கவிதை நூல் வெளியீடு

45 views
Skip to first unread message

NilaRaseegan

unread,
Jan 5, 2008, 12:49:02 PM1/5/08
to முத்தமிழ், namb...@googlegroups.com, panb...@googlegroups.com, Pira...@googlegroups.com, il...@googlegroups.com, Tamil2...@googlegroups.com

அன்புள்ள நண்பர்களே,

என்னுடயை இரண்டாவது கவிதைப்புத்தகம்
"மயிலிறகாய் ஒரு காதல்" இன்று வெளியானது.

தற்சமயம் சென்னையில் நடந்து கொண்டிருக்கும் புத்தக கண்காட்சியில்
கடை எண் 5, P15 மற்றும் P24ல் இப்புத்தகம்
கிடைக்கும்.

புத்தக கண்காட்சி முகவரி:

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கில பள்ளியில் நடைபெறுகிறது.(பச்சையப்பன் கல்லூரி எதிரில்)

வாங்கி படித்து,பதிலிடுங்கள்...
 
உங்கள் விமர்சனத்திற்காக காத்திருக்கும் நண்பன்,
நிலாரசிகன்.


--
அள்ளித்தர நட்புடன்,
நிலாரசிகன்.
"தமிழுக்கு நிலவென்று பேர்"
குழுமம்-->  http://in.groups.yahoo.com/group/nilaraseegankavithaigal/
கவிதைகள் வலைப்பூ--> http://nilaraseegan.blogspot.com
சிறுகதைகள் வலைப்பூ-->http://nilaraseegansirukathaigal.blogspot.com/
மழலைகளுக்காக -->http://www.helptolive.org/
Mayil Iragaai Oru Kaathal_NilaRaseegan.jpg

வினையூக்கி செல்வா

unread,
Jan 5, 2008, 1:45:54 PM1/5/08
to panb...@googlegroups.com
valthukkal

நண்பன்

unread,
Jan 5, 2008, 2:33:43 PM1/5/08
to panb...@googlegroups.com
Good Luck, Nilarasikan
--
நண்பன்
----------------
உண்மையென்பது நிபந்தனையற்ற கருத்துகளின் தொகுப்பே.

http://nanbanshaji.blogspot.com/

IMAMUDDIN GHOUSE MOHIDEEN

unread,
Jan 5, 2008, 4:02:31 PM1/5/08
to panb...@googlegroups.com

இதயங்கனிந்த வாழ்த்துக்கள்!!
அன்புடன்,
இமாம்.


Date: Sat, 5 Jan 2008 23:19:02 +0530
From: nilara...@gmail.com
To: mutht...@googlegroups.com; namb...@googlegroups.com; panb...@googlegroups.com; Pira...@googlegroups.com; il...@googlegroups.com; Tamil2...@googlegroups.com
Subject: [panbudan] கவிதை நூல் வெளியீடு

Swathi Swamy

unread,
Jan 5, 2008, 4:47:31 PM1/5/08
to namb...@googlegroups.com, முத்தமிழ், panb...@googlegroups.com, Pira...@googlegroups.com, il...@googlegroups.com, Tamil2...@googlegroups.com
வாழ்த்துக்கள் நண்பா!
 
கண்காட்சியில் உங்கள் புத்தகம் வைத்திருப்பது மனதுக்கு மிகவும் மகிழ்சி அளிக்கிறது. உங்கள் சிறகுகள் இன்னமும் உயரமாய் பறக்கும் சக்டி உள்ளவை. நன்றாக பரந்து விரியட்டும்.
 
மீண்டும் மனது நிறைந்த வாழ்த்துக்கள்!
 
அன்புடன்
சுவாதி

பிரேம்குமார்

unread,
Jan 5, 2008, 11:03:40 PM1/5/08
to panb...@googlegroups.com
புத்தகம் படித்தேன். 'மயிலிறகாய்' கவிதைகள் வருடிற்று நிலா. மனங்கவர் கவிதைகள் பல இருந்தன அதில்.
 
வாழ்த்துக்கள் நண்பா :)

Gnaniyar

unread,
Jan 5, 2008, 11:59:38 PM1/5/08
to panb...@googlegroups.com
On 1/6/08, பிரேம்குமார் <prem.kav...@gmail.com> wrote:
புத்தகம் படித்தேன். 'மயிலிறகாய்' கவிதைகள் வருடிற்று நிலா. மனங்கவர் கவிதைகள் பல இருந்தன அதில்.
 
வாழ்த்துக்கள் நண்பா :)
 
 
 
நிலா ரசிகனின் ரசிகன் நான். அவருடைய கவிதைகள் கவிதை எழுதத் தூண்டும். இப்புத்தகம் பெங்களுரில் கிடைக்குமா..? இல்லையென்றால் பிரேம்குமார் வாங்கி எனக்கு அனுப்பி வைப்பார் என்று நம்புகின்றேன்.

lucky shajahan

unread,
Jan 6, 2008, 4:48:22 AM1/6/08
to panb...@googlegroups.com
வாழ்த்துக்கள் நிலா ரசிகன் நண்பரே...
 
மயிலிறகாய் - மென்மையாய் இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை...
ஊரில் இருப்பதால் நிச்சயம் புத்தக கண்காட்சிக்கு செல்லலாம் என்றிருக்கிறேன்.. வாங்கிப் படித்து
பின் மடலிடுகிறேன்

 


லக்கி ஷாஜஹான்.

பிரேம்குமார்

unread,
Jan 6, 2008, 9:42:06 AM1/6/08
to panb...@googlegroups.com
 
 
நிலா ரசிகனின் ரசிகன் நான். அவருடைய கவிதைகள் கவிதை எழுதத் தூண்டும். இப்புத்தகம் பெங்களுரில் கிடைக்குமா..? இல்லையென்றால் பிரேம்குமார் வாங்கி எனக்கு அனுப்பி வைப்பார் என்று நம்புகின்றேன்.
 
தல, நீங்க கேட்டு நான் மாட்டேன்னு சொல்லுவேனா. ஆனா இப்படி பொதுவில கேக்கக்கூடாது. அப்புறம் கூட்டமா கிளம்பிருவாங்கய்யா கிளம்பிருவாங்கய்யா....

Tthamizth Tthenee

unread,
Jan 6, 2008, 10:37:28 AM1/6/08
to panb...@googlegroups.com
பண்புடன் நண்பர்களே
இன்று மாலை 4.00 மணிக்கு நான் உயர் திரு கசாலி
அவ்ர்களின் வீட்டுக்கு சென்றேன் அங்கு ஜேகே எனப்படும்
ஜெயகுமாரும்,ப்ரேம்குமார், சடையன் சாபு,ராமதாஸ்,
மெலட்டூர் நடராஜன், ஏஜே முருகன் என்னும் இணை
இயக்குனர்(திரைப்படத்துறை),காதல் படத்தில் நடித்த திரைப்பட நடிகர்
சுகுமார்,அனைவரும் சந்தித்தோம்,
இனிமையான மாலைப் பொழுதாக அமைந்தது
திரு கசாலி எங்களை அன்போடு வரவேற்று தேனீரும் கொறிக்க கொஞ்ஜம்
தின்பண்டங்களும் அளித்தார்,
திரு கே ஆர் அதியமான் தொலைபேசியில் வரமுடியாமைக்கு வருத்தம்
தெரிவித்துவிட்டு அடுத்த முறை கலந்து கொள்வதாக சொன்னார், நண்பன்
அவர்கள்,எங்களுக்கு வாழ்த்து சொன்னார்,
இப்னு அவர்களும் அடுத்த முறை கலந்து கொள்வதாக வாக்களித்தார், பொதுவாக
கருத்துப் பறிமாற்றம் செய்துகொண்டோம்
இனிமையான மாலைப் பொழுதாக அமைந்தது

ஒளிப்படங்கள் திரு கசாலி அவ்ர்கள் அனுப்புவார்

அன்புடன்
தமிழ்த்தேனீ

Kasali Mohammed

unread,
Jan 6, 2008, 10:50:55 AM1/6/08
to panb...@googlegroups.com
அனுப்பிட்டோம் ஐயா!
நீங்கதான் பளிச்சுன்னு அழகா இருக்கீங்க!

அன்புடன்
கஸாலி

Tthamizth Tthenee

unread,
Jan 6, 2008, 11:05:55 AM1/6/08
to panb...@googlegroups.com
ஆஹா மிக்க நன்றி

தேனீயைவிட சுறுசுறுப்பாக இருக்கிறீர்கள்

அன்புடன்
தமிழ்த்தேனீ

karthik

unread,
Jan 7, 2008, 12:29:49 AM1/7/08
to பண்புடன்
வாழ்த்துக்கள் நிலா ரசிகனின் ரசிகன்.

சார்லசு

unread,
Jan 7, 2008, 2:07:42 AM1/7/08
to panb...@googlegroups.com
புத்தகம் அருமைங்க... வாங்கினதும் படிச்சாச்சு... அட்டகாசமான கவிதைகள்.....
 

--
நட்புடன்

மழைக்காதலன் - சார்லஸ்
98410-55202
http://charlesantony.blogspot.com/
http://charlessmiles.blogspot.com/

Creation of a casteless and peaceful society is indeed the first step towards just, egalitarian, and harmonious society. A society of equals, neither unequal nor more-equals, beyond the strings of caste, class, gender, race, etc. Otherwise it would lead to social oppression, political exploitation, economic deprivation, cultural domination, gender discrimination, class isolation, deliberate exclusion. Lets' believe in a society beyond this.

NilaRaseegan

unread,
Jan 10, 2008, 1:21:32 AM1/10/08
to mutht...@googlegroups.com, panb...@googlegroups.com
புத்தக கண்காட்சி செல்ல இயலாதவர்கள் சென்னை தி.நகரில்
உள்ள நியூ புக் லேண்ட்ஸ் கடையில் வாங்கலாம்.

முகவரி:

New Book Lands
#52C Basement
North Usman Road
T. Nagar
Chennai - 600017
Landmark: Opp ARR Complex,Near Panagal Park
Phone: 044-28158171, 28156006



On Jan 8, 2008 11:49 AM, GEETHA SAMBASIVAM < siva...@gmail.com> wrote:
வாழ்த்துக்கள் நிலவிற்கும், விஜி சுதனுக்கும்.

On Jan 8, 2008 9:52 AM, NilaRaseegan <nilara...@gmail.com> wrote:
ஜான்,

என் முதல் கவிதை புத்தகம் "நிலாக்காலங்கள்".
"தேவதை தோட்டம்" ஒரு மின்னூல்.
விரைவில் என்னுடைய "மயிலிறகாய் ஒரு காதல்" இணையத்தில்
கிடைக்கும். தகவலனுப்புகிறேன்.

சிவா,

நீங்கள் சொன்னது மிகச்சரி. "கவிக்குயில்" விஜி சுதனின் முன்னுரையால்
மிளிர்கிறது இந்நூல். (கவிதைகளை விட முன்னுரை நன்றாக இருப்பதாக
செய்தி!:))



On Jan 8, 2008 12:17 AM, John P. Benedict < jpben...@gmail.com> wrote:
நல் வாழ்த்துக்கள்.
உங்களின் முதல் கவிதைப் புத்தகம் "தேவதைத் தோட்டம்" என்பதா?
நான் வாசிங்டனில் இருக்கிறேன். உங்களின் புத்தகங்களை வாங்குவதற்கு
சுலபமான வழி என்னவென்று சொல்லமுடியுமா? நன்றி.

On Jan 7, 12:59pm, "விஜி சுதன்" < vselvarat...@gmail.com> wrote:
> On 1/7/08, Siva Sankar <Sivasankar.i...@gmail.com > wrote:
>
>
>
> > இந்த கவிதை புத்தகத்தில் இன்னுமொரு சிறப்பும் இருக்கின்றது, இதற்கு
> > முன்னுரை
>
> > எழுதியிருப்பவர்............................................................­.........................................கவிதாயினி
> > விஜயமோகனச்செல்வி எனும் விஜி சுதன்.....சீக்கிரம் முந்துங்கள் உங்கள்
> > பிரதிக்கு....
> > சிவா...<<<
>
> சிவ..சிவா...இந்தலொள்ளுத்தானே வேண்டாம் என்கிறது சங்கரா :))))
>
> --
> என்றென்றும்
> சுதனின்விஜி
>
> "நாமார்க்கும் குடியல்லோம்"
> நமனை அஞ்சோம்"
>
> Help Ever Hurt Never
> Love All Serve All

--
அள்ளித்தர நட்புடன்,
நிலாரசிகன்.
"தமிழுக்கு நிலவென்று பேர்"
குழுமம்-->   http://in.groups.yahoo.com/group/nilaraseegankavithaigal/
கவிதைகள் வலைப்பூ--> http://nilaraseegan.blogspot.com
சிறுகதைகள் வலைப்பூ--> http://nilaraseegansirukathaigal.blogspot.com/
மழலைகளுக்காக -->http://www.helptolive.org/



NilaRaseegan

unread,
Jan 11, 2008, 4:22:07 AM1/11/08
to mutht...@googlegroups.com, panb...@googlegroups.com, Pira...@googlegroups.com
(கவிஞர்,பாடலாசிரியர் சினேகன் அவர்கள் என்னுடைய "மயிலிற்காய் ஒரு காதல்" கவிதை தொகுப்பிற்கு எழுதிய முன்னுரை. சற்று தாமதமாக கிடைத்த காரணத்தினால் அச்சேற்ற இயலவில்லை. அடுத்த பதிப்பில் இந்த முன்னுரை இடம்பெறும்.

கவிதைகளை பொறுமையுடன் வாசித்து,சுவாசித்து முன்னுரை எழுதித் தந்த கவிஞர்.சினேகனுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.)



மயிலிறகாய் ஒரு காதல்


தேவதைகள் வாழும் கிரகத்துக்குள் பயணித்தது போலவே இருந்தது இந்த கவிதை புத்தகத்துக்குள் சென்று வந்தது.

நூலாசிரியர் நிலாரசிகனுக்கும் தேவதைகளுக்கும் ஏதோ ஒரு அலைவரிசை
அவ்வப்போது சந்தித்துக்கொள்கிறது.

திரும்பிய திசையெல்லாம் தேவதைகளின் புராணம் சொட்ட சொட்ட காதலித்து இருக்கிறார். ஏதோ ஒரு தேவதையை


"மயிலிறகாய் ஒரு காதல்"

மனக்குகைகளை உரசிப்போகிறது. ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு விதமான காதலை அடையாளப் படுத்துகிறது.

காதலை மையப்புள்ளியாக வைத்து இந்த நூல் சுழன்றாலும் ரசனையோடுதான் சுழன்று கொண்டிருக்கிறது.

இவருடைய கவிதைகளில் நான் கண்டு வியந்தது சில இடங்களில் பெண்ணாகவும் மாறி பேசி இருக்கிறார்.

"கன்னம் சிவக்க சிவக்க
முத்தமிட்டுவிட்டு போதுமாடா
என்பேன்;
அழகானதொரு வெட்கத்தினால்
முகம் திருப்பிக் கொள்வாய்
ஆண்வெட்கம் அழகில்லை என்று
யார் சொன்னது"


என்றொரு கவிதை பெண்களின் வாயிலாக ஆண்களின் அழகியலை
அழகாக வெளிக்காட்டி இருக்கிறார்.

"எளிதில் தீப்பற்றும்
பொருட்களை பேருந்தில்
கொண்டு செல்ல தடை
பார்த்தாலே பற்றிக்கொள்ளும்
விழிகளோடு
நீ மட்டும் எப்படி
பயணிக்கிறாய்"

என்றொரு கவிதையில் காதலுக்கே உரிய கவன ஈர்ப்பு கவிதை தன்மையைத் தந்திருக்கிறார்.

காதல் சில சமயம் ரசிக்க வைக்கும்,சில சமயம் பிரம்மிக்க வைக்கும்,சில சமயம் யோசிக்க வைக்கும் சில சமயம் யாசிக்க வைக்கும்.

எல்லா சமயத்திலும் கண்ணீரோ புன்னகையோ காதல் நேசிக்க வைக்கும்.

"தவிர்த்தலுக்கென்றே ஒரு
பார்வை வைத்திருக்கிறாய்
நீ.
தவிப்பதற்கென்றே
ஒரு இதயம் வைத்திருக்கிறேன்
நான்"


என்ற கவிதை நேசிக்கவும் வைக்கிறது,யோசிக்கவும் வைக்கிறது.

இப்படி எல்லா கவிதைகளிலும் ஏதோ ஒரு இடத்தில் இதயத்தை
சிறை பிடித்து விடுகிறார் நிலாரசிகன்.

காதல் மனிதனை பக்குவப்படுத்துகிறதோ இல்லையோ,
நல்ல ரசிகனாக,கலைஞனாக மாற்றிவிடுகிறது என்பதற்கு
இந்த தொகுப்பில் நிறைய கவிதைகள் இடம்பெற்று உள்ளன.

காதலை பொருத்தவரை ரசிக்கவும்,ருசிக்கவும் வைத்தாலும்
சொல்லப்படாத சில காதல்கள் இன்னும் இந்த பூமியில் வாழ்ந்து
கொண்டுதான் இருக்கிறது.

காதல் தமிழும் - கவிதை தமிழும் கைகோர்த்து நடைபோடும் வகையில்
கவிஞர் நிலாரசிகனின்  "மயிலிறகாய் ஒரு காதல்" அமைந்திருக்கிறது.

நல்ல நடை நல்ல பார்வை
நாளை படைப்புலகில் உங்களுக்கும்
ஒரு இடம் இருக்கு...
அது எங்கே என்பதை உங்கள் படைப்புகள்
கண்டுணரும்...
நல்ல படைப்பாளன் எதிர்பார்ர்பு இன்றி
இயங்க வேண்டும்...
இந்த சமூகம் நிறைய எதிர்பார்க்கிறது.
கொடுப்பது நம் வேலை...

கற்பனை வாதிகள் கொடுத்து வைத்தவர்கள்.
தனக்கானதையும்,உலகத்திற்கு தேவையானதையும்
தானே தயாரித்துக் கொள்கிறார்கள்.

நீங்களும் கொடுத்து வைத்தவர்தான்.

கவிதையும்,கவிஞனும் கைகோர்த்து வளர வாழ்த்துகிறேன்.
நட்புடன்,
சினேகன்.

--------------------------------------------------------------------------------------

பிரேம்குமார்

unread,
Jan 11, 2008, 4:50:40 AM1/11/08
to panb...@googlegroups.com
அடடா, பாடலாசிரியர் சினேகனின் உரையா... மகிழ்ச்சி :)

NilaRaseegan

unread,
Jan 21, 2008, 4:30:54 AM1/21/08
to mutht...@googlegroups.com, panb...@googlegroups.com, Pira...@googlegroups.com
நண்பர்களுக்கு வணக்கம்,

என்னுடைய "மயிலிறகாய் ஒரு காதல்" புத்தகம் இன்று முதல் இணையம் மூலமாகவும் பெறலாம்.

வாங்க விரும்பும் அன்பர்கள் இங்கே சென்று வாங்கலாம்.

http://www.anyindian.com/index.php?manufacturers_id=212

நண்பன்,
நிலாரசிகன்


2008/1/11 J K <nsjey...@gmail.com >:
அதுவும் சூப்பரா இருக்கு...

2008/1/11 மஞ்சூரார் <manjo...@gmail.com>:

சிநேகனின் முன்னுரையின் மூலம் தான் உன் கவிதைகளை பற்றி தெரிந்துக்கொள்ளவேண்டுமா நிலா.

தாமதமாக கிடைத்த முன்னுரை என்றாலும் முத்தாய்ப்பாய் இருக்கிறது.

கவிதாயினி விஜியின் முன்னுரையையும் இங்கு எதிர்ப்பார்க்கிறோம்.







--
நட்புடன்,
   J K


Reply all
Reply to author
Forward
0 new messages