அக்காக்களும்,தம்பிகளும்!

60 views
Skip to first unread message

Shylaja Narayan

unread,
Apr 16, 2009, 1:47:41 AM4/16/09
to tamizh...@googlegroups.com, பண்புடன்

அக்காக்களை அதிகம் நேசிப்பவர்கள்
தம்பிகள் மட்டுமே!
அக்காவின் ஆழ்மன உணர்ச்சிகள்
தம்பிகளுக்கு மட்டுமே
அதிகம் தெரிந்திருக்கிறது

அண்ணாக்களைப்போல அதிகாரம்
செய்வதில்லை அக்காக்கள்
என்பதாலேயே இழைந்து
நேசிக்கும் தம்பிகளை
அக்காக்கள் ஒருபோதும்
வெறுப்பதில்லை

கல்லாமண்ணா
ரைட்டா தப்பா
ஒருகுடம் தண்ணி ஊத்தி
ஒருபூ  பூத்தது
தாயம், அஞ்சுகல்லு ஆட்டம்
பல்லாங்குழிச்சோழி

ஊஞ்சல் ஓட்டம்
உல்லாசக்கண்ணாமூச்சி

அக்காக்களின் பிரத்தியேக விளையாட்டுகளை
ஆதரிப்பது தம்பிகளே!

 


கோயிலுக்குக்கூடவந்து
சிதறத்தேங்காய் உடைத்து'
சிரித்துப்பெருமையுடன் நிற்கும்
சின்னத்தம்பிகளை நினைத்தாலே
சிலிர்க்கிறது அக்காக்களுக்கு

பட்டுப்பூச்சிகளைத்
தொட்டுப்பிடித்து
மெல்லத்தலைசீவி
வண்ணச்சிறகுகளை
வலிக்காமல் வருடுவதுபோல
வளர்க்கிறார்கள் தம்பிகளை
அன்பான அக்காக்கள்

தங்கள் கனவுகளையும்'ஆசைகளையும்
சேமித்துக்காப்பாற்றும் தம்பிகளை
அக்காக்கள் மறப்பதில்லை


அக்காக்களின் கனவுகளுக்கு
விடிந்தபின்னும் தம்பிகள் மட்டுமே
விளக்கம் சொல்லுவார்கள்

அரைநிஜார் அணிந்த தம்பிகள்
அர்த்தராத்திரியில் கிற்றுக்கொட்டாய்
சினிமாபார்த்துத்திரும்புகையில்
சிங்கம்போல வழித்துணையாய்நடந்துவர
அங்கமேபூரித்துப்போகும்
அக்காக்கள் பலருக்கு!


மத்தாப்புச்சூடுகண்ட தம்பியின்விரல்நுனியும்
முதல்முத்தம்வாங்கிய பாண்டியாட்டச்சில்லும்
மயிலிறகைமறைத்துவைத்த கணக்குப்புத்தகமும்
வண்ணத்துப்பூச்சியைப்பிடித்து,
வால்பையன்களோடுசேர்ந்து
வத்திப்பெட்டியில் அடைத்தநிகழ்வும்
தாவணி அணிந்த முதல்நாளும்
தம்பிகளோடு கூடிக்களித்த நேரங்களும்
அக்காக்களின் அன்றாட வாழ்வில்
அடிக்கடி வந்துபோகும் நினைவுகள்!
 
 
பிகு..
கவிதை , வலை  மற்றும் குழுமத்தம்பிகளுக்கு சமர்ப்பணம்:)

 

 

Ahamed Zubair A

unread,
Apr 16, 2009, 1:59:56 AM4/16/09
to பண்புடன்
நன்றி அக்கா... இதுக்கு எதிர் கவிதை நாளைக்கு...!!

தம்பிகளும் அக்காக்களும்..! 

2009/4/16 Shylaja Narayan <shyl...@gmail.com>

jmms

unread,
Apr 16, 2009, 2:06:37 AM4/16/09
to tamizh...@googlegroups.com, பண்புடன்


16 ஏப்ரல், 2009 12:47 pm அன்று, Shylaja Narayan <shyl...@gmail.com> எழுதியது:

அக்காக்களை அதிகம் நேசிப்பவர்கள்
தம்பிகள் மட்டுமே!



அப்படிப்போடுங்க...:)


அக்காவின் ஆழ்மன உணர்ச்சிகள்
தம்பிகளுக்கு மட்டுமே
அதிகம் தெரிந்திருக்கிறது

அண்ணாக்களைப்போல அதிகாரம்
செய்வதில்லை அக்காக்கள்

 


என்பதாலேயே இழைந்து
நேசிக்கும் தம்பிகளை
அக்காக்கள் ஒருபோதும்
வெறுப்பதில்லை


அதானே?.

கல்லாமண்ணா
ரைட்டா தப்பா
ஒருகுடம் தண்ணி ஊத்தி
ஒருபூ  பூத்தது
தாயம், அஞ்சுகல்லு ஆட்டம்
பல்லாங்குழிச்சோழி

ஊஞ்சல் ஓட்டம்
உல்லாசக்கண்ணாமூச்சி

அக்காக்களின் பிரத்தியேக விளையாட்டுகளை
ஆதரிப்பது தம்பிகளே!


கோலிக்காய் விடுபட்டுடுச்சு..

 


கோயிலுக்குக்கூடவந்து
சிதறத்தேங்காய் உடைத்து'
சிரித்துப்பெருமையுடன் நிற்கும்
சின்னத்தம்பிகளை நினைத்தாலே
சிலிர்க்கிறது அக்காக்களுக்கு

பட்டுப்பூச்சிகளைத்
தொட்டுப்பிடித்து
மெல்லத்தலைசீவி
வண்ணச்சிறகுகளை
வலிக்காமல் வருடுவதுபோல
வளர்க்கிறார்கள் தம்பிகளை
அன்பான அக்காக்கள்

தங்கள் கனவுகளையும்'ஆசைகளையும்
சேமித்துக்காப்பாற்றும் தம்பிகளை
அக்காக்கள் மறப்பதில்லை


கண்டிப்பா..


அக்காக்களின் கனவுகளுக்கு
விடிந்தபின்னும் தம்பிகள் மட்டுமே
விளக்கம் சொல்லுவார்கள்

அரைநிஜார் அணிந்த தம்பிகள்
அர்த்தராத்திரியில் கிற்றுக்கொட்டாய்
சினிமாபார்த்துத்திரும்புகையில்
சிங்கம்போல வழித்துணையாய்நடந்துவர
அங்கமேபூரித்துப்போகும்
அக்காக்கள் பலருக்கு!


:)))

ஆமா ஆனா அவன் மனைவியோட இப்படி போனா?.. 


மத்தாப்புச்சூடுகண்ட தம்பியின்விரல்நுனியும்
முதல்முத்தம்வாங்கிய பாண்டியாட்டச்சில்லும்
மயிலிறகைமறைத்துவைத்த கணக்குப்புத்தகமும்
வண்ணத்துப்பூச்சியைப்பிடித்து,
வால்பையன்களோடுசேர்ந்து
வத்திப்பெட்டியில் அடைத்தநிகழ்வும்
தாவணி அணிந்த முதல்நாளும்
தம்பிகளோடு கூடிக்களித்த நேரங்களும்
அக்காக்களின் அன்றாட வாழ்வில்
அடிக்கடி வந்துபோகும் நினைவுகள்!

ம். அருமை....

பெண் பார்க்க வந்த போது , மாப்பிள்ளையை பற்றி நல்லது கெட்டது சொல்வதும்....

ம்.  கோழ் மூட்டி அடி வாங்கித்தருவது... இன்னும் பல இருந்தாலும் கவிதை அழகாகிவிட்டது எளிமையான நினைவால்...


நிஜத்தில் எனக்கு தம்பி இல்லை.. ஆனா இப்ப உலகம் பூரா....

நல்ல கவிதை அக்கா...( தங்கை பற்றி ...???:)) )




--
சாந்தி
தன்னைப்போல் பிறரையும் நேசி..
http://punnagaithesam.blogspot.com/ =============================

பிரேம்குமார்

unread,
Apr 16, 2009, 2:08:25 AM4/16/09
to panb...@googlegroups.com

மிக்க நன்றி அக்கா :)

தஞ்சை-மீரான்

unread,
Apr 16, 2009, 2:29:37 AM4/16/09
to panb...@googlegroups.com, tamizh...@googlegroups.com
மறைந்திருக்கும் அக்கா - தம்பி பாச பெருமைகளை,
வெளிச்சம் இட்டு காட்டியிருக்கும்
 
சைலு அக்காவிற்கு மனம் நிறைந்த நன்றிகள்.

2009/4/16 பிரேம்குமார் <prem.kav...@gmail.com>

thevan mayam

unread,
Apr 16, 2009, 9:54:10 PM4/16/09
to panb...@googlegroups.com, tamizh...@googlegroups.com

அண்ணாக்களைப்போல அதிகாரம்
செய்வதில்லை அக்காக்கள்
என்பதாலேயே இழைந்து
நேசிக்கும் தம்பிகளை
அக்காக்கள் ஒருபோதும்
வெறுப்பதில்லை

அழகான சொற்கள்!!
அக்கா இல்லாத
அண்ணன் இல்லாதவன்
நான்!!

தேவா!!
http://abidheva.blogspot.com/

2009/4/16 Shylaja Narayan <shyl...@gmail.com>

Shylaja Narayan

unread,
Apr 16, 2009, 10:46:52 PM4/16/09
to panb...@googlegroups.com
இன்னிக்கு எதிர்பார்க்கறேன் அன்புத்தம்பியே!(ஹ்ம்ம் எல்லாம்  நாம முதல்ல எழுதினாத்தான் பதில்  வருதுப்பா:))))

2009/4/16 Ahamed Zubair A <ahamed...@gmail.com>

Shylaja Narayan

unread,
Apr 16, 2009, 10:54:44 PM4/16/09
to panb...@googlegroups.com


2009/4/17 thevan mayam <theva...@gmail.com>

அண்ணாக்களைப்போல அதிகாரம்
செய்வதில்லை அக்காக்கள்
என்பதாலேயே இழைந்து
நேசிக்கும் தம்பிகளை
அக்காக்கள் ஒருபோதும்
வெறுப்பதில்லை

அழகான சொற்கள்!!
அக்கா இல்லாத
அண்ணன் இல்லாதவன்
நான்!!

தேவா!!
http://abidheva.blogspot.com/
>>>>>>>>>> நன்றி தேவா..

 





Ahamed Zubair A

unread,
Apr 17, 2009, 2:52:21 AM4/17/09
to tamizh...@googlegroups.com, பண்புடன்
தம்பிகள் அதிகம் நேசிப்பது
அக்காக்களை மட்டுமே!
தம்பிகளின் கண்ணசைவு
அக்காக்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது..!

அண்ணாக்களைப்போல அதிகாரம்

செய்வதில்லை தம்பிகள்


என்பதாலேயே இழைந்து

நேசிக்கும் அக்காக்களை
தம்பி்கள் ஒருபோதும்


வெறுப்பதில்லை

சிகரெட்டு, சினிமா
சைட்டு, பீர்
தம்பிகளின் பிரத்யேக

விளையாட்டுகளை ஆதரிப்பது
அக்காக்கள்..!

கோயிலுக்கு கூட வந்து
சைட் அடிக்கும்போது
அந்த சைட்டின் பேர்முதல்
அத்தனையும் புட்டு வைக்கும்
அக்காக்களை நினைத்தாலே
ஆனந்தம் தம்பிகளுக்கு..

பட்டாம்பூச்சி கூட்டினைவிட்டு
பறக்கும் காலம் வரும்
என்பதாலேயே அக்காக்களை
அன்போடு பார்க்கிறார்கள் தம்பிகள்.

எதிர் வீட்டு ஜன்னல்
முதல் எல்லாவிதத்திலும்
உடனிருக்கும் அக்காக்களை
எப்போதும் மறப்பதில்லை
தம்பிகள்...

தாவணிபோட்ட அக்காக்களை
கல்லூரி விடும்போது
கூடவரும் சைட்டுக்கு
அக்கா கொடுக்கும்
இண்ட்ரோவில் அங்கமே பூரிக்கும்
தம்பிகளுக்கு..

தான்பெற்ற பிள்ளைகள்
வளர்ப்பதுபோல் தம்பியையும்
இடுப்பில் தூக்கி வளர்க்கும்
அக்காவை இன்னொரு அம்மாவாய்ப்
பார்க்கிறார்கள் தம்பிகள்..!

பி.கு.: எதிர்கவிதை போட்டாச்சுல்லா...

jmms

unread,
Apr 17, 2009, 2:57:49 AM4/17/09
to tamizh...@googlegroups.com, பண்புடன்


17 ஏப்ரல், 2009 1:52 pm அன்று, Ahamed Zubair A <ahamed...@gmail.com> எழுதியது:

தம்பிகள் அதிகம் நேசிப்பது
அக்காக்களை மட்டுமே!
தம்பிகளின் கண்ணசைவு
அக்காக்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது..!

அட.. 

அண்ணாக்களைப்போல அதிகாரம்
செய்வதில்லை தம்பிகள்
என்பதாலேயே இழைந்து
நேசிக்கும் அக்காக்களை
தம்பி்கள் ஒருபோதும்
வெறுப்பதில்லை


சரிங்க..

சிகரெட்டு, சினிமா
சைட்டு, பீர்
தம்பிகளின் பிரத்யேக
விளையாட்டுகளை ஆதரிப்பது
அக்காக்கள்..!

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. சைக்கிள் கேப்புல விமானமே ஓட்டுவீகளே விட்டா?..


கோயிலுக்கு கூட வந்து
சைட் அடிக்கும்போது
அந்த சைட்டின் பேர்முதல்
அத்தனையும் புட்டு வைக்கும்
அக்காக்களை நினைத்தாலே
ஆனந்தம் தம்பிகளுக்கு..

ஆனந்தமா?.. இருக்கட்டும் இருக்கட்டும்..


பட்டாம்பூச்சி கூட்டினைவிட்டு
பறக்கும் காலம் வரும்
என்பதாலேயே அக்காக்களை
அன்போடு பார்க்கிறார்கள் தம்பிகள்.

லைன் கிளியராகவா?


எதிர் வீட்டு ஜன்னல்
முதல் எல்லாவிதத்திலும்
உடனிருக்கும் அக்காக்களை
எப்போதும் மறப்பதில்லை
தம்பிகள்...

நல்லதுங்


தாவணிபோட்ட அக்காக்களை
கல்லூரி விடும்போது
கூடவரும் சைட்டுக்கு
அக்கா கொடுக்கும்
இண்ட்ரோவில் அங்கமே பூரிக்கும்
தம்பிகளுக்கு..

:)))))  ஹி   ஹி  ஹீ யா..


தான்பெற்ற பிள்ளைகள்
வளர்ப்பதுபோல் தம்பியையும்
இடுப்பில் தூக்கி வளர்க்கும்
அக்காவை இன்னொரு அம்மாவாய்ப்
பார்க்கிறார்கள் தம்பிகள்..!

கூலி இல்லா வேலையாளா?..



நல்லாருக்கு பேராண்டி..பாசத்தோட வேசமில்லாம..:)

Naresh Kumar

unread,
Apr 17, 2009, 3:07:16 AM4/17/09
to tamizh...@googlegroups.com, பண்புடன்
கவிதை அருமை!!!
--
நரேஷ்
www.nareshin.wordpress.com

Naresh Kumar

unread,
Apr 17, 2009, 3:18:11 AM4/17/09
to tamizh...@googlegroups.com, பண்புடன்
//அண்ணாக்களைப்போல அதிகாரம்

செய்வதில்லை தம்பிகள்
என்பதாலேயே இழைந்து
நேசிக்கும் அக்காக்களை
தம்பி்கள் ஒருபோதும்
வெறுப்பதில்லை//
 
உண்மையான வரிகள்!!!
 
பொதுவாக, அக்காக்களுக்கு தம்பியையும், அண்ணன்களுக்கு தங்கையையும்தான் பிடிக்கிறது என்றாலும், வரிகளில் வெளிப்படும் கவித்துவமான உணர்வு, நெஞ்சை அள்ளுகிறது!!!!
 
--
நரேஷ்
www.nareshin.wordpress.com

jmms

unread,
Apr 17, 2009, 3:20:59 AM4/17/09
to tamizh...@googlegroups.com, பண்புடன்
 அண்ணன்களுக்கு தங்கையையும்தான் பிடிக்கிறது


நிஜம் எனக்கு என் அண்ணாதான் பிடிக்கும்.

jmms

unread,
Apr 17, 2009, 5:45:18 AM4/17/09
to tamizh...@googlegroups.com, பண்புடன்

ரிஷான் மட்டும் நம்மை  அழைக்காம கல்யாணம் கட்டிக்கிட்டா அருவாளை எடுத்த்திட்டு கத்தாருக்குப்போயிடமாட்டோமா  நட்சத்ரா சாந்தி சுவாதி?:)


ஊறை நியாபகப்படுத்திட்டீகளே அக்கா..

ரிஷானு...உனக்கு சாவு கத்தாருல தாண்டி பச்சி சொல்லுது...

தயவுசெஞ்சு அந்த கல்யாண ஆல்பத்தை ஒளிச்சு வை...



jmms

unread,
Apr 17, 2009, 5:45:55 AM4/17/09
to tamizh...@googlegroups.com, பண்புடன்


17 ஏப்ரல், 2009 4:45 pm அன்று, jmms <jmms...@gmail.com> எழுதியது:

ரிஷான் மட்டும் நம்மை  அழைக்காம கல்யாணம் கட்டிக்கிட்டா அருவாளை எடுத்த்திட்டு கத்தாருக்குப்போயிடமாட்டோமா  நட்சத்ரா சாந்தி சுவாதி?:)


ஊரை   நியாபகப்படுத்திட்டீகளே அக்கா..

jmms

unread,
Apr 17, 2009, 6:01:27 AM4/17/09
to tamizh...@googlegroups.com, பண்புடன்


17 ஏப்ரல், 2009 4:50 pm அன்று, Shylaja Narayan <shyl...@gmail.com> எழுதியது:


2009/4/17 jmms <jmms...@gmail.com>


17 ஏப்ரல், 2009 4:45 pm அன்று, jmms <jmms...@gmail.com> எழுதியது:

ரிஷான் மட்டும் நம்மை  அழைக்காம கல்யாணம் கட்டிக்கிட்டா அருவாளை எடுத்த்திட்டு கத்தாருக்குப்போயிடமாட்டோமா  நட்சத்ரா சாந்தி சுவாதி?:)


ஊரை   நியாபகப்படுத்திட்டீகளே அக்கா.. >>>   ஊறிட்ட இருக்கட்டும் சாந்தி ரிஷானை நாமல்லாம்  மொத்தணும் எனும் நினவு!!  இப்போ இடையின வல்லினம் பிரச்சினை இல்ல விடுங்க:):):)



:))

 


--

Swathi Swamy

unread,
Apr 18, 2009, 12:03:50 AM4/18/09
to panb...@googlegroups.com

ரிஷான் மட்டும் நம்மை  அழைக்காம கல்யாணம் கட்டிக்கிட்டா அருவாளை எடுத்த்திட்டு கத்தாருக்குப்போயிடமாட்டோமா  நட்சத்ரா சாந்தி சுவாதி?:)

நான் ஏற்கனவே திருப்பாச்சில அரிவாளுக்கும், பெங்களூர்ல ஷைலஜாகிட்டே மைபாவுக்கும்  ஆர்டர் கொடுத்துட்டேன்.
இப்போ என்னோட  சந்தேகம் மைபாவால தலையை உடைச்சிட்டு , அரிவாளாலால வெட்டுறாதா இல்லை வெட்டிட்டு உடைக்கிறதா & ரிஷானுக்கு கல்யாணமாச்சு என்பது வதந்தியா அல்லது நம்பலாமா என்பது மட்டும் தான்.

அன்புடன்
சுவாதி

ஊறை நியாபகப்படுத்திட்டீகளே அக்கா..

ரிஷானு...உனக்கு சாவு கத்தாருல தாண்டி பச்சி சொல்லுது...

தயவுசெஞ்சு அந்த கல்யாண ஆல்பத்தை ஒளிச்சு வை...






--
சாந்தி
தன்னைப்போல் பிறரையும் நேசி..
http://punnagaithesam.blogspot.com/ =============================





--
சாவு நெருங்கி வரும் போதும் -
தமிழ் மானம் காத்திரடி பாப்பா!!

http://groups.google.com/group/Piravakam
http://santhappiravagam.blogspot.com/
http://jokes4smile.blogspot.com/
http://puthiyakalithokai.blogspot.com/

Swathi Swamy

unread,
Apr 18, 2009, 12:04:58 AM4/18/09
to panb...@googlegroups.com
யார் தலையை என்று கேட்க வேண்டாம்... புத்திசாலிகளுக்கு தெரியணும் ரிஷானோட தலை தான்னு.... 

17 ஏப்ரல், 2009 11:03 pm அன்று, Swathi Swamy <mswat...@gmail.com> எழுதியது:




ரிஷான் மட்டும் நம்மை  அழைக்காம கல்யாணம் கட்டிக்கிட்டா அருவாளை எடுத்த்திட்டு கத்தாருக்குப்போயிடமாட்டோமா  நட்சத்ரா சாந்தி சுவாதி?:)

நான் ஏற்கனவே திருப்பாச்சில அரிவாளுக்கும், பெங்களூர்ல ஷைலஜாகிட்டே மைபாவுக்கும்  ஆர்டர் கொடுத்துட்டேன்.
இப்போ என்னோட  சந்தேகம் மைபாவால தலையை உடைச்சிட்டு , அரிவாளாலால வெட்டுறாதா இல்லை வெட்டிட்டு உடைக்கிறதா & ரிஷானுக்கு கல்யாணமாச்சு என்பது வதந்தியா அல்லது நம்பலாமா என்பது மட்டும் தான்.

யார் தலையை என்று கேட்க வேண்டாம்... புத்திசாலிகளுக்கு தெரியணும் ரிஷானோட தலை தான்னு....  

அன்புடன்
சுவாதி

ஊறை நியாபகப்படுத்திட்டீகளே அக்கா..

ரிஷானு...உனக்கு சாவு கத்தாருல தாண்டி பச்சி சொல்லுது...

தயவுசெஞ்சு அந்த கல்யாண ஆல்பத்தை ஒளிச்சு வை...






--
சாந்தி
தன்னைப்போல் பிறரையும் நேசி..
http://punnagaithesam.blogspot.com/ =============================


Shylaja Narayan

unread,
Apr 18, 2009, 12:09:11 AM4/18/09
to panb...@googlegroups.com


2009/4/18 Swathi Swamy <mswat...@gmail.com>




ரிஷான் மட்டும் நம்மை  அழைக்காம கல்யாணம் கட்டிக்கிட்டா அருவாளை எடுத்த்திட்டு கத்தாருக்குப்போயிடமாட்டோமா  நட்சத்ரா சாந்தி சுவாதி?:)

நான் ஏற்கனவே திருப்பாச்சில அரிவாளுக்கும், பெங்களூர்ல ஷைலஜாகிட்டே மைபாவுக்கும்  ஆர்டர் கொடுத்துட்டேன்.>>>>>>>>>>>>>
 
அதானபாத்தேன் என்னடாஇது,,சுவாதீஇன்னும்  மைபாவைமண்டைய உடைக்க    இழுக்கலயேன்னு:):):)

இப்போ என்னோட  சந்தேகம் மைபாவால தலையை உடைச்சிட்டு , அரிவாளாலால வெட்டுறாதா இல்லை வெட்டிட்டு உடைக்கிறதா & ரிஷானுக்கு கல்யாணமாச்சு என்பது வதந்தியா அல்லது நம்பலாமா என்பது மட்டும் தான்.>>>>>>>
 
எதுன்னாலும் எனக்கு ஓகே...வரட்டும் ரிஷான்  ஒருகைல அருவாள்,,,,மறுகைல  மைபா...பார்த்துடறேன்   கத்தார்காளைய!!!!!!!
Reply all
Reply to author
Forward
0 new messages