----------------------------------------------
பேரா. கு. ஞானசம்பந்தன் நாடறிந்த தமிழ்ப் பேராசிரியர். எழுத்தாளர் சுஜாதா, பேரா. தொ.ப. அவர்களின் நண்பர். தொ.ப. அவர்களை எனக்கு அறிமுகப்படுத்தினவர் இவரே. கமலகாசன் திரைப்படங்களிலும், சின்னத் திரையிலும் வருபவர். தொலைக்காட்சி பட்டிமன்றுகளில் தலைவராக வீற்றிருப்பவர். அவரது யுட்யூப் ஓடையில் 2.5 லட்சம் தமிழர்கள் கண்டுமகிழ்கின்றனர். தற்போது பல்வேறு வகைப்பட்ட அறிஞர்களைப் பேட்டி எடுத்துவருகிறார். பேரா. கு. ஞா. தொல்லியல் அறிஞர் வெ. வேதாசலம் அவர்களைக் கீழடி பற்றி நீண்ட செவ்வி செய்துள்ளார். 2 பகுதிகளாக இருப்பதை எனக்கு வாட்ஸப் செய்து என் கருத்தைக் கேட்டிருந்தார். முனைவர் வெ. வேதாசலம் அவர்களின் கீழடிப் பேட்டி:
கீழடி உண்மை வரலாறு | Discussion With Archaeologist Dr.Vedachalam
https://www.youtube.com/watch?v=rjza_UGYrO4https://www.youtube.com/watch?v=xLJR8jrjzgYமணலூர் என்று மகாபாரத காலத்திலேயே (மு. இராகவையங்கார், செந்தமிழ், 1910 - அருச்சுனனும், தமிழ்நாட்டு மரபுகளும்) அழைக்கப்பட்ட “கீழடி”யில் பெருஞ்சமயம் இருந்ததா என்ற கேள்விக்கு, இல்லை என்கிறார் திரு. வேதாசலம். ஆனால், மூன்று பானை ஓடுகளில் வேத காலப் பெருந்தெய்வம் வருணன், அவனது சிந்துவெளிச் சின்னமாகிய மகரம் (லிங்க வழிபாடு) இருத்தலைக் கண்டேன். ஹூஸ்டனில் தமிழ்நாடு அறக்கட்டளை மாநாடு நடந்தபோது என் பொழிவைக் கேட்டதைக் குறிப்பிட்டார் கு.ஞா. வி.ஜி. சந்தோஷம் என்னிடம் எடுத்த பேட்டியின் காணொளி வலைக்கண் அனுப்பினேன். முசுவாக (Busy என்பதற்கான தமிழ்ச்சொல். இன்றும் கொங்குநாட்டில் வாழுஞ்சொல் இஃது.) இருக்கும் பேரா. கு.ஞா. நேரம் ஒதுக்கி, முழுக்கப் பார்த்துப் பாராட்டி, மணலூரில் (கீழடி) பெருஞ்சமயம் எனப் பேசுங்கள் என வேண்டுகோள் விடுத்தார். யாரும் பேசாத துறையிது, நீங்கள் செய்யுங்கள் என்றார். வருங்கால ஆய்வுகளுக்கு உதவும் வகையில் ஒரு சிறு அறிமுகம் பேரா. கு.ஞா. காணொளி ஓடையில் செய்ய உத்தேசம். குந்திகை - நாற்படையும் தங்குமிடம், ரத, கஜ, துரக, பதாதிகள்; இப்படைகளை மதுரை நகர மத்தியிலே நிறுத்த முடியாது அல்லவா? எனவே, குந்திகை > கொந்தகை (Cf.Ane-Kundhi, in Vijayanagara.) மேலும், அழகன்குளம் போன்ற துறைமுகங்களில் இருந்து வரும் வணிகப்பொருளை மதுரைக்கும் அனுப்பும் சுங்கச் சாவடி, இந்தியாவின் பல்வேறு கலைகள், தொழில்நுட்பம் சங்கமிக்கும் இடமாக மணலூர் சங்க காலத்தில் விளங்கியமை வெள்ளிடைமலை. மகரவிடங்கர் - சக்தி (ஸ்ரீ கொல்லி/கொற்றி - வருணன்) தம்பதியரின் பரன் குன்றத் தமிழிக் கல்வெட்டு, அதன் முக்கியத்துவம் - கல்வெட்டு மூத்த தெய்வங்கள் என்கிறது; முதலைக்குளம் தமிழ் பிராமி, ஆங்கே பாண்டிய மஹாராஜாக்கள் விடங்கருக்கு அசுவமேத யக்நம் செய்து காசுகள் வெளியிட்டமை போன்றவை பற்றியும், கொங்குதேசத்தை முதலில் வந்தடைந்த பிராமி எழுத்து, கிண்ணிமங்கலம் அருகே கொங்கர் புளியங்குளம் வந்துசேர்தலும், பின்னர் மதிரையைச் சுற்றி எழுத்து தோன்றுதலும் பற்றியும், குடிமல்லத்தில் - இந்தியாவின் முதல் லிங்கம் - வருண விடங்கர், கிண்ணிமங்கலம் பள்ளிப்படைக் காலத்தில் சிவ லிங்கமாக பரிணாம வளர்ச்சியும் சொல்லலாம்.
இந்தியாவின் வானியல் மிகப் பழையது. அண்மையில் பிஞ்சோர் எனும் ராஜஸ்தான் ஊரின் அருகே கொடுமணல் போல, ஒரு இண்டஸ்ட்ரியல் ஸைட்டில் தாயத்துகளில் காணும் 4700 ஆண்டுகால வானியல் பற்றி விளக்கினேன்:
Divine Couple in Ancient Indian Astronomy from Binjor to Adichanallur: Makara Viṭaṅkar & Kolli/Koṟṟavai
http://nganesan.blogspot.com/2021/02/divine-couple-binjor-amulet-to.htmlஸ்ரீ கொல்லி(கொற்றி) மயிடனுடன் போரிடல்:
http://nganesan.blogspot.com/2021/01/veerammalin-kaalai-by-kuparaa-1936.htmlPaṭṭa-Mahiṣī: Proto-Koṟṟavai goddess in Indus civilization (Banawali and Mohenjadaro)
http://nganesan.blogspot.com/2021/01/banawali-mohenjadaro-proto-durga.htmlIndus seal, M-312 ஜல்லிக்கட்டு அல்ல, கொற்றவை போத்துராஜா போர் (Proto-Koṟṟavai war with Mahisha)
http://nganesan.blogspot.com/2021/01/m312-seal-is-not-jallikkattu.htmlபின்னர், அக்கொம்பு சூடி இருப்பவள் கொல்லிப் பாவை. பாவை வழிபாடு சங்க இலக்கியத்தில் உள்ள இரண்டேயிரண்டு கலியாணப் பாடல்களில் பேசப்படுகிறது. பின்னர், ஸ்ரீவைஷ்ணவம், சைவம், சமணம் இளம்பெண்டிர் திருமணம் வேண்டிக் காத்யாயனி (கொல்லி) வழிபாடு இயற்றுவது பாவைப் பாட்டாக மலர்கிறது. திருப்பாவையிலே, ‘ஆழிமழைக் கண்ணன்’ என சிந்துவெளி தெய்வம் வருணன் (கொல்லி கணவன்) வருகிறான். இந்தியாவின் வழக்கங்கள் பல ஆயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து வருபவை.
பாலை, நெய்தல் திணைத் தெய்வதங்கள் (தொல்காப்பியம்) தம்பதியராக, வேள் ஒருவனின் முதுமக்கட்டாழியில் “Appliqueware" ஆக, கிடைக்கின்றனர்.
(1) Śaka Clans, Pallava Royals, Śākya Nāyanār and Bodhidharma
https://nganesan.blogspot.com/2020/09/zen-koan-by-hakuin-and-tamil-proverb.html(2) Indus Crocodile Religion as seen in the Iron Age Tamil Nadu, 16th World Sanskrit Conference Proceedings, Bangkok, Thailand, 2016.
https://archive.org/details/IVCReligionInIronAgeTamilNaduByNGanesan-2016-16thWSC(3)
http://nganesan.blogspot.com/2021/02/kinnimangalam-linga-changes.htmlஇலிங்க வழிபாடு விடங்கர் (கடியால் முதலை) சிந்துவெளியில், போஸ்ட்-ஹரப்பன் காலத்தில் வருணன் எனும் மழுவாள் நெடியோன், பின்னர் சிவலிங்கம் என 100+ கோடி மக்களால் தினந்தோறும் திகழ்கிறது. அதேபோல, இன்னொன்றும் சொல்லலாம். முல்லை நிலத்தில் ஓர் இளைஞன் காதலியை மணக்காமல் காலந்தாழ்த்துகிறான். இப்படிச் செய்தாய் ஆனால், வேறு மாப்பிள்ளை பார்த்து விரைவில் அவள் கலியாணம் மூய்த்துவிடுவர் என்று அறிவுறுத்துகின்றனர். (மூய்த்தல் - முடித்தல், முல்லைத் திணை கொங்கில் இன்னமும் உயிரோடிருக்கும் சங்கச்சொல். ) இந்த அரிய பாடல், ஸ்ரீ கொல்லிப் பாவையின் சின்னமாக எருமைப் பேட்டின் கொம்பு கலியாணச் சீர்களில் இடம்பெற்றிருப்பதைப் பாடுகிறது. இந்தியாவிலே, பஞ்ச திராவிட தேசங்களில் பல ஆயிரம் ஆண்டுகளாக இருந்துவரும் திராவிட உறவின்முறை (Dravidian Kinship. See publications by Emeneau, Trautmann, ...) இது போன்ற எருமைக் கொம்புகளை கொற்றி கோவிலிலும் நாலாயிரம் ஆண்டு முன்னரே அளித்து மக்கள் திருமணம் நிகழ வேண்டினர் போலும். மண்ணால் ஆன எருமைக் கொம்புகள் 'பிர்ரானா' போன்ற சிந்துவெளி ஊர் அகழாய்வுகளில் கிடைக்கின்றன:
கலித்தொகையில், அருமையான முல்லைக்கலிப் பாடல். கலியாணச் சீர்களில் பாவை (காத்யாயனி வழிபாடு - ஸ்ரீமத் பாகவதம்; காத்யாயனி கோவில் ஐஐடி, மெட்ராஸில் உண்டு.) குறியீடாக அவள் தலையணி எருமைப் பெடையின் கொம்பு வைத்து மணவறையில் வழிபடும் செய்தி உள்ள பாடல். விளக்கியவர்: உச்சிமேல் புலவர்கொள் நச்சினார்க்கினியர். இரண்டு ஆண்டுகளுக்கு முன் விரிவாகப் பேசியுள்ளேன். இதுவும் சங்ககாலத்தின் பெருந்தெய்வ வழிபாட்டின் தொடர்ச்சிக் கூறுகளில் ஒன்றாகும்.
சங்க காலத்தில் வருணனில் இருந்து சிவபிரானுக்கு மாறும் இலிங்க வழிபாடு:
https://nganesan.blogspot.com/2020/08/civasvami-in-edakkal-cave-brahmi.htmlபேரா. கு,ஞா. - என் பேட்டி நாள் தெரிந்ததும் சொல்கிறேன். ஏப்ரலில் இருக்கலாம்.
நா. கணேசன்
முல்லைக்கலி - கலியாணச் சீரில் ஸ்ரீகொற்றவையின் எருமைக்கோடு,
https://sangamtranslationsbyvaidehi.com/தமிழ்-உரை-கலித்தொகை/கலித்தொகை 114, சோழன் நல்லுருத்திரன், முல்லை, தலைவியும் தோழியும் சொன்னது
தலைவி:
வாரி நெறிப்பட்டு இரும் புறம் தாஅழ்ந்த
ஓரிப் புதல்வன் அழுதனன் என்பவோ?
“புதுவ மலர் தைஇ எமர் என் பெயரால்
வதுவை அயர்வாரை கண்டு மதி அறியா
ஏழையை” என்று அகல நக்கு வந்தீயாய் நீ 5
தோழி, அவன் உழைச் சென்று
தோழி:
சென்று யான் அறிவேன் கூறுக மற்று இனி
தலைவி:
சொல் அறியாப் பேதை, மடவை, மற்று எல்லா
நினக்கு ஒரூஉம் மற்று என்று அகல் அகலும் நீடு இன்று
நினக்கு வருவதாக் காண்பாய் அனைத்து ஆகச் 10
சொல்லிய சொல்லும் வியங்கொளக் கூறு,
தருமணல் தாழப் பெய்து, இல் பூவல் ஊட்டி,
எருமைப் பெடையோடு எமர் ஈங்கு அயரும்
பெரு மணம் எல்லாம் தனித்தே ஒழிய,
வரி மணல் முன்துறைச் சிற்றில் புனைந்த 15
திரு நுதல் ஆயத்தார் தம்முள் புணர்ந்த
ஒரு மணம் தான் அறியும், ஆயின் எனைத்தும்
தெருமரல் கைவிட்டு இருக்கோ? அலர்ந்த
விரி நீர் உடுக்கை உலகம் பெறினும்
அரு நெறி ஆயர் மகளிர்க்கு 20
இரு மணம் கூடுதல் இல் இயல்பு அன்றே!
தலைவி: வாரி முடித்துத் புறத்தே தாழ விட்ட தலை முடியையுடைய நம் தலைவன் அழுதான் என்று கூறுகின்றனரோ? அவ்வாறு கூறுவார்களாயின், நீ அவனிடம் சென்று, “புதிய மலர்களைக் கட்டி அவளுடைய உறவினர்கள் அவளுக்குத் திருமண ஏற்பாடு செய்வதைக் கண்டும் ஒன்றும் செய்யாத அறிவற்றவனே” என்று நன்றாக எள்ளி நகைத்து விட்டு வா தோழி.
தோழி: அவனிடம் சென்று சொல்வதை அறிவேன். இனி வேறு என்ன சொல்ல வேண்டும்?
தலைவி: மடவாய்! “நீ உன்னுடைய மண விருப்பத்தை அவளுடைய குடும்பத்தாரிடம் சொல்லத் தெரியாத மடப்பம் உடையவன். அதனால் திருமணம் உனக்குரியதாக இல்லாமல் உன்னிடமிருந்து அகலும். நீடிக்காமல் உடனேயே நிகழ்ந்து விடும். அம்மணம் உனக்கே நிகழும் வழிகளை அறிந்து விரைந்து செயலாற்று” என்று அவனிடம் கூறு. நீ கூறும் சொற்களை அவன் ஏற்றுக் கொள்ளும்படி உறுதியுடன் கூறு.
புதுமணல் பெய்து, மனைக்குச் செம்மண் பூசி, பெண் எருமையின் கொம்பை நட்டி, கடவுளை வழிபட்டு என் குடும்பத்தார் நிகழ்த்தும் பெரிய திருமணம் அவனில்லாமல் நிகழும். திட்டுத் திட்டாக உள்ள மணலையுடையத் துறையில் சிற்றில் கட்டி விளையாடிய அழகிய நெற்றியையுடைய தோழியருடன் விளையாடிய பொழுது அவர்கள் அறியாதபடி என்னுடன் தான் புணர்ந்ததை அவன் அறிவான். அவ்வாறு இருக்க நான் உள்ளம் வருந்தி இருக்க வேண்டுமா? நீர் சூழ்ந்த பெரிய உலகத்தையே பெற்றாலும், ஒழுக்க நெறியையுடைய ஆயர் பெண்களுக்கு, இருமணம் நிகழ்வது இயல்பு இல்லையே!
சொற்பொருள்: வாரி நெறிப்பட்டு இரும் புறம் தாஅழ்ந்த ஓரிப் புதல்வன் – வாரி முடித்துத் புறத்தே தாழ விட்ட தலை முடியையுடைய நம் தலைவன், அழுதனன் என்பவோ – அழுதான் என்று கூறுகின்றனரோ, புதுவ மலர் தைஇ எமர் என் பெயரால் வதுவை அயர்வாரை கண்டு மதி அறியா ஏழையை – புதிய மலர்கள் கட்டி என்னுடைய உறவினர்கள் எனக்குத் திருமண ஏற்பாடு செய்வதைக் கண்டும் ஒன்றும் செய்யாத அறிவற்றவனே – என்று – என்று, அகல நக்கு வந்தீயாய் நீ – அவனை நன்றாக எள்ளி நகைத்து விட்டு வருக, தோழி – தோழி, அவன் உழைச் சென்று – அவனருகில் சென்று,
சென்று யான் அறிவேன் கூறுக மற்று இனி – அவனிடம் சென்று சொல்வதை அறிவேன். இனி என்ன சொல்ல வேண்டும்?
மடவை – மடவாய், சொல் அறியாப் பேதை – நீ உன்னுடைய மண விருப்பத்தை அவளுடைய குடும்பத்தாரிடம் சொல்லத் தெரியாத பேதைமை உடையவன், மற்று எல்லா நினக்கு ஒரூஉம் மற்று என்று அகல் அகலும் – அதனால் திருமணம் உனக்குரியதாக இல்லாமல் உன்னிடமிருந்து அகலும், நீடு இன்று – நீடிக்காமல் உடனேயே நிகழ்ந்து விடும், நினக்கு வருவதாக் காண்பாய் – அம்மணம் உனக்கே நிகழும் வழிகளை அறிந்து விரைந்து செயலாற்று, அனைத்து ஆகச் சொல்லிய சொல்லும் வியங்கொளக் கூறு – நீ கூறும் சொற்களை அவன் ஏற்றுக் கொள்ளும்படி உறுதியுடன் கூறுவாயாக,