(சுஜாதாவின் தம்பியாக கமலும், ஜோடியாக ஜெமினியும், கமலுக்கு ஜோடியாக சுமித்ராவும் நடித்து ஒரு வண்ணப்படத்தை வலம்புரி சோமநாதன் எடுத்து கமல்-சுஜாதா ஜோடிக்கு திருஷ்டி கழித்தார். பெயர் மறந்துவிட்டது. படம் பார்த்ததையும் மறந்து தொலைத்திருக்கலாம்.)
லலிதா!இந்தப் படத்தில் வாணியெயராம் பாடிய கல்யாணமே ஒரு பெண்ணோடு தான் என்ற பாடல் அந்த நட்களில் இலங்கை வானொலியில் ஒலிக்காத நாட்களை விரல் விட்டு எண்ணலாம்.
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
எச்சூஸ்மி.. வயசானவங்களா பேசிட்டு இருக்கீங்க. நான் ஒதுங்கிக்கிறேன்.
இவ்வளவு எழுதிட்டு, அன்னக்கிளி “மச்சானைப் பார்த்தீங்களா?” -வை ஒரு வரி கூட எழுதாம விட்டுட்டீங்களே :)
On 4/13/11, நாஞ்சில் வேணு <venugopal...@gmail.com> wrote:
> [image: Sujatha.jpg]
>
> *எப்போதோ எழுதியிருக்க வேண்டும். இப்போதுதான் முடிந்தது. (தேர்தல்-ஏப்ரல் 14
> முன்னிட்டு விடுமுறை என்பதால்!)
> *
> சில படங்கள் வெளிவருவதற்கு முன்னர், அந்தப் படங்களின் பாடல்கள் பிரபலமாகி
> இயல்பைக் காட்டிலும் அதிக ஆர்வத்தை ஏற்படுத்துவதுண்டு. "*பச்சைக்கிளி
> முத்துச்சரம்," "ஆகாயப்பந்தலிலே பொன்னூஞ்சல்", "நான் படித்தேன் காஞ்சியிலே
> நேற்று,*" போன்றவை அந்தந்தப் படங்கள் வருவதற்கு ஓராண்டுக்கு முன்னரே
> வானொலிகளில் அல்லது இசைத்தட்டுகளில், கிட்டத்தட்ட சலிப்புறும்வரையில் அன்றாடம்
> கேட்ட பாடல்களின் உதாரணங்கள். அந்த வரிசையில் குறிப்பிடத்தக்க பாடல் தான்
> "*தெய்வம்
> தந்த வீடு வீதியிருக்கு!*". எனக்குத் தெரிந்து எஸ்.பாலசந்தரின் இசையில்
> *"நீயும்
> பொம்மை நானும் பொம்மை நினைச்சுப்பார்த்தா எல்லாம் பொம்மை,*" என்ற பாடலுக்குப்
> பிறகு, கே.ஜே.ஜேசுதாஸ் தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களுக்குப்பிறகு பாடிய பாடல்
> "தெய்வம் தந்த வீடு," என்று நினைக்கிறேன். ஜேசுதாஸ் நடித்த விக்ஸ் மாத்திரை
> விளம்பரத்தில் கூட அந்தப் பாடல் பாடுவது போல வருமளவுக்கு, அவரை அந்தப் பாடல்
> தமிழ்த்திரையுலகில் மீண்டும் மிகப் பிரபலமாக்கியது. அந்தப் பாட்டுக்காகவே
> "*அவள்
> ஒரு தொடர்கதை"* படம் பார்த்தவர்களில் நானும் ஒருவன். (மற்றபடி கே.பி. படங்கள்
> என்றால் எனக்கு கொஞ்சம் அலர்ஜீ தான்.)
>
> கதாநாயகி சுஜாதாவைப் பார்த்தபோது, நியூ சரஸ்வதி திரையரங்கில் பார்த்த "*
> புனர்ஜென்மம்*" மலையாளப்பபடத்தில் வேலைக்காரியாக கொஞ்சம் எசகுபிசகாக நடித்தவர்
> என்பதை உடனே அடையாளம் காண முடிந்தது. *அ.ஒ.தொ. *படம் பிடித்துப்போனதற்கு இரண்டு
> முக்கியமான காரணங்கள் -எம்.எஸ்.வியின் இசை மற்றும் பலகுரல் மன்னனாக கமல்ஹாசன்
> பண்ணிய அமர்க்களம்! அந்தப் படத்தில் அறிமுகமான சுஜாதா, ஜெய்கணேஷ், படாபட்
> ஜெயலட்சுமி எல்லாருமே ஒரு பெரிய ரவுண்டு வந்தார்கள் என்றாலும் சுஜாதா எட்டிய
> உயரம் மிக அதிகம். எல்லாராலும் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிற ஒரு
> துணிச்சல்காரப் பெண்ணாக அவர் அபாரமாக நடித்திருந்தார்.
>
> ஆனால், நிஜமான ஆச்சரியம் அதைத் தொடர்ந்து வெளியான *"மயங்குகிறாள் ஒரு மாது,*"
> படத்தைப் பார்த்தபோதுதான் ஏற்பட்டது.
>
> "அ.ஒ.தொ"வில் மிகவும் கட்டுப்பாடான பெண்ணாக சுஜாதாவும், எதையும் சகஜமாக
> ஏற்றுக்கொண்டு செல்லும் பெண்ணாக படாபட் ஜெயலட்சுமியும் நடித்திருந்தனர்.
> "ம.ஒ.மாது" படத்தில் இருவருக்கும் நேர் எதிரான கதாபாத்திரங்கள். அனேகமாக,
> சுஜாதாவை பிழியப் பிழிய அழவைக்கிற முன்னுதாரணத்தை அந்தப் படத்தில்தான்
> ஏற்படுத்தியிருப்பார்கள் என்று தோன்றுகிறது.
>
> இந்தியில் சஞ்சீவ்குமார்-ஜெயாபாதுரி நடித்த *"கோஷிஷ்"* படத்தை தமிழில்
> கமல்-சுஜாதாவை வைத்து "உயர்ந்தவர்கள்" என்று எடுத்தார்கள். அதில் இருவருமே
> அற்புதமாக நடித்திருந்தும் படம் ஓடவில்லை. பிறகு, புஷ்பா தங்கதுரை
> தினமணிகதிரில் எழுதிய *"ஓரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது"* நாவலைப்
> படமாக்கியபோதும் அதே ஜோடி! சுஜாதாவின் கணவராக நடிப்பென்றால் கிலோ என்னவிலை
> என்று கேட்கிற விஜயகுமார் நடித்திருந்ததாலோ என்னவோ, கமலின் நடிப்பு அப்போதே
> படுதூக்கலாக இருந்தது. ஆனால், அந்தப் படம் சுஜாதாவுக்கு இன்னொரு மைல்கல் என்று
> தைரியமாகச் சொல்லலாம். (*சுஜாதாவின் தம்பியாக கமலும், ஜோடியாக ஜெமினியும்,
> கமலுக்கு ஜோடியாக சுமித்ராவும் நடித்து ஒரு வண்ணப்படத்தை வலம்புரி சோமநாதன்
> எடுத்து கமல்-சுஜாதா ஜோடிக்கு திருஷ்டி கழித்தார். பெயர் மறந்துவிட்டது. படம்
> பார்த்ததையும் மறந்து தொலைத்திருக்கலாம்.*)
>
> "*அவர்கள்*" படத்தின் அனுவை மறக்க முடியாது. படத்தில் முதல்பாதியில்
> பின்னணியில் ரயில் சத்தம் சம்பந்தாசம்பந்தமில்லாமல் இம்சை பண்ணினாலும்
> (பாலசந்தர் *டச்*சாம்!) ரஜினி, கமல், சுஜாதா ஆகியோரின் நடிப்பாலும், (மீண்டும்)
> எம்.எஸ்.வியின் இசையாலும் உட்கார்ந்து பார்க்க முடிந்த ஒரு படம். ஆனால், அந்தப்
> படத்தில் கமலுக்குப் பதிலாக வேறு யார் நடித்திருந்தாலும் இடைவேளைக்குப் பிறகு
> தியேட்டர் காலியாகியிருக்கும்.
>
> சிவகுமார், முத்துராமன், விஜயகுமார், ஜெய்சங்கர் என்று பலருடன் ஜோடிசேர்ந்து பல
> படங்களில் சுஜாதா கலக்கினார் என்றாலும் *"தீபம்"* படத்தில் சிவாஜியோடு இணைந்து
> நடித்தது பெரிய திருப்புமுனையாக அமைந்தது. மலையாளத்தில் ஸ்ரீவித்யா ஏற்று
> நடித்த கதாபாத்திரத்தை அனாயசமாக ஏற்று நடித்திருந்தார் சுஜாதா. சிவாஜி மீது
> வெறுப்பை உமிழும் காட்சிகளில் சிவாஜி பக்தனான எனக்கு கோபமே வந்தது. "அந்தமான்
> காதலி" படத்தில் சில இடங்களில் சிவாஜியைத் தூக்கிச்சாப்பிட்ட நடிப்பு. அதைத்
> தொடர்ந்து சிவாஜியோடு பல படங்களில் நடித்திருந்தாலும், தீபம், அந்தமான் காதலி,
> வா கண்ணா வா -இவை மூன்றும் சிவாஜி-பத்மினி சகாப்தத்தை நினைவூட்டுவதுபோல அமைந்த
> படங்கள்.
>
> தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மிகவும் பிரபலமாக இருந்தபோது, இமேஜைப் பற்றிக்
> கவலைப்படாமல் மலையாளத்தில் *"பிரஷ்டு"* என்ற ஒரு படத்தில் ஒரு ஏடாகூடமான
> கதாபாத்திரத்தில் நடித்தது சற்றே நெருடலாக இருந்தது. அதே போல *"அண்ணன் ஒரு
> கோவில்" *படத்தில் வரும் *"நாலுபக்கம் வேடருண்டு"* பாட்டிற்காக பல
> பத்திரிகைகளிடம் சிவாஜியும் சுஜாதாவும் வாங்கிக்கட்டிக்கொண்டனர்.
>
> ஹோசூரில் இருந்தபோது அவர் நடித்த சில தெலுங்குப்படங்களையும் பார்த்திருக்கிறேன்
> என்றாலும், சுஜாதாவை தமிழ் சினிமா சரியாகக் கையாண்டதுபோல, பிறமொழிகளில்
> கையாளவில்லையோ என்றுதான் சொல்லத்தோன்றுகிறது.
>
> கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் சுஜாதாவை கதாநாயகியாக வைத்து இயக்கிய
> *"அடுக்குமல்லி"*என்ற கருப்பு வெள்ளைப்படம் அப்போது வெளிவந்த ரஜினி,
> கமல், சிவாஜியின்
> வண்ணப்படங்களைப் பின்னுக்குத்தள்ளி வசூலில் சக்கைபோடு போட்டதும் ஞாபகத்துக்கு
> வருகிறது.
>
> அப்புறம் *"விதி"* படம்! என்ன சொல்ல...? முழுமையான நடிப்பு...!
>
> சுஜாதாவைப் பற்றி நிறைய எழுதலாம் தான்! நீளம் கருதி அவருக்கு எனது அஞ்சலிகளுடன்
> நிறைவு செய்கிறேன்.
>
>
> --
> *நாஞ்சில் வேணு*
>
> --
> "தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
> கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"
>
--
இப்படிக்கு
"ஸ்ரீ"
"கவர்ச்சியில் மயங்கியது போதும்
வார்த்தை ஜாலத்தில் வீழ்ந்தது போதும்,
புதுமையான தமிழகம் உருவாக வாக்களிப்பீர்
முரசு சின்னத்திற்க்கு"
லலிதா!
இந்தப் படத்தில் வாணியெயராம் பாடிய கல்யாணமே ஒரு பெண்ணோடு தான் என்ற பாடல் அந்த நட்களில் இலங்கை வானொலியில் ஒலிக்காத நாட்களை விரல் விட்டு எண்ணலாம்.
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
"மனிதனிடமிருந்து வெளிப்படும் எல்லாமே அருவருப்பானவை. வியர்வை, எச்சில், சிறுநீர், மலம், சுக்கிலம், சளி , இப்படி நம்மிடமிருந்து வெளிப்படும் யாவுமே துர்நாற்றம் உடையவை.அருவருப்பு தருபவை. உன்னிடமிருந்து இத்தனை துர்நாற்றம் மிக்கவை வெளிப்படும் பொழுது சொற்களாவது இனிய மணம் உடையதாக வெளிப்படட்டும்"
புத்தர்.
அவள் ஒரு தொடர்கதையைப் பார்க்கிலும் ”அவர்கள்” படம் எனக்கு ரொம்பவும் பிடித்தது. அதில் ஈட்டியாய் குத்தும் ரஜனியின் வார்த்தைகளை தாங்கிக் கொண்டு பதிலுக்கு ரஜனி முகத்தில் கரி பூசும் சுஜாதாவின் நடிப்பு சூப்பர்.
தன்னுடைய அழுகையைப் பார்த்து சந்தோசப்பட நினைக்கும் கணவனுக்கு அந்த சந்தோஷத்தை கொடுக்காமல் இருக்க பிரயத்தனப்பட்டுக் கொண்டே, தன்னுடைய ஏமாற்றம், ஆற்றாமை என்று அத்தனையையும்
மறைத்துக் கொண்டு ரஜனியின் ஈட்டி வார்த்தைகளை சிரித்துக் கொண்டே எதிர்கொள்ளும் இடத்திலும், அவ்வளாவு நேரமும் அழாமல் வெற்றி பெற்றுவிட்டு மாமியாரின் அன்பில் அத்தனையும் உடைய கேவி கேவி அழும் காட்சியில் சுஜாதா சுஜாதா தான்...!
எனக்கு இதுல ‘விதி’மட்டும்தான் தெரியுது :((வெகுளித்தனமான/அழுத்தமான அம்மாவுக்கு மிகப் பொருத்தமானவர் ........
ஆனால் சுஜாதாவின் நினைவலைகளில் கமல் கொஞ்சம் அதிகமாகவே சிலாகிக்கப்பட்டது தற்செயல்தானென எண்ணுகிறேன்
கமலும் சுஜாதாவும் இணைந்து நடித்த கடல்மீன்களைப் பற்றி சொல்லாமல் விட்டு விட்டீர்கள்
மிகப்பெரும் சிவாஜி ரசிகரான என் தாயாருக்கு அந்தமான் காதலி பார்த்த பிறகு சுஜாதா மேல் தனி பிரியம் வந்து விட்டது :-)
"அன்னக்கிளி" படத்தின் வெற்றிக்கு காரணம் இயக்குனர்கள் தேவராஜ்-மோகன் மற்றும் அறிமுக இசையமைப்பாளர் இளையராஜா.
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
2011/4/13 நாஞ்சில் வேணு
அது இளையராஜாவைப் பத்தி எழுதறப்பவும் சொல்லுங்க! :))
ஆனால், சுஜாதா எனும்போது, அன்னக்கிளி பற்றிய குறிப்பு இல்லாமல் கட்டுரை முழுமை பெறாது எனவே கருதுகிறேன்.
பல இடங்களில் அன்றே பெண்களுக்கான குரலை உயர்த்திப் பேசியிருந்த வசனங்கள் ஆச்சரியமளித்தாலும் மெகா மொக்கை படம். இருந்தாலும் விடாப்பிடியாக பார்த்து ரசித்தேன் என்றால் அது ஜெமினியின் முகபாவங்களுக்காகத்தான் :-)
அதே போல "அண்ணன் ஒரு கோவில்" படத்தில் வரும் "நாலுபக்கம் வேடருண்டு" பாட்டிற்காக பல பத்திரிகைகளிடம் சிவாஜியும் சுஜாதாவும் வாங்கிக்கட்டிக்கொண்டனர்.