சைவ சித்தாந்தம்

1,343 views
Skip to first unread message

Raja sankar

unread,
Feb 6, 2011, 10:23:40 AM2/6/11
to minT...@googlegroups.com
இவ்விழையில் சைவ சித்தாந்தம் பற்றி எனக்கு தெரிந்ததை, புரிந்து கொண்டதை எழுதுகிறேன். 

இந்த இழைய எழுதும் முன் முன்பு மின் தமிழில் சைவசித்தாந்தம் பற்றி நடந்த உரையாடல்களையும் மரபு விக்கியில் இருக்கும் கட்டுரைகளையும் வாசித்தேன். சைவசித்தாந்தம் என்று தொடங்கினாலே அனல் பறந்திருக்கிறது. இந்த இழையில் அப்படி நடக்காமல் இருக்க ஈசன் அருள்வானாக. 

முதலில் சித்தாந்தம் என்றால் என்ன என பார்க்கலாம். சித்தம் என்றால் மனது/அறிவு. அதன் முடிவாக(அந்தமாக) இருப்பது சித்தாந்தம். இதே போல் நாதாந்தம், யோகாந்தம்,வேந்தாந்தம் என பல உண்டு. இவைகளை சேர்த்து சடாந்தம்(ஷடாந்தம் ?) என சொல்வார்கள். அவைகளை பற்றி பின்னர். சிந்தாந்த சைவம் என்றும் ஒரு கொள்கை பிரிவு உண்டு. அந்த வார்த்தை விளையாட்டுகள் பற்றியும் பின்னர். 

சைவ சித்தாந்தம் பற்றி பார்க்க புகுமுன் இந்திய தத்துவங்கள் என்பவை எப்படி அமைக்கப்பட்டிருக்கின்றன. அவைகளில் இலக்கணம் என்ன? அந்த இலக்கணங்கள் சைவ சித்தாந்தத்திற்கு அமைகிறதா எனவும் பார்க்கலாம். இந்த விளக்கம் கொஞ்சம் நீளமாக இருக்கும் ஏனென்றால் சித்தாந்தம் என்பது இருவரிகளில் சொல்லப்படுவது அல்ல. இந்திய தத்துவங்கள் யாவையும் கீழ்க்கண்ட அமைப்பில் இருக்கும்.  

1. கடவுள் என்பவர் யார்? குணங்கள் என்ன?
கடவுளை எந்த பெயரில் சொன்னாலும் அந்த தத்துவம் கடவுளின் பண்புகளை, அவற்றின் சிறப்பை, அருளும் முறைய சொல்லவேண்டும். கடவுளை பிரம்மம் என்று சொன்னாலும் அது மாறுபடுவதில்லையாதலால் இந்த வரையறை அந்த தத்துவங்களுக்கும் பொருந்தும். 
2. உயிர்கள் ஏன்? அவைகளின் இவ்வுலகில் ஏன் எப்படி வந்தன?
உலகு/பிரபஞ்சம், உயிர்கள் என்பவை என்ன? எவை எவை எல்லாம் உயிர் என்ற கருதுகோளுக்கு வருகிறது? அவைகளுக்கு இருக்கும் குணங்கள், செயல்கள் யாவை? உயிர்கள் படும் துன்பங்களுக்கு என்ன காரணம்? என்பவை சொல்லப்படும். 
3. விடுதலை/மோட்சம்/முக்தி
இந்த உலகில் இருந்து விடுபடுவது எவ்வாறு? அது எப்படி நடக்கிறது? எந்தெந்த வழிமுறைகள் இருக்கின்றன? அவைகளை எப்படி அறிவது? எப்படி பின்பற்றுவது போன்றவை இந்த பகுதியில் வரும். 
4. இவற்றின் நீருபணம்.
மேற்சொன்னவைகள் யாவையும் இது இப்படித்தான் என்று சொல்லப்படாமல் நியாய தர்க்க வழிமுறைகளை கொண்டு, காட்சி, நீருபிக்கப்பட்ட உண்மைகள், ஊகம் போன்றவைகளை கொண்டு நீருபிக்கப்பட்டாகவேண்டும். அவையும் நியாயத்தின் 16 அங்கங்களுக்குள் இருந்தாகவேண்டும். இல்லையெனில் அவை ஏற்றுக்கொள்ளப்படமாட்டா
5. மூவகை தளங்களில் இயக்கம். 
இப்படி நீருபிக்கப்பட்ட தத்துவங்கள் மூவகை தளங்களில் இயங்கும். 
அ. பொது நிலை
பொது நிலை என்பது, அன்றாட வாழ்வில் செய்யவேண்டிய செயல்கள், கடைப்படிக்கவேண்டிய விதிகள் போன்றவை. 
ஆ. சமூக/அமைப்பு நிலை
இது சமூகத்தில் செய்யவேண்டியது, கோயில் வழிபாடு, ஓவியம், சிற்பம், இசை போன்றவைகளை உள்ளடக்கியது. பக்தியும் பாடல் பாடுவது, தேர்த்திருவிழா கொண்டாடுவது போன்றவையும் இதில் சேரும். 
இ. தத்துவ நிலை
இது கடைசி நிலை. பாடல்கள் இயற்றுவது, தான் அடைந்த, பெற்ற அறிவை,அனுபவத்தை மற்றவர்களும் அனுபவிக்க, அடைய பாடல்கள் மூலமாக உரை மூலமாக சொல்வது போன்றவை இதில் அடக்கம்.


இந்த இழையில் மேற்கண்டவற்றை சுருக்கமாகவும் சைவ சித்தாந்தம் பற்றி விரிவாகவும் பார்க்கலாம். மேலும் இந்திய தத்துவங்கள் என்றாலே ஒன்றை ஒன்று திட்டுவது தான் என பலர் நினைத்துகொண்டிருக்கிறார்கள். அதுவும் உருவ அருவ வழிபாட்டில் இந்த குழப்பம் நிறைய பேருக்கு உண்டு. இந்த இழையில் மூலம் அவற்றையும் பார்க்கலாம். 

நண்பர் வினோத் அடிக்கடி சொல்லுவார், யோக முறையானது தார்மீக மதங்கள் எல்லாவற்றிலும் உண்டு என. அது எவ்வாறு எனவும் பார்ப்போம். 

நண்பர்களின் கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன. 

ராஜசங்கர்

Geetha Sambasivam

unread,
Feb 6, 2011, 10:32:53 AM2/6/11
to mint...@googlegroups.com
அருமையான தொடக்கம்.  யோகமுறை எல்லா மதங்களிலும் இருக்கிறது என்பதை நானும் கவனித்திருக்கிறேன்.  முக்கியமாய் பெளத்த மதத்தில் நம்முடைய பல யோகமுறைகள் கடைப்பிடிக்கப் படுகின்றன என்று படித்திருக்கிறேன்.  கூடவே இவற்றையும், விளக்கிக்கொண்டு வரும்படி கேட்டுக்கொள்கிறேன்.  இதைப் பற்றி ஆழ்ந்த அறிவு இல்லை என்பதால் அனைவரின் கருத்துக்களையும் படித்துப் புரிந்து கொண்டு சந்தேகம் வரும்போது விளக்கம் கேட்டுக்கொள்கிறேன்.  நன்றி.

2011/2/6 Raja sankar <errajasa...@gmail.com>
இவ்விழையில் சைவ சித்தாந்தம் பற்றி எனக்கு தெரிந்ததை, புரிந்து கொண்டதை எழுதுகிறேன். 

ராஜசங்கர்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

devoo

unread,
Feb 6, 2011, 10:33:26 AM2/6/11
to மின்தமிழ்
மகிழ்ச்சியாக இருக்கிறது,
சைவத் துறையை அறிந்தோரும், அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுவோரும்
கட்டாயம் பங்கு கொள்ள வேண்டிய இழை.

இடையூறின்றி இழை வளர்வதாக !


தேவ்

Subashini Tremmel

unread,
Feb 6, 2011, 12:46:47 PM2/6/11
to mint...@googlegroups.com
அருமையான தொடரை ஆரம்பித்திருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.
தத்துவங்களின் விளக்கம் என்பது வாசிப்பிற்கு என்றுமே விருந்து தான். நீங்கள் தத்துவ நூல்களை முன்வைத்து அச்செய்யுள்களின் வழி உங்கள் புரிதலை விளக்க நிணைத்திருக்கின்றீர்களா அல்லது பிறரது உரைகளின் வழியாகவா?
வாசிக்க ஆவலுடன் இருக்கின்றேன். தொடருங்கள்.
-சுபா
 
2011/2/6 Raja sankar <errajasa...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

Tthamizth Tthenee

unread,
Feb 6, 2011, 12:57:13 PM2/6/11
to mint...@googlegroups.com
”சைவசித்தாந்தம் என்று தொடங்கினாலே அனல் பறந்திருக்கிறது. இந்த இழையில் அப்படி நடக்காமல் இருக்க ஈசன் அருள்வானாக’
 
 
 
சைவ சிந்தாந்தமோ  வேறு எந்த சித்தாந்தமோ எதுவாயினும்  மற்ற சிந்தாந்தங்களை குறை சொல்லும் நோக்கோடு  தொடங்கினால்தான் அனல் பறக்கும்
 
மற்றபடி எல்லா சித்தாந்தங்களைப் பற்றியும் அறிந்துகொள்ளும் நோக்கமுடையவர்களே  மின் தமிழ் அன்பர்கள் என்பதில் சந்தேகமில்லை
 
அதனால் தைரியமாக தொடங்குங்கள் தெரிந்துகொள்ளக் காத்திருக்கிறோம்
 
அன்புடன்
 
தமிழ்த்தேனீ
 


 
2011/2/6 Raja sankar <errajasa...@gmail.com>

அஷ்வின்ஜி

unread,
Feb 6, 2011, 1:04:46 PM2/6/11
to மின்தமிழ்
நான் மிகவும் எதிர் பார்த்திருந்த இழையை துவங்கியமைக்கு நன்றி திரு.ராஜா
சங்கர்ஜி.
தடங்கல் இன்றி தொடர சிவனருள் பொழியட்டும்.

அஷ்வின்ஜி.

coral shree

unread,
Feb 6, 2011, 9:37:15 PM2/6/11
to mint...@googlegroups.com
மிக்க நன்றி திரு ராஜா. ஆவலாகக் காத்திருக்கிறோம். தொடக்கமும் அருமை. தொடருங்கள். நன்றி.

2011/2/6 Raja sankar <errajasa...@gmail.com>
இவ்விழையில் சைவ சித்தாந்தம் பற்றி எனக்கு தெரிந்ததை, புரிந்து கொண்டதை எழுதுகிறேன். 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--

மின் செய்தி மாலை படியுங்கள்!

Take life as it comes!                                                        
All in the game na ! 
                                                          
 Pavala Sankari
 Erode
 Tamil Nadu,
 India.                                                                                       

Nagarethinam

unread,
Feb 6, 2011, 10:56:47 PM2/6/11
to மின்தமிழ்
அய்யா

சைவ சித்தாந்தம் என்று ஒரு நேர்முக வகுப்பு அதில் சேர்ந்து
(ஹைதராபாதில் நடந்தது)...... அதில் தந்த புத்தகங்கள் பூச்சி சாப்பிடடது
போக மீதம் இருக்கிறது..

எழுதியது திருவக்குவரோ மாணிக்கவாசகரோ இல்லை. சமீப காலத்தவர்தான்.தாங்கள்
படித்ததை அப்படியே எழுதுகிறார்களோ
அதில் பயன் படுத்தப்பட்டிருக்கும் வாத்தைகள் பாதிக்குமேல் புரியாது.

சித்தர்கள் சிவனடியார்கள் தான். அவர்கள் பாடல்கள் சிவ ஞான போதம் எல்லாம்
படித்துப் பார்த்து, ஒரே ஒரு கேள்விக்கு பதில் கிடைக்க வில்லை.. விஞ்ஞான
யுகத்தில் சிந்தித்து விடை கிடைப்பது அவ்வளாவு சிரமம் இல்லை. சுமார் 35
வருடம் போராடி
ஒருமாதிர்யாக (சரியோ தவறோ) விளக்கம் கிடைத்துள்ளது.

மனிதனை இறைவன் ஏன் படைத்தார்.

(எங்கள் வாத்தியார் சொன்ன பதில்)
உயிர்கள் மீதுள்ள ,அன்பினால். பின்னர் ஏன் மனிதனுக்கு பிணி பஸி துன்பம்
இறப்பு என்று எல்லா துன்பங்க்ளையும் அள்ளித்த்ருகிறார்?

எல்லாம் ஒர் காரியமாகத்தான். அப்போதுதான் மனிதன் படைத்தவனை நினைப்பான்.

இறைவனை நினைவுகொண்டு துதிதால் துன்பம் போகும். அப்படியானால் இறைவன் ஒரு
சாடிஸ்டா?

என் வாத்தியாரிடமிருந்து பதில் இல்லை.

இப்படி இல்லாமல் லாஜிகலாக, எழுதி வந்தீர்களேயானால்,
படிப்பவர் பயனடைவது தறாது.

நட்புடன்

நடராஜன்


இறைவன் ஒரு

On Feb 6, 8:23 pm, Raja sankar <errajasankarc...@gmail.com> wrote:

Raja sankar

unread,
Feb 7, 2011, 12:05:26 AM2/7/11
to mint...@googlegroups.com
அன்பின் சுபா,

முன்னோர் எழுதிய நூல்கள் அவற்றின் விளக்கங்களை அடிப்படையாக கொண்டு தான் இதை எழுதவேண்டும். நான் சைவ சித்தாந்தம் முதலில் படித்தது திருமுருக கிருபானந்த வாரியாரின் கந்த புராண உரையில் தான். பின்பு பல நூல்களை படித்திருக்கிறேன். அவைகளை அடிப்படையாக கொண்டு நான் புரிந்து கொண்டதை எழுதுவேன். 

ராஜசங்கர்



2011/2/6 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Raja sankar

unread,
Feb 7, 2011, 12:10:46 AM2/7/11
to mint...@googlegroups.com
வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி. 

அன்பின் நடராஜன், 

உயிர்கள் ஏன் இங்கு வந்தன என்ற கேள்விக்கும் விடை வரும் என்று முதல் இழையிலேயே எழுதியிருக்கிறேன். ஒவ்வொன்றாக பார்க்கலாம். ஏதேனும் லாஜிக் குறைபாடு இருக்குமாயின் சுட்டுங்கள். திருமூலரின் ஆரம்பித்து மெய்கண்டார், தாயுமானவர், வள்ளலார் என்று வாழையடி வாழையாய் வளர்ந்த சைவ சித்தாந்தம் லாஜிக் இல்லாமல் எதையும் எழுதவில்லை என்பதே நான் கண்டது. 

ராஜசங்கர்

2011/2/7 Nagarethinam <nataraj...@gmail.com>

annamalai sugumaran

unread,
Feb 7, 2011, 12:42:36 AM2/7/11
to mint...@googlegroups.com
அரிய  ஒரு தலைப்பில் 
அருமையாகவே ஆரபித்திருக்கிறீர்கள் 
சிறப்பாக செய்ய வாழ்த்துக்கள் !
அன்புடன் 
சுகுமாரன் 

2011/2/7 Raja sankar <errajasa...@gmail.com>



--
A.Sugumaran ,
PONDICHERRY INDIA
MOBILE 09345419948

My goal is simple.
 It is complete understanding of the universe, why it as it is     and why it exists as all !

Rajkumar S

unread,
Feb 7, 2011, 3:53:39 AM2/7/11
to mint...@googlegroups.com
 Anbargalukku vanakkam,
                                          ulagil uyirgal yen vanthana? ipadi oru padaippukku enna karanam ithu inru varai thelivaaga vidai alikka mudiyaatha kelvi.
                               intha oru kelvikku mattum pathil intha urayadalil kidaiththal miga miga miga miga magizhven.
 
ethirpaarppudan
Rajkumar
 


 
2011/2/7 annamalai sugumaran <amirth...@gmail.com>

வினோத்-VINOTH

unread,
Feb 7, 2011, 4:30:36 AM2/7/11
to mint...@googlegroups.com


2011/2/6 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

”சைவசித்தாந்தம் என்று தொடங்கினாலே அனல் பறந்திருக்கிறது. இந்த இழையில் அப்படி நடக்காமல் இருக்க ஈசன் அருள்வானாக’
 
 
 
சைவ சிந்தாந்தமோ  வேறு எந்த சித்தாந்தமோ எதுவாயினும்  மற்ற சிந்தாந்தங்களை குறை சொல்லும் நோக்கோடு  தொடங்கினால்தான் அனல் பறக்கும்
 


நான் குழுமத்தில் சேர்ந்ததில் இருந்து இதுவரை சித்தாந்தம்  இந்த வேலைலை ஆரம்பித்து பார்த்ததில்லை.  ஆனால் சித்தர்களையும், சித்தாந்தத்தையும் எள்ளி நகையாடிய நிகழ்வுகளையே பார்க்க நேர்ந்தது. ஏனிந்த வேறுபாடுகள் என்பது தான் புரியவில்லை..

மூக்கை நுழைப்பதற்கு மன்னிக்கவும்.



--
வினோத் கன்னியாகுமரி
http://tamilnanbargal.com/friends/vinoth


Raja sankar

unread,
Feb 7, 2011, 9:36:19 AM2/7/11
to minT...@googlegroups.com
சைவ சித்தாந்தம்-2.

சைவ சித்தாந்தம் படிக்கும் முன் இது இப்படித்தான் இருக்கும் என்று கோட்டம் வைக்காமல் படிப்பது நல்லது. ஏனென்றால் மெய்கண்ட சாத்திரங்களும் அவைகளுக்கு வந்த விளக்க உரைகளும் தான் சைவ சித்தாந்தம் என ரொம்ப பேர் நினைத்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் அது பன்னிரு திருமுறைகளில் இருந்தே ஆரம்பிக்கிறது. இரண்டாவதாக முருக வழிபாடும் சைவ சித்தாந்தத்தில் அடக்கம் தான். கச்சியப்ப சிவாச்சாரியர் எழுதிய கந்த புராணம் பல கருத்துக்களை உள்ளடக்கியது. உவமான உவமேயங்கள் மிக அழகாக இருக்கும். அதையும் வாரியார் விளக்கத்தில் படிக்கவேண்டும். 

முருகனை சிவ அம்சமாக கருதுவதாலேயே அவரையும் உள்ளடக்கி சைவர்கள் வழிபடுகின்றனர். தேவராய சுவாமிகள் கந்தர் சஷ்டி கவசத்தில் "குண்டலினி யாஞ்சிவ குகன் தினம் வருக" என பாடுகிறார். அருணகிரி நாதரும் கந்தர் அனுபூதியில் "யோகா சிவஞா னொபதே சிகனே" என பாடுகிறார். ஆக முருகனை துதிக்கும் பாடல்களிலும் புராணங்களிலும் சைவ சித்தாந்த கருத்துக்களை காணலாம். 

அடுத்து திருமுறைகளில் விரிவானதாக எடுத்துரைப்பது எதுவென்று உங்களுக்கு தெரிந்திருக்கும். ஆம் திருமந்திரம் தான் தத்துவார்த்தமாக கருத்துக்களை முன்வைப்பது. அதற்காக மற்ற திருமுறைகள் அப்படி இல்லை என்று என்னக்கூடாது. திருமந்திரம் இதோ இனிமேல் தத்துவம் என்று சொல்லிவிட்டு ஆரம்பிக்கிறது. மற்றயை திருமுறைகளோ தங்கத்தில் நவமணிகளை பதித்தது போல் பக்தி பாடல்களில் உள்ளே சிந்தாந்த கருத்துக்களை வைத்திருக்கும். அதிலும் மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகம் ஏராளமான கருத்துக்களை உள்ளடக்கியது. திரு உந்தியார் பாடலான

வளைந்தது வில்லு விளைந்தது பூசல் 
உளைந்தன முப்புரம் உந்தீபற 
ஒருங்குடன் வெந்தவா றுந்தீபற

இதில் வரும் உந்தீ பற என்பதற்கு விளக்கம் சொல்ல மாளாது. சைவக்குரவர் நால்வரும் பாடிய பாடல்கள் மட்டுமல்லாது பன்னிரு நூல்களில் இவற்றை ஆங்காங்கே காண முடியும். இக்கட்டுரையில் எல்லா விளக்கங்களுக்கும் பொருத்தமான பாடல்களையே உதாரணமாக சொல்லலாம் என்றிருக்கிறேன். இது மனதில் பதிவதுடன் விளக்கம் எளிதாக புரியவும் அடுத்தவர்களுக்கு விளக்கும் போது நினைவில் கொண்டு வரவும் உதவும். 

பக்தி பாடல்களில் தத்துவத்தை கொணர்வது, தத்துவத்தை உள்ளம் உருகும் படி கவிதையாய் எழுதுவது என்பது மிகவும் அரிது. அதை இந்நூல்கள் சாதித்திருக்கின்றன என்றால் அதை எழுதியவர்களின் நிலைக்கு அவர்களின் பக்திக்கு இவை இன்னும் சான்றாக நிற்கின்றன. 

பன்னிரு திருமுறைகளை அடுத்து சைவ சிந்தாந்தம் மெய்கண்ட சாத்திரங்கள் என்றும் பண்டார சாத்திரங்கள் என்றும் சொல்லப்படும் நூல்களால் வளர்த்தெடுக்கப்பட்டது. அவைகளுக்கு உரையாக வந்த நூல்கள் பல. மேலும் நிஜானந்த போதம், கைவல்ய நவநீதம் என்றும் நூல்கள் எழுந்தன. இப்போது நிஜானந்த போதம் சித்தர் பாடல்கள் வரிசையில் வைக்கப்படுகிறது. இது எப்படி என தெரியவில்லை. பின்பு தாயுமானவ சுவாமிகள், வள்ளலார் என பாடல்கள் இயற்றியவர் எண்ணிக்கை பெரிது. 

என்னடா இவன் கடைசியில் வள்ளலாரையும் கொண்டாந்து சைவ ஆளுங்க வரிசையில் சேத்துட்டானே என நினைக்கலாம். ஆனால் வள்ளல் அடிகள் சைவ சித்தாந்த கருத்துக்களில் இருந்து மாறுபட்டு ஏதும் சொல்லவில்லை. சைவத்தின் உண்மைப்பொருளை மறந்து சாதி எனும் புதை குழியில் விழுந்து கிடந்த தமிழரை கரையேற்ற வந்த மகான். அவர் ஞான சம்பந்தரை குருவாக வழிபட்டு வந்தவர். வள்ளல் அடிகளின் பெருமையை பேசும் போது இதை விரிவாக பார்க்கலாம். 

இப்படியாக சைவ நூல்கள் அனைத்தையும் கற்கவேண்டும் என்றால் ஒருவரின் வாழ்நாளில் பாதிக்கும்மேல் போய்விடும். அப்படியிருக்க நான் படித்த நூல்களை வைத்து எனக்கு தெரிந்த அளவு சொல்ல முயற்சிக்கின்றேன். இவைகளைப்படித்தேன் என்று சொன்னால் தன்னை தருக்கிய குற்றத்திற்கு ஆளாவேன். இவை அனைத்தும் சென்னிமலை கோவணாண்டி அருள் என்று சொல்லி ஆரம்பிக்கிறேன். 

ராஜசங்கர்

2011/2/6 Raja sankar <errajasa...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Feb 7, 2011, 10:06:51 AM2/7/11
to mint...@googlegroups.com
தொடரவும், காத்திருக்கேன். 

2011/2/7 Raja sankar <errajasa...@gmail.com>
சைவ சித்தாந்தம்-2.

. ஆனால் அது பன்னிரு திருமுறைகளில் இருந்தே ஆரம்பிக்கிறது. இரண்டாவதாக முருக வழிபாடும் சைவ சித்தாந்தத்தில் அடக்கம் தான். கச்சியப்ப சிவாச்சாரியர் எழுதிய கந்த புராணம் பல கருத்துக்களை உள்ளடக்கியது. உவமான உவமேயங்கள் மிக அழகாக இருக்கும். அதையும் வாரியார் விளக்கத்தில் படிக்கவேண்டும். 

முருகனை சிவ அம்சமாக கருதுவதாலேயே அவரையும் உள்ளடக்கி சைவர்கள் வழிபடுகின்றனர். தேவராய சுவாமிகள் கந்தர் சஷ்டி கவசத்தில் "குண்டலினி யாஞ்சிவ குகன் தினம் வருக" என பாடுகிறார். அருணகிரி நாதரும் கந்தர் அனுபூதியில் "யோகா சிவஞா னொபதே சிகனே" என பாடுகிறார். ஆக முருகனை துதிக்கும் பாடல்களிலும் புராணங்களிலும் சைவ சித்தாந்த கருத்துக்களை காணலாம். 


வளைந்தது வில்லு விளைந்தது பூசல் 
உளைந்தன முப்புரம் உந்தீபற 
ஒருங்குடன் வெந்தவா றுந்தீபற



என்னடா இவன் கடைசியில் வள்ளலாரையும் கொண்டாந்து சைவ ஆளுங்க வரிசையில் சேத்துட்டானே என நினைக்கலாம். ஆனால் வள்ளல் அடிகள் சைவ சித்தாந்த கருத்துக்களில் இருந்து மாறுபட்டு ஏதும் சொல்லவில்லை. சைவத்தின் உண்மைப்பொருளை மறந்து சாதி எனும் புதை குழியில் விழுந்து கிடந்த தமிழரை கரையேற்ற வந்த மகான். அவர் ஞான சம்பந்தரை குருவாக வழிபட்டு வந்தவர். வள்ளல் அடிகளின் பெருமையை பேசும் போது இதை விரிவாக பார்க்கலாம். 

இப்படியாக சைவ நூல்கள் அனைத்தையும் கற்கவேண்டும் என்றால் ஒருவரின் வாழ்நாளில் பாதிக்கும்மேல் போய்விடும். அப்படியிருக்க நான் படித்த நூல்களை வைத்து எனக்கு தெரிந்த அளவு சொல்ல முயற்சிக்கின்றேன். இவைகளைப்படித்தேன் என்று சொன்னால் தன்னை தருக்கிய குற்றத்திற்கு ஆளாவேன். இவை அனைத்தும் சென்னிமலை கோவணாண்டி அருள் என்று சொல்லி ஆரம்பிக்கிறேன். 

ராஜசங்கர்


Raja sankar

unread,
Feb 8, 2011, 9:10:47 AM2/8/11
to minT...@googlegroups.com
போன இழையில் விநாயகர் அகவலை பற்றிய குறிப்பை விட்டுவிட்டேன். ஒளவை சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டி சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் கட்டி என பாடியிருக்கிறார். எனவே விநாயகரும் சிவாம்சமாகவே வழிபட படுகிறார். 


முதலில் இறைவன். 

சைவத்தில் இறைவப்பற்றி பேசும் முதலில் நினைவுக்கு வருவது பித்தா எனும் சொல்தான். பித்தா பிறைசூடி என்று தான் ஞான சம்பந்தர் பாடவே ஆரம்பிக்கிறார். வைணவத்தில் மாயோன் என்றும் சொல்லை இதற்கு இணையாக சொல்லலாம். கொங்கு வட்டார கதையான அண்ணன்மார் சாமி கதையில் கண்ணன் மாயவர் என்று அழைக்கப்படுகிறான். பக்தியில் பாடும் போது பித்தன், விகிர்தன், உள்ளம் கவர் கள்வன் என்றெல்லாம். பாடப்படுபவன் ஈசன். பித்தன் எனும் போது ஆழம் காண முடியாத செயலை, அறிவை, ஆற்றலை உடையவன் என்றே பொருள். பார்பதற்கு விளையாட்டாக தெரிந்தாலும் அச்செயல்களில் அர்த்தம் உள்ளது எனவும் கொள்லலாம். விகிர்த எனும் சொல்லும் அப்படியே. இவை இறைவன் செய்யும் செயல்களை விளையாட்டு எனவும் அதை அறிய நாம் இறையருள் பெற்றிருக்கவேண்டும் எனவும் சொல்கின்றன. லீலா விநோதம் என்றே நேரடியாக கந்தர் சஷ்டி கவசத்தில் சொல்லப்பட்டுள்ளது. 

இறைவனுடைய குணங்களை சொல்லும் போது மாணிக்கவாசகரை தவிர யாரை துணைக்கழைக்க முடியும். சிவபுராணப்பகுதி கீழே. எனக்கு தெரிந்தவரை சந்தி பிரித்தெழுதியுள்ளேன். இதிலே இறைவனுடைய விளக்கம் மட்டுமே உள்ளது. சிவபுராணம் ஒன்றை வைத்தே சைவ சித்தாந்தம் முழுவதையும் விளக்க முடியும். ஆனால் பலருக்கு அது கடினமாக இருக்கும் என்பதால் பின்பு அந்தந்த விளக்கங்கள் வரும் போது பார்க்கலாம். 

கண்ணுதலான் தன் கருணைக் கண் காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி
விண் நிறைந்து மண் நிறைந்து மிக்காய் விளங்கு ஒளியார்
எண் நிறைந்த எல்லை இலாதானே!

மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35
வெய்யாய் தணியாய்  இமயம் ஆனாய் விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய்ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே 40
ஆக்கம் அளவு இறுதி இல்லாய் அனைத்துலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே
மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே 45
கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று
பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையார் விண்ணோர்கள் ஏத்த 
மறைந்திருந்தாய்

தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே! தேனார் அமுதே சிவபுரனே
பாசமாம் பற்று அறுத்து பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சங் கெடப்
பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே
அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட் கொண்ட எந்த பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தாற் கொண்டு உணர்வார் தம் கருத்தின் 
நோக்கு அரிய நோக்கே நுணுக்கு அரிய நுண் உணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் எம் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தாய் மிக்காய் நின்ற
தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய்
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத்தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே

முதன் முதலில் திருவாசகம் படிக்கும் போது சிவபுராணத்தை படித்து விட்டு திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கு உருகார் என்று சொல்கிறார்களே எனக்கு மனம் உருகவில்லையே என்று கேட்டேன். :-))). அதற்கு உனக்கு இது புரியும் போது உன் மனமும் உருகும் என்று பதில் வந்தது. 

மேல் இருக்கும் பகுதி உரைநடையிலேயே புரியும் என நினைக்கிறேன். விளக்கம் வேண்டுமென்றாலும் எழுதுகிறேன். இந்த பண்புகளை தவிர்த்து இறைவனின் அலங்காரங்கள், அவர் செய்த செயல்கள் என வரும் பகுதிகள் நிறைய. அவைகளை சித்தாந்தத்தின் முக்கிய கூறுகளை விளக்கிய பின் பார்க்கலாம். 

இறைவனை விளக்கிய பின் உயிரை பற்றி விளக்கவேண்டும். சைவ சித்தாந்தத்தை பொறுத்தவரை உயிரும் அநாதி தான். இறைவன் உயிர்களை படைத்து படைப்பு தொழிலை செய்வதில்லை. ஆனாலும் இறைவன் ஐந்து தொழில்கள் செய்கின்றான். அது மட்டுமல்லாது ஊழித்தாண்டவம் ஆடுபவன். அவ்வாறு உலகம் அழிந்த போது அதற்கு சாட்சியாய் நின்றதை ஊழி முதல்வன் என்று திருமறை சொல்கிறது. 

ஊழியு மின்பமுங் காலமாகி யுயருந் தவமாகி
ஏழிசை யின்பொருள் வாழும்வாழ்க்கை வினையின் புணர்ப்பாகி
நாழிகை யும்பல ஞாயிறாகிநளிர் நாரை யூர்தன்னில்
வாழியர் மேதகு மைந்தர்செய்யும் வகையின் விளைவாமே.

சீர் பிரித்தால் இப்படி வரும்

ஊழியும் இன்பமும் காலமும் உயரும் தவமாகி
ஏழிசையின் பொருள் வாழும் வாழ்க்கை வினையின் புணர்ப்பாகி
நாழிகையும் பலஞாயிறாகி நளிர் நாரையூர் தன்னில்
வாழி உயர் மேதகு மைந்தர் செய்யும் வகையின் விளைவாமே.

இப்பாட்டு சிவனே ஊழி என்று சொல்கிறது. சித்தாந்தத்தில் இதை விளக்குவது தான் கடினம். இதை தவறாக விளக்கினால் லாஜிக் இடிக்கும். 

ஊழி என்று ஒன்று இருந்தால் ஆதி என்று ஒன்று இருக்கவேண்டும் அல்லவா? அப்படி இருக்கும் ஆதியில் படைப்பு(சிருஷ்டி) எப்படி நடக்கிறது? அந்த படைப்பிற்கு சிவனே முழு முதற்காரணமா என்று பார்க்கலாம். 

இந்த கருத்தில் இரண்டு வகையானவைகளை பார்க்கலாம். ஒன்று சிவஞான சித்தியார் சொல்லும் முதல் மற்றும் துணைக்காரணம். செங்கிருதத்தில் நிமித்த மற்றும் உபாதன காரணங்கள். இன்னொன்று திருமந்திரம் சொல்லும் சருவ சிருட்டி(சர்வ சிருஷ்டி). இது புராணங்களில் சொல்வது போல் மூன்று சக்திகள், அதிலிருந்து பஞ்சேந்திரியங்கள். அதிலிருந்து பஞ்ச பூதங்கள் என வரும். 

விளக்கமாக நாளை. 


ராஜசங்கர்

2011/2/7 Raja sankar <errajasa...@gmail.com>

kanniappan

unread,
Feb 8, 2011, 9:37:11 AM2/8/11
to mint...@googlegroups.com
பெருமதிப்பிற்கும், பேரன்பிற்கும் உரியீர்! வணக்கமும் நன்றியும் பல.
தங்களின் தொடர் ஒரு சிறந்த ஒன்று. தொடருங்கள்.
இத் தொடர் முழுமையாக வர எல்லாம் வல்ல திருக்கழுக்குன்றமர்ந்த வேதகிரீசப் பெருமான் அருள்வாராக!
passport_0001.jpg

திருக்கழுக்குன்றில் செல்வா போற்றி!
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

8 பிப்ரவரி, 2011 7:40 pm அன்று, Raja sankar <errajasa...@gmail.com> எழுதியது:

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரதமணித் திருநாடு!

என்றென்றும் அன்புடன்,
 வடிவேல் கன்னியப்பன்.

passport_0001.jpg

coral shree

unread,
Feb 8, 2011, 10:02:34 AM2/8/11
to mint...@googlegroups.com
நல்ல ஆரம்பம். தொடருங்கள். வாரியார் சுவாமிகளின் எளிய நடையிலேயே விளக்கம் கிடைத்தால் மிக்க மகிழ்ச்சி. காத்திருக்கிறோம் .தொடருங்கள்.நன்றி.

2011/2/7 Raja sankar <errajasa...@gmail.com>
சைவ சித்தாந்தம்-2.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--

Dhivakar

unread,
Feb 8, 2011, 11:25:30 AM2/8/11
to mint...@googlegroups.com
>>>பித்தா எனும் சொல்தான். பித்தா பிறைசூடி என்று தான் ஞான சம்பந்தர் பாடவே ஆரம்பிக்கிறார். வைணவத்தில் மாயோன் என்றும் சொல்லை இதற்கு இணையாக சொல்லலாம். <<<

ஞான சம்பந்தர் இல்லை - அவர் சுந்தரர்.

இரண்டு - மாயோன் என்பதை விட ’மால்’ என்ற சொல் சரியாக இருக்கலாமோ என்னவோ. ஆண்டாளின் மாலே, மணிவண்ணா - வுக்கு ஆச்சாரியர்களின் விளக்கம் மாலே என்று விளிப்பது பித்தா என்பதுதான் என்கிறார்கள்.

2011/2/8 Raja sankar <errajasa...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Raja sankar

unread,
Feb 9, 2011, 12:08:57 AM2/9/11
to mint...@googlegroups.com
வாரியாரை போல் நான் எழுத முடியுமா? அவருடைய சொற் பெருக்கெங்கே நான் எங்கே?. முடிந்த அளவு எளிய உரைநடையில் தர முயல்கிறேன். 

ராஜசங்கர்



2011/2/8 coral shree <cor...@gmail.com>

coral shree

unread,
Feb 9, 2011, 12:28:21 AM2/9/11
to mint...@googlegroups.com
நன்றி திரு ராஜா.

2011/2/9 Raja sankar <errajasa...@gmail.com>

LK

unread,
Feb 9, 2011, 12:32:00 AM2/9/11
to mint...@googlegroups.com
ராஜ சங்கர் , தொடருங்கள் , பின்வருகிறோம் 

2011/2/9 Raja sankar <errajasa...@gmail.com>



--
Thanks and Regards
Karthik L
http://lksthoughts.blogspot.com

sharadha subramanian

unread,
Feb 9, 2011, 1:31:26 AM2/9/11
to mint...@googlegroups.com

ராஜா சார் சைவ சித்தாநத்ம் இழை ஆரம்பம அருமை,ஒரே ஒர் ஏண்டுகோள் 1,2, என் எண்வரிசைகள் போட்டீர்கள் என்றால் foldrel saveபண்ண் சுலபமாக இருக்கும்,நன்றி


Raja sankar

unread,
Feb 13, 2011, 5:10:11 AM2/13/11
to mint...@googlegroups.com
சைவ சித்தாந்தம் -3.

சைவ சித்தாந்தம் சொல்லும் மெய்கண்ட சாத்திரங்களில் சிவஞான சித்தியார் மட்டும் பரபக்கம் (அடுத்தவர்களின் பக்கம்/கருத்து), சுபக்கம்(ஸபக்கம், தன்னுடைய கருத்து) என தனித்தனியாக இருக்கும். சிவஞான சித்தியார் மெய்கண்டாருடைய நூலை அடியொற்றி எழுதப்பட்டிருந்தாலும் சிந்தாந்தம் படிக்க ஆரம்பிப்பவர்களுக்கு நல்ல நூல். இதில் இறைவன், உயிர் நிர்ணயம் பற்றி பார்ப்போம். 

இறைவன்

இறைவன் புரிந்து கொள்ள அரியவன். அவனுடைய செயல்லுக்கு ஆழங்காண்தல் கடினம். கதிரவன் தன்னுடைய ஒளியினால் தாமரையை மலரச்செய்தாலும் அந்த செயலுக்கும் சூரியனுக்கும் சம்பந்தம் இல்லாதது போல் இறைவன் தன்னுடைய செயல்களால் கட்டுப்படுவதில்லை. பற்றற்று இருக்கிறான். உயிர்கள், உலகு அனைத்து அழிந்த பின்னரும் இருப்பதனால் மூவா முதல்வன் எனப்படுகிறான். இறைவனின் முத்தொழில்களை விளையாட்டு எனவும் சொல்லலாம். அல்லது செம்பிற்கு களிம்பு போலும், அரிசிக்கு உமி போலும் உயிர்களிடத்தில் இருக்கும் மூவகை மலங்களை அழிக்க இத்தொழில்கள் எனவும் சொல்லலாம். இறைவன் உருவம் உடையவனா இல்லையா எனும்போது எல்லாம் வல்ல இறைவன் உருவமற்றவன். ஆயினும் விருப்பபடி உருவெடுக்க வலிமை உடையவன். 


உலகம், உயிர்

முன்பே சொன்னது போல் உயிர்கள் உலகு தோன்றும் போதே தோன்றுகின்றன. உடன் இருக்கும் மும் மலங்களான ஆணவ கன்ம மாயா மலங்களால் சூழப்பட்டடு இரு வினைகள் செய்கின்றன. அந்த இருவினைகளின் காரணமாக இன்ப துன்பங்களை அனுபவிக்கின்றன. இறைவன் இந்த மலங்களை அறுக்கும் போது முக்தி கிடைக்கிறது. இந்த மலங்கள் இல்லாத நிலை சுத்த நிலை அல்லது சுத்தாவத்தை. ஆணவ மலம் இருப்பது கேவல நிலை அல்லது கேவலாவத்தை. அதன் முலம் கனம பலன்களை அனுபவிக்கும் போது சகல நிலை அல்லது சகலாவத்தை. இதிலும் மூவகை மலங்கள் உடையவர் சகலர். ஆணவ மலம் உடையவர் பிரளயாகலர், மும்மலம் நீங்கியவர் விஞ்ஞானகலர். 

கீழே அட்டவனையாக

ஆணவ மலம் - கேவல நிலை / கேவலாவத்தை - பிரளயாகலர்

கன்ம மலம் - சகல நிலை / சகலாவத்தை - சகலர்

எந்த மலமும் இல்லா நிலை - சுத்த நிலை / சுத்தாவத்தை - விஞ்ஞானகலர். 

ஏன் மாயா மலம் இருக்கும் நிலை வரவில்லை என்று கேட்கலாம். அது பின்னர். 


ராஜசங்கர்

sk natarajan

unread,
Feb 13, 2011, 5:41:30 AM2/13/11
to mint...@googlegroups.com
தொடருங்கள் ஐயா
புதிய உலகை அறியும் ஆவலில் நான்



என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
http://tamizhswasam.blogspot.com/


2011/2/13 Raja sankar <errajasa...@gmail.com>

devoo

unread,
Feb 13, 2011, 6:51:08 AM2/13/11
to மின்தமிழ்
>>பரபக்கம் (அடுத்தவர்களின் பக்கம்/கருத்து), சுபக்கம்(ஸபக்கம், தன்னுடைய
கருத்து)<<

பரபக்கம் -> பரபக்ஷம்
சுபக்கம் -> ஸ்வபக்ஷம்


தேவ்

> 2011/2/9 LK <karthik...@gmail.com>


>
> > ராஜ சங்கர் , தொடருங்கள் , பின்வருகிறோம்
>

> > 2011/2/9 Raja sankar <errajasankarc...@gmail.com>


>
> > வாரியாரை போல் நான் எழுத முடியுமா? அவருடைய சொற் பெருக்கெங்கே நான் எங்கே?.
> >> முடிந்த அளவு எளிய உரைநடையில் தர முயல்கிறேன்.
>
> >> ராஜசங்கர்
>

> >> 2011/2/8 coral shree <cora...@gmail.com>


>
> >>> நல்ல ஆரம்பம். தொடருங்கள். வாரியார் சுவாமிகளின் எளிய நடையிலேயே விளக்கம்
> >>> கிடைத்தால் மிக்க மகிழ்ச்சி. காத்திருக்கிறோம் .தொடருங்கள்.நன்றி.
>

> >>> 2011/2/7 Raja sankar <errajasankarc...@gmail.com>


>
> >>>> சைவ சித்தாந்தம்-2.
>
> >>>> சைவ சித்தாந்தம் படிக்கும் முன் இது இப்படித்தான் இருக்கும் என்று கோட்டம்
> >>>> வைக்காமல் படிப்பது நல்லது. ஏனென்றால் மெய்கண்ட சாத்திரங்களும் அவைகளுக்கு வந்த
> >>>> விளக்க உரைகளும் தான் சைவ சித்தாந்தம் என ரொம்ப பேர்
> >>>> நினைத்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் அது பன்னிரு திருமுறைகளில் இருந்தே
> >>>> ஆரம்பிக்கிறது. இரண்டாவதாக முருக வழிபாடும் சைவ சித்தாந்தத்தில் அடக்கம் தான்.
> >>>> கச்சியப்ப சிவாச்சாரியர் எழுதிய கந்த புராணம் பல கருத்துக்களை உள்ளடக்கியது.
> >>>> உவமான உவமேயங்கள் மிக அழகாக இருக்கும். அதையும் வாரியார் விளக்கத்தில்
> >>>> படிக்கவேண்டும்.
>
> >>>> முருகனை சிவ அம்சமாக கருதுவதாலேயே அவரையும் உள்ளடக்கி சைவர்கள்
> >>>> வழிபடுகின்றனர். தேவராய சுவாமிகள் கந்தர் சஷ்டி கவசத்தில் "குண்டலினி யாஞ்சிவ
> >>>> குகன் தினம் வருக" என பாடுகிறார். அருணகிரி நாதரும் கந்தர் அனுபூதியில் "யோகா
> >>>> சிவஞா னொபதே சிகனே" என பாடுகிறார். ஆக முருகனை துதிக்கும் பாடல்களிலும்
> >>>> புராணங்களிலும் சைவ சித்தாந்த கருத்துக்களை காணலாம்.
>
> >>>> அடுத்து திருமுறைகளில் விரிவானதாக எடுத்துரைப்பது எதுவென்று உங்களுக்கு
> >>>> தெரிந்திருக்கும். ஆம் திருமந்திரம் தான் தத்துவார்த்தமாக கருத்துக்களை
> >>>> முன்வைப்பது. அதற்காக மற்ற திருமுறைகள் அப்படி இல்லை என்று என்னக்கூடாது.
> >>>> திருமந்திரம் இதோ இனிமேல் தத்துவம் என்று சொல்லிவிட்டு ஆரம்பிக்கிறது. மற்றயை
> >>>> திருமுறைகளோ தங்கத்தில் நவமணிகளை பதித்தது போல் பக்தி பாடல்களில் உள்ளே
> >>>> சிந்தாந்த கருத்துக்களை வைத்திருக்கும். அதிலும் மாணிக்கவாசகர் எழுதிய
> >>>> திருவாசகம் ஏராளமான கருத்துக்களை உள்ளடக்கியது. திரு உந்தியார் பாடலான
>
> >>>> வளைந்தது வில்லு விளைந்தது பூசல்
> >>>> உளைந்தன முப்புரம் உந்தீபற
> >>>> ஒருங்குடன் வெந்தவா றுந்தீபற
>

> ...
>
> read more »

coral shree

unread,
Feb 14, 2011, 6:40:49 AM2/14/11
to mint...@googlegroups.com
ஒரு முறைக்கு இரு முறை படித்தால் புரிகிறது. தொடருங்கள். நன்றி.

2011/2/13 devoo <rde...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Raja sankar

unread,
Feb 14, 2011, 8:10:24 AM2/14/11
to mint...@googlegroups.com
அன்பின் திவாகர்,

நன்றி. கட்டுரையாக பதியும்போது திருத்திவிடுகிறேன். 

மால் என்றால் என்ன என்பது பற்றி வைணவ ஆழ்வாக்கடியார்கள் சொல்லட்டும் :-)

ராஜசங்கர்



2011/2/8 Dhivakar <venkdh...@gmail.com>

Raja sankar

unread,
Feb 14, 2011, 8:13:44 AM2/14/11
to mint...@googlegroups.com
தேவ்,

பெரும்பாலான செங்கிருந்த வார்த்தைகள் இப்படிதான் காணப்படுகின்றன. அவத்தை என்பது அவஸ்தை. அது போல் நிறைய உண்டு. நியாய தருக்க சாஸ்திர நிர்ணயங்களும் வருகின்றன. எளிமையாக தத்துவங்களை விளக்கிவிட்டு பின்பு கடும் பாடங்களுக்குள் போகலாம் என்பது என்னுடைய எண்ணம். 

தத்துவ நிர்ணயம், இறைவ நிர்ணயம், தர்சன பேதம் என சைவ சித்தாந்தம் விரிவாக, மற்றைய தத்துவங்களை போலவே உண்டு. ஒப்பீடு முடிந்தால் எழுதவும் செய்யலாம். 

ராஜசங்கர்

2011/2/13 devoo <rde...@gmail.com>

devoo

unread,
Feb 14, 2011, 9:30:15 AM2/14/11
to மின்தமிழ்
> பெரும்பாலான செங்கிருந்த வார்த்தைகள் இப்படிதான் காணப்படுகின்றன. அவத்தை என்பது
> அவஸ்தை. அது போல் நிறைய உண்டு.

உண்மைதான்; ஆனாலும் சில இடங்களில் மொழியின் மூலவடிவமே தெளிவாகப்


புரிகிறது.

பக்கம் என்பதை page என்று பொருள்படுத்திக்கொள்ள வாய்ப்புள்ளதால்
சுட்டிக்காட்ட நேர்ந்தது.
குறுக்கீடாக இருக்குமானால் மன்னிக்கவும்..

’சுபக்கம்’ என்பது ஸுபக்ஷம், ஸ்வபக்ஷம் இரண்டுக்கும் ஒரே தமிழ் வடிவம்;
க்ரந்த வரிவடிவம் வழக்கில் வந்தது இத்தகைய குழப்பங்களை நீக்குவதற்கே


தேவ்

> ...
>
> read more »

Raja sankar

unread,
Feb 14, 2011, 9:59:44 AM2/14/11
to mint...@googlegroups.com

என்னைப்பொறுத்தவரை செங்கிருதம் வந்ததே இக்குழப்பங்களை போக்குவதற்கு தான். :-)))  ஒரு சொல் ஒரு அர்த்தம் என்றிருந்தால் தான் குழப்பமே வராது. வேண்டுமானால் இவ்விவாதத்தை வேறு ஒரு சந்தர்பத்தில் தொடரலாம். 

ராஜசங்கர்



2011/2/14 devoo <rde...@gmail.com>
> ...
>
> read more »

Geetha Sambasivam

unread,
Feb 14, 2011, 10:34:04 AM2/14/11
to mint...@googlegroups.com
நல்லவேளையா சரியாவே புரிஞ்சுண்டேன், என்றாலும் சுபக்ஷம் என்று எழுதாட்டியும் சுபட்சம் என்றாவது எழுதி இருக்கலாமோ??

2011/2/14 devoo <rde...@gmail.com>
>

’சுபக்கம்’ என்பது ஸுபக்ஷம், ஸ்வபக்ஷம் இரண்டுக்கும் ஒரே தமிழ் வடிவம்;
க்ரந்த வரிவடிவம் வழக்கில் வந்தது இத்தகைய குழப்பங்களை நீக்குவதற்கே


தேவ்

360.gif

Raja sankar

unread,
Feb 14, 2011, 10:42:39 AM2/14/11
to mint...@googlegroups.com
பக்கம் என்பது சரியான சொல்தான். ஆனால் தன்பக்கம், எதிர்ப்பக்கம் என்று வந்திருக்கவேண்டும். செங்கிருத சொற்களை கிரந்தம் தவிர்த்து எப்படி எழுதினாலும் சிக்கல் வரத்தான் செய்யும். 

ராஜசங்கர்



2011/2/14 Geetha Sambasivam <geetha...@gmail.com>
360.gif

rajam

unread,
Feb 14, 2011, 10:51:24 AM2/14/11
to mint...@googlegroups.com
முதுகலைத் தமிழ் வகுப்பில் ... சைவ சித்தாந்த கலாநிதி ஔவை துரைசாமி பிள்ளை எங்களுக்கு நடத்திய சைவ சித்தாந்த வகுப்பில் ... "சுபக்கம்" "பரபக்கம்" என்றுதான் படித்திருக்கிறோம்.
அன்புகூர்ந்து அதை மாற்றிவிடாதீர்கள்! :-)


On Feb 14, 2011, at 7:42 AM, Raja sankar wrote:

பக்கம் என்பது சரியான சொல்தான். ஆனால் தன்பக்கம், எதிர்ப்பக்கம் என்று வந்திருக்கவேண்டும். செங்கிருத சொற்களை கிரந்தம் தவிர்த்து எப்படி எழுதினாலும் சிக்கல் வரத்தான் செய்யும். 

ராஜசங்கர்



2011/2/14 Geetha Sambasivam <geetha...@gmail.com>
நல்லவேளையா சரியாவே புரிஞ்சுண்டேன், என்றாலும் சுபக்ஷம் என்று எழுதாட்டியும் சுபட்சம் என்றாவது எழுதி இருக்கலாமோ?? <360.gif><360.gif>


2011/2/14 devoo <rde...@gmail.com>
>

’சுபக்கம்’ என்பது ஸுபக்ஷம், ஸ்வபக்ஷம் இரண்டுக்கும் ஒரே தமிழ் வடிவம்;
க்ரந்த வரிவடிவம் வழக்கில் வந்தது இத்தகைய குழப்பங்களை நீக்குவதற்கே


தேவ்


> read more »

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Geetha Sambasivam

unread,
Feb 14, 2011, 11:03:41 AM2/14/11
to mint...@googlegroups.com


2011/2/14 rajam <ra...@earthlink.net>
முதுகலைத் தமிழ் வகுப்பில் ... சைவ சித்தாந்த கலாநிதி ஔவை துரைசாமி பிள்ளை எங்களுக்கு நடத்திய சைவ சித்தாந்த வகுப்பில் ... "சுபக்கம்" "பரபக்கம்" என்றுதான் படித்திருக்கிறோம்.
அன்புகூர்ந்து அதை மாற்றிவிடாதீர்கள்! :-)



360.gif

Raja sankar

unread,
Feb 14, 2011, 11:23:32 AM2/14/11
to mint...@googlegroups.com
அப்படி எல்லாம் இல்லை. பக்கம் என்பது பக்ஷம் என்பதற்கு சரியான சொல்தான் என்று சொல்ல வந்தேன். :-))))

நீங்கள் பெரியவர்களிடமே பாடம் படித்தவர்கள். நான் ஏதோ சொந்த முயற்சியில் படித்ததை வைத்து எழுதுகிறேன். அதனால் அந்த முயற்சி எல்லாம் செய்ய மாட்டேன். 

மற்றபடி சரியாகத்தான் எழுதுகிறேனா?  :-)))))

ராஜசங்கர்



2011/2/14 rajam <ra...@earthlink.net>

Nagarajan Vadivel

unread,
Feb 15, 2011, 2:42:52 AM2/15/11
to mint...@googlegroups.com
அன்புடையீர்
தமிழில் இடம்பெற்றுள்ள தமிழல்லாத சொற்களை மூலத்திலிருந்து மாற்றிப் பயன்படுத்து பற்றி இருவேறு கருத்துக்கள் நிலவி வருகிறது.  பெயர்ச் சொற்களை அதன் மூலத்திலிருந்து மாற்றுவது சரியா?
எடுத்துக்காட்டாக என் பெயர் நாகராஜன் -பெற்றோர் இட்டபெயர்.  தமிழில் எழுதும்போது நாகராசன் என்று எழுதுவது சரியா?
என் வீட்டில் மற்றொருவரின் பெயர் தங்கராஜன்.  ஆங்கிலப் பேரசிரியராக இருந்தவர்.  தனித்தமிப் பற்றாளர். தன் பெயரைப் பொன்னரசன் என்று மாற்றிக்கொண்டார் என்னை அரவரசன் என்றே அழைப்பார்.  இது சரியா?
இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள சமஸ்கிரிதச் சொற்களைத் தமிழில் எழுதும்போது இந்த வாதம் மீண்டும் எழுகிறது.  சமஸ்கிரித, மணிப்பிரவாளாச் சொற்களை அப்படியே எழுதுவதா அல்லது தனித்தமிழில் எழுதுவதா? ஆங்கிலக் கலப்புள்ள சொற்களை அப்படியே எழுதுவதா அல்லது தனித்தமிழில் எழுதுவதா?
தனித்தமிழில் எழுதுவது மூலத்தை மாற்றும் அடாத செயல் என்றும் கலப்புச் சொற்களை அப்படியே எழுதுவது தமிழைச் சிதைப்பது என்றும் வாதம் நடந்துகொண்டிருக்கிறது
இரண்டுபெண்டாட்டிக்காரன் கதைபோல் கிரந்தம் வேறு நடுவில் மாட்டிக்கொண்டு விழிக்கிறது
சமஸ்கிரித ஒலியனில் சிலவற்றுக்குத் தமிழில் வரிவடிவம் இல்லை என்பதால் கிரந்த வரிவடிவம் பயன்படுத்தப்பட்டது என்பதும் தமிழ் ஒலியனில் சிலவற்றுக்கு சமஸ்கிரிதத்திலும் கிரந்தத்திலும் வரிவடிவம் இல்லை என்பதும் ஒரு நடைமுறைச் சிக்கல்
இதற்குத் திர்வுகாண சில வழிமுறைகள் தற்பொது முன்மொழியப்பட்டுள்ளது
நீண்டகாலமாகக் கணினி பயன் படுத்தும் ராஜம் அம்மா அவர்கள் நான் முன்மொழியும் தீர்வை உற்றுநோக்கி கருத்துக்கூற் வேண்டுகிறேன்
தமிழில் அகராதி, நிகண்டு மட்டும் சொல்லகராதியில் (லெக்சிகன்) வழங்கும் சொற்களைத் தனித்தமிழ், சமஸ்கிர்தம், ஆங்கில, உருது அரபி மற்றும் கிரந்தத்தமிழ் என்று தரவுகளாகப் பிரித்து தரவுத்தளங்கள் உருவாக்க வேண்டும். 

இவற்றை அகர வரிசைப்படி தொகுத்து கணினித்தேடல் மூலம் தொடர்புள்ள சொற்களின் நிரலி (கன்கார்டன்ஸ்) யை உருவாக்குதல். 
முதலிரண்டு எழுத்துக்களின் அடிப்படையில் சொற்கள் கணினித்திரையில் மொழியின் அடையாளத்துடன் (டேக்ஸ்) தெரியுமாறு செய்தல்.
பயனாளர் தன்க்குத்தேவையான் மொழியில் உள்ள சொல்லைத்தேர்ந்தெடுத்து ஆவணத்தில் சேர்த்தல்

இதுபோன்ற கணினித்தீர்வு உருவானால்
//’சுபக்கம்’ என்பது ஸுபக்ஷம், ஸ்வபக்ஷம் இரண்டுக்கும் ஒரே தமிழ் வடிவம்;//
//சைவ சித்தாந்த வகுப்பில் ... "சுபக்கம்" "பரபக்கம்" என்றுதான் படித்திருக்கிறோம். //
சுபக்கம் என்பதில் உள்ள முதல் இரண்டு எழுத்துக்களை இட்டால் திரையில் ஸுபக்ஷம், ஸ்வபக்ஷம் பரபக்கம் போன்ற சொற்கள் சமஸ்கிரிதம், தமிழ் என்ற அடையாளக்குறியுடன் தோன்றினால் பயனாளர் சமஸ்கிரிதம் அல்லது தமிழ் என்று தனக்குத்தேவையான  சொற்களைத் தெரிவுசெய்யலாம்.
இதை நடைமுறைப்ப்ப்டுத்துவதில் உள்ள சிக்கல் தெரிந்தால் அவ்ற்றைக் களைய என்ன செய்யலாம் என்பது தெரியும்
நாகராசன்

2011/2/14 rajam <ra...@earthlink.net>

Geetha Sambasivam

unread,
Feb 15, 2011, 2:45:48 AM2/15/11
to mint...@googlegroups.com
அருமையான ஆலோசனைக்கு நன்றி. குழுமத்தின் மற்றப்  பெரியவர்களின் கருத்துக்களுக்கும் காத்திருக்கேன். 

2011/2/15 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
அன்புடையீர்
தமிழில் இடம்பெற்றுள்ள தமிழல்லாத சொற்களை மூலத்திலிருந்து மாற்றிப் பயன்படுத்து பற்றி இருவேறு கருத்துக்கள் நிலவி வருகிறது.  பெயர்ச் சொற்களை அதன் மூலத்திலிருந்து மாற்றுவது சரியா?
எடுத்துக்காட்டாக என் பெயர் நாகராஜன் -பெற்றோர் இட்டபெயர்.  தமிழில் எழுதும்போது நாகராசன் என்று எழுதுவது சரியா?

இதுபோன்ற கணினித்தீர்வு உருவானால்
//’சுபக்கம்’ என்பது ஸுபக்ஷம், ஸ்வபக்ஷம் இரண்டுக்கும் ஒரே தமிழ் வடிவம்;//
//சைவ சித்தாந்த வகுப்பில் ... "சுபக்கம்" "பரபக்கம்" என்றுதான் படித்திருக்கிறோம். //
சுபக்கம் என்பதில் உள்ள முதல் இரண்டு எழுத்துக்களை இட்டால் திரையில் ஸுபக்ஷம், ஸ்வபக்ஷம் பரபக்கம் போன்ற சொற்கள் சமஸ்கிரிதம், தமிழ் என்ற அடையாளக்குறியுடன் தோன்றினால் பயனாளர் சமஸ்கிரிதம் அல்லது தமிழ் என்று தனக்குத்தேவையான  சொற்களைத் தெரிவுசெய்யலாம்.
இதை நடைமுறைப்ப்ப்டுத்துவதில் உள்ள சிக்கல் தெரிந்தால் அவ்ற்றைக் களைய என்ன செய்யலாம் என்பது தெரியும்
நாகராசன்







coral shree

unread,
Feb 15, 2011, 6:19:14 AM2/15/11
to mint...@googlegroups.com
அருமை. இந்த இழை அருமையாகப் போய்க் கொண்டிருக்கிறது. நிறைய கற்றுக் கொள்ள முடிகிறது. மிக்க நன்றி திரு ராஜா. மற்றவர்களுக்கும் நன்றி. 

2011/2/15 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Raja sankar

unread,
Feb 18, 2011, 1:19:43 AM2/18/11
to mint...@googlegroups.com
பற்பல எழுத்து வேலைகளால் இந்த பக்கமே வரமுடியவில்லை. 

உலகு எப்படி படைக்கபட்டதை எளிமையாக்குகிறேன் என்று கிளம்பியதனால் வந்த வினை :-)))). முடிந்தவரை எளிமையாக்கி இரண்டொரு நாளில் எழுதுகிறேன். 

ராஜசங்கர்

2011/2/15 coral shree <cor...@gmail.com>

coral shree

unread,
Feb 18, 2011, 2:04:45 AM2/18/11
to mint...@googlegroups.com
நன்றி.

2011/2/18 Raja sankar <errajasa...@gmail.com>

மின் செய்தி மாலை படியுங்கள்!
 
                                                    

Rajkumar S

unread,
Feb 20, 2011, 3:40:13 AM2/20/11
to mint...@googlegroups.com
//
இறைவன்

இறைவன் புரிந்து கொள்ள அரியவன். அவனுடைய செயல்லுக்கு ஆழங்காண்தல் கடினம். கதிரவன் தன்னுடைய ஒளியினால் தாமரையை மலரச்செய்தாலும் அந்த செயலுக்கும் சூரியனுக்கும் சம்பந்தம் இல்லாதது போல் இறைவன் தன்னுடைய செயல்களால் கட்டுப்படுவதில்லை. பற்றற்று இருக்கிறான். உயிர்கள், உலகு அனைத்து அழிந்த பின்னரும் இருப்பதனால் மூவா முதல்வன் எனப்படுகிறான். இறைவனின் முத்தொழில்களை விளையாட்டு எனவும் சொல்லலாம். அல்லது செம்பிற்கு களிம்பு போலும், அரிசிக்கு உமி போலும் உயிர்களிடத்தில் இருக்கும் மூவகை மலங்களை அழிக்க இத்தொழில்கள் எனவும் சொல்லலாம். இறைவன் உருவம் உடையவனா இல்லையா எனும்போது எல்லாம் வல்ல இறைவன் உருவமற்றவன். ஆயினும் விருப்பபடி உருவெடுக்க வலிமை உடையவன். //

அன்பு ராஜ சங்கர்,
           நான் அதிகம் இணையத்திற்க்கு வருவதில்லை. காரணம் என் பணி சூழ்நிலை அப்படி. எனக்கு ஆர்வம் நிறைய உண்டு.
        அதுவும் சமயத்துறையில். உங்கள் சைவ சித்தாந்த இழை பார்த்த உடனேயே மிகவும் மகிழ்ந்தேன்.
        நான் ஒரே ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்.
        ஏற்கெனவே எனக்கு தெரிந்த பெரியோர்களிடம் கேட்டு சரிவர விளங்காத அதே கேள்வி தான்.
     தாமரை, சூரிய உவமைக்கு வருவோம்.
     சீவர்களுக்கு தற்சுதந்திரம் இல்லை. எங்கோ இருந்து கொண்டு மலர வைத்து விட்டு பந்தப்படாத இறைவன்.
    கேள்வி 1: தற்சுதந்திரம் அற்ற உயிர்களை, உணவு உடை தூக்கம்,கோப தாப, காம என பல உணர்ச்சி விலங்குகள் பூட்டப்பெற்ற சீவர்களை.
                   பல வித தேவைகள் ( பணம், கல்வி, etc) உள்ள ஒரு அடிமைப்பட்ட ஒரு சீவனை பற்றுக்கு உள்ளாகும் படி செய்யும் ஒரு அமைப்பு.இது தேவையா?
          அப்படி இந்த அமைப்பை தன் கட்டுப்பாட்டுக்குள் இயக்கும் இறைவனை. மகாபாரத முடிவில் கண்ணனை காந்தாரி பார்த்த அதே பார்வையோடு தான் பார்க்க தோன்றுகிறது.
         காந்தாரி நல்ல ஞானவான். தன் கோபத்தை பிள்ளைகளை பறி கொடுத்த நிலையிலும் சரியாக, சரியான நபரிடம் வெளிப்படுத்தினாள்.
   சுருக்கமாக: எல்லா கட்டுப்பாட்டையும் தன்னிடம் வைத்திருக்கும் இறைவன் பாவ புண்ணியங்களுக்கு சீவர்களை பொறுப்பாக்குவது ஏன்???

கேள்வி 2 : இப்படி ஒரு உலகை, அமைப்பை உண்டாக்க காரணம்???
 இப்போது கூட எல்லா சீவராசிக்கும் ஞானம் அளித்து சலனமற்ற ஒரு அமைப்பாக மாற்றலாமே?
         நான் நாத்திகன் அல்ல அல்ல அல்ல!!!
   எல்லாம் இறைவன் செயல் என நினைக்கும் ஒரு இறை நம்பிக்கை உள்ளவன் தான்.
      ஆனால் பல நிகழ்ச்சிகள் என் நம்பிக்கையை ஆட்டி பார்க்கிறது.
என்னுடைய கேள்விகள் சைவ சித்தாந்தத்திற்கான வினா?
சித்தம் அந்தத்தை அடைந்தது சரி என்றால் இதற்க்கும் விடை இருக்கும் அல்லவா?
            வாதமாக ஆரம்பிக்கவில்லை, விடை தேடிதான் ஆரம்பிக்கிறேன்.
தமிழ் அன்பர்கள், சிந்தனை உதவி செய்பவர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாமே.

தேடலுடன்
ராஜ்குமார்

         
   
              

செல்வன்

unread,
Feb 20, 2011, 7:12:54 AM2/20/11
to mint...@googlegroups.com


2011/2/20 Rajkumar S <rajam...@gmail.com>

காந்தாரி நல்ல ஞானவான். தன் கோபத்தை பிள்ளைகளை பறி கொடுத்த நிலையிலும் சரியாக, சரியான நபரிடம் வெளிப்படுத்தினாள்.
   சுருக்கமாக: எல்லா கட்டுப்பாட்டையும் தன்னிடம் வைத்திருக்கும் இறைவன் பாவ புண்ணியங்களுக்கு சீவர்களை பொறுப்பாக்குவது ஏன்???


காந்தாரி தன் கோபத்தை தன் பிள்ளைகள் மேல் கொஞ்சம் காட்டியிருந்தால், (குறிப்பாக திரவுபதி துகிலுரியும் சம்பவம்) அவர்கள் இறக்க நேரிட்டிருக்காது

பிள்ளைகளை நல்லபடி வளர்க்க தவறிவிடுகிறோம்.பழியை ஆண்டவன் மேல் போடுகிறோம்.

"தன் வினைகளுக்கு மனிதனே பொறுப்பு" என்றும் "அனைத்து காரியங்களும் நடப்பதன் காரணம் விதியே (இறைவனே)" என்றும் இரு வகையான கருத்தாக்கங்கள் உண்டு.வைணவ ஆச்சாரியார்களுல் சிலர் "மனிதனுக்கு ஓரளவு சுதந்திரத்தை பகவான் அளிக்கிறான்.அதை நல்லபடி பயன்படுத்துவதும், அழிவுக்கு பயன்படுத்துவதும் மனிதனின் சாய்ஸ்" என்கிறார்கள்.துரியோதனனுக்கு விஸ்வரூப தரிசனத்தையே காட்டி ஐந்து கிராமங்களை மட்டும் கொடு என்றான் கண்ணன்.அந்த மூர்க்கன் அப்போதாவது கொடுத்தானா? பிறவிகுருடனான திருதராஷ்டிரனும், காந்தாரியும் கூட தான் அப்போது விஸ்வரூப தரிசனத்தை பார்த்தார்கள்.அவர்கள் பிள்ளைகளை திருத்த வேண்டும் என அவர்களுக்கு அப்போதாவது தோன்றியதா?
--
செல்வன்

கள் விற்கும் உரிமையை மக்களிடம் இருந்து பறித்து
பெருவணிகர்களுக்கு கொடுக்கும் கழகங்களை புறக்கணிப்போம்
கொங்குநாடு முன்னேற்ற பேரவைக்கு ஓட்டளிப்போம்

www.holyox.blogspot.com


Tthamizth Tthenee

unread,
Feb 20, 2011, 7:26:14 AM2/20/11
to mint...@googlegroups.com
கண்ணிழந்த திருதிராஷ்ரனுக்கும்
கண்ணைக் கட்டிக்கொண்டிருந்த காந்தாரிக்கும் விஸ்வரூபத்தைக் காட்டிய கிருஷ்ணனின் லீலை

அவனின் அவதார மஹிமையை விளக்கும் அருமையான நிகழ்வு

அப்படி புறக்கண்ணை அளித்து விஸ்வரூப தரிசனம் காட்டிய கண்ணனால் கூட அவர்களின் அகக்கண்ணைத் திறக்க முடியவில்லையே!

அன்புடன்
தமிழ்த்தேனீ

2011/2/20 செல்வன் <hol...@gmail.com>

செல்வன்

unread,
Feb 20, 2011, 7:43:23 AM2/20/11
to mint...@googlegroups.com
நாமாக நம் அககண்ணை திறக்கவேண்டும் என்று கண்ணன் எதிர்பார்க்கலாம்.திறக்கலைன்னா இன்னும் நாம் பக்குவத்தை வளர்த்துக்கணும்னு பொருள்.

குதிரையை குளத்துக்குகிட்டே கொண்டுபோக தான் முடியும்.தண்ணியுமா குடிக்க வெக்க முடியும்?


2011/2/20 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Tthamizth Tthenee

unread,
Feb 20, 2011, 7:46:53 AM2/20/11
to mint...@googlegroups.com
அதுவும் சரிதான்

அப்போதே அவர்களின் அகக்கண்னைத் திறந்திருந்தால் கிருஷ்ணனின் அவதார நோக்கம்  நிறைவேறாதே அதனாலும் இருக்கலாம்

அவன் நினைத்தால் குதிரைக்கு வாயிலேயே தண்ணீர் ஊற்ற முடியும்

நீர் குடிக்காமலே தாகம் தணிக்கவும் முடியும்

தாகமே இல்லாமல் இருக்கவைக்கவும் முடியும்

செல்வன்

unread,
Feb 20, 2011, 8:08:24 AM2/20/11
to mint...@googlegroups.com


2011/2/20 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

அவன் நினைத்தால் குதிரைக்கு வாயிலேயே தண்ணீர் ஊற்ற முடியும்

நீர் குடிக்காமலே தாகம் தணிக்கவும் முடியும்

தாகமே இல்லாமல் இருக்கவைக்கவும் முடியும்


தன்னால் செய்யமுடியகூடிய அனைத்து காரியங்களையும் அவன் செய்வது இல்லை.

சிலதை நம்மை செய்ய சொல்கிறான். அதை நாம் தான் செய்யணும்.,

ஒரு ஆசிரியர் பாடம் சொல்லிதர இயலும், பரிட்சையை தயார் செய்ய இயலும்.பேப்பரை திருத்த இயலும்.வகுப்பறையில் நல்ல சூழல் நிலவும்படி செய்ய இயலும், பாடபுத்தகம்,சிலபஸ் தர இயலும்,சந்தேகம் கேட்டால் சொல்லிதர இயலும்...

ஆனால் பரிட்சை எழுதுவது???அதை நாம் தான் செய்யணும்.நம் பேப்பரை வாங்கி ஆசிரியரே நமக்காக பரிட்சை எழுத முடியும் தான்.ஆனால் அதை அவர் செய்வது இல்லை.அதை நாம் தான் செய்யணும்.

"நாம் படிப்பதுக்கு கீதை எனும் பாடம் கொடுத்தான்.."-கண்ணதாசன்

N. Kannan

unread,
Feb 20, 2011, 8:20:54 AM2/20/11
to mint...@googlegroups.com
செல்வன்! எவ்வளவு அழகாக பெரிய தத்துவங்களை எளிய வரிகளில் எளிய உதாரணங்கள்
மூலம் சொல்லிப் போகிறீர்கள்!

க.>

2011/2/20 செல்வன் <hol...@gmail.com>
>

செல்வன்

unread,
Feb 20, 2011, 8:54:02 AM2/20/11
to mint...@googlegroups.com
நன்றி கண்ணன் ஐயா.

2011/2/20 N. Kannan <navan...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Rajkumar S

unread,
Feb 20, 2011, 11:03:04 AM2/20/11
to mint...@googlegroups.com
அன்புடையீர்,
         கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி, காந்தாரியும் திருதராட்டிரனும் விசுவரூப தரிசனம் கண்டார்களா??
       கண்ணன் அர்சுனனுக்கு தரிசனம் தந்த போது அதை ஞான திருட்டியால் சஞ்சயன் மட்டும் கண்டதாக நான் நினைத்து கொண்டிருக்கிறேன்.
    மேலும் குருசேத்திரத்தில் கண்ணன் காந்தாரியை ”நீ உன் பிள்ளைகளை நிந்திக்காது என்னை கோபித்து பயன் இல்லை” என்ற போது, காந்தாரி “ கண்ணா நான் ஒரு மானிடப் பெண் எனக்கு பிள்ளை பாசம் போன்ற விலங்குகள் உண்டு ஆனால் நீ புருசோத்தமனாக இருந்தும் உன் ஒரு சிந்தையிலேயே சகலத்தையும் மாற்ற வல்லவனாய் இருந்தும் அப்படி செய்யாது. ஆயுதம் தாங்குவதில்லை என முடிவெடுத்து ( பந்தப்படாது நிற்றல்) தேரோட்டியாய் இருந்து (உயிர்களை விதியாய் இருந்து வழி நடத்தல்) சகல சம்பவத்தையும் நடத்தியுள்ளாய் அதனால் என் சக்தி எல்லாம் திரட்டி உனக்கு சாபமிடுகிறேன்” என்ற போது கண்ணன் அதை மறுக்க முடியவில்லை ( அவதார நோக்கம் முடிந்ததால் என்றால் அது ஒரு மறைப்பு தான்)
 
//"தன் வினைகளுக்கு மனிதனே பொறுப்பு" என்றும் "அனைத்து காரியங்களும் நடப்பதன் காரணம் விதியே (இறைவனே)"//
 பின்பு உள்ளதுதான் சரி. துரோணரை அழிக்க யாகம்(திருட்டத்துயும்னன் என நினைவு) செய்த போது  ( உயிர்களின் சுய கர்ம பொறுப்பு) எதிர்பார்க்காது திரெளபதி தோன்றினாள்(விதி).
அசரீரியில் அவள் சிலவற்றை அழிப்பதற்காக பிறந்த காளி என அறிய வந்தார்கள்.
 அப்படி பார்த்தால் பாவம் இறைவனின் அழிப்பு சிந்தைக்கு ஏவலாக இறையால் நிர்மாணிக்கப்பட்டபடி துரியோதனன் துகிலுரிந்தான்.
அவன் அப்படி செய்து போர் மூண்டு பேரழிவு நிகழ வேண்டும் என்பதால் தானே திரெளபதி உயிர்கள் சுயமாய் புத்திரன் வேண்டி செய்த யாகத்தில் உப விளைவாக தோன்றினாள்.
அதனால் “ அனைத்தும் அவன் செயலே அன்றி நம் கையில் ஒன்றும் இல்லை” என்பது என் முடிபாக உள்ளது.
இது தெரிந்துதான் கண்ணன் கீதையில் “ எல்லா செயல்களையும், அதன் பலன்களையும் எனக்கே அர்பணித்து விடு” என்கிறான்.
மேலும் நானே யாவற்றுக்கும் காரணகர்த்தா என்கிறான்.
ஏன் இப்படி இருக்கிறான்??????
பகிர்தலுக்கு மிக்க நன்றி.

அன்புடன்

செல்வன்

unread,
Feb 20, 2011, 11:27:05 AM2/20/11
to mint...@googlegroups.com


2011/2/20 Rajkumar S <rajam...@gmail.com>

கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி, காந்தாரியும் திருதராட்டிரனும் விசுவரூப தரிசனம் கண்டார்களா??
       கண்ணன் அர்சுனனுக்கு தரிசனம் தந்த போது அதை ஞான திருட்டியால் சஞ்சயன் மட்டும் கண்டதாக நான் நினைத்து கொண்டிருக்கிறேன்.

கண்ணன் திருதராஷ்டிரன் அவைக்கு தூது வந்தபோது ஒட்டுமொத்த அவையும் கண்ணனின் விசுவரூப தரிசனத்தை கண்டது.

 
    மேலும் குருசேத்திரத்தில் கண்ணன் காந்தாரியை ”நீ உன் பிள்ளைகளை நிந்திக்காது என்னை கோபித்து பயன் இல்லை” என்ற போது, காந்தாரி “ கண்ணா நான் ஒரு மானிடப் பெண் எனக்கு பிள்ளை பாசம் போன்ற விலங்குகள் உண்டு ஆனால் நீ புருசோத்தமனாக இருந்தும் உன் ஒரு சிந்தையிலேயே சகலத்தையும் மாற்ற வல்லவனாய் இருந்தும் அப்படி செய்யாது. ஆயுதம் தாங்குவதில்லை என முடிவெடுத்து ( பந்தப்படாது நிற்றல்) தேரோட்டியாய் இருந்து (உயிர்களை விதியாய் இருந்து வழி நடத்தல்) சகல சம்பவத்தையும் நடத்தியுள்ளாய் அதனால் என் சக்தி எல்லாம் திரட்டி உனக்கு சாபமிடுகிறேன்” என்ற போது கண்ணன் அதை மறுக்க முடியவில்லை ( அவதார நோக்கம் முடிந்ததால் என்றால் அது ஒரு மறைப்பு தான்)


காந்தாரி புத்திசாலியாக இருந்திருந்தால் விசுவரூப தரிசனத்துக்கு பிறகு அத்தகைய பரம்பொருளை எதிர்த்து நிற்கும் தன் மகனுக்கு எத்தகைய நிலை நேரும் என்பதை புரிந்து கொண்டிருந்திருப்பாள்.நீதி, நேர்மை பொருட்டு தடுக்கலை என்றாலும் பிள்ளை பாசத்திலானாவது தடுத்திருக்கலாம்.

தன்னால் செய்ய முடிந்த செயலை எல்லாம் பகவான் செய்வதில்லை.மனிதர்களுக்கு சுதந்திரத்தை வழங்குகிறான்.எதை செய்ய வேண்டும் என்ற அறிவுரையையும் சேர்த்து அளிக்கிறான்.மனிதர்கள் கேட்பதில்லை.தவறு இழைக்கின்றனர்.அதன்பின் அதற்கான வினைபயனை அளிக்கும் பொறுப்பு பகவானை சேர்கிறது.

பாஞ்சாலியை துகிலுரிவதா வேண்டாமா என முடிவெடுக்கும் சுதந்திரம் துச்சாதனனுக்கு இருந்தது.யார் சொல்லியும் கேட்காமல் அவன் அதை செய்தான்.அதன்பின் அதற்கேற்ற கர்மபலனை அவனுக்கு அளிப்பது இறைவனின் கடமையானது.

மற்றபடி காந்தாரியின் சாபம் பரம்பொருளை எவ்விதத்திலும் பாதிக்காது.ஏதோ கோபத்தில் வீட்டில் இருக்கும் பூஜா விக்கிரகத்தை கீழே போட்டு உடைக்கிறோம்.கடவுளுக்கு அதனால் இழப்பா?

Hari Krishnan

unread,
Feb 20, 2011, 11:45:33 AM2/20/11
to mint...@googlegroups.com
2011/2/20 செல்வன் <hol...@gmail.com>
பாஞ்சாலியை துகிலுரிவதா வேண்டாமா என முடிவெடுக்கும் சுதந்திரம் துச்சாதனனுக்கு இருந்தது.யார் சொல்லியும் கேட்காமல் அவன் அதை செய்தான்.அதன்பின் அதற்கேற்ற கர்மபலனை அவனுக்கு அளிப்பது இறைவனின் கடமையானது.

மார்பிலே துணியைத் தாங்கும்
வழக்கம் கீழடியாற் கில்லை
யாரடா பணியாள் வராய்
பாண்டவர் மார்பி லேந்தும்
சீரையும் களைவாய் தையல்
சேலையும் களைவாய் என்றான்.

சொன்னவன் கர்ணன். வியாச பாரதத்திலும் அப்படித்தான் இருக்கிறது.  கர்ணன் சொன்னான்; துரியோதனன் ஆதரவுடன் துச்சாதனன் துகிலுரிந்தான்.  ஒவ்வொரு துர்செயலுக்கும் விதையாகக் கர்ணன் இருந்திருக்கிறான்--பீமனுக்கு நஞ்சு கொடுத்து கங்கையில் உருட்டிவிடச் சொன்னது தொடங்கி, அரக்கு மாளிகை யோசனையை வழங்கியது தொடர்ந்து......ஒவ்வொன்றிலும் கர்ணன் பங்கு இருந்திருக்கிறது.

தேர்ச்சக்கரம் மண்ணில் புதைந்த நிலையில், தர்மத்தைச் சுட்டிக்காட்டி, ‘இப்போது யுத்தத்தைத் தர்மத்தின் பொருட்டு நிறுத்த வேண்டும்’ என்று கர்ணன் சொல்லும்போது, கண்ணன் ஒரு ஸ்பீச் விடுவான் பாருங்க..... peroration....அப்போது எங்கேடா போயிருந்தது உன் தர்மம் என்று வரிசையாக அடுக்கியபடி வரும்.  வேண்டுமானால் பிறகு அந்தப் பகுதியைத் தருகிறேன்.

காந்தாரி எத்தனையோ முறை திருதிராஷ்டிரனிடம், ‘பாவியாகிய துரியோதனனை இப்போதே ‘விட்டேன்’ என்று துரத்தி விடுங்கள்; விதுரன் சொற்படி, பிறந்த அன்றே இவனைக் கொன்றிருக்க வேண்டும்.  கொல்லாதது உங்கள் தவறு.  இன்று விளைந்திருக்கும் இத்தனைத் துயரத்துக்கும் மூலகாரணமாக உங்களையே குற்றஞ்சாட்டுகிறேன்’ என்று சொல்லியிருக்கிறாள்.  கணவனிடமும், பிள்ளையிடமும் அவள் கெஞ்சாத இடம் பாக்கியில்லை.

ஆனானப்பட்ட பீஷ்மர், தாத்தா, மிலிட்டரியைக் கையில் வைத்திருக்கும் மனுஷன் வாய்மூடி தலைகவிழ்ந்து ‘தீங்கு தடுக்கும் திறமில்லேன்’ என்று சொன்ன போது, மற்றவர்களெல்லாம் எம்மாத்திரம்?

‘இந்தக் கிழத்துக்கு புத்தி கெட்டுப் போயிருக்கிறது. இதை இப்பவே கொல்லு என்று ஆயிரம்முறை சொன்னாலும் இவனுக்குத் தாத்தா பாசம் கண்ணை மறைக்கிறது.  இவனுடைய வில்லைக் கீழே வைக்கச் சொல்.  நாளைமுதல் நான் தலைமை தாங்கிப் போரை நடத்துகிறேன்’ என்று ஒன்பதாம்நாள் யுத்த முடிவில், இரவு ஆலோசனையில் கண்ணனே சொல்கிறான்.  அந்த அளவுக்கு பீஷ்ம, துரோணர்கள் எல்லோரும் வாய் வார்த்தையால் கெஞ்சிக் கொண்டிருந்தார்கள்.  கண்ணனைச் சிறைப்படுத்த துரியோதனன் முயன்றானே, அதைப்போல் துரியோதனனை இவர்கள் சிறைப்படுத்தியிருந்தார்களென்றால் பேச்சு முடிந்திருக்கும்.

ஒரு விஷயம் சொல்லிடறேன். திருதிராஷ்டிரன் பட்டம் சூட்டப்படாதவன்; துரியோதனனுக்கு இளவரசுப் பட்டம்கூட கட்டப்படவில்லை.  அவன் ஆண்டதெல்லாம் சூதில் கவர்ந்த நாட்டைப் பதின்மூன்று ஆண்டுகள் தலைமைதாங்கி நடத்தினானே அவ்வளவுதான்.  அப்போதும் பட்டாபிஷேகம் நடந்திருக்கவில்லை.  இதைக் காரணமாகக் காட்டியே ‘உன்னைவிடப் பெரியவரான தந்தையும், அண்ணன் யுதிஷ்டிரனும் உயிரோடு இருக்கும்போது, ராஜசூய யாகம் நடத்த உனக்கு அதிகாரம் இல்லை.  வைணவ யாகம் செய்’ என்று ஆலோசனை சொன்னது யார் தெரியுமோ?  கர்ணன்.

ஆட்சி, அதிகாரபூர்வமாக, பட்டாபிஷேகம் செய்யப்பட்டு வழங்கப்பட்டது பாண்டுவுக்கும் அவனுக்குப் பிறகு தர்மபுத்திரனுக்கும் மட்டும்தான்.  இடைக்காலம் முழுக்க நடந்தது dummy ஆட்சி.  மன்மோஹன் சிங் ஆட்சியைப் போல. :))

--
அன்புடன்,
ஹரிகி.

Tthamizth Tthenee

unread,
Feb 20, 2011, 11:58:40 AM2/20/11
to mint...@googlegroups.com
இடைக்காலம் முழுக்க நடந்தது dummy ஆட்சி.  மன்மோஹன் சிங் ஆட்சியைப் போல. :))



ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹாஆஆஆஅ

அருமை

அன்புடன்
தமிழ்த்தேனீ
2011/2/20 Hari Krishnan <hari.har...@gmail.com>

செல்வன்

unread,
Feb 20, 2011, 12:13:30 PM2/20/11
to mint...@googlegroups.com
ஹரிகி ஐயா

கர்ணன் துரியோதனனின் அள்ளகையாக தான் இருந்துள்ளான்.தமிழ்நாட்டில் வில்லனை நாயகனாக்குவது மரபு. அதன் அடிப்படையில் இரணியன், ராவணன், சந்தனகடத்தல் வீரப்பன், சீவலபேரி பாண்டி, கர்ணன் போன்றோரை பற்றிய எதிர்கதையாடல்கள் உருவாக்கபட்டு உள்ளன.இவர்களை புகழும் படங்களும் வந்து உள்ளன.வில்லனாக இருந்து நாயகனான சிவாஜி, ரஜினி,சத்தியராஜ்,சரண்ராஜ்,கிரண்,ஆனந்தராஜ் போன்றோர் கதையையும் இதே சைக்கலஜியில் சேர்த்துக்கலாம்.

காந்தாரி துரியோதனனுக்கு அறிவுரை கூறும் வயதில் அறிவுரை கூறி நல்லபடி வளர்க்கவில்லை.ஐந்தில் வளையாதவன் ஐம்பதில் எப்படி வளைவான்?அழுது புலம்பி அறிவுரை தந்து அது பலனளிக்கவில்லை என்றபோது தங்கபதக்கம் ஆர்பி சவுத்ரி பாணியில் மகனை சுட்டாவது எரித்திருக்கலாம்.செய்திருந்தால் ஒரு மகன் போனாலும் மீதம் 99 மகன்களாவது மிஞ்சியிருப்பார்கள்.

செய்ய முடிந்த காலத்தில் செய்யாமல் விட்டுவிட்டு அனைத்தும்போனபின் ஆண்டவன்மேல் ஆத்திரம் கொள்வதில் பொருள் இல்லை.

2011/2/20 Hari Krishnan <hari.har...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Rajkumar S

unread,
Feb 20, 2011, 12:34:36 PM2/20/11
to mint...@googlegroups.com
//மற்றபடி காந்தாரியின் சாபம் பரம்பொருளை எவ்விதத்திலும் பாதிக்காது.ஏதோ கோபத்தில் வீட்டில் இருக்கும் பூஜா விக்கிரகத்தை கீழே போட்டு உடைக்கிறோம்.கடவுளுக்கு அதனால் இழப்பா? //
 
 கடவுள் என்று பாதிக்கப்பட்டிருக்கிறான். எப்போதும் வடிவேல் போல் எல்லா காட்சியிலும் அடி வாங்குவது சீவர்கள் தாம்.

காந்தாரியின் சாபம் “ கண்ணா! என் குலம் அழிந்தது போல் உன் குலமும் அழிந்தொழியும்.” என்பதுதான்.
கண்ணன் பிறந்த யாதவ குலம் அழிந்தது துவாரகை கடல் கொண்டது என்பன புராணச் செய்தி.
அப்படியானல் இப்போதுள்ள யாதவர்கள் எல்லாம் யார் என்றால்? இது குறித்து என்னிடம் விளக்கம் இல்லை.
காந்தாரி சாபம் பலித்தது.

//கணவனிடமும், பிள்ளையிடமும் அவள் கெஞ்சாத இடம் பாக்கியில்லை.//
உண்மை.
தன் குல அழிவை பார்த்து மனம் வெதும்பி கானகத்தில் தனித்து இருந்த போதுதான் வேடன் அம்பு காலில் பட்டு கண்ணன் உயிர் இழக்கிறான்.
(ஏன் கால் விரலில் என்றால் காந்தாரியின் கோபப் பார்வை பெருவிரலில் பட்டதால் தான்)
அந்த இரும்பு அம்புக்கு ஒரு உப கதை உள்ளது. கண்ணனின் பால பருவ குறும்புடன் சம்பந்தப்பட்டது.

அன்புடன்
ராஜ்குமார்
 

Rajkumar S

unread,
Feb 20, 2011, 12:35:47 PM2/20/11
to mint...@googlegroups.com
மன்னிக்கவும் யாதவ குலமா? அல்லது யது குலமா?
அறிந்தவர்கள் விளக்கவும்.

2011/2/20 Rajkumar S <rajam...@gmail.com>

Hari Krishnan

unread,
Feb 20, 2011, 12:54:43 PM2/20/11
to mint...@googlegroups.com


2011/2/20 Rajkumar S <rajam...@gmail.com>

இழக்கிறான்.
(ஏன் கால் விரலில் என்றால் காந்தாரியின் கோபப் பார்வை பெருவிரலில் பட்டதால் தான்)
அந்த இரும்பு அம்புக்கு ஒரு உப கதை உள்ளது. கண்ணனின் பால பருவ குறும்புடன் சம்பந்தப்பட்டது.

காந்தாரியின் பார்வை பட்டு கருகிப்போனது தர்மபுத்திரனின் கால் பெருவிரல்.  கண்ணன் காலில் அடிபட்டதற்கும் காந்தாரி சாபத்துக்கும் சம்பந்தமில்லை.  யதுகுலம் அழிந்தது அவள் சாபத்தால்தான்.

உபகதையில் கர்ப்ப ஸ்திரீ வேடம் தாங்கியவன் கண்ணனுடைய முதல் மனைவியின் பிள்ளையான சாம்பன். முனிவர்களுடைய சாபத்துக்குக் (யதுகுலம் அழிய) சாம்பன் காரணம்.  கண்ணனுடைய பாலலீலையன்று அது.  

Tthamizth Tthenee

unread,
Feb 20, 2011, 1:19:23 PM2/20/11
to mint...@googlegroups.com
கண்ணனை காலில் அடித்த வேடன் வந்து மன்னிக்கவேண்டும் பறவை என்று நினைத்து அடித்துவிட்டேன் என்று கூறியதும் கண்ணன் சொன்னாராம் அது நான் செய்த செயலுக்கு மறு வினை

ராமாவதாரத்தில் நான் மறைந்து நின்று உன்னை அடித்தேன் நீ அந்த பிறவியில் வாலி
அதற்குதான் இப்போது உன் கையால் நான் அடிபட்டேன் என்று சொன்னதாக் சொல்லுவர்
அது மட்டுமல்ல கண்ணனை அடித்த அம்பில் இருந்தது யமுனையில் விளைந்த உலக்கையின் கடைசீப் பகுதி என்றும் சொல்லுவர்

காந்தாரி கண்ணனை குறைக்கொள்ளியாகப் போகக் கடவது என்று சபித்தாள்

அதனால் அர்ஜுனன் கையில் வைத்து எரித்தான் கிருஷ்ணனை அப்போது ப்ரளயம் வந்து பாதி எரியும்போதே கண்ணனை அடித்துக்கொண்டு போனது
அந்தக் குறைக்கொள்ளி பத்மநாபம் என்னும் ஊரில் வந்து சேர்ந்தது என்பர்

இன்றும் அந்த ஊரில் கிருஷ்ணன் குறைக்கொள்ளியாகவே காட்சி அளிக்கிறார் என்றும் சொல்லுவர்

அன்புடன்
தமிழ்த்தேனீ

2011/2/20 Hari Krishnan <hari.har...@gmail.com>
--

Tthamizth Tthenee

unread,
Feb 20, 2011, 1:22:51 PM2/20/11
to mint...@googlegroups.com
கிருஷ்ணன் அர்ஜுனனிடம் வேண்டினானாம் ஸ்மசான பூமியில் என்னை எரிக்காதே வலது உள்ளங்கையில் வைத்து எரி என்று

அன்புடன்
தமிழ்த்தேனீ

2011/2/20 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

செல்வன்

unread,
Feb 20, 2011, 2:46:05 PM2/20/11
to mint...@googlegroups.com


2011/2/20 Rajkumar S <rajam...@gmail.com>

காந்தாரியின் சாபம் “ கண்ணா! என் குலம் அழிந்தது போல் உன் குலமும் அழிந்தொழியும்.” என்பதுதான்.
கண்ணன் பிறந்த யாதவ குலம் அழிந்தது துவாரகை கடல் கொண்டது என்பன புராணச் செய்தி.
அப்படியானல் இப்போதுள்ள யாதவர்கள் எல்லாம் யார் என்றால்? இது குறித்து என்னிடம் விளக்கம் இல்லை.
காந்தாரி சாபம் பலித்தது.


கண்ணன் பிறந்தது யதுகுலம் இல்லை.வளர்ந்ததுதான் யதுகுலம்.

துவாரகை அழிந்தாலும் மக்கள் பால்,தயிர் அருந்துவதை நிறுத்தியிருக்கபோவதில்லை அல்லவா?அந்த தொழிலை யாரேனும் அதன்பின்னரும் செய்திருக்கலாம்.அவர்கள் அதன்பின்னர் யாதவர் என அழைக்கபட்டிருக்கலாம்.ஜாதிகள் தொழிலையும், வருணத்தையும் மாற்றிகொள்வது இந்தியாவில் வழக்கமாக நடந்த ஒன்று தான்

Hari Krishnan

unread,
Feb 20, 2011, 10:34:13 PM2/20/11
to mint...@googlegroups.com


2011/2/20 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

கண்ணனை காலில் அடித்த வேடன் வந்து மன்னிக்கவேண்டும் பறவை என்று நினைத்து அடித்துவிட்டேன் என்று கூறியதும் கண்ணன் சொன்னாராம் அது நான் செய்த செயலுக்கு மறு வினை

ராமாவதாரத்தில் நான் மறைந்து நின்று உன்னை அடித்தேன் நீ அந்த பிறவியில் வாலி
அதற்குதான் இப்போது உன் கையால் நான் அடிபட்டேன் என்று சொன்னதாக் சொல்லுவர்
அது மட்டுமல்ல கண்ணனை அடித்த அம்பில் இருந்தது யமுனையில் விளைந்த உலக்கையின் கடைசீப் பகுதி என்றும் சொல்லுவர்

தமிழ்த் தேனி சார்!  விளக்கம் நன்றாகத்தான் இருக்கிறது.  ஆனால் இது பாக--வதம்.  :D

Hari Krishnan

unread,
Feb 20, 2011, 11:23:11 PM2/20/11
to mint...@googlegroups.com


2011/2/20 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

கண்ணனை காலில் அடித்த வேடன் வந்து மன்னிக்கவேண்டும் பறவை என்று நினைத்து அடித்துவிட்டேன் என்று கூறியதும் கண்ணன் சொன்னாராம் அது நான் செய்த செயலுக்கு மறு வினை

ராமாவதாரத்தில் நான் மறைந்து நின்று உன்னை அடித்தேன் நீ அந்த பிறவியில் வாலி
அதற்குதான் இப்போது உன் கையால் நான் அடிபட்டேன் என்று சொன்னதாக் சொல்லுவர்
அது மட்டுமல்ல கண்ணனை அடித்த அம்பில் இருந்தது யமுனையில் விளைந்த உலக்கையின் கடைசீப் பகுதி என்றும் சொல்லுவர்

தயவுசெய்து ஸ்ரீமத் பாகவதத்தின் இந்தப் பகுதிகளை மறுபடியும் படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.  (நீங்கள் ஏற்கெனவே படித்திருப்பீர்கள் என்றறிவேன்.)

http://srimadbhagavatam.com/11/1/en The curse upon the Yadu Dynasty
http://srimadbhagavatam.com/11/31/en The Disappearance of Lord Krishna

குறிப்பாக இந்த ஸ்லோகம்.  கிருஷ்ணன் ஜரன் என்ற வேடனிடம் சொல்வது: 
SB 11.30.39: The Supreme Personality of Godhead said: My dear Jarā, do not fear. Please get up. What has been done is actually My own desire. With My permission, go now to the abode of the pious, the spiritual world.

வாலி வதத்துக்கான பிராயச்சித்தம்தான் இது என்ற குறிப்பு, அல்லது குறைந்தபட்சம் வாலியைப் பற்றிய மென்ஷன் ஏதாவது, இந்த ஸ்லெகத்திலோ அல்லது பாகவதம் நெடுகிலோ இருக்கிறதா?  இருந்தால் சுட்டவும்.  கற்றுக் கொள்வதில் என் ஆர்வம் எப்போதும் குறைவதில்லை.

Hari Krishnan

unread,
Feb 20, 2011, 11:44:31 PM2/20/11
to mint...@googlegroups.com


2011/2/21 devoo <rde...@gmail.com>
யதுவுக்கு சுமார்  40 தலைமுறை
கடந்தபின் தோன்றியவர் யாதவனான கண்ணபிரான்; ஆனால் யது குலத்தவருக்கு முடி
சூட்டிக்கொள்ளும் உரிமை கிடையாது.

யது, துர்வஸு, அனு (அநு? அணு?), த்ரஹ்யு, புரு ஆகிய ஒவ்வொருவரின் வம்சமும் பின்னால் வேறுவேறு பெயர்களால் அறியப்படுகின்றன.  சூரன் என்ற யாதவ மன்னனுக்குப் பிறந்தவர்கள் ப்ருதையும் வசுதேவரும். ப்ருதையை, சூரன், தன் உறவினனும் நண்பனுமான குந்திபோஜனுக்கு தத்து கொடுத்துவிட்டான்.  ஆகவே, ப்ருதை பின்னாளில் குந்தியானாள்.  

வசுதேவர் யதுகுலம்.  அவர் பிள்ளை கிருஷ்ணனும் யது அல்லது யாதவ குலமே.

புருவிலிருந்து தொடங்கி பாண்டவர்கள் வரை 44 தலைமுறை ஒருதடவை எண்ணினேன்.  சரிபார்க்க வேண்டும்.  தேவ் மேற்கொண்டு authentic விவரம் சொன்னால் நன்றியுடையவனாக இருப்பேன்.  

Raja sankar

unread,
Feb 21, 2011, 12:24:27 AM2/21/11
to mint...@googlegroups.com
நண்பர்களுக்கு,

இரண்டு நாட்களாக உடல்நிலை சரியில்லை. அதனால் இழைப்பக்கமே வரவில்லை. முடிந்தவரை தொடர்கிறேன். 

ராஜசங்கர்



2011/2/21 devoo <rde...@gmail.com>
சைவம் வைணவமாகவே தொடர்கிறது. ராஜா சங்கர் ஸாத்விகர். சித்தாந்த
சைவத்துக்குள் இழையைச் சேர்ப்பாராக

Hari Krishnan

unread,
Feb 21, 2011, 12:27:39 AM2/21/11
to mint...@googlegroups.com


2011/2/21 Raja sankar <errajasa...@gmail.com>

நண்பர்களுக்கு,

இரண்டு நாட்களாக உடல்நிலை சரியில்லை. அதனால் இழைப்பக்கமே வரவில்லை. முடிந்தவரை தொடர்கிறேன். 

ராஜசங்கர்

நானே சொல்லவேண்டும் என்று நினைத்தேன்.  சைவ சித்தாந்த இழையை இப்படி அகோரமாக மஹாபாரத இழையாக்குகிறோமே என்று வருத்தப்பட்டேன்.  என்னை மன்னித்து, இழையைத் தொடரவும்.  

அகோரமாக ஆக்கினாலும், அகோரமும் சிவனுடைய ஐந்து முகங்களில் ஒன்றுதானே!  சைவ சித்தாந்த்தோடு அப்படி இந்த இழைபிரிவை ஒட்ட வைத்துவிடுகிறேன். :))

Tthamizth Tthenee

unread,
Feb 21, 2011, 1:27:42 AM2/21/11
to mint...@googlegroups.com
(நீங்கள் ஏற்கெனவே படித்திருப்பீர்கள் என்றறிவேன்.)



இல்லை திரு ஹரிகி அவர்களே 60 வயது வரை வாழ்க்கைச் சூழல் படிக்க விடவில்லை
அப்படியே நேரம் கிடைத்தாலும் நுனிப்புல்லைத்தான் மேய்ந்திருக்கிறேன்
மேய்ந்த நுனிப்புற்களை மீண்டும் அசை போடவே நேரம் கிடைக்காத நிலை

மொத்தத்தில் அடித்த காற்றில் பருந்துகளோடு உறவாடிக்கொண்டிருக்கும் ஊர்க்குருவி நான்

ஆகையால் நான் கேள்விப்பட்ட செய்திகளை சொல்கிறேன்

அதில் உண்மையை அறிந்துகொள்ளும் முயற்சியில்தான் இங்கே எழுதிக்கொண்டிருக்கிறேன் தைரியமாக

ஆகவே கொஞ்சம் கொஞ்சமாக இந்த ஊர்க்குருவி பருந்தாக முயல்கிறது

உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது என்பதை அறிந்திருந்தும்

இது சுய இரக்கம் அல்ல உண்மை

அன்புடன்
தமிழ்த்தேனீ
2011/2/21 Hari Krishnan <hari.har...@gmail.com>

sharadha subramanian

unread,
Feb 21, 2011, 7:30:50 AM2/21/11
to mint...@googlegroups.com
யாதவன் என்றபெயர்கிருஷ்ண்னுக்கு வரக்காரணம்,யதுகுலத்தில் உதித்ஹவன் யாதவன், யயாதியின்பிள்ளையதுவைமுதல்வனாகக்கொண்டது யது குலம். (நன்றி கி.வா.ஜ.கேள்வி பதில்)


From: Rajkumar S <rajam...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Sun, 20 February, 2011 11:05:47 PM
Subject: Re: [MinTamil] Re: சைவ சித்தாந்தம்

kalairajan krishnan

unread,
Feb 21, 2011, 7:52:32 AM2/21/11
to mint...@googlegroups.com
இந்த இழை வழியாக
நிறையவே அறிந்து கொண்டு வருகிறேன்
பங்களிப்போர் அனைவருக்கும் பாராட்டுகள்
அன்பன்
கி. காளைராசன்


--
திருப்பூவணப் புராணம் மற்றும் திருப்பூவணக்காசி படியுங்கள்,
http://www.freewebs.com/thirupoovanam/

அன்னதானம் செய்வோம், கண்தானம் செய்வோம். இவ்விருதானங்களையும் சிவபெருமான்
ஏற்றுக் கொள்கிறார்,

N. Kannan

unread,
Feb 22, 2011, 6:58:06 AM2/22/11
to mint...@googlegroups.com
தேனீயாரே!

தாங்கள் தமிழ்த்தேனீ என்று பெயர் வைத்துக்கொண்டவர். தேனீ தேன் உள்ள
மலர்களை மட்டுமே நாடும் குணமுடையது!

கோபித்துக் கொள்ள மாட்டீர்கள் என்ற தைர்யத்தில் சில எண்ணங்களைப் பகிர்கிறேன்.

நமக்கு முதலில் ”பாவ சுத்தி” வேண்டும். தாங்கள் அப்படி எழுதியவுடன்
எனக்கு யாரோ காதில் ஈயத்தை ஊற்றியது போன்ற வலி. ஹரிகி மிக அழகாக அதை
வருணித்தார். பாக(வத) - வதை என்று.

ஏன் என்று சொல்கிறேன். நாம் ஒரு தெய்வத்தை நெஞ்சில் நிறுத்திவிட்டால்
அதன் உயர்வுதான் நமக்குக் கண்ணில் பட வேண்டும். ஒரு நாத்திகன்
பேசிவிட்டுப் போனால் அது நம்மைப் பாதிக்காது. ஆனால் ஒரு ஆத்திகன், வைணவ
நெறியுள்ள குடும்பத்தில் பிறந்தவன் எனும் போது ரணம் கூடுகிறது.

கருட வாகனன் வெறும் ஸ்ரீபதி மட்டுமல்ல. நம் எல்லோருக்கும் அவனே பதி.
இதுதான் நாயக-நாயகி பாவத்தின் சாரம்.

நம் மனைவி என்றாவது நம்மை விட்டுக்கொடுக்கிறாளா? (உங்கள்
அகத்துக்காரியையே கேட்டுப்பாருங்கள்). எக்காலத்திலும் விட்டுக் கொடுக்க
மாட்டாள். அது போல்தான் இதுவும்.

வள்ளுவன் பெருமையுடன் பேசிய திருமால். கம்பன்போற்றிப் புகழ்ந்த பெருமாள்.
பாரதி கொஞ்சி மகிழ்ந்த கண்ணன். இவர்கள் எவ்வளவு பெரிய ஆசான்கள். அவர்கள்
சும்மா ஒரு தெய்வத்தின் மீது பற்று வைப்பார்களா? கீதைக்கு பாஷ்யம்
எழுதுகிறார் சங்கரர். ஆசையுடன் மீண்டும் பிற ஆச்சார்யர்கள். பாரதிக்கும்
அந்த ஆசை பிறக்கிறது. அந்தக் கண்ணன் மகாபுருஷன் என்றுதானே வியாசர்
சொல்கிறார். எனவே அப்படிப்பட்ட ஒரு உயர் பொருளைப் பற்றி பேசப்புகும் முன்
இது சபைக்கு உகந்த சொல்லா? நமக்கு யாரோ சொன்னது, நாம் இதன் மூலம்
அறியோம், இதைப் பொதுவில் சொல்லலாமா? என்றெல்லாம் யோசித்து இருக்க
வேண்டாமா? ஒரே சொல்லில் நாம் நமக்கு முன்னிருந்த அத்தனை
மகாபுருஷர்களையும் மடையர் ஆக்கிவிடுகிறோமே! இது பாவம் இல்லையா?

அந்த ரங்கமன்னார் கோயிலில் ஓடி ஆடித்திரிந்தவர் தாங்கள். அந்த அரங்கனே
உங்களுக்கு ”பாவ சுத்தி” செய்து, உங்கள் ”மணாளன் அவன்” என்று காட்ட மனமாற
பிரார்த்திக்கிறேன்.

நன்றி.

மிக்க அன்புடன்
நா.கண்ணன்

2011/2/21 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:

Tthamizth Tthenee

unread,
Feb 22, 2011, 7:22:54 AM2/22/11
to mint...@googlegroups.com
கண்ணனை காலில் அடித்த வேடன் வந்து மன்னிக்கவேண்டும் பறவை என்று நினைத்து அடித்துவிட்டேன் என்று கூறியதும் கண்ணன் சொன்னாராம் அது நான் செய்த செயலுக்கு மறு வினை

ராமாவதாரத்தில் நான் மறைந்து நின்று உன்னை அடித்தேன் நீ அந்த பிறவியில் வாலி
அதற்குதான் இப்போது உன் கையால் நான் அடிபட்டேன் என்று சொன்னதாக் சொல்லுவர்
அது மட்டுமல்ல கண்ணனை அடித்த அம்பில் இருந்தது யமுனையில் விளைந்த உலக்கையின் கடைசீப் பகுதி என்றும் சொல்லுவர்

தமிழ்த் தேனி சார்!  விளக்கம் நன்றாகத்தான் இருக்கிறது.  ஆனால் இது பாக--வதம்.  :

அன்புள்ள கண்ணன் எனக்கு புரியவில்லை

நான் கேள்விப்பட்டதை சொன்னேன்

அதைதவிர நான் வேறு எதுவும் தவறாக சொல்லவில்லையே

என்னுடைய எந்தச் சொல் உங்களைப் புண்படுத்தியது என்பதை தெளிவாகச்சொல்லுங்கள்



நான் ஏதேனும் தவறாக எழுதியிருந்தால் அது உங்களைப் புண்படுத்தி இருந்தால்

என்னைக் கோபித்துக்கொள்ள உங்களுக்கு முழு உரிமையும் உண்டு.ஆகவே நான் என்ன தவறாக  எழுதினேன் என்று சொல்லுங்கள்..  மாற்றிக்கொள்கிறேன்

”நமக்கு முதலில் ”பாவ சுத்தி” வேண்டும். தாங்கள் அப்படி எழுதியவுடன்
எனக்கு யாரோ காதில் ஈயத்தை ஊற்றியது போன்ற வலி”  என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்று சத்தியமாக புரியவில்லை

தயவு செய்து எனக்கு சொல்லுங்கள் நான் எங்கே தவறினேன் என்று நான் என்னைத் திருத்திக்கொள்ள சௌகர்யமாய் இருக்கும்.நான் எப்போதும் உங்கள் தமிழ்த்தேனியே

அன்புடன்
தமிழ்த்தேனீ


2011/2/22 N. Kannan <navan...@gmail.com>

N. Kannan

unread,
Feb 22, 2011, 7:34:02 AM2/22/11
to mint...@googlegroups.com
Don't worry!
Taste differs!
ரசிக்கவில்லை என்று சொல்ல வந்தேன்!
மசானத்தில் எரிக்காதே, உள்ளங்கையில் வைத்து எரி! என்றெல்லாம் பேசுவது!
நம் அம்மாவையோ, அப்பாவையோ பற்றி இப்படி வாய் கூசாமல் பேச வருமா?
May be I'm too sensitive!

Kannan

2011/2/22 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:

Tthamizth Tthenee

unread,
Feb 22, 2011, 7:45:25 AM2/22/11
to mint...@googlegroups.com
மன்னிக்கவேண்டும் திரு கண்ணன் அவர்களே ஒரு பௌராணிகர் சொன்ன செய்தியை அப்படியே எழுதினேன்

அது உங்கள் மனதைப் புண்படுத்தி இருந்தால் மனப்பூர்வமாக மன்னியுங்கள்

இது எனக்கு இன்னொரு பாடம் கேள்விப்பட்டதை அப்படியே எழுதக் கூடாது என்று

நேரிடையாக கண்டனம் தெரிவித்ததற்கு மகிழ்ச்சி

மாற்றிக் கொள்கிறேன்

அன்புடன்
தமிழ்த்தேனீ

2011/2/22 N. Kannan <navan...@gmail.com>
Don't worry!

N. Kannan

unread,
Feb 22, 2011, 8:14:19 AM2/22/11
to mint...@googlegroups.com
நண்பரே!

அன்றுதான் நானும் ரங்கனும் இது பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்.

எல்லா பௌராணிகர்களும் `பாவத்துடன்` சொல்வதில்லை.

கண்ணன் வெறும் கதை இல்லையே! வாய் புளித்ததோ! மாங்காய் புளித்ததோ! என்று
பேசிவிட்டுப் போக!

"வாழ்வு நிலையே! கண்ணம்மா!” என்கிறான் பாரதி. ஆக கண்ணன் வெறும் கதை அல்ல.
பாரதியின் வாழ்வின் நிலை. ஆதார ஸ்ருதி. அதுதான் `பாவம்` என்பது. பாரதி
எங்காவது கண்ணனைப் பற்றி மட்டமாகச் சொல்லியிருக்கிறானா? அவனால் முடியவே
முடியாது. ஏனெனில் அவன் வாழ்வின் நிலை அது!

நமது ஆச்சார்யர்களுக்கும் அதுவே! எனவே அவன் கல்யாண குணங்களே கண்ணில் படும்.

நாம் பாமரத்தனத்திலிருந்து பரமத்துவம் நோக்கி நகர வேண்டும். அதற்கு இந்த
`பாவம்` மிகவும் முக்கியம்.

நம் மனைவி பற்றி பொது மன்றத்தில் துணிந்து பேசிவிடுவோமா? (பெண்கள், கணவர்
என்று போட்டுக்கொள்ளவும்). அதி ஜாக்கிரதையாக இருக்கிறோம். அந்த உணர்வு
எங்கிருந்து வருகிறது?

அந்த உணர்வு நம் தெய்வத்தின் விஷயத்தில் ஏன் இல்லாமல் போய்விடுகிறது?

அவன் இன்னும் நம்முடன் ஒன்றவில்லையென்று பொருள். நாம் நாமாக இருக்கிறோம்.
அவன் அவனாக இருக்கிறான்.

மன்னிக்கவும் ஆற்றாமை!

சொன்னால் விரோதமிது!

அன்புடன்
நா.கண்ணன்

2011/2/22 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:

Mohanarangan V Srirangam

unread,
Feb 22, 2011, 8:37:22 AM2/22/11
to mint...@googlegroups.com, N. Kannan
Three Cheers to Mr Kannan. 


2011/2/22 N. Kannan <navan...@gmail.com>

Rajkumar S

unread,
Feb 22, 2011, 12:18:23 PM2/22/11
to mint...@googlegroups.com
அன்பர்களே,
இழையின் கருவுக்கு வருவோம். சைவ சித்தாந்தம் இறை
நிலை பற்றியும், உயிர் தோற்றம் பற்றியும், அத்தோற்றத்துக்கு காரணம்
பற்றியும் விளக்குவது என்ன.?
அன்பர் ராஜசேகர் நலம் பெற்று எழுத தொடங்க காத்திருப்போம்.
நிச்சயம் ஞானிகள் இந்த படைப்பில் எந்த ஒரு குறையும்
காணவில்லை. அதனால் தான் சலனமற்ற மெளனம் எய்தி உலக இயக்கத்திற்கு
உதவுகிறார்கள்.
இறைவனை கண்டித்து குரல் எழுப்ப வில்லை.
நாமும், அறிவில் இருந்து, நம்பிக்கையில் இருந்து, உணரும் நிலைக்கு
உயர்வதற்காக சத்சங்கம் செய்து கொண்டுள்ளோம்.
அனைத்தும் இறைவன் சித்தம் என நம்பும் நம் போல் உள்ள
பக்தர்கள் மனதில் இவ்வுலகில் நடக்கும் சில வன்முறைகள், நம் வாழ்வில் நாம்
சந்திக்கும் கையறு நிலைகள் சில சந்தேக வினாக்களை விதைப்பது சாதாரணமே.
ஊர் கூடி தேர் இழுப்போம். நிச்சயம் பல குழப்பங்களுக்கு
தீர்வு காண்போம்.
கருத்துக்களையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளும்
அறிவுத் தேடல் உள்ள அனைத்து தமிழ் அன்பர்களுக்கும் நன்றி!

நட்புடன்


ராஜ்குமார்

Innamburan Innamburan

unread,
Feb 22, 2011, 12:24:35 PM2/22/11
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
யான் நிதானமாக, பலமுறை படிக்கும் இழை. தொடர்க, திரு.ராஜாசங்கர்.
இன்னம்பூரான்
22 02 2011

2011/2/22 devoo <rde...@gmail.com>
>>நாம் பாமரத்தனத்திலிருந்து பரமத்துவம் நோக்கி நகர வேண்டும்<<

அவதார தத்வம் பற்றிப்பேசும் வாய்ப்பு நேரும்போதெல்லாம் மஹர்ஷிகளும்,
அடியார்களும் ஸர்வ ஜாக்ரதையாக விளக்குகின்றனர்.

‘ப்ராச்யாம் திசி இந்து: இவ ‘ - கீழ்த்திசையில் தோன்றும் நிலவென
தேவகியிடம் கண்ணபிரான் அவதரித்தான் என்றார் சுக ப்ரம்மம். வான்
வெளிக்கும் சந்திரனுக்கும் என்ன ஒட்டுதலோ அந்த உறவுதான் கண்ணனுக்கும்
தேவகிப் பிராட்டிக்கும்; ஆனால் பாசத்தில் குறைவில்லை.

‘பகவாநபி தா ராத்ரி: ......’ பகவச் சப்தத்தை முன்னிட்டு ராஸ பஞ்ச அத்யாயி
தொடங்கும். குரவை கோக்குமுன் கண்ணன் காட்டுத்தீயைக் குடித்தான். கோபிகா
கீதம் இதையும் குறிப்பிடுகிறது.
‘ஸ்வ சரீரே பரிஷ்வங்கே தோஷ: ந அஸ்தி’ ( தன் உடலை ஒருவன் தொடுவதால்
குற்றம் நேராது) என யோகியர் தலைவரான சிவபெருமானும்  ராஸம்  மாசு
மருவற்றது என்று சான்றிதழ் கொடுத்து விட்டார்.

அவதாரம் நிறைவுறும்போது ‘த்ருஷ்ட்வா யோககதிம் ஹரே: ....’ யோக கதியில்
ஆண்திறல் அமரர் அரி ஏறு தன்னடிச் சோதியில் புகுந்த வைபவத்தைக் கண்டதற்கு
ப்ரம்மா, ருத்ரன், முனிவர்கள் ஸாக்ஷி.

‘வ்யாஸ உக்தி ஸாரமய பாகவதம்’ என்று பட்டதிரி அவர்களால் தலைமேல்
வைத்துக்கொண்டாடப்பட்ட  பாகவதத்திலிருந்து சிறிது  சொல்லப்பட்டது. பிற
துறைகளைப் பற்றிப்பேசும்போது இருக்கும்  பொறுப்பும், கவனமும்
மதத்துறையிலும்  இருக்க வேண்டும்


தேவ்


On Feb 22, 7:14 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> நண்பரே!
>
> அன்றுதான் நானும் ரங்கனும் இது பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்.
>
> எல்லா பௌராணிகர்களும் `பாவத்துடன்` சொல்வதில்லை.
>
> கண்ணன் வெறும் கதை இல்லையே! வாய் புளித்ததோ! மாங்காய் புளித்ததோ! என்று
> பேசிவிட்டுப் போக!
>
> "வாழ்வு நிலையே! கண்ணம்மா!” என்கிறான் பாரதி. ஆக கண்ணன் வெறும் கதை அல்ல.
> பாரதியின் வாழ்வின் நிலை. ஆதார ஸ்ருதி. அதுதான் `பாவம்` என்பது. பாரதி
> எங்காவது கண்ணனைப் பற்றி மட்டமாகச் சொல்லியிருக்கிறானா? அவனால் முடியவே
> முடியாது. ஏனெனில் அவன் வாழ்வின் நிலை அது!
>
> நமது ஆச்சார்யர்களுக்கும் அதுவே! எனவே அவன் கல்யாண குணங்களே கண்ணில் படும்.
>
> நாம் பாமரத்தனத்திலிருந்து பரமத்துவம் நோக்கி நகர வேண்டும். அதற்கு இந்த
> `பாவம்` மிகவும் முக்கியம்.
>
> நம் மனைவி பற்றி பொது மன்றத்தில் துணிந்து பேசிவிடுவோமா? (பெண்கள், கணவர்
> என்று போட்டுக்கொள்ளவும்). அதி ஜாக்கிரதையாக இருக்கிறோம். அந்த உணர்வு
> எங்கிருந்து வருகிறது?
>
> அந்த உணர்வு நம் தெய்வத்தின் விஷயத்தில் ஏன் இல்லாமல் போய்விடுகிறது?
>
> அவன் இன்னும் நம்முடன் ஒன்றவில்லையென்று பொருள். நாம் நாமாக இருக்கிறோம்.
> அவன் அவனாக இருக்கிறான்.
>
> மன்னிக்கவும் ஆற்றாமை!
>
> சொன்னால் விரோதமிது!
>
> அன்புடன்
> நா.கண்ணன்
>
> 2011/2/22 Tthamizth Tthenee <rkc1...@gmail.com>:
>
> > மன்னிக்கவேண்டும் திரு கண்ணன் அவர்களே ஒரு பௌராணிகர் சொன்ன செய்தியை அப்படியே
> > எழுதினேன்
> > அது உங்கள் மனதைப் புண்படுத்தி இருந்தால் மனப்பூர்வமாக மன்னியுங்கள்
> > இது எனக்கு இன்னொரு பாடம் கேள்விப்பட்டதை அப்படியே எழுதக் கூடாது என்று
> > நேரிடையாக கண்டனம் தெரிவித்ததற்கு மகிழ்ச்சி
> > மாற்றிக் கொள்கிறேன்
> > அன்புடன்
> > தமிழ்த்தேனீ

Geetha Sambasivam

unread,
Feb 26, 2011, 10:00:23 AM2/26/11
to mint...@googlegroups.com
எல்லாருடைய கருத்துக்களும் பயனுள்ளதாக அமைந்தது. நன்றி

2011/2/22 Innamburan Innamburan <innam...@gmail.com>
யான் நிதானமாக, பலமுறை படிக்கும் இழை. தொடர்க, திரு.ராஜாசங்கர்.
இன்னம்பூரான்
22 02 2011


Raja sankar

unread,
Feb 28, 2011, 9:27:07 AM2/28/11
to mint...@googlegroups.com
பத்து நாடகளாக உடல் நிலை சரியில்லாததால் ஏதும் எழுத முடியவில்லை. அதற்குள் ஏகப்பட்ட விவாதங்கள் சரி அதையெல்லாம் பார்பதற்கு முன் நான் எழுதிவைத்ததை இட்டுவிடுகிறேன். 

சைவ சிந்தாந்தம் - 4

இதிலே திருமந்திரம் இரண்டாம் தந்திரத்தில் ஒன்பதாம் பதிகமான சருவ சிருட்டியை பார்க்கலாம். இது முப்பது பாடல்களில் உலகின் உற்பத்தியை அது எவ்வாறு நடக்கிறது என கூறுகிறது. 
இந்த சருவ சிருட்டி என்பதே கொஞ்சம் சிக்கலான விடயம் என முன்பு பார்த்தோம் ஏன் சிக்கல்?

பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில்
பதியினைப் போற்பசு பாசம் அனாதி
பதியினைச் சென்றணு காபசு பாசம்
பதியணு கிற்பசு பாசம்நில் லாவே.  திருமந்திரம் முதம் தந்திரம் - 4 உபதேசேம்.

இதில் பதி போலவே பசுவும் பாசமும் அனாதி அதாவது தோற்றம் முடிவு இல்லாதவை, என்றென்றும் இருப்பவை என்று சொல்லும் திருமூலர் கடைசி அடியில் பதியை அணுகில் பாசம் இருக்காது என்கிறார். சரி பாசம் அந்த பசுவிற்கு மட்டும் இல்லாமல் போகிறது. அதை எப்படி என்று மலபரிபாகத்தில் பார்க்கலாம். ஆனால் இவைகள் தோற்றம் முடிவு இல்லை என்று சொல்லிவிட்டால் எங்கிருந்து இவைகளின் உற்பத்தியை கொண்டு வருவது?   

இந்த கேள்வியை இன்னொரு விதமாகவும் பார்க்கலாம். மூவா முதல்வன் என்று சிவனை சொல்கிறோம். அதே போல் உலகும் அப்படியா? வினைகளும் மலமும் அப்படியா? அப்படி எனில் இறைவனின் பங்கு தான் என்ன? இறைவன் மூவா இருப்பது போல் இதுகளும் இருக்க வேறு ஏதேனும் காரணம் உண்டா? 

இந்த கேள்விகளுக்கு இல்லை. இறைவன் மட்டுமே மூவா முதல்வன். மற்றவைகள் அவனிடமிருந்தே வருகின்றன. அவைகளை எப்படி வருகின்றன என்று தத்துவார்த்தமாக சொல்வது தான் இந்த பகுதி. 

ஆதியில் சிவன் மட்டும் இருக்கிறார். அது பாராபர சிவம் என்று சொல்லப்படுகிறது அவருடைய சக்தி பாரபரை அல்லது பாரபரசக்தி. அவருக்கு உலகை படைத்து உயிர்களை காக்கவேண்டும் என்ற விருப்பம் எழுகிறது. அதனால் தன்னில் ஒரு கூறான பரசிவனை உண்டாக்குகிறார். இவருடைய சக்தி பராசக்தி.  இவர்கள் ஆதிசிவன் - ஆதிசக்தி எனவும் குறிப்பிடப்பெறுகிறார்கள். 
இந்த பரசிவன் சுத்த மாயையால் நாத தத்துவத்தை தோற்றுவிக்கிறார். இந்த நாத தத்துவம் ஒரு சிவனுடைய அம்சமாக கருதப்பட்டு நாத சிவன் அல்லது நாதன் என அழைக்கப்படுகிறான். 
இந்த சிவனால் இருந்து எழுத்தோசையை தோற்றுக்குவிக்கும் முயற்சியால் விந்து எனும் தத்துவமும் அதன் சக்தியும் தோற்றுவிக்கபடுகின்றன. இந்த விந்து தத்துவத்தில் இருந்து ஐவர் தோன்றுகின்றர். அவர்கள் சதாசிவர், மகேசுரர்,உருத்திரர்,மால்,அயன் இவர்கள் ஒருவரிடம் இருந்து ஒருவர் தோன்றுவர். அதாவது சதாசிவரில் இருந்து மகேசுரர், மகேசுரரில் இருந்து உருத்திரர், இவரில் இருந்து மால், மாலில் இருந்த் அயன். 

அடுத்து பூத உற்பத்தி. முதலில் மகத் தத்துவம். அதில் இருந்து வான், வானில் இருந்து வாயு. வாயுவில் இருந்து தீ. தீயில் இருந்து நீர். நீரில் இருந்து நிலம். இவைகளின் தன் மாத்திரை உற்பத்தி முதலில் பின் பூதங்களின் உற்பத்தி. இவைகளின் தன்மாத்திரைகள் முறையே ஓசை,ஊறு,ஒளி,சுவை,நாற்றம். 

இரண்டு உற்பத்தியும் நிகழ்ந்துவிட்டது. இனி உலக உற்பத்தி. அதாவது படைப்புத்தொழில் அதை பிரம்மன் செய்கிறான். முன் கூறிய பஞ்ச பூதங்களில் துணையால் உலகில் உயிர்களின் தோற்றம்.  இறைவனில் ஆணையால் உலகில் உயிர்கள் தோன்றும் போது அவைகளில் வினைகளை கூட்டி அவற்றை அனுபவிக்கும் முறையை முன்னின்று செய்து பின் அவைகளுக்கு விடுதலையும் தருகிறான். 

சரி, இதிலே சில அருஞ்சொற்பொருடகளை பார்க்கலாம். 
சிவனுக்கு இருக்கும் ஆற்றல் மூன்றால் குறிக்கப்படுகின்றன. அவை ஞானம், இச்சை, கிரியை. முறையே அறிவு,விருப்பம்,ஆற்றல். 
முதலில் சிவனுக்கு இருக்கும் ஆற்றல் சுத்தமாயை என்று சொல்லப்படுகிறது. அது எந்த மறைப்பையும் செய்யாததால் விந்து,குடிலை, குண்டலினி என்ற சொற்களாலும் குறிக்கபடும். மாயையின் இயல்பு அதற்கு கிடையாதெனினும் இறைவன் படைப்பு தொழிலை இதன் மூலம் செய்கிறான். இந்த சுத்த மாயையில் இருந்து அசுத்த மாயை அதிலிருந்து தத்துவங்கள் எல்லாம். 

அடுத்ததில் ஆணவ, கன்ம மாயா மலங்கள் பற்றி. 

ராஜசங்கர்



2011/2/26 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Raja sankar

unread,
Feb 28, 2011, 9:28:27 AM2/28/11
to mint...@googlegroups.com

அனைவருக்கும் ஓர் வேண்டு கோள். இந்த இழையில் சொல்லப்படும் விஷயங்கள் பற்றி இன்னொரு இழையில் விவாதிக்கலாமே? படிப்பவர்களுக்கு இவ்விழையை மட்டும் படிக்க உதவியாக இருக்கும். 

ராஜசங்கர்


Hari Krishnan

unread,
Mar 3, 2011, 2:03:44 AM3/3/11
to mint...@googlegroups.com


2011/2/28 Raja sankar <errajasa...@gmail.com>

அனைவருக்கும் ஓர் வேண்டு கோள். இந்த இழையில் சொல்லப்படும் விஷயங்கள் பற்றி இன்னொரு இழையில் விவாதிக்கலாமே? படிப்பவர்களுக்கு இவ்விழையை மட்டும் படிக்க உதவியாக இருக்கும். 

அன்புள்ள ராஜசங்கர்,

முதன்மைக் குற்றவாளிகளில் ஒருவன் என்ற விதத்தில் பொறுப்பேற்று மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.  இழைபிரிந்து போய்விடும் என்ற உணர்வு ஏற்படாத நிலையில் செய்யத் தொடங்கியது அது.

இழையில் ஏதோ மஹாபாரதக் குறிப்பு (என்று நினைக்கிறேன். மறந்துவிட்டது.)  வந்தபோது, அதை விளக்க நேர்ந்தது (மறுபடியும் என்று நினைக்கிறேன்.)  அப்படி விளக்கிய போது, விவாதம் இந்தப் பக்கம் திசை திரும்பும் என்று எதிர்பார்க்கவில்லை.  இதற்காக ஒரு தனி இழை தொடங்குமளவுக்கு இது விரிவடையும் என்றும் எதிர்பார்க்கவில்லை.  நான் சொன்னதன்மேல் எதிர்வினையாற்றிய ஒவ்வொருவரும், அவரவர் எதிர்வினைகளுக்கு பதில்வினையாற்றும் சமயத்தில் நானும், by impulse of moment, by force of circumstances, இதே இழையில் தொடர நேரிட்டுவிட்டது.  ஆகவேதான் அதை மடைமாற்றுவதற்காக ‘இழை பிரியவேண்டாம்.  ராஜசங்கர் அவருடைய தலைப்பைத் தொடரட்டும்’ என்றும் ஒருவரி எழுதியிருந்தேன்.

பொதுவாக எல்லா இழைகளிலுமே இப்படித்தான் இழை பிரிகிறது.  தொடக்கத்தில், ‘இது ஒரு மலையாக வளரப்போகிறது’ என்று எதிர்பார்க்காமல்தான் ஆங்காங்கே சிறுசிறு மணல்துகள்களைச் சிதறிவிடுகிறோம்.  பிறகு, மலை கிளம்பிய பிறகுதான் தவறு தெரியவருகிறது.  இனி இப்படி நேராது என்ற உறுதியை மடலாடல் குழுமங்களில் எழுதுபவர் யாராலும் எந்தச் சூழலிலும் அளிக்க முடியாது.  ஒன்று, ஒவ்வொரு முறை (இழைக்குத் தொடர்பானதாகத் தொடங்கி, இன்னொரு கிளையாகப் பிரியுமோ பிரியாதோ என்ற தெளிவில்லாத) செய்திகள், விளக்கங்கள், வரும்போதும் ஒரு புதிய இழையைத் தொடங்கவேண்டும்.

அதைவிடவும் சுலபமானது, தக்ஷிணாமூர்த்தி உபதேசம்.  முயல்கிறேன்.

சும்மாயிரு சொல்லற என்றலுமே
அம்மா பொருளொன்று மறிந்திலனே. 

நட்புடன்,

Raja sankar

unread,
Mar 3, 2011, 11:26:49 PM3/3/11
to mint...@googlegroups.com
அன்பின் ஹரிகி,

பொதுவாக இந்த மாதிரி ஏதேனும் தலைப்பில் எழுதும்போது இரண்டு வைத்துகொள்வது வசதியாக இருக்கும். ஒரு இழையில் கட்டுரைகள் மட்டும். இன்னொரு இழையில் விவாதம். படிக்க மட்டும் விரும்புபவர்கள் கட்டுரை இழையை குறித்து வைத்துக்கொண்டு படிக்கலாம். 

மகாபாரதம் பற்றி அன்பர் கேட்டதும் நீங்கள் பதிலளித்ததும் தவறல்ல. விவாதத்தில் பங்கு கொள்ளும்படி இருந்திருந்தால் அப்போதே மடை மாற்றி விட்டிருக்கலாம். ஆனால் நடந்தவைகளை நடந்தவைகளாகவே விட்டு விட்டு இனிமேல் இவைகள் நடக்காமல் பார்த்துகொள்ளலாம். 

அதற்காக நீங்கள் உள்ளே வந்து கருத்து சொல்வதை நிறுத்தவேண்டியதில்லை. என்ன கருத்து வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் சொல்லலாம். வேண்டுமென்றால் இன்னோர் இழை தொடங்கி வெட்டி ஒட்டி விட்டு ஒரு அறிவிப்பு கொடுத்துவிட்டால் போகிறது. :-). 

நீங்கள், கண்ணன், ரங்கனார், தேவ், கீதாம்மா,ராஜம் அம்மா போன்றவர்கள் எழுதமாட்டேன் என்று சொல்ல ஓர் தடை போடவேண்டும். :-))))

ராஜசங்கர்

2011/3/3 Hari Krishnan <hari.har...@gmail.com>
--

N. Kannan

unread,
Mar 4, 2011, 7:18:55 PM3/4/11
to mint...@googlegroups.com
ராஜசங்கர்

மடலாடல் என்பது சிந்தனை ஓட்டத்தின் மின்திரள் வடிவம்.
ஓடி வரும் ஆற்றுக்கு கரை போட முடியாது. அது போனபின் இருப்பதுதான் கரை :-)
எண்ணங்கள் ஒன்றை ஒன்று பற்றி நடக்கும் கிழடுகள்.
ஒன்றுமே இல்லாமல் எண்ணத்தால் எழுந்து நிற்க முடியாது!
எண்ணக்கிளைத்தல் தவிர்க் இயலாது.
முயன்று பார்க்கலாம். ஜென் தியானம் செய்பவர்கள் சுரை நோக்கி அமர்வது போல.
தூங்கிப்போனால் தலையில் அடிக்க இன்னொருவர் வேண்டும்.
அங்கும் இங்கும் :-))

நா.கண்ணன்

2011/3/4 Raja sankar <errajasa...@gmail.com>:

--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

Raja sankar

unread,
Mar 6, 2011, 10:23:12 AM3/6/11
to mint...@googlegroups.com
சைவ சித்தாந்தம் -5

இதிலே மும்மலங்களை பார்க்கலாம். மும்மலங்கள் முறையே ஆணவம்,கன்மம்,மாயை என்று முதலிலேயே பார்த்திருக்கிறோம். திருமூலர் இவற்றைப்பற்றி நிர்ணையங்கள் செய்திருக்கிறார். அவைகள் பற்றி பார்க்கலாம். 

ஆணவம் மாயையும் கன்மமும் ஆம்மலம்
காணும் முளைஅத் தவிடுமி ஆன்மாவும்
தாணுவைப் போலாமல் தண்டுல மாய்நிற்கும்
பேணுவாய் மற்றுநின் பாசம் பிரித்தே.              திருமந்திரம்-எட்டாம் தந்திரம்-

மும்மலங்களும் அரிசிக்கு முளை,தவிடு,உமி போல் இருப்பவை. முதலில் தவிடு, அதற்கும் கீழ் உமி, அதற்கும் கீழ் முளை. இப்படியாக ஆன்மாவை சுற்றி மறைத்து இருக்கின்றன. 

ஆணவம் என்றால் என்ன?

நண்ணிய பாசத்தில் நான் எனல் ஆணவம்
பண்ணிய மாயையில் ஊட்டல் பரிந்தனன்
கண்ணிய சேதனன் கண்வந்த பேரருள்
அண்ண லடிசேர் உபாயம தாகுமே.   திருமந்திரம் 

இருக்கும் பாசத்தில் ஆணவம் மலம், நான் என்னும் கருத்தை உருவாக்குகிறது. இதில் இருந்து விடுவிக்க மாயையை இறைவன் பொருத்துகிறான். இது அவனுடைய திருவடியை சேர அவன் செய்யும் உபாயம். 

அதிமூட நித்திரை ஆணவம் நந்த
அதனால் உணர்வோன் அருங்கன்மம் முன்னி
இதமான கேவலம் இத்திறம் சென்று
பரமாக ஐயவத் தைப்படு வானே.

ஆணவத்தால் வரும் மிகப்பெரும் உறக்கம் ஒரு நிலை அது கேவலாவத்தை, அதனால் வரும் கன்மங்கள் ஒரு நிலை, மூன்று மலங்களும் உள்ள் நிலை, இப்படியாக ஐந்து அவத்தைகள் உயிருக்கு வரும். 

கன்மம் என்றால் என்ன?

கருமங்கள் ஒன்று கருதும் கருமத்(து)
உரிமையும் கன்மமும் உன்னும் பிறவிக்
கருவினை யாவதும் கண்டகன்(று) அன்பிற்
புரிவன கன்மக் கயத்துட் புகுத்துமே.            - திருமந்திரம் 
 
செய்யும் செயல்களால் வரும் வினைகள் பிறவிக்கு காரணமாக அமைகின்றன. இருந்தபோதிலும் உயிர்கள் செய்யும் செயல்கள் மூலம் இந்த கருமவினைகளில் இருந்து விடுபடவும் முடியும்

உடற்செயல் கன்மம் இந்த உடல்வந்த வாறே தென்னின்
விடப்படு முன்னு டம்பின் வினைஇந்த உடல்வி ளைக்கும்
தொடர்ச்சியால் ஒன்றுக் கொன்று தொன்றுதொட் டநாதி வித்தின்
இடத்தினின் மரம்ம ரத்தின் வித்தும்வந் தியையு மாபோல்.            - சிவஞான சித்தியார்

உடலின் செயல்களால் வரும் கன்மம் தொடர்ச்சியாய் உயிர்களை தொடரும். இது விதையில் மரமும் மரத்தில் விதையும் வருவது போலாகும். 

மாயை என்பது பற்றி 

மாயை என்பது இறைவனின் படைப்பு சக்தியாக கொள்ளப்படுகிறது. ஆணவ மலத்தில் இருந்து உயிர்களை காக்க இறைவன் உயிர்களுக்கு மாயா மலத்தை புகுத்துகிறான். அது உயிர்கள் இருக்கும் நித்திரை நிலையில் இருந்து செயல்பட வைக்கிறது. இது மும்மலங்களையும் நீக்கி இறைவனோடு சேர்வதற்கு வழி செய்கிறது.  இறைவனின் படைப்பு சக்தியாகவும் மாயை செயல்படுகிறது. மாயையில் சுத்த மாயை, அசுத்த மாயை என்ற இருபிரிவுகள் உண்டு. முதலாவது உயிர்களுக்கு உதவி செய்யவும், இரண்டாவது மறைப்பு சக்தியாகவும் செயல்படுகிறது. 

இதிலே திருமந்திர செய்யுள்களையே அதிகம் பயன்படுத்துகிறேன். ஏனென்றால் திருமந்திரம் தான் இருப்பதிலேயே மிக ஆழமாகவும், விரிவாகவும் இருக்கும் நூல். அதற்காக மற்ற பண்டார சாத்திரங்களை தேவையில்லை என்று அர்த்தம் இல்லை. அவைகளும் தத்துவ நிர்ணையங்களை செய்கின்றன. ஆனால் நீளம் குறைவாததால் திருமந்திரம் போல் விரிவாக இருக்காது. ஆக பெரும்பாலும் திருமந்திர செய்யுள்களையே தத்துவ விளக்கங்களுக்கு எடுத்துகொள்கிறேன். 

அடுத்து மலபரிபாகம். 

ராஜசங்கர்



2011/2/28 Raja sankar <errajasa...@gmail.com>

selva kumaran

unread,
Mar 6, 2011, 10:56:19 AM3/6/11
to mint...@googlegroups.com
நண்ணிய பாசத்தில் நான் எனல் ஆணவம்
பண்ணிய மாயையில் ஊட்டல் பரிந்தனன்
கண்ணிய சேதனன் கண்வந்த பேரருள்
அண்ண லடிசேர் உபாயம தாகுமே.   திருமந்திரம்

'அஹங்'காரம் என்பதும் 'நான்' என்பதே ஆகும் இல்லையா?!  அருமை! திருமந்திரம் சைவசித்தாந்தத்தில் மிக முக்கிய நூலாகும். அது மட்டுமல்ல, திருமந்திரத்தில்

ஆணவத் தார்ஒன் றறியாத கேவலர்
பேணிய மாயை பிரளயா கலர்க்காகும்
காணும் உருவினர் காணாமை காண்பவே
பூணும் சகலம் முப் பாசமும் புக்கோர்க்கே. 
8:7:14

ஆணவ மலம் ஒன்றையே உடையவராகிய விஞ்ஞானகலர் கேவலாவத்தையை அடையுமிடத்துக் காரிய தத்துவங்களுள் ஒன்றையும் அனுபவியாது, நாதமாத்திரையா யிருப்பர். .... (தருமபுர ஆதீன பொழிப்புரை)

அதே "நான்" எனும் உணர்வு இருக்கும் "கேவல அவஸ்தை" அத்வைதத்தில் சவிகல்ப சமாதியில் நிற்பர். அதுவும் நாதமாத்திரையாக அவர் இருப்பது சபீஜ சமாதி என்றழைக்கப்படும். (கேட்டறிந்து எழுதிய சரக்கு)

ஆக ஆணவம் என்ற சொல்லும்,அஹங்காரம்  என்ற சொல்லும்  இங்கும் ஒன்று போல் தோன்றுகின்றன.



2011/3/6 Raja sankar <errajasa...@gmail.com>

Raja sankar

unread,
Mar 9, 2011, 6:14:14 AM3/9/11
to mint...@googlegroups.com
இங்கு ஒரு சிறு விளக்கம். 

அதிமூட நித்திரை ஆணவம் என்றும் திருமூலர் சொல்கிறார். மற்றைய சித்தாங்களுக்கும் இதுவும் ஒன்று போல் தோன்றிலாலும் வேறுபாடுகள் உண்டு. அதை மலபரிபாகத்தில் பார்க்கலாம். 

சபீஜ - ஸபீஜ. விதையுள்ள சமாதி. சைவ சித்தாந்தததில் தீட்சையில் சபீச தீட்சை உண்டு. பின்னால் எல்லாம் விளக்கமாக எழுதுகிறேன். 

ராஜசங்கர்

selva kumaran

unread,
Mar 9, 2011, 6:21:19 AM3/9/11
to mint...@googlegroups.com
"அதிமூட நித்திரை ஆணவம் என்றும் திருமூலர் சொல்கிறார்"

அத்வைதத்திலுமே அதே சொற் கையாளல்தான். "அஹம் அஞ்ஞான நித்ரா" என்பது போல வரும். இந்த விஷயங்களை எங்கே எதில் படித்தேன் என்ற நினைவில்லாததுதான் பெரிய குறை.

ஆன்மீக விஷயங்களில் ஆழ்ந்துப் போக முடியாமல் போனதாலும், குடும்ப காரணங்களாலும் அலட்சியம் தட்டி விட்டது.


2011/3/9 Raja sankar <errajasa...@gmail.com>

Raja sankar

unread,
Mar 9, 2011, 6:24:13 AM3/9/11
to mint...@googlegroups.com
அத்வைதத்துக்கும் சைவ சித்தாந்ததிற்கும் இருக்கும் ஒற்றுமை, வேறுபாடுகளை பின்னால் பார்க்கலாம். சுபக்கத்தில் இது உண்டு. பல பண்டார சாத்திரங்களில் இது வரும். 

இப்போது சைவ சித்தாந்தம் மட்டும். :-)))

ராஜசங்கர்

selva kumaran

unread,
Mar 9, 2011, 6:28:43 AM3/9/11
to mint...@googlegroups.com
திரு. இராஜசங்கர்

அத்வைத, சைவ சித்தாந்த ஒற்றுமைக்காக அதை எழுதவில்லை.


அன்பர் மோகனரங்கன், சைவ சித்தாந்த ஆணவம் வேறு; அத்வைதத்தில் வரும் அஹங்காரம் வேறு என்று சொல்லி இருந்தார்.

அந்த சந்தேகத்தைத்தான் இப்படி எண்ணிப் பார்க்கிறேன்.

ஆகவே நானும் சைவ சித்தாந்தத்தை மட்டுமே தான் இங்கே படிக்கிறேன்.

அதில் வரும் ஆணவம் நான் புரிந்துக் கொண்டதா, வேறு ஒன்றா என்றுதான் தெரியவேண்டும்.

நீங்கள் உங்கள் பணியைத் தொடருங்கள்.

இந்த இழையில் என் எண்ணத்தைப் பதிவது சற்று இழையின் போக்கை மாற்றுவதாகக் கருதினால் தனி இழையில் என் வினாவை போட்டுக் கொள்கிறேன்.

நன்றி!

2011/3/9 Raja sankar <errajasa...@gmail.com>

coral shree

unread,
Mar 9, 2011, 8:03:24 AM3/9/11
to mint...@googlegroups.com
நன்கு எளிமையாக மனதில் பதியும் வண்ணம் விளக்கியுள்ளீர்கள். நன்றி.

2011/3/9 Raja sankar <errajasa...@gmail.com>
இங்கு ஒரு சிறு விளக்கம். 



--

                                                               
                 
மின் செய்தி மாலை படியுங்கள்.
Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

selva kumaran

unread,
Mar 9, 2011, 8:05:39 AM3/9/11
to mint...@googlegroups.com
"ஆணவத்துக்கும் மமதை - செருக்குக்கும் தொடர்பில்லை."

மிக மிகச் சரி.

2011/3/9 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>


2011/3/9 devoo <rde...@gmail.com>

>>சைவ சித்தாந்த ஆணவம் வேறு..<<

ஆணவம் -

பொதுவில்  விசேஷணமாக - அடைமொழியாக வடிவம் பெறும்போது
இவ்வாறாக மாறும் :

அணு - ஆணவம்
த(d)நு    - தா(d)நவ
கர்ம     - கார்மணம்
பர்வ    - பார்வண
பக்ஷ   - பாக்ஷிக

முதல் எழுத்து நெடிலாகும்.

ஆணவத்துக்கும் மமதை - செருக்குக்கும் தொடர்பில்லை.
பல வடசொற்கள் நம் பயன்பாட்டில் வேறுபொருள் தருகின்றன.
ஆணவ மலம் இறுதி நிலையிலும் அழிவுறாது,
வலிமை குன்றும் என்றும் அரங்கனார் கூறுவார்.

இழைக்குத் தொடர்புடைய கருத்து என நம்புகிறேன்


தேவ்


நன்றி தேவ் சார்! 

திரு ராஜாசங்கர் சற்று இந்தக் கருத்துத் தெளிவில் கவனம் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். 

தேவையில்லை என்று கருதினால் ஒன்றும் பிரச்சனையில்லை. 

ஸ்ரீமாதவ சிவஞான யோகிகளின் மாபாடியத்தை ஊன்றிக் கற்றல் நல்ல தெளிவைப் பிறப்பிக்கும். 

திரு ராஜாசங்கர் இந்த வார்த்தைகளைத் தயவு செய்து அறிவுரையாகக் கொள்ளக் கூடாது. 

நன்றி. 
On Mar 9, 5:28 am, selva kumaran <selvakumaran...@gmail.com> wrote:
> திரு. இராஜசங்கர்
>
> அத்வைத, சைவ சித்தாந்த ஒற்றுமைக்காக அதை எழுதவில்லை.
>
> அன்பர் மோகனரங்கன், சைவ சித்தாந்த ஆணவம் வேறு; அத்வைதத்தில் வரும் அஹங்காரம்
> வேறு என்று சொல்லி இருந்தார்.
>
> அந்த சந்தேகத்தைத்தான் இப்படி எண்ணிப் பார்க்கிறேன்.
>
> ஆகவே நானும் சைவ சித்தாந்தத்தை மட்டுமே தான் இங்கே படிக்கிறேன்.
>
> அதில் வரும் ஆணவம் நான் புரிந்துக் கொண்டதா, வேறு ஒன்றா என்றுதான்
> தெரியவேண்டும்.
>
> நீங்கள் உங்கள் பணியைத் தொடருங்கள்.
>
> இந்த இழையில் என் எண்ணத்தைப் பதிவது சற்று இழையின் போக்கை மாற்றுவதாகக்
> கருதினால் தனி இழையில் என் வினாவை போட்டுக் கொள்கிறேன்.
>
> நன்றி!
>
> 2011/3/9 Raja sankar <errajasankarc...@gmail.com>

>
> > அத்வைதத்துக்கும் சைவ சித்தாந்ததிற்கும் இருக்கும் ஒற்றுமை, வேறுபாடுகளை
> > பின்னால் பார்க்கலாம். சுபக்கத்தில் இது உண்டு. பல பண்டார சாத்திரங்களில் இது
> > வரும்.
>
> > இப்போது சைவ சித்தாந்தம் மட்டும். :-)))
>
> > ராஜசங்கர்
>
> > 2011/3/9 selva kumaran <selvakumaran...@gmail.com>
>
> > *"அதிமூட நித்திரை ஆணவம் என்றும் திருமூலர் சொல்கிறார்"*

>
> >> அத்வைதத்திலுமே அதே சொற் கையாளல்தான். "அஹம் அஞ்ஞான நித்ரா" என்பது போல
> >> வரும். இந்த விஷயங்களை எங்கே எதில் படித்தேன் என்ற நினைவில்லாததுதான் பெரிய
> >> குறை.
>
> >> ஆன்மீக விஷயங்களில் ஆழ்ந்துப் போக முடியாமல் போனதாலும், குடும்ப
> >> காரணங்களாலும் அலட்சியம் தட்டி விட்டது.
>
> >> 2011/3/9 Raja sankar <errajasankarc...@gmail.com>

>
> >> இங்கு ஒரு சிறு விளக்கம்.
>
> >>> அதிமூட நித்திரை ஆணவம் என்றும் திருமூலர் சொல்கிறார். மற்றைய
> >>> சித்தாங்களுக்கும் இதுவும் ஒன்று போல் தோன்றிலாலும் வேறுபாடுகள் உண்டு. அதை
> >>> மலபரிபாகத்தில் பார்க்கலாம்.
>
> >>> சபீஜ - ஸபீஜ. விதையுள்ள சமாதி. சைவ சித்தாந்தததில் தீட்சையில் சபீச தீட்சை
> >>> உண்டு. பின்னால் எல்லாம் விளக்கமாக எழுதுகிறேன்.
>
> >>> ராஜசங்கர்
>
> >>> 2011/3/6 selva kumaran <selvakumaran...@gmail.com>
>
> >>> *நண்ணிய பாசத்தில் நான் எனல் ஆணவம்*
> >>>> *பண்ணிய மாயையில் ஊட்டல் பரிந்தனன்*
> >>>> *கண்ணிய சேதனன் கண்வந்த பேரருள்*
> >>>> *அண்ண லடிசேர் உபாயம தாகுமே.   திருமந்திரம் *

>
> >>>> 'அஹங்'காரம் என்பதும் 'நான்' என்பதே ஆகும் இல்லையா?!  அருமை! திருமந்திரம்
> >>>> சைவசித்தாந்தத்தில் மிக முக்கிய நூலாகும். அது மட்டுமல்ல, திருமந்திரத்தில்
>
> >>>> *ஆணவத் தார்ஒன் றறியாத கேவலர்

> >>>> பேணிய மாயை பிரளயா கலர்க்காகும்
> >>>> காணும் உருவினர் காணாமை காண்பவே
> >>>> பூணும் சகலம் முப் பாசமும் புக்கோர்க்கே.  *8:7:14

>
> >>>> ஆணவ மலம் ஒன்றையே உடையவராகிய விஞ்ஞானகலர் கேவலாவத்தையை அடையுமிடத்துக்
> >>>> காரிய தத்துவங்களுள் ஒன்றையும் அனுபவியாது, நாதமாத்திரையா யிருப்பர். ....
> >>>> (தருமபுர ஆதீன பொழிப்புரை)
>
> >>>> அதே "நான்" எனும் உணர்வு இருக்கும் "கேவல அவஸ்தை" அத்வைதத்தில் சவிகல்ப
> >>>> சமாதியில் நிற்பர். அதுவும் நாதமாத்திரையாக அவர் இருப்பது சபீஜ சமாதி
> >>>> என்றழைக்கப்படும். (கேட்டறிந்து எழுதிய சரக்கு)
>
> >>>> ஆக ஆணவம் என்ற சொல்லும்,அஹங்காரம்  என்ற சொல்லும்  இங்கும் ஒன்று போல்
> >>>> தோன்றுகின்றன.
>
> >>>> 2011/3/6 Raja sankar <errajasankarc...@gmail.com>
> ...
>
> read more »


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Raja sankar

unread,
Mar 9, 2011, 8:47:36 AM3/9/11
to mint...@googlegroups.com
அன்பின் செல்வ குமரன், மோகன ரங்கன்,

சைவ சித்தாந்தத்தில் ஆணவ மலம் உயிர்களை மயக்கத்தில் ஆழ்த்தி உள்ளது(பதி, பசு, பாசம் மூன்றும் அநாதி). அதில் இருந்து மீள இறைவன் மாயையை சேர்க்கிறான். அதனால் உயிர்கள் மயக்கம் தெளிந்து செயல்களை செய்ய ஆரம்பிக்கிறன. அந்த செயல்கள் மூலமாகவோ அல்லது இறைவனின் அருளாளோ முக்தி. 

ஆக நான் என்பதோ எனது என்பதோ ஆணவ மலம் அல்ல.  நான் என்பது அஹங்காரம், எனது என்பது மமகாரம் என்பார் கிருபானந்த வாரியார். 

உயிர்களின் துன்பங்களுக்கு மூலம், முக்திக்கு தடை இந்த ஆணவ மலம். செயல்கள் கன்ம மலம். கன்மம் மலம், பிராப்த, சஞ்சித, ஆகாமியம் என மூவகை. இவ்மூவகை வினைகளும் தானாக உயிரை சேருவதில்லை. இறைவனாலே சேருகின்றன. இந்த கன்ம மலமும் நீக்க படவேண்டும்.  இறுதியில் ஆணவ மலத்தையும் நீக்கி சாலோக, சாமீமப, சாரூப முக்தியை இறைவன் அருளுகிறான். 

இதிலே, பக்குவன்-அபக்குவன், இருவினை ஒப்பு, தீட்சை, ஐவகை மலங்கள்(மாயேயம்,திரேதாயி), ஐவகை அவத்தை, ஐவகை நிலை(துரியம், துரியாதீதம்), மாயையில் மூவகை என விளக்க விரியும். 

இதுவே என்னுடைய புரிதல். தவறாக இருப்பின் சுட்டவும். 

எடுத்த எடுப்பிலேயே தத்துவார்த்தமாக விளக்கினால் எல்லோருக்கும் புரியாது என்றே கடும் தத்துவ பாடங்களை பின்னால் விளக்க எண்ணினேன். தவறாக எண்ணவேண்டாம். 

Geetha Sambasivam

unread,
Mar 9, 2011, 8:52:16 AM3/9/11
to mint...@googlegroups.com
நிதானமாகவே விளக்குங்க.

2011/3/9 Raja sankar <errajasa...@gmail.com>
அன்பின் செல்வ குமரன், மோகன ரங்கன்,

சைவ சித்தாந்தத்தில் ஆணவ மலம் உயிர்களை மயக்கத்தில் ஆழ்த்தி உள்ளது(பதி, பசு, பாசம் மூன்றும் அநாதி). அதில் இருந்து மீள இறைவன் மாயையை சேர்க்கிறான். அதனால் உயிர்கள் மயக்கம் தெளிந்து செயல்களை செய்ய ஆரம்பிக்கிறன. அந்த செயல்கள் மூலமாகவோ அல்லது இறைவனின் அருளாளோ முக்தி. 

ஆக நான் என்பதோ எனது என்பதோ ஆணவ மலம் அல்ல.  நான் என்பது அஹங்காரம், எனது என்பது மமகாரம் என்பார் கிருபானந்த வாரியார். 

ராஜசங்கர்

Geetha Sambasivam

unread,
Mar 9, 2011, 8:56:06 AM3/9/11
to mint...@googlegroups.com
திரும்பத் திரும்பப் படிச்சுக்கிறேன்.

2011/3/6 Raja sankar <errajasa...@gmail.com>
சைவ சித்தாந்தம் -5

இதிலே மும்மலங்களை பார்க்கலாம். மும்மலங்கள் முறையே ஆணவம்,கன்மம்,மாயை என்று முதலிலேயே பார்த்திருக்கிறோம். திருமூலர் இவற்றைப்பற்றி நிர்ணையங்கள் செய்திருக்கிறார். அவைகள் பற்றி பார்க்கலாம். 




selva kumaran

unread,
Mar 9, 2011, 11:30:55 AM3/9/11
to mint...@googlegroups.com
பிழைகள் இருக்கின்றன என்றுதான் நினைக்கிறேன், திரு. ராஜசங்கர்.

இருப்பினும் இடையே இடையே அவைகளை சொன்னால்,  நீங்கள் லயித்து எழுதும் வேகம் தடைபடும்.

ஒரு கட்டம் வரை நீங்கள் எழுதி முடித்தப் பின்னர் என் கருத்துக்களை இங்கே இடுகிறேன்.

அதுவரை உங்கள் வேகம் தடைபடாது சைவசித்தாந்த விளக்கம் ஒளிரட்டும்.

Raja sankar

unread,
Mar 9, 2011, 5:03:07 PM3/9/11
to mint...@googlegroups.com
//பிழைகள் இருக்கின்றன என்றுதான் நினைக்கிறேன், திரு. ராஜசங்கர்.

இருப்பினும் இடையே இடையே அவைகளை சொன்னால்,  நீங்கள் லயித்து எழுதும் வேகம் தடைபடும்.//

பிழைகள் இருக்கின்றன என்றால் இப்போதே சொல்லிவிடுங்கள். நான் முழுவதும் எழுதி பின்பு மாற்றி , இதை படித்தவர்களுக்கும் திரும்பவும் மாற்றி படிக்க வைக்கவேண்டாமே. 

தாராளமாக சொல்லுங்கள். தவறாக இருப்பின் திருத்திகொள்ளலாம். 

Geetha Sambasivam

unread,
Mar 10, 2011, 4:23:50 AM3/10/11
to mint...@googlegroups.com
சைவ சித்தாந்தத்தில் ஆணவ மலம் உயிர்களை மயக்கத்தில் ஆழ்த்தி உள்ளது(//

ஆணவமலம் இங்கே த்வைதமாய்ப்பார்க்கப் படுகிறதோ?  அதாவது அத்வைதம் என்பதிலிருந்து வேறுபட்டு??? ஆணவமலம் வலிமை குன்றும் என்று தேவ் அவர்கள் சொல்கிறார்.  அத்வைதத்திலோ ஆணவம் முற்றிலும் அழிந்து விடும். ஆகவே இந்த சந்தேகம்.  தவறெனின் மன்னிக்கவும். கொஞ்சம் குழப்பம்!

2011/3/9 Raja sankar <errajasa...@gmail.com>
அன்பின் செல்வ குமரன், மோகன ரங்கன்,

சைவ சித்தாந்தத்தில் ஆணவ மலம் உயிர்களை மயக்கத்தில் ஆழ்த்தி உள்ளது(பதி, பசு, பாசம் மூன்றும் அநாதி). அதில் இருந்து மீள இறைவன் மாயையை சேர்க்கிறான். அதனால் உயிர்கள் மயக்கம் தெளிந்து செயல்களை செய்ய ஆரம்பிக்கிறன. அந்த செயல்கள் மூலமாகவோ அல்லது இறைவனின் அருளாளோ முக்தி. 

ஆக நான் என்பதோ எனது என்பதோ ஆணவ மலம் அல்ல.  நான் என்பது அஹங்காரம், எனது என்பது மமகாரம் என்பார் கிருபானந்த வாரியார். 


361.gif

Raja sankar

unread,
Mar 10, 2011, 6:16:12 AM3/10/11
to mint...@googlegroups.com
தேவ்,

இங்கு குழப்பம் வர காரணம் உண்டு என நினைக்கிறேன். 

ஆணவ மலம், மூடத்தனங்கள் எல்லாவற்றிக்கும் காரணம் என்று சொல்லும் போது செருக்கு, திமிர் முதலானவையும் அதில் அடங்குகின்றன இல்லையா? இதை இன்னொரு விதமாகவும் சொல்லாம். 

நான் என்பது ஆணவ மலத்தில் உள்ளடக்கம். ஆனால் ஆணவ மலம், நான் எனும் கருத்தில் இல்லை. 

ஆங்கிலத்தில் இதற்கு Syllogism(http://en.wikipedia.org/wiki/Syllogism) என்று பெயர்.  நியாயத்தில் இதன் பெயர் என்னவென்று ஞாபகம் வரமாட்டேன் என்கிறது. 


ராஜசங்கர்



2011/3/10 devoo <rde...@gmail.com>
ஆணவத்தைச் செருக்கு எனும் பொருளில் எந்த மதமரபும்
பயன்படுத்தவில்லை; முதலில் சித்தாந்தங்களைத் தனித்தனியாக
நன்கு புரிந்துகொள்ள வேண்டும் - “பனுவல் வாசிப்பு”.
ஒப்பீடு அடுத்த நிலை.


மொழிகளிலும் அதே முறைதான். முதலில் புரிந்து கொண்டு பின்னர்
ஒப்பீடு செய்ய வேண்டும்


தேவ்

On Mar 10, 3:23 am, Geetha Sambasivam <geethasmbs...@gmail.com> wrote:
> சைவ சித்தாந்தத்தில் ஆணவ மலம் உயிர்களை மயக்கத்தில் ஆழ்த்தி உள்ளது(//
>
> ஆணவமலம் இங்கே த்வைதமாய்ப்பார்க்கப் படுகிறதோ?  அதாவது அத்வைதம் என்பதிலிருந்து
> வேறுபட்டு??? ஆணவமலம் வலிமை குன்றும் என்று தேவ் அவர்கள் சொல்கிறார்.
> அத்வைதத்திலோ ஆணவம் முற்றிலும் அழிந்து விடும். ஆகவே இந்த சந்தேகம்.  தவறெனின்
> மன்னிக்கவும். கொஞ்சம் குழப்பம்![?][?][?][?][?]
>
> 2011/3/9 Raja sankar <errajasankarc...@gmail.com>

>
> > அன்பின் செல்வ குமரன், மோகன ரங்கன்,
>
> > சைவ சித்தாந்தத்தில் ஆணவ மலம் உயிர்களை மயக்கத்தில் ஆழ்த்தி உள்ளது(பதி, பசு,
> > பாசம் மூன்றும் அநாதி). அதில் இருந்து மீள இறைவன் மாயையை சேர்க்கிறான். அதனால்
> > உயிர்கள் மயக்கம் தெளிந்து செயல்களை செய்ய ஆரம்பிக்கிறன. அந்த செயல்கள்
> > மூலமாகவோ அல்லது இறைவனின் அருளாளோ முக்தி.
>
> > ஆக நான் என்பதோ எனது என்பதோ ஆணவ மலம் அல்ல.  நான் என்பது அஹங்காரம், எனது
> > என்பது மமகாரம் என்பார் கிருபானந்த வாரியார்.
>
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
>
>
>  361.gif
> < 1KViewDownload

--

Nagarajan Vadivel

unread,
Mar 10, 2011, 7:47:01 AM3/10/11
to mint...@googlegroups.com
ஆணவம், ஆங்காரம் ஆகியவை தான் என்ற மையக் கருத்துருவை ஒட்டி புரிந்துகொள்ள வேண்டும்
ஆங்காரம் என்பது ஆங்கிலத்தில் ஈகோ என்ற பொருளில் வழங்கப்படுகிறது
தா(நா)ன் என்பது செல்ஃப் என்ற பொருளில் வழங்கப்ப்டுவது
ஆங்காரம் அல்லது ஈகோ வேத சாரத்திலும் பெளத்தத்திலும் சாங்க்ய-யோகாவிலும் வேதாந்தத்திலும் பயன்படுத்தப்பட்ட சொல்
தான் என்பது மேலை நாட்டுத் ததுவத்தில் soul என்ற சொல்லுக்கு நிகரானது

“Just as a man fully embraced by his beloved wife does not know anything at all, either external or internal, so does this man (purusha: the individual life monad), embraced fully by the supremely knowing Spiritual-Self (prajnatman), not knowing anything at all, either internal or external. That is his form devoid of sorrows, in which all desires are fulfilled; in which his only desire is the Self [which he has now attained]; in which he is without desire.  In that state a father is no father, a mother is no mother, the worlds no worlds, the gods no gods, ... a thief no thief, an ascetic no ascetic.  Unattended by virtuous works, unattended by evil works, he has crossed to the other shore, beyond the sorrows of the heart"
                                                                            - Brhadaranyaka Upanisad 4-3 21-22

ஓங்காரம் அல்லது ஓம் என்பது மனிதனின் உணர்நிலை கடந்த நான்காம் நிலையைக் குறிப்பது.  துரிய நிலை என்பது நான்காம் நிலை.  ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்து தூனகாமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம் என்ற குறிப்பின் படி விழிநிலை, கனவு, உறக்கம் கடந்த நிலை.
தான் என்பது நான்கு நிலைகளில் வெளிப்படும்
1. விழிநிலை - புலனுணர்வுகளைக் கொண்டு புற உலகை உணர்தல்
2. கனவுநிலை - உணர்நிலையை உள்முகப் படுத்தல்
3.. உறக்க நிலை -விழிநிலையும் கனவுநிலையும் கடந்தது
4. துரியநிலை - தூங்காமல் தூங்கிச் சுகம் பெறும் நிலை.  utterly quite (santam) peaceful-blissful (sivam) without-a-second (advaitam)- this is the Atman, the self to be realized

சில ஆண்டுகளுக்குமுன் மனித வளர்ச்சி பற்றிய தத்துவம் மேற்கும் கிழக்கும் என்ற முதுகலைப் பாடத்தில் இருந்து எடுத்த குறிப்பு.  ஆங்கில மொழிபெயர்ப்பை அடிப்படையாகக்கொண்டது.  மூலநூல் சொல்லுவது என்ன என்பதைத் தெளிவுபடுத்த வேண்டுகிறேன்
நாகராசன்





2011/3/10 devoo <rde...@gmail.com>
ஆணவத்தைச் செருக்கு எனும் பொருளில் எந்த மதமரபும்
பயன்படுத்தவில்லை; முதலில் சித்தாந்தங்களைத் தனித்தனியாக
நன்கு புரிந்துகொள்ள வேண்டும் - “பனுவல் வாசிப்பு”.
ஒப்பீடு அடுத்த நிலை.


மொழிகளிலும் அதே முறைதான். முதலில் புரிந்து கொண்டு பின்னர்
ஒப்பீடு செய்ய வேண்டும்


தேவ்

On Mar 10, 3:23 am, Geetha Sambasivam <geethasmbs...@gmail.com> wrote:
> சைவ சித்தாந்தத்தில் ஆணவ மலம் உயிர்களை மயக்கத்தில் ஆழ்த்தி உள்ளது(//
>
> ஆணவமலம் இங்கே த்வைதமாய்ப்பார்க்கப் படுகிறதோ?  அதாவது அத்வைதம் என்பதிலிருந்து
> வேறுபட்டு??? ஆணவமலம் வலிமை குன்றும் என்று தேவ் அவர்கள் சொல்கிறார்.
> அத்வைதத்திலோ ஆணவம் முற்றிலும் அழிந்து விடும். ஆகவே இந்த சந்தேகம்.  தவறெனின்
> மன்னிக்கவும். கொஞ்சம் குழப்பம்![?][?][?][?][?]
>
> 2011/3/9 Raja sankar <errajasankarc...@gmail.com>
>

> > அன்பின் செல்வ குமரன், மோகன ரங்கன்,
>
> > சைவ சித்தாந்தத்தில் ஆணவ மலம் உயிர்களை மயக்கத்தில் ஆழ்த்தி உள்ளது(பதி, பசு,
> > பாசம் மூன்றும் அநாதி). அதில் இருந்து மீள இறைவன் மாயையை சேர்க்கிறான். அதனால்
> > உயிர்கள் மயக்கம் தெளிந்து செயல்களை செய்ய ஆரம்பிக்கிறன. அந்த செயல்கள்
> > மூலமாகவோ அல்லது இறைவனின் அருளாளோ முக்தி.
>
> > ஆக நான் என்பதோ எனது என்பதோ ஆணவ மலம் அல்ல.  நான் என்பது அஹங்காரம், எனது
> > என்பது மமகாரம் என்பார் கிருபானந்த வாரியார்.
>
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
>
>
>  361.gif
> < 1KViewDownload

--

selva kumaran

unread,
Mar 10, 2011, 8:08:23 AM3/10/11
to mint...@googlegroups.com

"ஆணவ மலம், மூடத்தனங்கள் எல்லாவற்றிக்கும் காரணம் என்று சொல்லும் போது செருக்கு, திமிர் முதலானவையும் அதில் அடங்குகின்றன இல்லையா? இதை இன்னொரு விதமாகவும் சொல்லாம். 

நான் என்பது ஆணவ மலத்தில் உள்ளடக்கம். ஆனால் ஆணவ மலம், நான் எனும் கருத்தில் இல்லை. "

கண்டிப்பாக இல்லை, திரு. ராஜசங்கர். பெரும் பிழை இது.


அஹங்காரம் என்பதை கர்வம் என்ற பொருளில் தவறாக பயன்படுத்திக் கொண்டிருப்பதைப் போலவே, ஆணவமும் ஆகி விட்டது.

ஆணவம் என்ற சொல்லையும் அவ்வாறே பிழையாகப் பயன்படுத்துகிறோம்.


ஆணவம் என்பதில் உள்ள 'நான்' என்பதாலேயே செருக்கு ஏற்படுகிறது. ஆனால் செருக்கே 'நான்' ஆகி விடாது.

சைவசித்தாந்தத்தில் மும்மலங்களின் விளக்கத்தைத் தர புகுந்தால் ஆயிரக்கணக்கானப் பக்கங்கள் தேவைப்படும்.



2011/3/10 Raja sankar <errajasa...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Mar 10, 2011, 8:09:42 AM3/10/11
to mint...@googlegroups.com
அறியாமையால் கேட்ட கேள்வி, தவறெனின் மன்னிக்கவும்.  அக்ஞானத்தையே ஆணவமலம் எனக் கொள்ளலாமோ?  உண்மைப் பொருள் புரியாமல் மறைந்திருப்பது?

நீங்கள் தொடர்ந்து எழுதி வாருங்கள்.  திரும்பத் திரும்பப் படிச்சுப் புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்.

2011/3/10 Raja sankar <errajasa...@gmail.com>
தேவ்,

இங்கு குழப்பம் வர காரணம் உண்டு என நினைக்கிறேன். 

ஆணவ மலம், மூடத்தனங்கள் எல்லாவற்றிக்கும் காரணம் என்று சொல்லும் போது செருக்கு, திமிர் முதலானவையும் அதில் அடங்குகின்றன இல்லையா? இதை இன்னொரு விதமாகவும் சொல்லாம். 

நான் என்பது ஆணவ மலத்தில் உள்ளடக்கம். ஆனால் ஆணவ மலம், நான் எனும் கருத்தில் இல்லை. 

ஆங்கிலத்தில் இதற்கு Syllogism(http://en.wikipedia.org/wiki/Syllogism) என்று பெயர்.  நியாயத்தில் இதன் பெயர் என்னவென்று ஞாபகம் வரமாட்டேன் என்கிறது. 


ராஜசங்கர்


It is loading more messages.
0 new messages