சிறுகதைக் கொத்து

727 views
Skip to first unread message

தேமொழி

unread,
Oct 8, 2014, 10:44:34 PM10/8/14
to mint...@googlegroups.com, classr...@gmail.com, vall...@googlegroups.com
அப்பச்சி சொன்ன கதைகள்: காசின் அருமை

-----------------------------------------------------------------------------


தன் மகன் கருப்பஞ்செட்டி காசருமை தெரியாமல் வளர்வதில் சாத்தப்ப செட்டியாருக்கு மிகுந்த வருத்தம். சிக்கனமும், சேமிப்பும் நகரத்தார்களின் இரண்டு கண்கள் என்று அவர் அடிக்கடி சொல்வார். சிறுகக்கட்டிப் பெருக வாழவேண்டும் என்பார்.

அனால் அவர் மகன் கருப்பஞ்செட்டியிடம் அதெல்லாம் எடுபடவில்லை! அவன் நின்று பேசமாட்டான். காது கொடுத்து எதையும் கேட்க மாட்டான். அவன் தாயார் சிகப்பி ஆச்சி, அவனைச் செல்லம் கொடுத்து வளர்த்து வந்தார்கள். சாத்தப்ப செட்டியார் தம்பதிகளுக்குத் திருமணமாகி10 ஆண்டுகள் கழித்து, அவன் பிறந்ததால் ஆச்சிக்கு அப்படியொரு
பாசம். கண்ணை மறைக்கும் பாசம்.

காலம் 1941ம் ஆண்டு. ஏ.வி மெய்யப்ப செட்டியார் அவர்கள் தயாரித்து வெளிவந்த சபாபதி என்னும் திரைப்படம் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்த காலம். அந்தப் படத்தில் வரும் கதாநாயகனைப் போலவேதான் நம் கருப்பஞ்செட்டியும் இருந்தான். குணம், அறிவு என்று இரண்டிலுமே அச்சு அசலாக அப்படியேதான் இருந்தான். தோற்றத்தில் மட்டும் வாட்டசாட்டமாக இருப்பான். வயது 16. படிப்பு எட்டாம் வகுப்போடு சரி. அதற்குப் பிறகு படிப்பு ஏறவில்லை.

அப்போது இரண்டாம் உலக யுத்தம் நடந்து கொண்டிருந்ததால், நகரத்தார்கள் புதிதாக எதையும் செய்யாமால் இருப்பதை வைத்த வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தார்கள்.

சாத்தப்ப செட்டியாரின் வீடு நகரச் சிவன் கோயிலுக்கு அருகில் கீழக்கொரட்டியார் தெருவில் இருந்தது. பங்கு போட்டுக்கொள்ள யாருமில்லை. முழு  வீடும் அவருடையதுதான். கீழ ஊருணிக்கரையில் ஒரு சின்ன தோட்டம் இருந்தது. அந்தத் தோட்டத்தின் முன் பகுதியில் இருந்த தகரக் கொட்டகையில் ஒடு வியாபாரம் செய்து கொண்டிருந்தார். சீமை ஓடுகள். தேக்கு மரச் சட்டங்கள் மற்றும் கட்டுமானத்திற்கு வேண்டிய சாமான்கள்.உதவிக்கு நான்கு வேலையாட்களை வைத்திருந்தார்.

நாட்டு ஓடு, நம் கணினி கீ‍போர்டில், எண் ஒன்பது மற்றும் பூஜ்ஜியம் ஆகியவற்றில் இருக்கும் round bracket போன்ற வடிவில், அரை அடிக்கும் சற்று குறைவான‌ நீளத்தில் இருக்கும். இன்று இந்த வகை ஓடுகளைக் காண்பது அறிதாய் இருக்கிறது.

சீமை ஓடு, வளைந்து நெளிந்து, அளவில் பரீட்சை அட்டை போல‌,இப்பொழுது இருக்கும் அநேக வீடுகளில் இருப்பது. இவ்விருவ‌கை ஓடுக‌ளும் ஆர‌ஞ்சு நிற‌த்தில், க‌ண்க‌ளைக் க‌வ‌ரும் வ‌ண்ண‌மாக‌ இருக்கும். புதிதாக‌ வேய்ந்த‌ ஓடுக‌ள் நாள் செல்ல‌ச் செல்ல‌, ம‌ழையிலும், வெய்யிலிலும் ஆங்காங்கே க‌ருத்திருக்கும். 'வெய்யில்ல அலையாதப்பா கருத்துருவ' என்று இதைப் பார்த்து தான் சொன்னார்களோ என்னவோ! ஆரஞ்சில் கருமையும், ஒருவகையில் அழ‌கைக் கூட்டும் வித‌மாக‌வே இருக்கும்.

ஆனால் சாத்தப்பண்ணனின் ஒரே கவலை அவருடைய மகன்தான். கடைக்கு வந்து தொழிலைக் கற்றுக் கொள்ளப்பா என்றபோது முடியாது என்று மறுத்துவிட்டான். நீ சும்மா திட்டிக் கொண்டே இருப்பாய், உங்களிடம்  யார் வேலை பார்ப்பது என்று சொல்லிவிட்டான். வேறு இடத்திலும் வேலைக்குச்  செல்ல மறுத்துவிட்டான். இரண்டு வருடம் போகட்டும் என்று அவரும் விட்டு விட்டார்.

அவனுக்கு நிறைய நண்பர்கள். காலை ஒன்பது மணிக்கெல்லாம் கிளம்பிப் போய்விடுவான். மாலை ஆறு அல்லது ஏழு மணிக்குத்தான் வீட்டிற்குத் திரும்பி வருவான். ஒரு புத்தம் புது ராலி  சைக்கிள் வாங்கிக் கொடுத்திருந்தார். சைக்கிள்கள் எல்லாம் வெள்ளைக்காரன் தேசத்தில் இருந்துதான்

அப்போது வரும். டைனமோ, காற்று அடிக்கும் பம்ப் என்று எல்லா உபரி சாதனங்களையும் கொண்ட அற்புதமான சைக்கிள் அது. காலையில் கிளம்பு முன் சாத்தப்ப அண்ணனிடம் வந்து நிற்பான். முகப்புப் பெட்டகசாலையில் இருந்து முதல் நாள் குறிப்புக்களைச் சிட்டையில்  ஏற்றிக்கொண்டிருக்கும் அவர் நிமிர்ந்து பார்த்தவுடன் கையை நீட்டுவான். அன்றையக் கைச் செலவிற்கு, அதாவது பாக்கெட் மணி கேட்டு நிற்பான். அவரும் எழுதாத ஒப்பந்தப்படி ஒரு ஒத்த ரூபாய்க் காசை எடுத்துக் கொடுத்து அனுப்பி விடுவார்.

தங்கம் பவுன் 38 ரூபாய் விற்ற காலம் அது. ஒரு ரூபாய் என்பது அந்தக் காலத்தில் அதிக மதிப்புடையது. ரூபாய்க்குப் பதினாறு அணாக்கள். ஒரு அணாவிற்கு காலைப் பலகாரம் சாப்பிடக்கூடிய காலம் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். மாதம் 15 ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்கு ஆள் கிடைக்கும்  காலம் அது. அவன் இப்படிக் காசருமை தெரியாமல் தினமும் ஒரு ரூபாயை வீணடிக்கின்றானே என்று வருத்தப்படுவார்.

ஒருநாள் அதற்கு முடிவு கட்ட விரும்பியவர், அவனிடம் பேச்சுக் கொடுத்தார்:

“நான் ஒரு சின்ன வேலை சொல்கிறேன். செய்கிறாயா?”

அவன் பதில் சொன்னான். “முடிந்த வேலை என்றால் செய்கிறேன்”

ஒரு ஒத்த ரூபாய்க் காசை அவன் கையில் கொடுத்தவர், சொன்னார்.
” இந்தக் காசை நம் வீட்டுக் கிணற்றில் போட்டு விட்டு வா”

அவன் சற்றுக் கூட யோசிக்கவில்லை, தயங்கவில்லை. தங்கள் வீட்டு முகப்பில் இருக்கும் கிணற்றில் போட்டு விட்டு உடனே திரும்பி வந்தான்.

வந்து நின்றவனிடம் தொடர்ந்து சொன்னார் அவர்: “நாளை முதல் உன் கைச் செலவிற்கு நான் இரண்டு ரூபாய் தருகிறேன். ஆனால் இன்று நீ வெளியே சென்று சம்பாத்தித்து ஒரு ஒற்றை ரூபாயைக் கொண்டு வா பார்க்கலாம்”

“அவ்வளவுதானே, இன்று மாலைக்குள் ஒரு ரூபாய் சம்பாத்தியத்துடன் வருகிறேன்” என்று சொன்னவன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்று விட்டான்.

                          *********************************

சொல்வது எளிது. ஆனால் செயல் படுத்துவது என்பது எவ்வளவு கஷ்டம் என்பது கருப்பஞ் செட்டிக்கு வெளியே சென்றவுடன்தான் புத்தியில் உறைத்தது.

சில கூலி வேலைகளைச் செய்து அப்பணத்தைத் தேற்றிவிடலாம் என்று முடிவு செய்தவன், அடுத்த தெருவில் இருக்கும் ஒரு செல்வந்தர் வீட்டிற்குச் சென்று, அவரிடம் ஏதாவது வேலை தரும்படி கேட்டான்.

வயதுதான் 16 ஆனதே தவிர ஆள் தோற்றத்தில் வாட்ட சாட்டமாக இருபது வயது இளைஞன் போல இருப்பான்.

இவனை ஏற இறங்கப் பார்த்தவர், கார் ஒட்டத் தெரியுமா? என்று கேட்டார். அவர் வீட்டில் இரண்டு கார்கள் இருந்தன.

“தெரியாது” என்று சொன்னவன். கார்களைக் கழுவி சுத்தம் செய்து தருகிறேன். கூலியாக ஏதாவது கொடுங்கள் என்றான். பரிதாபப்பட்ட அவர் அந்த வேலையைச் செய்யும்படி பணித்து, அதற்கு வேண்டிய துணி, வாளி, ஆகியவற்றைக் கொடுத்ததோடு, தண்ணீர் பிடிக்கும் இடத்தையும் காட்டினார்.

ஒரு மணி நேரத்தில் அவற்றைச் செய்து முடித்தான். அவரும் அதற்குச் சன்மானமாக இரண்டு அணாக்களைக் கொடுத்தார்.

அதை வாங்கிக் கொண்டு கிளம்பியவன், கல்லுக்கட்டியில் இருந்த பெரிய மளிகைக் கடைக்குச் சென்று அதே போல ஏதாவது கூலி வேலை கொடுங்கள் என்றான். இவன் டிப்டாப்பாக இருப்பதைப் பார்த்துவிட்டு சந்தேகப் பட்ட கடைக்காரர்,” ஏம்ப்பா மூடை தூக்குவாயா? வெளியே வாகனத்தில் இருக்கும் பருப்பு மூட்டைகளை
உள்ளே கொண்டு வந்து அடுக்க வேண்டும். செய்வாயா?” என்று கேட்டார்.

அதெல்லாம் செய்வேன் என்று சொன்னவன், அடுத்த ஒரு மணி நேரத்தில் அந்த வேலையைச் செய்து முடித்தான். கொஞ்சம் சிரமாமகத்தான் இருந்தது. ஆனால் மனதில் நுழைந்த வீம்பு காரணமாக அதைச் செய்து முடித்தான். மொத்தம் 20 மூட்டைகள். மூட்டைக்குக் காலணா வீதம் கடைக்காரன் 4 அணாக்களைக் கொடுத்தான்.

இப்படியாகத் தொடர்ந்து வேலை பார்த்ததில் மாலை 4 மணிக்குள் 15 அணாக்கள் சம்பாதித்துவிட்டான். உடல் களைத்து விட்டது. ஆனாலும் மன உறுதி காரணமாகத் தாக்குப் பிடித்து நின்றான். மதியம் சாப்பாட்டிற்காக செலவழித்த ஒரணா போக மீதி பதினான் கணாக்கள் பைக்குள் இருந்தன.

இன்னும் இரண்டணாக்கள் வேண்டுமே?

பேருந்து நிலையத்திற்குச் சென்றான். அங்கே அப்போது வந்திறங்கிய பெரியவரிடம் இருந்த பெட்டி படுக்கை மூட்டை முடிச்சுக்களைப் பார்த்துவிட்டு, அய்யா இவற்றை நான் தலைச்சுமையாகக் கொண்டு வந்து உங்கள் வீட்டில் இறக்கி வைக்கிறேன்  என்றான். அவரும் பேரம் பேசியவர் கடையில் சம்மதித்து முத்துப் பட்டணத்தில் உள்ள தன்னுடைய வீடுவரை அவனைத் தூக்கிவர விட்டவர். கடைசியில் ஒரு அணாவைக் கொடுத்து அவனை அனுப்பி வைத்தார். திரும்பவும் பேருந்து நிலையம். மீண்டும் இது போல ஒரு தலைச் சுமை. ஒரணாக் கூலி.

அப்பாடா என்றிருந்தது அவனுக்கு. ஒரு ரூபாய் சேர்ந்து விட்டது!

வீட்டிற்குத் திரும்பும் வழியில் கொப்புடையம்மன் கோவில் வாசலில் இருந்த கடையில், சில்லறைகளைக் கொடுத்து விட்டு ஒற்றை ரூபாய்க் காசாக அதை மாற்றி வைத்துக் கொண்டு, பாதி ஓட்டமும் பாதி நடையுமாக மாலை ஆறரை மணிக்கு வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.

வந்தவுடன், வீட்டில் முகப்பில் அமர்ந்திருந்த தன் தந்தையாரிடம், கையை நீட்டி காசைக் காட்டினான்.

அவனை ஏற இறங்கப் பார்த்த அவன் தந்தையார், சொன்னார்: ”இந்தக்  காசைக் கொண்டு போய் நம் வீட்டுக் கிணற்றில் வீசி விட்டு வா!”

அவனுக்குக் கடுப்பாகி விட்டது. அத்துடன் கோபமும் தலைக்கு ஏற, காட்டுக் கூச்சலாய் கத்த ஆரம்பித்துவிட்டான்:

”என்ன அப்பச்சி? உங்களுக்குப் புத்தி பேதலித்து விட்டதா? எத்தனை இடங்களில் கூலி வேலை செய்து இந்தக் காசை சம்பாதித்தேன்  தெரியுமா? நான் பட்ட கஷ்டங்கள் உங்களுக்குத் தெரியுமா? இதைக்  கொண்டு போய் கிணற்றில் வீசச் சொல்கிறீர்களே?”

”இன்று காலையில் நான் கொடுத்த காசை மட்டும் சத்தமில்லாமல்  வீசி விட்டு வந்தாயே? இப்போது எதற்கு இத்தனை சத்தம்?”

அவனுக்கு செவிட்டில் அறைந்ததைப் போன்று இருந்தது. உடம்பு முழுவதும் மின்சாரம் பாய்ந்ததைப் போன்ற உணர்வு ஏற்பட்டது. மெளனமாக நின்றான்.

அவனுடைய தந்தை மெல்லிய குரலில்  அவனுக்குப் புரியும்படி சொன்னார்: “யாருக்கும் காசு சும்மா வராது. கஷ்டப்பட்டால்தான்  வரும். நான் காலையில் உன்னிடம் கொடுத்த பணமும், தினமும்  உன்னிடம் கொடுக்கும் பணமும் நான் கஷ்டப்பட்டு சம்பாதிப்பதுதான். வேலையில் நஷ்டம் வராது. ஆனால் தொழிலில், வியாபாரத்தில் நஷ்டமும் வரும் தெரியுமா? பல சமயங்களில் கடனாகக் கொடுத்த சரக்கிற்குப் பணம் வராது. அதை வராத கணக்கில், நஷ்டக் கணக்கில் தான் எழுத வேண்டியதிருக்கும் தெரியுமா? நான் ஒன்றும் உட்கார்ந்து கொண்டு, காலை ஆட்டிக்கொண்டு சம்பாதிக்கவில்லை. ஓடியாடி கஷ்டப்பட்டுத்தான் சம்பாதிக்கின்றேன். அதை முதலில் நீ புரிந்து 
கொள்!”

தந்தை சொன்ன ஒவ்வொரு சொல்லும் அவனைச் சம்மட்டியால் அடிப்பதைப் போன்று இருந்தது. எல்லாம் பிடிபட ஆரம்பித்தது.

“நாளை முதல் நானும் உங்களுடன் நம் கடைக்கு வருகிறேன். எனக்கு ஒரு வேலை கொடுங்கள். என்ன வேலை வேண்டுமென்றாலும் கொடுங்கள்!”என்று அவன் சொல்லச் சொல்ல அவனுடைய தந்தை பிரமிப்பிற்கு ஆளானார். தன்னுடைய ஒரு நாள் சோதனை ஓட்டம் அவனுக்குள் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது குறித்து சந்தோஷத்திற்கும் ஆளானார்.

அவனுக்குக் காசின் அருமை ஒரே நாளில் தெரிந்ததைக் குறித்து  மிகவும் சந்தோஷத்திற்கு ஆளானார். அனுபவம்தான் பெரிய வாத்தியார் என்பதையும் அதுதான் எந்த மனிதனையும் மாற்றக் கூடியது என்பதையும் தன் மகன் மூலம் அவர் உணர்ந்து கொண்டார்.

-----------------------------------------------------------------------------
எங்கள் அப்பச்சி சொன்ன கதைகள் வரிசையில் இது ஒன்பதாவது கதை. கதையின் கரு மட்டும் அவருடையது. அதை விரிவு படுத்தி எனது
நடையில் எழுதியுள்ளேன். அத்துடன் இந்தச் சிறுகதை சென்ற மாதம்
மாத இதழ் ஒன்றில் வெளியாகி அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றதாகும்.
உங்களுக்கு அறியத் தருவதற்காக அதை இன்று வலையில் ஏற்றி உள்ளேன்.

அன்புடன்,
வாத்தியார் (சுப்பையா வீரப்பன்)


-----------------------------------------------------------------------------
எனக்கு பிடித்த இணையதள எழுத்தாளர்களில் ஒருவர். கருத்து தெரிவிக்கும் பொழுது எழுத்தாளரின் மின்னஞ்சல் முகவரியையும் இணைத்தால் அவருக்கும் பயனளிக்கும்.

*******அனைவரும் உங்களுக்குப் பிடித்த கதைகளையும், கதைகள் பற்றிய கருத்துகளையும் இங்கு பகிர்ந்து கொள்ளலாம்.*******


Oru Arizonan

unread,
Oct 8, 2014, 11:32:19 PM10/8/14
to mint...@googlegroups.com
அருமையான   கதை.காரைக்குடியில்   நகரத்தார் ஒருவரால், எனக்கும் அவரது மகனுக்கும் கூறப்பட்டது.  காரணம், அவன் திரைப்படம் பார்க்க நாலரை அண்ணாவுக்குப் பதிலாக எட்டரை அணா கேட்டதுதான்.  பாத்திரங்கள் பெயர்கள்  வேறாகவும்,கதை மிகவும் சுர்க்கமாகவும் இருந்தது.

கடைசியில் அவர் மகனுக்கு நாலரை அண்ணாதான் கொடுத்தார்.  நாங்கள் இருவரும் கடலை மிட்டாய் வாங்கித் தின்ன ஆளுக்குக்  காலணா என்று கணக்குப் போட்டு என்னிடம் அரையணாவைக் கொடுத்து அனுப்பினார்.

\ஒரு அறிசொணன் 


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

வேந்தன் அரசு

unread,
Oct 9, 2014, 7:05:19 AM10/9/14
to vallamai, மின்தமிழ், classr...@gmail.com
நல்ல கருத்துள்ள கதை.

8 அக்டோபர், 2014 10:44 பிற்பகல் அன்று, தேமொழி <jsthe...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

தேமொழி

unread,
Nov 8, 2014, 3:19:42 AM11/8/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
இங்கிவளை யான் பெறவே!
_________________________________________________________________________________

இக்கதையில் ஒரு பெண்ணை பெற்றோர், கணவன் என குடும்பமே ஏமாற்றுவதை சித்தரிக்கிறார் கதாசிரியர்.

அவர் பெண் எழுத்தாளராக இருக்கவே வாய்ப்பிருக்கிறது என நினைக்கிறேன். ............

..... தேமொழி 

Mohanarangan V Srirangam

unread,
Nov 8, 2014, 3:22:19 AM11/8/14
to vallamai, min tamil
யார் அந்தக் கதாசிரியர்? ? அல்லது ரியை?

--

தேமொழி

unread,
Nov 8, 2014, 3:27:08 AM11/8/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
எழுத்து நடையை வைத்து கண்டுபிடிக்கலாமே...

பரிசு பெறும் எழுத்தாளர் வரிசையில் இருப்பவரே.

ஒரு தீபாவளி இதழில் வெளிவந்தது. 


..... தேமொழி



On Saturday, November 8, 2014 12:22:19 AM UTC-8, Mohanarangan V Srirangam wrote:
யார் அந்தக் கதாசிரியர்? ? அல்லது ரியை?
2014-11-08 13:49 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
இங்கிவளை யான் பெறவே!
_________________________________________________________________________________

இக்கதையில் ஒரு பெண்ணை பெற்றோர், கணவன் என குடும்பமே ஏமாற்றுவதை சித்தரிக்கிறார் கதாசிரியர்.

அவர் பெண் எழுத்தாளராக இருக்கவே வாய்ப்பிருக்கிறது என நினைக்கிறேன். ............

..... தேமொழி 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

Geetha Sambasivam

unread,
Nov 8, 2014, 4:30:35 AM11/8/14
to மின்தமிழ்
shailaja????  கதையை ஏற்கெனவே படித்திருக்கிறேன்.

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Nov 8, 2014, 4:35:39 AM11/8/14
to மின்தமிழ்

நானும் நினைச்சேன் ஷைலாக்காதான்னு!,

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன் .

www.aalosanai.blogspot.com
www.kuviyalgal.blogspot.com

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Nov 9, 2014, 12:35:23 AM11/9/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
On Saturday, November 8, 2014 1:35:39 AM UTC-8, tsparu2001 wrote:

நானும் நினைச்சேன் ஷைலாக்காதான்னு!,

அன்புடன் 
பார்வதி இராமச்சந்திரன் .



இந்தக் கதையை எழுதியவர், கீதாவும் பார்வதியும்  எண்ணியது போல ஷைலஜா தான் ...

மைதிலி நாராயணன் என்ற பெயரில் எழுதி இருக்கிறார்.

<<< கதை PDF கோப்பாக இணைப்பில் ....>>> 

..... தேமொழி
short story - ingivaLai yaan peRavae.pdf

தேமொழி

unread,
Jan 21, 2015, 6:38:53 PM1/21/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
ஏணி

-- நிர்மலா ராகவன்.


டீச்சர்! ஒங்களைப்போல எப்படி நடக்கறது?"

"என்னது?"

முன்வரிசையிலிருந்த ஒரு பெண் விளக்கினாள்: "எங்களை யாருமே மதிக்கறதில்லே. டீச்சருங்களும் சரி, மத்த மாணவிங்களும் சரி". குரலில் ஆழ்ந்த வருத்தத்தை மீறி கோபம் வெளிப்பட்டது. தோல் நிறத்தால் மட்டும் தாங்கள் எவ்விதம் மட்டமாகிவிட முடியும் என்று விளங்காத குழப்பமும்கூட கலந்து வந்தது.

இன்னொரு பெண் அவளுடன் சேர்ந்துகொண்டாள்:  "டீச்சர் நடக்கறபோது, தலையை நிமிர்த்தி நடக்கறீங்க! எல்லாரும் ஒங்ககிட்ட மரியாதையா இருக்காங்க. அந்த மாதிரி நாங்களும் ஆகமுடியுமா?"

கடந்த வாரம் தலைமை ஆசிரியை மிஸஸ்.கூ புவனாவை அழைத்து, 'நம்ப பள்ளியில் ஒரு தமிழ்ச்சங்கம் ஆரம்பிக்கணும்னு எல்லா மாணவிகளும் பல தடவை என்கிட்ட வந்து கேட்டுட்டாங்க. அதில நீங்கதான் பொறுப்பு ஏத்துக்கணும்னும் சொல்லிட்டாங்க. இருபது, முப்பது பேருக்காக ஒரு சங்கம் எதுக்குன்னு நான் எவ்வளவோ சொல்லிப்பாத்தும் கேக்கலே!' என்று கூறியபோது, புவனாவிற்கு எதுவும் புரியவில்லை. 

இப்போது சங்கத்தின் முதல் கூட்டத்திற்கு வந்தபோதுதான் அப்படி ஒரு வினா, மாணவிகளிடமிருந்து. 

அவளைப்போல நடக்க வேண்டுமாமே! 

தற்பெருமையுடன், எதிரிலிருந்தவர்களைப் பார்த்துப் பரிதாபமும் எழுந்தது. ஆரம்பப் பள்ளிகளில் மலாய்மொழி படித்திருந்த இவர்களுக்குத் தேவையானது தமிழ்மொழிப் புலமை இல்லை. ஒரு மனிதர் பிறருக்கு அளிக்க வேண்டிய அடிப்படை மரியாதை. எதனால் இவர்களுக்கு அது மறுக்கப்படுகிறது? வசதியுள்ள குடும்பத்தில் பிறந்து, தனியார் பள்ளிகளில் கல்வி பயின்றிருந்த அவளுக்கு அவர்களுடைய பிரச்னை புரியத்தான் இல்லை.

"ஆறாம் வகுப்புவரை இந்தமாதிரி எதுவும் கிடையாதா?" என்று கேட்டாள். 

வருத்தம் தோய்ந்த முகத்துடன் அங்கிருந்த எல்லா மாணவிகளும் பக்கவாட்டில் தலையை ஆட்டினர். உதடுகள் பிதுங்கின, சுய பச்சாதாபத்தில்.

யோசனையுடன், "எத்தனை பேர் தமிழ்ப் பள்ளிக்கூடத்திலிருந்து வந்திருக்கிறீர்கள்?" என்று கேட்டாள்.

ஒரு கைகூட மேலெழவில்லை.

ஆச்சரியம் தாங்காது, "ஒருத்தர்கூட இல்லையா?" என்று அவள் தனக்குத்தானே கேட்டுக்கொள்வதுபோல் மீண்டும் வினவ, மெள்ள மெள்ள கரங்கள் உயரத் தொடங்கின.

புவனாவிற்கு மெல்லப் புரிய ஆரம்பித்தது. தமிழ்ப் பள்ளிகளில் படித்திருப்பதே அவமானகரமான செயல் என்ற நினைப்பில் இவர்கள் தம்மைத் தாமே தாழ்த்திக் கொள்கிறார்கள்!

"கைதூக்க இவ்வளவு நேரமா? இல்ல, எங்கே படிச்சோம்னு மறந்துபோச்சா?" என்று வேடிக்கையாகக் கேட்க, அவர்களின் முகத்தில் இருந்த இறுக்கம் கணிசமாகக் குறைந்தது. "தமிழ் நம்ப தாய்மொழி. அதில பேசவும், படிக்கவும் எதுக்கு வெட்கப்படணும்? நம்ப மொழி நமக்கே தெரியாவிட்டால்தான் கேவலம்!" என்று அடித்துச் சொன்னாள் ஆசிரியை. தொடர்ந்து, "இந்த இங்கிலீஷ் இப்போதான் நானூறு, ஐந்நூறு வருஷமா இருக்கு. நம்ப தமிழோட வயசு என்ன தெரியுமா?" என்று ஒரு சிறு புதிர் போட்டுவிட்டு, தானே விடையும் அளித்தாள்: "இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னால எழுதின திருக்குறளே தமிழிலதானே இருக்கு! இப்ப அமெரிக்கா, ஐரோப்பாவிலகூட அதோட மொழிபெயர்ப்பை விரும்பிப் படிக்கறாங்களாம்!"

முதலில் கைதூக்கப் பயந்தவர்கள் இப்போது நிமிர்ந்து உட்கார்ந்தார்கள். தமிழில் பேச மட்டுமே முடிந்த சிலர், அதிலும், 'தமிழ் பேசத் தெரியுமா?' என்ற கேட்கக்கூடாத கேள்வியை யாராவது அசந்தர்ப்பமாகக் கேட்டுவிட்டால், 'கொஞ்சம் கொஞ்சம்!' என்று சாதாரணமாக அலட்டிக் கொள்பவர்கள் தலையை லேசாகக் குனிந்து கொண்டார்கள். தம்மை இக்கட்டில் மாட்டிவிட்ட ஆசிரியைமீது கோபம்கூட வந்தது.

"நம்ப சம்மதம் இல்லாம யாரும் நம்மை தாழ்த்திவிட முடியாது. புரிஞ்சுக்குங்க!"

"டீச்சர்! நாங்க எப்பவாவது பாவாடை கட்டினா, 'தங்கச்சி பாவாடை!'ன்னு மத்த பிள்ளைங்க கேலி செய்யறாங்க!" அழாதகுறையாக கமலவேணி கூறினாள். ஒல்லியான உருவம், கண்களில் எப்போதும் கலக்கம், நல்ல கறுப்பு என்று அவளை ஒரே பார்வையில் எடைபோட்டாள் ஆசிரியை.

"இதில கேலி செய்ய என்ன இருக்கு? பாவாடை-சட்டை, புடவை இதெல்லாம் நம்ப கலாசார ஆடை. மத்தவங்க அவங்க முறைப்படி ஏதேதோ உடுத்திக்கலியா?" புவனா  வேலைக்கு வரும்போது புடவையைத் தவிர வேறு எதுவும் அணிந்ததில்லை.

எல்லோர் முகத்திலும் புன்னகை. ஒருத்தரை ஒருத்தர் பார்த்து ஏதோ சமிக்ஞை செய்துகொண்டதைக் கவனிக்கத் தவறவில்லை புவனா.

பிறர் ஏன் அப்படி நடந்துகொள்கிறார்கள் என்று மனோதத்துவ ரீதியாக விளக்கத் தொடங்கினாள்: "மத்தவங்க வித்தியாசமா இருந்தா, சில பேருக்கு அதில ஒரு பயம் -- எங்கே நாம்ப செய்யறதிலே குத்தம் கண்டுபிடிச்சுடுவாங்களோன்னு. நாம்ப அவங்களைச் சொல்றோமோ இல்லியோ, அவங்க முந்திக்கறாங்க! அவ்வளவுதான்". 

"பொறாமை, இல்ல டீச்சர்?" முதல் வரிசையிலிருந்த பெண் கேட்டாள். 

"உன் பேர் என்ன?"

"உமா தேவி, டீச்சர்!" டீச்சரின் பார்வை தன்மீது பட்டுவிட்ட சந்தோஷத்துடன் பதிலளித்தாள் அந்த மாணவி. 'கொஞ்சம் குண்டு, நீண்ட இரட்டைப் பின்னல், குறுகுறுப்பான கண்கள்,' என்று குறித்துக்கொண்டாள் புவனா. 

"பொறாமை, அவநம்பிக்கை, ஏதோ ஒண்ணு. அவங்க பேச்சை எல்லாம் கேட்டு மனசு தளர்ந்தா, நமக்குத்தான் நஷ்டம்!" 

இப்போது எல்லோருமே நிமிர்ந்தனர். புவனா "அ ஆ இ ஈ," என்று ஆரம்பித்தாள்.

அவர்கள் அதைத் திரும்பச் சொன்னபோது, இனிய கானமாக ஒலித்தது.



"டீச்சர்!"

புவனா திரும்பினாள். எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருந்ததாலோ, என்னவோ,  தமிழ்ப் பெண்கள் பெரும்பான்மையும் வகுப்பில் பேசாமடந்தைகளாக இருந்ததை அவளறிவாள். ஏற்கெனவே இளக்காரத்துக்கு ஆளான தாம் ஏதாவது சொல்லப்போக, அது தவறாக இருந்துவைத்து, பிறரது கணிப்பில்  மேலும் தாழ்ந்துவிடுவோமோ என்ற பயமே அவர்கள் நாவைக் கட்டிப் போட்டிருந்தது என்பதும் அவளுக்குத் தெரிந்துதான் இருந்தது. இப்போது வலியவந்து ஒரு பெண் பேசுகிறாள் என்றால், அதுவே ஒரு நல்ல அறிகுறி என்று அவளுக்குப் பட்டது.

"என்ன துர்கா?"

அந்தப் பெண் ஏகமனதாக தமிழ்ச் சங்கத் தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்ததில், புவனாவிற்கு அவளுடைய பெயர் தெரிந்திருந்தது. 

"நான் எங்க போனாலும், நம்ப சங்கத்தில இருக்கறவங்க எல்லாரும் 'அக்கா, அக்கா'ன்னு கூப்பிட்டு, சும்மா ஏதாவது கேட்டுக்கிட்டே இருக்காங்க, டீச்சர். என் கிளாசில இருக்கறவங்க கேலி செய்யறாங்க!"

"நாளைக்கு நான் அவங்ககிட்ட சொல்றேன்," என்று புவனா உறுதி கொடுத்ததும்தான் துர்கா நிம்மதியுடன் அவ்விடத்தைவிட்டு அகன்றாள்.

புவனாவுக்குப் பரிதாபம் ஏற்பட்டது. ஆனால் துர்காவிடம் அல்ல. அவளைத் தொந்தரவு செய்வதாக அவள் கருதிய பிறர், 'ஒரு வழியாகத் தமக்கும் ஒரு ஊன்றுகோல் கிடைத்ததே!' என்ற பூரிப்படைந்திருந்தது அவளுக்குப் புரியும் வயதாகவில்லை, பாவம்! 

அவர்களது வேண்டுகோளுக்கிணங்க ஆரம்பிக்கப்பட்டிருந்த தமிழ்ச் சங்கத்தில் நாலைந்து தடவைகள் தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ள முயன்றுவிட்டு, அதன்பின், நோட்டுப் புத்தகத்தை வெளியில் எடுக்கத் தயக்கம் காட்டி, 'கிளாசில நாள் முழுவதும் படிக்கிறோமே, டீச்சர்!' என்று சாக்குப்போக்கு சொன்னார்கள் அம்மாணவிகள்.

புவனாவுக்குக் கோபம் வரவில்லை. தன்னிடமிருந்து அவர்கள் எதிர்பார்த்ததெல்லாம் தாம் எப்படி பிறர் மதிக்க வாழவேண்டும் என்ற அடிப்படைக் கல்விதான். தமிழ் மொழியைக் கற்பதால் அது எப்படி இயலும் என்ற நிராசையே அவர்களிடம் மிகுந்திருந்தது.

அதிகம் வற்புறுத்தாமல், "ஒங்களோட பிரச்னை என்னன்னு ஒவ்வொருத்தரா எழுந்து சொல்லுங்க!" என்று அடுத்த கட்டத்தில் இறங்கினாள். "மொதல்லே ஒங்க பேரு.."

"என் பேரு கலைவாணி. நான் ஒரு நாள் பள்ளிக்கூடத்துக்கு என்னோட கொலுசை எடுத்திட்டு வந்தேன்..," என்று ஒரு பெண் ஆரம்பிக்கவும், கோபமாக இடைமறித்தாள் புவனா. "சம்பந்தமில்லாத சாமான்களை எடுத்திட்டு வரக்கூடாதுன்னு பள்ளி விதிமுறை. தெரியாது?"

"அன்னிக்கு டான்ஸ் கிளாஸ் இருந்திச்சு, டீச்சர். ஆனா, நான் சொல்லச் சொல்ல கேக்காம,  வழக்கம்போல என் பையைச் சோதனை செய்யறப்போ, அதைப் பாத்துட்டு, எடுத்திட்டுப் போயிட்டாங்க ப்ரிஃபெக்ட்ஸ்!"

"என் பொட்டு சிவப்புக் கலரில இருந்ததால, அதை அழிக்கச் சொன்னாங்க, டீச்சர்!" உமா தேவி. "கறுப்புப் பொட்டுதான் வைக்கணுமாம். கல்யாணமானவங்கதான் சிவப்புப் பொட்டு வைக்கலாமா, டீச்சர்?"

'வாயாடி!' என்று தலையை ஆட்டிக்கொண்ட புவனா எதுவும் பதிலளிக்கவில்லை. 

சிறு வயதில் ஏற்பட்ட விபத்தால் தான் பிள்ளை பெற முடியாது என்பதால் கல்யாணமே வேண்டாம் என்றிருக்கிறோம். ஆனால், ஒவ்வொரு நாளும் புடவை நிறத்திற்கேற்ப, சிவப்பு மட்டுமின்றி, பச்சை, நீலம் என்று எல்லா வண்ணங்களிலும் பொட்டு வைத்துக்கொள்கிறோம். இதற்கெல்லாம் விதிமுறைகளா வகுப்பார்கள்? அவரவர் விருப்பம் என்று விட்டுவிட வேண்டியதுதான். எல்லாவற்றுக்கும் கண்டித்தால், மாணவ மாணவியர்க்கு பள்ளிக்கூடமே வெறுத்து விடாதா!

"என் நெத்தி பூராவும் விபூதி இட்டிருக்கேன்னு அழிக்கச் சொன்னாங்க, டீச்சர்! தினமும் காலையில குளிச்சதும், விபூதி பூசணும்னு அப்பா சொல்வாரு! சின்ன வயசிலேருந்து பழக்கம்!" விக்னேஸ்வரி.

புவனா மென்மையாகப் புன்னகைத்தாள். அவளே மீண்டும் சிறுபெண்ணாகி, தன் தாயுடன் பேசுவது போலிருந்தது. நடந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டிருந்தும், அந்தச் சம்பவத்தை நினைக்கும்போது இன்றும் லேசாக வலித்தது.

அன்று பொங்கல் பண்டிகை என்று அவள் அதிசயமாக வளையலும், பொட்டும் அணிந்து பள்ளிக்குப் போக, எதுவும் கேளாது, அவள் கன்னத்தில் அறைந்தாள் தலைமை ஆசிரியை. மத்தியானம் அழுதபடியே அவள் வந்ததைப் பார்த்த தாய்தான் என்னமாக அதிர்ந்து போனாள்! அந்த விவகாரத்தை அத்துடன் விடாது, கல்வி இலாகா, தமிழ், ஆங்கில தினசரிகள் எல்லாவற்றுக்கும் தகவல் கொடுத்தாளே! தலைமை ஆசிரியை கண்டிக்கப்பட்டு, உடனே வேறு பள்ளிக்கூடத்துக்கு மாற்றப்பட்டாள்.

விரைவிலேயே, "இன்னிக்கு வளை போட்டுக்க, புவனா!" பள்ளிக்குப் போகுமுன் அம்மா சிவப்பு நிறக் கண்ணாடி வளையல்கள் நான்கை நீட்ட, பெண் பயந்தாள். திரும்பவும் அடி வாங்கவா!

"போட்டுக்க, சொல்றேன்," அம்மா மிரட்டினாள். 

அம்மாவின் எதிரில் இப்போது அணிந்து கொண்டுவிட்டு, பள்ளிக்கூடத்தில் கழற்றிவிடலாமா என்று புவனாவின் யோசனை போயிற்று. அவளுடைய மனத்தைப் படித்தவளாக, "யாராவது கழற்றச் சொன்னா, 'இந்துப் பெண்கள் வளை போட்டுக்கணும்'னு எங்கம்மா சொன்னாங்கன்னு சொல்லு!" என்று சொல்லியும் கொடுத்தாள் தாய்.

அம்மா சொன்னபடிதான் நடந்தது. முன்பே பிரச்னையை எதிர்பார்த்திருந்ததால், அதைச் சமாளிக்கத் தெரிந்தது. "எங்கம்மா சொன்னாங்க...," என்று திரும்பத் திரும்ப அதையே சொன்னாள், ஒவ்வொரு முறையும் எதிராளியின் வலிமை குறைவது புரிய. அவளுக்கே வியப்பு உண்டாகும் விதமாக, புதிய தலைமை ஆசிரியை அந்த இடத்துக்கு வந்து, "என்ன தகறாறு இங்கே?" என்று விசாரித்து, இரு தரப்பினரது வாதத்தையும் கேட்டு, இறுகிய முகத்துடன், "புவனா வளை போட்டுக்கட்டும், விடு," என்று தகறாறு செய்த  மாணவியிடம் கூறினாள்.

அம்மா ஆவலுடன் வாசலிலேயே காத்திருந்தாள். "என்ன ஆச்சு?"

சிரித்தபடி தனது வெற்றியை விளக்கினாள் மகள்.

மறுநாள், "வளையைக் கழட்டி வெச்சுடு!" என்று தாய் சாதாரணமாகக் கூற, "பின்னே எதுக்கும்மா நேத்து அவ்வளவு சண்டை போடச் சொன்னீங்க?" என்று அழமாட்டாக் குறையாகக் கேட்டாள் மகள்.

"நம்ப பக்கம் நியாயம் இருந்தா, நாம்ப எதுக்கும் பயப்பட வேண்டியதில்ல. அதுக்காகப் போராடணும். அது ஒனக்குப் புரியணும்னுதான்!"

தாய் கூறியது அப்போது முழுமையாகப் புரியவில்லை எனினும், புவனா தைரியமாக உணர்ந்தாள். தான் தவறு செய்யாதிருக்கும்வரை பிறருக்கு எதற்காக அஞ்சுவது என்ற அறிவு வந்தது. தலை நிமிர்ந்து நடந்தாள். அஞ்சி, அவமானம் செய்யப் பார்த்தவர்களை அலட்சியம் செய்தாள். தனிமையிலேயே வாழ்வைக் கழிக்க நேர்ந்தவளுக்கு அந்த படிப்பினை மிகவும் உபயோகமாக இருந்தது.

இப்போது, தாயிடம் கற்ற பாடங்களை பிறருக்குப் போதிக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது!

"நான் முதல் நாளே சொன்னமாதிரி, நம்பளை மத்தவங்ககிட்டேயிருந்து ரொம்ப வித்தியாசப் படுத்திக்கிட்டா, அவங்களுக்குப் பயம் வந்துடும். நம்பளை மிரட்டுவாங்க. கூடியவரைக்கும், பள்ளி விதிமுறைகளை மீறாம நடந்துக்குங்க. கறுப்புப் பொட்டு வைக்கலாம். விபூதியும் ஓகே. நான் பெரிய டீச்சர்கிட்ட கேட்டுட்டேன். ஆனா, ஒளவையார்மாதிரி வேண்டாமே!"

இந்த ஒளவையார் ஜோக்கிற்கு எல்லாப் பெண்களும் சிரித்தார்கள்.

ஒரு மெல்லிய குரல் பின்னாலிருந்து தயங்கித் தயங்கி வந்தது: "நாங்க மஞ்சள் பூசிக்கிட்டு, பயங்கரமா இருக்கோமாம்". அந்தத் தமிழ்ச் சங்கத்திற்கு 'குறைகளை வெளிப்படுத்தும் இடம்' என்று பெயர் வைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். "என் பேர் காமாட்சி, டீச்சர்!" என்று அந்தப் பெண் சேர்த்துக் கொண்டாள்.

"நமக்குத் தெரியும், மஞ்சள் பூசினா, முகத்தில முடி வளராது, பரு வராதுன்னு. இதைப் பாக்கறவங்ககிட்டே எல்லாம் சொல்லிட்டுத் திரியமுடியுமா? சாயங்காலம் முகத்தைக் கழுவறபோது மஞ்சள் பூசிக்கலாமே! காலையில ஸ்கூலுக்கு வரப்போ எதுக்கு?" என்றாள் புவனா, நைச்சியமாக.   

இன்னொரு குறை வெளிவந்தது: "கிளாசில மத்த பொண்ணுங்கல்லாம் எங்களைப்  பக்கத்தில ஒக்கார விடமாட்டேங்கறாங்க, டீச்சர்!"

ஆத்திரம் எழுந்தது புவனா டீச்சருக்கு. "ஏனாம்?"

"எங்க தலையில பேன் இருக்குமாம். எங்க முடி நாறுதாம்!"

புவனா பெருமூச்சு விட்டாள். "நானே ஒங்ககிட்ட இதைப்பத்தி சொல்லணும்னு இருந்தேன். தலைக்கு கடலை எண்ணை பூசினா, பழக்கம் இல்லாதவங்களுக்கு நாத்தமாத் தோணும். அது வேணாம், வேற ஏதாவது வாசனைத் தைலம் வெச்சுக்கலாம்னு டீச்சர் சொன்னாங்கன்னு அம்மாகிட்ட சொல்லுங்க, என்ன?" என்றாள் பக்குவமாக. மாணவிகளுக்கு மட்டுமின்றி, அவர்களது தாய்மார்களுக்கும் தான் வழிகாட்டியாக விளங்குகிறோம் என்று அவள் புரிந்து வைத்திருந்தாள். "பேன் இருந்தா, அதுக்கு மருந்து இருக்கு. இல்லே, தலைகாணிமேல துளசியைப் போட்டுக்கிட்டு படுக்கலாம். நாம்ப சுத்தமா, புத்திசாலியா இருந்தா, தானே எல்லாரும் கிட்ட வரமாட்டாங்களா!"

அவர்களது இளம் முகத்தில் நம்பிக்கை ரேகை.

"வெளிர் நிறத்தில உடை போட்டுக்குங்க. மத்தவங்கமாதிரி ஒங்க நடையுடை பாவனையும் இருந்தா, தானே அவங்க ஒங்களை ஃப்ரெண்டா ஏத்துப்பாங்க!"



அடுத்த வாரம், டீச்சருக்கு ஆச்சரியம் காத்திருந்தது. நான்கு பெண்கள் முடியைக் கட்டையாக வெட்டிக் கொண்டிருந்தனர்! 

"என்ன, புது ஃபேஷன்!" என்று புன்சிரிப்புடன் புவனா கேட்க, "ரொம்ப வேர்த்துக் கொட்டுது!" என்று இல்லாத வியர்வையைத் துடைப்பதுபோல் பாவனை காட்டினாள் உமா தேவி. தான் சிவப்புப் பொட்டு இட்டுக் கொண்டதால் பிரச்னை எழுந்தது என்ற பெண். 

"அம்மா முந்தியெல்லாம் முடி வெட்டிக்கக் கூடாதும்பாங்க. இப்ப, டீச்சரே சொன்னாங்கம்மா, 'மத்தவங்கமாதிரி நாம்பளும் இருந்தாத்தான் அவங்க நம்பளை ஃப்ரெண்டா ஏத்துப்பாங்க'ன்னு அப்படின்னு சொன்னதும், 'சரி'ன்னுட்டாங்க!" சங்கத் தலைவி துர்கா உண்மையைக் கூறினாள்.

பிறருடன் இணைந்து  வாழ, நமது தனித்தன்மையை இழக்க வேண்டியதன் அவசியம் என்ன? துர்கா ஆத்திரப்பட்டாள். ஆனால் எதுவும் பேசவில்லை.

அடுத்து அவர்கள் ஏற்பாடு செய்யவிருந்த கலைவிழாவில் பிற இன மாணவிகளும் பங்கேற்று, மிக ஒற்றுமையாக எல்லாரும் இயங்குவதைக் கண்டு, தான் சொல்லிக்கொடுத்தது வீண்போகவில்லை என்று பூரிப்படைந்தாள் புவனா. 

"இந்தப் பாட்டுக்கா ஆடப் போறீங்க?" ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்த ஒரு குழுவிடம் அதிருப்தியை வெளிப்படுத்தினாள் புவனா.

சினிமாப் பாட்டு என்றாலும், சற்று விரசம் இல்லாமல் இருக்கக்கூடாதா!

"எங்களுக்கு இதுதான் தெரியும்," துடுக்காகப் பேசினாள் மாலா. "டீச்சர் வேணாம்னா, நான் ஆடலே!"

புவனாவிற்கு ஆழ்ந்த வருத்தம் உண்டாயிற்று. "அதில்லம்மா. ஒங்க டான்ஸ் ஏன் இவ்வளவு ஆபாசமா இருக்குன்னு யாராவது கேட்டா, நான் என்ன பதில் சொல்றது?"

"வாங்கடி!" சினிமா கதாநாயகன் பாணியில் மாலா கையை வீச, அவளைப் பின்தொடர்ந்து போனார்கள் ஐந்து பெண்களும். 

அவர்களையே பார்த்தபடி வாயடைத்துப்போய் நின்றாள் புவனா. தன்னை இவர்களுள் ஒருத்தியாகப் பாவித்துத்தானே இவர்களுக்கு வழிகாட்டுகிறோம்! சிலருக்கு ஏன் தன்மேல் இவ்வளவு காட்டம்? ஒருவேளை, எல்லாரிடமுமே இப்படித்தான் நடந்துகொள்ளத் தெரியுமோ இவர்களுக்கு?

அவள் நீண்ட காலம் குழம்ப வேண்டி இருக்கவில்லை. ஓரிரு வருடங்களில் உத்தியோக மாற்றல் கிடைக்க, புவனாவுக்கும், அந்தப் பள்ளிக்கும் தொடர்பு அற்றுப்போயிற்று.  என்றாவது அந்தத் தமிழ்ப்  பெண்களின் நினைவு வரும். இப்போது எல்லாரும் தன்னைப்போல் படிப்பு முடிந்து, வேலை பார்ப்பார்கள். ஒருவேளை, தன்னைப்போல்  இல்லாது, கல்யாணமாகி வீட்டில் இருக்கிறார்களோ, என்னவோ என்றெல்லாம் அவர்களைச் சுற்றி எண்ணத்தை ஓட்டுவாள். 

சிலர் மரியாதை இல்லாது பேசினார்கள். அது தன் குறையால் அல்ல. அவர்களுடைய தாழ்மை மனப்பான்மையே அப்படி பார்ப்போரிடமெல்லாம் சண்டை போடத் தூண்டுகிறது என்பது புரிந்திருந்ததால், அவர்களிடம் விரோதம் பாராட்டத் தோன்றவில்லை. 

அந்தக் கொலுசுப் பெண் -- அவள் பெயர் என்ன? சாமர்த்தியமான பெண். தினமும் வந்து வந்து, தன்னிடம் ஏதாவது கற்றுப்போவாளே! மிகவும் மரியாதையாக நடந்துகொள்வாள். அவள்  புத்திசாலி,  டீச்சருடைய அபிமானத்திற்கு   ஆளானவள் என்றே மற்ற பெண்களுக்கு அவளை அவ்வளவாகப் பிடிக்காது.

அவளுக்கு விடை அளிப்பதற்கென்றேபோல் நாளிதழில் அந்த புகைப்படம் வெளியாகி இருந்தது. குறிப்பிடத்தக்க அரசியல்வாதியாகி விட்டாளா இவள்! குட்டையும், பரட்டையுமான முடி. பாழ் நெற்றி. பக்கத்திலேயே அவளுடைய தேர்தல் வெற்றியைப் பாராட்டும் வகையில் அவள் வாயில் கேக்கை ஊட்டும் கணவர்.

'எனக்குத் தமிழ் மொழியும், நமது கலாசாரமும் மிகவும் பிடிக்கும்,' என்று பேட்டியில் அவள் சொல்லி இருந்தது புவனா டீச்சருக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. தனது மாணவி! இன்று நாடே பாராட்டும் வண்ணம் பெயரும், புகழுமாக இருக்கிறாள்! 

ஏதோ உந்துதலின்பேரில், உடனே அந்தக் கட்சியை அழைத்தாள், தொலைபேசியில். "நான் உமாவோட டீச்சர். புவனா டீச்சருன்னு சொன்னா, அவளுக்கு.. ம்.. அவங்க புரிஞ்சுப்பாங்க".

"யாரோ புவனாவாம். ஒங்க  டீச்சர்னு சொல்றாங்க! ஒங்ககூடப் பேசணுமாம்மா!"

"இப்ப நேரமில்லன்னு சொல்லு. அப்பாயிண்ட்மெண்ட் இல்லாம நான் யாரையும் பாக்கறது கிடையாதுன்னு சொல்லத் தெரியாதா ஒனக்கு?" என்று உதவியாளனிடம் எரிந்து விழுந்ததும், கூடவே, "யாராவது கொஞ்சம் வசதியா, செல்வாக்கோட  இருந்தா, வந்துடுவாங்களே, சொந்தம் கொண்டாடிக்கிட்டு!" என்று சொன்னதும் தன் காதில் விழவெனவே அவ்வளவு உரக்கச் சொல்லப்பட்டிருக்க வேண்டும் என்று புவனாவிற்கு நன்றாகவே புரிந்தது.

என்றோ எழுந்த வினாவிற்கு அன்று விடை கிடைத்தது. பிறரை மதிக்கத் தெரியாது, தம்மைப்பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பவர்களுக்கு மரியாதை கிட்டுவதில்லை. அதை வன்முறையால், பதவியால் பெறத் துடிக்கிறார்கள்!

நடுங்கும் கரத்தால் ஃபோனைக் கீழே வைத்தாள். மனம் குமுறியது. 'நான் பெறாத குழந்தைகளாக அவர்களைக் கருதி இருக்கலாம். ஆனால், அவர்களைப் பொறுத்தவரை, நான் ஒரு கருவி. அவ்வளவுதான். அதோ, அந்த ஏணிமாதிரி. மேலே ஏற்றிவிட்டதுடன் என் கடமையும் தீர்ந்தது'. 

ஏமாற்றமும், அவமானமும் ஒருங்கே எழுந்து, கண்ணீராக மாறின. இனிமேல் எந்த மாணவ மாணவியரிடமும் பற்று கொள்ளாது, அவர்கள் எக்கேடு கெட்டால் என்னவென்று, புத்தகங்களிலுள்ள பாடங்களை மட்டுமே கற்றுக் கொடுக்க வேண்டும். 

வாசலிலிருந்து ஒலித்த குரல் அவளுடைய சிந்தனையைக் கலைத்தது: "அம்மா! இன்னிக்குப் புல் வெட்டலாங்களா?"

"வெட்டுப்பா," என்று பதில்குரல் கொடுத்த புவனாவிற்கு சட்டென ஞாபகம் வந்தது. வழக்கமாகப் புல் வெட்டும் பெருமாள் போன மாதம்  வந்திருந்தபோது, அவனுடைய நான்கு வயது மகளைப் பாலர் பள்ளிக்கு அனுப்ப தான் பொறுப்பேற்றுக் கொள்ளுவதாகச் சொன்னோமே! 

அவசரமாகத் தனது 'செக்' புத்தகத்தை வெளியே எடுத்து, அந்தக் குழந்தைக்கு ஓராண்டுக்கான சம்பளப் பணத்தைப் பூர்த்தி செய்யும்போதே சொல்லவொணாத திருப்தி எழுந்தது அவளுக்குள். இன்னொரு தமிழ்க் குழந்தையின் நலனுக்கு வழிவகுத்தாயிற்று!

'ஏணிகள் வளைவதில்லை,' என்று ஏதோ தோன்ற, புன்சிரிப்பு எழுந்தது. 

(மலேசிய பாரதிதாசன் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை, 2004)





தேமொழி

unread,
Dec 11, 2015, 10:46:12 PM12/11/15
to மின்தமிழ், vall...@googlegroups.com
நன்றி வல்லமை:  http://www.vallamai.com/?p=33366


நம்மில் ஒருவர்….

  • Friday, March 15, 2013, 5:03

பார்வதி இராமச்சந்திரன்

ஒரு சிறு மளிகைக் கடையின் முன் வைக்கப்பட்டிருந்த வாக்குப் பெட்டி, என் கவனத்தைக் கவர்ந்தது. சில்லறை வியாபாரத்தில் அந்நிய பன்னாட்டு நிறுவனங்கள் நேரடியாக நுழைவதற்கு அனுமதியளிக்கக் கூடாதென்ற கோரிக்கையுடன்,  அதற்கு ஆதரவாக‌ வாக்களிக்க வேண்டி ஒரு பெண்கள் பத்திரிகை வைத்திருந்த வாக்குப் பெட்டி அது.

நம் குடும்பத்தில் ஒருவராக இருப்பவரின் வியாபாரத்தை முடக்குவதா?’ என்பது போன்ற வாசகங்களுடன், வாக்குப் பெட்டிக்கு அருகில் இருந்த பேனர்கள் என் கருத்தைக் கவர்ந்தது.

அருகிலிருந்த என் மகள், சிரித்தவாறு, ‘ஒரு கடை வச்சிருக்கிறவர் எப்படி நம் குடும்பத்தில ஒருத்தர் மாதிரி ஆக முடியும்?, காசு கொடுத்து பொருள் வாங்குறோம், அவ்வளவு தானே?’ என்றாள். அவள் கையை அழுத்தியவாறு சொன்னேன்.

‘உனக்குப் புரியாதும்மா!!!!’

அவள் சிறுமி, ஊர் விட்டு ஊர் மாறும் வேலையுடைய என் கணவருடன், நிரந்தரமாக, ஓரிரண்டு வருடத்திற்கு  மேல் ஒரு ஊரிலும் இருந்ததில்லை. ஆகையால், அவளுக்கு அந்த வாசகத்தின் மகத்துவம் புரியவில்லை என நினைத்துக் கொண்டேன்.

கடையிலேயே ஒரு வாக்குச் சீட்டை வாங்கி, வாக்களிக்கையில், என் மனம்,  கணபதி மாமாவை நினைத்துக் கொண்டது. முகமெல்லாம் சிரிப்பாக, எப்போது பார்த்தாலும் ‘என்னா பாப்பா?’ என்று அன்போடு அரவணைக்கிற, எப்போது கடைப்பக்கம் போனாலும் கை நிறைய ஆரஞ்சு மிட்டாய் தருகிற அந்த முகம், எங்கள் குடும்பத்தோடு மட்டுமல்லாமல், ஊரில் எல்லோருடனும் வைத்திருந்த நல்லுறவு என ஒவ்வொன்றாக நினைவு வந்தது. அவர் கதையை பாதியிலிருந்து மட்டுமே நான் அறிவேன். என் பாட்டி, சித்திப் பாட்டி, மாமா, அப்பா என உறவுகள் சொல்லிக் கேட்டதே நிறைய.

முதன் முதலில் மாமா எங்கள் வீட்டுக்கு வந்ததை ஒரு ஆச்சரியம் போல் சொல்வாள் பாட்டி.

‘ஒரு நா வாசல்ல, ஒரு நடுவயசு மனுஷரும் சின்ன பையனும் நின்னா. ஊருக்குப் புதுசுன்னு பாத்த ஒடனே பளிச்சுன்னு தெரிஞ்சது. உள்ள வரலாமான்னுட்டு யோஜனை பண்ணிண்டு நின்னார் பாவம். ஒன் தாத்தா பாத்துட்டு, ‘வாங்கோ உள்ள’ன்னதும் அப்படி ஒரு ஆச்சரியம் அவர் மொகத்துல.

‘வெளியூர்லயிருந்து பொழைக்க வந்துருக்கோம், சின்னதா ஒரு மளிகை வக்கலாம்னு. நீங்க பெரியவங்க ஆதரிக்கணுன்னு’ கேட்டுண்டார். தாத்தா ஒடனே சரின்னுட்டார். பக்கத்துல இருந்த பையனப் பாத்து, ‘ஒம் பேரென்ன?’ன்னார். ‘கணபதி’ன்னு கணீர்னு வந்தது பதில். ‘படிக்கறியா’ன்னார்.’

அந்தக் கேள்விக்கு பதில் வரவில்லையாம். காரணம் கொஞ்சம் நெருடலானது. கணபதி மாமாவின் கால் விரல்கள் வித்தியாசமாக இருக்கும். வலக்காலில் இரண்டு விரல்கள் இருக்காது. கூடப்படிக்கும் பையன்களின் கேலிக்குப் பயந்து பள்ளிக்கூடம் போவதை நிறுத்தி விட்டிருக்கிறார்.

தாத்தா, உடனே அறிவுரை கூறியதோடல்லாமல், அப்போது சின்ன பையனாயிருந்த மாமாவை அழைத்து ‘வெங்கி, நாளைக்கு இந்தப் பையனையும் ஒன்னோட அழைச்சுண்டு போய் ஸ்கூல்ல சேத்துடு, செல்லத்துரை வாத்தியார்ட்ட நான் சொன்னேன்னு சொல்லு’ என்று சொல்லியிருக்கிறார். பூஜையறையிலிருந்து பழங்களை எடுத்து, கணபதி மாமாவின் இருகரங்களிலும் கொடுத்திருக்கிறார் பாட்டி.

‘மொகத்துல சிரிப்பப் பாக்கணுமே, பொன்னாட்டம் வாங்கிண்டுது கொழந்தை ‘!!.

அப்போது துவங்கியது. கடையிலும் அப்பாவுக்கு உதவியாக இருந்தாராம் கணபதி மாமா. சிட்டை(லிஸ்ட்) படி மளிகைப் பொருட்களை அவரவர் வீட்டுக்குக் கொண்டு சேர்ப்பது. சின்ன பற்று வரவு புத்தகத்தில் கையெழுத்து வாங்க வருவது என்று எல்லா வேலைகளும் செய்வார். அதனால் கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலும் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது.

குறிப்பாக எங்கள் இல்லத்தில் ஒரு மகன் போலவே ஆனார். வெங்கி மாமாவுக்கு ‘கணா’, என் அப்பா, சித்தப்பாவுக்கு ‘அண்ணே’, என் தாத்தாவுக்கு ‘கணபதி’, என் சின்னத்தாத்தா(தாத்தாவின் தம்பி) மட்டும் மிக நெருக்கமாக ‘பிள்ளைவாள்’ என்பார். அதென்னமோ மாமாவின் மேல் அலாதி பாசம் அவருக்கு. வயதுக்கு மீறிய தோழமை இருவரின் நடுவேயும். இருவருக்கும் பயணம் செய்வதில் அடக்கமாட்டாத ஆசை. ஏதாவது குடும்ப விசேஷங்கள், திருவிழாக்களுக்காக கணபதி மாமா வெளியூர் செல்ல வேண்டி வந்தால், சின்னத் தாத்தாவும் புறப்பட்டு விடுவார். இருவரும் ஏதாவது ஒரு புள்ளியில் சந்தித்து, அருகில் இருக்கும் எல்லா ஊர்களையும் பார்த்து விட்டுத் திரும்புவது வழக்கம். அதைப் போலவே கணபதி மாமாவும் செய்வார்.

அதனால் இருவரில்  ஒருவர் வெளியூர் சென்றுவிட்டு, ஊர் திரும்பத் தாமதமானால், பரஸ்பரம் விசாரித்துக் கொண்டு அமைதி காண்பது இருவர் வீட்டு வழக்கமும்.

கணபதி மாமா, தன் அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், படிப்பை பள்ளியிறுதியோடு நிறுத்திக் கொண்டார். உடனே திருமணமும் ஆயிற்று. நிறையக் குழந்தைகள் கணபதி மாமாவுக்கு.

கணபதி மாமாவைப் போலவே அவர் மனைவி மீனாட்சி அக்காவும். கலகல என்று இருப்பார். இருக்கும் இடமே திருவிழாப்போல இருக்கும்.

ஊரில் யார் வீட்டுக்கு யார் வந்தாலும்  கணபதி மாமாவுக்குத் தெரிந்துவிடும்.

கடைக்கு வருகிறவர்களிடம், காசு வாங்கினோம், பொருளைக் கொடுத்தோம் என்றிருப்பது அவரால் முடியாது.

‘யாரு, அக்காவா, என்னா சேமியா வேணுமா?, தாரேன். பாயாசம் வைக்கிறதுக்கா இல்ல உப்புமாவா?. பாயாசமா? அப்ப சீனி வேணும்ல? இருக்கா?. டே, அந்த சேமியாவ எடு!!, ஆமாக்கா, என்ன விசேசமா?!!, ஆரு வந்திருக்காங்க, நாத்தனாரா?, அதான் பாயாசமா!!, என்னா சும்மாத்தான் ஊரு பாக்கவா இல்ல வேற விசேசம் ஏதாச்சும் உண்டா?, என்னா பொண்ணு கேக்க வந்திருக்காகளா?, என்னா மெல்ல சொல்லுறீக, சட்டுப்புட்டுன்னு பண்ணிறலாம்ல!! வயசும் ஆச்சுல்ல பாப்பாவுக்கு, மாமா என்னா சொல்லுறாரு?,’ என்று கோர்வையாக விசாரிப்பார்.

அன்று சாயங்காலமோ, மறுநாளோ கடைக்கு வந்த அக்காவின் வீட்டுக்காரரைப் பார்க்க நேர்ந்தால், வாசாலகமாக, ‘வாங்க மாமா, என்னா கடப்பக்கமே ரொம்ப நாளா காணும்?’

என்று துவங்கி, ஒரு சுற்று பேசி விட்டு, ‘ஆமா, என்னா எப்ப பாப்பா கல்யாணத்துக்கு சமையல் சாமா(ன்) சிட்டை தரப்போறீக?, நேத்தென்னாமோ, ஒறமொறை வந்திருந்தாக போல’ என்று விஷயத்துக்கு வருவார்.

மாப்பிள்ளை பிடித்தம் இல்லை என்றால் தலையிடமாட்டார். மாறாக, பண விஷயத்துக்காக தவங்குகிறது என்றால் ‘கிடுகிடுவென’ உதவியில் இறங்குவார்.

‘நீங்க கவலப்படாதீங்க, நக நட்டுக்கு, துணிமணிக்கெல்லாம் எவ்வளவு தேவப்படுது?, மண்டபச்செலவு பத்தி பெரச்சனையில்ல, “அங்கயற்கண்ணி” ல சொல்லிரலாம். சமயல் பாத்திரத்துலருந்து, கூட்டிப் பெருக்குற ஆள் வரக்கும் இருக்கு, பாத்துக்கிரலாம். நம்ம ஒறமொறைதான் மண்டபம் வச்சிருக்கிறவ‌ரு. நாஞ்சொன்னா செரிம்பாரு. சமயலுக்கு ஆள மட்டும் பாருங்க, சாமா(ன்) செட்டு அத்தனையும்,  மஞ்சப்பொடிலருந்து, வெத்தல பாக்கு வரக்கும் நாங்கொணாந்து போடுறேன், பெறகு மொள்ளமா கொடுங்க, இப்ப என்னா?, வேற என்னா செலவு?’ என்று அலச ஆரம்பிப்பார். செட்டியார் கடையில், தவணை முறைக் கடனுக்கு ஏற்பாடு செய்வதிலிருந்து எல்லாவற்றிற்கும் உதவிக்கு நிற்பார். கண்டிப்பாய், ஏதேனும் ஒரு சிறிய செலவேனும் தன் பொறுப்பில் ஏற்பார். அநேகமாக, அது பூவாகத்தானிருக்கும். கல்யாணத்திற்கு வேண்டிய பூச்சரம், மாலைகள், உதிரிப்பூ எல்லாவற்றையும் தன் செலவில் வாங்கித் தருவார். திருமணம் முடிந்து, மணமக்களை வண்டி ஏற்றி அனுப்புவது வரை அந்த‌ வீட்டு மனுஷனாக உடனிருப்பார்.

ஒரு முறை பாட்டி சொன்னாள் என்று ஹார்லிக்ஸ் பாட்டில் வாங்கப் போனது நன்றாக நினைவிருக்கிறது. சொன்னதும் உடனே எடுத்துக் கொடுக்கவில்லை.

‘என்னா பாப்பா வந்திருக்கீக, அண்ணன் இல்லையா, வள்ளி எங்க போனா?’

‘அண்ணா மாமா வீட்டுக்குப் போயிருக்கார். வள்ளி மார்க்கட்டுக்கு!!’

‘அதானா, செரி இந்தாங்க‌ ஆரஞ்சு மிட்டாயி, எப்பவாச்சும் தானே ஹார்லிக்ஸூ வாங்குறது நம்ம வீட்டுல, ஆமா, ஆராச்சும் விருந்து வந்திருக்காங்களா?’

‘இல்லல்ல… பக்கத்தாத்து சுந்தரம் மாமா இல்ல, அவர ஆஸ்பத்திரில சேத்துருக்கா… தாத்தா பாக்கப் போறா.. அங்க குடுத்து விடத்தான்’

‘அப்டியா, செரி நீங்க போயி பாட்டிக்கிட்ட நா(ன்) கொண்டாரேன்னு சொல்லுங்க!’

நேரே வீட்டுக்கு வந்து, என்ன ஏது என்று விசாரிப்பதோடு நிற்க மாட்டார். சுந்தரம் மாமாவின் வீட்டுக்குப் போய் என்ன உதவி வேண்டும் என்று கேட்டுச் செய்வதோடு, சுந்தரம் மாமா ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பும் வரை, எப்போது டவுன் பக்கம் போனாலும், தன் சைக்கிளில், அவர் வீட்டிலிருந்து,  சாப்பாடு மற்ற சாமான்கள் எடுத்துப் போய், ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போய்க் கொடுப்பார்.

தன் கல்யாணமும் அவரால் தான் நடந்தது என்பாள் அம்மா. எங்கே பிள்ளைக்கு கல்யாணமானால், மருமகள் வந்து பிரித்து விடுவாளோ என்ற காரணமற்ற பயத்தினால், அப்பாவின் கல்யாணத்தை ஏதேனும் சாக்கு சொல்லி தள்ளிப் போட்டுக்கொண்டே போனாளாம் பாட்டி. பெண் பார்க்கும் வரை வந்தால் கூட ஏதாவது காரணம் கண்டுபிடித்து ‘வேண்டாம்’ என்று சொல்லிவிடுவாளாம். தாத்தா எவ்வளவு சொல்லியும் பாட்டிக்கு உறைக்கவில்லை. அப்பா,  த‌ன்  அம்மாவுக்கு அடங்கிய பிள்ளை.

இராமநாதபுரத்தில், அம்மாவைப் பெண்பார்த்து வந்ததும், வழக்கம் போல் பாட்டி காரணம் தேட ஆரம்பிக்க, அப்போது, சாமான் கொண்டு வந்து கொடுக்க வந்த கணபதி மாமா,

‘என்னங்கப்பா, பொண்ணு பாக்கப் போனீங்கல்ல, நல்ல விசயம்தான?’ என்று தாத்தாவிடம் ஆரம்பித்தாராம்.,

‘இல்லடா கணபதி,  பொண்ணு கொஞ்சம் குள்ளமாட்டமா இருக்கு!!  ..பாட்டி.

‘அதனால என்னா… ரவியும்  ஒயரங் கம்மிதான‌.. செரியா இருக்கும்ல’.

பாட்டி பதில் பேசாமல் இருக்க, ‘இந்தா பாருங்க அம்மா, ரவி வயசுல, எனக்கு கலா சடங்காயிருச்சு… இன்னம் கலியாணமுடிக்காம இருந்தீங்கன்னா, அது பிள்ளைகள வளத்தி நிமுத்த வயசு வேணாமா… இன்னம் சின்னப் புள்ளையா…. ஒங்களுக்கு பேரம்பேத்தி வேணுங்குற ஆச இருக்குதா இல்லையா?, என்ன மாதிரி சின்னவங்க, ஒங்ககிட்ட செரி, தப்பு எடுத்துச்  சொன்னா நல்லாவா இருக்கு?.. ஏம்ப்பா… ரவிக்கு பொண்ணு புடிச்சுருக்குல்ல… அப்ப ஆக வேணுங்குறத பாக்கலாம்ல… அம்மா ஒண்ணுஞ் சொல்ல மாட்டாங்க‌. நீங்க ஒண்ணு பண்ணுங்க… போயி, பொண்ணு புடிச்சுருக்குன்னு ஒரு தந்தி குடுத்துருங்க…. இப்பமே நிச்சயம் பண்ணினாத்தான் செரி வரும். இல்லன்னா மார்கழி வந்துரும். வர ஞாயித்துக்கெழம முகூர்த்த நாளுன்னு பாத்ததா ஞாபகம். அத செரிபாருங்க. செரியா இருந்துச்சுன்னா, அன்னைக்கே நிச்சியம் பண்ணிரலாமான்னும் ஒரு வரி சேருங்க…. நாம் போயி, ‘அங்கயற்கண்ணி’ல ஒரு வார்த்த சொல்லிர்றேன். அங்கயே  வச்சிரலாம் நிச்சியம். என்னா?’  என்று அடுக்க…

அப்பா, சின்னதாய்த் தலையசைக்க, பாட்டியின் மௌனத்தை சம்மதமாக எடுத்துக் கொண்டு, தாத்தா, ‘அப்படியே செய்துடுவோம், நான் உங்கூடவே வரேன். என்ன தந்தி ஆபீசுல இறக்கி விட்டுடு…’ என்று கணபதி மாமாவின் சைக்கிளில் ஏறிச் சென்று தந்தி அடித்து விட்டு வந்தாராம்.

‘அவர் மட்டும் பூனைக்கு மணி கட்டலைன்னா… அறுபதாம் கல்யாணம்தான் உங்கப்பாவுக்கு’ என்று சிரிப்பாள் அம்மா.

இது போல், கணபதி மாமா வீட்டுக் கல்யாணம் தாத்தாவால் நிச்சயம் செய்யப்பட்டதும் நடந்ததுண்டு.

கணபதி மாமா, தன் மக்கள் எல்லாரையும் உறவிலேயே மணமுடித்துக் கொடுத்து வந்தார். . கிட்டத்தட்ட எல்லா அக்கா தங்கை உறவிலேயும் கொள்வினை கொடுப்பினை உண்டு. மீனாட்சி அக்காவுக்கு, தன் ஐந்தாவது பிள்ளையை, தன் அண்ணன் மகளுக்கு மணமுடிக்க வேண்டும் என ஆசை. ஆனால், எதனாலேயோ ‘ஒன் ஒறவுல சம்மந்தம் வேணாம்’ என்று சொல்லிவிட்டார் என கண்ணைக் கசக்கிக் கொண்டு தாத்தாவிடம் வந்து நின்றார் மீனாட்சி அக்கா.

‘ஏண்டா, அவ சொல்றதும் ஞாயந்தானே!!’

‘அப்பா, அது சும்மா சொல்லுது… எத்தன பெரச்சன வந்துச்சு அவுங்களாலன்னு ஒங்களுக்கும் தெரியுந்தான…’

‘ஆமா, அதுக்கென்ன பண்றது.. அவங்கப்பா செஞ்சதுக்கு புள்ளை என்ன பண்ணுவான் சொல்லு..  நீரடிச்சு நீர் விலகாது. நாளக்கு அவ சொந்தத்துலயும் ஒருத்தர் வேணுன்னு நெனைக்கறா…’

‘அதுக்காக, இவங்கண்ணன்ட்ட நாம் போயி என்னா பேசுரது…’

‘அது ஒண்ணும் பெருசுல்லா.. சொல்லிவுட்டா அவங்களே வருவாங்க…’ என்றார் அக்கா.

‘எல்லாந் திட்டம் போட்டு வச்சாச்சா?’

‘ கணபதி… நீ கொஞ்சம் இறங்கி வா.. இத்தன நாள் ஒங்கூட சம்சாரம் பண்ணி இருக்கா.. இந்த ஒண்ணுல விட்டுக்குடுத்துடேன்..’

‘ நாளப்பின்ன, அண்ணன் வீட்டுல‌ அத செய்யல,  இத செய்யலன்னு இவளே பேசுவாப்பா..’

‘அதொண்ணுமில்ல… எங்க பொறந்தவூட்டுல யான மேல அம்பாரிகட்டி சீர் செய்வாங்க’

‘ஆத்தி!!!, அப்ப  ஒன்னோட வந்த  யானய முழுங்கிட்டுதா நீ இத்தத்தண்டிக்கு ஆனியா!’

இறுதியாக தாத்தாவின்  வார்த்தைக்காக, சம்மந்தத்துக்கு ஒத்துக் கொண்டாராம் கணபதி மாமா.

இப்படி, ஊரில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் முக்கியமான நபராக, நல்லது கெட்டதுகளில் பங்களிப்புச் செய்து கொண்டு, ஊரே தன் குடும்பமாக வாழ்ந்தார். அவரை வேற்றாளாக நினைத்துப் பார்க்க முடியாது யாராலும். ‘உபகாரம்னா, கணபதி’ என்று பேரெடுத்திருந்தார்.

ஆயிரம் இருந்தாலும், கணபதி மாமாவுக்குத் தான் கால் விரல்கள் பற்றிக் குறையான குறை உண்டாம். தனிமையில், சின்னத் தாத்தாவிடம், நிறைய வருத்தப்பட்டிருக்கிறாராம்.

‘விடுடா.. எல்லாத்துக்கும் ஏதாவது காரணமிருக்கும்.. இதனால, ஒனக்கு என்ன கொறைஞ்சு போச்சு?’ என்பாராம் சின்னத் தாத்தா.

ஆனால், காரணம் எவ்வளவு கொடூரமானது என்பதை விதியைத் தவிர யாரும் அறிந்திருக்கவில்லை.

ஒரு கல்யாணத்துக்குப் போய்விட்டு இரவு திரும்ப வேண்டிய கணபதி மாமா, மறுநாள் ஆகியும் வராததால், மீனாட்சி அக்கா, எங்கள் வீட்டுக்கு விசாரிக்க வந்தார்.

‘சித்தியம்மா, சித்தப்பா ஊருக்கா?’.

‘இல்லடி..இங்கதான்  ஏன்?’.

‘இல்ல, அவரு திருச்சிக்கு ஒரு கல்யாணத்துக்குப் போயிட்டு வரக்காணும், சித்தப்பா கூட ஊரப்பாக்கப் போயிட்டாராக்கும்னு வந்தேன்’.

சித்திப்பாட்டி திகைத்தாள். இப்படி நடந்ததே இல்லை. ‘வந்துருவான்டி, வேற ஏதாவது வேலையாயிருக்கும்’  சொல்லிக் கொண்டு இருக்கும் போதே சின்னத்தாத்தா வந்துவிட்டார்.

விஷயம் தெரிந்து அவரும் யோசித்தார். ‘சரி, நீ போயிட்டு வா, மீனாட்சி,   வந்துடுவான்னே நினைக்கிறேன். இல்லன்னா நா சாயரட்சை கிளம்பிப் போய் விசாரிக்கிறேன்.

அக்கா, போனதும், ‘பருவதம், எனக்கு என்னமோ பண்றது. ஒண்ணும் மனசுக்கு சரியாப்படலை. நான் சரவணப் பொய்கைப் பக்கம் போய்ட்டு வரேன்’ என்று சொல்லிவிட்டு கலங்கிய முகத்துடன்  தெருவில் இறங்கினார்.

அதே நேரத்தில், ஒரு தெரு நாய்,  வீதியின் கோடியில் இருந்த‌ பதினாறு கால் மண்டபத்தில் உட்கார்ந்து  பேசிக்கொண்டிருந்த தெருக்காரர்களின் முன்பாக, இரைக்க, இரைக்க ஓடிவந்து ஒரு பொருளைக் கொண்டு போட்டு விட்டு ஓடியது. அது ஒரு மனிதக் கால். வலது கால். வித்தியாசமான விரல் அமைப்புகளோடு இருந்த அதில் இரு விரல்கள் இல்லை.

கொஞ்ச நேரத்தில் தெருவே அலறியது. தாத்தா உட்பட தெருவாசிகளுக்குத் தகவல் பறந்தது. அப்பாவும், சித்தப்பாவும், மாமாவும், கண்ணீருடன் தெருவில் பதறி ஓடியது நினைவிருக்கிறது. நாய் சென்ற வழியை உத்தேசமாகத் தொடர்ந்து கொண்டு, ஒரு ஊகத்தில் ஊர் எல்லையில் இருந்த இரயில்வே லைனை அடைந்த போது அத்தனை பேருக்கும் ஒரு கணம் இதயம் நின்று தான் விட்டது. ஊருக்குப் போய்த் திரும்பிய கணபதி மாமா, இரவில், ஆளில்லா இரயில்வே லைனைக் கடக்க முற்பட்ட போது, இரயில் வந்து தூக்கியடித்திருக்கிறது.  அவர் உடலின் முன் பாகம் சிதையாமல் இரயில்வே லைனுக்குப் பக்கத்தில் கிடந்ததைத் தூக்கி வந்தார்கள்.

பாட்டி, அம்மா, சித்தி எல்லாரும் கணபதி மாமா வீட்டுக்கு ஓடினார்கள். ஊரே கதறி அழுதது. சின்னத் தாத்தாவின் துயரம் சொல்லில் அடங்குவதாயில்லை. மீனாட்சி அக்கா..?, அதிர்ச்சியில் மயங்கி விழுந்தவர் எழவே இரண்டு நாட்கள் ஆயிற்று.  தாத்தா, கணபதி மாமாவின் மூத்த மகன் ராமுவின் பக்கத்திலேயே இருந்து எல்லாம் செய்ய வைத்தார்.

அதன் பின், மீனாட்சி அக்கா, தன்னை ஆச்சரியப்படும் விதத்தில் தேற்றிக் கொண்டு சோகத்தில் இருந்து மீண்டது, கடைப்பொறுப்பை ஏற்றுக் கொண்டது, திருமணமாகாமல் இருந்த   ஒரு மகள் மற்றும் இரு மகன்களுக்கு ஊர்க்காரர்கள் அனைவரும் முன்னிற்க,  திருமணம் செய்து வைத்தது,  எல்லாவற்றிற்கும் மேலாக, எங்கள் வீட்டில், ஊரில் கணபதி மாமாவின் இடத்தை நிரப்பியது என எல்லாமுமே மிகச் சாதாரண வாக்கியங்களால் சொல்லிவிடுகிற விஷயமில்லை. ஒவ்வொன்றும் சரித்திரம்.

சமீபத்தில் ஊருக்குச் சென்றிருந்த போது, அம்மா சொன்னாள் என்று கணபதி மாமாவின் கடையில் வெல்லம் வாங்கச் சென்றேன். அது இப்போது பல்பொருள் அங்காடியாகியிருந்தது. ராமு அண்ணா கல்லாவில் இருந்தார். நான் போனதும், நிமிர்ந்து பார்த்தவர், ‘ஆத்தி, ஆரு ரவி சித்தப்பா மகளா, என்னா ஊர மறந்து போயிட்டீக, வரப்போக இருக்க வேணாமா வீட்டுப் பொண்ணுக?’ என்று அன்பாகவும் உரிமையாகவும் விசாரித்தவர், புறப்படும் போது, வெல்லத்தோடு இரு பிஸ்கட் பாக்கெட்டுக்களையும் சேர்த்துக் கொடுத்தார்.

‘எதுக்குண்ணே?’ என்ற போது, ‘வச்சுக்க பாப்பா, வீட்டுல புள்ளைங்களுக்குக் கொடு, மறுக்கா எப்ப வரியோ? வாங்கிக்க!!!’ என்ற போது, என் கையில் இருந்த பிஸ்கட், க்ஷண நேரத்திற்கு ஆரஞ்சு மிட்டாயாகத் தெரிந்தது. நிமிர்ந்து பார்க்கையில், கடைச் சுவரில், சீரியல் செட்டுக்களால் சட்டமிடப்பட்ட படங்களில் கணபதி மாமாவும் மீனாட்சி அக்காவும் சிரித்தார்கள்.

 

தேமொழி

unread,
Dec 11, 2015, 10:50:38 PM12/11/15
to மின்தமிழ், vall...@googlegroups.com
நாளும் கோயிலும் 

- நிர்மலா ராகவன்
(இவ்வார வல்லமையாளர் நிகிதா ஆசாத்தைப்பற்றி அறிந்ததும் எழுந்த கற்பனை)

ஒனக்கு இப்போ `நாள்,’ இல்லே?” தாயாரின் குரலில் கவலை தொனித்தது.

மகள் அலட்சியமாகக் கையை வீசினாள். “இப்போ என்ன அதுக்கு?”

இல்லேஹம்சாநாளைக்குக் கோயில்ல ஆடப்போறியே..,” மீதியைச் சொல்லாமல் விட்டாள். “ஆமாஎந்தக் கோயில்லேன்னு சொன்னே?”எங்க கிளாஸ் நடக்கிற கோயில்லதான்!”

காமாட்சி அம்மன் கோயில்!” என்று சொல்லிக்கொண்டாள் தாய்தனக்குள்.

ஹம்சா மேலே எதுவும் பேசவில்லைபேசப் பிடிக்கவில்லைஒரு பாட்டை மனதிற்குள் பாடியபடி அங்கிருந்து நகர்ந்தாள்கைதன்னையுமறியாமல்அபிநயம் பிடித்தது.

அப்போதைக்கு அம்மாவிடமிருந்து தப்பித்துப்போனால் போதும் என்றிருந்தது அவளுக்குமாடியிலிருந்த தனது அறையை நோக்கிப்போனாள்.

அதுவரை அடக்கி வைத்திருந்த ஆத்திரம் மேலெழுந்தது.

`தீட்டுஎன்று இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் பெண்களை மட்டமாகவே நடத்தப்போகிறார்கள்?

ஆதிமனிதன் குகையில் வசித்த காலத்தில்காட்டு விலங்குகள் ரத்த வாடையை முகர்ந்து குகைக்குள் வந்துவிடுமே என்று பயந்துஅக்காலங்களில் பெண்களைத் தனியேவிலக்கிவைத்திருக்கலாம்இப்போது என்ன வந்தது!

பள்ளிக்கோஅல்லது வேலைக்கோ வெளியே போகும் பெண்கள் வீட்டில் தனித்து விலக்கி வைக்கப்படுவது வெகுவாகக் குறைந்துவிட்டதுஆனால்கோயில்களில் மட்டும் பழையவிதிமுறைகளை மாற்றாமல்கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்!

சில கோயில்களில், `இவர்களெல்லாம் கோயிலுக்குள் நுழையக்கூடாது!’ என்று ஒரு பெரிய பட்டியல் தயாரித்துவெளியிலேயே எழுதி வைத்திருக்கிறார்கள்மாத விலக்கு வந்த பெண்களும்,பெருநோய் வந்தவர்களும் ஒன்றாகையில்லாத ரவிக்கை அணிபவர்களுக்கு மட்டும் பக்தி இருக்கக்கூடாதா?

அவளுடைய ஆத்திரத்திற்கு முட்டுக்கட்டை போடவேபோல் தொலைபேசி அழைத்தது.

ஹம்சாவுக்குச் சட்டென்று சிரிப்பு வந்ததுயாராவது ஒரு மாணவி, `டீச்சர்இன்னிக்கு பரத்நாட்யம் க்ளாஸ் இருக்கா?’ என்று கேட்பாள்முதலில் வரவே யோசித்தவர்களுக்கு இப்போதுதான்எத்தனை ஆர்வம்நினைத்துப்பார்க்கவே பெருமையாக இருந்தது அவளுக்கு.

 

பரதநாட்டியம் வசதிபடைத்தவர்களுக்கு மட்டுமே எட்டக்கூடிய ஓர் உயரம் என்ற எழுதப்படாத விதிமுறையை எதிர்த்துஹம்சா அந்த வகுப்பை ஆரம்பித்திருந்தாள்.

பெரிதாக இடம் எடுத்து நடத்த வழில்லைகுடிசைகளுக்குப் பதிலாக்க கட்டப்பட்ட  அடுக்குமாடி வீடுகள் நிறைந்த அவ்விடத்தில் அவர்களுக்கென இருந்த ஒரு சிறு கோயில் பிரகாரம்தான்நாட்டிய வகுப்பு -- பூஜை இல்லாத நேரங்களில்.

அக்கம்பக்கத்திலிருந்த குடும்பங்களிலிருந்து மாணவிகள் வந்தார்கள் -- இலவசம் என்பதைக் கேள்விப்பட்டுஆனால்எதிலும் அவர்களுக்கு துடிப்போபுதியதாக ஒன்றைக் கற்கும் ஆர்வமோஇருக்கவில்லைஎப்போதும் வாயில் விரல்நிமிர்ந்து நிற்கக்கூட தெம்போஉத்வேகமோ இல்லாதவர்களாக இருந்தார்கள்எட்டு வயதிலேயே கூனலாஇவர்களை எப்படி வழிக்குக்கொண்டுவருவது என்று அயர்ந்தே போனாள் ஹம்சா.

எப்போதோ அம்மா சொன்ன ஒன்று நினைவுக்கு வந்தது: `சின்னப்பிள்ளைங்களுக்குத் தாகமா இருந்தாலோபசியா இருந்தாலோ சொல்லத் தெரியாதுவாயிலே விரல் போட்டுப்பாங்க!’

தன்னுடைய தோழிகள் சிலருடன் கலந்தாலோசித்துஅவர்களுக்குச் சாப்பிட எதையாவது கொடுக்க ஏற்பாடு பண்ணினாள்.

`நாட்டியம் கற்றுக் கொள்கிறார்களோஇல்லையோவயிறாரச் சாப்பிட்டுவிட்டாவது போகட்டுமே!’ தான் பசியே அறியாது வளர்ந்திருந்ததில் சிறிது குற்ற உணர்வுகூட ஏற்பட்டது.

வெளியில் எங்கும் கிடைக்காத தோழமையும்சிரிப்பும்அறிவும் அங்கு கிடைப்பதை உணர்ந்தவர்களுக்குச் சில மாதங்களிலேயே உணவில் ஆர்வம் குறைந்துபோயிற்று.

ஆரம்பத்தில் எதையும், `எனக்கு? எனக்கு?’ என்று பிடுங்கியவர்கள்கூட, `நீங்களும் சாப்பிடுங்கடீச்சர்,’ என்று உபசாரம் செய்யக் கற்றுக்கொண்டார்கள்.

சில நாட்கள்ஓரிரு பெண்கள் வகுப்புக்கு வராததன் காரணத்தை (`அக்கா சுத்தமில்லே!’) யார்மூலமாவது சொல்லி அனுப்பியபோதுதான் அந்த யோசனை எழுந்தது ஹம்சாவுக்கு

ஒங்க ஒடம்பைப்பத்தி ஒங்களுக்குத் தெரிஞ்சிருக்கணும்நீங்க தீட்டுன்னு நினைக்கிறது தப்பான உணவாலேயோஆரோக்கியக் குறைவாலேயோ கிடையாது.

ஒரு பெண் கர்ப்பம் தரிக்கத் தயாராக இருக்கிறாள் என்பதைத்தான் உணர்த்துகிறது மாதாந்திர உதிரப்போக்குஇயற்கையான ஒரு செயல்அதற்கு ஆயிரம் தப்பு கண்டுபிடித்து.., என்றெல்லாம் பெண்கள் மருத்துவரான சுந்தரவல்லி அந்த வகுப்புக்கு வந்து விளக்கினாள்.

நம்ப உடம்பைஉயிரைகடவுள் குடுத்ததுன்னு ஏத்துக்கறோம்இல்லியாஅவரோட செயலே தப்புங்கிறமாதிரிஇயற்கையா நடக்கிற இதுக்குக்காக பயந்துக்கிட்டுகோயிலுக்கு வராமஇருந்துடாதீங்கஎவ்வளவு கஷடப்பட்டு ஒங்களுக்கு டான்ஸ் கத்துக்குடுக்க வராங்க டீச்சர்தெரியுமா?” என்று சந்தடி சாக்கில்ஹம்சா படும்பாட்டையும் குறிப்பிட்டாள் சுந்தரவல்லிதன்தோழியைப்பார்த்துக் கண்ண்டித்தாள்.

அப்பெண்களின் முகம் தெளிந்ததுதமக்காகப் பாடுபடும் இரு பெண்மணிகளையும் பார்த்து நட்புடன் சிரித்தார்கள்.

ஏன் இப்படி கூனிக்கிட்டு நடக்கறீங்க?” உரிமையுடன் அதட்டினாள் சுந்தரவல்லி.

ஒரு துணிச்சலான பெண் தங்கள் தர்மசங்கடமான நிலைமையை வெளிப்படுத்தினாள்: “எல்லாரும் எங்க ஒடம்பையே மொறைச்சுப் பாக்கறாங்கடாக்டர்வெக்கமா இருக்கு!” குரல்அழுகையாக வந்தது.

பிற மாணவிகளும் தலையை ஆட்டினார்கள்உதடுகள் பிதுங்கின

அலட்சியமாக் கையை வீசினாள்அந்த சிறப்பு விருந்தினர். “அதுக்கென்ன பண்றதுசாமி நமக்கு அப்படி அழகான ஒடம்பை நமக்குக் குடுத்திருக்கு!” என்று புன்சிரிப்புடன் கூறியவள்தன்இருகரங்களால் மூன்று வளைவுகளைக் காட்டினாள்.

எல்லாரும் நிம்மதியும்வெட்கமுமாகச் சிரிக்கஒரு பெண், “இரண்டுதானேடாக்டர்?” என்று சிரிப்புடன் வினவடாக்டர் யோசிப்பதைப்போல் பாவனை காட்டினாள். “நீ சொல்றது சரிஇரண்டுவளைவுகள்தான்!”

சிரிப்பு பலத்ததுஇப்போது எல்லாரும் நிமிர்ந்து உட்கார்ந்தார்கள்.

சில சமயம் ஆட முடியலேவலிக்குது,” என்று ஒரு பெண் சுட்டினாள்.

ஒங்கம்மாவை கருஞ்சீரகத்தை வறுத்துப் பொடி பண்ணிமோரிலே கலக்கிக் குடுக்கச் சொல்லுதினமும் குடிச்சாகருப்பை வலுவாகும்.

சொல்லக்கூடாத அந்த வார்த்தையைக் கேட்டதும் எல்லாரும் வெட்கத்துடன் சிரித்தார்கள்.

அறிவுரை தொடர்ந்தது: “ரொம்ப வலிச்சாவெந்நீர் ஒத்தடம் குடுக்கச்சொல்லுஇந்தமாதிரி சமயங்களிலே சுருண்டு படுக்காமஎக்சர்சைஸ் பண்ணணும். அது ரொம்ப முக்கியம்!

அதன்பின்வீட்டில் பாட்டியோஅம்மாவோ ஆட்சேபித்ததையும் மீறிக்கொண்டுஎந்த நாட்களிலும் கோயிலுக்கு வந்து நாட்டியம் கற்றுக்கொள்ளத் துணிந்தார்கள் அப்பெண்கள்.

நான்கு பேர் பார்க்க நாட்டியமாடும் தகுதி அவர்களுக்கு இருக்கிறது என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட ஹம்சாசரஸ்வதி பூஜையன்று (அன்று தான்டாக்டர் சுந்தரவல்லியின் உபயம்)அவர்கள் ஆட ஏற்பாடு செய்திருந்தாள்மாணவிகளுடன்அவளும் ஆடவேண்டும் என்று கோயில் குருக்கள் விண்ணப்பித்திருந்தார்.

இப்போது அம்மா அவள் மனத்தைக் கலைத்துவிட்டாள்!

தொலைபேசியில் ரஞ்சனி பேசினாள்தயங்கித் தயங்கி. “டீச்சர்எனக்கு இப்போ பீரியட்நான் ஆடலாமா?”

தாராளமாஆனாயார்கிட்டேயும் இதைப்பத்தி சொல்லிக்கிட்டிருக்க வேண்டாம்என்ன?”

ஒவ்வொரு வகுப்புக்கும் தவறாது வந்துபெருமுயற்சியுடன் கற்ற கலைஇப்போது  பல பேர் பார்க்க தன் திறமையை வெளிப்படுத்த ஒரு தருணம் வந்திருக்கிறதுஅது நழுவி விடுமோஎன்ற கவலை இனி இல்லை!

சரிடீச்சர்!” என்ற சிறுமியின் குரலில் அலாதி நிம்மதி. “ரொம்ப பயந்துக்கிட்டிருந்தேன்டீச்சர் -- டீச்சர் என்ன சொல்வீங்களோன்னு!”

ஹம்சா சிரித்துக்கொண்டாள். “குளிச்சுட்டு வந்தா போதும்காமாட்சி புரிஞ்சுக்குவா!”

யாருடீச்சர்?”

காமாட்சி அம்மன்!”

!” அப்பெண் புரிந்தவளாகச் சிரித்தாள்.

“தைரியமா ஆடு. அதான் முக்கியம். ஏதாவது மாத்தி, தப்பா ஆடினாலும் பரவாயில்லே. அடிச்சு விட்டுடணும். என்னைத் தவிர, யாருக்கும் அது தெரியப்போறதில்லே! என்று, பல முறை வகுப்பில் சொன்னதையே திரும்பச் சொன்னாள் ஹம்சா. “காமாட்சி அம்மனும் நம்பளைமாதிரி ஒரு பொண்ணுதானேகோவிச்சுக்க மாட்டா!” தனக்கே தைரியம்அளித்துக்கொள்வதைப்போல் இருந்தது .  

கணினியில் பதிவு செய்திருந்த பாட்டை ஒலிக்கவிட்டாள்

முகத்தில் புன்னகை  படரபுடவைத்தலைப்பை இழுத்துச் சொருகிக்கொண்டாள். தரையைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு, பயிற்சியில் இறங்கினாள் ஹம்சா. உடல் லேசானதுபோல் இருந்தது. 

 

தேமொழி

unread,
Jan 11, 2016, 10:36:08 PM1/11/16
to மின்தமிழ், vall...@googlegroups.com
தாம்பத்யம்

- ஜெயகாந்தன்.

தலைச்சுமைக்கார மருதமுத்துவுக்கும் ரஞ்சிதத்துக்கும் அவர்கள் தலைவிதிப்படி அன்று மாலை கலியாணம் நடந்தேறியது. அதாவது அரையணா கதம்பம், ஓரணா மஞ்சள் கயிறு, காலணா மஞ்சள், மூணு ரூபாய்க்கு ஒரு புடவை, இரண்டணாவுக்கு வளையல்-ஆக ஐந்து ரூபாய் செலவில் ரிக்க்ஷாக்கார-கூலிக்கார ஏழைக் கடவுளின் சந்நிதானத்தில் ரஞ்சிதத்தை மருதமுத்து கண்ணாலம் கட்டிக் கொண்டான்.

அந்த ஐந்து ருபாயைச் சேர்ப்பதற்கு அவன் ஒரு மாதம் முழுவதும் சிரமப்பட வேண்டியிருந்தது. தனக்குக் கிடைக்கும் கூலிக் காசில் தினந்தோறும் இரண்டணா மூன்றணாவாகச் சேர்த்தான். தன் கையிலிருந்தால் செலவாகி விடும் என்று பயந்து மூலைக்கடை சாயபுவிடம் கொடுத்துச் சேமித்தான். அதற்குள்தான் அந்த ரஞ்சிதத்துக்கு என்ன அவசரம். முதலில் மருதமுத்து கலியாணத்துக்கு ஒப்புக் கொள்ளவில்லை. அது அவசியம் இல்லையென்று கருதினான். அங்கு வாழ்ந்தவர்களின் வளமுறை-பூர்வீகமாகவே அல்ல - தற்காலிகமாக சந்தர்ப்பவசமாக அப்படித்தான்

ஆனால் அதற்குப் பட்டிக்காட்டுப் பெண்ணான ரஞ்சிதம் ஒப்பவில்லை. மேளதாளம் இல்லாட்டியும், கூறையும் தாலியுமாவது கட்டிக்க வேணாமா? சாமி முன்னாலே நின்று சத்தியம் செஞ்சுக்குவோம். இதுகூட இல்லாட்டி கட்டிக்கறத்துக்கும் 'சேத்துவெச்சிக்கிறதுக்கும்' என்னாமச்சான் வித்தியாசம்? என்று தர்க்கம் புரிய ஆரம்பித்தாள். மருதமுத்துவுக்கும் அவள் சொல்வது சரியென்று படவே ஒப்புக் கொண்டான். ரஞ்சிதத்துக்குத் தன் மச்சான் ஒப்புக் கொண்டதில் பரம சந்தோஷம். பாவம், அவளும்தான் யாருமற்ற அனாதையாக எத்தனை காலம் இருப்பது?

அவள் பட்டணத்துக்கு அனாதையாகவா வந்தாள்? அவள் அப்பன் பட்டணத்தில் கை வண்டி இழுத்துப் பிழைத்துக் கொண்டிருந்தபொழுது அவள்திண்டிவனத்தை அடுத்த முண்டியம்பாக்கத்தில் தன் தாயுடன் பயிர் வேலை செய்து கொண்டிருந்தாள். அவள் தாய் இறந்த செய்தி கேட்டுப் பட்டணத்திலிருந்து ஒரு வாரத்துக்குப் பின் வந்த அவள் தகப்பன் திரும்பிப் போகும்போது ரஞ்சிதத்தையும் தன்னுடன் அழைத்துச் சென்றான். பட்டணத்தில் தகப்பனும் மகளும் வாழ்க்கை நடத்த இருக்கவே இருந்தது பிளாட்பாரம். கந்தல் பாய், மண் சட்டிகள். கை வண்டி ஓட ஓட வாழ்க்கையும் நகர்ந்தது. ஒருநாள் அவனால் நகர முடியவில்லை.

அவன் நகராவிட்டால் நகரம் நகராமலா இருந்துவிடும்?. அது நகர்ந்தது

பிளாட்பாரத்தில் கிடக்கும் கூலிக்காரனின் சவத்தைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் அதுநகர்ந்தது.

நாகரிகம் நெளிந்துநகர்ந்துகொண்டிருந்த அந்த விதியில் நாலு பேர் தோள் மீது கடைசிப் பிரயாணத்தைத் தொடங்கி விட்ட அப்பனின் பிரிவைச் சகிக்க முடியாத அனாதை ரஞ்சிதம் புலம்பிப் புரண்டு கதறிக்கொண்டிருந்தாள்

"நான் அனாதை ஆயிட்டேனே" என்று கதறிக்கொண்டிருந்த ரஞ்சிதத்தின் செவிகளில் "அழாதே, நான் இருக்கிறேன்" என்ற கனிவுமிக்க ஒரு குரல் ஒலித்தது. ரஞ்சிதம் திகைத்தாள். திரும்பிப் பார்த்தபொழுது தன் மச்சான் மருதமுத்துநிற்பதைக் கண்டவுடன் கோவென்று கதறினாள். அவன் அவளைத் தேற்றினான்.

வரவர அவள் தன் அப்பனை நினைத்து அழுவதையே நிறுத்தி விட்டாள். அதற்குத்தான் அவன் அவசியம் இல்லாதபடி செய்து விட்டானே. அப்படி என்ன செய்தான்? ஒரு வார்த்தைதான் சொன்னான்.

'நீ எதுக்கும் கவலைப்படாதே. நான் உன்னைக் கண்ணாலம் கட்டிக்கிறேன். வீணா அழாதே," என்று அவன் ஆறுதல் சொன்னதும் அழுதுகொண்டிருந்த அவள் அவனை ஏறிட்டு நோக்கினாள். கலங்கிய விழிகள் பரவசத்தால் படபடத்தன. என் கண்ணான உன்னை நான் கண்ணாலம் கட்டிக்குவேன் என்று கூறி அவன் லேசாகச் சிரித்தான். அவள் உதடுகளில் மகிழ்ச்சி துடிதுடிக்க நாணத்தால் தலை குனிந்தாள்.

அதன் பிறகு தினந்தோறும் அவள்தான் அவனுக்குச் சோறு பொங்கிப் பரிமாறினாள். அவளும் அவனும் கண்ணாலம் கட்டிக் கொள்ளப் போகிறார்கள் என்று அடுத்த அடுப்புக்காரிகளெல்லாம் (அடுத்த வீட்டுக்காரர்கள் என்று சொன்னால் சரிவராது. பிளாட்பார வாசிகளின் குடும்பங்களைப் பிரித்துக் காட்டுவது அடுப்புகள்தான்), பேசிக் கொண்டார்கள். 

மருதமுத்து கொத்தவால் சாவடியில் தலைச்சுமைக் கூலி தினசரி கிடைக்கும் ஆறணா எட்டணா வருமானத்தில் இரண்டனா ஓரணா எப்படியோ மீதம் பிடித்துக்கொண்டு மிகுதியை ரஞ்சிதத்திடம் கொடுத்துவிடுவான். பகலெல்லாம் கூலி வேலை. மாலை நேரங்களில் அவளிடம் சிரித்துச் சிரித்துப் பேசுவதன் விளைவாய் இரவு நேரங்களில் அவன் மனம் அவளை எண்ணித் தவியாய்த் தவிக்கும் எதிர்கால இன்பத்திற்காக நிகழ் காலத்திலேயே துடியாய்த் துடிக்கும். ஆனால் ரஞ்சிதம் அதற்கெல்லாம் மசிபவள் அல்ல; ஏனென்றால் அவள் பட்டணத்திற்கு வந்து அதிக நாளாகிவிடவில்லை; இன்னும் பட்டிக்காட்டுத்தனம் இருந்தது.

‘சாமி முன்னாடி நின்னு சத்தியம் பண்ணித் தாலி கட்டினாத்தான்" என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டாள். கடைசியில் எப்படியோ காசு சேர்ந்துவிட்டது.

சோறு விற்கும் கிழவி ஒருத்தி மருதமுத்துவையும் ரஞ்சிதத்தையும் பார்த்து மவராசியா வாழணும். என்று ஆசிர்வதித்தாள்.

என்ன மச்சான், கண்ணாலச் சாப்பாடு எப்போ?..." என்று பரிகாசம் பேசி மகிழ்ந்தான் அவன் சகாக்களில் ஒருவன். சிறுவர்கள் சிலர் அவனிடம் வெகுமானம் கேட்டனர்.

அவனும் சிரித்துக் கொண்டே இரண்டு மூன்று காலணாக்களை வெகுமானம் அளித்தான்.

லோன்ஸ்குயர்பார்க்கின் கம்பி வேலியின் ஓரமாக எழுந்தருளியிருக்கும் பிள்ளையாரின் புறாக் கூண்டு போன்ற மகா சன்னிதானத்தில் அவன் ஏற்றி வைத்த தரும விளக்கு ஜோதியாய், சுடராய், ஒளியாய், மஹா ஹோமமாய் எரிந்துகொண்டிருந்தது.

ஓரணாகடலை எண்ணெய் அல்லவா ஊற்றியிருக்கிறான்.

பார்க்குக்கு எதிரே மாதாகோயில் சுவர் ஒரமாகக் கட்டை வண்டி கைவண்டி, குப்பைத் தொட்டி முதலியவற்றின் இணைபிரியா ஒட்டுறவுடன்நிலைத்துவிட்ட அடுப்பில் மீன் குழம்புகொதித்துக் கொண்டிருந்தது. கஞ்சி மொடமொடக்கும் புதுப்புடவையின் விறைப்போடு கூடிய கொசுவத்தை மடக்கிக் கால்களுக்கிடையே செருகிக் கொண்டு குனிந்துநின்று குழம்பைத் துழாவிக் கொண்டிருந்த ரஞ்சிதத்தின் கைகளில் கலகலக்கும் கண்ணாடி வளையல்களிலும், கழுத்தில் தொங்கிய மஞ்சள் சரட்டிலும், மஞ்சள் பூசிய கன்னக் கதுப்பிலும், நெற்றியில் ஜொலித்த குங்குமப் பொட்டின் ஜிகினாத் துளிலும் அடுப்பில் கனன்ற தீ  ஜூவாலை - நாற்புறமும் சுழன்று நெளிந்து குழம்புச் சட்டியின் அடிப்பாகத்தை நக்கி நிமிர்ந்த தீ நாக்குகளின் செவ்வொளி-படர்ந்துபட்டுப் பிரகாசித்தது.

அவள் அடுப்பை, கனன்று எரியும் கங்குகளைப் பார்த்தவண்ணம் நின்றிருந்தாள். அவள் கண்களில் கங்குகளின் பிம்பம் பிரதிபலித்தது. அவள் முகத்தில் புதிய, இதுவரை அவன் காணாத அனுபவிக்காத ஒரு அழகு, ஒரு தேஜஸ், ஒரு மயக்கம், ஒரு லாகிரி என்னவோ தோன்றியது. அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு அவளருகே குத்துக் காலிட்டு உட்கார்ந்திருந்தான் மருதை. அவன் இதழ்க்கடையில் சிரிப்பு சுழித்தது. கீழுதட்டை அமுக்கிப் பற்களால் கடித்தவாறு, புருவங்களை உயர்த்தி, முகத்தைச் சாய்த்து ஒரு கோணல் பார்வையோடு பெருமூச்செறிந்தான்.

"ஏ குட்டி கொஞ்சம் நெருப்பு எடு, ஒரு பீடியை எடுத்து வாயில் வைத்துக்கொண்டு கேட்டான்.

'ஐய. கூப்பிடறதைப் பாரு. குட்டியாமில்லே, குட்டி என்று முனகிக் கொண்டே தீ பற்றிய சுள்ளி ஒன்றை எடுத்து அவனிடம் நீட்டினாள். சுள்ளியை வாங்கும்போது அவள் கையையும் சேர்த்துப் பற்றிக்கொண்ட மருதமுத்து, அவள்கரங்களில் அடுக்கியிருந்த கண்ணாடி வளையல்களோடு விளையாடிக் கொண்டே கொஞ்சுகின்ற குரலில், "கண்ணாலம் கண்ணாலமின்னு கண்ணாலம் கட்டியாச்சு, இப்ப என்ன சொல்லுவியாம்," என்று குரலைத் தாழ்த்தி அவள் காதருகே குனிந்து ரகசியமாக என்னவோ கூறினான். அதைத் தொடர்ந்து கண்ணாடி வளையல்களோடு அவள் சிரிப்பும் சேர்ந்து கலகலக்க, "கையை வுடு மச்சான். அடுப்பிலே கொழம்புகொதிக்குது." என்று சிணுங்கிக் கொண்டே அவன் பிடியிலிருந்து கைகளை விடுவித்துக் கொண்டே ரஞ்சிதம் முன்றானையால் முகத்தை மூடி உள்ளுரச் சிரித்துக் கொண்டாள். அப்படி அவன் என்னதான் கேட்டானோ? அவளை வெட்கம் பிடுங்கித் தின்றது.

"ஊஹூம், சொன்னாத்தான்."

"இனிமே என்னை என்னா கேக்கறது?" என்று சொல்லிவிட்டு மறுபுறம் திரும்பி அடுப்பைக் கவனிக்க முனைந்தாள் ரஞ்சிதம். அவள் முதுகில் என்னமோநமைத்தது. உடல் முழுவதும் சிலிர்த்தது. சோறு சமைத்துக் குழம்பு காய்ச்சிப் புருஷனுக்கு விருந்து படைத்துவிட்டுத் தானும் சாப்பிட உட்கார்ந்தாள்- எல்லாம் நடுத்தெருவில்தான்! ரஞ்சி, நான் பார்க்கிலே அந்த மூலை பெஞ்சியிலே படுத்திருக்கேன்," என்று மற்றவர்கள் காதில் விழாதபடி சொல்லிவிட்டுச் சென்றான் மருதமுத்து

சோறும் குழம்பும் நன்றாகத்தான் இருந்தது என்றாலும் ரஞ்சிதத்திற்கு சோறு கொள்ளவில்லை.

மணி பத்துக்கு மேலாகிவிட்டது. பார்க்கிலுள்ள மூலை பெஞ்சில் மருதமுத்து புரண்டுப் புரண்டு படுத்துக் கொண்டிருந்தான். பெஞ்சுக்குக் கீழே கிழிந்த பாயும் பழைய போர்வையும் கிடந்தன. அவன் விரல்களுக்கிடையே பீடி நெருப்பு கனிந்துகொண்டிருந்தது. இன்னும் தெருவில் சந்தடி அடங்கவில்லை. 

ரஞ்சிதம் தயங்கித் தயங்கி மெள்ள மெள்ள அசைந்து பார்க்குக்குள் நுழைந்தாள். அவனருகே தலைமாட்டில் அவனுக்குத் தெரியாமல் வந்துநின்றாள். தன் பின்னால் அவள் வந்துநிற்பதை அறிந்தும் அறியாதவன் போல் கண்களை மூடிக்கொண்டு படுத்திருந்தான் மருதமுத்து தான் துங்கிவிட்டதாக அவள் எண்ணிக் கொள்ளட்டும் என்று லேசாகக் குறட்டை விட்டான். ஆனால் அவன் கையில் புகைந்துகொண்டிருந்த பீடித்துண்டு அவனை அவளுக்குக் காட்டிக் கொடுத்துவிட்டது. அவளுக்குச் சிரிப்பு வந்தது. சிரிப்பை அடக்கிக் கொண்டு மெளனமாய் நின்றிருந்தாள். அவளுக்குக் கழுத்து நரம்புகளில் உள்ளுர என்னவோ உரசிக்கிளுகிளுத்து ஓடி உடல் முழுவதும் பரவுவதுபோல் இருந்தது. அவனுக்கும் அங்கு நிலவிய மெளனம் சிரிப்பை மூட்டியது. அவன் அடக்கிப் பார்த்தான். அவன் முகத்தில் சிரிப்பின் ரேகைகள் ஓடிப் பாய்ந்துகளுக்கென்று குரலும் வெடித்துவிட்டது. அவளும் சிரித்தாள். இருவரும் ஒருவரைப் பார்த்து ஒருவர் காரணமின்றியோ காரணத்தோடோ விழுந்து விழுந்து சிரித்தனர். சிரித்து ஓய்ந்த பின் ரஞ்சிதம் பெஞ்சின் மறுகோடியில் நாணிக்கோணி உட்கார்ந்தாள். 

"ரஞ்சி, வெத்தலை பாக்கு வெச்சிருக்கியா? குடு" அவள் வெற்றிலை மடித்துக் கொடுத்தாள். மருதமுத்து வெற்றிலையைச் சுவாரஸ்யமாக மென்று கொண்டே அவளருகில் உட்கார்ந்துகொண்டான்.

நல்ல நிலவு.

நிலாவெளிச்சம் அந்தக் காதலர்களுக்கு இன்பமளிக்க வில்லை; இடைஞ்சலாய் இருந்தது.

பெஞ்சின்மீது அமர்ந்திருந்த ரஞ்சிதத்தின் முகத்தில் ஓங்கி வளர்ந்த அரசமரக் கிளைகளின் ஊடே பாய்ந்து வந்த நிலவின் ஒளிக் கதிர்கள் விழுந்துகொண்டிருந்தன. அந்த ஒளியில் அவள் விழிகள் மின்னின. வெற்றிலைக் காவி படிந்த உதடுகளில் ஊறிப் படர்ந்த வெற்றிலைச் சாற்றின் மினுமினுப்புமருதமுத்துவின் உதடுகளை என்னவோ செய்தது. அவன் உதட்டைக் கடித்துக்கொண்டு அவளையே பார்த்தான். அவள் கழுத்திலே கிடந்த கருவ மணியும் மஞ்சள் கயிறும் முறுக்கிக் கொண்டு மார்பின் நடுவே தடுமாறி நெகிழ்ந்து கிடந்தது. நழுவிப் போன மேலாக்கினுடே, ரவிக்கையில்லாத கருங்காலிக் கடைசல் போன்ற தேகத்தின் வனப்பு மறைந்தும் மறையாமலும் மருதமுத்துவை மயக்கிற்று.

ரஞ்சி! 

அவள் பெருமூச்சு விட்டாள்.

விம்மி மேலெழுந்து அவள் நெஞ்சம் புடைத்ததனால் நிலை குலைந்த மருதமுத்து அவளை, அவளுடைய வெற்றுடலை மார்புறத் தழுவிக் கொண்டான்.

"வுடு மச்சான்," என்று திமிறிக் கொண்டு தன்னைச் சரி செய்துகொண்டு நகர்ந்து உட்கார்ந்தாள் ரஞ்சி.

எதிரிலிருக்கும் முஸ்லிம் ரெஸ்டாரண்ட் இன்னும் மூடப்படாததை அப்பொழுதுதான் கவனித்தான் மருதமுத்து.

"சீச்சி. இந்தப் பார்க்ரொம்ப நாஸ்டியாப் போச்சு," என்று ஒரு வெள்ளை வேஷ்டிக்காரன் இவர்களைப் பார்த்தவாறே தம்மருகில் வந்தவரிடம் சொல்லிக் கொண்டே நடந்தான். மருதமுத்துவின் உடல் நாணிக் கூசியது, ரஞ்சிதம் பரிதாபகரமாக விழித்தாள்.

"நம்ம ஊரிலேயே கண்ணாலம் கட்டிக்கிட்டிருந்தா? என்று சொல்ல வந்ததை முடிக்க முடியாமல் ரஞ்சியின் குரல் அடைத்தது.

அவனும் பெருமூச்சு விட்டான்.

"கஞ்சியில்லாட்டியும் நமக்குன்னு ஒரு குடிசையாச்சும் இருக்குமில்லே. பட்டினியோட ஒருத்தருக்கும் தெரியாம கவுரவமா படுத்துக்கெடக்கலாமில்லே. சீச்சி இது என்ன பொழைப்பு? தெருவிலே கண்ணாலம் கட்டிக்கினு தெருவிலே புள்ளை பெத்துக்கினு தெருவிலே செத்தும் போறது," என்று சலிப்புடன், வெறுப்புடன், துயரத்துடன், ஏமாற்றத்துடன், ஏக்கத்துடன் முனகிக் கொண்டாள் ரஞ்சி. 

அவன் மெளனமாய் இருந்தான். சற்று நேரம் கழித்து ஒரு பெருமூச்சுடன் சொன்னான்.

"என்னாபண்றது ரஞ்சி?... அவுங்க அவுங்க தலையெழுத்துப்படிதா நடக்கும். ஊர்லே ஒலகத்திலே எவ்வளவோ பேரு கண்ணாலம் கட்டிக்கிறாங்க. பங்களா என்னா! காரு என்னா! அதிலாட்டிப் போனாலும் ஒரு சின்ன வீடு, ஒரு பஞ்சு மெத்தை - அதாவது இருக்கும். எல்லாத்துக்கும் குடுத்து வைக்கணும்  நம்ம விதி இப்படி," என்று வருத்தத்தோடு புலம்பினான். 
"என்னாமச்சான், இதுக்கா நீ கவலைப்படறே? நீ இருக்கிற வரைக்கும் எனக்கு ஒரு குறையும் இல்லே, காரும் பங்களாவும் வெச்சிருக்கிறவங்க கதையெல்லாம் தெரியாதுபோலிருக்கு. ஆம்படையான் பெண்டாட்டி விசயம் கச்சேரி வரைக்கும் சிரிக்குதே. நம்ம மாதிரி அவுங்களுக்கு ஒருத்தர் மேலே ஒருத்தருக்கு ஆசையிருக்குமா..?"

'இனிக்கும் இன்ப இரவே நீ வாவா...' என்று ஹோட்டல் ரேடியோ விரகத்தால் உருகிக் கொண்டிருந்தது. ஜன சந்தடி அடங்கிவிட்டது. ஹோட்டலில்கூட ஆள்நடமாட்டம் அதிகம் இல்லை.

மணி பன்னிரண்டு அடித்தது.

பிளாட்பாரத்தில் வாழும் மனிதர்களெல்லாம் உறங்கிக் கொண்டிருந்தனர். பனி மூட்டம் அவர்களின் மீது கவிந்து கொண்டிருந்தது. விறைக்கும் குளிரில் அழுக்குக் கந்தல்களினுள் அந்த ஜீவன்கள் முடங்கிக் கிடந்தன. பச்சைக் குழந்தைகள் தாயின் மார்பினுள்ளே மண்டிக் காந்தும் வெப்ப சுகத்தில் பம்மிக் கொண்டன. அவர்கள் தலைமாட்டில் சொறி நாய்களும், கிழட்டு மாடுகளும் அரைத் தூக்கத்துடன் காவல் காத்தன.

பார்க்கில் நிசப்தம் நிலவியது. மருதமுத்து பெஞ்சியிலிருந்து எழுந்து செடி மறைவில் விரித்திருந்த பழம்பாயில் படுத்துப் புரண்டு கொண்டிருந்த ரஞ்சிதத்தின் அருகே சென்று அமர்ந்தான். ரஞ்சி. தூங்கிட்டியா?"

'இல்லே..."

ஒனக்குக் குளிருதா?

'உம்'

இருவரும் மொடமொடக்கும் அவளுடைய புதிய சிவப்புப் புடவையால் போர்த்திக் கொண்டார்கள். போர்த்தியிருந்த புடவை மெள்ளமெள்ள அசைந்தது. "மச்சான்...."  அழுவதுபோல் திணறியவாறே முனகினாள் ரஞ்சிதம்.

திடீரென அந்தத் தெருவிலிருந்து ஒரே வெளிச்சம் அவர்கள்மீது பாய்ந்தது

"ஐயோ..." என்று பதறினாள் ரஞ்சி.

"காருதான். போயிடும்." அவன் தோளில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டாள் ரஞ்சிதம் கார்சென்ற பிறகு, உலகத்தையே, தங்களையே மறந்திருந்த அவர்களின் அருகே காலடி ஓசைகளும் பேச்சுக் குரலும், சிரிப்பொலியும் கேட்டன.

மினர்வா தியேட்டரில் இரண்டாவது காட்சி முடிவடைந்து கும்பல் வீதியில் பெருகி வந்துகொண்டிருந்தது.

மருதமுத்து எழுந்து சென்று பெஞ்சின் மேல் படுத்துக் கொண்டான். ரஞ்சிதத்திற்கு அழுகையே வந்துவிட்டது.

மருதமுத்துவுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது யார்மீது ஆத்திரப்படுவது?

கும்பலில் ஒரு பகுதி முஸ்லிம் ரெஸ்டாரண்டிற்குள் படையெடுத்தது. வெகுநேரம் வரை சந்தடி அடங்கவில்லை.

மணி ஒன்று அடித்தது. 

முஸ்லிம் ரெஸ்டாரெண்டில் ஆளரவமே இல்லை. பார்க் அருகே ஒரு ரிக்க்ஷாக்காரன் நின்றிருந்தான். அவனருகே ஒரு மஸ்லின் ஜிப்பாக்காரன். அப்புறம் என்ன சொல்றே?"

வா, சாமி. நல்ல ஸ்டூடன்ஸீங்கதான் பிராமின்ஸ் சார். வண்டியிலே ஏறு சார். போவும்போது பேசிக்குவோம்."

மஸ்லின் ஜிப்பாக்காரனை ஏற்றிக் கொண்டு நகர்ந்து பிராட்வேயிலிருந்து பிரியும் ஒரு சிறிய சந்தில் நுழைந்து விரைந்து மறைந்தது ரிக்க்ஷா .

தூ... இதுவும் ஒரு பிழைப்பா? கஸ்டப்பட்டு வண்டி வலிக்கிற அந்தக் கயிதைக்கு ஏன் இந்தப் பேமானிப் புத்தி? என்று காறி உமிழ்ந்தான் மருதமுத்து.

"என்ன மச்சான் திட்டறே?"

'ஊரும் ஒலகமும் இருக்கறதைப் பார்த்தா திட்டாமெ எப்படி இருக்கிறது? இன்னம் ஒனக்குத் துக்கம் வரல்லியா. உம். எப்படி வரும்" என்று தனக்குத் தானே பேசிக் கொண்டான் மருதமுத்து.

நிலவுமேகத்தில் மறைந்தது.

ஒளி மிக்க அந்த பூர்ணிமை இரவும் இருண்டது. முஸ்லிம் ரெஸ்டாரெண்டும் மூடப்பட்டது. மனித சந்தடியே அற்றுப் போயிற்று.

ஒரே அமைதி.

பார்க்கினுள் நெடிது வளர்ந்திருந்த அரசமரக் கிளைகளில் காகங்கள் சலசலத்தன விடிந்துவிட்டதுபோன்ற பிரமை போலும். சில காகங்கள் கரைந்தன. வெளிறிய இருளின் பிடிப்பில் ஊமைத்தனம் போல் நட்சத்திர ஒளி ஜாடை காட்டிற்று. நாய் ஒன்று எழுந்துநின்று உடலை வளைத்து முறித்துச் சடசடத்து உதறிக்கொண்டு அலுப்புத் தீர்ந்ததுபோல் எங்கோ நோக்கி வேகமாக ஓடியது. 

மணி இரண்டு அடித்தது.

ரஞ்சி.

............

ரஞ்சி.

'உம்."

பெஞ்சு காலியாயிருந்தது. செடி மறைவில் இலையோ இருளோ அசைந்தது. 
"டக். டக. டக்"

முதலில் அந்த ஓசையை அவர்கள் பொருட்படுத்தவில்லை.

"டக் டக். டக் டக்." ஓசை அவர்களைச் சமீபிக்கவே அவர்கள் சலனமின்றி ஒன்றிக் கிடந்தனர்.

'ஏய், யாரது? எழுந்து வாம்மே' என்ற போலீஸ்காரனின் முரட்டுக் குரல், வலுக்கட்டாயமாக-மிருகத்தனமான-மனித உணர்ச்சிகளிலிருந்து மனித நாகரிகத்தின் புதை குழிக்குஅவளிடமிருந்து அவனைப் பிய்த்தெறிந்தது. 

அவன் உடல் பதை பதைக்க உதடுகள் துடிதுடிக்க எழுந்து வந்தான். அவள் செடி மறைவில் நின்று தனது புடவையைச் சுற்றிக் கொண்டாள்.

'வெளியே வாம்மே' என்று போலீஸ்காரன் அசூயையுடன் உறுமினான்.

"பயம்மா இருக்கே மச்சான்." என்று அந்தப் பட்டிக்காட்டு யுவதி பரிதாபகரமாகத் தன் கைபிடித்த கணவனிடம் குழறினாள். அவள் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.

"பயப்படாதே வா, ரஞ்சி"  என்று அவள்கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு பார்க்கின் இரும்புக் கிராதியைத் தாண்டிக் குதித்து வெளியே வந்தான் மருதமுத்து விளக்குக் கம்பத்தடியில் போலீஸ்காரன்நின்றிருந்தான்.

"யார்ரா நீ?" என்று சிகரெட் புகையை அவன் முகத்தில் ஊதிவிட்டான் போலீஸ்காரன்.

"வந்து .. வந்து கூடைக்காரன், சாமி."

'ஏய், இப்படி வெளிச்சத்துக்கு வாம்மே'  என்று அவளைக் கூப்பிட்டான் போலீஸ்காரன். அவள் பயந்து நடுங்கிய வண்ணம் விளக்கு வெளிச்சத்தில் வந்துநின்றாள். நெற்றித் திலகம் கலைந்து, கூந்தல் அவிழ்ந்து சிகையில் சூடிய கதம்பம் சிதைந்து சிதறிக் கிடந்தது. 

"ஏம்மே. இங்கதான் இடமா? ஒம் பேரு என்னாம்மே?" என்று பாக்கெட்டிலிருந்த சிறு நோட்டுப் புத்தகத்தையும், பென்சிலையும் கையிலெடுத்தான் போலீஸ்காரன். 

அவள் ஒன்றும் புரியாமல் குழப்பத்துடன், "ரஞ்சிதம், சாமி" என்றாள். 

"சார். சார்." என்று ஏதோ சொல்ல வாயெடுத்தான் மருதமுத்து.

"நீ ஒண்னும் பயப்படாதே, இவதான் என்னைக் கூப்பிட்டான்னு ஸ்டேஷனுக்கு வந்து ரிப்போர்ட்டு குடுத்துடு. ஒன்னே விட்டுடுவோம்," என்றான் போலீஸ்காரன்.

ரஞ்சிதத்திற்கு விஷயம் விளங்கி விட்டது.

"நாங்கபுருஷன், பெஞ்சாதி சாமி." என்று பதறினாள் ரஞ்சிதம் .
போலீஸ்காரன் சிரித்தான். அவள் சொன்னதை அவன் நம்பவில்லை.

"சத்தியமாத்தான் சாமி. இந்தப் புள்ளையார் சாட்சியா நாங்க புருஷன் பெஞ்சாதிங்க சாமி. இதோ பாருங்க" என்று அவள் கழுத்தில் கிடந்த கயிற்றை வெளியே இழுத்துக் காண்பித்தான் மருதை.

சட்டத்தின் வேலிக்குள் நிற்கும் அந்தப் போலீஸ்காரனால் தலையை நிமிர்த்தி அந்த மஞ்சள் கயிற்றைக் காண முடியவில்லை. அவன் சட்டம் இருட்டைத் துருவி திருட்டைக் கண்டுபிடி என்றுதான் கற்றுக்கொடுத்திருக்கிறது. மனசைத் துருவி உணர்ச்சியைப் பார் என்று சொல்லிக் கொடுக்கவில்லை.

அவன் கண்டுபிடித்தது குற்றம். குற்றவாளியைக் கைதுசெய்ய வேண்டியது சட்டம். சட்டத்தின் வாரிசு போலீஸ்காரன். அவன் ஒழுக்கத்தின் பிரதிநிதியோ உண்மையின் தூதுவனோ அல்ல.

'உம், நட நட'. அதெல்லாம் ஸ்டேஷனிலே பேசிக்கலாம் என்று அவளைத் தள்ளினான்.

"ஐயா. ஐயா...' என்ற அந்தக் காதல் 'குற்றவாளி' ரஞ்சிதம் கெஞ்சினாள். தன் கணவனின் முகத்தை ஏக்கத்தோடு பார்த்தாள். அவன் தலையைக் குனிந்த வண்ணம் போலீஸ்காரனுடன் நடந்து கொண்டிருந்தான். அவளும் அவர்களைத் தொடர்ந்தாள்.

ஊரே அடங்கிய அந்த அமைதியான இரவில் அந்த நகரத்தின் பெரிய வீதியில் சட்டத்தின் ஹிருதயத் துடிப்புபோல் ஜீவனுடன் கம்பீரமாக போலீஸ்காரனின் பூட்ஸ்களின் சப்தம் டக் டக் என்று ஒலித்தது. 
ரஞ்சிதத்திற்குத் தன் ஹிருதயத்தில் யாரோ மிதிப்பதுபோல் பக் பக் என்று நெஞ்சு துடித்தது.

எதன் மீதோ மிதித்து நசுக்கி நடந்துசெல்லும் சட்டத்தின் காலடியோசை.

அதோ, டக். டாக். டாக். டக்.


***************************************

தேமொழி

unread,
Jan 19, 2016, 11:08:31 PM1/19/16
to மின்தமிழ், vall...@googlegroups.com

ஒருகாம்பிருதலையும் பூ



-- நரசய்யா


[ திரு நரசய்யா எழுதிய முதற்கதை விகடனில் 1964 ஆம் வருடம் செப்டம்பரில் வெளியானது. இக்கதை 100 கதைகளைத் தாண்டியது. திரு நரசய்யா அவர்களின்  அரை நூற்றாண்டு இலக்கியப் பயணத்தின் நினைவாக!]


“கல்லுருகுங் காலங் கழுகறியு மக்காலம்
வையக மெல்லா மலர்ந்தபூ வண்டறியும்
ஓங்க லறியு முயர்கடலி னுள்ளாழம்

பாங்கனுக்குப் பாங்கன் பயன்றிவான் மன்ற
அறிவா ரறிவா ரறியா ரறியார்
ஒருகாம் பிருதலையும் பூ”

பெருந்தொகை பாட்டு எண் 1800

அகலிகை வெண்பா முன்னுரையிலிருந்து தொகுக்கப்பட்டது.
(கழைக்கூத்தியொருத்தி கழை மேனின்று ஆடியபோது பூப்படையக் கழையினின்று இறங்குக்காற் பாடியது )

சென்னை மாநகரின் அடையாறில் வசிக்கும் எனக்குக் கழைக்கூத்தாடிகளைப் பற்றி அதிகம் தெரியாதுதான். ஆனாலும் அன்றொருநாள் சர்வ சித்தி விநாயகர் கோவிலுக்குச் சென்று திரும்புகையில் அடிக்கப்பட்ட தம்பட்ட ஒலி என்னை நிறுத்தித் திரும்பிப் பார்க்கச் செய்தது!

அது சாதாரண ஒலியில்லை, ஓலம்! பசியையும் ஏழ்மையையும் அறிவித்து, எங்களைப்பார் என்பதைப் போல இருந்ததால் நின்று கவனித்தேன். அதிகமாக எவரும் கவனிக்கவில்லை. இரண்டு பக்கங்களிலும் கிராஸ வடிவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூங்கில்களின் இடையில் சுமார் 10 அடி நீளத்திற்குக் கட்டப்பட்ட கயிறு. கீழே ஒரு துண்டு விரிக்கப்பட்டிருந்தது. தந்தையும் தாயும் தம்பட்டத்தை அடித்துக்கொண்டு பாடிக்கொண்டு மக்களின் கவனத்தை ஈர்க்க முன்று கொண்டிருந்த நிலை! ஒரு பெண்; சுமார் 10 லிருந்து 13 வயதிற்குள்ளென சொல்லலாம்; தயாராக நின்று கொண்டிருந்தாள். நான் நின்று பார்ப்பதைப் பார்த்த தந்தை இன்னும் வேகமாக தம்பட்டத்தை அடித்துக் கொண்டிருந்த போது இன்னும் சிலர் சேர்ந்தனர். அப்பெண் எப்படியோ அந்த மூங்கில் வழியாக கயிற்றின் மீது ஏறி, கையில் ஒரு நீண்ட குச்சியையும் வைத்துக்கொண்டு கயிற்றில் மீது நடக்க ஆரம்பித்தாள். இன்னும் இரண்டு மூன்று மனிதர்கள் சேர்ந்து விடவே உறசாகத்துடன் தம்பட்டம் ஒலிக்க அவளும் இரண்டு முறை மேலும் கீழுமாக நடந்து விட்டாள். சிலர் சில்லரையை அந்தத் துண்டின் மீது எறிந்து விட்டு அகன்றனர். திடீரென அப்பெண் கீழே இறங்கிவந்து ஏதோ தன் தாயிடம் முணுமுணுக்கவும் தம்பட்ட ஒலி நின்றது. மனைவியைப் பார்த்த அந்த மனிதன் அவள் செயத ஜாடையைப் புரிந்து கொண்டு எக்காராணத்தாலோ தலையில் அடித்துக் கொண்டான்.

********

இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு முன்னால், எனது சகோதரர்களுடனும் அவர்கள் குடும்பத்தினருடனும் தி. நகரின் ஒரு சுமாரான பெரிய ஹோட்டலுக்குச் சென்றிருந்தோம். நாங்கள் சென்றது அங்கு நடக்கவிருந்த ஒரு திருமண வரவேற்புக்காக; அந்த ஹோட்டலின் நுழைவாசலில் சில அறிவிப்புகள் இருந்தன. அதைப் பார்த்து எங்கு செல்ல வேண்டுமெனத் தெரிந்து கொள்ள வேண்டும. திருமண வரவேற்பு எங்கு எனப் பார்த்துக் கொண்டிருக்கையில், அங்கு வைக்கப்பட்டிருந்த மற்றொரு அறிவிப்பு என் கவனத்தை ஈர்த்தது. . . .இன்னாரின் மகளான செல்வி . . . எனப்பட்டவள் புஷ்பவதி ஆகிவிட்டதை அந்த அறிவிப்பு பிரகடனப்படுத்திக் கொண்டிருந்தது. அதற்காக அப்பெண்ணின் பெற்றோர்கள் ஒரு வரவேற்பு ஏற்பாடு செய்திருக்கின்றனர்!

அதற்காக ஒரு விழா எடுக்கப்பட்டுள்ளது. அங்கு அந்த ஏற்பாட்டிற்காக வந்திருந்தவர்களெல்லோருமே சுமாராக பணம் படைத்தவர்களாகத்தான் இருக்க வேண்டும். கைகளில் பல தினுசு தினுசான பரிசுப் பொருளகளும் இருந்தன! என்னதான் செய்கிறார்கள் என்று பார்க்க நானும் அந்த ஹாலின் அருகில், துணைக்கு எனது இளைய சகோதரனின் புத்திரியான ரம்யாவையும் அழைத்துக் கொண்டு சென்றேன். ஒரு கல்யாண வரவேற்பு போலவே இருந்தது. வந்தவர்கள் எல்லோரும் அப்பெண்ணின் பெற்றோரை வாழ்த்தினர். அப்பெண் கையில் பரிசுப் பொருளகளைத் தந்து மகிழ்ந்தனர். அப்பெண்ணின் உருவத்தையும் மீறி அவளுக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தலை நிறையப் பூ! திரும்பவும் வந்து அந்த பிரகடனத்தைப் பார்த்தேன்.

“புஷ்பவதி ஆன… ” அப்போது என்னையும் அறியாமல் சிரித்து விட்டேன். ரமயா ஏன் சிரிக்கிறீர்கள் எனக் கேட்டாள். “ரம்யா நீயே நினைத்துப் பாரேன்.

சப்போசிங் மெனோபாஸுக்கு இந்த மாதிரி ஒரு விழா எடுத்தால் எப்படியிருக்குமென்று?’

“சீ” * * * *

திடீரெனத் தம்பட்ட ஓசை நின்று விட்டதையடுத்து. தலையில் கை வைத்துக் கொண்டிருந்த அந்த தந்தையின் அருகில் சென்றேன். “என்னாச்சு?” “என்னத்தை சொல்ல சார். இவளை நம்பித்தான் நாங்க பொழப்பு நடத்துறோம் இப்போ பாருங்கோ திடீர்னு பொண்ணு பெரியவளாயிட்டதா இவ சொலறா. .”

தனது மனைவியைச் சுட்டிக்காட்டிச் சொன்ன அந்த மனிதனின் நிலைமையைக் கண்டால் பரிதாபமாயிருந்தது. தாய்க்கு மட்டும் தான் தெரியும் அப்பெண் பூப்பெய்து விட்டது; அதைத்தான அறிவார் அறிவார் என்றும் அறியார் அறியார் என்றும் சொன்னார்களோ! தாயோ, ஒரே நேரத்தில், சந்தோஷத்தையும் துக்கத்தையும் தனது முகத்தில் காட்டிக்கொண்டிருந்தது எனக்குத் தெரிந்தது. துண்டில் கிடந்த சில்லரையில் சிலவற்றைப் பொறுக்கியெடுத்துக் கொண்டு கோவிலுக்குச் சென்று அங்கு பூ விற்றுக்கொண்டிருந்த மாதிடம் இவ்விஷயத்தைச் சொல்லவும், அம்மாதோ, சற்றும் தயங்காது, பணத்தை மறுத்து விட்டு இரண்டு முழம் பூவை எடுத்து அந்த தாயிடம் அளித்து வாழ்த்தும் சொன்னாள்! அதைக் கொண்டு வந்து அப்பெண்ணிற்கு அணிவித்து விட்டு கட்டிப்பிடித்துக் கொண்ட தாய் யுகாந்திரமாக தாய்மார்கள் அனுபவிக்கும் சந்தோஷத்தை வெளிப்படுத்த முடியாமல் நின்று கொண்டிருந்தாள். வெளியிலிருந்தே உள்ளே வீற்றிருக்கும விநாயகரை நோக்கித் தொழுது நிற்கையில் அப்போதே வெளியிலிருந்து வந்து கொண்டிருந்த அர்ச்சகார் நாராயண சாஸ்திரியைப் பார்த்து அம்மாது சொன்னாள்: “சாமி, எம்பொண்ணு பெரியவளாயிட்டா; கும்பிடறேன்” என்றாள். “அப்பிடியா! இனணிக்கு திதி நடசத்திரம் எல்லாமே பேஷா இருக்கு ஒம்பொண்ணு பிரகாசிப்பா; இந்தா” என்று அவர் குங்குமப் பிரசாதமும் பூவும் கொடுத்தார். அப்பெண்ணின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை!

தந்தையின் முகம் மாறுபட்டிருந்தது. அவர் சந்தோஷத்தில் உள்ளாரா, துக்கத்தில் ஆழந்து கிடக்கிறாரா என்று விவரிக்க இயலவில்லை! அவர்களது சம்பாத்தியமே இப்பெண்ணின் மூலம் தான்! மூவர் சாப்பாடும் அவள் கையில்தான்! ஆனாலும் அவர்களும் மனிதர்கள்தானே! தமது பெண் பெரியவளானது அவர்களுக்கும் சந்தோஷத்தைத் தானே அளிக்கவேண்டும. ஏனிந்த ஒரே நிகழ்ச்சி சிலருக்குச் சந்தோஷத்தையும் மற்றும் சிலருக்குத் துக்கத்தையும் அளிக்க வேண்டும்? கயிற்றினின்றும் இறங்கிவிட்ட அப்பெண் எவ்வளவு மாறுபட்ட அக உணர்வுப் போராட்டங்களை உண்டாக்கிக் கொண்டிருந்தாள்! திடீரென சைரன் ஒலிக்கும் கார் ஒன்று எங்களைத் தாண்டிச் சென்றது. அதுவும் ஒரு ஓசை தான்; ஏன் ஒரு ஓலம் தான்! நான் கவனிக்கப்பட வேண்டியவன் என்று அறிவித்துக்கொண்டு செல்கிறார் அக்காரினுள் உள்ளளவர். தான் செல்வது மற்றவர்களுக்குத் தெரியவில்லை என்றால், அது தன்னுடைய கர்வபங்கம் என்று நினைத்துத் தான்அவ்வாறு ஓலத்தை ச் செயது கொண்டு அவரும் பாவம் செல்கிறார்!

அதிலிருப்பபவரும் மனிதன் தான். அரசியல் வாதியோ அல்லது உயர்ந்த பதவியிலிருக்கும் அதிகாரியாகவோ இருக்க வேண்டும். வெட்கம் கெட்டவர்கள்! எனது வாய் முணுமுணுத்தது இவர்கள் செல்வது உலகுக்கு எல்லாம் தெரியவேண்டுமா? “சைரனுக்குப் பதிலாக, நீயும் ஒரு தம்பட்டத்தை ஏன் கையில் எடுத்துக் கொள்ளக்கூடாது. அதை அடிக்கக்கூட உனக்கு ஆட்கள் தயாராகக் கிடைப்பார்களே!” எனக் கேட்கலாம் போலிருந்தது! இங்கு தம்பட்டம் அடித்து தனது இருப்பிடத்தை உணர்த்திக் கொண்டிருக்கும் இந்த கழைக்கூத்தாடிக்கும் சைரனை அடித்துக்காட்டிக்கொன்டு மற்றவர்கள் உபயத்தில் பெரும் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் இந்த”பெரிய” மனிதர்களுக்கும் என்ன வித்தியாசம்?

இந்த கழைக்கூத்தாடியே சிறந்தவர்! ஆனாலும் நடைமுறையில் தினசரி சாப்பாட்டிற்கே ஆட வேண்டிய நிலை! பள்ளி செல்ல வேண்டிய வயதில் கழைக்கூத்து! சைரன் கார்காரர் தனது சொந்த விளம்பரத்திற்காக “சிறாக்களைப் பள்ளிக்கு அனுப்புங்கள்; வேலை செய்ய அனுப்பாதீர்கள்” எனச் சொல்லலாம்! வேறுபாடுகள் இவ்வளவா?

ஹோட்டலில் வாழ்த்துப் பெற்றவளும் ஒருத்தி தான். இங்கு நிற்கும் இக்காம்பு, தனது இரு மருங்கிலும் பூ ததும்ப நிற்கிறாளே இவளும் ஒரு மனுஷிதான்! ஆனால் மனிதர்களுள எவ்வளவு வேறுபாடு! மூங்கில்களை சேர்த்துக் கொண்டுகயிற்றையும் சுற்றிக் கொண்டு கிளம்பத் தயாராகிவிட்டார் அந்தக் கழைக்கூத்தாடி! சுற்றிக் கொண்டிருந்த துண்டின் அருகில் சென்று என் பையிலிருந்து எடுத்த ரூபாய் நோட்டை அத்துண்டில் போட்டேன். அக்கூத்தாடியின் கண்கள் அகல விரிந்தன. “ஐயா! நீங்கள் பிள்ளை குட்டிகளோடே நல்லா இருக்கணுமய்யா!” என்ற போது அந்த வார்த்தைகளின் உண்மையும், ஹோட்டலில் பார்த்த சமுதாய நோக்கிற்காகச் சொல்லப்பட்ட வார்த்தைகளின் ஆழமின்மையும், அரசியல் வாதியோ ஒரு அதிகாரியோ சென்ற அக்காரின் அபத்தமான சைரனின் ஒலியும் இரைந்தே சொல்லியவை, ” மன்ற அறிவா ரறிவா ரறியா ரறியார்” என்ற வார்த்தைகள்தாம்! அவ்வார்த்தைகள் அந்த இடத்திலெல்லாம் வியாபித்து, எல்லா பக்கங்களிலிருந்தும் என்னைத் தாக்கின. இருதலையும் பூ கொண்ட அப்பெண்ணை இப்போது பெற்றோர்கள் அரவணைத்து ஆனந்தத்துடன் முத்தமிட்டனர்! அவர்கள் அறிவர். வையக மெல்லா மலர்ந்தபூ வண்டறியும்; ஓங்கல் அறியும் கடலாழம்!


நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=65668


About the Author

நரசய்யா

நரசய்யா has written 3 stories on this site.

இலக்கியப் பயணத்தில் அரை சதம் (50 ஆண்டுகள்) கடந்து வந்து எழுத்துலகில் பெரும் சாதனை புரிந்து, எண்ணற்றோருக்கு வழிகாட்டியாகவும் இருப்பவர் திரு. நரசய்யா அவர்கள். எளிமையும், தன்னடக்கமும் தன்னகத்தேக் கொண்ட இவரது அனுபவம் வாய்ந்த எழுத்துகளும், தெளிந்த ஆய்வுக் கட்டுரைகளும், நூல் விமர்சனங்களும், ஆங்கிலம் மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும், வருங்கால எழுத்தாளர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்வது என்றால் அது மிகையாகாது. இவருடைய முதல் தமிழ் சிறுகதை, தாம் தமிழ் மொழியை முழுமையாக அறியாத காலத்தில் எழுதிய கதையே, 1964ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், ஆனந்த விகடன் முத்திரைக் கதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்று ஒன்பது கதைகள் முத்திரையிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. கப்பலில் மாலுமியாக இவர்தம் நெடிய வாழ்க்கைப் பயணம் பல சாதனைகள் கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.





தேமொழி

unread,
Jan 22, 2016, 12:13:28 AM1/22/16
to மின்தமிழ், vall...@googlegroups.com

மரத்தடியில் முக்கனிகள்

-- சீதாலட்சுமி

மரத்தடியில் முக்கனிகளும் அமர்ந்திருந்தனர். மா, பலா, வாழை. வாழையிடம் ஒரு வாட்டம். மேலும் மாங்கனியைப் பார்த்த பார்வயில் நேசமில்லை. பலா அதனைக் கவனித்துவிட்டது.

“என்ன வாழையம்மா, வாடிப்போயிருக்கீங்க ?மனதிலே ஏதோ ஒண்ணு உங்களை உருத்திக்கிட்டு இருக்கு. வெளி வந்துடட்டும். பாரம் போய்டும்” என்று சாமர்த்தியமாக விசாரித்தது பலாக்கனி..

“நன்றி கெட்ட ஜனங்கள். காலம் பூராவும் அவங்களுக்குக் கிடைக்கற மாதிரி இருக்கேன். குறைச்ச காசுக்குக் கிடைக்கும். பழங்கள் வரிசை போடறப்போ என் பேரையில்லே முதல்லே போட்டிருக்கணும். நீங்க ரெண்டு பேரும் சீசன் பழங்க. மாம்பழத்துப் பேரை முதல்லே போடலாமா ?” கேள்வியை ஆத்திரத்துடன் கேட்டது வாழை.
மாங்கனி சிவந்து விட்டது.

“முதல்லே பேரைப் போட்டுட்டு மொத்து மொத்துனு அடிக்கறாங்களே அது கண்ணுக்குத் தெரியல்லியா?” என்று வருத்ததுடன் கேட்டது மாங்கனி. பலாக்கனிக்கு சுவாரஸ்யம் வந்துவிட்டது.
“ஆஹா, இன்னிக்குப் பொழுது போகும். கதை கிடைச்சிருச்சு. “என்று  மனத்திற்குள் நினைத்தது. . அதன் தோற்றத்திற்கேற்ற புத்தி. உள்ளும் புறமும் வித்தியாசம்.. “அதென்ன மாங்கணி, உன்னை யாரு மொத்தறாங்க” என்று கனிவான குரலில் கேட்டது பலா.  வாழைக்கனி மவுனமாக நாடகத்தைப் பார்க்க ஆரம்பித்தது. மாம்பழத்தின் கதை
நாரதர் ஒரு மாம்பழத்தைக் கைலாயத்திற்கு எடுத்துச் சென்றது அவர் தவறு.மகேசனே ஆனாலும் மனைவி மக்களை விட்டுச் சாப்பிடுவாரா ? குழப்பத்தை உண்டு பண்ணவே ஒற்றைக் கனியைச் சிவனிடம் கொடுத்தார்..வந்து
தொலைந்தது பரிசோதனை.

உலகைச் சுற்றி முதலில் வரும் பிள்ளைக்கு மாங்கனி. இது குசும்புதானே. உடனே சுட்டிப் பிள்ளை முருகன் மயிலில் பறந்துவிட்டான். பாவம் விநாயகர். பார்த்தார். அப்பா, அம்மாவைச் சுற்றினால் யோசனை சொல்லுவார்கள் என்று நினைத்து ஒரு வலம் வந்தார். அவ்வளவுதான். அவரை உற்சாகப் படுத்த எல்லோரும் கை தட்டினார்கள். பிள்ளையார் மேல் இரக்கங் கொண்டு, அப்பா அம்மாவைச்  சுற்றினால் உலகம் சுற்றியதற்குச் சமம் என்று சொல்லி விட்டார் ஒருவர்.

பிள்ளையார்குட்டியும் உடனே அதையே சொல்லிவிட்டது. குழந்தைகள் சில நேரம் கிளிப் பிள்ளைகள் மாதிரி சொன்னதைத் திருப்பிச்  சொல்லுவார்கள்..மாம்பழம் அவர் கைக்கு வரவும் அப்பாவியாய்த் திருதிருவென்று விழித்துக் கொண்டிருந்தார். பொடிப்பைய்யன் வந்துவிட்டான். பார்த்தான். எல்லோரும் ஏமாற்றிவிட்டதை உணர்ந்தான்/ காரமான பொடியன்.

அவ்வளவுதான்.ஆடைகளைத் தூர எறிந்தான். ஆபரணங்களையும் வீசி எறிந்தான். கட்டிய கோவணத்துடன் பழனி மலைக்குப் பறந்து விட்டான்.(அக்காலத்தில் ஜட்டி கிடையாது. அதுதான் கோவணத்துடன் பறந்தான். கோவணத்தாண்டி என்ற பட்டம். ஜட்டி போட்டிருந்தால் ஜட்டி ஆண்டி என்று பெயர் வந்திருக்கும்)
இத்தனைக்கும் நாரதர்தான் மூலகாரணம். மாம்பழம் வாங்கினா  ஆண்டியாய் விடுவான்னு கேலி பேசினா வருத்தம் வராதா மாம்பழத்துக்குச் சிவன் மேலும் கோபம் அவர் இன்னொரு இடத்திலும் விளையாடியதால்தான் கேலி நிலைத்து விட்டது.

நம்ம சாலமன் பாப்பைய்யா பட்டி, மன்றத்தில் ராஜா கேலி பண்ண ஆரம்பிச்சுடுவார்னு கவலை வேறு.
பலாக்கனி கேட்டுக் கொண்டதால் இன்னொரு கதையயும் மாங்கனி சொல்லிற்று. காரைக்காலில் புனிதவதின்னு என்று ஒரு அம்மா. நல்லவங்க. பசின்னு யார் வந்தாலும் சோறு கொடுப்பாங்க. அவங்க புருஷன் ஒரு வியாபாரி.
அடிக்கடி வெளியூர் போய்டுவான். ஒருதபா ரெண்டு மாம்பழம் வாங்கிக் கிட்டு வந்து பொண்ஜாதியிடம் கொடுத்தான்.
கைலாயத்தில் ஒரு மாம்பழம். காரைக்காலில் ரெண்டு மாம்பழம்.  இந்த சிவனுக்கு எப்படி குசும்பு.எல்லாம் அவரோட விளையாட்டு. (நம்ம சிவனை நம்ம நாட்டுக்குப் பிரதம மந்திரியாக்கிடலாமான்னு பலா மெதுவாக் கேட்டது. மாவோ கதை சொல்லுவதிலே கவனம். கதை தொடர்ந்தது)  புனிதம்மா புருஷன் வெளியிலே போயிருந்தப்போ ஒரு சாமியார்  “பசி” ன்னு வந்தார். சோறு இல்லை. ஒரு மாம்பழத்தை அவருக்குக் கொடுத்தாங்க.பசிக்கு அதாவது கிடச்சதேன்னு சாப்பிட்டுட்டு சாமியார் போய்ட்டார்.

போன புருஷன் வீட்டுக்கு வந்தான். நல்ல வேளை சாமியார் போனவுடன் அந்த அம்மா சமையல் முடிச்சிட்டாங்க. (இந்தக் காலம்னா ரெஸ்டாரண்ட்டுக்குப் போகலாம்னு சொல்லிடுவாங்க, புருஷனும் பயந்து போய் கூட்டிட்டு போவான். இந்த ஆம்புள்ளங்களுக்கு வேணும். என்னமா ஆட்டிவச்சாங்க. காலம் மாறிடுச்சுடோய்ய்ய்ய் .பயந்து நடங்க
மாம்பழ மனத்தில் இடையில் இப்படி ஒரு நாதம்) சாப்பிட உட்கார்ந்தார் அய்யா. சாப்பாட்டு இலையில் ஒரு மாம்பழம் கொண்டு வச்சாங்க. பழத்தை ருசி பார்த்தவன் இன்னொரு மாம்பழத்தையும் கேட்டுட்டான்..

பொண்டாட்டி சாப்பிட இருக்கட்டும்னு புருஷன் நினைக்கல்லே. விவஸ்தைகெட்ட மனுஷன். அவள் சாமியார் விஷயத்தைச் சொல்லியிருக்கலாம். ஒண்ணும் பேசாம உள்ளேபோய்ட்டு சிவன் அய்யாவை நினச்சு அழுதா. (ஆமாம் , இந்தப் பொம்பளைங்களுக்கு எப்படி பொசுக்குன்னு அழுகை வருது. அமெரிக்காவிலே
பிரிசிடெண்டுங்க பொண்டாட்டிங்க மேடையிலே புருஷன் ஜெயிச்சா அழுதுடுவாங்களாம் ஆனால் கிளிண்டன் பொண்ஜாதி அழமாட்டாங்களாம்ஆனால் அவரு அழுதுடுவாராம். அவருக்கு நல்ல மனசுய்யா) சிவன் அய்யாவுக்கும் இரக்கம் வந்து ஒரு பழம் கொடுத்தாரு. (அது இரக்கமா, இல்லே புருஷன் பொண்டாட்டி சண்டை போட்டுக்
கட்டும்ங்கற நினைப்புதான். கைலாயத்திலே அண்ணன் தம்பிச் சண்டை இங்கே புருஷன் பொண்டாட்டி சண்டை.கடவுளுக்குக் கூட fighting பார்க்க ஆசைதான்.

தெய்வப் பழம் தனி ருசியைக் காட்டிட்டுது. பொண்டாட்டியப் பாத்து விபரம் கேட்டான். பாவம் அந்த அம்மா. இந்தக் காலமா இருந்தா அடுக்கடுக்கா பொய் வந்திருக்கும். சினிமா, டி. வி பாக்கறாங்களே. அந்த அம்மா உண்மையைச் சொல்லிடுத்து. விடுவானா புருஷன் “அதென்ன சாமி கொடுத்ததுன்னு கதை சொல்றே. என் முன்னால் இன்னொண்ணு வரவழச்சு காட்டு”னு சொல்லிட்டான். “சரிதான் போய்யா” என்று சமஉரிமைக்குரலில் பேச இந்தக் காலம் இல்லியே கடவுளைக் கூப்பிட்டாங்க அந்த அம்மா. அதான் சிவன் அய்யா காத்துக் கிட்டே இருந்தாரே. உடனே அந்த அம்மா கைய்யில் இன்னொரு மாம்பழம் வந்துடுச்சு. புருஷன் அரண்டுட்டான். ஆம்புளங்க அவ்வளவுதான்.

ஜம்பமா பேசத்தான் தெரியும். பொண்டாட்டி நிமிந்துட்டா அடங்கிப் போய்டுவான். அப்போ அவன் ஒண்ணும்
பேசல்லே.வியாபாரத்துக்குப் போனவன் போனவந்தான் வரல்லே. புனிதம்மா வருஷக் கணக்கா காத்திருந்தாங்க. மதுரைலே இருக்கான்னு தகவல் கிடைச்சது. புருஷனைப் பாக்கப் புறப்பட்டுட்டாங்க. தைரியசாலிதான். கண்ணகி காலமா இருந்தா சாகுற வரை வூட்டுக்குள் இருந்திருப்பாங்க. வூட்லேயே இருந்திருக்கலாம். அந்த அம்மாவை
எலும்புப் பேயாக்கிடம்னு சிவக்கடவுள் முடிவு செய்துட்டாரே.

புனிதம்மா போனா, அவங்க புருஷன் இன்னொரு பொண்ஜாதி  பிள்ளைகளோட வந்து அம்மா கால்லே விழுந்துட்டான். இதுதான் சரணகதிபோல. ஆம்புள்ளங்க கெட்டிக்காரங்க. ஊருக்கு ஒருத்தியை மத்தவங்களுக்குத் தெரியாம வச்சுக்க முடியுது. அந்தக் காலத்துலிருந்து ஒரெ கதைதான். இது மனுஷங்க விவகாரம். அம்மா விஷயத்துக்குப் போகலாம். புருஷன் கால்லே விழவும் துடிச்சாங்க .வூட்டுக்கு வந்து காலத்தைக் கடத்தியிருக்கலாம். நல்ல வசதி இருந்தது. ஆனால் அந்த அம்மாவுக்கு உலகமே வெறுத்துப் போச்சு. கடவுள் கிட்டே புலம்பி அழுதாங்க. அவர்தான் காத்துகிட்டே இருந்தாரே. அந்த அம்மாவை எலும்புப் பேயாக்கிட்டாரு. இதுவும் அவர் இருக்குற
மலைக்குப் போயி , தலைகீழா படி ஏறி சிவன் சாமியைக் கும்பிட்டாங்க.  இந்த அம்மா இப்படி ஆனதுக்கும் மாம்பழம் காரணம்னு சொல்ல வச்சுட்டாரு. விளையாடறது இந்த சாமிகள். குற்றம் சொல்றது மத்தவங்களை.

மாங்கனி கதை முடிக்கவும் வாழையின் மனமும் கனிந்தது. “மாங்கனி, உன் மனசு கஷ்டம் புரியாம பேசிட்டேன். மனசுலே வச்சுக்காதே. நாம சாதாரணப் பழங்க. கடவுளோட போட்டி போட முடியுமா? கவலையை விடு” என்று வாழைக்கனி ஆறுதல் கூறியது. “எல்லாம் அந்த நாரதர் ஆரம்பிச்சு வச்சது. நமக்கும் ஒரு காலம் வரும் “ என்று பலாக்கனி கூறிக் கொண்டிருக்கும் பொழுதே அங்கே நாரதர் வந்து சேர்ந்தார். நாரதர் முகத்தில் உற்சாகம் இல்லை
இப்பொழுது பலாக்கனிக்கு நேரம் “என்ன நாரதர் சாமி, கலகத்துக்கு ஆள் கிடைக்கல்லியா ?” என்று அக்கறை கொண்டது போல் நாசுக்கா கேட்டது பலா.

நாரதருக்குக் கோபம் வந்தது. இந்த சாதாரணப் பழங்கள் கேலி செய்வதா? சமயம் வரட்டும் என்று உள்ளுக்குள் பொருமிக் கொண்டார். “அதெல்லாம் ஒன்றுமில்லை “ என்றார் நாரதர்.

“சாமி , நமக்குள்ளே என்ன சாமி, நாங்க மனுஷப் பிறவியா? சீக்கிரம் உசுரை விடற பிறவிங்க. “ என்று மெதுவாகக் கூறிவிட்டு, மேலும் தொடர்ந்து பேசியது பலா, “சாமி, நீங்க பூலோகத்துக்கு வந்துட்டீங்க. அதுவும் எங்க நாட்டுக்கு.
ஊருக்குள் போய்ப் பாருங்க. நிறைய கதை கிடைக்கும். உங்களுக்கும் பொழுது போகும் “ நாரதர் யோசித்தார் முகத்தில் புன்னகை பிறந்தது. “நான் போய்ட்டு வரேன் “ என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டு விட்டார் நாரதர்.
“எங்கே போறாரு “ என்று ஆவலுடன் கேட்டது வாழை. பலாவோ , “வேடிக்கை பாருங்க “ என்று மட்டும் கூறியது.
போன நாரதர் கொஞ்ச நேரத்தில் வந்தார். “ஊரு இப்படி கெட்டுப் போயிருக்கே, இனிமே கடவுள் கூட
எட்டிப் பார்க்க முடியாது “ என்று ஆத்திரத்துடன் கூறிவிட்டு வேகமாகப் போய்விட்டார்.

“என்ன நடந்தது” என்று அப்பாவியாகக் கேட்டது மாங்கணி. “ வேறென்ன, ஊருக்குள்ளே இப்போ எல்லாரும் நாரதர்தான். கலகம் செய்ய மேலேருந்து வரணுமா? உனக்குக் கெட்ட பேரு வரவச்சாரில்லே . இனிமே பூலோகம்னா அலறுவாரு. சரியான பாடம்” பலா முரட்டுத்தனமாக பதில் கூறியது. மற்ற இருகனிகளும் பலாவை வியப்புடன் பார்த்தன. “பலா, படைப்புலே, உனக்கு வெளிப்புறம் முரட்டுத்தோல். உள்ளேதான் இனிப்புப் பழம். சுலபமா எடுத்துட முடியாது. உன் புத்தியும் சுலமாப் புரிங்சுக்க முடியல்லே. இருந்தாலும் இப்போ சந்தோஷமா இருக்கு.

நாம ஒத்துமையா இருந்தா போதும் “என்று மாங்கனி கூறியது. மாங்கனியின் பேச்சு இனித்தது.


நன்றி: தமிழ் மரபு அறக்கட்டளையின் "தமிழ் மரபு விக்கி" 
http://www.heritagewiki.org/index.php/சீதாலட்சுமி_-_மரத்தடியில்_முக்கனிகள்


About the Author

சமூகநல சேவகியாக தமிழக அரசில் முப்பத்துநான்கு ஆண்டுகள் பணியாற்றி, துணை இயக்குனர் பதவியில் இருக்கும் பொழுது ஓய்வு பெற்றவர் திருமதி சீதாலட்சுமி சுப்பிரமணியன் அவர்கள். அவரை அறிந்தவர்களால் சீதாம்மா என்று அன்புடன் அழைக்கப்படும் முற்போக்கு சிந்தனைகளும் கொள்கைகளும் கொண்ட சீதாம்மா பெண்களின் உரிமைக்காகவும், குழந்தைகள் நலனுக்காகவும் சமூகப்பணியாற்றியவர். இவரது எழுத்துக்களும், பணிகளும் சமுதாய நலனில் அக்கறை கொண்டவையாக இருப்பதுடன் தன்னை சமூகசேவகி என்று அடையாளம் காணுவதில் பெருமையும் மகிழ்ச்சியும் கொள்பவர்.



தேமொழி

unread,
Feb 11, 2016, 9:38:56 PM2/11/16
to மின்தமிழ், vall...@googlegroups.com
அரைவேக்காட்டு ஆத்திகன் - ஒரு பெரிய கதை ! 

-- கோவி. கண்ணன்.

ஒரு ஊரில் பழுத்த ஆன்மிகவாதி என்று தன்னைத் தானே நினைத்துக் கொண்டிருந்த பக்தன் ஒருவன் இருந்தானாம். எப்போதும் விஷ்ணு பூஜை செய்த பிறகே உணவு எடுப்பது வழக்கம். ஓரளவு தானம் செய்யும் பழக்கம் உள்ளவன். கிருஷ்ணா இராமா என்று சொல்லிவிட்டு உதவி கேட்டால் உடனே இயன்றதைச் செய்துவிடுவானாம். 

ஒருநாள் 75 வயது மதிக்கத் தக்க கிழவர் நடந்து வந்தவர் இந்த ஆன்மிக வாதியின் வீட்டின் முன் பசி மயக்கத்தால் விழுந்துவிட்டாராம். உடனடியாக பதறிய அந்த ஆன்மிகவாதி, அவரை வீட்டிற்குள் அழைத்து வந்து தண்ணீர் கொடுத்து விட்டு, 

"பகவானே இந்த முதியவருக்கு உதவி செய்ய எனக்கு நல்ல உள்ளம் கொடுத்ததற்கு நன்றி, பெரியவரே பாருங்கள், கடவுள் இருக்கிறார், இல்லை என்றால் நீங்கள் என்வீட்டு வாசலில் விழுந்து இருக்கமாட்டீர்கள், உடனடியாக உங்களுக்கு உதவியும் கிடைத்திருக்காது" என்றானாம் 

இதைக் கேட்டப் பெரியவர் திடுக்கிட்டார், காரணம் அவர் ஒரு நாத்திகர். 

"ஐயா நான் நாத்திகன், நீங்கள் ஒரு மனிதனாக என்னை மதிப்பதாக இருந்தால் நீங்கள் தரும் உணவை ஏற்றுக் கொள்கிறேன், நான் உங்கள் கொள்கைக்கு எதிரானவன், எனக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது" என்றாராம் 

இதைக் கேட்டதும் அருவெறுப்பு பட்ட ஆன்மிகவாதி, மேலே கைகூப்பி 

"நான் ஒரு நாத்திக மூடனுக்கா உதவ இருந்தேன். நல்லவேளை பகவானே, உன்னை நிந்திப்பவருக்கு உணவு அளித்து பாவம் செய்ய இருந்தேன்...என்னை மன்னியுங்கள்" என்று கூறிவிட்டு, அந்தப் பெரியவரை நோக்கி, 

கண்ணை மூடிக் கொண்டே... மேலும் கோபம் அடைந்தவனாக 

"உன்னைப் போன்ற நாத்திக மடையர்களுக்கு நான் உதவி செய்வது கிடையாது, உனக்கு உதவி செய்தால் எந்த ஜென்மத்திலும் எனக்குப் பாவம் நீங்காது...இங்கிருந்து சென்றுவிடு மூடனே...." என்று சத்தம் போட 

பெரியவர் வசைகளால் குறுக்கிப் போய்......மௌனமாக வெளி ஏறிவிட்டாராம். 

இன்னும் கோவம் தீராத, அந்த ஆன்மிகவாதி புலம்ப ஆரம்பித்து 

"கடவுளே இது என்ன சோதனை, ஒரு நாத்திகனுக்கு உணவு அளித்துத் தவறு செய்ய இருந்தேனே......உங்களுக்கு நான் என்ன குறைவைத்தேன்" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது, வீடெல்லாம் ஒளி வெள்ளம். 

அந்த ஆத்திகனுக்கு முன்னால் பகவான் கிருஷ்ணர் தோன்றி, 

"முட்டாளே ! தினமும் என்னை நிந்தித்தாலும் அந்த முதியவனுக்கு 75 வயது வரை எவர் மூலமாவது தொடர்ந்து உணவு அளித்தேன், ஒரே ஒரு நாள் உன் வீட்டு வாசல் வழியாகச் சென்ற போது மயங்கி விழுந்த காரணத்தினால் கிழவனைப் பட்டினி போட்டுவிட்டாயே, கிழவனுக்கான இன்றைய உணவு உன்னால் கிடைத்துவிடும் என்று உன்னை நம்பி இருந்தேனே, இப்போது நானே பாவம் செய்துவிட்டேன் "  என்றாராம். 

பேச்சே எழாமல் தன் தவற்றை உணர்ந்த ஆத்திகன் கண் முன்னே நிற்கும் கடவுளைப் பார்க்கக் கூட வெட்கப்பட்டு, கூசிப் போக வைத்த தன் செயலை நினைத்துத் தலைகுனிந்தானாம். 

குறிப்பு: இந்தக் கதை ஜக்கிவாசுதேவ் அவர்களின் நூலில் இருந்து படித்தது, பேச்சுரையில் சிறிது மாற்றி இருக்கிறேன். பொய்முகங்கள் கொண்டு தான் ஒரு ஆன்மிக அரும்பெரும் வியாதி, என்கிற நினைப்பில் நாத்திகம் குறித்து தூற்றுவோர்க்கு அர்ப்பணமாக்குகிறேன். 

உடுக்க உடையும், படுக்க இடமும், உழைக்காத செல்வமும், அகதி / தாழ்த்தப்பட்டவன் என்ற நிலை இல்லாதிருந்தால் எந்த வயதிலும் ஆன்மிகம் பேசலாம். பகவான் புகழ்பாடலாம், இப்படி இருப்பவன் தான் இந்துவா ?



About the Author:

கோவி. கண்ணன்:  என்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்


தேமொழி

unread,
Feb 13, 2016, 11:06:26 PM2/13/16
to மின்தமிழ், vall...@googlegroups.com
அணையா நெருப்பு!

--கமல்ஹாசன்


வேறு ஒரு கதை விவாதத்தில் பிறந்த கிளைக் கதை இது. இது கிளைகூட இல்லை; வேறு, வேறு விதை.

‘‘விவசாயிகளின் தளம் போல வானம் பார்த்த பூமி இல்லை நமது விளைநிலம்’’ என்றார் கதை விவாதிக்க வந்த ஒரு நண்பர்.

‘‘ஆம்! இது பூமி பார்த்த பூமி’’ என்றேன்.

‘‘சில சமயம் வானமும் பார்க்குமே?” என்று சிரித்தார். ‘‘பார்க்கும், எங்கேயும் பார்க்கும். பார்வைதானே கதையே! என் கோணம், என் கதை.’’

‘‘சரி, கதைக்கு ஒரு துப்பு கொடுங்க, துலக்கறேன்’’ என்றேன்.

‘‘துப்பு என்ன… தலைப்பே தர்றேன்.’’

‘‘ம்…?’’ நான் சற்றும் எதிர்பாராத தலைப்பு தந்தார்.

‘‘நான் கற்பிழந்த நாள்.’’

‘‘ஓ! கதையின் நீளம்?’’

‘‘சிறுசு’’ என்றார்.

‘‘கதாநாயகனா? நாயகியா?’’

‘‘நாயகிதான் யதார்த்தமாய் இருக்குமோ?’’

‘‘உண்மைதான். காலம்?’’

‘‘பகலா, இரவான்னு கேக்கறீங்களா?’’

‘‘இல்லை. நேற்றா, இன்றா, நாளையான்னு கேக்கறேன்?’’

‘‘முந்தானேத்து’’ என்றார் வீம்புக்காக.

சிரித்துவிட்டு, ‘‘How about முன்பு ஒரு காலத்துல?’’

‘‘Why not?’’ என்றார் விட்டுக் கொடுப்புடன்.

‘‘உங்க தலைப்புக்கு ஏத்த மாதிரி ஒரு கதைச் சுருக்கம்… ‘சீதையின் வாழ்வில் ஒரு நாள்’ – எப்படி?’’

‘‘அம்மாடியோவ்!’’

‘‘ஏன்?’’

‘‘Why not?’’

‘‘கலவரம் வர ஒரு கதை காரணமா இருக்கணுமா?’’

‘‘கலவரம் வர நம்மூர்ல காரணம் வேணுமா என்ன?’’ என்றேன்.

‘‘Agreed. சீதை என்ன சொல்றா? ஏன் அப்படிச் சொல்றா? அவ அப்படிச் சொன்னதுக்கு என்ன ஆதாரம்?’’

‘‘ஓ! கதையின் கால், ரிஷியின் மூலம் எங்கேன்னு கேக்கறீங்க? சொல்றேன்.ஆதாரம் கேட்டீங்கன்னா, கையில ஒண்ணுமில்ல. ஆனா, இது அக்னி சாட்சியா உண்மை.’’

‘‘அப்பிடின்னா?’’

‘‘இது எனக்கு அக்னிதேவன் சொன்ன கதை.’’

‘‘ஓ! சீதை சொல்லவில்லையா?’’ என்றார் சுவாரஸ்யம் இழந்தவராக.

‘‘இல்ல… சீதை எனக்குப் பழக்கமில்லை. ஆனால், அக்னி வேறு விஷயம்.’’

‘‘ஓஹோ! அக்னிதேவன் உங்க நண்பரா?’’

‘‘ஆமாம்! ஆனா, ரொம்ப நெருக்கமில்ல. தூரத்து உறவு. அந்தரங்க ரகசியங்களைப் பகிர்ந்துக்கற அளவுக்கு நட்பு. ஒரு தலைக் காதலர்கள் சங்கத்துல என்னைப் போல் அவரும் சில காலம் உறுப்பினரா இருந்தாரு.’’

‘‘Wow! hot gossip?’’

‘‘No, a warm tale’’ என்றேன்.

துவங்கினேன்… ‘‘அக்னி தேவன் சொன்னபடி அதிக புனைவில்லாமல் சொல்றேன்.’’

‘‘ராமன், சீதையின் கற்பைச் சோதிக்க முடிவு செய்த நாள். ராவணன் போரில் செத்துப்போனான். என் போன்ற ஒருதலைக் காதல் ராவணனுக்கும் இருந்தது சீதையின் மேல்’’ என்று கதை சொல்லத் தொடங்கினான் அக்னிதேவன்.

‘‘இரவெல்லாம் அசோக வனத்தில் குளிருக்காக ராவண சேவகிகள் என்னை எண்ணெயூட்டி, மட்டை விறகூட்டி வளர்ப்பர். என் கதகதப்பில் காவலாளிகள் உறங்கினாலும் சீதை உறங்க மாட்டாள். நானும்தான்.

சில சமயம் அனைவரும் உறங்கிய பின் என்னையே வெறித்துப் பார்ப்பாள் சீதை. நான் படபடத்துப் போவேன். சங்கோஜத்தில் நெளிவேன், உறக்கம் இன்றி.

விடிந்ததும் காமுற்ற என் மனதை நனைத்து அவிக்கும் பகலும், காற்றும்!

ஒரு முறை ராவணன் மேல் பொறாமையில், ராவணனின் அரண்மனைக்குத் தூது வந்த ராமதூதன் வாலைப் பிடித்துக்கொண்டு இலங்கையையும் ராவணனையும் அழிக்கக் கூடத் துணிந்தேன். கைகூடவில்லை. வீணாக நிறைய அரக்கு உருகியதுதான் மிச்சம்…’’

‘‘சரி! கதையின் தலைப்புக்குக் காரணமான காரியமென்ன? இது சிறுகதை, ஞாபகமிருக் கட்டும்’’ என்று ஞாபகப் படுத்தினார் நண்பர்.

தடங்கலின் எரிச் சலைக் காட்டாமல் அக்னிதேவன் தொடர்ந்து பேசலானான்…

‘‘காரண காரியம் காதல் தான். சீதையின் கற்புக்கு நானே சாட்சி! ராவணன் அவளைச் சந்தித்த இரவுகளில், நானும் கூடவே இருந்தேன். அந்தத் தூதுவன் கணையாழி கொண்டு வந்து நீட்டியபோது அடி வயிறு பற்றிக் கொழுந்துவிட்டு எரிந்தேன். என்ன பிரயோஜனம்? சீதை கணையாழியை இன்னும் தெளிவாகப் பார்த்தாள்… என் வெளிச்சத்தில்.

சீதை ராவணனோடு மட்டுமல்ல, என்னுடனும் பேச மறுத்தாள். அவள் நல்லவள். ஒரு வார்த்தைகூட என்னுடன் பேசாதவள்.

அன்று ராமன் அவளை ஊரறியச் சோதிக்க முற்பட்டபோதுதான் என்னுடன் முதன்முதலாகப் பேசினாள்.

‘‘ராமனன்றி யாருடனும் சேராதவள், நினையாதவள் இன்று மனமொடிந்தேன்! நிதம் பார்த்து ஏங்கினாயே! காத்துவைத்த இந்தக் கற்பு உனதாகட்டும். எனை ஆட்கொள்’’ என்றாள்.

காதல் ஓர் விநோத நோய். தேரைக்கும் பாறைக்கும் ஏற்பட்ட காதல் போல யாரும் அறியாது நிகழ்ந்த இந்தக் காதல் சங்கமத்தில், என் காமச் சூட்டைவிட காதல் வண்ணம் மேலோங் கியது.

என் முதல் காதல் நாசமாய்ப் போனதே… அதுபோல் இதுவும் ஆகும் என்று தோன்றியது.

அவளை எனதாக்கிக் கொள்ளும் அவசரத்தில், அவளையே கரிக்கிச் சாம்பலாக்கிவிடுவேன் நான். தெரியும் எனக்கு. தோற்ற என் முதல் காதல் தந்த அனுபவம் இது.

‘முதல் காதல் யாருடன்?’ என்று நண்பர் கேள்வியைக் கேட்கும் முன், சுடச்சுட வந்தது பதில்.

‘‘முதல் காதல் காட்டுடன், வனமோகினியுடன். நான் அப்போது மலைமகன். விடலை. என் காதலைச் சொன்னவுடன் வெகுண்டு வெடித்தார் தந்தையார். என்னை வீட்டைவிட்டு வெளியேற்றினார். குழம்பிப் போனேன். காதலியைத் தேடிப் போனேன். பல நாள் கனவிலே செய்ததை அன்று நினைவில் செய்தபோது, காதலி கரிந்துபோனாள். என் காதலும்தான்! என் காதல் தோற்ற கோபத்தில் காதல், காமம் என்ற வார்த்தை களைக் கேட்டாலே எரிந்து விழுந்தேன். சிவனின் மகன் மாறன் கரிந்ததும் என்னால் தான். அந்நிலை இன்று இவளுக்கும் ஆகும். தெரியும் எனக்கு. இவளுடன் ஒன்று சேருவதை விட இவளைக் காப்பதே என் கடமை என்றது காதல். என் கைக்குள்ளே வந்த சீதையிடமோ குரோதமும் ஆதங்கமுமே தெரிந்தது. மோதியழ ஒரு தோள் நான். அவ்வளவே!

அவள் என் மேல் அன்று பொழிந்தது காதல் மழையல்ல, கருணை மழை! உதட்டளவில் தானமாகக் கொடுத்தாள் காதலை.

‘‘உன்னுடன் வருகிறேன் என்றவளை ஏன் வேண்டாம் என ஒதுக்குகிறாய். ஏற்க என்னை!’’ என்றாள்.

‘‘சீதா! காதல் ஒன்று சேருவதில் மட்டுமே வருமெனில், ராமனின் காதல் இந்நேரம் வெகுவாகக் கூடி இருக்க வேண்டுமே! கூடியபின் குறையும் குணம் உள்ளது காதல். என்னருமை சீதா! காமத்தில் நான் குளித்து நனைந்தால், யாருக்கும் இன்றி அவிந்தேபோவேன். நீ அயோனிஜா, மீண்டும் உன் தாய் வீட்டுக்கே போவாய். மற்றவர்போல், கடைசியிலேனும் என் கைவசப்படுவாய் என்ற நம்பிக்கையும் இல்லை எனக்கு. என்னைப் போல் நீயும் நியதிகளுக்கு அப்பாற்பட்டவள். உன் கற்பும் கலையாமல், நம் காதலும் கரையாமல் இருக்க, நாம் கூடவே கூடாது.

என்னைக் கடந்து செல், உன் சுயநல ராமனிடம்! இந்தக் கூடாத கூடலில், நியதிகளுக்குள் அடங்காத நானே கருத்தரிப்பேன்! நம் காதலின் நினைவாக உன் வடிவில் ஒரு குமாரத்தி யைப் பிரசவிப்பேன்! அவளுக்கு திரௌபதை என்று பெயரிடுவேன். சம்மதமா?’’ என்றேன்.

சீதை என் காதல் கேட்டுக் கண்கலங்கினாள். ‘இத்தகைய காதலை நான் அனுபவித்ததே இல்லை. இத்தகைய ஆணையும் நான் சந்தித்தது இல்லை. இனியும் அது நிகழாது'.

உன் இந்த அன்புச் சூட்டில் உன் கை தவழ்ந்து வெளியேறிய பின், உன் நினைவாகவே இருப்பேன். என் கற்பு, ராமன் போன்றவர் வாழும் பிரதேசத்தில் அழுகித்தான் போகும். என் கற்பு உன்னிடமே இருக்கட்டும். அதை, பிறக்கப்போகும் நம் மகள் திரௌபதைக்கு திருமணச் சீராக விட்டுச் செல்கிறேன்’’ எனக் கூறி விடைபெற்றாள்.

அவள் கண்ணீரும் காதலும் என்னை நனைக்க, என் கைகள் தளர்ந்து போயின. அன்று கைவிட்டுப் போனவள்தான், பிறகு பார்க்கவில்லை. என் மகள் திரௌபதையின் வாழ்வில் இத்தகைய சந்தேகக் கணவர் யாரும் வாய்க்காமல் காப்பேன். கற்பு என்ற சிறையில் சீதைபோல் அவள் சாகாமல் காப்பேன். என் மேல் ஆணை!’’

தன் தலையையே சத்தியத்தின் சாட்சியாக்கினான் அக்னி என்று முடித்து, என் குரலை மாற்றிக்கொண்டு நானானேன்.

விவாதம் தொடர்ந்தது.






விகடனில் வெளியான தேதி:   மே 28, 2006 

பகிர்வுக்கு நன்றி: http://paarima.blogspot.com/2006/05/blog-post_114847700826610698.html




About the Author:

தேவையா?


Suba

unread,
Feb 14, 2016, 4:49:58 AM2/14/16
to மின்தமிழ், Dr.Subashini
இந்தக் கதையை படித்த போது சில சிந்தனைகள் தோன்றின..
ஆன்மிகம் என்பது என்ன என்ற மீள்பார்வை இக்கால கட்டத்திற்கு அதிலும் தமிழ் சூழலில்  மிகத் தேவையானது. 
தற்சமயம் பல நன்கு கல்வி கற்ற இளைஞர்கள் அலசி ஆராய்ந்து நன்மை-தீமை, தெய்வீகம் -தெய்வீகமற்ற தன்மை போன்றவற்றிற்கு சீரிய வகையில் தங்கள் கருத்துக்களைப் படைத்து வருகின்றனர். 

இந்தக் கதையோ ஒரு நல்ல சிந்தனைக்கு இன்னும் பழைய உதாரணங்களையே வைத்துக் காட்டுவது போல இருக்கின்றது. தமிழ் மக்கள் கடந்த 10 ஆண்டுகள் சிந்தனை வகையில் மிக வேகமாக மாறி வருவதைக் காண்கின்றேன். இது வரவேற்கத்தக்க ஒன்று என்றே காண்கின்றேன்.

சுபா

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Visit THF pages and blogs
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி
http://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

Suba

unread,
Feb 14, 2016, 4:58:14 AM2/14/16
to மின்தமிழ், Dr.Subashini
இப்படி ஒரு கோணத்தில் நான் யோசித்ததில்லை.
வித்தியாசமான எழுத்து.

2016-02-14 5:06 GMT+01:00 தேமொழி <jsthe...@gmail.com>:
அணையா நெருப்பு!

--கமல்ஹாசன்

​...

காதல் ஓர் விநோத நோய். தேரைக்கும் பாறைக்கும் ஏற்பட்ட காதல் போல யாரும் அறியாது நிகழ்ந்த இந்தக் காதல் சங்கமத்தில், என் காமச் சூட்டைவிட காதல் வண்ணம் மேலோங் கியது.

என் முதல் காதல் நாசமாய்ப் போனதே… அதுபோல் இதுவும் ஆகும் என்று தோன்றியது.

அவளை எனதாக்கிக் கொள்ளும் அவசரத்தில், அவளையே கரிக்கிச் சாம்பலாக்கிவிடுவேன் நான். தெரியும் எனக்கு. தோற்ற என் முதல் காதல் தந்த அனுபவம் இது.

‘முதல் காதல் யாருடன்?’ என்று நண்பர் கேள்வியைக் கேட்கும் முன், சுடச்சுட வந்தது பதில்.

‘‘முதல் காதல் காட்டுடன், வனமோகினியுடன். நான் அப்போது மலைமகன். விடலை. என் காதலைச் சொன்னவுடன் வெகுண்டு வெடித்தார் தந்தையார். என்னை வீட்டைவிட்டு வெளியேற்றினார். குழம்பிப் போனேன். காதலியைத் தேடிப் போனேன். பல நாள் கனவிலே செய்ததை அன்று நினைவில் செய்தபோது, காதலி கரிந்துபோனாள். என் காதலும்தான்! என் காதல் தோற்ற கோபத்தில் காதல், காமம் என்ற வார்த்தை களைக் கேட்டாலே எரிந்து விழுந்தேன். சிவனின் மகன் மாறன் கரிந்ததும் என்னால் தான். அந்நிலை இன்று இவளுக்கும் ஆகும். தெரியும் எனக்கு. இவளுடன் ஒன்று சேருவதை விட இவளைக் காப்பதே என் கடமை என்றது காதல். என் கைக்குள்ளே வந்த சீதையிடமோ குரோதமும் ஆதங்கமுமே தெரிந்தது. மோதியழ ஒரு தோள் நான். அவ்வளவே!

அவள் என் மேல் அன்று பொழிந்தது காதல் மழையல்ல, கருணை மழை! உதட்டளவில் தானமாகக் கொடுத்தாள் காதலை.

‘‘உன்னுடன் வருகிறேன் என்றவளை ஏன் வேண்டாம் என ஒதுக்குகிறாய். ஏற்க என்னை!’’ என்றாள்.

‘‘சீதா! காதல் ஒன்று சேருவதில் மட்டுமே வருமெனில், ராமனின் காதல் இந்நேரம் வெகுவாகக் கூடி இருக்க வேண்டுமே! கூடியபின் குறையும் குணம் உள்ளது காதல். என்னருமை சீதா! காமத்தில் நான் குளித்து நனைந்தால், யாருக்கும் இன்றி அவிந்தேபோவேன். நீ அயோனிஜா, மீண்டும் உன் தாய் வீட்டுக்கே போவாய். மற்றவர்போல், கடைசியிலேனும் என் கைவசப்படுவாய் என்ற நம்பிக்கையும் இல்லை எனக்கு. என்னைப் போல் நீயும் நியதிகளுக்கு அப்பாற்பட்டவள். உன் கற்பும் கலையாமல், நம் காதலும் கரையாமல் இருக்க, நாம் கூடவே கூடாது.

என்னைக் கடந்து செல், உன் சுயநல ராமனிடம்! இந்தக் கூடாத கூடலில், நியதிகளுக்குள் அடங்காத நானே கருத்தரிப்பேன்! நம் காதலின் நினைவாக உன் வடிவில் ஒரு குமாரத்தி யைப் பிரசவிப்பேன்! அவளுக்கு திரௌபதை என்று பெயரிடுவேன். சம்மதமா?’’ என்றேன்.

சீதை என் காதல் கேட்டுக் கண்கலங்கினாள். ‘இத்தகைய காதலை நான் அனுபவித்ததே இல்லை. இத்தகைய ஆணையும் நான் சந்தித்தது இல்லை. இனியும் அது நிகழாது'.
 
உன் இந்த அன்புச் சூட்டில் உன் கை தவழ்ந்து வெளியேறிய பின், உன் நினைவாகவே இருப்பேன். என் கற்பு, ராமன் போன்றவர் வாழும் பிரதேசத்தில் அழுகித்தான் போகும். என் கற்பு உன்னிடமே இருக்கட்டும்.
​இந்தக் கதைக்கு இப்பகுதி ஹைலைட்.

சுபா
​ 

தேமொழி

unread,
Feb 20, 2016, 2:25:45 AM2/20/16
to மின்தமிழ்
__________________________________________________________________________________________



Suba

unread,
Feb 20, 2016, 1:19:32 PM2/20/16
to மின்தமிழ், Dr.Subashini
எழுத்தாளர் ஜெயகாந்த்னின் நூல்களை எனக்கு அறிமுகம் செய்தவர் என் அம்மா ஜனகா.
அவரை எனக்கு நேரில் அறிமுகம் செய்தவர் சீத்தாம்மா. அந்த சந்திப்பின் போது அவர் கையெழுத்துப் போட்டு கொடுத்த நூல்கள் என்னிடம் இருக்கின்றன. 

இந்த கதையை மிக இளம் வயதில் அம்மாவின் நூல் சேகரிப்பில் வாசித்திருக்கின்றேன். அதே நினைவும் இப்போது வாசிக்கும் போதும். 
 ஒரு சமூகச் சிற்பி ஜெயகாந்தன்.

ஒரு கதையிலேயே நூற்றாண்டுகளின் அழுக்கை துடைத்து சுத்தம் செய்துவிடும் லாவகம் இந்தக் கதையில்.

பகிர்வுக்கு நன்றி தேமொழி.

சுபா


தேமொழி

unread,
Apr 7, 2016, 2:35:50 PM4/7/16
to மின்தமிழ், ksuba...@gmail.com


On Saturday, February 20, 2016 at 10:19:32 AM UTC-8, Suba.T. wrote:
எழுத்தாளர் ஜெயகாந்த்னின் நூல்களை எனக்கு அறிமுகம் செய்தவர் என் அம்மா ஜனகா.
அவரை எனக்கு நேரில் அறிமுகம் செய்தவர் சீத்தாம்மா. அந்த சந்திப்பின் போது அவர் கையெழுத்துப் போட்டு கொடுத்த நூல்கள் என்னிடம் இருக்கின்றன. 

இந்த கதையை மிக இளம் வயதில் அம்மாவின் நூல் சேகரிப்பில் வாசித்திருக்கின்றேன். அதே நினைவும் இப்போது வாசிக்கும் போதும். 
 ஒரு சமூகச் சிற்பி ஜெயகாந்தன்.

ஒரு கதையிலேயே நூற்றாண்டுகளின் அழுக்கை துடைத்து சுத்தம் செய்துவிடும் லாவகம் இந்தக் கதையில்.

இன்று ஜெயகாந்தனின் முதல் நினைவு நாள் (ஏப்ரல் 8).

ஏப்ரல் 24 அவரது பிறந்த நாள்.

இரு வாரங்களுகளுக்கு  அவருடைய சிறுகதைகளையும் கூட நாம் இங்கு பகிர்ந்து கொள்ளலாம்.


ஜெயகாந்தனின் சிறுகதைகள்..மதுரை திட்டத்தின் வழி கீழ்காணும் சுட்டிகளில் படிக்கக் கிடைக்கும்....

சிறுகதைகள் - தொகுப்பு - 1     http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0198.html

சிறுகதைகள் - தொகுப்பு - 2     http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0199.html

சிறுகதைகள் - தொகுப்பு - 3     http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0204.html


..... தேமொழி


 

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

K R A Narasiah

unread,
Apr 8, 2016, 12:33:22 AM4/8/16
to mintamil
none can surpass Jeyakanthan. His style is great. as one who moved closely with him from 1968 to many years later, I can say he was marvelous conversationalist as well. When we were close he wrote Parisukkup po, in which he named a character Narasiah, though not worth mentioning. the last I met him was when he got his Gnanpeeth award; he wanted to pay respects to Chitti and with KS he came to may home in Adyar and all the three of us went to see Chitti who was then very weak. Somehow after that I never met him though during Kanaiyazhi inauguration in its new avatar, he inquired of me 
Seethamma knew him well and met him last. I could not meet him before his passing away.He was a genius. 
This story is reflective of his deep understanding of society in all its levels. Chitti used to say none including T Janakiraman can depict Brahmin characters in stories as he did it with in depth understanding. 

On Fri, Apr 8, 2016 at 12:05 AM, தேமொழி <jsthe...@gmail.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (jsthe...@gmail.com) Add cleanup rule | More info



On Saturday, February 20, 2016 at 10:19:32 AM UTC-8, Suba.T. wrote:
எழுத்தாளர் ஜெயகாந்த்னின் நூல்களை எனக்கு அறிமுகம் செய்தவர் என் அம்மா ஜனகா.
அவரை எனக்கு நேரில் அறிமுகம் செய்தவர் சீத்தாம்மா. அந்த சந்திப்பின் போது அவர் கையெழுத்துப் போட்டு கொடுத்த நூல்கள் என்னிடம் இருக்கின்றன. 

இந்த கதையை மிக இளம் வயதில் அம்மாவின் நூல் சேகரிப்பில் வாசித்திருக்கின்றேன். அதே நினைவும் இப்போது வாசிக்கும் போதும். 
 ஒரு சமூகச் சிற்பி ஜெயகாந்தன்.

ஒரு கதையிலேயே நூற்றாண்டுகளின் அழுக்கை துடைத்து சுத்தம் செய்துவிடும் லாவகம் இந்தக் கதையில்.

இன்று ஜெயகாந்தனின் முதல் நினைவு நாள் (ஏப்ரல் 8).

ஏப்ரல் 24 அவரது பிறந்த நாள்.

இரு வாரங்களுகளுக்கு  அவருடைய சிறுகதைகளையும் கூட நாம் இங்கு பகிர்ந்து கொள்ளலாம்.


ஜெயகாந்தனின் சிறுகதைகள்..மதுரை திட்டத்தின் வழி கீழ்காணும் சுட்டிகளில் படிக்கக் கிடைக்கும்....

சிறுகதைகள் - தொகுப்பு - 1     http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0198.html

சிறுகதைகள் - தொகுப்பு - 2     http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0199.html

சிறுகதைகள் - தொகுப்பு - 3     http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0204.html


..... தேமொழி


 

தேமொழி

unread,
Jul 10, 2016, 1:31:40 AM7/10/16
to மின்தமிழ்

நகரம் - சுஜாதா


சுவர்களில் ஓரடி உயர எழுத்துக்களில் விளம்பரங்கள் விதவிதமாக ஒன்றி வாழ்ந்தன. நிஜாம் லேடி புகையிலை , ஆர்.கே.கட்பாடிகள் -எச்சரிக்கை! புரட்சி தீ! சுவிசேஷக் கூட்டங்கள் - ஹாஜி மூசா ஜவுளிக்கடை (ஜவுளிக்கடல் ) - 30 .9 -1973 அன்று கடவுளை நம்பாதவர்கள் சுமக்கப் போகும் தீச்சட்டிகள்

 

        மதுரையில் ஒரு சாதாரண தினம். எப்போதும் போல "பைப்" அருகே குடங்கள் மனிதர்களுக்காகsujatha வரிசைத் தவம் இருந்தன . சின்னப் பையன்கள் 'டெடன்னஸ்" கவலை இன்றி மண்ணில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். பாண்டியன் போக்குவரத்துக் கழக பஸ்கள் தேசியம் கலந்த டீசல் புகை பரப்பிக் கொண்டிருந்தன . விரைப்பான கால்சராய் சட்டை அணிந்த ப்ரோடீன் போதா போலீஸ்காரர்கள் இங்கிட்டும் அங்கிட்டும் செல்லும் வாகன- மானிட போக்குவரத்தைக் கட்டுப்படுத்தி கொண்டுஇருந்தார்கள் நகரின் மனித இயக்கம் ஒருவிதப் ப்ரோவ்னியான் இயக்கம் போல இருந்தது . கதர் சட்டை அணிந்த மெல்லிய அதிக நீளமில்லாத ஊர்வலம் ஓன்று, சாலையின் இடதுபுறத்தில் அரசாங்கத்தை விலைவாசி உயர்வுக்காக திட்டிக்கொண்டே ஊர்ந்தது. செருபில்லாத டப்பாக்கட்டு ஜனங்கள் மீனாட்சி கோயிலின் ஸ்தம்பித்த கோபுரங்கள் , வற்றிய வைகை , பாலம் .. மதுரை !

 

நம் கதை இந்த நகரத்துக்கு இன்று வந்திருக்கும் ஒரு பெண்ணைப் பற்றியது. வள்ளியம்மாள் தான் மகள் பாப்பாத்தியுடன் மதுரை பெரியாஸ்பத்திரியில் ஓ.பி டிப்பாட்மேண்டின் காரிடாரில் காத்திருந்தாள். முதல் தினம் பாப்பாத்திக்கு சுரம். கிராம ப்ரைமரி ஹெல்த் சென்டரில் காட்டியதில் அந்த டாக்டர் பயங்காட்டிவிட்டார். "உடனே பெரிய ஆஸ்பத்திரிக்கு எடுத்துகிட்டு போ' என்றார் அதிகாலை பஸ் ஏறி ....

 

பாப்பாத்தி ஸ்ட்ரெச்சரில் கிடந்தால். அவளைச் சூழ்ந்து ஆறு டாக்டர்கள் இருந்தார்கள். பாப்பாத்திக்குப் பன்னிரண்டு வயது இருக்கும். இரண்டு மூக்கும் குத்தப்பட்டு ஏழைக் கண்ணாடிக் கற்கள் ஆஸ்பத்திரி வெளிச்சத்தில் பளிச்சிட்டன. நெற்றியில் விபூதிக் கீற்று . மார்பு வரை போர்த்தப்பட்டுத் தெரிந்த கைகள் குச்சியாய் இருந்தன. பாப்பாத்தி சுரத் தூக்கத்தில் இருந்தால். வாய் திறந்திருந்தது.

 

பெரிய டாக்டர் அவள் தலையை திருப்பி பார்த்தார்.  கண் இரப்பையை தூக்கிப் பார்த்தார். கண்ணகளை விலரால் அழுத்திப் பார்த்தார். விரல்களால் மண்டையோட்டை உணர்ந்துப் பார்த்தார். பெரிய டாக்டர் மேல் நாட்டில் படித்தவர் போஸ்ட் க்ராசுவேட் வகுப்புகள் எடுப்பவர். ப்ரொபசர் . அவரைச் சுற்றிலும் இருந்தவர்கள் அவரின் டாக்டர் மாணவர்கள் .

 

"acute case of meningitis . notice  this .."

 

வள்ளியம்மாள் அந்தப் புரியாத சம்பாசனையின் ஊடே தான் மகளையே ஏக்கத்துடன் நோக்கிக் கொண்டிருந்தாள் . சுற்றிலும் இருந்தவர்கள் ஒவ்வொருவராக வந்து ஆப்தல்மாஸ்கோப் மூலம் அந்தப் பெண்ணின் கண்ணுக்குளே பார்த்தார்கள். 'டார்ச்' அடித்து விழிகள் நகருகின்றனவா என்று சோதித்தார்கள் . குறிப்புகள் எடுத்துக் கொண்டார்கள் .

 

பெரிய டாக்டர், "இவளை அட்மிட் பண்ணிடச் சொல்லுங்கள் " என்றார்.

 

வள்ளியம்மாள் அவர்கள் முகங்களை மாற்றி மாற்றிப் பார்த்தாள். அவர்களில் ஒருவர், 'இத பாரும்பா, இந்தப்ப் பெண்ணை உடனே ஆஸ்பத்திரியில் சேர்க்கணும். அதோ அங்கே உக்காந்திருக்காரே , அவர் கிட்ட போ , சீட்டு எங்கே ?" என்றார்

 

வள்ளியம்மாளிடம் சீட்டு இல்லை.

 

"சாரி அவரு கொடுப்பாரு . நீ வாய்யா இப்படி பெரியவரே ! "

 

வள்ளியம்மாள் பெரிய டாக்டரைப் பார்த்து, " அய்யா, குழந்தைக்குச் சரியா போயிருங்களா ?" என்றாள் .

 

"முதல்ல அட்மிட் பண்ணு. நாங்க பார்த்துக்கறோம் . டாக்டர் தனசேகரன், நானே இந்தக் கேசை பார்க்கிறேன். ஸீ தட் ஸீ இஸ் அட்மிட்டட் எனக்கு கிளாஸ் எடுக்கணும். போயிட்டு வந்ததும் பார்க்கறேன்"

 

மற்றவர்கள் புடைசூழ அவர் ஒரு மந்திரி போல கிளம்பிச் சென்றார். டாக்டர் தனசேகரன் அங்கிருந்த சீனிவாசனிடம் சொல்லிவிட்டு  பெரிய டாக்டர் பின்னால் விரைந்தார்.

 

சீனிவாசன் வள்ளியம்மாளைப் பார்த்தான்.

 

"இங்கே வாம்மா . உன் பேர் என்ன ..? டேய் சாவு கிராக்கி ! அந்த ரிஜிஸ்டரை எடுடா..! "

 

"வள்ளியம்மாள்"

 

"பேசண்டு பேரு?"

 

"அவரு செத்து போயிட்டாருங்க .."

 

சீனிவாசன் நிமிர்ந்தான்

 

"பேசண்டுன்னா நோயாளி .. யாரைச் சேர்க்கணும் ?"

 

"என் மகளைங்க "

 

"பேரு என்ன ..?'

 

"வள்ளியம்மளுங்க"

 

"என்ன சேட்டையா பண்ற ? உன் மாக பேரு என்ன ..'

 

"பாப்பாத்தி '

 

"பாப்பாத்தி!.. அப்பாடா. இந்தா , இந்தச் சீட்டை எடுத்துகிட்டு போயி இப்படியே நேராப் போனின்னா அங்கே மாடிப்படிகிட்ட நாற்காலி போட்டுகிட்டு ஒருத்தர் உக்காந்திருப்பார் . வருமான பாக்குறவரு அவருகிட்ட கொடு."

 

"குளந்தங்கே..?'

 

"குளைந்தைக்கு ஒண்ணும் ஆவாது. அப்படியே படுத்து இருக்கட்டும்  கூட யாரும் வல்லையா ? நீ போய் வா. விஜயரங்கம் யாருய்யா ?"

 

வள்ளியம்மாளுக்கு பாபதியை விட்டுப் போவதில் இஷ்டமில்லை . அந்த கியூ வரிசையும் அந்த வாசனையும் அவளுக்குக் குமட்டிக்கொண்டு வந்தது. இறந்து போன தான் கணவன்மேல் கோபம் வந்தது.

 

அந்த சீட்டை கொண்டு அவள் எதிரே சென்றால். நாற்காலி காலியாக இருந்தது. அதான் முதுகில் அழுக்கு இருந்தது. அருகே இருந்தவரிடம் சீட்டைக் காட்டினாள்.ஆவர் எழுதிக்கொண்டே சீட்டை இடது கண்ணின் கால்பாகத்தால் பார்த்தார்."இரும்மா அவரு வருத்தம்' என்று காலி நாற்காலியை காட்டினார். வள்ளியம்மாளுக்கு தயும்பித் தன் மகளிடம் செல்ல ஆவல் ஏற்பட்டது. அவள் படிக்காத நெஞ்சில் , காத்திருப்பதா - குழந்தையிடம் போவதா என்கிற பிரச்சனை உலகளவுக்கு விரிந்தது.

 

"ரொம்ப நேரமாவுங்களா..? " என்று கேட்க பயமாக இருந்தது அவளுக்கு.

 

வருமானம் மதிப்பிடுபவர் தன் மருமானை அட்மிட் பண்ணிவிட்டு மெதுவாக வந்தார் உட்கார்ந்தார்.  ஒரு சிட்டிகைப் பொடியை மூக்கில் மூன்று தடவை தொட்டுக் கொண்டு கர்சிப்பைக் கயிறாக சுருட்டித் தேய்துக்க் கொண்டு சுறு சுறுப்பானார்.

 

"த பார் வரிசையா நிக்கணும். இப்படி ஈசப்புச்சி மாதிரி வந்திங்கன்ன என்ன செய்யிறது ..?"

 

வள்ளியம்மாள் முப்பது நிமிஷம் காத்திருந்தபின் அவள் நீட்டிய சீட்டு அவளிடமிருந்து பிடுங்கப்பட்டது.

 

"டாக்டர் கிட்ட கை எழுத்து வாங்கி கிட்டு வா , டாக்டர் கையழுத்தே இல்லையே அதிலே ..?

 

"அதுக்கு எங்கிட்டு போவனும்..?"

 

"எங்கிருந்து வந்தே ..?'

 

"மூனாண்டிபாடிங்கே !'

 

கிளார்க் "ஹாத்" என்றாள். சிருதார். "மூணாண்டிபட்டி ! இங்கே கொண்ட அந்த சீட்டை "

 

சீட்டை மறுபடி கொடுத்தால். அவர் அதை விசிறி  போல் இப்படிப் திருப்பினார்.

 

"உன் புருசனுக்கு என்ன வருமானம் ?"

 

"புருஷன்  இல்லீங்க "

 

"உனக்கு என்ன வருமானம்? "

 

அவள் புரியாமல் விழித்தாள்.

 

"எத்தன ரூபா மாசம் சம்பாதிப்பே ?"

 

"அறுப்புக்குப் போன நெல்லாக் கிடைக்கும் அப்புறம் கம்பு, கேழ்வரகு !'

 

"ரூபா கிடையாதா.! சரி சரி .. தொண்ணூறு ரூபா போட்டு வைக்கிறேன்."

 

"மாசங்களா?"

 

"பயப்படாதே .சார்ஜு பண்ண மாட்டாங்க . இந்த , இந்த சீட்டை எடுத்துகிட்டு கொடு இப்படியே நேராப் போயி இடது பாக்கள் - பீச்சாங்கைப் பக்கம் திரும்பு. சுவத்திலே அம்பு அடையாளம் போட்டிருக்கும் . 48  - ம் நம்பர் ரூமுக்கு போ ."

 

வள்ளியம்மாள் அந்த சீட்டை இரு கரங்களிலும் வாங்கி கொண்டால். கிளார்க் கொடுத்த அடையாளங்கள் அவள் எளிய மனதை மேலும் குழப்பி இருக்க , காற்றில் விடுதலை அடைந்த காகிதம் போல் ஆஸ்பத்திரியில் அலைந்தாள். அவளுக்கு படிக்க வராது. 48  ம் நம்பர் என்பது உடனே அவள் ஞாபகத்திலிருந்து விலகி இருந்தது. திரும்பி போயி அந்த கிளார்க்கை கேட்க அவளுக்கு அச்சமாக இருந்தது.

 

ஒரே ஸ்ட்ரச்சரில் இரண்டு நோயாளிகள் உக்கார்ந்து கொண்டு, பாதி படுத்துக்கொண்டு மூக்கில் குழாய் செருகி இருக்க அவளைக் கடந்தார்கள். மற்றொரு வண்டியில் ஒரு பெரிய வாயகன்ற பாத்திரத்தில் சாம்பார் சாதம் நகர்ந்து கொண்டிருதது. வெள்ளைக் குல்லாய்கள் தெரிந்தன . அலங்கரித்து கொண்டு வெள்ளை கோட் அணிந்து கொண்டு ஸ்டேதேஸ்கோப் மாலையிட்டு, பெண் டாக்டர்கள் சென்றார்கள். போலீஸ்காரர்கள், காபி டம்ளர்காரர்கள், நர்சுகள் எல்லோரும் எல்லா திசைகளிலும் நடந்து கொண்டு இருந்தார்கள். அவர்களை நிறுத்திக் கேட்க அவளுக்கு  பயமாக இருந்தது. என்ன கேட்பது என்றே அவளுக்குத் தெரியவில்லை. ஏதோ ஒரு அறையின் முன் கும்பலாக நின்று கொண்டு இருந்தார்கள். அங்கே ஒரு ஆள் சீட்டுப் போல பல பழுப்புச் சீட்டுகளைச் சேகரித்து கொண்டிருந்தான். அவன் கையில் தான் சீட்டைக் கொடுத்தாள். அவன் அதைக் கவனமில்லாமல் வாங்கி கொண்டான். வெளியே பெஞ்சில் எல்லோரும் காத்திருந்தார்கள். வள்ளியம்மாளுக்குப் பாப்பாத்தியின் கவலை வந்தது. அந்த பெண் அங்கே தனிய இருக்கிறாள். சீட்டுகளைச் சேகரித்தவன் ஒவ்வொரு பெயராக கூப்பிட்டு கொண்டிருந்தான். கூப்பிட்டு வரிசையாக அவர்களை உட்கார வைத்தான். பாப்பாத்தியின் பெயர் வந்ததும் அந்த சீட்டை பார்த்து, "இங்க கொண்டு வந்தியா! இந்தா, " சீட்டை திருப்பி கொடுத்து, "நேராப் போ,' என்றான். வள்ளியம்மாள், "அய்யா , இடம் தெரியலிங்களே"  என்றாள். அவன் சற்று எதிரே சென்ற ஒருவனை தடுத்து நிறுத்தி, " அமல்ராஜ் இந்த அம்மாளுக்கு 48 ம் நம்பரை காட்டுய்யா . இந்த ஆள் பின்னாடியே போ . இவர் அங்கேதான் போறார்." என்றான்.

 

அவள் அமல்ராஜின் பின்னே ஓட வேண்டியிருந்தது.

 

அங்கே மற்றொரு பெஞ்சில் மற்றொரு கூட்டம் கூடி இருந்தது. அவள் சீட்டை ஒருவன் வாங்கி கொண்டான். வள்ளியம்மாளுக்கு ஒன்றும் சாப்பிடாததாலும், அந்த ஆஸ்பத்திரி வாசனையினாலும் கொஞ்சம் சுற்றியது.

 

அரை மணி கழித்து அவள் அழைக்கபட்டாள். அறையின் உள்ளே சென்றாள். எதிர் எதிராக இருவர் உட்கார்ந்து காகிதப் பென்சிலால் எழுதிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருத்தன் அவள் சீட்டைப் பார்த்தான். திருப்பி பார்த்தான். சாய்த்துப் பார்த்தான்

 

"ஓ,பி. டிபார்ட்மேண்டிலிருந்து வரியா ..?"

 

இந்த கேள்விக்கு அவளால் பதில் சொல்ல முடியவில்லை.

 

"அட்மிட் பண்றதுக்கு எழுதி இருக்கு. இப்ப இடம் இல்லை. நாளைக்கு கலையிலே சரியாய் ஏழரை மணிக்கு வந்துடு என்ன..?"

 

"இங்கேயே வா, நேரா வா, என்ன ?"

 

வள்ளியம்மாளுக்கு அந்த அறையை விட்டு வெளியே வந்ததும் அவளுக்கு ஏறக்குறைய ஒன்றரை மணி நேரம் தியாக வந்த விட்ட தன் மகள் பாப்பாத்தியின் கவலை மிகப் பெரியதாயிற்று.அவளுக்குத் திரும்பிப் போகும் வழி தெரியவில்லை. ஆஸ்பத்திரி அறைகள் யாவும் ஓன்று போல் இருந்தன.ஒரே ஆசாமி திரும்ப திரும்ப பல்வேறு அறைகளில் உட்கார்ந்திருப்பது போல தோன்றியது. ஒரு வார்டில் கையை காலைத் தூக்கி கிட்டி வைத்துக் கட்டி பல பேர் படுத்திருந்தார்கள் . ஒன்றில் சிறிய குழந்தைகள் வரிசையாக முகத்தைச் சுளித்து அழுது கொண்டிருந்தன.மிஷின்களும், நோயாளிகளும், டாக்டர்களுமாக, அவளுக்குத் திரும்பும் வழி புரியவில்லை.

 

"அம்மா" என்று ஒரு பெண் டாக்டரை கூப்பிட்டு தான் புறப்பட இடத்தின் அடையாளங்களைச் சொன்னாள். "நெறைய டாக்டருங்க கூடிப் பேசிக்கிட்டாங்க. வருமானம் கேட்டாங்க. பணம் கொடுக்க வேண்டாமுன்னு சொன்னாங்க. எம் புள்ளைய அங்கிட்டு விட்டுட்டு வந்திருக்கேன் அம்மா! "

 

அவள் சொன்ன வழியில் சென்றாள். அங்கே கேட்டுக் கதவு பூட்டி இருந்தது. அப்போது அவளுக்கு பயம் திகிலாக மாறியது. அவள் அழ ஆரம்பித்தாள். நட்ட நடுவில் நின்று கொண்டு அழுதாள். ஒரு ஆள் அவளை ஓரமாக நின்று கொண்டு அழச்சொன்னான். அந்த இடத்தில் அவள் அழுவது அந்த இடத்து அசெப்டிக் மணம் போல எல்லோருக்கும் சகஜமாக இருந்திருக்க வேண்டும்.

 

"பாப்பாத்தி! பாப்பாத்தி! உன்னை எங்கிட்டு பாப்பேன்? எங்கிட்டுப் போவேன்? " என்று பேசிக் கொண்டே நடந்தாள். ஏதோ ஒரு பக்கம் வாசல் தெரிந்தது. ஆஸ்பத்திரியை விட்டு வெளியே செல்லும் வாசல். அதான் கேட்டை திருந்து வெளியே மட்டும் செல்ல விட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த வாசலைப் பார்த்த ஞாபகம் இருந்தது அவளுக்கு.

 

வெளியே வந்து விட்டாள்.அங்கிருந்து தான் தொலை தூரம் நடந்து மற்றோரு வாசலில் முதலில் உள் நுழைந்தது ஞாபகம் வந்தது. அந்தப் பக்கம் ஓடினாள். மற்றொரு வாயிலை அடைந்தாள். அந்த மரப்படிகள் ஞாபகம் வந்தது. அதோ வருமானம் கேட்ட ஆசாமியின் நாற்காலி காலியாக இருக்கிறது. அங்கேதான்!

 

ஆனால் வாளில்தான் மூடப்பட்டிருந்தது உள்ளே பாப்பாத்தி ஒரு ஓரத்தில் இன்னும் அந்த ஸ்ட்ரச்சரில் கண் மூடிப் படுத்திருப்பது தெரிந்தது.

 

"அதோ! அய்யா, கொஞ்சம் கதவைக் திறவுங்க, எம்மவ அங்கே இருக்கு .'

 

சரியா மூணு மணிக்கு வா. இப்ப எல்லாம் க்ளோஸ்'" அவனிடம் பத்து நிமிஷம் மன்றாடினாள். அவன் பாஷை அவளுக்குப் புரியவில்லை. தமிழ்தான். அவன் கேட்டது அவளுக்கு புரியவில்லை. சில்லறையைக் கண்ணில் ஒத்திக் கொண்டு யாருக்கோ  அவன் வழி விட்டபோது அந்த வழியில் மீறிக்கொண்டு உள்ளே ஓடினாள். தன் மகளை வாரி அணைத்துக்கொண்டு தனியே பெஞ்சில் போய் உட்கார்ந்து  கொண்டு  அழுதாள்.

 

பெரிய டாக்டர் எம்.டி. மாணவர்களுக்கு வகுப்பு எடுத்து முடிந்ததும் ஒரு கப் காப்பி சாப்பிட்டு விட்டு வார்டுக்கு சென்றார். அவருக்கு காலை பார்த்த மெனின்ஜைடிஸ் கேஸ் நன்றாக ஞாபகம் இருந்தது.B .M .J  யில்  சமீபத்தில் புதிய சில மருந்துகளை பற்றி வர படித்திருந்தார்.

 

"இன்னைக்குக் காலையிலே அட்மிட் பண்ணச் சொன்னேனே  மெனின்ஜைடிஸ் கேஸ். பன்னிரண்டு வயசுப் பொண்ணு எங்கேய்யா..?

 

"இன்னிக்கு யாரும் அட்மிட் ஆகலையே டாக்டர் "

 

"என்னது? அட்மிட் ஆகலையே? நான் ஸ்பெசிபிக்கா சொன்னேனே! தனசேகரன், உங்களுக்கு ஞாபகம் இல்லை ..?"

 

"இருக்கிறது டாக்டர் ! "

 

"பால்! கொஞ்சம் போயி விசாரிச்சு கிட்டு வாங்க அது எப்படி மிஸ் ஆகும் ?"

 

பால் என்பவர் நேராகக் கீழே சென்று எதிர் எதிராக இருந்த கிளாற்குகளிடம் விசாரித்தார்."எங்கயா! அட்மிட் அட்மிட்டுன்னு நீங்க பாட்டுக்கு எழுதிபுடுறீங்க. வார்டிலே நிக்க இடம் கிடையாது! "

 

"சுவாமி சீப்  கேக்குறார் !"

 

"அவருக்கு தெரிஞ்சவங்களா ?"

 

"இருக்கலாம் எனக்கு என்ன தெரியும்?"

 

"பன்னண்டு வயசுப் பொண்ணு ஒண்ணும் நம்ம பக்கம் வரல. வேற யாரவது வந்திருந்தாக் கூட எல்லோரையும் நாளைக்கு காலையிலே வர சொல்லிட்டேன். ராத்திரி ரெண்டு மூணு பெட்டு காலியாகும். எமேர்ஜன்சின்னா முன்னாலேயே சொல்லணும்! இல்லை பெரியவருக்கு அதிலே இண்டரஸ்ட் இருக்குன்னு ஒரு வார்த்தை! உறவுக்காரங்களா ..?'

 

வள்ளியம்மாளுக்கு மறுநாள் காலை ஏழரை மணி வரை என்ன செய்ய போகிறோம் என்பது தெரியவில்லை. அவளுக்கு ஆஸ்பத்திரியின் சூழ்நிலை மிகவும் அச்சம் தந்தது. அவர்கள் தன்னைப் பெண்ணுடன் இருக்க அனுமதிப்பார்களா என்பது தெரியவில்லை. வள்ளியம்மாள் யோசித்தாள். தன் மகள் பாப்பாத்தியை அள்ளி அணைத்துக் கொண்டு மார்பின் மேல் சார்த்திக் கொண்டு, தலை தோளில் சாய, கைகால்கள் தொங்க, ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்தாள். மஞ்சள் நிற சைக்கிள் ரிக்சாவில் ஏறிக் கொண்டாள். அவனை பஸ் ஸ்டாண்டுக்குப் போகச் சொன்னாள்.

 

"வாட் நான்சென்ஸ்! நாளைக்கு காலை ஏழரை மணியா! அதுக்குள்ள அந்த பொண்ணு செத்துப் போயிடும்யா! டாக்டர் தனசேகரன் நீங்க ஓ.பி யிலே போயி பாருங்க . அங்கேதான் இருக்கும்! இந்த ரெச்சர்ட் வார்டிலே ஒரு பெட் காலி இல்லைன்னா நம்ம டிப்பாட்மென்ட் வார்டில பெட் இருக்குது. கொடுக்க சொல்லுங்க! க்விக்!"

 

"டாக்டர்! அது ரிசர்வ் பண்ணி வைச்சிருக்கு "

 

"i dont care. i want that girl admitted now. Right now!"

 

பெரியவர் அம்மாதிரி இதுவரை இரைந்தது இல்லை. பயந்த டாக்டர் தனசேகரன், பால், மிராண்டா  என்கிற தலைமை நர்ஸ் எல்லோரும் வள்ளியம்மாளை தேடி ஓ.பி டிபாட் மெண்டுக்கு ஓடினார்கள்.

 

"வெறும் சுரம்தானே ? பேசாமல் மூனாண்டிப் பட்டிக்கே போயி விடலாம்.வைத்தியரிடம் காட்டிவிடலாம். கிராம ஆஸ்பத்திரிக்கு போக வேண்டாம். அந்த டாக்டர் தான் பயங்காட்டி மதுரைக்கு விரட்டினார். சரியாக போயிவிடும். வெள்ளைக்கட்டி போட்டு விபூதி மந்திரித்து விடலாம்." சைக்கிள் ரிக் ஷா  பஸ் நிலையத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. வள்ளியம்மாள், "பாப்பாத்திக்குச் சரியாய் போனால் வைத்தீஸ்வரன் கோயிலுக்கு இரண்டு கை நிறைய காசு காணிக்கையாக அளிக்கிறேன்' என்று வேண்டி கொண்டாள்.

நன்றி: http://www.searchtamilbooks.com/blog/nagaram-sujatha#sthash.9cL3of5p.dpuf

தேமொழி

unread,
Sep 4, 2016, 2:09:44 PM9/4/16
to மின்தமிழ்

கணேஷ்


இன்று தமிழ் நாட்டில் விநாயகர் மூர்த்தி பிரதிஷ்டை செய்யப்பட்டிராத இடத்தைப் பார்ப்பது வெகு அபூர்வமாகத்தான் இருக்கும். எந்த கிராமத்திலும் ஒரு சிறிய பிள்ளையார் கோவில் இருக்கும். ஒரு சிறு அறை, கம்பிக்கதவு. உள்ளே எரியும் சிறு விளக்கு. அவ்வளவு தான். ஏரி, குளக்கரைகளில், கிணற்றங்கரையில் பெரிய ஊர்களில், தெரு முனைகளில், நகரங்களில் அனேக நடைபாதைகளில், விநாயகருக்கு இல்லாத இடம் இல்லை. ஆனால் இந்த இடங்களில் அவருக்கு ஒரு அறை, பூட்டிய கதவு என்று எதுவும் தேவையில்லை. மரத்தடியில் ஒரு மேடை இருந்தால் போது, பாரிய உடம்பானாலும், எங்கும் இருக்க அவருக்குச் சம்மதம் தான். கிணற்றடியில், குளக்கரைகளில் இருக்கும் பிள்ளையார் பற்றி கதைகள் சொல்லக் கேட்டிருக்கிறேன். பெண்கள் காலையிலும் மாலையிலும் குளிக்க, தண்ணீர் எடுத்துச் செல்ல கூட்டம் கூட்டமாக வரும் இடத்தில் பிள்ளையார் காத்திருக்கிறாராம். தன் அன்னை பார்வதி தேவியைப் போல அழகான, புத்திசாலியான பெண்ணைத் தேடி. ஆசை யாரை விட்டது? இதைச் சொல்லும்போது, பாட்டியிலிருந்து என் அம்மா, மாமி வரை எல்லோரும் ஒரு நமுட்டுச் சிரிப்பு உடன் உதடுகளில் மொட்டுக் கட்டியிருக்கும். அவர்கள் கிண்டல் செய்வது போல இருக்கும். பிள்ளையாரையா, அல்லது என்னையா என்பது தெரியாது. இப்படி பிள்ளையாரையும் விஷமத்தனமாக கிண்டல் செய்யும் ஹிந்து சமூகத்தைப் பற்றி இப்போது எனக்கு கர்வம் தான்.


நான் ஒன்றும் அவ்வளவு சமயப் பற்று கொண்டவன் இல்லை. ஹிந்து சமூகத்தில் பிறந்தேன். ஹிந்துவாக இருக்கிறேன். வேறு எதுவாகவும் மாறுவதற்கான சாதாரண காரணங்கள் கூட எனக்குத் தென்படவில்லை. எங்கு போனாலும் இந்தக் கதைதான் என்பது திட்ட வட்டமாகத் தெரிகிறது அன்றாட உலக நிலவரங்களைப் பார்க்கும்போது. அதனால் ஹிந்து என்றால் திருடன் என்று நான் நம்பவில்லை. திருடனுக்கு மதம் இல்லை. நான் ஹிந்துவாகப் பிறந்ததற்கு வெட்கப்படவும் இல்லை.


இந்த ஹிந்து மதத்தில் தான் எவ்வளவு சுதந்திரம்! ஹிந்து என்றால் திருடன் என்று யாரும் சொன்னால், ஹிந்துவாக பிறந்ததற்காக வெட்கப்படுவதாக சொன்னால், அதற்காக ஹிந்து மதம் அரண்டு வெறி பிடித்து என்ன தண்டனை கொடுக்கலாம் என்று வெறியாட்டம் போடுவதில்லை. அதனால் தான் அவர்களுக்கு இப்படிச் சொல்லும் தைரியம் வந்ததோ என்னவோ. அந்த தைரிய்த்தையும் சுதந்திரத்தையும் கொடுத்த ஹிந்து மதத்தில் பிறந்ததற்கு அவர்கள் சந்தோஷப்படலாம். பிள்ளையாரைப் பற்றிய சுதந்திரம், அவரை எப்படி வேண்டுமானாலும் நடத்த அவர் நமக்கு சுதந்திரம் தந்துள்ளாரா அல்லது எப்படி வேண்டுமாலாலும் எங்குவேண்டுமானாலும் இருக்க அவர் சுதந்திரம் கொண்டுள்ளாரா என்பது பற்றி நிச்சயமாகச் சொல்லிவிட முடியாது. இரண்டும் தான். பிரம்மாண்ட கோவில்களில், எல்லோரும் தொடப்பட முடியாத, விதிமுறைகள், சடங்குகள் நிறைந்த பிரதி நிதியாகவும் அந்த மூர்த்தி வடிவமாக இருக்க அந்த தெய்வத்திற்கு இஷ்டம் தான். அரசமரத்தடியில் சடங்குகள் ஏதுமின்றி பிரதிஷ்டை செய்யப்பட்டு, காக்கை எச்சமிட வெட்ட வெளியில் அமர்ந்திருக்கவும் அந்த பிள்ளையாருக்கு ட்சேபணை இல்லை. வெகு வயதான மரத்தின் வேர்கள் தரையில் பரவும் கோலம் பிள்ளையாரின் தோற்றத்தைத் தந்தால், அந்த வேர்களிலும் பிரசன்னமாகி, குங்குமம், சந்தனம் இட்டுக்கொள்ளத் தயார் தான். சமீப காலங்களில் அரசியல் கட்சிகள் சிலவற்றின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டிருந்தாலும், இவ்வளவு வெகுஜனப்ரியரான ஒரு கடவுள் வேறு உண்டா என்று தெரியவில்லை.


வினாயக சதுர்த்தி அன்று வீட்டிலேயே பூஜை அறையில் வினாயகரை பிரதிஷ்டை செய்து பூஜிக்க, சின்ன மர அச்சுக்களில் களிமண்ணால் ன பிள்ளையார் சிலைகளை எட்டணா ஒரு ரூபாய் என்று வாங்கிச்சென்ற ஞாபகம். இப்போதும் அந்த பழக்கம் உண்டா என்று தெரியவில்லை. சின்ன களிமண் பிள்ளையார். பூஜை முடிந்த மறுநாள் அந்த பிள்ளையாருக்கு வீட்டில் இடமிருக்காது. கிணறு, ஏரி, குளம், று என்று அவருக்கு வாசஸ்தலம் தேடப்படும். ஒரு வம்பு தும்பில்லை. அவருக்கும் ஏது ஆட்சேபனை இருந்ததில்லை.

இந்த தலைமுறைக்கு நினைவு இருக்கிறதோ என்னவோ, ஒரு சமயம், பகுத்தறிவுத் தந்தையின் நாஸ்திக பிரச்சாரம் பிள்ளையாரை உடைப்போம் என்று தம் திட்டத்தைச் சொல்லி பயமுறுத்தியது. அவரது நாஸ்திகம் பிள்ளையாரைத் தான் தனிமைப் படுத்தியது. வேறு எந்த கடவுளையும் தொடவில்லை. அப்போது ராஜாஜி முதன் மந்திரியாக இருந்தார். நாயக்கரும் ஆச்சாரியாரும் 1920லிருந்து நண்பர்கள். காங்கிரஸ் கட்சியில் நாயக்கரைச் சேர்த்ததே ச்சாரியார் தான். அதெல்லாம் பழைய கதை. இப்போதைய பிள்ளையார் சிலை உடைப்பு ரகளை முன்னிற்கிறதே. பகுத்தறிவுத் தந்தை உடைக்கத் திட்டமிட்டது மர அச்சில் வடிக்கப்பட்ட களி மண் பிள்ளையார் தான். அதை பிள்ளையார் உபாசகர்களே மறு நாள் அந்த அச்சுப் பிள்ளையாரை கிணற்றில் குளத்தில் எறியத் தான் போகிறார்கள். "அது பொம்மைப் பிள்ளையார் தான். உடைத்துவிட்டுப் போகட்டும்" என்று ராஜாஜி சொல்லவே, எந்த ரகளையும் ஏற்படாமல், பொது மக்கள் வேடிக்கை பார்க்க, "பிள்ளையார் சிலை உடைப்பு" அமைதியாக, வெற்றிகரமாக நடந்தேறியது. அதன் பிறகு அந்தப் போராட்டம் தொடரப்படவில்லை. ஆனால் பிள்ளையார் பூஜைகள், ஒவ்வொரு வருட சதுர்த்தசி தினமும் நடந்து வருகிறது. நடைபாதைப் பிள்ளையாருக்குக் கூட ஏதும் பத்து வரவில்லை. அவர் சௌக்கியமாகவே இருந்து வருகிறார். தஞ்சை ரயில் நிலயத்தில் நட்ட நடுவில் ஒரு பிள்ளையார் கோயில் இருக்கிறது தெரியுமோ. தஞ்சை ரயில் நிலயம் என்ன, சிலைகளை உடைக்கச் சொன்ன பெரியார் ஒவ்வொரு ஊரிலும் கிராமத்திலும் தெரு முனையில் முச்சந்தியில், பூங்காக்களில், வாகனச் சந்தடி நடுவே தானே சிலையாகி நிற்பதே ஒரு விடம்பனம் தான்.


இதெல்லாம் போகட்டும். முன்னர் ஒவ்வொரு வீட்டினுள்ளும் சின்ன அளவில் அமைதியாக நடந்து வந்த பிள்ளளையார் பூஜை இப்போது சமூக நிகழ்வாகப் பெரிதாகி விட்டது. எவ்வளவு வேகத்தில் பந்தை எறிகிறோமோ அவ்வளவு வேகத்தில் அது சுவற்றில் அடிபட்டுத் திரும்பும். அப்படித்தானோ என்னவோ. பெரிய பிள்ளையார் சிலைகள். ஆறு அங்குல மர அச்சில் வார்த்த களி மண் பிள்ளையார் இருந்த இடத்தில் இப்போது மூன்றடி உயரத்திலிருந்து பத்து அடி உயர் பிள்ளையார் வரை, 500 ரூபாயிலிருந்து 15000 ரூபாய் விலையில் பிள்ளையார் சிலைகள் உருவாக்கப்படுகின்றன. இப்போது சமீப காலமாகத்தான் இப்படி ஒரு சமூக விழாவாக இது கியுள்ளது.


மகா ராஷ்டிராவில் தான், மராத்தியர்கள் தான் விநாயக பூஜையை இப்படி கோலாகலமாக பெரிய அளவில் நடத்துவார்கள். நம்மூர்களில் நடக்கும் உறியடியும் அங்கு நடக்கும். மிக உயரத்தில் கட்டப்பட்டிருக்கும் உறியில் பணம், தவிர இன்னும் என்னென்னவோ வைக்கப்பட்டிருக்கும். அந்த உறியைக் கைப்பற்ற மனித கோபுரம் எழுப்பப்படும், நான்கைந்து மனித உயரத்திற்கு. கீழே தாங்கி நிற்பவர்களின் தோளில் ஏறி இப்படி பல அடுக்குகளில் கோபுரம் எழும். ஒரு காலத்தில் மகாராஷ்டிரத்திலும் முன்னர் நம்மூர்களில் இருந்தது போல வீட்டு நிகழ்வாகத்தான் அது இருந்தது என்று நினைக்கிறேன். இதை ஒரு சமூக நிகழ்வாக, தேச பக்த உணர்வை எழுப்பும் செயல்பாடாக க்கியது, பால கங்காதர திலகர். சிறந்த கல்விமான். தத்துவங்களில், நிறைந்த ஞானம் உள்ளவர். மாண்டலே சிறையில் இருந்த போது கீதா ரகஸ்யம் என்ற பெரிய நூலை இயற்றினார். அது அவரது உலக, தத்துவப் பார்வையைச் சொல்லும். கீதையில் சொல்லப்பட்டுள்ளது அனைத்தும் கர்ம யோகத்தை நோக்கிச் செல்வது. என்பது அவர் முடிபு. அந்த கர்ம யோகம் இன்று வலியுறுத்துவது தேச விடுதலை. மனித விடுதலை என்பது திலகர் கருத்து. அவர் மராத்தியர்களுக்கு தேச பக்தி உணர்வை ஊட்ட இரண்டு பெரிய சமூக செயல்பாட்டை ரம்பித்து வைத்தார். ஒன்று கணேஷ் பூஜை. இரண்டாவது சிவாஜியை, அன்னியர்களை விரட்டிய முதல் வீர புருஷனாக உணர்த்தியது. அனேகமாக ஒரு நூற்றாண்டு காலமாகப் போகிறது. இரண்டும் மகாராஷ்டிரத்தில். மராத்தியர் வாழும் இடங்களில் எல்லாம் பெரிய அளவில் கொண்டாடப்படுகின்றன.


ஆனால், இங்கு பெரிய அளவில் நடத்தப்படும் பிள்ளையார் சிலை ஊர்வலத்திற்கும் அதன் சங்கமத்திற்கும் பெரிய அளவில் கட்டுப்பாடுகள் தோன்றியது ஏனே தெரியவில்லை. ஏன் இவ்வளவு எதிப்பை, முஸ்லீம் கள் காட்டுகிறார்களோ இல்லையோ, அரசு முஸ்லீம்களுக்கு எதிரானது என்று காரணம் சொல்லி, சட்டம் ஒழுங்குக்கு அபாயம் என்று பயமுறுத்துகிறார்கள். கடைசியில் எந்த வழி செல்ல வேண்டும், எப்படிச் செல்ல வேண்டும், போலீஸ் பாதுகாப்பு என்றெல்லாம் சொல்லி கடைசியில் அந்த ஊர்வலத்தின் விழாக் கொண்டாட்டத்தின் உயிரையே பறித்து சக்கையாக்கி விட்டிருக்கிறார்கள். முஸ்லீம்கள் எதிர்ப்பு என இல்லாத ஒன்று உருவாக்கப்படுகிறது என்று தான் தோன்றுகிறது. முஸ்லீம்கள் பெருமளவில் உள்ள ஆனால் ஹிந்துக்களே பெரும்பான்மையாக உள்ள தில்லியில் ங்காங்கே போக்குவரத்து நிறைந்த சாலைகளில் கூட முகர்ரம் பண்டிகையின் ஊர்வலங்களில் பெரிய பெரிய தாஜியாக்கள் எடுத்துச் செல்வார்கள். எல்லாம் அமைதியாக நடக்கும். அவையும் ஒர் அழகு தான். வாழ்க்கையைக் கொண்டாடும் ஒர்பாங்கு. ஆனால், இங்கு ஏன் பீதி கிளப்பப் படுகிறது என்று தெரியவில்லை. இதையெல்லாம் பார்க்கும் போது, வீட்டளவிலேயே நடக்கும் சின்ன மர அச்சுப் பிள்ளையாரே அமைதியும் அழகும் நிறைந்தவராகத் தோன்றுகிறார் எனக்கு. ஒரு குழந்தைமையும் அவருக்கு இருப்பதாகத் தோன்றுகிறது. விக்னேஸ்வரர் அதாவது இடர்பாடுகளை நீக்குபவர் என்று பொருள் பெற்ற பெயர் கொண்ட அவர் விக்னங்களையே, அதாவது இடர்பாடுகளையே சமூகத்தில் விதைப்பவராக இங்கு க்கப்பட்டுள்ளது, தமிழ் வாழ்க்கையில் காணும் விடம்பனம் தான்.


இவ்வளவு வம்புகளுக்கும் காரணம் திலகரின் தேச பக்த உணர்வில் பிறந்த இந்த பத்தடியோ பதினைந்தடியோ உயர ஊர்வல மூர்த்தியான எண்ணெய் வண்ண பிள்ளையார் தான் என்று நினைக்கக் கூடாது. பிள்ளையாரே நமக்கு மகாராஷ்டிரத்திலிருந்து பெறப்பட்டவர் தான். இறக்கு மதி தான். ஏழாம் நூற்றாண்டில் நரஸிம்மவர்ம பல்லவன் இரண்டாம் புலிகேசி என்னும் சாளுக்கிய மன்னனைத் தோற்கடித்து வாதாபியைக் கைப்பற்றினான். அந்தப் போரில் நரசிம்ம வர்மப் பல்லவனின் சேனாதிபதியாக இருந்தவர் பின்னர் சிறுத்தொண்ட நாயனார் என்று பெயர் பெற்ற பரஞ்சோதி. அவர் தான் வாதாபியிலிருந்து விநாயகர் சிலையைக் கொணர்ந்து விநாயக வழிபாட்டைத் தமிழ்நாட்டில் தொடங்கி வைத்தார். இதைத் தான் முத்து சாமி தீக்ஷ¢தர் தம் ஹம்சத்வனி ராக கிருதி, "வாதாபி கணபதிம் பஜே" யில் குறிப்பிடுகிறார், வாதாபி கணபதி என்றே. இதற்கு முன் தமிழ் நாடு விநாயகரை அறியாது. திருமாலை அறியும். சிவனை அறியும். கொற்கை என்னும் துர்க்கையை அறியும். முருகனை அறியும். ராமாயணத்தை, மகாபாரதத்தை தமிழர் அறிவர். விநாயகரை அல்ல. பரஞ்சோதி வாதாபி சென்று புலிகேசியை வென்று திரும்பிய 630-640 கி.பிக்கு முந்திய எந்த தமிழ் நூலிலாவது விநாயகருக்கு வாழ்த்து சொல்லப் பட்டுள்ளதா என்று பார்க்கலாம். இல்லை யென்று தான் நான் நினைக்கிறேன். தமிழ் புலமை சான்றோர் இது பற்றித் தம் நுண்மாண் நுழைபுலக் கருத்து ஏதும் சொன்னால் நான் நன்றியுடையவனாக இருப்பேன்.


இதன் பின் பிள்ளையார் இல்லாத இடம் இல்லை. எந்த காரியம் தொடங்கினாலும் விக்னம் இல்லாது நடக்க அவன் துணை வேண்டியிருக்கிறது. எந்த புலவரும் வினாயகருக்கு வாழ்த்துப் பாடித் தான் தம் நூலை இயற்றத் துணிகிறார். பாரதி வரை. ஒம் சக்தி என்று தொடங்கினாலும் அடுத்தாற்போல் :கணபதி ராயனின் இருகாலைப் பிடித்திடத்தான் அவர் மனம் செல்கிறது. அவர் எல்லா ஊருக்கும் எல்லைக்கடவுள் போல் கிவிட்டார். ஆனாலும், விக்னங்களை நாசம் செய்பவர், விக்னங்களையே தருபவராக சமூகத்தின் ஒரு பாலாரால், சில கட்சிகளால் கருதப்பட்டாலும், அவருக்குக் கற்பிக்கப்பட்டுள்ள உருவே அந்த விளயாட்டுச் சிறுவனின் பிரதிமையே வேடிக்கை உணர்வைத் தருகிறது. மகாராஷ்டிரத்தில் ஒரு பெண்மணி இன்னும் ஒரு சில நூறு பிரதிமைகள் செய்துவிட்டால் 50,000 பிரதிமைகளைச் செய்த இலக்கை அடைந்து விடுவேன் என்கிறார். இவ்வளவு பிரதிமைகள் செய்த பழக்கத்தாலோ என்னவோ, கண்களைக் கட்டிக் கொண்டே கூட அவரால் பிரதிமைகளைச் செய்துவிட முடிகிறது. அதுவும் நவீன சிற்பிகளைப் போல வித விதமான படிமங்களில் வித்தியாசமான பிரதிமைகளை அவர் சில நிமிடங்களில் அவர் விரல்கள் செய்யும் மாயத்தில் ஒரு நவீன படிம வினாயகர் உருவாக்கி விடுகிறார். சென்னையில் கூட கடந்த வருடம் ஒரு வாலிபர் எண்ணற்ற வினாயக சிற்பங்களைச் சேகரித்து வைத்திருந்ததை ஒரு தொலைக்காட்சியில் பார்த்தேன். கையில் கிரிக்கெட் மட்டை தாங்கிய் வினாயகர், பந்தின் மேல் கால் வைத்து உதைக்கத் தயாராயிருக்கும் வினாயகர், பைக்கில் அமர்ந்த கோலத்தில், இப்படி பல தோற்றங்களில். பாண்ட்டும் சர்ட்டும் போட்ட வினாயகர் கூட இருந்ததாக ஞாபகம்.


சிற்பிகளுக்கும் வினாயகர் பிரதிமை தரும் உற்சாகமும், கற்பனைப் பெருக்கமும், பார்த்தவர்களுக்குத் தான் தெரியும். அந்த பிரதிமை வாய்த்திருப்பது அப்படி. என்னென்ன விதமாக வெல்லாம், அந்த உருவம் தரும் வாய்ப்புகளுக்கும் அப்பால் கற்பிக்கத் தோன்றுகிறது. நிறைந்த கவர்ச்சியும், அழகும் வாய்ந்த பிரதிமை அது. முக்கியமாக நடனமாடும் விக்னேச்வரர் சிற்பங்களைப் பார்த்திருக்கிறேன். அப்படிப்பட்ட ஒரு கவர்ச்சி நடராஜப் பிரதிமைக்கே உண்டு.


எதுவானாலும், அதிலிருந்து மேம்பட்ட சிந்தனையையும், அழகுணர்வுகளையும் பெறுவது நமக்குள்ளிருந்து பிறக்க வேண்டும். அது நாம் எப்படிப்பட்ட ன்மா என்பதைப் பொறுத்துள்ளது. பரஞ்சோதி கொணர்ந்த கொடை நம் சங்கீதத்தை, சிற்பக் கலையை, கவிதையை, வாழ்க்கையை, விழாக்களை சிறுவர்களின் விளையாட்டு மனத்தையும் கூடத்தான் வளப்படுத்தியுள்ளது. நமது மனக்கட்டமைப்பு வேறானால், அழிப்பதற்கு எதுவும் சாக்காகும்.


Oru Arizonan

unread,
Sep 5, 2016, 1:52:32 AM9/5/16
to mintamil
பகிர்வுக்கு நன்றி, தேமொழி அவர்களே!

தேமொழி

unread,
Jan 2, 2017, 1:05:12 AM1/2/17
to மின்தமிழ்


மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம் 

ஜெயகாந்தனின் சிறுகதைகள் - தொகுப்பு - 1


தேமொழி

unread,
Apr 8, 2017, 3:12:59 AM4/8/17
to மின்தமிழ்


இன்று ஜெயகாந்தனின்  நினைவுநாள்

ஜெயகாந்தனின் சிறுகதைகள் - தொகுப்பு-2

நன்றி, மதுரைத் திட்டம் 

தேமொழி

unread,
May 11, 2017, 5:38:51 AM5/11/17
to மின்தமிழ்

காலந்தோறும் காதல்


எழுத்தாளர்: சி.மதிவாணன்
14 ஏப்ரல் 2017

பாரதியின் சிறுகதை- தற்காலத் தமிழில்


'காந்தாமணி... உன் அப்பாவின் பெயர் என்ன?' பாட்டி கேட்டாள். அது ஒரு கிணற்றடி. காலை நேரம். இளைய சூரியன் வானத்தை அழகாக்கிக் கொண்டிருந்தான். அந்தக் கிணற்றில் தானே நீர் இறைத்து ஒரு கிழவர் குளித்துக்கொண்டிருந்தார். அவர் பெயர் பார்த்தசாரதி அய்யங்கார். போலீஸ் வேலையிலிருந்து நீக்கம் செய்யப்பட்டவர். 'ராம நாம'த்தை ஜெபித்து காலத்தைப் போக்கிக்கொண்டிருந்த கிழவர் அந்தப் பாட்டியையே பார்த்துக் கொண்டிருந்தார்.

அது வேப்பந்தோப்பில் அமைந்த கிணறு. செழித்திருந்த அந்தத் தோப்பில் மூலிகைகள் நிறைய கிடைக்கும் என்பதால் நான் அங்கே வந்திருந்தேன்.

'உன் அப்பாவின் பெயர் என்ன?' என்ற பாட்டியின் கேள்விக்கு 'எங்க அப்பாவின் பெயர் பார்த்தசாரதி அய்யங்கார்'' என்று காந்தாமணி பதில் சொன்னாள். அவளின் குரல் குழலின் இசையைப் போன்றிருந்தது.

கிழவி போலீஸ் பார்த்தசாரதி அய்யங்காரை முறைத்துப் பார்த்தாள். பார்த்தசாரதி அய்யங்காருக்கு கைகால் வெலவெலத்துவிட்டது. அய்யங்காருக்கு உடம்பு தலையெல்லாம் நரைத்த முடி. ஆனால், உடம்பு 18 வயது பையனின் உடம்பு போல உருண்டு திரண்டிருந்தது. ஆண் புலியை வேட்டையாடும் ஆள் என்றும், பாம்புகளைப் பிடிக்கும் ஆள் என்றும் தன்னைப் பற்றி பார்த்தசாரதி அய்யங்கார் என்னிடம் சொல்லியிருக்கிறார்.

இப்படிப்பட்ட சூராதி சூரர் ஒரு பாட்டியின் பார்வைக்கு பயந்து நடுங்குவது ஆச்சரியமாக இருந்தது. அந்தப் பாட்டி பார்த்தசாரதி அய்யங்காரைச் சுட்டிக்காட்டி, 'இவரா உன் தந்தை?' என்று கேட்டாள்.

காந்தாமணி, 'அடக் கடவுளே' என்பதுபோல, வானத்தை நோக்கி கையை உயர்த்தி, நக்கல் சிரிப்புடன், 'இந்த ஆள் கருப்பாக, ஆசாரி போலிருக்கிறார். எங்கப்பா செக்கச் செவேலென்று, எலுமிச்சை நிறத்தில் வாலிபராக இருப்பார்'' என்று சொன்னாள்.

அப்போது போலீஸ் பார்த்தசாரதி, காந்தாமணியைப் பார்த்து, ''உங்கப்பாவிற்கு எந்த ஊரில் வேலை?' என்று கேட்டார்.

''எங்கப்பா சங்கரநாதன் கோவிலில் சப்- இன்ஸ்பெக்டர்'' என்று சொன்னாள். சப் இன்ஸ்பெக்டர் என்ற வார்த்தை பார்த்தசாரதி அய்யங்காரின் காதில், பாம்பின் காதில் விழுந்த இடிச் சத்தம் போல விழுந்து. அப்படியே பம்மிவிட்டார்.

அதன்பின் பாட்டியும் காந்தாமணியும் பேசிக்கொள்ள ஆரம்பித்தனர்.

'நீங்கள் அக்கா, தங்கை எத்தனை பேர்? ” என்று பாட்டி கேட்டாள்.

'எங்கக்காவுக்குப் பதினெட்டு வயது. போன மாசந்தான் ஸ்ரீவைகுண்டத்தில் சாந்தி முகூர்த்தம் நடந்தது; எனக்கு அடுத்த மாசம் சாந்தி முகூர்த்தம். என் தங்கை ஒருத்தி சாந்தி முகூர்த்தத்திற்குக் காத்திருக்கிறாள். நாங்கள் மூன்று பேரும் பெண்கள். எங்கப்பாவுக்கு ஆண் பிள்ளை இல்லை என்ற தீராத மனக் கவலை. என்ன செய்யலாம்? பெருமாள் கருணை கிடைத்தால் மட்டும் அவமானத்தில் இருந்து தப்பிக்க முடியும்.. வேறு வழியிருக்கா? அதற்காக அவர் சோதிடம் பார்த்தார். எங்கம்மாவுக்கு இனிமேல் ஆண் குழந்தை பிறக்காதென்று பாழாய் போன ஒரு சோதிடன் சொல்லிவிட்டான். அதை வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு எங்க அப்பா இன்னொரு கல்யாணம் பண்ணிக்கப் போறார். பெண்ணின் ஊர் மன்னார்கோவில். முகூர்த்தமெல்லாம் முடிவு செய்தாயிற்று" என்று முழு கதையையும் சொன்னாள் காந்தாமணி.

'உங்க அப்பாவுக்குப் பெண் கொடுக்கப்போறவரின் பெயரென்ன?' என்று அந்தப் பாட்டி கேட்டாள். 'அவர் பெயர் கோவிந்த ராஜய்யங்காராம். அந்த ஊரிலே அவர் பெரிய மிராசாம். அவருக்கு ஒரே பெண்தானம். கால் முதல் வைரங்களைப் போட்டு அனுப்புவாராம். தேவலோகத்து ரம்பை போல அழகாம் அந்தப் பெண்' என்று பதில் சொன்னாள் காந்தாமணி.

"அப்படிப்பட்ட அழகான பணக்கார இடத்துப் பெண்ணை இளையாளாகக் கொடுக்கக் காரணமென்ன?’ என்று பாட்டி கேட்டாள். அந்தப் பெண் பெரியவளாகி மூன்று வருஷங்களாய்விட்டன. அதன் தாயும் இறந்துபோய்விட்டாள். அதன் நடையுடை பாவனைகளெல்லாம் ஐரோப்பியர் மாதிரி. ஆதலால் இதுவரை அவளைக் கல்யாணம் செய்ய யாரும் வரவில்லை. எங்கப்பா அந்த ருதுவான வார்த்தையெல்லாம் வீண் பொய்யென்று சொல்லித் தாம் கல்யாணம் பண்ணிக் கொள்ள சம்மதப்பட்டுவிட்டார். மேலும் தனக்கு ருதுவான பெண் கிடைப்பது பற்றி இவருக்கு மனதுக்குள்ளே சந்தோஷந்தான்.. இன்றைக்குக் காலேயிலே கூட அவரும் எங்கம்மாவும் பேசிக் கொண்டிருந்தார்கள். நாங்கள் இந்த ஊர்ச் சத்திரத்திலேதான் ஒரு வாரமாக தங்கியிருக்கிறோம். எங்கப்பாவும், அம்மாவும் பேசிக் கொண்டிருந்தபோது அம்மா சொன்னாள்: "மன்னார்குடிப் பெண் வயதுக்கு வந்து மூன்று வருஷமாய் விட்டதாக இந்த ஊரிலே கூடப் பலமான பேச்சு அடிபடுகிறது'' என்றாள். அப்பா அதற்கு : 'நெவர்மைன்ட். அந்தக் குட்டி பெரியவளானது பற்றி நமக்கு இரட்டை சந்தோஷம். நமக்குப் பணம் கிடைக்கும். ஆண் பிள்ளை பிறக்கும். குட்டி ஏராளமான அழகு. இந்த மாதிரி பெண் கிடைக்கும்போது நமக்கு சாத்திரம் முக்கியமா?'' என்றார்..... ' என்று காந்தாமணி சொன்னாள்.

இவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருக்கிற சத்தம் என் காதில் விழுந்தது. என்னுடைய பார்வை முழுவதும் போலீஸ் பார்த்தசாரதி ஐயங்கார் மேல் இருந்த்து. அவரைப் பார்த்துக் கொண்டிருக்கையிலே என் மனதில் திடீரென்று ஒரு யோசனை பிறந்தது.

அங்கிருந்தவர்களில் எனக்குக் காந்தாமணியின் முகந்தான் புதிது. பார்த்தசாரதி ஐயங்காரையும் தெரியும்; அந்தக் கிழவியையுந் தெரியும். அந்தக் கிழவி அய்யங்கார்ச்சியில்லை; அந்தக் கிராம முன்சீபின் தங்கை. அவளுக்கும் போலீஸ் பார்த்தசாரதி அய்யங்காருக்கும் பால்யத்தில் பலமான காதல் நடை பெற்று வந்ததென்றும், அதனால் போலீஸ் பார்த்தசாரதி அய்யங்காருக்கும் மேற்படி கிராம முன்சீபுக்கும் பல முறை மோதல் நடந்தது என்றும், அப்படியான சண்டை ஒன்றில்தான் பார்த்தசாரதி அய்யங்காருக்கு ஒரு கண்ணில் பலமான காயம்பட்டு அது பொட்டையாய் விட்டதென்றும் நான் கேள்விப் பட்டதுண்டு.

இந்த செய்திகளை மனதில் வைத்துக்கொண்டு, அய்யங்காரின் முகத்தில் தோன்றிய உணர்ச்சிகளைப் பார்த்துக்கொண்டிருந்து எனக்கு ஒரு விஷயம் தெளிவாகத் தெரிந்தது. அந்தக் கிழவியின் மீதான அய்யங்காரின் காதல் இன்னும் மாறவில்லை. தனது காதலைக் கிழவியிடம் காட்ட அய்யங்கார் முயற்சிக்கிறார்.

காந்தாமணி போன்ற இளம் பெண்ணின் அருகே அந்தக் கிழவி நின்றபோதும், அய்யங்காருக்கு கிழவியே அழகியாகத் தோன்றுகிறாள். அவரின் காதல் அனலாய் பொங்கிக்கொண்டிருந்தது.

ஆனால், காந்தாமணியைப் பார்க்காமல் கிழவியை மட்டும் பார்த்து காதல் கணை வீச அய்யங்கார் சிரமப்பட்டு நடிக்கிறார் என்றும் எனக்குத் தோன்றியது. பெண்களைப் படைத்த பிரம்மனே காந்தாமணியைப் பார்க்கக் கண் கூசுவான். அவளைப் பார்க்காமல் கிழவியைப் பார்ப்பதாக நடித்த அய்யங்கார் மிகவும் சிரமப்படுகிறார் என்றும் எனக்குத் தோன்றியது.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், மறைவில் இருந்து நான் கிழவனைப் பார்த்துக் கொண்டிருந்தது போலவே காந்தாமணியும் கிழவியும் கிழ அய்யங்காரைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

பெண்களுக்குப் பாம்பை விட கூர்மையான காது. பருந்தைக் காட்டிலும் தெளிவான பார்வை. எனவே, அய்யங்காரின் மனது என்ன யோசிக்கிறது என்று இரண்டு பெண்களும் தெளிவாகப் புரிந்து கொண்டிருந்திருப்பார்கள்.

இந்த சூழலில் 20 வயதுள்ள ஒரு மலையாளிப் பையன் அங்கு வந்தான். அவன் பெருங்காய வியாபாரம் செய்பவன். அவனை நான் பலமுறை கிராமத்தில் பார்த்திருக்கிறேன். அவன் பார்வைக்கு மன்மதன் போலிருந்தான். கரிய விழிகள். நீண்ட மூக்கு. சுருள் சுருளான முடி. படர்ந்த உச்சிக் குடுமி. அவனைக் கண்ட எனக்கு அவன் மீது மோகம் உண்டாயிற்று என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அவன் கிணற்றுக்கு அருகே நின்று தாகத்துக்குத் தண்ணீர் வேண்டும் என்று கிழவியிடம் கேட்டான்.

அவனைப் பார்த்தவுடன் காந்தாமணி நடுங்கிப் போனாள். அந்த மலையாளி அவனைப் பார்த்தான். அவன் பார்வை பட்ட உடன், காந்தாமணி இடுப்பில் இருந்த பானை கீழே விழுந்து நசுங்கியது.

காந்தாமணி அதைக் குனிந்தெடுத்து 'ஐயோ, நான் என்ன செய்வேனம்மா ? குடம் ஆரங்குல ஆழம் அமுங்கிப் போய்விட்டதே ? எங்கம்மா எனக்குத் தூக்குத் தண்டனை விதிப்பாளே? ' என்று சொல்லிப் பெருமூச்சு விட்டாள். மார்புத் துணியை நெகிழவிட்டாள். தூரத்தில் இருந்த பொதியை மலைத் தொடரை நோக்கினாள்.

இந்தக் காந்தாமணி மேற்படி மலையாளிப் பையனிடம் அளவுக்கு மீறிய காதல் கொண்டவள் என்பதை நான் உணர முடிந்தது. பிறகு ஒரு சமயம் நான் விசாரித்தபோது, காந்தாமணியின் அப்பாவாகிய பார்த்தசாரதி மலையாளப் பகுதியில் பணியாற்றிக் கொண்டிருந்திருக்கிறார். அந்த மலையாளி சிறுவனாகவும் காந்தாமணி சிறுமியாகவும் இருந்த நாளிலிருந்தே அவர்களுக்கு நேசம் இருந்திருக்கிறது. காதல் வளர்ந்து முற்றிப் போய்விட்டது.

ஆனால், சப் இன்ஸ்பெக்டர் வேறொரு கணக்கு வைத்திருந்தார். ஓய்வூதியத்திற்கான துணை கலெக்டராகவும் கந்தலாபுரம் ஜமீனின் திவானாவும் இருந்து 55 வயதுள்ள கோழம்பாடு ஸ்ரீநிவாலாசாரியார் என்பவருக்கு விவாகம் செய்து கொடுத்து விட்டார். அந்த ஆளுடன் வாழ்வதற்கு காந்தாமணிக்குச் சம்மதமில்லை. இந்த செய்தியை எல்லாம் நான் பின்னர் விசாரித்து தெரிந்துகொண்டேன்.

இப்போது கதைக்கு வருவோம். 'குடத்தை உடைத்தேனென்று அம்மா திட்டுவாளே' என்று அழுதபடியே கிணற்றை விட்டுப் புறப்பட்ட காந்தாமணி தன் தாய் தந்தையர் இருந்த சத்திரத்துக்குப் போகவில்லை. அந்த ஊருக்கு மேற்கேயிருந்த நதிக்குப் போனாள். அதன் பின் அந்த மலையாளியும் அங்கே போய்ச் சேர்ந்தான்.

இதற்குள் எனக்கு சந்தியாவந்தனம் செய்ய வேண்டிய நேரம் கடந்துவிட்டபடியால், நான் மறைவிலிருந்து வெளியே வந்துவிட்டேன்.

அன்று மாலை என் வீட்டுக்கு மேற்படிக் கிராமத்து வாத்தியார் சுந்தர சாஸ்திரி வந்தார். வந்தவர் திடீரென்று, ''கேட்டீர்களோ விஷயத்தை வெகு ஆச்சரியம்! வெகு ஆச்சரியம் !'' என்று கூக்குரலிட்டார். '

'என்ன ஒய் ஆச்சரியம்? கடந்ததைச் சொல்லிவிட்டுப் பிறகு கூக்குரல் போட்டால் எனக்குக் கொஞ்சம் வசதியாக இருக்கும்' என்றேன்.

'சத்திரத்திலே சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி அய்யங்கார் சங்கரநாதன் கோவிலிலிருந்து வந்து இறங்கியிருக்கிருரோ, இல்லையோ? அவர் ஒரு பெண்ணையும் கூட்டிக்கொண்டு வந்தார். அவருடைய மகள், அந்தக் குட்டி வெகு அழகாம். திலோத்தமை, ரம்பையையெல்லாம் இவளுடைய காலிலே கட்டி அடிக்கவேண்டுமாம். அதற்குப் பெயர் காந்தா மணியாம். சொல்லுகிறபோதே நாக்கில் ஐலம் சொட்டுகிறது. காந்தாமணி... காந்தாமணி.... என்ன நேர்த்தியான காமம். ரஸம் ஒழுகுகிறது' என்று சுந்தர சாஸ்திரி காந்தாமணியை வர்ணித்துக் கொண்டு போவதை நான் இடையே மறித்து : “மேலே நடந்த கதையைச் சொல்லும் ' என்றேன்.

"அந்தக் காந்தாமணியைக் காணவில்லையென்று விடியற் காலமெல்லாம் தேடிக் கொண்டிருந்தார்கள். இப்போதுதான் அம்பாசமுத்திரத்திலிருந்து ஒரு தந்தி கிடைத்ததாம். இன்று பகல் 8 மணிக்கு மேற்படி காந்தாமணியும், ஒரு மலையாளப் பையனும் கிறிஸ்தவக் கோவிலில் விவாகம் செய்து கொண்டார்களென்று அந்தத் தந்தி சொல்லுகிறதாம்” என்றார்.

சில தினங்களுக்கப்பால் மற்றொரு ஆச்சரியமான செய்தி வந்தது.

கிராமத்து மாஜிப் போலீஸ் சேவகர் நரைத்த தலைப் பார்த்தசாரதி அய்யங்காரும், அன்று கிணற்றங்கரையில் அவருடைய காதற் பார்வைக்கிலக்காயிருந்த கிழவியும் ரங்கூனுக்கு ஒடிப் போய் விட்டார்கள்.

அதன்பின், அந்தக் கிழவி தலையில் முடி வளர்த்துக்கொண்டாள் என்றும், பார்த்தசாரதி அய்யங்காரும் அவளும் புருஷனும் பெண்சாதியுமாக வாழ்கிறார்களென்றும் அய்யங்கார் அங்கொரு நாட்டுக்கோட்டைச் செட்டியிடம் வேலை பார்த்து, தக்க சம்பளம் வாங்கிக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ்கிறார் என்றும் ரங்கூனிலிருந்து செய்தி வந்தது.

====================================================

(பாரதியார் எழுதிய காந்தாமணி என்ற கதையை தற்காலத் தமிழர்களுக்குப் புரியும் வகையில் மாற்றி எழுதியிருக்கிறேன். முடிந்தவரை பாரதியின் வார்த்தைகளை வைத்துக்கொண்டு, தற்கால நிலைமைக்கு ஏற்ப சுருக்கவும் செய்திருக்கிறேன். எனது தவறுகள் பற்றிய உங்கள் கருத்தை வெளிப்படையாகத் தெரிவியுங்கள். மகிழ்வேன்.)

- சி.மதிவாணன்

தேமொழி

unread,
Jun 4, 2017, 12:47:25 AM6/4/17
to மின்தமிழ்

நன்றி விகடன் : http://www.vikatan.com/news/tamilnadu/91141-abdul-rahman-special-article.html


கவிக்கோ அப்துல் ரகுமான்... உதிர்ந்த மெளனம்!



அப்துல் ரகுமான் எழுதிய நான்கு சிறுகதைகள் ஆனந்த விகடனில் வெளிவந்திருக்கின்றன. 'ராட்சஸம்' என்ற சிறுகதை 14.3.1993 ஆனந்த விகடன் இதழில் வெளிவந்தது. அந்தச் சிறுகதை....



ராட்சஸம்


தலைவர் ‘பார்ட்’ பார்ட்’டாய் வந்து இறங்கினார். தலையிலிருந்து மார்பு வரை, மார்பிலிருந்து இடுப்பு வரை, இடுப்பிலிருந்து முழங்கால் வரை, முழங்காலிலிருந்து பாதம் வரை என்று நான்கு பெரிய வர்ணத் துண்டுகள்.

சாரம் முன்பே கட்டப்பட்டுவிட்டது. துண்டுகளை ஒட்டுப் போட்டுத் தூக்கி நிறுத்த வேண்டியதுதான் பாக்கி.

பெருமாளின் தலைமையில் ஆட்கள் பம்பரமாய்ச் சுழன்று கொண்டிருந்தனர். நாளை காலையில் கூட்டம். விடிவதற்குள் முடித்தாக வேண்டும். அந்தப் பரபரப்பில் ஏற்பட்ட பதற்றமும் எரிச்சலும் அவருடைய ஏவல்களில் தெரிந்தன.

அப்துல் ரகுமான் கதை

 

பையன் டீ கொண்டுவந்து கொடுத்தான். வேலையிலிருந்து கண்களைப் பெயர்க்காமலே பெருமாள் டீயை வாங்கிக் குடித்தார்.
பெருமாள் பழைய தலைமுறையைச் சேர்ந்தவர். பெரிய பெரிய தலைவர்களையெல்லாம் அவர் பார்த்திருக்கிறார். அவர்களுக்கெல்லாம் இப்படி ராட்சஸக் கட்-அவுட்டுகள் தேவைப்படவில்லை. அவர்கள் சுயமான விஸ்வரூபத்தில் உயர்ந்து, மக்கள் மனத்தில் பிரமாண்டமாக நின்றார்கள். அவர்களுடைய உயரம் தூரிகையாலும் மரத்தாலும் ஆனதல்ல; அவர்களைத் தூக்கி நிறுத்தச் சாரமும் தேவைப்பட்டதில்லை.

“ஐயா...” என்ற குரலில் அவர் சிந்தனை கலைந்தது. எதிரில் ஓர் இளைஞன்.
“நானும் கூடமாட ஒத்தாசை செய்யட்டுமா?”
“வேண்டாம் தம்பி... போதுமான ஆட்கள் இருக்காங்க...”
“கூலி ஒண்ணும் வேணாங்க, சும்மா செய்றேன். தலைவருன்னா எனக்கு உசுரு. அவருக்குக் கட்-அவுட் வெக்கறதிலே நானும் சேந்துக்கணும்னு ஆசையா இருக்கு...”
“ஓம் பேரு என்ன?” - பெருமாளின் கேள்வியில் கொஞ்சம் வியப்பும் கலந்திருந்தது.
“கபாலிங்க...”
“சரி.. போய்ச் செய்...”

கபாலி உற்சாகமாக ஓடினான். சாரத்தில் கால்பகுதி கட்டப்பட்டு முடிந்திருந்தது. அவன் அந்தக் கால்களில் விழுந்து வணங்கினான். எழுந்து பக்கத்தில் தரையில் கிடந்த தலைவரின் முகத்தை ஆசையோடு தடவினான். வலை வீசும் இந்தப் புன்னகை யாருக்கு வரும்..? அவனுக்குள் சுரந்த பயபக்தி முகத்தில் கசிந்தது.

கபாலி கட்சிக்காரன் அல்ல. உண்மையான அர்த்தத்தில் அரசியலும் அவனுக்குத் தெரியாது. காட்டப்படுவதை நம்பும் இனம் அவன். தலைவர் கிழவியின் தலையைத் தடவுவது, ஊனமுற்ற சிறுவனுக்குச் சக்கர வண்டி கொடுத்து அவனுக்கு முத்தமிடுவது, தீ விபத்தில் வீடு இழந்தவர்களுக்கு உணவுப்பொட்டலம், வேட்டி, சேலை கொடுப்பது... இதையெல்லாம் படங்களில் பார்த்து, ஏழைகளுக்காக உருகி உருகிப் பேசுவது, அவர்கள் உரிமைகளுக்காக வீராவேசமாக முழங்குவது... இதையெல்லாம் கேட்டு, அவனுடைய இதயத்தில் ஒரு சிம்மாசனம் போட்டு அவரை உட்கார வைத்திருந்தான். செய்தித்தாள்களில் காட்டப்படும் வெளிப்பக்கத்தை மட்டுமே தரிசிக்கிறவன் அவன். தூண்டில் முள்ளை மறைக்கும் புழுவை அடையாளம் காணும் பக்குவமெல்லாம் அவனுக்கு இல்லை.

தலைவர் எங்கே பேசினாலும் அங்கே போய்விடுவான். ‘என் கண்ணின் மணிகளே!’ என்று அவர் தொடங்கும்போது பரவசமாகி, மெய்சிலிர்த்து, விசிலடித்து ஆரவாரித்துக் கைதட்டுவான். தேர்தல் காலத்தில் அவருக்காகப் பசி, தாகம் பார்க்காமல் வேலை செய்வான். போஸ்டர் ஒட்டுவான்; சுவரில் எழுதுவான்; ஊர்வலம் போவான்; உரக்கக் கோஷம் போடுவான்; அவரை யாராவது குறைத்துப் பேசினால், சண்டைக்குப் போய்விடுவான். இதில் எத்தனையோ முறை அடி உதை பட்டு ரத்தம் சிந்தியிருக்கிறான். இதையெல்லாம் தலைவருக்குக் காணிக்கையாகவே நினைத்துக்கொள்வான். தேர்தலில் தலைவர் ஜெயித்துவிட்டால், தானே ஜெயித்ததுபோல் பட்டாசு கொளுத்திக் கூத்தாடுவான். அந்த ராமனுக்குதான் ஓர் அணில் என்று அவனுக்கு நினைப்பு. ஆனால், அவன் முதுகு எப்போதும், யாராலும் தடவிக் கொடுக்கப்பட்டதில்லை. அதை அவன் எதிர்பார்த்ததும் இல்லை.

ஆட்கள், இடுப்புப் பகுதியைத் தூக்க வந்தார்கள். கபாலியும் அவர்களோடு சேர்ந்து கைகொடுத்தான். அந்தக் கனம் அவனுக்குச் சுமையாகப் படவில்லை. தலைவரைத் தூக்குகிறோம் என்ற பெருமையும் மகிழ்ச்சியும் அவன் முகத்தில் பளிச்சிட்டன.

நேரம் ஆக ஆக, பெருமாளுக்குப் பதற்றம் அதிகரித்தது. கொஞ்ச நேரத்துக்கு முன்னால்தான் அமைச்சர் ஒருவர் வந்து, வேகம் போதாதென்று கெட்ட வார்த்தையில் திட்டிவிட்டுப் போனார். அவர் பரபரப்பாக ஆட்களை வேகப்படுத்தினார். அது கட்சிக் கூட்டம்தான். ஆனாலும் மேடை பந்தல் வேலைகளில் அரசாங்க அதிகாரிகள் பயபக்தியோடு ஈடுபட்டிருந்தனர். அரசாங்க வாகனங்கள் இங்கும் அங்கும் புழுதி பறக்க ஓடிக்கொண்டிருந்தன.

“இவங்களுக்கெல்லாம் பெரிசாக் காட்டணும். அதுவும் அவசரமா காட்ட ணும். ஜனநாயகம்கிறானுங்க... அமைச்சர்கள் ஜனங்களுடைய சேவகர்கள் என்கிறானுங்க... ஆனா, ஜனங்களைவிட, தான் ஒசத்தி... ஜனங்க தங்களை அண்ணாந்து பாக்கணும்.. தங்களை அற்பமா நெனச்சு கால்லே விழுந்து வணங்கணும்... கப்பம் கட்டணும்னு நெனக்கிறானுங்க... தெரியாத தேவதையைவிட தெரிந்த அரக்கன் மேல்ங்கற ஜனங்க மனப்பான்மையை இவங்க நல்லா தெரிஞ்சு வெச்சிருக்கானுங்க. அதனாலே தங்களுடைய உருவத்தை, முகத்தை செயற்கையா அசிங்கமா பெரிசாக்கி, பாமரர் மனசிலே பலவந்தமா திணிக்க முயற்சி பண்றாங்க. உருவத்தைப் பெரிசா காட்டுனா பெரிய மனுஷன் ஆயிட முடியுமா? இது படங்களை நம்புற தேசம். அதனாலே எல்லாரும் படங்காட்ட றானுங்க.. தூத்தேறி...” - பெருமாள் காறித் துப்பினார்.

தலைப்பகுதியைப் பொருத்திவிட்டு ஆட்கள் இறங்கிக்கொண்டிருந்தார்கள். கபாலிக்கு உடையெல்லாம் அழுக்காகி விட்டது. உடம்பில் அங்கங்கே சிராய்ப்பு. ஆனால், அவனுக்குக் களைப்போ, வலியோ தெரியவில்லை. அவன் தூரத்தில் போய் நின்று பார்த்தான். தலைவர் வானளாவ உயர்ந்து அட்டகாசமாக, கம்பீரமாக நின்றுகொண்டிருந்தார். பின்னால் இருந்த கோயில் கோபுரம்கூடத் தெரியவில்லை. அதைவிட உயரமாக அதை மறைத்துக்கொண்டு நின்றிருந்தார் தலைவர். அந்தப் புன்னகை... யாருக்கு வரும் அந்தப் புன்னகை? கபாலியின் உடம்பெல்லாம் பரவசம் பரவியது. அவன் கையெடுத்துக் கும்பிட்டான்.

“எவ்வளவு செலவாகியிருக்கும்?” - யாரோ ஒருவன் கேட்டான்.
“ஐம்பதாயிரம் ரூபாய்னு சொன்னாங்க...”
“ஐம்பதாயிரமா? அடப்பாவிங்களா... ஐம்பது குடும்பம் ஒரு மாசத்துக்குப் பசியில்லாம சாப்பிடலாமே... ராட்சஸன் மாதிரி அவ்வளவையும் விழுங்கிக்கிட்டு நிக்கிறதைப் பாரு...”

கபாலிக்கு இதயத்தில் ‘சுரீர்’ என்றது. கோபத்தோடு திரும்பிப் பார்த்தான். கட்டையும் குட்டையுமாக இருந்தவன்தான் அப்படிப் பேசிக்கொண்டிருந்தான்.

கபாலி அவன்மேல் பாய்ந்தான். “எங்க தலைவரு தெய்வம்யா... அவரைப் போய் ராட்சஸன்னா சொல்றே?” என்று கத்தியபடி அவன் முகத்தில் குத்தினான்.

எதிர்பாராத தாக்குதலில் முதலில் நிலைகுலைந்து திகைத்துப்போன அந்த ஆள், தன்னைச் சமாளித்துக்கொண்டு கபாலியை ஓங்கி எட்டி மிதித்தான். கபாலி குலைந்துபோய்க் கீழே விழுந்தான்.

“இவனாடா தெய்வம்? ஏண்டா தெய்வம்ங்கற வார்த்தையை இப்படி அசிங்கப் படுத்துறீங்க... உன்ன மாதிரி முட்டாப் பசங்களுக்குத்தான்டா இவன் தெய்வம்...  உடுத்த மறு வேட்டி இல்லாம இந்த ஊருக்கு வந்தவன்டா ஒங்க தலைவன். இப்போ இந்த ஊர்லே பாதி அவனுக்குச் சொந்தம்... எங்கேயிருந்துடா வந்தது இவ்வளவு பணம்? குடியை ஒழிக்காம சாகமாட்டேன்னு கூவுறானே ஒங்க தலைவன்... பினாமியிலே ரெண்டு சாராயத் தொழிற்சாலை இருக்குடா அவனுக்கு... உனக்குத் தெரியுமா? சேரியை எல்லாம் ஒழிக்காம தூங்கமாட்டேன்னு மேடையெல்லாம் முழங்குறானே... அவன் எப்படி எங்க சேரியை ஒழிச்சான் தெரியுமா? தனக்குப் பெட்டி பெட்டியா கொண்டுவந்து கப்பம் கட்டறவன்  ஓட்டல் கட்டறதுக்காக, ஒரு சேரியையே நெருப்பு வெச்சுக் கொளுத்த வெச்சவன்டா ஒங்க தலைவன்... அந்தத் தீயிலே வீடு, வாசல், குழந்தையைப் பறிகொடுத்தவன்டா நான்...” - அந்த ஆள் பொங்கி வெடித்துச் சிதறிக் கொண்டிருந்தான்.

கைகலப்பைப் பார்த்துப் பதறிக் கொண்டு ஓடிவந்தார் பெருமாள். வம்பு எதுவும் வந்துவிடக் கூடாதே என்று, அந்த ஆளைச் சமாதானம் பண்ணி காலில் விழாத குறையாகக் கெஞ்சி அவனை அனுப்பிவைத்தார். பிழைப்புக்குக் கேடு வரும் என்றால் எதனோடும் சமரசம் செய்துகொள்ளப் பழகிவிட்டவர் அவர். கபாலியையும் சமாதானப்படுத்திவிட்டு அவர் போய்விட்டார்.

காலையில் கூடும் கும்பலின் காலடிகள் பட்டு அதுவும் மறைந்துவிடும்.

கபாலிக்கு இதயத்தில் வலித்தது. ‘இல்லை... இல்லை... இதெல்லாம் உண்மையா இருக்க முடியாது... இருக்கக் கூடாது. அவன் எதிர்க்கட்சிக்காரனா இருப்பான்... பொய் சொல்றான்... தலைவர் இப்படியெல்லாம் செய்யமாட்டார்...’ -ஆனால், அவன் இதயத்திலிருந்த சிம்மாசனம் லேசாக ஆடத் தொடங்கியது.

கட்-அவுட்டை அவன் நிமிர்ந்து பார்த்தான். ‘தலைவரே, இது உண்மையா? உண்மையா?’ என்று அவன் இதயம் அலறியது.
காற்று ‘ஹோ.. ஹோ..’ என்று இரையத் தொடங்கியது. மரங்கள் பேயாடின. தலைவரின் அந்தப் புன்னகை மெதுவாக மறைந்தது. வாயின் இரண்டு பக்கத்திலும் கோரப் பற்கள் முளைத்தன. முகம் விகாரமானது.

கபாலி எழுந்து ஓடினான். “இல்லை.. இது உண்மை இல்லை” என்று கட்-அவுட்டின் கால்களைப் பிடித்துக் கொண்டு கதறினான்.
ஆணைக்குக் காத்திருந்ததுபோல், காற்று சீறிச் சினந்து ஆவேசமாகக் கட்-அவுட்டை அசைத்தது. கொஞ்ச நேரத்தில் கட்-அவுட் மடமடவென்று இரைச்சலுடன் சரிந்து விழுந்தது.

கட்-அவுட்டின் இடிபாடுகளை அகற்ற வந்தவர்கள், அதன் அடியில் ஒரு பிணத்தைக் கண்டு திடுக்கிட்டார்கள். பிணம் ரகசியமாக அப்புறப்படுத்தப்பட்டது. அந்த இடத்தில் சாட்சியாகக் கொஞ்சம் ரத்தக் கறை மட்டும் இருந்தது - ‘இது உண்மையா...? உண்மையா?’ என்ற மௌனமான அலறலோடு. 



காலையில் கூடும் கும்பலின் காலடிகள் பட்டு அதுவும் மறைந்துவிடும்.

Suba

unread,
Jun 4, 2017, 4:25:42 AM6/4/17
to மின்தமிழ்
இந்தக் கதையை மின் தமிழ் மேடையில் கவிஞரின் நினைவாகப் பதிந்து வைப்போமே.

சுபா

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Dr.K.Subashini
http://www.subaonline.net - எனது பக்கங்கள்

தேமொழி

unread,
Jun 4, 2017, 9:04:32 PM6/4/17
to மின்தமிழ்


On Sunday, June 4, 2017 at 1:25:42 AM UTC-7, Dr.K.Subashini wrote:
இந்தக் கதையை மின் தமிழ் மேடையில் கவிஞரின் நினைவாகப் பதிந்து வைப்போமே.


மின்தமிழ் மேடையில் ...
 ராட்சஸம்
-- கவிக்கோ அப்துல்ரகுமான்

தேமொழி

unread,
Jun 27, 2017, 10:20:01 PM6/27/17
to மின்தமிழ்

முடிவு

(பொன் குலேன்திரன் – கனடா )                                               

                       

“ அம்மா நான் இண்டைக்கு ஸ்கூலிலை இருந்து சுணங்கித்தான் வருவன். என்னைத் தேடவேண்டாம்” தாயுக்குச் சாந்தன் சொன்னான்.

“ஏன்டா ராசா அப்படி என்ன விசேசம் ஸ்கூலிலை  நடக்குது? செல்லம்மா மகனை கேட்டாள்

“இண்டைக்கு எண்டை ஏ லெவல் பௌதிக பாடத்தில் பரீட்சைக்கு வரக்கூடிய கேள்விகளையும்’ அதற்கான விடைகளையும் ஸ்டுடன்சுக்கு சொல்லப் போறார் எங்கடை பௌதிக மாஸ்டர் நாதன். போன வருஷம் அவர் சொன்ன கேள்விகள் பல வந்தது. நான் அந்த கிளாசை மிஸ் பண்ணக்கூடாது.  பௌதிக படத்திலை நல்ல மார்க்கஸ் நான் எடுத்தால் நிட்சயம் மெடிக்கல் கல்லூரிக்கு போக எனக்கு இடம் கிடைக்கும். மற்றைய பாடங்களில் எனக்குப் பிரச்சனை இல்லை” சாந்தன் திடமாகச் சொன்னான்.

“அப்ப சரி ராசா. உனக்கு பிடித்த புட்டும், கோழி இறச்சிக் கறியும், முட்டை பொரியலும் செய்து வைக்கிறன். போகக்கை டோர்ச் லைட்டையும் கொண்டு போ. உண்டை சைக்கில் டைனமோ வேலை செய்யுதில்லை என்று உன் அப்பா சொன்னார்”

“சரி அம்மா” என்று அறைக்குள் போய் டோர்ச் லைட்டையும் நோட் புத்தகத்தையும் எடுத்துக் கொண்டு தன் சைக்கிளில் சாந்தன் எறிப்போனான்.

சாந்தன், மாணிக்கம் செல்லம்மா தம்பதிகளின் ஏக புத்திரன். மாணிக்கம் வைத்திய சாலையில் மருந்து தயாரிக்கும் கொம்பௌன்டர் வேலை செய்பவர். செல்லம்மா அரச வைத்தியசாலையில் நேர்ஸ். மருத்துவர் முதலில் மருந்துகளை பரிந்துரைக்கிறார், அதன்  பின்னர் கொம்பௌன்டர்  அவசியமான பொருட்கள், கலவைகள் ஆகியவற்றை எடுத்துக்கொள்கிறார், மேலும் முழுமையான டாக்டரின் ஆலோசனையின் பேரில் நோயாளிக்கு மருந்தை வழங்குகிறார்.

மாணிக்கம் தம்பதிகளுக்கு டாக்டர்களோடு நெருங்கிய தொடர்புண்டு. இருவரும் தங்கள்  மகன் வெள்ளை யுனிபோர்ம் அணிந்து, கழுத்தில் ​ஸ்டேதஸ்கோப் தொங்க  நடந்து வரும் காட்சியை எப்போது காணலாம் எனக் கனவு கண்டனர். அவர்களின் ஆசையைப் பூர்த்தி செய்யவோ என்னவோ சாந்தன்  படிப்பில் கெட்டிக்காரனாக திகழ்ந்தான். தனது  தாய் மாமன் தன் மகன் சுகுமார் ஒரு டாக்டர்  என்பதை அடிக்கடி பெருமையாக பலருக்கு சொல்வதை சாந்தன்  .கேட்டபோது தானும் படித்து டாக்டராக வேண்டும் என் முழு மூச்சாக படித்தான். தாயும் தகப்பனும் அவனுக்குத் தேவையான புத்தகங்களை செலவு பாராது வாங்கிக் கொடுத்தார்கள். சாந்தனும் தன் அறையில் மருத்துவம், படிப்பு.. இலக்கியம் சம்பந்தப்பட்ட நூல்களை அழகாக பிரோவில் அடுக்கி வைத்திருந்தான்.  

சாந்தன் படித்த கல்லூரி பிரின்சிபால் சிவலிங்கம், மாணிக்கத்தை சந்தித்த போது “மாணிக்கம் எங்கடை கல்லூரில் இந்த முறை மருத்துவக் கல்லுரிக்கு தேர்வாகும்  மாணவர்கள் மூவர் என்பதை ஆசிரியர்கள் எதிர்பாக்கினம். அந்த இருவரில் உம்முடைய மகன் சாந்தனும் ஒருவன். ஆனால் ஓன்று மட்டும் உமக்கு சொள்ளவிரும்புகிறன்;”

“என்ன சேர் அந்த விஷயம்” மாணிக்கம்

“ எவ்வளவு கடுமையாகப் படித்தாலும் மருத்துவக் கல்லூரிக்கு தேர்வாகுவது அவ்வளவு இலேசு இல்லை. போட்டி அதிகம். அதோடு புதிதாக அரசாங்கத்தினால்  அமுல்படுத்தப் பட்ட  தரப்படுத்தல் கொள்கையால் பல கெடிக்கார தமிழ்  மாணவர்கள் பாதிக்கப் பட்டு இருகிறார்கள். அதை உமக்கு சொலி வைக்க விரும்புகிறேன்”

“அதென்ன  அரசாங்கத்தின் கொள்கை சேர்”

“ஒரு காலத்தில் இந்த தரப்படுத்தல் கொள்கை  இல்லாதபோது படித்து மருதுவக்கல்லூரிக்கும், போறியியல் கல்லூரிக்கும் எடுபட்டவர்கள் பெரும்பாலோர். தமிழ் மாணவர்கள். அதோடு பரீட்சைகுப்பின் பௌதிகம். இரசாயனம், விலங்கியல். தாவரவியல் ஆகிய பாடங்களில் பரிசோதனை பரீட்சைகள் நடப்பதுண்டு. அது இப்பொது அரசால் நிறுத்தப்பட்டு விட்டது.. காரணம் நல்ல கல்லூரிகள் தமிழ் பகுதிகளில் மிஷனேரிகள் உருவாக்கியதே. கிராமத்துக் கல்லூரிகளில் லப் வசதி குறைவு. இதை காரணம் காட்டி பின் தங்கிய பகுதிகளில்  வாழும் சிங்கள மாணவர்கள் டாக்டராரக வேண்டும் என்பதால் அப்  பகுதிகளில் படிக்கும் சிங்கள மாணவர்களுக்காக  சிங்கள அரசியல் வாதிகள் கொண்டுவந்தது தரப் படுத்தல் சட்டம்.  இதனால் குறைந்த புள்ளிகள் எடுத்த கிராமப்புற சிங்கள மாணவர்கள் டாக்டர் அகும் வாய்புண்டு”

“இது சிங்களம்  மட்டும் சட்டத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் அரசாங்க ஊழியர்களைப் போல் அல்லவா இருகிறது. நானும் அதனால் பாதிக்கபட்ட அரசாங்க ஊழியன் சேர்” மாணிக்கம் சொன்னான்

“சரியாகச்  சொன்னீர் மாணிக்கம். அனால் சாந்தன் கெட்டிக்காரன். அவன் உமது கனவை நிறைவேற்றுவான் என்ற நம்பிக்கை எனக்குண்டு.. நீர் ஒண்டுக்கும் யோசிக்க வேண்டாம்” பிரின்சிபால் சொன்னார்.

 *******

மனிதன் நினைப்பது ஓன்று கடவுள் தீர்மானிப்பது வேறோண்டு. பரீட்சை முடிவுகள் வந்தவுடன் சாந்தன் கல்லூரியில் முதல் மாணவனாக சித்திடைந்திருந்தான். ஆசரியர்கள் எல்லோரும் சாந்தன் காலூரியில் இருந்து நிட்சயம் மருத்துவக் கலூரிக்கு தேர்வாகுவான் என எதிர்பார்த்தனர். ஈழத்து போர் மும்மரமாக நடந்து கொண்டிருந்தது. அரச விமனபடை ஈவிரக்கம் பாராது குண்டு வீச்சுத் தாக்குதலை நடத்திக் கொண்டிருந்தது.

கல்லூரி பிரின்சிபால் சாந்தனை தன் ஒபீசுக்கு அழைத்தார். எதோ நாள் செய்தி பிரின்சிபால் சொல்லப்போகிற’ என்ற ஆர்வத்தில் சாந்தன் . ஒபீசுக்கு போனபோது பிரின்சிபால் சொன்னது அவனுக்கு ஏமாற்றத்தை கொடுத்த்து

“சாந்தன் நீ  மருத்துவக் கல்லூரிக்கு தேர்ந்து எடுகப்படவில்லை”

“என்ன சேர் சொல்லுறியல்”

“எங்கடை கல்லூரியில் இருந்து ஒருவரும் மருத்துவக் கல்லூரிக்கு  தேர்ந்து எடுக்கப்படவில்லை”

“ஏன் சேர்”

“இது அரசின்  தரப்படுத்தல் கொள்கையின் பாதிப்பு. உம்மிலும்; பார்க்க குறைந்த மார்க்ஸ் எடுத்த சிங்கள கிராமப்புற மாணவர்கள் மருத்துவக் கல்லூரிக்கு எடுபட்டிருக்கலாம். அடுத்த முறையும் முயற்கித்துப் பாரும்”

சாந்தன் அதை கேட்டு அதிர்ந்து போனான். ஓன்று பேசாமல் வீட்டுக்கு சென்ற போது விமான குண்டு வீச்சின் சத்தம் கேட்ட படி இருந்தது. சனங்கள் பதறி அடித்து ஓடுவதைக் கண்டான். அந்தக் கூட்டத்தோடு தன் தாயும் தகப்பனும் சேர்ந்து ஓடுவதைக் கண்டான்

“அப்பா எங்கை இப்படி ஓடுகிறீர்கள்” சாந்தன் அவர்களைப் பார்த்துப் பதறியபடி கேட்டான்.

“சாந்தன் இங்கை நிற்காதே. குண்டு உன் தலையில் எபோது விழும் என்று தெரியாது. எங்கள் வீட்டில் விழுந்து வீடு எரிகிறது. இங்கை நிற்காதே வா பாதுகாப்பான ஊருக்குப் போவோம்” என்றான் மாணிக்கம்.

“அப்பா என் புத்தகங்களுக்கு என்ன நடந்தது”

“அதை பற்றி யோசிக்கா இப்ப நேரமில்லை. அவையும் வீட்டோடு எங்கள் மத்திய நூலகத்தைப் போல் தீயுக்கு இரையாகி இருக்கலாம். பேசிக் கொண்டிருக்காமல் வா எங்களோடை” என்றார் மாணிக்கம்.

“ அப்ப நான் படித்து டாக்டர்ராக முடியதா”?

“அதிப்பற்றி பிறகு யோசிப்பம்.” என்றாள் தாய்.

மாணிக்கம் குடும்பம் உயரைரைக் காப்பாற்ற மக்களோடு மக்களாய்  பாதுகாப்பு தேடி ஓடினார்கள்

“கொழும்பிலை சிங்களவனிடம் அடி வாங்கி கப்பலில் இங்கை சொந்த

ஊருக்கு வந்தோம் இங்கையும் எங்களுக்குப் பாதுகாப்பு  இல்லையா.. இந்த அடுக்குமுறையை நிருத்த வழியில்லையா. அடிமைகளாக நாம் வாழ வேண்டுமா அப்பா” விசனத்தோடு சாந்தன் கேட்டான். அவனது பேச்சில் விரக்தி தெரிந்தது

“ நீ இப்ப அதிகம் பேசாமல் வரப்போகிறாயா இல்லையா”? மகனை மாணிக்கம் அதட்டினார்.

********

பல மாதங்கள் சென்றன. வெளிநாடுகளின் அழுத்தம் காரணாக குண்டுவீச்சு நிறுத்தப்பட்டாலும் இராணுவத்தால் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்தன. சாந்தனோடு ஒரே வகுப்பில் படித்த இரு மாணவிகள் இராணுவத்தால் கடத்தப்பட்டனர். ஊர் மக்கள் பலர் வன்னி  நோக்கி புலம் பெயர்ந்தனர்.

ஒரு நாள் சாந்தனின் கல்லூரி பிரின்சிபால் மாணிகத்தை சந்தித்தார்.

“என்ன மாணிக்கம்  இப்ப ஏன் உமது  கெட்டிக்கார மகன் சாந்தன் ஸ்கூளுக்கு வருவதில்லை பிரின்சிபால்  மாணிக்கத்தை கேட்டார்

“அதை ஏன் சேர் கேட்குறீர்கள். சாந்தன் மேலும் படிப்பை தொடர விருபவில்லை. சாந்தனும்அவனோடு படித்த மூன்று நண்பர்களும் இனி படித்து பிரயோசனம் இல்லை. எமது தமிழ் இனத்தைப் பாதுகாக்க வேண்டும். எமது உரிமைகளைப் பெற வேண்டும். பேனாவல்ல துவக்கு தான் தனக்கு என்று முடிவு  செய்து தமிழர் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் எங்களுக்குச் சொல்லாமல் தன்னோடு படித்த நண்பர்களோடு சேர்ந்து விட்டான் சேர். அவன் முடிவு சரியென நான் நினைக்கிறன்”  என்றார் அமைதியாக.

*****


https://twitter.com/kulendiren


Suba

unread,
Jun 28, 2017, 4:17:12 PM6/28/17
to மின்தமிழ்
இந்தக் கதைப் போன்ற சூழல் மலேசியாவிலும் நிகழ்கின்றது.  உதாரணமாக ஒரு இயல்பான தமிழ் குடும்பத்து செயல்பாடுகள் போலத்தான் என் தாயாருக்கும் நான் மருத்துவம் படிக்க வேண்டும் என விருப்பம். ஆனால்  எனக்கு கிடைத்த புள்ளிகளுக்கும் குறைவாகக் கிடைத்த மலாய் மாணவ்ர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. அது இன சலுகை ஒதுக்கீட்டுச் சட்டத்தின் படி அமைந்த ஒரு அமைப்பினால். ஆனால் நான் இதனால் வருந்தி ஆர்வம் இழந்து போய்விடவில்லை. நான் மட்டுமல்ல.. ஏராளமான தமிழ் சீன மாணவ்ர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைதான்..ஆயினும் முயற்சியும் திறமையும் ஆர்வமும் இருந்தால் சலுகை கிடைத்தோரை விட தன் முயற்சியில் பல மடங்கு முன்னேற்றம் காணலாம்.
தனது தோல்விக்குக் காரணம் தேடுவதும் பின் பிறர் மேல் பழி போடுவதும் பட்சாதாபம் தேடுவதும் பயனற்றது என நினைக்கின்றேன்.

சுபா

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Jan 12, 2018, 5:24:12 PM1/12/18
to மின்தமிழ்
நன்றி- திண்ணை - http://puthu.thinnai.com/?p=14209

மானுடர்க்கென்று……..
விஜே.பிரேமலதா

 

கறுத்துப் போன தேகத்தோடு, வியர்வை வழிய நெற்றியிலிருந்த நாமம் வழிந்து மூக்கைச் சிவப்பாக்கியிருந்தது. அதை அறியாமல், ஒருவித தளர்வோடு முகத்தை இறுக்கமாக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார் பெரியாழ்வார். கூடத்துத் திண்ணையில் தோழியரோடு மாலை கட்டியபடி அனுமன் பற்றிய கதையைச் சொல்லிக்கொண்டிருந்த கோதை தலைநிமிர்ந்தாள். ஆண்டாளின் கதை நின்றதை அறிந்த தோழியர் பெரியாழ்வாரின் முகத்தைப் பார்த்தளவில் பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு வாய்ப் பொத்தி அவரவர் வீட்டிற்குப் பறந்து போயினர்.

தந்தையின் வருகை அகத்தில் மகிழ்ச்சியைத்தர, துள்ளிக்குதித்தபடி அன்றலர்ந்த மலர் ஓடி வருவதைப்போல வந்த மகளிடம் சோகத்தை மறைக்க, புன்சிரிப்பை வலிய வரவழைக்க முயன்றார்.  ஏனோ அது வரவில்லை. கோதையின் முகம் சிறுத்தது. தன்னால் தான் தந்தை சிரிப்பையே தொலைத்துவிட்டார் என்ற எண்ணம் அவளை நிலைகுலைய வைத்தது.

அன்றொரு நாள் சிறுமியாயிருந்த போது கண்ணனுக்காகக் கட்டிய மாலையைக் கழுத்தில் அணிந்து கொண்டு ‘ நானே கண்ணன்` எனத் தோழியருடன் விளையாடிக் கொண்டிருந்ததைக் கண்டும் கூட கோபத்திலும் அவர் முகத்தில் புன்னகை மாறாமலிருந்ததே.  கண்டிப்பிலும்கூட அவரையும் மீறி சொற்களில் அன்பு கனிந்திருந்ததே. இப்போது அவை எங்குப் போய் ஒளிந்து கொண்டன? வலிய புன்னகைக்க முயன்று ஏன் தோற்றுக்கொண்டிருக்கிறார்? எனினும் முன்னை விட அவர் கண்களில் மிகுதியாய் அவளைப் பார்க்குந் தோறும் கனிவு பெருகிக்கொண்டிருக்கிறதே?

கோதை  தாயைப் பார்க்க உள்ளறைக்குச் சென்றாள். அவளின் தாய் தள்ளாத வயதிலும் உடல் சோர்வைப் பொருட்படுத்தாது அடுப்படியில் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தாள். கோதையின் வரவறிந்து சொம்பு நீரை எடுத்து நீட்டினாள். தந்தையின் வருகையைத் தெரிவிக்குமுன்னரே எப்படி அவர் வருகையை அறிந்தாள்? நெருப்பின் சிவப்போடு போட்டிப் போடும் அவள் மேனியிலிருந்து பெருகி வழியும் வியர்வை தனலின் ஒளி பட்டு மினுமினுத்துக் கொண்டிருந்தது.கண்கள் உள்ளடங்கிச் சிறுத்திருந்தன. அவளுடைய மை தீட்டிய பெரிய கண்கள்  இந்த இரண்டு வருடங்களுக்குள் யாரைக் காண விரும்பாமல் இப்படிச் சிறுத்தன? யாருமறியாமல் அழுது அழுது தன் குடும்பத்தைத் தவிர இனி எவரையும் பார்ப்பதில்லை என வைராக்கியம் கொண்டதனால் இப்படிச் சிறுத்து விட்டனவோ?  எல்லாம் தனக்காக.. தன் மீது கொண்ட பாசத்திற்காக…கோதை மறுகினாள்.

தந்தையும் தாயும் மாறி மாறி எதையும் சொல்லாமல், பேசிக் கொள்ளாமல் கோதைக்குத் தெரியாமல் பாதுகாத்தாலும்,அவர்கள் மனதில் மூண்டு எழுந்து உக்கிரமாகி கொண்டிருக்கும் அக்னியின் தகிப்பு அவளையும் சூழ்ந்து கொண்டுதான் இருந்தது. இதற்கு முன் தந்தை வெளியில் சென்று திரும்பும் பொழுது வீடு இப்படியா இருக்கும்? தந்தை உள்ளே நுழைவதை எங்கிருந்தாலும், எந்த வேலையிலிருந்தாலும் உணர்ந்து  கொண்டு ஓடிவராத குறையாக நடந்து வந்து, நீராகாரம் கொடுத்து அவருடன் சிறிது நேரம் மலர்ந்த முகத்துடன் பேசி, கோதையின் அன்றைய குறும்புகளையோ, அவள்  கற்றுக் கொண்ட புதிய பாடத்தையோ  பற்றிப் பேசி, அவரைச் சிரிக்க வைத்த பின்னர் தானே விட்டு வந்த வேலையை நினைத்து ஓடுவாள்.இப்போதெல்லாம் தந்தை வந்ததை அறிந்த பின்னரும்,இல்லாத வேலையை இருப்பதைப் போலக் காட்டிக் கொண்டு அவள் வெளியே வர மறுக்கும் காரணம் கோதைக்குப் புரியாமலா இருக்கிறது? தந்தை சென்ற வேலையின் பலனை அவர் சொல்லாமலே அவர் முகத்தைப் பார்க்காமலே தெரிந்து கொண்டு விட்டதைத் போலத்தானே அவளுடைய இச்செயல் காட்டுகிறது?

தந்தையிடமிருந்து மட்டுமா, தன்னிடமிருந்தும்தான் தள்ளி நிற்கிறாள். இதைச்செய், இப்படிச்செய், புக்ககம் சென்றால் எல்லாரும் பாராட்டும்படி செய்யவேண்டும். அப்புறம் என்னைத்தான் தூற்றுவார்கள் என்று நொடிக்கொருதரம் கோதைக்கு வேலைகளைத் திருத்தமாகச் செய்யக் கற்றுக் கொடுக்கும் தாய் இப்போது ஏன் எதையும் கண்டு கொள்வதில்லை? கோதையின் தாய்க்கு தெரியாதது எதுவுமில்லை. எத்தனை விதமான கோலங்கள்? சமையல்கள்? கண்ணனுக்கு அவள் கட்டித்தரும் மாலைகள் தான் எத்தனை விதங்கள்? கண்ணன் நின்ற கோலத்திலிருக்கும் பொழுது அவன் கழுத்திலிருந்து கால் பெருவிரலைத் தொடும்வரை அணிவிக்கப்படும் நீண்ட மாலையைக் கட்டிஅதன் பெயர் தெரியல் என்பாள்.  கண்ணனின் தோளில் தொடங்கி இடுப்புவரை மட்டும் வரும் வகையில் பூக்களைக் கோர்த்து இரு பக்கத்தையும்  சேர்த்துக் கட்டி அதன் பெயர் மாலை என்பாள். அதன் கீழ்ப்பகுதியில் பந்து போலப் பூவை கட்டி தொங்க விட்டால் அதன் பெயர் தொங்கல் என்பாள்..கொண்டையில் சூட சிறிய அளவில் சிறு வளையம் போல வட்டமாகக் கட்டினால் அதன் பெயர் கோதை என்பாள்.

தலைஅலங்காரத்தில் எத்தனை வகை உண்டோ அத்தனையையும் மகளுக்குப் போட்டுப் பார்த்து ஆனந்தம் அடைவாள். மகளின் அடர்ந்த கூந்தலைப் பாதியாக்கி தலை உச்சியின் இடதுபுறம் கொண்டை போட்டு அதைச்சுற்றி கோதை எனப்படும் சிறு வளையம் போன்ற மாலையைச் சூட்டி அழகு பார்ப்பாள்.அதுதான் மகளுக்கு அழகாக இருக்கிறது என்று அடிக்கடி போட்டு அழகு பார்த்ததால் தானே தோழியர் தன்னைக் கோதை என்றே அழைக்கத் தொடங்கி விட்டனர். தனக்கும் அதுவே பெயராகிப் போனது. மழலை மாறா சிறிய வயதில் அவளைப் படுத்திய பாட்டையெல்லாம் வளர்நத நிலையில் சொல்லி பூரித்துப் போவாளே. ஓயாமல் பேசுபவளே பேசுவதை மறந்ததைப் போல மௌனமாகிப் போனதென்ன?

பதினைந்து வருடத்திற்கு முன் தோட்டத்தில் துளசி செடி அருகே தான் கண்டெடுக்கப்பட்டதாகத் தந்தை எப்போதோ கூறியது இப்போது ஏன் அடிக்கடி நினைவிற்கு வருகிறது.பிறந்த அன்றே தன்னைத் துளசிச் செடியருகில் போட்டது யாரோ?‘கண்ணனே துளசிச்செடியருகில் தனக்காகக் குழந்தையாக மாறிக் கிடந்ததாக நினைத்து மனமகிழ்ந்து வாரியணைத்துக் கொண்டதாகத் தந்தை கூறும் பொழுது அவர்தான் எப்படிக் கிறங்கி்ப் போவார்? குழந்தையற்ற தம்பதிகளுக்குக் கண்ணனையே குழந்தையாகப் பாவித்துப் பாவனையில் கொஞ்சி மகிழ்ந்தவர்களுக்கு, மோகினி வடிவம் எடுத்து சிவனையே மயக்கிய கண்ணன் அவ்வடிவெடுத்தே குழந்தையாகக் கிடைத்திருக்கிறான்.

தூணிலும் துரும்பிலும் இக்குழந்தையிலும் அவன்.சிரிக்கும் பூப்பந்து. அவர்கள் வீட்டில் துள்ளி விளையாட ஒரு சின்னக்குழந்தை.சிலைவடிவ கண்ணனுக்குச் செய்ததெல்லாம் நிஜத்தில் செய்திட வாய்ப்பு தந்திட்ட குட்டிப் பொக்கிசம் என்று  பூரித்தவர்கள் அல்லவோ அவர்கள்?

கோதை வளர வளர அவள் கேள்விகளும் அதிகமாயின. அக்கம்பக்கத்துக் குழந்தைகள் தம் உறவுகள் அளித்த பரிசுகளைப் பற்றிக் கூறும் பொழுது தன் உறவுகள் பற்றிக் கேள்விகளால் பெரியாழ்வாரைக் குடைவாள்.

பெரியாழ்வார் குறும்புச் சிரிப்புடன் கோதையை மடியிலமர்த்தி, அவள் பிறந்தபொழுது தேவர்களின் தலைவனான இந்திரன் வைரம் மற்றும்  மாணிக்கம் பதித்த தங்கத் தொட்டிலைப் பரிசளித்தாகவும், சிவன் தங்க மாதுளம்பூ தொங்கவிடப்பட்ட இடைஞாணும்,பிரமன் பொன் சலங்கையும் பரிசளித்ததாகவும்,  தேவாதிதேவரெல்லாம் வந்திருந்து விலைமதிப்பில்லா பல பரிசுகளை அளித்ததோடு பல்லாண்டு வாழ்கவென்று வாழ்த்திச் சென்றதையும் மிகப் பெருமையுடன் கூறியது இன்றும் கோதையின் மனதில் நிழலாடிக் கொண்டிருக்கிறது.

பெரியாழ்வார் சொல்லச் சொல்ல விழிகள் விரிய அக்காட்சியை நினைத்துப் பார்த்துப் பூரித்துப் போவாள் கோதை.இப்போது ஏன் வருவதில்லை என்று அவள் தொடர்ந்து கேட்கும் கேள்விகளுக்கு ‘உன் திருமணத்திற்கு வருவார்கள்‘ எனக் கூறி அவள் வாயை அடைத்து விடுவார் பெரியாழ்வார்.தோழியரிடம் சென்று தந்தை சொல்லியதைச் சொல்லி திக்கு முக்காட வைப்பாள்.

அவளுடைய அழகும், அறிவும், பணிவும் அனைத்திற்கும் மேலாக அவள் கற்பனை கலந்து கூறும் கண்ணனின் கதைகளும், தோழியர் அனைவரையும் கட்டிப் போட்டிருந்தன. அவளோடு சேர்ந்திருக்க ஆசை கொள்ளாத பெண்களில்லை.தாயிடம் பூமாலையும் தந்தையிடம் பாமாலையும் கற்றதினால், எளிதில் உடன் ஒத்த தோழியரை வழி நடத்தும் தலைமை பெற்றாள்.

மார்கழி வந்து விட்டால் போதும். விடியற்காலமே தோழியரை எழுப்பிக் கையில் விளக்குடன் கண்ணனின் திருக்கோயிலுக்குச் செல்வதை ஒரு திருவிழா போலவே மாற்றிக் கொண்டிருந்தாள். முப்பது நாளும் சலிக்காமல் கோதையைத் தவிர யார் இப்படி வழி நடத்தியிருக்க முடியும்? கண்ணனின் கோயிலை கோயிலாகவா காட்டினாள்?

வாயிற்காப்போன், நந்தகோபன், பலதேவன், யசோதை, நப்பின்னை அனைவரும் குடியிருக்கும் கண்ணனின் வீடாக அல்லவா காட்டினாள். அதுமட்டுமா?நெய் பால் உண்ணக்கூடாது. கண்ணில் மை எழுதக்கூடாது. எளிய ஆடையில்தான் கோயிலுக்கு வரவேண்டும்.கோதையின் சொல்லுக்கு மாற்று உண்டோ?அதிகாலையில் எழாமல் அடம்பிடிப்பவர்கள் கூடக் கோதைக்காக, நோன்பு முடியம் நாளில் அவள் தரும் இனிப்பு பாற்சோற்றின் சுவைக்காக நோன்பிருந்தனர்.

இளம்பெண்களையெல்லாம் திரட்டி கண்ணனுக்காக நோன்பிருக்க வைத்து பெரும் புரட்சி செய்து கொண்டிருந்த கோதையை நினைத்து நெஞ்சு கொள்ளாத பெருமிதத்தில் பூரித்துப் போயிருந்தார் பெரியாழ்வார்.அதனால்தான் திருமாலுக்கு அணிய வைத்திருந்த மாலையைக் கோதை எடுத்து அணிந்து கொண்டபோது பெரியாழ்வாரால் வன்மையாகக் கண்டிக்கமுடியவில்லை.

அவர் வேறு மாலை கட்டி எடுத்துச் சென்றதை அறிந்த கோதை அவர் வீடு திரும்பியதும், வாசலிலேயே எதிர்கொண்டு ‘தூணிலும் துரும்பிலும் அவன் என்பது உண்மையானால் என்னில் அவன் இல்லையா? ஏன் வேறு மாலை கட்டி எடுத்துச் சென்றீர்கள்? எனக் கேட்டு திகைக்க வைத்தாளே?அவளுடைய துடுக்குத்தனம் இப்போதெல்லாம் எங்கு போய் ஒளிந்து கொண்டது?

 இப்போதெல்லாம் தன் வேலையைச் செய்துவிட்டுத் தோட்டத்திற்குச் சென்று விடுகிறாள்.ஒவ்வொரு செடியாகப் பார்த்துக் கொண்டு வந்தவள், வெள்ளிய ஒளிப் புள்ளிகளைக் கொண்டு அவளையே பார்ப்பது போலத் தோற்றமளித்த துளசி்ச்செடியருகே தன்னையறியாமல் நின்றுவிட்டாள்.இதுவரை இல்லாத ஏக்கம் அவளுள் சூழ்ந்தது. மற்ற செடிகளுடன் வளர்ந்திருந்த துளசிச்செடிக்கு மட்டும் மண்ணால் ஒரு மாடம் கட்டினாள்.

செடிகளுக்குக் கூடக் கிளை பரப்ப வழியிருக்க மானிட சாதியான தனக்கு அது ஏன் மறுக்கப்பட்டது? தன் சாதி …..அதுதானே தாய் தந்தையரின் பெருந்துயருக்குக் காரணம். தன்னோடொத்த தோழியரெல்லாம் மணமுடித்துச் சென்று விடத் தான் மட்டும் இன்னும்…..அழகும், அறிவும், பணிவும், ஆளுமையும் புறந்தள்ளப் பட்டு சாதியே முன் நிற்கிறது. கோதையின் திறமையின் பெருமையில் பூரித்து நின்றவர்களைச் சாதி சுழற்காற்றாய் மாறி சூறையாடிக் கொண்டிருக்கிறது..பெரியாழ்வார் இன்னும் நம்பிக்கையைக் கைவிடவில்லை. இப்போதுகூட அயலூரிலிருக்கும் பால்யகால நண்பனை கோதையின் திருமணம் தொடர்பாகச் சந்தித்து விட்டுத் திரும்பியிருக்கிறார். சிங்கமெனப் பறப்பட்டுப் போனவர் சிறுபுல்லென மிதிபட்டு வந்திருக்கிறார்.

‘சாதிக்கச் சாதி தேவையில்லை.சாத்திரத்திற்குச் சாதி தேவை.எண்பது வயது கிழவனும் சாதியற்ற பெண்ணைக் கை பிடிக்கமாட்டான்‘ என அவர் நாடியைப் பொடித்து அனுப்பியிருக்கிறார் அவர் நண்பர்..இவர்கள் வணங்கும் கண்ணனே இடைசாதி.கீழ்சாதி.இவர்கள் மட்டும் மேல் சாதியா? என்ன முரண்பாடு? இதை யாரிடம் சொல்வது? சாதியைக் கடந்த தாய் தந்தையரிடம் யார் சொல்வது அதன் விசுவரூபத்தை?  ‘தாய்க்குப் புரிந்து விட்டது.அதனால்தான் உள்ளொடுங்கிப் போய்த் தன்னிடம் முன்பை விட உயிராயிருக்கிறாள்.நான் தூங்கும்பொழுது என் முகம் பார்த்து பெருமூச்சு விட்டு விட்டு உடல் சுருங்கிப் போய்விட்டாள்.நானறியாமல் எனக்காக அழும் இவளல்லவோ உண்மைத்தாய்‘.

 பெரியாழ்வார் மனைவியின் உள்ளிருப்பை வேறுவிதமாகப் புரிந்து கொண்டார்.தன் சோகமுகத்தை அது தரும் துயரச் செய்தியை கேட்கப் பிடிக்காமல் உள்ளிருப்பதாகப் புரிந்து கொண்டார்.ஆனால்  கணவனிடம் பேசுவதைக் கண்டு வளர்ந்த பெண்ணாகிய கோதையின் மனம் ஏக்கம் கொண்டு விடக் கூடாதென்றே பெரியாழ்வாரிடம் பேசுவதை அவள் தவிர்க்கிறாள் என்ற  உண்மையை கோதை புரிந்து கொண்டாள்.

“கண்ணா உன்னை வளர்த்த யசோதை போலத்தானே என் தாயும்? பெற்ற பாசத்தைவிட வளர்த்த பாசம் பெரிதல்லவா? நீயும் ஒருத்தி மகனாகப் பிறந்து ஒருத்தி மகனாக வளர்ந்தாய். நானும் அப்படியே. உன்னை வதைத்த கம்சன் போல் என்னை வதைக்கச் சாதி என்னும் அரக்கன். கண்ணனுக்காகக் கம்சனை வெறுத்தவர்கள் சாதி எனும் கம்சர்களாக மாறி எங்களை வதைப்பது வேடிக்கைதான். தன் மகளாக என்னைக் கொண்டாடும் இவர்களுக்கு ஒரு மகளாக நான் செய்ய வேண்டியது என்ன? சாதியறியாத எனக்கு ஆதியறியாத நீயே கதி.. நீயே என் மணவாளன்.‘ கோதை அன்றுமுதல் கண்ணனின் காதலியானாள்.அவனிடம் மனதிற்குள் பேசத்தொடங்கி விட்டாள்.“ நீயே கதி எனக் கிடக்கும் என்னை வதைப்பதுதான் உனக்கு அழகா? உன் ஆடையை என் வீட்டில் ஒளித்து வைத்தாலென்ன? அப்போதாவது என்னைத் தேடி வருவாயல்லவா? இதோ கண்ணன் வந்து விட்டான்.சுருண்டகுழலும் அந்தக் கண்ணும்… செம்பவள வாயும்…அவனேதான். கோதைக்குள் மின்னல் ஓடியது.என் உறவு..என் வாழ்வு எல்லாம் அவன் அவனே. இன்றைக்கும் எழேழ்பிறவிக்கும்…..

கோதை…கோதை…தாயார் அழைப்பதைக் கேட்டதும் பதறியெழுந்தாள். கண்ணனை எங்கு ஒளித்து வைப்பது? நல்லவேளை கண்ணனே மாயமாகி விட்டான்.தாய்பூசைக்கு மலர் பறித்து வரச்சொன்னாள். சிட்டெனப் பறந்தாள்.பூக்களைப் பறிக்கும்பொழுது பச்சைக் கற்பூர வாசனை. கண்ணன் வந்துவிட்டான்.

.அவள் குடலையிலிருந்து மலர்கள் கீழே சிதறின. அதைப் பொறுக்கக் குனிந்தாள். அம்மலர்களின் உள்ளே கோவிந்தனாகக் கண்ணன். அம்மலர்களை வைத்தே அவன் பெயரெழுதினாள். தாய் எட்டிப் பார்த்து எதுவும் சொல்லாமல் சென்றுவிட்டாள். கண்ணன் மறைந்து விட்டான். மீண்டும் கண்ணன் ஏன் வரவில்லை? இப்போது கோவிந்தா கோவிந்தா என அவன் பெயரைத் தோட்டத்து மணலிலெல்லாம் எழுதத் தொடங்கிவிட்டாள். இதோ தையும் நெருங்கி வருகிறது. அவளுள் அச்சம் கண்ணனோடு தான் கொண்ட காதல் நிறைவேறுமா…..சிறுவயதில் தோழிகளோடு விளையாடிய கூடல் விளையாட்டு நினைவிற்கு வந்தது. கடைசி தோழிக்கும் திருமணம் முடிந்து விட்டது.தனித்தே அதை விளையாடத் தொடங்கினாள்.

கண்ணை மூடிக் கொண்டு மணலில் ஆட்காட்டி விரலால் வட்டம் அதைத் தொடர்ந்து விரலை எடுக்காமலே மற்றொரு வட்டம். இப்படி வட்டங்களின் தொடர் அணிவகுப்பு மீண்டும் தொடங்கிய இடத்திலேயே வட்டத்தை முடிக்க வேண்டும்.‘கண்ணன் எனக்குக் கிடைப்பானாகி்ல் கூடலே நீ கூடிடு‘. வட்டம் தொடங்கிய இடத்தில் முடியவில்லை.‘கண்ணன் கை என்னோடு பற்றுமாகில் கூடலே நீ கூடிடு.‘ வட்டமாக முடியாமல் எங்கோ முடிந்திருந்தது. ‘சாதியென்னும் காளியன் தலைமேல் நடனமாடிய கூத்தனை நான் சேர்ந்திடுமாகில் கூடலே நீ கூடிடு‘.கோணப்புளியங்காபோல் சேராமல் விரிந்திருந்தது.‘என்னைக் கொண்டு போக அக்கோபாலன் வருவானாகில் கூடலே நீ கூடிடு‘.அவள் எண்ணங்களின் தொடர்ச்சியும் முடிவும் அவனே.கூடலிழைத்தல் விளையாட்டை ஒரு தவம் போலத் தோட்டத்து மணல் முழுதும் விளையாடினாள்.

தனிமைத்துயர் அவளைத் தீண்டவேயில்லை. எனினும் இன்னும் கூடல் கூடவில்லை. ‘கோதை தோட்டத்தில் விளையாடியது  போதும் வா….‘ தாயின் குரல். .அவள் தன்னை நிழல் போல் தொடர்வதை நினைத்து உள்ளுக்குள் வேதனையோடு சிரித்தாள் கோதை…தாய் அளித்த உணவை உண்டபின் படிக்க அமர்ந்தாள். நாளை மார்கழி முடியப்போகிறது. தாய் வீட்டை தூய்மை செய்யத் தொடங்கிவிட்டாள்.தந்தை பூசைக்குரிய ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார்.

வருகிற தை மாதத்திற்குள் கோதையின் திருமணத்தை முடித்துவிடவேண்டுமென்ற எண்ணம் அவரைச் சுறுசுறுப்பாக்கியிருந்தது.நாளை விடியலில் அயலூருக்கு கோதையின் வரன் தொடர்பாக அவர் புறப்படவேண்டும்.கோதை தாய் தந்தையர் இருவரையும் மாறிமாறி பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் இதயம் கசிந்தது. அன்றிரவு தலையணை நனைந்தது.

காலையில் கோதை எழாததைக் கண்ட தாய் பதறிப்போனாள். கோதையின் உடல் அனலாய் சுட்டது.‘நாளெல்லாம் தோட்டத்து வெயிலில் விளையாடிக் கொண்டிருந்தால் இப்படித்தான்…‘ புலம்பியபடி மருந்தரைத்துத் தந்தாள். பெரியாழ்வார் கோதைக்கு மாப்பிள்ளைத் தேட அதிகாலையிலேயே கிளம்பிவிட்டிருந்தார். கோதை தாய் தந்த மருந்தை உட்கொண்டாள். அவள் மனம் சிந்தனையிலாழ்ந்தது.

பிருந்தாவனத்தில் கண்டெடுக்கப்படட இந்த விட்டுணு சித்தனின் மகளுக்குக் கண்ணனின் திருநாமமே மருந்து என்பதைத் தாய் அறியாதவளா? சிலருக்கு மருந்தில் உயிர் இருக்கிறது. எனக்கு அவன் தான் மருந்து. தாயிடம் எதுவும் சொல்லாமல் அவள் கொடுத்த மருந்தை உண்டு வந்தாள்.அப்படியே உறங்கிப்போனாள்.

கண்விழித்த போது தாய் அவளுடைய காலருகே பாதிச் சாய்ந்தபடி உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டாள். சிறிதுநேரம் தோட்டத்தில் உலவிட விரும்பினாள். தாயறியாமல் மெல்ல நடந்தாள். அங்குக் கண்ணில் பட்ட குயிலிடம் கண்ணனிடம் தூது சென்று வருமாறு மனதிற்குள் கெஞ்சினாள்.நடை தளர ஒரு மரத்தினடியில் அமர்ந்தாள்.அவள் விரல் அவளறியாமலே கூடலிழைத்தது.

கூடலே நீ கூடிடு. கூடலே நீ கூடிடு. . கூடலே நீ கூடிடு. இதோ கூடிவிட்டது.அதோ அங்கு வருவது யார்?  கண்ணன்தான். யானை மீதமர்ந்து ஒரு சிங்கம் போலல்லவா வருகிறான். அவனோடு தேவர்களும் அல்லவா வருகிறார்கள். ஐயோ எனக்குப் படபடப்பாக வருகிறதே. அதோ தந்தை யானையின் ஓசை கேட்டு வீட்டிலிருந்து வெளியே வருகிறாரே. எப்போது ஊரிலிருந்து அவர் வந்தார்? கண்ணன் யானையிலிருந்து இறங்கிச் சென்று தந்தையிடம் என்ன சொல்கிறான்?

‘கோவிந்தனாகிய எனக்கும் கோதையாகிய என்னை ஆண்டுக் கொண்டிருக்கும் இந்த ஆண்டாளுக்கும் நாளை வதுவை என்று சொல்வது என் காதில் விழுகிறதே…. ‘ என்னை ஆள்பவள் …என்னை ஆள்பவள்..அந்தச் சொல் என் நெஞ்சத்தில் பூ பூக்க வைக்கிறதே. நானா அவரை ஆண்டேன். நான் ஆண்டாளா? இது கனவா? இந்திரன் உள்ளிட்ட தேவரெல்லாம் பாளை கமுகை போன்ற மரங்களை என் வாசலில் நடத் தொடங்கி விட்டனரே.இது உண்மைதான்.

‘அம்மா அம்மா…‘கோதை தாயை அழைத்தாள். ‘எங்கே போனாள். அம்மா நீ எதிர்பார்த்த நன்னாளும் வந்து விட்டதம்மா‘.குரல் கேட்டதும் அதோ சின்னப்பிள்ளை போல ஓடி வந்து  வந்தவர்களை உபசரிக்கத் தொடங்கிவிட்டாள். இனி அவளுக்கு ஓய்வேது? என்னை யார் அலங்கரிப்பது? என் நிலையறிந்து எனக்கு நாத்தனாராகப் போகும் துர்க்கை கூறைப் புடவையை எனக்கு அணிய உதவிசெய்து மாலையைக் கழுத்தில் சூட்டுகிறாளே.மங்கல மகளிர் என் கையையையும் கண்ணன் கையையும் சேர்த்துக் காப்பு நாண் கட்டுவதை நிமிர்ந்து பார்க்க விடாமல் நாண் என்னைத் தடுக்கிறதே. ஊர்வலம் தொடங்கி, மத்தள மேகம் முழங்க, வரிசங்கம் நின்றூத, மந்திரம் ஒதுவதில் வல்லவர்கள் வேதம் ஓதுகின்றனரே. இதோ கண்ணன் உரிமையுடன் என் கையைப் பற்றுகிறானே.எவ்வளவு துரிதமாக செயல்கள் நடக்கின்றன.

அக்னியை வலம் வருவதற்குள் படபடப்பில் என் உடலிலிருந்த நீரெல்லாம் வியர்வையாகிப் போனதே. என் கால்விரல்களைப் பிடித்து அம்மி மீது வைத்து, எரிமுகம் காட்டி, அதில் பொரியைப் போட செய்து,ஊஞ்சலில் அமரவைத்து, ஓமநெருப்பின் சூடு தணிய சந்தனத்தைப் பூசிக், குளிப்பாட்டி,அலங்கரித்து யானை மீதமர்த்திக் கண்ணனின் இல்லத்திற்கு அனுப்பி வைக்கும் வரையில் தான்  எத்தனை சடங்குகள்.எத்தனை சடங்குகள்? அப்பப்பா…..அப்பா அப்பா எங்கே? அதோ தூரத்தில் நெஞ்சு கொள்ளாத பூரிப்புடன் தன் சொந்தங்களிடம் கண்களிலே பெருமை பேசிக் கொண்டிருக்கிறார்.

தாய் எங்கே.. இதோ அழைக்கிறாளே…கோதை…கோதை… ஐயோ தாயின் குரலில் ஏனிந்த பதற்றம். திகில்! என்னவாயிற்று .கண் இமைகள் ஏன் இப்படிக் கனக்கின்றன? தாய் தன்னைத் தூக்க முயற்சித்து நிற்க வைத்து நடத்திச் செல்கிறாளே. திருமணக் களைப்பில் யானையின் மீதிருந்து விழுந்து விட்டேனா…கண்ணனின் உறவுகளெல்லாம் என்ன நினைத்திருக்கும்….அந்த நினைப்பே அவளின் பதட்டத்தை மிகுதிப்படுத்தி அவளை மீண்டும் மயங்கச் செய்துவிட்டது.

 கண் விழித்துப் பார்த்த போது தாயும் தந்தையும் அவளருகே கவலையோடு அமர்ந்திருப்பதைக் கண்டாள். அவர்கள்தான் எப்படி மெலிந்து போய் விட்டார்கள். கண்ணன் எங்கே ..எப்படி தாயிடம் கேட்பது? எல்லாம் கனவா…கண்ணனுக்காக நோன்பு நோற்றதும் கண்ணனே அவளை மணமுடித்ததும்உண்மையில்லையா? தந்தை வைத்தியரை அழைத்து வரச் சென்றுவிட்டார். தாய் தானறிந்த மருந்தை தயாரித்துக் கொண்டிருந்தாள்.எத்தனை நாட்கள் கழிந்தன? இது என்ன மாதம் ? யாரறிவார்? மெல்ல எழுந்து மாடத்திலிருந்த பெரியாழ்வாரின் ஓலைச் சுவடிகளை எடுத்தாள். தாய் எட்டிப் பார்த்து எதுவும் சொல்லாமல் சென்று விட ஆண்டாளுக்கு உற்சாகம் பிறந்தது.

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளாய்……தன் உயிரையே உருக்கி உருக்கி கண்ணனையே நினைந்து நினைந்து பாவனையில் நனைந்து நனைந்து அவள் எழுதி வைத்த  ஓலைச் சுவடிகள்.. கண்ணனையே நான் மணமுடித்துக் கொண்டேன் என்பதை எப்படி இவர்களுக்குப் புரிய வைப்பது?அவள் உடல் தேறியதாகக் கருதிய பெரியாழ்வார் மீண்டும் வரன் தேடத் தொடங்கியிருந்தார்.

தனக்காகப் பெரியாழ்வாரையும் உத்தமியான தாயையும் புறக்கணித்த இம் மானுடக் கூட்டத்திடமா இவர்கள் மன்றாடுவது? தன் இருப்பே இவர்களுக்குப் பெருந்துயரம் என்பதை உணர்ந்தளவில் சிறகு விரித்த உயிர்ப்பறவை ஆண்டாள் அவனன்றி எதுவும் வேண்டாள் என்பதை எழுத்தில் வெளிப்படுத்திப் பறந்து போனது.

கோதை மறைந்த எட்டாம் நாள்.பெரியாழ்வார் நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாமல் தோட்டத்தையே சுற்றி வந்து கொண்டிருந்தார்.துளசிச் செடிக்கென்று தனிமாடம் கட்டி வைத்திருக்கிறாளே. அவள் மனம் எதையெல்லாம் நினைத்து ஏங்கியதோ. எங்கும் கோதை நடந்து வந்து செடிகளை வருடிக் கொடுத்தபடி நிற்பது போலவே இருக்கிறது. ‘போதும்மா கோதை உச்சி வெயிலில் நிற்காதே உள்ளே வா..‘என்று குரல் கொடுத்தார்.

கோதையின் தாய், ‘யார்கிட்ட பேசிக்கிட்டிருக்கீங்க? உள்ள வாங்க உங்க தலைதான் வெயிலில் பொளக்கப்போறது‘ என்றாள். எப்போதும் போல அவள் வேலைகளில் மூழ்கி விட்டிருந்தாள். கோதை இறந்ததை உணராததுபோலவே அவளின் செய்கைகள் இருந்தன. தன்னைப் போல அவளும் எங்கும் கோதையே நிறைந்திருப்பதாகக் கருதிக் கொண்டிருக்கிறாளோ?

ஆனால் இப்போது யாரிடம் பேகசிக்கிட்டிருக்கீங்க என்றாளே. அப்படியானால் தான் காட்டிய பாசம் அவளிடம் இல்லையோ? அதனால்தான் கோதைக்காக வரன் தேடியலைந்த போது உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினாளா? கோதையின்பால் உண்மையான அன்பில்லாமல் எனக்காகத்தான் வளர்த்தாளா? அந்தக் குழந்தை அதைப் புரிந்துதான் உயிரை விட்டதோ? ஆத்திரம் அவர் அறிவை மறைத்தது. நேரே சமையல் கட்டிற்குச் சென்றார். அவள் மோர் கடைந்து கொண்டிருந்தாள். கோதைக்கு மோர் கடையும் ஓசை பிடிக்குமே. அவரிடம் பாடம் கேட்டுக் கொண்டிருந்தாலும் அதை விட்டு வி்ட்டு இந்த மத்தின் ஓசைகேட்க ஓடிவிடுவாளே? கண்ணில் நீர் வழிய அப்படியே நிலைப்படியில் நின்றுவிட்டார். ஏதோ உணர்வில் திரும்பியவள் ‘இதோ ஆச்சு உட்காருங்கோ வந்திடறேன்‘ என்றாள்.

கூடத்துத் திண்ணையில் கோதை வழக்கமாகப் பூ கட்டும் இடத்தில் சென்று அமர்ந்து விட்டார். அங்கிருந்த மாடத்தில்தான் கோதையின் சுவடிகளை அவள் தாய் பத்திரப்படுத்தி வைத்திருந்தாள்.அதைப் பற்றி அவரிடம் சொல்ல மறந்து விட்டாள். அவரின் கண்ணில் அது தற்செயலாய்ப் படச் சுவடிகளைப் படிக்கத் தொடங்கினார். ‘மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளாய்…..‘ அவர் கண்கள் வியப்பால் விரிந்தன.முப்பது முத்துகள். திருமொழியைப் படிக்கும்போது ஒருவித நடுக்கத்தை அவர் உணர்ந்தார். படிக்கப் படிக்க நா உலர்ந்தது.

திருப்பாவையில் சிறுமியாய் இருந்த கோதை திருமொழியில் வேறு பரிணாமம் எடுத்திருந்தாள். அதில் அவள் குழந்தையல்ல. பருவப் பெண். பருவக் கனவுகள். இளமைத்தாகங்கள்…பெரியாழ்வார் விதிர்த்துப் போனார். கோதையை நினைத்து நினைத்து அவர் மனம் உருகியது. தன் செல்ல மகளின் அவலநிலை அவரை நிலைகுலைய வைத்துவிட்டது. அவளின் நிலையறிந்ததால்தான் அவள் தாய் அவளின் மறைவை இயல்பாய் ஏற்றுக்கொண்டாளோ?

‘மானுடர்க்கென்று பேச்சுப்படின் வாழ்கிலேன்‘. சாட்டையாய் மனித குலத்தின் மீது விழுந்த அவ்வரிகள்…கோதை எப்பேர்பட்ட பெண்.அந்த வைராக்கியம். துணிச்சல். தன் கூரிய அறிவினால் மனித குலத்தை மிகுந்த உயரத்திலிருந்து பார்த்திருக்கிறாள்.ஹஇவளுடைய சிந்தனைக்கு நிகரான ஒருவரை மனித குலத்தில் தேடமுடியமா? இவளைப் போய்க் கேவலம் மனிதகுலத்திற்கு மணமுடிக்கப் பார்த்தேனே.அவர் நெஞ்சு குற்ற உணர்வினால் தவித்தது.

கோதையின் தாய் சாப்பிட அழைத்தாள். ‘உன்னால் எப்படி முடிகிறது? தெரிந்துதான் இதைப் பத்திரப்படுத்தினாயா? நம் கோதை மகா கவி. .அவளின் பிரிவை என்னால் தாங்க முடியவில்லையே. உன்னால் எப்படி முடிகிறது. உனக்குப் பாசமே இல்லையா? கோதை அழைப்பது போலவே இருக்கிறதே?இந்த சின்ன வயதில் எத்தனை துயரங்கள்? எத்தனை புரிதல்கள்? அதை அறியாத பாவியாகிப் போனேனே? புலம்பித் தவித்தார்.

‘நாம எதுக்கு அழணும். நம் மகள் கண்ணனை விரும்பினாள்.அவனோடு வாழச் சென்றிருக்கிறாள்.அவள் விரும்பிய வாழ்வு அவளுக்குக் கிடைத்திருக்கிறது.நல்ல இடத்தில் மகளை வாழ அனுப்பியபின் நாம் வாடுவது அழகா? கண்ணன் அவளை நம் மகளாக வளர அனுப்பி வைத்தான். நம் மீது அவன் வைத்த நம்பிக்கை, அவன் நம் மகளைச் சிறப்பாகப் பார்த்துக் கொள்வான் என்று நமக்கும் இருக்க வேண்டுமல்லவா?‘ அத் தாய் நிதானமாகக் கேட்டாள். பெரியாழ்வார் திகைத்துப் போய்விட்டார்.

 

விஜே.பிரேமலதா,தமிழ் இணைப் பேராசிரியர்,அரசு கலைக் கல்லூரி,சேலம்-7

தேமொழி

unread,
Jan 12, 2018, 5:28:16 PM1/12/18
to மின்தமிழ்

விடுபட்ட பகுதி:   

‘கோவிந்தனாகிய எனக்கும் கோதையாகிய என்னை ஆண்டுக் கொண்டிருக்கும் இந்த ஆண்டாளுக்கும் நாளை வதுவை என்று சொல்வது என் காதில் விழுகிறதே…. ‘ என்னை ஆள்பவள் …என்னை ஆள்பவள்..அந்தச் சொல் என் நெஞ்சத்தில் பூ பூக்க வைக்கிறதே. நானா அவரை ஆண்டேன். நான் ஆண்டாளா? இது கனவா? இந்திரன் உள்ளிட்ட தேவரெல்லாம் பாளை கமுகை போன்ற மரங்களை என் வாசலில் நடத் தொடங்கி விட்டனரே.இது உண்மைதான்.

‘அம்மா அம்மா…‘கோதை தாயை அழைத்தாள். ‘எங்கே போனாள். அம்மா நீ எதிர்பார்த்த நன்னாளும் வந்து விட்டதம்மா‘.குரல் கேட்டதும் அதோ சின்னப்பிள்ளை போல ஓடி வந்து  வந்தவர்களை உபசரிக்கத் தொடங்கிவிட்டாள். இனி அவளுக்கு ஓய்வேது? என்னை யார் அலங்கரிப்பது? என் நிலையறிந்து எனக்கு நாத்தனாராகப் போகும் துர்க்கை கூறைப் புடவையை எனக்கு அணிய உதவிசெய்து மாலையைக் கழுத்தில் சூட்டுகிறாளே.மங்கல மகளிர் என் கையையையும் கண்ணன் கையையும் சேர்த்துக் காப்பு நாண் கட்டுவதை நிமிர்ந்து பார்க்க விடாமல் நாண் என்னைத் தடுக்கிறதே. ஊர்வலம் தொடங்கி, மத்தள மேகம் முழங்க, வரிசங்கம் நின்றூத, மந்திரம் ஒதுவதில் வல்லவர்கள் வேதம் ஓதுகின்றனரே. இதோ கண்ணன் உரிமையுடன் என் கையைப் பற்றுகிறானே.எவ்வளவு துரிதமாக செயல்கள் நடக்கின்றன.

அக்னியை வலம் வருவதற்குள் படபடப்பில் என் உடலிலிருந்த நீரெல்லாம் வியர்வையாகிப் போனதே. என் கால்விரல்களைப் பிடித்து அம்மி மீது வைத்து, எரிமுகம் காட்டி, அதில் பொரியைப் போட செய்து,ஊஞ்சலில் அமரவைத்து, ஓமநெருப்பின் சூடு தணிய சந்தனத்தைப் பூசிக, குளிப்பாட்டி,அலங்கரித்து யானை மீதமர்த்திக் கண்ணனின் இல்லத்திற்கு அனுப்பி வைக்கும் வரையில் தான்  எத்தனை சடங்குகள்.எத்தனை சடங்குகள்? அப்பப்பா…..அப்பா அப்பா எங்கே? அதோ தூரத்தில் நெஞ்சு கொள்ளாத பூரிப்புடன் தன் சொந்தங்களிடம் கண்களிலே பெருமை பேசிக் கொண்டிருக்கிறார்.

sundararajan srinivasagam

unread,
Jan 13, 2018, 10:39:09 AM1/13/18
to mint...@googlegroups.com

Peryazhwar could not understand how the mother could go about the daily chores without any remorse. This reminds me of a scene in the American poem "Home Burial".

--

தேமொழி

unread,
Dec 10, 2019, 2:21:30 PM12/10/19
to மின்தமிழ்


சிறுகதை: ஜோ

ஜி.ஆர்.சுரேந்தர்நாத்

சிறுகதை
சிறுகதை

1997. தமிழக இளைஞர்களின் இதயத்திலிருந்த குஷ்புவை, ‘வி.ஐ.பி’ திரைப்படம் மூலம் சிம்ரன் வெளியேற்றிய ஜூலை மாதம். என் அப்பாவுக்கு திடீரென்று திருச்சியிலிருந்து மதுரைக்கு டிரான்ஸ்ஃபராக… மதுரையில் வீடு பார்த்துக் குடியேறினோம். நான் எம்.எஸ்ஸி., பிஸிக்ஸ் படித்து முடித்துவிட்டு வெட்டியாக இருந்த நாள்கள் அவை.

ஒரு மாத காலத்திற்குள் மதுரை, சிம்மக்கல் சென்ட்ரல் லைப்ரரியில் உறுப்பினரானேன். வண்டியூர் பழனி ஆறுமுகம், வில்லாபுரம் மது ஆகிய தியேட்டர்களில் பலான மலையாளப் படங்கள் தொடர்ச்சியாகப் பார்த்து மலையாளம் என் இரண்டாம் தாய்மொழியானது. விளக்குத்தூண் ஃபேமஸ் ஜிகர்தண்டாவும், ஆறுமுகம் கடை புரோட்டாவும், சுவரொட்டிக் குழம்பும் சாகும் வரை மதுரையிலேயே வாழவேண்டும் என்ற எண்ணத்தை விதைத்தது. நட்பைப் புனிதமாகக் கருதும் பாசக்கார மதுரைப் பசங்கள், நண்பர்களைப் பங்காளியாக்கி, பின்னர் அதை ‘பங்கு’ என்று சுருக்கி அழைப்பது பிடித்துப்போயிற்று. பக்கத்து வீட்டு செந்தில் நெருங்கிய நண்பனாக… மதுரை வாழ்க்கை நண்பர்களால் நிறைய ஆரம்பித்தது.

உள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்!

1997 செப்டம்பர் 1. செந்தில், “ஒரு எழவு விசாரிக்கணும்… வா…” என்று என்னை சைக்கிளில் ஆரப்பாளையத்திற்கு அழைத்துச் சென்றான். அந்தத் தெருவில் நுழைந்தவுடனேயே சங்கு ஊதும் சத்தமும், சகுண்டி அடிக்கும் சத்தமும் கேட்க… ஒரு பந்தல் வீட்டு முன்பு செந்தில் சைக்கிளை நிறுத்தினான். எங்கிருந்தோ மெலிதாக ஒலித்த, “ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ…” பாடலைக் கேட்டபடி, “யாருடா செத்துட்டா?” என்றேன். செந்தில் சுவரில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டரைக் காண்பிக்க… நான் அதிர்ந்தேன்.

Short Story
Short Story

போஸ்டரில், ‘அகால மரணமடைந்த வேல்ஸ் இளவரசி டயனாவிற்குக் கண்ணீர் அஞ்சலி… தோற்றம்: 1.7.1961. மறைவு: 31.8.1997’ என்று போட்டிருந்தது. டயானாவின் போட்டோவிற்குக் கீழே இருந்த வாசகங்களைக் கவிதை என்று சொன்னால் கவிஞர்கள் சண்டைக்கு வருவார்கள். இருந்தாலும் போஸ்டர்காரர்கள் அதைக் கவிதை என்றுதான் சொல்வார்கள் என்பதால் கீழே அந்தக் கவிதை:

பூமிப்பந்தின் புன்னகை நிலா மறைந்தது.

இனி எங்களுக்கு தினம் தினம் அமாவாசைதான்.

மீளாத்துயருடன்… ஜெராக்ஸ் ஜோ, லிரில் சோப் லிங்கம், ரின் ரியாஸ், பட்டாசு பாண்டி ஆகியோர் அஞ்சலி செலுத்தியிருந்தார்கள். நான், “செந்திலு… இந்த லிங்கம் லிரில் சோப் ஏஜென்டா?” என்றேன்.

“இல்ல… லிங்கம் தினம் லிரில் சோப் போட்டுத்தான் குளிப்பான்” என்றவுடன் அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு வர எனக்குச் சில விநாடிகளாகின. நாங்கள் பந்தலுக்குள் நுழைந்தவுடன் காசுக்கு அழைத்துவரப்பட்டிருந்த ஒப்பாரி பெண்கள், “வெள்ளைக்கார சீமாட்டி… வெந்துபோகப் போறாளே… ஹ்ம்…” என்று மூக்கைச் சிந்தினர். பந்தலில் நான்கைந்து இளைஞர்கள், “பாடிய எப்ப எடுப்பாங்க?” என்பதுபோல் சோகமான முகபாவத்துடன் அமர்ந்திருந்தனர். அதற்குமேல் அடக்கமுடியாமல் நான் சிரித்தபடி, “டேய்… டயானா செத்ததுக்கு இங்க என்னடா பண்றாங்க?” என்று கேட்க… செந்தில் பதறிவிட்டான்.

“டேய் சிரிக்காதேடா, ஜோ பாத்தான்… கொன்டேபுடுவான். டயானா செத்துப்போயிடுச் சுன்னு பயங்கர சோகத்துல இருக்கான்” என்றான் செந்தில். நான் கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக்கொண்டு, “யாருடா ஜோ?” என்றேன். செந்தில், “அங்க டயானா போட்டோ பக்கத்துல நிக்குறான் பாரு. ஜோயல்னு பேரு. நாங்க ஜோன்னு கூப்பிடுவோம். டயானா நற்பணி மன்றத் தலைவர்” என்று காண்பித்தான். அந்த வீட்டிற்கு முன்பு, டயானாவின் போட்டோவை வைத்து மாலை போட்டிருந்தார்கள். அருகில் கூலிங்கிளாஸ் போட்டபடி நீல நிற டிஷர்ட் அணிந்துகொண்டு, வேட்டியுடன் நின்றுகொண்டிருந்தவன்தான் ஜோவாக இருக்க வேண்டும். ஜோ உயரமாக சிவப்பாக அழகாகத்தான் இருந்தான். என்னைவிட நான்கைந்து வயது அதிகமிருக்கும்.

அப்போது கையில் மாலையுடன் நான்கு இளைஞர்கள் நுழைய… பரபரப்பானது. அந்த இளைஞர்கள் டயானா போட்டோவுக்கு மாலை அணிவித்துவிட்டு ஜோவின் கைகளைப் பிடித்து ஆறுதல் கூறினர். ஒருவன், “என்னாச்சு ஜோ… போன மாசம்கூட டயானா போஸ்னியாவுக்குப் போய் கண்ணிவெடில அடிபட்டவங்கள பாத்துட்டு வந்தாய்ங்களே… ” என்றான். அதற்கு ஜோ, “நல்லாதான் காளி இருந்துச்சு… லவ்வர் டோடி பயத்தோட டயானா பாரீஸுக்கு வந்துருக்கு… இந்தப் பப்பாரஸி போட்டோக்காரங்க இருக்காய்ங்கள்ல?” என்றவுடன், “பப்பாரஸின்னா?” என்றான் காளி. சட்டென்று அந்த இடம் அமைதியானது. ஜோ பதில் சொல்லாமல், திருதிருவென்று விழித்தபடி சுற்றிலும் பார்த்தான். உடனே அனைவரும் சோகமாக இருப்பதுபோல் தலையைக் குனிந்துகொண்டனர். தொடர்ந்து ஜோ, “அவிங்க டயானாவ வெரட்டிட்டுப் போயிருக்காய்ங்க. அப்ப ஆக்ஸிடென்ட் ஆயி...” என்றவனின் தொண்டை அடைக்க… கூலிங்கிளாஸைக் கழற்றி, கண்களைத் துடைத்துக்கொண்டான்.

இப்போது செந்திலைப் பார்த்துவிட்ட ஜோ, “வா செந்திலு” என்று கூற… நானும் செந்திலும் ஜோவை நெருங்கினோம். செந்திலைக் காண்பித்து ஜோ தன்னருகில் நின்ற இளைஞனிடம், “லிங்கம்… செந்தில்தான் டயானா 36ஆவது பிறந்தநாள லண்டன்ல கொண்டாடுச்சுன்னு, பேப்பர்ல போட்டோ காமிச்சான். ஸ்லீவ்லெஸ் கறுப்பு கலர் கவுன போட்டுக்கிட்டு அம்சமா நின்னுச்சு. அப்பவே நினைச்சேன்… எதுக்கு இந்தப் பொண்ணு பொறந்தநாளும் அதுவுமா கறுப்பு போட்டிருக்குன்னு… நான் பயந்தபடியே ஆயிடுச்சு” என்று கூற… செந்தில் ஜோவை அணைத்து ஆறுதல் சொன்னான். அடுத்து ஜோ என்னிடம் ஆறுதல் பெறுவதற்காக என் கையைப் பிடிக்க… வேறு வழியின்றி நானும் ஜோவை அணைத்து ஆறுதல் சொன்னேன். நான் லிங்கத்தின் அருகில் நெருங்கி, லிரில் சோப் வாசனை வருகிறதா என்று பார்த்தேன். அமோகமாக வந்தது.

சிறுகதை: ஜோ

ஜோவிடம் என்னை அறிமுகப்படுத்திய செந்தில், “இது மகேந்திரன். எங்க தெருவுக்குப் புதுசா வந்திருக்காய்ங்க” என்றான்.

“அப்புறம் துக்கம்ல்லாம் முடிஞ்சவுடனே வாங்க தம்பி. ஃப்ரீயா பேசலாம்” என்று எங்களை அனுப்பி வைத்தான்.

பந்தலை விட்டு வெளியே வந்தவுடன் நான், “ஜோ என்ன வேலைல இருக்கான்?” என்றேன்.

“வேலையா, அவன் ரெண்டு தலைமுறைக்கு உக்காந்துகிட்டே சாப்பிடலாம். லைன் வீடுங்க, காம்ப்ளக்ஸ்னு ஏகப்பட்ட சொத்த வெச்சுட்டு அவங்கப்பா சின்ன வயசுலயே செத்துட்டாரு. வாடகையே மாசம் எழுபதாயிரம் வருது” என்றவுடன் நான் மிரண்டுபோனேன். தொடர்ந்து செந்தில், “பேருக்கு டவுன்ஹால் ரோட்டுல ஜெராக்ஸ் கடை வெச்சிருக்கான். ஆளு வெச்சுப் பாக்குறான். போரடிச்சுதுன்னா என்னைக்காச்சும் போய்ட்டு வருவான்” என்றபடி செந்தில் சைக்கிளை எடுத்தான்.

“ஜோவுக்குக் கல்யாணமாயிடுச்சா?” என்றேன்.

“இல்ல… ஜோ கலைச்செல்வின்னு ஒரு புள்ளய லவ் பண்ணினான். ஜோ கிறிஸ்டீன்னு அந்தப் புள்ள வீட்டுல ஒத்துக்கல. வேற ஒருத்தன் கூட கல்யாணம் பண்ணி வெச்சுட்டாய்ங்க. மூணு வருஷமாயிடுச்சு. அந்தப் புள்ளைக்கி கொழந்தையே பொறந்துடுச்சு. இன்னும் அவளையே நினைச்சுட்டிருக்கான். வேற எந்தப் புள்ளையையும் பாக்கமாட்டான். 27 வயசாவுது. கல்யாணமும் பண்ணிக்கமாட்டேங்கிறான்” என்றான். இந்தக் காலத்திலும் பழைய காதலியை நினைத்துக்கொண்டு, திருமணம் செய்யாமலிருக்கும் ஜோமீது எனக்கு ஒரு தனிப் பிரியம் வந்தது.

மறுநாள் ஜோவை ராஜாஜி பார்க்கில் நான் செந்திலுடன் பார்த்தேன். என் கையை இறுக்கிப் பிடித்த ஜோ, பின்னர் நான் மதுரையில் இருந்த காலம் வரைக்கும் அந்தக் கைகளை விடவேயில்லை. நான் புத்தகங்கள் படிப்பேன், வார இதழ்களில் கவிதைகள் எழுதுவேன் என்பதால் ஜோவிற்கு என்னிடம் ஒரு தனிப் பிரியம். ஜோ என்னைவிட நான்கு வயது பெரியவன் என்றாலும், சீக்கிரமே ‘வாடா… போடா…’ என்று கூப்பிடும் அளவுக்கு நெருக்கமாகிவிட்டோம்.

நாங்கள் அறிமுகமாகிப் பல மாதங்களுக்குப் பிறகு, குஷ்பு ஒயின்ஸில் ஒருநாள் தண்ணி அடித்தபோது ஜோ திடீரென்று, “கலைச்செல்வி மேட்டர செந்தில் சொல்லியிருப்பானே” என்றான்.

“ம்…” என்றேன்.

“இன்னைக்கிதான் நாங்க லவ்வ சொல்லிக்கிட்ட நாள். மனசு ஒரு மாதிரியா இருக்கு. அதுக்குத்தான் தண்ணியடிக்கக் கூப்பிட்டேன். நீ ஒரு தடவை கலைச்செல்விய பாக்கணும் மகேந்திரா… இந்த உலகத்துலயே அழகான பொண்ணு அவதான்” என்றான். இது பொதுவாக எல்லாக் காதலன்களும், தங்கள் காதலி பற்றிச் சொல்வதுதானென்பதால் நான் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை.

தொடர்ந்து ஜோ, “நான் மதம்லாம் பாக்காம, மதுரைல நடக்கிற எல்லாத் திருவிழாவுக்கும் போவேன். முத முதல்ல அவள சித்திரைத் திருவிழா, எதிர்சேவையப்ப பாத்தேன். அவ அழகர பாத்துக்கிட்டே இருந்தா. பாத்தவுடனே அசந்துபோய்ட்டேன். எனக்குன்னே பொறந்தவ மாதிரி தோணுச்சு. பக்கத்துல போனேன். அப்ப திடீர்னு திரும்பி என்னையப் பாத்தா பாரு…அவ்ளோதான் மாப்ள… அப்புறம் அவ அழகரப் பாக்கவே இல்ல. என்னையத்தான் பாத்துக்கிட்டிருந்தா. ஒரே மாசத்துல லவ் பண்ண ஆரம்பிச்சிட்டோம்” என்ற ஜோ ஒரு மடக்கு ரம்மைக் குடித்தான்.

நான், “இப்ப கலைச்செல்வி எங்க இருக்காங்க?” என்றேன்.

“மதுரைலதான் கட்டிக்கொடுத்திருக்காய்ங்க. வழில எங்காச்சும் பாத்தா பேசிக்குவோம். என்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லும். ஆனா… எனக்கு என்னமோ யாரையும் கல்யாணம் பண்ணிக்கத் தோணல. ஒருவேளை மறுபடியும் ஒருத்தியப் பாத்து எனக்காகப் பிறந்தவன்னு தோணுச்சுன்னா பாக்கலாம்” என்ற ஜோவை நான் ஆச்சர்யத்துடன் பார்த்தேன். இன்னும் பழைய காதலியை நினைத்து உருகிக்கொண்டிருந்தாலும், மறுபக்கம் டயானா நற்பணி மன்றத் தலைவராக வாழும் ஜோவை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

பாரிலிருந்து வெளியே வந்தபோது உச்சக்கட்ட போதையில் இருந்த ஜோ, தடுமாற்றத்துடன் ஒரு லாரிக்கு முன்பு விழப்பார்த்து, கடைசி விநாடியில் மீட்டோம்.

மறு வாரத்தில், எங்கள் ஏரியா மாரியம்மன் கோயில் முளைப்பாரித் திருவிழாவின் கடைசி நாள் மாலை. கோயில் முன்பு முளைப்பாரிகளை வைத்திருந்தனர். ஒரு கிழவி மைக்கில், ‘தானானே…’ பாட, பெண்கள் கைகளைக் கொட்டிக்கொண்டு முளைப்பாரிகளைச் சுற்றி வந்தனர். கோயில் வாசலில் நூறு பேருக்கு மேல் இருப்பார்கள். பெரும்பாலும் பெண்கள். இளம்பெண்களை வேடிக்கை பார்த்தபடி நாங்கள். ஜோ பெண்களையெல்லாம் கவனிக்காமல், பாண்டியுடன் ஏதோ பேசிக்கொண்டிருந்தான்.

அப்போது செந்தில், “ஜோ… கலைச்செல்வி வாராடா…” என்று கூற, ஜோ வேகமாகத் திரும்பிப் பார்த்தான். பாண்டி என்னிடம், “இதான் ஜோ ஆளு” என்றவுடன் ஆர்வத்துடன் பார்த்தேன். இடுப்பில் குழந்தையுடன் வேகமாக ஜோவிற்கு அருகில் வந்த கலைச்செல்வி, “என்னைய அழவெச்சாதான் உனக்கு சந்தோஷமாடா?” என்று ஆரம்பித்ததும், நான் நகர ஆரம்பித்தேன். ஜோ, “இர்ரா… தனியா பேசினா யாராச்சும் தப்பா நினைப்பாய்ங்க…” என்றவன் செல்வியைப் பார்த்து, “இப்ப எதுக்கு அழுதுகிட்டு நிக்குற, புருஷன் நல்லாதானே வெச்சுருக்கான்.”

“அதுக்கெல்லாம் ஒரு கொறச்சலும் இல்ல. அது என் சாமில்ல… நம்ம சேதி தெரிஞ்சும் என்ன அப்படி பாத்துக்கிடுது. நீதான்டா என் உசுர வாங்குற… போன வாரம் ஓவராக் குடிச்சுப்புட்டு, லாரில அடிபடப் பாத்தியாமே… எங்கூட்டுக்காரரு பாத்துட்டு வந்து சொன்னாரு.”

“அதான் உசுரோட முன்னாடி நிக்குறோம்ல?”

“கெரகம்… இதெல்லாம் கேட்டுத் தொலையாம, எங்கயாச்சும் வெளியூர்ல கட்டிக் கொடுத்தி ருக்கலாம். இங்க பாருடா…” என்று கலைச்செல்வி அவன் கையைத் தொட்டாள். ஜோ வேகமாக, ``ஏய்… கைய எடு. கல்யாணமாய்ட்டு… அறிவில்ல?” என்ற ஜோ, கலைச்செல்வியின் குழந்தையை நோக்கிக் கையை நீட்டினான். அது டபக்கென்று சிரிப்புடன் தாவி ஜோவிடம் வந்ததைப் பார்த்ததும், ஏனோ தெரியவில்லை, எனக்கு நெகிழ்ந்துவிட்டது. அருகில் உள்ள கடைக்குச் சென்று குழந்தைக்கு சாக்லேட் வாங்கித் தந்துவிட்டு கலைச்செல்வியிடம், “சரி நீ போ… எவனாச்சும் பாத்தா கதை கட்டி விடுவாய்ங்க” என்ற ஜோவை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. கலைச்செல்வி தெருமுனையில் திரும்பும் வரையிலும் அவளையே பார்த்துக்கொண்டு நின்றான் ஜோ.

அப்போது சற்றே சத்தமாக, “தேன்மொழி” என்று ஒரு பெண் அழைக்கும் குரல் கேட்க… திரும்பிப் பார்த்த அத்தனை பசங்களும் ஆடிப்போய்விட்டோம். ஆடிப்போனது… கோயில் வாசலில், கையில் குழந்தையுடனிருந்த தேன்மொழியைப் பார்த்து அல்ல. சற்றுத் தொலைவிலிருந்து தேன்மொழியை அழைத்தவளைப் பார்த்து. ஏனெனில் தேன்மொழியை அழைத்தவள் அவ்வளவு அழகாக இருந்தாள்.

மணமகன் வீட்டுக்குப் பெண் வீட்டார் அனுப்பும் பெண் புகைப்படம்போல் மரியாதையான தோற்றம். சிவப்பிற்கும், அதீத சிவப்பிற்கும் இடையே இருந்தாள். கடவுள் இந்த உலகம் தோன்றிய நாள் முதல் இதுவரையிலும் படைத்த மனிதர்களில், அதிக நேரம் எடுத்துக்கொண்டு செதுக்கிய முகம் அவளுடைய முகமாகத்தான் இருக்கும். அவ்வளவு திருத்தமான அழகிய முகம். உயிரோட்டமான அகன்ற கண்கள். அவள் இப்போது தேன்மொழியின் குழந்தையை வாங்கி முகத்துக்கு நேரே தூக்கி, முகமெங்கும் பொங்கி வழியும் சிரிப்புடன் நாக்கைத் துருத்தி, “ரூ… ரூ…” என்று கொஞ்சிக்கொண்டிருந்தாள். அழகான பெண்கள் குழந்தைகளைக் கொஞ்சும்போது மேலும் அழகாகிவிடுகிறார்கள்.

நாங்கள் அவளைப் பார்த்ததில் எந்த ஆச்சர்யமுமில்லை. ஆனால் ஜோவும் அவளைக் கவனிப்பதைப் பார்த்தவுடன் நாங்கள் அசந்துவிட்டோம். ஜோ அவளைப் பார்த்த பார்வையைப் பார்த்தவுடன், நாங்கள் அனைவரும் உடனே ஆட்டத்திலிருந்து விலகி, அவளை அண்ணி ஆக்கிக்கொண்டோம். இத்தனை மாதப் பழக்கத்தில் அப்போதுதான் ஜோவின் கண்களில் வெளிச்சத்தைப் பார்த்தேன். அவன் முகத்தில் நிரந்தரமாகப் படிந்திருந்த துயர ரேகைகள் சட்டென்று மாயமாகியிருந்தன.

“என்னா ஜோ, உனக்குன்னு பொறந்தவ மாதிரி தோணுதா?” என்றேன். “சீ…” என்று அழகாக வெட்கப்பட்ட ஜோ, “அதெல்லாம் ஒண்ணுமில்லடா…” என்றான். பாண்டி, “தேன்மொழி நம்ப சரவணன் தங்கச்சிதான். புள்ள யாரு என்னான்னு விசாரிச்சுருவோமா?” என்றபோது, “டேய் சும்மா இருங்கடா…” என்ற ஜோ, அந்தப் பெண்ணிடமிருந்து பார்வையை விலக்கவில்லை.

அந்தப் பெண் தேன்மொழியிடம் விடைபெற்றுக்கொண்டு சென்றவுடன் ஜோ, “ஏன்னே தெர்லடா… அவ இருந்த வரைக்கும் இந்த இடமே ஜெகஜோதியா இருந்துச்சு. அவ போனவுடனே சட்டுன்னு வானத்துல யாரோ கரன்ட்ட ஆஃப் பண்ண மாதிரி ஆயிடுச்சு” என்று சொல்ல… நாங்கள், “சிக்கிட்டான்டா… மாப்ள சிக்கிட்டான்டா” என்று கத்தினோம். ஜோ வெட்கத்துடன் சிரித்தபடி, “சும்மா அலப்பறை உடாம யாரு என்னான்னு விசாரிங்கடா” என்றான்.

சிறுகதை: ஜோ

மறுநாள் மாலை, நாங்கள் தல்லாகுளம் பொட்டலில் டாப்படித்திருந்தோம். அப்போது அங்கு வந்து வேகமாக சைக்கிளை நிறுத்திய பாண்டி, “சரவணன்கிட்ட பூராத்தையும் விசாரிச்சாச்சு. அவளும் கிறிஸ்டீன்தான். பேரு டயானா” என்றவுடன் ஜோவின் முகத்தில் சந்தோஷம். “டயானாவா?” என்று நாங்கள் உற்சாகமாகக் கத்தினோம். தொடர்ந்து பாண்டி, “செல்லூர்ல இருந்து, இப்பதான் இங்க குடிவந்துருக்காய்ங்க. டாக்டர் அருளானந்தம் க்ளினிக்ல டோக்கன் கொடுக்குற வேலை பாக்குது” என்றவுடனேயே ஜோ இரும ஆரம்பித்துவிட்டான். இருமியபடியே எழுந்த ஜோ, “மகேந்திரா… நேத்திலருந்து ஒரே இருமல். வா… டாக்டர் வீட்டுக்குப் போயிட்டு வந்துடலாம்” என்று புல்லட்டை ஸ்டார்ட் செய்தான்.

நாங்கள் அருளானந்தம் க்ளினிக்கில் நுழைந்தோம். ஒரு டேபிளுக்குப் பின்னால் அமர்ந்திருந்த டயானாவை நெருங்கி இருமியபடி, “டாக்டரப் பாக்கணும்” என்றான் ஜோ. டோக்கனை நீட்டிய டயானா, “டோக்கன் நம்பர் 24. ஊடால வெளிய போய்ட்டுல்லாம் வரக்கூடாது. இருந்து பாத்துட்டுப் போவணும்.”

“நாங்க என்னாத்துக்குப் போறோம்…”

நாற்காலியில் அமர்ந்த ஜோ கழுத்துச் செயினிலிருந்த சிலுவை டாலரை எடுத்து வெளியில் விட்டபடி, “மத்தேயு எழுதின சுவிசேஷத்துல, ஏழாம் அதிகாரத்துல என்ன சொல்லியிருக்குன்னா…” என்று சத்தமாகக் கூற… நான் பயந்துவிட்டேன். இத்தனை மாதப் பழக்கத்தில் அவன் ஒருமுறைகூட சர்ச்சுக்குச் சென்றோ, பைபிள் படித்தோ பார்த்ததில்லை. “ஏழாம் அதிகாரத்துல என்னடா?” என்றேன். இப்போது குரலை அடக்கிய ஜோ, “எவன்டா கண்டான்? வேற மதம்னா பாப்பா பயப்படுமுல்ல? அதான் கிறிஸ்டீன்னு இன்ஃபார்ம் பண்றேன்” என்றபடி அவளைப் பார்த்தான்.

சில நிமிடங்கள் கழித்து அவளிடம் சென்று, “எத்தனை டோக்கன் போயிருக்கு?” என்றான் ஜோ. அவள் “ஏழு” என்றாள். “ஏழுதான் போயிருக்கா? எனக்கு இருபத்து நாலுன்னா…” என்ற ஜோ தன் கைவிரலை நீட்டி, “எட்டு, ஒன்பது…” என்று கணக்குப் போட… டயானா, “இன்னும் பதினாறு பேரு” என்றாள் வெடுக்கென்று. “சரி” என்று மீண்டும் இருக்கையில் அமர்ந்துகொண்டான். சில நிமிடங்கள் கழித்து மீண்டும் அவளிடம் சென்று “இப்ப எத்தனை போயிருக்கு?” என்றான். டயானா, “ஹலோ… உங்க டோக்கன் வர்றப்ப நாங்க சொல்வோம்” என்று இறுக்கமாகக் கூற… ஜோ வேறு வழியின்றி வந்து அமர்ந்தான். டயானாவை உற்றுப் பார்த்தபடி ஜோ, “பாக்க பாக்க ஒவ்வொரு செகண்டும் லவ் ஏறிக்கிட்டேயிருக்குடா” என்றான்.

“அது அப்படித்தான் ஏறும். அப்புறம் கல்யாணமானவுடனே இறங்கிரும்” என்று நான் கூற… ஜோ முறைத்தான். அப்போது ஜோவின் நம்பர் அழைக்கப்பட்டது. டாக்டரைப் பார்த்துவிட்டு வந்து டயானாவைப் பார்த்து ஜோ சிரிக்க… அவள் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

மறுநாள் மாலை, என்னைப் பார்த்தவுடன் என் கழுத்தைத் தொட்டுப் பார்த்த ஜோ, ‘என்னடா… இவ்ளோ காய்ச்சலா இருக்கு? வா வா… டாக்டர்ட்ட போய்ட்டு வந்துடலாம்” என்றவுடன் சிரித்துவிட்டேன். ஜோ, “டெய்லி எனக்கே உடம்பு சரியில்லன்னு போனா பாப்பா நம்பாது. அதுக்குத்தான்…” என்று புல்லட்டை ஸ்டார்ட் செய்தான்.

க்ளினிக்கில் எங்களை சந்தேகமாகப் பார்த்த டயானா, “18” என்று டோக்கனை நீட்டினாள். நாற்காலியில் அமர்ந்து டயானாவை உற்றுப் பார்த்த ஜோ, “எதுக்குடா இம்புட்டு பேரும் டாக்டரப் பாக்குறானுங்க? டயானாவ கண்ணால பாத்தாலே எல்லா நோயும் சரியாய்டாது?” என்றான்.

“அது உனக்கு.”

“நேத்து திடீர்னு ஒரு கவலை. எனக்குப் பொண்ணு பொறந்தா கலைச்செல்வின்னு பேர் வைக்கலாம்னு இருந்தேன். ஆனா டயானா ஒத்துக்காதுல்ல?”

“டேய்… மொதல்ல அவ லவ் பண்ணட்டும்டா” என்றேன் அழுவதுபோல்.

மறுநாள் பாண்டியிடம் ஜோ, “இன்னைக்கி நீ டாக்டர்கிட்ட வர்றியா?” என்றான். அப்போது செந்தில், “டெய்லி ஃப்ரண்ட்ஸ்ங்களுக்கு உடம்பு சரியில்லன்னா சந்தேகப்படுவாடா” என்றான். “அதுவுஞ் சரிதான்” என்று யோசித்த ஜோ, “உங்க ஏரியா பெருசுங்க யாருக்காச்சும் உடம்பு சரியில்லாம இருக்கா?” என்றான்.

“ம்… நம்ம ஆசாரி தெரு மீனாட்சி பாட்டிக்கு உடம்பு சரியில்லாம இருக்கு” என்று செந்தில் கூறிய அடுத்த ஐந்தாவது நிமிடம், நானும், ஜோவும் ஆப்பிள் பழங்களோடு மீனாட்சி பாட்டி வீட்டில் இருந்தோம். ஜோ, “பாட்டி முழங்கால் வலின்னு நடக்கமுடியாமக் கெடக்கு. யாருக்காச்சும் பொறுப்பு இருக்கா? நான் டாக்டர்ட்ட கூட்டிட்டுப் போறேன்… டேய் மகேந்திரா… ஒரு ஆட்டோ பிடிடா…” என்று என்னை ஏவினான்.

அடுத்தடுத்த நாள்களில், தனக்குத் தெரிந்த பெருசுகளையெல்லாம் ஜோ க்ளினிக்கிற்கு அழைத்துப்போனதில், டாக்டர் அருளானந்தத்தின் கலெக்‌ஷன் கிர்ரென்று எகிற… ஜோ டாக்டரின் நண்பனாகிவிட்டான். ஆனால் ஜோ தனக்காகத்தான் வருகிறான் என்று புரிந்துகொண்ட டயானா, அவனிடம் ஒன்றும் பேசாமல் டோக்கன் கார்டை மட்டும் நீட்டுவாள். ஜோ ஏதும் கேள்வி கேட்டாலும் கண்டுகொள்ளாததுபோல் போனை எடுத்து டயல் செய்ய ஆரம்பித்துவிடுவாள்.

நாள்கள் மிக வேகமாகச் சென்றன. ஜோ வாரத்துக்கு மூன்று நாள்களாவது, யாரையாவது அழைத்துக்கொண்டு க்ளினிக் சென்றுவிடுவான். எங்களுடன் பேசும் நேரங்களிலெல்லாம் டயானா பற்றியே பேசிக்கொண்டிருந்தான். ஜோவின் மனதில் டயானாவைத் தவிர மற்ற அனைத்து விஷயங்களும் மறந்துவிட்ட நாள்கள் அவை.

நாற்காலியில் அமர்ந்த ஜோ கழுத்துச் செயினிலிருந்த சிலுவை டாலரை எடுத்து வெளியில் விட்டபடி, “மத்தேயு எழுதின சுவிசேஷத்துல, ஏழாம் அதிகாரத்துல என்ன சொல்லியிருக்குன்னா…” என்று சத்தமாகக் கூற… நான் பயந்துவிட்டேன்.

மூன்று மாதங்களுக்குப் பிறகு, அன்று மதுரையைச் சுற்றியுள்ள அனைத்துப் பெரிசுகளும் சர்வ சகல ஆரோக்கியத்துடன் இருந்ததால், வேறு வழியின்றி எனக்குக் காய்ச்சல் என்று க்ளினிக் சென்றோம். டாக்டரிடம் காண்பித்துவிட்டு வெளியே வந்தோம். ஜோ டயானாவைப் பார்த்தபடியே செருப்பைப் போட… டயானா அவனை முறைத்தாள்.

நாங்கள் வெளியே சாலைக்கு வந்து நடந்தபோது, “ஹலோ…” என்று பின்னாலிருந்து குரல் கேட்டுத் திரும்பினோம். டயானா. உற்சாகத்துடன் ஜோ, “என்னையத்தான்டா கூப்பிடுறா…” என்றபடி நின்றான். எங்கள் அருகில் வந்த டயானா ஜோவைப் பார்த்து, “நீங்க எதுக்காக தினம் இங்க வர்றீங்கன்னு தெரியுது. இனிமே என் பின்னாடி சுத்துற வேலை வெச்சுக்காதீங்க” என்றாள்.

“சரி… இனிமே வரலங்க. ஆனா விஷயத்தச் சொல்லிடுறேன். நான் டவுன்ஹால் ரோட்டுல ஜெராக்ஸ் கடை வெச்சிருக்கேன். வீட்டு வாடகைல்லாம் மாசம் எழுபதாயிரம் வருது. உங்கள எனக்கு ரொம்பப் புடிச்சுப்போச்சுங்க. நானும் கிறிஸ்டீன்தான். நீங்க சரின்னா, வீட்டுல வந்து பொண்ணு கேக்கச் சொல்றேன்” என்று ஜோ தடாலடியாகக் கூற… எனக்கு வெலவெலத்து விட்டது. சில விநாடிகள் ஒன்றும் சொல்லாமல் ஜோவைப் பார்த்த டயானா, “நீங்க கிறிஸ்டியன்தான், நிறைய சொத்தெல்லாம் இருக்கு, எல்லாஞ் சரி… ஆனா… என்னால உங்கள லவ் பண்ண முடியாது?”

“ஏங்க?”

“ஏன்னா…” என்று சில விநாடிகள் தயங்கிய டயானா, “நான் ஒருத்தன ரெண்டு வருஷமா லவ் பண்ணிகிட்டிருக்கேன். அவனதான் கல்யாணம் பண்ணிக்கப்போறேன். தயவுசெஞ்சு இனிமே என் பின்னாடி சுத்தாதீங்க…” என்று கூறியவள் எங்கள் பதிலுக்காகவெல்லாம் நிற்கவில்லை. திரும்பி க்ளினிக்கை நோக்கிப் போய்க்கொண்டேயிருந்தாள். ஜோவின் முகம் செத்துப்போய்விட்டது. சில விநாடிகள் அதிர்ச்சியுடன் என்னைப் பார்த்த ஜோ, என் தோளைப் பிடித்தபோது அவன் கை நடுங்கியது. “என்னடா… பொசுக்குன்னு இப்படிச் சொல்லிப்புட்டா…” என்று சிரிக்க முயன்ற ஜோவின் கண்கள் லேசாகக் கலங்கினாற்போல் இருந்தது. “மாப்ள…” என்று நான் ஆறுதலாக அவன் தோளைத் தொட… அவன் என் கையை விலக்கிவிட்டு வேகமாக நடந்தான்.

அன்றிரவு தளபதி ஒயின்ஸில் தண்ணியடித்துக் கொண்டிருந்த ஜோவைப் பார்க்க பயமாக இருந்தது. கிட்டத்தட்ட நான்கு மணி நேரமாக விடாமல் குடித்துக்கொண்டிருக்கிறான். திடீரென்று ஜோ சத்தமாக, “நடுநெஞ்சுல கத்தியால குத்திட்டு, அந்தக் காயத்துல ஆசிட்ட ஊத்தி, மிளகாத்தூளத் தடவி, தீயால பத்த வெச்சா எப்படித் தெரியுமா இருக்கும்? அப்படி இருக்குடா எனக்கு…” என்ற ஜோ அழ ஆரம்பித்துவிட்டான். காதல் தோல்வியில் பாரில் அழாத ஆண்கள் யாரும் இருக்கிறார்களா என்ன?

நான், “டேய்… என்னடா…” என்று அவன் தோளை அணைத்தபடி சுற்றிலும் பார்த்தேன். “செத்துடலாம் போல இருக்குடா” என்ற ஜோ கண்களைத் துடைத்துக்கொண்டான்.

“சீ... இதுக்குப்போய் சாவியா? கலைச்செல்வி போனதையே தாங்கிக்கிட்ட… இது சும்மா ஒன்ஸைடுதானடா?” என்றேன். என்னை உற்றுப் பார்த்த ஜோ, “ஒன்ஸைடுன்னாலும் இதுவும் காதல்தான்டா. எல்லாக் காதலுக்கும் ஒரே வலிதான் மாப்ள... ஏன்னே தெரியல… டயானாவ மொதமொதல்ல பாத்தவுடனே, சட்டுன்னு எல்லாக் கஷ்டமும் போயி மனசு சந்தோஷமாயிடுச்சு. தெனம்… பாத்து பாத்து ரொம்ப ஆசையை வளத்துக்கிட்டேன். அவ கூட வாழறதப் பத்தி நிறைய கனவு கண்டுட்டேன் மாப்ள… அவ இல்லாம ஒரு வாழ்க்கைய நெனச்சுக்கூட பாக்கமுடியலடா…” என்ற ஜோ தொடர்ந்து கண்ணீர் விட்டுக்கொண்டேயிருந்தான்.

ஜோ அந்தக் கண்ணீரிலிருந்து மீண்டு வர இரண்டு மாதங்களாகின. இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ஜோ குடியை நிறுத்தியிருந்த ஒரு மாலை. அன்று நாங்கள் தல்லாகுளம் பொட்டலில் உட்கார்ந்திருந்தபோது ஜோவின் ஜெராக்ஸ் கடையில் வேலை செய்யும் முத்து வந்தான்.

ஜோ, “என்னடா… அதுக்குள்ள கடைய சாத்திட்டியா?” என்றான்.

“ஒரு முக்கியமான வேலைண்ணே… என் பெரியம்மா பையன்… இளங்கோன்னு பேரு…” என்று தூரத்தில் நின்றுகொண்டிருந்த ஒரு இளைஞனைக் காண்பித்தான். தொடர்ந்து முத்து, “செல்லூர்ல புரோட்டோக் கடை வெச்சிருக்கான். ஒரு புள்ளய லவ் பண்ணிக்கிட்டிருக்கான். புள்ள வீட்டுல ஒத்துக்காம. புள்ளய இடம் மாத்தினாய்ங்க. நாலஞ்சு மாசம் பாத்துக்காம இருந்தாய்ங்க. ஆனா லெட்டர் கான்டாக்ட்ல இருந்தாய்ங்க. இப்ப அதுவும் புள்ள வீட்டுக்குத் தெரிஞ்சுபோயி மடக்கி வீட்டுல அடைச்சி வெச்சிருக்காய்ங்க. அந்தப் புள்ளக்கி வேகமா மாப்பிள்ளை பாத்துட்டு இருக்காய்ங்க. ரெண்டு பேரும் ஓடிப்போற முடிவுக்கு வந்துட்டாய்ங்க… நீங்கதாண்ணே ஹெல்ப் பண்ணணும்” என்றான். தனது காதல் தோற்றபிறகு, ஜோ நான்கைந்து காதல் திருட்டுக் கல்யாணங்களுக்கு உதவி செய்திருக்கிறான். அதனால்தான் முத்து ஜோவிடம் வந்திருக்கிறான்.

“பொண்ணு எந்த ஏரியா?”

“முதல்ல செல்லூர்லதான் குடியிருந்துச்சு. இப்பதான் உங்க ஏரியாவுக்கு வந்துருக்கு. கிறிஸ்டீன்தான். பொண்ணு பேரு டயானா… டாக்டர் அருளானந்தம் க்ளினிக்ல வேலை பாத்துட்டிருந்துச்சு. இப்ப ஒரு மாசமா வீட்டுலயே மடக்கிப் போட்டுருக்காய்ங்க…” என்றவுடன் ஜோவின் முகம் மாறியது. இடிபோல் இறங்கிய அதிர்ச்சியை மறைத்துக்கொண்டு ஜோ அமைதியாக சாலையை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். ஜோவைவிட அதிர்ந்துபோயிருந்த நாங்கள் என்ன செய்வதென்று புரியாமல் ஜோவின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தோம். சில விநாடிகளுக்குப் பிறகு ஜோ குரலில் எந்த உணர்ச்சியுமின்றி, “அப்படியா... எங்காளுங்க... கொஞ்சம் யோசிச்சுதான் செய்யணும். எப்படிப் பண்ணமுடியும்னு பாக்கணும்? யோசிச்சு ரெண்டு நாள்ல சொல்றேன்” என்று முத்துவை அனுப்பி வைத்தான்.

நாங்கள், “என்னடா… செய்யப்போறியா?” என்றோம். “யோசிக்கணும்” என்ற ஜோ மேற்கொண்டு ஒன்றும் பேசாமல் எழுந்து சென்றான். அதற்குப் பிறகு வந்த ஒரு வார காலமும் ஜோ எங்களிடம் அதிகம் பேசாமல், ஏதோ யோசனையிலேயே இருந்தான். எங்கள் யாரையும் அழைக்காமல், எங்கெங்கோ சென்று வந்தான்.

ஒரு வாரத்திற்குப் பிறகு ஜோ என்னிடம், “மகேந்திரா, டயானாவ பொண்ணு பாக்கப்போறேன்…” என்றவுடன் எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. என் வாழ்வில் நான் சந்தித்த மிகப்பெரிய அதிர்ச்சிகளில் ஒன்று அது. தொடர்ந்து ஜோ, “டயானா தேவதைடா… அவள கல்யாணம் பண்றதுக்கெல்லாம் ஒரு தகுதி வேணும்டா. இந்த இளங்கோ பயகூட போயி ரோட்டுக்கடைல, குடிகாரப் பசங்களுக்கு புரோட்டா போட்டுத் தருவா. அவன் கூட அவ கஷ்டப்படுவாடா… அதான் நானே கல்யாணம் பண்ணிக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டேன். டயானாவப் பத்தி டீப்பா விசாரிச்சேன். எங்கப்பாவோட ஃபிரெண்டு பெஞ்சமினுக்கு சொந்தம். அவரப் பாத்துப் பேசினேன். அவரு இளங்கோ மேட்டரச் சொன்னாரு. நான் பரவால்லன்னு சொல்லிட்டேன். அவங்க வீட்டுல வரச்சொல்லியிருக்காய்ங்க. நீ வரியா?” என்றான்.

நான் கோபத்துடன், “மாப்ள… டயானா மேல உனக்கு ஆசை இருக்கலாம். ஆனா இளங்கோ நம்ம உதவி கேட்டு வந்த பய… அவனுக்கு உதவி பண்ணலன்னாலும், துரோகம் பண்ணக்கூடாதுடா.”

“மகேந்திரா… வாழ்க்கைல ஒருத்தனுக்காச்சும் துரோகம் பண்ணாம, இங்க யாரும் ஜெயிக்க முடியாது. என்னா… வர்றியா?”

ஜோவின் செயலில் எனக்கு உடன்பாடில்லை. இருந்தாலும் அவன் மிகவும் வற்புறுத்தியதால் அவனுடன் சென்றேன். ஜோவுடன் அவன் அம்மா மற்றும் அக்கா குடும்பத்தினரும் வந்திருந்தனர். காபி எடுத்துக்கொண்டு வந்த டயானாவிற்கு ஜோவைப் பார்த்தவுடன் அதிர்ச்சி. ஜோ டயானாவிடம் தனியாகப் பேசிவிட்டு வந்து டயானாவின் அப்பாவிடம், “எனக்கு பொண்ணப் பிடிச்சிருக்கு. இளங்கோ மேட்டரெல்லாம் பெரிய விஷயமில்ல. இதெல்லாம் வயசுல வர்றதுதான்னு பொண்ணுகிட்ட சொல்லிட்டேன். யோசிச்சு உங்க முடிவச் சொல்லுங்க” என்று கூறிவிட்டு வெளியே வந்தான்.

என்னிடம் ஜோ, “டயானாகிட்ட, ‘அந்த இளங்கோ ஒரு வெத்துப் பய… எனக்கு இவ்ளோ சொத்து இருக்கு. நான் உன்ன மதுரைல ராணி மாதிரி வெச்சுக்குறே’ன்னு பக்குவமாப் பேசினேன். யோசிச்சுச் சொல்றன்னு சொல்லியிருக்கு” என்றான்.

அதன் பிறகு ஏறத்தாழ ஒரு வாரம் வரை நான் ஜோவைச் சந்திக்கவேயில்லை. எட்டாம் நாள் என் வீட்டிற்கு வந்த ஜோ, “டயானா ஓகே சொல்லிருச்சு. கல்யாண தேதி முடிவாயி, பத்திரிகைல்லாம் அடிக்கக் கொடுத்தாச்சு. நாளைக்கி என் கூட சினிமாக்கு வரேன்னுருக்கு” என்றவுடன், நான் கசப்பாகச் சிரித்தேன்.

மறுநாள் இரவு. எட்டு மணிபோல் இருக்கும். என் வீட்டுக்கு வந்த ஜோ என்னை வெளியே அழைத்துக்கொண்டு வந்தான். நாங்கள் தெருமுனைக்கு வந்தபோது பிள்ளையார் கோயில் அருகில் நின்றுகொண்டிருந்த டயானாவைப் பார்த்தேன். இவளை எதற்கு இங்கு அழைத்து வந்திருக்கிறான்? என்னைப் பார்த்தவுடன் டயானா மெலிதாகச் சிரித்தாள். அப்போது ஜோ, “மகேந்திரா… இப்ப உன்கிட்ட ஒரு உண்மையச் சொல்லப்போறேன்... யாருகிட்டயும் சொல்லமாட்டேன்னு சத்தியம் பண்ணு” என்று கையை நீட்டினான். நான் ஒன்றும் புரியாமல் சத்தியம் செய்தேன்.

ஜோ, “இப்ப நானும், டயானாவும் எதுக்கு தெரியுமா வெளிய வந்துருக்கோம்… இளங்கோவோட டயானாவ அனுப்பி வைக்க…” என்றவுடன், நான் அரண்டுபோனேன். தொடர்ந்து ஜோ, “நீயெல்லாம் இங்க வர்றதுக்கு முன்னாடி அன்புன்னு ஒரு ஃபிரெண்டு, அவனையும் அவன் லவ்வரையும் ஊர விட்டு அனுப்பி வெச்சோம். மறுநாள் பாண்டியும், லிங்கமும் நல்லா தண்ணியப் போட்டுட்டு எங்கயோ உளறி வெச்சுருக்காய்ங்க. ஒரே நாள்ல புள்ளய கமுக்கமா தூக்கிட்டு வந்து, வேற ஒருத்தனுக்குக் கல்யாணம் பண்ணி வெச்சுட்டாய்ங்க. அதான் இந்தத் தடவை யாருக்கும் சொல்லல. ஆனா உன்கிட்ட மறைக்கிறது… மனச உறுத்திக்கிட்டே இருக்கு. அதான் சொல்லிட்டேன்” என்ற ஜோவை இன்னும் அதிர்ச்சி அடங்காமல் பார்த்துக் கொண்டேயிருந்தேன்.

சில விநாடிகள் இடைவெளிக்குப் பிறகு ஜோ, “முத்து சொன்னவுடனே யோசிச்சேன். மொதல்ல டயானாவ வீட்ட விட்டு வெளிய கூட்டிட்டு வரணும். ஆனா அவிங்க வீட்டுல எங்கயும் வெளிய விடுறதுல்ல. கக்கூஸ் போறப்பக்கூட காவலு. அதுக்குத்தான் நான் கல்யாணம் பண்ணப் போற மாதிரி போனேன். டயானாகூட தனியா பேசறப்ப என் பிளானச் சொல்லிட்டேன். இளங்கோகிட்டயும் விஷயத்தைச் சொல்லிட்டேன்” என்று சொல்லச் சொல்ல… என் பிரமிப்பு எகிறிக்கொண்டேயிருந்தது.

சிறுகதை: ஜோ

தொடர்ந்து ஜோ, “கேரளா, திருச்சூர்ல இருக்கிற என் ஃபிரெண்டு ஒருத்தன் வீட்டுக்கு அனுப்பப்போறேன். மதுரைல கார் பிடிச்சா ட்ராவல்ஸ்ல விசாரிச்சுக் கண்டுபிடிச்சுடுவாய்ங்க. அதனால திருச்சூருலேருந்தே ட்ராவல்ஸ்ல ஒரு கார இங்க வர வெச்சிருக்கேன். ஃபாத்திமா காலேஜ்கிட்ட கார் நிக்குது. இப்ப நானும், டயானாவும் அங்க போறோம். இளங்கோ என் ஜெராக்ஸ் கடைல இருக்கான். எங்க வரணும்னு இளங்கோக்குத் தெரியாது. நாங்க போயி கூட்டிட்டுப் போனா, யார் கண்லயாச்சும் பட்டா வம்பு. அதனால நீ போயி அவன அழைச்சுக்கிட்டு ஃபாத்திமா காலேஜ் வந்துரு…” என்ற ஜோ தெருவில் சென்ற ஆட்டோவைக் கைதட்டி அழைத்தான்.

நான் நடப்பதையெல்லாம் நம்பமுடியாமல் பரபரப்புடன் கிளம்பினேன். நான் இளங்கோவை அழைத்துக்கொண்டு ஃபாத்திமா காலேஜ் வந்தபோது, மணி இரவு ஒன்பதாகியிருந்தது. கல்லூரியைத் தாண்டி நின்ற ஒரு கார் கேரளப் பதிவு எண்ணுடன் இருந்தது. எங்களைப் பார்த்தவுடன் காரிலிருந்து ஜோவும் டயானாவும் இறங்கினர். டயானா ஓடி வந்து இளங்கோவைக் கட்டிப்பிடித்துக்கொண்டு அழுதாள்.

கார் புறப்படுவதற்கு முன்பு டயானாவும், இளங்கோவும் ஜோவின் காலில் திடீரென்று விழுந்தனர், “ஏய்… என்னப்பா…” என்று அவர்களை எழுப்பிய ஜோ, “போய் நல்லபடியா இருங்க. கொறஞ்சது மூணு மாசம் இங்க யாரு கூடயும் பேசாதீங்க. நடுவுல நான் அங்க வந்து என்னாச்சுன்னு சொல்றேன்” என்றவன் தன் பாக்கெட்டிலிருந்து கொத்தாகப் பணத்தை எடுத்தான். இளங்கோ, “எங்கிட்ட இருக்குண்ணே…” என்று தடுக்கத் தடுக்க இளங்கோவின் சட்டைப் பாக்கெட்டில் பணத்தைச் செருகி, அவர்களை காரில் ஏற்றி விட்டான். கார் கிளம்பியது. தூரத்தில் லைட் வெளிச்சத்துடன் கார் மறைய… ஜோ கண்களைத் துடைத்துக்கொண்டான். ஜோவைப் பார்க்கப் பார்க்க… இப்படி ஒருவனுடன் பழகியதற்காகப் பெருமையாக இருந்தது.

“எப்படிரா உன்னால இதைச் செய்யமுடியுது?” என்றேன்.

“காதல் தோல்வியோட வலி, எவ்வளவு கொடுமைன்னு எனக்குத் தெரியும் மகேந்திரா… கலைச்செல்விக்குக் கல்யாணமாயி குழந்தைல்லாம் பொறந்த பின்னாடி, ஒரு நாள் டவுன்ஹால் ரோட்டுல பாத்தேன். அவளுக்கு பிரேமவிலாஸ் அல்வான்னா உசுரு. வாங்கிக் கொடுத்தேன். ஆசையா தின்னுச்சு. தின்னுகிட்டு என்னைப் பாத்துக்கிட்டே இருந்துச்சு. மனசுல என்ன நினைச்சுச்சோ… திடீர்னு கடகடன்னு கண்ணுல தண்ணி. நான், “என்னா புள்ள’ங்கிறேன்... ஒண்ணுமே சொல்லல. அழுதுகிட்டே ஒரு ஆட்டோ புடிச்சு ஏறிப் போயிருச்சு. அடிமனசுல அவ்ளோ வலி இருக்குடா மாப்ள... பொட்டப் புள்ளைங்க மனசுவலிய வெளிய காட்டிக்காதுங்க. அந்த வலி டயானாவுக்கு வேணாம்டா… என்ன இருந்தாலும் நான் காதலிச்ச பொண்ணுல்ல?”

“இருந்தாலும் இதைச் செய்றதுக்கு ஒரு மனசு வேணும்டா. நீ டயானாவ சுத்திட்டிருந்தது இளங்கோவுக்குத் தெரியுமா?”

“ம்ஹ்ம்… சொல்லவேண்டாம்னு டயானாகிட்ட சொல்லிட்டேன்” என்ற ஜோவை சில விநாடிகள் உற்றுப் பார்த்த நான் சட்டென்று அவனை இறுக்கமாக அணைத்துக்கொண்டேன். என்னையறியாமல் என் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

பின்னர் ஜோ டயானா வீட்டில், பாதி சினிமாவில் டயானா காணாமல்போய்விட்டாள் என்று கூறிவிட்டான். அவர்கள் இளங்கோ வீட்டில் விசாரிக்க… அவனும் காணவில்லை என்பது தெரிய வர... அவர்கள் ஓடிவிட்டது புரிந்தது. பத்திரிகை அச்சடிப்பு வரை சென்றுவிட்டதால் ஜோமீது அவர்கள் வீட்டில் சந்தேகம் வரவில்லை. எங்கெங்கோ தேடிப் பார்த்து ஓய்ந்துவிட்டார்கள்.

இவையெல்லாம் நடந்து இரண்டு மாதத்தில் எனக்குச் சென்னையில் வேலை கிடைத்து வந்துவிட்டேன். பிறகு அப்பாவிற்கும் சென்னைக்கு டிரான்ஸ்ஃபராகி, சென்னையில் செட்டிலானோம். இரண்டாண்டுகள் கழித்து நான் சிங்கப்பூருக்கு வேலைக்குச் செல்லும் வரை, ஜோ யாரையும் திருமணம் செய்துகொள்ளாமல்தான் இருந்தான். பிறகு மதுரை நண்பர்களுடன் சுத்தமாகத் தொடர்பு அறுந்துபோனது.

2019. கடந்த வாரம் நான் சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்தபோது, சென்னை ஏர்போர்ட்டில் நான் ஜோவை அவனின் மனைவி, குழந்தைகளோடு தற்செயலாகப் பார்த்தேன். ஒரு திருமணத்துக்காகச் சென்னை வந்திருப்பதாகக் கூறினான். அவர்களை வீட்டுக்கு அழைத்து வந்தேன்.

அன்றிரவு லஸ் கார்னர் பிக்னிக் பிளாஸா பாரில் பிராந்தியை அருந்தியபடி ஜோவிடம், “டயானா இப்ப எங்கடா இருக்கா?” என்றேன்.

“மூணு வருஷம் கழிச்சு மதுரை வந்து, இப்ப எல்லாம் ராசியாய்ட்டாங்க… டயானாதான் எனக்குப் பொண்ணு பாத்து கல்யாணம் பண்ணி வெச்சுது.”

“டயானாவவிட உன் ஒய்ஃப் ரொம்ப அழகா இருக்காங்கடா…” என்று உண்மையாகவே சொன்னேன்.

“தெரியும். அதுக்காக டயானா மாதிரி வருமாடா? இது கல்யாணம்… அது லவ்வுடா…” என்ற ஜோவின் கண்களை உற்றுப் பார்த்தேன். அன்று டயானா வேறொருவனைக் காதலிப்பதாகச் சொன்னபோது பார்த்த அதே வலியை, இப்போதும் ஜோவின் கண்களில் என்னால் பார்க்க முடிந்தது. அந்த வலியைப் புரிந்துகொள்ள நாம் ஜோவாகப் பிறந்திருக்க வேண்டும்.




மின்னஞ்சலில் படிப்போருக்காக - இந்த இழையின் சுட்டி: https://groups.google.com/d/msg/mintamil/qN11Gl3lMQA/YorJT82j--cJ

தேமொழி

unread,
Apr 9, 2020, 2:46:45 AM4/9/20
to மின்தமிழ்

சிறுகதை: 
பாசப் போராட்டம்

- புஷ்பா ராஜ்குமார்


என்னங்க மூட்டை?

ஒண்ணுமில்ல. ரேசன் கடையில ஆயிரம் ரூபா குடுத்தாங்க அதான் கொஞ்சம் மளிகை சாமான் வாங்கிட்டு வந்தேன்

ஓடிவந்து மூட்டையைக் பிரிக்கும் மனைவியை அதட்டினார்

ஏய் அத எடுக்காத இது நமக்கு இல்ல. இது நம்ம பொண்ணு வீட்டுக்கு

ஏன் நமக்கு வாயும் வயிறும் இல்லையா. உங்க பொண்ணுக்கு மட்டும் தான் வாயும் வயிறும் இருக்குதா. ஆயிரம் ரூபா வாங்கிட்டு வந்துருக்கீங்க. மீதிய குடுங்க

இதுவே 1400 ரூபாய் ஆச்சு, 400 ரூபாய் கடன் சொல்லிட்டு வந்திருக்கேன்

அப்போ எனக்கு ஆஸ்துமா மாத்திரை வாங்கலே. அந்த உறிஞ்சிர மிசினு இன்னும் வாங்கல அதானே

வாங்கிக்கலாம். எப்படியும் காசு வரும்போது உனக்கு வாங்கி தரேன். உனக்கு வாங்கித் தராம வேற யாருக்கு வாங்கி தர போறேன்

அய்யோ வாங்கி கொடுத்தாலும், நான் ஆறு மாசமா கேட்டுட்டு இருக்கேன். மூச்சு விட முடியல. கஷ்டமா இருக்குன்னு சொல்லிட்டு இருக்கேன். அதை வாங்கி கொடுக்க முடியல. 1000 வா வாங்கி அப்படியே மகளுக்கு மளிகை சாமான் வாங்கிட்டு வந்துட்டீங்க


எப்படி போவீங்க பஸ் இல்ல. ட்ரெயின் இல்ல. ஆட்டோவும் கிடையாது.எப்படி போவீங்க.

சைக்கிள் ல போவேன்

ஏன் பாதிலேயே வெய்யில்ல சுருண்டு விழுந்து சாகுறதுக்கா

நல்ல வார்த்தையே பேச மாட்டியா நீ

இப்ப போக வேணாம் நாளைக்கு காலைல போய் குடுத்துக்கலாம்

இல்லல்ல நான் இப்பவே கிளம்புறேன்

போங்க. போலீஸ்காரன் சாமானையும் சைக்கிளையும் புடுங்கி வச்சுகிட்டு, உங்களை தோப்புக்கரணம் போட சொல்லுவானோ, குட்டிக்கரணம் போட சொல்லுவானோ. நடந்து தான் வரப் போறீங்க

நல்ல வார்த்தையே பேச மாட்டியா

அய்யய்யோ துரை போருக்கு போறாரு. நல்ல வார்த்தை சொல்லி அனுப்பனும்.

சரி கிளம்பனும் பழைய சோறு இருந்தா கொடு

அதான் மக வீட்டுக்கு போறீங்கள்ள. உங்க மக சமைச்சு வச்சிருப்பா. அங்கே போய் சாப்பிட்டு வாங்க

சரி நான் கிளம்புறேன்

சொன்னா கேக்க மாட்டீங்க. பட்டா தான் உங்களுக்கு புத்தி வரும்.போலீஸ்காரன் உங்கள அடிச்சு உதைச்சு அனுப்பும்போது தான் நான் சொன்னது ஞாபகத்துக்கு வரும்

அவர் சைக்கிளில் எல்லா மளிகை சாமான்களையும் மூட்டையாக கட்டி, பின்பக்கம் வைத்துக் கொண்டு கிளம்பினார்

ஒரு ஐந்து கிலோமீட்டர் வந்திருப்பார்.அங்கே சாலையில் தடுப்பு அமைத்து ஜிப்போடு போலீஸ்காரர்கள் நின்று கொண்டிருந்தார்கள்.
மனைவி சொன்னது போல் போலீஸ்காரர்கள் சாமானையும் சைக்கிளையும் பிடிங்கி கொள்வார்களோ. தோப்புக்கரணம் போடச் சொல்லி போட்டோ எடுத்து டிவியில் போடுவார்களோ.தெரியாமல் வந்து விட்டோமோ.
பயம் தொற்றிக் கொண்டது.

அவர் அருகில் சென்றபோது ஒரு போலீஸ்காரர் தடுத்து நிறுத்தினார்

என்னா பெருசு எங்க கிளம்பிட்டே

ஐயா அயனாவரம் வரை போறேங்கய்யா. மக வீட்டுக்கு மளிகை சாமான் வாங்கிட்டு போறேங்கய்யா

சைக்கிளை ஓரமாக நிறுத்து.  அந்த மூட்டைய தூக்கிட்டு வா

அவ்வளவுதான் 1,400 ரூபாய் மளிகை சாமான் போக போவுது

மிதிவண்டியை நிறுத்தி ஸ்டாண்ட் போட்டு, மளிகை சாமான் மூட்டையை இறக்கி கீழே வைத்தார்

யோவ் பெருசு அந்த ஜீப்புக்குள்ள இன்ஸ்பெக்டர் உக்காந்திருக்காரு அவரை போய் பாரு

அவர் போலீஸ் வண்டியை நோக்கி நடந்தார். வண்டியில் வாட்டசாட்டமாய் கூலிங் கிளாஸ் போட்ட பெரிய மீசை வைத்திருந்த அந்த இன்ஸ்பெக்டர் அமர்ந்திருந்தார்

என்ன பெரியவரே எங்க கிளம்பிட்டீங்க

ஐயா அயனாவரம் வரை போறேங்கய்யா. பொண்ணு அங்க இருக்கு.  மாப்பிள்ளை டிரைவரா இருக்காரு. வேலை இல்ல. அதான் கவர்மெண்ட் கொடுத்த ஆயிரம் ரூபாயில கொஞ்சம் மளிகை சாமான் வாங்கிட்டு போறேங்கய்யா

ஊர்ல தடை போட்டுருக்காங்க தெரியாதா பெரியவரே

தெரியுங்கய்யா. ஆனா நாலு உசுரு அங்க சோத்துக்கு இல்லாம கஷ்டப்படுமே. அதனாலதான் இத போயி கொடுத்துட்டு வந்துடலாம்னு கெளம்பினேய்யா

என்ன வயசு ஆகுது பெரியவரே உங்களுக்கு

63 வயசு ஆகுதுங்கய்யா

அருகில், நடு சாலையில் பத்துப் பதினைந்து இளைஞர்கள் தோப்புக்கரணம் போட்டுக் கொண்டிருந்தார்கள். இவருக்கு மனசு பிசைந்தது. நடுக்கம் வந்தது.

கான்ஸ்டபிள் வந்தார்.

சார் இந்த ஆள் கொண்டு வந்த மூட்டைய சீஸ் பண்ணிட்டேன் சார்

உன் வயசென்னை அவரு வயசு என்ன ஆளுன்ற

சாரி சார்

அந்த கான்ஸ்டபிள் தள்ளி போய் நின்று கொண்டார்.

பெரியவரே சாப்பிட்டீங்களா

இல்லீங்க சார்

கான்ஸ்டபிள் அந்த சாப்பாடு பொட்டலத்துல ஒண்ணு  எடுத்து குடு

ஐயா எனக்கு வேண்டாய்யா. நான் மகள் வீட்டுல போய் சாப்பிடுகிறேன்

 சாலையில் தோப்புக்கரணம் போட்டுக் கொண்டிருந்த இளைஞர்களில் ஒருவன் ஏதோ சொல்ல,

சட்டமா பேசறே என்று ஒரு கான்ஸ்டபிள் அவனை முதுகில் அடித்தார்

அங்க போய் கறியும் சோறும் தின்னுங்க.  இது சும்மா பிரிஞ்ஜி தான்.  சாப்பிட்டுக்கங்க. வெயில்ல எப்படி சைக்கிள் மிதிப்பீங்க

சாப்பிட்ட பின் தோப்புக்கரணம் போட சொல்வார்களோ

ஜீப் மைக் கர கரவென்று பேசிக்கொண்டே இருந்தது.

நாளைக்கு காலையில் சீக்கிரமா கிளம்பி போயிருக்கலாம் என்று நினைத்துக்கொண்டார்.
கான்ஸ்டபிள் எடுத்து வந்து கொடுத்த ஒரு பொட்டலத்தையும் ஒரு தண்ணீர் பாட்டிலையும் வாங்கிக்கொண்டார்.

பெரியவரே அதோ ரூம் இருக்குல்ல. அங்க உக்காந்து சாப்பிடுங்க.
இன்ஸ்பெக்டர் சொன்ன இடத்தில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தார்

பெரியவரே நல்லா சாப்பிடுங்க இன்னொரு பொட்டலம் வேணுமா

இன்ஸ்பெக்டர் கேட்க, அவர் வேண்டாம் என்று தலையாட்டினார்.

சாப்பிட்டு தண்ணீர் குடித்து கை கழுவினார். பரவாயில்லை வயிறு ரொம்பிடுச்சி. இப்ப முட்டி போடலாம். தோப்புக்கரணம் போடலாம்.

பெரியவரே சாப்பிட்டீங்களா

சாப்பிடங்கய்யா

ஜீப்ல கொண்டு வந்து உங்க மகள் வீட்டுல விடட்டுமா

ஐயா வேண்டாங்கய்யா நான் போயிடுவேங்கய்யா

சரி இந்த பனியனை போட்டுக்கோங்க. இந்த தொப்பிய போட்டுக்கோங்க. இது வாலண்டியர்ஸ்  போட்டுக்கறது. அரசாங்கம் கொடுக்கிற பணத்தை வாங்கினமா தண்ணி அடிச்சமா தலைகுப்புற விழுந்தமான்னு இல்லாம, நாலு உசுருக்கு சோறு போட சாமான் வாங்கிட்டு போறீங்களே. நீங்க தான் உண்மையான வாலண்டியர்.
 இந்த பனியனை  போட்டுக்கோங்க. பத்திரமா போயிட்டு வாங்க.

அது கனவா நனவா என்று நம்ப முடியாமல் பனியனை வாங்கி மாட்டிக்கொண்டார்.

இன்ஸ்பெக்டருக்கு இரண்டு கை குவித்து வணக்கம் வைத்தார்.
 சைக்கிளில் ஏறி, மகள் வீட்டை நோக்கி சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தார்.
*
அப்பா எப்படி வந்தீங்க. எதுக்குப்பா சைக்கிள்ல வந்தீங்க. கை கழுவுங்க. 

பேரன்கள் ஓடி வந்து கட்டிக் கொண்டார்கள்.

பேரன்களை அணைத்து உடனே தள்ளிப் போகச் சொன்னார்.

மகள், அவர் வாங்கி வந்த பொருட்களை எடுத்து உள்ளே வைத்துவிட்டு

என்னப்பா தனியா வந்துருக்கீங்க அம்மாவை கூட்டிட்டு வந்து இருக்கலாம்ல

இல்லம்மா. இன்னொரு நாளைக்கு  கூட்டிட்டு வரேன். நான் கிளம்பட்டுமா. இங்க இருக்கிறது அவ்வளவு நல்லது இல்லம்மா. நான் வீட்டுக்கு போயிடுறேன். உங்க அம்மா தனியா இருக்கும்.

அப்பா சாப்பிட்டு போங்கப்பா. சாப்பாடு ரெடியா இருக்குப்பா

நான் சாப்பிட்டேன்மா

ஏதுப்பா இந்த பனியன் நீங்க வாலண்டியரா இருக்கீங்களா

நடந்த எல்லா விஷயங்களையும் மகளிடம் சொன்னார்

பேரன்களை அழைத்து அவர்களுக்கு காசு கொடுத்து விட்டு கிளம்பினார்

மகள் ஒரு பையோடு வந்தாள்.

அப்பா  பையில கொஞ்சம் பழங்கள் இருக்கு. எடுத்துட்டு போயி அம்மாகிட்ட கொடுங்கப்பா. அம்மாவுக்கு ரோட்ஹெலர் மெஷின் வாங்கினேன். அத கொடுத்துடுங்கப்பா.  அம்மாவுக்கு ஆஸ்துமா மாத்திரை வாங்கி இருக்கேன் அதையும் மறக்காம குடுத்துடுங்கப்பா.

பையை வாங்கிக்கொண்டார்.

மாப்பிள்ளை எங்கம்மா

அப்பா அரசாங்கத்துல  காய்கறி எல்லாம் வண்டியில் போய் விக்க சொல்லியிருக்காங்க. அதான் ஒரு காய்கறி வண்டியில டிரைவரா போயிருக்காருப்பா

இந்த ஆஸ்துமா மெஷினுக்கும்,'ஆஸ்துமா மாத்திரைக்கும் ஏதும்மா காசு

போன மாசம் சம்பளத்திலேயே இது இரண்டும் வாங்கி வச்சுட்டேன் பா

அவர் சைக்கிளை எடுக்க வீட்டை விட்டு வெளியே வந்தபோது மகள் ஓடிவந்து அவர் சட்டைப்பையில்  இரண்டு ஐநாறு ரூபாய் நோட்டுகளை வைத்தார்

அப்பா எங்களுக்கும் நேத்துதான் அரசாங்கத்திலிருந்து ஆயிரம் ரூபாய் கொடுத்தாங்க. நேத்து நைட்டு உங்க மாப்பிள்ளை சொல்லிட்டாரு, உங்க அப்பா அம்மாக்கு கொடுத்துடு. நம்ம ஏதாவது வேலை செஞ்சி சம்பாரிச்சுக்கலாம். வயசானவங்க என்ன பண்ணுவாங்கன்னு சொன்னாருப்பா.

சரிம்மா. மாப்பிள்ளைய கேட்டேன்னு சொல்லு. பத்திரமா இருங்கம்மா.

அவர் உயிரை தன் மகள் வீட்டில் வைத்து விட்டு மிதிவண்டியில் ஏறி தன் வீட்டை நோக்கி மிதிவண்டியை இயக்க ஆரம்பித்தார்.



#வாட்சப்_பகிர்வு

தேமொழி

unread,
Aug 20, 2020, 6:18:04 PM8/20/20
to மின்தமிழ்


ஒருகாம்பு
  இருதலையும் பூ  

நரசய்யா

  "கல்லுருகுங் காலங் கழுகறியு மக்காலம்
   
வையக மெல்லா மலர்ந்தபூ வண்டறியும்
   
ஓங்க லறியு முயர்கடலி னுள்ளாழம் 

  பாங்கனுக்குப் பாங்கன் பயனறிவான்; மன்ற 

  அறிவா ரறிவா ரறியா ரறியார் 

  ஒருகாம் பிருதலையும் பூ"   

 

பெருந்தொகை பாட்டு எண் 1800) அகலிகை வெண்பா முன்னுரையிலிருந்து தொகுக்கப்பட்டது. *

(கழைக்கூத்தியொருத்தி கழை மேனின்று ஆடியபோது பூப்படையக் கழையினின்று இறங்குக்காற் பாடியது )


சென்னை மாநகரின் அடையாறில் வசிக்கும் எனக்குக் கழைக்கூத்தாடிகளைப் பற்றிஅதிகம் தெரியாதுதான். ஆனாலும் அன்றொருநாள் 

சர்வ சித்தி விநாயகர் கோவிலுக்குச் சென்று திரும்புகையில் அடிக்கப்பட்ட தம்பட்ட ஒலி என்னை நிறுத்தித் திரும்பிப் பார்க்கச் செய்தது! 

அது சாதாரண ஒலியில்லை, ஓலம்! பசியையும் ஏழ்மையையும் அறிவித்து, எங்களைப் பார் என்பதைப் போல இருந்ததால் நின்று கவனித்தேன். 

அதிகமாக எவரும் கவனிக்கவில்லை. இரண்டு பக்கங்களிலும் கிராஸ் வடிவில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த  மூங்கில்களின் இடையில் சுமார் 

10 அடி நீளத்திற்குக் கட்டப்பட்ட கயிறு. கீழே ஒரு துண்டு விரிக்கப்பட்டிருந்தது. தந்தையும் தாயும் தம்பட்டத்தை அடித்துக்கொண்டு பாடிக்கொண்டு 

மக்களின் கவனத்தை ஈர்க்க முயன்று கொண்டிருந்த நிலை! ஒரு பெண்; சுமார் 10 லிருந்து13 வயதிற்குள்ளென சொல்லலாம்; தயாராக நின்று 

கொண்டிருந்தாள். நான் நின்று பார்ப்பதைப் பார்த்த தந்தை இன்னும் வேகமாக தம்பட்டத்தை அடித்துக்கொண்டிருந்தபோது இன்னும் சிலர் 

சேர்ந்தனர். அப்பெண் எப்படியோ அந்த மூங்கில் வழியாக கயிற்றின் மீது ஏறி, கையில் ஒரு நீண்ட குச்சியையும் வைத்துக்கொண்டு கயிற்றின் மீது 

நடக்க ஆரம்பித்தாள். இன்னும் இரண்டு மூன்று மனிதர்கள் சேர்ந்துவிடவே உற்சாகத்துடன் தம்பட்டம் ஒலிக்க அவளும் இரண்டு முறை மேலும் 

கீழுமாக நடந்து விட்டாள். சிலர் சில்லரையை அந்தத் துண்டின் மீது எறிந்து விட்டு அகன்றனர். திடீரென அப்பெண் கீழே இறங்கிவந்து ஏதோ தன் 

தாயிடம் முணுமுணுக்கவும் தம்பட்ட ஒலி நின்றது. மனைவியைப் பார்த்த அந்த மனிதன் அவள் செய்த ஜாடையைப் புரிந்து கொண்டு எக்காராணத்தாலோ 

தலையில் அடித்துக் கொண்டான்.

 

எனது நினைவு பின்னோக்கிப் பாய்ந்தது. இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு முன்னால், எனது சகோதரர்களுடனும் அவர்கள் குடும்பத்தினருடனும் 

நாங்கள் தி. நகரின் ஒரு சுமாரான பெரிய ஹோட்டலுக்குச் சென்றிருந்தோம். நாங்கள் சென்றது அங்கு நடக்கவிருந்த ஒரு திருமண வரவேற்புக்காக; அந்த 

ஹோட்டலின் நுழைவாசலில் சில அறிவிப்புகள் இருந்தன. அதைப் பார்த்து எங்கு செல்ல வேண்டுமெனத் தெரிந்துகொள்ள வேண்டும். திருமண வரவேற்பு 

எங்கு எனப் பார்த்துக் கொண்டிருக்கையில், அங்கு வைக்கப்பட்டிருந்த மற்றொரு அறிவிப்பு என் கவனத்தை ஈர்த்தது. . . .இன்னாரின் மகளான செல்வி . . .  

எனப்பட்டவள் புஷ்பவதி ஆகிவிட்டதை அந்த அறிவிப்பு பிரகடனப்படுத்திக் கொண்டிருந்தது. அதற்காக அப்பெண்ணின் பெற்றோர்கள் ஒரு வரவேற்பு ஏற்பாடு 

செய்திருக்கின்றனர்! அதற்காக ஒரு விழா எடுக்கப்பட்டுள்ளது. அங்கு அந்த ஏற்பாட்டிற்காக வந்திருந்தவர்களெல்லோருமே சுமாராக பணம் 

படைத்தவர்களாகத்தான் இருக்க வேண்டும். கைகளில் பல தினுசு தினுசான பரிசுப் பொருள்களும் இருந்தன! என்னதான் செய்கிறார்கள் என்று பார்க்க நானும் 

அந்த ஹாலின் அருகில்,துணைக்கு எனது இளைய சகோதரனின் புத்திரியான ரம்யாவையும் அழைத்துக் கொண்டு சென்றேன். ஒரு கல்யாண வரவேற்பு 

போலவே இருந்தது. வந்தவர்கள் எல்லோரும் அப்பெண்ணின் பெற்றோரை வாழ்த்தினர். அப்பெண் கையில் பரிசுப் பொருள்களைத் தந்து மகிழ்ந்தனர். 

அப்பெண்ணின் உருவத்தையும் மீறி அவளுக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தலை நிறையப் பூ! திரும்பவும் வந்து அந்த பிரகடனத்தைப் பார்த்தேன்.

"புஷ்பவதி ஆன... "  அப்போது என்னையும் அறியாமல் சிரித்து விட்டேன். ரம்யா ஏன் சிரிக்கிறீர்கள் எனக் கேட்டாள். "ரம்யா நீயே நினைத்துப் பாரேன்.
சப்போசிங் மெனோபாஸுக்கு இந்த மாதிரி ஒரு விழா எடுத்தால் எப்படியிருக்குமென்று?'

"சீ . . .”

தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மையைப் போல அன்றைய நினைவுக்குத் திரும்பினேன். திடீரெனத் தம்பட்ட ஓசை நின்று விட்டதையடுத்து. தலையில் 

கை வைத்துக்கொண்டிருந்த அந்த தந்தையின் அருகில் சென்றேன்.

 "என்னாச்சு?"

"என்னத்தை சொல்ல சார். இவளை நம்பித்தான் நாங்க பொழப்பு நடத்துறோம். இப்போ பாருங்கோ திடீர்னு பொண்ணு பெரியவளாயிட்டதா இவ சொல்றா. ."

தனது மனைவியைச் சுட்டிக்காட்டிச் சொன்ன அந்த மனிதனின் நிலைமையைக் கண்டால் பரிதாபமாயிருந்தது. தாய்க்கு மட்டும்தான் தெரியும் அப்பெண் 

பூப்பெய்துவிட்டது; அதைத்தான் அறிவார் அறிவார் என்றும் அறியார் அறியார் என்றும் சொன்னார்களோ! தாயோ, ஒரே நேரத்தில், சந்தோஷத்தையும் 

துக்கத்தையும் தனது முகத்தில் காட்டிக்கொண்டிருந்தது எனக்குத் தெரிந்தது. 

 

துண்டில் கிடந்த சில்லறையில் சிலவற்றைப் பொறுக்கியெடுத்துக் கொண்டு கோவிலுக்குச் சென்று அங்கு பூ விற்றுக்கொண்டிருந்த மாதிடம் 

இவ்விஷயத்தைச் சொல்லவும், அம்மாதோ, சற்றும் தயங்காது, பணத்தை மறுத்து விட்டு இரண்டு முழம் பூவை எடுத்து அந்த தாயிடம் அளித்து

வாழ்த்தும் சொன்னாள்! அதைக் கொண்டு வந்து அப்பெண்ணிற்கு அணிவித்துவிட்டுக் கட்டிப்பிடித்துக் கொண்ட தாய் யுகாந்திரமாக தாய்மார்கள்

அனுபவிக்கும் சந்தோஷத்தை வெளிப்படுத்த முடியாமல் நின்று கொண்டிருந்தாள். வெளியிலிருந்தே உள்ளே வீற்றிருக்கும விநாயகரை நோக்கித் 

தொழுது நிற்கையில் அப்போதே வெளியில் வந்து கொண்டிருந்த அர்ச்சகர் நாராயண சாஸ்திரியைப் பார்த்து அம்மாது சொன்னாள்: "சாமி, எம்பொண்ணு 

பெரியவளாயிட்டா; கும்பிடறேன்" என்றாள். "அப்பிடியா! இன்னிக்கு திதி நட்சத்திரம் எல்லாமே பேஷா இருக்கு ஒம்பொண்ணு பிரகாசிப்பா; இந்தா" 

என்று அவர் குங்குமப் பிரசாதமும் பூவும் கொடுத்தார். அப்பெண்ணின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை!

 

தந்தையின் முகம் மாறுபட்டிருந்தது. அவர் சந்தோஷத்தில் உள்ளாரா, துக்கத்தில் ஆழ்ந்து கிடக்கிறாரா என்று விவரிக்க இயலவில்லை! அவர்களது

சம்பாத்தியமே இப்பெண்ணின் மூலம்தான்! மூவர் சாப்பாடும் அவள் கையில்தான்! ஆனாலும் அவர்களும் மனிதர்கள்தானே! தமது பெண் பெரியவளானது

அவர்களுக்கும் சந்தோஷத்தைத்தானே அளிக்கவேண்டும. ஏனிந்த ஒரே நிகழ்ச்சி சிலருக்குச் சந்தோஷத்தையும் மற்றும் சிலருக்குத் துக்கத்தையும் 

அளிக்க வேண்டும்? 

 

கயிற்றினின்றும் இறங்கிவிட்ட அப்பெண் எவ்வளவு மாறுபட்ட அக உணர்வுப் போராட்டங்களை உண்டாக்கிக் கொண்டிருந்தாள்! திடீரென சைரன் ஒலிக்கும் 

கார் ஒன்று எங்களைத் தாண்டிச் சென்றது. அப்போது இந்த அசிங்கமான ஓசை இன்னும் அமலில் இருந்தது. அதுவும் ஒரு ஓசைதான்; ஏன் ஒரு ஓலம்தான்! 

நான் கவனிக்கப்பட வேண்டியவன் என்று அறிவித்துக்கொண்டு செல்கிறார் அக்காரினுள் உள்ளவர். தான் செல்வது மற்றவர்களுக்குத் தெரியவில்லை 

என்றால், அது தன்னுடைய கர்வபங்கம் என்று நினைத்துத்தான் அவ்வாறு ஓலத்தைச் செய்துகொண்டு அவரும் பாவம் செல்கிறார்!


அதிலிருப்பவரும் மனிதன்தான். அரசியல்வாதியோ அல்லது உயர்ந்த பதவியிலிருக்கும் அதிகாரியாகவோ இருக்க வேண்டும். வெட்கம் கெட்டவர்கள்! 

எனது வாய் முணுமுணுத்தது இவர்கள் செல்வது உலகுக்கு எல்லாம் தெரிய வேண்டுமா? "சைரனுக்குப் பதிலாக, நீயும் ஒரு தம்பட்டத்தை ஏன் கையில்

எடுத்துக் கொள்ளக்கூடாது. அதை அடிக்கக்கூட உனக்கு ஆட்கள் தயாராகக் கிடைப்பார்களே!" எனக் கேட்கலாம் போலிருந்தது!  இங்கு தம்பட்டம் அடித்து 

தனது இருப்பிடத்தை உணர்த்திக் கொண்டிருக்கும் இந்த கழைக்கூத்தாடிக்கும் சைரனை அடித்துக்காட்டிக்கொண்டு மற்றவர்கள் உபயத்தில் பெரும் வாழ்க்கை 

நடத்திக்கொண்டிருக்கும் இந்த "பெரிய" மனிதர்களுக்கும் என்ன வித்தியாசம்?


இந்த கழைக்கூத்தாடியே சிறந்தவர்! ஆனாலும் நடைமுறையில் தினசரி சாப்பாட்டிற்கே ஆட வேண்டிய நிலை! பள்ளி செல்ல வேண்டிய வயதில்

கழைக்கூத்து! சைரன் கார்காரர் தனது சொந்த விளம்பரத்திற்காக "சிறாக்களைப் பள்ளிக்கு அனுப்புங்கள்; வேலை செய்ய அனுப்பாதீர்கள்" எனச் சொல்லலாம்!

வேறுபாடுகள் இவ்வளவா?


ஹோட்டலில் வாழ்த்துப் பெற்றவளும் ஒருத்திதான். இங்கு நிற்கும் இக்காம்பு, தனது இரு மருங்கிலும் பூ ததும்ப நிற்கிறாளே இவளும் ஒரு மனுஷிதான்! 

ஆனால் மனிதர்களுள் எவ்வளவு வேறுபாடு! மூங்கில்களை சேர்த்துக் கொண்டு கயிற்றையும் சுற்றிக் கொண்டு கிளம்பத் தயாராகிவிட்டார் அந்தக் 

கழைக்கூத்தாடி!  சுற்றிக் கொண்டிருந்த துண்டின் அருகில் சென்று என் பையிலிருந்து எடுத்த ரூபாய் நோட்டை அத்துண்டில் போட்டேன். அக்கூத்தாடியின் 

கண்கள் அகல விரிந்தன. "ஐயா! நீங்கள் பிள்ளை குட்டிகளோடேநல்லா இருக்கணுமய்யா!" என்றபோது அந்த வார்த்தைகளின் உண்மையும், ஹோட்டலில் 

பார்த்த சமுதாய நோக்கிற்காகச் சொல்லப்பட்ட வார்த்தைகளின் ஆழமின்மையும், அரசியல்வாதியோ ஒரு அதிகாரியோ சென்ற அக்காரின் அபத்தமான 

சைரனின் ஒலியும் இரைந்தே சொல்லியவை, " மன்ற அறிவா ரறிவா ரறியா ரறியார்" என்ற வார்த்தைகள்தாம்! அவ்வார்த்தைகள் அந்த இடத்திலெல்லாம் 

வியாபித்து, எல்லாப் பக்கங்களிலிருந்தும் என்னைத் தாக்கின. இருதலையும் பூ கொண்ட அப்பெண்ணை இப்போது பெற்றோர்கள் அரவணைத்து 

ஆனந்தத்துடன் முத்தமிட்டனர்!

 

அவர்கள் அறிவர். வையக மெல்லா மலர்ந்த பூ வண்டறியும்; ஓங்கல் அறியும் கடலாழம்! 


தேமொழி

unread,
Sep 29, 2020, 6:45:55 PM9/29/20
to மின்தமிழ்
வேட்டி
 - கி. ராஜநாராயணன்

’காலம் இப்பொ ரொம்ப நாகரிகமாகிவிட்டது. முந்திய தலைமுறை ஆட்கள் மாதிரி இருந்தால் வேட்டியே வேண்டியதில்லை! ஒரு அரணாக்கயிறும் ஒரு பழையதுணி கோவணம் மட்டுமே போதும்.  வெயிலுக்கு ஒரு கந்தல் தண்டில்  வெயிலின் சுள்ளாப்புத் தெரியாமல் இருக்க அந்தத் துணியில் ஒரு முழம் சுங்கு விட்டுக் கொண்டால் போதும். தூங்கா நாயக்கருடைய அய்யா அய்யலுசாமி நாயக்கர் மட்டுமென்ன, அந்த கிராமத்துப் பாட்டாளிகளே அப்படித்தான் அரணாக்கயிற்றில் கோவணத்தைச் சொருகிக்கொண்டு சந்தோஷமாய் வாழ்ந்தார்கள், பழநி அப்பனைப் போல எட்டு வயதுவரை ஆண் குழந்தைகள் பிறந்தமேனியாகவே அலைவார்கள். காற்றும் வெயிலுமே ஆடைகள். அரையில் அரணாக் கயிறு மட்டுமே இருக்கணும்; அது இல்லையென்றால்தான் பார்த்தவர்கள் சிரிப்பார்கள்!’
தூங்கா நாயக்கரின் மனைவி வேப்பமுத்து பொறுக்கி சேர்த்து அதை அளந்து எப்படியாவது தனக்கு ஒரு சேலை எடுத்துக் கொண்டு விடுவாள். ஊரைச் சுற்றிலும் வேப்ப மரங்கள். கோடைக்காலத்தில் பறவைகள் வேப்பமரத்தில் பழங்களைத் தின்று கொட்டைகள் போடும். ஜனங்கள் ஓடி ஓடிப் பொறுக்குவார்கள். கூலிப் பருத்திக்கும் சென்று அதைச் சேர்த்து வைத்து, தங்கள் ஆடைகளின் தேவையைப் பூர்த்தி செய்துகொண்டு விடுவார்கள், இதனால் குழந்தைகளுக்கு நாக்குக்கு ருசியாக கடைகளில் வாங்கித் திங்கக்கூட பருத்தி கொடுத்தனுப்ப முடியாது. அதுக்குள் புளியங்கொட்டைகளைப் பொறுக்கிக்கொண்டு வந்து வரையோட்டில் போட்டு வறுத்து, அதை உரலில் போட்டு இடித்து தோலை நீக்கி விட்டு கொட்டையின் பருப்பை மட்டிலும் உப்புப் போட்ட தண்ணீரில் ஊறவைத்துத் தின்பார்கள். இதுதான் இந்தப் பாவி மக்களுக்குக் கிடைக்கும் பலகாரம்; பட்சணம்.
சற்று தூரத்தில் பல மனிதர்களின் சளசளப்புக் குரல்கள் கேட்டு தூங்கா நாயக்கர் திரும்பி பார்த்தார். அது கிராமத்தின் முக்கியஸ்தர்கள் பெரியவர்களின்  கூட்டம். அவர்கள் பாரதநாட்டின் சுதந்திர தின வெள்ளிவிழாவைச் சிறப்பாகக் கொண்டாட ஊருக்குள் பணவசூல் செய்கிறார்கள். நமக்கு சுதந்திரம் கிடைத்து கால் நூற்றாண்டு ஆகிவிட்டதே!.
 
அந்தக்கூட்டத்தில் முதலாளி நல்லா நாயக்கர், மைனர் நாயக்கர், ராமராஜூ, முதலாளி வெங்கிடசுப்பையா, சுப்பு செட்டியார் முதலிய அனைவரும் இருந்தார்கள். ரொம்ப உத்ஸாகமாக நடக்கிறது வசூல்.
25 வருசங்களுக்கு முன்னால்.... இந்தக் காசி கன்னியாகுமரி பெருவழிச்சாலை, மங்கம்மா சாலையாக இருந்து, அது பிறகு மதுரை ரோடு ஆகியது. இப்பொழுது ஒரு நிமிஷத்துக்கு ஒன்று அல்லது இரண்டு நிமிஷங்களுக்கு மூன்று என்ற விகிதத்தில் எந்திர வாகனங்கள், சாலை மேலுள்ள இந்த கிராமத்தைக் கடந்து செல்கிறது. 25 வருசங்களுக்கு முன்போ, எப்பவாவது ஆபூர்வமாக ஒரு பிளஷர்க் காரைப் பார்க்கலாம். எறும்புச் சாரையைப் போல் விட்டு விட்டு கூண்டு வண்டிகள் செங்கோட்டை இலஞ்சி தென்காசி முதலிய ஊர்களிலிருந்து மாம்பழங்கள், சம்பை(கருவாடு) முதலிய பாரங்களை ஏற்றிக் கொண்டு கோவில்பட்டிக்கு மெதுவாகப் பாடிக்கொண்டே நகர்ந்து செல்லும்.  இப்போது கூண்டு வண்டியே கிடையாது. அவ்வளவும் லாரிகள். எங்கே பார்த்தாலும் லாரிகள். எத்தனை வகை லாரிகள்! எல்லாமே இந்தியாவில் செய்தவை.
 
புழுதி பறக்கும் கப்பிக்கல் ரோடு இப்பொழுது தார்ரோடு ஆகி நாலு லாரிகள் விலகும்படியான அகலமாகி விட்டது. இதில் போகும் வாகனங்களையே பார்த்துக் கொண்டிருக்கலாம். கார்கள், பஸ்கள், ஜீப்கள், வேன்கள், டாக்ஸிகள், மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள், எத்தனை எத்தனை!.
 கொழுத்த தடியான அழகான பணக்காரப் பெண்ணைப் போல் எப்பவாவது ஒரு வெளிநாட்டுக் கார் போகும்! நம்முடைய் இந்திய ஜனாதிபதிகூட ஆறு கதவுகள் கொண்ட பெரிய வெளிநாட்டுக் கார் வாங்கி இருக்காராமே.
பணம் வசூலிக்கும் கூட்டம் இப்பொழுது இவரை நோக்கிதான் வந்து கொண்டிருக்கிறது. ஏதோ இவர் நிறைய அள்ளிக் கொடுத்து விடுவார் என்று நினைத்து அவர்கள் வரவில்லை.  சுதந்திரத்துக்காக இவர் ஜெயிலுக்குப் போகாவிட்டாலும் உதைபட்டவர் அல்லவா. எல்லோரும் இவரை மலர்ந்த முகத்துடன் பார்த்துக்கொண்டே வருகிறார்கள்.
 தூங்கா நாயக்கருக்கு இன்னது செய்வதென்று தெரியவில்லை. பரபரப்போடு எழுந்துநின்று இடதுகையால் வேட்டியின் பிய்ந்த கிழிசலை மறைத்துக்கொண்டு அவர்களை வரவேற்கத் தயாரானார். 


(தாமரை,ஏப்ரல்,1972)
#WhatsappSharing


குறிப்பு:  சிறுகதைகளின் தொகுப்பு இழை - https://groups.google.com/g/mintamil/c/qN11Gl3lMQA/m/YorJT82j--cJ

K R A Narasiah

unread,
Sep 29, 2020, 8:18:35 PM9/29/20
to minT...@googlegroups.com
Thank you
N

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/50d38184-afc7-4eed-b21a-5a94a62f7cacn%40googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages