யாருப்பா இந்த சவுக்கு?

90 views
Skip to first unread message

Asif Meeran AJ

unread,
Jun 16, 2010, 7:56:11 AM6/16/10
to பண்புடன்

நித்யானந்தா ஆபாச சிடி வெளியானது எப்படி ? அதிர்ச்சியூட்டும் தகவல்கள்.





பொதுவாக, தமிழ்நாட்டுக்கென ஒரு ‘ட்ரென்ட்’ உண்டு. அது பத்திரிக்கையாளர்கள் மீதான புகார்களைப் பற்றி மூச்சு விடாதது. பத்திரிக்கையாளர்களைப் பற்றி வண்டி வண்டியாக புகார்கள் இருந்தாலும், அதைப் பற்றி எந்த பத்திரிக்கையும் எழுதாதாம். அதுதான் பத்திரிக்கை தர்மமாம். இந்த தர்மத்தை மூத்த பத்திரிக்கையாளர்களும் கடை பிடிப்பது, தமிழகத்தின் சாபக்கேடு.

ஊரில் உள்ள ஊழல்களையெல்லாம் எழுதுவார்களாம். ஆனால், அதை விட முடை நாற்றமெடுக்கும் இவர்களின் ஊழலைப் பற்றி யாரும் எழுதக் கூடாதாம். ஆனால், இது சவுக்கு அய்யா. சவுக்கு. சவுக்குக்கு இந்த பத்திரிக்கை தர்மமெல்லாம் பொருந்தாது. ஊழல் செய்தவர்கள் யாராயிருந்தாலும், அவர்களின் முகத்திரையை கிழிப்பதே சவுக்கின் வேலை.

சுவாமி நித்யானந்தா… …. தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும், அனைவராலும் உச்சரிக்கப் பட்ட ஒரு பெயர். தமிழ்நாட்டில் அனைத்துப் பிரச்சினைகளையும் பின்னுக்குத் தள்ளி ஏறக்குறைய ஒரு மாத காலத்துக்கும் மேலாக தலைப்புச் செய்திகளை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த பெயர். இந்த பிரச்சினையில் நுழையும் முன், இந்தியாவின் ஆன்மீக வியாபாரத்தை புரிந்து கொள்வது அவசியம்.

இந்தியாவில் எப்போதுமே, ஆன்மீக வியாபாரத்துக்கு நல்ல மதிப்பு இருந்தே வந்திருக்கிறது. 99 ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வைத்திருந்ததன் மூலம், ஓஷோ, இந்தியாவின் ஆன்மீக வியாபாரத்துக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்.





ஓஷோவின் கணக்கிலடங்காத சொத்துக்கள், இது எவ்வளவு பணம் புழங்கும் வியாபாரம் என்பதை உலகுக்கு உணர்த்தியது.

இவர் அளவுக்கு சம்பாதிக்க வில்லை என்றாலும், ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் “கிருஷ்ணமூர்த்தி பவுன்டேஷனும்“ பணம் புரளும் ஒரு ட்ரஸ்ட்தான்.



இவர்கள் இருவரின் மறைவுக்குப் பின் ஏற்பட்ட காலியிடத்தை நிரப்ப வந்தவர்கள் மூவர்.

ஒருவர் ஜக்கி வாசுதேவ். அடுத்தவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்.






அடுத்தவர், இன்று கழன்ற டவுசரோடு (Caught with pants down) மாட்டிக் கொண்ட நித்யானந்தா.

இந்தியாவின் ஆன்மீக வியாபாரத்தை பங்கு போட்டுக் கொள்வதில் இந்த மூவருக்கும் தான் கடும் போட்டி. இவர்கள் மூவரைத் தவிர, மேல்மருவத்தூர் சாமியார் போன்றவர்கள் அல்லு சில்லுகள். இந்த மூவரைப் போல, வெளிநாட்டு பணத்தை வாங்கி பெரும் பணக்காரனாகும் வியாபார நுணுக்கம் தெரியாதவர்கள்.

இந்த மூவரும், தங்கள் வியாபாரத்தை மேம்படுத்திக் கொள்ள பகீரதப் பிரயத்தனங்களை செய்ய ஆரம்பித்தார்கள். ஒருவர் ஆனந்த விகடனில் தொடர் எழுதுவார். இன்னொருவர் குமுதத்தில் தொடர் எழுதுவார். ரவிசங்கர், இந்தியா டுடேவின் அட்டைப் படத்தில் வருவார்.

இது போக மின்னணு ஊடகங்களிலும் இடம் பிடிப்பதில் இவர்கள் மூவருக்கும் இடையே கடும போட்டி.

இந்த நிலையில் தான், நக்கீரன் பத்திரிக்கையில் 1993 94 ஆண்டுகளில் ஜக்கி வாசுதேவின் மனைவி தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வெளியிடுகிறது. இந்த செய்தியை எழுதியவர் மகரன் என்ற நிருபர்.

இதற்கு அடுத்து அதே ஆண்டுகளில் நக்கீரன் ஜக்கி வாசுதேவின் ஆசிரமத்தில் கஞ்சா சரளமாக புழங்குகிறது என்று ஒரு செய்தி வருகிறது. இதையும் மகரன் என்ற நிருபரே எழுதுகிறார்.

1994-95ம் ஆண்டுகளில் ஜக்கி வாசுதேவின், மாஹே மற்றும் ஏணம் பகுதிகளில் உள்ள ஆசிரமங்களில் பெண் விவகாரங்களில் கலாச்சார சீரழிவு என்று மீண்டும் செய்தி வருகிறது.
இந்நிலையில், ஜக்கி வாசுதேவ், 1996-97ம் ஆண்டுகளில் நக்கீரன் காமராஜை அழைக்கிறார்.

அப்போது கோவை சென்று ஜக்கியை சந்திக்கும் காமராஜ், அந்த ஆசிரமத்திலேயே ஒரு மாதம் தங்குகிறார். இந்த கால கட்டத்தில், ஜக்கியின் தேனொழுகும் பேச்சில் மயங்கிய காமராஜ், ஜக்கியின் பரம சீடனாக உருவெடுக்கிறார். ஜக்கிக்காக தமிழ்நாட்டில் பல காரியங்களை செய்து கொடுக்கும் பரம பக்தனாக காமராஜ் மாறுகிறார்.



இதையடுத்து, ஜக்கியின் ஆசிரமத்துக்காக சொத்தக்களை வாங்கிக் குவிப்பதிலும், இது தொடர்பாக அரசு அலுவலகங்களில் வேலைகளை சுலபமாக்குவதிலும், காமராஜ் பெரும் பங்கு வகிக்கிறார்.

ஜக்கியை அழைத்து வந்து, சென்னை அண்ணா பல்கலைகழகத்தின் உள்ளே கருணாநிதி தலைமையில் மரம் நடும் விழா நடத்தப் பட்டது அல்லவா. அந்த விழாவுக்கு ஏற்பாடு செய்ததே காமராஜ் தான்.



தன்னுடைய குருவான ஜக்கி வாசுதேவை கருணாநிதிக்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டும் என்ற முயற்சியை நிறைவேற்ற கருணாநிதியிடம் தனக்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தியே இந்த ஏற்பாடுகளை செய்தார்.



காமராஜின் மகன், கோவையில் உள்ள ஜக்கி வாசுதேவின் உறைவிடப் பள்ளியில் படித்து வருகிறான் என்பதும் குறிப்பிடத் தகுந்த தகவல்.

இந்த மூன்று சாமியார்களுக்குள் ஏற்கனவே இருந்த தொழில் போட்டியை தன்னுடைய போட்டியாக காமராஜ் கருதத் தொடங்கினார். இதையொட்டியே, காமராஜுக்கு, நித்யானந்தாவின் சீடர், லெனின் என்கிற தர்மானந்தாவின் பழக்கம் ஏற்படுகிறது. இந்த தர்மானந்தா, நித்யானந்தாவின் பெண் தொடர்புகள் பற்றி காமராஜிடம் கூறுகிறார். இருவரும் சேர்ந்து ஒரு பெரிய சதித் திட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

நித்யானந்தாவை சிக்கலில் மாட்டுவது போன்ற ஒரு வீடியோ படத்தை தயாரிக்கத் திட்டமிடுகின்றனர். லெனினுக்கு தொழில்நுட்பம் பற்றிய விபரங்கள் ஏதும் தெரியாது என்பதால், இதற்கான வீடியோ கேமரா மற்றும் இதர உபகரணங்களையும் காமராஜே வாங்கிக் கொடுக்கிறார். திட்டமிட்டபடி வீடியோ உபகரணம் உரிய இடத்தில் பொருத்தப் படுகிறது என்று ஆசிரம வட்டாரங்கள் கூறுகின்றன.

பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல, நித்யானந்தாவோடு, நடிகை நெருக்கமாக இருக்கும் காட்சி பதிவாகிறது. இதைப் பார்த்த, காமராஜுக்கும், லெனினுக்கும் சாமியாரை மிரட்டி பணம் பறிக்கலாம் என்ற எண்ணம் வருகிறது.



இதையடுத்து, லெனினையே, நித்யானந்தாவோடு பேரம் பேச அனுப்புகிறார் காமராஜ். இவர்களின் பேரம் மூன்று கோடி ரூபாய். காமராஜுக்கு இரண்டு கோடியும், லெனினுக்கு ஒரு கோடியும் என்று முடிவாகிறது.

நித்யானந்தாவோடு பேரம் தொடங்கியதும், நித்யானந்தா இந்த விவகாரத்தைப் பற்றி, சேலத்தில் உள்ள ஒரு ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியிடம் ஆலோசனை கேட்கிறார். அந்த அதிகாரி, இது போல பணம் கொடுத்தால், இந்த ப்ளாக் மெயில் தொடரும் என்பதால், பணம் கொடுக்க மாட்டேன் என்று மறுக்க சொல்கிறார். அதன் படியே நித்யானந்தா பணம் கொடுக்க மறுக்க, இந்த வீடியோவை வெளியிடுவது என்று லெனினும் காமராஜும் முடிவெடுக்கின்றனர்.

அச்சு ஊடகங்களில் வந்தால் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என்று காட்சி ஊடகங்களிலும் வர வேண்டும் என்று முடிவெடுக்கப் பட, காமராஜ் சன் டிவியுடன் பேரம் பேசி, இந்த வீடியோவுக்கான பிரத்யேக ஒளிபரப்பு உரிமைகளைத் தர, ஒரு தொகையை பெற்றுக் கொள்கிறார்.



இது போல வீடியோ ஒளிபரப்பப் படுகிறது என்ற தகவல் அறிந்த ஒரு மூத்த பத்திரிக்கையாளர் சன் டிவியின் செய்தி ஆசிரியரை தொடர்பு கொண்டு வீடியோ நகல் ஒன்று வேண்டும் என்று கேட்க, மொத்த கன்ட்ரோலும் நக்கீரனிடம் உள்ளது என்றும் எந்த நகலையும் யாருக்கும் தர உரிமை இல்லை என்று பதில் அளித்தது குறிப்பிடத் தக்கது.


இந்த வீடியோவை வெளியிட்டதால் நக்கீரன் உட்பட அனைவருக்கும் லாபம் தான். இது தொடர்பான செய்தி முதலில் வெளி வரும் நேரத்தில் நக்கீரனின் சர்குலேஷன் எவ்வளவு தெரியுமா ? வெறும் 60,000. இந்த நேரத்தில் வாரம் இருமுறை இதழாக இருக்கும் நக்கீரனை மீண்டும் வார இதழாக மாற்றலாமா என்ற ஆலோசனை நடக்கும் அளவுக்கு நிலைமை பரிதாபமாக இருந்தது. நித்யானந்தா கதைக்குப் பிறகு, நக்கீரனின் சர்குலேஷன் 1.5 லட்சத்தை தொட்டிருக்கிறது.



இந்த செய்தியை முதன் முதலில் வெளியிட்டு, தொடர்ந்து மூன்று மாதங்களுக்கும் மேலாக, நக்கீரன் கவர் ஸ்டோரியாக, நித்யானந்தாவுக்கு சுய இன்பப் பழக்கம் உண்டு, நித்யானந்தா நீலப்படம் பார்ப்பார் என்று இந்தக் கதைகளையே வெளியிட்டு, சரோஜா தேவி கதைகளை மீண்டும், தமிழுக்கு கொண்டு வந்ததை யாரும் மறந்திருக்க முடியாது. நித்யானந்தா நக்கீரனை காப்பாற்றினார் என்றால் அது மிகையாகாது.


சென்னை காவல் துறையிடம் புகார் ஒன்னை கொடுத்த லெனின் என்கிற தர்மானந்தாவை எந்த பத்திரிக்கையாளரையும் சந்திக்க அனுமதி வழங்கப் படவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.


சென்னை மாநகர காவல்துறை இந்த விவகாரத்தை கையாண்ட விதம் ஒரு பெரிய தமாசு. முதலில் நாலு வழக்கறிஞர்கள் சென்று கமிஷனரிடம் புகார் கொடுக்கிறார்கள். உடனே நித்யானந்தா மேல் வழக்கு பதிவு செய்கிறார் கமிஷனர்.

இந்த ஆபாச வீடியோவை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பி குழந்தைகளோடு டிவி பார்க்க விடாமல் நெருக்கடிக்கு உள்ளாக்கிய சன் டிவி மீதும், வாரமிருமுறை இதழாக சட்ட விரோதமாக விற்கப் படும் “போர்னோ“ பத்திரிக்கையான நக்கீரன் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று பதிவுத் தபாலில், கல்யாணி என்ற வழக்கறிஞர் அனுப்பிய புகார் ஏன் கமிஷனர் ராஜேந்திரன் கண்ணுக்குத் தெரியவில்லை ?


ஏனென்றால், இது அத்தனையையும் ஆட்டி வைப்பது காமராஜ். அவர் சொன்னால் வழக்கு பதியப் படும். வேண்டாம் என்றால் மூடப்படும். முதலில் வழக்கு பதிவு செய்த சென்னை காவல்துறை, உடனடியாக வழக்கை பெங்களூருக்கு மாற்றம் செய்ததும் குறிப்பிடத் தக்கது. நித்யானந்தா கைது செய்யப் பட்டதும், ஒரு தனிப்படை பெங்களுர் சென்று நித்யானந்தாவை விசாரிக்கும் என்று கமிஷனர் ராஜேந்திரன் சொன்னது இன்னொரு தமாஷ்.


ஏற்கனவே மாற்றம் செய்யப் பட்ட வழக்கு தொடர்பாக எப்படி விசாரிக்க முடியும் ?

இந்த சதித் திட்டத்தின் ஒரு பகுதியாகவே, ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் ஆசிரமத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டை, நித்யானந்தா விவகாரத்தோடு முடிச்சு போட்டு கவர் ஸ்டோரி வெளியிட்டது.
பெரிய வியாபாரிகள் மூன்று பேரில் ஒருவரை ஒழித்துக் கட்டியாகி விட்டது. இன்னும் ஜக்கிக்கு போட்டியாக ஒருவன் இருக்கிறானல்லவா ?



அவனையும் ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதற்காகவே இந்த கவர் ஸ்டோரி. மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரமே, அந்த துப்பாக்கிச் சூடு, ரவிசங்கரை குறி வைத்து நடத்தப் பட்டதல்ல என்று பேட்டியளித்த பின்பும் கூட இந்த சம்பவங்கள் இரண்டையும் முடிச்சு போட்டு கவர் ஸ்டோரி வெளியிடப் படுகிறது என்றால் ஜக்கியை தூக்கிப் பிடிக்க காமராஜ் எடுக்கும் முயற்சியை பாருங்கள்.

இந்தியாவின் ஒரே ஆன்மீக வியாபாரியாக ஜக்கி வாசுதேவை, ஒரு Monopoly வியாபாரி ஆக்கிவிட்டார் காமராஜ் என்றால், அது மிகையாகாது.


எல்லாம் ஆன்மீகம் அய்யா ஆன்மீகம்.

மஞ்சூர் ராசா

unread,
Jun 16, 2010, 8:13:14 AM6/16/10
to panb...@googlegroups.com
இப்படித்தான் ஏதேனும் நடந்திருக்கும்னு சந்தேகப்பட்டேன்.  இப்ப சரியா போச்சு.

VJagadeesh

unread,
Jun 16, 2010, 8:08:56 AM6/16/10
to panb...@googlegroups.com

எவன் அந்த காமராஜ்

 

From: panb...@googlegroups.com [mailto:panb...@googlegroups.com] On Behalf Of Asif Meeran AJ
Sent: Wednesday, June 16, 2010 5:26 PM
To:
பண்புடன்
Subject: [
பண்புடன்] யாருப்பா இந்த சவுக்கு?

 

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

அபி அப்பா

unread,
Jun 16, 2010, 8:33:30 AM6/16/10
to panb...@googlegroups.com
அது போல சவுக்கு பக்கத்தில் வரும் மதியார் கட்டுரை எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு, தவிர இது வந்த பின்னே தான் கழுகு, வம்பானந்தா எல்லாம் காப்பி அடிக்கிறாங்க. ஜூவியும் , ரிப்போர்ட்டரும் ஒருத்தரை ஒருத்தர் காப்பி அடிக்கிறாங்க என்பது தனி விஷயம். ஆனா அவங்க ரெண்டு பேருமே மதியார் கட்டுரையை காப்பி அடிக்கிறாங்க என்பது நான் அந்த மூன்றையும் படித்த அளவில் உண்மை.

போன வாரம் ஜூவி, ரிப்போர்ட்டர் இரண்டு சினிமா பக்கத்திலயும் பிரியாமணி ஸ்டில் தான் ஒரே அளவிலே ஒரே செய்தியாக.

2010/6/16 VJagadeesh <VJaga...@prouindia.com>

shakthiprabha shakthiprabha

unread,
Jun 16, 2010, 8:36:53 AM6/16/10
to panb...@googlegroups.com
என்ன கேடு கெட்ட உலகம்! :(
 
சாதாரண அப்புசாமி குப்புசாமி முதல் ஞானி என்று சொல்லிக்கொள்ளும் சாமியார்கள் வரை யாருமே உண்மையா இருக்க மாட்டாங்களா! ன்னு சிறுபிள்ளைத் தனமாக  ஏக்கம் மட்டும் மண்டிக்கிடக்கிறது.

ராஜா

unread,
Jun 18, 2010, 4:32:03 PM6/18/10
to panb...@googlegroups.com

கர்ம வீரர்…

 


கர்ம வீரர். கர்ம வீரர் என்றவுடன் உங்கள் நினைவுக்கு வருவது பெருந்தலைவர் காமராஜர். இந்தப் பதிவு பெருந்தலைவரைப் பற்றிய பதிவு என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். இது கர்ம வீரர் பற்றிய பதிவு அல்ல.

இது ஒரு கருமம் பிடித்த வீரரைப் பற்றிய பதிவு. அந்த கருமம் பிடித்த வீரர் யார் தெரியுமா ? நக்கீரன் காமராஜ் என்று அழைக்கப் படும் காமராஜ்தான் அது. இவரை ஏன் கருமம் பிடித்த வீரர் என்று சொல்ல வேண்டும் ?

இவர் அப்படி ஒரு மோசமான மனிதரா என்ன ? அதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். சமீபத்தில் வெளிவந்த நக்கீரன் இதழில் வெளிவந்த ஒரு ப்ரத்யேக ஸ்டோரியின் சில வரிகளை மற்றும் உங்களுக்காக தருகிறேன்.

“நித்யானந்தா எனது மார்பகங்களில் கை வைத்தார். இயல்பாகவே எனக்கு பெரிய மார்பகங்கள். அவர் கை வைத்ததும் எனது மார்பகங்கள் பெரிதாகின“. இது இந்த கட்டுரையில் முதல் சில வரிகள் மட்டுமே. இதற்கு அடுத்த வரிகளை எழுத சவுக்குக்கு கை கூசுகிறது.

அப்பொழுது அந்த நக்கீரன் இதழ் எப்படி இருந்திருக்கும் என்பதை உங்கள் ஊகத்துக்கே விட்டு விடுகிறேன். சவுக்கு நக்கீரன் நிர்வாகிகளைப் பார்த்துக் கேட்கும் கேள்வி இதுதான். உங்களின் 12 அல்லது 14 வயது மகனுக்கோ, அல்லது மகளுக்கோ, இந்த நக்கீரன் இதழை படிக்கக் கொடுப்பீர்களா ?

நக்கீரன் இதழில் முக்கிய புள்ளியாக இருக்கும் காமராஜ், ஜக்கி வாசுதேவின் ஆசிரமத்தில் படிக்கும் தனது மகனுக்கு, இந்த இதழை படிக்க கொடுப்பாரா ? கொடுப்பார் என்றால் இதை எழுதுவது நேர விரயம். கொடுக்க மாட்டார் என்றால் இதைப் போலவேதானே மற்ற குடும்பங்களையும் நினைக்க வேண்டும் ?



இந்த நித்யானந்தா வீடியோவை வெளியிட்டதிலும், தொடர்ந்து சரோஜா தேவி கதைகளை வெளியிடுவதிலும், முன்னணியில் இருக்கும் நக்கீரன் இதழின் முக்கிய நிர்வாகி யார் என்பது முந்தைய பதிவிலேயே தெரிவிக்கப் பட்டிருந்தது. அவர்தான் நக்கீரன் காமராஜ்.
யார் இந்த காமராஜ் ? பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரெட்டியார் வகுப்பைச் சேர்ந்தவர்தான் இந்த காமராஜ்.

சென்னைக்கு வந்த புதிதில் சென்னை அமைந்தகரை காவல் நிலையத்துக்குப் பின்னே ஒரு வாடகை வீட்டில் பேச்சிலராக தன் சென்னை வாழ்க்கையை துவக்கியவர்தான் இந்த காமராஜ். மிக மிக சாதாரணமான ஒரு நடுத்தர ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர்தான் இந்த காமராஜ். இந்த காமராஜின் இன்றைய சொத்து மதிப்பு பல கோடிகளைத் தாண்டும். சென்னைக்கு வந்து நக்கீரனில் சேர்ந்த பிறகு, மிக சாதாரண வாழ்க்கைதான் வாழ்ந்து கொண்டிருந்தார் இந்த காமராஜ்.


1995ல் காமராஜுக்கு திருமணம் நடந்தது. இவர் திருமணத்துக்கு வருகை தந்து சிறப்பித்தவர் குன்றக்குடி அடிகளார்.




இவ்வாறு நக்கீரனில் சேர்ந்த இந்த காமராஜ், சிறிது சிறிதாக கோபாலின் நம்பிக்கையை பெற்றார். காமராஜ் மீது கோபாலுக்கு இருந்த நம்பிக்கை, அவர் கைதான போது, பன் மடங்கு மேம்பட்டது.

குறிப்பாக, கன்னட கண்மணி ராஜ்குமார் வீரப்பனால் கடத்தப் பட்ட போது, காமராஜ் உளவுத் துறை அதிகாரிகளோடு இணைந்து ஆற்றிய பணி கோபாலுக்கு காமராஜ் மேல் மிகப் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியது.


தூதுவராக வீரப்பனின் மிகப் பெரிய நம்பிக்கையை பெற்றிருந்த கோபால், கையில் பணம் வந்ததும், அரசு அதிகாரிகளுக்கு இருக்கும் பேராசையைப் போலவே அதை கையாடல் செய்யலாம் என்று முடிவு செய்து, அதை செய்து முடித்ததிலும் காமராஜுக்கு பெரும் பங்கு உண்டு. ஆனால் பலே கில்லாடியான வீரப்பனிடம், பணத்தை கையாடல் செய்த கோபால் மாட்டிக் கொண்டதும், கோபாலை மரத்தில் கட்டி வைத்து இவனைக் கொல்லப் போகிறேன் என்று வீரப்பன் உறுமியதும், தூதுவராக வந்த நபரை கொன்றால் நம் கொள்கைக்கு இழுக்கு என்று மாறன் வீரப்பனை மாற்றியதும், மாறன் பேச்சுக்கு மதிப்பளித்து, வீரப்பன் கோபாலை அவிழ்த்து விட்டதும், அத்தோடு, கோபாலை கழற்றி விட்டு விட்டு, பேராசிரியர் கல்யாணி, அய்யா நெடுமாறன் உள்ளிட்டோரை தூதுவராக அழைத்ததும், தனிக் கதை.


ராஜ்குமார் கடத்தல் விவகாரத்தில் முக்கிய பங்கு வகித்தது, தற்போழுது ஆவணக் காப்பகத் துறையில் “டம்மி பீசாக“ வைக்கப் பட்டுள்ள ஐபிஎஸ் அதிகாரி ராமானுஜம். இந்த ராமானுஜத்தோடு இணைந்து இந்த கடத்தல் விவகாரத்தில், பெரும் பங்காற்றியது காமராஜ்தான்.

காட்டிலிருந்து வீரப்பன் கேசட் கொடுத்தனுப்பியதும், தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசுக்கு பெரும் தலைவலியாகவும், இரு மாநில காவல்துறையும் மும்முரமாக கண்காணித்துன் கொண்டிருந்த போதிலும், முதலில் காமராஜின் சகோதரர் ரமேஷ் வைத்திருக்கும் ஸ்டுடியோவுக்குத் தான் இந்த கேசட் செல்லும்.

அந்த ஸ்டுடியோவில் இந்த கேசட் எடிட் செய்யப் பட்டு, இவர்கள் என்ன செய்திகள் செல்ல வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அந்த செய்திகள் மட்டுமே செய்தியாகும்.
சிறிது சிறிதாக தனது செல்வாக்கை வளர்த்துக் கொண்ட காமராஜ், சங்கராச்சாரி கைதின் போது மிக முக்கிய பங்கை வகிக்கிறார்.

இந்த வழக்கின் புலனாய்வு அதிகாரியாக இருந்த பிரேம் குமாரிடம் நெருக்கமான தொடர்பை பேணுகிறார். அப்போதும், காமராஜிடம், இப்போதைய முதல்வர் கருணாநிதி நெருக்கமான தொடர்பை பராமரித்து வருகிறார்.


காமராஜிடம் எப்போதும் ரெகுலராக பேசும் பிரேம் குமார், சங்கரரரமன் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளி ஜெயேந்திரர் தான் என்று தெரிவிக்கிறார்.
எப்போதும் காமராஜிடம் தொலைபேசியிலோ, அல்லது நேரிலோ, தொடர்பில் இருக்கும் கருணாநிதி காமராஜிடம், இந்த வழக்கில் உண்மையான குற்றவாளி யார் என்று கேட்கிறார். காமராஜ், இவ்வழக்கில் உண்மையான குற்றவாளி ஜெயேந்திரர் தான் என்றும், இவர்தான் குற்றவாளி என்று தெரிந்ததும் அரசு கைது செய்ய யோசிக்கிறது என்றும் தெரிவிக்கிறார்.



இச்செய்தி தெரிந்ததும் கருணாநிதி, சங்கரராமன் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகள் கைது செய்யப் படவில்லை என்று அறிக்கை வெளியிடுகிறார். இந்த அறிக்கையையும், காமராஜும் கருணாநிதியும் தொலைபேசியில் விவாதிக்கிறார்கள். காமராஜ் மற்றம் கருணாநிதியின் இந்த உரையாடலை பதிவு செய்து கேட்ட ஜெயலலிதா, “நீங்கள் யார் சொல்வதற்கு, ஜெயேந்திரரை நான் கைது செய்ய மாட்டேன் என்று “கைது செய்து காட்டுகிறேன் பார்“ என்று உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டு, அதன் விளைவாகவே தீபாவளியன்று, ஜெயேந்திரர் கைது செய்யப் படுகிறார்.


படிப்படியாக தன்னை வளர்த்துக் கொண்டு வரும் காமராஜுக்கு, தற்போது உளவுத் துறை ஐஜியாக இருக்கும் ஜாபர் சேட்டுடன் பழக்கம் ஏற்படுகிறது. இவர்களுக்கிடையேயான பழக்கம், ஜாபர் சேட், செங்கல்பட்டு டிஐஜியாக இருக்கும் பொழுதுதான் நெருக்கமாகிறது.
திருமழிசை அருகே, பெப்சி தொழிற்சாலை ஒன்று உண்டு. இத்தொழிற்சாலையின் முதலாளி, காமராஜின் நெருங்கயி நண்பர்.

இந்த தொழிற்சாலையில் தொழிலாளர்களுக்கு, ஒப்பந்தப் படி ஊதியம் தரவில்லை என்று போராட்டம் தொடங்குகிறது. இந்தத் தொழிலாளர்கள் பெரும்பாலும் தலித்துகள். இந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக பூவை மூர்த்தி களம் இறங்குகிறார். பூவை மூர்த்தி களத்தில் இறங்கி தொழிலாளர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கத் தொடங்கியதும், இத்தொழிற்சாலையின் முதலாளி, தனது நெருங்கிய நண்பர் காமராஜை தொடர்பு கொள்கிறார். காமராஜ் அப்போது செங்கல்பட்டு டிஐஜியாக இருந்த ஜாபர் சேட்டை தொடர்பு கொள்கிறார். ஜாபர் சேட், தன்னுடைய போலீஸ் படையை பயன்படுத்தி, போராடும் தொழிலாளர்களை ஓட ஓட விரட்டுகிறார். இதனால், நியாயமான கூலி கொடுக்க வேண்டிய முதலாளி, காமராஜ் மற்றும் ஜாபர் சேட்டின் தயவால், தொழிலாளிகளை ஒடுக்குகிறார்.


இந்த சம்பவம் முதல், ஜாபர் சேட்டுக்கும், காமராஜுக்கும் இடையேயான நட்பு, மிக மிக நெருக்கமாகிறது. திருடர்களிக்கிடையிலான நட்பு இயல்புதானே ?




இந்த நட்பு எந்த அளவுக்கு தொடர்கிறதென்றால், 2001ல் கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப் படும் விஷயத்தை ஒரு மணி நேரம் முன்னால், ஜாபர் சேட், காமராஜுக்கு தெரிவிக்கிறார்.

கருணாநிதி கைது செய்யப் பட்டு, ஜாமீனில் விடுதலை ஆன பின்னர், ஒரு நாள், அவரைப் பார்க்க கோபாலபுரம் வீட்டுக்கு காமராஜ் சென்ற போது, “எதுக்குய்யா என்னப் பாக்க வந்த. எனக்கு இருக்குற தொந்தரவு போதாதா“ என்று கருணாநிதி காமராஜைப் பார்த்து கத்தியதாகவும் தகவல் உண்டு.


இப்படி கருணாநிதியுடன் இருந்த காமராஜின் உறவு, கடந்த 2006ம் ஆண்டில் இருந்து மிக மிக நெருக்கமாக ஆனது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், கருணாநிதியின் பிறந்த நாளின் போது (அப்போது மாறன் குடும்பம் ஒன்று சேரவில்லை) விழா எல்லாம் முடித்து விட்டு, வீட்டுக்கு வந்த கருணாநிதி, “இன்று வரும் வழியில் காரில், வேட்டியிலேயே சிறுநீர் கழித்து விட்டேன், நான் இப்படிப் பட்ட நிலையில் இருக்கிறேன், ஆனால் என் பிள்ளைகள் (அழகிரி, ஸ்டாலின்) எப்படி அடித்துக் கொள்கிறார்கள் பார்த்தாயா “ என்று காமராஜிடம் பகிர்ந்து கொள்கிறார் என்றால், கருணாநிதியும் காமராஜும் எவ்வளவு நெருக்கம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.


இந்த நெருக்கத்தை, காமராஜ் எப்படியெல்லாம் தன்னுடைய நலனுக்கு பயன் படுத்த வேண்டுமோ, அப்படி பயன் படுத்தி வருகிறார். இது போன்ற நெருக்கமான விஷயத்தை, தமிழ்நாட்டில் உள்ள ஏதாவது ஒரு ஐபிஎஸ் அல்லது ஐஏஎஸ் அதிகாரியிடம் காமராஜ் தெரிவித்தாரேயானால், அடுத்த இரண்டு நிமிடத்தில் அந்த அதிகாரி காமராஜ் எதிரில் இருக்க மாட்டார். எங்கே இருப்பார் என்று கேட்டீர்களேயானால், கீழே உட்கார்ந்து, காமராஜின் கால் செருப்பை துடைத்துக் கொண்டிருப்பார்கள், நல்ல பதவி வேண்டி.

சென்னைக்கு வந்த புதிதில், வாடகை வீட்டில், வறுமையான சூழலில் வாழ்ந்து கொண்டிருந்த காமராஜுக்கு, இன்று சென்னை பெசன்ட் நகரில் 5 படுக்கை அறை கொண்ட வீடு சொந்தம். அலுவலகத்தில் கொடுத்திருக்கும் க்வாலிஸ் காரைத் தவிர, மனைவிக்கும், மகனுக்குமாக ஐந்து சொகுசு கார்கள் வைத்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.


பெசன்ட் நகர் வீட்டை வாங்கும் போது, அந்த வீட்டை 32 லட்ச ரூபாய் மதிப்பில் வாங்கினார் காமராஜ். இந்த வீட்டுக்கு உடனடியாக கொடுக்க கையில் ரொக்கம் இல்லாததால், கோபால், காமராஜுக்கு 20 லட்ச ரூபாய் கடனாக கொடுத்தார். இந்த வீட்டில், பளிங்கு தரை அமைக்க மட்டும், 8 லட்ச ரூபாய் செலவிடப் பட்டுள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன.

இது போன்ற சொகுசு பங்களாவை சொந்தமாக வைத்துக் கொண்டு, கருணாநிதியுடன் இருக்கும் நெருக்கத்தை பயன்படுத்திக் கொண்டு, அரசு விருப்புரிமைக் கோட்டாவில், சென்னை திருவான்மியூரில், தன் மனைவி ஜெயசுதா பெயரில் 80 லட்ச ரூபாய் பெருமானமுள்ள வீட்டு மனையை 2007ம் ஆண்டில் ஒதுக்கீடு பெற்றுள்ளார் காமராஜ்.


திருச்சிக்கு அருகில் உள்ள தொழுதூருக்கும், பெரம்பலூருக்கும் இடையே உள்ள வாலிகண்டபுரத்தில் காமராஜுக்கு சொந்தமான க்ரானைட் விற்பனை நிலையம் 20,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப் பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.


உத்தரப் பிரதேசத்தில் உள்ள பரீதாபாத் என்ற இடத்தில், காமராஜ் மற்றும் கோபாலுக்கு சொந்தமாக ஒரு மருத்துவக் கல்லூரி கட்டப் பட்டு அதன் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இந்தக் கல்லூரியில் இந்த ஆண்டே மாணவர் சேர்க்கை தொடங்கியிருக்க வேண்டும்.

ஆனால், இந்த வீணாகப் போன கேத்தன் தேசாய் சிபிஐ வலையில் சிக்கியதால், உடனடியாக மாணவர் சேர்க்கை தொடங்க இயலவில்லை. தற்போது, மாணவர் சேர்க்கையை உடனடியாக தொடங்க, ஆ.ராசாவின் சகோதரரும், இந்திய வனப் பணி அதிகாரியும், ஆ.ராசாவின் அந்தரங்க காரியதரிசியுமான ராமச்சந்திரன் மூலம், உடனடியாக மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் பெற முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் கூறுகின்றன.


இது தவிரவும், கொடைக்கானலில், 30 சொகுசு அறைகள் கொண்ட, சாய் சித்தா ரிசார்ட்ஸ் என்ற பெயரில் காமராஜ் சொகுசு மாளிகையை வாங்கியிருப்தாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்த மாளிகையை பராமரித்து வருவது, காமராஜின் நெருங்கிய நண்பர், ரகுபதி.


சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் பேருந்து நிலையங்களை நவீனமயமாகக்க திட்டம் தீட்டப் பட்டு, ஃபைபர் பேருந்து நிலையங்கள் அமைக்கப் பட்டன. இந்த பேருந்து நிலையங்களை போக்குவரத்து அமைச்சர் நேருவின் தம்பியின் மைத்துனர் செல்வம் மற்றும் காமராஜ், கூட்டாக கான்ட்ராக்ட் எடுத்து பராமரித்து கொள்ளை லாபம் பார்த்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

இதில் விசேடம் என்னவென்றால், இந்த பேருந்து நிலையம் அமைக்கும் அனைத்து செலவுகளும், சென்னை மாநகராட்சியினுடையது. இந்த பேருந்து நிலையத்தில் விளம்பரம் செய்வதற்கு ஒரு மாதத்திற்கான வாடகை ரூபாய் 3 லட்சம். இதற்கான தொகை முன் பணமாக காமராஜ் & கம்பெனியால் பெறப்பட்டது. பெறப்பட்டபின், மாநகராட்சி இதில் சிக்கல்களை உருவாக்கியது.

விரிவாகச் சொல்லுவதென்றால், மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இது பெரிய பஞ்சாயத்தாகி, துணை முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு அனைவருக்கும் சமாதானம் ஏற்படுத்தினார். சமாதானம் என்ன தெரியுமா ? ராஜேஷ் லக்கானியை ஒரு பெரிய தொகையை கொடுத்து “கவனிக்க“ வேண்டும் என்பதுததான். காமராஜ் & கம்பேனி அவ்வாறே அவரை கவனித்து விட்டு இத்தொழிலை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.


பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சாதிக். 10 அல்லது 12 ஆண்டுகளுக்கு முன்னால், சென்னைக்கு ஒரு மஞ்சள் பையுடன் வந்தார். சென்னைக்கு வந்து சொந்த மாவட்டத்துக் காரர் என்ற வாஞ்சையுடன் காமராஜை பார்க்க, காமராஜ், இவரை தனது பினாமியாக்கிக் கொண்டார்.


மஞ்சள் பையுடன் சென்னை வந்த சாதிக், இன்று சன் டிவியில், இரவு 7.30 மணிக்கும், 8 மணிக்கும் க்ரீன்வேஸ் ப்ரமோட்டர்ஸ் என்ற பெயரில் விளம்பரம் செய்யும் அளவுக்கு வளர்ந்துள்ளார். இது போல, சென்னைக்கு வந்த உடன், 10 ஆண்டுகளில் பெரிய தொழில் அதிபர் ஆவது, அண்ணாமலை ரஜினிகாந்துக்கு மட்டுமே சாத்தியம்.


சாதிக் பெயரில், தன்னுடைய சட்ட விரோத சம்பாத்தியத்தையெல்லாம் காமராஜ், இருங்காட்டுக்கோட்டை, வல்லக்கோட்டை போன்ற இடங்களில் முதலீடு செய்திருப்பதாகவும், வாரந்தோறும், காமராஜ், இந்த இடங்களுக்குச் சென்று, ரியல் எஸ்டேட் தொழிலை விரிவு படுத்தி வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

பெரம்பலூர் மாவட்டத்தை சிறப்பு பொருளாதார மண்டலமாக அறிவிக்க, தேர்ந்தெடுக்கப் படவில்லை. இந்த மாவட்டம் சிறப்பு பொருளாதார மண்டலமாக அறிவிக்கப் படாவிட்டால், இந்த இடத்தில் ரியல் எஸ்டேட் தொழில் நடத்தும் காமராஜ், ஆ.ராசா, ஆகியோர் கடும் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்பதால், தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி, பெரம்பலூர் மாவட்டத்தின் ஒரு பகுதியையும் சிறப்பு பொருளாதார மண்டலமாக அறிவிக்கப் பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

தற்போது, பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு மருந்து தொழிற்சாலை தயாரிக்க லைசென்ஸ் பெற்றிருப்பதாகவும், விரைவில் இத்தொழிற்காலை தொடங்க இருப்தாகவும் தகவல்கள் கூறுகின்றன.

காமராஜ் இன்று தொடங்கியிருக்கும் “பெரம்பலூர் மாஃபியாவின்“ முக்கிய உறுப்பினர்கள் யார் தெரியுமா ? ஜாபர் சேட். ஜெகத் கஸ்பர். கனிமொழி. ஆ.ராசா. டி.ஆர்.பாலு ஆகியோர்தான்.

தமிழ்நாட்டை இன்று நிர்வகிப்பது அரசு அதிகாரிகளோ, நீதிமன்றங்களோ, சட்டசபையோ, முதலமைச்சரோ அல்ல. இந்த “பெரம்பலூர் மாஃபியாதான்”

இந்தப் பதிவு எழுதுவதற்காக ஏறக்குறைய இரண்டு மாத காலம் வேலை நடந்தது. இந்தப் பதிவை எழுதுவதால், கடும் நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்று மிரட்டல்கள் விடுக்கப் பட்டன.

இந்த மிரட்டல்களுக்கு பதிலாக ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
என்னை வழி நடத்துபவன் பாரதி. நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் என்றான் அவன். அந்த யார்க்கும் என்பதில் காமராஜ், ஜாபர் சேட், ஆ.ராசா, கனிமொழி, கஸ்பர், டி.ஆர்.பாலு ஆகிய அனைவரும் அடங்குவார்கள் தானே ?


சவுக்கு

stalin felix

unread,
Jun 18, 2010, 4:44:35 PM6/18/10
to panb...@googlegroups.com
செம இன்போ வச்சிருக்கார் சவுக்கு 


--
அன்புடன்
ம. ஸ்டாலின் பெலிக்ஸ்
http://stalinfelix.blogspot.com/


jse ramesh

unread,
Jun 18, 2010, 5:01:35 PM6/18/10
to panb...@googlegroups.com
கிட்டத்தட்ட அவரோட எல்லா இழைகளையும் படிச்சிட்டேன். அ.தி.மு.க ஆதரவு என்பதைவிட, தி.மு.க வின் எதிர்ப்பு கருத்துக்களையே அதிகம் பேசுறாரு....சிலநேரம்  அது போர் அடிக்குது...ஆனா ஆதாரப் பூர்வமாகவும், பழைய நிகழ்வுகளை கண்முன் நிறுத்துவதாலும் கொஞ்சம் ஆர்வமா இருக்குது. ஒன்னு மட்டும் நல்லா தெரியுது, தமிழ் நாட்டுல நடக்கிற சின்னச் சின்ன விசயங்களில்கூட அரசியல் கலந்திருக்குது....நடக்கட்டும் நடக்கட்டும்..

2010/6/18 stalin felix <stalinf...@gmail.com>

செம இன்போ வச்சிருக்கார் சவுக்கு 




--
என்றும் அன்புடன்,
ரமேஷ்

stalin felix

unread,
Jun 18, 2010, 5:34:09 PM6/18/10
to panb...@googlegroups.com
Too late

 ஒன்னு மட்டும் நல்லா தெரியுது, தமிழ் நாட்டுல நடக்கிற சின்னச் சின்ன விசயங்களில்கூட அரசியல் கலந்திருக்குது....நடக்கட்டும் நடக்கட்டும்

2010/6/19 jse ramesh <rames...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

jse ramesh

unread,
Jun 18, 2010, 5:51:48 PM6/18/10
to panb...@googlegroups.com
என்ன பண்றது இன்னும் குழந்தையாவே இருக்கேன் :))

2010/6/19 stalin felix <stalinf...@gmail.com>
Too late

 

Swathi Swamy

unread,
Jun 19, 2010, 10:07:38 PM6/19/10
to panb...@googlegroups.com


18 ஜூன், 2010 5:51 pm அன்று, jse ramesh <rames...@gmail.com> எழுதியது:

என்ன பண்றது இன்னும் குழந்தையாவே இருக்கேன் :))

ஐயே...வெளில சொல்லிடாதீங்க...  

2010/6/19 stalin felix <stalinf...@gmail.com>
Too late

 
--
என்றும் அன்புடன்,
ரமேஷ்

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--
சாவு நெருங்கி வரும் போதும் -
தமிழ் மானம் காத்திரடி பாப்பா!!

http://groups.google.com/group/Piravakam
http://santhappiravagam.blogspot.com/
http://jokes4smile.blogspot.com/
http://puthiyakalithokai.blogspot.com/

ராஜா

unread,
Jun 28, 2010, 9:43:37 AM6/28/10
to panb...@googlegroups.com

பழ.கருப்பையா வீட்டின் மீது தாக்குதல். காட்டுமிராண்டிகளின் காலம்.




பழ.கருப்பையா….

தமிழகத்தின் மிகச் சிறந்த கட்டுரையாளர். ஆங்கிலத்தில் எழுதும் அருந்ததி ராய்க்கு நிகரான கட்டுரையாளர். இவரின் கட்டுரைகள் தினமணி நாளேட்டில் வந்து மிகப் பிரபலமான வரவேற்பை பெற்றது. குறிப்பாக இலங்கைக்கு எம்பிக்கள் குழு சென்றதில், திருமாவளவன் பங்கேற்று, ராஜபக்ஷேவுடன் சிரித்து, குலாவி வந்தது குறித்து, பழ.கருப்பையா எழுதிய கட்டுரை, திருமாவளவனை நெளியச் செய்தது.

இந்தக் கட்டுரைக்குப் பிறகே, திருமாவளவன் வேறு வழியின்றி, ராஜபக்ஷே சகோதரர்களை கைது செய் என்று ஒப்புக்கு ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தினார்.


இன்று, மாலை பழ.கருப்பையாவின் வீட்டில் திமுக ரவுடிக் கும்பல் புகுந்து, அவர் வீட்டை சேதப்படுத்தி, காரை உடைத்து, பெண்களை தாக்கி, அவருக்கும் காயம் ஏற்படுத்திச் சென்றிருக்கிறது. இந்தத் தாக்குதலுக்கு காரணம் என்ன ? பழ.கருப்பையா அதிமுகவின் இலக்கிய அணித் தலைவராக உள்ளார்.

கடந்த வாரம் ஜெயா டிவி நேர்முகம் நிகழ்ச்சியில், பேட்டியளித்த பழ.கருப்பையா கருணாநிதியை விமர்சித்து பேசினார். முள்வேளி முகாமில் தமிழர்களை அடைத்து வைத்து விட்டு, கோவையில் என்ன கொண்டாட்டம் என்று கேட்டார். முக்கிய தமிழறிஞர்களை அழைக்காமல், சினிமாக் காரர்களை அழைத்து, கூத்தடித்துக் கொண்டிருக்கிறார் கருணாநிதி என்று பேசினார். இந்த நிகழ்ச்சியில் பழ.கருப்பையா பேசிய அனைத்துமே துக்ளக் இதழில் கட்டுரையாக வந்தவைதான்.


கருணாநிதி நடத்தும் குடும்ப மாநாட்டிற்கு, உணர்ச்சியற்ற சிவத்தம்பிகள் வருவார்கள், ஆனால் தமிழ்த்தாய் வரமாட்டாள் என்று எழுதினார்.


இந்தக் கட்டுரை திமுக உடன்பிறப்புகளுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்காக, திமுக உடன் பிறப்புகள், கோவை மாநாட்டிலிருந்து பிரத்யேகமாக சென்னைக்கு அனுப்பப் பட்டு, செம்மொழி மாநாடு முடிவதற்குள் பழ.கருப்பையா மீது இந்தத் தாக்குதலை நடத்த வேண்டும் என்ற திமுக மேலிட உத்தரவின் அடிப்படையிலேயே இத்தாக்குதல் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.


இந்த வன்முறைக் கலாச்சாரம் திமுகவுக்கும் புதிதில்லை, அதிமுகவுக்கும் புதிதில்லை.
1991 முதல் 1996 வரை நடைபெற்ற செல்வி.ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தின் போது, சுப்ரமணியன் சுவாமி மீதும், வழக்கறிஞர்கள் விஜயன், சண்முகசுந்தரம், தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன், ஆகியோர் மீது நடத்தப் பட்ட தாக்குதலை மறக்க முடியாது.

அப்போது, பரவலாக பத்திரிக்கைகளில் வந்த செய்தி, ஆட்சியை விமர்சித்தால், வீட்டுக்கு ஆட்டோ வரும் என்பது. இந்த தாக்குதல்களை முன்னின்று நடத்தியவர்கள், அப்போது அதிமுகவில் இருந்த எஸ்டி.சோமசுந்தரம் மற்றும், இப்போதும் அதிமுகவில் இருக்கும் மதுசூதனன் ஆகியோர்.


ஆங்கிலத்தில் ஒரு வழக்கு உண்டு. Paying back with their own coin என்று. அது போல, அதிமுக நடத்திய வன்முறை வெறியாட்டம், இப்போது அவர்கள் பக்கம் திரும்புகிறது. அதிமுக திமுகவிலிருந்து வந்ததுதானே….. ?


வன்முறை திமுகவிற்கு புதிதா என்ன ? ஒரே ஒரு கருத்துக் கணிப்பு நடத்தி அழகிரி கருணாநிதியின் வாரிசாக வேண்டும் என்று ஒரு சதவிகித மக்கள் மட்டுமே விரும்புகிறார்கள் என்ற ஒரே காரணதிற்காக, அந்த தினகரன் நாளிதழை நடத்தும், மாறன் சகோதரர்களை அடிக்காமல், அந்நாளிதழின் அப்பாவி ஊழியர்கள் மூவரை எரித்துக் கொன்றவர்கள் திமுகவினர்தானே ?


கட்சியில் மூத்தவராக இருப்பதால், தன்னை மதிக்க மாட்டேன்கிறார், கட்சிக்காரர்களை தன் பக்கம் இழுத்துக் கொள்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக, திமுக மாவட்டச் செயலரை வெட்டிக் கொன்று விட்டு, இவர்களே சென்று மலர்வளையமும் வைத்தது இதே திமுகவினர் தானே ?


ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும், கருணாநிதிக்கு எதிராகவும் பேசிவிட்டார் என்பதற்காக, இயக்குநர் பாரதிராஜாவின் அலுவலகத்திற்குள் புகுந்து, கோடிக்கணக்கான மதிப்புள்ள பொருட்களை சூறையாடியது, இதே திமுகவினர் தானே ?


சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலை திறப்பு நிகழ்ச்சியின் போது, கருணாநிதி பேசிக் கொண்டிருக்கும் போது, அமைதியான முறையில் கருப்புக் கொடி காட்டிய நான்கு வழக்கறிஞர்களை திமுக ரவுடிகள் சூழ்ந்து கொண்டு தாக்கியதையும், அதை படமெடுத்த ஊடகவியலாளர்களை திமுக ரவுடிகள் கடுமையாக தாக்கியதையும், தொலைக்காட்சிகள் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பியதே ? தாக்கிய ரவுடிகளை கைது செய்வதை விட்டு விட்டு, தாக்கப் பட்ட வழக்கறிஞர்கள் மீதே வழக்கு போட்டு, கைது செய்யும்,

கருணாநிதியின் காட்டாட்சியில், பழ.கருப்பையாவை உயிரோடு விட்டு வைத்தார்களே என்று சந்தோஷப் படுகிறது, சவுக்கு. ஏனென்றால், இது காட்டுமிராண்டிகளின் காலம் அல்லவோ ?


இன்று பழ.கருப்பையாவை கொலை செய்திருந்தால் நம்மால் என்ன செய்திருக்க முடியும் ? இரண்டு நாள் துக்கம் கடைபிடிப்போம். கண்ணீர் அஞ்சலி என்று போஸ்டர் ஒட்டுவோம்.

செல்வி.ஜெயலலிதா கண்டித்து அறிக்கை விடுவார். உயர்நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று யாராவது பொது நல வழக்கு தொடர்வார்கள்.

ஒரு வாரம் கழித்து, அவரவர் அவரவர் வேலையை பார்க்க போய் விடுவோம்.
தேர்தல் வரும் நேரத்தில் இது எல்லாவற்றையும் வசதியாக மறந்து விட்டு, கவரில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று வாங்கி எண்ணிப் பார்த்து விட்டு, மீண்டும் கருணாநிதியை முதலமைச்சர் ஆக்குவோம்.

அதற்காக எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல், கருணாநிதியின் ஜால்ராக் கூட்டத்தோடு சேர்ந்து கொண்டு, சொம்படிக்கலாமா ? இதைத் தவிர வேறு வழியேயில்லையா ? உயிர் வாழவே முடியாதா ?

வரலாறு நெடுக, அதிகாரத்தை எதிர்த்த கலகக் குரல்கள் ஒலித்தே வந்திருக்கின்றன.
அறிவியலின் தந்தை என்று அழைக்கப் படும், கலிலியோ 1500களில் நேரடியாக பைபிளுக்கும், சர்ச்சுக்கும் எதிராக கலகக் குரல் கொடுக்கவில்லையா ?




விஷத்தை அருந்திவிட்டு இறந்தாலும் இறப்பேன், ஆனால், வளைந்து கொடுக்க மாட்டேன் என்று சாக்ரட்டீஸ் உறுதியாக இல்லையா ?




கிறித்தவ மதத்தின் எதிர்ப்பையும் மீறி, சூரியனைச் சுற்றியே இவ்வுலகம் சுழல்கிறது என்று குரல் கொடுக்கவில்லையா கோப்பர்நிக்கஸ் ?





உலகை படைத்தவர் ஏசுகிறிஸ்து என்று பைபிள் கூவிக் கொண்டிருந்தாலும், உயிரிவளர்ச்சியைப் பற்றி நூல் எழுதவில்லையா சார்லஸ் டார்வின் ?



ஆகையால், ஆயிரம் கருணாநிதிகளும், ஆயிரம் அழகிரிகளும் வந்தாலும், நியாயத்தைப் பேசும் கலகக் குரல் ஒலித்துக் கொண்டேதான் இருக்கும்.


இல்லாத கடவுள் இறங்கி வந்தாலும், நியாயத்தைப் பேசுபவனின் குரல் ஒலித்துக் கொண்டேதான் இருக்கும்.
 
********************************************************************************************************************************************
 

ஏழைப் பங்காளர் டி.சுதர்சனம்.



நேற்று சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவரும், காங்கிரஸில் முக்கியப் புள்ளியுமான திரு.டி.சுதர்சனம் அவர்கள், கோவையில் மாரடைப்பால் காலமானார் என்று செய்தி வந்துள்ளது.

பொதுவாக இறந்தவர்களை விமர்சனம் செய்யக் கூடாது என்ற ஒரு கிறுக்குத்தனமான அரசியல் மரபு இந்தியாவில் கடைபிடிக்கப் பட்டு வருகிறது.

“இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்“

என்றுதானே கண்ணதாசன் சொல்லியிருக்கிறார் ?

ராஜீவ் காந்தி இறந்தவுடன், அவர் புனிதராகி விடுகிறார். போபர்ஸ் ஊழல், 4000 சீக்கியர்கள் வெட்டிப் படுகொலை செய்யப் பட்ட போது, ஆலமரத்தின் கீழே விழுந்தால் பூமி அதிரத்தான் செய்யும் என்ற ஆணவம், 20,000 பேரின் உயிர் போகக் காரணமாக இருந்த வாரன் ஆண்டர்சனை தப்ப விட்டது, ஈழத்தில் ஆயிரக்கணக்கான தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப் பட்டது, அதற்கு, ராணுவம் ஒரு இடத்திற்கு சென்றால் “அப்படி இப்படித்தான்“ இருக்கும் என்ற வியாக்கியானம் வேறு, இப்படி ராஜீவ் காந்தியைப் பற்றி அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஆனால் ராஜீவ் இறந்து போனவுடன் அவர் புனிதராகிறார். அவர் மனைவிக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கப் படுகிறது. அவர் அந்த வேலையை நிராகரித்து, வேறொருவரை நியமிக்கிறார். இந்த கேலிக்கூத்துக்கள், இந்தியாவுக்கே பிரத்யேகமானவை.


இப்பொழுது இறந்துள்ள டி.சுதர்சனத்தைப் பற்றி பேசுகையில், சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் நடைபெற்ற ஒரு சம்பவத்தைச் சொல்லலாம்.

சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத் தொடரில் “மக்களுக்காகவே உழைத்து உழைத்து ஓடாகத் தேய்ந்து போன எம்.எல்.ஏக்கள்“ அனைவரும் ஏழைகளாக இருப்பதால் அவர்களுக்கு வீட்டு மனை ஒதுக்கித் தருமாறு கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை முன்னெடுத்தது, இருப்பதிலேயே மிகவும் ஏழைக் கட்சியான காங்கிரஸ்தான்.

காங்கிரஸ் எம்எல்ஏ ஞானசேகரன்தான் இந்த கோரிக்கையை வைக்கிறார்.


நவீன கர்ணணும், வாரி வழங்கும் வள்ளலுமான கருணாநிதி, “ஊரான் வீட்டு நெய்யே… என் பொண்டாட்டி கையே“ என்ற தத்துவத்தின் அடிப்படையில் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் சென்னை மகாபலிபுரம் அருகே 2400 சதுர அடி வீட்டு மனை என்று அறிவிக்கிறார்.


கொஞ்சூன்டு மான ரோஷத்தோடு இருக்கும் கம்யூனிஸ்ட்டுகள் இதை எதிர்த்தனர். குறிப்பாக எம்எல்ஏ பாலபாரதி, மக்களின் பிரச்சினைகளை பேசுவதற்காக அவைக்கு தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறோம், இங்கு வந்து எங்களுக்கு வீட்டு மனை ஒதுக்குங்கள் என்று கேட்டால் மக்கள் என்ன நினைப்பார்கள் என்று எதிர்ப்பு தெரிவித்தார்.




உடனடியாக பேச எழுந்த டி.சுதர்சனம் என்ன சொன்னார் தெரியுமா ? “விருப்பம் இல்லாவிட்டால் இடது சாரிகள் வெளியேறலாம். அவர்கள் வீட்டு மனை வாங்கிக் கொள்ள வேண்டும் என்று யாரும் கட்டாயப் படுத்தவில்லை“ என்று கூறினார்.

இவ்வாறு, வெள்ள நிவாரணம் பெற வரிசையில் நிற்கும் கூட்டம் போல முண்டியடித்துக் கொண்டு பேசிய டி.சுதர்சனத்தின், சொத்துக்களின் விபரம் என்ன தெரியுமா ?


இந்த விபரங்கள் மே 2006 அன்று உள்ளபடி. இப்போது இதன் மதிப்பு பல மடங்கு உயர்ந்திருக்கும். மேலும், இந்த சொத்தக் கணக்கு “வெள்ளை“. கருப்பு கணக்கில் எடுத்துக் கொள்ளப் படவில்லை.


1. ரொக்கம் கையிருப்பு
38,966

15,83,627

3, வங்கியில் பாண்டுகள்,
37,200
டிபென்சர்கள்
4. கார் உள்ளிட்ட வாகனங்கள்
12,00,000

5. நகைகள்
11,66,000

6. செம்பரம்பாக்கம் விளை நிலம்
10,00,000

2 ஏக்கர்
7. புதுப்பாக்கம் கிராமம்
6,00,000
1.51 ஏக்கர்
8. பொன்னேரி இருளிப்பட்டி
6,00,000

11.51 ஏக்கர்.
9. விலை நிலம் 42.51 ஏக்கர்
10. பண்ருட்டி 2.507 மற்றும் 3.170 ஏக்கர்
9,00,000

11. மணப்பாக்கம் கிராமம் 8.843 ஏக்கர்
5,00,000

12. நொலம்பூர் கிராமம் 1.753 ஏக்கர்
50,00,000

13. அண்ணாநகரில் வணிக வளாகம்
1,50,00,000

4250 சதுர அடி
14. ஷெனாய் நகர் வீடு 3950 ச.அடி
51,00,000

15. ஷெனாய் நகர் வீடு 2800 ச.அடி
25,00,000


மொத்தம்
3,64,74,814



ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் நண்பர்களிடம் விசாரித்ததில், மேற்கூறிய மதிப்புகள் பத்தில் ஒரு பங்குதான். அசல் சந்தை மதிப்பு இதை விட பல மடங்கு கூடுதல் என்று கூறுகின்றனர். குறிப்பாக மணப்பாக்கத்தில் எல்லாம் ஒரு ஏக்கர் ஒரு கோடி என்று கூறுகின்றனர்.

சுதர்சனத்தின் மரணம் கூட, சர்ச்சைகளில்லாமல் இல்லை. சுதர்சனம் காங்கிரசில் ஜி.கே.வாசன் கோஷ்டி. 24 அன்று காலை, செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜி.கே.வாசன் கோவை விமான நிலையத்தில் வந்திறங்கினார்.

அப்போது அவரை வரவேற்பதற்காக ஜி.கே.வாசன் குழுவைச் சேர்ந்த மாநில இளைஞர் அணித் தலைவர் வி.யுவராஜும், எம்.எல்.ஏ கோவைத் தங்கமும் நின்று கொண்டிருக்கின்றனர். அப்போது திடீரென்று வாசன் வந்து விட, வரிசையில் முன்னால் நின்று கொண்டிருந்த யுவராஜை பின்னுக்குத் தள்ளி விட்டு கோவைத் தங்கம் முந்திக் கொண்டு சென்று சால்வை போர்த்துகிறார்.

இதைக் கண்டு கடும் கோபம் அடைந்த யுவராஜ், அவரை முறைக்கிறார். ஆனால் வாசன் அங்கே இருந்ததால், அமைதியாக இருந்தவர்களுக்குள், வாசன் சென்றவுடன் மோதல் தொடங்கி அது தள்ளுமுள்ளில் சென்று முடிகிறது. அருகில் இருந்த சுதர்சனம், பெரிய மனிதர் அல்லவா ? எப்படி அமைதியாக இருக்க முடியும் ? அதனால் இவர்கள் இருவருக்கிடையில் நுழைந்து சமாதானம் செய்ய முயற்சிக்கிறார்.

அப்போது மோதிக் கொண்ட கோஷ்டிகள் விட்ட “குத்து“ ஒன்று சுதர்சனம் நெஞ்சில் விழுகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்தான் சுதர்சனத்திற்கு, வயிற்றின் கீழே அறுவை சிகிச்சை நடைபெற்றிருக்கிறது. இந்த குத்தை வாங்கிய சுதர்சனம், அன்று மாலையே ரத்த வாந்தி எடுக்கிறார்.

உடல்நிலை மிகவும் மோசமாக, உடனடியாக கோவையில் உள்ள கல்பனா மருத்தவமனையில் அனுமதிக்கப் படுகிறார். மறுநாள் 25 காலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் படுகிறார். 25 காலையிலேயே, சுதர்சனத்தின் உயிர் பிரிந்து விட்டது என்று கூறுகிறார்கள்.

சுதர்சனத்தின் உயிர் பிரிந்தாலும், செம்மொழி மாநாடு நடக்கும் நேரத்தில் அமங்கலமான இந்தச் செய்தி வெளியானால், மாநாட்டின் சிறப்பு கெட்டு விடுமல்லவா ? இதனால், இறந்த செய்தியை வெளியே சொல்லாமல் His condition is critical and he is under intensive treatment என்ற “அல்வாவை“ எல்லோருக்கும் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இறந்த பிறகும், வெளியில் தகவல் சொல்லாமல் இரண்டு நாட்கள் தள்ளிப் போடச் சொல்லி, அவர் குடும்பத்தை ஒத்துக் கொள்ளச் செய்தவர், ஆற்காடு வீராசாமி என்று சுதர்சனம் குடும்பத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சுதர்சனத்தின் குடும்பத்தினர் கொடுத்த நெருக்கடியினால்தான், நேற்று இரவு அவர் உயிர் பிரிந்ததாக அறிவிக்கப் பட்டது.

சுதர்சனத்தின் சொத்துப் பட்டியலை பார்த்தீர்கள். இவ்வளவு சொத்துக்களை வைத்துக் கொண்டு, அரசு தரும் ஒரு க்ரவுண்ட் நிலத்துக்கு அலையும் டி.சுதர்சனம், இப்போது அவரோடு என்ன கொண்டு செல்லுகிறார் ?

“காதற்ற ஊசியும் வாராது கண் கடை வழிக்கே“ என்ற சித்தரின் பாடலை படித்திருக்க மாட்டாரோ ?


 

சவுக்கு

சென்ஷி

unread,
Jun 28, 2010, 9:54:59 AM6/28/10
to panb...@googlegroups.com

தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசையெல்லாம்
காசு முன் செல்லாதடி
தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசையெல்லாம்
காசு முன் செல்லாதடி குதம்பாய் காசு முன் செல்லாதடி
ஈசனும் ஈசனார் பூசையும் தேசத்தில்
காசுக்குப் பின்னாலே குதம்பாய் காசுக்குப் பின்னாலே

காட்சியான பணம் கைவிட்டுப் போன பின்
சாட்சிக் கோர்ட் ஏறாதடி
காட்சியான பணம் கைவிட்டுப் போன பின்
சாட்சிக் கோர்ட் ஏறாதடி குதம்பாய் சாட்சிக் கோர்ட் ஏறாதடி
பை பையாய்ப் பொன் கொண்டோர் பொய் பொய்யாய் சொன்னாலும்
மெய் மெய்யாய்ப் போகுமடி குதம்பாய் மெய் மெய்யாய்ப் போகுமடி

நல்லவரானாலும் ம்.. ம்..ம்..
நல்லவரானாலும் இல்லாதவரை நாடு மதிக்காது
நல்லவரானாலும் இல்லாதவரை நாடு மதிக்காது - குதம்பாய்
நாடு மதிக்காது - கல்வி
இல்லாத மூடரைக் கற்றோர் கொண்டாடுதல்
வெள்ளிப் பணமடியே குதம்பாய் வெள்ளிப் பணமடியே

ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே காசு
காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே
ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே காசு
காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே
உள்ளே பகை வையடா தாண்டவக்கோனே..ஏ..
உள்ளே பகை வையடா தாண்டவக்கோனே - காசுக்கு
உதட்டில் உறவாடடா தாண்டவக்கோனே
உள்ளே பகை வையடா தாண்டவக்கோனே - காசுக்கு
உதட்டில் உறவாடடா தாண்டவக்கோனே

முட்டாப் பயலையெல்லாந் தாண்டவக்கோனே - சில
முட்டாப் பயலையெல்லாந் தாண்டவக்கோனே - காசு
முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே
முட்டாப் பயலையெல்லாந்தாண்டவக்கோனே - காசு
முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே
கட்டி அழும் போதும் தாண்டவக்கோனே - பிணத்தைக்
கட்டி அழும் போதும் தாண்டவக்கோனே..ஏ..
கட்டி அழும் போதும் தாண்டவக்கோனே - பணப்
பெட்டி மேலே க்ண் வையடா தாண்டவக்கோனே
கட்டி அழும் போதும் தாண்டவக்கோனே - பணப்
பெட்டி மேலே க்ண் வையடா தாண்டவக்கோனே

ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே காசு
காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே

ராஜா

unread,
Jun 28, 2010, 10:10:19 AM6/28/10
to panb...@googlegroups.com


28-6-10 அன்று, சென்ஷி <senshe...@gmail.com> எழுதினார்:

ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே காசு
காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே
ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே காசு
காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே

:-)
 
 
 
 
குட்டி ஆடு தப்பிவந்தால் 
குள்ளநரிக்குச் சொந்தம்! 
குள்ளநரி மாட்டிகிட்டா 
கொறவனுக்குச் சொந்தம்! 

தட்டுக்கெட்ட மனிதர்கண்ணில் 
பட்டதெல்லாம் சொந்தம்! 
சட்டப்படி பார்க்கப்போனால் 
எட்டடிதான் சொந்தம்! 

உனக்கெது சொந்தம் 
எனக்கெது சொந்தம்! 
உலகத்துக் கெதுதான் சொந்தமடா! (உனக்கு) 
மனக்கிறுக்கால் நீ உளறுவதாலே 
வந்தலாபம் மதிமந்தமடா (உனக்கு) 

கூட்டுலே குஞ்சு பறக்க நினைத்தால் 
குருவியின் சொந்தம் தீருமடா! 
ஆட்டுலே குட்டி ஊட்ட மறந்தால் 
அதோட சொந்தம் மாறுமடா! - காலை 
நீட்டியே வைத்து நெருப்பிடும் போது 
நேசம் பாசம் பொருளாசைக் கெல்லாம் 
காட்டிய ஒருபிடி வாய்க் கரிசியிலே 
கணக்கத் தீர்த்திடும் சொந்தமடா (உனக்கு) 

பாப சரக்குகளைப் பணத்தாலே மூடிவைத்து 
பாசாங்கு வேலைசெய்த பகல் வேஷக்காரர்களும் 
ஆபத்திலே சிக்கி அழிந்தார்களானாலும் 
அடுத்தடுத்து வந்தவரும் அவர்களுக்குத் தம்பியடா! 
அவருவந்தார் இவருவந்தார் ஆடினார் - முடிவில் 
எவருக்குமே தெரியாம ஓடினார் - மனதில் 
இருந்ததெல்லாம் மறந்து கண்ணை மூடினார்
 

செவரு வச்சுக் காத்தாலும் 
செல்வமெல்லாம் சேர்த்தாலும் 
செத்தபின்னே அத்தனைக்கும் 
சொந்தக்காரன் யாரு? - நீ 
துணிவிருந்தா கூறு! 

ரொம்ப- 

எளியவரும் பெரியவரும் 
எங்கே போனார் பாரு! - அவரு 
எங்கே போனார் பாரு! 

பொம்பளை எத்தனை ஆம்பிளை எத்தனை 
பொறந்த தெத்தனை எறந்த தெத்தனை 
வம்பிலே மாட்டிப் போன தெத்தனை 
மானக் கேடாய் ஆன தெத்தனை? 
மூச்சு நின்னா முடிஞ்சுதடி சொந்தம் 
எத்தனை எத்தனை ஆனந்தம்! (உனக்கு)
 

 

stalin felix

unread,
Jun 28, 2010, 12:38:32 PM6/28/10
to panb...@googlegroups.com
சவுக்கின் எழுத்துக்கள் மிகப்பெரிய நம்பிக்கையை தருகின்றன 
--
அன்புடன்
ம. ஸ்டாலின் பெலிக்ஸ்
http://stalinfelix.blogspot.com/


Reply all
Reply to author
Forward
0 new messages