மாதொரு பாவம்!(விமர்சனக் கட்டுரை)
--------------------------
நண்பர்களே!....
மாதொருபாகன் என்கிற நாவலைப் படித்தேன்!
அதுபற்றிய ஒரு சர்ச்சை கிளம்பாமல் இருந்திருந்தால் அதைப் படித்திருக்க வாய்ப்பு இல்லை!
இவ்வளவு பெரிய பிரச்சினையாக ஆன அதில் என்னதான் சொல்லப்பட்டிருக்கிறது என்று அறிய விரும்பிப் படித்துப் பார்த்தேன்.
ஒரு எழுத்தாளன் தான் படைக்கும் பாத்திரங்கள் ஏதாவது ஒன்றில் ஒளிந்திருப்பான்.
இதிலும் இந்த நாவலை எழுதிய எழுத்தாளர் பெருமாள்முருகன் இரண்டு பாத்திரங்களில் ஒளிந்திருக்கிறார்.
அதுதான் பொன்னா என்கிற கதாநாயகி மற்றும் பாவப்பட்ட பெண்களை வேட்டையாட நினைக்கும் ஒழுக்கங்கெட்ட ஜென்மங்கள்...
எப்போதும் ஒரு படைப்பாளி தான் படைத்த பாத்திரங்களில் ஒன்றில் மறைந்திருந்து தான் உலகுக்கு சொல்ல நினைப்பதைச் சொல்வார்!
அதுபோல இவரும் இந்தப் பொன்னாள் மூலமும் முகமறியாத பெண்களைத் தங்கள் இச்சைக்குப் பயன்படுத்திக்கொள்ளத் துடிக்கும் நடத்தை கெட்ட மனிதர்கள்மூலமும் தனது உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறார்!
அவர்களின் பாத்திரத்தை நியாயப்படுத்துவதில் இருந்து இதை நம்மால் உணர முடிகிறது!
ஒரு எழுத்தாளன் ஒரு பாத்திரத்தைச் சிறப்பிக்கிறான் என்றால் அதற்கான நியாயமான காரணங்கள் இருக்கவேண்டும்!
இந்த எழுத்தாளர் பொன்னாள் மற்றும் நடத்தை கெட்டவர்களை நியாயப் படுத்த என்ன காரணங்களை முன்வைக்கிறார்?
அவர்கள்மூலம் தான் வாழும் சமூகத்துக்கு என்ன சொல்ல நினைக்கிறார்?
பிள்ளைப்பேறு இல்லாத பெண்கள் தவறான நடத்தையைப் பின்பற்ற வேண்டும் என்கிறாரா?
அல்லது காலங்கடந்து பிள்ளைப்பேறு பெற்ற தாய்மார்கள் இப்படிப்பட்டவர்கள்தான் என்று அழுத்தம் திருத்தமாக மறைமுகமாக விளக்குகிறாரா?
அல்லது ஒவ்வொரு ஆண்மகனும் தனது பிள்ளைகளை உண்மையாகவே அப்படித்தானா என்று சந்தேகம்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறாரா?
அல்லது ஆண் பெண் உறவில் கட்டுப்பாடும் ஒழுக்கமும் தேவையற்றவை என்று சொலி அவற்றை ஒழித்துவிட்டு முறையற்ற உறவுகளை சமூக ஒழுக்கமாக மாற்ற விரும்புகிறாரா?
நாவல் என்று சொல்லிவிட்டு குறிப்பிட்ட ஊரின் பெயரையும் ஜாதியின் பெயரையும் மதப் பின்னணியையும் எதற்காகச் சொல்லவேண்டும்?
வரலாற்று ஆவணம் என்றால் அதைத் தகுந்த ஆதாரங்களுடன் ஆய்வுக் கட்டுரைகளாக வெளியிட்டிருக்கவேண்டும்!
கதை என்றால் கதையும் கதா பாத்திரங்களும் கதாசிரியரின் கருத்தோட்டங்களுமாக இருந்திருக்க வேண்டும்!
துவக்கத்தில் நல்லவளாகச் சித்தரிக்கப்பட்ட கதாநாயகி பொன்னா கடைசியில் கட்டிய கணவனை மற்றவர்களுடன் சேர்ந்து ஏமாற்றிவிட்டு மாற்றானுடன் கள்ள உறவு கொண்டவளாகக் கதையை முடிக்கிறார்!
பொன்னாளுடைய குழந்தையில்லாக் குறையைச் சொல்லும்போது இந்தச் சமூகத்தில் வாழும் ஒவ்வொருவரும் அவளின் குறையைச் சொல்லி அவமானப்படுத்துவதையே பிழைப்பாகக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்!
அது அப்பட்டமான சமூக நிந்தனை!
அவ்வளவையும் சொல்லி அவளின் அல்லது அவளைப்போன்றவர்களின் கள்ள உறவை நியாயப் படுத்த நினைத்து அதற்குச் சாமிகளையும் துணைக்கு வைத்துக்கொண்ட அவர் கடைசியில் பொன்னா தவறு செய்ததை நினைத்துக் கணவன் காளி மகிழ்ச்சி அடைவதாகச் சொல்லாமல் ஏன் அவளைக் கண்டபடி திட்ட வைத்தார்?
ஆகக் கணவனையும் மீறிப் பிள்ளை இல்லாத பெண்கள் தவறு செய்தார்கள், செய்யலாம் என்றும் அது சாமிக்குச் சம்மதம் என்றும் சொல்கிறாரா?
ஒரு இடத்தில் விலைமாதுக்கள்கூட இன்று அனைத்துப் பெண்களுமே விலைமாது(தேவடியாள்)க்கள்தான் என்று சொல்வதாக நாவலில் இருக்கிறது.
ஆதாவது குழந்தைப் பாக்கியம் இல்லாத சமூகத்தால் அவமானத்துக்கு உள்ளாக்கப்படுகின்ற பாவப்பட்ட பெண்களின்மேல் அனுதாபம் காட்டப் போகிறேன் என்று புறப்பட்டு கடைசியில் அனைத்துப் பெண்களையும் தேவடியாள் என்று நிந்திக்கும் நிலைக்குப் போயிருக்கிறார்!
கண்ணியமான மனிதர் வாய்விட்டுச் சொல்ல அருவருக்கும் கொச்சையான ஆபாசமான வார்த்தைகளை எழுத்தில் கொண்டு வருவதை யதார்த்தமாக நினைத்தார் போலும்?
அப்படியானால் குடிகாரர்களின் பிரச்சினையை எழுதும்போது அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் அனைத்தையும் அப்படியே எழுத்தில் கொண்டு வருவாரா?
தொண்டுப் பட்டி தொண்டுப்பட்டி என்று நூறுதடவை குடியானவனின் பட்டியைக் குறிப்பிடுகிறார்.
அப்படியொரு வார்த்தையைத் தவறான பொருளில்தான் முற்காலத்திலும் கேட்டிருக்க முடியும்.
தொண்டு என்கிற வார்த்தைக்கு ஒழுக்கங் கேட்டவள் என்ற ஒரு பொருளும் உண்டு.
இவர் பயன்படுத்திய வார்த்தை அதைத்தான் பொருள் படுத்துகிறது!
கடைசியாக ஒன்றைச் சொல்ல வேண்டும்!
அதாவது குழந்தையில்லாப் பிரச்சினை உலகம் முழுக்க இருக்கும்போது எதற்காகத் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு கோவில் திருவிழா நிகழ்வுடன் இணைத்து அந்த ஊரைப் பற்றிய தாழ்வான எண்ணம் உருவாக்க வேண்டும்?
இந்தப் புத்தகத்தில் சொல்லும்படியான ஒன்று அந்தக் காலத்தில் நடந்திருக்க வாய்ப்பு இருந்திருக்க முடியாது!
அப்படி இருந்திருந்தால் இவர் சொல்படி அங்கு வரும் பாவப்பட்ட பெண்கள் சிலராகவும் அவர்களின் குறையைத் தீர்க்கும் சாமிகளாக எண்ணற்றவர்களும் குவிந்திருக்கவேண்டும்.
காரணம் அந்தப் பெண்களின் எண்ணிக்கை வரம்புக்கு உட்பட்டது. ஆனால் அந்த ஒழுக்கங்கெட்ட ஆண்களின் எண்ணிக்கை வரம்புக்கு உட்பட்டது அல்ல!
அப்படிப்பட்ட நிலையில் இந்த நூலில் சொன்னபடி உண்மையாக நடந்திருந்தால் அது எப்பேர்ப்பட்ட வன்முறைகளுக்கும் கலகங்களுக்கெல்லாம் காரணமாக இருந்திருக்கும்!
அப்படிப்பட்ட வரலாறு அங்கு உள்ளதா?
கிராமிய விவசாயம் சார்ந்த வாழ்க்கையும் அதன் உட்கூறுகளும் ரசனையுடன் சொல்லப்பட்டிருகின்றன என்பதைத் தவிர இந்த நூலில் பாராட்டும்படியான முற்போக்கு அம்சங்கள் எதுவும் இல்லை!
எழுத்துச் சுதந்திரமும் கருத்துச் சுதந்திரமும் உயர்ந்தவை!
அதை இப்படிக் கீழ்த்தரமாகப் பயன்படுத்துவதால் எழுத்துக்கும் எழுத்தாளனுக்கும் இலக்கியத்துக்கும் சிறுமையே தவிரப் பெருமை இல்லை!....



சரியானபடி விமரிசனம் செய்திருக்கிறார். வாழ்த்துகள். எழுத்துச் சுதந்திரமும் கருத்துச் சுதந்திரமும் உயர்ந்தவை!
அதை இப்படிக் கீழ்த்தரமாகப் பயன்படுத்துவதால் எழுத்துக்கும் எழுத்தாளனுக்கும் இலக்கியத்துக்கும் சிறுமையே தவிரப் பெருமை இல்லை!....
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
சமீப காலத்தில் பெரும் பரபரப்பைத் தமிழகத்தில் ஏற்படுத்தியிருப்பவர் யார் என்று கேட்டால் அது எழுத்தாளர் ’பெருமாள்முருகன்’தான் என்று அதிகம் யோசிக்காமலேயே விடை சொல்லிவிடலாம். அந்த அளவிற்கு மக்களின் திடீர்க் கவன ஈர்ப்பையும் கூடவே பலத்த எதிர்ப்பையும் சம்பாதித்துத் தந்திருக்கின்றது சில ஆண்டுகளுக்கு முன்பு (2010ஆம் ஆண்டு) அவர் எழுதிய ’மாதொருபாகன்’ எனும் சமூக நாவல்; காலம் கடந்து அந்நாவல் இப்போது அவரை மிகுந்த சர்ச்சைக்கு உள்ளாக்கியிருக்கின்றது.
திருச்செங்கோட்டையும் அதை ஒட்டிய சிறிய கிராமங்களையும் கதைக்களமாக்கிருக்கும் நாவலாசிரியர், திருச்செங்கோட்டில் (அன்று) ஆண்டுதோறும் நடைபெற்ற ஒரு திருவிழாக் குறித்துத் தன் நாவலில் விரிவாக விளக்கியிருக்கிறார். அதில் அவர் குறிப்பிட்டிருக்கும் நிகழ்வுகள் ’கடும் கண்டனத்துக்குரியவை; பெண்களை இழிவுபடுத்துபவை’ என்று கடுங்கோபத்துக்கும் சீற்றத்துக்கும் ஆளாகியிருக்கும் அவ்வூர் மக்கள் அவரை உலுக்கிய உலுக்கலில், ”பெருமாள்முருகன் எனும் எழுத்தாளர் இறந்துவிட்டார்; இனி அவர் ஏதும் எழுதமாட்டார்; இதுவரை எழுதியவற்றையும் திரும்பப் பெறுகின்றார்” என்று அவரே கைப்பட எழுதிக்கொடுத்துவிட்டு, தன் செயலுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பும் கேட்டுவிட்டு எழுத்துத்துறையைவிட்டே வெளியேறியிருக்கிறார்.
இப்போது, அவரை ஆதரித்தும் எதிர்த்தும் பல்வேறு ஊர்வலங்களும் கண்டனப் பொதுக்கூட்டங்களும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் தொடர்ந்து நடைபெற்றுவருவதைச் செய்தி ஊடகங்கள் ஊக்கத்துடன் தினமும் வெளியிட்டு வருவதைக் காண்கின்றோம்.
இத்தகைய பரபரப்புக்களால் (வாசகர்களாகிய) நமக்குக் கிட்டிய ஒரே லாபம் என்னவெனில்…அவருடைய ‘மாதொருபாகன்’ நாவலை முழுமையாகக் படிக்கக்கூடிய வாய்ப்பினைப் பெற்றதுதான்!. இந்நாவலை PDF கோப்பாக அனுப்பிப் படிக்க உதவிய திரு. ஸ்ரீநிவாசன் அவர்களுக்கு என் உளப்பூர்வமான நன்றி!
நாவலைப் படிக்கக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி 192 பக்கங்கள் கொண்ட இந்நாவலை இப்போதுதான் படித்துமுடித்தேன். படித்தவுடனேயே, ’மாதொருபாகன்’ என் அவதானிப்பில் எவ்வாறு காட்சியளிக்கின்றான் என்பதை நம் குழும நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும் ஆவல் ஏற்பட்டது. அதனால் மாதொருபாகனை என் பார்வையில் முன்வைத்திருக்கின்றேன்.
இயல்பான கொங்கு நடையில் தடையற்ற ஓட்டத்துடன் எழுதப்பட்டிருக்கும் இந்நாவல், ஆசிரியர் திரு. பெருமாள்முருகன் தேர்ந்த எழுத்தாற்றலும், அழகாய்க் கதைசொல்லும் திறனும் வாய்க்கப்பெற்றவர் என்பதைத் தெளிவாய் நமக்குப் புலப்படுத்திவிடுகின்றது.
சற்றேறக்குறைய
ஒரு நூற்றாண்டுக்கு முன்பு திருச்செங்கோட்டை ஒட்டிய கிராமப்புறங்களில் வாழ்ந்த மக்களின்
வாழ்க்கையே இந்நாவலின் பேசுபொருள். அம்மக்களின் வாழ்க்கைமுறை, பொழுதுபோக்குகள், வட்டார
வழக்கு, இயல்பாகப் புழங்கும் சொலவடைகள் முதலியவற்றை இந்நாவல் நமக்கு விரிவாய் அறியத்
தருகின்றது. தோப்பு, துரவுகள், காடு, மேடுகள், ’வறடிகல்’ என்று அழைக்கப்படும் திருச்செங்கோட்டு
மலையுச்சி ஆகியவற்றிலெல்லாம் கதாநாயகன் காளியும், அவன் நண்பனும் நாயகியின் அண்ணனுமான
முத்துவும் செல்லும்போதெல்லாம் நாமும் கூடவே பயணிப்பது போன்ற ஓர் உணர்வை தன் மிகையற்ற
இயல்பான வர்ணனைகளால் ஆசிரியர் ஏற்படுத்தியுள்ளார்!
திருச்செங்கோட்டைச்
சுற்றியிருந்து அருள்பாலிக்கும் பல்வேறு தெய்வங்களை இந்நாவல் நமக்கு அறிமுகப்படுத்துகின்றது.
குறிப்பாகத் திருச்செங்கோட்டுக்குப் பெருமை சேர்க்கும் மாதொருபாகன் (அர்த்தநாரீஸ்வரர்)
கோயில், அச்செங்கோட்டு மலையருகில் இருக்கும் வனத்தில் ’கிடந்த திருக்கோலத்தில்’ அருள்பாலிக்கும்
கானகப் பெண்தெய்வமான ‘பாவாத்தா’ ஆகியோரைக் குறிப்பிடலாம். அதிலும் ’பாவாத்தா’ எனும்
பெயர்கொண்ட அச்சிறுதெய்வத்தின்(demi-goddess) அச்சம் தருகின்ற மீப்பெரு தோற்றமும்,
அத்தெய்வத்தை அப்பகுதி மக்களில் பலர் தங்கள் குலசாமியாகக் கும்பிட்டு நேர்த்திக்கடன்களைச்
செய்துவரும் முறையினையும் நேர்த்தியாக விவரித்துள்ளார் ஆசிரியர்.
இப்படிப் படித்துமகிழ உகந்தவை பல நாவலில் இருந்தாலும் அதையும் தாண்டி வாசகர் மனத்தை உறுத்தும் குறைகளுக்கும் பஞ்சமில்லை. அவற்றை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
திருமணமாகிச் சில ஆண்டுகள் கழிந்தும் மகப்பேறு வாய்க்கப்பெறாத காளி, பொன்னாள் எனும் இணையரின் கதைதான் இது என்பதை நாவலின் தொடக்கத்திலேயே புதிர்கள் ஏதுமின்றி நாம் அறிந்துகொண்டு விடுகின்றோம். அவர்களிருவரும் பிள்ளை இல்லாமையால் எவ்வகையிலெல்லாம் இச்சமுதாயத்தினரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகின்றனர் என்பதை ஆசிரியர் உணர்வுபூர்வமாக விளக்க எடுத்துக்கொண்ட முயற்சியே இந்நாவலின் நீட்சியாய்த் தொடர்கிறது. ஆசிரியரின் இவ்வகை முயற்சி சரிதான் என்றாலும், யாரெல்லாம் அவர்களிருவரையும் அவமானப்படுத்துகிறார்கள் என்பதையும், அதனால் எப்படியெல்லாம் அவர்கள் மன உளைச்சலுக்கும், வேதனைக்கும் உள்ளாகின்றார்கள் என்பதையும் நாவல் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே வருவது படிப்போர்க்கு ஒருவித சலிப்பைத் தருகின்றது.
மக்களின் இயல்பான உரைநடையைப் பதிவு செய்கிறேன் பேர்வழி என்று படிப்பதற்கே கூசுகின்ற பல சொலவடைகளையும் (அம்மக்கள் மொழியில் அதன் பெயர் சொலவாந்திரம்) உரையாடல்களையும் நாவலின் பல இடங்களில் ஆசிரியர் பயன்படுத்தியிருப்பது நாவலின் சுவையை வெகுவாய்க் குறைக்கிறது. அதிலும் பாலியல் சார்ந்த விஷயங்களை அம்மக்கள் பட்டவர்த்தனமாகவும், கொச்சையாகவும் பேசுவதையும், விமரிசிப்பதையும் சிறிதும் இரசிக்கவே முடியவில்லை.
பிள்ளையில்லாத்
தம்பதியின் துயர வாழ்வைச் சித்தரிப்பதே நாவலின் மையக்கருத்தாக இருப்பினும் கதையை வேறு
திசைகளில் சற்றும் பயணிக்கவிடாது ஒரே பாதையில் பயணிக்கவிட்டிருப்பது கதையின் விறுவிறுப்பைப்
பெரிதும் மட்டுப்படுத்தி விடுகின்றது. ’நல்லுப்பையன் சித்தப்பா’ பாத்திரம் மட்டும்
இல்லையென்றால் கதையில் இன்னும் வறட்சி தென்பட்டிருக்கும். ஆயினும், அவரின் பேச்சுக்களிலும்
அளவுக்கு மீறிய ஆபாசம்!
கதாநாயகன்
காளியும் அவன் தோழன் முத்துவும் எப்போதும் சாராயம், கள் என்று மாற்றி மாற்றிக் குடிப்பதும்,
விதவிதமாக மாமிசம் உண்பதுமே தங்கள் வாழ்வின் நோக்கம் என்பதுபோல் இருப்பது அன்றைய ஆடவரின்
மீதிருக்கும் மரியாதையைப் பெரிதும் குறைப்பதோடு, ஒழுக்கக்கேடாய் வாழ்வதே சமுதாயத்தால்
அங்கீகரிக்கப்பட்ட/பின்பற்றப்பட்ட அன்றைய ஆண்களின் இயல்போ என ஐயுற வைக்கிறது.
அடுத்து,
திருச்செங்கோட்டு மக்கள் அனைவரையும் ஆவேசமாக்கிய நாவலின் முக்கியப் பகுதிக்கு வருகிறேன்.
நாவலின் மையப்புள்ளி இதுவே! இந்நிகழ்வை நோக்கியே கதை கவனமாக நகர்த்தப்பட்டிருக்கின்றது. அது
என்ன?
திருச்செங்கோட்டு மாதொருபாகன் கோயிலில் ஒவ்வோராண்டும் 14 நாட்கள் தொடர்ச்சியாய் நடைபெறும் ’தேர்நோம்பி’ எனும் திருவிழாவே அது! அதில் அப்படியென்ன ஆட்சேபத்திற்குரிய விஷயம் நிகழ்கிறது என்று பார்த்தால்…விழாவின் 14-ஆம் நாளிரவில் திருச்செங்கோட்டுக்குத் திருவிழா பார்க்கவரும் ஆண்களும் பெண்களும் யார் வேண்டுமானாலும் யாருடன் வேண்டுமானாலும் (முறையற்ற) பாலுறவு கொள்ளலாம் என்பதாக நாவலில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. அத்தோடு விடவில்லை ஆசிரியர்…பிள்ளைப்பேறில்லாப் பெண்கள் பலர் அன்று இம்முறையைப் பின்பற்றி குழந்தை பெற்றிருக்கின்றார்கள்; அப்பிள்ளைகளை யாரும் தவறாகப் பார்க்கவில்லை; மாறாக அப்பிள்ளைகள் ‘சாமிப் பிள்ள’ என்ற அடைமொழியோடு அழைக்கப்பட்டிருக்கின்றனர் என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.
இந்நாவலிலும்
தன் கணவனால் பிள்ளைப்பேறு வாய்க்கப்பெறாத நாயகி ‘பொன்னாளும்’ கடைசியில் ‘வறடி
(barren woman) என்று தான் அழைக்கப்படும் அவலத்தைத் துடைக்க வேறுவழியின்றி இதே வழியைப்
பின்பற்ற விழைகின்றாள்; தன் மனைவியின்மீது அளவற்ற அன்பு கொண்டு ஈருடல் ஓருயிராக…அதாவது
‘மாதொருபாகனாக’ வாழ்ந்துவரும் நாயகன் காளிக்கு இது பெரும் அதிர்ச்சியைத் தருவதாய் நாவலை
முடித்துள்ளார் ஆசிரியர்.
இங்கே நாம் ஒன்றை கவனிக்க வேண்டும். இத்தகைய சம்பவங்கள் நிகழ்காலத்தில் (திருச்செங்கோட்டில்) நடப்பவையாக ஆசிரியர் தன் நாவலில் பதிவுசெய்யவில்லை! குறைந்தபட்சம் 100 ஆண்டுகளைத் தாண்டியதாய் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நிகழ்ந்தவையாகவே இச்சம்பவங்கள் காட்டப்பட்டுள்ளன. எனவே அவை உண்மையா இல்லையா என்பதை அறிய முற்படாமல் உணர்ச்சிவசப்பட்டுப் போராட்டங்கள் நடத்துவது அறிவுடைமை ஆகாது. ’மெய்ப்பொருள் காண்பதே அறிவல்லவா?’
நன்கு
படித்த பொறுப்புள்ள ஒரு பேராசிரியர், கொங்குச் சொற்களின் பேரகராதி, சிறுகதை, நாவல்கள்
ஆகியவற்றின் வாயிலாய்ப் பரவலாக மக்களிடம் கவனம்பெற்ற ஒரு மனிதர், இவ்வளவு சென்சிடிவான
ஒரு விஷயத்தைத் தன் நாவலின் மையப்புள்ளியாய், கிளைமாக்ஸாய் வைத்திருக்கிறார் என்றால்
அது ஏதோ கற்பனையானது என்றோ, வேண்டுமென்றே தன் சொந்தஊர் மக்களை இழிவுபடுத்தவேண்டும்
என்ற நோக்கத்தில் செய்த செயலென்றோ ஒரேயடியாய்ப் புறந்தள்ளிவிடவும் முடியவில்லை. இவற்றில்
ஒருசிறிதேனும் உண்மையிருக்க வாய்ப்புண்டு என்பதை மறுப்பதற்கில்லை.
என்னவொன்று…எழுதுதற்கு ஆதாரங்களாக அவர் கைக்கொண்ட நூல்களையோ, தரவுகளையோ, பிற சான்றுகளையோ இந்த நாவலில் அவர் தந்திருக்கலாம்; அல்லது வேறுசில எழுத்தாளர்கள் சொல்வதுபோல் வெளிப்படையாக ஊர்ப் பெயரினையும் திருவிழாப் பெயரினையும் நாவலில் குறிப்பிட்டிருப்பதைத் தவிர்த்திருக்கலாம். இரண்டையுமே செய்யத்தவறியிருக்கிறார்.
மொத்தத்தில், இந்த நாவலை இன்னும் செம்மையாகவும் சிறப்பாகவும் நாகரிகச் சொல்லாடல்களோடும், முக்கியச் சம்பவங்களைத் தகுந்த ஆதாரங்களோடும் ஆசிரியர் கொடுத்திருந்தால் இந்நாவல் சிறப்பாகவும், தரமாகவும் இருந்திருக்கும். அதைச் செய்யத் தவறியது பெருங்குறையே!
இனி, ’மாதொருபாகன்’ குறித்துப் பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் ஒரு நேர்காணலில் தந்துள்ள பதிலை இங்கே பகிர்ந்துள்ளேன்.
''எழுத்தாளர் பெருமாள்முருகனின் 'மாதொருபாகன்’ நாவல், இந்து மதத்தையும் திருச்செங்கோடு என்கிற ஊரையும் இழிவுபடுத்துவதாக நடைபெற்ற போராட்டங்கள், புத்தக எரிப்பு... போன்றவற்றைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?''
''குடும்பம் என்ற அமைப்பு உருவாவதற்கு முன்பு, இங்கே கற்பு இல்லை. இன்னமும்கூடப் பல பழங்குடிச் சமூகங்களில் குடும்பத்துக்கு வெளியேயான பாலுறவும், திருமணத்துக்கு முன்பான பாலுறவும் சகஜம். ஏன்... சங்க காலத்திலேயே களவு முறை இருந்ததே. கற்பு... கற்பு என மீண்டும் மீண்டும் வலியுறுத்தப் பட்டதற்குக் காரணமே, களவு முறை அதிகமாக இருந்ததால்தானே?
எழுத்தாளர்களுக்கு முழுமையான சுதந்திரம் வேண்டும். அவர்கள் சிந்திப்பதைத் தடை செய்யக் கூடாது. ஒரு நாவலில் குறிப்பிடப்படும் பகுதிகளையும் கதையையும், அப்படியே எடுத்துக்கொள்ளக் கூடாது. ஒருவேளை ஒரு படைப்பு தங்களை இழிவுபடுத்துவதாகச் சிலர் நினைத்தால், அதற்கு எதிராகப் பேசலாம்; அந்தப் படைப்புக்கு எதிராக, இன்னொரு படைப்பை உருவாக்கலாம். ஒரு படைப்பை இன்னொரு படைப்பு மூலம்தான் எதிர்க்க முடியுமே தவிர, புத்தகங்களை எரிப்பதன் மூலம் அல்ல. இப்போது பெருமாள்முருகன் இனி வரும் பிரதிகளில் 'திருச்செங்கோடு’ எனும் பெயரை எடுத்துவிடப் போவதாக அறிவித்துள்ளார். பொது அமைதி கருதி அவர் எடுத்திருக்கும் இந்த முடிவு வரவேற்கத்தக்கது. சில ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் மீண்டும் அதே படைப்பில் திருத்தங்களைச் செய்யலாம். எல்லாமே எழுத்தாளரின் படைப்புச் சுதந்திரத்துக்கு உட்பட்டவை. புத்தகங்களை எரித்துவிடலாம். ஆனால், உண்மையை எரிக்க முடியாது.''
தகவலுக்கு நன்றி: ஆனந்த விகடன்
எழுத்தாளர் சுஜாதா "குமுதம்" இதழில் எழுதிய தொடர்கதைக்கு நாடார் சமுதாய மக்கள் தெரிவித்த பலத்த எதிர்ப்புக்குப் பின் அவர் வருத்தம் தெரிவித்து, கதை உரைநடையில் சில மாற்றங்களைப் புகுத்தினார். அந்தக் கதை ஆங்கிலேயர்கள் சென்னையில் காலூன்றித் தங்கள் ஆதிக்கத்தைத் தொடங்கிய காலத்தையொட்டிய வரலாற்று நவீனம். அவர் பிராமணர் என்பதால் அப்படி எழுதினார் எனக் கருதினால் அது தவறு. ஒரு கதாசிரியன் அந்தக் கதை நடந்த காலத்தில் யாரை எப்படி அழைத்தார்களோ அப்படி வசனம் எழுதியது தவறு என்றால், மகாபாரதம் இராமாயணம் முதலியவற்றை இன்று மீண்டும் எழுதும் ஆசிரியர்கள் நவீனகால சொல்நடையால் எழுதலாமா?
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--VGopalan
On Jan 25, 2015 10:35 AM, "Megala Ramamourty" <megala.r...@gmail.com> wrote:
>
புத்தகங்களை எரித்துவிடலாம். ஆனால், உண்மையை எரிக்க முடியாது.''
>
அருமையான விமர்சனம் மேகலா!
கிராமப்புரத்து ஆளான எனது இரண்டு துட்டுக் கருத்து.
தமிழ் மொழி தன்னைப் பல்வேறு பரிமாணங்களில் தக்க வைத்துக் கொள்கிறது. அதில், கொச்சைத்தமிழ், கொடுந்தமிழ் என்பதுமொன்று. இதே கதையை வாய்மொழியாகச் சொல்யிருந்தால் இத்தகைய பிரச்சனை வந்திருக்காது. ஏனெனில் கிராமத்தான் பேச்சில் (பெண்ணையும் சேர்த்து) செக்ஸ் என்பது இயல்பான ஒன்று. வசவானாலும், வாழ்த்தானாலும்! ;-)
ஆனால், கொடுந்தமிழ் தாண்டி செம்மொழிக்கு வரும் போது பல விஷயங்கள் வடிகட்டப்படுகின்றன. நாகரீகம் கருதி.
ஆனால் பின் நவீனத்துவ எழுத்து இதைக்கேள்வி கேட்கிறது. உதாரணமாக, தலித் இலக்கியம் பொது நீரோட்டத்திற்கு வந்தால் பலரால் சகிக்கமுடியுமா? என்பதே அக்கேள்வி. ஏனெனில் அவர்கள் பேச்சில் வரும் கொச்சை அவர்களுக்கு இயல்பாக இருக்கலாம், நமக்கு உவப்பாக இருக்குமா? என்பது கேள்வி. நாம் நினைப்பதையும் விட தமிழ்ச் சமூகம் சீரற்ற இழிவு நிலையில் உள்ளது. தமிழ்ச் சமூகம் செந்தரத்தில் இல்லை. இந்திய சாதி அமைப்பு என்பது தனிமனிதனை காப்பிட்டுக்காக்கிறது. சாதி விட்டு சாதி வழக்கு வேறுபடுகிறது. வட்டாரம் விட்டு வட்டாரம் வழக்குகள் வேறுபடுகின்றன, பழங்குடிகளின் வழக்கம் நகர் மைய வாழ்விலிருந்து வேறுபடுகிறது. நகர்ப்புற வாழ்வு கிராம வாழ்விலிருந்து வேறுபடுகிறது. எனவே ஒருவர் நாகரீகம் அடுத்தவருக்கு அப்படித்தோன்றாமல் இருக்கலாம். பின் நவீனத்துவம் நமது பாசாங்குகளைக் கேள்விக்குள்ளாக்குகிறது. உண்மையை எதிர்கொள்ளச் சொல்கிறது.
எழுத்து என்பது எப்போதும் நம்மை சுகானுபவத்தில் வைத்திருக்கும் என்று சொல்வதற்கில்லை. மகாபாரதமே சாட்சி!
நா.கண்ணன்
போராட்டக்காரர்களுக்கு:
திருச்செங்கோட்டு கோவில் விழாவில் நடப்பதான நிகழ்ச்சியில் திருச்செங்கோட்டு மக்கள் மட்டும்தான் வருவார்கள் என்றோ, கவுண்டர் சாதி மட்டுமே வரும் என்றோ, கோவில் நிர்வாகமே துணை நிற்கிரது என்றோ கதையில் இல்லை. கதையின் நாயகன், நாயகியருக்கு கூட பிள்ள இல்லாத பெண்டிர் பிள்ளைபெறும் வழி அது என் அறிந்திருக்கவும் இல்லை. விழாக்காலங்களில் சிலர் இசகு பிசாக இருப்பது உலக இயல்புதான். கூத்தாணடவர் திருவிழாவில் எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு நடத்துவது ஏன்?
நாயகியின் அம்மாவும் மாமியாரும்தான் இந்த விழா தருணத்தை பயன்படுத்தலாம் என பரிந்துரை செய்கிறார்கள்.மேலோட்டமாக வாசித்து விட்டு ரகளை செய்கிறீர்கள்.
முற்போக்கு என்ற பெயரில் சாக்கடையை கங்கையாக்கும் முயற்சிகளை முறியடிக்க வேண்டும்.
த்சோ ...த்சோ ... செல்வன் என்ன இது?yes sir, certainly it tells a lot about Subash Krishnasamyஎன்பதுதான் சரியான மறுமொழியாக இருக்க வேண்டும்...;-))
2015-01-24 22:45 GMT-06:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:போராட்டக்காரர்களுக்கு:
திருச்செங்கோட்டு கோவில் விழாவில் நடப்பதான நிகழ்ச்சியில் திருச்செங்கோட்டு மக்கள் மட்டும்தான் வருவார்கள் என்றோ, கவுண்டர் சாதி மட்டுமே வரும் என்றோ, கோவில் நிர்வாகமே துணை நிற்கிரது என்றோ கதையில் இல்லை. கதையின் நாயகன், நாயகியருக்கு கூட பிள்ள இல்லாத பெண்டிர் பிள்ளைபெறும் வழி அது என் அறிந்திருக்கவும் இல்லை. விழாக்காலங்களில் சிலர் இசகு பிசாக இருப்பது உலக இயல்புதான். கூத்தாணடவர் திருவிழாவில் எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு நடத்துவது ஏன்?
நாயகியின் அம்மாவும் மாமியாரும்தான் இந்த விழா தருணத்தை பயன்படுத்தலாம் என பரிந்துரை செய்கிறார்கள்.மேலோட்டமாக வாசித்து விட்டு ரகளை செய்கிறீர்கள்.முழுநூலும் படித்துவிட்டுத்தான் போராடினார்கள்.
"சிலர்" இசகு, பிசகாக இருப்பது மாதிரி எல்லாம் கதையில் இல்லை. "இன்னிக்கு எல்லா பெண்ணும் தே**** தான்" என்பது கதையில் பயன்பட்டுள்ள வார்த்தை
திருச்செங்கோட்டு கோவில் விழாவில் நடப்பதான நிகழ்ச்சியில் திருச்செங்கோட்டு மக்கள் மட்டும்தான் வருவார்கள் என்றோ, கவுண்டர் சாதி மட்டுமே வரும் என்றோ, கோவில் நிர்வாகமே துணை நிற்கிரது என்றோ கதையில் இல்லை
-இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ அப்போ கவிதையை ???
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
On Jan 25, 2015 10:38 PM, "Gopalan Venkataraman" <priv...@gmail.com> wrote:
>
> அப்போது சுஜாதாவை ஆதரித்து இப்படியொரு இயக்கம் நடைபெறவில்லை.
சுஜாதாவிற்கு ஈதெல்லாம் ஜுஜுபி. ஆனால் பாவம் பெருமாள் முருகன் பயந்துவிட்டார். அதனால்தான் இந்த ஆதங்கம். வலதுசாரிகளின் ஒடுக்கும் குரலுக்கு, குறிப்பாக ஜாதீயக்குரலுடன் எழும் இப்பிரச்சனையை எதிர்த்து எல்லோரும் குரல் கொடுக்க வேண்டும்.
நா.கண்ணன்
25 ஜனவரி, 2015 ’அன்று’ 7:04 முற்பகல் அன்று, துரை.ந.உ <vce.pr...@gmail.com> எழுதியது:அப்போ கவிதையை ???
காதலியைப் போல்
”Is there any documentary evidence to support the existence of consensual sex, written about in the book?
There is no historical evidence. Details about the custom were passed on orally. Writer Theodore Baskaran and Professor A.K. Perumal have also written about similar customs that prevailed in other parts of the State. For example, [there is] the Thuppatti festival in which men and women participate while covering their faces.”
மக்களின் இயல்பான உரைநடையைப் பதிவு செய்கிறேன் பேர்வழி என்று படிப்பதற்கே கூசுகின்ற பல சொலவடைகளையும் (அம்மக்கள் மொழியில் அதன் பெயர் சொலவாந்திரம்) உரையாடல்களையும் நாவலின் பல இடங்களில் ஆசிரியர் பயன்படுத்தியிருப்பது நாவலின் சுவையை வெகுவாய்க் குறைக்கிறது. அதிலும் பாலியல் சார்ந்த விஷயங்களை அம்மக்கள் பட்டவர்த்தனமாகவும், கொச்சையாகவும் பேசுவதையும், விமரிசிப்பதையும் சிறிதும் இரசிக்கவே முடியவில்லை.
அடுத்து, திருச்செங்கோட்டு மக்கள் அனைவரையும் ஆவேசமாக்கிய நாவலின் முக்கியப் பகுதிக்கு வருகிறேன். நாவலின் மையப்புள்ளி இதுவே! இந்நிகழ்வை நோக்கியே கதை கவனமாக நகர்த்தப்பட்டிருக்கின்றது. அது என்ன?
திருச்செங்கோட்டு மாதொருபாகன் கோயிலில் ஒவ்வோராண்டும் 14 நாட்கள் தொடர்ச்சியாய் நடைபெறும் ’தேர்நோம்பி’ எனும் திருவிழாவே அது! அதில் அப்படியென்ன ஆட்சேபத்திற்குரிய விஷயம் நிகழ்கிறது என்று பார்த்தால்…விழாவின் 14-ஆம் நாளிரவில் திருச்செங்கோட்டுக்குத் திருவிழா பார்க்கவரும் ஆண்களும் பெண்களும் யார் வேண்டுமானாலும் யாருடன் வேண்டுமானாலும் (முறையற்ற) பாலுறவு கொள்ளலாம் என்பதாக நாவலில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. அத்தோடு விடவில்லை ஆசிரியர்…பிள்ளைப்பேறில்லாப் பெண்கள் பலர் அன்று இம்முறையைப் பின்பற்றி குழந்தை பெற்றிருக்கின்றார்கள்; அப்பிள்ளைகளை யாரும் தவறாகப் பார்க்கவில்லை; மாறாக அப்பிள்ளைகள் ‘சாமிப் பிள்ள’ என்ற அடைமொழியோடு அழைக்கப்பட்டிருக்கின்றனர் என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.
இந்நாவலிலும் தன் கணவனால் பிள்ளைப்பேறு வாய்க்கப்பெறாத நாயகி ‘பொன்னாளும்’ கடைசியில் ‘வறடி (barren woman) என்று தான் அழைக்கப்படும் அவலத்தைத் துடைக்க வேறுவழியின்றி இதே வழியைப் பின்பற்ற விழைகின்றாள்; தன் மனைவியின்மீது அளவற்ற அன்பு கொண்டு ஈருடல் ஓருயிராக…அதாவது ‘மாதொருபாகனாக’ வாழ்ந்துவரும் நாயகன் காளிக்கு இது பெரும் அதிர்ச்சியைத் தருவதாய் நாவலை முடித்துள்ளார் ஆசிரியர்.
இங்கே நாம் ஒன்றை கவனிக்க வேண்டும். இத்தகைய சம்பவங்கள் நிகழ்காலத்தில் (திருச்செங்கோட்டில்) நடப்பவையாக ஆசிரியர் தன் நாவலில் பதிவுசெய்யவில்லை! குறைந்தபட்சம் 100 ஆண்டுகளைத் தாண்டியதாய் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நிகழ்ந்தவையாகவே இச்சம்பவங்கள் காட்டப்பட்டுள்ளன. எனவே அவை உண்மையா இல்லையா என்பதை அறிய முற்படாமல் உணர்ச்சிவசப்பட்டுப் போராட்டங்கள் நடத்துவது அறிவுடைமை ஆகாது. ’மெய்ப்பொருள் காண்பதே அறிவல்லவா?’
நன்கு படித்த பொறுப்புள்ள ஒரு பேராசிரியர், கொங்குச் சொற்களின் பேரகராதி, சிறுகதை, நாவல்கள் ஆகியவற்றின் வாயிலாய்ப் பரவலாக மக்களிடம் கவனம்பெற்ற ஒரு மனிதர், இவ்வளவு சென்சிடிவான ஒரு விஷயத்தைத் தன் நாவலின் மையப்புள்ளியாய், கிளைமாக்ஸாய் வைத்திருக்கிறார் என்றால் அது ஏதோ கற்பனையானது என்றோ, வேண்டுமென்றே தன் சொந்தஊர் மக்களை இழிவுபடுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் செய்த செயலென்றோ ஒரேயடியாய்ப் புறந்தள்ளிவிடவும் முடியவில்லை. இவற்றில் ஒருசிறிதேனும் உண்மையிருக்க வாய்ப்புண்டு என்பதை மறுப்பதற்கில்லை.
என்னவொன்று…எழுதுதற்கு ஆதாரங்களாக அவர் கைக்கொண்ட நூல்களையோ, தரவுகளையோ, பிற சான்றுகளையோ இந்த நாவலில் அவர் தந்திருக்கலாம்; அல்லது வேறுசில எழுத்தாளர்கள் சொல்வதுபோல் வெளிப்படையாக ஊர்ப் பெயரினையும் திருவிழாப் பெயரினையும் நாவலில் குறிப்பிட்டிருப்பதைத் தவிர்த்திருக்கலாம். இரண்டையுமே செய்யத்தவறியிருக்கிறார்.
”Is there any documentary evidence to support the existence of consensual sex, written about in the book?
There is no historical evidence. Details about the custom were passed on orally. Writer Theodore Baskaran and Professor A.K. Perumal have also written about similar customs that prevailed in other parts of the State. For example, [there is] the Thuppatti festival in which men and women participate while covering their faces.”
நா. கணேசன்
There is no historical evidence. Details about the custom were passed on orally. Writer Theodore Baskaran and Professor A.K. Perumal have also written about similar customs that prevailed in other parts of the State. For example, [there is] the Thuppatti festival in which men and women participate while covering their faces.”
தேவடியாள்கள் அப்படித்தான் பேசுவார்கள்.,பொன்னா அவளுடைய அப்பன் வண்டி ஓட்ட தேர் திருவிழாவுக்கு போகும் போது, இந்த ஒரு சாலையில் மட்டும் இத்தனை மக்கள் என்றால் உலகத்தில் எத்த்னை மக்கள் இருப்பார்கள் என்று வியப்பாள். அத்தனை பேருமா?திருவிழாவில் பல பதினாயிரம் மக்கள் கூடுவார்கள் எல்லாரும் தேவடியாள்தான் எனறு பொருள்தராது.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
2015-01-25 5:57 GMT-06:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:தேவடியாள்கள் அப்படித்தான் பேசுவார்கள்.,பொன்னா அவளுடைய அப்பன் வண்டி ஓட்ட தேர் திருவிழாவுக்கு போகும் போது, இந்த ஒரு சாலையில் மட்டும் இத்தனை மக்கள் என்றால் உலகத்தில் எத்த்னை மக்கள் இருப்பார்கள் என்று வியப்பாள். அத்தனை பேருமா?திருவிழாவில் பல பதினாயிரம் மக்கள் கூடுவார்கள் எல்லாரும் தேவடியாள்தான் எனறு பொருள்தராது.தேவடியாளிடமே தேவடியாபட்டம் வாங்கின அவமானமே திருச்செங்கோட்டுபெண்களுக்கு இந்த நாவலால் கிடைத்துள்ளது.
நாம இங்கே என்ன பேசியும் பயன் கிடையாது. பாதிக்கபட்ட மக்களுக்கு தான் அவர்கள் வலி தெரியும்...அவர்களுக்கு பாதிப்பில்லை என்றால் அதை அவர்கள் தானே சொல்லவேண்டும்? நாம் எப்படி முடிவெடுக்கமுடியும்?
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
நாவல்களை படிக்கச் சோம்பல்படும் நான் " மாதொருபாகன் " நாவலை வெற்றிகரமாக
படித்து முடித்துவிட்டேன். அனைவரும் படிப்பதற்க்கு உதவிய மின்தமிழிற்க்கு என்னுடைய
நன்றி. இக்கதையைப் பற்றிய என்னுடைய கருத்தை பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன்.
கதையில் வரும்
" நல்லுப்பையன் சித்தப்பா" கதாப்பாத்திரம் படிப்பவர் முகத்தில்
லேசாக சிரிப்பு மலர உதவுகிறது.
கதையின் ஓட்டத்தில் எந்த ஒரு இடத்திலும் காளிக்குத்தான் குறை
என்று குறிப்பிடவில்லை. இருவரில் யாரிடம் குறையென்று தெரியவில்லை,
அப்படியிருக்க அவள் எப்படி அந்த
திருவிழா செல்ல துணிந்தால் என்று புரியவில்லை.
எந்த ஒரு பரிகாரம் செய்வதாக இருந்தாலும் ஒன்றாக சேர்ந்தே சென்றவர்கள்,
கடைசியில் பொன்னா அவனைவிடுத்து குழந்தைக்காக
திருவிழா சென்றதும், அன்று அவளிள் மனதில் தோன்றிய
உணர்வுகளும்,எண்ணங்களும் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை.
கதையின் ஆரம்பத்தில் சித்தரிக்கபட்ட பொன்னாவின் கதாப்பாத்திரமும்
கடைசியில் வரும் அவளின் செய்கைகளும் ஒன்றுக்கொன்று முரண்பட்டு உள்ளன.
கதையின் முடிவு மொத்தத்தில் இயல்பானதாக இல்லை.
திருமதி.ஸ்ரீவிபா
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
முற்போக்கு என்பது ஒரு பேஷன்.
பாரின் சினிமா, டிவிடி, நூல் எல்லாம் படிப்பார்கள். அதில் கற்பு என்பது முட்டாள்தனம், கல்யாணம் செய்பவன் பைத்தியகார, லிவிங்டுகெதர் தான் பெஸ்ட் என இருக்கும்.இப்போதைய நியூயார்க்கர் இதழில் தந்தையை கல்யாணம் செய்த மகள் பற்றிய முற்போக்கு கட்டுரை வந்துள்ளது. அதான் இன்று டாக் ஆஃப் தெ டவுன்.
இதை எல்லாம் படிக்கும் நம் ஊர் ஆட்கள் என்ன செய்கிறார்கள்? இதை எல்லாம் தமிழுக்கு கொண்டுவரணும். எப்படிக்கொண்டுவருவது? எழுது ஒரு நாவலை. அதில் இந்த முற்போக்கையெல்லாம் திருசெங்கோடு மாதிரி அப்பாவிகள் தலையில் கட்டிவிட்டு "முந்தி திருசெங்கோடே மன்மதலீலையில் கரைபிரன்டோடியது" என்பது மாதிரி முற்போக்குகதைகளை எழுதிவிடவேண்டியது"உங்க முற்போக்குக்கெல்லாம் நாங்க தான் கிடைத்தோமா" என அந்த ஊர்க்காரர்கள் எகிறினால் உடனே ஜாதிவெறியர், பழமைவாதி என ஒரு பட்டத்தைச்சுட்டி விடவேண்டியது. ஜாதி, மதத்தை எதிர்த்துபோராட ஒரு பெரிய படையே காத்திருக்கிறது. அவர்கள் புத்தகதிருவிழாவுக்கு போன இடத்தில் கூடிப்பேசி, டீகுடித்துவிட்டு அதையே "மதவாதத்துக்கு எதிரான முற்போக்கு எழுத்தாளர்கூட்டம்" என அறிவித்து கலைந்துவிடுவார்கள். அதைப்பேஸ்புக்கில் படமாக பிடித்துபோட்டு மானே, தேனே, பொன்மானே ஸ்டைலில் "சாதி, மதம், பின்னநவீனம், கருத்துரிமை, இந்துத்வா" என நாலைந்து கீவர்ட்ஸை போட்டு கட்டுரை எழுதினால் நீங்களும் புரட்சியாளரே.
The elderly people in their 90s corroborate what the learned historian says. Many of the local citizens point out other inconsistencies in the book. A Gopalakrishnan, one of the local persons with a deep understanding of the history related to the town and the temple belonging to the Devaradiarcommunity, states categorically that there was no prostitutes’ street as mentioned in the book in the town and it is an attack on the reputation of their community. In fact one of the prominent houses in the street belongs to the most famous political family of this town, namely the late Dr P Subbarayan. There have been many political leaders from his family over three generations, occupying high positions at national level.
Certain critical historical facts relating to the town and the car festival seems vastly different from what is portrayed by the writer in the novel. There is little evidence of fundamentalism, casteism, Fascism or lumpenism as alleged by the city-based literary critics and activists.
A young lady professional from the town probably in her early 30s asked me, “Sir, I have been praying to Ardhanareeswara for the last six years after my marriage for a child. When I get a child, how do they want the world to look at me?” One finds it difficult to understand why these ‘progressive’ forces and their intellectual supporters want to denigrate innocent women like her. Have any of these vocal forces tried to visit the place and reach out to the women to understand their beliefs and emotions? How can they impose their views sitting in far off places, simply because they have the connections and the capacity to speak and write, while these powerless innocent citizens living in a distant town cannot reach out to the people from the rest of the country to make their case?
http://swarajyamag.com/culture/perumal-murugan-escape-the-questions-skip-to-outrage/
Tamil Nadu Progressive Writers and Artists Association president S.Tamilselvan, expressing solidarity with the writer, had challenged the decision of a peace committee at a meeting organised by the district administration (sic) in Namakkal on January 12. The decision was that Mr. Murugan had agreed to issue an unconditional apology, delete the controversial portions from his book, and withdraw unsold copies from the market.
Meanwhile, a group of people, claiming to be residents of Tiruchengode, approached the High Court to initiate criminal charges against the author.
Concluding the year-long legal battle, the First Bench of Chief Justice S. K. Kaul and Justice Puspha Sathyanarayana held that the settlement arrived at the peace meet would not be binding on the author. It also dismissed the plea moved by the residents, and consequently quashed an FIR filed against Mr. Murugan.
The court directed the State government to circulate a series of guidelines framed by the court to handle such situations among the State police and to form an expert committee to handle such issues.
============
the book is now "unbanned"
regards
rnkantan
கோர்ட்டு , சட்டம் எல்லாமே "one dollar short and one day late" தான்.
மக்களை மீறி புத்தகம் வெளியே வராது. வரவேண்டுமானால் திருச்செங்கோடு எனும் பெயரை அகற்றிவிட்டு கற்பனையான ஒரு ஊர் பெயரை போட்டு மகராசனாக வெளியே கொண்டுவரலாம்.
இலவசமாக இணையத்தில் கொடுத்தார்கள்..அதுக்கு பேர் விற்று காசு வாங்குவதா? :-)
ஆன்லைனில் விற்கிறதா என தேடினால் அவுட் ஆஃப் ஸ்டாக் என நூலகம் டாட் காமில் காட்டுகிறது. நூல் சந்தையில் விற்பனைக்கு இல்லை என நினைக்கிறேன்
இப்ப 2016ம் ஆண்டு என்பது அண்ணாச்சிக்கு நினைவிருக்கா இல்லை இன்னும் 2015ல் தாந் இருகீங்களா? :-)
புத்தகம் இப்ப விறபதில்லை...அவ்ளோதான் மேட்டர்
புத்தக கண்காட்சி திருச்செங்கோட்டில் அல்லது கோவை பெல்ட்டிலா நடந்தது?
அணையபோகும் விளக்கு சுடர் விட்டு எரிந்து பின் காணாமல் போய் விட்டது. அதுக்கு ஒரு பெருமை வேறு :-)
ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் என்பது தமிழ் மூதுரை :-)
இந்திய மொழிகளில் சிறந்த இலக்கிய நூல்களுக்கு அகில இந்திய அளவில் ‘சமன்வாய் பாஷா சம்மன்’ என்னும் உயரிய விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இவ்விருதுக்கு தமிழகத்தைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகன் தேர்வாகி இருக்கிறார். டெல்லியில் நேற்று நடந்த 4–வது இந்திய மொழிகள் திருவிழாவில் கே.சச்சிதானந்தன் தலைமையில் சச்சின் கேத்கர், மங்கலேஷ் தாப்ரல், மித்ரா புகன், அருந்ததி சுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய குழு சமன்வாய் பாஷா விருதுக்கு மாதொருபாகன் நாவலுக்காக பெருமாள் முருகனை தேர்வு செய்தது.
சொந்த ஊரையும், மக்களையும் பகைத்துக்கொண்டு எந்த மனிதனாலும் மகிழ்ச்சியாக வாழ்ந்துவிட முடியாது. நல்லது, கெட்டது, சொந்தம், பந்தம் எல்லாம் ஊருக்குள் தான்...கோர்ட் ஆடரை வைத்துகொண்டு ஊரில் ஒரு பிரயோஜனமும் கிடையாது.
தான் செய்த தவறை அவரே உணர்ந்து மன்னிப்பு கேட்டு, நூலை வாபஸ் வாங்கி விட்டார். அது பெரிய மனிதரின் பண்பை காட்டுகிறது. ஆனால் உசுப்பேத்தி உசுப்பெத்தி உடம்பை ரணகளமாக்கும் நண்பர்க்ள் கூட்டத்தின் சகவாசத்தையும் அவர் விட்டுவிட்டால் இன்னும் நல்லது :-)
சொந்த ஊரு பெண்ணை ரயில்வே ஸ்டேசனில் வைத்து வெட்டினதுக்கே சென்னை மக்கள் சும்மா தான் இருந்தார்கள். திருச்செங்கோட்டு பெண்களை பற்றி மோசமாக எழுதினால் அவர்கள் ஏன் வீதிக்கு வந்து போராட போகிறார்க்ள்?
விருது, கிருதுன்னு காமடி வேற...சொந்த ஊர் மக்கள் பாராட்டுவதை விட பெரிய விருதும் இல்லை, அவர்கள் மனவருத்தத்தை விட பெரிய எதிர்ப்பும் இல்லை. இதெல்லாம் பெருமாள் முருகனுக்கு நல்லா தெரியும். விருது குடுத்து உசுபேத்திவிட்டு நீங்கலாம் சென்னையில உக்காந்துக்குவீங்க..நாளை நல்லது, கெட்டதுன்னா அவர் தான சொந்த ஊருக்கு போகணும் ,வரணும்? சொந்த, பந்தங்களோட புழங்கணும்?
ஆக, வல்லான் வகுப்பதே வாய்க்கால் என அண்ணாச்சி தீர்ப்பெழுதி விட்டார். வல்லோர் என்னவும் செய்து கொள்ளலாம். சாதி பாராட்டிக் கொள்ளலாம்... ஊரை விட்டுத் துரத்திக் கொள்ளலாம்... நீதிமன்றங்கள் வீண்!! எலேய்... ஆர்லே அங்க... எல்லா நீதிமன்றங்களையும் கலைச்சுடுங்கலே... அண்ணாச்சிமாரி வல்லார் தீர்ப்பே இறுதியானது. மக்களின் வரிப்பணமாவது மிஞ்சட்டும்!!
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
சரி....நீங்கள் ஆதரவு கொடுக்கவிலலை, பொருளும் சந்தையில் இல்லை. முடிந்ததா மேட்டர்? :-)
சந்தையில் இல்லாத பொருளுக்கு ஆதரவும், எதிர்ப்பும் எதுக்கு? :-)
கண்டியுங்க....யாருக்கு அதைப்பற்றி என்ன கவலை? ஒரு ஊர் பெண்களை அவமதிப்பவர்களை தட்டி கேட்டால் கண்டிப்பீர்கள் என்றால் அந்த தவறை தொடர்ந்து செய்துவருவோம் என்பதை பணிவுடன் தெரிவித்து கொள்கிறோம்.
//ஒரு ஊர் பெண்களை அவமதிப்பவர்களை //அவதூறு கிளப்புவதற்கும் கண்டனங்கள்!!
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
:))தாய்க்குலத்தின் நற்பெயருக்கு களங்கம் வந்தால் அதை எதிர்த்து போராடுவது மனிதனாக பிறந்த ஒவ்வொருவரின் கடமையும்.
அப்படி செய்தால் கண்டிப்பீர்கள், ஊர் மானத்தை சந்தி சிரிக்க வைத்தால் மெச்சி உச்சி முகர்ந்து விருதும் கொடுப்பீர்கள் என்றால் அந்த விருதும், பாராட்டும் not worth the paper they are printed on.
எங்களுக்கு மானமும், சுயமரியாதையும் தான் முக்கியம். விருதை தூக்கி குப்பையில் போடுங்கள். இன்னும் எத்தனை கண்டனம் வந்தாலும் அதெல்லாம் தான் எங்களுக்கு ஞானபீட விருது மாதிரி.
திருச்செங்கோட்டு மலடிகள் திருவிழாவில் படுத்து குழந்தை பெற்றார்கள் என எழுதினால் அது அவமானம் இல்லையாம்....மக்கள் அதை மெச்சி மெடல் போடணுமாம்..ரைட்டு. நல்ல பஞ்சாயத்து பண்றீங்க.
திருச்செங்கோட்டு மக்களும் படித்து விட்டு தான் எதிர்த்த்கார்கள்.
அவர்களை நூல் அவமானபடுத்தியதா இல்லையா என அவர்களுக்கு தெரியாது...அதை முடிவு செய்யும் அளவு விவரமும் அவர்களுக்கு போதாது...அண்ணாச்சி சொல்லிட்டால் அதுக்கு அப்பீல் இல்லை :-)
மாதொரு பாவம்!(விமர்சனக் கட்டுரை)
--------------------------நண்பர்களே!....
மாதொருபாகன் என்கிற நாவலைப் படித்தேன்!
அதுபற்றிய ஒரு சர்ச்சை கிளம்பாமல் இருந்திருந்தால் அதைப் படித்திருக்க வாய்ப்பு இல்லை!
இவ்வளவு பெரிய பிரச்சினையாக ஆன அதில் என்னதான் சொல்லப்பட்டிருக்கிறது என்று அறிய விரும்பிப் படித்துப் பார்த்தேன்.
ஒரு எழுத்தாளன் தான் படைக்கும் பாத்திரங்கள் ஏதாவது ஒன்றில் ஒளிந்திருப்பான்.
இதிலும் இந்த நாவலை எழுதிய எழுத்தாளர் பெருமாள்முருகன் இரண்டு பாத்திரங்களில் ஒளிந்திருக்கிறார்.
அதுதான் பொன்னா என்கிற கதாநாயகி மற்றும் பாவப்பட்ட பெண்களை வேட்டையாட நினைக்கும் ஒழுக்கங்கெட்ட ஜென்மங்கள்...
எப்போதும் ஒரு படைப்பாளி தான் படைத்த பாத்திரங்களில் ஒன்றில் மறைந்திருந்து தான் உலகுக்கு சொல்ல நினைப்பதைச் சொல்வார்!
அதுபோல இவரும் இந்தப் பொன்னாள் மூலமும் முகமறியாத பெண்களைத் தங்கள் இச்சைக்குப் பயன்படுத்திக்கொள்ளத் துடிக்கும் நடத்தை கெட்ட மனிதர்கள்மூலமும் தனது உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறார்!
அவர்களின் பாத்திரத்தை நியாயப்படுத்துவதில் இருந்து இதை நம்மால் உணர முடிகிறது!
ஒரு எழுத்தாளன் ஒரு பாத்திரத்தைச் சிறப்பிக்கிறான் என்றால் அதற்கான நியாயமான காரணங்கள் இருக்கவேண்டும்!
இந்த எழுத்தாளர் பொன்னாள் மற்றும் நடத்தை கெட்டவர்களை நியாயப் படுத்த என்ன காரணங்களை முன்வைக்கிறார்?
அவர்கள்மூலம் தான் வாழும் சமூகத்துக்கு என்ன சொல்ல நினைக்கிறார்?
பிள்ளைப்பேறு இல்லாத பெண்கள் தவறான நடத்தையைப் பின்பற்ற வேண்டும் என்கிறாரா?
அல்லது காலங்கடந்து பிள்ளைப்பேறு பெற்ற தாய்மார்கள் இப்படிப்பட்டவர்கள்தான் என்று அழுத்தம் திருத்தமாக மறைமுகமாக விளக்குகிறாரா?
அல்லது ஒவ்வொரு ஆண்மகனும் தனது பிள்ளைகளை உண்மையாகவே அப்படித்தானா என்று சந்தேகம்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறாரா?
அல்லது ஆண் பெண் உறவில் கட்டுப்பாடும் ஒழுக்கமும் தேவையற்றவை என்று சொலி அவற்றை ஒழித்துவிட்டு முறையற்ற உறவுகளை சமூக ஒழுக்கமாக மாற்ற விரும்புகிறாரா?
நாவல் என்று சொல்லிவிட்டு குறிப்பிட்ட ஊரின் பெயரையும் ஜாதியின் பெயரையும் மதப் பின்னணியையும் எதற்காகச் சொல்லவேண்டும்?
வரலாற்று ஆவணம் என்றால் அதைத் தகுந்த ஆதாரங்களுடன் ஆய்வுக் கட்டுரைகளாக வெளியிட்டிருக்கவேண்டும்!
கதை என்றால் கதையும் கதா பாத்திரங்களும் கதாசிரியரின் கருத்தோட்டங்களுமாக இருந்திருக்க வேண்டும்!
துவக்கத்தில் நல்லவளாகச் சித்தரிக்கப்பட்ட கதாநாயகி பொன்னா கடைசியில் கட்டிய கணவனை மற்றவர்களுடன் சேர்ந்து ஏமாற்றிவிட்டு மாற்றானுடன் கள்ள உறவு கொண்டவளாகக் கதையை முடிக்கிறார்!
பொன்னாளுடைய குழந்தையில்லாக் குறையைச் சொல்லும்போது இந்தச் சமூகத்தில் வாழும் ஒவ்வொருவரும் அவளின் குறையைச் சொல்லி அவமானப்படுத்துவதையே பிழைப்பாகக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்!
அது அப்பட்டமான சமூக நிந்தனை!
அவ்வளவையும் சொல்லி அவளின் அல்லது அவளைப்போன்றவர்களின் கள்ள உறவை நியாயப் படுத்த நினைத்து அதற்குச் சாமிகளையும் துணைக்கு வைத்துக்கொண்ட அவர் கடைசியில் பொன்னா தவறு செய்ததை நினைத்துக் கணவன் காளி மகிழ்ச்சி அடைவதாகச் சொல்லாமல் ஏன் அவளைக் கண்டபடி திட்ட வைத்தார்?
ஆகக் கணவனையும் மீறிப் பிள்ளை இல்லாத பெண்கள் தவறு செய்தார்கள், செய்யலாம் என்றும் அது சாமிக்குச் சம்மதம் என்றும் சொல்கிறாரா?
ஒரு இடத்தில் விலைமாதுக்கள்கூட இன்று அனைத்துப் பெண்களுமே விலைமாது(தேவடியாள்)க்கள்தான் என்று சொல்வதாக நாவலில் இருக்கிறது.
ஆதாவது குழந்தைப் பாக்கியம் இல்லாத சமூகத்தால் அவமானத்துக்கு உள்ளாக்கப்படுகின்ற பாவப்பட்ட பெண்களின்மேல் அனுதாபம் காட்டப் போகிறேன் என்று புறப்பட்டு கடைசியில் அனைத்துப் பெண்களையும் தேவடியாள் என்று நிந்திக்கும் நிலைக்குப் போயிருக்கிறார்!
கண்ணியமான மனிதர் வாய்விட்டுச் சொல்ல அருவருக்கும் கொச்சையான ஆபாசமான வார்த்தைகளை எழுத்தில் கொண்டு வருவதை யதார்த்தமாக நினைத்தார் போலும்?
அப்படியானால் குடிகாரர்களின் பிரச்சினையை எழுதும்போது அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் அனைத்தையும் அப்படியே எழுத்தில் கொண்டு வருவாரா?
தொண்டுப் பட்டி தொண்டுப்பட்டி என்று நூறுதடவை குடியானவனின் பட்டியைக் குறிப்பிடுகிறார்.
அப்படியொரு வார்த்தையைத் தவறான பொருளில்தான் முற்காலத்திலும் கேட்டிருக்க முடியும்.
தொண்டு என்கிற வார்த்தைக்கு ஒழுக்கங் கேட்டவள் என்ற ஒரு பொருளும் உண்டு.
இவர் பயன்படுத்திய வார்த்தை அதைத்தான் பொருள் படுத்துகிறது!
கடைசியாக ஒன்றைச் சொல்ல வேண்டும்!
அதாவது குழந்தையில்லாப் பிரச்சினை உலகம் முழுக்க இருக்கும்போது எதற்காகத் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு கோவில் திருவிழா நிகழ்வுடன் இணைத்து அந்த ஊரைப் பற்றிய தாழ்வான எண்ணம் உருவாக்க வேண்டும்?
இந்தப் புத்தகத்தில் சொல்லும்படியான ஒன்று அந்தக் காலத்தில் நடந்திருக்க வாய்ப்பு இருந்திருக்க முடியாது!
அப்படி இருந்திருந்தால் இவர் சொல்படி அங்கு வரும் பாவப்பட்ட பெண்கள் சிலராகவும் அவர்களின் குறையைத் தீர்க்கும் சாமிகளாக எண்ணற்றவர்களும் குவிந்திருக்கவேண்டும்.
காரணம் அந்தப் பெண்களின் எண்ணிக்கை வரம்புக்கு உட்பட்டது. ஆனால் அந்த ஒழுக்கங்கெட்ட ஆண்களின் எண்ணிக்கை வரம்புக்கு உட்பட்டது அல்ல!
அப்படிப்பட்ட நிலையில் இந்த நூலில் சொன்னபடி உண்மையாக நடந்திருந்தால் அது எப்பேர்ப்பட்ட வன்முறைகளுக்கும் கலகங்களுக்கெல்லாம் காரணமாக இருந்திருக்கும்!
அப்படிப்பட்ட வரலாறு அங்கு உள்ளதா?
கிராமிய விவசாயம் சார்ந்த வாழ்க்கையும் அதன் உட்கூறுகளும் ரசனையுடன் சொல்லப்பட்டிருகின்றன என்பதைத் தவிர இந்த நூலில் பாராட்டும்படியான முற்போக்கு அம்சங்கள் எதுவும் இல்லை!
எழுத்துச் சுதந்திரமும் கருத்துச் சுதந்திரமும் உயர்ந்தவை!
அதை இப்படிக் கீழ்த்தரமாகப் பயன்படுத்துவதால் எழுத்துக்கும் எழுத்தாளனுக்கும் இலக்கியத்துக்கும் சிறுமையே தவிரப் பெருமை இல்லை!....
--
காரணம் அந்தப் பெண்களின் எண்ணிக்கை வரம்புக்கு உட்பட்டது. ஆனால் அந்த ஒழுக்கங்கெட்ட ஆண்களின் எண்ணிக்கை வரம்புக்கு உட்பட்டது அல்ல!//
--
well I can recognize your (as a woman) angst over the novel; but why bring religion in this now?1) certainly all societies have been patriarchal so far and so the "woman as a progenitor" is almost embedded in the psyche.2) Niyoga was a practice in ancient times (remember satyavati and vyasa of mahabharat?) and there are many who claim Kunti's son's are outcome of niyoga. (there are many who claim it is a sanctioned religious practice; but Kanchi seer - periyava- had clarified that it was a social custom and not a religious practice. if I remember, he wrote that one of the most illustrious chola kings was also out of niyoga practice - though I don't remember which one? karikalan?)3) Mahabharata reflected the patriarchal psyche with a foray in niyoga and polyandry; no body ridiculed vyasa or banned it!4) if you search google you can get glimpses of such practice by early Christians and jews toos
திருச்செங்கோட்டை பெற்றி பேசுகையில் குந்தி தேவி, நியோகம்னு எங்க மக்கள் வாயில் நுழையாத பேரு, ஊரு, கலாசாரத்தையெல்லாம் சொல்லிகிடிட்டிருக்க கூடாது. இந்தியாவில் 30 கிமிக்கு ஒருக்கா கலாசாரம், பண்பாடு எல்லாம் மாறும். வடக்கே சாமியார்கள் அம்மணமா சுத்துவார்கள். இங்க ஜடாமுடியுடன் இருப்பார்கள். திருச்செங்கோட்ல போயி நியோகம்னா என்னனு யாருக்கும் தெரியாது. கண்டவனுடன் படுத்து பிள்ளைபெறுவது, ஒரு பொண்ணு அஞ்சு புருசனை கட்டின கதை இதையெல்லாம் எந்த தமிழ் இலக்கியத்திலோ, மரபிலோ காணமுடியுமா? தெரியாம தான் கேக்கறேன்வடநாட்டு கலாசாரம் மோசம்னு நான் சொல்லல...அது நம் மரபல்ல. நம் மரபு வேறு. பண்பாடு வேறு. மரபுக்கும், பண்பாட்டுக்கும் தொடர்பில்லாம கதையை எழுதி அதுக்கு வடநாட்டு ஆபாச வழக்குகளை உதாரணமா கொடுத்து...முடியல. இது எங்க மண்ணின் கதையே கிடையாது. எங்காச்சும் ராஜஸ்தான்ல நடக்கர மாதிரி கதையை மாத்தி எழுதுங்க. படிக்கறோம். எங்கூரு பொண்ணுக கண்ணகி வம்சம். திரவுபதி வம்சமல்ல.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
//புராணங்களையும் இந்து மதத்தையும், கோயில் களையும் நீன்கள் எவ்வளவு வேண்டுமென்றாலும் திட்டுங்க்ள். எனக்கு ஆட்சேபணை இல்லை. //
//பாவம் , அப்பாவிப் "இந்துப்" பெண்மணிகளை விட்டுவிடுங்கள்.//
//மற்றுமொன்று, தைரியமிருுந்தால் வேறுமதத்திலிருந்து எடுத்துக்காட்டுக் கொடுங்கள். //
//2) Niyoga was a practice in ancient times (remember satyavati and vyasa of mahabharat?) and there are many who claim Kunti's son's are outcome of niyoga. (there are many who claim it is a sanctioned religious practice; but Kanchi seer - periyava- had clarified that it was a social custom and not a religious practice. if I remember, he wrote that one of the most illustrious chola kings was also out of niyoga practice - though I don't remember which one? karikalan?)3) Mahabharata reflected the patriarchal psyche with a foray in niyoga and polyandry; no body ridiculed vyasa or banned it!//
4//) if you search google you can get glimpses of such practice by early Christians and jews toos??//
ருத்ரா ஐயா,
நம் நாட்டு ராக்கெட்டை மேக்ஸ்முல்லர் பவனில் திருடினார்கள் என்றெல்லாம் நான் எப்போதும் எழுதியதில்லை.
எனக்கு தெரிந்து, நான் படித்தவரை தமிழ் மரபிலும், இலக்கியத்திலும் மானமும், வீரமுமே தமிழ்மரபாக குறிப்பிடப்பட்டுள்ளது. பிள்ளை இல்லை எனில் திருவிழாவில் கண்டவனுடன் படுத்து பிள்ளை பெறும் கலாசாரம் இந்த மண்ணின் வழக்கம் இல்லை. இப்படிப்பட்ட கலாசாரத்தை வடமொழி நூல்களில் இருந்து தேடி எடுத்து அதை திருச்செங்கோட்டு கலாசாரம் என சொல்லி மகிழ்ந்து கொள்வது புத்தகம் விற்க உதவலாம், அல்லது முற்போக்கு வட்டங்களில் புகழ் பெற உதவலாம் அல்லது விருதுகள் கிடைக்க உதவலாமோ என்னவோ எனக்கு தெரியாது. ஆனால் இதுக்கு எல்லாம் திருச்செங்கோட்டு பெண்கள் தாந் பலியாடாகவேண்டுமா என்பது தான் எந் கேள்வி.
இந்த ஆபாச கலாசாரம் திருச்செங்கோட்டில் நிலவியதுக்கான ஆதாரத்தை முன்வைத்து விட்டு இம்மாதிரி கதைகளை எழுதினால் நன்று.
”Is there any documentary evidence to support the existence of consensual sex, written about in the book?
There is no historical evidence. Details about the custom were passed on orally. Writer Theodore Baskaran and Professor A.K. Perumal have also written about similar customs that prevailed in other parts of the State. For example, [there is] the Thuppatti festival in which men and women participate while covering their faces.”
ஜனவரி 25, 2015 அன்று மிந்தமிழ், வல்லமைக்கு அனுப்பிய மடல்:”எந்த டாக்குமெண்டரி ஆதாரமும் இல்லை. கேள்விப்பட்டது தான்” என்கிறார் முற்போக்கு எழுத்தாளர் பெருமாள் முருகன்.”Is there any documentary evidence to support the existence of consensual sex, written about in the book?
There is no historical evidence. Details about the custom were passed on orally. Writer Theodore Baskaran and Professor A.K. Perumal have also written about similar customs that prevailed in other parts of the State. For example, [there is] the Thuppatti festival in which men and women participate while covering their faces.”
--------------------------
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
அனைவரின் வாதத்தையும் அமைதியாக அவதானித்து விட்டுதான் எழுதத் துணிகிறேன்.
பழமைபேசி?! பூசி மெழுகி!?
அந்தக்காலமோ இந்தக் காலமோ
பெண்கள்தான் கண்கள் உறுத்தும்
மையப்பொருள்.
எப்போதும் பெண்டாளுதல் தவறே.
மாதொருபாகன் கதை உருக்கொண்ட சமூகக்கோபம்
எண்ணற்பாலது? அன்றுகையற்றநிலையில் ஒரு சமூக (இன) பெண்கள் பெண்டாளப்
பட்டார்கள்.இன்று எழுத்து எம்கையில் ஊடகங்கள் எம்கையில் அரசியல்கட்சிகளும்
எம்கையில்.எனவே நாங்க இப்பத்திருப்பி எல்லாப்பொம்பளைகளும் அப்படித்தான்னுசொல்லுவோம்.
உங்களால் எண்ணபண்ணமுடியும்
என்ற எழுத்தாணவ வெளிப்பாடேயது.எழுத்தாவணம்
அல்ல இது.சரி அப்பவும் சரி இப்பவும் சரி எங்களின் (பெண்களின்)
தாலியையே ஏன் அறுக்கிறீர்கள்?