தஞ்சாவூர்த் தமிழ்

349 views
Skip to first unread message

தேமொழி

unread,
Jul 25, 2013, 5:32:39 PM7/25/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com
குழும தமிழ் தோழர்களே....

1. தஞ்சாவூர்த் தமிழ்/தஞ்சை தமிழ் என்பதன் சிறப்பு என்ன?

2. அதை எவ்வாறு பிற வட்டாரத் தமிழில் இருந்து பிரித்தறிவது?

3. தஞ்சை மக்கள் மட்டுமே பயன்படுத்தும் சொற்கள் யாவை?

கீழ்கண்ட விக்கி பக்கங்கள் வழிகாட்டக் கூடும்.
மதுரைத் தமிழ் - https://ta.wikipedia.org/s/wi3
கொங்குத் தமிழ் - https://ta.wikipedia.org/s/qid
சென்னைத் தமிழ் - https://ta.wikipedia.org/s/chn
திருநெல்வேலித் தமிழ் - https://ta.wikipedia.org/s/3wk

அரிசனப் பேச்சுத் தமிழ் - https://ta.wikipedia.org/s/g2q
பிராமணத் தமிழ் - https://ta.wikipedia.org/s/eb
முஸ்லிம் தமிழ் - https://ta.wikipedia.org/s/2mng

மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ் - https://ta.wikipedia.org/s/lzw
யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ் - https://ta.wikipedia.org/s/jng
மலேசியத் தமிழர் தந்த தமிழ்ச் சொற்கள் - https://ta.wikipedia.org/s/c0n

தனித்தமிழ் - https://ta.wikipedia.org/s/9l2
என்ற பக்கத்தில் தஞ்சைத்தமிழ் பற்றிய விளக்கம் கிடைக்கவில்லை.

தஞ்சைத்தமிழ் அறிந்தவர்கள் கருத்துகளைப் பகிர்ந்து உதவினால், அவற்றைத்  தொகுத்து கட்டுரையாக வழங்கிடலாம்.
இணையத்தேடல் இதில் உதவில்லை.

அன்புடன் 
..... தேமொழி 

DEV RAJ

unread,
Jul 25, 2013, 6:09:40 PM7/25/13
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
பிற வட்டாரத்தவர்  எம்பத்தொண்ணு, எம்பத்தொம்பது
என்பதைத் தஞ்சை வட்டாரத்தவர் ‘எம்ப்ளத்தொண்ணு,
’எம்ப்ளத்தொன்பது’ என்பர்.

தி.ஜானகிராமன் அவர்களின் நாவல்களில் தஞ்சை
வட்டாரப் பேச்சைக் காண முடிகிறது.


('ஒம்போதுக்கொம்போது எம்ப்ளத்தொண்ணு' என்ற டீச்சர் குரல் இன்னும் காதிலேயே ஒலிக்கிறது).



தேவ்

Innamburan S.Soundararajan

unread,
Jul 25, 2013, 8:25:32 PM7/25/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com
வட்டாரமொழி ஆராய்ச்சி சுவையானது. தஞ்சை என்ன? திருநெல்வேலி தமிழும்
அழகானது. புதுக்கோட்டை சமஸ்தான காலத்து வட்டாரமொழியில் 'பாலிடிக்ஸ்'
செய்கிறான் என்றால் வில்லங்கம் என்று பொருள்.

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com


2013/7/26 DEV RAJ <rde...@gmail.com>:
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "வல்லமை" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to vallamai+u...@googlegroups.com.
> For more options, visit https://groups.google.com/groups/opt_out.
>
>

வேந்தன் அரசு

unread,
Jul 25, 2013, 8:52:58 PM7/25/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com
எத்தனை பேர் இலக்கணம் எழுதி என்ன பயன்?

அரை மாத்திரை ,ஒரு மாத்திரை, இருமாத்திரை ,அளபெடை, குற்றிய லுகரம்
ஒலி பிறக்கும் இடம் எல்லாமும் சொல்லி என்ன யூசும் இல.

நீ என்ன சொல்லுதூஉ?
--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

DEV RAJ

unread,
Jul 25, 2013, 10:06:51 PM7/25/13
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
On Thursday, 25 July 2013 17:52:58 UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:
எத்தனை பேர் இலக்கணம் எழுதி என்ன பயன்?
அரை மாத்திரை ,ஒரு மாத்திரை, இருமாத்திரை ,அளபெடை, குற்றிய லுகரம்
ஒலி பிறக்கும் இடம் எல்லாமும் சொல்லி என்ன யூசும் இல.


என்ன செய்வது சேவியர் சார் ?
உலகின் பெரும்பான்மை மொழியான சீன மொழியிலும்
பத்துக்கும் மேற்பட்ட வட்டாரப் பேச்சுகள். செம்மொழிகளிலும்
காலம்தோறும் செய்யுள் நடையிலும், உரை நடையிலும்
மாற்றம் இருக்கத்தான் செய்கிறது. வட்டார வழக்குகள்
தூய தமிழ்ச் சொற்களைப் பாதுகாத்து வைத்திருப்பதையும்
மறுக்க முடியாது. விரிவாக எழுதினால் தேமொழி அவர்கள் 
இழை தொடங்கியதன் நோக்கம் திசை மாறும்.

நான் உன்னிப்பாகக் கவனித்த அளவில் தஞ்சை
வட்டாரத்தின் ழகர உச்சரிப்பு, பிற பகுதிகளைக்
காட்டிலும் தெளிவாக உள்ளது


தேவ்


shylaja

unread,
Jul 25, 2013, 11:45:46 PM7/25/13
to vallamai, mintamil
தஞ்சைத்மிழில்   காரம் என்பதை சிலர் அயல் என்கிறார்கள் என் மாமியார் வீட்டில்  கிராமத்தில் குழம்பு அயல்கிறது என்றே  சொல்வார்கள்.  வீட்டைத்திமிர்ந்துவிடு  என்றால்   துடைத்துவிடு என்பதை அங்கே  கேட்டேன். மற்றபடி தேவ்ஜீ சொல்வதுபோல  எண்கள் உச்சரிப்பு சற்று மாறுமே தவிர ழகர உச்சரிப்பு சிறப்பாகத்தான் இருக்கும். தி ஜானகிராமன்  கதைகளில்  நலல் தஞ்சைமணம்  வீசும்!
 
பொதுவாக  தமிழ்மொழியே சில இடங்களில் சரி  இல்லை. ரசம் என்றால் சுவையென்று பொருள் அதிரசம் என்றால்  மிகவும் சுவையானது என்பது பொருள்  இதனை அதிர்சம் என்கிறார்கள்.
 
அதேபோல  கைமாறு  பேச்சுவழக்கு கைம்மாறு என்பதே சரி.
 
முயற்சிக்கிறேன் என்று  பலர் எழுதுகிறார்கள். முயல் வினைச்சொல். முயற்சி பெயர்ச்சொல். இது பெயராகத்தான் வர முடியுமே தவிர வினைப்பொருளில் வரமுடியாது. முயல்கிறேன்  என்பதோ முயற்சி செய்கிறேன் என்பதோ தான் சரி.
 
 
 
 
 
 


2013/7/26 தேமொழி <them...@yahoo.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
ஷைலஜா
 
 

வாசன்

unread,
Jul 25, 2013, 11:47:50 PM7/25/13
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
வணக்கம்.

தஞ்சை மாவட்டம்..ஹூம்.. 31 ஆண்டுகளுக்கு முன் 19 வருடம் தஞ்சை மாவட்டத்தினன்.

தெற்கு பக்கம் - தெண்ணன்ட பக்கம்

மேற்கு பக்கம் - மேலண்ட பக்கம், கிழக்கு - கீழண்ட

நிலம் - மேலண்ட பக்கம் வாஞ்சியாத்துக்கிட்ட ஆறு வேலி நஞ்சை இருந்தது. அதுல 20 குழி மொத வாட்டியா கரும்பு போட்டிருக்கேன் - இங்கு வேலி மற்றும் குழி வட்டாரச் சொற்களோ..?

மற்றும் வட்டார உணவுகள் - இது தஞ்சை மாவட்டத்தின் சிறப்பு என சிலர் சொன்னது. சரியா, தெரியாது.

பால் கொழுக்கட்டை - சீப்பு பணியாரம்

யோசித்துப் பார்க்கணும்.

-
வாசன்

நியு மெக்ஸிக்கோ -யூ எஸ்

DEV RAJ

unread,
Jul 26, 2013, 12:53:47 AM7/26/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, vaa...@gmail.com
On Thursday, 25 July 2013 20:47:50 UTC-7, வாசன் wrote:
அதுல 20 குழி மொத வாட்டியா கரும்பு போட்டிருக்கேன் - இங்கு வேலி மற்றும் குழி வட்டாரச் சொற்களோ..?
 

ஆம். குழி, மா, வேலி நில அளவைகள்.

100 குழி = ஒரு மா
20 மா = ஒரு வேலி
[1 குழி  -  0 . 34 சென்ட்]

சாலி நெல்லின் சிறை கொள் வேலி
ஆயிரம் விளையுட்டு ஆக,
காவிரி புரக்கும் நாடுகிழவோனே !
          - பொருநர் ஆற்றுப்படை

‘வேலி’ இன்றும் புழங்கும் சொல்.

முன்பு காவிரிப் பாசனத்தில் மூன்று
பட்டங்கள்; குறுவை, சம்பா, தாளடி [கோடைப் பட்டம்] 
ஆகிய மூன்று போகம். 

நெல்லை மாவட்டத்தில் கார், பிசானம்
என்று  இரண்டு பட்டங்கள்தான்;
மாசி மாதம் முடிந்து கோடையில்
சிறு தானியங்கள் விளைந்தால்
அதிகம்.


தேவ்




 

N. Ganesan

unread,
Jul 26, 2013, 8:56:29 AM7/26/13
to vall...@googlegroups.com, mintamil, thami...@googlegroups.com
On Thursday, July 25, 2013 8:45:46 PM UTC-7, shylaja wrote:
தஞ்சைத்மிழில்   காரம் என்பதை சிலர் அயல் என்கிறார்கள் என் மாமியார் வீட்டில்  கிராமத்தில் குழம்பு அயல்கிறது என்றே  சொல்வார்கள்.  வீட்டைத்திமிர்ந்துவிடு  என்றால்   துடைத்துவிடு என்பதை அங்கே  கேட்டேன். மற்றபடி தேவ்ஜீ சொல்வதுபோல  எண்கள் உச்சரிப்பு சற்று மாறுமே தவிர ழகர உச்சரிப்பு சிறப்பாகத்தான் இருக்கும். தி ஜானகிராமன்  கதைகளில்  நலல் தஞ்சைமணம்  வீசும்!
 

(1) அயல்கிறது “அழல்கிறது” என்பதன் பேச்சுமொழி. பல இடங்களில் உண்டு. கிழவி - கெயவி, வாழைப்பழம் - வாயப்பயம் என்பது போல.

அண்ணா கட்டுரை:

திருவிழா, திருவிஷா. உழுதல் காலம் (உழை : மான்கொம்பால் உழுதகாலம் உண்டு) - உஷத் காலம் (உஷா:உழை. உழை - மான்) என கருதுகிறேன்,
விழா - விழு/விஷு - விஷுவத். கலூழ் - கலூஷ என்று எமெனோ எழுதியுள்ளார்.

(2) திமிர்தல் - மேற்பூச்சு பூசுதல். இளமைக் காலத்தில் பொலிவைத் திமிர் என்பது இந்த வினைச்சொல்லில் இருந்துதான்.
பொலிகாளையின் திமில் இளமையின் அழகைக் காட்டிநிற்பது. உ-ம்: பழையகோட்டைக் காளைகள்.
சிந்து சமவெளி முத்திரைகளில் திமிர் (திமில்) உடைய காளைகள் ஆயிரக் கணக்கில் கலைவடிவாக பத்தாயிரம்
சதுரமைல்களில் கிடைக்கின்றன. திமிர் பொலி காளை:


அதன் திமிர்/திமில் தந்த வடசொல் - திமிர. கருமை என்ற பொருளில் வடமொழியில் வருகிறது.
வேளாண் நாகரீகத்தின் வடசொல் அடையாளம் இச்சொல்.

நா. கணேசன்

சொ. வினைதீர்த்தான்

unread,
Jul 26, 2013, 10:12:48 AM7/26/13
to vallamai, mintamil, தமிழாயம்
தஞ்சாவூரில் மூன்று ஆண்டுகள் பணியாற்றினேன். பலருடன் நெருங்கிப்பழகும் வாய்ப்பும் அமைந்திருந்தது. என் இயல்புக்கும் கலந்து பழகுதல் ஒத்தது. எனக்கு வட்டார வழக்கு ஒன்றும் தென்படவில்லை. 
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்


2013/7/26 N. Ganesan <naa.g...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages