அன்புள்ள ஞாநி!

219 views
Skip to first unread message

Albert Fernando

unread,
Apr 24, 2008, 2:03:42 PM4/24/08
to பண்புடன்

அன்புள்ள ஞாநிக்கு…
… அறிவுமதி…..
.
அன்புள்ள ஞாநி! உங்கள் பழைய நண்பன் அறிவுமதி பேசுகிறேன்.

அவ்வப்போது நீங்கள் செய்கிற தவறுகளை அவ்வப்போது நட்புரீதியாகவே
சுட்டிக்காட்டி இப்படியெல்லாம் எழுதுதல் நாகரிகமா? நியாயமா? என்று
நேரிடையாகவே தங்களிடம் கேட்டிருக்கிறேன்.

இனி அப்படியெல்லாம் எழுதமாட்டேன் என்று எனக்கு நீங்கள் சில வேளைகளில்
உறுதிமொழியும் அளித்துள்ளீர்கள். அந்த நம்பிக்கையில் உங்களோடு உடன்பட்டு
உங்கள் எழுத்துகளை உள்வாங்கி உளம் மகிழ்ந்த எங்களுக்கு…
கொஞ்சகாலமாகவே… உங்கள் எழுத்துகளில் தென்படத் தொடங்கிய ‘நொரநொரப்பு’
உங்கள் சிந்தனைகளை உள்விழுங்க விடாமல் உபத்தரவம் செய்யத் தொடங்கியது.

அப்போதே… விழித்துக் கொண்டு உங்கள் எழுத்துகளை உன்னிப்பாகக் கவனிக்கத்
தொடங்கினோம்…

சிவப்புடை போட்டுக் கொண்டு
பொதுவுடைமை முகாமுக்குள் போய்
உளவுபார்த்துவிட்டு
அவர்களிடம் பிடிபடாமல்
தப்பித்து வந்த நீங்கள்…
கருப்புடை போட்டுக் கொண்டு
பெரியாரிய முகாமுக்குள் போய்
உளவுபார்த்துவிட்டு
அவர்களிடம் பிடிபடாமல்
தப்பித்து வந்த நீங்கள்…
புலிகளின் சீருடை போட்டுக்கொண்டு
புலிகளின் முகாமுக்குள் போய்
உளவுபார்த்துவிட்டுத்
திரும்புகையில் பிடிபட்ட
ஒருகேடு கெட்டசிங்கள உளவாளியாய்
இப்போது எங்களிடம் நீங்கள்
கையும் களவுமாய்..
பொய்யும் பூணூலுமாய்..
அகப்பட்டிருக்கிறீர்கள்…

கொஞ்ச நாள்களுக்கு முன்பு உங்களிடமும் உங்கள் எழுத்துகளிடமும் கொஞ்சம்
விழிப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக நான் எழுதிய கட்டுரையைப்
படித்துவிட்டு… இப்படியெல்லாம் ஞாநியை சந்தேகப்படலாமா? என்று கேட்டு… என்
கருத்துக்கு உடன்படாமல் உங்கள் பக்கம் நின்றவர்தான் எங்கள் சுப.வீ.

தமிழ்த்தேசீய ‘தென்செய்தி’-யும் எங்கள் ஞாநி என்று தங்கள் கட்டுரையை
அண்மையில் வெளியிட்டு மகிழ்ந்தது.

பெரியார் திராவிடர் கழகமும், எங்கள் ஞாநி.. பெரியார் ஞாநி என்று.. பல
மேடைகள் தந்து மகிழ்ந்தது.

ஆனால்… இவர்கள் அனைவரிடமும்.. சுப.வீ-க்கு தாங்கள் எழுதிய குமுதம்
மடல்வாயிலாக…

நான்..பெரியார் ஞாநியன்று..
பெரியவாள் ஞாநியே..
என்று வெளிப்படையாகத் தெரிவித்துக் கொண்டமைக்கு மிக்க மகிழ்ச்சி ஞாநி.
திண்ணியத்திலும் எரையூரிலும் ஆதிக்க சாதிகள் செய்த அட்டூழியங்களை
அதட்டிக் கேட்டவர்கள்தாம் ஞாநி.. அந்தச் சிங்கள இயக்குநரையும்
தட்டிக்கேட்டவர்கள். அவர்களில் ஒருவர்தான் சுப.வீ. அவரை மட்டும் தனிமைப்
படுத்தி.. அவரைத் தலித்துகளுக்கு எதிரானவராகக் காட்டி…
“மொழியால்… இனத்தால் நம்மவரான விடுதலைப்புலிகள்” என்று.. எமது
மொழிக்குள்… எமது இனத்திற்குள் உள் நுழைய.. உள் பதுங்க வருகிற உங்கள்
சூழ்ச்சியை.. என்னவென்று சொல்வது?!

மொழியால் எப்படி நீதமிழனாவாய்?இனத்தால் எப்படி நீதமிழனாவாய்?‘நம்மவர்’
என்கிற சொல்லாடலுக்குள்தமிழர்களாகிய எங்கள் பெயர்கள் அடங்கலாம். ஞாநி
என்கிற உன் பெயர் எப்படி அடங்கும்.

நீ யார்…எங்கள் தமிழர்களை எழுப்பிவிடநாங்கள்
படாதபாடுபட்டுக்கொண்டிருக்கையில்…எழுகிற தமிழர்களை இடறிவிடமுயற்சி
செய்கிற.. நீ யார்?பச்சைப் பார்ப்பான்!

அப்புறம் எப்படி…நீ…தமிழன் பட்டியலில்.. சேர முடியும்? ‘நம்மவர்’ என்ற
சொல்லாடலுக்குள் நுழைய முடியும்?ஒரே ஒரு இரட்டை டம்ளர் டீக்கடையையாவது…
என்று கேட்டிருக்கிறீர்களே ஞாநி! பல இரட்டை டம்ளர் டீக்கடைகளை அடித்து
நொறுக்கி.. ஆதிக்க சாதித் திமிரை ஓடஓட விரட்டிய எம் பெரியார் பிள்ளைகள்
தாமய்யா அங்கு வந்து… எங்கள் இனவரலாற்றை இப்படி இழிவு செய்யலாமா என்று
எதிர்த்துக் கேட்டது! தனித்த சுப.வீ மட்டும் இல்லை.

சிறுபான்மை பிரிவினரைக் குறித்து ரொம்பவும் அக்கறையாக கவலைப்பட்டு
இருக்கிறீர்கள். அந்தச் சிறுபான்மை பிரிவில் பிறந்து மிகச் சிறந்த
இடத்திற்கு வந்த அய்யா அப்துல் கலாம் பற்றி எவ்வளவு கேவலமாக எவ்வளவு
இழிவாக நீங்கள் எழுதி இருக்கிறீர்கள் என்பதை மறுக்க முடியுமா
ஞாநி!“மாற்றாக தம்பி சீமானுடன் சேர்ந்து பதில் படம் எடுங்கள்….” எவ்வளவு
எளிதாக எழுதிவிட்டீர்கள் ஞாநி!

“காற்றுக்கென்ன வேலி” எடுத்த தம்பி புகழேந்தி பட்டபாடு தெரியாதா ஞாநி!
இந்தச் சிங்கள இயக்குநருக்காக இவ்வளவு வரிந்து கட்டிக்கொண்டு வருகிற
உங்களை… அன்றைய பட்டினிப் போராட்டங்களில் எல்லாம் எங்களால் பார்க்க
முடியவில்லையே ஞாநி!ஈழப் பிரச்சனை குறித்துத் திரிபுபடுத்தித்
திரைப்படமெடுத்த பார்ப்பன இயக்குநருக்கு தேசிய விருது. அதை குறித்து
வெறும் மேடையில் பேசிய தமிழர்களுக்கு 19 மாத பொடா சிறை தண்டனை…
அந்தத் தண்டனையை அனுபவித்தவர்களில் சுப.வீ-யும் ஒருவர். அவரைப் போய் அதே
போல கொதிக்காதது ஏன் என்று எகத்தாளமாக கேள்வி கேட்கிறீர்கள்? எத்தனை முறை
சுப.வீ சிறைக்குச் சென்றுள்ளார். எந்தெந்தப் பிரச்சனைகளுக்காகச்
சிறைக்குச் சென்றுள்ளார் என்கிற பட்டியலை வேண்டுமானாலும் தரத் தயாராக
இருக்கிறோம் ஞாநி! அவரைப் போய் கொதிக்காத ஆள் என்று கொழுப்பாக எழுதுதல்
பிழையில்லையா ஞாநி!
பொடா கொடுமை பற்றி சுப.வீ எழுதிய வலி சுமந்த தொடரை.. தொடரவிடாமல் தடுத்த
நீங்களா ஞாநி, கருத்துரிமை பற்றி பேசுவது?
“என் கருத்துகளை… எல்லோரும் பயன்படுத்தலாம், குமுதம் குழுமம் மட்டும்
பயன்படுத்தக் கூடாது” என்று கூறிய நீங்களா ஞாநி, கருத்துரிமை பற்றி
பேசுவது?

“பத்திரிகையில்,தொலைக்காட்சியில்,ஊடகங்களில், அவ்வளவு ஏன் உங்கள் சகோதரர்
எஸ்.பி.முத்துராமன் உட்பட, தமிழ்த்திரைப்படப் படைப்பாளிகள் சினிமாவில்
சொல்லாமல்விட்ட பெண்ணடிமைக் கருத்துகள் ஏதும் மீதம் இருக்க முடியாதே!”
என்று எழுதியுள்ளீர்களே ஞாநி!

தாங்கள்.. தங்கள் முற்போக்கான கருத்துகளைத் தங்கள் வலைத்தளத்தில்
எழுதுவது, ‘தீம்தரிகிட’ என்கிற தங்களுக்கான இதழில் மட்டுமே எழுதுவது என்ற
பத்தியத்தோடுதான் இருக்கிறீர்களா ஞாநி!

நன்றி ஞாநி..

எந்தச் சூழ்நிலையிலும்..நாம் கருத்துக்குக் கருத்து வைத்து..தெளிவுகளை
நோக்கிவிவாதிப்போம்… மற்றபடி உங்கள்மீது எங்களுக்கு எவ்வித வன்மமும்
இல்லை.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக.. உங்களை உழைக்கவிடாமல் உட்காரவைத்துச்
சோறு போட்ட.. போடுகிற.. சமூகம் தமிழ்ச் சமூகம். அந்தச் சமூகத்திற்கு
சிறிதும் நன்றியில்லாமல் நீங்கள் செய்கிற இந்த ஈனக் காரியங்கள் குறித்து
உங்களுக்கு வெட்கமே இல்லாமல் போயிற்றே! அது தான் ஞாநி வருத்தமாக
இருக்கிறது!

சிங்கள இயக்குநருகாக வன்முறை என்று வரிந்து கட்டிக்கொண்டு வருகிற நீங்கள்…
தில்லை நடராசர் கோயிலில்.. ஆறுமுக சுவாமி அவர்களை, தீட்சிதர்கள் அடித்து
நொறுக்கிய போது.. வன்முறை என்று வாயைத் திறக்கவில்லையே.. ஏன் ஞாநி?

கடைசியாக சொல்லிக் கொள்வது இது தான் ஞாநி!

எங்கள் வீட்டுக்குள் எங்கள் பெண்களைக் கெடுக்க வருகிற மிருகங்களின்
ஆண்குறிகளை வெட்ட வேண்டும் என்பது எங்களின் ஆத்திரம் !

இல்லை.. இல்லை…

அந்தக் குறிகளுக்கு ஆணுறைகள் மாட்டிவிட வேண்டும் என்பது உங்களின்
சாத்திரம்.

நீங்கள்.. உங்கள் சாத்திரப்படியே மாட்டி விட்டுக் கொள்ளுங்கள் ஞாநி!
எங்களால் முடியாது!

நன்றிகளுடன்….
அறிவுமதி
சென்னை
08-ஏப்ரல்-2008

KeN

unread,
Apr 24, 2008, 2:16:33 PM4/24/08
to panb...@googlegroups.com
 ஞாநிக்கு பத்தாது இதெல்லாம்

2008/4/24 Albert Fernando <Albe...@gmail.com>:

Swathi Swamy

unread,
Apr 24, 2008, 8:25:27 PM4/24/08
to panb...@googlegroups.com
சகோதரர் அறிவுமதி தன்னுடைய நேரத்தை ஞாநி போன்ற அர்த்தமற்ற பிறப்புகளுக்கு ஏன் செலவிட வேண்டும் என்பது தான் என் வேதனையே!
 
உணர்வுகள் கொண்ட மனிதர்களுக்கு தான் எதுவுமே உறைக்கும்.  உணர்வுகளை விற்பனை செய்பவர்களுக்கு உறைக்குமா என்ன?
 
அன்புடன்
சுவாதி

2008/4/24 KeN <jakey...@gmail.com>:
2008/4/24 Albert Fernando <Albe...@gmail.com>:

pandii durai

unread,
Apr 24, 2008, 8:47:31 PM4/24/08
to panb...@googlegroups.com
சுவாதி
ஞாநி பற்றிய பீடங்களை என்போன்றவர்களுக்கும் சென்றடையவே .
 
ஏன் கென் நீங்களும் ஞாநிக்காக உங்க நேரத்தை வீணாடிக்கிறிங்கனு கேட்காமா விட்டிங்களே.
 

K.R.அதியமான்

unread,
Apr 25, 2008, 1:54:38 AM4/25/08
to பண்புடன்
குமுதம் 23.4.2008 இதழில் சுப.வீ அவர்களின் பதிலுக்கு, ஞாநி எழுதிய
பதில் ??

---------------------------------------

ஒரு பழைய பதிவு :

http://selvanayaki.blogspot.com/2007/10/blog-post_24.html

நந்தா

unread,
Apr 25, 2008, 5:20:41 AM4/25/08
to பண்புடன்
வணக்கம்.

சற்று நின்று நிதானித்து பேச வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறேன்....

முதலில் ஒன்றை தெளிவு படுத்திக் கொள்ள விரும்புகின்றேன். நான் குமுதம்
புத்தகத்தை மதிக்காத காரணத்தால் அதை வாங்குவதே இல்லை. சுப.வீ, ஞானி
பிரச்சினை குறித்தான அனைத்து இடுகைகளைப் பற்றிய விவரமோ அல்லது சுட்டியோ
இருந்தால் இங்கே இடுங்களேன்.

தெளிவு படுத்திக் கொள்ளவே கேட்கிறேன்.

// ஞாநிக்கு பத்தாது இதெல்லாம் //


//சகோதரர் அறிவுமதி தன்னுடைய நேரத்தை ஞாநி போன்ற அர்த்தமற்ற
பிறப்புகளுக்கு ஏன்
செலவிட வேண்டும் என்பது தான் என் வேதனையே!

உணர்வுகள் கொண்ட மனிதர்களுக்கு தான் எதுவுமே உறைக்கும். உணர்வுகளை
விற்பனை
செய்பவர்களுக்கு உறைக்குமா என்ன? //

கென், சுவாதி உங்களுக்கு ஞானியைப் பற்றித் தெரிந்த விவரங்களை
சொல்லுங்களேன். ஏன்னா இந்தளவுக்கு கோபம் வருமளவுக்கு ஞானியின் மீதான
உங்களது பார்வைக்கான காரணம் தெரிந்தால் நானும், (நாங்களும்) தெளிவு
பெறலாம் அல்லவா.. அதற்காகத்தான்.

முதலில் இந்த விவரங்களைத் தெரிந்து விட்டு வருகிறேன்.

KeN

unread,
Apr 25, 2008, 5:24:27 AM4/25/08
to panb...@googlegroups.com
ஞாநி பற்றிய விவரங்கள் இனிமேல்தான் தேவையெனில் நீங்கள் அறிவுமதியின் மடலை இன்னொரு முறை வாசிக்கலாம்
தனிப்பட்ட முறையில் எனக்கும் ஞாநிக்கும் கொடுக்கல் வாங்கல் ஏதுமில்லை நந்தா
 

2008/4/25 நந்தா <media...@gmail.com>:

pandii durai

unread,
Apr 25, 2008, 5:27:23 AM4/25/08
to panb...@googlegroups.com
எங்கே செல்லும் இந்த பாதை - பாமரன் என்ற பண்புடன் இழையிலிருந்து
 
ப்ரேம்குமார்
 

இந்த ஞாநிக்கும் பாமரனுக்கு வேறு வேலை இல்லை. பத்தி பத்தியாய் எழுதுவது தவிர‌

ஒரு முறை நீயா நானாவில் ஞாநி ஐ.டி காரர்களை பார்த்து கேட்டார் 'இதே 50000
சம்பளத்தை மாதா மாதம் நான் தருகிறேன். இவர்கள் எல்லாம் மலம் அள்ள தயாரா என்று
கேட்டார்'.

ஆகா, ஞாநிக்கு தான் என்ன ஒரு சமூக அக்கறை என்று நினைத்த போது, எதிர்ப்புறம்
இருந்த ஒருவர் ஞாநியை பார்த்து 'நான் உங்களுக்கு மாதா மாதம் 60000 ரூபாய்
கொடுக்கிறேன். நீங்கள் அள்ளுகிறீர்களா?' என்று கேட்ட போது ஞாநி எனக்கு
அதெல்லாம் பழக்கமில்லை. என்னால் முடியாது என்றார்

அப்போது அங்கே கிழிந்தது ஞாநியின் முகத்திரை

பாமரனும் அது போலவே தான். இந்த ஒரு 'பப்' விசயத்தை இன்னும் எத்தனை காலம் தான்
பேசுவாரோ தெரியவில்லை. ஐ.டி காரர்கள் என்ன மாதிரியான வேலை பார்க்கிறார்கள்
என்பதை வெளியில் இருந்து விமர்சனம் செய்வது எளிது. மஞ்சள் காமாலை கண்ணுக்கு
எல்லாமே மஞ்சளாகத்தான் தெரியும்

http://groups.google.com/group/panbudan/browse_thread/thread/c77cf295f95114c0#

 

நன்றி: ப்ரேம்குமார்

நந்தா

unread,
Apr 25, 2008, 6:30:33 AM4/25/08
to பண்புடன்
//ஞாநி பற்றிய விவரங்கள் இனிமேல்தான் தேவையெனில் நீங்கள் அறிவுமதியின்
மடலை
இன்னொரு முறை வாசிக்கலாம் //

அய்யா அதை படிக்காமயா கேட்கறேன்....

பிரச்சினைகளுக்குக் காரணமான சுப.வீ கட்டுரையையும், ஞானியின் கட்டுரையைப்
பற்றியும் தான் கேட்கிறேன்...

முழுப் பிரச்சினையைப் பற்றித் தெரியாமல் என்னால் எதையும் அனுமானிக்க
முடிய வில்லை.

கார்த்திக்

unread,
Apr 25, 2008, 1:11:28 PM4/25/08
to பண்புடன்
ஞானி சொன்னதில் தவறிருப்பதாக எனக்கு தெரியவில்லை.
ஆணிவேர்ல தமிழன் சொன்னத அந்த சிங்கள இயக்குனர் சிங்கள மொழில
சொல்லிருக்கார்.சண்டை LTTE கும் Army கும் இடைல எங்கள (சிங்களர்களை) ஏன்
தாக்குரிங்கனு சொல்லி படம் எடுத்து அதை சென்னைல போட்டுக்கான்பிச்சா அதா
பாத்துட்டு இயக்குனரை ஏன்டா இப்படி படம் எடுத்தைனு கேட்டு
அடிக்குறாங்க.இதைக்கேட்ட ஞானியை இப்படி திட்டுறாங்க.

அலெக்சாண்டரும் ஒரு கோப்பை தேனீரும் நாவலில்
அலெக்ஸ்க்கும் ஒரு சிங்கள உலவாளியும் உரையாடும் பகுதியை இவர்கள்
படித்தார்கள என்று தெரியவில்லை.தெரிந்திருந்தால் !

விஜய்கோபால்சாமி

unread,
May 9, 2008, 2:49:12 AM5/9/08
to பண்புடன்
அய்யா கார்த்திக்,

காற்றுக்கென்ன வேலி என்று ஈழத்தமிழர் குறித்த ஒரு திரைப்படம் என்ன பாடு
பட்டது என்று தெரியுமா உங்களுக்கு. எந்த சிங்களவனும் வந்து தடுக்கவில்லை
அந்த படத்தை. நம்ம ஊர் தமிழனுங்கதான் தடுத்தார்கள். இந்த ஞாநி, “கருத்தை
கருத்தால்தான் எதிர்க்க வேண்டும். இந்த படம் வரக்கூடாது என்று
தடுப்பவர்கள் தங்களது எதிர்க்கருத்தை ஒரு படமாக எடுத்து வெளியிடலாமே”
என்று ஏன் அப்போது கருத்து சொல்லவில்லை. இந்த ”கருத்து கந்தசாமிக்கு”
தேவை விளம்பரம். உங்க வீட்டு விளம்பரம் எங்க வீட்டு விளம்பரமில்லை, அகில
உலக விளம்பரம். அதற்காக ஞாநி என்ன வேண்டுமானாலும் செய்வார்.

அதற்கு நானே உதாரணம். கடந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் ஞாநியினுடைய
ஸ்டாலுக்கு சென்றிருந்த போது அவரும் அங்கே இருந்தார். சில புத்தகங்களை
வாங்கிவிட்டு அதை எழுதியவர் என்ற முறையில் அவரிடம் ஒப்பமிட்டுத் தருமாறு
கேட்டேன். ”இது தவறான ”கல்ச்சர்”. உங்களுக்கு சமமானவர்களிடம் வாங்குவது
தவறில்லை. பிரபலம் என்று நீங்கள் கருதுகிற ஒருவரிடம் வாங்கும்போது, அங்கே
நீங்கள் உங்களையே தாழ்த்திக்கொள்கிறீர்கள்” என்று அறிவுரை சொல்லி அனுப்பி
வைத்தார். என்னை அனுப்பிவிட்டு அங்கே காத்திருந்த ஜெயா டிவியின்
படப்பதிவுக் குழுவுக்கு பேட்டிஅளிக்கிறார். ஏனென்றால், அவருக்கு ஜெயா
டிவி தருகிற விளம்பரத்தை இந்த அப்பாவி வாசகனால் தரமுடியாதல்லவா! அவர்களாக
தேடிவந்து கேட்டதற்கு ஞாநி என்ன செய்வார் என்று கேட்கலாம். அதே போல நானாக
சென்றுதானே ஒப்பமிட்டுத் தாருங்கள் என்றேன். இதில் எதற்க்கு ஜெயா
டிவிக்கு வெண்ணை, எனக்கு மட்டும் சுன்னாம்பு!

அந்த விளம்பர வெறிதானே ”என் படைப்புகளை யார் வேண்டுமானாலும்
பயன்படுத்தலாம், குமுதம் குழும ஏடுகள் மட்டும் பயன்படுத்தக்கூடாது” என்று
சொன்ன ஞாநியை அதே குமுதத்துக்கு இழுத்துக்கொண்டு வந்தது. அவ்வளவு
சுயமரியாதை பார்க்கிற ஞாநி “ஓ பக்கங்களை” தீம்தரிகிட வில் மட்டும் எழுத
வேண்டியதுதானே. தீம்தரிகிட டிவி என்று இவரே ஒன்று தொடங்குவதுதானே?
எதுக்கு குமுதம் வெப் டிவி க்கு வருகிறார்? சிலருக்கு பாரதியார் போதை,
சிலருக்கு சங்கராச்சாரியார் போதை, அதுபோல சிலருக்கு ஞாநி போதை. அந்த
போதைக்கு தீம்தரிகிடவில் ஊற்றித் தரமுடியாது. அதற்காகத்தான் வெகுசன ஏடான
ஆனந்த விகடன் ஊற்றிக் கொடுத்து வந்தார். அந்த ஏடு இவரை ஒதுக்கித் தள்ளிய
பிறகு, தாவி குதித்து குமுதத்துக்கு ஓடி வந்திருக்கிறார். அங்க ஊத்துன
அதே சரக்குதான், டம்ளர் மட்டும் வேற.

வழக்கறிஞர் ஜோதி அ.தி.மு.க.விலிருந்து விலகிய மூண்றாவது நாளே
தி.மு.க.வில் சேர்ந்ததற்கு என்ன உள்நோக்கம் என்று உக்காந்து யோசிச்சு
எழுதியிருந்தார். ஆனந்த விகடன் விரட்டி விட்ட இரண்டாவது வாரமே
குமுதத்துக்கு ஓடி வந்த இந்த ”உள்நோக்க ஸ்பெஷலிஸ்டை” எவன் வந்து கேள்வி
கேட்டான். அப்படியே எவனாவது கேட்டாலும், “ஜோதி மூணே நாள்ல திமுக வுல
சேந்துட்டாரு, ஆனா ஞாநி ரெண்டு வாரம் தாமதமாத்தானே இடம் மாறினார். அந்த
ரெண்டு வார தாமதத்துக்காக அவர பாராட்ட வேண்டாமா” என்று கேட்டாலும்
கேட்பார்கள் ஞாநி போதையில் மிதக்கிற அவருடைய தீவீர வாசகர்கள்.

இந்த ஊரு இன்னுமா ஞாநியை நம்பிக்கொண்டிருக்கிறது. என்ன கொடுமை சார்...

பிரேம்குமார்

unread,
May 9, 2008, 3:14:04 AM5/9/08
to panb...@googlegroups.com
அடேங்கப்பா, எவ்வளவு பெரிய மடல். அப்படியே உங்கள் அறிமுகத்தையும் இடுங்களேன் விஜய் :)

நந்தா

unread,
May 9, 2008, 4:03:16 AM5/9/08
to பண்புடன்
//”இது தவறான ”கல்ச்சர்”. உங்களுக்கு சமமானவர்களிடம் வாங்குவது
தவறில்லை. பிரபலம் என்று நீங்கள் கருதுகிற ஒருவரிடம் வாங்கும்போது, அங்கே
நீங்கள் உங்களையே தாழ்த்திக்கொள்கிறீர்கள்” என்று அறிவுரை சொல்லி அனுப்பி
வைத்தார். என்னை அனுப்பிவிட்டு அங்கே காத்திருந்த ஜெயா டிவியின்
படப்பதிவுக் குழுவுக்கு பேட்டிஅளிக்கிறார். ஏனென்றால், அவருக்கு ஜெயா
டிவி தருகிற விளம்பரத்தை இந்த அப்பாவி வாசகனால் தரமுடியாதல்லவா! //

விஜய் எனக்கென்னமோ இது சரியாகத்தான் படுகின்றது. எனக்கே பல சமயம்
எழுத்தாளர்களை ஆதர்ச புருஷர்களாக நினைத்து அவர்களிடம் கையெழுத்து கேட்பதை
பாமரத்தனமாகத்தான் தோன்றி இருக்கிறது. ஆனால உங்களால் ஞானிக்கு விளம்பரம்
கிடைக்காததால்தான் உங்களுக்கு கையெழுத்து போடாததற்குக் காரணம் என்று
நீங்கள் சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடிய வில்லை.

இது மட்டுமில்லை பல விஷயங்களில் நாம் அதீதமாய் உணர்ச்சி வசப்படுகிறோமோ
எனும் எண்ணம் எனக்குள் இப்போதெல்லாம் அடிக்கடி எழுகிறது. ஜெயமோகன்
மொக்கைத்தனமாய் பேசுவதற்காக, அவர் ஒரு சைக்கோ, அவரது புக்கை எல்லாம்
படித்துத் தொலைக்கிறார்களே என்று குரல் எழுப்பியது போல் இப்போது ஞானியின்
மீது சில விஷயங்கள்.

நிற்க. ஞானி குமுதத்திற்கு போனது, சிங்களப் படத்தின் மீதான அவரது கருத்து
ஆகியவற்றில் எனக்கு முற்றிலும் மாற்றுக் கருத்து இருந்தாலும், ஞானி ஒரு
பார்ப்பன வாதி, அவரது சட்டைக்குள் பூணூல் தெரிகிறது... என்பது போன்ற
குரல்களை அதீத உணர்ச்சி வசப்படுதலின் மறுவடிவமாகவே என்னால் பார்க்கப்
படுகிறது.

நந்தா

unread,
May 9, 2008, 4:04:14 AM5/9/08
to பண்புடன்
இந்த கட்டுரை சுபவீ யால் செப்டம்பர் 2007 ல் எழுதப்பட்டது.........


தந்தை பெரியார், பார்ப்பனர்களை, வைதீகப் பார்ப்பனர் என்றும், லௌகீகப்
பார்ப்பனர் என்றும் இரண்டு வகையாகப் பிரிப்பார். ஞாநி ஒரு லௌகீகப்
பார்ப்பனர். அவர் அரசியலை அலசுவார், சமூகநீதி பேசுவார், அறிந்தும்
அறியாமலும் இருக்கும் பாலியல் உணர்வுகளைப் பாடமாய் நடத்துவார், எங்கு
சென்றாலும், தன் முற்போக்கு முகத்தை மறக்காமல் எடுத்துச் செல்வார்.

ஆனால், அவருக்குள் புதைந்து கிடந்த திராவிட இயக்க எதிர்ப்பு, கலைஞர்
எதிர்ப்பு போன்றவை பூனைக்குட்டி வெளியே வருவது போல் இப்போது வெளிவரத்
தொடங்கி விட்டன.

முரசொலி மாறனுக்கு அஞ்சல்தலை வெளியிட்டது பற்றி எழுதுகையில், தேசிய
விலங்குகளுக்கு எல்லாம் கூட அஞ்சல்தலை வெளியிடப்படும்போது மாறனுக்கும்
வெளியிட்டால் என்ன என்பது போல் குறிப்பிட்டிருந்தார். நெஞ்சு நிறைய
அப்பிக்கிடக்கும் பகையும், வன்மமும் அந்த வரிகளில் அப்படியே வெளிப்பட்டன.

கண்ணகி சிலையைக் கரடி பொம்மையோடு ஒப்பிட்டுத் தன் மேதாவித் தனத்தை
ஒருமுறை வெளிப்படுத்தினார். இப்போது ஆனந்த விகடனில், ஸ்டாலினுக்கு
இருக்கும் எல்லாத் திறமையும் பரிதி இளம்வழுதிக்கும் உண்டுதானே என்று
எழுதி, தி.மு.க.விற்குள் சிண்டுமுடியும் சின்னத்தனத்தில்
ஈடுபட்டிருக்கிறார்.

என் குடும்பத்தில் தலித் மருமகள் இருக்கிறார் என்பது போன்ற வெற்று
அறிக்கைகள் விடுவதைக் கைவிட்டுவிட்டு, எங்கள் கட்சியின் சார்பில் ஒரு
தலித் முதலமைச்சராக்கப்படுகிறார் என்று கலைஞர் அறிக்கைவிட வேண்டுமாம்,
ஒரு தலித் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று ஞாநி கனவு காண்கிறாராம். அடடா,
தலித் மக்கள் மீது ஞாநிக்குத்தான் எத்தனை பரிவு, எத்தனை பாசம்.

அண்மையில் அவருக்கு ஆனந்தவிகடனில் ஒரு பெரிய பொறுப்பு கொடுத்துள்ளதாகக்
கேள்விப்பட்டேன். அந்தப் பதவி எல்லாம் எனக்கு வேண்டாம், யாராவது ஒரு
தலித் நண்பருக்குக் கொடுத்துவிடுங்கள் என்று அவர் சொன்னதாகத்
தெரியவில்லை. கனவெல்லாம், கலைஞரைப் பற்றி மட்டும்தான் போலும். குறைந்த
பட்சம் ஜெயலலிதாவிடம் இருந்தும் அப்படி ஓர் அறிக்கை வர வேண்டுமென்று அவர்
கனவு கண்டிருக்கலாம்.

தங்கள் நெஞ்சில் பட்டதை அப்படியே சொல்லிவிடும் முரடர்கள்தான் நாமெல்லாம்.
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் பக்குவமெல்லாம் நம்மில் பலருக்கு
இன்னும் கைவரவில்லை. பாருங்கள். அது ஞாநிக்கு எவ்வளவு அழகாய்க்
கைவருகிறது என்று!

தி.மு.க. விற்குள் உட்கட்சி சண்டையும், குழப்பமும் வரவேண்டும் என்னும்
தன் ஆசையை நேரடியாகச் சொல்லும் முரட்டுத்தனம் அவரிடம் இல்லை. பரிதி
முதலமைச்சராக வரவேண்டும் என்று கனவு காண்பதாகச் சொல்லிவிட்டால், பிறகு
அதை எதிர்ப்பது கடினம். எதிர்ப்பவர்களைத் தலித் விரோதி என்று
சொல்லிவிடலாம், ஞாநியின் கனவு பலிக்கும் வரையில், தி.மு.க.விற்கும் தலித்
விரோதக் கட்சி என்று முத்திரை குத்திவிடலாம்.

இப்படிப் பல்வேறு சித்து விளையாட்டுகளை ஞாநி அந்தக் கட்டுரையில் செய்து
பார்த்திருக்கிறார்.

ஆனாலும், வரலாறு நமக்கு ஓர் உண்மையைச் சொல்கிறது. திராவிட இயக்கத்தில்
தலித் தோழர்களுக்கு எப்போதும் இடம் இருந்திருக்கிறது என்பதே அந்த உண்மை.
மீனாம்பாள், சிவராஜ், தொண்டு வீராசாமி, சத்தியவாணி முத்து தொடங்கி இன்று
வரை அதன் தொடர்ச்சியை நம்மால் காணமுடியும். அண்மையில் கூட தன் பேரனை
அகற்றிவிட்டு, அந்த இடத்தில் அனைத்துத் தகுதிகளும் வாய்ந்த
ஆ.இராசாவைத்தான் அமைச்சராக ஆக்கியுள்ளார் கலைஞர். தமிழக அரசிலும்,
ஆதிதிராவிட நலத்துறைக்கு மட்டுமின்றி, பால்வளத்துறைக்கும் ஒரு தலித்
நண்பரே அமைச்சராக உள்ளார் என்பதை நாம் அறிவோம்.

இந்த உண்மைகளை எல்லாம் மறைத்து விட்டு, தலித் மக்களின் முன்னேற்றத்தில்
தி.மு.க. அக்கறை காட்ட வேண்டும் என்பது போல் அறிவுரை சொல்வதும், கனவு
காண்பதாய்க் கதைவிடுவதும், கிழிந்துதொங்கும் அவரது முற்போக்கு
முகமூடியையே நமக்கு அடையாளம் காட்டுகிறது.

பரிதிஇளம்வழுதியின் மீது நமக்கெல்லாம் இல்லாத பாசம், திடீரென்று அவருக்கு
எங்கிருந்து பொத்துக் கொண்டு வந்தது? இதுவரை பரிதியின் திறமையைப்
பாராட்டி அவர் எத்தனை இடங்களில் எழுதியும் பேசியுமிருக்கிறார்? எந்தெந்த
வகைகளில் ஸ்டாலின் மற்றும் பரிதியின் திறமைகளை ஒப்பிட்டு
ஆராய்ந்திருக்கிறார்? பொத்தாம் பொதுவில். போகிற போக்கில், ஒரு
குற்றச்சாட்டை வீசிவிட்டுப் போவதென்பது, எவ்வளவு உள்நோக்கமுடையது என்பதை
நாம் உணரவேண்டும்.

தந்தை பெரியார் ஓர் இடத்தில் சொல்லுவார், வைதீகப் பார்ப்பனர்களைவிட
லௌகீகப் பார்ப்பனர்களே ஆபத்தானவர்கள் என்று!

நந்தா

unread,
May 9, 2008, 4:10:57 AM5/9/08
to பண்புடன்
மேலே இருக்கும் கட்டுரை சுபவீ யால் செப்டம்பர் மாதம் 2007 ல்
எழுதப்பட்டது....

சுபவீ யின் செயல்பாடுகள், கொள்கைகள் போன்ற பலவற்றினால் அவர்பால் பெரும்
அபிமானம் ஏஎற்பட்டிருக்கும் போதிலும் மேலே இருக்கும் ஒரு கட்டுரையை
என்னால் மிகச் சாதாரணா ஒன்றாகவே பார்க்கமுடிகிறது...

ஞானியின் மீதான பார்ப்ப்பன முத்திரை இன்று என்றில்லை. சில காலங்களாகவே
குத்தப்பட்டுத்தான் வருகிறது..... இங்கு மிக முக்கியமாய் கவனிக்க
வேண்டியது தி.மு.க வைப்பற்றியோ, கலைஞரைப் பற்றியோ விமர்சனம் செய்பவர்
என்கின்ற காரணமே, ஞானியின் மீதான பார்ப்பன முத்திரைக்கு மிக முக்கிய
காரணமாய் இருப்பது ஒரு வகையான அதிகார மையத்தை நோக்கி திராவிடர்
கொள்கைகளும் நகர்ந்துக் கொண்டிருக்கின்றனவோ என்ற பயத்தை எனக்குள்
ஏற்படுத்துகிறது.....




பிரேம்குமார்

unread,
May 9, 2008, 4:13:00 AM5/9/08
to panb...@googlegroups.com

ஞாநியின் பார்ப்பனீயத்தை பற்றி எனக்கு தெரியாது என்ற போதும், அவர் ஒரு அற்புதமான விளம்பர விரும்பி என்பது என் ஆழமான கருத்து.

pandii durai

unread,
May 9, 2008, 4:16:14 AM5/9/08
to panb...@googlegroups.com
////////வழக்கறிஞர் ஜோதி அ.தி.மு.க.விலிருந்து விலகிய மூண்றாவது நாளே

தி.மு.க.வில் சேர்ந்ததற்கு என்ன உள்நோக்கம் என்று உக்காந்து யோசிச்சு
எழுதியிருந்தார். ஆனந்த விகடன் விரட்டி விட்ட இரண்டாவது வாரமே
குமுதத்துக்கு ஓடி வந்த இந்த "உள்நோக்க ஸ்பெஷலிஸ்டை" எவன் வந்து கேள்வி
கேட்டான். அப்படியே எவனாவது கேட்டாலும், "ஜோதி மூணே நாள்ல திமுக வுல
சேந்துட்டாரு, ஆனா ஞாநி ரெண்டு வாரம் தாமதமாத்தானே இடம் மாறினார். அந்த
ரெண்டு வார தாமதத்துக்காக அவர பாராட்ட வேண்டாமா" என்று கேட்டாலும்
கேட்பார்கள் ஞாநி போதையில் மிதக்கிற அவருடைய தீவீர வாசகர்கள்.
//////////////////

K.R.அதியமான்

unread,
May 9, 2008, 7:55:07 AM5/9/08
to பண்புடன்
நந்தா நீங்கள் சொன்னதை நான் வழிமொழிகிறேன்.

----------

a recent mail and reply :

Date: Sat, 9 Feb 2008 14:20:28 +0530
From: ath...@gmail.com
To: dheemth...@hotmail.com
Subject: நீங்கள் செய்த 'தவறு'

அன்புள்ள அய்யா,

ஆர்குட்டில் நடந்த ஒரு விவாதத்தில் நான் எழுதியது :

சமீப காலமாக ஞாநீ மீதான தனி மனித தாக்குதல்களை (அவர் கலைஞரை ஓய்வு பெற
சொன்னதின் விளைவாக) பார்க்கும் போது என்ன தோனுதுன்னா :

ஞாநி செய்த பெரிய தவறு, அவர் 'கலைஞர் வாழ்க' என்று கூவும் ஜால்ராக்களைப்
போல் பிழைப்புவாதியாக வாழத்தெரியாமல், சுயனலமாக வாழத்தெரியாமல், உடல்
நலத்தையும், வீட்டையும் இழந்ததுதான். எத்தனையோ பிழைப்புவாதிகளைப் போல்
இல்லாமல், தனது சொந்த வாழ்வை சோகமயமாக்கிய அசடு இவர். நாடும், மக்களும்
எக்கேடுகேட்டால் என்ன, தனது பிழைப்பு ஓடினால் சரி என்று வாழ்ந்திருக்க
வேண்டும் அவர்.

செய்த 'தவறுக்கு' தண்டனை அனுபவிகிறார்...
----------
his reply to me :

nandri
gnani



பிரேம்குமார்

unread,
May 9, 2008, 8:13:11 AM5/9/08
to panb...@googlegroups.com
ஒன்னு குத்தம் சொன்னா எல்லாரையும் குத்தம் சொல்லனும், இல்ல ஒருத்தங்க மேல குத்தம் சொல்றதுன்னா வெளிப்படையா சொல்லனும். எதுவும் இல்லாம சொல்றத சொல்லிட்டு, அப்புறம் நான் அப்படி நினைச்சு சொல்லவில்லை அப்படின்னு எஸ்கேப் ஆகுறதும் என்னாத்துக்கு இதெல்லாம்? :)

கார்த்திக்

unread,
May 9, 2008, 9:31:17 AM5/9/08
to பண்புடன்
// நந்தா நீங்கள் சொன்னதை நான் வழிமொழிகிறேன்.//

//உங்களுக்கு சமமானவர்களிடம் வாங்குவது தவறில்லை. பிரபலம் என்று நீங்கள்
கருதுகிற ஒருவரிடம் வாங்கும்போது, அங்கே நீங்கள் உங்களையே
தாழ்த்திக்கொள்கிறீர்கள்” என்று அறிவுரை சொல்லி அனுப்பி வைத்தார். என்னை
அனுப்பிவிட்டு அங்கே காத்திருந்த ஜெயா டிவியின் படப்பதிவுக் குழுவுக்கு
பேட்டிஅளிக்கிறார். ஏனென்றால், அவருக்கு ஜெயா டிவி தருகிற விளம்பரத்தை
இந்த அப்பாவி வாசகனால் தரமுடியாதல்லவா! //

வாங்க விஜய்.

ஞானி சொன்னதுல தப்பு இருக்கறதா எனக்குப்படல.நீங்க காசு குடுத்து வாங்குன
புத்தகத்துல அவரு ஏன் கையெழுத்து போடனும்னு எதிர்பாக்குரிங்க.
ஜெயா டிவில வர்ற காலைமலர் நிகழ்ச்சில திங்கள் கிழமைகள்ள அவர் புத்தகம்
பத்தி
5 நிமிஷம் பேசுவார் அதுக்கான பேட்டியாகூட அது இருக்கலாம் அது அவர்
தொழில்.
அதாவது அவரு உங்களுக்கு கையெழுத்து போட்டிருந்தா நல்லவர்.
போடதனால இப்போ கேட்டவர தெரியுறார்.

//ஞாநி செய்த பெரிய தவறு, அவர் 'கலைஞர் வாழ்க' என்று கூவும்
ஜால்ராக்களைப் போல் பிழைப்புவாதியாக வாழத்தெரியாமல், சுயனலமாக
வாழத்தெரியாமல், உடல் நலத்தையும், வீட்டையும் இழந்ததுதான்.//

விஜய்கோபால்சாமி

unread,
May 10, 2008, 4:15:31 AM5/10/08
to பண்புடன்
முதலில் நன்றி சொல்லிக்கொள்கிறேன். எனது மடலுக்கு பதில் எழுதிய
அனைவருக்கும் நன்றி. அனைவரும் சுட்டிக்காட்டியது ஞாநியிடம் நான் ஒப்பம்
கேட்டது குறித்துத்தான். மறுமொழிகள் நான் எதிர்பார்த்தபடியேதான்
வந்திருக்கின்றன. இந்த கையெழுத்து விஷயம் ஞாநியைக் குறித்த எனது தவறான
புரிதல் என்று நினைப்பீர்களேயானால் அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்.
இதில் அவமானப்படவோ வெட்கப்படவோ எதுவும் இல்லை. எனக்கும் அவருக்கும்
தனிப்பட்டு எந்த பகையும் கிடையாது. ஆனாலும் இந்த கையெழுத்து விஷயத்தை
உள்நோக்கத்தோடுதான் குறிப்பிட்டேன். இந்த பதிலைப் முழுவதுமாகப் படித்தால்
என் உள்நோக்கம் புரியும். இதன் பேரில் ஞாநிக்கு பரிந்து பேசியவர்களுக்கு
நான் பெரிதும் கடன் பட்டிருக்கிறேன். நிற்க.

ஞாநியைப் பார்ப்பன முத்திரையைக் கொண்டு தாக்குவதில் எனக்கும் உடன்பாடு
கிடையாதுதான். ஆனாலும் ஞாநி வெறுக்கத்தக்கவர் என்பதற்கு இன்னும் பல
காரணங்களும் இருக்கின்றன. அவற்றையும் கொஞ்சம் பார்த்துவிடுவோம்.

ஞாநி தன்னுடைய கருதுகோள்களை சமூகத்தின் மீது வெகு லாவகமாக திணிக்கிற
வேலையைத்தான் செய்துவருகிறார். அதுதான் என்னைப் போலவே பலரும் ஞாநியை
வெறுப்பதற்கு காரணமாக இருக்கிறது.

எதையும் தட்டிக் கேட்பது தப்பு என்று சொல்ல முடியாது. ஆனால் எல்லாரையும்
தட்டிப் பார்ப்பதைத்தான் தப்பு என்று சொல்கிறேன். ஞாநி இப்போது என்ன
செய்து வருகிறார்? ”ஒண்டிக்கு ஒண்டி வற்றியா, வற்றியா” என்று எல்லாரையும்
சண்டைக்கு இழுக்கிற தெருச்சண்டியர் வேலைதானே? பெரியவங்களா, பதில்
சொல்லுங்க... உண்டா, இல்லையா?

இதனால் அவருக்கு இரட்டை லாபம்தானே ஒழிய எந்த நட்டமும் கிடையாது. அந்த லாப
நட்டத்தையும் விளக்குகிறேன், கேட்டுக்கொள்ளுங்கள். இவரு வம்பிழுத்த
யாரவது இவரை திருப்பி அடித்தால், ”உண்மை கசக்குது அதான் அடிச்சிட்டு
போறான்” என்று சொல்லிக்கொள்ளலாம். அவன் இவரை கண்டுகொள்ளாமல்
சென்றுவிட்டால், “நான் சொன்னதில உண்மை இருக்கப் போய்த்தானே சும்மா
போறான்” என்றும் சொல்லிக்கொள்ளலாம். சரியா...

இந்தியா வல்லரசாக வேண்டும் என்பதில் ஞாநிக்கு மற்றவர்களோடு கருத்து
வேறுபாடு இருந்துவிட்டுப் போகட்டும். அது அவருடைய தனிப்பட்ட கருத்து
சுதந்திரம். ஆனா இந்தியா வல்லரசாக வேண்டும் என்ற லட்சியத்தோடு உழைத்து
வருகிற ஒருவரைப் பார்த்து, “நீ முக்கால் இந்து, கால் முஸ்லிம். அதனால்
தான் பி.ஜே.பி உன்னை ஜனாதிபதி ஆக்கியது” என்று சொல்லுவது எந்த வகையில்
சரி? பூனூலைக் கொண்டு ஞாநியைத் தாக்குவது தவறு என்று வக்காலத்து
வாங்குகிறவர்கள், அதே தவறை ஞாநி செய்தபோது அதற்க்கு அவர்கள் காட்டிய
எதிர்வினை என்ன என்று சொன்னால் கோடி பெறும். ஊடகங்களில் பலரும் இதற்கு
எதிர்வினை காட்டினால், ”ஓ பக்கங்களில்” கலாம் குடியரசுத் தலைவராக இருந்த
ஐந்து வருடங்களும் அவருடைய உடைமைகளை அண்ணா பல்கலைக்கழகம் அவருக்கு
ஒதுக்கிய இடத்தில் வைத்து பாதுகாத்ததை கேள்விக்கு உள்ளாக்குகிறார்.
இந்தக் கட்டத்தில் என்னுடைய கையெழுத்து விவகாரத்தை கொஞ்சம்
நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். பிடிக்காமல் போன பிறகு குற்றம் சொல்வதற்கு
காரணம் தேடுகிற வேலைதானே இது? சொல்லுங்கள், உண்டா இல்லையா?

கையெழுத்து போடாததில் ஞாநியின் தவறு என்ன இருக்கிறது என்று என்னை
கேட்டவர்கள், அண்ணா பல்கலைக்கழகம் அவருடைய உடைமைகளை பாதுகாத்ததற்கு கலாம்
எந்த வகையில் பொறுப்பாக முடியும் என்றும் ஞாநியையும் கேள்வி கேட்க
வேண்டும், கேட்பீர்களா? ஏனெனில் அண்ணா பல்கலைக்கழகம் கலாமின் பொருட்களை
பாதுகாத்ததிலும் எந்த தவறும் கிடையாது. ஒரு உதாரணமும் சொல்கிறேன்.
என்னுடைய அலுவலகத்தில் ஒவ்வொருவருக்கும், ஒரு கணினியும், ஒரு பெட்டகமும்
(லாக்கர்) கொடுத்திருக்கிறார்கள். என்னுடைய மேலாளர் அலுவல் நிமித்தமாக
வெளிநாடு சென்றபோது அவருடைய பொருட்களை அவருக்கு ஒதுக்கப்பட்ட
பெட்டகத்தில் வைத்துப் பூட்டி, சாவியை அவரேதான் வைத்திருந்தார். ஏனெனில்
அவர் திரும்பி வந்து அதே மேசை முன்பு அமர்ந்துதான் தன் அலுவல்களை செய்தாக
வேண்டும். இப்போது சொல்லுங்கள் என் மேலாளர் சாவியை எடுத்துச் சென்றது,
சரியா தவறா? கலாம் விஷயத்திலும் அதுதானே நடந்திருக்கிறது. சொல்லுங்க,
உண்டா இல்லையா?

இப்போது கலாமிலிருந்து கருணாநிதிக்கு வருவோம். கருணாநிதியைக் குறித்து
பலருக்கு விருப்பும் வெறுப்பும் இருக்கலாம். அதையும் யாரும் தவறு என்று
சொல்லிவிட முடியாது.

மிக அக்கறையாக கருணாநிதியை ஓய்வெடுக்கச் சொல்லுகிறார் ஞாநி. இனியும்
அவருடைய பிள்ளைகளும் தொண்டர்களும் அவரை ஓய்வெடுக்க விடவில்லையெனில்
அவர்கள் கொடுமைக்காரர்கள் என்கிறார். இதில் உண்மையான அக்கறை
இருந்திருந்தால் ஏன் ஞாநி மீது ஏன் இத்தனை வசவுகளும் ஏச்சுகளும்
வருகின்றன? இந்த இடத்தில் ஒரு செய்தியைப் பார்ப்போம்.

தமிழ்நாட்டில் ஒரு கிழவன் இருந்தார். சமுதாயத்தை சீர்திருத்துகிற
வேட்கையோடு பல மேடைகளில் பேசியவர், போராடியவர். ஒரு கட்டத்தில் அந்தக்
கிழவனுடைய உடல் மிகவும் தளர்ந்து போனது. நின்று கூட பேசமுடியாது.
வயிற்றிலே குடல் சரிவு. உடலிலிருந்து சிறுநீர் சரியாக பிரியாது.
மருத்துவர்கள் வயிற்றில் ஒரு குழாயை சொருகி அதன் மூலமாக சிறுநீர் கழிக்க
ஏற்பாடு செய்திருந்தனர். நடக்கக் கூட இயலாத அந்த நிலையிலும், புளிமூட்டை
போல அந்தக் கிழவனைத் தூக்கிச் சென்று மேடைகளில் உட்கார வைப்பார்கள்.
சரிந்து விழுகிற குடலோடும், நாற்றமடிக்கும் மூத்திர வாளியோடும்
தொண்னூற்றி நாலு ஆண்டுகள் தான் கொண்ட கொள்கைக்காக போராடியவர் அந்தக்
கிழவன்.

இன்றளவும் ஞாநி அந்த கிழவனைக் கொண்டாடி வருகிறார். பாரதியைக் கொண்டாடுகிற
அதே வாயால் எப்படி அந்த கிழவனையும் கொண்டாடுகிறார் என்று புரியவில்லை.
அந்த பெரிய கிழவனிடம் பாடம் படித்தவர்தான் ஞாநி இப்போது ஓய்வெடுக்கச்
சொல்லுகிற சின்னக் கிழவன். விஷய ஞானமுள்ளவர்களுக்கு நான் யாரைச்
சொல்லுகிறேன் என்பது இந்நேரம் புரிந்திருக்கும். ஆமாம், பெரியாரைத் தான்
குறிப்பிடுகிறேன்.

தொண்னூற்றி நான்கு வயது வரை உழைத்த பெரியாரை இவருடைய ஆதர்சமாக
கொண்டிருப்பார், ஆனால் என்பத்தி நான்கு வயதில் உழைத்துக் கொண்டிருக்கும்
அவருடைய சீடன் கருணாநிதியை ஓய்வெடுக்கச் சொல்கிறார். ஞாநியை அபத்த மூட்டை
என்பதா, அபத்த மலை என்பதா? சொல்லுங்க பெரியவங்களா?

சமீபத்தில்தான் தனது அறுபதாவது பிறந்தநாளைக் கொண்டாடினார் ஜெயலலிதா.
அறுபது வயது கடந்தவர்கள் தினசரி நடவடிக்கைகளை எவ்வாறு
ஒழுங்குபடுத்திக்கொள்வது, கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள் என்று
அவருக்கும் ஏதாவது அறிவுரை கூறியிருக்கலாமே?

மேற்கு வங்கத்தில் எண்பது வயது கடந்தும் முதல்வராக இருந்த ஜோதிபாசுவுக்கு
சொல்லியிருக்கலாமே இந்த அறிவுரையை, அவர் மேற்கு வங்க முதல்வராக
இருந்தபோது.

மூட்டுத் தேய்மானத்தினால் நடக்கவே சிரமப்பட்ட சங்கர் தயாள் சர்மா, அடல்
பிகாரி வாஜ்பாய் போன்றோரும் முதியவர்கள்தானே. அவர்கள் மீது ஏன் கரிசணம்
பிறக்கவில்லை ஞாநிக்கு?

அவ்வளவு ஏன், ஜெயேந்திர சரஸ்வதி கூட முதியவர்தான். மடத்தை கைமாற்றிவிட்டு
ஓய்வெடுங்களேன் என்று அவரைப்பார்த்து சொல்ல ஞாநி ஏன் வாயைத்
திறக்கவில்லை?

கால் நரம்பு பிரச்சனை காரணமாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூட இப்போதெல்லாம்
கூட்டங்களில் அமர்ந்தபடியேதான் பேசிவருகிறார். ராமதாசின் சிரமம் ஏன்
ஞாநியின் கண்களுக்குத் தெரியவில்லை? இதே உபதேசத்தை ராமதாசுக்கு வழங்க
வேண்டும் என்று ஏன் தோண்றாமல் போனது? சொல்லியிருந்தால், தன் எதிர்காலம்
சக்கரநாற்காலி இல்லாமல் நகரமுடியாது என்பது செயல்வீரர் ஞாநிக்கும்
தெரியும்.

(மேலே சொன்ன முதியவர்களைப் பற்றிய கருத்து இன்று காலை நான் படித்த ஒரு
வலைப்பதிவில் இருந்தது. பதிவும் பதிவரின் பெயரும் நினைவில் இல்லை.
ஆனாலும் இது இன்னொருவருடைய சிந்தனை என்பதால் அவரை மதிக்கும் விதமாக இதனை
தெரிவிக்கிறேன். பதிவர் குறித்த விபரங்களை தர இயலாமைக்கு மண்ணிக்கவும்.
வேறு யாரேனும் அந்த பதிவைப் படித்திருந்தால் தவறாமல் சுட்டியை
இணைக்கவும்.)

கருணாநிதி தலித்துகளின் சம்பந்தி என்று சொல்லிக் கொள்வதோடு நில்லாமல் ஒரு
தலித்தை முதலமைச்சராக்க வேண்டும் என்றும் தனது தலித் பாசத்தை
பொழிந்திருந்தார். தாழ்த்தப்பட்டவரான பரிதி இளம்வழுதியை முதலமைச்சராக்க
வேண்டும் என்றும் கேட்டிருந்தார். பரிதியை முதலமைச்சராக்குவதும்
ஆக்காததும் கருணாநிதியின், தி.மு.க வின் கையில் உள்ளது. அதை
விட்டுவிடுவோம். ஞாநி ஜெயலலிதாவிடமோ, ராமதாசிடமோ இதே கேள்வியை ஏன்
கேட்கக் கூடாது?

இதெல்லாம் போகட்டும், அடுத்த சங்கராச்சாரியாராக ஒரு தலித்தை
கொண்டுவாருங்களேன் என்று ”இருள்நீக்கி” ஜெயேந்திர சரஸ்வதிக்காவது ஞாநி
அறிவுறுத்தியிருக்கலாமே?

சுப.வீ.யைப் பற்றி நீங்கள் போதுமான அளவுக்கு பேசிவிட்டதால், ஞாநிக்கு
சுப.வீ. மீதுள்ள காழ்ப்பைப் பற்றி நான் இங்கே அதிகம் பேச விரும்பவில்லை.

இப்படி தொடர்ந்து திராவிட உணர்வாளர்கள் மீதே புழுதி வாரித் தூற்றினால்,
பூனூலைப் பற்றிக் கேள்வி கேட்கத் தோண்றுமா தோண்றாதா? சொல்லுங்க
பெரியவங்களா?

நண்பர் பிரேம் குமார் என்னைக் குறித்த அறிமுகம் கேட்டிருந்தார். ஏற்கெனவே
என்னுடைய மடல் மிகவும் நீண்டுவிட்டது. அதையும் சேர்த்தால் ஆர்.எம்.கே.வி
பட்டுப்புடவை போல் இன்னும் நீண்டுவிடும். இன்னொரு மடலில் அதை
எழுதுகிறேன்.


நன்றியுடன்

விஜய்கோபால்சாமி

நந்தா

unread,
May 11, 2008, 2:44:08 PM5/11/08
to பண்புடன்
நன்றி விஜய். உங்கள் பார்வையில் உங்களுக்கு சரி என்று தோன்றியதை எடுத்து
கூறி இருக்கிறீர்கள்.

ஆனால் இதற்கான மறுப்பை எனது சார்பில் நான் சொல்லியும் தீர வேண்டி
இருக்கிறது.

முதலில் மிகத் தெளிவாக ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். ஞானியின் எல்லா
செயல்களையும் கண்முடித்தனமாக நான் ஆதரிக்க வில்லை. ஞானியின் பல்வேறு
செயல்பாடுகளில் எனக்கு விமர்சனம் இருக்கிறது. ஆனால் கருணாநிதியை
விமர்சிப்பதனாலும், திமுகவின் மீது அவர் விமர்சனம் வைப்பதாலும் அவர்
பார்ப்பன புத்தியை காட்டுகிறார் என்பது அப்பட்டமான அதிகாரமையத்தின்
வெளிப்பாடு. சொல்லப்போனால் ஒரு காலத்தில் பார்ப்பனர்கள் பயன்படுத்தி வந்த
உத்தி இது. ”அடப்பாவி பிராமணனை திட்டறீயேடா, பகவான் சபிச்சுடுவாருடா
சபிச்சு...”என்பது போன்ற உத்தி இது.

மறுபடி சொல்கிறேன் கருணாநிதி குறித்த அந்த கட்டுரையின் மீது வைக்கும்
எதிர் விமர்சனம் என்பது ”ஞானி தட்டையான முறையில், கருத்தியலற்ற ஒரு
கட்டுரையை எழுதி இருக்கிறார் என்பதாக” த்தான் இருக்கலாமே தவிர ”அடப்பாவி
கருணானிதியை யே விமர்சனம் பண்றியா... நீ பார்ப்பனன்டா” என்பது போல்
இருந்தால் மன்னியுங்கள் அந்த புள்ளியில் நான் சத்தியமாய் வேறுபடுகிறேன்.

கருணாநிதி----பெரியாரின் சீடர்---- திமுக--- பெரியார், அண்ணா வழி வந்த
மிக முக்கிய திராவிடர்கழகத்தின் பிரிவு

ஞாநி = பார்ப்பான்
பார்ப்பான் = 2000 வருடப் பகைமை
கலைஞர் = பெரியாரின் வழிவந்த சூத்திரத் தலைவர்
பார்ப்பான் x சூத்திரன்
ஞாநி x கலைஞர் => பார்ப்பான் x சூத்திரன் (நன்றி பத்ரி)


இதுதான் இங்கே நடந்துக் கொண்டிருக்கிறது.கலைஞரும் திமுகவும் என்ன
முற்றிலும் விமர்சனத்திற்கப்பாற்பட்டவர்களா என்ன???

அப்துல்கலாமின் ஒரு சில செயல்களும் இன்னும் பலத்த
விமர்சனத்திற்குள்ளாகிக் கொண்டுதான் இருக்கின்றன விஜய். இதே ஞாநி அவர்கள்
எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களைப் பற்றியும், இளையராஜாவைப் பற்றியும்,
பெரியார் படத்திற்கு அவர் இசையமைக்க மறுத்து விட்டதைக் குறித்தும் எழுதி
இருக்கின்ற கட்டுரைகளைப் படித்திருக்கின்றீர்களா.....

ஞானி ஒரு காலம்னிஸ்ட். அறிவுஜீவிகள் என்று முத்திரைக்குத்தப்பட்டவர்கள்
எல்லாரும் சேர்ந்து தற்போது ஒரு சில வார்த்தைகளை மகா மோசமான
கெட்டவார்த்தைகளாக மாற்றி இருக்கின்றார்கள்....

பொதுப்புத்தி, நுண்ணரசியல், பெண்ணியம் என்று கெட்டவார்த்தைகளாக்கப் பட்ட
அந்த வார்த்தைகளில் ஒன்று நடுநிலை வாதம்... அது என்னமோ தெரிய வில்லை நாம்
எல்லாருக்கும் ஒரு லேபிள் தேவைப்படுகிறது. தேடித்தேடி ஒரு லேபிளை
வாங்கிக் கொள்கின்றோம். இல்லாவிட்டால் பார்ப்பவர் எல்லாருக்கும் அத்தகைய
முத்திரையைக் குத்தி விட துடிக்கின்றோம்...

ஞாநி மீதும் அப்படி ஒரு முத்திரயைத்தான் குத்தி விடத் துடித்துக்
கொண்டிருக்கின்றோமோ......








.

நந்தா

unread,
May 11, 2008, 2:46:16 PM5/11/08
to பண்புடன்
சன்னியாசப் பொன்விழா காணும் சங்கராச்சாரி-யார்?

காஞ்சி மடாதிபதி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் துறவு பூண்டு 50
ஆண்டுகள் ஆனதை சினிமாவின் நூறாவது நாள் விழா மாதிரி கொண்டாடி
வருகிறார்கள். "அடுத்த பிரதமர் ஜெயேந்திரர் என்று சிலர் கிண்டலடிக்கும்
அளவுக்கு அவரது அரசியல் பாணி துறவறம் வளர்ந்து கொண்டிருப்பது
வருத்தத்துக்குரியது. இப்படிச் சொல்வதால் அந்த பீடத்தின் மீது நமக்குள்ள
மதிப்பு இம்மியும் குறைவுபட்டு விடாது" என்று கல்கி இதழ் எழுதுகிறது.
ஒருவர் துறவியானதைக் கொண்டாட வேண்டுமா என்றால் ஜயேந்திரர் விஷயத்தில்
அவசியம்தான். ஏனென்றால் 16 வருடங்களுக்கு முன்பு துறவியின் தண்டத்தைப்
போட்டுவிட்டு நள்ளிரவில் மடத்தை விட்டு ஓடிப் போனவர் அவர். பிறகு
திரும்பிவந்து தொடர்ந்து துறவியாக இருப்பது கொண்டாட்டத்துக்கு
உரியதுதானே! கல்கி வர்ணிக்கிற 'அரசியல் பாணி துறவறம்' எப்படிப்பட்டது
என்பதற்கு வரலாற்றிலிருந்து இதோ 'சாம்பிள்! 1983ல் ஜயேந்திரர் அழைத்ததன்
பேரில் அவரை சந்தித்த சின்னக்குத்தூசி, உடன் சென்ற ஞாநி இருவரும்
'எதிரொலி'யில் எழுதிய கட்டுரைகள், அதற்கு 'சோ'வின் மறுப்பு, மறுப்புக்கு
மறுப்பை வெளியிட மறுப்பு முதலியவை இதோ:

'தவறாமல் விடுதலை படிக்கிறேன்'

- சின்னக்குத்தூசி கட்டுரை

"ஆச்சார்ய ஸ்வாமிகள் - உங்களைப் பார்க்க விரும்புகிறார்" என்றார் ஆற்காடு
வீராசாமியின் தம்பி தேவராசன்.

நமக்கு அதிசயமாக இருந்தது.

கெல்லீசில் உள்ள கார்பொரேஷன் பாங்க் கிளையின் நிர்வாகி சீனிவாசன் ஒருநாள்
பிற்பகல் வந்தார்.

அவருடன் நாமும் பரீக்ஷா நாடகக் குழுவின் அமைப்பாளர் ஞாநியும் ஸ்வாமிகளை
சந்திக்கப் புறப்பட்டோம்.

காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
திருவல்லிக்கேணியில் - வசந்த மண்டபத்தில் தங்கி இருந்தார்கள்.

வசந்த மண்டபத்தின் வாயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஸ்வாமிகளை தரிசனம்
செய்யக் காத்திருந்தார்கள்.

கார்ப்பொரேஷன் பாங்க் சீனிவாசன் எங்கள் வருகையை ஸ்வாமிகளுக்கு ஒரு ஊழியர்
மூலம் சொல்லி அனுப்பினார்.

உடனடியாக நாங்கள் சுவாமிகள் தங்கியிருந்த கட்டிடத்திற்குச் சென்றோம்.
சிலபடிகள் ஏறியவுடன் ஒரு சிறிய ஹால் இருந்தது. அந்த அறையின் தரை பாயோ -
சமுக்காளமோ விரிக்கப்படாமல் வெறுமையாக இருந்தது. அந்த அறையில் நாங்கள்
காத்திருந்தோம்.

இரண்டொரு நிமிடங்களே ஆகியிருக்கும்; ஸ்வாமிகள் உள்ளே வந்தார்.

நாங்கள் கைகூப்பி வணக்கம் தெரிவித்தோம்.

ஸ்வாமிகள் எங்கள் அருகில் வந்து அமர்ந்தார். ஒரு ஊழியர் - கதவுகளையும்
ஜன்னல்களையும் மூடிவிட்டு வெளியே போய்விட்டார். அறையில் நாங்கள் மூவரும்
- ஸ்வாமிகளும் மட்டுமே இருந்தோம்.

"என்ன இதெல்லாம்" என்றார்.

"இதுவரையில் திராவிடர் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள
பகுத்தறிவுப் பிரச்சார நூல்களும் - பெரியார் எழுதிய நூல்களும் இதில்
இருக்கின்றன" என்றோம்.

"இதெல்லாம் எதற்காக?" என்றார் ஸ்வாமிகள்.

"சமீப காலமாகத் தாங்கள் பேசி வருவதை எல்லாம் நாம் படித்து வருகிறோம்.
சுயமரியாதை இயக்கம் சம்பந்தமாகத் தாங்கள் ஒரு தவறான மனோபாவத்தை வளர்த்து
வைத்துக் கொண்டிருப்பதாக எமக்குத் தோன்றுகிறது. ஸ்வாமிகள் இந்த நூல்களை
எல்லாம் படித்தால் உண்மை தெரியும்" என்றோம்.

ஸ்வாமிகள் வாய்விட்டுச் சிரித்தார்.

பின்னர்,

"நான் தினசரி வேறு எந்தப் பத்திரிகை படித்தாலும் படிக்காவிட்டாலும்
'விடுதலை' பத்திரிகையை மட்டும் படிக்காமல் இருப்பதில்லை" என்றார்.

இப்படிச் சொல்லிவிட்டு,

"என்ன உங்கள் கட்சியின் வேலை? ஒரு குறிப்பிட்ட ஜாதியினரைப் பற்றி
ஆபாசமாகவும் அவதூறாகவும் பேசவேண்டியது இதுதானே..." என்றார்.

சின்னக்குத்தூசி: "அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. தனிப்பட்ட முறையில்
எவரையும் தாக்கிப் பேசுவது பகுத்தறிவு இயக்கத்தவரின் வழக்கமல்ல"

ஸ்வாமிகள்: "ஏன் இல்லை? எல்லா இடங்களிலும் நான் போகும் இடங்களில் எல்லாம்
திராவிடர் கழகத்தினர் கலாட்டா செய்கிறார்கள்; கறுப்புக்கொடி
காட்டுகிறார்கள். என்னை எதிர்த்து ஆபாசமான வார்த்தைகள் கூறி
திட்டுகிறார்கள்."

சி.கு.: "தங்களைப் பற்றித் தனிப்பட்ட முறையில் எந்த திராவிடர்
கழகத்தவரும் தாக்கிப் பேசி இருக்க மாட்டார்கள். தாங்கள் ஒரு அமைப்பின் -
வர்ணாஸ்ரம தர்மத்தின் பிரதிநிதியாக இருப்பதால் - தங்கள் வருகைக்கும்
தங்களது பேச்சுகளுக்கும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பார்களே தவிர,
தனிப்பட்ட முறையில் இருக்காது."

ஸ்வாமிகள்: "திருவான்மியூரில் ஒருவர் எதையோ என்மீது விட்டெறிந்தார். பல
இடங்களில் அராஜகம் வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள். சுவர்களைப் போய்ப்
பாருங்கள். எப்படி எல்லாம் ஆபாசமாக எழுதி வைத்திருக்கிறார்கள் என்று
தெரியும்."

சி.கு.: "தாங்கள் கூறுவதை என்னால் ஒப்புக் கொள்ள முடியாது. எங்காவது
ஓரிரண்டு இடங்களில் வன்முறைப் போக்கு தலைதூக்கி இருக்கலாம். ஆனால்,
அதையெல்லாம் வைத்துக்கொண்டு, "எல்லாமும் வன்முறைதான்" என்று முடிவுகட்டக்
கூடாது. வன்முறை எங்காவது தலைதூக்குவது என்பது எல்லா இயக்கங்களுக்கும்
பொதுவானதுதான். காந்திஜி நடத்திய அகிம்சைப் போராட்டத்திலேகூட அவ்வப்போது
வன்முறைகள் தலைதூக்கி இருக்கின்றன. சவுரிசவுரா போலீஸ் ஸ்டேஷனை
கொளுத்தியது போன்ற வன்முறைகள் நடந்திருக்கின்றன. அதை வைத்துக் கொண்டு
காந்திஜியின் இயக்கமே வன்முறை இயக்கம்தான் என்று முடிவுகட்டிவிட
முடியுமா?"

நான் இன்னொரு விஷயத்தையும் ஸ்வாமிகளுக்கு ஒப்பிட்டுக் காட்ட
விரும்புகிறேன்.

பெரியாரின் பகுத்தறிவு இயக்கம் கடந்த அய்ம்பது வருடங்களுக்கு மேலாக
நடந்து வருகிறது. இந்த அய்ம்பது வருட காலத்தில் எத்தனை வன்முறைச்
சம்பவங்கள் நடந்துவிட்டன என்று ஸ்வாமிகளால் பட்டியல் போட்டுக் காட்ட
முடியுமா? என்னால் முடியும்! பட்டுக்கோட்டை டேவிஸ் என்பவர் ஒரு
பிராமணரின் பூணூலை அறுத்திருக்கிறார். தூத்துக்குடி புது கிராமம்
அக்கிரகாரத்திலே தி.மு.க போராட்டத்தின்போது வன்முறை நடந்ததாகக்
கூறப்பட்டது. தஞ்சாவூரிலே, மன்னார்குடியிலே, கோவைக்கருகிலே சமீப
காலத்தில் வன்முறை நடந்ததாகச் செய்தி வெளிவந்தது.

அய்ம்பது வருடத்திற்கு மேலாக நடைபெற்று வரும் ஒரு இயக்கத்திலே
இப்படிப்பட்ட விரல்விட்டு எண்ணக் கூடிய சம்பவங்கள் நடந்தது ஒன்றும் பெரிய
விஷயமல்ல. திராவிடர் கழகக்காரர்களால் - பெரியார் தொண்டர்களால்
இதுவரையிலும் பொதுஜன அமைதிக்குப் பங்கம் ஏற்பட்டதாகவோ, எந்த உயிருக்கும்
ஆபத்து ஏற்பட்டதாகவோ வரலாறு கிடையாது.

ஆனால், தங்களைப் போன்றவர்கள் இந்துமத எழுச்சி - இந்துமத ஒற்றுமை என்ற
பேரால் சமீப வருடங்களில் செய்துவரும் பிரச்சாரத்திற்குப் பிறகு எத்தனை
கலவரங்கள் நடந்து இருக்கின்றன? எத்தனை உயிர்ச் சேதங்கள், எத்தனை
பொருட்சேதங்கள். மீனாட்சிபுரம், ராமநாதபுரம், மண்டைக்காடு, புத்தநத்தம்,
புளியங்குடி என்று எத்தனை எத்தனை வன்முறைச் சம்பவங்கள் துப்பாக்கிச்
சூடுகள் நடந்துவிட்டன.

இந்துமத ஒற்றுமையின் பேரால் நடந்த இதுபோன்ற வன்முறைகள் - கலவரங்கள் - மத
எதிர்ப்பு இயக்கமான திராவிடர் கழகத்தினரால் ஒருபோதும் நடந்ததில்லை.."

- பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த ஸ்வாமிகள் இடையில் குறுக்கிட்டு,

"பிராமணர்களைப் பற்றி சுவற்றில் எழுதுகிறார்களே, அதைப்பற்றி நீங்கள்
ஒன்றும் சொல்லவில்லையே" என்று கேட்டார்.

நண்பர் ஞாநி சொன்னார்:

"எங்களுடன் மைலாப்பூருக்கு வாருங்கள். உங்களை வரவேற்பவர்கள்
எப்படியெல்லாம் சுவர்களில் எழுதி வைத்திருக்கிறார்கள் என்று
காட்டுகிறோம்.

'வீரமணியின் மனைவியை பொதுவுடைமை ஆக்குவோம்' என்றுகூட எழுதி
வைத்திருக்கிறார்கள்."

ஸ்வாமிகள்: (ஞாநி சொன்னதைத் தொடர்ந்து) எல்லாம் சரி, உங்கள் பிரச்சாரம்
எல்லாம் இந்து மதத்தை கன்னாபின்னாவென்று பேசுவதில்தானே இருக்கிறது.
கிறிஸ்துவ மதத்தையோ, இஸ்லாமிய மதத்தையோ நீங்கள் விமர்சிப்பதில்லையே"
என்றார்.

சி.கு.: "ஏன் இல்லை; பகுத்தறிவு இயக்கத்தினர் எல்லா மதங்களிலும் உள்ள
கேடுகளையும்தாம் விமர்சித்து வருகிறார்கள்."

ஸ்வாமிகள்: "இந்தக் கேள்விக்கு மட்டும் நீங்கள் யாருமே சரியாக பதில்
சொல்வதில்லை. நழுவுகிறீர்கள். இப்படித்தான் இதே கேள்வியை வீரமணியிடம் சோ
கேட்டபோது அவரும் மழுப்பிவிட்டார்.

'சோ'வை நான்தான் வீரமணியிடம் அனுப்பினேன். நான் தயாரித்துத் தந்த
கேள்விகளைத்தான் சோ - வீரமணியிடம் கேட்டார்."

சி.கு.: "தாங்கள் அப்படிக் கருதுவது தவறு - இந்தப் புத்தகக் கட்டில் கூட
ஜீன் மெஸ்லியரின் நூல் - நான் ஏன் கிறிஸ்துவன் இல்லை என்பது போன்ற
கிறுஸ்துவ மதத்தை விமர்சிக்கும் நூல்கள் இருக்கின்றன.

மற்றொன்று எங்களது பிரதான வேலை இந்து மதத்தின் கேடுகளை
அம்பலப்படுத்துவதுதான்.

எனக்கு மதம் இல்லை; சாதி, கடவுள் ஆகியவைகளில் நம்பிக்கை கிடையாது.
ஆனாலும் என்னைப் பற்றி அரசாங்கப் பதிவேடுகளில் என்னை இந்து என்றும் ஒரு
குறிப்பிட்ட சாதியைச் சார்ந்தவன் என்றும்தான் குறித்து எழுதுகிறார்கள்.
இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் இந்துக்களே; இந்தியாவை அலைக்கழித்து
வரும் இந்து மதத்தைப் பற்றி விமர்சிப்பதையே நாங்கள் முதல் வேலையாகக்
கருதுகிறோம்.

கிறிஸ்துவர்கள் - முஸ்லீம்களை விமர்சிப்பது அப்படி ஒன்றும் சிரமமான
காரியமல்ல; உங்களோடும் விசுவ இந்து பரிஷத்தோடும், இந்து முன்னணியோடும்
ஆர்.எஸ்.எஸ்.காரர்களோடும் நாங்கள் ஒத்துழைத்தாலே போதுமே! அதைத்தானே
நீங்கள் செய்து வருகிறீர்கள். எங்கள் நோக்கமும் செயலும் உங்களிடமிருந்து
முற்றிலும் வித்தியாசமானது. நீங்கள் இந்துமத ஒற்றுமையின் பேரால் பிற
மதங்களை ஒழிக்கவும் ஒடுக்கவும் பார்க்கிறீர்கள்; அது எங்கள் வேலையல்ல.
இந்துமத முத்திரை குத்தப்பட்டவர்களிலும் 97 சதவீத மக்களை நீங்கள்
சூத்திரர்கள் என்றும், தீண்டத்தகாதவர்கள் என்றும் மதத்தின் பேரால்
ஒடுக்கி ஒதுக்கி வைத்திருக்கிறீர்கள். அந்தக் கொடுமைக்கு எதிரானதுதான்
எங்கள் இயக்கம் எல்லாம்."

ஸ்வாமிகள்: "யார் சொன்னது நாங்கள் தீண்டாமை அனுஷ்டிக்கிறோம் என்று;
என்னோடு வந்து பாருங்கள் நான் ஒவ்வொரு ஊரிலும் சேரிகளுக்குச் செல்வதையும்
சேரி ஜனங்களுக்கு நன்மை செய்வதையுமே பெரிய பணியாக ஏற்று நடத்தி
வருகிறேன்."

சி.கு.: "அய்யா சொல்வதைக் கேட்க ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது. ஆனால்,
ஸ்வாமிகள் சேரிக்கு போவதாலும், சேரி ஜனங்களுக்கு சில நன்மைகள்
செய்வதாலும் என்ன பெரிய மாறுதல் வந்துவிட முடியும்?

காந்தியடிகள் நடத்திய தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தை விடவா? ஆலயப் பிரவேசம்
என்றூ ஊரூருக்கும் நடத்தினார்களே; அதனால் அரிஜனங்களின் நிலை சமூகத்தில்
உயர்ந்துவிட்டதா? இப்போதும் மாலை நேரங்களில் எல்லாக் கோயில்களிலும்
போய்ப் பார்க்கலாம். எத்தனை அரிஜனங்களை தங்களோடு மற்ற மக்கள் சமமாக
நடத்துகிறார்கள். மேல்சாதி அமைப்புகள் - உயர்சாதி மனோபாவம் ஆகியவைகளை
அப்படியே போற்றிப் பாதுகாத்து வைத்துக் கொண்டு சேரி ஜனங்களுக்கு நன்மை
செய்கிறேன் என்றால் அதற்கு என்ன அர்த்தம்?

ஏன் தங்களையே எடுத்துக் கொள்வோம்; அரிஜனங்களுக்கு நன்மை செய்வதாக
சொல்கிறீர்கள். ஆனால் அதே அரிஜனங்களும் அர்ச்சகர் ஆகலாம் என்றால்
குறுக்கே நிற்கிறீர்கள்."

ஸ்வாமிகள்: "நான் எங்கே குறுக்கே நிற்கிறேன்; யாரோ வழக்குப் போட்டால்
அதற்கு நான் எப்படிப் பொறுப்பு?"

ஞாநி: "வழக்குப் போட்டவர்கள் யார்? உங்களைப் பின்பற்றுபவர்கள்தானே;
நீங்கள் அழைத்து ஒரு வார்த்தை சொன்னால் போதுமே!"

ஸ்வாமிகள்: "ஏன் சொல்ல வேண்டும்? அது அவர்கள் இஷ்டம். ஆகமங்களுக்கு
விரோதமானது என்பதால் அவர்கள் கோர்ட்டுக்குப் போகிறார்கள். கோர்ட்டு
தீர்ப்பு அப்படி வந்தால் - அதற்கு நான் என்ன செய்ய முடியும்?"

சி.கு.: "இந்து லா என்பதுதானே பெரும்பான்மை மக்களின் உரிமைக்கும்
விருப்பங்களுக்கும் எதிராக இங்கே இப்படி எல்லாம் ஆட்டி வைத்துக்
கொண்டிருக்கிறது. அதனால்தான் நாங்கள் வேதம், ஆகமம், சாஸ்திரம் என்ற
பேரால் நடத்தப்படும் இப்படிப்பட்ட அக்கிரமங்களை எதிர்த்துப் போராட
வேண்டியிருக்கிறது."

ஸ்வாமிகள்: "நாம் என்னதான் அரிஜனங்களுக்காக பாடுபட்டாலும் சில இடங்களில்
அவர்கள் நடந்து கொள்ளூம் விதம் அதிர்ச்சி அளிக்கிறது. நான் தமிழ்நாட்டை
சொல்லவில்லை. வடக்கே பம்பாய் போன்ற இடங்களில் தலித்பந்தர் போன்ற
இயக்கங்கள் பயங்கர வன்முறையில் ஈடுபடுகின்றன. அது தேவை அற்றது."

சி.கு.: ஸ்வாமிகள் இப்போது நாம் ஆரம்பத்தில் சொன்ன ஒரு உண்மையை
ஒப்புக்கொண்டு விட்டீர்கள். வடக்கே பெரியார் தோன்றாததாலும் - ஜாதி
ஒழிப்பு இயக்கங்கள் இல்லாததாலும் - இன்னமும் அங்கு சாதிவெறி கொடுமைகள்
தலைவிரித்து ஆடுகின்றன. ஆகவே அங்கு வன்முறையும் இருக்கிறது.

ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் சமூக மாறுதல் இவ்வளவு அமைதியாக நடந்து
வருகிறதே; அதற்குக் காரணம் யார்? பெரியார்தான். பெரியாரின் அய்ம்பது
ஆண்டு காலத்திற்கும் மேலான சாதி ஒழிப்புப் பணிகளால்தான் தமிழகத்தில்
இவ்வளவு பெரிய மாறுதல், வன்முறை துளியும் இன்றி ஏற்பட்டிருக்கிறது."

ஸ்வாமிகள்: "அது வாஸ்தவம்தான். பெரியாரைப் பற்றி எனக்கு எப்போதுமே
மரியாதை உண்டு. அவர் யாரிடமும் துவேஷம் பாராட்டினதில்லை. ரொம்ப
நாகரீகத்தோடு நடந்து கொண்டார். ஆனால், இப்போது அவரைப் பின்பற்றுபவர்கள்
அப்படி இல்லை.

கருணாநிதியை எடுத்துக் கொள்ளூங்கள். என்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும்
சொல்லட்டும். நான் கேட்டுக் கொள்கிறேன். ஆனால் எனது பீடத்தை எதற்காக அவர்
இழிவுபடுத்திப் பேச வேண்டும். எனக்கு ரொம்ப வருத்தம். நான் என்ன செய்ய
முடியும்? நான் வழிபடும் ஆண்டவனிடத்திலேதான் அவருக்கு தண்டனை
அளிக்கும்படி முறையிட்டுக் கொண்டேன். அதன்படி அவரும் படுத்துவிட்டார்!"

சி.கு.: கருணாநிதி தங்களையோ - தாங்கள் சார்ந்துள்ள காமகோடி பீடத்தையோ
தனிப்பட்ட முறையில் எதுவும் தாக்கிப் பேசவே இல்லை.

தாங்கள் தவறாகச் சொன்ன ஒரு கருத்துக்கு பதிலளித்துத்தான் அவர் பேசினார்.
தாங்கள் சொன்னீர்கள் 'தமிழர்களுக்குத் தமிழும் சமஸ்கிருதமும் இரண்டு
கண்கள் போன்றவை. தமிழ் தாய்மொழி என்றால் சமஸ்கிருதம் தந்தை மொழி' என்று.

இது எப்படி சரியாகும்? வழக்கு ரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும் -
யதார்த்தத்திலும் தாங்கள் சொன்னது பொருந்தவே பொருந்தாத ஒன்று. தாய்மொழி
என்றுதான் இருக்க முடியுமே தவிர தந்தை மொழி என்று ஒன்று ஏது?

அப்படியே தாங்கள் சொல்வது போல தமிழர்களுக்கு சமஸ்கிருதம் தந்தை மொழி
என்று வாதத்திற்காக ஒப்புக் கொண்டே பேசுவோம்!

தமிழர்கள் எல்லோருக்கும் சமஸ்கிருதம் தந்தை மொழி என்றால் 97% பேரான
மக்கள் அந்த மொழியைப் பயின்று பாண்டித்யம் பெற்றால்கூட கோயில்களில்
அர்ச்சகராக முடியாது என்கிறீர்களே!

தமிழன் தனது தாய்மொழியான, தமிழில் அர்ச்சனை செய்தால் ஆண்டவனுக்கு ஆகாது;
புரியாது என்கிறீர்களே!

அப்புறம் எப்படி தமிழர்களுக்கு தமிழும் சமஸ்கிருதமும் இரண்டு கண்கள்
என்பானேன்? எந்தத் தகப்பன் 'எனது மூன்று குழந்தைகள் மட்டுமே
உயர்வானவர்கள். பாக்கி 97 பேர் மட்டம்' என்பான்?

ஸ்வாமிகள்: "நீங்கள் சொல்வது சரி அல்ல. இப்போதே தமிழ்நாட்டில்
ஆயிரக்கணக்கான கோயில்களில் பிராமணர் அல்லாதவர்கள்தான் பூஜை செய்து
வருகிறார்கள். அவர்கள் எல்லாம் தமிழில்தான் பூஜை நடத்துகிறார்கள்;
அவர்களில் ரொம்பப் பேருக்கு தமிழ்கூட சரியாகத் தெரியாது..."

சி.கு.: "தமிழே தெரியாதவர்கள் - ஆயிரக்கணக்கான கோயில்களில் பூஜை
நடத்துகிறார்கள் என்று நீங்கள் சொல்கிறீர்கள். தமிழை நன்றாகத் தெரிந்தவர்
மீதமிருக்கிற கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்தால் என்ன தவறு?"

ஸ்வாமிகள்: "இன்னும் பத்துப் பதினைந்து வருடம் போனால் நிலைமை
அப்படித்தான் ஆகப் போகிறது. இப்போதே பல கோயில்களில் உள்ள படாச்சாரியார் -
சிவாச்சாரியார்கள் எல்லாம் தங்கள் வீட்டுக் குழந்தைகளை படிக்க வைத்து -
வேலைக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். இனி வருங்காலத்தில் இந்த
வேலைக்கு யார் வரப் போகிறார்கள்?"

சி.கு.: பிராமணர்கள் தங்கள் வீட்டுப் பிள்ளைகளை படிக்க வைத்து வேறு
வேலைகளுக்கு அனுப்புகிறார்கள் என்று நீங்களே சொல்கிறீர்கள்! அப்படியானால்
பிராமணன் என்று நீங்கள் குறீப்பிடுகிற ஜாதியினருக்கும் பிராமணரல்லாதார்
என்று சொல்லப்படுகிறவர்களுக்கும் என்ன வித்தியாசம்?

பிராமணன் பிரம்மத்தை அறிந்தவன்; காசு பணம் சம்பாதிக்க ஆசைப்படாதவன்;
சமூகத்திற்கே வழிகாட்டியாக - உயர்ந்த ஒழுக்க சீலங்களை தனது சொந்த
வாழ்க்கையில் அனுஷ்டித்து சமூகத்திற்கே உதாரணமாக இருப்பவன் என்று
பெரியவாளின் 'தெய்வத்தின் குரல்' புத்தகம் கூறுகிறது.

ஸ்வாமிகள் சிரிக்கிறார்! "பெரியவாள் புஸ்தகங்களை எல்லாம் நன்றாக
படித்திருக்கிறார்" என்று சீனிவாசனிடம் கூறுகிறார்.

நாம் தொடர்ந்து சொல்கிறோம் -

"இன்றைக்கு பிராமணர்கள் எல்லாம் பெரியவாள் தொகுத்துக் காட்டியிருக்கிற
இலக்கணப்படிதான் இருக்கிறார்களா? நீங்களே சொல்லுகிறீர்கள்; பிராமணர்கள்
வேறு வேலைக்குத் தங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்கிறார்கள் என்று!

அப்படியானால் 'பிராமணன்' என்று ஏன் அவர்கள் தங்களை இன்னமும் அழைத்துக்
கொள்ள வேண்டும்? அவர்களுக்கு எதற்காக பிராமணர் சங்கம் என்று ஒன்று?"

ஸ்வாமிகள்: "நாடார் சங்கம், நாயுடு சங்கம், முதலியார் சங்கம் எல்லாம்
இல்லையா? அதுபோல பிராமணர்களும் தங்களுக்கு என்று சங்கம் வைத்துக்
கொள்வதில் என்ன தவறு?

சி.கு.: "தவறு என்று நான் சொல்லவில்லை. நாடார் குலப் பெருமக்கள் சங்கம்
வைத்து என்ன கோரிக்கை வைக்கிறார்கள். நாங்கள் தமிழகத்தின் மொத்த
ஜனத்தொகையில் இத்தனை சதவீதம் பேர் இருக்கிறோம். அவர்களுக்கு மக்கள் தொகை
அடிப்படையில் இத்தனை சதவீத இடங்களை கல்வித்துறையிலும் உத்தியோகத்
துறையிலும் ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என்றுதான் கேட்கிறார்கள்.
வன்னியர்கள் ஆனாலும், நாயுடுகள் ஆனாலும், எல்லோருமே மக்கள் தொகை
அடிப்படையில் - எங்கள் விகிதாச்சாரத்துக்கு ஒதுக்கீடு கொடு என்றுதான்
கேட்கிறார்கள்.

ஆனால் ஜனத்தொகையில் 3 சதவீதத்தினர் பிராமணர்கள் சங்கம் வைத்து என்ன
கேட்கிறார்கள். ஒதுக்கீடு என்பதே கூடாது; எல்லா இடங்களையும் திறந்து
விடுங்கள். தகுதி - திறமை பேரால் நாங்களே வந்துவிடுகிறோம் என்கிறார்கள்
இது எப்படி நியாயம் ஆகும்?

கருணாநிதியும் வீரமணியும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும்,
தாழ்த்தப்பட்டோருக்கும் ஒதுக்கீடு செய்தது போக மீதமுள்ள பொதுஇடத்தில் ஒரு
பத்து சதவீத இடத்தை முற்பட்டோருக்கு என்று ஒதுக்கீடு செய்யலாம் என்ற
அளவிற்குக் கூறுகிறார்களே. அதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ள மறுத்து
"ஒதுக்கீடே கூடாது, தகுதி, திறமைதான் அடிப்படை" என்றூ பேசுகின்றவர்கள்,
"மற்ற சாதியினர் சங்கம் அமைக்கவில்லையா?" என்று கேட்பதில் அர்த்தம்
இருக்கிறதா? மக்கள் தொகை அடிப்படையில் விகிதாச்சார ஒதுக்கீடு கேட்ட்கும்
மற்ற சாதி சங்கங்களும், "ஒதுக்கீடே கூடாது; எல்லாம் எங்களுக்கே" என்று
கூறும் பிராமணர் சங்கமும், அடிப்படையிலேயே வேறுபட்டவை ஆயிற்றே!

ஸ்வாமிகள்: "நீங்கள் என்னதான் சொன்னாலும் வெறும் பிராமணர் எதிர்ப்பு -
பிராமணர்களைத் தாக்குதல்தான் திராவிடர் கழகத்தின் வேலையாக இருக்கிறது
என்று எனக்குத் தோன்றுகிறது."

ஞாநி: "ஸ்வாமிகள் அப்படி நினைப்பது தவறு. வீரமணி, கருணாநிதி
போன்றவர்களையே அழைத்து ஸ்வாமிகள் பேசலாம். ஸ்வாமிகள் சொல்கிற சாதி
ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு போன்ற காரியங்களில் அவர்கள் கண்டிப்பாக
ஒத்துழைப்புத் தருவார்கள்."

ஞாநியின் இந்த யோசனைக்கு ஸ்வாமிகளிடமிருந்து ஒரு சிரிப்பு மட்டுமே
பதிலாகக் கிடைக்கிறது.

சி.கு.: "சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு போன்றவைகளில் கூட ஸ்வாமிகள்
கருத்துக்கும் சீனியர் ஸ்வாமிகள் பெரியவாள் கருத்துக்கும் வித்தியாசம்
இருக்கிறது.

பெரியவாள் "சாதிகள் ஒழியவேண்டியதில்லை". வர்ணாஸ்ரமத்தின் அடிப்படையில்,
வகுக்கப்பட்ட சாதிகள் அப்படியே நீடிப்பதுதான் நல்லது என்று திட்டவட்டமாக
கூறுகிறார்கள். ஆனால், தாங்களோ - சமீப காலமாக சாதி ஒழிப்புப் பணிகள்
பற்றியும் பேசி வருகிறீர்கள்"

உரையாடல் நீண்டுகொண்டே போனது. ஒண்ணே கால் மணிநேரம் போனதே தெரியவில்லை.

வெளியே பக்தர்கள் கூட்டம் அதிகரித்துவிட்டது. நிறைய பேர் கதவருகே நின்று
உரையாடல்களைக் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.

இதற்கு மேலும் ஸ்வாமிகளின் நேரத்தை எடுத்துக் கொள்வது அவ்வளவு சரியாகப்
படவில்லை. ஆகவே, -

"அய்யா! தங்களை சந்தித்ததிலே ரொம்ப சந்தோஷம்; இன்னொரு சமயம் மறுபடியும்
வந்து சந்திக்கிறோம்" என்று சொல்லி எழுந்தோம்.

ஸ்வாமிகள் ஒரு ஊழியரை பெயர் சொல்லி அழைத்தார். அவரிடமிருந்து 'கல்கண்டு'
வாங்கி எங்களுக்கெல்லாம் புரசை இலையில் வைத்து பிரசாதமாக வழங்கினார்.
பெற்றுக் கொண்டு விடைபெற்றோம்.

காஞ்சி சங்கர மடத்தின் தற்போதைய தலைவரான ஜெயேந்திர சரஸ்வதியைச் சந்திக்க
நண்பர் சின்னக்குத்தூசி சென்றபோது நானும் தற்செயலாக உடன்செல்லும்
வாய்ப்பு ஏற்பட்டது.

தன்னை, தன் கொள்கைகளை கடுமையாக விமர்சிப்பவர்களை ஒருவர் சந்திப்பதோ,
அளவளாவுவதோ தவறானதல்ல. எனினும், தன்னைப் பற்றி விமர்சித்து எழுத வேண்டாம்
என்று மடாதிபதி - ஒரு துறவி சொல்லியனுப்புவதும், அதற்குப் பயன் இல்லாது
போன நிலையில் குறைந்தபட்சம் சந்திக்கவாவது வரச் சொல்லுங்கள் எனத்
தூதனுப்பியதும் - இன்றைய கலாச்சார, அரசியல், சமூக சூழ்நிலையில் எனக்கு
சாதாரண விஷயங்களாகத் தோன்றவில்லை.

வாளால் அறுப்பினும், தாளில் பணியினும் ஒரே நிலையோடு இருக்க வேண்டிய
பற்றற்ற சுவாமிகள், விமர்சனங்களுக்காக மனம் பதைப்பதும் விமர்சகரின்
மனம்மாற்ற (கொள்கை ரீதியாக அல்ல) வழிகள் தேடுவதும் மதமும் அரசியலும் இணைய
ஆரம்பித்திருக்கிற காலத்தின் கோலம்தான்.

சுவாமிகளைக் காணச் சென்றபோது அவரையும் தற்போது மடத்தின்
நிர்வாகத்திலிருந்து ஓய்வு பெற்று ஒதுங்கிப் போய்விட்ட முந்தைய
மடாதிபதியான சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளையும் ஒப்பிட்டு உலாவி
வரும் கருத்துக்கள் என் மனதில் உலா வந்தன.

"பெரியவர் விளம்பரம் தேடாதவர். சின்னவர் பப்ளிசிடிக்கு அலைகிறார்.
பெரியவரோட ஞானம் சின்னவருக்கு வராது. பெரியவர் எங்கு போனாலும் நடந்து
போவார். இவர் கார்ல போறார். பெரியவர் அனாசாரமா சேரிக்கெல்லாம்
போகமாட்டார். சின்னவர் ஆகம விரோதமா சேரிக்கெல்லாம் போறார். பெரியவர்
காலத்துல அவரோட ஒரு உறவினரைக்கூட மடத்துப் பக்கம் அண்டவிட்டதில்லை. இவர்
நேர்மாறு. பெரியவர் இளைஞர்களை அட்ராக்ட் பண்ண முடியல. சின்னவர் இளைஞர்
படையையே திரட்டியிருக்கார்."

இப்படி எத்தனை எத்தனையோ கருத்துக்கள். இச்சூழ்நிலையில் ஜயேந்திர
சரஸ்வதிகளை சந்தித்து உரையாடச் செல்வதில் ஒரு பெரிய ஆவல் எனக்கு
இருந்ததில் வியப்பில்லை.

மடாதிபதிகள் பொதுவிவாகாரங்களில் வெளிப்படையாகத் தலையிடாமல்
ஒதுங்கியிருந்த காலம் மாறிவிட்ட நிலையில் - இதில் முன்னணியில் இருக்கிற
இந்த சங்கராச்சாரி - எப்படிப்பட்ட மனிதர், ஜாதியும் மதமும் எதற்காக
இன்னமும் தேவை என்று கருதுகிறார் என்றெல்லாம் அறிய விரும்பினேன்.

நேரில் சந்தித்து உரையாடியபோது, அவருடைய பல கருத்துக்கள், அவரும்,
அவருடைய மடமும் காலங்காலமாக சார்ந்து நிற்கும் கருத்துக்களின்
வெளிப்பாடாகவே அமைந்தன. அவை எனக்கு எந்த விதத்திலும் வியப்பை
ஏற்படுத்தவில்லை.

ஆனாலும், அவருடன் சின்னக் குத்தூசியும் (ஓரளவு) நானும் நடத்திய
விவாதத்தில் நான் உணர நேர்ந்த ஒரு சில விஷயங்கள் மட்டுமே இன்னும் என்னை
நெருடிக் கொண்டிருக்கின்றன.

கலைஞர் கருணாநிதி, வீரமணி, சோ போன்றவர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது
அவன், இவன் என்றெல்லாம் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பேசியதைக் கூட
முக்கியமானதல்ல என்று ஒதுக்கிவிடலாம்.

குன்றக்குடி அடிகளார் மார்க்சியம் பேசுவதற்கு ஜயேந்திர சுவாமிகள் கண்டனம்
தெரிவித்ததைக் கூட பொருளாதார ஏற்றத் தாழ்வுகளைப் பற்றி சுவாமிகளுக்கு
அக்கறையில்லை என்பதாக விட்டுவிடலாம். மார்க்சியத்தின் அடிப்படையே மனித
நேயம்தான் என்று நான் சுட்டிக்காட்டியபோதும் சுவாமிகள் அதை ஏற்கவில்லை.

கலைஞர் கருணாநிதி காமகோடி பீடத்தை இழிவுபடுத்தி பேசியதாகவும், அதனால்
தான் கோபமுற்றதாகவும் கூறிய சுவாமிகள் "என் பக்தி சுத்தமானதாக இருந்தால்
(கருணாநிதிக்கு) ஏதாவது உடம்புக்கு வரணும்னு பிரார்த்தனை செஞ்சேன்.
அதேமாதிரி (கருணாநிதியை) படுக்கப் போட்டுடுத்து" என்று சொன்ன போது நானும்
சின்னக் குத்தூசியும் ஒருகணம் அதிர்ந்து போனோம். ஒரு துறவி செய்கிற
பிரார்த்தனையாக இது இல்லையே என்று அதிர்ச்சியடைந்தபோதும், விவாதத்தை
ஆரோக்கியமாக நடத்த வேண்டும் என்ற அக்கறையோடு சின்னக்குத்தூசி தன் கருத்து
ரீதியான கேள்விகளைத் தொடர்ந்தார். சுவாமிகளின் அருவருக்கத்தக்க
பிரார்த்தனை அவரது மனித பலவீனத்துக்கு அடையாளமாய் நிற்பதைக் கூட
ஒதுக்கிவிட்டு மேலே போவோம்.

எங்களிடம் பேசும்போது மணியனின் முரண்பாடுகளை பற்றி ஒப்புக்கொண்ட
சுவாமிகள், மணியன் மதத்தையும் ஆன்மிகத்தையும் வியாபாரமாகவே நடத்துவதாகக்
கருத்து தெரிவித்த சுவாமிகளிடம் - இதை நீங்கள் பொதுமேடையில் பகிரங்கமாகச்
சொல்ல வேண்டாமா? அவர் செய்வதற்கெல்லாம் உங்கள் ஆசிர்வாதம் இருப்பதாக
வெளியில் நிலவும் கருத்தை நீங்கள் தவறென்று கருதினால், அதை வெளியே சொல்ல
வேண்டாமா? என்று நான் கேட்டபோது,

பதில் சொல்லாமல் சிரித்தார். "இதை வெளியில் சொல்ல நீங்கள் மறுத்தால்,
மணியன் செய்யும் காரியங்களுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள் என்றுதானே
அர்த்தம்" என்று மீண்டும் நான் சொன்ன போது,

அப்போதும் சிரிப்பையே பதிலாக்கினார் சுவாமிகள்.

இதே போல் தமிழ் அர்ச்சனை பற்றியும் அரிஜனங்கள் அர்ச்சகராவது பற்றியும்
பேசியபோது என் நேரடியான கேள்விகளுக்கு பதில் சொல்வது சிக்கலாகிவிட்ட போது
சிரிப்பையே உதிர்த்தார். அந்தச் சிரிப்பை தெய்வீகச் சிரிப்பு என்று
மெய்சிலிர்த்து ஒருபோதும் எழுதிவிட முடியாது. அதில் தெய்வீகம் இல்லை.
விஷமத்தனம் தான் இருந்தது.

எங்களைத் திருப்திப்படுத்த சில பதில்களைத் தருவதும் அதே நேரத்தில்
அவற்றைப் பகிரங்கமாகப் பேசமறுப்பது என்ற போக்கும் விருப்பு வெறுப்பற்ற
துறவிகளுக்கு சரியானதல்ல... சில குறிப்பிட்ட அரசியல் நோக்கங்களுக்காக
அப்படியெல்லாம் நடந்துகொள்வது, சில பல அரசியல்வாதிகளுக்கே உரிய குண
இயல்பு.

ஜகத்குரு ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் எனக்கு நெருடலாக நின்ற மற்றொரு
விஷயத்துக்கு வருவோம்.

தன்னை பிராமணர்களின் தலைவர் என்று கூறுவதை வன்மையாக ஆட்சேபித்த
சுவாமிகள், அந்தக் குறுகிய வட்டத்தில், தன்னை அடைப்பதை விரும்பவில்லை.
அதைவிடப் பெரிய இன்னொரு வட்டமான இந்து வட்டத்துக்குள்ளே தன்னை குறுக்கிக்
கொள்வதையே விரும்பினார்.

இந்துமதத் தலைவர்களில் ஒருவராகத் தன்னை எல்லோரும் அடையாளம் காண்பதையே
சுவாமிகள் அவாவுவதில் நமக்கு ஆட்சேபணை இல்லை. மதங்கள், சாதிகள், கடவுள்
முதலியவற்றின் மீதான பற்றுக்கள் முற்றாக நீங்கும் காலம், மக்களிடையே
விழிப்புணர்ச்சியின் விளைவாக வரும்வரையில், - மதத்தலைவர்கள் நம்
சமூகத்தில் இருந்தே தீருவார்கள் என்ற யதார்த்தத்தை மறுக்க முடியாது.

ஆனால், ஒரு மதத்தின் தலைவர்கள் இன்னொரு மதத்தின் மீது துவேஷம்
பாராட்டுவதையோ, அதன் விளைவாக மக்களிடையே பிளவுகளூம் மோதல்களும்
ஏற்படுவதையோ ஒருபோதும் சகிக்கலாகாது. கடவுள் நம்பிக்கை உள்ளவராயினும்
சரி, அற்றவராயினும் சரி, மதம் ஜாதி முதலியவற்றின் பெயரால் மக்கள்
பிளவுபடுத்தப்படுவதை ஏற்க முடியாது.

ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சின்னக்குத்தூசியை சந்திக்க விரும்பியதன்
இரண்டு அடிப்படை நோக்கங்களை எனக்கு அந்த விவாதத்தில் உணர முடிந்தது.

தன்மீதான விமர்சனங்களை நிறுத்தக் கோருவது ஒன்றாகும்; அதை தனிப்பட்ட
பலவீனமாக விட்டுவிடலாம். இன்னொரு நோக்கமே முக்கியமானதாகிறது.

"இந்து மதத்தின் குறைகளை திராவிடர் கழகம் விமர்சிப்பது பரவாயில்லை.
ஆனால், அதனால் முஸ்லீம்களுக்கு பலம் வந்துவிடுகிறது. எனவே, திராவிடர்
கழகம் இந்து மதத்தையோ, சங்கராச்சாரியையோ விமர்சிப்பதற்கு பதிலாக,
சேரிகளில் சங்கர மடம் செய்யும் நிவாரணப் பணிகளில், கைகொடுக்கட்டும்.

எது எப்படியானாலும் முஸ்லீம்களை வளரவிடும் விதத்தில் திராவிடர் கழகம்
செயல்படக் கூடாது."

- என்பதுதான் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தொடர்ந்து வலியுறுத்திய விஷயம்.

அப்போது நான் குறுக்கிட்டு, "எல்லா மனிதரும் சந்தோஷமாக வாழ வேண்டும்
என்பதுதானே மதங்களின் நோக்கம்! இந்துவானால் என்ன முஸ்லீமானால் என்ன"
என்று கேட்டேன்.

"அதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு இந்துக்களை பற்றித்தான் கவலை.
எல்லா மனுஷங்களைப் பத்தியும் கவலையில்லை" என்று ஜகத்குரு ஜயேந்திர
சரஸ்வதி சுவாமிகள் அடித்து சொன்னார்.

"அதெப்படி சொல்லலாம்? இது சரியாக இல்லையே என்று நான் மீண்டும் சொன்னேன்.

"முஸ்லீம்கள் எக்கேடு கெட்டாலும் எனக்கு கவலையில்லை. நான் ஹிண்டுஸ்
பத்திதான் அக்கறை எடுத்துக்க முடியும்" என்று மீண்டும் சுவாமிகள் சொல்லி
விட்டார்.

இந்த இரண்டு விஷயங்களும்தான் என்னை நெருடின. அன்பு, சமரசம், மனிதநேயம்
இவற்றையே மதம் போதிப்பதாக கூறுவதும், இப்படி போதிக்கிற மதத்தின்
தலைவர்களாக உள்ளவர்கள் வெளியில் ஒன்றும் உள்ளே வேறொன்றுமாகப் பேசும் நிலை
இருக்குமானால் -

மீண்டும் வலியுறுத்திச் சொல்ல வேண்டியிருக்கிறது. கடவுள் நம்பிக்கை
என்பது தனிப்பட்ட விஷயம். மத நம்பிக்கை என்பதும் ஜாதி நம்பிக்கை என்பதும்
சமூக விஷயங்கள். எனவே, நம்மிடையே மோதல்களை உருவாக்க மதத்தையும்
ஜாதியையும் பயன்படுத்துவதை எதிர்க்க கடவுள் நம்பிக்கையுள்ளவராயினும்
அற்றவராயினும் ஒன்று சேர வேண்டிய காலம் வந்து கொண்டிருக்கிறது.

அமைதியான தமிழகத்தில் மதக் கலவரங்களை அரசியல் ரீதியில் ஏற்படுத்தும்
நோக்கத்தோடு அண்மைக் காலத்தில் முயற்சிகள் நடந்து வருகின்றன. இவற்றின்
விளைவாக 1983 மீண்டும் 1948 ஆக மாற்றப்பட்டு மனிதர்கள் ரத்த ஆறு
ஓடுமானால் - அதற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ பொறுப்பானவர்களின் பட்டியலில்
ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளும் இருப்பார் என்றே என்னால் இப்போதைக்கு
என்னால் அனுமானிக்க முடிகிறது.

ஏனென்றால் துறவியைச் சந்திக்கப்போன நான் தரிசித்தது காவியுடையில் இருந்த
ஒரு "பூர்ஷ்வா" அரசியல்வாதியைத்தான்.

இது குறித்து நாம் எல்லோரும் வருத்தப்படவும், சிந்திக்கவும்
கடமைப்பட்டவர்களாவோம்.

"சோ" மறுப்பு:

(15.4.83 'துக்ளக்' இதழில் சோ வெளியிட்ட மறுப்பு அறிக்கை இது)

அன்புடையீர், வணக்கம்.

தாங்கள் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீரமணியுடன் நடத்திய
கலந்துரையாடல் - அறிவார்ந்த கருத்துச் செறிந்த, இரண்டு வழக்குரைஞர்களின்
போராகவே இருந்தது.

ஆனால், 3.4.83 'எதிரொலி' நாளிதழில் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி
ஸ்வாமிகளை சின்னக்குத்தூசி கண்டெழுதியுள்ள கலந்துரையாடலில்
சங்கராச்சாரியார், 'நான்தான் சோவை வீரமணியிடம் அனுப்பினேன். நான் எழுதிக்
கொடுத்த கேள்விகளைத்தான் சோ, வீரமணியிடம் கேட்டார்" என்று கூறியுள்ளார்.

இது எவ்வளவு அபத்தம் என்பதை எண்ணி நான் மிகவும் வருந்துகிறேன். 'லாஜிக்'
என்பார்களே, 'தர்க்கவாதத்' துறைக்கு தாங்கள் முடிசூடா மன்னர் போன்றவர்
என்பதை, தர்க்கவியலைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்தவர் உணர்வர். இது தங்களை
மகிழ்விக்க வேண்டுமென்று எழுதப்படவில்லை. ஏனென்றால், 'துக்ளக்'
படிப்பவர்கள் அப்படிப்பட்டவர்களல்ல என்பதைத் தாங்கள் பன்முறை
கூறியுள்ளீர்கள்.

எனவே, என் போன்ற பலர் இதுபோல் சங்கராச்சாரியார் கூறியதைக் கேட்டு
வருந்துகிறோம். வீரமணி சொல்லியிருக்கிற பதில்களையெல்லாம் இவர் உணர்ந்து
அதற்கு மறுவினாவையும் தங்களிடம் அனுப்பியதுபோல், சங்கராச்சாரியார்
கூறியுள்ளமை குறித்து தாங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்பதை அறிய என்
போன்றவர்கள் ஆவலாயுள்ளோம்.

காஞ்சி சங்கராச்சாரியின் பேச்சைத் தாங்கள் தெளிவுறுத்தி, 'தன்னிலை
விளக்கம்' அளிப்பின் என் போன்றோர் தெளிவுற ஏதுவாகும்.

- அ.மகிமை, வேலூர் - 63

(ஆசிரியர் குறிப்பு: இந்த வாசகர் குறிப்பிட்டிருப்பது போல், இந்த
விஷயம்பற்றி நான் விளக்கமளிப்பது தவிர்க்க முடியாததாகி விட்டது.)

டியர் மிஸ்டர் வாசகரே!

ஆசார்ய சுவாமிகள் கூறியுள்ளதாக 'எதிரொலி'யில் வெளியாகியுள்ளதை நானும்
படித்தேன்.

ஆசார்ய சுவாமிகளிடமே நேரில் சென்று, இது பற்றி அவருடைய கருத்தைச்
சொல்லுமாறு கேட்டுக் கொண்டேன்.

பிரசுரத்திற்காக அல்லாமல் சில கருத்துக்களை எதிரொலியின் பிரதிநிதிகளுடன்
பேசிக் கொண்டிருந்ததாக சுவாமிகள் கூறினார். ஆனால் தான் சொல்லாதவற்றை
ஆங்காங்கே சேர்த்தும், சொல்லிய சிலவற்றை ஆங்காங்கே விட்டும்,
சம்பாஷணையின் சில பகுதிகளை முற்றிலுமாக விட்டும் 'எதிரொலி' கட்டுரை
வெளியிட்டிருக்கிறது என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

துக்ளக்கில் வெளியான வீரமணி பேட்டியைப் பற்றி பேசுகையில், 'ஹிந்து மத
நம்பிக்கைகளைப் பற்றித்தான் எல்லோரும் தாக்குவீர்கள். மற்ற மதங்களைப்
பற்றிக் கேட்டால், பதில் கூறாமல் நழுவி விடுவீர்கள். வீரமணியை சோ பேட்டி
கண்ட போது இப்படித்தான் நடந்திருக்கிறது. சரியாகவே பதில் சொல்லவில்லை'
என்று சுவாமிகள் குறிப்பிட்டிருக்கிறார் அவ்வளவுதான்.

நடக்காத ஒன்றை நடந்ததுபோல் கூற வேண்டிய அவசியமும், நடந்தவற்றை
நடக்காததுபோல் காட்டும் அவசியமும் கட்சி சார்புள்ள பத்திரிகைகளுக்கு
வேண்டுமானால் ஏற்படலாம்.

ஸ்ரீ சங்கராச்சார்ய சுவாமிகளுக்கு அந்த மாதிரி ஏற்பட நியாயம் இல்லை.
இன்னொரு விஷயத்தையும் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். சென்னையில்
ஆசார்ய சுவாமிகள் முன்னின்று வெற்றிகரமாக நடத்திய கலாச்சார விழா, ஊர்வலம்
போன்றவைகளுக்கு பிறகு எதிரொலி இந்தக் கட்டுரையை வெளியிட்டுள்ளது. ஆசார்ய
சுவாமிகளைச் சந்தித்த போதே அதுபற்றி வெளியிடாமல் திடீரென்று அந்த
விழாவுக்குப் பிறகு வெளியிடுவானேன்?

வீணாக அவருடைய பெயரை சர்ச்சைக்குரிய வகையில் இழுத்திருப்பது வருந்தத்தக்க
விஷயம்.

- சோ.

சின்னக்குத்தூசி எழுதிய பதில்

காஞ்சி காமகோடிபீடம் ஜீனியர் சங்கராச்சாரியாரை அவரது
விருப்பத்திற்கிணங்கவே நாம் சந்திக்க நேர்ந்தது.

ஏழெட்டு தடவைகள் அவர் சொல்லி அனுப்பிய பின்னரே, நாம் அவரை சந்திக்க
ஒப்புக் கொண்டோம்.

சங்கராச்சாரியார் போன்ற துறவிகள் குறைந்தபட்சம் பொய் சொல்லாத -
நேர்மையானவர்களாகவாவது இருப்பார்கள் என்று நாம் நம்பினோம்.

ஜீனியர் சங்கராச்சாரியார் நமது நம்பிக்கையின் அஸ்திவாரத்தையே தகர்த்துத்
தூள்தூளாக்கி விட்டார்.

- பொய்யர்

கடைந்தெடுத்த பொய்யர்

என்பவருக்கு ஒரு உதாரணம் வேண்டும் என்றால் காஞ்சி ஜீனியர்
சங்கராச்சாரியாரை கண்ணை மூடிக்கொண்டு உதாரணம் காட்டி விடலாம்.

அந்த அளவுக்கு - அவர் தம்மை வடிகட்டிய பொய்யர் என்று - துக்ளக் சோ மூலம்
அடையாளம் காட்டிக் கொண்டிருக்கிறார்.

காஞ்சி சங்கராச்சாரியார் நம்முடன் பேசியது என்ன என்பதற்கு இரண்டு பேர்
சாட்சியம் உண்டு. ஒருவர் - பரீக்ஷா நாடக அமைப்பின் தலைவர் ஞாநி.

- மற்றொருவர் காஞ்சி சங்கராச்சாரியாரின் அத்யந்த சீடரும் கார்ப்பரேஷன்
பாங்கின் கெல்லீஸ் கிளை நிர்வாகியுமான சீனிவாசன்.

காஞ்சி ஜீனியர் - நம்மிடம் உரையாடியபோது - "நான் தான் சோவை வீரமணியிடம்
அனுப்பினேன். நான் எழுதிக் கொடுத்த கேள்விகளைத்தான் சோ வீரமணியிடம்
கேட்டார்"

என்று சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை!

ஆனால் இப்போது அவர் சோவிடம் அப்படிச் சொல்லவில்லை என்றூ மறுப்புத்
தெரிவித்து விட்டார்.

சங்கராச்சாரியார் அப்படி மறுப்புச் சொல்லியிருந்தால் -

அவரைப்போல - ஒரு கடைகெட்ட பொய்யரை - துறவி என்று நம்பி - சந்திக்கச்
சென்றதற்காக - வாசகர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ள நேரிடும்.

நம்மிடம் பேசியபோது மணியன் உள்ளிட்ட பலரையும் அவன், இவன் என்றே அவர்
தரக்குறைவாகப் பேசினார்.

"மணியனுக்கும் எனக்கும் ஸ்நானப் பிராப்தி கூட கிடையாது. மணியன் பிசினஸ்
பேர்வழி. இப்போது இந்து மதத்தை ஆதரிப்பதால் பிசினஸ் நடக்கிறது. நாளைக்கு
கருணாநிதி ஆட்சிக்கு வந்தால் மணியன் கருணாநிதியின் பின்னால்
போய்விடுவான்"

என்று ஜீனியர் கூறியதை எல்லாம் - நாம் நாகரீகம் கருதி நமது பேட்டிக்
கட்டுரையில் குறிப்பிடாமலே விட்டுவிட்டோம்.

அது மட்டுமல்ல;

பெரியார் கொள்ளையடித்துப் பணம் சேர்த்து வைத்திருப்பதாகவும் ஜீனியர்
சொன்னார்.

அப்போது நாம் ஜீனியரிடம்,

"அப்படிச் சொல்லாதீர்கள். அகில இந்தியாவில் பெரியார் ஒருவர்தான்
பொதுமக்கள் தாங்களாக விரும்பி தமக்கு அளித்த சொத்தை எல்லாம் தன்
வாழ்க்கைக்கு என்று பைசாகூட எடுத்துக் கொள்ளாமல் கோடிக்கணக்கில்
சேர்த்து, அதைப் பொதுமக்கள் நன்மைக்காகவே டிரஸ்ட் எழுதிவிட்டுப் போன
தலைவர்.

பெரியாரின் சிக்கனம் பிரசித்தி பெற்ற ஒன்று; கஞ்சன் கருமி என்றெல்லாம்
சொல்லும்படியாக - ஒவ்வொரு பைசாவையும் செலவழிப்பதற்கு முன் பலமுறை
யோசித்து செலவு செய்து, சிக்கனத்திற்கே ஓர் இலக்கணமாக திகழ்ந்தவர்
பெரியார்.

பெரியர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் - அப்படிப்பட்ட பெரியார் - மக்கள்
தமக்கு தந்த பொருள் எதையும் - தமது குடும்பத்தாருக்கு உயில் எழுதி வைத்து
விடாது, பொது நன்மைக்கே ஏற்பாடு செய்துவிட்டுப் போனார்.

ஆனால் பெரியாரின் சமகாலத்தில் - திருவண்ணாமலை குகையில் ஒரு அரை நிஜாருடன்
ஒரு சிறுவன் உட்கார்ந்தான். அந்த அரைநிஜார் சிறுவனே பின்னர் ரமண மகரிஷி
என்றும் பகவான் ரமணர் என்றும் அழைக்கப்பட்டவர்.

அரை நிஜாருடன் குகையில் வந்து அமர்ந்த ரமணருக்கும் மக்கள் கோடிக்கணக்கில்
காணிக்கை என்ற பேரில் ஏராளமாய் சொத்தை சேர்த்துத் தந்தார்கள்.

அந்த பகவான் ரமணரிஷி இறந்து போவதற்குள் என்ன செய்தார் தெரியுமா?

தனது தம்பியின் பெயருக்கு - உயில் எழுதி வைத்துவிட்டுப் போனார்.

ஆகவே, பெரியார் பற்றி அப்படி எல்லாம் சொல்லாதீர்கள்" என்று ஒரு நீண்ட
பிரசங்கம் என்று சொல்லத்தக்க அளவுக்கு ஒரு விளக்கம் தந்தோம்.

ஜீனியர் சங்கராச்சாரி உடனே -

"கொள்ளையடித்த பணம் என்று நான் சொல்லவில்லை. கொள்ளைப் பணம்
வைத்துவிட்டுப் போயிருக்கிறார் என்றுதான் சொன்னேன். கொள்ளை அழகு என்று
சொல்வதில்லையா அதுபோல்; நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டு விட்டீர்கள்"

- என்று தம்மைத் திருத்திக் கொண்டார்.

நாம் 'எதிரொலி'யில் எழுதிய பேட்டிக் கட்டுரையில் இந்தப் பகுதியையும்
விட்டுவிட்டோம். காரணம், அவரே வருத்தம் சொல்லிவிட்ட பிறகு - அதை ஏன் எழுத
வேண்டும் என்ற நாகரீகம் கருதி - பிரசுரிக்காமல் விட்டோம்.

அது போலவே,

"குன்றக்குடி அடிகளார் என்ன பேசுகிறார் என்றே அவருக்குப் புரியவில்லை!
சமயத்தைப் பற்றி பேசிக்கொண்டே இருப்பார். திடீர் என்று மார்க்ஸ் லெனின்
என்றூ போய்விடுவார்" என்று ஜீனியர் கூறியதையும் நாம் அன்று
பிரசுரிக்கவில்லை.

இப்படி நாம் பிரசுரிக்காமல் விட்ட பகுதிகள் அனைத்துமே காஞ்சி ஜீனியரின்
உண்மை உருவத்தை தோலுரித்துக் காட்டக் கூடிய பகுதிகள்தாம்.

எனினும் நாகரிகம் கருதி - நாம் அதனை எல்லாம் பிரசுரிக்காமல் விடுத்தனம்.

ஆனால் - சோவுக்கு ஜீனியர் சங்கராச்சாரி தெரிவித்துள்ள மறுப்பை
படித்தபிறகு

- இந்த மாதிரி பொய்யர்களிடம்

- நாகரீகமாவது - புடலங்காயாவது என்ற வருத்தமே மேலோங்கி நிற்கிறது.

"நான்தான் சோவை வீரமணியிடம் அனுப்பினேன். நான் எழுதிக்கொடுத்த
கேள்விகளைத்தான் சோ வீரமணியிடம் கேட்டார்"

- என்று சொல்லவில்லை என்று மறுப்புத் தெரிவித்திருக்கிறார் சங்கராச்சாரி.

சங்கராச்சாரி எவ்வளவு பொய்யரோ - அந்த அளவுக்கு -

சோ - ஒரு நாணயங்கெட்ட - யோக்கிய தன்மை இல்லாத நபர்

என்பதும் சோ துக்ளக்கில் எழுதியுள்ள விளக்கத்திலிருந்து புலனாகிறது.

" 'சங்கராச்சாரியாரை நேரில் கேட்டேன்; அவர் அப்படிச் சொல்லவில்லை' என்று
மறுப்பு தெரிவித்து விட்டார்"

- என்று எழுதியிருந்தால் சோவை நம்மால் மதிக்க முடியும்!

'எதிரொலி'யில் சங்கராச்சாரியார் பேட்டி வந்த மறுநாளோ - அதற்கு மறுநாளோ,
சோ - 'எதிரொலி'க்கு போன் செய்து

- ஞாநியிடமும்

- நம்மிடமும்

"சங்கராச்சாரியார் அப்படித்தான் சொன்னாரா? அதைப் படித்ததிலிருந்து ரொம்ப
வேதனையா இருக்கின்றது"

- என்றெல்லாம் பிரலாபித்தார் சோ!

அதுமட்டுமல்ல;

"சங்கராச்சாரியார் சொன்னதை நீங்கள் நம்பிவிட்டீர்களா?" என்று வேறு
திரும்பத் திரும்பக் கேட்டார். அப்படிப்பட்ட 'சோ' இப்போது என்ன
எழுதுகிறார்?

- நடக்காத ஒன்றை நடந்ததுபோல் கூறவேண்டிய அவசியமும், நடந்தவற்றை
நடக்காததுபோல் காட்டும் அவசியமும் கட்சி சார்புள்ள பத்திரிகைகளுக்கு
வேண்டுமானால் ஏற்படலாம். ஸ்ரீ சங்கராச்சாரிய சுவாமிகளுக்கு அந்த மாதிரி
ஏற்பட நியாயமில்லை"

என்று எழுதி இருக்கிறார் சோ.

எதிரொலி பற்றிய, அவநம்பிக்கையையும், சங்கராச்சாரியார் மீது தமக்குள்ள
நம்பிக்கையையும் இந்த இரண்டு வாக்கியங்கள் மூலம் கோடிட்டு காட்டி
இருக்கிறார் சோ.

இந்த இரு வாக்கியங்களும் சோ எவ்வளவு நாணயங்கெட்ட மனிதர் - யோக்கியத்தன்மை
இல்லாதவர் என்பதையே தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன.


நன்றி: தீம்தரிகிட - ஏப்ரல் 2003

நந்தா

unread,
May 11, 2008, 2:48:54 PM5/11/08
to பண்புடன்
மேலே உள்ள கட்டுரை தீம்தரிகிட வில் 2003 ஆம் வருடம் எழுதப்பட்டது.

பி.கே சிவகுமார் அவர்கள் தளத்தில் இருந்து இங்கு மீள்பதிவு செய்யப்
பட்டிருக்கிறது....

pandii durai

unread,
May 11, 2008, 7:57:02 PM5/11/08
to panb...@googlegroups.com
///முதலில் மிகத் தெளிவாக ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். ஞானியின் எல்லா
செயல்களையும் கண்முடித்தனமாக நான் ஆதரிக்க வில்லை. ஞானியின் பல்வேறு
செயல்பாடுகளில் எனக்கு விமர்சனம் இருக்கிறது////
 
 
அன்பின் நந்தா
ஞாநியின் பல்வேறு செய்பாடுகளில் உங்களுக்கும் விமர்சனம் உண்டு என்று குறிப்பிட்டு இருக்கிறீர்கள்.  அப்படி  ஞாநி சொன்ன சொல்லி நீங்கள் விமர்சித்த கட்டுரையை இங்கு இடலாமே. நானும் மேல் தெரிந்து  கொள்ள ஆவா
 
பண்புடன்
பாண்டித்துரை

pandii durai

unread,
May 11, 2008, 7:58:13 PM5/11/08
to panb...@googlegroups.com
//அப்படி  ஞாநி சொன்ன சொல்லி நீங்கள் விமர்சித்த கட்டுரையை இங்கு இடலாமே. நானும் மேல் தெரிந்து  கொள்ள ஆவா////
 
மன்னிக்க அப்படி நீங்கள் விமர்சித்த அல்லது விமர்சிக்க நினைத்த ஞாநியின் கட்டுரையை இங்கு இடலாமே

 
--
www.pandiidurai.wordpress.com

நந்தா

unread,
May 12, 2008, 2:06:01 AM5/12/08
to பண்புடன்
நன்றி பாண்டி. ஞாநி யின் கட்டுரைகளில் எனக்கு மாற்றுக் கருத்து உள்ளவைகளை
நான் சொல்கிறேன்.

சில சமயம் ஒட்டு மொத்த கட்டுரையே பிடிக்காமல் போயிருந்திருக்கிறது. சில
சமயம் ஒரு சில பகுதிகள் மட்டுமே கூட எனக்குள் எதிர் கருத்தை ஏற்படுத்தி
இருக்கிறது. அவற்றை விரைவில் சொல்கிறேன்.

ஆனால் என்னுடைய எதிர் விமர்சனங்கள் நிச்சயமாக கருத்தியல்
ரீதியிலானதாகத்தான் இருக்கும்.

பி.கு: விரைவில் என்று சொல்லி விட்டு ஓடிப் போய் விட வில்லை. கொஞ்சம்
வேலைகளையும் முடிச்சுட்டு வந்து டைப் பண்றேன். ஏன்னா ஆசிஃப் இந்த மாதிரி
நான் ஏதாவது வார்த்தையை சொல்லுவேன் அவரு ஓட்டலாமேன்னு காத்திட்டிருக்கார்.

Asif Meeran AJ

unread,
May 12, 2008, 6:56:51 AM5/12/08
to panb...@googlegroups.com
ஏன்னா ஆசிஃப் இந்த மாதிரி நான் ஏதாவது வார்த்தையை சொல்லுவேன் அவரு ஓட்டலாமேன்னு காத்திட்டிருக்கார்.

அடப்பாவி நந்தா!

அப்பாவியான நான் இப்படியெல்லாம் சொல்வேனா?
அதுவும் சுவையான இந்த் விவாதத்தில் அப்படிச் சொல்வேனா?

யாருங்க அது விஜய் கோபால்சாமி?
பண்புடனுக்கு வருக! வந்ததுமே களமிறங்கி விளாசுகிறீர்களே ஐயா!
உங்களைப் பற்றி அறிமுகம் தந்துட்டு, ஞாநியின் அஞ்ஞான செயல்பாடுகளை
இன்னமும் விளக்குங்கள். அப்படியாவது நந்தா பதில் எழுதுறாரான்னு பார்க்கலாம் :-)

நந்தா

unread,
May 12, 2008, 8:09:45 AM5/12/08
to பண்புடன்
ஞானியின் மீதான எனது நிலைப்பாடுகள் என்பது அவரை அருகிலிருந்து
பார்க்காமல், அவரது கட்டுரைகள் எனக்குள் எழுப்பும்
எதிர்வினைகளினடிப்படையில் எனக்குத் தோன்றியது, "அவரது கட்டுரைகளில் சில
அல்லது பல இடங்களில் கருத்தியல் விமர்சனங்கள் கண்டிப்பாக வைக்கப்பட
வேண்டியவை என்பதே. ஆனால் அந்த கட்டுரைகளின் மூலம் ஞாநியின் நரம்பு
பூணுலால்தான் செய்யப்பட்டிருக்கிறது என்பது போன்றவற்றை என்னால் ஏற்றுக்
கொள்ள முடிய வில்லை". ஒரு வேளை மாற்றுக் கருத்தை வைக்கின்றவர்கள் (சுபவீ
போன்றோர் உட்பட) கட்டுரைகளைத் தாண்டி, ஞாநியுடனான தனிப்பட்ட பழக்கம்
மற்றும் பொதுவில் வராத ஞாநியின் செயல்பாடுகளை வைத்து இந்த கருத்தை பலமாய்
முன்வைப்பார்களேயானால் அதற்கு என்னிடம் பதில் இல்லை.

ஆனால் இது வரை நான் பார்த்த எதிர்ப்புக் கட்டுரைகளும், அவரது
கட்டுரைகளைக் குறித்த எதிர் வினைகளாகவே இருந்திருப்பதால் இதை நான்
தொடர்கின்றேன்....


//அப்படியாவது நந்தா பதில் எழுதுறாரான்னு பார்க்கலாம் :-) //

நீங்க ஆசிப் அண்ணாச்சி இல்லை. உள்குத்து அண்ணாச்சி... இரவு பதில்
எழுதுகின்றேன். இப்போது கடப்பாரையை பிடுங்கும் நேரம்....

Asif Meeran AJ

unread,
May 12, 2008, 8:28:43 AM5/12/08
to panb...@googlegroups.com
கட்டுரைகளின் மூலம் ஞாநியின் நரம்பு பூணுலால்தான் செய்யப்பட்டிருக்கிறது என்பது போன்றவற்றை என்னால் ஏற்றுக் கொள்ள முடிய வில்லை".

உண்மை நந்தா
சமயங்களீல் இது போன்ற கருத்துக்கள் மாற்றுக் கருத்துக்களில் இரூக்கும் வீரியத்தையும் மழுங்கச் செய்து விடுகின்றன. கட்டுரையின் பிற பகுதிகளும் இதனாலேயே புறக்கணிக்கப்பட வாய்ப்புகளும் உண்டு
 
//அப்படியாவது நந்தா பதில் எழுதுறாரான்னு பார்க்கலாம் :-) //

நீங்க ஆசிப் அண்ணாச்சி இல்லை. உள்குத்து அண்ணாச்சி... இரவு பதில்
எழுதுகின்றேன். இப்போது கடப்பாரையை பிடுங்கும் நேரம்....

அப்படியா? நான் கடப்பரையை முழுங்கிக் கொண்டு திரிகிறேன் :-)

நந்தா

unread,
May 12, 2008, 8:41:24 AM5/12/08
to பண்புடன்
//உண்மை நந்தா சமயங்களீல் இது போன்ற கருத்துக்கள் மாற்றுக்
கருத்துக்களில் இரூக்கும்
வீரியத்தையும் மழுங்கச் செய்து விடுகின்றன. கட்டுரையின் பிற பகுதிகளும்
இதனாலேயே புறக்கணிக்கப்பட வாய்ப்புகளும் உண்டு //

அப்பாடா அண்ணாச்சி நான் எந்த நோக்கத்தில் இதை அணுகுகிறேன் என்பதை
புரிந்துக் கொண்டதில் மகிழ்ச்சியே....

இந்த சமயத்தில் ஏற்கனவே ஒரு மோதலில் ஹரன் பிரசன்னா எழுதிய ஒரு
பின்னூட்டம் நினைவிற்கு வருகின்றது.. அதை இங்கே போடுகின்றேன்.
சூழ்நிலைக்கு ஏற்றவாறு இருப்ப்பதால்...


பார்ப்பனராகப் பிறந்தவர் என்று தெரிந்தவுடன் யாரைத்தான் நீங்கள்
ஏற்றுக்கொண்டு விட்டீர்கள்? ரோஸா வசந்திலிருந்து தொடங்கி பத்ரி தொட்டு,
ஒரு சண்டையில் கோபத்தில் ‘என் சட்டைக்குள் பூணூல் இருக்குதான்னு பாரு’
என்று பனியனை கழட்டிக் காண்பித்த இ.பா. வரையில், பிராமணியத்தையும்
ஹிந்த்துவாவையும் எதிர்ப்பதையே நோக்கமாகக் கொண்ட ஞாநி முடித்து, யார்
என்ன கருத்து சொன்னாலும், ‘என்ன இருந்தாலும் நீ பாப்பாந்தானே’ என்று
நீங்கள் மற்றும் உங்களைப் போன்றவர்கள் சொல்லாமல் போனால்தான் எனக்கு தலை
சுற்றும். இதையே பிராமணர் அல்லாதவர் ஒரு கருத்து சொல்லும்போது, ‘வேறு
சாதிக்காரன் நீ அப்படித்தான் சொல்லுவ’ என்று நீங்கள் சொல்வீர்களா என்று
கேட்டால், அது காலம் காலமாக கத்தப்பட்டுக்கொண்டிருக்கும் கத்தலாகிவிடும்.
அதுமட்டுமின்றி, பிராமணரல்லாதவர் மனதில் பட்டதைப் பேசினால் கூட இருக்கவே
இருக்கிறது ‘பிராமணீயம், ஹிந்துத்துவம்’ என்கிற விலைபோகும் ஜல்லிகள்.
எடுத்துக்காட்டுக்கு இருக்கவே இருக்கிறார், உங்களால் ஹிந்துத்துவா என்று
விளிக்கப்படும் பிகே சிவகுமார்.

சாதியத்தினுள் விழ விரும்பாத அனைவரையும் நீங்கள் தள்ளிவிட்டுத்தான்
ஓய்வீர்கள் என்பது தெரிந்ததுதான்.

Asif Meeran AJ

unread,
May 12, 2008, 8:54:18 AM5/12/08
to panb...@googlegroups.com
நந்தா


அப்பாடா அண்ணாச்சி நான் எந்த நோக்கத்தில் இதை அணுகுகிறேன் என்பதை
புரிந்துக் கொண்டதில் மகிழ்ச்சியே....

எனக்குப் புரியாமல் இல்லை.. அப்படிப்பட்ட  எழுத்துக்கள்தாம்
 
பார்ப்பனராகப் பிறந்தவர் என்று தெரிந்தவுடன் யாரைத்தான் நீங்கள்
ஏற்றுக்கொண்டு விட்டீர்கள்?

இப்படிப்பட்ட கேள்விகளை எழச் செய்கின்றன என்பதை நிச்சயம் மறுப்பதற்கில்லை
ஆனால் அதே சமயம் பார்ப்பனீயம் புகுந்த எழுத்துக்களை அடையாளம் கண்டு எழுதப்
புகும்போது ஏற்படும் நெருக்கடிகளையும் நாம் உணர்ந்தாக வேண்டும்

எல்லா எழுத்துக்களிலும் ப்கக சார்புகள் இருக்கவே செய்கின்றன
எந்தப் பக்கம்சார்ந்த எழுத்து என்பதை உணர்ந்து கொள்வதில்தான் வாசகன் விழிப்பாக
இருந்தாக வேண்டும்

சாதியத்தினுள் விழ விரும்பாத அனைவரையும் நீங்கள் தள்ளிவிட்டுத்தான்
ஓய்வீர்கள் என்பது தெரிந்ததுதான்.

செம்பைத்  தூக்கி உள்ள வச்சுட்டேன்னு பிரசன்னா கிட்ட சொல்லிடுங்க :-))

கார்த்திக்

unread,
May 12, 2008, 10:43:31 AM5/12/08
to பண்புடன்
இனிமேலும் பார்ப்பனீயம, சுரா, சுஜாதா என ஜல்லியடிததுக்
கொண்டிருப்பதிலிருந்து மீண்டு அதிகார மய்யம் என்பதினை நோக்கி நகரத்
துவங்குவோம. அதற்கு முதலில் நம்மளவில் தூக்கலாய் நிற்கும் அதிகாரத்தினைச்
சிதைப்போம்.இப்போதைய வலைச்சூழலில் மிகப்பெரிய அதிகார மய்யமென நான்
உணர்வது தமிழச்சி பதிவுகளையும் அதற்கு ஒத்து ஊதும் திராவிட ப்ளா
ப்ளாக்களை மாத்திரமே. பார்ப்பனியத்திற்கெதிரான திராவிடமென்பது தன்னளவிள்
இன்னொரு பார்ப்பனியமாக வளர்ந்து நிற்பது மிகவும் ஆபத்தானது..

-அய்யனார்

நந்தா

unread,
May 12, 2008, 5:24:20 PM5/12/08
to பண்புடன்
முதலில் பிரச்சினையின் மூலத்திலிருந்து வருகிறேன். அதாவது இந்த இழையின்
ஆரம்பப்புள்ளியிலிருந்து...

துசார பீரிஸ் எடுத்த பிரபாகரன் திரைப்படத்திற்கெதிரான எதிர்வினைகளும்
இயக்குநரின் மீதான வன்முறையும் (சிறிசா, பெரிசா என்பது அடுத்தது) நம்
ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு வகையான எதிர் வினைகளை
கிளப்பியுள்ளது....நம்மில் சிலர் இது முழுக்க முழுக்க நியாயமே. அந்த
இயக்குநரை அடித்ததில் தவறே இல்லை என்றும் ஒரு சிலர் இது கருத்து
சுதந்திரத்திற்கான தீவிரவாதம் என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

ஞாநி இதில் இரண்டாவது வகை. சுபவீ, சீமான்,சத்யராஜ் போன்றோர் முதல் வகை.
படத்தின் காட்சியமைப்புகளைப் பற்றியும், கதையைப் பற்றியும் பல்வேறு
இடங்களில் தேடித்தேடி தெரிந்துக் கொண்ட பின்பு என்னால் வெகு எளிதில்
புரிந்துக் கொள்ள முடிந்தது இதுதான். இப்படம் இலங்கை அரசின்
“விடுதலைப்புலிகளுக்கெதிரான போராட்டத்தை ஒட்டு மொத்த உலக
பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டமாய், நிறுவ முயலும் இன்னொரு முயற்சி”.
விடுதலைப்புலிகள் கோட்டை விட்டதும், கடந்த சில வருடங்களாய் இலங்கை அரசு
சற்றே பலமாய் உலக நாடுகள் மத்தியில் நிறுவி இருக்கும் கருத்தாக்கத்திற்கு
வலு சேர்க்கும் இன்னொரு முயற்சி...

துசார பீரிஸ் எடுத்த இந்த படத்தை என்னைப் பொறுத்த வரை இங்கே தடை செய்தே
தீர வேண்டும். ஆனால் இந்த வன்முறை சரியா என்று என்னைக் கேட்டால்,
தேவையில்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. இந்த வன்முறை அடத்திற்கு
இலவசமய் பெரும் விளம்பரத்தைப் பெற்றுட் தந்திருக்கிறது என்றுதான் சொல்ல
வேண்டும். கலைஞர் ஆட்சிப் பொறுப்பிலிருக்கும் போது, சுப வீ யால் எளிதில்
இந்த படத்திற்கு தடை வாங்கி இருக்க முடியும், ஆனால் உணர்ச்சிக்
கொந்தளிப்பில் அவர்கள் இதை அணுகி இருக்கிறார்கள் என்றுதான் தோன்றுகிறது.

அதற்காக ஞாநி சொன்னாற் போல மாற்றுக் கருத்துடைய படங்களையும் மக்களிடம்
நம்பிக்கை வைத்து கட்டலாம் என்பதை ஏற்றுக் கொள்ள முடிய வில்லை. உண்மையான
கருத்துச் சுதந்திரத்தை ஞாநி வலியுறுத்துவாராயின் அவர் இந்த கட்டுரையில்
பிரபாகரன் படத்தோடு ஆணி வேர், காற்றுக்கென்ன வேலி ஆகிய படத்தின்
மீதிருந்தும் தடையை நீக்கச் சொல்லி இருக்க வேண்டும். ஆனால் மருந்துக்கும்
இங்கே அதைப் பற்றி அவர் பேச வில்லை. இந்தப் புள்ளியில்தான் நாம்
அவரிடமிருந்து வேறுபட வேண்டி இருக்கிறது.

மக்கள் எதனை முடிவெடுக்க வேண்டும் என்பதை அதிகாரத்தில் இருப்பவர்களே
தீர்மானிக்கிறார்கள்.

புலிகளுக்குச் சார்பான, தமிழ் மக்களின் பிரச்சினைகளை நேர்மையாகப் பேச
முற்பட்ட எத்தனையோ படங்களை இலங்கையிலும் சரி இந்தியாவிலும்சரி அரசுகள்,
சட்டம் எல்லாம் இரும்புக் கதவினை அடைத்து மூடி ஆயுதங்கள் சிறைச்சாலைகள்
சகிதம் தடை செய்தன.

காற்றுக்கென்ன வேலிக்கு என்ன நடந்தது? ஆணிவேருக்கு என்ன நடந்தது?

ஆக, அரசும் ஆயுதமும் எவர் கையில் இருக்கிறதோ, அவருக்கு எதிரான உண்மைகள்
வெளிவருவதை பீரங்கிகள், சிறைச்சாலைகள் சகிதம் தடுக்கும் போது அது
வன்முறையின் உச்ச வடிவம்.

பிரசன்ன விதானகே, அசோக கந்தகம, தர்மசிறி பண்டாரநாயக்க, விமுக்தி
ஜெயசுந்தர ஆகிய நால்வருக்கும் இலங்கை இனவாதிகளால் மரண அச்சுறுத்தல்
விடுக்கப்பட்ட போதும் அவர்களது படங்கள் இலங்கையில் திரையிடத் தடை
விதிக்கப்பட்ட போதும ந்ம்மில் எவரும் கருத்துச் சுதந்திரத்தின்
அவசியத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்க வில்லை.

அதை விட மிக முக்கியம் கருத்துச் சுதந்திரத்தைப் பற்றி பேசுவதற்கு
முன்னால் சார்பு நிலையைப் பற்றி பேச வேண்டியதன் அவசியம்...

*********************** யமுனா ராஜேந்திரனின் கட்டுரையிலிருந்து
*****************

துசரா பிரீஸ் மீதான தாக்குதல், இந்திய தமிழக அளவிலான ஒரு ‘முக்கியமான
அரசியல்’ தருணத்தில் நடந்திருக்கிறது. விடுதலைப் புலிகளின் தலைவர்களைக்
கொன்றொழிப்பது எனும் திட்டத்தை சிங்கள அரசு வெளிப்படையாக அறிவித்த
நிலையில், பாராளுமன்றத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிப் பொதுச்
செயலாளரான தோழர்.து.ராஜாவும், தமது அகில இந்திய மாநாட்டில்
தோழர்.தா.பாண்டியனும் இலங்கை அரசுக்கு இந்திய ராணுவ உதவி வழங்கப்படக்
கூடாது என முன்வைத்த கோரிக்கைகள் வலுப்பெற்றிருக்கும் நிலையில்,
தமிழச்செல்வன் கொல்லப்பட்டு, கலைஞர் அதற்கான அஞ்சலிக் கவிதை எழுதிய
சூழலில், தமது தமிழ்தேசிய அரசியலுக்கும் தமது அரசியலைத் ஸ்திரப்படுத்திக்
கொள்வதற்கும் ‘இது சரியான தருணம்’ என தொல்.திருமாவளவனும் மருத்துவர்
ராமதாசும் களத்தில் இறங்கியிருக்கிற நிலைமையில், இந்தத் தாக்குதல்
நடந்திருக்கிறது. தொல் திருமாவளவன் மற்றும் மருத்துவர் ராமதாஸ்
போன்றவர்கள் முன்வைக்கும் விமர்சனமற்ற ஈழதேசிய அரசியல் அல்ல, கம்யூனிஸ்ட்
கட்சியினரது அரசியல் எனப் புரிந்து கொள்வது நிலைமையின் சிக்கலைப்
புரிந்து கொள்ள நமக்கு உதவும்.

படைப்பாளிகளின் கருத்துச் சுதந்திரம் குறித்த செவ்வியல் விமர்சனப் பார்வை
செல்லுபடியாகாத காலத்தில் நாம் வாழ்கிறோம். இன்றைய படைப்பாளி,
‘நவீனத்துவ’ உலகின் மனித உரிமைகள், சுதந்திரம், மானுட விடுதலை
போன்றவற்றைப் பேசுகிறவனாக இன்று இல்லை. படைப்பாளி என்பவன் இன்று
வெளிப்படையாகவே தன்னை இஸ்லாமிய மதச் சார்பானவன், இந்தத்துவச் சார்பாளன்,
இனத்துவ தேசியக் கலாச்சாரத்தின் காவலன் என அறிவித்துக் கொள்கிறான்.
பிரபஞ்ச உரிமைகள் என்பதற்கு மாற்றாக அவன் பிராந்தியம் சார்ந்த, மதம்
சார்ந்த, இனத்துவம் சார்ந்த உரிமைகளை முன்வைக்கிறவனாக இருக்கிறான்.

இச்சூழலில் மொழி-இனம்-மதம் கடந்த மானுடவிடுதலை பேசுகிற படைப்பாளி என்பவன்
மிகுந்த சிக்கலில் விடப்பட்டிருக்கிறான். பொதுவாகப் பிரபஞ்ச
உரிமைகளையும், தத்துவார்த்த அளவில் மனித விடுதலையையும் பேசுகிற படைப்பாளி
ஒரு அரசுடனோ அல்லது மதநிறவனத்துடனோ அல்லது இனநிறுவனத்துடனோ தன்னைப்
பிணைத்துக் கொள்பவன் இல்லை. குஸைன், தஸ்லீமா மற்றம் ரசூல் போன்றவர்கள்
இத்தகைய படைப்பாளிகள்.

பிரீஸ், ஜெயமோகன், குஸ்பு போன்றவர்களை நாம் இவ்வகையில் வைத்துப்
பேசமுடியாது. முன்னர் குறிப்பிட்ட மூவருக்கும் இருக்கிற மானுட விடுதலை
சார்ந்த பாத்திரம் எதுவும் இந்தப் பின்னவர்களுக்குக் கிடையாது. இந்திய,
தமிழக சமூகத்தில் எதுவெல்லாம் ஒடுக்கப்பட்ட மனிதரின் தளைகளை உடைக்கும்
எனக் கருதுகிறோமோ, அவைகள் அத்தனையையும் அவருக்குக் கிடைத்த அனைத்து
முனைகளிலும் எதிர்த்துக் குரல் கொடுத்துக் கொண்டிருப்பவர் ஜெயமோகன்.
குஸ்பு, நிலவும் தமிழ் சினிமா அமைப்புக்கு எதிராகச் சுட்டுவிரலைக் கூட
அசைக்காதவர். பிரீஸ் சிங்கள ராணுவத்தினரின் பார்வையை முன்வைப்பவர். ஆகவே,
இவர்கள் குறித்த ‘கருத்துச் சுதந்திரத்திற்காக’ நாம் குரல்
கொடுக்கும்போது இவர்களது அரசியலையும் புரிந்துகொண்டுதான் நாம்
இவர்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டும்.

நாம் இவர்களுக்காகக் கொடுக்கிற தார்மீக ஆதரவுக் குரல் இவர்களது
‘அரசியலுக்கு ஆனது அல்ல’ என்பதனைத் தெளிவுபடுத்தி விட வேண்டிய கடமை
நமக்கு எப்போதுமே உண்டு.

துசரா பிரீஸின் பிரச்சினைக்கு வருவோம். தமிழ்நாட்டில்
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கிறது. திரைப்படத் துறைக்கென பல்வேறு
அமைப்புக்கள் இருக்கிறது. ஒரு படத்தை திரையிடலாமா அல்லது திரையிடக்
கூடாதா என்று தீர்;மானிக்கத் தணிக்கைக் குழு இருக்கிறது. இவைகள் முன்
கோரிக்கை முன்வைப்பதில் திருமாவளவன் அல்லது சுப.வீரபாண்டியன் அல்லது
சீமான் உள்பட, எவருக்கும் உரிமை இருக்கிறது. இதில் ஒருவித நியாயமும்
இருக்கிறது. ஆனால், தொழில்முறையில் ஒரு சினிமா லேப் பிரிண்ட் போடக்
கூடாது, ஒரு திரைப்படம் சம்பந்தப்பட்டவர், தொழில்ரீதியில் ஒரு நாட்டுக்கு
வந்து பிரிண்ட் போடக் கூடாது என்று எந்த ‘அறத்தில்’ இருக்கிறது? அதற்காக
அவரை இரத்தக் காயப்படுத்துவது என்ன வகையில் நியாயம்? ஒரு வகையில் ‘களு
சுதுமல்’ மாதிரியான ஒரு மிக மோசமான படத்திற்கு அநாவசியமாக விளம்பரம்
தேடிக்கொடுத்த அசட்டுத்தனமாகக் கூட இது ஆகிவிடக் கூடும். யாருக்குத்
தெரியும்? இதனைத் தட்டிக் கேட்க அல்லது தடை செய்ய திருமாவளவனுக்கும்,
மருத்துவர் ராமதாசுக்கும் அல்லது சுப.வீரபாண்டியனுக்கும் என்ன தகைமை
இருக்கிறது? இவர்கள் தணிக்கைக் குழவினரா அல்லது சினிமா அமைப்பின்
பிரதிநிதிகளாக அல்லது தமிழக அரசின் பிரதிநிதிகளா?

இவர்கள் செய்திருப்பது தமிழகத்தின் சாபக்கேடாக இருக்கும் ஒருவகை குண்;டர்
அரசியல். சீமானின் ‘தம்பி’ படத்தில் மாதவன் போலீஸ் கையாளாக இருந்து
கொண்டு, சே குவேரா பனியன் போட்டுக் கொண்டு பாட்டுப் பாடுகிறார். கலைஞரின்
‘தாய் காவியத்தில’ பாடலாசிரியர் விஜய்யும், திருமாவின் படமொன்றில்
அவரும் என இருவரும் சேகுவேரா தொப்பி போட்டு சே குவேரா போல ‘போஸ்’
கொடுக்கிறார்கள். இதனை ஆட்சேபிக்கிற ஒருவர், சீமானையோ அல்லது
திருமாவளவனையோ, பிரீஸை எதிர்கொண்ட மாதிரி நடப்பதற்கு இவர்களே
வழிசமைத்துக் கொடுத்திருக்கிறார்களே இது நியாயமா?

இந்தியாவுக்கு, இந்திரா காந்தியின் மகனான ‘சட்டம் கடந்த’ ஒரு சஞ்சய்
காந்தியும், தமிழகத்துக்கு, ‘சட்டம் கடந்த’ ஒரு அழகிரியும்
போதுமானவர்கள். இந்தச் ‘சட்டம் கடந்த’ அபத்தத்தின் விலையாக பம்பாய் சேரி
மக்கள் தமது உயிரையும், மதுரை பத்திரிக்கையாளர்கள் தமது உயிரையும்
ஏற்கனவே இந்திய மக்களாகக் கொடுத்திருக்கிறார்கள். ‘அரசியல் யாப்புக்கு
அப்பாலும், சட்டத்திற்கு அப்பாலும்’, தணிக்கை உரிமையையும், தடைசெய்கிற
உரிமையையும் தாங்களாகவே தமது கையில் எடுத்துக் கொண்டிருக்கிற
திருமாவளவனும், சீமான் மற்றும் சுப.வீரபாண்டியனும் நிஜத்தில் இந்திய
ஜனநாயகத்திற்குச் சவாலாகவே பரிமாணம் பெறுவார்கள் என்பதைத்தான் துசரா
பிரீஸ் தொடர்பாக நடந்திருக்கும் தமிழக சம்பவங்கள் தெளிவாகத்
தெரிவித்திருக்கின்றன.

***************************************************************

என்னுடைய நிலையும் இதேதான்... காசியில் தீபா பேத்தவிற்கெதிரான
போராட்டத்திற்கும், இதற்கும் வித்தியாசங்கள் இருந்தாலும், போராட்ட முறை
எனவோ ஒரே தொனியையே கொண்டுள்ளது...

அப்புறம் இன்னஒரு மிக முக்கிய விஷயம்... சீமான் மற்றும் சத்யராஜைப்
பற்றி. உண்மையிலேயே சீமான் எல்லா சமயங்களிலும் தெளிவாய் சிந்திக்கக்
கூடியவரா அல்லது உணர்ச்சியின் விளிம்பில் நிற்கக் கூடியவரா எனும்
சந்தேகம் எனக்குள் பல முறை எழுந்திருக்கிறது. வாழ்த்துகள் படத்தை தமிழன்
ரசிக்காததற்குக் காரணம் அதில் வரும் எல்லோரும் தமிழில் மட்டுமே
பேசுவதால்தான் என்று இவர் அநியாயத்திற்கு கொதித்த போது எனக்குச்
சிரிப்புத்தான் வந்தது... இவரது தம்பி படம் வெளிநாடுகளில் திரையிடப்படும்
முறை பற்றியும், இவரது விளம்பரங்களைப் பற்றியும் ”ஷோபா சக்தி” போன்றோர்
வைக்கும் விமர்சனங்களையும் (”வேலைக்காரிகளின் புத்தகம்” நூலைப்
பார்க்கவும்) படிக்கும் போது சீமான் போன்றோரையும் சற்று ஜாக்கிரதையாகவே
அணுக வேண்டி இருக்கிறது.

தன்னை பெரியாரின் தீவிர ஆதரவாளராய்ச் சொல்லிக் கொள்ளும் சத்யராஜ் தான்
சார்ந்த திரைப்படத் துறையிலும், அல்லது குறைந்தது தான் நடிக்கும்
படங்களிலாவது நேரடியாகவும், மறைமுகமாகவும் செய்து வரும் பாலியல்
சுரண்டல்களையும், பெண்களை நுகர்வுப் பொருளாய் காட்டுவது குறித்தும்,
இன்னும் பல விதங்களில் நடந்து வரும் தவறுகள் குறித்தும் இது வரை ஒரு தடவை
கூட எதிர்த்து அடிக்க வேண்டாம். சின்ன முனகலைக் கூட
வெளிப்படுத்தியதில்லை. ஆனால் அதேசமயத்தில் ”எவன்டா அவன் ஜெயமோகன். நீ
மட்டும் என் எதிர்ல வந்தன்னா நான் எதால அடிப்பேன்னு எனக்கு தெரியாது”
என்று கூட்டம் கூட்டி வீரத்தை காட்டத் தயங்குவது கிடையாது...

ஒருவர் ஒரு தவறைச் சுட்டிக்காட்டும் போது, வலைப்பதிவர்களில் சில
பதிவர்கள் உட்பட நம்மில் பலர் உடனே ஆற்றும் எதிர் வினை இதுதான். ”இதை ஏன்
நீ அவங்க ஆட்சியிலயே கேட்கலை அல்லது இதை ஏன் நீ இந்த கட்சியைப் பார்த்து
கேட்க வில்லை” என்பதுதான். இதுவே கேள்வி திமுகவை நோக்கியாய் இருந்தால்
ஒன்று அம்மாவின் அடிவருடி எல்லாம் இப்படித்தான் கேட்பாங்க என்றோ அல்லது
பார்ப்பன புத்தி வெளியில் தெரிய ஆரம்பித்திருக்கிறதோ என்றோ பட்டம்
கிடைத்து விடுகிறது..

ஆனால் எவரும் நின்று நிதானித்து ஆமாம் இது தவறுதான் அதை யார் எவர்
ஆட்சியில் செய்திருந்தாலும் தவறுதான் என்று ஒத்துக் கொள்ள மறுப்பவராகவே
இருக்கின்ற நிலையில் நாம் என்ன செய்வது???

ஞாநியின் கலைஞர் மீதான கட்டுரைக்கு, ஏன் வாஜ்பாயிடம் அல்லது சங்கர்தயாள்
சர்மாவிடம், அல்லது காஞ்சி பெரியவரிடம் கேட்க வில்லை என்று எதிர்
அணியினர் வசை பாடுகின்றனர்.

ஆனால் அதே சம்யத்தில் அவர்களுக்கு ஞாநியின்

”நேற்று திண்ணியத்திலோ, இன்று எரையூரிலோ தலித்துகளை இழிவுபடுத்துபவர்
மீது இந்தக் கோபம் வரவில்லையே ஏன்? நிராயுதபாணியாய் உங்களிடம் சிக்கிக்
கொண்ட பீரிஸை சட்டையைக் கிழித்து அடித்து விட்டு, புதுச் சட்டை மாட்டி
வேடிக்கை பார்த்தீர்களே, ஒரே ஒரு இரட்டை டம்ளர் டீக்கடையையாவது உங்களால்
ஊர்வலமாய் போய் தகர்த்து விட முடியுமா?? எதிர்த்தாக்குதல் நடத்த ஆள் பலம்
இருக்கும் ஒரு இடத்திலாவது நீங்கள் இதே போல் மோதியிருக்கிறீர்களா???”

என்பது போன்ற கேள்விகள் அவர் மீது இன்னும் நன்றாய் பார்ப்பன சாயம் பூச
மட்டுமே பயன்படுத்தப் படுகின்றது. சொல்லப்போனால் இருவருமே இதில் ஒரே
மாதிரிதான் நடந்திருக்கிறார்கள் என்றுதான் தோன்றுகிறது...

இன்னும் பல விஷயங்களைத் தொட்டுச் செல்ல ஆசைதான். முதலில் இது வரையிலும்
சொன்னது குறித்து மற்றவர் நிலை என்ன என்று த்ரிந்து கொண்டு விட்டு
தேவைப்பட்டால் தொடரலாம்...

நந்தா

unread,
May 12, 2008, 5:32:11 PM5/12/08
to பண்புடன்
நான் செய்வது எல்லாம், பிரச்சினைகளின் எல்லா கோணங்களையும் ஆராய்ந்து அவை
எனக்குள் ஏற்படுத்திய எண்ணங்க்ளை அப்படியே பாசாங்கில்லாமல், உங்களிடம்
பகிர்ந்துக் கொள்வதே. இப்படியேதான் நீங்களும் நினைக்க வேண்டும் என்பதோ
அல்லது இதுதான் சரி என்று நிறுவ முயலுவதோ இல்லை...

மாற்றுக் கருத்துகள் சரியானதாய், இருப்பின் என்னை மாற்றிக் கொள்ள நான்
எப்போதும் தயாராகவே இருக்கிறேன். ஆனால் இந்த நொடியில் நான் தெரிந்து
வைத்திருக்கும் விஷயங்கள், படித்த புத்தகங்கள், கட்டுரைகள் மற்றும் எனது
தார்மீக எண்ணங்கள் ஆகியவை எனக்குள் ஏற்படுத்தி இருக்கும் நிலைப்பாடு மேலே
நான் கட்டுரையில் சொல்லி இருப்பதே. சரியான காரணங்கள் இல்லாமல் அது மாறாது.

M.RISHAN SHAREEF

unread,
May 12, 2008, 5:38:24 PM5/12/08
to panb...@googlegroups.com
அன்பின் நந்தா,
 
இவ்விழையை ஆரம்பத்திலிருந்தே வாசித்துவருகிறேன்.எனினும் கருத்துக்களெதுவும் எழுதவில்லை.
 
துசார பீரிஸின் 'பிரபாகரன்'திரைப்படத்துக்கான எதிர்வினைகள் மிக மோசமாக நடைபெற்றுள்ளது.
எந்தவொரு கலைஞருக்கும் அவருடைய படைப்பை வெளியிடும் பூரண உரிமை இருக்கும் பொழுது அதனை வன்முறை மூலமாக இரத்தக்காயங்களை ஏற்படுத்தி தடுக்கமுற்படுவது நியாயமல்லவே?
அப்படிச் செய்ததால் அந்தப் படம் இன்னும் பிரப்லமானதன்றி வேறென்ன?
 
அந்தப்படம் பற்றி துசார பீரிஸ்  "படத்தில் பிரபாகரன் எனப் பெயர் கொண்டவர் ஒரு சிறுவர்.அவருக்கும் அவர் குடும்பத்துக்கும் யுத்தத்தால் ஏற்படும் துன்பங்களும்,இழப்புகளுமே படத்தின் கரு' எனக்குறிப்பிட்டுள்ளார்.
 
இப்படியிருக்க வெறும் தலைப்பை மட்டுமே பார்த்து,படத்தைப் பார்க்காமல் இப்படியொரு வன்முறை தேவைதானா?
 
அதிலும் இயக்குனர் சீமானுக்கு இதைத் தடுக்க எள்ளளவும் உரிமையில்லை.
 
அண்மையில் கூட அவரது 'வாழ்த்துகள்' திரைப்படத்தின் இரண்டு பாடல்காட்சிகள் இலங்கையில்தான் படமாக்கப்பட்டது.
அவரால் தனியாக படக்குழுவுடன் வந்து படமெடுக்க முடியுமா?
தங்கியிருந்த ஒரு மாதமும் பயணங்களிலும்,பட வேலைகளிலும்,இடங்களின் அனுமதியைப் பெற்றுக் கொடுப்பதிலும்,காவல் வேலைகளிலும் சிங்கள் இயக்குனர்களின்,பொலிஸாரின் உதவியைப் பெற்றுக்கொண்டு விட்டு இப்பொழுது அவரது நாட்டுக்கு படவேலைக்கு வந்த ஒருவரைத் தாக்குவது நியாயமா நண்பா?

 

விஜய்கோபால்சாமி

unread,
May 12, 2008, 10:20:39 PM5/12/08
to பண்புடன்
வணக்கம் நண்பர்களே,

நான் விஜய்கோபால்சாமி. திருவல்லிக்கேணி கோஷாஸ்பத்திரியில் கண்விழித்த
எத்தனையோ குழந்தைகளில் நானும் ஒருவன். பிறந்து இருபது வருடங்கள் போன
பின்னர்தான் சென்னை வாழ்க்கை மீண்டும் கிட்டியது. அதுவும் நாலரை ஆண்டுகள்
மாத்திரமே. அந்த இருபது ஆண்டுகளும் வாழ்க்கை வளர்ச்சி அனைத்தும்
நிகழ்ந்தது தஞ்சாவூரில். கடந்த ஓராண்டாக வசிப்பது ஹைதராபாதில். எனது
வலைத்தளம்: http://vijaygopalswami.wordpress.com

நன்றி

On May 12, 1:38 pm, "M.RISHAN SHAREEF" <msmris...@gmail.com> wrote:
> அன்பின் நந்தா,
>
> இவ்விழையை ஆரம்பத்திலிருந்தே வாசித்துவருகிறேன்.எனினும் கருத்துக்களெதுவும்
> எழுதவில்லை.
>
> துசார பீரிஸின் 'பிரபாகரன்'திரைப்படத்துக்கான எதிர்வினைகள் மிக மோசமாக
> நடைபெற்றுள்ளது.
> எந்தவொரு கலைஞருக்கும் அவருடைய படைப்பை வெளியிடும் பூரண உரிமை இருக்கும் பொழுது
> அதனை வன்முறை மூலமாக இரத்தக்காயங்களை ஏற்படுத்தி தடுக்கமுற்படுவது நியாயமல்லவே?
> அப்படிச் செய்ததால் அந்தப் படம் இன்னும் பிரப்லமானதன்றி வேறென்ன?
>
> அந்தப்படம் பற்றி துசார பீரிஸ் "படத்தில் பிரபாகரன் எனப் பெயர் கொண்டவர் ஒரு
> சிறுவர்.அவருக்கும் அவர் குடும்பத்துக்கும் யுத்தத்தால் ஏற்படும்
> துன்பங்களும்,இழப்புகளுமே படத்தின் கரு' எனக்குறிப்பிட்டுள்ளார்.
>
> இப்படியிருக்க வெறும் தலைப்பை மட்டுமே பார்த்து,படத்தைப் பார்க்காமல்
> இப்படியொரு வன்முறை தேவைதானா?
>
> அதிலும் இயக்குனர் சீமானுக்கு இதைத் தடுக்க எள்ளளவும் உரிமையில்லை.
>
> அண்மையில் கூட அவரது 'வாழ்த்துகள்' திரைப்படத்தின் இரண்டு பாடல்காட்சிகள்
> இலங்கையில்தான் படமாக்கப்பட்டது.
> அவரால் தனியாக படக்குழுவுடன் வந்து படமெடுக்க முடியுமா?
> தங்கியிருந்த ஒரு மாதமும் பயணங்களிலும்,பட வேலைகளிலும்,இடங்களின் அனுமதியைப்
> பெற்றுக் கொடுப்பதிலும்,காவல் வேலைகளிலும் சிங்கள் இயக்குனர்களின்,பொலிஸாரின்
> உதவியைப் பெற்றுக்கொண்டு விட்டு இப்பொழுது அவரது நாட்டுக்கு படவேலைக்கு வந்த
> ஒருவரைத் தாக்குவது நியாயமா நண்பா?
>
> ...
>
> read more »

விஜய்கோபால்சாமி

unread,
May 13, 2008, 12:11:49 AM5/13/08
to பண்புடன்
துசாரா பெய்ரீஸ் தாக்கப்பட்டது தவறுதான். யாரும் மறுக்கவில்லை. இங்கே
ரிஷான் ஷரீஃப் அவர்கள் சீமானையும் துஷாரா பெய்ரீசையும் ஒப்பிடுகிறார்.
ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள் ரிஷான், இருவருடைய படங்களின் உள்ளடக்கமும்
வேறு வேறு. ஒரு மென்பொருளாளனின் காதல் கதையும், ஒரு இனத்தின் விடுதலைப்
போராட்டத்தை திரித்துக் கூறுகிற கதையும் ஒன்று என்று கூற வருகிறீர்களா?

ஒரு நண்பர் குறிப்பிட்டிருந்தார் “சிங்கள ராணுவத்துக்கும்
தமிழர்களுக்கும்தான் சண்டை, இடையில் எங்களை ஏன் துன்புறுத்துகிறீர்கள்”
என்று கேட்கும் விதமாக எடுக்கப்பட்ட படம் அது என்று. அப்படியானால் சிங்கள
ராணுவம் சிங்கள மக்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லையா? துஷரா
பெய்ரீஸ் அவ்வளவு நடுநிலையாளன் என்றால், சிங்கள ராணுவத்தின்
அட்டூழியங்களையும் அல்லவா படத்தில் சேர்த்திருக்க வேண்டும்?

தாக்கப்பட்டது தவறு என்பதை உணர்ந்துதான் மாற்றுடை வழங்கினார்கள் அந்த
போராட்டக் குழுவினர். மாற்றுடை வழங்கினாலும் பெய்ரீஸ் தாக்கப்பட்டதை
யாரும் மறுக்கவில்லை. வழிநடத்தியவர்களை மீறியும் கூடியிருந்தவர்கள்
உணர்ச்சிவயப்பட்டிருக்கின்றனர் என்பதுதான் உண்மை நிலை. தன்னுடைய
படைப்பில் உண்மை துளியளவும் இல்லை என்று உணர்ந்ததால்தானே பெய்ரீஸ் அவசர
அவசரமாக தமிழ்நாட்டை விட்டு ஓடினார். தன் படைப்பில்
உண்மையிருக்கிறதென்றால் சிறப்புக் காட்சிக்குப் பிறகு போராட்டக்
குழுவினருக்கு தன் பக்கத்து நியாயத்தை விளக்கவேண்டியதுதானே?

சீமான், திருமாவளவன், சுப.வீ, பாட்டளி மக்கள் கட்சியின் பிரதிநிதிகள்,
தயாரிப்பளர் சங்கத் தலைவர் ராமநாராயணன் உள்ளிட்டோர் கூடியிருந்த அந்த
குழுவில் சுப.வீயை மட்டும் குறிவைத்துத் தாக்கவேண்டிய அவசியமென்ன. சுப.வீ
தமிழர்களுக்கு எதிரான ஒரு அவதூறைத் தடுக்கும் முயற்சியில் இறங்கினால்,
தமிழ் நாட்டில் இரட்டைக்குவளை முறையை ஒழிக்க நீ என்ன செய்தாய் என்று
கேட்கிறார். ஒரு அயல்நாட்டு கலைஞன் தாக்கப்பட்டதற்கு அதற்க்கு தொடர்புடைய
வகையில் தன்னுடைய கண்டனத்தை சொல்ல வேண்டியதுதானே. அதற்குத் துளியும்
தொடர்பில்லாத ஒன்றைக் கூறி சுப.வீ அவர்களைக் கண்டிப்பது சுப.வீ மீது
நடத்தப்பட்ட character assassination இல்லையா?

//
பார்ப்பனியத்திற்கெதிரான திராவிடமென்பது தன்னளவில் இன்னொரு பார்ப்பனியமாக
வளர்ந்து நிற்பது மிகவும் ஆபத்தானது
//

திராவிடம் தன்னளவில் இன்னொரு பார்ப்பனியமாக வளர்ந்திருந்தால் தலித்துகள்
மலம் திண்றுகொண்டிருக்க மாட்டார்கள். ஒவ்வொரு பார்ப்பனனின் வாயிலும் மலம்
திணிக்கப்பட்டிருக்கும். இங்கே அதுவா நடந்துகொண்டிருக்கிறது? நீங்கள்
சொல்வது உண்மையாக இருந்திருந்தால் ஜெர்மனியில் யூதர்களுக்கு நடந்ததைப்
போல் ஒரு இனப்படுகொலையே நடந்திருக்கும்.

மீண்டும் விவாதத்தின் சரியான திசைக்கு வருவோம்.

ஞாநியை மூண்று முறை நேரில் சந்திக்கிற வாய்ப்பைப் பெற்றவன் நான்.
ஞாநியிடம் ஒப்பம் கேட்ட புத்தகக் கண்காட்சி சந்திப்பு, அதற்க்கு முன்பு
மயிலாப்பூர் பேருந்து நிறுத்தத்தில் கண்ணகி சிலை குறித்து விவாதித்த ஒரு
சந்திப்பு, அதற்கும் முன்பு மாயவரம் ஏவிசி கல்லூரி கருத்தரங்கில் ஒன்று
என்று மூன்று சந்திப்புகள்.

முந்தைய இரண்டு சந்திப்புகளை விட்டுவிடுங்கள். முதல் சந்திப்பு
இருக்கிறதே அதைக் கொஞ்சம் விரிவாக சொல்லுகிறேன். அது ஒரு இதழியல்
செமினார். அதிலே அவர் கூறிய விஷயங்களில் இரண்டை மட்டும் கூறுகிறேன்.
ஒன்று, எதையும் கேள்விக்கு உட்படுத்து, மற்றொன்று, நடுநிலை என்பது மோசடி,
ஒன்று இடது புறம் இல்லை வலது புறம் என்பதுதான் உண்மையாக இருக்க முடியும்
என்பது.

எதையும் கேள்விக்கு உட்படுத்த வேண்டும் என்றால் ஞாநியின் பார்ப்பனப்
பிறப்பையும் கேள்விக்கு உட்படுத்த வேண்டியவனாயிருக்கிறேன். ஞாநியைக்
குறித்து உங்களுக்கு ஒரு முன்முடிவு இருக்கலாம் என்றால் எனக்கு
அவரைக்குறித்து இருக்கக் கூடிய முன்முடிவை யாரும் இங்கே கேள்வி கேட்கக்
கூடாது. நமக்கிடையே நடக்கும் இது போன்ற விவாதங்கள்தான் பொதுத்தளத்தில்
ஞாநிக்கு பரிதாபத்தைத் தேடித்தருகிறது. அதை ஞாநியும் சரியாகவும்
பயன்படுத்திக்கொள்கிறார்.

எத்தனை பேர் அவரை விவாதத்துக்கு அழைத்திருக்கிறார்கள்? அவருடைய
இணையதளத்தின் வாயிலாக அவருக்கு அழைப்பு விடுக்கப் படுகிறது. அதன்
தொடர்ச்சியாக அந்த இணையதளத்தையே மூடுகிறார். உடல்நிலை சரியில்லை என்று
காரணம் சொல்கிறார். குடந்தை அக்கினிபுத்திரன் என்ற அவருடைய நண்பரை
குடந்தைக்கே சென்று சந்தித்து விவாதத்துக்கு அழைத்த அந்த இளைஞனை கொஞ்சம்
அமைதியாக இருக்கச் சொல்லுங்கள் என்று புறவழியில் உள்ளடி செய்கிறார்.
(தகவல்: கவிஞர் அறிவுமதி, வாணிமகால் கண்டனக் கூட்டத்தில்). ஞாநி
யோக்கியரா? சொல்லுங்கள்.

ஞாநியின் வார்த்தைகளிலேயே சொல்வதென்றால் நடுநிலை என்பதே ஒரு மோசடி வாதம்.
எங்கள் மேல் இத்தனை காழ்ப்பை உமிழ முடிகிறதென்றால், ஞாநி நடுநிலையாளனா,
அல்லது எங்கள் பக்கம் நிற்பவரா. எங்கள் பக்கம் இல்லையென்றால் வேறு யார்
பக்கம் நிற்கிறார். அவரைப் பொறுத்தவரைதான் நடுநிலை என்பது மோசடியாயிற்றே.
பிறகு யாரைத் திருப்திப்படுத்த இந்த எழுத்து?

சோ.ராமசாமி, சுப்ரமணிய சாமி, வேதாந்தி, அத்வானி போன்றவர்கள் கூட
ஆபத்தில்லாதவர்கள். தங்களுடைய உண்மையான முகத்துடன் நம்முடன்
மோதுகிறார்கள். அவன் எப்போது அடிப்பான் என்று தெரிந்து ஆயத்தம்
செய்துகொள்ள வாய்ப்புள்ளது. ஆனால் ஞாநி போல் சிவப்பு வேட்டியும்
காவிக்கோவணமும் கட்டியவர்கள்தான் கடைந்தெடுத்த அயோக்கியர்கள். ஞாநி
நிச்சயம் ஒருநாள் வேட்டியை அவிழ்த்தெறிந்துவிட்டு காவிக்கோவணத்தோடு
வெளியே வருவார். விகடனை விட்டு குமுதத்துக்கு வந்ததற்கு தன்னிலை விளக்கம்
அளித்தாரே, அது போல் பார்ப்பனியத்தின், இந்துத்துவத்தின் பிரச்சாரகனாக
தன்னை உருமாற்றிக்கொள்ளும்போதும் ஒரு தன்னிலை விளக்கம் அளிப்பார்.
தலையெழுத்து அதையும் நீங்களெல்லாம் படித்துத் தொலைப்பீர்கள்.

விபச்சாரி உடலை வைத்து விபச்சாரம் செய்கிறாள் என்றால், ஞாநி எழுதி
விபச்சாரம் செய்து வருகிறார். இதுதான் எனது முடிந்த முடிபு. மறுக்க
முடிந்தால் மறுக்கலாம். அந்த மறுப்பையும் மறுக்கிற அளவுக்கு ஆதாரம் வழங்க
ஞாநியிடமும் சரக்கு இருக்கிறது, அதை உங்கள் முன் எழுதுமளவுக்கு எனக்கும்
சரக்கு இருக்கிறது.

பணிவுடன்
விஜய்கோபால்சாமி




On May 12, 1:38 pm, "M.RISHAN SHAREEF" <msmris...@gmail.com> wrote:
> அன்பின் நந்தா,
>
> இவ்விழையை ஆரம்பத்திலிருந்தே வாசித்துவருகிறேன்.எனினும் கருத்துக்களெதுவும்
> எழுதவில்லை.
>
> துசார பீரிஸின் 'பிரபாகரன்'திரைப்படத்துக்கான எதிர்வினைகள் மிக மோசமாக
> நடைபெற்றுள்ளது.
> எந்தவொரு கலைஞருக்கும் அவருடைய படைப்பை வெளியிடும் பூரண உரிமை இருக்கும் பொழுது
> அதனை வன்முறை மூலமாக இரத்தக்காயங்களை ஏற்படுத்தி தடுக்கமுற்படுவது நியாயமல்லவே?
> அப்படிச் செய்ததால் அந்தப் படம் இன்னும் பிரப்லமானதன்றி வேறென்ன?
>
> அந்தப்படம் பற்றி துசார பீரிஸ் "படத்தில் பிரபாகரன் எனப் பெயர் கொண்டவர் ஒரு
> சிறுவர்.அவருக்கும் அவர் குடும்பத்துக்கும் யுத்தத்தால் ஏற்படும்
> துன்பங்களும்,இழப்புகளுமே படத்தின் கரு' எனக்குறிப்பிட்டுள்ளார்.
>
> இப்படியிருக்க வெறும் தலைப்பை மட்டுமே பார்த்து,படத்தைப் பார்க்காமல்
> இப்படியொரு வன்முறை தேவைதானா?
>
> அதிலும் இயக்குனர் சீமானுக்கு இதைத் தடுக்க எள்ளளவும் உரிமையில்லை.
>
> அண்மையில் கூட அவரது 'வாழ்த்துகள்' திரைப்படத்தின் இரண்டு பாடல்காட்சிகள்
> இலங்கையில்தான் படமாக்கப்பட்டது.
> அவரால் தனியாக படக்குழுவுடன் வந்து படமெடுக்க முடியுமா?
> தங்கியிருந்த ஒரு மாதமும் பயணங்களிலும்,பட வேலைகளிலும்,இடங்களின் அனுமதியைப்
> பெற்றுக் கொடுப்பதிலும்,காவல் வேலைகளிலும் சிங்கள் இயக்குனர்களின்,பொலிஸாரின்
> உதவியைப் பெற்றுக்கொண்டு விட்டு இப்பொழுது அவரது நாட்டுக்கு படவேலைக்கு வந்த
> ஒருவரைத் தாக்குவது நியாயமா நண்பா?
>
> ...
>
> read more »

pandii durai

unread,
May 13, 2008, 1:02:50 AM5/13/08
to panb...@googlegroups.com

M.RISHAN SHAREEF

unread,
May 13, 2008, 2:04:03 AM5/13/08
to panb...@googlegroups.com


On 5/13/08, விஜய்கோபால்சாமி <vijaygo...@gmail.com> wrote:
//துசாரா பெய்ரீஸ் தாக்கப்பட்டது தவறுதான். யாரும் மறுக்கவில்லை. இங்கே
ரிஷான் ஷரீஃப் அவர்கள் சீமானையும் துஷாரா பெய்ரீசையும் ஒப்பிடுகிறார்.//
 
அன்பின் விஜய்கோபால்சாமி,
நான் மேலே எழுதிய வரிகளில் எந்த இடத்தில் சீமானையும்,துஷார பீரிசய்யும் ஒப்பிட்டிருக்கிறேன் எனக் கூறமுடியுமா?இது போன்ற தவறான புரிதல்களே சிறு பிரச்சினைகளையும் பூதாகரமாக்குகின்றன.

//ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள் ரிஷான், இருவருடைய படங்களின் உள்ளடக்கமும்

வேறு வேறு. ஒரு மென்பொருளாளனின் காதல் கதையும், ஒரு இனத்தின் விடுதலைப்
போராட்டத்தை திரித்துக் கூறுகிற கதையும் ஒன்று என்று கூற வருகிறீர்களா?//
 
நான் அப்படிக்கூறவிழைந்தேனா? முதலில் எனது மேலுள்ள பதிலை நிதானமாக வாசித்துப் பாருங்கள்.என்ன கூறவருகிறேன் என விளங்கும்.இரு படங்களின் கருவையோ,இயக்குனர்களையோ எவ்விடத்திலும் ஒப்பிடவில்லை.

//ஒரு நண்பர் குறிப்பிட்டிருந்தார் "சிங்கள ராணுவத்துக்கும்

தமிழர்களுக்கும்தான் சண்டை, இடையில் எங்களை ஏன் துன்புறுத்துகிறீர்கள்"
என்று கேட்கும் விதமாக எடுக்கப்பட்ட படம் அது என்று. அப்படியானால் சிங்கள
ராணுவம் சிங்கள மக்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லையா? துஷரா
பெய்ரீஸ் அவ்வளவு நடுநிலையாளன் என்றால், சிங்கள ராணுவத்தின்
அட்டூழியங்களையும் அல்லவா படத்தில் சேர்த்திருக்க வேண்டும்?//
 
படத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறதா இல்லையா என படம் முழுவதையுமே பார்த்த பின்னால் தானே ஒரு முடிவுக்கு வரமுடியும் நண்பரே? நீங்கள் படத்தை முழுமையாகப் பார்த்தீர்களா? படமே இன்னும் வெளிவராத நிலையில் எப்படிச் சொல்லமுடியும்?
 
சிங்களத் திரைப்படமான 'இர மெதியம','புரஹந்த கலுவர' இரண்டையும் பாருங்கள்.இரண்டும் கேன்ஸ் விருதுகளைப் பெற்ற படங்கள்.இரண்டிலும் இராணுவத்தின் அத்துமீறல்களைத் தான் காட்டியிருக்கிறார்கள்.

//தாக்கப்பட்டது தவறு என்பதை உணர்ந்துதான் மாற்றுடை வழங்கினார்கள் அந்த

போராட்டக் குழுவினர். மாற்றுடை வழங்கினாலும் பெய்ரீஸ் தாக்கப்பட்டதை
யாரும் மறுக்கவில்லை. வழிநடத்தியவர்களை மீறியும் கூடியிருந்தவர்கள்
உணர்ச்சிவயப்பட்டிருக்கின்றனர் என்பதுதான் உண்மை நிலை. தன்னுடைய
படைப்பில் உண்மை துளியளவும் இல்லை என்று உணர்ந்ததால்தானே பெய்ரீஸ் அவசர
அவசரமாக தமிழ்நாட்டை விட்டு ஓடினார். தன் படைப்பில்
உண்மையிருக்கிறதென்றால் சிறப்புக் காட்சிக்குப் பிறகு போராட்டக்
குழுவினருக்கு தன் பக்கத்து நியாயத்தை விளக்கவேண்டியதுதானே?//
 
//அவசரமாக தமிழ்நாட்டை விட்டு ஓடினார்//
 
அவர் ஓடவில்லை.அனுப்பி வைக்கப்பட்டார்.சரி..போராட்டக்குழுவிற்கு அது தன்னுடைய நாடாக இல்லாத பட்சத்தில் அவர் பக்கத்து நியாயத்தை விளக்கவேண்டிய அவசியம் என்ன?அதுவும் படம் இன்னும் முழுதாகப் பூர்த்தியாகாப் பட்சத்தில்.
 
கொச்சையாகச் சொல்வதானால் சீமானுக்கு இலங்கைக் காட்சிகள் வேண்டும்.அவரது பாடல்காட்சிகளுக்கு.
அப்பொழுது வந்து சிங்கள இயக்குனர்களையும்,அமைச்சர்களையும் வால்பிடித்து தன் காரியத்தைச் சாதித்துக் கொள்வார்.
 

--
http://mrishanshareef.blogspot.com/
http://rishanshareef.blogspot.com/

நந்தா

unread,
May 13, 2008, 2:38:15 AM5/13/08
to பண்புடன்
இல்லை பாண்டி முற்றிலும் சம்பந்தமில்லாததை கேட்கிறார் என்றும் சொல்ல
முடியாது... அதே போல் ரிஷான், தூசார பீரிஸ் ஒன்றும் அவ்வளவு நியாயமான
நடுநிலையான, சார்பு நிலையற்ற படைப்பாளியும் கிடையாது.பீரிஸ்ஸின் இந்த
படம் நான் ஏற்கனவே சொன்னது போல்இலங்கை அரசின் “விடுதலைப்புலிகளுக்கெதிரான
போராட்டத்தை ஒட்டு மொத்த உலக பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டமாய்,
நிறுவ முயலும் இன்னொரு முயற்சி”. விடுதலைப்புலிகள் கோட்டை விட்டதும்,
கடந்த சில வருடங்களாய் இலங்கை அரசு சற்றே பலமாய் உலக நாடுகள் மத்தியில்
நிறுவி இருக்கும் கருத்தாக்கத்திற்கு வலு சேர்க்கும் இன்னொரு முயற்சியே.
இதற்கு ஆதாரமாய் பீரிஸ்ஸின் பேட்டியை முடிந்தால் நான் எடுத்துப்
போடுகின்றேன்...

நான் சொல்ல வருவது எந்த சூழ்நிலையிலும் தனி நபருக்கெதிரான வன்முறையை
ஆதரிக்கக் கூடாது என்பதே. இதை ஆதரித்தால், அப்புறம் குஷ்பூ தவறாக,
இளைஞர்கள் மனதில் நஞ்சை விளைவிக்கும் வகையில் வார்த்தைகளை சொன்னார்,
அதனால்தான் அவரையும் அடிக்கப் போனோம், இதுவும் நியாயம்தான், அதுவும்
நியாயம்தான் என்பது போல் ஆகி விடும்.

இந்து பத்திரிக்கை உட்பட, இந்திய மற்றும் தமிழக அரசின் பெரும்பான்மையான
ஊடகங்களும் ஈழப்பிரச்சினையில், பல விஷயங்களை திரித்து சொல்லிக்
கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில், ஒவ்வொரு செய்திகள் வரும் போதும் அதன்
உண்மை முகம் என்னவாய் இருக்கக் கூடும் என்று பாதி பேர் தெரிந்துக் கொள்ள
ஆர்வமற்றதாயும், இன்னும் பாதி பேர் இந்து பத்திரிக்கையும், வட மற்றும்
தென்னக ஊடகங்கள் சொல்வது முழுதும் உண்மைதான் என்று கண்ணை மூடிக் கொண்டு
போய்க் கொண்டிருக்கும நிலையில், ஒரு சிறிய கூட்டம் மட்டும் இதற்காக
வருத்தப்படுவதும், உணர்ச்சி வசப்படுவதும் எல்லாவற்றிற்கும் மேலாக,
ஒவ்வொரு செய்திகள் வெளிவரும் போதும் அதன் மறுபுறமமென்ன என்று தெரிந்து
வைத்துக்கொண்டிருப்பதும் அல்லது வைத்துக் கொள்ள முயற்சி எடுத்துக்
கொண்டிருப்பதுமான இந்த சூழ்நிலையில் ஞாநி சொல்லுவது போல இந்த படம்
திரையிடப் பட்டிருந்தால், அது தவறான விளைவையே ஏற்படுத்தி இருக்கும்.

மறுபடியும் நான் சொல்வது இதுதான். சுபவீ உள்ளிட்டோர் நினைத்திருந்தால்
இந்தப் படம் இங்கு திரையிடப்படாமல் தடுத்திருக்கலாம். இப்படி ஒரு படம்
வந்ததே தெரியாமல் போயிருந்திருக்கும். ஆனால் உண்மையில் இந்த தாக்குதல்,
படத்திற்கு இலவசமாய் ஒரு பெரும் விளம்பரத்தைக் கொடுத்திருக்கிறது. ஒரு
மிகச் சாதாரண இயக்குநரை, புலம் பெயர் தமிழர்கள் சிலர் மத்தியிலும்,
இலங்கையிலும் தியாகியாகவும், போராளியாகவும் உருவகப்படுத்தியுள்ளது.
இலங்கையிலுள்ள குமுதம் பாணி பத்திரிக்கைகள் இவரது பேட்டியை போட்டி
போட்டுக் கொண்டு போட முன்வர நிர்ப்பந்தப் படுத்தி இருக்கின்றது. அதை விட
முக்கியமாய் இங்கே ஈழ சகோதரர்களுக்காதரவாய் போராடுவோரை
விமர்சனத்திற்குட்படுத்தவும், அவர்களை உணர்ச்சி வசப்பட்டவர்களாகவும்,
முன் நிறுத்தியுள்ளது. எனக்குள் சற்று நின்று நிதானித்து நடந்திருக்கலாம்
என்ற ஆதங்கத்தை கிளப்பி விட்டிருக்கிறது.

***** ***************** ****************88

கீழே இருப்பது தூசார பீரிஸ் சின் பேட்டியின் சுருக்கம்
--------------------------------------------------------------------------------------------------

கே:உங்களின் முதல்ப் படத்துக்கு போரை மையமாகக் கொள்ள என்ன நோக்கம்?

ப:எமது நாட்டில் போர் நடைபெறுகிறதென்று நாம் அறிவோம். ஆனால் போரின் உண்மை
முகம் எது என யாருக்குத் தெரியும். யாருக்கு இப்போர் தேவை? யார்
இப்போரினால் லாபம் அடைகின்றனர்? ஸ்ரீலங்காவில் மட்டுமல்லாது மூன்றாமுலக
நாடுகளில் அனேகமான நாடுகளில் உள்நாட்டு யுத்தம் நடைபெறுகிறது. உலக
மயமாக்கலுக்கும் பயங்கரவாததுக்கும் நெருங்கிய தொடர்புண்டு.
இந்நாடுகளுக்குப் பொருத்தமான ஒரு திரைப்படத்தை எடுப்பதே எனது நோக்கம்.

கே:இந்த கருப்பொருள் எங்கே பிறந்தது?

ப: /ரதன் எழுதிய 700,000ரூபா கதையுடன்…/ இவர்களின் வாழ்க்கையே என்னை
‘பிரபாகரன்’ எடுக்கத் தூண்டியது. எவ்வாறாயினும் இது ஒரு அரசியல்
நோக்கங்களைத் திருப்திப்படுத்த எடுக்கப்பட்ட அரசியல் படமல்ல. இது
பயங்கரவாதம் பற்றிய படம்.

கே:’பிரபாகரன்’ இல் உங்கள் பார்வை என்ன?

ப:நான் பயங்கரவாதத்தை ஒரு ஜனநாயக அரசின் கோணத்தில் இருந்து பார்க்க
விரும்பினேன். எனது முக்கிய நோக்கம் நாமே எமது பிரச்சினைகளை தீர்க்கலாம்
என்று சொல்வது. நாம் போர் வேண்டுமா இல்லையா என தீர்மானிக்கலாம். புலிகளை
விட்டு விலகிய புலி உறுப்பினர்களுடன் பேசியபோது கீழ்நிலையில் இருக்கும்
புலிகளுக்கு போரில் விருப்பமில்லை என அறிந்தேன்.எவ்வாறாயினும் எனது படம்
எந்த ஒரு இனவாத பார்வையையோ அல்லது தீவிரவாத கொள்கைகளையோ கொண்டிராது. அதே
நேரத்தில் நான் எனது நாட்டுக்கோ மக்களுக்கோ துரோகம் செய்யமாட்டேன்.
இந்நாட்டு மக்களின் வரிப்பணத்திலே வழங்கப்பட்ட இலவசக் கல்வியினால் பயன்
பெற்றதை ஒருபோதும் மறக்கமாட்டேன். எனவே அவர்களுக்கு என்னால் துரோகம்
செய்ய முடியாது.

கே:அனேகமாக போரை மையமாகக்கொண்டு ஸ்ரீலங்காவில் தயாரிக்கப்பட்ட எல்லாப்
படங்களும் சர்ச்சைக்குரியனவாயும் தாக்குதலுக்குட்பட்டும் உள்ளனவே?

ப:திரைப்படத்துறை ஒரு கடினமானது, முக்கியமாக எமது போன்ற ஒரு நாடுகளில்.
வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமாயின் எனது படத்தை இந்நாட்டு மக்களுக்கு
காட்டுவதற்கு திரையிட ஒரு திரையரங்கு கிடைக்குமா என எனக்கு அச்சமே. ஆனால்
புதிய திரைப்படத் துறையாளர்களாக இவ்வாறான கடினங்களுக்கு முகங்கொடுக்க
நாம் தயாராக இருக்க வேண்டும். எமது பாரம்பரியங்களையும் கலாச்சாரங்களையும்
மதிக்கும் வேளையில், திரைத் துறையினருக்கு எந்த கட்டுப்பாட்டுகளும் அற்ற
ஒரு சுயாதீன சூழல் திரைப்படத்தைத் தயாரிப்பதற்கு இருக்க வேண்டும்.அஷோகா
ஹண்டகமாவும் பிரசன்ன விதானகேயும் இத்தீவின் கருத்தியலில் இருந்து
விலகிப்போக முயற்சிக்கிறார்கள். தங்களின் சொந்த வழியில் ஸ்ரீலங்காவின்
திரைத்துறையை உயர்த்த முயற்சிக்கிறார்கள். அவர்களை தாக்கிய அதே மக்கள்
தற்கொலை கொலையாளிகளைப் பற்றியும் குழந்தைப் போராளிகளையும் பயங்கரவாத
நடவடிக்கைகளையும் பேசும் படத்தை எடுத்திருக்கும் எனக்காக பேச
முன்வருவார்களா எனப் பார்ப்போம். ஆனால் இதுவரையில் அவர்கள் இது பற்றி
விசாரிக்கக்கூட இல்லை. அவர்களின் உண்மையான நாட்டுப்பற்று பற்றி எனக்கு
ஐயப்பாடு உண்டு.

அத்துடன் புலிகள் அவர்களுக்கிருக்கும் மட்டுப்படுத்த வளங்களுடனும் எல்லா
வகையான கட்டுப்பாடுகளுக்குள்ளும் போரைப் பற்றி ஆறு படங்கள்
எடுத்துள்ளனர். அத்துடன் தற்போதும் ஒரு படம் எடுத்துவருகின்றனர். ஆனால்
துரதிஷ்டவசமாக நம் போர் பற்றிப் பேசும் ஒரு படமேனும் எடுக்கவில்லை

******* ************ *************

நந்தா

unread,
May 13, 2008, 2:58:21 AM5/13/08
to பண்புடன்
//ஒரு அயல்நாட்டு கலைஞன் தாக்கப்பட்டதற்கு அதற்க்கு தொடர்புடைய
வகையில் தன்னுடைய கண்டனத்தை சொல்ல வேண்டியதுதானே. அதற்குத் துளியும்
தொடர்பில்லாத ஒன்றைக் கூறி சுப.வீ அவர்களைக் கண்டிப்பது சுப.வீ மீது
நடத்தப்பட்ட character assassination இல்லையா? //

பாண்டி ஏற்கனவே சொன்னதுதான்.

ஒருவர் ஒரு தவறைச் சுட்டிக்காட்டும் போது, வலைப்பதிவர்களில் சில
பதிவர்கள் உட்பட நம்மில் பலர் உடனே ஆற்றும் எதிர் வினை இதுதான். ”இதை ஏன்
நீ அவங்க ஆட்சியிலயே கேட்கலை அல்லது இதை ஏன் நீ இந்த கட்சியைப் பார்த்து
கேட்க வில்லை” என்பதுதான். இதுவே கேள்வி திமுகவை நோக்கியாய் இருந்தால்
ஒன்று அம்மாவின் அடிவருடி எல்லாம் இப்படித்தான் கேட்பாங்க என்றோ அல்லது
பார்ப்பன புத்தி வெளியில் தெரிய ஆரம்பித்திருக்கிறதோ என்றோ பட்டம்
கிடைத்து விடுகிறது..

ஆனால் எவரும் நின்று நிதானித்து ஆமாம் இது தவறுதான் அதை யார் எவர்
ஆட்சியில் செய்திருந்தாலும் தவறுதான் என்று ஒத்துக் கொள்ள மறுப்பவராகவே
இருக்கின்ற நிலையில் நாம் என்ன செய்வது???

ஞாநியின் கலைஞர் மீதான கட்டுரைக்கு, ஏன் வாஜ்பாயிடம் அல்லது சங்கர்தயாள்
சர்மாவிடம், அல்லது காஞ்சி பெரியவரிடம் கேட்க வில்லை என்று எதிர்
அணியினர் வசை பாடுகின்றனர்.

ஆனால் அதே சம்யத்தில் அவர்களுக்கு ஞாநியின்

”நேற்று திண்ணியத்திலோ, இன்று எரையூரிலோ தலித்துகளை இழிவுபடுத்துபவர்
மீது இந்தக் கோபம் வரவில்லையே ஏன்? நிராயுதபாணியாய் உங்களிடம் சிக்கிக்
கொண்ட பீரிஸை சட்டையைக் கிழித்து அடித்து விட்டு, புதுச் சட்டை மாட்டி
வேடிக்கை பார்த்தீர்களே, ஒரே ஒரு இரட்டை டம்ளர் டீக்கடையையாவது உங்களால்
ஊர்வலமாய் போய் தகர்த்து விட முடியுமா?? எதிர்த்தாக்குதல் நடத்த ஆள் பலம்
இருக்கும் ஒரு இடத்திலாவது நீங்கள் இதே போல் மோதியிருக்கிறீர்களா???”

என்பது போன்ற கேள்விகள் அவர் மீது இன்னும் நன்றாய் பார்ப்பன சாயம் பூச
மட்டுமே பயன்படுத்தப் படுகின்றது. சொல்லப்போனால் இருவருமே இதில் ஒரே
மாதிரிதான் நடந்திருக்கிறார்கள் என்றுதான் தோன்றுகிறது...

ஞாநி கேட்பது எங்கோ தூரத்திலிருக்கும் சகோதரர்கள் உணர்வைக்
காயப்படுத்தியதற்காக இயக்குநரை அடித்த நீங்கள், இங்கேயே உங்கள் ஊரில்
தினம் தினம் தலித் சகோதரர்களை வன்கொடுமை செய்யும், ஆதிக்கச்
சாதியினரையும் அதே வீச்சுடன் அடித்து விடத் தயாரா??? என்றுதான்
கேட்கிறார். அட அவன் சிங்கள் ஆளுய்யா, அவன் சிங்கள அரசுக்கு ஆதரவாதான்
படமெடுப்பான். இங்கே தினம் தினம் எத்தனை ஊடகங்கள் தமிழர்களாய் இருந்துக்
கொண்டு ஈழத் தமிழர்கள் விஷயத்தில் உண்மைக்கு புறம்பான விஷயங்களை காட்டி
வருகிறது. அவனை அடித்து விடேன் பார்க்கலாம் என்பதே...

"வலியோனை எளியோன் ஆட்கொள்ளல்" என்ற த்ர்ர்மீக நெறியை இவர்களும் (நான்
மதிப்பவர்களும்) பின்பற்றி விட்டார்களே என்ற ஆதங்கம்தான் எனக்குள்
எழுகிறது.

இது ஒரு பெரிய டிஸ்க்ளெய்மர்:

ஒட்டு மொத்தமாய் பார்க்கையில் நான் ஏதோ ரொம்ப நல்லவன் வேஷம்
போடுவதற்காகவும், நடுநிலைவாதி என்று என்னை வலிந்து காட்டிக்
கொள்வதற்காகவும், அப்படியும் இல்லாமல், இப்படியும் இல்லாமல், சாலமன்
பாப்பையா பட்டி மன்றத் தீர்ப்பினைப் போல "அதுவும்தான், இதுவும்தான்"
என்று வேஷம் கட்டுவதாகத் தோன்றலாம். ஆனால் நண்பர்களே உண்மையில் எனது
நிலைப்பாடூம் ஏறக்குறைய அதே வகையில்தான் உள்ளது. ஏனெனில் சுபவீ, சீமான்
உள்ளிட்டோர் நடந்து கொண்ட விதத்திலும் தவறிருக்கின்றது. ஞாநி சொன்னாற்போல
இது கருத்து சுதந்திற்கெதிரான முயற்சி என்பதிலும் சில கருத்தியல் பிழைகள்
இருக்கின்றது. அதை இப்படி இருபுறமும் இருக்கும் பிழைகளைச் சுட்டிக்
காட்டாமல் முழுக்க ஞாநி சார்பாகவோ, அல்லது எதிர் அணியினர் சார்பாகவோ
பேசுவது என்பது என்னுடைய தார்மீக எண்ணங்களை, இந்த பிரபலங்களின்
மீதிருக்கும் கவர்ச்சியில் நான் தொலைத்து விட்டேன் என்றுதான் சொல்ல
முடியும். அப்புறம் எனக்கும், "தலைவா, வருங்கால முதல்வரே" என்று கோஷம்
போடும் ரசிகனிற்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும் என்பதால் இதை இங்கே
நான் பதிவு செய்ய வேண்டியதாயுள்ளது.

நந்தா

unread,
May 13, 2008, 3:44:28 AM5/13/08
to பண்புடன்
//எதையும் கேள்விக்கு உட்படுத்த வேண்டும் என்றால் ஞாநியின் பார்ப்பனப்
பிறப்பையும் கேள்விக்கு உட்படுத்த வேண்டியவனாயிருக்கிறேன். ஞாநியைக்
குறித்து உங்களுக்கு ஒரு முன்முடிவு இருக்கலாம் என்றால் எனக்கு
அவரைக்குறித்து இருக்கக் கூடிய முன்முடிவை யாரும் இங்கே கேள்வி கேட்கக்
கூடாது. நமக்கிடையே நடக்கும் இது போன்ற விவாதங்கள்தான் பொதுத்தளத்தில்
ஞாநிக்கு பரிதாபத்தைத் தேடித்தருகிறது. அதை ஞாநியும் சரியாகவும்
பயன்படுத்திக்கொள்கிறார். //

ஒருவரை பிறப்பினடிப்படையில் தீண்டத்தகாதவர் என்று கூறி அவர் எவ்வளவு நல்ல
செயல்கள் செய்திருந்தாலும் அவரை இழிவுபடுத்துவது எப்படி தவறோ
அதேபோலத்தான், ஒருவரை பிறப்பினடிப்படையில் பார்ப்பணர் என்று சொல்லி அவர்
எது செய்தாலும் "பார்ப்பான் பார்ப்பான்" என்று சொல்லுவது. ம.க.இ.க
தலைமையிடமும் இதே கேள்விதான் முன்வைக்கப்பட்டது. ஆனால் எனக்குத் தெரிந்து
சமீப காலங்களில் திமுக போராடத் தவறிய சாதி கொடுமை ஒழிப்புப்
போராட்டங்களிலெல்லாம் ம.க.இ.க போராடி இருக்கின்றது. ஆனால் தான் நினைத்த
படி அவர்கள் நடக்க வில்லை என்ற சூழ்நிலை வரும் போது திராவிட
தொண்டர்களாலேயே ஆயிரந்தான் இருந்தாலும் பிறப்பால் நீ ஒரு பூணூல்வாதி
என்பது போன்ற குற்றச்சாட்டுகள் எழுப்பட்டிருக்கின்றது..

//ஞாநியைக் குறித்து உங்களுக்கு ஒரு முன்முடிவு இருக்கலாம் என்றால்
எனக்கு
அவரைக்குறித்து இருக்கக் கூடிய முன்முடிவை யாரும் இங்கே கேள்வி கேட்கக்
கூடாது. //

தவறு விஜய். முன் முடிவுகளுடன் அணுகப்படும் எந்த பிரச்சினையும் விவாதத்தை
வளர்த்துக் கொண்டேதான் போகுமே தவிர, பிரச்சினைக்கு தீர்வாய் ஒன்றும்
கிடைத்து விடாது. இங்கே நம்மில் எவர் முன் முடிவுடன் பேசினாலும், அதைக்
குறித்து கேள்வி எழுப்ப எல்லோருக்கும் உரிமை உண்டு.

//சோ.ராமசாமி, சுப்ரமணிய சாமி, வேதாந்தி, அத்வானி போன்றவர்கள் கூட
ஆபத்தில்லாதவர்கள். தங்களுடைய உண்மையான முகத்துடன் நம்முடன்
மோதுகிறார்கள். அவன் எப்போது அடிப்பான் என்று தெரிந்து ஆயத்தம்
செய்துகொள்ள வாய்ப்புள்ளது. ஆனால் ஞாநி போல் சிவப்பு வேட்டியும்
காவிக்கோவணமும் கட்டியவர்கள்தான் கடைந்தெடுத்த அயோக்கியர்கள். ஞாநி
நிச்சயம் ஒருநாள் வேட்டியை அவிழ்த்தெறிந்துவிட்டு காவிக்கோவணத்தோடு
வெளியே வருவார். விகடனை விட்டு குமுதத்துக்கு வந்ததற்கு தன்னிலை விளக்கம்
அளித்தாரே, அது போல் பார்ப்பனியத்தின், இந்துத்துவத்தின் பிரச்சாரகனாக
தன்னை உருமாற்றிக்கொள்ளும்போதும் ஒரு தன்னிலை விளக்கம் அளிப்பார்.
தலையெழுத்து அதையும் நீங்களெல்லாம் படித்துத் தொலைப்பீர்கள்.

விபச்சாரி உடலை வைத்து விபச்சாரம் செய்கிறாள் என்றால், ஞாநி எழுதி
விபச்சாரம் செய்து வருகிறார். இதுதான் எனது முடிந்த முடிபு. மறுக்க
முடிந்தால் மறுக்கலாம். அந்த மறுப்பையும் மறுக்கிற அளவுக்கு ஆதாரம் வழங்க
ஞாநியிடமும் சரக்கு இருக்கிறது, அதை உங்கள் முன் எழுதுமளவுக்கு எனக்கும்
சரக்கு இருக்கிறது. //

இந்த இரண்டு பாராக்கள் முழுக்க சம்பவங்களைச் சொல்லாமல், திட்டுவதற்கு
மட்டுமே பயன்படுத்தப் பட்டிருக்கிறது. ஆகையால் இதைப் பற்றி சொல்ல ஒன்றும்
இல்லை.

//ஞாநியின் வார்த்தைகளிலேயே சொல்வதென்றால் நடுநிலை என்பதே ஒரு மோசடி
வாதம்.
எங்கள் மேல் இத்தனை காழ்ப்பை உமிழ முடிகிறதென்றால், ஞாநி நடுநிலையாளனா,
அல்லது எங்கள் பக்கம் நிற்பவரா. எங்கள் பக்கம் இல்லையென்றால் வேறு யார்
பக்கம் நிற்கிறார். அவரைப் பொறுத்தவரைதான் நடுநிலை என்பது மோசடியாயிற்றே.
பிறகு யாரைத் திருப்திப்படுத்த இந்த எழுத்து? //

நான் ஏற்கனவே சொல்லி இருப்பது போல் அறிவு ஜீவிகள் என்று சொல்லிக்
கொள்ளப்படுபவர்கள் ஒன்று சேர்ந்து கெட்டவார்த்தையாக்கப்பட்ட
வார்த்தைகளில் இந்த நடு நிலைவாதம் என்ற வார்த்தையும் ஒன்று. ஆனால் இங்கே
இன்னமும் பெரும் பகுதி கூட்டத்தினரால், மக்களால், திராவிடம் என்பது ஏதோ,
தி,க மற்றும் தி.மு.க கட்சிகளின் கொள்கைகளை ஆதரிப்பது என்பது போலவும்,
மார்க்ஸியம், பார்ப்பணீயம் போன்றவையும் அந்தந்த கட்சியின் கொள்கைகளை
ஆதரிப்பது என்பது போலவும் மட்டுமே புரிந்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.

விஜய் இது ஒரு கொள்கை முடிவு. நிலைப்பாடு. இதை நீங்கள் கட்சி சார்ந்து
பார்க்காதீர்கள். அதையும் தாண்டி இங்கே புரிந்து கொள்ளப்படவேண்டியவை பல
இருக்கின்றது. திராவிடம், மார்க்ஸியம் ஆகியவற்றை அரசியல்
கட்சிகளிடமிருந்து பிரித்து எடுத்து விட்டுதான் நாம் யோசிக்கவே ஆரம்பிக்க
வேண்டும்.

நீங்கள் உங்களது முதல் கட்டுரையில் சொன்னதில் ஒரு சில மாற்றுக்
கருத்துக்கள் உண்டு. கலைஞர், பெரியார் வழி வந்தவர். இப்போதிருக்கும்
அரசியல் கட்சிகளில், திராவிட கொள்கைகளை முன்னெடுத்துச் செல்லும் ஒரு
முக்கிய கட்சியின் தலைவர். அவர் பல போராட்டங்களச் சந்தித்தவர். எல்லாம்
சரி ஆனால் அரசியல் காரணங்களுக்காக அவர் தனது தீவிரத்தன்மையை குறைத்து
வெகு காலம் ஆகி விட்டது. இப்போதைய பிரச்சினையான, உத்தப்புரம் சுவர்
விவகாரம் உட்பல பல விஷயங்களில், அவர் நடந்துக் கொள்ளும் விதம் அவர்
பெரியாரின் சீடர் என்பதை நமக்கு மறக்க வைக்கின்றது. சொல்லப்போனால்
உத்தப்புரம் சுவர் விவகாரத்தில் இவர் நடந்து கொள்வது போன்று ஜெயலலிதா
நடந்து கொண்டிருந்தால் நான் ரொம்ப வருத்தப்பட்டிருக்க மாட்டேன். இவர்
இப்படித்தான் நட்ப்பார் என்று தெரிந்ததுதானே. என்று சமாதானமாவது சொல்லிக்
கொள்ளலாம். ஆகையால் ஞாநி எப்படி விமர்சனத்திற்குட்ப்பட்டவரோ, அதே
போலத்தான் இவரும் விமர்சனத்திற்குப்பட்டவரே. பெரியாரின் சீடர் என்ற
பட்டமோ, தமிழர்களின் தலைவர் என்ற கோஷமோ அதைத் த்டுத்து விடுமாயின் அதை
பெரியாரிசமே ஒத்துக் கொள்ளாது.

Asif Meeran AJ

unread,
May 13, 2008, 3:50:50 AM5/13/08
to panb...@googlegroups.com
நண்பர்களே

இழையை கவனமாகப் பின் தொடர்ந்து வருகிறேன்
சிறப்பான கருத்தாக்கம் கொண்ட இழையாக இது உருப்பெற்ரு வருவதில்மகிழ்ச்சி
நானும் என் இரண்டனா கருத்துக்களோடு பின்தொடர்கிறேன்

கடப்பாரையைப் பிடுங்கிக் கொண்டு கருத்துக்களை அள்ளி வீசும் நந்தாவுக்கும்
இழைக்கு அனல் சேர்க்கும் விஜய் கோபால்சாமிக்கும், இடையில் அகப்பட்டுக்
கொண்ட ரிஷானுக்கும் :-)

நன்றி!

பாண்டித்துரை, நண்பன், ரசிகவ், இப்னு ஹம்தூன், சுபைர், முபாரக், கதிர் உள்ளிட்ட
நண்பர்க்ளும், பீற கவிஞ்ர்களும் பிற அன்பர்களும் கூட தங்கள் கருத்துக்களை முன்வைத்து
விவாதத்தை முன்னெடுத்துச் செல்லலாமே?

நந்தா

unread,
May 13, 2008, 3:54:17 AM5/13/08
to பண்புடன்
//கருத்துக்களை அள்ளி வீசும் நந்தாவுக்கும//

ஏற்கனவே கருத்து கந்தசாமி பட்டம் கொடுத்திருக்கீங்க. இப்போ இது வேறயா....

க்க்க் போ.....

KeN

unread,
May 13, 2008, 4:01:58 AM5/13/08
to panb...@googlegroups.com

ஞானி மேலான குற்றச்சாட்டில் மிக முக்கியமானது அவர் மிகச்சிறந்த பச்சோந்தி எ.கா குமுதம் இதழ்களுக்கு இனி எழுதவே போவதில்லை என்பது.

 தன்னை இடதுசாரி சிந்தனைவாதியாக வெளிக்காட்டிக்கொண்டது , சிறிதுகாலம் திராவிட கருத்துகளை அள்ளித்தெளித்தது. தமிழர்களுக்கான பாலியல் கருத்துக்களால் தனிவகுப்பெடுத்தது, இன்னும் பிற‌

 பிறப்பை நோக்கிய கேள்வி எழுவதற்கு மிக முக்கிய காரணம் அதை நோக்கிய ஞானியின் மறைமுக பயணம்.

 எப்போதுமே விளம்பரத்திற்காக பேசுவது சிலர்க்கு மிகப்பிடிக்கும் அதில் வெகு முக்கியமான ஊடக பச்சோந்தி ஞானி அவரிடம் அரசியல் வாதிகள் கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய‌

 மற்றபடி இரட்டைக்குவளை முறைக்கு வருத்தமோ ,உத்தமபுர சுவர்களுக்கு இரக்கமோ ஞானி போன்ற பச்சோந்திகள் காட்டத்தேவையேயில்லை.

 கவிஞர் அறிவுமதி அண்ணனின் மனம் திறந்த மடல் ஞானிக்கு எழுதப்பட்ட இத்தனை மாதங்களில் வெளிப்படையான பதில் இன்று வரை இல்லை என்பது மிகச்சிறந்த ஜனநாயக வாதிகளை பற்றி கருத்துரைக்கும் ஞானியின் முகமூடிக்கு வெகுச்சிறந்த உதாரணம்.

    மற்றபடி பெரியாரைப்பற்றி பேசவோ அவரை சொந்தம் கொண்டாடவோ எந்த அரசியல் கட்சிக்கும் அரசியலின் அற்ப புழுக்களுக்கும் உரிமை இல்லை.


On 5/13/08, நந்தா <media...@gmail.com> wrote:

KeN

unread,
May 13, 2008, 4:05:02 AM5/13/08
to panb...@googlegroups.com
ஞாநியை மூண்று முறை நேரில் சந்திக்கிற வாய்ப்பைப் பெற்றவன் நான்.

ஞாநியிடம் ஒப்பம் கேட்ட புத்தகக் கண்காட்சி சந்திப்பு, அதற்க்கு முன்பு
மயிலாப்பூர் பேருந்து நிறுத்தத்தில் கண்ணகி சிலை குறித்து விவாதித்த ஒரு

சந்திப்பு, அதற்கும் முன்பு மாயவரம் ஏவிசி கல்லூரி கருத்தரங்கில் ஒன்று
என்று மூன்று சந்திப்புகள்.
 
 
நானும் ஏவிசி பாலிடெக்னிக்-ல் தான் படித்தேன் :)

 
--
-  கென் -

www.thiruvilaiyattam.blogspot.com

Asif Meeran AJ

unread,
May 13, 2008, 4:20:18 AM5/13/08
to panb...@googlegroups.com
நான் நல்லெண்ணத்துலதான் யா சொன்னேன்
எல்லாத்தையும் தப்பாவே புரிஞ்சுக்கிட்டா எப்படிய்யா?

ஒரு கவிதைக்கு ஒரு முத்தம்னா
நூறு கவிதை எழுதி நூறு வாங்கலாமங்குற மாதிரியே
நெனப்பு இருந்தா இப்படித்தான் போல :-)

இழை திசையை ம்மாற்றி விட வேண்டாம்
கென்னுக்கு பதில்சொல்லுங்க

2008/5/13 நந்தா <media...@gmail.com>:

Asif Meeran AJ

unread,
May 13, 2008, 4:27:33 AM5/13/08
to panb...@googlegroups.com
நன்றி கென்
உங்கள் முதல் குற்றச்சாட்டு மிக பலமானது
மனிதர்கள் எப்போதும் கொள்கைகளில் உறுதியாக இருக்க முடியாதவர்கள்
ஞாநி மட்டும் எப்படி விதிவிலக்காக முடியும்?


ஞானி மேலான குற்றச்சாட்டில் மிக முக்கியமானது அவர் மிகச்சிறந்த பச்சோந்தி எ.கா குமுதம் இதழ்களுக்கு இனி எழுதவே போவதில்லை என்பது.


 

பிறப்பை நோக்கிய கேள்வி எழுவதற்கு மிக முக்கிய காரணம் அதை நோக்கிய ஞானியின் மறைமுக பயணம்.


ஒருவர் பிற்ப்பின்காரணமாகவே அவரை விம்ர்சனம் செய்வது முறையற்றது என்பதுதான் என் விவாதமும்.
காரணம் அப்படிச் செய்யும்போது விவாதம் திசை திருப்பப்படுவதோடு விவாத்த்தின் தன்மையும் நீர்த்துப் போய்விடுகிறது. 'நான் என்ன சொன்னாலும்பார்ப்பனன்னு சொல்றாங்க' என்று எளிதாக வாசகர்களிடம் அனுதாபத்தைப் பெற்று விடவும் 'இவனுக்கு வேலையில்லை'என்று எதிர்கருத்துக்கள் வீரியமிழக்கவும் இவை காரணமாகலாம்.

எனவே அவரது உளநோக்கச் சிந்தைகளை மட்டுமே வெளீப்படுத்தி வாசகனுக்கு ஜெயமோகனின் போலித்தன்மைகளை அடையாளம் காட்டி ஒதுக்குவது போல இவரது போலித்தனத்தையும் அடையாஅளம் காட்டி அவரை 'ஓரம்' பக்கங்க்ளுக்கு விரட்டலாமே தவிர அவரது கருத்து அவரது பிறப்பினால் வருவதாகச் சொல்வது எனக்கும் உடன்பாடில்லாத விடயமே - ஞாநியோடு நான் நிறைய முரண்படுகின்ற போதும்
 

கவிஞர் அறிவுமதி அண்ணனின் மனம் திறந்த மடல் ஞானிக்கு எழுதப்பட்ட இத்தனை மாதங்களில் வெளிப்படையான பதில் இன்று வரை இல்லை என்பது மிகச்சிறந்த ஜனநாயக வாதிகளை பற்றி கருத்துரைக்கும் ஞானியின் முகமூடிக்கு வெகுச்சிறந்த உதாரணம்.

அறிவுமதி அண்ணன் எழுதிய திறந்த கடிதத்தின் கடைசி வரிகளில் இருந்த வீரியம் கவனித்தீர்களா கென்?

எங்கள் பெண்களைக் கற்பழிக்க வரும்போது
அவர்கள் குறிகளை வெட்ட வேண்டும் என்று நாங்கள் ஆவேசம் கொள்கிறோம்
நீங்கள் ஆனுறை மாட்டி அழகு பார்க்க வேண்டுமென்று சாஸ்திரம் பேசுகிறீர்கள்

என்பது போல எழுதியிருப்பார்
உங்களிடம் இருந்தால் இந்த இழையில் இடுங்களேன் கென்

நந்தா

unread,
May 13, 2008, 5:42:06 AM5/13/08
to பண்புடன்
//ஞானி மேலான குற்றச்சாட்டில் மிக முக்கியமானது அவர் மிகச்சிறந்த
பச்சோந்தி எ.கா
குமுதம் இதழ்களுக்கு இனி எழுதவே போவதில்லை என்பது. //

மறுக்கவே இல்லை. ஞாநியின் மீதான குற்றச்சாட்டுகளில் இதுவும் ஒன்றுதான்.
தனக்கென்று வரும் போது அவர் சமரசம் செய்து கொண்டார் என்று சொன்னாலும் சரி
பச்சோந்தித்தனம் என்று சொன்னாலும் சரி இது தவறுதான். இதற்கு ஆதரவாய் நான்
எங்கேயும் கொடி பிடிக்க வில்லை.

//தன்னை இடதுசாரி சிந்தனைவாதியாக வெளிக்காட்டிக்கொண்டது , சிறிதுகாலம்
திராவிட
கருத்துகளை அள்ளித்தெளித்தது. தமிழர்களுக்கான பாலியல் கருத்துக்களால்
தனிவகுப்பெடுத்தது, இன்னும் பிற‌ //

இதில் என்ன தவறு. நான் கூடத்தான் வலையுலகிற்குள்ளே நுழையும் போது "போடா
லூசு" வகை காதல் கவிதையை எழிதி உள் நுழைந்தேன். பின்பு முத்தக்கவிதை,
வரலாறு (அண்ணாச்சி கவனிக்க), அரசியல், பெண்ணியம் என்று பரவலாகத் தொட்டுச்
சென்றிருக்கிறேன். என்ன சொல்ல வருகிறீர்கள். அவர் ஆரம்பித்த இடத்திலேயே
இருந்திருக்க வேண்டும் என்றா அல்லது இடது சாரி சிந்தனைகளைப் பேசி விட்டு
திராவிடம் பேசியிருக்கக்கூடாது என்றா????

//பிறப்பை நோக்கிய கேள்வி எழுவதற்கு மிக முக்கிய காரணம் அதை நோக்கிய
ஞானியின்
மறைமுக பயணம். //

இதைத்தான் நானும் கேட்கிறேன். கலைஞரை விமர்சித்து ஒருவர் எழுதினால் அவர்
பார்ப்பனர் என்று நீங்கள் சொல்வதாயிருந்தால், எவ்வளவு பேசினாலும் என்னால்
ஏற்றுக் கொள்ள முடியாது.

//மற்றபடி இரட்டைக்குவளை முறைக்கு வருத்தமோ ,உத்தமபுர சுவர்களுக்கு
இரக்கமோ ஞானி
போன்ற பச்சோந்திகள் காட்டத்தேவையேயில்லை. //

// மற்றபடி பெரியாரைப்பற்றி பேசவோ அவரை சொந்தம் கொண்டாடவோ எந்த
அரசியல்
கட்சிக்கும் அரசியலின் அற்ப புழுக்களுக்கும் உரிமை இல்லை. //

இந்த வரிகளில் கருத்தியல் ரீதியான எதிர்கொள்ளலோ, அல்லது கோப
உணர்வைத்தவிர்த்த லாஜிக்கல் கேள்விகளோ எதுவும் இல்லாத நிலையில், இந்த
வசைபாடல் வார்த்தைகளுக்கு என்னவென்று பதில் சொல்வது.

சரி நான் ஏன் இவ்வளாவு தூரம் ஞாநியைத் தாங்கி பிடிக்கிறேன்??? அவர்
எனக்கு என்ன செய்து விட்டார்?? என்றெல்லாம் கேட்டால் ஒன்றுமே யில்லை.
என்னைப் பொறுத்த வரை ஞாநி போன்றோரையும் எதேனும் காரணம் காட்டி, குற்றம்
சொல்லி ஒதுக்கி விட்டால், அப்புறம் அவர்கள் எழுப்புகின்ற பல நியாயமான
கேள்விகள் நமக்குள் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாமலேயே போய்விடும்.
எல்லாத்துக்கும் "ஆமா உனக்கு வேற வேலையே இல்லை. நீ ரொம்ப யோக்கியமா?"
எனறு பதில் எழுப்பி விட்டு போய் விடுவோம்...

"இலக்கியவாதிகள் சினிமாவுக்கு வரவேண்டும்" என்று கமல் அழைப்பு விடுத்தது
குறித்து ஞாநி எழுதிய கட்டுரை, ஜெயகாந்தன் மற்றும் விருது
அரசியலைப்பற்றிய கட்டுரை, எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் மீதான
விமர்சனம், கார்கில் போராட்டத்தின் போது நாடே பாகிஸ்தான் தான் ன் எல்லா
பிரச்சினைகளுக்கும் காரணம் என்றுச் சொல்லிக் கொண்டிருக்கும் போது,
காஷ்மீர் மக்களின் உண்மையான நிலைப்பாடாய் தான் கண்டதை பற்றி அவர் எழுதி
இருந்த கட்டுரை, இளையராஜாவின் மீதான விமர்சனம், ஆளுநர் பதவியின்
பின்னாலிருக்கும் அரசியல், கிருஷ்ணசாமியின் சண்டியர் படத்திற்கெதிரான
போராட்டம் பற்றியும், சாமி படத்தில் மறைந்துக் கிடக்கும் சாதியக்கூறுகள்
குறித்தான கட்டுரை, 80 வயது அத்வானி, 75 வயது மன்மோகன் சிங், கலைஞர்
உள்ளிட்ட பல மூத்த அரசியல் தலைவர்கள் வயது பற்றிய கட்டுரையின் ஒரு பகுதி,
பெண்களுக்கெதிராய் திணிக்க்ப்படும் உடை குறித்தான பாசிச உணர்வுகள் பற்றிய
கட்டுரை... (இன்னும் பல வரிசையிலிருக்கின்றன) என்று பல கட்டுரைகளையும்
நாம் "இந்தாளு சொல்றதையெல்லாம் மதிச்சு யோசிக்கணுமா?" என்ற ரீதியில்
புறம் தள்ளி விட்டு விடுவோம் என்கின்ற ஒரே காரணத்திற்காக நான்
தாங்கித்தான் பிடிக்க வேண்டியிருக்கிறது.

மறுபடி சொல்கிறேன். பிரியன் மற்றும் ராஜதுரை போன்றோர் சமீபத்தில் சொல்லி
இருந்த ஞாநி யின் வார்த்தையாடல்கள் குறித்தான குற்றச்சாட்டுகளை என்னால்
ஏற்றுக் கொள்ள முடிகிறது. அவை கருத்தியல் ரீதியிலானவை. ஆனால் திமுக,
கலைஞரை விமர்சித்தால் பார்ப்பண புத்தி என்று சொன்னால் உங்கள் நிலை
உங்களுக்கு, எனது நிலை எனக்கு என்றுதான் சொல்ல முடியும். இதைத்தாண்டி,
அவரது கட்டுரை9களைல் தொடர்ச்சியாய் எங்கேனும் சனாதன, வருணாசிரம
தருமத்திற்கு நேரடியேனும், மறைமுகமாகவும் ஆதரவு தெரிவிக்கிறார் போல்
எழுதி இருந்தால் தயவு செய்து சொல்லுங்கள். உங்களுக்கு முன்பு நான் கூரை
மேலேறி நின்று கத்துகிறேன். "அவர் நரம்புகள் பூணூலால்தான்
செய்யப்பட்டிருக்கிறதென்று."

விஜய்கோபால்சாமி

unread,
May 13, 2008, 9:49:20 AM5/13/08
to பண்புடன்
நந்தா,

ஞாநி மறுத்துவிட்ட அவருடைய சாதி அடையாளங்களைக் கொண்டு அவரைத் தாக்குவதில்
எனக்கும் உடன்பாடில்லாமல்தான் இருந்தது முதலில். ஆனால் அப்படித்
தாக்குவதையே ஞாநி ஆதாயமாக்கி அறுவடை செய்யத் தொடங்கிய பிறகுதான் என்னுடைய
நிலைப்பாடு அதையும் சேர்த்துக் கேள்விக்கு உள்ளாக்குவதில் என்ன தவறு என்ற
நிலைக்கு முன்னகர்ந்தது. எப்படி ஞாநியால் தனிப்பட்ட முறையில் நீங்கள்
எந்த ஆதாயத்தையும் அடைந்துவிடவில்லையோ, அதே போல கருணாநிதியால் நானும்
எந்த தனிப்பட்ட ஆதாயத்தையும் அடைந்துவிடவில்லை.

கலைஞர் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் என்பது எனது எண்ணமல்ல. ஆனால்
எத்தகைய விமர்சனம் என்பதில்தான் இருக்கிறது கலைஞருக்கான எனது அக்கறை.
கலைஞர் மீது டி.எஸ்.எஸ். மணி, பழ நெடுமாறன் போன்றோர் வைக்கின்ற
விமர்சனங்களுடன் ஞாநி வைக்கின்ற விமர்சனங்கள் எந்த வகையில் சேரும்.

முதியவர்களான சங்கர்தயாள் சர்மாவுக்கும், வாஜ்பாய்க்கும் பரிதாபப்பட்டாரா
ஞாநி, என்று நான் கேட்டது வேண்டுமானால் நீங்கள் என்னை தி.மு.க வின்
அனுதாபியாக நினைப்பதை நியாயப்படுத்தலாம். ஆனால் இதே ஞாநி குடியரசுத்
தலைவர் பதவிக்குப் பரிந்துரைத்த மகா ஸ்வேத தேவி என்பத்தியோரு வயது
முதியவர். இதை “நான் பூணூலால் தாக்கப்படுகிறேன்” என்று கூறி ஞாநி மிகத்
திறமையாக வெளியே வராமல் மறைக்கிறார். இதையெல்லாம் சோ. ராமசாயின்
துக்ளக்கிலோ, பால் தாக்ரேவின் சாம்னாவிலோ எழுதியிருந்தால் இப்போதிருக்கிற
கொதிநிலையை யாரும் அடைந்திருக்கப் போவதில்லை. நீங்கள் சொல்வது போல
புறக்கணித்துவிட்டுப் போயிருப்பார்கள். மாறாக தமிழக கலாச்சாரத்தின்
முகங்களாக காட்டிக்கொள்ளும் ஆனந்த விகடனிலும் குமுதத்திலும்
எழுதும்போதுதான் இத்தகைய கேள்விகள் எழுகின்றன.

அவருடைய பேச்சுக்கும் எழுத்துக்கும் உள்நோக்கம் இல்லையென்றால், உங்களைப்
போல என்னைப் போல இதை விவாதித்துக் கொண்டிருக்கும் பலருடைய அழைப்பையும்
புறந்தள்ளிவிட்டு விவாதத்துக்கு வராமலிருப்பது ஏன்? கொல்லைப் புற வழியில்
அந்த விவாதங்களை முடக்குகிற வேலை எதற்கு?

ஞாநி இத்தகைய விவாதங்களுக்கு வராத வரை நீங்களும் நானும் இங்கே முட்டிக்
கொண்டிருப்பதில் எந்தப் பயனும் இல்லை.
> செய்யப்படடிருக்கிறதென்று."

pandii durai

unread,
May 13, 2008, 10:21:32 PM5/13/08
to panb...@googlegroups.com

அண்ணாச்சி நானும் முழுமையாக இந்த இழையை வாசித்து வருகிறேன். ஞாநி பற்றிய முழுமையான மதிப்பீடுகளுக்கு என்னால் இப்பொழுது வரமுடியாது. நான் இன்னும் அந்த அளவிற்கு வாசிப்பிற்கு உட்படவில்லை. ஆனால் ஞாநியின் பல கட்டுரைகளை வாசித்திருக்கிறேன்.

ஆ.வியை விட்டு ஞாநி வெளியேறியதற்கு சொன்ன காரணம் மஞ்சு விரட்டு பற்றிய கட்டுரையை ஆ.வி வெளியிடவில்லை உடனே குமுததிற்கு மாறிவிட்டார். நான் ஆவி எனது சகோதரனின் புண்ணியத்தில் படிக்கின்றேன். ஞாநி குமுதிற்கு மாறியது ஏதேச்சையா ரோட்டில் போகும் பொழுது கவனித்து அத வாங்க போய் ரோபோ படத்திற்கான தலைப்பு பற்றிய ஒரு சிறு கட்டுரையைநான் என் வலையில் பதிந்துள்ளேன்.
 
எங்கோ போயிட்டேன்ல
 

ஆவியை விட்டு ஞாநி வெளியேறியதற்கான ஞாநி சொன்ன காரணம் உங்களுக்கு உண்மைனு தோணுதா?

என்னளவில் இல்லை.

இத நான் சொன்ன நந்தா கேட்கலாம் தனிப்பட்ட கருத்துக்களை சொல்லவேண்டும் என்ற நிர்பந்தம் ஏதும் உண்டா என்று?

இந்த போக்கு இங்கு ஞாநி பற்றி நேர் எதிர் பதிவு செய்யும் நண்பர்ளிடமும் உள்ளது. கட்டுரையை படிக்கும் பொழுதே தெரிகிறது.

 

 

pandii durai

unread,
May 13, 2008, 10:41:33 PM5/13/08
to panb...@googlegroups.com
நந்தா ஞாநியை முற்றிலும் புறக்கணிக்க முடியாது. புறக்கணிக்கவும் வேண்டாம். ஆனால் புறக்கணிப்பதற்கான விகிதாச்சாரம்?
 
செக்ஸ் கல்வி பற்றி ஞாநி எழுதினாரு!
இது பற்றி அறிமதி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அந்த கட்டுரை எனக்கு ஏற்புடைய ஒன்றே.
 

///கலைஞர் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் என்பது எனது எண்ணமல்ல. ஆனால்

எத்தகைய விமர்சனம் என்பதில்தான் இருக்கிறது கலைஞருக்கான எனது அக்கறை.
///
 
எனக்கு உடன்பாடனா ஒன்று .
சிங்கப்பூரில் லீகுவான்யு (முன்னாள் பிரதமர் ) மறைமுகமான நின்று செயல்படுகிறார்.
ஆனா ஞாநி கேட்ட விதம்!
 
அதேதான் சிங்கள படவிவகாரத்திலும்.

pandii durai

unread,
May 13, 2008, 10:44:28 PM5/13/08
to panb...@googlegroups.com
thanks: keetru.com
 
உதைபட்ட சிங்கள இயக்குனர் - 'பிரபாகரன்' படத்தின் பின்னணி என்ன?

ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் திரைப்படம் ஒன்றை சிங்கள இயக்குனர் பிரீஸ் என்வர் தயாரித்து, அதை பிரதி எடுப்பதற்காக (பிரிண்ட்) அந்த இயக்குனர் சென்னை ஜெமினி கலையகத்துக்கு வந்தார். செய்தி வெளியானவுடன், தமிழின உணர்வாளர்கள் கலையகம் விரைந்து எதிர்ப்பு தெரிவித்தனர். திரைப்பட இயக்குனர் சீமான், சுப. வீரபாண்டியன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் அமைப்பினரோடு பெரியார் திராவிடர் கழகத் தோழர்களும் விரைந்தனர். படத்தின் உள்ளடக்கம் பொதுவானது என்று கூறி, சிங்கள இயக்குனர் எதிர்ப்பாளர்களை ஏளனப்படுத்தியபோது, அவர் தாக்குதலுக்கு உள்ளானார்.

படத்தை திரையிட்டு பார்த்தப் பிறகு பிரதி எடுக்கலாம் என்று ஜெமினி கலையகத்துடன் பேசி முடிவெடுக்கப்பட்டது. இதற்கு சிங்கள இயக்குனரும் ஒப்புக் கொண்டார். மார்ச் 27 ஆம் தேதி அப்படம் வட பழனியில் உள்ள ஒரு திரையரங்கில் திரையிடப்பட்டது. திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தலைவர் இராம. நாராயணன், நடிகர் சத்தியராஜ், தங்கர்பச்சான், இயக்குனர் சீமான் உள்ளிட்ட கலை உலகப் பிரமுகர்களும், தொல். திருமாவளவன், பேராசிரியர் சுப.வீரபாண்டியன், கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், பா.ம.க. துணைத்தலைவர் முத்துக்குமார் மற்றும் தோழர்களும் படத்தைப் பார்த்தனர்.

சுமார் இரண்டு மணி நேரம் ஓடும் அத்திரைப்படம் இலங்கை ராணுவ அமைச்சகத்துக்கும், ராணுவ தளபதிகளுக்கும் நன்றி கூறி தொடங்குகிறது. பிரபாகரன் என்ற பெயரில் ஒரு சிறுவன், விடுதலைப்புலிகள் அமைப்பில் விருப்பமின்றி கட்டாயப்படுத்தி சேர்க்கப்படுவதாகவும், புலிகள் அமைப்பு பள்ளிக்கூடத்தில் நுழைந்து சிறுவர்களை கடத்திச் சென்று ராணுவத்தில் சேர்ப்பதாகவும் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன. பிரபாகரன் சகோதரியான தமிழ்ப் பெண், ஒரு சிங்களரை காதல் திருமணம் செய்து கொண்டு, நிறை மாத கர்ப்பிணியாக இருக்கும்போது, அந்தப் பெண்ணை தற்கொலைப் போராளியாக மாறுமாறு, விடுதலைப்புலிகள் கட்டாயப்படுத்துவதாகவும், அந்தப் பெண் மறுத்து, கடைசியில் புலிகளையே வெடிகுண்டு வீசி கொல்வதாகவும் கதை சொல்லியிருக்கிறார்கள்.

பிரபாகரன் என்ற சிறுவன் விடுதலைப் புலிகள் படையிடமிருந்து சிறுவர்களோடு தப்பும் போது, அனைவரும் புலிகளால் கொல்லப்படுவதாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. படத்தில் எந்த ஒரு இடத்திலும், ஒரு சிங்கள ராணுவமோ, சிங்கள ராணுவ தளபதியோ தலைகாட்டும் காட்சியே கிடையாது. அந்நிய நாடுகள் சதி செய்து - போலி சமாதான முயற்சிகளை மேற்கொள்வதாகவும், சர்வதேச தொண்டு நிறுவனங்கள் சிங்களர்களை எதிர்த்து செயல்படுவதாகவும், புலிகள் தாக்குதலால், அகதிகள் முகாம்களில் சிங்களர்கள் உணவின்றி தவிப்பதாகவும், காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. முழுமையாக பொய்யைப் பரப்பும் படத்தைப் பார்த்து கொதித்துப் போன தமிழர்கள் படத்தைத் திரையிட எதிர்ப்பு தெரிவித்தனர்.

சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரக அதிகாரியான அம்சா என்பவரே இத் திரைப்படத்தை தமிழில் பிரதி எடுத்து, தமிழகத்தில் திரையிடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதால், சிங்கள இயக்குனர் சென்னை வந்துள்ளார். எதிர்ப்பு வலுத்தவுடன், தமிழக காங்கிரஸ் கட்சியிடம் சிங்கள தூதரகம் சரணடைந்துள்ளது. காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், சிங்கள தூதரகத்துடன் நெருக்கமாக இருப்பவர்; அவர் பத்திரிகையாளர்களைக் கூட்டி, சிங்கள இயக்குனர் தாக்கப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்களை சிங்களப் படைகள் தாக்கும் போதெல்லாம் ஒரு முறைகூட கண்டனம் தெரிவிக்காத எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் என்ற மனிதர், இப்போது சிங்கள இயக்குநருக்காக குரல் கொடுக்க முன் வந்துள்ளார். சிங்கள இயக்குனரைத் தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த சென்னை பிரமுகர் சபீர் அலி என்பவர் காவல் நிலையத்தில் புகார் கூறியுள்ளார்.

இதற்கிடையே 'பிரபாகரன்' படம் பற்றி சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. இந்தப் படத்தில் துரோகக் குழுவைச் சார்ந்த பிள்ளையான் என்பவரின் ஆட்களே, நடிக்க வைக்கப்பட்டுள்ளனர். துணை ராணுவக் குழுக்கள் அதிகம் நடமாடும் வெலிக்கந்த எனும் பகுதியில் இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. சிங்கள ராணுவத்தில் உயர் அதிகாரிகளான மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிப்பிட்டிய மற்றும் கேணல் பெரேரா ஆகியோர் படத் தயாரிப்புக்கு முழுமையாக உதவிகளை செய்துள்ளனர். தமிழ்நாட்டில் உருவாகியுள்ள இந்த எழுச்சி சென்னை இலங்கை தூதகரத்தை மட்டுமல்ல, தமிழக காங்கிரசாரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது

pandii durai

unread,
May 13, 2008, 10:46:17 PM5/13/08
to panb...@googlegroups.com
thanks keetru.com
 
ஞாநியின் பேனாவை பூணூல் தடுக்கிறதோ?
அதி அசுரன்

எழுத்தாளர் ஞாநி அவர்கள் தற்போது புதுக்குடித்தனம் போயிருக்கும் குமுதம் 9.4.2008 இதழில் சுபவீ அவர்களுக்கு ஒரு மடல் எழுதியிருக்கிறார். தமிழர்களை கொன்றுகுவிப்பதை அன்றாட வாழ்க்கை நடைமுறையாகக் கொண்டுள்ள சிங்கள அரசின் ஆதரவில் - ஆலோசனையில் பிரபாகரன் என்ற திரைப்படம் உருவாகி வருவதையும் அதன் தொழில் நுட்பப்பணிக்காக அப்படத்தின் இயக்குநர் துசாரா பெய்ரிஸ் சென்னை பிரசாத் கலைக்கூடத்தில் இருந்தபோது தோழர்கள் சுபவீ, சீமான், வன்னியரசு மற்றும் விடுதலைச் சிறுத்தைகள், பெரியார் திராவிடர் கழகம் ஆகிய அமைப்புத் தோழர்களால் தாக்கப்பட்டதையும் அறிவீர்கள். அந்த சிங்களன் தாக்கப்பட்டதற்காகத் தான் இந்த முற்போக்கு ஞாநி அவர்கள் சுபவீ அவர்களுக்கு மடல் எழுதியிருக்கிறார்.

கருத்தைக் கருத்தால் சந்திக்க வேண்டுமாம், இந்த வன்முறைத் தாக்குதல் ஒரு மோசமானமுன்னுதாரணமாம். இந்த வன்முறை இருபுறமும் வெட்டக்கூடிய கூரிய ஆயுதமாம். சிங்களன் அடிபட்டதற்காக துடித்துப்போய் நமக்கு அறிவுரைகளை அள்ளி வீசியுள்ளார்.

கண்ணகி சிலை கடற்கரையில் இருந்து அகற்றப்பட்டபோது அது தொடர்பாக ஞாநி அவர்கள் எழுதிய கடிதம் ஒன்று அவரது தீம்தரிகிட இதழில் வெளியானது. அதை முதலில் பாருங்கள்.

...அன்று இரவு திருவனந்தபுரம் மெயிலில் சென்னை திரும்புகையில், விடியற்காலை சுமார் இரண்டு மணிக்கு பெட்டிக்குள் இருந்த எதிர் வரிசை பெண்ணின் உரத்த குரல் என்னையும் பல சக பயணிகளையும் எழுப்பியது. அந்தப் பெண் பக்கத்து இருக்கையில் படுத்து இருந்த ஆணைக் கடுமையாக சாடிக் கொண்டிருந்தாள். அவன் தன்னை நோக்கிக் கையை நீட்டி சீண்டித் தொல்லை செய்ததை அவள் கண்டித்துக் கொண்டிருந்தாள். சக பயணிகளை தன் உதவிக்கு வரும்படி அந்தப் பெண் அழைக்கக் கூட இல்லை. வந்த உதவியை நிராகரிக்கவும் இல்லை.

முறைகேடாக நடந்து கொண்ட பயணியை நடுவழியில் இறக்கி விட்டுவிடலாம் என்று பெட்டியின் நடத்துநர் சொன்னதை அவள் ஏற்கவில்லை. அவனை உடனே போலீசிடம் ஒப்படைக்க வேண்டுமென்று வலியுறுத்தினாள். அப்போது சேலம் ரயிலடியில் வண்டி நின்றது. நடத்துநர் ஓடிச் சென்று ஒரு காவல் துறை துணை ஆய்வாளரை அழைத்து வந்தார். அந்தக் காவலரோ புகாரைப் பதிவு செய்ய வேண்டுமென்றால், இருவரும் அந்த ரயில் நிலையத்தில் இறங்க வேண்டும் என்றார். தன் முகவரி, முழு விவரங்களுடன் தான் எழுத்துப்பூர்வமாகப் புகார் கடிதம் தரும்போது, தானும் ஏன் பயணத்தை பாதியில் முறிக்கவேண்டும் என்று அந்தப் பெண் கேட்டதற்கு சரியான பதில் இல்லை. காவலர் மேல் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் இறங்கிப் போய்விட்டார்.

அந்தப் பெண் நடத்துநரிடமிருந்து தவறு செய்த பயணியின் பெயர் விவரத்தைப் பெற்று புகார் கடிதம் எழுதி நடத்துநரிடம் அளித்தாள். குற்றவாளி 18 வருட சர்வீஸ் உள்ள ராணுவ 'வீரர்'. (ரயிலில் ராணுவ சிப்பாய்கள் பெண்களிடம் அத்துமீறி இப்படி நடப்பது தனக்குத் தெரிந்தே நான்காவது முறை என்று அந்தப் பெண் தெரிவித்தாள்.) ரயில்வே நிர்வாகத்தின் மூலம் புகாரை ராணுவத் தலைமையகத்துக்கு அனுப்புவதாக நடத்துனர் உறுதியளித்தார். இதுவரை வாய் திறக்காமல் மௌனமாக இருந்த குற்றவாளி, வேறு சில பயணிகளின் யோசனையின்பேரில், சட்டென்று அந்தப் பெண்ணின் காலைத் தொட்டு வணங்கி தன்னை எதுவும் செய்துவிடவேண்டாம் என்றான்.

கோபமடந்த பெண், அருகிலிருந்த ஒரு செருப்பை எடுத்து அவன் தலையில் அடித்தாள். அவனிடம் எந்த சலனமும் இல்லை. கடைசி வர அந்தப் பெண் தன் புகாரைத் திரும்பப் பெறவில்லை. தமிழ்நாட்டில் கண்ணகியைக் காட்டிக் காட்டி நமது பெண்களை மூளைச் சலவை செய்து வந்ததன் விளைவாகத்தான், ரயில்களில், பஸ்களில், பொது இடங்களில் ஏன் வீட்டுக்குள்ளும்தான், எல்லா அவமானங்களையும் சீண்டல்களையும் மௌனமாக சகித்துக் கொள்கிற 'கல்ச்சர்' ஏற்பட்டிருக்றது. தனக்கு இழக்கப்படும் அநீதிகளைப் பொறுத்துக் கொண்டு மௌனமாக இருக்க வேண்டும். தன் வீட்டு ஆண்களுக்கு ஏற்படும் சிக்கல்களுக்கு மட்டும் தெருவில் வந்து போராடவேண்டும் என்று பெண்ணுக்கு போதிக்கிற கலாசாரம்தானே கண்ணகி கலாசாரம்?

கண்ணகி மட்டுமல்ல, சீதையும், நளாயினியும், கண்ணகியின் கற்பு, பண்பாடு பற்றி உருகுகிற இன்றைய அரசியல் தலைவர்கள், சமூகப் பிரமுகர்கள் பலரின் முதல் மனைவிகளும் என் தந்தையின் முதல் மனைவியும் கூட அவரவர் செருப்புகளை தம் கணவன்களுக்கெதிராகப் பயன்படுத்தியிருந்தால் அது ஒன்றும் குற்றமாகிவிடாது என்பதுதான் பெரியார் எனக்குக் கற்றுத் தந்த பார்வை.


இப்படி ஒரு மடலை 5.1.2002 நாளிட்டு எழுதி அது தீம்தரிகிட இதழில் வந்துள்ளது.

ஒரு பெண் இரயில் பயணத்தில் தன்னிடம் தவறாக சைகை செய்த ஒரு ஆணை செருப்பால் அடிக்கிறார். அவன் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்ட பின்பும் செருப்பால் அடிக்கிறார். தன்னிடம் அடிவாங்கியவன் மீது காவல்துறையில் புகாரும் கொடுக்கிறார். ஞாநி அந்தப் பெண்ணைப் பாராட்டுகிறார். பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிறார். அந்தப் பெண்ணுக்காக சாட்சிக் கையெழுத்தும் போட்டுள்ளார். நாம் அந்தப் பெண்ணை மனமாரப் பாராட்டுகிறோம். அந்த சம்பவத்தில் ஞானியையும் பாராட்டுகிறோம்.

ஒரு பெண்ணிடம் தவறாக சைகை செய்தவன் அதே பெண்ணிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டபின்னும் செருப்பால் அடிக்கப்படுகிறார். அது ஞானிக்கு நியாயமாம்.

ஆயிரக்கணக்கான தமிழச்சிகளை அவர்களது சகோதரன் முன்னிலையிலேயே, பெற்றோரின் முன்னிலையிலேயே, கணவனின் எதிரிலேயே காட்டுமிருகங்காக மாறிக் குதறிவிட்டு, மார்பகங்களை அறித்தெறிந்துவிடுவதும், மார்பில் சிறீ என்று குறி பதிவதும், கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து அந்த சிசுவையும் உருத்தெறியாமல் சிதைப்பதையும் ஒருவன் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்கவேண்டுமாம். இந்த காட்டுமிராண்டிகளைத் திருப்பித் தாக்க, தன் இனத்தைத் தற்காத்துக் கொள்ள மானமுள்ளவன் ஆயுதம் எடுத்தால் அது தவறாம். வன்முறையாம்.

இந்தத் தற்காப்பு தாக்குதலை வன்முறையாக சித்தரிப்பானாம். நாளை உயிரோடு இருப்போம் என யாருக்கும் உத்திரவாதமில்லாத நாட்டில், அந்த உறுதியை, உத்திரவாதத்தை தமிழனுக்குக் கொடுப்பதற்காக ஆயுதம் ஏந்தியவர்களை வன்முறையாளர்களாகச் சித்தரித்து ஒருவன் படம் எடுப்பானாம். அதை நாம் வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் இருக்க வேண்டுமாம். அந்தப் படத்தை ஓடவிட்டு அதற்குப் பதில் கொடுக்கும் விதமாக நாமும் ஒரு படம் எடுத்துத் தான் பதில் சொல்ல வேண்டுமாம்.

ஞாநி அவர்களே தமிழனின் மான உணர்வைக் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறீர்கள். உமது குலத்தினர் மாட்டுமூத்திரத்துக்கு தரும் மரியாதையின் அளவுக்காவது நீங்கள் எம் போன்ற தோழர்களின் உணர்வுகளுக்கு, நியாயங்களுக்கு மரியாதை கொடுப்பது அடிப்படை அவசியம். எந்த துணிச்சலில் இப்படி ஒரு கடிதத்தை எழுதுகிறீர்கள்? சுபவீ அவர்களுக்கு ஏன் மடல் எழுதுகிறீர்கள்? சுபவீ என்ற தனிப்பட்ட நபரா அடிக்கச் சென்றார்? கட்சிகளைக் கடந்து, இயக்கங்களைக் கடந்து தமிழர்கள் ஒன்றாகச் சென்று தாக்கியுள்ளனர்.

2006 டிசம்பரில் பெரியார் சிலைக்கு செருப்புமாலை போட்ட உடனே தமிழ்நாடெங்கும் பூணூல் அறுக்கப்பட்டது. பார்ப்பனர்கள் தாக்கப்பட்டனர். அயோத்தியா மண்டபம் தாக்கப்பட்டது. அதன் பிறகு தமிழ்ச்செல்வன் வீரமரணமடைந்த சமயத்தில் வாலாட்டிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கோபியில் விரட்டியடிக்கப்பட்டார். இப்போது சிங்களன் தாக்கப்பட்டுள்ளான். ஓகேனக்கல் குடிநீர் திட்ட எதிர்ப்புக்கு கன்னடர்கள் தமிழ்நாட்டு உடைமைகளைத் தாக்கியபோது சென்னையில் கன்னடர்களின் உடுப்பி ஓட்டல்களும், சங்கீதா ஓட்டல்களும் தாக்கப்படுகின்றன. எந்த இயக்கத் தலைவரும் அறிவிக்காமல் தமிழ்நாடு முழுவதும் அனைத்து இயக்கத் தோழர்களும் பதிலடியில் இறங்கியுள்ளனர். தமிழ்நாட்டில் இப்பதானய்யா அடிக்க ஆரம்பிச்சு இருக்கோம். இவ்வளவு நாளா வாங்கிக்கிட்டுத்தானே இருந்தோம்.

எமது எதிர்த்தாக்குதல் உங்களுக்கு மோசமான முன்னுதாரணமா? இருந்து விட்டுப் போகட்டும். இந்த நிலை வரவேண்டும் என்பதுதானே எமது நோக்கம். நீங்கள் வேண்டுமானால் ஐ.நா அவையின் அமைதிக்கான விருதையும், உலக அமைதிக்கான நோபல் விருதையும் வாங்கிக் கொள்ளுங்கள். எமக்கு ரவுடிப் பட்டம் தான் தேவை. காலங்காலமாக அடிவாங்கிய எங்களுக்கு ஏதாவது ஒரு சிறு நியாயமாவது கிடைக்க வேண்டுமென்றால் முதலில் அடி - பதிலடி அப்புறம்தான் பேச்சுவார்த்தை, விவாதம், கருத்துரிமை, கழுதையுரிமை எல்லாம்.

கருத்தைக் கருத்தால் சந்திக்கவும் நாங்கள் தயார்தான். நீங்கள்தான் கருத்துரிமைக் காவலர் ஆச்சே, நீங்கள் நிறுவனராக உள்ள ஒற்றைரீல் இயக்கத்தில் எமக்கு, எமது கருத்துக்களைச் சொல்வதற்கு ஒரு வாய்ப்பை வழங்குங்கள். நாங்கள் சிங்கள இயக்குநர் பெய்ரீசை அடித்தது சரிதான் என நிரூபிக்கும் வண்ணம் ஒரு ரீலை எடுத்துத் தருகிறோம். நாடெங்கும் ஒளிபரப்புங்கள். செய்வீர்களா? எனது நிறுவனத்தில் அதெல்லாம் செய்யமாட்டேன் என்கிறீர்களா? சரி, உங்களது இணை நிறுவனரான பிரமிட் சாய்மீராவில் பேசிச் சொல்லுங்கள். நீங்கள் விரும்பியபடியே இயக்குநர் சீமான் அவர்களை வைத்து பெய்ரிசை அடித்தது நியாயம் என்பதை விளக்கி திரைப்படம் எடுக்கிறோம். பதிலுக்குக் காத்திருக்கிறோம்.

மேலும், சிங்களனைக் கொல்ல விரும்பினால் வன்னியிலே போய் ஆயுதப் பயிற்சி எடுத்து புலிப்படையில் சேர்ந்து போராடுங்கள், அப்பாவி சிங்களனை அடிக்காதீர்கள் என்கிறார் ஞானி.

நிதானமாகத் தான் எழுதுகிறாரா எனத் தெரியவில்லை. ஓரிசாவில் மருத்துவப்பணி செய்து வந்த ஸ்டேன்ஸை உயிரோடு எரித்தார்களே, 1990 இல் ரத யாத்திரை நடத்தி 100க்கும் மேற்பட்ட முஸ்லீம்களைக் கொலை செய்தார்களே, பாபர் மசூதி இடிப்பு கலவத்தில், குஜராத்தில் மோடி நடத்திய கலவரத்தில் முஸ்லீம்களைக் கொன்று குவித்தார்களே, மும்பையில் முஸ்லீம்கள் வாழும் பகுதியில் இரயில் குண்டு வைத்தர்களே, அந்த காலிக்கும்பலிடம் - காவிக்கும்பலிடம் போய் இது போன்ற வாதத்தை வைப்பீர்களா?

திண்டுக்கல்லில் கஞ்சிக்கு வழியில்லாமல் சாலையில் படுத்துக் கிடந்த முஸ்லீம் பெரியவரை கொலை செய்கிறார்கள், தாராபுரத்தில் மசூதியில் பன்றி வாலைத் தூக்கி எறிகிறார்கள், அந்த அரைடவுசர் கும்பலிடம் போய், இங்கிருக்கும் மதம் மாறியவனை - இந்த நாட்டுக்குச் சொந்தமானவனை ஏன் அடிக்கிறாய்? துணிவிருந்தால் சுதர்ஸன்ஜி தலைமையில் எல்லோரும் பின்லேடனிடம் போய் சண்டை போடுங்கள். அல்கொய்தாவிடம் சண்டை போடுங்கள், ஆப்கானுக்குப் படை எடுங்கள், குறைந்த பட்சம் இராமகோபாலன் தலைமையில் காஷ்மீருக்குப் போய் சண்டையைத் தொடங்குங்கள் என்று சொல்ல வேண்டியது தானே?

திண்டுக்கல் மாவட்டம் வெள்ளோட்டில், பஞ்சம்பட்டி, கொசவபட்டியில், பெருமாள்கோவில்பட்டியில் பாஸ்கு திருவிழாக்களில் சப்பரம் (தேர்) இழுத்துவரும் கிறிஸ்தவர்களிடம் வெட்டு, குத்துக்குச் செல்லும் ஆஃப் டிராயர் சண்டியர்களிடம் போய், ரெண்டு மூணு தலைமுறைக்கு முன்னால் மதம் மாறிய உள்ளூர்க்காரனை ஏன் அடிக்கிறீர்கள்। புறப்படுங்கள் ரோம் நகருக்கு, போட்டுத் தள்ளுங்கள் மதம் மாற்றுபவர்களை என கீதாஉபதேசம் செய்யவேண்டியதுதானே? இதுவரை அப்படி எழுதாவிட்டாலும் பரவாயில்லை। இனிமேலாவது அப்படி எழுதுவீர்களா? பூணூல் பேனாவைத் தடுக்குமோ?

கடந்த 25 ஆண்டுகளாகத் தொடர்ந்து சிங்களக் கடற்படை தமிழர்களை, மீனவர்களைத் தாக்குகிறதே, உங்களது ஓ... பக்கங்களில் அந்த சிங்களப் படைகளைக் கண்டித்து, ஏன் அப்பாவி மீனவர்களைக் கொல்கிறீர்கள்? துணிவிருந்தால் இந்திய இராணுவத்துடன் நேரடியாக மோதுங்கள், குறைந்தபட்சம் எங்கள் கூடுதல் டி.ஜி.பி. விஜயகுமாரிடம் மோதிப் பாருங்கள் என சிங்கள இராணுவத்துக்கு பகிரங்கக் கடிதம் எழுத வேண்டியது தானே? ஏன் எழுதவில்லை?

மலேசியாவில் இரண்டு தமிழர்கள் கொடுமைப்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட போது அவர்களுக்கு, அந்த ஏழைத் தமிழர்களுக்கு தமிழக அரசு உதவவில்லை என மாவோயிஸ்ட்கள் ரேஞ்சுக்கு தீம்தரிகிட இதழில் எழுதினீர்கள். கார்கில் போர் நடந்தபோது களத்திற்கே சென்று ஆனந்த விகடனில் கட்டுரை எழுதினீர்கள். இங்கே பக்கத்திலே இராமேஸ்வரத்திலே 25 ஆண்டுகளாக மீனவர்களை கொன்று, சொத்துக்களைக் கொள்ளையடித்துச் செல்கிறதே சிங்களக் கடற்படை. அந்தச் சிங்களக் கடற்படைக் கொலைவெறிக் கூட்டத்தைக் கண்டித்து என்றாவது ஒருநாள் எழுதியது உண்டா? கடலுக்குச் சென்று நிலைமையைப் பார்த்ததுண்டா? காஷ்மீரில் அடிபடுபவன் பண்டிட் பார்ப்பான் - இங்கே அடிபடுபவன் தமிழன்.

சிங்களப்படை ஈழத்திலே தமிழனை அழிப்பதோடு, தமிழ்நாட்டுக் கடல் எல்லைக்குள் தமிழர்களையும் தாக்குகிறது. இலங்கைத் துணைத் தூதர் ஹம்சா தமிழ்நாட்டிலேயே உட்கார்ந்து கொண்டு தமிழ்நாட்டு முன்னாள் அமைச்சர்களைப் பிடித்து தமிழ்நாடு முழுவதும் நாற்பது ஊர்களில் புத்தர்கோவில் என்ற போர்வையில் சிங்களனுக்குக் களம் அமைக்கிறார். பெய்ரிசுகளைப் பிடித்து சிங்கள அரசின் கொள்கை விளக்கத்தை திரைப்படமாக எடுக்கிறார். உங்களைப் போன்ற ஊடகத்துறையில் உள்ள ஞாநிகள் மூலமாக அந்தத் திரைப்படத்திற்கு ஆதரவு திரட்டப்படுகிறது. இதற்கு இந்திய உளவுநிறுவனங்களின் ஒத்துழைப்பும் கிடைக்கிறது. இவ்வளவும் நடக்கும். நாங்கள் வெறும் கருத்துப்போர் நடத்திக்கொண்டிருக்க வேண்டும்! அந்த அக்கப்போரை என்னைப் போன்ற வேலைவெட்டி இல்லாதவன் பார்த்துக் கொள்வான். அதுவும் எங்களுக்குள் உள்ள மாறுபாடுகளுக்குத் தான் கருத்துப் போரெல்லாம். பார்ப்பானிடமும், சிங்களனிடமும் பதிலடிதான் முதலில்.

எங்களுக்குத் தெரியும். யார் பத்திரிக்கையில் எழுதிக்கொண்டிருக்க வேண்டும், யார் வன்னிக்குப் போகவேண்டும், யார் அயோத்தியா மண்டபத்துக்குப் போக வேண்டும், யார் இங்கே இருக்க வேண்டும், யார் இரட்டைக் குவளையை உடைக்க வேண்டும், யார் உடுப்பி ஓட்டலை நொறுக்க வேண்டும், யார் பெய்ரீசை உதைக்க வேண்டும் என்றெல்லாம். எந்தப் பார்ப்பன ஆலோசனைகளும் எமக்குத் தேவையில்லை.

ஈழப்பிரச்சனை மட்டுமல்ல, ஒகேனக்கல் சிக்கலில் திரைத்துறையினர் உண்ணாவிரதத்தில் இனமுரசு சத்தியராஜ் அவர்கள் பேசியதைக் கூட இமயம் தொலைக்காட்சியில் விமர்சனம் செய்தீர்கள்.

உணர்ச்சியைத் தூண்டும் வகையில், உணர்ச்சிவசப்பட்டு சிலர் பேசினார்கள். கமலஹாசன் தான் பக்குவமாகப் பேசினார்.

என்றீர்கள். பெங்களூரில் பார்ப்பனர்கள் அதிகம் வாழும் மல்லேஸ்வரம் பகுதியில் பார்ப்பனர்களுக்கு அடி விழுந்து மாமிகள் அடித்து விரட்டப்பட்டு தமிழக எல்லை நோக்கி ஓடிவந்திருந்தால் - பம்பாயில் மாதுங்கா பகுதியில் வாழும் பார்ப்பனர்கள் அடித்து விரட்டப்பட்டு தமிழ்நாடு நோக்கி வரவேண்டிய நிலை வந்திருந்தால் கமலஹாசனோ, நீங்களோ பக்குவமாகத் தான் பேசியிருப்பீர்களா? இல்லை இந்திய அரசாங்கம்தான் இப்படி அமைதியாக இருக்குமா? சத்தியராஜ் அப்படி பேசாவிட்டால்தான் அவர்மீது எங்களுக்கு சந்தேகம் வந்திருக்கும்.

திண்ணியத்தில், எறையூரில் தலித்துகள் இழிவுபடுத்தப்பட்ட போது சுபவீ அவர்களுக்கு ஏன் கோபம் வரவில்லை எனக் கேட்கிறார் ஞானி. ஓரே ஒரு இரட்டை டம்ளர் கடையையாவது சுபவீ தலைமையில் போய் உடைக்க முடியுமா எனவும் கேட்டுள்ளார்.

எதற்கெடுத்தாலும் இரட்டைக்குவளைகள் ஒழிப்பு, பாப்பாபட்டி, கீரிப்பட்டி பிரச்னைகளில் என்ன செய்தீர்கள் என்று அனைவரைப் பார்த்தும் கேட்கிறீர்களே? அப்படி இரட்டைக்குவளை ஒழிப்பிற்காக நீங்கள் என்னதான் செய்துவிட்டீர்கள்? ஆனந்த விகடனில் ஓரிரு வரிகள் எழுதினீர்கள். பாராட்டுகிறோம். நீங்கள் அடிக்கடி அனைவருக்கும் செக் வைப்பதாக நினைத்து கேள்வி கேட்கும் பிரச்சனைகளான இரட்டைக்குவளை உடைப்பு, கண்டதேவி தேரோட்டம், பாப்பாபட்டி - கீரிப்பட்டி உள்ளாட்சித் தேர்தல் போன்ற தீண்டாமைக் கொடுமைகள் பெரும்பாலானவற்றிலும் அவை தொடர்பான போராட்டங்களில் பங்கேற்ற - போராடிய இயக்கங்களில் பெரியார் திராவிடர் கழகமும் ஒன்று.

அரசுக்கு ஆறுமாத அவகாசம் கொடுத்து ஊர்வலமாகச் சென்று 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இரட்டைக் குவளைகளை உடைத்த தோழர்களில் நானும் ஒருவன். அந்தப் போராட்டங்களில் எதிலுமே உங்களை நாங்கள் பார்த்ததில்லையே! பல்வேறு இயக்கங்கள், ஒரே ஒருவர் மட்டுமே இருக்கும் இயக்கங்கள் கூடப் பங்கேற்று இருக்கின்றன. எங்கேயும் உங்களைப் பார்த்ததில்லை. ஆனால் கொரலு மட்டும் அதிகமா இருக்கிறதே! அடுத்தவர்களைப் பார்த்து தீண்டாமை பற்றி கேள்வி கேட்பதற்கு முன்பாக முதலில் கண்ணாடி முன் நின்று உங்களையே கேட்டுப்பாருங்கள்.

எங்களுக்குத் தெரியும் சுபவீயின் பங்கு என்ன என்று. உங்களை விட அதிகமாக இரட்டைக்குவளை ஒழிப்பிற்கு உளமார்ந்த, மனமார்ந்த கவனம் செலுத்தி உழைப்பைக் கொடுத்தவர்களில் சுபவீரபாண்டியனும் ஒருவர். அவருடன் இணைந்து தொடர்ந்து அவ்வகைப் பணியில் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். இரட்டைக்குவளைகளை உடைக்க சுபவீ அவர்கள் தயாரா எனக் கேட்பதிலிருந்தே உங்களுக்கு அதைப் பற்றி எதுவும் தெரியவில்லை என்பதும் இரட்டைக்குவளை ஒழிப்பு பற்றிப் பேசுவதில் வேறு நோக்கம் இருக்கிறது என்பதும் தெரிகிறது.

தீண்டாமை என்பது இரட்டை டம்ளரில் மட்டுமல்ல. கோவிலிலும் இருக்கிறதல்லவா? இந்து மதத்தில், சாஸ்திரங்களில், பார்ப்பனர்களிடத்தில் ஒட்டு மொத்தமாக இருக்கிறதல்லவா? இவற்றை எல்லாம் ஒழிக்கச் சொல்ல வேண்டியதுதானே?

ஞானி அவர்களே நீங்கள் எப்படிக் கேட்டிருக்க வேண்டுமென்றால், துசாரா பெய்ரீசை தாக்கிய சுபவீ, சாதிவெறிக்கு அடையாளமான பார்ப்பனர்களின் பூணூலை அறுப்பாரா? சங்கர மடத்திற்கு வெடிகுண்டு வைப்பாரா? சங்கராச்சாரியை வெட்டிக் கூறுபோடுவாரா? மனுநீதி நூலை ஊர்வலமாக எடுத்துச் சென்று எரிப்பாரா? இராமாயணத்தைச் வீட்டு வீட்டுக்குச் கொடுத்து செருப்பால் அடிக்கச் செய்வாரா?

இப்படி எல்லாம் ஒரு நாளும் ஞாநி யாரைப் பார்த்தும் கேட்டதில்லையே ஏன்? இரட்டைக்குவளை உடைப்பு என்ற தீண்டாமையோடு மட்டும் மோதத் சொல்கிறீர்களே, தீண்டாமைகளுக்கு அடிப்படையான சாதியோடும், மதத்தோடும், மதத் தலைர்களோடும், கடவுளோடும் போராடச் சொல்லாதது ஏன்?

எங்களுக்கு இரட்டைக்குவளைகளை உடைக்கவும் தெரியும், கண்டதேவியில் நாட்டார்களை எதிர்த்து தேரிழுக்கவும் தெரியும், எறையூரில் வன்னியர்களுக்கு எதிராக போராடவும் தெரியும், சிதம்பரத்தில் தீட்சிதர்களை எதிர்க்கவும் தெரியும், அனைவரும் ஒன்று சேர்ந்து பெய்ரீசுகளை உதைக்கவும் தெரியும். எல்லா இழிவுகளும் வன்னிக்காட்டுக்குப் போய் போராடினால் தீர்ந்துவிடும் என்ற நிலை வந்தால் அங்கு போய் போராடவும் தெரியும்.

pandii durai

unread,
May 13, 2008, 10:54:42 PM5/13/08
to panb...@googlegroups.com
tks : keetru.com
 
பார்ப்பன வாத்தியார்கள்
பாவலர் அறிவுமதி


ஞாநி இப்போது தமிழ்ச்சமுகத்தின் பாலியல் வாத்தியாராகப் பதவி உயர்வு பெற்றுவிட்டார். அதனால்தான் ஆனந்த விகடனில் 'அறிந்தும் அறியாமலும்' எழுதுகிறார்.

மூன்று வயது ஆண்குறி விறைப்பது குறித்தும், மூன்று வயது பெண்குறி பிசுபிசுப்பது குறித்தும் எழுதி எழுதி... முதன் முதலாக எப்போது நீங்கள் அதைத் தொட்டது.. முதன் முதலாக எப்போது நீங்கள் இதைப் பார்த்தது என்று கேள்விகள் கேட்டு வந்த பத்திரிகையாளர் ஞாநி... கடைசியாக ஆண் - பெண் உறுப்புகளின் படங்கள் வரைந்து பாகங்கள் குறித்து விலாவாரியாக எழுதலாமா என்று கேட்டு.. ஆறுகோடித் தமிழர்களும் அதற்கு அங்கீகாரம் அளித்து விட்டதாகவும்.. இனி துணிந்து பாலியல் குறித்துப் பக்கம் பக்கமாக ஆனந்த விகடனில் எழுதப் போவதாகவும் ஏகப்பட்ட குஷியில் அறிவித்திருக்கிறார்.

அரசியல் விமர்சனங்கள் எழுத பத்திரிகையாளர் ஞாநிக்குத் தகுதியுண்டு. பாலியல் சார்ந்த சிறுகதைகள், புதினங்கள் எழுதவும் தகுதியுண்டு. ஆனால், மருத்துவர்களாகிய பெற்றோர்களின் மகன் மகப்பேறு பார்த்தது எவ்விதம் பிழையோ அவ்விதமே பாலியல் கல்வி குறித்தத் தொடர் எழுதுதல் ஞாநிக்குப் பிழை என்பதை ஞாநியும் உணர வேண்டும். நாமும் உணர வேண்டும்.

ஞாநி அடிப்படையில் பாலியல் மருத்துவம் படித்த வல்லுநரன்று. பாலியல் நூல்களைப் படித்து அல்லது பாலியல் மருத்துவர்களிடம் கேட்டுக் கேட்டு எழுதப் போகிற தொடர்தான் இந்தப் பாலியல் மருத்துவத் தொடர். இந்தத் தொடரில் அவரது பணி, மொழி பெயர்ப்பாளர் அல்லது நேர்காணல் செய்பவர் என்கிற அளவில் மட்டுமே பயன்படப் போகிறது. அப்படியானால் இந்தப் பாலியல் தெளிவுகளுக்கான அறிவுக்குச் சொந்தக்காரர்கள் வேறு நபர்கள்.

இப்படி அடுத்தவர் உழைப்பை, அடுத்தவர் அறிவைத் திருடிப் பிழைக்கும் வகையறாக்களே ஞாநியின் வகையறாக்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இப்படிப்பட்ட ஈனப் பிழைப்பை நடத்தி வருகிறவர்கள்தாம் இவர்கள். ஏரோட்டியவர்களின் கால்களில் கட்டிய சலங்கை பத்மா சுப்ரமணியத்திற்குப் பல பட்டங்களைப் பெற்றுக் கொடுத்த உண்மையை... நாற்று நட்ட தாய்கள் பாடிய இராகங்கள் பாம்பே ஜெயஸ்ரீக்குப் பட்டம் பெற்றுக் கொடுத்த உண்மையை... உணர்ந்தவர்களுக்குத் தான் நான் சொல்கிற உண்மை புரியும்.

அன்று இசையை, நடனத்தைத் திருடியவர்கள் இன்று அடுத்தவர்களின் அறிவியல் உழைப்பையும் திருடிப் பிழைப்பு நடத்துவதின் அடையாளமே ஞாநியின் அறிந்தும் அறியாமலும், சுஜாதாவின் கற்றதும் பெற்றதும், மதனின் ஹாய் மதனும்!

இந்த வகையறாக்களின் கைகளில் இருக்கும் அறிவுக் குழந்தைகளின் அப்பா அம்மாக்கள் யார் யாரோ. இவர்கள் பல நூலகங்களில் திருடி வந்த குழந்தைகளை விற்கும் அசிங்கத் திருடர்கள், அருவருப்புத் திருடர்கள்.

இவர்களுடைய பணி இந்தத் திருட்டு வேலைகளோடு நின்றுவிடவில்லை. இவர்களுடைய இந்த எழுத்துகளைப் படிக்கும் தமிழர்களிடையே இவர்கள் மிகச் சிறந்த பத்திரிகையாளர்களாக, பாராட்டுக்குரிய அறிவியல் அறிஞர்களாக, "இவர்கள் சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும் என்கிற கருத்துருவாக்க மனிதர்களாக...." இவர்கள் மாறுகிற இடத்தில்தான் தமிழகத்திற்கான ஆபத்துகள் தொடங்குகின்றன. தேர்தல் நேரத்தில் கால்மேல் கால் போட்டுக் கொண்டு தொலைக்காட்சிகளில் அமர்வது போன்ற ஆபத்துகள்.

சுஜாதாவின் எழுத்துகளையும், கேள்வி பதில்களையும் படித்துப் படித்து வியப்புற்ற தமிழர்கள் சுஜாதாவின் மீது மிகுந்த மரியாதை வைத்தார்கள். சங்க இலக்கியங்களான புறநானூறு, குறுந்தொகைக்கெல்லாம் உரையெழுதியதைப் பார்த்து மிகச் சிறந்த தமிழ்மேதையென்று மதிப்பும் வைத்தார்கள் (புறநானூறுக்கு அவர் எழுதிய உரையில் இருந்த அடிப்படையான தவறுகளை ஆதாரத்துடன் 'இந்தியா டுடே' இதழ் மூலம் பேராசிரியர்கள் இருவர் சுட்டிக் காட்டியும், இன்றுவரை அதற்கு எந்த விடையும் சொல்லாமல் பதுங்கிக் கொண்டது வேறு விசயம்.)

புறநானூற்றுக்கு உரையெழுதிய இந்த தமிழ்மேதைதான் 'சிவாஜி'' படத்திற்கு வசனகர்த்தா! அந்தப் படத்தில் ஒரு காட்சி எழுதிக் கொடுத்திருக்கிறார் இந்த மேதை! அங்கவை, சங்கவை பாரி மகளிராக அறியப்பட்ட பெயர்கள். இந்தப் பெயர்கள் கொண்ட, இயல்பாக இருக்கிற தமிழ்ப் பெண்களின் முகங்களில், 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் மணிரத்னம் போரளிகள் முகத்தில் பூசிவிட்டதைப் போல... இராமாயணத்தில் அரக்கர்கள் என்றது போல, கரியைப் பூசி தமிழ் படித்த கேணையன் சாலமன் பாப்பையா வாயால்... "வாங்க எங்கிட்ட ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க, வந்து பழகுங்க.. புடிச்சிருந்தா கட்டிக்கிங்க.. புடிக்கலன்னா பிரண்ட்சா வச்சிக்கிங்க" என்று பேச வைத்திருக்கிறார். ஒரு தமிழ்ப் பேராசிரியரை வைத்தே தமிழ்ப் பெண்களை இவ்வளவு கேவலப்படுத்திருக்கிறார் சுஜாதா!

நல்ல தமிழ்ப் பெண்கள் எங்கே கிடைப்பார்கள் என்பதற்கு, 'எல்லா தமிழ்ப் பெண்களும் கால்சென்டருக்குப் போய்விட்டார்கள். ஒண்ணு ரெண்டு கோயில்ல இல்லன்னா.... யாழ்ப்பாணத்துல...' என்றும் எழுதியிருக்கிறார் சுஜாதா. வேலைக்குப் போகிற பெண்களெல்லாம் விபச்சாரிகள் என்று பெரியவாள் சொன்ன குரலை சுஜாதாவின் குரல் அப்படியே எதிரொலிக்கிறதா இல்லையா? படித்த தமிழ்ப் பெண்களையெல்லாம் இப்படிக் கேவலப்படுத்தி எழுதியுள்ள சுஜாதாவைப் பற்றி... இந்த உரையாடலைப் பயன்படுத்திய இயக்குநரைப் பற்றி, நடிகர்களைப் பற்றி எந்தக் கேள்வியும் கேட்காமல் ஆயிரம் ரெண்டாயிரம் கொடுத்து விட்டு வருகிற தமிழர்களைப் பற்றி என்ன சொல்வது!

Sujatha 'யாழ்ப்பாணம்' என்ற சொல்லை முன்பொருமுறை மணிரத்னம் தனது படத்திலும் பயன்படுத்தியிருந்தார். வருகிற ஒருவரை எங்கிருந்து வர்ற என்று கேட்க, தெற்கே என்று சொல்ல... யாழ்ப்பாணத்திலிருந்தா.. என்று கேட்பான், தமிழ்நாட்டில் நடக்கும் கதையில்! இந்தப் படத்திலும் அப்படியே.. ஊறுகாய் போல 'யாழ்ப்பாணம்' பயன்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்து எம்தமிழ் உறவுகள் படுகிற வேதனை குறித்து இந்த சுஜாதாவிற்கு என்ன கவலை இருக்கப் போகிறது? அங்கே வயதுக்கு வந்த பெண்களை... பையன்களை வைத்துக் கொண்டிருக்கிற தாய்களின் வலிகுறித்து இந்த ஆளுக்குத் தெரியுமா? வெள்ளை வண்டி சோகம் புரியுமா? 'யாழ்ப்பாணம்' என்ற சொல்லைப் பயன்படுத்தி புலம்பெயர்ந்த தமிழர்களின் கடின உழைப்பு ஊதியத்தை ஏமாற்றிப் பிடுங்க மட்டுமே இவர்களுக்குத் தெரியும். (சிங்களவர்களை விட தம் வாழ்விற்கு இவர்கள் மிக மோசமான எதிரிகள் என்கிற உண்மையை உணராமல், எம் புலம் பெயர்ந்த தமிழ் உறவுகள் தமிழர்களுக்கும், தமிழ்க் கலாச்சாரத்திற்கும் எதிராக எடுக்கப்பட்டுள்ள இந்த மிக மோசமான படத்தைப் பார்க்கிறார்கள் என்பதைக் கேள்விப்பட்டு வலிக்கிறது. ஆனாலும், சுவிசின் துர்க்கா வாழ் தமிழ் உறவுகள் ஒட்டுமொத்தமாக இதனை நிராகரித்திருப்பது ஆறுதலாக இருக்கிறது).

அப்புறம்... 'வாங்க வந்து வடைய தட்டுங்க...' என்று தொலைக்காட்சி புகழ் உமாவிற்கு வசனம் கொடுத்திருக்கிறார் சுஜாதா. அறிவுள்ள அந்தப் பெண் இந்த உரையாடலைக் கூச்சமின்றி பேசிக் கொடுத்திருக்கிறார்!

'ஆதி' என்று சொல்லி இன்னொரு சொல்லைச் சொல்லப் போக, விவேக்கின் வாயை ரஜினி மூட, கபோதி என்று சொல்ல வந்தேன் என்று வசனம் எழுதியிருக்கிறார் சுஜாதா! இதையே இந்தியன் படத்திலும் 'ரெண்டெழுத்துக் கொழுப்பு' என்றும் 'கேணக்கூ'....என்றும் எழுதி ஒரு பெரிய நடிகரின் வாயால் உச்சரிக்க வைத்தவர்தான் இந்த சுஜாதா!

அந்த உறுப்பு வழியாகத்தானே சுஜாதா அவரது மரியாதைக்குரிய அம்மாவின் வயிற்றிலிருந்து உலகிற்கு வந்தார்! இந்த உரையாடலை எழுதியவர்.... வாயை அடைத்தவர்... இயக்கியவர் இவர்களும் இதன் வழியாகத்தானே உலகிற்கு வந்தார்கள்! அந்த உறுப்பு அவ்வளவு கேவலமானதா? கேலிக்குரியதா? கிண்டலுக்குரியதா?

ரவுண்டு ரவுண்டா நா ஒண்ணுக்கு உடுறேம்பாரு... அப்படி நீ உடுவியா என்று ஒரு சிறுவன் சிறுமியிடம் கேட்பதாக எழுதிய சுஜாதாதான் இன்று ஆனந்த விகடனில் கற்றதும் பெற்றதும் எழுதுகிற அறிவியல் மேதை! குங்குமம் இதழில் இவர் கூறுகிறார்... தமிழர்கள் கடல்வணிகம் செய்தவர்கள் இல்லையென்று! 'கட்டுமரம்' என்கிற சொல்லையே - உலகத்திற்குக் கொடுத்த தமிழர்களுக்குக் கடல் வணிகம் தெரியாதாம்!

இன்னொரு அறிவியல் மேதை ஹாய் மதனிடம்... மல்லிகை மன்னன், மதுரை-17 என்ற நபரிடமிருந்து ஒரு கேள்வி...

ஆண்களுக்கு மட்டும் காம உணர்சி கடைசி வரையிலும் குறையாமல் இருப்பதன் மர்மம் என்ன? இப்படிக் காமம் தொடர்பான கேள்விகளுக்குக் கிளுகிளுப்பான பதில்களாக நூலகங்களில் திருடித் திருடி எழுதுகிற மதன்... ஒருமுறை இறையன்பு கேட்ட. "வந்தார்கள் வென்றார்கள் எழுதியது போல சோழப் பேரரசுவின் பின்புலத்தில் ஒரு வரலாற்று நாவல் எழுதினால் என்ன?" என்ற கேள்விக்கு, "தமிழர்களுக்கென்று ஏதடா வரலாறு...?" என்று எகத்தாளமாகப் பதில் சொன்னவர்.

நாடற்ற வந்தேறியாகிய இவரிடம் மிகப்பெரும் தமிழுணர்வாளரே தமிழர்களின் கருத்துருவாக்கச் சிந்தனையாளனாய் ஏற்றுக்கொண்டு கேட்ட கேள்விக்குக் கிடைத்த மரியாதையிது. தன் இனமக்களை ஊருக்குத் தள்ளிய புறம்போக்குச் சேரிகளில் வாழவைத்துவிட்டு எங்கிருந்தோ ஏய்க்க வந்த நாய்களையெல்லாம் வரவேற்று அழகழகாய் மாடமாளிகைகள் கட்டிக் கொடுத்து பிரம்மதேயங்களாய் ஆயிரமாயிரம் காணி நிலங்களை எழுதிக் கொடுத்து உழைக்கத் தேவையில்லையென்று உட்கார வைத்தே சாப்பிட வைத்த சோழ மன்னர்களுக்கு இவர்கள் காட்டுகிற நன்றியைப் பார்த்தீர்களா? ஆனால் இதற்காக மதனுக்குக் கிடைத்த மரியாதையை varalaru.com கண்டு மகிழ்க...

சுஜாதாவாக இருந்தாலும் மதனாக இருந்தாலும் ஞாநியாக இருந்தாலும்.. இவர்களை பயன்படுத்திக் கொண்டு ஆனந்த விகடன் தமிழர்களிடம் வணிகம் செய்து வயிறு கழுவுகிறதே தவிர, சமூகப் பொறுப்புணர்வோடு தமிழர்களுக்கென்று எந்த ஒரு நல்ல நோக்கத்திலும் பயன்பட நினைக்கவில்லை.

இவர்களைத் தமிழர்களிடம் நம்பகத்தனமான அறிவாளிகளாகக் காட்டி... அதன் வாயிலாகத் தமிழர்களின் பண்பாட்டை, வரலாற்றை, விழுமியத்தை, அரசியலை அழிப்பதே.. இடறி விடுவதே.. ஆனந்த விகடனின் சூழ்ச்சிப் பணியாக இருந்து வருகிறது. கம்பராமயணத்தை.. மகாபாரதத்தை அழகுத் தமிழில் வாலியை விட்டுத் தொடர்களாக எழுதி மகிழ்ந்த ஆனந்த விகடன் திருக்குறளை மட்டும் சென்னைத் தமிழில் எழுதி இழிவுபடுத்தியது (இதையே பகவத் கீதையை நகர தலித் மொழியில் நாம் எழுதியிருந்தால் என்ன துள்ளு துள்ளியிருப்பார்கள்!)

நகைச்சுவை என்கிற பெயரில் தமிழர்களின் புறநானூற்றை 'முறநானூறு' என்று எழுதி மகிழ்கிறது ஆனந்த விகடன். மன்னர்கால நகைச்சுவைத் துணுக்குகள் என்கிற பெயரில் தமிழர்களின் மூளைகளில் இவர்கள் செய்ய நினைக்கிற தொழிற்பாடுகளும்.. தமிழர்களின் வீரமரபை இழிவு செய்கிற செயலும்...புரியாமலில்லை.

எனவே, தமிழினம் மேம்படக் கூடாது என்கிற உள்நோக்கில் செயல்படும் ஆனந்த விகடன் பார்ப்பனர்களைப் பாதுகாப்பதில் மட்டும் விழிப்புணர்வோடு இருக்கிறது என்பதில் எனக்கு நேர்ந்த அனுபவமே சாட்சி.

ஹாய் மதன் கேள்விபதில் பகுதியில் இது கேள்வி...

பாரதியார் காதலித்திருக்கிறாராமே?

இதற்கு மதனின் பதில்...

மனைவியோடு வாழ்வதற்கே நேரமில்லாத பாரதிக்குக் காதலியா? எல்லாம் பொய்.

இந்தப் பதிலைப் பார்த்ததும் அதிர்ந்து போனேன். பாரதியார் தம் சுயசரிதையிலேயே தம் பிள்ளைப் பிராயத்துக் காதலைப் பற்றி உணர்வுப் பூர்வமாக எழுதியிருக்கிறரர். அவரது வரிகளையே ஆதாரமாகக் கொண்டு இந்தத் தவறான பதிலை மதனிடம் கூறி திருத்தி வெளிடுங்கள். ஒரு மகாகவியின் வரலாற்றில் பல இலட்சம் வாசகர்களுக்கு ஒரு பிழையைப் பதிவு செய்வது தவறு என்று மடல் எழுதி அனுப்பினேன்.

ஆனந்த விகடன் அந்தப் பிழையைத் திருத்த முன் வரவில்லை. அடுத்த வாரம் மதனுக்குத் தொலைபேசி செய்து "பதினோரு வயது பாரதி ஒன்பது வயது பெண்ணைக் காதலித்திருப்பதாக சுயசரிதையில் கூறியுள்ளார். எனவே, தங்கள் தவறான பதிலுக்குத் திருத்தம் வெளியிடுங்கள். அதுதான் நாகரிகம்" என்றேன்.

"வயசுக்கு வராத பெண்ணை பாரதி காதலித்திருக்கிறானா?" இதுதான் மதன் என்னிடம் கேட்ட கேள்வி. மதன் கேள்வி பதில் ஆனந்த விகடனின் வியாபாரத்திற்கான ஒரு பகுதி. மதனின் மீதான வாசகர்களின் நம்பகத்தன்மை குறைதல் கூடாது என்பதற்காகவே ஒரு மகாகவியின் வாழ்க்கை வரலாற்றை மறைக்கத் துடிக்கிறது ஆனந்த விகடன்!

இந்த ஆனந்த விகடனில்தான் ஞாநி அறிந்தும் அறியாமலும் என்ற பாலியல் மருத்துவ அறிவியல் தொடரை எழுதுகிறார். இந்தத் தொடரை வெளியிடும் தகுதி ஆனந்த விகடனுக்கு இல்லை என்பது எம் கருத்து. நோயுற்ற பெண்ணுக்கு மருத்துவம் பார்க்க வேண்டுமென்றால் மருத்துவரிடம் போகவேண்டுமே தவிர விபச்சாரத் தரகனிடம் அழைத்துப் போக வேண்டிய அவசியமில்லை. ஆனந்த விகடன் தமிழ்ச் சமுகத்தைச் சீரழிக்கத் துடிக்கிற விபச்சாரத் தரகுவேலையை பார்க்கிறது என்பதற்கு இதோ இந்தக் குறுங்கதையே எடுத்துக்காட்டு. 27.6.2007 ஆனந்த விகடனில் வந்தது.

"வா" என்றான் அவன்.

"ஊகூம்" என்றாள் அவள்.

"வா" என்றான் மீண்டும்.

"இல்ல" என்றாள்.

"வா" என்றான் திரும்பவும்.

"தப்பு" என்று முறைத்தாள்.

அதன் பிறகும் "வா" என்று இழுத்தான்,

"போடா" என்று அவன் தலையில் ஒரு குட்டு வைத்தாள்.

'வ' பக்கத்துல '¡' போட்டிருந்தா தான் 'வா'ன்னு இழுக்கணும், இது 'வ' என்று பொறுமையாக அந்த சிறுவனுக்குத் தமிழ்ப் பாடத்தைத் தொடர்ந்து நடத்தினாள் அந்த மிஸ்! ஒரு சிறுவனுக்கு ஒரு தமிழாசிரியை தமிழ் சொல்லிக் கொடுக்கும் காட்சியை வைத்தே இவ்வளவு வக்கிரமாக காம இச்சையைத் தூண்டி தமிழர்களிடம் காசு பார்க்கத் துடிக்கிற ஆனந்த விகடனா தமிழ்ச் சிறுவர்களுக்குப் பாலியல் கல்வியை நடத்தும் காகிதப் பள்ளிக் கூடமாக விளங்கப்
போகிறது. நம்புகிறீர்களா தமிழர்களே?

ஆனந்த விகடன் நமக்கு.. நம் தமிழர்களுக்கு ஏதேனும் செய்யுமென்று நம்புகிறீர்களா? இதோ 9.06.2007இல் ஆனந்த விகடனில் வந்த நகைச்சுவைகளைப் படியுங்கள்.

"என் கணவர் பெரிய கலா ரசிகர்னு எனக்கு நேத்துதான் தெரிஞ்சது"

"தெரிஞ்சதும் என்ன பண்ணினே?"

"கலாவை வேலைய விட்டு நிறுத்திட்டேன்".


"நம்மோட கள்ளத் தொடர்பு தெரிஞ்சுட்டதால். உன்னை வேலையைவிட்டு நிறுத்தப் போறா என் மனைவி!"

"கவலைப்படாதீங்க எஜமான். உங்களுக்கு வெளியில இருந்து ஆதரவு தர்றேன்!"

ஆனந்த விகடன் ஆசிரியர் அவர்களே! பத்திரிகையாளர் ஞாநி அவர்களே! உங்கள் வீட்டிற்கு வந்து பண்டம் பாத்திரம் கழுவி, உங்கள் அழுக்குத் துணிகளைத் துவைத்து. உங்கள் அழுக்குத் துணிகளைத் துவைத்து. உங்கள் அறைகளைக் கூட்டிப் பெருக்கி - அதிலிருந்து வருகிற வருமானத்தில் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கிறார்களே, அந்தப் பிள்ளைகளுக்கு அவர்களின் அம்மாக்களைப் பற்றி இவ்வளவு கேவலமாக அறிமுகப்படுத்துகிற ஆனந்த விகடனிலா எங்கள் பிள்ளைகள் பாலியல் அறிவைக் கற்றுக் கொள்ள வேண்டும்?

Vikatan photo தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் எங்களையெல்லாம் படியுங்கள் படியுங்கள் என்று போராடிப் படிக்க வைத்ததெல்லாம் இப்படி நீங்கள் எங்கள் தாய்மார்களைப் பற்றி கேவலமாக எழுவதைப் படிக்கத் தானா ஞாநி!

ஊருக்கெல்லாம் உபதேசம் சொல்லி ஓ போட வைக்கிற ஞாநியே! இப்படி சமூக பொறுப்பற்ற முறையில் பெண்களைக் கேவலப்படுத்தி பெண்களின் அரை நிர்வாணப் படங்களைப் போட்டு, படிக்கும் தமிழர்களின் காம இச்சையை வக்கிரமாகத் தூண்டிவிட்டு பணம் பறிக்கும் ஆனந்த விகடன் விற்பனையை அதிகப்படுத்துவதற்கான பச்சை மன்னிக்கவும். நீல வியாபாரத் தந்திரமே உங்களின் இந்தப் பாலியல் அறிவியல் மருத்துவத் தொடர்.

"ஒரு மருத்துவர், மருத்துவத்துக்கான கல்வித் தகுதி இல்லாத ஒருவரை, அதுவும் சிறுவனை.. அறுவை சிகிச்சை செய்யவோ, அதற்கு உதவியாக இருக்கவோ அனுமதிப்பது எந்த விதத்திலும் நியாயமாகாது. அது மருத்துவத் துறையின் அற நெறிகளுக்கு மட்டுமல்ல... மானுட அறநெறிகளுக்கும் விரோதமானது."

இப்படி... 4.7.2007 ஆனந்த விகடனில் சொல்லியிருப்பது வேறு யாருமென்று.. பத்திரிகையாளர் ஞாநி அவர்களே. ஞாநி அவர்களே! இதே கருத்து தங்களுக்கும் பொருந்தும் இல்லையா! பாலியல் அறிவியல் தொடர் எழுதுவதற்கான மருத்துவக் கல்வியைத் தாங்கள் எந்த மருத்துவக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றுள்ளீர்கள்?

தாங்கள் எழுதும் பாலியல் அறிவியல் கருத்துகளில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால்.. மருத்துவப் பட்டம் பெறாத தாங்கள் சொல்வதை நம்பி எப்படி தெளிவு பெறுவது? மருத்துவத் துறையின் அறநெறிகளுக்கும் மானுட அறநெறிகளுக்கும் இது மட்டும் விரோதமாகாதா? ஆனந்த விகடன் போன்ற பத்திரிகைகளும்.. ஞாநி போன்ற பத்திரிகையாளர்களும்.. திரைப்பட, தொலைக்காட்சி ஊடகங்கள் அனைத்தும் தமிழர்களிடம் மட்டும்.. பாலியல் சார்ந்த காமத்தை வக்கிர உணர்ச்சியாக வைத்து வணிகம் செய்வதற்கான காரணம் என்ன?

Rajini ஒரே காரணம்தான்...

கணவனும் மனைவியும்.. தனித்துப் படுக்க ஒரு வீடு கிடைக்காத, ஓர் அறை கிடைக்காத குந்தக் குடிசையில்லாத.. புறம்போக்குகளாய்ப் பெரும்பகுதித் தமிழர்கள் வாழவேண்டியிருப்பதன் சோகம்தான் இதற்கு அடிப்படைக் காரணம். இதற்கான அரசியல் விழிப்புணர்வு பெற்று எம் தமிழ் இளைஞர்கள் சமூகப் போராளிகளாக மாறிவிடக்கூடாது.. என்றும் இவர்கள் இரசிகர் மன்ற உறுப்பினர்களாகவே இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.. இவர்கள் இந்த மூன்றாம் பால் வியாபாரத்தை நம்மிடம் மும்முரமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இல்லையென்றால்.... ரஜினி குறித்து எழுதுகிற ஆனந்த விகடன், 'சினிமா ஓகே. அரசியல்?' என்று எழுதுமா?(4.06.2007)

ஏன் தமிழ்நாட்டை தமிழர்களே ஆளக்கூடாதா? நீங்கள்தான் அதிகார மய்யமாக இருக்க வேண்டும், இல்லையென்றால் நடிகர்கள்தான் ஆளவேண்டுமா? அரசியலுக்கு ரஜினியை அழைக்கிற ஆனந்த விகடனே.. பல்கலைக் கழகம் கட்டி... பள்ளிகள் கட்டி.. ஏழைகளுக்கு இலவசக் கல்வி கொடுக்க.. எடுக்கப்பட்ட சிவாஜி படத்தில் நடித்த ரஜினி அவர்களின் பணத்தில் (அதாவது அவரது உயிருக்குயிரான எம் தமிழ்ச் செல்வங்கள் கொடுத்த பணத்தில்) கட்டப்பட்ட.. 'ஆஸ்ரம்' பள்ளியில் இலவசக் கல்விபெறும் மாணவர்களின் பட்டியலை.. அல்லது எந்தெந்த ரஜினி ரசிகர் மன்ற பிள்ளைகள் படிக்கிறார்கள் என்கிற பட்டியலை.. அல்லது ஒரு குழந்தைக்கான ஓர் ஆண்டு கட்டணம் எவ்வளவு என்கிற பட்டியலையாவது ஆனந்த விகடன் கேட்டு வெளியிட்டுவிட்டு .. அவரை அரசியலுக்கு அழைக்குமா? இது என்ன ஆனந்த விகடன் ஆசையா? இல்லை அக்ரகாரத்து ஆசையா? இரண்டாயிரம் ஆண்டுகளாக எங்களை ஏமாற்றிப் பிழைத்தது போதாதா?

விடுங்கடா சாமி.

(நன்றி: நமது தமிழ்மண், சூலை 2007 இதழ்)

pandii durai

unread,
May 13, 2008, 10:59:47 PM5/13/08
to panb...@googlegroups.com
///"ஒரு மருத்துவர், மருத்துவத்துக்கான கல்வித் தகுதி இல்லாத ஒருவரை, அதுவும் சிறுவனை.. அறுவை சிகிச்சை செய்யவோ, அதற்கு உதவியாக இருக்கவோ அனுமதிப்பது எந்த விதத்திலும் நியாயமாகாது. அது மருத்துவத் துறையின் அற நெறிகளுக்கு மட்டுமல்ல... மானுட அறநெறிகளுக்கும் விரோதமானது."


இப்படி... 4.7.2007 ஆனந்த விகடனில் சொல்லியிருப்பது வேறு யாருமென்று.. பத்திரிகையாளர் ஞாநி அவர்களே. ஞாநி அவர்களே! இதே கருத்து தங்களுக்கும் பொருந்தும் இல்லையா! பாலியல் அறிவியல் தொடர் எழுதுவதற்கான மருத்துவக் கல்வியைத் தாங்கள் எந்த மருத்துவக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றுள்ளீர்கள்?
///
 
மேல இடப்பட்ட கட்டுரைகளில் ஞாநி சொன்ன கருத்தையே திரும்ப கேட்டுள்ளனர் இப்பபொழுது ஞாநிக்கு இதில் உடன்பாடு இல்லையா என்று?
 
 

pandii durai

unread,
May 13, 2008, 11:01:25 PM5/13/08
to panb...@googlegroups.com
அந்த நோக்கத்தில் தான் நான் இந்த பதிவினை இங்கு இட்டுள்ளேன்.
நந்தா நீங்க சொன்னது போல் ஞாநியின் சில கட்டுரைகள் எனக்கு ஏற்புடையதே.

நந்தா

unread,
May 14, 2008, 1:25:16 AM5/14/08
to பண்புடன்
//ஆவியை விட்டு ஞாநி வெளியேறியதற்கான ஞாநி சொன்ன காரணம் உங்களுக்கு
உண்மைனு
தோணுதா?//

இல்லை உண்மைன்னு தோணாதது மட்டுமில்லை. அவர் நல்லா சப்பைக்கட்டு
கட்டுகிறார் என்றும்தான் தோன்றியது... இந்த இடத்தில் ஞாநியைப் பார்த்து
எனக்கு பரிதாபப் படத்தான் தோன்றியது.

//இத நான் சொன்ன நந்தா கேட்கலாம் தனிப்பட்ட கருத்துக்களை சொல்லவேண்டும்
என்ற
நிர்பந்தம் ஏதும் உண்டா என்று?
இந்த போக்கு இங்கு ஞாநி பற்றி நேர் எதிர் பதிவு செய்யும் நண்பர்ளிடமும்
உள்ளது.
கட்டுரையை படிக்கும் பொழுதே தெரிகிறது.//

மன்னிக்கவும் என்ன கேக்க வர்றீங்கன்னு சரியா புரியலை.

//செக்ஸ் கல்வி பற்றி ஞாநி எழுதினாரு!இது பற்றி அறிமதி ஒரு கட்டுரை
எழுதியிருந்தார். அந்த கட்டுரை எனக்கு ஏற்புடைய ஒன்றே. //

மறக்க முடியுமா அந்த கட்டுரையை. சொல்லப்போனால் அந்தக் கட்டுரை வந்த முதல்
இரண்டு நாட்களுக்கு பலருக்கு தெரியாமல் இருந்தது. எனது பல வலைப்ப்பதிவு
நண்பர்களுக்கு நான் போய் போய் இதைப் படியுங்கன்னு எடுத்துக்
கொடுத்திருக்கிறேன். அந்த கட்டுரை எனக்கும் ஏற்புடைய ஒன்றுதான்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~`
கண்ணகி பற்றிய கட்டுரைக்கு வருகிறேன்.

உண்மையில் கண்ணகி சிலை பிரச்சினை தொடர்பாக என்னால் இன்னும் முழு தெளிவோடு
முடிவெடுக்க முடிய வில்லை. ஆனால் தற்போதைய நிலையில் கண்ணகி சிலையை கலைஞர்
அளாவுக்கதிகமாய் தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கிறாரோ என்றுதான்
தோன்றுகிறது.

கொஞ்சம் பக்குவப்பட்ட நாளிலிருந்து இந்த நொடி வரை என்னாலும் கண்ணகியை
ஆணாதிக்க சிந்தனைகளை ஏற்றுக் கொண்ட ஒரு சாதரண பெண்மனியாகவே நினைத்துப்
பார்க்க வைத்திருக்கிறதே அன்றி, சிலை வைத்து, தமிழர்களின்
பாரம்பரியத்தின் அடையாளமாய் காட்டப்ப்பட வேண்டிய ஒரு பாத்திரமாய்
எனக்குத் தோன்ற வில்லை.

முழுத்தகவ்ல்கள் அறிய இந்த இணைப்பையும் படியுங்கள்.
http://www.keetru.com/dheemtharikida/jul06/jnani_4.php

அது மட்டுமன்றி, இந்த பிரச்சினையின் போது ஞாநி எழுதிய கட்டுரை அவர் மேல்
இன்னும் அதிகமான பார்ப்பன முத்திரை விழக் காரணமாய் இருந்திருக்கிறது.
ராமன் கற்பனைப் பாத்திரம், ராமர் பாலம் புனைவு மக்களை மூட
நம்பிக்கைக்குட்படுத்தாதீர்கள் என்று சொல்லும் அதே கலைஞர்தான்,
கண்ணகியைப் பற்றி யாராவது தவறாக ஏதாவது சொன்னால் மேடையிலேயே தழுதழுக்க
ஆரம்பித்து விடுகிறார்..

ஞாநியின் இந்த கட்டுரை எழுதப்பட்டவுடன் திமுக குழுவால் மட்டுமல்ல.
இன்னும் பிற தமிழறிஞர்களிடமிருந்தும்தான் எதிர் வினைகள் வந்து விழுந்தது.
அதில் அவர்கள் சொல்லி இருந்த ஒரு சில வார்த்தைகள் எனக்குச் சிரிப்பையே வர
வைத்தன.

கோவலன் ஒன்றும் கண்ணகியை விட்டு விட்டு 2 வருடங்க்ள் மாதவியுடன் தங்கி
இருக்க வில்லை. அவன் தங்கி இருந்தது வெறுமனே 8 மாதங்கள் மட்டுமே என்று
சொல்லி இருந்தார்கள். என்னைப் பொறுத்த வரை 8 மாடம் இல்லை 8 நாட்கள் தங்கி
இருந்தாலே அது பெருங்குற்றம். குற்றாம் என்பதை விட கேவலமான செயல் என்று
சொல்லலாம்.

உத்தப்புரம் சுவர் ஒன்றும் 800 மீட்டர் நீளம் கிடையாது. அது8 வெறுமனே 150
மீட்டர்தான் என்று சொல்லுவது போலிருக்கிறது. வெறும் 10 மீட்டர் அந்த
சுவர் இருந்தாலே எப்படி தீண்டாமையின் அடையாளமோ இங்கே நம்
போராடிக்கொண்டிருப்பது தீண்டாமையின் மறுவடிவத்திற்காகவே தவிர சுவரின்
அகலத்திற்காக அல்ல. அதேபோல தான் கண்ணகி விவகரமும்.

கண்ண்கி தன் மார்பினை அரிந்து அதனைக் கொண்டு மதுரையையே எரித்ததற்கு புது
விளக்கமும், இதன் மூலம் கண்ணகி பெரும் புரட்சி செய்து விட்டாள், அவள்
பெண்ணியக் கூற்றை அப்போதே செய்திருக்கிறாள் என்று சப்பைக்கட்டும் சொல்லி
ஒரு புது கருத்தியலை கூறி வந்தனர்.எனக்கு ஏற்பட்ட சந்தேகம்,
ஆன்மீகவாதிகளும் இதே போலத்தானே, பகவத் கீதையையும், ரமாயணத்தையும்
நேரடியாக அப்படியே பார்க்காதீர்கள், அதனுள்ளே பல பல உள்ளர்த்தங்கள்
பொதிந்திருக்கின்ற்ன என்று ராமன் சீதையை சந்தேகப்பட்டது, தீக்குளிக்கச்
சொன்னது, காட்டுக்கு அனுப்பியது என்று பல விஷயங்களிற்கு தலையைச் சுற்றிக்
கொண்டு வந்து மூக்கைத் தொட்டு ஒரு புது அர்த்தத்தைச் சொல்லுவார்கள்.
இதற்கும் கண்ணகி விஷயத்தில் சொல்லப்படும் சமாதானத்திற்கும் என்ன
வித்தியாசம் என்றுதான் தோன்றி இருக்கிறது.

ஆகையால் கண்ணகி விஷயத்தைப் பொறுத்த வரை அதன் மூலம் எவரேனும் அவரை
பார்ப்பனர் என்று சொல்வாராயின் சிரிப்பை பதிலாய்த் தந்து விடுகிறேன்.

அப்புறம் பாண்டி நீங்கள் இரயிலில் நடந்த ஒரு விஷயத்தைப் பற்றிச் சொல்லி
இருந்தீர்கள்.

//ஒரு பெண்ணிடம் தவறாக சைகை செய்தவன் அதே பெண்ணிடம் காலில் விழுந்து
மன்னிப்பு
கேட்டபின்னும் செருப்பால் அடிக்கப்படுகிறார். அது ஞானிக்கு நியாயமாம். //

ஆம் நியாயமே. இதை சற்று உளவியல் ரீதியில் பார்க்கலாம். நமது தேவைக்காக
நாம் ஒருவரைப் பார்க்க அல்லது போனில் பேசச் செய்யும் போது நாம்
சம்பிரதாயம் கருதி கேட்கும் கேள்வி ”ஏதாவது வேலையில இருக்கும் போது
டிஸ்டர்ப் பண்ணிட்டனோ?? கொஞ்ச நேரம் பேசலாமா?” என்றும், பதிலுக்கு
”பரவாயில்லை அதனால் என்ன சொல்லுங்கள்” என்ற பதிலை மட்டுமே
எதிர்பார்க்கிறோம். மாறாக ”ஆமா ரொம்ப பிஸியாதான் இருக்கேன். நடுவில நீங்க
வந்துட்டீங்க. முக்கியமான வேலை நீங்க அப்புறம் பேசுங்க” என்று சொன்னால்
சரியான மரியாதை தெரியாத ஆளாய் இருப்பான் போல என்று மனதிற்குள் திட்டிக்
கொண்டே வந்து விடுகிறோம். அப்படி சொல்வது சரியா தவறா என்பது அப்புறம்.
ஆனால் இங்கே நாம் எதிர்பார்ப்பது என்ன தெரியுமா? நாம் இப்படி கேட்கும்
போது எதிர்ப்புறமிருந்து நமக்கு சாதகமான பதிலேதான் வர வேண்டுமென்பதே. இது
ஒருவகையான் எதிர்பர்ப்புடன் முன்வைக்கும் கேள்வி. உண்மையில் நாம் இதற்கு
இது போன்ற் கேள்விகளை வைக்கும் போது இரண்டு விதமான பதிலையும் ஏற்றுக்
கொள்ள தாயாராகி இருக்க வேண்டும். இது மாதிரி பல உதாரணங்க்ள் இருக்கிறது.

இன்னொரு உதாரணம்தான் நீங்கள் மேலே சொல்லி இருக்கும் மன்னிப்பு கேட்கும்
விஷயம். ஒருவர் தவறு செய்து விட்டு மன்னிப்பு கேட்கையில்,
பாதிக்கப்பட்டவர் கண்டிப்பாய் மன்னித்து விட வேண்டும், இல்லா விட்டால்
அதை திமிரின், அகங்காரத்தின் அடையாளமாய் பார்ப்பது. அப்படி நினைத்து
மன்னிப்பு கேட்பது என்பது தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக
கேட்கப்படும் ஒன்றே தவிர, தவறை உணர்ந்து கேட்பதல்ல.

சுபவீ உள்ளிட்ட பல தோழர்கள் ஆற்றி இருக்கும் களப்பணிகளோடு ஒப்பிட்டு ஞாநி
என்ன களப்பணிகள் செய்து விட்டார் என்று கேட்கையில், ஒன்றுமே இல்லை என்று
கூறி விடுமளவுக்கு பெரும்பாலும் எழுத்துக்கள் மூலம் மட்டுமேதான் ஞாநி
தனது பங்களிப்பைச் செய்து வருகிறார் என்று சொல்லி விடலாம்.

இருப்பினும் எனது வார்த்தைகள் இதுதான். உங்கள் பணிகளோடு பார்க்கும் போது,
ஒன்றுமே செய்யாத நான் கூட இவ்வளாவு தூரம் பேச தகுதியற்றவன்தான். அனால்
அதே சமயம் நாம் மரியாதை வைத்திருக்கும் ஒரு அமைப்பு சற்றே தவறாக
நடக்கையில் ஏற்படும் ஒரு வித வருத்தத்துடன் எனது விமர்சனத்தை ஒப்பிடலாம்.
உணர்ச்சி வசப்பட்டு புலிகள் செய்த பல நடவடிக்கை எப்படி உலக அரங்கில்
அவர்களை தீவிரவாதிகளாக இலங்கை அரசு நிறுவுவதற்கு எளிதான காரணமாய் அமைந்து
விட்டதோ அது போல உணர்ச்ச்சியின் விளிம்பில் நின்றுக் கொண்டு தோழர்கள்
செய்யும் சில செயல்கள், ஈழத் தமிழர்கள் பிரச்சினையில், முழு உண்மை
தெரியாமல் பேப்பர் செய்திகளை மட்டுமே தெரிந்துக் கொண்டு வரும்
பெரும்பான்மையான சாதாரண மக்களின் மனதில் எந்த ஒரு தவறான எண்ணத்தையும்
விதைத்து விடக் கூடாது என்பதுதான் எனது கவலையும் கூட.

இதன் நீட்சியாக நாம் தேவைப்பட்டால் இன்னும் பல விஷயங்களைக் கூடப்
பேசலாம்.

அது ஷோபாசக்தி அவர்கள் புலிகள் அமைப்பின் மீதும், சீமானின் தம்பி
படத்தின் மீதும் வைக்கும் விமர்சனம்,

ஈழப்பிரச்சினை பற்றி எடுக்கப்பட்ட வேறி சில திரைப்படங்கள், அவற்றின்
பிரச்சினைகள்,

ஞாநியை முதன் முதலில் எந்த வருடத்தில், எந்த கட்டுரைக்காக பார்ப்பனர்
என்று திட்ட ஆரம்பித்தார்கள்,

ஞாநியின் தொடர்ச்சியான இட ஒதுக்கீடு குறித்த பிரச்சாரங்கள் மற்றும்,
போராட்டங்களின் நம்பகத்தன்மையை இதனால் நாம் குறைத்துக் கொள்ள வேண்டுமா???

அவர் தனது கட்டுரைகளில் சனாதான, வருணாச்ரம தர்மத்தை ஆதரித்து எழுதி
இருக்கின்றாரா??

இப்படி இன்னும் பல விஷயங்களை இதன் நீட்சியாகப் பேசலாம்தான்....

pandii durai

unread,
May 14, 2008, 1:50:18 AM5/14/08
to panb...@googlegroups.com
////ஆனால் தற்போதைய நிலையில் கண்ணகி சிலையை கலைஞர்

அளாவுக்கதிகமாய் தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கிறாரோ என்றுதான்
தோன்றுகிறது.
///
 
இதிலே எனக்கும் உடன்பாடு உண்டு
 
 
///இப்படி இன்னும் பல விஷயங்களை இதன் நீட்சியாகப் பேசலாம்தான்....//
 
கண்டிப்பாக நந்தா

pandii durai

unread,
May 14, 2008, 1:50:57 AM5/14/08
to panb...@googlegroups.com

///அதே சமயம் நாம் மரியாதை வைத்திருக்கும் ஒரு அமைப்பு சற்றே தவறாக

நடக்கையில் ஏற்படும் ஒரு வித வருத்தத்துடன் எனது விமர்சனத்தை ஒப்பிடலாம்.
உணர்ச்சி வசப்பட்டு புலிகள் செய்த பல நடவடிக்கை எப்படி உலக அரங்கில்
அவர்களை தீவிரவாதிகளாக இலங்கை அரசு நிறுவுவதற்கு எளிதான காரணமாய் அமைந்து
விட்டதோ அது போல உணர்ச்ச்சியின் விளிம்பில் நின்றுக் கொண்டு தோழர்கள்
செய்யும் சில செயல்கள், ஈழத் தமிழர்கள் பிரச்சினையில், முழு உண்மை
தெரியாமல் பேப்பர் செய்திகளை மட்டுமே தெரிந்துக் கொண்டு வரும்
பெரும்பான்மையான சாதாரண மக்களின் மனதில் எந்த ஒரு தவறான எண்ணத்தையும்
விதைத்து விடக் கூடாது என்பதுதான் எனது கவலையும் கூட.
/////

நந்தா

unread,
May 14, 2008, 2:34:06 AM5/14/08
to பண்புடன்
மன்னிக்கவும் எனது கடைசி பகுதி மறுவாசிப்பு செய்யப்படாமல் அவசர அவசரமாய்
டைப் செய்யப்பட்டதால் ரொம்பவே அதிகமாய் எழுத்துப் பிழைகள் இருக்கின்றன.
பண்புடன் மன்னிக்க வேண்டுகிறேன். :)

நந்தா

unread,
May 14, 2008, 4:44:12 AM5/14/08
to பண்புடன்
//இப்படி இன்னும் பல விஷயங்களை இதன் நீட்சியாகப் பேசலாம்தான்....//

அண்ணாச்சி எங்கே போய்ட்டீங்க. நான் இந்த மாதிரி வரிகளை எங்கேயாவது
போட்டால் கரெக்டா வந்து ரவுண்டு கட்டுவீங்களே... இந்த வாய்ப்பையும்
விட்டுடாதீங்க....

Asif Meeran AJ

unread,
May 14, 2008, 4:58:00 AM5/14/08
to panb...@googlegroups.com
அப்படியில்ல மக்கா.
நீயா ஆர்வமா எழுதும்போது குறுக்க பேசக் கூடாது.
சொன்னா மாதிரியே கடப்பாரைக்கு இடையிலயும் பாறைக்கு
வெடி வைக்க்குற பாரு. அந்த் மகிழ்ச்சியில அமைதியாயிட்டேன்
மேலும் சுவாரஸ்யமான கொஞ்சம் விரிவான இந்த இழையில் சும்மா
காட்டைக் கலைச்சு இழையைக்கும்மியாக்கிட வேண்டாமேன்னுதான்.

நல்ல விவாதம் நிறைய கருத்துக்கள் சுவையான இழையில் சும்மா நான்
பேசுனா நல்லா இருக்குமா? அதான். அவையறிஞ்சுதானே ஆட்டம் போடணும்?? :-)

2008/5/14 நந்தா <media...@gmail.com>:

நந்தா

unread,
May 14, 2008, 5:37:14 AM5/14/08
to பண்புடன்
//சுவையான இழையில் சும்மா நான்
பேசுனா நல்லா இருக்குமா? அதான். அவையறிஞ்சுதானே ஆட்டம் போடணும்?? :-) //

ஆஹா கவிதை கவிதை. அவையடக்கம்னா இதுதானோ???

சரி இதன் தொடர்ச்சியாக நான் மேலும் சில விஷயங்களை இடுகிறே. முதலில்
சீமானின் தம்பி படம் குறித்தான ஷோபா ஷக்தியின் விம்ர்சனம்... இது
வேலைக்காரிகளின் புத்தகம் எனும் அவரது புத்தகத்திலும் சத்தியக்கடதாசி
வலைப்பதிவிலும் வந்துள்ளது. இதை தனி இழையாக இடுவதா அல்லது ஈழத்தமிழர்கள்
பற்றியும், வி.புலிகள், சீமான் பற்றியும் பேசிக்கொண்டிருப்பதாலும்,
இங்கேயே இடுவதா எனும் தயக்கத்துடன் இடுகிறேன்.

பதிவை நான் கடத்த (ஹைஜாக்னா இதான??)விரும்ப வில்லை.

நந்தா

unread,
May 14, 2008, 5:42:57 AM5/14/08
to பண்புடன்
திரைப்பட நடிகர்களின் கட் அவுட்டுக்களுக்குப் பாலபிஷேகம் செய்வது, அபிமான
நடிகைகளுக்காகக் கோயில் கட்டுவது, அபிமான நடிகர்களுக்காக விரலை
வெட்டுவது, அரைவேக்காட்டுத்தனமான மிகை உணர்ச்சித் திரைப்படங்களுக்கும்
மலிவுத்தனமாக பாலியல் கிளர்ச்சிகளை உருவாக்கும் விடலைத்தனமான ‘காதல்’
படங்களுக்கும் பல்கலைக்கழகப் பேராசிரியர்களுக்கும் திரைப்பட
ஆய்வாளர்களும் பாராட்டுக் கட்டுரைகள் எழுதுவது, உலக இலக்கியத்தைச் சவால்
செய்வதாய்ச் சொல்லிக் கொள்ளும் இலக்கிய எழுத்தாளன் பேய் பிசாசு
நம்பிக்கைகளையும் சாதி பெருமிதங்களையும் தூக்கி நிறுத்தும்,
துப்பட்டாக்களைக் கண்காணிக்கும் சமூக விரோதத் திரைப்படங்களுக்கு வசனம்
எழுதுவது, திரைப்படப் புகழ் நட்கத்திரங்களைத் தேர்ந்த சமூக
சிந்தனையாளர்களாக உருவகித்து ஊடகங்கள் நேர்காணல் செய்வது, உணர்ச்சிப்
பாவலர்கள் ஆணிய வக்கிரத்துடன் ஆபாசமாகத் திரைப்படப் பாடல்கள் புனைவது,
சினிமா கவர்ச்சி என்ற ஒற்றை ஆயுதத்தின் துணையுடன் மட்டுமே திரைப்படத்
துறையினர் அரசியல் பண்பாட்டு தளங்களின் போக்குகளைத் தீர்மானிக்கக் கூடிய
சக்திகளில் ஒன்றாக மாறிவிடுவது போன்ற அட்டூழியங்கள் தமிழ்நாட்டில்
மட்டுமே நிகழ முடியும் என அடிக்கடி எமது தமிழகத் தோழர்கள்
வருத்தப்பட்டுக் கொள்வதுண்டு. தோழர்களுக்கு சற்றே ஆறுதல் அளிக்கக்
கூடிய ஒரு செய்தி என்னிடம் உண்டு. தமிழ்நாட்டில் மட்டுமல்ல புலம்பெயர்ந்த
ஈழத் தமிழர்களிடையேயும் இந்த அட்டூழியங்களில் சிலவாவது நிகழ்ந்துகொண்டு
தானிருக்கின்றன.

பெப்ரவரி மாதத்தின் நடுப்பகுதியில் பாரிஸ் நகரத்தில் ஈழத் தமிழர்கள்
நடமாடும் கடை வீதிகளில் எல்லாம் இயக்குனர் சீமானின் எழுத்து மற்றும்
இயக்கத்தில் உருவாக்கப்பட்ட ‘தம்பி’ திரைப்படத்துக்கான விளம்பரச்
சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. நடிகர் மாதவனின் விதம் விதமான தோற்ற
நிலைகளின் கீழே ‘அச்சந் தவிர், ரெளத்திரம் பழகு’ என்ற புதிய
ஆத்திசூடியின் வரிகள் அச்சிடப்பட்டிருந்தன. அச் சுவரொட்டிகளில்
இப்படியாகவும் ஒரு வரி இருந்தது “முக்கிய குறிப்பு - இத் திரைப்படம் ஈழத்
தமிழர்களின் பிரச்சனையைப் பற்றியது” . அதே நேரத்தில் அய்ரோப்பியத்
தமிழ்த் தொலைக்காட்சிகளில் தம்பி திரைப்பட முன்னோட்டம் அரை மணி
நேரத்துக்கு ஒரு தடவை காண்பிக்கப்பட்டது. முன்னோட்டத்தில்
முத்தாய்ப்பாய் சே குவேரா, மாவோ இருவரதும் புகழ்பெற்ற இரண்டு
கூற்றுக்கள் திரையில் எழுத்துக்களாய் மின்னின. தம்பி திரைப்படம்
வெளியானதும் புலம்பெயர் வாரப் பத்திரிகைகள் தம்பி படத்தைக் கொண்டாடின.
மின் இலத்திரனியல் ஊடகங்களில் தம்பி திரைப்படமும் இயக்குனர் சீமானும் சே
குவேரா பனியனும் முக்கிய பேசு பொருட்களாயின. மார்க்ஸின் மாணவன்
பெரியாரின் பேரன் தம்பியின் தம்பி என்று என்று கிறுக்குத்தனமாகச் சீமான்
பெரிய சாமானாக வர்ணிக்கப்பட்டார்.

இந்த அமளிதுமளிக்குள் சீமான் அவுஸ்ரேலியாவிலிருந்து ஒலிபரப்பாகும் இன்பத்
தமிழ் வானொலிக்கு 20.10.2005 அன்று வழங்கியிழுந்த நேர்காணலை இணையத்தளம்
ஊடாகச் சற்றே தாமதமாகக் கேட்க நேர்ந்தது. அந் நேர்காணலில் சீமான் இவ்வாறு
கூறினார்: “சிங்கள அரசு முழுப் பலத்துடன்தமிழ் மக்களை அழித்தொழிக்கும்
போது அதை ஒரு அரசின் இறையாண்மையாக உலகம் பார்க்கிறது, ஆனால் நாங்கள்
கையில் ஆயுதத்தை எடுக்கும் போது அதை வன்முறையாகத் தீவிரவாதமாக உலகம்
சொல்கிறது. அப்படிச் சொல்லக் கூடாது என்பதையே உள்ளர்த்தமாகக் கொண்டு
தம்பி திரைப்படத்தை எடுத்து வருகிறேன்” இவை எல்லாற்றினதும் உச்சமாகத்
தம்பி வெளியானதும் சீமான் ஆனந்த விகடன் இதழுக்கு வழங்கிய நேர்காணலில்
“தம்பியின் வெற்றியைப் பெரியாருக்கும் பிரபாகரனுக்கும் அர்ப்பணிக்கிறேன்”
என்றார். இனி வருவது தம்பி திரைப்படத்தின் கதை:


அன்பே உருவான பெற்றோரும் பாசமுள்ள ஒரேயொரு தங்கையும் உள்ள தமிழ்
சினிமாவின் மாதிரிக் குடும்பமொன்றில் பிறந்தவன் தம்பி என்ற வேலுத்
தொண்டைமான். இவனுக்கு முன்னதாகப் “படையப்பா”, “பரமசிவன்”,
“திருப்பாச்சி” போன்றவர்களும் இத்தகைய மாதிரிக் குடும்பத்தில்
பிறந்தவர்களே. கல்லூரியில் தங்கப் பதக்கம் பெற்ற மாணவனான தம்பி மாதம்
எட்டாயிரம் ரூபாய் சம்பளத்துடன் உத்தியோகம் பார்க்கத் தொடங்குகிறான்.
வேலைக்குப் போய்க் கொண்டிருக்கையில் தெருச்சண்டியன் பாண்டியனின் தம்பி
செய்யும் கொலையொன்றைத் தற்செயலாகச் சீமானின் தம்பி பார்த்துவிடுகிறான்.
தம்பி நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்ததால் பாண்டியனின் தம்பி உள்ளே
தள்ளப்படுகிறான். இதனால் வெகுண்டெழுந்த தெருச்சண்டியன் பாண்டியன்,
தம்பியின் மாதிரிக் குடும்பத்தைக் கொன்றொழித்து விடுகிறான். இப்போது
தம்பி சினந்தெழுந்து பாண்டியனைப் பழிவாங்க பாண்டியனின் வீட்டுக்குச்
செல்லும் போது அங்கே பாண்டியனின் மாதிரிக் குடும்பத்தைக் காண்கிறான்.

அந்தக் குடும்பம் தான் பாண்டியனைக் கொலை செய்வதால் பாதிக்கப்படக் கூடாது
என எண்ணும் தம்பி பாண்டியனைச் சந்தித்து “நிறுத்திக் கொள்வோம்”
என்கிறான். பாண்டியனோ தம்பியை அடித்து முள்ளுக் கம்பியில் காயப்
போட்டுவிடுகிறான். காயங்கள் ஆறியதும் தம்பி வன்முறையை ஒழிக்கப்
புறப்படுகிறான். வில்லன் குழுவினரை துரத்தித் துரத்தி மரண அடி
அடிக்கிறான் தம்பி. தம்பி கொலை செய்வதில்லை ஆனால் கொலைக்கும்
கோமாவுக்கும் உள்ள மயிரிழையில் தம்பியிடம் அடி வாங்கியவர்களின் உயிர்
ஊசலாடுகிறது. இந்த மயிர் இழையில் தான் படமே நிற்கிறது.வன்முறைக்கு எதிராக
ஒரு வரையறுக்கப்பட்ட வன்முறையைத் தம்பி கையில் எடுக்கிறான். “உதைக்கணும்
உதைக்கணும் உதைப்பேன்” என்று முழிகளைப் புரட்டியவாறு ஒரு சைக்கோ
மாதிரித் தம்பி அலையத் தம்பியின் சைக்கோவையும் தெருச் சண்டித்தனத்தையும்
மாவீரம் என அர்த்தப்படுத்திக் கொள்ளும் அர்ச்சனா தம்பியை விரட்டி
விரட்டிக் காதல் செய்கிறாள். தம்பிக்கு உலகைத் திருத்தும்
வேலையிருப்பதால் அவன் அர்ச்சனாவின் திடீர்க் காதலை நிராகரிக்கிறான்.
என்றாலும், அர்ச்சனா விடாப்பிடியாக கனவில் தம்பியோடு இரண்டு காதற்
பாடல்களை ஊரைச் சுற்றி மரத்தைச் சுற்றி பாடிவிடுகிறாள்.

இடையில் தம்பிக்கு மதியுரைஞராக வந்து வாய்க்கிறார் மணிவண்ணன். பேருந்தில்
பயணம் செய்யும் பெண்களை இடிக்கும் வாலிப வயோதிக அன்பர்களை அடக்கிய
தம்பியின் தீரச் செயல்களுக்குப் புரட்சிகர தத்துவார்த்தரீதியான
விளக்கங்களை மதியுரைஞர் வழங்குகிறார். “நான் ஏன் தெருச்சண்டியன் ஆனேன்?”
என்று பல்கலைக் கழகப் பரிசளிப்பு விழா மேடையில் தம்பி உருக்கமாக உரை
நிகழ்த்துகிறான். அப்போது மேடையில் இருக்கும் செட் ப்ரொப்பர்டிகள் பின்
வருமாறு :

மூன்று நாற்காலிகள், ஒரு மேசை, எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்சினி, ஒரு
மைக் ஸ்ராண்ட், பாவலர் அறிவுமதி, ஒரு மின்விசிறி.

மீண்டும் தோன்றும் மதியுரைஞர் தம்பியிடம் கார்ல் மார்க்ஸ், சே குவேரா,
பிரபாகரன் எல்லோரும் கல்யாணம் செய்ததால் தம்பியும் அர்ச்சனாவை
காதலிக்கலாம் என்று ஆலோசனை கூறுகிறார். உடனே தம்பி அர்ச்சனாவின் காதலை
ஏற்றுக்கொள்ள அர்ச்சனா தம்பியின் காலில் தடாலென விழுந்து
கும்பிடுகிறாள். கடைசி நேரக் கலவரத்தில் பாண்டியனின் மாதிரிக்
குடும்பத்தைச் சீமானின் தம்பி ஆபத்திலிருந்து காப்பாற்றுவதோடு
பாண்டியனுக்கு அறிவுரையும் சொல்கிறான். மனம் திருந்திய பாண்டியன்
சீமானின் தம்பியைத் தனது குலசாமியாக ஏற்றுக்கொள்கிறான் இது தெரியாத
பாண்டியனின் தம்பி சீமானின் தம்பியை வெட்டி விடுகிறான். தம்பி
குற்றுயிராக ஆஸ்பத்திரிப் படுக்கையில் கிடக்க தம்பியின் காதலியும்
நண்பர்களும் சோகத்துடன் நிற்கிறார்கள். இவர்களை விடப் படு சோகத்துடன்
வில்லனும் வெட்டியவனும் கண்களைக் கசக்கிக்கொண்டு நிற்கிறார்கள்.அப்போது
அங்கே தோன்றும் மதியுரைஞர் தம்பியின் காதுகளுக்குள் “தம்பி எழுந்திரு!
இன்னமும் பஸ்ஸில் இடித்தபடியே தான் பயணம் செய்கிறார்கள் எழுந்திரு !
நமக்கு இன்னமும் வேலையிருக்கிறது” என்று கூறத் “தம்பி பொழைச்சிட்டான்
“……………

மேலேயுள்ளது தம்பி திரைப்படத்தின் கதைச் சுருக்கம் என்று
நினைத்துவிடாதீர்கள். தம்பி திரைப்படத்தின் முழுக்கதையும் இதைவிடச்
சுருங்கியது, நான் தான் வாசிப்புச் சுவாரசியத்துக்காகக் கதையைச் சற்றே
மினுக்கி எழுதியுள்ளேன்.தறுதலை தம்பிக்கும் தாதா பாண்டியனுக்கும் இடையில்
நடக்கும் நாய்ச் சண்டையில் தமிழீழ மக்களின் போராட்டம் எங்கே வருகிறது ?
காதலை ஏற்றுக்கொண்டவுடன் தம்பியின் கால்களில் காதலி விழுந்து தொழும்
அசிங்கமான திரைப்படத்தில் ஈரோட்டுச் சிங்கத்துக்கு என்ன வேலை ?இந்த
வெங்காயச் சினிமாவை வீரமணி, கொளத்தூர்மணிக்குக் கூட அர்ப்பணிக்க
முடியாதே ? இதை எந்தத் துணிச்சலில் சீமான் பெரியாருக்கு
அர்ப்பணிக்கிறார் ?

“தமிழ்த் திரைப்படங்களை குறித்துப் பேசுவது சிரங்கைச் சொறிந்து
கொடுப்பதைப் போன்றது” எனப் பேராசிரியர் சிவசேகரம் ஒருமுறை எழுதியதாக
நினைவு. பேராசிரியர் விரக்தியின் விளிம்பில் நின்று இதை
எழுதியிருந்தாலும் கூட தமிழ்த் திரைப்பட வரலாற்றில் நேர்மறைப் பண்புகளும்
இல்லாமல் இல்லை. திராவிட இயக்கத்தினரின் திரைப்படங்களும் ‘பாதை தெரியுது
பார்’, ‘ஏழாவது மனிதன்’, ‘கண் சிவந்தால் மண் சிவக்கும்’ போன்று மாற்றுத்
திரைப்படங்களைக் கண்டடைவதற்கான எத்தனங்களுக்குள்ளால் உருவாக்கப்பட்ட
திரைப்படங்களும் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் முக்கியமானவை.இது தவிர வணிக
நோக்கில் தயாரிக்கப்படும் சனரஞ்சக மனோரதியத் திரைப்படங்களுக்கும்
பரந்துபட்ட தமிழ்ப் பார்வையாளர்கள் திரளுக்குமிடையே உள்ள உறவுடன் ரசிக
உளவியலும் குறித்த ஒரு உரையாடலை ‘நிறப்பிரிகை’ சில வருடங்களுக்கு முன்பு
தொடங்கி வைத்தது. எனினும் அவை குறித்த சிந்தனை வளர்ச்சியும் ஆய்வு
முயற்சிகளும், தமிழில் தொடராமலேயே போய்விட்டன. பாடல்கள், நடனங்கள்,
சண்டைக் காட்சிகள், மிகை உணர்சிகள், போன்ற கேளிக்கைக்கான நேர்மறைக்
கூறுகளுடன் நடிகைகளைப் பாலியல் பிரதிமைகளாகக் கட்டமைப்பது, ஆதிக்க சாதிச்
சாய்வு,மூடநம்பிக்கைகள், ஆண் மையவாதச் சிந்தனை முறைமை போன்ற எதிர்மறைக்
கூறுகளும் சேர்ந்ததாகவே தமிழ்ச் சினிமாவின் பரப்பு இயங்கி வருகிறது.

இந்தப் போக்கு தமிழ்ச் சினிமாவில் மட்டுமல்லாமல் உலகச் சினிமாவிலும்
தொழிற்படும் ஒரு போக்குத்தான். ஆனால் தமிழ்த் திரைப்படத் துறையில்
மாபெரும் வணிக வெற்றிகளை சாதித்த இயக்குனர்கள் தமது திரைப்படங்களுக்கு
வெளியே புரட்சிகரமான வாய்ச் சொற்களை உதிர்ப்பதில்லை. ‘கரகாட்டக்காரன்’
திரைப்படத்தின் வெற்றியைக் கத்தாருக்கு அர்ப்பணிக்கிறேன் என்று கங்கை
அமரன் சொன்னதில்லை. ‘கப்டன் பிரபாகரன்’ படத்தின் வெற்றியை
ஈழப்போராளிகளுக்கு அர்ப்பணிக்கிறேன் என்று செல்வமணி சொன்னதில்லை.
‘வைஜந்தி அய்.பி.எஸ்’ திரைப்படத்தை ரோசா லக்ஸம்பேர்க்கிற்கு
அர்ப்பணிப்பதாக அத் திரைப்படத்தின் இயக்குனர் சொன்னதில்லை, ஆனால்
மேற்சொன்ன படங்களையே கருத்துத் தளத்தில் ஒத்ததாக உள்ள தம்பி
திரைப்படத்தின் வெற்றியைப் பெரியாருக்கும், பிரபாகரனுக்கும்,
அர்ப்பணிக்கிறேன் என்று கூறும் சீமானின் வாய்த் துடுக்குக்குப் பின்னால்
இருப்பது எது ?

தம்பி திரைப்படத்துக்கு புறத்தே இயக்குனர் சீமான் கட்டமைத்த கட்டமைக்கும்
போலிப் புரட்சிகரப் படிமங்களின் பின்னே/ அவர் உதிர்த்தும் கைப்புள்ள,
வெடிமுத்து வீர வசனங்களின் பின்னே இயங்கும் சின்னத்தனமான அரசியலின்
வியாபார இலக்கு எது ? அந்த வியாபாரத்தின் அரசியல் என்ன ? இந்தக்
கேள்விகளைப் பரிசீலிப்பதற்கு முன்னதாக தம்பி படத்தின் திரைக்கதை
வசனத்தைப் பற்றியும் அவற்றுள் பொதிந்திருக்கும் ஆபத்தான சாதிய ஆண்மையவாத
அராஐகக் கூறுகளைப் பற்றியும் பார்த்து விடுவோம்.

தம்பி திரைப்படம் பழிக்குப் பழி என்ற வழமையான தமிழ்த் திரைப்பட
பாணியிலிருந்து வேறுபட்டது அதனாலேயே அது முக்கியமானது என்று திராவிடப்
பாசறையிலிருந்து வரும் ‘உண்மை’ இதழும் எழுதுகிறது தமிழ்த் தேசியவாதப்
பாசறையிலிருந்து வரும் ‘தென் செய்தி’ இதழும் எழுதுகிறது. என்ன இழவு இது ?

எம்.ஜி.ஆர் நடித்த 136 படங்களில் 130 படங்களில் இந்த கதை தானே நடந்தது !
எழுந்தமானமான எடுத்துக்காட்டாய் கஜேந்திரா பிலிம்ஸின் ‘நாளை நமதே”
திரைப்படத்தை எடுத்துக்கொள்வோம் அன்பே உருவான தாய், அறிவே உருவான
தந்தை, சங்கர், விஜே, கண்ணன் என மூன்று குழந்தைகள்! தென்றல் நடைபயின்ற
குடும்பத்தில் தீடீரெனப் புகுந்தான் கொள்ளைக்காரன் ரஞ்சித். தென்றல்கள்
ஒவ்வொன்றும திசைக்கு ஒன்றாகப் பிரிந்தன. முடிவு என்ன? எம்.ஜி.ஆர்
பெரியவனாக வளரவில்லையா? தன் குடும்பத்தையே நாசமாக்கிய நம்பியாரைக் கண்டு
பிடிக்கவில்லையா? நம்பியாரைத் தண்டவாளத்தில் ஓடவிட்டுத் துரத்தித்
துரத்தி நீதி மொழிகள் பேசவில்லையா நம்பியாரைப் பழிவாங்க எல்லா
வாய்ப்புகள் இருந்தும் இறுதியில் எம்.ஜி.ஆர் நம்பியாரின் உயிரைக்
காப்பாற்றி சட்டத்தின் கையில் ஒப்புவிக்கவில்லையா? அப்போது நாகேஷ்
போலீசாரை ஜீப்பில் அழைத்துக்கொண்டு வரவில்லையா? எல்லாமே நடந்தன. ஒன்று
மட்டும் தான் நடக்கவில்லை. இத் திரைப்படத்தின் வெற்றியை அண்ணாத்துரைக்கு
அர்ப்பணிப்பதாக எம்.ஜி.ஆர் சொல்லவில்லை……!

‘தென்செய்தி’ இதழில் சுப.வீரபாண்டியன் தம்பி திரைப்படத்தைக் குறித்து
எழுதும் போது தம்பியின் வீட்டில் பெரியார், கார்ல் மார்க்ஸ், பாரதிதாசன்
படங்கள் தொங்குவதாக மகிழ்ந்து போகிறார். இவையெல்லாம் தம்பியின் உள்
வீட்டில் மாட்டியிருந்த படங்கள். ஆனால் தம்பியின் வீட்டின் முகப்பில்
மாட்டப்பட்டிருந்த ஒரு புகைப்படம் -அண்மைக் காட்சிக்குள் ஒன்றுக்கு
இரண்டு தடவைகள் வரும் ஒரு புகைப்படம்- எப்படித்தான் பேராசிரின்
கண்களுக்குப் படாமல் போனதோ தெரியவில்லை. அம் முகப்பு படத்தில்
இருப்பவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். மார்க்ஸின் மாணவர்கள்,
பெரியாரின் பேரர்கள், ஒரு போதும் முத்துராமலிங்கத்தின் படத்தைத்
தூக்கிப்பிடிப்பதில்லை. தலித் மக்களின் தலைமைப் போராளி இம்மனுவேல்
சேகரனின் படுகொலைக்கு நேரடிக் காரணியாக இருந்தவர் முத்துராமலிங்கம்.

முத்துராமலிங்கத்தை கைது செய்யுமாறு அப்போது பெரியார் குரல்
கொடுத்தார். பின் அவர் கைது செய்யப்பட்டார். முத்துராமலிங்கத்துக்கு
அடிப்படைவாத இந்துத்துவ முகமும் உண்டு. இந்து மகா சபைத் தலைவராகவும்
முத்துராமலிங்கம் இருந்தார். “ஒரு வேளை இன்று முத்துராமலிங்கர் உயிருடன்
இருந்திருந்தால் அவரே இன்றைய தமிழக இந்துத்துவ சக்திகளின் தலைவராக
இருந்திருப்பாரோ என்று ஊகிக்கவும் இடமுண்டு” என்பார் அ.மார்க்ஸ்
(அதிகாரத்தை நோக்கி உண்மைகளைப் பேசுவோம் பக்.107) இன்று
தென்மாவட்டங்களில் சாதி ஒடுக்குமுறையாளர்களாக விளங்கும் முக்குலோத்தரின்
சாதிப் பெருமிதப் படிமமாக வரலாற்று நாயகனாக பசும்பொன் முத்துராமலிங்கத்
தேவர் நிறுத்தப்பட்டிருக்கிறார். ஆக முத்துராமலிங்கத்தின் படத்தைத்
தம்பியின் வீட்டில் சீமான் மாட்டிவிட்டதற்க்குப் பின்னால் இருப்பது சுய
சாதி அபிமானத்தைத் தவிர வேறென்ன? இந்த இடத்தில் இயக்குனர் சீமான்
திரைப்படத் துறையினுள் நுழைந்த விதத்தையும் நாம் கவனிக்க வேண்டும்.

என் ஞாபகம் சரியாக இருந்தால் சீமான் பாரதிராஜாவின் ‘பசும்பொன்’
திரைப்படத்ததுக்குக் கதை உரையாடல் எழுதித்தான் திரைப்படத் துறையில்
அறிமுகமாகிறார். தமிழ்க் சினிமாவின் மொழியை மாற்றிப் போட்ட வகையிலும்
‘கிழக்கே போகும் ரயில்’, ‘கருத்தம்மா’, போன்ற சில படங்களில் சமூகப்
பிரச்சனைகளைச் சற்றே ஆழமாகப் பேசியவர் என்ற வகையிலும் தமிழ்த் திரைப்பட
வரலாற்றில் பாரதிராஜாவின் வகிபாகம் முதன்மையானதாக இருக்கிறது. இதற்கு
அப்பால் சுயசாதிப் பெருமிதங்களைப் பேசும் படங்களை எடுத்ததோடு
மட்டுமில்லாமல் சாதிச் சங்கத்தின் நிகழ்வுகளிலும் கலந்து கொள்பவர்
பாரதிராஜா.சீமான் கதை உரையாடல் எழுதிய பசும்பொன் திரைப்படமும் சுயசாதிப்
பெருமைகளைப் பேசிய ஒரு வன்கொடுமைத் திரைப்படம் தான். இத் திரைப்படத்தின்
நாயகப் பாத்திரமான துரைராசுத் தேவர் பாத்திரத்தை ஏற்று நடித்தவர் சிவாஜி
கணேசன் என்பதும் இங்கே கவனிக்கத் தக்கது. அத் திரைப்படத்தில் தான்
“தென்காசிச் சிங்கமே தேவர் அய்யா எங்கள் தேவர் குலத் தங்கமே தேவர் அய்யா”
என்ற பாடல் வருகிறது. இந்தப் பாடலை எழுதியவர் வைரமுத்து என்பது கூடுதற்
தகவல்.

“நமது மொழி சாதி காப்பாற்றும்” மொழி என்பார் பெரியார். நமது மொழியின்
அடுக்குகளில் சாதி நுட்பமாகப் படிந்துள்ளது. சீமானின் தம்பி
திரைப்படத்தில் பாத்திரங்கள் பிற பாத்திரங்களைத் திட்டும் போது
‘சண்டாளா’ எனத் திட்டுகிறார்கள். படம் நெடுகவும் இந்த சண்டாளா எனற
சொற்ப் பிரயோகம் வருகிறது. சண்டாளர் என்பது புராணகள், இதிகாசங்கள்
தோன்றிய காலங்களில் இருந்தே தலித்துக்களை இழித்துரைப்பதற்காக ஆதிக்கச்
சாதியினர் பயன்படுத்தும் சொல். மதுரை மீனாட்சி கோயில் ஆலயப் பிரவேசப்
போராட்டம் நடந்த போது அடையாளமாகப் பறையர், பள்ளர், நாடார்
சாதிகளிலிருந்து இரண்டிரண்டு பேர்களென ஆறு பேர்கள் ஆலயத்துக்குள்
நுழைந்தனர். ‘ஆறு சண்டாளர்கள்’ என இவர்களைப் பற்றி ‘பகிரதி’ என்ற
பார்ப்பனப் பெண் வசைப்பாடல் இயற்றிய கொடுமையைத் தமிழவேள் ‘இம்மானுவேல்
தேவேந்திரர் வரலாறு’ என்ற நூலில் குறிப்பிடுகிறார். இவற்றுக்கு மேலாக
சண்டாளர் என்பது இந்தியாவின் அட்டவணைச் சாதிகளுள் உள்ள ஒரு தீண்டப்படாத
சாதியின் பெயர் என்பதும் அறிய வருகிறது. இச் சாதியின் பெயரை வசைச்
சொல்லாகச் சீமான் தம்பி திரைப்படத்தில் உபயோகித்திருப்பதை திரைப்படத்
தணிக்கைக் குழுவினர் எப்படி அனுமதித்தனர் ? தணிக்கைக் குழு
அனுமதித்திருப்பினும் உண்மையும் தென்செய்தியும் சுபவீயும் கோவி.லெனினும்
எப்படி இதைக் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர் ? சீமான் சார்ந்திருக்கும்
தமிழ் பாதுகாப்பு இயக்கம் குஷ்புவிடம் இருந்து மட்டும் தான் தமிழைக்
காப்பாற்றுமா ? சாதியிடமிருந்து தமிழைக் காப்பாற்றாதா ?

பெரியாருக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்தத் திரைப்படத்திலும் “கதாநாயகி”,
கதைக்கு சம்மந்தமில்லாமல் வந்துபோன அறிவுமதி ஆண்டாள் பிரியதர்சினி
போலவே அவளும் வந்து போகிறாள். சற்றுக் காலத்துக்கு முன்பு அண்ணா
பல்கலைக் கழகத்தில் மாணவிகள் ஜீன்ஸ், பனியன் போன்ற உடைகளை அணியக் கூடாது
என்ற ஒரு கலாச்சார அடிப்படைவாத விதி கொண்டுவரப்பட்டதே, அதை மாணவிகள்
கடைப்பிடிக்கிறார்களோ இல்லையோ சீமான் செம்மையாகக் கடைப்பிடிக்கிறார்.
படம் முழுவதும் கல்லூரி மாணவியான நாயகி சேலையிலேயே வருகிறாள்.

சீமானைப் போல மாதவனைப் போல அவளால் சே குவேரா படம் பொறித்த பனியன் அணிய
முடியாது. விரும்பினால் சே குவேரா படத்தைச் சேலையில் பிரிண்ட்
போட்டுக்கொள்ள வேண்டியது தான். புரட்சியாளனைக் காதலிக்கும்
குற்றத்துக்காக அவள் புரட்சியாளனிடமிருந்து லூசு, இம்சை, பேய் போன்ற
வசைகளைப் பெறுகிறாள். கடைசியில் சீமானின் தம்பி காதலை ஏற்றுக் கொண்டதும்
அவனின் கால்களில் விழுகிறாள்.முற்று முழுதாக ஆணாதிக்கச் சிந்தனை
வழியிலேயே சீமான் நாயகியின் பாத்திரத்தைக் கட்டமைத்திருக்கிறார்.
வெட்கத்தை விட்டு ஒன்றைச் சொல்ல வேண்டியிருக்கிறது: கே.பாலச்சந்தர்
போன்ற பார்ப்பனப் பிற்போக்குவாதிகள் “அவள் ஒரு தொடர் கதை”, “அவர்கள்”,
“மனதில் உறுதி வேண்டும்”, “அச்சமில்லை அச்சமில்லை”,” அக்னி சாட்சி”,ஆகிய
திரைப்படங்களில் அரைகுறையாகவேனும் சித்தரித்துக் காட்டிய பெண் ஆளுமைகளைக்
கூட நமது பெரியாரின் பேரர்களாலும் தம்பியின் தம்பிகளாலும் உருவாக்க
முடியாமல் உள்ளது.அவர்கள் தமிழ்க் கலாச்சாரம் என்ற பெயரில் காலில் விழும்
கலாச்சாரத்துக்கு திரும்பிக்கொண்டிருக்கிறார்கள்.

மாவோவின் மேற்க்கோளோடு தொடங்கி சே குவேரா வின் மேற்க்கோளோடு
முடியும் இத் திரைப்படம் முழுவதும் சீமானின் தம்பி கிட்டத் தட்ட ஒரு
போலிஸ் உளவாளி போலவே இயங்குகிறான். போலிசார் கைதிகளை நீதிமன்றத்துக்கு
அழைத்துச் சொல்லும் போது போலிஸ் வாகனத்துக்கு முன்னால் தம்பி
பாதுகாப்பு அளித்துச் செல்கிறான். போலிசாரும் தம்பி சண்டித்தனம்
செய்யும் போது கடைசிவரைக்கும் கண்டும் காணாமலேயே இருந்துவிடுகிறார்கள்.
வரலாற்றிலேயே இல்லாத புரட்சியாய் பொலிஸ் அதிகாரி
(ராஜ்கபூர்)புரட்சியாளனை இரகசியமாகச் சந்தித்துப் சிலபல அய்டியாக்களும்
கொடுக்கிறான். “புரட்சியாளன்” தம்பியும் போலிசும் கை கோர்த்துச்
செயற்படுகிறார்கள். இவ்வாறாகப் போலிஸாருடன் கரங்களைக் கோர்ப்பவர்களை
சனங்கள் புரட்சியாளன் என்று அழைப்பதில்லை, மாறாகப் “போலிஸ் உளவாளி”
என்றுதான் காறியுமிழ்வார்கள். இந்தப் படத்துக்காக வீரப்பன் வேட்டை
நிகழ்ந்த பகுதிகளிலும் நக்ஸல்பாரிப் புரட்சியாளர்கள் கொடூரமாகப்
போலிசாரால் கொன்றொழிக்கப்பட்ட தருமபுரிக் கிராமங்களிலும் வாழும் இரத்த
சாட்சியங்களான மக்கள் சீமானைச் செருப்பாலே அடித்தால் அது புரட்சி!


சமூகத்தின் உண்மையான வன்முறையாளர்கள் சீமான் ஆனந்த விகடன் நேர்காணலில்
கோபப்படுவது போல சாலையில் குப்பை எறியும் இளைஞர்களோ சாலை விதியை
மீறும் எளிய மனிதர்களோ அல்ல. அல்லது சீமான் தம்பி திரைப்படத்தில்
சித்தரிப்பது போன்ற பேருந்தில் உரசியபடியே பயணம் செய்யும் பாலியல்
வறுமையில் உழல்பவர்களோ தெருச்சண்டியர்களோ அடியாட்களாக இயங்கும்
விளிம்பு நிலை மனிதர்களோ அல்ல. அவர்கள் இந்த நிலப்பிரபுத்துவ முதலாளியக்
கேடுகெட்ட சமூக அமைப்பின் விளைவுகள். சமூகத்தின் மிகப் பெரும் வன்முறை
நிறுவனங்களாக அரசும் நீதிமன்றமும் காவல்துறையும் இராணுவமும்,
சிறைச்சாலைகளுமே விளங்குகின்றன.அவையே இந்த சமத்துவமற்ற சமூக
ஒழுங்குகளையும் சுரண்டலையும் தாங்கிப் பிடித்து நிற்கின்றன. இவற்றின்
வன்முறை குறித்துத் தம்பி திரைப்படம் பேசுவதில்லை. மாறாகத் தம்பி ஒரு
இளைஞனுக்கு “நீயும் நானும் அடித்தால் குற்றம் போலிஸ் அடித்தால் சட்டம்”
எனவே நீ படித்து போலிஸ்காரனாகு! கலக்டராகு! சமூகத்தைத் திருத்து”
என்கிறான்.

‘தாகம்’ பெப்ரவரி 2006 இதழில் சீமான் தனக்குள் இலட்சியங்களை
விதைத்தவர்களான மாவோவும் லெனினும் சே குவேராவும் தம்பி திரைப்படம்
முழுவதும் விரவியிருப்பதாகக் கூறுகிறார். மாவோவும் லெனினும் அரசு
இயந்திரத்தை நொறுக்குவது குறித்தும் அரசின் காவல் நாய்களான
அதிகாரிகளையும் ஆயுதப்படையினரையும் செயலிழக்கச் செய்வது குறித்தும்தான்
பேசுவார்கள். அவர்கள் புரட்சியாளர்களாக மாறச் சொன்னார்களே ஒழிய
பொலிஸ்காரர்களாக மாறச் சொல்லவில்லை. ” நீதி என்பது அரசின் வன்முறை-
வன்முறை என்பது மக்களின் நீதி” என்பதே சர்வதேசிய அனார்கிஸ்டுகளிள் முதல்
முழக்கமாய்த் திகழ்கிறது. அரசுக் கட்டுமானம், நீதியின் வன்முறை,
வெகுசனங்களின் கலகம் போன்ற நுண் அரசியற் சிந்தனைகள் சே குவேராவின்
பனியனைப் போட்டுக்கொண்டு கோடம்பாக்கத்துத் தெருக்களில் சுற்றித்
திரிவதாலோ அல்லது பிரபாகரனின் படத்தைச் சட்டைப்பையில் வைத்துக்கொண்டு
அலைவதினாலோ சித்தித்துவிடப் போவதில்லை.இயக்குனர் சீமான்
குத்துமதிப்பாய் மார்க்ஸிஸம் மாவோயிஸம் என அரைகுறையாய்ப் அனர்த்துவதை
நிறுத்திக்கொண்டு, குறைந்தபட்சம் அவர் அவரின் இன்னொரு தோழரான தியாகு
எழுதிய ‘மார்க்சியம் ஆனா ஆவன்னா’ என்ற நூலையாவது படிக்க வேண்டும்.
‘சொல்வது தெளிந்து சொல்லவேண்டும்.’

லெனினையும் பெரியாரையும் பாரதிதாசனையும் புகைப்படங்களாகத் தமிழ்த்
திரையில் முதலில் காட்டியவர் சீமான் என்ற சிந்தனையாளன் தான் என்று
சிறுபிள்ளைத்தனமாக சுப.வீரபாண்டியன் மகிழ்ந்து போவதில் எந்த அர்த்தமும்
இல்லை. எம்.ஜி.ஆர் கூடத்தான் உலகம் சுற்றும் வாலிபனில் லெனின் சிலையை
காண்பிக்கிறார்.பாரதிதாசனைப் பற்றியும் பெரியாரைப் பற்றியும் புத்தரைப்
பற்றியும் அண்ணாவைப் பற்றியும் திரைப்படங்களில் எம்.ஜி.ஆர் பேசாததையா
சீமான் பேசிவிட்டார் ? எம்.ஜி.ஆர் இயக்கி நடித்த நாடோடி மன்னன்
திரைப்படத்தில் நாடோடி ஆட்சியில் அமர்ந்தவுடன் கொண்டு வரும் சட்டத்
திருத்தங்களில் அரைவாசி கார்ல் மார்க்சும் ஏங்கெல்சும் எழுதிய
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையிலிருந்து எடுக்கப்பட்டவை என்பார்கள். வணிக
இலக்குகளுடன் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்குள் இவ்வகையான போலிப்
புரட்சிகரப் படிமங்களும் உணர்ச்சி முழக்கங்களும் எழுப்பப்படுவதற்க்கான
நோக்கம் வியாபாரக் காரணங்களைத் தவிர வேறில்லை.
தம்பி திரைப்படத்தைப் போலவே 1981 ல் போலிப் புரட்சிகர முழுக்கங்களுடன்
ஏ.வி.எம் தயாரிப்பில் ‘சிவப்பு மல்லி’ என்றொரு திரைப்படம்
விஐய்காந்த்,சந்திரசேகர் நடிப்பில் வெளிவந்தது. அத் திரைப்படத்தின் போலி
முழக்கங்களுக்குப் பின்னால் இருந்த வணிக உத்திகளை அறந்தை நாராயணன் ‘தமிழ்
சினிமாவின் கதை’ என்ற நூலில் விமர்சிக்கிறார். இந்த விமர்சனம் ‘நாடோடி
மன்னனுக்கும்’ பொருந்தும், ‘உலகம் சுற்றும் வாலிபனுக்கும்’ பொருந்தும்,
‘அன்பே சிவத்துக்கும்’ பொருந்தும், நம் சீமானின் தம்பிக்கும்
பொருந்தும். கீழே வருவது அறந்தை நாரயணின் ‘சிவப்பு மல்லி’ குறித்த
விமர்சனம்:

1980 ல் ஏ.வி.எம் கூட்டத்திலிருந்து மெய்யப்பச் செட்டியாரின் மைந்தர்கள்
‘முரட்டுக்காளை’ என்றொரு பிரமாண்டமான பொழுதுபோக்குப் படத்தை
வெளியிட்டனர். அது நடந்து கொணடிருந்த போது ஆந்திராவில் ஒரு தெலுங்குப்
படம் வசூலை அள்ளிக் குவித்துக் கொண்டிருப்பதாக சினிமா வட்டாரத்தில்
பேச்சு அடிபட்டது. அந்தப் படம் ‘எர்ரமல்லி’. ஆந்திர மாநிலக்
கம்யுனிஸ்டுகள் உருவாக்கிய படம். சகோதரர்கள் அந்தப் படத்தைப் பார்த்தனர்
சிக்கனமான செலவில் தயாரிக்கக் கூடிய ‘ப்ருவ்ட் சப்ஐக்ட்’ என்பதை
உணர்ந்தனர். தேசமெங்கும் முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடியால்
அமைதியின்மையும் வாழ்க்கை நெருக்கடியும்… அதனை எதிர்த்து விவசாயிகள்
தொழிலாளிகள் இளைஞர்கள் மாணவர்கள் மத்தியதர வர்க்கத்தினர் அனைவரும்
போராடிக் கொண்டிருக்கும் புறச் சூழ்நிலை.

இதன் எதிரொலியாக அமிதாப்பச்சன் நடிக்கும் இந்தி மசாலாப் படங்களிலும் -
ஏன் ரஜினிகாந்த் நடித்த தமிழ் ‘காளி’ படத்தி லும் - போராட்டக்கார இளைஞன்
கம்யுனிஸ்டாகவும் கையில் செங்கொடி பிடிப்பவனாகவும் படங்களில் வரத்
தொடங்கியிருந்தான். எர்ரமல்லி ப்ரூவ்ட் சப்ஜெக்டை ஏ.வி.எம் சகோதரர்கள்
வாங்கினர். தமிழுக்கு தகுந்த மாதிரி திரைக்கதை எழுத வைத்து ‘சிவப்பு
மல்லி’ என்ற படத்தை 1981 ல் வெளியிட்டனர். தமிழ்ப் படத்துக்கு வசனம்
எழுதி இயக்கியவர் இராம.நாராயணன் . நிலப்பிரபுத்துவத்தையும்
முதாலாளித்துவத்தையும் எதிர்த்து எழுந்த இரு கோபம் கொணட இளைஞர்களின்
கதை. கடிகாரத்தைப் பின்னுக்குத் தள்ளிச் சுரண்டும் முதலாளி அவனுக்கு
நல்லவளான ஒரு மனைவி கோமாளிகளான மூன்றுநிலப்பிரபுகள். நிலப்பிரபுவுக்கு
ஒரு மகள்…. என்று தமிழில் (மாற்றப்பட்ட) திரைக்கதை. வண்ணத்தில்
நூற்றுக்கணக்கான கம்யுனிஸ்ட் கட்சிக் கொடிகள், ஊர்வலத்தில் லெனின் படம்
கூடவே பெரியார், அண்ணாத்துரை படங்கள். கம்யுனிஸ்ட் கட்சிக் கொடிகளையும்,
சில வசனங்களையும் நீக்கி விட்டால் ‘சிவப்பு மல்லி’ - ஒரு எம்.ஜி.ஆர்
பாணிப்படம்; அபாரமான வசூல். (தமிழ் சினிமாவின் கதை பக்:714)

தம்பி திரைப்படத்திலும் இரு மேற்கோள்களையும் ஒரு வசனத்தையும் நீக்கி
விட்டால் சீமானின் தம்பி அசலான விஜயக்காந் பாணிப்படம். இராம.நாராயணனுக்கு
‘முரட்டுக்காளையை’ தயாரித்த ஏ.வி.எம் நிறுவனமென்றால் சீமானுக்கு ‘ஜீன்ஸ்’
படத்தைத் தயாரித்த முரளி மனோகர். ஏ.வி.எம்மும் இராம.நாராயணனும் சேர்ந்து
தமிழ்த் தொழிலாளர்கள் விவசாயிகள் மாணவர்கள் தலையில் மிளகாய்
அரைத்தார்கள் என்றால்; முரளி மனோகரும் சீமானும் தமிழகத் தமிழர்களுடன்
சேர்த்து ஈழத் தமிழர்களின் தலையிலும் மிளகாய் அரைக்கிறார்கள்….

இன்று புலம் பெயர்ந்த தேசங்களில் ஏறக்குறைய பத்து இலட்சம் ஈழத்தமிழர்கள்
வாழ்கிறார்கள். இவர்களே தமிழ்த் திரைப்படங்களின் வருவாயில் கணிசமான
பகுதியைத் தீர்மானிப்பவர்களாக விளங்குகிறார்கள் என்றும்
சொல்லப்படுகிறது. ஈழத்தமிழர்களின் சினிமாக் கிறுக்கு மற்ற எந்த தேசிய
இனத்தவர்களின் சினிமாக் கிறுக்கை விடவும் சற்றும் குறைந்ததல்ல.
‘காதலுக்கு மரியாதை’ ‘ஆட்டோ கிராப்’ போன்ற கிறுக்குத்தனமான
திரைப்படங்களை புகலிடங்களில் பெரும் வெற்றியோடு ஓட வைத்தவர்கள் இவர்கள்.
பாரிஸ் நகரத்தில் இதுவரை திரையிடப்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் அதிக
காட்சிகள் ஓடிய திரைப்படம் ‘கப்டன் பிரபாகரன்’. அந்தப் பெயருக்காகவே அத்
திரைப்படம் ஓட்டமாக ஓடியது. இதே வணிக உத்தியோடு இப்போது சீமானின் தம்பி
திரைப்படமும் புகலிட தேசங்களில் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடியது.

தமிழீழ விடுதலைப் போராளிகளின் தலைமைகள் மீதும் அவர்களின் குறுந்
தேசியவாதப் பண்புகளின் மீதும் நமக்கு ஆயிரம் விமர்சனங்கள் இருக்கின்றன
என்பதற்காகச் சிங்களப் பேரினவாத அரசுகளின் இன அழிப்புக் கொடுமைகளையும்
ஈழப் போராட்டத்தின் தோற்றுவாய்க்கான நியாயமான காரணிகளையும்
போராட்டத்தில் ஏராளமான மக்களும் அடிமட்டப் போராளிகளும் செய்த வீரஞ்
செறிந்த தியாகங்களையும் நாம் மறந்து விடப் போவதில்லை. ஈழப்
போராட்டத்துக்கு தமிழகத் தோழர்கள் செய்த பங்களிப்புகளும் அளப்பெரியன.
அத் தோழர்கள் ஈழத் தமிழர்களின் உரிமைகளுக்காக தீயில் எரிந்தார்கள்.
மாணவர்களும் இளைஞர்களுமாகத் திரண்டு ஈழ அகதிகளுக்குப் பெரும் உதவிகளைச்
செய்தார்கள். பல தோழர்கள் ஈழப் போராட்டத்தின் நியாயங்களைப் பரப்புரை
செய்வதையே தமது வாழ்நாள்ப் பணியாகக் கொண்டார்கள். பயிற்சி முகாம்களில்
ஆயுதப் பயிற்சி பெற்று ஈழத்தில் களப் போராளிகளாகவும் சில தமிழகத்
தோழர்கள் இறங்கியிருக்கிறார்கள். ஈழப் போராட்டத்துக்கு பல்வேறு
வழிகளில் உதவிகளைப் புரிந்ததால் எண்ணுகணக்கற்ற தோழர்கள் சிறைக்
கொட்டடிகளில் ஆண்டு கணக்காக அடைக்கப்பட்டார்கள். வாக்கு, மனம், காயம்
எனச் சகலத்தையும் தமிழ்ப் போராட்டத்துக்கு ஒப்படைத்த சில தோழர்கள்
சகோதரப் படுகொலைகளைத் தொடர்ந்து விரக்தியடைந்து தோழர் பாவரசுவைப்
போல மனநோயாளிகளாக மாறிக் காணாமலேயே போய்விட்டார்கள். ஆக இவை எல்லாம்
சேர்ந்தது தான் ஈழப்போராட்டத்தின் வரலாறு.

இன்று ஈழ விடுதலைப் போரட்டம் குறுந் தேசிய வெறியாலும் கலாச்சார
அடிப்படைவாதத்தாலும் ஏகாதிபத்திய அடிபணிவாலும் பாஸிஸத்தாலும் திசை தவறிப்
போயிருக்கலாம் . ஆனால் ஈழப் போராட்டத்தின் தோற்றுவாய்க் காரணங்களாய்
அமைந்த இன ஒடுக்குமுறைக் காரணிகள் அப்படியே தான் இருக்கின்றன. அரசியல்,
இராணுவ முட்டுச் சந்துகளில் அகப்பட்டிருக்கும் ஈ ழவிடுதலைப்
போராட்டத்தைச் சனநாயகப் படுத்துவதும் பாஸிஸத்தைத் தோற்கடிப்பதுவுமே
ஈழப் போராட்டத்தை அடுத்த படியை நோக்கி நகர்த்தும் வழியாக இருக்கும்.
இத்திசை நோக்கி நகர்வதே சமூகப் போராளிகளின் அக்கறையாக இருக்கும். ஆனால்
தமிழீழ விடுதலையின் ஆதரவாளராகச் சொல்லப்படும் திரைப்பட வியாபாரி
சீமானுக்கு இவையெல்லாம் ஒரு பொருட்டேயில்லை. அவர் பிரபாகரன் எனற
தனிமனிதனையே ஈழப்போராட்டமாக உருவகித்து பத்திரிகைகளிலும் வானொலிகளிலும்
பேட்டிகளை வழங்கிக் கொண்டிருக்கிறார். புறநானூற்றின் நிகழ்காலம
பிரபாகரன் என்று அவர் தனிமனிதத் துதியைப் பாடிக் கொண்டிருக்கிறார்.
விடுதலைப் புலிகள் ஆதரவு, தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம், பெரியார்,
அம்பேத்கர் என்று சொற்க் குவியல்களை உதிர்ப்பதின் மூலம் அவர் ஊடகங்களில்
- குறிப்பாகப் புலம்பெயர் ஊடகங்களில் - தன்னை எப்போதும் தக்க வைத்துக்
கொள்கிறார். இதனூடாக அவர் தனது வணிக வலையைக் கவனமாகப் பின்னுகிறார்.

சீமானின் வணிகப் புத்தி மிகவும் வெளிப்படையானது. தம்பி திரைப்படத்தில்
நடிப்பதற்கு மாதவனைத் தவிர எந்த நடிகர்களும் தயாராக இருக்கவில்லை என்று
அவர் வியாபார மதிப்புள்ள உச்ச நட்சத்திரங்களைக் குறித்துப்
புலம்புகிறார். ‘பாதை தெரியுது பார்’ இயக்குனர் நிமாய்கோசும் ‘ஏழாவது
மனிதன்’ இயக்குனர் ஹரிகரனும் ‘கண் சிவந்தால் மண் சிவக்கும்’ இயக்குனர்
சிறீதர் ராஜனும் உச்ச நட்சத்திரங்களின் தேதிகளுக்காகச் சீமானைப் போல
புலம்பவில்லை. அவர்கள் புது முகங்களையும் வணிக மதிப்பற்ற நடிகர்களையும்
வைத்தே காலத்தால் அழியாத திரைப்படங்களை உருவாக்கிக் காட்டினார்கள். ஆனால்
சீமானோ சே குவேரா பனியனை அணிந்து நடிக்க மாதவனைத் தவிர எந்தத் தமிழ்
நடிகனுக்கும் துணிவில்லை எனறு பழித்துப் பேசிய அதே நாவால்தான் தனது
அடுத்த படத்தில் விஜய் அல்லது விக்ரம் நடித்தால் சிறப்பாக இருக்கும் என
ஆனந்த விகடன் ஊடாக உச்ச நட்சத்திரங்களிடம் மனுக் கொடுக்கிறார்.

அம்ஸ்ரர்டாமில் கஞ்சா விற்கும் கோப்பிக் கடைகளின் முகப்பில் பொப்
மார்லியின் உருவத்தை வணிக இலச்சினையாகப் பொறித்திருப்பார்கள். ஆயத்த
ஆடைகள் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் பனியன்களில் சே குவேராவின்
உருவத்தை அச்சிட்டுச் சந்தைப்படுத்துவார்கள். அதே போல் இயக்குனர்

சீமானுக்குத் தனது திரைப்படத்தைச் சந்தைப்படுத்த பிரபாகரன் ஒரு வியாபார
இலச்சினை.

ஈழப் பிரச்சினை அவருக்கு ஒரு ‘ப்ரூவ்ட் சப்ஜெக்ட்’.
இலங்கையில் நடைபெறும் யுத்தத்தால் ஆதாயம் அடைபவர்கள் பலர். ஆயுத
வியாபாரிகள், அரசுத் தலைவர்கள், இராணுவ அதிகாரிகள் ஒரு புறம் யுத்தத்தின்
பெயரால் நிதியைச் சுருட்டிக் கொண்டிருக்கிறார்கள். மறுபுறத்தில் தமிழ்த்
தேசியத்தை முழக்கமிடும் பத்திரிகைகள், பல்கலைக் கழகப் பேராசிரியர்கள்,
அறிவு ஜீவிகள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் திட்டமிடலாளர்கள்,
தமிழ்த் தேசியத்தின் வெளிநாட்டு முகவர்கள், கோயில் முதலாளிகள்
போன்றவர்களும் ஈழப் போரட்டத்தின் பெயரால் பெரும் பொருளியல்
ஆதாயங்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். இப்போது இயக்குனர் சீமானும்
தன் பங்குக்கு வாய் நனைக்க வந்துள்ளார். ஆற்றிலே போற வெள்ளம் அண்ணே குடி!
தம்பி குடி!!

ஷோபாசக்தி

Naresh Kumar

unread,
May 14, 2008, 11:35:41 PM5/14/08
to பண்புடன்
ஆஹா! கும்மிக்கு துளியும் சம்பந்தமில்லாத இந்த இழை 66க்கும் மேற்பட்ட
மறுமொழிகளைத் தாண்டி வந்திருக்கிறதே என்று புளங்காகிதப் படுறதா இல்லை
ரெண்டு, மூணு முறை தொடரும் போட்டும் நந்தா தொடர்ந்து எழுதிட்டு
இருக்கிறாரே அதை நினைச்சு சிலாகிக்கிறதான்னு தெரியலை!!!

விஜய் எடுத்தவுடனே அடிச்சு ஆடுறிங்க. பண்புடனுக்கு நல்வரவு!!!

சில விஷயங்களில் கருத்து வேறுபடுகின்றேன். எனக்கு புரியாத விஷயம், கலைஞர்
மீது வைத்த விமர்சனத்தை ஏன் மற்றவர்கள் மீது வைக்கவில்லை என்கிறீர்கள்
ஆனால் இது எந்த வகையில் பார்ப்பனீயம் என்று புரியவில்லை.

அதே போல் விவாதத்திற்கு வராமல் தப்பிப்பதால் அவர் பார்ப்பனர் என்று
கூறுவது எப்படி தகும். கலைஞர் மீதான விமர்சனத்தில் ஒவ்வொருவருக்கு
ஒவ்வொரு நிலைப்பாடு இருக்கும். ஒரு சிலர் அதனை சரி எனலாம், ஒரு சிலர்
அதனை தவறு எனலம், ஒரு சிலர் விமர்சனம் செய்தது சரி ஆனால் முறை தவறு
எனலாம். ஆனால் தவறு என்று சொல்லும் பலர் அவருடய பூணூல்தான் இப்படி
எழுதுவதற்கு காரணம் என்பது போல் கூறியிருக்கின்றனர். அதனாலேயே அவர்
பூணூலால் தாக்கப் படுகிறேன் எனக் கூறியிருக்கலாம்.

நான் ஞாநி சொல்லும் அனைத்தும் சரி என சொல்லவில்லை. ஆனால் அவர் பார்ப்பனர்
போன்ற குற்றச்சாட்டுகளை என்னால் ஏற்றுக் கொள்ள முடிய வில்லை. இப்படி
காரணம் சொல்லி அவரையும் புறம் தல்ளி விட்டு நாம் அடையப் போவது என்ன?

தொடர்ச்சியாக இட ஒதுக்கீடுக்கு ஆதரவு தெரிவிப்பவர், நீயா நானாவில் ஒரு
பார்ப்பனர் எங்களுக்குள் சாதி பாகுப்பாடு இல்லை என பார்ப்பனர்களுக்கு
கொடி பிடிக்க, அவர்களைப் பார்த்து உங்களில் எத்தனை பேர் ஒரு தலித்
பையனையோ, பெண்ணையோ உங்கள் பெண்ணுக்கோ, பையனுக்கோ மணமுடிக்க
முன்வருகிறீர்கள் என கேட்க ஒருவரும் முன்வரவில்லை. இதுதான் உங்கள்
நிலைப்பாடு, பேச்சில் மற்றும்தான் சீர்திருத்தம் செய்வீர்கள் என்
நேரிடையாக சாடினார். இது போன்ற விஷயங்களால் அவர் பார்ப்பனர், அதனால்தான்
அப்படி செய்கிறார் போன்ற குற்றச்சாட்டுகளை என்னால் ஒத்துக் கொள்ள
முடியவில்லை.

புரிதலுக்கு நன்றி!
> read more »...

Asif Meeran AJ

unread,
May 15, 2008, 3:23:23 AM5/15/08
to panb...@googlegroups.com

ஆஹா! கும்மிக்கு துளியும் சம்பந்தமில்லாத இந்த இழை 66க்கும் மேற்பட்ட
மறுமொழிகளைத் தாண்டி வந்திருக்கிறதே என்று புளங்காகிதப் படுறதா இல்லை
ரெண்டு, மூணு முறை தொடரும் போட்டும் நந்தா தொடர்ந்து எழுதிட்டு
இருக்கிறாரே அதை நினைச்சு சிலாகிக்கிறதான்னு தெரியலை!!!


:-))))
உண்மை. கும்மிகள் ஒரு புறமிருந்தாலும் ஆழமான விவாதங்களுக்குத் தங்களை உட்படுத்தவும்
பண்புடன் நண்பர்கள் தயாராக இருப்பதையே இது  உணர்த்துகிறது. எல்லாம் எடுத்துக் கொள்ளப்படும்
விசயத்தில் இருக்கிறது. இதில் விஜய் கோபால்சாமி ஜெயசூர்யா மாதிரி எடுத்ததுமே அடித்து ஆடத்
துவங்கியதால் சென்னை சூப்பர் கிங்க்ஸின் நந்தா தடுப்பாட்டத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார் :-)
 

சில விஷயங்களில் கருத்து வேறுபடுகின்றேன். எனக்கு புரியாத விஷயம், கலைஞர்
மீது வைத்த விமர்சனத்தை ஏன் மற்றவர்கள் மீது வைக்கவில்லை என்கிறீர்கள்
ஆனால் இது எந்த வகையில் பார்ப்பனீயம் என்று புரியவில்லை.

இது ஒருவகையான குறியீடாகத்தான் பார்க்கப்பட வேண்டும் என்று கருதுகிறார்கள்
வயதில் மூத்த எத்தனையோ தலைவர்கள் இருக்க குறிப்பாகக் கருணாநிதியை மட்டும் ஓய்வு
பெறச் சொல்வது அப்படியொரு ஐயத்தை ஏற்படுத்தியிருக்கிறதென்று கருதுகிறேன்

 
அதே போல் விவாதத்திற்கு வராமல் தப்பிப்பதால் அவர் பார்ப்பனர் என்று
கூறுவது எப்படி தகும். கலைஞர் மீதான விமர்சனத்தில் ஒவ்வொருவருக்கு
ஒவ்வொரு நிலைப்பாடு இருக்கும். ஒரு சிலர் அதனை சரி எனலாம், ஒரு சிலர்
அதனை தவறு எனலம், ஒரு சிலர் விமர்சனம் செய்தது சரி ஆனால் முறை தவறு
எனலாம். ஆனால் தவறு என்று சொல்லும் பலர் அவருடய பூணூல்தான் இப்படி
எழுதுவதற்கு காரணம் என்பது போல் கூறியிருக்கின்றனர். அதனாலேயே அவர்
பூணூலால் தாக்கப் படுகிறேன் எனக் கூறியிருக்கலாம்.

பூணூலை மட்டுமே வைத்துக் கொண்டு ஒருவரை விமர்சிப்பது தவறான முன்னுதாரணமாக
இருக்குமென்றுதான் நானும் வலியுறுத்துகிறேன். ஞாநியின் சில நிலைப்பாடுகள் அவர் பேசும்
கருத்துக்களோடு முரண்படும்போது அவர் விமர்சனத்திற்குள்ளாகிறார். அந்த் அவிமர்சனங்களை
அவர் நேர்மையோடு அணுகி பதில் சொல்லாமல் ஒதுங்கும்போது அவ்ரது நம்பகத்தன்மைக்குக் குந்தகம்
ஏற்பட்டு விடுகிறது. தான் சொல்வதில் மட்டும்தான் உண்மை இருக்கிறது எதிர்க்குரல்கள் கண்டுகொள்ளாமல்
விடப்ப்ட வேண்டியவை என்பது போன்ற தோற்றத்தை அவர் உருவாக்குவதால் அவருக்க்குண்டான எதிர்ப்பும் அதிகமாகிறதோ என்று கருத வேண்டியிருக்கிறது

 
நான் ஞாநி சொல்லும் அனைத்தும் சரி என சொல்லவில்லை. ஆனால் அவர் பார்ப்பனர்
போன்ற குற்றச்சாட்டுகளை என்னால் ஏற்றுக் கொள்ள முடிய வில்லை. இப்படி
காரணம் சொல்லி அவரையும் புறம் தல்ளி விட்டு நாம் அடையப் போவது என்ன?

இதே கேள்விதான் எனக்கும் இருக்கிறது
ஆனால் சமயங்களில் ஞாநியின் குரலில் அதிகார மைய்த்தினோடு இணைந்து உறவாடும் தொனி
தென்படுவதைக் காணும்போது அவருக்கென்று தனிப்பட்ட நிலைப்பாடு இல்லையோ என்று எண்ணம்
பிறக்கிறது


தொடர்ச்சியாக இட ஒதுக்கீடுக்கு ஆதரவு தெரிவிப்பவர், நீயா நானாவில் ஒரு
பார்ப்பனர் எங்களுக்குள் சாதி பாகுப்பாடு இல்லை என பார்ப்பனர்களுக்கு
கொடி பிடிக்க, அவர்களைப் பார்த்து உங்களில் எத்தனை பேர் ஒரு தலித்
பையனையோ, பெண்ணையோ உங்கள் பெண்ணுக்கோ, பையனுக்கோ மணமுடிக்க
முன்வருகிறீர்கள் என கேட்க  ஒருவரும் முன்வரவில்லை. இதுதான் உங்கள்
நிலைப்பாடு, பேச்சில் மற்றும்தான் சீர்திருத்தம் செய்வீர்கள் என்
நேரிடையாக சாடினார். இது போன்ற விஷயங்களால் அவர் பார்ப்பனர், அதனால்தான்
அப்படி செய்கிறார் போன்ற குற்றச்சாட்டுகளை என்னால் ஒத்துக் கொள்ள
முடியவில்லை.

சில விசயங்களில் மட்டுமே அவர் அப்படிச் சொல்கிறார்
சமூக தீர்திருத்தம் பற்றி துடிப்பாகப் பேசிய அதே ஞாநிதான் மாதம் 10000 சம்பளம் கொடுத்தால்
மலம் அள்ள எவனாவது முன்வருவானா என்று தொநு படித்த இளைஞர்களைப் பார்த்து கேள்வி
கேட்டு, அதெ 10000 நான் தருகிறேன் நீங்கள் செய்வீர்களா என்ற  மறுகேள்வி வந்ததும் ' எனக்குப்
பழக்கமில்லை' என்று ஒதுங்கிக் கொண்டவர். இந்த இரட்டைத்தன்மை அவரது சிந்தனையில் இருக்கும்
குழப்பத்தையும் அவரது எழுத்தில் தென்படுபவைகளில் பாதிக்கு மேல் வெறும் பாசாங்கு மட்டுமே என்பதையும்
வெளிப்படுத்துகின்றன

மட்டுமில்லாமல் பொதுக்கருத்துக்களுக்கு மாற்றான சிந்தனைகளை மட்டுமே முன்வைப்பதன் மூலமாகத்
தன்னை அடையாளப்படுத்திக் கொள்லும் முயற்சியில் அவர் தன்னைத் தொலைத்துக் கொண்டிருக்கிறாரோ என்ற பரிதாபமும் அவர் மேல் ஏற்படுகிறது.

அதனை அப்படி எதிர்கொள்ளாமல் பார்ப்பனன், பூணூல் என்று விவாதம் திசை திரும்பும்போது சிலருக்கேனும்
ஞாநியின் மீது அனுதாபம் தோன்ற வழி பிறக்கிறது.

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருளின் மெய்ப்பொருளைக் காண முடியாமல் போகும் சிக்கலான சூழலில் வாழ நாம் நிர்பந்தம் செய்யப்படும்போது உருவாக்கப்படும் கருத்துக்களொடு ஒன்றவே நான் வலியுறுத்தப்[அப்டுகிறோம் என்பது நிதர்சனமான உண்மை. இந்த நிலையிலிருந்து வெளிவந்து சீந்திக்கும்போதுதான் மெய்ப்பொருளை நாம் அடையாளம் காண முடியுமென எண்ணுகிறேன்

(அப்பாடா! கடப்பாரைக்கு இடையிலும் வந்து மொக்கை போட்டாச்சு :-))

pandii durai

unread,
May 15, 2008, 3:46:10 AM5/15/08
to panb...@googlegroups.com

/////அந்த் அவிமர்சனங்களை

அவர் நேர்மையோடு அணுகி பதில் சொல்லாமல் ஒதுங்கும்போது அவ்ரது நம்பகத்தன்மைக்குக் குந்தகம்
ஏற்பட்டு விடுகிறது////////

நந்தா

unread,
May 15, 2008, 5:08:50 AM5/15/08
to பண்புடன்
//சென்னை சூப்பர் கிங்க்ஸின் நந்தா தடுப்பாட்டத்தில் தத்தளித்துக்
கொண்டிருக்கிறார் :-) //


கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. அண்ணாச்சி, கவனிச்சுக்கறேன்.

நான் ப்ரீத்திக்காகவே பஞ்சாப் டீமை சப்போர்ட் பண்ற ஆளு...

Asif Meeran AJ

unread,
May 15, 2008, 5:48:51 AM5/15/08
to panb...@googlegroups.com
நானும்தான். இந்த மாதிரி விசயங்கள்ல நமக்குக் கருத்து வேறுபாடே கிடையாது
குறிப்பா, ஸ்ரீசாந்த் அழுதது ஹர்பஜன் சிங் கன்னத்துல போட்டதுக்கு இல்லையாம்.
எப்பவும் ஆட்டம் முடிஞ்சதும் ப்ரீத்தி யுவராஜை மட்டும் கட்டிப் புடிக்கிறாங்களேன்னு
வயித்தெரிச்சலாம். ஊருக்குள்ள பேசிக்கிறாங்கப்பு. அய்யய்யோ.. இழையோட வேகம்
கெட்டுடப் போகுது. ஞாநியைப் பத்தி மட்டும் பேசலாம் அப்பு.
Reply all
Reply to author
Forward
0 new messages