வஞ்சி

1,485 views
Skip to first unread message

kanmani tamil

unread,
Oct 23, 2017, 6:34:48 AM10/23/17
to mintamil
சேரநாட்டில் ஒரு முறையான கூட்டாட்சி சங்க காலத்திலேயே
அமைந்திருந்தது.மேனாட்டு நிலவியலாரும் கரூரா சேரபோத்ராஸின் தலைநகர்
என்கின்றனர் ."சேரபோத்ராஸ் "என்ற சொல்லுக்கு சேர புத்திரர்கள் என்ற
பன்மைப் பொருளையே கொள்ள முடியும் (.periplus of the erythriyan sea)
தி.வை.சதாசிவ பண்டாரத்தார்
"வஞ்சிநகர் நாலும் வளமையா ஆண்டருளும்
கஞ்ச மலர்க்கை உடையான் காண் ",
"நாலுவஞ்சி சேரப் படைத்த சேரமான் பெருமாள் "என்ற செப்பேட்டுப் பகுதிகளை
எடுத்துக்காட்டி வஞ்சி என்ற பெயர் 4ஊர்கட்கு உரியதென விளக்குகிறார்
(இலக்கியமும் கல்வெட்டுக்களும் )
ஒன்பது சேரர் தலைநகரங்கள் வஞ்சி என்ற பெயரைத் தாங்கியிருந்தன
1-.மேலைக் கடற்கரையில் அகலப்புழை ஆற்றின் சங்கமத்துறையில் இருந்த வஞ்சி
2-கொங்குக் கரூர் வஞ்சி
3-கொங்குநாட்டில் காவிரிக்கு வடகரையில் ஸ்ரீராமசமுத்திரம் என்று
அழைக்கப்படும் அயிலூர்
4-மேலைக் கடற்கரையில் 8ம் நூற்றாண்டில் தோன்றிய திருவஞ்சைக்களம்
5-திருவனந்தபுரத்தின் ஒரு பகுதியில் மன்னன் அரண்மனை இருந்த இடம்
6-தாராபுரம் என்று மருவிய ராஜராஜபுரம்
7-கிரங்கனூருக்கு 5மைல் வடக்கிலும் திருக்குணவாயிலுக்கு 2மைல்
வடகிழக்கிலும் உள்ள கரூர்ப்படஞ்ஞா
8-கடல்கோளால் 8ம் நூற்றாண்டில் அழிந்த கொல்லம் நகர்
9-இன்றைய கொல்லம்
வஞ்சிப்பெயர் பெற்ற நகரங்கள் சில கரூர்/கருவூர் என்ற மாற்றுப்பெயர் பெற்றன .
திவாகரமும் பிங்கலந்தையும் வஞ்சி என்ற சொல்லுக்கு கருவூர் என்று பொருள் கூறுகின்றன.
பத்தாம் நூற்றாண்டில் ஆண்ட இராஜசிம்மனது சின்னமனூர்ப் பெரிய
தாமிரப்பட்டயம் 'கருபதி பல 'என்று சேரர் தலைநகரங்களைக் குறிக்கிறது
டாலமி அலிமுகம்/பொய்முகம் என்று அழைக்கப்படும் pseudoisthmusக்குக்
கிழக்கில் கொரவூரா என்ற ஊரைச் சுட்டுகிறார்
pseudoisthmusக்கும் தெற்கில் உள்ள பரிஸ் துறைக்கும் .இடைப்பட்ட
உள்நாட்டு ஊர்களில் கரூரா என்ற ஒரு சேரர் தலைநகரையும் குறிப்பிடுகிறார் .

N D Logasundaram

unread,
Oct 23, 2017, 2:48:41 PM10/23/17
to mintamil
அன்புநிறை கண்மணி அவர்கட்கு 

ஈங்கு வஞ்சி எனும் சொல் சங்கநூல்களில் இடம்
பெற்றுள்ள எல்லா  வரிகளையும் காட்டியுள்ளேன் 

இதனை வஞ்சி என்பது பயிரினமும் உள்ளது அவைகளை நீக்கிக் காணஎஞ்சுவது வஞ்சி எனும் இடப்பெயர்
 வாடா வஞ்சி எனும் சொல்லில் வஞ்சி எனும் இடப்பெயரைத்தான் குறிக்கின்றது ஐயமில்லை 

அகநானூறு 36 மிகத்தெளிவாக ஆ ன்பொருநை ஆற்று மணல் பற்றிப்பேசுகின்றது 
இது சோழமன்னன் சேரநாட்டு கருவூரை முற்றுகை யிட்டுருந்தபோது பாடப்பெற்றது 

புறநானூறு 11 ஆம் பாடல்தான் மிகத்  தெளிவாக பொருநை நீர் பாயும் வஞ்சி எனவே குறிக்கின்ற  
மையால் சங்ககாலத்து வஞ்சி வேவேறெங்கும் உள்ளதும் ஆகாது 

கல்வெட்டுல் வழி கா ட்டப்படுவானவற்றைப் பு றம் தள்ளுக 
அவை மிகவும் ம்பிற்காலத்தவையே 

ஆன்பொ ருநை எனும் ஆறு தமிகத்தில் இல்லை 
காவிரி எந்நாளும் பொருநை என விளி க்கப்பட்டதாக்க சான்றுகள் இல்லவே இல்லை 
முன் துறை எனும் சொல் கடலு க்கு அருகில் உள்ள துறைதனைக்குறிக்குமீ அன்றி  வெறும் ஆற்றுத்துறை அல்ல 

ஆக கடலில் ஓர் ஆறு கலக்கும் இடமாகிய சேரமான் பெருமான் தொடர்புடைய கிரங்கனுர் என ஆங்கிலேயர்களால் திருத்தி வழங்கிய கொடுங்கோளூர் திருவஞ்சைக்களம் அருகு  பெரியாறு கலக்குமிடமாகும்

அதா ன்று சிலம்பு மணிமேகலை வரிகளையும் காட்டியுள்ளேன் இதனில் எங்கும் காவிரிக்கரை அமைந்த கரூர் தனக்கு தொடர்பேது உள்ளதாக காண வே இல்லை 
----------------------------

பகன்றை பலாசம் பல்பூம் பிண்டி
வஞ்சி பித்திகம் சிந் துவாரம்
தும்பை துழாஅய் சுடர்ப்பூந் தோன்றி 90
நந்தி நறவ நறும்புன் னாகம்
பாரம் பீரம் பைங்குருக் கத்தி                                  குறிஞ்சிப்பாட்டு             

குடபுலம் காவலர் மருமான் ஒன்னார்
வடபுல இமயத்து வாங்குவில் பொறித்த
எழு உறழ் திணிதோள் இயல் தேர்க் குட்டுவண்
வருபுனல் வாயில் வஞ்சியும் வறிதே அதாஅன்று 50   சிறுபாணாற்றுப்படை
\
36
நீயே அறிந்து செய்க
பாடியவர்: ஆலத்தூர் கிழார்
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்
திணை:வஞ்சி துறை: துணை வஞ்சி
குறிப்பு: சோழன் கருவூரை முற்றியிருந்தபோது பாடியது

அடுநை யாயினும் விடுநை யாயினும்
நீ அளந் தறிதி நின் புரைமை வார்தோல்
செயறியரிச் சிலம்பின் குறுந்தொடி மகளிர்
பொலஞ்செய் கழங்கின் தெற்றி யாடும்
தண்ணான் பொருநை வெண்மணல் சிதையக்
கருங்கைக் கொல்லன் அரஞ்செய் அவ்வாய்
நெடுங்கை நவியம் பாய்தலின் நிலையழிந்து
வீகமழ் நெடுஞ்சினை புலம்பக் காவுதொறும்
கடிமரம் தடியும் ஓசை தன்ஊர்
நெடுமதில் வரைப்பின் கடிமனை இயம்ப
ஆங்குஇனி திருந்த வேந்தனொடு ஈங்குநின்
சிலைத்தார் முரசும் கறங்க
மலைத்தனை எண்பது நாணுத்தகவு உடைத்தே           3 அகநானுறு

கடும்பகட்டு யானை நெடுந்தேர்க் கோதை20
திருமா வியனகர்க் கருவூர் முன்துறைத்
தெண்நீர் உயர்கரைக் குவைஇய
தன்ஆன் பொருநை மணலினும் பலவே                              93 அகநானுறு

நாண்கொள் நுண்கோலின் மீன்கொள் பாண்மகள்
தாளபுனல் அடைகரைப் படுத்த வராஅல்
நாரரி நறவுண்டு இருந்த தந்தைக்கு
வஞ்சி விறகின் சுட்டு வாய் உறுக்கும்
தண்துறை ஊரன் பெண்டிர் எம்மைப் 5                    அகநானுறு 216


நீடுநிலை யாஅத்துக் கோடுகொள் அருஞ்சுரம்
கொண்டனன் கழிந்த வன்கண் காளைக்கு
அவள் துணிவு அறிந்தனென் ஆயின் அன்னோ 10
ஒளிறுவேல் கோதை ஓம்பிக் காக்கும்
வஞ்சி அன்னஎன் வளநகர் விளங்க      அகநானுறு  264

ஆரியர் அலறத் தாக்கிப் பேர்இசைத்
தொன்றுமுதிர் வடவரை வணங்குவில் பொறித்து
வெஞ்சின வேந்தரைப் பிணித்தோன்
வஞ்சி யன்னவென் னலம்தந்து சென்மே  அகநானுறு 397


குலவுச் சினைப் பூக் கொய்து
தண் பொருநைப் புனல் பாயும் 5
விண் பொருபுகழ் விறல்வஞ்சிப்
பாடல் சான்ற விறல்வேந் தனும்மே                          புறநானூறு 11


யாபல கொல்லோ பெரும வார் உற்று
விசிபிணிக் கொண்ட மண்கனை முழவின்
பாடினி பாடும் வஞ்சிக்கு
நாடல் சான்ற மைந்தினோய் நினக்கே                     புறநானூறு 16

கடும்பின் அடுகலம் நிறையாக நெடுங் கொடிப் 1
பூவா வஞ்சியும் தருகுவன் ஒன்றோ                           புறநானூறு 32

ஏழெயில் கதவம் எறிந்து கைக்கொண்டு நின்
பேழ்வாய் உழுவை பொறிக்கும் ஆற்றலை
பாடுநர் வஞ்சி பாடப் படையோர்                10           
தாதுஎரு மறுகின் பாசறை பொலியப்                        புறநானூறு 33


இமையம் சூட்டியஏம விற்பொறி     15
மாண்வினை நெடுந்தேர் வானவன் தொலைய
வாடா வஞ்சி வாட்டும்நின்
பீடுகெழு நோன்தாள் பாடுங் காலே                          புறநானூறு 39

வஞ்சி முற்றம் வயக்கள னாக
அஞ்சா மறவர் ஆட்போர்பு அழித்துக்                      புறநானூறு 373

பனிக்கயத் தன்ன நீள்நகர் நின்று என்
அரிக்கூடு மாக்கிணை இரிய ஒற்றி
எஞ்சா மரபின் வஞ்சி பாட
எமக்கென வகுத்த அல்ல மிகப்பல 10                     புறநானூறு 378

மென் பாலான் உடன் அணை இ   1
வஞ்சிக் கோட்டு உறங்கும் நாரை
அறைக் கரும்பின் பூ அருந்தும்
வன் பாலான் கருங்கால் வரகின்                              புறநானூறு 384

விடுவர் மாதோ நெடிதோ நில்லாப்
புல்லிளை வஞ்சிப் புறமதில் அலைக்கும்                    புறநானூறு 387
 பரிபாடல் திரட்டு
கல்லென் பொருநை மணலினும் ஆங்கண்
பல்லூர் சுற்றிய கழனி
எல்லாம் விளையும் நெல்லினும் பலவே                      புறநானூறு 387

ஒருகண் மாக்கிணை தெளிர்ப்ப ஒற்றிப்
பாடுஇமிழ் முரசின் இயல்தேர்த் தந்தை
வாடா வஞ்சி பாடினேன் ஆக                                 புறநானூறு 394  

ஏம இன் துயில் எழுதல் அல்லதை
வாழிய வஞ்சியும் கோழியும் போலக்
கோழியின் எழாது எம் பேர் ஊர் துயிலே                   பரிபாடல் திரட்டு 8

துணையோர் செல்வமும் யாமும் வருந்துதும்
வஞ்சி ஓங்கிய யாணர் ஊர
தஞ்சம் அருளாய் நீயேநின்     
நெஞ்சம் பெற்ற இவளுமார் அழுமே                          10-10 /  50

ஆற்றல் உடையன் அரும்பொறி நல்லூரன்
மேற்றுச் சிறுதாய காய்வஞ்சி - போற்றுருவிக்
கட்டக முத்திற் புதல்வனை மார்பின்மேல்
பட்டஞ் சிதைப்ப வரும்                                        ஐந்திணை எழுபது 44

மைந்துகால் யாத்து மயங்கிட ஞாட்பினுட்
புய்ந்துகால் போகிப் புலான்முகந்த வெண்குடை
பஞ்சிபெய் தாலமே போன்ற புனனாடன்
வஞ்சிக்கோ வட்ட களத்து                                       களவழி நாற்பது 38

கற்றறிந்த நாவினார் சொல்லார்தம் சோர்வஞ்சி
மற்றைய ராவார் பகர்வர் - பனையின்மேல்
வற்றிய ஓலை கலகலக்கும் எஞ்ஞான்றும்
பச்சோலைக் கில்லை யொல                                   255   பழமொழி400




யானை வீரரும் இவுளித் தலைவரும்
வாய்வாள் மறவரும் வாள்வல னேத்தத்
தானவர் தம்மேற் றம்பதி நீங்கும்
வானவன் போல வஞ்சி நீங்கித்
தண்டத் தலைவருந் தலைத்தார்ச் சேனையும் 80  // 26 கால்கோட் காதை
வெண்டலைப் புணரியின் விளிம்புசூழ் போத

மிகப்பெருந் தானையோடு இருஞ்செரு வோட்டி
அகப்பா எறிந்த அருந்திற லாயினும்
உருகெழு மரபின் அயிரை மண்ணி 145
இருகடல் நீரும் ஆடினோ னாயினும்
சதுக்கப் பூதரை வஞ்சியுள் தந்து
மதுக்கொள் வேள்வி வேட்டோ னாயினும்           // 28 நடுகல் காதை

ஆரிய அரசரை அருஞ்சிறை நீக்கிப் 195
பேரிசை வஞ்சி மூதூர்ப் புறத்துத்
தாழ்நீர் வேலித் தண்மலர்ப் பூம்பொழில்
வேளா விக்கோ மாளிகை காட்டி                     // 28 நடுகல் காதை

குமரியொடு வடவிமயத் தொருமொழிவைத் துலகாண்ட
சேரலாதற்குத் திகழொளி ஞாயிற்றுச் சோழன்மகளீன்ற
மைந்தன் கொங்கர் செங்களம் வேட்டுக் கங்கைப் பேர்
யாற்றுக் கரைபோகிய செங்குட்டுவன் சினஞ் செருக்கி
வஞ்சியுள் வந்திருந்த காலை வட ஆரிய மன்னர் ஆங்
கோர் மடவரலை மாலைசூட்டி உடனுறைந்த இருக்கை
தன்னில் ஒன்றுமொழி நகையினராய்த் தென்றமிழ்     // 29 வாழ்த்துக் காதை

தாங்கண் உருள்கின்ற மணிவட்டைக் குணில்கொண்டு
துரந்ததுபோல் இமயமால்வரைக் கற்கடவுளாமென்ற
வார்த்தை இடந்துரப்ப ஆரியநாட்டரசோட்டி அவர்
முடித்தலை அணங்காகிய பேரிமயக் கல்சுமத்திப்
பெயர்ந்து போந்து நயந்த கொள்கையிற் கங்கைப்பேர்
யாற்றிருந்து நங்கைதன்னை நீர்ப்படுத்தி வெஞ்சினந்தரு
வெம்மை நீங்கி வஞ்சிமா நகர்புகுந்து நிலவரசர் நீண்
முடியாற் பலர்தொழு படிமங் காட்டித் தடமுலைப் பூச
லாட்டியைக் கடவுண் மங்கலஞ்செய்தபின்னாள் கண்ணகி         29 வாழ்த்துக் காதை
தன் கோட்டத்து மண்ணரசர் திறைகேட்புழி அலம்வந்த  (உரைப் பாட்டு மடை)

மலையரையன் பெற்ற மடப்பாவை தன்னை
நிலவரசர் நீண்முடிமேல் ஏற்றினான் வாழியரோ
வாழியரோ வாழி வருபுனல்நீர்த் தண்பொருநை
சூழ்தரும் வஞ்சியார் கோமான்றன் தொல்குலமே 14                29 வாழ்த்துக் காதை  (வாழ்த்து)


மனிலை யுலகத் தவருடன் போகும்
தாவா நல்லறஞ் செய்தில ரதனால் 125
அஞ்செஞ் சாய லஞ்சா தணுகும்
வஞ்சி மூதூர் மாநகர் மருங்கிற்
பொற்கொடி தன்மேற் பொருந்திய காதலின்
அற்புளஞ் சிறந்தாங் கரட்டன் செட்டி


யானுஞ் சென்றேன் என்னெதி ரெழுந்து
தேவந் திகைமேல் திகழ்ந்து தோன்றி
வஞ்சி மூதூர் மணிமண் டபத்திடை
நுந்தை தாணிழ லிருந்தோய் நின்னை
அரைசுவீற் றிருக்குந் திருப்பொறி யுண்டென்று 175

முடியுடை வேந்தர் மூவ ருள்ளும்
குடதிசை யாளுங் கொற்றங் குன்றா
ஆர மார்பிற் சேரர்குலத் துதித்தோர்
அறனும் மறனும் ஆற்றலும் அவர்தம்
பழவிறல் மூதூர்ப் பண்புமேம் படுதலும் 5
விழவுமலி சிறப்பும் விண்ணவர் வரவும்
ஒடியா இன்பத் தவருறை நாட்டுக்
குடியின் செல்வமுங் கூழின் பெருக்கமும்
வரியுங் குரவையும் விரவிய கொள்கையின்
புறத்துறை மருங்கின் அறத்தொடு பொருந்திய 10
மறத்துறை முடித்த வாய்வாள் தானையொடு                                  30 வரந்தரு காதை
பொங்கிரும் பரப்பிற் கடல்பிறக் கோட்டிக்
கங்கைப் பேர்யாற் றுக்கரை போகிய
செங்குட் டுவனோ டொருபரிசு நோக்கிக்
கிடந்த வஞ்சிக் காண்ட முற்றிற்று 15


 சேய் நிலத்து அன்றியும் செவ்வியின் வணங்கி 
      எஞ்சா மண் நசை இகல் உளம் துரப்ப 
      வஞ்சியின் இருந்து வஞ்சி சூடி 19-120
      முறம் செவி யானையும் தேரும் மாவும் 
      மறம் கெழு நெடு வாள் வயவரும் மிடைந்த 

 மாநீர் வங்கத்து அவனொடும் எழுந்து 
      மாயம் இல் செய்தி மணிபல்லவம் எனும் 
      தீவகத்து இன்னும் சேறலும் உண்டால் 
      தீவதிலகையின் தன் திறம் கேட்டு 
      சாவக மன்னன் தன் நாடு அடைந்த பின் 
      ஆங்கு அத் தீவம் விட்டு அருந் தவன் வடிவு ஆய் 21-090
      பூங் கொடி வஞ்சி மா நகர் புகுவை 
      ஆங்கு அந் நகரத்து அறி பொருள் வினாவும் 
      ஓங்கிய கேள்வி உயர்ந்தோர் பலரால் 
      "இறைவன் எம் கோன் எவ் உயிர் அனைத்தும் 

  "மன்னவன் மகற்கு இவள் வரும் கூற்று" என்குவர் 
      ஆபுத்திரன் நாடு அடைந்து அதன் பின் நாள் 
      மாசு இல் மணிபல்லவம் தொழுது ஏத்தி   24-155
      வஞ்சியுள் புக்கு மா பத்தினி தனக்கு 
      எஞ்சா நல் அறம் யாங்கணும் செய்குவல் 

   இட்டனள் சாபம் பட்டது இதுவால் 25-200
  கடவுள் மா நகர் கடல் கொள பெயர்ந்த 
      வடி வேல் தடக் கை வானவன் போல 
      விரிதிரை வந்து வியல் நகர் விழுங்க 
      ஒரு தனி போயினன் உலக மன்னவன் 
      அருந் தவன் தன்னுடன் ஆய் இழை தாயரும் 
      வருந்தாது ஏகி வஞ்சியுள் புக்கனர் 
      பரப்பு நீர்ப் பௌவம் பலர் தொழ காப்போள் 

முன் நாள் எடுத்ததும் அந் நாள் ஆங்கு அவன் 25-210
      அற அரசு ஆண்டதும் அறவணன் தன்பால் 
      மறு பிறப்பாட்டி வஞ்சியுள் கேட்பை' என்று 
      அந்தரத் தீவகத்து அருந் தெய்வம் போய பின் 
      மன்னவன் இரங்கி மணிமேகலையுடன் 

   'புன்கண் கொள்ளல் நீ போந்ததற்கு இரங்கி நின் 
      மன் பெரு நல் நாடு வாய் எடுத்து அழைக்கும் 
      வங்கத்து ஏகுதி வஞ்சியுள் செல்வன்' என்று 
      அந்தரத்து எழுந்தனள் அணி இழை தான் என் 25-239

பூ மலர்ப் பொழிலும் பொய்கையும் மிடைந்து 
      நல் தவ முனிவரும் கற்று அடங்கினரும் 
      நல் நெறி காணிய தொல் நூல் புலவரும் 
      எங்கணும் விளங்கிய எயில் புற இருக்கையில் 
      செங்குட்டுவன் எனும் செங்கோல் வேந்தன் 
      பூத்த வஞ்சி பூவா வஞ்சியில் 
      போர்த் தொழில் தானை குஞ்சியில் புனைய 
      நில நாடு எல்லை தன் மலை நாடென்ன 26-080
      கைம்மலைக் களிற்று இனம் தம்முள் மயங்க 
      தேரும் மாவும் செறி கழல் மறவரும் 
      கார் மயங்கு கடலின் கலி கொளக் கடைஇ 
      கங்கை அம் பேர் யாற்று அடைகரைத் தங்கி 
      வங்க நாவியின் அதன் வடக்கு இழிந்து 
      கனக விசயர் முதல் பல வேந்தர் 
      அனைவரை வென்று அவர் அம் பொன் முடி மிசை 
      சிமையம் ஓங்கிய இமைய மால் வரைத் 
      தெய்வக் கல்லும் தன் திரு முடிமிசைச் 
      செய் பொன் வாகையும் சேர்த்திய சேரன் 
      தேரும் மாவும் செறி கழல் மறவரும் 
      கார் மயங்கு கடலின் கலி கொளக் கடைஇ 
      கங்கை அம் பேர் யாற்று அடைகரைத் தங்கி 
      வங்க நாவியின் அதன் வடக்கு இழிந்து 
      கனக விசயர் முதல் பல வேந்தர் 
      அனைவரை வென்று அவர் அம் பொன் முடி மிசை 
      சிமையம் ஓங்கிய இமைய மால் வரைத் 
      தெய்வக் கல்லும் தன் திரு முடிமிசைச் 
      செய் பொன் வாகையும் சேர்த்திய சேரன் 


நூ த லோ சு
மயிலை
ஊ 


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

kanmani tamil

unread,
Oct 27, 2017, 6:53:40 AM10/27/17
to mintamil
கல்வெட்டுல் வழி கா ட்டப்படுவானவற்றைப் பு றம் தள்ளுக
அவை மிகவும் ம்பிற்காலத்தவையே .>.
வரலாற்று ஆய்வுகளுக்கு  கல்வெட்டுக்கள் முதல்நிலைத் தரவுகளாக அமையும்.மேனாட்டு நிலவியலார் குறிப்புகளும் அவ்வண்ணமே ஏற்றுக்கொள்ளப்படும். .மேற்சுட்டிய இரண்டனுக்கும் பின்னரே இலக்கியச் சான்றுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் செவிவழிச்செய்திகள் மூன்றாம் நிலைத தரவுகளாம் .இதுதான் ஆராய்ச்சி நெறிமுறை .
வஞ்சிப்பெயர் பெற்ற ஊர்களைச் சுற்றியிருந்த சில பகுதிகளேனும் ஒத்த பெயரும் தன்மையும் உடையனவாய் இருந்தன 
1).முசிறி என்ற பெயரில் ஒரு ஊர் மேலைக் கடற்கரை வஞ்சியை அடுத்தும் இருந்தது .கொங்கு வஞ்சியை அடுத்தும் உள்ளது .
2)மேற்கரை வஞ்சியை ஒட்டி ஓடிய சுள்ளியம் பேரியாறு  ஆன்பொருநை என்றும் அழைக்கப்பட்டது .கொங்கு வஞ்சியை அடுத்து ஓடிய நதியும் ஆன்பொருநை என்று அழைக்கப்பட்டது.
3)சேரர் தலைநகரங்களில்  குணவாயில் என்று ஒரு பகுதி உண்டு 
4)வஞ்சிநகர அரண்மனைகளில்  ஆடகமாடம் என்று அழைக்கப்பட்ட திருமால் கோயில் உள்ள பகுதி இருந்தது .
சுள்ளியம் பேரியாற்றுக்கு ஆன்பொருநை என்ற பெயர்வழக்கு இருந்தமைக்கு புறநானூற்றுப்பாடல்கள் ஆதாரமாக அமைகின்றன .
சோழன் நலங்கிள்ளியைப் பாடிய உறையூர் முதுகண்ணன் சாத்தனார் அவன் சேரநாட்டை வென்று கைப்பற்றியதைப் புகழ்கிறார் .(புறம்.29)கோவூர் கிழார் 
"குண  கடல் பின்னதாக குடகடல்   வெண்டலைப் புணரிநின் மான்குளம்பு அலைப்ப "அவனது படைகள் அவனுக்காக போர் செய்தன என்கிறார் .(புறம் 31)
இதனால் அவனது படைகள் மேற்கரை வஞ்சியை வென்றமை தெளிவு ."பூவாவஞ்சியும் தருகுவன் "என்றும் அவரே குறிப்பிடுகிறார் .(புறம் 32)இவனது சகோதரன்  கிள்ளி வளவனுக்கும் இப்போர்களில் பங்கு இருந்தமை பின்வரும் பாடல்களால் தெளிவாகிறது .ஆலந்தூர் கிழார்" தண்ணா ன் பொருநை வெண்மணல் சிதைய "கடிமரம் தடியும் ஓசையைக் கேட்ட பின்பும் கோட்டைக்குள் வாளாவிருந்த சேரனை எதிர்த்துப் போரிட்டதாகப் பாடுகிறார் .(புறம் 36)மாறோக்கத்து நப்பசலையார் கிள்ளி வளவனைப் பாடும்போது "வாடாவஞ்சி வாட்டுநின் பீடுகெழு நோன்தாள்"என்கிறார் .(புறம் 39)
இதனால் கிள்ளிவளவன் மேற்கரை நாட்டில் ஆன்பொருநைக் கரையில் இருந்த வஞ்சியை வென்றான் என்பதில் ஐயமில்லை .
இதனால் மேற்கரையிலும் வஞ்சி இருந்தது என்பதை மறுக்க இயலாது .
கண்மணி 







   .  

N. Ganesan

unread,
Oct 27, 2017, 8:38:50 AM10/27/17
to மின்தமிழ்
சுள்ளியாற்றுக்கு ஆன்பொருனை என்ற பெயர் இருந்ததா?? 
”மேற்கரை நாட்டில் ஆன்பொருநைக் கரையில் இருந்த வஞ்சியை ”

ஆன்பொருநை/ஆன்பொருந்தக் கரையிலே வஞ்சி மாநகர் இருந்தது என ஏராளமான சான்றுகள் உண்டு.
இலக்கியம், கல்வெட்டு, தொல்லியல்.

கேரளாவில் எங்கே ஆன்பொருனை ஆறு ஓடியது? ஆவணங்கள், கல்வெட்டுகள், இலக்கியங்கள்
சான்றுகள் தாருங்கள். நன்றி.

நா. கணேசன்
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N D Logasundaram

unread,
Oct 27, 2017, 4:24:41 PM10/27/17
to mintamil
​​வரலாற்று ஆய்வுகளுக்கு  கல்வெட்டுக்கள் முதல்நிலைத் தரவுகளாக அமையும்.மேனாட்டு நிலவியலார் குறிப்புகளும் அவ்வண்ணமே ஏற்றுக்கொள்ளப்படும். .மேற்சுட்டிய இரண்டனுக்கும் பின்னரே இலக்கியச் சான்றுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் செவிவழிச்செய்திகள் மூன்றாம் நிலைத தரவுகளாம் .இதுதான் ஆராய்ச்சி நெறிமுறை
 . இது கண்மணி அவர்களின் கூற்று 

அன்புள்ள கண்மணி அவர்கட்கு 
நீங்கள் சொல்வது பொது நிலையில் (வா னத்தில் இருந்து) கொள்ள வேண்டிய கொள்கையே ஆகும்
 அதனால் எப்போது எக்காலத்தும் எவ்விடத்தும் கொள்ளவேண்டும் என்பதும் ஆகாது 

இங்கு நம் சங்க காலத்து இருந்த ஓர் இடப்பெயரைப்பற்றிப்பேசும் போது கல்வெட்டுகளின்
 கால ம் ஏறக்குறைய 7-8 ஆம் நூற்றாண்டுகளை க்கடந்ததுதான் ஆகும் 
குறிப்பாக நீங்கள் கட்டிய  சதாசிவ பண்டாரத்தார் காட்டிய வற்றில் கல்வெட்டுகளால் 
காண்பது பிழைபட்டதாக வே முடியும் அல்லது ஐயம் ஏற்படக்காரணமாகவும் அமையும் 
என்பதுதான் பொருளாகும்  
எந்த ஒரு ஆய்விலும் நுண்மை நோக்கிச் செல்லும் பொது கோதுக்களைக் கழித்துதான்
 செல்லவேண்டும் எனும் பொருளில் சொல்லப்பட்ட சொற்களாகும் அவ்வளவே 

மேலும் ஆழ்ந்த நிலை ஆய்வாளர்களுக்கு பக்தி/தாச  நிலைக்கூடாது எல்லாரும் தா ன 
பிழைப்படக்கூடியவர் களே இவர் சொல்லிவிட்டார் அவர் அப்படிக்கட்டினார் எனபதால்
மட்டும் உண்மையாகி விடமுடியாது எனபதைம் மனம் கொள்ள வேண்டும் அதனால்
 எல்லாவற்றையும் மறுக்க வேண்டும் என்றும் சொல்ல வரவில்லை  
எதற்கும் இடம் நோக்கியும் பொருள் கொள்ள  வேண்டும் சிறியேன் சொல்வதைக்கேட்க
வேண்டாம் எனும் முடிவும் சரியாகாது சுட்டப்பழம் கதை அறிவீர்கள்

அதான்று ஒரு புள்ளியில் வைத்து பலகோடுகள் போடமுடியும் ஆனால்  இரு புள்ளிகள்
 இருந்தால் ஓரளவிற்கு ஓர் நேர்கோடுதன  அமையும் 
மேலும்ல  அவற்றின் இடைப்பட்ட தூரம் வரைதான்  நேர்கோடு  கொள்ளமுடியும்
 மூன்றாவதுவந்தால் அந்த நேர்கோட்டில் இருந்தால் வலுப்பெறும்
 அகன்றிருந்தால் குழப்பம் வரும் 

புகாப்புகர் கொண்ட புன்பூங்கலிங்கமொடு
வாடா மாலை துயல்வர ஓடி
பெருங் கயிறு நாலும் இரும்பனம் பிணையல்
பூங்கண் ஆயம் ஊக்க ஊங்காள்
அழுதனள் பெயரும் அம்சில்ஓதி 

இது ஒரு நற்றி ணைப்பாடல் வரிகள் (90)  

இது வேண்டும் என முன்பே குறிப்பாக அறிந்த நிலையில் காட்டியதும்  அல்ல 
இது எட்டில் கயிறு சாற்றி  பார்த்தலாக கண்டது 

இதில் வரும் நாலு ம் எனும் சொல்லிற்கு என்ன பொருள் கொள்வீர் 
நான்கு எனும் பொருள் கொள்ள முடியாதல்லவா? அதுபோல் நீங்ககாட்டியதிலும் 

//தி.வை.சதாசிவ பண்டாரத்தார்
 "வஞ்சிநகர் நாலும் வளமையா ஆண்டருளும்//
 நாலு ம் என்றசொல்லால் நான்கு கருவூர்
எனக்கட்டல் சரியாகாது என்பது என்கருத்து 

நாலும் என்றால் தொங்கும் எனவும் ஓர் பொருளுண்டு 
நால்வாய் (வினைத்தொகை-மற்றும் சினையாகுபெயர் ) என்றால் யானையாகும் 
பாருங்கள் இந்த சொல்லின எழுதிய வுடன் தான் தோன்றிய கருத்து  
யானைக்கு நாலுகின்ற வாய் என்று தான் சொல் பொருள் கொள்ளவேண்டும் 
இதனில் வாய் என்றால் எப்படிப் பொருந்தும் அதொங்குகின்றது வாயல்லவே 
மூக்குத்தானே வாய் என ஒன்றும்தான் தனியாக உள்ளதே 
ஆ னால் காற்று உள்ளே கும் வழியினைக்கொண்டதால் (வாயில்) வாய் ஆயிற்று 

மீண்டும் 

வஞ்சி நகர் நாலும் என்ற இடத்தில் நாலு ம் என்பதனை  எண்ணாகக் கொள்ளாமல்
 வினையாகக் கொள்ளவும் முடியும் மேலும் இருபுறமும் பிணைத்து வஞ்சி நகர் நாலு ம்
 என்றோ அல்லது நாலும் வளமையா என்றோ  கொள்ள முடியும் பின்னதே சரியானது
 என்பது என் கருத்து 

அதான்று 
நாலூர் என்று தேவா ரப்பா டல்பெற்றத்தலமுமுண்டு அறிவீர்கள் அங்கு நான்கு   ஊர்கள் அமைந்த
தால் நாலூர் என்கிறா ர்களா அல்லது நாலும் ஊர் எனவும் கொள்ள முடியும் இருந்தாலும் 
நாலும் என்பதனுக்கு தொங்குகின்ற எனலும் தகாது பின் ஏதுவாகும் ??

                                                     வஞ்சிக்குப்புறம்பாகச் செல்லவில்லை 

என்னிடம்   உள்ள 18 நிகண்டுகளில் இவ்வாறு பொருள்கள் உள்ளன 


 திவாகரம் 

கருவூர் 
ஆற்றெழும் ஓர் கொ டிப்பிறப்பு   
பாவிகற்பத்து ஓர் பா
 மாதர் 
மேல்செலவு (போர்)


பாரதி தீ ப நிகண்டு 

நாற் பா வில் ஒன்று 
ஆற்றகத்து ஓர் கொடி
 நன்னுதல் 
மேற்போய்விடும் சொல் 
கருவூர் 

பிங்கலம் 

வானீரம் 
பிசின் 
வஞ்சுளம் 
பகைவர் மேற்செல்லல் 
ஓர் கொடி
 பெண் கள் 
ஒரு பா 
கருவூர் 
குடை 

உரிச்சொல்   நிகண்டு 

வாணீரம்
 வஞ்சுளம் 


கயாதர நிகண்டு


மேற்சேற ல் 
ஒருபா 
ஒருபதி 

சூடாமணி நிகண்டு

மேற்செலவு (பகைவர்மேல்)
வஞ்சிப்பா 
கருவூர் 
வஞ்சிக்கொடி
 பெண் 

அகராதி நிகண்டு 

மேற்செலவு 
ஓர்பா 
வள்ளி 
பெண் 
ஓர் பா 

ஆசிரிய நிகண்டு 

கொடி
 திணை 

வடமலை நிகண்டு 

மாது 
ஓர்க்கொடி 
பாவின் விகற்பம்
 போர்மேல் செல்லல் 
மருத யாழ்த்திறம் 

பொதிகை நிகண்டு 

மேற்செலவு 
ஓர் ஊர்
ஓர் பா 
வல்லி 
 பெண் 


நாம தீப நிகசண்டு 


வஞ்சுளம்
 வானீரம் 
கருவூர் 
செடி 
கூகை நீறு 
ஓர் வாசனை 


நாணார்த்த தீபிகை 

கருவூர் 
ஓர் மரம் 
ஓர் கொ டி
 ஓர் பா 
பாக்கழிப்பண் 


வேதகிரியார் சூடாமணி நிகண்டு

மேற்செலவு 
ஓர் ஊர் 
பா 
வள்ளி 
பெண் 
இயக்கி 



 1-.மேலைக் கடற்கரையில் அகலப்புழை ஆற்றின் சங்கமத்துறையில் இருந்த வஞ்சி
2-கொங்குக் கரூர் வஞ்சி
3-கொங்குநாட்டில் காவிரிக்கு வடகரையில் ஸ்ரீராமசமுத்திரம் என்று
அழைக்கப்படும் அயிலூர்
4-மேலைக் கடற்கரையில் 8ம் நூற்றாண்டில்  தோன்றிய திருவஞ்சைக்களம்
5-திருவனந்தபுரத்தின் ஒரு பகுதியில் மன்னன் அரண்மனை இருந்த இடம்
6-தாராபுரம் என்று மருவிய ராஜராஜபுரம்
7-கிரங்கனூருக்கு 5மைல் வடக்கிலும் திருக்குணவாயிலுக்கு 2மைல்
வடகிழக்கிலும் உள்ள கரூர்ப்படஞ்ஞா
8-கடல்கோளால் 8ம் நூற்றாண்டில் அழிந்த கொல்லம் நகர்
9-இன்றைய கொல்லம்
வஞ்சிப்பெயர் பெற்ற நகரங்கள் சில கரூர்/கருவூர்  என்ற மாற்றுப்பெயர் பெற்றன .
திவாகரமும் பிங்கலந்தையும் வஞ்சி என்ற சொல்லுக்கு கருவூர் என்று பொருள் கூறுகின்றன.
பத்தாம்  நூற்றாண்டில் ஆண்ட இராஜசிம்மனது சின்னமனூர்ப் பெரிய





நூ த லோ சு
மயிலை
ஊ 

kanmani tamil

unread,
Oct 28, 2017, 5:16:31 AM10/28/17
to mintamil
அன்புடையீர் வணக்கம் 
 
நாலு என்ற சொல்லுக்கு நான்கு என்ற பொருளும் உண்டு என்பதைத் தாங்களும் அறிவீர்கள் .அந்தப் பொருளைக் கொண்டு தொடர்ந்து ஆய்வு செய்வதில் எனக்கு எந்த இடர்பாடும் ஏற்படவில்லை .வேறு பொருளைத் தேட வேண்டிய தேவையும் ஏற்படவில்லை .அதனால் அவ்வாறே தொடர்கிறேன் .
கண்மணி 

N D Logasundaram

unread,
Oct 28, 2017, 5:49:38 AM10/28/17
to mintamil
நீங்கள் உங்கள் ஆய்வினில் தொடர்வதில்என க்கும் எந்த இடர்பாடும் இல்லை கண்மணி 

நூ த லோ சு
மயிலை
ஊ 

kanmani tamil

unread,
Oct 28, 2017, 8:56:47 AM10/28/17
to mintamil
ல் எங்கே ஆன்பொருனை ஆறு ஓடியது? ஆவணங்கள், கல்வெட்டுகள், இலக்கியங்கள்
சான்றுகள் தாருங்கள். >.
இன்று மதுரையை ஒட்டி ஓடும் வைகையில் கணுக்கால் அளவேனும் நீர் ஓடக் காரணமான பெரியாறே பேரியாறு ஆகும் .இதையே  சுள்ளியம்பே ரியாறு   என்றும் ஆன்பொருநை என்றும் புறநானூறு சுட்டுகிறது.இளங்கோவடிகள் பேரியாறு  என்றே சுட்டுகிறார் இந்த ஆறு கடலோடு கலந்த இடத்தை நாம் கண்டுபிடித்தால் மேலைக் கடற்கரை வஞ்சியை அடையாளம் காட்டி விடலாம் .  
பண்டைய மேலைக் கடற்கரை இன்றைய மேலைக் கடற்கரையினின்றும் 6அல்லது 7கல் கிழக்கே முற்பட்டு இருந்திருக்க வேண்டும் என்பதை 
 வி.கனகசபைப்பிள்ளை தனது ஆய்வேட்டில் நிறுவியுள்ளார் .(the tamils1800 years ago)
மேனாட்டு நிலவியலார் கூறும் கடற்கரைப்பட்டினங்கள்  துணையோடு தன கருத்தை வலுப்படுத்துகிறார் .
அதே கருத்தை ஜார்ஜ்வூட் காக் நிலத்தின் தன்மையும் வேறுபாடும் கொண்டு நிலைநாட்டுகிறார் .(kerala-a portrait of the malabar coast)
இன்றுள்ள கொல்லம் 8ம் நூற்றா ண்டிலும் ,கோழிக்கோடு 13ம்.நூற்றா ண்டிலும் ,கொச்சி 14ம் நூற்றா ண்டிலும் புதிதாகத் தோன்றிய துறைமுகங்கள் என்று செ.கோவிந்தன் எடுத்துக் காட்டியுள்ளார் .(சேர நாட்டுத் துறைமுகப் பட்டினங்களும் கடல் வாணிபமும் -இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் -4வது கருத்தரங்கு மலர் -ப.589)
வரலாற்றுக் காலத்தில் ஏற்பட்ட வெள்ளங்களால் மேலைக் கடற்கரை மேலும்  மாற்றம் பெற்றது.14ம்.நூற்றா ண்டில் ஏற்பட்ட வெள்ளத்தால்கொடுங்கோளூர் துறைமுகம் அழிந்தது .அப்பொழுது தான் வைப்புத்தீவும் தோன்றியது.அதற்கு முன்னர் கொடுங்கல்லூர் அழிக்கும் பெரியாற்றுக்கும் இடையே கழி இருந்ததெனினும் அதற்கு பெரியாற்றின்  ஒரு  பாகமாகக் கருதத்தக்க பரப்பே இருந்ததென periplus of the erythrean seaகூறும் குறிப்புகளை வைத்து இளங்குளம்.குஞ்ஞன்பிள்ளை நிறுவுகிறார் .
இத்தனை மாற்றங்களும் நிகழ்ந்த மேலைக்கடற்கரையில் வஞ்சியைத் தேடிக் காண்பது தான் நமக்கிருக்கும் சவால்.         
அடியார்க்கு நல்லார் மேலைக் கடற்கரையில் உள்ள கொடுங்கல்லூரை வஞ்சி   என்று கூறுவதை உ.வே.சாமிநாதையர்,எஸ்.கிருஷ்ணசாமி ஐயங்கார் (சேரன் வஞ்சி),சி.எஸ்.செலுவ ஐயர் (vanjimanagar or thegreat city called vanji-annals of oriental research),துடிசைக்கிழார் .அ .சிதம்பரனார் (திருவஞ்சைக்களம்-செந்தமிழ்ச் செல்வி -சிலம்பு-14),தா.பொன்னம்பலம் பிள்ளை (செந்தமிழ்-தொகுதி-2-பகுதி-5,6),தி.வை.சதாசிவ பண்டாரத்தார் ஆகிய அனைவரும் ஆமோதிக்கின்றனர் .ஆனால் அங்கு அகழ்வாய்வு நிகழ்த்திய தொல்பொருள் ஆய்வுத்துறையினர் கி.பி.8ம் நூற்றாண்டிற்கு முந்தைய காலகட்ட எச்சங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்கின்றனர் . 
இங்கு தான் நமக்கு இலக்கியம் கைகொடுக்கிறது .ஏனெனில் மேனாட்டு நிலவியலார் கடலிலிருந்து மிளகு ப் பொதிகளை படகுகளில் ஏற்றி கழியைக் கடந்து முசிறியை  அடைந்துள்ளனர் .அதன் அருகில் சேரபோத் ராசின் தலைநகர் இருந்தது என்கின்றனர் .ஆனால் கடற்கரையோ மிகுந்த மாற்றம் பெற்று விட்டது .நிலப்பகுதியிலும் பெரிய்ய்ய கழி உருவாகி விட்டது .காரணகாரியத் தொடர்போடு சிந்தித்தால் சங்ககால வஞ்சி கழிக்குள்ளே இருக்க வேண்டும் என்றும் புரிகிறது .இடைக்கழி நாட்டு நல்லூர்  நத்தத்தனார் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார் .
"வருபுனல் வாயில் வஞ்சி "என்கிறார் .
வாயில் என்னும் பொருளை உடைய "புழை" என்னும் பின்னொட்டோடு இன்றும் கேரளத்தின் இடப்பெயர்கள் வழங்குகின்றன.ஆறு கடலோடு கலக்கும் இடத்தை பண்டு வாயில் என்று வழங்கியவர்கள் இன்று அதே பொருளை உடைய புழை என்னும் சொல்லால் அழைக்கின்றனர் .
இன்று பெரியாறு கடலோடு கலந்த இடத்தை நினைவூட்டுவதாக அகலப்புழை என்ற பெயரில் ஓரிடம் வழங்குகிறது .மேற்கரை வஞ்சியை அகழ்வாய்வு மூலம் காண இயலாது என்றும் அதன் காரணத்தையும் தொல்லியல் ஆய்வாளரும்  கூறுகின்றனர் .(கே.வி.இராமன் -தொல்லியல் ஆய்வுகள் )
கண்மணி      

N. Ganesan

unread,
Oct 28, 2017, 9:33:00 PM10/28/17
to மின்தமிழ், vallamai
Kanmani wrote:
>> இதையே  சுள்ளியம்பே ரியாறு   என்றும் ஆன்பொருநை என்றும் புறநானூறு சுட்டுகிறது

ஆன்பொருநை என்று சுள்ளியம்பேரியாற்றைப் புறநானூறு சுட்டவில்லை.
எந்தப் பாடலில் அவ்வாறு பொருள் கொள்கிறீர்கள்?

பேரியாறு மகோதை, அஞ்சைக்களம் என்னும் ஊர். இது வஞ்சைக்களம் என்று,
வஞ்சி என்றும் சிலர் எழுத முயன்றுள்ளனர். ஆனால், அஞ்சைக்களத்தருகே
எந்த ஆன்பொருநை நதியும் இல்லை. ஆன்பொருனை - பிற்காலத்தில் ஆன்பொருந்தம்
- இன்றைய அமராவதி ஆறு. அதன் கரையில் இருப்பது வஞ்சி மாநகர்.
சேரர்களின் தலைநகர் என்பதை வஞ்சி (கருவூரில்) கிடைத்த சேர மன்னர்கள்
கல்வெட்டுகளும், நாணயங்களும் நிரூபித்துவிட்டன. பார்க்க: ஐராவதம்
மகாதேவன், Early Tamil Epigraphy, 2003.

கோவையிலே செம்மொழி மாநாடு நடைபெற்றது. அப்போது தமிழறிஞர்கள்,
தொல்லியல் அறிஞர்கள் எது சேரர்களின் மாநகர் வஞ்சி எனக் குறிப்பிட்டுள்ளனர்.
அஞ்சைக்களத்தை வஞ்சி என்பது சரியாகாது. அங்கு உள்ள ஊர் முசிறிப் பட்டினம்.
இப்போதைய அகழ்வாய்வுகளைப் பாருங்கள். 1977 கே. வி. ராமன் புஸ்தகம்,
அதற்குப் பின்னர் பல செய்திகள் கிட்டிவிட்டன.

மதுரை வேறு, மணலூர் (பெருமணலூர், கீழடி) வேறு என்பது தெளிவு.
அதேபோல, சேரர் தலைநகர் வஞ்சி என்பது ஆன்பொருனைக் கரையிலே
உள்ள கரூர். முசிறிப் பட்டின்ம் போய் வந்திருக்கலாம் அம்மன்னர்கள்
- திறை வசூலிக்க. முசிறி, அஞ்சைக்களம், ... பகுதிகள். ஆனால்,
சங்கச் சேரர் தலைநகர் வஞ்சிக்கருவூர் என்று கொங்குநாட்டு ஊர்.

மதுரையை மணலூர் எனக் குழப்புவது போல, வஞ்சிக் கருவூரை
அஞ்சைக்களம் எனல் வேண்டா.

தொல்லியல் வரலாறு, சங்க இலக்கியங்கள், கல்வெட்டுகள் காட்டும் ஆன்பொருனை (ஆம்பிராவதி)
நதிக் கரை ஊராம் வஞ்சி என்னும் சங்கச் சேரர் தலைநகர் ஆகும்.

நா. கணேசன்

* இரும்பு மற்றும் சங்ககாலத் தொல்லியல் தொடர்பான 250க்கும் மேற்பட்ட கள ஆய்வுக்குரிய இடங்கள், ஒருங்கிணைந்த கோவை மாவட்டப் பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன.
* எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாகச் சேரர்களின் தலைநகரமான கரூர்வஞ்சி கொங்குப் பகுதியில் ஆன்பொருநை (அமராவதி) ஆற்றின் கரையிலமைந்திருந்தது.
* சங்க இலக்கியத்தில் ‘வளங்கெழு முசிறி’ எனக் குறிப்பிடப்பெறும் சேரர்களின் துறைமுகமான முசிறிப்பட்டினம், அண்மையில் கேரள வரலாற்றாய்வுக் கழகம் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் முனைவர் கா.இராசன், உதவிப்பேராசிரியர் முனைவர் வீ. செல்வக்குமார் ஆகியோரின் துணையுடன் நடத்திய அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ”

* சங்ககாலத்தில் சேரர் மற்றும் வேளிரின் ஆட்சிப் பகுதியாக விளங்கிய கொங்குப் பகுதி, சங்க இலக்கியங்களில் சிறப்பாகப் பதிற்றுப்பத்தில் குறிப்பிடப்படுகிறது. பண்டைய கொங்குச் சமுதாயம் பற்றிய செய்திகள் பலவும் அவற்றில் காணப்படுகின்றன. சங்ககாலத்தில், வணிகம் மற்றும் தொழில்நுட்பத்தின் சிறப்பிடமாகவும் கொங்குப் பகுதி விளங்கியிருக்கிறது. இப்பகுதியில் இரும்புக்காலம் ( கி.மு. 1000 முதலாக ) முதற்கொண்டு மக்கள் வாழ்ந்ததற்கான தொல்லியல் சான்றுகள் பல கிடைத்துள்ளன.
*அகநானூற்றில் (அகம் 1 , 61) பாடப்பெறும் நெடுவேள் ஆவிக்கோவும் குறிஞ்சி நிலத்திற்குரிய முருகனும் நிலைகொண்ட பொதினி (பழநி) மலையைக் கொங்குப் பகுதி கொண்டுள்ளது.
* பதிற்றுப்பத்தில் (30 ,79) புகழ்ந்து கூறப்படும் சேரரின் அயிரைமலை (அயிரைமலை>ஐவர்மலை) கொங்குப் பகுதியில் உள்ளது.
· பெருஞ்சித்திரனார், பெருந்தலைச்சாத்தனார் ஆகிய சங்கப்புலவர்களால் பாடப்பெற்ற இயல்தேர்க் குமணனும், பெருங்கல்நாடன் பேகனும் (கடையெழு வள்ளல்களுள் இருவர்) வாழ்ந்த பகுதி கொங்குப் பகுதியாகும்.
* அகநானூறு, பதிற்றுப்பத்து ஆகியனவற்றில் குறிப்பிடப்பெறும் சங்ககால மன்னன் கழுவுளின் காமூர் (தற்போதைய காங்கேயம்) கொங்குப் பகுதியில் உள்ளது.
* புறநானூற்றில்(168 – 172) போற்றப்படும் பிட்டங்கொற்றனின் குதிரைமலை கொங்குப் பகுதியில் அமைந்துள்ளது.
* விளங்கு புகழ்க் கபிலனையும் சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறையையும் பாடிய (புறம் 53) சங்கப்புலவர் பொருந்தில் இளங்கீரனார் வாழ்ந்த ஊரான பொருந்தில் கொங்குப் பகுதியில் உள்ளது. இப்பொருந்திலின் சிறப்பு அண்மையில் புதுச்சேரி மையப் பல்கலைக்கழகம் மேற்கொண்ட- தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர்களும் பங்கேற்ற-தொல்லியல் அகழாய்வில் வெளிக்கொணரப்பட்டது. இந்த அகழாய்வில் ஒருபானையில் 2 கிலோ நெல்மணிகள் கிடைத்துள்ளன. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் பயன்படுத்திய ஆயிரக்கணக்கான பலவகைக் கல்மணிகள், கண்ணாடி மணிகள், இரும்பாலான ஆயுதங்கள் ஆகியன வெளிக்கொணரப்பட்டுள்ளன. வாழ்விடப் பகுதியில் சங்ககாலத்தைச் சார்ந்த செங்கற் கட்டுமானங்களும், கண்ணாடித் தொழிற்கூடங்களும் அகழாய்வில் வெளிக்கொணரப்பட்டன.
* சங்க இலக்கியமான பதிற்றுப்பத்தில் (ஏழாம் பத்து) ‘கொடுமணம் பட்ட வினைமாண் அருங்கலம்’ எனக் குறிப்பிடப்படும் தொழிற்கூட ஊர் தற்போது சென்னிமலைக்கருகில் கொடுமணல் என்னும் பெயரில் உள்ளது. இப்பகுதியில் தமிழ்ப் பல்கலைக்கழகம் நடத்திய அகழாய்வில் ஈமச்சின்னங்களில் ஏராளமான கல்மணிகள், இரும்பாலான ஆயுதங்கள், வெண்கலத்தாலான பொருட்கள், பானைக்குறியீடுகள் ஆகியன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இங்கு வாழ்விடப்பகுதியில் அகழாய்வு செய்தபோது இரும்பு உருக்குலைகள், கல்மணித் தொழிற்கூடங்கள் ஆகியன இருந்தமைக்கான சான்றுகள் வெளிக்கொணரப்பட்டுள்ளன. 2300 ஆண்டுகளுக்கும் முற்பட்ட தமிழ்-பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட பானையோடுகளும் அகழாய்வில் கிடைத்துள்ளன.
* நன்னூலை இயற்றிய சமணப்புலவர் பவணந்தி அடிகள் வாழ்ந்த தற்போதைய சீனாபுரம் (ஜீனர் புரம் > சமணர் புரம்) என்னும் ஊரும் அதற்கருகில் உள்ள சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்குநல்லார் வாழ்ந்த நிரம்பையும், சமணக்காப்பியமான பெருங்கதையை உருவாக்கிய கொங்குவேள் வாழ்ந்த விசயமங்கலமும் கொங்குப் பகுதியில் அமைந்துள்ளன.
* இரும்புக்கால ஈமச்சின்னங்கள் கல்வட்டங்களாகவும் கற்குவியல்களாகவும் காணப்படுகின்றன. சங்ககாலத்தில் கொங்குப்பகுதியிலிருந்து பாலக்காட்டுக் கணவாய் வழியாக மேலைக்கடற்கரைப் பகுதிகளோடு வணிகம் மேற்கொள்ளப்பட்டது. வெள்ளலூர், சாவடிப்பாளையம், பொள்ளாச்சி போன்ற இடங்களில் கிடைத்த உரோமானியக் காசுகள் இவற்றை உறுதிசெய்கின்றன.
* தமிழகம் உரோம் நாட்டுடன் கொண்டிருந்த வணிகத்திற்கான உறுதியான சான்றுகள் கொங்குப்பகுதியில் கிடைத்துள்ளன. அதாவது, இந்தியாவிலேயே உரோமானிய நாணயங்கள் கொங்குப் பகுதியில்தாம் அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
* சங்க இலக்கியச் சான்றுகளை உறுதிப்படுத்தும் வகையில் சேரமன்னர்களின் மரபை இலக்கியத்தில் சுட்டியவாறு அறுதியிட்டு உரைக்கும் தமிழ்-பிராமிக் கல்வெட்டுகள் கிடைத்துள்ள புகளூரும் இந்தியாவிலேயே இசைக்குறிப்பைத் தரும் காலத்தால் முற்பட்ட தமிழ்-பிராமிக் கல்வெட்டு உள்ள அறச்சலூர் என்னும் ஊரும் கொங்குப் பகுதியில் உள்ளன.
* கோவைக்கு அருகிலுள்ள பேரூர், போளுவாம்பட்டி என்னுமிடங்களில் மேற்கொண்ட தொல்லியல் அகழாய்வுகள் சங்ககாலத்தைச் சார்ந்த பலவகைக் கல்மணிகள், கண்ணாடி மணிகள், சங்காலான பொருட்கள், இரும்புக் கருவிகள், சுடுமண் உருவங்கள், காதணிகள், இரும்புக்காலப் பானைக்குறியீடுகள் போன்ற தொல்லியல் எச்சங்களை வெளிக்கொணர்ந்துள்ளன.
* கொங்குப் பகுதியான சூலூர் என்னுமிடத்தில் கிடைத்துள்ள முத்திரை நாணயங்கள் சங்ககாலத்தில் தமிழகத்திற்கும் வட இந்தியாவிற்கும் இருந்த வணிகத் தொடர்பினை உறுதிசெய்கின்றன. மேலும் இவ்வூரில் கிடைத்த சங்ககால மண் அகலில் காணப்பெறும் குறியீடு ஒன்று சிந்துவெளி நாகரிகக் குறியீட்டினை ஒத்துள்ளதாக அறிஞர் ஐராவதம் மகாதேவன் கருதுகிறார்.
* இரும்பு மற்றும் சங்ககாலத் தொல்லியல் தொடர்பான 250க்கும் மேற்பட்ட கள ஆய்வுக்குரிய இடங்கள், ஒருங்கிணைந்த கோவை மாவட்டப் பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன.
* எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாகச் சேரர்களின் தலைநகரமான கரூர்வஞ்சி கொங்குப் பகுதியில் ஆன்பொருநை (அமராவதி) ஆற்றின் கரையிலமைந்திருந்தது.
* சங்க இலக்கியத்தில் ‘வளங்கெழு முசிறி’ எனக் குறிப்பிடப்பெறும் சேரர்களின் துறைமுகமான முசிறிப்பட்டினம், அண்மையில் கேரள வரலாற்றாய்வுக் கழகம் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் முனைவர் கா.இராசன், உதவிப்பேராசிரியர் முனைவர் வீ. செல்வக்குமார் ஆகியோரின் துணையுடன் நடத்திய அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்வழி, சங்க இலக்கியம் குறிப்பிடும் தமிழக வரலாற்றுப் பண்பாட்டுச் செய்திகளுக்குரிய சான்றுகள் வெளிப்பட்டுள்ளன. 

kanmani tamil

unread,
Oct 31, 2017, 3:59:08 AM10/31/17
to mintamil
< சேரர் தலைநகர் வஞ்சி என்பது ஆன்பொருனைக் கரையிலே
உள்ள கரூர். முசிறிப் பட்டின்ம் போய் வந்திருக்கலாம் அம்மன்னர்கள்
- திறை வசூலிக்க. முசிறி, அஞ்சைக்களம், ... பகுதிகள். ஆனால்,
சங்கச் சேரர் தலைநகர் வஞ்சிக்கருவூர் என்று கொங்கநாட்டு ஊர>
பதிற்றுப்பத்து நூலை ஊன்றிப் பயிலும்போது சேரர் ஆட்சிமுறை தெளிவாகிறது .
நமக்குக் கிடைத்துள்ள 8பத்துகள் வாயிலாக நாம் 9சேர மன்னர்களின் பெயர்களை அறிகிறோம் (இரண்டாம் பத்தின் பதிகம் வாயிலாக நமக்குக்கிடைக்காத முதல் பத்தின் மன்னனைத் தெரிந்து கொள்கிறோம் ) 
.இவர்கள் 9பேரும் ஒருவர் பின் ஒருவராக  பட்டம் கட்டியவர்கள் அல்லர் .ஒரே காலகட்டத்தில் சேர நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்கள் .(சோழ நாட்டில் பங்காளிச் சண்டை நடந்தமையை புறநானூற்றில் காண்கிறோம்(பா.44,45,47).ஆனால் சேர நாட்டில் பங்காளிச்சண்டை நடந்ததாகத் தகவல் ஏதும் இல்லை .)
இந்த மன்னர்களைப் பாடிய 8புலவர்களும் ஒரே காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள் .
2ம் பத்தின் தலைவனாகிய இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் பரணர் பாடிய பாடல் புறநானூற்றில் உள்ளது.(பா.63)
பரணர் கடல் பிறக்கோட்டிய வேல் கெழு குட்டுவனை பதிற்றுப்பத்தில்  பாடுகிறார் .
பரணரும் 7ம்பத்திற்குரிய செல்வக்கடுங்கோ வாழியாதனைப் பாடிய கபிலரும் ,8ம்.பத்திற்குரிய பெருஞ்சேரலிரும்பொறையைப் பாடிய அரிசில் கிழாரும் ,9ம்.பத்திற்குரிய இளஞ்சேரலிரும்பொறையைப் பாடிய பெருங்குன் றூர்கிழாரும் ,ஒருசேர பேகனைப் பாடியுள்ளனர் .(புறம்.-141-147)
விடுபட்ட பல்யானைச்செல் கெழு குட்டுவன் இம்யவரம்பனின் தம்பி என்பது பதிகம் வாயிலாகப் புலப்படுகிறது .
3ம்.பத்திற்குரிய களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலும் ,6ம்பத்திற்குரிய ஆடுகோட்பாட்டுச் சேரலாதனும் இமயவரம்பனின்  ஒரு மனைவிக்குப்  (வேளாவிக்கோ பதுமன் மகள் )பிறந்தவர்கள் .கடல் பிறக்கோட்டிய வேல்கெழு குட்டுவன் இம்யவரம்பனின் இன்னொரு மனைவிக்குப் (சோழன் மகள் )பிறந்தவன்செல்வக்கடுங்கோவாழியாதனுக்கும்  வேளாவிக்கோமான் பெண் கொடுத்திருக்கிறான் .அவர்களுக்குப் பிறந்தவனே பெருஞ்சேரல் இரும்பொறை .அவர்களின் பேரனே இளஞ்சேரலிரும்பொறை .
 இவர்கள் அனைவரும் ஒரே காலகட்டத்தைச் சேர்ந்த 3தலைமுறையினர் ஆவர்என்பது வெளிப்படை .சேரர் குடியில் உதியன்மரபு ,இரும்பொறை மரபு என்ற இரண்டு மரபும் ஒத்த பெருமையுடன் இருந்தன.வேளாவிக்கோ இரண்டு மரபிற்கும் பெண் கொடுத்திருக்கிறான் .
இவர்களது காலத்தில் நிகழ்ந்த போர்களும் இவர்கள இருவரேனும் இணைந்து செய்தனவாகவே காணப்படுகின்றன.
இமயத்தில் விற்பொறித்த செய்தி இம்யவரம்பனுக்கும் ,கடல் பிறக்கோட்டியவேல்கெழு குட்டுவனுக்கும் ஒருசேர உரியதாகும்.(பதிற்று.-11,43)
கடற்கடம்பரை அடக்கிய செயலும் அப்படியே (11,17,20,41,45,46,48&அகம்.127,21)இரண்டுமே தந்தையும் மகனும் சேர்ந்து பெற்ற வெற்றிகள் .
கொங்கு வெற்றியும் உதியன் சேரலாதனுக்கும் ,பல்யானைச் செல்கெழு குட்டுவனுக்கும் ஒருங்கு உரியன.(3ம்பத்தின் பதிகம் ,பா.22,அகம்.169,233)  .    
உதியன் மரபினரோடு தொடர்பு பெறும் ஊர்கள் மேற்குக் கடற்கரை சார்ந்தனவாகவும் இரும்பொறை மரபோடு தொடர்புடைய ஊர்கள் எல்லாம் கொங்கு
பகுதி சார்ந்தனவாகவும் இருப்பதை அடுத்த மடலில் காணலாம்.
 <ஆன்பொருநை என்று சுள்ளியம்பேரியாற்றைப் பறநானூறு சுட்டவில்லை. 
எந்தப் பாடலில் அவ்வாறு பொருள் கொள்கிறீர்கள்?>

புறநானூறு 29,31,32,36,39ஆகிய ஐந்து  பாடல்களும் சோழன் நலங்கிள்ளியும் ,கிள்ளிவளவனும் சேர்ந்து மேற்கரை வஞ்சியை முற்றுகையிட்டுப் பெற்ற வெற்றியைப் பாடுகின்றன .இப்பாடல்களில் வஞ்சி ஆன்பொருநைக் கரையில் இருந்தது தெளிவாகிறது .இந்த ஆன்பொருநை சுள்ளியம்பேரியாறு என்று ஆய்வாளர் பின்வருமாறு நிறுவுகின்றனர் 
பாலக்காட்டுக்கணவாய்க்குத்  தெற்கே இருந்த மேற்கு மலைத்தொடர்பொருப்பு என்று பெயர் பெற்றது .(எஸ் .கணபதிராமன் -பொருநை நாடு -ப.34)
பொருப்பிலிருந்து தோன்றி ஓடிய நதிகள் பொருநை என்னும் பொதுப்பெயரைப் பெற்றன .(அவ்வை .சு.துரைசாமிப்பிள்ளை -பண்டைநாளை ச் சேர மன்னர் வரலாறு -ப.20)
கிழக்கு நோக்கி ஓடுபவை பெண் நதிகள் ;மேற்கு நோக்கி  ஓடுபவை ஆண் நதிகள் என்னும் கொள்கையின்படி பொருப்பிலிருந்து மேற்கு நோக்கி ஓடிய சுள்ளி 
யம்பேரியாறு ஆன் எனும் முன்னொட்டைப் பெறும்.(கழகத் தமிழகராதி -ப.92&704)
இக்கருத்தை ஆய்வாளரும் உறுதி செய்துள்ளனர் .(எஸ்.கிருஷ்ணசாமி ஐயங்கார் -சேரன் வஞ்சி -ப.41&42)
கண்மணி   

N. Ganesan

unread,
Oct 31, 2017, 11:23:29 AM10/31/17
to மின்தமிழ், vallamai




NG < சேரர் தலைநகர் வஞ்சி என்பது ஆன்பொருனைக் கரையிலே
உள்ள கரூர். முசிறிப் பட்டின்ம் போய் வந்திருக்கலாம் அம்மன்னர்கள்
- திறை வசூலிக்க. முசிறி, அஞ்சைக்களம், ... பகுதிகள். ஆனால்,
சங்கச் சேரர் தலைநகர் வஞ்சிக்கருவூர் என்று கொங்கநாட்டு ஊர>
 
2017-10-31 0:59 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
 
பதிற்றுப்பத்து நூலை ஊன்றிப் பயிலும்போது சேரர் ஆட்சிமுறை தெளிவாகிறது .
நமக்குக் கிடைத்துள்ள 8பத்துகள் வாயிலாக நாம் 9சேர மன்னர்களின் பெயர்களை அறிகிறோம் (இரண்டாம் பத்தின் பதிகம் வாயிலாக நமக்குக்கிடைக்காத முதல் பத்தின் மன்னனைத் தெரிந்து கொள்கிறோம் ) 
.இவர்கள் 9பேரும் ஒருவர் பின் ஒருவராக  பட்டம் கட்டியவர்கள் அல்லர் .ஒரே காலகட்டத்தில் சேர நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்கள் .(சோழ நாட்டில் பங்காளிச் சண்டை நடந்தமையை புறநானூற்றில் காண்கிறோம்(பா.44,45,47).ஆனால் சேர நாட்டில் பங்காளிச்சண்டை நடந்ததாகத் தகவல் ஏதும் இல்லை .)
இந்த மன்னர்களைப் பாடிய 8புலவர்களும் ஒரே காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள் .
2ம் பத்தின் தலைவனாகிய இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் பரணர் பாடிய பாடல் புறநானூற்றில் உள்ளது.(பா.63)
பரணர் கடல் பிறக்கோட்டிய வேல் கெழு குட்டுவனை பதிற்றுப்பத்தில்  பாடுகிறார் .
பரணரும் 7ம்பத்திற்குரிய செல்வக்கடுங்கோ வாழியாதனைப் பாடிய கபிலரும் ,8ம்.பத்திற்குரிய பெருஞ்சேரலிரும்பொறையைப் பாடிய அரிசில் கிழாரும் ,9ம்.பத்திற்குரிய இளஞ்சேரலிரும்பொறையைப் பாடிய பெருங்குன் றூர்கிழாரும் ,ஒருசேர பேகனைப் பாடியுள்ளனர் .(புறம்.-141-147)
விடுபட்ட பல்யானைச்செல் கெழு குட்டுவன் இம்யவரம்பனின் தம்பி என்பது பதிகம் வாயிலாகப் புலப்படுகிறது .
3ம்.பத்திற்குரிய களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலும் ,6ம்பத்திற்குரிய ஆடுகோட்பாட்டுச் சேரலாதனும் இமயவரம்பனின்  ஒரு மனைவிக்குப்  (வேளாவிக்கோ பதுமன் மகள் )பிறந்தவர்கள் .கடல் பிறக்கோட்டிய வேல்கெழு குட்டுவன் இம்யவரம்பனின் இன்னொரு மனைவிக்குப் (சோழன் மகள் )பிறந்தவன்செல்வக்கடுங்கோவாழியாதனுக்கும்  வேளாவிக்கோமான் பெண் கொடுத்திருக்கிறான் .அவர்களுக்குப் பிறந்தவனே பெருஞ்சேரல் இரும்பொறை .அவர்களின் பேரனே இளஞ்சேரலிரும்பொறை .
 இவர்கள் அனைவரும் ஒரே காலகட்டத்தைச் சேர்ந்த 3தலைமுறையினர் ஆவர்என்பது வெளிப்படை .சேரர் குடியில் உதியன்மரபு ,இரும்பொறை மரபு என்ற இரண்டு மரபும் ஒத்த பெருமையுடன் இருந்தன.வேளாவிக்கோ இரண்டு மரபிற்கும் பெண் கொடுத்திருக்கிறான் .
இவர்களது காலத்தில் நிகழ்ந்த போர்களும் இவர்கள இருவரேனும் இணைந்து செய்தனவாகவே காணப்படுகின்றன.
இமயத்தில் விற்பொறித்த செய்தி இம்யவரம்பனுக்கும் ,கடல் பிறக்கோட்டியவேல்கெழு குட்டுவனுக்கும் ஒருசேர உரியதாகும்.(பதிற்று.-11,43)
கடற்கடம்பரை அடக்கிய செயலும் அப்படியே (11,17,20,41,45,46,48&அகம்.127,21)இரண்டுமே தந்தையும் மகனும் சேர்ந்து பெற்ற வெற்றிகள் .
கொங்கு வெற்றியும் உதியன் சேரலாதனுக்கும் ,பல்யானைச் செல்கெழு குட்டுவனுக்கும் ஒருங்கு உரியன.(3ம்பத்தின் பதிகம் ,பா.22,அகம்.169,233)  .    
உதியன் மரபினரோடு தொடர்பு பெறும் ஊர்கள் மேற்குக் கடற்கரை சார்ந்தனவாகவும் இரும்பொறை மரபோடு தொடர்புடைய ஊர்கள் எல்லாம் கொங்கு
பகுதி சார்ந்தனவாகவும் இருப்பதை அடுத்த மடலில் காணலாம்.

நன்றி. அடுத்த மடலுக்குக் காத்திருக்கிறேன். சங்ககாலச் சேர மன்னர்கள் கல்வெட்டுகள் எங்கே கிடைத்துள்ளன?
ஆன்பொருனை காவேரியோடு சேரும் ஊரின் அருகிலே.

 
 NG<ஆன்பொருநை என்று சுள்ளியம்பேரியாற்றைப் பறநானூறு சுட்டவில்லை. 
எந்தப் பாடலில் அவ்வாறு பொருள் கொள்கிறீர்கள்?>

புறநானூறு 29,31,32,36,39ஆகிய ஐந்து  பாடல்களும் சோழன் நலங்கிள்ளியும் ,கிள்ளிவளவனும் சேர்ந்து மேற்கரை வஞ்சியை முற்றுகையிட்டுப் பெற்ற வெற்றியைப் பாடுகின்றன .இப்பாடல்களில் வஞ்சி ஆன்பொருநைக் கரையில் இருந்தது தெளிவாகிறது .இந்த ஆன்பொருநை சுள்ளியம்பேரியாறு என்று ஆய்வாளர் பின்வருமாறு நிறுவுகின்றனர் 
பாலக்காட்டுக்கணவாய்க்குத்  தெற்கே இருந்த மேற்கு மலைத்தொடர்பொருப்பு என்று பெயர் பெற்றது .(எஸ் .கணபதிராமன் -பொருநை நாடு -ப.34)
பொருப்பிலிருந்து தோன்றி ஓடிய நதிகள் பொருநை என்னும் பொதுப்பெயரைப் பெற்றன .(அவ்வை .சு.துரைசாமிப்பிள்ளை -பண்டைநாளை ச் சேர மன்னர் வரலாறு -ப.20)
கிழக்கு நோக்கி ஓடுபவை பெண் நதிகள் ;மேற்கு நோக்கி  ஓடுபவை ஆண் நதிகள் என்னும் கொள்கையின்படி பொருப்பிலிருந்து மேற்கு நோக்கி ஓடிய சுள்ளி 
யம்பேரியாறு ஆன் எனும் முன்னொட்டைப் பெறும்.(கழகத் தமிழகராதி -ப.92&704)
இக்கருத்தை ஆய்வாளரும் உறுதி செய்துள்ளனர் .(எஸ்.கிருஷ்ணசாமி ஐயங்கார் -சேரன் வஞ்சி -ப.41&42)
கண்மணி   

பொருத்தமாகத் தெரியவில்லை. மேற்கே நோக்கி ஓடும் சுள்ளியம்பேராறு ஆண்பெயரிலா இருக்கிறது? சுள்ளி என்பது தாவரம்.

இதை எழுதினோர் ஆன் 'cattle', ஆண் 'male' இரண்டும் வெவ்வேறான சொற்கள் என்று தெரியாதவரா?

கா/கான்,  கோ/கோன், மா/மான், ஆ/ஆன் என -ன் விகுதி ஏற்ற சொற்கள்.
வடமொழியில் ம்ருகம் X பசு = ( wild X domesticated animal ),
அதுபோல, தமிழில் மா/மான் X ஆ/ஆன்.

ஆ/ஆன் மிகப் பழைய சொற்கள். ஆக்கள். ஆயர்கள். ஆயர்பாடி.
ஆன் 'cow' முற்றிலும் ஆண் 'male' என்பதில் இருந்து வேறான சொல்.

உலகிலே யூனிகார்ன் தொன்மக்கதை சிந்து சமவெளியில் பிறந்தது.
இதற்கு ஆதாரம் மரை+ஆ/ஆன் = மரையான் (மரை = antelope, ஆ/ஆன் = cow (gau in Sanskrit) )
மரையான்/மரையா = Nilgai (https://en.wikipedia.org/wiki/Nilgai )
மரையான் என்னும் நீலகாய் பற்றியும், அதன் சிந்து தொடர்பு பற்றியும் நிறைய எழுதியுள்ளேன்.
பலருக்கும் சங்க இலக்கியம் பேசும் மரையா/மரையான் என்றால் என்ன என்றே தெரியாது. 1920களில் கூட
நீலகிரி மலைப்பகுதிகளில் இருந்தது. இப்போது தென்னிந்தியாவில் அழிந்துவிட்டது.
மைசூர்க்காடுகளில் சில தவிர. மரவி/மராவு - கன்னடத்தில் பெயர். கோண்டுகள் (Gonds) என்னும்
வட இந்தியா, ஆந்திராவில் வாழும் திராவிடமொழி பேசும் மக்களின் ஒரு குலம் மரையானால் தான்.
மராவி என்ற அக் கூட்டத்தின் பெயர். கொங்கர்களில் பல குலங்கள் ஒவ்வொன்றும் விலங்கு, பறவை,
தாவரப் பெயர்களால் அமைந்தவை. இதே போல, அமெரிக்காவில் செவ்விந்தியர் கூட்டப் பெயர்களும்
உண்டு. அந்தந்த குலத்தார் தங்க: Totemic symbol பொருளை உண்ணார்.

---------

Kanmani> புறநானூறு 29,31,32,36,39ஆகிய ஐந்து  பாடல்களும் சோழன் நலங்கிள்ளியும் ,கிள்ளிவளவனும் சேர்ந்து மேற்கரை வஞ்சியை முற்றுகையிட்டுப் பெற்ற வெற்றியைப் பாடுகின்றன .

இல்லை. இப்பாடல்களில் உள்ள ஆன்பொருனை நதியும், அதன் கரையில் இருந்த வஞ்சியும் கொங்குநாட்டின் கிழக்குப் பகுதியில் இருக்கின்றன

தாமான்தோன்றி மலை:

தோன்றி மலை அரசன் தாமான்தோன்றிக்கோன். ஆனிரைகள் மேயும் நிலம் கொண்ட ஆறு 'தண்ணான்பொருநை' (தண் ஆன் பொருநை). அதுபோலத் தாவும் மான்கள் தோன்றும் மலை 'தாமான்தோன்றி'. இந்த மலையில் பாய்ந்த அருவி கொட்டுவதில்லை. 'இழும்' என வழிந்தோடியது.[1] இதனைக் கருவூருக்கு அருகிலுள்ள தான்தோன்றி மலை என அறிஞர்கள் கருதுகின்றனர். [2]

அடிக்குறிப்பு[தொகு]

  1. Jump up

    இழுமென இழிதரும் அருவி
    வான்தோய் உயர்சிமைத் தோன்றிக் கோவே. புறநானூறு 399

  2. Jump up ஔவை சு. துரைசாமிப்பிள்ளை புறநானூறு 399 உரை
 
----------------

புறநானூறு 387-ஆம் பாட்டில் செல்வக் கடுங்கோ வழியாதனைப் பாடியது.
அதனில், வஞ்சி, ஆன்பொருனை வருகிறது.

கடுங்கோ வாழியாதன் பற்றிய தமிழ் பிராமி கல்வெட்டுகள்
ஆன்பொருனை கரூரின் ஆறு, கொங்குநாடு என உறுதி
செய்துவிட்டன. ஆனால், அக்கல்வெட்டுகள் (தமிழ் பிராமி)
படிக்கப்படுவதன் முன்னமே ஆன்பொருனை நதி
கொங்குநாட்டில் உள்ள் நதி என தெரிந்துவிட்டது.

387. சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்
கடுங்கோவாழியாதன்


30செல்வக் கடுங்கோ வாழி யாதன்
 என்னாத் தெவ்வ ருயர்குடை பணித்திவண்

விடுவர் மாதோ நெடிதே நில்லாப்
புல்லிலே வஞ்சிப் புறமதி லலைக்கும்
கல்லென் பொருநை மணலினு மாங்கட்
35
பல்லுார் சுற்றிய கழனி
 எல்லாம் விளையு நெல்லினும் பலவே.

     திணையும் துறையு மவை. சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய 
செல்வக்கடுங்கோ வாழியாதனைக் குன்றுகட்பாலியாதனார் பாடியது.

புல்லிலை  வஞ்சிப் புறமதில் - அலைக்கும் இலையில்லாத 
வஞ்சியாகிய  வஞ்கிமாநகரின்  மதிற்புறத்தை யலைக்கும்; கல்லென் பொருதை 
மணலினும் - கல்லென்னும் ஒசையையுடைய ஆன் பொருதையாற்று மணலினும்; 


இது வஞ்சிமாநகர்க்கு வெளிப்படை
வஞ்சிநகர்க்கண்மையிலோடும்   பொருநை  ஆன்பொருநை    யெனப்படும். 
கருவூர்க்ல்வெட்டும், (A. R. No. 166 of 1939-7) அதனை வஞ்சி நகரென்றும், 
அமராவதியை ஆன்பொருந்த மென்றும் குறிக்கின்றன. “மண்ணாள் வேந்தே 
நின் வாணாட்கள், தண்ணான் பொருதை மணலினுஞ் சிறக்க” (சிலப். 28; 125-6) 
என அடிகளும் உரைப்பது காண்க.

எனவே, வஞ்சி மாநகர் என்பதும் ஆன்பொருநைக் கரை என்பதும்
கொங்குநாட்டிலே தான் உண்டு. ஸம்மர் பேலஸ் என்பது போல,
நான்கு வஞ்சியில் மூன்று சிறு வஞ்சிகளாக இருக்கலாம்.
உ-ம்: ஆன்பொருனைக் கரையிலே உள்ள தாராபுரத்துக்கும்
வஞ்சி என்ற பெயர். சீவக சிந்தாமணி உடையார் திருத்தக்கதேவர் ஊர்
(பார்க்க: புலவர் செ. இராசு, கொங்குநாட்டில் சமணம். இந்த முக்கியமான
முனைவர் ஆய்வேட்டை நான் அச்சிட உதவினேன். இப்பொழுது
இரண்டாம் பதிப்பு NCBH வெளியிட்டுவிட்டது.)

நான்கு வஞ்சிகளில் மாநகர் என்று சேரர்கள் தலைநகரம் 
எனக் கல்வட்டுகள் குறிப்பது ஒன்றுதான்.
சங்க காலச் சேரர்களின் ப்ராமிக் கல்வெட்டுகள் உறுதி செய்துவிட்டன.
சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் 
இரும்பொறை காலத்தே காவிரிக்கரையிலுள்ள கருவூர்க்கு வஞ்சியென்ற 
பெயரும், அமராவதி யாற்றுக்கு ஆன்பொருநை யென்ற பெயரும், அதற்கு 
வடகிழக்கில் காவிரியின் வடகரையிலுள்ள மூதூர்க்கு முசிறி யென்ற 
பெயரும் உண்டாயின. அதனை இவ்வுரைகாரர். எழுதிய “பண்டைநாளைச் 
சேரமன்னர்கள்” என்ற நூலிற் காண்க. கருவூர்க்கு உண்டான வஞ்சி 
யென்னும் பெயர் இப்போது வழக்கு வீழ்ந்தொழிந்து. இடைக்காலத்தும்
கருவூர் வஞ்சிநகரமென வழங்கினமை “வீரசோழ மண்டலத்து வெங்கால 
நாட்டுக் கருவூரான வஞ்சிமாநகர்” (A. R. No. 335 of 1927-28) 
என்பதனாலறியப்படும். தாராபுரமும் கொங்குவஞ்சி (A. R. No. 146 of 1920) 
எனப்படுவது கருவூரேறிய ஒள்வாட்கோப்பெருஞ் சேரலுக்கு முன்னொரு 
காலத்தில் உண்டாகியது. 

வீரசோழிய உரையில் ஆன்பொருனை நதி எங்கே ஓடுகிறது என விளக்கியுள்ளனர்
ஆன் - பசு5
ஆன்பயம்386
ஆன்பொருநை - ஆன்பொருந்தமென்னும் நதி , இது கருவூர்க்கருகில் ஓடுவது1136387


புறனானூறு 36,
36. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்

தண்ணான் பொருநை வெண்மணல் சிதைய - குளிர்ந்த ஆன் 
பொருந்தத்தினது வெளிய மணல் சிதற; கருங்கைக் கொல்லன் 
அரஞ்செய் அவ்வாய் நெடுங்கைநவியம் பாய்தலின் - வலிய 
கையையுடைய கொல்லன் அரத்தாற் கூர்மை செய்யப்பட்ட அழகிய 
வாயினை யுடைத்தாகிய நெடிய கையையுடைய கோடாலி 
வெட்டுதலான்


உரை: ஆன்பொருந்தம்  இப்போது அமராவதி யென வழங்குகிறது. 

N. Ganesan

unread,
Oct 31, 2017, 11:36:02 AM10/31/17
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, panb...@googlegroups.com, Erode Tamilanban Erode Tamilanban, sirpi balasubramaniam, Iravatham Mahadevan, Ramachandran Nagaswamy, Karthikeya Sivasenapathty, Dr.Krishnaswamy Nachimuthu, S. V. Shanmukam, mozhitrust
வஞ்சி மாநகர் என்று சங்க காலத்திலே சேர மகாராசர்களின் தலைநகராக ஆன்பொருனைக் கரையிலே (அமராவதி ஆறு) இருந்தது வஞ்சிக் கருவூர் என்பது தெளிவு.
அங்கே அரண்மனையில் வளர்ந்தவர் இளங்கோ அடிகள். அவர் கர்நாடகத்தில் இன்றுள்ள, அவர்காலத்தில் வடகொங்காக இருந்த காவேரி பிறக்கும்
சையமலையிலே தம் சமண சமயத்தை குரவர்களிடம் கற்றிருக்கவேண்டும். தமிழில் கர்நாடகாவில் வழங்கி வந்த காவதம்/காதம் என்ற சொற்களை
காவேரி பிறக்கும் நாட்டைப் பாடும்போது அறிமுகம் செய்கிறார். இது பற்றி நான் எழுதிய கட்டுரை ஓம்சக்தி தீபாவளி மலர் 2017-ல் அச்சாகியுள்ளது.
உங்கள் சிவகாசியில் தான் அச்சானது.

முழுக் கட்டுரையும் கரந்தை ஜெயக்குமார் வெளியிட்டுள்ளார்:


வாழ்த்துக்காதையில் தம்குலத்தை தொல்குலம் என்கிறார் இளங்கோ அடிகள்:
6. வாழ்த்துக் காதை



14.

  

மலையரையன் பெற்ற மடப்பாவை தன்னை

நிலவரசர் நீண்முடிமேல் ஏற்றினான் வாழியரோ,


வாழியரோ வாழி வருபுனல்நீர்த் தண்பொருநை

சூழ்தரும் வஞ்சியார் கோமான்றன் தொல்குலமே;



14
உரை
14

''மலையரையன் . . . தொல்குலமே''

        மலையரையன் பெற்ற மடப்பாவை தன்னை நிலவரசர் நீண்முடி மேல் ஏற்றினான் வாழியரோ-மலையரனாகிய இமவான் பெற்ற இளமை பொருந்திய பாவையை நிலமாளும் மன்னரது நெடிய முடியின்கண் சுமத்தினோன் நீடு வாழ்க, வாழியரோ வாழி வருபுனல்நீர் ஆன்பொருநை சூழ்தரும் வஞ்சியார் கோமான் றன் தொல்குலமே - அறாது ஒழுகும் நீர்மையினையுடைய நீர் மிக்க ஆன் பொருந்தம் சூழ்ந்த வஞ்சி நகரத்தார் தலைவனது பழங்குலம் நீடுழி வாழ்வதாக;

        
இமயமலைக் கற்கொணர்ந்து படிவஞ் செய்தமையான், ''மலை யரையன் பெற்ற மடப்பாவை'' என்றார். நிலவரசர் - கனகனும் விசயனும்.


N. Ganesan

unread,
Nov 3, 2017, 12:15:58 AM11/3/17
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, panb...@googlegroups.com

வஞ்சி - தாவரங்கள்
--------------

(1) வஞ்சி மரம் : Salix tetrasperma. (Gamble (1928), Lushington (1915) )
Also, known as Indian Willow tree.
பூக்கள் முதிரும்போது வாகை மலர்கள் போல வெண்மையும்
துய் பஞ்சு ஆகவும் இருக்கும். இதனை வீரர்கள் சூடினர். வஞ்சித்துறை.
வஞ்சி மாநகரை ‘வாடாவஞ்சி’ என்கிறார் இளங்கோ அடிகள்.

(2)  ஆத்து வஞ்சி, நீர்வஞ்சி Ochreinauclea Missionis

#GSCC Fieldwork Fund. JNTBGRI collecting seed of Ochreinauclea missionis. Endemic to the Western Ghats and Vulnerable on the IUCN Red List

(2) வஞ்சி - புதர் (பிரம்பு) = வானீரம்
புதலும், மங்கையும், ஓர்பதியும், மாற்றார் குடையும் வஞ்சி ஆகும் - பிங்கலந்தை.

(3) வஞ்சிக் கொடி, வஞ்சுளம். 
வஞ்சி அம்மன் - மதுரைக்கு மதுராபதி அம்மன், புகாருக்கு சம்பாபதி (சம்பா - சண்பை) போல,
வஞ்சி மாநகருக்கு வஞ்சியம்மன். இன்றும் உள்ள கோயில். முந்தைய தலைமுறை
வரை, கோவை, ஈரோட்டில் பல பெண்களுக்கும் வஞ்சிக்கொடி என்ற பெயர் உண்டு.
‘கொஞ்சநாள் பொறு தலைவா, வஞ்சிக்கொடி இங்கு வருவா’

வஞ்சி Tinospora Cardifolia, Miers.; Menispermaceae. 

வஞ்சிக் கொடி தான் வஞ்சிமாநகர் (கருவூர்) ஸ்தல ஸ்தாவரம் ஆகும்:
தலமர சிறப்புகள்

தேவர் திங்களும் பாம்புஞ் சென்னியில் 
மேவர் மும்மதி லெய்த வில்லியர் 
காவ லர்கரு வூரு ளானிலை 
மூவ ராகிய மொய்ம்ப ரல்லரே. - திருஞானசம்பந்தர்.

திருக்கருவூர் ஆனிலை எனும் தலத்தில் தலவிருட்சமாக விளங்குவது வஞ்சியாகும். இது சீந்தில் கொடி, ஆகாசவல்லி, அமிர்தவல்லி, சோமவல்லி, சாகாமூலி என்ற பல பெயர்களாலும் குறிப்பிடப்படுகின்றது. இஃது இதய வடிவ பசிய இலைகளையும் தக்கையான சாறுள்ள தண்டுகளையும், காகிதம் போன்ற மெல்லிய புறத்தோலையும் உடைய ஏறு கொடி இனமாகும். கொடியின் தரைத் தொடர்பு துண்டிக்கப்பட்டால் கொடியிலிருந்து மெல்லிய விழுதுகள் வளர்ந்து தரையில் ஊன்றி கொடி தழைக்கும் தன்மை கொண்டது. இதன் இலை, கொடி, வேர் முதலியன மருத்துவக் குணங்கொண்டு விளங்குகின்றது.. உடல் தேற்றி உரமாக்குதல், முறைநோய் நீக்குதல், பசி மிகுத்தல் முதலிய மருத்துவக் குணமுடையது.

வஞ்சிக்கொடி:
கொழுநனைத் தழுவும் கொடி போல,

வஞ்சிக்கொடி என்பது அமிர்தவல்லி எனப்படும் Tinospora_cordifolia தான்,
பிரப்பங்கொடி (Calamus_rotang, ரத்தன்) என்னும் முள்புதர் அல்ல என்று காட்டுவது
வஞ்சி மாநகர் ஆன்நிலை அப்பர் கோவிலின் தலத் தாவரம் ஆகும்.

வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா:
வஞ்சி என்னும் பாவினம் வஞ்சிக்கொடிபோல வளைந்து வளைந்து செல்லுமோ?

MTL:
"நாகினி nākiṉi, n. < nāginī. 1. Betel; வெற்றிலை. (மலை.) 2. Common rattan of South India. See வஞ்சிக்கொடி. (மலை.)"
நாகம் போல வளைந்து, வளைந்து செல்வது வெற்றிலையும், அமிர்தவல்லி (வஞ்சிக்கொடி = Tinospora_cordifolia) ஆகும்.
Madras Tamil Lexicon giving nAgini as Common rattan of South India is wrong.
வெற்றிலையும், அமிர்தவல்லிக் கொடியிலையும் ஒப்புமை காண்க.

நா. கணேசன்


kanmani tamil

unread,
Nov 3, 2017, 1:54:11 AM11/3/17
to mintamil
<வஞ்சி என்னும் பாவினம் வஞ்சிக்கொடிபோல வளைந்து வளைந்து செல்லுமோ?>
வஞ்சிப்பா தூங்கலோசை உடையது .அதாவது தொங்குகின்ற ஊசல் ஆடுவது போன்று தொடுக்கும் பா வஞ்சிப்பா .
கண்மணி 

kanmani tamil

unread,
Nov 3, 2017, 4:12:05 AM11/3/17
to mintamil

<- இன்றைய அமராவதி ஆறு. அதன் கரையில் இருப்பது வஞ்சி மாநகர்.
சேரர்களின் தலைநகர் என்பதை வஞ்சி (கருவூரில்) கிடைத்த சேர மன்னர்கள்
கல்வெட்டுகளும், நாணயங்களும் நிரூபித்துவிட்டன.> 
உண்மை .இன்றைய அமராவதி ஆற்றின் கரையில் சங்ககாலத்தில் ஒரு சேரன் தலைநகர் இருந்தது.ஆனால் இதுமட்டும் சேரன் தலைநகர் அன்று .சேரநாட்டின் கூட்டாட்சி முறையைப் புரிந்து கொண்டபிறகு மற்றவற்றைப் பேசலாம்.இதற்கு முன்னர் நான் அனுப்பிய மடல்கள் மூலம் தெளிவான செய்திகளைத் தொகுத்துவிட்டு முன்னேறிச் செல்லலாம் .
      1)தி.வை.சதாசிவ பண்டாரத்தார் எடுத்துக்காட்டும் செப்பேட்டுத்தொடர்கள் வாயிலாக வரலாற்றுக்காலத்தில் பலவஞ்சிகள் இருந்தமை தெளிவு .
      2)மேனாட்டு நிலவியலார் கூற்றின்படி 'சேரபோத்ராஸ் ' என்று சேர மன்னர் அழைக்கப்படுவதால் சேரபுத்திரர்கள் ஆண்டநாடு சேரநாடு என்றாகிறது.
      3)பதிற்றுப்பத்து கூறும் சேர மன்னர் பட்டியல் (10--1=9)அவர்களை ஒரே காலகட்டத்தைச் சேர்ந்தவராகக் காட்டுகிறது .
      4)இவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தத்தா ,மகன்கள் ,பேரன்கள் ,--அண்ணன்தம்பிகள் ,ஒன்றுவிட்ட சித்தப்பா மக்கள் ,பெரியப்பா-மக்கள் .
      5)இவர்கள் செய்த போர்களிலும் ஒன்றுக்கு மேற்பட்டோர் சேர்ந்து ஈடுபட்டு வெற்றி பெற்றுள்ளனர

 இனி இவர்கள் சேர நாட்டின்எந்தெந்த பகுதிகளில் ஆட்சிப் பொறுப்பு ஏற்றார்கள்;போர் செய்தார்கள்  என்று பார்ப்போம் . 
     1ம்.பத்து-கொள்ளுத்தாத்தா -உதியன் சேரலாதனுக்குரியது.-நமக்குக் கிடைக்கவில்லை.-அகப்பாவை போரில் வென்று பெற்றான் (அகம்.169,233) 
     2ம்.பத்து -இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் -மரந்தை ,வஞ்சி(மூதூர்)- அகம்-127,396,பதிற்.15&2ம்பத்தின் .பதிகம் 
     3ம்.பத்து- பல்யானைச் செல்கெழு குட்டுவன் -தொண்டி,செருப்புமலை&மூதூர்-மேற்கரை நாட்டின் கிழக்கே இருந்த அகப்பாவை போரிட்டு வென்று பெற்றான்.(3ம்.பத்தின் பதிகம்,      பா.21,22,30,அகம்.169,233,290&ஐங்.178)
     4ம்.பத்து-களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் -தொன்னகர் (பதிற்.31)
     5ம்.பத்து -கடல்பிறக்கோட்டிய வேல்கெழு குட்டுவன் -முசிறி, மரந்தை& தொன்னகர்(புறம் 343,அகம்.376,குறுந்.34,பதிற்.47)
     6ம்.பத்து -ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் -தொண்டி,நறவு &மூதூர் (6ம்.பத்தின் பதிகம் ,பா.60&53)
     7ம்.பத்து -செல்வக்கடுங்கோ வாழியாதன் -கொங்கிலுள்ள-கிழக்கிலுள்ள  கொடுமணம்,பந்தர்-போரிட்டுப்  பெற்ற வெற்றி .(பதிற்.67)
     8ம்.பத்து -பெருஞ்சேரலிரும்பொறை -கொடுமணம் ,பந்தர்,கிழக்கே உள்ள தகடூரைப் போரிட்டுப் பெறுகிறான் (பதிற்.74&78)   
     9ம்.பத்து -இளஞ்சேரலிரும்பொறை -தனிப்பட எந்த ஊருடனும்தொடர்புபடுத்தப்படவில்லை.(செல்லப்பிள்ளை!)   
    10ம்.பத்து -கிடைக்கவில்லை.(ஊகத்தின் அடிப்படையில் சேரமான் கணைக்கால் இரும்பொறை எனலாம்.(தகடூருக்கும் கிழக்கே முன்னறிச் செய்த போரில் சோழ மன்னனால் சிறை பிடிக்கப்பட்டான் )  
இந்தக் குடும்ப உறவுகளையும் சேர ,கொங்கு நாடுகளின் நிலவியலையும் நன்கு புரிந்து கொண்டால் சங்க காலத்தில் கொங்குக் கரூர் வஞ்சி மட்டுமில்லாமல் இன்னொரு வஞ்சியும் இருந்தமை புரியும்.
சிறிது இடைவேளைக்குப் பிறகு தொடருவோம்.
கண்மணி 


,,









 

2ம்.பத்து -     















Message has been deleted

N. Ganesan

unread,
Nov 3, 2017, 9:17:30 AM11/3/17
to மின்தமிழ்
2017-11-03 1:11 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:

<- இன்றைய அமராவதி ஆறு. அதன் கரையில் இருப்பது வஞ்சி மாநகர்.
சேரர்களின் தலைநகர் என்பதை வஞ்சி (கருவூரில்) கிடைத்த சேர மன்னர்கள்
கல்வெட்டுகளும், நாணயங்களும் நிரூபித்துவிட்டன.> 
உண்மை .இன்றைய அமராவதி ஆற்றின் கரையில் சங்ககாலத்தில் ஒரு சேரன் தலைநகர் இருந்தது.ஆனால் இதுமட்டும் சேரன் தலைநகர் அன்று .சேரநாட்டின் கூட்டாட்சி முறையைப் புரிந்து கொண்டபிறகு மற்றவற்றைப் பேசலாம்.இதற்கு முன்னர் நான் அனுப்பிய மடல்கள் மூலம் தெளிவான செய்திகளைத் தொகுத்துவிட்டு முன்னேறிச் செல்லலாம் .
      1)தி.வை.சதாசிவ பண்டாரத்தார் எடுத்துக்காட்டும் செப்பேட்டுத்தொடர்கள் வாயிலாக வரலாற்றுக்காலத்தில் பலவஞ்சிகள் இருந்தமை தெளிவு .

நன்றி. 

ஆன்பொருனை/ஆன்பொருந்தம், அதன் கரையில் உள்ள வஞ்சி - கொங்குநாட்டு ஊர் என்பது பார்த்தோம்.
ஆன்பொருனை என்று எந்த ஆறும் கேரளாவில் இல்லை. ஆன்பொருனைக் கரையிலே உள்ளது வஞ்சி மாநகரம்
(கல்வெட்டுகள் கொடுத்துள்ளார் ஔவை துரைசாமி.)

கொடுங்கோளூர், மாகோதைப் பட்டினம் முசிறிப் பட்டினம் அருகே உள்ளது அஞ்சைக்களம்.
தேவாரம் தமிழ்மரபில் அஞ்சைக்களம் என்கிறது. மலையாளநாட்டார் அஞ்ஞைக்களம். (தேங்காய் - தேங்ஙா, ஊஞ்சல் - ஊஞ்ஞல், ... போல).
மஞ்ஞை/மஞ்சை > அஞ்ஞை/அஞ்சை (மலர் > அலர், மாமர- > ஆம்ர, ...) மயில் போலும் தலைவி உடன்போக்குச் செய்தாளாக
அவளை அஞ்ஞை என்கிற சங்கப் பாடல்கள் உண்டு. அஞ்சைக்களம் வஞ்சி என்றோ, ஆன்பொருனை என்றோ சங்க காலத்தில்
கூற சங்க இலக்கியச் சான்றோ, தமிழ் ப்ராமிக் கல்வெட்டுகளோ ஏதுமில்லை.

பண்டாரத்தார் காட்டும் செப்பேட்டுத் தொடரைப் பார்க்கலாம். பின்னர்.

நா. கணேசன்
 
      2)மேனாட்டு நிலவியலார் கூற்றின்படி 'சேரபோத்ராஸ் ' என்று சேர மன்னர் அழைக்கப்படுவதால் சேரபுத்திரர்கள் ஆண்டநாடு சேரநாடு என்றாகிறது.

தேமொழி

unread,
Nov 3, 2017, 11:06:55 PM11/3/17
to மின்தமிழ்
வஞ்சிமாநகரம் 
(சரித்திர நாவல்)
ஆசிரியர்: நா. பார்த்தசாரதி

N. Ganesan

unread,
Nov 4, 2017, 2:18:43 PM11/4/17
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com

    வஞ்சிமாநகரம் (சரித்திர நாவல்)

    1. மகோதைக் கரையிலே ...

    பூர்ணவாகினி என்று சிறப்பித்துச் சொல்லப்படும் பொன்வானியாறு கடலொடு கலக்குமிடம், அன்று அந்த முன்னிரவு வேளையில் அழகு மிகுந்து தோன்றியது. பெளர்ணமிக்கு மறுநாளாகையினால் சிறிது காலந்தாழ்ந்து உதித்தாலும் நிலாவின் பொலிவு அந்த இடத்தின் பொலிவுக்கு மெருகு ஊட்டியது. பொன்வானியாற்றின் செந்நிற நீரும் மகோதைக் கடலின் நீல அலைகளும் கலக்குமிடம் ஆண்மையும், பெண்மையுமாகிய குணங்களே சந்தித்துக் கலப்பது போல் வனப்பு நிறைந்ததாயிருந்தது. கடலை ஆண்மையாகவும், நதியைப் பெண்மையாகவும் கற்பனை செய்யும் எண்ணத்தைக் கூட அந்தச் சங்கமத்துறையே படைத்துக் கொடுத்தது.

அடர்ந்த மரக்கூட்டங்களுக்கு அப்பால் பொன்வானியாற்றின் கரையோரமாகவே சென்றால் சேரநாட்டின் வீரத் தலைநகரமாகிய கொடுங்கோளுரை அடைந்து விடலாம். கரையோரமாகத் தென்மேற்கே பத்து நாழிகைப் பயணத்தில் வஞ்சிமாநகரம் இருந்தது. ”

 
பொன்வானி ஆறு கடலில் கலக்கும் கழிமுகம் பொன்னானி. இது ஓர் கடற்கரைத்தாலூக்கா. பொன்வானி/பொன்னானி ஆற்றுக்கு வடமொழி நூல்களில்
பூர்ணவாஹினீ என்று பெயர். இந்தப் பூர்ணா நதிக்கரையிலே தான் ஆதி சங்கரர் 8-ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிறந்தார். 
இப்போது பாரதப்புழா ஆறு என்று இந்தப் பெரிய ஆறு அழைக்கப்படுகிறது. பொள்ளாச்சி, உடுமலை அருகே ஆனைமலைத் தொடர்களில் தோன்றி, பாலக்காட்டுக்
கணவாய்க்கு நட்டநடுவே ஓடி பொள்ளாச்சி (பொழில்வாய்ச்சி), பாலைகாடு, ஷொரனூர், ... பாய்ந்து வளம்பெருக்கி பொன்னானியை அடைந்து
கடலில் கலக்கிறது. https://en.wikipedia.org/wiki/Bharathappuzha
பூர்ணா (பொன்வானி/பொன்னானி = பூர்ணவாஹிநீ) கரையிலே
கரிஞ்சம் எனப்படும் க்ரௌஞ்சம் (அன்றில்) பறவைகள்: http://markazhi.com/?p=3656
Inline image 1


ஆனால்,
மகோதை, அஞ்சைக்களம், முசிறி என்னும் பழங்கால ஊர்களுக்கு
அருகே ஓடுவது சுள்ளியம்பேரியாறு. வடமொழி நூல்களிலே 
சூர்ணீ என்று அழைக்கப்படும் ஆறு. 
பரம்பிக்குளம் ஆறு இந்த சாலக்குடி ஆற்றின் உபநதி தான்.

சுள்ளியம்பேரியாறு = https://en.wikipedia.org/wiki/Periyar_(river) இன்று பெரியாறு. 
சுள்ளி என்பது ஒருவகைச் சூரல் புதை. நொய்யல் ஓடும் கரையிலே
சூரல் கொடி இருப்பதால் சூரலூர் (=சூலூர்) ஆனது. 
சுள்ளியாற்றை சூர்ணீ என்பது அதனால் தான்.
கொங்குவேளிர், பெருங்கதை:

வள்ளியும் வகுந்தும் சுள்ளியும் சூரலும் - உஞ்ஞை 46/276
சுள்ளியும் சூரலும் வள்ளியும் மரலும் - உஞ்ஞை 50/27

இதே சுள்ளிச் செடிகள் இருப்பதால், வடக்கே வங்காளத்திலும்
சூர்ணி ஆறு உண்டு: https://en.wikipedia.org/wiki/Churni_River


முசிரிப் பட்டினம்: (மகோதை, அஞ்ஞைக்களம்/அஞ்சைக்களம்):




மகோதை, முசிறி, அஞ்சைக்களம் என்னும் பழைய ஊர்கள், சூர்ணீ (சுள்ளியம்பேரியாறு) கரையிலே இருப்பவை.

------------------------------------------

சங்க கால வஞ்சி மாநகரம் ஆன்பொருனைக் கரையிலே.
கருவூர் = (அகநகர், downtown). 

முசிறி, மகோதை, அஞ்சைக்களம் பகுதியில்
வஞ்சி மாநகரம் இருந்ததாக எந்த சங்க இலக்கியமோ,
தமிழ் (அல்லது, வடமொழி) கல்வெட்டுக்களோ இல்லை.

சில சான்றுகள்:

கொங்கர்கோன் ... கொல்லி காவலன் - குலசேகர ஆழ்வார்

சேரர் கொங்கு வைகாவூர் நன்னாடு - அருணகிரிநாதர்

பத்தாம் நூற்றாண்டில் பாண்டியன் இராஜசிம்மன்
சின்னமனூர்ப் பெரியதாமிரப் பட்டயம்:

கொடும்பைமா நகர்நிறைந்த குரைகடற் பெருந்தானை
இடும்பையுற் றிரியத்தன் இரணோதய மேற்கொண்டும்
புனற்பொன்னி வடகரையிற் பொழில்புடைசூழ் மதில்வஞ்சி
கனற்படவிழித் தெதிர்ந்தவீரர் கவந்தமாடக் கண்சிவந்தும்

காவிரிக்கு அக்கரையில் நின்று சேரனது தலைநகரைப்
தீப்பட நோக்கினான் பாண்டியன் இராசசிம்மன்.

----

வீரசோழ மண்டலத்து வெங்காலநாட்டு
வஞ்சி மாநகரமான கருவூர்
    - கொங்குச்சேரன் குலோத்துங்கசோழதேவன், 13-ஆம் ஆண்டு.
    (M.E.R. 335 of 19278)

"வீரகேரள மண்டலத்துத் திருவஞ்சிமாநகரமான
 முடிவழங்கு சோழபுரத்து” (Mackenzie's Misc. கருவூர்ச் சாஸனங்கள்)
“வஞ்சி ஸ்ரீவைஷ்ணவரோம்” (கருவூர் பெருமாள் கோயில் கல்வெட்டு)
“கொங்கு வஞ்சி”  (Epigraphica India,Vol. xvii, p. 298)
“கருவூர் வஞ்சி மாநகரமான முடிவழங்கு சோழபுரத்து” (பிரான்மலைச் சாஸனம், SII, Vol. viii, No. 441)

சங்க காலத்தின் பின்னரும், முசிரி, முயிரிக்கோடு என்று தான் கல்வெட்டுக்கள் இருக்கின்றன.
முயிரிக்கோட்டு அஞ்சுவண்ணம், 
‘கோசிரீ பாற்கர இரவிவர்மன் திருவடி ... முயிரிக்கோட்டு இருந்தருளிய நாள்’ (Ep. Ind. iii, p. 68)
வஞ்சி, கருவூர் என்றெல்லாம் ஒரு கல்வெட்டும் அங்கே இல்லை. ஆவணங்களும் இல்லை.
மகோதைப் பட்டினத்தின் கோயில் அஞ்சைக்களம் (தேவாரம்).

சேரர் வஞ்சி (கரூர்), மகோதையும் வெவ்வேறு ஊர்கள் எனப் பிற்கால இலக்கியங்களும்
தெளிவுறுத்துகின்றன:
“வஞ்சியை விட்டகல் அஞ்சிய கோதை மகோதை” (தக்கயாகப் பரணி)

“வஞ்சியும் உறந்தையும் மரந்தையும் மகோதையும்” (குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்)

“வஞ்சிக்கும் ஓதை மகோதைக்கும் மாமதுரை இஞ்சிக்கும்” (சங்கர சோழன் உலா).


ஆன்பொருநைக் கரையில் வஞ்சி மாநகரம்:
பார்க்க: சங்க இலக்கியங்கள்.
Inline image 2

நா. கணேசன்

தேமொழி

unread,
Nov 4, 2017, 4:45:02 PM11/4/17
to மின்தமிழ்


"சங்க கால வஞ்சி மாநகரம் ஆன்பொருனைக் (அமராவதி) கரையின்  கருவூர் (அகநகர், downtown)"

என்பதை அப்படியே வைத்துக் கொள்வோம். 

அடுத்து "சின்னமனூர்ப் பெரியதாமிரப் பட்டயம்" செய்தியுடன் இது மாறுபடுகிறதல்லவா?


"புனற்பொன்னி வடகரையிற் பொழில்புடைசூழ் மதில்வஞ்சி"
(பத்தாம் நூற்றாண்டில் பாண்டியன் இராஜசிம்மன் சின்னமனூர்ப் பெரியதாமிரப் பட்டயம்)

காவிரிக்கு அக்கரையில் நின்று சேரனது தலைநகரைப் தீப்பட நோக்கினான் பாண்டியன் இராசசிம்மன் என்கிறீர்கள் 
இதனை 
காவிரிக்கு "தென்"கரையில் நின்று "புனற்பொன்னி வடகரையிற் பொழில்புடைசூழ் மதில்வஞ்சி" சேரனது தலைநகரைப் தீப்பட நோக்கினான் பாண்டியன் இராசசிம்மன் என்ற பொருள்  வருகிறது.

(இன்றைய) கரூர் இருப்பது காவிரியின் தென்கரையில்.
அது காவிரியின் துணையாறான   அமராவதியின் தென் கரையிலோ வடகரையிலோ இருந்தாலும் கூட இன்றைய  கரூர் இருப்பது காவிரியின் தென் கரையில்.


பாண்டியன் இராசசிம்மன் முறைத்துப் பார்த்தது காவிரியின் வடகரையில் இருக்கும் வஞ்சி 

வஞ்சி என்பது (பட்டினம். . .  பாக்கம் போல நிலப்பகுதியின் பண்பைக் குறிப்பது போல) சேரர் நகருக்கு  குறிப்பிட்ட ஒரு பொதுப் பெயராகவும் இருக்கலாமோ என்று தோன்றுகிறது. 
வளநாடு என்றால் சோழருக்கு உரிய பகுதி என்பது போல வஞ்சி என்றால் சேரரின் பகுதி என்ற பொதுவான(generic) குறிப்பாக இருக்கலாமோ என் எண்ணுகிறேன். 

.... தேமொழி

தேமொழி

unread,
Nov 4, 2017, 4:49:13 PM11/4/17
to மின்தமிழ்


உதவிக்கு ஒரு படம்.




"சங்க கால வஞ்சி மாநகரம் ஆன்பொருனை (அமராவதி) கரையின்  கருவூர் (அகநகர், downtown)"

என்பதை அப்படியே வைத்துக் கொள்வோம். 

அடுத்து "சின்னமனூர்ப் பெரியதாமிரப் பட்டயம்" செய்தியுடன் இது மாறுபடுகிறதல்லவா?


"புனற்பொன்னி வடகரையிற் பொழில்புடைசூழ் மதில்வஞ்சி"
(பத்தாம் நூற்றாண்டில் பாண்டியன் இராஜசிம்மன் சின்னமனூர்ப் பெரியதாமிரப் பட்டயம்)

காவிரிக்கு அக்கரையில் நின்று சேரனது தலைநகரைப் தீப்பட நோக்கினான் பாண்டியன் இராசசிம்மன் என்கிறீர்கள் 
இதனை 
காவிரிக்கு "தென்"கரையில் நின்று "புனற்பொன்னி வடகரையிற் பொழில்புடைசூழ் மதில்வஞ்சி" சேரனது தலைநகரைப் தீப்பட நோக்கினான் பாண்டியன் இராசசிம்மன் என்ற பொருள்  வருகிறது.

(இன்றைய) கரூர் இருப்பது காவிரியின் தென்கரையில்.
அது காவிரியின் துணையாறான   அமராவதியின் தென் கரையிலோ வடகரையிலோ இருந்தாலும் கூட இன்றைய  கரூர் இருப்பது காவிரியின் தென் கரையில்.


பாண்டியன் இராசசிம்மன் முறைத்துப் பார்த்தது காவிரியின் வடகரையில் இருக்கும் வஞ்சி 

வஞ்சி என்பது (பட்டினம். . .  பாக்கம் போல நிலப்பகுதியின் பண்பைக் குறிப்பது போல) சேரர் நகருக்கு  குறிப்பிட்ட ஒரு பொதுப் பெயராகவும் இருக்கலாமோ என்று தோன்றுகிறது. 
வளநாடு என்றால் சோழருக்கு உரிய பகுதி என்பது போல வஞ்சி என்றால் சேரரின் பகுதி என்ற பொதுவான(generic) குறிப்பாக இருக்கலாமோ என் எண்ணுகிறேன். 


..... தேமொழி

N. Ganesan

unread,
Nov 4, 2017, 5:38:53 PM11/4/17
to மின்தமிழ்
கட்டுபுதூர் அல்ல. காட்டுப்புதூர். செல்வன் எழுதுவதுபோல, சந்தி இல்லாமல் எழுதுகிறது கூகுள்.



--

N. Ganesan

unread,
Nov 4, 2017, 5:43:38 PM11/4/17
to மின்தமிழ்
2017-11-04 13:45 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:


"சங்க கால வஞ்சி மாநகரம் ஆன்பொருனைக் (அமராவதி) கரையின்  கருவூர் (அகநகர், downtown)"

என்பதை அப்படியே வைத்துக் கொள்வோம். 

அடுத்து "சின்னமனூர்ப் பெரியதாமிரப் பட்டயம்" செய்தியுடன் இது மாறுபடுகிறதல்லவா?


"புனற்பொன்னி வடகரையிற் பொழில்புடைசூழ் மதில்வஞ்சி"
(பத்தாம் நூற்றாண்டில் பாண்டியன் இராஜசிம்மன் சின்னமனூர்ப் பெரியதாமிரப் பட்டயம்)

காவிரிக்கு அக்கரையில் நின்று சேரனது தலைநகரைப் தீப்பட நோக்கினான் பாண்டியன் இராசசிம்மன் என்கிறீர்கள் 
இதனை 
காவிரிக்கு "தென்"கரையில் நின்று "புனற்பொன்னி வடகரையிற் பொழில்புடைசூழ் மதில்வஞ்சி" சேரனது தலைநகரைப் தீப்பட நோக்கினான் பாண்டியன் இராசசிம்மன் என்ற பொருள்  வருகிறது.

(இன்றைய) கரூர் இருப்பது காவிரியின் தென்கரையில்.
அது காவிரியின் துணையாறான   அமராவதியின் தென் கரையிலோ வடகரையிலோ இருந்தாலும் கூட இன்றைய  கரூர் இருப்பது காவிரியின் தென் கரையில்.


பாண்டியன் இராசசிம்மன் முறைத்துப் பார்த்தது காவிரியின் வடகரையில் இருக்கும் வஞ்சி 

வஞ்சி என்பது (பட்டினம். . .  பாக்கம் போல நிலப்பகுதியின் பண்பைக் குறிப்பது போல) சேரர் நகருக்கு  குறிப்பிட்ட ஒரு பொதுப் பெயராகவும் இருக்கலாமோ என்று தோன்றுகிறது. 
வளநாடு என்றால் சோழருக்கு உரிய பகுதி என்பது போல வஞ்சி என்றால் சேரரின் பகுதி என்ற பொதுவான(generic) குறிப்பாக இருக்கலாமோ என் எண்ணுகிறேன். 


வளநாடு என்பது இப்போதைய தாலூக்கா/வட்டம் போல ஒரு பிரிவு. ஆனால், வஞ்சி என்பது ஓர் ஊர்.
வஞ்சி மாநகரம் = ஆன்பொருனை (அமராவதி) கரையில் அமைந்த நகரம்.

உபசார வழக்காய் இன்னும் சில ஊர்களை, மிகப் பிற்காலத்தில் வஞ்சி என்றல் உண்டு.
உ-ம்: நாலு வஞ்சி. அவர்றில் ஒன்று: சீவக சிந்தாமணி ஆசிரியர் திருத்தக்க தேவரின் தாராபுரம்.
அதுவும் ஆன்பொருனைக் கரையிலே அமைந்த ஊரே.

வஞ்சி - வளநாடு, தாலூக்கா என்ற பொருளில் கல்வெட்டோ, ஆவணமோ காணோம்.

நா. கணேசன்


 
.... தேமொழி

--

தேமொழி

unread,
Nov 4, 2017, 5:51:38 PM11/4/17
to மின்தமிழ்


On Saturday, November 4, 2017 at 2:38:53 PM UTC-7, N. Ganesan wrote:
கட்டுபுதூர் அல்ல. காட்டுப்புதூர். செல்வன் எழுதுவதுபோல, சந்தி இல்லாமல் எழுதுகிறது கூகுள்.

செல்வனை நான் மட்டுமே வம்புக்கு இழுக்கலாம்  என்பதுதான் குழுமத்தின்  எழுதப்படாத சட்டம். 

தேமொழி

unread,
Nov 4, 2017, 5:54:39 PM11/4/17
to மின்தமிழ்


On Saturday, November 4, 2017 at 2:43:38 PM UTC-7, N. Ganesan wrote:


2017-11-04 13:45 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:


"சங்க கால வஞ்சி மாநகரம் ஆன்பொருனைக் (அமராவதி) கரையின்  கருவூர் (அகநகர், downtown)"

என்பதை அப்படியே வைத்துக் கொள்வோம். 

அடுத்து "சின்னமனூர்ப் பெரியதாமிரப் பட்டயம்" செய்தியுடன் இது மாறுபடுகிறதல்லவா?


"புனற்பொன்னி வடகரையிற் பொழில்புடைசூழ் மதில்வஞ்சி"
(பத்தாம் நூற்றாண்டில் பாண்டியன் இராஜசிம்மன் சின்னமனூர்ப் பெரியதாமிரப் பட்டயம்)

காவிரிக்கு அக்கரையில் நின்று சேரனது தலைநகரைப் தீப்பட நோக்கினான் பாண்டியன் இராசசிம்மன் என்கிறீர்கள் 
இதனை 
காவிரிக்கு "தென்"கரையில் நின்று "புனற்பொன்னி வடகரையிற் பொழில்புடைசூழ் மதில்வஞ்சி" சேரனது தலைநகரைப் தீப்பட நோக்கினான் பாண்டியன் இராசசிம்மன் என்ற பொருள்  வருகிறது.

(இன்றைய) கரூர் இருப்பது காவிரியின் தென்கரையில்.
அது காவிரியின் துணையாறான   அமராவதியின் தென் கரையிலோ வடகரையிலோ இருந்தாலும் கூட இன்றைய  கரூர் இருப்பது காவிரியின் தென் கரையில்.


பாண்டியன் இராசசிம்மன் முறைத்துப் பார்த்தது காவிரியின் வடகரையில் இருக்கும் வஞ்சி 

வஞ்சி என்பது (பட்டினம். . .  பாக்கம் போல நிலப்பகுதியின் பண்பைக் குறிப்பது போல) சேரர் நகருக்கு  குறிப்பிட்ட ஒரு பொதுப் பெயராகவும் இருக்கலாமோ என்று தோன்றுகிறது. 
வளநாடு என்றால் சோழருக்கு உரிய பகுதி என்பது போல வஞ்சி என்றால் சேரரின் பகுதி என்ற பொதுவான(generic) குறிப்பாக இருக்கலாமோ என் எண்ணுகிறேன். 


வளநாடு என்பது இப்போதைய தாலூக்கா/வட்டம் போல ஒரு பிரிவு. ஆனால், வஞ்சி என்பது ஓர் ஊர்.
வஞ்சி மாநகரம் = ஆன்பொருனை (அமராவதி) கரையில் அமைந்த நகரம்.

உபசார வழக்காய் இன்னும் சில ஊர்களை, மிகப் பிற்காலத்தில் வஞ்சி என்றல் உண்டு.
உ-ம்: நாலு வஞ்சி. அவர்றில் ஒன்று: சீவக சிந்தாமணி ஆசிரியர் திருத்தக்க தேவரின் தாராபுரம்.
அதுவும் ஆன்பொருனைக் கரையிலே அமைந்த ஊரே.

வஞ்சி - வளநாடு, தாலூக்கா என்ற பொருளில் கல்வெட்டோ, ஆவணமோ காணோம்.


வஞ்சி என்பது வளநாடு போன்றவையா என்பது ஒரு லாங் ஷாட் அவ்வளவுதான்.

"புனற்பொன்னி வடகரையிற் பொழில்புடைசூழ் மதில்வஞ்சி" காவிரி  வடகரை வஞ்சி என்பதுதான் எனக்கு கேள்வியாக இருப்பது.

..... தேமொழி  


 

N. Ganesan

unread,
Nov 4, 2017, 6:03:32 PM11/4/17
to மின்தமிழ்
2017-11-04 14:54 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:


On Saturday, November 4, 2017 at 2:43:38 PM UTC-7, N. Ganesan wrote:


2017-11-04 13:45 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:


"சங்க கால வஞ்சி மாநகரம் ஆன்பொருனைக் (அமராவதி) கரையின்  கருவூர் (அகநகர், downtown)"

என்பதை அப்படியே வைத்துக் கொள்வோம். 

அடுத்து "சின்னமனூர்ப் பெரியதாமிரப் பட்டயம்" செய்தியுடன் இது மாறுபடுகிறதல்லவா?


"புனற்பொன்னி வடகரையிற் பொழில்புடைசூழ் மதில்வஞ்சி"
(பத்தாம் நூற்றாண்டில் பாண்டியன் இராஜசிம்மன் சின்னமனூர்ப் பெரியதாமிரப் பட்டயம்)

காவிரிக்கு அக்கரையில் நின்று சேரனது தலைநகரைப் தீப்பட நோக்கினான் பாண்டியன் இராசசிம்மன் என்கிறீர்கள் 
இதனை 
காவிரிக்கு "தென்"கரையில் நின்று "புனற்பொன்னி வடகரையிற் பொழில்புடைசூழ் மதில்வஞ்சி" சேரனது தலைநகரைப் தீப்பட நோக்கினான் பாண்டியன் இராசசிம்மன் என்ற பொருள்  வருகிறது.

(இன்றைய) கரூர் இருப்பது காவிரியின் தென்கரையில்.
அது காவிரியின் துணையாறான   அமராவதியின் தென் கரையிலோ வடகரையிலோ இருந்தாலும் கூட இன்றைய  கரூர் இருப்பது காவிரியின் தென் கரையில்.


பாண்டியன் இராசசிம்மன் முறைத்துப் பார்த்தது காவிரியின் வடகரையில் இருக்கும் வஞ்சி 

வஞ்சி என்பது (பட்டினம். . .  பாக்கம் போல நிலப்பகுதியின் பண்பைக் குறிப்பது போல) சேரர் நகருக்கு  குறிப்பிட்ட ஒரு பொதுப் பெயராகவும் இருக்கலாமோ என்று தோன்றுகிறது. 
வளநாடு என்றால் சோழருக்கு உரிய பகுதி என்பது போல வஞ்சி என்றால் சேரரின் பகுதி என்ற பொதுவான(generic) குறிப்பாக இருக்கலாமோ என் எண்ணுகிறேன். 


வளநாடு என்பது இப்போதைய தாலூக்கா/வட்டம் போல ஒரு பிரிவு. ஆனால், வஞ்சி என்பது ஓர் ஊர்.
வஞ்சி மாநகரம் = ஆன்பொருனை (அமராவதி) கரையில் அமைந்த நகரம்.

உபசார வழக்காய் இன்னும் சில ஊர்களை, மிகப் பிற்காலத்தில் வஞ்சி என்றல் உண்டு.
உ-ம்: நாலு வஞ்சி. அவர்றில் ஒன்று: சீவக சிந்தாமணி ஆசிரியர் திருத்தக்க தேவரின் தாராபுரம்.
அதுவும் ஆன்பொருனைக் கரையிலே அமைந்த ஊரே.

வஞ்சி - வளநாடு, தாலூக்கா என்ற பொருளில் கல்வெட்டோ, ஆவணமோ காணோம்.


வஞ்சி என்பது வளநாடு போன்றவையா என்பது ஒரு லாங் ஷாட் அவ்வளவுதான்.

"புனற்பொன்னி வடகரையிற் பொழில்புடைசூழ் மதில்வஞ்சி" காவிரி  வடகரை வஞ்சி என்பதுதான் எனக்கு கேள்வியாக இருப்பது.


Look at the next line in the saasanam grant.

 பாண்டியராசா காவேரி வடகரையில் பாடிவீடு அமைத்துத் தங்கியுள்ளான். அவனது வீரர்கள் அங்கே தங்கியுள்ளனர்.

வஞ்சி மாநகரில் சேரனைப் பணியச் சொல்கிறார்கள். அவன் மறுக்கிறான். அத்தோடு, சேரர் படையை
பொன்னி வடகரையிலே தங்கியுள்ள பாண்டியனை எதிர்க்க அங்கே செல்கிறான். போர் நடக்கிறது.

NG

தேமொழி

unread,
Nov 4, 2017, 6:36:37 PM11/4/17
to mint...@googlegroups.com
பாடலில் காற்புள்ளியை  எங்கு போட்டு பொருள் கொள்ளுவது என்பதில் இருக்கிறது.

கொடும்பைமா நகர்நிறைந்த குரைகடற் பெருந்தானை
இடும்பையுற் றிரியத்தன் இரணோதய மேற்கொண்டும்
புனற்பொன்னி வடகரையிற், பொழில்புடைசூழ் மதில்வஞ்சி
கனற்படவிழித் தெதிர்ந்தவீரர் கவந்தமாடக் கண்சிவந்தும்

என்பது கரூர் தென்கரையில் இருப்பதால், பாட்டின் பொருளுக்கு ஏற்றவாறு 'வடகரையில் பாடி தங்கிய பாண்டியன்' என்று பிரசஸ்தியாசிரியர் "கருதுவதாக" எம். ராகவாயங்கார் குறிப்பிடுகிறார். 

கொடும்பைமா நகர்நிறைந்த குரைகடற் பெருந்தானை
இடும்பையுற் றிரியத்தன் இரணோதய மேற்கொண்டும்
புனற்பொன்னி வடகரையிற் பொழில்புடைசூழ் மதில்வஞ்சி,
கனற்படவிழித் தெதிர்ந்தவீரர் கவந்தமாடக் கண்சிவந்தும்

நான் பாடி தங்கிய பாண்டியன் வடகரையில் இருந்தான் என்பதாக ஊகம் செய்யாமல், புனற்பொன்னி வடகரையிற் பொழில்புடைசூழ்  இருந்த மதில்வஞ்சி என்று காவிரியின் வடகரையில் வஞ்சி இருந்திருக்கலாம் என்கிறேன். 

'வடகரையில் பாடி தங்கிய பாண்டியன்'  என்பதற்கு இந்தக் கருதுகோளைத் தவிர வேறேதுவும் குறிப்புகள் உள்ளனவா?


..... தேமொழி

ராம் காமேஸ்வரன்

unread,
Nov 4, 2017, 8:25:19 PM11/4/17
to மின்தமிழ்
//பொன்வானி ஆறு கடலில் கலக்கும் கழிமுகம் பொன்னானி. இது ஓர் கடற்கரைத்தாலூக்கா. பொன்வானி/பொன்னானி ஆற்றுக்கு வடமொழி நூல்களில்
பூர்ணவாஹினீ என்று பெயர். இந்தப் பூர்ணா நதிக்கரையிலே தான் ஆதி சங்கரர் 8-ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிறந்தார். //

தவறான தகவல். ஆதிசங்கரர் அவதாரஸ்தலம் காலடி என்னும் பெரியாற்றங்கரையில் உள்ள க்ஷேத்திரம்.

ராம் காமேஸ்வரன்

unread,
Nov 4, 2017, 8:41:34 PM11/4/17
to மின்தமிழ்
காலடி பற்றி ஸ்ருங்கேரி சாரதா பீடம் வலைத்தளத்தில்:

Kalady, the Adi Shankara Janma Bhumi Kstetram or birth place of Sri Sankara remained obscure till the beginning of 20th century. Jagadguru Sri Sachidananda Shivabhinava Narasimha Bharathi Swamigal, the 33rd Peetathipathi of the illustrious Sringeri guru parampara with the help of Sri Moolam Thirunal Ramavarma Maharaja of Thiruvitamcore located Kalady. His Holiness built two temples one for Goddess Sharadamba and one for Sri Sankara. The Kumabhishekam was performed on the auspicious Magha shukla dwadasi in the year 1910 (21-02-1910). Then after Kalady grew into prominence as a great international pilgrim center. The Maha Swamiji began the conduct of Sri Sankara Jayanthi and Navarathri at Kalady from that time. 


N. Ganesan

unread,
Nov 4, 2017, 10:52:01 PM11/4/17
to மின்தமிழ்
2017-11-04 17:25 GMT-07:00 ராம் காமேஸ்வரன் <ram.kam...@gmail.com>:
//பொன்வானி ஆறு கடலில் கலக்கும் கழிமுகம் பொன்னானி. இது ஓர் கடற்கரைத்தாலூக்கா. பொன்வானி/பொன்னானி ஆற்றுக்கு வடமொழி நூல்களில்
பூர்ணவாஹினீ என்று பெயர். இந்தப் பூர்ணா நதிக்கரையிலே தான் ஆதி சங்கரர் 8-ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிறந்தார். //

தவறான தகவல். ஆதிசங்கரர் அவதாரஸ்தலம் காலடி என்னும் பெரியாற்றங்கரையில் உள்ள க்ஷேத்திரம்.

தவறு என்று உறுதியாகச் சொல்ல இயலவில்லை. சங்கர விஜயம் நூல்களில் பூர்ணா நதிக்கரையில் உள்ள காலடி க்ஷேத்திரம் சங்கரரின் அவதார ஸ்தலம் என்றிருக்கிறது.
இதனைச் சான்று காட்டி ரா. ராகவையங்கார், மு. ராகவையங்கார் இருவரும் பொன்னானி நதிக்கரையில், பொன்னானி தாலூக்காவில்
உள்ள காலடி சங்கர பகவத்பாதரின் அவதார ஸ்தலம் என்று குறிப்பிட்டுள்ளனர். பூர்ணவாஹினி - பொன்னானி நதி. அதன் கரையிலும் 
ஒரு காலடி உள்ளது. இப்போது அங்கே ஹிந்துக்கள் குறைவு.

நா. கணேசன்
 

--

N. Ganesan

unread,
Nov 5, 2017, 5:34:51 AM11/5/17
to மின்தமிழ், vallamai
நான் பாடி தங்கிய பாண்டியன் வடகரையில் இருந்தான் என்பதைத் ஊகம் செய்யாமல் புனற்பொன்னி வடகரையிற் பொழில்புடைசூழ்  இருந்த மதில்வஞ்சி என்று காவிரியின் வடகரையில் வஞ்சி இருந்திருக்கலாம் என்கிறேன். 


எப்பொழுதும் பழைய பாடல்களைப் படித்து வாழ்நாள் முழுதும் ஆராய்ந்த மு. ராகவையங்கார் போன்ற தமிழின் பேராசிரியர்கள் பொருளுணர முக்கியமானவர்கள்.
ஆன்பொருனை வடகரையிலே உள்ளது வஞ்சி (கருவூர்). காவிரி வடகரையிலே இருந்து அடிபணிய வஞ்சி மாநகரத்து சேரர் அரண்மனைக்குச் செய்தி அனுப்புகிறான்
பாண்டியமன்னன். அதனை மதியாது, தன் கொங்கப்படையை அனுப்புகிறான் பாண்டிப் படைகளை எதிர்கொள்ள என்பது சின்னமனூர்ப் தாம்ர சாசனம் தரும் சேதி.

சங்க இலக்கியத்தில் , சிலப்பதிகாரத்தில் (இளங்கோ அடிகளின் ஊர்!) ஆன்பொருனைக் கரையில் வஞ்சி மாநகர் இருந்தது என்றுதான் உள்ளது.
காவேரி வடகரையில் வஞ்சி (கருவூர்) இல்லை. எனவே, எந்த சாசனமும் அவ்வாறு சொல்வதும் இல்லை.

ஆன்பொருந்தக் கரையினில் வஞ்சி மாநகரம்:
Inline image 1


நா.கணேசன்

வேந்தன் அரசு

unread,
Nov 5, 2017, 9:43:08 AM11/5/17
to vallamai, மின்தமிழ்
உறையூரிலிருந்த ஒரு பட்டத்துயானை மதம்பிடித்து வஞ்சிநகருள் புகுந்துவிட்டதாக ஒரு சங்கப்பாடல் வாசித்த நினைவு.

5 நவம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 2:34 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

வேந்தன் அரசு

unread,
Nov 5, 2017, 12:35:47 PM11/5/17
to vallamai, மின்தமிழ், housto...@googlegroups.com


4 நவம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 11:18 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

On Fri, Nov 3, 2017 at 8:06 PM, தேமொழி <jsthe...@gmail.com> wrote:
வஞ்சிமாநகரம் 
(சரித்திர நாவல்)
ஆசிரியர்: நா. பார்த்தசாரதி

 
தட்டச்சுப்பிழை: 
<நிலாவின் பொலிவு அந்த இடத்தின் பொலிவுக்கு மெருகு ஊட்டியது>
நிலாவின் பொழிவு அந்த இடத்தின் பொலிவுக்கு மெருகு ஊட்டியது 

தேமொழி

unread,
Nov 7, 2017, 2:18:54 PM11/7/17
to மின்தமிழ்

kanmani tamil

unread,
Nov 8, 2017, 1:08:03 AM11/8/17
to mintamil
<இன்றைய அமராவதி ஆற்றின் கரையில் சங்ககாலத்தில் ஒரு சேரன் தலைநகர் இருந்தது.ஆனால் இதுமட்டும் சேரன் தலைநகர் அன்று .சேரநாட்டின் கூட்டாட்சி முறையைப் புரிந்து கொண்டபிறகு மற்றவற்றைப் பேசலாம்.இதற்கு முன்னர் நான் அனுப்பிய மடல்கள் மூலம் தெளிவான செய்திகளைத் தொகுத்துவிட்டு முன்னேறிச் செல்லலாம் .
      1)தி.வை.சதாசிவ பண்டாரத்தார் எடுத்துக்காட்டும் செப்பேட்டுத்தொடர்கள் வாயிலாக வரலாற்றுக்காலத்தில் பலவஞ்சிகள் இருந்தமை தெளிவு .
      2)மேனாட்டு நிலவியலார் கூற்றின்படி 'சேரபோத்ராஸ் ' என்று சேர மன்னர் அழைக்கப்படுவதால் சேரபுத்திரர்கள் ஆண்டநாடு சேரநாடு என்றாகிறது.
      3)பதிற்றுப்பத்து கூறும் சேர மன்னர் பட்டியல் (10--1=9)அவர்களை ஒரே காலகட்டத்தைச் சேர்ந்தவராகக் காட்டுகிறது .
      4)இவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தத்தா ,மகன்கள் ,பேரன்கள் ,--அண்ணன்தம்பிகள் ,ஒன்றுவிட்ட சித்தப்பா மக்கள் ,பெரியப்பா-மக்கள் .
      5)இவர்கள் செய்த போர்களிலும் ஒன்றுக்கு மேற்பட்டோர் சேர்ந்து ஈடுபட்டு வெற்றி பெற்றுள்ளனர

 இனி இவர்கள் சேர நாட்டின்எந்தெந்த பகுதிகளில் ஆட்சிப் பொறுப்பு ஏற்றார்கள்;போர் செய்தார்கள்  என்று பார்ப்போம் . 
     1ம்.பத்து-கொள்ளுத்தாத்தா -உதியன் சேரலாதனுக்குரியது.-நமக்குக் கிடைக்கவில்லை.-அகப்பாவை போரில் வென்று பெற்றான் (அகம்.169,233) 
     2ம்.பத்து -இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் -மரந்தை ,வஞ்சி(மூதூர்)- அகம்-127,396,பதிற்.15&2ம்பத்தின் .பதிகம் 
     3ம்.பத்து- பல்யானைச் செல்கெழு குட்டுவன் -தொண்டி,செருப்புமலை&மூதூர்-மேற்கரை நாட்டின் கிழக்கே இருந்த அகப்பாவை போரிட்டு வென்று பெற்றான்.(3ம்.பத்தின் பதிகம்,      பா.21,22,30,அகம்.169,233,290&ஐங்.178)
     4ம்.பத்து-களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் -தொன்னகர் (பதிற்.31)
     5ம்.பத்து -கடல்பிறக்கோட்டிய வேல்கெழு குட்டுவன் -முசிறி, மரந்தை& தொன்னகர்(புறம் 343,அகம்.376,குறுந்.34,பதிற்.47)
     6ம்.பத்து -ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் -தொண்டி,நறவு &மூதூர் (6ம்.பத்தின் பதிகம் ,பா.60&53)
     7ம்.பத்து -செல்வக்கடுங்கோ வாழியாதன் -கொங்கிலுள்ள-கிழக்கிலுள்ள  கொடுமணம்,பந்தர்-போரிட்டுப்  பெற்ற வெற்றி .(பதிற்.67)
     8ம்.பத்து -பெருஞ்சேரலிரும்பொறை -கொடுமணம் ,பந்தர்,கிழக்கே உள்ள தகடூரைப் போரிட்டுப் பெறுகிறான் (பதிற்.74&78)   
     9ம்.பத்து -இளஞ்சேரலிரும்பொறை -தனிப்பட எந்த ஊருடனும்தொடர்புபடுத்தப்படவில்லை.(செல்லப்பிள்ளை!)   
    10ம்.பத்து -கிடைக்கவில்லை.(ஊகத்தின் அடிப்படையில் சேரமான் கணைக்கால் இரும்பொறை எனலாம்.(தகடூருக்கும் கிழக்கே முன்னறிச் செய்த போரில் சோழ மன்னனால் சிறை பிடிக்கப்பட்டான் )  
இந்தக் குடும்ப உறவுகளையும் சேர ,கொங்கு நாடுகளின் நிலவியலையும் நன்கு புரிந்து கொண்டால் சங்க காலத்தில் கொங்குக் கரூர் வஞ்சி மட்டுமில்லாமல் இன்னொரு வஞ்சியும் இருந்தமை புரியும்.>
மேற்சுட்டிய பகுதி பதிற்றுப்பத்துச் செய்திகளை வகுத்தும் தொகுத்தும் சொன்ன கருத்துக்களாம்
இப்பகுதியில் ஒரே காலத்தில் ஆண்ட 10-1=9சேர மன்னர்களுடன் தொடர்புபடுத்தப்படும் ஊர்களின் பெயர்களும் சில பிற விபரங்களும் உள்ளன..
முதல் 6சேர மன்னர்களும் மேலைக் கடற்கரையிலிருந்த தொண்டி ,நறவு,மரந்தை ,முசிறி போன்ற துறைமுகப் பட்டினங்களுடனும்;சேர நாட்டு மலைப்பகுதியுடனும்
தொடர்பு படுத்தப் படுகின்றனர்.அத்துடன் மூதூர் /தொன்னகர் என்ற ஒரு சிறப்பான நகரத்துடனும் தொடர்பு படுத்தப் படுகின்றனர்.
7,8,9ம்.பத்தின் சேர மன்னர்கள் கொங்கு நாட்டுப் பகுதிகளுடன் தொடர்புபடுத்தப் படுகின்றனர் .இவர்கள் கொங்கு நாட்டில் படிப்படியாக முன்னேறி கிழக்கு நோக்கி நகர்ந்து
அங்கிருந்தோரை வெற்றி கண்டுள்ளனர் .
   இப்போது முந்தைய முந்தைய மடல்களால் தெளிவான 5கருத்துக்களுடன் இன்னும் 4கருத்துக்கள் தெளிவாகி உள்ளன.அவையாவன:
 6)ஒரே காலத்தைச் சேர்ந்த 10-1=9மன்னர்களுள் 6பேர் மேலைக் கடற்கரையில் இருந்து ஆட்சி செய்ய மற்றவர் கொங்கு நாட்டில் இருந்து ஆட்சி செய்துள்ளனர் .
7)கொங்கு நாடு படிப்படியாக சேர மன்னர்களால் வெற்றி கொள்ளப்பட்டது .
8)குடும்பத்தலைவனான (உதியன் சேரலாதன் பற்றிய 10பாடல்கள் கிடைக்காத நிலையில்அவனது மகன்) இமயவரம்பன் மேற்கரை நாட்டில் ஆண்டு வந்துள்ளான் . 
 தன் மகன் கடல் பிறக்கோட்டிய வெல்கெழு குட்டுவனுடன் சேர்ந்து இமயத்தில் விற்பொறித்த போரிலும் (பதிற்.11,43)கடற்கடம்பரை அடக்கிய போரிலும் (பதிற்.11,17,20,41,45,46,48&அகம் 127,24)ஈடுபட்டுள்ளான் .
9) அவனது தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவனும் தந்தை உதியன் சேரலாதனும் சேர்ந்தே கொங்கு நாட்டைப் போரிட்டு வென்றனர் .(பதிற்-3ம்.பதிகம் ,பா-22,&அகம்.169,233)
10)விழாக் காலத்தில் இக்குடும்பம் ஒன்று சேர்ந்துள்ளது .ஒரு உள்ளி விழாவில் ஒன்று சேர்ந்த போதுதான் இவர்கள் 10பேரையும் 10புலவர்கள் பத்துப்பத்து
பாடல்களால் புகழ்ந்து பாடியுள்ளனர்.பண்ணும் தூக்கும் கலந்த பாடலும் ,துணங்கைக் கூத்தும் ,ஊன் கலந்த சோறும் ,பருகப் பருக குறையாத கட்பானையும் ,விறலிக்குத் தலைக்கை கொடுத்துஆட்டமும் ,எல்லோருக்கும் பரிசிலும் என பதிற்றுப்பத்து முழுவதும் இக்கொண்டாட்டம் புகழப்படுகிறது.
இந்தப் பத்துக் கருத்துக்களிலும் தெளிவு கிடைத்த பிறகுதான் சங்க காலத்தில் ஒரு வஞ்சியா?இரண்டு வஞ்சிக்களா ?என்பது பற்றிப் பேச இயலும்.அதனால் தான் கணேசன் அவர்களின் சில மடல்களுக்கு நான் பதில் கூறாமலிருந்தேன்.
பதிற்றுப்பத்தை படிப்பது கொஞ்சம் சவாலான வேலை தான்.ஆனாலும் ஆர்வம் இருந்தால் முயலலாம்.பாடம் நடத்தும் போதே ஒரு பாடலுக்கு 2மணி நேரத்திற்கு மேல் தேவைப்படும்.
கண்மணி.       























































































































.










.













Click here to ReplyReply to all or Forward
0.48 GB (3%) of 15 GB used
Last account activity: 1 hour ago
Details

iraamaki

unread,
Nov 8, 2017, 2:35:15 AM11/8/17
to mint...@googlegroups.com
இன்னொன்ரையுஞ் சேர்த்துக்கொள்ளுங்கள். குட்டன், குட்டுவன் என்ற பெயர் சேரலத்தில் தான் அதிகம். குட்டநாடு என்றே ஒரு நிலப்பகுதியுண்டு.
 
இன்னும் பலவற்றைச் சொல்லலாம். ஆனால் நீங்கள் என்ன சொன்னாலும் “கொங்கு, கொங்கு” என்று கூறிக்கொண்டிருக்கிறவர் எதையும் ஏற்கமாட்டார்.  கல்லில் நார் உரிக்க முயல்கிறீர்கள். அவ்வளவு தான் நொதுமலாய்ச் சொல்லமுடிகிறது. இதுபோல் சொல்லிப் பலரும் ஓய்ந்துபோனார்.
 
அன்புடன்,
இராம.கில்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Nov 8, 2017, 8:31:35 AM11/8/17
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
2017-11-05 6:43 GMT-08:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
உறையூரிலிருந்த ஒரு பட்டத்துயானை மதம்பிடித்து வஞ்சிநகருள் புகுந்துவிட்டதாக ஒரு சங்கப்பாடல் வாசித்த நினைவு.

அகநானூற்றுப் பாடல். ஏட்டில் இருந்த போதே - பொள்ளாச்சிச் சிவன்பிள்ளை (இன்ஸ்பெக்டர் ஆஃப் ஸ்கூல்ஸ்) போன்றோரிடம்
ஏடுகள் பெற்று அகநானூற்றைப் பதிப்பித்த - ரா. ராகவையங்கார் இது ஆன்பொருனைக் கரையில் உள்ள
வஞ்சி என எழுதிவிட்டார்கள். மு. ராகவையங்காருக்கும் இப்பாடலைத் தந்தவர் அவரே. சேரர்களின் தலைமை
ஸ்தானம் இந்த ஆதி வஞ்சி தான் என்பதைத் தொல்லியல் சான்றுகள் ஐயந்திரிபற நிறுவிவிட்டன.
இன்னும் தமிழ்க் கட்டுரைகளில் அச் செய்திகள் வருவதில்லை. 

அருகருகே இருக்கும் உறந்தையையும், வஞ்சி மாநகரையும் சேர்த்தே பாடுதல் சங்க இலக்கிய மரபு.
மதுரை பாண்டியன் அரண்மனை (இப்போதைய மீனாட்சி கோயில்) வைகைக்குத் தென்கரையில்.
அதன் அமைப்பு தாமரைப் பூ என்று சொல்லும் பரிபாடல் பாட்டில்:  ’வாழிய வஞ்சியும் கோழியும் போல’

வஞ்சி, உறந்தை - இரு ஊர்களின் திருவிழாக்கள்.
சேரர்களின் தலைநகர் வஞ்சி மாநகரில் ஆற்றங்கரை பெரிது. அங்கே ஹோளி திருவிழா. உள்ளி/ஊளி
திருவிழாவுக்கு சங்க காலத்தில் தமிழர்கள் எல்லாரும் அறிந்த திருவிழா 
Like the famous Carnival in New Orleans, Louisiana. https://en.wikipedia.org/wiki/Carnival

  சான்றோர் வருந்திய வருத்தமும் நுமது 
    
வான்தோய்வு அன்ன குடிமையும் நோக்கித் 
    
திருமணி வரன்றும் குன்றம் கொண்டிவள் 
    
வருமுலை ஆகம் வழங்கினோ நன்றே 
5
அஃதான்று, 
    
அடைபொருள் கருதுவிர் ஆயின் குடையொடு 
    
கழுமலம் தந்த நற்றேர்ச் செம்பியன் 
    
பங்குனி விழவின் உறந்தையொடு 
    
உள்ளி விழவின் வஞ்சியும் சிறிதே. 
 


NG

N. Ganesan

unread,
Nov 8, 2017, 10:18:49 AM11/8/17
to மின்தமிழ், vallamai


2017-11-07 22:07 GMT-08:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
>
> NG <இன்றைய அமராவதி ஆற்றின் கரையில் சங்ககாலத்தில் ஒரு சேரன் தலைநகர் இருந்தது.ஆனால் இதுமட்டும் சேரன் தலைநகர் அன்று >


>
> .சேரநாட்டின் கூட்டாட்சி முறையைப் புரிந்து கொண்டபிறகு மற்றவற்றைப் பேசலாம்.இதற்கு முன்னர் நான் அனுப்பிய மடல்கள் மூலம் தெளிவான செய்திகளைத் தொகுத்துவிட்டு முன்னேறிச் செல்லலாம் .
>       1)தி.வை.சதாசிவ பண்டாரத்தார் எடுத்துக்காட்டும் செப்பேட்டுத்தொடர்கள் வாயிலாக வரலாற்றுக்காலத்தில் பலவஞ்சிகள் இருந்தமை தெளிவு .

சமஸ்கிருதப் பகுதியில் வரும் தொடர் தரும் பொருள் வேறு. நீங்கள் கொள்ளும் பொருள் வேறு.

>       2)மேனாட்டு நிலவியலார் கூற்றின்படி 'சேரபோத்ராஸ் ' என்று சேர மன்னர் அழைக்கப்படுவதால் சேரபுத்திரர்கள் ஆண்டநாடு சேரநாடு என்றாகிறது.

ஆமாம். முசிரஸ் கடற்கரை நகரம். ஆனால், கரூர் என்னும் தலைநகரம் உள்நாட்டில் இருக்கிறது என்கின்றனர் கிரேக்க நூலாசிரியர்கள்.

ஆன்பொருனைக் கரையில் உளது வஞ்சி மாநகரம் என்று சங்க இலக்கியம் மிகத் தெளிவாகக் கூறுகிறது. சிலப்பதிகாரமும் தான்.
இளங்கோ அடிகள் செங்கோடு என்ற சொல்லை வைப்பதுபோலவே, பராசரன் என்னும் பார்ப்பனன் சென்றது அனந்தை என்கிற வஞ்சி என்கிறார்.
தாராபுரத்துக்கும் இளங்கோ அடிகள் காலத்தில்  (கி.பி. 5-ம் நூற்.) வஞ்சி என்ற பெயர் உண்டு.

ஆனால், முசிறிப் பட்டினம் வஞ்சி மாநகரமா என்றால் சங்க இலக்கியத்தில் ஒரு சான்றும் இல்லை. பதிற்றுப்பத்து ’முசிறி அருகில் வஞ்சி’ என்று கூறுவதில்லை.
உறந்தை அருகே வஞ்சி மாநகர். அங்கே உள்ளிவிழா நடக்கிறது என்கிறது சங்க இலக்கியம். சங்க காலத்தில் வஞ்சி மாநகரம் சேரர் தலைநகரமான ராஜதானி
வஞ்சிக் கருவூரே - ஆன் பொருனைக் கரையில். மேலைக் கடற்கரையில் அப்போது இருந்தது முசிறிப் பட்டினம். அங்கும் சேர இளவரசர்கள்
சுல்கம் (> உல்கு, குறள். கோவையில் உல்கடம் - உக்கடம் ‘சுங்கச் சாவடி’) உண்டு.) வசூல் செய்ய அங்கு தங்கியிருப்பார்கள். மதுரையிலே சோழர்கள்
ஆட்சிக்காலத்தில் சோழபாண்டியர்கள் இருந்தாற்போல.

சங்க காலத் தமிழ்க் கல்வெட்டுகள் வஞ்சி மாநகர் சேரர் தலைநகர் இன்றைய கரூர், பிற தொல்லியற் சான்றுகள் காட்டிவிட்டனவே. அதனையும்
பாருங்கள்.

அஞ்சைக்களம்/அஞ்ஞைக்களம் வகர உடம்படுமெய் பெற்று திருவஞ்சைக்களம் என தேவாரத்தில் வருகிறது. மலையாளம் - தமிழ் மொழிப்
பிரிவு ஆனபின்னர், கேரளாவில் வஞ்சி = படகு. திருவஞ்சைக்களத்தைப் பிரித்து மலையாளிகள் வஞ்சிக்குளம் என்று சொல்கின்றனர்.
திருஅஞ்சைக்களம் - களம் - குளம் ஆகிவிட்டது! ஆனால், அதெல்லாம் மிகப் பிற்காலம். சங்க காலத்தில் முசிறிப்பட்டினம் மேலைக்கடற்கரையில்.
அது அழிந்தபின் கொடுங்கோளூர்/மகோதை தலைநகர் ஆகியுள்ளது. சிவன் கோயில் அஞ்சைக்களம். சேரர் மாநகர் வஞ்சி ஆன்பொருனைக்
கரையில் இருப்பது அழியவே, மலையாளம் தனிமொழியாக பிரியும் காலகட்டங்களில் அஞ்சைக்களம் (திருவஞ்சைக்களம் வ் - உடம்படுமெய்)
வஞ்சிக்குளம் என்கின்றனர் இப்போது. ஆனால், மலையாளம் தனியாக ஆவதன் முன் சேரராஜாக்களின் ராஜதானி மாநகர் வஞ்சிக் கருவூர்
- ஆம்பிராவதி/ஆன்பொருனை நதிக்கரையில். நீங்கள் சொல்வதுபோல சில கஸின்ஸ் முசிறியில் இருந்திருக்கலாம். ஆனால், முசிறியை
சங்ககால வஞ்சி மாநகரம் என்றுகொள்ள சான்றுகள் இலக்கியத்திலோ, ஆர்க்கியாலஜியிலோ காணோம்.

வஞ்சிக்குளம் - படகோடும் குளம். மலையாள நாட்டாருக்கு. அஞ்சைக்களத்தப்பர் கோயிலுக்கு படகில் பயணிக்கவேண்டும் கொடுங்கோளூரில்
இருந்து.

ஆனால், வஞ்சி சேரர் மாநகர் வஞ்சிக்கொடியின் பெயரால் அமைந்த நகரம். இன்றும் ஆன்பொருநைக் கரையில் உள்ள ஆன்நிலை அப்பர்
கோயிலில் வஞ்சிக்கொடிதான் தலவிருட்சம். வஞ்சிக்கொடி - நாகினி. இதற்கு சரியான பொருளை பெப்ரீஸியஸ் அகராதியில் தந்துள்ளார்.
புரிந்துகொள்ளாமல், சென்னைப் பேரகாதியில் பிரம்புச்செடி என்கிறது. வஞ்சிப் பிரம்பு முட்செடி, ஒரு புதை. நாகினி எனப்படும் வஞ்சிக்கொடி
(அமிதவல்லி) பெண்களுக்கு உவமை. ஆன்பொருனைக் கரை ஆன்நிலை ஸ்தலவிருட்சம், ஆர்க்கியாலஜி, ப்ராமி கல்வெட்டுகள்
சங்க இலக்கியத்தில் சேரர் ராஜதானி வஞ்சி மாநகர் எதுவெனக் காட்டி நிற்கின்றன. எந்த ஆர்க்கியாலஸ்ட்டும் சங்க கால வஞ்சி
முசிறிப் பட்டினம் என்றெழுதி நான் படிக்கவில்லை. இருந்தால் தாருங்கள். மேலே தொடர்வோம்.

நா. கணேசன்

>       3)பதிற்றுப்பத்து கூறும் சேர மன்னர் பட்டியல் (10--1=9)அவர்களை ஒரே காலகட்டத்தைச் சேர்ந்தவராகக் காட்டுகிறது .
>       4)இவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தத்தா ,மகன்கள் ,பேரன்கள் ,--அண்ணன்தம்பிகள் ,ஒன்றுவிட்ட சித்தப்பா மக்கள் ,பெரியப்பா-மக்கள் .
>       5)இவர்கள் செய்த போர்களிலும் ஒன்றுக்கு மேற்பட்டோர் சேர்ந்து ஈடுபட்டு வெற்றி பெற்றுள்ளனர
>
>  இனி இவர்கள் சேர நாட்டின்எந்தெந்த பகுதிகளில் ஆட்சிப் பொறுப்பு ஏற்றார்கள்;போர் செய்தார்கள்  என்று பார்ப்போம் .
>      1ம்.பத்து-கொள்ளுத்தாத்தா -உதியன் சேரலாதனுக்குரியது.-நமக்குக் கிடைக்கவில்லை.-அகப்பாவை போரில் வென்று பெற்றான் (அகம்.169,233)
>      2ம்.பத்து -இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் -மரந்தை ,வஞ்சி(மூதூர்)- அகம்-127,396,பதிற்.15&2ம்பத்தின் .பதிகம்
>      3ம்.பத்து- பல்யானைச் செல்கெழு குட்டுவன் -தொண்டி,செருப்புமலை&மூதூர்-மேற்கரை நாட்டின் கிழக்கே இருந்த அகப்பாவை போரிட்டு வென்று பெற்றான்.(3ம்.பத்தின் பதிகம்,      பா.21,22,30,அகம்.169,233,290&ஐங்.178)
>      4ம்.பத்து-களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் -தொன்னகர் (பதிற்.31)
>      5ம்.பத்து -கடல்பிறக்கோட்டிய வேல்கெழு குட்டுவன் -முசிறி, மரந்தை& தொன்னகர்(புறம் 343,அகம்.376,குறுந்.34,பதிற்.47)
>      6ம்.பத்து -ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் -தொண்டி,நறவு &மூதூர் (6ம்.பத்தின் பதிகம் ,பா.60&53)
>      7ம்.பத்து -செல்வக்கடுங்கோ வாழியாதன் -கொங்கிலுள்ள-கிழக்கிலுள்ள  கொடுமணம்,பந்தர்-போரிட்டுப்  பெற்ற வெற்றி .(பதிற்.67)
>      8ம்.பத்து -பெருஞ்சேரலிரும்பொறை -கொடுமணம் ,பந்தர்,கிழக்கே உள்ள தகடூரைப் போரிட்டுப் பெறுகிறான் (பதிற்.74&78)  
>      9ம்.பத்து -இளஞ்சேரலிரும்பொறை -தனிப்பட எந்த ஊருடனும்தொடர்புபடுத்தப்படவில்லை.(செல்லப்பிள்ளை!)  
>     10ம்.பத்து -கிடைக்கவில்லை.(ஊகத்தின் அடிப்படையில் சேரமான் கணைக்கால் இரும்பொறை எனலாம்.(தகடூருக்கும் கிழக்கே முன்னறிச் செய்த போரில் சோழ மன்னனால் சிறை பிடிக்கப்பட்டான் )  
> இந்தக் குடும்ப உறவுகளையும் சேர ,கொங்கு நாடுகளின் நிலவியலையும் நன்கு புரிந்து கொண்டால் சங்க காலத்தில் கொங்குக் கரூர் வஞ்சி மட்டுமில்லாமல் இன்னொரு வஞ்சியும் இருந்தமை புரியும்.>

கொங்குநாட்டு நிலவியலை நன்கு அறிந்தவன். கேரளாவில் பல பூமிகள் இருந்தன. சித்தூர் தாலூக்கா கேரளாவுக்குப் போனதால் அந்த வட்டத்தில் ஏராளமான பூமிகளை
இழந்தவர் என் நெருங்கிய உறவினர்கள். இன்றும் என் தாயாருக்கு மீனாட்சிபுரத்தில் தோட்டம் உண்டு. பெரியப்பாவுக்கு முதலைமடையில். ...

பதிற்றுப்பத்து உரை எழுதியவர் பற்றிய செய்யுளை உவேசா, முதல் பதிப்பில் பாருங்கள். அச் செய்யுள் பற்றிய செய்திகளைச் சொல்லவேண்டும்.

நா. கணேசன்

தேமொழி

unread,
Nov 8, 2017, 4:28:06 PM11/8/17
to மின்தமிழ்
புலவர். ஆ.பழநி >>> http://apazhani.in/vanjiye-engirukkiraai/

சிலம்பு கூறும் வஞ்சி குறித்து உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன். 

 ..... தேமொழி

iraamaki

unread,
Nov 8, 2017, 7:05:40 PM11/8/17
to mint...@googlegroups.com
வாழ்க நீவீர்! வேறொரு கட்டுரையில் ஆழ்ந்திருப்பதால் இந்த உரையாட்டில் கலந்துகொள்ள முடியவில்லை. நெடுங்காலம் இருவேறு வஞ்சிகள் இருப்பதை நான் சொல்லிவந்துள்ளேன். குடவஞ்சியை இல்லையென்று சாதிக்கும் கொங்குவஞ்சியாளர் கொங்கை உயர்த்திச் சொல்லவிழைகிறார். அவ்வளவுதான். (ஊர்ப்பாசம், மண்டலப் பாசம் யாருக்குத்தான் இல்லை? விடுங்கள்) நாங்கள்யாரும் கொங்கைக் குறைக்கவில்லை. (நானே கொங்கில் படித்துவந்தவன் தான். கொங்கில் பலவிடங்களில் புகுந்துவந்திருக்கிறேன். ஒருகாலத்தில் கொங்குவட்டாரப் பேச்சை அப்படியே பேசுவேன்.) அதன் பெருமையைச் சொல்லுமிடத்து, மற்ற இடங்களின் சிறப்பைக் குறைத்துச் சொல்லவேண்டாம் என்றுமட்டுமே எம்போன்றோர் சொல்கிறோம். (நான் பாண்டிநாட்டான். தமிழுக்கு நடந்த எல்லாமும் பாண்டியிற்றான் நடந்ததென நான்சொல்வது எவ்வளவு தவறோ, அவ்வளவு தவறு எல்லாவற்றையும் கொங்கென்பது. தமிழகம் என்பது கொங்கினும் பெரிது. அதேபொழுது கொங்கும் சேர்ந்ததே தமிழகம். இந்த மண்டலப் பாசம் தமிழக வரலாற்றைக் குலைத்துவிடும் என்றுசொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.)
 
இளங்கோவின் சிலம்பு கூறுவது குடவஞ்சியே, கொங்குவஞ்சியல்ல.
 
அன்புடன்,
இராம.கி.
 
Sent: Thursday, November 09, 2017 2:58 AM
Subject: Re: [வல்லமை] Re: [MinTamil] வஞ்சி
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Nov 8, 2017, 7:18:35 PM11/8/17
to மின்தமிழ்
கருத்துப் பகிர்வுக்கு நன்றி ஐயா.

..... தேமொழி 
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Nov 8, 2017, 9:08:20 PM11/8/17
to மின்தமிழ், vallamai
2017-11-08 13:28 GMT-08:00 தேமொழி <jsthe...@gmail.com>:
>
> புலவர். ஆ.பழநி >>> http://apazhani.in/vanjiye-engirukkiraai/
>
> சிலம்பு கூறும் வஞ்சி குறித்து உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்.
>
>  ..... தேமொழி
>

அஞ்சைக்களம் (கொடுங்கோளூர்) வஞ்சி எனச் சிலம்பு பாடியதாக தெரியவில்லை.

பராசரன் செல்வது பொதிகைமலை அருகே உள்ள அனந்தபுரம் எனலாம்.

சங்க இலக்கியம் போல, வஞ்சி மாநகர் கரூர் எனச் சிலப்பதிகாரத்தில் உள்ளது. ஆன்பொருனை
(அமராவதி) ஆற்றங்கரையில். 

கருவூர்க் கல்வெட்டும், (A. R. No. 166 of 1939-7)  வஞ்சி நகரென்றும்,  அமராவதியை ஆன்பொருந்தம் என்றும் குறிக்கின்றன. 
“மண்ணாள் வேந்தே  நின் வாணாட்கள், 
தண்ணான் பொருநை மணலினுஞ் சிறக்க” (சிலப். 28; 125-6) 

சங்கப் பாடல் போலவே மரபுத் தொடர் இது. மிகப் பழைய சேர மன்னர்கள்
கல்வெட்டுகள் வஞ்சி மாநகரில் (கரூரில்) கிடைக்கின்றன.
முசிறிப் பட்டினத்தில் சேர மன்னர்கள் கல்வெட்டும் இல்லை.
வஞ்சி என்பதும் காணோம்.

சென்ற 30 ஆண்டுகளில் கிடைத்துள்ள சான்றுகள் பழைய
வஞ்சி மாநகர் உறந்தை அருகே என தெளிவாகக் காட்டிவிட்டன.
தண்பொருனை, ஆன்பொருனை என்ற ஆறுகள் கேரளாவில் இல்லை.

தொல்லியல் சான்றுகளோ, எந்த சங்க இலக்கியமோ
மேலைக் கடற்கரையில் வஞ்சி மாநகர் என்று குறிப்பிடாமல்
இருப்பதால் இனிமேலும், சங்க கால வஞ்சி மாநகர் 
மேற்குக் கடற்கரையில் எனப் பேசிக்கொண்டிருப்பதில்
பொருளில்லை. 

முசிறிப் பட்டினத்தை வஞ்சி எனக் குறிப்பிட்டதாகக் காணோம்.

நா. கணேசன்


தேமொழி

unread,
Nov 8, 2017, 9:56:12 PM11/8/17
to மின்தமிழ்
கண்மணி சொல்வதும் ... அவர் கொடுக்கும் காரணங்கள் விளக்கங்கள் எனக்கு ஏற்புடையதாக இருக்கிறது.

அவ்வாறே, 

புலவர். ஆ. பழநி சிலம்பிலேயே  இலக்கிய மேற்கோள்கள் எடுத்துக் கொடுத்து விளக்கிய முறையும், 

"இளங்கோவின் சிலம்பு கூறுவது குடவஞ்சியே, கொங்குவஞ்சியல்ல" என இராமகி ஐயா கூறுவதும்,  

எனக்கு ஏற்புடையதாக இருக்கிறது.  ஒன்றுக்கு மேற்பட்ட வஞ்சிகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் இருந்துள்ளன, சிலம்பு சொல்லும் வஞ்சி இன்றைய  கரூர் வஞ்சியல்ல எனவே எனக்குத் தோன்றுகிறது.

எனது கேள்வியைப் பொருட்படுத்தி, நேரமெடுத்து உங்கள் கோணத்தைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி திரு. கணேசன். 

..... தேமொழி

N. Ganesan

unread,
Nov 8, 2017, 10:03:22 PM11/8/17
to மின்தமிழ்
2017-11-08 18:56 GMT-08:00 தேமொழி <jsthe...@gmail.com>:
கண்மணி சொல்வதும் ... அவர் கொடுக்கும் காரணங்கள் விளக்கங்கள் எனக்கு ஏற்புடையதாக இருக்கிறது.

அவ்வாறே, 

புலவர். ஆ. பழநி சிலம்பிலேயே  இலக்கிய மேற்கோள்கள் எடுத்துக் கொடுத்து விளக்கிய முறையும், 

"இளங்கோவின் சிலம்பு கூறுவது குடவஞ்சியே, கொங்குவஞ்சியல்ல" என இராமகி ஐயா கூறுவதும்,  

எனக்கு ஏற்புடையதாக இருக்கிறது.  ஒன்றுக்கு மேற்பட்ட வஞ்சிகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் இருந்துள்ளன, சிலம்பு சொல்லும் வஞ்சி இன்றைய  கரூர் வஞ்சியல்ல எனவே எனக்குத் தோன்றுகிறது.

எனது கேள்வியைப் பொருட்படுத்தி, நேரமெடுத்து உங்கள் கோணத்தைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி திரு. கணேசன். 

மேலைக் கடற்கரையில் முசிறி, கொடுங்கோளூர், அஞ்சைக்களம் - இவற்றுக்கு வஞ்சி என்று எந்த இலக்கியத்தில்
படிக்கலாம் என்று அறியத் தந்தால் மக்ழிச்சி.

யாராவது ஆர்க்கியாலஜிஸ்ட் வஞ்சி என்ற சேரர் தலைநகர் சங்க காலத்தில் முசிறி அருகே இருந்தது என எழுதினாலும்
அறியத் தாருங்கள்.
 
---------------------


கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனைப்
பரணர் பாடியது - பதிற்றுப்பத்து

பல்பொறிமார்ப! நின்பெயர் வாழியரோ
நின்மலைப் பிறந்து நின்கடல் மண்டும்
மலிபுனல் நிகழ்தரும் தீநீர் விழவில்
பொழில்வதி வேனில் பேரெழில் வாழ்க்கை
மேவரு சுற்றமோடு உண்டினிது நுகரும்
தீம்புனல் ஆயம் ஆடும்
காஞ்சியம் பெருந்துறை மணலினும் பலவே!

கோவை அருகே ஓடும் நதி காஞ்சி ஆறு.
காஞ்சி மரங்களால் பெற்ற பெயர் ஆகலாம்.
சீந்து/ஈந்து என்னும் date palm சிந்து நதிக்குப்
பெயராகி நிற்பது போல.

மீ கொங்கில் அணி காஞ்சி வாய்ப் 
பேரூர்ப் பெருமானை - சுந்தரர்.

செங்குட்டுவன் தன் கோப்பெருந்தேவியுடனும், இளங்கோ அடிகளுடனும் மற்ற அதிகாரிகளுடனும் வஞ்சி மாநகரில் புறப்பட்டு மலைகளை (= சஹ்யத்ரி என்னும் Western Ghats) ஊடறுத்துச் செல்லும் கடந்து சுள்ளிப் பெரியாற்றங் கரையிலே தங்குகிறான் என்பது சிலப்பதிகாரம். சுள்ளிப் பேரியாற்றங்கரையில் வஞ்சி மாநகர் உள்ளது எனக் குறிப்பிடவில்லை சிலப்பதிகாரம். வஞ்சிக்கு பேரியாற்றங்கரையில் மலைஅளம் எல்லாம் கண்டு திரும்புகிறான் செங்குட்டுவன். இதனை அரும்பத உரையாசிரியர் விளக்கியுள்ளார்: பேரியாற்றங்கரையினின்று செங்குட்டுவன் தன் வஞ்சிக்குத் திரும்பியதைக் கூறியவிடத்து "வாடாவஞ்சி மாநகர் புக்கபின்" என்பதற்கு அரும்பதவுரையாசிரியர் "பொலிவுபெற்ற கருவூரிலே திரியச்சென்று அரசன் பேராற்றங்கரையினின்றும்போந்து புக்க பின்" என்கிறார்.

நா. கணேசன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

N. Ganesan

unread,
Nov 8, 2017, 10:19:30 PM11/8/17
to மின்தமிழ்


2017-11-07 22:07 GMT-08:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
>
> <இன்றைய அமராவதி ஆற்றின் கரையில் சங்ககாலத்தில் ஒரு சேரன் தலைநகர் இருந்தது.ஆனால் இதுமட்டும் சேரன் தலைநகர் அன்று .சேரநாட்டின் கூட்டாட்சி முறையைப் புரிந்து கொண்டபிறகு மற்றவற்றைப் பேசலாம்.இதற்கு முன்னர் நான் அனுப்பிய மடல்கள் மூலம் தெளிவான செய்திகளைத் தொகுத்துவிட்டு முன்னேறிச் செல்லலாம் .
>       1)தி.வை.சதாசிவ பண்டாரத்தார் எடுத்துக்காட்டும் செப்பேட்டுத்தொடர்கள் வாயிலாக வரலாற்றுக்காலத்தில் பலவஞ்சிகள் இருந்தமை தெளிவு .
>       2)மேனாட்டு நிலவியலார் கூற்றின்படி 'சேரபோத்ராஸ் ' என்று சேர மன்னர் அழைக்கப்படுவதால் சேரபுத்திரர்கள் ஆண்டநாடு சேரநாடு என்றாகிறது.
>       3)பதிற்றுப்பத்து கூறும் சேர மன்னர் பட்டியல் (10--1=9)அவர்களை ஒரே காலகட்டத்தைச் சேர்ந்தவராகக் காட்டுகிறது .
>       4)இவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தத்தா ,மகன்கள் ,பேரன்கள் ,--அண்ணன்தம்பிகள் ,ஒன்றுவிட்ட சித்தப்பா மக்கள் ,பெரியப்பா-மக்கள் .
>       5)இவர்கள் செய்த போர்களிலும் ஒன்றுக்கு மேற்பட்டோர் சேர்ந்து ஈடுபட்டு வெற்றி பெற்றுள்ளனர
>
>  இனி இவர்கள் சேர நாட்டின்எந்தெந்த பகுதிகளில் ஆட்சிப் பொறுப்பு ஏற்றார்கள்;போர் செய்தார்கள்  என்று பார்ப்போம் .
>      1ம்.பத்து-கொள்ளுத்தாத்தா -உதியன் சேரலாதனுக்குரியது.-நமக்குக் கிடைக்கவில்லை.-அகப்பாவை போரில் வென்று பெற்றான் (அகம்.169,233)
>      2ம்.பத்து -இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் -மரந்தை ,வஞ்சி(மூதூர்)- அகம்-127,396,பதிற்.15&2ம்பத்தின் .பதிகம்
>      3ம்.பத்து- பல்யானைச் செல்கெழு குட்டுவன் -தொண்டி,செருப்புமலை&மூதூர்-மேற்கரை நாட்டின் கிழக்கே இருந்த அகப்பாவை போரிட்டு வென்று பெற்றான்.(3ம்.பத்தின் பதிகம்,      பா.21,22,30,அகம்.169,233,290&ஐங்.178)
>      4ம்.பத்து-களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் -தொன்னகர் (பதிற்.31)
>      5ம்.பத்து -கடல்பிறக்கோட்டிய வேல்கெழு குட்டுவன் -முசிறி, மரந்தை& தொன்னகர்(புறம் 343,அகம்.376,குறுந்.34,பதிற்.47)
>      6ம்.பத்து -ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் -தொண்டி,நறவு &மூதூர் (6ம்.பத்தின் பதிகம் ,பா.60&53)
>      7ம்.பத்து -செல்வக்கடுங்கோ வாழியாதன் -கொங்கிலுள்ள-கிழக்கிலுள்ள  கொடுமணம்,பந்தர்-போரிட்டுப்  பெற்ற வெற்றி .(பதிற்.67)
>      8ம்.பத்து -பெருஞ்சேரலிரும்பொறை -கொடுமணம் ,பந்தர்,கிழக்கே உள்ள தகடூரைப் போரிட்டுப் பெறுகிறான் (பதிற்.74&78)  
>      9ம்.பத்து -இளஞ்சேரலிரும்பொறை -தனிப்பட எந்த ஊருடனும்தொடர்புபடுத்தப்படவில்லை.(செல்லப்பிள்ளை!)  
>     10ம்.பத்து -கிடைக்கவில்லை.(ஊகத்தின் அடிப்படையில் சேரமான் கணைக்கால் இரும்பொறை எனலாம்.(தகடூருக்கும் கிழக்கே முன்னறிச் செய்த போரில் சோழ மன்னனால் சிறை பிடிக்கப்பட்டான் )  
> இந்தக் குடும்ப உறவுகளையும் சேர ,கொங்கு நாடுகளின் நிலவியலையும் நன்கு புரிந்து கொண்டால் சங்க காலத்தில் கொங்குக் கரூர் வஞ்சி மட்டுமில்லாமல் இன்னொரு வஞ்சியும் இருந்தமை புரியும்.>

ஔவை துரைசாமிப்பிள்ளையின் பதிற்றுப்பத்து உரை பார்த்தேன். இரண்டு வஞ்சி மாநகரங்கள் என்று குறிப்பிடக் காணோம்.
உங்கள் பட்டியலிலும் வஞ்சி இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் குறித்தே வருகிறது.

மேலைக் கடற்கரையில் குறிப்பிடும் தலைநகரம் நறவு என்ற பெயர் உடையதா?
ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் - நறவு + வஞ்சி மூதூர். 
மேலைக் கடற்கரையில் நறவு என்ற தூறைமுகமும், வஞ்சிக் கருவூர் (மூதூர்) சேரர்களின் ஆதி தலைநகர் என சங்க இலக்கியப்
பாடல்களால் தெரிகிறது (உ-ம்: அகம் 93).

நா. கணேசன்

 
 
>
> மேற்சுட்டிய பகுதி பதிற்றுப்பத்துச் செய்திகளை வகுத்தும் தொகுத்தும் சொன்ன கருத்துக்களாம்
> இப்பகுதியில் ஒரே காலத்தில் ஆண்ட 10-1=9சேர மன்னர்களுடன் தொடர்புபடுத்தப்படும் ஊர்களின் பெயர்களும் சில பிற விபரங்களும் உள்ளன..
> முதல் 6சேர மன்னர்களும் மேலைக் கடற்கரையிலிருந்த தொண்டி ,நறவு,மரந்தை ,முசிறி போன்ற துறைமுகப் பட்டினங்களுடனும்;சேர நாட்டு மலைப்பகுதியுடனும்
> தொடர்பு படுத்தப் படுகின்றனர்.அத்துடன் மூதூர் /தொன்னகர் என்ற ஒரு சிறப்பான நகரத்துடனும் தொடர்பு படுத்தப் படுகின்றனர்.
> 7,8,9ம்.பத்தின் சேர மன்னர்கள் கொங்கு நாட்டுப் பகுதிகளுடன் தொடர்புபடுத்தப் படுகின்றனர் .இவர்கள் கொங்கு நாட்டில் படிப்படியாக முன்னேறி கிழக்கு நோக்கி நகர்ந்து
> அங்கிருந்தோரை வெற்றி கண்டுள்ளனர் .
>    இப்போது முந்தைய முந்தைய மடல்களால் தெளிவான 5கருத்துக்களுடன் இன்னும் 4கருத்துக்கள் தெளிவாகி உள்ளன.அவையாவன:
>  6)ஒரே காலத்தைச் சேர்ந்த 10-1=9மன்னர்களுள் 6பேர் மேலைக் கடற்கரையில் இருந்து ஆட்சி செய்ய மற்றவர் கொங்கு நாட்டில் இருந்து ஆட்சி செய்துள்ளனர் .
> 7)கொங்கு நாடு படிப்படியாக சேர மன்னர்களால் வெற்றி கொள்ளப்பட்டது .
> 8)குடும்பத்தலைவனான (உதியன் சேரலாதன் பற்றிய 10பாடல்கள் கிடைக்காத நிலையில்அவனது மகன்) இமயவரம்பன் மேற்கரை நாட்டில் ஆண்டு வந்துள்ளான் .
>  தன் மகன் கடல் பிறக்கோட்டிய வெல்கெழு குட்டுவனுடன் சேர்ந்து இமயத்தில் விற்பொறித்த போரிலும் (பதிற்.11,43)கடற்கடம்பரை அடக்கிய போரிலும் (பதிற்.11,17,20,41,45,46,48&அகம் 127,24)ஈடுபட்டுள்ளான் .
> 9) அவனது தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவனும் தந்தை உதியன் சேரலாதனும் சேர்ந்தே கொங்கு நாட்டைப் போரிட்டு வென்றனர் .(பதிற்-3ம்.பதிகம் ,பா-22,&அகம்.169,233)
> 10)விழாக் காலத்தில் இக்குடும்பம் ஒன்று சேர்ந்துள்ளது .ஒரு உள்ளி விழாவில் ஒன்று சேர்ந்த போதுதான் இவர்கள் 10பேரையும் 10புலவர்கள் பத்துப்பத்து
> பாடல்களால் புகழ்ந்து பாடியுள்ளனர்.பண்ணும் தூக்கும் கலந்த பாடலும் ,துணங்கைக் கூத்தும் ,ஊன் கலந்த சோறும் ,பருகப் பருக குறையாத கட்பானையும் ,விறலிக்குத் தலைக்கை கொடுத்துஆட்டமும் ,எல்லோருக்கும் பரிசிலும் என பதிற்றுப்பத்து முழுவதும் இக்கொண்டாட்டம் புகழப்படுகிறது.
> இந்தப் பத்துக் கருத்துக்களிலும் தெளிவு கிடைத்த பிறகுதான் சங்க காலத்தில் ஒரு வஞ்சியா?இரண்டு வஞ்சிக்களா ?என்பது பற்றிப் பேச இயலும்.அதனால் தான் கணேசன் அவர்களின் சில மடல்களுக்கு நான் பதில் கூறாமலிருந்தேன்.
> பதிற்றுப்பத்தை படிப்பது கொஞ்சம் சவாலான வேலை தான்.ஆனாலும் ஆர்வம் இருந்தால் முயலலாம்.பாடம் நடத்தும் போதே ஒரு பாடலுக்கு 2மணி நேரத்திற்கு மேல் தேவைப்படும்.
> கண்மணி.      
>

>
>
> Click here to Reply, Reply to all or Forward
> 0.48 GB (3%) of 15 GB used
> Manage
> Terms - Privacy
> Last account activity: 1 hour ago
> Details
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Nov 8, 2017, 10:29:27 PM11/8/17
to மின்தமிழ்
உரையாசிரியர்களின் தாக்கமின்றி  பாடல்களின் வரிகளுக்கு பொருள் விளக்கம் கொள்வது வேறு வகை.
மதுரை கட்டுரையில் மயிலையார் விளக்கம் குறித்து புலவர் ஆ. பழநி எழுப்பும் கேள்விகள் போல எழுப்பிப் பார்ப்பதும் ஒரு சிலர் கையாளும் முறை. 
தொல்லியல் ஆய்வில் நாம் மிகவும் பின்தங்கியுள்ளோம். 

..... தேமொழி 
> To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Nov 8, 2017, 10:52:06 PM11/8/17
to மின்தமிழ், vallamai
2017-11-08 19:29 GMT-08:00 தேமொழி <jsthe...@gmail.com>:
உரையாசிரியர்களின் தாக்கமின்றி  பாடல்களின் வரிகளுக்கு பொருள் விளக்கம் கொள்வது வேறு வகை.
மதுரை கட்டுரையில் மயிலையார் விளக்கம் குறித்து புலவர் ஆ. பழநி எழுப்பும் கேள்விகள் போல எழுப்பிப் பார்ப்பதும் ஒரு சிலர் கையாளும் முறை. 
தொல்லியல் ஆய்வில் நாம் மிகவும் பின்தங்கியுள்ளோம். 

உரையாசிரியர் தாக்கம் இல்லாமல் பொருள் விளக்கம் எவ்வாறு அமைப்பது? மூல நூல் ஆசிர்யருக்கு அவர்கள்
காலத்தால் நெருங்கியவர்கள். 

வஞ்சி மாநகர் பற்றி அறிய தொல்லியல் மிக துணைபுரிகிறது, வேண்டிய அளவு இரும்பொறை, செல்வக் கடுங்கோ வாழியாதன்
பிராமிக் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.

ஐராவதம் ம்காதேவன் நூலைப் படித்திருக்கிறீர்களா? தொல்லியல் பற்றி எழுதுங்கள்.
தொல்லியலில் மிக முன்னேற்றம் காணுதற்குக் காரணமான ஐராவதம், நாகசாமி, புலவர் செ. ராசு, கா. ராஜன், ...
வஞ்சி மாநகரம் = கரூர் என விளக்கியுள்ளனர். 

நா. கணேசன்
 

N. Ganesan

unread,
Nov 8, 2017, 11:15:10 PM11/8/17
to மின்தமிழ்
2017-11-08 18:56 GMT-08:00 தேமொழி <jsthe...@gmail.com>:
ஒன்றுக்கு மேற்பட்ட வஞ்சிகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் இருந்துள்ளன, சிலம்பு சொல்லும் வஞ்சி இன்றைய  கரூர் வஞ்சியல்ல எனவே எனக்குத் தோன்றுகிறது.


இவ்விழையில் முன்பு காட்டினேன். சிலப்பதிகாரத்தில்  வஞ்சி மாநகர் ஆன்பொருனைக் கரையில் இருப்பதும், அதன் அரசர்குலம் சேரர்கள் என்றும் இளங்கோ அடிகள் பாடியுள்ளார். ஒரு நூற்றாண்டு முன்னரே வஞ்சி மாநகர் = கரூர் என நிறுவியவர்கள் காட்டியதுதான். பின்னர், 1963-ல் 
ஐராவதம் மகாதேவன் பதிற்றுப்பத்தில் வரும் சேரர்களின் கல்வெட்டுகளை ப்ராமியில் படித்துக் காட்டினார். பின்னர் நாகசாமி இரும்பொறை மன்னர்களின் காசுகள் வஞ்சிக் கருவூரில் கிடைப்பதைப் பற்றி ஆய்வேடுகளில் எழுதினார்.

சிலம்பு சேரர் வஞ்சி மாநகர் கரூர் தான், ஆன்பொருனைக் கரையில் உள்ள வஞ்சி என்கிறது. பொருனை என்று எந்த ஆற்றுக்கும்
கேரளாவில் பெயர் இல்லை. வஞ்சி மூதூர் தண்பொருனைக் கரையிலே என்று சங்க இலக்கியத்தின் வழியாகவே ஆவணப்படுத்தி
உள்ளார் இளங்கோ அடிகள். 

வாழ்த்துக்காதையில் தம்குலத்தை தொல்குலம் என்கிறார் இளங்கோ அடிகள்:
6. வாழ்த்துக் காதை



14.

  

மலையரையன் பெற்ற மடப்பாவை தன்னை
நிலவரசர் நீண்முடிமேல் ஏற்றினான் வாழியரோ,
வாழியரோ வாழி வருபுனல்நீர்த் தண்பொருநை
சூழ்தரும் வஞ்சியார் கோமான்றன் தொல்குலமே;



14
உரை
14

''மலையரையன் . . . தொல்குலமே''

        மலையரையன் பெற்ற மடப்பாவை தன்னை நிலவரசர் நீண்முடி மேல் ஏற்றினான் வாழியரோ-மலையரனாகிய இமவான் பெற்ற இளமை பொருந்திய பாவையை நிலமாளும் மன்னரது நெடிய முடியின்கண் சுமத்தினோன் நீடு வாழ்க, வாழியரோ வாழி வருபுனல்நீர் ஆன்பொருநை சூழ்தரும் வஞ்சியார் கோமான் றன் தொல்குலமே - அறாது ஒழுகும் நீர்மையினையுடைய நீர் மிக்க ஆன் பொருந்தம் சூழ்ந்த வஞ்சி நகரத்தார் தலைவனது பழங்குலம் நீடுழி வாழ்வதாக;

        
இமயமலைக் கற்கொணர்ந்து படிவஞ் செய்தமையான், ''மலை யரையன் பெற்ற மடப்பாவை'' என்றார். நிலவரசர் - கனகனும் விசயனும்.


-------

இளங்கோ அடிகள் குறிப்பிட்டுப் பாடுவதால் அவரது தொல்குலத்தின் தலைநகரம் ஆன்பொருனைக் கரையின் வஞ்சிக் கருவூர்
எனக் கொள்கிறேன். 
இவற்றை எல்லாம் விட்டுவிட்டால், சங்க இலக்கியம் வஞ்சி மாநகர் எங்கே உள்ளது என தெளிவாகக் கூறும்
செய்திகளை ஒதுக்கினால், மேலைக் கடற்கரையில் வஞ்சி சேரர்களின் தலைநகர் என்று சொல்லலாம்.
ஆனால், ஆதாரம் இலக்கியத்திலோ, தொல்லியல் கல்வெட்டுகள், காசுகள் இவற்றில் இல்லாமல் சொல்லும்
கூற்று. சிலப்பதிகாரம் கி.மு. நூற்றாண்டுகள் என்று குறிப்பிடுவன பொய்யுரைகள் என தொல்லியல் சான்றுகளும்
தமிழறிஞர்களும் ஆராய்ந்து அறிவித்துள்ளனர்.

நா. கணேசன்

 
எனது கேள்வியைப் பொருட்படுத்தி, நேரமெடுத்து உங்கள் கோணத்தைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி திரு. கணேசன். 

..... தேமொழி


தேமொழி

unread,
Nov 8, 2017, 11:27:29 PM11/8/17
to மின்தமிழ்


On Wednesday, November 8, 2017 at 7:52:06 PM UTC-8, N. Ganesan wrote:


2017-11-08 19:29 GMT-08:00 தேமொழி <jsthe...@gmail.com>:
உரையாசிரியர்களின் தாக்கமின்றி  பாடல்களின் வரிகளுக்கு பொருள் விளக்கம் கொள்வது வேறு வகை.
மதுரை கட்டுரையில் மயிலையார் விளக்கம் குறித்து புலவர் ஆ. பழநி எழுப்பும் கேள்விகள் போல எழுப்பிப் பார்ப்பதும் ஒரு சிலர் கையாளும் முறை. 
தொல்லியல் ஆய்வில் நாம் மிகவும் பின்தங்கியுள்ளோம். 

உரையாசிரியர் தாக்கம் இல்லாமல் பொருள் விளக்கம் எவ்வாறு அமைப்பது? மூல நூல் ஆசிர்யருக்கு அவர்கள்
காலத்தால் நெருங்கியவர்கள். 

வஞ்சி மாநகர் பற்றி அறிய தொல்லியல் மிக துணைபுரிகிறது, வேண்டிய அளவு இரும்பொறை, செல்வக் கடுங்கோ வாழியாதன்
பிராமிக் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.

ஐராவதம் ம்காதேவன் நூலைப் படித்திருக்கிறீர்களா? தொல்லியல் பற்றி எழுதுங்கள்.
தொல்லியலில் மிக முன்னேற்றம் காணுதற்குக் காரணமான ஐராவதம், நாகசாமி, புலவர் செ. ராசு, கா. ராஜன், ...
வஞ்சி மாநகரம் = கரூர் என விளக்கியுள்ளனர். 


தொல்லியல் குறித்து தொல்லியல் ஆய்வாளர்கள் எழுதுவார்கள்.

நான் பொதுவாக அறிந்தது... சங்கப்பாடல்கள் காட்டும்,  பெரிப்ளஸ் வரைபடத்தில் குறிப்பிடும் முசிறித் துறைமுகம் எங்கிருக்கிறது என்பதைக் கூட இன்னமும் நாம் உறுதியாகக் கண்டறியவில்லை என்பதுதான்.


Fate of Pattanam hangs in the balance

http://www.thehindu.com/news/national/kerala/fate-of-pattanam-hangs-in-the-balance/article19566224.ece


..... தேமொழி 

N. Ganesan

unread,
Nov 8, 2017, 11:38:57 PM11/8/17
to மின்தமிழ், vallamai
ஔவை துரைசாமிப்பிள்ளையின் வரிகளை ஆ. பழனி தன் கட்டுரையின் கடைசியில் காட்டியுள்ளார்.
அது சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் பற்றிய புறப்பாட்டு. ஆ. பழனி காட்டும்
ஔவை உரை, பாட்டுக்கு எழுதிய உரையுடன் முரண்படுவது காண்க.



387. சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்

கடுங்கோவாழியாதன்


30
செல்வக் கடுங்கோ வாழி யாதன்
 என்னாத் தெவ்வ ருயர்குடை பணித்திவண்

விடுவர் மாதோ நெடிதே நில்லாப்
புல்லிலே வஞ்சிப் புறமதி லலைக்கும்
கல்லென் பொருநை மணலினு மாங்கட்
35பல்லுார் சுற்றிய கழனி
 எல்லாம் விளையு நெல்லினும் பலவே.

     திணையும் துறையு மவை. சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய 
செல்வக்கடுங்கோ வாழியாதனைக் குன்றுகட்பாலியாதனார் பாடியது.

புல்லிலை  வஞ்சிப் புறமதில் - அலைக்கும் இலையில்லாத 
வஞ்சியாகிய  வஞ்கிமாநகரின்  மதிற்புறத்தை யலைக்கும்; கல்லென் பொருதை 
மணலினும் - கல்லென்னும் ஒசையையுடைய ஆன் பொருதையாற்று மணலினும்; 


”இது வஞ்சிமாநகர்க்கு வெளிப்படை
வஞ்சிநகர்க்கண்மையிலோடும்   பொருநை  ஆன்பொருநை    யெனப்படும். 
கருவூர்க்ல்வெட்டும், (A. R. No. 166 of 1939-7) அதனை வஞ்சி நகரென்றும், 
அமராவதியை ஆன்பொருந்த மென்றும் குறிக்கின்றன. “மண்ணாள் வேந்தே 
நின் வாணாட்கள், தண்ணான் பொருதை மணலினுஞ் சிறக்க” (சிலப். 28; 125-6) 
என அடிகளும் உரைப்பது காண்க.”

எனவே, ஔவை வஞ்சி என்பது கரூர் என்றும், மேலைக் கடற்கரை
என்றும் ஒவ்வொரு இடத்தில் சொல்லியுள்ளார். பாடலில் தெளிவாக
ஆன்பொருனைக் கரையில் வஞ்சி மூதூர் உள்ளது இருக்கிறது.

தொல்லியல் சான்றுகள் ஔவை போன்றோர் எழுத்துகளில்
எந்தப் பகுதி சரியானது எனக் காட்டுகின்றன.

ஔவையாரின் கிள்ளிவளவன் குறித்த பாடல் உரையை
ஆ. பழநி அவர்கள் காட்டாது விட்டுவிடுகிறார் என்பது
குறிப்பிடத்தக்கது.

தேமொழி

unread,
Nov 8, 2017, 11:54:51 PM11/8/17
to மின்தமிழ்
https://books.google.com/books?id=BzgYmdwFby4C

The Tamils Eighteen Hundred Years Ago
V. Kanakasabhai, 1904

இந்த நூலின் 19 ஆம் பக்கம் படிக்கவும். 

 periyar = porunai 
என்கிறது.

..... தேமொழி 

தேமொழி

unread,
Nov 9, 2017, 12:17:46 AM11/9/17
to மின்தமிழ்
மேலும்...



Historians have always linked the rise and fall of a civilisation to the presence of a vibrant river and its demise.

But in modern times, when humans can get water delivered where and when he wants, people’s innate connection with rivers has been lost. So much so, that even if a river is dying, people fail to take note.

In Tripunithura, the Padinjare Puzha (the western river), which has played no mean role in the history of the town, is gasping for breath with overgrown weeds and pollution choking the vital water body.

The late M. Raman Namboothiri of the Archaeological Survey of India, who was an expert in the history and heritage of Tripunithura, in one of his writings, has stated that the Padinjare Puzha is actually the historical Poorna river. His work titled “Poornayude Puravrutham” explores the origin, the course and the flow of the Periyar’s tributary till the great flood of 1341. The flood changed the course of many rivulets.

Raman Namboothiri has described how the eastern jetty of the Poorna, right at the back of Sri Poornathrayeesa Temple, played the role of an important trading link for Tripunithura.

Though the British built the iron bridge, another heritage structure, right next to this jetty, boat services from the jetty to the rural interiors continued till some 40 to 50 years ago. All these historical aspects have been strung together by the Poorna Nadi Samrakshana Samithi and it has asked the government to take an earnest role in preserving the heritage of the boat jetty and also save the river from pollution.

Samithi secretary K.G. Sreekumar said the river was mentioned as the Poorna river in Sukasandesam composed in the 14th century by Lakshmidasan. It is called Porunai in old Tamil texts and Poorna in Sanskrit texts. The Poornathrayeesa temple, during one of its festivals called the Para Ulsavam, takes the deity across the river on a boat from the jetty. This ritual has been practised for centuries. Mr. Sreekumar said the irrigation department had initiated a project to preserve and protect the boat jetty, but expressed his concern that the effort might not be sustained.



“Poornayude Puravrutham” explores the origin, the course, and the flow of Padinjare Puzha.




..... தேமொழி   

kanmani tamil

unread,
Nov 9, 2017, 2:31:24 AM11/9/17
to mintamil

<கேரளாவில் எங்கே ஆன்பொருனை ஆறு ஓடியது? ஆவணங்கள், கல்வெட்டுகள், இலக்கியங்கள்
சான்றுகள் தாருங்கள். >
இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல இன்றுவரை முனையாமல் இருந்த காரணம் முதலில் அடிப்படைக் கருத்துக்களில் தெளிவு வேண்டும் என்பது தான்.கணக்கிலோ இயற்பியலிலோ ஒரு சமன்பாட்டை நிறுவ வேண்டுமெனில் படிப்படியாகத் தான் முன்னேறுவோம்.அது தான் முறையும் கூட.தமிழ் வரலாறு சார்ந்த ஆய்வும் அறிவியல் சார்ந்த நெறிமுறையில்அமைந்தால் தான் பிசிறு இல்லாத தெளிவு கிடைக்கும்.காலத்தின் கோலத்தில் நாம் பல செல்வங்களை இழந்து விட்டோம்.முதலும் முடிவும் சிதைந்த இலக்கியம்,ஆண்டாண்டு காலமாய் மீண்டும் மீண்டும் மாறிய கடற்கரை ஓரத்து நிலவியல் என்ற சோதனைகளுக்கு மத்தியில் நம் ஆய்வு அமைகிறது.எனவே மருவிய பெயர்கள்,சொற்பொருள்கள் முதலியவற்றை இரண்டாம்கட்ட ஆய்வுக்கு என இப்போதைக்கு நிறுத்தி வைப்போம்.'கொங்கு நாட்டு வஞ்சி சங்ககாலத்திலிருந்து சீரும் சிறப்பும் பெற்றுத் திகழ்ந்தது.அது அமராவதி என்று மருவிய ஆன்பொருநைக் கரையில் இருந்தது.கரூர் என்னும் மாற்றுப்பெயரைப் பெற்றிருந்தது'.இந்த முடிவை யாராலும் மறுக்க முடியாது.ஆனால் சங்க காலத்தில் எத்தனை வஞ்சிகள்இருந்தன என்ற ஆய்வு இப்பொழுது தான் தொடங்குகிறது.அடிப்படைக் கருத்துகளை முதலில் புரிந்து கொள்வோம்.படிப்படியாக முன்னேறுவோம்.
கண்மணி     

kanmani tamil

unread,
Nov 9, 2017, 2:55:40 AM11/9/17
to mintamil
வஞ்சி மாநகர் என்று சங்க காலத்திலே சேர மகாராசர்களின் தலைநகராக ஆன்பொருனைக் கரையிலே (அமராவதி ஆறு) இருந்தது வஞ்சிக் கருவூர் என்பது தெளிவு.
<அங்கே அரண்மனையில் வளர்ந்தவர் இளங்கோ அடிகள். அவர் கர்நாடகத்தில் இன்றுள்ள, அவர்காலத்தில் வடகொங்காக இருந்த காவேரி பிறக்கும்
சையமலையிலே தம் சமண சமயத்தை குரவர்களிடம் கற்றிருக்கவேண்டும். தமிழில் கர்நாடகாவில் வழங்கி வந்த காவதம்/காதம் என்ற சொற்களை
காவேரி பிறக்கும் நாட்டைப் பாடும்போது அறிமுகம் செய்கிறார். இது பற்றி நான் எழுதிய கட்டுரை ஓம்சக்தி தீபாவளி மலர் 2017-ல் அச்சாகியுள்ளது.
உங்கள் சிவகாசியில் தான் அச்சானது>.
இப்படியெல்லாம் கற்பனை செய்யக்கூடாது.சங்ககாலத்து வஞ்சி ஒன்றைத் தேடும்போது சங்கம் மருவிய கால இலக்கியகார்த்தாவை உள்ளே இழுக்கவே கூடாது.ஏனென்றால் சிலப்பதிகாரத்தின் காலம் பற்றி இந்த இழை பேசவில்லை.அன்றியும் சிலப்பதிகாரத்தை 11ம்.நூ-டு.சார்ந்தது என்றெல்லாம் நிறுவ முனைபவர்கள் இருக்கிறார்கள்.இப்போதைக்கு சிலப்பதிகாரம் சங்க காலத்தைச் சேர்ந்தது அல்ல என்று உறுதியாக நம்பலாம்.நம்பி அதை இந்த இழையிலிருந்து தவிர்த்து விடலாம்.
கண்மணி 

kanmani tamil

unread,
Nov 9, 2017, 3:17:00 AM11/9/17
to mintamil
<வஞ்சி என்பது (பட்டினம். . .  பாக்கம் போல நிலப்பகுதியின் பண்பைக் குறிப்பது போல) சேரர் நகருக்கு  குறிப்பிட்ட ஒரு பொதுப் பெயராகவும் இருக்கலாமோ என்று தோன்றுகிறது.>
சரியான கருத்து.சேரர்களின் தலைநகரங்கள் இருந்த இடங்களெல்லாம் கரூர் அல்லது கருவூர் என்ற மாற்றுப்பெயர்களைக் கொண்ட வஞ்சி என்னும் பொதுப்பெயரைப் பெற்றன.
கண்மணி 

kanmani tamil

unread,
Nov 9, 2017, 3:53:48 AM11/9/17
to mintamil
<இன்னொன்ரையுஞ் சேர்த்துக்கொள்ளுங்கள். குட்டன், குட்டுவன் என்ற பெயர் சேரலத்தில் தான் அதிகம். குட்டநாடு என்றே ஒரு நிலப்பகுதியுண்டு.
 
இன்னும் பலவற்றைச் சொல்லலாம். ஆனால் நீங்கள் என்ன சொன்னாலும் “கொங்கு, கொங்கு” என்று கூறிக்கொண்டிருக்கிறவர் எதையும் ஏற்கமாட்டார்.  கல்லில் நார் உரிக்க முயல்கிறீர்கள். அவ்வளவு தான் நொதுமலாய்ச் சொல்லமுடிகிறது. இதுபோல் சொல்லிப் பலரும் ஓய்ந்துபோனார்.>
குட்டன்,குட்டுவன் போன்ற சொற்களின் விளக்கங்களையும் இரண்டாம் கட்டத்திற்காக நிறுத்தி வைப்போம் .அடிப்படைக் கருத்துக்கள் பத்து தான் நமக்கு தெளிவைக் கொடுக்கக்கூடியன .அடிப்படையை வலுவாக நிறுவிய பிறகு அடுத்த அடி எடுத்து வைப்போம்.
கண்மணி 

kanmani tamil

unread,
Nov 9, 2017, 5:06:55 AM11/9/17
to mintamil
<> 1)தி.வை.சதாசிவ பண்டாரத்தார் எடுத்துக்காட்டும் செப்பேட்டுத்தொடர்கள் வாயிலாக வரலாற்றுக்காலத்தில் பலவஞ்சிகள் இருந்தமை தெளிவு ..
சமஸ்கிருதப் பகுதியில் வரும் தொடர் தரும் பொருள் வேறு. நீங்கள் கொள்ளும் பொருள் வேறு.

>       2)மேனாட்டு நிலவியலார் கூற்றின்படி 'சேரபோத்ராஸ் ' என்று சேர மன்னர் அழைக்கப்படுவதால் சேரபுத்திரர்கள் ஆண்டநாடு சேரநாடு என்றாகிறது.

ஆமாம். முசிரஸ் கடற்கரை நகரம். ஆனால், கரூர் என்னும் தலைநகரம் உள்நாட்டில் இருக்கிறது என்கின்றனர் கிரேக்க நூலாசிரியர்கள்.
1)"வஞ்சிநகர் நாலும்  வளமையா ஆண்டருளும் கஞ்ச மலர்க்கை உடையான் காண் ","நாலுவஞ்சி சேரப்படைத்த சேரமான் பெருமாள் ""கருபதி பல"(பாண்டியன் இராசசிம்மனது சின்னமனூர் பெரிய தாமிரப் பட்டயத்தில் இடம்பெறும் பிரசஸ்தியிலுள்ள தொடரை மு.இராகவையங்கார் எடுத்துக்காட்டுகிறார்-ஆராய்ய்ச்சித் தொகுதி -ப.255-256.) போன்ற  செப்பேட்டுத்தொடர்கள் தமிழில் உள்ளன  ;வெளிப்படையான பொருளில் இருக்கும்போது முன்னே இருக்கும் சமஸ்கிருதப் பகுதியைப்  பெரிதுபடுத்துவானேன்?
 2)'சேரபோதராஸ் 'என்று சேர மன்னர் அழைக்கப் படுவதால் சேர புத்திரர்கள் ஆண்ட நாடு சேரநாடு என்ற கருத்துக்கு உங்களிடம் மாற்றுக்கருத்து இல்லை ;ஆதலால் இது நீங்கள் உடன்படுகின்ற கருத்து என்றாகிறது.மேனாட்டு நிலவியலார் ஒன்றுக்கு மேற்பட்ட கரூர்களைச் சுட்டிக் காட்டியுள்ளனர் .அது தொடர்பான செய்தி வரும்போது அதை ஆதாரமாகக் கொள்வோம்.
கண்மணி 

kanmani tamil

unread,
Nov 9, 2017, 5:14:39 AM11/9/17
to mintamil
<  3)பதிற்றுப்பத்து கூறும் சேர மன்னர் பட்டியல் (10--1=9)அவர்களை ஒரே காலகட்டத்தைச் சேர்ந்தவராகக் காட்டுகிறது . 
      4)இவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தத்தா ,மகன்கள் ,பேரன்கள் ,--அண்ணன்தம்பிகள் ,ஒன்றுவிட்ட சித்தப்பா மக்கள் ,பெரியப்பா-மக்கள் .>
இவ்விரு கருத்துக்கள் குறித்த விளக்கம் எனது முந்தைய மடல்களில் உள்ளன.அவை குறித்த உங்கள் கருதுகோள் என்ன?முடிவு என்ன?
கண்மணி 
  
      

iraamaki

unread,
Nov 9, 2017, 5:27:08 AM11/9/17
to mint...@googlegroups.com
திரு. கா.இராஜன் ”தமிழ்நாட்டுக் கரூர் மட்டுமே வஞ்சி” என்று விளக்கியிருக்கிறாரா? எங்கே?
 
அன்புடன்,
இராம.கி.
 
Sent: Thursday, November 09, 2017 9:21 AM
Subject: Re: [வல்லமை] Re: [MinTamil] வஞ்சி
 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

வேந்தன் அரசு

unread,
Nov 9, 2017, 9:56:22 AM11/9/17
to vallamai, மின்தமிழ்
சேரமன்னர்களை குடபுலகாவலர் என ஏன் சொன்னார்கள்?. கரூரிலிருந்து மேலைக்கரைவரை ஆண்டார்களா?

இரும்பொறை மன்னர்கள் அல்லாமல் குட்டுவன், கோதையினரும் ஆண்டுள்ளார்கள்

கரூரில் கறி விளையுதா?


கொழுமீன் குறைய வொதுங்கி வள்ளிதழ்க்
கழுநீர் மேய்ந்த கயவா யெருமை
பைங்கறி நிவந்த பலவி னீழல்
மஞ்சண் மெல்லிலை மயிர்ப்புறந் தைவர 
விளையா விளங்க ணாற மெல்குபு பெயராக்
45
குளவிப் பள்ளிப் பாயல் கொள்ளுங் 
குடபுலங் காவலர் மருமா னொன்னார் 
வடபுல விமயத்து வாங்குவிற் பொறித்த
எழுவுறழ் திணிதோ ளியறேர்க் குட்டுவண்
வருபுனல்வாயில் வஞ்சியும் வறிதே

8 நவம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 8:38 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--

தேமொழி

unread,
Nov 11, 2017, 4:40:20 AM11/11/17
to மின்தமிழ்


On Monday, October 23, 2017 at 3:34:48 AM UTC-7, kanmanitamilskc wrote:
சேரநாட்டில் ஒரு முறையான கூட்டாட்சி சங்க காலத்திலேயே
அமைந்திருந்தது.மேனாட்டு நிலவியலாரும் கரூரா சேரபோத்ராஸின் தலைநகர்
என்கின்றனர் ."சேரபோத்ராஸ் "என்ற சொல்லுக்கு சேர புத்திரர்கள் என்ற
பன்மைப் பொருளையே கொள்ள முடியும் (.periplus of the erythriyan sea)
தி.வை.சதாசிவ பண்டாரத்தார்
 "வஞ்சிநகர் நாலும் வளமையா ஆண்டருளும்
கஞ்ச மலர்க்கை உடையான் காண் ",

"நாலுவஞ்சி  சேரப் படைத்த சேரமான் பெருமாள் "என்ற செப்பேட்டுப் பகுதிகளை
எடுத்துக்காட்டி வஞ்சி என்ற பெயர் 4ஊர்கட்கு உரியதென விளக்குகிறார்
(இலக்கியமும் கல்வெட்டுக்களும் )

///தி.வை.சதாசிவ பண்டாரத்தார் 
 "வஞ்சிநகர் நாலும் வளமையா ஆண்டருளும் 
கஞ்ச மலர்க்கை உடையான் காண் ", //// 

கண்மணியின் பார்வைக்கு ஒரு கட்டுரை:

ஐயம், தி. அ. முத்துசாமிக் கோனார், 
தமிழ்ப் பொழில், (7/12), மார்ச்-1932

"கொங்கு மலை நாடும் குளிர்ந்த நதி பன்னிரண்டும்
சங்கரனார் தெய்வத் தலம் ஏழும்  - பங்கயம் சேர்
வஞ்சி நகர் நாலும் வளமையாய் ஆண்டருளும்
கஞ்சமலர்க் கையுடையோன் காண்"

என்ற பாடலுக்கு பொருள் வேண்டுகிறார் தி. அ. முத்துசாமிக் கோனார்] 

..... தேமொழி 


ஒன்பது சேரர் தலைநகரங்கள் வஞ்சி என்ற பெயரைத் தாங்கியிருந்தன
 1-.மேலைக் கடற்கரையில் அகலப்புழை ஆற்றின் சங்கமத்துறையில் இருந்த வஞ்சி
2-கொங்குக் கரூர் வஞ்சி
3-கொங்குநாட்டில் காவிரிக்கு வடகரையில் ஸ்ரீராமசமுத்திரம் என்று
அழைக்கப்படும் அயிலூர்
4-மேலைக் கடற்கரையில் 8ம் நூற்றாண்டில்  தோன்றிய திருவஞ்சைக்களம்
5-திருவனந்தபுரத்தின் ஒரு பகுதியில் மன்னன் அரண்மனை இருந்த இடம்
6-தாராபுரம் என்று மருவிய ராஜராஜபுரம்
7-கிரங்கனூருக்கு 5மைல் வடக்கிலும் திருக்குணவாயிலுக்கு 2மைல்
வடகிழக்கிலும் உள்ள கரூர்ப்படஞ்ஞா
8-கடல்கோளால் 8ம் நூற்றாண்டில் அழிந்த கொல்லம் நகர்
9-இன்றைய கொல்லம்
வஞ்சிப்பெயர் பெற்ற நகரங்கள் சில கரூர்/கருவூர்  என்ற மாற்றுப்பெயர் பெற்றன .
திவாகரமும் பிங்கலந்தையும் வஞ்சி என்ற சொல்லுக்கு கருவூர் என்று பொருள் கூறுகின்றன.
பத்தாம்  நூற்றாண்டில் ஆண்ட இராஜசிம்மனது சின்னமனூர்ப் பெரிய
தாமிரப்பட்டயம் 'கருபதி  பல 'என்று சேரர் தலைநகரங்களைக் குறிக்கிறது
டாலமி அலிமுகம்/பொய்முகம் என்று அழைக்கப்படும் pseudoisthmusக்குக்
கிழக்கில் கொரவூரா என்ற ஊரைச் சுட்டுகிறார்
pseudoisthmusக்கும் தெற்கில் உள்ள பரிஸ் துறைக்கும் .இடைப்பட்ட
உள்நாட்டு ஊர்களில் கரூரா என்ற ஒரு சேரர் தலைநகரையும் குறிப்பிடுகிறார் .

தேமொழி

unread,
Nov 11, 2017, 4:44:17 AM11/11/17
to மின்தமிழ்


On Saturday, November 11, 2017 at 1:40:20 AM UTC-8, தேமொழி wrote:


On Monday, October 23, 2017 at 3:34:48 AM UTC-7, kanmanitamilskc wrote:
சேரநாட்டில் ஒரு முறையான கூட்டாட்சி சங்க காலத்திலேயே
அமைந்திருந்தது.மேனாட்டு நிலவியலாரும் கரூரா சேரபோத்ராஸின் தலைநகர்
என்கின்றனர் ."சேரபோத்ராஸ் "என்ற சொல்லுக்கு சேர புத்திரர்கள் என்ற
பன்மைப் பொருளையே கொள்ள முடியும் (.periplus of the erythriyan sea)
தி.வை.சதாசிவ பண்டாரத்தார்
 "வஞ்சிநகர் நாலும் வளமையா ஆண்டருளும்
கஞ்ச மலர்க்கை உடையான் காண் ",

"நாலுவஞ்சி  சேரப் படைத்த சேரமான் பெருமாள் "என்ற செப்பேட்டுப் பகுதிகளை
எடுத்துக்காட்டி வஞ்சி என்ற பெயர் 4ஊர்கட்கு உரியதென விளக்குகிறார்
(இலக்கியமும் கல்வெட்டுக்களும் )

///தி.வை.சதாசிவ பண்டாரத்தார் 
 "வஞ்சிநகர் நாலும் வளமையா ஆண்டருளும் 
கஞ்ச மலர்க்கை உடையான் காண் ", //// 

கண்மணியின் பார்வைக்கு ஒரு கட்டுரை:

ஐயம், தி. அ. முத்துசாமிக் கோனார், 
தமிழ்ப் பொழில், (7/12), மார்ச்-1932

 கடைசி பக்கம்...பார்க்கவும். 

kanmani tamil

unread,
Nov 14, 2017, 5:17:33 AM11/14/17
to mintamil
<இளங்கோ அடிகள் .................................................................................................................. பராசரன் என்னும் பார்ப்பனன் சென்றது அனந்தை என்கிற வஞ்சி என்கிறார்.>

பதிற்றுப்பத்து கூறும் அடிப்படைக் கருத்துகள் பத்தினை தொகுத்துக் கொடுத்திருந்தேன் .அவற்றின் வன்மை மென்மை பற்றிப் பேசி முடித்த பிறகு தான் சங்க காலத்தில் ஒரு வஞ்சியா ?இரண்டு வஞ்சிகளா ?என்று முடிவு செய்ய இயலும் என்றும் கூறியிருந்தேன்.ஆனாலும் உங்களது முந்தைய மடற்கருத்தில் எனக்கு ஒரு ஐயம் .தீர்த்து வையுங்கள்.
பராசரன் அனந்தை சென்றது பற்றி மூலநூற் குறிப்பு எதுவும் கிடையாது.
 அவன் சேரனிடம் பரிசில் பெற்ற பிறகு சோணாடு திரும்பியதாகத் தான் குறிப்பு உள்ளது.  
திரும்பும் வழியில் நடை வருத்தம் தீர தங்காலின்  போதித்தானத்தில் அமர்ந்து இளைப்பாறினான் .-இது கதை .
சோழ நாட்டைத் தாயகமாகக் கொண்ட பராசரன்; தன் பாண்டித்தியத்தைக் காட்டி, பார்ப்பனவாகை சூட சேரன் தலைநகரை  (நீங்கள் சொல்லும் கொங்கு வஞ்சி ) விட்டுவிட்டு சேர புத்திரர் சுங்கம் வசூலிக்கத் தங்கியிருக்கும் மேலைக் கடற்கரைக்குச் (நீங்கள் சொன்ன விளக்கம்)சென்றான் என்பது எந்த வகையில் நோக்கினாலும் வலிந்து சொல்லும் விளக்கமாகிறது.
மேலைக் கடற்கரை தான் சேர நாடு .கொங்கு நாடு ஒரு buffer territory.(தமிழில் ----???)
சோழப் பேரரசுக் காலத்தில் அது சோழ நாடு .
2ம்.பாண்டியப் பேரரசுக் காலத்தில் அது பாண்டிநாடு .
சங்க காலத்தில் சேரரின் கை ஓங்கியிருந்தமைக்கு பதிற்றுப்பத்தே சான்று .
கொங்கு நாடு என்பது நிலவியல்அடிப்படையில்அமைந்த   பெயர்.
கொங்கு என்பதற்கு கிழக்கு என்பது பொருள் என நீங்களே ஒத்துக்கொண்டு இருக்கிறீர்கள் .
எந்த நாட்டிற்குக் கிழக்கே கொங்கு இருக்கிறது ?
 சேர நாட்டிற்கு --கொங்கு நாடு அப்பெயர் பெறக் காரணமே சேரநாடு தான்.(பருவ மழை கொங்க் மாய் என்று பெயர் பெற்ற காரணமும் இதனால் முரண்படவில்லை .) 
பராசரன் கதையில் சிலப்பதிகாரத்தின் காலத்திற்கே வெளிச்சம் கிடைப்பதை இங்கே பேசவேண்டாம்.
கண்மணி 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Nov 15, 2017, 12:46:06 AM11/15/17
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
2017-11-14 2:17 GMT-08:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
<இளங்கோ அடிகள் .................................................................................................................. பராசரன் என்னும் பார்ப்பனன் சென்றது அனந்தை என்கிற வஞ்சி என்கிறார்.>

பதிற்றுப்பத்து கூறும் அடிப்படைக் கருத்துகள் பத்தினை தொகுத்துக் கொடுத்திருந்தேன் .அவற்றின் வன்மை மென்மை பற்றிப் பேசி முடித்த பிறகு தான் சங்க காலத்தில் ஒரு வஞ்சியா ?இரண்டு வஞ்சிகளா ?என்று முடிவு செய்ய இயலும் என்றும் கூறியிருந்தேன்.ஆனாலும் உங்களது முந்தைய மடற்கருத்தில் எனக்கு ஒரு ஐயம் .தீர்த்து வையுங்கள்.
பராசரன் அனந்தை சென்றது பற்றி மூலநூற் குறிப்பு எதுவும் கிடையாது.
 அவன் சேரனிடம் பரிசில் பெற்ற பிறகு சோணாடு திரும்பியதாகத் தான் குறிப்பு உள்ளது.  
திரும்பும் வழியில் நடை வருத்தம் தீர தங்காலின்  போதித்தானத்தில் அமர்ந்து இளைப்பாறினான் .-இது கதை .

பொதியில் மலையைத் தாண்டிச் செல்கிறான் என்கிறது சிலம்பு.
பொதியில் அடிவாரத்தில் என்றும் பார்ப்பனர்கள் வேத வேள்வி செய்துகொண்டே இருக்கிறார்கள்
என்பது புறநானூற்றுக்காலத்தில் இருந்து இன்றுவரை உண்டு.

திண்டிறல் நெடுவேற் சேரலற் காண்கெனக்

காடும் நாடும் ஊரும் போகி 65

நீடுநிலை மலயம் பிற்படச் சென்றாங்கு


மலயம் = பொதியில். பாரதத்தின் குலபர்வதங்கள் ஏழு.
அதனுள் ஒன்று பொதிகை என்னும் மலயம்.
பொதிகைப் பொருப்பை துவஜமாகக் கொண்டவன் பாண்டியன்.
அதனால் பாண்டியராசாவுக்கு மலயத்வஜர் என்ற பட்டம் உண்டு.
மீனாட்சி மலயத்வஜ பாண்டியராஜ தனயை.


திருவனந்தபுரம் என்று நான் குறிப்பிடக் காரணமானது காந்தளூர்சாலை போன்ற படைவீரர் கல்லூரிகள்.
விழிஞம், அனந்தை, காந்தளூர்ச் சாலை போன்ற இடங்களில் சுங்கம் வசூலிக்க சேர இளவரசர் இருந்திருக்கலாம்.
சேர அரசனும் வஞ்சி மாநகர் (இன்றைய கரூர்) நீங்கி படைவளம் காண அங்கே முகாம் இருந்திருக்கலாம்/
சூர்ணி (சுள்ளிப்பேரியாறு) கரையில் இருப்பது பூர்ணத்ரயீசாலை - முவ்வேதங்களும் முழங்கும் சாலை.
கொடுங்கோளூர், அஞ்சைக்களத்தில். 

அனந்தை போன்ற ஊரில் புறப்பட்டு தங்கால் என்னும் ஊர் வழியாகத் தன் ஊர் திரும்புகிறான் நான்மறைப் பார்ப்பனன்.
அனந்தை அரசர் 15-ஆம் நூற்றாண்டின் பின்னர் வஞ்சி பூபாலர் என அழைக்கப்படுகின்றனர்.

10-15 பக்கக் கட்டுரை ’வஞ்சி மாநகர்’ பற்றி எழுதித் தருகிறேன். சேரர் ஆட்சி மேற்கே இருந்து கிழக்கே
பரவியது என்பதற்கு சங்க இலக்கியத்திலோ, தொல்லியல் சான்றுகளிலோ (நாணயங்கள்),
தமிழ் ப்ராமி கல்வெட்டுகளிலோ சான்றுகள் இல்லை. ஆனால், கிழக்கே இருந்து மேற்கே நகர்ந்தது
காலப்போக்கில் என்பதற்கு மறுக்கவியலாச் சான்றுகள் சங்க காலத்தில் நிரம்ப உள.

உங்கள் 1992 புத்தகம் படித்தபின் கட்டுரை எழுதித் தருகிறேன்

பாண்டியனைப் பற்றிய அழகான வெண்பா - முத்தொள்ளாயிரம்.

வினைபற்றிய சிலேடை அவநுதி

எ - டு: ' நறவேந்து கோதை நலங்கவர்ந்து நல்கா
மறவேந்தன் வஞ்சியா னல்லன் - துறையின்
விலங்காமை நின்று வியன்தமிழ்நா(டு) ஐந்தின்
குலங்காவல் கொண்டொழுகுங் கோ'

இது வினைபற்றிய சிலேடை அவநுதி. நறவு - மது . ஏந்தல் - தாங்கல். துறையின் விலங்காமை - குலதருமத்தின் வழுவாமை . இதனுள் ' வஞ்சியானல்லன்' என்பதற்குக் கருவூரை யுடைய சோழன் அல்லன் என்றும் , பிறரை வஞ்சியாது ஒழிவானல்லன் என்றும் சிலேடையாகப் பொருள் கொள்க.

பிறவும் வந்தவழிக் கண்டுகொள்க.

வி-ரை: அவநுதியணி சிலேடையணியோடு கூடி, அச்சிலேடை தானும் வினைச்சொல்லினிடமாகவரின் , அது வினைபற்றிய சிலேடை அவநுதியாம்.


இந்த வெண்பாவின் அழகை இதுபோன்ற உரைகள் காட்டுவதில்லை.
சங்கச் சேரர்கள் வஞ்சி மாநகரம் உறந்தை அருகே இருக்கிறது.
அவர்களுக்கு நறவு, முசிறி, தொண்டி துறைமுகங்கள் மேலைக்கடற்கரையில் உள்ளது.
இதனைச் சுருக்கி நறவு என்ற துறைமுகம் மாத்திரம் குறிக்கிறார் புலவர்.
வஞ்சி (கரூர்) - நறவு தொலைவு அதிகமில்லாத சிறிய நாட்டான் சேரன்.
தமிழகத்தின் ஐந்துமண்டலங்களும் ஆளும் பேரரசன் பாண்டியன்
என்பது உள்ளுறையும் குறிப்பு. இரண்டு ஊருக்கும், 5 மண்டிலங்களுக்கும்
வேறுபாடு வெளிப்படை. பாலும் தெளிதேனும் ... ஔவை வெண்பா
பற்றி கிவாஜ: நான் நாலுபொருள் தருகிறேன், நீ மூன்று தமிழ் தா என்கிறாளாம்
ஔவை. குழந்தையர் விளையாட்டில் காணுவதைக் கவிதை ஆக்கியுள்ளாள்.
அதுபோல் இது.

சேரர் பாண்டியர்க்கு அடங்கினோர் என்பது வான்மீகம். பின்னாளில்
சோழர்க்கு (உ-ம்: ராஜராஜன்) அடங்கினார். ஆனால் ஆதி வஞ்சி
கரூர். அகம் 93. கருவூர் வஞ்சி முற்றம் (கிள்ளிவளவன் காலம்)
உறையூர்ப் போர் - இரண்டு புறப்பாடல் ஒரே போரைப் பாடியுள்ளன.
பெரும்போராக இருந்திருக்கும். கிள்ளி ஜெயித்தான்.


சோழ நாட்டைத் தாயகமாகக் கொண்ட பராசரன்; தன் பாண்டித்தியத்தைக் காட்டி, பார்ப்பனவாகை சூட சேரன் தலைநகரை  (நீங்கள் சொல்லும் கொங்கு வஞ்சி ) விட்டுவிட்டு சேர புத்திரர் சுங்கம் வசூலிக்கத் தங்கியிருக்கும் மேலைக் கடற்கரைக்குச் (நீங்கள் சொன்ன விளக்கம்)சென்றான் என்பது எந்த வகையில் நோக்கினாலும் வலிந்து சொல்லும் விளக்கமாகிறது.
மேலைக் கடற்கரை தான் சேர நாடு .கொங்கு நாடு ஒரு buffer territory.(தமிழில் ----???)
சோழப் பேரரசுக் காலத்தில் அது சோழ நாடு .
2ம்.பாண்டியப் பேரரசுக் காலத்தில் அது பாண்டிநாடு .
சங்க காலத்தில் சேரரின் கை ஓங்கியிருந்தமைக்கு பதிற்றுப்பத்தே சான்று .
கொங்கு நாடு என்பது நிலவியல்அடிப்படையில்அமைந்த   பெயர்.
கொங்கு என்பதற்கு கிழக்கு என்பது பொருள் என நீங்களே ஒத்துக்கொண்டு இருக்கிறீர்கள் .

கொங்கு என்பது மலைவளம் சார்ந்த நாடு. எனவே, தேன், பூந்தாது எனப் பொருள்.
என் வலைச்சுவடியிலே கூட பல ஆண்டு முன்னரே கொங்கு என்பது பற்றித்
தலைப்பில் சொல்லியுள்ளேன். http://nganesan.blogspot.com
கொங்கு எனில் தேன். மலைவளம் மிக்க நாட்டுக்குக் கொங்குநாடு என்றே பெயர். "கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பியாய்" மனங்கவரும் மரபு இலக்கியச் சிறு துளிகளைச் சுவைப்போம்.

 
நான் கிழக்கு என்று குறிப்பிட்டது குணக்கு, கொண்டல் என்பதால்  North East Monsoon பெயரான கொண்கமழை, கொங்கமழை.
சென்னை போன்ற வடவயின் தோன்றும் கொண்கமழை கொங்குநாட்டிற்கு வருகிறது. ஆனால், கோடைமழை போல அடைமழை
அல்ல. இதனை அவ்விழையில் விரிவாக சொல்லியுள்ளேன்.

தொண்டி யாவக தீவில் இருந்து வெள்ளீயம், யாமரம் (சாலம்), அதன் விளைபொருள்கள் வந்ததை சிலம்பு 
உரைக்கிறார். இளங்கோ அடிகள் காலம் தென்கிழக்கு ஆசியாவுக்கு இந்தியர்கள் அகஸ்தியர் கதைகளைக் கொண்டுசென்ற
காலம். அகத்தியர் புராணங்கள் பலவும் சிலம்பில்தான் முதன்முதலாகக் காண்கிறோம். சங்க இலக்கியத்தில்
மலயமுனி வெறும் Canopus நக்ஷத்ரமே. கிழக்கே உள்ள தொண்டி துறைமுகம் - யாவக தீவு தொடர்புகள்:

பிற பின், (for example, what are the 4 Vanji-s, referred to by Tiruchengode Ashtavadhanam Muthusamy Konar in Tamizppozil jl. as mentioned in Themozhi's mail.)
நா. கணேசன்

kanmani tamil

unread,
Nov 15, 2017, 5:47:25 AM11/15/17
to mintamil
<திருவனந்தபுரம் என்று நான் குறிப்பிடக் காரணமானது காந்தளூர்சாலை போன்ற படைவீரர் கல்லூரிகள்.
விழிஞம், அனந்தை, காந்தளூர்ச் சாலை போன்ற இடங்களில் சுங்கம் வசூலிக்க சேர இளவரசர் இருந்திருக்கலாம்.
சேர அரசனும் வஞ்சி மாநகர் (இன்றைய கரூர்) நீங்கி படைவளம் காண அங்கே முகாம் இருந்திருக்கலாம்/>
இப்படி எல்லாமே 'லாம் 'என்று சொல்ல வேண்டிய தேவை என்ன?
வாதம் வலுவற்றது என்பதைக் காட்டுகிறது.
என்னுடைய கோணத்தில் சற்று பார்ப்போம்.
கொங்குக் கரூரில் இரும்பொறை மரபினர் ஆண்டு வந்தாலும் வஞ்சி மூதூர் மேற்குக் கடற்கரையில் இருந்ததால் பராசரன் அங்கு சென்றான்.
புகளூர்க் கல்வெட்டும் இளஞ்சேரல் இரும்பொறை ,அவனது தந்தை பெருஞ்சேரல் இரும்பொறை ,அவனது தந்தை செல்வக்கடுங்கோ ஆகிய  
மூவரை மட்டுமே சுட்டுகிறது.இதனால் இப்பகுதியில் அவர்கள் மட்டுமே ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்தனர் என்பதும் வெளிப்படை.
இம்மூவர் காலத்திலேயே ஆட்சிப் பொறுப்பில் இருந்த இமயவரம்பன் ,பல்யானைச் செல் கெழு குட்டுவன் ,கடல் பிறக்கோட்டிய வெல்கெழு குட்டுவன்,ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் ,களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் எல்லோரும் மேற்கரைச் சேரநாட்டில் தானே இருந்தார்கள்.
 எல்லோருக்கும் மூத்த கொள்ளுத்தாத்தா உதியன் சேரலாதன் வஞ்சி மூதூரில் இருந்தான் அதனால் தான் பராசரன் மலயம் பிற்பட அங்கே சென்றான்.
அங்கிருந்து சோழ நாட்டிற்குத் திரும்பி வர அவன் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒரு கணவாய் வழியாகக் கடந்து தங்காலில் வந்து இளைப்பாறினான் 
தங்கால் சிவகாசியிலிருந்து 3கி.மீ.தூரத்தில் தான் உள்ளது.
மேற்கரைச் சேர நாட்டிலிருந்து பாண்டிய சோழ நாடுகளுக்கு வர 18 கணவாய்கள் இருந்தன.(கல்வெட்டுச் செய்தி )
தங்காலுக்கு நேர் மேற்கே 2கணவாய்கள் உள்ளன,
கண்மணி   

kanmani tamil

unread,
Nov 15, 2017, 12:25:51 PM11/15/17
to mintamil
17 of 64
 
 
 
Expand all
Print all
In new window

வஞ்சி

Inbox
x
kanmani tamil23 Oct
சேரநாட்டில் ஒரு முறையான கூட்டாட்சி சங்க காலத்திலேயே அமைந்திருந்தது.மேனாட்டு ந...
N D Logasundaram24 Oct
அன்புநிறை கண்மணி அவர்கட்கு ஈங்கு வஞ்சி எனும் சொல் சங்கநூல்களில் இடம் பெற்றுள்...
kanmani tamil27 Oct
அவை மிகவும் ம்பிற்காலத்தவையே .>. வரலாற்று ஆய்வுகளுக்கு கல்வெட்டுக்கள் முதல்நி...

N. Ganesan <naa.g...@gmail.com>

27 Oct
to மின்தமிழ்
சுள்ளியாற்றுக்கு ஆன்பொருனை என்ற பெயர் இருந்ததா?? 
”மேற்கரை நாட்டில் ஆன்பொருநைக் கரையில் இருந்த வஞ்சியை ”

ஆன்பொருநை/ஆன்பொருந்தக் கரையிலே வஞ்சி மாநகர் இருந்தது என ஏராளமான சான்றுகள் உண்டு.
இலக்கியம், கல்வெட்டு, தொல்லியல்.

கேரளாவில் எங்கே ஆன்பொருனை ஆறு ஓடியது? ஆவணங்கள், கல்வெட்டுகள், இலக்கியங்கள்
சான்றுகள் தாருங்கள். நன்றி.

நா. கணேசன்

On Friday, October 27, 2017 at 3:53:40 AM UTC-7, kanmanitamilskc wrote:
கல்வெட்டுல் வழி கா ட்டப்படுவானவற்றைப் பு றம் தள்ளுக 
அவை மிகவும் ம்பிற்காலத்தவையே .>.
வரலாற்று ஆய்வுகளுக்கு  கல்வெட்டுக்கள் முதல்நிலைத் தரவுகளாக அமையும்.மேனாட்டு நிலவியலார் குறிப்புகளும் அவ்வண்ணமே ஏற்றுக்கொள்ளப்படும். .மேற்சுட்டிய இரண்டனுக்கும் பின்னரே இலக்கியச் சான்றுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் செவிவழிச்செய்திகள் மூன்றாம் நிலைத தரவுகளாம் .இதுதான் ஆராய்ச்சி நெறிமுறை .
வஞ்சிப்பெயர் பெற்ற ஊர்களைச் சுற்றியிருந்த சில பகுதிகளேனும் ஒத்த பெயரும் தன்மையும் உடையனவாய் இருந்தன 
1).முசிறி என்ற பெயரில் ஒரு ஊர் மேலைக் கடற்கரை வஞ்சியை அடுத்தும் இருந்தது .கொங்கு வஞ்சியை அடுத்தும் உள்ளது .
2)மேற்கரை வஞ்சியை ஒட்டி ஓடிய சுள்ளியம் பேரியாறு  ஆன்பொருநை என்றும் அழைக்கப்பட்டது .கொங்கு வஞ்சியை அடுத்து ஓடிய நதியும் ஆன்பொருநை என்று அழைக்கப்பட்டது.
3)சேரர் தலைநகரங்களில்  குணவாயில் என்று ஒரு பகுதி உண்டு 
4)வஞ்சிநகர அரண்மனைகளில்  ஆடகமாடம் என்று அழைக்கப்பட்ட திருமால் கோயில் உள்ள பகுதி இருந்தது .
சுள்ளியம் பேரியாற்றுக்கு ஆன்பொருநை என்ற பெயர்வழக்கு இருந்தமைக்கு புறநானூற்றுப்பாடல்கள் ஆதாரமாக அமைகின்றன .
சோழன் நலங்கிள்ளியைப் பாடிய உறையூர் முதுகண்ணன் சாத்தனார் அவன் சேரநாட்டை வென்று கைப்பற்றியதைப் புகழ்கிறார் .(புறம்.29)கோவூர் கிழார் 
"குண  கடல் பின்னதாக குடகடல்   வெண்டலைப் புணரிநின் மான்குளம்பு அலைப்ப "அவனது படைகள் அவனுக்காக போர் செய்தன என்கிறார் .(புறம் 31)
இதனால் அவனது படைகள் மேற்கரை வஞ்சியை வென்றமை தெளிவு ."பூவாவஞ்சியும் தருகுவன் "என்றும் அவரே குறிப்பிடுகிறார் .(புறம் 32)இவனது சகோதரன்  கிள்ளி வளவனுக்கும் இப்போர்களில் பங்கு இருந்தமை பின்வரும் பாடல்களால் தெளிவாகிறது .ஆலந்தூர் கிழார்" தண்ணா ன் பொருநை வெண்மணல் சிதைய "கடிமரம் தடியும் ஓசையைக் கேட்ட பின்பும் கோட்டைக்குள் வாளாவிருந்த சேரனை எதிர்த்துப் போரிட்டதாகப் பாடுகிறார் .(புறம் 36)மாறோக்கத்து நப்பசலையார் கிள்ளி வளவனைப் பாடும்போது "வாடாவஞ்சி வாட்டுநின் பீடுகெழு நோன்தாள்"என்கிறார் .(புறம் 39)
இதனால் கிள்ளிவளவன் மேற்கரை நாட்டில் ஆன்பொருநைக் கரையில் இருந்த வஞ்சியை வென்றான் என்பதில் ஐயமில்லை .
இதனால் மேற்கரையிலும் வஞ்சி இருந்தது என்பதை மறுக்க இயலாது .
கண்மணி 







   .  


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

-- 
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--- 
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
N D Logasundaram28 Oct
. இது கண்மணி அவர்களின் கூற்று அன்புள்ள கண்மணி அவர்கட்கு நீங்கள் சொல்வது பொது ...
kanmani tamil28 Oct
அன்புடையீர் வணக்கம் நாலு என்ற சொல்லுக்கு நான்கு என்ற பொருளும் உண்டு என்பதைத் ...
N D Logasundaram28 Oct
நீங்கள் உங்கள் ஆய்வினில் தொடர்வதில்என க்கும் எந்த இடர்பாடும் இல்லை கண்மணி


<* சங்ககாலத்தில் சேரர் மற்றும் வேளிரின் ஆட்சிப் பகுதியாக விளங்கிய கொங்குப் பகுதி, சங்க இலக்கியங்களில் சிறப்பாகப் பதிற்றுப்பத்தில் குறிப்பிடப்படுகிறது. பண்டைய கொங்குச் சமுதாயம் பற்றிய செய்திகள் பலவும் அவற்றில் காணப்படுகின்றன. சங்ககாலத்தில், வணிகம் மற்றும் தொழில்நுட்பத்தின் சிறப்பிடமாகவும் கொங்குப் பகுதி விளங்கியிருக்கிறது. இப்பகுதியில் இரும்புக்காலம் ( கி.மு. 1000 முதலாக ) முதற்கொண்டு மக்கள் வாழ்ந்ததற்கான தொல்லியல் சான்றுகள் பல கிடைத்துள்ளன.
*அகநானூற்றில் (அகம் 1 , 61) பாடப்பெறும் நெடுவேள் ஆவிக்கோவும் குறிஞ்சி நிலத்திற்குரிய முருகனும் நிலைகொண்ட பொதினி (பழநி) மலையைக் கொங்குப் பகுதி கொண்டுள்ளது.
* பதிற்றுப்பத்தில் (30 ,79) புகழ்ந்து கூறப்படும் சேரரின் அயிரைமலை (அயிரைமலை>ஐவர்மலை) கொங்குப் பகுதியில் உள்ளது.
· பெருஞ்சித்திரனார், பெருந்தலைச்சாத்தனார் ஆகிய சங்கப்புலவர்களால் பாடப்பெற்ற இயல்தேர்க் குமணனும், பெருங்கல்நாடன் பேகனும் (கடையெழு வள்ளல்களுள் இருவர்) வாழ்ந்த பகுதி கொங்குப் பகுதியாகும்.
* அகநானூறு, பதிற்றுப்பத்து ஆகியனவற்றில் குறிப்பிடப்பெறும் சங்ககால மன்னன் கழுவுளின் காமூர் (தற்போதைய காங்கேயம்) கொங்குப் பகுதியில் உள்ளது.
* புறநானூற்றில்(168 – 172) போற்றப்படும் பிட்டங்கொற்றனின் குதிரைமலை கொங்குப் பகுதியில் அமைந்துள்ளது.
* விளங்கு புகழ்க் கபிலனையும் சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறையையும் பாடிய (புறம் 53) சங்கப்புலவர் பொருந்தில் இளங்கீரனார் வாழ்ந்த ஊரான பொருந்தில் கொங்குப் பகுதியில் உள்ளது. இப்பொருந்திலின் சிறப்பு அண்மையில் புதுச்சேரி மையப் பல்கலைக்கழகம் மேற்கொண்ட- தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர்களும் பங்கேற்ற-தொல்லியல் அகழாய்வில் வெளிக்கொணரப்பட்டது. இந்த அகழாய்வில் ஒருபானையில் 2 கிலோ நெல்மணிகள் கிடைத்துள்ளன. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் பயன்படுத்திய ஆயிரக்கணக்கான பலவகைக் கல்மணிகள், கண்ணாடி மணிகள், இரும்பாலான ஆயுதங்கள் ஆகியன வெளிக்கொணரப்பட்டுள்ளன. வாழ்விடப் பகுதியில் சங்ககாலத்தைச் சார்ந்த செங்கற் கட்டுமானங்களும், கண்ணாடித் தொழிற்கூடங்களும் அகழாய்வில் வெளிக்கொணரப்பட்டன.
* சங்க இலக்கியமான பதிற்றுப்பத்தில் (ஏழாம் பத்து) ‘கொடுமணம் பட்ட வினைமாண் அருங்கலம்’ எனக் குறிப்பிடப்படும் தொழிற்கூட ஊர் தற்போது சென்னிமலைக்கருகில் கொடுமணல் என்னும் பெயரில் உள்ளது. இப்பகுதியில் தமிழ்ப் பல்கலைக்கழகம் நடத்திய அகழாய்வில் ஈமச்சின்னங்களில் ஏராளமான கல்மணிகள், இரும்பாலான ஆயுதங்கள், வெண்கலத்தாலான பொருட்கள், பானைக்குறியீடுகள் ஆகியன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இங்கு வாழ்விடப்பகுதியில் அகழாய்வு செய்தபோது இரும்பு உருக்குலைகள், கல்மணித் தொழிற்கூடங்கள் ஆகியன இருந்தமைக்கான சான்றுகள் வெளிக்கொணரப்பட்டுள்ளன. 2300 ஆண்டுகளுக்கும் முற்பட்ட தமிழ்-பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட பானையோடுகளும் அகழாய்வில் கிடைத்துள்ளன.
* நன்னூலை இயற்றிய சமணப்புலவர் பவணந்தி அடிகள் வாழ்ந்த தற்போதைய சீனாபுரம் (ஜீனர் புரம் > சமணர் புரம்) என்னும் ஊரும் அதற்கருகில் உள்ள சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்குநல்லார் வாழ்ந்த நிரம்பையும், சமணக்காப்பியமான பெருங்கதையை உருவாக்கிய கொங்குவேள் வாழ்ந்த விசயமங்கலமும் கொங்குப் பகுதியில் அமைந்துள்ளன.
* இரும்புக்கால ஈமச்சின்னங்கள் கல்வட்டங்களாகவும் கற்குவியல்களாகவும் காணப்படுகின்றன. சங்ககாலத்தில் கொங்குப்பகுதியிலிருந்து பாலக்காட்டுக் கணவாய் வழியாக மேலைக்கடற்கரைப் பகுதிகளோடு வணிகம் மேற்கொள்ளப்பட்டது. வெள்ளலூர், சாவடிப்பாளையம், பொள்ளாச்சி போன்ற இடங்களில் கிடைத்த உரோமானியக் காசுகள் இவற்றை உறுதிசெய்கின்றன.
* தமிழகம் உரோம் நாட்டுடன் கொண்டிருந்த வணிகத்திற்கான உறுதியான சான்றுகள் கொங்குப்பகுதியில் கிடைத்துள்ளன. அதாவது, இந்தியாவிலேயே உரோமானிய நாணயங்கள் கொங்குப் பகுதியில்தாம் அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
* சங்க இலக்கியச் சான்றுகளை உறுதிப்படுத்தும் வகையில் சேரமன்னர்களின் மரபை இலக்கியத்தில் சுட்டியவாறு அறுதியிட்டு உரைக்கும் தமிழ்-பிராமிக் கல்வெட்டுகள் கிடைத்துள்ள புகளூரும் இந்தியாவிலேயே இசைக்குறிப்பைத் தரும் காலத்தால் முற்பட்ட தமிழ்-பிராமிக் கல்வெட்டு உள்ள அறச்சலூர் என்னும் ஊரும் கொங்குப் பகுதியில் உள்ளன.
* கோவைக்கு அருகிலுள்ள பேரூர், போளுவாம்பட்டி என்னுமிடங்களில் மேற்கொண்ட தொல்லியல் அகழாய்வுகள் சங்ககாலத்தைச் சார்ந்த பலவகைக் கல்மணிகள், கண்ணாடி மணிகள், சங்காலான பொருட்கள், இரும்புக் கருவிகள், சுடுமண் உருவங்கள், காதணிகள், இரும்புக்காலப் பானைக்குறியீடுகள் போன்ற தொல்லியல் எச்சங்களை வெளிக்கொணர்ந்துள்ளன.
* கொங்குப் பகுதியான சூலூர் என்னுமிடத்தில் கிடைத்துள்ள முத்திரை நாணயங்கள் சங்ககாலத்தில் தமிழகத்திற்கும் வட இந்தியாவிற்கும் இருந்த வணிகத் தொடர்பினை உறுதிசெய்கின்றன. மேலும் இவ்வூரில் கிடைத்த சங்ககால மண் அகலில் காணப்பெறும் குறியீடு ஒன்று சிந்துவெளி நாகரிகக் குறியீட்டினை ஒத்துள்ளதாக அறிஞர் ஐராவதம் மகாதேவன் கருதுகிறார்.
* இரும்பு மற்றும் சங்ககாலத் தொல்லியல் தொடர்பான 250க்கும் மேற்பட்ட கள ஆய்வுக்குரிய இடங்கள், ஒருங்கிணைந்த கோவை மாவட்டப் பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன.
* எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாகச் சேரர்களின் தலைநகரமான கரூர்வஞ்சி கொங்குப் பகுதியில் ஆன்பொருநை (அமராவதி) ஆற்றின் கரையிலமைந்திருந்தது.
* சங்க இலக்கியத்தில் ‘வளங்கெழு முசிறி’ எனக் குறிப்பிடப்பெறும் சேரர்களின் துறைமுகமான முசிறிப்பட்டினம், அண்மையில் கேரள வரலாற்றாய்வுக் கழகம் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் முனைவர் கா.இராசன், உதவிப்பேராசிரியர் முனைவர் வீ. செல்வக்குமார் ஆகியோரின் துணையுடன் நடத்திய அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்வழி, சங்க இலக்கியம் குறிப்பிடும் தமிழக வரலாற்றுப் பண்பாட்டுச் செய்திகளுக்குரிய சான்றுகள் வெளிப்பட்டுள்ளன>


இப்பகுதியில் நீங்கள் குறிப்பிட்டபடி வேள்ஆவி,குமணன்,பேகன்,கழுவுள் ,பிட்டன்கொற்றன் எல்லோரும் கொங்கு நாட்டில் ஆண்டவர்கள் தாம்.
அவர்கள் மட்டுமின்றி பெருஞ்சேரல் இரும்பொறை ,இளஞ்சேரல் இரும்பொறை ,செல்வக்கடுங்கோ வாழியாதன் ஆகிய சேர மன்னர்களும்கொங்கு நாட்டில் தான்  ஆட்சிப் பொறுப்பில் இருந்திருக்கிறார்கள் .அவர்களது கரூரும் கொங்குப்பகுதியில் தான் இருந்தது. 
அதனால் தான் இரும்புக்காலம் தொடர்பான தொல்லியல் சான்றுகளும் ,சங்க காலம் தொடர்பான எச்சங்களும் மிகுதியாகக் கிடைத்துள்ளன.
ஆனால் சேர நாட்டுக் கடற்கரையின் அழிமுகம் /பொய்முகம் என்று அழைக்கப்பட்ட pseudoisthmus அருகே முசிறி என்ற துறைமுகமும் அதனை ஒட்டிய உள்நாட்டுப் பகுதியில் கருவூர் எனும் மாற்றுப்பெயர் கொண்ட வஞ்சிமூதூரும் இருந்தன என்பதை மறுப்பதற்கு மேற்சுட்டிய சான்றுகள் பொருத்தமானவை அல்ல.
ஆழ்கடலில் தொல்லியல் ஆய்வு நிகழ்வது போல மேலைக் கடற்கரைக் கழிக்குள் தொல்லியல் ஆய்வு நிகழ்ந்தால் மட்டுமே உதியன் சேரலாதன் ஆண்ட வஞ்சி மூதூரின் எச்சங்கள் கிடைக்க வாய்ப்புண்டு.
கண்மணி 

kanmani tamil

unread,
Nov 16, 2017, 6:02:33 AM11/16/17
to mintamil
கிழக்கு நோக்கி ஓடுபவை பெண் நதிகள் ;மேற்கு நோக்கி  ஓடுபவை ஆண் நதிகள் என்னும் கொள்கையின்படி பொருப்பிலிருந்து மேற்கு நோக்கி ஓடிய சுள்ளி 
யம்பேரியாறு ஆன் எனும் முன்னொட்டைப் பெறும்.(கழகத் தமிழகராதி -ப.92&704)
இக்கருத்தை ஆய்வாளரும் உறுதி செய்துள்ளனர் .(எஸ்.கிருஷ்ணசாமி ஐயங்கார் -சேரன் வஞ்சி -ப.41&42)
கண்மணி   

பொருத்தமாகத் தெரியவில்லை. மேற்கே நோக்கி ஓடும் சுள்ளியம்பேராறு ஆண்பெயரிலா இருக்கிறது? சுள்ளி என்பது தாவரம்.

இதை எழுதினோர் ஆன் 'cattle', ஆண் 'male' இரண்டும் வெவ்வேறான சொற்கள் என்று தெரியாதவரா?

கா/கான்,  கோ/கோன், மா/மான், ஆ/ஆன் என -ன் விகுதி ஏற்ற சொற்கள்.
வடமொழியில் ம்ருகம் X பசு = ( wild X domesticated animal ),
அதுபோல, தமிழில் மா/மான் X ஆ/ஆன்.

ஆ/ஆன் மிகப் பழைய சொற்கள். ஆக்கள். ஆயர்கள். ஆயர்பாடி.
ஆன் 'cow' முற்றிலும் ஆண் 'male' என்பதில் இருந்து வேறான சொல்.>

பொருப்பிலிருந்து தோன்றி ஓடும் நதிகளுக்கு பொருநை என்பது பொதுப்பெயர்.

 சுள்ளியம் பேரியாற்றுக்கு - இப்பெயர் சிறப்புப் பெயர் 
.
பொருப்பிலிருந்து கிழக்கு நோக்கி ஓடிய நதிகள் தண் என்னும் முன்னொட்டைப் பெற்றன.(எ -டு )தண் பொருநை >தாமிரபரணி .
அங்ஙனமே கொங்கு வஞ்சியை அடுத்து ஓடும் பொருநையும் 'தண் 'என்னும் முன்னொட்டைப் பெற்றுள்ளது ."தண்ணான்பொருநை "-(அகம் -பா93)

கொங்குக்கரூரை அடுத்து ஓடும் தண்ணான்பொருநையின் பழையசிறப்புப்  பெயர்கள் ஆனி ,வானி என்பன.(பிங்கல நிகண்டு -4061)

மேற்கரையிலிருந்து சேரர் படிப்படியாக கொங்கில் முன்னேறி கொங்குக்கரூரை தலைநகராகக் கொண்டு ஆண்டபோது தங்கள் பூர்விகத் தலைநகர் அருகில் ஓடிய ஆன்பொருநை  நினைவாகவே அதையும்  ஆன்பொருநை என்று அழைத்தனர்.எனினும் அது கிழக்கு நோக்கி ஓடியதாலேயே 'தண் 'என்னும் முன்னொட்டையும் சேர்த்து தண் ஆன்பொருநை ஆனது.    
சுள்ளியம்பேரியாறு மேற்கு நோக்கி ஓடியதால் ஆன்பொருநை என்னும் பொதுப்பெயர்க்குரியது .அது ஆண் நதிக்குரிய பொதுப்பெயர் என்பதை கழகத் தமிழகராதி தான் நிறுவுகிறது .(ப.93-ஆன் =பெற்றம்;ப.704-பெற்றம் =இடபம் )
கண்மணி   

N. Ganesan

unread,
Nov 16, 2017, 11:07:40 AM11/16/17
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
2017-11-16 3:02 GMT-08:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
கிழக்கு நோக்கி ஓடுபவை பெண் நதிகள் ;மேற்கு நோக்கி  ஓடுபவை ஆண் நதிகள் என்னும் கொள்கையின்படி பொருப்பிலிருந்து மேற்கு நோக்கி ஓடிய சுள்ளி 
யம்பேரியாறு ஆன் எனும் முன்னொட்டைப் பெறும்.(கழகத் தமிழகராதி -ப.92&704)
இக்கருத்தை ஆய்வாளரும் உறுதி செய்துள்ளனர் .(எஸ்.கிருஷ்ணசாமி ஐயங்கார் -சேரன் வஞ்சி -ப.41&42)
கண்மணி   

NG> பொருத்தமாகத் தெரியவில்லை. மேற்கே நோக்கி ஓடும் சுள்ளியம்பேராறு ஆண்பெயரிலா இருக்கிறது? சுள்ளி என்பது தாவரம்.

இதை எழுதினோர் ஆன் 'cattle', ஆண் 'male' இரண்டும் வெவ்வேறான சொற்கள் என்று தெரியாதவரா?

கா/கான்,  கோ/கோன், மா/மான், ஆ/ஆன் என -ன் விகுதி ஏற்ற சொற்கள்.
வடமொழியில் ம்ருகம் X பசு = ( wild X domesticated animal ),
அதுபோல, தமிழில் மா/மான் X ஆ/ஆன்.

ஆ/ஆன் மிகப் பழைய சொற்கள். ஆக்கள். ஆயர்கள். ஆயர்பாடி.
ஆன் 'cow' முற்றிலும் ஆண் 'male' என்பதில் இருந்து வேறான சொல்.>

பொருப்பிலிருந்து தோன்றி ஓடும் நதிகளுக்கு பொருநை என்பது பொதுப்பெயர்.

 சுள்ளியம் பேரியாற்றுக்கு - இப்பெயர் சிறப்புப் பெயர் 
.
பொருப்பிலிருந்து கிழக்கு நோக்கி ஓடிய நதிகள் தண் என்னும் முன்னொட்டைப் பெற்றன.(எ -டு )தண் பொருநை >தாமிரபரணி .
அங்ஙனமே கொங்கு வஞ்சியை அடுத்து ஓடும் பொருநையும் 'தண் 'என்னும் முன்னொட்டைப் பெற்றுள்ளது ."தண்ணான்பொருநை "-(அகம் -பா93)


கண்மணி > 
கொங்குக்கரூரை அடுத்து ஓடும் தண்ணான்பொருநையின் பழையசிறப்புப்  பெயர்கள் ஆனி ,வானி என்பன.(பிங்கல நிகண்டு -4061)

மேற்கரையிலிருந்து சேரர் படிப்படியாக கொங்கில் முன்னேறி கொங்குக்கரூரை தலைநகராகக் கொண்டு ஆண்டபோது தங்கள் பூர்விகத் தலைநகர் அருகில் ஓடிய ஆன்பொருநை  நினைவாகவே அதையும்  ஆன்பொருநை என்று அழைத்தனர்.எனினும் அது கிழக்கு நோக்கி ஓடியதாலேயே 'தண் 'என்னும் முன்னொட்டையும் சேர்த்து தண் ஆன்பொருநை ஆனது.    
சுள்ளியம்பேரியாறு மேற்கு நோக்கி ஓடியதால் ஆன்பொருநை என்னும் பொதுப்பெயர்க்குரியது .அது ஆண் நதிக்குரிய பொதுப்பெயர் என்பதை கழகத் தமிழகராதி தான் நிறுவுகிறது .(ப.93-ஆன் =பெற்றம்;ப.704-பெற்றம் =இடபம் )
கண்மணி   


பொருனை என்ற நதியோ, ஆன்பொருனை என்ற நதியோ கேரளாவில் எப்பொழுதும் எங்கும் ஓடியதில்லை.
எந்த இலக்கியத்தில், கல்வெட்டில் பொருனை (அ) ஆன்பொருனை கேரள மாநிலத்தில் ஓடியது என்பதற்கான சான்று
காட்டுகிறது என அறிய விழைகிறேன். இருந்தால் தாருங்கள்.

ஆன்பொருனை ஆன்பொருந்தக் கரையில் உள்ள வஞ்சி மாநகரம் இன்றைய கரூர்.
மேற்குக் கடற்கரைக்கு ஆன்பொருனை சென்று கலந்ததாகவோ, அக் கழிமுகத்தில்
வஞ்சி மாநகரம் இருந்ததாகவோ இலக்கிய (உ-ம்: சங்கம்), கல்வெட்டு, தொல்லியல்
சான்றுகள் ஏதுமில்லை. ஆன்பொருனைக் கரையில் வஞ்சி மாநகர், பின்னர் சிந்தாமணி இயற்றிய
காலத்தில் பெருவஞ்சி (தாராபுரம்) இருந்தன. சேலம், மூலனூர் - வஞ்சி என்ற பெயர் உண்டு.
சேலம் தவிர மற்ற ஊர்களில் வஞ்சியம்மன் திருக்கோயில்கள் இன்றும் வழிபாட்டில் உள்ளன.
கொங்கு நிலவியலை அறிய கோவை வந்தால், நாம் அங்கே போய்ப் பார்க்கலாம்.
தொல்லியல் அறிஞர்கள் புலவர் செ. ராசு. ர. பூங்குன்றன், கா. ராஜன், துரை. சுந்தரம்,
பிஎஸ்ஜி கல்லூரி ரவி (துரை சுந்தரத்தின் கல்வெட்டாசான்), ... அழைப்போம்.
கிறிஸ்துமஸ் - பொங்கல் முடிய கோவையில் இருப்பேன்.

மு. ராகவையங்கார் வஞ்சி மேலைக் கடற்கரையில் என எழுதினார் என்றீர்கள்.
அவ்வாறு அவர் செய்யவில்லை. வஞ்சி - சங்க காலச் சேரர் மாநகர் ஆன்பொருனைக்
கரையில் உள்ள ஆன்நிலை அப்பன் வாழும் கருவூர் என்றெழுதினார் என தகவல்
குறிப்பிட்டேன்.

எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார் ராகவையங்கார்கள் போலத் தமிழறிந்தவர் அல்லர்.
வரலாறு தெரியும். சொ. சாந்தலிங்கம் விராலிமலையை விறலியர் மலை என
எழுதுகிறார் :) இதை ஏற்கமுடியுமா? அதுபோல தான் ஆண்பொருனை,
ஆண் நதி என்றெல்லாம் எஸ். கிருஷ்ணசாமியின் கற்பனைகள். சான்றுகள்
இல்லாத கூற்றுகள் அவை.

வஞ்சிக் கருவூர் பற்றி இரா. கிருஷ்ணமூர்த்தி, நாகசாமி, ஐராவதம் நூல்களையும்
நீங்கள் வாசித்தால் தொல்லியலாளர் வஞ்சி என்பது கருவூர் எனக் காட்டுவது 
அறியலாகும்.

It is 20th century Tamil Nadu politics that sustained Vanji as on the west coast in Sangam times.
What was on the west coast was only Musiri (Musiris in Yavana texts) pattinam, we don't
hear of any Vanji city on the west seashore in Sangam texts at all. No inscriptions in Brahmi
to say Cheras' capital was Musiri, it was just a toll gate in the port. The capital was in Vanji Karur,
inland according to Greeks.

N. Ganesan

kanmani tamil

unread,
Nov 16, 2017, 12:55:53 PM11/16/17
to mintamil
< முசிரஸ் கடற்கரை நகரம். ஆனால், கரூர் என்னும் தலைநகரம் உள்நாட்டில் இருக்கிறது என்கின்றனர் கிரேக்க நூலாசிரியர்கள்.>

டாலமி கடற்கரைப் பட்டினங்களைத் தொகுத்துக் கூறும்போது அலிமுகம் அல்லது பொய்முகம் என வழங்கும் சூடோய்ஸ்த்மஸ்க்குக் கிழக்கில் உள்ள மூன்று ஊர்களில் ஒன்று கொரவூரா என்கிறார்.இது கரூர் என்று எண்ண இடமுள்ளது.இதையடுத்து சூடோய்ஸ்த்மஸ்க்கும் தெற்கில் உள்ள   பரிஸ் துறைமுகத்துக்கும் இடைப்பட்ட உள்நாட்டு ஊர்களில் கரூரா என்ற ஊர் ஒன்று சேரமன்னர்களின் தலைநகர் என்றே குறிப்பிடுகிறார் (வி.கனகசபை .....ப.33,34.&எஸ்.கிருஷ்ணசாமி .....ப.14)

இங்கே சொல்லப்படும் 'கொரவூரா','கரூரா' இரண்டையுமே டாலமி கடற்கரையை அடுத்த உள்நாட்டு ஊர்கள் என்று சொல்வது குறிப்பிடத்தக்கது .

டாலமி முசிறிக்கும் கொரவூராவுக்கும் கொடுக்கும் நேர்கோட்டு நிரைகோட்டுக் கணக்கின்படிகொங்குக் கரூரே வஞ்சி என்கிறார் பெ.இராமலிங்கன் (ப.35)

டாலமி கூறும் நேர்கோடு நிரைகோட்டுக் கணக்கு நம்ப இயலாததாக உள்ளது.கன்னியாகுமரி ,பரிகாசா துறைமுகம் ,பைதான் நகரம் ,வங்காளக் குடாக்கடல் கங்கையின் சங்கமத்துறை ,காண்டன் நகரம்,மகாநதி ,கம்போடியா நாட்டுக் கடற்கரை போன்ற பல இடங்களின் நேர்கோட்டு நிரைகோட்டு அளவுகள் முற்றிலும் பொருத்தமற்ற முறையில் குறிக்கப்பட்டுள்ளன.(ம.பசுவலிங்கம் -சங்ககால வஞ்சி -ப.131)

இதனால் எந்த  வஞ்சியையும்  நிர்ணயிக்க  டாலமியின் நேர்கோட்டு நிரைகோட்டு கணக்கை ஆதாரமாகக் கொள்ள இயலாது .

டாலமி உள்நாட்டில் இருந்தது என்று கூறும் 'நெல்கிந்தா (நிற்குன்றம் )'கரையிலிருந்து 120 ஸ்டேடியா தொலைவில் இருந்ததாகக் கூறுகிறார்.இது 10 மைல் தூரத்திற்கு உட்பட்ட இடமாகும். பத்து மைல் தூரத்திற்கு உட்பட்ட ஓரிடமே உள்நாட்டு ஊர் என்று கூறப்படும் போது கரூரா உள்நாட்டு ஊர் என்றமைக்காக அதை 100 மைல்களுக்கு மேல் உள்ளே தள்ளியிருக்கும் கொங்குக் கரூர் என்று முடிவு செய்ய வேண்டியதில்லை.
கண்மணி  
   



--

kanmani tamil

unread,
Nov 16, 2017, 1:01:01 PM11/16/17
to mintamil
                                                                                      < ஆண்பொருனை,
ஆண் நதி என்றெல்லாம் எஸ். கிருஷ்ணசாமியின் கற்பனைகள்.>
கழகத் தமிழகராதி காட்டும் தரவிற்கு எதிர்வாதம் என்ன?
கண்மணி 

தேமொழி

unread,
Nov 16, 2017, 4:50:05 PM11/16/17
to மின்தமிழ்
ஏன் முடியாது?
இந்தக் கோணத்தில்தான் மரைக்காடு  >>> மறைக்காடு என்று விவாதித்தது நினைவில் வந்து செல்கிறது.

..... தேமொழி

 
அதுபோல தான் ஆண்பொருனை,

தேமொழி

unread,
Nov 16, 2017, 4:55:34 PM11/16/17
to மின்தமிழ்


On Thursday, November 16, 2017 at 3:02:33 AM UTC-8, kanmanitamilskc wrote:
கிழக்கு நோக்கி ஓடுபவை பெண் நதிகள் ;மேற்கு நோக்கி  ஓடுபவை ஆண் நதிகள் என்னும் கொள்கையின்படி பொருப்பிலிருந்து மேற்கு நோக்கி ஓடிய சுள்ளி 
யம்பேரியாறு ஆன் எனும் முன்னொட்டைப் பெறும்.(கழகத் தமிழகராதி -ப.92&704)
இக்கருத்தை ஆய்வாளரும் உறுதி செய்துள்ளனர் .(எஸ்.கிருஷ்ணசாமி ஐயங்கார் -சேரன் வஞ்சி -ப.41&42)
கண்மணி   

பொருத்தமாகத் தெரியவில்லை. மேற்கே நோக்கி ஓடும் சுள்ளியம்பேராறு ஆண்பெயரிலா இருக்கிறது? சுள்ளி என்பது தாவரம்.

இதை எழுதினோர் ஆன் 'cattle', ஆண் 'male' இரண்டும் வெவ்வேறான சொற்கள் என்று தெரியாதவரா?

கா/கான்,  கோ/கோன், மா/மான், ஆ/ஆன் என -ன் விகுதி ஏற்ற சொற்கள்.
வடமொழியில் ம்ருகம் X பசு = ( wild X domesticated animal ),
அதுபோல, தமிழில் மா/மான் X ஆ/ஆன்.

ஆ/ஆன் மிகப் பழைய சொற்கள். ஆக்கள். ஆயர்கள். ஆயர்பாடி.
ஆன் 'cow' முற்றிலும் ஆண் 'male' என்பதில் இருந்து வேறான சொல்.>

பொருப்பிலிருந்து தோன்றி ஓடும் நதிகளுக்கு பொருநை என்பது பொதுப்பெயர்.

 சுள்ளியம் பேரியாற்றுக்கு - இப்பெயர் சிறப்புப் பெயர் 
.
பொருப்பிலிருந்து கிழக்கு நோக்கி ஓடிய நதிகள் தண் என்னும் முன்னொட்டைப் பெற்றன.(எ -டு )தண் பொருநை >தாமிரபரணி .
அங்ஙனமே கொங்கு வஞ்சியை அடுத்து ஓடும் பொருநையும் 'தண் 'என்னும் முன்னொட்டைப் பெற்றுள்ளது ."தண்ணான்பொருநை "-(அகம் -பா93)

கொங்குக்கரூரை அடுத்து ஓடும் தண்ணான்பொருநையின் பழையசிறப்புப்  பெயர்கள் ஆனி ,வானி என்பன.(பிங்கல நிகண்டு -4061)

மேற்கரையிலிருந்து சேரர் படிப்படியாக கொங்கில் முன்னேறி கொங்குக்கரூரை தலைநகராகக் கொண்டு ஆண்டபோது தங்கள் பூர்விகத் தலைநகர் அருகில் ஓடிய ஆன்பொருநை  நினைவாகவே அதையும்  ஆன்பொருநை என்று அழைத்தனர்.எனினும் அது கிழக்கு நோக்கி ஓடியதாலேயே 'தண் 'என்னும் முன்னொட்டையும் சேர்த்து தண் ஆன்பொருநை ஆனது.    
சுள்ளியம்பேரியாறு மேற்கு நோக்கி ஓடியதால் ஆன்பொருநை என்னும் பொதுப்பெயர்க்குரியது .அது ஆண் நதிக்குரிய பொதுப்பெயர் என்பதை கழகத் தமிழகராதி தான் நிறுவுகிறது .(ப.93-ஆன் =பெற்றம்;ப.704-பெற்றம் =இடபம் )

/////மேற்கரையிலிருந்து சேரர் படிப்படியாக கொங்கில் முன்னேறி கொங்குக்கரூரை தலைநகராகக் கொண்டு ஆண்டபோது தங்கள் பூர்விகத் தலைநகர் அருகில் ஓடிய ஆன்பொருநை  நினைவாகவே அதையும்  ஆன்பொருநை என்று அழைத்தனர்.எனினும் அது கிழக்கு நோக்கி ஓடியதாலேயே 'தண் 'என்னும் முன்னொட்டையும் சேர்த்து தண் ஆன்பொருநை ஆனது.    
சுள்ளியம்பேரியாறு மேற்கு நோக்கி ஓடியதால் ஆன்பொருநை என்னும் பொதுப்பெயர்க்குரியது .அது ஆண் நதிக்குரிய பொதுப்பெயர் என்பதை கழகத் தமிழகராதி தான் நிறுவுகிறது .(ப.93-ஆன் =பெற்றம்;ப.704-பெற்றம் =இடபம் )/////

இது போல ஏரணத்துடன் கொண்ட விளக்கங்கள் அரிது.

(முன்னரே கண்மணி குழுமத்தில் எழுதத் துவங்கியிருந்தால்  நான் மேலும் பல தெரிந்து கொண்டிருந்திருப்பேன்)

..... தேமொழி  

LNS

unread,
Nov 16, 2017, 6:29:24 PM11/16/17
to மின்தமிழ்
மிகவும் சுவாரசியமான இழை. 

இந்த கேள்விக்கு நூல் ஆதாரங்களை (textual sources) மட்டும் வைத்துக்கொண்டு விடை காண இயலாது என்பது என் தாழ்மையான கருத்து. கலாச்சார, பொருளாதார, மத, கலை, மக்கள் பெயர்ச்சி   இன்னும் மற்ற  ஆதாரங்களையும்  கலாச்சார கோட்பாடுகளின் வளர்ச்சியையும்  வைத்தே இதை ஆராய வேண்டும். 

 ஒரு சிறிய சான்றாக  நம்பூதிரிகளின் வரலாற்றையே எடுத்துக் கொள்வோம். அவர்களைக் கேட்டால் நாங்கள் 'அந்தர்வேதி' யிலிருந்து குடிபெயர்ந்து கேரளத்திற்கு வந்தோம் என்பார்கள். இதற்கு கேரளோல்பத்தி போன்ற ஆதாரங்களையும் சொல்வார்கள். கேரளோல்பத்தி என்பது கோயில் தல வரலாறு போல் ஒரு இன வரலாறு. இவ்வகை வரலாறுகளின் ஒரே குறிக்கோள் தம் கோயிலையோ தம் இனத்தையோ உயர்த்தி காண்பிப்பதே.

'அந்தர்வேதி' என்பது கங்கைக்கும் யமுனைக்கும் நடுவில் உள்ள பிரதேசம். இதனை இந்தியில் 'தொஆப்' (Doab) என்று சொல்வார்கள். இதற்கு புண்ணியபூமி என்ற ஒரு பெரிய புகழும் வரலாற்றில் இருந்ததன் பேரில் வடக்கே எந்த பிராமண வர்க்கத்தைக் கேட்டாலும் எங்கள் முன்னோர்கள்  'அந்தர்வெதி' யிலிருந்து கிளம்பினார்கள் என்று சொல்லிக்கொள்வார்கள். ஆனால் மெய்யானது என்ன? கேரளத்து நம்பூதிரிகள் குணதிசையிலிருந்து குடநாட்டிற்கு  பெயர்ந்தார்கள்  என்பது  திண்ணம். இது அவர்களின் வேதசாகை, கோத்திரம், சூத்திரம், சிரௌத கோட்பாடு போன்ற இன்னும் சில அறிகுறிகளை வைத்து எளிதாக நிறுவலாம். மேலும் அவர்களிந் பழைய கிராம-அக்ரகார இருக்கைகளிலிருந்து இவர்கள் பாலக்காடு இடைவெளி  (Palghat Gap) மூலம் குடநாட்டில் குடியேறினார்கள் என்றும் கூறலாம். தமிழகத்தில் இன்றும் வாழும் பூர்வசிகை பிராமணர்களின் (பிராமண வகுப்பில் சிறுபான்மையினர்) வேதம் முதலிய கோட்பாடுகள் நம்பூதிரிகளுடன் ஒத்துப் போகிறது என்றும் காணலாம். இக் குடியினர் ஒருகாலத்தில் தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் இருந்தனர் என்பது பல்லவ சோழ காலத்து கல்வெட்டுக்கள் மற்றும் இலக்கிய ஆதாரங்களிலிருந்து (திருமுறை, நாலாயிரம்) குன்றின் மேலிட்ட விளக்கைப் போல் தெரியும். (பேரா. தெண்ணிலபுரம் மகாதேவனின் ஆய்வுக் கட்டுரை பார்க்கவும்). 

மக்கட் பெயர்ச்சிக்கு சில முக்கியமான காரணங்கள் -  3-4ம் நூற்றாண்டில் மழபுலத்திலிருந்து ஊடுருவிய களப்பிரர் ஆக்கிரமிப்பு, பின்னர் பல்லவ-பாண்டிய சண்டை, சோழ-சேர சண்டைகள் என்று பல. அதனால் தான் கேரள நாட்டு சரித்திரம் (அதாவது எழுத்து வடிவில் வந்த சரித்திரம் - செப்பேடுகள், கல்வெட்டுக்கள், செப்பு பட்டயங்கள் ) கி பி 825 க்கு முன் இல்லை. 


பிராமணர்கள் கிழக்கிலிருந்து மேற்குச் சென்றார்கள் என்ற பட்சத்தில் அவர்களை ஆதரிக்கும் மன்னர்கள் மேற்கிலிருந்து கிழக்கு வந்தார்கள் என்றால் எதிர்மறையாக இருக்கிறதே! இதை தகுந்த ஆதாரங்கள் இல்லாமல்   வெறும் ஆற்றின் பெயர்களை வைத்து எப்படி முடிவுக்கு வருவது? 

தமிழக கேரள பழைய சம்பந்தங்கள் பற்றி  ஒன்று மட்டும் நாம்  துணியலாம் - ஏறத்தாழ எல்லாவிதமான மக்கள் பெயர்ச்சியும் கோட்பாட்டு பெயர்ச்சியும் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி சென்றிருக்கிறதே ஒழிய மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி அல்ல. 

அன்புடன்

LNS

N. Ganesan

unread,
Nov 16, 2017, 8:49:03 PM11/16/17
to மின்தமிழ்
விராலிமலையைச் சொல்கிறீர்களா?  பழைய சங்ககாலப் பெயர் உள்ளது.

நா. கணேசன்
 

..... தேமொழி

 
அதுபோல தான் ஆண்பொருனை,
ஆண் நதி என்றெல்லாம் எஸ். கிருஷ்ணசாமியின் கற்பனைகள். சான்றுகள்
இல்லாத கூற்றுகள் அவை.

வஞ்சிக் கருவூர் பற்றி இரா. கிருஷ்ணமூர்த்தி, நாகசாமி, ஐராவதம் நூல்களையும்
நீங்கள் வாசித்தால் தொல்லியலாளர் வஞ்சி என்பது கருவூர் எனக் காட்டுவது 
அறியலாகும்.

It is 20th century Tamil Nadu politics that sustained Vanji as on the west coast in Sangam times.
What was on the west coast was only Musiri (Musiris in Yavana texts) pattinam, we don't
hear of any Vanji city on the west seashore in Sangam texts at all. No inscriptions in Brahmi
to say Cheras' capital was Musiri, it was just a toll gate in the port. The capital was in Vanji Karur,
inland according to Greeks.

N. Ganesan

--

N. Ganesan

unread,
Nov 17, 2017, 10:47:56 AM11/17/17
to மின்தமிழ், vallamai
2017-11-16 13:50 GMT-08:00 தேமொழி <jsthe...@gmail.com>:

On Thursday, November 16, 2017 at 8:07:40 AM UTC-8, N. Ganesan wrote:

எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார் ராகவையங்கார்கள் போலத் தமிழறிந்தவர் அல்லர்.
வரலாறு தெரியும். சொ. சாந்தலிங்கம் விராலிமலையை விறலியர் மலை என
எழுதுகிறார் :) இதை ஏற்கமுடியுமா?

ஏன் முடியாது?
இந்தக் கோணத்தில்தான் மரைக்காடு  >>> மறைக்காடு என்று விவாதித்தது நினைவில் வந்து செல்கிறது.


சாந்தலிங்கம் ஆகட்டும், எஸ். கிருஷ்ணசாமி ஆகட்டும் தமிழறிஞர்கள் எனச் சொல்லமுடியாது.
அதனால் தான் விறலியர் வாழ்ந்ததால் விராலிமலை என சாந்தலிங்கம் என நினைந்து எழுதியுள்ளார்.
எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார் செய்த தவறு மேலைக் கடற்கரையில் வஞ்சி மாநகரம் இருந்தது
என - கொச்சி சமஸ்தானமும், அதன் திவானாக விளங்கிய கோவைக்காரரும் வேண்ட எழுதியுள்ளார்.
ஆனால், அவ்வாறு கொள்ள சான்றுகள் ஒன்றுமில்லை. சங்க இலக்கியம் படித்தால் இது தெளிவாகத் தெரியும்.
அதைத்தான் அவ்விலக்கியத்தை தேடி அலைந்து ஓலைச்சுவடியினின்றும் முதலில் பதிப்பித்த
ராகவையங்கார்கள் எழுதியுள்ளனர்.

கொங்கு நிலவியலும், குலவியலும் அறிந்து ஆராய்ந்தால் இதன் உண்மை புலப்படும். சங்க இலக்கியத்தில்
ஏராளமான இடங்களில் முசிறி புகலப்படுகிறது. அது தான் வஞ்சி மாநகரம் என்றால் ஓரிடத்திலாவது
சஙகச் சான்றோர் குறிப்பிடாது விட்டிருப்பார்களா? சிந்திப்போம். எஸ். கிருஷ்ணசாமி குறிப்பிடும்
ஆண் நதி, பெண் நதி இப்படியெல்லாம் எந்த தென்னிந்திய இலக்கியம், ஆவணம், கல்வெட்டு குறிப்பிடுகிறது
என்றறிய ஆர்வம், ஆண்பொருனை என்று எங்காவது எப்பவாவது ஒரு நதி இருந்ததா?
பொருனை என்றோ, ஆண்பொருனை என்றோ எப்பவாவது கேரளாவில் ஒரு ஆறு உண்டா?
எது இதுபோன்ற சான்று தரும் ஆவணம்? சங்க இலக்கியத்தில் வஞ்சி சந்தேகமில்லாமல்
ஆன்பொருனைக் கரையில் என்று பாடியுள்ளனர்.
 
மடல்களைப் படிக்கும்போது எனக்குத் தோன்றுவது. முசிறிதான் (பிற்கால கொடுங்கோளூர்)
சங்க கால வஞ்சி மாநகரம். போனால் போகுது-ன்னு வேணும்னா ஆன்பொருனைக் கரையில்
உள்ள வஞ்சியை வைத்துக்கொள்ளலாம், இரண்டாவது, நாலாவது வஞ்சியாக ...

ஆனால், கிடைத்துள்ள சங்க இலக்கியம், தொல்லியல் சான்றுகள் இம்முடிவுகட்கு 
நேரெதிர்மாறாக இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

சேதுபதி மகாராஜா வேண்ட, சங்க இலக்கியப் பதிப்பாசிரியர்கள் ராகவையங்கார்கள்
100+ ஆண்டுமுன்னரே விளக்கிய செய்திகள் இவை. இவர்களை கொங்குநாட்டார்
அதனால் சொந்தநாட்டு அபிமானத்தால் எழுதினர் என்று புறந்தள்ளி ஒதுக்க இயலாது.

நா. கணேசன்


விராலிமலையைச் சொல்கிறீர்களா?  பழைய சங்ககாலப் பெயர் உள்ளது.

நன்றி, விரிவாகத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன், அடுத்த தவணைக்குக் காத்திருக்கிறேன்.

..... தேமொழி





 

N. Ganesan

unread,
Nov 17, 2017, 9:58:10 PM11/17/17
to மின்தமிழ்
evidence?
 
(முன்னரே கண்மணி குழுமத்தில் எழுதத் துவங்கியிருந்தால்  நான் மேலும் பல தெரிந்து கொண்டிருந்திருப்பேன்)


100% ஆம்.  பேரா. கண்மணி எழுதுவதால் நிறையக் கற்றுக் கொள்கிறோம். தமிழ்நாட்டுப் பேராசிரியர்கள் பலரும்
அவரை முன்மாதிரியாகக் கொண்டு தங்கள் அனுபவங்களை, ஆராய்ச்சிகளை இணையத்தில் பகிர்ந்துகொள்ள
முன்வருவரே ஆனால், தமிழ் இணையத்தில் ஆழம் மிக்கதாகும். 

பிஎச்டி ஆய்வேடுகளை தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் சோதகங்கா.இன் தளத்தில் வலையேற்ற வேண்டும்.
படித்து ஆராய்வாருக்கு உபயோகமாகும்.

நா. கணேசன்
 
..... தேமொழி  

N. Ganesan

unread,
Nov 20, 2017, 12:02:31 AM11/20/17
to மின்தமிழ்


                                                                                      < ஆண்பொருனை,
ஆண் நதி என்றெல்லாம் எஸ். கிருஷ்ணசாமியின் கற்பனைகள்.>

On Thursday, November 16, 2017 at 10:01:01 AM UTC-8, kanmanitamilskc wrote: 
கழகத் தமிழகராதி காட்டும் தரவிற்கு எதிர்வாதம் என்ன?
கண்மணி 


கழகத் தமிழகராதி எஸ். கிருஷ்ணசாமி கருத்தைத் தருகிறது.
நாம் பார்க்க வேண்டியது எஸ். கிருஷ்ணசாமிக்கு முன்
எங்காவது “ஆண்பொருனை” கேரளாவில் ஓடுகிறது என
ஆவணம், நூல் உள்ளதா என்று.  

ஆண்பொருனை என்று ஆவணமும் காணவில்லை.

நா. கணேசன்

தேமொழி

unread,
Nov 20, 2017, 12:44:32 AM11/20/17
to மின்தமிழ்

The late 
M. Raman Namboothiri of the Archaeological Survey of India, who was an expert in the history and heritage of Tripunithura, in one of his writings,has stated that the Padinjare Puzha is actually the historical Poorna river. His work titled “Poornayude Puravrutham” explores the origin, the course and the flow of the Periyar’s tributary till the great flood of 1341. The flood changed the course of many rivulets.
M. Raman Namboothiri of the Archaeological Survey of India
என தொல்லியல் துறை சார்ந்தவர் கொடுத்த தகவலை முன்னரே நான் இங்கு கொடுத்துள்ளேன்.

..... தேமொழி 
 

நா. கணேசன்

kanmani tamil

unread,
Nov 20, 2017, 2:10:02 AM11/20/17
to mintamil
<(முன்னரே கண்மணி குழுமத்தில் எழுதத் துவங்கியிருந்தால்  நான் மேலும் பல தெரிந்து கொண்டிருந்திருப்பேன்)>
ஆம் தேமொழி முன்னரே நான் குழுமத்தில் மடலாடத் தொடங்கியிருந்தால் நானும் நிறைய புதுச் செய்திகளையும் கோணங்களையும் கற்றுக் கொண்டிருப்பேன் .
நான் செய்த பணியும் இல்லறச் சுமையும் என்னை இவ்வளவு காலம் கழித்துத் தான் குழுமத்தில் நுழைய விட்டன.மூன்று நாட்கள் கழித்து நேற்று இரவு 11மணிக்குத் தான் வீட்டிற்குள் நுழைந்தேன்.(3நாட்கள் -மகள் வீடு -பேரக் குஞ்சுகளோடு குற்றாலம் -திருமலைக் குமாரசாமி கோயில் என கழிந்தது.கைப்பேசியைத் தொடுவதில்லை.தொட்டால் உடனே விளையாடப் பிடுங்கி விடுவான்கள் .)எல்லோரையும் தூங்க வைத்து விட்டு 12மணிக்கு மேல் வஞ்சி இழையில் என்ன ஓடியிருக்கிறது என்று பார்த்துவிட்டுத்தான் தூங்கப் போனேன்.
இந்தக் குழுமத்திற்குள் நுழைந்த பிறகு தான் -திருவள்ளுவர் சமயம் பற்றி இவ்வளவு தீவிரமாக வாதம் செய்வார்களா ?!
                                                                                       சொல்லாராய்ச்சியில் இத்தனை கோணங்களா?!!
                                                                                         சமணம் பற்றி இவ்வளவு விபரங்கள் தமிழருக்கும் தெரியுமா?!!!
                                                                                        சைவ சித்தாந்தத்தில் 0ஆக இருக்கிறோமே?
என்று ஒவ்வொரு நாளும் புதிது புதிதாகப் படிக்கிறேன்.'கற்றது கைம்மண்ணளவு ;கல்லாதது உலகளவு '
                                                                                                          'கல்வி கரையில ;கற்பவர் நாள் சில ' 
அனுபவபூர்வமாக உணர்கிறேன்.
கண்மணி   

--

kanmani tamil

unread,
Nov 20, 2017, 2:32:40 AM11/20/17
to mintamil
<மிகவும் சுவாரசியமான இழை. 

இந்த கேள்விக்கு நூல் ஆதாரங்களை (textual sources) மட்டும் வைத்துக்கொண்டு விடை காண இயலாது என்பது என் தாழ்மையான கருத்து. கலாச்சார, பொருளாதார, மத, கலை, மக்கள் பெயர்ச்சி   இன்னும் மற்ற  ஆதாரங்களையும்  கலாச்சார கோட்பாடுகளின் வளர்ச்சியையும்  வைத்தே இதை ஆராய வேண்டும்.>
நன்றி ஐயா ,
சுவாரஸ்யம் என்ற தங்கள் கருத்துரை மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.
இழையின் நோக்கம் 'சங்க கால வஞ்சி எது?' என்பது அன்று.
'சங்க காலத்தில் 2வஞ்சிகள் இருந்தன 'என்பதை இலக்கிய ஆதாரங்கள் மூலம் நிறுவுவது.
பதிற்றுப்பத்து அரைகுறையாகக் கிடைத்திருப்பதாலும் ,மேற்குக் கடற்கரை பல மாற்றங்களுக்கு உட்பட்டதாலும் அதை நிறுவுவது கடினமான சவாலாக உள்ளது.
நம்பூதிரிகளின் குடியேற்றம் சங்க காலத்திற்குப் பிற்பட்டது.
சுள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க -யவனர் தந்த வினைமாண் நன்கலம் -பொன்னோடு வந்து கறியோடு பெயர்ந்த போது ;அந்தக் கழியை அடுத்த உள்நாட்டுப் பகுதியில்  ஒரு வஞ்சி இருந்தது ;அது தான் மூதூர் ; என்பது என்னுடைய கருதுகோள். 
அதனால் அதற்கு சங்க இலக்கியம் தான் ஆதாரங்களைக் கொடுக்க இயலும்.
கண்மணி 

kanmani tamil

unread,
Nov 20, 2017, 3:19:50 AM11/20/17
to mintamil
<கழகத் தமிழகராதி எஸ். கிருஷ்ணசாமி கருத்தைத் தருகிறது.
நாம் பார்க்க வேண்டியது எஸ். கிருஷ்ணசாமிக்கு முன்
எங்காவது “ஆண்பொருனை” கேரளாவில் ஓடுகிறது என
ஆவணம், நூல் உள்ளதா என்று.>
கழகத் தமிழகராதி உருவானதில் எஸ்.கிருஷ்ணசாமி ஐயங்காருக்குப் பங்கு இருந்ததா?எனக்குத் தெரியாது.
'ஆண் பொருநை 'என்ற பெயரை யாருமே எங்குமே பயன்படுத்தவில்லை .
வடநூலார் கொள்கைப்படி கிழக்கு நோக்கி ஓடி வருபவை பெண் நதிகள் ;தண் -என்னும் முன்னொட்டைப் பெறுவன மேற்கு நோக்கி ஓடுபவை ஆண் நதிகள்;ஆன் -என்னும் முன்னொட்டைப் பெறுவன .(கோ.வே.பெருமாள் -பொருநை வளம் -ப.20&ஒளவை.சு.துரைசாமிப்பிள்ளை -நந்தா விளக்கு -ப.8,9) .
'ஆன்-'என்னும் முன்னொட்டு ஆண்பாலைக் குறிப்பதற்கு கழகத் தமிழகராதி ஆதாரம் தருகிறது.
எஸ்.கிருஷ்ணசாமி ஐயங்கார் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.நானும் ஏற்றுக்கொண்டுள்ளேன்.அவ்வளவே !
கொங்கு நாட்டு ஆன்பொருநைக்கு ஆனி /வானி என்ற பழம் பெயர்கள் உள்ளன என்பது பிங்கலந்தை தரும் செய்தி.இவர்கள் யாருமே அமராவதி ஆற்றுக்கு எதிராக சதி செய்பவர்கள் அல்லர்.
38 ஆண்டுகளாக குடிநீரை விலை கொடுத்து வாங்கித்தான் தாகம் தீர்க்கிறேன்.சிறுமியாக இருந்த பொழுது ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் நந்தவனத்திற்கு அழைத்துச் சென்று தெலா கிணற்றில் நீர் இறைத்து ஒரு தொட்டியை நிறைத்து எங்க ஐயா குளிக்கத் தருவார்.சொர்க்கமே கிடைத்தது போல் இருக்கும்.தண்ணீர் எந்த ஆற்றில் ஓடினாலும் ,நடந்தாலும் அதை ஒன்று போல தெய்வமாகவே பாவிப்பவள் நான்.
கண்மணி 

kanmani tamil

unread,
Nov 20, 2017, 8:00:48 AM11/20/17
to mintamil
                                                                                                                                                                                                                  <சேரர் ஆட்சி மேற்கே இருந்து கிழக்கே
பரவியது என்பதற்கு சங்க இலக்கியத்திலோ, தொல்லியல் சான்றுகளிலோ (நாணயங்கள்),தமிழ் ப்ராமி கல்வெட்டுகளிலோ சான்றுகள் இல்லை. ஆனால், கிழக்கே இருந்து மேற்கே நகர்ந்ததுகாலப்போக்கில் என்பதற்கு மறுக்கவியலாச் சான்றுகள் சங்க காலத்தில் நிரம்ப உள>

சேரர் ஆட்சி மேற்கிலிருந்து கிழக்கே பரவியது என்பதற்கு இந்த இழையில் ஏற்கெனவே சில பதிற்றுப்பத்துச் செய்திகளைத் தந்தேன்.
பாடல் எண்களையும் கருத்துக்களையும் மீண்டும் பதிகிறேன்.
        1.கொங்கு வெற்றியும் அதற்குப் பின்  பெருஞ்சோற்று நிலையும் உதியன் சேரலாதனுக்கும் பல்யானைச் செல்கெழு குட்டுவனுக்கும் ஒருங்கே உரியன.
                                                                                                                                                                                                                         -பதிற்.-3ம்.பதிகம் ,பா.22,அகம் .169&233
        2.செல்வக்கடுங்கோ வாழியாதன் கொடுமணம் ,பந்தர் என்ற கொங்குப் பகுதிகளை வென்றவன்.-பதிற்.பா.67
        3.பெருஞ்சேரலிரும்பொறை தகடூரை வென்றவன்.-பதிற்.பா.78
இந்த நிகழ்வுகளுக்குப் பின்னர் தான் பெருஞ்சேரலிரும்பொறை கொங்குக்கரூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டான்.அதனால் தான் அவன் பெயருடன்  கருவூரேறிய ஒள்வாட்கோப்பெருஞ்சேரலிரும்பொறை என்னும் அடைமொழி சேர்ந்தது.(இளங்குளம் குஞ்ஞன் பிள்ளை-(studies in kerala history p.162& ம.பசுவலிங்கம் -சங்ககால வஞ்சி -ப.25) 
பிறகு தான்  சேரமான் கணைக்காலிரும்பொறை சோழனோடு ஏற்பட்ட மோதலில் சிறைப்பட்டு அவமானம் தாங்காமல் உயிர் விட்டான் என்பது புறநானூற்றுச் செய்தி.நமக்குப் 10ம்.பத்து கிடைக்கவில்லை ;ஆதலால் இந்தப் போரை நான் வரிசையில் சேர்க்கவில்லை.
ஆனாலும் படிப்படியாக சேரர் கொங்குப் பகுதியை அடிப்படுத்தினர் என்பதற்கு இதைவிட வலுவான சான்று இருக்கமுடியுமா?

அப்படி அடிப்படுத்தியதால் தானே சோழன் சேரர்களோடு மோதுகிறான் .அடிப்படுத்தியதுடன் நிற்காமல் உள்ளி விழாக் கொண்டாட்டம் வேறு.!உறந்தையில் நிகழும் கொண்டாட்டத்தோடு ஒருங்கு வைத்துப் புலவரும் புகழ்கின்றனர்.சோழர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.'அங்கே ஆடி எங்கெங்கோ ஆடி கடைசியில் என் ஊர்ப்பக்கம் வந்து ஏன்டா ஆட்டம் போடுறீங்க ?'என்று கேட்பது போல் தானே அவன் கொங்குக்கரூரை முற்றுகை இடுகிறான்.புறம்.பா.36 

என் ஆய்வேட்டைக் கணினி மயமாக்க அவசரப்படவில்லை.
உங்களோடு மடல்வாதம் செய்யும்போது எனக்கும் புதுத்தெளிவு பிறக்கிறது.
நமது வாதஎதிர் வாதங்களுக்குப் பிறகு முடிவை எட்டிய பின்னர் அதைச் செய்கிறேன்.
கண்மணி   

N. Ganesan

unread,
Nov 20, 2017, 8:40:33 AM11/20/17
to மின்தமிழ்
2017-11-20 5:00 GMT-08:00 kanmani tamil <kanmani...@gmail.com>:                  

என் ஆய்வேட்டைக் கணினி மயமாக்க அவசரப்படவில்லை.
உங்களோடு மடல்வாதம் செய்யும்போது எனக்கும் புதுத்தெளிவு பிறக்கிறது.
நமது வாத எதிர்வாதங்களுக்குப் பிறகு முடிவை எட்டிய பின்னர் அதைச் செய்கிறேன்.
கண்மணி   

இந்த வாத எதிர்வாதங்களுக்கும் உங்கள் 1992 நூலுக்கும் தொடர்பில்லையே.
முடிவு எப்படி இருந்தாலும் சரி.

1992-ஆம் நூலில் இருப்பது இருப்பதுதானே. அதை இப்பொழுதே கொடுக்கலாம்.
பொள்ளாச்சி நசன் ஒரே நாளில் பிடிஎப் கொடுத்துவிடுவார். பின்னர் கொடுப்போம்
என்று நீங்கள் முடிவெடுப்பதும் உங்கள் கையிலே.

எப்போது கிடைக்கிறதோ, அப்போது படித்து என் கருத்துக்களை எழுதுகிறேன்.
நன்றி.

நா. கணேசன் 

N. Ganesan

unread,
Nov 20, 2017, 9:28:11 AM11/20/17
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
ஆம். நினைவிருக்கிறது. ராம் காமேசுவரன் காட்டிய காலடி என்ற ஊர் மாறிய வரலாறும்,
ராமன் நம்பூதிரி பழைய வரலாறு தெரியாமல் எழுதியிருப்பது பற்றி விரிவாகச் சொல்ல
எண்ணியுள்ளேன். நேரம் கிடைக்கியில் “காலடி” சங்கரர் பிறந்த ஊர் பொன்னானி தாலூக்கா.
அதை ஏன் சுள்ளிப் பேரியாற்றுக்கு மாற்றினார் சிருங்கேரி மடாதிபதி என எழுதவேண்டும்.
முஸ்லீம்கள் 85% வாழும் மலப்புரம் ஜில்லா சிக்கலாகும் என நினைத்தார். மாணிக்கவாசகர்
ஞானாசிரியனைச் சந்தித்தது சோழநாட்டு திருப்பெருந்துறையில். இதனை அவரே பாடியுள்ளார்.
ஆனால், பாண்டியர்கள் 12-ஆம் நூற்றாண்டில் மிமோரியல் ஆலயம் மாணிக்கவாசகருக்கு
எடுக்கிறபோது ஒரிஜினல் பெருந்துறை அவர்கள் கையிலோ, ஆட்சியிலோ இல்லை.
எதற்கும் பாதுகாப்பாக இருக்கட்டும் என்று தங்கள் நாட்டிலே ஆவுடையார்கோயில் எழுப்பினர்.
அதுபோல, காலடி மாற்றம். 

ராமன் நம்பூதிரி போன்ற மலையாள தேசத்தவர் சங்கத்தமிழ் இலக்கியம் போன்றவை படித்தால்
அவர்கள் எழுத்து மேன்மையுறும். படிஞாறுப்புழைக்கு (படிஞாயிறு = மேற்கு) மேற்குப்புழைக்கு
எப்பொழுதும் பூர்ணா என்ற பெயர் இல்லை.

 பொள்ளாச்சி, பாலக்காடு, ஷொரனூர், பொன்னானி அருகே கடலில் கலக்கும் பொன்வானி ஆறு
பூரணவாகினி என அழைக்கப்பட்டது. சங்கர விஜயம் நூலில் காணலாகும்.

ராமன் நம்பூதிரி பூர்ணா எது என தெரியாமல் எழுதியுள்ளார். சங்கத் தமிழ் போன்றவற்றை
அறியாமையே காரணம். கண்மணி சொல்வதுபோல், கொங்கு நிலவியல் அறியாதிருந்துள்ளார்.
சேரன் வரலற்ற்றுக்கு கொங்குக் குலவியல் பற்றிக் கண்மணி அவர்கள் 1992-ல் நூலில் குறிப்பிடவில்லை
என நினைக்கிறேன். அதுபற்றி அவர்க்கு எழுதவேண்டும்.

 சுள்ளியம்பேரியாறு என்பதில் சுள்ளி < சுருளி. சுருளிமலையில்
உற்பத்டி ஆகும் முல்லைப்பெரியாறு சங்க காலத்தில் சுள்ளியம்பேரியாறு. இன்றும்
அதன் பெயர் பெரியாறு தான். சுருளி > சுர்ளி > சுள்ளி - இதன் தாவரப் பெயர்
Hardwickia Binata என்பது. தமிழில் கருமரம் என்போம். இது கருமர(ம்) -  > கர்மர > கம்மர
என்று கன்னடத்திலும், கமர என்று மராட்டியிலும் வழங்கும் காராச்சா மரம்.
அதாவது கருமையான ஆச்சா மரம் இந்தக் கருமரம். அதனால், வடமொழியில்
அஞ்சன மர எனக் கருமரத்தை (=காராச்சா) வழங்குகின்றனர். https://en.wikipedia.org/wiki/Hardwickia
சுருளிமலையில் தொடங்கும் சுள்ளியாற்றின் பேர்க்காரணம் இதுதான்.
இந்தச் சுள்ளியும், விறகெரிக்கப் பயன்படும் சுள்ளியும் வெவ்வேறான
தாதுவேர் கொண்டவை. சுள்-/சுடு-/சுண்டு- (சுள்- > உஷ்ணம்) இந்தத் தாது பிறப்பிக்கும்
சொல் விறகெரிக்கும் சுள்ளி. 

ஆனால். கொங்குவேளிர் பாடும் பெருங்கதையில் சுருளி மரத்தை சுள்ளி
என்கிறார்: by consonant assimilation.

1. உஞ்சைக்காண்டம்
 
50. குறிஞ்சிநிலங் கடந்தது
 
           நறையு நாகமு முறையிரு வேரியும்
          வருக்கையு மாவும் வழையும் வாழையும்
          அருப்பிடை நிவந்த வாசினி மரமும்
     25   பெருஞ்செண் பகமும் பிண்டியும் பிரம்பும்
          கருங்கோற் குறிஞ்சியுங் கடிநாள் வேங்கையும்
          சுள்ளியுஞ் சூரலும் வள்ளியு மரலும்
          வால்வெள் வசம்பும் வள்ளிதழ்க் காந்தளும்
          பால்வெண் கோட்டமும் பனிச்சையுந் திலகமும்
     30   வேயும் வெதிரமும் வெட்சியுங் குளவியும்
          ஆய்பூந் தில்லையு மணிமா ரோடமும்
          ஆரமுஞ் சந்து மகிலுந் தமாலமும்
          ஏரில வங்கமு மேலமு மிருப்பையும்

பெருங்கதையில், கொங்குவேள் குறிப்பிடும்
சுள்ளி = சுருளி = காராச்சா என வழங்கும்.
கருமரம்/கம்மரம்/கமர எனப்படுவது இது.
இதனிலும் பால் வடியும். அதில் இருந்து சாம்பிராணி தயாரிப்பதுண்டு.

காராச்சா என்னும் = கரிய-ஆச்சா. இது தென்னிந்தியாவில் மிக
அழிந்து வருகிறது. இன்னும் சில ஆண்டுகளில் இல்லாது போய்விடும்.
யா மரம் எனப்பட்ட ஆ/ஆச்சா மரம் சங்க காலத்தில் தென்னிந்தியாவில்
இருந்தது. இன்றில்லை. ஆனால், யா/ஆ ஆச்சா (shorea robusta) குடும்ப
மரங்கள் சில இன்றும் தென்னாட்டில் உள்ளன. அவற்றை இங்லிஷ்காரர்கள்
Bastard Sal trees எனப் பெயரிட்டு எழுதினர்.

ஆனால், ஆச்சா எனப்படுவது சால மரம் ஆகும்.
இதனை தெளிவாகக் காட்டுவது நமக்கு தமிழின்
ஆதிநிகண்டு ஆகிய பிங்கலந்தை ஆகும்.
ஆ = ஆச்சா = சாலம் என்கிறது பிங்கலம்.
இது தெரியாமல், யா மரம் என்றால் ஏதோ மரத்தை எல்லாம்
சொல்லுதல் பிழை. அதற்கெல்லாம் வேறு பெயர் இருக்கிறது.
கேரளாவின் மிகப் பெரிய ஆற்றின் பெயராக
பல ஆயிரம் ஆண்டுகளாக.

விவசாயமும், ஜனநெருக்கடியும் அதிகரித்ததால்
யா என்னும் ஷொரியா ரோபஸ்டா தென்னக்த்தில் அழிபட்டது.
இப்போது ஒரிஸ்ஸா, வங்காளத்தில் வெகுவாக அழிந்துவருகிறது.
இந்த நூற்றாண்டில் சங்க கால யா மரம் (ஆ/ஆச்சா = ஷொரியா ரோபஸ்டா)
தென்னாட்டில் மட்டுமல்ல, வடக்கேயும் அழிந்துவிடலாம்.
தென்னாட்டில் காராச்சா எனப்படும் சுருளிமரம் இல்லாமல் போகும்.
ஆனால், சுள்ளி (< சுருளி) மரத்தின் பெயர் கொண்ட சுள்ளியம்பேரியாறு
இனி இலக்கியத்தில் மட்டுந்தானா? இல்லை, அந்நதியை அழிக்காமல்
சுத்தமாக வைத்துப் பாதுகாப்போம் என மலையாளிகள் முடிவு செய்யணும்,
தமிழ்நாடு அளவுக்குக் கொள்ளைபோகாது என நினைக்கிறேன்.

பிற பின்!
நா. கணேசன்
 
NG                                                                                      < ஆண்பொருனை,
ஆண் நதி என்றெல்லாம் எஸ். கிருஷ்ணசாமியின் கற்பனைகள்.>
On Thursday, November 16, 2017 at 10:01:01 AM UTC-8, kanmanitamilskc wrote: 
கழகத் தமிழகராதி காட்டும் தரவிற்கு எதிர்வாதம் என்ன?
கண்மணி 


கழகத் தமிழகராதி எஸ். கிருஷ்ணசாமி கருத்தைத் தருகிறது.
நாம் பார்க்க வேண்டியது எஸ். கிருஷ்ணசாமிக்கு முன்
எங்காவது “ஆண்பொருனை” கேரளாவில் ஓடுகிறது என
ஆவணம், நூல் உள்ளதா என்று.  

ஆண்பொருனை என்று ஆவணமும் காணவில்லை.

நா. கணேசன்

மு. ராகவையங்கார் அவர்கள் வஞ்சி - சங்க காலச் சேரர் மாநகர் ஆன்பொருனைக்
கரையில் உள்ள ஆன்நிலை அப்பன் வாழும் கருவூர் என்றெழுதினார் என தகவல்
குறிப்பிட்டேன்.

எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார் ராகவையங்கார்கள் போலத் தமிழறிந்தவர் அல்லர்.
வரலாறு தெரியும். சொ. சாந்தலிங்கம் விராலிமலையை விறலியர் மலை என
எழுதுகிறார் :) இதை ஏற்கமுடியுமா? அதுபோல தான் ஆண்பொருனை,
ஆண் நதி என்றெல்லாம் எஸ். கிருஷ்ணசாமியின் கற்பனைகள். சான்றுகள்
இல்லாத கூற்றுகள் அவை.

வஞ்சிக் கருவூர் பற்றி இரா. கிருஷ்ணமூர்த்தி, நாகசாமி, ஐராவதம் நூல்களையும்
நீங்கள் வாசித்தால் தொல்லியலாளர் வஞ்சி என்பது கருவூர் எனக் காட்டுவது 
அறியலாகும்.

It is 20th century Tamil Nadu politics that sustained Vanji as on the west coast in Sangam times.
What was on the west coast was only Musiri (Musiris in Yavana texts) pattinam, we don't
hear of any Vanji city on the west seashore in Sangam texts at all. No inscriptions in Brahmi
to say Cheras' capital was Musiri, it was just a toll gate in the port. The capital was in Vanji Karur,
inland according to Greeks.

NG

N. Ganesan

unread,
Nov 20, 2017, 9:37:58 AM11/20/17
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
சுள்ளியாற்றுக்கு வடமொழிப்பெயர் சூர்ணி என்பது. சூர்ணி : சுருளி/சுள்ளி 
என்னும் தமிழ்ப் பெயரின் வடமொழிப்படுத்தல். 

சுள்ளிப்பெரியாற்றுக்கு பூர்ணா என்ற பெயர் இல்லை. பழைய ஆவணங்களில்.
அது சிருங்கேரி மடம் காலடி என சுள்ளி/சூர்ணி ஆற்றங்கரையில் உருவாக்கிய
அண்மைக்காலத்தில் எழுந்தது. 

தேமொழி

unread,
Nov 20, 2017, 4:41:37 PM11/20/17
to மின்தமிழ்
///ராமன் நம்பூதிரி பூர்ணா எது என தெரியாமல் எழுதியுள்ளார். சங்கத் தமிழ் போன்றவற்றை
அறியாமையே காரணம். ///

பழைய வரலாறு தெரியாமல் எழுதியிருக்கிறார்கள் என்று ஒரு குறிப்பிட்ட துறையில் ஆய்வுபல செய்து கட்டுரை வெளியிட்டவர்களை மறுத்துக் கூறும் பொழுது சான்றுடன் சொல்வது சரியான முறையாக இருக்கும். 

ராமன் நம்பூதிரி  எழுதிய “Poornayude Puravrutham”  என்ற நூலில் தனது  (படிஞாறுப்புழை/பொருநை ஆறு) கருத்துக்கு ஆதரவாக என்ன சான்றுகள்  கொடுத்தார் என்று காட்டி அதில் உள்ள பிழையைச் சுட்டிக்காட்டி  மறுப்பதுதான் முறையல்லவா?

நீங்கள் படித்த ஒரு நூலின் கருத்துடன் அவரது முடிவு  இசைந்து வரவில்லை என்றால், அவர் தந்த மாற்றுக்  கோணம் பிழை என்று அவர் சொல்ல வருவதை ஆராயாமல் முடிவு செய்ய முடியுமா?


..... தேமொழி

N. Ganesan

unread,
Nov 20, 2017, 5:54:52 PM11/20/17
to மின்தமிழ், vallamai
2017-11-20 13:41 GMT-08:00 தேமொழி <jsthe...@gmail.com>:


///ராமன் நம்பூதிரி பூர்ணா எது என தெரியாமல் எழுதியுள்ளார். சங்கத் தமிழ் போன்றவற்றை
அறியாமையே காரணம். ///

பழைய வரலாறு தெரியாமல் எழுதியிருக்கிறார்கள் என்று ஒரு குறிப்பிட்ட துறையில் ஆய்வுபல செய்து கட்டுரை வெளியிட்டவர்களை மறுத்துக் கூறும் பொழுது சான்றுடன் சொல்வது சரியான முறையாக இருக்கும். 

ராமன் நம்பூதிரி  எழுதிய “Poornayude Puravrutham”  என்ற நூலில் தனது  (படிஞாறுப்புழை/பொருநை ஆறு) கருத்துக்கு ஆதரவாக என்ன சான்றுகள்  கொடுத்தார் என்று காட்டி அதில் உள்ள பிழையைச் சுட்டிக்காட்டி  மறுப்பதுதான் முறையல்லவா?

நீங்கள் படித்த ஒரு நூலின் கருத்துடன் அவரது முடிவு  இசைந்து வரவில்லை என்றால், அவர் தந்த மாற்றுக்  கோணம் பிழை என்று அவர் சொல்ல வருவதை ஆராயாமல் முடிவு செய்ய முடியுமா?


Not just one. Many scores of books were read. But there is no evidence,
inscriptions, literature that Porunai was running in Kerala.

would like to see the lines where Raman Nambudiri claims Porunai
of Sangam literature was PaDijnARu-puzhaa. In case, you have access
to the book, please let me know. I will ask experts in Kerala as well.

In The Hindu article, I don't see any Porunai or AanPorunai river at all.

N. Ganesan

--

தேமொழி

unread,
Nov 20, 2017, 6:13:39 PM11/20/17
to மின்தமிழ்


On Monday, November 20, 2017 at 2:54:52 PM UTC-8, N. Ganesan wrote:


2017-11-20 13:41 GMT-08:00 தேமொழி <jsthe...@gmail.com>:


///ராமன் நம்பூதிரி பூர்ணா எது என தெரியாமல் எழுதியுள்ளார். சங்கத் தமிழ் போன்றவற்றை
அறியாமையே காரணம். ///

பழைய வரலாறு தெரியாமல் எழுதியிருக்கிறார்கள் என்று ஒரு குறிப்பிட்ட துறையில் ஆய்வுபல செய்து கட்டுரை வெளியிட்டவர்களை மறுத்துக் கூறும் பொழுது சான்றுடன் சொல்வது சரியான முறையாக இருக்கும். 

ராமன் நம்பூதிரி  எழுதிய “Poornayude Puravrutham”  என்ற நூலில் தனது  (படிஞாறுப்புழை/பொருநை ஆறு) கருத்துக்கு ஆதரவாக என்ன சான்றுகள்  கொடுத்தார் என்று காட்டி அதில் உள்ள பிழையைச் சுட்டிக்காட்டி  மறுப்பதுதான் முறையல்லவா?

நீங்கள் படித்த ஒரு நூலின் கருத்துடன் அவரது முடிவு  இசைந்து வரவில்லை என்றால், அவர் தந்த மாற்றுக்  கோணம் பிழை என்று அவர் சொல்ல வருவதை ஆராயாமல் முடிவு செய்ய முடியுமா?


Not just one. Many scores of books were read. But there is no evidence,
inscriptions, literature that Porunai was running in Kerala.

would like to see the lines where Raman Nambudiri claims Porunai
of Sangam literature was PaDijnARu-puzhaa. In case, you have access
to the book, please let me know. I will ask experts in Kerala as well.

In The Hindu article, I don't see any Porunai or AanPorunai river at all.

அதே இந்துக் கட்டுரையின் இறுதிப் பத்தியின் முதல் மூன்று வரிகள் . . . .
Historic river gasps for breath
“Poornayude Puravrutham” explores the origin, the course, and the flow of Padinjare Puzha.


Samithi secretary K.G. Sreekumar said the river was mentioned as the Poorna river in Sukasandesam composed in the 14th century by Lakshmidasan. It is called Porunai in old Tamil texts and Poorna in Sanskrit texts. The Poornathrayeesa temple, during one of its festivals called the Para Ulsavam, takes the deity across the river on a boat from the jetty. This ritual has been practised for centuries. Mr. Sreekumar said the irrigation department had initiated a project to preserve and protect the boat jetty, but expressed his concern that the effort might not be sustained.

முதலில் ராமன் நம்பூதிரி அது பூர்ணா ஆறு என்கிறார்.
The late M. Raman Namboothiri of the Archaeological Survey of India, who was an expert in the history and heritage of Tripunithura, in one of his writings, has stated that the Padinjare Puzha is actually the historical Poorna river. 

பிறகு ஸ்ரீகுமார் இதுவே பழந்தமிழ்ப் பாடல்கள் சொல்லும் பொருநை என்கிறார்.
 It is called Porunai in old Tamil texts and Poorna in Sanskrit texts.

இவை இரண்டையும் ஹைலைட் செய்து முதலில் பகிர்ந்த பொழுதும் கொடுத்திருந்தேன்.

..... தேமொழி

N. Ganesan

unread,
Nov 20, 2017, 6:40:24 PM11/20/17
to மின்தமிழ், vallamai
2017-11-20 15:13 GMT-08:00 தேமொழி <jsthe...@gmail.com>:


On Monday, November 20, 2017 at 2:54:52 PM UTC-8, N. Ganesan wrote:


2017-11-20 13:41 GMT-08:00 தேமொழி <jsthe...@gmail.com>:


///ராமன் நம்பூதிரி பூர்ணா எது என தெரியாமல் எழுதியுள்ளார். சங்கத் தமிழ் போன்றவற்றை
அறியாமையே காரணம். ///

பழைய வரலாறு தெரியாமல் எழுதியிருக்கிறார்கள் என்று ஒரு குறிப்பிட்ட துறையில் ஆய்வுபல செய்து கட்டுரை வெளியிட்டவர்களை மறுத்துக் கூறும் பொழுது சான்றுடன் சொல்வது சரியான முறையாக இருக்கும். 

ராமன் நம்பூதிரி  எழுதிய “Poornayude Puravrutham”  என்ற நூலில் தனது  (படிஞாறுப்புழை/பொருநை ஆறு) கருத்துக்கு ஆதரவாக என்ன சான்றுகள்  கொடுத்தார் என்று காட்டி அதில் உள்ள பிழையைச் சுட்டிக்காட்டி  மறுப்பதுதான் முறையல்லவா?

நீங்கள் படித்த ஒரு நூலின் கருத்துடன் அவரது முடிவு  இசைந்து வரவில்லை என்றால், அவர் தந்த மாற்றுக்  கோணம் பிழை என்று அவர் சொல்ல வருவதை ஆராயாமல் முடிவு செய்ய முடியுமா?


Not just one. Many scores of books were read. But there is no evidence,
inscriptions, literature that Porunai was running in Kerala.

would like to see the lines where Raman Nambudiri claims Porunai
of Sangam literature was PaDijnARu-puzhaa. In case, you have access
to the book, please let me know. I will ask experts in Kerala as well.

In The Hindu article, I don't see any Porunai or AanPorunai river at all.

அதே இந்துக் கட்டுரையின் இறுதிப் பத்தியின் முதல் மூன்று வரிகள் . . . .
Historic river gasps for breath
“Poornayude Puravrutham” explores the origin, the course, and the flow of Padinjare Puzha.


Samithi secretary K.G. Sreekumar said the river was mentioned as the Poorna river in Sukasandesam composed in the 14th century by Lakshmidasan. It is called Porunai in old Tamil texts and Poorna in Sanskrit texts. The Poornathrayeesa temple, during one of its festivals called the Para Ulsavam, takes the deity across the river on a boat from the jetty. This ritual has been practised for centuries. Mr. Sreekumar said the irrigation department had initiated a project to preserve and protect the boat jetty, but expressed his concern that the effort might not be sustained.

முதலில் ராமன் நம்பூதிரி அது பூர்ணா ஆறு என்கிறார்.
The late M. Raman Namboothiri of the Archaeological Survey of India, who was an expert in the history and heritage of Tripunithura, in one of his writings, has stated that the Padinjare Puzha is actually the historical Poorna river. 

பிறகு ஸ்ரீகுமார் இதுவே பழந்தமிழ்ப் பாடல்கள் சொல்லும் பொருநை என்கிறார்.
 It is called Porunai in old Tamil texts and Poorna in Sanskrit texts.

I mentioned few times that cuLLi-p-periyaru is called ChuurNi in Sanskrit texts.

cuurNi/cuLLi-Periyar is not mentioned as PoorNa in Sanskrit texts, and also not as Porunai in Sangam texts.

Poona-vaahini is Ponvaani river (= BharataPuzhaa, north of ChuurNi/cuLLi-Periyar) in Sanskrit texts.

N. Ganesan

தேமொழி

unread,
Nov 20, 2017, 7:07:06 PM11/20/17
to மின்தமிழ்
மற்றொரு தகவல்.. (நான் கிடைத்த தகவலைப் பகிரும் நோக்கில் மட்டுமே பகிர்கிறேன்)

தெண்ணீர் உயர்கரைக் கவைஇய தண்ணான் பொருநை மணலினும் பலவே  -  Porunai (ponnani puzha)
என்று இவர் குறிப்பிடுகிறார். 

கேரளா பகுதியினருக்கு   எவ்வளவு  பழந்தமிழகம் பற்றிய தொடர்பு விட்டுப்போனதோ, அதே அளவு தமிழருக்கு மலையாள வட்டாரப் புழக்கம் கொண்டிருந்த செய்திகள் குறித்த தொடர்பு இல்லாமல் போயிருக்கிறது. 

கண்மணி சொன்னது போல படிப்படியாக நிறுவக் காத்திருப்போம். 


CORRIDORS OF TIME
Dr Suvarna Nalapat
page: 352

[...]
Wherever the kings of vanchi had their residence due to political reasons certain important rites like crown and coronation, taking the divine sword (udavaal) and climbing the nilapaduthara was always done at Thirunaava and old Vanchi in Vannery till the kochi kings were thrown out of vannery to kochiinThrikkalkara. About the aadikaruvoor aadimahodayapuram Nakkeranar says that itwas in the sands of Porunai (ponnani puzha)

Kadambu kattiyaanai nedumtherkothai
Thirumaaviyanakar karuvur moonturai-
Thenneeruyarkaraikuvalayathannan
Porunai manalinum palawe.

Ship, measurements, elephant,big chariots, kotha (king/beautiful women) were the wealths of the divine city of karuvur and in front of that city flow the cold waters of porunai to the port through the sandbeds.

The second thruvanchikalam came intobeing only during the times of 50th king perumal.(802-818AD) In PurananuruThiruthaamanar. calls him the Vaymozhivanchan.In Akananur Maamoolanar says:
Valampadu murachir cheralathan 
Munneerottikkadamberinthimayathu 
Munnor marula vanankuvir porithu 
Nannakar maanthai muraithonnar 
Panithirai thantha paduchaannelkkalam
Ponchey paavai vayiramodaamba
[...]

N. Ganesan

unread,
Nov 21, 2017, 9:10:04 AM11/21/17
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, tiruva...@googlegroups.com, George Hart
நூறாண்டுக்கு முன்னரே ராகவையங்கார்கள் இவையெல்லாம் சான்றில்லாதவை என நிறுவினார்கள். சங்க இலக்கியம் பதிப்பித்தவர்களில் முக்கியமானவர் ரா. ராகவையங்கார். அவரால் தான் அகநானூறு அச்சில் வெளிப்போந்தது. பிங்கலந்தை பதிப்பாசிரியர் பொள்ளாச்சிச் சிவன்பிள்ளை போன்றோரிடம் ஏடுகள் பெற்று ராகவையங்கார் ஸ்வாமி பதிப்பித்தார். அகநானூற்றில் உள்ள பாடல்கள் புரிதற்குப் பெரும் சவாலாய் இருந்த காலம். தன் நுண்ணிய அறிவால் கண்ணகி தெய்வமான இடம் சுருளிமலைப்பகுதி என எழுதினார். பொருனை, ஆன்பொருனை கேரளாவில் இல்லாததும் காட்டி 100+ ஆண்டுகள் ஆகிவிட்டன. திருக்குறள் சமண சமயத்தவர் எழுதினது என்று அ. சக்கிரவர்த்தி நயினாரும், திரு.வி.க.வும், மே.வீ.வேணுகோபாலப்பிள்ளையும், சுவலபில்லும், கா. ம. வேங்கடராமையாவும், ஐராவதமும், .... என்று காட்டிப் பல ஆண்டுகள் ஆனாலும், இன்னும் சிலர் சைவ சித்தாந்தம் குறள் என்றும், (மேலைக் கடற்கரைக்கே வராத) செயின்ட் தாமஸ் சொல்லி எழுதியது குறள் என்றும் மதவாதிகள் எழுதுவதும் பார்க்கிறோமே. அதுபோலத் தான் பொருனை கேரளா ஆறுகள் என்பது.

தமிழர்கள் லெமூரியாக்கண்டம் (குமரிக்கண்டம்) போன்ற எழுத்துக்களை இணையத்தில் பெரிதாகி வருவதைப் பார்க்கலாம். இன்னும் சில புதுப்புராணங்கள் உருவாகிவருகின்றன. அவற்றில் சில நான்காண்டு+ முன்னர் குறிப்பிட்டேன்: http://nganesan.blogspot.com/2013/09/google-aandavar-j-fletcher.html  ஆறாம்திணையில் புராண வளர்ச்சி.  மலையாளிகளுக்கு கொடுங்கோளூர் தான் எல்லாம். 20-ஆம் நூற்றாண்டில் கண்ணகிக்கு செங்குட்டுவன் கட்டிய கோயில் கொடுங்கோளூர் பகவதி கோயில் என்றனர். ஆராய்ச்சியால் அது சரியில்லை. சுருளிமலையில் உள்ள ராஜராஜன் எடுப்பித்த இடம் எனக் காட்டினார்கள் ராகவையங்கார்கள் என்னும் தமிழின் பேராசிரியர்கள். அதனைப் பின்னர் விரிவாகப் போய்ப் பார்த்து எழுதினார் சி. கோவிந்தராசனார். புலவர் கோவை. இளஞ்சேரனார் (மரைக்காடு என்று மறைக்காட்டை விளக்கியவர்களில் ஒருவர்) மலையாளநாடடார் சொல்லும் கொடுங்கோளூர் கண்ணகி என்பதைப் பொய்யாக்கிவிட்டது சுருளிமலைக் கண்ணகி கோட்டம் என எழுதினார். அவரது எழுத்தைப் பின்னர் தருகிறேன். மூன்று பழைய கண்ணகி சிலைகள் பற்றி எழுதவேண்டும். மங்கலாதேவி கண்ணகியின் புராதன விக்கிரகங்கள் என்ற இழையில் சொல்லலாம். பலரும் கண்ணகியின் பழைய 3 வடிவங்களைப் பார்த்திருக்கமாட்டார்கள். அந்தக் கட்டுரைகளின் அச்சில் தெளிவில்லை. அவற்றின் இன்றைய ஒளிப்படங்களும், அச் சிறப்ங்களை வைத்து பத்மவாசன், மணியன்செல்வன், மாருதி போன்றோரைக்கொண்டு ஓவியம் எழுதலாம்.

சொர்ணா நளபாடு பொன்வானி (பொன்னானி) எனும் பாரதப்புழை பொருனை என்கிறார். ராமன் நம்பூதிரியோ சூர்ணி/சுள்ளிப் பெரியாறு பொருனை என்கிறார். இதற்கெல்லாம் சான்றுகள் எங்காவது உள்ளனவா என அறிய ஆவல். தமிழ்ச் சங்கம், மலையாளம், கல்வெட்டுகள் ... ஏதாகிலும் இருந்தால் காட்டினால் மகிழ்ச்சி. குமரிக்கண்டம், சிலப்பதிகாரம் கி.மு. நூற்றாண்டுகளில் எழுதப்பட்டது என்றெல்லாம் தமிழறிஞர்கள் இன்று எழுதுவதில்லை. அதே போலத்தான் கொடுங்கோளூர் முசிறிப் பட்டினத்தைச் சங்க கால வஞ்சி, சேரர் தலைநகர் என்பதும். மலையாளிகளுக்கு பொருனை என்று தமிழ்ச் சங்க இலக்கியம் சுள்ளிப் பெரியாற்றைக் கூறுவதாகக் கற்பனைகள் கொடிகட்டிப் பறக்கின்றன. ஏற்கெனவே குறிப்பிட்டேன், சங்க கால நகரம் மேலைக்கடற்கரை முசிறி. போனால் போகுதுன்னு இரண்டாம் பட்சமாக கரூரை வஞ்சி என்று இரண்டாவதாக ஏற்கலாம் என்னும் ஆராய்ச்சிகள், அஸ்திவாரம் அற்றவை. மணலில் கட்டும் மாளிகைகள். சங்க இலக்கியத்தை ஊன்றிப்படித்தாலோ, கல்வெட்டுகள், தொல்லியல் சான்றுகளை ஆராய்ந்தாலோ மேலைக் கடற்கரையில் வஞ்சி காணோம். அப்பர் பெருமான், சுந்தரர் எல்லாம் அஞ்சைக்களத்தைப் பாடியுள்ளனர். அஞ்ஞைக்களம் என்பர் மலையாளிகள். ஒரு சில இன்ச் உயரமே கொண்ட அஞ்சைக்களத்தப்பர் பழமையானவர். இதனை ராஜராஜசோழன் ஓவியம் ஆக்கியுள்ளான் பெருவுடையார் கோயிலில். இப்போது மலையாளிகள் வஞ்சிக்குளம் என்கிறார்கள். அஞ்சைக்களத்து அப்பனைப் பார்க்க, வஞ்சி என்னும் சிறுபடகில் போகவேண்டும். அதனால் திருவஞ்சைக்களம் வஞ்சிக்குளம் ஆகியுள்ளது அண்மைக்காலத்தில். பூர்ணா, பூர்ணவாகினி என்பது பாரதப்புழையைத்தான் பழைய நூல்களில். அதன்படி பார்த்தால் காலடி பொன்னானி தாலூக்கா, அரசியல் காரணங்களுக்காக, சிக்கலைத் தவிர்க்க, சிருங்கேரி சுவாமிகள் அண்மைக்காலத்தில் சுள்ளி/சூர்ணி ஆற்றங்கரைக் காலடிக்கு மாற்றிப் பெரிய தீப ஸ்தம்பமும், கோயிலும் எழுப்பினார்கள்.

சுராலை எனத் தமிழ் இலக்கியத்தில் சாம்பிராணியைக் குறிப்பிடுவர். சுருளி/சுள்ளி மரம் Indian benzoin tree (= Hardwickia pinnata). குடகில் இருந்து குமரி வரை சையமலையிம் விசேஷமான மரங்களில் ஒன்று. உலகில் வேறெங்கும் இல்லாதது. சுருளி(சுள்ளி) is *endemic* to Southern Ghats. இதனைப் பழந்தமிழர் 3000, 4000 ஆண்டு முன்னர் சுள்ளிப் பெரியாறு எனப் பெயர் கொடுத்தது அருமை. சுருளி என்னும் மரப்பெயர் சுராலை என்று சாம்பிராணிக்கு பெயர் அளிப்பதுங் காண்க. சாம்பிராணி என்பது இந்தோனேசிய மலாய் மொழி. அங்கே உள்ள ஒரு பிரதேசம். ஆனால், தூய தமிழ்ப் பெயர் சுராலை என்பது. மறைமலை அடிகள் திருமகன் மறை. திருநாவுக்கரசு எழுதிய கட்டுரை: சங்ககால வஞ்சி மாநகரின் அருகே உள்ள ஈரோட்டில் நிகழ்ந்த நிகழ்ச்சி:
அவர்கள் வீட்டிலே, நான் போவதற்கு முன்னாலேயே, அவர்கள் குடும்பத்திலே, அவர் இறை மறுப்புக் கொள்கையுடையவராகிவிட்ட காரணத்தால், அங்குள்ள பூசை அறையைப் பூட்டி வைத்திருந்தார்கள். ஆனால் நான் போன அன்று, அந்தப் பூசை அறைக் கதவு திறக்கப் பெற்றிருந்தது. அது மட்டுமின்றி அறை முழுவதும் கழுவித் தூய்மை செய்து, சுராலைக்குச்சி (ஊதுவத்தி) கற்றையாகப் புகைய வைத்து, விளக்கும் ஏற்றி வைக்கப் பெற்றிருந்தது. அத்துடன் ஒரு தட்டில் மலர்கள், கற்பூரம், சுராலை (சாம்பிராணி) எல்லாம் வைக்கப் பெற்றிருந்தன. இது பற்றி, ‘என்ன’ என்று அங்கிருந்தவர்களிடம் விளக்கம் கேட்டேன். அதற்கவர்கள், நீங்கள் இங்கிருக்கும் வரை, உங்கள் வழக்கப்படியே பூசை - முதலியவற்றையெல்லாம் செய்து கொள்ளுங்கள்; இங்கு இருப்பதனால் உங்கள் பூசை பழக்க வழக்கங்களுக்குக் கெல்லாம் முட்டுப்பாடு கூடாது’ என்று சொன்னார்கள்; நான் மிகவும் வியப்புக் கொண்டேன்; மகிழ்ச்சியும் அடைந்தேன்.”
சுருளிமலை போன்றவற்றிற்குப் பெயர்தரும் சுருளிமரத்தின் விளைபொருள் ஆகிய சுராலைக்கட்டி சுருண்டு நெருப்பில் குமைவதால் ஏற்படும் பெயரா? ஆண்குமைஞ்சான் என யா மரங்களின் dammar resinக்கும், பெண்குமைஞ்சான் என்று சுருளிமரத்தின் benozoin resin-கும் பழைய பெயர்கள். குங்கிலியம் = dammar resin, சுராலை = சாம்பிராணி (benzoin resin).

இன்னொரு செய்தி:
கிழக்குக் கடற்கரையில் பாண்டியர் துறைமுகம் தொண்டி பற்றி விரிவாக ஆய்வுக்கட்டுரை சங்கப்பாடல், சிலம்பில் இருந்து எழுதியவர் மயிலை சீனி. வேங்கடசாமி ஆவார்.
அரிய கட்டுரை அது.
யாவகம் (ஜாவா) தீவுகளில் இருந்து தொண்டி (பாண்டிநாட்டுக்கு) துறைமுக வாணிகம்’

"இந்தத் தொண்டித் துறைமுகத்தைச் சிலப்பதிகாரக் காவியமும் கூறுகின்றது. கடல் கடந்த நாடுகளிலிருந்து அகிற் கட்டை, சந்தனக் கட்டை, பட்டுத் துணி, சாதிக்காய், இலவங்கம், குங்குமப்பூ, கருப்பூரம் முதலான வாசனைப் பொருள்களை ஏற்றி வந்த நாவாய்கள் கொண்டல் காற்றின் உதவியினால் தொண்டித் துறைமுகத்துக்கு வந்ததையும் இறக்குமதியான அந்தப் பொருள்களைத் தொண்டியிலிருந்து பாண்டியனின் தலைநகரான மதுரைக்கு அனுப்பப்பட்டதையும் சிலப்பதிகாரம் கூறுகிறது.

‘ஓங்கிரும் பரப்பின்
வங்க ஈட்டத்துத் தொண்டியோர் இட்ட
அகிலும் துகிலும் ஆரமும் வாசமும்
தொகு கருப்பூரமும் சுமந்துடன் வந்த
கொண்டலொடு புகுந்து கோமகன் கூடல்
வெங்கண் நெடுவேள் வில்விழாக் காணும்
பங்குனி முயக்கத்துப் பனியரசு’.                    (ஊர் காண் காதை, 106-112)

இங்குக் குறிப்பிடப்பட்ட பொருள்கள் எல்லாம் கிழக்குக் கடலுக் கப்பால் கீழ்க்கோடி நாடுகளிலிருந்து வந்தவை. இந்தக் காலத்தில்
இந்தோனேஷியா என்றும், கிழக்கிந்தியத் தீவுகள் என்றும் கூறப் படுகின்ற தீவுகள் அந்தக் காலத்தில் சாவக நாடு என்று கூறப்பட்டன. இங்குக் கூறப்பட்ட பொருள்கள் எல்லாம் அந்தக் காலத்தில் சாவக நாட்டுக்கேயுரியவை. இப்பொருள்கள் அந்தக் காலத்தில் வேறு எங்கும் கிடைக்காதவை. கீழ்க்கடல் தீவுகளிலிருந்து கொண்டு வரப்பட்டுத் தொண்டித் துறைமுகத்தில் இறக்குமதியான பொருள்கள் அகில், துகில், ஆரம், வாசம், கருப்பூரம் முதலானவை என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. இவற்றை விளக்கிக் கூறுவோம்.
[...]
வாசம்

வாசம் என்பது வாசனைப் பொருள்கள். அவை கிராம்பு (இலவங்கம்), குங்குமப்பூ, தக்கோலம், சாதிக்காய் முதலியவை. இந்த வாசப் பொருள்கள் அக்காலத்தில் சாவக நாட்டில் மட்டும் உண்டாயின; வேறெங்கும் இவை அக்காலத்தில் கிடைக்கவில்லை."


இளங்கோ அடிகள் குறிப்பிடும் கருப்பூரம் = https://en.wikipedia.org/wiki/Camphor
இதனை தொண்டி துறைமுகத்துக்கு பாண்டியர் இறக்குமதி செய்தனர்.

இதில் குங்குமப்பூ (Saffron) யாவகம், சுமத்ராவில் இருந்து வந்ததாய் மயிலை சீனி. வேங்கடசாமி எழுதியுள்ளார் அது பிழை. குங்குமப்பூ ஆப்கானிஸ்தான், ஈரான், காஷ்மீரில் விளைவது. யாவகத்தில் இல்லாதது.

இளங்கோ அடிகள் கீழைத்துறைமுகங்களுக்கு (கொற்கை, மருங்கூர் பட்டினம், தொண்டி, நாகை, பூம்புகார்,  ...)
அகிலும் துகிலும் ஆரமும் வாசமும்” வந்தன என்று பாடியுள்ளார்.
வாசம் என்பது மணப்பொருள். கந்த தூபம். கந்தரசு எனப்படும் குங்கிலியம், சுராலை.
யா (= shorea robusta. = சாலம், ஆ. ஆச்சா) தரும் குங்கிலியம் தமிழர் தேடிச் சென்ற பொருள்.
அதனை இறக்குமதி செய்ததால்தான் யாவகத் தீவு என பெயரிட்டனர்.
அதே போல, சுராலை (சாம்பிராணி) தரும் மரங்களும் உண்டு. இந்த மரப்பால் பிசின்கள்.
பிற்காலத்தில் ரப்பர் மரங்களின் பாலும் கிடைத்தது ஆங்கே.

‘ஓங்கிரும் பரப்பின்
வங்க ஈட்டத்துத் தொண்டியோர் இட்ட
அகிலும் துகிலும் ஆரமும் வாசமும்
தொகு கருப்பூரமும் சுமந்துடன் வந்த
கொண்டலொடு புகுந்து கோமகன் கூடல்
வெங்கண் நெடுவேள் வில்விழாக் காணும்
பங்குனி முயக்கத்துப் பனியரசு’.                    (ஊர் காண் காதை, 106-112)

இளங்கோ அடிகள் குறிப்பிடும் வாசம் = கந்த தூபம் ஏற்றப்
பயன்படும் குங்கிலியம் (யா இன மரங்கள் அளிப்பது),
சுராலை (சுருளி இன மரங்கள் அளிப்பது). 

NG
இளங்கோ அடிகள் புகழும் காவேரிநாடு:

 

தேமொழி

unread,
Nov 21, 2017, 4:36:06 PM11/21/17
to மின்தமிழ்
////பிங்கலந்தை பதிப்பாசிரியர் பொள்ளாச்சிச் சிவன்பிள்ளை போன்றோரிடம் ஏடுகள் பெற்று ராகவையங்கார் ஸ்வாமி////

ராகவையங்கார் ஸ்வாமி என்றழைப்பது தேவையா எனத் தெரியவில்லை.

.... தேமொழி 

kanmani tamil

unread,
Nov 22, 2017, 1:55:24 PM11/22/17
to mintamil
<மடல்களைப் படிக்கும்போது எனக்குத் தோன்றுவது. முசிறிதான் (பிற்கால கொடுங்கோளூர்)
சங்க கால வஞ்சி மாநகரம். போனால் போகுது-ன்னு வேணும்னா ஆன்பொருனைக் கரையில்
உள்ள வஞ்சியை வைத்துக்கொள்ளலாம், இரண்டாவது, நாலாவது வஞ்சியாக ...>
பிற்காலக் கொடுங்கோளூர் சங்ககால வஞ்சியாக இருக்க வாய்ப்பே இல்லை.ஏனென்றால் மேலைக் கடற்கரை காலந்தோறும் பல மாறுதல்களுக்கு உட்பட்டு விட்டது என்பதை இந்த இழையின் தொடக்கத்திலேயே நான்விரிவாகக்  கூறியிருக்கிறேன் .  
பண்டைய மேலைக் கடற்கரை இன்றைய மேலைக் கடற்கரையினின்றும் 6அல்லது 7கல் கிழக்கே முற்பட்டு இருந்திருக்க வேண்டும் என்பதை 
 வி.கனகசபைப்பிள்ளை தனது ஆய்வேட்டில் நிறுவியுள்ளார் .(the tamils1800 years ago)
மேனாட்டு நிலவியலார் கூறும் கடற்கரைப்பட்டினங்கள்  துணையோடு தன கருத்தை வலுப்படுத்துகிறார் .
அதே கருத்தை ஜார்ஜ்வூட் காக் நிலத்தின் தன்மையும் வேறுபாடும் கொண்டு நிலைநாட்டுகிறார் .(kerala-a portrait of the malabar coast)
இன்றுள்ள கொல்லம் 8ம் நூற்றா ண்டிலும் ,கோழிக்கோடு 13ம்.நூற்றா ண்டிலும் ,கொச்சி 14ம் நூற்றா ண்டிலும் புதிதாகத் தோன்றிய துறைமுகங்கள் என்று செ.கோவிந்தன் எடுத்துக் காட்டியுள்ளார் .(சேர நாட்டுத் துறைமுகப் பட்டினங்களும் கடல் வாணிபமும் -இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் -4வது கருத்தரங்கு மலர் -ப.589)வரலாற்றுக் காலத்தில் ஏற்பட்ட வெள்ளங்களால் மேலைக் கடற்கரை மேலும்  மாற்றம் பெற்றது.14ம்.நூற்றா ண்டில் ஏற்பட்ட வெள்ளத்தால்கொடுங்கோளூர் துறைமுகம் அழிந்தது .அப்பொழுது தான் வைப்புத்தீவும் தோன்றியது.அதற்கு முன்னர் கொடுங்கல்லூர் அழிக்கும் பெரியாற்றுக்கும் இடையே கழி இருந்ததெனினும் அதற்கு பெரியாற்றின்  ஒரு  பாகமாகக் கருதத்தக்க பரப்பே இருந்ததென periplus of the erythrean seaகூறும் குறிப்புகளை வைத்து இளங்குளம்.குஞ்ஞன்பிள்ளை நிறுவுகிறார் .
இத்தனை மாற்றங்களும் நிகழ்ந்த மேலைக்கடற்கரையில் வஞ்சியைத் தேடிக் காண்பது தான் நமக்கிருக்கும் சவால்.         
.     அது மட்டுமன்று டாலமியின் கூற்றுப்படி முசிறிக்கும் பரிஸ்துறைமுகத்துக்கும் இடைப்பட்ட உள்நாட்டுப்பகுதியில் கொரவூரா ,கரூரா என்று இரண்டு ஊர்களைச் சுட்டுவதையும்அவற்றுள் கரூராதலைநகர் என்று சொல்லியிருப்பதையும்   முந்தைய மடலில் கூறியுள்ளேன்.
 டாலமி கடற்கரைப் பட்டினங்களைத் தொகுத்துக் கூறும்போது அலிமுகம் அல்லது பொய்முகம் என வழங்கும் சூடோய்ஸ்த்மஸ்க்குக் கிழக்கில் உள்ள மூன்று ஊர்களில் ஒன்று கொரவூரா என்கிறார்.இது கரூர் என்று எண்ண இடமுள்ளது.இதையடுத்து சூடோய்ஸ்த்மஸ்க்கும் தெற்கில் உள்ள   பரிஸ் துறைமுகத்துக்கும் இடைப்பட்ட உள்நாட்டு ஊர்களில் கரூரா என்ற ஊர் ஒன்று சேரமன்னர்களின் தலைநகர் என்றே குறிப்பிடுகிறார் (வி.கனகசபை .....ப.33,34.&எஸ்.கிருஷ்ணசாமி .....ப.14)

இங்கே சொல்லப்படும் 'கொரவூரா','கரூரா' இரண்டையுமே டாலமி கடற்கரையை அடுத்த உள்நாட்டு ஊர்கள் என்று சொல்வது குறிப்பிடத்தக்கது .

டாலமி முசிறிக்கும் கொரவூராவுக்கும் கொடுக்கும் நேர்கோட்டு நிரைகோட்டுக் கணக்கின்படிகொங்குக் கரூரே வஞ்சி என்கிறார் பெ.இராமலிங்கன் (ப.35)
டாலமி கூறும் நேர்கோடு நிரைகோட்டுக் கணக்கு நம்ப இயலாததாக உள்ளது.கன்னியாகுமரி ,பரிகாசா துறைமுகம் ,பைதான் நகரம் ,வங்காளக் குடாக்கடல் கங்கையின் சங்கமத்துறை ,காண்டன் நகரம்,மகாநதி ,கம்போடியா நாட்டுக் கடற்கரை போன்ற பல இடங்களின் நேர்கோட்டு நிரைகோட்டு அளவுகள் முற்றிலும் பொருத்தமற்ற முறையில் குறிக்கப்பட்டுள்ளன.(ம.பசுவலிங்கம் -சங்ககால வஞ்சி -ப.131)
இக்கருத்துக்களையெல்லாம் மறுக்க வழியில்லையே 
இவற்றுடன் சேரர் எவ்வாறு படிப்படியாக கொங்கை அடிப்படுத்தினர் என்றும் ஒரு மடலில் விரித்துள்ளேன்.
உங்களோடு வாதிட்டதில் நான் மாற்றிக்கொண்ட கருத்து ஒன்றும் உண்டு.
கிள்ளிவளவன் முற்றுகையிட்டது கொங்கு வஞ்சியே.ஏனென்றால் அப்பாடல் 'தண்ணான்பொருநை'பற்றிப் பேசுகிறது.
கண்மணி  .
  

  
 





 





kanmani tamil

unread,
Nov 22, 2017, 2:09:23 PM11/22/17
to mintamil
நீங்கள் சுள்ளி பற்றிக் கூறும் விளக்கங்களையெல்லாம் நான் ஆர்வத்துடன் படித்து வருகிறேன்.
எனக்கு அவையெல்லாம் புதுத்தகவல்கள் .சுவையான பாடங்கள் .
ஆனால் அதற்காக மேலைக் கடற்கரைக்கும் மேலை மலைக்கும் இடையே வஞ்சி என்னும் தலைநகர் இல்லவே இல்லை என்று சொல்ல இயலாது.
சங்க காலத்திலேயே சேரர் கொங்கை அடிப்படுத்தி விட்டதால் ஆன்பொருநைக்கரையில் வஞ்சித்தலைநகர் இருந்தது.
அது மிகவும் சிறப்பு வாய்ந்தது.சோழர்கள் மனம் பொருமும் அளவுக்கு பேர் பெற்றது.பெருஞ்சேரலிரும்பொறை அதைத் தலைநகராக்குவதற்கு முன்னால் சேரர் தலைநகர் எங்கே இருந்தது?
கண்மணி  

kanmani tamil

unread,
Nov 23, 2017, 12:50:05 AM11/23/17
to mintamil
<பொருனை என்றோ, ஆண்பொருனை என்றோ எப்பவாவது கேரளாவில் ஒரு ஆறு உண்டா?>
முதலில் உங்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏன் தெரியுமா?
என்னிடம் கேள்வி கேட்டு சிந்திக்க வைக்கிறீர்கள்.
நான் ஆய்வேட்டைத் தயார் செய்தபோது நெறியாளர் என்னிடம் ஒரு கேள்வியும் கேட்டதில்லை.
எனக்கு நேர்முகத் தேர்வு நடந்த போது தேர்வாளர் என்னிடம் கேள்வி கேட்கவில்லை.ஒரு அலுவலக நடைமுறையாகத் தான் நடந்தது.அது ஒரு தனி ........    மூன்றாண்டு கால வரலாறு.
28 ஆண்டுகள் கழித்து நான் மீளாய்வு செய்கிறேன்.

நேற்றிரவு தூங்குவதற்கு கண்ணை மூடிய நொடியிலிருந்து மண்டைக்குள் சுள்ளி /சூர்ணா /பொருநை /பூர்ணா /பூர்ணாவாஹினி என்று மாறிமாறி ஓடிக்கொண்டே இருந்தது.மாற்றத்திற்குரிய உருபொலியனியல் விதிகள் தெரிந்தாலும் மேற்கொண்டு சான்றுகள் காட்டி நிறுவ வேண்டுமல்லவா?
 
10ம்.நூற்றாண்டிலேயே மலையாளம் தமிழின் கிளை மொழியாகி விட்டது.
குடநாடு ,குட்டநாடு ,வேணாடு எல்லாம் கொடுந்தமிழ் வழங்கிய பகுதிகளாகத் தான் அடையாளம் காட்டப்படுகின்றன.
எனவே அங்கு வழங்கிய தமிழ் மாற்றங்களுக்கு உட்பட்டுத்தான் இருக்கும்.
தமிழின் பொருநை >>>>பூர்ணை என மருவி வழங்கியமைக்குரிய விதிகள் :
                                                                                                                                                 '-ஒ -'---------------->'-உ-'
                                                                                                                                                  '-உ -'---------------->-'ஒ -'
தமிழில் மேற்சுட்டிய இருமாற்றங்களும் கட்டிலாமல் நிகழக்கூடியவை.(எ -டு )    உலக்கை >>><<<ஒலக்கை 
                                                                                                                                                       குளவி >>><<<கொளவி(அம்மிக் -)
                                                                                                                                                        புத்தகம் >>><<<பொத்தகம்  
                                                                                                                                                        குழந்தை >>><<<கொழந்தை 
   1)இந்த வரிசையில் பொருநை >>><<<புருநைஎன்ற மாற்றமும் நிகழ்ந்துள்ளது .
   2)உயிர் இடம் பெயரல் எனும் விதிப்படி புருனை >>>பூர்னைஎன மருவியுள்ளது ('ந '>>><<<'ன 'இரண்டு ஒலிகளும் மாற்றொலிகளாக அன்றும் வழங்கியுள்ளன.இன்றும் வழங்குகின்றன. 
   3)பூரணை+வாஹினி ---->பூர்ணாவாஹினி என வழங்கியுள்ளது.
இம்மூன்றாவது புணர்ச்சி மாற்றத்திற்குரிய சான்றுகள் பின்வருமாறு :
                                                                                                                                      கதை +கலாட்சேபம் ------>கதாகலாட்சேபம்
                                                                                                                                      மேதை +விலாசம் ------->மேதாவிலாசம்
பொருநை என்ற பெயரே மேற்கு மலைக்கப்பால் வழங்கிய கொடுந்தமிழில் பூர்ணா என்றாகி வடமொழி வழக்கு மிகுந்த காலத்தில் வாஹினியுடன் இணைந்து பூர்ணாவாஹினிஎன்று வழங்கியுள்ளது.இது ஒரு மூன்று படிநிலை மாற்றமாகும் .பின்னரே இது பொன்வானி ஆகத்திரிந்திருக்க வேண்டும்.
                                     பூர்ணாவாஹினி------>பொன்வானி என்ற மாற்றமும்உருபொலியனியல் விதிகளுக்கு உட்பட்டதே.
பொருநை ;பூர்ணாவாஹினி ஆனவரலாறு இது .
சங்க இலக்கியம் சாம்பிராணிப் பிசின் தரும் சுள்ளி மரங்கள் மிகுந்த மலைப்பகுதியில் தோன்றிய ஆற்றை அதற்குரிய சிறப்பு வெளிப்படும் வகையில் சுள்ளியம் பேரியாறு என்று அழைத்தமை தமிழரின் இயற்கையோடு இயைந்த வாழ்க்கைச் சிறப்பைக் காட்டுகிறது.பொதுப் பெயரான பொருனையைப் 
பெரிது படுத்தவில்லை.ஆனால் மேற்கு மலையைத் தாண்டி நாட்டை விரிவுபடுத்திய போது பிறந்த மண்ணின் நினைவாக கொங்குப் பொருனையை த் தண்ஆன்பொருநை என்று அழைத்தனர்.இது அடிப்படை வாழ்வியல் உண்மை.
நம் குழுமத்திற்குள்ளேயே இதற்குரிய சான்றுகள் ஏராளம் .
ஒன்று மட்டும் காட்டுகிறேன்.
இங்கே சிவகாசியில் இருக்கும் ஐஸ்கிரீம் பார்லருக்குச் சென்று நான் பனிக்குழைவு வேண்டும் என்று கேட்பேனா?
(டேய் ;காளீஸ்வரி காலேஜ் ப்ரின்சிபாலுக்கு எதோ ஆகிவிட்டதடா என்று காட்டுத்தீ போல் பரவி விடாதா!!)
ஆனால் குழுமத்தில் எல்லோரும் எவ்வளவு ஈடுபாட்டுடன் அந்தச் சொல்லை பயன்படுத்துகிறீர்கள்.ஏனென்றால் உங்களில் பலர் பிறந்த மண்ணைப் பிரிந்து இருக்கிறீர்கள் . 
கண்மணி        


                                                                                                                           

kanmani tamil

unread,
Nov 23, 2017, 4:52:59 AM11/23/17
to mintamil
 <சங்க இலக்கியத்தை ஊன்றிப்படித்தாலோ, கல்வெட்டுகள், தொல்லியல் சான்றுகளை ஆராய்ந்தாலோ மேலைக் கடற்கரையில் வஞ்சி காணோம். >
பதிற்றுப்பத்தை ஊன்றிப் படித்து 10-2=8சேர மன்னர்களோடு தொடர்புபடுத்தும் நகர்கள் எவையெவை என ஏற்கெனவே ஒருமடல் அனுப்பியுள்ளேன்.
இனி இவர்கள் சேர நாட்டின்எந்தெந்த பகுதிகளில் ஆட்சிப் பொறுப்பு ஏற்றார்கள்;போர் செய்தார்கள்  என்று பார்ப்போம் . 
     1ம்.பத்து-கொள்ளுத்தாத்தா -உதியன் சேரலாதனுக்குரியது.-நமக்குக் கிடைக்கவில்லை.-அகப்பாவை போரில் வென்று பெற்றான் (அகம்.169,233) 
     2ம்.பத்து -இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் -மரந்தை ,வஞ்சி(மூதூர்)- அகம்-127,396,பதிற்.15&2ம்பத்தின் .பதிகம் 
     3ம்.பத்து- பல்யானைச் செல்கெழு குட்டுவன் -தொண்டி,செருப்புமலை&மூதூர்-மேற்கரை நாட்டின் கிழக்கே இருந்த அகப்பாவை போரிட்டு வென்று பெற்றான்.(3ம்.பத்தின் பதிகம்,      பா.21,22,30,அகம்.169,233,290&ஐங்.178)
     4ம்.பத்து-களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் -தொன்னகர் (பதிற்.31)
     5ம்.பத்து -கடல்பிறக்கோட்டிய வேல்கெழு குட்டுவன் -முசிறி, மரந்தை& தொன்னகர்(புறம் 343,அகம்.376,குறுந்.34,பதிற்.47)
     6ம்.பத்து -ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் -தொண்டி,நறவு &மூதூர் (6ம்.பத்தின் பதிகம் ,பா.60&53)
     7ம்.பத்து -செல்வக்கடுங்கோ வாழியாதன் -கொங்கிலுள்ள-கிழக்கிலுள்ள  கொடுமணம்,பந்தர்-போரிட்டுப்  பெற்ற வெற்றி .(பதிற்.67)
     8ம்.பத்து -பெருஞ்சேரலிரும்பொறை -கொடுமணம் ,பந்தர்,கிழக்கே உள்ள தகடூரைப் போரிட்டுப் பெறுகிறான் (பதிற்.74&78)   
     9ம்.பத்து -இளஞ்சேரலிரும்பொறை -தனிப்பட எந்த ஊருடனும்தொடர்புபடுத்தப்படவில்லை.(செல்லப்பிள்ளை!)   
    10ம்.பத்து -கிடைக்கவில்லை.(ஊகத்தின் அடிப்படையில் சேரமான் கணைக்கால் இரும்பொறை எனலாம்.(தகடூருக்கும் கிழக்கே முன்னறிச் செய்த போரில் சோழ மன்னனால் சிறை பிடிக்கப்பட்டான் )  
இந்தக் குடும்ப உறவுகளையும் சேர ,கொங்கு நாடுகளின் நிலவியலையும் நன்கு புரிந்து கொண்டால் சங்க காலத்தில் கொங்குக் கரூர் வஞ்சி மட்டுமில்லாமல் இன்னொரு வஞ்சியும் இருந்தமை புரியும்.>
  
இரண்டாம் பத்திற்குரிய இமயவரம்பன் மரந்தை மட்டுமின்றி வஞ்சி மூதூருடனும் தொடர்புடையவனாகிறான்.
3,4,5,6ம்.பத்திற்குரிய சேர மன்னர்களும் மூதூர்/தொன்னகர் என்று சிறப்பிக்கப்பட்ட தலைநகருடன் தொடர்பு படுத்தப்படுகின்றனர் .
இவர்களில் எவரும் கொங்கு வஞ்சியுடன் தொடர்புடையவர் அல்லர்.
புகளூரில் கிடைத்த கல்வெட்டும் 7,8,9ம்.பத்திற்குரிய சேரர்களை மட்டுமே குறிப்பிடுகிறது.
ஏனெனில் அவர்கள்தான் கொங்குவஞ்சியில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தனர்.
அதே காலகட்டத்தைச் சேர்ந்த 1,2,3,4,5,6ம்.பத்திற்குரியோர் மேலைக் கடற்கரைக்கும் மேற்கு மலைத்தொடருக்கும் இடைப்பட்ட பகுதிகளில் ஆட்சிப் பொறுப்பில் இருந்துள்ளனர்.
கொங்குத் தலைநகரைக் காட்டிலும் காலத்தால் முற்பட்டது என்பதாலேயே இமயவரம்பனும் உதியஞ்சேரலாதனும் இருந்த வஞ்சி; மூதூர்/தொன்னகர் என்னும் சிறப்புப் பெயர்களால் மட்டும் அழைக்கப்படுகிறது.
நீங்கள் தொல்லியல் சான்றுகளை மீண்டும் மீண்டும் கேட்கிறீர்கள்..
நியாயமான கேள்வி தான்.
ஆனால் இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ தோண்டினால் என்ன கிடைக்கும்?
அதுவும் தென்னைப் வளர்ப்புக்காக ஆயிரமாயிரம் ஆண்டுக்காலமாய்  குழிகளைத் தோண்டித் தோண்டி பயிர் செய்த பூமியில் என்ன கிடைக்கும்?
வரலாற்றுக் காலம் முழுதும் மீண்டும் மீண்டும் கடற்கரை நிலவியலில் மிகப் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டு ;-ஆற்றின் அகலத்தோடு இருந்த கழி 8கி.மீ.அகலமான கழியாய் மாறிய பின்பு 
கடற்கரையிலோ கழியின் கரையிலோ தோண்டினால் என்ன கிடைக்கும்?
வைப்பு வெள்ளம் ஏற்பட்டு கடல் பின்னடைந்து விட ;புதிதாகத் தோன்றிய வைப்புத்தீவில் தோண்டினால் என்ன கிடைக்கும்?
கழியின் கரையில் இருந்த முசிறித்துறைக்கு படகுகளில் சரக்கேற்றி வந்து வாணிபம் செய்த மேனாட்டார் அவ்விடத்தை அழிமுகம் அல்லது பொய்முகம் என்று அழைத்து அது அடிக்கடி போக்கு மாறும் என்று சொல்லியிருக்கிறார்களே. இதன் காரணமாகவே தலைநகர் சற்று தள்ளி உள்நாட்டில் இருந்தது என்றும் சொல்லியுள்ளனரே  .இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டால் தலைநகர் கழிக்குள்ளே இருக்கிறது என்று தெளிவாகப் புரிகிறதே.
ஆழ்கடலில் தொல்லியல் ஆய்வு நிகழ்வது போல கழிக்குள்ளே தொல்லியல் ஆய்வு நிகழ வேண்டும்.அன்று தான் சங்ககால வஞ்சிமூதூரை அடையாளம் காண இயலும்.
கொங்கில் இருந்தது வஞ்சி.மேலைக் கடற்கரையில் இருந்தது வஞ்சிமூதூர் .
கண்மணி.  

kanmani tamil

unread,
Nov 28, 2017, 10:25:17 AM11/28/17
to mintamil
<கண்மணி சொன்னது போல படிப்படியாக நிறுவக் காத்திருப்போம்.> 21.11.17 அன்று தேமொழி எழுதியது .
பொருநை என்பது பூர்ணாவாஹினி என மாறிய படிநிலைகளையும் ,தொல்லியல் ஆய்வுகளில் மேற்குத்தொடர்ச்சி மலைக்கும் மேலைக்கடலுக்கும் இடையில் சங்ககால எச்சங்கள் கிடைக்காமைக்கான காரணங்களையும் முந்தைய மடல்களில் கண்டோம்.
சங்க கால வஞ்சி கொங்கு வஞ்சியே என்று நிறுவும் மு.இரா.,இரா.இரா.,பெ.இரா.ஆகிய மூவரும் பதிற்றுப்பத்திலிருந்து காட்டும் காரணங்களை ஒவ் வொன்றாக நோக்குவோம்.
'இரு கடல் நீரும் ஒரு பகல் ஆடிய சேரன் தன் தலைநகர் இருகடற்கரையகத்தும் இல்லாமையான் இரண்டையும் தருவித்து ஒரு பகலில் நீராடினான் என்றும் ,ஒரு கடற்கரையில் வஞ்சி இருந்திருப்பின் மற்றொரு கடல்நீரை மட்டும் கொண்டு வந்திருப்பான் என்றும் இரா.இரா.(வஞ்சிமாநகர் -ப.72)கூறுகிறார்.
பதிற்றுப்பத்து 3ம்.பத்தின் பதிகம் பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் பற்றிப் பாடும் செய்தி இது.
                                                                                       "கருங்களிற்று யானைப் புணர் நிரை  நீட்டி 
                                                                                  
                                                                                         இருகடல் நீரும் ஒரு பகல் ஆட"
என்ற அடிகளின் பொருள் நோக்குக.
பல்யானைச் செல்கெழு குட்டுவன் யானைக்கூட்டத்தை வரிசையாக நிறுத்தி இரண்டு கடல்களிலும் நீராடினான்.
அது ஒரு விழாக்காலம் -பதிற்றுப்பத்து நூல் எழுந்த சூழல் ஒரு உள்ளி விழாவுக்காக முழுக் குடும்பமும் ஒன்று சேர்ந்த சூழல் என்ற கருதுகோளை  ஏற்கெனவே  முன்வைத்தேன்.      
யானைகளை வரிசையாக நிறுத்தி விழாவைக் கொண்டாடும் வழக்கம் கேரளத்தில் தானே இன்றும் உள்ளது.
அன்றியும் கடற்கரையில் யானைகளை வரிசையாக நிறுத்த வேண்டுமெனில் அது  கொங்கு வஞ்சியில் இயலாதே.கடல்நீரை தருவித்தமைக்கும் பாடல்பகுதியில் ஆதாரமில்லையே.
நாம் ஏற்கெனவே கண்டபடி இந்த 10-1=9சேர மன்னர்களும் ஒரே காலகட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆட்சிப் பொறுப்பை ஏற்று இருந்தமைக்கு பதிற்றுப்பத்திலிருந்து நூற்சான்றுகள் இருப்பதையும் பார்த்தோமே.
பல்யானைச் செல்கெழு குட்டுவன் தொண்டித்துறையுடனும், செருப்பு மலை இருக்கும் பூழி நாட்டுடனும் தொடர்புடையவன்.(பதிற்று .21,அகம்.290&ஐங்.178)
சேரன்தொண்டி அழிந்து விட்டது.ஆனால் பூழி நாடு இன்றும் உள்ளது.ஆரல்வாய்மொழி என இன்று மருவி வழங்கும் 'ஆராம்பொழி 'பூழிக் கணவாயைக் குறிக்கிறது.சேரன் தொண்டியிலிருந்து ஒரு பகல் பொழுதுக்குள் தெற்கிலுள்ள குமரித்துறையை அடைந்து விடலாம்.பூழிக்கணவாய்க்கு வராமலேயே கடற்கரையை ஒட்டியே இன்றும் போக்குவரத்து உண்டு.
அதனால் மேற்கு மலைக்கும் மேலைக் கடற்கரைக்கும் இடையில் வஞ்சிமூதூர் இருந்தது என ஆணித்தரமாக நம்பலாம்.
கண்மணி 
இந்த அகச் சான்றுகளை ஏன் ஒதுக்க வேண்டும்?  


2017-11-27 12:34 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:

---------- Forwarded message ----------
From: kanmani tamil <kanmani...@gmail.com>
Date: 2017-10-28 14:46 GMT+05:30
Subject: Re: [MinTamil] வஞ்சி
To: mintamil <mint...@googlegroups.com>


அன்புடையீர் வணக்கம் 
 
நாலு என்ற சொல்லுக்கு நான்கு என்ற பொருளும் உண்டு என்பதைத் தாங்களும் அறிவீர்கள் .அந்தப் பொருளைக் கொண்டு தொடர்ந்து ஆய்வு செய்வதில் எனக்கு எந்த இடர்பாடும் ஏற்படவில்லை .வேறு பொருளைத் தேட வேண்டிய தேவையும் ஏற்படவில்லை .அதனால் அவ்வாறே தொடர்கிறேன் .
கண்மணி 

2017-10-28 1:54 GMT+05:30 N D Logasundaram <selvi...@gmail.com>:
​​வரலாற்று ஆய்வுகளுக்கு  கல்வெட்டுக்கள் முதல்நிலைத் தரவுகளாக அமையும்.மேனாட்டு நிலவியலார் குறிப்புகளும் அவ்வண்ணமே ஏற்றுக்கொள்ளப்படும். .மேற்சுட்டிய இரண்டனுக்கும் பின்னரே இலக்கியச் சான்றுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் செவிவழிச்செய்திகள் மூன்றாம் நிலைத தரவுகளாம் .இதுதான் ஆராய்ச்சி நெறிமுறை
 . இது கண்மணி அவர்களின் கூற்று 

அன்புள்ள கண்மணி அவர்கட்கு 
நீங்கள் சொல்வது பொது நிலையில் (வா னத்தில் இருந்து) கொள்ள வேண்டிய கொள்கையே ஆகும்
 அதனால் எப்போது எக்காலத்தும் எவ்விடத்தும் கொள்ளவேண்டும் என்பதும் ஆகாது 

இங்கு நம் சங்க காலத்து இருந்த ஓர் இடப்பெயரைப்பற்றிப்பேசும் போது கல்வெட்டுகளின்
 கால ம் ஏறக்குறைய 7-8 ஆம் நூற்றாண்டுகளை க்கடந்ததுதான் ஆகும் 
குறிப்பாக நீங்கள் கட்டிய  சதாசிவ பண்டாரத்தார் காட்டிய வற்றில் கல்வெட்டுகளால் 
காண்பது பிழைபட்டதாக வே முடியும் அல்லது ஐயம் ஏற்படக்காரணமாகவும் அமையும் 
என்பதுதான் பொருளாகும்  
எந்த ஒரு ஆய்விலும் நுண்மை நோக்கிச் செல்லும் பொது கோதுக்களைக் கழித்துதான்
 செல்லவேண்டும் எனும் பொருளில் சொல்லப்பட்ட சொற்களாகும் அவ்வளவே 

மேலும் ஆழ்ந்த நிலை ஆய்வாளர்களுக்கு பக்தி/தாச  நிலைக்கூடாது எல்லாரும் தா ன 
பிழைப்படக்கூடியவர் களே இவர் சொல்லிவிட்டார் அவர் அப்படிக்கட்டினார் எனபதால்
மட்டும் உண்மையாகி விடமுடியாது எனபதைம் மனம் கொள்ள வேண்டும் அதனால்
 எல்லாவற்றையும் மறுக்க வேண்டும் என்றும் சொல்ல வரவில்லை  
எதற்கும் இடம் நோக்கியும் பொருள் கொள்ள  வேண்டும் சிறியேன் சொல்வதைக்கேட்க
வேண்டாம் எனும் முடிவும் சரியாகாது சுட்டப்பழம் கதை அறிவீர்கள்

அதான்று ஒரு புள்ளியில் வைத்து பலகோடுகள் போடமுடியும் ஆனால்  இரு புள்ளிகள்
 இருந்தால் ஓரளவிற்கு ஓர் நேர்கோடுதன  அமையும் 
மேலும்ல  அவற்றின் இடைப்பட்ட தூரம் வரைதான்  நேர்கோடு  கொள்ளமுடியும்
 மூன்றாவதுவந்தால் அந்த நேர்கோட்டில் இருந்தால் வலுப்பெறும்
 அகன்றிருந்தால் குழப்பம் வரும் 

புகாப்புகர் கொண்ட புன்பூங்கலிங்கமொடு
வாடா மாலை துயல்வர ஓடி
பெருங் கயிறு நாலும் இரும்பனம் பிணையல்
பூங்கண் ஆயம் ஊக்க ஊங்காள்
அழுதனள் பெயரும் அம்சில்ஓதி 

இது ஒரு நற்றி ணைப்பாடல் வரிகள் (90)  

இது வேண்டும் என முன்பே குறிப்பாக அறிந்த நிலையில் காட்டியதும்  அல்ல 
இது எட்டில் கயிறு சாற்றி  பார்த்தலாக கண்டது 

இதில் வரும் நாலு ம் எனும் சொல்லிற்கு என்ன பொருள் கொள்வீர் 
நான்கு எனும் பொருள் கொள்ள முடியாதல்லவா? அதுபோல் நீங்ககாட்டியதிலும் 

//தி.வை.சதாசிவ பண்டாரத்தார்
 "வஞ்சிநகர் நாலும் வளமையா ஆண்டருளும்//
 நாலு ம் என்றசொல்லால் நான்கு கருவூர்
எனக்கட்டல் சரியாகாது என்பது என்கருத்து 

நாலும் என்றால் தொங்கும் எனவும் ஓர் பொருளுண்டு 
நால்வாய் (வினைத்தொகை-மற்றும் சினையாகுபெயர் ) என்றால் யானையாகும் 
பாருங்கள் இந்த சொல்லின எழுதிய வுடன் தான் தோன்றிய கருத்து  
யானைக்கு நாலுகின்ற வாய் என்று தான் சொல் பொருள் கொள்ளவேண்டும் 
இதனில் வாய் என்றால் எப்படிப் பொருந்தும் அதொங்குகின்றது வாயல்லவே 
மூக்குத்தானே வாய் என ஒன்றும்தான் தனியாக உள்ளதே 
ஆ னால் காற்று உள்ளே கும் வழியினைக்கொண்டதால் (வாயில்) வாய் ஆயிற்று 

மீண்டும் 

வஞ்சி நகர் நாலும் என்ற இடத்தில் நாலு ம் என்பதனை  எண்ணாகக் கொள்ளாமல்
 வினையாகக் கொள்ளவும் முடியும் மேலும் இருபுறமும் பிணைத்து வஞ்சி நகர் நாலு ம்
 என்றோ அல்லது நாலும் வளமையா என்றோ  கொள்ள முடியும் பின்னதே சரியானது
 என்பது என் கருத்து 

அதான்று 
நாலூர் என்று தேவா ரப்பா டல்பெற்றத்தலமுமுண்டு அறிவீர்கள் அங்கு நான்கு   ஊர்கள் அமைந்த
தால் நாலூர் என்கிறா ர்களா அல்லது நாலும் ஊர் எனவும் கொள்ள முடியும் இருந்தாலும் 
நாலும் என்பதனுக்கு தொங்குகின்ற எனலும் தகாது பின் ஏதுவாகும் ??

                                                     வஞ்சிக்குப்புறம்பாகச் செல்லவில்லை 

என்னிடம்   உள்ள 18 நிகண்டுகளில் இவ்வாறு பொருள்கள் உள்ளன 


 திவாகரம் 

கருவூர் 
ஆற்றெழும் ஓர் கொ டிப்பிறப்பு   
பாவிகற்பத்து ஓர் பா
 மாதர் 
மேல்செலவு (போர்)


பாரதி தீ ப நிகண்டு 

நாற் பா வில் ஒன்று 
ஆற்றகத்து ஓர் கொடி
 நன்னுதல் 
மேற்போய்விடும் சொல் 
கருவூர் 

பிங்கலம் 

வானீரம் 
பிசின் 
வஞ்சுளம் 
பகைவர் மேற்செல்லல் 
ஓர் கொடி
 பெண் கள் 
ஒரு பா 
கருவூர் 
குடை 

உரிச்சொல்   நிகண்டு 

வாணீரம்
 வஞ்சுளம் 


கயாதர நிகண்டு


மேற்சேற ல் 
ஒருபா 
ஒருபதி 

சூடாமணி நிகண்டு

மேற்செலவு (பகைவர்மேல்)
வஞ்சிப்பா 
கருவூர் 
வஞ்சிக்கொடி
 பெண் 

அகராதி நிகண்டு 

மேற்செலவு 
ஓர்பா 
வள்ளி 
பெண் 
ஓர் பா 

ஆசிரிய நிகண்டு 

கொடி
 திணை 

வடமலை நிகண்டு 

மாது 
ஓர்க்கொடி 
பாவின் விகற்பம்
 போர்மேல் செல்லல் 
மருத யாழ்த்திறம் 

பொதிகை நிகண்டு 

மேற்செலவு 
ஓர் ஊர்
ஓர் பா 
வல்லி 
 பெண் 


நாம தீப நிகசண்டு 


வஞ்சுளம்
 வானீரம் 
கருவூர் 
செடி 
கூகை நீறு 
ஓர் வாசனை 


நாணார்த்த தீபிகை 

கருவூர் 
ஓர் மரம் 
ஓர் கொ டி
 ஓர் பா 
பாக்கழிப்பண் 


வேதகிரியார் சூடாமணி நிகண்டு

மேற்செலவு 
ஓர் ஊர் 
பா 
வள்ளி 
பெண் 
இயக்கி 



 1-.மேலைக் கடற்கரையில் அகலப்புழை ஆற்றின் சங்கமத்துறையில் இருந்த வஞ்சி
2-கொங்குக் கரூர் வஞ்சி
3-கொங்குநாட்டில் காவிரிக்கு வடகரையில் ஸ்ரீராமசமுத்திரம் என்று
அழைக்கப்படும் அயிலூர்
4-மேலைக் கடற்கரையில் 8ம் நூற்றாண்டில்  தோன்றிய திருவஞ்சைக்களம்
5-திருவனந்தபுரத்தின் ஒரு பகுதியில் மன்னன் அரண்மனை இருந்த இடம்
6-தாராபுரம் என்று மருவிய ராஜராஜபுரம்
7-கிரங்கனூருக்கு 5மைல் வடக்கிலும் திருக்குணவாயிலுக்கு 2மைல்
வடகிழக்கிலும் உள்ள கரூர்ப்படஞ்ஞா
8-கடல்கோளால் 8ம் நூற்றாண்டில் அழிந்த கொல்லம் நகர்
9-இன்றைய கொல்லம்
வஞ்சிப்பெயர் பெற்ற நகரங்கள் சில கரூர்/கருவூர்  என்ற மாற்றுப்பெயர் பெற்றன .
திவாகரமும் பிங்கலந்தையும் வஞ்சி என்ற சொல்லுக்கு கருவூர் என்று பொருள் கூறுகின்றன.
பத்தாம்  நூற்றாண்டில் ஆண்ட இராஜசிம்மனது சின்னமனூர்ப் பெரிய





நூ த லோ சு
மயிலை
ஊ 

2017-10-27 16:23 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:
கல்வெட்டுல் வழி கா ட்டப்படுவானவற்றைப் பு றம் தள்ளுக
அவை மிகவும் ம்பிற்காலத்தவையே .>.
வரலாற்று ஆய்வுகளுக்கு  கல்வெட்டுக்கள் முதல்நிலைத் தரவுகளாக அமையும்.மேனாட்டு நிலவியலார் குறிப்புகளும் அவ்வண்ணமே ஏற்றுக்கொள்ளப்படும். .மேற்சுட்டிய இரண்டனுக்கும் பின்னரே இலக்கியச் சான்றுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் செவிவழிச்செய்திகள் மூன்றாம் நிலைத தரவுகளாம் .இதுதான் ஆராய்ச்சி நெறிமுறை .
வஞ்சிப்பெயர் பெற்ற ஊர்களைச் சுற்றியிருந்த சில பகுதிகளேனும் ஒத்த பெயரும் தன்மையும் உடையனவாய் இருந்தன 
1).முசிறி என்ற பெயரில் ஒரு ஊர் மேலைக் கடற்கரை வஞ்சியை அடுத்தும் இருந்தது .கொங்கு வஞ்சியை அடுத்தும் உள்ளது .
2)மேற்கரை வஞ்சியை ஒட்டி ஓடிய சுள்ளியம் பேரியாறு  ஆன்பொருநை என்றும் அழைக்கப்பட்டது .கொங்கு வஞ்சியை அடுத்து ஓடிய நதியும் ஆன்பொருநை என்று அழைக்கப்பட்டது.
3)சேரர் தலைநகரங்களில்  குணவாயில் என்று ஒரு பகுதி உண்டு 
4)வஞ்சிநகர அரண்மனைகளில்  ஆடகமாடம் என்று அழைக்கப்பட்ட திருமால் கோயில் உள்ள பகுதி இருந்தது .
சுள்ளியம் பேரியாற்றுக்கு ஆன்பொருநை என்ற பெயர்வழக்கு இருந்தமைக்கு புறநானூற்றுப்பாடல்கள் ஆதாரமாக அமைகின்றன .
சோழன் நலங்கிள்ளியைப் பாடிய உறையூர் முதுகண்ணன் சாத்தனார் அவன் சேரநாட்டை வென்று கைப்பற்றியதைப் புகழ்கிறார் .(புறம்.29)கோவூர் கிழார் 
"குண  கடல் பின்னதாக குடகடல்   வெண்டலைப் புணரிநின் மான்குளம்பு அலைப்ப "அவனது படைகள் அவனுக்காக போர் செய்தன என்கிறார் .(புறம் 31)
இதனால் அவனது படைகள் மேற்கரை வஞ்சியை வென்றமை தெளிவு ."பூவாவஞ்சியும் தருகுவன் "என்றும் அவரே குறிப்பிடுகிறார் .(புறம் 32)இவனது சகோதரன்  கிள்ளி வளவனுக்கும் இப்போர்களில் பங்கு இருந்தமை பின்வரும் பாடல்களால் தெளிவாகிறது .ஆலந்தூர் கிழார்" தண்ணா ன் பொருநை வெண்மணல் சிதைய "கடிமரம் தடியும் ஓசையைக் கேட்ட பின்பும் கோட்டைக்குள் வாளாவிருந்த சேரனை எதிர்த்துப் போரிட்டதாகப் பாடுகிறார் .(புறம் 36)மாறோக்கத்து நப்பசலையார் கிள்ளி வளவனைப் பாடும்போது "வாடாவஞ்சி வாட்டுநின் பீடுகெழு நோன்தாள்"என்கிறார் .(புறம் 39)
இதனால் கிள்ளிவளவன் மேற்கரை நாட்டில் ஆன்பொருநைக் கரையில் இருந்த வஞ்சியை வென்றான் என்பதில் ஐயமில்லை .
இதனால் மேற்கரையிலும் வஞ்சி இருந்தது என்பதை மறுக்க இயலாது .
கண்மணி 







   .  

2017-10-24 0:18 GMT+05:30 N D Logasundaram <selvi...@gmail.com>:
அன்புநிறை கண்மணி அவர்கட்கு 

ஈங்கு வஞ்சி எனும் சொல் சங்கநூல்களில் இடம்
பெற்றுள்ள எல்லா  வரிகளையும் காட்டியுள்ளேன் 

இதனை வஞ்சி என்பது பயிரினமும் உள்ளது அவைகளை நீக்கிக் காணஎஞ்சுவது வஞ்சி எனும் இடப்பெயர்
 வாடா வஞ்சி எனும் சொல்லில் வஞ்சி எனும் இடப்பெயரைத்தான் குறிக்கின்றது ஐயமில்லை 

அகநானூறு 36 மிகத்தெளிவாக ஆ ன்பொருநை ஆற்று மணல் பற்றிப்பேசுகின்றது 
இது சோழமன்னன் சேரநாட்டு கருவூரை முற்றுகை யிட்டுருந்தபோது பாடப்பெற்றது 

புறநானூறு 11 ஆம் பாடல்தான் மிகத்  தெளிவாக பொருநை நீர் பாயும் வஞ்சி எனவே குறிக்கின்ற  
மையால் சங்ககாலத்து வஞ்சி வேவேறெங்கும் உள்ளதும் ஆகாது 

கல்வெட்டுல் வழி கா ட்டப்படுவானவற்றைப் பு றம் தள்ளுக 
அவை மிகவும் ம்பிற்காலத்தவையே 

ஆன்பொ ருநை எனும் ஆறு தமிகத்தில் இல்லை 
காவிரி எந்நாளும் பொருநை என விளி க்கப்பட்டதாக்க சான்றுகள் இல்லவே இல்லை 
முன் துறை எனும் சொல் கடலு க்கு அருகில் உள்ள துறைதனைக்குறிக்குமீ அன்றி  வெறும் ஆற்றுத்துறை அல்ல 

ஆக கடலில் ஓர் ஆறு கலக்கும் இடமாகிய சேரமான் பெருமான் தொடர்புடைய கிரங்கனுர் என ஆங்கிலேயர்களால் திருத்தி வழங்கிய கொடுங்கோளூர் திருவஞ்சைக்களம் அருகு  பெரியாறு கலக்குமிடமாகும்

அதா ன்று சிலம்பு மணிமேகலை வரிகளையும் காட்டியுள்ளேன் இதனில் எங்கும் காவிரிக்கரை அமைந்த கரூர் தனக்கு தொடர்பேது உள்ளதாக காண வே இல்லை 
----------------------------

பகன்றை பலாசம் பல்பூம் பிண்டி
வஞ்சி பித்திகம் சிந் துவாரம்
தும்பை துழாஅய் சுடர்ப்பூந் தோன்றி 90
நந்தி நறவ நறும்புன் னாகம்
பாரம் பீரம் பைங்குருக் கத்தி                                  குறிஞ்சிப்பாட்டு             

குடபுலம் காவலர் மருமான் ஒன்னார்
வடபுல இமயத்து வாங்குவில் பொறித்த
எழு உறழ் திணிதோள் இயல் தேர்க் குட்டுவண்
வருபுனல் வாயில் வஞ்சியும் வறிதே அதாஅன்று 50   சிறுபாணாற்றுப்படை
\
36
நீயே அறிந்து செய்க
பாடியவர்: ஆலத்தூர் கிழார்
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்
திணை:வஞ்சி துறை: துணை வஞ்சி
குறிப்பு: சோழன் கருவூரை முற்றியிருந்தபோது பாடியது

அடுநை யாயினும் விடுநை யாயினும்
நீ அளந் தறிதி நின் புரைமை வார்தோல்
செயறியரிச் சிலம்பின் குறுந்தொடி மகளிர்
பொலஞ்செய் கழங்கின் தெற்றி யாடும்
தண்ணான் பொருநை வெண்மணல் சிதையக்
கருங்கைக் கொல்லன் அரஞ்செய் அவ்வாய்
நெடுங்கை நவியம் பாய்தலின் நிலையழிந்து
வீகமழ் நெடுஞ்சினை புலம்பக் காவுதொறும்
கடிமரம் தடியும் ஓசை தன்ஊர்
நெடுமதில் வரைப்பின் கடிமனை இயம்ப
ஆங்குஇனி திருந்த வேந்தனொடு ஈங்குநின்
சிலைத்தார் முரசும் கறங்க
மலைத்தனை எண்பது நாணுத்தகவு உடைத்தே           3 அகநானுறு

கடும்பகட்டு யானை நெடுந்தேர்க் கோதை20
திருமா வியனகர்க் கருவூர் முன்துறைத்
தெண்நீர் உயர்கரைக் குவைஇய
தன்ஆன் பொருநை மணலினும் பலவே                              93 அகநானுறு

நாண்கொள் நுண்கோலின் மீன்கொள் பாண்மகள்
தாளபுனல் அடைகரைப் படுத்த வராஅல்
நாரரி நறவுண்டு இருந்த தந்தைக்கு
வஞ்சி விறகின் சுட்டு வாய் உறுக்கும்
தண்துறை ஊரன் பெண்டிர் எம்மைப் 5                    அகநானுறு 216


நீடுநிலை யாஅத்துக் கோடுகொள் அருஞ்சுரம்
கொண்டனன் கழிந்த வன்கண் காளைக்கு
அவள் துணிவு அறிந்தனென் ஆயின் அன்னோ 10
ஒளிறுவேல் கோதை ஓம்பிக் காக்கும்
வஞ்சி அன்னஎன் வளநகர் விளங்க      அகநானுறு  264

ஆரியர் அலறத் தாக்கிப் பேர்இசைத்
தொன்றுமுதிர் வடவரை வணங்குவில் பொறித்து
வெஞ்சின வேந்தரைப் பிணித்தோன்
வஞ்சி யன்னவென் னலம்தந்து சென்மே  அகநானுறு 397


குலவுச் சினைப் பூக் கொய்து
தண் பொருநைப் புனல் பாயும் 5
விண் பொருபுகழ் விறல்வஞ்சிப்
பாடல் சான்ற விறல்வேந் தனும்மே                          புறநானூறு 11


யாபல கொல்லோ பெரும வார் உற்று
விசிபிணிக் கொண்ட மண்கனை முழவின்
பாடினி பாடும் வஞ்சிக்கு
நாடல் சான்ற மைந்தினோய் நினக்கே                     புறநானூறு 16

கடும்பின் அடுகலம் நிறையாக நெடுங் கொடிப் 1
பூவா வஞ்சியும் தருகுவன் ஒன்றோ                           புறநானூறு 32

ஏழெயில் கதவம் எறிந்து கைக்கொண்டு நின்
பேழ்வாய் உழுவை பொறிக்கும் ஆற்றலை
பாடுநர் வஞ்சி பாடப் படையோர்                10           
தாதுஎரு மறுகின் பாசறை பொலியப்                        புறநானூறு 33


இமையம் சூட்டியஏம விற்பொறி     15
மாண்வினை நெடுந்தேர் வானவன் தொலைய
வாடா வஞ்சி வாட்டும்நின்
பீடுகெழு நோன்தாள் பாடுங் காலே                          புறநானூறு 39

வஞ்சி முற்றம் வயக்கள னாக
அஞ்சா மறவர் ஆட்போர்பு அழித்துக்                      புறநானூறு 373

பனிக்கயத் தன்ன நீள்நகர் நின்று என்
அரிக்கூடு மாக்கிணை இரிய ஒற்றி
எஞ்சா மரபின் வஞ்சி பாட
எமக்கென வகுத்த அல்ல மிகப்பல 10                     புறநானூறு 378

மென் பாலான் உடன் அணை இ   1
வஞ்சிக் கோட்டு உறங்கும் நாரை
அறைக் கரும்பின் பூ அருந்தும்
வன் பாலான் கருங்கால் வரகின்                              புறநானூறு 384

விடுவர் மாதோ நெடிதோ நில்லாப்
புல்லிளை வஞ்சிப் புறமதில் அலைக்கும்                    புறநானூறு 387
 பரிபாடல் திரட்டு
கல்லென் பொருநை மணலினும் ஆங்கண்
பல்லூர் சுற்றிய கழனி
எல்லாம் விளையும் நெல்லினும் பலவே                      புறநானூறு 387

ஒருகண் மாக்கிணை தெளிர்ப்ப ஒற்றிப்
பாடுஇமிழ் முரசின் இயல்தேர்த் தந்தை
வாடா வஞ்சி பாடினேன் ஆக                                 புறநானூறு 394  

ஏம இன் துயில் எழுதல் அல்லதை
வாழிய வஞ்சியும் கோழியும் போலக்
கோழியின் எழாது எம் பேர் ஊர் துயிலே                   பரிபாடல் திரட்டு 8

துணையோர் செல்வமும் யாமும் வருந்துதும்
வஞ்சி ஓங்கிய யாணர் ஊர
தஞ்சம் அருளாய் நீயேநின்     
நெஞ்சம் பெற்ற இவளுமார் அழுமே                          10-10 /  50

ஆற்றல் உடையன் அரும்பொறி நல்லூரன்
மேற்றுச் சிறுதாய காய்வஞ்சி - போற்றுருவிக்
கட்டக முத்திற் புதல்வனை மார்பின்மேல்
பட்டஞ் சிதைப்ப வரும்                                        ஐந்திணை எழுபது 44

மைந்துகால் யாத்து மயங்கிட ஞாட்பினுட்
புய்ந்துகால் போகிப் புலான்முகந்த வெண்குடை
பஞ்சிபெய் தாலமே போன்ற புனனாடன்
வஞ்சிக்கோ வட்ட களத்து                                       களவழி நாற்பது 38

கற்றறிந்த நாவினார் சொல்லார்தம் சோர்வஞ்சி
மற்றைய ராவார் பகர்வர் - பனையின்மேல்
வற்றிய ஓலை கலகலக்கும் எஞ்ஞான்றும்
பச்சோலைக் கில்லை யொல                                   255   பழமொழி400




யானை வீரரும் இவுளித் தலைவரும்
வாய்வாள் மறவரும் வாள்வல னேத்தத்
தானவர் தம்மேற் றம்பதி நீங்கும்
வானவன் போல வஞ்சி நீங்கித்
தண்டத் தலைவருந் தலைத்தார்ச் சேனையும் 80  // 26 கால்கோட் காதை
வெண்டலைப் புணரியின் விளிம்புசூழ் போத

மிகப்பெருந் தானையோடு இருஞ்செரு வோட்டி
அகப்பா எறிந்த அருந்திற லாயினும்
உருகெழு மரபின் அயிரை மண்ணி 145
இருகடல் நீரும் ஆடினோ னாயினும்
சதுக்கப் பூதரை வஞ்சியுள் தந்து
மதுக்கொள் வேள்வி வேட்டோ னாயினும்           // 28 நடுகல் காதை

ஆரிய அரசரை அருஞ்சிறை நீக்கிப் 195
பேரிசை வஞ்சி மூதூர்ப் புறத்துத்
தாழ்நீர் வேலித் தண்மலர்ப் பூம்பொழில்
வேளா விக்கோ மாளிகை காட்டி                     // 28 நடுகல் காதை

குமரியொடு வடவிமயத் தொருமொழிவைத் துலகாண்ட
சேரலாதற்குத் திகழொளி ஞாயிற்றுச் சோழன்மகளீன்ற
மைந்தன் கொங்கர் செங்களம் வேட்டுக் கங்கைப் பேர்
யாற்றுக் கரைபோகிய செங்குட்டுவன் சினஞ் செருக்கி
வஞ்சியுள் வந்திருந்த காலை வட ஆரிய மன்னர் ஆங்
கோர் மடவரலை மாலைசூட்டி உடனுறைந்த இருக்கை
தன்னில் ஒன்றுமொழி நகையினராய்த் தென்றமிழ்     // 29 வாழ்த்துக் காதை

தாங்கண் உருள்கின்ற மணிவட்டைக் குணில்கொண்டு
துரந்ததுபோல் இமயமால்வரைக் கற்கடவுளாமென்ற
வார்த்தை இடந்துரப்ப ஆரியநாட்டரசோட்டி அவர்
முடித்தலை அணங்காகிய பேரிமயக் கல்சுமத்திப்
பெயர்ந்து போந்து நயந்த கொள்கையிற் கங்கைப்பேர்
யாற்றிருந்து நங்கைதன்னை நீர்ப்படுத்தி வெஞ்சினந்தரு
வெம்மை நீங்கி வஞ்சிமா நகர்புகுந்து நிலவரசர் நீண்
முடியாற் பலர்தொழு படிமங் காட்டித் தடமுலைப் பூச
லாட்டியைக் கடவுண் மங்கலஞ்செய்தபின்னாள் கண்ணகி         29 வாழ்த்துக் காதை
தன் கோட்டத்து மண்ணரசர் திறைகேட்புழி அலம்வந்த  (உரைப் பாட்டு மடை)

மலையரையன் பெற்ற மடப்பாவை தன்னை
நிலவரசர் நீண்முடிமேல் ஏற்றினான் வாழியரோ
வாழியரோ வாழி வருபுனல்நீர்த் தண்பொருநை
சூழ்தரும் வஞ்சியார் கோமான்றன் தொல்குலமே 14                29 வாழ்த்துக் காதை  (வாழ்த்து)


மனிலை யுலகத் தவருடன் போகும்
தாவா நல்லறஞ் செய்தில ரதனால் 125
அஞ்செஞ் சாய லஞ்சா தணுகும்
வஞ்சி மூதூர் மாநகர் மருங்கிற்
பொற்கொடி தன்மேற் பொருந்திய காதலின்
அற்புளஞ் சிறந்தாங் கரட்டன் செட்டி


யானுஞ் சென்றேன் என்னெதி ரெழுந்து
தேவந் திகைமேல் திகழ்ந்து தோன்றி
வஞ்சி மூதூர் மணிமண் டபத்திடை
நுந்தை தாணிழ லிருந்தோய் நின்னை
அரைசுவீற் றிருக்குந் திருப்பொறி யுண்டென்று 175

முடியுடை வேந்தர் மூவ ருள்ளும்
குடதிசை யாளுங் கொற்றங் குன்றா
ஆர மார்பிற் சேரர்குலத் துதித்தோர்
அறனும் மறனும் ஆற்றலும் அவர்தம்
பழவிறல் மூதூர்ப் பண்புமேம் படுதலும் 5
விழவுமலி சிறப்பும் விண்ணவர் வரவும்
ஒடியா இன்பத் தவருறை நாட்டுக்
குடியின் செல்வமுங் கூழின் பெருக்கமும்
வரியுங் குரவையும் விரவிய கொள்கையின்
புறத்துறை மருங்கின் அறத்தொடு பொருந்திய 10
மறத்துறை முடித்த வாய்வாள் தானையொடு                                  30 வரந்தரு காதை
பொங்கிரும் பரப்பிற் கடல்பிறக் கோட்டிக்
கங்கைப் பேர்யாற் றுக்கரை போகிய
செங்குட் டுவனோ டொருபரிசு நோக்கிக்
கிடந்த வஞ்சிக் காண்ட முற்றிற்று 15


 சேய் நிலத்து அன்றியும் செவ்வியின் வணங்கி 
      எஞ்சா மண் நசை இகல் உளம் துரப்ப 
      வஞ்சியின் இருந்து வஞ்சி சூடி 19-120
      முறம் செவி யானையும் தேரும் மாவும் 
      மறம் கெழு நெடு வாள் வயவரும் மிடைந்த 

 மாநீர் வங்கத்து அவனொடும் எழுந்து 
      மாயம் இல் செய்தி மணிபல்லவம் எனும் 
      தீவகத்து இன்னும் சேறலும் உண்டால் 
      தீவதிலகையின் தன் திறம் கேட்டு 
      சாவக மன்னன் தன் நாடு அடைந்த பின் 
      ஆங்கு அத் தீவம் விட்டு அருந் தவன் வடிவு ஆய் 21-090
      பூங் கொடி வஞ்சி மா நகர் புகுவை 
      ஆங்கு அந் நகரத்து அறி பொருள் வினாவும் 
      ஓங்கிய கேள்வி உயர்ந்தோர் பலரால் 
      "இறைவன் எம் கோன் எவ் உயிர் அனைத்தும் 

  "மன்னவன் மகற்கு இவள் வரும் கூற்று" என்குவர் 
      ஆபுத்திரன் நாடு அடைந்து அதன் பின் நாள் 
      மாசு இல் மணிபல்லவம் தொழுது ஏத்தி   24-155
      வஞ்சியுள் புக்கு மா பத்தினி தனக்கு 
      எஞ்சா நல் அறம் யாங்கணும் செய்குவல் 

   இட்டனள் சாபம் பட்டது இதுவால் 25-200
  கடவுள் மா நகர் கடல் கொள பெயர்ந்த 
      வடி வேல் தடக் கை வானவன் போல 
      விரிதிரை வந்து வியல் நகர் விழுங்க 
      ஒரு தனி போயினன் உலக மன்னவன் 
      அருந் தவன் தன்னுடன் ஆய் இழை தாயரும் 
      வருந்தாது ஏகி வஞ்சியுள் புக்கனர் 
      பரப்பு நீர்ப் பௌவம் பலர் தொழ காப்போள் 

முன் நாள் எடுத்ததும் அந் நாள் ஆங்கு அவன் 25-210
      அற அரசு ஆண்டதும் அறவணன் தன்பால் 
      மறு பிறப்பாட்டி வஞ்சியுள் கேட்பை' என்று 
      அந்தரத் தீவகத்து அருந் தெய்வம் போய பின் 
      மன்னவன் இரங்கி மணிமேகலையுடன் 

   'புன்கண் கொள்ளல் நீ போந்ததற்கு இரங்கி நின் 
      மன் பெரு நல் நாடு வாய் எடுத்து அழைக்கும் 
      வங்கத்து ஏகுதி வஞ்சியுள் செல்வன்' என்று 
      அந்தரத்து எழுந்தனள் அணி இழை தான் என் 25-239

பூ மலர்ப் பொழிலும் பொய்கையும் மிடைந்து 
      நல் தவ முனிவரும் கற்று அடங்கினரும் 
      நல் நெறி காணிய தொல் நூல் புலவரும் 
      எங்கணும் விளங்கிய எயில் புற இருக்கையில் 
      செங்குட்டுவன் எனும் செங்கோல் வேந்தன் 
      பூத்த வஞ்சி பூவா வஞ்சியில் 
      போர்த் தொழில் தானை குஞ்சியில் புனைய 
      நில நாடு எல்லை தன் மலை நாடென்ன 26-080
      கைம்மலைக் களிற்று இனம் தம்முள் மயங்க 
      தேரும் மாவும் செறி கழல் மறவரும் 
      கார் மயங்கு கடலின் கலி கொளக் கடைஇ 
      கங்கை அம் பேர் யாற்று அடைகரைத் தங்கி 
      வங்க நாவியின் அதன் வடக்கு இழிந்து 
      கனக விசயர் முதல் பல வேந்தர் 
      அனைவரை வென்று அவர் அம் பொன் முடி மிசை 
      சிமையம் ஓங்கிய இமைய மால் வரைத் 
      தெய்வக் கல்லும் தன் திரு முடிமிசைச் 
      செய் பொன் வாகையும் சேர்த்திய சேரன் 
      தேரும் மாவும் செறி கழல் மறவரும் 
      கார் மயங்கு கடலின் கலி கொளக் கடைஇ 
      கங்கை அம் பேர் யாற்று அடைகரைத் தங்கி 
      வங்க நாவியின் அதன் வடக்கு இழிந்து 
      கனக விசயர் முதல் பல வேந்தர் 
      அனைவரை வென்று அவர் அம் பொன் முடி மிசை 
      சிமையம் ஓங்கிய இமைய மால் வரைத் 
      தெய்வக் கல்லும் தன் திரு முடிமிசைச் 
      செய் பொன் வாகையும் சேர்த்திய சேரன் 


நூ த லோ சு
மயிலை
ஊ 

2017-10-23 16:04 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:
சேரநாட்டில் ஒரு முறையான கூட்டாட்சி சங்க காலத்திலேயே
அமைந்திருந்தது.மேனாட்டு நிலவியலாரும் கரூரா சேரபோத்ராஸின் தலைநகர்
என்கின்றனர் ."சேரபோத்ராஸ் "என்ற சொல்லுக்கு சேர புத்திரர்கள் என்ற
பன்மைப் பொருளையே கொள்ள முடியும் (.periplus of the erythriyan sea)
தி.வை.சதாசிவ பண்டாரத்தார்
 "வஞ்சிநகர் நாலும் வளமையா ஆண்டருளும்
கஞ்ச மலர்க்கை உடையான் காண் ",
"நாலுவஞ்சி  சேரப் படைத்த சேரமான் பெருமாள் "என்ற செப்பேட்டுப் பகுதிகளை
எடுத்துக்காட்டி வஞ்சி என்ற பெயர் 4ஊர்கட்கு உரியதென விளக்குகிறார்
(இலக்கியமும் கல்வெட்டுக்களும் )
ஒன்பது சேரர் தலைநகரங்கள் வஞ்சி என்ற பெயரைத் தாங்கியிருந்தன
 1-.மேலைக் கடற்கரையில் அகலப்புழை ஆற்றின் சங்கமத்துறையில் இருந்த வஞ்சி
2-கொங்குக் கரூர் வஞ்சி
3-கொங்குநாட்டில் காவிரிக்கு வடகரையில் ஸ்ரீராமசமுத்திரம் என்று
அழைக்கப்படும் அயிலூர்
4-மேலைக் கடற்கரையில் 8ம் நூற்றாண்டில்  தோன்றிய திருவஞ்சைக்களம்
5-திருவனந்தபுரத்தின் ஒரு பகுதியில் மன்னன் அரண்மனை இருந்த இடம்
6-தாராபுரம் என்று மருவிய ராஜராஜபுரம்
7-கிரங்கனூருக்கு 5மைல் வடக்கிலும் திருக்குணவாயிலுக்கு 2மைல்
வடகிழக்கிலும் உள்ள கரூர்ப்படஞ்ஞா
8-கடல்கோளால் 8ம் நூற்றாண்டில் அழிந்த கொல்லம் நகர்
9-இன்றைய கொல்லம்
வஞ்சிப்பெயர் பெற்ற நகரங்கள் சில கரூர்/கருவூர்  என்ற மாற்றுப்பெயர் பெற்றன .
திவாகரமும் பிங்கலந்தையும் வஞ்சி என்ற சொல்லுக்கு கருவூர் என்று பொருள் கூறுகின்றன.
பத்தாம்  நூற்றாண்டில் ஆண்ட இராஜசிம்மனது சின்னமனூர்ப் பெரிய
தாமிரப்பட்டயம் 'கருபதி  பல 'என்று சேரர் தலைநகரங்களைக் குறிக்கிறது
டாலமி அலிமுகம்/பொய்முகம் என்று அழைக்கப்படும் pseudoisthmusக்குக்
கிழக்கில் கொரவூரா என்ற ஊரைச் சுட்டுகிறார்
pseudoisthmusக்கும் தெற்கில் உள்ள பரிஸ் துறைக்கும் .இடைப்பட்ட
உள்நாட்டு ஊர்களில் கரூரா என்ற ஒரு சேரர் தலைநகரையும் குறிப்பிடுகிறார் .

N. Ganesan

unread,
Nov 30, 2017, 8:36:33 PM11/30/17
to மின்தமிழ், vallamai


2017-11-08 13:28 GMT-08:00 தேமொழி <jsthe...@gmail.com>:
புலவர். ஆ.பழநி >>> http://apazhani.in/vanjiye-engirukkiraai/

சிலம்பு கூறும் வஞ்சி குறித்து உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன். 

 ..... தேமொழி



மலையாளிகள் சிலர் எழுதியுள்ள நூல்களை ஜெயமோகன் மொழிபெயர்த்துள்ளார் போலும்.
அதனைப் புலவர் ஆ. பழநி படித்து கொடுங்ஙல்லூர் (தமிழர்கள் கொடுங்கல்லூர் என்பர்.
அஞ்ஞைக்களம், தமிழர் வாக்கில் அஞ்சைக்களம் ஆவதுபோல். அப்பர், சுந்தரர்) தான்
சங்க கால சேரர் தலைநகர் என்கிறவாறு எழுதியுள்ளார். ஆனால், இலக்கிய, தொல்லியல்
சான்றுகள் அதற்கு ஒன்றுமில்லை.

கண்மணி அவர்கள் சூர்ணி ஆற்றங்கரையுள்ள கொடுங்ஙல்லூர்  வஞ்சி மாநகரம் அல்ல
என்று குறிப்பிட்டுள்ளார். அதையும் படித்துப் பாருங்கள். மலையாளிகள் சொர்ணா நளபாடு,
இராமன் நம்பூதிரி சூர்ணி ஆற்றை பூர்ணா என்பதும் பொருத்தமற்ற கூற்று எனக் 
குறிப்பிட்டுள்ளேன். 

டாக்டர் கே. வி. இராமன் சென்னைப் பல்கலை தொல்லியல் துறைப் பேராசிரியர், தலைவர்.
60-களிலும், 70களிலும். அவரது தொல்லியல் ஆய்வுகள் புகழ்பெற்றவை. உறையூர்,
காவிரிப்பூம்பட்டினம், கொடுங்கல்லூர், ... கொடுங்கல்லூரில் பல இடங்களில்
குழிகள் தோண்டி விஞ்ஞான முறைப்படி ஆய்ந்தபோது 8,9-ஆம் நூற்றாண்டுக்கு
முந்திய மக்கள் வாழிடங்கள் ஒன்றுமில்லை எனக் காட்டினார்.
‘கேரளத்தில் அகழாய்வுகள்’, பக். 55-70,

கொடுங்ஙல்லூரை சங்க வஞ்சி என்பது கால விரயம் என்கிறார் பேரா. கே. வி. ராமன்,

“ஆராய்ச்சிப் பேரறிஞர் மு. ராகவ ஐயங்கார் தமிழகத்திலுள்ள கரூர்தான் பழைய சேரர்
தலைநகரமான வஞ்சியாகும் என்று இலக்கியம், கல்வெட்டுகள் இவற்றின் துணைகொண்டு
கூறினார். இப்பொழுது அகழாய்வுகளும் அக் கருத்தை உறுதிப்படுத்தியுள்ளன.” (பக். 70)

இந்த முடிபு வாக்கியத்தின் பின்னர் முசிறி எங்கே எனக் கண்டுபிடிக்கவேண்டும் என்கிறார்.
அது பொன்வானி (பூர்ணவாஹினி) கரையிலே சில ஆண்டு முன் கண்டுபிடித்தாயிற்று.

மெதுவாகப் பார்ப்போம். ஆன்பொருனை கரையிலே வஞ்சி மூதூர் இருந்தது
என்னும் செய்தி சங்கம், சிலம்பு உறுதி செய்கிறது. மலையாள நாட்டார் கூறும்
கொடுங்கல்லூர் வஞ்சி அன்று என முனைவர் கண்மணி உறுதிப்படுத்துகிறார்.
அது சரியே. அவரது ஆய்வேட்டில் 1992 படிக்கும்போது அவ்வாறு குறிப்பிட்டுள்ளாரா
எனப் பார்ப்போம்.  

20-30 பக்கக் கட்டுரையில் வஞ்சி மூதூர் கேரளாவில் சங்க காலம் என யாராவது
எழுதினால் நன்று. 20-ஆம் நூற்றாண்டுக் கற்பனை குமரிக்கண்டம் போல எனக்
கருத கே.வி. இராமன் போன்றோர் முடிபுகள் துணைவருகின்றன.

நா. கணேசன்
 



On Wednesday, November 8, 2017 at 7:18:49 AM UTC-8, N. Ganesan wrote:


2017-11-07 22:07 GMT-08:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
>
> NG <இன்றைய அமராவதி ஆற்றின் கரையில் சங்ககாலத்தில் ஒரு சேரன் தலைநகர் இருந்தது.ஆனால் இதுமட்டும் சேரன் தலைநகர் அன்று >

>
> .சேரநாட்டின் கூட்டாட்சி முறையைப் புரிந்து கொண்டபிறகு மற்றவற்றைப் பேசலாம்.இதற்கு முன்னர் நான் அனுப்பிய மடல்கள் மூலம் தெளிவான செய்திகளைத் தொகுத்துவிட்டு முன்னேறிச் செல்லலாம் .
>       1)தி.வை.சதாசிவ பண்டாரத்தார் எடுத்துக்காட்டும் செப்பேட்டுத்தொடர்கள் வாயிலாக வரலாற்றுக்காலத்தில் பலவஞ்சிகள் இருந்தமை தெளிவு .

சமஸ்கிருதப் பகுதியில் வரும் தொடர் தரும் பொருள் வேறு. நீங்கள் கொள்ளும் பொருள் வேறு.

>       2)மேனாட்டு நிலவியலார் கூற்றின்படி 'சேரபோத்ராஸ் ' என்று சேர மன்னர் அழைக்கப்படுவதால் சேரபுத்திரர்கள் ஆண்டநாடு சேரநாடு என்றாகிறது.

ஆமாம். முசிரஸ் கடற்கரை நகரம். ஆனால், கரூர் என்னும் தலைநகரம் உள்நாட்டில் இருக்கிறது என்கின்றனர் கிரேக்க நூலாசிரியர்கள்.

ஆன்பொருனைக் கரையில் உளது வஞ்சி மாநகரம் என்று சங்க இலக்கியம் மிகத் தெளிவாகக் கூறுகிறது. சிலப்பதிகாரமும் தான்.
இளங்கோ அடிகள் செங்கோடு என்ற சொல்லை வைப்பதுபோலவே, பராசரன் என்னும் பார்ப்பனன் சென்றது அனந்தை என்கிற வஞ்சி என்கிறார்.
தாராபுரத்துக்கும் இளங்கோ அடிகள் காலத்தில்  (கி.பி. 5-ம் நூற்.) வஞ்சி என்ற பெயர் உண்டு.

ஆனால், முசிறிப் பட்டினம் வஞ்சி மாநகரமா என்றால் சங்க இலக்கியத்தில் ஒரு சான்றும் இல்லை. பதிற்றுப்பத்து ’முசிறி அருகில் வஞ்சி’ என்று கூறுவதில்லை.
உறந்தை அருகே வஞ்சி மாநகர். அங்கே உள்ளிவிழா நடக்கிறது என்கிறது சங்க இலக்கியம். சங்க காலத்தில் வஞ்சி மாநகரம் சேரர் தலைநகரமான ராஜதானி
வஞ்சிக் கருவூரே - ஆன் பொருனைக் கரையில். மேலைக் கடற்கரையில் அப்போது இருந்தது முசிறிப் பட்டினம். அங்கும் சேர இளவரசர்கள்
சுல்கம் (> உல்கு, குறள். கோவையில் உல்கடம் - உக்கடம் ‘சுங்கச் சாவடி’) உண்டு.) வசூல் செய்ய அங்கு தங்கியிருப்பார்கள். மதுரையிலே சோழர்கள்
ஆட்சிக்காலத்தில் சோழபாண்டியர்கள் இருந்தாற்போல.

சங்க காலத் தமிழ்க் கல்வெட்டுகள் வஞ்சி மாநகர் சேரர் தலைநகர் இன்றைய கரூர், பிற தொல்லியற் சான்றுகள் காட்டிவிட்டனவே. அதனையும்
பாருங்கள்.

அஞ்சைக்களம்/அஞ்ஞைக்களம் வகர உடம்படுமெய் பெற்று திருவஞ்சைக்களம் என தேவாரத்தில் வருகிறது. மலையாளம் - தமிழ் மொழிப்
பிரிவு ஆனபின்னர், கேரளாவில் வஞ்சி = படகு. திருவஞ்சைக்களத்தைப் பிரித்து மலையாளிகள் வஞ்சிக்குளம் என்று சொல்கின்றனர்.
திருஅஞ்சைக்களம் - களம் - குளம் ஆகிவிட்டது! ஆனால், அதெல்லாம் மிகப் பிற்காலம். சங்க காலத்தில் முசிறிப்பட்டினம் மேலைக்கடற்கரையில்.
அது அழிந்தபின் கொடுங்கோளூர்/மகோதை தலைநகர் ஆகியுள்ளது. சிவன் கோயில் அஞ்சைக்களம். சேரர் மாநகர் வஞ்சி ஆன்பொருனைக்
கரையில் இருப்பது அழியவே, மலையாளம் தனிமொழியாக பிரியும் காலகட்டங்களில் அஞ்சைக்களம் (திருவஞ்சைக்களம் வ் - உடம்படுமெய்)
வஞ்சிக்குளம் என்கின்றனர் இப்போது. ஆனால், மலையாளம் தனியாக ஆவதன் முன் சேரராஜாக்களின் ராஜதானி மாநகர் வஞ்சிக் கருவூர்
- ஆம்பிராவதி/ஆன்பொருனை நதிக்கரையில். நீங்கள் சொல்வதுபோல சில கஸின்ஸ் முசிறியில் இருந்திருக்கலாம். ஆனால், முசிறியை
சங்ககால வஞ்சி மாநகரம் என்றுகொள்ள சான்றுகள் இலக்கியத்திலோ, ஆர்க்கியாலஜியிலோ காணோம்.

வஞ்சிக்குளம் - படகோடும் குளம். மலையாள நாட்டாருக்கு. அஞ்சைக்களத்தப்பர் கோயிலுக்கு படகில் பயணிக்கவேண்டும் கொடுங்கோளூரில்
இருந்து.

ஆனால், வஞ்சி சேரர் மாநகர் வஞ்சிக்கொடியின் பெயரால் அமைந்த நகரம். இன்றும் ஆன்பொருநைக் கரையில் உள்ள ஆன்நிலை அப்பர்
கோயிலில் வஞ்சிக்கொடிதான் தலவிருட்சம். வஞ்சிக்கொடி - நாகினி. இதற்கு சரியான பொருளை பெப்ரீஸியஸ் அகராதியில் தந்துள்ளார்.
புரிந்துகொள்ளாமல், சென்னைப் பேரகாதியில் பிரம்புச்செடி என்கிறது. வஞ்சிப் பிரம்பு முட்செடி, ஒரு புதை. நாகினி எனப்படும் வஞ்சிக்கொடி
(அமிதவல்லி) பெண்களுக்கு உவமை. ஆன்பொருனைக் கரை ஆன்நிலை ஸ்தலவிருட்சம், ஆர்க்கியாலஜி, ப்ராமி கல்வெட்டுகள்
சங்க இலக்கியத்தில் சேரர் ராஜதானி வஞ்சி மாநகர் எதுவெனக் காட்டி நிற்கின்றன. எந்த ஆர்க்கியாலஸ்ட்டும் சங்க கால வஞ்சி
முசிறிப் பட்டினம் என்றெழுதி நான் படிக்கவில்லை. இருந்தால் தாருங்கள். மேலே தொடர்வோம்.

நா. கணேசன்

>       3)பதிற்றுப்பத்து கூறும் சேர மன்னர் பட்டியல் (10--1=9)அவர்களை ஒரே காலகட்டத்தைச் சேர்ந்தவராகக் காட்டுகிறது .
>       4)இவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தத்தா ,மகன்கள் ,பேரன்கள் ,--அண்ணன்தம்பிகள் ,ஒன்றுவிட்ட சித்தப்பா மக்கள் ,பெரியப்பா-மக்கள் .
>       5)இவர்கள் செய்த போர்களிலும் ஒன்றுக்கு மேற்பட்டோர் சேர்ந்து ஈடுபட்டு வெற்றி பெற்றுள்ளனர
>
>  இனி இவர்கள் சேர நாட்டின்எந்தெந்த பகுதிகளில் ஆட்சிப் பொறுப்பு ஏற்றார்கள்;போர் செய்தார்கள்  என்று பார்ப்போம் .
>      1ம்.பத்து-கொள்ளுத்தாத்தா -உதியன் சேரலாதனுக்குரியது.-நமக்குக் கிடைக்கவில்லை.-அகப்பாவை போரில் வென்று பெற்றான் (அகம்.169,233)
>      2ம்.பத்து -இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் -மரந்தை ,வஞ்சி(மூதூர்)- அகம்-127,396,பதிற்.15&2ம்பத்தின் .பதிகம்
>      3ம்.பத்து- பல்யானைச் செல்கெழு குட்டுவன் -தொண்டி,செருப்புமலை&மூதூர்-மேற்கரை நாட்டின் கிழக்கே இருந்த அகப்பாவை போரிட்டு வென்று பெற்றான்.(3ம்.பத்தின் பதிகம்,      பா.21,22,30,அகம்.169,233,290&ஐங்.178)

>      4ம்.பத்து-களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் -தொன்னகர் (பதிற்.31)
>      5ம்.பத்து -கடல்பிறக்கோட்டிய வேல்கெழு குட்டுவன் -முசிறி, மரந்தை& தொன்னகர்(புறம் 343,அகம்.376,குறுந்.34,பதிற்.47)
>      6ம்.பத்து -ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் -தொண்டி,நறவு &மூதூர் (6ம்.பத்தின் பதிகம் ,பா.60&53)
>      7ம்.பத்து -செல்வக்கடுங்கோ வாழியாதன் -கொங்கிலுள்ள-கிழக்கிலுள்ள  கொடுமணம்,பந்தர்-போரிட்டுப்  பெற்ற வெற்றி .(பதிற்.67)

>      8ம்.பத்து -பெருஞ்சேரலிரும்பொறை -கொடுமணம் ,பந்தர்,கிழக்கே உள்ள தகடூரைப் போரிட்டுப் பெறுகிறான் (பதிற்.74&78)  
>      9ம்.பத்து -இளஞ்சேரலிரும்பொறை -தனிப்பட எந்த ஊருடனும்தொடர்புபடுத்தப்படவில்லை.(செல்லப்பிள்ளை!)  
>     10ம்.பத்து -கிடைக்கவில்லை.(ஊகத்தின் அடிப்படையில் சேரமான் கணைக்கால் இரும்பொறை எனலாம்.(தகடூருக்கும் கிழக்கே முன்னறிச் செய்த போரில் சோழ மன்னனால் சிறை பிடிக்கப்பட்டான் )  
> இந்தக் குடும்ப உறவுகளையும் சேர ,கொங்கு நாடுகளின் நிலவியலையும் நன்கு புரிந்து கொண்டால் சங்க காலத்தில் கொங்குக் கரூர் வஞ்சி மட்டுமில்லாமல் இன்னொரு வஞ்சியும் இருந்தமை புரியும்.>

கொங்குநாட்டு நிலவியலை நன்கு அறிந்தவன். கேரளாவில் பல பூமிகள் இருந்தன. சித்தூர் தாலூக்கா கேரளாவுக்குப் போனதால் அந்த வட்டத்தில் ஏராளமான பூமிகளை
இழந்தவர் என் நெருங்கிய உறவினர்கள். இன்றும் என் தாயாருக்கு மீனாட்சிபுரத்தில் தோட்டம் உண்டு. பெரியப்பாவுக்கு முதலைமடையில். ...

பதிற்றுப்பத்து உரை எழுதியவர் பற்றிய செய்யுளை உவேசா, முதல் பதிப்பில் பாருங்கள். அச் செய்யுள் பற்றிய செய்திகளைச் சொல்லவேண்டும்.

நா. கணேசன்

> மேற்சுட்டிய பகுதி பதிற்றுப்பத்துச் செய்திகளை வகுத்தும் தொகுத்தும் சொன்ன கருத்துக்களாம்
> இப்பகுதியில் ஒரே காலத்தில் ஆண்ட 10-1=9சேர மன்னர்களுடன் தொடர்புபடுத்தப்படும் ஊர்களின் பெயர்களும் சில பிற விபரங்களும் உள்ளன..
> முதல் 6சேர மன்னர்களும் மேலைக் கடற்கரையிலிருந்த தொண்டி ,நறவு,மரந்தை ,முசிறி போன்ற துறைமுகப் பட்டினங்களுடனும்;சேர நாட்டு மலைப்பகுதியுடனும்
> தொடர்பு படுத்தப் படுகின்றனர்.அத்துடன் மூதூர் /தொன்னகர் என்ற ஒரு சிறப்பான நகரத்துடனும் தொடர்பு படுத்தப் படுகின்றனர்.
> 7,8,9ம்.பத்தின் சேர மன்னர்கள் கொங்கு நாட்டுப் பகுதிகளுடன் தொடர்புபடுத்தப் படுகின்றனர் .இவர்கள் கொங்கு நாட்டில் படிப்படியாக முன்னேறி கிழக்கு நோக்கி நகர்ந்து
> அங்கிருந்தோரை வெற்றி கண்டுள்ளனர் .
>    இப்போது முந்தைய முந்தைய மடல்களால் தெளிவான 5கருத்துக்களுடன் இன்னும் 4கருத்துக்கள் தெளிவாகி உள்ளன.அவையாவன:
>  6)ஒரே காலத்தைச் சேர்ந்த 10-1=9மன்னர்களுள் 6பேர் மேலைக் கடற்கரையில் இருந்து ஆட்சி செய்ய மற்றவர் கொங்கு நாட்டில் இருந்து ஆட்சி செய்துள்ளனர் .
> 7)கொங்கு நாடு படிப்படியாக சேர மன்னர்களால் வெற்றி கொள்ளப்பட்டது .
> 8)குடும்பத்தலைவனான (உதியன் சேரலாதன் பற்றிய 10பாடல்கள் கிடைக்காத நிலையில்அவனது மகன்) இமயவரம்பன் மேற்கரை நாட்டில் ஆண்டு வந்துள்ளான் .
>  தன் மகன் கடல் பிறக்கோட்டிய வெல்கெழு குட்டுவனுடன் சேர்ந்து இமயத்தில் விற்பொறித்த போரிலும் (பதிற்.11,43)கடற்கடம்பரை அடக்கிய போரிலும் (பதிற்.11,17,20,41,45,46,48&அகம் 127,24)ஈடுபட்டுள்ளான் .
> 9) அவனது தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவனும் தந்தை உதியன் சேரலாதனும் சேர்ந்தே கொங்கு நாட்டைப் போரிட்டு வென்றனர் .(பதிற்-3ம்.பதிகம் ,பா-22,&அகம்.169,233)
> 10)விழாக் காலத்தில் இக்குடும்பம் ஒன்று சேர்ந்துள்ளது .ஒரு உள்ளி விழாவில் ஒன்று சேர்ந்த போதுதான் இவர்கள் 10பேரையும் 10புலவர்கள் பத்துப்பத்து
> பாடல்களால் புகழ்ந்து பாடியுள்ளனர்.பண்ணும் தூக்கும் கலந்த பாடலும் ,துணங்கைக் கூத்தும் ,ஊன் கலந்த சோறும் ,பருகப் பருக குறையாத கட்பானையும் ,விறலிக்குத் தலைக்கை கொடுத்துஆட்டமும் ,எல்லோருக்கும் பரிசிலும் என பதிற்றுப்பத்து முழுவதும் இக்கொண்டாட்டம் புகழப்படுகிறது.
> இந்தப் பத்துக் கருத்துக்களிலும் தெளிவு கிடைத்த பிறகுதான் சங்க காலத்தில் ஒரு வஞ்சியா?இரண்டு வஞ்சிக்களா ?என்பது பற்றிப் பேச இயலும்.அதனால் தான் கணேசன் அவர்களின் சில மடல்களுக்கு நான் பதில் கூறாமலிருந்தேன்.
> பதிற்றுப்பத்தை படிப்பது கொஞ்சம் சவாலான வேலை தான்.ஆனாலும் ஆர்வம் இருந்தால் முயலலாம்.பாடம் நடத்தும் போதே ஒரு பாடலுக்கு 2மணி நேரத்திற்கு மேல் தேவைப்படும்.
> கண்மணி.      
>
>
>

N. Ganesan

unread,
Dec 1, 2017, 4:11:00 PM12/1/17
to மின்தமிழ், vallamai
2017-11-20 15:39 GMT-08:00 N. Ganesan <naa.g...@gmail.com>:


2017-11-20 15:13 GMT-08:00 தேமொழி <jsthe...@gmail.com>:


On Monday, November 20, 2017 at 2:54:52 PM UTC-8, N. Ganesan wrote:


2017-11-20 13:41 GMT-08:00 தேமொழி <jsthe...@gmail.com>:


///ராமன் நம்பூதிரி பூர்ணா எது என தெரியாமல் எழுதியுள்ளார். சங்கத் தமிழ் போன்றவற்றை
அறியாமையே காரணம். ///

பழைய வரலாறு தெரியாமல் எழுதியிருக்கிறார்கள் என்று ஒரு குறிப்பிட்ட துறையில் ஆய்வுபல செய்து கட்டுரை வெளியிட்டவர்களை மறுத்துக் கூறும் பொழுது சான்றுடன் சொல்வது சரியான முறையாக இருக்கும். 

ராமன் நம்பூதிரி  எழுதிய “Poornayude Puravrutham”  என்ற நூலில் தனது  (படிஞாறுப்புழை/பொருநை ஆறு) கருத்துக்கு ஆதரவாக என்ன சான்றுகள்  கொடுத்தார் என்று காட்டி அதில் உள்ள பிழையைச் சுட்டிக்காட்டி  மறுப்பதுதான் முறையல்லவா?

நீங்கள் படித்த ஒரு நூலின் கருத்துடன் அவரது முடிவு  இசைந்து வரவில்லை என்றால், அவர் தந்த மாற்றுக்  கோணம் பிழை என்று அவர் சொல்ல வருவதை ஆராயாமல் முடிவு செய்ய முடியுமா?


Not just one. Many scores of books were read. But there is no evidence,
inscriptions, literature that Porunai was running in Kerala.

would like to see the lines where Raman Nambudiri claims Porunai
of Sangam literature was PaDijnARu-puzhaa. In case, you have access
to the book, please let me know. I will ask experts in Kerala as well.

In The Hindu article, I don't see any Porunai or AanPorunai river at all.

அதே இந்துக் கட்டுரையின் இறுதிப் பத்தியின் முதல் மூன்று வரிகள் . . . .
Historic river gasps for breath
“Poornayude Puravrutham” explores the origin, the course, and the flow of Padinjare Puzha.


Samithi secretary K.G. Sreekumar said the river was mentioned as the Poorna river in Sukasandesam composed in the 14th century by Lakshmidasan. It is called Porunai in old Tamil texts and Poorna in Sanskrit texts. The Poornathrayeesa temple, during one of its festivals called the Para Ulsavam, takes the deity across the river on a boat from the jetty. This ritual has been practised for centuries. Mr. Sreekumar said the irrigation department had initiated a project to preserve and protect the boat jetty, but expressed his concern that the effort might not be sustained.

முதலில் ராமன் நம்பூதிரி அது பூர்ணா ஆறு என்கிறார்.
The late M. Raman Namboothiri of the Archaeological Survey of India, who was an expert in the history and heritage of Tripunithura, in one of his writings, has stated that the Padinjare Puzha is actually the historical Poorna river. 

பிறகு ஸ்ரீகுமார் இதுவே பழந்தமிழ்ப் பாடல்கள் சொல்லும் பொருநை என்கிறார்.
 It is called Porunai in old Tamil texts and Poorna in Sanskrit texts.



This newspaper article speaks as though the river ending in Kodungallur, Cochin is "Poorna". But Lakshmidasa's 'Suka sandesham (14th century) mentions the river name ChuurNi (Puurvasandesa, stanza 65).

From Prof. V. R. Ramachandra Dikshitar Centenary Volume, edited by Dr. R. Nagaswamy, 1997. Sri. V. R. R. Dikshitar's paper, Kaladi or The Birth-place of 'Sri 'Sankara. Jl. of the Gujarat Research Society. The editor, Dr. R. Nagaswamy, nor the family of V.R.R. Dikshitar knows the Volume number, or the year in which Prof. VRR Dikshitar published this important essay. I found out that it was published in 1939, & passed on the info to Dr. Nagaswamy.

It is interesting that the pearls found at the estuary of ChoorNi river is called ChaurNeyam in Kautalya's Arthasastra. If there was a really large city called Vanji, the Sangam Cheras' capital, at the mouth of ChuurNi river (CuLLip pEriyARu of Sangam texts), will it not be mentioned in Arthasastra? why ChaurNeya for pearls which are also mentioned in Sangam poems? will the pearls be named after Vanji as Vaanjkam or Vaanjiyam?? Kanmani is correct in that Vanji is not Kodungallur area. Kodungallur came along only in Chola times (prof. K. V. Raman's extensive excavations). Near Kodungalur, Archaeologists recently have found out Musiri pattinam.

N. Ganesan

 

தேமொழி

unread,
Dec 1, 2017, 5:29:30 PM12/1/17
to மின்தமிழ்
அனைத்துக் கோணங்களையும் தரவுகளையும் அவை கூறும் செய்திகளைக் கொண்டு எடை போடவேண்டுமல்லவா?


கண்மணியின் கீழ்க்காணும் தரவு குறித்து உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்.

[...]

பதிற்றுப்பத்து 3ம்.பத்தின் பதிகம் பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் பற்றிப் பாடும் செய்தி இது.
                                                                                       "கருங்களிற்று யானைப் புணர் நிரை  நீட்டி 
                                                                                  
                                                                                         இருகடல் நீரும் ஒரு பகல் ஆட"
என்ற அடிகளின் பொருள் நோக்குக.
பல்யானைச் செல்கெழு குட்டுவன் யானைக்கூட்டத்தை வரிசையாக நிறுத்தி இரண்டு கடல்களிலும் நீராடினான்.
அது ஒரு விழாக்காலம் -பதிற்றுப்பத்து நூல் எழுந்த சூழல் ஒரு உள்ளி விழாவுக்காக முழுக் குடும்பமும் ஒன்று சேர்ந்த சூழல் என்ற கருதுகோளை  ஏற்கெனவே  முன்வைத்தேன்.      
யானைகளை வரிசையாக நிறுத்தி விழாவைக் கொண்டாடும் வழக்கம் கேரளத்தில் தானே இன்றும் உள்ளது.
அன்றியும் கடற்கரையில் யானைகளை வரிசையாக நிறுத்த வேண்டுமெனில் அது  கொங்கு வஞ்சியில் இயலாதே.கடல்நீரை தருவித்தமைக்கும் பாடல்பகுதியில் ஆதாரமில்லையே.
நாம் ஏற்கெனவே கண்டபடி இந்த 10-1=9சேர மன்னர்களும் ஒரே காலகட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆட்சிப் பொறுப்பை ஏற்று இருந்தமைக்கு பதிற்றுப்பத்திலிருந்து நூற்சான்றுகள் இருப்பதையும் பார்த்தோமே.
பல்யானைச் செல்கெழு குட்டுவன் தொண்டித்துறையுடனும், செருப்பு மலை இருக்கும் பூழி நாட்டுடனும் தொடர்புடையவன்.(பதிற்று .21,அகம்.290&ஐங்.178)
சேரன்தொண்டி அழிந்து விட்டது.ஆனால் பூழி நாடு இன்றும் உள்ளது.ஆரல்வாய்மொழி என இன்று மருவி வழங்கும் 'ஆராம்பொழி 'பூழிக் கணவாயைக் குறிக்கிறது.சேரன் தொண்டியிலிருந்து ஒரு பகல் பொழுதுக்குள் தெற்கிலுள்ள குமரித்துறையை அடைந்து விடலாம்.பூழிக்கணவாய்க்கு வராமலேயே கடற்கரையை ஒட்டியே இன்றும் போக்குவரத்து உண்டு.
அதனால் மேற்கு மலைக்கும் மேலைக் கடற்கரைக்கும் இடையில் வஞ்சிமூதூர் இருந்தது என ஆணித்தரமாக நம்பலாம்.
கண்மணி 
இந்த அகச் சான்றுகளை ஏன் ஒதுக்க வேண்டும்?  

[...]

வஞ்சி நகர் என்பது எங்கிருந்தாலும்  எனக்கு ஒன்றே. 
என்னைப் பொறுத்தவரை இலக்கியங்கள் குறிக்கும் அகச்சான்றுக்கு என்ன பதில்?
அதிலும் பதிற்றுப்பத்து காலத்தில் புலவர்கள் கற்பனை இடங்களை வைத்துப் பாடல் எழுதினார்கள் என என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

தொல்லியல் தடயங்கள் பின்னாளில் கிடைக்கக் கூடும்.


..... தேமொழி
It is loading more messages.
0 new messages