ராமானுஜருக்குப் பின்னால் வைணவத்தில் இரு பிரிவுகள் தோன்றின. தோன்றிய பகுதியைப் பொறுத்து அவை வடகலை என்றும் ,தென்கலை என்றும் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டன. வடக்கில் காஞ்சியை மையமாகக் கொண்டு வடகலையும் ,தெற்கே ஸ்ரீரங்கத்தை மையமாகக் கொண்டு தென்கலையும் வளர்ந்தன.
இவ்விரு பிரிவினருக்கும் இடையே தத்துவ மட்டத்தில் வேறுபாடு இல்லை.இவ்விருசாராருமே ராமானுஜரையும் அவரது விசிஷ்டாத்வைத தத்துவத்தையும் முன்னோடியாகக் கொள்கிறார்கள், என்றாலும் இவர்களுக்கிடையே இறையியல் , ஜீவாத்மா பரமாத்மாவை அடையும் வழி போன்றவற்றில் கடும் வேறுபாடுகள் உள்ளன.
இவை குறித்துப் பல்வேறு அறிஞர்கள் ஆராய்ந்துள்ளனர். இவர்களில் Patricia y Mumme முதன்மை வகிக்கிறார். சமீபத்தில் வெளிவந்துள்ள " The Srivaishnava Theological Dispute " என்ற அவரது நூல் இப்பொருள் குறித்து வெளிவந்துள்ள ஆய்வுகளில் மிகச் சிறந்தது.1
இக்கட்டுரையில் இவ்விரு பிரிவினரில் தென்கலை வைணவத்தின் தத்துவ , இறையியல்,பரமாத்மா ஜீவாத்ம, தொடர்பு ஆகியவற்றை ஓரளவு சமூகப் பின்னணியோடு ஆராய எண்ணியுள்ளேன்.
ராமானுஜரின் காலம் 11--12 ம் நூற்றாண்டு ஆகும், அவர் கி பி 1137 ல் காலமானார் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பின்னால் கிட்டத்தட்ட 130 ஆண்டுகள் வைணவ சமயத்தில் நிகழ்ந்த உள் முரண்பாடுகள் ஒரு பெரும் தத்துவார்த்த சமயக் கிளர்ச்சியைத் தோற்றுவித்தன. இதனால் இப்பிரிவினரிடையே பல்வேறு நூல்கள் தோன்றின. சமயப் ப்ரசாரங்களும் நி்கழ்ந்தன.
இக்கால கட்டத்தில் வைணவம் மக்களிடையே வெகு வேகமாகப் பரவியது. இவை பற்றி விவாதிப்பதற்கு முன்னால் ராமானுஜரின் விசிஷ்டாத்வைத தத்துவம் குறித்து ஓரளவு நினைவு படுத்திக்கொள்வது நமது நோக்கத்துக்கு உதவியாக இருக்கும்.
ராமானுஜருடைய தத்துவத்தை இவ்வாறு சுருக்கிச் சொல்லலாம்
புற உலகையும் தனி மனித உயிர்களையும் (ஜீவான்மாக்கள்) ஒட்டுமொத்தமாக உடல் எனக் கொண்டால் இறைவனை (பரமாத்மா) அதில் உறையும் உயிர் எனக் கொள்ளலாம். எவ்வாறு உடலுக்கு உயிர் ஆதாரமோ அதுபோல புறஉலகு, ஜீவான்மாக்கள் ஆகியவற்றால் ஆன உடலுக்குப் பரமாத்மாவே உயிராவான்.
எனினும் இறைவனே உயிர்கள் அனைத்துக்கும் உலகுக்கும் அந்தர்யாமியாய் உள்நின்று அவையனைத்தையும் இயக்குகிறான்.எனவே ஆன்மாக்கள் பலவாயினும் அவ்வான்மாக்கள் அனைத்தையும் தனக்கு உடலாகக் கொண்டு ஆன்மாக்களுக்கெல்லாம் ஆன்மாவாக நிற்பது பரமாத்மா ஒன்றுதான் என்பது கருத்து.
அதே சமயம் இறைவன் உயிருக்கு உயிராக நிற்கும் காரணத்தால் ,இறைவன் வேறு,ஜீவன் வேறு அல்ல,இரண்டும் ஒன்றுதான் என்பது பெறப்படுகிறது:. ராமானுஜரைப் பொருத்தமட்டில் புற உலகும் உண்மை (ஏனெனில் அது இறைவனின் திருமேனி) உயிர்களும் உண்மை.
ஆனால் அவை ப்ரம்மத்தின் ( இறைவனின் ) விசேஷணங்கள்.ப்ரம்மம் அவ்விசேஷணங்களையுடைய விசேஷியம். இந்த விசேஷணம், விசேஷியம் சேர்ந்த கூட்டுக்கு விசிஷ்டம் என்று பெயர்.அந்த விசிஷ்டத்துக்கு வேறாக வேறொன்றும் இல்லை. அதனாலேயே ராமானுஜருடைய தத்துவம் விசிஷ்டாத்வைதம் என்றழைக்கபட்டது
ராமானுஜர் தமது விசிஷ்டாத்வைத தத்துவத்தை ஆழ்வார்களின் பாசுசுரங்களின் அடிப்படையிலேயே உருவாக்கிக்கொண்டார் என்பதற்கு சான்றுகள் உண்டு. அதிலும் குறிப்பாக, நம்மாழ்வாரின் திருவாய்மொழியே விசிஷ்டாத்வைதத்தின் அடிப்படை என்பதிலும் ஐயமில்லை.நம்மாழ்வாரின் கீழ்க்கண்ட திருவாய்மொழி இக்கூற்றை உறுதிப்படுத்தும்.
”திடவிசும் பெரிவளி நீர்நில மிவை மிசை
படர்பொருள் முழுவதுமாய் அவையவை தொறும்
உடல்மிசை யுயிரெனக் காந்தெங்கும் பரந்துனன்
சுடர்மிகு சுருதியுள் இவையுண்ட சுரனே ”
ராமானுஜர் இப்பாசுரங்களின் அடிப்படையிலேயே ப்ரஸ்தானத் திரயங்கள் என்றழைக்கப்படும் உபநிடதங்கள்,ப்ரம்மசூத்திரம்,பகவத்கீதை ஆகியவற்றுக்கு உரை எழுதித் தமது விசிஷ்டாத்வைதத்தை விவரித்துக் கூறினார்.
வடகலை, தென்கலைப் பிரிவினர் இருவரும் ராமானுஜரின் விசிஷ்டாத்வைதத்தையே தங்கள் தத்துவமாகக் கொண்டுள்ளனர்.அதாவது தத்துவ மட்டத்தில் இரு சாராருக்கும் கருத்து வேறுபாடோ அன்றிச் சச்சரவோ இல்லை. ஆனால் பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்கும் உள்ள உறவை -- வேறு விதமாகச் சொல்வதானால், தனிமனித ஜீவன் (உயிர்) இறைவனை அடையும் வழிமுறை என்ன என்பதிலேயே இவர்களது வேறுபாடு தொடங்குகிறது.
இவ் வேறுபாட்டை விளக்க வைணவ அறிஞர்கள் கூறும் உவமை மிகவும் சுவாரசியமானது பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்கும் இடையே உள்ள உறவு குரங்குக்கும் அதன் குட்டிக்கும் இடையேயுள்ள உறவைப் போன்றது என்று வடகலையார் கூறுகின்றனர்.
இதனை மர்க்கட நியாயம் என்றழைக்கின்றனர் ( மர்க்கடம்-- குரங்கு ) தென்கலையாரோ அவ்வுறவு பூனைக்கும் அதன் குட்டிக்கும் போன்றது என்று கூறுகின்றனர். இதனை “ மார்ஜாரம்-- பூனை என்று அழைக்கின்றனர்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
..இன்று தொடங்கும் இந்தத் தொடரில் தமிழ்த்தேனி ஆங்காங்கே அடிக்குறிப்புகள் இட்டு விளக்கமும் அளித்தால் சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி பொழிந்தாற்போல இருக்கும்,
Vijayaraghavan
On Mar 25, 8:55 am, Subashini Tremmel <ksubash...@gmail.com> wrote:
> *தென்கலை வைணவத்தின் சமூக உள்ளடக்கம்
> *வெ. கிருஷ்ணமூர்த்தி
> *பகுதி 2
> *...
> read more »
முதலில் கட்டுரையின் தலைப்பே சில கேள்விகளை எழுப்பியிருக்கிறது. தென்கலை
வைணவத்தின் "சமூக உள்ளடக்கம்". சமூக உள்ளடக்கம் என்று என்னென்ன விஷயங்களை
வரையறுத்துக் கொண்டு இந்த ஆய்வுக் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறதென்றே,
இதுவரை வெளிவந்த இருபகுதிகளில் இருந்து தெரிந்துகொள்ள முடியவில்லை.
முதலில் ஆய்வு வட்டக் கட்டுரை முழுமையாக வெளிவரட்டும். அதன்பிறகு ஆய்வு
முழுமையாக இருந்ததா இல்லையா, மாற்றுக் கருத்துக்கள் உண்டா இல்லையா
இப்படி ஒன்றன்பின் ஒன்றாகப் பார்க்கலாம்.
திரு விஜயராகவன்!
திரு மணிவரதராஜன் மற்றும் அன்பில்திரு ராமசாமி எழுதிய விஷயங்கள்,
வைணவத்தைப் பற்றிய அடிப்படைப் புரிதல் உள்ளவர்களுக்கே புரியக் கூடியவை!
குழுமத்தில் இருக்கும் அத்தனைபேருக்கும் பரிச்சயமாகி இருக்கும் என்று
சொல்ல முடியாது.இந்த ஆய்வுக் கட்டுரை முழுதாக வரட்டும்.
---------------------
அன்புடன்
கிருஷ்ணமூர்த்தி
On Mar 25, 3:12 pm, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
adhara-adheya (the sustainer and the sustained), niyanta-niyamya (the
controller and the controlled) and the sesi-sesa (the Supreme Lord and
the dependent).
http://www.indianetzone.com/49/concept_sesatva.htm
dev
On Mar 26, 2:47 am, Subashini Tremmel <ksubash...@gmail.com> wrote:
> *தென்கலை வைணவத்தின் சமூக உள்ளடக்கம்*
> *வெ. கிருஷ்ணமூர்த்தி*
> *பகுதி 3*
>
> *ஜீவாத்மாவின் இயல்பு*
> பகுதி ...
>
> read more »
On 3/26/11, Subashini Tremmel <ksuba...@gmail.com> wrote:
> *தென்கலை வைணவத்தின் சமூக உள்ளடக்கம்*
> *வெ. கிருஷ்ணமூர்த்தி*
> *பகுதி 3*
>
>
> *ஜீவாத்மாவின் இயல்பு*
> *பக்தி--ப்ரபத்தி*
>
> இறைவனை அடைய பக்தியே சிறந்த மார்க்கம் என்று வடகலையாரும் பிரபத்தியே உற்றவழி
> என்று தென்கலையாரும் கூறுகின்றனர். பக்தி என்பது கீதையில் கூறப்பட்டுள்ள பக்தி
> யோகத்தையும்,பிரபத்தி என்பது சரணாகதியையும் குறிக்கும்.
>
> இவ்விரு வழிகளும் ஆரம்ப காலத்திலேயே ---அதாவது நடாத்தூர் அம்மாள் காலத்திலேயே
> உருவாகிவிட்டன எனினும் பிற்காலத்தில் மிகத் தெளிவான பிரிவுகளாக அவைமாறி
> விட்டன.
> பக்தியோகம் என்றால் என்னவென்று கீதைக்குத் தாம் எழுதிய கீதாபாஷ்யத்தில்
> ராமானுஜர் விளக்குகிறார். அதாவது உபநிடதங்களிலும் ,பிற நூல்களிலும்
> குறிப்பிடப்பட்டுள்ள இறைவனையும் அவனது கல்யாண குணங்களையும் சதா இடைவிடாது
> தியானித்தல், அவ்வாறு தியானித்தலோடு சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள தத்தம்
> வருணாசிரம வழிப்படி வழிபடுதல் அவ்வாறு செய்யும்போது பற்றற்றுச் செய்தல்.
>
> கீதையில் கூறப்பட்டுள்ள ஞான யோகமும் கரும யோகமும் பக்தியோகத்திற்கு துணை
> செய்பவை மட்டுமே. இறைவனை அடைய ஞானயோகமும், கருமயோகமும் நேரடி உபாயங்கள்
> அல்ல.பக்தியோகமே நேரடி வழியாகும்.
>
> ராமானுஜர் தரும சாஸ்திரங்களின் வழியிலேயே பக்தியோகத்தின் மூலம் இறைவனை அடைய
> இயலும் என்று கூறுகிறார். சித்தாந்த ரீதியாக வருணாசிரம தரும முறையை எதிர்க்க
> அவரால் இயலவில்லை. என்பதை இங்கு நாம் மனங்கொள்ளுதல் வேண்டும்.
>
> (தொடரும்..)
>
>
>
> 2011/3/25 Subashini Tremmel <ksuba...@gmail.com>
>
>> *தென்கலை வைணவத்தின் சமூக உள்ளடக்கம்
>> *வெ. கிருஷ்ணமூர்த்தி
>> *பகுதி 2
>> *
>>
>> தத்துவம் என்பது தனி மனித உணர்வுக்கும் புற உலகுக்கும் இடையேயுள்ள தொடர்பை
>> ஆய்வு செய்யும் இயல். உணர்வைப் பற்றி ஆராய்வதை ஞானம் என்றும் புற உலகை
>> ஆராய்வதை
>> விஞ்ஞானம் என்றும் கீதை கூறுகிறது. தத்துவத்தில் இருபெரும் கூறுகள் உள்ளன.
>> ஒன்று ஞானமே முதல் என்றும் விஞ்ஞானம் ஞானத்தின் படைப்பு என்றும் கூறுகிறது.
>>
>>
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
--
என்றும் அன்புடன்
அன்னை அபிராமியின் அருள்
அனைவருக்கும் கிடைக்க வேண்டும் அடியேன்
மு. கந்தசாமி நாகராஜன்,
சுப்பிரமணியபுரம்.
--------------------------------
சலுகை போனால் போகட்டும் - என்
அலுவல் போனால் போகட்டும்.
தலைமுறை ஒரு கோடி கண்ட என்
தமிழ் விடுதலை ஆகட்டும்.
--------------------------------
www.chithiram.blogspot.com
www.subramanyapuram.blogspot.com
இதை அப்படியே மாற்றிப் படிக்க வேண்டும்.
On Mar 26, 4:32 pm, மு. கந்தசாமி நாகராஜன் <m.kanthas...@gmail.com>
wrote:
> மிகவும் மௌனமாக இந்த இழையைக் கவனித்துப் படித்து வருகின்றேன்..
> உள்ளத்துள் எழும் வினாக்களை எழுதி வைத்துள்ளேன்.. கட்டுரைகள் முற்றுப்
> பெற்ற பின் வினாக்களைப் பதிவு செய்வேன்... அறியாததை அறிந்து கொள்ள
> வேண்டும் வினா என்பதால்தான் இறுதியில் பதிவுசெய்வேன் என்று சொல்கின்றேன்.
> ஏனென்றால் நமது வினாக்கான விடைகள் அடுத்த பதிவில் கூட வந்து விடலாம்
> அல்லவா?? தற்சமயம் மௌனம்...
>
> ...
>
> read more »
"இறைவனை அடைய பக்தியே சிறந்த மார்க்கம் என்று வடகலையாரும் பிரபத்தியேஇதை அப்படியே மாற்றிப் படிக்க வேண்டும்.
உற்றவழி
என்று தென்கலையாரும் கூறுகின்றனர். பக்தி என்பது கீதையில் கூறப்பட்டுள்ள
பக்தி
யோகத்தையும்,பிரபத்தி என்பது சரணாகதியையும் குறிக்கும்"
--
இதை அப்படியே மாற்றிப் படிக்க வேண்டும்.
ஐயா! எப்படி மாற்றிப் படிக்க வேண்டும்?
திரு ஸ்ரீதரன் ராகவன்,இங்கு கருத்துக் குழப்பம் இருக்கிறது.
நிச்சயம் கண்ணன். தமது ’ஸம்பிரதாய பரிசுத்தி’ என்ற நூலில் ஸ்ரீவேதாந்ததேசிகர் சொல்லுவதும் இதுவே.‘ஸ்ரீபாஷ்ய காரரின் சிஷ்ய வர்க்கங்களில் யோஜனாபேதமே உள்ளது, ஸம்பிரதாய பேதம் இல்லை’ என்பது.ஸ்ரீவேதாந்த தேசிகர் உள்ளிட்ட ஸ்ரீவைஷ்ணவ பூர்வாச்சாரியர்கள் கருதிய ஆழ்வார்களின் அடிபரவும் திருமால் அடியார் குழாம் நடுவில் சில குழப்ப வாதங்களைக் கடந்து இன்று வடமொழி வேதம் தமிழ்வேதம் இரண்டையும் தம் இருகண்களாக மதிக்கும் உயரிய ஸ்ரீவைஷ்ணவ ஸம்பிரதாயமாக உருவாகி வருகிறது. அதற்கு அயராது பாடுபட்ட பிரதிவாதிபயங்கரம் ஸ்ரீ அண்ணங்கராச்சாரியார், வேளுக்குடி ஸ்ரீ உ வே வரதாச்சாரியார் ஸ்வாமி, ஸ்ரீவைஷ்ணவ ஸுதர்சனம் ஸ்ரீ உ வே ஸ்ரீ கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் போன்ற எத்தனையோ ஸ்ரீவைஷ்ணவ வித்வான்களையும், ஸ்ரீஅஹோபில மடம் ஸ்ரீமத் அழகியசிங்கர் போன்றவர்களையும் நாம் நன்றியுடன் நினைக்கக் கடமைப்பட்டுள்ளோம்.உண்மையில் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தினர் அனைவரின் எண்ணத்தை நன்கு பிரதிபலிப்பது இந்த வெண்பாவாகும்.ஆழ்வார்கள் வாழி அருளிச்செயல் வாழிதாழ்வாது மில்குரவர் தாம்வாழி - ஏழ்பாரும்உய்ய அவர்கள் உரைத்தவைகள் தாம்வாழிசெய்யமறை தன்னுடனே சேர்ந்து.
தென்கலை வைணவத்தின் சமூக உள்ளடக்கம்வெ. கிருஷ்ணமூர்த்தி
பகுதி 3
On 3/27/11, Subashini Tremmel <ksuba...@gmail.com> wrote:
> நண்பர்களே,
> இந்தக் கட்டுரை இப்பகுதியுடன் முடிவடைகின்றது. அட்டவணைகள் இரண்டுடனும் இணைத்து
> இக்கட்டுரை மரபு விக்கியில் இணைக்கபப்டும்.
>
> அன்புடன்
> சுபா
> *
> *
> *தென்கலை வைணவத்தின் சமூக உள்ளடக்கம்*
> வெ. கிருஷ்ணமூர்த்தி
>
> *பகுதி 4 (முடிவுறுகின்றது)*
> *
> *
> *
> *
> *முடிவுரை*
> *மேற்கோள்களும் சான்றுகளும்*
> 1. Patricia Y Mumme---- The SriVaishnava Theological Dispute--- New Era
> publications Madras.
>
> 2. N .Jagadeesan Hostory Of Sri Vaishnauism in the Tamil Country--- Post
> Ramanuja P. 181
>
> 3. வாசிஷ்ட தரும சூத்திரம் VI.24 மேற்கோள் R.S சர்மா Sudras in Ancient times P
> 154.
> 4. அதே புத்தகம் p 305
> 5. ஆசாரிய ஹ்ருதயம் P. B. அண்ணங்கராசாரியார் -பதிப்பு -1972.காஞ்சீபுரம்.
> 6.. S Gurumoorthy Education In South India (Ancient and Medievai Pviods)
> 7. Patricia Y. Mumme The Srinivaishnava Theological Dispute P. 7
> 8. K. V . Raman SriVaradharaga Swami Temple Kanchi Art and Architecturc New
> Delhi P .75
> *
> *
>
>
>
> 2011/3/26 Subashini Tremmel <ksuba...@gmail.com>
>
>> *தென்கலை வைணவத்தின் சமூக உள்ளடக்கம்*
>> *வெ. கிருஷ்ணமூர்த்தி*
>> *பகுதி 3*
>>
>>
>> *ஜீவாத்மாவின் இயல்பு*
>>
>> விசிஷ்டாத்வைத தத்துவப்படி ஆன்மா, அத்வைதிகள் கூறுவதைப் போல, ஞானம்
>> மட்டுமல்ல,
>> அது ஞானத்தின் பிறப்பிடமும் கூட,ஆனால் பிரம்ம சூத்திரம் போன்ற நூல்கள் ஞானமே
>> ஆன்மா என்று கூறுகின்றன,இது விசிஷ்டாத்வைதத்திற்கு சற்றுத் தடையாக இருப்பது
>> உண்மையே.
>>
>>
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
--
என்றும் அன்புடன்
அன்னை அபிராமியின் அருள்
அனைவருக்கும் கிடைக்க வேண்டும் அடியேன்
மு. கந்தசாமி நாகராஜன்,
சுப்பிரமணியபுரம்.
--------------------------------
காமம் யாவையும் தருவதும் அப்பதம் கடந்தால்
சேம வீடு உறச்செய்வதும் செந்தழல் முகந்த
ஓம வேள்வியின் உறுபதம் உய்ப்பதும் ஒருவன்
நாமம் அன்னது கேள் நமோ நாராயணாய
--------------------------------
www.chithiram.blogspot.com
www.subramanyapuram.blogspot.com
நல்லதொரு கட்டுரைத்தொடரை வழங்கி எங்களை தமிழக சமூக அமைப்பு, சமயப்
புரட்சிகள் பற்றி அறியத்தந்துள்ளீர்கள்.
இதுவொரு நல்ல சரித்திர வாசிப்பு என்று கொள்ளலாம். நுண்ணிய வேறுபாடுகளை
மேலும் கற்றோர் சொல்லக்கூடும். ஆயினும் பொதுவாக இது இராமானுஜருக்கு
ஏற்றம் தருவதாக எழுதப்பட்டுள்ளது மகிழ்ச்சி.
ஜாதி வேறுபாடுகள் குறித்து அப்போதிருந்த மனநிலையில் நமது வடகலைத்
தோழர்கள் இப்போது இல்லை என்பது சர்வ நிச்சயம். அப்படி இருக்கையில் அந்த
வேறுபாடுகளை ஏதோ சாஸ்வதமானது என்பது போல் நம்ப வேண்டிய அவசியமில்லை
என்பது என் கருத்து. எனக்குத்தெரிந்து எத்தனையோ அந்தணர்கள் Beauty Saloon
என்று முடிதிருத்தகம் நடத்துகின்றனர். காஞ்சிப் பெரியவர் அடிக்கடி
மேற்கோள் காட்டுவது போல் `கொல்லும்` தொழிலான ஆர்மி, நேவி, விமானப்படை
என்று எல்லாக் கொலைத்தொழிலும் அந்தணர்கள் இருக்கின்றார்கள். அந்தணர்
என்போர் அறவோர், எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகுபவர்கள் என்று
நிச்சயமாக இனிமேல் சொல்ல முடியாது. கமலஹாசன் கோழிக்கறி எப்படி
சாப்பிடுவது என்று சினிமாவில் புகுந்து விளையாடுகிறார். எனவே தேசிகன்
காலத்தில் இருந்த வர்ணாஸ்ரம வடிவமைப்பு முற்றும் ஒழிந்து போய்விட்ட
நிலையில் இனிமேலும், வடகலை, தென்கலை என்று யாருக்கு எந்த நாமம்
போடலாமென்று யாராவது அலைந்தார்களெனில் அவ்ர்கள், `நட்டுக்கழண்ட` கேஸூகள்
என்பது நிச்சயம். எனவே இக்கட்டுரை எந்த நோக்கில் எழுதப்பட்டதோ! ஆனால்
வாசித்து முடித்தவுடன் இந்த வடகலை, தென்கலை என்ற சரக்கு காலாவதியாகிவிட்ட
சரக்கு என்றுதான் தோன்றுகிறது. யாரும் இப்போதெல்லாம் மனுசாஸ்திரம்
பயிலுவதில்லை. ஆன்மீகம் என்று பார்த்தால் எல்லோரும் கடையனிலும் கடையனான
நிலையில் நிற்பது புரிகிறது. எனவே வைணவம் சொல்லும் நல்ல பல கருத்துக்களை
உள்வாங்கி, எக்காலத்திற்கும் பொருந்தும் வண்ணம் அமைந்திருக்கும்
ஆழ்வார்களின் பிரபத்தி நெறியில் இருப்பதே நமக்கு வாழ்வு நெறி என்று
படுகிறது.
இதற்கு அடுத்த நிலைதான் விவேகாநந்தர் காட்டிய இந்தியப் பொதுமைக்குமான
`இந்து` எனும் பொது அடையாளம். இந்திய தேசியம் கடந்த 60 ஆண்டுகளில்
சாத்தியப்பட்டிருக்கிறது எனில், இந்து எனும் பொது அடையாளமும்
சாத்தியப்படும். நம் முன்னோர்கள் பன்மையில் ஒற்றுமை என்பதை மிக நன்றாகப்
புரிந்து கொண்டுதான், இந்து ”மதம்” என்ற ஒரு மாபெரும் நிருவனத்தை (சர்ச்)
உருவாக்கவில்லை. இராமானுஜர் அதே வழியில்தான் நாலாயிரத்திற்கு உரை
செய்யவில்லை. அவரவர் மனோதர்மத்திற்கு ஏற்றபடி, அவரவர்க்கு விருப்பமான
தெய்வ உருவங்களை வழி பட்டு ஒற்றுமையாக வாழமுடியும். இந்து என்றால்
பல்லாயிரம் திரிகள் கூடிய கட்டு என்று பொருள். இயங்குவிதி சொல்வது
என்னவெனில் ஒரே கயிறால் உருவாகும் தண்டை விட பல திரிகளால் உருவாகும்
கயிறு வலு கூடிய ஒன்றாகும். அவ்வகையில் இந்திய மெய்ஞானம் காலத்தை வென்று
நிற்கும்.
பொலிக, பொலிக, பொலிக!
போயிற்று வல்லுயிர் சாபம்!
கலியும் கெடும்!!
நா.கண்ணன்
2011/3/27 Subashini Tremmel <ksuba...@gmail.com>:
On 3/27/11, Subashini Tremmel <ksuba...@gmail.com> wrote:
> நண்பர்களே,
> இந்தக் கட்டுரை இப்பகுதியுடன் முடிவடைகின்றது. அட்டவணைகள் இரண்டுடனும் இணைத்து
> இக்கட்டுரை மரபு விக்கியில் இணைக்கபப்டும்.
>
> அன்புடன்
> சுபா
> *
> *
> *தென்கலை வைணவத்தின் சமூக உள்ளடக்கம்*
> வெ. கிருஷ்ணமூர்த்தி
>
> *பகுதி 4 (முடிவுறுகின்றது)*
> *
> *
> *
> *
> *முடிவுரை*
>
> *மேற்கோள்களும் சான்றுகளும்*
> 1. Patricia Y Mumme---- The SriVaishnava Theological Dispute--- New Era
> publications Madras.
>
> 2. N .Jagadeesan Hostory Of Sri Vaishnauism in the Tamil Country--- Post
> Ramanuja P. 181
>
> 3. வாசிஷ்ட தரும சூத்திரம் VI.24 மேற்கோள் R.S சர்மா Sudras in Ancient times P
> 154.
> 4. அதே புத்தகம் p 305
> 5. ஆசாரிய ஹ்ருதயம் P. B. அண்ணங்கராசாரியார் -பதிப்பு -1972.காஞ்சீபுரம்.
> 6.. S Gurumoorthy Education In South India (Ancient and Medievai Pviods)
> 7. Patricia Y. Mumme The Srinivaishnava Theological Dispute P. 7
> 8. K. V . Raman SriVaradharaga Swami Temple Kanchi Art and Architecturc New
> Delhi P .75
> *
> *
>
>
>
> 2011/3/26 Subashini Tremmel <ksuba...@gmail.com>
>
>> *தென்கலை வைணவத்தின் சமூக உள்ளடக்கம்*
>> *வெ. கிருஷ்ணமூர்த்தி*
>> *பகுதி 3*
>>
>>
>> *ஜீவாத்மாவின் இயல்பு*
>>
>> விசிஷ்டாத்வைத தத்துவப்படி ஆன்மா, அத்வைதிகள் கூறுவதைப் போல, ஞானம்
>> மட்டுமல்ல,
>> அது ஞானத்தின் பிறப்பிடமும் கூட,ஆனால் பிரம்ம சூத்திரம் போன்ற நூல்கள் ஞானமே
>> ஆன்மா என்று கூறுகின்றன,இது விசிஷ்டாத்வைதத்திற்கு சற்றுத் தடையாக இருப்பது
>> உண்மையே.
>>
>>
>
ஹி..ஹீ..நீங்கள் என்ன கேட்கிறீர்கள்?
வேறு ஜாதிக்காரர் ஐயங்காராக மாறமுடியுமா? என்றா இல்லை தென்கலை வைணவராக என்றா?
கட்டுரைதான் மிகத்தெளிவாக ஆங்கிலேயக் கணக்கெடுப்பை உதாரணம் காட்டுகிறதே.
தமிழகத்தில் தென்கலை வைணவர்கள்தான் அதிகமென்று. இது எல்லாச் சாதியிலும்
உள்ள தென்கலை சார்ந்தோரைச் சுட்டுகிறது. எங்க மதுரைக் கள்ளரும், நானும்
ஒரே கலைதான் :-))
க.>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
On 3/28/11, N. Kannan <navan...@gmail.com> wrote:
> >
> ஹி..ஹீ..நீங்கள் என்ன கேட்கிறீர்கள்?
>
> வேறு ஜாதிக்காரர் ஐயங்காராக மாறமுடியுமா? என்றா இல்லை தென்கலை வைணவராக என்றா?
>
அப்படின்னா தென் கலை வைணவர்கள் வேறு தென் கலை ஐயங்கார்கள் வேறா? இதே
போன்று வடகலை வைணவர்கள், வடகலை ஐயங்கார்கள் என்றும் இருக்கின்றார்களா?
வைணவர்கள் என்போர் ஐயங்கார்களும் உள்ளிட்டவர்கள். நாயுடு, ரெட்டியார், செட்டியார் இனத்தவர்களிலும் திருமால் அடியார்கள், வைணவர்கள் உண்டு.
தலைப்பு வைணவத்தைப் பற்றிச் சொல்லவில்லை... தென் கலை வைணவம் என்று
சொன்னதால்தான் எனக்கு இப்படிச் சந்தேகம்... மன்னிச்சிருங்க.... இன்னும்
கேள்விகள் இருக்கு.... ஒவ்வொண்ணா கேட்கிறேன்...
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
மிக அழகாக, யதார்த்தமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
பேராசிரியர் நாகராஜன் கொடுத்த தொடுப்பின் ஒன்றில் ஸ்ரீராமானுஜரின் கொள்ளு
(to the power of 49? or 29?) பேரன் எழுதியிருக்கிறார். அவர் வாஞ்சையுடன்
சாத்தாதா ஸ்ரீவைஷ்ணவர்களைப் பற்றிக் குறிப்பிடுவது மிக ரசிக்கும் படி
இருந்தது. நானும் இது பற்றி என் இளமைக்கால அனுபவத்தைச் சொல்லிருந்தேன்.
அவர்கள் அந்தணரில்லை, ஆனால் அனுஷ்டானத்தில் அந்தணர்கள்
தோத்துப்போவார்கள்.
இராமானுஜர் குளிக்கப் போகும் போது அந்தணர்கள் தோள் மீது சாய்ந்து கொண்டு
போய் திரும்பி குளித்து “மடியாய்” வரும் போது அந்தணர் இல்லாத பாகவதர்கள்
தோளில் சாய்ந்து கொண்டு வந்து நிறைய ஐயர்களின் (அக்காலத்தில்தான்
ஐயங்கார் என்பது இல்லையே!) வயிற்றெரிச்சலைக் கிளப்பி இருப்பதாக
குருபரம்பரைக் கதைகள் சொல்லும்.
ஆனால் சுஜாதாவிற்கு இது தெரியாது என்று என்னால் நம்பமுடியவில்லை. அவர்
ஸ்ரீரங்கத்து ஆசாமி (அவர் தென்கலை, மாமி வடகலை). அவரது சொல்லாடலில் ஏதோ
பிழை இருந்திருக்க வேண்டும். எனக்கு இந்த சம்பவம் கணையாழியில் வாசித்த
நினைவில் இல்லை!
நா.கண்ணன்
2011/3/28 Hari Krishnan <hari.har...@gmail.com>:
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
வடகலை ஐயங்காரும், தென்கலை ஐயங்காரும் ஜாதியில் ஒன்று. ஆனால் யோஜனா
பேதத்தால் (சம்பிரதாயத்தில்) வேறு என்று எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள்!
ஆனால் தமிழகத்தில் ஜாதிகள் ஆயிரம், ஆனால் நெறியால் வைஷ்ணவர்களாக
இருக்கிறார்கள். எது மேல் என்று நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
நா.கண்ணன்
2011/3/28 மு. கந்தசாமி நாகராஜன் <m.kant...@gmail.com>:
இருக்கிறார்கள். ஆனால் இந்த கோயில் பாத்யதை குறித்து இந்த ஐயங்கார்கள்
போட்டுக்கொண்ட சண்டைதான் தெருவிற்கு வந்துவிட்டது!! யானையை சும்மா
விட்டிருக்கலாம். அது இடையில் மாட்டிக்கொண்டு விட்டது!!
பிற ஜாதி வைஷ்ணவர்கள் எந்தத் திருமாளிகையில் மால்நெறி தொடக்கம் (சங்கு
சக்ர தோள் குறியீடு) ஆகிறதோ அதற்கேற்றவாறு திருமண் இட்டுக்கொள்வார்கள்.
அதற்கு மேல் அதிகமாக வம்பு தும்பிற்குப் போகமாட்டார்கள்.
இவையெல்லாம் அழிந்தொழிய வேண்டிய காலம் வந்துவிட்டது! I'm not a category!
I seem to be a verb!
நா.கண்ணன்
நான் இதுவரை தென் கலை செட்டியார், வடகலை செட்டியார், தென் கலை நாயுடு,
வடகலை நாயுடு.... இப்படில்லாம் கேள்விப்பட்டதில்லை.... அவர்களுக்குள்ளும்
இப்படி வேறுபாடுகள் இருக்கின்றனவா?
ஆனால் சுஜாதாவிற்கு இது தெரியாது என்று என்னால் நம்பமுடியவில்லை. அவர்
ஸ்ரீரங்கத்து ஆசாமி (அவர் தென்கலை, மாமி வடகலை). அவரது சொல்லாடலில் ஏதோ
பிழை இருந்திருக்க வேண்டும். எனக்கு இந்த சம்பவம் கணையாழியில் வாசித்த
நினைவில் இல்லை!
ஐயோ பாவம்!
அப்படியா?
ம்ம்ம்..இன்னும் சந்தேகம் போகலை (அது எப்படி ஸ்ரீரங்கமாக பின் இருக்கமுடியும்?)
நா.கண்ணன்
முதலியார்கள் கூட. இரட்டைகள் டாக்டர் ராமசாமி முதலியார், டாக்டர்
லக்ஷ்மணசாமி முதலியார் வைனவர்கள் . நாமத்துடந்தான் (வடகலை) காட்சி
தருவர்.
விஜயராகவன்
இந்த அவதானத்தின் ஒரு நீட்சி , "சமுதாய சீர்திருத்தம்"என சொல்லி 90
ஆண்டுகளாக திரியும் தமிழ்நாட்டு இயக்கங்கள். இந்த இயக்கங்களின்
ஜஸ்டிபிகேஷன் இருந்தால் அது 50 ஆன்டு முன்னாலேயே மறைந்து விட்டது,
ஆனால் , இந்த இய்க்கங்கள் 100 வருடம் முன்னால் இருந்த தரவுகளை காட்டி
ஜாதி அரசியலிலும், ஜாதி ஒதுக்கீடுகளிலும் திளைக்கின்றன.
தங்கள் தரவுகளை மறுபரிசிலனை செய்தால், தங்கள் ஐடியாலஜிக்கு ஒரு ஆதாரமும்
இல்லை என்பது இவ்வியக்கங்களுக்கு தெரிந்து விடும்.
விஜயராகவன்
-ததாஸ்து. நாங்கள் செக்காணுரணியிலும், உசிலம்பட்டியிலும் இப்படித்தான் வாழ்ந்தோம்.
2."வைணவ இலக்கியத்துக்குப் பெருந்தொண்டாற்றி வருபவர்களில் நாயுடு,
ரெட்டியார் இனத்தைச் சேர்ந்தவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள்."
- இது நாம் யாவரும் அறிந்ததே. சொல்லப்போனால், அவர்களுக்கு ஆழ்ந்த ஈடுபாடு
உண்டு. நவதிருப்பதிக்கு சென்றால், வண்டிக்காரர்களின் ஸ்மரணம்: நாலாயிர
திவ்ய பிரபந்தம். எனக்கு வீ,கே. ராஜகோபாலைய்யர் என்று ஒரு ஆசிரியர்;
பட்டை நாமம். அவருக்கு குலதெய்வம்: திருவேங்கிடத்தான்.
இன்னம்பூரான்
27 03 2011
2011/3/28 விஜயராகவன் <vij...@gmail.com>:
2."வைணவ இலக்கியத்துக்குப் பெருந்தொண்டாற்றி வருபவர்களில் நாயுடு,
ரெட்டியார் இனத்தைச் சேர்ந்தவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள்."
- இது நாம் யாவரும் அறிந்ததே.
அய்யங்கார் என்ற சொல் அய்யகாரு என்ற தெலுங்குச் சொல்லில் இருந்து
வந்திருக்கிறது என்று கோயிலொழுகு நூலில் படித்தேன். அந்தச் சொல்
பிற்காலத்தியது (15-16ம் நூற்றாண்டுகள்??).
சமீபத்தில் ஸ்ரீரங்கம் போயிருந்தேன். ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ கிருஷ்ணமாசாரியார்
எழுதியிருக்கும் கோயிலொழுகு (ஸ்ரீரங்கம் கோயில் வரலாறு) புத்தகத்தின்
ஏழாவது (கடைசி) பாகம் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு நானும்,
அரவிந்தன் நீலகண்டனும் உரையாற்றினோம். பங்குனி உத்திர சமயம். அரங்கனை
கண்குளிர சேவித்தோம். வையாளி உற்சவமும் பார்த்தோம். இன்னும் சில வைணவ,
வரலாற்று அறிஞர்களையும் சந்தித்தேன். நிறைவான பயணம்.
அன்புடன்,
ஜடாயு
On Mar 28, 7:49 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2011/3/28 Innamburan Innamburan <innambu...@gmail.com>
நீதியரசர் குலசேகரன் வன்னியர். மணிவர்மா (காங்கிரஸ்காரர்) உறவினர்
நாகராசன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
நீதிபதி என்றால் ஒரே சமஸ்கிருத வாஸனை என்று, தனித்தமிழில் நீதியரசரை
கண்டுபிடித்தனர்.
விஜயராகவன்
அல்லது நீதிமன்றப் பயன்பாட்டில் நீதியரசர் என்ற சொல் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்லப்பட்டுள்ளதா?
மை லார்ட் என்பதே கால வழக்கில் மாறி யுவர் ஹானர் என்றும் ஹானரபில் என்றும் அடைமொழி கொடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களுக்குக்கூட மாண்புமிகு என்ற அடைமொழி எப்பொழுது புழக்கத்தில் வந்தது?
நீதியரசர், நீதிபதி is used in 1:5 ratio.
I have heard TV/radio in India news referring to நீதிபதி.
Even though it seems to be of Srilankan origin, it has gained some
currency in India also perhaps due to the reason I alluded to.
Vijayaraghavan
On Mar 30, 9:57 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
> aஅரசரில் சமஸ்கிரித வாசனை இல்லை என்று சொல்ல முடியுமா?
> சமஸ்கிரித-தமிழ் மோதலுக்குமுன் இது யாரால் எப்போது அறிமுகப்படுத்தப்படடது
> என்பதைத் தெரிந்துகொள்வது நலம். அரசு அல்லது நீதிமன்றப் பயன்பாட்டில்
> நீதியரசர் என்ற சொல் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்லப்பட்டுள்ளதா?
> மை லார்ட் என்பதே கால வழக்கில் மாறி யுவர் ஹானர் என்றும் ஹானரபில் என்றும்
> அடைமொழி கொடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களுக்குக்கூட மாண்புமிகு என்ற அடைமொழி
> எப்பொழுது புழக்கத்தில் வந்தது?
> நாகராசன்
>
> 2011/3/30 விஜயராகவன் <viji...@gmail.com>
>
>
>
> > On Mar 30, 5:31 am, "S.Krishnamoorthy"
> > <sundara.krishnamoor...@gmail.com> wrote:
> > > எனக்கு ஒரு சிறிய சந்தேகம்.
> > > நீதியரசர் என்ற சொல்லைப் பலர் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக
> > “முனைவர்கள்”.
> > > நீதிபதி என்று சொல்லுவதே சரி என்று படுகிறது.
> > > அரசனின் கோல் வளைந்துகொடுப்பது உண்டு. நீதிபதியின் கோல் வளையாது என்று
> > > கருதுவது மரபு.
>
> > நீதிபதி என்றால் ஒரே சமஸ்கிருத வாஸனை என்று, தனித்தமிழில் நீதியரசரை
> > கண்டுபிடித்தனர்.
>
> > விஜயராகவன்
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil- Hide quoted text -
>
> - Show quoted text -