2011/3/20 Narayanan Kannan <nka...@gmail.com>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
நாதமுனிகள் காலம்வரை இறைவனை இதயக்கமலத்தில் கண்டு அனுபவிக்கும் யோகமுறையே பரவலாக இருந்தது. பின்னானார் வணங்கும் சோதி எனும் கருப்பொருள் நிலைக்கவில்லை. பிராமணர்கள் கோயிலுக்குப் போவதில்லை. பல ஜாதி மக்கள் வரும் இடம், தீட்டு எனும் காரணத்தால். இது நாதமுனிகளுக்குப் பின் மாறுகிறது. இதுதான் தாமரைப் புரட்சியின் முதல் புரட்சி.திருவரங்கத்தில் நடக்கும் உரையாடல் (என் பேச்சாக):
மேலும் வரும்..ஆர்வமிருந்தால்...
--
நா.கண்ணன்
2011/3/20 Innamburan Innamburan <innam...@gmail.com>:
இது நிச்சயமாக சதுவேதிகளுக்கு பொருந்தி வரும்.
ஆயினும் இங்கு அத்வைத பாரம்பரியத்தில் வரும் வைதீக பிராமணர்களையே நான்
குறிக்கிறேன். திருவரங்கப் புரட்சி ஒரு அத்வைதியை கோயில் சேவகனாக
மாற்றியதே!
உங்கள் கேள்வி இன்னும் ஆழமாக அந்தணர் சமூகத்தை அறிந்து கொள்ள வழி
கோலுகிறது. நான் எம்பெருமானார் போட்ட பாட்டையில் நிற்கும் கடைக்குட்டி.
அதுவும் பெரியார் காலம் வேறு. என்னைவிட அந்தணர் குலம் அறிந்த பெரியோர்
இருப்பர். அவர்கள் சொன்னால் தெளிவு கிட்டும்.
அன்புடன்
நா.கண்ணன்
2011/3/20 Geetha Sambasivam <geetha...@gmail.com>:
மிக நல்ல கேள்வி.
இது நிச்சயமாக சதுவேதிகளுக்கு பொருந்தி வரும்.
ஆயினும் இங்கு அத்வைத பாரம்பரியத்தில் வரும் வைதீக பிராமணர்களையே நான்
குறிக்கிறேன். திருவரங்கப் புரட்சி ஒரு அத்வைதியை கோயில் சேவகனாக
மாற்றியதே!
உங்கள் கேள்வி இன்னும் ஆழமாக அந்தணர் சமூகத்தை அறிந்து கொள்ள வழி
கோலுகிறது. நான் எம்பெருமானார் போட்ட பாட்டையில் நிற்கும் கடைக்குட்டி.
அதுவும் பெரியார் காலம் வேறு. என்னைவிட அந்தணர் குலம் அறிந்த பெரியோர்
இருப்பர். அவர்கள் சொன்னால் தெளிவு கிட்டும்.
அன்புடன்
நா.கண்ணன்
>
இங்கு தாங்கள் ஐயங்கார் என்பதை மனதில் கொண்டால், ஒரு சிறு தெளிவு.
ஐயங்கார் என்ற பிரிவு மிகப்பின்னால் வருகிறது. ஈடு வியாக்கியானத்தில்
ஐயர் என்ற சொல்லாட்சி உண்டு. ஐயங்கார் இருக்க வாய்ப்பில்லை. அது தெலுங்கு
நாயக்கர்கள் கோலோட்சத்தொடங்கிய பின் தமிழகத்தில் உண்டாகியிருக்கலாம்.
அவர்கள், ஐயர் + காரு என்று சொல்லப்போய் அது ஐயங்கார் என்று மருவி
இருக்கலாம்.
மேலும் சைவம், வைணவம் என்ற பிரிவு கூட பின்னால் வந்தது என்று
தோன்றுகிறது. வைதீகர்கள் அனைவரும் வைஷ்ணவர்களே. ஆதிசங்கர பகவத் பாதாள்
இதை மிகத்தெளிவாகச் சொல்லுவார்.
நா.கண்ணன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> இது வைணவத்திற்கு மட்டுமே பொருந்துமோ??இங்கு தாங்கள் ஐயங்கார் என்பதை மனதில் கொண்டால், ஒரு சிறு தெளிவு.
மேலும் சைவம், வைணவம் என்ற பிரிவு கூட பின்னால் வந்தது என்று
தோன்றுகிறது. வைதீகர்கள் அனைவரும் வைஷ்ணவர்களே. ஆதிசங்கர பகவத் பாதாள்
இதை மிகத்தெளிவாகச் சொல்லுவார்.
நா.கண்ணன்
வைதீகர்கள் அனைவரும் வைஷ்ணவர்களே. ஆதிசங்கர பகவத் பாதாள்
இதை மிகத்தெளிவாகச் சொல்லுவார்.
--
இப்படித் தாமரைக் காடாகத் திகழும் திருமால் உறையும் ஊர் திருவரங்கம்.
ஐயா, வணக்கம்,
நேற்று, நானும் எனது இல்லாளும், திருவரங்கம் சென்று இறைவனைச்
சேவித்திடும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றோம். உடையவரைச் சேவித்து
உய்வடைந்தோம்.
எங்களுடன் நண்பர் திரு.கந்தசாமிநாகராஜன் தம்பதியினரும், மற்றும் அவரது
நண்பர்கள் மூவரும் சேர்ந்திருந்தனர்,
இன்று இந்த இழையில் தங்களது கருத்துக்களைக் கண்ணுறுவது மிகவும்
மகிழ்சியாக உள்ளது. தங்களையன்றி யார் தருவார் இந்தப் பேற்றினை!
அன்பன்
கி.காளைராசன்
--
திருப்பூவணப் புராணம் மற்றும் திருப்பூவணக்காசி படியுங்கள்,
http://www.freewebs.com/thirupoovanam/
அன்னதானம் செய்வோம், கண்தானம் செய்வோம். இவ்விருதானங்களையும் சிவபெருமான்
ஏற்றுக் கொள்கிறார்,
--
சாந்தோக்ய ச்ருதிதான் தாமரைக் கண்களை பரத்வ லக்ஷ்மமாக முதன்முதலில்
சொன்னது; உடையவரின் திரு உள்ளம் நமக்கு நன்கு தெரியவருவதும் அதனால்தான் .
>> பிராமணர்கள் கோயிலுக்குப் போவதில்லை.<<
ஆழ்வார்கள் காலத்துக்கு முன்பிருந்தே ஆலய வழிபாடு இருந்து வந்துள்ளது.
சிலம்பில் மாடல மறையவர் திவ்யதேச வைபவம் சொன்னார். ’ஸுரமந்திர தருமூல
நிவாஸ: ‘ என ஆதி சங்கரர் பாடினார் (ஸுரமந்திரம் - கோயில்). அவர்
திருமலையில் யந்த்ர ப்ரதிஷ்டை செய்ததாக வரலாறு உண்டு. அவர் காசிக்குச்
செல்லக் காரணம் என்ன ?
அங்கு ஆலய வழிபாடு செய்யாமல் இருந்திருப்பாரா ?
ப்ரபோத ஸுதாகரத்தில் (ப்ரகரணம்) க்ருஷ்ண பக்தியை வெளிப்படுத்திய அவர்
ஸ்ரீ ப்ருந்தாவநம் செல்லாமல் இருந்திருப்பாரா ?
புரி ஜகந்நாதத்திலும், பண்டரிபுரத்திலும், பதரியிலும் பூஜகர்கள் யார் ?
கௌராங்கரும், ஜயதேவரும் ஏன் புரியை மையமாகக் கொண்டு வாழ்ந்தனர் ? ஸத்குரு
த்யாகராஜர் ஆலயங்களை மையமாகக் கொண்டு தலயாத்திரை செல்லவில்லையா ?
பகவந்நாம போதேந்திரர்கள் ஜகந்நாதபுரி சென்ற காரணம் என்ன ? கௌராங்க
தேவரின் தமையனார் விச்வரூபர் கௌடதேசம் விட்டுப் பண்டரிபுரம் வரக்காரணம்
என்ன ? ஆர்யபடர்கள் அரங்கம் வரக்காரணம் என்ன ?
கூரத்தாழ்வான் நிர்வாஹத்தைப் பெறுமுன் அரங்க வழிபாட்டு முறை யாது ?
உடைவர் காலத்துக்குப்பின் 1000 ஆண்டு கடந்த பின்னரும் திருமலை,
திருவல்லிக்கேணி, அநந்தபுரம் உள்ளிட்ட பெரும்பாலான விண்ணகரங்கள்
உடையவர் பெரிதும் ஆதரித்த ஸ்ரீ பாஞ்சராத்ரத்துக்கு மாறாதது ஏன் ?
நாம் சிறியவர்கள், ஆராய்ச்சி என்ற பெயரில் யாரிடமும் அபசாரப்படக் கூடாது.
நெருடலான விஷயம். தாங்கள் ஆர்வத்தோடு எழுத முனைகிறீர்கள். தடை செய்யும்
நோக்கம் சிறிதும் கிடையாது. சற்று கவனமாக எழுதுமாறு பணிவுடன்
வேண்டுகிறேன். தென்னக வைணவம் பற்றி எழுதும்போது இந்திய வைணவத்தையும்
கருத்தில் கொள்க.
ஜ்ஞாந வைராக்ய ஸம்பூர்ணாந் ஹரிபக்தி பராயணாந் |
பூர்வாசார்யாந் அஹம் வந்தே ஸம்ப்ரதாய ப்ரவர்தகாந் ||
என்னும் பரனூர்ப் பெரியவரின் திருவாக்கைச் சிந்தித்து
தேவ்
On Mar 19, 8:30 pm, Narayanan Kannan <nkan...@gmail.com> wrote:
> திருமால் என்றவுடன் நம் மனக்கண்ணில் தோன்றும் முதற்காட்சி செவ்வரியோடிய அவன்
> நீண்ட திருக்கண்களே! அவன் மேனியே ஒரு தாமரை பூத்த தடாகம்!
>
> மை வண்ண நறுங்குஞ்சிக் குழல் பின் தாழ
> மகரம் சேர் குழை இருபாடிலங்கி ஆட
> எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே
> இருவராய் வந்தார் என் முன்னே நின்றார்
> கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும்
> கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே
> அவ் வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழீ!
> அவரை நாம் தேவர் என்றஞ்சினோமே
>
> (திருநெடுந்தாண்டகம் – 21)
>
> எனும் மிக அழகான பொருள்ள பாசுரத்தில் திருமங்கை ஆழ்வார் கையாண்டிருக்கும் தாமரை
> எனும் உவமை வேதம் தோன்றுவதற்கு முன்பிருந்தே இந்திய மனங்களில் ஒன்றிய ஒரு
> காட்சியாகும். ஜைனர் என்று ”சொல்லப்படுகின்ற” வள்ளுவரின் மனக்காட்சியிலும்
> தாமரைக்கண்ணான் அகலவில்லை.
>
> *தாம் வீழ்வார் மென்றோள் துயிலின் இனிது கொல்
> தாமரைக் கண்ணான் உலகு.*
> ஐயா! நாதமுனிகளின் யோக சாஸ்திரம் இறைவனை நெஞ்சில் வைத்துக் கண்டு ...
>
> read more »
மாங்காட்டு மறையவர்
> ...
>
> read more »
வார்த்தைகள் பல பரிமாணம் கொண்டவை. அதைப் பொதுமைப்படுத்திவிட்டால்
பிரச்சனைகள் வரலாம்.
தாமரைப் புரட்சிக்கு முன் கோயில் வழிபாடே இல்லை என்றா சொன்னேன்? திருமால்
வழிபாடு பன்னெடுங்காலமாக தமிழ் மண்ணில் இருந்து கொண்டுதானே
வந்திருக்கிறது. நாம் பேசுவது ஒரு மடை மாற்றம். அதுவும் குறிப்பாக ஒரு
சமூகத்தின் மடை மாற்றம். அந்த மடை மாற்றம் மிக முக்கியமானது. சமூகத்தில்
உயர் மட்டத்தில் உள்ளவர் மனம் மாறும்போது மட, மடவென்று சமூகமே மனம்
மாறுகிறது. எனவே, நாதமுனிகள் தொடக்கம் இவர்கள் வழியாக, வழியாக
விடாப்பிடியாக ஆழ்வார்களின் வழியை தெள்ளத்தெளிவாக்கியது ஒரு பெரும்
புரட்சி.
தாங்களே மேற்கோள் காட்டியபடி, ஸ்ரீஇராமானுஜர் செல்லப்பிள்ளையின் மீது
இப்படியொரு பாசம் கொள்வதற்கு ஆழ்வார்கள் காரணம். பொதுவாக இந்த தாஸபாவம்
பிராமணர்களுக்கு உரியதன்று.
இது பற்றி மேலும் பேசுவோம். இத்தொடர் சில அசௌகர்யங்களைக் கொடுக்கலாம்.
ஆனால் உள்ளது உள்ளபடி ஒரேயொருமுறையேனும் சத்ய தரிசனம் ஆகிவிட்டால்
அதுதான் மடை மாற்றத்தின் திறவுகோல். அதன் பின் மனது இறைவனின்
கைப்பிள்ளையாகிவிடுகிறது! பின் அவன் பார்த்துக்கொள்வான்.
நா.கண்ணன்
2011/3/20 devoo <rde...@gmail.com>:
2011/3/20 Geetha Sambasivam <geetha...@gmail.com>:
மிகவும் மகிழ்வாக உள்ளது. நமது முதலும், கடைசிச் சரணும் அவன்
ஒருவனிடத்தில்தான். உடையவர் நம் தாய். அவரைப் பார்த்து விஜாரித்து
வந்துவிட்டீர்கள். இனிமேல் காரிய அநுகூலமுண்டு. தடைகள் நீங்கும்.
தங்களது அனுபவத்தை எழுதுங்கள். வேங்கடவனின் செல்லப்பிள்ளைக்கு அரங்கனின்
வரவேற்பு எப்படி இருந்தது :-))?
நா.கண்ணன்
2011/3/20 kalairajan krishnan <kalair...@gmail.com>:
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
நன்றி. ஆம். இந்த நாயன்மாரின் கதை கேட்டிருக்கிறேன்.
உள்ளமெனும் கோயிலிலே உறைகின்றாய் குமரா! என்றொரு அழகான பாட்டு உண்டு :-)
க.>
2011/3/20 coral shree <cor...@gmail.com>:
இப்போதெல்லாம் எழுதி மாட்டிக்கொள்வதில் அதிக ஈடுபாடு இல்லை.
This is certainly not to show my scholarship but to point out some
milestones in history from my point of view. That's all.
அதுவும் நண்பர்கள் கேட்டதால். எழுத மிகவும் தயக்கமாக இருந்தது. சொன்னால்
விரோதம்! என்ன செய்ய? :-)
க.>
2011/3/20 selva kumaran <selvaku...@gmail.com>:
--
இப்போதெல்லாம் எழுதி மாட்டிக்கொள்வதில் அதிக ஈடுபாடு இல்லை.
This is certainly not to show my scholarship but to point out some
milestones in history from my point of view. That's all.
அதுவும் நண்பர்கள் கேட்டதால். எழுத மிகவும் தயக்கமாக இருந்தது. சொன்னால்
விரோதம்! என்ன செய்ய? :-)
ஆம், இதில் அடியேன் திறத்தில் அணுவளவும் மறுப்பில்லை. பதப்படுவது அத்தனை
எளிதில்லையே. கேசவ ஸோமயாஜியாரின் புத்ரகாம இஷ்டியின் பலனாக உடையவர்
திருவவதாரம். பெருமாள் திருவுள்ளமே மூன்றனலை ஓம்பும் மரபில் பிறந்த
ஒருவரைக் கோயில் சீய்த்துத் தொண்டு செய்பவராக ஆக்க வேண்டும் என்றுதான்
இருந்துள்ளது என ஊகிக்க இடமுள்ளது.
சக்கரவர்த்தி வாய்மை காக்க இளவலை வனத்தில் போக்கி உயிர் துறந்தது வைதிக
தர்மம்; பெரிய உடையார் ஸீதாபஹரண சமயத்தில் போராடி உயிர் துறந்தது வைஷ்ணவ
தர்மம். இது விசேஷ தர்மம், முந்தையது ஸாமாந்யம்.
குமாரில பட்டர் துஷாக்நியில் வெந்து உயிர் துறந்தது வைதிக தர்மம்; பிள்ளை
திருநரையூரர் அர்ச்சை காக்கத் தீயில் வெந்து உயிர் துறந்தது வைஷ்ணவ
தர்மம்.
இந்த எடுத்துக்காட்டுகள் ஒன்றில் ஒன்று முதிர்ச்சியைக் காட்டுகின்றன.
மடைமாற்றத்தின் விளைவான மனப் பரிணாம வளர்ச்சி வேறு; புரட்சி வேறு.
Evolution & revolution.
ஆனால் ‘புரட்சி’ மாதிரியான தலைப்பு நல்ல கவன ஈர்ப்பைப் பெறுவதென்னவோ
உண்மைதான்.
>> இத்தொடர் சில அசௌகர்யங்களைக் கொடுக்கலாம்<<
வரலாற்றை உள்ளபடி அறிவதில் எந்த அசௌகர்யமும் இல்லை; மேலும் படிக்கக்
காத்திருக்கிறேன்
தேவ்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

பாருங்கள் என்ன அழகாக உங்களுக்குப் பேசத்தெரிகிறது. இப்படி மென்மையாக,
பரிபாஷை போட்டு எனக்குப் பேசத்தெரியவில்லையே! ஆயினும் இந்த சத்சபையில்
என்னை வைத்திருப்பதே இறைவனின் பரம காருண்யம் என்றே நான் கருதுகிறேன்.
நான் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் அடிச்சுவட்டை பின்பற்றிய காலங்களில் அறிந்து
கொண்ட முக்கியப் பாடம் மனதை அதன் இயல்பான மென்மைத்தன்மைக்கு இட்டுச்
செல்வதுதான். முக்கியமான விஷயங்களா அவர் சொல்வது we need to have
sensitivity, we need to have awareness (both are linked), love and
intelligence are not two different things என்பவை.
என்னைப் பொறுத்தவரை வைணவம் முழுக்க, முழுக்க இந்த மென்மைப்படுத்தலில்
கவனம் கொள்கிறது. அதை மிக அழகான உதாரணங்கள் கொண்டு சொல்லியுள்ளீர்கள்.
இப்போது இதை taste என்கிறார்கள். நான் சொல்ல வருகின்ற விஷயங்களில் இந்த
ருசியும் ஒன்று.
புரட்சி சரியான சொல் இல்லைதான். பாரதி என்றவுடன் நமக்கு ஒரு
முரட்டுத்தனம்தான் முன்னால் வருகிறது. ஆனால் அவன் எவ்வளவு மென்மையானவன்.
மானுடத்தின் மீது மாறாக்காதல் கொண்டவன். அது போல்தான் நான் உடையவரைக்
காண்கிறேன். அவர் தெரிந்து பெரிய புரட்சி என்றெல்லாம் செய்யவில்லை. மிக
இயல்பாக சில மாற்றங்கள் அவசியம் தேவை என்று உணர்ந்து அதை மிக, மிகத்
தெளிவான தூரப்பார்வை கொண்டு அவர் காலத்தில் செயல்படுத்தி இருக்கிறார்.
அதன் நன்மைகளை நாம் இன்று அனுபவிக்கிறோம்.
நான் இங்கு புதிதாக ஏதும் சொல்லப்போவதில்லை. முன்பே மின் தமிழில் பல
இழைகளில் வந்த விஷயங்கள்தான். நண்பர்கள் கேட்டதால் அவைகளைச் சிறு
தொகுப்பாக அளிக உள்ளேன். அதுவொரு அட்டவணை போல் எப்போதும் மேற்கோள் காட்ட
உதவும்.
உங்கள் தொடர்ந்த ஆதரவு இதற்கு பயனளிக்கும்!
நா.கண்ணன்
2011/3/21 devoo <rde...@gmail.com>:
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
தென்னக வைணவம் ஸ்ரீகூர்மம் (ஆந்திரம்) வழியே ஒரிசாவரை பரவியுள்ளது; ஆனால்
புரி ஆலய பத்ததியை மாற்ற முடியவில்லை. பின்னால் தோன்றிய கௌராங்க தேவர்
உடையவர் தொடர்புடைய வைணவத் தலங்களை விடாமல் தர்சிக்கிறார்,
வடக்கிலிருந்து தெற்காக. உடையவருக்குப் பின்னால் தோன்றிய மற்ற இந்திய
வைணவ மரபுகள் பாஞ்சராத்ரத்தை ஏற்றுக்கொண்டதையும் கவனிக்க வேண்டும்,
கொள்கை அளவில் அவற்றிடையே நுண்ணிய வேறுபாடுகள் இருப்பினும்
தேவ்
On Mar 20, 10:46 pm, "s.bala subramani B+ve" <sunkenl...@gmail.com>
wrote:
> குறிப்பாக*முக்குவர்கள்
> * ?
ஸம்ஸ்க்ருதச் சிந்தனைகளுக்குள்ளும் பிளவுபட்டிருந்தவற்றுக்கு
இணைப்பை ஏற்படுத்தியுள்ளார். புரியும்படி எழுதும் வல்லமையையும்
அவரே அருளினால் இழை முடிவில் எழுத முயலலாம்
தேவ்
On Mar 20, 11:24 pm, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
> The goal of proving the Vedantic legitimacy of the popular conception of a
> personal deity and a genuine personal identity essentially characterizes
> Ramanuja's project, and the Advaitin school presents a natural object for
> his polemics. It is this synthesis between the classical Sanskrit writings
> and the popular Tamil poetry that is the source of one of the names of
> Ramanuja's system: *Ubhaya Vedānta*, or "Vedanta of both kinds." prays
> Srivaisnas & Lakshmi
>
> To quote from Shyam Ranganathan's article on Ramanuja at the Internet
> Encyclopedia of Philosophy </wiki/Internet_Encyclopedia_of_Philosophy>,
> "From a young age he is reputed to have displayed a prodigious intellect and
> liberal attitudes towards caste. At this time he became friendly with a
> local, saintly Sudra (member of the servile caste) by the name of
> Kancipurna, whose occupation was to perform services for the local temple
> idol of the Hindu deity Vishnu. Ramanuja admired Kancipurna's piety and
> devotion to Vishnu and sought Kancipurna as his guru-much to the horror of
> Kancipurna who regarded Ramanuja's humility before him as an affront to
> caste propriety."
>
> The Tamil prabhandas are chanted at Vishnu temples on par with the Sanskrit
> vedas. Persons of all communities, and not just Brahmins, are given roles in
> rituals at Srirangam and other leading temples.
>
> 1. சமஸ்கிரிதச் சிந்தனைக்கும் தமிழ்க் கவிதைக்கும் ஒரு சங்கமம்
>
> 2. சாதிப்பேய் சாராமல் அறிவையும் மனப்பாங்கையும் இறைப்பணிக்குச் சபர்ப்பித்தல்
>
> 3. சாதியற்ற சமயம் தமிழகத்தில் நடக்காதென்பதை மாற்றி இறைப்பணியில்
> அனைவரும்பங்குபெறச்செய்தல்
>
> இவையெல்லாம் பரிணாம வளர்ச்சியில்லை. மாபெரும் புரட்சியே
>
> காந்தியாரைக் குறிப்பிடும்போது கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் என்று
> குறிப்பிட்டதுபோன்று இது ஒரு மாபெரும் மனமாற்றத்தை உருவாக்கிய மென்மையான போர்
> நாகராசன்
>
> 2011/3/21 K R A Narasiah <narasiah...@gmail.com>
>
> > புரட்சிக்கு ஒரு மெல்லிய பொருளும் உண்டு. மாற்றிச் செய்வது தான் புரட்சி. இது
> > ஆங்கிலத்தில் குறிப்பிடும் revolution அல்ல; தேவ் சொல்வது போல evolution
> > தான். நீங்களும் மற்ற சுபா போன்ற திறனாளிகளும் கருத்தொருமித்தவர்களும்
> > மின்தமிழில் செய்வதே ஒரு மாபெரும் புரட்சியன்றோ!
>
> > மென்மைப் புரட்சியில் (Oxymoran?) மேன்மை பெற்றவர் பாரதி! பக்தி
> > இலக்கியத்திலும் ஒரு மென்மைப் புரட்சிதான் மேற்கொள்ளப்பட்டது.
>
> > அவ்வப்பொழுது சமூக நியதிகளுக்குட்பட்டு, ஆனாலும் அவற்றினை மாற்றியமைக்கவும்
> > தளராது செயல்பட்டவர்கள் நமது முன்னோர்கள்.
>
> > இந்த இழை சிறந்துள்ளது
> > நரசய்யா
> > 2011/3/21 N. Kannan <navannak...@gmail.com>
> ...
>
> read more »
திருமால் என்றவுடன் நம் மனக்கண்ணில் தோன்றும் முதற்காட்சி செவ்வரியோடிய அவன் நீண்ட திருக்கண்களே! அவன் மேனியே ஒரு தாமரை பூத்த தடாகம்!
மை வண்ண நறுங்குஞ்சிக் குழல் பின் தாழ
மகரம் சேர் குழை இருபாடிலங்கி ஆட
எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே
இருவராய் வந்தார் என் முன்னே நின்றார்
கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும்
கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே
அவ் வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழீ!
அவரை நாம் தேவர் என்றஞ்சினோமே
(திருநெடுந்தாண்டகம் – 21)
எனும் மிக அழகான பொருள்ள பாசுரத்தில் திருமங்கை ஆழ்வார் கையாண்டிருக்கும் தாமரை எனும் உவமை வேதம் தோன்றுவதற்கு முன்பிருந்தே இந்திய மனங்களில் ஒன்றிய ஒரு காட்சியாகும். ஜைனர் என்று ”சொல்லப்படுகின்ற” வள்ளுவரின் மனக்காட்சியிலும் தாமரைக்கண்ணான் அகலவில்லை.
தாம் வீழ்வார் மென்றோள் துயிலின் இனிது கொல்
தாமரைக் கண்ணான் உலகு.
இப்படித் தாமரைக் காடாகத் திகழும் திருமால் உறையும் ஊர் திருவரங்கம். அதனைப் பிரதானக் கேந்திரமாக வைத்து ஒரு மெல்லிய புரட்சி நடந்திருக்கிறது. உலகில் புரட்சி என்றாலே வன்முறை என்று பொருள் படுகிறது. ஆனால் இந்திய வழியில் கத்தியின்றி, ரத்தமின்றி ஒரு யுத்தம் நடக்க காந்தி வழிகோலினார். உலக வரலாற்றில் அதுவொரு புதிய புரட்சி. அதற்கு முன்னமே தென் தமிழகத்தில் இத்தகைய புரட்சியை திருமால் அடியார்கள் செய்திருக்கின்றனர். அதுவொரு சமூகப் புரட்சி. வள்ளலாரும், பெரியாரும் தோன்றுவதற்கு பல நூறு ஆண்டுகள் முன் ஆழ்வார்களை முன் வைத்து நடந்த புரட்சி அது. அதன் தளபதி ஸ்ரீஇராமானுஜர். உண்மையில் அவர், தான் ராஜா. கஷாயம் கட்டிக் கொண்டாலும் ராஜாவாக இருந்தவர் (யதிராஜர் = துறவிகளின் அரசன்).எனவே தாமரை போன்ற மெல்லிய இதயமுடையோர் ஒரு புரட்சி செய்தால் அது மென்மையான இதயப்புரட்சியாகத்தானே இருக்கும். ஆம், அவர்கள் குறிவைத்தது தமிழனின் இதயத்தை. பக்தி எனும் பயிரை தமிழன் தன் இதயத்தில் பயிர் செய்வித்த ஆன்மீக உழவர்கள். அவர்கள் செய்த பயிர் இன்றும் தமிழ் மண்ணில் வாழ்கிறது. என்ன! கொஞ்சம் காண்பாரற்ற காடுகளில் உள்ளது. மின் தமிழ் மூலமாக அதைப் பொது விவசாயமாக்கலாம்.முனைவர், பேராசிரியர், எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி அவர்களின் முனைவர் பட்ட ஆய்வேடான, ‘தமிழ் இலக்கியங்களில் வைணவம்’ நூலில் ‘பக்தி இயக்கம்’ என்ற சொல்லாட்சியைப் பயில்கிறார். உண்மையில் இன்று காண்கின்ற கழகங்கள், இயக்கங்கள் போல் ஒருமித்த அரசியல் போக்காக அன்று நடந்திருக்க வாய்ப்புண்டா? எனும் கேள்வியை எழுப்பி, அவர்கள் அப்படியெல்லாம் வெற்று கோஷங்கள் எழுப்பாமால் செம்மையான விழுமியங்களை மக்கள் மனதில் விதைத்து அதைச் செழுமையுற பயிர் செய்வித்ததால் அதையொரு இயக்கமெனக் காணலாம் என்று சொல்கிறார்கள். தொண்டரடிப் பொடியாழ்வார் தமது திருமாலை எனும் பிரபந்தத்தில் ஆழ்வார்களின் அருளிச் செயல்கள் உண்மையில் ஓர் இயக்கம் என்பதை
பேசிற்றே பேச லல்லால் பெருமையொன் றுணர லாகாது,
ஆசற்றார் தங்கட் கல்லால் அறியலா வானு மல்லன்,
மாசற்றார் மனத்து ளானை வணங்கிநா மிருப்ப தல்லால்,
பேசத்தா னாவ துண்டோ ? பேதைநெஞ் சே.நீ சொல்லாய்.
என்று காண்கிறார். ஒரு ஆழ்வார் பேசியதையே இன்னொரு ஆழ்வார் பேசுவார். ஒரு பேச்சு, மற்றொருவர் பேச்சிற்கு சுவை கூட்டுமே தவிர மறுதலிக்காது. இப்படியான, பிரபந்தக் கூட்டிற்குப் பெயர்தான், ‘திய்வப் பிரபந்தம்’ என்பது. மிக, மிக திவ்யமான பொருளைப் பற்றிய திவ்யமான பேச்சு என்று இதைச் சொல்லலாம். பின்னால், இதனால் திருவாய்மொழியை, ‘பகவத் விஷயம்’ என்றே சொல்லத்தலைப்பட்டனர்.
இத்தகைய திவ்யப்பனுவல்களையும் தொலைத்துவிட்டு தமிழகம் இருந்திருக்கிறது ஒரு காலத்தில்!!
நல்லவேளையாக யோக சாஸ்திர விற்பன்னரான நாதமுனிகள் நாலாயிர திவ்யப் பிரபந்தங்களைக் கண்டறிந்து அதன் சிறப்பறிந்து தன் சிஷ்ய கோஷ்டியினரிடம் பாதுகாக்கும் படி சொல்கிறார். இதன் பெருமையை எவ்வளவு அழகாக இந்த ஆச்சார்ய புருஷர்கள் சொல்கிறார்கள் என்பதற்கு ஒரு கதையுண்டு.நாதமுனிகள் காலம்வரை இறைவனை இதயக்கமலத்தில் கண்டு அனுபவிக்கும் யோகமுறையே பரவலாக இருந்தது. பின்னானார் வணங்கும் சோதி எனும் கருப்பொருள் நிலைக்கவில்லை. பிராமணர்கள் கோயிலுக்குப் போவதில்லை. பல ஜாதி மக்கள் வரும் இடம், தீட்டு எனும் காரணத்தால். இது நாதமுனிகளுக்குப் பின் மாறுகிறது. இதுதான் தாமரைப் புரட்சியின் முதல் புரட்சி.
திருவரங்கத்தில் நடக்கும் உரையாடல் (என் பேச்சாக):ஐயா! நாதமுனிகளின் யோக சாஸ்திரம் இறைவனை நெஞ்சில் வைத்துக் கண்டு அனுபவிக்குமாறு சொல்கிறதே! எம்மைப் போன்ற பாமரர்களுக்கு அது எப்படி முடியும்?
உண்மை! வீட்டில் பிணம் கிடக்க மணம் புணரலாமோ? தமிழர்கள் தெய்வம் யாரென்று தெரியாமல் அலைக்கழிந்து அலைபாயும் நேரத்தில் யோகமெல்லாம் சரிப்படாது. எல்லோரும் வந்து வழிபடும் வகையில் அவன் அர்ச்சையாக (சிலையாக) கோயிலில் உள்ளான். அவனை அனுபவித்து வழிபடும் வகைகளை ஆழ்வார்கள் சொல்லிச் சென்றுள்ளனர். அதன் வழியில் செல்வோம்!அதாவது யக்ஞதேவனான விஷ்ணுவை அர்ச்சையாக பார்த்து அநுபவிப்பது என்பது! யக்ஞத்திலும் அவன் ஜோதியாக உள்ளான். அர்ச்சையிலும் அவன் ஜோதியாக உள்ளான். ஆனால் அதை பிராமணர்கள் கண்டுணராத காலம். நான் சிறுவனாக இருந்தவரை கோயில் செல்வதை ஒரு பெரும் வழக்காகக் கொள்ளாத அந்தணர்களைக் கண்டுள்ளேன். ஆனால் வைணவத்தின் அடிநாதமே, கோயிலுக்குப் போய் அங்குள்ள இறைவனுக்கு `மங்களா சாஸனம்` செய்வதே. இது இரண்டாவது புரட்சி. கோயிலுக்குப் போய் இறைவனை வழிபடு என்று இவர்கள் சொல்வதில்லை. கோயிலுக்குப் போய் இறைவனை “வாழ்த்து” என்கிறார்கள்!
மேலும் வரும்..ஆர்வமிருந்தால்...
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
மென்மைப் புரட்சியில் (Oxymoran?) மேன்மை பெற்றவர் பாரதி! பக்தி இலக்கியத்திலும் ஒரு மென்மைப் புரட்சிதான் மேற்கொள்ளப்பட்டது.
நா.கண்ணன்
2011/3/21 s.bala subramani B+ve <sunke...@gmail.com>:
இன்னும் சொல்லுங்கள். அவன் கதைகள், அவன் அடியார் கதைகள் இவையெல்லாம் இன்னமுதே!
அந்த வழியில்தான் தியாகய்யரும், புரந்த தாசரும் என் இராமன், என் கண்ணன்
என்று உரிமை கொண்டாடுகிறார்கள். அந்த உரிமை நமக்கேன் வருவதில்லை?
இவர் பாவம் பிரம்மா, கோகுலம் வந்து பர வாசுதேவன் எங்கிருக்கிறார் என்று
அறிவொன்றும் இல்லா ஆயர் சிறுமிகளிடம் கேட்டுக் கொண்டு வருகிறார். ஒரு
குட்டி, `இவனைச் சொல்கிறாயா? என்று முந்தானை முடிச்சிலிருந்து கிருஷ்ணனை
எடுத்துக் கொடுத்தாளாம்`! அப்படியல்லவோ இருக்க வேண்டும்!!.
நம் அன்பிற்கு அவன் தப்பிவிடுவானா என்ன?
நா.கண்ணன்
2011/3/21 shylaja <shyl...@gmail.com>:
புரட்டிப்போட்டால்தான் புரட்சியா? உள்ளதை உள்ளபடி புரிந்து கொள்வதே
புரட்சிதான் :-))
நா.கண்ணன்
2011/3/21 K R A Narasiah <naras...@gmail.com>:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
அற்புதம்! அற்புதம்!
இதைத்தான் சொல்ல நினைக்கிறேன்.
நான் முக்குலத்தோர் ஊர்க்காரன்.
மதுரைக் கள்ளர்கள் அந்தத் திருமாலிடம் காட்டும் அன்பில் சிறிதளவு கூட
நம்மால் காட்ட முடிவதில்லை. அவர்கள் வீட்டுப் பிள்ளையாக அவன் உட்கார்ந்து
இருக்கிறான். திடீரென்று மதுரைக் கள்ளழர் கிழக்கே ஆற்றோரம் நடையைக்
கட்டுவார். என்னாடா ஆச்சு, இந்தப் பெருமாளுக்கு என்றால், `துலுக்க
நாச்சியாருக்கு` தரிசனமாம்!
இதையெல்லாம் என்ன வார்த்தை கொண்டு சொல்வது. இதைச் செய்வித்தது புரட்சி இல்லையா?
நா.கண்ணன்
திருக்கச்சி நம்பிகளுடன் (Kancipurna) கொண்ட உறவுதான் எம்பெருமானாரை
கஷாயம் கட்ட வைக்கிறது.
திருக்கச்சி நம்பிகள் வைபவம் மிக சுவாரசியமாக இருக்கும்! அவர் ஒருவகையில்
இராமானுஜர் தோன்றுவதற்குக் காரணமாகிறார். அப்படியொரு கதையுண்டு. மிக
ரசிக்கத்தக்க கதை!
மிக,மிக அழகாகப் பட்டியிலிட்டுவிட்டீர்கள்.
பாருங்கள்! நான் எழுத வேண்டிய அவசியமே இல்லாமல் இன்னருள் இவ்விழையில் பேசுவதை!!.
இதை நான் பரம அனுக்கிரகமாகக் காண்கிறேன்.
நா.கண்ணன்
2011/3/21 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
திருக்கச்சி நம்பிகளுக்கும் ஒரிசா கேசரி மன்னர்களுக்கும் உள்ள தொடர்பில் கூட அவர் பூரிக்கு சென்று இருக்கலாம்
On <navannak...@gmail.com> wrote:
> மிக்க நன்றி சார்.
>
> புரட்டிப்போட்டால்தான் புரட்சியா? உள்ளதை உள்ளபடி புரிந்து கொள்வதே
> புரட்சிதான் :-))
>
> நா.கண்ணன்
>
> 2011/3/21 K R A Narasiah <narasiah...@gmail.com>:
>
> > புரட்சிக்கு ஒரு மெல்லிய பொருளும் உண்டு. மாற்றிச் செய்வது தான் புரட்சி. இது
> > ஆங்கிலத்தில் குறிப்பிடும் revolution அல்ல; தேவ் சொல்வது போல evolution
> > தான். நீங்களும் மற்ற சுபா போன்ற திறனாளிகளும் கருத்தொருமித்தவர்களும்
> > மின்தமிழில் செய்வதே ஒரு மாபெரும் புரட்சியன்றோ!
>
> > மென்மைப் புரட்சியில் (Oxymoran?) மேன்மை பெற்றவர் பாரதி! பக்தி
> > இலக்கியத்திலும் ஒரு மென்மைப் புரட்சிதான் மேற்கொள்ளப்பட்டது.
>
> > அவ்வப்பொழுது சமூக நியதிகளுக்குட்பட்டு, ஆனாலும் அவற்றினை மாற்றியமைக்கவும்
> > தளராது செயல்பட்டவர்கள் நமது முன்னோர்கள்.
>
> > இந்த இழை சிறந்துள்ளது
> > நரசய்யா
> > 2011/3/21 N. Kannan <navannak...@gmail.com>
> ...
>
> read more »
On <navannak...@gmail.com> wrote:
> 2011/3/21 s.bala subramani B+ve <sunkenl...@gmail.com>:
க.>
2011/3/21 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
க.>
2011/3/21 devoo <rde...@gmail.com>:
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
ஆரணநூல்வழிச் செவ்வை யழித்திடுமைதுகர்க்கோர்
வாரணமாய் அவர்வாதக்கதலிகள் மாய்த்தபிரான்
ஏரணிகீர்த்தி இராமானுசமுனி இன்னுரைசேர்
சீரணிசிந்தையினோம் சிந்தியோமினித்தீவினையே
அடியேன் சொல்ல என்ன இருக்கிறது ? உடையவர் வைபவம் கேட்கும் ஆசை. உங்கள்
நிலைப்பாடோ பின்னூட்டத்துக்குத் தக்கன வெவ்வேறு வடிவம் கொள்கிறது. ஒரே
குரலில் நீங்கள் பகிர்ந்துகொள்ள நினைப்பதைப் படிப்படியாகச் சொன்னால்
பெரும்பூதூர் மாமுனி புரட்சியில் முனைந்தாரா ? மலர்ச்சிக்கு
வித்திட்டாரா? அது நம் பார்வைக்கு எப்படித் தெரிகிறது என்பதையெல்லாம்
பிற்பாடு பார்த்துக்கொள்ளலாம்
Mar 20, 10:27 pm, "N. Kannan"
அவர் தெரிந்து பெரிய புரட்சி என்றெல்லாம் செய்யவில்லை. மிக
இயல்பாக சில மாற்றங்கள் அவசியம் தேவை என்று உணர்ந்து அதை மிக, மிகத்
தெளிவான தூரப்பார்வை கொண்டு அவர் காலத்தில் செயல்படுத்தி இருக்கிறார்.
அதன் நன்மைகளை நாம் இன்று அனுபவிக்கிறோம்.
Mar 21, 6:17 am, "N. Kannan"
புரட்டிப்போட்டால்தான் புரட்சியா? உள்ளதை உள்ளபடி புரிந்து கொள்வதே
புரட்சிதான் :-))
Mar 21, 6:23 am, "N. Kannan"
இதையெல்லாம் என்ன வார்த்தை கொண்டு சொல்வது. இதைச் செய்வித்தது புரட்சி
இல்லையா?
The whole object of [the Hindu religion] is, by constant struggle, to
become perfect, to become divine, to reach God, and see God. . . .
தேவ்
On Mar 21, 6:55 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> தேவ் சார், ஏதோ சொல்ல வருவது தெரிகிறது. என்னவென்று புரியவில்லை?
> அவரது சேதி வரவில்லை.
>
> க.>
>
> 2011/3/21 devoo <rde...@gmail.com>:
>
>
>
>
>
> > On <navannak...@gmail.com> wrote:
> >> 2011/3/21 s.bala subramani B+ve <sunkenl...@gmail.com>:
>
> >> > பெருமாளை வேறு தளத்திற்கு கொண்டு வந்தது ராமனுஜரின் செயல்
>
> >> அற்புதம்! அற்புதம்!
> >> இதைத்தான் சொல்ல நினைக்கிறேன்.
> >> நான் முக்குலத்தோர் ஊர்க்காரன்.
> >> மதுரைக் கள்ளர்கள் அந்தத் திருமாலிடம் காட்டும் அன்பில் சிறிதளவு கூட
> >> நம்மால் காட்ட முடிவதில்லை. அவர்கள் வீட்டுப் பிள்ளையாக அவன் உட்கார்ந்து
> >> இருக்கிறான். திடீரென்று மதுரைக் கள்ளழர் கிழக்கே ஆற்றோரம் நடையைக்
> >> கட்டுவார். என்னாடா ஆச்சு, இந்தப் பெருமாளுக்கு என்றால், `துலுக்க
> >> நாச்சியாருக்கு` தரிசனமாம்!
>
> >> இதையெல்லாம் என்ன வார்த்தை கொண்டு சொல்வது. இதைச் செய்வித்தது புரட்சி இல்லையா?
>
> >> நா.கண்ணன்
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group athttp://groups.google.com/group/minTamil

--
திருக்கச்சி நம்பிகளுக்கும் ஒரிசா கேசரி மன்னர்களுக்கும் உள்ள தொடர்பில் கூட அவர் பூரிக்கு சென்று இருக்கலாம்
சந்திரன் வளருகின்ற பருவத்தில் முதல் நாள் கீற்று கண்ணில் படாது.
இரண்டாம் நாளும் அப்படித்தான். மூன்றாம் பிறை கண்ணில் படும், ஆனால்
பார்க்கக்கூடாது என்பார்கள். பிறையைக் காட்டித்தான் தெரிந்து கொள்ள
வேண்டும். முழு நிலவைக் காட்ட வேண்டிய அவசியமில்லை. அதுவும்
சந்திரோதயமென்றால் பெரிய சொளகு போல் தெரியும். எம்பெருமானார் முழு நிலவு.
அதே தண்மை, அதே ஜாஜ்வல்யம், அதே தாய்மை (உயிர்களின் வளர்ச்சிக்கு
சந்திரன் அவசியம் தேவை). அவர் பெரியவர். அவரை இச்சிறியேன் அறிமுகப்படுத்த
அவசியமில்லை என்பதை நான் இழை ஆரம்பித்தவுடன் வந்து குவிந்திருக்கும்
உங்கள் பின்னூட்டங்கள் காட்டுகின்றன!
புரட்சி என்ற சொல் பற்றிய பேச்சு வந்தது. இதைப் புரட்சி என்று சுட்டலாமா
என்று?. அதற்கும் உங்களது பெரும்பான்மையானோரின் பின்னோட்டம் சாதகமாகவே
அமைந்துள்ளது. நான் சரித்திரத்தைக் காண்கிறோம், வியக்கிறோம். நம்
வியப்பைச் சுட்ட வார்த்தைகளைத் தேடுகிறோம். இரஷ்யாவில் ஜார் மன்னர்களின்
கொடுங்கோன்மை ஆட்சி ஒழிந்து மக்கள் குரல் கேட்கத்தொடங்கிய நிகழ்வைப்
பார்த்து வியந்து, `ஆகாவென்று எழுந்தது பார்! யுகப்புரட்சி!` என்று
பாடுகிறான் பாரதி. பாரதிக்கு இச்சரித்திர நிகழ்வை அப்படித்தான்
சுட்டத்தோன்றுகிறது. பாரதி வழியில் வரும் நாமும் அச்சொல்லால்
ஸ்ரீரங்கத்தில் தோன்றிய மாற்றங்களைச் சுட்டுவதில் தவறேதுமில்லை. ஒரு
புத்தகத்திற்கு பல்வேறு வாசிப்புக்கள் இருப்பது போல், சரித்திரத்திற்கும்
பல்வேறு வாசிப்புக்கள் இருக்கலாம். இதை சரித்திர ஆசிரியர்கள் நன்கு
உணர்வர். கல்கியே நல்ல உதாரணம். இவ்விழை பின்னூட்டங்கள் கூட
ஸ்ரீஇராமானுஜரின் மிகப்பரந்த மனதை, அவர் மேற்கொண்ட துணிகரமான
நடவடிக்கைகளை புரட்சி என்றே நீங்கள் காண்பது தெரிகின்றது. எனவே அது
வெறும் `கவன ஈர்ப்பு` அல்ல! தமிழகமும் தாமரைப் புரட்சியை அங்கீகரித்தது
என்பதற்கு பாரதிதாசனே சாட்சி! வ.ரா தயாரித்த `ஸ்ரீஇராமானுஜர்` என்ற படம்
எடுத்தார். அதற்கு பாட்டெழுத ஒப்புக்கொண்டார் பாரதிதாசன்! .
பாரதிதாசனுக்கு இராமானுஜரை மிகவும் பிடிக்கும். தமிழகம் செய்த தவத்தால்
இராமானுஜர் தோன்றினார் என்பது பாரதிதாசனின் விவரிப்பு.
மூன்றாவதாகச் சொல்ல வேண்டியது, இவ்விழை தனியாக வந்தாலும் இவ்விழை
மின்தமிழில் வந்த/வரும் பிற இழைகளைச் சார்ந்தே இயங்குகிறது. நான் புதிதாக
ஏதும் சொல்ல வரவில்லை. எனது எழுத்தில் அடிக்கடி, `தாமரைப் புரட்சி` என்ற
சொல்லாட்சி வந்ததால் விளக்கம் கேட்க இவ்விழை தொடங்கப்பட்டது.
அவ்வளவுதான். ஏற்கனவே நான் 2000களில் எழுதிய பாசுரமடல், பல
இணையக்கருத்துக்கள், ஸ்ரீரங்கம் மோகனரங்கனின், `அறிவும் நம்பிக்கையும்`
நூல் என்று நான் படித்த விஷயங்களைத்தான் இங்கு தொகுத்து என் தலைப்பிற்கு
ஆதரவாக முன்வைக்கிறேன்.
சரி, இனி விஷயத்திற்கு வருவோம்.
சென்ற மடலில், ஸ்ரீரங்கத்துப் பெரியவர் ஒருவர், `வீட்டில் பிணம் கிடக்க
மணம் புணரலாமா?` என்று சொன்னதைக் கவனித்தோம். அது எவ்வளவு பெரிய
வார்த்தை. இப்படியொரு வார்த்தை அங்கு விழுகிறது என்றால் தமிழகத்தின்
நிலமை படுமோசமாக இருந்திருக்கிறது என்பதை நிச்சயம். உணரலாம்! சமணமும்,
பௌத்தமும் தமிழர்களை அவர்களது இயல்பான, மண் சார்ந்த (ஐந்திணை சார்ந்த)
சமய ஒழுங்கிலிருந்து அந்நியப்படுத்திவிட்டது. தமிழர்கள் திடீரென அவர்கள்
தாய் மண்ணிலேயே அநாதையாகிவிடுகின்றனர். இச்சமயத்தில் அவர்களது உண்மையான
தந்தை யார் என்று காட்ட வேண்டிய பொறுப்பு ஆச்சார்ய சீலர்களுக்கு வந்து
சேர்கிறது. அதை மிகத்திறமையாக ஸ்ரீஇராமானுஜர் செய்வதால் அவர் `இதத்தாய்`
என்றழைக்கப்படுகிறார். தமிழக மக்களுக்கு வேதம் சொல்லும் ஆதி புருஷனும்,
தொல்காப்பியர் சொல்லும் முல்லைத் தலைவனுமாகிய ஸ்ரீமன் நாராயணனே நம்
தந்தை, ஆதிப்பிரான் என்று காட்ட வேண்டிய கடப்பாடு வந்து சேர்கிறது.
உடையவர் ஆளவந்தார் பரமபதம் அடையும் வேளையில் தன் நிறைவேறாத ஆசைகள் மூன்று
என்பது போல் மூன்று விரல்களை மடக்கியவாறு இறந்துபடுகிறார். அவை
என்னவென்று இராமானுஜர் உணர்ந்து சொல்லும் முதல் வாக்குறுதி, `தமிழை
மீட்டெடுப்பேன்` என்பது. அதாவது ஆழ்வார்கள் செய்வித்த அகத்திணை சார்ந்த
பனுவல்களை மீட்டெடுத்து பரவலாக்குவேன் என்பது. ஸ்ரீரங்கம் மோகனரங்கன்,
தமது அறிவும் நம்பிக்கையும் நூலில் மிகத்தெளிவாகச் சொல்லுவார், அக்கால
வழக்கில் `தமிழ்` என்றாலே அது அகத்திணை என்று. எனவே முழுக்க, முழுக்க
அகத்திணைப் படல்களாக அமையும் திருவாய்மொழி தொடக்கம், நாலாயிரத்தையும்
மீட்டெடுத்து பரவலாக்கினால் அது `தமிழை மீட்டதாகவே` ஆகும். இது
இராமானுஜரின் பெரிய புரட்சி. இது மூடிமறைக்கபடும் விஷயமாக இருப்பதால்
அழுத்திச் சொல்ல வேண்டியுள்ளது. இராமானுஜர் மீது காழ்ப்பு கொண்டோர்
வைக்கும் முதல் குற்றச்சாட்டே, இராமானுஜர் தமிழில் ஒன்றும் (எப்பனுவலும்)
செய்யவில்லை! என்பதே! அவர் தமிழையே மீட்டெடுக்க தம் வாழ்நாள் முழுவதையும்
அர்ப்பணித்தது சாதாரணமான செயலன்று.
சரி! அவர் ஏன் வடமொழி மீதும் பற்று வைத்திருந்தார்? அதற்கும் ஒரு நல்ல
காரணம் இருக்கிறது. அவர் வாழ்ந்த காலத்தில் வடமொழி அறிஞர்களும் தமிழர்கள்
போல், தந்தை அறியா அநாதைகளாகவே வாழ்ந்திருக்கின்றனர் என்று தெரிகிறது.
அதாவது, ஒரு பக்கம் பௌத்தமும், சமணமும் திணை சார்ந்த தமிழர் வாழ்வை
அந்நியப்படுத்தி அநாதையாக்கி வைத்திருந்தது, இன்னொரு புறம் ஆதிசங்கரரின்
அத்வைத கருத்துக்களைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் இறைவனை
அணுகத்தெரியாமல் அநாதையானது. ஸ்ரீஇராமானுஜரின் ஆரம்பகால வாழ்வு இதைக்
காட்டும். இராமானுஜர் யாதவப்பிரகாசர் எனும் பெரிய அத்வைத ஆசிரியரிடம்
குருகுலம் செய்தார். அவர் `கொடி கட்டிப் பறந்த` பெரிய விதவான். யாதவிய
சித்தாந்தம் என்று சொல்லும் அளவிற்கு அத்வைதத்தை கரைத்துக் குடித்தவர்.
ஆனால், அப்படிப்பட்டவருக்கு, பரமனின் திருக்கண்களை ஒரு குரங்கின்
ஆசனவாயுடன் ஒப்பு நோக்கித்தான் விளக்கம் சொல்ல வேண்டுமென்று
துர்பாக்கியம். "tasya ”yatha kapyasam pundarikamevamakshini” எனும்
சண்டோக்கிய உபநிஷ வாக்கியத்தில் வரும் கப்யாசம் எனும் சொல்லிற்கு
அப்படிப் பொருள் சொல்கிறார். இது எதைக் காட்டுகிறது? அவருக்கு
சமிஸ்கிருதம் சரியாகத் தெரியவில்லை என்பதை அல்ல. ஸ்ரீஇராமானுஜர்
எடுத்துக்காட்டும், `கதிரவனின் ஒளிபட்டு மலரும்` தாமரை (Kapyasam=Sun
blossomed or blossomed by the Sun) என்பதே அதன் பொருள் என்று
யாதவருக்குத் தெரியாதா? தெரியும். இருந்தாலும், அத்வைதத்தை அவர் புரிந்து
கொண்ட விதத்தில் வரும் வினை! அகம் பிரம்மாஸ்மி என்றால், தானே பிரம்மம்
என்று நினைத்துவிட்டார் போலும். இது ஹிரண்ய கசிபு புரிதல்
(interpretation) அல்லவோ? இதற்குப் பேசாமல் தானொரு நாத்திகன் என்றே
சொல்லிவிடலாம்! எனவே வடமொழி அறிந்த அத்வைதிகளின் மனநிலை பௌத்த, சமண
மனநிலைலிருந்து அதிகம் மாறுபட்டு இருந்திருக்கவில்லை என்பதை இச்சரித்திர
நிகழ்வு காட்டுகிறது. எனவே தமிழை மீட்டெடுப்பது மட்டுமல்ல, வடமொழியையும்
மீட்டெடுக்கும் பொறுப்பு உடையவருக்கு வந்து சேர்கிறது. அத்வைதிகளுக்கு
உண்மையான பரம்பொருள் யார், அவரை எப்படி அணுக வேண்டும் எனும் ஞான, பக்தி
மார்க்கத்தைக் காட்ட வேண்டிய பொறுப்பும் வந்து சேர்கிறது.
இச்சூழலில் அறிவுடைய யாரொருவர் இருந்தாலும், இந்திய மரபை மீட்டெடுக்க
வேண்டுமெனில் இவ்விருமொழிகளையும் மீட்டெடுக்க வேண்டும் என்றே
தீர்மானிப்பர். எனவே ஸ்ரீவைஷ்ணவம் தன்னை `உபய வேதாந்தம்` (இருமொழி
வேதாந்தம்) என்று சொல்லிக் கொண்டதில் தவறே இல்லை.
அடுத்து விவேகாநந்தர் பேசும், `Ramanuja, with his sariri-sharira Bhava
of God and worlds, a most practical philosophy, a great appeal to the
emotional and entire denial of birthrights before spiritual
attainments and its appeal through the popular tongue, completely
succeeded in bringing the masses back to the Vedic religion.
மேலும் தொடர்வோம்....
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
சரித்திரம் சில விஷயங்களைப் பூடகமாகச் சுட்டும். யாதவப் பிரகாசர்
அக்காலத்தைய அத்வைதிகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என்று கொள்ளலாம்.
ஒருவகையான intellectual arrogance இருந்திருப்பதைத்தான் அந்த உதாரணம்
செப்புகிறது. ஆசனவாய் சிவப்பாக இருக்கிறது, தாமரையும் சிவப்பாக
இருக்கிறது. சொன்னால் என்ன தப்பு? என்று பார்க்கும் அறிவுஜீவித்திமிர்.
ஆனால் இராமானுஜர் அங்கு சுட்டுவது `பாவம்`. மொழியை நேரடியாக கையாள்வது
ஒரு புலவனின் தொழில் இல்லை. அதைக் கவிதை ஆக்குவதுதான் கலைஞனின் வேலை.
இராமானுஜர் வடமொழியின் கவிமரபை மீட்டுக்கொடுக்கிறார், தனது அற்புதமான
`பாவங்கள்` மூலம்.
இன்னொரு உதாரணம் சொல்கிறேன். நமது காஞ்சிபுரத்து ஜென் மாஸ்டர்
(போதிதருமர்) சீனாவில் சாஸ்திரங்கள் தேவை இல்லை என்று சொன்னாலும்
சொன்னார், ஒரு நிலையில் ஜென் பிட்சுக்கள் கோயிலுக்குப் போய் புத்தர் சிலை
மீது சிறுநீர் கழித்தும், எச்சல் துப்பியும் அலோங்கப்படுத்திய வரலாறு
உண்டு. எப்படி முஸ்லிம் சுல்தான்கள் ஹம்பியின் அழகு, அழகு சிலைகளை
தத்துவப் புரிதலின்றி விகாரப்படுத்தினரோ, அது போல்தான் இதுவும்.
எனவே எங்கெல்லாம் தத்துவங்கள் அதன் பொருள் இழக்கின்றனவோ அப்போது ஒரு
அவதாரம் தோன்றுகிறது. அது எந்த சமயமாக இருந்தாலும்!
நா.கண்ணன்
--
பகுதி 3
Martial Arts எனும் வர்மக்கலைக்கும் பக்திக்கும் ஒரு தொடர்புண்டு! என்ன
இது புதுக்கதை? என்று தோன்றுகிறதா?
வர்மக்கலை என்பது அடிப்படையில் கொல்லும் கலை அல்ல. அதுவொரு தற்காப்பு
அவ்வளவுதான். அக்கலையில் பலம் கூடக்கூட தன்னடக்கம் வர வேண்டும். அதுதான்
அடிப்படை. அந்தக் காலத்து ப்ரூஸ்லீ படங்கள், பின்னால் ஜாக்கிசான்,
ஷாவோலின் மாஸ்டர்ஸ் படங்கள் பார்க்கும் போது தெரியும் இந்த வர்மக்கலை
வல்லுநர்கள் மிகவும் அடக்கமான ஆசாமிகள் என்று. குருவிற்குப் பணிவார்கள்,
குடும்பத்தை நேசிப்பார்கள், நண்பனை மதிப்பார்கள், பொதுவாக சமூக ஒழுங்கை
மீறாமல் நடப்பார்கள். பின் இவ்வளவு சா(கா)ரமான ஒரு கலையை ஏன் கற்பானேன்?
அடக்கம் வரத்தான்! என்று சொன்னால் முரண்நகை போல் தோன்றும்.
இராமானுஜர் வாழ்ந்த காலத்தில் அந்தணர்கள் சமூகத்தின் உச்சியில் இருந்த
காலம். அவர்கள் வேத ரக்ஷகர்கள் என்ற ஒரே காரணத்திற்காக தமிழ் சமூகம்
அவர்களுக்கு ஏகப்பட்ட சலுகைகள் கொடுத்து பீடத்தில் வைத்திருந்தது.
ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. Power corrupts! Absolute power corrupts
absolutely! என்று. அது போல், வெறும் பிறப்பால் ஒருவனுக்கு ஏகப்பட்ட
சௌகர்யங்கள் வந்து சேரும் போது தலைகால் புரியாமல் ஆட வாய்ப்புகள் உண்டு.
இச்சமூகம் அது அதிக அளவில் நடந்துவிடாமல் தடுக்க ஃபூஸ் போல் பல
திட்டங்கள் வைத்திருந்தாலும் உயர் குலத்தோன் எனும் திமிர் கொஞ்சமாவது
ஒட்டாமல் போகாது. இப்படியான அதிகாரம் ஒரு சாராருக்கு வந்து சேரும் போது
கடுமையான சட்ட திட்டங்கள் அமுலுக்கு வருவது சகஜம்தானே! அந்த வகையில்தான்
வேத ஒலிகளை ஒரு சூத்திரன் கேட்டுவிட்டால் அவன் காதில் ஈயத்தைக் காய்ச்சி
ஊற்ற வேண்டும், வேத சாஸ்திரங்களைப் பயிலுதல் அதன்படி ஒழுகுதல்
பெண்குலத்திற்கும் சூத்திரருக்கும் தடை செய்யப்பட்டது போன்ற மனிதவிரோதச்
சட்டங்கள் நடைமுறையில் இருந்தன சாஸ்திரங்களின் அனுமதியுடன்!
http://groups.google.com/group/mintamil/msg/626f0ca215d20f4a?
எனவேதான் இராமானுஜர் முதலில் தன் சமூகத்தை மாற்ற முற்பட்டார். அந்தணர்
சமூகம் அறிவுத்திமிர் கொண்ட சமூகம். ஆரம்பத்தில் அப்படி இருந்திருக்க
வாய்ப்பில்லை என்று வள்ளுவம் சொல்கிறது. வெறும் அறவோராக, முக்கோல்
பகவர்களாகவே இருந்திருக்கின்றனர். ஆயினும், உயர் கல்வி என்பது
அவர்களுக்கு பாரம்பரியச் சொத்தாக வரும் போது, இயல்பாக அறிவுத்திமிர் வர
வாய்ப்புண்டு! அந்த மனநிலையை மாற்ற முற்படுவதின் முதல் அடிதான் தனது
குருவான யாதவப் ப்ரகாசருக்கு ,’தாஸ’ பாவத்தைக் காட்டி அருளல். யாதவருக்கு
சமிஸ்கிருதம் கற்றுக் கொடுக்க வரவில்லை ஸ்ரீஇராமானுஜர். ஆனால்
அந்தணர்களுக்கு பணிவையும், பக்தியையும் மீட்டிக்கொடுக்க வந்தார்
எம்பெருமானார். ஆனால், ஒரு வழக்கத்திற்கு பழக்கப்பட்டவர்களுக்கு அதை
‘மாற்று’ என்று சொன்னால் முதலில் வருவது கோபமும், ஆக்ரோஷமும்தான்.
அதனால்தான் செந்தண்மை பூண்டு ஒழுக வேண்டிய யாதவப்பிரகாசர் இளம் பிள்ளையான
ஸ்ரீஇராமானுஜரைக் கொல்லவும் துணிந்தது. இது முதல் விபத்து. ஆனால்
தொடர்ந்து ஸ்ரீஇராமானுஜர் விபத்துகளை தம் முற்போக்கு நெறியால்
சந்திக்கிறார். குளித்து மூன்று அனலை ஓம்பும் அந்தணர்களை கோயில்
சேவகர்கள் என்றாக்கினால் யாருக்கு மனம் வரும்? இதனால் அவருக்கு
ஸ்ரீரங்கத்து வீதியிலேயே உஞ்சவிருத்தியின் போது நஞ்சு வைத்த உணவு
பிச்சையாகப் போடப்படுகிறது. இது இரண்டாவது விபத்து. இவையிரண்டும்
அந்தணர்களால், அந்தணர் குலத்தில் மாமணியாக நிற்கும் இராமானுஜருக்கு
நடக்கிறது.
காரணம் என்ன என்று உளவியல் நோக்கில் பார்த்தால், பூலோகத்து தேவர்கள்
என்று சமூகம் மதிக்கும் ஒரு குலத்தில் உள்ளோரை, ‘தாஸானுதாஸன்’ என்று மாறு
என்று சொன்ன மாற்றத்தின் பின்புலத்தில் உள்ள வலி. அதுவும் சாதாரண தாஸன்
அல்ல, திருமால் அடியார் என்பவர் எப்படி இருக்க வேண்டுமாம்? திருவாய்மொழி
சொல்கிறது:
குவலந்தாங்கு சாதிகள் நாலிலும்
கீழிழிந்து, எத்தனை
நலந்தா னிலாதசண் டாளசண்
டாளர்க ளாகிலும்,
வலந்தாங்கு சக்கரத் தண்ணல்
மணிவண்ணற் காளென்றுள்
கலந்தார், அடியார் தம்மடி
யாரெம் மடிகளே. 3.7.9
என்று இருக்க வேண்டுமாம். இது அந்தக் காலத்து அந்தணர்களுக்கு சாத்தியமா
(ஏன் இப்போதும் சாத்தியமா)? ஆனால், இராமானுஜர் இதை எதிர்பார்த்தார். அவர்
இதை வெறும் வாய்ப்பேச்சாகச் சொல்லாமல் நடந்தும் காட்டினார். இன்று நாம்
பாரதியை உச்சி முகர்ந்து கொண்டாடுகிறோம். அவனது புரட்சிக்
கருத்துக்களுக்கு. அதே குலத்தில் உதித்த ஒரு பெரியவர், இதை அவருக்கு
முன், பல நூற்றாண்டுகளுக்கு முன்னமே, சொல்லி வைத்து நடைமுறைப்படுத்தியும்
இருக்கிறார் என்பது புரட்சிதானே?
இராமனுஜர் அந்தணர் குலதர்மம் என்பதை தலைகீழாக்கிவிட்டார். அதாவது,
உண்மையான பிராமணன் பிரம்மத்தை அறிந்தவன் ஆவான். பிரம்மத்தை அறிந்தவனுக்கு
தன் ஆத்ம சொரூபம் என்ன என்று தெரியும். ஆத்ம சொரூபம், என்னவெனில்
இறைவனுக்கு ஆட்பட்டு இருத்தல். என்றும் அடிமை என்று உணர்ந்து இருத்தல்
என்று கணக்கை தலைகீழாக்கியது புதுமை (அதாவது அர்த்தம் பொதிய சமூக
நீதியாக்கியது புதுமை). இது அந்தணர்களுக்குத் தெரியாது என்றில்லை,
வேதத்தில்தான் எல்லாம் இருக்கிறதே. ஆனால் படித்ததை வாழ்க்கையில் கொண்டு
வருதல் என்பது சிரமம். கற்க, கற்ற பின் அதற்குத்தக நிற்க எனில், அதுதான்
பெரிய பிரச்சனை.
இந்தச் சிக்கலை அழகிய மணவாள நாயினார் சொல்லுவார் (என் வார்த்தையில்),
‘சூத்திரனுக்கும், பெண்களுக்கும் தாஸபாவம் என்பது மிக இயல்பாக
படிந்திருக்கிறது. ஆனால் வேதங்கள் கற்று சமூகத்தாலும், மன்னாதி
மன்னர்களாலும் போற்றப்படும் பண்டிதர்களுக்கோ அது படிய மாட்டேன் என்கிறது.
எனவே சூத்திரர்கள் அதிர்ஷ்டம் பெற்றவர்கள்’ என்று. இராமானுஜரின் பெரிய
புரட்சி என்பது சமூகத்தின் மிக உயர்ந்த படிநிலையில் இருக்கும் அந்தணனை
சமூகத்தின் கீழ் நிலையில் இருக்கும் ஒருவனைக் கண்டு ஏக்கமுறும்படி
செய்தது என்று சொல்லலாம்.
இது உண்மையில், சமூகத்தின் எண்ணங்களை, இத்தனை நூற்றாண்டுகளாக படிந்து
போய் ஸ்தரப்பட்டுப் போன வழக்கத்தை மாற்றுவது ஆகும். இது எந்த வகையிலும்
பெரியாரின் சீர்திருத்ததிற்கு எள்ளளவும் குறைந்ததில்லை. ஆனால் இராமானுஜர்
புரட்சியோ ‘தாமரைப் புரட்சி’. தாமரை எவ்வளவு மென்மையானதோ அது போல்
மென்மையான புரட்சி. இராமானுஜர் யாதவப்பிரகாசரை வன்முறையால்
திருத்தவில்லை. அவரது ஆன்ம சொரூபத்தைக் காட்டி தடுத்து ஆட்கொண்டார்.
அவரது, ஒன்றுவிட்ட தம்பி கோவிந்தன் பிற நெறிகளில் உழன்று கொண்டிருந்த
போது அவரைத் திருத்தி உண்மையான நெறிக்கு அழைத்து வந்தார். பின்னால்
‘எம்பார்’ என்று போற்றப்படும் வைணவ சீலராக மாற்றி ஆட்கொண்டார்.
இவர் பெயர்தான் இராமானுஜன். ஆனால் செய்கையில் ஸ்ரீஇராமனாகவே நடந்து
கொண்டார். ‘இன்று போய் நாளை வா!’ என்று சொல்லி புல், பூண்டு, ஈ, எறும்பு
என்று சகல ஜீவன்களுக்கும் மோட்சமளிக்க வந்த வள்ளல் அல்லவோ ஸ்ரீஇராமன்.
ஸ்ரீஇராமானுஜரும் அதே வழியில் எல்லோரையும் அனைத்துக் கொண்டு, பாரிய
மனமாற்றத்தை உருவாக்கி ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தை உருவாக்க
முயற்சித்தார். உயர்குலம் மாறும் போது ஒரு சமூகமே மட, மடவென மாறிவிடும்
என அறிந்தவர் உடையவர்.
திராவிடக் கட்சிகள் இதைச் செய்வதாகச் சொல்லிக்கொண்டு சமூகத்தில்
வன்முறையையும், அசூசையும், நிறவாதக்கருத்துக்களையும் பரப்பியதே தவிர
உண்மையான சமூக மாற்றத்தை அல்ல. இராமானுஜர் சாதாரண தர்மம், விசேஷ தர்மம்
என்று நாசூக்காகச் சொல்லி மாற்றுகிறார். இதை ஒப்பு நோக்கி, பெரியார்
தாசர்கள் நாமம் போட்டவன் நெற்றியை நக்கி அழிப்பது என்பது எத்தகைய உளவியல்
பாதிப்பை உருவாக்கியிருக்கும் என்று எண்ணிப்பார்க்கலாம். ஒரு சமூகத்தின்
ஒத்த அங்கத்தினரை ஜென்மப்பகைவர்களாக மாற்றுவதா புரட்சி? அவர்களையா நாம்
புரட்சியாளர்கள் என்று பட்டியலிட வேண்டும்? மாறாக சமூகத்தில்
கீழ்ப்பட்டுப் போன அங்கத்தினரை, ‘திருக்குலத்தோர்’ என்று பெயர் சூட்டி
உயர்த்துவது அன்றோ புரட்சி! காந்தியின் ‘ஹரிஜன்’ என்பது இராமானுஜரின்
‘திருக்குலத்தோர்’ எனும் கோட்பாடுதானே!
காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று! என்பதை மீண்டும், மீண்டும் மேற்கோள்
காட்டி ஒரு சமூகத்தைப் பகைவர்கள் போல் காட்ட முயல்கின்றனர். ஆனால் எத்தனை
பேர் காதில் ஈயம் ஊற்றப்பட்டது என்ற கணக்கு நம்மிடம் கிடையாது.
அப்படியொரு சட்டம் இருக்கலாம். ஆனால் அதை லோககுரு என்று வந்துதித்த
ஸ்ரீஇராமானுஜர் மதித்தாகவே தெரியவில்லையே! வேதங்கள் சுட்டுவது எதை?
இறைவனை! வேதங்கள் உருவானது எதற்காக? இறைவனை அறிய. இறைவன் அவதரிக்கும்
போது கூடவே வேதங்களும் அவதரிக்கின்றன என்பது ஆன்மீகப்புரிதல்.
அப்படிப்பட்ட வேதபுரீஸ்வரரான ‘நாரணனை’ அவனைச் சுட்டும் எண்ணெழுத்து
மந்திரத்தை, தன் காதில் ஓதப்பட்ட திருமந்திரத்தை உலகோர் காதிற்கு மாற்றிய
இந்தப் புதுமையைக் காணாமல். காதில் ஈயத்தை ஊற்றினான் என்பது எவ்வளவு
பொய்! இராமானுச முனி காதில், ‘தேனை’ அல்லவோ ஊற்றி இருக்கிறான்.
இவைகளையெல்லாம் எப்படி வருணிக்க முடியும்? தாமரைப் புரட்சி என்ற சொல்லன்றி?
ஆசைப்பட்டால் இன்னும் வரும்...
அக்குரல் சொல்கிறது, இராமானுஜர் ஒரு சாதாரண அந்தணர். அவர் அந்தணர்
குலத்தில் தோன்றி, அந்தணர் ஒழுக்கங்களை முறையாகப் பின் பற்றி, அவர்
கற்றறிந்த சாத்திரங்களுக்கு முரணில்லாத ஓர் வாழ்வைச் செம்மையாக வாழ்ந்த
பெரியவர். அவர் புரட்சியெல்லாம் ஒன்றும் செய்யவில்லை என்பது.
இராமானுஜர் அந்தணர் ஒழுக்கத்தை மீறியதாக வரலாறு இல்லை. அவர் சாஸ்திர
விரோதமாகவும் ஏதும் செய்யவில்லை. எதற்கெடுத்தாலும் சாஸ்திர ஒப்பு நோக்கு
இருந்து கொண்டே இருக்கும் அப்பழுக்கற்ற வாழ்வு அவருடையது. ஆயினும் அவர்
செய்த செயல்கள் இன்று பெரும் புரட்சியாகத் தோன்றுகிறதே? இதை எப்படி
விளங்கிக்கொள்வது?
அதற்கு முதலில் அவர் வாழ்ந்த, அவருக்கு முன்பிருந்த சமூக ஒழுக்கங்களை
கூர்ந்து கவனிக்க வேண்டும். இராமானுஜ அவதாரத்திற்குப் பின் ஒரு தொன்மம்
(myth) உண்டு. காஞ்சி பூரணர் என்றழைக்கப்படும் திருக்கச்சி நம்பிகள்
காஞ்சி பேரரளுளாப்பெருமாளுடன் சகஜமாக உரையாடக் கூடியவர். இரவு
திருப்பள்ளியெழுச்சி செய்த பின்னும் திவ்ய தம்பதிகளுடன் பள்ளியறையில்
தனித்து இருக்கும் பாக்கியம் பெற்றவர். இவருக்கும் பெருமாளுக்கும்
சுவாரசியமான உரையாடல்கள் நடக்கும். ஒரு நாள், தமிழகம் செல்லும் போக்கு
கண்டு மனம் பொறுக்காத பூரணர் பெருமாளிடம் உங்கள் பூரண கருணையும்,
மாட்சியும் இம்மாந்தர்களுக்கு சரியாகப் புரியவில்லையே. எங்கும் உம்
அருளாட்சி பூரணமாகப் பொலியும் வகை செய்தல் கூடாதா? என்று
வேண்டியிருக்கிறார். அதற்குப் பெருமாள் சிரித்துக் கொண்டே, இதற்கு நான்
ஏன் வேறு ஆள் தேட வேண்டும். தினமும் எம்முடன் பள்ளியறை பரியந்தம் உறவு
கொண்டாடும் நீர் இருக்கையில்! என்று சொல்லியிருக்கிறார். பூரணர்
பதறிப்போய், என்ன ஐயனே! இது!? எனக்கு என்ன தெரியும்? உம் மாட்சிமை பற்றி
மக்களுக்கு எடுத்துச் சொல்ல? என்று பதிலளித்து இருக்கிறார். என்ன
தெரியாதா? நீர்தானே ஓய்! என் கூடவே இருந்து என் எல்லாப்பெருமையையும்
அறிந்து வைத்திருக்கிறீர்! இதற்கு மேல் என்ன வேண்டும்? என்று
கேட்டிருக்கிறார், மீண்டும் பதறிய பூரணர், ஐயனே! உம் விளையாட்டை
நிறுத்திக்கொண்டு நல்ல அந்தண சிரேஷ்டராக ஒருவரை இப்பூமிக்கு வழங்கும்.
நான்கு வேதமும் பூரணமாய் கற்று, ஆகம, உபநிடத, இதிகாச புராணங்களை
முற்றுமாய் அறிந்த ஒருவரை விரைவில் அனுப்பி வையும் ! என்று
சொல்லியிருக்கிறார். அதற்கு மேல் பூரணரை சோதிக்க விரும்பாத பேரரளுளான்,
சரி! நீ விரும்பியபடியே, நமது சேஷனான “இரு கேழ் உத்தி அணிந்த எருத்தின்
வரை கெழு செல்வனை’ அனுப்பி வைப்போம்! என்று சொல்ல, அதன் படியே ஆதிசேஷனின்
அம்சமாக ஸ்ரீஇராமானுஜர் அவதரிப்பதாக தொன்மம்.
இதில் மறைந்திருக்கும் சேதி என்னவெனில், பெருமாளுடன் நித்யம் பேசும்
பூரணர் தான் அதற்கு அதிகாரி அல்லேன் என்று சொல்லிவிடுகிறார். பெருமாள்
நினைத்தால் என்னமும் செய்யலாம்தானே? ஆயினும் அக்கால சமூக ஒழுங்கை
சிந்தித்து ஒரு அந்தணரை அனுப்பி வையுங்கள் என்கிறார். வேறு
குலத்திலிருந்து அனுப்புங்கள் என்று கேட்டிருக்கலாம், ஆயினும் தமிழ்
மண்ணில் அந்தணர்களுக்கு அச்சமூகம் கொடுத்திருக்கும் உயர் இடத்தை உற்று
நோக்கி அக்குலத்தில் உதிக்க வேண்டுகிறார். மேலும் காரியம் அவசரமானது.
இச்சமயத்தில் திருப்பாணாழ்வார் போல் ஒரு பாணரை அனுப்பினால் அவர் சமூக
நீரோட்டத்தில் எதிர் நீச்சல் அடித்து, தடைகளை மீறி வெளி வந்து இறைவன்
பற்றிய பேருண்மைகளைச் சொல்லுவதற்குள் ‘போதும், போதுமென்றாகிவிடும்’ !
ஆக, இறைவனோடு பேசும் போதும் தமிழகக் குமுகாய ஒழுங்கை மனத்தில் இருத்திப்
பேசுகிறார் பூரணர். இப்போதைய மொழியில் சொல்வதானால், பூரணர் மிகவும்
பிராக்டிக்கலாகப் பேசுகிறார். ‘நான் சொன்னால் எவன் கேட்பான்’? என்பது
நன்கு தெரிந்திருக்கிறது அவருக்கு.
பூரணர் வாழ்ந்த காலத்தில் நான்கு வருணங்களும் தன் எல்லைமீறா ஒழுங்குடன்
இருந்து வந்திருக்கின்றன என்று தெரிகிறது. மேலும், ‘அந்தணர் என்போர்
அறவோர்’ எனும் சூத்திரமும் நடைமுறையில் இருந்திருக்கிறது. இல்லையெனில்
அங்கு போய் ஏன் அவதரிக்கச் சொல்கிறார்?
அவர் எதிர்பார்த்தவிதமே, பூரணச் சந்திரனாக இராமானுஜர் பிறக்கிறார்.
வளர்கிறார், படிக்கிறார், இறைவனது கல்யாண குணங்களில் மூழ்கித்திளைக்கும்
சுபாவம் உடையவராக இருக்கிறார். அக்காலத்து அந்தணர்குரிய செயல்பாடான
தருக்கம், நியாயம் போன்ற வாதங்களிலும் தேர்ச்சி பெறுகிறார். ஆதிசங்கர
பகவத்பாதாள் அஸ்திவாரம் போட்ட வேதாந்த நெறி பொலிவற்றுப் போன பொழுதில்
அதற்கு மீட்டுயிர் தருகிறார். இவையெல்லாம் சரித்திரம். ஆதார பூர்வமானவை.
ஆனால் இதற்கும் மேல் இராமானுஜர் செய்த சமூக மாற்றங்கள்தான் அவரை
இன்றளவும் பேச வைக்கிறது.
இராமானுஜர் பாகவத சமூகத்தில் ஜாதிக்கு இடமில்லை என்கிறார்!
குலம் தாழ்ந்த சண்டாளரேனும் (பஞ்சமர்) எம்பெருமான் திருநாமம் சொன்னால்
அவன் ‘திருக்குலம்’ என்கிறார்!
நான்காவது வருணத்தில் வந்துதித்த சடகோபனை வைணவகுல குரு என்கிறார்!
அதுவரை, தாய்மொழியாக மட்டுமிருந்த தமிழ் மொழியைக் கோயில் மொழியாக்குகிறார்!
சைவத்துடன் எமக்கு என்றும் சச்சரவு கிடையாது என்று நிரூபித்து வேதாந்த,
ஆகம உசாத்துணைகள் கொண்டு ஸ்ரீமன் நாராயணனே வேதப் பெரும் பொருள் என்றும்
நிறுவுகிறார்.
வடவேதம் மட்டுமே கற்றறிந்திருந்த கணபாடிகளைப் புதிதாய் திராவிட வேதமென்ற
தமிழ்ப் பனுவல்களை ஓத வைக்கிறார்!
அது மட்டுமில்லாமல் தொன்றுதொட்டு சமிஸ்கிருத மந்திரங்கள் மட்டுமே
கர்ப்பக்கிரகத்தில் ஒலிக்க வேண்டும் எனும் முறையை மாற்றி முதன்முதலாக
தமிழ்ப்பாசுரங்களை இறைவன் சந்நிதியில் ஓத வைக்கிறார்!
எல்லாவற்றிற்கும் மேலாக மானுட மாற்றங்கள் போதாது என்று இறைவன் உற்சவ
முறைகளிலேயே மாற்றங்கள் கொண்டு வருகிறார். வேத பண்டிதர்கள் மந்திரம்
சொல்ல பவனிவரும் நம்பெருமாள் உற்சவத்தில், தமிழ் முன்செல்ல, அது கேட்டு
இறைவன் பின் செல்ல, இறைவன் திருப்பாதம் தேடும் வேதம் அதன் பின் செல்ல
என்றொரு புதுப்பழக்கத்தைக் கொண்டு வருகிறார்.
கட்டுப்பட்டியான தமிழக சமூகத்தில் இவற்றில் ஏதாவதொன்று செய்வதே
பிரம்மப்பிரயர்த்தனம் (20 நூற்றாண்டு பெரியார் கதையே சாட்சி, சிதம்பரம்
தீட்சதர்களே சாட்சி). இவை எல்லாவற்றையும் அவரால் எப்படிச் செய்ய
முடிந்தது?
அவர் வாழ்ந்த காலத்தில் வேதாந்த சதஸ் என்பது மிகவும் கடுமையான,
நெறிபிறழாத திருச்சபை. இவரது ஒவ்வொரு செயலுக்கும் அங்கு பதில் சொல்லியாக
வேண்டும்.
எனவே இராமானுஜர் செய்த இத்தனை மாற்றங்களுக்கும் சாஸ்திரத்தில் இடம்
இருந்திருக்கிறது என்று பொருள்!
இன்று இது மதம்தான் இந்தியாவில் ஜாதீய விஷக்கருவை இட்டது என்று கூசாமல்
பொய் சொல்கின்றனர். அது உண்மையெனில், ஏன் இந்துமதம் பரவி, இந்து
சாம்ராஜ்ஜயமாக இருந்த ஸ்ரீவிஜயப்பேரரசு (இந்தோனீசியா, மலேசியா,
தாய்லாந்து), கெமிர் பேரரசு (கம்போடியா, தாய்லாந்து, பர்மா) நிலைத்த
நாடுகளில் ஜாதிமுறை இல்லை? அங்கு பின்னால் பௌத்தமும், இஸ்லாமும் வந்ததால்
ஜாதிமுறை ஒழிந்தது என்று சொன்னால் அதே பௌத்தம் இந்தியாவில்தானே
தோன்றியது? இங்கு ஏன் ஜாதி போகவில்லை? இஸ்லாம் இன்றும் இருக்கிறதே!
அங்கும் ஜாதீயச் சாயல்கள் உள்ளனவே (வாசிக்க தோப்பில் முகம்மதுமீரான்).
கிறிஸ்தவம் ஜாதிகளை ஏற்றுக்கொள்ளாத சமயமாயிற்றே, ஆனால் ஏன் இந்திய
கிறிஸ்தவத்தில் முறை தவறாக ஜாதீயம் எந்தவித மாற்றமும் இல்லாமல்
இருக்கிறது? எல்லாவற்றிற்கும் மேல் ஆரியர்களான பிராமணர்கள் ஜாதீயத்தை
விதைத்தனர் என்றால் எப்படி இராமானுஜரால் மிகத்துணிந்து தமிழக ஜாதீயத்தை
எதிர்க்க முடிந்தத?. சரி ஜாதீயம் ஆரியர்கள் கொண்டு வந்தது என்றால், ஏன்
ஐரோப்பாவில் ஜாதீயம் இல்லை?
மிகவும் யோசிக்க வேண்டிய விஷயங்கள் இவை. இந்து மதமா ஜாதிக்கு
வித்திட்டது? ஒருவனை உய்விக்க வருவதுதானே சமயம். அப்படி இருக்க ஜாதிக்கு
இந்து மதம் எப்படி அனுமதி தரும்? சாஸ்திரங்கள் அப்படிச் சொல்கின்றன
என்றால் எப்படி தமிழகத்தில் ‘தலித் ஆலயப்பிரவேசம்’ நடந்தது?
கேள்விகள் கேட்போம்!
During Ramanuja's time he appointed 74 Mudhalis (Leaders or Simhasanadipati) of whom a good number were Shattadas(generally of non-Brahmin origin). It is noteworthy that 5 among the 74 Mudhalis were women. All these fit well with the character of Ramanuja. He freely mingled with true devotees of God, irrespective of their caste. He washed their feet, ate food left over in their plate, held them with great reverence, and popularized their works.
When Kanchi Purna, a great devotee of God, did not let Ramanuja to wash hisfeet, saying that
he is from a low caste, Ramanuja says, "pray , noble Sir,
is it the wearing of the sacred thread that makes one a Brahmana? He who is
devoted to God, he alone is a genuine Brahmana."
At another instance, Kanchi Purna refused to accept Ramanuja as his
disciple, stating that Ramanuja was a Brahmin well versed in the shatras,
while Kanchi Purna was just an ignorant old Sudra. To this Ramanuja replied,
" If the knowledge of the Sastras only brings about pride instead of devotion
to God, then it is false knowledge, better is ignorance than this. You have
verily tasted the real essence of the Sastras; other scholars merely carry
the burden, like the ass that carries the load of sandalwood. So saying, he
fell at the feet of Kanchi Purna and began to weep.நாகமலை புதுக்கோட்டைக்கு அப்போது தினம் பயணப்பட்டுக் கொண்டிருந்தேன்
மதுரையிலிருந்து. என்னுடன் பல பேராசிரியர்களும், தமிழ் ஆய்வு மாணவர்களும்
உடன் வருவர். கிழக்கே போகும் ரயில் என்று பின்னால் எங்கள் ரயில் வண்டி
பிரபலமானது. அப்பயணங்கள் எனக்கு கற்றுக்கொடுத்தவை அநேகம். முனைவர்
சு.வெங்கட்ராமன் பட்டர்பிரான் எனும் பெருந்தகையை அறிமுகப்படுத்தினார்,
தி.ஜானகிராமன் அப்போதுதான் இன்னொரு பெண்ணால் அறிமுகமாகிறார். அப்போது
எங்களோடு ஒரு பேராசிரியர் வருவார். அவர்நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்.
அப்படிச் சொல்லிக்கொள்வதில் பெருமிதம் கொள்பவர். அந்த ஜாதி மாணவர்களுக்கு
மட்டுமே ஆய்வு நிலையம் நடத்தியவர். அவர் ஒருமுறை இராமானுஜர் பற்றி, ‘இவர்
வந்ததுக்கு அப்புறம் பல கீழ் ஜாதி மக்கள் ஐயங்கார் என்றாகினர்’ என்றார்.
இது எவ்வளவு உண்மை என்று யோசிக்க ஆரம்பித்தேன்.
இப்படிச் சொல்வதற்குப் பின் பல பொய்யான அனுமானங்கள் உள்ளன. அதாவது ஐயர்
என்பவர் சிவப்பாக, வெள்ளைக்காரன் போல் இருப்பான், தமிழன் கருப்பாக
இருப்பான். எனவே கருப்பாயுள்ள ஐயங்காரெல்லாம் கீழ்ஜாதியிலிருந்து
வந்தவர்கள் என்று எண்ணுவது. இரண்டாவது இராமனுஜர் செய்த மாற்றங்களைச்
சரியாகப் புரிந்து கொள்ளாதது. மூன்றாவது அவர் மேல் பொறாமை கொண்டு
‘இல்லாததும், பொல்லாததும்’ சொல்வது (அதாவது மறுமலர்ச்சியின் மீதான
காழ்ப்பு). கடைசியாக தமிழக ஜாதிமுறை பற்றி சரியாகப் புரிந்து கொள்ளாதது.
வருணம்/ஜாதி இரண்டையும் குழப்பிக்கொள்வது.
1. எந்த மனிதக்குழுவிலும் (population) நிறம் என்பது ஸ்தரமில்லை.
ஆப்பிரிக்கா கண்டத்திலேயே அட்டக்கரியிலிருந்து, மாநிறம், வெள்ளை என்ற
வேறுபாடுகளுண்டு. அது போல் ஐயரென்றில்லை எல்லா ஜாதியிலும் கருப்புமுண்டு,
வெள்ளையுமுண்டு. எனவே கருப்பாய் இருந்தால் ஐயரில்லை என்று
சொல்லிவிடக்கூடாது, சிவப்பாய் இருப்பரெல்லாம் ஐயரென்றும்
சொல்லிவிடக்கூடாது.(intelligence and skin color are multigenic traits)
2. இராமனுஜர் சாஸ்திர விரோதமில்லாமல் என்ன செய்தார்? அவர் ஜாதிகளை
மாற்றவில்லை. எல்லோரையும் ஐயங்காராக மாற்றவில்லை. குணங்களினால் அமைகின்ற
வருணப் படிநிலைகளில் மாற்றத்திற்கு/இடப்பெயர்விற்கு அனுமதி இருக்கிறது
என்றறிந்து எல்லோரையும் உயர்ந்த வருணமான அந்தணர் வருணத்திற்கு
மாற்றினார். உதாரணமாக, செந்தண்மை பூண்டொழுகும் ஜீனர்களெல்லாம்
அந்தணர்களே. வள்ளுவர் அவர்களைத்தான் சொல்கிறார் என்று நா.கணேசன் போன்றோர்
சொல்வதுண்டு. சமீபத்தில் விநோத் எழுதிய தொடரிலும் யார் பிராமணன்
என்பதற்கு புத்தர் கொடுத்த விளக்கமும், செந்தண்மை பூண்ட ஒரு பௌத்தனை
அந்தணன் என்று சொல்வதில் தவறில்லை என்றே சொல்கிறது. எனவே இந்த விதிகளின்
படி, இராமானுஜர் பாகவத ஒழுக்கத்தைக் கொண்டு வந்து அதன் மூலம் எல்லோரையும்
அந்தணர் குலத்திற்கு உயர்த்தினார். கௌசிகன், விஸ்வாமித்திரன் ஆனது போல்!
எல்லோரையும் ஐயங்கார் ஆக்கவில்லை!!
3. இராமானுஜர் பாரதி கண்ட கனவை மிக எளிய வழியில் செய்வித்தார். பாரதி
இதனால்தான் இந்தியர்களை `ஆரிய புத்ர` என்றான். ஆரிய என்றால் உயர்வானவன்
என்று பொருள். சிம்பாலிக்கலாக கனகலிங்கத்திற்கு பூணூல் மாட்டினார்.
இராமானுஜர் காலத்தில் அப்படிச் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஏனெனில்
பூணூல் என்பது எல்லாக்குலத்திலும் அணியப்பட்டு வந்தது. அந்தணர்களில்
ஐயர், வைசிகனில் சில செட்டி சனங்கள், சூத்திரனில் கொல்லர்கள், குயவர்கள்.
சத்திரியர்களும் பூணூல் போடுவதுண்டு என நம்புகிறேன். எனவே இராமனுஜர்
செய்த வருணாஸ்ரம போக்குவரத்தை பலர் தவறாகப் புரிந்து கொண்டுவிட்டனர். அது
சாஸ்திர விரோதமன்று. மேலும் நான்கு வருணங்களில் முதல் மூன்று
வருணத்தாருக்கும் வேதம் கற்கும் உரிமையுண்டு. நான்காவது வருணத்தாருக்கு
அந்த உரிமை இல்லை என்பதை உணர்ந்து எம்பெருமானார் திராவிட வேதத்தின்
உயர்வை மீட்டெடுத்து அதை நால்வகை வர்ணத்தாருக்கும் பொதுவாக்கினார்.
இதற்கு அவருக்கு ஆகம சாத்திரங்கள் அனுமதி கொடுத்தன. அரங்கனார் முன்பு
சுட்டிக்காட்டியது போல் ஆதிசங்கரபகவத் பாதாள் அவர்களே பாஞ்சராத்ர
ஆகமங்களை வேதோத்தமமானது என்று ஏற்றுக்கொண்டுள்ளார்.
4. இம்மாதிரி மாற்றங்கள் ஜாதியின் பால் பற்றுக்கொண்ட பலருக்கு எரிச்சல்
ஊட்டியிருக்க வேண்டும். என்னுடன் வந்த பேராசிரியருக்கு நிச்சயம்
எரிச்சலூட்டியதை என்னால் கண்ணுற முடிந்தது. அதனால்தான் இராமானுஜர்
ஜாதிகளை மாற்றினார் என்ற புரளியைக் கிளப்பியது. அவர் பாரதி போல் எந்தக்
கனகலிங்கத்திற்கும் பூணூல் மாட்டியதாகக் கதை இல்லை. அவர் செய்தது பாகவத
தர்மம் எனும் ஜாதிகளற்ற ஒரு பெருநெறியை ஸ்தாபிதம் செய்தது. அது
இந்தியாவெங்கும் மலர்ந்தது. சென்றவிடமெல்லாம் புரட்சி விதையை
வித்திட்டது. இல்லையெனில் கபீர் இல்லை, மீரா இல்லை, கிருஷ்ண சைதன்யர்
இல்லை, புரந்தரதாசர் இல்லை.
5. வருணங்களுக்குள் மாற்றம் கொள்ள சமய நெறி தடை செய்யவில்லை. ஏனெனில் அது
குணத்தை அடிப்படையாகக் கொண்டது. மண்ணில் உழலும் ஒரு விவசாயிக்கு பக்தி
பூக்கக்கூடாது என்றில்லை, இல்லை ஒரு மறவன் பாகவதனாக மாறக்கூடாது
என்றில்லை (உம். மகாவீரர், புத்தர், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார்,
ஆளவந்தார்), ஒரு வைசிகன் ஆன்மீகனாக மாறக்கூடாதா என்ன? புரந்தரதாசர்,
பட்டிணத்து அடிகள் இன்னும் பலர். எனவே, `வாடிய பயிரைக் கண்டபோது வாடும்
உள்ளம் கொண்ட வள்ளல்கள்` அனைவரும் அந்தணரே.
ஆனால் ஜாதி என்பது வேறு. அது பிறப்பினால் தீர்மானிக்கப்படுவது. Tribal
communities என்று சொல்லலாம். ஆதிமனிதனாக தமிழன் ஆப்பிரிக்காவிலிருந்து
வந்த காலத்திலிருந்து குடிவாரி சமுதாயமாகவே இன்றளவும் அவன் இருக்கிறான்.
சங்கம் பேசும் வேடுவர், யாதவர், பாணர், பறையர், பார்ப்பான் போன்றவை
குடிகள். அதுவே ஜாதி ஆகும். ஜாதிமுறையை யாரும் இங்கு கொண்டு வந்து
விதைக்கவில்லை. அது தொன்று தொட்டு இருந்துவரும் சமூக அமைப்பு.
இக்காலத்திலும் ஜாதிவிட்டு ஜாதி மாறிக் கல்யாணம் செய்து கொண்டாலும்,
தம்பதிகளின் அடிப்படை ஜாதி மாறிவிடுவதில்லை. அதே ஜாதீய அடையாளங்களோடுதான்
சாகும்வரை வாழ வேண்டும். இதை இறைவனால் கூட மாற்றமுடியாது. அவ்வளவு
இறுக்கமானது. எனவேதான் சமூக விரோதத்தை சம்பாதித்துக் கொள்ளாமல்
இராமானுஜர் ‘பாகவத தர்மத்தை’ விசேஷ தர்மம் என்றழைத்தார். எனவே
இராமனுஜருக்குப் பிறகு பள்ளன், பறையன் எல்லோரும் ஐயங்கார் ஆகிவிட்டனர்
என்று சொல்வது வெறும் காழ்ப்புணர்ச்சியால், ஜாதீய எண்ணத்தினால் வருவது.
அவர் அப்படியெல்லாம் ஒன்றும் செய்யவில்லை. அவர் வருணாஸ்ரம தர்மம்
சொல்லுகின்றவாறு ஒரு உத்தமமான பார்ப்பானாக வாழ்ந்தார். அவரிடம் வந்து
சேர்ந்த பாகவதர்களை அவர் ஜாதீயக் கண்கொண்டு பார்க்கவில்லை. அதனால்தான்
அவரை ‘எம்பெருமானார்’ என்று உயர்வாகச் சொல்கிறோம்.
நான்காம் வர்ணத்தவரான நம்மாழ்வாரை குலதனமாக, ஸ்ரீவைஷ்ணவ ஆச்சார்யனாக
வைத்துக் கொண்டதற்கு முக்கிய காரணம் சர்வ சுதந்திரனான இறைவனை மானுட
சட்டங்களுக்கு கீழ்படிந்து நடக்க வேண்டுமென்று சொல்லாமல் அவன்
நிர்ஹேதுவாக, எக்காரணமுமின்றி, யாருக்கும் அருள் சுரக்க முடியும்
என்பதைக் காட்டும் முகமாக நம்மாழ்வாரின் உயர்வு கருதி அவரை ஆச்சார்யனாக
ஏற்றுக்கொண்டார்.
உண்மையில் இராமனுஜர் வாழ்ந்தது தமிழ் வாழ்க்கை. சங்கம் தொட்டு தமிழ்
மண்ணில் இருந்து வந்த மிக உயர்ந்த விழுமியங்களை உட்கொண்ட வாழ்க்கை.
அவனொரு தூய தமிழன். அவன் காட்டிய வழி வர்க்க, ஜாதீய வேறுபாடுகள் அற்ற
சமூக நியாயம் நிரம்பிய வழி. நமது வக்கிரத்தைக் காட்ட அந்த உத்தமன் மேல்
பழி சொல்லிப் பேசுவது நமது அழுக்கைக் காட்டுவதாகவே அமையும்.
மேலும் சங்கம் போற்றிய இந்து தர்மம், வேதம் சொல்லிய இந்து தர்மம் பொது
மனித உயர்விற்கு வித்திட்டதே தவிர அவனை ஜாதீய வலைக்குள் போட்டு
கட்டுப்படுத்த வேண்டுமென்று என்றும் எண்ணியதில்லை. இல்லையெனில் பிரபுபாதா
வெறும் இரண்டு சப்ளாக்கட்டை, உஞ்சவிருத்தி மூட்டையுடன் இராமானுஜ
தரிசனத்தை உலகெலாம் பரப்ப ஏன் அமெரிக்கா செல்ல வேண்டும்? இந்துக்கள்
வாழும் பாலித்தீவில் வர்ணங்கள் உண்டு. ஜாதீயம் கிடையாது. ஜாதி எனும்
பிறப்பின் பால் வருகின்ற அடையாளம் typically இந்தியன். very unique. அதை
யாரும் இங்கு கொண்டுவரவில்லை. ஆதியிலிருந்து அப்படித்தான் உள்ளது. அந்தக்
கெடுபிடிகளிலிருந்து இந்தியனை மீட்கவே இந்து தர்மம் அன்று முதல் இன்றுவரை
பாடுபட்டு வருகிறது.இந்தியாவில் மட்டும் ஏன் இத்தனை ஸ்வாமிஜீக்கள்,
ஆச்சார்யர்கள்? சாம்ராட் சிவாஜி நாடக வசனம்தான் நினைவிற்கு வருகிறது,
“நோயிருக்கும் இடத்தில்தானே வைத்தியனுக்கு வேலை”
சாம்ராட் அசோகன் என்று இருக்க வேண்டும். மன்னிக்க.
நா.கண்ணன்
இராமானுஜரால் எப்படி சாதிக்க முடிந்தது என்றறிய வேண்டுமெனில் நமது இந்து
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
உங்களது பின்னூட்டங்களை ஆர்வமுடன் வாசித்தேன். அவைகளுக்கான என் பொதுவான
கருத்தாக இதைப்பதிகிறேன்:
வர்ணாஸ்ரமம் என்று நிறத்தைக் குறிப்பது போல் பெயர் இருந்தாலும், அது மனித
குணத்தையே குறிக்கிறது. நான்கு வர்ணங்களைச் சொல்லும் கீதை அந்த நான்கு
வர்ணமாகவும் இறைவனே உள்ளதாகச் சுட்டுகிறது. தலை மேலிருப்பதாலும், கால்
கீழிருப்பதாலும் ஒன்று உயர்ந்தது, ஒன்று தாழ்ந்தது என்றில்லை. எங்கு வலி
என்றாலும் உயிர் போகிறது. நான்காம் வர்ணத்தவர் இழிவு என்றால், `ஏரின்றி
அமையாது உலகு` என்று நம் முன்னோர் பாராட்டி இருக்க மாட்டார்கள். இறை
வணக்கத்திற்குப் பின் வள்ளுவன் நேரடியாக வான் சிறப்பிற்கு வருகிறான்.
இறைவனுக்கு அடுத்து சூத்திரன் என்றாகிறது. எனவே ஒட்டு மொத்தமாக ஒன்று
உயர்ந்தது ஒன்று தாழ்வானது எனும் எண்ணம் நமது ஜாதீயத்திலிருந்து
வருகிறது.
சென்ற நூற்றாண்டில் மிகவும் விமர்சிகப்பட்ட தலித் நாவல் இமயம் அவர்கள்
எழுதிய கோவேறு கழுதை ஆகும். அது வண்ணான் சமூகம் பற்றிய அலசலாகும். அது
மிகத்தெளிவாக சில உண்மைகளைச் சொல்கின்றன. அதுவே நமது குமுகாயத்தின்
ஆணிவேர்.
1. ஜாதி என்பது பிறப்பால் வருவது (வர்ணம் என்பது குணத்தால் வருது)
2. ஜாதிவிட்டு, ஜாதி மாறமுடியாது. புதிதாக வேண்டுமானால் ஜாதி
உருவாக்கிக்கொள்ளலாம் (வர்ணம் விட்டு, வர்ணம் மாறமுடியும். இராமானுஜப்
புரட்சியே சாட்சி)
3. ஜாதியின் அடிப்படைக் குணம், ஒரு ஜாதி மற்றொன்றிலிருந்து உயர்ந்தது
என்பது. கோவேறு கழுதையில் இந்து வண்ணான், கிறிஸ்தவ வண்ணானை விடப்
பெரியவன். ஆனால் இருவரும் கள்ளர்களுக்குக் கீழானவர். இந்த discrimination
என்பது இந்து மதம் சார்ந்தது என்பது பொய். இங்கிலாந்தில் புகலிடம் தேடும்
பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள், தாங்கள் பாகிஸ்தானில் தீண்டாமைக் கொடுமைக்கு
ஆளாவதாகச் சொல்கின்றனர். அங்கு வந்த ஒரு கேஸில், பொது இடத்தில் தண்ணீர்
எடுக்கப்போன கிறிஸ்தவப் பெண்ணை முஸ்லிம் பெண்கள், இவள் தண்ணீரைத்தொட்டால்
தீட்டு என்று புறக்கணிக்க, வாய் வார்த்தை முற்றி, கிறிஸ்தவப் பெண்
முகம்மது நபியைக் கீழத்தரமாகப் பேசினால் என்று ஷாரீயா விதிப்படி கொலை
தண்டனை விதிக்கப்பட்டது. என்ன கொடுமை பாருங்கள். தோப்பில் முக்கம்மது
மீரானின் புத்தகங்களில் முஸ்லிம் சமூகத்தில் நிகழும் தீண்டாமை
பேசப்படுகிறது. இஸ்ரேல் நாட்டில் எல்லோரும் யூதர்கள் என்றாலும் அங்கும்
உயர்வு தாழ்வு உண்டு. இந்தியாவிலிருந்து போகும் ஆதி இந்திய யூதர்கள்
வெள்ளை யூதர்களுக்கு ஒருபடி கீழேதான். அருந்ததிராய் மிக நளினமாக தனது
நாவல்களில் சிரியன் கிறிஸ்தவர்கள் எப்படி மற்ற இந்துக்களை தமக்குக்கீழ்
என்று தீண்டாமை செய்கின்றனர் எனக்காட்டுவார். எனவே, இந்து மதம்தான்
தீண்டாமையை தன் சாஸ்திரங்கள் மூலம் சொல்லியது என்பது `வாசிப்புக் கோளாறு`
(பனுவல் வாசிப்பு முறை). எல்லா மதங்களிலும் தீண்டாமை
பரவிக்கிடப்பதிலிருந்து அதை சமய ஒழுங்கு என்று காணாமல் குமுகாயக்கூறு
என்று காண வேண்டும். கிருஷ்ணனோ, யேசுவோ, நபியோ தீண்டாமையை என்றும்
ஆதரித்து இருக்க வாய்ப்பில்லை. அவர்கள் மனிதரை இக்கீழ் மனநிலையிலிருந்து
மேம்படுத்தவே முயன்றனர் என்று கொள்ளலாம்.
இந்தியாவின் தீண்டாமை ஜாதீயத்தில் ஒளிந்திருக்கிறது. அதன்
நீட்சியாகத்தான் ஒட்டு மொத்த வர்ணங்களும் உயர்வு தாழ்வு பேசப்படுகிறது.
ஆயின் உண்மையில் வர்ணப் போக்குவரத்து சாத்தியம். அது ஜாதியில் நடைபெற
முடியாது. அது குமுகாயக்கூறு என்பதால் அக்குமுகாயம் விட்டு நீங்கிய
ஒருவனைச் சாதீயத்தீட்டு அண்டுவதில்லை. உதாரணமாக, தமிழ்நாட்டு தலித்,
டெல்லியில் வாழும் போது, அவர் வேண்டினாலன்றி அவரது தலித் அடையாளம்
அக்குமுகாயத்திற்கு அவசியமில்லாதது. வெளிநாடு வந்துவிட்டால் முற்றும்
அதற்குப் பொருள் இல்லாமல் போய்விடுகிறது.
ஆயினும் வெளிநாடு போகும் இந்திய வம்சாவளியினர் அங்கு போய் இதே
குமுகாயத்தை அமைக்கும் போது ஜாதீயம் ஏற்றுமதியாகிவிடுகிறது. ஐரோப்பாவில்
எங்களது இலக்கிய சந்திப்புக்களில் ஈழத்தின் ஜாதீய நீட்சி எப்படி ஐரோப்பிய
மண்ணிலும் செயல் படுகிறது என்று அலசுவதுண்டு. ஈழ மண்ணில் அந்தணர் உயர்
குலமல்ல. வேளாளரே உயர் குலம். இதுவும் இங்கு கவனிக்கத்தக்கது.
இந்திய ஜாதீயம் என்பது நிறப்பிரிகை அல்ல. அதுவொரு மன அழுக்கு.
சுபமங்களாவில் ஒரு குருட்டுக்கிழவியின் தீண்டாமை விவரிக்கப்படும்.
நா.கண்ணன்
2011/4/21 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
>>> காஞ்சி பூரணர் என்றழைக்கப்படும் திருக்கச்சி நம்பிகள்
காஞ்சி பேரரளுளாப்பெருமாளுடன் சகஜமாக உரையாடக் கூடியவர். இரவு
திருப்பள்ளியெழுச்சி செய்த பின்னும் திவ்ய தம்பதிகளுடன் பள்ளியறையில்
தனித்து இருக்கும் பாக்கியம் பெற்றவர் <<<
இதை நம்பிகள் காலத்திய குமுகாய ஒழுங்குமுறை அனுமதித்ததா ?
தேவ்
> வளர்கிறார், ...
>
> read more »
பேராசிரியர் அவர்களே,
வணக்கம்.
பட்டியலின் 74 பேர்களில் பெண் பாலர் யார் யார் ?
சாத்தாத முதலிகள் யார் யார் ?
The names of the 74 simhanadhipatis -
· CHOTTAI NAMBI (SON OF AALAVANDAR)
· PUNDARIKA (SON OF MAHA POORNA)
· YAAMUNA (SON OF GHOSTI PURNA)
· SUNDARA BAHU ( SON OF THIRUMAALAI AANDAN)
· RAAMANUJA ( SON OF SAILA PURNA)
· PARASARA BHATTAR(AND HIS BROTHER, SONS OFALWAN)
· RAAMAANUJA ( SON OF AANDAN)
· NADUVIL AAZHWAN(MADYAMAARYA)
· GOMATATHU AAZHWAAN
· THIRUKOVALOOR AAZHWAN
· THIRUMOOHUR AAZHWAN
· PILLAI PILLAI AZHWAAN(DISCIPLE OF KOORATHAZHWAN)
· NADADOOR AMMAL (VARADA VISHNU ACHARYA, VATSYA ARADAR)
· VISHNU CHITTHA (ENGALAZHWAN)
· MILAGAZHWAN
· NEYYUNDHAZHWAN
· BAALARAAYA-1 (SETLUR SIRIYAAZHWAN)
· ANANTHAZHWAN (THIRUMALAI)
· VEDAANTHI AAZHWAN
· KOVIL AAZHVAN
· UKKALAAZHWAN
· ARANA PURATU AAZHVAN
· EMBAAR
· KIDAMBI AACHAN
· BALARAAYA-11(KANIYANOOR SIRIYA AAZHWAN)
· ICHCHAMBAADI AAZHWAN
· KONGIL AACHAN
· ICHCHAMBADI JEEYER
· TIRUMALI NALLAN
· SATTAAM PILLAI JEEYER
· THIRUVELLARAI JEEYER
· AATKONDAVALLI JEEYER
· THIRUNAGARI PILLAI
· KAARANJI SOMAYAAJI
· ALAMKAARA VENKATAVAR
· NAMBI KARAM DEVAR
· DEVARAJA BHATTAR
· PILLAI URANDHI UDAIYAAR
· THIRUKURUGAI PIRAN PILLAN
· PERIYA KOIL VALLALAAR
· AASURIPPILLAI
· KANNAPURATTU AACHAAN
· MUNIPPILLAI
· AMMANGIPPILLAI
· MAARUTHI AANDAAN
· MAARUTHI SIRIYA AANDAAN
· SOMAYAJI AANDAAN
· JEEYER AANDAN
· ISVARAANDAAN
· IYENNIPILLAI AANDAAN
· PERIYAA ANDAAN
· SIRIYA AANDAAN
· KURINJI PURAM SIRIYA AANDAAN
· AMMANGI AANDAAN
· AALAVANDAAR AANDAAN
· DEVARAJA MUNI (ARULALAP PERUMAL EMPERUMANAR)
· THONDANOOR NAMBI
· MARUDOOR NAMBI
· MAZHUVOOR NAMBI
· THIRUKURUNGUDI NAMBI
· KURUVA NAMBI
· MUDUMBAI NAMBI
· VADUGA NAMBI
· VANKIPIRATHU NAMBI
· PARAANKUSA NAMBI
· AMMANGI AMMAL
· PARUTHIK KOLLAI AMMAL
· UKKAL AMMAL
· CHOTTAI AMMAL
· MUDUMBAI AMMAL
· KOMAANDOOR PILLAI
· KOMAANDOOR ELLAYAVALLI
· KIDAAMBI PERUMAAL
· AARKATU PILLAAN
http://www.ibiblio.org/sripedia/ramanuja/archives/may02/msg00012.htm
தேவ்
On Apr 20, 8:20 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
> வெறும் சமய ஒழுங்கு என்பதைத் தாண்டி பாரிய சமூக மாற்றத்திற்கு
> வித்திட்டிருக்கிறது
> Sociology of religion in India By Rowena Robinsonhttp://books.google.co.in/books?id=q_0O8LxsWb8C&pg=PA227&lpg=PA227&dq...
> http://books.google.co.in/books?id=lyU4nepW2xQC&pg=PA28&lpg=PA28&dq=S...
>
> 2011/4/20 N. Kannan <navannak...@gmail.com>
> ...
>
> read more »
>
> christian1.jpg
> 57KViewDownload
ஆகம வழியில் அமைந்த ஆலயங்களை நிறுவிய, புரந்த மன்னர்கள் - கோச்செங்கட்
சோழனிலிருந்து பின்னாளில் தோன்றிய மருது சகோதரர் வரை அனைவரும் புலால்
மறுத்துப் பஞ்சசீலம் காத்தவர்கள் தானா ?
ஏரார் முயல்விட்டுக் காக்கைபின் போவதே - என்று பாடியவரும் திவ்ய
தேசயாத்ரை மேற்கொண்டு ஆலயம் தொழுததாக அறிகிறோம்
தேவ்
On Apr 21, 2:10 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
> ஐயா
> புறத்தூய்மையை ஆகம அடிப்படையில் இயங்கும் கோவில்கள் வலியுறுத்தின. கோவிலில்
> இறைவனைத் தரிசிக்க வுருபவர் சில புறத்தூய்மைகளைக் கடைபிடிக்க வேண்டும் என்று
> வலியுறுத்தியது
> புலால் உண்ணாமை, கள்ளுண்மை அவற்றில் முக்கியமானவை. கோவிலில் இறைவன் முன் நிற்க
> இத்தூய்மை அவசியம் என்று வலியுறுத்தப்பட்டது. அதனால் கோவிலுக்குள் நுழைய,
> வணங்க கட்டுப்பாடு உருவானது
> பஞ்சமரிலும், வேளாளரிலும் புலால் உண்ணாதவர்கள் உயர்வானவர்களகக் கருதப்பட்டனர்
> என்பதே உண்மை
> சமூகவியல் மானுடவியலில் 18 ஆம் நூற்றாண்டு 19ஆம் நூற்றாண்டுச் சமூகவியல்
> சிந்தனையில் தமிழர் வாழ்வியல் சிந்தனை இணைப்பில்
> நாகராசன்
>
> 2011/4/21 seshadri sridharan <sseshadr...@gmail.com>
>
> > நாகராசரின் விளக்கம் தெளிவார்ந்தது. நெஞ்சத்துத் தூய்மையே இறைவழிபாட்டிற்கு
> > உகந்தது. நெஞ்சத்தே தூயோர் எல்லாவற்றையும் இறைவடிவாயே காண்பார். ராமானுசர் தூய
> > நெஞ்சினர்.
>
> > சேசாத்திரி
>
> > 2011/4/21 Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
>
> >> 18 மற்றும் 19ஆம் நூற்றாண்டின் சமூகவியல் மானுடவியல் குறிப்புகளும்
> >> அனுமானங்களும் (ஜீகன்பால், தண்டபானி ஸ்வாமிகள், ஆறுமுக நாவலர்) தமிழர்
> >> வாழ்வியல் மனுநீதியிலிருந்து மாறுபட்டு ஆகம அடிப்படையில் அமைந்த
> >> வழிபாட்டுமுறையும், தொழில் அடிப்படையில் உருவான குமுகமும் இணைந்து நிலவியதாகக்
> >> குறிப்பிடுகின்றன.
> >> ஆகம அடிப்படையில் எழுந்த இறை வழிபாட்டுக்குத் தூய்மை தேவை. அது தொழில்
> >> அடிப்படையில் பிரிந்திருந்த பிரிவுகளில் யாரிடம் அத்தூய்மை இருந்தாலும் அவர்கள்
> >> ஆகம விதிப்படி உயர்ந்தவர்களே
> >> எனவே குமுகம் பிரிந்திருந்தாலும் ஆகம விதிக்குட்பட்டால் அனைவரும் சமமே என்ற
> >> கருத்து நிலைபெற்று வர்ணாஸ்ரம முறைப்படி உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பிரிவு
> >> இல்லாத சமுதாயம் தமிழ்ச் சமுதாயம் என்ற அனுமானம் ஏற்றுக்கொள்ளப்பட்டால்
> >> அனைவரும் சமம் என்ற கருத்தை தூய்மையுள்ளவர் அனைவரும் எப்பிரிவினராயினும்
> >> இறைவன் முன் சமம் என்றிருந்த நிலை மாறி குமுகத்தில் பிறப்பின் அடிப்படையில் ஒரு
> >> குழுவே தூய்மைக்குறைவானது என்ற கருத்து யாரால் எப்போது தமிழகத்தில் பரப்பப்
> >> பட்டது?
>
> >> நாகராசன்
>
> >> 2011/4/21 N. Kannan <navannak...@gmail.com>
>
> >> 2011/4/20 N. Kannan <navannak...@gmail.com>:
> >>> >இந்தியாவில் மட்டும் ஏன் இத்தனை ஸ்வாமிஜீக்கள்,
> >>> > ஆச்சார்யர்கள்? சாம்ராட் சிவாஜி நாடக வசனம்தான் நினைவிற்கு வருகிறது,
> >>> > “நோயிருக்கும் இடத்தில்தானே வைத்தியனுக்கு வேலை”
>
> >>> சாம்ராட் அசோகன் என்று இருக்க வேண்டும். மன்னிக்க.
>
> >>> நா.கண்ணன்
>
> >>> --
> >>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >>> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may
> >>> like to visit our Muthusom Blogs at:
> >>>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
> >>> send email to minT...@googlegroups.com
> >>> To unsubscribe from this group, send email to
> >>> minTamil-u...@googlegroups.com
> >>> For more options, visit this group at
> >>>http://groups.google.com/group/minTamil
>
> >> --
> >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> >> to visit our Muthusom Blogs at:
> >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
> >> send email to minT...@googlegroups.com
> >> To unsubscribe from this group, send email to
> >> minTamil-u...@googlegroups.com
> >> For more options, visit this group at
> >>http://groups.google.com/group/minTamil
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
>
>
> 1709 jIkan.doc
> 48KViewDownload
On Apr 21, 1:54 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
> aகண்ணன் ஐயா
> தங்கள் பதிலுக்கு நன்றி
> இருப்பினும் வர்ணம் என்பதற்குத் தெளிவான ஒரு கருத்து உருவாக்க முயற்சி
> செய்யுங்கள்
> வர்ணாஸ்ரமம் என்ற மனிதனின் நால்வகை வாழ்வியல் நிலைகள் அறம் பொருள் இன்பம் வீடு
> இந்திய வாழ்வியல் மரபுக்கே பொதுமையானது
> நால்வகை வர்ணம் என்ற அடிப்படையில் அரசு ஆளுமைக்கான கருத்துரு வடிவம் பெற்றது
> மெளரியர் ஆட்சியில் அர்த்த சாஸ்த்ரத்தின் அடிப்படையில் உருவானது. அப்பேரரசின்
> எழுச்சிக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் அம்முறை சிறப்பாகப் பயன் பட்டது.
> நால்வகை வர்ணத்தை சமயத்துக்குக் கொண்டுவந்து குமுகத்தைப் பிரித்த வடபுலத்தில்
> தமிழகம் போன்ற விரிவான ஜாதிப்பிரிவுகள் உருவாகவில்லை
> தமிழகத்தில் ஜாதிப் பிரிவு என்பது குமுக வளர்ச்சிக்கென பழங்குடிகள் வகுத்த
> வாழ்வியல் நெறி. அதுபோன்றே இறைவனை அடைய ஜாதி ஒரு தடையில்லை ஆகம விதியில்
> வலியுறுத்தப்பட்ட தூய்மை முக்கியம் என்பதே உண்மை
> நாகராசன்
>
ஐயா,
வர்ண கோட்பாடு ஆரியர்கள் கொண்டுவந்தது. உலகெங்கும்
3-பிரிவாக உள்ளதை இட்டு, அதற்கு வெளியே இருப்போரை
4-ஆம் வருணம் ஆக்கினர்.
ஜாதி இந்தியாவில் பல்லாயிரம் ஆண்டுகளாக இருப்பதற்கு
திராவிடர்களின் பங்கும் நிறைய உண்டு. அவர்களின்
இறைக்கோட்பாடு உணவால் ஒரு பிரமிட் ஸிஸ்டம்
உருவாகக் காரணமாக இருந்திருக்கிறது. இதுபற்றி
சங்க இலக்கியம்கொண்டு அருமையாக விளக்கியவர்
பெர்க்கிலி தமிழ் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் அவர்கள்.
அவரது பல ஆண்டுகளுக்கு முந்தைய கட்டுரை:
சங்க இலக்கியம் பற்றிய ஆராய்ச்சிகளில் தொன்மையான
இந்தியாவின் சமூகக் கட்டமைப்பில் திராவிடரின் பங்கு
பற்றி அறிய பேரா. ஹார்ட்டின் தீஸிஸ் மிக, மிக
முக்கியமானது. இந்தியா முழுக்க திராவிடர்களின்
ஸப்ஸ்றேற்றம் (உ-ம்: சிந்து சமவெளி) இருந்திருக்கிறது
என்பதற்கு ஜாதியின் அடிப்படைகள் முக்கிய
சான்றாகும். முண்டா ஜனங்களிடமோ, இந்தியாவுக்கு
வெளியிலோ இந்தியா போன்ற ஜாதியமைப்பை
விரிவாகக் காண முடிவதில்லை. ஆரிய வர்ணம் - திராவிட
ஜாதிகளின் கலவை இந்தியாவில் உருவாவதற்கு
பண்டைய வேளாண்முறைகளும், திராவிடர்களின்
இறைக் கோட்பாடுகளும் காரணம். திராவிடர்களின்
பண்டை இறைக்கோட்பாடுகளின் அடிப்படைகளைப்
புரிந்துகொள்ள சங்க இலக்கியம் துணையாகிறது.
சிந்து சமவெளி சமூகத்தில் ஜாதியின் தொடக்கங்களை
காண்கிறோம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
தனி இழையில் ஜார்ஜ் ஹார்ட் தீஸிஸ் பற்றி விளக்குகிறேன்.
நா. கணேசன்
One of the good books on VarNa concept from old Sanskrit books is
by prof. Brian K. Smith. I have a personal copy & you can check some
pages
at books.google.
Classifying the universe: the ancient Indian varṇa system and the
origins of caste
Brian K. Smith
Oxford University Press, 1994
The first book to analyze why India's caste system has authoritatively
endured for so long, this path-breaking text provides, for the first
time anywhere, an exhaustive analysis of the historical predecessor to
caste: the ancient Indian varna system as it was laid out in the Vedic
literature. Presenting a revisionist overview of the way the religion
of the Veda is to be understood, Classifying the Universe demonstrates
that social classes were systematically reduplicated in taxonomies
that organized the universe as a whole. The classification of society,
in which some groups were accorded rights and privileges withheld from
others, could thus be represented as part of a primordial and
universally applicable order of things. Social hierarchy, argues the
author, was in this way subtly but powerfully justified by recourse to
other realms of the cosmos that were similarly ordered, and this
essentially religious understanding of varna is the key to
comprehending the Vedic world-view in all its complexity, and the
persistence of its power in the social realm.
-----------------
Sanskritists like Brian Smith do not know much about the Dravidian
part that is clear from a study of Sangam
texts. This was brilliantly done by George Hart about 40 years ago.
Sangam literature gives us a pointer
towards the caste structures of old India. In the agricultural society
(e.g., vELir),
the notions of food, death, pulai, and how they give rise to jAti
structure, food pyramid of caste structure, ...
need to be explained from scholars like Hart. Sanskrit and Dravidian
"caste" notions were heavily
interacting. Also, scholars like H. Tieken, ... do explain how
Sanskrit lietrature was interacting
in extreme South in the production of Sangam texts, its dates, ...
N. Ganesan
"அவரிடம் வந்து
சேர்ந்த பாகவதர்களை அவர் ஜாதீயக் கண்கொண்டு பார்க்கவில்லை. அதனால்தான்
அவரை ‘எம்பெருமானார்’ என்று உயர்வாகச் சொல்கிறோம்."
எம்பெருமானார் பற்றி எனக்குத் தெரிந்தன எல்லாம் அவர் கோபுரம் மீது ஏறி
குருஉபதேசம் செய்தார் என்பதும், இன்னும் சில தகவல்களும்தான்.
தங்களது இந்த இழை வழியாக எம்பெருமானார் பற்றி அதிகமாக அறிந்து கொள்கிறேன்.
நன்றிகள் பல.
அன்பன்
கி.காளைராசன்
--
திருப்பூவணப் புராணம் மற்றும் திருப்பூவணக்காசி படியுங்கள்,
http://www.freewebs.com/thirupoovanam/
அன்னதானம் செய்வோம், கண்தானம் செய்வோம். இவ்விருதானங்களையும் சிவபெருமான்
ஏற்றுக் கொள்கிறார்,
On Apr 21, 10:25 am, Raja sankar <errajasankarc...@gmail.com> wrote:
> இன்னமும் எவ்வளவு நாளைக்கு தான் ஜாதி முறை ஆரியர்கள் கொண்டு வந்தது. இந்தியா
> போன்ற சாதி அமைப்பு வெளியே எங்கும் இல்லை என சொல்லிக்கொண்டு இருக்க
> போகிறீர்களோ?
>
munaivar avarkaLukku,
where is the varNa-jAti system as in India. For caste system
in Sangam and Sanskrit texts, many Tamil and Sanskrit theses
have been written to explain them. You may want to read
to know.
Best wishes,
N. Ganesan
> அரபியர்கள் தலையில் இரண்டு வகையான துண்டு கட்டியிருப்பார்கள். வெள்ளை
> கட்டியிருந்தால் அரச அல்லது மேன் மக்கள். கட்டம் போட்டது கட்டியிருந்தால்
> சாதாரண மக்கள். இதிலே யார் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்பது கொண்டு
> தீர்மானிக்கப்படும்.
>
> ஐரோப்பாவில் இருந்த செர்ப் மற்றும் நோபிலிட்டி இது அங்கும் இருந்தது என்பதற்கு
> இன்னோர் சான்று. ஐரோப்பா, சீனா என எல்லா இடங்களிலும் இது உண்டு.
>
> சாதீயம் விலங்குகளில் இருந்து வந்ததற்கும் இப்போது ஆதாரங்கள் உண்டு. இவ்வளவு
> ஆதாரங்கள் இருந்தும் ஏன் இந்த கோயபல்ஸ் பிரச்சாரம் ஆடிக்கொருமுறை அமாவாசைக்கு
> ஒரு முறை மின் தமிழில் நடக்கிறது என தெரியவில்லை. :-))
>
> கணேசனாரிடம் இன்னொரு கேள்வி. கொஞ்ச நாள் முன்னாடி நீங்கள் சங்க இலக்கியத்திலும்
> சாதி முறைகள் இருந்தன என்று சொல்லி படித்ததாக ஞாபகம். மணி மணிவண்ணன் உங்களிடம்
> அதை நீரூபிக்க சொல்லி கேட்டார் என நினைக்கிறேன்.
>
> இப்போது அந்த தீஸிஸ் எவ்வாயிற்று?
>
> ராஜசங்கர்
>
> 2011/4/21 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
>
>
> > வர்ண கோட்பாடு ஆரியர்கள் கொண்டுவந்தது. உலகெங்கும்
> > 3-பிரிவாக உள்ளதை இட்டு, அதற்கு வெளியே இருப்போரை
> > 4-ஆம் வருணம் ஆக்கினர்.- Hide quoted text -
>
> - Show quoted text -
கணேசனார் முன்பு எழுதியது -
Dear Selvan,
There are in many societies some initial stages of
caste system. In Japan, professors who study ancient
Japan point to a system similar to what Sangam
system had as described by Hart. That is one reason
what we find in Japan.
But none had caste system as elaborate as we find in India.
I'd like to compare this with "systemic retroflexion"
in Indian langauges. All over the world,
in America, midwestern R, in Sweden etc.,
there is "spontaneous retroflexes",
but not as systemic as in Indic languages recorded
in orthography as phonemes.
Same thing, India has caste embedded in Dharma shastras.
Now, many rush to get SC, ST certificates because
of the quota system & benefits that accrue from it.
N. Ganesan
There are castes where there is no Manu Smrithi or brhamins. Elitism
is a human charecteristic.
'களமர்’ சேக்கிழார் பிள்ளைத்தமிழிலும் இடம் பெறுகிறது -
வெண்ணந் துரறி வயிறுளைந்து வீற்று வீற்றாக் கருவுயிர்த்த
வெண்ணித் திலத்தை யரித்தெடுத்து வெள்வாய்க் *களமர்* கரைகுவிக்க
வண்ணந் துவரென் றுவமிக்கும் வாயோ திமநீர் குடைந்தெழுந்து
மற்றக் குவியன்மே லிவர்ந்து மருவி முதிரா வெயில்காயக்
கண்ணந் துறவுண் டெழுதருமக் *களமர்* மராள முட்டையினைக்
கதிர்நித் திலமென் றுரக்குவித்தோங் கடையே மயங்கி யெனநாணுந்
தண்ணந் துறைசேர் குன்றத்தூர்த் தலைவா தாலோ தாலேலோ
சகலா கம்பண் டிததெய்வச் சைவா தாலோ தாலேலோ.
சங்கத்தின் நீட்சி 19ம் நூற்றாண்டுவரை தொடர்கிறது ; களம சாதி இப்போது
உள்ளதா தெரியவில்லை. கேரளத்தில் களமசேரி என்றே ஓர் ஊர் உள்ளது
எர்ணாகுளம் மாவட்டத்தில்.
களமர் சாதியைத் தோற்றுவித்தது யார் ?
தேவ்
இந்த இழையிலோ அல்லது வேறு எங்கோ நிலப்பிரபுத்துவம் நிலவிய நாடுகளில்
எல்லாம் சாதி முறை இருந்தது என செல்வன் அவர்கள் எழுதினார்.
கணேசனார் தம் கருத்தோடு ஒத்துப் போகாதவர்களை முனைவர் என்று கேலி
செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
ஜாதி பற்றி மிகுதியாகப் பேசியாகி விட்டது. உடையவரின் பங்களிப்பு என்ன ?
அதுவே இங்கு விவாதக்கரு. இந்த இழை அதன் விளக்கத்தை மட்டும்
எதிர்பார்க்கிறது.
இடையில் அடியேன் எழுப்பிய சில வினாக்களுக்கும் விடை வேண்டும்
தேவ்
On Apr 21, 10:25 am, Raja sankar <errajasankarc...@gmail.com> wrote:
> இன்னமும் எவ்வளவு நாளைக்கு தான் ஜாதி முறை ஆரியர்கள் கொண்டு வந்தது. இந்தியா
> போன்ற சாதி அமைப்பு வெளியே எங்கும் இல்லை என சொல்லிக்கொண்டு இருக்க
> போகிறீர்களோ?
>
> அரபியர்கள் தலையில் இரண்டு வகையான துண்டு கட்டியிருப்பார்கள். வெள்ளை
> கட்டியிருந்தால் அரச அல்லது மேன் மக்கள். கட்டம் போட்டது கட்டியிருந்தால்
> சாதாரண மக்கள். இதிலே யார் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்பது கொண்டு
> தீர்மானிக்கப்படும்.
>
> ஐரோப்பாவில் இருந்த செர்ப் மற்றும் நோபிலிட்டி இது அங்கும் இருந்தது என்பதற்கு
> இன்னோர் சான்று. ஐரோப்பா, சீனா என எல்லா இடங்களிலும் இது உண்டு.
>
> சாதீயம் விலங்குகளில் இருந்து வந்ததற்கும் இப்போது ஆதாரங்கள் உண்டு. இவ்வளவு
> ஆதாரங்கள் இருந்தும் ஏன் இந்த கோயபல்ஸ் பிரச்சாரம் ஆடிக்கொருமுறை அமாவாசைக்கு
> ஒரு முறை மின் தமிழில் நடக்கிறது என தெரியவில்லை. :-))
>
> கணேசனாரிடம் இன்னொரு கேள்வி. கொஞ்ச நாள் முன்னாடி நீங்கள் சங்க இலக்கியத்திலும்
> சாதி முறைகள் இருந்தன என்று சொல்லி படித்ததாக ஞாபகம். மணி மணிவண்ணன் உங்களிடம்
> அதை நீரூபிக்க சொல்லி கேட்டார் என நினைக்கிறேன்.
>
> இப்போது அந்த தீஸிஸ் எவ்வாயிற்று?
>
> ராஜசங்கர்
>
> 2011/4/21 N. Ganesan <naa.gane...@gmail.com>
In a 21st century India (the largest democracy in the world and one of its fastest growing economies), the caste system of India has been hailed. The division in society has been kept, maintained, solidified and institutionalized. Only the order has been reversed. This is the new order:
1) Scheduled Castes/Scheduled Tribes (SCs/STs) - highest caste (The new Brahmins)
2) The Other Backward Classes (OBCs) (without creamy layer) - the ruling class (The new Kshatriyas)
3) OBCs with creamy layer - the new Vaishyas (they may fight to be counted amongst the ruling class)
4) The General or Forward Class (people in India having surnames signifying higher caste) - the new Shudras (they will either suffer or flee to foreign lands and foreign Universities)
VNagarajanநல்ல பாயிண்டு. பபூன், கழுத்தைப்புலி போன்ற விலங்குகளில் கடைந்தெடுத்த
தீண்டாமையுண்டு.
> கணேசனாரிடம் இன்னொரு கேள்வி. கொஞ்ச நாள் முன்னாடி நீங்கள் சங்க இலக்கியத்திலும்
> சாதி முறைகள் இருந்தன என்று சொல்லி படித்ததாக ஞாபகம். மணி மணிவண்ணன் உங்களிடம்
> அதை நீரூபிக்க சொல்லி கேட்டார் என நினைக்கிறேன்.
>
> இப்போது அந்த தீஸிஸ் எவ்வாயிற்று?
>
(இன்னொரு இழையிலிருந்து ‘பரிபாடலில் மதுரை’)
2011/4/21 N. Ganesan <naa.g...@gmail.com>:
>
> நச்சினார்க்கினியர் உரை:
> ”சிறப்புடைய நாடுகளைப் பாடி தாழ்ச்சி பெற்ற இழிகுலத்தோர் உறையும்
> நாடுகளைப் பாடாமல் தொகுக்கிறார். அவை புறநாடென்பது தோன்ற. அவர்கள்
> காண்டற்குரிய வள்ளிக் கூத்தினையும் கூறி அதனை வெளிப்படுத்தினார்” மற்ற
> உரையாசிரியர்கள் விளக்கம். ”வாடாவள்ளி - வாடுங் கொடியல்லாத வள்ளிக்
> கூத்து, அஃது இழிகுலத்தார் காணும் கூத்து.”
>
நச்சினிக்கினியார் காலம் எது?
குலம் தாழ்ச்சி, உயர்ச்சி சங்க காலம் தொட்டு தமிழ் மண்ணில் இருப்பதைக்
கண்ணுற வேண்டும். தீண்டாமை உள்ளூர் சரக்கு என்று காண்க!
'சாதிகள் இல்லையடி பாப்பா; - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி, உயர்ந்த மதி, கல்வி - அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்! - பாரதி
அதே நேரத்தில் முருகனுக்கு வள்ளியை மனைவியாக வைத்த பாங்கும் நோக்கத்தக்கது!
க.>
எனவேதான் நான் நம்புகிறேன் இந்த ஜாதீய எண்ணத்தின் நீட்சியே வர்ணங்களில்
தாழ்ச்சி, உயர்ச்சி சொலல் என்று. உண்மையில் அங்கு உயர்வு/தாழ்வு
கிடையாது.
நா.கண்ணன்
On Apr 21, 6:13 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> > நச்சினார்க்கினியர் உரை:
> > ”சிறப்புடைய நாடுகளைப் பாடி தாழ்ச்சி பெற்ற இழிகுலத்தோர் உறையும்
> > நாடுகளைப் பாடாமல் தொகுக்கிறார். அவை புறநாடென்பது தோன்ற. அவர்கள்
> > காண்டற்குரிய வள்ளிக் கூத்தினையும் கூறி அதனை வெளிப்படுத்தினார்” மற்ற
> > உரையாசிரியர்கள் விளக்கம். ”வாடாவள்ளி - வாடுங் கொடியல்லாத வள்ளிக்
> > கூத்து, அஃது இழிகுலத்தார் காணும் கூத்து.”
>
> நச்சினிக்கினியார் காலம் எது?
>
ஆராய்வோம்.
> குலம் தாழ்ச்சி, உயர்ச்சி சங்க காலம் தொட்டு தமிழ் மண்ணில் இருப்பதைக்
> கண்ணுற வேண்டும். தீண்டாமை உள்ளூர் சரக்கு என்று காண்க!
>
> 'சாதிகள் இல்லையடி பாப்பா; - குலத்
> தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
> நீதி, உயர்ந்த மதி, கல்வி - அன்பு
> நிறைய உடையவர்கள் மேலோர்! - பாரதி
>
> அதே நேரத்தில் முருகனுக்கு வள்ளியை மனைவியாக வைத்த பாங்கும் நோக்கத்தக்கது!
>
> க.>
>
> எனவேதான் நான் நம்புகிறேன் இந்த ஜாதீய எண்ணத்தின் நீட்சியே வர்ணங்களில்
> தாழ்ச்சி, உயர்ச்சி சொலல் என்று. உண்மையில் அங்கு உயர்வு/தாழ்வு
> கிடையாது.
>
இருக்கலாம்.
> நா.கண்ணன்
--
On Apr 21, 12:40 pm, devoo <rde...@gmail.com> wrote:
> ஜாதி பற்றி மிகுதியாகப் பேசியாகி விட்டது. உடையவரின் பங்களிப்பு
> என்ன ? அதுவே இங்கு விவாதக்கரு. இந்த இழை அதன்
> விளக்கத்தை மட்டும் எதிர்பார்க்கிறது.
>
தேவ்,
முனைவர் என்பதற்கு விளக்கம் தொல்காப்பியத்தில்
பாருங்கள். அப்பொருள் பட்டப் படிப்பு அல்ல.
உடையவர் புரட்சி பற்றி பெரிதாக தெரிவதில்லை.
எல்லோரும் எழுதுங்கள். ஏதாவது தமிழில் எழுதியுள்ளாரா?
தமிழ், ஆழ்வார் பற்றி வடமொழியில் எழுதியுள்ளாரா? என்றும்
சொல்லவும்.
நா. கணேசன்
தேவ் சார்,
மஹாபூர்ண (< பெரிய நம்பி), காஞ்சிபூர்ண (< கச்சிநம்பி),
கோஷ்டிபூர்ண (< (திரு) கோட்டியூர் நம்பி), ....
இன்னும் பூர்ணர் < நம்பி உதாரணங்கள் உண்டா?
ஏன் நம்பியை பூர்ணன் என்று மொழிபெயர்க்கிறார்கள்?
கமுகு > க்ரமுக, தமிழ் > த்ரமிட, பவளம் > ப்ரவாலம், ...
எனல் போல,
நம்பி > ந்ரம்பி (முழுமைபெறல் - நிரம்புதல்) > பூர்ணன்
என்றா?
நா. கணேசன்
> ...
>
> read more »
சாதி, வர்ணம், முனைவர், நம்பி - தனி இழையில் விவாதிப்போம்.
இங்கு உடையவர் செய்த ‘புரட்சி’ மட்டும்
தேவ்
> ...
>
> read more »
On Apr 21, 9:55 pm, devoo <rde...@gmail.com> wrote:
> கணேசர் ஐயா,
>
> சாதி, வர்ணம், முனைவர், நம்பி - தனி இழையில் விவாதிப்போம்.
> இங்கு உடையவர் செய்த ‘புரட்சி’ மட்டும்
>
> தேவ்
>
கண்ணன் உடையவர் புரட்சி சாதி, வர்ணம் சார்ந்தது
என்கிறார். உண்மையானால் புரட்சி தான்.
நம்பி என்ற தமிழ்ச்சொல் பொருளை பூர்ணன் என்ற
மொழிபெயர்ப்பு தருவதில்லை. இரண்டும் வேறானவை.
வடுகநம்பி > ஆந்த்ரபூர்ணன்.
உடையவர் புரட்சி பற்றிக் கேட்டு தெரிந்துகொள்வோம்.
நா. கணேசன்
> > On Apr 21, 1:39 am, devoo <rde...@gmail.com> wrote:
On Apr 21, 8:39 pm, Raja sankar <errajasankarc...@gmail.com> wrote:
>. ஏனென்றால் முனைவர்கள் மட்டுமே சிந்திக்கும் உரிமம்
> பெற்றவர்கள்.
இணையத்தில் பல முனைவர்களை மக்கள் அறிவார்கள்.
முனைவர் மாத்திரம் சிந்திக்கும் உரிமம் பெற்றவர்
என்று தொல்காப்பியர் குறிப்பிடவில்லை.
அன்புடன்
நா. கணேசன்
முனைவர் சொல்லியாச்சுன்னா அப்பீல் கெடயாது;
தமிழ் இணையத்தில் தொல்காப்பிய முனைவு, பல்கலை முனைவு இரண்டும்
பூர்ணமாகப் பொருந்தும் இணைய நம்பி நீர் ஒருவர் மட்டுமே.
அர்ச்சைக்கும் ‘நம்பி’ உண்டு.
திருக்குறுங்குடி நம்பி:
வடிவழகிய நம்பி - ஸுந்தர பரிபூர்ணன்
பெயர் சூட்டிய பெரியோர்களுக்குத் தமிழ் தெரியாது என நீவிர் சொன்னால்
யாரால் மறுக்க முடியும் ?
(நம்பி - குணபூர்த்தியுடையவர்; பிரான் - மஹோபகாரம் செய்தவர். ஸம்ப்ரதாயம்
வல்லோர் தவறென்று சுட்டினால் திருத்திக் கொள்வேன்)
தேவ்
On Apr 21, 10:23 pm, devoo <rde...@gmail.com> wrote:
> பெயர் சூட்டிய பெரியோர்களுக்குத் தமிழ் தெரியாது என நீவிர்
> சொன்னால் யாரால் மறுக்க முடியும் ?
தேவரீர், இப்படி யான் சொன்னேனா?
> (நம்பி - குணபூர்த்தியுடையவர்;
இந்தப் பொருள் தமிழில் இருக்கிறதா?
நம்பி, பூர்த்தி (பூர்ணம்) இரண்டும் ஒன்றென்றால்
குறுங்குடி நம்பி குணபூர்ணர் என்று ஏன்?
தமிழறிஞரான தாங்கள் சொல்லுங்கள்.
நன்றி,
நா. கணேசன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil