Re:அண்ணி..ஐ லவ் யூ

534 views
Skip to first unread message

செல்வன்

unread,
Nov 20, 2008, 3:13:13 AM11/20/08
to muththamiz, பண்புடன்

"அழுகாதீங்க அண்ணி.பார்க்குல எல்லோரும் நம்மையே பாக்கறாங்க" என்றான் வாசு.

அண்ணி அழுகையை நிறுத்தினார்."என்னை அண்ணின்னு கூப்பிடாதே வாசு.என்னவோ மாதிரி இருக்கு. சுஜாதான்னே கூப்பிடு" என்றார்.

"சுஜாதா..சுஜாதா" என்று மனதுக்குள் சொல்லிப் பார்த்துக்கொண்டான் வாசு.

"வீட்டுக்கு போகலாம்.அண்ணன் தேடும்" என்றான்.

"இனி எந்த முகத்தோட வீட்டுக்கு போறது?" என்றார் அண்ணி.

"சிங்காநல்லூர்ல என் கிளாஸ்மேட் பொண்ணுக தங்கற ரூம் இருக்கு.உங்களுக்கு ஆட்சேபனை இல்லைன்னா இன்னும் கொஞ்சம் நாளுக்கு அங்கே தங்குங்க.அம்மா,அப்பா,அண்ணன் அசந்த நேரத்தில் நகை,பனத்தை சுருட்டிகிட்டு வர்ரேன்.மும்பைக்கு ரயிலேறிடலாம்.அப்புறம் கடவுள் விட்ட வழி" என்றான் வாசு.

"உன் கிளாஸ் பொண்ணுக இதுக்கு ஒத்துக்குவாங்களா?" என்றார் அண்ணி.

**

"ஏன் ஒத்துக்க மாட்டோம்?வாசு எல்லா விவரமும் சொல்லிட்டான்.உள்ளே வாங்க" என்றாள் கவிதா.

சுஜாதா தயக்கத்துடன் உள்ளே நுழைந்தார்.அறைமூலையில் மேலும் இரு பெண்கள் அவரையே உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தது தெரிந்தது.

"பயப்படாதீங்க..அவங்க கிராமம்.அவங்களுக்கு இதெல்லாம் புதுசு.ஆனால் நீங்க இங்கே தங்குவதில் எங்க யாருக்கும் எந்த ஆட்சேபமும் இல்லை." என்றாள் கவிதா.

"ரொம்ப தேங்க்ஸ் கவிதா" என்றான் வாசு.அழுகிறார் போல் ஆகிவிட்டான்."அண்ணி..சாரி சுஜாதா மேல எனக்கு உயிரே இருக்கு.துரும்பு பட்டாலும் தாங்கிக்க மாட்டேன்.உங்களை அதிகமா தொந்தரவு பண்னமாட்டேன்.இன்னும் இரண்டு நாள்.பணத்தை புரட்டிட்டு வந்துடறேன்."

வாசு மெதுவாக கீழிறங்கினான்.சுஜாதா ஜன்னல் வழியாக அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.வாசு திரும்பி,திரும்பி பார்த்துக்கொண்டே நடந்தான்.

****

அண்ணி காணாமல் போனதை பற்றி அண்ணன் அலட்டிக்கொள்ளவே இல்லை."ஓடுகாலி கழுதை, எங்கேயோ போய்த்தொலையட்டும்" என உறுமினார்."போலிஸில் சொல்லலாம்" என சொன்ன அம்மாவை பார்த்து முறைத்தார்.கப் சிப்..அத்துடன் பேச்சு நின்றது.

இரவு வாசு மெல்ல எழுந்தான்.லாக்கரை திறந்து பனத்தையும், நகையை எடுத்தான்.தனது சர்ட்டிபிகேட்டுகளை எடுத்துக்கொண்டான்.மெல்ல கேட்டை திறந்து வெளியேறினான்.

பின்னால் அவனுக்கே தெரியாமல் அவன் அப்பா செண்பகராமன் அவனை பின் தொடர்ந்தார்.

ஏதோ வீட்டு கதவை நள்ளிரவில் வாசு தட்டுவது தெரிந்தது.ஒரு பெண் வெளியே வந்தாள்.யார் அது?எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறதே?இதென்ன வாசுவை அனைத்துக்கொள்கிறாள்??அட கடவுளே...அவளா இவள்?இருக்க முடியாது...

செண்பகராமன் அதிர்ச்சியில் உறைந்தார்.

"மும்பை போயிட்டா உடனே வீடு பாக்கணும்" சொல்லிக்கொண்டு படி இறங்கிய வாசு முகத்தில் டார்சு வெளிச்சம் விழுந்தது..அப்பா..

"இது என்ன கோலம்டா சங்கரு?உன்னை இப்படி பாக்கவா உசுரை வெச்சிருந்தேன்?"

செண்பகராமன் அழுதார்.

"அப்பா...நான் பல வருடம் மறைச்சு,மறைச்சு பார்த்தேன்.முடியலை.ஆணா நடிக்க தான் முடிந்ததே ஒழிய வாழ முடியலை.தம்பி வாசு தான் தைரியம் சொல்லி மும்பைக்கு கூட்டிபோய் ஆபரேஷன் பண்ணி என்னை பொண்ணா மாத்தறதா சொன்னான்.அரவாணிக்கெல்லாம் தலையெழுத்து இதுதானே?எனக்கு வேற வழி தெரியலை..மன்னிசிருங்கப்பா" என்றாள் சுஜாதா.

"சங்கரு..இப்பவும் ஒண்ணும் கெட்டுப்போகலை.ஊட்டுக்கு வா.எம்பொண்னாவே இரு.ஊர் என்ன சொன்னாலும் கவலை இல்லை.எங்கேயோ போயி நீ துடிப்பதை என் கண்னால் பார்க்க முடியாது.அரவாணின்னா என்ன கேவலமாடா?அதுவும் மனுச பொறப்புதானே?வா கண்ணு" என்றார் செண்பகராமன்.

"அண்ணி..அப்பா சொல்றதுதான் சரி.வாங்க வீட்டுக்கு போகலாம்.அப்பா கிட்ட சொல்லி இங்கே நல்ல டாக்டரா பாத்து ஆபரேஷன் பண்ணிக்கலாம்" என்றான் வாசு.

"ஏன்டா...அண்னன் பொண்ணானா அண்ணின்னு கூப்பிடணும்னு எவன்டா சொல்லிக்கொடுத்தது?முட்டாபய மவனே" என்றார் செண்பகராமன்.

கல கலவென சிரித்தாள் சுஜாதா.

மூவரும் ஆட்டோ பிடித்து வீட்டை நோக்கி விரைந்தனர்.

--
செல்வன்

www.holyox.tk

"Beer is proof that God loves us and wants us to be happy"- Benjamin Franklin

Asif Meeran AJ

unread,
Nov 20, 2008, 3:41:19 AM11/20/08
to பண்புடன்

இன்னொரு தலைப்பு தொடர்பான விவாதத்துக்கு
நல் வாழ்த்துகள் :-))

செல்வன்

unread,
Nov 20, 2008, 3:45:18 AM11/20/08
to panb...@googlegroups.com

அண்ணாச்சி,

இந்த தபா நான் இந்த ஆட்டத்துக்கு வரலை.மக்களே ஆடிக்கட்டும்:-)


2008/11/20 Asif Meeran AJ <asifm...@gmail.com>

பிரேம்குமார்

unread,
Nov 20, 2008, 10:51:20 AM11/20/08
to panb...@googlegroups.com
நான் வேணும்னா ஆரம்பிக்கட்டா....
 
வேற ஒன்னும் இல்லை... செல்வன் நிறைய மசாலாப்படங்கள் பார்ப்பார் போல. அதான் நல்ல கருத்து சொல்லனும்னாலும் கிளுகிளுப்பு தலைப்பும் கதையோட்டமும் வேணும்னு நினைச்சிட்டார் போல

Swathi Swamy

unread,
Nov 20, 2008, 11:35:32 AM11/20/08
to panb...@googlegroups.com


2008 நவம்பர் 20 10:51 அன்று, பிரேம்குமார் <prem.kav...@gmail.com> எழுதியது:

நான் வேணும்னா ஆரம்பிக்கட்டா....

ராசா.... நீங்க என்ன ஆரம்பிச்சாலும் கடைசில கும்மில கும்மப்படும் பருப்பொருள் நீங்க தான் என்பதை அடிக்கடி நான் தான் உங்களுக்கு ஞாபகப்படுத்த வேணுமோ?  சிவனே ன்னு  நல்லதா ஒரு பின்னூட்டம்  போட்டுட்டு போலாமே....  எதுக்கு வம்பு?  :)

அன்புடன்
சுவாதி
 
வேற ஒன்னும் இல்லை... செல்வன் நிறைய மசாலாப்படங்கள் பார்ப்பார் போல. அதான் நல்ல கருத்து சொல்லனும்னாலும் கிளுகிளுப்பு தலைப்பும் கதையோட்டமும் வேணும்னு நினைச்சிட்டார் போல





--
சாவு நெருங்கி வரும் போதும் -
தமிழ் மானம் காத்திரடி பாப்பா!!

http://groups.google.com/group/Piravakam
http://santhappiravagam.blogspot.com/
http://jokes4smile.blogspot.com/
http://puthiyakalithokai.blogspot.com/

பிரேம்குமார்

unread,
Nov 20, 2008, 11:40:32 AM11/20/08
to panb...@googlegroups.com
//எதுக்கு வம்பு?  :)/
 
அப்படிங்கிறீங்களா??? ம்ம்ம், அக்கா சொன்னா சரிதான்

செல்வன்

unread,
Nov 20, 2008, 12:22:30 PM11/20/08
to panb...@googlegroups.com

பிரேம்,

கருத்து சொல்றதுக்கெல்லாம் கதை எழுதறதில்லை.சுவாரசியத்துக்கு தான் எழுதுகிறேன்.

தலைப்பு வைப்பதெல்லாம் சும்மா ஜாலிக்கு.

lucky shajahan

unread,
Nov 20, 2008, 5:44:44 PM11/20/08
to panb...@googlegroups.com
அதானே அக்கா..பிரேம்ஜின்னு வந்துட்டா மொக்கைப் பீடியா டீம்லேர்ந்து
எல்லாரும் களம் இறங்கிட மாட்டோம் :-)

2008 நவம்பர் 20 19:35 அன்று, Swathi Swamy <mswat...@gmail.com> எழுதியது:



ராசா.... நீங்க என்ன ஆரம்பிச்சாலும் கடைசில கும்மில கும்மப்படும் பருப்பொருள் நீங்க தான் என்பதை அடிக்கடி நான் தான் உங்களுக்கு ஞாபகப்படுத்த வேணுமோ? --
எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே...
நீ நதி போல ஓடிக்கொண்டிரு...
*
லக்கி ஷாஜஹான்.

பிரேம்குமார்

unread,
Nov 20, 2008, 8:48:45 PM11/20/08
to panb...@googlegroups.com
என்ன செய்யுறது லக்கி அண்ணா....... நான் வாங்கி வந்த வரம் அப்படி :)
 
இப்போ செல்வன் எழுதியதற்கு சீரியஸா பதில் எழுதனும்னு நினைக்கிறேன். ஆனா ஏதோ ஒன்னு தடுக்குது..
 
நம் கடன் மொக்கை போட்டு கிடப்பதே அப்படின்னு இருக்க வேண்டியது தான் ;-)

Ahamed Zubair A

unread,
Nov 20, 2008, 10:26:46 PM11/20/08
to panb...@googlegroups.com
நானும் ஆஜர்.
 
தானைத்தலைவர் பிரேம் வாழ்க..

2008/11/21 lucky shajahan <luckys...@gmail.com>

jmms

unread,
Nov 20, 2008, 10:33:06 PM11/20/08
to panb...@googlegroups.com


2008/11/21 Ahamed Zubair A <ahamed...@gmail.com>

நானும் ஆஜர்.
 
தானைத்தலைவர் பிரேம் வாழ்க..

நான் இல்லேன் ஐயா... ( ஊர் போய்ட்டு வார வரைக்கும்)...:)


சாந்தி
தன்னைப்போல் பிறரையும் நேசி..
http://punnagaithesam.blogspot.com/ =============================

செல்வன்

unread,
Nov 21, 2008, 1:57:27 AM11/21/08
to panb...@googlegroups.com

//தானைத்தலைவர் பிரேம் வாழ்க..//

வழிமொழிகிறேன்.

வாழ்க பிரேம்.வளர்க அவரது புகழ்

Asif Meeran AJ

unread,
Nov 21, 2008, 2:22:02 AM11/21/08
to panb...@googlegroups.com
என் இதயக்கனிக்கு இருக்கும் மக்கள் ஆதரவைப் பார்த்து புளகாங்கிதமடைகிறேன்.

வாழ்க பிரேம்!
ஓங்குக அவர் புகழ்!

ஆனல், இதுக்கெல்லாம் பயந்து பிரேம் சீரியஸா எழுதுவதை விட்டு விட மாட்டார் என்பதையும் இப்போது உயிரோசையில் எழுதும் என் கவிவாரிசு ஞானபீடத்துக்கான கவிதைப்பரிசு வாங்குனம் வரை ஓய மாட்டார் என்பதையும் எச்சரிக்கையாகவே சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.
(இதுவும் செல்வன் கதை மாதிரிதான்..கிகிகி. சும்மா சுவாரஸ்யத்துக்காக)


வழிமொழிகிறேன்.வாழ்க பிரேம்.வளர்க அவரது புகழ்



Ahamed Zubair A

unread,
Nov 21, 2008, 3:08:07 AM11/21/08
to panb...@googlegroups.com
பிரேம் அண்ணா,
 
பொம்மை, நாய் எல்லாம் எழுதியாச்சு... இப்ப குரங்கு, கழுதை எல்லாம் பாக்கியிருக்கு.. சும்மா பூந்து விளையாடுங்க..
 
இந்த மொக்கைல உங்க கவிதை சூப்பர்னு சொல்ல மறந்தாச்சு..
 


 
2008/11/21 Asif Meeran AJ <asifm...@gmail.com>

Swathi Swamy

unread,
Nov 21, 2008, 6:36:33 AM11/21/08
to panb...@googlegroups.com


2008 நவம்பர் 21 02:22 அன்று, Asif Meeran AJ <asifm...@gmail.com> எழுதியது:
என் இதயக்கனிக்கு இருக்கும் மக்கள் ஆதரவைப் பார்த்து புளகாங்கிதமடைகிறேன்.

வாழ்க பிரேம்!
ஓங்குக அவர் புகழ்!

ஆனல், இதுக்கெல்லாம் பயந்து பிரேம் சீரியஸா எழுதுவதை விட்டு விட மாட்டார் என்பதையும் இப்போது உயிரோசையில் எழுதும் என் கவிவாரிசு ஞானபீடத்துக்கான கவிதைப்பரிசு வாங்குனம் வரை ஓய மாட்டார் என்பதையும் எச்சரிக்கையாகவே சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.
(இதுவும் செல்வன் கதை மாதிரிதான்..கிகிகி. சும்மா சுவாரஸ்யத்துக்காக)

அதானே பார்த்தேன்.....   என்னடா இன்னிக்கு பனி  மழை  கொட்டிடுமோன்னு பயந்துட்டேன் ஒரு வினாடி...


வழிமொழிகிறேன்.வாழ்க பிரேம்.வளர்க அவரது புகழ்



பிரேம்குமார்

unread,
Nov 21, 2008, 9:46:19 AM11/21/08
to panb...@googlegroups.com
அது சரி... ஒருத்தன் சிக்கினா கூடி கும்மியடிச்சுருவீங்களே :)
 
செல்வன்...... u too???? :))))))))))))))))))
 
அண்ணாச்சி.... இது விட அதிரடியா என்னை கும்ம முடியாது!!!!! அவ்வ்வ்வ்வ் :)

Swathi Swamy

unread,
Nov 21, 2008, 9:52:24 AM11/21/08
to panb...@googlegroups.com


2008 நவம்பர் 21 09:46 அன்று, பிரேம்குமார் <prem.kav...@gmail.com> எழுதியது:

அது சரி... ஒருத்தன் சிக்கினா கூடி கும்மியடிச்சுருவீங்களே :)
 
செல்வன்...... u too???? :))))))))))))))))))
 
அண்ணாச்சி.... இது விட அதிரடியா என்னை கும்ம முடியாது!!!!! அவ்வ்வ்வ்வ் :)

:):)  அண்ணாச்சிக்கு வாரிசானாலும் அக்கா சொல்லை தட்டாதீர். ..
     கவுஜை  எழுதி ஜெயிச்சாலும் இந்த அக்கா சொல்லை தட்டாதீர்..
   


பிரேம்குமார்

unread,
Nov 21, 2008, 9:55:55 AM11/21/08
to panb...@googlegroups.com
ம்ம்ம், நீ அப்பவே சொன்னீங்க..... கேட்டாத்தானே???!!!!
Reply all
Reply to author
Forward
0 new messages