திராவிடர் என்றால் யார்?

Skip to first unread message

செல்வன்

unread,
Mar 18, 2018, 2:40:56 AM3/18/18
to செல்வன்
திராவிடம் என்பது விந்திய மலைக்கு தெற்கே இருக்கும் நிலப்பரப்பு

திராவிட மொழிகள் என்பவை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகியவை

திராவிடர் என்பது இந்த நிலப்பரப்பில் வாழ்ந்து இம்மொழிகளை பேசும் மக்கள்.

இது நான் புரிந்துகொண்ட வரையறை. ( இது தவறு என்றால் சரியான வரையறை என்ன என கூறவும்.)

இந்த வரையறையின்படி தமிழை தாய்மொழியாக கொண்ட பார்ப்பனர்கள் திராவிடர்கள் என்ற வரையறையுல் அடங்குவார்கள் என்பது சரியா, தவறா?

பதில் தெரிந்தவர்கள் விளக்கவும்.

நன்றி

--

செல்வன்

iraamaki

unread,
Mar 18, 2018, 3:18:34 AM3/18/18
to mint...@googlegroups.com
http://valavu.blogspot.in/2006/04/blog-post.html படியுங்கள். 12 ஆண்டுகளுக்கு முன் எழுதியது. இப்பொழுது சற்று மாறுபடுவேன். சில திருத்தங்கள் செய்யலாம். இருப்பினும் முந்தையப் பதிவு என்பதால் மாற்றாதிருக்கிறேன். சில விதயங்களை இன்னும் விரித்து எழுதலாம். அடிப்படை ஒன்றுதான்.
 
நான் தமிழன்
நான் திராவிடன்
நான் இந்தியன்
 
இந்த மூன்றும் ஒன்றிற்கொன்று முரண்பட்டவையல்ல. மூன்றும் மூவேறு வட்டங்கள்.  இதில் ஏதொன்றை உடைத்தாலும் எனக்கு அது குறையாகவே தென்படும்.  இந்துத்துவர் முதலிரண்டு வட்டங்களை உடைக்க முயல்கிறார். அதை நான் ஏற்கேன்.
 
அன்புடன்,
இராம.கி.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

nkantan r

unread,
Mar 18, 2018, 4:57:25 AM3/18/18
to மின்தமிழ்
இராம கி அவர்களின் கட்டுரை (கட்டு
உரையா? மெய்யுரை யன்றோ!) மிக நன்று

ஆனால் ஒரு ஐயம் (அய்யம்!). புத்தர் பாலியில் பேசினாரா?

rnk

iraamaki

unread,
Mar 18, 2018, 5:17:02 AM3/18/18
to mint...@googlegroups.com
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our

iraamaki

unread,
Mar 18, 2018, 5:17:02 AM3/18/18
to mint...@googlegroups.com
ஐயம் என்று சொல்லுங்கள், எழுதுங்கள் தவறேயில்லை. புத்தர் மாகதியில் பேசினார்.
மகாவீரர் அருத்த மாகதியில் பேசினார்.

இப்பொழுது எனக்கிருக்கும் புரிதலின் படி, (கட்டுரை எழுதியபோது இருந்ததற்கும்
இப்போதும் சற்று வேறுபடுகிறேன்.) பாலி என்பது மாகதி, அருத்த மாகதி போன்ற
வட்டாரமொழிகளின் கூட்டுக்கலவையின் (கலவையின் பெயர் எனக்குத் தெரியாது.) செம்மை
வடிவம். பெரும்பாலும் படித்தவரே இதைப் பேசினார். சங்கதம் என்ற கூட்டுக்கலவை
செங்கதம் ஆனது போல் தான் இதுவும் ஆகியிருக்கிறது. பாலி கற்க புத்தரின்
பள்ளிக்குத்தான் போகவேண்டும். எப்படிச் செங்கதம் கற்க வேதியர் பாடசாலை போனாரோ
அதுபோல.

ஆனாலும் மோரியர் காலத்தில் செங்கதத்தை விட பாலிக்குப் பயன்பாடு கூட
இருந்திருக்கலாம். நிறையப் படித்தவர் பயனுறுத்தியிருக்கலாம். முழு விவரம்
தெரியாது. ஆய்வுகள் மேம்படவேண்டும். பாலியையும் செங்கதத்தையும் ஒரேவகை
அளவுகோலால் அளக்கவேண்டும்.

-----Original Message-----
From: rnka...@gmail.com via
mintamil+bncBCU2PO5YQ...@googlegroups.com
Sent: Sunday, March 18, 2018 2:27 PM
To: மின்தமிழ்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our

Innamburan S.Soundararajan

unread,
Mar 18, 2018, 5:31:23 AM3/18/18
to mintamil

செல்வன் சொல்வது தான் சரியான விளக்கம். திராவிடம் என்ற சொல்லை குறுகிய அரசியல் நோக்கத்துடன்
வந்தேறியாக்கிய போலி பகுத்தறிவாளர்கள் உண்மையான பின்னணியை மறைத்தது கண்டு திரு.வி.க, அவர்கள்
வழங்கிய தெளிவுரையின் சாராம்சம் இங்கே.
இன்னம்பூரான்
*

...தொல்காப்பியத்தின் மொழிநடையும், உள்ளுறையும் தமிழரின்தொன்மைக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். தொல்காப்பிய மொழி...விழுமிய கருத்துக்களை இழுமென் மொழியாக எளிதில் மலர்விக்கும்...இத்தொன்மை வழிவழி வந்தவர் தமிழராவர். பழந்தூய தமிழரும், வழிவந்த தமிழரும், இடையே குடி புகுந்து நிலைத்த சிலருஞ் சேர்ந்த ஓரினமே இப்போதுள்ள தமிழினமாகும்...கலப்பு என்பது இயற்கை. உலகில் எம்மொழியும், எந்நாடும் எவ்வினமும் தோன்றியவாறே கலப்பின்றித் தனிமைத் தூய்மையும் என்றும் ஒரு பெற்றியாய் நிலவுதல் அரிது.,,கலப்பால் வளர்ச்சியே உண்டு...தமிழ்நாட்டில் ஆரியர் தமிழர் பிரிவு பெரிதும் பேசப்படுகிறது... அதை வாழ்விடை ஏன் பாராட்டிப் பகைமை வளர்த்தல் வேண்டும்?...இப்போது தூய ஆரியர் இன்னார், தூயத்தனித்தமிழர் இன்னார் என்று எவரே பிரிக்க வல்லார்?...இயகை நிலை இவ்வாறாக, பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழ்நட்ட்9; வாழ்ந்து வரும் ஆரியர்களுக்கும் தமிழர்களுக்கும் கலப்பு ஏற்பட்டிராதென்று கருதுவது மதியுடையாக்ய்ன் கொல்! எனவே தூய ஆரியராதல் தூய தமிழராதல் இப்போது இல்லை என்பதை வலியுறுத்துகிறேன்...பார்ப்பனர் பார்ப்பனல்லாதார் பூசலையொட்டி வடமொழி தென்மொழிப் பிணக்கும் எழுந்து திருவிளையாடல் புரிகிறது...வடமொழி பாரத நாட்டுக்குரிய பொது மொழி,,,’ யாதும் ஊரே யாவருங்கேளீர்’ என்னும் விழுமிய கொள்கையுடைய தமிழர் வழிவழி வந்த இக்கால தமிழர்  சிறிமைப் பிரிவுகளில் கருத்திருத்தல் அறமாகுது...”

~தமிழ் தென்றல் திரு.வி.க. அவர்கள்   ஜூலை 5: 1928, ஏப்ரல்  10,11,12: 1929 & ஆகஸ்ட் 6 :1932 அன்று ஆற்றிய சொற்பொழிவுகளிலிருந்து.


தேமொழி

unread,
Mar 18, 2018, 5:55:03 AM3/18/18
to mint...@googlegroups.com
வரலாற்றுச் செய்தி கொடுத்தால் தெளிவாகக் கொடுக்க வேண்டும் ஐயா.
தமிழ் தென்றல் திரு.வி.க. அவர்கள்   
ஜூலை 5: 1928
ஏப்ரல்  10,11,12: 1929
ஆகஸ்ட் 6 :1932 
ஆற்றிய சொற்பொழிவுகளில் "திராவிடக் கழகத்தின் கொள்கையையா"  எதிர்த்து உரையாற்றினார்?

கீழே திராவிடக் கட்சியின் வரலாறு:
பெரியாரே நீதிக் கட்சிக்குள் வருவது 1938 இல்தான்.
அதன் பிறகே கட்சிக்கும் பெயர் மாற்றுகிறார்.
திருவிக எந்த போலி பகுத்தறிவாளர்கள் பற்றி 1928-1932  ஆண்டுகளுக்கிடையில்  பேசினார்? விளக்குவீர்களா?
முழு உரையும் இயன்றால் கொடுக்கவும். ஆண்டு குறிப்பு பொருந்தாததால் இந்த வேண்டுகோள். 

----------------------------

1916 – Justice Party was formed
Dr. T.M. Nair, and Velludai Vendar alias Sir. P. Theagaraya established a political party on 20.1.1916. It was named as “South Indian Liberal Federation”. In order to propagate the principles of the party, a daily named “Justice” was started. Dr. Nair was its first editor. At a later stage, the party was called as “Justice Party” after the daily. In Tamil, it was called as “Needhi Katchi.” The historical South Indian Liberal Federation, which was later called as the Justice Party, is the birth of the Dravidian movement.

1920 – The first victory of Justice Party
Justice Party won a landslide victory in the election conducted on 20th November 1920 and formed the government. The President of the party Sir. P. Theagaraya made A. Subbarayulu Reddy as Chief Minister on 17.12.1920. On the death of Subbarayulu Reddy, the Raja of Panagal became the Chief Minister on 11.7.1921.

1938 – Periyar in Justice Party
In 1938, when Periyar was imprisoned, the 14th state conference of the Justice party took place on 29th, 30th, and 31st of December. “I bestow the garland that adorns my shoulder to Periyar”, saying so, the party men emotionally garlanded the photo of Periyar kept on the stage. Periyar was unanimously elected as the president of the party. 

1944 – The formation of Dravida Kazhagam
The 16th state level conference of the Justice party was held in Salem. The Justice party was renamed as “Dravida Kazhagam.” The resolution for the name change was called as “Annadurai resolution.”

1949 - Arignar Anna announces the commencement of the DMK party
Perarignar Anna founded the “Dravida Munnetra Kazhagam” on 17.9.1949 at Robinson Park in Royapuram, Chennai. Anna said, “It is impossible to spread the principles or attain our goal without integrating our efforts. We have all the facilities and strength for it. As a first step, we will protest against the government for the freedom of speech and expression.” He emotionally said, “Dear Periyar, we, who have obtained culture and maturity from your guidance, will follow your path against the government and get imprisoned.” 
--------------------------------
..... தேமொழி

தேமொழி

unread,
Mar 18, 2018, 5:57:01 AM3/18/18
to மின்தமிழ்
"முழு உரையும் இயன்றால் கொடுக்கவும். ஆண்டு குறிப்பு பொருந்தாததால் இந்த வேண்டுகோள். "
எனப் படிக்கவும் 

Innamburan S.Soundararajan

unread,
Mar 18, 2018, 7:33:28 AM3/18/18
to mintamil
அவருடைய சொற்பொழிவுகளிலிருந்து excerpted.அத்தனை பக்கங்கள் தட்டச்சு செய்ய கையும் இல்லை;
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னாக்கங்களில் இருக்கிறது. என் உடல் நிலையில் இதற்கு மேல் எழுத சக்தி இல்லை.

nkantan r

unread,
Mar 18, 2018, 7:58:31 AM3/18/18
to மின்தமிழ்
Mr I in his post did not say that ThiruViKa wrote or spoke about DK ( or for that justice party). So why that question arose?

It is no secret or rather a recorded history that EVR was peeved with what he considered brahmin hegemony in Congress. To that extent, that he supported JP against the party principles of Congress.

Finally he left congress on the grounds of brahmin -non brahmin issues only.

rnk

தேமொழி

unread,
Mar 18, 2018, 9:39:03 AM3/18/18
to மின்தமிழ்
நன்று   ... 

அவர்  கூறியதில்     "திராவிடம் என்ற சொல்லை குறுகிய அரசியல் நோக்கத்துடன் வந்தேறியாக்கிய போலி பகுத்தறிவாளர்கள்" என்ற விரிப்பில் 

   "திராவிடம் என்ற சொல்லை குறுகிய அரசியல் நோக்கத்துடன்  வந்தேறியாக்கிய போலி பகுத்தறிவாளர்கள்"   என்ற சொல் =  நீதிக்கு கட்சி குறித்த விளக்கமா?

போலிப்  பகுத்தறிவாளர்கள்  என்பது நீதிக்கு காட்சியைக்  குறிக்கிறதா?  என்று நீங்கள் விளக்கினாலும் போதுமானதே 

பார்ப்பனர் மற்றும்  பார்ப்பனரல்லாத இயக்கம் என்பது முதலில்   பகுத்தறிவு இயக்கம்  என அழைக்கப்பட்டதா என்பது  குறித்து நீங்கள் விளக்கினாலும் கூட  போதுமானதே.


..... தேமொழி 

nkantan r

unread,
Mar 18, 2018, 10:26:12 AM3/18/18
to மின்தமிழ்
Think over your first response again.

from the excerpts, Thiru vi ka speech was about brahmin /non-brahmin (he didnot use antibrahmin, which is probably what periyar and dk devolved into) quarrel -பூசல்.

He didnot say or mention JP or periyar. Nor Mr I.

And reading your query about timeline, I feel there is a hint that if this was after 1936, then you would take no umbrage about 'போலி பகுத்தறிவாளர்கள்' statement of Mr I.?

The base question by OP is about Dravidian definition. What periyar talked about Aryan invasion and degradation of Tamil culture is all now without much substance as Indian subcontinent has been receptacle for successive inward movement of population and Tamils were one set.

rnk

தேமொழி

unread,
Mar 18, 2018, 10:40:45 AM3/18/18
to மின்தமிழ்
எனது கேள்வி எளிமையானது,  "போலி பகுத்தறிவாளர்"  என அவர் குறித்தது யார் என்பதை மட்டுமே நான் அறிய விரும்புகிறேன். 

/// திராவிடம் என்ற சொல்லை குறுகிய அரசியல் நோக்கத்துடன் வந்தேறியாக்கிய போலி பகுத்தறிவாளர்கள் உண்மையான பின்னணியை மறைத்தது/// 

அவர் அவ்வாறு மேற்கோள் கொடுந்த  காலகட்டமான ஜூலை 5: 1928 - ஆகஸ்ட் 6 :1932 இடைப்பட்ட கால நீதிக்கட்சியினர் என்பர்  "போலி பகுத்தறிவாளர்" என்பவர்களா?

..... தேமொழி

S. Jayabarathan

unread,
Mar 18, 2018, 11:08:57 AM3/18/18
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, Aravindan Neelakandan, Oru Arizonan, Asan Buhari, Raju Rajendran, kanmani tamil, Anna Kannan, Anne Josephine
////இந்த வரையறையின்படி தமிழை தாய்மொழியாக கொண்ட பார்ப்பனர்கள் திராவிடர்கள் என்ற வரையறையுல் அடங்குவார்கள் என்பது சரியா, தவறா?

பதில் தெரிந்தவர்கள் விளக்கவும்.////

தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பிராமணரைத் திராவிடர் என்று பெரியாரின் திராவிடக் கழகமும் ஒப்புக் கொள்ளாது. உயிரோடு இருந்தால் பெரியாரும் ஒப்புக் கொள்வாரா என்பதும் ஐயமே.

தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பிராமணரைத் திராவிடர் என்று பிராமணரே முதலில் ஏற்றுக் கொள்ள மாட்டார்.

தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான தமிழ்ப் பிராமணர் உள்ளார்.  அவரை எல்லாம் ஆரியர் என்றும், தமிழர் அல்லர் என்றும், வந்தேறிகள் என்றும் வசைபாடி வந்தவர் பெரியார், வருபவர் பெரியாரின் சீடர்கள், சில தமிழ்த் தேசீயவாதிகள்.  இப்போது ஜாதீய விகிதப் பங்கீட்டில் எதிர்ப் புறக்கணிப்பு [Reverse Discrimination]பெருகி, பிராமணர் தமிழ்நாட்டில் வேலை கிடைக்காது, வெளிநாட்டுக்கும், மற்ற மாநிலங்கட்கும் ஓடுகிறார்.  இதனால் தமிழகத்தில் செந்திறத் செழிப்புக் குறைவு  [Brain Drain] ஏற்பட்டுத் தமிழ் நாட்டில் இப்போது விஞ்ஞானத் துறையில் யாரும் மேலாக வர முடியவில்லை !!!

தமிழ் நாட்டில் உள்ள தமிழ்ப் பிராமணரும், தமிழ் இஸ்லாமியரும், தமிழ்க் கிறித்துவரும் தம்மைத் திராவிடர் என்று ஒருபோதும் ஒப்புக் கொள்ளார்.


சி. ஜெயபாரதன்

​+++++++++++++++++++++​


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Mar 18, 2018, 11:16:58 AM3/18/18
to மின்தமிழ், vallamai
ஆந்திராவில் திராவிடாலு என்றாலே தமிழகத்தில் இருந்து வந்த பிராமணர்கள் என்று பொருள்.

திராவிடம் என்பது 1500 ஆண்டுகளாக பொருள் பொதிந்த வடசொல். மொழியியலில் மிக முக்கியமான வார்த்தை.
இந்திய வரலாறு சம்ஸ்கிருதமும், திராவிடமும் முதலில் பேசிய மக்களின் பிணையல் தான். அஷ்டநாகபந்தம்
- சித்திர கவியிலோ, கோவில் விதானங்களில் இருக்கும் நாகபந்தத்திலோ, வினாயகருக்கு அரசமரத்தடியில்
பக்கங்களில் இருக்கும் இரட்டைப்பாம்புகள் பந்தித்து இருப்பதுபோல்.

மனோன்மணீயம் பாடிய சுந்தரம்பிள்ளை சைவசித்தாந்தி. அவருக்கு ஈரோட்டு நாயக்கர் யார் என்றே தெரியாது.
சுந்தரனாரின் பாடல் 50 ஆண்டு காலமாக தமிழ்நாட்டின் அதிகாரபூர்வமான தமிழ்த்தாய் வாழ்த்து என
கடவுள் வணக்கமாக அரச நிகழ்ச்சிகள், தமிழ்ச் சங்கங்கள் (உ-ம்: டிஎன் எஃப், ஃபெட்னா, ... என அமெரிககவில்)
தமிழ்ப் பள்ளிகளில் பாடப்படுகிறது. அப்படி யுள்ள கடவுள் வாழ்த்தில் ஏன் பொருள்கொண்ட “திராவிடம்” 
என்ற வடசொல்லை நீக்கவேண்டும்? இந்தியாவின் பக்தர்கள் யாவரும் த்ராவிடம் என்றால் தமிழ் என்று அறிந்த
நிலையில். தமிழ்ச் சைவர்கள் தொடங்கியது தனித்தமிழ் இயக்கம். சேசாத்திரி மறைமலை அடிகளை முட்டாள்
என்கிறார். ஜெயபாரதன் திராவிட என்ற சொல்லை நீக்க வேண்டும் என்கிறார். ஏன்? திராவிட மொழியியலை
அறிந்தவர்கள்  திராவிட என்ற சொல்லை நீக்க மாட்டார்கள்.

முன்பு 2006-ல் தினமலரில் ஜார்ஜ் ஹார்ட் (பெர்க்கிலி) பேசிய சொற்பொழிவின் சுருக்கம் வந்தது.
மின் தமிழில் பேசியுள்ளோம் அதுபற்றி.

சம்ஸ்கிருதம் மாத்திரம் இந்தியா இல்லை. திராவிட மொழிகளும், அதன் இயல்களும், நூல்களும்
கொண்டு பார்த்தால் இந்திய வரலாறு விளங்கும்.



  ஹார்ட் உரையின் மூலத்தை முழுக்க படித்தேன் கணேசன் ஐயா

தமிழ்,சமஸ்கிருதம் இரண்டின் குணாம்சங்களையும் அழகாக விளக்கி இரண்டும் தனித்துவம் வாய்ந்த செம்மொழிகள் என விளக்குகிறார்.

2011/7/23 N. Ganesan <naa.g...@gmail.com>
செல்வன்,

2006-ல் தினமலர் வெளியிட்ட செய்தி:

அன்றாட வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்பு சமஸ்கிருதத்தில் இல்லை!

கலிபோர்னியா பல்கலைக்கழக தமிழ்ப் பீடம் பேராசிரியர் ஜோர்ஜ் எல்.ஹார்ட்:
வேறு எந்த மொழியோ,சூழலோ தொட முடியாத கூட் டுக்குள் இருப்பது சமஸ்கிருதம்;
எல்லாமே சமஸ்கிருதத்திலிருந்து பிறந்தவை என்று நம்பும் சமஸ்கிருதப்
பண்டிதர்களையும் மேலைநாட்டு அறிஞர்களையும் மாற்ற முடியாது. ஆனால்,
இங்கால்ஸ் போன்ற பல அறிஞர்கள் இதற்கு விதிவிலக்கு. இந்தியாவில் தோன்றும்
பல கருத்து களின் கருவூலமாக சமஸ்கிருதம் திகழ்ந்து வந்திருக் கிறது என்று
அவர்கள் அறிந்திருந்தனர். இந்தியா வில் எது ஊற்றெடுத்தாலும், ஏதாவது ஒரு
காலக்கட்டத்தில் யாராவது ஒருவர் அதைப்பற்றி சமஸ்கிருதத்தில் எழுதி
வைப்பார்.

சமஸ்கிருதத்தின் மீதும் பல்வேறு தாக்கங்கள் இருந்திருக்கின்றன. ஆனால்,
இதை ஏற்றுக் கொள்ள மறுக்கும் சமஸ்கிருத அறிஞர்களும், பண்டிதர்களும்,
தமிழைப் பொருட்படுத்துவதில்லை. மிகப் பழங்காலத்திலிருந்த சமஸ்கிருத
வடிவங்களைத் தவிர, பின்னால் வந்த சமஸ்கிருதம் ஒரு செயற்கை மொழி தான்.
சமஸ்கிருதம் என்ற சொல்லே செயற்கை வடிவமைத்த என்ற பொருளைத் தருகிறது. அது
தொடர்பு மொழி, அறிஞர் மொழி யாக விளங்கியிருக்கிறது. ஆனால், தமிழில்
இருப்பது போன்ற அன்றாட வாழ்க்கையோடான நெருங் கிய தொடர்பு சமஸ்கிருதத்
தில் இல்லை. நானும் இன்னும் சில மாணவர்களும், தமிழ் தலித் இலக்கியங்களைப்
படித்துக் கொண்டிருந்தோம். அவற்றில் காணப்படும் மொழி பேச்சுத் தமிழாக
இருந்தாலும், அந்த வாழும் மொழியின் கருத்து வளம் வியக்கத் தக்கது.
செயற்கை மொழியான சமஸ்கிருதத்தில் அதைப் பார்க்க முடியாது. சமஸ்கிருதம்
உயர்ந்த கலாசாரம், சிந்தனை எல்லாவற்றையும் வெளிப்படுத்தலாம். ஆனால்,
அதிலும் சில ஓட்டைகள் இருக்கத் தான் செய்கின்றன.

மேலை நாட்டு சமஸ்கிருத ஆராய்ச்சியாளர்களின் படைப் புகளை அடிப்படையாக
வைத்து தான், முஸ்லிம் களுக்கு ஷரியா சட்டம் என்பது போல், இந்துக்
களுக்கான சட்டம் மனுநீதி என்று பிரிட்டிஷ் பேரரசு முடிவு செய்தது. இந்திய
மரபு பற்றி உண்மையிலே அறிந்த எவராலும் இந்தப் புரட்டை ஏற்றுக்
கொண்டிருக்க முடியாது. மனுநீதி சில சிறுபான்மைக் குடிகளை மட்டும் ஏற்றி
வைக்குமே ஒழிய, அது இந்துக் கலாசாரத்தைப் பிரதிபலிக்கவில்லை.

-----------

பேராசிரியை கல்பனா சேக்கிழார், அண்ணாமலைப் பல்கலை,
ஹார்ட் சொற்பொழிவு பற்றி எழுதியுள்ளார்:
http://www.sekalpana.com/2009/12/blog-post_30.html

நா. கணேசன்


நன்றி

--

செல்வன்

--

N. Ganesan

unread,
Mar 18, 2018, 11:32:34 AM3/18/18
to மின்தமிழ், vallamai
2018-03-18 8:08 GMT-07:00 S. Jayabarathan <jayaba...@gmail.com>:
> ////இந்த வரையறையின்படி தமிழை தாய்மொழியாக கொண்ட பார்ப்பனர்கள் திராவிடர்கள்
> என்ற வரையறையுல் அடங்குவார்கள் என்பது சரியா, தவறா?
>
> பதில் தெரிந்தவர்கள் விளக்கவும்.////
>
> தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பிராமணரைத் திராவிடர் என்று பெரியாரின் திராவிடக்
> கழகமும் ஒப்புக் கொள்ளாது. உயிரோடு இருந்தால் பெரியாரும் ஒப்புக் கொள்வாரா
> என்பதும் ஐயமே.
>
> தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பிராமணரைத் திராவிடர் என்று பிராமணரே முதலில்
> ஏற்றுக் கொள்ள மாட்டார்.


பிழையான செய்தி.

மஹாராஷ்ட்ரா - பஞ்ச த்ராவிட தேசங்களுள் ஒன்று ((1) கூர்ச்சரம்-சிந்து
“நர்மதே சிந்து காவேரீ ...”
(2) மஹாராஷ்ட்ரம் (3) ஆந்திரம் (4) கர்நாடகம் (5) தமிழகம் ( இன்றைய
தமிழ்நாடு+கேரளா).

மஹாராஷ்ட்ராவுக்கு சில தலைமுறை முன்னர் சென்று வாழ்ந்த தமிழ் ப்ராமணர்களை
திராவிட் என அழைக்கின்றனர். ராகுல் திராவிட் - தமிழ்ப் பிராமணர் குடும்ப
வம்சாவளியினர்.
பிரபல துடுப்பாட்ட (க்ரிக்கெட்) விளையாட்டுவீரர்.

ஆந்திராவில் தெலுங்கு இலக்கியத்திற்கும், த்ராவிட மொழியியலுக்கும் சேவைசெய்த
திராவிட ப்ராமணர்கள் மிகுதி. வேதம் வெங்கட்ராய சாஸ்திரி, ....
பல த்ராவிட பிராமணர்கள் உலகத் தமிழ் மாநாடுகளில் தமிழ்-தெலுங்கு உறவுகளில்
நுட்பமான விஷயங்களை கட்டுரைகள் எழுதியுள்ளனர். அவற்றில் பல படித்துள்ளேன்.

Dravida is a very deep word in Indian literature, both in Tamil and
Sanskrit and in other Indic bAsha-s.
It cannot and should not be removed from the Official version of Tamil
Thaay Vaazhthu. Karanthai Tamil Sangam
founders did enormous work to make P. Sundranar's song which is famous
and official for several decades.

தமிழ்த்தாய் வாழ்த்தில் என்றும் திராவிட என்ற சொல் இலங்கும். இது உறுதி.

நா. கணேசன்
I have written three papers in International conferences and journals
have published them.
You can read Dravidian language speakers' early presence in Indus
valley and in India in them,
https://archive.org/details/@dr_n_ganesan
>> minTamil-u...@googlegroups.com
>> For more options, visit this group at
>> http://groups.google.com/group/minTamil
>> ---
>> You received this message because you are subscribed to the Google Groups
>> "மின்தமிழ்" group.
>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
>> email to mintamil+u...@googlegroups.com.
>> For more options, visit https://groups.google.com/d/optout.
>
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups
> "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to mintamil+u...@googlegroups.com.

S. Jayabarathan

unread,
Mar 18, 2018, 11:33:14 AM3/18/18
to vallamai, மின்தமிழ்
திராவிடர் என்ற புனிதச் சொல்லுக்குப் பெரியார் கீழான சூத்திரர் என்று பட்டம் கொடுத்தார்.  ஆரியரை மேலான பிறவியாக தூக்கி வைத்தார்.  இந்தச் சண்டைதான் இங்கு நிகழ்கிறது !!!

திராவிடர் என்ற சொல் அதனால்தான் நீக்கப்பட வேண்டும் என்று நான் கூறி வருகிறேன்.

திராவிடரைக் கீழாக்கி அவர் தனி இனம் என்று பிரித்தது பெரியாரின் இமாலயத் தவறு.

சூத்திரன் திராவிடன் என்று சொல்லிச் சொல்லிப் பெரியார் தடவிய கறை எப்படிப் போகும் ???

திராவிடன் எப்போது புனிதன் ஆவான் ???  

சி. ஜெயபாரதன் 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

S. Jayabarathan

unread,
Mar 18, 2018, 11:38:23 AM3/18/18
to vallamai, மின்தமிழ்
////தமிழ்த்தாய் வாழ்த்தில் என்றும் திராவிட என்ற சொல் இலங்கும். இது உறுதி.


நா. கணேசன்
I have written three papers in International conferences and journals
have published them.
You can read Dravidian language speakers' early presence in Indus
valley and in India in them,

நண்பர் கணேசன்,

திராவிடநாடு, திராவிடம் இந்தியத் தளப்படத்தில் இல்லை.

சி. ஜெயபாரதன் 

>> For more options, visit this group at
>> http://groups.google.com/group/minTamil
>> ---
>> You received this message because you are subscribed to the Google Groups
>> "மின்தமிழ்" group.
>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an

>> For more options, visit https://groups.google.com/d/optout.
>
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to

> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups
> "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an

> For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Mar 18, 2018, 11:43:08 AM3/18/18
to மின்தமிழ், vallamai


2018-03-18 8:37 GMT-07:00 S. Jayabarathan <jayaba...@gmail.com>:
> ////தமிழ்த்தாய் வாழ்த்தில் என்றும் திராவிட என்ற சொல் இலங்கும். இது உறுதி.
>
> நா. கணேசன்
> I have written three papers in International conferences and journals
> have published them.
> You can read Dravidian language speakers' early presence in Indus
> valley and in India in them,
> https://archive.org/details/@dr_n_ganesa/////
>
> நண்பர் கணேசன்,
>
> திராவிடநாடு, திராவிடம் இந்தியத் தளப்படத்தில் இல்லை.
>
> சி. ஜெயபாரதன் 


தமிழ்த்தாய் வாழ்த்தில் இருக்கிறது. 1500 ஆண்டுகளாக இந்தியாவின் எல்லா மொழிகளின்
இலக்கியங்களிலும் திராவிட நாடு/தேசம் இருக்கிறது. த்ராவிடாலு என்று தமிழர்களை
பிற இந்திய பாஷைகள் பேசுவோர் அழைப்பது இருக்கிறது.

நீங்கள் இன்னும் படிக்கவேண்டும். இந்தியா வரைபடத்தில் பஞ்ச திராவிட தேசம்
வரைந்த வரைபடங்கள் (Maps) இருக்கின்றன.

நீங்கள் பார்த்த மேப்பில் இல்லை என்றதும், தமிழ்த்தாய் வாழ்த்தில் உள்ள
திராவிட என்ற சொல்லை நீக்கணும் என்றால் அரசாங்கம் நீக்கணுமா?

நா. கணேசன்


>> >> For more options, visit this group at
>> >> http://groups.google.com/group/minTamil
>> >> ---
>> >> You received this message because you are subscribed to the Google
>> >> Groups
>> >> "மின்தமிழ்" group.
>> >> To unsubscribe from this group and stop receiving emails from it, send
>> >> an

>> >> For more options, visit https://groups.google.com/d/optout.
>> >
>> >
>> > --
>> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
>> > Foundation.
>> > Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit
>> > our
>> > Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To
>> > post
>> > to this group, send email to minT...@googlegroups.com
>> > To unsubscribe from this group, send email to

>> > For more options, visit this group at
>> > http://groups.google.com/group/minTamil
>> > ---
>> > You received this message because you are subscribed to the Google
>> > Groups
>> > "மின்தமிழ்" group.
>> > To unsubscribe from this group and stop receiving emails from it, send
>> > an

>> > For more options, visit https://groups.google.com/d/optout.
>>
>> --
>> You received this message because you are subscribed to the Google Groups
>> "வல்லமை" group.
>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an

>> For more options, visit https://groups.google.com/d/optout.
>
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to

> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups
> "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an

தேமொழி

unread,
Mar 18, 2018, 12:15:19 PM3/18/18
to mint...@googlegroups.com


On Sunday, March 18, 2018 at 8:08:57 AM UTC-7, jayabarathans wrote:

தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பிராமணரைத் திராவிடர் என்று பிராமணரே முதலில் ஏற்றுக் கொள்ள மாட்டார்.

பிறர் கேள்விகள் எழுப்பிக் கொண்டிருப்பதைக் காட்டிலும்  அவர்களே இதைத்  தெளிவாக்கினால் நன்றுதான்.  செல்வன் கேள்விக்கு விடை கிடைக்கும்.


 
ஜாதீய விகிதப் பங்கீட்டில் எதிர்ப் புறக்கணிப்பு [Reverse Discrimination]பெருகி, பிராமணர் தமிழ்நாட்டில் வேலை கிடைக்காது, வெளிநாட்டுக்கும், மற்ற மாநிலங்கட்கும் ஓடுகிறார்.  இதனால் தமிழகத்தில் செந்திறத் செழிப்புக் குறைவு  [Brain Drain] ஏற்பட்டுத் தமிழ் நாட்டில் இப்போது விஞ்ஞானத் துறையில் யாரும் மேலாக வர முடியவில்லை !!!


வாய்ப்பு கொடுக்கப்பட்டால் யாராலும் அறிவியல் துறையில்  மேலே செல்லமுடியும் என்று மக்கள் சான்றுடன் அறிந்து கொள்ளவும்  முடிந்தது 


தமிழகத்தில் தெருவிற்கு பத்து  மருத்துவர்கள் இருபது  பொறியாளர்கள் எல்லோரும் அறிவியல் துறையில் பங்காற்றுபவர்களே 


 


தமிழ் நாட்டில் உள்ள தமிழ்ப் பிராமணரும், தமிழ் இஸ்லாமியரும், தமிழ்க் கிறித்துவரும் தம்மைத் திராவிடர் என்று ஒருபோதும் ஒப்புக் கொள்ளார்.

"தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பிராமணரைத் திராவிடர் என்று பிராமணரே முதலில் ஏற்றுக் கொள்ள மாட்டார்." &  "தமிழ் நாட்டில் உள்ள தமிழ்ப் பிராமணரும், தமிழ் இஸ்லாமியரும், தமிழ்க் கிறித்துவரும் தம்மைத் திராவிடர் என்று ஒருபோதும் ஒப்புக் கொள்ளார்." 

இந்த இரு கூற்றுகள் குறிப்பது போல திராவிடம்  என்பது "சமயம்  சார்ந்தது" என மாற்றப்பட்டால் அது நான்கு வர்ணங்கள் அடிப்படையில் என்று அமைக்கப்பட்டது என (பெரியார் சொல்லியதை) மறுக்க முடியவில்லை என்பதைக் காட்டுகிறது. 

..... தேமொழி 
 


சி. ஜெயபாரதன்

செல்வன்

unread,
Mar 18, 2018, 12:25:40 PM3/18/18
to mintamil
2018-03-18 2:18 GMT-05:00 iraamaki <p...@giasmd01.vsnl.net.in>:
http://valavu.blogspot.in/2006/04/blog-post.html படியுங்கள். 12 ஆண்டுகளுக்கு முன் எழுதியது. இப்பொழுது சற்று மாறுபடுவேன். சில திருத்தங்கள் செய்யலாம். இருப்பினும் முந்தையப் பதிவு என்பதால் மாற்றாதிருக்கிறேன். சில விதயங்களை இன்னும் விரித்து எழுதலாம். அடிப்படை ஒன்றுதான்.
 
நான் தமிழன்
நான் திராவிடன்
நான் இந்தியன்
 
இந்த மூன்றும் ஒன்றிற்கொன்று முரண்பட்டவையல்ல. மூன்றும் மூவேறு வட்டங்கள்.  இதில் ஏதொன்றை உடைத்தாலும் எனக்கு அது குறையாகவே தென்படும்.  இந்துத்துவர் முதலிரண்டு வட்டங்களை உடைக்க முயல்கிறார். அதை நான் ஏற்கேன்.
 
அன்புடன்,
இராம.கி.





நன்றி ஐயா. நானும் அதையே ஒப்புகொள்கிறேன். இலக்கியங்களில் உள்ளது போல தென்னிந்தியாவில் வசிக்கும் அனைத்து மக்களையும் குறிக்கும் சொல்லா திராவிடர் எனும் சொல். 

தவறான முறையில் இச்சொல் புரிந்துகொள்ளபடுவது தான் வருத்தம் அளிக்கிறது. 

செல்வன்

unread,
Mar 18, 2018, 12:26:45 PM3/18/18
to vallamai, மின்தமிழ்
ஆம். திருஞான சம்பந்தரை கூட திராவிட சிசு எனத்தான் ஆதிசங்கரர் விளிக்கிறார். 


--

செல்வன்

செல்வன்

unread,
Mar 18, 2018, 12:30:36 PM3/18/18
to vallamai, மின்தமிழ்
2018-03-18 10:32 GMT-05:00 S. Jayabarathan <jayaba...@gmail.com>:
திராவிடர் என்ற புனிதச் சொல்லுக்குப் பெரியார் கீழான சூத்திரர் என்று பட்டம் கொடுத்தார்.  ஆரியரை மேலான பிறவியாக தூக்கி வைத்தார்.  இந்தச் சண்டைதான் இங்கு நிகழ்கிறது !!!

திராவிடர் என்ற சொல் அதனால்தான் நீக்கப்பட வேண்டும் என்று நான் கூறி வருகிறேன்.

திராவிடரைக் கீழாக்கி அவர் தனி இனம் என்று பிரித்தது பெரியாரின் இமாலயத் தவறு.

சூத்திரன் திராவிடன் என்று சொல்லிச் சொல்லிப் பெரியார் தடவிய கறை எப்படிப் போகும் ???

திராவிடன் எப்போது புனிதன் ஆவான் ???  





இலக்கியப்படி அது தவறான வரையறை.

அனைத்து தமிழ் மக்களும் திராவிடர்கள் எனும் வரையறையில் அடங்குவர்

பெரியார் கூறிய வரையறை தவறு என இழையிலேயே பலரும் கூறியுள்ளனர்.

அதனால் திராவிடம், திராவிட எனும் சொல்லை அனைத்து தென்னிந்திய மக்களுக்கும் பொதுவாக தாகூர் கூறியதை நாமும் ஏற்றுகொள்வோமே?

 


--

செல்வன்

kanmani tamil

unread,
Mar 18, 2018, 12:53:51 PM3/18/18
to mintamil
/// திராவிடம், திராவிட எனும் சொல்லை அனைத்து தென்னிந்திய மக்களுக்கும் பொதுவாக தாகூர் கூறியதை நாமும் ஏற்றுகொள்வோமே?///
அப்படி ஏற்றுக் கொண்டு மனம் அமைதிப்பட்டால் சரி.
ஆனால் உண்மையில் இங்கு யாருமே 100%திராவிடரும் இல்லை .
100% ஆரியரும் இல்லவே இல்லை .
கண்மணி 



--

nkantan r

unread,
Mar 18, 2018, 1:01:32 PM3/18/18
to மின்தமிழ்
இதைத்தான் திரு வி க தமிழர் யார் என்ற கேள்விக்கு பதிலாய்ச் சொல்லியுள்ளார்.

Quote (from Mr I's post)
பழந்தூயத் தமிழரும், வழிவந்த தமிழரும், இடையே குடி புகுந்து நிலைத்த சிலருஞ் சேர்ந்த ஓரினமே இப்போதுள்ள தமிழினமாகும்...கலப்பு என்பது இயற்கை. உலகில் எம்மொழியும், எந்நாடும் எவ்வினமும் தோன்றியவாறே கலப்பின்றித் தனிமைத் தூய்மையும் என்றும் ஒரு பெற்றியாய் நிலவுதல் அரிது.,,கலப்பால் வளர்ச்சியே உண்டு...தமிழ்நாட்டில் ஆரியர் தமிழர் பிரிவு பெரிதும் பேசப்படுகிறது... அதை வாழ்விடை ஏன் பாராட்டிப் பகைமை வளர்த்தல் வேண்டும்?...இப்போது தூய ஆரியர் இன்னார், தூயத்தனித்தமிழர் இன்னார் என்று எவரே பிரிக்க வல்லார்?...இயற்கை நிலை இவ்வாறாக, பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் ஆரியர்களுக்கும் தமிழர்களுக்கும் கலப்பு ஏற்பட்டிராதென்று கருதுவது மதியுடையாக்ய்ன்(sic) கொல்! எனவே தூய ஆரியராதல் தூய தமிழராதல் இப்போது இல்லை என்பதை வலியுறுத்துகிறேன்.
=====

rnk

kanmani tamil

unread,
Mar 18, 2018, 1:17:11 PM3/18/18
to mintamil
Yes, it is true.
Even Pandyas,Chozhas and Cheras are aryans.
They were called "தமிழ் கெழு மூவர் " because they accepted Tamil language ,culture and the people of Tamilnad long before .
kanmani  

செல்வன்

unread,
Mar 18, 2018, 1:24:25 PM3/18/18
to mintamil
2018-03-18 11:53 GMT-05:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
/// திராவிடம், திராவிட எனும் சொல்லை அனைத்து தென்னிந்திய மக்களுக்கும் பொதுவாக தாகூர் கூறியதை நாமும் ஏற்றுகொள்வோமே?///
அப்படி ஏற்றுக் கொண்டு மனம் அமைதிப்பட்டால் சரி.
ஆனால் உண்மையில் இங்கு யாருமே 100%திராவிடரும் இல்லை .
100% ஆரியரும் இல்லவே இல்லை .
கண்மணி 



100% சுத்தம் எல்லாம் இனவாதிகள் தான் கேட்பார்கள் :-)

நாம் நம் இலக்கிய மரபின்படி போவோம் :-)



தேமொழி

unread,
Mar 18, 2018, 1:37:29 PM3/18/18
to மின்தமிழ்
இழை மாறிச் சென்ற  ஓர்  தனிஆவர்த்தனம் ... 

அதன் முதற்கேள்வியின் தொடக்கமான மேற்கோள், 
அதைத் தொடர்ந்து  பகுதி நீக்கப்பட்ட மேற்கோள், 
அதைத் தொடர்ந்த மெய்ப்பொருள் காணவிழையும் வினா 

----

On Sunday, March 18, 2018 at 10:01:32 AM UTC-7, nkantan r wrote:
இதைத்தான் திரு வி க தமிழர் யார் என்ற கேள்விக்கு பதிலாய்ச் சொல்லியுள்ளார்.

Quote (from Mr I's post)

பழந்தூயத் தமிழரும், வழிவந்த தமிழரும், இடையே குடி புகுந்து நிலைத்த சிலருஞ் சேர்ந்த ஓரினமே இப்போதுள்ள தமிழினமாகும்...கலப்பு என்பது இயற்கை. உலகில் எம்மொழியும், எந்நாடும் எவ்வினமும் தோன்றியவாறே கலப்பின்றித் தனிமைத் தூய்மையும் என்றும் ஒரு பெற்றியாய் நிலவுதல் அரிது.,,கலப்பால் வளர்ச்சியே உண்டு...தமிழ்நாட்டில் ஆரியர் தமிழர் பிரிவு பெரிதும் பேசப்படுகிறது... அதை வாழ்விடை ஏன் பாராட்டிப் பகைமை வளர்த்தல் வேண்டும்?...இப்போது தூய ஆரியர் இன்னார், தூயத்தனித்தமிழர் இன்னார் என்று எவரே பிரிக்க வல்லார்?...இயற்கை நிலை இவ்வாறாக, பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் ஆரியர்களுக்கும் தமிழர்களுக்கும் கலப்பு ஏற்பட்டிராதென்று கருதுவது மதியுடையாக்ய்ன்(sic) கொல்! எனவே தூய ஆரியராதல் தூய தமிழராதல் இப்போது இல்லை என்பதை வலியுறுத்துகிறேன்.
=====

rnk


---

On Sunday, March 18, 2018 at 10:14:55 AM UTC-7, singanenjan wrote:
."வடமொழி பாரத நாட்டுக்குரிய பொது மொழி"......

அப்படியானால் தமிழ்....? வேற்றுமொழியா? 

திரு.வி.க. சொன்னால் என்ன....யார் சொன்னால் என்ன? 

மெய்ப்பொருள் காண்பது அறிவு. 

 

kanmani tamil

unread,
Mar 18, 2018, 1:40:31 PM3/18/18
to mintamil
அந்த இழையில் பதிலைப் பதிந்துள்ளேன் .
கண்மணி 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

தேமொழி

unread,
Mar 18, 2018, 1:45:23 PM3/18/18
to மின்தமிழ்
நன்றி கண்மணி 

தேமொழி

unread,
Mar 18, 2018, 1:52:15 PM3/18/18
to மின்தமிழ்
சங்க இலக்கியங்களில் ஆரியர் - இராம.கி.



S. Jayabarathan

unread,
Mar 18, 2018, 3:25:55 PM3/18/18
to vallamai, tamilmantram, mintamil, vannan vannan, vaiyavan mspm, Oru Arizonan, Aravindan Neelakandan, Asan Buhari
////தமிழ்த்தாய் வாழ்த்தில் இருக்கிறது. 1500 ஆண்டுகளாக இந்தியாவின் எல்லா மொழிகளின்
இலக்கியங்களிலும் திராவிட நாடு/தேசம் இருக்கிறது. த்ராவிடாலு என்று தமிழர்களை
பிற இந்திய பாஷைகள் பேசுவோர் அழைப்பது இருக்கிறது.

நீங்கள் இன்னும் படிக்கவேண்டும். இந்தியா வரைபடத்தில் பஞ்ச திராவிட தேசம்
வரைந்த வரைபடங்கள் (Maps) இருக்கின்றன.

நீங்கள் பார்த்த மேப்பில் இல்லை என்றதும், தமிழ்த்தாய் வாழ்த்தில் உள்ள
திராவிட என்ற சொல்லை நீக்கணும் என்றால் அரசாங்கம் நீக்கணுமா?

நா. கணேசன்////


தெலுங்கன் ஒரு தமிழனை அரவாடு [கத்துபவன்] என்றுதான் சொல்வான்.  

திராவிடலு என்றால் உமது கூற்றுப்படி தெலுங்கனும் அதில் சேர்ந்து இருக்கிறான்.

திராவிட நாடு, திராவிடம் உள்ள  பூர்வீகத் தளப்பட ஆதாரம் காட்ட வேண்டும்.

நாமறிந்த அக்பர் காலத்து தளப்படம், பிரிட்டீஷ் இந்திய தளப்படம், விடுதலை இந்திய
தளப்படம் ஆகியற்றில் திராவிட நாடு, திராவிடம் இல்லை.

பிரிட்டீஷ் இந்திய தளப்படத்தில் இருக்கும் சிந்து, பஞ்சாப், எல்லை மாநிலங்களை இந்தியா
எங்கள் மாநிலங்கள் என்று கேட்க முடியுமா ???

தேசீயப் பாட்டில் உள்ள திராவிடம் எது, திராவிடர் யாரென்று அரசியில் சாசனத்தில் இல்லை.

////1500 ஆண்டுகளாக இந்தியாவின் எல்லா மொழிகளின்
இலக்கியங்களிலும் திராவிட நாடு/தேசம் இருக்கிறது  ///

புளுகு மூட்டை, புனைவு மூட்டை இது. ஆதாரம் தேவை.


சி. ஜெயபாரதன்.

S. Jayabarathan

unread,
Mar 18, 2018, 3:50:52 PM3/18/18
to vallamai, tamilmantram, mintamil, vannan vannan, vaiyavan mspm, Oru Arizonan, Aravindan Neelakandan, Asan Buhari
நண்பர் கணேசன்,


///ஆந்திராவில் திராவிடாலு என்றாலே தமிழகத்தில் இருந்து வந்த பிராமணர்கள் என்று பொருள்.////

///த்ராவிடாலு என்று தமிழர்களை பிற இந்திய பாஷைகள் பேசுவோர் அழைப்பது இருக்கிறது.////


பிற இந்திய மொழிகள் எவை என்று கூறுங்கள் ?


இந்த இரண்டு வாசகங்களும் நீங்கள் எழுதியவை.  இவற்றுள் எது சரி, எது தப்பு ???   

ஆதாரங்கள் தேவை.


திராவிடலு என்றால் பொதுவாகத் தெக்கணத்தார் அல்லவா ?  அது எப்படித் தமிழரை, தமிழ் பிராமணரைக்
குறிக்க முடியும் ???

ஒரே குழப்பமாக ஆக்கிவிட்டீர்களே !  

திராவிட நாடும், திராவிடலு நாடும் ஒன்றா ?  திராவிடலு நாடு தமிழ்ப் பிராமணர் நாடா ???

[சிரிப்புத்தான் வருகுதையா !!!]

திராவிடலு நாடு எந்த தளப்படத்திலா இருக்குதா ???
இருந்தால் தெலுங்கு தேசம் தனியாகிவிடும் !!!


சி. ஜெயபாரதன்



S. Jayabarathan

unread,
Mar 18, 2018, 4:00:19 PM3/18/18
to Oru Arizonan, mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, Aravindan Neelakandan, Asan Buhari, Raju Rajendran, kanmani tamil, Anna Kannan, Anne Josephine
நண்பர் அரிசோனன்,

தமிழ் நாட்டில் உள்ள பஞ்சதிராவிடப் பிராமணர் தம்மைத் தனியாகத் திராவிடர் என்று ஒப்புக் கொள்வார்களா ? 

திராவிடர் என்றால் பெரியார் கூற்றுப்படிக் கீழ்ஜாதி அல்லவா ? ஜாதீய விகிதச் சலுகைப் பங்கீட்டில் 
கீழ்ஜாதியரோடு சேர்க்கப் படவில்லையே.

சி. ஜெயபாரதன்  
2018-03-18 14:37 GMT-04:00 Oru Arizonan <oruar...@gmail.com>:
2018-03-18 8:08 GMT-07:00 S. Jayabarathan <jayaba...@gmail.com>

//தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பிராமணரைத் திராவிடர் என்று பிராமணரே முதலில் ஏற்றுக் கொள்ள மாட்டார்.//

இந்தியாவிலிருக்கும் பிராமணர்கள் இருபெரும்பிரிவாக்கப் பிறக்கப்பட்டுள்ளனர்.  பஞ்சதிராவிட  பிராமணர் [தென்னாட்டவர்], பஞ்சகௌட பிராமணர்[வடநாட்டவர்.Saraswat, Kanyakubja, Maithil Brahmins, Gauda brahmins, Utkala Brahmins].  இங்கு பஞ்ச என்ற சொல் 'காய்ந்து என்ற எண்ணைக் குறிக்கிறது.


தென்னாட்டிலிருக்கும், அதாவது, தமிழ்நாடு, ஆந்திரா, கருநாடு, மராட்டம் [கேரள நம்பூதிரிகள் தவிர்த்து] ஆகிய மாநிலங்களிலுள்ளவை பிராமணர்கள் -- ஒப்புக்கொண்டாலும், ஒப்புக்கொள்ளாவிட்டாலும், பஞ்சதிராவிட பிராமணர்களே!  இருப்பினும், தமிழ்நாட்டிலிருந்து, மற்றமாநிலங்களுக்குக் குடியேறிய பிராமணர்களை 'திராவிடலு' என்று ஆந்திராவிலும் [இப்பொழு அவர்களின் தாய்மொழி தெலுங்காக இருப்பினும்], திராவிட்  என்ற குடும்பப் பெயருடன் வடநாட்டிலும் [அவர்கள்  பல நுற்றாண்டுகளாகத் தமிழை மறந்துவிட்டிருந்தாலும்] அழைக்கப்படுகிறார்கள்.
 
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 


Virus-free. www.avast.com

தேமொழி

unread,
Mar 18, 2018, 4:57:47 PM3/18/18
to மின்தமிழ்

செல்வன்

unread,
Mar 18, 2018, 5:07:27 PM3/18/18
to vallamai, mintamil
2018-03-18 14:59 GMT-05:00 S. Jayabarathan <jayaba...@gmail.com>:
நண்பர் அரிசோனன்,

தமிழ் நாட்டில் உள்ள பஞ்சதிராவிடப் பிராமணர் தம்மைத் தனியாகத் திராவிடர் என்று ஒப்புக் கொள்வார்களா ? 

திராவிடர் என்றால் பெரியார் கூற்றுப்படிக் கீழ்ஜாதி அல்லவா ? ஜாதீய விகிதச் சலுகைப் பங்கீட்டில் 
கீழ்ஜாதியரோடு சேர்க்கப் படவில்லையே.

சி. ஜெயபாரதன்  





ஐயா..இதன் சரியான பொருள் அவர்களுக்கு எப்போதோ தெரியும். பெரியார் தான் திராவிடன் என்றால் என்ன பொருள் என அறியாது அந்த பெயரை பிராமணலோதோரை குறிக்க பயன்படுத்தினார்.


தாகூர், கவிமணிதேசிய வினாயகம் பிள்ளை ஆகிய சான்றோர் அந்த சொல்லை சரியான முறையிலேயே கையாண்டுள்ளனர். பின்னாளில் திராவிட நாடு கோரிக்கைகள் எழுந்தபோதும் அவை கைவிடவும் பட்டுவிட்டன. அதனால் திராவிடம், திராவிடநாடு எனும் சொற்களை அதன் சரியான பொருளில் நாம் கையாள்வதில் தவறு எதுவும் இல்லை. 

--

செல்வன்

தேமொழி

unread,
Mar 18, 2018, 7:04:52 PM3/18/18
to மின்தமிழ்


On Sunday, March 18, 2018 at 2:07:27 PM UTC-7, செல்வன் wrote:


2018-03-18 14:59 GMT-05:00 S. Jayabarathan <jayaba...@gmail.com>:
நண்பர் அரிசோனன்,

தமிழ் நாட்டில் உள்ள பஞ்சதிராவிடப் பிராமணர் தம்மைத் தனியாகத் திராவிடர் என்று ஒப்புக் கொள்வார்களா ? 

திராவிடர் என்றால் பெரியார் கூற்றுப்படிக் கீழ்ஜாதி அல்லவா ? ஜாதீய விகிதச் சலுகைப் பங்கீட்டில் 
கீழ்ஜாதியரோடு சேர்க்கப் படவில்லையே.

சி. ஜெயபாரதன்  





ஐயா..இதன் சரியான பொருள் அவர்களுக்கு எப்போதோ தெரியும். பெரியார் தான் திராவிடன் என்றால் என்ன பொருள் என அறியாது அந்த பெயரை பிராமணலோதோரை குறிக்க பயன்படுத்தினார்.


தாகூர், கவிமணிதேசிய வினாயகம் பிள்ளை ஆகிய சான்றோர் அந்த சொல்லை சரியான முறையிலேயே கையாண்டுள்ளனர்.


கவிமணிதேசிய வினாயகம் பிள்ளை???

என்னால் அந்தப் பாடலை நினைவிற்கு கொண்டு வரமுடியவில்லையே !!  அது என்ன பாடல்?

S. Jayabarathan

unread,
Mar 18, 2018, 7:05:48 PM3/18/18
to vallamai, tamilmantram, mintamil, vannan vannan, vaiyavan mspm, Aravindan Neelakandan, Oru Arizonan, Raju Rajendran
இப்போது தமிழ், தமிழர், தமிழ்நாடு என்னும் தமிழ்த் தேசீயம் பொங்கி எழுந்து, 
திராவிட யுகம் "தேய்வு நியதிப்படி" [Entropy Theory]  ​சிதைந்து வருகிறது.

சி.ஜெயபாரதன்



--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

தேமொழி

unread,
Mar 18, 2018, 7:38:48 PM3/18/18
to மின்தமிழ்


On Sunday, March 18, 2018 at 2:07:27 PM UTC-7, செல்வன் wrote:


2018-03-18 14:59 GMT-05:00 S. Jayabarathan <jayaba...@gmail.com>:
நண்பர் அரிசோனன்,

தமிழ் நாட்டில் உள்ள பஞ்சதிராவிடப் பிராமணர் தம்மைத் தனியாகத் திராவிடர் என்று ஒப்புக் கொள்வார்களா ? 

திராவிடர் என்றால் பெரியார் கூற்றுப்படிக் கீழ்ஜாதி அல்லவா ? ஜாதீய விகிதச் சலுகைப் பங்கீட்டில் 
கீழ்ஜாதியரோடு சேர்க்கப் படவில்லையே.

சி. ஜெயபாரதன்  





ஐயா..இதன் சரியான பொருள் அவர்களுக்கு எப்போதோ தெரியும். பெரியார் தான் திராவிடன் என்றால் என்ன பொருள் என அறியாது அந்த பெயரை பிராமணலோதோரை குறிக்க பயன்படுத்தினார்.


பெரியார் மனுநீதி என்ன சொன்னதோ, அதனைப்  படித்து அதிலிருந்து பொருள் கொண்டார்.


மனு நீதி குறிக்கும் திராவிடரும் அவர் நிலை தாழ்த்தப்பட்ட காரணமும்:

CHAPTER X.

20. Those (sons) whom the twice-born beget on wives of equal caste, but who, not fulfilling their sacred duties, are excluded from the Savitri, one must designate by the appellation Vratyas.

21. But from a Vratya (of the) Brahmana (caste) spring the wicked Bhriggakantaka, the Avantya, the Vatadhana, the Pushpadha, and the Saikha.

22. From a Vratya (of the) Kshatriya (caste), the Ghalla, the Malla, the Likkhivi, the Nata, the Karana, the Khasa, and the Dravida.

23. From a Vratya (of the) Vaisya (caste) are born a Sudhanvan, an Akarya, a Karusha, a Viganman, a Maitra, and a Satvata.

[...]

43. But in consequence of the omission of the sacred rites, and of their not consulting Brahmanas, the following tribes of Kshatriyas have gradually sunk in this world to the condition of Sudras;

44. (Viz.) the Paundrakas, the Kodas, the Dravidas, the Kambogas, the Yavanas, the Sakas, the Paradas, the Pahlavas, the Kinas, the Kiratas, and the Daradas.

[...]

அவர் கொண்ட பொருள் தவறென்றால் இதனைப் படித்து அதன் சரியான  பொருளை யாரேனும் எழுதலாம்.

எந்த இடத்தில் அவர் தவறினார் என்று நானும் அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

தவறு எங்கிருக்கிறது?  எழுதிய நூலிலா அல்லது அதை எடுத்துச் சொன்னவரிடமா? 



..... தேமொழி




தாகூர், கவிமணிதேசிய வினாயகம் பிள்ளை ஆகிய சான்றோர் அந்த சொல்லை சரியான முறையிலேயே கையாண்டுள்ளனர். பின்னாளில் திராவிட நாடு கோரிக்கைகள் எழுந்தபோதும் அவை கைவிடவும் பட்டுவிட்டன. அதனால் திராவிடம், திராவிடநாடு எனும் சொற்களை அதன் சரியான பொருளில் நாம் கையாள்வதில் தவறு எதுவும் இல்லை. 

--

செல்வன்

தேமொழி

unread,
Mar 18, 2018, 7:47:25 PM3/18/18
to மின்தமிழ்


On Sunday, March 18, 2018 at 4:38:48 PM UTC-7, தேமொழி wrote:


On Sunday, March 18, 2018 at 2:07:27 PM UTC-7, செல்வன் wrote:


2018-03-18 14:59 GMT-05:00 S. Jayabarathan <jayaba...@gmail.com>:
நண்பர் அரிசோனன்,

தமிழ் நாட்டில் உள்ள பஞ்சதிராவிடப் பிராமணர் தம்மைத் தனியாகத் திராவிடர் என்று ஒப்புக் கொள்வார்களா ? 

திராவிடர் என்றால் பெரியார் கூற்றுப்படிக் கீழ்ஜாதி அல்லவா ? ஜாதீய விகிதச் சலுகைப் பங்கீட்டில் 
கீழ்ஜாதியரோடு சேர்க்கப் படவில்லையே.

சி. ஜெயபாரதன்  





ஐயா..இதன் சரியான பொருள் அவர்களுக்கு எப்போதோ தெரியும். பெரியார் தான் திராவிடன் என்றால் என்ன பொருள் என அறியாது அந்த பெயரை பிராமணலோதோரை குறிக்க பயன்படுத்தினார்.


பெரியார் மனுநீதி என்ன சொன்னதோ, அதனைப்  படித்து அதிலிருந்து பொருள் கொண்டார்.


மனு நீதி குறிக்கும் திராவிடரும் அவர் நிலை தாழ்த்தப்பட்ட காரணமும்:

CHAPTER X.

20. Those (sons) whom the twice-born beget on wives of equal caste, but who, not fulfilling their sacred duties, are excluded from the Savitri, one must designate by the appellation Vratyas.

21. But from a Vratya (of the) Brahmana (caste) spring the wicked Bhriggakantaka, the Avantya, the Vatadhana, the Pushpadha, and the Saikha.

22. From a Vratya (of the) Kshatriya (caste), the Ghalla, the Malla, the Likkhivi, the Nata, the Karana, the Khasa, and the Dravida.

23. From a Vratya (of the) Vaisya (caste) are born a Sudhanvan, an Akarya, a Karusha, a Viganman, a Maitra, and a Satvata.

[...]

43. But in consequence of the omission of the sacred rites, and of their not consulting Brahmanas, the following tribes of Kshatriyas have gradually sunk in this world to the condition of Sudras;

44. (Viz.) the Paundrakas, the Kodas, the Dravidas, the Kambogas, the Yavanas, the Sakas, the Paradas, the Pahlavas, the Kinas, the Kiratas, and the Daradas.

[...]

அவர் கொண்ட பொருள் தவறென்றால் இதனைப் படித்து அதன் சரியான  பொருளை யாரேனும் எழுதலாம்.

எந்த இடத்தில் அவர் தவறினார் என்று நானும் அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

தவறு எங்கிருக்கிறது?  எழுதிய நூலிலா அல்லது அதை எடுத்துச் சொன்னவரிடமா? 


Vratyas

Skt., vratya; pagans, outcasts
Little information can be found on these outcasts of early Vedic society, but what we know makes them look like proto-type Tantrics who, as was done elsewhere on the planet, worshipped the Goddess and celebrated life with wine and orgies. Women among the Vratyas sometimes became pumscali (ritual prostitutes) and they may well be the precursers of the later devadasi tradition. 


..... தேமொழி

Innamburan S.Soundararajan

unread,
Mar 18, 2018, 7:49:58 PM3/18/18
to mintamil

ஈ.வே.ரா. அவர்களின் காழ்ப்புணர்ச்சியின் வரவு திராவிடம் என்ற சொல்லை அரசியல் ஆதாயம் ஆக்கியது.
அந்த உத்தியை பிற்காலம் ஹிட்லரின் பிரசார பீரங்கி கெப்பல்ஸ் திறனுடன் பயன்படுத்தி இனவெறியை கொணர்ந்து
ஆயிரக்கணக்கான யூதர்களை கொன்றார். நல்ல வேளை ஈ.வே.ரா. சிஷ்யகோடிகள் மண் சோறு சாப்பிட்டு, மொட்டையடித்த்ய்,
அவர் வாக்குப்படி 'முட்டாள்கள்' ஆனார்கள்.

தேமொழி

unread,
Mar 18, 2018, 8:00:12 PM3/18/18
to mint...@googlegroups.com
பொய்யைத் திரும்ப திரும்பச் சொன்னால் அது உண்மையாகத் தோற்றமளிக்க ஆரம்பித்துவிடும் என்பது "கோயபல்ஸ் தத்துவம்" 

ஆனால், நூலில் இருப்பதை எடுத்துத் திருப்பி விளக்கமளிப்பது பொய் அல்ல.  அது நூலில் எழுதியிருப்பது.  

அது போல நூலுக்கு விளக்கமளிப்பவரை உரையாசிரியர் என்பார்கள்.

பெரியார் எழுதிய உரை "பொய்" என்றால் உண்மையை நீங்கள் எழுதலாம் ஐயா, உங்களுக்குத்தான் ஆங்கிலம் சமஸ்கிரதம் தமிழ் போன்ற மொழிகளில் நல்ல ஆற்றல் உண்டே.

அனைவரும் அறிய விரும்புவது எது உண்மை என்பதைத்தான், உங்கள் பங்களிப்பு உதவலாம். 




..... தேமொழி



செல்வன்

unread,
Mar 18, 2018, 8:32:43 PM3/18/18
to mintamil
2018-03-18 18:38 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:


On Sunday, March 18, 2018 at 2:07:27 PM UTC-7, செல்வன் wrote:


2018-03-18 14:59 GMT-05:00 S. Jayabarathan <jayaba...@gmail.com>:
நண்பர் அரிசோனன்,

தமிழ் நாட்டில் உள்ள பஞ்சதிராவிடப் பிராமணர் தம்மைத் தனியாகத் திராவிடர் என்று ஒப்புக் கொள்வார்களா ? 

திராவிடர் என்றால் பெரியார் கூற்றுப்படிக் கீழ்ஜாதி அல்லவா ? ஜாதீய விகிதச் சலுகைப் பங்கீட்டில் 
கீழ்ஜாதியரோடு சேர்க்கப் படவில்லையே.

சி. ஜெயபாரதன்  





ஐயா..இதன் சரியான பொருள் அவர்களுக்கு எப்போதோ தெரியும். பெரியார் தான் திராவிடன் என்றால் என்ன பொருள் என அறியாது அந்த பெயரை பிராமணலோதோரை குறிக்க பயன்படுத்தினார்.


பெரியார் மனுநீதி என்ன சொன்னதோ, அதனைப்  படித்து அதிலிருந்து பொருள் கொண்டார்.


மனு நீதி குறிக்கும் திராவிடரும் அவர் நிலை தாழ்த்தப்பட்ட காரணமும்:

CHAPTER X.

20. Those (sons) whom the twice-born beget on wives of equal caste, but who, not fulfilling their sacred duties, are excluded from the Savitri, one must designate by the appellation Vratyas.

21. But from a Vratya (of the) Brahmana (caste) spring the wicked Bhriggakantaka, the Avantya, the Vatadhana, the Pushpadha, and the Saikha.

22. From a Vratya (of the) Kshatriya (caste), the Ghalla, the Malla, the Likkhivi, the Nata, the Karana, the Khasa, and the Dravida.

23. From a Vratya (of the) Vaisya (caste) are born a Sudhanvan, an Akarya, a Karusha, a Viganman, a Maitra, and a Satvata.

[...]

43. But in consequence of the omission of the sacred rites, and of their not consulting Brahmanas, the following tribes of Kshatriyas have gradually sunk in this world to the condition of Sudras;

44. (Viz.) the Paundrakas, the Kodas, the Dravidas, the Kambogas, the Yavanas, the Sakas, the Paradas, the Pahlavas, the Kinas, the Kiratas, and the Daradas.

[...]

அவர் கொண்ட பொருள் தவறென்றால் இதனைப் படித்து அதன் சரியான  பொருளை யாரேனும் எழுதலாம்.

எந்த இடத்தில் அவர் தவறினார் என்று நானும் அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

தவறு எங்கிருக்கிறது?  எழுதிய நூலிலா அல்லது அதை எடுத்துச் சொன்னவரிடமா? 







இந்த மொழிபெயர்ப்பே தவறானது என தெரிகிறது.




10.43

शनकैस्तु क्रियालोपादिमाः क्षत्रियजातयः ।
वृषलत्वं गता लोके ब्राह्मणादर्शनेन च । । १०.४३ । ।
 

But in consequence of the omission of the sacred rites, and of their not consulting Brahmanas, the following tribes of Kshatriyas have gradually sunk in this world to the condition of Sudras;




10.44

पौण्ड्रकाश्चौड्रद्रविडाः काम्बोजा यवनाः शकाः ।
पारदापह्लवाश्चीनाः किराता दरदाः खशाः । । १०.४४ । ।
 

(Viz.) the Paundrakas, the Kodas, the Dravidas, the Kambogas, the Yavanas, the Sakas, the Paradas, the Pahlavas, the Kinas, the Kiratas, and the Daradas.



தாரதர்கள் காஷ்மிரில் இருக்கும் ஒரு பகுதியினர். 


Daradas were a people who lived north to the Kashmir valley. Their kingdom is identified to be the Gilgit region in Kashmir along the river Sindhu or Indus. They are often spoken along with the Kambojas. The Pandava hero Arjuna had visited this country of Daradas during his northern military campaign to collect tribute for Yudhishthira's Rajasuya sacrifice.



 

செல்வன்

unread,
Mar 18, 2018, 8:38:22 PM3/18/18
to mintamil
பிழை திருத்தம்: திராவிடர் என அதில் இருக்கிறது...தாரதர் எனவும் இருக்கிறது.

ஆக மனுவில் அப்படி குறிப்பிட்டிருப்பது உண்மைதான். ஆனால் அதில் "திராவிட பகுதியில் உள்ள க்ஷத்திரியர்கள் தான் திரிந்து சூத்திரர் ஆனார்கள்" எனதான் குறிப்பிடபட்டுள்ளது.

எப்படி இருப்பினும் இந்த முட்டாள்தனமான மனுஸ்மிரிதியில் சொல்லியிருப்பதை நாம் ஏன் உண்மை என ஏற்கவேண்டும்?

தேமொழி

unread,
Mar 18, 2018, 8:51:51 PM3/18/18
to மின்தமிழ்
**** அடுத்து என்ன கேள்வி கேட்பீர்கள் என்ற ஆவல் ...****



கீதை – நான்காவது அத்தியாயம்

ஞான கர்ம சந்யாச யோகம்

‘அர்ஜுனா, உன்னை ஏமாற்றிச் சண்டையில் உற்சாகமூட்டுவதற்காக உன்னைக் கர்மயோகத்தில் தூண்டுகிறேன் என்று எண்ணாதே. உலகத்தைப் படைக்கும்போதே இக் கர்மயோகத்தை நான் மனுவுக்கு உபதேசித்தேன்.

பிறகு மனுவின் வழியாக உலகில் அது பரவிற்று’ என்று சொல்லிக் கண்ணன் தனது அவதார ரகசியத்தைக் கூறுகிறான். பிறகு கர்மயோகத்தின் பிரிவுகளையும் அவற்றுள் அடங்கிய ஆத்ம ஞானத்தின் பெருமையையும் விளக்குகிறான். கர்மயோகம் ஞானபாகத்தை உள்ளடக்கிக் கொண்டிருப்பதால் அதுவே ஞானயோகத்தின் பலனையும் அளிக்கும் என்று கூறுகிறான்.

श्रीभगवानुवाच
इमं विवस्वते योगं प्रोक्तवानहमव्ययम्।
विवस्वान्मनवे प्राह मनुरिक्ष्वाकवेऽब्रवीत्॥१॥

ஸ்ரீப⁴க³வாநுவாச
இமம் விவஸ்வதே யோக³ம் ப்ரோக்தவாநஹமவ்யயம்|
விவஸ்வாந்மநவே ப்ராஹ மநுரிக்ஷ்வாகவேऽப்³ரவீத் ||4-1||

ஸ்ரீப⁴க³வாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்
இமம் அவ்யயம் யோக³ம் = இந்த அழிவற்ற யோகத்தை
அஹம் விவஸ்வதே ப்ரோக்தவாந் = நான் சூரியனுக்கு (விவஸ்வான்) சொன்னேன் 
விவஸ்வாந் மநவே ப்ராஹ = விவஸ்வாந் மனுவுக்கு சொன்னான் 
மநு: இக்ஷ்வாகவே அப்³ரவீத் = மனு இக்ஷ்வாகு மன்னனுக்கு சொன்னார்

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: இந்த அழிவற்ற யோகத்தை நான் முன்னர் விவஸ்வானுக்குச் சொன்னேன். விவஸ்வான் மனுவுக்குச் சொன்னான். மனு இஷ்வாகு ராஜனுக்குக் கூறினான். 

[...]

चातुर्वर्ण्यं मया सृष्टं गुणकर्मविभागशः।
तस्य कर्तारमपि मां विद्ध्यकर्तारमव्ययम्॥१३॥

சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் கு³ணகர்மவிபா⁴க³ஸ²:|
தஸ்ய கர்தாரமபி மாம் வித்³த்⁴யகர்தாரமவ்யயம் ||4-13||

கு³ண கர்ம விபா⁴க³ஸ²: = குணத்துக்கும் செய்கைக்கும் தக்கபடி பிரிவுகளாக 
சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் = நான்கு வர்ணங்கள் என்னால் உருவாக்கப் பட்டது
தஸ்ய கர்தாரம் அபி = நானே அவற்றை செய்தேன் என்றாலும் 
அவ்யயம் மாம் = அழிவற்றவனாகிய என்னை
அகர்தாரம் வித்³தி⁴ = கர்த்தா அல்லேன் என்று உணர்

குணத்துக்கும் செய்கைக்கும் தக்கபடி நான் நான்கு வர்ணங்களைச் சமைத்தேன். செயற்கையற்றவனும் அழிவற்றவனுமாகிய யானே அவற்றைச் செய்தோனென்றுணர்.

செல்வன்

unread,
Mar 18, 2018, 8:54:12 PM3/18/18
to mintamil
வர்ணத்துக்கும் திராவிடம் எனும் வரையறைக்கும் என்ன சம்பந்தம்?


--

செல்வன்

செல்வன்

unread,
Mar 18, 2018, 9:01:05 PM3/18/18
to mintamil, vallamai
வர்ணம் என்பது என்ன?

பிராமணர் யார், சூத்திரர் யார்?

இதெல்லாம் வேலை வெட்டி இல்லாத வாதம். வடமொழி நூல்கள் இம்மாதிரி முட்டாள்தனங்களை பேசலாம். தமிழ் இலக்கியங்களில் இதற்கு எதேனும் சான்றுகள் உள்ளனவா? எனக்கு தெரிந்து கிடையாது. தமிழ் பார்ப்பனர்கள் இம்மாதிரி வடமொழி இலக்கியங்களில் உள்ளது போல முட்டாள்தனமாக எதையும் எழுதி வைக்கவில்லை. அவர்கள் சங்க இலக்கியங்களில் பாராட்டபட்டே உள்ளனர்.

பிறகு இந்த வடமொழி நூல்களில் உள்ளதை நாம் ஏன் பொருட்படுத்தவேண்டும்?




--

செல்வன்

தேமொழி

unread,
Mar 18, 2018, 9:05:41 PM3/18/18
to மின்தமிழ்


On Sunday, March 18, 2018 at 5:54:12 PM UTC-7, செல்வன் wrote:
வர்ணத்துக்கும் திராவிடம் எனும் வரையறைக்கும் என்ன சம்பந்தம்?

தொடர்ந்து படிக்க வேண்டும்.... துண்டு துண்டாக்கப் படிக்கக் கூடாது...

பாடங்கள் அடிப்படையைச் சொல்லிவிட்டு அதன் மீது கட்டமைத்து தொடர்ந்து நடத்தகப்படுவதுதானே வழக்கம்..

மேல்நிலை பாடம் படிப்பவருக்கு அடிப்படை புரிந்திருக்கும் என்பது எதிர்பார்ப்பு...

நான் முன்னரே கொடுத்துவிட்டேன்.

மீண்டும்... வர்ணம்...

மனு நீதி குறிக்கும் திராவிடரும் அவர் நிலை தாழ்த்தப்பட்ட காரணமும்:

CHAPTER X.

20. Those (sons) whom the twice-born beget on wives of equal caste, but who, not fulfilling their sacred duties, are excluded from the Savitri, one must designate by the appellation Vratyas.

21. But from a Vratya (of the) Brahmana (caste) spring the wicked Bhriggakantaka, the Avantya, the Vatadhana, the Pushpadha, and the Saikha.

22. From a Vratya (of the) Kshatriya (caste), the Ghalla, the Malla, the Likkhivi, the Nata, the Karana, the Khasa, and the Dravida.

23. From a Vratya (of the) Vaisya (caste) are born a Sudhanvan, an Akarya, a Karusha, a Viganman, a Maitra, and a Satvata.



 


--

செல்வன்

தேமொழி

unread,
Mar 18, 2018, 9:08:21 PM3/18/18
to மின்தமிழ்
:)) great 

நன்று...கீதை படிக்கக் கூடாது என்று  அறிவித்துவிடுவோம்.






--

செல்வன்

செல்வன்

unread,
Mar 18, 2018, 9:11:23 PM3/18/18
to mintamil
2018-03-18 20:05 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:


On Sunday, March 18, 2018 at 5:54:12 PM UTC-7, செல்வன் wrote:
வர்ணத்துக்கும் திராவிடம் எனும் வரையறைக்கும் என்ன சம்பந்தம்?

தொடர்ந்து படிக்க வேண்டும்.... துண்டு துண்டாக்கப் படிக்கக் கூடாது...

பாடங்கள் அடிப்படையைச் சொல்லிவிட்டு அதன் மீது கட்டமைத்து தொடர்ந்து நடத்தகப்படுவதுதானே வழக்கம்..

மேல்நிலை பாடம் படிப்பவருக்கு அடிப்படை புரிந்திருக்கும் என்பது எதிர்பார்ப்பு...

நான் முன்னரே கொடுத்துவிட்டேன்.

மீண்டும்... வர்ணம்...



திராவிடம், திராவிடன் என்பதற்கான வரையறை எதையும் இதில் காணவில்லை. சம்பந்தமின்றி எதை, எதையோ எழுதுகிறீர்கள்.

எழுதியதில் உருப்படியாக நான் கண்டது மனுவில் திராவிடரில் க்ஷத்திரியர் திரிந்து சூத்திரர் ஆனார்கள் என குறிப்பிஅடப்பட்ட தகவலைதான். அதற்கான விளக்கமும் அம்பேத்கர் கொடுத்துள்ளார். அதாவது போரில் தோற்ற க்ஷத்திரிய சாதியினர் சிலர் தண்டனையாக சூத்திரர் ஆக்கபட்டனர் என. அதெற்கேற்றார்போல பல தாழ்த்தபட்ட சாதியினரும் தாம் முன்பு ஆண்டபரமபரை எனவே கூறிவருகின்ரனர்.

ஆக இழையின் முக்கிய கேள்வியான திராவிடர் எனும் வரையறைக்கு திரும்பவும்.

 

செல்வன்

unread,
Mar 18, 2018, 9:13:04 PM3/18/18
to mintamil
வைணவத்தை பின்பற்றும் தமிழருக்கு திராவிடவேதம் எனும் பிரபந்தமே போதுமானது.

தேமொழி

unread,
Mar 18, 2018, 9:20:06 PM3/18/18
to மின்தமிழ்


On Sunday, March 18, 2018 at 6:11:23 PM UTC-7, செல்வன் wrote:


2018-03-18 20:05 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:


On Sunday, March 18, 2018 at 5:54:12 PM UTC-7, செல்வன் wrote:
வர்ணத்துக்கும் திராவிடம் எனும் வரையறைக்கும் என்ன சம்பந்தம்?

தொடர்ந்து படிக்க வேண்டும்.... துண்டு துண்டாக்கப் படிக்கக் கூடாது...

பாடங்கள் அடிப்படையைச் சொல்லிவிட்டு அதன் மீது கட்டமைத்து தொடர்ந்து நடத்தகப்படுவதுதானே வழக்கம்..

மேல்நிலை பாடம் படிப்பவருக்கு அடிப்படை புரிந்திருக்கும் என்பது எதிர்பார்ப்பு...

நான் முன்னரே கொடுத்துவிட்டேன்.

மீண்டும்... வர்ணம்...



திராவிடம், திராவிடன் என்பதற்கான வரையறை எதையும் இதில் காணவில்லை. சம்பந்தமின்றி எதை, எதையோ எழுதுகிறீர்கள்.

செல்வன் நான் தொடர்பின்றி எழுதவில்லை. என் மீது திருப்பாதீர்கள் .

இழையைத் தொடங்கியவர் நீங்கள்...

இது போன்ற இழைகளைத் தொடங்கினால்  என்ன ஆகும் என்பதும் உங்களுக்கும் தெரியும்...

///பெரியார் தான் திராவிடன் என்றால் என்ன பொருள் என அறியாது அந்த பெயரை பிராமணலோதோரை குறிக்க பயன்படுத்தினார்.///

என்று அவர் மீது குற்றம் சொன்னீர்கள்.

அவர் தவறு செய்யவில்லை நூலில் இருப்பதை திரும்பிச் சொன்னார் என்று விளக்கம் கொடுத்தேன்.

தேமொழி

unread,
Mar 18, 2018, 9:22:49 PM3/18/18
to மின்தமிழ்


On Sunday, March 18, 2018 at 6:01:05 PM UTC-7, செல்வன் wrote:
வர்ணம் என்பது என்ன?

பிராமணர் யார், சூத்திரர் யார்?

இதெல்லாம் வேலை வெட்டி இல்லாத வாதம். வடமொழி நூல்கள் இம்மாதிரி முட்டாள்தனங்களை பேசலாம். தமிழ் இலக்கியங்களில் இதற்கு எதேனும் சான்றுகள் உள்ளனவா? எனக்கு தெரிந்து கிடையாது. தமிழ் பார்ப்பனர்கள் இம்மாதிரி வடமொழி இலக்கியங்களில் உள்ளது போல முட்டாள்தனமாக எதையும் எழுதி வைக்கவில்லை.


கொஞ்சமும் காலம் கடந்து பயணியுங்கள் 

திருப்பாணாழ்வார் திருநாளைப்போவார் வரலாறுகளை வடமொழியில் இருந்து தமிழர் கடன் வாங்கினார்களா?

செல்வன்

unread,
Mar 18, 2018, 9:23:05 PM3/18/18
to mintamil
2018-03-18 20:20 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:


On Sunday, March 18, 2018 at 6:11:23 PM UTC-7, செல்வன் wrote:


2018-03-18 20:05 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:


On Sunday, March 18, 2018 at 5:54:12 PM UTC-7, செல்வன் wrote:
வர்ணத்துக்கும் திராவிடம் எனும் வரையறைக்கும் என்ன சம்பந்தம்?

தொடர்ந்து படிக்க வேண்டும்.... துண்டு துண்டாக்கப் படிக்கக் கூடாது...

பாடங்கள் அடிப்படையைச் சொல்லிவிட்டு அதன் மீது கட்டமைத்து தொடர்ந்து நடத்தகப்படுவதுதானே வழக்கம்..

மேல்நிலை பாடம் படிப்பவருக்கு அடிப்படை புரிந்திருக்கும் என்பது எதிர்பார்ப்பு...

நான் முன்னரே கொடுத்துவிட்டேன்.

மீண்டும்... வர்ணம்...



திராவிடம், திராவிடன் என்பதற்கான வரையறை எதையும் இதில் காணவில்லை. சம்பந்தமின்றி எதை, எதையோ எழுதுகிறீர்கள்.

செல்வன் நான் தொடர்பின்றி எழுதவில்லை. என் மீது திருப்பாதீர்கள் .

இழையைத் தொடங்கியவர் நீங்கள்...

இது போன்ற இழைகளைத் தொடங்கினால்  என்ன ஆகும் என்பதும் உங்களுக்கும் தெரியும்...

///பெரியார் தான் திராவிடன் என்றால் என்ன பொருள் என அறியாது அந்த பெயரை பிராமணலோதோரை குறிக்க பயன்படுத்தினார்.///

என்று அவர் மீது குற்றம் சொன்னீர்கள்.

அவர் தவறு செய்யவில்லை நூலில் இருப்பதை திரும்பிச் சொன்னார் என்று விளக்கம் கொடுத்தேன்.



ஆனால் அந்த நூலில் அப்படி எதுவும் சொல்லப்படவில்லையே?

எல்லா திராவிடரும் சூத்திரர்கள் என எந்த நூலில் குறிப்பிடபட்டுள்ளது என காட்டவும்.


 செல்வன்

செல்வன்

unread,
Mar 18, 2018, 9:25:14 PM3/18/18
to mintamil
2018-03-18 20:22 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:


On Sunday, March 18, 2018 at 6:01:05 PM UTC-7, செல்வன் wrote:
வர்ணம் என்பது என்ன?

பிராமணர் யார், சூத்திரர் யார்?

இதெல்லாம் வேலை வெட்டி இல்லாத வாதம். வடமொழி நூல்கள் இம்மாதிரி முட்டாள்தனங்களை பேசலாம். தமிழ் இலக்கியங்களில் இதற்கு எதேனும் சான்றுகள் உள்ளனவா? எனக்கு தெரிந்து கிடையாது. தமிழ் பார்ப்பனர்கள் இம்மாதிரி வடமொழி இலக்கியங்களில் உள்ளது போல முட்டாள்தனமாக எதையும் எழுதி வைக்கவில்லை.


கொஞ்சமும் காலம் கடந்து பயணியுங்கள் 

திருப்பாணாழ்வார் திருநாளைப்போவார் வரலாறுகளை வடமொழியில் இருந்து தமிழர் கடன் வாங்கினார்களா?




அவை வருணத்தை எதிர்த்து நின்ற தமிழ் வைணவர்கள், சைவர்களின் கதை அல்லவா? வருணத்தை அவை ஆதரிக்கவில்லையே? மறுக்கதனே செய்துள்ளன?

--

செல்வன்

தேமொழி

unread,
Mar 18, 2018, 9:29:10 PM3/18/18
to மின்தமிழ்
43. But in consequence of the omission of the sacred rites, and of their not consulting Brahmanas, the following tribes of Kshatriyas have gradually sunk in this world to the condition of Sudras;

44. (Viz.) the Paundrakas, the Kodas, the Dravidas, the Kambogas, the Yavanas, the Sakas, the Paradas, the Pahlavas, the Kinas, the Kiratas, and the Daradas.
 


 செல்வன்

தேமொழி

unread,
Mar 18, 2018, 9:30:03 PM3/18/18
to மின்தமிழ்
கடவுளுடன் கலந்துவிட்டவர்கள்.

 

--

செல்வன்

செல்வன்

unread,
Mar 18, 2018, 9:32:51 PM3/18/18
to mintamil
the following tribes of Kshatriyas ட்டும் தானே சூத்திரர் ஆனார்கள் என குறிப்பிடபட்டுள்ளது?

திராவிடரில் உள்ள வைசியர் கூட சூத்திரர் ஆனதாக கூறபடவில்லையே?

இதற்கான விளக்கமும் அம்பேத்கர் அளித்த்ள்ளார். 




செல்வன்

iraamaki

unread,
Mar 18, 2018, 11:44:41 PM3/18/18
to mint...@googlegroups.com
திராவிட என்ற சொல்லுக்கு 2 பொருள்களுண்டு. ஒன்று தமிழர். இன்னொன்று தமிழிய மொழிக்குடும்பத்தார். முதற்பொருளைப் புரிந்துகொள்ள ஒலிமாற்றங்களைத் தெரிந்துகொள்ளவேண்டும். தமிழர் என்பதைப் பாலியும் பாகதமும் த3மிலோ/த3மிளோ என்று சொல்லும். அதைச் சங்கதம், த்3ரமிளோ என்றாக்கும். வடக்கே சிலபகுதிகளில் இதை த்3ரமிடோ என்றுஞ்சொன்னார். மகரமும் வகரமும் இந்தியாவின் பலவிடங்களில் போலிகள். எனவே த்3ரமிடோ/த்3ரமிட என்பது த்3ரவிட ஆனது. பின் அகரம்நீண்டு த்3ராவிட என்றுமானது. (த்3ரவிட>தமிழ என்று பலகாலம் தலைகீழ்ப்பாடஞ் சொன்னதை இப்பொழுது பலருஞ் சொல்வதில்லை. ஒருவாறாகத் தமிழ>த்3ரவிட என்ற சரியான பாடத்திற்கு வந்துள்ளார். இப்பாடத்திற்கு வரவே கிட்டத்தட்ட 100 ஆண்டு பிடித்திருக்கிறது.)
 
மலையாளம் எழுமுன்னர், தமிழ், கன்னடம், தெலுங்கு, மராட்டியம், கூர்ச்சரம் ஆகிய மொழிபேசுவோர் பொதுவான மொழிமரபு கொண்டவரென்றே எண்ணப்பட்டார். (இப்படி ஒரு புரிதல் படித்தவரிடம் இருந்ததை கால்டுவெல் ஏற்று முன்னுரைத்தார். இதை அவரே சொன்னாரென்பது இற்றை இந்துத்துவவாதிகளில் இழிகூற்று.) இன்று கூர்ச்சரமும், மராட்டியமும் இந்தையொரோப்பிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தன என்றுகூறப்பட்டாலும், இவற்றுள் தமிழ், கன்னடம், தெலுங்கின் மொழிக்கூறுகள் இருப்பதைப் பலரும் சொல்லியுள்ளார். பார்ப்பனரில் பஞ்சதிராவிடர் என்றுகூற்று இவ் அடிப்படையில் தான் வந்தது. தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகியவற்றுள் தமிழே மூத்தது என்பதால் மேற்சொன்ன தமிழ>த்3ரவிட என்றமுறையில் தமிழியக்குடும்பம் என்றே உரைத்தார். இதன்தொடக்கம் குமரிலபட்டரில் உள்ளது. குமரிலபட்டர் சொல்லாததைக் கால்டுவெல் சொல்லவில்லை. இந்துத்துவவாதிகள் கால்டுவெல்லைச் சாடுவதற்கு மாறாய்க் குமரிலபட்டரையும், ஆதிசங்கரரையும் சாடலாம். ஏனெனில் திராவிட என்பது ஆதிசங்கரரால் சொல்லப்பட்டது.
 
மனுநீதி திராவிடரைச் சூத்திரரிற் சேர்த்தது வேறு கதை. அதைக் கண்டு வெதும்பியே பெரியார் சொன்னார். சாடுவதாயிருந்தால் மனுநீதியைச் சாடவேண்டும். பெரியாரைச் சாடுவதிற் பொருளில்லை.  மனுநீதி சொன்னதைப் பெரியார் மீள உரைத்து, “இதை ஏற்கவேண்டுமா?” என்று கேள்வியெழுப்பினார். அவர் சொன்ன முறைகளில் பலருக்கும் வருத்தமிருக்கலாம். ஆனால் கேள்விகேட்டது தவறே இல்லை. மனுநீதியை, அதையொட்டிய கருத்துக்களைத் தாங்கள் ஏற்கவில்லை என்றுசொல்லிவிட்டு, அடுத்தவேலையைப் பார்க்கலாம். வீணாக திராவிடரென்ற சொல்லைத்திட்டி, பெரியாரைத்திட்டிப் பொழுதைப் போக்கவேண்டாம். தான்பிடித்த முயலுக்கு மூன்றுகாலென்று அடம்பிடிக்கவேண்டாம்.
 
அன்புடன்,
இராம.கி. 
 
Sent: Sunday, March 18, 2018 9:55 PM
Subject: Re: [MinTamil] திராவிடர் என்றால் யார்?
 
 
 
2018-03-18 2:18 GMT-05:00 iraamaki <p...@giasmd01.vsnl.net.in>:
http://valavu.blogspot.in/2006/04/blog-post.html படியுங்கள். 12 ஆண்டுகளுக்கு முன் எழுதியது. இப்பொழுது சற்று மாறுபடுவேன். சில திருத்தங்கள் செய்யலாம். இருப்பினும் முந்தையப் பதிவு என்பதால் மாற்றாதிருக்கிறேன். சில விதயங்களை இன்னும் விரித்து எழுதலாம். அடிப்படை ஒன்றுதான்.
 
நான் தமிழன்
நான் திராவிடன்
நான் இந்தியன்
 
இந்த மூன்றும் ஒன்றிற்கொன்று முரண்பட்டவையல்ல. மூன்றும் மூவேறு வட்டங்கள்.  இதில் ஏதொன்றை உடைத்தாலும் எனக்கு அது குறையாகவே தென்படும்.  இந்துத்துவர் முதலிரண்டு வட்டங்களை உடைக்க முயல்கிறார். அதை நான் ஏற்கேன்.
 
அன்புடன்,
இராம.கி.
 
 
 
 
 
நன்றி ஐயா. நானும் அதையே ஒப்புகொள்கிறேன். இலக்கியங்களில் உள்ளது போல தென்னிந்தியாவில் வசிக்கும் அனைத்து மக்களையும் குறிக்கும் சொல்லா திராவிடர் எனும் சொல்.
 
தவறான முறையில் இச்சொல் புரிந்துகொள்ளபடுவது தான் வருத்தம் அளிக்கிறது.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

nkantan r

unread,
Mar 18, 2018, 11:45:01 PM3/18/18
to மின்தமிழ்
I really don't know why we bring periyar, manu-sutra in all threads?

Periyar is only partially relevant in current times of caste-ridden and superstitious Tamil society. Manu is now only a historical reference. I have repeated times and again, that even in earlier times kings or brahmins had little use for manu.

Because Europeans first hit upon manu and translated it, many started reading and realised how discriminatory it is in current times.

Now coming to the issue of dravida, it is mischevious to ask for a certified map with borders and named Dravidam. There never existed an India and never a Dravidam. Both are concepts.

Dravidam has two relevant connotations. One related to language, to define languages as different from Indo-aryan. This is a huge group with Telugu at the maximum count (based on users) and Tamil at pivotal role ( based on its antiquity and wealth of literary content). Physically this spreads from sri-lanka to baloch and west Bengal (look at the census figures)

With four languages as base physically, now it represents TN, Kerala, Karnataka, andhra, telengana and parts of Maharashtra.

(Marathi or Oriya are indo-aryan deriving out of prakrit languages. But certainly Marathi is highly dravidianised in structure but retains three-gender divisions. ).

Connecting Dravidian to deccan is in early 1920s thus producing the idea of 'south of vindhya'. But Tagore is clear separating maratha and Dravidam.

rnk


nkantan r

unread,
Mar 18, 2018, 11:48:19 PM3/18/18
to மின்தமிழ்
By the way the idea of vindhya range itself is a concept as there is no continuous range called vindhya mountains !!!!

rnk

இசையினியன்

unread,
Mar 19, 2018, 1:38:27 PM3/19/18
to மின்தமிழ்
திராவிடம் என்பது ஒரு கொள்கை அவ்வளவே. திராவிடம் கொள்கை என்றால் திராவிடர் என்பதும் கெள்கையாகவே இருக்கிறது.

எப்படி உலகம் தோன்றியது எனக் கேட்டால்; பலரும் ஒவ்வொரு கொள்கையைக் குறிப்பிடுவர், உலகத் தோற்றம் பற்றிய கொள்கையில் பெருவெடிப்புக் கொள்கையும் ஒன்று அல்லவா? அது போன்றதுதான் திராவிடம் என்பதும். உண்மையில் அது இருப்பதாகத் தெரியவில்லை.

எப்படி தமிழர் அனைவரும் இந்துக்கள் எனக் கூறுவது பொய்யாக இருந்தாலும் கேட்க வேண்டிய தலையெழுத்தும், சாதிப் பெயருடன் இந்து என எழுதுவதும் நாம் செய்ய வேண்டிய கட்டாயமாக இருக்கிறதோ அது போன்றதே திராவிடம்.

தமிழர் மதங்களுக்கு அப்பாற்பட்டவர். வரலாறு அவ்வாறுதான் கூறுகிறது. தமிழருக்கு சமயம் என்ற ஒன்று இருந்திருக்கிறது. மதம் என்ற ஒன்று முளைகட்டப்பட்டு நாம் உண்ணும் உணவில் கலக்கப்பட்டுள்ளது. அறுசமயம், புத்தசமயம், சமணசமயம்; பெருங்காப்பியங்களும், சிறுங்காப்பியங்களும் பல சமயங்களைக் கூறுகின்றன. மணிமேகலை பல வழிபாடுகளுக்கிடையே பயணிக்கிறது. ஆனால் எங்கும் இந்துவையோ, திராவிடத்தையோ பார்க்க முடியவில்லை.

திராவிட மொழிகள் என்பது ஒரு குடும்ப மொழிகள். அது வரையறை மட்டுமே.

திராவிடர் என்பது ஒரு அரசியல் சிந்தாந்தம் என்றே தோன்றுகிறது. மொழிவாரியாக மாநிலம் பிரிக்கப்பட்ட போதும் தமிழ்நாட்டைக் காண முயற்றோர், தமிழ் முன்னேற்றக் கழகத்தை ஒருபோதும் உருவாக்க முயலவில்லை என்பது வரலாறு.

இங்கு காணும் மக்களை திராவிடர் எனும் கொள்கையுள் கொண்டு வந்து அரசாள முயலும் முயற்சி, என்று கூடக் கூறலாம். அதுவும் நன்மைக்கே! தமிழ்நாட்டு அரசியலில் மக்கள்பிரிவினையை, ஏற்படுத்த அவர்கள் விரும்பவில்லை, என்பது மேன்மையான நோக்குடையது என்பது தெரிவு. மதம்பற்றி அவர்கள் நேரடியான அரசியலை நடத்தத் துணியவில்லை, மறைமுகமாக நடத்தியிருக்கலாம்.

இந்தவகையில்தான் தற்காலத்தில் தமிழ்நாட்டில் மதம் எனும் வெற்றிடத்தை நிரப்ப நேரடியான அரசியல் நடத்த முயற்சிகள் நடைபெருகிறது. திராவிடம் எனும் வரையறையுள் இதுவரை இருந்த தமிழ்நாட்டு மக்களை; மொழிப்பெயர் கொண்டு பிரித்தாள நினைக்கும் அரசியல் முன்னெடுப்புகளையும் பார்க்க முடிகிறது. தமிழ்நாட்டில் மொழிவாரி இடஒதுக்கீடு என்பது புதிய அரசியல்வாதியின் யுக்தியாவதையும் பார்க்க முடிகிறது. தமிழ்நாடுவாழ், பிறமொழியும் பேசும் மக்களை நோக்கிய; இந்து எனும் ஆயுதம் இருப்பதையும் பார்க்க முடிகிறது.

ஆனால் தமிழரின் அடிப்படை வழிபாட்டில் இந்துவத்தை ஒரு துளிகூட காண முடியவில்லை. அய்யனார் கருப்பசாமி அணுத்தியம்மன் பெத்தனாட்சி மதுரைவீரன் சடையாண்டி என பலர். இவர்களில் ஒருதுளிகூட திராவிடத்தையோ, ஆரியத்தையோ காண முடியவில்லை. சதுரகிரி வாழ் சிவன், குன்றுகள் வாழ் முருகன் இவர்களில் திராவிடத்தையோ ஆரியத்தையோ காண முடியவில்லை. ஒவ்வொரு ஊரிலும் இருப்பவர்களுக்கு அவரவரை பெற்ற அம்மா தவிர ஊருக்கே அவ்வூரில் பாட்டன் முதல் தற்கால நாம் வரை அனைவருக்கும் அம்மாவாக'அம்மனாக இருக்கும் மாரி, காளி, சூளி, கன்னிமார் இவர்களிலும் திராவிடத்தையோ ஆரியத்தையோ காண முடியவில்லை. ஆனால் தமிழைக் காண முடிகிறது.தமிழரைக்காண முடிகிறது. தமிழ் என்றால் மேற்கு தொடர்ச்சி மலைகளில் இன்றும் பெயர் தெரியாத மொழியாகளாக வாழும் தமிழையும் கூறுகிறேன். தமிழர் வழிபாடுகள், சில இந்துவழிபாடாக எப்படியோ மாற்றம் அடைந்துள்ளன. வருவாய் ஈட்டும் கோயில்களில், இந்த மாற்றத்தை அப்பட்டமாகக் காண முடியும், எப்படி அது ஆரியமாக விரிகிறது என்பதையும் காண முடிகிறது.

இறுதியாக நீங்கள் கேட்டு இருக்கும் கேள்வி தமிழை தாய் மொழியாகக் கெண்ட ... என கேட்கிரீர். தங்களின் கேள்வியிலே இருக்கிறது பதில். ஒருவரின் தாய் மொழி தமிழ் என்றால் அவர் தமிழராகவே இருப்பார்.

தமிழராக இருக்க, ஒரே ஒரு பதில் மட்டும் ஒருவரின் பதிலாக இருக்க வேண்டும் என்னவென்றால், உன் தாய் மொழி எது என்றால்? தமிழ். என்றால் அவர் தமிழராகவே இருப்பார். அவர் சிலர் கேட்குறபடி திராவிடராகவோ, சிலர் சொல்லுரபடி பார்..ராகவோ இருக்க மாட்டார்கள் என்பது தெளிவு.


உன் தாய்மொழி எது என உங்களுக்கு மிகத் தெரிந்த நபரிடம் கூட கேட்டுப்பாருங்கள்; பதில் அதிர்ச்சியாகக் கூட இருக்கலாம்.

-----
திராவிடம் என்பது விந்திய மலைக்கு தெற்கே இருக்கும் நிலப்பரப்பு

திராவிட மொழிகள் என்பவை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகியவை

திராவிடர் என்பது இந்த நிலப்பரப்பில் வாழ்ந்து இம்மொழிகளை பேசும் மக்கள்.

இது நான் புரிந்துகொண்ட வரையறை. ( இது தவறு என்றால் சரியான வரையறை என்ன என கூறவும்.)

இந்த வரையறையின்படி தமிழை தாய்மொழியாக கொண்ட பார்ப்பனர்கள் திராவிடர்கள் என்ற வரையறையுல் அடங்குவார்கள் என்பது சரியா, தவறா?

பதில் தெரிந்தவர்கள் விளக்கவும்.

நன்றி

--

செல்வன்

தேமொழி

unread,
Mar 19, 2018, 2:01:28 PM3/19/18
to மின்தமிழ்

On Mon, Mar 19, 2018 at 2:16 AM, Tthamizth Tthenee <rkc...@gmail.com> wrote:
ஆரியர்களான நாம் வந்தேறிகள்  தமிழர்கள் அல்ல  என்று சொல்கிறார்களே

ஆமாம் நீங்கள் யாரை  தமிழா  என்று விளித்து    விழித்திரு  செயல்படு என்கிறீர்கள்?

அன்புடன்
தமிழ்த்தேனீ


நன்றி ஜெயபாரதன் ஐயா, மேலுள்ள பதிலை கவனத்திற்குக் கொண்டு வந்ததற்கு....

இப்பொழுது செல்வனின் இழைக்கும் உங்கள் இழைக்கும் பதில் கிடைத்துவிட்டது.


ref:  https://groups.google.com/d/msg/mintamil/jgKhZf9GxII/ters9XS-CgAJ

On Saturday, March 17, 2018 at 11:40:56 PM UTC-7, செல்வன் wrote:
திராவிடம் என்பது விந்திய மலைக்கு தெற்கே இருக்கும் நிலப்பரப்பு

திராவிட மொழிகள் என்பவை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகியவை

திராவிடர் என்பது இந்த நிலப்பரப்பில் வாழ்ந்து இம்மொழிகளை பேசும் மக்கள்.

இது நான் புரிந்துகொண்ட வரையறை. ( இது தவறு என்றால் சரியான வரையறை என்ன என கூறவும்.)

இந்த வரையறையின்படி தமிழை தாய்மொழியாக கொண்ட பார்ப்பனர்கள் திராவிடர்கள் என்ற வரையறையுல் அடங்குவார்கள் என்பது சரியா, தவறா?
---------------
 
ref:  https://groups.google.com/d/msg/mintamil/_zScTn-ZtkM/GaW8uiZEDQAJ

பார்ப்பனர்களே எழுதி வைத்த சரித்திரங்களிலேயே எழுதியிருக்கிறார்களே, பார்ப்பனர்கள் இந்த நாட்டுக்குப் பிழைக்க வந்தவர்கள் என்று அவர்களே எழுதியிருக்கிறார்களே, ..............
 
---15-11-1953 இல் சென்னை வண்ணாரப்பேட்டையில் திராவிடர்கழகப் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் சொற்பொழிவு: "விடுதலை" 17-11-1953
---------------

From the horse's mouth:  "ஆரியர்களான நாம்"  
 
பெரியார் இதைத்தான் கேட்டார்?  நாமா சொல்கிறோம்.... அவர்கள்தானே சொல்கிறார்கள்  என்று. 

பிறர் சொல்வதை சுட்டிக் காட்டியவர் குற்றவாளியாக வழியே இல்லை. 

இது  21 ஆம் நூற்றாண்டில் கொடுக்கப்பட்ட  வாக்குமூலம்.

சென்ற நூற்றாண்டில் இது அதிகம்.  ஒரு சிலர் தங்களின் தோற்றம் நார்வே ஸ்வீடன் பகுதிவரை ஐரோப்பிய கண்டத்தின் வடக்கே தள்ளி பெருமை பேசிக் கொண்டார்கள்.  மகாத்மா ஜோதிபா கோவிந்த ராவ் புலே இதைச் சுட்டிக் காட்டி   உள்ளார்.  

நிற்க... 


பார்ப்பனர்  பார்ப்பனரல்லாதார் போராட்டம் தமிழ்நாட்டுக்கு மட்டும் உரியது அல்ல.  மகாராஷ்டிரமும் தமிழகம் போல முன்னணியில் இருந்தது.  

எனது பரிந்துரை மம்முட்டி நடித்த அம்பேத்கார் படத்தையாவது எல்லோரும் ஒருமுறை பார்த்து சென்ற நூற்றாண்டின் நிலையை அறிந்து கொள்ள வேண்டும்.

பலவகையில் உரிமை பறிக்கப்பட்ட மக்கள் நாடு முழுவதும் கிளர்ந்தெழுந்த காலம் அது.

தமிழகத்தில் பெரியார் முன்னணியில் அது வீறு கொண்டது.



பெரியார் எதிர்க்கேள்வி கேட்டது ரேசிசம் என்றால் "பார்ப்பனர்  பார்ப்பனரல்லாதார் போராட்டம்" நடத்தியவர் யாவரும் ரேசிஸ்ட்கள் என்று ஏற்றுக் கொள்ள வேண்டும்.. விதிவிலக்கு கிடையாது. 

ரேசிஸ்ட் நடவடிக்கையை எதிர்த்து உரிமைக் குரல் எழுப்பியவர்களையே  ரேசிஸ்ட் என்று அழைத்தால் எனக்கும் சிரிப்புதான் வருகுதையா 


உண்மை அறிந்தாய் தமிழா! விழித்திரு! செயல்படு!

பீரியட். 



***குறிப்பு:  இந்தப் பதிவு அந்த இழைகளிலும் பகிரப்படும். 

..... தேமொழி




 

அன்புடன்

தமிழ்த்தேனீ

செல்வன்

unread,
Mar 19, 2018, 2:38:44 PM3/19/18
to mintamil
From the horses mouth?


நான் என்னை கடவுள் என கூட சொல்லிகொள்லலாம். அதனால் நான் கடவுள் ஆகிவிடுவேனா?

தமிழ்நாட்டு பிராமணர் ஆரியர் என சொல்வதற்கு எந்த எவிடென்சும் இலக்கியரீதியில், ஜெனடிக் ரீதியில், அறிவியல் ரீதியில் கிடையாது

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--

செல்வன்

Pitchai Muthu

unread,
Mar 19, 2018, 2:48:01 PM3/19/18
to mintamil

தாங்கள் கூறும் தமிழ்நாட்டு பிர.....ர் அவர் தாய் மொழி எது ஐயா?

You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/jgKhZf9GxII/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

செல்வன்

unread,
Mar 19, 2018, 2:56:24 PM3/19/18
to mintamil
2018-03-19 13:47 GMT-05:00 Pitchai Muthu <pitchaim...@gmail.com>:

தாங்கள் கூறும் தமிழ்நாட்டு பிர.....ர் அவர் தாய் மொழி எது ஐயா?



தமிழ்
 
--

செல்வன்

nkantan r

unread,
Mar 19, 2018, 3:39:15 PM3/19/18
to மின்தமிழ்
திருநெல்வேலி, மதுரை, கோவை, வேலூர் மாவட்டங்களில் நான் பார்த்தது. கீழ்ஜாதி தமிழன் என ஒரு சாராரை ஒதுக்கியும், கேவலப்படுத்தியும் வைத்திருப்பது, நீங்கள் ஆரியன் என வசைபாடும் பார்ப்பனர் அல்ல. தமிழனே.

3% தானே, சைவ உணவு க்காரன், இயல்பாக தொடை தட்டி பேச மாட்டான் என்ற soft target.

படிப்பினாலும், adaptability யாலும் மேலே இருக்கிறாநே என்ற நமைச்சலாலும் (1930-1960) வரை அவனை அடித்து பார்த்து..

மற்ற 18% 24% ஆட்களிடம் பருப்பு வேகவில்லை. இப்பொழுது ஜாதி பார்ப்பவன் பார்ப்பனன் இல்லை.

அவன் வேறே, வேறே..

அதனால்தான் இன்னும் தமிழ்நாட்டில் ஜாதி வித்தியாசம்..

rnk

Pitchai Muthu

unread,
Mar 20, 2018, 12:33:55 AM3/20/18
to mintamil

தமிழ் என்றால் தமிழர் என்றுதானே சொல்லிக்கொள்ள வேண்டும். பிறகு ஏன் பிர...ர் என்று கூறுகிறீர்?

தமிழை தாய்மொழி எனக் கொண்டோர் அனைவரையும் தமிழர் என்றல்லவா கொள்ளல் தக்கது!

அவர்களை தமிழர் என்று அழையுங்கள், யாரும் அவர்களிடம் கேட்டால் பிர...ர் என்றால் அங்கு விரிகிறது பிரிவினை. சாதி என்பது தமிழ்சமுதாயத்தில் இருந்தும், சாதி வேற்றுமையை அரசு ஏடுகளில் இருந்து நீங்கும் வரை, இருந்தோர் வந்தோர் என்றே கூறுவர்.

அவர் தமிழர் என்று மார் தட்டிக் கொண்டால் தமிழராகவே கருதப்படுவர்.

திராவிடர் என்பது ஒரு ஒரு மாயை. அது உருவாக்கப்பட்டது.

தனித்தமிழகராதிக்களஞ்சியம்:
https://thanithamizhakarathikalanjiyam.github.io

--

தேனீ

unread,
Mar 20, 2018, 2:45:11 AM3/20/18
to மின்தமிழ்
அப்புறம் எதற்காக வைதிகத்தை தமிழர் மீது ஏற்றி அந்த காலம் முதல் இந்த காலம் வரை மகிழ்ந்து வருகின்றீர்கள்?

வைதிக கோட்பாடுகள் மற்றும் நெறிகளுக்கும் தமிழருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஏற்றுக் கொண்டால் முடிந்தது அல்லவா பிரச்சனை.

திராவிடரின் எல்லைப் பகுதியைப் பிரித்துக் கூறிய சிவாகமச் சான்று ஒன்றை முன்னமே மின் தமிழில் குறித்துள்ளேன்.

ஆகையால் திராவிடம் என்பதும் ஒரு குறிப்பிட்ட எல்லை பகுதிக்குள்ளான பூர்விக மக்களைக் குறிக்கும் சொல். இதை ஆரியர் எவ்வாறு எடுத்துக் கொண்டனர் என்பது ஆய்வுக்குறியது. திராவிடப் பகுதியில் வாழும் மக்களை எத்தன்மையுடையோர் என்று அவர் குறிப்பிடுவதிலிருந்து உண்மையை அறிந்துகொள்ள இயலும்.

Thenee MK

unread,
Mar 20, 2018, 5:27:18 AM3/20/18
to mintamil
மேற்கூறிய கருத்துக்குச் சான்றாக இத்துடன் காமிக ஆகமத்தின் பூர்வ பாகத்திலிருக்கும் 49-வது அத்தியாயத்தை இணைக்கிறேன்.

அதில் இந்திய நிலப்பகுதியை ஆறாகப் பிரித்து அதில் ஒன்றை திராவிட பகுதியாக குறிப்பிட்டுள்ளதைக் காண்க.

இப்பொழுது திராவிடம் என்பது ஒரு நிலப்பகுதி என்பதும் திராவிடர் என்பது அப்பகுதியில் வாழும் மக்களைக் குறித்தச் சொல் என்றும் புரியும்.

அடுத்து ஒரு பக்கத்தில் 'the hymns composed in dravida-language and its dialect should be sung" என்று குறிப்பிட்டதலிருந்து அது திராவிட மக்களின் மொழியில் இயற்றப்பட்ட பாமாலை என்பது புரியும். இன்று சிவாகமத்தின் உபயோகம் தமிழ் நாட்டு வட்டத்திற்குள் அடங்கி விட்டது. தமிழ் நாட்டுக்கு வெளியே வெகு சில கோயில்களிலேயே சிவாகம நெறி பின்பற்றப்படுகின்றது. அப்புறம் திராவிடம் என்பதும் திராவிட மொழி என்பதும் எந்த நிலப்பரப்பைக் குறித்தது? தமிழ் நாடல்லவா. தமிழ் மொழியைல்லவா. இதற்கு மேலும் என்ன விதண்டாவாதம் வேண்டிக் கிடக்கு?

ஆரியர் அவர்தம் நூலில் தமிழரை திராவிடர் என்றோ சூத்திரர் என்றோ எழுதி வைத்திருந்தால் அது அவர்தம் பாடு. அதை எம்மீது ஏத்தாதே என்பதுதான் கருத்து. ஆரியக் கருத்தை அக்காலத்தில் தமிழர் மீதும் தெலுங்கு மக்கள் மீதும் ஆரிய பண்பாட்டையுடைய பிராமணர் வலுகட்டாயமாக ஏத்தியதால்தானே திராவிடர் என்ற பிரிவினை வாதம் பிறந்தது. அதை பெரியார் தாழ்த்தப்பட்டோர் என்று கூறினார் என்றால் அன்று அக்காலத்தில் தமிழரையும் தெலுங்கரையும் ஆரிய பிராமணர் அவ்வாறுதான் கண்டனர். இதற்கு போய்  பெரியாரை குறை கூறுவானேன்? அம்பு எய்தவன் இருக்க அம்பை நோவாணேன்? என்னையா அநியாயம் இது. படித்தவரும் கூட சில நேரங்களில் உண்மையை மறந்து ஏதோ மலையைப் பார்த்துக் குரைத்தது போல் குரைப்பதேன்?

அன்று இருந்த சூழ்நிலையில் திராவிடர் என்பது எந்த பிராமணரையும் குறிக்கவில்லை. ஒரு நிலப்பரப்பில் வாழ்ந்த மக்களைக் குறித்ததாகும். அவன் பிராமணா அல்லது சூத்திரனா, முசுலிமா, கிறித்துவனா என்று கூட சொல்லவில்லை. அப்புறம் எதற்கு திராவிடர் யார் என்பதில் மயக்கம்? 

201803201645.pdf

தேமொழி

unread,
Mar 20, 2018, 5:40:53 AM3/20/18
to மின்தமிழ்
நன்றி ஐயா.


இந்தப் பகுதியையும் இங்கே கொடுக்கிறேன்.

நூலில் கொடுக்கப்பட்ட  

Title: A Literary and Historical Atlas of Asia
Author: J. G. Bartholomew

Source: 

நூலுக்கே சென்று 

ASIA
RACES

ASIA
RELIGIONS
John Bartholomew & Co., Edinr

ARYAN LANGUAGES
OF INDIA
Bartholomew Edinr

NON-ARYAN LANGUAGES
OF INDIA
Bartholomew Edinr

என்ற படங்களைப் பார்க்கவும்.




..... தேமொழி

Thenee MK

unread,
Mar 20, 2018, 9:38:15 AM3/20/18
to mintamil
நன்றி தேமொழி.

படித்து விட்டு தேவையேற்பட்டால் எமது கருத்தைக் கூறுவேன்.

அன்புடன் மு. கமலநாதன்
 

S. Jayabarathan

unread,
Mar 20, 2018, 10:31:04 AM3/20/18
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, Aravindan Neelakandan, Oru Arizonan, Asan Buhari, Raju Rajendran, Anna Kannan
தமிழ்மேதை உ.வே.சா அவர்களுக்கு திராவிட வித்யபூஷண விருது, அவரைத் திராவிடர் என்று சொல்லவில்லை.  அவரைத் தெக்கண வித்யபூஷண மேதை என்று மெச்சுகிறது.

அதுபோல் ஞான சம்பந்தரைத் திராவிடச் சிசு என்றது, அவரைத் திராவிடர் என்று கூறவில்லை. மாறாகத் தெக்கணச் சிசு என்று பாராட்டுகிறது.

சி. ஜெயபாரதன் 

++++++++++++

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

தேமொழி

unread,
Mar 20, 2018, 10:36:46 AM3/20/18
to மின்தமிழ்
ஐயா!!! தமிழ்த்தாய் வாழ்த்தை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையைப் போல இனி கொடுக்கப்பட்ட பட்டங்களையும் மாற்றச் சொல்வீர்களா?  இதற்கு முதலில் நாம் நாட்டுப்பண்ணில் இருந்து துவங்கி இந்திய அரசிடம் செல்வோமே.

 குஜராட்ட மராட்டா தெக்கண உத்கல வாங்கவும் நன்றாக இருக்கிறது. 

..... தேமொழி 

N. Ganesan

unread,
Mar 20, 2018, 10:50:16 AM3/20/18
to மின்தமிழ், vallamai
2018-03-20 7:36 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
ஐயா!!! தமிழ்த்தாய் வாழ்த்தை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையைப் போல இனி கொடுக்கப்பட்ட பட்டங்களையும் மாற்றச் சொல்வீர்களா?  இதற்கு முதலில் நாம் நாட்டுப்பண்ணில் இருந்து துவங்கி இந்திய அரசிடம் செல்வோமே.

 குஜராட்ட மராட்டா தெக்கண உத்கல வாங்கவும் நன்றாக இருக்கிறது. 

..... தேமொழி 


On Tuesday, March 20, 2018 at 7:31:04 AM UTC-7, jayabarathans wrote:
தமிழ்மேதை உ.வே.சா அவர்களுக்கு திராவிட வித்யபூஷண விருது, அவரைத் திராவிடர் என்று சொல்லவில்லை.  அவரைத் தெக்கண வித்யபூஷண மேதை என்று மெச்சுகிறது.

அதுபோல் ஞான சம்பந்தரைத் திராவிடச் சிசு என்றது, அவரைத் திராவிடர் என்று கூறவில்லை. மாறாகத் தெக்கணச் சிசு என்று பாராட்டுகிறது.

சி. ஜெயபாரதன் 

++++++++++++


திராவிடம் என்றால் தெக்கணமா? Deccan?  உங்கள் புதிசான கருத்து. ஆதாரம் இல்லாதது. உ-ம்: குஜராத் (கூர்ச்சுரம்) தெக்கணத்திலா இருக்கிறது?

ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளேன். 1500 ஆண்டுகளாக திராவிடம் பொருள்பொதிந்த சொல்லாக இந்திய பாஷைகளிலே உள்ளது.

குஜராத்-சிந்து, மஹாராஷ்ட்ரம், ஆந்த்ரம், கருநாடகம், தமிழ்நாடு-கேரளா : இவற்றுக்கு பஞ்ச திராவிட தேசம் எனப் பெயர்.

நீங்கள் சொல்வது போல் மாற்றினால், த்ராவிட தேசம் என 1500 ஆண்டுகளாய் உள்ள பழைய மரபு மாற்றப்பட்டுவிடும்.

தாகூரின் இந்திய நாட்டுப் பண்ணிலோ, சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்திலோ உள்ள திராவிட என்ற வார்த்தை
வரலாற்றில் ஆழமான சொல். அதனை தெக்கணம் என்றோ வேறொன்றையோ மாற்றினால் பொருளிழந்துவிடும்.
பெ. சுந்தரனாரோ, தாகூரோ அவர்கள் பாட்டை மாற்றுவதற்கு ஒருபோதும் ஒப்புக்கொள்ளார். 

மிக முக்கியமான சொல்லாகிய திராவிடம் என்ற சொல் தமிழ்நாட்டு மாநிலக் கடவுள் வாழ்த்திலோ, 
பாரததேசிய கீதத்திலோ தொடரும்.

நா. கணேசன்
 

S. Jayabarathan

unread,
Mar 20, 2018, 10:51:43 AM3/20/18
to mintamil
நன்றாக உள்ளது.  நல்ல ஆலோசனை.  ஆரிய-திராவிடப் பிரிவு இல்லாமல் போகும்.  

கொடுத்த பட்டங்களை மாற்ற வேண்டாம். கொடுக்கப் பட்ட பட்டங்கள் "தெக்கண விருதுகள்" என்றால் ஏற்றுக் கொள்ளும் விளக்கம் கிடைக்கிறது.

சி. ஜெயபாரதன்

S. Jayabarathan

unread,
Mar 20, 2018, 10:52:56 AM3/20/18
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, Aravindan Neelakandan, Oru Arizonan, Raju Rajendran

ipohsaivite

unread,
Mar 20, 2018, 11:04:10 AM3/20/18
to mint...@googlegroups.com, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, Aravindan Neelakandan, Oru Arizonan, Asan Buhari, Raju Rajendran, Anna Kannan
இது குழப்பமா? அல்லது மடலாடுபவரை குழப்பும் முயற்சியா?



Sent from my Samsung Galaxy smartphone.
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/jgKhZf9GxII/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

ipohsaivite

unread,
Mar 20, 2018, 11:05:40 AM3/20/18
to mint...@googlegroups.com, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, Aravindan Neelakandan, Oru Arizonan, Asan Buhari, Raju Rajendran, Anna Kannan
எங்க ஊருல எருமை மாட்டை பசு என்றுதான் கூறுவோம்!

S. Jayabarathan

unread,
Mar 20, 2018, 11:14:12 AM3/20/18
to vallamai, tamilmantram, மின்தமிழ், vannan vannan, Aravindan Neelakandan, vaiyavan mspm
///திராவிடம் என்றால் தெக்கணமா? Deccan?  உங்கள் புதிசான கருத்து. ஆதாரம் இல்லாதது. உ-ம்: குஜராத் (கூர்ச்சுரம்) தெக்கணத்திலா இருக்கிறது?  ///

தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நற்றிரு நாடும் என்பதில் திராவிடமும் தெக்கணத்தில் உள்ளது என்ற விளக்கம் கிடைக்கிறது.  

தெக்கணமும் அதிற் சிறந்த செந்தமிழ் நற்றிரு நாடும் என்பது இன்னும் இனிக்கிறது.

திராவிடம் என்னும் பகுதியும், திராவிடர் என்ற இனமும், திராவிட நாடு என்ற புனைவு நாடும், சட்டப்படி இந்திய அரசியல் சட்டத்தில் இல்லவே இல்லை.

சி. ஜெய்பாரதன். 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

தேமொழி

unread,
Mar 20, 2018, 11:32:30 AM3/20/18
to மின்தமிழ்


On Tuesday, March 20, 2018 at 8:14:12 AM UTC-7, jayabarathans wrote:
///திராவிடம் என்றால் தெக்கணமா? Deccan?  உங்கள் புதிசான கருத்து. ஆதாரம் இல்லாதது. உ-ம்: குஜராத் (கூர்ச்சுரம்) தெக்கணத்திலா இருக்கிறது?  ///

தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நற்றிரு நாடும் என்பதில் திராவிடமும் தெக்கணத்தில் உள்ளது என்ற விளக்கம் கிடைக்கிறது.  

தெக்கணமும் அதிற் சிறந்த செந்தமிழ் நற்றிரு நாடும் என்பது இன்னும் இனிக்கிறது.

திராவிடம் என்னும் பகுதியும், திராவிடர் என்ற இனமும், திராவிட நாடு என்ற புனைவு நாடும், சட்டப்படி இந்திய அரசியல் சட்டத்தில் இல்லவே இல்லை.

நானறிந்து  national language என்பதும் கூடத்தான் சட்டப்படி இந்திய அரசியல் சட்டத்தில் இல்லவே இல்லை. 


..... தேமொழி 

nkantan r

unread,
Mar 21, 2018, 2:34:20 AM3/21/18
to மின்தமிழ்
ஆபஸ்தம்ப சூத்திரத்தில் தாலி பற்றி கூரியுள்ளதாகக் கேட்டுள்ளேன். விவரம்
தெரிந்தவர் யாராவது விளக்க வேண்டுகிறேன்.

PS.there is one more mythological story ( in Vishnu puraanam? need to check) where is apasthamba was born out of vishwamitra's sons migrating to south -dravidisthan. That is how mangal sutra came in brahmins marriage in addition to saptapathi??)

nkantan r

unread,
Mar 21, 2018, 2:37:47 AM3/21/18
to மின்தமிழ்
Wiki says about apastamba sutra:

https://en.m.wikipedia.org/wiki/Apastamba_Dharmasutra

See the reference to south India and rituals?

rnk

தேமொழி

unread,
Mar 24, 2018, 1:06:45 AM3/24/18
to மின்தமிழ்


On Tuesday, March 20, 2018 at 7:31:04 AM UTC-7, jayabarathans wrote:
தமிழ்மேதை உ.வே.சா அவர்களுக்கு திராவிட வித்யபூஷண விருது, அவரைத் திராவிடர் என்று சொல்லவில்லை.  அவரைத் தெக்கண வித்யபூஷண மேதை என்று மெச்சுகிறது.

அதுபோல் ஞான சம்பந்தரைத் திராவிடச் சிசு என்றது, அவரைத் திராவிடர் என்று கூறவில்லை. மாறாகத் தெக்கணச் சிசு என்று பாராட்டுகிறது.


கீழுள்ள செய்தி இன்றும் திராவிடம் என்ற சொல் புழக்கத்தில் உள்ளது ஆனால் அதைப் பயன்படுத்துபவர் கழக கட்சிகள் அல்ல என்றும், திராவிடம் என்றால் எப்பகுதி எனவும் தெளிவாக வரையறுக்கிறது. 
 


மக்களவைத் தேர்தலில் தென்னிந்தியாவில் காலூன்ற ரூ.4,800 கோடியில் ‘ஆபரேஷன் திராவிடம்’: தேசிய கட்சி மீது தெலுங்கு நடிகர் புகார்

Published :  23 Mar 2018  07:40 IST
Updated :  23 Mar 2018  07:40 IST



நடிகர் சிவாஜி

“வரும் 2019-ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில், தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகாவில் காலூன்ற ஒரு தேசிய கட்சி சதி செய்கிறது. இதற்கு ‘ஆபரேஷன் திராவிடம்’ என்று பெயர் சூட்டி ரூ. 4,800 கோடியை அந்த கட்சி ஒதுக்கியுள்ளது” என்று தெலுங்கு நடிகர் சிவாஜி குற்றம் சாட்டியுள்ளார்.

பிரபல தெலுங்கு நடிகர் சிவாஜி. இவர் தமிழில் ‘காதல் சுகமானது’ என்ற படத்தில் நடித்துள்ளார். ஏராளமான தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார், சில படங்களை தயாரித்துள்ளார். ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டபோது நடந்த போராட்டங்களில், மாநிலத்தைப் பிரிக்கக் கூடாது என குரல் கொடுத்தார். பாஜகவில் சேர்ந்து, மாநிலத்தை பிரித்த காங்கிரஸை கடுமையாக விமர்சித்து வந்தார். சில மாதங்கள் வரை எந்த கட்சியிலும் இல்லாமல் சமூக பிரச்சினைகளை மட்டும் சமூகவலைதளங்களில் சுட்டிக் காட்டி வந்தார்.

வீடியோ வெளியீடு

இந்நிலையில் நேற்று மாலை இவர், விஜயவாடாவில் செய்தியாளர்களை சந்தித்து ஒரு வீடியோவை வெளியிட்டு யார் பெயரையும் குறிப்பிடாமல் பேசியதாவது:

ஒரு தேசிய கட்சி, வரும் 2019-ல் நடைபெற உள்ள மக்களவை மற்றும் சில மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலில், தென்னிந்தியாவில் காலூன்ற பல சதிகளைச் செய்ய ‘ஆபரேஷன் திராவிடம்’ என பெயர் சூட்டியுள்ளது. தமிழகம், கேரளாவுக்கு ‘ஆபரேஷன் ராவணா’, ஆந்திரா, தெலங்கானாவுக்கு ‘ஆபரேஷன் கருடா’ கர்நாடகத்துக்கு ‘ஆபரேஷன் குமார்’ என அந்த தேசிய கட்சி பெயர் சூட்டி உள்ளது.

இந்த அரசியல் ஆபரேஷன்களை நடத்த ‘ஸ்லீப்பர் செல்ஸ்’ எனப்படும் ரகசிய நபர்கள் மூலம் அந்த கட்சி, 4 மாநிலங்களில் கடந்த 2017-ம் ஆண்டு முதலே அரசியல் காய்களை நகர்த்த தொடங்கிவிட்டது. இதனால் அந்த மாநிலங்களில் உள்ள கட்சிகளில் உட்பூசல் ஏற்படும். பலர் தாய் கட்சிகளில் இருந்து வெளியேறுவார்கள். பலர் புதிய கட்சிகளை தொடங்குவார்கள். மக்களைக் குழப்பும் பல தகவல்களை சமூக வலைதளங்கள் மூலம் பரப்புவார்கள். இதற்கென தனி அமைப்பையே அந்த தேசிய கட்சி உருவாக்கி உள்ளது. மேலும் அரசியல் ஆபரேஷனை வெற்றிகரமாக நடத்தி முடிக்க ரூ. 4,800 கோடியை அந்த கட்சி ஒதுக்கி செலவிட்டு வருகிறது.

இதில் சிலர் பணத்துக்காகவும், பதவிகளுக்காகவும் சக்கர வியூகத்தில் விழுந்து பலியாக உள்ளனர். குறிப்பாக ஆந்திராவில் பெரும் கலவரம் நடக்க உள்ளது. ஒரு எதிர்க்கட்சித் தலைவர் குண்டூர் அல்லது ஹைதராபாத்தில் தாக்கப்படுவார். இதற்காக ஒடிஷா, பீஹார் மாநிலங்களில் இருந்து கூலிப்படை வரவழைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை அரங்கேற்றிய பின்னர், ஆந்திராவில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் பணிகள் நடைபெறும். இதனை காரணமாக கொண்டு வரும் செப்டம்பரில் தற்போதைய ஆந்திர ஆட்சி கலைக்கப்படும்.

முதல்வர் சந்திரபாபு நாயுடு மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் பல வழக்குகள் பதிவாகும். ஒரு கட்டத்தில் சிபிஐ விசாரணைக்கு கூட உத்தரவிடப்படும். இதன் மூலம் தெலுங்கு தேச கட்சிக்கு அவப்பெயரை உருவாக்க அந்த தேசிய கட்சி திட்டம் தீட்டியுள்ளது. மேலும் சந்திரபாபு நாயுடுவை பொருளாதாரரீதியாகவும் நிலை குலைய செய்யவும் திட்டம் தீட்டியுள்ளது.

புதிதாக கட்சி தொடங்கி, தேர்தலை சந்திக்காத ஒரு கட்சி தலைவரையும் தேசிய கட்சி விட்டு வைக்க வில்லை. அவர் விரைவில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்குவார். இதற்கு அடிபணிந்தது போல், தேசிய கட்சி ஒரு சிறப்பு நிதியை ஆந்திராவுக்கு வழங்கும். இவரை உபயோகப்படுத்தி கொண்டு அடுத்த தேர்தலில் இவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்க பேரமும் பேசப்பட்டுள்ளது. இறுதியில், சட்டப்பேரவைத் தேர்தல் நடந்த பின்னர், தற்போதைய எதிர்க்கட்சி, புதிய கட்சியுடன் இணைந்து தனது கட்சியை சேர்ந்த ஒரு மூத்த அரசியல்வாதியை ஆந்திராவின் முதல்வராக நியமிக்கும்.

கடந்த 6 மாதங்களாக நான் டெல்லியில் தங்கி இருந்தபோது, அந்த ஸ்லீப்பர் செல்லில் உள்ளவர்களில் ஒருவர் இந்த தகவல்களை எனக்கு தெரிவித்தார். ஆனால், இப்போதும்கூட நான் இதனை தெரிவிக்காவிட்டால், ஆந்திர மக்கள் என்னை மன்னிக்கமாட்டார்கள். ஆந்திரா மட்டுமின்றி, தென் மாநிலங்களில் நம்பக்கூட முடியாத பல செயல்களை வெற்றிகரமாக நிறைவேற்ற அந்த தேசிய கட்சி கீழ்த்தரமான செயல்களில் கூட ஈடுபட தயங்காது. பொதுமக்கள் ‘அந்த’ தேசிய கட்சியின் சதியில் விழாமல் விழித்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு நடிகர் சிவாஜி கூறினார்.

இது குறித்து ஆந்திரா, தெலங்கானா அரசியலில் பெரும் விவாதம் நடைபெற்று வருகிறது. தெலுங்கு ஊடகங்களில் விவாத நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதுகுறித்து தெலுங்கு தேச கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், அமைச்சர்கள் கூறியபோது, “அந்த தேசிய கட்சியின் அரசியல் விளையாட்டை ஆந்திராவில் அரங்கேற்ற விட மாட் sடோம்” என தெரிவித்துள்ளனர்.

Reply all
Reply to author
Forward
0 new messages