தமிழும் தமிழ் சார்ந்த நிலமும்

703 views
Skip to first unread message

தேமொழி

unread,
Feb 26, 2017, 1:24:34 AM2/26/17
to மின்தமிழ்
நன்றி சிறகு: http://siragu.com/?p=26071

தமிழும் தமிழ் சார்ந்த நிலமும்

தேமொழி 


“நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமுந்
தமிழ்வரம் பறுத்த தண்புனல் நன்னாட்டு”

“குமரி வேங்கடங் குணகுட கடலா
மண்டினி மருங்கினிற் றண்டமிழ் வரைப்பில்”

என்பார்  இளங்கோவடிகள்.  இதன் மூலம் வடக்கில் திருவேங்கடம் முதல், தெற்கில் குமரிமுனை வரை, கிழக்கிலும் மேற்கிலும் கடலை எல்லையாகக் கொண்டு திகழ்ந்த நிலம் தமிழ் பேசும் தமிழ்நாடாக இருந்ததை அறிகிறோம். அவ்வாறே இந்த எல்லைகளுக்குட்பட்டத்  தமிழ் மண்ணை  ஆட்சி செய்த சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்களின் ஆட்சிக்குட்பட்ட நிலங்களின் எல்லைகள் குறித்தும் பாடல்கள் உள்ளன.  

  
தமிழகத்தின் சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் ஆட்சி செய்த, அவர்களது நாடுகளின் எல்லைகளைக் குறிக்கும் பாடல்கள் என கம்பர் இயற்றியதாகக் குறிப்பிடப்பட்டு நான்கு தனிப்பாடல்கள் ‘தனிப்பாடற்றிரட்டு’ என்ற நூலில் (பக்கம் 124-126) இடம் பெற்றுள்ளன. தனிப்பாடற்றிரட்டு (முதல் பாகம்),  என்ற இந்த நூல்,  பல புலவர்கள் எழுதிய தனிப்பாடல்களைத் தொகுத்து,  1908 ஆம் ஆண்டு கா. இராமசாமி நாயுடு அவர்கள் வெளியிட்ட நூல். இந்நூலில் காளமேகப்புலவர் முதற்கொண்டு,  கம்பர் உட்பட 29 புலவர்கள் இயற்றிய சுமார் 750 தனிப்பாடல்கள்  கா. இராமசாமி நாயுடு அவர்களால் தொகுத்து உரை எழுதப்பட்டு பார்த்தசாரதி நாயுடு அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. 



‘தனிப்பாடற்றிரட்டு’ நூலில் கம்பரின் தனிப்பாடல்கள் எனத் தொகுக்கப்பட்டுள்ள  பாடல்கள் 69. கம்பர் (கி.பி. 1180-1250) 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.  சோழமன்னனின் அவையை அலங்கரித்த, 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த   ‘ஒட்டக்கூத்தர்’,  நளவெண்பா பாடிய ‘புகழேந்திப் புலவர்’ மற்றும் ‘ஒளவையார்’ ஆகியோருடன் போட்டியிட்டும், தனது மகன் அம்பிகாபதியுடனும் சோழ மன்னனுடனும் பாடிய பாடல்கள் என இத்தொகுப்பில் கம்பரின் பாடல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.  இக்குறிப்புகள்  இப்பாடல்கள் எழுதியவரைக் கம்பர் எனச் சுட்டுகின்றன.  எனினும் எழுத்து நடை, இலக்கிய நயம் கொண்டு இப்பாடல்கள் ‘கம்பராமாயணம்’ இயற்றிய கம்பரால் பாடப்பட்டவையல்ல என்ற கருத்தும் உள்ளது.  மேலும் இடைக்காலச் சோழர்கள் காலத்திலேயே,  அதாவது, 9 ஆம் நூற்றாண்டிலேயே  பல்லவர் ஆட்சி முடிவு பெற்றுவிட்டது. கம்பர் காலம் 12 ஆம் நூற்றாண்டு என்றால் அது பிற்காலம்.  சாளுக்கிய சோழர்கள், குறிப்பாக 3 ஆம் குலோத்துங்க சோழன் காலம்.  ஒட்டக்கூத்தர், புகழேந்திப் புலவர்கள் காலத்தில் கம்பர் வாழ்ந்ததாகக் கூறப்படும் கதைகளில் உண்மை இருக்கலாம் என்றால் அது 2ஆம் குலோத்துங்க சோழன் காலம் எனக் கொள்ள வேண்டும்.  இக்காலத்தில் பல்லவ நாடு பேர் சொல்லும் வகையில்  சிறப்புடன் இருக்கவில்லை என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். 

தமிழ் நிலத்தை ஆண்ட மன்னர்களின் நாடுகளின் எல்லைப்பகுதிகள் ‘தமிழகத்தின் இயற்கை அமைப்பு’ அடிப்படையில் இயற்கையாக அமைந்த நில எல்லைகளான ‘மலைத்தொடர்கள்,’ ‘ஆறுகள்,’ ‘கடல்கள்’  போன்றவற்றால் வரையறுக்கப்பட்டோ அல்லது ‘பெருவழிகள்,’ ‘ஊர்கள்’ ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்டோ அமைந்திருப்பதை நிலவரைபடம் தெளிவாகக் காட்டுகிறது (பார்க்க படம்: 1).  

படம்: 1


சுருக்கமாக, ‘மேற்குத்தொடர்ச்சி மலை’ சேரநாட்டை, பாண்டிய சோழ பல்லவ நாட்டிலிருந்து பிரிக்கும் எல்லையாக அமைந்திருந்திருக்கிறது.  ‘கிழக்குத் தொடர்ச்சி மலை’யின் தெற்கே பல்லவர்களின் தொண்டைநாடு அமைந்திருந்துள்ளது.  ‘தென்பெண்ணை ஆறு’ அல்லது அதற்குத் தெற்கே பாயும் ‘கெடிலம் ஆறு’ அல்லது ‘வட வெள்ளாறு’(கெடிலம் ஆற்றுக்குத் தெற்காக, சிதம்பரத்திற்கு வடக்கில் ஓடும் ஆறு),  ஆகிய ஆறுகளில் ஒன்று ஒவ்வொரு காலகட்டத்திலும்  பல்லவ நாட்டையும் சோழ நாட்டையும் பிரித்திருக்கிறது.  அவ்வாறே சோழ நாட்டையும் பாண்டிய நாட்டையும் புதுக்கோட்டைக்குத் தெற்கில் பாயும் ‘தென் வெள்ளாறு’ பிரித்துள்ளது. 

சோழ மன்னர்கள் வடகிழக்கில் வங்கநாடு  வரையிலும் போரிட்டு சென்றாலும், கிழக்குத் தொடர்ச்சி மலையின் மேற்காக உள்ள பகுதிகளில் ஆர்வம் காட்டவில்லை. அவ்வாறே மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குள்ள பகுதிகளிலும் தமிழ் மன்னர்கள் அக்கறை காட்டவில்லை. புலிகேசியை வாதாபி வரை விரட்டிச் சென்று வெற்றி கொண்டு வந்தாலும் பல்லவர்களும் அங்கேயே தங்கிவிட எண்ணவில்லை. பொதுவாகவே தமிழ் மன்னர்கள் மேற்கு கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் தெற்காகவே தங்களது ஆட்சி எல்லைகளை இயற்கை அளித்த வரையறையுடன் நிறுத்திக் கொண்டுள்ளார்கள். கடல்கடந்து போரிட்டாலும் ஆட்சியை விரிவாக்கும் எண்ணம் ஏனோ தமிழருக்கு இல்லாதிருந்தது வியப்பிற்குரிய நிலை. 

இதற்கு, ஓரளவிற்கு மேல் எல்லை விரிவடையும்பொழுது  தளவாடங்கள், நிர்வாக அமைப்புகளின் கட்டுப்பாடு, கண்காணிப்பு ஆகியவை  நிலைகுலையத் தொடங்குவதும் காரணமாக இருந்திருக்கலாம். தமிழகத்தின் கொங்குநாட்டின் பரந்த சமவெளிப் பகுதியைப் போட்டி போட்டுக் கொண்டு தங்களது  ஆட்சிக்குட்படுத்த சேர சோழ பாண்டிய பல்லவ மன்னர்கள்  விரும்பியுள்ளார்கள். இருப்பினும், தமிழ் மண்ணில் ஆங்காங்கே இருந்த  மலைகளையும் (பரம்பு, கொல்லி மலை போன்ற மலைகள்),  சிறு குன்றுகளையும் அதன் பழங்குடிமக்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர எண்ணாமல் அவற்றைக்  குறுநில மன்னர்களையே தங்கள் ஆட்சியின் கீழ் அரசாளவும் விட்டிருக்கிறார்கள். அச்சிற்றரசர்களுடன் நட்புறவோ, திருமண உறவோ கொண்டு தங்கள் பாதுகாப்பிற்கு அவர்களைப் பயன்படுத்தியுள்ளார்கள்.  இத்தகைய நிர்வாக முறை, இக்கால அரசியல் அதிகாரம் செலுத்துபவர்கள் வலுவுள்ள சிலரை (அடியாட்கள்) பாதுகாப்பிற்காகத் தங்களுடன் வைத்திருக்கும் முறை போன்றே அமைந்துள்ளது. தங்கள்  நிர்வாகத்தில் அதிக ஆற்றலை விரையமாக்கக் கூடிய குறுநிலப்பகுதிகளை  குறுநிலமன்னர்களையே ஆளவிட்டு அவர்களிடம் திறைபெற்று, நட்புறவு கொண்டு தங்கள் பாதுகாப்பையும் வலுப்படுத்திக் கொண்ட நிர்வாகமுறையை ஒருவகையில் பார்த்தால், அது  பெருவேந்தர்களின் அறிவுடைய செயலாகவும் தோன்றுகிறது. 

படம்: 2



இனி தமிழகத்தின் நாட்டுப் பிரிவுகளின் எல்லைகள் யாதெனக் கூறும் பாடல்களைக் காண்போம். சேர, சோழ, பாண்டிய, தொண்டை மண்டலத்தின் எல்லைகளைக் குறிக்கும் பாடல்கள் கம்பரால் எழுதப்பட்ட தனிப்பாடல்கள் எனத் தொகுக்கப்பட்டவை.  கொங்குநாட்டின் எல்லைகளைக் கூறும் பாடல்களின் ஆசிரியர் பெயர்(கள்) குறிப்பிடப்படவில்லை. அவற்றின் காலத்தை குறித்து  நேரடியான குறிப்புகளும் கொடுக்கப்படவில்லை, பாடல் கருத்துகளின் குறிப்புகளைக் கொண்டு அறிந்து கொள்ளவும் வழியில்லை.


1. சோழநாட்டெல்லை இதுவெனப் பாடியது:
“கடல்கிழக்குத் தெற்குக்கரை பொருவெள்ளாறு(i)
குடதிசையில் கோட்டைக்கரையாம் - வடதிசையில்
ஏணாட்டுப் பண்ணை(ii) இருபத்துநாற் காதம்
சோணாட்டுக் கெல்லையெனச்சொல்.”

(i) ‘பொருவெள்ளாறு’ என்பதற்குப் பதில் 'புரள் வெள்ளாறு' என்ற பாடவேறுபாடு உள்ள பாடலும் கிடைக்கிறது.  
(ii) அவ்வாறே ‘ஏணாட்டுப் பண்ணை’ என்ற தொடருக்கு ‘ஏணாட்டுப் பெண்ணை’ ‘ஏணாட்டு வெள்ளாறு’ என்ற பாடபேதங்களைக் கொண்ட பாடல்களும் பதிவாகியுள்ளன. ‘பெண்ணை’ என்பதை  ‘பண்ணை’ என்று மு. இராகவையங்கார் பாடம் கொள்கிறார்.  அத்துடன் கம்பர் எழுதியதாகக் குறிப்பிடப்படும் இப்பாடலை ஒளவையார் எழுதினார் என்ற குறிப்புள்ளதாகவும் தெரிகிறது.  ‘ஏணாடு’ என்பது தென்பெண்ணைக்கும் வடவெள்ளாற்றுக்கும் இடைப்பட்ட திருக்கோவிலூரை உள்ளடக்கிய ‘நடுநாடு’ என்ற குறிப்பும் கொடுக்கப்படுகிறது. இது தொண்டைநாட்டுக்கும் சோழ நாட்டுக்கும் இடைப்பட்ட பகுதி (பொதுவாக இப்பகுதி,  தென்பெண்ணைக்குத் தெற்கேயும்  வட வெள்ளாற்றுக்கு வடக்கிலும் உள்ள நிலப்பகுதி).
புதுக்கோட்டைக்கு தெற்கில் ஓடும்  ஆறு ‘தென் வெள்ளாறு’ என்று அழைக்கப்படுகிறது.  

“கடல்கிழக்குத் தெற்குக் கரைபுரள் வெள்ளாறு
குடதிசையில் கோட்டைக் கரையாம் - வடதிசையில்
ஏணாட்டு வெள்ளாறு இருபத்து நாற்காதம்
சோணாட்டுக்கு எல்லையெனச் சொல்.”

பாடலின் பொருள்; கிழக்குத் திசையில் கடலும், தென்திசையில் கரையில் அலைமோதும் (தென்)வெள்ளாறும்,  மேற்கில் கோட்டைக்கரை எல்லையாகவும், வடதிசையில் ஏணாட்டின் பெண்ணையாற்றுக்கும் (அல்லது ஏணாட்டு வெள்ளாற்றுக்கும் ) இடையே இருபத்து நான்கு காதம் பரவியுள்ள நிலமே சோழ நாட்டின் எல்லை எனக் கூறுவாயாக. 

இவ்வாறே சோழ எல்லைகளைக் குறிக்கும் மற்றுமொரு பாடல்;
“செல்லும் குணபால் திரைவேலை
         தென்பால் செழித்த வெள்ளாறு
வெல்லும் கோட்டைக் கரைவிளங்கும்
         மேல்பால் வடபால் வெள்ளாறே
எல்லை ஒருநான் கினும்காதம்
         இருபா னான்கும் இடம்பெரிதாம்
மல்லல் வாழ்வு தழைத்தோங்கும்
         வளம்சேர் சோழ மண்டலமே”
(சோழமண்டல சதகம்)

கிருஷ்ண தேவராயனின் தென்னார்க்காடு மாவட்டம் திருக்கோயிலூர் வட்டம் சேந்தமங்கலம் கல்வெட்டு (26-1-1518-ஆம் ஆண்டு) நடுவில்மண்டலம் உட்படச் சோழநாட்டின் எல்லை கூறப்படுகிறது. ‘கெடில ஆற்றுக்குத் தெக்கு ஸமுத்திரத்துக்கு மேக்கு தெர்க்கு வெள்ளாற்றுக்கு வடக்கு கோட்டைக்கரை மதுக்கரைக்குக் கிழக்கு’ என்று கூறப்படுகிறது. (SII VIII - 352, வரிகள் கல்வெட்டின்படியே). மேற்கே கோட்டைக்கரை  என்பது இக்காலத்தில் ‘மதிள்கரை’ > ‘மதுக்கரை’ என மாறியிருக்கலாம் எனவும் ‘சோழமண்டல சதகம்’காட்டுகிறது.



இங்கு ‘கோட்டைக்கரை மதுக்கரைக்குக் கிழக்கு’ என்ற கல்வெட்டுக் குறிப்பில் இருந்து மதுக்கரை எல்லையாகக் கொள்ளப்படுகிறது.  கோட்டைக்கரை என்ற பெயரில் வேறு சில ஊர்கள் இருப்பதுடன், அவற்றில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகில் பெத்தநாயக்கன் பாளையத்தில் உள்ள கோட்டைக்கரை பகுதி, அது அமைந்திருக்கும்  இடப் பொருத்தத்தின் காரணமாக, அது பாடல் குறிப்பிடும் கோட்டைக்கரையாகவும் இருக்க வாய்ப்புண்டு. சேலம் மாவட்டம் பண்டைய கொங்குநாட்டுப் பகுதி என்பதால், இங்குள்ள கோட்டைக்கரை கொங்கு நாட்டின் கிழக்கெல்லையாகவும், சோழநாட்டின் மேற்கெல்லையாகவும் அமைந்திருக்க வாய்ப்புள்ளது. ‘கோட்டக்கரை (பேட்டைவாய்த்தலை?) ஏணாடு ஆகியவை பற்றித் தெளிவாகத் தெரியவில்லை’ என மயிலை சீனி. வேங்கடசாமி கூறுவது இங்குக் குறிப்பிடத்தக்கது. இது குறித்து பின்னர் வரும்  கொங்குநாட்டு எல்லை பகுதியில் சற்று விரிவாகக் காணலாம்.  

எனவே இதன் அடிப்படையில் பொதுவாக, வடக்கில் ஓடும் வெள்ளாற்றுக்கும், தெற்கில் பாயும்  வெள்ளாற்றுக்கும்  என இரு வெள்ளாற்று நதிகளுக்கு இடைப்பட்ட சமதளமாக,  கிழக்கில் கடலை ஒரு எல்லையாகவும் மேற்கில் கோட்டைக்கரை வரை விரிந்த நிலமாக வயல்வெளிகளைக் கொண்டது சோழ மண்டலம் என அறியப்படுகிறது. 

2. பாண்டிநாட்டெல்லை இதுவெனப் பாடியது:
“வெள்ளாறது வடக்காம் மேற்குப்பெருவழியாம்(iii)
தெள்ளார் புனற்கன்னி தெற்காகும் - உள்ளார 
ஆண்டகடல் கிழக்காம் ஐம்பத்தறுகாதம் 
பாண்டிநாட்டெல்லைப்பதி.”
(iii)  பெருவழி என்பதற்குப் பதில் பெருவெளி என்ற பாட பேதமும் உண்டு. 

வெள்ளாறு வட எல்லையாகவும், மேற்கு எல்லையாகப் பெருவழியும், தெளிந்த நீர் கொண்ட கன்னி(குமரி) தென் எல்லையாகவும்,  (பல பாண்டிய மன்னர்களாலும்  துறைமுகமாகக் கொண்டு) மனநிறைவுடன் ஆட்சி செய்யப்பட்ட கடல்  கிழக்கு எல்லையாகவும், இந்த ஐம்பத்தாறு காதம் வரை விரிந்துள்ள நிலமே பாண்டிநாட்டின் எல்லைக்கு உட்பட்ட இடமாகும். 

3. சேரநாட்டெல்லை இதுவெனப் பாடியது: 
“வடக்குத்திசை பழனி வான் கீழ்தென்காசி 
குடக்குத்திசை கோழிக்கோடாம்-கடற்கரையின் 
ஓரமோ தெற்காகும் உள்ளெண்பதின்காதம் 
சேரநாட்டெல்லையெனச் செப்பு.”

பழனி வட திசை எல்லையாகவும், சிறப்பு கொண்ட கிழக்கு  எல்லையாகத்   தென்காசியும் உள்ளது, மேற்குத் திசையில்  கோழிக்கோடு எல்லையாகவும்,  தெற்கெல்லையாகக் கடலும் உள்ள  எண்பது காதம் வரை பரவியுள்ள நிலமே சேரநாட்டின் எல்லை என்று சொல்வாயாக. 

4.  தொண்டைநாட்டெல்லை இதுவெனப் பாடியது:
“மேற்குப் பவளமலை வேங்கடம் நேர்வடக்காம் 
ஆர்க்கும் உவரியணிகிழக்கு-பார்க்குளுயர் 
தெற்குப்பினாகி(iv) திகழ் இருபதின் காதம்
நற்றொண்டை நாடெனவே நாட்டு.”
(iv)பினாகினி என்ற பாடபேதமும் உள்ளது.

மேற்குத் திசையில் பவளமலை எல்லையாகவும்,   நேர் வடக்கில் வேங்கடமலை எல்லையாகவும்,  கிழக்கு எல்லையாக ஆரவாரிக்கும் கடலும், உலகில் சிறந்த நதியாகிய  தென்பெண்ணை ஆறு (வடமொழியில் பினாகி எனக் குறிக்கப்படும் தென்பெண்ணையாறு) தென்திசை எல்லையாகவும் திகழும்  இருபது காதம் விரவியிருக்கும் நிலமே  நல்ல தொண்டைநாடு என நிலை நாட்டுவாயாக. தொண்டைநாடு  ‘அருவா நாடு’ எனவும் அழைக்கப்படுகிறது.

இப்பாடல்களால் பெறப்படுவது:
சோழநாடு:  கிழக்கில் கடல், மேற்கில் கோட்டைக்கரை, வடக்கில் பெண்ணை/வட வெள்ளாறு, தெற்கில் தென்வெள்ளாறு  – இவற்றுக்கு இடையில் 24 காதம்.
பாண்டிய நாடு:  கிழக்கில் கடல், மேற்கில் பெருவழி, வடக்கில் தென்வெள்ளாறு, தெற்கில் கன்னியாகுமரி   – இடையில் 56 காதம். 
சேரநாடு: கிழக்கில் தென்காசி, மேற்கில் கோழிக்கோடு, வடக்கில் பழனி, தெற்கில் கடற்கரை ஓரம் – இடையில் 80 காதம். 
தொண்டைநாடு: கிழக்கில் கடல், மேற்கில் பவளமலை, வடக்கில் வேங்கடம்,  தெற்கில் தென்பெண்ணை – இடையில் 20 காதம்.

கம்பர் எழுதிய பாடல்களாக கருதப்படும் இப்பாடல்கள் தவிர்த்து, இப்பாடல்கள் காட்டாத ‘கொங்கு நாட்டு’ எல்லைகள் குறித்த பாடல்களையும் அறியத் தருகிறார் ‘மயிலை சீனி. வேங்கடசாமி’ ‘ஆய்வுக் களஞ்சியம் - 2’ என்ற நூலில்.  தமிழகம் ஆறு நாடுகளாகப் பிரிந்திருந்தது. அந்தப் பிரிவுகள், துளுநாடு, சேரநாடு, பாண்டிநாடு, சோழநாடு, அருவாநாடு(தொண்டைநாடு), கொங்குநாடு என்பவையாகும்.  சேரநாடும் துளுநாடும் பண்டைத் தமிழகத்தின் மேற்குப்பகுதி.  தொண்டைநாடு, சோழநாடு, பாண்டியநாடு கிழக்குக் கடலை எல்லைகளாகக் கொண்டவை. இவற்றுக்கு இடையே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கொங்கு நாடு அமைந்திருந்தது.  இன்றைய கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல் மாவட்டங்களை உள்ளடக்கிய நிலப்பகுதியே பண்டைக்காலத்தின் கொங்கு நாடு. 

5. கொங்கு நாட்டெல்லை குறிக்கும் பாடல்கள்:
“வடக்குத் தலைமலையாம் வையாவூர் தெற்குக்
குடக்கு வெள்ளிப் பொருப்புக் குன்று  - கிழக்குக்
கழித்தண்டலை சூழும் காவிரிசூழ் நாடாம்
குழித்தண்டலை அளவே கொங்கு”(v)

என்றும்;

“வடக்குப் பெரும்பாலை வைகாவூர் தெற்குக்
குடக்குப் பொருப்புவெள்ளிக் குன்று - கிடக்கும்
களித்தண் டலை மேவும் காவிரிநன் நாட்டுக் 
குளித்தண்டலை அளவே கொங்கு” (v)

என்றும் கூறுகின்றன பழம் பாடல்கள்.
(v)இப்பாடலில் காணப்படம் பாடபேதங்கள்: 
‘வடக்குத் தலைமலை’ அல்லது ‘வடக்குப் பெரும்பாலை’ என்ற பாடபேதங்கள் உள்ளன.
‘வையாவூர்’ அல்லது ‘வைகாவூர்’ என்ற பாடபேதங்கள் கொண்ட ஊர் இக்காலப் ‘பழனி’.
‘குடக்கு வெள்ளிப் பொருப்புக் குன்று’ அல்லது ‘குடக்குப் பொருப்புவெள்ளிக் குன்று’ வேறுபாடுகள் கிடைக்கிறது. 
‘கிழக்கு’ என்பதற்குப் பதில் ‘கிடக்கு’ என்றும், 
‘கழித்தண்டலை சூழும்’ என்பது ‘களித்தண்டலை மேவும்’  எனவும், 
‘காவிரிசூழ் நாடாம்’ என்பது ‘காவிரிநன்நாட்டு’ எனவும்,
‘குழித்தண்டலை’ என்பது  ‘குளித்தண்டலை’ எனவும் 
வரிக்கு வரி பாட மாறுபாடுகள் கொண்ட பாடலிது. 
குழித்தண்டலை > குளித்தண்டலை > குளித்தலை என மாறியிருக்க வாய்ப்புண்டு. 

வடக்கில் ‘தலைமலைக்கும்’ (மைசூருக்கும் சத்தியமங்கலத்துக்கும் இடையிலுள்ளது),  தெற்கில் ‘பழனிக்கும்,’ மேற்கில் பாலக்காட்டுக் கணவாயின் வடபகுதியில் உள்ள ‘வெள்ளியங்கிரி மலைக்கும்,’  கிழக்கில் காவிரி பாயும் ‘குளித்தலைக்கும்’ இடையில் உள்ளது ‘கொங்கு நாடு’ என்று கொங்குநாட்டின் எல்லைகளைக் குறிப்பிடுகிறது இந்தப்பாடல் (தமிழகம், பக்கம் 74).

குளித்தலை கொங்கு நாட்டின் கிழக்கெல்லையாகவும், சோழநாட்டின் மேற்கெல்லையாகவும் இருந்திருக்கக் கூடும் என்பதனை மயிலை சீனி. வேங்கடசாமி, “இப்போதுள்ள குளித்தலை வட்டம்வரை சங்ககாலச் சோழநாடு மேற்கில் பரவியிருந்தது என்று கொள்ள இடமுண்டு. வடக்கில் இதன் எல்லை சங்ககாலத்தில் காவிரி ஆற்றுச் சமவெளியைத் தாண்டிச் செல்லவில்லை என்றே எண்ணவேண்டியுள்ளது” எனக் குறிப்பிடுவதையும் கருத்தில் கொள்ளலாம். இதற்குச் சான்றாக, “இப்போதுள்ள தான்தோன்றி மலைப்பகுதி சங்ககாலத்தில் ‘தாமான் தோன்றிக்கோன்’ என்னும் அரசனால் ஆளப்பட்டது. அவன் காலத்தில் கிள்ளிவளவன் என்னும் சோழ அரசனும் ஆண்டான் (புறம். 399).  இந்த நிலை மேற்கண்ட உய்த்துணர்வுக்கு இடமளிக்கிறது” என்றும் மயிலை சீனி. வேங்கடசாமி குறிப்பிடுகிறார்.  

‘குளித்தலை’ என்பதைச் சோழநாட்டின் மேற்கெல்லை என்று கொண்டால், கம்பரது பாடல் குறிப்பிடும் கோட்டைக்கரை மேற்கெல்லை என்பது ஆத்தூர் அருகிருக்கும் ‘கோட்டைக்கரை’ என்பதுடனும் பொருந்தி வரும் என்பதையும் இங்கு நோக்க வேண்டும்.   குளித்தலையும்,  கோட்டைக்கரையும் (ஆத்தூர்)  வடக்குத் தெற்காக நேர்கோட்டில் இருப்பதும் இதற்கு ஒரு வலுவான சான்றாகவும் அமையும். அத்துடன்  கொங்கு நாட்டின் எல்லைகளைக் குறிக்கும் கீழ்க்காணும் பாடலும் ‘மதிற்கரை கீட்டிசை’ என்றே கூறுகிறது. 

“மதிற்கரை கீட்டிசை தெற்குப் பழனி மதிகுடக்குக்
கதித்துள வெள்ளிமலை பெரும்பாலை கவின்வடக்கு
விதித்துள நான்கெல்லை சூழ வளமுற்றும் மேவிவிண்ணோர்
மதித்திட வாழ்வு தழைத்திடு நீள்கொங்கு மண்டலமே”

கோவை அருகிலுள்ள ‘கோட்டைக்கரை – மதுக்கரை’ என்பது மேற்கெல்லையாக அடையாளம் காணப்பட்டது  பிற்காலத்தில்,  சோழநாட்டின் எல்லை ‘மேற்குத்தொடர்ச்சிமலை - பாலக்காட்டுக் கணவாய்’ வரை விரிந்த பின்னால் அதன் தாக்கத்தில் பிழையாகக் கொள்ளப்பட்டதாக இருக்கவே வாய்ப்புள்ளது.  

சோழன்  குராப்பள்ளித்  துஞ்சிய  கிள்ளிவளவன் கொங்கரை வென்றதைக் குறிக்கும் ,  “மைந்த  ராடிய  மயங்குபெருந்  தானைக்,  கொங்கு புறம் பெற்ற  கொற்ற வேந்தே” (புறம். 373) என்ற புறநானூற்றுப் பாடலும்; பசும்பூண்  பாண்டியன் கொங்கரை வென்றதைக் குறிக்கும் ,  “வாடாப் பூவின் கொங்க ரோட்டி, நாடுபல தந்த பசும்பூண் பாண்டியன்”(அகம்.   253)   என்ற அகநானூற்றுப் பாடலும் கொங்குநாட்டைக் குறிக்கும் சங்கப்பாடல்களாகும். இருப்பினும் கொங்கு நாடு சேர சோழ பாண்டிய பல்லவப் பேரரசுகள் போல ஒரு  தனிச்சிறப்பான நிலையை எய்தாமல் மாறி மாறி இந்தப் பேரரசுகள் ஆட்சியில் இருந்துள்ளது. குறிப்பாக, சேரர் ஆட்சிக்குட்பட்ட நாடாக பெரும்பாலும்  விளங்கியது. 



கிடைக்கும் பாடல்களில் இருந்து பொதுவாக எல்லைகளைக் குறிக்கும் பண்டைய  தமிழ் நிலத்தின் ஒரு  வரைபடத்தை யாரும் வரையலாம்.  ஆனால் நாட்டின் எல்லைகள் காலத்திற்குக் காலம் வேறுபடும் என்பதும், தொல்லியல் சான்றுகள் மூலம் பல்லவ மன்னர் கட்டிய கோவில் சோழ நாட்டிலும் கொங்கு நாட்டிலும் அமைந்திருப்பதும்; பிற்காலத்தில் கடல் கடந்து விரிந்த சோழப்பேரரசு களப்பிரர் காலத்தில் காணாமல் போயிருந்ததும்  நாட்டின் எல்லையைக் குறிக்கும் வரைபடத்திற்கு ‘காலக் குறிப்பு’ எவ்வளவு  முக்கியமானது என்பதைக் காட்டி நிற்கும்.  எனினும், ஒரு பொதுவான  புரிதலுக்குத் தனிப்பாடல்களில் கிடைக்கும் தகவல் அடிப்படையில் ஒரு வரைபடத்தையும் (பார்க்க படம்: 2) வரைந்து சேர சோழ பாண்டிய பல்லவ மன்னர்களின் ஆட்சிக்குட்பட்டிருந்த நிலப்பரப்புகளை அறியலாம்.



உதவிய நூல்கள்:
[1] திரவிடத்தாய்; மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர், பதிப்பாசிரியர் புலவர் அ. நக்கீரன் – http://www.tamilvu.org/library/lA46P/html/lA46Pind.htm

[2] பண்டைத் தமிழக வரலாறு – சேரர், சோழர், பாண்டியர்; மயிலை சீனி. வேங்கடசாமி, ஆய்வுக் களஞ்சியம்: 1, பதிப்பு வீ. அரசு – http://www.tamilvu.org/library/ln00201/html/ln00201ind.htm

[3] பண்டைத் தமிழக வரலாறு – கொங்கு நாடு, பாண்டியர், பல்லவர் இலங்கை வரலாறு; மயிலை சீனி. வேங்கடசாமி, ஆய்வுக் களஞ்சியம்: 2, பதிப்பு வீ. அரசு  – http://www.tamilvu.org/library/ln00202/html/ln00202ind.htm

[4] சோழமண்டல சதகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் (பக்கம் 10) – http://www.tamilvu.org/library/l5750/html/l5750ind.htm


[6] தனிப்பாடற்றிரட்டு (முதல் பாகம்), 1908; தொகுப்பாசிரியர் கா. இராமசாமி நாயுடு, பதிப்பாசிரியர்  பார்த்தசாரதி நாயுடு – google-books id=id=3cMxAQAAMAAJ 

[7] கம்பர் தனிப்பாடல்கள்  – https://ta.wikisource.org/s/3mn

நிலவரைபடம்:

*****

Pandiyaraja

unread,
Feb 26, 2017, 3:50:35 AM2/26/17
to மின்தமிழ்
மிக நல்ல பதிவு - அருமையான தகவல்கள். பாராட்டுகள் - எழுதியவருக்கும் இங்கு எடுத்துத் தந்தவருக்கும்
ப.பாண்டியராஜா

தேமொழி

unread,
Feb 26, 2017, 9:05:30 PM2/26/17
to மின்தமிழ்
மிக்க நன்றி ஐயா.

..... தேமொழி

Oru Arizonan

unread,
Feb 27, 2017, 1:21:44 PM2/27/17
to mintamil
நல்ல பதிவு.  பாராட்டுகள் !

ஒரு அரிசோனன் 

தேமொழி

unread,
Feb 28, 2017, 12:28:44 AM2/28/17
to மின்தமிழ்
பாராட்டிற்கு நன்றி திரு. அரிசோனன்.

..... தேமொழி

Singanenjam Sambandam

unread,
Feb 28, 2017, 6:27:55 AM2/28/17
to mint...@googlegroups.com
நல்ல பதிவு. படித்து மகிழ்ந்தேன். 

காதம் பற்றி நிறைய பேசியாயிற்று. ஆனாலும் இந்தப் பாடல்களில் வரும் காதம் எத்தனை கி.மீ. என்று கணக்கிட இயலுமா 



--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Mar 1, 2017, 5:31:05 AM3/1/17
to மின்தமிழ்


On Tuesday, February 28, 2017 at 3:27:55 AM UTC-8, singanenjan wrote:
நல்ல பதிவு. படித்து மகிழ்ந்தேன். 

பாராட்டிற்கு மிக்க நன்றி  



காதம் பற்றி நிறைய பேசியாயிற்று. ஆனாலும் இந்தப் பாடல்களில் வரும் காதம் எத்தனை கி.மீ. என்று கணக்கிட இயலுமா 


இராமகி ஐயா கணித்த அளவுடன் (தென்புல அடிப்படையில் 1 காதமென்பது 4.167 மைல்) ஒத்து வருகிறது 

தென்புல அடிப்படையில் 1 காதமென்பது 4.167 மைல் என்பது அவர் கூறுவது.

பாடல்கள் நாட்டிற்கு வட எல்லை - தென் எல்லை எனக் குறிப்பிடும் இடங்களை ஒரு  "குத்துமதிப்பாக" அளந்தது பார்த்ததில் 

1 காதம் = 4.167 மைல் = 6.706 கிலோமீட்டர்  என்ற அளவுடன்  ஏறத்தாழ ஒத்து வருகிறது (முற்காலத்தில் எப்படி அளந்தார்கள் எனத் தெரியவில்லை). 
கீழே  விரிவாக ......

இப்பாடல்கள்  கூறுவது :
சேரநாடு: வடக்கில் கோழிக்கோடு-தெற்கில் கடற்கரை ஓரம் = இடையில் 80 காதம்.
பாண்டிய நாடு: வடக்கில் தென்வெள்ளாறு, தெற்கில் கன்னியாகுமரி  = இடையில் 56 காதம். 
சோழநாடு: வடக்கில் வட வெள்ளாறு, தெற்கில் தென்வெள்ளாறு  = இவற்றுக்கு இடையில் 24 காதம்.
தொண்டைநாடு: வடக்கில் வேங்கடம்,  தெற்கில் தென்பெண்ணை = இடையில் 28 காதம் ("இருபதின் காதம்" என்பது "இருபத்தெண் காதம்" எனப் பாடலில் இருந்திருக்க  வேண்டும்) .

மேற்குப் பவளமலை வேங்கடம் நேர்வடக்காம் 
ஆர்க்கும் உவரியணிகிழக்கு-பார்க்குளுயர் 
தெற்குப்பினாகி திகழ் இருபதின் காதம்
நற்றொண்டை நாடெனவே நாட்டு.(இருபத்தெண் காதம்?)

சேரநாடு =254மைல்/80காதம் = 3.2 மைல்
பாண்டிய நாடு =180மைல்/56காதம் = 3.2 மைல்
சோழநாடு =98மைல்/24காதம்= 4.1 மைல்
தொண்டைநாடு =122மைல்/28காதம் = 4.4 மைல்



கண்ணகி: மதுரை மூதூர் யாது?
கோவலன்: ஆறு-ஐங் காதம் நம் அகல் நாட்டு உம்பர் 

புகாருக்கும் மதுரைக்கும்  ஒரு நேர்க்கோடிழுத்தால் சற்றொப்ப 30 காதம் அல்லது ~140 மைல்கள். 

இதிலிருந்து கண்ணகியும் கோவலனும் 2 ஆவது  தேனிலவுக்கு குடகுக்குப் பயணமாகவில்லை என்பது உறுதியாகிறது. 

மாயோன்

unread,
Mar 1, 2017, 6:31:01 AM3/1/17
to mintamil
👏👏👏

1 மார்ச், 2017 ’அன்று’ முற்பகல் 2:31 அன்று, தேமொழி <jsthe...@gmail.com> எழுதியது:

N. Ganesan

unread,
Mar 1, 2017, 8:58:34 AM3/1/17
to மின்தமிழ்


On Wednesday, March 1, 2017 at 2:31:05 AM UTC-8, தேமொழி wrote:


கண்ணகி: மதுரை மூதூர் யாது?
கோவலன்: ஆறு-ஐங் காதம் நம் அகல் நாட்டு உம்பர் 

புகாருக்கும் மதுரைக்கும்  ஒரு நேர்க்கோடிழுத்தால் சற்றொப்ப 30 காதம் அல்லது ~140 மைல்கள். 

இதிலிருந்து கண்ணகியும் கோவலனும் 2 ஆவது  தேனிலவுக்கு குடகுக்குப் பயணமாகவில்லை என்பது உறுதியாகிறது. 


தேனிலவுக்கு கண்ணகி - கோவலன் செல்லவில்லை. இளங்கோ அடிகள் தம் சமண சமய போதனைக்கு
நாடுகாண் காதையைப் படைத்துள்ளார். பழங்காலத்தில் காதம்/காவதம் 12 மைல். யோஜனை அளவு.
கர்நாடகச் சொல்லையும், கர்நாடகக் குரவர் கவுந்தியடிகளும் காட்டி சமண சமயத்தை தமிழர்களுக்கு
விளக்குகிறார்.

பழைய சிலம்புக் கால கணக்கீட்டில் காதம் 9 - 18 மைல். பல சான்றுகள் கொடுத்துள்ளேன். அண்மைக்
காலத்தில் பாரதியாரும் காதம் = 10 மைல் எனக் கொண்டுள்ளார்.

நா. கணேசன்

 
 

..... தேமொழி 
 


N. Ganesan

unread,
Mar 1, 2017, 9:09:06 AM3/1/17
to மின்தமிழ்


On Wednesday, March 1, 2017 at 2:31:05 AM UTC-8, தேமொழி wrote:

சேரநாடு: வடக்கில் கோழிக்கோடு-தெற்கில் கடற்கரை ஓரம் = இடையில் 80 காதம்.
பாண்டிய நாடு: வடக்கில் தென்வெள்ளாறு, தெற்கில் கன்னியாகுமரி  = இடையில் 56 காதம். 
சோழநாடு: வடக்கில் வட வெள்ளாறு, தெற்கில் தென்வெள்ளாறு  = இவற்றுக்கு இடையில் 24 காதம்.
தொண்டைநாடு: வடக்கில் வேங்கடம்,  தெற்கில் தென்பெண்ணை = இடையில் 28 காதம் ("இருபதின் காதம்" என்பது "இருபத்தெண் காதம்" எனப் பாடலில் இருந்திருக்க  வேண்டும்) .

மேற்குப் பவளமலை வேங்கடம் நேர்வடக்காம் 
ஆர்க்கும் உவரியணிகிழக்கு-பார்க்குளுயர் 
தெற்குப்பினாகி திகழ் இருபதின் காதம்
நற்றொண்டை நாடெனவே நாட்டு.(இருபத்தெண் காதம்?)


மிகப் பிற்காலப் பாடல்கள் இவை.

சுற்றளவு (perimeter) - தொண்டைமண்டலத்துக்கு இருபது காதம் (200 மைல்) என்பது பொருந்துகிறதா?
பார்த்துச் சொல்லுங்கள் - the circumference of Tondai region.

நா. கணேசன் 

N. Ganesan

unread,
Mar 1, 2017, 9:14:07 AM3/1/17
to மின்தமிழ்
2017-03-01 6:09 GMT-08:00 N. Ganesan <naa.g...@gmail.com>:


On Wednesday, March 1, 2017 at 2:31:05 AM UTC-8, தேமொழி wrote:

சேரநாடு: வடக்கில் கோழிக்கோடு-தெற்கில் கடற்கரை ஓரம் = இடையில் 80 காதம்.
பாண்டிய நாடு: வடக்கில் தென்வெள்ளாறு, தெற்கில் கன்னியாகுமரி  = இடையில் 56 காதம். 
சோழநாடு: வடக்கில் வட வெள்ளாறு, தெற்கில் தென்வெள்ளாறு  = இவற்றுக்கு இடையில் 24 காதம்.
தொண்டைநாடு: வடக்கில் வேங்கடம்,  தெற்கில் தென்பெண்ணை = இடையில் 28 காதம் ("இருபதின் காதம்" என்பது "இருபத்தெண் காதம்" எனப் பாடலில் இருந்திருக்க  வேண்டும்) .

மேற்குப் பவளமலை வேங்கடம் நேர்வடக்காம் 
ஆர்க்கும் உவரியணிகிழக்கு-பார்க்குளுயர் 
தெற்குப்பினாகி திகழ் இருபதின் காதம்
நற்றொண்டை நாடெனவே நாட்டு.(இருபத்தெண் காதம்?)


இருபத்தெண்காதம் என்று மாற்றினால் வெண்பாவாக இருக்காது.

 


மிகப் பிற்காலப் பாடல்கள் இவை.

சுற்றளவு (perimeter) - தொண்டைமண்டலத்துக்கு இருபது காதம் (200 மைல்) என்பது பொருந்துகிறதா?
பார்த்துச் சொல்லுங்கள் - the circumference of Tondai region.

நா. கணேசன் 

--

iraamaki

unread,
Mar 1, 2017, 9:22:47 AM3/1/17
to mint...@googlegroups.com
அப்பாடா, ஏற்றுக்கொண்டீர்களே! கூடவே http://valavu.blogspot.in/2009/07/7.html என்ற என் கட்டுரைத்தொடரின் 7 ஆம் பகுதியையும் படியுங்கள். நீட்டளவை  பற்றிய என் கட்டுரைத்தொடர் முழுக்கவும் படித்தால் இன்னும் நல்லது. அதன் தொடர்ச்சியாய் பரப்பளவைக்கும் நான் போகவேண்டும். என்று தொடுவேனென்று தெரியவில்லை.
 
அன்புடன்,
இராம.கி. 
Sent: Wednesday, March 01, 2017 4:01 PM
Subject: Re: [MinTamil] தமிழும் தமிழ் சார்ந்த நிலமும்
 
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
 
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Mar 1, 2017, 9:48:39 AM3/1/17
to மின்தமிழ்


On Wednesday, March 1, 2017 at 2:31:05 AM UTC-8, தேமொழி wrote:

(முற்காலத்தில் எப்படி அளந்தார்கள் எனத் தெரியவில்லை). 


முற்காலத்தில் எப்படி காவதம்/காதம் அளந்தார்கள் என்பதற்கு கல்வெட்டுகளும், இலக்கியங்களும்
நிறைய இருக்கின்றன. அவற்றைக் கொடுத்துள்ளேன். படிக்கலாம்.

கம்பருக்கும் இக் கட்டுரையில் உள்ள பாடல்களுக்கும் ஒரு தொடர்புமில்லை.
சுற்றளவு கணக்கிட்டுப் பார்த்து காதம் என்ன என ஒருவாறு கணிக்கலாம்.

       “வடக்குத்திசை பழனி வான் கீழ்தென்காசி 
குடக்குத்திசை கோழிக்கோடாம்-கடற்கரையின் 
ஓரமோ தெற்காகும் உள்ளெண்பதின்காதம் 
சேரநாட்டெல்லையெனச் செப்பு.”

உ-ம்: இவ் வெண்பாவில் உள்ள ஊர்களின் பெரிமீட்டர் 80 காதம் = ~ 800 மைல் என்ற கணக்கைத்
தரலாம்.

நா. கணேசன் 

N. Ganesan

unread,
Mar 1, 2017, 9:55:58 AM3/1/17
to மின்தமிழ்
On Tuesday, February 28, 2017 at 3:27:55 AM UTC-8, singanenjan wrote:
நல்ல பதிவு. படித்து மகிழ்ந்தேன். 

காதம் பற்றி நிறைய பேசியாயிற்று. ஆனாலும் இந்தப் பாடல்களில் வரும் காதம் எத்தனை கி.மீ. என்று கணக்கிட இயலுமா 



கணக்கிடலாம். இப் பாடல்கள் மிகப் பிற்காலம் - கம்பர் வாக்கு அல்ல. கம்பர், வள்ளுவர், ... என உலவும் பிற்காலப் பாடல்கள் பல.
தேமொழி கட்டுரையில் உள்ள பாடல்களில் சொல்லும் ஊர்களை இணைத்து சுற்றளவு (Circumference) இவ்வளவு காதம் எனப்
பார்க்கலாம்.

NG
 

On Tue, Feb 28, 2017 at 10:58 AM, தேமொழி <jsthe...@gmail.com> wrote:
பாராட்டிற்கு நன்றி திரு. அரிசோனன்.

..... தேமொழி




On Monday, February 27, 2017 at 10:21:44 AM UTC-8, oruarizonan wrote:
நல்ல பதிவு.  பாராட்டுகள் !

ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Mar 1, 2017, 7:01:35 PM3/1/17
to மின்தமிழ்


On Wednesday, March 1, 2017 at 3:31:01 AM UTC-8, மாயோன் wrote:
👏👏👏


நன்றி மாயோன் 

..... தேமொழி 

தேமொழி

unread,
Mar 1, 2017, 7:47:57 PM3/1/17
to மின்தமிழ்


நீங்கள் நாட்டின்  சுற்றளவில் ...
சேரநாடு  =  800 மைல்/ 80 காதம் > இதன்படி ஒரு காதம்  = 10 மைல்
என்று சொல்கிறீர்கள். 
இது சரியான அளவில்லையே !!!!... 
எனக்கு வரும் சேரநாட்டின் சுற்றளவு 610 மைல்கள் ..
அளவுடன் கூடிய படமும் கொடுக்கப்பட்டுள்ளது 

இதே அளவிடும் முறை பிற நாடுகளுக்கும் பொருந்த வேண்டும், 
அத்துடன்  வேறுபாடுகள் இருந்தாலும்  அதிகம் இருக்கக்கூடாது. 

கொடுத்துள்ள  சேர சோழ நாடுகளின் சுற்றளவு  படங்களைப் பார்க்கவும் 
சேரநாடு சுற்றளவு  = 610 மைல்/ 80 காதம் ( இதன்படி ஒரு காதம்  = 7.6 மைல்)
சோழநாடு சுற்றளவு  = 382 மைல்/ 24காதம்  ( இதன்படி ஒரு காதம்  =15.9 மைல்)
இதற்குப் பிறகு பிற நாடுகள் என்ன அளவு  எனத் தொடருவதில் பயனில்லை. 

இதில் எதை எடுத்துக் கொள்ளலாம் 

ஒரு காதம்  = 7.6 மைல் அல்லது  15.9 மைல் அல்லது  இரண்டிற்கும் உள்ள  சராசரி?

***

பொதுவாக வழக்கில் உள்ளது இங்கிருந்து இங்குள்ள தூரம் இவ்வளவு  என்ற முறை.
திருச்சிக்கும் கோவைக்கும் இடையில் இவ்வளவு  தூரம் என்றுதானே சொல்வோம்.

அந்த முறையில் இந்த ஆற்றுக்கும் அந்த ஆற்றுக்கும் இடையில் உள்ள தூரம்  என்ற முறையில் அளந்தேன். 

சோழநாடு: வடக்கில் வட வெள்ளாறு, தெற்கில் தென்வெள்ளாறு  = இவற்றுக்கு இடையில் 24 காதம்.
என்பது தெளிவான எல்லைகள், இதற்கிடைத் தொலைவு ...
சோழநாடு =98மைல்/24காதம்= 4.1 மைல்
இது 
தென்புல அடிப்படையில் 1 காதமென்பது 4.167 மைல்  என்பதுடன் ஒத்து வருகிறது.
அதுபோல 
மதுரை புகார் தொலைவாக  இளங்கோ சொல்லும் 30 காதம் இந்தத் தொலைவுக்கும் ஒத்து வருகிறது 

எல்லைகளுக்கு இடையில் எப்படி அளந்தார்கள் ?  
கடற்கரை ஓரமாக நடந்தா... அல்லது இப்பொழுது சாலை வழி செல்லும் தொலைவு போல ஊர்களுக்கு இடைப்பட்ட தொலைவா? எந்த முறை என்பது  தெளிவாகத் தெரியவில்லை.
உங்களிடம் தகவல் இருந்தால் தரலாம். 

சேரநாடு =254மைல்/80காதம் = 3.2 மைல்
பாண்டிய நாடு =180மைல்/56காதம் = 3.2 மைல்
சோழநாடு =98மைல்/24காதம்= 4.1 மைல்
தொண்டைநாடு =122மைல்/28காதம் = 4.4 மைல்

இடைப்பட்ட தூரம் பாடல்களின் அடிப்படையில் "மூன்று அல்லது நான்கு" வருவதில் சுற்றளவு போல பெருத்த வேறுபாடு இல்லை என்பதைக் காணலாம்.
இருக்கும் வேறுபாடும் குத்துமதிப்பாக எந்த நேர்க்கோட்டில் அளந்தார்கள் என்ற தெளிவில்லாததால் சற்றே மாறுபடுவது.


வெள்ளாறு >> வெள்ளாறு 4.1 போல வருவது தெளிவான அளவு. 
ஆனாலும் அளவிடுவது எந்தப் புள்ளியில் இருந்து?
ஆற்றின் துவக்கமா, இடையில் உள்ள இடமா, அல்லது கழிமுகமா?
ஆனாலும் வேறுபாடு அதிகமில்லை.
சோழநாடு எல்லைகளுக்கு இடைப்பட்ட தொலைவு  இராமகி ஐயாவின் கோணத்தை உறுதி செய்கிறது.

பாடல் எக்காலம் ? அது வேறு  ஒரு ஆய்வு... 
அதன் காலத்தைக் குறித்த என் கேள்வியையும், கம்பர்தான் எழுதினாரா என்ற ஐயங்களும்  கட்டுரையிலும் கொடுக்கப்பட்டுள்ளது.

பாடல் கொடுக்கும்  காதம்  அளவு சிலம்பின் காதம்  அளவுடன் ஒத்துப் போகிறது 
காதம் அளவை வேறு இரு பாடல்களின் உதவியுடன் உறுதி செய்ய உதவியுள்ளது...
சோழநாட்டுப் பயணம் ஒன்றும், சோழ நாட்டின் எல்லைக்குறிப்பும்.

 ..... தேமொழி


தேமொழி

unread,
Mar 1, 2017, 7:49:42 PM3/1/17
to மின்தமிழ்
________

____________

N. Ganesan

unread,
Mar 1, 2017, 8:35:04 PM3/1/17
to மின்தமிழ்
>
நீங்கள் நாட்டின்  சுற்றளவில் ...
சேரநாடு  =  800 மைல்/ 80 காதம் > இதன்படி ஒரு காதம்  = 10 மைல்
என்று சொல்கிறீர்கள். 
இது சரியான அளவில்லையே !!!!... 
எனக்கு வரும் சேரநாட்டின் சுற்றளவு 610 மைல்கள் ..
> அளவுடன் கூடிய படமும் கொடுக்கப்பட்டுள்ளது 


(1) நீங்கள் கொடுத்துள்ள படம் 200 - 300 ஆண்டு முன் புலவர் கையாண்டார் என எப்படிக் கொள்வது?

(2)  வெண்பாக்கள் பலர் இயற்றியவை. ஒருவரே அல்ல.
மேலும், வெண்பாவைப் படித்தால் இரண்டு ஊருக்கு உள்ள தூரத்தை அவர் குறிப்பிடவில்லை
என்பது மிகமிகத் தெளிவு. ஒரு பெரிமீட்டரை அப்புலவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

(3) சேர நாடு படம் எடுத்துக்கொள்ளுங்கள். இதனைப் புலவர் மனத்தில் இருந்த சேரநாடு என யான் கருதவில்லை.

சேரநாடு கொங்குநாடு (பாலக்காட்டுக் கணவாயின் கிழக்குப் பகுதி) உள்ளடக்கியது. அங்கே வஞ்சி மாநகரில்
வாழ்ந்தவர் இளங்கோ அடிகள். 

பழைய காதம் எவ்வளவு எனத் தெரியவில்லை என்கிறீர்கள். அருணகிரிநாதர் கொடுத்துள்ளாரே.
கச்சியப்பரும் (12-ஆம் நூற்றாண்டு), மாதவச் சிவஞான முனிவரும் 18 மைல்கள் என்று கூறுகின்றனர்.

தென்கனரா, கொங்கு சேர்த்து கணக்கிட்டால் 80 காதம் என்பது 12 - 14 மைல் வரும் .

(4) தொண்டை நாட்டுப் படம் தவறு என நினைக்கிறேன். திருவண்ணாமலை மிகப் பிரசித்தி பெற்ற
தலம். சங்க இலக்கியத்தில் அதன் கார்த்திகை தீபம் மூதூர் என்றெல்லாம் உள்ள தலம்.
நடுநாட்டுத் தலம்.  சென்னை - காஞ்சி உள்ளடக்கிய சுமார் 14 - 18 மைல்  X 20 காதம் என்பது
அந்த வெண்பா இயற்றிய புலவரின் கணிப்பு.

இவை போலப் பிறவும் காண்க. இரண்டு ஊருக்கு இடையே உள்ள தூரம் என்று
இவ்வெண்பாக்களை வைத்து காத அளவு கணித்தல் பிழையாகிவிடும் என்பது என் புரிதல்.
சர்க்கம்பெரென்ஸ் பாடுபவை இவ் வெண்பாக்கள்.

10 - 20 மைல் காத அளவு வரும். 

நா. கணேசன்

தேமொழி

unread,
Mar 1, 2017, 11:48:27 PM3/1/17
to மின்தமிழ்


On Wednesday, March 1, 2017 at 5:35:04 PM UTC-8, N. Ganesan wrote:
>
நீங்கள் நாட்டின்  சுற்றளவில் ...
சேரநாடு  =  800 மைல்/ 80 காதம் > இதன்படி ஒரு காதம்  = 10 மைல்
என்று சொல்கிறீர்கள். 
இது சரியான அளவில்லையே !!!!... 
எனக்கு வரும் சேரநாட்டின் சுற்றளவு 610 மைல்கள் ..
> அளவுடன் கூடிய படமும் கொடுக்கப்பட்டுள்ளது 



இனி வரிக்கு வரி பதில் அளிக்கிறேன்... இதில் நான் முன்பின் முரணாக மாற்றிச் சொல்லியிருந்தால் அதைச் சுட்டிக் காட்டுங்கள். இந்த வரிகள் கட்டுரையில் இருந்து.

‘தனிப்பாடற்றிரட்டு’ நூலில் கம்பரின் தனிப்பாடல்கள் எனத் தொகுக்கப்பட்டுள்ள  பாடல்கள் 69. கம்பர் (கி.பி. 1180-1250) 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.  சோழமன்னனின் அவையை அலங்கரித்த, 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த   ‘ஒட்டக்கூத்தர்’,  நளவெண்பா பாடிய ‘புகழேந்திப் புலவர்’ மற்றும் ‘ஒளவையார்’ ஆகியோருடன் போட்டியிட்டும், தனது மகன் அம்பிகாபதியுடனும் சோழ மன்னனுடனும் பாடிய பாடல்கள் என இத்தொகுப்பில் கம்பரின் பாடல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.  இக்குறிப்புகள்  இப்பாடல்கள் எழுதியவரைக் கம்பர் எனச் சுட்டுகின்றன.  எனினும் எழுத்து நடை, இலக்கிய நயம் கொண்டு இப்பாடல்கள் ‘கம்பராமாயணம்’ இயற்றிய கம்பரால் பாடப்பட்டவையல்ல என்ற கருத்தும் உள்ளது.  மேலும் இடைக்காலச் சோழர்கள் காலத்திலேயே,  அதாவது, 9 ஆம் நூற்றாண்டிலேயே  பல்லவர் ஆட்சி முடிவு பெற்றுவிட்டது. கம்பர் காலம் 12 ஆம் நூற்றாண்டு என்றால் அது பிற்காலம்.  சாளுக்கிய சோழர்கள், குறிப்பாக 3 ஆம் குலோத்துங்க சோழன் காலம்.  ஒட்டக்கூத்தர், புகழேந்திப் புலவர்கள் காலத்தில் கம்பர் வாழ்ந்ததாகக் கூறப்படும் கதைகளில் உண்மை இருக்கலாம் என்றால் அது 2ஆம் குலோத்துங்க சோழன் காலம் எனக் கொள்ள வேண்டும்.  இக்காலத்தில் பல்லவ நாடு பேர் சொல்லும் வகையில்  சிறப்புடன் இருக்கவில்லை என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். 
 
(1) நீங்கள் கொடுத்துள்ள படம் 200 - 300 ஆண்டு முன் புலவர் கையாண்டார் என எப்படிக் கொள்வது?


கொள்ளத் தேவையில்லை .. 
பாடலின் ஆசிரியர் கம்பர் என்ற  பெயர்க்குறிப்புடன் ஒட்டக்கூத்தர் சோழ மன்னர் ஔவையார் காலத்துடன் தொடர்புபடுத்தி தமிழக மன்னர்களின் நிலங்களின் எல்லையைக் குறிக்கும் பாடல். அவ்வளவே.
பாடல்கள்  கம்பர்  காலம் என சுட்டுவதைக் குறித்து நானும் கேள்வி எழுப்பியுள்ளேன். எனது காரணம் அக்காலத்தில் பல்லவர் ஆட்சியில் இல்லை. இருப்பினும் தொடர்ந்து அப்ள்ளவநாடு என்று கருதப்பட்டும் இருந்திருக்கலாம்.
 

(2)  வெண்பாக்கள் பலர் இயற்றியவை. ஒருவரே அல்ல.
மேலும், வெண்பாவைப் படித்தால் இரண்டு ஊருக்கு உள்ள தூரத்தை அவர் குறிப்பிடவி
 
///வெண்பாக்கள் பலர் இயற்றியவை. ஒருவரே அல்ல.///
சேர சோழ பாண்டிய பல்லவர் என்ற பாடல்களுக்கு "கம்பர்" என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. சோழ நாட்டுப்பாடலைப் பாடியவர் ஔவையார் என்ற குறிப்பும் உள்ளத்காகத் தெரிகிறது.  இது குறித்து நான் மட்டும் அல்ல எழுதியவர் நடை இலக்கிய நயம் குறித்து பிறருக்கும் கேள்விகள் இருக்கிறது என்பதையும் விக்கிபீடியா வரை கொடுத்துள்ளர்கள்.  கொங்கு நாட்டுக்கு இது போன்ற ஆசிரியர் குறிப்போ காலக்குறிப்போ நான் தேடியவரை கிடைக்கவும் இல்லை.  இவற்றைப் பாடியவர் ஒருவரா? பலரா? எக்காலத்தவர்? என்ற வகையிலும் நான் கட்டுரையை அமைக்கவில்லை.  எனது நோக்கம் கிடைக்கும் தனிப்பாடல்கள் குறிக்கும் தமிழக அரசுகளின் நிலங்கள் பற்றிய குறிப்புகளைக் காட்டுவது மட்டுமே. படம் கூட அதன் முதன்மைப் பகுதி கிடையாது அது தனிப்பட்ட ஆர்வத்தில் பாடல் குறிப்புகளைக் கொண்டு  வரைந்து பார்த்தது.  இதை நான் கட்டுரையில் முடிவுரையாகவும் கீழ்வருமாறு கொடுத்துள்ளேன். 

கிடைக்கும் பாடல்களில் இருந்து பொதுவாக எல்லைகளைக் குறிக்கும் பண்டைய  தமிழ் நிலத்தின் ஒரு  வரைபடத்தை யாரும் வரையலாம்.  ஆனால் நாட்டின் எல்லைகள் காலத்திற்குக் காலம் வேறுபடும் என்பதும், தொல்லியல் சான்றுகள் மூலம் பல்லவ மன்னர் கட்டிய கோவில் சோழ நாட்டிலும் கொங்கு நாட்டிலும் அமைந்திருப்பதும்; பிற்காலத்தில் கடல் கடந்து விரிந்த சோழப்பேரரசு களப்பிரர் காலத்தில் காணாமல் போயிருந்ததும்  நாட்டின் எல்லையைக் குறிக்கும் வரைபடத்திற்கு ‘காலக் குறிப்பு’ எவ்வளவு  முக்கியமானது என்பதைக் காட்டி நிற்கும்.  எனினும், ஒரு பொதுவான  புரிதலுக்குத் தனிப்பாடல்களில் கிடைக்கும் தகவல் அடிப்படையில் ஒரு வரைபடத்தையும் (பார்க்க படம்: 2) வரைந்து சேர சோழ பாண்டிய பல்லவ மன்னர்களின் ஆட்சிக்குட்பட்டிருந்த நிலப்பரப்புகளை அறியலாம்.
 
///மேலும், வெண்பாவைப் படித்தால் இரண்டு ஊருக்கு உள்ள தூரத்தை அவர் குறிப்பிடவில்லை
என்பது மிகமிகத் தெளிவு. ஒரு பெரிமீட்டரை அப்புலவர்கள் குறிப்பிடுகிறார்கள்.///

இந்த "சுற்றளவு" அடிப்படையில் சென்றால், "நாட்டின் சுற்றளவு இரு வேறு நாடுகளுக்கு அளவிடும் பொழுது .. அது வெவ்வேறு அளவுகளைக் காத அளவு என்று குறிப்பிடுவதைக் கவனிக்க வேண்டும் (ஒரு காதம் = 7.6 மைல் [சேரநாடு] அல்லது  15.9 [சோழநாடு]) ".  
இதற்கு மறுப்பு சொன்னால்  மீண்டும் பலர் பல காலத்தில் எழுதிய பாடல், நாட்டு எல்லைக்குறிப்பு, காலக் குறிப்பு தவறு என்ற விவாதத்தைத்தான் முன்வைக்க வேண்டியிருக்கும். 
எக்காலத்திலும் மாறாதிருக்கும் இயற்கை எல்லைகள்....கரை உள்ளவாங்கியோ விரிந்திருந்தோ சற்றே மாறியிருக்கக்கூடிய குமரி முனை, தடம் சிறிதே  மாறினாலும் சற்றேறக்குறைய பழைய தடத்தின்  அருகிலேயே ஓடும் ஆறுகளும்  தொலைவைக் கணக்கிட சரியான முறை. ஒருகாதம் மாறியிருந்தாலும் பெரிய வேறுபாட்டைக் கொண்டு வராது. மேலும் இந்த முறையைக் கடைப்பிடித்ததில் ஒரு காதம் என்பது ~ 3  முதல் ~5 (± 1) மைல் என்று காத  அளவும் வருவது இந்த முறை தவறில்லை என்றும் காட்டுகிறது. 
நீங்கள் சொல்லும் முறையில்,  சுற்றளவு கொண்டு அனைத்து  நாடுகளும் குறிக்கும் காத அளவு = x மைல் இது போன்றே "குறைந்த வேறுபாடுகளுடன் இருந்தால்"  அதுவும் காத அளவின் மாற்றுக் கோணத்திற்கு உதவும். ஆனால்,  குளித்தலைக்குப் பதில்  கோவை மதுக்கரையை மேற்கெல்லையாக  கொண்டு சோழ நாட்டின் எல்லை சுற்றளவை அளந்திருந்தால் ஒரு காதத்தின் அளவில் எவ்வளவு பெரிய  மாறு பாடு வந்திருக்கும்? இப்பொழுதே  அது ஒருகாதம் என்பதை 15 மைல் என்று உயர்த்திவிட்டது. 


(3) சேர நாடு படம் எடுத்துக்கொள்ளுங்கள். இதனைப் புலவர் மனத்தில் இருந்த சேரநாடு என யான் கருதவில்லை.

சேரநாடு கொங்குநாடு (பாலக்காட்டுக் கணவாயின் கிழக்குப் பகுதி) உள்ளடக்கியது. அங்கே வஞ்சி மாநகரில்
வாழ்ந்தவர் இளங்கோ அடிகள். 

மீண்டும்... காலக் குறிப்பு கொடுக்கப்படாத ஒரு பாடலில் காலக்குறிப்பைத்  திணிப்பது உதவாது.  பாடல்வரிகளை பாடல் வரிகள் சொல்லும் குறிப்பாகவே  எடுத்துக் கொள்வோம்.  
இங்கு சேர நாட்டு வட எல்லையை உறுதிப்படுத்த (corroboration) கொங்கு நாட்டுப் பாடலும் உதவுகிறது.

சேரநாடு பழனியை வடக்கெல்லை என்கிறது. கொங்குநாடு பழநியை தெற்கெல்லை எனக் குறிப்பிடுகிறது. 

எனவே இப்பாடல்களின் குறிப்புப்படி பழநி சேர கொங்கு நாடுகளுக்கு இடைப்பட்ட எல்லை.  ஆனால் இப்பாடல்கள் குறிப்பது எந்தக் காலம்? கம்பர்  பாடிய காலமா?  தொண்டை நாட்டைப் பாடிய கம்பர் கொங்கு நாட்டைப் பாடாது ஏன் விட்டார். இல்லை... கொங்கு பாடலை எழுதிய  பெயர் தெரியாத புலவரும் கம்பர் என்று கூறப்படும் அதே புலவரா? கேள்விகள் பல உள்ளன. ஆனால் இவையெல்லாம் நமக்குத் தெரியாது. 

பாடல்களில்   தெரிவது எல்லைக் குறிப்புகள் மட்டுமே. 
 

பழைய காதம் எவ்வளவு எனத் தெரியவில்லை என்கிறீர்கள். அருணகிரிநாதர் கொடுத்துள்ளாரே.
கச்சியப்பரும் (12-ஆம் நூற்றாண்டு), மாதவச் சிவஞான முனிவரும் 18 மைல்கள் என்று கூறுகின்றனர்.

தென்கனரா, கொங்கு சேர்த்து கணக்கிட்டால் 80 காதம் என்பது 12 - 14 மைல் வரும் .

யாருமேஎந்த அளவும்  கொடுக்கட்டுமே, அதனால் என்ன!!! 
ஆய்வு என்ற முறைக்கு எடுத்துச் செல்ல விரும்பினால் முன்னிருந்தவற்றை  மீள்பார்வை செய்வதுதானே வழக்கம். 
தென் கன்னடத்தையும் கொங்குவையும் நாம் ஏன் சேர்த்துக் கணக்கிட வேண்டும். ஏற்கனவே தொண்டை நாட்டின் மேற்கெல்லை எனக் குறிப்பிடப்படும் பவள மலை கொங்கு நாட்டில் இருக்கிறது. இதனை///ஆனால் நாட்டின் எல்லைகள் காலத்திற்குக் காலம் வேறுபடும் என்பதும், தொல்லியல் சான்றுகள் மூலம் பல்லவ மன்னர் கட்டிய கோவில் சோழ நாட்டிலும் கொங்கு நாட்டிலும் அமைந்திருப்பதும்; /// என்று காட்டியுள்ளேன், எல்லை குறித்த படம் வரைந்த பொழுது பவளமளையைக் குறித்து அதனை பல்லவ எல்லாவ்யாகக் குறிக்கவில்லை. ஏனெனில் மற்றொரு பாடல் அதற்கும் வடக்கே உள்ள பகுதியையே, கொங்கு என்று குறிப்பிடுகிறது.  இது போன்ற வேறுபாடுகளினால் தான். உறுதியாகக் கூறமுடியாத காரணத்தினால்தான் நான் கொங்கு சுற்றளவை கணக்கிடுவதைத்  தவிர்த்துவிட்டேன். 
 

(4) தொண்டை நாட்டுப் படம் தவறு என நினைக்கிறேன். திருவண்ணாமலை மிகப் பிரசித்தி பெற்ற
தலம். சங்க இலக்கியத்தில் அதன் கார்த்திகை தீபம் மூதூர் என்றெல்லாம் உள்ள தலம்.
நடுநாட்டுத் தலம்.  சென்னை - காஞ்சி உள்ளடக்கிய சுமார் 14 - 18 மைல்  X 20 காதம் என்பது
அந்த வெண்பா இயற்றிய புலவரின் கணிப்பு.

மீண்டும், என் நோக்கம் தொலைவை அளவிடுவது கிடையாது.  பாடல் குறிப்புகளுடன் நிறுத்திக் கொள்வது.  
தொண்டை நாட்டு எல்லை ...வடக்கில் வேங்கடம், தெற்கில் தென்பெண்ணை.  இவற்றுக்கு இடையே எந்த ஊர் இருந்தாலும் அது பல்லவநாடு. 
திருவண்ணாமலை நான் கொடுத்த படத்திலும் தொண்டை நாட்டின் எல்லைக்குள்தான் (வேங்கடம்... தென்பெண்ணை இடைப்பட்ட நிலத்தில்தான்) இருக்கிறது. 
அவ்வாறே  சென்னை - காஞ்சியும் உள்ளடகித்தான் உள்ளது.
வேங்கடம்> தென்பெண்ணை இடைப்பட்ட தொலைவு ~ 120 
 இதனை 20 காதம் என்கிறார் புலவர் 

120  ÷ 20 = 6 மைல் 
பிறபாடல்களின் கணக்குப்படி ஒரு காதம் ~3 அல்லது ~4 மைல் என வரும்பொழுது, இதில்  பாடபேதம்  இருக்க வாய்ப்புள்ளதோ என 28 எனக்  கணக்கிட்ட பொழுது 

120  ÷ 28 = 4.2 என பிற அளவுகளுடன் ஒத்து வந்தது.
எனவே அதையும் குறிப்பிட்டேன். 
வெண்பா இலக்கணம் பற்றிய கோணத்தில் சிந்திப்பதுடன், பாடல்களில் பலவும்   பாடபேதத்துடன்தான்  கிடைத்துள்ளது என்பதையும்  கவனிக்க வேண்டும். 
 

இவை போலப் பிறவும் காண்க. இரண்டு ஊருக்கு இடையே உள்ள தூரம் என்று
இவ்வெண்பாக்களை வைத்து காத அளவு கணித்தல் பிழையாகிவிடும் என்பது என் புரிதல்.
சர்க்கம்பெரென்ஸ் பாடுபவை இவ் வெண்பாக்கள். 

10 - 20 மைல் காத அளவு வரும். 
 
உங்கள் கோணத்தின்படி அளவிட்டு காட்ட முடியுமா?  நீங்களும் உங்கள் அளவை வரைந்து காட்டி உறுதிப் படுத்தலாமே. 
நான் சுற்றளவைக் கொண்டு இரண்டு நாடுகளுக்கு ...குறிப்பாக பாடல் குறிப்புகளைக் கொண்டு ... கணக்கிட்டு வேறு வேறு அளவு ஒரு காதம் என வருவதைக் காட்டியுள்ளேன்.  
ஆனால் பாடல் குறிப்புகளுக்கு மேல் எதையும் புகுத்த விரும்பவில்லை. 

தேமொழி

unread,
Mar 1, 2017, 11:49:33 PM3/1/17
to மின்தமிழ்
படம் இணைக்க மறந்தேன்...


..... தேமொழி

N. Ganesan

unread,
Mar 2, 2017, 5:41:38 AM3/2/17
to மின்தமிழ்
2017-03-01 20:48 GMT-08:00 தேமொழி <jsthe...@gmail.com>:


பழைய காதம் எவ்வளவு எனத் தெரியவில்லை என்கிறீர்கள். அருணகிரிநாதர் கொடுத்துள்ளாரே.
கச்சியப்பரும் (12-ஆம் நூற்றாண்டு), மாதவச் சிவஞான முனிவரும் 18 மைல்கள் என்று கூறுகின்றனர்.

தென்கனரா, கொங்கு சேர்த்து கணக்கிட்டால் 80 காதம் என்பது 12 - 14 மைல் வரும் .

யாருமேஎந்த அளவும்  கொடுக்கட்டுமே, அதனால் என்ன!!! 
ஆய்வு என்ற முறைக்கு எடுத்துச் செல்ல விரும்பினால் முன்னிருந்தவற்றை  மீள்பார்வை செய்வதுதானே வழக்கம். 
தென் கன்னடத்தையும் கொங்குவையும் நாம் ஏன் சேர்த்துக் கணக்கிட வேண்டும். ஏற்கனவே தொண்டை நாட்டின் மேற்கெல்லை எனக் குறிப்பிடப்படும் பவள மலை கொங்கு நாட்டில் இருக்கிறது. இதனை///ஆனால் நாட்டின் எல்லைகள் காலத்திற்குக் காலம் வேறுபடும் என்பதும், தொல்லியல் சான்றுகள் மூலம் பல்லவ மன்னர் கட்டிய கோவில் சோழ நாட்டிலும் கொங்கு நாட்டிலும் அமைந்திருப்பதும்; /// என்று காட்டியுள்ளேன், எல்லை குறித்த படம் வரைந்த பொழுது பவளமளையைக் குறித்து அதனை பல்லவ எல்லாவ்யாகக் குறிக்கவில்லை. ஏனெனில் மற்றொரு பாடல் அதற்கும் வடக்கே உள்ள பகுதியையே, கொங்கு என்று குறிப்பிடுகிறது.  இது போன்ற வேறுபாடுகளினால் தான். உறுதியாகக் கூறமுடியாத காரணத்தினால்தான் நான் கொங்கு சுற்றளவை கணக்கிடுவதைத்  தவிர்த்துவிட்டேன். 
 

யாருமேஎந்த அளவும்  கொடுக்கட்டுமே, அதனால் என்ன!!! 
??

ஊர் பேர் தெரியாத ~ 200 வருடம் ஆன வெண்பாவை வைத்து காதம் என்பது சரியாகக் கணிக்கமுடியாது. அதுவும் உங்கள் கட்டுரையில் இரண்டு இடங்களுக்கு ஆன
இடைதூரம் வைத்துச் சொல்லியுள்ளீர்கள். ஆனால், வெண்பாக்கள் ஒரு சர்க்கம்பெரன்ஸ் சொல்கிறது எனக் குறிப்பிட்டேன்.


அருணகிரிநாதர், கச்சியப்ப சிவாச்சார்யர் (12-ஆம் நூற்.), மாதவச் சிவஞான யோகிகள், கந்தசாம்பி புலவர் (பூவணப் புராணம், ....) எல்லோரும் காதம் இவ்வளவு எனக் கொடுத்துள்ளார்கள். இவர்கள் புகழ்மிக்க தமிழின் ஆசிரியர்கள். காலமும், படைப்பும் உலகம் அறியும். கர்நாடகத்தில் இவ் வார்த்தையைக் கேட்ட இளங்கோ அடிகள் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்துகிறார்: காதம்/காவதம் இளங்கோ அடிகள் சமண சமய போதனைக்காக கவுந்தி அடிகள் என்ற குரத்தியை அங்கே சந்திக்கவைக்கிறார். காதம்/காவதம் = ~12 மைல் அங்கேயும் இருக்கிறது. காதம் 10 மைல் என்று பாரதியார் பயன்படுத்தியுள்ளார்: http://nganesan.blogspot.com/2016/11/speed-of-light-in-bharatiyar-poem.html 

எனவே, வெண்பாக்கள் குறிப்பிடும் சுற்றளவு 80 காதம் என்பது சேரநாடு (கொங்கு உள்ளிட்டது), பாண்டிநாடு 56 காதம், சோழம் - 24 காதம், தொண்டை - 20 காதம். இவை Core regions' perimeter. 

நா. கணேசன் 

N. Ganesan

unread,
Mar 2, 2017, 6:10:04 AM3/2/17
to மின்தமிழ்


On Thursday, March 2, 2017 at 2:41:38 AM UTC-8, N. Ganesan wrote:


2017-03-01 20:48 GMT-08:00 தேமொழி <jsthe...@gmail.com>:


பழைய காதம் எவ்வளவு எனத் தெரியவில்லை என்கிறீர்கள். அருணகிரிநாதர் கொடுத்துள்ளாரே.
கச்சியப்பரும் (12-ஆம் நூற்றாண்டு), மாதவச் சிவஞான முனிவரும் 18 மைல்கள் என்று கூறுகின்றனர்.

தென்கனரா, கொங்கு சேர்த்து கணக்கிட்டால் 80 காதம் என்பது 12 - 14 மைல் வரும் .

யாருமேஎந்த அளவும்  கொடுக்கட்டுமே, அதனால் என்ன!!! 
ஆய்வு என்ற முறைக்கு எடுத்துச் செல்ல விரும்பினால் முன்னிருந்தவற்றை  மீள்பார்வை செய்வதுதானே வழக்கம். 
தென் கன்னடத்தையும் கொங்குவையும் நாம் ஏன் சேர்த்துக் கணக்கிட வேண்டும். ஏற்கனவே தொண்டை நாட்டின் மேற்கெல்லை எனக் குறிப்பிடப்படும் பவள மலை கொங்கு நாட்டில் இருக்கிறது. இதனை///ஆனால் நாட்டின் எல்லைகள் காலத்திற்குக் காலம் வேறுபடும் என்பதும், தொல்லியல் சான்றுகள் மூலம் பல்லவ மன்னர் கட்டிய கோவில் சோழ நாட்டிலும் கொங்கு நாட்டிலும் அமைந்திருப்பதும்; /// என்று காட்டியுள்ளேன், எல்லை குறித்த படம் வரைந்த பொழுது பவளமளையைக் குறித்து அதனை பல்லவ எல்லாவ்யாகக் குறிக்கவில்லை. ஏனெனில் மற்றொரு பாடல் அதற்கும் வடக்கே உள்ள பகுதியையே, கொங்கு என்று குறிப்பிடுகிறது.  இது போன்ற வேறுபாடுகளினால் தான். உறுதியாகக் கூறமுடியாத காரணத்தினால்தான் நான் கொங்கு சுற்றளவை கணக்கிடுவதைத்  தவிர்த்துவிட்டேன். 
 

யாருமேஎந்த அளவும்  கொடுக்கட்டுமே, அதனால் என்ன!!! 
??


காதம்/காவதம்:
’பாரதியின் வேதமுகம்’ போன்ற நூல்களின் ஆசிரியர் சைவத்திரு. சு. கோதண்டராமன் மக்கள் வழக்கிலே பலகாலமாக காத அளவு பற்றி உள்ள
பழமொழியைக் குறிப்பிட்டுள்ளார்:

நாகைக்கும் காரைக்கும் காதம், 
காரைக்கும் கடையூருக்கும் காதம்,
கடையூருக்கும் காழிக்கும் காதம், 
காழிக்கும் தில்லைக்கும் காதம் என்று
ஒரு வழக்கு அந்தப் பகுதிகளில்- நாகப்பட்டினம், காரைக்கால்,
திருக்கடையூர், சீர்காழி, சிதம்பரம்- கேட்டிருக்கிறேன்.
சொல்லப்பட்ட ஊர்களுக்கு இடையேயுள்ள தூரம்
ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட 20 கிலோமீட்டர் உள்ளது.”

N. Ganesan

unread,
Mar 2, 2017, 6:45:42 AM3/2/17
to மின்தமிழ், vallamai


On Wednesday, March 1, 2017 at 4:47:57 PM UTC-8, தேமொழி wrote:


பாடல் எக்காலம் ? அது வேறு  ஒரு ஆய்வு... 
அதன் காலத்தைக் குறித்த என் கேள்வியையும், கம்பர்தான் எழுதினாரா என்ற ஐயங்களும்  கட்டுரையிலும் கொடுக்கப்பட்டுள்ளது.

பாடல் கொடுக்கும்  காதம்  அளவு சிலம்பின் காதம்  அளவுடன் ஒத்துப் போகிறது 
காதம் அளவை வேறு இரு பாடல்களின் உதவியுடன் உறுதி செய்ய உதவியுள்ளது...
சோழநாட்டுப் பயணம் ஒன்றும், சோழ நாட்டின் எல்லைக்குறிப்பும்.


தவறான முடிவுகளுக்கு வந்துள்ளீர்கள். சிலம்பின் காத அளவுக்கு அதன் காலத்துக்கு நெருங்கிய சான்றுகளைப் பார்த்தால் தெரியும். அவற்றைக் கொடுத்துள்ளேன்.

இவ் வெண்பாக்களில் நீங்கள் எடுக்கும் இரண்டு இடங்களின் தூரம் என்று கணக்கிடச் சொல்வதில்லை, வெண்பாக்கள் குறிப்பிடும் சுற்றளவு 80 காதம் என்பது சேரநாடு (கொங்கு உள்ளிட்டது), பாண்டிநாடு 56 காதம், சோழம் - 24 காதம், தொண்டை - 20 காதம். இவை Core regions' perimeter.

> புகாருக்கும் மதுரைக்கும்  ஒரு நேர்க்கோடிழுத்தால் சற்றொப்ப 30 காதம் அல்லது ~140 மைல்கள். 

> இதிலிருந்து கண்ணகியும் கோவலனும் 2 ஆவது  தேனிலவுக்கு குடகுக்குப் பயணமாகவில்லை என்பது உறுதியாகிறது. 

??

இரண்டாவது ஹனிமூன் என்றா இளங்கோ அடிகள் பாடியுள்ளார்? சமண சமயத்தை அறிய கவுந்தி அடிகளைச் சந்திக்க
செல்கிறார்கள் கோவல கண்ணகியர். 30 காதம் என்பது ~360 மைல்கள். நாடுகாண் காதையில் உள்ள இடங்களின்
செய்திகளைப் பார்க்கவும். இரண்டு அரங்கங்களை (சீரங்கம்   - காவிரியின் நடுவிலே உள்ள பெரிய அரங்கம்),
பின்னர் திருவரங்கம் (காடுகாண் காதை)  - ஒன்றில் சமணம், இரண்டாவதில் ஸ்ரீவைஷ்ணவம் எனக் குறித்துள்ளார்.

நா. கணேசன்

 
 ..... தேமொழி


தேமொழி

unread,
Mar 2, 2017, 12:03:16 PM3/2/17
to மின்தமிழ்


On Thursday, March 2, 2017 at 3:45:42 AM UTC-8, N. Ganesan wrote:


On Wednesday, March 1, 2017 at 4:47:57 PM UTC-8, தேமொழி wrote:




> புகாருக்கும் மதுரைக்கும்  ஒரு நேர்க்கோடிழுத்தால் சற்றொப்ப 30 காதம் அல்லது ~140 மைல்கள். 

> இதிலிருந்து கண்ணகியும் கோவலனும் 2 ஆவது  தேனிலவுக்கு குடகுக்குப் பயணமாகவில்லை என்பது உறுதியாகிறது. 

??

இரண்டாவது ஹனிமூன் என்றா இளங்கோ அடிகள் பாடியுள்ளார்? சமண சமயத்தை அறிய கவுந்தி அடிகளைச் சந்திக்க
செல்கிறார்கள் கோவல கண்ணகியர். 

இங்கு நான் பகடி செய்வதாக நினைத்து "2 ஆவது  தேனிலவுக்கு" என்று  குறிப்பிட்டது...நீங்கள் ஒருமுறை குறிப்பிட்டதைத்தான். 

நீங்கள் கூறுவது போல  கண்ணகி மதுரை பயணம் செய்யும்பொழுது புகாரில் இருந்து சுற்றி வளைத்து குடகு செல்ல வேண்டிய காரணம் என்ன என்று  ஒருமுறை  உங்களைக் கேட்டதற்கு, கோவலன்  மாதவியைப் பிரிந்த பிறகு கண்ணகியை சமதனைப்படுத்தும் நோக்கில் குடகுக்கு அழைத்துச் சென்றான் என்று (விளையாட்டாகத்தான்)  குறிப்பிட்டீர்கள்.  

இதைக் குறித்து நான் முன்னரும் இங்கு ..9/18/16
குறிப்பிட்டுள்ளேன். 

ஆனால் நீங்கள் கூறியதை தேடி எடுப்பது அவ்வளவு சுலபமாக இல்லை.  பல இழைகளிலும் சிலம்பு, மதுரை, கண்ணகி, கோவலன், கவுந்தி, குடகு பயணம் என்று நீங்கள் கூறுவது  வருகிறது.  முடிந்தவரை தேடி எடுத்து காட்ட எண்ணம் உள்ளது.

ஆனால் தேனிலவுக்குப் போனதாக இளங்கோவடி குறிப்பிடவில்லை  என்பதை சிலம்பு கதை அறிந்த தமிழகத்தின் சிறு குழந்தையும் அறியும். 
அவ்வாறே கவுந்தியை சந்திக்க அவர்கள் குடகு சென்றார்கள் என்பதை இளங்கோவடிகள் குறிப்பிடவில்லை என்பதையும் சிலம்பு அறிந்தவர்கள் அறிவார்கள்.

இந்த தேனிலவு குறிப்பு  உங்களைக்  குறித்து  நான் கொடுத்தது, ஆனால்  "இரண்டாவது ஹனிமூன் என்றா இளங்கோ அடிகள் பாடியுள்ளார்? " என்று என் மீதே திரும்பும் என நான் எதிர்பார்க்கவில்லை.

..... தேமொழி

தேமொழி

unread,
Mar 2, 2017, 12:31:27 PM3/2/17
to மின்தமிழ்


On Thursday, March 2, 2017 at 2:41:38 AM UTC-8, N. Ganesan wrote:


2017-03-01 20:48 GMT-08:00 தேமொழி <jsthe...@gmail.com>:


பழைய காதம் எவ்வளவு எனத் தெரியவில்லை என்கிறீர்கள். அருணகிரிநாதர் கொடுத்துள்ளாரே.
கச்சியப்பரும் (12-ஆம் நூற்றாண்டு), மாதவச் சிவஞான முனிவரும் 18 மைல்கள் என்று கூறுகின்றனர்.

தென்கனரா, கொங்கு சேர்த்து கணக்கிட்டால் 80 காதம் என்பது 12 - 14 மைல் வரும் .

யாருமேஎந்த அளவும்  கொடுக்கட்டுமே, அதனால் என்ன!!! 
ஆய்வு என்ற முறைக்கு எடுத்துச் செல்ல விரும்பினால் முன்னிருந்தவற்றை  மீள்பார்வை செய்வதுதானே வழக்கம். 
தென் கன்னடத்தையும் கொங்குவையும் நாம் ஏன் சேர்த்துக் கணக்கிட வேண்டும். ஏற்கனவே தொண்டை நாட்டின் மேற்கெல்லை எனக் குறிப்பிடப்படும் பவள மலை கொங்கு நாட்டில் இருக்கிறது. இதனை///ஆனால் நாட்டின் எல்லைகள் காலத்திற்குக் காலம் வேறுபடும் என்பதும், தொல்லியல் சான்றுகள் மூலம் பல்லவ மன்னர் கட்டிய கோவில் சோழ நாட்டிலும் கொங்கு நாட்டிலும் அமைந்திருப்பதும்; /// என்று காட்டியுள்ளேன், எல்லை குறித்த படம் வரைந்த பொழுது பவளமளையைக் குறித்து அதனை பல்லவ எல்லாவ்யாகக் குறிக்கவில்லை. ஏனெனில் மற்றொரு பாடல் அதற்கும் வடக்கே உள்ள பகுதியையே, கொங்கு என்று குறிப்பிடுகிறது.  இது போன்ற வேறுபாடுகளினால் தான். உறுதியாகக் கூறமுடியாத காரணத்தினால்தான் நான் கொங்கு சுற்றளவை கணக்கிடுவதைத்  தவிர்த்துவிட்டேன். 
 

யாருமேஎந்த அளவும்  கொடுக்கட்டுமே, அதனால் என்ன!!! 
??

இங்கு நான் குறிப்பிட்டது ஆய்வின் முறையில்  ஒருவர் அணுக விரும்பினால் அனைத்தையும் ஒப்பிட்டு பார்க்கும் முறையை. 

"அருணகிரிநாதர், கச்சியப்ப சிவாச்சார்யர் (12-ஆம் நூற்.), மாதவச் சிவஞான யோகிகள், கந்தசாம்பி புலவர் (பூவணப் புராணம், ....) எல்லோரும் காதம் இவ்வளவு எனக் கொடுத்துள்ளார்கள். இவர்கள் புகழ்மிக்க தமிழின் ஆசிரியர்கள்" "காதம் 10 மைல் என்று பாரதியார் பயன்படுத்தியுள்ளார்" என்பத்தைஎல்லாம் மறுக்கும் நோக்கில் இல்லை. 

 

ஊர் பேர் தெரியாத ~ 200 வருடம் ஆன வெண்பாவை வைத்து காதம் என்பது சரியாகக் கணிக்கமுடியாது.

என்று குறிப்பிடும் நீங்கள் மறு இழையிலேயே
மக்கள் வழக்கிலே பலகாலமாக காத அளவு பற்றி உள்ள
பழமொழியைக் குறிப்பிட்டுள்ளார்:

நாகைக்கும் காரைக்கும் காதம், 
காரைக்கும் கடையூருக்கும் காதம்,
கடையூருக்கும் காழிக்கும் காதம், 
காழிக்கும் தில்லைக்கும் காதம்

என்று அதனை ஏற்றுக் கொள்வது முன்னுக்குப்பின் முரண்.  

ஊர் பேர் தெரியாத ~ 200 வருடம் ஆன வெண்பாவைவிட பழமொழி  சிறந்ததா?  அது போன்ற வழக்கில் உள்ளதைத்தானே பாடிய புலவரும் பாடியிருப்பார். 

 ~ 200 பழைய பாடல் என்று எதை வைத்து கணக்கிடுகிறீர்கள்? தனிப்பாடல்  நூல் வெளியான காலத்தையா?  அல்லது பாடல் எழுதிய காலம் குறித்த குறிப்பு எங்கு கிடைத்தது?




அதுவும் உங்கள் கட்டுரையில் இரண்டு இடங்களுக்கு ஆன
இடைதூரம் வைத்துச் சொல்லியுள்ளீர்கள். ஆனால், வெண்பாக்கள் ஒரு சர்க்கம்பெரன்ஸ் சொல்கிறது எனக் குறிப்பிட்டேன்.

ஊரின் சுற்றளவை விட்டு தொலைவை அளவிடும் முறையில் எனக்கும்ஒப்புதல் இல்லை.

ஆனால் சுற்றளவு கொண்ட ஒப்பீட்டில் வேறு வேறு அளவுகள் வருவதைக் காட்டியுள்ளேன்.  
நடைமுறையில் ஊருக்கு ஊர் இடப்பட்ட தொலைவை நாம்  சொல்வது போல..அதாவது நீங்கள் கொடுக்கும் பழமொழிபாடல் போல ... அளவிட முயன்றேன்.  
நீங்கள் எதற்காக   வடக்கு தெற்கு எல்லைகள், ஏன் கிழக்கு மேற்கு எல்லைகளுக்கு இடையில் அளவிடவில்லை என்று கேட்டிருக்கலாம்.  மேற்கில் கடல், கிழக்கில் கடல் என்பது ஒரு நிலையான புள்ளியைக் கொடுக்கவில்லை. இதை ஆற்றை எல்லையாகக் குறித்த பொழுதும் எந்த இடத்தை எடுத்துக் கொள்வது என்று கேட்டுள்ளேன். 


 


அருணகிரிநாதர், கச்சியப்ப சிவாச்சார்யர் (12-ஆம் நூற்.), மாதவச் சிவஞான யோகிகள், கந்தசாம்பி புலவர் (பூவணப் புராணம், ....) எல்லோரும் காதம் இவ்வளவு எனக் கொடுத்துள்ளார்கள். இவர்கள் புகழ்மிக்க தமிழின் ஆசிரியர்கள். காலமும், படைப்பும் உலகம் அறியும். கர்நாடகத்தில் இவ் வார்த்தையைக் கேட்ட இளங்கோ அடிகள் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்துகிறார்: காதம்/காவதம் இளங்கோ அடிகள் சமண சமய போதனைக்காக கவுந்தி அடிகள் என்ற குரத்தியை அங்கே சந்திக்கவைக்கிறார். காதம்/காவதம் = ~12 மைல் அங்கேயும் இருக்கிறது. காதம் 10 மைல் என்று பாரதியார் பயன்படுத்தியுள்ளார்: http://nganesan.blogspot.com/2016/11/speed-of-light-in-bharatiyar-poem.html 

எனவே, வெண்பாக்கள் குறிப்பிடும் சுற்றளவு 80 காதம் என்பது சேரநாடு (கொங்கு உள்ளிட்டது), பாண்டிநாடு 56 காதம், சோழம் - 24 காதம், தொண்டை - 20 காதம். இவை Core regions' perimeter. 

சேரநாட்டு எல்லை கிழக்கில் தென்காசி, வடக்கில் பழநி, மேற்கில் கோழிக்கோடு தெற்கில் தென்கடல்கரை என்று குறிப்பிடுகிறது.  

அப்படி என்றால், பாடல் குறிப்பின்படி,  "பழனிக்கு வடக்கில் இருக்கும் கொங்கு பகுதி" (... "சேரநாடு கொங்குநாடு (பாலக்காட்டுக் கணவாயின் கிழக்குப் பகுதி) உள்ளடக்கியது. அங்கே வஞ்சி மாநகரில் வாழ்ந்தவர் இளங்கோ அடிகள்" . ...  என்று நீங்கள் குறிப்பிடும் பகுதி) குறித்து  பாடல் குறிப்பிடுகிறதா?

 

நா. கணேசன் 

N. Ganesan

unread,
Mar 2, 2017, 12:35:55 PM3/2/17
to மின்தமிழ்


On Thursday, March 2, 2017 at 9:03:16 AM UTC-8, தேமொழி wrote:


On Thursday, March 2, 2017 at 3:45:42 AM UTC-8, N. Ganesan wrote:


On Wednesday, March 1, 2017 at 4:47:57 PM UTC-8, தேமொழி wrote:




> புகாருக்கும் மதுரைக்கும்  ஒரு நேர்க்கோடிழுத்தால் சற்றொப்ப 30 காதம் அல்லது ~140 மைல்கள். 

> இதிலிருந்து கண்ணகியும் கோவலனும் 2 ஆவது  தேனிலவுக்கு குடகுக்குப் பயணமாகவில்லை என்பது உறுதியாகிறது. 

??

இரண்டாவது ஹனிமூன் என்றா இளங்கோ அடிகள் பாடியுள்ளார்? சமண சமயத்தை அறிய கவுந்தி அடிகளைச் சந்திக்க
செல்கிறார்கள் கோவல கண்ணகியர். 

இங்கு நான் பகடி செய்வதாக நினைத்து "2 ஆவது  தேனிலவுக்கு" என்று  குறிப்பிட்டது...நீங்கள் ஒருமுறை குறிப்பிட்டதைத்தான். 

நீங்கள் கூறுவது போல  கண்ணகி மதுரை பயணம் செய்யும்பொழுது புகாரில் இருந்து சுற்றி வளைத்து குடகு செல்ல வேண்டிய காரணம் என்ன என்று  ஒருமுறை  உங்களைக் கேட்டதற்கு, கோவலன்  மாதவியைப் பிரிந்த பிறகு கண்ணகியை சமதனைப்படுத்தும் நோக்கில் குடகுக்கு அழைத்துச் சென்றான் என்று (விளையாட்டாகத்தான்)  குறிப்பிட்டீர்கள்.  

இதைக் குறித்து நான் முன்னரும் இங்கு ..9/18/16
குறிப்பிட்டுள்ளேன். 

ஆனால் நீங்கள் கூறியதை தேடி எடுப்பது அவ்வளவு சுலபமாக இல்லை.  பல இழைகளிலும் சிலம்பு, மதுரை, கண்ணகி, கோவலன், கவுந்தி, குடகு பயணம் என்று நீங்கள் கூறுவது  வருகிறது.  முடிந்தவரை தேடி எடுத்து காட்ட எண்ணம் உள்ளது.

ஆனால் தேனிலவுக்குப் போனதாக இளங்கோவடி குறிப்பிடவில்லை  என்பதை சிலம்பு கதை அறிந்த தமிழகத்தின் சிறு குழந்தையும் அறியும். 
அவ்வாறே கவுந்தியை சந்திக்க அவர்கள் குடகு சென்றார்கள் என்பதை இளங்கோவடிகள் குறிப்பிடவில்லை என்பதையும் சிலம்பு அறிந்தவர்கள் அறிவார்கள்.

காதம் என்னும் அளவை புகழ்மிக்க நூலாசிரியர்கள் குறிப்பிடும் 10 மைல், 20 கிமீ என்று கொண்டு கணக்கிட்டால் காவிரியின் உற்பத்தி ஸ்தானங்களில் (இன்றைய கர்னாடகா, ஆனால் முன்பு கொங்குநாடு என்பவர் உவேசா) கவுந்தி அடிகள் பள்ளி இருந்தமை தெரியலாகும்.

இளங்கோ அடிகள் கால நிலவியல், தமிழர்க்கு எழுத்து வந்த இடங்களில் கவுந்தி அடிகள் எனப் பாடியுள்ளார். காதம் 12-18 மைல் எனக் கொள்ளவேண்டும். அவ்வாறுதான் கர்நாடகாவிலும் உள்ளது. அதனை சமண சமயக் காப்பியம் செய்த இளங்கோ அடிகள் அறிமுகப் படுத்துகிறார் கவுந்தி அடிகள் எங்கே இருந்தார் என விளக்கும்போது.

இன்றைய அரசியல் மாகாணப் படங்கள் வேறு. இளங்கோ காலத்தைய நிலைமை வேறு.

நீங்கள் குறிப்பிட்டுள்ள வெண்பாக்களில் சர்கம்பெரென்ஸ் கொண்டு பார்த்தால் காத அளவு கணக்கிடலாம்.

நா. கணேசன்
 

தேமொழி

unread,
Mar 2, 2017, 1:01:14 PM3/2/17
to மின்தமிழ்


On Wednesday, March 1, 2017 at 5:58:34 AM UTC-8, N. Ganesan wrote:


On Wednesday, March 1, 2017 at 2:31:05 AM UTC-8, தேமொழி wrote:


கண்ணகி: மதுரை மூதூர் யாது?
கோவலன்: ஆறு-ஐங் காதம் நம் அகல் நாட்டு உம்பர் 

புகாருக்கும் மதுரைக்கும்  ஒரு நேர்க்கோடிழுத்தால் சற்றொப்ப 30 காதம் அல்லது ~140 மைல்கள். 

இதிலிருந்து கண்ணகியும் கோவலனும் 2 ஆவது  தேனிலவுக்கு குடகுக்குப் பயணமாகவில்லை என்பது உறுதியாகிறது. 


தேனிலவுக்கு கண்ணகி - கோவலன் செல்லவில்லை. இளங்கோ அடிகள் தம் சமண சமய போதனைக்கு
நாடுகாண் காதையைப் படைத்துள்ளார். 
பழங்காலத்தில் காதம்/காவதம் 12 மைல். யோஜனை அளவு.
கர்நாடகச் சொல்லையும், கர்நாடகக் குரவர் கவுந்தியடிகளும் காட்டி சமண சமயத்தை தமிழர்களுக்கு
விளக்குகிறார்.

இளங்கோவடிகளின் நோக்கம் சமண சமயம் பரப்புவது என்று கூறுவது  ஏற்றுக் கொள்ளும்  வகையில்  இல்லை.  
அவ்வாறென்றால் அவர் பிற சமயம் பற்றிய குறிப்புகளை  சிலம்பில்  இணைக்கத் தேவையில்லையே.

(இரண்டு அரங்கங்களை (சீரங்கம்   - காவிரியின் நடுவிலே உள்ள பெரிய அரங்கம்),
பின்னர் திருவரங்கம் (காடுகாண் காதை)  - ஒன்றில் சமணம், இரண்டாவதில் ஸ்ரீவைஷ்ணவம் எனக் குறித்துள்ளார். என்று நீங்களே  இங்கு https://groups.google.com/d/msg/mintamil/eYfE29Y8e6k/0X4TsyUfAAAJ குறித்துள்ளீர்கள். 



பழைய சிலம்புக் கால கணக்கீட்டில் காதம் 9 - 18 மைல். பல சான்றுகள் கொடுத்துள்ளேன். அண்மைக்
காலத்தில் பாரதியாரும் காதம் = 10 மைல் எனக் கொண்டுள்ளார்.

பழைய சிலம்புக் கால கணக்கீட்டில் காதம் 9 - 18 மைல். 

ஒரு காதம் அளவு = 14 ± 5  மைல் என்பது ஒரு நிலையான அளவாகவும் இல்லை. 

தேமொழி

unread,
Mar 2, 2017, 1:09:55 PM3/2/17
to மின்தமிழ்


On Thursday, March 2, 2017 at 9:35:55 AM UTC-8, N. Ganesan wrote:


On Thursday, March 2, 2017 at 9:03:16 AM UTC-8, தேமொழி wrote:


On Thursday, March 2, 2017 at 3:45:42 AM UTC-8, N. Ganesan wrote:


On Wednesday, March 1, 2017 at 4:47:57 PM UTC-8, தேமொழி wrote:




> புகாருக்கும் மதுரைக்கும்  ஒரு நேர்க்கோடிழுத்தால் சற்றொப்ப 30 காதம் அல்லது ~140 மைல்கள். 

> இதிலிருந்து கண்ணகியும் கோவலனும் 2 ஆவது  தேனிலவுக்கு குடகுக்குப் பயணமாகவில்லை என்பது உறுதியாகிறது. 

??

இரண்டாவது ஹனிமூன் என்றா இளங்கோ அடிகள் பாடியுள்ளார்? சமண சமயத்தை அறிய கவுந்தி அடிகளைச் சந்திக்க
செல்கிறார்கள் கோவல கண்ணகியர். 

இங்கு நான் பகடி செய்வதாக நினைத்து "2 ஆவது  தேனிலவுக்கு" என்று  குறிப்பிட்டது...நீங்கள் ஒருமுறை குறிப்பிட்டதைத்தான். 

நீங்கள் கூறுவது போல  கண்ணகி மதுரை பயணம் செய்யும்பொழுது புகாரில் இருந்து சுற்றி வளைத்து குடகு செல்ல வேண்டிய காரணம் என்ன என்று  ஒருமுறை  உங்களைக் கேட்டதற்கு, கோவலன்  மாதவியைப் பிரிந்த பிறகு கண்ணகியை சமதனைப்படுத்தும் நோக்கில் குடகுக்கு அழைத்துச் சென்றான் என்று (விளையாட்டாகத்தான்)  குறிப்பிட்டீர்கள்.  

இதைக் குறித்து நான் முன்னரும் இங்கு ..9/18/16
குறிப்பிட்டுள்ளேன். 

ஆனால் நீங்கள் கூறியதை தேடி எடுப்பது அவ்வளவு சுலபமாக இல்லை.  பல இழைகளிலும் சிலம்பு, மதுரை, கண்ணகி, கோவலன், கவுந்தி, குடகு பயணம் என்று நீங்கள் கூறுவது  வருகிறது.  முடிந்தவரை தேடி எடுத்து காட்ட எண்ணம் உள்ளது.

ஆனால் தேனிலவுக்குப் போனதாக இளங்கோவடி குறிப்பிடவில்லை  என்பதை சிலம்பு கதை அறிந்த தமிழகத்தின் சிறு குழந்தையும் அறியும். 
அவ்வாறே கவுந்தியை சந்திக்க அவர்கள் குடகு சென்றார்கள் என்பதை இளங்கோவடிகள் குறிப்பிடவில்லை என்பதையும் சிலம்பு அறிந்தவர்கள் அறிவார்கள்.

காதம் என்னும் அளவை புகழ்மிக்க நூலாசிரியர்கள் குறிப்பிடும் 10 மைல், 20 கிமீ என்று கொண்டு கணக்கிட்டால் காவிரியின் உற்பத்தி ஸ்தானங்களில் (இன்றைய கர்னாடகா, ஆனால் முன்பு கொங்குநாடு என்பவர் உவேசா) கவுந்தி அடிகள் பள்ளி இருந்தமை தெரியலாகும்.

இப்பொழுது உவேசா குறிப்புடன் குடகை கொங்குடன் இணைக்கிறீர்கள். 

சேரநாட்டு எல்லை கிழக்கில் தென்காசி, வடக்கில் பழநி, மேற்கில் கோழிக்கோடு தெற்கில் தென்கடல்கரை என்று குறிப்பிடுகிறது.  

அப்படி என்றால், பாடல் குறிப்பின்படி,  "பழனிக்கு வடக்கில் இருக்கும் கொங்கு பகுதி" (... "சேரநாடு கொங்குநாடு (பாலக்காட்டுக் கணவாயின் கிழக்குப் பகுதி) உள்ளடக்கியது. அங்கே வஞ்சி மாநகரில் வாழ்ந்தவர் இளங்கோ அடிகள்" . ...  என்று நீங்கள் குறிப்பிடும் பகுதி) குறித்து  பாடல் குறிப்பிடுகிறதா?


என்பவை  பாடல் காட்டும்  எல்லைக்குறிப்பில்  ஒத்து வருகிறதா 
 

இளங்கோ அடிகள் கால நிலவியல், தமிழர்க்கு எழுத்து வந்த இடங்களில் கவுந்தி அடிகள் எனப் பாடியுள்ளார். காதம் 12-18 மைல் எனக் கொள்ளவேண்டும். அவ்வாறுதான் கர்நாடகாவிலும் உள்ளது. அதனை சமண சமயக் காப்பியம் செய்த இளங்கோ அடிகள் அறிமுகப் படுத்துகிறார் கவுந்தி அடிகள் எங்கே இருந்தார் என விளக்கும்போது.

இன்றைய அரசியல் மாகாணப் படங்கள் வேறு. இளங்கோ காலத்தைய நிலைமை வேறு.


கால எல்லைக் குறிப்பின் முக்கியத்துவம் நானும் குறிப்பிட்டுளேன்.  பாடல்வரிகள் படி செல்வது மட்டுமே இங்கு நான் பார்கிறேன். பாடல்வரிகள் படி காட்டுமாறு கேட்பதை நீங்கள் தவிர்த்து வருகிறீர்கள்.   

தேமொழி

unread,
Mar 2, 2017, 1:16:16 PM3/2/17
to மின்தமிழ்


On Wednesday, March 1, 2017 at 6:48:39 AM UTC-8, N. Ganesan wrote:

சுற்றளவு கணக்கிட்டுப் பார்த்து காதம் என்ன என ஒருவாறு கணிக்கலாம்.

       “வடக்குத்திசை பழனி வான் கீழ்தென்காசி 
குடக்குத்திசை கோழிக்கோடாம்-கடற்கரையின் 
ஓரமோ தெற்காகும் உள்ளெண்பதின்காதம் 
சேரநாட்டெல்லையெனச் செப்பு.”

உ-ம்: இவ் வெண்பாவில் உள்ள ஊர்களின் பெரிமீட்டர் 80 காதம் = ~ 800 மைல் என்ற கணக்கைத்
தரலாம்.


    ~ 800 மைல் என்ற கணக்கை, மேற்காணும் இப்பாடல் குறிப்பில் இருந்து விலகாமல் எப்படி கணக்கிட்டீர்கள் என்று விளக்கமுடியுமா?

பாடல்களில் சொல்லும் ஊர்களை இணைத்து சுற்றளவு (Circumference) இவ்வளவு காதம் எனப்பார்க்கலாம் (https://groups.google.com/d/msg/mintamil/eYfE29Y8e6k/fVESwSkVAgAJ)  என்று மீண்டும் மீண்டும் சொல்கிறீர்களே தவிர அது எப்படி என்று படமிட்டு காட்டும்படி கேட்பதை மட்டும் தவிர்க்கிறீர்கள். 



நா. கணேசன் 

N. Ganesan

unread,
Mar 2, 2017, 1:41:33 PM3/2/17
to மின்தமிழ்

I just mention the basic idea in these very late VeNpaa-s. They mention the circumference of each region.
Based on what we know from famous and respectable authors, we know Gaadham/Gaavadham (I have explained
how this VaDasol is formed and its semantics - from Gau - oxen) Gaavatham is ~ 14 miles or so.

Any one can draw a circle, ellipse covering these:
வெண்பாக்கள் குறிப்பிடும் சுற்றளவு 80 காதம் என்பது சேரநாடு (கொங்கு உள்ளிட்டது), பாண்டிநாடு 56 காதம், சோழம் - 24 காதம், தொண்டை - 20 காதம். இவை Core regions' perimeter.

NG
 


நா. கணேசன் 

தேமொழி

unread,
Mar 2, 2017, 2:03:07 PM3/2/17
to மின்தமிழ்
மேற்கூறிய வற்றால் புதிதாக ஒன்றும் தெரியவில்லை
வெண்பாக்கள் குறிப்பிடும் சுற்றளவு 80 காதம் என்பது சேரநாடு (கொங்கு உள்ளிட்டது), பாண்டிநாடு 56 காதம், சோழம் - 24 காதம், தொண்டை - 20 காதம். 

என்பதை "பாடல் குறிப்புகளுக்கு ஏற்ப கட்டாமல்"  மீண்டும் மீண்டும் பாடல்வரிகளையே  விளக்கிக் கொண்டிருந்தால்  எப்படி தொடர்வது. 


***
ஊர் பேர் தெரியாத ~ 200 வருடம் ஆன வெண்பாவை வைத்து காதம் என்பது சரியாகக் கணிக்கமுடியாது என்ற பிறகு,  மறு இழையிலேயே மக்கள் வழக்கிலே பலகாலமாக காத அளவு பற்றி உள்ள
பழமொழியை ஏற்றுக் கொள்வது சரியா? 

~ 200 பழைய பாடல் என்று எதை வைத்து கணக்கிடுகிறீர்கள்? தனிப்பாடல்  நூல் வெளியான காலத்தையா?  அல்லது பாடல் எழுதிய காலம் குறித்த குறிப்பு எங்கு கிடைத்தது?

பாடல்  சேரநாட்டு எல்லை கிழக்கில் தென்காசி, வடக்கில் பழநி, மேற்கில் கோழிக்கோடு தெற்கில் தென்கடல்கரை என்று குறிப்பிடுகிறது.  

அப்படி என்றால், பாடல் குறிப்பின்படி,  "பழனிக்கு வடக்கில் இருக்கும் கொங்கு பகுதி" (... "சேரநாடு கொங்குநாடு (பாலக்காட்டுக் கணவாயின் கிழக்குப் பகுதி) உள்ளடக்கியது. அங்கே வஞ்சி மாநகரில் வாழ்ந்தவர் இளங்கோ அடிகள்" . ...  என்று நீங்கள் குறிப்பிடும் பகுதி) குறித்து  பாடல் குறிப்பிடுகிறதா?
***

    ~ 800 மைல் என்ற கணக்கை, மேற்காணும் இப்பாடல் குறிப்பில் இருந்து விலகாமல் எப்படி கணக்கிட்டீர்கள் என்று விளக்கமுடியுமா?

பாடல்களில் சொல்லும் ஊர்களை இணைத்து சுற்றளவு (Circumference) இவ்வளவு காதம் எனப்பார்க்கலாம் (https://groups.google.com/d/msg/mintamil/eYfE29Y8e6k/fVESwSkVAgAJ)  என்று மீண்டும் மீண்டும் சொல்கிறீர்களே தவிர அது எப்படி என்று படமிட்டு காட்டும்படி கேட்பதை மட்டும் தவிர்க்கிறீர்கள். 


என என் கேள்விகள் எல்லாம் அப்படியே இருக்கிறது. 

..... தேமொழி 
 

NG
 


நா. கணேசன் 

N. Ganesan

unread,
Mar 2, 2017, 2:13:20 PM3/2/17
to மின்தமிழ்


On Thursday, March 2, 2017 at 10:01:14 AM UTC-8, தேமொழி wrote:


இளங்கோவடிகளின் நோக்கம் சமண சமயம் பரப்புவது என்று கூறுவது  ஏற்றுக் கொள்ளும்  வகையில்  இல்லை.  
அவ்வாறென்றால் அவர் பிற சமயம் பற்றிய குறிப்புகளை  சிலம்பில்  இணைக்கத் தேவையில்லையே.


Why?

If you read  & take a look at how Ilango aDikaL uses NaaDu kaaN kaathai to teach Jainism via Kavunti aDikaL. He situates
her PaLLi in the region where Kaveri is born and famous for Jainism, and the kings, Ganga dynasty,
are big patrons of the religion.

No serios scholar of Tamil or Jainism has said Ilango aDikaL does not consider Jainism teaching
as unimportant. He uses this Kavunti aDikaL chapter for impermanence of Wealth, Life, and
importance of Fate - core Jaina philosophy in this. Next is "KaaDu kaaN kaathai" - kaaDu
also means "cuDu kaaDu" cremation/final ground, he chooses the name so Kovalan will be killed
in his novel soon.

NG

தேமொழி

unread,
Mar 2, 2017, 2:33:33 PM3/2/17
to மின்தமிழ்
சரி எனது  பிற கேள்விகளுக்கும் நேரம் கிடைக்கும் பொழுது எழுதுங்கள்...


குறிப்பாக சேரநாடு... பாடல் காட்டும் சேரநாட்டு எல்லைக்குறிப்பு... அதில் வஞ்சி மாநகர் வருகிறதா?
பாடல் குறிப்புபைக் கொண்டு  சேர நாட்டின் சுற்றளவு ~ 800 மைல் என எப்படி கணக்கிடீர்கள் 
என்பது போன்ற 
பாடல் 80 என்கிறது 80 x 10 = 800 என்று back calculate  செய்தீர்களா? என விவரிக்கவும்.

நடந்து பழக்கமில்லாத கண்ணகியை இழுத்துக் கொண்டு புகாரில் இருந்து நேர் வழியில் செல்லாமல் மதுரைக்கு செல்ல குடகுவரை சென்று சுற்றுவழியாக மதுரையை அடைந்தார்கள் என்பதை நான் இன்னமும் ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை. அதில் ஏரணம் இல்லை.




..... தேமொழி  

N. Ganesan

unread,
Mar 2, 2017, 2:45:15 PM3/2/17
to மின்தமிழ்


On Thursday, March 2, 2017 at 9:31:27 AM UTC-8, தேமொழி wrote:

ஊர் பேர் தெரியாத ~ 200 வருடம் ஆன வெண்பாவை வைத்து காதம் என்பது சரியாகக் கணிக்கமுடியாது.

என்று குறிப்பிடும் நீங்கள் மறு இழையிலேயே
மக்கள் வழக்கிலே பலகாலமாக காத அளவு பற்றி உள்ள
பழமொழியைக் குறிப்பிட்டுள்ளார்:

நாகைக்கும் காரைக்கும் காதம், 
காரைக்கும் கடையூருக்கும் காதம்,
கடையூருக்கும் காழிக்கும் காதம், 
காழிக்கும் தில்லைக்கும் காதம்

என்று அதனை ஏற்றுக் கொள்வது முன்னுக்குப்பின் முரண்.  

ஊர் பேர் தெரியாத ~ 200 வருடம் ஆன வெண்பாவைவிட பழமொழி  சிறந்ததா?  அது போன்ற வழக்கில் உள்ளதைத்தானே பாடிய புலவரும் பாடியிருப்பார். 

பழமொழிகள் மக்களால் பல தலைமுறைகளாக சொல்லப்படுபவை. பெரும்பான்மை மக்களின் அறிவை, அநுபவத்தை சாராம்சமாகச் சொல்பவை.

தமிழில் பார்த்தால் இன்றைக்கும் இணையம், பத்திரிகளில் தனிமனிதர்களால் பல வெண்பாக்கள் சொல்லப்படுகின்றன. இந்த அண்மைக்கால வெண்பாக்களும், மக்கள் சொல்லும் பழமொழிகளும் ஒரே நிலையில் வைத்துப் பார்க்கப்படவேண்டும் என நான் கருதவில்லை.

நா. கணேசன்

 

N. Ganesan

unread,
Mar 2, 2017, 2:53:29 PM3/2/17
to மின்தமிழ்


On Thursday, March 2, 2017 at 11:33:33 AM UTC-8, தேமொழி wrote:
சரி எனது  பிற கேள்விகளுக்கும் நேரம் கிடைக்கும் பொழுது எழுதுங்கள்...


குறிப்பாக சேரநாடு... பாடல் காட்டும் சேரநாட்டு எல்லைக்குறிப்பு... அதில் வஞ்சி மாநகர் வருகிறதா?
பாடல் குறிப்புபைக் கொண்டு  சேர நாட்டின் சுற்றளவு ~ 800 மைல் என எப்படி கணக்கிடீர்கள் 
என்பது போன்ற 
பாடல் 80 என்கிறது 80 x 10 = 800 என்று back calculate  செய்தீர்களா? என விவரிக்கவும்.

நடந்து பழக்கமில்லாத கண்ணகியை இழுத்துக் கொண்டு புகாரில் இருந்து நேர் வழியில் செல்லாமல் மதுரைக்கு செல்ல குடகுவரை சென்று சுற்றுவழியாக மதுரையை அடைந்தார்கள் என்பதை நான் இன்னமும் ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை. அதில் ஏரணம் இல்லை.



For a Jaina ascetic like Ilango aDikaL, it makes sense to create a Jaina nun situated in the Jaina country par supreme, and teach his
religion via the Jaina teacher. Kavunti aDikaL is his own alter ego talking the principles, prayers (to Siddhas, Arhats) in NaaDu kaaN kaathai.

You are saying you are not contesting the Gaadham/Gaavadham distance as given by Bharati, Arunagirinathar, Kacciyappar, Madhava Signana YogikaL, Pukazenthi (in Nala Venpa), AtiveeraramapaaNdyar (NaiDatham), Kanthasami Pulavar (PuuvaNap puraaNam) etc. etc., Once that number of miles (say 12 or 14 miles per Gaudha-), we can know where Kavunthi's Jaina monastery (PaLLi) existed. It is in Sahyadri mountains where Kaveri starts to flow. In Ilango's days it was Kongunadu, as seen in U Ve Saa's writings. He says Gangas were northern Kongu kings, and such a king requested Bhavanandhi Muni, again a Jaina ascetic, to compose Nannuul grammar which is even today Tamil's grammar book.

best wishes,
NG
 

தேமொழி

unread,
Mar 2, 2017, 3:10:01 PM3/2/17
to மின்தமிழ்


On Thursday, March 2, 2017 at 11:45:15 AM UTC-8, N. Ganesan wrote:


On Thursday, March 2, 2017 at 9:31:27 AM UTC-8, தேமொழி wrote:

ஊர் பேர் தெரியாத ~ 200 வருடம் ஆன வெண்பாவை வைத்து காதம் என்பது சரியாகக் கணிக்கமுடியாது.

என்று குறிப்பிடும் நீங்கள் மறு இழையிலேயே
மக்கள் வழக்கிலே பலகாலமாக காத அளவு பற்றி உள்ள
பழமொழியைக் குறிப்பிட்டுள்ளார்:

நாகைக்கும் காரைக்கும் காதம், 
காரைக்கும் கடையூருக்கும் காதம்,
கடையூருக்கும் காழிக்கும் காதம், 
காழிக்கும் தில்லைக்கும் காதம்

என்று அதனை ஏற்றுக் கொள்வது முன்னுக்குப்பின் முரண்.  

ஊர் பேர் தெரியாத ~ 200 வருடம் ஆன வெண்பாவைவிட பழமொழி  சிறந்ததா?  அது போன்ற வழக்கில் உள்ளதைத்தானே பாடிய புலவரும் பாடியிருப்பார். 

பழமொழிகள் மக்களால் பல தலைமுறைகளாக சொல்லப்படுபவை. பெரும்பான்மை மக்களின் அறிவை, அநுபவத்தை சாராம்சமாகச் சொல்பவை.

தமிழில் பார்த்தால் இன்றைக்கும் இணையம், பத்திரிகளில் தனிமனிதர்களால் பல வெண்பாக்கள் சொல்லப்படுகின்றன. 
இந்த அண்மைக்கால வெண்பாக்களும், மக்கள் சொல்லும் பழமொழிகளும் ஒரே நிலையில் வைத்துப் பார்க்கப்படவேண்டும் என நான் கருதவில்லை.



இந்த நூலில் 


https://books.google.com/books/reader?id=3cMxAQAAMAAJ&printsec=frontcover&output=reader&pg=GBS.PT156

134-135-136

௧௩௪-௧௩௫-௧௩௬ 

பக்கங்களில் கம்பர் எழுதிய பாடல் என்ற குறிப்புடன் இருக்கும் பாடல்கள் இவை.  

ஆனால் எதை வைத்து ~200 ஆண்டு என்று குறிப்பிட்டீர்கள் என்று கணித்தீர்கள் 


1518 கிருஷ்ணதேவராயர் பட்டயம் ஒன்றும் எல்லைகளைக் குறிப்பது கட்டுரையில் உள்ளது.  ஆனால் காதம் அளவுகள் இல்லை.   

அதில் சேந்தமங்கலம் கல்வெட்டு சோழ எல்லை  கெடிலம் தெற்கு என்கிறது, இப்பாடல்  வெள்ளாறு தெற்கு என்கிறது.

ஆனால் நீங்கள்  ~ 200 எனக் காலம் கணித்த முறை எதன் அடிப்படையில் ?


..... தேமொழி

தேமொழி

unread,
Mar 2, 2017, 3:11:22 PM3/2/17
to மின்தமிழ்


On Thursday, March 2, 2017 at 11:53:29 AM UTC-8, N. Ganesan wrote:


On Thursday, March 2, 2017 at 11:33:33 AM UTC-8, தேமொழி wrote:
சரி எனது  பிற கேள்விகளுக்கும் நேரம் கிடைக்கும் பொழுது எழுதுங்கள்...


குறிப்பாக சேரநாடு... பாடல் காட்டும் சேரநாட்டு எல்லைக்குறிப்பு... அதில் வஞ்சி மாநகர் வருகிறதா?
பாடல் குறிப்புபைக் கொண்டு  சேர நாட்டின் சுற்றளவு ~ 800 மைல் என எப்படி கணக்கிடீர்கள் 
என்பது போன்ற 
பாடல் 80 என்கிறது 80 x 10 = 800 என்று back calculate  செய்தீர்களா? என விவரிக்கவும்.

நடந்து பழக்கமில்லாத கண்ணகியை இழுத்துக் கொண்டு புகாரில் இருந்து நேர் வழியில் செல்லாமல் மதுரைக்கு செல்ல குடகுவரை சென்று சுற்றுவழியாக மதுரையை அடைந்தார்கள் என்பதை நான் இன்னமும் ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை. அதில் ஏரணம் இல்லை.



For a Jaina ascetic like Ilango aDikaL, it makes sense to create a Jaina nun situated in the Jaina country par supreme, and teach his
religion via the Jaina teacher. Kavunti aDikaL is his own alter ego talking the principles, prayers (to Siddhas, Arhats) in NaaDu kaaN kaathai.

You are saying you are not contesting the Gaadham/Gaavadham distance as given by Bharati, Arunagirinathar, Kacciyappar, Madhava Signana YogikaL, Pukazenthi (in Nala Venpa), AtiveeraramapaaNdyar (NaiDatham), Kanthasami Pulavar (PuuvaNap puraaNam) etc. etc., Once that number of miles (say 12 or 14 miles per Gaudha-), we can know where Kavunthi's Jaina monastery (PaLLi) existed. It is in Sahyadri mountains where Kaveri starts to flow. In Ilango's days it was Kongunadu, as seen in U Ve Saa's writings. He says Gangas were northern Kongu kings, and such a king requested Bhavanandhi Muni, again a Jaina ascetic, to compose Nannuul grammar which is even today Tamil's grammar book.

ஆக, கையில் இருக்கும்  பாடல் குறிப்புடன் ஒப்பிட்டு சொல்ல மாட்டீர்கள், சரி. 

..... தேமொழி
  

best wishes,
NG
 

iraamaki

unread,
Mar 2, 2017, 7:25:54 PM3/2/17
to mint...@googlegroups.com
உங்களுக்குப் பொறுமை மிகக்கூட என்றெண்ணுகிறேன். விடாதுகேட்கிறீர்கள். அவரோ, உடம்பெல்லாம் எண்ணெய் தடவிக்கொண்டு “பலிஞ்சடுகுடு.... சடுகுடு” என்று ஆடிக்கொண்டேயிருக்கிறார். 
 
இன்னொரு உவமையிற் சொன்னால், சுற்றிச்சுற்றி அவர் சுழற்பந்து (spin) தான் எரிவார்
. அதை வாகாய் நீங்கள் வாங்கி எல்லைக்கு வெளியில்  ஆறோட்டமாய் (sixer) அடித்தாற்றான் உண்டு.
காதத்தையொட்டி உங்களைக் குழப்பியடித்து வெளிக்குத் (out) தள்ளப்போகிறார்.
அவர் சுழற்பந்து மன்னர். யாரிடமுஞ் சிக்கமாட்டார். Smile)))))) எல்லாரிடமும் ஏதாவதுசொல்லித் தப்பிப்பதே அவர்பாங்கு.
 
நீவிர் வாழ்க!
 
அன்புடன்,
இராம.கி. 
Sent: Thursday, March 02, 2017 11:46 PM
Subject: Re: [MinTamil] தமிழும் தமிழ் சார்ந்த நிலமும்
 
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
wlEmoticon-smile[1].png

N. Ganesan

unread,
Mar 2, 2017, 7:59:19 PM3/2/17
to மின்தமிழ்
2017-03-02 12:10 GMT-08:00 தேமொழி <jsthe...@gmail.com>:


On Thursday, March 2, 2017 at 11:45:15 AM UTC-8, N. Ganesan wrote:


On Thursday, March 2, 2017 at 9:31:27 AM UTC-8, தேமொழி wrote:

ஊர் பேர் தெரியாத ~ 200 வருடம் ஆன வெண்பாவை வைத்து காதம் என்பது சரியாகக் கணிக்கமுடியாது.

என்று குறிப்பிடும் நீங்கள் மறு இழையிலேயே
மக்கள் வழக்கிலே பலகாலமாக காத அளவு பற்றி உள்ள
பழமொழியைக் குறிப்பிட்டுள்ளார்:

நாகைக்கும் காரைக்கும் காதம், 
காரைக்கும் கடையூருக்கும் காதம்,
கடையூருக்கும் காழிக்கும் காதம், 
காழிக்கும் தில்லைக்கும் காதம்

என்று அதனை ஏற்றுக் கொள்வது முன்னுக்குப்பின் முரண்.  

ஊர் பேர் தெரியாத ~ 200 வருடம் ஆன வெண்பாவைவிட பழமொழி  சிறந்ததா?  அது போன்ற வழக்கில் உள்ளதைத்தானே பாடிய புலவரும் பாடியிருப்பார். 

பழமொழிகள் மக்களால் பல தலைமுறைகளாக சொல்லப்படுபவை. பெரும்பான்மை மக்களின் அறிவை, அநுபவத்தை சாராம்சமாகச் சொல்பவை.

தமிழில் பார்த்தால் இன்றைக்கும் இணையம், பத்திரிகளில் தனிமனிதர்களால் பல வெண்பாக்கள் சொல்லப்படுகின்றன. 
இந்த அண்மைக்கால வெண்பாக்களும், மக்கள் சொல்லும் பழமொழிகளும் ஒரே நிலையில் வைத்துப் பார்க்கப்படவேண்டும் என நான் கருதவில்லை.


40+ ஆண்டுகளாக இவ் வெண்பாக்களை அறிவேன்.

தனிப்பாடல் திரட்டு நூலை இங்கே பலமுறை குறிப்பிட்டுள்ளேன், ஓர் உ-ம்:

NG
 



இந்த நூலில் 


https://books.google.com/books/reader?id=3cMxAQAAMAAJ&printsec=frontcover&output=reader&pg=GBS.PT156

134-135-136

௧௩௪-௧௩௫-௧௩௬ 

பக்கங்களில் கம்பர் எழுதிய பாடல் என்ற குறிப்புடன் இருக்கும் பாடல்கள் இவை.  

ஆனால் எதை வைத்து ~200 ஆண்டு என்று குறிப்பிட்டீர்கள் என்று கணித்தீர்கள் 


1518 கிருஷ்ணதேவராயர் பட்டயம் ஒன்றும் எல்லைகளைக் குறிப்பது கட்டுரையில் உள்ளது.  ஆனால் காதம் அளவுகள் இல்லை.   

அதில் சேந்தமங்கலம் கல்வெட்டு சோழ எல்லை  கெடிலம் தெற்கு என்கிறது, இப்பாடல்  வெள்ளாறு தெற்கு என்கிறது.

ஆனால் நீங்கள்  ~ 200 எனக் காலம் கணித்த முறை எதன் அடிப்படையில் ?


..... தேமொழி


 

நா. கணேசன்

 

 ~ 200 பழைய பாடல் என்று எதை வைத்து கணக்கிடுகிறீர்கள்? தனிப்பாடல்  நூல் வெளியான காலத்தையா?  அல்லது பாடல் எழுதிய காலம் குறித்த குறிப்பு எங்கு கிடைத்தது?


 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Mar 2, 2017, 8:05:41 PM3/2/17
to மின்தமிழ்


On Thursday, March 2, 2017 at 11:33:33 AM UTC-8, தேமொழி wrote:
சரி எனது  பிற கேள்விகளுக்கும் நேரம் கிடைக்கும் பொழுது எழுதுங்கள்...


குறிப்பாக சேரநாடு... பாடல் காட்டும் சேரநாட்டு எல்லைக்குறிப்பு... அதில் வஞ்சி மாநகர் வருகிறதா?
பாடல் குறிப்புபைக் கொண்டு  சேர நாட்டின் சுற்றளவு ~ 800 மைல் என எப்படி கணக்கிடீர்கள் 
என்பது போன்ற 
பாடல் 80 என்கிறது 80 x 10 = 800 என்று back calculate  செய்தீர்களா? என விவரிக்கவும்.

நடந்து பழக்கமில்லாத கண்ணகியை இழுத்துக் கொண்டு புகாரில் இருந்து நேர் வழியில் செல்லாமல் மதுரைக்கு செல்ல குடகுவரை சென்று சுற்றுவழியாக மதுரையை அடைந்தார்கள் என்பதை நான் இன்னமும் ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை. அதில் ஏரணம் இல்லை.



பழைய நாவல்கள் பலவற்றிலும் ஏரணம் (அப்படி என்றால் விளக்கவும்) இல்லாமல் இருக்கலாம். உ-ம்: இளங்கோ அடிகள் சங்க காலச் சமயத்தின் சாரமாக கண்ணகி இடது கொங்கையைத் திருகி
எறிந்து மதுரையை எரித்தாள் என்கிறார். பாஸ்பரஸா இருந்தது என்று கேட்டார் பெரியார். 

பௌத்த நாவல்கள் பல உண்டு. சீனாவிலும். அவற்றிலும் இவை போன்ற தொல்புராணிகம் (Myths) இருக்கின்றன. கண்டவியூக சூத்திரத்திலே காணலாம். அதனை சமண சமயத்திற்கு
ஏற்று புதிய நாவல் செய்கிறார் இளங்கோ அடிகளார் - 5-6ஆம் நூற்றாண்டில்.  

N. Ganesan

unread,
Mar 2, 2017, 10:20:49 PM3/2/17
to மின்தமிழ்


On Thursday, March 2, 2017 at 12:11:22 PM UTC-8, தேமொழி wrote:



குறிப்பாக சேரநாடு... பாடல் காட்டும் சேரநாட்டு எல்லைக்குறிப்பு... அதில் வஞ்சி மாநகர் வருகிறதா?
பாடல் குறிப்புபைக் கொண்டு  சேர நாட்டின் சுற்றளவு ~ 800 மைல் என எப்படி கணக்கிடீர்கள் 
என்பது போன்ற 
பாடல் 80 என்கிறது 80 x 10 = 800 என்று back calculate  செய்தீர்களா? என விவரிக்கவும்.


பாடலில் 80 காதம் என்றுள்ளது. சென்னைப் பல்கலை அகராதியில் தமிழறிஞர்கள் காதம் = 10 மைல் எனக் கொடுத்துள்ளனர்.
காதம் 18 மைல் வரைசொல்லும் சான்றுகள் உள்ளன (கச்சியப்பர்). 20 கிமீ. என்னும் மக்கள் வழக்கத்தை
சு. கோதண்டராமன் ஐயா கொடுத்துள்ளார்.

Trivandrum - Kasargod  = 350 miles. So, circumference ~ 700 miles. Close enough.
So, today's Kaerala state borders ~800 miles.

DIfferent maps can be generated taking the circumfrence, it is up to the user.
If Gaavadha = ~12 miles, then 80 * 12 miles, will include Kerala + parts of Kongu country. 

The distance which Ilango aSikaL introduces while teaching his Jaina religion from Karnataka is around 12 - 14 miles.
My point is these very late veNpaa-s are pointing to perimeter of core regions of each region. That's all.
They give Gaavadha distance as seen in reputed authors of Tamil and Kannada sources.

N. Ganesan 

தேமொழி

unread,
Mar 2, 2017, 11:09:38 PM3/2/17
to மின்தமிழ்
ஆமாம் ஐயா...
இந்தத்  தனிப்பாடல்கள் தரும்  குறிப்புகள் படி;  நமக்கு புதியதாக  காதம் குறித்து  என்ன தெரிகிறது என்று நானும் அவரது கோணத்தைத்   தெரிந்து கொள்ளத்தான் முயல்கிறேன்.  
இதுவரை  இந்தப் பாடல்களை முன்னரே அவருக்கு தெரியும் என்று சொல்லியிருக்கிறார். 
முன்னர் எப்பொழுதும் கூறிய  காதம் குறித்த குறிப்புகளைத் தரும் ஆசிரியர்களைக் குறிப்பிட்டு, ஒரு காதம் என்பது ~9 முதல் ~19  மைல்களுக்குள் எந்த ஒரு அளவாகவும் இருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.


 
..... தேமொழி


To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

தேமொழி

unread,
Mar 2, 2017, 11:13:26 PM3/2/17
to மின்தமிழ்


On Thursday, March 2, 2017 at 5:05:41 PM UTC-8, N. Ganesan wrote:


On Thursday, March 2, 2017 at 11:33:33 AM UTC-8, தேமொழி wrote:
சரி எனது  பிற கேள்விகளுக்கும் நேரம் கிடைக்கும் பொழுது எழுதுங்கள்...


குறிப்பாக சேரநாடு... பாடல் காட்டும் சேரநாட்டு எல்லைக்குறிப்பு... அதில் வஞ்சி மாநகர் வருகிறதா?
பாடல் குறிப்புபைக் கொண்டு  சேர நாட்டின் சுற்றளவு ~ 800 மைல் என எப்படி கணக்கிடீர்கள் 
என்பது போன்ற 
பாடல் 80 என்கிறது 80 x 10 = 800 என்று back calculate  செய்தீர்களா? என விவரிக்கவும்.

நடந்து பழக்கமில்லாத கண்ணகியை இழுத்துக் கொண்டு புகாரில் இருந்து நேர் வழியில் செல்லாமல் மதுரைக்கு செல்ல குடகுவரை சென்று சுற்றுவழியாக மதுரையை அடைந்தார்கள் என்பதை நான் இன்னமும் ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை. அதில் ஏரணம் இல்லை.



பழைய நாவல்கள் பலவற்றிலும் ஏரணம் (அப்படி என்றால் விளக்கவும்)

லாஜிக். 
 
இல்லாமல் இருக்கலாம். உ-ம்: இளங்கோ அடிகள் சங்க காலச் சமயத்தின் சாரமாக கண்ணகி இடது கொங்கையைத் திருகி
எறிந்து மதுரையை எரித்தாள் என்கிறார். பாஸ்பரஸா இருந்தது என்று கேட்டார் பெரியார். 

கோபம் வந்தால் ஊரையே கொளுத்தி விடுவார்கள்  என்ற லாஜிக் 

N. Ganesan

unread,
Mar 2, 2017, 11:15:49 PM3/2/17
to மின்தமிழ்
2017-03-02 20:13 GMT-08:00 தேமொழி <jsthe...@gmail.com>:


On Thursday, March 2, 2017 at 5:05:41 PM UTC-8, N. Ganesan wrote:


On Thursday, March 2, 2017 at 11:33:33 AM UTC-8, தேமொழி wrote:
சரி எனது  பிற கேள்விகளுக்கும் நேரம் கிடைக்கும் பொழுது எழுதுங்கள்...


குறிப்பாக சேரநாடு... பாடல் காட்டும் சேரநாட்டு எல்லைக்குறிப்பு... அதில் வஞ்சி மாநகர் வருகிறதா?
பாடல் குறிப்புபைக் கொண்டு  சேர நாட்டின் சுற்றளவு ~ 800 மைல் என எப்படி கணக்கிடீர்கள் 
என்பது போன்ற 
பாடல் 80 என்கிறது 80 x 10 = 800 என்று back calculate  செய்தீர்களா? என விவரிக்கவும்.

நடந்து பழக்கமில்லாத கண்ணகியை இழுத்துக் கொண்டு புகாரில் இருந்து நேர் வழியில் செல்லாமல் மதுரைக்கு செல்ல குடகுவரை சென்று சுற்றுவழியாக மதுரையை அடைந்தார்கள் என்பதை நான் இன்னமும் ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை. அதில் ஏரணம் இல்லை.



பழைய நாவல்கள் பலவற்றிலும் ஏரணம் (அப்படி என்றால் விளக்கவும்)

லாஜிக். 
 
இல்லாமல் இருக்கலாம். உ-ம்: இளங்கோ அடிகள் சங்க காலச் சமயத்தின் சாரமாக கண்ணகி இடது கொங்கையைத் திருகி
எறிந்து மதுரையை எரித்தாள் என்கிறார். பாஸ்பரஸா இருந்தது என்று கேட்டார் பெரியார். 

கோபம் வந்தால் ஊரையே கொளுத்தி விடுவார்கள்  என்ற லாஜிக் 


சங்க காலத்தில் கொங்கையில் அணங்கு இருப்பதைக்கொண்டு பாடியுள்ளார் இளங்கோ அடிகள்.

நா. கணேசன்
 
 

பௌத்த நாவல்கள் பல உண்டு. சீனாவிலும். அவற்றிலும் இவை போன்ற தொல்புராணிகம் (Myths) இருக்கின்றன. கண்டவியூக சூத்திரத்திலே காணலாம். அதனை சமண சமயத்திற்கு
ஏற்று புதிய நாவல் செய்கிறார் இளங்கோ அடிகளார் - 5-6ஆம் நூற்றாண்டில்.  

 
For a Jaina ascetic like Ilango aDikaL, it makes sense to create a Jaina nun situated in the Jaina country par supreme, and teach his
religion via the Jaina teacher. Kavunti aDikaL is his own alter ego talking the principles, prayers (to Siddhas, Arhats) in NaaDu kaaN kaathai.

You are saying you are not contesting the Gaadham/Gaavadham distance as given by Bharati, Arunagirinathar, Kacciyappar, Madhava Signana YogikaL, Pukazenthi (in Nala Venpa), AtiveeraramapaaNdyar (NaiDatham), Kanthasami Pulavar (PuuvaNap puraaNam) etc. etc., Once that number of miles (say 12 or 14 miles per Gaudha-), we can know where Kavunthi's Jaina monastery (PaLLi) existed. It is in Sahyadri mountains where Kaveri starts to flow. In Ilango's days it was Kongunadu, as seen in U Ve Saa's writings. He says Gangas were northern Kongu kings, and such a king requested Bhavanandhi Muni, again a Jaina ascetic, to compose Nannuul grammar which is even today Tamil's grammar book.

best wishes,
NG
 


..... தேமொழி  




On Thursday, March 2, 2017 at 11:13:20 AM UTC-8, N. Ganesan wrote:


On Thursday, March 2, 2017 at 10:01:14 AM UTC-8, தேமொழி wrote:


இளங்கோவடிகளின் நோக்கம் சமண சமயம் பரப்புவது என்று கூறுவது  ஏற்றுக் கொள்ளும்  வகையில்  இல்லை.  
அவ்வாறென்றால் அவர் பிற சமயம் பற்றிய குறிப்புகளை  சிலம்பில்  இணைக்கத் தேவையில்லையே.


Why?

If you read  & take a look at how Ilango aDikaL uses NaaDu kaaN kaathai to teach Jainism via Kavunti aDikaL. He situates
her PaLLi in the region where Kaveri is born and famous for Jainism, and the kings, Ganga dynasty,
are big patrons of the religion.

No serios scholar of Tamil or Jainism has said Ilango aDikaL does not consider Jainism teaching
as unimportant. He uses this Kavunti aDikaL chapter for impermanence of Wealth, Life, and
importance of Fate - core Jaina philosophy in this. Next is "KaaDu kaaN kaathai" - kaaDu
also means "cuDu kaaDu" cremation/final ground, he chooses the name so Kovalan will be killed
in his novel soon.

NG

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

N. Ganesan

unread,
Mar 2, 2017, 11:17:52 PM3/2/17
to மின்தமிழ்
2017-03-02 20:09 GMT-08:00 தேமொழி <jsthe...@gmail.com>:
இந்தத்  தனிப்பாடல்கள் தரும்  குறிப்புகள் படி;  நமக்கு புதியதாக  காதம் குறித்து  என்ன தெரிகிறது என்று நானும் அவரது கோணத்தைத்   தெரிந்து கொள்ளத்தான் முயல்கிறேன்.  
இதுவரை  இந்தப் பாடல்களை முன்னரே அவருக்கு தெரியும் என்று சொல்லியிருக்கிறார். 
முன்னர் எப்பொழுதும் கூறிய  காதம் குறித்த குறிப்புகளைத் தரும் ஆசிரியர்களைக் குறிப்பிட்டு, ஒரு காதம் என்பது ~9 முதல் ~19  மைல்களுக்குள் எந்த ஒரு அளவாகவும் இருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.


இப்பாடல்களில் உள்ளது நாட்டின் வட்டகை. உ-ம்:

Trivandrum - Kasargod  = 350 miles. So, circumference ~ 700 miles. Close enough.
So, today's Kaerala state borders ~800 miles.

DIfferent maps can be generated taking the circumfrence, it is up to the user.
If Gaavadha = ~12 miles, then 80 * 12 miles, will include Kerala + parts of Kongu country. 

தேமொழி

unread,
Mar 2, 2017, 11:24:22 PM3/2/17
to மின்தமிழ்


On Thursday, March 2, 2017 at 8:17:52 PM UTC-8, N. Ganesan wrote:


2017-03-02 20:09 GMT-08:00 தேமொழி <jsthe...@gmail.com>:
இந்தத்  தனிப்பாடல்கள் தரும்  குறிப்புகள் படி;  நமக்கு புதியதாக  காதம் குறித்து  என்ன தெரிகிறது என்று நானும் அவரது கோணத்தைத்   தெரிந்து கொள்ளத்தான் முயல்கிறேன்.  
இதுவரை  இந்தப் பாடல்களை முன்னரே அவருக்கு தெரியும் என்று சொல்லியிருக்கிறார். 
முன்னர் எப்பொழுதும் கூறிய  காதம் குறித்த குறிப்புகளைத் தரும் ஆசிரியர்களைக் குறிப்பிட்டு, ஒரு காதம் என்பது ~9 முதல் ~19  மைல்களுக்குள் எந்த ஒரு அளவாகவும் இருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.


இப்பாடல்களில் உள்ளது நாட்டின் வட்டகை. உ-ம்:

Trivandrum - Kasargod  = 350 miles. So, circumference ~ 700 miles. Close enough.
So, today's Kaerala state borders ~800 miles.



இதை நீங்கள் தவற விட்டு விட்டேர்களோ?

1 காதம் = 7.6 மைல். 

N. Ganesan

unread,
Mar 2, 2017, 11:41:24 PM3/2/17
to மின்தமிழ்


On Thursday, March 2, 2017 at 8:24:22 PM UTC-8, தேமொழி wrote:

இதை நீங்கள் தவற விட்டு விட்டேர்களோ?

1 காதம் = 7.6 மைல். 


ஆமாம். சேரநாட்டின் பகுதியாக எப்பொழுதும் விளங்கிய கொங்குமண்டிலமும் சேர்த்தால் 12 மைல் = காதம் என்றாகும்.

iraamaki

unread,
Mar 2, 2017, 11:46:19 PM3/2/17
to mint...@googlegroups.com
இவருக்கு ”விரல், சாண், முழம், கோல், தண்டம், கூப்பீடு பற்றித் தெரியுமா?” என்று கேளுங்கள். பள்ளிக்கூடத்தில் தமிழ் நீட்டளவையைப் படித்திருக்கிறாரா? – என்றுங் கேளுங்கள். (கணக்கதிகாரத்தையாவது ஒழுங்காய்ப் படித்திருக்கிறாரா?) கொடுமுடி சண்முகம் என்ற அருமையான பொறியாளர் விவரங்கெட்டதனமாய் பழந்தமிழர் மரபுகளையும், இந்தக் காதத்தையும் மாய்ந்து மாய்ந்து ஆய்ந்து தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்.  அவருடைய ஆய்வுநூல் அவ்வளவு அருமையானது. (நாசாக்காரரை விட அவரை நான் நம்புவேன்.)
 
அவரெல்லாம் இவருக்குமுன் தூசியென்று இவர்சொல்லுவார். மொத்தத்தில் தன்னைத்தவிர வேறெந்தப் புகர்நிறத்தான் சொல்வதையும் இவர் நம்ப மாட்டார்.  வெள்ளைக்காரரையும், 15 ஆம் நூற்றாண்டுக்கு அப்புறமுள்ள ஆசிரியரை மட்டுமே இவர் என்றைக்கும் நம்புவார். மற்றதெல்லாம் புதினம் கட்டுக்கதை என்பார்.  மாறாக ”மகரம், விடங்கர், முதலை, கொற்றவை, சிந்து சமவெளி” என்று சொல்லிப்பாருங்கள். தான் ஏற்கனவே அதைப்பற்றிச் சொன்னதாகச் சொல்லிவிடுவார். (இவர் பீற்றலை உடைப்பதற்கு யாரோவொரு கொம்பன் வராமலா போவான்? அந்தக் கொம்பனை எதிர்பார்த்து வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கிறேன்.)
 
கடைசிவரை காதத்தின் பொருளை யாருக்கும் இவர் புரியவிடமாட்டார். இவரே அதற்கு ஒரேயொரு எண்ணையும் சொல்லிவிடமாட்டார்.  புத்தர்காலத்து சஞ்சயவேளத்து  புத்தனுக்கு (எல்லாவற்றையும் ஐயப்படும் புத்தனை சஞ்சயப்படும் புலத்தின் தலைவனாகச் சொல்வது வாதமுறைகளில் ஒன்று. கோதமபுத்தர் காலத்து 6 பெரிய மெய்யியல் ஆசிரியரில் சஞ்சயவேளத்து புத்தன் ஒருவர்.) அடுத்தவர் இவர். 
 
பொதுவாக அகப்பாடு மண்டிக் கிடப்பவரோடு உரையாட முடியாது.  ”இவர் பெரிய மேதை” என்றுசொல்லி நீங்கள் வேறுவேலையைப் பார்ப்பதே நல்லது. ”இவர் மட்டுமே புத்திசாலி, மற்றவரெல்லாம் மடையர்” என்று சொல்லித்தான் விடுங்களேன்!
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Mar 2, 2017, 11:56:32 PM3/2/17
to மின்தமிழ்


On Thursday, March 2, 2017 at 8:41:24 PM UTC-8, N. Ganesan wrote:


On Thursday, March 2, 2017 at 8:24:22 PM UTC-8, தேமொழி wrote:

இதை நீங்கள் தவற விட்டு விட்டேர்களோ?

1 காதம் = 7.6 மைல். 


ஆமாம். சேரநாட்டின் பகுதியாக எப்பொழுதும் விளங்கிய கொங்குமண்டிலமும் சேர்த்தால் 12 மைல் = காதம் என்றாகும்.

மீண்டும் பெரிய பாம்பு கடித்து முதல்கட்டத்தில் விழுந்தாகிவிட்டது.

பாடல் குறிப்பை அடியொட்டி எல்லை வரைந்து  அதன் சுற்றளவை மட்டும் அளப்பதுதானே முறை!!!

"பாடலின்படி"  "பழநி வட எல்லை" என்றால் "தென்காசி கிழக்கு எல்லை" என்றால் இவற்றுக்கு வடக்கே இருக்கும் கொங்கு நாடு எப்படி இந்த சேர நாட்டின்  எல்லைக்குள் வரும்?

..... தேமொழி


 
 



 
DIfferent maps can be generated taking the circumfrence, it is up to the user.
If Gaavadha = ~12 miles, then 80 * 12 miles, will include Kerala + parts of Kongu country. 

N. Ganesan

unread,
Mar 3, 2017, 12:07:55 AM3/3/17
to மின்தமிழ்


On Thursday, March 2, 2017 at 8:56:32 PM UTC-8, தேமொழி wrote:


On Thursday, March 2, 2017 at 8:41:24 PM UTC-8, N. Ganesan wrote:


On Thursday, March 2, 2017 at 8:24:22 PM UTC-8, தேமொழி wrote:

இதை நீங்கள் தவற விட்டு விட்டேர்களோ?

1 காதம் = 7.6 மைல். 


ஆமாம். சேரநாட்டின் பகுதியாக எப்பொழுதும் விளங்கிய கொங்குமண்டிலமும் சேர்த்தால் 12 மைல் = காதம் என்றாகும்.

மீண்டும் பெரிய பாம்பு கடித்து முதல்கட்டத்தில் விழுந்தாகிவிட்டது.

பாடல் குறிப்பை அடியொட்டி எல்லை வரைந்து  அதன் சுற்றளவை மட்டும் அளப்பதுதானே முறை!!!

"பாடலின்படி"  "பழநி வட எல்லை" என்றால் "தென்காசி கிழக்கு எல்லை" என்றால் இவற்றுக்கு வடக்கே இருக்கும் கொங்கு நாடு எப்படி இந்த சேர நாட்டின்  எல்லைக்குள் வரும்?


பாடலைப் படித்தீர்களா என தெரியவில்லை. நீங்கள் கொடுத்த படத்திலேயே சேர நாடு பழனிக்கு வடக்கே படம் வரைந்துள்ளீர்கள்.

பாடலில் பழனிதான் வடக்கே எல்லை என்றும் காணோம். எல்லை என்ற சொல்லே இல்லை அதனில்.

குமரி, திருவனந்தபுரம் போன்ற பகுதிகளை ஒப்பிட்டால் பழனி வடக்குத் திசையில் என்று சொல்கிறது இந்த வெண்பா.
கொங்குநாட்டின் தலைமைப் பதி பழனி. அதனால் தென்குமரிக்கு வடக்கே திசையில் உள்ளது பழனி என்கிறார் ஆசிரியர்,

வரலாற்றில் சேரநாடு என்பது கொங்குநாட்டை அடக்கியதுதான். அதன் தலைமைப் பதியைச் சொல்கிறார்.
வட திசையில். கேரளாவை மாத்திரம் வடக்கே கோடு இழுத்துவிட்டு, கொங்குநாட்டை சேர்த்தாமல் விட்டால்
7.6 மைல் வரும். கொங்கையும் சேர்த்தினால் காதம் = ~12 மைல் வரும்.

சேரர் கொங்கு நன்னாடதில் - பழனித் திருப்புகழ் (நாத விந்து கலாதி நமோ நம)

N. Ganesan

unread,
Mar 3, 2017, 12:16:11 AM3/3/17
to மின்தமிழ்


On Thursday, March 2, 2017 at 8:56:32 PM UTC-8, தேமொழி wrote:


பாடல் குறிப்பை அடியொட்டி எல்லை வரைந்து  அதன் சுற்றளவை மட்டும் அளப்பதுதானே முறை!!!

சரியாகச் சொல்லியுள்ளீர்கள். 
 

"பாடலின்படி"  "பழநி வட எல்லை" என்றால் "தென்காசி கிழக்கு எல்லை" என்றால் இவற்றுக்கு வடக்கே இருக்கும் கொங்கு நாடு எப்படி இந்த சேர நாட்டின்  எல்லைக்குள் வரும்?


பாடலின் படி பழநி வட எல்லை என்று புரிந்துகொண்டுள்ளீர்கள். ஆனால், சேர நாட்டின் வட எல்லை என்று பாடலில் ஆசிரியர் சொல்லவில்லை,
வரலாற்றிலும்  அவ்வாறு சேரநாடு இருந்ததில்லை. 

நா. கணேசன்

பல்கலைக்கழக ஆய்வுகளின் படி சிலம்பின் காலம் கி.பி. 5-6 ஆம் நூற்றாண்டு. 
கி.மு. ஒன்றாம் நூற்றாண்டு என்பது இராமகி கருத்து ஆதாரம் அற்றது என்பது தமிழறிஞர்கள் கூற்று.

தேமொழி

unread,
Mar 3, 2017, 12:22:20 AM3/3/17
to மின்தமிழ்


On Thursday, March 2, 2017 at 9:07:55 PM UTC-8, N. Ganesan wrote:


On Thursday, March 2, 2017 at 8:56:32 PM UTC-8, தேமொழி wrote:


On Thursday, March 2, 2017 at 8:41:24 PM UTC-8, N. Ganesan wrote:


On Thursday, March 2, 2017 at 8:24:22 PM UTC-8, தேமொழி wrote:

இதை நீங்கள் தவற விட்டு விட்டேர்களோ?

1 காதம் = 7.6 மைல். 


ஆமாம். சேரநாட்டின் பகுதியாக எப்பொழுதும் விளங்கிய கொங்குமண்டிலமும் சேர்த்தால் 12 மைல் = காதம் என்றாகும்.

மீண்டும் பெரிய பாம்பு கடித்து முதல்கட்டத்தில் விழுந்தாகிவிட்டது.

பாடல் குறிப்பை அடியொட்டி எல்லை வரைந்து  அதன் சுற்றளவை மட்டும் அளப்பதுதானே முறை!!!

"பாடலின்படி"  "பழநி வட எல்லை" என்றால் "தென்காசி கிழக்கு எல்லை" என்றால் இவற்றுக்கு வடக்கே இருக்கும் கொங்கு நாடு எப்படி இந்த சேர நாட்டின்  எல்லைக்குள் வரும்?


பாடலைப் படித்தீர்களா என தெரியவில்லை. நீங்கள் கொடுத்த படத்திலேயே சேர நாடு பழனிக்கு வடக்கே படம் வரைந்துள்ளீர்கள்.

பாடலில் பழனிதான் வடக்கே எல்லை என்றும் காணோம். எல்லை என்ற சொல்லே இல்லை அதனில்.



சேரநாட்டெல்லை இதுவெனப் பாடியது: 
“வடக்குத்திசை பழனி வான் கீழ்தென்காசி 
குடக்குத்திசை கோழிக்கோடாம்-கடற்கரையின் 
ஓரமோ தெற்காகும் உள்ளெண்பதின்காதம் 
சேரநாட்டெல்லையெனச் செப்பு.”

பழனி வட திசை எல்லையாகவும், சிறப்பு கொண்ட கிழக்கு  எல்லையாகத்   தென்காசியும் உள்ளது, மேற்குத் திசையில்  கோழிக்கோடு எல்லையாகவும்,  தெற்கெல்லையாகக் கடலும் உள்ள  எண்பது காதம் வரை பரவியுள்ள நிலமே சேரநாட்டின் எல்லை என்று சொல்வாயாக. 
இப்பாடலால் பெறப்படுவது....
சேரநாடு: 
கிழக்கில் தென்காசி, 
மேற்கில் கோழிக்கோடு, 
வடக்கில் பழனி, 
தெற்கில் கடற்கரை ஓரம் – இடையில் 80 காதம். 


 நீங்களே மீண்டும் ஒரு முறை பாருங்கள்...பாடலின் குறிப்பின்படி ...
பழநி, தென்காசி, கோழிக்கோடு, தென்கடல் ஆகியன படத்தில் குறிக்கப்பட்டு மேற்குத் தொடர்ச்சி மலை வழியாக நாட்டின் எல்லை வரையப்பட்டுள்ளது.

.... தேமொழி

N. Ganesan

unread,
Mar 3, 2017, 12:28:55 AM3/3/17
to மின்தமிழ்
குமரிமுனை, தென்கடல் இதெல்லாம் பாட்டில் இல்லை.
நீங்கள் தான் சேர்த்து வரைந்துள்ளீர்கள்.

அதே போல, பழனி வடக்கே எல்லை என்றும் இல்லை.

தென்காசிக்கு கீழே சேர்த்தது போல, பழனிக்கு வடக்கேயும் சேர்த்தலாம்.
In fact, Kongu country was part of Chera country more than Nanjil Nadu. 

நா. கணேசன்
 


 நீங்களே மீண்டும் ஒரு முறை பாருங்கள்...பாடலின் குறிப்பின்படி ...
பழநி, தென்காசி, கோழிக்கோடு, தென்கடல் ஆகியன படத்தில் குறிக்கப்பட்டு மேற்குத் தொடர்ச்சி மலை வழியாக நாட்டின் எல்லை வரையப்பட்டுள்ளது.

.... தேமொழி



குமரி, திருவனந்தபுரம் போன்ற பகுதிகளை ஒப்பிட்டால் பழனி வடக்குத் திசையில் என்று சொல்கிறது இந்த வெண்பா.
கொங்குநாட்டின் தலைமைப் பதி பழனி. அதனால் தென்குமரிக்கு வடக்கே திசையில் உள்ளது பழனி என்கிறார் ஆசிரியர்,

வரலாற்றில் சேரநாடு என்பது கொங்குநாட்டை அடக்கியதுதான். அதன் தலைமைப் பதியைச் சொல்கிறார்.
வட திசையில். கேரளாவை மாத்திரம் வடக்கே கோடு இழுத்துவிட்டு, கொங்குநாட்டை சேர்த்தாமல் விட்டால்
7.6 மைல் வரும். கொங்கையும் சேர்த்தினால் காதம் = ~12 மைல் வரும்.

சேரர் கொங்கு நன்னாடதில் - பழனித் திருப்புகழ் (நாத விந்து கலாதி நமோ நம)

நா. கணேசன்
 

..... தேமொழி


 
 



 
DIfferent maps can be generated taking the circumfrence, it is up to the user.
If Gaavadha = ~12 miles, then 80 * 12 miles, will include Kerala + parts of Kongu country. 

நா. கணேசன்

 

 
..... தேமொழி


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

தேமொழி

unread,
Mar 3, 2017, 12:48:59 AM3/3/17
to மின்தமிழ்


ஆக நான் பாடலை படித்துப் பொருள்  புரிந்து கொள்ளவில்லை என்பது உங்கள் கருத்தாக இருக்கிறது.

நன்றி.


..... தேமொழி

N. Ganesan

unread,
Mar 3, 2017, 1:05:27 AM3/3/17
to மின்தமிழ்

2017-03-02 21:48 GMT-08:00 தேமொழி <jsthe...@gmail.com>:

ஆக நான் பாடலை படித்துப் பொருள்  புரிந்து கொள்ளவில்லை என்பது உங்கள் கருத்தாக இருக்கிறது.

நன்றி.


இன்னும் மேம்படலாம் என நினைத்தேன்.

உ-ம்: தென்கடல், குமரி எல்லாம் வெண்பாவில் இல்லை. பழனி வட எல்லை என்றும் அதில் இல்லை.
நாஞ்சில் நாடு அண்மையில் சேர்ந்த பகுதி. ஆனால், எப்போதும் உள்ள கொங்கு சேரம் ஏன் விடுபட்டது என்பதில் ஐயம்.

மேலும், காதம் என்பது சுற்றளவாக இவ் வெண்பாக்களில் உள்ளமை தெளிவு.

நா. கணேசன் 

iraamaki

unread,
Mar 3, 2017, 1:15:57 AM3/3/17
to mint...@googlegroups.com
என் நூலை மறுத்து எந்தத் தமிழறிஞரும் இந்த ஆறாண்டு காலத்தில் எழுதவில்லை.  நா.கணேசனைத் தமிழறிஞராய் நான் என்றுமே கொண்டதில்லை.
 
அன்புடன்,
இராம.கி.
 
Sent: Friday, March 03, 2017 10:46 AM
Subject: Re: [MinTamil] தமிழும் தமிழ் சார்ந்த நிலமும்
 
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Mar 3, 2017, 1:21:50 AM3/3/17
to மின்தமிழ்
எந்தத் தமிழறிஞரும் சிலம்பு கி.மு 1-ஆம் நூற்றாண்டு என இப்பொழுது எழுதுவதில்லை.

நா. கணேசன்

 
Sent: Friday, March 03, 2017 10:46 AM
Subject: Re: [MinTamil] தமிழும் தமிழ் சார்ந்த நிலமும்
 


On Thursday, March 2, 2017 at 8:56:32 PM UTC-8, தேமொழி wrote:
 
 
பாடல் குறிப்பை அடியொட்டி எல்லை வரைந்து  அதன் சுற்றளவை மட்டும் அளப்பதுதானே முறை!!!
 
சரியாகச் சொல்லியுள்ளீர்கள்.
 
 
"பாடலின்படி"  "பழநி வட எல்லை" என்றால் "தென்காசி கிழக்கு எல்லை" என்றால் இவற்றுக்கு வடக்கே இருக்கும் கொங்கு நாடு எப்படி இந்த சேர நாட்டின்  எல்லைக்குள் வரும்?
 
 
பாடலின் படி பழநி வட எல்லை என்று புரிந்துகொண்டுள்ளீர்கள். ஆனால், சேர நாட்டின் வட எல்லை என்று பாடலில் ஆசிரியர் சொல்லவில்லை,
வரலாற்றிலும்  அவ்வாறு சேரநாடு இருந்ததில்லை.
 
நா. கணேசன்
 
பல்கலைக்கழக ஆய்வுகளின் படி சிலம்பின் காலம் கி.பி. 5-6 ஆம் நூற்றாண்டு.
கி.மு. ஒன்றாம் நூற்றாண்டு என்பது இராமகி கருத்து ஆதாரம் அற்றது என்பது தமிழறிஞர்கள் கூற்று.
 
 
 
..... தேமொழி
 
 
 
 
 
 
 
 
DIfferent maps can be generated taking the circumfrence, it is up to the user.
If Gaavadha = ~12 miles, then 80 * 12 miles, will include Kerala + parts of Kongu country.
 
நா. கணேசன்
 
 
 
 
..... தேமொழி
 
 
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Mar 3, 2017, 1:29:22 AM3/3/17
to மின்தமிழ்


On Thursday, March 2, 2017 at 8:46:19 PM UTC-8, இராம.கி wrote:
இவருக்கு ”விரல், சாண், முழம், கோல், தண்டம், கூப்பீடு பற்றித் தெரியுமா?” என்று கேளுங்கள். பள்ளிக்கூடத்தில் தமிழ் நீட்டளவையைப் படித்திருக்கிறாரா? – என்றுங் கேளுங்கள். (கணக்கதிகாரத்தையாவது ஒழுங்காய்ப் படித்திருக்கிறாரா?) கொடுமுடி சண்முகம் என்ற அருமையான பொறியாளர் விவரங்கெட்டதனமாய் பழந்தமிழர் மரபுகளையும், இந்தக் காதத்தையும் மாய்ந்து மாய்ந்து ஆய்ந்து தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்.  அவருடைய ஆய்வுநூல் அவ்வளவு அருமையானது. (நாசாக்காரரை விட அவரை நான் நம்புவேன்.)

கொடுமுடி சண்முகத்தை நான் அறிவேன். அவர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் என்று எந்தத் தமிழறிஞரும் கூறமாட்டார்கள். 
 
 
அவரெல்லாம் இவருக்குமுன் தூசியென்று இவர்சொல்லுவார். மொத்தத்தில் தன்னைத்தவிர வேறெந்தப் புகர்நிறத்தான் சொல்வதையும் இவர் நம்ப மாட்டார்.  வெள்ளைக்காரரையும், 15 ஆம் நூற்றாண்டுக்கு அப்புறமுள்ள ஆசிரியரை மட்டுமே இவர் என்றைக்கும் நம்புவார். மற்றதெல்லாம் புதினம் கட்டுக்கதை என்பார்.  மாறாக ”மகரம், விடங்கர், முதலை, கொற்றவை, சிந்து சமவெளி” என்று சொல்லிப்பாருங்கள். தான் ஏற்கனவே அதைப்பற்றிச் சொன்னதாகச் சொல்லிவிடுவார். (இவர் பீற்றலை உடைப்பதற்கு யாரோவொரு கொம்பன் வராமலா போவான்? அந்தக் கொம்பனை எதிர்பார்த்து வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கிறேன்.)
 

காத்திருக்கலாம். தமிழறிஞர்கள் பலரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். 

நா. கணேசன்
 
கடைசிவரை காதத்தின் பொருளை யாருக்கும் இவர் புரியவிடமாட்டார். இவரே அதற்கு ஒரேயொரு எண்ணையும் சொல்லிவிடமாட்டார்.  புத்தர்காலத்து சஞ்சயவேளத்து  புத்தனுக்கு (எல்லாவற்றையும் ஐயப்படும் புத்தனை சஞ்சயப்படும் புலத்தின் தலைவனாகச் சொல்வது வாதமுறைகளில் ஒன்று. கோதமபுத்தர் காலத்து 6 பெரிய மெய்யியல் ஆசிரியரில் சஞ்சயவேளத்து புத்தன் ஒருவர்.) அடுத்தவர் இவர். 
 
பொதுவாக அகப்பாடு மண்டிக் கிடப்பவரோடு உரையாட முடியாது.  ”இவர் பெரிய மேதை” என்றுசொல்லி நீங்கள் வேறுவேலையைப் பார்ப்பதே நல்லது. ”இவர் மட்டுமே புத்திசாலி, மற்றவரெல்லாம் மடையர்” என்று சொல்லித்தான் விடுங்களேன்!
 
அன்புடன்,
இராம.கி. 
 
Sent: Friday, March 03, 2017 9:39 AM
Subject: Re: [MinTamil] தமிழும் தமிழ் சார்ந்த நிலமும்
 
ஆமாம் ஐயா...
இந்தத்  தனிப்பாடல்கள் தரும்  குறிப்புகள் படி;  நமக்கு புதியதாக  காதம் குறித்து  என்ன தெரிகிறது என்று நானும் அவரது கோணத்தைத்   தெரிந்து கொள்ளத்தான் முயல்கிறேன்.  
இதுவரை  இந்தப் பாடல்களை முன்னரே அவருக்கு தெரியும் என்று சொல்லியிருக்கிறார்.
முன்னர் எப்பொழுதும் கூறிய  காதம் குறித்த குறிப்புகளைத் தரும் ஆசிரியர்களைக் குறிப்பிட்டு, ஒரு காதம் என்பது ~9 முதல் ~19  மைல்களுக்குள் எந்த ஒரு அளவாகவும் இருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
 
 
 
..... தேமொழி
 
 

On Thursday, March 2, 2017 at 4:25:54 PM UTC-8, இராம.கி wrote:
உங்களுக்குப் பொறுமை மிகக்கூட என்றெண்ணுகிறேன். விடாதுகேட்கிறீர்கள். அவரோ, உடம்பெல்லாம் எண்ணெய் தடவிக்கொண்டு “பலிஞ்சடுகுடு.... சடுகுடு” என்று ஆடிக்கொண்டேயிருக்கிறார். 
 
இன்னொரு உவமையிற் சொன்னால், சுற்றிச்சுற்றி அவர் சுழற்பந்து (spin) தான் எரிவார்
. அதை வாகாய் நீங்கள் வாங்கி எல்லைக்கு வெளியில்  ஆறோட்டமாய் (sixer) அடித்தாற்றான் உண்டு.
காதத்தையொட்டி உங்களைக் குழப்பியடித்து வெளிக்குத் (out) தள்ளப்போகிறார்.
அவர் சுழற்பந்து மன்னர். யாரிடமுஞ் சிக்கமாட்டார். Smile)))))) எல்லாரிடமும் ஏதாவதுசொல்லித் தப்பிப்பதே அவர்பாங்கு.
 
நீவிர் வாழ்க!
 
அன்புடன்,
இராம.கி. 
Sent: Thursday, March 02, 2017 11:46 PM
Subject: Re: [MinTamil] தமிழும் தமிழ் சார்ந்த நிலமும்


On Wednesday, March 1, 2017 at 6:48:39 AM UTC-8, N. Ganesan wrote:
 
சுற்றளவு கணக்கிட்டுப் பார்த்து காதம் என்ன என ஒருவாறு கணிக்கலாம்.
 
       “வடக்குத்திசை பழனி வான் கீழ்தென்காசி
குடக்குத்திசை கோழிக்கோடாம்-கடற்கரையின்
ஓரமோ தெற்காகும் உள்ளெண்பதின்காதம்
சேரநாட்டெல்லையெனச் செப்பு.”
 
உ-ம்: இவ் வெண்பாவில் உள்ள ஊர்களின் பெரிமீட்டர் 80 காதம் = ~ 800 மைல் என்ற கணக்கைத்
தரலாம்.
 
 
    ~ 800 மைல் என்ற கணக்கை, மேற்காணும் இப்பாடல் குறிப்பில் இருந்து விலகாமல் எப்படி கணக்கிட்டீர்கள் என்று விளக்கமுடியுமா?

பாடல்களில் சொல்லும் ஊர்களை இணைத்து சுற்றளவு (Circumference) இவ்வளவு காதம் எனப்பார்க்கலாம் (https://groups.google.com/d/msg/mintamil/eYfE29Y8e6k/fVESwSkVAgAJ)  என்று மீண்டும் மீண்டும் சொல்கிறீர்களே தவிர அது எப்படி என்று படமிட்டு காட்டும்படி கேட்பதை மட்டும் தவிர்க்கிறீர்கள்.
 
 
 
நா. கணேசன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Mar 3, 2017, 1:58:43 AM3/3/17
to மின்தமிழ், vallamai


On Thursday, March 2, 2017 at 9:31:27 AM UTC-8, தேமொழி wrote:

"அருணகிரிநாதர், கச்சியப்ப சிவாச்சார்யர் (12-ஆம் நூற்.), மாதவச் சிவஞான யோகிகள், கந்தசாமிப் புலவர் (பூவணப் புராணம், ....) எல்லோரும் காதம் இவ்வளவு எனக் கொடுத்துள்ளார்கள். இவர்கள் புகழ்மிக்க தமிழின் ஆசிரியர்கள்" "காதம் 10 மைல் என்று பாரதியார் பயன்படுத்தியுள்ளார்" என்பத்தை எல்லாம் மறுக்கும் நோக்கில் இல்லை. 


சிறப்பான கருத்து.  எந்தத் தமிழறிஞரும் சிலம்பு கி.மு. நூற்றாண்டுகளில் பாடப்பட்டது என்றோ, புகழ்பெற்ற தமிழ்ப் புலவர்களாகிய இவர்கள் கொடுத்துள்ள காத அளவை தவறு என்றோ எழுதி
நான் படித்ததில்லை. இளங்கோ அடிகள் கி.பி. 5-ஆம் நூற்றாண்டு வாக்கில் வாழ்ந்தவர். கர்நாடகத்தில் வழங்கும் வடசொற்கள் காவதம்/காதம் இவற்றைத் தமிழ்க் காப்பியத்தில்
அறிமுகம் செய்கிறார். 

பிற்கால வெண்பாக்களில் கூறும் பிரதேச மண்டிலங்களின் சுற்றளவும் முந்தைத் தமிழ்ப்புலவோர் கூற்றுகளுக்கு இயைந்துவருகிறது. உ-ம்: சேர நாட்டுடன் கொங்கையும் சேர்த்துப் பார்க்கவேண்டும்.
தென்கடல், குமரிமுனை பாட்டில் இல்லாவிட்டாலும் சேர்த்து எழுதுவதுபோல, பழனி தலைமைப் பதியாகக் கூறினார். ஆனால் வடவெல்லை என்று கூறவில்லை. குமரி நாஞ்சில்நாடு இது சேரருக்கானது பிற்காலம். ஆனால், பல நூற்றாண்டுகளாய் அதற்கு முன்னரே கொங்குநாடு சேரநாடு தான். ’சேரர் கொங்கு’ - அருணகிரிநாதர் (14-ஆம் நூற்றாண்டு). பின்னர் கொங்குமண்டல சதகத்தில் விரிவாக கார்மேகக் கவிஞர் என்னும் சமணர் விளக்கியுள்ளார்.

நா. கணேசன்

தேமொழி

unread,
Mar 3, 2017, 2:11:42 AM3/3/17
to மின்தமிழ், vall...@googlegroups.com


On Thursday, March 2, 2017 at 10:58:43 PM UTC-8, N. Ganesan wrote:


பல நூற்றாண்டுகளாய் அதற்கு முன்னரே கொங்குநாடு சேரநாடு தான். ’சேரர் கொங்கு’ - அருணகிரிநாதர் (14-ஆம் நூற்றாண்டு). பின்னர் கொங்குமண்டல சதகத்தில் விரிவாக கார்மேகக் கவிஞர் என்னும் சமணர் விளக்கியுள்ளார்.


Let's stick with the words given by the author of the poem, extrapolation is unnecessary, especially in this case that gives specific values.

N. Ganesan

unread,
Mar 3, 2017, 2:17:09 AM3/3/17
to மின்தமிழ், vall...@googlegroups.com
In poems, there is always dhvani. The Chera country veNpaa just gives key towns. By historical records and epigraphs we know where Chera coutry was.

(1) The author does not say Pazani is "vaDa ellai" of Chera realm.
(2) He does not mention ThenkaDal, Kumari either.

N. Ganesan

தேமொழி

unread,
Mar 3, 2017, 2:19:32 AM3/3/17
to மின்தமிழ்
“வடக்குத்திசை பழனி வான் கீழ்தென்காசி 
குடக்குத்திசை கோழிக்கோடாம்-கடற்கரையின் 
ஓரமோ தெற்காகும் உள்ளெண்பதின்காதம் 
சேரநாட்டெல்லையெனச் செப்பு.”

தென் திசையில் இருக்கும் கடல் எது?


N. Ganesan

unread,
Mar 3, 2017, 2:26:36 AM3/3/17
to மின்தமிழ்
2017-03-02 23:19 GMT-08:00 தேமொழி <jsthe...@gmail.com>:
“வடக்குத்திசை பழனி வான் கீழ்தென்காசி 
குடக்குத்திசை கோழிக்கோடாம்-கடற்கரையின் 
ஓரமோ தெற்காகும் உள்ளெண்பதின்காதம் 
சேரநாட்டெல்லையெனச் செப்பு.”

தென் திசையில் இருக்கும் கடல் எது?



தென் திசையில் கடல் என்றா பாட்டில் இருக்கிறது.

தென்காசிக்கு அருகே உள்ள கடற்கரை தெற்கு எனலாமே.
நாஞ்சில் நாடு கேரளா ஆகுமா?

நா. கணேசன் 


On Thursday, March 2, 2017 at 11:17:09 PM UTC-8, N. Ganesan wrote:


On Thursday, March 2, 2017 at 11:11:42 PM UTC-8, தேமொழி wrote:


On Thursday, March 2, 2017 at 10:58:43 PM UTC-8, N. Ganesan wrote:


பல நூற்றாண்டுகளாய் அதற்கு முன்னரே கொங்குநாடு சேரநாடு தான். ’சேரர் கொங்கு’ - அருணகிரிநாதர் (14-ஆம் நூற்றாண்டு). பின்னர் கொங்குமண்டல சதகத்தில் விரிவாக கார்மேகக் கவிஞர் என்னும் சமணர் விளக்கியுள்ளார்.


Let's stick with the words given by the author of the poem, extrapolation is unnecessary, especially in this case that gives specific values.

In poems, there is always dhvani. The Chera country veNpaa just gives key towns. By historical records and epigraphs we know where Chera coutry was.

(1) The author does not say Pazani is "vaDa ellai" of Chera realm.
(2) He does not mention ThenkaDal, Kumari either.

N. Ganesan

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

தேமொழி

unread,
Mar 3, 2017, 2:36:31 AM3/3/17
to மின்தமிழ்

கீழே பாடலின் பொருள்:





தென்காசிப்பகுதியில் கடல் இருக்கிறதா?

தேவையானால்  

கோழிக்கோடு

பழநி 

தென்காசி போல 

அங்கிருக்கும் ஊரைக் குறிக்க எழுதியவருக்குத் தெரியாதா?

அதனால் தெற்கில் கடற்கரை என்றால்  குமரிக்கரை என்றுதானே பொருள்

பழனிக்கும் அவ்வாறே.


..... தேமொழி

தேமொழி

unread,
Mar 3, 2017, 2:44:13 AM3/3/17
to மின்தமிழ், vall...@googlegroups.com
பாடல்களும் படமும்.....


..... தேமொழி


 

N. Ganesan

unread,
Mar 3, 2017, 2:50:33 AM3/3/17
to மின்தமிழ்
2017-03-02 23:36 GMT-08:00 தேமொழி <jsthe...@gmail.com>:

கீழே பாடலின் பொருள்:





தென்காசிப்பகுதியில் கடல் இருக்கிறதா?

தேவையானால்  

கோழிக்கோடு

பழநி 

தென்காசி போல 

அங்கிருக்கும் ஊரைக் குறிக்க எழுதியவருக்குத் தெரியாதா?

அதனால் தெற்கில் கடற்கரை என்றால்  குமரிக்கரை என்றுதானே பொருள்


சேர நாட்டு தெற்கில் கடற்கரை என்றால் தென்காசிக்கு மேற்குக் கடற்கரை.

புகழ்பெற்ற குமரி என்றால் ஏன் குறிக்கவில்லை?

N. Ganesan

unread,
Mar 3, 2017, 2:56:24 AM3/3/17
to மின்தமிழ், vall...@googlegroups.com
Compared to the names of towns, Kanyakumari is very famous. If you stick with the words of the author of the poem, your picture will not include Nanjil Naadu & Kanyakumari.

The verse says the seashore is the southern edge. By seashore, he means the sea near Thenkasi.

If it were Kanyakumari, he would have mentioned by name this well known tip. He intentionally avoids it, as it did not belong to Chera country.

NG 

தேமொழி

unread,
Mar 3, 2017, 3:03:26 AM3/3/17
to மின்தமிழ்

தென்காசிப்பகுதியில் கடல் இருக்கிறதா?

தேவையானால்  

கோழிக்கோடு

பழநி 

தென்காசி போல 

அங்கிருக்கும் ஊரைக் குறிக்க எழுதியவருக்குத் தெரியாதா?

அதனால் தெற்கில் கடற்கரை என்றால்  குமரிக்கரை என்றுதானே பொருள்

முன்னரே கொடுத்துள்ளேன், 



NG 

N. Ganesan

unread,
Mar 3, 2017, 3:14:19 AM3/3/17
to மின்தமிழ்
2017-03-03 0:03 GMT-08:00 தேமொழி <jsthe...@gmail.com>:


On Thursday, March 2, 2017 at 11:56:24 PM UTC-8, N. Ganesan wrote:


On Thursday, March 2, 2017 at 11:11:42 PM UTC-8, தேமொழி wrote:


On Thursday, March 2, 2017 at 10:58:43 PM UTC-8, N. Ganesan wrote:


பல நூற்றாண்டுகளாய் அதற்கு முன்னரே கொங்குநாடு சேரநாடு தான். ’சேரர் கொங்கு’ - அருணகிரிநாதர் (14-ஆம் நூற்றாண்டு). பின்னர் கொங்குமண்டல சதகத்தில் விரிவாக கார்மேகக் கவிஞர் என்னும் சமணர் விளக்கியுள்ளார்.


Let's stick with the words given by the author of the poem, extrapolation is unnecessary, especially in this case that gives specific values.

Compared to the names of towns, Kanyakumari is very famous. If you stick with the words of the author of the poem, your picture will not include Nanjil Naadu & Kanyakumari.

The verse says the seashore is the southern edge. By seashore, he means the sea near Thenkasi.

If it were Kanyakumari, he would have mentioned by name this well known tip. He intentionally avoids it, as it did not belong to Chera country.



தென்காசிப்பகுதியில் கடல் இருக்கிறதா?



தென்காசிக்கு மேற்கே கடல் இல்லையா?

குமரி என்று புகழ்பெற்ற இடத்தை வெண்பா குறிப்பிடுகிறதா?
குமரி உள்ள நாஞ்சில் நாடு சேரநாடா?

நா. கணேசன்
 

தேவையானால்  

கோழிக்கோடு

பழநி 

தென்காசி போல 

அங்கிருக்கும் ஊரைக் குறிக்க எழுதியவருக்குத் தெரியாதா?

அதனால் தெற்கில் கடற்கரை என்றால்  குமரிக்கரை என்றுதானே பொருள்

முன்னரே கொடுத்துள்ளேன், 



NG 

--

தேமொழி

unread,
Mar 3, 2017, 3:45:40 AM3/3/17
to மின்தமிழ்


On Friday, March 3, 2017 at 12:14:19 AM UTC-8, N. Ganesan wrote:


2017-03-03 0:03 GMT-08:00 தேமொழி <jsthe...@gmail.com>:


On Thursday, March 2, 2017 at 11:56:24 PM UTC-8, N. Ganesan wrote:


On Thursday, March 2, 2017 at 11:11:42 PM UTC-8, தேமொழி wrote:


On Thursday, March 2, 2017 at 10:58:43 PM UTC-8, N. Ganesan wrote:


பல நூற்றாண்டுகளாய் அதற்கு முன்னரே கொங்குநாடு சேரநாடு தான். ’சேரர் கொங்கு’ - அருணகிரிநாதர் (14-ஆம் நூற்றாண்டு). பின்னர் கொங்குமண்டல சதகத்தில் விரிவாக கார்மேகக் கவிஞர் என்னும் சமணர் விளக்கியுள்ளார்.


Let's stick with the words given by the author of the poem, extrapolation is unnecessary, especially in this case that gives specific values.

Compared to the names of towns, Kanyakumari is very famous. If you stick with the words of the author of the poem, your picture will not include Nanjil Naadu & Kanyakumari.

The verse says the seashore is the southern edge. By seashore, he means the sea near Thenkasi.

If it were Kanyakumari, he would have mentioned by name this well known tip. He intentionally avoids it, as it did not belong to Chera country.



தென்காசிப்பகுதியில் கடல் இருக்கிறதா?



தென்காசிக்கு மேற்கே கடல் இல்லையா?

குமரி என்று புகழ்பெற்ற இடத்தை வெண்பா குறிப்பிடுகிறதா?
குமரி உள்ள நாஞ்சில் நாடு சேரநாடா?

என்று பிறபாடல்கள் கடல் எல்லையைப் பற்றிக் குறிப்பதையும் ஒப்பிட்டு பார்க்கலாம் 

கடல்கிழக்குத் தெற்குக்கரை பொருவெள்ளாறு (சோழநாட்டெல்லை)
செல்லும் குணபால் திரைவேலை ( சோழநாட்டெல்லை)
தெள்ளார் புனற்கன்னி தெற்காகும் (பாண்டிநாட்டெல்லை)
ஆர்க்கும் உவரியணிகிழக்கு (தொண்டைநாட்டெல்லை)

சேரநாட்டு எல்லையைக்   குறிக்கும் மற்ற உரைகளையும் ஒப்பிட்டு அறியலாம்.
முன்னர் தனிப்பாடல் திரட்டு நூலில் இருந்து தந்தேன். 
கீழுள்ளது  தமிழகம் நூலில் இருந்து...***இவையாவற்றையும்  கட்டுரையின் சான்றுகள் பகுதியிலும் காணலாம்***.


"வடக்குத் திசைபழனி வான்கீழ்தென் காசி
குடக்குத் திசைகோழிக் கோடாம்-கடற்கரையின்
ஓரமே தெற்காகு முள்ளெண் பதின்காதம்
சேரநாட்டெல்லையெனச் செப்பு.
         பழனிக்குத் தெற்கு, தென்காசிக்கு மேற்கு, கோழிக்கோட்டிற்குக் கிழக்கு, கடற்கரைக்கு வடக்கு ஆகிய இந்த எல்லைக்குட்பட்ட எண்பதுகாதம் நிலப்பரப்பு, சேரதேசமென்பது இப்பாட்டால் விளங்குகின்றது. (http://www.tamilvu.org/slet/lA100/lA100pd4.jsp?bookid=227&pno=72



..... தேமொழி

iraamaki

unread,
Mar 3, 2017, 3:48:52 AM3/3/17
to mint...@googlegroups.com
அப்படியா எழுதியிருந்தீர்?
 
“கி.மு. ஒன்றாம் நூற்றாண்டு என்பது இராமகி கருத்து ஆதாரம் அற்றது என்பது தமிழறிஞர்கள் கூற்று” என்று எழுதியிருந்தீர். அதனுடைய பொருளென்ன?  (ஒன்றாம் நூற்றாண்டு என்பது எழுத்து மரபில்லை என்றாவது தெரிந்துகொள்ளும்.; முதல் நூற்றாண்டென்று சொல்லவேண்டும் நீர் இங்கு தமிழ்பற்றிப் பலருக்குச் சொல்லித்தருகிறீர். வேடிக்கை. ஆங்கிலத்தில் first century என்பீரா? oneth century என்பீரா? )
 
”சிலம்பு முதல் நூற்றாண்டென்று எனக்குமுன்னால் எவரும் கூறியதில்லை” என்பதாற்றான் என்நூல் கவனிக்கப்படுகிறது.  உம் புரட்டு வேலைகளை வேறெங்காவது வைத்துக்கொள்ளும். உம் தமிழாழம் எவ்வளவென்று நான் நன்றாகவே அறிவேன். என் நூலைப் பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ, அது வேறுகதை. நீர் ஒருநாளும் அப்படியொரு நூல் இருப்பதாகக்கூட acknowledge செய்ததில்லை.  அவ்வளவு தரமுள்ள நீர்  பேசவந்துவிட்டீர். உமக்குச் சிலம்புபற்றி என்ன தெரியும்?
 
நீர் சொல்லவந்ததைச் சொல்லும். அதோடு நிறுத்திக்கொள்ளும்.
 
இராம.கி.
 
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Mar 3, 2017, 3:58:08 AM3/3/17
to மின்தமிழ்
நீங்கள் எல்லை குறித்த சர்ச்சை எழுப்புவதன் நோக்கம் இங்கு  தெளிவு. 
சேரநாட்டின் எல்லைகள் பாடலில் குறிப்பிட்ட குறிப்புகள்படியே  அமைக்கப்பட்டால் 
நீங்கள் கூறும் ஒரு காதம் அளவு = 14 ± 5  மைல் என்ற வரையறைக்குள் வராமல் ~7 என்று நின்றுவிடுகிறது. 
பாடலில் குறிப்பிடாத கொங்குப் பகுதியை இயன்றவரை  உள்ளிழுக்க, பிற எல்லைகள் சரியில்லை என்று கூறி என்னமாய்   படாத பாடு படுகிறீர்கள் என்பது வேடிக்கையாகவே இருக்கிறது எனக்கு.

..... தேமொழி

iraamaki

unread,
Mar 3, 2017, 4:04:39 AM3/3/17
to mint...@googlegroups.com
உமக்குத் தெரிந்தது அவ்வளவு தான்.  பூனை தன் கண்ணை மூடிக்கொண்டால் உலகமே இருண்டுவிட்டதென்று நினைத்துக்கொள்ளுமாம்.  அவரைப்பற்றி உமக்கு என்ன தெரியும்? வெறுமே ஆட்களின் பெயரை எடுத்துவிட்டு, “ எனக்கு அவரைத்தெரியும், இவரைத்தெரியும்” என்று சொல்வதில் நீர் மிகச் சமர்த்தர். Name-calling character. (ஒருவன் சொன்னானாம் “அண்ணாத்துரையை எனக்குத் தெரியும்”. அண்ணாத்துரைக்கு இவனைத் தெரியுமா? என்பது தான் எப்பொழுதும் கூர்ந்துபார்க்கவேண்டியது. )
 
அவர் புதுவைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். என் பழையநினைவில் தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகம் என்று எழுதிவிட்டேன்.  அது தப்பு.  அவர் முனைவர்பட்ட ஆய்வேடு பொத்தகமாக வெளிவந்திருக்கிறது. அதன் முதற்பக்கத்தைக் கண்ணித்து அனுப்பியுள்ளேன்.
இனியாவது  தெரிந்துகொள்ளும்.
 
இராம.கி.
img165.jpg

N. Ganesan

unread,
Mar 3, 2017, 9:50:17 AM3/3/17
to மின்தமிழ்
2017-03-03 1:03 GMT-08:00 iraamaki <p...@giasmd01.vsnl.net.in>:
உமக்குத் தெரிந்தது அவ்வளவு தான்.  பூனை தன் கண்ணை மூடிக்கொண்டால் உலகமே இருண்டுவிட்டதென்று நினைத்துக்கொள்ளுமாம்.  அவரைப்பற்றி உமக்கு என்ன தெரியும்? வெறுமே ஆட்களின் பெயரை எடுத்துவிட்டு, “ எனக்கு அவரைத்தெரியும், இவரைத்தெரியும்” என்று சொல்வதில் நீர் மிகச் சமர்த்தர். Name-calling character. (ஒருவன் சொன்னானாம் “அண்ணாத்துரையை எனக்குத் தெரியும்”. அண்ணாத்துரைக்கு இவனைத் தெரியுமா? என்பது தான் எப்பொழுதும் கூர்ந்துபார்க்கவேண்டியது. )
 
அவர் புதுவைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். என் பழையநினைவில் தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகம் என்று எழுதிவிட்டேன்.  அது தப்பு.  அவர் முனைவர்பட்ட ஆய்வேடு பொத்தகமாக வெளிவந்திருக்கிறது. அதன் முதற்பக்கத்தைக் கண்ணித்து அனுப்பியுள்ளேன்.
இனியாவது  தெரிந்துகொள்ளும்.
 

கொடுமுடியார் எழுத்துச்சீர்மையில் ஆர்வம் மிகக் கொண்டவர். அவர் குடும்பமே தெரியும். முதன்முதலில் தெய்வசிகாமணிக்கவுண்டரின் ஓலைச்சுவடிகளை
கொங்கு, தேனோலையில் அச்சிடக் கேட்டு வாங்கி அச்சுப்போட்டவர். புலவர் ராசுவிடம் தமிழ் பற்றிக் கேட்கும் பழக்கம் உடையவர்,

கொடுமுடி சண்முகன் நூலில் புகழ்வாய்ந்த பழைய நூலாசிரியர்கள் காதம் பற்றிட்தரும் தொலைவு பற்றிய செய்திகள் இல்லை. அவற்றை அவர் அறியவில்லை.

அருணகிரிநாதர், கச்சியப்ப சிவாச்சார்யர் (12-ஆம் நூற்.), மாதவச் சிவஞான யோகிகள், கந்தசாமிப் புலவர் (பூவணப் புராணம், ....) எல்லோரும் காதம் இவ்வளவு எனக் கொடுத்துள்ளார்கள். இவர்கள் புகழ்மிக்க தமிழின் ஆசிரியர்கள். காலமும், படைப்பும் உலகம் அறியும். கர்நாடகத்தில் இவ் வார்த்தையைக் கேட்ட இளங்கோ அடிகள் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்துகிறார்: காதம்/காவதம் இளங்கோ அடிகள் சமண சமய போதனைக்காக கவுந்தி அடிகள் என்ற குரத்தியை அங்கே சந்திக்கவைக்கிறார். காதம்/காவதம் = ~12 மைல் அங்கேயும் இருக்கிறது. காதம் 10 மைல் என்று பாரதியார் பயன்படுத்தியுள்ளார்: http://nganesan.blogspot.com/2016/11/speed-of-light-in-bharatiyar-poem.html 

நா. கணேசன்

 
இராம.கி.

N. Ganesan

unread,
Mar 3, 2017, 9:55:12 AM3/3/17
to மின்தமிழ்


On Friday, March 3, 2017 at 12:45:40 AM UTC-8, தேமொழி wrote:

சேரநாட்டு எல்லையைக்   குறிக்கும் மற்ற உரைகளையும் ஒப்பிட்டு அறியலாம்.
முன்னர் தனிப்பாடல் திரட்டு நூலில் இருந்து தந்தேன். 
கீழுள்ளது  தமிழகம் நூலில் இருந்து...***இவையாவற்றையும்  கட்டுரையின் சான்றுகள் பகுதியிலும் காணலாம்***.


உரைகளில் கடற்கரை என்பது குமரிமுனை என்று யாரும் எழுதவில்லை. கா. ராமசாமி நாயுடு உரை படித்துப்பாருங்கள்.

நா. கணேசன்
 

N. Ganesan

unread,
Mar 3, 2017, 10:01:22 AM3/3/17
to மின்தமிழ்


On Friday, March 3, 2017 at 12:48:52 AM UTC-8, இராம.கி wrote:
அப்படியா எழுதியிருந்தீர்?
 
“கி.மு. ஒன்றாம் நூற்றாண்டு என்பது இராமகி கருத்து ஆதாரம் அற்றது என்பது தமிழறிஞர்கள் கூற்று” என்று எழுதியிருந்தீர். அதனுடைய பொருளென்ன?  (ஒன்றாம் நூற்றாண்டு என்பது எழுத்து மரபில்லை என்றாவது தெரிந்துகொள்ளும்.; முதல் நூற்றாண்டென்று சொல்லவேண்டும் நீர் இங்கு தமிழ்பற்றிப் பலருக்குச் சொல்லித்தருகிறீர். வேடிக்கை. ஆங்கிலத்தில் first century என்பீரா? oneth century என்பீரா? )
 
”சிலம்பு முதல் நூற்றாண்டென்று எனக்குமுன்னால் எவரும் கூறியதில்லை” என்பதாற்றான் என்நூல் கவனிக்கப்படுகிறது.  உம் புரட்டு வேலைகளை வேறெங்காவது வைத்துக்கொள்ளும். உம் தமிழாழம் எவ்வளவென்று நான் நன்றாகவே அறிவேன். என் நூலைப் பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ, அது வேறுகதை. நீர் ஒருநாளும் அப்படியொரு நூல் இருப்பதாகக்கூட acknowledge செய்ததில்லை.  அவ்வளவு தரமுள்ள நீர்  பேசவந்துவிட்டீர். உமக்குச் சிலம்புபற்றி என்ன தெரியும்?
 

உமக்குத் தெரிந்தது சிலம்பு என கிமு 1-ஆம் நூற்றாண்டு என்பதிலேயே தெரிகிறது. உம் நூலை நான் படித்ததில்லை. தமிழறிஞர்கள் சிலம்பு பற்றிய நூலில்
கி.மு. நூற்றாண்டுகள் என எழுதிப் பார்த்ததில்லை. 100 ஆண்டுக்கு முன்னர் சொல்லியிருக்கலாம். இப்போது இல்லை.

மாதவி என்பது குருக்கத்தி என நான் சொல்லிய கருத்தை நீங்கள் பயன்படுத்துவதை அறிவேன். அகத்தியர் பற்றிய கதைகளை இளங்கோ அடிகள்
விரிவாகப் பாடியுள்ளார். தொகுத்துப்பார்த்தால் கி.மு. நூற்றாண்டுகளில் சிலம்பு இயற்றப்படவில்லை என்பது விளங்கிக்கொள்கின்றனர்
தமிழறிஞர்கள்.

நா. கணேசன்
 
நீர் சொல்லவந்ததைச் சொல்லும். அதோடு நிறுத்திக்கொள்ளும்.
 
இராம.கி.
 

N. Ganesan

unread,
Mar 3, 2017, 10:06:14 AM3/3/17
to மின்தமிழ்
2017-03-03 0:58 GMT-08:00 தேமொழி <jsthe...@gmail.com>:
நீங்கள் எல்லை குறித்த சர்ச்சை எழுப்புவதன் நோக்கம் இங்கு  தெளிவு. 
சேரநாட்டின் எல்லைகள் பாடலில் குறிப்பிட்ட குறிப்புகள்படியே  அமைக்கப்பட்டால் 
நீங்கள் கூறும் ஒரு காதம் அளவு = 14 ± 5  மைல் என்ற வரையறைக்குள் வராமல் ~7 என்று நின்றுவிடுகிறது. 
பாடலில் குறிப்பிடாத கொங்குப் பகுதியை இயன்றவரை  உள்ளிழுக்க, பிற எல்லைகள் சரியில்லை என்று கூறி என்னமாய்   படாத பாடு படுகிறீர்கள் என்பது வேடிக்கையாகவே இருக்கிறது எனக்கு.

..... தேமொழி



பாடலில் கொங்குப் பகுதி குறிப்பிடவில்லையா? பழனி என்பது எங்கே உள்ளது?

பாடலில் குறிப்பிடாத, உரைகளில் இல்லாத குமரியை நீங்கள் சேர்த்தும்போது,
பாடலில் குறிப்பிடப்படும் கொங்குப்பகுதிகள் சேர நாடு ஆகாதா?
சேர நாட்டின் தலைநகர் கொங்கில் இருந்தது, 14-ஆம் நூற்றாண்டிலும் பின்னரும்
சேரநாட்டுடன் கொங்கைச் சேர்த்தே பாடியிருக்கின்றனர். அதனை விட்டுவிட வேண்டுமா?

ஆனால், பாட்டிலே இல்லாத குமரி ஏன் சேர்கிறது? - என விளங்கிக் கொள்ள இயலவில்லை.

நா. கணேசன்
 

N. Ganesan

unread,
Mar 3, 2017, 10:11:19 AM3/3/17
to மின்தமிழ்


On Friday, March 3, 2017 at 12:48:52 AM UTC-8, இராம.கி wrote:
முதல் நூற்றாண்டென்று சொல்லவேண்டும் நீர் இங்கு தமிழ்பற்றிப் பலருக்குச் சொல்லித்தருகிறீர். வேடிக்கை. ஆங்கிலத்தில் first century என்பீரா? oneth century என்பீரா? )
 

ஒன்றாம் நூற்றாண்டு என்றும் சொல்லலாம். உங்கள் தமிழாழம் தெரியாதா? ஆங்கில வார்த்தை அப்படியே கிரந்த எழுத்தை நீக்கி எழுதுவது உங்கள் தமிழ்.
என்ன ஒன்று? படிப்பவருக்கு இது எஞ்சினீரிங்கா என தலை சுற்றிவிடும். கட்டுரை படித்த தமிழ் ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.

பலருக்கும் சிலம்பு கி.மு. நூற்றாண்டுகள் என்று சொல்லித் தருகிறீர். வேடிக்கை தான்.

நா. கணேசன்
 
 

iraamaki

unread,
Mar 3, 2017, 7:09:13 PM3/3/17
to mint...@googlegroups.com
”ஆமாம். தப்பாகச் சொல்லிவிட்டேன். அவர் முனைவர் பட்டம் வாங்கியவர் தான்” என்று சொல்லும் அடிப்படைநாணயம் கூட உம்மிடம் இல்லையே? 
 
இராம.கி.
 
Sent: Friday, March 03, 2017 8:19 PM
Subject: Re: [MinTamil] தமிழும் தமிழ் சார்ந்த நிலமும்
 

தேமொழி

unread,
Mar 5, 2017, 1:31:28 PM3/5/17
to மின்தமிழ்
_____________


On Friday, March 3, 2017 at 12:58:08 AM UTC-8, தேமொழி wrote:
நீங்கள் எல்லை குறித்த சர்ச்சை எழுப்புவதன் நோக்கம் இங்கு  தெளிவு. 
சேரநாட்டின் எல்லைகள் பாடலில் குறிப்பிட்ட குறிப்புகள்படியே  அமைக்கப்பட்டால் 
நீங்கள் கூறும் ஒரு காதம் அளவு = 14 ± 5  மைல் என்ற வரையறைக்குள் வராமல் ~7 என்று நின்றுவிடுகிறது. 
பாடலில் குறிப்பிடாத கொங்குப் பகுதியை இயன்றவரை  உள்ளிழுக்க, பிற எல்லைகள் சரியில்லை என்று கூறி என்னமாய்   படாத பாடு படுகிறீர்கள் என்பது வேடிக்கையாகவே இருக்கிறது எனக்கு.

..... தேமொழி


from: https://groups.google.com/d/msg/mintamil/6Kxqa7vlPpo/l5lK-TYYAQAJ

On Sunday, March 5, 2017 at 7:49:55 AM UTC-8, N. Ganesan wrote:

தேமொழி அவர்களை பழைய காதம் கணக்கிட சேரநாட்டு பவுண்டரி (boundary) 80 காதம் என்னும் வெண்பாவிற்கு கேரளா, + கொங்கு சுற்றளவு 
சேர்த்தச் சொல்லியும் எழுதியுள்ளேன். அப்போது சுமார் 12 மைல் புகழ்பெற்ற தமிழ்க்கவிஞர்கள் (உ-ம்: அருணகிரிநாதர், கச்சியப்பர், .... பாரதியார்)
குறிப்பிடும் அளவுடன் இயையும். ~12 மைல் = காதம் என்று எடுத்து வட்டகை (perimeter of ellipse) தொண்டை (20 காதம்), சோழம் (24 காதம்), பாண்டி (56 காதம்),
சேரநாடு (80 காதம் = கேரளா + கொங்கு - அவ் வெண்பாவில் கொங்கு தலைமை க்ஷேத்ரம் பழனி விளக்கமாகக் குறிப்பீடுண்டு) மேப்படம் 
எளிதாக வரையலாம்..


திரு. கணேசன்,
இந்த இழைக்குரிய விவாதம்  குறித்து பிற இழைகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த விவாதத்தில்  நீங்கள் என்னை உங்கள் விவாதக் கருத்தை ஏற்றுக் கொள்ளும்படி எந்த சான்றும் தரவில்லை.  உங்கள் கருத்தை நான் ஏற்றுக் கொள்ளவும் இல்லை.

என்னால் ஒவ்வொரு இழையிலும் சென்று  பதிலளித்து அவற்றை எல்லாம் திசை திருப்பும் எண்ணமும் எனக்கில்லை. 
சுபாவின் சமணமலை பதிவில் இதற்குள் மூன்று முறை 

இழைகளில் இது குறித்து  தோன்றியதும் அல்லாமல் 

housto...@googlegroups.com போன்று நான் உறுப்பினராக இல்லாத, சென்று பதிலளிக்க இயலாத குழுமங்களுக்கும்  அனுப்புவதில் உங்கள் கருத்து உறுதிப்படுத்தப் பட்டது போன்ற தோற்றத்தையும்  ஏற்படுத்துகிறீர்கள்.

நீங்கள் ஆயிரம் கருத்து சொல்லலாம், ஆனால் அதை எல்லோரும் ஏற்றுக் கொள்ளவேண்டும், எல்லா இழைகளிலும் சென்று பதிலளிக்க வேண்டும் என்று நினைப்பது முறையல்ல.  
அவ்வாறு செய்யாவிட்டால் உங்கள் கருத்து சரியானது என்ற பொருளும் அல்ல.

கண்ணகி கோவலன் குடகு சென்றார்கள் என்று நீங்கள் குறிப்பிடுவதை, பல இழைகளில் குறிப்பிடுவதை ஒருமுறை மறுத்துவிட்டு மேற்கொண்டு அனைவரும் தவிர்த்துவிடுவதன் நோக்கம் ... உங்கள் கருத்தை அனைவரும் ஆதரிகிறார்கள் என்ற பொருள் அல்ல.  

அதற்கு மேல் பேச அதில் ஏதும் இல்லை என்பதுவே.


மீண்டும் எல்லை குறித்து....
(I)

சேரநாட்டெல்லை: 
“வடக்குத்திசை பழனி வான் கீழ்தென்காசி 
குடக்குத்திசை கோழிக்கோடாம்-கடற்கரையின் 
ஓரமோ தெற்காகும் உள்ளெண்பதின்காதம் 
சேரநாட்டெல்லையெனச் செப்பு.”

மற்றும் 

கொங்கு நாட்டெல்லை குறிக்கும் பாடல்கள்:
“வடக்குத் தலைமலையாம் வையாவூர் தெற்குக்
குடக்கு வெள்ளிப் பொருப்புக் குன்று  - கிழக்குக்
கழித்தண்டலை சூழும் காவிரிசூழ் நாடாம்
குழித்தண்டலை அளவே கொங்கு”

என்று இரு தனி நாடுகளுக்கான பாடல்கள்...
சேரநாட்டின் பாடலில் பழநி வடக்கெல்லை.
கொங்கு நாட்டின் பாடல் வையாவூர் (பழநி) தென்எல்லை என்று வருகிறது.

ஆகவே இவற்றின் அடிப்படையில் படம் வரையும் பொழுது  கொங்கு நாட்டை சேரநாட்டில் இணைக்க முடியாது.


(II)
பாடல்களின்  காலம் வெவ்வேறாக இருக்கலாம், பாடல் எழுதியவர் வெவ்வேறானவராகவும் இருக்கலாம்....
ஆனால் ஏதோ பொதுவில் வழக்கில் இருந்த கருத்தைப் பாடலில் கொண்டு வந்திருக்கிறார்கள் என்றும், 
அதற்கேற்றவாறு வரைந்த படம் இது  என்ற என் கருத்தை தெளிவாகக் குறிப்பிட்டு படத்தை வரைந்ததையும் குறிப்பிட்டேன்.  
இதைப் பலமுறை  உங்களுக்கும் பலமுறை தெளிவாகவும் விளக்கியுள்ளேன்.


(III)
நாஞ்சில் நாட்டை ஏன் இணைத்தாய்? கொங்கை ஏன் இணைக்கவில்லை என்ற உங்கள் கேள்விக்கு....
தொண்டை நாட்டுப் பாடலும், சேரநாட்டுப் பாடலும் ஒருசேர ஒரு புலவர் (கம்பர்) வழியாகக்  கிடைப்பதால், அவற்றின் அடிப்படையில்...

அது சற்றொப்ப 8 ஆம் அல்லது 9 ஆம் நூற்றாண்டு எனக் கொள்ளலாம். அப்பொழுதுதான் பிற்கால சேரர் ஆட்சி துவக்கம்.
அதே  8 ஆம் அல்லது 9 ஆம் நூற்றாண்டு காலம்தான் பல்லவர் ஆட்சியும் சோழர்களால்  முடிவுக்கு வருகிறது. அபராஜிதன் கையில் இருந்து (Aparajitavarman - 880-897 https://en.wikipedia.org/wiki/Aparajitavarman) சோழருக்கு வருகிறது.

கீழே சேரநாட்டு எல்லையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த தகவல்கள் ...
பிற்கால சேரர் காலம் என்பது  குலசேகர  வர்மா (குலசேகர  ஆழ்வார் கி.பி. 800-820)  காலம் முதல்  ராம வர்மா குலசேகரன் (கி.பி. 1090–1102) வரை.
முற்கால சேரர் காலத்திலோ ... பிற்கால சேரர் காலத்திலோ ஆய், நாஞ்சில் பகுதி மாறி மாறி சேர சோழ பாண்டியர் கைகளில் சென்று வந்திருக்கிறது.
பார்க்க:
Rama Varma ascended the throne of the Later Chera Kingdom during a period of severe political crisis and instability. The Chola king Kulothunga's army captured the southern city of Quilon in 1096, and now controlled all regions of the Chera state south to the city.After the Cholas destroyed Mahodayapuram, Rama Varma shifted his capital to Quilon Rama Varma resolved to beat back the Later Cholas this time and rallied all his forces behind him. During the following long war even the capital city of Mahodayapuram and surrounding places were destroyed and burned down by the Chola army. After the fall of the capital, Rama Varma, without even a palace of his own, stayed at alternative frugal accommodations such as Cranganore and Quilon. In order to the stem the Cholas from the south, Rama Varma moved his base of operations to Quilon. Sometime before 1100 AD, after saving Quilon from the Cholas, he marched against the Cholas ahead of a large army. The newly formed chaver suicide forces sustained heavy losses to the Chola army. Kulothunga Chola was defeated and withdrew towards Kottar. This was the first fatal blow to Chola imperialism in the region and ended the century long Chola domination in Chera state.The Cholas never tried to regain their influence beyond Nanjanad after this defeat. Rama Varma continued to stay at Quilon even after the war and managed the affairs of the kingdom for some time more. He seems to have abdicated the throne in favor of his son Kotha Varma (1102–1125) and retired from public life and perhaps later died at a local palace. Kotha Varma later conquered Kottar and portions of Nanjanad from Pandyas.  [Menon, A Sreedhara; "A Survey Of Kerala History"; D C Books, 01-Jan-2007]
உதவி விக்கிபீடியா - https://en.wikipedia.org/wiki/Rama_Varma_Kulashekhara
 
(IV)
எல்லாவற்றுக்கும் மேலாக.... பாடல்கள் குறிப்பின் அடிப்படையில்தான் படமும் வரைய முடியும் அதன் அடிப்படையில்தான் அளக்கவும் முடியும்.
என் முயற்சிக்கு  பாடல்களின் குறிப்புகள்   அடிப்படை ...இதைப் பலமுறை சொல்லிவிட்டேன்.

குறிப்புகள் அடிப்படையில்தான் படம் வரைந்து அளப்பது முறையே தவிர, 
நீங்கள் கூறுவது போல ((சுமார் 12 மைல் புகழ்பெற்ற தமிழ்க்கவிஞர்கள் (உ-ம்: அருணகிரிநாதர், கச்சியப்பர், .... பாரதியார்) குறிப்பிடும் அளவுடன் இயையும். ~12 மைல் = காதம் என்று எடுத்து வட்டகை (perimeter of ellipse) தொண்டை (20 காதம்), சோழம் (24 காதம்), பாண்டி (56 காதம்), சேரநாடு (80 காதம் = கேரளா + கொங்கு - அவ் வெண்பாவில் கொங்கு தலைமை க்ஷேத்ரம் பழனி விளக்கமாகக் குறிப்பீடுண்டு) மேப்படம்  எளிதாக வரையலாம்))
இந்த இந்த ஆசிரியர்கள் கொடுத்த அளவு இது... இதில்   ~12 மைல் = காதம் என்ற அளவு குறிப்பிடுகிறார்கள் ... 
எனவே இதன் அடிப்படையில்   நாம் நாட்டின் எல்லையை 80 காதம் = கேரளா + கொங்கு என்று வரைவோம் என்பது வரைபடம் வரையும் முறையல்ல.

இந்த முறையில் யாரேனும் எனது நிலம் 250 ஏக்கர் என்று எல்லை வரைந்த தகவல் உண்டா?  இவையிவை  நிலத்தில் எல்லைக் குறி, இதற்கிடைப்பட்ட பகுதி என்றுதான் அளப்பது வழக்கம்.  

ஆகவே, நான் பாடல் குறிப்பின்படி வரைந்து அதில் சுற்றளவிற்கு இடைப்பட்ட இடம் ~7 மைல் வருகிறது என்று கணக்கு காண்பிக்கிறேன்.

அத்துடன் ...
1. காதம் குறித்த, ~9 முதல் ~19 மைல் என்ற நிலையற்ற நிலஅளவை அடிப்படையிலும்,
2. பாடலின் காலம் உறுதிப்படுத்தப்படாத நிலையிலும்,
3. நில எல்லைகள் பலமுறை மாறிக்கொண்டே இருந்தது என்ற அடிப்படையிலும்  
உள்ள சூழ்நிலையில் 
 ~12 மைல் = காதம் என்ற காரணத்திற்காக எல்லைகளை பாடல் தரும் குறிப்புகளை மீறி   வரைய வேண்டியத் தேவையும் இல்லை.

இந்தப் பதிவை, நான் கொடுத்த விளக்கத்தை நீங்கள் அனுப்பிய அத்தனை குழுமங்களுக்கும் அனுப்பவேண்டும் என்பது எனது கோரிக்கை. 

மேலும், நான் இதைக் குறித்து மின்தமிழில் மட்டுமே, இயன்றால்  இந்த இழையில் மட்டுமே, என்னால் விளக்கம் அளிக்கக்கூடிய இடத்தில் மட்டுமே  விவாதம் தொடர்வதை விரும்புகிறேன்.

மற்றவர்களைப்போல  இதை மேலும் பலமுறை சொல்ல நான் சொல்லப்போவதில்லை, சொல்ல விரும்பவில்லை .  இதுவே இறுதிமுறை.  period.

.... தேமொழி 




N. Ganesan

unread,
Mar 5, 2017, 3:27:39 PM3/5/17
to மின்தமிழ், vallamai


On Sunday, March 5, 2017 at 10:31:28 AM UTC-8, தேமொழி wrote:


கண்ணகி கோவலன் குடகு சென்றார்கள் என்று நீங்கள் குறிப்பிடுவதை, பல இழைகளில் குறிப்பிடுவதை ஒருமுறை மறுத்துவிட்டு மேற்கொண்டு அனைவரும் தவிர்த்துவிடுவதன் நோக்கம் ... உங்கள் கருத்தை அனைவரும் ஆதரிகிறார்கள் என்ற பொருள் அல்ல.  

அதற்கு மேல் பேச அதில் ஏதும் இல்லை என்பதுவே.

எல்லோரும் எங்கே மறுத்துள்ளார்கள்? யார் யார் நான் எழுதிய கவுந்தி தவப்பள்ளி காவிரி உற்பத்தி இடங்களிலே கங்க ராஜ்யத்தில் இருந்தது என்னும் கருதுகோளை
மறுத்து கட்டுரைகள் எழுதியுள்ளனர் என பார்க்க ஆர்வம் உள்லவன். நாடுகாண் காதையில் காவிரியின் தலைமை ஸ்தானங்கள் இல்லை என்பதை? அறிந்துகொள்ள ஆவல்.
தமிழறிஞர்கள் உவேசா போன்றோர் குறிப்பிட்டுள்ளதை வைத்தும், சீரங்கம், திருவரங்கம் என்ற வேறுபாடுகளை வைத்தும் எழுதியுள்ளேன்.
ஜர்னல் ஆர்ட்டிக்கிள் எழுதித் தருகிறேன். 

புகழ்மிக்க தமிழ்நூலாசிரியர்கள் கூறும் காதத்தின் அளவை வைத்துப் பார்த்தாலும் தெரியும்.
உ-ம்: வேதத்தை தமிழில் சொல்ல முயன்ற சு. கோதண்டராம காட்டும் பழமொழி. உவேசா மாணவர் கிவாஜ கூறியதும் தந்துள்ளேன்.
 


மீண்டும் எல்லை குறித்து....
(I)

சேரநாட்டெல்லை: 
“வடக்குத்திசை பழனி வான் கீழ்தென்காசி 
குடக்குத்திசை கோழிக்கோடாம்-கடற்கரையின் 
ஓரமோ தெற்காகும் உள்ளெண்பதின்காதம் 
சேரநாட்டெல்லையெனச் செப்பு.”

மற்றும் 

கொங்கு நாட்டெல்லை குறிக்கும் பாடல்கள்:
“வடக்குத் தலைமலையாம் வையாவூர் தெற்குக்
குடக்கு வெள்ளிப் பொருப்புக் குன்று  - கிழக்குக்
கழித்தண்டலை சூழும் காவிரிசூழ் நாடாம்
குழித்தண்டலை அளவே கொங்கு”

என்று இரு தனி நாடுகளுக்கான பாடல்கள்...
சேரநாட்டின் பாடலில் பழநி வடக்கெல்லை.
கொங்கு நாட்டின் பாடல் வையாவூர் (பழநி) தென்எல்லை என்று வருகிறது.

ஆகவே இவற்றின் அடிப்படையில் படம் வரையும் பொழுது  கொங்கு நாட்டை சேரநாட்டில் இணைக்க முடியாது.



இவை  இரண்டும் தனித்தனியாக, வெவ்வேறு கால கட்டங்களில் கிடைத்த பாடல்கள்,. 
இந்த இரண்டு வெண்பாக்கள் இருப்பதால் கொங்கு சேரநாட்டோடு சேர்த்தக் கூடாது என்கிறீர்கள்.

ஓர் உதாரணம் தருகிறேன். வெங்காலூர் என்ற பெங்களூர் பெயரை விளக்குவது கொங்குநாட்டின்
24 உபநாடுகளில் ஒன்றான வெங்கால நாடு. ஊர்த்தொகை பாடல்களில் வெங்கால நாட்டுக்குப்
பாடல் உண்டு. வெங்காலநாட்டுக்குப் பாடல் இருப்பதால், அது கொங்குநாட்டோடு சேர்த்தக் கூடாது
என வாதிடுவது சரியா?

அவ்வாறு வரலாறு இல்லை. கொங்குநாடு சேரநாட்டின் உபநாடு தான்.
கொடுமுடி சண்முகனும் சேர்த்துள்ளார். 

கொங்குநாட்டு வெண்பா எழுதியவர் வேறு. கா. ராமசாமிநாயுடு நூலில் உள்ள பாடல்கள் வேறு.
இரண்டும் வெவ்வேறு நூற்றாண்டுகளில் வெவ்வேறு ஆசிரியர்கள் எழுதியவை. இதனால்,
கொங்குநாடு சேரநாடு அல்ல என வரையறுக்க முடியாது. வரலாறு அவ்வாறு காட்டுவதும் இல்லை.
கொடுமுடி சண்முகமும்.

> 1. காதம் குறித்த, ~9 முதல் ~19 மைல் என்ற நிலையற்ற நிலஅளவை அடிப்படையிலும்,

இதுபற்றி எழுதியுள்ளேன். யோஜனை ~9 மைல். ஆனால் இரட்டியாக ~18 மைல் என்பது சிலர் கருத்து.
பாடல்களும் கொடுத்துள்ளேன்.

நாட்டின் வட்டகையை வைத்துக் காதம் கணிக்கவேண்டும் என்றும் பாடல்களைப் படிக்க
குறிப்பிட்டுள்ளேனே. நிலையற்ற அளவு எனக் கருதமுடியாது: 9 மைல்ஸ் என்பதன் double-measure 18 மைல்ஸ்.
அவ்வளவுதான்.

கா. ராமசாமிநாயுடு நூலிலே இல்லாத வெண்பாவை செ. ராசுவின் ஆசிரியர் பெரும்புலவர் வே. ரா. தெய்வசிகாமணிக்கவுண்டர்
போன்றோர் கொங்குநாட்டு ஆவணங்களில் அந்த உபநாட்டின் அளவைச் சொல்லும் வெண்பாவால்
சேரநாட்டிலிருந்து கொங்குநாட்டைப் பிரிப்பது சரியல்ல எனலாம். கொடுமுடிசண்முகனும் செய்யாத செயல் அது.
ரா. ராகவையங்கார், சேரர் வஞ்சி; இரா. கிருஷ்ணமூர்த்தி, சேரர் நாணயங்கள்; ஐராவதம் மகாதேவன், சங்கம் சேரர் கல்வெட்டுகள்;
நாகசாமி, ரோமன் கரூர் - இவற்றை படித்துப் பாருங்கள். ஏன் கொடுமுடியார் கொங்கை சேர்த்துகிறார் சேரநாடாக
என இவ்வாய்வுகள் நிறுவும். அருணகிரிநாதர், தமிழ்ப் பழமொழி, கந்தசாமிப் புலவர், ... பாடல்களைப் பார்த்தால்
வட்டகைக் கணக்கில் நீங்கள் கூறும் 7.6 மைல் அதிகரிக்கும்.

நா. கணேசன்



N. Ganesan

unread,
Mar 5, 2017, 4:07:20 PM3/5/17
to மின்தமிழ்


On Friday, March 3, 2017 at 12:58:08 AM UTC-8, தேமொழி wrote:
நீங்கள் எல்லை குறித்த சர்ச்சை எழுப்புவதன் நோக்கம் இங்கு  தெளிவு. 
சேரநாட்டின் எல்லைகள் பாடலில் குறிப்பிட்ட குறிப்புகள்படியே  அமைக்கப்பட்டால் 
நீங்கள் கூறும் ஒரு காதம் அளவு = 14 ± 5  மைல் என்ற வரையறைக்குள் வராமல் ~7 என்று நின்றுவிடுகிறது. 
பாடலில் குறிப்பிடாத கொங்குப் பகுதியை இயன்றவரை  உள்ளிழுக்க, பிற எல்லைகள் சரியில்லை என்று கூறி என்னமாய்   படாத பாடு படுகிறீர்கள் என்பது வேடிக்கையாகவே இருக்கிறது எனக்கு.

..... தேமொழி



இன்றைய உங்கள் மடலால் ஏன் கொங்குநாட்டை சேரநாட்டில் இருந்து விலக்கினீர்கள் எனப் புரிந்துகொண்டேன். ஆனால் வரலாற்றில் அவ்வாறு இல்லை.

இருவேறு ஆசிரியர்கள், இரு வேறு நூற்றாண்டுகளில், வெவ்வேறு காரணங்களுக்காக (உ-ம்: கொங்குநாட்டின் எல்லையை அவ்வூர்க்காரர்களுக்கு சொல்வதற்காக எழுதிய வெண்பா. ஆனால் அவ்வெண்பா கொங்கு சேரநாட்டின் பகுதி என்பதை எவ்விதத்திலும் மறுக்கவில்லை. 

நா. கணேசன் 

N. Ganesan

unread,
Mar 5, 2017, 4:15:12 PM3/5/17
to மின்தமிழ்


On Wednesday, March 1, 2017 at 4:47:57 PM UTC-8, தேமொழி wrote:



நீங்கள் நாட்டின்  சுற்றளவில் ...
சேரநாடு  =  800 மைல்/ 80 காதம் > இதன்படி ஒரு காதம்  = 10 மைல்
என்று சொல்கிறீர்கள். 
இது சரியான அளவில்லையே !!!!... 
எனக்கு வரும் சேரநாட்டின் சுற்றளவு 610 மைல்கள் ..
அளவுடன் கூடிய படமும் கொடுக்கப்பட்டுள்ளது 

இதே அளவிடும் முறை பிற நாடுகளுக்கும் பொருந்த வேண்டும், 
அத்துடன்  வேறுபாடுகள் இருந்தாலும்  அதிகம் இருக்கக்கூடாது. 

கொடுத்துள்ள  சேர சோழ நாடுகளின் சுற்றளவு  படங்களைப் பார்க்கவும் 
சேரநாடு சுற்றளவு  = 610 மைல்/ 80 காதம் ( இதன்படி ஒரு காதம்  = 7.6 மைல்)
சோழநாடு சுற்றளவு  = 382 மைல்/ 24காதம்  ( இதன்படி ஒரு காதம்  =15.9 மைல்)
இதற்குப் பிறகு பிற நாடுகள் என்ன அளவு  எனத் தொடருவதில் பயனில்லை. 

இதில் எதை எடுத்துக் கொள்ளலாம் 

ஒரு காதம்  = 7.6 மைல் அல்லது  15.9 மைல் அல்லது  இரண்டிற்கும் உள்ள  சராசரி?

***


சோழ நாட்டின் சுற்றளவுக்கு அருகிலே வரும். கொங்கு உபநாட்டின் வெண்பாவுக்காக
கொஙகைச் சேரநாட்டுடன் சேர்த்தாமல் இருப்பதை நீங்கள் தவிர்த்தால் எனக் கருதுகிறேன்.

Ref.:

தேமொழி

unread,
Mar 5, 2017, 4:16:31 PM3/5/17
to மின்தமிழ்


On Sunday, March 5, 2017 at 12:27:39 PM UTC-8, N. Ganesan wrote:


On Sunday, March 5, 2017 at 10:31:28 AM UTC-8, தேமொழி wrote:


கண்ணகி கோவலன் குடகு சென்றார்கள் என்று நீங்கள் குறிப்பிடுவதை, பல இழைகளில் குறிப்பிடுவதை ஒருமுறை மறுத்துவிட்டு மேற்கொண்டு அனைவரும் தவிர்த்துவிடுவதன் நோக்கம் ... உங்கள் கருத்தை அனைவரும் ஆதரிகிறார்கள் என்ற பொருள் அல்ல.  

அதற்கு மேல் பேச அதில் ஏதும் இல்லை என்பதுவே.

எல்லோரும் எங்கே மறுத்துள்ளார்கள்? யார் யார் நான் எழுதிய கவுந்தி தவப்பள்ளி காவிரி உற்பத்தி இடங்களிலே கங்க ராஜ்யத்தில் இருந்தது என்னும் கருதுகோளை
மறுத்து கட்டுரைகள் எழுதியுள்ளனர் என பார்க்க ஆர்வம் உள்லவன். நாடுகாண் காதையில் காவிரியின் தலைமை ஸ்தானங்கள் இல்லை என்பதை? அறிந்துகொள்ள ஆவல்.
தமிழறிஞர்கள் உவேசா போன்றோர் குறிப்பிட்டுள்ளதை வைத்தும், சீரங்கம், திருவரங்கம் என்ற வேறுபாடுகளை வைத்தும் எழுதியுள்ளேன்.
ஜர்னல் ஆர்ட்டிக்கிள் எழுதித் தருகிறேன். 


உங்கள் கோணத்தை நீங்கள்  சொல்வதையோ எழுதுவதையோ யார் தடை செய்ய முடியும்...

அதை  ஒப்புக்கொண்டிருக்கிறார்களா   என்பதே கேள்வி.  

ஒருவர் கோணம் காலப்போக்கில் ஏற்றுக் கொள்ளவும் படலாம், ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தை புறக்கணிக்கவும் நேரலாம். 

இதை விட்டுவிடாலம். உங்கள் ஆய்வு குறித்து  காலம் முடிவு செய்யும்  
காதம் அளவு கண்டுபிடிப்பது என் கட்டுரையின் முதன்மை நோக்கமே அல்ல.

முதலில் சில தனிப்பாடல்கள் தரும் தமிழக மன்னர்களின் அரசு எல்லைகளைக் குறிக்கும் பாடல்களை தொகுத்து  கொடுத்து அவை குறிக்கும், பாடலாசிரியர்,  காலம், எல்லை ஆகியவற்றைக் குறித்து எனது கருத்துகளையும் பகிர்வது. இதுவே எனது முதன்மை நோக்கம்.

அடுத்து அப்பாடல்கள் குறிப்பிலேயே படம் வரைந்தால் எப்படி இருக்கும் என ஆர்வத்தால் படம் வரைவது.

பிறகு இறுதியாக வந்ததே காதம் குறித்த வரைபட அளவு முயற்சி.

குறிப்புகளைக் கொண்டு வரைந்த  படத்தின்படிதான் அளவு காண இயலும்.  குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றல் கிருஷ்ணதேவராயர் கல்வெட்டு செய்தியையும் குறிப்பிட்ட நான் அதில் உள்ள கெடிலம் நதிக்கு சோழ எல்லையை நீட்டி அளக்க வில்லை.
வரலாறு படிக்கும்   அனைவருக்கே தெரியும் சோழ எல்லைகளைப் பற்றி. எல்லைகள்  சுருங்கி விரிந்து சுருங்கி விரிந்து காலப்போக்கில் மாறுவது. 
தஞ்சை மாவட்டம் என்றாலே ... இப்பொழுதெல்லாம் அக்கால தஞ்சை நாகை, திருவாரூர் உள்ளிட்ட பகுதியைக் குறிப்பிடுவதாக எழுதும் நிலையில் உள்ளோம்... 
தெலுங்கானா? ஆந்திரா? 
திருப்பதிஎல்லை குறித்த போராட்டம் நமக்குப் புதிதா?

அதனால், வரலாற்றில் அறிந்ததை எல்லாம் தெளிவான குறிப்புகள் கொண்ட பாடலில் வரும் நிலப்பரபலவிற்கு .... 
நமக்குத் தேவையான அளவு வருவதற்காக மாற்றி அமைக்க முடியாது. 
மேலும்,  சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சோழ நிலஅளவையைப் பற்றி சேசாத்திரி ஒரு செய்தி பகிர்ந்திருந்தார்.

ஒவ்வொரு மன்னரும் தங்கள் நாட்டின்படி ஒவ்வொரு நில அளவீடு கொண்டிருந்தார்களா? இவை நாட்டுக்கு நாடு மாறியதுண்டா? காலத்திற்குக் காலம் மாறியதுண்டா? 
இந்த முறைப்படி இதன் அடிப்படையில்  இது ஒரு காதம் என அளவு  வருகிறது. 
அந்தத் தகவலைக் கொண்டு கணித்துப் பார்த்தால் அது வருகிறது. 
இப்படி இந்தத் தகவலின் படி அளந்தால் இந்த முறை கொடுக்கும் அளவும் இவர் கணிப்பை ஒத்துச் செல்கிறது.  
இதுதான் நாம் சொல்ல முடியும்.  மேலும் மேலும் குறிப்புகள் கிடைத்தால் தெளிவுகள் பிறக்கலாம்..

ஆனால் ~ 12 மைல் வரவேண்டும் என்று பாடலை மீறி வரைந்து அளப்பதில்  பயனில்லை.

இதை ஆய்வில் "டேட்டாவை குக் செய்வது" என்று சொல்வார்கள்.
[wiki: In scientific culture, cooking is a term for falsifying data or selectively deleting data in an attempt to prove a hypothesis.  Gregor Mendel has been posthumously accused of cooking his data.]

..... தேமொழி

தேமொழி

unread,
Mar 5, 2017, 4:21:07 PM3/5/17
to மின்தமிழ்


On Sunday, March 5, 2017 at 1:07:20 PM UTC-8, N. Ganesan wrote:


On Friday, March 3, 2017 at 12:58:08 AM UTC-8, தேமொழி wrote:
நீங்கள் எல்லை குறித்த சர்ச்சை எழுப்புவதன் நோக்கம் இங்கு  தெளிவு. 
சேரநாட்டின் எல்லைகள் பாடலில் குறிப்பிட்ட குறிப்புகள்படியே  அமைக்கப்பட்டால் 
நீங்கள் கூறும் ஒரு காதம் அளவு = 14 ± 5  மைல் என்ற வரையறைக்குள் வராமல் ~7 என்று நின்றுவிடுகிறது. 
பாடலில் குறிப்பிடாத கொங்குப் பகுதியை இயன்றவரை  உள்ளிழுக்க, பிற எல்லைகள் சரியில்லை என்று கூறி என்னமாய்   படாத பாடு படுகிறீர்கள் என்பது வேடிக்கையாகவே இருக்கிறது எனக்கு.

..... தேமொழி



இன்றைய உங்கள் மடலால் ஏன் கொங்குநாட்டை சேரநாட்டில் இருந்து விலக்கினீர்கள் எனப் புரிந்துகொண்டேன். ஆனால் வரலாற்றில் அவ்வாறு இல்லை.


இந்தப் பாடல்கள் வழி நாம் அறிவது தமிழக மன்னர்களின் எல்லைகள் குறித்த  ஒரு பொதுவான புரிதல் மட்டுமே.

..... தேமொழி 

 

N. Ganesan

unread,
Mar 5, 2017, 4:25:50 PM3/5/17
to மின்தமிழ்
2017-03-05 13:21 GMT-08:00 தேமொழி <jsthe...@gmail.com>:


On Sunday, March 5, 2017 at 1:07:20 PM UTC-8, N. Ganesan wrote:


On Friday, March 3, 2017 at 12:58:08 AM UTC-8, தேமொழி wrote:
நீங்கள் எல்லை குறித்த சர்ச்சை எழுப்புவதன் நோக்கம் இங்கு  தெளிவு. 
சேரநாட்டின் எல்லைகள் பாடலில் குறிப்பிட்ட குறிப்புகள்படியே  அமைக்கப்பட்டால் 
நீங்கள் கூறும் ஒரு காதம் அளவு = 14 ± 5  மைல் என்ற வரையறைக்குள் வராமல் ~7 என்று நின்றுவிடுகிறது. 
பாடலில் குறிப்பிடாத கொங்குப் பகுதியை இயன்றவரை  உள்ளிழுக்க, பிற எல்லைகள் சரியில்லை என்று கூறி என்னமாய்   படாத பாடு படுகிறீர்கள் என்பது வேடிக்கையாகவே இருக்கிறது எனக்கு.

..... தேமொழி



இன்றைய உங்கள் மடலால் ஏன் கொங்குநாட்டை சேரநாட்டில் இருந்து விலக்கினீர்கள் எனப் புரிந்துகொண்டேன். ஆனால் வரலாற்றில் அவ்வாறு இல்லை.


இந்தப் பாடல்கள் வழி நாம் அறிவது தமிழக மன்னர்களின் எல்லைகள் குறித்த  ஒரு பொதுவான புரிதல் மட்டுமே.

..... தேமொழி 


ஆமாம். I agree 100%.

In one of the first mails in this thread, I mentioned that it is very hard to use these late veNpaa-s to calculate Gaavadha distance, which was introduced by Ilango
aDikaL from Karnataka. May be he leart these words when he studied Jainism in Gangas' country who were staunch Jainas.

NG
 

 

இருவேறு ஆசிரியர்கள், இரு வேறு நூற்றாண்டுகளில், வெவ்வேறு காரணங்களுக்காக (உ-ம்: கொங்குநாட்டின் எல்லையை அவ்வூர்க்காரர்களுக்கு சொல்வதற்காக எழுதிய வெண்பா. ஆனால் அவ்வெண்பா கொங்கு சேரநாட்டின் பகுதி என்பதை எவ்விதத்திலும் மறுக்கவில்லை. 

நா. கணேசன் 

--

N. Ganesan

unread,
Mar 5, 2017, 4:43:25 PM3/5/17
to மின்தமிழ், vallamai


On Sunday, March 5, 2017 at 1:16:31 PM UTC-8, தேமொழி wrote:

ஆனால் ~ 12 மைல் வரவேண்டும் என்று பாடலை மீறி வரைந்து அளப்பதில்  பயனில்லை.


~12 மைல் வரணும் என நான் சொல்லவில்லை. ~10 மைல் இருக்கலாம். ~18 மைல் இருக்கலாம்.

சமணர்கள் தீர்த்தங்கரர்கள் உயரம், அவர்கள் மேரு போன்றவற்றை மிகையான அளவைகளைச் சொல்வர்.
அப்படிப்பார்த்தால், ஒரு யோஜனை = நான்கு காதம் என்பது அவர்களில் சிலர் கொள்வர்.
நாலடியாரில் காதமும், யோஜனையும் எவ்வளவு என்று External Acoustics சான்று கொண்டு பார்த்தேன்:
நாலடியாரும் ஒலியியல் விஞ்ஞானமும் (Yojana distance of Jains as determined from the Science of Acoustics)

இதை ஆய்வில் "டேட்டாவை குக் செய்வது" என்று சொல்வார்கள்.
[wiki: In scientific culture, cooking is a term for falsifying data or selectively deleting data in an attempt to prove a hypothesis.  Gregor Mendel has been posthumously accused of cooking his data.]


Exactly. Since I know the distinctly separate origins of the veNpaa-s of Kongunadu vs. Cheranad for serving different purposes, composed in different centuries. it will be tantamount to cooking data
to come up with Kaatham = 7.6 miles if we leave Kongu out in computations. No Tamil scholar would do that, esp. after R. Raghavaiyangar's classic: Cherar Vanji & Archaeology and Epigraphy has confirned his thesis.

If we compute the circumference of Chera country (Kerala + Kongu), it will be close to what Chozha country circumference yields for Kaadham distance. Kodumudiyar was going in the right direction,
I could have written/talked and we can ask him to contribute in MinTamil. I could have told him what various Tamil books say on distance of Kaadham and why 20th century books like MTL, by Bharati
use 10 miles as 1 Kaadham. Kodumudi Shanmukan was not aware of numerous Tamil books by reputed authors in each century defining the distance of Kaatham, and he seems to be baffled by the
fact that Tamil Lexicon (& Bharati, btw) uses 10 miles for Gaavatham.

Unfortunately an Engineer with a passion for simplifying Tamil script like Periyar is no more. The late CM Jayalalitha appointed
a committee to give her Kodumudi's reco-s. Unfortunately both are dead. We can all together honor Periyar, Kodumudi, ... memories by implementing what Kodumudi said the future direction of Tamil script
in mobile apps. That possibility should be made available to those who want to use Periar/Kodumudi's u, uu dependent letters.

NG
 
..... தேமொழி

Thiagarajan

unread,
Mar 5, 2017, 10:27:59 PM3/5/17
to மின்தமிழ்
அற்புதமான விளக்கம். படங்கள் சிறப்பு.

தேமொழி

unread,
Mar 6, 2017, 2:29:24 AM3/6/17
to மின்தமிழ்


On Sunday, March 5, 2017 at 7:27:59 PM UTC-8, Thiagarajan wrote:
அற்புதமான விளக்கம். படங்கள் சிறப்பு.

பாராட்டிற்கு மிக்க நன்றி திரு. தியாகராஜன் .


..... தேமொழி


Message has been deleted

தேமொழி

unread,
Mar 9, 2017, 2:05:22 AM3/9/17
to மின்தமிழ்

On Saturday, February 25, 2017 at 10:24:34 PM UTC-8, தேமொழி wrote:
நன்றி சிறகு: http://siragu.com/?p=26071

தமிழும் தமிழ் சார்ந்த நிலமும்


காலந்தோறும் தமிழகம்


ஒல்லி பை (Ollie Bye) உருவாக்கியுள்ள "ஒவ்வொரு ஆண்டிலும்  இந்திய வரலாறு" என்ற காணொளி அருமையானதொரு முயற்சி. இவர் இதனை விக்கிப்பீடியா தரும் தகவல்கள் அடிப்படையில் உருவாக்கியுள்ளதாகக் காணொளியின் இறுதிக் குறிப்பு தெரிவிக்கிறது.   இவர் இது போல பலநாடுகளுக்கும் உருவாக்கியுள்ளார், அனைத்தும் வரலாற்று அறிவுக்கு உதவுபவையே (https://www.youtube.com/channel/UC6gNjP1W4FXWExT5QpYkmhQ). 

அவருக்குக் கிடைத்த தரவுகளில் பிழையில்லை எனில்  அவை  காட்டும் வரலாறும் பிழையற்றதே. இதனால்  மேலோட்டமாக உலக வரலாறு, நாடுகளின் வரலாறு இவற்றைத் தெரிந்து கொள்ள இக்காணொளிகள் உதவும்.

ஒல்லி பை உருவாக்கிய  "ஒவ்வொரு ஆண்டிலும்  இந்திய வரலாறு" *  காணொளி படத்தில் ஒவ்வொரு 50 ஆண்டுகள் இடைவெளியிலும் "தமிழகத்தின் வரலாறு" குறிக்கும் பகுதியை மட்டும் வெட்டி எடுத்து இங்கு வழங்குகிறேன். இதனால் இந்த வரலாற்றை நான் அப்படியே ஏற்றுக் கொண்டதாகக் கூறவியலாது. குறிப்பாக, பிற்கால  சேர நாட்டின் எல்லை  குறித்த கேள்விகள் எனக்கு உள்ளது.   அதனால்  நல்லதொரு வரலாற்றுப் பதிவை அறிமுகப்படுத்தும் எண்ணம் மட்டுமே எனது நோக்கம். தமிழகத்தின்  கடந்த 2500 ஆண்டுகள் (பொது ஆண்டுக்கும் முன் 550  ஆம் ஆண்டு  முதல் பொது ஆண்டு 1950 வரையில்) தமிழகத்தின் வரலாறு படங்களாக கீழே காண்க: 


* The History of India: Every Year
Ollie Bye

பொ. ஆ. மு.  550-350மாற்றங்கள் காணப்படவில்லை.
(அதனால்  இங்கு கொடுக்கப்படவில்லை-இதனை  கார்வேலனின் ஹத்திகும்பா கல்வெட்டு(கி.மு 150) தரும் தகவலுடன் ஒப்பிடத் தேவையுள்ளது- ஹாத்திகும்பா கல்வெட்டு  - https://ta.wikipedia.org/s/41jo)



வரலாற்றுக்காலம் முதல் சங்ககால இறுதி வரை

களப்பிரர் ஆட்சி துவக்கம்

அடுத்து தொடரும்....














தேமொழி

unread,
Mar 9, 2017, 2:21:48 AM3/9/17
to மின்தமிழ்
காலந்தோறும் தமிழகம்

தொடர்கிறது....

Picture 2-Interregnum
Picture 3- Medieval Resurgence of Empires
Picture 4- Post Medieval to Indian Independence


களப்பிரர் ஆட்சி துவக்கம் முதல் பேரரசுகள் எழுச்சி வரை 

களப்பிரர் ஆட்சி துவக்கம் முதல் பேரரசுகள் எழுச்சி வரை 

அடுத்து பேரரசுகளின் காலம் ... தொடரும்...

தேமொழி

unread,
Mar 9, 2017, 2:28:57 AM3/9/17
to மின்தமிழ்
காலந்தோறும் தமிழகம்

தொடர்கிறது....

Picture 3- Medieval Resurgence of Empires
Picture 4- Post Medieval to Indian Independence

தமிழகப் பேரரசர்களின் காலம் 


தமிழகப் பேரரசர்களின் காலம் முடிவுற்றது 

அடுத்து விஜயநகர ஆட்சிக்காலம் முதல்... தொடரும்...

தேமொழி

unread,
Mar 9, 2017, 2:37:05 AM3/9/17
to மின்தமிழ்
காலந்தோறும் தமிழகம்

தொடர்கிறது....

Picture 3- Medieval Resurgence of Empires >> https://groups.google.com/d/msg/mintamil/eYfE29Y8e6k/zlK0BDM3AgAJ
Picture 4- Post Medieval to Indian Independence

விஜயநகர ஆட்சிக்காலம் முதல் சுதந்திர இந்தியா வரை 


ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று...

ஆடுவோம்..ஆடுவோம்...ஆடுவோம்...



நன்றி: படங்கள் உதவி ஒல்லி பை (Ollie Bye) உருவாக்கிய காணொளி >> https://www.youtube.com/watch?v=QN41DJLQmPk









Pandiyaraja

unread,
Mar 9, 2017, 4:21:04 AM3/9/17
to மின்தமிழ்
மிகுந்த அருமையான, பயனுள்ள தொகுப்பு - தேமொழி அம்மைக்குப் பாராட்டுக்கள்.
ப.பாண்டியராஜா

Oru Arizonan

unread,
Mar 9, 2017, 12:57:58 PM3/9/17
to mintamil
சிறந்த, பயனுள்ள பதிவு, உயர்திரு தேமொழி அவர்களே,
  
தங்களிடமிருந்து மேலும் இத்தகைய பதிவுகளை எதிர்நோக்குகிறேன்.
ஒரு அரிசோனன்

தேமொழி

unread,
Mar 9, 2017, 11:15:38 PM3/9/17
to மின்தமிழ்


On Thursday, March 9, 2017 at 1:21:04 AM UTC-8, Pandiyaraja wrote:
மிகுந்த அருமையான, பயனுள்ள தொகுப்பு - தேமொழி அம்மைக்குப் பாராட்டுக்கள்.

 மிக்க நன்றி ஐயா.


 

தேமொழி

unread,
Mar 9, 2017, 11:21:35 PM3/9/17
to மின்தமிழ்


On Thursday, March 9, 2017 at 9:57:58 AM UTC-8, oruarizonan wrote:
சிறந்த, பயனுள்ள பதிவு, உயர்திரு தேமொழி அவர்களே,

மிக்க நன்றி திரு.  அரிசோனன்



  
தங்களிடமிருந்து மேலும் இத்தகைய பதிவுகளை எதிர்நோக்குகிறேன்.

எழுதும் கருத்தின் தகுதிக்கு மட்டும் கருத்தை எதிர்பார்க்கிறேன்  திரு.  அரிசோனன்.

behavior modification techniques... உளவியல் முறையில் மறைமுகமாக நீங்கள் விரும்பும் வகையில் என் கட்டுரைகள் இருக்க வேண்டும் என்ற கோணத்தில் செலுத்தும் வகையில் கருத்துகள் வேண்டாமே. 

தவறு இருந்தால் கடுமையான விமர்சனம், தகுதி இருந்தால் பாராட்டு போதும்.

தீபாவளி, பெரியார் கட்டுரைகளுக்கு ஒருவித அணுகுமுறை, பிறவற்றிற்கு ஒரு அணுகுமுறை என 

"Carrot and Stick" approach of motivation techniques might work on managing projects, but can't applied for freedom of writing, either in the case of creative or research. no hidden agenda, please

..... தேமொழி

Singanenjam Sambandam

unread,
Mar 10, 2017, 12:54:23 AM3/10/17
to mint...@googlegroups.com
அற்புதமான , பயனுள்ள தொகுப்பு. பல பக்கங்களில் எழுதவேண்டியதை , சில படங்கள் அழகாக விளக்குகின்றன . பதிவிற்கு நன்றி.

தேமொழி

unread,
Mar 10, 2017, 1:05:56 AM3/10/17
to மின்தமிழ்


On Thursday, March 9, 2017 at 9:54:23 PM UTC-8, singanenjan wrote:
அற்புதமான , பயனுள்ள தொகுப்பு. பல பக்கங்களில் எழுதவேண்டியதை , சில படங்கள் அழகாக விளக்குகின்றன . பதிவிற்கு நன்றி.


மிக்க நன்றி திரு. சிங்கநெஞ்சம். 

..... தேமொழி


 

It is loading more messages.
0 new messages