைக்கு சேர்ந்தபோதுதான் வாழ்க்கை என்பதின் அர்த்தம் புரிய ஆரம்பித்தது.

இரண்டுமணி நேர மின்சார ரயில் பயணமும்,பெரும் மக்கள்கூட்டத்தினூடாக நடப்பதும் வாடிக்கையானபோது தளர்ந்திருந்த எனக்கு  ரயிலில் என்னோடு பயணிக்கும் சேட்டுப்பெண் மீது இனம்புரியாத ஒன்று உருவானது.அவளின் தங்கநிற தேகமும்,பச்சை நிற கண்களும் மனசுக்குள் ஏதேதோ கற்பனைகளை உருவாக்கின. மெல்ல அவளுடன் பழக ஆரம்பித்தபோது அவளுக்கு பிடித்த புத்தகமொன்றை பரிசாக தந்தேன். உடனே முகம் மலர்ந்தவள் ரயில் நிலையமென்றும் பாராமல் என் புறங்கையில் முத்தமிட்டாள். ரஞ்சனியின் ஞாபகம் வந்து போனது. முத்தமிட்டதோடு நில்லாமல் பரிசாக  தங்கப்பேனா ஒன்றை தந்துவிட்டு "வில் யூ மேரி மீ" என்றாள். என் ஆங்கில அறிவு அவளுக்குத் தெரிந்திருக்கவாய்ப்பில்லை. பூம்பூம் மாடு மாதிரி தலையாட்டினேன். சிரித்துக்கொண்டே போய்விட்டாள். அவளுடன் ஊர்சுற்ற அடிக்கடி விடுப்பு எடுத்ததால் வேலை பறிபோனது.

 

திடீரென்று ஒருநாள் என்னிடம் வந்தவள் அவளது நிச்சயதார்த்த செய்தியை சொல்லி இருசொட்டு கண்ணீர்விட்டு பிரிந்துவிட்டாள். கையில் பணமில்லாமல் ரணப்பட்ட நெஞ்சுடன் மும்பை தெருக்களில் சுற்றி அலைந்தபோதுதான் பிரவீனுடன் பழக்கம் ஏற்பட்டது. பிக்பாக்கெட் அடிப்பதும்,சிறுசிறு பொருட்களை மார்க்கெட்டில் திருடுவதும் அவனது தொழில். வேறு வழியின்றி அதைக்கற்றுக்கொண்டு வயிற்றைக் கழுவினேன். அப்போதுதான் பேனாவில் கத்தியும் உண்டு என்பது தெரிந்தது.மும்பை நகர போலீஸில் ஒரு நாள் சிக்கியதில் அவர்கள் அடித்த அடியில் வலது கால் நரம்பு அறுந்துவிட்டது.

சில நாட்களில் வெளியே வந்துபோது ஒரு கூலிப்படையின் அறிமுகம் கிடைத்தது.

 

நினைவுகளிலிருந்து என்னை மீட்டெடுத்தது அறைக்கதவு திறக்கும் சப்தம். அந்த அதிகாலையில் இரண்டுபேர் வந்து என்னை அழைத்துச் சென்றார்கள். கருப்புத்துணியால் என் தலைமூடப்பட்டது. உயிர் பிரிகின்ற பொழுதிலும் பேனாவின் முனை உடைத்த நீதிபதியை திட்டிக்கொண்டேயிருந்தது மனம்.

 

-நிலாரசிகன்.

 



2008/7/30 NilaRaseegan <nilara...@gmail.com>

Swathi Swamy

unread,
Aug 4, 2008, 11:39:04 AM8/4/08
to mutht...@googlegroups.com, panb...@googlegroups.com, தமிழ் பிரவாகம்


2008 ஆகஸ்ட் 4 06:21 அன்று, NilaRaseegan <nilara...@gmail.com> எழுதியது:

தூவல் - சிறுகதை

 நல்ல கதை. ஒரு மனிதன் எப்படியெல்லாம் வாழ்கையில் திசை மாறிப் போகிறான்..? கடைசியில் தூக்கு மேடை ஏறுகிறான்....  சுருக்கென்று தைக்கிறது முடிவு.

NilaRaseegan

unread,
Aug 5, 2008, 7:07:57 AM8/5/08
to mutht...@googlegroups.com, panb...@googlegroups.com, தமிழ் பிரவாகம்

புருவக்குட்டி - சிறுகதை

கிடுகு முனைந்துகொண்டிருந்த சரசுவை புறவாசல் பக்கமிருந்து கத்தும் ஆட்டின் சத்தம் நிமிரச்செய்தது. அவள் வளர்க்கும் ஆடுகளில் ஒன்று சினையாகி இருந்தது. இரண்டு நாட்களாக எப்போது குட்டி போடும் என்று காத்துக்கொண்டிருந்தவள் சத்தம் கேட்டவுடன் ஓடிச் சென்று பார்த்தாள். ஆடு குட்டி ஈனும் தருவாயிலிருந்தது.

 

அருகில் சென்று அதன் முதுகை வாஞ்சையுடன் தடவிக்கொடுத்தாள். வலி பொறுக்க முடியாமல் தலையை ஆட்டியபடியே சத்தம்போட்டுக்கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் ஆட்டுக்குட்டியின் சிறிய கால்களும் அதற்கிடையே தலையும் வெளியே வர ஆரம்பித்தது. குட்டிபோடும் இடத்தில் சாக்குப்பைகளை விரித்து வைத்தாள் சரசு. குட்டியின் உடல் முழுவதுமாய் வெளிவந்து சாக்குப்பை மீது பொத்தென்று விழுந்தது. பழைய துணி ஒன்றை எடுத்து குட்டியை நன்றாக துடைத்துவிட ஆரம்பிக்கும்போது அடுத்த குட்டியையும் ஈன்றது அந்த தாய் ஆடு. சத்தம்கேட்டு பக்கத்துவீட்டு செவ்வந்தி ஓடிவந்தாள்.

"என்ன  சரசக்கா ஆடு  ஈனிருச்சா? கெடாக்குட்டியா புருவக்குட்டியாக்கா?"
ஆர்வம் பொங்க கேட்டாள் அச்சிறுமி.

"ரெண்டும்தான்..நல்ல நேரத்துல வந்த கொஞ்ச நேரம் குட்டிய பார்த்துக்க,எதிர்தோட்டத்துல போயி புல்லறுத்துட்டு ஓடியாந்துர்றேன். பாவம் ஆடு களச்சு போயிருக்கும்" என்றவள் பனையோலை பெட்டியும் புல்லறுக்கும் அருவாளும் எடுத்துக்கொண்டு கிளம்பினாள். வாசலுக்கு வந்தவளை வழி மறித்தான் சரசின் கணவன் சாமிக்கண்ணு. சாமிக்கண்ணு ஒரு மொடாகுடிகாரன். வேலை வெட்டி இல்லாமல் ஊர் சுற்றுபவன்.

 

அவள் கையை முறுக்கி, முதுகில் ஓங்கி அறைந்து கீழே தள்ளிவிட்டான்.

 

"யாத்தீ" என்று அலறியபடி விழுந்தாள் சரசு.

 

"ரெண்டு நாளா துட்டு துட்டுன்னு நானும் நாயா அலையறேன் ஒரு பயலும் துட்டு குடுக்கமாட்டேங்கறான். இப்ப துட்டு தர்றியா இல்லையா? அடுப்பகறையில ஒளிச்சு வச்சிருப்பியே? சனியன்புடிச்ச சிறுக்கி" கோபத்தில் கத்தினான் சாமிக்கண்ணு.

 

 "இந்தா பாரு ஆடு குட்டி ஈனியிருக்கு. நான் போயி புல்லறுத்துட்டு வரணும். ச்சும்மா என் கிட்ட அஞ்சு பைசா கிடையாது. அடுப்புல பழைய சோறு இருக்கு வெங்காயத்தை கடுச்சுக்கிட்டு தின்னு இல்ல எங்கயாவது போயி சாவு. என் உசிர எடுக்காத" சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்.

ஆடுகளுக்கு புற்கள் அறுத்துக்கொண்டு வீட்டிற்கு வரும்போது திமுதிவென்று ஆட்கள் ஓடுகின்ற சத்தம் கேட்டு புரியாமல் நின்றாள். கூட்டம் கூட்டமாக எல்லோரும் குளத்தை நோக்கி ஓடிக்கொண்டிருந்தனர். என்ன ஏதுவென்று புரியாமல் சிறுவன் ஒருவனை மடக்கி நிறுத்தினாள்.

"ஏலே எல்லாரும் எங்க இப்படி கண்ணு மண்ணு தெரியாம ஓடுதிய?"

"அக்கா உனக்கு சேதி தெரியாதா குளத்தாங்கரை பக்கத்துல சாராய கட இருந்துச்சுல்லா, அதுல ஏதோ விசம் கலந்துருச்சாம். நாலு வேரு செத்துக்கெடக்காங்களாம்" மூச்சுவாங்கிக்கொண்டே சொன்னவன் சரசைவிட்டு விலகி ஓடிவிட்டான். தூக்கிவாரி போட்டது சரசுக்கு. ஒருவேளை சாமிக்கண்ணு குடிக்க  போயிருந்தால்? தெரியாமல் புருஷனை சாபமிட்டது பலித்துவிடுமோ? விறுவிறுவென்று வீட்டிற்கு வந்து தேடிப்பார்த்தாள். சாமிக்கண்ணு வீட்டில் இல்லை. ஆடு கத்திக்கொண்டிருந்தது.

 

குளக்கரை நோக்கி ஓட்டமும் நடையுமாக படபடப்புடன் சென்றாள் சரசு. குளக்கரைக்கு பக்கத்திலிருந்த சாராய கடையை பெரும் கும்பல் சூழ்ந்திருந்தது.

ஒப்பாரிச்சத்தமும், அழுகையும் பலமாய் கேட்டது. நெஞ்சிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுதுகொண்டிருந்தனர் பெண்கள். நான்கு உடல்கள் வரிசையாக கிடத்தப்பட்டிருந்தன. பயந்து அழுதுகொண்டே ஒவ்வொரு உடல்

அருகிலும் சென்று பார்த்தாள் சரசு. நான்காவது உடலை பார்ப்பதற்கு சென்றவள் தோள்மீது ஒரு கை விழுந்து தடுத்தது. யாரென்று திரும்பி பார்த்தாள்.

தலையை தொங்கபோட்டுக்கொண்டு நின்றிருந்தான் சாமிக்கண்ணு. கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் கொட்டிக்கொண்டிருந்தது.

 

"மச்சான் ஏம் மச்சான் அழுவற…மச்சான் என்னாச்சு மச்சான்" அவனைக் உயிருடன் கண்ட சந்தோசத்திலும், ஏன் அழுகிறான் என்கிற குழப்பத்திலும் அவனை உலுப்பினாள் சரசு.

 

"என்னை மன்னிச்சுடு புள்ள…எத்தனையோ நாளு நீ என்னைய குடிக்ககூடாதுன்னு நீ சொல்லியும் நான் கேட்கல.  இன்னைக்கு நீ புல்லறுக்க போயிருந்தப்ப புதுசா பொறந்த ஆட்டுக்குட்டிய எவனுக்காச்சும் வித்து தண்ணி அடிக்கலாம்னு நெனச்சு புருவக்குட்டிய தூக்கிட்டு சந்தை பக்கம் போனேன். போகிற வழியில கையில இருந்து ரோட்டுல குதிச்சிருச்சு. ஓடிப்போயி எடுக்கறதுக்குள்ள பஸ்ஸுகாரன் அடிச்சு எறிஞ்சுட்டான். அந்த சின்னக்குட்டி துடிதுச்சு சாகறத கண்ணால பார்த்துட்டேன் சரசு. என்னால தாங்க முடியல. மனசு ஒடிஞ்சுபோயி அங்கேயே ஒட்கார்ந்திருந்தேன். அப்போதான் சாராயத்துல விஷம் கலந்த விசயம் தெரிஞ்சுது. அதோட உசுர விட்டு என் உசிர காப்பாத்திருச்சு அந்த ஆட்டுக்குட்டி. இனிமே அந்த ஆட்டுக்குட்டிமேல சத்தியமா நான் குடிக்கமாட்டேன் சரசு" சொல்லிவிட்டு கதறி அழுதான் சாமிக்கண்ணு.

 

சாராயத்தால் இறந்தவர்களுக்காக அழுகின்ற சத்தத்தைவிட அதிகமாய் கேட்டது ஆட்டுக்குட்டிகாக  அழுகின்ற சாமிக்கண்ணுவின் அழுகைச்சத்தம்.

 

-நிலாரசிகன்.


2008/8/4 Swathi Swamy <mswat...@gmail.com>

sree Koushi

unread,
Aug 6, 2008, 9:51:43 AM8/6/08
to panb...@googlegroups.com
Super da....nalla iruku....but eppodhum edhavadhu oru uyir un kadhaila irandhu poidudhu...
adha mattum konjam kammi panniko....really it is good dear nila... :)

 

Tamizh Raseegai M

unread,
Aug 6, 2008, 1:58:32 PM8/6/08
to panb...@googlegroups.com

தூவல்,புருவக்குட்டி இரண்டுமே அருமை நிலா..
குறிப்பாக தூவல் கதை , அதனை கொண்டு சென்ற விதம்..எனை மிகவும் ரசிக்க வைத்தது...

வாழ்த்துக்கள்....
Reply all
Reply to author
Forward
0 new messages