எவ்வழி நல்லவர் ஆடவர் - என்ன பொருள்?

6,737 views
Skip to first unread message

தேமொழி

unread,
Apr 19, 2018, 11:27:50 PM4/19/18
to மின்தமிழ்
நாடா கொன்றோ ; காடா கொன்றோ;
அவலா கொன்றோ ; மிசையா கொன்றோ;
எவ்வழி நல்லவர் ஆடவர்,
அவ்வழி நல்லை ; வாழிய நிலனே.

பாடியவர்: ஒளவையார்
புறநானூறு 187

என்பது அக்காலத் தமிழர் எதிர்பார்ப்பாக இருந்திருக்கிறது  என்பது எனது புரிதல்.
கணவன் என்றில்லை, அனைத்து ஆடவருமே ஒழுக்கம் என்பதை வாழ்வியல் வழியாகக் கொள்வது நன்மை பயக்கும்.


-----

நாடானால் என்ன, காடானால் என்ன? மேடானால் என்ன, பள்ளமானால் என்ன? எவ்விடத்தே ஆடவர் நல்லவராக விளங்குகின்றனரோ, அவ்விடத்திலே, நிலனே, நீயும் நன்றாக விளங்குவாய். நிலத்தைப் பொறுத்ததன்று வாழ்வும் தாழ்வும்: அவ்வந் நிலத்துவாழ் ஆடவரைப் பொறுத்ததே என்பது இது. (ஆள்வோர் சிலர் தம் குறையை நாட்டின் மீதேற்றிக் குறைகூற, நாட்டிலுள்ள ஆண்களின் குறைபாடே அது என உரைக்கிறார் புலவர்)

புலியூர்க்கேசிகன் விளக்கம் - பார்க்க: https://ta.wikisource.org/s/8k30

-----

உரை: நிலமே! நீ நாடாகவோ, காடாகவோ, பள்ளமான இடமாகவோ அல்லது மேடான இடமாகவோ எப்படி இருந்தாலும், அங்கு வாழும் ஆண்கள் நல்லவர்களாக இருந்தால் நீயும் நல்ல நிலமாக இருப்பாய். நீ வாழ்க!

சிறப்புக் குறிப்பு: நாடு, காடு, அவல், மிசை என்பவை முறையே மருதம், முல்லை, நெய்தல், குறிஞ்சி நிலப்பகுதிகளைக் குறிக்கும். சங்காலத்தில் ஆண்களின் உழைப்பால் நிலம் செப்பனிடப்பட்டு வேளாண்மை நடைபெற்றது. ஆகவே, நிலத்தினது இயல்பு அங்கு வாழும் மக்களின் இயல்பைப் பொருத்ததாக இருந்தது. பாடுபட்டு உழைப்பவர்கள் இருந்தால் எல்லா நிலப்பகுதிகளுமே பயனளிப்பதாக இருக்கும். ஆகவே, இப்பாடலில், ”ஆடவர்” என்பதை “மக்கள்” என்றும் “நல்லவர்” என்பதை ”கடமை உணர்வோடு உழைப்பவர்” என்றும் பொதுவான முறையில் பெருள் கொள்வது சிறந்ததாகத் தோன்றுகிறது.

முனைவர். பிரபாகரன்  - http://puram400.blogspot.com/2010/12/187.html

-----

 பலரும் ஆடவர் என்பதற்கு ஆண்மக்கார் என்றே  பொருளுரைப்பார். அது தவறு. ஆடவர் என்பது இங்கே ஆளுவோர். ஆளல்>ஆடல். பாட்டின் பொருள் அப்பொழுதுதான் சிறக்கும். ”ஆள்பவர் ஒழுங்காயிருந்தால் நாடென்ன, காடென்ன, பள்ளமென்ன, மேடென்ன, எல்லா நிலமும் அப்படியே நல்லபடி வாழும்”. என்பது இதன் பொருள்.
 

-----

இந்த செய்யுள் புத்த தம்மபாதத்தின் செய்யுள் ஒன்றின் மொழிபெயர்ப்பு என்பது தெளிவு. அதனால் இது தமிழரின் கருத்தல்ல என்று நினைக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழர் எல்லா கலாசாரங்களிலிருந்தும் நல்ல கருத்துக்களை எடுத்துக் கொண்டனர் என்று தெரிகிறது. 

grāme vā yadi vāraṇya  nimne vā yadi vā sthale  |
yatrārhanto viharanti te deśā ramaṇīyakaṃ || (Patna Dhammapada verse 98)

மூலத்தை (வடமொழி தமிழ் இரண்டையும்) முழுதாக ஆராய்ந்தால் தான் திட்டவட்டமாக எதுவும் சொல்ல முடியும். அதற்கு இருமொழி புலமை தேவை.

LNS -https://groups.google.com/d/msg/mintamil/rgMdCegxrNA/Z5D3gNZrAgAJ


செல்வன்

unread,
Apr 19, 2018, 11:30:59 PM4/19/18
to mintamil
ஆடவர் அனைவரும் குடிக்ககூடாது, பெண்னாசை பிடித்து அலையக்கூடாது, கட்டின மனைவியை கண்கலங்காமல் காப்பாற்றவேண்டும், உழைக்கவேண்டும் என உறுதி எடுத்தால் தான் நாடு நல்லா இருக்கும்.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

செல்வன்

தேமொழி

unread,
Apr 19, 2018, 11:31:01 PM4/19/18
to மின்தமிழ்

திருக்குறள் மற்றும் திரு நாகசாமி நூல்  இழை 

திசைமாறாதிருக்க இங்கு விரும்புவோர் தொடர்வோம்.


On Thursday, April 19, 2018 at 8:27:50 PM UTC-7, தேமொழி wrote:
நாடா கொன்றோ ; காடா கொன்றோ;
அவலா கொன்றோ ; மிசையா கொன்றோ;
எவ்வழி நல்லவர் ஆடவர்,
அவ்வழி நல்லை ; வாழிய நிலனே.

பாடியவர்: ஒளவையார்
புறநானூறு 187

 
 பலரும் ஆடவர் என்பதற்கு ஆண்மக்கார் என்றே  பொருளுரைப்பார். அது தவறு. ஆடவர் என்பது இங்கே ஆளுவோர். ஆளல்>ஆடல். பாட்டின் பொருள் அப்பொழுதுதான் சிறக்கும். ”ஆள்பவர் ஒழுங்காயிருந்தால் நாடென்ன, காடென்ன, பள்ளமென்ன, மேடென்ன, எல்லா நிலமும் அப்படியே நல்லபடி வாழும்”. என்பது இதன் பொருள்.
 



நன்றி ஐயா, இன்னமும் விரிவாக விளக்க விரும்பினால் உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள் ஐயா.

..... தேமொழி  

kanmani tamil

unread,
Apr 19, 2018, 11:33:41 PM4/19/18
to mintamil
I'll join tomorrow, Themozhi 
Kanmani

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Apr 19, 2018, 11:35:37 PM4/19/18
to மின்தமிழ்


On Thursday, April 19, 2018 at 8:27:50 PM UTC-7, தேமொழி wrote:
நாடா கொன்றோ ; காடா கொன்றோ;
அவலா கொன்றோ ; மிசையா கொன்றோ;
எவ்வழி நல்லவர் ஆடவர்,
அவ்வழி நல்லை ; வாழிய நிலனே.

பாடியவர்: ஒளவையார்
புறநானூறு 187



 
இந்த செய்யுள் புத்த தம்மபாதத்தின் செய்யுள் ஒன்றின் மொழிபெயர்ப்பு என்பது தெளிவு. அதனால் இது தமிழரின் கருத்தல்ல என்று நினைக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழர் எல்லா கலாசாரங்களிலிருந்தும் நல்ல கருத்துக்களை எடுத்துக் கொண்டனர் என்று தெரிகிறது. 

grāme vā yadi vāraṇya  nimne vā yadi vā sthale  |
yatrārhanto viharanti te deśā ramaṇīyakaṃ || (Patna Dhammapada verse 98)

மூலத்தை (வடமொழி தமிழ் இரண்டையும்) முழுதாக ஆராய்ந்தால் தான் திட்டவட்டமாக எதுவும் சொல்ல முடியும். அதற்கு இருமொழி புலமை தேவை.

LNS -https://groups.google.com/d/msg/mintamil/rgMdCegxrNA/Z5D3gNZrAgAJ


அதற்கு பாலி  மொழியும் அல்லவா படிக்க வேண்டும் போலிருக்கிறது!!!




.... தேமொழி  

தேமொழி

unread,
Apr 19, 2018, 11:54:56 PM4/19/18
to மின்தமிழ்

எழுத்தாளர்: ஆ.கார்த்திகேயன் 
பிரிவு: உங்கள் நூலகம் - மார்ச் 2018 

அவ்வழி நல்லை வாழிய நிலனே!

நாடா கொன்றோ காடா கொன்றோ

அவலா கொன்றோ மிசையா கொன்றோ

எவ்வழி நல்லவ ராடவர்

அவ்வழி நல்லை, வாழிய நிலனே (புறம் - 187)

மேற்கண்ட பாடல் புறநானூற்றில் வருகின்ற புகழ் பெற்ற பாடலாகும். மிகவும் அழகான சிறிய பாடல். இதில் வரும் நாடு, காடு, ஒன்று, வழி, நல்லவர், ஆடவர், வாழிய, நிலன் போன்ற சொற்கள் இன்றும் புழக்கத்தில் உள்ளதால் பாடலும் சற்று எளிதாகவே புரிந்து விடுகின்றது. அவல் என்ற சொல் ‘பள்ளம்’ என்ற பொருளையும் மிசை என்ற சொல் ‘மேடு’ என்ற பொருளையும் உணர்த்துகின்றன. மிசை என்ற சொல் “மீது” என்ற பொருளில் சொல்லுருபாகவும் பழந்தமிழில் வந்துள்ளது. ‘மலர்மிசை ஏகினான்’ என்ற குறளில் இதனைப் பார்க்கலாம். ‘நல்லை’ என்பது முன்னிலை ஒருமை குறிப்பு வினைமுற்று. நிலனே! நீ நல்லை என்று கொண்டு தற்காலத் தமிழில் சொல்வதானால் நிலமே! நீ நல்லவள் என்று பொருள் கொள்ளலாம். ஆடவர் என்ற சொல்லுக்கு ‘ஆண்மக்கள்’ என்று பொருள் கொள்ளப்படுகின்றது.

நிலத்தை இழித்துக் கூறினாரா?

இப்பாடலுக்கு ஒளவை துரைசாமிப்பிள்ளை அவர்கள் கீழ்க்கண்டவாறு உரை தருகின்றார்.

“நிலனே, நீ ஒன்றில் நாடேயாக; ஒன்றிற் காடேயாக; ஒன்றிற் பள்ளமேயாக; ஒன்றில் மேடேயாக; எவ்வாறாயினும் எவ்விடத்து நல்லர் ஆண்மக்கள் அவ்விடத்து நீயும் நல்லை யல்லது நினக்கென ஒரு நலமும் உடையை யல்லை வாழி”.

“தீய நிலனே யாயினும் நல்லோருறையின் நன்றெனவும், நல்ல நிலனே யாயினும் தீயோ ருறையின் தீதெனவும், தன்னிடத்து வாழ்வாரியல் பல்லது தனக்கென ஓரியல்புடைய தன்றென நிலத்தை பழித்துக் கூறுவதுபோல உலகத்தியற்கை கூறியவாறாயிற்று” (புறநானூறு 187 பக் 526)

ஆடவர் என்ற இப்பாடலில் வரும் சொல் ஆண் மக்களை மட்டும் குறித்ததா அல்லது ஆண்மக்கள் பெண்மக்கள் இருபாலரையும் குறித்ததா? நிலம் ஓரிடத்தில் காடாகவும் மற்றோரிடத்தில் மேடாகவும் இன்னொரு இடத்தில் பள்ளமாகவும் வடிவம் வேறு பட்டு இருப்பதால் “நினக்கென ஒரு நலமும் உடையை யல்லை என்று உரை தருவது சரியாகுமா? ஒளவையார் ‘நிலத்தை இழித்துக் கூறுவது போல’ இப்பாடலை எழுதினாரா? அல்லது மக்களை இழித்துக் கூறுவது போல நிலத்தை வாழ்த்தி இருக்கிறாரா என்ற ஐயமும் எழுகின்றது.

தெ.பொ.மீயின் ஒப்பீடு

ஒளவையார் எழுதிய இத்தமிழ்ப் பாடலைத் தம்மபதப் பாடல் ஒன்றோடு ஒப்பிட்டுத் தெ.பொ.மீ ஒரு கட்டுரை எழுதியுள்ளார். தெ.பொ.மீயின் கட்டுரையைத் தமிழில் மொழிபெயர்த்து அதன் தொடர்ச்சியாக ஒளவையின் இலக்கிய மொழிநடை குறித்து பேராசிரியர் செ.வை.சண்முகனார் ஓர் ஆய்வுக்கட்டுரை படைத்துள்ளார். (காண்க: செ.வை சண்முகம்; 2012;பக் - 131-38) செ.வை.சண்முகம் அவர்களின் நூலிலிருந்து தம்மபதப் பாடல் கீழே தரப்படுகின்றது.

காமே வா யதிவா ரஞ்ஞே

மிந்நே வா யதிவா தளே

யதா அரஹந்தோ விகரந்தி

தம் பூமி ரமனேய்யகம்

(அரஹந்த வக்க; பாடல் - 98)

காமே - கிராமத்தில், ரஞ்ஞே - ஆரண்யத்தில் (காடு) மிந்நே (நிந்நே) பள்ளத்தில், தளே - தளத்தில் (மேடு) விகரந்தி - வாழ்கின்ற (இடம்), ‘‘arhat’’ என்ற சொல் ‘perfected one’ என்ற பொருளில் புத்த துறவி களைக் குறித்திருக்கும். “கிராமத்தில் அல்லது வனத்தில் பள்ளத்தில் அல்லது மேட்டில் எங்கே அரஹந் வாழ் கின்றாரோ அந்த இடம் மகிழ்ச்சிகரமானது”. இப் பாடலை ஒளவையின் பாட்டோடு ஒப்பிட்டுக் காட்டிய தெ.பொ.மீயின் கருத்துக்களைக் காண்போம். இரண்டு பாடல்களிலும் கருத்துவரிசை ஒன்றாக இருப்பதால் அது தற்செயலாக இருக்க முடியாது. ஒளவையார் தம்மபதத்திலிருந்து கருத்துக்களைக் கடனாகப் பெற்றிருக்கிறார். ஆனாலும் கூட அவரது கவித்திறமை இப்பாடலில் நன்கு புலனாகிறது.

“ஒளவை அந்தச் செய்யுளைக் கவித்துவமும் நாடகப் பாங்கும் நிறைந்துள்ளதாக ஆக்கியுள்ளார். அவருடைய கவிதை வெறும் கருத்துத் தொகுப்பு அல்ல. நிலத்தை மனிதனாக உருவகப்படுத்தி, அவர் தன் கண்ணெதிரே நிற்பது போலக் காட்சிப் படுத்தி யுள்ளார். இயற்கை எவ்வளவுதான் குறையுடையதாக இருந்தாலும் அவ்வப்போது எழுகிற சவால்களை எதிர்க்கும் சக்தியும் விடாமுயற்சியும் தன்னம்பிக்கை உடையவனாக மனிதன் இருந்தால் இயற்கை உதவி யாகவே இருக்கும். இயற்கையின் இந்த இளக்கப் பண்பு அதன் பேராற்றலைப் பொய்யாக்குகிறது. அந்தப் பண்பே ஒளவைக்குப் பிடித்திருக்க வேண்டும். அந்த ஆற்றலின் சக்தியே “வாழிய நிலனே” என்று உரக்கக் கூவும்படி வைத்திருக்க வேண்டும். ஒளவை பெரிய மனிதர்களின் சிறப்பை வெளிப்படுத்துவதோடு இயற்கை மனிதனுக்குத் தடையாக இல்லாமல் துணையாக இருப்பதாக வலியுறுத்தியுள்ளார்” (காண்க; சண்முகம் 2014, பக்-133) தம்மபதம் “அரஹத்” என்று குறிப்பிட ஒளவை எல்லாத் துறைகளிலும் உள்ள மனிதர்களையும் “ஆடவர்” என்று பொதுமைப்படுத்தினார். விழிப்புடன் செய்யப் படும் இதுபோன்ற ஒப்பாய்வு சுவையானதாக இருக்கும் என்றும் தெ.பொ.மீ ஒப்பிலக்கிய ஆராய்ச்சியை ஊக்கப்படுத்தியுள்ளார்.

செ.வை.சண்முகனார் விளக்கம்

“கிராமம் என்ற சொல் தமிழில் நாடு என்று மாற்றப்பட்டது பொழிப்பு எதுகைக்கு மட்டும் அல்லாமல் பொருண்மை நிலையில் பொருள் விரிவு ஏற்படவும் காரணமாக அமைந்துள்ளது. கவிதையின் தொடர் அமைப்பு (எவ்வழி / அவ்வழி) வழியாக ஆடவர்களின் நல்ல பண்பும் நிலத்தின் நல்ல பண்பும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கிற உறவு புலப்படுத்தப்பட்டு விடுகிறது. நிலம் அழியாதது, நிலைத்திருப்பது ஆடவர் இறக்கக்கூடியவர், நிலையாமை உடையவர், எனவே நிலைத்து நிற்கிற நிலத்தை “வாழிய நிலனே” என்று வாழ்த்துகிறார் என்று விளக்குகிறார். ஒளவையின் கவிதை நடையில் இணைபெயரெச்சத் தொடர் திரும்பத் திரும்ப வருவதைக் கொண்டு அதனை ஒளவையின் நடையியற் கூறாகக் காட்டுகிறார்.

எவ்வழி நல்லவர்         -           அவ்வழி நல்லை

எத்திசைச் செலினும்   -           அத்திசைச் சோறே

வடமொழி அறிவும் வைதீக சமய அறிவும் உடைய ஒளவையார் பௌத்த சமயப் பாடலை மொழி பெயர்த்திருப்பது அக்காலத்தில் சமய நல்லிணக்கம் நிலவியிருந்ததைப் புலப்படுத்துகிறது என்றும் செ.வை சண்முகனார் விளக்கம் தருகிறார். முழுவதும் மொழி பெயர்ப்பாக அல்லாமல் மொழியாக்கம் Transcreation என்ற நிலையிலும் ஒளவை புதுமையைச் செய்துள்ளார். விரிவான விளக்கத்திற்கு செ.வை.சண்முகம் அவர்களின் கட்டுரையைக் காண்க.

அபபிரம்சா பாடல்

இனி, இதே சாயலில் அமைந்த ஓர் அபபிரம்சா பாடலைக் காண்போம்.

சரிஹிம் ன சரேஹிம் ன சரவரேஹிம் ன வி உஜ்ஜானவனேஹிம்!

தேச ரவண்ணா ஹோந்தி வட நிவசந்தேஹிம் சுஅனேஹிம்!!

இப்பாடலில் வரும் சரிஹி, சரேஹி, சரவரேஹி உஜ்ஜானவனம் ஆகிய சொற்கள் முறையே ஆறு, குளம், ஏரி, பூஞ்சோலை ஆகிய தமிழ்ச் சொற்களுக்கு இணையான சொற்கள். “ன” என்பது எதிர்மறைச் சொல். “ஆற்றால் இல்லை; குளத்தால் இல்லை; ஏரியால் இல்லை; பூஞ்சோலையால்கூட இல்லை” என்பது

முதல் வரியின் பொருள். இரண்டாவது வரியில் வரும் சொற்கள்: தேச - நாடு; ரவண்ணா ஹோந்தி - அழகாகின்றது; வட - மூர்க்கனே!, நிவசந்தேஹிம் - வாழ்கின்ற, சுஅனேஹிம் - நல்லவர்களால் ஆகிய இவற்றைக் கொண்டு தேசத்தில் வாழும் நல்லவர்களால் அத்தேசம் இன்பமான / அழகான இடமாக மாறுகிறது, மூர்க்கனே!”. இது இரண்டாவது வரியின் பொருள். இந்த அபபிரம்சா பாடலின் சமஸ்கிருத மொழி பெயர்ப்பும் கீழே தரப்படுகின்றது.

சரித்பிஹின சரோபிஹின சரோவரைஹி ன அபி உத்யானவனனறி!

தேஷாஹ ரம்யா பவந்தி மூர்க்! நிவசத்பிஹி சுஜனைஹி!!

ஆறு, குளம், ஏரி, உத்யானவனம் இவற்றால் தேசம், அழகு பெறுவதில்லை, மூர்க்கனே! அங்கு வாழும் நல்லவர்களால் (சு+ஜன) அழகு பெறுகின்றது என்று பாடலுக்குப் பொருள் காணலாம்.

நாடு, காடு, மேடு, பள்ளம் ஆகிய சொற்களைக் கொண்டு தமிழ்ப் பாடலும் தம்மபதப் பாடலும் அமைந்துள்ளன. ஆறு, குளம், ஏரி, உத்யானவனம் ஆகிய சொற்களைக் கொண்டு அபபிரம்சா பாடல் அமைந்துள்ளது. அபபிரம்சா பாடலில் நிலப்பகுதி களுக்குப் பதிலாக நீர்நிலைகள் வந்துள்ளன. நிலமும் நீரும் தானே பூமியின் இருபெருங் கூறுகள். வாழிய நிலனே என்று ஒளவை நிலத்தை முன்னிலைப்படுத்தி முழங்குகிறார். தம்மபதப் பாடல் யாரையும் முன்னிலைப்படுத்திப் பாடப்படவில்லை. அரஹத் வசிக்குமிடம் அழகாக இருக்கும் என்று பௌத்தர் தமது சீடர்களை நோக்கிச் சொன்னதாகக் கொள்ளலாம். ஆனால் பாடலில் வெளிப்படையாக விளிச்சொல் இல்லை. மூன்றாவதாக அபபிரம்சா பாடலில் மூர்க்கனே என்று விளிச்சொல் அமைகின்றது. மூர்க்கர்களை முன்னிலைப்படுத்திப் பாடல் புனையப் பெற்றுள்ளது. நல்லவர்களைச் சுட்டிக்காட்டி முட்டாள்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக பாடல் அமைந்துள்ளது. மூர்க்கனே என்று விளிப்பதிலிருந்து புலவரின் சினத்தையும் உணர்ந்துகொள்ள முடிகிறது. ஒளவை அந்தச் சினத்தை மறைத்து மென்மையாகக் கருத்தை வெளிப்படுத்து கிறார். இயல்பான சாதாரண உரையாடலில் மக்கள் மக்களை முன்னிறுத்தியே உரையாட முடியும். பேசுவோர் - கேட்போர் இருநிலைகளும் உரை யாடலுக்கு அவசியம். இது உரையாடல் விதி. ஆனால் இலக்கிய உரையாடலில் மக்கள் இயற்கையோடு உரையாட முடியும். இது இலக்கிய மொழியின் பண்பு. நிலமோ, பூமியோ, தேசமோ நல்லவர்களாலே சிறப்படைகின்றது, இதனை முட்டாள்கள் உணர வேண்டும்; மனம் மாற வேண்டும்; திருந்தி வாழ வேண்டும் என்பதே ஒளவையாரின் உள்ளக்கிடக்கையாக இருக்க வேண்டும். முட்டாள்களே என்று அவர்களை விளித்துச் சொல்லாமல் மறைமுகமாக “வாழிய நிலனே” என்று ஒளவை புனைந்திருப்பது தமிழ்ப்பாடலின் தனித்துவமாகத் திகழ்கின்றது.

அடிக்குறிப்புகள்

In a village or in a forest

in a valley or on a hill

wherever arhats dwell

that place is delightful. (dhammapada)

It is not by rivers, nor ponds, nor lakes,

nor by gardens and sylvan parks that

the regions look delightful, you silly one!

(But it is) from the good persons

living there (that these places derive

their charms). - (Apabrahmsa verse)

பார்வை நூல்கள்

  1. சண்முகம், செ.வை, (2012) இலக்கியமும் மொழி அமைப்பும். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட் சென்னை - 600 098.
  2. புறநூனூறு (செவ்விலக்கியக் கருவூலம்) (2008). தமிழ் மண் அறக்கட்டளை வெளியீடு, தி.நகர், சென்னை - 17.

LNS

unread,
Apr 20, 2018, 12:30:33 AM4/20/18
to மின்தமிழ்
அருமையான அஞ்சல். பாலிமொழி மூலத்தை இட்டதற்கு நன்றி.

புறப்பாட்டு தம்மபத செய்யுளின் பதத்திற்கு பதம் மொழிபெயர்ப்பு. புறப்பாட்டில் உள்ள 'நல்லவர்' என்ற சொல் மூலத்தின் 'அர்ஹந்த' என்ற சொல்லுடன் ஒத்து போகிறது. மூலத்தின் 'விஹரந்தி' என்ற சொல்  'நடமாடுகிறார்கள்' / 'நடப்பர்' என்று பொருள்பட
வருகிறது. இதைத் தான் 'ஆடவர்' என்னும் சொல் சுட்டுகிறது போலும்.

 'நடமாடுவர்' என்பதின் மறு உருவமே 'ஆடுவர்'  என்னும் சொல். இங்கு 193-ம் பாட்டு அதாவது ஒக்கல் வாழ்க்கை பாட்டில் வரும் 'ஒருவன் ஆட்டும் புல்வாய்' என்ற தொடரில் உள்ள 'ஆட்டும்' என்ற சொல் நோக்கத்தக்கது.

பாடத்தைத் திருத்திக் கொள்ளலாம் அல்லது ஆடவர் என்றால் ஆண்மக்கள் என்று பழையபடி எடுத்துக்கொண்டு செல்லலாம். இது என்ன தர்ம சங்கடம்?

LNS

தேமொழி

unread,
Apr 20, 2018, 1:23:59 AM4/20/18
to மின்தமிழ்


On Thursday, April 19, 2018 at 9:30:33 PM UTC-7, LNS wrote:
அருமையான அஞ்சல். பாலிமொழி மூலத்தை இட்டதற்கு நன்றி.


காமே வா யதிவா ரஞ்ஞே

மிந்நே வா யதிவா தளே

யதா அரஹந்தோ விகரந்தி

தம் பூமி ரமனேய்யகம்

(அரஹந்த வக்க; பாடல் - 98)

காமே - கிராமத்தில், ரஞ்ஞே - ஆரண்யத்தில் (காடு) மிந்நே (நிந்நே) பள்ளத்தில், தளே - தளத்தில் (மேடு) விகரந்தி - வாழ்கின்ற (இடம்), ‘‘arhat’’ என்ற சொல் ‘perfected one’ என்ற பொருளில் புத்த துறவி களைக் குறித்திருக்கும். “கிராமத்தில் அல்லது வனத்தில் பள்ளத்தில் அல்லது மேட்டில் எங்கே அரஹந் வாழ் கின்றாரோ அந்த இடம் மகிழ்ச்சிகரமானது”. இப் பாடலை ஒளவையின் பாட்டோடு ஒப்பிட்டுக் காட்டிய தெ.பொ.மீயின் கருத்துக்களைக் காண்போம். இரண்டு பாடல்களிலும் கருத்துவரிசை ஒன்றாக இருப்பதால் அது தற்செயலாக இருக்க முடியாது. ஒளவையார் தம்மபதத்திலிருந்து கருத்துக்களைக் கடனாகப் பெற்றிருக்கிறார். ஆனாலும் கூட அவரது கவித்திறமை இப்பாடலில் நன்கு புலனாகிறது. 

 
இதில் பாருங்கள் LNS   இரண்டு பாடல்களிலும் கருத்துவரிசை ஒன்றாக இருப்பதால் அது தற்செயலாக இருக்க முடியாது  என்கிறார் தெ பொ மீ

ஆனால் https://www.ancient-buddhist-texts.net/Buddhist-Texts/C5-Patna/Patna.pdf#page=130 இந்த தளத்தின் பாடலில்  காடு முதலில் வருகிறது.  மொழி பெயர்ப்பில் வரிசை மாற்றுகிறார்கள்.  

aranne yadi vā ggrāme ninne vā yadi vā thale  >>> gāme vā yadi vāraññe  என்று மாறியுள்ளது !!!  ஆரண்யம், கிராமம் வரிசை  மாற்றம் 

.... தேமொழி 

LNS

unread,
Apr 20, 2018, 6:19:25 AM4/20/18
to மின்தமிழ்
>
இதில் பாருங்கள் LNS   இரண்டு பாடல்களிலும் கருத்துவரிசை ஒன்றாக இருப்பதால் அது தற்செயலாக இருக்க முடியாது
  என்கிறார் தெ பொ மீ

சந்தேகமில்லாமல். புறப்பாட்டு தம்மபதத்தின் தழுவல் என்பதினால் நாம் ஒன்றும் குறைந்து போய் விட மாட்டோம்.

LNS

N. Ganesan

unread,
Apr 20, 2018, 9:49:03 AM4/20/18
to மின்தமிழ், vallamai, S. V. Shanmukam, sirpi balasubramaniam, Erode Tamilanban Erode Tamilanban, Dr.Krishnaswamy Nachimuthu, Banukumar Rajendran
2018-04-20 3:19 GMT-07:00 LNS <lns2...@gmail.com>:
> இதில் பாருங்கள் LNS   இரண்டு பாடல்களிலும் கருத்துவரிசை ஒன்றாக இருப்பதால் அது தற்செயலாக இருக்க முடியாது  என்கிறார் தெ பொ மீ

சந்தேகமில்லாமல். புறப்பாட்டு தம்மபதத்தின் தழுவல் என்பதினால் நாம் ஒன்றும் குறைந்து போய் விட மாட்டோம்.


தெபொமீ கட்டுரையும், பேரா. செ.வை.சண்முகம் நூலும் படித்திருக்கிறேன் பல்லாண்டு முன்.
சென்ற வாரம் தான் வஞ்சி மாநகர் அருகில் கிடைத்த சமணச் சிற்பம் (ஆதிநாதர்) பற்றி எழுதிய
கட்டுரைக்கு வாழ்த்தை செ. வை. சண்முகம் அனுப்பியிருந்தார்.

இப் புறப்பாட்டை பாடிய ஔவை சிரமண சமயத்தவர் எனலாம். உ-ம்: அவல் என்ற வடமொழிச் சொல்லைத் தமிழ்ச் சொல்லுக்குப்
பயன்படுத்தியுள்ளார். அக் காலத்துப் பள்ளிகளில் தமிழும், வடமொழியும் பயின்ற இருமொழிப் புலவர் இந்த ஔவையார்.

இப்பொழுதுதான் அரசியலுக்காக கிரந்த எழுத்து ஆகாது என்று பிரச்சாரம். ஆனால், தென் மாநிலங்கள் நான்கும்,
ஒரிசா, வங்காளம்,  குஜராத், பஞ்சாப், மகாராஷ்ட்ரம், பீகார் எல்லாம் தேவநாகரி இல்லாமல் தான் வடமொழி கற்றுள்ளனர்.
ஹிந்தி திணிப்பை இம் மாநிலங்கள் எதிர்க்க இந்த பழைய, அந்தந்த மாநில எழுத்துக்களைப் பயன்படுத்துவோம்
என தில்லி தர்பாரிடம் அறிவிக்கவேணும். Lots of local politics due to scripts, Roman script also should be also adjunct script for India's languages,
as more & more of India uses English in schools for science, trade, etc.,

நா. கணேசன்

 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

வேந்தன் அரசு

unread,
Apr 20, 2018, 10:45:20 AM4/20/18
to vallamai, மின்தமிழ், S. V. Shanmukam, sirpi balasubramaniam, Erode Tamilanban Erode Tamilanban, Dr.Krishnaswamy Nachimuthu, Banukumar Rajendran


20 ஏப்ரல், 2018 ’அன்று’ முற்பகல் 6:48 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:



2018-04-20 3:19 GMT-07:00 LNS <lns2...@gmail.com>:
> இதில் பாருங்கள் LNS   இரண்டு பாடல்களிலும் கருத்துவரிசை ஒன்றாக இருப்பதால் அது தற்செயலாக இருக்க முடியாது  என்கிறார் தெ பொ மீ

சந்தேகமில்லாமல். புறப்பாட்டு தம்மபதத்தின் தழுவல் என்பதினால் நாம் ஒன்றும் குறைந்து போய் விட மாட்டோம்.


தெபொமீ கட்டுரையும், பேரா. செ.வை.சண்முகம் நூலும் படித்திருக்கிறேன் பல்லாண்டு முன்.
சென்ற வாரம் தான் வஞ்சி மாநகர் அருகில் கிடைத்த சமணச் சிற்பம் (ஆதிநாதர்) பற்றி எழுதிய
கட்டுரைக்கு வாழ்த்தை செ. வை. சண்முகம் அனுப்பியிருந்தார்.

இப் புறப்பாட்டை பாடிய ஔவை சிரமண சமயத்தவர் எனலாம். உ-ம்: அவல் என்ற வடமொழிச் சொல்லைத் தமிழ்ச் சொல்லுக்குப்
பயன்படுத்தியுள்ளார். அக் காலத்துப் பள்ளிகளில் தமிழும், வடமொழியும் பயின்ற இருமொழிப் புலவர் இந்த ஔவையார்.



அவ்வைமட்டுமா பல்வேறுபுலவர்களும்.!!

ஆனால் 'அவ' எனும் சொல்லை அவம் என மாற்றாமல் அவல் என மாற்றியது ஏன் என சொல்லாவிட்டால் நும் தலை நூறாக சிதறட்டும். ?

படுமழை பொழிந்த பாறை மருங்கில்
சிரல் வாய் உற்ற தளவின் பரல் அவல்
கான் கெழு நாடற் படர்ந்தோர்க்குக்
கண்ணும் படுமோ என்றிசின் யானே. "

"கல்லக வரைப்பில் கான் கெழு சிறுகுடி
மெல் அவல் மருங்கின் மௌவலும் அரும்பின
நரை உரும் உரறும் நாம நள் இருள்  5
வரையக நாடன் வரூஉம் என்பது
உண்டுகொல் அன்று கொல் யாது கொல் மற்று என"

"அவல்தொறும் தேரை தெவிட்ட, மிசைதொறும்
வெங்குரல் புள்ளினம் ஒலிப்ப, உதுக்காண்,
கார் தொடங்கின்றால் காலை அதனால்
நீர் தொடங்கினவால், நெடுங்கண் அவர்
தேர் தொடங்கின்றால் நம் வயினானே."

"மாதிரம் புதையப் பாஅய்க் கால் வீழ்த்து
ஏறுடைப் பெரு மழை பொழிந்தென அவல் தோறு
ஆடு களப் பறையின் வரி நுணல் கறங்க"

"பரல் அவல் படுநீர் மாந்தித் துணையோடு
இரலை நன் மான் நெறி முதல் உகளும்"

"வெயில் வெய்துற்ற பரல் அவல் ஒதுக்கில்
கணிச்சியில் குழித்த கூவல் நண்ணி
ஆன் வழிப்படுநர் தோண்டிய பத்தல்
யானை இன நிரை வெளவும்
கானம் திண்ணிய மலை போன்றிசினே.  "

"பரல் அவல் ஊறல் சிறு நீர் மருங்கின்
பூ நுதல் யானையொடு புலி பொருது உண்ணும்
சுரன் இறந்து அரிய என்னார் உரன் அழிந்து  5
உள் மலி நெஞ்சமொடு வண்மை வேண்டி"


"அவல் வகுத்த பசுங்குடையான்
புதன் முல்லைப் பூப்பறிக்குந்து"

"

படு மழை பொழிந்த பாறை மருங்கில்
சிரல் வாய் உற்ற தளவின் பரல் அவல்
கான் கெழு நாடற் படர்ந்தோர்க்குக்
கண்ணும் படுமோ’ என்றிசின் யானே."
















kanmani tamil

unread,
Apr 21, 2018, 3:49:16 AM4/21/18
to mintamil

செல்வன் <hol...@gmail.com>

20 Apr (1 day ago)
to mintamil
///ஆடவர் அனைவரும் குடிக்ககூடாது, பெண்னாசை பிடித்து அலையக்கூடாது, கட்டின மனைவியை கண்கலங்காமல் காப்பாற்றவேண்டும், உழைக்கவேண்டும் என உறுதி எடுத்தால் தான் நாடு நல்லா இருக்கும்///
இது பண்டைத்  தமிழகத்திற்குப் பொருந்தாத விளக்கம் .
ஒளவையாரே ரசித்துக் கள் அருந்தியவர் . விரும்பி ஊன் உணவை மிகுதியாக உண்டவர்.
அதியமான் இறந்தவுடன் அவருக்கு முதலில் நினைவுக்கு வந்தது அவன் கொடுத்த கள் தான். தான் பாடிய ஒப்பாரியில் "கள் கொஞ்சமாக இருந்தால் அதை அப்படியே எனக்குக் கொடுத்து விடுவான்; மிகுதியான கள் இருந்தால் என்னைப் பாடச்  சொல்லிக் கேட்டுக் கொண்டே அவன் குடித்து மகிழ்வான்" என்று தான் தொடங்குகிறார். பாணர் குழுத் தலைவியாகிய தன்னுடன் அதியமானுக்கு இருந்த அன்பை அந்த ஒப்பாரியில் தொடர்ந்து சொல்கிறார். பருத்த கறித்துண்டுகள் எலும்போடு சேர்ந்தனவாய் இருப்பதையெல்லாம் ஒளவைக்குக் கொடுத்து விடுவானாம் . 'புலவு நாறும் என்தலை  தைவந்தனன்' என்கிறார்.கலைக்குழுத்தலைவியாகிய  தன்மேல் அதியமானுக்கு இருந்த பற்றையும் பாசத்தையும் அந்த ஒப்பாரிப் பாடலில் சொல்லோவியமாகக் கொடுக்கிறார் (புறநானூறு -பா-235) எனவே மேற்சொன்ன பொருளை ஏற்றுக்கொள்ள இயலாது.
கண்மணி      

kanmani tamil

unread,
Apr 21, 2018, 4:09:30 AM4/21/18
to mintamil
/// பலரும் ஆடவர் என்பதற்கு ஆண்மக்கார் என்றே  பொருளுரைப்பார். அது தவறு. ஆடவர் என்பது இங்கே ஆளுவோர். ஆளல்>ஆடல். பாட்டின் பொருள் அப்பொழுதுதான் சிறக்கும். ”ஆள்பவர் ஒழுங்காயிருந்தால் நாடென்ன, காடென்ன, பள்ளமென்ன, மேடென்ன, எல்லா நிலமும் அப்படியே நல்லபடி வாழும்”. என்பது இதன் பொருள். 

பாட்டின் பொருள் சிறக்க வேண்டும் என்பது நோக்கமாக இருந்தால் உரை கூறுபவர் திறமைக்கேற்ப பொருள் மாறுபட்டுவிடும். 
ஒளவையின் உட்கிடக்கை என்ன என்பதை அறிவது நோக்கமாக இருந்தால் அவளது அனைத்துப் பாடல்களையும் ஒருங்கு வைத்துப் பார்க்க வேண்டும்.
ஒளவை என்னும் ஆளுமை ஒரு கலைக்குழுத் தலைவி , ஒரு அரசியல் தூதுவர் , ஒரு சராசரிப்பெண்  என்ற மூன்று பரிமாணங்களை உள்ளடக்கியது.
மூன்று பட்டைகளைக் கொண்ட கண்ணாடி - prism - போல. எனவே 'ஆடவர்' என்ற சொல்லுக்கு சரியான பொருள் கூற ஒளவையை  ஆழமாகப் பயில வேண்டும் .
கண்மணி      

kanmani tamil

unread,
Apr 21, 2018, 7:31:04 AM4/21/18
to mintamil
///வடமொழி அறிவும் வைதீக சமய அறிவும் உடைய ஒளவையார் பௌத்த சமயப் பாடலை மொழி பெயர்த்திருப்பது அக்காலத்தில் சமய நல்லிணக்கம் நிலவியிருந்ததைப் புலப்படுத்துகிறது என்றும் செ.வை சண்முகனார் விளக்கம் தருகிறார். /// 

ஒளவையார் தம்மபதப் பாடலைத் தழுவி ஒரு பாடல் எழுதியுள்ளார். 
அவர் வடமொழி அறிவு வாய்க்கப்பெற்றவர் என்பதற்கு ஆதாரம் இல்லை.
அதுபோன்று வைதீக சமய அறிவு உடையவர் என்பதற்கும் ஆதாரம் இல்லை.

அவர் பாலி மொழி அறிந்திருந்தார் என்று சொல்ல மட்டுமே வாய்ப்புண்டு.
புறநானூறு 367ம் பாடல் சேரன் மாரிவெண்கோ ,பாண்டியன் கானப்பேர்தந்த உக்கிரப் பெருவழுதி ,சோழன் ராசசூயம் வேட்டபெருநற்கிள்ளி ஆகிய மூவரும் சேர்ந்து இருந்தமையை அவர் பாடியதாகக் கூறுகிறது.அப்பாடலில்
                                                                                       "நாகத்தன்னை பாகார் மண்டிலம் 
                                                                                        தமவே ஆயினும் தம்மொடு செல்லா 
                                                                                        வேற்றோராயினும் நோற்றோர்க்கு ஒழியும்
                                                                                        ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப்
                                                                                         பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து ..........."என்று பாடுகிறார் .அதாவது நாகலோகத்தைப் போன்ற தமிழகம்; மூவேந்தர்க்குரியதெனினும் அவர்கள் இயற்கை எய்தும் போது அவர்களோடு செல்வதில்லை. தொடர்பற்ற  வேற்றுநாட்டவர் புகுந்து தமிழகத்தை அடிப்படுத்துவதற்கும் வாய்ப்புண்டு. எனவே பார்ப்பனருக்கு பூவும் பொன்னும் தாரை வார்த்து தானம் செய்யவும் என்கிறாள். இரவலர்க்கு அருங்கலம் அருகாது வீசுக ; அதாவது தன்னைப் போன்ற பாணர் கூட்டத்திற்கும் வரையாது வழங்க வேண்டும்.அதுவே நல்வினை.  இறக்கும் போது உயிர்க்குத் துணையாவது தாம் ஆற்றும் ஈகையே . ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப்பாளர் முத்தீ போல அழகுற வீற்றிருக்கும் வெண்கொற்றக்குடை வேந்தர்களே !!

இப்பாடல் ஒளவையின் அரசியல் அறிவையும் ,தமிழகத்து மக்களின் அன்றைய நம்பிக்கைகளையும் ,கொள்கைகளையும் தெளிவாக்குகிறது.
தமிழகத்தை மூவேந்தர் ஒழிந்த பிற வடநாட்டு அரசர்கள் அடிப்படுத்தும் முயற்சியில் இருந்தனர்.
பார்ப்பனருக்கு பூவும் பொன்னும் தாரை வாரத்துக்கு கொடுத்தால் புண்ணியம் கிடைக்கும் என்று மக்கள் நம்பினர் .
மூவேந்தரும் அந்தணரின் தலைமை சான்ற வருணப் பாகுபாட்டை ஏற்றுக் கொண்டவர் ஆவர்.
ஒளவை போன்ற- பாணர்,விறலியர் போன்ற இனக்குழுக்களும் நால்வருணப்பாகுபாட்டையும் அந்தணர் தலைமைத்தன்மையையும் ஏற்றுக்கொண்டனர்.      
 மூவேந்தரும் வைதீகம் போற்றினர்.      

இவற்றால் ஒளவை  வடமொழி அறிவு பெற்றவர் என்றோ ,வைதீக சமய அறிவு உடையவர் என்றோ சொல்ல இயலாது .
கண்மணி   

kanmani tamil

unread,
Apr 21, 2018, 8:05:19 AM4/21/18
to mintamil

///நாடு, காடு, மேடு, பள்ளம் ஆகிய சொற்களைக் கொண்டு தமிழ்ப் பாடலும் தம்மபதப் பாடலும் அமைந்துள்ளன. ஆறு, குளம், ஏரி, உத்யானவனம் ஆகிய சொற்களைக் கொண்டு அபபிரம்சா பாடல் அமைந்துள்ளது. அபபிரம்சா பாடலில் நிலப்பகுதி களுக்குப் பதிலாக நீர்நிலைகள் வந்துள்ளன. நிலமும் நீரும் தானே பூமியின் இருபெருங் கூறுகள். வாழிய நிலனே என்று ஒளவை நிலத்தை முன்னிலைப்படுத்தி முழங்குகிறார். தம்மபதப் பாடல் யாரையும் முன்னிலைப்படுத்திப் பாடப்படவில்லை. அரஹத் வசிக்குமிடம் அழகாக இருக்கும் என்று பௌத்தர் தமது சீடர்களை நோக்கிச் சொன்னதாகக் கொள்ளலாம். ஆனால் பாடலில் வெளிப்படையாக விளிச்சொல் இல்லை. மூன்றாவதாக அபபிரம்சா பாடலில் மூர்க்கனே என்று விளிச்சொல் அமைகின்றது. மூர்க்கர்களை முன்னிலைப்படுத்திப் பாடல் புனையப் பெற்றுள்ளது. நல்லவர்களைச் சுட்டிக்காட்டி முட்டாள்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக பாடல் அமைந்துள்ளது. மூர்க்கனே என்று விளிப்பதிலிருந்து புலவரின் சினத்தையும் உணர்ந்துகொள்ள முடிகிறது. ஒளவை அந்தச் சினத்தை மறைத்து மென்மையாகக் கருத்தை வெளிப்படுத்து கிறார். இயல்பான சாதாரண உரையாடலில் மக்கள் மக்களை முன்னிறுத்தியே உரையாட முடியும். பேசுவோர் - கேட்போர் இருநிலைகளும் உரை யாடலுக்கு அவசியம். இது உரையாடல் விதி. ஆனால் இலக்கிய உரையாடலில் மக்கள் இயற்கையோடு உரையாட முடியும். இது இலக்கிய மொழியின் பண்பு. நிலமோ, பூமியோ, தேசமோ நல்லவர்களாலே சிறப்படைகின்றது, இதனை முட்டாள்கள் உணர வேண்டும்; மனம் மாற வேண்டும்; திருந்தி வாழ வேண்டும் என்பதே ஒளவையாரின் உள்ளக்கிடக்கையாக இருக்க வேண்டும். முட்டாள்களே என்று அவர்களை விளித்துச் சொல்லாமல் மறைமுகமாக “வாழிய நிலனே” என்று ஒளவை புனைந்திருப்பது தமிழ்ப்பாடலின் தனித்துவமாகத் திகழ்கின்றது.//./

தம்மபதப் பாடலினின்றும் வேறுபட்டு ஒளவையின் தனித்தன்மையை அவரது தழுவல் பாடலில் காண இயல்கிறது என்பதை கார்த்திகேயன் அவர்கள் எடுத்துக்காட்டியுள்ளார். அப்படியிருக்க 'ஆடவர்' என்ற சொல்லின் பயன்பாட்டில் ஐயம் கொள்ள வேண்டிய தேவை இல்லை.

///மூலத்தின் 'விஹரந்தி' என்ற சொல்  'நடமாடுகிறார்கள்' / 'நடப்பர்' என்று பொருள்பட வருகிறது. இதைத் தான் 'ஆடவர்' என்னும் சொல் சுட்டுகிறது போலும். 

 'நடமாடுவர்' என்பதின் மறு உருவமே 'ஆடுவர்'  என்னும் சொல். இங்கு 193-ம் பாட்டு அதாவது ஒக்கல் வாழ்க்கை பாட்டில் வரும் 'ஒருவன் ஆட்டும் புல்வாய்' என்ற தொடரில் உள்ள 'ஆட்டும்' என்ற சொல் நோக்கத்தக்கது. 
பாடத்தைத் திருத்திக் கொள்ளலாம் அல்லது ஆடவர் எ ........../// 

ஓரேர் உழவரின் சொல்லாடல் ஒளவையின் சொல்லாடலோடு ஒத்த தன்மை உடையதாய் இருக்க வேண்டும் என்ற நியதி இல்லை.புறநானூறு 193ம் பாடல்
உலக வாழ்க்கையின் சிரமத்தை - உயிர் பிழைக்க ஓடும் மானின் தவிப்போடு ஒப்பிடுகிறது.
ஆனால் ஒளவையின் பாடலில் பதைப்பே இல்லை .நிதானமாக நல்ல வார்த்தை சொல்லி; 'நிலனே' என்று உலகோரை விளித்து; தன் முத்திரையைப் பதித்துப் பாடும் அவர் பாடலின் சொல்லை  புறம்.193ம் பாடலைப் பார்த்து மாற்ற வேண்டிய தேவை ஏற்படவில்லை.
கண்மணி        

N. Ganesan

unread,
Apr 21, 2018, 10:44:22 AM4/21/18
to மின்தமிழ், vallamai
2018-04-21 5:05 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:

///நாடு, காடு, மேடு, பள்ளம் ஆகிய சொற்களைக் கொண்டு தமிழ்ப் பாடலும் தம்மபதப் பாடலும் அமைந்துள்ளன. ஆறு, குளம், ஏரி, உத்யானவனம் ஆகிய சொற்களைக் கொண்டு அபபிரம்சா பாடல் அமைந்துள்ளது. அபபிரம்சா பாடலில் நிலப்பகுதி களுக்குப் பதிலாக நீர்நிலைகள் வந்துள்ளன. நிலமும் நீரும் தானே பூமியின் இருபெருங் கூறுகள். வாழிய நிலனே என்று ஒளவை நிலத்தை முன்னிலைப்படுத்தி முழங்குகிறார். தம்மபதப் பாடல் யாரையும் முன்னிலைப்படுத்திப் பாடப்படவில்லை. அரஹத் வசிக்குமிடம் அழகாக இருக்கும் என்று பௌத்தர் தமது சீடர்களை நோக்கிச் சொன்னதாகக் கொள்ளலாம். ஆனால் பாடலில் வெளிப்படையாக விளிச்சொல் இல்லை. மூன்றாவதாக அபபிரம்சா பாடலில் மூர்க்கனே என்று விளிச்சொல் அமைகின்றது. மூர்க்கர்களை முன்னிலைப்படுத்திப் பாடல் புனையப் பெற்றுள்ளது. நல்லவர்களைச் சுட்டிக்காட்டி முட்டாள்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக பாடல் அமைந்துள்ளது. மூர்க்கனே என்று விளிப்பதிலிருந்து புலவரின் சினத்தையும் உணர்ந்துகொள்ள முடிகிறது. ஒளவை அந்தச் சினத்தை மறைத்து மென்மையாகக் கருத்தை வெளிப்படுத்து கிறார். இயல்பான சாதாரண உரையாடலில் மக்கள் மக்களை முன்னிறுத்தியே உரையாட முடியும். பேசுவோர் - கேட்போர் இருநிலைகளும் உரை யாடலுக்கு அவசியம். இது உரையாடல் விதி. ஆனால் இலக்கிய உரையாடலில் மக்கள் இயற்கையோடு உரையாட முடியும். இது இலக்கிய மொழியின் பண்பு. நிலமோ, பூமியோ, தேசமோ நல்லவர்களாலே சிறப்படைகின்றது, இதனை முட்டாள்கள் உணர வேண்டும்; மனம் மாற வேண்டும்; திருந்தி வாழ வேண்டும் என்பதே ஒளவையாரின் உள்ளக்கிடக்கையாக இருக்க வேண்டும். முட்டாள்களே என்று அவர்களை விளித்துச் சொல்லாமல் மறைமுகமாக “வாழிய நிலனே” என்று ஒளவை புனைந்திருப்பது தமிழ்ப்பாடலின் தனித்துவமாகத் திகழ்கின்றது.//./

தம்மபதப் பாடலினின்றும் வேறுபட்டு ஒளவையின் தனித்தன்மையை அவரது தழுவல் பாடலில் காண இயல்கிறது என்பதை கார்த்திகேயன் அவர்கள் எடுத்துக்காட்டியுள்ளார். அப்படியிருக்க 'ஆடவர்' என்ற சொல்லின் பயன்பாட்டில் ஐயம் கொள்ள வேண்டிய தேவை இல்லை.

///மூலத்தின் 'விஹரந்தி' என்ற சொல்  'நடமாடுகிறார்கள்' / 'நடப்பர்' என்று பொருள்பட வருகிறது. இதைத் தான் 'ஆடவர்' என்னும் சொல் சுட்டுகிறது போலும். 
 'நடமாடுவர்' என்பதின் மறு உருவமே 'ஆடுவர்'  என்னும் சொல். இங்கு 193-ம் பாட்டு அதாவது ஒக்கல் வாழ்க்கை பாட்டில் வரும் 'ஒருவன் ஆட்டும் புல்வாய்' என்ற தொடரில் உள்ள 'ஆட்டும்' என்ற சொல் நோக்கத்தக்கது. 
பாடத்தைத் திருத்திக் கொள்ளலாம் அல்லது ஆடவர் எ ........../// 

ஓரேர் உழவரின் சொல்லாடல் ஒளவையின் சொல்லாடலோடு ஒத்த தன்மை உடையதாய் இருக்க வேண்டும் என்ற நியதி இல்லை.புறநானூறு 193ம் பாடல்
உலக வாழ்க்கையின் சிரமத்தை - உயிர் பிழைக்க ஓடும் மானின் தவிப்போடு ஒப்பிடுகிறது.
ஆனால் ஒளவையின் பாடலில் பதைப்பே இல்லை .நிதானமாக நல்ல வார்த்தை சொல்லி; 'நிலனே' என்று உலகோரை விளித்து; தன் முத்திரையைப் பதித்துப் பாடும் அவர் பாடலின் சொல்லை  புறம்.193ம் பாடலைப் பார்த்து மாற்ற வேண்டிய தேவை ஏற்படவில்லை.
கண்மணி        


ஔவை உண்மையிலேயே விறலியா? அந்தப் பாத்திரம் ஏற்று விறலி பாவத்தில் (bhaava) பாடியுள்ளாரா? க. கைலாசபதி கருத்தும் நினைக்கவேண்டியுள்ளது.
சங்கப் பாடல்களைப் பற்றிய ஹெர்மன் டீக்கன் நூலும் வாசிக்க வேண்டும்,

நா. கணேசன்

ஆடவர் - 47 இடங்களில் சங்க இலக்கியத்தில் உண்டு:

ஆடவர் (45) கண் மாறு ஆடவர் ஒடுக்கம் ஒற்றி - மது 642 பெரும் செய் ஆடவர் தம்-மின் பிறரும் - மது 746 ஆடவர் குறுகா அரும் கடி வரைப்பின் - நெடு 107 களிறு களம் படுத்த பெரும் செய் ஆடவர்/ஒளிறு வாள் விழுப்புண் காணிய புறம் போந்து - நெடு 171,172 அகல்வர் ஆடவர் அது அதன் பண்பே - நற் 24/9 செம் கோல் வாளி கொடு வில் ஆடவர்/வம்ப மாக்கள் உயிர் திறம் பெயர்த்து என - நற் 164/6,7 செம் கணை தொடுத்த செயிர் நோக்கு ஆடவர்/மடி வாய் தண்ணுமை தழங்கு குரல் கேட்ட - நற் 298/2,3 செம் கணை செறித்த வன்கண் ஆடவர்/ஆடு கொள் நெஞ்சமோடு அதர் பார்த்து அல்கும் - நற் 329/6,7 அன்பு இல் ஆடவர் அலைத்தலின் பலருடன் - நற் 352/2 மனை உறை மகளிர்க்கு ஆடவர் உயிர் என - குறு 135/2 வருநர் பார்க்கும் வன்கண் ஆடவர்/நீர் நசை வேட்கையின் நார் மென்று தணியும் - குறு 274/4,5 ஏவல் ஆடவர் வலன் உயர்த்து ஏந்தி - பதி 24/3 புண் தோள் ஆடவர் போர்முகத்து இறுப்ப - பதி 40/4 முன் சமத்து எழுதரும் வன்கண் ஆடவர்/தொலையா தும்பை தெவ்_வழி விளங்க - பதி 52/7,8 வெல் போர் ஆடவர் மறம் புரிந்து காக்கும் - பதி 78/8 அரி உண்ட கண்ணாரொடு ஆடவர் கூடி - பரி 23/53 அருள் அன்று ஆக ஆள்வினை ஆடவர்/பொருள் என வலித்த பொருள் அல் காட்சியின் - அகம் 75/1,2 தோள் பதன் அமைத்த கரும் கை ஆடவர்/கனை பொறி பிறப்ப நூறி வினை படர்ந்து - அகம் 79/1,2 கொலை வில் ஆடவர் போல பல உடன் - அகம் 97/6 கடை மணி உகு நீர் துடைத்த ஆடவர்/பெயரும் பீடும் எழுதி அதர்-தொறும் - அகம் 131/9,10 செரு வேட்டு சிலைக்கும் செம் கண் ஆடவர்/வில் இட வீழ்ந்தோர் பதுக்கை கோங்கின் - அகம் 157/4,5 வடி உறு பகழி கொடு வில் ஆடவர்/அணங்கு உடை நோன் சிலை வணங்க வாங்கி - அகம் 159/5,6 வடியா பித்தை வன்கண் ஆடவர்/அடி அமை பகழி ஆர வாங்கி - அகம் 161/2,3 கொடு வில் ஆடவர் படு பகை வெரீஇ - அகம் 167/9 வாங்கு தொடை பிழையா வன்கண் ஆடவர்/விடு-தொறும் விளிக்கும் வெம் வாய் வாளி - அகம் 175/2,3 விடு வாய் செம் கணை கொடு வில் ஆடவர்/நன் நிலை பொறித்த கல் நிலை அதர - அகம் 179/7,8 அரும் சமத்து எதிர்ந்த பெரும் செய் ஆடவர்/கழித்து எறி வாளின் நளிப்பன விளங்கும் - அகம் 188/5,6 படை அமைத்து எழுந்த பெரும் செய் ஆடவர்/நிரை பர பொறைய நரை புற கழுதை - அகம் 207/4,5 வடி நவில் அம்பின் ஏவல் ஆடவர்/ஆள் அழித்து உயர்த்த அஞ்சுவரு பதுக்கை - அகம் 215/10,11 புலி என உலம்பும் செம் கண் ஆடவர்/ஞெலியொடு பிடித்த வார் கோல் அம்பினர் - அகம் 239/3,4 வில் வல் ஆடவர் மேல் ஆள் ஒற்றி - அகம் 263/7 குலாஅ வல் வில் கொடு நோக்கு ஆடவர்/புலாஅல் கையர் பூசா வாயர் - அகம் 265/17,18 கடுங்கண் ஆடவர் ஏ முயல் கிடக்கை - அகம் 365/7 செம் வாய் பகழி செயிர் நோக்கு ஆடவர்/கணை இட கழிந்த தன் வீழ் துணை உள்ளி - அகம் 371/2,3 கடு முனை அலைத்த கொடு வில் ஆடவர்/ஆடு கொள் பூசலின் பாடு சிறந்து எறியும் - அகம் 372/10,11 செம் தொடை பிழையா வன்கண் ஆடவர்/அம்பு விட வீழ்ந்தோர் வம்ப பதுக்கை - புறம் 3/20,21 ஆடவர் பிணிக்கும் பீடு கெழு நெடுந்தகை - புறம் 68/7 அன்பு இல் ஆடவர் கொன்று ஆறு கவர - புறம் 161/9 புளி சுவை வேட்ட செம் கண் ஆடவர்/தீம் புளி களாவொடு துடரி முனையின் - புறம் 177/8,9 எ வழி நல்லவர் ஆடவர்/அ வழி நல்லை வாழிய நிலனே - புறம் 187/3,4 புரவு எதிர்கொள்ளும் பெரும் செய் ஆடவர்/உடைமை ஆகும் அவர் உடைமை - புறம் 199/5,6 ஆண்மை தோன்ற ஆடவர் கடந்த - புறம் 242/4 குமரி_படை தழீஇய கூற்று வினை ஆடவர்/தமர் பிறர் அறியா அமர் மயங்கு அழுவத்து - புறம் 294/3,4 முளவு_மா தொலைச்சிய முழு_சொல் ஆடவர்/உடும்பு இழுது அறுத்த ஒடும் காழ் படலை - புறம் 325/6,7 பொழில்_அகம் பரந்த பெரும் செய் ஆடவர்/செரு புகன்று எடுக்கும் விசய வெண் கொடி - புறம் 362/4,5 மேல் ஆடவர்க்கு (2) பிரியல் ஆடவர்க்கு இயல்பு எனின் - நற் 243/10 வினையே ஆடவர்க்கு உயிரே வாள் நுதல் - குறு 135/1

kanmani tamil

unread,
Apr 23, 2018, 12:01:38 AM4/23/18
to mintamil
ஒளவை பாணர்குழுத் தலைவி ...அவளது குழுவில் விறலியும், கிணைப்பொருநனும் இருந்தனர்...அவளது பாடலில் அகச்சான்று உள்ளது.
"காவினம் கலனே " என்று அவளுக்குச் சினம் வந்தவுடன் 'விசுக்'கென்று தன் இசைக்கருவிகளைக் காவடியாகக் கட்டித் தூக்குவதைத் தன் பாடலிலேயே குறிப்பிடுகிறாள். அதனால் எனக்கு ஐயமில்லை.  
கைலாசபதியின் நூலை ஏற்றுக் கொண்டீர்களா ?
ஆச்சரியம் !!!
அவர் இலங்கைக்காரர் ஆயிற்றே! கனகசபைப்பிள்ளைக்கு(நான் போற்றும் ஆய்வாளர் ) தமிழே தெரியாது என்று சொன்னவர் நீங்கள்.
கைலாசபதி கேள்வி கேட்பதன் காரணம் ........கிரேக்கக் கவிஞர் சஃபோவுடன் ஒப்பிட்டுப் பார்த்ததன் விளைவு.
1975ல் வாசித்த நூல் ....அடிப்படைக் கருத்துக்கள் மட்டுமே நினைவில் உள்ளன.
ஆடவர் என்ற சொல் சங்க இலக்கியத்தில் 1000 இடங்களில் வேண்டுமாயினும் இடம் பெறட்டும்.
அதைப் பற்றிக்  கவலை கொள்ளத்  தேவையில்லை.
ஒளவை எழுதிய அனைத்துப் பாடல்களையும் ஒருங்கு வைத்துப் பார்த்தால் தான் சரியான பொருளை முடிவு செய்ய இயலும். 
தமிழாய்வின் தரத்தை தொல்லியலாளரைக் கொண்டே முடிவு செய்யும் உங்களால் இதை ஏற்றுக் கொள்ள இயலுமா என்பது ஐயமே.
யாராவது மேலை நாட்டார் சொல்லும் கருத்தை கண்ணை மூடிக் கொண்டு ஏற்றுக் கொள்வதால் மட்டும் தமிழாய்வு தரமானதாகி விடாது.
எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் .................நிரப்பிக் கொள்க .
  கண்மணி 





nkantan r

unread,
Apr 24, 2018, 1:51:30 AM4/24/18
to மின்தமிழ்
A country is known by its people

period

rnkantan

kanmani tamil

unread,
Apr 24, 2018, 2:09:23 AM4/24/18
to mintamil
The lyrics of Auvai bears both the views of a polititian and an average lady downpouring her emotions
 Now the problem is to categorise the lyric---
If we analyse the song as a polititian's creation then the word 'adavar' refers to people only.
If we analyse it as a feminist's criticism then we have to come to a conclusion that the word 'adavar' denotes the masculine gender.
For this we need a thorough and deep study of all her creations.
kanmani 

--

kanmani tamil

unread,
Apr 26, 2018, 12:32:49 PM4/26/18
to mintamil
பெண் எழுத்து ,பெண் மொழிக்குச் சான்றாக ஒளவையார் பாடல்களைச் சுட்டலாம் என்கிறார் அரங்க மல்லிகா.
ஒளவையின் பல பாடல்கள் பெருந்திணை வயப்படுவன என்கிறார் வ.சுப.மாணிக்கனார்.
அகநானூறு 273ம் பாடலின்படி "தனது காமம் ஒருதலைக்கொருகால் பெருகிச் செல்வதன்றித் தணியவில்லை.........தோழி ஆற்றியும் அடங்கவில்லை .......ஊரெல்லாம் அறிந்து பேசும்படி வெளிப்பட்டுவிட்டது " என்று பாடியிருப்பதால் அது 'தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம் ' என்பார் மு.பழனியப்பன்.

தனது அடங்காத காமநோயை "முலையிடைத் தோன்றிய நோய் " என்றே ஒளவை சுட்டுகிறாள்.இங்கு ஒரு பெண்ணின் காமத்தை அவளது மார்பு வெளிப்படுத்தும் என்பதாகப் பொருள் கூறுகிறார்  அரங்க மல்லிகா. காமம் ஆணுக்கு மட்டும் அங்கீகரிக்கப்பட்டதாக உள்ள கருத்தாக்கத்தை ஒளவையின் பாடல் உடைக்கிறது . பெண்ணின்  ஆழ்மனஉணர்வுகளை கட்டற்று வெளிப்படுத்த அனுமதிக்கப்படாத சூழலில் ஒளவையின் பாடல் இயல்பாக வீரியமிகுதியுடன் வெளிப்படுத்துகிறது.

தனது காமம் நெஞ்சில் வேர்விட்டு ,ஊரார் தம்முள் கூடிப் பேசும்படி கிளைத்து ,காதல்  பரப்பி ,புலவோர் போற்றும் நாணமே சிறிதும் இல்லாத பெரிய மரமாக மாறி,நிலம் முழுதும் பரவி , அலர்ந்த அரும்புகள் கொத்துக்  கொத்தாகச் சொரியும் நிலை அடைந்து விட்டது. ஆனால் இந்நோய்க்குக் காரணமான தலைவன் மட்டும் இன்னும் வரவில்லை என்று தன் ஏமாற்றத்தை விவரிக்கிறாள் .

சங்க அகப்பாடல்கள் தன்னுணர்ச்சிப் பாடல்கள் ஆவன .
மேற்சுட்டிய பாடலில் தன் உணர்ச்சுயைத் தான் அவள் பாடுகிறாளே அன்றி இந்த ஏமாற்றம் அடுத்தவர் உணர்வைக் கடன் வாங்கிப் பாடுவதன்று.
கண்மணி           

Kandiah MURUGATHASAN

unread,
Apr 26, 2018, 2:59:45 PM4/26/18
to mint...@googlegroups.com
காமம் ஆண்களுக்கு மட்டுமே உரியது என எந்தவொரு இலக்கியத்திலுமே இல்லை.காமம்   ஆணுக்கும் பெண்ணுக்குமுரியதேதான்.

Kandiah MURUGATHASAN

unread,
Apr 26, 2018, 3:04:33 PM4/26/18
to mint...@googlegroups.com
தனது அடங்காத காமநோயை "முலையிடைத் தோன்றிய நோய் " என்றே ஒளவை சுட்டுகிறாள்.இங்கு ஒரு "பெண்ணின் காமத்தை அவளது மார்பு வெளிப்படுத்தும் "என்பதாகப் பொருள் கூறுகிறார்  அரங்க மல்லிகா .
 

காமத்தை ஒரு பெண்ணின் மார்பு வெளிப்படுத்தும் என்பது உண்மையே.இது போன்ற  தர்க்கம்  கடந்த வருடம் திருத்தம் பொன; சரவணனால் கம்பராமாயணம் தழுவி விவாதிக்கப்பட்டிருந்ததை ஞாபகம; கொள்க.

kanmani tamil

unread,
Apr 27, 2018, 7:03:21 AM4/27/18
to mintamil
கடக்க இயலாக் காம வேட்கைப்பட்டவளாகவே ஒளவையின் குறுந்தொகைப் பாடலும்  அவளைக் காட்டுகிறது.(பா -102)
தன் காமம் வானளவு மிகுதியானது என்றும் ;தன்னால் மருவப்பட்ட தலைவன் சான்றோன் அல்லன் என்றும் பாடுகிறாள்.
ஒளவையின்  காமஉணர்வை அவளது தலைவன் முற்றும் தணிக்கவில்லை என்று முனைவர் மு.பழனியப்பன் கூறும் விளக்கமே அவளது நிலையைத் தெளிவாக்குகிறது.
நிறைவு பெறாத பாலுணர்வு வேட்கையை  வெளிப்படுத்தத் தயங்காத பெண்ணாக  ஒளவை இலக்கிய உலகில் உலா வருகிறாள்.
இன்றைய 21ம் நூற்றாண்டில் கூட பெண்கள் வெளிப்படையாகப் பேசத் தயங்கும் சிக்கல் இது.
 இந்தச் சிக்கலால் ஏற்படும் மன உளைச்சலைத் தான்    அவளது அகநானூற்றுப் பாடலும் சித்தரிக்கிறது. 
"......நம் துயர் அறியார் கொல்லோ 
 தாமே அறியினும் நம் மனத்தன்ன மென்மை இன்மையின் நம்முடை உலகம் உள்ளார் கொல்லோ 
யாங்கென உணர்கோ யானே ...... " என்றெல்லாம் புலம்புவதும் ; இறுதியில் அத்தலைவன் தன்னை நாடி வராமல் இருப்பதைக்கூறி நோவதும்--- ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னரே சமூகக் கட்டுப்பாடுகளைத் தகர்த்து தனக்கென ஒரு மொழிச்சுதந்திரத்தைத் தானாகவே அங்கீகரித்துக் கொண்ட பெண்ணியவாதியாகக் காட்சியளிக்கிறாள் .      
கண்மணி 

தேமொழி

unread,
Apr 27, 2018, 1:25:03 PM4/27/18
to மின்தமிழ்
தொடருங்கள் கண்மணி, நீங்கள் பங்கு பெறும் இழைகள் மூலம் அரிய தகவல்களும் மாற்றுக் கோணங்களும்  அறியக் கிடைக்கின்றன. 


..... தேமொழி

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Apr 27, 2018, 11:55:22 PM4/27/18
to mintamil
இக்காலத்தில் காமம் = பாலியல் வேட்கை. ஆனால்
சங்க காலத்தில் காமம் = காதல்.

சங்கப் பாடல்களில் மிளிர்வது காதலே அன்றி பாலியல் வேட்கை அன்று. இதற்கு ஏராளமான சான்றுகளை எனது பல கட்டுரைகளில் கொடுத்துள்ளேன். இப்போதைக்கு ஒன்றே ஒன்று.

மகிழ்ந்தோர் கள் களி செருக்கத்து அன்ன காமம்-கொல் இவள் கண் பசந்ததுவே - நற்.35

இப்பாடலில் கள்ளுண்டவரின் கண்கள் சிவப்பதைப் போல காதல் உணர்வு மிக்க தலைவியின் கண்கள் அழுகையினால் சிவந்து காணப்பட்டதென்று கூறப்பட்டுள்ளது.
காதல் மிகுதியால்தான் அழுகை வருமேயன்றி பாலியல் வேட்கை மிகுதியால் அன்று.
பாலியல்வேட்கை மிகும்போது அது கிடைக்க வழியில்லாத போது அழுகை வராது; சினமே மிகும்.
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
எதிரியிடம் நமக்குப் பிடிக்காத பொருள்
எதிர்க்கும் தன்மையே அன்றிஅவர் உயிரல்ல
எதிர்க்கும் தன்மையை மட்டும் நீக்கிவிட்டு
எதிரியையும் வாழவிடுவோம் நண்பனாக !!!
----------------------------------------------------------------
எனது முகநூல் முகவரி: http://www.facebook.com/thiruththam
எனது டுவிட்டர் முகவரி: https://twitter.com/thiruththam
தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.in
திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com
தமிழ்நூல்களுக்கான மதிப்புரைகளைக் காண: http://noolmathippurai.blogspot.in

Suba

unread,
Apr 28, 2018, 4:18:37 AM4/28/18
to மின்தமிழ், Subashini Kanagasundaram
2018-04-26 18:32 GMT+02:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
பெண் எழுத்து ,பெண் மொழிக்குச் சான்றாக ஒளவையார் பாடல்களைச் சுட்டலாம் என்கிறார் அரங்க மல்லிகா.
ஒளவையின் பல பாடல்கள் பெருந்திணை வயப்படுவன என்கிறார் வ.சுப.மாணிக்கனார்.
அகநானூறு 273ம் பாடலின்படி "தனது காமம் ஒருதலைக்கொருகால் பெருகிச் செல்வதன்றித் தணியவில்லை.........தோழி ஆற்றியும் அடங்கவில்லை .......ஊரெல்லாம் அறிந்து பேசும்படி வெளிப்பட்டுவிட்டது " என்று பாடியிருப்பதால் அது 'தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம் ' என்பார் மு.பழனியப்பன்.

தனது அடங்காத காமநோயை "முலையிடைத் தோன்றிய நோய் " என்றே ஒளவை சுட்டுகிறாள்.இங்கு ஒரு பெண்ணின் காமத்தை அவளது மார்பு வெளிப்படுத்தும் என்பதாகப் பொருள் கூறுகிறார்  அரங்க மல்லிகா. காமம் ஆணுக்கு மட்டும் அங்கீகரிக்கப்பட்டதாக உள்ள கருத்தாக்கத்தை ஒளவையின் பாடல் உடைக்கிறது . பெண்ணின்  ஆழ்மனஉணர்வுகளை கட்டற்று வெளிப்படுத்த அனுமதிக்கப்படாத சூழலில் ஒளவையின் பாடல் இயல்பாக வீரியமிகுதியுடன் வெளிப்படுத்துகிறது.

தனது காமம் நெஞ்சில் வேர்விட்டு ,ஊரார் தம்முள் கூடிப் பேசும்படி கிளைத்து ,காதல்  பரப்பி ,புலவோர் போற்றும் நாணமே சிறிதும் இல்லாத பெரிய மரமாக மாறி,நிலம் முழுதும் பரவி , அலர்ந்த அரும்புகள் கொத்துக்  கொத்தாகச் சொரியும் நிலை அடைந்து விட்டது. ஆனால் இந்நோய்க்குக் காரணமான தலைவன் மட்டும் இன்னும் வரவில்லை என்று தன் ஏமாற்றத்தை விவரிக்கிறாள் .

சங்க அகப்பாடல்கள் தன்னுணர்ச்சிப் பாடல்கள் ஆவன .
மேற்சுட்டிய பாடலில் தன் உணர்ச்சுயைத் தான் அவள் பாடுகிறாளே அன்றி இந்த ஏமாற்றம் அடுத்தவர் உணர்வைக் கடன் வாங்கிப் பாடுவதன்று.
கண்மணி      


​இப்பதிவில் முனைவர்.கண்மணி அவர்கள் குறிப்பிடும் பேராசிரியர்.முனைவர். அரங்கமல்லிகா (எத்திராஜ் மகளிர் கல்லூரி - தமிழ்த்துறை) அவர்களை மின் தமிழில் இணைத்துள்ளேன்.

முனைவர். அரங்கமல்லிகா  - உங்களுக்கு மின் தமிழ் குழுமத்திற்கு நல்வரவு. உங்கள் கட்டுரைகள், கருத்துக்களை இங்கு நீங்கள் பதியலாம்.

 
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Dr.K.Subashini
http://www.subaonline.net - எனது பக்கங்கள்
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி


 

kanmani tamil

unread,
Apr 28, 2018, 4:28:39 AM4/28/18
to mintamil
இயற்கையாக ஒரு பெண்ணுக்கு ஏற்படும் பாலியல் வேட்கை .......நிறைவேறாத போது சினம் ஏற்படுவதும் இயற்கையே .
ஒளவையின் குறுந்தொகைப் பாடல்(281) அந்த சினத்தைத் தான் விலாவாரியாக வருணிக்கிறது.
"முட்டுவேன் கோல் ?
தாக்குவேன் கோல்?
ஒரேன் யானும் ..........
ஓர் பெற்றி மேலிட்டு 'ஆஅ ', 'ஓ ', 'ஒல்' எனக் கூவுவேன் கொல் ?
அலமரல் அசைவளி அலைப்ப என் உயவுநோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே ." 
தனது  நிறைவடையாத வேட்கை...... தான் மருவியவனின் இயலாமையால்  ஏற்பட்ட சிக்கல்......ஊரெல்லாம் தெரிந்து விட்டது .எல்லோரும் அதுபற்றிக் கூடிக்கூடிப்   பேசித் தீர்க்கின்றனர்.......சிக்கலுக்குக் காரணமானவனுக்கு தப்பிக்கும் எண்ணம் தவிர வேறேதும் தோன்ற வழியில்லை என்பது உலகறியும்.....
அதனால் தான் அவன் ஒளவையைத் தேடி வரவேயில்லை......பாவப்பட்ட நிலையில் இருந்தவள் யார்மேல் தன் சினத்தைக் காட்டுவாள்?......தன்னைத் தானே வருத்திக் கொள்ளும் மனநிலைக்கு ஆளாகிறாள் ......
ஆனாலும் அறிவிற் சிறந்த பெண் ஒளவை ---முட்டுவேனோ என்று கேள்வி கேட்கிறாள்.
                                                                                    யாரைத் தாக்குவேன் என்று படபடக்கிறாள் 
                                                                                     நிதானமாக சிந்திக்கவும் இயலவில்லை .  
                                                                                    ஏதாவது காரணத்தைக் கூறி கத்திக்கத்தித்  தூங்கிக் கொண்டிருக்கும் இந்த ஊரை எழுப்பலாமா? 
                                                                                     புறம் பேசத் தெரிந்த ஊருக்கு பிரச்சினையைத் தீர்க்கும் வழி சொல்லத் தெரியவில்லையே .   
                                                                                     வாடைக்காற்றில் பெருகும் துயரம்  ............
இது தான் அவளது  அகவாழ்க்கையின்  நிலை.
பெண்ணுக்குத் தோன்றும் வேட்கை இயற்கை; எனினும் அது பற்றிப் பெண் தன் வாயால் பேசுவதே இழுக்கு என்று எண்ணும் உற்றார்,உறவினர் ,பெற்றோர் ,பெரியோர் ,உடன்பிறப்புகள் ,உடன்பிறவா நட்புகள் அத்தனையும் நிறைந்த  சமூகத்தில் தன வேதனையை மறைக்கவும் முடியாமல் ,உடலைத் துன்புறுத்திக் கொள்ளவும் அறிவு இடம் கொடுக்காமல்--- ஒரு கலை வாழ்க்கையையும் ,அரசியல் வாழ்க்கையையும் ஏற்றுக் கொண்டு பாரதத்தில் முதல் பெண் தூதுவராக அதியமானிடம் இருந்து தொண்டைமானிடம் சென்று சாதனை படைத்த முதல் தமிழ் பெண்ணியவாதி ஒவைள
கண்மணி      

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Apr 28, 2018, 4:57:07 AM4/28/18
to mintamil
அருமையான பாடலும் விளக்கமும். நன்றி.

ஆனால் இப்பாடல் ஔவையாரைப் பற்றியது தானா என்பது கேள்விக்குரியது.

ஏனென்றால் பாடலைப் பாடிய புலவர்கள் அனைவரும் தம்மைப் பற்றியே பாடியவரில்லை.

ஔவையாரின் தோழி அல்லது உறவினரின் துன்பத்தை இவர் பாடியதாகவும் இருக்கலாம் இல்லையா?.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Apr 28, 2018, 5:19:31 AM4/28/18
to mintamil
கணவனை மறுபடியும் பார்க்க முடியுமா என்னும் ஏக்கமே பெருநோயாக மாறிவிட்டது.

ஒவ்வொரு நாளும் அவனை எண்ணி எண்ணி துன்பம் பெருகுகிறது.

என் துன்பத்தைக் கொஞ்சமும் அறியாமல் இந்த ஊர் உறங்கிக் கொண்டிருக்கிறது.

இந்த ஊரில் யாரைச் சென்று முட்டுவது அதாவது பிடிப்பது?.

யாரிடம் எனது சிக்கலைத் தாக்கல் செய்வது?

என்ன செய்யவேண்டும் என்ற முறையினை என்னால் சிந்திக்க முடியவில்லை.

இல்லை இப்படியே இரவெல்லாம் அரற்றிக் கொண்டிருப்பேனா?.


kanmani tamil

unread,
Apr 28, 2018, 11:15:16 AM4/28/18
to mintamil
ஒளவையின்  பாடல்கள் தன்னுணர்ச்சிப் பாடல்கள் என்பதில் மாற்றுக்கருத்து எழ வழியில்லை.
அவளது அகப்பாடல்கள் ,புறப்பாடல்கள் ,ஒப்பாரி ,தூதுச்செய்தி அனைத்தையும் பார்ப்போம்.
அவளது அகப்பாடலில் 'தான் மருவியவர்  ' என்ற குறிப்பும் ,'சான்றோர்  அல்லர் ' என்ற குறிப்பும் தவிர  அவன் கணவனா ? காதலனா ? என்ற அகச்சான்று கூற வழி ஏதும் இல்லை.
உரைக்கும் ,கொளு தரும் செய்திக்கும் பனுவல் செய்திக்கு அடுத்த சிறப்பிடமே தர வேண்டும் என்பதால் நாமும் அவளது தலைவன் யார் என்ற ஆராய்ச்சி செய்ய வேண்டிய கட்டாயமில்லை. 
நற்றிணை 295ம் பாடலில்; தன் துன்பத்தை அறிந்து தோழியர் கூட்டம் துன்புற்றது என்கிறாள்.
                                                 அன்னைக்கும்  எல்லாம் புரிந்து விட்டது; என்னை இற்செறித்து விட்டாள்  என்கிறாள்
                                                 கள்ளின் சாடி போன்ற தன்  இளமைநலம் வீட்டிற்குள்ளேயே இருந்து முதுமை அடையும் என்கிறாள் .............ஏன்?
கொண்டவன் இயலாமையை மறைக்கத் தெரியாமல் --- தன் ஆராக்காதலையும் மூடி வைக்கத் தெரியாமல் ---தோழியர் தொடங்கி ஊர் முழுதும் அம்பலாக்கக் காரணமான மகளை /ஒளவையை இற்செறிக்காமல் பெற்றவளால் வேறென்ன செய்ய இயலும்?
அந்த இற்செறிப்பு தானே அவளுக்குப் பாதுகாப்பு என்று தாய் எண்ணுவாள் !?!?
ஒளவையை முதியவளாக தமிழ்ச் சமூகம் சித்தரித்த காரணம் இப்பாடலில் உள்ளது.
எல்லா முதுபெண்டிரும் இளமையைக் கடந்து தானே முதுமை அடைவர்.
அவளது இளமையின் மன அவசத்தை ஏறிட்டுப் பார்க்கக் கூடத் தயாராக இல்லாத சமூகம் நம்முடையது என்பதை நாம் ஜீரணித்துத் தான் ஆகவேண்டும் .
கண்மணி         

kanmani tamil

unread,
Apr 30, 2018, 8:50:06 AM4/30/18
to mintamil
ஒளவை பாடியதாக எட்டுத்தொகையிலும் ,பத்துப்பாட்டிலும் சேர்த்து மொத்தம் 59 பாடல்கள் உள்ளன.
அவற்றுள் 26 பாடல்கள் அகப்பாடல்கள். ---அவற்றுள் நான்கு பாடல்களை இதுவரை பார்த்தோம்.
நான்கு பாடல்களும் அவளது குடும்பவாழ்க்கையின் வேதனையை விவரித்தன .

ஒளவை போலவே அகவாழ்வில் துன்புற்ற இன்னொரு பெண் வெள்ளிவீதி .
சங்க இலக்கியத்தில் வெள்ளிவீதியின் பாடலும் கேட்பவர் மனதைப் பிழியும்.
வெள்ளிவீதியாரின் பெண்மொழி பற்றி சு.மலர்விழி ஒரு ஆய்வுக்கட்டுரையில் 'பெண்கள் வெளிப்படையாகப் பேசக்கூடாது என்று வரையறுக்கப்பட்ட காமத்தை வெளிப்படுத்தி ; பிரிந்து சென்ற காதலனுக்காக காத்திருக்க வேண்டும் என்ற மரபை உடைத்து ,அவனைத் தேடி அலைந்து ; தன்  உடலில் ஏற்பட்ட மாற்றத்தையும், நோயையும் நுட்பமாகப் பதிவு செய்ததன் மூலம் சமூகக் கட்டுக்களைத் தகர்த்து ; தன் இருப்பைப் பதிவு செய்த ஒற்றைக் கலகக் குரல் '       
என்று முடித்துள்ளார்.  "...........................................................
                                            நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின் 
                                            குடிமுறை குடிமுறை தேரின் 
                                            கெடுநரும் உளரோ நம் காதலோரே " என்று பாடி ஊர் ஊராய், காடுகளைக் கடந்து; ஒவ்வொரு நாட்டிலும் ,ஒவ்வொரு குடியிருப்பிலும் சென்று தன் காதலுக்குரியவனைத் தேடி அலைந்தவர் வெள்ளிவீதியார்.

இந்த வெள்ளிவீதியின் செயலை ஒளவை தன் பாடலில் விபரமாகவே எடுத்துச் சொல்கிறார்.(அகநானூறு -147) வெள்ளிவீதியைப் போல நானும் தேடித் தேடி அலைய என் மனம் நாடுகிறது என்கிறாள். தான் வினைமேற்செல்வதாகச் சொல்லிச் சென்றவன் தலைவன் ;அவன் சொன்னபடி வந்து விடுவான் என்று நம்பி வீட்டில் தனித்து இருந்து துன்புறுபவள் நான் (நற்றிணை -129)சொன்ன காலம் கடந்து விட்டது இனி அவனைத்தேடி யானும் செல்வேன் என்று தன் மனதோடு பேசுகிறாள் (அகநானூறு -303)
கண்மணி  

kanmani tamil

unread,
May 2, 2018, 10:36:08 AM5/2/18
to mintamil
"பெண்ணிடமிருந்து உற்பவித்துத் தமிழ்இலக்கியத்தின் பல்வேறு காலகட்டங்களிலும் பதிவாகியுள்ள எழுத்துக்கள் 'பெண் எழுத்துக்கள்' "என்கிறார் எம்.ஏ.சுசீலா. ............."மரபு வழி வந்த இலக்கியங்களில் எடுத்தாளப்பட்டுள்ள பெண் பற்றிய போலியான கருத்தாக்கங்களை உடைத்தெறிவது பெண்ணியத் திறனாய்வு" என்பார் இரா.பிரேமா .
ஒளவை என்னும் பெண் சார்ந்த போலிக் கருத்தாக்கம் உடைபட வேண்டும் என்பதே இன்றைய மடலின் நோக்கமாகும்.  
குறுந்தொகை 99ம் பாடல் -" உள்ளினென்  அல்லனோ யானே  உள்ளி 
                                                     நினைந்தனென் அல்லனோ பெரிதே நினைந்து 
                                                     மருண்டனென் அல்லனோ ,உலகத்துப் பண்பே 
                                                      நீடிய மரத்த கோடு தோய் மலிர்நிறை 
                                                      இறைத்து உணச் சென்று அற்று ஆங்கு 
                                                      அனைப் பெருங் காமம் ஈண்டு கடைக் கொளவே ."
தன்மை இடம் சுட்டி ஒளவை பாடியுள்ள பாடல் இது.
உள்ளினென் அல்லனோ யானே =  நான் எண்ணிப் பார்த்தேன்.
உள்ளி நினைந்தெனன் அல்லனோ பெரிதே =அங்ஙனம் எண்ணும் போது உலக இன்பங்களிற் பெரிதாகிய காமஇன்பத்தை நினைத்துப் பார்த்தேன்.
நினைந்து மருண்டெனன் அல்லனோ உலகத்துப் பண்பே = நினைத்தபோது உலகத்துப் பண்பைக் கருத்தில் கொண்டு மருண்டேன்.
நீண்டு உயர்ந்த மரம்...... ; அதன் கிளை ஒன்று ஆறோடும் போக்கில் குறுக்கே தாழ்ந்து உள்ளது......; ஓடிவரும் பெருவெள்ளம் அந்தக் கிளையைத் தோய்ந்து செல்கிறது......; கிளையில் இருந்து கொண்டு அந்த வெள்ளநீரை இறைத்து உண்டு தாகம் தீர்க்க இயலுமா?(வெள்ளத்தின் வேகம் கிளையில் அமர்ந்து இருப்பவரையும் அடித்துச் செல்லும்;கிளையையும் சேதமாக்கும்).....;அத்தகைய காமம் இங்கு என்னிடம் -----இது தான் இந்தத் தன்னுணர்ச்சிப்பாவின் கருத்து.
தன்னுடைய தீராத வேட்கை தன்  உயிரைக் கொல்லும் தன்மை உடையது என்கிறாள் . பாடலின் இறுதி மூன்றடிகள் இறைச்சிப் பொருள் தருகின்றன.தனக்கும் தான் மருவிய தலைவனுக்கும் இடையே இருந்த பாலுறவுச் சிக்கலை இறைச்சி மூலம் குறிப்பாகச் சொல்கிறாள்.
    
இப்பாடலுக்கு பொருள் எழுதிய பெருமழைப் புலவரும் அவருக்கு முன்னர் கொளு எழுதியோரும் இது ஒரு தலைவன் கூற்று என்கின்றனர். அவன் பொருள் தேடித் சென்ற பொழுது தலைவியை நினைத்தானா என்று தோழி கேட்டாளாம் .அதற்குத் தலைவன் பதில் கூறினானாம் . பாடலை வரிசைப்படுத்துவோரும் ,உரை எழுதுவோரும் இவ்வளவு வலிந்து ஒரு கற்பனை செய்யக் காரணம் ? வெள்ளம் போல் பெருக்கெடுக்கும் காமம் பற்றி ஒரு பெண் பேசுவது அவளுக்கு   இழுக்கு என்னும் கொள்கையே இத்தகைய பொருத்தமற்ற விளக்கத்தின் காரணம் ஆகும்.

இரா.பிரேமாவின் கருத்தின்படி இது தான் போலிக் கருத்தாக்க உடைப்பு .........பெண்ணியத் திறனாய்வு.  

kanmani tamil

unread,
May 3, 2018, 3:42:50 PM5/3/18
to mintamil
குறுந்தொகை 29ம் பாடலும் ஒளவையின் தன்னுணர்ச்சிப் பாட்டே .
இந்தப் பாடலையும் ஒரு ஆண்மகன் கூற்றாகவே உரையாசிரியரும், கொளு எழுதியோரும் பார்க்கின்றனர்.
அவ்வாறு சொல்வதன் காரணம் அதில் இடம் பெற்றிருக்கும் உவமை.
"நல்லுரை இகந்து புல்லுரை தாஅய்ப் 
பெயல் நீர்க்கு ஏற்ற பசுங்கலம் போல 
உள்ளம் தங்கா வெள்ளம் நீந்தி 
அரிது அவா உற்றனை நெஞ்சே நன்றும் 
பெரிதால் அம்ம நின் பூசல் உயர்கோட்டு 
மகவுடை மந்தி போல 
அகனுறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே ."
மழை நீர் நிறையும் பச்சை மண் பானை கரைந்து ஓடுவதைப்போல ; உள்ளத்தால் தாங்க முடியாத ஆசைப்பெருக்கை நீந்திக்கடக்க அவா உற்ற நெஞ்சே 
என்று தன் மனதோடு புலம்புகிறாள் .இவ்வாறு ஒரு பெண் பேசுவது அழகல்ல என்று நினைத்தோர் பாடலைத் தலைமகன் கூற்றாக்குகின்றனர். 
இதையடுத்து இன்னொரு உவமையும் இப்பாட்டில் இடம் பெற்று நம்மை நெஞ்சு நெகிழ வைக்கிறது. 
ஒளவையை இற்செறித்த அவளது தாய் தன் ஆற்றாமையை எங்கே கொட்டியிருப்பாள்?
தன் மகள் மீது தானே ..........பெற்றவளிடமிருந்து பாசத்தில் நனைந்த நல்ல சொற்களை அவளால் கேட்கமுடியவில்லை. மாறாக சுடுசொற்களே.........
மரத்தின் உச்சியில் குட்டியைத் தழுவிக் கொண்டிருக்கும் மந்தி போல என்னைத் தன் நெஞ்சோடு தழுவி என் குறையைக் கேட்பவர் எவருமில்லையே என்று விம்முகிறாள் . அவளுக்கு துன்பத்திற்கு மேல் துன்பம் பெருகுகிறது.
இந்தப் பாடலை இரவுக்குறி மறுக்கப்பட்ட தலைமகன் தன் நெஞ்சை நோக்கிப் பேசுவதாகப்  பொருள் கூற முயன்றுள்ளனர்.         
கண்மணி 

kanmani tamil

unread,
May 4, 2018, 2:57:45 AM5/4/18
to mintamil
இப்படி ஒளவை பாடிய பாடல்கள் எல்லாம் சோகத்தை மட்டும் தழுவி இருக்கின்றனவா என்றால் ----------இல்லை.
அவளுக்காக அறத்தொடு நிற்க ஒரு தோழி வாய்த்திருந்தாள் -------(குறுந்தொகபா.-23)

அவளது காதலும் சமுதாயம் போற்றும் திருமணத்தில் முடிந்தது .(குறுந்தொகை -பா.-15)

அதையடுத்து அவள் வாழ்வில் நிகழ்ந்த ஏமாற்றம்..........அந்த ஏமாற்றத்தை எண்ணிப் பார்க்கும் பொழுது அவள் மனம் வெந்து சாம்பலானது .
அந்த ஏமாற்றத்தை எண்ணாமல் புறந்தள்ளி விட்டு.........எல்லோரையும் போல் கலகலப்பாக அன்றாடம் பொழுது போக்கினால்.......காமநோய் வானளவு உயர்ந்து........துன்பத்தைக் கொடுத்தது .(குறுந்தொகை -பா.-102)

ஒளவைக்கும் அவளது கணவனுக்கும் இடையில் பாலுறவுச் சிக்கல் இருந்தபோதும் அவர்களிடையே இருந்த காதல் மறையவில்லை.
இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டவர் ;ஆதலால் பொருளைக் காரணம் காட்டி ஒரு பிரிவைத் தன்  கணவன் கூறிய போது அவள் அதைப் பெரிதுபடுத்தவில்லை.உன்னோடு சேர்ந்து வந்தால் காட்டுவழிச் செலவும்  இனிதாகவே இருக்கும் என்று சொல்லி நின்றாள்(குறுந்தொகை-பா.-388).

 'செல்வார் அல்லர் என்று இகழ்ந்து  இருந்தாள் '.அவள் கணவனோ 'இவள் பிரிவுக்கு ஒருப்படமாட்டாள் ' என்று நன்கு அறிந்து அமைதியாகவே இருந்தான். இருவருடைய அழுத்தமான மனங்களும் இரண்டு பேராண்மைகளாகத் தம்முள் பூசலிட்டன.(குறுந்தொகை -பா.-43)
இப்பாடலில் ஒளவை கையாளும் 'இரு பேராண்மை 'என்ற தொடர் அவளது ஆளுமையை நமக்குத் தெளிவாக்குகிறது. பெண்மனம் தான் எனினும் தன்மனம் ஆண்மைத் தன்மை கொண்ட வலிமை வாய்ந்தது என்கிறாள்.(இப்படிச் சொல்வதற்கே எத்துணை துணிவு வேண்டும்!)
  
அவர்களது இல்லறச் சிக்கல் கணவனைத் துரத்தியது. பிரிந்து சென்ற தன்  கணவன் மீண்டு திரும்பி விடுவான் என்று எல்லாப் பெண்களையும் போல் அவளும் காத்திருந்தாள்.( குறுந்தொகை -பா.-158,183&200)

 அவன் திரும்பவில்லை என்று புரிந்து அவள் நொந்து புலம்புவதை அகநானூறு -11 ல் காணலாம்.இருவருடைய உடற்கூறியல் அடிப்படையிலான சிக்கலைக் கூட பொருட்படுத்தாமல் அவள் ஒருவாறு தன்னைத் தேற்றிப் பாடுவதாக அமைந்துள்ளது இப்பாடல்.
     
ஆனால் தன்னை அவன் நிரந்தரமாகப் பிரிந்த காரணமும் அவளுக்குத் தெரிந்ததால் அவள் ஆற்றாது அரற்றியதைத் தான் முந்தைய மடல்கள்  அனைத்திலும் பார்த்தோம். குறுந்தொகை- 39ல்  -அந்த விரக்தியின் எல்லையில் அவள் தன்  கணவனை 'முலையிடை முனிநர்' என்கிறாள்.
கண்மணி  

kanmani tamil

unread,
May 5, 2018, 1:45:32 PM5/5/18
to mintamil
ஒளவையின்  கலை வாழ்வும் அரசியல் வாழ்வும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை.
பாணர் குலத்தில் தோன்றியவள்  ஒளவை. அவளது குலம் பற்றி ஆய்வாளர் கைலாசபதிக்கு ஐயம் தோன்றக் காரணமாக அமைவது புறம்.390ம் பாடல்.
இப்பாடல் ஒரு கிணைப் பொருநன் பாடுவதாக ஒளவை பாடியதாகும்.பெண்ணாகிய ஒளவை  ஒரு ஆண்  பாடியது போல் பாடியிருப்பதால் அவளது பிற பாடல்களையும்  கைலாசபதி ஐயுறுகிறார்.ஆனால் அவள் பாணர் குலத்தைச் சேர்ந்தவள் என்பதற்கு சான்றாக அமைவன அவளது பாடலில் உள்ள அகச்சான்றுகள்.

இசைக்கருவிகளைக் காவடியாகக் கட்டி எடுத்துச்சென்ற காட்சியை புறம்.103ம் பாட்டு காட்சிப்படுத்துகிறது. தன்  மண்டை (உண்கலம்)கவிழ்ந்திருக்க அதை மலர்த்தி மெழுகு மெல்லடையிற் கொழுநிணம் பெருப்ப ஊட்டுவான் என்று தன்  கூட்டத்து விறலியிடம் பேசுவதாகப் பாடுகிறாள் .

பாண்பாட்டு என்னும் துறையிலமைந்த பாடலும் ஒளவையின் பாடல்களில் ஒன்று. இது வீரமரணமடைந்த ஒருவனின் ஆற்றல் பாடி ஈமக்கடன் செய்வது.. களிறெறிந்து வீழ்ந்தவரைக் கைவல் யாழ்ப்பாணர் கடன் இறுப்பது  பாண்பாட்டு ஆகும் என புறப்பொருள் வெண்பாமாலையும் கூறுகிறது. 'செருவத்து ஒருவருமில்லை மாதோ ' என்பது போலவே புறநானூறு 311ம் பாடலும் அமைகிறது. பாணர் குலத்தைச் சேர்ந்தவளாதலால் யாருமில்லாத வீரனுக்குத் தன்  குழுவோடு சேர்ந்து இறுதிக்கடன் ஆற்றுகிறாள். 

புறப்பா.-206ல் "எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே "எனச் சினந்து எழும்போது,"காவினம் கலனே "என  தன்  இசைக்கருவிகளை காவடியில் கட்டி எடுப்பதைக் கூறுவது நோக்கத்தக்கது. சினத்தில் வெளிப்படும் பாடலில் இல்லாத கற்பனை இடம்பெற வழியில்லை.

அதியமான் மறைந்தபோது அவன் மார்பைத் துளைத்த வேல் பாணரின் உண்கலத்தைத் துளைத்து இரந்து நிற்பவர் கைகளைத் துளைத்து புலவர் நாவில் சென்று வீழ்ந்தது என்கிறார்.(235)இங்கே முதலிடம் பெறுவது பாணர் உண்கலமே

கிணைப்பொருநன் பாடியுள்ளதாக அவள் பாடக்  காரணம் தன்  குழுவிலிருந்த பொருநன் அதியமானிடம்  பெற்ற வரிசைகளைப் போற்றிச்  சொல்ல நினைத்தமை ஆகலாம்.

இரண்டாவது காரணம் ---பாணர்கள் பாடியவை நீண்ட வாய்மொழிப் பாடல்கள்.Bardic poetry எனப் பெயர் பெறும் கிரேக்க வாயமொழிப் பாடல்களோடு சங்க இலக்கியத்தை கைலாசபதி ஒப்பிட்டுப் பார்க்கிறார். இலியட் ,ஒடிசி போன்ற கிரேக்க கதைப்பாடல்கள்  எழுத்துரு பெற்று விட்டன.  ஆனால் தமிழில் வாய்மொழிப் பாடல்கள் ---கதைப் பாடல்கள் எழுத்துரு பெறவில்லை; எழுத்துரு பெற்ற சங்கப் பாடல்கள் வாய்மொழிக் கூறுகளைக் கொண்டுள்ளன.
   .
ஒளவையின் பாடல்களிலும் வாய் மொழிக் கூறுகள் மிகுதியாக உண்டு. (அவை தனியாகப் பின்னர் காண வேண்டியவை).

அவளது கலைப் பயணம் நாஞ்சில் வள்ளுவனிடம் தொடங்குகிறது.(பா.-140) இப்பாடலிலும் தன் குழுவிலிருந்த விறலி பற்றிக் குறிப்பிடுகிறாள்.
எனவே ஒளவை பாண்மகள் என்பதில் ஐயமில்லை.
கண்மணி  


   









    

kanmani tamil

unread,
May 7, 2018, 1:21:14 PM5/7/18
to mintamil
நாஞ்சில் வள்ளுவனை விட்டு  வடக்கு நோக்கி மேலே சென்ற ஒளவை தன்  பாணர் குழுவோடு கொங்கு நாட்டுப் பகுதியில் இருந்த இனக்குழுக்களில் ஊடாடுகிறாள்.பசுக்கள் /கறவைகள் மிகுந்த கொங்கு நாட்டுப் பகுதியில் வெட்சிப் போர் ,கரந்தைப்போர் நிகழ்ந்த இடங்களில் அவளது பாடல்கள் பிறந்துள்ளன. அத்தலைவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை.(புறம்.-பா.-269&290)
முதன்முதலாக அதியமானைக் காணச்  சென்ற அவளது சொல்லாடல்; பரிசில் வாழ்க்கைக்குரியோரின் செம்மாந்த பண்பைத் தாங்கி நிற்கிறது.(புறம்.-பா.-206) "எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே " என்று  சினந்து எழுகிறாள்.
அதியனைச் சந்தித்த ஒளவை உடன் அவனுடன் நிரந்தரமாகத் தங்கவில்லை . தன்  பாணர் குழுவோடு அவள் பல்லூரும் சுற்றி வந்தாள் .மீண்டும் மீண்டும் அவனிடம்  வந்து பாடிப் பரிசில் பெற்றாள் .(புறம்.-பா.-101&103)  
அதியமானுடன் அவள் தங்கியிருந்த காலத்தில் அவன் தன்னைச் சூழ்ந்திருந்த எழுவரோடு / இனக்குழுத்தலைவரோடும்,வேளிரொடும்  ,திருக்கோவலூர் மலயமானோடும், தொண்டைமானோடும், சேரமான் பெருஞ்சேரலிரும்பொறையோடும் பகையுற்றிருந்தான் /போரிட்டான் என்ற வரலாற்றுச் செய்திகள்   புறநானூறில் பதிவாகியுள்ளன.
இனக்குழுத் தலைவருடன் செய்த போர் =புறம்.-87,88,89,90
தொண்டைமானுடன் கொண்ட பகை காரணமாக ஒளவை தூது செல்லல் =புறம்.-பா.-95 
கதிர் நெல்லின் செம்மல் மூதூருடைய வேளிருடன் செய்த போர்=புறம்.-பா.-97,98 
திருக்கோவலூரை வென்றமை =புரா.-பா.-99&93

அதியனுக்கும் ஒளவைக்கும் இடையிலிருந்த உறவு தந்தையின் முன் நிற்கும் புதல்வரின் உறவு போன்றது என்று அவளது பாடலே சான்று பகர்கிறது.  ஒளவைக்கு நெல்லிக்கனி கொடுத்த நட்புறவு =புறம்.-91 
உன் அன்பால் என்சொல் தந்தையர்க்குப் புதல்வர் சொல்லும் சொல் போல் அருள் சுரக்கும் தன்மையன =92
எனக்கு நீ இனியவன்;பகைவர்க்கு நீ கொடியவன் =புறம்.பா.-94

புலவு நாறும் தன்  தலை தைவந்த அதியனை ---சேர்ந்து உணவுண்ண அமர்ந்தால் என்போடு தடிபடு வழியெல்லாம் தனக்கு ஈந்த அதியனை ---கள் சிறிதளவே இருந்தால் அதை அப்படியே தனக்கு ஈந்த அதியனை---மிகுதியாகக் கள்  இருந்தால் தன்னைப் பாடச்சொல்லித் தான் ரசித்த அதியனை ---  . 
தாட்பாடு சின்னீரில் இருப்பினும் களிற்றைக் கொல்லும் முதலை போன்றவன் என்கிறாள். =புறம்.-பா.-104
தீக்கடை கோல் போல அதியனின் வீரமும் வலிமையும் மறைந்திருக்கும்.=புறம்.-பா.-315 

அதியனின் மகன் எழினி பிறந்த போது ஒளவை உடனிருந்தாள் .அதியனின் இறப்பு வரை அவள் இருப்பு தொடர்ந்தது
 அதியன் இறந்த போது அவள் கையற்றுப் பாடிய பாடல்கள் மூன்று =புறம்.-பா.-231,232,235
பின்னர் எழினி மன்னனாக இருந்த காலத்தும் அவள் தகடூரிலேயே இருந்தாள் .புறம்.-பா.-96,100,102
இதுவே ஒளவையின் அரசியல் வாழ்க்கையும் ,கலை வாழ்க்கையும் ஆகும்.
கண்மணி  

 

kanmani tamil

unread,
May 8, 2018, 2:31:24 AM5/8/18
to mintamil
மேற்சுட்டிய புறவாழ்க்கையில்  கலைக்கூறும், அரசியல் கூறும் தவிர மூன்றாவதாக அமைவது சமுதாயத்தோடு ஒளவை கொண்ட  உறவு.
நெருக்கமான அந்த உறவு அதியன் இறந்த போது கூடியிருந்து ஒப்பாரி பாட வைக்கிறது.
ஒப்பாரி பாடும் பெண்கள்வட்டமாக அமர்ந்து  இருபுறமும் அருகிருப்பவர் தோளில் கை  போட்டுச்  சேர்ந்து குனிந்து இராகத்தோடு அழுது கொண்டு பாவர் .
தமிழகத்து  ஒப்பாரியில் இடம் பெறும் இரண்டு தவிர்க்க முடியாத கூறுகள்: இழுவையும் ,சிளுக்கும் ஆகும்.
சிறு வயதில் நான் வாழ்ந்த பகுதியில் பெண்கள் இழுவையோடும் சிளுக்கோடும் ஒப்பாரி வைப்பதைக்  கேட்டிருக்கிறேன்.
இழுவை என்பது ஒலியோடு  நீண்ட மூச்சை உள்வாங்குவது.
சிளுக்கு என்பது உள்வாங்கிய மூச்சை ஏக்கம் கலந்த ஒலியோடு சேர்த்து வெளிவிடுவது.
சில வாரங்களுக்கு முன் சிறந்த வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்கப் பட்ட திருமதி விஜயலக்ஷ்மி நவநீதகிருஷ்ணன் 1990வாக்கில் ஒளவையின் ஒப்பாரியை இழுவையோடும் சிளுக்கோடும் எம் கல்லூரி இலக்கியமன்றக் கூட்டத்தில்  பாடிக்காட்டினார்.நேரில் கேட்டிருக்கிறேன்.
இழுவை, சிளுக்கு என்ற பெயர்களும் அவை ஒளவைபாட்டில் பொருந்தியுள்ளன என்பதும் விஜயலக்ஷ்மிநவநீதகிருஷ்ணனிடம் இருந்து தெரிந்து கொண்டவை ----------இந்த ஒப்பாரி தான் புறம்.-பா.-235.
இது வாய்மொழி இலக்கிய வகைகளுள் ஒன்றான ஒப்பாரி என்பதற்கு இதன் யாப்பமைதியே சான்று.
   முதலடியில்  நான்கு சீர்கள்..........இரண்டாமடியில் இரண்டு சீர்கள்; இங்கு மூன்றாவதாக அமைய வேண்டியது இழுவை ; நான்காவதாக அமைய வேண்டியது சிளுக்கு..........எட்டாவது அடியில் மீண்டும் ஒரு இழுவையும் சிளுக்கும் இடம்பெறும் ........அதற்கேற்ப அந்த அடியில் மூன்று சீர்களே உள்ளன.
அதேபோல் பதினொன்று ,பதினான்கு,பதினைந்தாம் அடிகளிலும் ........ 
 
புறம்.-பா.-286ல் பொதுமக்களுடன் நெருங்கிய உறவுடைய ஒளவையைப் பார்க்கிறோம்.
வெற்றி அல்லது வீரமரணம் தான் புத்தேள் உலகிற்கு இட்டுச் செல்லும் என்னும் கொள்கை உடைய சமுதாயத்தில் வாழ்ந்தவள் அவள்.
தன்  மகனின் வீரத்தைப் போற்றித்  தலைவன் அவனுக்கு சிறப்பாகக் கள் வழங்குவது கண்ட மறக்குடித்தாயை அருகிருந்து நெருங்கிப் பார்த்து அவளது உள்ளக்கிடக்கையைப் பாடுகிறாள்.   

புறம்.-290ல் கரந்தைப்போர் தொடங்கப் போகிறது. முன்னதாக தலைவன் எல்லோருக்கும் கள் வழங்குகிறான். மக்களது நெருங்கிய உறவும் பழக்கமும் 
ஒளவைக்கு இருந்ததால் அவள் பின்வருமாறு கூறுகிறாள்."நுந்தை தந்தைக்கு இவன்றந்தைதந்தை கண்ணிமையாமல் பகைவர் எறிந்த படைகளை எல்லாம் தானேற்று மாண்டான். அதனால் முதலில் இவனுக்கு கள்ளைக் கொடு "என்கிறாள்.

புறம்.-295ல் தன்  மகன் வீரமரணமடைந்ததைக் கண்ட மறக்குடித் தாயின் மெய்ப்பாட்டு மாற்றத்தை விதந்தோதுகிறாள். இது சமுதாய மக்களோடு அவள் கொண்ட நெருக்கத்தின் விளைவே.

புறம்.-பா.-311------போர்க்களத்தில் வீரமரணமடைந்து  ஈமக்கடன் செய்ய யாருமற்ற வீரனுக்கு தன்  குழுவோடு சேர்ந்து இறுதிக்கடன் செய்கிறாள்.அந்த அளவிற்கு சமுதாயக் கடப்பாடுள்ளவளாக இருக்கிறாள்.
இந்தப் பின்னணியில் ஒளவை சுட்டும் 'ஆடவர் ' என்ற சொல் சுட்டுவது யார் எனக் காண வேண்டும்.   
கண்மணி 

செல்வன்

unread,
May 8, 2018, 5:17:34 AM5/8/18
to mint...@googlegroups.com
அருமை அருமை...நான் அறியாத தகவல்கள். தொடருங்கள் கண்மணி 🙏

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
எதிரியிடம் நமக்குப் பிடிக்காத பொருள்
எதிர்க்கும் தன்மையே அன்றிஅவர் உயிரல்ல
எதிர்க்கும் தன்மையை மட்டும் நீக்கிவிட்டு
எதிரியையும் வாழவிடுவோம் நண்பனாக !!!
----------------------------------------------------------------
எனது முகநூல் முகவரி: http://www.facebook.com/thiruththam
எனது டுவிட்டர் முகவரி: https://twitter.com/thiruththam
தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.in
திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com
தமிழ்நூல்களுக்கான மதிப்புரைகளைக் காண: http://noolmathippurai.blogspot.in

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

kanmani tamil

unread,
May 8, 2018, 10:36:07 AM5/8/18
to mintamil
///சங்கப் பாடல்களைப் பற்றிய ஹெர்மன் டீக்கன் நூலும் வாசிக்க வேண்டும்,
நா. கணேசன் wrote on 21st april///

ஹெர்மன் டீக்கன் கருத்து என்ன என்பதை பகிர்ந்து கொண்டால்; அதில் புதிதாக என்ன சொல்கிறார் என்று தெரிந்து கொள்வதுடன்; இந்த இழைக்கு அது பயனுள்ளதா என்பதை அறுதியிட்டு பின்னர் முடிக்கலாம். பனுவலை நுணுகி அறிந்து கொள்வதற்கு முன்னர் அடுத்தவர் கோணத்தை மனதில் வாங்கினால் நமது கோணம் கட்டுப்படுத்தப் படும். சுயசிந்தனைக்கு வழியில்லாமல் போய்விடும் .

ஒளவையின் அகவாழ்க்கையில் அவள் ஏங்கி ...அழுது ...கணவனைப் பிரிந்து ...தனித்து ...இற்செறிக்கப்பட்டு ...ஆதரவான தாய் அணைப்பும் கிடைக்காமல் ...நொந்து புலம்புவதைப் பார்த்தோம். ஆனாலும் ஒரு இடத்தில் கூட தன்  கணவனை அவள் குறை கூறவில்லை . மாறாக அவளது காதல்மனம் தன்  கணவனின் இயலாமையைப் பொருட்படுத்தாமல் சேர்ந்து இருக்கும் வழியையே நாடுகிறது.அகநானூறு 11ம் பாடலில்; பொருளைக் காரணம் காட்டிப் பிரிந்து சென்ற தலைவனுடன் தானும் சென்றிருந்தால்- காட்டாற்றின் கரையிலே மரக்கிளைகள் தாழ்ந்துள்ள மணல்மேட்டில் ,"மெய்புகுவன்ன  கைகவர் முயக்கம் அவரும் பெருகுவர் மன்னே " ; நான் இடைவிடாது அழும்நிலை இருந்திருக்காது என்கிறாள் .   இங்கு தம் இருவருக்கும் இடையிலிருந்த பாலுறவுச் சிக்கலை அடியொற்றி அதற்கு மாற்றாகவே ---கலவிக்கூட்டம் இல்லாமல்; அதையொத்து  கைகளால் அணைத்துத் தன்  கணவனோடு  இருந்தால் அவனும் இன்புறுவான்;தானும் அழ நேராது என்கிறாள். 
எனவே 'ஆடவர் ' என்ற சொல் கணவர் என்று பொருள் தர வழியில்லை. 'எவ்வழி நல்லவர் ஆடவர்' என்ற தொடர் இல்வாழ்க்கையில் ஈடுபடும் ஆண்மக்களைக் குறிக்கவில்லை .

ஒளவையின் புறவாழ்க்கையில் அவள் பாணர் குழுத்தலைவியாக இருந்தாள் . அவளது குழுவில் இருந்த கிணைப்பொருநன் அதியனிடமும்,எழினியிடமும்  பெற்ற வரிசை பற்றியும்; அவளே பாடல் பாடி(புறம்.-பா.-390&392) அப்பொருநனது மன நிறைவை வெளிப்படுத்தி இருக்கிறாள்.குழுவிற்குள் விறலியும் இருந்தாள் .அவர்களுக்குள் எந்த ஒரு பிணக்கும் இல்லை;மாறாக யாரும் அற்று வீரமரணம் அடைந்தவருக்கு அக்குழு ஒன்று சேர்ந்து பாண்கடன் இறுக்கிறது. எனவே 'எவ்வழி நல்லவர் ஆடவர்' என்ற தொடர் கலைவாழ்க்கையில் ஈடுபடும் ஆண்மக்களைக் குறிக்கவில்லை .

அரசியலில் ஈடுபட்டிருந்த  இனக்குழுத் தலைவர்கள் ,வேளிர்கள் ,நாஞ்சில் வள்ளுவன் ,அதியமான் ,அவனது மகன் எழினி ,தொண்டைமான்,சேரன் மாவண்கோ ,பாண்டியன் கானப்பேரெயில் கடந்த  உக்கிரப் பெருவழுதி ,சோழன் இராசசூயம் வெட்ட பெருநற்கிள்ளி  அனைவருடனும் அவ்வப்போது தொடர்பு கொண்டவள் ஒளவை .ஒவ்வொருவருடனும் அவள் ஒரு தலைமைத்தன்மை வாய்ந்த மதியூகி போல உரையாடுவதைப்  பார்க்கிறோம். புறம் .-367ம் பாடல் தக்க சான்று .(இவ்விழையில் ஏப்ரல் 21ம் தேதி எழுதிய மடல் நோக்குக.) அவள் அவ்வாறு உரையாட மூவேந்தரும் இடம் கொடுத்தனர் .எனவே 'எவ்வழி நல்லவர் ஆடவர்' என்ற தொடர் அரசியல்வாழ்க்கையில் ஈடுபடும் ஆண்மக்களைக் குறிக்கவில்லை .
கண்மணி 





To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
எதிரியிடம் நமக்குப் பிடிக்காத பொருள்
எதிர்க்கும் தன்மையே அன்றிஅவர் உயிரல்ல
எதிர்க்கும் தன்மையை மட்டும் நீக்கிவிட்டு
எதிரியையும் வாழவிடுவோம் நண்பனாக !!!
----------------------------------------------------------------
எனது முகநூல் முகவரி: http://www.facebook.com/thiruththam
எனது டுவிட்டர் முகவரி: https://twitter.com/thiruththam
தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.in
திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com
தமிழ்நூல்களுக்கான மதிப்புரைகளைக் காண: http://noolmathippurai.blogspot.in

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

சொ. வினைதீர்த்தான்

unread,
May 8, 2018, 10:46:16 AM5/8/18
to mint...@googlegroups.com
மின்தமிழ் குழுமத்திற்கு வந்து நாளாகிவிட்டது.
திருமிகு கண்மணி பதிவுகள் சிறப்பாக உள்ளன. 

வாழ்த்தினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சொ.வினைதீர்த்தான்


--
"Tamil in Digital Media...

kanmani tamil

unread,
May 8, 2018, 10:55:49 AM5/8/18
to mintamil
நன்றி ;வினைதீர்த்தான் அவர்களே .
கண்மணி 

...

[Message clipped]  

Suba

unread,
May 8, 2018, 11:35:51 AM5/8/18
to மின்தமிழ், Subashini Kanagasundaram
2018-05-08 16:36 GMT+02:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
///சங்கப் பாடல்களைப் பற்றிய ஹெர்மன் டீக்கன் நூலும் வாசிக்க வேண்டும்,
நா. கணேசன் wrote on 21st april///

ஹெர்மன் டீக்கன் கருத்து என்ன என்பதை பகிர்ந்து கொண்டால்; அதில் புதிதாக என்ன சொல்கிறார் என்று தெரிந்து கொள்வதுடன்; இந்த இழைக்கு அது பயனுள்ளதா என்பதை அறுதியிட்டு பின்னர் முடிக்கலாம். பனுவலை நுணுகி அறிந்து கொள்வதற்கு முன்னர் அடுத்தவர் கோணத்தை மனதில் வாங்கினால் நமது கோணம் கட்டுப்படுத்தப் படும். சுயசிந்தனைக்கு வழியில்லாமல் போய்விடும் .

ஒளவையின் அகவாழ்க்கையில் அவள் ஏங்கி ...அழுது ...கணவனைப் பிரிந்து ...தனித்து ...இற்செறிக்கப்பட்டு ...ஆதரவான தாய் அணைப்பும் கிடைக்காமல் ...நொந்து புலம்புவதைப் பார்த்தோம். ஆனாலும் ஒரு இடத்தில் கூட தன்  கணவனை அவள் குறை கூறவில்லை . மாறாக அவளது காதல்மனம் தன்  கணவனின் இயலாமையைப் பொருட்படுத்தாமல் சேர்ந்து இருக்கும் வழியையே நாடுகிறது.அகநானூறு 11ம் பாடலில்; பொருளைக் காரணம் காட்டிப் பிரிந்து சென்ற தலைவனுடன் தானும் சென்றிருந்தால்- காட்டாற்றின் கரையிலே மரக்கிளைகள் தாழ்ந்துள்ள மணல்மேட்டில் ,"மெய்புகுவன்ன  கைகவர் முயக்கம் அவரும் பெருகுவர் மன்னே " ; நான் இடைவிடாது அழும்நிலை இருந்திருக்காது என்கிறாள் .   இங்கு தம் இருவருக்கும் இடையிலிருந்த பாலுறவுச் சிக்கலை அடியொற்றி அதற்கு மாற்றாகவே ---கலவிக்கூட்டம் இல்லாமல்; அதையொத்து  கைகளால் அணைத்துத் தன்  கணவனோடு  இருந்தால் அவனும் இன்புறுவான்;தானும் அழ நேராது என்கிறாள். 
எனவே 'ஆடவர் ' என்ற சொல் கணவர் என்று பொருள் தர வழியில்லை. 'எவ்வழி நல்லவர் ஆடவர்' என்ற தொடர் இல்வாழ்க்கையில் ஈடுபடும் ஆண்மக்களைக் குறிக்கவில்லை .

ஒளவையின் புறவாழ்க்கையில் அவள் பாணர் குழுத்தலைவியாக இருந்தாள் . அவளது குழுவில் இருந்த கிணைப்பொருநன் அதியனிடமும்,எழினியிடமும்  பெற்ற வரிசை பற்றியும்; அவளே பாடல் பாடி(புறம்.-பா.-390&392) அப்பொருநனது மன நிறைவை வெளிப்படுத்தி இருக்கிறாள்.குழுவிற்குள் விறலியும் இருந்தாள் .அவர்களுக்குள் எந்த ஒரு பிணக்கும் இல்லை;மாறாக யாரும் அற்று வீரமரணம் அடைந்தவருக்கு அக்குழு ஒன்று சேர்ந்து பாண்கடன் இறுக்கிறது. எனவே 'எவ்வழி நல்லவர் ஆடவர்' என்ற தொடர் கலைவாழ்க்கையில் ஈடுபடும் ஆண்மக்களைக் குறிக்கவில்லை .

அரசியலில் ஈடுபட்டிருந்த  இனக்குழுத் தலைவர்கள் ,வேளிர்கள் ,நாஞ்சில் வள்ளுவன் ,அதியமான் ,அவனது மகன் எழினி ,தொண்டைமான்,சேரன் மாவண்கோ ,பாண்டியன் கானப்பேரெயில் கடந்த  உக்கிரப் பெருவழுதி ,சோழன் இராசசூயம் வெட்ட பெருநற்கிள்ளி  அனைவருடனும் அவ்வப்போது தொடர்பு கொண்டவள் ஒளவை .ஒவ்வொருவருடனும் அவள் ஒரு தலைமைத்தன்மை வாய்ந்த மதியூகி போல உரையாடுவதைப்  பார்க்கிறோம். புறம் .-367ம் பாடல் தக்க சான்று .(இவ்விழையில் ஏப்ரல் 21ம் தேதி எழுதிய மடல் நோக்குக.) அவள் அவ்வாறு உரையாட மூவேந்தரும் இடம் கொடுத்தனர் .எனவே 'எவ்வழி நல்லவர் ஆடவர்' என்ற தொடர் அரசியல்வாழ்க்கையில் ஈடுபடும் ஆண்மக்களைக் குறிக்கவில்லை .
கண்மணி 


​வாசித்து ரசித்தேன்

ஒரு கேள்வி எப்போதும் என் மனதில் எழுவதுண்டு.

ஔவையை ஓவியமாகத் தீட்டியவர்கள் அவரை வயது முதிர்ந்த கோலத்திலேயே வைத்து விட்டனரே?
இது ஏற்றுக்கொள்ளக்கூடியதா? 
எனது சிந்தனைப்படி அவரை வெள்ளை ஆடை உடுத்தி கோல் ஒன்றை பிடித்துக்  கொண்டு வளைந்த முதுகுடன் நிற்கும் உருவமாகத் தீட்டியது தவறு.
ஔவைக்குப் புதிய வடிவம்/உருவப்படம் உருவாக்கப்பட வேண்டும் :-)

சுபா



--

S. Jayabarathan

unread,
May 8, 2018, 12:12:15 PM5/8/18
to mintamil, tamilmantram, vallamai, Subashini Kanagasundaram, vannan vannan, vaiyavan mspm
எவ்வழி ஆடவர் அவ்வழி ஆயிழை !
எவ்வழி ஆயிழை, அவ்வழி விடுதலை ! 

சி.  ஜெயபாரதன்

kanmani tamil

unread,
May 8, 2018, 1:24:23 PM5/8/18
to mintamil
///ஔவையை ஓவியமாகத் தீட்டியவர்கள் அவரை வயது முதிர்ந்த கோலத்திலேயே வைத்து விட்டனரே?
இது ஏற்றுக்கொள்ளக்கூடியதா? 
எனது சிந்தனைப்படி அவரை வெள்ளை ஆடை உடுத்தி கோல் ஒன்றை பிடித்துக்  கொண்டு வளைந்த முதுகுடன் நிற்கும் உருவமாகத் தீட்டியது தவறு.
ஔவைக்குப் புதிய வடிவம்/உருவப்படம் உருவாக்கப்பட வேண்டும் :-)
சுபா//
ஆம் ! வெள்ளைச் சேலை உருவம் ஏற்றுக் கொள்ளக் கூடியது இல்லை .
ஓளவை=அவ்வை =அ +ஐ                        ஐ =அய்   என்றாற்போல் ஒள=அவ்   
அ =அழகிய 
ஐ=தலைவி 
ஒளவை =அழகிய தலைவி  
நற்றிணை 187வது பாடலில் அவள் தான் காதலித்த தலைவனோடு பொழிலில் விளையாடிய செய்தி இடம்  பெற்றுள்ளது.
எல்லோரையும் போல்  அவளுக்கும் இளமைக்கால நிகழ்வுகள் உண்டு.
நமது சமூகம் தனது விருப்பத்திற்கேற்ப கொடுத்த உருவமே கிழவி உருவம்.
கண்மணி  

சொ. வினைதீர்த்தான்

unread,
May 8, 2018, 1:25:41 PM5/8/18
to mint...@googlegroups.com
குறைந்தது நாலைந்து அவ்வையார் இருந்திருக்க வேண்டுமென்கிறார்கள். 

சொ.வி


--
"Tamil in Digital Media...

kanmani tamil

unread,
May 8, 2018, 1:30:13 PM5/8/18
to mintamil

சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>

22:55 (0 minutes ago)
to mintamil
குறைந்தது நாலைந்து அவ்வையார் இருந்திருக்க வேண்டுமென்கிறார்கள். 
சொ.வி
திட்டவட்டமாக ஒன்றுக்கு மேற்பட்ட ஒளவைகள்  இருந்திருக்கின்றனர்.
மொத்தம் எத்தனைபேர் என்பது விரிவான ஆய்வுக்குரியது.
கண்மணி   


...

[Message clipped]  

kanmani tamil

unread,
May 8, 2018, 2:22:04 PM5/8/18
to mintamil

S. Jayabarathan

21:41 (2 hours ago)
to tamilmantram, vannan, vaiyavan, mintamil, vallamai, Subashini
///எவ்வழி ஆடவர் அவ்வழி ஆயிழை !
எவ்வழி ஆயிழை, அவ்வழி விடுதலை ! 
சி.  ஜெயபாரதன்///
ஐயா உங்களைப் போன்ற கவிஞர்கள் இப்படி நறுக்குத் தெறித்த மாதிரி கவிதை எழுதினால் கொஞ்சம் விளக்கமும் சொல்லி விடுங்களேன். இல்லையென்றால் இஷ்டத்துக்கு நாங்கள் கண்டபடி பொருள் கொள்ள நேரும்.
கண்மணி 

2018-05-08 23:00 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:

சொ. வினைதீர்த்தான் <karuannam@gmail.com>

to mintamil

வேந்தன் அரசு

unread,
May 8, 2018, 2:55:39 PM5/8/18
to தமிழ் மன்றம், mintamil, vallamai, Subashini Kanagasundaram, vannan vannan, vaiyavan mspm
<ஒளவையார் தம்மபதப் பாடலைத் தழுவி ஒரு பாடல் எழுதியுள்ளார்>

தமிழனுக்கு சொந்தப்புத்தி என்றுமே இருப்பதில்லை.

kanmani tamil

unread,
May 9, 2018, 5:42:55 AM5/9/18
to mintamil
ஒரு சராசரிப்  பெண்ணாக சமுதாய மக்களுடன் ஊடாடிய ஒளவை  தன்  பெற்றோருக்குப் பிறகு  தன்  சொந்தக்காலில்நிற்கிறாள் .நாஞ்சில் வள்ளுவனிடம் முதலில் தன்  கலைக்குழுவோடு சென்று பரிசில் பெற்ற பின்னர் அவள் சுற்றித் திரிந்த கொங்குநாடு அங்கு  நிகழ்ந்த அரசியல் கொந்தளிப்பில் ; வேளிர்  ,அதியன் , மலையமான் ,தொண்டைமான் ,சேரர் ,சோழர் அனைவர்க்கும் இடையே நிகழ்ந்த அதிகாரப் போட்டியில் சிக்கித் தத்தளித்துக் கொண்டு இருந்தது,
 கொங்குநாடு சேரரால் முற்றிலும் வசப்படுத்தப்பட்டதையும்,அதியன் இறப்பில் தன்  கண் முன்னர் கண்டாள். அதியனின் மகன் எழினி சேரனிடம் சிற்றரசனானான். 
இந்தச் சூழலின் இறுக்கம் தளர்ந்து சேரனும்,சோழனும்,பாண்டியனும் சேர்ந்து இருந்தபோது ஒளவை  முதிர்ந்த அரசியல்வாதியாக தமிழகத்தில் அந்நியரின் ஆதிக்கத்திற்குரிய போர்மேகம் சூழ்ந்து இருந்தமையைக் கூறி அவர்கள் ஒற்றுமையை வலியுறுத்துகிறான்.     
அன்றைய தேவை; வெற்றி அல்லது வீர மரணத்திற்குத் தயாராக இருக்கும் இளைஞர்கள் .
தன் மகன் மன்னனிடம் வாங்கும் சிறப்பான சலுகைகளைக் காட்டிலும் அவன் கால்கழி கட்டிலில் வெள்ளுடை போர்த்திப் பெரும்பேறு பெற வேண்டுமென்று அவா கொண்ட தாயை ரசிக்கிறாள்.(புறம்.-286)
தன்  மகனின் வீர மரணத்தைக்கேட்டவுடன் அவனுக்குக் குழந்தைப் பருவத்தில் பாலூட்டிய தன்  வற்றிய மார்பில் மீண்டும் பால் சுரந்தது என்ற வீரத் தாயை ரசிக்கிறாள் (புறம்.-295)
கரந்தைப்போருக்குக் கிளம்பும் முன்னர் யாருக்கு முதல் சிறப்பு செய்யவேண்டும் என்று அறிவுறுத்தி  அந்தப்போரில் ஈடுபட இருந்த வீரக்குடிமகனை
ஊக்குகிறாள்.(புறம்.-290) 
வீரமரணமடைந்து  கேட்பாரற்றுக் கிடந்த சவத்திற்கு இறுதிக்கடன் செய்கிறாள்.(புறம்.-311)
அவளின் சமுதாய ஊடாடல் தமிழகத்திற்கு வீரர்கள் தேவை என்பதை உணர்கிறது.
எனவே அவளது பாடலில் இடம்பெறும் 'ஆடவர் ' =போர்வீரர் என்பது முடிபாகும்.
அப்பாடலில் அவள் சுட்டும் நிலன் =தமிழகம். அதனால் தான் குறிஞ்சி ,முல்லை,மருதம்,நெய்தல் என்று அகப்பாடல்கட்குரிய கலைச்சொற்களைக் கையாளாமல் நாடு=மருதம் ,
                           காடு=முல்லை ,
                           அவல் =நெய்தல் ,
                           மிசை =மலை என்று தமிழகம்முழுவதையும் இரண்டடிக்குள் அடக்குகிறாள்.
தமிழகத்து இளைஞர்கள் எந்த அளவுக்கு வீரயுகக் கொள்கைகளை ஏற்று நடக்கிறார்களோ அந்த அளவுக்கு தமிழகம் நல்லநிலையில் இருக்கும் என்பதே அவளது பாடற்பொருள்.
கண்மணி   



On 9 May 2018 at 00:25, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:
<ஒளவையார் தம்மபதப் பாடலைத் தழுவி ஒரு பாடல் எழுதியுள்ளார்>

தமிழனுக்கு சொந்தப்புத்தி என்றுமே இருப்பதில்லை.

--

kanmani tamil

unread,
May 9, 2018, 6:03:59 AM5/9/18
to mintamil

வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

00:25 (14 hours ago)
to தமிழ், mintamil, vallamai, Subashini, vannan, vaiyavan
///<ஒளவையார் தம்மபதப் பாடலைத் தழுவி ஒரு பாடல் எழுதியுள்ளார்>
தமிழனுக்கு சொந்தப்புத்தி என்றுமே இருப்பதில்லை.///
இந்த விமர்சனம் எதற்காக ஐயா ?
என்னைச் சோதிக்கவா?
எனக்கும் நிறைய கேள்விகள் மனதிலுள்ளன.
மூன்றே மூன்று கேள்விகள்  மட்டும்  உங்களிடம்  கேட்கிறேன்.
முடிந்தால் உங்கள் விளக்கத்தைக் கொடுங்கள்.
1)வேந்தர் என்று பெயர் பெற்ற முடிமன்னர் மூவரும் வைதீகத்தைப் போற்றுவது வெளிப்படையாகத் தெரிந்தும்;வருணப் பாகுபாட்டை விமர்சிக்கும்  தமிழ்ச்சமூகம்  அவர்களைத்  தம்மவராகக் கருதுவது மட்டுமின்றி ;  நாங்கள் சேரன் வழிவந்தவர் /நாங்கள் பாண்டியன் பரம்பரையினர் என்றெல்லாம் இன்றும் சொல்லிப் பெருமை கொள்வது ஏன்?
2)மூவேந்தரை வந்தேறிகள் என்று சொல்லலாமா?
3)வேளாண்மையில் ஈடுபட்ட கொங்கு நாட்டவர் வேளிர் என்று அழைக்கப்பட ; சோழ பாண்டிய நாடுகளில் வேளாண்மை செய்தோர் கிழார் என்று அழைக்கப்பட்ட காரணம் என்ன?
நீங்கள் விமர்சித்ததைவிட இவை முக்கியமானவையாக எனக்குப் படுகின்றன.
உங்கள் கருத்தைப் பதிவு செய்தால் ஐந்து நாட்களுக்குப் பின்னர் பதிலுரைக்கிறேன்.
கண்மணி 

kanmani tamil

unread,
May 15, 2018, 1:43:51 PM5/15/18
to mintamil
///சங்கப் பாடல்களைப் பற்றிய ஹெர்மன் டீக்கன் நூலும் வாசிக்க வேண்டும்,
நா. கணேசன் wrote on 21st April
ஹெர்மன் டீக்கன் கருத்து என்ன என்பதை பகிர்ந்து கொண்டால்; அதில் புதிதாக என்ன சொல்கிறார் என்று தெரிந்து கொள்வதுடன்; இந்த இழைக்கு அது பயனுள்ளதா என்பதை அறுதியிட்டு பின்னர் முடிக்கலாம். .Kanmani wrote on 8th May

kanmani tamil <kanmani...@gmail.com>

14 May (1 day ago)
to vannan
சங்கப் பாடல் பற்றிய ஹெர்மன் டீக்கன் கருத்து என்ன?
இந்த இழையிலுள்ள என் மடல்களைத் தொகுப்பதற்கு முன் தெரிந்து கொள்ள விழைகிறேன் .
கண்மணி ///
அருள் கூர்ந்து ஹெர்மன் டீக்கன் கருத்தைக் கூறுக.(நேரமில்லையா?)
கண்மணி 

2018-05-14 11:32 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:
சங்கப் பாடல் பற்றிய ஹெர்மன் டீக்கன் கருத்து என்ன?
இந்த இழையிலுள்ள என் மடல்களைத் தொகுப்பதற்கு முன் தெரிந்து கொள்ள விழைகிறேன் .
கண்மணி 

2018-05-11 14:55 GMT+05:30 vannan vannan <vanna...@gmail.com>:
1953ல்  அண்ணா மலைப்  பல்கலைக் கழகத்தில் தமிழ் பேரவையில் தமிழில் பட்ட மேற்படிப்பு படித்த மாணவர்   
திரு,க.இரா.அக்கப்பன் கூறியது-ஔவையார் அதியமானைக் காதலித்ததாலதான் உயிரினும் மேலான நெல்லிக்கனியைக் கொடுத்தார்.கூட்டத் தலைவர் அதிர்ச்சியில் தலையில் அடித்துக் கொண்டதைக் கண்டேன்.
கி வ வண்ணன் 
Reply all
Reply to author
Forward
0 new messages