Re: [MinTamil] Re: பெரியார்: சில புரிதல்கள்

730 views
Skip to first unread message

Seshadri Sridharan

unread,
Dec 24, 2016, 10:49:45 PM12/24/16
to mintamil
தமிழ் இனத்தை திராவிட இனம் என்றும் , தமிழ் நாட்டை திராவிட நாடு என்றும் ஈ.வெ.ரா. திரிபுவாதம் செய்த போது தமிழரான .கி.ஆ.பெ. விசுவநாதம் தமிழ் தமிழர் தமிழ்நாடு என்று கூறியதற்கு ஈ.வெ.ரா. கி.ஆ.பெ. அவர்களை பித்தலாட்டக்காரர் என்றும் கருங்காலி என்றும் தூற்றியதற்க்கு கி.ஆ.பெ. அவர்கள் அளித்த பதில் இது:-
” அண்மையில் சென்னை கோகலே ஆலில் திரு.சி.டி.டி. அரசு அவர்கள் தலைமையில் நடைப்பெற்ற கூட்டத்தில் ”தமிழர்” என்பதும் ’தமிழர் கழகம்’ என்பதும் ”தமிழரசுக் கட்சி” என்பதும் ”தமிழர் இராச்சியம்” என்பதும் தமிழ்நாடு தமிழருக்கே என்பதும் நமது முயற்சியைக் கெடுக்கும் சூழ்ச்சிகள் என்று பெரியார் அழுத்தம் திருத்தமாக கூறியிருக்கிறார்கள். இது ஏற்கனவே பத்திரிகைகளில் வெளிவந்து இருக்கிறது.
”இப்போது ’தமிழர்’ என்போர் ’பித்தலாட்டக்காரர்கள்’, ’கருங்காலிகள்’ என்று எழுதியும் பேசியும் வருகிறார்கள்.
ஆகவே, வேண்டுமென்றே திட்டம் போட்டு வைய முன்வந்திருக்கிறதாக நன்கு விளங்குகிறது.
” இதனால், ’தமிழ், தமிழர், தமிழ்நாடு, தமிழ் அரசு’ என்று கூறக் கூடாதுதென்றும், ’திராவிடம், திராவிடர், திராவிட நாடு, திராவிடர் கழகம், திராவிட அரசு’ என்றே கூறவேண்டுமென்றும் அவர்கள் விரும்புவதாகத் தெரிகிறது.

இது, தமிழ்நாட்டுப் பெருமக்களுக்கு மாறுபட்ட கொள்கையாயிருந்து வருகிறது. காரணம்-ஆந்திர, மலையா, கன்னடிய மக்களாகிய சுற்றியுள்ள மூன்று நாட்டினரும் ’திராவிடர்’ எனக் கூறாமல் தங்கள் மொழியையும் நாட்டையுமே கூறிவரும்போது, தமிழ்நாட்டு மக்கள் மட்டும் தங்கள் மொழியையும் நாட்டையும் பற்றி ஏன் கூறக் கூடாது?

இதற்கு மாறுபட்டிருப்பது எதன் பொருட்டு என்பது தமிழ் மக்களுக்கு விளங்கவில்லை.
உடையவர்களைப் ’பித்தலாட்டக்காரர்கள்’, ’கருங்காலிகள்’ என்று கூற வேண்டிய”அவ்விதமிருந்தாலும் மாறுபட்ட கருத்தும் கொள்கையும் து அவசியம்தானா என்பதையும் பெரியாரே எண்ணிப் பார்க்கவேண்டும்.
ஒரு கழகத்தின் தலைவர் வாயிலிருந்து இக் கடுஞ்சொற்கள் வருவது நேர்மையானதுதானா என்பதைப் பொதுமக்களே கருதிப் பார்க்க வேண்டும்.

”ஆந்திரநாட்டுக்குச் சென்று ’ஆந்திர’, ’ஆந்திரநாடு’ என்று சொல்லுபவர்களிடம் அவ்வாறு சொல்லுகிறவர்கள் பித்தலாட்டக் கருங்காலிகள் என்று இதுவரை சொல்லியிருக்கிறாரா? இனியேனும் சொல்லுவாரா?
”கேரள நாட்டுக்குச் சென்று ’கேரளர்’, ’கேரளநாடு’ என்று சொல்லுபவர்களிடம் அவ்வாறு சொல்லுகிறவர்கள் பித்தலாட்டக் கருங்காலிகள் என்று இதுவரை சொல்லியிருக்கிறாரா?

”கன்னடிய நாட்டுக்குச் சென்று கன்னடியர், கன்னடிய நாடு என்று சொல்லுபவர்களிடம் அவ்வாறு சொல்லுகிறவர்கள் பித்தலாட்டக் கருங்காலிகள் என்று இதுவரை சொல்லியிருக்கிறாரா?
இனியேனும் சொல்லுவாரா?

இதுவரை சொல்ல வில்லையென்றால், ’தமிழர்’, ’தமிழ்நாடும’ என்று சொல்லுகிறவர்களை மட்டும் பித்தலாட்டக் கருங்காலிகள் என்று சொல்லுவானேன்?
”’பித்தலாட்டக்காரர்கள், கருங்காலிகள்’ என்று சும்மா கூறிவிடுவது மட்டும் போதாது. காரணம் காட்டிக் கூறியிருக்க வேண்டும்.

அவ்வாறு கூறாதது அவர்களுடைய ஆத்திரத்தைக் காட்டுகிறதே தவிர உண்மையைக் காட்டுவதாக அறிவாறிகளால் ஒப்ப முடியாது.

”நமது தோழர்களில் சிலர் பெரியார் இவ்வாறு கூறியது ஆரியரையே எனக் கருதி நமக்கு எழுதியிருக்கின்றனர்.
அவ்வாறு இருந்தால் அவர் அதை வெளிப்படையாகக் கூறியிருப்பாரே தவிர, மறைவாகக் கூற வேண்டிய நிலையில் இல்லை என்பதனையும் அவர்கள் அறிய வேண்டும். 

”மற்றொரு நண்பர் கிராமணியார் அவர்களைத்தான் அவ்வாறு கூறியிருக்கிறார் என நினைத்து நமக்கு எழுதியிருக்கிறார்.
இது உண்மையானால், நேரடியாக எழுதியிருக்கலாமே! அப்படி இருந்தாலுங்கூடக் கிராமணியார் ஒரு மாறுபட்ட கருத்தினர் என்பதற்காக அவரது தமிழ்ப்பற்றும் தமிழ்நாட்டுப்பற்றும் நமக்குத் தேவையில்லாமல் போய்விடுமா?
இதற்காக, அவரைப் ’பித்தலாட்டக்காரர்’ என்றும் ’கருங்காலி’ என்றும் கூறித்தான் ஆக வேண்டுமா என்பதனையும் அன்பர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

”தமிழர் கழகத்தையும் தமிழரசுக் கழகத்தையும் நேரடியாகத் தாக்கித் தமிழ்ப்பற்று, தமிழ்நாட்டுப்பற்றுள்ள மக்களை வேண்டுமென்றே வைதிருக்கிறாரென்று முடிவாகத் தெரிகிறது.
இதை மெய்ப்பிக்க ’கழகம்’ என்ற சொல்லை எடுத்துவிட்டுத் ’தமிழர்’, ’தமிழரசு’ என்று சுட்டிக்காட்டி வைதிருப்பதே போதுமான சான்றாக இருக்கும்.

”நம்மை பொறுத்தவரையில் பெரியாரின் தன்மைக்கு இந்தச் சொற்கள் ஏற்றதல்ல என்றே கூறுவோம்.
இப்போது கூறியதை அவர் திரும்பப் பெறவேண்டும். இன்றேல் தாம் கூறியதைக் காரணம் காட்டி மெய்ப்பிக்க வேண்டும்.

இதுவே ’தமிழர்’, ’தமிழரசு’, ’தமிழ்நாடு தமிழருக்கே!’ என்று கூறுகிற பித்தலாட்டக் கருங்காலிகளின் கோரிக்கையாகும்”. (தமிழர் நாடு இதழ், ஆசிரியர் கி.ஆ.பெ.25.1.1948)
’தமிழ்’, ’தமிழர்’, ’தமிழ்நாடு’ என்போரைக் ’கருங்காலிகள்’, ’பித்தலாட்டக்காரர்கள்’ என்று இழிவாகப் பேசிய ஈ.வெ.ரா.வின் அருகதையினை நாம் தெள்ளத் தெளிவாக தெரிந்துகொள்ளலாம்.
அப்படிப் பட்ட ஈ.வெ.ரா.வைத் தமிழர்கள் ”தமிழர் தலைவர்” என்று போற்றலாமா?
’திராவிடம்’, ’திராவிட நாடு’ என்று பேசியும் எழுதியும் தமிழக எல்லைகள் பறிபோக ஈ.வெ.ரா. காரணமாயிருந்ததோடு, ம.பொ.சி., மார்சல் நேசமணி போன்றவர்கள் தமிழக எல்லைகளை மீட்கப் போராட்டங்கள் நடத்தியபோது அப் போராட்டங்களைக் கொச்சைப்படுத்தி நீர்த்துப்போகச் செய்யும் செயல்களில் ஈடுபட்டார்.

முகநூல் பக்கத்தில் இருந்து ஒத்தியெடுப்பு 

2016-12-24 11:55 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:


இரண்டாவது பொழிவு (27.02.2001)
2. சமூகம் பற்றிய சிந்தனைகள்

2 . திருமணம்

(ஊ) குழந்தை மணம்: இதைப்பற்றியும் பெரியார் சிந்தித்துள்ளார். அவர் சிந்தனைகள்:

(1) குடும்ப வாழ்க்கையை நடத்துவதற்குத் தகுதியற்ற பருவத்தில் உள்ள சிறுமியர்களை மணம் என்னும் கயிற்றினால் பிணித்துக் குடும்பம் என்னும் குழியில் வீழ்த்திக் கணவன் என்னும் விலங்கனைய காவலாளி கையில் ஒப்புவிக்கும்படி எந்த அறநூலும் போதிக்கவில்லை.

(2) சட்டத்தை மீறி நடக்கும் கல்யாணங்களில் சம்பந்தப்பட்ட வர்கள்மேல் வழக்குத் தொடுக்கும் உரிமை காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் தாராளமாக இருக்க வேண்டும். ‘குடி குடியைக் கெடுக்கும்’ என்ற ஏட்டுச் சுரைக்காயைப்போல் ‘பெண்ணின் திருமண வயது 21’ என்று எல்லா இடங்களில் எழுதிவைப்பது நகைச்சுவை விருந்தேயன்றி வேறு என்ன?

(3) சாரதா சட்டத்தை மீறுவதான முறையில் மணம் நடைபெறப் போவதாகத் தெரிந்தால் அதைத் தடுக்கும் அதிகாரமும் அவ்வழக்கை விசாரிக்கும் அதிகாரமும் நீதிமன்றத்துக்கு இருக்கவேண்டும்.

(4) பெண்களுக்கும் ஆண்களுக்கும் திருமணம் செய்து வைத்து விடுவதால் சிறுவயதிலேயே அவர்கள் தலைமீது குடும்பப் பொறுப்பு விழுந்து விடுகின்ற காரணத்தால் சுதந்திரம் அற்றுக் கவலை, தொல்லை இவற்றிற்கு ஆளாகிப் போதிய வளர்ச்சியற்றவர்களாக ஆகிவிடுகிறார்கள்.


திருமண அடையாளம்: திருமணத்தில் தாலிகட்டப் பெறுகின்றது. இதுபற்றிப் பெரியார் சிந்தனைகள்:

(i) தாலிகட்டுவது என்பது பெண்களுக்குமட்டும் ஆண்கள் தாலிகட்டுவதால் அதில் ஏதோ காரணம் இருக்க வேண்டும், தாலிகட்டினவன் அப்பெண்ணுக்கு எசமான் என்றும் தாலி அடிமைச்சின்னம் என்றும் விளங்குகிறது. ஆண்பெண் இருவரும் சம அந்தஸ்து உள்ளவர்கள் என்பதற்கு இருவர்கழுத்திலும் தாலி கட்டிக்கொள்ளவேண்டும். இல்லையேல் இருவருக்கும் இல்லாமல் இருக்கவேண்டும் (மோதிரத்தை மாற்றிக் கொள்ளும் ஏற்பாடு செய்யலாம்).

(ii) தாலி என்பது நாய்க்கு நகராண்மைக்கழகம்கட்டும் பட்டை போன்றது. தாலி பெண்ணை அடக்கி ஆளும் மூர்க்கத் தனத்தின் சின்னம். தாலிபற்றிப் புலவர்கள் பேசும்போது காளையை அடக்குதல், புலிவேட்டையாடுதல் போன்ற பொருத்தமற்ற இலக்கிய ஆதாரங்களை அள்ளி வீசுவார்கள். பெண்களுக்கு அறிவு வந்தாலொழியத் தாலியை நீக்கமுடியாது.

(iii) தாலி கட்டுவது எதற்காக? அஃது எதற்காகப் பயன்படுவது என்றால் பெண்களை முண்டச்சியாக்கப் பயன்படுகின்றது. அறுப்பதற்காகவே பயன்படுகின்றது.

(iv) தாலி என்ற அடிமைச்சின்னம் சீர்த்திருத்தத் திருமணங் களிலும்- நூற்றுக்குத் தொண்ணுறு திருமணங்களில்கட்டப்பெறுகின்றது. இது மாறவேண்டும்.

(v) மணமானவள் என்று தெரிந்து கொள்வதற்காகத் தாலி கட்டுவது என்று கூறுகின்றனர். ஆனால் ஆண்கள் திருமணமானவர் என்று தெரிந்து கொள்ள அவர்கள் கழுத்திலும் தாலி கட்ட வேண்டாமா? இதில் ஆண்களுக்கும் மட்டிலும் விதிவிலக்கு ஏன்?


அய்யா வாழ்க்கையில்: 19 வயதில் திருமணம். அப்போது தாலிகட்டிதான் திருமணம் நடைபெற்று (1898) வந்தது. அந்த வயதில் தாலியைப் பற்றி எதிர்ப்பு செய்யவே இல்லை*. ஒருநாள் இரவு அய்யா தாலியைக் கழற்றும்படி கூறினார். அம்மையார் மறுத்தார். “நானே பக்கத்தில் இருக்கும்போது தாலி இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? நான் ஊரில் இல்லாதபோதுதான் அது இல்லாமல் இருக்கக்கூடாது” என்று அளந்த அளப்பில் நாதன்சொல் உண்மை என நம்பி தாலியைக் கழற்றிக்கொடுத்தார். ஈ.வெ.ரா. அதனைத் தம் சட்டைப்பையில் போட்டுக் கொண்டு உறங்கிவிட்டார். விடிந்தவுடன் அம்மையாரும் தாலியைக் கேட்க மறந்துவிட்டார். கணவரும் அதனைத்தர மறந்தார். அவரும் தாலியின் நினைவில்லாமலேயே சட்டையை மாட்டிக் கொண்டு வெளியில் சென்றுவிட்டார்.

இப்போது நாகம்மையாருக்கு தாலியின் நினைப்பு வந்துவிட்டது. கழுத்தில் தாலியில்லாமலிருப்பதை யாரேனும் கண்டால் ஏளனம் செய்வார்களே என்று நாணப்பட்டுக் கூடியவரை தம் கழுத்தைப் பிறர் காணாதபடி மறைத்துக் கொண்டே வேலை பார்த்து வந்தார். தம் கழுத்து வெளியில் தெரியாதபடி அடிக்கடித் துணியை இழுத்து இழுத்து மூடிக் கொண்டு வேலை செய்வதை மாமியார் கவனித்து விட்டார். உடனே ‘தாலி எங்கே?’ என்று வினவ, மருமகள் விடைகூற முடியாமல் ஏதேதோ சொல்லி மழுப்பிக் கொண்டிருந்தார். இதற்குள் இன்னும் சில பெண்கள் கூடிவிட்டனர். அவர்கள் நாகம்மையாரை நக்கல் செய்யத் தொடங்கிவிட்டனர். அம்மையாருக்குச் சினம் பொங்கி எழுந்தது. “உங்களுக்கு என்ன தெரியும்? கணவர் ஊரில் இருக்கும்போது தாலி இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன?” என்று ஒரு போடு போடவே, நக்கல் பண்ணிய பெண்கள் மறுமொழிகூற முடியாமல் வாயடைத்துப் போனார்கள். “கணவனுக்கேற்ற மனைவி; நாம் என்ன சொல்வது?” என்று சொல்லிக்கொண்டே நழுவி விட்டனர். இந்த நிகழ்ச்சியை,

தாலி என்னும் சங்கிலிதான், பெண்ணினத்தைப்
பிணித்திருக்கும் தளைஎன் றெண்ணித்
தாலிதனைக் கழற்றென்னத் தன்மனைவி
மறுத்துரைக்க, 'நானி ருக்கத்
தாலிகட்டிக் கொள்ளுவதன் பொருளென்ன?
எனக்கேட்டு வாங்கிக் கொண்டார்.
‘தாலிஎங்கே?’ எனக்கேலி செய்த பெண்கள்
தமைக்கண்டு சினந்தார் அம்மை!

-ஈரோட்டுத்தாத்தா-பக்.

என்ற பாட்டாக வடித்துக் காட்டுவார் கவிஞர் நாச்சியப்பன்.



மூடநம்பிக்கை: திருமணம் பற்றிய சில மூடநம்பிக்கைகள் உள்ளன. அவைபற்றிய பெரியாரின் சிந்தனைகள்.

(i) சாத்திரப்படி பெண் சுதந்திரமற்றவள், அவள் காவலில் வைக்கப் பெறவேண்டியவள் என்பது. இஃது ஒருபுறம் இருக்க மனிதன் ‘புத்’ என்னும் நரகத்திற்குப் போகாமல் இருப்பதற்காகவும் பெற்றோர்கட்கு இறுதிக்கடன், திதி முதலியவை செய்ய ஒரு பிள்ளையைப் பெறவும் என்பதாகவும் திருமணம் செய்து கொள்ள வேண்டியது அவசியம் என்று கூறுகிறது.

(ii) பொருத்தம் பார்ப்பது, சகுனம் பார்ப்பது என்பது மிக மிக முட்டாள்தனம். பொருத்தம் பார்க்கும் சோதிடனுக்கு ஆணையோ பெண்ணையோ தெரியாது. இருந்தாலும் பொருத்தம் பார்க்கிறார்கள். இரண்டு ஆண்களின் சாதகத்தையோ இரண்டு பெண்களின் சாதகத்தையோ கொடுத்தால் இவை பொருத்த மற்றவை என்று எவனாவது கூறமுடியுமா?

(iii) தாரைவார்த்து வாங்கினவன் வாங்கின பெண்ணை யாருக்கு வேண்டுமானாலும் கொடுத்து விடலாம். வாடகைக்கு விடலாம். அடகுவைக்கலாம். அவனுக்கு உரிமை உள்ளது. ஏன் என்று கேட்க முடியாது. இங்ஙனம் புராண இதிகாசங்களில் நடந்துள்ளது. தருமன் திரெளபதியை பணயம் வைத்துச் சூதாடினான். அரிச்சந்திரன் தன்மனைவியை வேறு ஒருவனிடம் விற்றான். இயற்பகை நாயனார் தன் மனைவியை சிவனடியார் ஒருவருக்கு கூட்டிக் கொடுத்தார். அவமானம் உள்ள கதைகள்!

(iv) இன்றைக்குப் பொருத்தம் சோதிடனைக் கொண்டுதான் பார்க்கப்பெறுகின்றதே ஒழிய வயதுப் பொருத்தம், உடற்கட்டு, குருதிக்குழுப்பொருத்தம், அழகு, பண்பு, படிப்புப் பொருத்தம் முதலியவற்றை எவன் பார்க்கின்றான்? இன்றைக்கு இப்படிப்பட்ட முட்டாள்தனமான பொருத்தம் படித்தவன்-பணக்காரன் இடத்தில்தான் குடிகொண்டுள்ளது.

நாகம்மையின் மூடப்பழக்கத்தைக் களைதல்: இரண்டு நிகழ்ச்சிகளை ஈண்டுக் காட்டுவேன்.

(1) விரத ஒழிப்பு: இராமசாமியாரைப்போல் நாகம்மையாரையும் ஆசாரமில்லாதவராக விடக்கூடாது என்பது மாமனார்-மாமியார் கருத்து. கணவருக்கு வேண்டிய புலால் உணவைத் தன்னிச்சையாகச் சமைப்பார். பரிமாறுவார். பிறகு நீராடி விட்டுதான் சமையல் அறைக்குள் போவார். கணவர் வெளியில் அமர்ந்துதான் உணவு உண்ண வேண்டும். சமையல் அறைக்குள் எப்போதும் நுழையக்கூடாது.

நாகம்மையார் வெள்ளிக்கிழமைதோறும் நோன்பிருந்து வந்தார். இது மாமியார் இட்டகட்டளை. மக்கட்பேறு இல்லை என்பதற்காகவே இந்த நோன்பு ஏற்பாடு. என்றைக்கு விரத நாளோ அன்றுதான் தவறாமல் இராமசாமியாருக்குப் புலால் உணவு சமைக்கவேண்டும். நாகம்மாள்தான் பரிமாற வேண்டும். இஃது இராமசாமியாரின் பிடிவாதம். நாகம்மையாரும் கணவன் முகம் கோணாமல் அவர் விருப்புப்படி புலால் உணவு சமைப்பார். பரிமாறுவார். உடனே நீராடச் சென்றுவிடுவார்.

இச்சமயத்தில் இராமசாமியார் சமையலறைக்குள் புகுந்து அம்மையார் அருந்துவதற்கெனத் தனியாக மூடிவைத்திருக்கும் விரதச் சோற்றைத் திறந்து அதற்குள் எலும்புத்துண்டைப் புதைத்துவிட்டுப் போய்விடுவார். அம்மையார் சாப்பிடும்போது சோற்றுக்குள்ளிருந்த எலும்புத்துண்டு தலைநீட்டும். இது கணவரின் திருவிளையாடல் என்பதை அவர் உணர்ந்து கொளவார். அவ்வளவுதான்; நோன்புக்கு முற்றுப்புள்ளி. அம்மை யார் பட்டினி. இக்குறும்புத்தனம் ஈ.வெ.ரா பெற்றோர்கட்கு தெரிந்தது. அவர்களும் கண்டித்தனர். ஆயினும் நிற்கவில்லை. இறுதியில் மாமியார் மருமகளை அழைத்து ‘இந்தக் கணவனைக் கட்டிக்கொண்டு நீ வாழ்ந்தது போதும். நிறுத்திவிடு ’ என்று சொல்லிவிட்டார். இவ்வளவோடு நாகம்மையாரின் வெள்ளிக் கிழமை விரதத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கப் பெற்றது. மற்ற விரதங்களும் நாளடைவில் பறந்தன. இந்த நிகழ்ச்சியை கவிஞர் நாச்சியப்பன், 

தன்மனைவி தனைத்தொட்டால் தீட்டென்று
தலைமுழுகிப் பிள்ளைப் பேற்றிற்கு
என்று வெள்ளிக் கிழமைதொறும் நோன்பிருக்கும்
நிலைபோக்க எண்ணி, ஆய்ந்து
சின்னவோர் எலும்பெடுத்துச் சோற்றுக்குள்
புதைத்திடுவார்! சென்ற வம்மை
தன்னுணவை உண்ணுங்கால் தலைநீட்டும்
எலும்புகண்டு நோன்பி ழப்பார்!

-ஈரோட்டுத்தாத்தா-பக்.7.

என்ற பாடலால் வார்த்துக் காட்டுவார்.

(2) கோயில் செல்லல் ஒழிப்பு: நாகம்மையார் விழாக் காலங்களில் எப்பொழுதாவது கோயிலுக்குச் செல்வதுண்டு. இவ்வழக்கத்தை நிறுத்த வேண்டும் என்பது ஈ.வெ.ராவின் திட்டம். இதற்காக இவர் செய்த குறும்பு மிக வேடிக்கையானது. ஒருநாள் ஏதோ ஒரு திருவிழாவை முன்னிட்டு நாகம்மையார் சில பெண்களுடன் கோயிலுக்குச் சென்றிருந்தார். ஈ.வெ.ரா. தம் கூட்டாளிகள் சிலருடன் கோயிலுக்குச் சென்றார். தாம் மைனர் கோலம்பூண்டு அம்மையார் தம்மை நன்கு பார்க்க முடியாதபடி ஓர் ஒதுக்கிடத்தில் நின்று கொண்டார். நாகம்மையாரைத் தம் கூட்டாளிகளுக்குக் காட்டி ‘இவள் யாரோ ஒரு புதியதாசி. நமது ஊருக்கு வந்திருக்கிறாள். இவளை நம் வசப்படுத்தவேண்டும்; நீங்கள் அவள் நோக்கத்தை அறிந்துகொள்ள வேண்டிய முயற்சியைச் செய்யுங்கள் என்றார்.’ அவர்களும் அவ்வம்மையார் நின்றிருந்த இடத்திற்குச் சென்று அவரைப் பார்த்து ஏளனம் செய்யத் தொடங்கினர். நாகம்மையார் இக்கூட்டத்தின் செய்கைகளைப் பார்த்துவிட்டார். அவருக்குச் செய்வது இன்னது என்று தோன்றவில்லை. கால்கள் வெலவெலத்துவிட்டன. உடம்பு நடுநடுங்கியது. தாங்கமுடியாத அச்சத்தால் நெஞ்சம் துடிதுடிக்கின்றது. வியர்வையால் அப்படியே நனைந்தது போய் விட்டார். ஆயினும் ஒருவாறு சமாளித்துக்கொண்டு அக்காலிகளிடமிருந்து தப்பி வீடு வந்து சேர்ந்துவிட்டார். திருக்கோயில்களின் நிலைமையையும் தெரிந்து கொண்டர். மறுநாளே கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சி தம் கணவரின் சூழ்ச்சி மிக்க திருவிளையாடல்தான் என்று உணர்ந்து கொண்டார்.



  1. Jump up* 1930-இல் விருதுநகரில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில்தான் தாலி கட்டும் பழக்கத்தை எதிர்த்ததாகத் தெரிகிறது. அதற்குமுன் பல சுயமரியாதைத் திருமணங்களில் தாலிகட்டும் வழக்கம் இருந்து வந்ததாகத் தெரிகிறது. முத்தமிழ் காவலர் கி. ஆ. பெ. வி. செய்வித்த தமிழ்த்திருமணங்களில் இப்பழக்கம் தொடக்கத்தில் இருந்து வந்தது.

இனி அடுத்து வரவிருப்பது 3. சாதிக்கொள்கை  பகுதியில், சாதிக்கொள்கை குறித்து தந்தை பெரியாரின் சிந்தனைகள் ....

[தொடரும்]


Jaisankar Jaganathan

unread,
Dec 25, 2016, 2:10:41 AM12/25/16
to mint...@googlegroups.com
சேஷாத்ரி சார்,

நான் மின் தமிழை படித்த வரையில் யாராவதை பெரியாரை திட்டியிருந்தால் (எவ்வளவு பழைய தகவலாக இருந்தாலும் சரி) அதை பகிர்றீர்கள். ஏன் அப்படி? பெரியாரின் மேல் அப்படி என்ன கோபம் என்று சொன்னால் புரிந்துகொள்ள வசதியாக இருக்கும் 

Seshadri Sridharan

unread,
Dec 25, 2016, 10:55:41 PM12/25/16
to mintamil, ipohs...@gmail.com, வேந்தன் அரசு, p...@giasmd01.vsnl.net.in, doraisu...@gmail.com, ras...@gmail.com, jalas...@gmail.com, muku...@gmail.com, krishna...@gmail.com, rnka...@gmail.com, anbuja...@gmail.com, திருத்தம் பொன்.சரவணன், rajis...@gmail.com, Banukumar Rajendran, yesura...@gmail.com, Shrinivasan T, mani muthu, Pandiyaraja Paramasivam, Senguttuvan K, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, Malarvizhi Mangay, Innamburan S.Soundararajan, Kalairajan Krishnan, Krishnamachary Rangaswamy, bala subramani, V. Dhivakar, N D Logasundaram, Megala Ramamourty, பெருமாள் தேவன், coral shree, Geetha Sambasivam, Satish Kumar Dogra, N. Kannan, rajam ramamurti, aravindan....@gmail.com, satha sivam, rathinam.c...@gmail.com, tamil...@gmail.com, sneelak...@gmail.com, vet...@gmail.com, ts.m...@gmail.com, நா. கணேசன், g.sa...@gmail.com, Nagarajan Vadivel, praman...@gmail.com, Subashini Tremmel
2016-12-25 12:40 GMT+05:30 Jaisankar Jaganathan <jaisa...@gmail.com>:
நான் மின் தமிழை படித்த வரையில் யாராவதை பெரியாரை திட்டியிருந்தால் (எவ்வளவு பழைய தகவலாக இருந்தாலும் சரி) அதை பகிர்றீர்கள். ஏன் அப்படி? பெரியாரின் மேல் அப்படி என்ன கோபம் என்று சொன்னால் புரிந்துகொள்ள வசதியாக இருக்கும் 


ஓ அப்படியா? விடுதலையில் பெரியார் பற்றி ஒரு தொடர் வழங்க வேண்டும் என்று இருந்தபோது. உடனே துக்ளக்கில் பெரியாரின் இன்னின்ன செய்தியை போடலாம் என்று எடுக்ககோல் தந்திருந்தார் அதன் ஆசிரியர். அத்தனையும் பெரியாரின் negative comments. ஏனென்றால் பெரியார் என்றால் எல்லாம் நல்லவர் என்பதல்ல கெட்டதும் உண்டு என்பதைக் காட்டத்தான்.   

நானும் பெரியாரின் கெட்ட பக்கத்தை தான் போட்டேன். நல்லவர் போன்ற கருத்தை மட்டும் பதிந்தால் தமிழ்த்தேசியம் திராவிடத்தின் கால்களில் மிதிப்பட்டே இருக்கும் தலைதூக்கவே தூக்காது. என் விளக்கம் போதுமா? பெரியாரின் negative comments களை ஒதுக்கிவிட்டு இவர்கள் பதியும் பதிவு கோவில்களில் கதாகாலட்சேபம் செய்வது இவர்கள் செய்யும் பெரியார் கதாகாலட்சேபமே ஆகும். 

ஆரோகவங்கன்  

Seshadri Sridharan

unread,
Dec 25, 2016, 10:56:02 PM12/25/16
to mintamil, ipohs...@gmail.com, வேந்தன் அரசு, p...@giasmd01.vsnl.net.in, doraisu...@gmail.com, ras...@gmail.com, jalas...@gmail.com, muku...@gmail.com, krishna...@gmail.com, rnka...@gmail.com, anbuja...@gmail.com, திருத்தம் பொன்.சரவணன், rajis...@gmail.com, Banukumar Rajendran, yesura...@gmail.com, Shrinivasan T, mani muthu, Pandiyaraja Paramasivam, Senguttuvan K, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, Malarvizhi Mangay, Innamburan S.Soundararajan, Kalairajan Krishnan, Krishnamachary Rangaswamy, bala subramani, V. Dhivakar, N D Logasundaram, Megala Ramamourty, பெருமாள் தேவன், coral shree, Geetha Sambasivam, Satish Kumar Dogra, N. Kannan, rajam ramamurti, aravindan....@gmail.com, satha sivam, rathinam.c...@gmail.com, tamil...@gmail.com, sneelak...@gmail.com, vet...@gmail.com, ts.m...@gmail.com, நா. கணேசன், g.sa...@gmail.com, Nagarajan Vadivel, praman...@gmail.com, Subashini Tremmel
2016-12-25 20:06 GMT+05:30 Seshadri Sridharan <ssesh...@gmail.com>:
2016-12-25 12:40 GMT+05:30 Jaisankar Jaganathan <jaisa...@gmail.com>:
நான் மின் தமிழை படித்த வரையில் யாராவதை பெரியாரை திட்டியிருந்தால் (எவ்வளவு பழைய தகவலாக இருந்தாலும் சரி) அதை பகிர்றீர்கள். ஏன் அப்படி? பெரியாரின் மேல் அப்படி என்ன கோபம் என்று சொன்னால் புரிந்துகொள்ள வசதியாக இருக்கும் 


விடுதலையில் பெரியார் பற்றி ஒரு தொடர் வழங்க வேண்டும் என்று இருந்தபோது. உடனே துக்ளக்கில் பெரியாரின் இன்னின்ன செய்தியை போடலாம் என்று எடுக்ககோல் தந்திருந்தார் அதன் ஆசிரியர். (சத்தியராஜ் நடித்த பெரியார் படம் எடுப்பதற்கு முன் என்னென்ன கருத்துக்களை அதில் உள்ளடக்கலாம் என்ற கருத்துரையாக இருக்கலாம் என்று திட்டமிட்டபோது என்று எண்ணுகிறேன்) அத்தனையும் பெரியாரின் negative comments. ஏனென்றால் பெரியார் என்றால் எல்லாம் நல்லவர் என்பதல்ல கெட்டதும் உண்டு என்பதைக் காட்டத்தான்.   

நானும் பெரியாரின் கெட்ட பக்கத்தை (bad side) தான் போட்டேன். நல்லவர் போன்ற கருத்தை மட்டும் பதிந்தால் தமிழ்த்தேசியம் திராவிடத்தின் கால்களில் மிதிப்பட்டே இருக்கும் தலைதூக்கவே தூக்காது. என் விளக்கம் போதுமா? பெரியாரின் negative comments களை ஒதுக்கிவிட்டு இவர்கள் பதியும் பதிவு கோவில்களில் கதாகாலட்சேபம் செய்வது இவர்கள் செய்யும் பெரியார் கதாகாலட்சேபமே ஆகும். 

ஆரோகவங்கன்  

தேமொழி

unread,
Dec 25, 2016, 11:54:55 PM12/25/16
to மின்தமிழ்

நன்றி: http://tamil.thehindu.com/opinion/blogs/நெட்டிசன்-நோட்ஸ்-பெரியார்-நெட்டில்லா-காலத்துப்-போராளி/article9118344.ece


நெட்டிசன் நோட்ஸ்: பெரியார்- நெட்டில்லா காலத்துப் போராளி!

க.சே. ரமணி பிரபா தேவி

Published: September 17, 2016


செப். 17 - இன்று தந்தை பெரியார் பிறந்த நாள். பெரியாருக்கு வாழ்த்துச் சொல்லி நெட்டிசன்கள் ட்விட்டரில் #HBDPeriyar என்ற ஹேஷ்டேகை இந்திய அளவில் ட்ரெண்டாக்கினர். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

கில்லர்

தமிழ் இனத்திற்கு சுயமரியாதை கற்றுத்தந்த கலகக்காரன்! என் இனத்தின் நந்தாவிளக்கு, தலைவர்களுக்கெல்லாம் தலைவன் தந்தை பெரியார்! #HBDperiyar

Doha

”உன் மதம் சாதி பார்க்கும் மதம், உன் சாமி சாதி பார்க்கும் சாமி … சக மனிதனையே மனிதனாக மதிக்காத இரண்டையுமே ஒழி ! ” - பெரியார்.

பித்தன்

எண்ணிய எண்ணியாங்கு பேசியவன், என்றும் பேசப்படுபவன் ! #HBDPeriyar

Sahoo :p ‏@sahoodmail

நாடு போற்றும் சிறந்த தலைவர்களுள் ஒருவர் தந்தை பெரியார், பகுத்தறிவுவாதி.. வாழ்த்துக்கள் #HBDPeriyar

மது ‏

புரட்டாசியும் இன்றுதான் பிறக்கிறது. புரட்டு ஆசிகளை நம்பாதே என்பவரும் பிறந்த தினம் இன்று. #HBDPeriyar

Cine Tent ‏

மதங்களை கடந்த மாமனிதர் அய்யா பெரியாரின் பிறந்த நாள் இன்று...

Siva

"யார் சொல்லியிருந்தாலும், எங்கு படித்திருந்தாலும், நானே சொன்னாலும் உனது புத்திக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே!" - பெரியார்

SumiSumathi

ரெண்டாயிரம் வருஷ மனு ஆட்சியை / கடவுள் நம்பிக்கைய 90 வருஷம் மட்டுமே வாழ்ந்த ஒரு கிழவனால் ஆட்டிப்படைக்க முடிந்ததே, இதுவே பெரியாரின் வெற்றி...

Jokin Jeyapaul

பெரியார் எனும் பெயரை உச்சரித்தால் இன்னும் சிறியவர்களுக்கு எரிச்சல் வருகிறது. அது தான்உங்கள் வாழ்நாள் சாதனை. #HBDPeriyar

ஓலைக்கணக்கன்

என்ன வேணா செஞ்சிருக்கட்டும், உன் அறிவுக்கு ஒத்துக்க முடியலேன்னா கேள்வி கேளுன்னு சொன்னார் பாருங்க. அது ஒண்ணு போதும். #hbdperiyar

புகழ்

பக்தி வந்தால் புத்தி போகும்.. புத்தி வந்தால் பக்தி போகும்..- தந்தை பெரியார்.

ராவணன் ‏

பக்தி என்பது தனிசொத்து. ஒழுக்கம் என்பது பொது சொத்து. #HBDperiyar

ஆ இளங்குமரன்

என்றும் தேவைப்படும் ஈரோட்டு ஏந்தல்... தந்தை பெரியார் #HBDPeriyar

navaneetha

மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு.

ஆ இளங்குமரன் ‏

அன்று இடுப்பில் கட்டிய துண்டு, இப்போது நம் தோளில் இருக்க காரணமே பெரியார் தான்

ரா.கிருஷ்ணமூர்த்தி

ராகுல் சர்மா, கிஷோர் ரெட்டி, அங்கித் கவுடாக்களுக்கு மத்தியில் நான் சுப்ரமணியனாக மட்டுமே.. நன்றி #HBDPeriyar

Arun Nedunchezhiyan

எனக்குச் சிலை வைத்தார்கள் என்றால், இந்தச் சிலை எனக்கு மணியடிக்கிற சிலை இல்லை; பூசை செய்கிற சிலை இல்லை. கடவுள் இல்லை..

Sudhakar Ganesan ‏

தமிழ் நாட்டில் எல்லா தரப்பு மக்களும் கோவிலுக்குள் சென்று கும்பிட காரணமானவர் கடவுள் மறுப்பாளர் பெரியார்.

அறந்தை மணி

எவரொருவர் பெயரைக் கேட்டால், சாதி, மதம், இனம் கடந்து ஒரு இனம்புரியாத உணர்வுடன் மனிதம் தழைக்க நினைக்கிறதோ அங்கு வாழ்கிறார் பெரியார்.

arulselvam ‏

மண்டைச்சுரப்பை உலகு தொழும், தூய தாடி மார்பில் விழும், அவர்தாம் பெரியார்.

Doha Talkies ‏

“பெரியார் மட்டும் இல்லாவிட்டால் நீங்களும் நானும் அருவாள், கம்பைத் தூக்கிக் கொண்டுதான் திரிந்திருப்போம்” - மூப்பனார்.

Thadagam Mugund

பெரியாரும் - ஒரு பெரியவாள் தானே;

ஆம்; அவர் நம் -

பேதமைகளை அரிந்தெடுத்த

பெரிய வாள்தானே !- வாலி

வரிப்புலி

தாழ்த்தப்பட்டோர்க்கு "ஐயா, சாமி, துரை" என்று பெயரிட்டு எல்லோரையும் அழைக்க வைத்தவரின் பிறந்தநாள். #HBDperiyar

Manikandan ‏

தேர்தலில் தேர்வு செய்யப்பட்டவன் அயோக்கியன் எனில், தேர்ந்தெடுத்தவன் முட்டாள் என்று அர்த்தம் - பெரியார்.

kiramaththan

எல்லோர்க்கும் பதில் மட்டுமே சொல்லிக் கொண்டிருந்த காலத்தில் கேள்விகள் கேட்டவன் நீ! #HBDPeriyar

Satheesh Kumar ‏

30+ மாநிலங்கள். தமிழகம் பலவற்றில் முன்னணி. மிகப்பெரும்பான்மையான பட்டதாரிகள். வேற்றுமையற்ற சகோதரத்துவம். நீர் அதன் முதல் புள்ளி. #HBDPeriyar

karthik tpr ‏

தன் மக்களின் சூத்திர பட்டம் நீங்க, 95 வயதிலும் மூத்திர சட்டியை கையில் ஏந்தி இன உணர்வூட்டிய கொள்கைக்குன்று, தந்தை பெரியார்.

Doha Talkies

“பெரியாரின் முரட்டுத்தனமான அணுகுமுறை; அதெல்லாம் சரிப்பட்டு வராதுங்க!” இது முடிவெட்டும் தோழரின் மகனான எலக்ட்ரிக்கல் என்ஜினியர் சொன்னது.

வெள்ளந்தி

திராவிடர்கள் வணங்க வேண்டிய உண்மையான கடவுள். #HBDperiyar

ரெவுனி

பெரியார், ஒருதடவ அந்த பேரை மனசுக்குள்ள சொல்லிப்பாரேன், உன்னையே நீ புதிதாய் உணர்வாய்!

govikannan

தமிழ்நாட்டின் பெருமைக்கு தாடி வைத்த இந்த இருவரே போதுமானது, வள்ளுவர் மற்றும் பெரியார். #hbdperiyar

Lakschumi

ஏதோ பெண் சுதந்திரமென பிதற்றுகிறோம் இன்னும் ஒரு நூறாண்டு இருந்திருக்கலாம்; அந்த வெண்தாடிக் கிழவன். #HBDPeriyar

ச ப் பா ணி ‏

இணையம் இல்லாத காலத்துலேயே போராடியவர். #HBDPeriyar

roshanriswan

மானம் கெடுப்பாரை, அறிவைத் தடுப்பாரை, மண்ணோடு பெயர்த்தெடுத்த கடப்பாரை!

வானம் உள்ளவரை, வையம் உள்ளவரை யார்தான் மறப்பார் நம் பெரியாரை?


 ---

Jaisankar Jaganathan

unread,
Dec 26, 2016, 1:11:15 AM12/26/16
to mint...@googlegroups.com
பெரியாரின் மறுபக்கம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் திராவிடம் தமிழ் தேசியத்தை நசுக்குகிறது என்பது புரியவில்லை

N. Ganesan

unread,
Dec 26, 2016, 3:30:12 PM12/26/16
to மின்தமிழ், vallamai


On Monday, December 26, 2016 at 12:11:15 AM UTC-6, Jaisankar Jaganathan wrote:
பெரியாரின் மறுபக்கம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் திராவிடம் தமிழ் தேசியத்தை நசுக்குகிறது என்பது புரியவில்லை.

ஜெ பற்றி அரவிந்தன் நீலகண்டன். ஜெயலலிதா திராவிட இயக்கக் கட்சியின் தலைவர்:

ஈவேரா அவரது காலத்து வர்ணாசிரமத்துக்கு எதிர்வினை செய்தார். அப்போது தமிழ் தேசியம் இப்போதுள்ள நிலையில் பெரிய அளவு இருக்கவில்லை. ம.பொ.சி, கி.ஆ.பெ. போன்றோர் கூட்டங்களுக்கு ஆதரவு குறைவாகவே இருந்தது. பெரியாரின் கூட்டங்களும் சிறிய அளவுதான். ஆனால், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஈவேரா வழியில் என்று சொல்லி திராவிடக் கட்சிகள் பெரிய அளவில் மக்களை ஆட்கொள்கின்றன. ஆட்சியைப் பிடித்து 50 ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் தமிழ்தேசிய கட்சிகள் ஆரம்ப நிலையிலே தான் உள்ளன. மக்கள் ஆதரவு பெற்றால் ஆட்சிக் கட்டிலில் அமரலாம், அதற்கான தலைவர்கள் உருவாகி, எல்லோரையும் அரவணைத்து செல்லவேண்டும். பிறமொழிகள் பேசுவோரை திட்டிக்கொண்டிருந்தால் மட்டும் பதவிக்கு வரமுடியாது.

பத்ரி சேசாத்ரி திராவிடக் கட்சிகளின் தலைமையில் வெற்றிடம் என்பது பற்றி எழுதியுள்ளார்: இந்த வெற்றிடம் ஸ்டாலின், சசிகலா, பன்னீர்செல்வம், ... நிரப்புவார்களா? இல்லை, புதுக் கட்சிகள் ஏற்பட்டு பதவிக்கு வருமா? 

'Parties passé; wanted jobs, water & roads'


நா. கணேசன் 

Seshadri Sridharan

unread,
Dec 26, 2016, 10:48:51 PM12/26/16
to mintamil
On Mon, Dec 26, 2016 at 11:41 AM, Jaisankar Jaganathan <jaisa...@gmail.com> wrote:
பெரியாரின் மறுபக்கம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் திராவிடம் தமிழ் தேசியத்தை நசுக்குகிறது என்பது புரியவில்லை

பெரியார் தமிழ் தமிழர் தமிழ்நாடு என்ற கருத்தை ஏற்கவில்லை. ஏனென்றால் தெலுங்கர் அதை ஆளமுடியாது. திராவிற் தேசியம் என்றால் தெலுங்கர் ஆளலாம்.

அரோகவங்கன்   

Seshadri Sridharan

unread,
Dec 26, 2016, 10:49:10 PM12/26/16
to mintamil, ipohs...@gmail.com, வேந்தன் அரசு, p...@giasmd01.vsnl.net.in, doraisu...@gmail.com, ras...@gmail.com, jalas...@gmail.com, muku...@gmail.com, krishna...@gmail.com, rnka...@gmail.com, anbuja...@gmail.com, திருத்தம் பொன்.சரவணன், rajis...@gmail.com, Banukumar Rajendran, yesura...@gmail.com, Shrinivasan T, mani muthu, Pandiyaraja Paramasivam, Senguttuvan K, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, Malarvizhi Mangay, Innamburan S.Soundararajan, Kalairajan Krishnan, Krishnamachary Rangaswamy, bala subramani, V. Dhivakar, N D Logasundaram, Megala Ramamourty, பெருமாள் தேவன், coral shree, Geetha Sambasivam, Satish Kumar Dogra, N. Kannan, rajam ramamurti, aravindan....@gmail.com, satha sivam, rathinam.c...@gmail.com, tamil...@gmail.com, sneelak...@gmail.com, vet...@gmail.com, ts.m...@gmail.com, நா. கணேசன், g.sa...@gmail.com, Nagarajan Vadivel, praman...@gmail.com, Subashini Tremmel
2016-12-27 2:00 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

On Monday, December 26, 2016 at 12:11:15 AM UTC-6, Jaisankar Jaganathan wrote:
பெரியாரின் மறுபக்கம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் திராவிடம் தமிழ் தேசியத்தை நசுக்குகிறது என்பது புரியவில்லை.

ஜெ பற்றி அரவிந்தன் நீலகண்டன். ஜெயலலிதா திராவிட இயக்கக் கட்சியின் தலைவர்:

ஈவேரா அவரது காலத்து வர்ணாசிரமத்துக்கு எதிர்வினை செய்தார். அப்போது தமிழ் தேசியம் இப்போதுள்ள நிலையில் பெரிய அளவு இருக்கவில்லை. ம.பொ.சி, கி.ஆ.பெ. போன்றோர் கூட்டங்களுக்கு ஆதரவு குறைவாகவே இருந்தது. பெரியாரின் கூட்டங்களும் சிறிய அளவுதான். ஆனால், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஈவேரா வழியில் என்று சொல்லி திராவிடக் கட்சிகள் பெரிய அளவில் மக்களை ஆட்கொள்கின்றன. ஆட்சியைப் பிடித்து 50 ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் தமிழ்தேசிய கட்சிகள் ஆரம்ப நிலையிலே தான் உள்ளன. மக்கள் ஆதரவு பெற்றால் ஆட்சிக் கட்டிலில் அமரலாம், அதற்கான தலைவர்கள் உருவாகி, எல்லோரையும் அரவணைத்து செல்லவேண்டும். பிறமொழிகள் பேசுவோரை திட்டிக்கொண்டிருந்தால் மட்டும் பதவிக்கு வரமுடியாது.

 1952 தேர்தலில் சி பா ஆதித்தனார் தலைமையில் இருந்த நாம் தமிழர் கட்சி தான் ஆட்சிக்கு வந்திருக்க வேண்டும். ராமசாமி படையாட்சியை தன் பக்கம் இழுத்திருந்தால் அது நடந்திருக்கும். அந்த மதி நுட்பம் ராசாயிடம் இருந்தது காங்கிரசு ஆட்சியை அமைத்தது. நம் தமிழர் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடாமல் தடுத்து தெலுங்கர் ஆட்சியை நிலைபெறச்செய்யவே அண்ணா துரை தேர்தலில் போட்டியிடாத தன் கட்சியை 1957 இல் போட்டியிடவைத்தார். அத்தோடு நாம் தமிழர் கட்சி உயிர் இழந்தது ஆதித்தனார் திமுகவில் இணைந்தார். தமிழர் வாளாயிருத்த காலத்தில் தெலுங்கர் விழிப்புற்று இருந்து தம் அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொண்டனர்.

 
பத்ரி சேசாத்ரி திராவிடக் கட்சிகளின் தலைமையில் வெற்றிடம் என்பது பற்றி எழுதியுள்ளார்: இந்த வெற்றிடம் ஸ்டாலின், சசிகலா, பன்னீர்செல்வம், ... நிரப்புவார்களா? இல்லை, புதுக் கட்சிகள் ஏற்பட்டு பதவிக்கு வருமா? 

'Parties passé; wanted jobs, water & roads'


நா. கணேசன் 

//Dravidian politics depended on charisma.When erudition could not provide it, they looked for it in cinema. Now, in post-Jayalalitha, post-Karunanidhi politics, even the charisma is lacking. There is no single mass leader in the Dravidian political space who can command an audience through their fiery oration. Writing to their cadre stopped with Annadurai and Karunanidhi. MGR and Jayalalitha didn't bother to do that//

திராவிடக் கட்சிகள் எப்போதோ பேச்சால் மக்களை ஈர்ப்பதை இழந்து விட்டன. அதனாலேயே இலவசங்களை கொண்டுவந்தன. திமுக தேர்தல் காலத்தில் பேச்சாற்றல் கொண்டவர்களான டி. ராசேந்தர், வைகோ,  லியோனி போன்றோரை அமர்த்தியது.  அதிமுக நடிகைகளை அமர்த்தியது. இந்த நிலை 2001 தேர்தல் முதலே தொடங்கிவிட்டது.  

ஆரோகவங்கன்  

தேமொழி

unread,
Dec 27, 2016, 3:14:37 AM12/27/16
to மின்தமிழ்


On Monday, December 26, 2016 at 7:48:51 PM UTC-8, ஆரோகவங்கன். wrote: 

பெரியார் தமிழ் தமிழர் தமிழ்நாடு என்ற கருத்தை ஏற்கவில்லை. ஏனென்றால் தெலுங்கர் அதை ஆளமுடியாது. திராவிற் தேசியம் என்றால் தெலுங்கர் ஆளலாம்.

பெரியார் தமிழ் தமிழர் தமிழ்நாடு என்ற கருத்தை ஏற்கவில்லை. ஏனென்றால்  ....

பெரியார் அக்கால சூழ்நிலையில்  அணுகிய கோணம் வேறு....

அவரது அணுகுமுறை விரிந்த கோணம் கொண்டது.  

தகுதியற்றவர்கள் சிலர்  ரூம் போட்டு யோசித்து உருவாக்கிய கருத்துப்பிழை கொண்ட "புதிய தமிழ்த்தேசியம்" என்ற கொள்கைக்கு முற்றிலும் மாறுபட்டது பெரியாரின் நோக்கம். 

மொழிப்போராட்டம் கலாச்சாரப் போராட்டத்தின் ஒரு பகுதிதானே ஒழிய முழுப்போராடமாகவே ஆகிவிடாது என்ற கோணத்தில் அவர் துவங்கியதாகத்தான்  தெரிகிறதேயொழிய... 

 "நான் கர்நாடக பலிஜநாயுடு வகுப்பில் பிறந்தவன்" என்று குறிப்பிட்ட பெரியாருக்கு; 'தெலுங்கருக்கு' ஆட்சியியைப் பிடித்துக் கொடுக்க என்ன கட்டாயம்  என்று மீண்டும் ரூம் போட்டு யோசிக்கத் தேவையிருகிறது. 


தகவல் உதவி:

கொளத்தூர் மணி - நேர்க்காணல்

http://kolathurmani.blogspot.com/2011_06_01_archive.html


 ..... தேமொழி 

 

N. Ganesan

unread,
Dec 27, 2016, 6:59:48 PM12/27/16
to மின்தமிழ்


On Tuesday, December 27, 2016 at 2:14:37 AM UTC-6, தேமொழி wrote:


On Monday, December 26, 2016 at 7:48:51 PM UTC-8, ஆரோகவங்கன். wrote: 

பெரியார் தமிழ் தமிழர் தமிழ்நாடு என்ற கருத்தை ஏற்கவில்லை. ஏனென்றால் தெலுங்கர் அதை ஆளமுடியாது. திராவிற் தேசியம் என்றால் தெலுங்கர் ஆளலாம்.

பெரியார் தமிழ் தமிழர் தமிழ்நாடு என்ற கருத்தை ஏற்கவில்லை. ஏனென்றால்  ....

பெரியார் அக்கால சூழ்நிலையில்  அணுகிய கோணம் வேறு....

அவரது அணுகுமுறை விரிந்த கோணம் கொண்டது.  

தகுதியற்றவர்கள் சிலர்  ரூம் போட்டு யோசித்து உருவாக்கிய கருத்துப்பிழை கொண்ட "புதிய தமிழ்த்தேசியம்" என்ற கொள்கைக்கு முற்றிலும் மாறுபட்டது பெரியாரின் நோக்கம். 

மொழிப்போராட்டம் கலாச்சாரப் போராட்டத்தின் ஒரு பகுதிதானே ஒழிய முழுப்போராடமாகவே ஆகிவிடாது என்ற கோணத்தில் அவர் துவங்கியதாகத்தான்  தெரிகிறதேயொழிய... 

 "நான் கர்நாடக பலிஜநாயுடு வகுப்பில் பிறந்தவன்" என்று குறிப்பிட்ட பெரியாருக்கு; 'தெலுங்கருக்கு' ஆட்சியியைப் பிடித்துக் கொடுக்க என்ன கட்டாயம்  என்று மீண்டும் ரூம் போட்டு யோசிக்கத் தேவையிருகிறது. 

அருள் வலைப்பதிவு ஜெயபாரதன் தந்திருக்கிறார். அதைப் படித்தபின் அவர் சிலநாள் முன்னர் எழுதிய பதிவும் பார்த்தேன்.

அருள் சில நாள்களுக்கு முன் எழுதிய பதிவும் பார்க்கலாம்:

ஆனால், விஜயநகரை ஆரம்பித்தவர்கள் கன்னடம் பேசும் கன்னட நாயக்கர்கள்
ஆவர். தமிழ்தேசியர் பலரும் தெலுங்கர்கள் என எழுதுகிறார்கள். விஜயநகர ஆட்சி
சில நூற்றாண்டு சென்ற பின்னரே தெலுங்கர்கள் கைவசம் ஆனது.

மேலும், பலமுறை விளக்கியுள்ளேன். தமிழ்நாடு = திராவிடநாடு. இது
கங்காதேவியின் மதுராவிஜயத்திலும் சொல்லப்பட்டுள்ள செய்தி.

நா. கணேசன்

மாயோன்

unread,
Dec 28, 2016, 4:11:40 AM12/28/16
to mintamil
//மேலும், பலமுறை விளக்கியுள்ளேன். தமிழ்நாடு = திராவிடநாடு.//
முதல் இலக்கிய பயன்பாட்டில் வேறு மாதிரி இருக்கிறதே ஐயா!!

28 டிசம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 5:29 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Seshadri Sridharan

unread,
Dec 28, 2016, 5:11:07 AM12/28/16
to mintamil, ipohs...@gmail.com, வேந்தன் அரசு, doraisu...@gmail.com, ras...@gmail.com, jalas...@gmail.com, muku...@gmail.com, krishna...@gmail.com, rnka...@gmail.com, anbuja...@gmail.com, திருத்தம் பொன்.சரவணன், rajis...@gmail.com, Banukumar Rajendran, yesura...@gmail.com, Shrinivasan T, mani muthu, Pandiyaraja Paramasivam, Senguttuvan K, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, Malarvizhi Mangay, Innamburan S.Soundararajan, Kalairajan Krishnan, Krishnamachary Rangaswamy, bala subramani, V. Dhivakar, N D Logasundaram, Megala Ramamourty, பெருமாள் தேவன், coral shree, Geetha Sambasivam, Satish Kumar Dogra, N. Kannan, rajam ramamurti, aravindan....@gmail.com, satha sivam, rathinam.c...@gmail.com, tamil...@gmail.com, sneelak...@gmail.com, vet...@gmail.com, ts.m...@gmail.com, நா. கணேசன், g.sa...@gmail.com, Nagarajan Vadivel, praman...@gmail.com, Subashini Tremmel
2016-12-27 13:44 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
On Monday, December 26, 2016 at 7:48:51 PM UTC-8, ஆரோகவங்கன். wrote: 

பெரியார் தமிழ் தமிழர் தமிழ்நாடு என்ற கருத்தை ஏற்கவில்லை. ஏனென்றால் தெலுங்கர் அதை ஆளமுடியாது. திராவிற் தேசியம் என்றால் தெலுங்கர் ஆளலாம்.

பெரியார் தமிழ் தமிழர் தமிழ்நாடு என்ற கருத்தை ஏற்கவில்லை. ஏனென்றால்  .... பெரியார் அக்கால சூழ்நிலையில்  அணுகிய கோணம் வேறு.... அவரது அணுகுமுறை விரிந்த கோணம் கொண்டது.  

தமிழ் தமிழர் தமிழ்நாடு என்ற கருத்தை ஏற்கவில்லை என்றால் அவர் தமிழர் தந்தை என்று அழைக்கப்படுவதற்கு தகுதி இல்லாதவர். தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் அவரை தம் தந்தை என்று அழைப்பதில்லை. அவர் தெலுங்கர் தலைமை, அதிகாரம் நிலைக்க வேண்டும் என்று சந்தர்ப்பவாத அரசியல் செய்தார். ஒரு காட்டு, கம்யூனித்துகளோடு நெருங்கியிருந்த பெரியார் 1952 தேர்தலில் கம்யூனித்துகள் அதிக அளவில் சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றத்தைக் கண்டு திகைப்புற்று அவர்கள் ஆட்சியேறினால் நிலக்கிழார்களான நாயுடு, ரெட்டி, ராஜு போன்றோர் நிலம் இழப்பர் என்று கருதி 1000 க்கு 30 பார்ப்பனர்களை கொண்ட கம்யூனித்து கட்சியை பார்ப்பனர் வல்லாதிக்கம் கொண்ட கட்சி என்று  பழித்து அதைவிட அதிகமாக 1000 க்கு 100 பேர் பார்ப்பனர்களாக உள்ள காங்கிரசுக்கு ஆதரவு தந்தார். ஏன்? காங்கிரசு மிட்டா மிராசுகளின் கட்சி. அண்ணாவும் அதைத் தடுக்க திமுகவை தேர்தலில் போட்டியிட செய்தார்.


தகுதியற்றவர்கள் சிலர்  ரூம் போட்டு யோசித்து உருவாக்கிய கருத்துப்பிழை கொண்ட "புதிய தமிழ்த்தேசியம்" என்ற கொள்கைக்கு முற்றிலும் மாறுபட்டது பெரியாரின் நோக்கம். 


1952 இலேயே ஆட்சிக்கட்டில் ஏறியிருக்க வேண்டிய கட்சி தமிழ்த் தேசிய கருத்தியல் கொண்ட சி.பா.  ஆதித்தனாரின் தலைமையில் அமைந்த நாம் தமிழர் + கூட்டணி கட்சிகள். எனவே தமிழ் தேசியம் புதிதல்ல. 
தமிழர் எழுச்சி இதழில் தமிழ்த் தேசியம் எப்படி இருக்க வேண்டும் என்ற ஆத்தினாரின் கட்டுரையை படியுங்கள் 


தமிழர் எழுச்சி மாத இதழ்கள் தற்போது மின்னூல்களாகவும் (E Books) வெளிவர ஆரம்பித்திருக்கின்றன.

தமிழர் எழுச்சி ஜூன் ௨௦௧௪ (2014) மாத இதழ் -http://thamizharezhuchchi.blogspot.com/2014/06/2014_2960.html

தமிழர் எழுச்சி மே ௨௦௧௪ (2014) மாத இதழ் -http://thamizharezhuchchi.blogspot.com/2014/06/2014_4170.html

தமிழர் எழுச்சி மார்ச் ௨௦௧௪ (2014) மாத இதழ் -http://thamizharezhuchchi.blogspot.com/2014/06/2014_27.html

தமிழர் எழுச்சி பிப்ரவரி ௨௦௧௪ (2014) மாத இதழ் -http://thamizharezhuchchi.blogspot.com/2014/06/2014_26.html

தமிழர் எழுச்சி ஜனவரி ௨௦௧௪ (2014) மாத இதழ் -http://thamizharezhuchchi.blogspot.com/2014/06/2014_708.html

தமிழர் எழுச்சி டிசம்பர் ௨௦௧௩ (2013) மாத இதழ் -http://thamizharezhuchchi.blogspot.com/2014/06/2014_25.html

தமிழர் எழுச்சி நவம்பர் ௨௦௧௩ (2013) மாத இதழ் -http://thamizharezhuchchi.blogspot.com/2014/06/2014.html

தமிழர் எழுச்சி மாத இதழுக்கான இணையதளம் -http://thamizharezhuchchi.blogspot.in/ 



மொழிப்போராட்டம் கலாச்சாரப் போராட்டத்தின் ஒரு பகுதிதானே ஒழிய முழுப்போராடமாகவே ஆகிவிடாது என்ற கோணத்தில் அவர் துவங்கியதாகத்தான்  தெரிகிறதேயொழிய... 


அவர் தமிழ், தமிழ்ப் பண்பாட்டை மதிக்கவே இல்லை. பார்ப்பனர் வெறுப்பிற்கு உதவும் என்பதாலேயே அவற்றை ஆதரித்தார். 

  
 "நான் கர்நாடக பலிஜநாயுடு வகுப்பில் பிறந்தவன்" என்று குறிப்பிட்ட பெரியாருக்கு; 'தெலுங்கருக்கு' ஆட்சியியைப் பிடித்துக் கொடுக்க என்ன கட்டாயம்  என்று மீண்டும் ரூம் போட்டு யோசிக்கத் தேவையிருகிறது. 


நாயுடு என்றாலே தெலுங்கு தான். அவர் முன்னோர் கருநாடகத்தை சேர்ந்த நாயுடுகள். 

தேமொழி

unread,
Dec 28, 2016, 6:11:28 AM12/28/16
to மின்தமிழ்


On Wednesday, December 28, 2016 at 2:11:07 AM UTC-8, ஆரோகவங்கன். wrote:
2016-12-27 13:44 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
On Monday, December 26, 2016 at 7:48:51 PM UTC-8, ஆரோகவங்கன். wrote: 

பெரியார் தமிழ் தமிழர் தமிழ்நாடு என்ற கருத்தை ஏற்கவில்லை. ஏனென்றால் தெலுங்கர் அதை ஆளமுடியாது. திராவிற் தேசியம் என்றால் தெலுங்கர் ஆளலாம்.

பெரியார் தமிழ் தமிழர் தமிழ்நாடு என்ற கருத்தை ஏற்கவில்லை. ஏனென்றால்  .... பெரியார் அக்கால சூழ்நிலையில்  அணுகிய கோணம் வேறு.... அவரது அணுகுமுறை விரிந்த கோணம் கொண்டது.  

தமிழ் தமிழர் தமிழ்நாடு என்ற கருத்தை ஏற்கவில்லை என்றால் அவர் தமிழர் தந்தை என்று அழைக்கப்படுவதற்கு தகுதி இல்லாதவர்.

நானறிந்தவரை "தமிழர் தந்தை" என அழைக்கப்படுபவர்  சி.பா.ஆதித்தனார் 

பெரியாருக்கு பொதுவாக  தந்தை என மதிப்பளிக்க முடிவெடுக்கப்பட்டது பெண்களால். 

பெண்கள் உரிமைக்காக பெரியார் என்னவெல்லாம் செய்தார் தெரியுமா...?

பெரியாரிஸம் உருவாக்கிய பெண் பேராளுமைகள்!

 
தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் அவரை தம் தந்தை என்று அழைப்பதில்லை. அவர் தெலுங்கர் தலைமை, அதிகாரம் நிலைக்க வேண்டும் என்று சந்தர்ப்பவாத அரசியல் செய்தார். ஒரு காட்டு, கம்யூனித்துகளோடு நெருங்கியிருந்த பெரியார் 1952 தேர்தலில் கம்யூனித்துகள் அதிக அளவில் சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றத்தைக் கண்டு திகைப்புற்று அவர்கள் ஆட்சியேறினால் நிலக்கிழார்களான நாயுடு, ரெட்டி, ராஜு போன்றோர் நிலம் இழப்பர் என்று கருதி 1000 க்கு 30 பார்ப்பனர்களை கொண்ட கம்யூனித்து கட்சியை பார்ப்பனர் வல்லாதிக்கம் கொண்ட கட்சி என்று  பழித்து அதைவிட அதிகமாக 1000 க்கு 100 பேர் பார்ப்பனர்களாக உள்ள காங்கிரசுக்கு ஆதரவு தந்தார். ஏன்? காங்கிரசு மிட்டா மிராசுகளின் கட்சி. அண்ணாவும் அதைத் தடுக்க திமுகவை தேர்தலில் போட்டியிட செய்தார்.

அதாவது, இடஒதுக்கீடு தகராறில் காங்கிரசை விட்டு வெளியேரிய பெரியார், பின்னாளில்   காமராஜரை ஆதரித்தது தவறு என்கிறீர்கள்

பிறகு திக வில் இருந்து வெளியேறிய திமுக வை கடுமையாக எதிர்க்கும் நோக்கில்  தேர்தலில் காங்கிரசை ஆதரித்து திமுகவை எதிர்த்த செயல்களெல்லாம்   இப்பொழுது எப்படியெல்லாம் புதிய உள்நோக்கம் கொடுத்து திரிக்க முடியும் என்பது புரிகிறது. 

 
 


தகுதியற்றவர்கள் சிலர்  ரூம் போட்டு யோசித்து உருவாக்கிய கருத்துப்பிழை கொண்ட "புதிய தமிழ்த்தேசியம்" என்ற கொள்கைக்கு முற்றிலும் மாறுபட்டது பெரியாரின் நோக்கம். 


1952 இலேயே ஆட்சிக்கட்டில் ஏறியிருக்க வேண்டிய கட்சி தமிழ்த் தேசிய கருத்தியல் கொண்ட சி.பா.  ஆதித்தனாரின் தலைமையில் அமைந்த நாம் தமிழர் + கூட்டணி கட்சிகள். எனவே தமிழ் தேசியம் புதிதல்ல. 
தமிழர் எழுச்சி இதழில் தமிழ்த் தேசியம் எப்படி இருக்க வேண்டும் என்ற ஆத்தினாரின் கட்டுரையை படியுங்கள் 

பின்னர் ஏன் ஆதித்தனார் திமுக வில் இணைந்தார்? அவர் கொள்கைகைகளை திமுக முன்னெடுக்கும் என நம்பி இணைந்துவிட்டாரா?



தமிழர் எழுச்சி மாத இதழ்கள் தற்போது மின்னூல்களாகவும் (E Books) வெளிவர ஆரம்பித்திருக்கின்றன.

தமிழர் எழுச்சி ஜூன் ௨௦௧௪ (2014) மாத இதழ் -http://thamizharezhuchchi.blogspot.com/2014/06/2014_2960.html

தமிழர் எழுச்சி மே ௨௦௧௪ (2014) மாத இதழ் -http://thamizharezhuchchi.blogspot.com/2014/06/2014_4170.html

தமிழர் எழுச்சி மார்ச் ௨௦௧௪ (2014) மாத இதழ் -http://thamizharezhuchchi.blogspot.com/2014/06/2014_27.html

தமிழர் எழுச்சி பிப்ரவரி ௨௦௧௪ (2014) மாத இதழ் -http://thamizharezhuchchi.blogspot.com/2014/06/2014_26.html

தமிழர் எழுச்சி ஜனவரி ௨௦௧௪ (2014) மாத இதழ் -http://thamizharezhuchchi.blogspot.com/2014/06/2014_708.html

தமிழர் எழுச்சி டிசம்பர் ௨௦௧௩ (2013) மாத இதழ் -http://thamizharezhuchchi.blogspot.com/2014/06/2014_25.html

தமிழர் எழுச்சி நவம்பர் ௨௦௧௩ (2013) மாத இதழ் -http://thamizharezhuchchi.blogspot.com/2014/06/2014.html

தமிழர் எழுச்சி மாத இதழுக்கான இணையதளம் -http://thamizharezhuchchi.blogspot.in/ 



மொழிப்போராட்டம் கலாச்சாரப் போராட்டத்தின் ஒரு பகுதிதானே ஒழிய முழுப்போராடமாகவே ஆகிவிடாது என்ற கோணத்தில் அவர் துவங்கியதாகத்தான்  தெரிகிறதேயொழிய... 


அவர் தமிழ், தமிழ்ப் பண்பாட்டை மதிக்கவே இல்லை. பார்ப்பனர் வெறுப்பிற்கு உதவும் என்பதாலேயே அவற்றை ஆதரித்தார். 

எல்லாவற்றையும் சான்றுடன் கூறுங்கள்.

மொழி பண்பாடு குறித்த 'பெரியார் சிந்தனைகள்' கட்டுரை இதே இழையில் தொடர்ந்து வரத்தான் போகிறது. 



  
 "நான் கர்நாடக பலிஜநாயுடு வகுப்பில் பிறந்தவன்" என்று குறிப்பிட்ட பெரியாருக்கு; 'தெலுங்கருக்கு' ஆட்சியியைப் பிடித்துக் கொடுக்க என்ன கட்டாயம்  என்று மீண்டும் ரூம் போட்டு யோசிக்கத் தேவையிருகிறது. 


நாயுடு என்றாலே தெலுங்கு தான். அவர் முன்னோர் கருநாடகத்தை சேர்ந்த நாயுடுகள். 



அவர் யாராக இருந்தால்தான் என்ன?  அவர் பின்னணி எதுவாக இருந்தால்தான் என்ன? ... தமிழர் முன்னேற்றத்திற்கு பெரியார்   செய்த பல உருப்படியான செயல்களுக்குச் சான்றுகள் இருக்கிறது. 

தான் கர்நாடகா குடும்பப் பிரிவில் வந்தவன் என்று ஒருவர் கூறியதையும் மதிக்காது, தானே அவரைத் தெலுங்கு என முத்திரை குத்துவது வேடிக்கை.      

எங்கிருந்தோ முதலியார் என்ற பட்டமெல்லாம் தேர்தல் என்றவுடன் அண்ணாதுரையிடம் ஒட்டிகொண்டது என்று நையாண்டி செய்தவரின்   சாதி குறித்து பேசிக் கொண்டிருப்பது அரசியல் செய்பவர்களுக்கு தேவையாக இருக்கலாம்.  ஆனால் அவரை மதிப்பவருக்கு அது தேவையற்ற விவாதம்.  

அவரே தனது குடும்பத்தில் விதவைத் திருமணம் நடத்துவது என்றால் எவ்வளவு எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்ற கோடி காட்டவே தனது ஆச்சாரமான குடும்பப் பின்னணியைக் காட்ட ஒரு கட்டுரையில் தனது பின்புலத்தைக்  குறிப்பிட்டார்.  


இப்பொழுது புதிதாக தூசி தட்டிக்  கிளம்பியுள்ள புதிய  தமிழ்த்தேசியம், ஆட்சியைப்பிடிக்க தமிழ்சாதி, தெலுங்கு சாதி, மலையாள சாதி என தமிழர்களில்  பிரிவினை உண்டாக்கி  சூழ்ச்சி செய்யும் கூட்டம்.

யார் தமிழர் என அடையாளம் சாதி மூலம் தெரிய வரும் என்ற கருத்தில் சாதிப்பிரிவினையை தீவிரமாக வளர்த்தெடுக்கும் கூட்டம்.

இன்றைய தமிழகத்தில் தமிழின் மீது உண்மையான  அக்கறை கொண்டவர் யாருமே இல்லை என்பதே எனது கணிப்பு. 

உண்மையான அக்கறை உள்ள தமிழ்ப் பின்புலம் உள்ளவர்கள்  என்றால், மக்களும் கவனிக்கும் வண்ணம் தமிழ் பண்பாட்டை மதிக்கும் வகையில் ஏதாவது செய்துவிட்டு பிறகு களத்தில் இறங்கலாம்.  

திமுகவின் இந்தி எதிர்ப்புதான்  அவர்களுக்கு உதவியது என்பது வரலாறு காட்டும் உண்மை.  தமிழ்நாட்டிற்கென்று ஏதாவது செய்தால் மக்களுக்கு நம்பிக்கை வரும்.  ஒன்றிரண்டு செய்தவர்களையும்  குறை சொல்லிக் கொண்டிருப்பது உதவாது. 

Seshadri Sridharan

unread,
Dec 28, 2016, 11:07:51 PM12/28/16
to mintamil, ipohs...@gmail.com, வேந்தன் அரசு, doraisu...@gmail.com, ras...@gmail.com, jalas...@gmail.com, muku...@gmail.com, krishna...@gmail.com, rnka...@gmail.com, anbuja...@gmail.com, திருத்தம் பொன்.சரவணன், rajis...@gmail.com, Banukumar Rajendran, yesura...@gmail.com, Shrinivasan T, mani muthu, Pandiyaraja Paramasivam, Senguttuvan K, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, Malarvizhi Mangay, Innamburan S.Soundararajan, Kalairajan Krishnan, Krishnamachary Rangaswamy, bala subramani, V. Dhivakar, N D Logasundaram, Megala Ramamourty, பெருமாள் தேவன், coral shree, Geetha Sambasivam, Satish Kumar Dogra, N. Kannan, rajam ramamurti, aravindan....@gmail.com, satha sivam, rathinam.c...@gmail.com, tamil...@gmail.com, sneelak...@gmail.com, vet...@gmail.com, ts.m...@gmail.com, நா. கணேசன், g.sa...@gmail.com, Nagarajan Vadivel, praman...@gmail.com, Subashini Tremmel
2016-12-28 16:41 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
On Wednesday, December 28, 2016 at 2:11:07 AM UTC-8, ஆரோகவங்கன். wrote:
பெரியார் தமிழ் தமிழர் தமிழ்நாடு என்ற கருத்தை ஏற்கவில்லை. ஏனென்றால் தெலுங்கர் அதை ஆளமுடியாது. திராவிற் தேசியம் என்றால் தெலுங்கர் ஆளலாம்.

பெரியார் தமிழ் தமிழர் தமிழ்நாடு என்ற கருத்தை ஏற்கவில்லை. ஏனென்றால்  .... பெரியார் அக்கால சூழ்நிலையில்  அணுகிய கோணம் வேறு.... அவரது அணுகுமுறை விரிந்த கோணம் கொண்டது.  

தமிழ் தமிழர் தமிழ்நாடு என்ற கருத்தை ஏற்கவில்லை என்றால் அவர் தமிழர் தந்தை என்று அழைக்கப்படுவதற்கு தகுதி இல்லாதவர்.

நானறிந்தவரை "தமிழர் தந்தை" என அழைக்கப்படுபவர்  சி.பா.ஆதித்தனார்  
பெரியாருக்கு பொதுவாக  தந்தை என மதிப்பளிக்க முடிவெடுக்கப்பட்டது பெண்களால். 
பெண்கள் உரிமைக்காக பெரியார் என்னவெல்லாம் செய்தார் தெரியுமா...?

தமிழ்த் தேசிய கருத்தியலர் ஆதித்தனாரையே தமிழர் தந்தை என்றனர். இன்று அதை தினத்தந்தி தான் நினைவூட்டிக்கொண்டிருக்கிறது. திராவிடரிடம் கேட்டால் பெரியாரைத் தான் தமிழர் தந்தை என்கின்றனர். பெரியார் கூலிக்கு தலித்துகளை அழைத்துவந்து போராட்டம் நடத்தினார். மீனாம்பாளை வைத்து தந்தை பட்டம் பெற்றுக்கொண்டார். இன்று தலித்துகள் அதற்கு வருந்துகின்றனர்.

  
தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் அவரை தம் தந்தை என்று அழைப்பதில்லை. அவர் தெலுங்கர் தலைமை, அதிகாரம் நிலைக்க வேண்டும் என்று சந்தர்ப்பவாத அரசியல் செய்தார். ஒரு காட்டு, கம்யூனித்துகளோடு நெருங்கியிருந்த பெரியார் 1952 தேர்தலில் கம்யூனித்துகள் அதிக அளவில் சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றத்தைக் கண்டு திகைப்புற்று அவர்கள் ஆட்சியேறினால் நிலக்கிழார்களான நாயுடு, ரெட்டி, ராஜு போன்றோர் நிலம் இழப்பர் என்று கருதி 1000 க்கு 30 பார்ப்பனர்களை கொண்ட கம்யூனித்து கட்சியை பார்ப்பனர் வல்லாதிக்கம் கொண்ட கட்சி என்று  பழித்து அதைவிட அதிகமாக 1000 க்கு 100 பேர் பார்ப்பனர்களாக உள்ள காங்கிரசுக்கு ஆதரவு தந்தார். ஏன்? காங்கிரசு மிட்டா மிராசுகளின் கட்சி. அண்ணாவும் அதைத் தடுக்க திமுகவை தேர்தலில் போட்டியிட செய்தார்.

அதாவது, இடஒதுக்கீடு தகராறில் காங்கிரசை விட்டு வெளியேரிய பெரியார், பின்னாளில்   காமராஜரை ஆதரித்தது தவறு என்கிறீர்கள்

பிறகு திக வில் இருந்து வெளியேறிய திமுக வை கடுமையாக எதிர்க்கும் நோக்கில்  தேர்தலில் காங்கிரசை ஆதரித்து திமுகவை எதிர்த்த செயல்களெல்லாம்   இப்பொழுது எப்படியெல்லாம் புதிய உள்நோக்கம் கொடுத்து திரிக்க முடியும் என்பது புரிகிறது. 

அந்த இடஒதுக்கீடு கல்வி, தொழில், வேலைவாய்ப்பு ஒதுக்கீடு அல்ல. அது சட்ட மன்ற உறுப்பினருக்கான   இடஒதுக்கீடு பற்றியது. அந்த காலத்தில் வரிகட்டுபவர் தான் ஓட்டுபோடமுடியும். ஓட்டுப்போடும் தகுதியுடையோர் மட்டுமே தேர்தலில் நிற்கமுடியும். இதில் இடஒதுக்கீடு வேண்டும் என்று அவர் கேட்கக் காரணம் அக்காலத்தே நிலக்கிழார்கள் தான் அதிக அளவு வரிகட்டினர். 50% நிலக்கிழார்கள் தெலுங்கர்கள் என்பதால் அவ்வாறான இடஒதுக்கீடு ஆட்சி அதிகாரம் செய்வதற்கு தெலுங்கர்களுக்கே சாதகமாக அமையும் என்பது தான். அதைத் தான் திரு வி க எதிர்த்தார். பெரியார் நொண்டி சாக்கு சொல்லி வெளியேறினார்.

திமுக 1957 இல் தான் தேர்தலில் போட்டியிட்டது. ஆனால் அதற்கு முன்னேயே காங்கிரசை பெரியார் ஆதரித்தார். 1952 தேர்தலில் தமிழ்த் தேசிய கட்சிகள் / கம்யூனித்து கட்சிகள் அதிக இடங்களை பெற்றது தெலுங்கர் நலனுக்கு எதிராகப் போகும் என்பதாலேயே அவற்றின் வளர்ச்சியை தடுக்க காங்கிரசு பக்கம் சாய்ந்தார். அந்த முயற்சிக்கு திமுக வின் தேர்தல் அரசியல் குந்தகமாகுமோ என்று எண்ணி திமுகவையும் எதிர்த்தார் என்பதே உண்மை.


தகுதியற்றவர்கள் சிலர்  ரூம் போட்டு யோசித்து உருவாக்கிய கருத்துப்பிழை கொண்ட "புதிய தமிழ்த்தேசியம்" என்ற கொள்கைக்கு முற்றிலும் மாறுபட்டது பெரியாரின் நோக்கம். 


1952 இலேயே ஆட்சிக்கட்டில் ஏறியிருக்க வேண்டிய கட்சி தமிழ்த் தேசிய கருத்தியல் கொண்ட சி.பா.  ஆதித்தனாரின் தலைமையில் அமைந்த நாம் தமிழர் + கூட்டணி கட்சிகள். எனவே தமிழ் தேசியம் புதிதல்ல. 
தமிழர் எழுச்சி இதழில் தமிழ்த் தேசியம் எப்படி இருக்க வேண்டும் என்ற ஆத்தினாரின் கட்டுரையை படியுங்கள் 

பின்னர் ஏன் ஆதித்தனார் திமுக வில் இணைந்தார்? அவர் கொள்கைகைகளை திமுக முன்னெடுக்கும் என நம்பி இணைந்துவிட்டாரா?


நாம் தமிழர் கட்சி கால ஓட்டத்தில் கரைந்தது. கருணாநிதி ஆதித்தனாருக்கு சால்வை போர்த்தி அடுத்து தனித் தமிழ்நாடு தான் என்று பொய் கூறினார். ஆதித்தனார் அதை உண்மை என்று கருதி யார் தனித்தமிழ்நாடு அமைத்தல் என்ன? அமைந்தால் சரி என்று திமுகவில் சேர்ந்தார். 


மொழிப்போராட்டம் கலாச்சாரப் போராட்டத்தின் ஒரு பகுதிதானே ஒழிய முழுப்போராடமாகவே ஆகிவிடாது என்ற கோணத்தில் அவர் துவங்கியதாகத்தான்  தெரிகிறதேயொழிய... 


அவர் தமிழ், தமிழ்ப் பண்பாட்டை மதிக்கவே இல்லை. பார்ப்பனர் வெறுப்பிற்கு உதவும் என்பதாலேயே அவற்றை ஆதரித்தார். 

எல்லாவற்றையும் சான்றுடன் கூறுங்கள். மொழி பண்பாடு குறித்த 'பெரியார் சிந்தனைகள்' கட்டுரை இதே இழையில் தொடர்ந்து வரத்தான் போகிறது. 

திருக்குறள் சிலப்பதிகார இகழ்ச்சி இதற்கு சான்று.  

 "நான் கர்நாடக பலிஜநாயுடு வகுப்பில் பிறந்தவன்" என்று குறிப்பிட்ட பெரியாருக்கு; 'தெலுங்கருக்கு' ஆட்சியியைப் பிடித்துக் கொடுக்க என்ன கட்டாயம்  என்று மீண்டும் ரூம் போட்டு யோசிக்கத் தேவையிருகிறது. 


நாயுடு என்றாலே தெலுங்கு தான். அவர் முன்னோர் கருநாடகத்தை சேர்ந்த நாயுடுகள். 


அவர் யாராக இருந்தால்தான் என்ன?  அவர் பின்னணி எதுவாக இருந்தால்தான் என்ன? ... தமிழர் முன்னேற்றத்திற்கு பெரியார்   செய்த பல உருப்படியான செயல்களுக்குச் சான்றுகள் இருக்கிறது. 

அவரால் தமிழர் எந்த முன்னேற்றமும் அடையவில்லை. அதற்கு அவர் பள்ளிக்கூடமோ, மருத்துவமனையோ, தொழிற்சாலையோ கட்டவில்லை வேலைவாய்ப்பு கொடுக்க.

 
தான் கர்நாடகா குடும்பப் பிரிவில் வந்தவன் என்று ஒருவர் கூறியதையும் மதிக்காது, தானே அவரைத் தெலுங்கு என முத்திரை குத்துவது வேடிக்கை.     

 பலிஜா என்றாலே நாயுடு தான். நாயுடுவில்  கன்னடப் பிரிவே கிடையாது.


இப்பொழுது புதிதாக தூசி தட்டிக்  கிளம்பியுள்ள புதிய  தமிழ்த்தேசியம், ஆட்சியைப்பிடிக்க தமிழ்சாதி, தெலுங்கு சாதி, மலையாள சாதி என தமிழர்களில்  பிரிவினை உண்டாக்கி  சூழ்ச்சி செய்யும் கூட்டம்.

தமிழர்களில் தெலுங்கு சாதி மலையாள சாதி அடங்கார். எனவே அது தமிழரில் பிரிவினை ஆகாது. 


திமுகவின் இந்தி எதிர்ப்புதான்  அவர்களுக்கு உதவியது என்பது வரலாறு காட்டும் உண்மை.  தமிழ்நாட்டிற்கென்று ஏதாவது செய்தால் மக்களுக்கு நம்பிக்கை வரும்.  ஒன்றிரண்டு செய்தவர்களையும்  குறை சொல்லிக் கொண்டிருப்பது உதவாது. 


மாணவர்களின் போராட்டத்தை தனதாக திமுக களவாடியது.  

தேமொழி

unread,
Dec 28, 2016, 11:45:10 PM12/28/16
to மின்தமிழ்


On Wednesday, December 28, 2016 at 8:07:51 PM UTC-8, ஆரோகவங்கன். wrote:
2016-12-28 16:41 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
On Wednesday, December 28, 2016 at 2:11:07 AM UTC-8, ஆரோகவங்கன். wrote:
பெரியார் தமிழ் தமிழர் தமிழ்நாடு என்ற கருத்தை ஏற்கவில்லை. ஏனென்றால் தெலுங்கர் அதை ஆளமுடியாது. திராவிற் தேசியம் என்றால் தெலுங்கர் ஆளலாம்.

பெரியார் தமிழ் தமிழர் தமிழ்நாடு என்ற கருத்தை ஏற்கவில்லை. ஏனென்றால்  .... பெரியார் அக்கால சூழ்நிலையில்  அணுகிய கோணம் வேறு.... அவரது அணுகுமுறை விரிந்த கோணம் கொண்டது.  

தமிழ் தமிழர் தமிழ்நாடு என்ற கருத்தை ஏற்கவில்லை என்றால் அவர் தமிழர் தந்தை என்று அழைக்கப்படுவதற்கு தகுதி இல்லாதவர்.

நானறிந்தவரை "தமிழர் தந்தை" என அழைக்கப்படுபவர்  சி.பா.ஆதித்தனார்  
பெரியாருக்கு பொதுவாக  தந்தை என மதிப்பளிக்க முடிவெடுக்கப்பட்டது பெண்களால். 
பெண்கள் உரிமைக்காக பெரியார் என்னவெல்லாம் செய்தார் தெரியுமா...?

தமிழ்த் தேசிய கருத்தியலர் ஆதித்தனாரையே தமிழர் தந்தை என்றனர். இன்று அதை தினத்தந்தி தான் நினைவூட்டிக்கொண்டிருக்கிறது. திராவிடரிடம் கேட்டால் பெரியாரைத் தான் தமிழர் தந்தை என்கின்றனர். பெரியார் கூலிக்கு தலித்துகளை அழைத்துவந்து போராட்டம் நடத்தினார். மீனாம்பாளை வைத்து தந்தை பட்டம் பெற்றுக்கொண்டார். இன்று தலித்துகள் அதற்கு வருந்துகின்றனர்.


"தமிழர் தந்தை" என்று ஒரு இணையத் தேடல் செய்து உங்கள் முடிவுகளை வெளியிடுங்கள்.



  
தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் அவரை தம் தந்தை என்று அழைப்பதில்லை. அவர் தெலுங்கர் தலைமை, அதிகாரம் நிலைக்க வேண்டும் என்று சந்தர்ப்பவாத அரசியல் செய்தார். ஒரு காட்டு, கம்யூனித்துகளோடு நெருங்கியிருந்த பெரியார் 1952 தேர்தலில் கம்யூனித்துகள் அதிக அளவில் சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றத்தைக் கண்டு திகைப்புற்று அவர்கள் ஆட்சியேறினால் நிலக்கிழார்களான நாயுடு, ரெட்டி, ராஜு போன்றோர் நிலம் இழப்பர் என்று கருதி 1000 க்கு 30 பார்ப்பனர்களை கொண்ட கம்யூனித்து கட்சியை பார்ப்பனர் வல்லாதிக்கம் கொண்ட கட்சி என்று  பழித்து அதைவிட அதிகமாக 1000 க்கு 100 பேர் பார்ப்பனர்களாக உள்ள காங்கிரசுக்கு ஆதரவு தந்தார். ஏன்? காங்கிரசு மிட்டா மிராசுகளின் கட்சி. அண்ணாவும் அதைத் தடுக்க திமுகவை தேர்தலில் போட்டியிட செய்தார்.

அதாவது, இடஒதுக்கீடு தகராறில் காங்கிரசை விட்டு வெளியேரிய பெரியார், பின்னாளில்   காமராஜரை ஆதரித்தது தவறு என்கிறீர்கள்

பிறகு திக வில் இருந்து வெளியேறிய திமுக வை கடுமையாக எதிர்க்கும் நோக்கில்  தேர்தலில் காங்கிரசை ஆதரித்து திமுகவை எதிர்த்த செயல்களெல்லாம்   இப்பொழுது எப்படியெல்லாம் புதிய உள்நோக்கம் கொடுத்து திரிக்க முடியும் என்பது புரிகிறது. 

அந்த இடஒதுக்கீடு கல்வி, தொழில், வேலைவாய்ப்பு ஒதுக்கீடு அல்ல. அது சட்ட மன்ற உறுப்பினருக்கான   இடஒதுக்கீடு பற்றியது. அந்த காலத்தில் வரிகட்டுபவர் தான் ஓட்டுபோடமுடியும். ஓட்டுப்போடும் தகுதியுடையோர் மட்டுமே தேர்தலில் நிற்கமுடியும். இதில் இடஒதுக்கீடு வேண்டும் என்று அவர் கேட்கக் காரணம் அக்காலத்தே நிலக்கிழார்கள் தான் அதிக அளவு வரிகட்டினர். 50% நிலக்கிழார்கள் தெலுங்கர்கள் என்பதால் அவ்வாறான இடஒதுக்கீடு ஆட்சி அதிகாரம் செய்வதற்கு தெலுங்கர்களுக்கே சாதகமாக அமையும் என்பது தான். அதைத் தான் திரு வி க எதிர்த்தார். பெரியார் நொண்டி சாக்கு சொல்லி வெளியேறினார்.

திமுக 1957 இல் தான் தேர்தலில் போட்டியிட்டது. ஆனால் அதற்கு முன்னேயே காங்கிரசை பெரியார் ஆதரித்தார். 1952 தேர்தலில் தமிழ்த் தேசிய கட்சிகள் / கம்யூனித்து கட்சிகள் அதிக இடங்களை பெற்றது தெலுங்கர் நலனுக்கு எதிராகப் போகும் என்பதாலேயே அவற்றின் வளர்ச்சியை தடுக்க காங்கிரசு பக்கம் சாய்ந்தார். அந்த முயற்சிக்கு திமுக வின் தேர்தல் அரசியல் குந்தகமாகுமோ என்று எண்ணி திமுகவையும் எதிர்த்தார் என்பதே உண்மை.

அன்றைய அரசியல் சூழ்நிலை....
தமிழ்நாடு என்ற மாநிலம் உருவாகிய பின்னர்--   
இராஜாஜி கட்சியில் மதிப்பிழந்து விலகிய பின்னர்-- 
குலக்கல்வி திட்டம் குழி தோண்டி புதைக்கப்பட்ட பின்னர் --
பச்சைத் தமிழர், அவரால் தமிழகத்திற்கு நன்மை என்று கருதிய காமாராஜர் ஆட்சிக்கு வந்த பின்னர் --
காங்கிரசை எதிர்ப்பதில் பெரியார் அக்கறை காட்டவில்லை.



தகுதியற்றவர்கள் சிலர்  ரூம் போட்டு யோசித்து உருவாக்கிய கருத்துப்பிழை கொண்ட "புதிய தமிழ்த்தேசியம்" என்ற கொள்கைக்கு முற்றிலும் மாறுபட்டது பெரியாரின் நோக்கம். 


1952 இலேயே ஆட்சிக்கட்டில் ஏறியிருக்க வேண்டிய கட்சி தமிழ்த் தேசிய கருத்தியல் கொண்ட சி.பா.  ஆதித்தனாரின் தலைமையில் அமைந்த நாம் தமிழர் + கூட்டணி கட்சிகள். எனவே தமிழ் தேசியம் புதிதல்ல. 
தமிழர் எழுச்சி இதழில் தமிழ்த் தேசியம் எப்படி இருக்க வேண்டும் என்ற ஆத்தினாரின் கட்டுரையை படியுங்கள் 

பின்னர் ஏன் ஆதித்தனார் திமுக வில் இணைந்தார்? அவர் கொள்கைகைகளை திமுக முன்னெடுக்கும் என நம்பி இணைந்துவிட்டாரா?


நாம் தமிழர் கட்சி கால ஓட்டத்தில் கரைந்தது. கருணாநிதி ஆதித்தனாருக்கு சால்வை போர்த்தி அடுத்து தனித் தமிழ்நாடு தான் என்று பொய் கூறினார். ஆதித்தனார் அதை உண்மை என்று கருதி யார் தனித்தமிழ்நாடு அமைத்தல் என்ன? அமைந்தால் சரி என்று திமுகவில் சேர்ந்தார். 


மொழிப்போராட்டம் கலாச்சாரப் போராட்டத்தின் ஒரு பகுதிதானே ஒழிய முழுப்போராடமாகவே ஆகிவிடாது என்ற கோணத்தில் அவர் துவங்கியதாகத்தான்  தெரிகிறதேயொழிய... 


அவர் தமிழ், தமிழ்ப் பண்பாட்டை மதிக்கவே இல்லை. பார்ப்பனர் வெறுப்பிற்கு உதவும் என்பதாலேயே அவற்றை ஆதரித்தார். 

எல்லாவற்றையும் சான்றுடன் கூறுங்கள். மொழி பண்பாடு குறித்த 'பெரியார் சிந்தனைகள்' கட்டுரை இதே இழையில் தொடர்ந்து வரத்தான் போகிறது. 

திருக்குறள் சிலப்பதிகார இகழ்ச்சி இதற்கு சான்று.  

ஒரு இலகியப்படைப்பென்றால் அதைப் படிப்பவர்  யாரும்  விமர்சிக்கலாம்.

1949 திருவள்ளுவர் குறள் மாநாடு நடத்தியவர் பெரியார். 

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருவள்ளுவர் குறள் மாநாடு என்பது 1949 ஆம் ஆண்டு சனவரி 15-16 ஆம் திகதிகளில் பெரியார் தலைமையில் தமிழ்நாட்டில் ஒழுங்குசெய்யப்பட்டு திருக்குறளை ஆய்ந்த ஒரு தமிழ் மாநாடு ஆகும். இந்த மாநாட்டில் அன்றைய அறிஞர்கள், புலவர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டுக்கான அழைப்பில், பெரியார் பின்வருமாறு கூறுகிறார்: "குறள் தத்துவத்தை விளக்கிடவென்றே நடத்தப்படும் இம் மாநாட்டில் நாம் பங்கு கொண்டு தத்துவங்களை உணர்ந்து, தமிழ்ப் பாமர மக்கள் இடையில் அந்தத் தத்துவங்கள் புகும்படி செய்ய வேண்டியது நம் கடமையாகும்.


அடுத்து ஒரு தனி பதிவாகவும் வரம் 



 
 "நான் கர்நாடக பலிஜநாயுடு வகுப்பில் பிறந்தவன்" என்று குறிப்பிட்ட பெரியாருக்கு; 'தெலுங்கருக்கு' ஆட்சியியைப் பிடித்துக் கொடுக்க என்ன கட்டாயம்  என்று மீண்டும் ரூம் போட்டு யோசிக்கத் தேவையிருகிறது. 


நாயுடு என்றாலே தெலுங்கு தான். அவர் முன்னோர் கருநாடகத்தை சேர்ந்த நாயுடுகள். 


அவர் யாராக இருந்தால்தான் என்ன?  அவர் பின்னணி எதுவாக இருந்தால்தான் என்ன? ... தமிழர் முன்னேற்றத்திற்கு பெரியார்   செய்த பல உருப்படியான செயல்களுக்குச் சான்றுகள் இருக்கிறது. 

அவரால் தமிழர் எந்த முன்னேற்றமும் அடையவில்லை. அதற்கு அவர் பள்ளிக்கூடமோ, மருத்துவமனையோ, தொழிற்சாலையோ கட்டவில்லை வேலைவாய்ப்பு கொடுக்க.

 
தான் கர்நாடகா குடும்பப் பிரிவில் வந்தவன் என்று ஒருவர் கூறியதையும் மதிக்காது, தானே அவரைத் தெலுங்கு என முத்திரை குத்துவது வேடிக்கை.     

 பலிஜா என்றாலே நாயுடு தான். நாயுடுவில்  கன்னடப் பிரிவே கிடையாது.


இப்பொழுது புதிதாக தூசி தட்டிக்  கிளம்பியுள்ள புதிய  தமிழ்த்தேசியம், ஆட்சியைப்பிடிக்க தமிழ்சாதி, தெலுங்கு சாதி, மலையாள சாதி என தமிழர்களில்  பிரிவினை உண்டாக்கி  சூழ்ச்சி செய்யும் கூட்டம்.

தமிழர்களில் தெலுங்கு சாதி மலையாள சாதி அடங்கார். எனவே அது தமிழரில் பிரிவினை ஆகாது. 


திமுகவின் இந்தி எதிர்ப்புதான்  அவர்களுக்கு உதவியது என்பது வரலாறு காட்டும் உண்மை.  தமிழ்நாட்டிற்கென்று ஏதாவது செய்தால் மக்களுக்கு நம்பிக்கை வரும்.  ஒன்றிரண்டு செய்தவர்களையும்  குறை சொல்லிக் கொண்டிருப்பது உதவாது. 


மாணவர்களின் போராட்டத்தை தனதாக திமுக களவாடியது.  


திட்ட வேண்டுமானால் இந்திப் போராட்டத்திற்கு திமுக  தான் காரணம் என்றும் சொல்வதையும் நான் அறிவேன். குழுமத்தில் பலமுறை இவ்வாறு சொல்லியும் கேட்டுள்ளேன். 

 

தேமொழி

unread,
Dec 28, 2016, 11:46:52 PM12/28/16
to மின்தமிழ்


பெரியார் நடத்திய திருக்குறள் மாநாடு

திருக்குறள் மாநாடு 15.01.1949




இன்றைய தினம் திருவள்ளுவர் பற்றியும், திருக்குறள் பற்றியும் உலகம் பேசுகிறது. இந்த நிலை உருவாவதற்கான அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர் தந்தை பெரியார்.


புலவர்கள் மத்தியில் மட்டும் நடமாடிக் கொண்டிருந்த குறளை மக்கள் மத்தியில் தவழச் செய்ய முதன் முதலில் சென்னையில் மாநாட்டைக் கூட்டினார் தந்தை பெரியார். அதில் அறிவாய்ந்த தமிழ்ப் பெருமக்களைப் பங்கு பெறச் செய்தார். 

15.01.1949 அன்று திருவள்ளுவர் - குறள் மாநாடு கூட்டப்பட்டது.

பெரியார் வேண்டுகோள்!

திருவள்ளுவர் மாநாடு சென்னையில் பிரபலமாய் பல அறிஞர்கள் தலைமை யையும், சொற்பொழிவுகளையும் கொண்டு இம்மாதம் 15,16 சனி,ஞாயிறுகளில் நடக்கின்றது.

திராவிடர் கழகம் அதில் நல்ல பங்கு கொள்ள வேண்டும் என்பது எனது ஆசை. ஏனென்றால், தமிழர்களுக்கு ஆரியக் கலைகள், ஆரிய நீதி நெறி ஒழுக்கங்கள் அல்லாமல் வேறு இல்லை என்பது மாத்திரமல்லாமல், இவைகளில் ஆரியர் வேறு‡ தமிழர் வேறு என்று பாகுபடுத்துவது தவறு என்றும் கூறுவதோடல்லாமல், குறள் முதலிய தமிழர் பண்பு, ஒழுக்கம், நெறி ஆகியவைகளைக் காட்டும் தமிழ்மறைகள் பலவும் ஆரியத்தில் இருந்து ஆரிய வேத, சாஸ்திர, புராண, இதிகாசங்களில் உள்ளதைத் தொகுத்து எழுதப்பட்டவையே என்றும், பெரும் அளவுக்கு ஆரியர்கள் பிரசாரம் செய்வது மாத்திரமல்லாமல் பலவகைத் தமிழர்களைக் கொண்டும் அப்படிப்பட்ட பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.

குறளைப் பொறுத்தவரை என்னுடைய கருத்து ஆரிய கலை, பண்பு, ஒழுக்கம், நெறி முதலியவை யாவும், பெரிதும் தமிழர்களுடைய கலை, பண்பு, நெறி, ஒழுக்கம் முதலியவைகளுக்கு தலைகீழ் மாறுபட்டதென்பதும், அம்மாறுபாடுகளைக் காட்டவே சிறப்பாக குறள் உண்டாக்கப்பட்டது என்பதும் உறுதியான கருத்தாகும். குறளிலும் சிற்சில இடங்களில் ஆரியப் பண்பு கலப்பு இருக்கின்றது என்று இன்று பல பெரியார்கள் கருதுகிறார்கள். அதற்கேற்றப்படி சில எடுத்துக்காட்டுகளையும் காட்டுகிறார்கள்.

ஏதோ சில இருக்கலாம் என்றே வைத்துக் கொள்ளலாம். அப்படிப்பட்டவைகளை நாம் இக் காலத்துக்கும், குறளாசிரியரது பெரும்பாலான கருத்துக்கும், ஒப்பிட்டுப் பார்த்து நல்ல கவலையுடன் சிந்தித்தோமே யானால் ஏதாவது நம் கருத்துக்கு ஏற்ற தெளிபொருள் விளங்கும் என்றே கருதுகிறேன். விளங்காவிட்டாலும் அவை குறளின் தத்துவத்துக்கு முரண்பாடானது என்றாவது தோன்றலாம். அதுவும் இல்லாவிட்டால் நம் பகுத்தறிவுப்படி பார்த்து, கொள்வதைக் கொண்டு, விலக்குவதை விலக்கலாம்.

நீண்ட நாள் நம் கலைகள், பண்புகள் எதிரிகளின் இடையிலேயே காப்பு அற்றும், நாதி அற்றும் கிடந்ததாலும் அன்னிய கலை, பண்பு ஆட்சிக்கு நாம் நிபந்தனை அற்ற அடிமைகளாக இருந்ததாலும், நம் கலைகளில் இப்படிப்பட்ட தவறுதல்கள் புகுவது, நேருவது இயற்கையே யாகும். ஆதலால் அப்படிப்பட்ட ஏதோ சிலவற்றிற்காக நம்முடைய மற்றவைகளையும் பறி கொடுத்துவிட வேண்டும் என்பது அவசியமல்ல.

எனவே, குறள் தத்துவத்தை விளக்கிட வென்றே நடத்தப்படும் இம் மாநாட்டில் நாம் பங்கு கொண்டு தத்துவங்களை உணர்ந்து, தமிழ்ப் பாமர மக்கள் இடையில் அந்தத் தத்துவங்கள் புகும்படி செய்ய வேண்டியது நம் கடமையாகும். திராவிடர் கழகம் என்பது சமுதாய முன்னேற்றத்திற்காகவே இருப்பதால், அதன் சமுதாயக் காரியங்களுக்கு குறள் தத்துவம் பெருமளவுக்கு அவசியமாகும். ஆதலால், குறள் மாநாட்டைத் தமிழர்கள், திராவிடர்க் கழகத்தார் நல் வாய்ப்பாகக் கொண்டு கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

ஈ.வெ.ரா (விடுதலை 10.01.1949)


திருவள்ளுவர் குறள் மாநாடு

காரியக் கூட்டம் மவுண்ட்ரோடு மீரான் சாயிபு தெரு கட்டடத்தில் 8.1.1949 அன்று நடந்தது. பெரியார் உட்பட சுமார் 100 பேர் வந்திருந்தனர். சப்‡கமிட்டிகளும், தொண்டர் பதிவுகளும் நடந்தன.

1) கொட்டகை சம்பந்தமான காரியங்களும், அணி விரிப்பு, தண்ணீர் வசதி முதலியவைகளும் பொறுப்பேற்க சப்‡கமிட்டியாக தோழர்கள் பாவலர் எஸ்.எஸ். அப்துல்காதர், எஸ்.எம். ஜக்ரியா, வீரராகவன், துரைராஜ், எம்.கே.சாமு, எம்.கே.எஸ். சாயபு தம்பி, வி. முனுசாமி ஆகியோரும்,

2) லைட் (விளக்கு), ரேடியோ, லைட் அணி முதலிய பொறுப்பு ஏற்க தோழர்கள் கூத்தரசன், தலைவர் பரமசிவன், எ.ஆர். சேசாசலம் ஆகியோரும்,

3) வெளியூரிலிருந்து மாநாட்டுக்கு வருகிறவர்களுக்கு இடம் முதலிய வசதிக்குப் பொறுப்பேற்க தோழர்கள் பி. வீரராகவன், எ.ஆர்.சேசாசலம் ஆகியோரும்,

4) விளம்பரம், கடிதப் போக்குவரத்து, அழைப்பு, நிகழ்ச்சிக்குறிப்பு ஆகியவைகள் பொறுப்பேற்க புலவர் பு.செல்வராஜ், லிங்கராசு ஆகியோரும்,

இக்காரியங்களைக் காரியக் கவனிப்பு செய்து அடிக்கடி அறிக்கை வெளியிட, தோழர் கள் டாக்டர் கணேசன், கே.கோவிந்தசாமி ஆகியோரும் கேட்டுக் கொண்டு யாவரும் ஏற்றுக் கொண்டார்கள்.

தொண்டர்களாக அந்த இடத்திலேயே சுமார் 50 பேர்கள் அதாவது, தணிகாசலம், வெ.கண்ணன், எம்.குப்புசாமி, தா.வேணுகோபால், லிங்கராசு, எஸ்.பி.டி. திராவிடமணி, சுந்தரவதனம், டி.தாமஸ், சி.கணேசன், எஸ். பழநிவேலு, தெ. அண்ணாமலை, டி.சி.முருகேசன், டி.ராமலிங்கம், பி.ஆர். இராமச்சந்திரன், பி.எஸ். பழநி, சி.எஸ். மோகன சுந்தரம், எஸ்.வி. சீனிவாசன், சி.பிரசாரம், எஸ்எஸ். ராசவேலு, சி.ஆர்.சின்னப்பன், அனந்தசயனம், ரா.சண்முகம், ச.ப.சிவன், கே.மாணிக்கசாமி, எம்.டி.செல்வராசன், ஊ.கு.ராமநாதன், தி.ரா.பழநி, இராமானுஜம், மோகனரங்கம், காசிராசன், எ.இ. சுப்பிரமணியம், டி.எம்.வி. ராஜன், எஸ்.கணேசன், எம்.பி. பாண்டுரங்கம், சி.என்.சண் முகம், என்.கே.குப்புசாமி, எம்.ராஜூ, பெண் தொண்டர்கள் அமைப்புக்கு தோழியர் அலர்மேலம்மாள் கேட்டுக் கொள்ளப்பட்டார்கள்.

மற்ற காரியங்களைக் கவனிக்க, 10.01.1949 மாலை 5 மணிக்கு பவழக்காரத் தெரு, பாவலர் எஸ்.எஸ். அப்துல் காதர் அவர்கள் கட்டடத்தில் கூட்டுவதென்று தீர்மானிக்கப்பட்டது. செயலாளர் தோழர் மணிமொழியார் நன்றி கூற, கூட்டம் இரவு 8 மணிக்கு முடிவு பெற்றது.

மேலும் குறள் மாநாட்டு பெண் தொண்டர்கள்: 1. அலமேலு அப்பாதுரை அம்மாள், 2. சுசீலா முத்துக்கிருட்டிணன், 3. டி.பாப்பம்மாள், 4.எம்.எம்.லட்சுமி அம்மாள். மேலும் தொண்டர்களாகப் பதிவு செய்து கொண்டவர்கள்; து. குப்புசாமி, அப்துல் அஜீஸ், டி.கே.க. ராஜன், பி.சோமசுந்தரம், ம.கு. நெடுமாறன், ஏ.தாஸ் , வி. சங்கரன், மகிமை தாஸ், கி.பா.அய்யன், சி.என். கிருட்டிணசாமி, கே.இராமு, பி.டி.ஜனநாயகம், ம. ராஜேசுவரன், ச.வீ.வரதன், எம்.கண்ணன், கொ.பெருமாள், ச.தங்கவேல், ச. சோமசுந்தரம், கே.நடேசன், கே.பி. சந்திரன், மு.சடகோபன், ஆ.சம்பந்தன், ஜி.கணேசன், செ.ஆரோக்கிய தாஸ், ஆர்.சி.சுந்தரராஜி, எம்.சிவஞானம், நா.ரா. பத்மநாபன், ச. சந்திரபாபு, நாகையன், சி.எம்.சுவாமி, ம.இராவணதாஸ், பி.டி.டி. தேவராஜூலு, எஸ்.வி. சண்முகம், பி.எஸ்.பழனி, இ.ஆர்.கோவிந்தசாமி, எம்.எஸ்.சாமிநாதன், கோதண்டன், டி.ஐம்புலிங்கம், சாளை கபீர், ராவணன், துரைக் கண்ணம்மாள். 

நாளை 12.1.1949 மாலை மீரான் சாயுபு வீதி மாநாடு காரியாலயக் கட்டடத்தில் தேர்வு நடத்திய பின் கடமை உரை, பயிற்சி நடைபெறும்.

திருவள்ளுவர் குறள் மாநாடு அறிக்கை (12.1.1949)

மாநாட்டு ஏற்பாடுகள் அதற்குரிய தனித்தனி உட்கழக உறுப்பினர்களால் விரைந்து செய்யப்பட்டு வருகின்றன. பந்தல் வேலை பெரும்பாலும் முடிவு பெற்றுவிட்டது. கிட்டத்தட்ட 10,000 பேர்கள் இருக்கத்தக்க அளவு பந்தல் போடப்பட்டிருக்கிறது. பந்தலுக்கு ‘வள்ளுவர் பந்தல்’ என்றே பெயரிடப்பட்டிருக்கிறது.

நேற்று பெரியார் அவர்களுடன் தளபதி அண்ணா அவர்களும் நகரசபை உறுப்பினர் வி.முனுசாமி அவர்களும் மற்றும் பல பெரியார்களும் வந்து பந்தலையும் மற்ற ஏற்பாடுகளையும் பார்வையிட்டனர். நாள்தோறும் நூற்றுக்கணக்கானவர்கள் பந்தலைப் பார்த்துச் செல்கின்றனர். சென்னை முழுவதும் குறள் மாநாட்டைப் பற்றிய பேச்சாகவே இருக்கிறது. மாநாட்டு நுழைவுச் சீட்டுகள் இப்போதிருந்தே விற்பனையாகத் தொடங்கிவிட்டன.

தேவையான அளவுக்கு மேல் 100 தொண்டர்கள் வரை பதிவு பெற்றுள்ளனர். தொண்டு செய்வதில் உண்மையான ஆக்கமும், பற்றும் உள்ள இளைஞர்களே தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்கள். மாநாட்டைப் பற்றி விவரம் அறிய விரும்புவோர்: செயலாளர், திருவள்ளுவர் குறள் மாநாடு, 1. மீரான் சாயுபு தெரு,மவுண்ட் ரோடு, சென்னை என்ற முகவரிக்கு எழுதுங்கள். இதுவரை நடைபெறாத முறையில் சென்னை யில் குறள் மாநாடு நடப்பதற்கான முறையில் சிறந்த ஏற்பாடுகள் செய்யப் படுகின்றன. 

பேரறிஞர்கள், புலவர் பெருமக்கள் பலர் இசைந்துள்ளார்கள். மாநாடு வெற்றிக ரமாகவும், பயனுடையதாகவும், நடைபெற தங்கள் அனைவருடைய கருத்துகளையும் முன்னதாகத் தெரிவிப்பின் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ளப்படும். புலவர்கட்கு அழைப் பிதழ்கள் தலைமைத் தமிழாசிரியர் பேருக்கு அனுப்பப்படுகின்றன. மற்ற புலவர்கள் அவர்களிடம் பெற்று கொள்வார்களாக.

-சி.டி.அரசு,காஞ்சி மணிமொழியார், செயலாளர்கள்.

முதல்நாள் மாநாடு (15.01.1949)

மாநாட்டில் கட்சி கருத்து வேற்றுமையின்றி தமிழ் அறிஞர்களும், உயர்தர அதிகாரிகளும், புலவர் பெருமக்களும், நடிப்புக் கலைஞர்களும், வழக்கறிஞர்களும் பங்கு கொண்டுள்ளனர். மக்கள் கடல் எனக் கூடியுள்ளனர்.

காலை 8 மணி முதற்கொண்டே மக்கள் மாநாட்டுப் பந்தலில் குழும்ப ஆரம்பித்து விட்டனர். பெரியார் அவர்களும் 8.15 மணிக்குள்ளாகவே வந்து பந்தலின் ஒரு பக்கத்தில் அமர்ந்து தோழர்களை வரவேற்று மகிழ்வுடன் உரையாடிக் கொண்டிருந்தார்.

9.45 மணிக்கு நகைச்சுவை அரசு என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள் தம் சகாக்களுடன் வந்து சேரவும் பெரியார் அவர்கள் அன்னாரை வரவேற்று இருக்கை அளித்து உபசரித்தார்கள். 

அனைவரையும் வரவேற்றார் பெரியார்!

சரியாக 10.15 மணிக்கு பன்மொழிப் புலவர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் எம்.ஏ., பி.எல்., எம்.ஓ.எல் அவர்கள் மாநாட்டுப் பந்தலை அடையவும் பெரியார் அவர்கள் அன்னாரை வரவேற்று இருக்கையில் அமர்த்தினார்கள்.

சரியாக 10.30 மணிக்கு நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்களும், தோழர் டி.எஸ். கந்தசாமி முதலியார் அவர்களும் மாநாட்டுப் பந்தலையடையவே மாநாடு கண்காணிப்பாளர் டாக்டர் கணேசன், அவர்களை வரவேற்று மேடையின்கண் அழைத்து வந்தார்.

மாநாட்டுச் செயலாளர் சி.டி.டி. அரசு அவர்கள் மாநாடு கூட்டப்பட்டதன் நோக்கத்தை எடுத்துக்கூறி அனைவரையும் வரவேற்று, நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்களை மாநாட்டை திறந்து வைக்கும்படி கேட்டுக் கொண்டார்.

தெ.பொ.மீ. தலைமை


நண்பகல் 12 மணிக்குப் பிறகு, திருச்சி வழக்கறிஞர் தி.பொ. வேதாசலம் அவர்கள் முன்மொழிய, முஸ்லிம் தோழர் பாவலர் அப்துல் காதர் அவர்களும், தோழர் டி.கே.நாராயணசாமி நாயுடு அவர்களும் தொடர்ந்து வழிமொழிய நீண்ட கைதட்டலுக் கிடையே பன்மொழிப் புலவர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் தலைமையேற்றார். அவர் தம் உரையில் குறிப்பிட்டதாவது:‡

வள்ளுவர், புலவர் உலகத்திலேயே இதுகாறும் வாழ்ந்தது போதும். ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்ற பழமொழிக்கிணங்க வெறும் மேற்கோளுக்காக மட்டுமே இதுகாறும் புலவர்களுக்கு நம் குறள் பயன்பட்டு வந்தமை இப்போதேனும் மாய்ந்து போகட்டும்! கிறிஸ்தவன் ஒவ்வொருவனுக்கும் விவிலிய நூல் (பைபிள்) எப்படியோ, அதுபோல் திருக்குறளும் தமிழனது திருமறை நூலாக விளங்கும் வாய்ப்பை அடையட்டும், மக்களெல்லாம் இன்புற்று வாழ்தல் வேண்டும் என்ற ஒரு கருத்தையே அடிப்படையாகக் கொண்டு பண்டைத் தமிழனாகிய வள்ளுவனால் எழுதப்பட்ட நூல் பாமரர்களுக்கும் இனி பயன்படட்டும். அமெரிக்கப் பேரறிஞர் மில்டென் அவர்கள் விரும்பிய ஒரே உலகம் திருக்குறள் மூலமேனும் இனிது வந்தடையட்டும் என்று குறிப்பிட்டார்.

திருக்குறள் எஸ். முனுசாமி



திருக்குறளை நன்கு படித்துத் தெளிவாகத் தெரிந்து கொள்வது எப்படி என்னும் பொருள் பற்றி நகைச்சுவை ததும்ப அரிய சொற்பொழிவாற்றினார்.

திருவள்ளுவர் சொற்களை மிகவும் வரம்பு கட்டியும் கையாண்டிருக்கிறார். ஒவ்வொரு குறளையும் நன்கு படித்து மனப்பாடம் செய்து அவற்றின் பொருளை உரையாசிரியர் மூலம் தெரிந்து கொள்ள முயற்சிக்காமல் தன் அறிவு கொண்டே சிந்தித்துப் பார்த்துத் தெளிவுபெற முயற்சிக்க வேண்டும். குறளில் கையாளப் பட்டுள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் விரிவான பொருள் குறளிலேயே எங்கேனும் ஓரிடத்தில் கொடுக்கப்பட்டே இருக்கிறது என்றும் விளக்கிக் கூறினார்.

பெரும்புலவர் டி.எஸ்.கந்தசாமி முதலியார்

வள்ளுவர் கூறியுள்ள சிறப்பான பண்புகளைக் கடைபிடித்து நடந்து வருவதன் மூலமே எவனும் முன்னேற்றம் அடைதல் கூடும். தலைவருள் தலைவனும் புலவருள் புலவனும் ஆன வள்ளுவன் தமிழ்க் கலையுள் ஓர் ஒப்பற்ற காவியம் திருக்குறளை இயற்றிக் கொடுத்துள்ளார். அன்னாரின் திருக்குறளை யாவரும் மாசறக் கற்றல் வேண்டும் என்று கூறி திருவுருவப் படத்தைத் திறந்து வைத்தார்.

எஸ்.முத்தையா முதலியார்

அந்தணர் என்பதும், பார்ப்பனர் என்பதும் வெவ்வேறு வார்த்தைகள் என்பது எடுத்துக் காட்டப்பட்ட உண்மையே என்றும், அந்தணப்பேட்டையும், பார்ப்பனச்சேரியும் அடுத்தடுத்து இருப்பதே இதற்குப் போதுமான சான்றாகும். திருக்குறள் வழிப்படி யாவரும் நடந்து வருவோமானால் நம்மை யாரும் குறை கூற மாட்டார்கள். கடவுள் உண்டா? இல்லையா? என்பது பற்றி நாம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. நாம் ஒழுக்கமுடன் நடந்து கொண்டால் அதுவே போதுமானது என்று உரையாற்றினார்.

இயற்கையானது குறளை பெரியாரிடம் ஒப்படைத்துள்ளது 


-பேராசிரியார் சி. இலக்குவனார்




இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல் 

என்ற குறள் மொழிப்படி திருக்குறளை அனைத்துலகுக்கும் எடுத்தோதி அதற்குச் சிறப்பை உண்டாக்கித் தர இப் பெரியார் ஒருவராலேயே முடியும் என்பதை உணர்ந்தே இயற்கை யானது திருக்குறளை பெரியார் அவர்களிடம் ஒப்படைத்தி ருக்கின்றதென்றும், இயற்கை கூட வள்ளுவர் கட்டளைப்படியே நடக்கிறதென்பது வள்ளுவர்க்குப் பெருமை தருவதாகும் என்றும் எடுத்துக் கூறினார் பேராசிரியர் இலக்குவனார். ஒன்றிரு புலவர்கள் தமிழனுக்குக் கதியான நூல்கள் கம்பராமாயணமும், திருக்குறளும் என்று கூறி வருவது ஏற்புடையதல்ல வென்றும், கம்பனையும் வள்ளுவனையும் ஒப்பிடுவது பாம்பையும், பசுவையும் ஒப்பிட்டுப் பார்ப்பதாகும்.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்றும், உழவர்க்கு எஞ்ஞான்றும் ஒப்பார் இல் என்றும் உழைப்பாளிகளைப் போற்றியிருக்கின்றமை மார்க்சியத்தையே குறிப்பதாகும் என்றும், மார்க்சியக் கொள்கைகளை விளக்க திரு. லெனின் தோன்றியது போல், வள்ளுவருடைய கருத்துகளுக்கு விரிவுரை வழங்க நம் பெரியார் அவர்கள் தோன்றி யுள்ளார். எனினும், அரசியல் நெறியை எடுத்துக் கூறும்போது கூட, வள்ளுவர் அறம் வழுவாது உயர் நெறிகளை எடுத்தோதி இருக்கிறார் என்றும், இன்றைய சர்க்கார் உண்மையிலேயே மதச் சார்பற்ற சர்க்காராக வேண்டுமானால், திருக்குறள் அதற்கேற்ற வழிகாட்டி என்றும் கூறி பழந்தமிழனான வள்ளுவன், புரட்சித் தமிழ் மகனான வள்ளுவன், சீர்திருத்தக் காரனான வள்ளுவன் எழுதிய குறளை யாவரும் படித்து அதன்படி நடந்து இன்ப வாழ்வு வாழ்தல் வேண்டுமென்று கூறினார்.

அஷ்டவதானம்

பிறகு, திரு.சுப்பிரமணியம் அவர்களின் அஷ்டவதானம் விமர்சையாக நடைபெற்றது. பலரும் பல கேள்விகள் கேட்டு அவர் சரியாக விடை கூற, மக்கள் யாவரும் அவருடைய ஞாபக சக்தியைப் பாராட்டினர். 8.15 மணிக்கு அவதானம் முடிவுற்றது. நன்றி கூறிய பின் மாநாடு மறுநாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டு இனிது கலைந்தது. 

2 ஆம் நாள் மாநாடு



16.1.1949 காலை 9.30 மணிக்கு திரு. சக்ரவர்த்தி நயினார் அவர்கள் மாநாட்டுப் பந்தலுக்கு வந்துவிட்டார்கள். பெரியார் அவர்கள் அன்னாரை வரவேற்று ஆசனத்தில் அமர்த்தினார்.

சரியாக 10 மணிக்கு கற்றறிந்த மக்களிடையே ஒளியுடன் விளங்கி நிற்கும் பெரியார் என்றும் பதவி விருப்பமற்றவர் என்றும், ஆராய்ச்சி வல்லுநர் என்றும் கூறி சக்ரவர்த்தி நாயனார் அவர்களை பெரியார் அறிமுகப்படுத்தி அன்னாரைத் தலைமை 



ஏ. சக்ரவர்த்தி நாயனார் 

ஏற்கும்படி கேட்டுக் கொண்டார். தோழர் நெடுஞ்செழியன் அவர்கள் தொடர்ந்து வழி மொழிய ராவ்பகதூர் ஏ. சக்ரவர்த்தி நாயனார் அவர்கள் நீண்ட கைதட்டலுக்கிடையே தலைமையேற்று தம் சொற்பொழிவைத் தொடங்கினார். பின்னர் பெரியார் அவர்கள் சிறிது நேரம் பேசிய பின், தோழர் நெடுஞ்செழியன் அவர்கள் சொற்பொழிவாற்றத் தொடங் கினார்.

நேற்றைவிட இன்று மக்கள் திரளாக மாநாட்டில் கலந்து கொண்டனர். கொட்டகை பூராவும் மக்கள் நிரம்பியிருக்கின்றனர். கோவை ராவ்சாகிப், திரு.சி.எம். ராமச்சந்திரன் செட்டியார் அவர்களும் மாநாட்டில் கலந்து கொண்டார்கள். அறிஞர் அண்ணாதுரை, நாவலர் பாரதியார் ஆகியோரும் வந்திருந்தார்கள்.

நெடுஞ்செழியன் அவர்கள் பேசிய பிறகு, தொடர்ந்து அன்பழகன், விருதுநகர் திருக்குறள் சங்கத் தலைவர் வெள்ளைச்சாமி நாடார், கா. அப்பாத்துரை ஆகியோர் சொற்பொழிவாற்றினர். தலைவர் அவர்கள் வேறு வேலை நிமித்தம் வெளியில் செல்லுகையில் தனக்குப் பதிலாக நாவலர் பாரதியார் அவர்கள், தலைமை வகித்துத் தருவார் என்று கூறி விடை பெற்றார்.

நேற்றுப் போல் இன்றும் கோர் ஆபிசர் தோழர் ரா. ஜெகதீஸ்வரன் தலைமையில் ஜெயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் படையினர் 20 பேர் வந்திருந்தனர்.

பெரியார் குறளை ஏந்தியது ஏன்? வரவேற்புரையில் திரு.வி.க.விளக்கம்




திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு திருக்குறளே. திருக்குறளைப் பயின்று பயின்று அதன் உள்ளுரையை உணர உணர திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு நமக்கு மேலும் மேலும் விளங்குவதாகும்.

திருவள்ளுவர் தமிழர். திருக்குறளைத் தமிழில் எழுதினார். இது உறுதி. மிக உறுதி. முழு உறுதி. அய்யமில்லை. இது உண்மை என்பதை அறுதியிட்டுக் கூறலாம். ஆனால், குறள் தமிழ் நூலன்று. தமிழர் நூலன்று. உலக நூல். உலகப் பொது நூல், சமதர்ம நூல்.

குறளைப் படிக்கும் முன்னர், படிப்பவர் (Sexual Science) பால் அறிவு பெற்ற வராதல் வேண்டும். ஆண்-பெண் சேர்க்கை பற்றிய விஞ்ஞான அறிவின்றி திருக் குறளைப் பயின்றால் குறளின் முழு உண்மையையும் உணர்தல் அரிது. அரிது.

குறளைப் பயிலும் முன் மார்க்சிசமும் அறிந்திருத்தல் வேண்டும். மார்க்சிசம் அறியாமல் குறளைப் பயின்றால் பயனில்லை. மக்கள் கூடி வாழப் பிறந்தவர்கள். பிரிந்து வாழப் பிறந்தவர்கள் அல்லர். இதுதான் மார்க்ஸ் தத்துவத்தின் அடிப்படை. குறள் நூலின் அடிப்படையும் இதுதான்.

தமிழகத்தின் இயற்கைத் தலைவர் பெரியார் அவர்களே ஆவார். இந்த மாநாட்டின் இயற்கை வரவேற்புத் தலைவர் பெரியார் அவர்களே தான். என்னைச் செயற்கை வரவேற்புத் தலைவராக்கிற்று.

சில சமயங்களில் நான் (Thesis) தத்துவம் ஆக இருந்திருக்கிறேன்; அவர்  எதிர்த் தத்துவமாக இருந்திருக்கிறார். சில சமயங்களில் நான் ஆக இருந்திருக்கிறேன். அவர் Thesis  ஆக இருந்திருக்கிறார். ஆனால், இது போதோ தத்துவம்(Thesis)  எதிர் தத்துவம் (Anti - Thesis) இரண்டும் மறைந்து (ஒருமைப்பாடு) Synthesis ஏற்பட்டிருக்கிறது.

பெரியாருடைய அறிவியக்கம் புரட்சி இயக்கம் ; பகுத்தறிவு இயக்கம் தோன்றியது, வளர்ந்தது. எப்படி எப்படியோ சென்றது. நானும் பெரியாரும் பலமுறை போரிட்டோம். ஆனால், அக் காலத்திலேயே நான் சொல்லியது உண்டு. இத்தகைய ஒருமைப்பாடு Synthesis ஏற்படப் போவது உறுதி, உறுதி என்று.

யார் என்ன கூறினாலும் கூறுக. பெரியாருடைய இயக்கம் - அறிவியக்கம், நாடுகளின் எல்லையை, மொழிகளின் எல்லையை, சமயங்களின் எல்லையை, சாதிகளின் எல்லையை, இனங்களின் எல்லையை எல்லா எல்லைகளையும் கடந்தது. அது உலகப் பொது இயக்கம்.

பெரியார் இன்று குறளைக் கையில் ஏந்தியுள்ளார். பலப்பல நூல்களை ஒதுக்கிக் கொண்டே வந்த பெரியார் குறளை மட்டும் கையில் ஏந்தியிருக்கும் காரணம் என்ன? திருக்குறள் உலகப் பொதுநூல். பெரியாரின் உலகப் பொது இயக்கத்திற்கு ஏற்ற உலகப் பொது நூல் திருக்குறளே! எனவேதான் அது பெரியாரின் கையிலே வீற்றியிருக்கிறது.

யார் யாரோ குறளைப் பாராட்டினார்கள். போற்றினார்கள். ஆனால், அவர்கள் தொண்டின் பயனாகவெல்லாம் குறள் தனக்கு உரிய இடத்தை அடைந்ததில்லை. இன்று பெரியார் குறளை ஏந்தியிருக்கிறார். இனி மிக விரைவில் குறள் தன் சிறப்பிடத்தை எய்துவது உறுதி! உறுதி! என்று உரையாற்றினார் திரு.வி.க.

ஆரியம் கலவாத திருக்குறள்


நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமை உரை




திருக்குறள் என்னும் இந்த ஒப்பற்ற தமிழ்க் கருவூலத்தின் பெருமையை, சால்பை, அருமையை, சிறப்பை தமிழ் மக்களை விட வேற்றவரே அதிகம் உணர்ந்துள்ளனர். நாம் திருக்குறளைப் போற்றுவதெல்லாம் ஒரு சடங்காக, ஒரு போலிக் கவுரவ வீண் பிதற்றலாகத்தான் இருக்கிறதே தவிர, திருக்குறளை எம் முறையில் போற்ற வேண்டுமோ அம் முறையில் இல்லை.

குறளாசிரியர் காலத்திலேயே தமிழரிடை ஆரியர் தொடர்பு ஏற்பட்டு விட்டது. ஆனால், தமிழகம் ஆரிய மயமாகவில்லை. தமிழர் ஆரியர் கருத்துகளை அறிய லாயினர். ஆனால், ஆரியக் கருத்துகளுக்கு அடிமைகளாகி விடவில்லை. தமிழகம் ஆரியத் தொடர்பு கொண்டு, ஆனால் ஆரியத்திற்கு அடிமைப்படாமல் வாழ்ந்து வந்த கால நிலையிலே தான் திருக்குறள் என்னும் இத் தமிழ்ப் பெருநூல் எழுவதாயிற்று. ஆரியர் கருத்துகளில் சிறந்தன உண்டேல் ஏற்றுக் கொண்டு, தனித்தமிழ்த் துறைகளை சிறிதும் விட்டுக் கொடாமல் வலியுறுத்திய தமிழ்ப் பெரியார்களுள்ளே தலைசிறந்த பெரியாரே திருவள்ளுவனார்.

இப்போது சங்க இலக்கியங்கள் என்று அழைக்கப்படும் நூல்கள் பலவற்றிலும் திருக்குறள் பாக்கள் மேற்கோளாகக் கையாளப்பட்டுள்ளன. இதுவும் குறளின் பழைமை யர்க்குத் தக்க சான்று.

எவ்வளவுக் கெவ்வளவு எதெது தங்கட்குத் தெரியாதோ, அவ்வளவுக்கவ்வளவு அவற்றைப் பற்றி தெரிந்தது போல் பாவித்து தெரியாததை எல்லாம் உளறி வைக்கும் அறியாமை இடைக்காலப் புலவர்களைப் பிடித்தாட்டிற்றே. அந்தப் பேதமை திருவள்ளு வரிடம் சிறிதும் கிடையாது. 

திருக்குறள் தொன்மை மிகுந்த தமிழ்ப் பண்பு வடிவான, ஆரியமயம் ஆகாத தொல்காப்பிய நெறிவழி நிற்கும் உயர்ந்த நூல் என்பதற்கு இதுவே தக்க சான்று.

நம் அருமைத் தமிழை அறியாத ஆண்டவன் ஒருவன் இருப்பானாகில் அந்த ஆண்டவன் நமக்குத் தேவையே இல்லை. பிற்காலப் புலவர்கள் ஆண்டவனைப் பற்றிக் கூறியுள்ள இழிந்த முறையோடு திருவள்ளுவர் கூறியுள்ள உயர்ந்த முறையை ஒப்பிட்டுப் பாருங்கள். திருவள்ளுவரின் சிறப்பு எளிதில் புலனாகும்.

திருக்குறளைப் படிப்பவர் யாராயினும் அவர் திருக்குறளைப் படிக்கும் முன்னர், ஆரிய நாகரிகம் கலவாத தமிழ் நாகரிகம் ஒன்று தமிழகத்தில் தலை நிமிர்ந்தோங்கித் தழைத்திருந்தது என்பதையும், திருக்குறள் அந்தத் தமிழ் நாகரிகத்தின் வழி வந்த உயர்தனிச் சிறப்பு நூல் என்பதையும் உணர்ந்து ஆக வேண்டும். இவற்றை உணராதவர் திருக்குறளைப் படித்துப் பயன் இல்லை. 

கா.அப்பாத்துரை



வடநாட்டில் முதன் முதலாக ஆரியத்திற்கு எதிர்ப்புத் தோன்றியது வங்காளத்தில் தான். அவ் வெதிர்ப்பின் தோற்றம்தான் பவுத்த மதமும், சமண மதமும். வங்காளிகளும் திராவிடர்களே. திராவிட நாட்டு மக்களாகிய நாம் தொடர்ந்து திராவிட கலாச்சாரத்துக்கு மறுமலர்ச்சியளிக்கப் பாடுபட்டு வருவோமானால் விரைவில் வடநாட்டிலுள்ள திராவிடர் களின் ஆரிய மோகமும் மாய்ந்து, பரந்ததோர் திராவிட நாட்டைக் காணலாம் என்று குறிப்பிட்டார்.




புலவர் குழந்தை




இராவண காவியம் ஆசிரியர் புலவர் குழந்தை அவர்கள், வள்ளுவரின் இன்பப் பாக்களில் (காமத்துப் பாக்களில்) கூறப்பட்டுள்ள குறள்களின் மேன்மைப்பற்றிச் சிறிது நேரம் பேசினார்.

சேலம் இராசிபுரத்திலிருந்து வெளிவரும் ‘திருக்குறள் ஆட்சியின்’ ஆசிரியர் திரு. அரங்கசாமி அவர்கள் நாடெங்கணும் திருக்குறள் கருத்துகள் பரப்பப்பட வேண்டிய அவசியத்தை எடுத்துக் கூறினார்.

பெரியார் அகமகிழ நடப்போம் ‡ கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்

குறளுக்குத் தற்போது வழங்கிவரும் உரைகள் யாவும் சாதாரண மக்களுக்குச் சிறிதும் பயன்படாததாக இருக்கிறது. நல்லதோர் உரையை உண்டாக்கிக் கொடுப்ப தற்கான முடிவு இம் மாநாட்டின்கண் ஏற்பட வேண்டும். சில காங்கிரஸ் அறிவிலிகள் பெரியார் வெறும் பெருமைக்காகவும், பதவிக்காகவும் பாடுபட்டு வருகிறார் என்று கூறி வருவது போல், நம்மால் ஏன் வேறு எந்த அறிவுள்ள மகனாலோ கூற இயலாது. திராவிடன் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்ற ஒரே கருத்தை உட்கொண்டு தான் பெரியார் அவர்கள் பெருந்தொண்டாற்றி வருகிறார். அவர் வாழ்நாளிலேயே அவர் அகமகிழ அவர் வழிப்படி நடந்து இன்பத் திராவிடத்தை உண்டாக்கித் தர வேண்டும். ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்று குறளையும் எடுத்தோதி கஷ்ட நஷ்டம் பாராமல் பெரியார் வழி பின்பற்றி நடக்க வேண்டும் என்று கூறினார்.

பெரியார் திருக்குறள் மாநாட்டை நடத்துவது ஏன்? -அறிஞர் அண்ணா


ஆண்டுக்கொருமுறை குறள் மாநாட்டைக் கூட்ட வேண்டும். குறளுக்கு நல்லதோர் உரை காண ஒரு குழுவை நியமித்து இன்றைய நடப்புக்கேற்ப ஒரு நல்லுரை உண்டாக்கித் தர ஒரு செயற்குழு திரு.வி.க. அவர்களைத் தலைவராக இருக்கவும், திருக்குறள் முனுசாமி அவர்களைச் செயலாளராகவும், தோழர்கள் நெடுஞ்செழியன், கா. அப்பாதுரை, புலவர் இலக்குவனார் ஆகியோர் அங்கத்தினர்களாகவும் கொண்டு இருக்க வேண்டும். அவர்களும் மேலும் சிலரையும் சேர்த்துக் கொள்ள அதிகாரம் அளித்தும் மூன்று தீர்மானங்களைப் பரேரேபிக்கும் முகத்தான்...

மக்கள் வாழ்வு நலிந்திருக்கக் கண்ட பெரியார் அவர்தம் வாழ்வை நலப்படுத்த நூற்கள் பல தேடிப் பார்த்த போது தான் கண்ட பாரதம், பாகவதம், பகவத் கீதை, இராமயணங்கள், வேதங்கள் உப நி­த்துகள் இவையாவும் பல கேடுகளைத் தம்மிடத்தே கொண்டு ஆரியப் பிரச்சாரத்தால், புரட்டுகள் வெளித்தோன்றாமல் இருந்து வருபவைகள். திராவிடர் வாழ்வுக்கு உண்மையில் பெரிதும் கேடு செய்து வருபவை இவைகளே என்று கண்டுதான் இதுகாறும் அவற்றிலுள்ள புரட்டுகளை எடுத்தோதி வந்து இன்று மக்களுக்கு அவற்றின் மீதுள்ள பற்றுதல் வெகுவாகக் குறைந்திருக்கும் இந்த வேளையில் திருக்குறள் என்ற ஒப்பற்ற நீதி நூலை மாநாடு கூட்டி திராவிடர்களுக்கு ‡ எல்லாத் தமிழர்களுக்கும் தருகிறார் தந்தை பெரியார். இனித் திராவிடன் ஒவ்வொருவன் கையிலும் குறள் எப்போதும் இருத்தல் வேண்டும். திராவிடன் கையில் குறள் இருப்பதை, பகவத் கீதை ஏந்தித் திரியும் பார்ப்பனர்கள் காண்பார்களாகின் பார்ப்பனியம் படுகுழியில் புதைக்கப்படப் போவது நிச்சயம் என்பதை உணர்ந்து நமக்கும் மேலாக திருக்குறளைப் போற்றிப் புகழ முற்படுவதோடு அல்லாமல் தம் அகம்பாவத்தையும் , மூட நம்பிக்கை களையும் கைவிட்டேயாக வேண்டும் என்ற தீர்மானத்துக்கு வந்து விடுவார்கள் என்றார்.

மேலும் அவர் குறிப்பிட்டதாவது:

பெரியார் இம்மாநாட்டின் மூலம் நல்லதோர் செயல் திட்டத்தைத் தருகிறார். பெரியார் கொடுத்த எத்திட்டத்தையும் இதுவரை கைவிட்டறியாத நாம், பெரியார் ஒரு நல்லுழவர் என்பதை நன்குணர்ந்துள்ள நல் பண்ணையாளர்களாகிய நாம் அவர்தம் முயற்சி வெற்றி பெற எல்லா வகையாலும் பாடுபடுவோம். திருக்குறளைத் துணைக் கொண்டு நம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் நம் வாழ்வைக் கெடுக்க வேண்டி ஆரியம் நம் பாதையில் வெட்டியுள்ள படு மோசப் படுகுழிகள் யாவும் நம் அறிவுக் கண்களுக்குத் தெற்றெனப் புலப்படும். கம்பருக்குத் திருவிழாக்கள் கொண்டாடும் புன் மதியாளர் காது செவிடுபடும்படி திருக்குறள் இனி ஓதப்படும். விரைவில் வெற்றி முரசு கொட்டிய நமது பெரும்படை, போர் பல நடத்தி நற்பயிற்சி பெற்றுள்ள நம் பெரும் படை திக்கெங்கணும் புறப்படும். வெற்றி கொண்டு பெரியாரின் பேரிதயம் மகிழச் செயலாற்றும் என்றார்.

பெரியார் பேருரை:

ஆரியத்தை ஒழிக்கும் ஒப்பற்ற ஆயுதம் திருக்குறளே!

சொற்பொழிவின் தொடக்கத்திலேயே, தான் எப்போதுமே தன் அறிவு ஒன்றையே ஆதாரமாகக் கொண்டு நடந்து வந்தவன் என்பதையும் அது ஒரு வேளை தவறாக முடியுமோ என்ற அச்சம் சில சமயங்கள் ஏற்பட்ட போதிலும், நாம் தொடர்ந்து உறுதியோடு அதையே ஆதாரமாகக் கொண்டு நடந்து வந்தமையையும் எடுத்துக் கூறி, அதையே காலையில் தலைவர் திரு.சக்ரவர்த்தி நயினார் அவர்கள் ஒப்புக் கொண்டமை, தான் நடந்து கொண்ட வகையே சாலச் சிறப்புடைத்து என்பதைத் தெரிந்து கொண்டதாகவும், மனிதன் ஒவ்வொருவனும் தன் வாழ்வுக்குத் தானே எஜமானன் என்பதை உள்ளபடி உணர்ந்து செயலாற்றி வருதலே நன்மை பயக்கத் தக்கது என்றும், தன்னறிவு தனக்கு காட்டிக் கொடுக்கும் வரை சற்று சங்கடம் ஏற்படினும் அதனால் கேடொன்றும் நேர்ந்து விடாதென்றும், இன்று திருக்குறளை தாம் புகழ்ந்து கூறுவதற்கும் தம்முடைய கருத்துகள் அதில் காணப்படுவதால்தானே ஒழிய, அது வள்ளுவரால் கூறப்பட்டது என்பதற்காகவோ அல்லது அதில் கூறப்பட்டுள்ளது யாவுமே பகுத்தறிவுக்கு ஏற்றது என்ற கருத்தினாலுமே அல்ல என்றும், அதில் தம் முன்னேற்றக் கருத்துக்கு ஒவ்வாதன இருப்பின் அவற்றை விலக்க தாம் எப்போதும் தயங்கப் போவதில்லை என்றும் தெரிவித்துக் கொண்டார்.

குறளும் சுயமரியாதையும்

மேலும், அவர் பேசுகையில், திருக்குறளின் மேன்மை நம் அருமை நண்பர் மாணிக்க நாயக்கர் காலத்திலேயே நமக்கு ஓர் அளவுக்குப் புலப்பட்டது என்றாலும், இன்றைய நாள் வரை அதைப்பற்றி அதிகம் பேசாமல் இருந்தமைக்குக் காரணம், நீண்ட நாள்களாகவே நம்மிடையே ஆரியத்தால் புகுத்தப்பட்டு நம் வாழ்வைக் கெடுத்துக் கொண்டு வரும் கடவுள், மதம், இவை சம்பந்தப்பட்ட மூட நம்பிக்கைகள், அறவே ஒழிக்கப்படும் வரை திருக்குறளை மக்களிடையே பரப்புவதால் பயனில்லை என்பதை தெளிவாக உணர்ந்ததன் காரணத்தினால்தான் என்றும் இன்று சுயமரியாதைப் பிரச்சாரத்தால் மூட நம்பிக்கைகளும், ஆரிய முறையும் பெருமளவுக்கு நீங்கி நாம் எடுத்துக் கூறும் சீர்திருத்தக் கருத்துகளை ஒப்புக்கொள்ளவும் அவற்றை மக்களிடையே பரப்பவும் போதுமான ஆதரவாளர்கள் ஏற்பட்டு விட்டனர். நமது பிரசாரம் வெற்றி பெற்றுவிட்டது. ஆரியம் அழியும் காலம் மிக நெருக்கத்திற்கு வந்து விட்டது என்பதை உள்ளபடி அறிந்த பிறகே அதைப் பரப்பத் துணிவு கொண்டு மாநாட்டைக் கூட்டு முயற்சியில் ஈடுபட்டதாகவும் குறிப்பிட்டார்.

குறளைக் கொண்டு வாழ்க்கையை நிர்ணயிப்போம்!

மேலும் பேசுகையில், சமுதாயத்தின் ஒழுக்கமும், நாணயமும் மிகவும் கெட்டுவிட்டதென்றும், மனிதனை மனிதன் வஞ்சித்து வாழும் கொடுமை மிகமிக மலிந்துவிட்ட தென்றும், இத்தகைய ஒழுக்கக் கேட்டிற்குக் காரணமான கடவுளும், மதமும் மாற்றப்பட்டாக வேண்டுமென்றும் தெரிவித்துக் கொண்டதோடு, காந்தியார் வணங்கிய கடவுளும், போற்றிய அகிம்சையும், சத்தியமும், மதமும் அவருக்கே பயன்படாது போய் விட்டமை காரணமாகவேணும் இவ்வுண்மை மக்களுக்குப் புலப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும் குறளை யார் எழுதியது, அவர் காலமென்ன என்ற விசாரத்தை யயல்லாம் ஆராய்ச்சி வல்லுநர்களான சரித்திரப் பேராசிரியர்களுக்கே விட்டு விட்டோம். குறளில் கூறப்பட்டுள்ள கருத்துகளை மட்டுமே கவலையோடு ஆராய்ந்து பார்த்து அவற்றின் படி நம் வாழ்க்கையை செப்பனிட்டுக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துக் கொண்டார்.

உருவக் கடவுளைக் குறிப்பிட்டாரா வள்ளுவர்?

‘கடவுள் வாழ்த்தி’ல் என்ன கூறப்பட்டுள்ளது என்று எடுத்துக் கூறுமுகத்தான் வள்ளுவர் எங்கும் உருவக் கடவுளைப் பற்றிக் குறிக்கவே இல்லை என்றும், அவர் கடவுள் வாழ்த்து என்ற அதிகாரத்தில் மனிதன் இன்னின்ன உயர்வான குணங்களைப் பெறுதல் வேண்டும் என்று மட்டுமே குறிப்பிடுகிறார் என்றும், உயர்வான மனிதத் தன்மை எதுவென்பதே அவ்வதிகாரத்தில் கூறப்பட்டிருக்கிற தென்பதையும் தெளிவாக எடுத்துக் கூறினார்.

அடுத்த அதிகாரமாகிய ‘வான் சிறப்பை’ப் பற்றிப் பேசுகையில், மக்கள் ஒழுக்க மாயிருந்தால் மழை பெய்யும் என்ற இன்றைய மதவாதிகளின் கருத்தைக் கண்டித்து வள்ளுவர் மழை பெய்தால் தான் மக்கள் கஷ்டமின்றி வாழ்தல் கூடும். கஷ்டமின்றி வாழ்தல் கூடுமானால்தான் மக்களிடையே ஒழுக்கம் நிலவ முடியும் என்று குறிப்பிட்டி ருப்பதை எடுத்துக் காட்டினார்.

திருவள்ளுவர் பெண்களைப் பற்றி ‘பெண் வழிச் சேரல்’ என்ற பகுதியில் கூறியி ருப்பது சிலரின் கண்டனத்திற்கு ஆளாகியிருப்பதைப் பற்றிக் குறிப்பிட்டு, திருவள்ளுவர் பெண்களை அய்ந்து வகையாக அதாவது தாய் தகப்பன் பாதுகாப்பில் கல்யாண மாகாமல் கன்னிகளாக இருந்துவரும் பெண்கள், கல்யாணமாகி இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டு வாழும் பெண்கள், விபச்சாரத்தைத் தொழிலாகக் கொண்டு வாழ்ந்துவரும் விலைமகள், கல்யாணம் செய்து கொள்ளாமல் தான் தோன்றித்தனமாக சுதந்தரமாக வாழ்ந்து வரும் பெண் என்று பிரித்தே பேசியிருக்கிறார் என்றும் பெண் வழிச்சேரல் என்ற பகுதியில் குறிப்பிடப் பட்டிருக்கும் பெண்டிர் கடைசியாகக் கூறப்பட்ட சுதந்தரர்கள் என்றும் அவர் வழி சேர்ந்த ஆடவர்களுக்கு கேடு சம்பவிக்கும் என்றுதான் திருவள்ளுவர் கூறியிருக்கிறாரே ஒழிய பெண்களைப் பற்றி இழுக்காக ஒரு வார்த்தை கூட திருவள்ளுவர் பேசவில்லை என்றும் குறிப்பிட்டார்.

திருவள்ளுவர் பொதுவுடைமைக்காரர்

மேலும் அவர் திருவள்ளுவர் காலம் பொது உடைமைக்காலமோ, சமதர்மக் காலமோ அல்ல. ஆனால், வள்ளுவர் சிறந்த பொது உடைமைக்காரராகவே விளங்குகிறார். அதனால்தான் நம் போற்றுதலுக்கு ஆளாகிறார் என்று குறிப்பிட்டு விட்டு இத்தகைய தனிச் சிறப்பு வாய்ந்த திருக்குறளை அனைவரும் போற்றி அதன்படி நடந்து நல்வாழ்வு வாழ வேண்டுமென்றும், நாட்டின் மூலை முடுக்குகள் தோறும்கூட திருவள்ளுவர் கழகங்கள் தோற்றுவிக்கப்பட்டு, திருக்குறள் கருத்துகள் பரப்பப்பட வேண்டுமென்றும், ஆண்டுதோறும் இது போன்ற வள்ளுவர் மாகாண மாநாடுகளும், ஒவ்வொரு ஜில்லாவிலும் தனி மாநாடும் கூட்டப்பட வேண்டும். குறள் ஆரியத்தை ஒழிக்க ஒப்பற்ற நல்லாயுதம் என்று திருக்குறள் பிரச்சாரக் குழு ஒன்று அமைக்கப்பட்டு, விரைவில் செயலாற்றத் தொடங்கும். அதற்கான ஆதரவைப் பொது மக்கள் தந்துதவ வேண்டும் என்று கூறி மாநாட்டில் கலந்து கொண்ட புலவர்களுக்கும், அறிஞர்களுக்கும், பொதுமக்களுக்கும் தம் நன்றியறிதலை தெரிவித்துக் கொண்டார்.

அண்ணாவின் நாடகம்

16.1.1949 இரவு 10 மணிக்குத் தோழர் அண்ணாதுரை அவர்கள் குழுவினரால் ‘சந்திரமோகன்’ என்கிற நாடகம் வள்ளுவர் மாநாட்டுப் பந்தலில் இனிது நடிக்கப் பெற்றது. நாடகத்தைக் காண வேண்டி மக்கள் 7.30 மணி முதற்கொண்டே வந்து குழும ஆரம்பித்து விட்டனர். 9 மணிக்குள்ளாகவே பந்தல் நிறைந்துவிட்டது. இதுவரை இம் மாதிரி பெருந்திரளான மக்களிடையே சென்னையில் நாடகம் நடைபெற்றிருக்க முடியாது என்பது வெளிப்படை. நாடகம் சுமார் 2 மணிக்கு முடிந்தது.

பெரியார் பாராட்டு

இதுவரை, இந்நாட்டில் பெருமையோடு நிலவி வருகின்ற அரசர்கள் யாவரும், தமிழ்நாட்டு மூவேந்தர் உள்பட யாவருமே சிவாஜியைப் போன்றே ஆரியத்துக்கு அடிபணிந்தே, ஆரியக் கொள்கைகளை ஆதரித்து அவற்றை பிரச்சாரம் செய்தே தம் ஆட்சியை நடத்தி வந்திருக்கின்றனர். 

இது போன்ற சீர்திருத்தக் கருத்துகளை உண்மையான சரித்திர ஆதாரங்களோடு எடுத்துக்காட்டப்படும் நடிப்புகளைப் பெரிதும் ஆதரிக்க வேண்டுமென்றும் புராணப் புரட்டுகளை மறைத்துக் காட்டும், புராண சம்பந்தமான நடிப்புகளை ஆதரிக்கக் கூடாதென்றும் பெரியார் தெரிவித்துக் கொண்டார்.

பிறகு பேசிய அண்ணாதுரை அவர்கள்,

நாடகத்தில் தம்முடன் சேர்ந்து நடித்த மற்ற தோழர்களுக்கும், நாடகத்திற்கு வந்து கவுரவித்த பொதுமக்களுக்கும் நன்றி கூறினார். தம்மால் எழுதப் பெற்று நடிக்கப்பட்ட ‘சந்திரமோகன்’ என்கின்ற நாடகத்தில் காணப்படும் நிகழ்ச்சிகள் யாவும் சரித்திர ஆதாரம் கொண்டதே என்பதற்கு ஆதாரமாக 15.1.1949 இண்டியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் பண்டிதர் நீலகண்ட சாஸ்திரியார் அவர்கள் எழுதியுள்ள கட்டுரையில் சிவாஜி சூத்திரன் என்ற காரணத்தால் முடி சூடத் தகுதியற்றவன் என்று கூறப்பட்டது, பிறகு காசி காகப்பட்டர் அவர்களால் ஓமத்தின் மூலமும், பிராமணர்களுக்கு சமராதனை செய்யப்பட்டதன் மூலமும் சுத்தியடையச் செய்து சத்திரியனாக்கப்பட்டு முடிசூட்டப் பெற்றான் என்பது, இந்தியாவின் பல பாகங்களில் இருந்தும் ஒரு லட்சம் பார்ப்பனர்கள் தம் மனைவி மக்களோடு சிவாஜியின் நாட்டை வந்தடைந்து நான்கு மாதங்கள் உண்டு களித்தது ஆகியன கூறப்பட்டிருப்பதை எடுத்துக் காட்டி, இந் நாடகத்தைத் தடை செய்ய நினைக்கும் இன்றைய மாகாண அமைச்சர்கள் இதைக் கண்டேனும் தெளிவு பெற வேண்டும் என்று எடுத்துக் கூறினார்.

பிறகு நடிகர் டி.கே.சண்முகம் அவர்கள் உரையாற்றினார்.

இறுதியாக தோழர் க. அன்பழகன் நன்றி கூறினார். மாநாடு நள்ளிரவு 2.30 மணிக்கு முடிவுற்றது.

Seshadri Sridharan

unread,
Dec 29, 2016, 4:26:21 PM12/29/16
to mintamil
2016-12-29 10:15 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com
//அன்றைய அரசியல் சூழ்நிலை....
தமிழ்நாடு என்ற மாநிலம் உருவாகிய பின்னர்--   
இராஜாஜி கட்சியில் மதிப்பிழந்து விலகிய பின்னர்-- 
குலக்கல்வி திட்டம் குழி தோண்டி புதைக்கப்பட்ட பின்னர் --
பச்சைத் தமிழர், அவரால் தமிழகத்திற்கு நன்மை என்று கருதிய காமாராஜர் ஆட்சிக்கு வந்த பின்னர் --
காங்கிரசை எதிர்ப்பதில் பெரியார் அக்கறை காட்டவில்லை//

.
 எதிர்ப்பதென்ன!! தேர்தல் பரப்புரையே செய்தார் பெரியார் காமராசுக்கு மட்டுமல்ல  TTK, R  வெங்கடராமன் போன்றோரையும் ஆதரித்து. 


ஒரு இலகியப்படைப்பென்றால் அதைப் படிப்பவர்  யாரும்  விமர்சிக்கலாம்.

1949 திருவள்ளுவர் குறள் மாநாடு நடத்தியவர் பெரியார். 
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருவள்ளுவர் குறள் மாநாடு என்பது 1949 ஆம் ஆண்டு சனவரி 15-16 ஆம் திகதிகளில் பெரியார் தலைமையில் தமிழ்நாட்டில் ஒழுங்குசெய்யப்பட்டு திருக்குறளை ஆய்ந்த ஒரு தமிழ் மாநாடு ஆகும். இந்த மாநாட்டில் அன்றைய அறிஞர்கள், புலவர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் பலரும் கலந்து கொண்டனர். 

இந்த மாநாட்டுக்கான அழைப்பில், பெரியார் பின்வருமாறு கூறுகிறார்: "குறள் தத்துவத்தை விளக்கிடவென்றே நடத்தப்படும் இம் மாநாட்டில் நாம் பங்கு கொண்டு தத்துவங்களை உணர்ந்து, தமிழ்ப் பாமர மக்கள் இடையில் அந்தத் தத்துவங்கள் புகும்படி செய்ய வேண்டியது நம் கடமையாகும்.


அடுத்து ஒரு தனி பதிவாகவும் வரம் 


தேமொழி

unread,
Dec 29, 2016, 4:48:54 PM12/29/16
to மின்தமிழ்


On Thursday, December 29, 2016 at 1:26:21 PM UTC-8, ஆரோகவங்கன். wrote:
2016-12-29 10:15 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com
//அன்றைய அரசியல் சூழ்நிலை....
தமிழ்நாடு என்ற மாநிலம் உருவாகிய பின்னர்--   
இராஜாஜி கட்சியில் மதிப்பிழந்து விலகிய பின்னர்-- 
குலக்கல்வி திட்டம் குழி தோண்டி புதைக்கப்பட்ட பின்னர் --
பச்சைத் தமிழர், அவரால் தமிழகத்திற்கு நன்மை என்று கருதிய காமாராஜர் ஆட்சிக்கு வந்த பின்னர் --
காங்கிரசை எதிர்ப்பதில் பெரியார் அக்கறை காட்டவில்லை//

.
 எதிர்ப்பதென்ன!! தேர்தல் பரப்புரையே செய்தார் பெரியார் காமராசுக்கு மட்டுமல்ல  TTK, R  வெங்கடராமன் போன்றோரையும் ஆதரித்து. 

நல்லார்  ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை 

:)

Seshadri Sridharan

unread,
Dec 30, 2016, 1:59:38 AM12/30/16
to mintamil, ipohs...@gmail.com, வேந்தன் அரசு, doraisu...@gmail.com, ras...@gmail.com, jalas...@gmail.com, muku...@gmail.com, krishna...@gmail.com, rnka...@gmail.com, anbuja...@gmail.com, திருத்தம் பொன்.சரவணன், rajis...@gmail.com, Banukumar Rajendran, yesura...@gmail.com, Shrinivasan T, mani muthu, Pandiyaraja Paramasivam, Senguttuvan K, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, Malarvizhi Mangay, Innamburan S.Soundararajan, Kalairajan Krishnan, Krishnamachary Rangaswamy, bala subramani, V. Dhivakar, N D Logasundaram, Megala Ramamourty, பெருமாள் தேவன், coral shree, Geetha Sambasivam, Satish Kumar Dogra, N. Kannan, rajam ramamurti, aravindan....@gmail.com, satha sivam, rathinam.c...@gmail.com, tamil...@gmail.com, sneelak...@gmail.com, vet...@gmail.com, ts.m...@gmail.com, நா. கணேசன், g.sa...@gmail.com, Nagarajan Vadivel, praman...@gmail.com, Subashini Tremmel
2016-12-30 3:18 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
On Thursday, December 29, 2016 at 1:26:21 PM UTC-8, ஆரோகவங்கன். wrote:
2016-12-29 10:15 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com
//அன்றைய அரசியல் சூழ்நிலை....
தமிழ்நாடு என்ற மாநிலம் உருவாகிய பின்னர்--   
இராஜாஜி கட்சியில் மதிப்பிழந்து விலகிய பின்னர்-- 
குலக்கல்வி திட்டம் குழி தோண்டி புதைக்கப்பட்ட பின்னர் --
பச்சைத் தமிழர், அவரால் தமிழகத்திற்கு நன்மை என்று கருதிய காமாராஜர் ஆட்சிக்கு வந்த பின்னர் --
காங்கிரசை எதிர்ப்பதில் பெரியார் அக்கறை காட்டவில்லை//

 எதிர்ப்பதென்ன!! தேர்தல் பரப்புரையே செய்தார் பெரியார் காமராசுக்கு மட்டுமல்ல  TTK, R  வெங்கடராமன் போன்றோரையும் ஆதரித்து. 
நல்லார்  ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை 

அவர் காமராசர் பொருட்டு பிறருக்கும் செய்தார் என்கிறீர். ஆனால் 1952 தேர்தலில்  நாம் தமிழர் கட்சி அணியும் கம்யூனித்துகளும் பெற்ற பேரளவு வெற்றி அவரது எலும்பில் குளிர்பாய்ச்சியது. தமிழர் ஆட்சி பெற்றால் அது தெலுங்கர் நலனுக்கு கேடு என்று அவர் எண்ணினார். அதை தடுக்க சரியான மாற்று காங்கிரசை ஆதரிப்பது தான் அதுவே பாதுகாப்பு என்பது அவரது தீர்மானம்.  

சிந்தனையில் எப்போதும் தெலுங்கராக, தெலுங்கர் ஏற்றமே தன் நோக்காக கொண்டு இயங்கியவர் ஈரோடை திராவிட இராமசாமி. அவர் தமிழ், தமிழர், தமிழ்ப் பண்பாட்டை இகழந்தது தெலுங்கருக்கே உரிய தமிழர் பெருத்து நோக்கில் தான்.   


ஆரோகவங்கன்  

Seshadri Sridharan

unread,
Dec 30, 2016, 2:00:10 AM12/30/16
to mintamil, ipohs...@gmail.com, வேந்தன் அரசு, doraisu...@gmail.com, ras...@gmail.com, jalas...@gmail.com, muku...@gmail.com, krishna...@gmail.com, rnka...@gmail.com, anbuja...@gmail.com, திருத்தம் பொன்.சரவணன், rajis...@gmail.com, Banukumar Rajendran, yesura...@gmail.com, Shrinivasan T, mani muthu, Pandiyaraja Paramasivam, Senguttuvan K, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, Malarvizhi Mangay, Innamburan S.Soundararajan, Kalairajan Krishnan, Krishnamachary Rangaswamy, bala subramani, V. Dhivakar, N D Logasundaram, Megala Ramamourty, பெருமாள் தேவன், coral shree, Geetha Sambasivam, Satish Kumar Dogra, N. Kannan, rajam ramamurti, aravindan....@gmail.com, satha sivam, rathinam.c...@gmail.com, tamil...@gmail.com, sneelak...@gmail.com, vet...@gmail.com, ts.m...@gmail.com, நா. கணேசன், g.sa...@gmail.com, Nagarajan Vadivel, praman...@gmail.com, Subashini Tremmel
சிந்தனையில் எப்போதும் தெலுங்கராக, தெலுங்கர் ஏற்றமே தன் நோக்காக கொண்டு இயங்கியவர் ஈரோடை திராவிட இராமசாமி. அவர் தமிழ், தமிழர், தமிழ்ப் பண்பாட்டை இகழந்தது தெலுங்கருக்கே உரிய தமிழர் பற்றிய நோக்கில் தான்.   


ஆரோகவங்கன்  

தேமொழி

unread,
Dec 30, 2016, 2:32:18 AM12/30/16
to மின்தமிழ்
தன்னைத் தேடி வந்த ஆட்சி பொறுப்பேற்கும் பதவிகளை ஏற்றுக் கொண்டு  தெலுங்கரை முன்னேற்ற நினைக்காமல்,  

தனது மாணவனாக உருவாக்கிய அண்ணாதுரையின் பின்புலத்தையும் கவனிக்காமல் அவரைத் தோற்கடிக்க நினைத்து, அவருக்கு எதிராக மேடை தோறும் பிரச்சாரத்தில் ஈடுபட்டது  என ..

தனது நோக்கத்திற்கு  முரணாகச் செயல்பட்டு கொக்குதலையில் வெண்ணையை வைத்து அதனைப் பிடிக்க நினைத்தார் என்பதில் ஏரணம் கொஞ்சமும்  பொருந்தவில்லை.  


..... தேமொழி




ஆரோகவங்கன்  

Seshadri Sridharan

unread,
Dec 30, 2016, 12:39:07 PM12/30/16
to mintamil
2016-12-30 13:02 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:

அவர் காமராசர் பொருட்டு பிறருக்கும் செய்தார் என்கிறீர். ஆனால் 1952 தேர்தலில்  நாம் தமிழர் கட்சி அணியும் கம்யூனித்துகளும் பெற்ற பேரளவு வெற்றி அவரது எலும்பில் குளிர்பாய்ச்சியது. தமிழர் ஆட்சி பெற்றால் அது தெலுங்கர் நலனுக்கு கேடு என்று அவர் எண்ணினார். அதை தடுக்க சரியான மாற்று காங்கிரசை ஆதரிப்பது தான் அதுவே பாதுகாப்பு என்பது அவரது தீர்மானம்.  

சிந்தனையில் எப்போதும் தெலுங்கராக, தெலுங்கர் ஏற்றமே தன் நோக்காக கொண்டு இயங்கியவர் ஈரோடை திராவிட இராமசாமி. அவர் தமிழ், தமிழர், தமிழ்ப் பண்பாட்டை இகழந்தது தெலுங்கருக்கே உரிய தமிழர் பெருத்து நோக்கில் தான்.   

சிந்தனையில் எப்போதும் தெலுங்கராக, தெலுங்கர் ஏற்றமே தன் நோக்காக கொண்டு இயங்கியவர்

தன்னைத் தேடி வந்த ஆட்சி பொறுப்பேற்கும் பதவிகளை ஏற்றுக் கொண்டு  தெலுங்கரை முன்னேற்ற நினைக்காமல்,  தனது மாணவனாக உருவாக்கிய அண்ணாதுரையின் பின்புலத்தையும் கவனிக்காமல் அவரைத் தோற்கடிக்க நினைத்து, அவருக்கு எதிராக மேடை தோறும் பிரச்சாரத்தில் ஈடுபட்டது  என ..
தனது நோக்கத்திற்கு  முரணாகச் செயல்பட்டு கொக்குதலையில் வெண்ணையை வைத்து அதனைப் பிடிக்க நினைத்தார் என்பதில் ஏரணம் கொஞ்சமும்  பொருந்தவில்லை.  - தேமொழி


அண்ணாதுரை தன் கட்சியை உடைத்தவர் தனது தனிப்பட்ட வாழ்வை தெருவிற்கு கொண்டுவந்தவர் என்ற வெறுப்பு, காங்கிரசை வலுப்படுத்தி தெலுங்கர் நலன் காக்க வேண்டிய தன முயற்சிக்கு தடையாக காங்கிரசு ஓட்டைப் பிரிக்கும் வகையில்  திமுகவை தேர்தலில் போட்டியிடவைத்தனர் என்ற கோவம் பெரியார் அண்ணாவை எதிரியாகப் பார்க்க வைத்தது.

ஆரோகவங்கன்   

மாயோன்

unread,
Jan 2, 2017, 8:04:12 AM1/2/17
to mintamil
பெரியார் திருக்குறளை ஆதரித்தாரா? 
பழித்தாரா?

தமிழர்களிடம் தொன்று தொட்டு திருக்குறளை போற்றும் மரபு இருந்து வந்துள்ளது.
"அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறிந்த குறள்"- என்று ஒளவையாரும்,

"வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு" என்று பாரதியாரும்,

"வள்ளுவனைப் பெற்ற தாற் பெற்றதே புகழ் வையகமே" என்று பாரதி தாசனும் பாடியுள்ளனர்.

திருக்குறள் வீ.முனுசாமி என்பவர் 1935இல் திருச்சி மலைக்கோட்டை நூற்றுக்கால் மண்டபத்தில் திருக்குறள் பரப்புரையை மேற்கொண்டார். 1941இல் முதன்முதலாக சேலத்தில் திருக்குறள் மாநாட்டையும் அவர் தான் கூட்டினார். உண்மைநிலை இவ்வாறு இருக்க பெரியார் வந்த பிறகு தான் திருக்குறள் பரப்புரையும், மாநாடும் நடத்தப்பட்டதைப் போல கதை சொல்லப்படுகிறது.

திருக்குறள் மீது எப்போதும் காழ்ப்புணர்ச்சியோடு கருத்து மாறுபாடு கொண்டவர் பெரியார். சில குறள்களில் தனக்கு உடன்பாடு இருப்பதைப் போல காட்டிக் கொள்வார். ஒரு கால கட்டத்தில் அதன் அடிப்படை கருத்து 'ஆரிய எதிர்ப்பு' என்பார். மற்றுமொரு கால கட்டத்தில் அதன் அடிப்படை கருத்து 'ஆரிய ஆதரவு' என்பார். தமிழை எந்தளவுக்குப் பழித்தாரோ அந்த அளவுக்கு திருக்குறளை பழிக்கவும் தயங்கியதில்லை. 

இவர் 1949இல் சென்னையில் திருக்குறள் மாநாடு நடத்தியதை பெருமை பொங்க பேசுபவர்கள் மறு ஆண்டே திருக்குறளை மலத்தோடு ஒப்பிட்டு எழுதியதைக் கண்டு சினம் கொள்ள மாட்டார்கள்.

அண்ணாவின் ஆட்சியில் உலகத்தமிழ் மாநாடு நடக்கவிருந்த நேரத்தில் (1968) "தமிழும் தமிழரும்" நூல் பெரியாரால் வெளியிடப்பட்டது. அதில் திருவள்ளுவர், தொல்காப்பியர், கம்பர் ஆகிய மூவரும் கடுஞ்சொற்ளால் ஏசப்பட்டனர். இம் மூவர்களும் சாதியையும், சாதித் தொழிலையும் ஏற்றுக் கொண்டவர்களே ஆவார்கள் என்றார்.

பெரியார் கூறுகிறார்: திருவள்ளுவன் அக்காலத்திற்கு ஏற்ற வகையில் ஆரிய கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் அளவில் பகுத்தறிவைப் பற்றி கவலைப்படாமல் நீதி கூறும் முறையில் தனது மத உணர்ச்சியோடு கூறிச் சென்றார்."

திருக்குறள் மீது பெரியாரின் பார்வை என்பது எப்போதும் முன்னுக்குப் பின் முரண்பாடு கொண்டவை என்பதற்கு கீழே கண்ட அவரது முந்தைய பதிவுகளே அவரைத் தோலுரிக்கும்.

14.3.1948 மயிலாப்பூர் திருவள்ளுவர் கழகம் சார்பில் நடைபெற்ற திருவள்ளுவர் மாநாட்டில், "திருக்குறளில் எத்தகைய பகுத்தறிவுக்கு புறம்பான ஆபாசக் கருத்துகளுக்கும் அதில் இடமில்லை என்று கூறியதோடு, திருக்குறள் ஆரிய தர்மத்தை மனு தர்மத்தை அடியோடு கண்டிப்பதற்காகவே ஏற்பட்ட நூல் என்பதை நீங்கள் உணர வேண்டும்" 

ஈரோட்டில் 23,24.10.1948இல் நடைபெற்ற திராவிடர் கழக 19வது மாநாட்டில், "குறள் ஹிந்து மதக் கண்டன புத்தகம் என்பதையும், அது சர்வ மதத்திலுள்ள சத்துக்களை எல்லாம் சேர்த்து எழுதப்பட்டுள்ள மனித தர்ம நூல் என்பதையும் எல்லோரும் உணர வேண்டும்" என்றும் கூறுகிறார்.

15.1.1949 சென்னையில் திராவிடர் கழகம் சார்பில் திருக்குறள் மாநாடு நடத்தப்பட்டது. அதில், "குறள் ஆரியத்தை ஒழிக்க ஒப்பற்ற நல்லாயுதம்" என்றும் பேசினார்.

விவேகானந்தன், இனியன் சம்பத், கல்பனா தாசன் ஆகிய மூன்று பேர் இணைந்து எழுதிய நூலான "ஈ.வெ.கி.சம்பத்தும் திராவிட இயக்கமும்" நூலில் பின்வருமாறு தெரிலிக்கப்பட்டுள்ளது. 

"1949 பொங்கல் திருநாளையொட்டி சென்னையில் திருக்குறள் மாநாட்டைப் பெரியார் நடத்தினார். இதற்கு முன்பெல்லாம் அவர் மொத்தத்தில் புலவர்களே மோசம், தமிழ் இலக்கியமே குப்பை, தமிழே காட்டுமிராண்டி மொழி என்றெல்லாம் கருத்துக் கூறியதால் தமிழ்ப்புலவர்கள் மத்தியில் கடும் கோபமும் எதிர்ப்பும் ஏற்பட்டன.

அண்ணா, சம்பத், நெடுஞ்செழியன் போன்றவர்கள் பெரியாரிடம் "புராணங்களை எதிர்க்கிற வேகத்தில் திருக்குறள், சிலப்பதிகாரம் போன்றவற்றையும் சேர்த்துத் தாக்கிடுவது முறையல்ல. தமிழுக்கும் தமிழ் இலக்கியங்களுக்கும் நாமே பாதுகாப்பு. குறள் உலகப் பொதுமறை என்பதை நாம் உணர்த்த வேண்டும்" என்றெல்லாம் சில ஆண்டுகளுக்கு முன்பே ஒதிய பிறகு தாமதித்தேனும் பலன் ஏற்பட்டது. இப்போதூ பெரியார் தமிழ் இலக்கியங்களையும், புலவர்களையும் தாக்குவதை நிறுத்திக் கொண்டார்."
(பக். 169)

மேற்கண்ட செய்தியின் படி திருக்குறள் மாநாடு அண்ணா, ஈ.வெ.கி.சம்பத், நெடுஞ்செழியன் ஆகியோரின் நிர்பந்தத்தின்படி நடத்தப்பட்டுள்ளது. திருக்குறளுக்கு எதிரான பெரியாரிடமே சில ஆண்டுகளாக அதுபற்றி நல்லவிதமாக ஓதி வந்தபடியால் வேறு வழியின்றி திருக்குறள் மாநாடு நடத்த பெரியாரும் ஒப்புக் கொண்டார் என்பதும் விளங்கும். 

1950இல் மீண்டும் பெரியார் என்ற வேதாளம் முருங்கை மரம் ஏறியது. அவர் கூறுகிறார்: "வள்ளுவர் குறளையும் அந்தப்படியே அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன். எல்லாவற்றையும் குறை சொல்லும் போது பலர் என்னிடம் எல்லாம் போய் விட்டால் நமக்கு எது தான் நூல் என்று கேட்டார்கள். நான் இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது. அதை எடுத்து விடு என்று கூறினால் அந்த இடத்தில் என்ன வைப்பது என்றா கேட்பது என்று பதில் கூறினேன். (விடுதலை 1.6.1950)

பெரியாருக்கு சாவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு வரையிலும் திருக்குறளின் மேல் நல்லெண்ணம் பிறக்க வில்லை. 

27.12.1972இல் 'கலைமகள்' இதழுக்கு அளித்த பேட்டியில் கூறுகிறார்: 
"குறளை எடுத்துக்குங்க. நான் மட்டும் தான் குறளை கண்டிக்கிறேன்.... நான் குறள் மாநாடு நடத்தியதாலே சிலபேர் என்னைக் கண்டிச்சாங்க. கலைஞர் கூட அதை ஒண்ணையாவது விட்டுவிடக் கூடாதான்னு கேட்டாரு. குன்றக்குடி அடிகளாரும் கேட்டுக்கிட்டாரு. இரண்டாயிரம் வருடத்துக்கு முந்தியது குறள். அதை அப்படியே இப்பவும் நாம் ஏத்துக்கணும்னா?"

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு என்று கலகக்குரல் எழுப்பியவர் திருவள்ளுவர். அவர் எழுதிய திருக்குறள் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போர்க்களத்தில் இன்றும் தேவைப்படுகிறது என்பதை பெரியாருக்கும், பெரியாரைப் போற்றும் அடிப்பொடிகளுக்கும் ஓங்கி உரைத்திடுவோம்!
 

30 டிசம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 9:01 அன்று, Seshadri Sridharan <ssesh...@gmail.com> எழுதியது:

--

Innamburan S.Soundararajan

unread,
Jan 2, 2017, 8:37:33 AM1/2/17
to mintamil
திருவள்ளுவரை ஒரு அரசியல் நிழல் மனிதனாக, திருக்குறலை ஒரு அரசியல் பிரச்சாரகருவியாக துஷ்பிரயோகம் செய்யும் பண்பு திராவிடக்கட்சிகளின் ஆயுதம்.
இன்னம்பூரான்

Jaisankar Jaganathan

unread,
Jan 2, 2017, 9:09:36 AM1/2/17
to mint...@googlegroups.com
பெரியாரின் புரிதல்கள் இழை பெரியாரை இகழவே ஆரம்பிக்கப்பட்டது போல் இருக்கிறது. எதுவா இருந்தாலும் படிக்க நான் ரெடி. 

Innamburan S.Soundararajan

unread,
Jan 2, 2017, 11:11:14 PM1/2/17
to mintamil

ஒரு விளக்கம் தருகிறேன், திரு ஜயசங்கர். எதுவானாலும் படிக்க நீங்கள் ரெடியாக இருப்பதால், தான், இந்த விளக்கம். தலைவர்கள் யாவருமே விமர்சிக்கப்படுவார்கள். 
தற்காலம் காந்திஜியை இகழும் பதிவுகளும் வருகின்றன. பெரியாரை நேரில் சந்தித்து அவரை சிறிதளவு அறிந்த நான், அவருடைய சொற்பொழிவுகளையும், எழுத்துக்களையும் அந்தந்த நாட்களில் ஆர்வத்துடன் படித்தவன். அவருடைய நெருங்கிய நண்பரும், அரசியல் எதிர் துருவமான திரு.வி.க. அவர்களின் விசிறி. அவருடைய நெருங்கிய நண்பரும், அரசியல் எதிர் துருவமான ராஜாஜி அவர்களின் சீடன். ஈ.வே.ரா. அவர்கள் சர்ச்சைக்கு உரிய வாறு, சமூக முன்னேற்றத்துக்கும், சம்பிரதாய விலக்கலுக்கும் பணி செய்திருந்தாலும், விடுதலை நாளை துக்க நாளாக கொண்டாடுவது, பிராமணர்களின் சிகை அறுப்பது, பூணூலை அறுப்பது, பிள்ளையார் சிலையை உடைப்பது, ராமர் படத்தின் மீது செருப்படி செய்வது போன்ற கைங்கர்யங்களை துவக்கி வைத்தவர். அவருடைய சீடர்களே ஒட்டு மொத்தமாக அவரை தள்ளுபடி செய்து, 'கடவுளை நம்புவன் முட்டாள்' என்ற அவருடைய வைரவரியை பக்தியுடன் வரித்துக்கொண்டு மண்சோறு தின்பதும், மொட்டை அடித்துக்கொள்வதுமாகவும், சாதி மத பேதங்களுக்கு உரம் இட்டு வளர்த்து அரசியல் செய்வதின் மணிவிழா நெருங்கும் காலகட்டத்தில், அவரை புரியவா வைக்கமுடியும்.? சிரிப்பு தான் வருகிறது. அவர் முன்னாலேயே, அவருடைய சீடர்களால் புடைக்கப்பட்ட நான் அவரது நற்செயல்களை பாராட்டுகிறேன். 










இன்னம்பூரான்

On Mon, Jan 2, 2017 at 7:39 PM, Jaisankar Jaganathan <jaisa...@gmail.com> wrote:
பெரியாரின் புரிதல்கள் இழை பெரியாரை இகழவே ஆரம்பிக்கப்பட்டது போல் இருக்கிறது. எதுவா இருந்தாலும் படிக்க நான் ரெடி. 

-- 

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jan 3, 2017, 2:21:54 AM1/3/17
to mintamil

வணக்கம்.
காட்டுமிராண்டி களாய் வாழ்ந்த தமிழரை மீட்க வேண்டிக் காசு வாங்கிக் கொண்டு மேடை ஏறித் திட்டினார், காசு கொடுப்பவர் வீட்டிற்குச் சென்று சாப்பிட்டார், காசு கொடுப்பவர் வீட்டிற்குச் சென்று தங்கினார் பெரியார்.
இதை பேரறிஞரும் பின்பற்றினார், அவருக்குப்  பின்னர் கலைஞர் என இன்றைய கழக அரசியல் காசுக்கு அடிமையானதற்குக் காரணம் பெரியார்.

தமிழர் இன்றும் காட்டுமிராண்டி களாய்த் தான் வாழ்கின்றனர் என்கிறது பீட்டா.

தேமொழி

unread,
Jan 3, 2017, 2:42:15 AM1/3/17
to மின்தமிழ், kalair...@gmail.com


On Monday, January 2, 2017 at 11:21:54 PM UTC-8, kalai wrote:

வணக்கம்.
காட்டுமிராண்டி களாய் வாழ்ந்த தமிழரை மீட்க வேண்டிக் காசு வாங்கிக் கொண்டு மேடை ஏறித் திட்டினார், காசு கொடுப்பவர் வீட்டிற்குச் சென்று சாப்பிட்டார், காசு கொடுப்பவர் வீட்டிற்குச் சென்று தங்கினார் பெரியார்.


Innamburan S.Soundararajan

unread,
Jan 3, 2017, 3:42:43 AM1/3/17
to mintamil
அலுப்பு தட்டாமல் திரும்பித் திரும்பி பார்க்கவேண்டிய திரைப்படம், நன்றி. எனது தோழர் வாசுகி உமாநாத் அவர்களும் ஞானி அவர்களும் நடித்த தொலைக்காட்சி தொடர் ஒன்றும் நன்கு அமைந்தது. ஒரு தடவை வாசுகியும் சுபஷிணியும் சந்திக்க ஏற்பாடு செய்திருந்தேன். நடக்கவில்லை.
இன்னம்பூரான்

--

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jan 3, 2017, 4:02:20 AM1/3/17
to mintamil

ஐயா அவர்களுக்கு வணக்கம்.


On 03-Jan-2017 2:12 PM, "Innamburan S.Soundararajan" <innam...@gmail.com> wrote:
>
> அலுப்பு தட்டாமல் திரும்பித் திரும்பி பார்க்கவேண்டிய திரைப்படம், நன்றி.

அப்படியா, நானும் அவசியம் பார்த்து விடுகுறேன்.

எனது தோழர் வாசுகி உமாநாத் அவர்களும் ஞானி அவர்களும் நடித்த தொலைக்காட்சி தொடர் ஒன்றும் நன்கு அமைந்தது.

தொலைக்காட்சித் தொடரின் சில பகுதிகளை மட்டுமே பார்க்க வாய்ப்பு கிடைத்தது.
நான் பார்த்த பதிவுகளில் அவரது நல்ல செயல்கள் மட்டுமே தொகுக்கப் பட்டது.  அவரது கறுப்பு முகம் காட்டப்பட வில்லை.
இணைப்பில் உள்ள படமும் அப்படித்தானா? என எனக்குத் தெரிய வில்லை.
படத்தை அவசியம் பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டி விட்டுள்ளீர்கள் ஐயா.

ஒரு தடவை வாசுகியும் சுபஷிணியும் சந்திக்க ஏற்பாடு செய்திருந்தேன். நடக்கவில்லை.
> இன்னம்பூரான்
>
>
>
>
>
>
>
>
>
>
> இன்னம்பூரான்
>
> http://innamburan.blogspot.co.uk
>
> http://innamburan.blogspot.de/view/magazine
>
> www.olitamizh.com
>
>
> 2017-01-03 13:12 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
>>
>>
>>
>> On Monday, January 2, 2017 at 11:21:54 PM UTC-8, kalai wrote:
>>>
>>> வணக்கம்.
>>> காட்டுமிராண்டி களாய் வாழ்ந்த தமிழரை மீட்க வேண்டிக் காசு வாங்கிக் கொண்டு மேடை ஏறித் திட்டினார், காசு கொடுப்பவர் வீட்டிற்குச் சென்று சாப்பிட்டார், காசு கொடுப்பவர் வீட்டிற்குச் சென்று தங்கினார் பெரியார்.
>>
>>
>> https://www.youtube.com/watch?v=BsRONWV2RJM&feature=youtu.be&t=2h22m05s
>>
>>  
>>
>> --
>> --
>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

>> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>> ---
>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.


>> For more options, visit https://groups.google.com/d/optout.
>
>

> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Innamburan S.Soundararajan

unread,
Jan 3, 2017, 4:22:17 AM1/3/17
to mintamil
நான் பார்த்த பதிவுகளில் அவரது நல்ல செயல்கள் மட்டுமே தொகுக்கப் பட்டது.  

~இதுவும் ஒரு வகையான மட்டுறுத்தல். மனித பலவீனம்.பொது சொத்து. புதுமை பித்தனின் சாப விமோசனம் சில ஆத்திகவாதிகளால் எதிர்க்கப்படுகிறது. என்னை போன்ற சிலர் அதன் உட்கருத்தை ஆதரிப்பர். 

அவரது கறுப்பு முகம் காட்டப்பட வில்லை.
~ கறுப்பு முகம், உண்மை முகம் என்பது எல்லாம் மனகசப்பின் கற்பனை. மற்றவர் உள்ளக்கிடக்கையை அறிவது கடினம். நீங்கள் ஈ.வே.ரா. வை பார்த்து கூட இல்லை என்று நினைக்கிறேன். Dr. Jekyll and Mr.Hide படித்திருக்கிறீர்களோ? இளங்கோ அடிகள் ஒரு துறவி. அவர் எழுதிய சிலப்பதிகாரத்தில் காமரசம் தொக்கி நிற்கிறது. குணங்குடி மஸ்தானின் மனோன்மணி கண்ணி என்னுடைய சலபஞ்சிகாவை விட அதீதமான காதல் மொழி.அவரோ ஊரறிந்த சித்தபுருஷன். இளங்கோ, குணங்குடி ஆகியோரின் உண்மை முகம் உம்மால் காண முடிந்தால் அசந்து போவீர்கள். சாந்த ஸ்வரூபிகள், ஞானக்கடல்கள்.

காத்தடைத்த பைகளில் மனதை அலைய விடாதே, காளைராசா.
அன்புடன்,இன்னம்பூரான்

~
2017-01-03 14:32 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:

ஐயா அவர்களுக்கு வணக்கம்.
On 03-Jan-2017 2:12 PM, "Innamburan S.Soundararajan" <innam...@gmail.com> wrote:
>
> அலுப்பு தட்டாமல் திரும்பித் திரும்பி பார்க்கவேண்டிய திரைப்படம், நன்றி.

அப்படியா, நானும் அவசியம் பார்த்து விடுகுறேன்.

எனது தோழர் வாசுகி உமாநாத் அவர்களும் ஞானி அவர்களும் நடித்த தொலைக்காட்சி தொடர் ஒன்றும் நன்கு அமைந்தது.

தொலைக்காட்சித் தொடரின் சில பகுதிகளை மட்டுமே பார்க்க வாய்ப்பு கிடைத்தது.
நான் பார்த்த பதிவுகளில் அவரது நல்ல செயல்கள் மட்டுமே தொகுக்கப் பட்டது.  அவரது கறுப்பு முகம் காட்டப்பட வில்லை.
இணைப்பில் உள்ள படமும் அப்படித்தானா? என எனக்குத் தெரிய வில்லை.
படத்தை அவசியம் பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டி விட்டுள்ளீர்கள் ஐயா.

ஒரு தடவை வாசுகியும் சுபஷிணியும் சந்திக்க ஏற்பாடு செய்திருந்தேன். நடக்கவில்லை.
> இன்னம்பூரான்
>
>
>
>
>
>
>
>
>
>
> இன்னம்பூரான்
>
> http://innamburan.blogspot.co.uk
>
> http://innamburan.blogspot.de/view/magazine
>
> www.olitamizh.com
>
>
> 2017-01-03 13:12 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
>>
>>
>>
>> On Monday, January 2, 2017 at 11:21:54 PM UTC-8, kalai wrote:
>>>
>>> வணக்கம்.
>>> காட்டுமிராண்டி களாய் வாழ்ந்த தமிழரை மீட்க வேண்டிக் காசு வாங்கிக் கொண்டு மேடை ஏறித் திட்டினார், காசு கொடுப்பவர் வீட்டிற்குச் சென்று சாப்பிட்டார், காசு கொடுப்பவர் வீட்டிற்குச் சென்று தங்கினார் பெரியார்.
>>
>>
>> https://www.youtube.com/watch?v=BsRONWV2RJM&feature=youtu.be&t=2h22m05s
>>
>>  
>>
>> --
>> --
>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

>> To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com


>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>> ---
>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.


>> For more options, visit https://groups.google.com/d/optout.
>
>
> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

> To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com


> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.


> For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Jaisankar Jaganathan

unread,
Jan 3, 2017, 7:01:03 AM1/3/17
to mint...@googlegroups.com
புரிகிறது சார். இன்னம்பூரான் அவர்களே நன்றி

2017-01-03 9:40 GMT+05:30 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>:
ஒரு விளக்கம் தருகிறேன், திரு ஜயசங்கர். எதுவானாலும் படிக்க நீங்கள் ரெடியாக இருப்பதால், தான், இந்த விளக்கம். தலைவர்கள் யாவருமே விமர்சிக்கப்படுவார்கள். 
தற்காலம் காந்திஜியை இகழும் பதிவுகளும் வருகின்றன. பெரியாரை நேரில் சந்தித்து அவரை சிறிதளவு அறிந்த நான், அவருடைய சொற்பொழிவுகளையும், எழுத்துக்களையும் அந்தந்த நாட்களில் ஆர்வத்துடன் படித்தவன். அவருடைய நெருங்கிய நண்பரும், அரசியல் எதிர் துருவமான திரு.வி.க. அவர்களின் விசிறி. அவருடைய நெருங்கிய நண்பரும், அரசியல் எதிர் துருவமான ராஜாஜி அவர்களின் சீடன். ஈ.வே.ரா. அவர்கள் சர்ச்சைக்கு உரிய வாறு, சமூக முன்னேற்றத்துக்கும், சம்பிரதாய விலக்கலுக்கும் பணி செய்திருந்தாலும், விடுதலை நாளை துக்க நாளாக கொண்டாடுவது, பிராமணர்களின் சிகை அறுப்பது, பூணூலை அறுப்பது, பிள்ளையார் சிலையை உடைப்பது, ராமர் படத்தின் மீது செருப்படி செய்வது போன்ற கைங்கர்யங்களை துவக்கி வைத்தவர். அவருடைய சீடர்களே ஒட்டு மொத்தமாக அவரை தள்ளுபடி செய்து, 'கடவுளை நம்புவன் முட்டாள்' என்ற அவருடைய வைரவரியை பக்தியுடன் வரித்துக்கொண்டு மண்சோறு தின்பதும், மொட்டை அடித்துக்கொள்வதுமாகவும், சாதி மத பேதங்களுக்கு உரம் இட்டு வளர்த்து அரசியல் செய்வதின் மணிவிழா நெருங்கும் காலகட்டத்தில், அவரை புரியவா வைக்கமுடியும்.? சிரிப்பு தான் வருகிறது. அவர் முன்னாலேயே, அவருடைய சீடர்களால் புடைக்கப்பட்ட நான் அவரது நற்செயல்களை பாராட்டுகிறேன். 
On Mon, Jan 2, 2017 at 7:39 PM, Jaisankar Jaganathan <jaisankarj@gmail.com> wrote:
பெரியாரின் புரிதல்கள் இழை பெரியாரை இகழவே ஆரம்பிக்கப்பட்டது போல் இருக்கிறது. எதுவா இருந்தாலும் படிக்க நான் ரெடி. 

-- 
-- 
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--- 
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
regards,
jaisankar jaganathan

மாயோன்

unread,
Jan 3, 2017, 7:21:52 AM1/3/17
to mintamil
பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்
மருளானாம் மாணப் பிறப்பு.
மெய்ப்பொருள் அறியும் வரை பொய்ப்பொருளால் தமிழர் சிறப்பாக வாழமுடியாது.
பலரின் பிழைப்புக்காக இராமசாமியார் விற்பனை தொடரும்.

3 ஜனவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 5:30 அன்று, Jaisankar Jaganathan <jaisa...@gmail.com> எழுதியது:

சி. ஜெயபாரதன்

unread,
Jan 3, 2017, 10:06:34 AM1/3/17
to mintamil, vallamai, tamilmantram, Kalairajan Krishnan
பெரியாரைத் திராவிடப் பிதாவாகக் காட்ட எடுத்த ஒருமுகத் திரைப்படம்.  பெரியாரின் கசப்பு மறுமுகம் காட்டப்பட வில்லை.

சி. ஜெயபாரதன்

--

Jaisankar Jaganathan

unread,
Jan 3, 2017, 10:09:04 AM1/3/17
to vall...@googlegroups.com, mintamil, tamilmantram, Kalairajan Krishnan
ஐயா ஜெயபாரதன்,

ஆனால் படம் நன்றாக இருந்தது. பெரியாரின் வாழ்வின் கசப்பு பக்கத்தை அவரே மறைத்தது இல்லை. ஆனால் இரண்டரை மணி திரைப்படத்தில் எல்லாவற்றையும் காட்ட இயலாது. 

இப்பொழுது ஜெயலலிதா வாழ்க்கையை திரைப்படம் எடுத்தால் அவரின் மறுபக்கத்தை காட்ட இயலுமா? 

You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
regards,
jaisankar jaganathan

Seshadri Sridharan

unread,
Jan 4, 2017, 12:32:58 AM1/4/17
to mintamil, ipohs...@gmail.com, வேந்தன் அரசு, doraisu...@gmail.com, ras...@gmail.com, jalas...@gmail.com, muku...@gmail.com, krishna...@gmail.com, rnka...@gmail.com, anbuja...@gmail.com, திருத்தம் பொன்.சரவணன், rajis...@gmail.com, Banukumar Rajendran, yesura...@gmail.com, Shrinivasan T, mani muthu, Pandiyaraja Paramasivam, Senguttuvan K, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, Malarvizhi Mangay, Innamburan S.Soundararajan, Kalairajan Krishnan, Krishnamachary Rangaswamy, bala subramani, V. Dhivakar, N D Logasundaram, Megala Ramamourty, பெருமாள் தேவன், coral shree, Geetha Sambasivam, Satish Kumar Dogra, N. Kannan, rajam ramamurti, aravindan....@gmail.com, satha sivam, rathinam.c...@gmail.com, tamil...@gmail.com, sneelak...@gmail.com, vet...@gmail.com, ts.m...@gmail.com, நா. கணேசன், g.sa...@gmail.com, Nagarajan Vadivel, praman...@gmail.com, Subashini Tremmel
2017-01-03 14:51 GMT+05:30 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>:
நான் பார்த்த பதிவுகளில் அவரது நல்ல செயல்கள் மட்டுமே தொகுக்கப் பட்டது.  

அவரது கறுப்பு முகம் காட்டப்பட வில்லை.
~ கறுப்பு முகம், உண்மை முகம் என்பது எல்லாம் மனகசப்பின் கற்பனை.

இது நாள் வரை அவருக்கு கருப்பு முகம் உண்டு என்று எவரும் ஒப்பவில்லை. இன்று தமிழ்த் தேசியம் வந்து அவரது முகத்தை மூடியுள்ள முகமூடியை கிழித்தெறிந்து அவரை வேடதாரி என்று காட்டிற்று. இளைஞர்கள் அவர் கருத்தை சாடத்துவங்கிவிட்டனர். ஆனால் சில பழம் பைத்தியங்கள் தம் பெரியார் பித்தை இன்னமும் விடாமல் மக்களை தவறான வழியில் செலுத்தி வருகின்றனர்.

காத்தன் தொன்னன் 

Seshadri Sridharan

unread,
Jan 4, 2017, 12:33:20 AM1/4/17
to mintamil, ipohs...@gmail.com, வேந்தன் அரசு, doraisu...@gmail.com, ras...@gmail.com, jalas...@gmail.com, muku...@gmail.com, krishna...@gmail.com, rnka...@gmail.com, anbuja...@gmail.com, திருத்தம் பொன்.சரவணன், rajis...@gmail.com, Banukumar Rajendran, yesura...@gmail.com, Shrinivasan T, mani muthu, Pandiyaraja Paramasivam, Senguttuvan K, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, Malarvizhi Mangay, Innamburan S.Soundararajan, Kalairajan Krishnan, Krishnamachary Rangaswamy, bala subramani, V. Dhivakar, N D Logasundaram, Megala Ramamourty, பெருமாள் தேவன், coral shree, Geetha Sambasivam, Satish Kumar Dogra, N. Kannan, rajam ramamurti, aravindan....@gmail.com, satha sivam, rathinam.c...@gmail.com, tamil...@gmail.com, sneelak...@gmail.com, vet...@gmail.com, ts.m...@gmail.com, நா. கணேசன், g.sa...@gmail.com, Nagarajan Vadivel, praman...@gmail.com, Subashini Tremmel
2017-01-03 20:39 GMT+05:30 Jaisankar Jaganathan <jaisa...@gmail.com>:
ஆனால் படம் நன்றாக இருந்தது. பெரியாரின் வாழ்வின் கசப்பு பக்கத்தை அவரே மறைத்தது இல்லை. ஆனால் இரண்டரை மணி திரைப்படத்தில் எல்லாவற்றையும் காட்ட இயலாது. 

தம் தெலுங்கர் இனநல நோக்கை மறைத்துள்ளார். ஆனாலும் அது நீரில் மிதவும் எண்ணெய் போல துலங்க நிற்கிறது. உண்மையை ஒருநாளும் அழுத்தவோ மறைக்கவோ முடியாது. ஆனால் மக்கள் தம் கண்களை மூடிக்கொண்டால் துலங்கும் பொருள் எதுவும் துலங்காது போகும். தமிழ்த் தேசியம் மக்கள் கண்களை திறந்துகொண்டு வருகிறது. 



காத்தன் தொன்னன் 

Jaisankar Jaganathan

unread,
Jan 4, 2017, 1:39:30 AM1/4/17
to mintamil
சேஷாத்ரி ஸ்ரீதரன் அவர்களே,

தமிழ்த்தேசியம் பற்றி தமிழ்நாட்டில் இணையம் தவிர யாருக்கும் தெரியாது என்பதே உண்மை

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jan 5, 2017, 1:52:08 AM1/5/17
to mintamil

ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.

On 03-Jan-2017 2:52 PM, "Innamburan S.Soundararajan" <innam...@gmail.com> wrote:
நான் பார்த்த பதிவுகளில் அவரது நல்ல செயல்கள் மட்டுமே தொகுக்கப் பட்டது.  
அவரது கறுப்பு முகம் காட்டப்பட வில்லை.
~ கறுப்பு முகம், உண்மை முகம் என்பது எல்லாம் மனகசப்பின் கற்பனை. மற்றவர் உள்ளக்கிடக்கையை அறிவது கடினம். நீங்கள் ஈ.வே.ரா. வை பார்த்து கூட இல்லை என்று நினைக்கிறேன்.
மிகவும் சரி.
நான் ஈ.வே.ரா அவர்களைப் பார்த்து கிடையாது.
எனது தந்தையார் காவல்பணி செய்தவர்.  
ஈ.வே.ரா அவர்களது கூட்டங்களுக்குக் காவல்பணிக்குச் செல்லும் போதெல்லாம் அவர் பேசுகின்ற பேச்சுக்களைக் கேட்டு மிகவும் மனம் வருந்திய எனது தந்தையார், ஈ.வே.ரா பற்றி எனக்குச் சொல்லிய செய்திகளே எனக்குத் தெரியும்.  இதை எழுதினால் இரண்டு பக்கங்களுக்கு மிகாது.
என் தந்தையார்வழி நான் அறிந்து கொண்ட ஈ.வே.ரா அவர்களின் கறுப்பு முகத்தை வேறு யாரும் எதிலும் எழுதியிருக்க மாட்டார்கள்.
ஈ.வே.ரா அவர்களின் கருப்பு முகத்தை அவரது கூட்டத்தில் அவரது பேச்சைக் கேட்டவர்கள் மட்டுமே அறிந்திருக்க முடியும்.

1) ஈ.வே.ரா கடவுள் மறுப்புக் கொள்கை உள்ளவர் என்று கூறிக்கொள்வார்.
ஆனால் அவரது கேள்விகளுக்குப் பதில் அளிக்கவல்ல, அவரது ஐயத்தை நீக்க வல்ல பார்ப்பனர்களைத் திட்டோ திட்டு என்று திட்டித் தீர்ப்பார்.  அதிலும் குறிப்பாக பார்ப்பனர்களது மனைவிமார்களையும் அவர்களது பெண் குழந்தைகளையும் மிகவும் கேவலமாகப் பொய் சொல்லித் திட்டுவார். 
அவரது தாய்தந்தை மனைவி எல்லோரையும் திட்டுவார்.
பிறரை இழிவு செய்யும் வார்த்தைகளால் அவரது சொற்கேட்போரை சிரிக்க வைத்து அவர்களது பணத்தைக் கறந்து விடுவார்.
2) எவ்வகையிலும் எல்லாவற்றிலும் பணம் பண்ணப் பார்ப்பார்.

இந்த இரண்டு கறுப்பு முகங்கங்களின் அடிப்படையிலேயே நான் ஈ.வே.ரா அவர்களை வெறுக்கிறேன்.

எனது மேற்கண்ட இரண்டு கருத்துகளும் பிழையுடையன என்று தாங்கள் கூறினால் நான் ஏற்றுக் கொள்ளத் தயார்.

மற்றபடி இணைப்பில் உள்ள திரைப்படத்தை நேரம் கிடைக்கும் போது அவசியம் பார்க்கிறேன்.

அன்பன்
கி.காளைராசன்

Innamburan S.Soundararajan

unread,
Jan 5, 2017, 9:56:52 AM1/5/17
to Seshadri Sridharan, mintamil, Thenee MK, வேந்தன் அரசு, dorai sundaram, Raju Saravanan, Jalasayanan Chellappa, Mukunthan Pathmanesan, Krishnan S, nkantan r, anbujaya2005, திருத்தம் பொன்.சரவணன், rajalakshmi paramasivam, Banukumar Rajendran, yesu rajan, Shrinivasan T, mani muthu, Pandiyaraja Paramasivam, Senguttuvan K, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, Malarvizhi Mangay, Kalairajan Krishnan, Krishnamachary Rangaswamy, bala subramani, V. Dhivakar, N D Logasundaram, Megala Ramamourty, பெருமாள் தேவன், coral shree, Geetha Sambasivam, Satish Kumar Dogra, N. Kannan, rajam ramamurti, Aravindan Neelakandan, satha sivam, Rathinam Chandramohan, Neduchezhian T. Chezhian, S NEELAKANTAN, Vetha Nayagy, ts.m...@gmail.com, நா. கணேசன், G Sannah, Nagarajan Vadivel, Parvathy ramanathan, Subashini Tremmel
காளை கூறிய செய்திகள் புரட்டுக்கதைகள் அல்ல. நான் ஈ.வே.ரா. வை சந்தித்து, அவர்களது சொற்பொழிவுகளை கேட்டு, அவர் திட்டுவதை பற்றி விளக்கம் கேட்கப்போய் செம்மையாக அடி வாங்கினேன், அவர் கண்ணெதிரில். அவர் வாளாவிருந்தார். தன் பார்ப்பன துவேஷைத்தை அவர் மறைக்க வில்லை. நம்து தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னாக்கம் செய்த நூலில் ஒன்று, வ.வே.சு. ஐயர் கம்பராமயாணத்தை பற்றி எழுதிய நூல். அதில் ஈ.வே.ரா.வின் வசைமொழிக்கு, வ.வே.சு.ஐயரின் திருமகனார் தக்கத்கொரு பதில் கொடுத்திருப்பார். அதை படித்தாலே, ஈ.வே.ரா.வை புரிந்து கொள்ளலாம். வன்முறை, தான் எதிர்ப்பவர்களின் மீது கன்னா பின்னா என்று கெட்ட வார்த்தைகளால் வைவது, பெண்குலத்தை ஏசுவது எல்லாம், என் இளமை பருவத்தில் கேட்டவை தான். எனினும் ஒரு விஷய்ம்.கல்கி சொல்வது போல் அடி வாங்கினாலும், அவர் பேச்சை கேட்க தோன்றும். மனக்கசப்பில் அது ஒரு வகை.காத்தன் தொத்தனுக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம். ஆனாலும் அவர் எழுத்துரிமையை ஏன் தடை செய்யவேண்டும்? 

காளைராஜனுக்கு ஒரு விளக்கம். நான் கருப்பு மனிதன் என்று சொல்லவேண்டாம் என சொன்னதின் காரணம் கருப்பர்களும் நல்லவர்களே. கருப்பு நிறமற்ற தன்மை உடையது. எங்கள் வீட்டை எடுத்துக்கொள்ளுங்கள். எனக்கு அட்டைக்கரி நைஜீரியன் பையன் ஒருவன் மகன் மாதிரி. சமையலறையில் வந்து தோசை வார்க்க கற்றுக்க்கொண்டான். சுற்றத்தில் ஒரு மாப்பிள்ளை ஆஃப்ரோ அமெரிக்கன். தங்கமான பையன். நீங்கள் ஈவேராவுக்கு கறுப்புமுகம் என்று சொல்லாதீர்கள். நீங்கள் கொடுத்த தகவல்கள் படி பார்த்தால், மூர்க்கர் என்று சொல்லலாமோ என்னவோ?
நன்றி, வணக்கம்,
இன்னம்பூரான்
2017-01-05 18:46 GMT+05:30 Seshadri Sridharan <ssesh...@gmail.com>:
207-01-05 12:21 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:

மிகவும் சரி.

நான் ஈ.வே.ரா அவர்களைப் பார்த்து கிடையாது.
எனது தந்தையார் காவல்பணி செய்தவர்.  
ஈ.வே.ரா அவர்களது கூட்டங்களுக்குக் காவல்பணிக்குச் செல்லும் போதெல்லாம் அவர் பேசுகின்ற பேச்சுக்களைக் கேட்டு மிகவும் மனம் வருந்திய எனது தந்தையார், ஈ.வே.ரா பற்றி எனக்குச் சொல்லிய செய்திகளே எனக்குத் தெரியும்.  இதை எழுதினால் இரண்டு பக்கங்களுக்கு மிகாது. என் தந்தையார்வழி நான் அறிந்து கொண்ட ஈ.வே.ரா அவர்களின் கறுப்பு முகத்தை வேறு யாரும் எதிலும் எழுதியிருக்க மாட்டார்கள். ஈ.வே.ரா அவர்களின் கருப்பு முகத்தை அவரது கூட்டத்தில் அவரது பேச்சைக் கேட்டவர்கள் மட்டுமே அறிந்திருக்க முடியும்.

1) ஈ.வே.ரா கடவுள் மறுப்புக் கொள்கை உள்ளவர் என்று கூறிக்கொள்வார்.
ஆனால் அவரது கேள்விகளுக்குப் பதில் அளிக்கவல்ல, அவரது ஐயத்தை நீக்க வல்ல பார்ப்பனர்களைத் திட்டோ திட்டு என்று திட்டித் தீர்ப்பார்.  அதிலும் குறிப்பாக பார்ப்பனர்களது மனைவிமார்களையும் அவர்களது பெண் குழந்தைகளையும் மிகவும் கேவலமாகப் பொய் சொல்லித் திட்டுவார். 
அவரது தாய்தந்தை மனைவி எல்லோரையும் திட்டுவார்.
பிறரை இழிவு செய்யும் வார்த்தைகளால் அவரது சொற்கேட்போரை சிரிக்க வைத்து அவர்களது பணத்தைக் கறந்து விடுவார்.
2) எவ்வகையிலும் எல்லாவற்றிலும் பணம் பண்ணப் பார்ப்பார்.

இந்த இரண்டு கறுப்பு முகங்கங்களின் அடிப்படையிலேயே நான் ஈ.வே.ரா அவர்களை வெறுக்கிறேன்.

எனது மேற்கண்ட இரண்டு கருத்துகளும் பிழையுடையன என்று தாங்கள் கூறினால் நான் ஏற்றுக் கொள்ளத் தயார்.

மற்றபடி இணைப்பில் உள்ள திரைப்படத்தை நேரம் கிடைக்கும் போது அவசியம் பார்க்கிறேன். - கி.காளைராசன்

எத்தனை பக்கம் ஆனால் என்ன அறிந்ததை எழுதாமல் இருப்பது தான் பெரும் தவறு ஏனென்றால் அறிந்தவர் அதை எழுதாவிட்டால் பிறகு எப்போதுமே யாருமே அறிய முடியாது. 

நான் who is Shudra என்ற இடுகையில் சில தெளிவுகளை ஏற்படுத்தவே எனது பதிவை இட்டேன் ஆனால் எனது மூன்று பதிவுகள் வரவிடாமல் தடைசெய்யப்பட்டுவிட்டன.கூகிளில் சென்று பார்த்து இதைத் தெரிந்து கொண்டேன்.

காத்தன் தொன்னன் 

Jaisankar Jaganathan

unread,
Jan 5, 2017, 10:29:03 AM1/5/17
to mintamil
இன்னம்பூரான் சார்,

என்ன சொன்னாலும் பெரியார் அன்றைய சமுதாயத்துக்கு தேவையானவரே. அப்பேர்பப்ட்டவர் இருந்தே இன்னும் சாதி கொடுமை இருக்குதே . அவர் இல்லையென்றால் தமிழகம் ஒடிசா போல ஒரு மாநிலமாகி இருக்கும்

N. Ganesan

unread,
Jan 5, 2017, 10:56:39 AM1/5/17
to மின்தமிழ், vallamai


On Tuesday, January 3, 2017 at 10:39:30 PM UTC-8, Jaisankar Jaganathan wrote:
சேஷாத்ரி ஸ்ரீதரன் அவர்களே,

தமிழ்த்தேசியம் பற்றி தமிழ்நாட்டில் இணையம் தவிர யாருக்கும் தெரியாது என்பதே உண்மை.

தமிழ்நாட்டில் தினமும் பேராசிரியர்கள், புலவர்கள், கவிஞர்கள், ... என் பண்ணையத்தில் உள்ளோர், உறவினர்கள்,
கோவை தொழிலதிபர்கள், மருத்துவர்கள், ... என்று தொடர்பில் இருக்கிறேன். யாருக்கும் தமிழ்தேசியம் என்று
தெரியக் காணோம். தமிழ் தேசியம் என்று சீமான் போன்றோருடன் சேர்ந்தோ தனியாகவோ தேர்தலில்
நின்றால் 1%-க்கும் குறைவாகவே ஓட்டு வரும் என்பதுதான் யதார்த்தநிலைமை.

இன்றைக்கும் பெரியார் ஈவேரா வழியில் வந்த கக்ஷிகள் என்று திமுக, அதிமுக தமிழ்நாட்டின் பெரும்பான்மைக் 
கட்சிகளாக விளங்கிவருகின்றன. தமிழ்தேசியம் போலில்லாமல் தமிழ்நாட்டுக்கு வந்தோர், வருவோர்
அனைத்தையும் அரவணைத்து ஆட்சிபீடத்தில் இருந்து சமரசம் செய்து, வருமானத்தைப் பங்கி,
டாஸ்மாக் போன்றன அளித்து ஆட்சி பல ஆண்டு செய்யும் திறன் அதிமுக, திமுக கட்சிகளுக்கே இருக்கின்றன.

நா. கணேசன் 

N. Ganesan

unread,
Jan 5, 2017, 11:01:12 AM1/5/17
to வல்லமை, மின்தமிழ்


On Tuesday, January 3, 2017 at 10:41:28 PM UTC-8, நச்சோணன் wrote:
2017-01-04 8:26 GMT+05:30 Jaisankar Jaganathan <jaisa...@gmail.com>:
//தமிழ்த் தேசியம் மக்கள் கண்களை திறந்துகொண்டு வருகிறது. //

தமிழ்த்தேசியம் என்றால் என்ன? இந்தியாவை எதிர்ப்பதா? அது முட்டாள் தனமல்லவ
 
தமிழ்த்தேசியம் தமிழ் தமிழர் தமிழ்ப் பண்பாட்டின் உறைவிடம். ஏன் இந்தியாவை உதறக்கூடாது? இந்தியாவிலேயே இருக்கவேண்டும் என்பதற்கு ஞாயமான காரணம் எவரேனும் சொல்லமுடியுமா? மொழிச் சிறுபான்மையர். மதநோக்கர், வணிக நோக்கர் தவிர்த்து தமிழ்த் தேசியத்தை கண்டு அஞ்சுவதற்கு யார் உளர்? இந்திய அடிமைச் சிறையில் எல்லாவற்றையும் கொள்ளை கொடுத்துவிட்டு கையேந்தி நிற்பது தான் முழு முட்டாள்தனம்.   



தமிழர்கள் வன்முறை விரும்பாதவர். ஆயுதம் ஏந்தி இந்தியாவிடம் இருந்து பிரியவேண்டும் என்று எந்த தமிழரும் அரசியல் அரங்கில் இல்லை.

பெ. மணியரசன் கூட அமெரிக்கா வந்தபோது இந்தியாவில் இருந்து தமிழ்நாடு பிரியவேண்டும் என்று பேசவில்லை.

தமிழ்தேசியர் யாராகிலும் தமிழ்நாடு பாரத மணித்திரு நாட்டிடம் இருந்து பிரிதலை முன்வைத்து எலக்‌ஷன் போன்றவற்றில் நின்றால்
ஓட்டு வராது.

நா. கணேசன்
 
தமிழ்த்தேசியம் பற்றி இணையம் தவிர எங்கேயும் கேள்விப்பட்டது இல்லை

இணையவெளி நாடு இன எல்லை கடந்து பரவுவது. இன்னமும் பெரியாரையும் திராவிடத்தையும் பிடித்துத் தொங்குவதால் தமிழ்த் தேசியர் பலரிடம் தெளிந்த சிந்தனை இல்லை. நான் 2004 முதலே தமிழ்த் தேசிய இயக்கங்களின் இதழ்களை படித்துவருபவன், கூட்டங்களுக்கு சென்று வருபவன்.

நச்சோணன்    

N. Ganesan

unread,
Jan 5, 2017, 11:07:08 AM1/5/17
to மின்தமிழ், vallamai


On Tuesday, January 3, 2017 at 9:33:20 PM UTC-8, காத்தன் தொன்னன் wrote:
2017-01-03 20:39 GMT+05:30 Jaisankar Jaganathan <jaisa...@gmail.com>:
ஆனால் படம் நன்றாக இருந்தது. பெரியாரின் வாழ்வின் கசப்பு பக்கத்தை அவரே மறைத்தது இல்லை. ஆனால் இரண்டரை மணி திரைப்படத்தில் எல்லாவற்றையும் காட்ட இயலாது. 

தம் தெலுங்கர் இனநல நோக்கை மறைத்துள்ளார். ஆனாலும் அது நீரில் மிதவும் எண்ணெய் போல துலங்க நிற்கிறது. உண்மையை ஒருநாளும் அழுத்தவோ மறைக்கவோ முடியாது. ஆனால் மக்கள் தம் கண்களை மூடிக்கொண்டால் துலங்கும் பொருள் எதுவும் துலங்காது போகும். தமிழ்த் தேசியம் மக்கள் கண்களை திறந்துகொண்டு வருகிறது. 



பெரியார் கன்னடியர். நீங்கள் தெலுங்கர் என்று எழுதுவது பற்றி குறிப்பிட்டுள்ளேன். சிந்து சமவெளி எழுத்தை தமிழ் என்று உயிர், மெய் எழுத்தாகப் படிப்பது போல,
பெரியார் தெலுங்கர் என்பதும். 

கொங்குநாட்டுக்கும், கன்னட நாட்டுக்கும் பழைய தொடர்புகள் பல. உ-ம்: பிராமி எழுத்தை கன்னட தேசத்தில் இருந்து கொங்குநாட்டுக்கு சமண முனிவர்கள் கொண்டுவந்தனர்.
இளங்கோ அடிகள் கன்னட நாட்டில் சமணம் பயின்றிருக்கவேண்டும். பல குறிப்புகளை தந்துள்ளார் அவரது காவியத்தில். உ-ம்: காவதம் என்ற சொல் அங்கே புழங்குவதை
தமிழில் அறிமுகம் செய்துள்ளார்.

நா. கணேசன்

சி. ஜெயபாரதன்

unread,
Jan 5, 2017, 1:15:48 PM1/5/17
to vallamai, mintamil, tamilmantram, vannan vannan, Oru Arizonan
\\\\தமிழ்த்தேசியம் தமிழ் தமிழர் தமிழ்ப் பண்பாட்டின் உறைவிடம். ஏன் இந்தியாவை உதறக்கூடாது? இந்தியாவிலேயே இருக்கவேண்டும் என்பதற்கு ஞாயமான காரணம் எவரேனும் சொல்லமுடியுமா? ///

தமிழகம் இந்தியக் கலாச்சார/நாகரீக/வரலாறு/ பூதளவியல்/உணவு வகைகள்/ வாழ்க்கை அறநெறிகள்/பணி வேலைகள்/மருந்துகள்/வணிகம் ஆகியவற்றில் நரம்புகளால் இணைக்கப்பட்டு ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் நன்மை தீமைகளில் பங்கெடுத்து வருகிறது.

தமிழகம் தனித்துப் பிரிந்தால், இவை மூலம் ஏற்படும் பாதிப்புகளோடு, வெளி மாநிலங்களில் பிழைக்கும் மில்லியன் கணக்கான தமிழர் வெளியே விரட்டப்படுவர். அத்தனை பேருக்கும் தமிழ்நாடு வேலை கொடுத்து ஊதியம் அளிக்க முடியுமா ?

சி. ஜெயபாரதன்.

++++++++++++

2017-01-04 1:41 GMT-05:00 seshadri sridharan <ssesh...@gmail.com>:
2017-01-04 8:26 GMT+05:30 Jaisankar Jaganathan <jaisa...@gmail.com>:
//தமிழ்த் தேசியம் மக்கள் கண்களை திறந்துகொண்டு வருகிறது. //

தமிழ்த்தேசியம் என்றால் என்ன? இந்தியாவை எதிர்ப்பதா? அது முட்டாள் தனமல்லவ
 
தமிழ்த்தேசியம் தமிழ் தமிழர் தமிழ்ப் பண்பாட்டின் உறைவிடம். ஏன் இந்தியாவை உதறக்கூடாது? இந்தியாவிலேயே இருக்கவேண்டும் என்பதற்கு ஞாயமான காரணம் எவரேனும் சொல்லமுடியுமா? மொழிச் சிறுபான்மையர். மதநோக்கர், வணிக நோக்கர் தவிர்த்து தமிழ்த் தேசியத்தை கண்டு அஞ்சுவதற்கு யார் உளர்? இந்திய அடிமைச் சிறையில் எல்லாவற்றையும் கொள்ளை கொடுத்துவிட்டு கையேந்தி நிற்பது தான் முழு முட்டாள்தனம்.   


தமிழ்த்தேசியம் பற்றி இணையம் தவிர எங்கேயும் கேள்விப்பட்டது இல்லை

இணையவெளி நாடு இன எல்லை கடந்து பரவுவது. இன்னமும் பெரியாரையும் திராவிடத்தையும் பிடித்துத் தொங்குவதால் தமிழ்த் தேசியர் பலரிடம் தெளிந்த சிந்தனை இல்லை. நான் 2004 முதலே தமிழ்த் தேசிய இயக்கங்களின் இதழ்களை படித்துவருபவன், கூட்டங்களுக்கு சென்று வருபவன்.

நச்சோணன்    

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

Innamburan S.Soundararajan

unread,
Jan 5, 2017, 8:37:03 PM1/5/17
to vall...@googlegroups.com, mintamil, tamilmantram, vannan vannan, Oru Arizonan
என்ன சொன்னாலும் பெரியார் அன்றைய சமுதாயத்துக்கு தேவையானவரே. 
~ஆமாம்.

அப்பேர்பப்ட்டவர் இருந்தே இன்னும் சாதி கொடுமை இருக்குதே . 

~ அதை கொம்பு சீவி வளர்ப்பவர்கள், அவரது சீடர்களே.

அவர் இல்லையென்றால் தமிழகம் ஒடிசா போல ஒரு மாநிலமாகி இருக்கும்

~ ஐயா, எனக்கு இரண்டு மாநிலங்களும், அவற்றின் நகரங்களும், கிராமங்களும் என் உள்ளங்கை போல் பரிச்சியம். ஒடிஷா எவ்வளவோ தமிழ் நாட்டை விட தேவலை. நீங்கள் ஒடிஷாவில் எப்போது இருந்தீர்கள்?

எத்தனை கூட்டங்களில் ஆள் வைத்துக் கல்லெறிவது செருப்பு வீசுவது என்று பல சம்பவங்கள் நடந்ததைக் கணக்கில்கொண்டால் பெரியார் வெறுப்பு எந்த அளவுக்கு இருந்தது என்பதை யூகிக்க முடியும்

~ நான் அந்த காலகட்டத்தில் அவருடைய கூட்டங்களில் கலந்து கொள்பவன். கல்லெறிந்தது எல்லாம் முதலியார், பிள்ளைமார், சேர்வை, தேவர்,நாடார் வகையறா. அதுவும் அவருடைய வன்முறையில் ஒரு பின்னம். பிராமணர்கள் தலை தெறிக்க அஞ்சி ஓடினார்கள். ஏனெனில் எல்லாம் நிர்பயா கேசு. பிராமண பெண்பிள்ளைகளுக்கு அவரால் ஆபத்து தான்.
இன்னம்பூரான்.










இன்னம்பூரான்

Seshadri Sridharan

unread,
Jan 5, 2017, 11:13:19 PM1/5/17
to mintamil, ipohs...@gmail.com, வேந்தன் அரசு, doraisu...@gmail.com, ras...@gmail.com, jalas...@gmail.com, muku...@gmail.com, krishna...@gmail.com, rnka...@gmail.com, anbuja...@gmail.com, திருத்தம் பொன்.சரவணன், rajis...@gmail.com, Banukumar Rajendran, yesura...@gmail.com, Shrinivasan T, mani muthu, Pandiyaraja Paramasivam, Senguttuvan K, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, Malarvizhi Mangay, Innamburan S.Soundararajan, Kalairajan Krishnan, Krishnamachary Rangaswamy, bala subramani, V. Dhivakar, N D Logasundaram, Megala Ramamourty, பெருமாள் தேவன், coral shree, Geetha Sambasivam, Satish Kumar Dogra, N. Kannan, rajam ramamurti, aravindan....@gmail.com, satha sivam, rathinam.c...@gmail.com, tamil...@gmail.com, sneelak...@gmail.com, vet...@gmail.com, ts.m...@gmail.com, நா. கணேசன், g.sa...@gmail.com, Nagarajan Vadivel, praman...@gmail.com, Subashini Tremmel
207-01-05 12:21 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:

மிகவும் சரி.

நான் ஈ.வே.ரா அவர்களைப் பார்த்து கிடையாது.
எனது தந்தையார் காவல்பணி செய்தவர்.  
ஈ.வே.ரா அவர்களது கூட்டங்களுக்குக் காவல்பணிக்குச் செல்லும் போதெல்லாம் அவர் பேசுகின்ற பேச்சுக்களைக் கேட்டு மிகவும் மனம் வருந்திய எனது தந்தையார், ஈ.வே.ரா பற்றி எனக்குச் சொல்லிய செய்திகளே எனக்குத் தெரியும்.  இதை எழுதினால் இரண்டு பக்கங்களுக்கு மிகாது. என் தந்தையார்வழி நான் அறிந்து கொண்ட ஈ.வே.ரா அவர்களின் கறுப்பு முகத்தை வேறு யாரும் எதிலும் எழுதியிருக்க மாட்டார்கள். ஈ.வே.ரா அவர்களின் கருப்பு முகத்தை அவரது கூட்டத்தில் அவரது பேச்சைக் கேட்டவர்கள் மட்டுமே அறிந்திருக்க முடியும்.

1) ஈ.வே.ரா கடவுள் மறுப்புக் கொள்கை உள்ளவர் என்று கூறிக்கொள்வார்.
ஆனால் அவரது கேள்விகளுக்குப் பதில் அளிக்கவல்ல, அவரது ஐயத்தை நீக்க வல்ல பார்ப்பனர்களைத் திட்டோ திட்டு என்று திட்டித் தீர்ப்பார்.  அதிலும் குறிப்பாக பார்ப்பனர்களது மனைவிமார்களையும் அவர்களது பெண் குழந்தைகளையும் மிகவும் கேவலமாகப் பொய் சொல்லித் திட்டுவார். 
அவரது தாய்தந்தை மனைவி எல்லோரையும் திட்டுவார்.
பிறரை இழிவு செய்யும் வார்த்தைகளால் அவரது சொற்கேட்போரை சிரிக்க வைத்து அவர்களது பணத்தைக் கறந்து விடுவார்.
2) எவ்வகையிலும் எல்லாவற்றிலும் பணம் பண்ணப் பார்ப்பார்.

இந்த இரண்டு கறுப்பு முகங்கங்களின் அடிப்படையிலேயே நான் ஈ.வே.ரா அவர்களை வெறுக்கிறேன்.

எனது மேற்கண்ட இரண்டு கருத்துகளும் பிழையுடையன என்று தாங்கள் கூறினால் நான் ஏற்றுக் கொள்ளத் தயார்.

மற்றபடி இணைப்பில் உள்ள திரைப்படத்தை நேரம் கிடைக்கும் போது அவசியம் பார்க்கிறேன். - கி.காளைராசன்

எத்தனை பக்கம் ஆனால் என்ன அறிந்ததை எழுதாமல் இருப்பது தான் பெரும் தவறு ஏனென்றால் அறிந்தவர் அதை எழுதாவிட்டால் பிறகு எப்போதுமே யாருமே அறிய முடியாது. 

நான் who is Shudra என்ற இடுகையில் சில தெளிவுகளை ஏற்படுத்தவே எனது பதிவை இட்டேன் ஆனால் எனது மூன்று பதிவுகள் வரவிடாமல் தடைசெய்யப்பட்டுவிட்டன.கூகிளில் சென்று பார்த்து இதைத் தெரிந்து கொண்டேன்.

காத்தன் தொன்னன் 

தேமொழி

unread,
Jan 6, 2017, 12:03:32 AM1/6/17
to மின்தமிழ்


On Thursday, January 5, 2017 at 7:29:03 AM UTC-8, Jaisankar Jaganathan wrote:
இன்னம்பூரான் சார்,

என்ன சொன்னாலும் பெரியார் அன்றைய சமுதாயத்துக்கு தேவையானவரே. அப்பேர்பப்ட்டவர் இருந்தே இன்னும் சாதி கொடுமை இருக்குதே . அவர் இல்லையென்றால் தமிழகம் ஒடிசா போல ஒரு மாநிலமாகி இருக்கும்

Crime In India 2015 Complete PDF - National Crime Records Bureau
graphics-see page #113 
---
Report:
Chapter 7: 
Crime Against Persons Belonging to SCs / STs 
Page # 109
--- 

 முன்னரே பகிர்ந்த தகவல்தான் இது.

..... தேமொழி

Seshadri Sridharan

unread,
Jan 6, 2017, 3:13:01 AM1/6/17
to mintamil, ipohs...@gmail.com, வேந்தன் அரசு, doraisu...@gmail.com, ras...@gmail.com, jalas...@gmail.com, muku...@gmail.com, krishna...@gmail.com, rnka...@gmail.com, anbuja...@gmail.com, திருத்தம் பொன்.சரவணன், rajis...@gmail.com, Banukumar Rajendran, yesura...@gmail.com, Shrinivasan T, mani muthu, Pandiyaraja Paramasivam, Senguttuvan K, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, Malarvizhi Mangay, Innamburan S.Soundararajan, Kalairajan Krishnan, Krishnamachary Rangaswamy, bala subramani, V. Dhivakar, N D Logasundaram, Megala Ramamourty, பெருமாள் தேவன், coral shree, Geetha Sambasivam, Satish Kumar Dogra, N. Kannan, rajam ramamurti, aravindan....@gmail.com, satha sivam, rathinam.c...@gmail.com, tamil...@gmail.com, sneelak...@gmail.com, vet...@gmail.com, ts.m...@gmail.com, நா. கணேசன், g.sa...@gmail.com, Nagarajan Vadivel, praman...@gmail.com, Subashini Tremmel
2017-01-06 7:06 GMT+05:30 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>:
என்ன சொன்னாலும் பெரியார் அன்றைய சமுதாயத்துக்கு தேவையானவரே. 
~ஆமாம்.


தேவையற்றவர். தெலுங்கருக்கு மட்டுமே அவர் தேவையாய் இருந்தார். பெரியார் தமிழ்க்  குமுகத்தில் வேற்றுமை என்னும் வெறுப்பை விதைத்துள்ளார்.   


அப்பேர்பப்ட்டவர் இருந்தே இன்னும் சாதி கொடுமை இருக்குதே . 

~ அதை கொம்பு சீவி வளர்ப்பவர்கள், அவரது சீடர்களே.


பெரியார் திகவினர் அனைவரும் கலப்பு திருமணம் செய்யவேண்டும் என்று வற்புறுத்தவில்லை. வற்புறுத்தவும் மாட்டார். ஏனென்றால் தெலுங்கர் தமிழரை மணந்து தெலுங்கு அடையாளத்தை இழந்துவிடுவர் என்ற இனப்பாசம் தான். அவ்வளவு ஏன் அம்பேத்துக்கர் பிறந்த மாராட்டியத்திலும் சாதிக் கொடுமை ஒழியவில்லை. சாதிக் கொடுமைக்கு பல காரணங்கள் உண்டு. அதில் முகாமையானது ஒடுக்கப்பட்ட மக்கள் ஆதிக்க நிலப்பண்ணை சாதிகளிடம் கூலிகளாக இருந்தது தான். இப்போது அவர்கள் முன்னேறுவதை இவர்கள் விரும்பவில்லை. 


எத்தனை கூட்டங்களில் ஆள் வைத்துக் கல்லெறிவது செருப்பு வீசுவது என்று பல சம்பவங்கள் நடந்ததைக் கணக்கில்கொண்டால் பெரியார் வெறுப்பு எந்த அளவுக்கு இருந்தது என்பதை யூகிக்க முடியும்

~ நான் அந்த காலகட்டத்தில் அவருடைய கூட்டங்களில் கலந்து கொள்பவன். கல்லெறிந்தது எல்லாம் முதலியார், பிள்ளைமார், சேர்வை, தேவர்,நாடார் வகையறா. அதுவும் அவருடைய வன்முறையில் ஒரு பின்னம். பிராமணர்கள் தலை தெறிக்க அஞ்சி ஓடினார்கள். ஏனெனில் எல்லாம் நிர்பயா கேசு. பிராமண பெண்பிள்ளைகளுக்கு அவரால் ஆபத்து தான்.- இன்னம்பூரான்.

பெரியார் தமக்கே உரிய சத்திரிய மனோபாவத்தோடு மேடை ஏறியதும் தமிழ்ச் சாதிகளை எல்லாம் மனம் போனபடி திட்டினார் ஏதோ அவர் மன்னர் போலவும் தமிழர் அவர்க்கு  அடிமைபோலவும். புராணங்களை பிராமணர் பரப்பினர் என்றால் இவருடைய நாயுடு, ரெட்டி, செட்டி, ராசு தெலுங்க இனத்தார் புராணங்களை முழுமையாக நம்பினர் கோவில்களுக்கு உபயம், நன்கொடை ஈந்து கோவில் வழிபாட்டை போற்றினர். புராண புரட்டிற்காக பிராமணரை திட்டிய பெரியார் தம் தெலுங்கு இனத்தாரின் மதப்பற்றை ஒருநாளாவது திட்டியது உண்டா? இல்லையே. அதனால் தான் அவரது எந்த திராவிடக் கருத்தியலும் மக்கள் ஏற்பை  பெறாமல் தோற்றுப்போனது.

காத்தன் தொன்னன் 

 நச்சோணன்  

Seshadri Sridharan

unread,
Jan 6, 2017, 3:13:01 AM1/6/17
to mintamil, ipohs...@gmail.com, வேந்தன் அரசு, doraisu...@gmail.com, ras...@gmail.com, jalas...@gmail.com, muku...@gmail.com, krishna...@gmail.com, rnka...@gmail.com, anbuja...@gmail.com, திருத்தம் பொன்.சரவணன், rajis...@gmail.com, Banukumar Rajendran, yesura...@gmail.com, Shrinivasan T, mani muthu, Pandiyaraja Paramasivam, Senguttuvan K, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, Malarvizhi Mangay, Innamburan S.Soundararajan, Kalairajan Krishnan, Krishnamachary Rangaswamy, bala subramani, V. Dhivakar, N D Logasundaram, Megala Ramamourty, பெருமாள் தேவன், coral shree, Geetha Sambasivam, Satish Kumar Dogra, N. Kannan, rajam ramamurti, aravindan....@gmail.com, satha sivam, rathinam.c...@gmail.com, tamil...@gmail.com, sneelak...@gmail.com, vet...@gmail.com, ts.m...@gmail.com, நா. கணேசன், g.sa...@gmail.com, Nagarajan Vadivel, praman...@gmail.com, Subashini Tremmel
2017-01-05 23:45 GMT+05:30 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:
\\\\தமிழ்த்தேசியம் தமிழ் தமிழர் தமிழ்ப் பண்பாட்டின் உறைவிடம். ஏன் இந்தியாவை உதறக்கூடாது? இந்தியாவிலேயே இருக்கவேண்டும் என்பதற்கு ஞாயமான காரணம் எவரேனும் சொல்லமுடியுமா? ///

தமிழகம் இந்தியக் கலாச்சார/நாகரீக/வரலாறு/ பூதளவியல்/உணவு வகைகள்/ வாழ்க்கை அறநெறிகள்/பணி வேலைகள்/மருந்துகள்/வணிகம் ஆகியவற்றில் நரம்புகளால் இணைக்கப்பட்டு ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் நன்மை தீமைகளில் பங்கெடுத்து வருகிறது.

தாலிகட்டிவிட்டால் கல் ஆனாலும் கணவன் புல் ஆனாலும் புருஷன் என்பது போல் உள்ளது உமது மேலது கருத்து. 

இந்தியாவில் ஒவ்வோர் மாநிலமும் தனி வரலாறு, பண்பாடு, பழக்க வழக்கம், மொழி கொண்ட வேறுபட்ட  நிலப்பகுதிகளாகவே உள்ளன. ஐரோப்பாவே பல வகையில் ஒற்றுமை கொண்டிருந்தாலும் நாடுகள் பிரிந்து தான் உள்ளன. இத்தனைக்கும் அவர்கள் எல்லோருக்கும் புரோதசுதந்து மதம் தான் பின் ஏன் பிரிந்துள்ளார்கள்? நாடு,  தனி நாடு, இறையாண்மை பெற்ற நாடு என்று எப்படி அழைத்தாலும் அது ஒரு நிருவாக அமைப்பு தான் அதனினும் வேறல்ல என்ற தெளிந்த புரிதல் அவர்களுக்கு உள்ளது நமக்கு அது இல்லை
 
தமிழகம் தனித்துப் பிரிந்தால், இவை மூலம் ஏற்படும் பாதிப்புகளோடு, வெளி மாநிலங்களில் பிழைக்கும் மில்லியன் கணக்கான தமிழர் வெளியே விரட்டப்படுவர். அத்தனை பேருக்கும் தமிழ்நாடு வேலை கொடுத்து ஊதியம் அளிக்க முடியுமா ? - சி. ஜெயபாரதன்.

 தெலுங்கானம் ஆந்திரத்தில் இருந்து பிரிந்ததும் இந்த சிக்கல் எழுந்தது. தமிழகம் வெளிமாநிலத்தவர் பலருக்கு வேலையை நல்கியுள்ளது. அந்த வேலையை பிற மாநிலத்தில் உள்ள தமிழர்களுக்குத் தரலாம். நான் தமிழ்நாட்டிற்கு மட்டுமே விடுதலை வேண்டும் என்று சொல்லவில்லை இந்தியாவில் உள்ள எல்லா தேசிய இனங்களுக்கும் இறையாண்மை கிட்டவேண்டும் என்கிறேன்.

Seshadri Sridharan

unread,
Jan 6, 2017, 3:13:01 AM1/6/17
to mintamil, ipohs...@gmail.com, வேந்தன் அரசு, doraisu...@gmail.com, ras...@gmail.com, jalas...@gmail.com, muku...@gmail.com, krishna...@gmail.com, rnka...@gmail.com, anbuja...@gmail.com, திருத்தம் பொன்.சரவணன், rajis...@gmail.com, Banukumar Rajendran, yesura...@gmail.com, Shrinivasan T, mani muthu, Pandiyaraja Paramasivam, Senguttuvan K, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, Malarvizhi Mangay, Innamburan S.Soundararajan, Kalairajan Krishnan, Krishnamachary Rangaswamy, bala subramani, V. Dhivakar, N D Logasundaram, Megala Ramamourty, பெருமாள் தேவன், coral shree, Geetha Sambasivam, Satish Kumar Dogra, N. Kannan, rajam ramamurti, aravindan....@gmail.com, satha sivam, rathinam.c...@gmail.com, tamil...@gmail.com, sneelak...@gmail.com, vet...@gmail.com, ts.m...@gmail.com, நா. கணேசன், g.sa...@gmail.com, Nagarajan Vadivel, praman...@gmail.com, Subashini Tremmel
2017-01-05 21:37 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
தம் தெலுங்கர் இனநல நோக்கை மறைத்துள்ளார். ஆனாலும் அது நீரில் மிதவும் எண்ணெய் போல துலங்க நிற்கிறது. உண்மையை ஒருநாளும் அழுத்தவோ மறைக்கவோ முடியாது. ஆனால் மக்கள் தம் கண்களை மூடிக்கொண்டால் துலங்கும் பொருள் எதுவும் துலங்காது போகும். தமிழ்த் தேசியம் மக்கள் கண்களை திறந்துகொண்டு வருகிறது. 


பெரியார் கன்னடியர். நீங்கள் தெலுங்கர் என்று எழுதுவது பற்றி குறிப்பிட்டுள்ளேன். சிந்து சமவெளி எழுத்தை தமிழ் என்று உயிர், மெய் எழுத்தாகப் படிப்பது போல,
பெரியார் தெலுங்கர் என்பதும். 

தமிழ்,தமிழ்ப்பண்பாடு, தமிழர், தமிழ்நாடு நலன் சார்ந்த கருத்தியலே தமிழ்த்தேசியம் என்பது. தேர்தல் அரசியல் அதில் ஒரு பகுதி தான். அரணமுறுவல் போன்ற பேராசிரியர்கள், சிறு சிறு தமிழ்த் தேசிய இயக்கத்தோர் தமிழ்த் தேசியக் கருத்தியலை பேசவே செய்கின்றனர்.

 
இன்றைக்கும் பெரியார் ஈவேரா வழியில் வந்த கக்ஷிகள் என்று திமுக, அதிமுக தமிழ்நாட்டின் பெரும்பான்மைக் கட்சிகளாக விளங்கிவருகின்றன. தமிழ்தேசியம் போலில்லாமல் தமிழ்நாட்டுக்கு வந்தோர், வருவோர் அனைத்தையும் அரவணைத்து ஆட்சிபீடத்தில் இருந்து சமரசம் செய்து, வருமானத்தைப் பங்கி, டாஸ்மாக் போன்றன அளித்து ஆட்சி பல ஆண்டு செய்யும் திறன் அதிமுக, திமுக கட்சிகளுக்கே இருக்கின்றன. - நா. கணேசன் 

பெரியாரின் அணுகுமுறை தமிழரின் உரிமைகளை பெற்றுத்தராது அடிமையாக்கும்.

தம் தெலுங்கர் இனநல நோக்கை மறைத்துள்ளார். ஆனாலும் அது நீரில் மிதவும் எண்ணெய் போல துலங்க நிற்கிறது. உண்மையை ஒருநாளும் அழுத்தவோ மறைக்கவோ முடியாது. ஆனால் மக்கள் தம் கண்களை மூடிக்கொண்டால் துலங்கும் பொருள் எதுவும் துலங்காது போகும். தமிழ்த் தேசியம் மக்கள் கண்களை திறந்துகொண்டு வருகிறது. 

பெரியார் கன்னடியர். நீங்கள் தெலுங்கர் என்று எழுதுவது பற்றி குறிப்பிட்டுள்ளேன். சிந்து சமவெளி எழுத்தை தமிழ் என்று உயிர், மெய் எழுத்தாகப் படிப்பது போல, பெரியார் தெலுங்கர் என்பதும். 

பலிஜா என்றாலே நாயுடு தான் நாயுடு என்றாலே தெலுங்கு தான். தமிழகத்தை போல கருநாடகத்தின் சில பகுதிகள் தெலுங்கர் குடியேற்றத்திற்கு உள்ளாயின.  பெரியாரின் முன்னோர் ஆந்திரத்தில் இருந்து கருநாடகத்தில் குடியேறியிருக்கலாம்.    https://en.wikipedia.org/wiki/Balija . In Karnataka, they are known as Banajigas.

 சிந்து எழுத்து இது தான் என்று சொல்ல இதுவரை எந்த ஆண் மகனும் அயல் நாட்டில் பிறக்கவில்லை.

 
கொங்குநாட்டுக்கும், கன்னட நாட்டுக்கும் பழைய தொடர்புகள் பல. உ-ம்: பிராமி எழுத்தை கன்னட தேசத்தில் இருந்து கொங்குநாட்டுக்கு சமண முனிவர்கள் கொண்டுவந்தனர். இளங்கோ அடிகள் கன்னட நாட்டில் சமணம் பயின்றிருக்கவேண்டும். பல குறிப்புகளை தந்துள்ளார் அவரது காவியத்தில். உ-ம்: காவதம் என்ற சொல் அங்கே புழங்குவதை தமிழில் அறிமுகம் செய்துள்ளார். - நா. கணேசன்

பிராமி எழுத்து அசோகனுக்கு முன்னேயே தமிழகத்தில் இருந்துள்ளது. பொருந்தல் அகழ்வாய்வு இதற்கு ஒரு சான்று. சமணர் அறிமுகப்படுத்தினர் என்பது தவறு.

Seshadri Sridharan

unread,
Jan 6, 2017, 3:25:07 AM1/6/17
to mintamil, ipohs...@gmail.com, வேந்தன் அரசு, doraisu...@gmail.com, ras...@gmail.com, jalas...@gmail.com, muku...@gmail.com, krishna...@gmail.com, rnka...@gmail.com, anbuja...@gmail.com, திருத்தம் பொன்.சரவணன், rajis...@gmail.com, Banukumar Rajendran, yesura...@gmail.com, Shrinivasan T, mani muthu, Pandiyaraja Paramasivam, Senguttuvan K, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, Malarvizhi Mangay, Innamburan S.Soundararajan, Kalairajan Krishnan, Krishnamachary Rangaswamy, bala subramani, V. Dhivakar, N D Logasundaram, Megala Ramamourty, பெருமாள் தேவன், coral shree, Geetha Sambasivam, Satish Kumar Dogra, N. Kannan, rajam ramamurti, aravindan....@gmail.com, satha sivam, rathinam.c...@gmail.com, tamil...@gmail.com, sneelak...@gmail.com, vet...@gmail.com, ts.m...@gmail.com, நா. கணேசன், g.sa...@gmail.com, Nagarajan Vadivel, praman...@gmail.com, Subashini Tremmel
017-01-05 20:26 GMT+05:30 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>:
காத்தன் தொன்னனுக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம். ஆனாலும் அவர் எழுத்துரிமையை ஏன் தடை செய்யவேண்டும்? 


உங்கள் கருத்துக்கு நன்றி ஐயா!

கௌதம சன்னாவிற்கு பின் நீங்கள் தான் எனக்கா பரிந்து பேசியுள்ளீர்கள். மின்தமிழ் மட்டுறுத்துனர்கள் அமெரிக்கா, செருமனி போன்ற அயல்நாடுகளில் வாழ்ந்துகொண்டு அங்கத்து தனி மனித உரிமையை நுகர்ந்து கொண்டு மின்தமிழில் மட்டும் தமக்கு உவந்த கருத்துக்களுக்கு மட்டும் ஒப்புதல் வழங்கி என் கருத்திற்கு தடை போடுகின்றனர். நான் அண்ணாவின் முதல் எழுத்து காஞ்சிவரம் நையாண்டி ஐயர் என்று 2014 செபுதம்பரில் எழுதியது முதல் இன்று வரை 15 மாத காலமாக மட்டுறுத்தலில் வைக்கப்பட்டுள்ளேன். இது என்ன வகை அறிவார்ந்த செயலோ எனக்கு தெரியாது. ஆனால் இவர்கள் மட்டும் இவர்களுக்கு பிடித்த கருத்துகளை தடை சொல்லுவார் எவரும் இன்றி எழுதி வருகின்றனர்.

மாயோன்

unread,
Jan 6, 2017, 4:48:04 AM1/6/17
to Seshadri Sridharan, mintamil, ipohs...@gmail.com, வேந்தன் அரசு, doraisu...@gmail.com, ras...@gmail.com, jalas...@gmail.com, muku...@gmail.com, krishna...@gmail.com, rnka...@gmail.com, anbuja...@gmail.com, திருத்தம் பொன்.சரவணன், rajis...@gmail.com, Banukumar Rajendran, yesura...@gmail.com, Shrinivasan T, mani muthu, Pandiyaraja Paramasivam, Senguttuvan K, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, Malarvizhi Mangay, Innamburan S.Soundararajan, Kalairajan Krishnan, Krishnamachary Rangaswamy, bala subramani, V. Dhivakar, N D Logasundaram, Megala Ramamourty, பெருமாள் தேவன், coral shree, Geetha Sambasivam, Satish Kumar Dogra, N. Kannan, rajam ramamurti, aravindan....@gmail.com, satha sivam, rathinam.c...@gmail.com, tamil...@gmail.com, sneelak...@gmail.com, vet...@gmail.com, நா. கணேசன், g.sa...@gmail.com, Nagarajan Vadivel, praman...@gmail.com, Subashini Tremmel
//அப்பேர்பப்ட்டவர் இருந்தே இன்னும் சாதி கொடுமை இருக்குதே . அவர் இல்லையென்றால் தமிழகம் ஒடிசா போல ஒரு மாநிலமாகி இருக்கும்//

விவேகானந்தர் அன்றைய இந்தியாவில், கேரளம் தான் சாதி வெறியில் பைத்தியமாக மாறிவிட்டது என சொல்லியிருப்பது ஏனோ இராமசாமியார் பக்தர்களுக்கு தெரிவதில்லை. இராமசாமி நாயக்கர் தனி மனித ஒழுக்கமில்லாமல் இருந்த பொழுதே சாதிய கொடுமைகளை எதிர்த்து அயோத்தி தாசர், வ.உ.சி போன்றோர் போராடியுள்ளனர்.

//இன்றைக்கும் பெரியார் ஈவேரா வழியில் வந்த கக்ஷிகள் என்று திமுக, அதிமுக தமிழ்நாட்டின் பெரும்பான்மைக் 
கட்சிகளாக விளங்கிவருகின்றன. தமிழ்தேசியம் போலில்லாமல் தமிழ்நாட்டுக்கு வந்தோர், வருவோர்
அனைத்தையும் அரவணைத்து ஆட்சிபீடத்தில் இருந்து சமரசம் செய்து, வருமானத்தைப் பங்கி,
டாஸ்மாக் போன்றன அளித்து ஆட்சி பல ஆண்டு செய்யும் திறன் அதிமுக, திமுக கட்சிகளுக்கே இருக்கின்றன.//
அப்புறம் ஏன் வைக்கோ நாயுடு இப்படி அலறுகிறார் ஐயா🤔🤔?


//தமிழர்கள் வன்முறை விரும்பாதவர். ஆயுதம் ஏந்தி இந்தியாவிடம் இருந்து பிரியவேண்டும் என்று எந்த தமிழரும் அரசியல் அரங்கில் இல்லை.//
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிந்தது போல பொது வாக்கெடுப்பு மூலம் பிரியும்படி இங்கு உரிமை இல்லை; தமிழகத்தின் மொழி,கலாச்சாரம்,வரலாறு,சமயம், வணிகம்,உழவு... என எதையும் காக்கவும் உரிமை இல்லை. சமஉரிமையுடன் இருக்க வழி கிடைத்தால் அடிமையாக இல்லாமல் அங்கமாக இருக்கலாம்; இல்லை எனில் என்ன செய்ய ஐயா?

//உ-ம்: பிராமி எழுத்தை கன்னட தேசத்தில் இருந்து கொங்குநாட்டுக்கு சமண முனிவர்கள் கொண்டுவந்தனர்.//
ஐயா, தமிழி/தமிழ் பிராமி தமிழகத்தில் உருவானது. சமணர்கள் கொண்டு வரவில்லை. அன்றைய கருநாடகத்தில் பிராகிருதம் இருந்தது; பிராகிருத மொழிக்கு இருக்கும் முதல் சான்றை விட தமிழியின் முதல் சான்று காலத்தால் முந்தையது-ஆய்வு முடிவுகள் வரவில்லை; 
//தமிழகம் இந்தியக் கலாச்சார/நாகரீக/வரலாறு/ பூதளவியல்/உணவு வகைகள்/ வாழ்க்கை அறநெறிகள்/பணி வேலைகள்/மருந்துகள்/வணிகம் ஆகியவற்றில் நரம்புகளால் இணைக்கப்பட்டு ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் நன்மை தீமைகளில் பங்கெடுத்து வருகிறது.

தமிழகம் தனித்துப் பிரிந்தால், இவை மூலம் ஏற்படும் பாதிப்புகளோடு, வெளி மாநிலங்களில் பிழைக்கும் மில்லியன் கணக்கான தமிழர் வெளியே விரட்டப்படுவர். அத்தனை பேருக்கும் தமிழ்நாடு வேலை கொடுத்து ஊதியம் அளிக்க முடியுமா ?//
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமையாகி வருகிறது என்று சொல்லலாம். இந்தியாவில் இல்லாமல் தனிநாடானால் தமிழகம் ஆசியாவில் சிறந்த நாடாக(முதல் பத்தில்)வரும் என பொருளாதார அமிர்தியா சென் சொல்லியதை பல முறை சொன்னாலும், அதை விடுத்து இந்தியா இல்லையேல் தமிழகம் இல்லை என மக்களை ஏமாற்ற வேண்டாம் ஐயா.



6 ஜனவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 1:52 அன்று, Seshadri Sridharan <ssesh...@gmail.com> எழுதியது:

N. Ganesan

unread,
Jan 6, 2017, 9:05:08 AM1/6/17
to மின்தமிழ், vallamai
On Friday, January 6, 2017 at 1:48:04 AM UTC-8, மாயோன் wrote:


//உ-ம்: பிராமி எழுத்தை கன்னட தேசத்தில் இருந்து கொங்குநாட்டுக்கு சமண முனிவர்கள் கொண்டுவந்தனர்.//
ஐயா, தமிழி/தமிழ் பிராமி தமிழகத்தில் உருவானது. சமணர்கள் கொண்டு வரவில்லை. அன்றைய கருநாடகத்தில் பிராகிருதம் இருந்தது; பிராகிருத மொழிக்கு இருக்கும் முதல் சான்றை விட தமிழியின் முதல் சான்று காலத்தால் முந்தையது-ஆய்வு முடிவுகள் வரவில்லை; 

கொங்குநாட்டில் தான் பிராமி அசோகருக்கு முன்பு எழுதியது கிடைத்துள்ளது. அவற்றில் பிராகிருதமும், தமிழும் சம அளவிலே கிடைக்கின்றன. சமண முனிவர்களும், வணிகர்களும் தமிழ்நாட்டுக்கு
பிராமி லிபியை அறிமுகப்படுத்தியுள்ளனர் என்பதற்கு கொங்கில் கிடைத்துள்ள எழுத்துக்கள் நல்ல சான்று ஆகும்.
 

//தமிழகம் இந்தியக் கலாச்சார/நாகரீக/வரலாறு/ பூதளவியல்/உணவு வகைகள்/ வாழ்க்கை அறநெறிகள்/பணி வேலைகள்/மருந்துகள்/வணிகம் ஆகியவற்றில் நரம்புகளால் இணைக்கப்பட்டு ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் நன்மை தீமைகளில் பங்கெடுத்து வருகிறது.

தமிழகம் தனித்துப் பிரிந்தால், இவை மூலம் ஏற்படும் பாதிப்புகளோடு, வெளி மாநிலங்களில் பிழைக்கும் மில்லியன் கணக்கான தமிழர் வெளியே விரட்டப்படுவர். அத்தனை பேருக்கும் தமிழ்நாடு வேலை கொடுத்து ஊதியம் அளிக்க முடியுமா ?//
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமையாகி வருகிறது என்று சொல்லலாம். இந்தியாவில் இல்லாமல் தனிநாடானால் தமிழகம் ஆசியாவில் சிறந்த நாடாக(முதல் பத்தில்)வரும் என பொருளாதார அமிர்தியா சென் சொல்லியதை பல முறை சொன்னாலும், அதை விடுத்து இந்தியா இல்லையேல் தமிழகம் இல்லை என மக்களை ஏமாற்ற வேண்டாம் ஐயா.


அமார்த்ய சென்.

அமார்த்ய சேனர் எழுதிய கட்டுரை தலைப்பு, வெளிவந்த ஆண்டு, இதழின் பெயர் தெரியுமா? இருந்தால் தாருங்கள், படிக்க ஆவல்.

நா. கணேசன்
 
 

N. Ganesan

unread,
Jan 6, 2017, 9:09:34 AM1/6/17
to மின்தமிழ்


On Monday, January 2, 2017 at 8:11:14 PM UTC-8, இன்னம்பூரான் wrote:
ஒரு விளக்கம் தருகிறேன், திரு ஜயசங்கர். எதுவானாலும் படிக்க நீங்கள் ரெடியாக இருப்பதால், தான், இந்த விளக்கம். தலைவர்கள் யாவருமே விமர்சிக்கப்படுவார்கள். 
தற்காலம் காந்திஜியை இகழும் பதிவுகளும் வருகின்றன. பெரியாரை நேரில் சந்தித்து அவரை சிறிதளவு அறிந்த நான், அவருடைய சொற்பொழிவுகளையும், எழுத்துக்களையும் அந்தந்த நாட்களில் ஆர்வத்துடன் படித்தவன். அவருடைய நெருங்கிய நண்பரும், அரசியல் எதிர் துருவமான திரு.வி.க. அவர்களின் விசிறி. அவருடைய நெருங்கிய நண்பரும், அரசியல் எதிர் துருவமான ராஜாஜி அவர்களின் சீடன். ஈ.வே.ரா. அவர்கள் சர்ச்சைக்கு உரிய வாறு, சமூக முன்னேற்றத்துக்கும், சம்பிரதாய விலக்கலுக்கும் பணி செய்திருந்தாலும், விடுதலை நாளை துக்க நாளாக கொண்டாடுவது, பிராமணர்களின் சிகை அறுப்பது, பூணூலை அறுப்பது, பிள்ளையார் சிலையை உடைப்பது, ராமர் படத்தின் மீது செருப்படி செய்வது போன்ற கைங்கர்யங்களை துவக்கி வைத்தவர். அவருடைய சீடர்களே ஒட்டு மொத்தமாக அவரை தள்ளுபடி செய்து, 'கடவுளை நம்புவன் முட்டாள்' என்ற அவருடைய வைரவரியை பக்தியுடன் வரித்துக்கொண்டு மண்சோறு தின்பதும், மொட்டை அடித்துக்கொள்வதுமாகவும், சாதி மத பேதங்களுக்கு உரம் இட்டு வளர்த்து அரசியல் செய்வதின் மணிவிழா நெருங்கும் காலகட்டத்தில், அவரை புரியவா வைக்கமுடியும்.? சிரிப்பு தான் வருகிறது. அவர் முன்னாலேயே, அவருடைய சீடர்களால் புடைக்கப்பட்ட நான் அவரது நற்செயல்களை பாராட்டுகிறேன். 


ஈவேரா குடுமி அறுப்பது, பூணூலை அறுப்பது போன்ற செயல்களை துவக்கி வைத்தாரா? சிலை உடைப்பு போன்றவை படித்துள்ளேன். திராவிட இயக்கத்தவர்களிடம் கேட்டால் குடுமி, பூணூல் அறுக்க வேண்டும் எனப் பேசியதோ, எழுதியதோ ஈவேரா செய்யவில்லை என்கிறார்கள். பெரியார் பேச்சில், எழுத்தில், கட்டுரைகளில் நீங்கள் சொல்வதற்கான சான்றுகள் உள்ளனவா? இருந்தால் தாருங்கள்.

நா. கணேசன்
 

இன்னம்பூரான்

On Mon, Jan 2, 2017 at 7:39 PM, Jaisankar Jaganathan <jaisa...@gmail.com> wrote:
பெரியாரின் புரிதல்கள் இழை பெரியாரை இகழவே ஆரம்பிக்கப்பட்டது போல் இருக்கிறது. எதுவா இருந்தாலும் படிக்க நான் ரெடி. 

-- 

-- 
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--- 
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Jan 6, 2017, 9:20:04 AM1/6/17
to வல்லமை, மின்தமிழ்


On Thursday, January 5, 2017 at 10:17:02 PM UTC-8, நச்சோணன் wrote:
2017-01-05 21:26 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

On Tuesday, January 3, 2017 at 10:39:30 PM UTC-8, Jaisankar Jaganathan wrote:
சேஷாத்ரி ஸ்ரீதரன் அவர்களே,

தமிழ்த்தேசியம் பற்றி தமிழ்நாட்டில் இணையம் தவிர யாருக்கும் தெரியாது என்பதே உண்மை.

தமிழ்நாட்டில் தினமும் பேராசிரியர்கள், புலவர்கள், கவிஞர்கள், ... என் பண்ணையத்தில் உள்ளோர், உறவினர்கள், கோவை தொழிலதிபர்கள், மருத்துவர்கள், ... என்று தொடர்பில் இருக்கிறேன். யாருக்கும் தமிழ்தேசியம் என்று தெரியக் காணோம். தமிழ் தேசியம் என்று சீமான் போன்றோருடன் சேர்ந்தோ தனியாகவோ தேர்தலில் நின்றால் 1%-க்கும் குறைவாகவே ஓட்டு வரும் என்பதுதான் யதார்த்தநிலைமை.


தமிழ்,தமிழ்ப்பண்பாடு, தமிழர், தமிழ்நாடு நலன் சார்ந்த கருத்தியலே தமிழ்த்தேசியம் என்பது. தேர்தல் அரசியல் அதில் ஒரு பகுதி தான். அரணமுறுவல் போன்ற பேராசிரியர்கள், சிறு சிறு தமிழ்த் தேசிய இயக்கத்தோர் தமிழ்த் தேசியக் கருத்தியலை பேசவே செய்கின்றனர்.


அரணமுறுவல் யார் என அறியேன். எந்தத் துறையில் பேராசிரியர்? என்னென்ன நூல்கள் எழுதியுள்ளார். தரம்வாய்ந்த ஜர்னல்ஸ்-ல் ஏதாவது ஆய்வுக்கட்டுரைகள் வெளியிட்டுள்ளாரா?
பல ஆயிரம் கல்லூரிகளில் பல பேராசிரியர்கள் இருக்கின்றனர். இந்த பேராசிரியர் ஆய்வு வெளியீடுகள் என்ன என்பதை அறிந்துகொள்ளா ஆர்வம்.

நா. கணேசன்
 
 
இன்றைக்கும் பெரியார் ஈவேரா வழியில் வந்த கக்ஷிகள் என்று திமுக, அதிமுக தமிழ்நாட்டின் பெரும்பான்மைக் கட்சிகளாக விளங்கிவருகின்றன. தமிழ்தேசியம் போலில்லாமல் தமிழ்நாட்டுக்கு வந்தோர், வருவோர் அனைத்தையும் அரவணைத்து ஆட்சிபீடத்தில் இருந்து சமரசம் செய்து, வருமானத்தைப் பங்கி, டாஸ்மாக் போன்றன அளித்து ஆட்சி பல ஆண்டு செய்யும் திறன் அதிமுக, திமுக கட்சிகளுக்கே இருக்கின்றன. - நா. கணேசன் 

பெரியாரின் அணுகுமுறை தமிழரின் உரிமைகளை பெற்றுத்தராது அடிமையாக்கும்.

நச்சோணன்    

N. Ganesan

unread,
Jan 6, 2017, 9:27:38 AM1/6/17
to வல்லமை, மின்தமிழ்


On Friday, January 6, 2017 at 6:25:35 AM UTC-8, நச்சோணன் wrote:
2017-01-06 19:35 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
On Friday, January 6, 2017 at 1:48:04 AM UTC-8, மாயோன் wrote:

/உ-ம்: பிராமி எழுத்தை கன்னட தேசத்தில் இருந்து கொங்குநாட்டுக்கு சமண முனிவர்கள் கொண்டுவந்தனர்.//
ஐயா, தமிழி/தமிழ் பிராமி தமிழகத்தில் உருவானது. சமணர்கள் கொண்டு வரவில்லை. அன்றைய கருநாடகத்தில் பிராகிருதம் இருந்தது; பிராகிருத மொழிக்கு இருக்கும் முதல் சான்றை விட தமிழியின் முதல் சான்று காலத்தால் முந்தையது-ஆய்வு முடிவுகள் வரவில்லை; 

கொங்குநாட்டில் தான் பிராமி அசோகருக்கு முன்பு எழுதியது கிடைத்துள்ளது. அவற்றில் பிராகிருதமும், தமிழும் சம அளவிலே கிடைக்கின்றன. சமண முனிவர்களும், வணிகர்களும் தமிழ்நாட்டுக்கு பிராமி லிபியை அறிமுகப்படுத்தியுள்ளனர் என்பதற்கு கொங்கில் கிடைத்துள்ள எழுத்துக்கள் நல்ல சான்று ஆகும்.


கொற்கையில் கி.மு 8 ஆம் நூற்றாண்டிலேயே பிராமி எனும் தமிழி எழுத்து பொறிப்பு பானையோடு கிடைத்துள்ளது. எனவே சமணர் தான் அந்த எழுத்தை தமிழருக்கு சொல்லித்தந்தனர் என்ற கருத்தை முதலில் கைவிடுங்கள்.


கொற்கையில் கி.மு. 8-ஆம் நூற்றாண்டில் பிராமி இல்லை. கணக்குப் பிழை. அங்கே நீர் தோண்டத் தோண்ட வரும். Contamination is high. கொற்கை டெஸ்டிங்குக்கு அனுப்பிவைத்த
தொல்பொருள் அறிஞர் கொடுத்த தகவல்.

நா. கணேசன்
 

N. Ganesan

unread,
Jan 6, 2017, 9:43:12 AM1/6/17
to வல்லமை, vallamai, மின்தமிழ்


On Thursday, January 5, 2017 at 11:26:49 PM UTC-8, நச்சோணன் wrote:
2017-01-05 23:45 GMT+05:30 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:
\\\\தமிழ்த்தேசியம் தமிழ் தமிழர் தமிழ்ப் பண்பாட்டின் உறைவிடம். ஏன் இந்தியாவை உதறக்கூடாது? இந்தியாவிலேயே இருக்கவேண்டும் என்பதற்கு ஞாயமான காரணம் எவரேனும் சொல்லமுடியுமா? ///

தமிழகம் இந்தியக் கலாச்சார/நாகரீக/வரலாறு/ பூதளவியல்/உணவு வகைகள்/ வாழ்க்கை அறநெறிகள்/பணி வேலைகள்/மருந்துகள்/வணிகம் ஆகியவற்றில் நரம்புகளால் இணைக்கப்பட்டு ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் நன்மை தீமைகளில் பங்கெடுத்து வருகிறது.

தாலிகட்டிவிட்டால் கல் ஆனாலும் கணவன் புல் ஆனாலும் புருஷன் என்பது போல் உள்ளது உமது மேலது கருத்து. 

இந்தியாவில் ஒவ்வோர் மாநிலமும் தனி வரலாறு, பண்பாடு, பழக்க வழக்கம், மொழி கொண்ட வேறுபட்ட  நிலப்பகுதிகளாகவே உள்ளன. ஐரோப்பாவே பல வகையில் ஒற்றுமை கொண்டிருந்தாலும் நாடுகள் பிரிந்து தான் உள்ளன. இத்தனைக்கும் அவர்கள் எல்லோரும் புரோதசுதந்து மதம் தான் பின் ஏன் பிரிந்துள்ளார்கள்? நாடு,  தனி நாடு, இறையாண்மை பெற்ற நாடு என்று எப்படி அழைத்தாலும் அது ஒரு நிருவாக அமைப்பு தான் அதனினும் வேறல்ல என்ற தெளிந்த புரிதல் அவர்களுக்கு உள்ளது நமக்கு அது இல்லை.

 
தமிழகம் தனித்துப் பிரிந்தால், இவை மூலம் ஏற்படும் பாதிப்புகளோடு, வெளி மாநிலங்களில் பிழைக்கும் மில்லியன் கணக்கான தமிழர் வெளியே விரட்டப்படுவர். அத்தனை பேருக்கும் தமிழ்நாடு வேலை கொடுத்து ஊதியம் அளிக்க முடியுமா ?

தெலுங்கானம் ஆந்திரத்தில் இருந்து பிரிந்ததும் இந்த சிக்கல் எழுந்தது. தமிழகம் வெளிமாநிலத்தவர் பலருக்கு வேலையை நல்கியுள்ளது. அந்த வேலையை பிற மாநிலத்தில் உள்ள தமிழர்களுக்குத் தரலாம். நான் தமிழ்நாட்டிற்கு மட்டுமே விடுதலை வேண்டும் என்று சொல்லவில்லை இந்தியாவில் உள்ள எல்லா தேசிய இனங்களுக்கும் இறையாண்மை கிட்டவேண்டும் என்கிறேன்.


நல்ல கருத்து. ஜெயலலிதா மறைவு முதன்முதலாக, பெரும்பான்மை தமிழ்ச்சாதியைச் சார்ந்தவர்களிடம் அதிகாரம் வழங்கியுள்ளது. எண்ணிக்கையில் 5 பெருஞ்சாதி தமிழர்கள் உண்டு:
பள்ளர், பறையர், கவுண்டர், வன்னியர், தேவர். மற்ற அனைவரும் 6-ஆம் குழு எனலாம். ஒற்றுமையாக இருந்து அண்டை மாநிலங்கள் போல, தமக்குள் அதிகாரத்தை பங்கி
தங்களைத் தாங்களே ஆள்வரா? இல்லை, மதறாஸ் மீடியாக்கள் தயாரிக்கும் பிற மாநிலத்தில் இருந்து வரும் நடிக, நடிகைகளுக்கு தான் முதல்வர் பதவியா? அடிமை வாழ்வா? என
இவர்கள் தாம் முடிவு செய்யவேண்டும். பார்ப்போம் எப்படி தமிழக அரசியல் சதுரங்க காய்கள் நகர்த்தப்படுகின்றன என்று.

நா. கணேசன்
 
 நச்சோணன்   

சி. ஜெயபாரதன்

unread,
Jan 6, 2017, 9:49:21 AM1/6/17
to vallamai, mintamil, tamilmantram, vannan vannan
////தாலிகட்டிவிட்டால் கல் ஆனாலும் கணவன் புல் ஆனாலும் புருஷன் என்பது போல் உள்ளது உமது மேலது கருத்து.//// 

இது பாட்டி வாசகம்.  படித்தவர், அனுபவம் பெற்றவர் வாசகமில்லை

///இந்தியாவில் ஒவ்வோர் மாநிலமும் தனி வரலாறு, பண்பாடு, பழக்க வழக்கம், மொழி கொண்ட வேறுபட்ட  நிலப்பகுதிகளாகவே உள்ளன. ஐரோப்பாவே பல வகையில் ஒற்றுமை கொண்டிருந்தாலும் நாடுகள் பிரிந்து தான் உள்ளன. இத்தனைக்கும் அவர்கள் எல்லோரும் புரோதசுதந்து மதம் தான் பின் ஏன் பிரிந்துள்ளார்கள்? நாடு,  தனி நாடு, இறையாண்மை பெற்ற நாடு என்று எப்படி அழைத்தாலும் அது ஒரு நிருவாக அமைப்பு தான் அதனினும் வேறல்ல என்ற தெளிந்த புரிதல் அவர்களுக்கு உள்ளது நமக்கு அது இல்லை.////

இந்த கணக்குச் சமன்பாடு வெறும் ஏட்டுச் சுரைக்காய்.  பாகிஸ்தான் பிரிவினைப் புலப் பெயர்ச்சியில் எத்தனை இந்து முஸ்லீம் மக்கள் வீடு, நிலம், உயிரிழந்தனர் என்று எண்ணிப் பார்க்க வேண்டும், 

நீரும் எரிசக்தியும் குன்றிய தனித் தமிழ்நாடு வேலையில்லா திண்டாட்டத்தில் பங்களா தேசம்போல் பிச்சை நாடாகப் போகும்.

சி. ஜெயபாரதன்.


2017-01-06 2:26 GMT-05:00 seshadri sridharan <ssesh...@gmail.com>:
2017-01-05 23:45 GMT+05:30 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:
\\\\தமிழ்த்தேசியம் தமிழ் தமிழர் தமிழ்ப் பண்பாட்டின் உறைவிடம். ஏன் இந்தியாவை உதறக்கூடாது? இந்தியாவிலேயே இருக்கவேண்டும் என்பதற்கு ஞாயமான காரணம் எவரேனும் சொல்லமுடியுமா? ///

தமிழகம் இந்தியக் கலாச்சார/நாகரீக/வரலாறு/ பூதளவியல்/உணவு வகைகள்/ வாழ்க்கை அறநெறிகள்/பணி வேலைகள்/மருந்துகள்/வணிகம் ஆகியவற்றில் நரம்புகளால் இணைக்கப்பட்டு ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் நன்மை தீமைகளில் பங்கெடுத்து வருகிறது.

தாலிகட்டிவிட்டால் கல் ஆனாலும் கணவன் புல் ஆனாலும் புருஷன் என்பது போல் உள்ளது உமது மேலது கருத்து. 

இந்தியாவில் ஒவ்வோர் மாநிலமும் தனி வரலாறு, பண்பாடு, பழக்க வழக்கம், மொழி கொண்ட வேறுபட்ட  நிலப்பகுதிகளாகவே உள்ளன. ஐரோப்பாவே பல வகையில் ஒற்றுமை கொண்டிருந்தாலும் நாடுகள் பிரிந்து தான் உள்ளன. இத்தனைக்கும் அவர்கள் எல்லோரும் புரோதசுதந்து மதம் தான் பின் ஏன் பிரிந்துள்ளார்கள்? நாடு,  தனி நாடு, இறையாண்மை பெற்ற நாடு என்று எப்படி அழைத்தாலும் அது ஒரு நிருவாக அமைப்பு தான் அதனினும் வேறல்ல என்ற தெளிந்த புரிதல் அவர்களுக்கு உள்ளது நமக்கு அது இல்லை.

 
தமிழகம் தனித்துப் பிரிந்தால், இவை மூலம் ஏற்படும் பாதிப்புகளோடு, வெளி மாநிலங்களில் பிழைக்கும் மில்லியன் கணக்கான தமிழர் வெளியே விரட்டப்படுவர். அத்தனை பேருக்கும் தமிழ்நாடு வேலை கொடுத்து ஊதியம் அளிக்க முடியுமா ?

தெலுங்கானம் ஆந்திரத்தில் இருந்து பிரிந்ததும் இந்த சிக்கல் எழுந்தது. தமிழகம் வெளிமாநிலத்தவர் பலருக்கு வேலையை நல்கியுள்ளது. அந்த வேலையை பிற மாநிலத்தில் உள்ள தமிழர்களுக்குத் தரலாம். நான் தமிழ்நாட்டிற்கு மட்டுமே விடுதலை வேண்டும் என்று சொல்லவில்லை இந்தியாவில் உள்ள எல்லா தேசிய இனங்களுக்கும் இறையாண்மை கிட்டவேண்டும் என்கிறேன்.

 நச்சோணன்   

Innamburan S.Soundararajan

unread,
Jan 6, 2017, 9:51:05 AM1/6/17
to vall...@googlegroups.com, மின்தமிழ்
ஈவேரா குடுமி அறுப்பது, பூணூலை அறுப்பது போன்ற செயல்களை துவக்கி வைத்தாரா? சிலை உடைப்பு போன்றவை படித்துள்ளேன். திராவிட இயக்கத்தவர்களிடம் கேட்டால் குடுமி, பூணூல் அறுக்க வேண்டும் எனப் பேசியதோ, எழுதியதோ ஈவேரா செய்யவில்லை என்கிறார்கள். பெரியார் பேச்சில், எழுத்தில், கட்டுரைகளில் நீங்கள் சொல்வதற்கான சான்றுகள் உள்ளனவா? இருந்தால் தாருங்கள்.

~முனைவர் கணேசனார் அவர்களுக்கு இன்னம்பூரான் வாய் புதைத்து, கை கட்டி, தாள் பணிந்து தெரிவிக்கும் சேதி யாதெனில்: 

ஐயா,
செவி சாய்த்து கேட்பீர்களாக. உங்கள் வினா எனக்கு புன்முறுவலை அளிக்கிறது. ஒரு உதாரணம். நான் இங்கிலாந்தில் எட்டு வருடங்கள் முன் Applied Sociology முதுகலை பட்டத்துக்கு படித்துக்கொண்டிருந்த போது சான்று கேட்டு கேட்டு, மார்க் குறைப்பார்கள். எனக்கு அந்த பிரச்னையில்லை. எனினும் ஒரு பாரிஸ்டர் பேராசிரியர் நான் சொன்ன கருத்து ஒன்றுக்கு சான்று இல்லை என்று மார்க் குறைத்தார். 'என்னுடைய ஒரிஜனல் கருத்துக்கு சான்று கேட்பது என்ன நியாயம் என்று வினவ, அவர் மன்னிப்பு கேட்டு விட்ட மார்க்கை உயிர்பித்தார். 
அந்த மாதிரி, நான் நேரில் கேட்டதற்கு, பார்த்ததற்கு சான்று கேட்டால் எப்புடி?
எதற்கும் நம் சேகரிப்பில் சுபாஷிணி, கேப்பில் சைக்கிள் விட்டு, பணம் நாடும் வீர மணியார் அசந்த போது குடியரசு முழுதையும் இராப்பகலாக உழைத்து மின்னாக்கம் செய்து விட்டார். அங்கு தேடி பாருங்களேன், உங்கள் நண்பர் ஆனைமுத்து அவர்களை கேளுங்களேன். 
விடுதலையில் விளம்பரம் செய்து கேளுங்களேன். அநேகமாக பூணூல், சிகை அறுக்கப்பட்ட பிராமணர்கள் செத்து போய் இருப்பார்கள். 
அன்புடன்,
இன்னம்பூரான்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Jan 6, 2017, 10:03:49 AM1/6/17
to மின்தமிழ், vall...@googlegroups.com, minT...@googlegroups.com


On Friday, January 6, 2017 at 6:51:05 AM UTC-8, இன்னம்பூரான் wrote:
ஈவேரா குடுமி அறுப்பது, பூணூலை அறுப்பது போன்ற செயல்களை துவக்கி வைத்தாரா? சிலை உடைப்பு போன்றவை படித்துள்ளேன். திராவிட இயக்கத்தவர்களிடம் கேட்டால் குடுமி, பூணூல் அறுக்க வேண்டும் எனப் பேசியதோ, எழுதியதோ ஈவேரா செய்யவில்லை என்கிறார்கள். பெரியார் பேச்சில், எழுத்தில், கட்டுரைகளில் நீங்கள் சொல்வதற்கான சான்றுகள் உள்ளனவா? இருந்தால் தாருங்கள்.

~முனைவர் கணேசனார் அவர்களுக்கு இன்னம்பூரான் வாய் புதைத்து, கை கட்டி, தாள் பணிந்து தெரிவிக்கும் சேதி யாதெனில்: 

ஐயா,
செவி சாய்த்து கேட்பீர்களாக. உங்கள் வினா எனக்கு புன்முறுவலை அளிக்கிறது. ஒரு உதாரணம். நான் இங்கிலாந்தில் எட்டு வருடங்கள் முன் Applied Sociology முதுகலை பட்டத்துக்கு படித்துக்கொண்டிருந்த போது சான்று கேட்டு கேட்டு, மார்க் குறைப்பார்கள். எனக்கு அந்த பிரச்னையில்லை. எனினும் ஒரு பாரிஸ்டர் பேராசிரியர் நான் சொன்ன கருத்து ஒன்றுக்கு சான்று இல்லை என்று மார்க் குறைத்தார். 'என்னுடைய ஒரிஜனல் கருத்துக்கு சான்று கேட்பது என்ன நியாயம் என்று வினவ, அவர் மன்னிப்பு கேட்டு விட்ட மார்க்கை உயிர்பித்தார். 
அந்த மாதிரி, நான் நேரில் கேட்டதற்கு, பார்த்ததற்கு சான்று கேட்டால் எப்புடி?
எதற்கும் நம் சேகரிப்பில் சுபாஷிணி, கேப்பில் சைக்கிள் விட்டு, பணம் நாடும் வீர மணியார் அசந்த போது குடியரசு முழுதையும் இராப்பகலாக உழைத்து மின்னாக்கம் செய்து விட்டார். அங்கு தேடி பாருங்களேன், உங்கள் நண்பர் ஆனைமுத்து அவர்களை கேளுங்களேன். 
விடுதலையில் விளம்பரம் செய்து கேளுங்களேன். அநேகமாக பூணூல், சிகை அறுக்கப்பட்ட பிராமணர்கள் செத்து போய் இருப்பார்கள். 
அன்புடன்,
இன்னம்பூரான்




என் கேள்வி: ஈவேரா நாயக்கர் பூணூல், குடுமி அறுக்கவேண்டும் எனப் பேசினாரா என்பது. இதற்கான கட்டுரைகள் குடியரசு, விடுதலை, .... எழுதினாரா?

அப்படி அறுக்கப்பட்டவர்கள் இறந்திருந்தாலும், துக்ளக், விகடன், ஹிண்டு, குமுதம், ... மற்ற இந்தியா பத்திரிகைகளில் பதிவு செய்திருப்பார்கள் அல்லவா?
எம்ஜிஆர், ஜெயலலிதா, ... ஆட்சிக்காலங்களிலாவது.

நா. கணேசன்
 
2017-01-06 19:57 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:


On Friday, January 6, 2017 at 6:25:35 AM UTC-8, நச்சோணன் wrote:
2017-01-06 19:35 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
On Friday, January 6, 2017 at 1:48:04 AM UTC-8, மாயோன் wrote:

/உ-ம்: பிராமி எழுத்தை கன்னட தேசத்தில் இருந்து கொங்குநாட்டுக்கு சமண முனிவர்கள் கொண்டுவந்தனர்.//
ஐயா, தமிழி/தமிழ் பிராமி தமிழகத்தில் உருவானது. சமணர்கள் கொண்டு வரவில்லை. அன்றைய கருநாடகத்தில் பிராகிருதம் இருந்தது; பிராகிருத மொழிக்கு இருக்கும் முதல் சான்றை விட தமிழியின் முதல் சான்று காலத்தால் முந்தையது-ஆய்வு முடிவுகள் வரவில்லை; 

கொங்குநாட்டில் தான் பிராமி அசோகருக்கு முன்பு எழுதியது கிடைத்துள்ளது. அவற்றில் பிராகிருதமும், தமிழும் சம அளவிலே கிடைக்கின்றன. சமண முனிவர்களும், வணிகர்களும் தமிழ்நாட்டுக்கு பிராமி லிபியை அறிமுகப்படுத்தியுள்ளனர் என்பதற்கு கொங்கில் கிடைத்துள்ள எழுத்துக்கள் நல்ல சான்று ஆகும்.


கொற்கையில் கி.மு 8 ஆம் நூற்றாண்டிலேயே பிராமி எனும் தமிழி எழுத்து பொறிப்பு பானையோடு கிடைத்துள்ளது. எனவே சமணர் தான் அந்த எழுத்தை தமிழருக்கு சொல்லித்தந்தனர் என்ற கருத்தை முதலில் கைவிடுங்கள்.


கொற்கையில் கி.மு. 8-ஆம் நூற்றாண்டில் பிராமி இல்லை. கணக்குப் பிழை. அங்கே நீர் தோண்டத் தோண்ட வரும். Contamination is high. கொற்கை டெஸ்டிங்குக்கு அனுப்பிவைத்த
தொல்பொருள் அறிஞர் கொடுத்த தகவல்.

நா. கணேசன்
 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Jan 6, 2017, 10:11:27 AM1/6/17
to மின்தமிழ், vallamai


On Friday, January 6, 2017 at 1:48:04 AM UTC-8, மாயோன் wrote:

//இன்றைக்கும் பெரியார் ஈவேரா வழியில் வந்த கக்ஷிகள் என்று திமுக, அதிமுக தமிழ்நாட்டின் பெரும்பான்மைக் 
கட்சிகளாக விளங்கிவருகின்றன. தமிழ்தேசியம் போலில்லாமல் தமிழ்நாட்டுக்கு வந்தோர், வருவோர்
அனைத்தையும் அரவணைத்து ஆட்சிபீடத்தில் இருந்து சமரசம் செய்து, வருமானத்தைப் பங்கி,
டாஸ்மாக் போன்றன அளித்து ஆட்சி பல ஆண்டு செய்யும் திறன் அதிமுக, திமுக கட்சிகளுக்கே இருக்கின்றன.//
 
அப்புறம் ஏன் வைக்கோ நாயுடு இப்படி அலறுகிறார் ஐயா🤔🤔?


வைகோ நாயுடு திராவிட இயக்க பெருங்கட்சிகளிடம் மாறி மாறி இருந்தவர். தமிழ் தேசியம் பெரிய கட்சியானால்
அங்கும் சேர்வார். ஆனால், தமிழ் தேசியக் கட்சியினர் தேர்தலில் நின்று தங்கள் பலத்தை நிரூபிக்கவேண்டும்.
வெறும் இணையம் மாத்திரம் தமிழ்தேசியத்துக்கு அதிகாரம் வழங்குமா?

உங்களுக்கு ஒரு செய்தி: வைகோ சட்டக் கல்லூரியில் மாணவர் அசோசியேசன் தேர்தலில் தமிழர் ஒருவரிடம்
தோற்றார். அந்த தேர்தலில் வெற்றிகொண்டவர் என் உறவினர்.

நா. கணேசன் 

N. Ganesan

unread,
Jan 6, 2017, 10:13:21 AM1/6/17
to மின்தமிழ், vall...@googlegroups.com, minT...@googlegroups.com
On Friday, January 6, 2017 at 1:48:04 AM UTC-8, மாயோன் wrote:

//இன்றைக்கும் பெரியார் ஈவேரா வழியில் வந்த கக்ஷிகள் என்று திமுக, அதிமுக தமிழ்நாட்டின் பெரும்பான்மைக் 
கட்சிகளாக விளங்கிவருகின்றன. தமிழ்தேசியம் போலில்லாமல் தமிழ்நாட்டுக்கு வந்தோர், வருவோர்
அனைத்தையும் அரவணைத்து ஆட்சிபீடத்தில் இருந்து சமரசம் செய்து, வருமானத்தைப் பங்கி,
டாஸ்மாக் போன்றன அளித்து ஆட்சி பல ஆண்டு செய்யும் திறன் அதிமுக, திமுக கட்சிகளுக்கே இருக்கின்றன.//
 
அப்புறம் ஏன் வைக்கோ நாயுடு இப்படி அலறுகிறார் ஐயா🤔🤔?


வைகோ நாயுடு திராவிட இயக்க பெருங்கட்சிகளிடம் மாறி மாறி இருந்தவர். தமிழ் தேசியம் பெரிய கட்சியானால்
அங்கும் சேர்வார். ஆனால், தமிழ் தேசியக் கட்சியினர் தேர்தலில் நின்று தங்கள் பலத்தை நிரூபிக்கவேண்டும்.
வெறும் இணையம் மாத்திரம் தமிழ்தேசியத்துக்கு அதிகாரம் வழங்குமா?

உங்களுக்கு ஒரு செய்தி: வைகோ சட்டக் கல்லூரியில் மாணவர் அசோசியேசன் தேர்தலில் தமிழர் ஒருவரிடம்
தோற்றார். அந்த தேர்தலில் வெற்றிகொண்டவர் என் உறவினர்.

நா. கணேசன் 

சி. ஜெயபாரதன்

unread,
Jan 6, 2017, 11:02:32 AM1/6/17
to vallamai, mintamil, tamilmantram, vannan vannan, Oru Arizonan
கூட்டு நாடாய் இருக்கும்போது எழும் பிரச்சனைகளை விட, தமிழகம் தனியாக இருந்தால் பிரச்சனைகள் பத்து / இருபது மடங்கு பெருகும். எல்லைச் சண்டைகள், திருட்டுத் தொல்லைகள் உண்டாகும். யாரிடம் முறையிடுவது ?  நியூயார்க் ஐக்கிய நாடுகள் பேரவையிலா ?  

நாணயம் பொதுவா ? வேறா ?

தமிழகத்தில் ஆறு கோடித் தமிழர் [?] பாஸ்போர்ட்டுடன் அண்டை மாநிலங்களில் நடமாடும்போது அயலவராய் ஒதுக்கப்படுவர்.

சி. ஜெயபாரதன்

Innamburan S.Soundararajan

unread,
Jan 6, 2017, 11:27:23 AM1/6/17
to vall...@googlegroups.com, mintamil, tamilmantram, vannan vannan, Oru Arizonan
அப்படி அறுக்கப்பட்டவர்கள் இறந்திருந்தாலும், துக்ளக், விகடன், ஹிண்டு, குமுதம், ... மற்ற இந்தியா பத்திரிகைகளில் பதிவு செய்திருப்பார்கள் அல்லவா?
~ உங்களுக்கு கிடைக்காத செய்தியா? தட்டுங்கள்; திறக்கப்படும்.
என் கேள்வி: ஈவேரா நாயக்கர் பூணூல், குடுமி அறுக்கவேண்டும் எனப் பேசினாரா என்பது. இதற்கான கட்டுரைகள் குடியரசு, விடுதலை, .... எழுதினாரா?
~ இதை நீங்களே தேடிக்கொள்ளக்கூடாதா? நான் கூறியது புரட்டுக்கதை என்கிறீர்களா?

Seshadri Sridharan

unread,
Jan 7, 2017, 12:11:41 AM1/7/17
to mintamil, ipohs...@gmail.com, வேந்தன் அரசு, doraisu...@gmail.com, ras...@gmail.com, jalas...@gmail.com, muku...@gmail.com, krishna...@gmail.com, rnka...@gmail.com, anbuja...@gmail.com, திருத்தம் பொன்.சரவணன், rajis...@gmail.com, Banukumar Rajendran, yesura...@gmail.com, Shrinivasan T, mani muthu, Pandiyaraja Paramasivam, Senguttuvan K, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, Malarvizhi Mangay, Innamburan S.Soundararajan, Kalairajan Krishnan, Krishnamachary Rangaswamy, bala subramani, V. Dhivakar, N D Logasundaram, Megala Ramamourty, பெருமாள் தேவன், coral shree, Geetha Sambasivam, Satish Kumar Dogra, N. Kannan, rajam ramamurti, aravindan....@gmail.com, satha sivam, rathinam.c...@gmail.com, tamil...@gmail.com, sneelak...@gmail.com, vet...@gmail.com, ts.m...@gmail.com, நா. கணேசன், g.sa...@gmail.com, Nagarajan Vadivel, praman...@gmail.com, Subashini Tremmel
2017-01-06 19:50 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
தமிழ்,தமிழ்ப்பண்பாடு, தமிழர், தமிழ்நாடு நலன் சார்ந்த கருத்தியலே தமிழ்த்தேசியம் என்பது. தேர்தல் அரசியல் அதில் ஒரு பகுதி தான். அரணமுறுவல் போன்ற பேராசிரியர்கள், சிறு சிறு தமிழ்த் தேசிய இயக்கத்தோர் தமிழ்த் தேசியக் கருத்தியலை பேசவே செய்கின்றனர்.


அரணமுறுவல் யார் என அறியேன். எந்தத் துறையில் பேராசிரியர்? என்னென்ன நூல்கள் எழுதியுள்ளார். தரம்வாய்ந்த ஜர்னல்ஸ்-ல் ஏதாவது ஆய்வுக்கட்டுரைகள் வெளியிட்டுள்ளாரா?
பல ஆயிரம் கல்லூரிகளில் பல பேராசிரியர்கள் இருக்கின்றனர். இந்த பேராசிரியர் ஆய்வு வெளியீடுகள் என்ன என்பதை அறிந்துகொள்ளா ஆர்வம்.- நா. கணேசன்



முனைவர் ந. அரணமுறுவல் (20-10-1949) ... தனித்தமிழ் உணர்வாளர் ... தமிழியக்கத் தொண்டர் ... ஈழ விடுதலைப்போராட்டத் தீவிர ஆதரவாளர் ... பொதுவுடமைச் சிந்தனையாளர் ... தமிழ்த்தேசியப் போராளி... இவ்வாறு அடுக்கிக்கொண்டே செல்லலாம். எனக்கு 40 ஆண்டுகால நண்பர் ... தோழர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பிஓஎல்., பட்டம், சென்னைப் பச்சையப்பா கல்லூரியில் தமிழில்முதுகலைப் பட்டம், சென்னைப் பல்கலைக்கழகத்தில்தமிழ்மொழித்துறையில் எனது வழிகாட்டுதலில் முனைவர் பட்டம் ஆகியவற்றைப் பெற்றவர். பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் தென்மொழி இதழுக்கு ஆணிவேராகச் செயல்பட்டவர். தென்மொழி இதழுக்காகவே கடலூரிலிருந்து சென்னையைநோக்கித் தனது வாழ்க்கையைத் திருப்பினார். சூளைமேட்டில் ஒரு தனியார் உயர்நிலைப்பள்ளியில் தனது ஆசிரியப்பணியைத் தொடங்கினார்.
 

தேமொழி

unread,
Jan 7, 2017, 1:25:43 AM1/7/17
to மின்தமிழ்


On Friday, January 6, 2017 at 6:51:05 AM UTC-8, இன்னம்பூரான் wrote:
ஈவேரா குடுமி அறுப்பது, பூணூலை அறுப்பது போன்ற செயல்களை துவக்கி வைத்தாரா? சிலை உடைப்பு போன்றவை படித்துள்ளேன். திராவிட இயக்கத்தவர்களிடம் கேட்டால் குடுமி, பூணூல் அறுக்க வேண்டும் எனப் பேசியதோ, எழுதியதோ ஈவேரா செய்யவில்லை என்கிறார்கள். பெரியார் பேச்சில், எழுத்தில், கட்டுரைகளில் நீங்கள் சொல்வதற்கான சான்றுகள் உள்ளனவா? இருந்தால் தாருங்கள்.

~முனைவர் கணேசனார் அவர்களுக்கு இன்னம்பூரான் வாய் புதைத்து, கை கட்டி, தாள் பணிந்து தெரிவிக்கும் சேதி யாதெனில்: 

ஐயா,
செவி சாய்த்து கேட்பீர்களாக. உங்கள் வினா எனக்கு புன்முறுவலை அளிக்கிறது. ஒரு உதாரணம். நான் இங்கிலாந்தில் எட்டு வருடங்கள் முன் Applied Sociology முதுகலை பட்டத்துக்கு படித்துக்கொண்டிருந்த போது சான்று கேட்டு கேட்டு, மார்க் குறைப்பார்கள். எனக்கு அந்த பிரச்னையில்லை. எனினும் ஒரு பாரிஸ்டர் பேராசிரியர் நான் சொன்ன கருத்து ஒன்றுக்கு சான்று இல்லை என்று மார்க் குறைத்தார். 'என்னுடைய ஒரிஜனல் கருத்துக்கு சான்று கேட்பது என்ன நியாயம் என்று வினவ, அவர் மன்னிப்பு கேட்டு விட்ட மார்க்கை உயிர்பித்தார். 
அந்த மாதிரி, நான் நேரில் கேட்டதற்கு, பார்த்ததற்கு சான்று கேட்டால் எப்புடி?
எதற்கும் நம் சேகரிப்பில் சுபாஷிணி, கேப்பில் சைக்கிள் விட்டு, பணம் நாடும் வீர மணியார் அசந்த போது குடியரசு முழுதையும் இராப்பகலாக உழைத்து மின்னாக்கம் செய்து விட்டார். அங்கு தேடி பாருங்களேன்,


கருத்துப் பிழைகள்:

குடிஅரசு இதழ்களை மின்னாக்கம் செய்து பல போராட்டங்களுக்குப் பின்னர் வெளியிட்டவர் கொளத்தூர் மணி (- https://ta.wikipedia.org/s/2bog) அவர்கள். 

பெரியார் கருத்துக்கள் தொகுப்புப் பணி[மூலத்தைத் தொகு]

பெரியார் அவர்களால் மே 2 1925 முதல் நடத்தப்பட்ட குடிஅரசு என்ற வார ஏட்டிலுள்ள பெரியாரின் எழுத்துக்களையும் பேச்சுகளையும் தொகுத்துள்ளார். அப்போது திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி அவர்கள் பெரியார் எழுத்துக்களை வெளியிட தங்களுக்கு மட்டுமே பதிப்புரிமை உள்ளது எனக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கில் இவர்களுக்கு சாதகமாக தீர்ப்பான பிறகு மேல்முறையீடு செய்தார் வீரமணி. அவ்வழக்கும் இவர்களுக்கு சாதகமாகத் தீர்ப்பாகியதால், உச்சநீதி மன்றத்துக்கே சென்றார் வீரமணி. ஆனால், அவ்வழக்கை விசாரணைக்குத் தகுதியற்றது எனக் கூறி தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். இவ்வழக்கிற்கு அளிக்கப்பட்ட தீர்ப்பின் காரணமாக பெரியாரின் எழுத்துக்களும், பேச்சுகளும் மக்கள் சொத்தாக்கப்பட்டன. எனவே, குடிஅரசு 1925 முதல் குடிஅரசு 1938 வரை தான் தொகுத்த 27 தொகுதிகளையும் வெளியிட்டார். மேலும் பெரியாரால் 1928 முதல் 1930 வரை நடத்தப்பட்ட REVOLT என்னும் ஆங்கில வார ஏட்டில் உள்ள கட்டுரைகளையும் தொகுத்து வெளியிட்டுள்ளார்.இவை மொத்தம் 11000 பக்கங்கள்.



///பணம் நாடும் வீர மணியார்///

இல்லை திக தலைவர் வீரமணி எந்த பணமும் நாடவில்லை, நூலாக வெளியிடும் முன் திராவிட கழகத்திடம் தெரிவிக்க சொன்னதாகச் செய்தி.
நீதிமன்றத்தில் நீதிபதி சந்துரு அவர்கள் அளித்த தீர்ப்பின்படி பெரியார் எழுத்துக்கள், பேச்சுகள் யாவும் பொது சொத்து .


பெரியாரின் குடியரசு தொகுதிகள் நாளை வெளியீடு!

பெரியாரின் எழுத்து மற்றும் பேச்சுகளை புத்தமாக வெளியிட எப்போதும் தடை கிடையாது என்று திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார். 
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடியரசு இதழில் வெளிவந்த பெரியாரின் பேச்சுக்கள் மற்றும் எழுத்துக்களை பெரியார் திராவிட கழகம் புத்தகங்களாக வெளியிடுவதை எதிர்த்து திராவிட கழகத்தினர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை கேட்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. ஆனால், பெரியாரின் படைப்புகளை புத்தகமாக வெளியிடுவதற்காக நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆனால் பெரியாரின் படைப்புகளை அறக்கட்டளையின் அனுமதி பெற்று யார் வேண்டுமானாலும் புத்தகமாக வெளியிடுவதற்கு எப்போதும் தடை கிடையாது என்று கூறியுள்ளார்.

THF சேகரிப்பில் இருக்கும் குடியரசு சுட்டியை அடுத்துத் தருகிறேன்.  ஆனால் பெரியார் தனது வழிநடப்போருக்கு பிராமணர்களின் பூணூல் குடுமி ஆகியவற்றை நீக்கும்படி எழுதினர் பேசினார் என்பதற்கு சான்றுகளைத் தெரிந்து கொள்ள எனக்கும் ஆவலாக இருக்கிறது.  

..... தேமொழி   

தேமொழி

unread,
Jan 7, 2017, 1:28:21 AM1/7/17
to மின்தமிழ்

தமிழ் மரபு நூலகம்
THF Reference Library
Friday, March 6, 2015


பெரியாரின் குடி அரசு மின்னூல்கள் 





தமஅ வெளியீடு # 221   
குடி அரசு - 1925-1 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (அறிமுகம்)   
Kudiy-Arasu- 1925-1 : Periyarin Ezhuthum Paechum  (Preface)   
http://www.tamilheritage.org/old/text/ebook/periyar/THF1925_preface.pdf

தமஅ வெளியீடு # 222   
குடி அரசு - 1925-2 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி 1)   
Kudiy-Arasu- 1925-2 : Periyarin Ezhuthum Paechum  (Part  1)   
http://www.tamilheritage.org/old/text/ebook/periyar/THF1925_part1.pdf

தமஅ வெளியீடு # 223   
குடி அரசு - 1926-1 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி 2)   
Kudiy-Arasu- 1926-1 : Periyarin Ezhuthum Paechum  (Part  2)   
http://www.tamilheritage.org/old/text/ebook/periyar/THF1926-1part2.pdf

தமஅ வெளியீடு # 224   
குடி அரசு - 1926-2 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி 3)   
Kudiy-Arasu- 1926-2 : Periyarin Ezhuthum Paechum  (Part  3)   
http://www.tamilheritage.org/old/text/ebook/periyar/THF1926-2part3.pdf

தமஅ வெளியீடு # 225   
குடி அரசு - 1927-1 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி 4)   
Kudiy-Arasu- 1927-1 : Periyarin Ezhuthum Paechum  (Part  4)   
http://www.tamilheritage.org/old/text/ebook/periyar/THF1927-1part4.pdf

தமஅ வெளியீடு # 226   
குடி அரசு - 1927-2 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி 5)   
Kudiy-Arasu- 1927-2 : Periyarin Ezhuthum Paechum  (Part  5)   
http://www.tamilheritage.org/old/text/ebook/periyar/THF1927-2part5.pdf

தமஅ வெளியீடு # 227   
குடி அரசு - 1928-1 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி 6)   
Kudiy-Arasu- 1928-1 : Periyarin Ezhuthum Paechum  (Part  6)   
http://www.tamilheritage.org/old/text/ebook/periyar/THF1928-1part6.pdf

தமஅ வெளியீடு # 228   
குடி அரசு - 1928-2 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி 7)   
Kudiy-Arasu- 1928-2 : Periyarin Ezhuthum Paechum  (Part  7)   
http://www.tamilheritage.org/old/text/ebook/periyar/THF1928-2part7.pdf

தமஅ வெளியீடு # 229   
குடி அரசு - 1929-1 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி 8)   
Kudiy-Arasu- 1929-1 : Periyarin Ezhuthum Paechum  (Part  8)   
http://www.tamilheritage.org/old/text/ebook/periyar/THF1929-1part8.pdf

தமஅ வெளியீடு # 230   
குடி அரசு - 1929-2 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி 9)   
Kudiy-Arasu- 1929-2 : Periyarin Ezhuthum Paechum  (Part  9)   
http://www.tamilheritage.org/old/text/ebook/periyar/THF1929-2part9.pdf

தமஅ வெளியீடு # 231   
குடி அரசு - 1930-1 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி 10)   
Kudiy-Arasu- 1930-1 : Periyarin Ezhuthum Paechum  (Part  10)   
http://www.tamilheritage.org/old/text/ebook/periyar/THF1930-1part10.pdf

தமஅ வெளியீடு # 232   
குடி அரசு - 1930-2 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி 11)   
Kudiy-Arasu- 1930-2 : Periyarin Ezhuthum Paechum  (Part  11)   
http://www.tamilheritage.org/old/text/ebook/periyar/THF1930-2part11.pdf

தமஅ வெளியீடு # 233   
குடி அரசு - 1931-1 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி 12)   
Kudiy-Arasu- 1931-1 : Periyarin Ezhuthum Paechum  (Part  12)   
http://www.tamilheritage.org/old/text/ebook/periyar/THF1931_part12.pdf

தமஅ வெளியீடு # 234   
குடி அரசு - 1931-2 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி 13)   
Kudiy-Arasu- 1931-2 : Periyarin Ezhuthum Paechum  (Part  13)   
http://www.tamilheritage.org/old/text/ebook/periyar/THF1931_2part13.pdf

தமஅ வெளியீடு # 235   
குடி அரசு - 1932-1 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி 14)   
Kudiy-Arasu- 1932-1 : Periyarin Ezhuthum Paechum  (Part  14)   
http://www.tamilheritage.org/old/text/ebook/periyar/THF1932_1part14.pdf

தமஅ வெளியீடு # 236   
குடி அரசு - 1932-2 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி 15)   
Kudiy-Arasu- 1932-2 : Periyarin Ezhuthum Paechum  (Part  15)   
http://www.tamilheritage.org/old/text/ebook/periyar/THF1932-2part15.pdf

தமஅ வெளியீடு # 237   
குடி அரசு - 1933-1 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி 16)   
Kudiy-Arasu- 1933-1 : Periyarin Ezhuthum Paechum  (Part  16)   
http://www.tamilheritage.org/old/text/ebook/periyar/THF1933_1part16.pdf

தமஅ வெளியீடு # 238   
குடி அரசு - 1933-2 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி 17)   
Kudiy-Arasu- 1933-2 : Periyarin Ezhuthum Paechum  (Part  17)   
http://www.tamilheritage.org/old/text/ebook/periyar/THF1933_2part17.pdf

தமஅ வெளியீடு # 239   
குடி அரசு - 1934-1 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி 18)   
Kudiy-Arasu- 1934-1 : Periyarin Ezhuthum Paechum  (Part  18)   
http://www.tamilheritage.org/old/text/ebook/periyar/THF1934_1part18.pdf

தமஅ வெளியீடு # 240   
குடி அரசு - 1934-2 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி 19)   
Kudiy-Arasu- 1934-2 : Periyarin Ezhuthum Paechum  (Part  19)   
http://www.tamilheritage.org/old/text/ebook/periyar/THF1934_2part19.pdf

தமஅ வெளியீடு # 242   
குடி அரசு - 1935-2 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி 21)   
Kudiy-Arasu- 1935-2 : Periyarin Ezhuthum Paechum  (Part  21)   
http://www.tamilheritage.org/old/text/ebook/periyar/THF1935_2part21.pdf

தமஅ வெளியீடு # 243   
குடி அரசு - 1936-1 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி 22)   
Kudiy-Arasu- 1936-1 : Periyarin Ezhuthum Paechum  (Part  22)   
http://www.tamilheritage.org/old/text/ebook/periyar/THF1936_1part22.pdf

தமஅ வெளியீடு # 244   
குடி அரசு - 1936-2 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி 23)   
Kudiy-Arasu- 1936-2 : Periyarin Ezhuthum Paechum  (Part  23)   
http://www.tamilheritage.org/old/text/ebook/periyar/THF1936_2part23.pdf

மாயோன்

unread,
Jan 7, 2017, 9:54:44 AM1/7/17
to Seshadri Sridharan, mintamil, Thenee MK, வேந்தன் அரசு, p...@giasmd01.vsnl.net.in, dorai sundaram, Raju Saravanan, Jalasayanan Chellappa, Mukunthan Pathmanesan, Krishnan S, nkantan r, Anbu Jaya, திருத்தம் பொன்.சரவணன், rajalakshmi paramasivam, Banukumar Rajendran, yesura...@gmail.com, Shrinivasan T, mani muthu, Pandiyaraja Paramasivam, Senguttuvan K, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, Malarvizhi Mangay, Innamburan S.Soundararajan, Kalairajan Krishnan, Krishnamachary Rangaswamy, bala subramani, V. Dhivakar, N D Logasundaram, Megala Ramamourty, பெருமாள் தேவன், coral shree, Geetha Sambasivam, Satish Kumar Dogra, N. Kannan, rajam ramamurti, Aravindan Neelakandan, satha sivam, Rathinam Chandramohan, Neduchezhian T. Chezhian, S NEELAKANTAN, Vetha Nayagy, நா. கணேசன், Gowthama Sanna, Nagarajan Vadivel, Parvathy ramanathan, Subashini Tremmel
@Ganesan:
//கொங்குநாட்டில் தான் பிராமி அசோகருக்கு முன்பு எழுதியது கிடைத்துள்ளது. அவற்றில் பிராகிருதமும், தமிழும் சம அளவிலே கிடைக்கின்றன. சமண முனிவர்களும், வணிகர்களும் தமிழ்நாட்டுக்கு
பிராமி லிபியை அறிமுகப்படுத்தியுள்ளனர் என்பதற்கு கொங்கில் கிடைத்துள்ள எழுத்துக்கள் நல்ல சான்று ஆகும்.//

கொற்கை,அனுராதபுரம்,பொருந்தல்,செம்பியன்கண்டியூர்,கீழடி,ஆதிச்சநல்லூர்,...என பட்டியலிட்டால் பெரிதாக போகும். சரியான ஆய்வு முடிவுகள் வராமல் போவது, தமிழி வெளியில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்தது என்பதை நிறுவ தான் ஐயா.


//அமார்த்ய சேனர் எழுதிய கட்டுரை தலைப்பு, வெளிவந்த ஆண்டு, இதழின் பெயர் தெரியுமா? இருந்தால் தாருங்கள், படிக்க ஆவல்.//
இதனுடன், NYTimes,BBCTravel போன்றவற்றின் அறிக்கைகளையும் சேர்த்து நோக்கினால், தமிழகம் மட்டும் ஏன் நல்ல நிலைமையில் வரும் என புரியும் ஐயா.

Book name:

An Uncertain Glory: India and its Contradictions


இந்த நூலில் தமிழ்நாடு கடைசி 40 ஆண்டுகளில் எவ்வாறு மாறியுள்ளது எனவும் விளக்கியிருப்பார்.pdf இல்லை என்னிடம், கிடைத்தால் அஞ்சலில் அனுப்புகிறேன் உங்களுக்கு.

//உங்களுக்கு ஒரு செய்தி: வைகோ சட்டக் கல்லூரியில் மாணவர் அசோசியேசன் தேர்தலில் தமிழர் ஒருவரிடம்
தோற்றார். அந்த தேர்தலில் வெற்றிகொண்டவர் என் உறவினர்.//
நன்று.நன்று.

@Jeyabharathan:
//கூட்டு நாடாய் இருக்கும்போது எழும் பிரச்சனைகளை விட, தமிழகம் தனியாக இருந்தால் பிரச்சனைகள் பத்து / இருபது மடங்கு பெருகும். எல்லைச் சண்டைகள், திருட்டுத் தொல்லைகள் உண்டாகும். யாரிடம் முறையிடுவது ?  நியூயார்க் ஐக்கிய நாடுகள் பேரவையிலா ?  

நாணயம் பொதுவா ? வேறா ?

தமிழகத்தில் ஆறு கோடித் தமிழர் [?] பாஸ்போர்ட்டுடன் அண்டை மாநிலங்களில் நடமாடும்போது அயலவராய் ஒதுக்கப்படுவர்.//


இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக தனிநாடாக தானே இருந்தது தமிழகம். வெள்ளையர் உருவாக்கிய இந்திய கூட்டமைப்பில் தானே பல நூற்றாண்டுகளாக இல்லாத/குறைவாக இருந்த பிரச்சனைகள் எல்லாம் வளர்ந்து வருகிறது 100/1000 மடங்காக. பாக்கிசுத்தானம் தனி நாடாக போனதால் தானே, இன்று வரை நதிநீர் பங்கீட்டில் முறைதவறாமல் ஒப்பந்தப்படி நடந்து வருகிறது இந்தியா.

நாணயம் மட்டுமல்ல ஐயா, மொழி, சமயம்,வரலாறு,பண்பாடு,உடை,உணவு,உழவு,....என எல்லாமே வேறு வேறு தான்.இவற்றை எல்லாம் ஒழித்து வருகிறார்கள் என்பதால் தானே தனி நாடு கோரிக்கை வருகிறது. கூட்டு நாடென்றால் தமிழ் அடையாளத்தை ஏன் விடணும்? கடவுச்சீட்டு இல்லாமல் இந்தியாவில் இருந்து நேபாளத்திற்கு பூட்டானிற்கும் போகலாம். அதனால், தமிழ்நாட்டில் இருந்து இந்தியாவிற்கு செல்ல கடவுச்சீட்டு வைத்தே ஆகணும் என அவசியமில்லை.

நீங்கள் சொல்லும் இந்திய நாட்டில், ஏற்கனவே அடிமைகளாக  இருக்கும் தமிழர் பிரிந்து அயலாராக இருப்பது எவ்வளவோ மேல் ஐயா
 .


//
இந்த கணக்குச் சமன்பாடு வெறும் ஏட்டுச் சுரைக்காய்.  பாகிஸ்தான் பிரிவினைப் புலப் பெயர்ச்சியில் எத்தனை இந்து முஸ்லீம் மக்கள் வீடு, நிலம், உயிரிழந்தனர் என்று எண்ணிப் பார்க்க வேண்டும், 

நீரும் எரிசக்தியும் குன்றிய தனித் தமிழ்நாடு வேலையில்லா திண்டாட்டத்தில் பங்களா தேசம்போல் பிச்சை நாடாகப் போகும்.//
தனிநாடானால் தானாகவே நீர்ப்பிரச்னைகள் குறையும் ஐயா. தமிழகம் உற்பத்தி செய்தாலும் அதிக இழப்பிருக்கும் பல மின்கடத்திகளில் பிரமாநிலங்களுக்கு அனுப்புவதால் தான் தமிழக மக்கள் மேல் மின்வெட்டுச் சுமையை போடுகிறார்கள். கேரளாவில் பெரிதாக உற்பத்தி இல்லையென்றாலும் மின்வெட்டு இல்லாமல் இருப்பதற்கு காரணங்களில் தமிழகமும் ஒன்று. மேலும், ஐரோப்பிய மின்கூட்டமைப்பு போலவே இந்தியா-தமிழக மின்கூட்டமைப்பு நடந்தால் தமிழகம் மேலும் வளரும்.

இதெல்லாம் இல்லையெனில், குறுமின்கூட்டமைப்புகள் வைத்து ஐரோப்பிய நாடுகளைப் போலவே சூரிய/காற்றாலை மின்சாரம் கொண்டு ஐந்து ஆண்டுகளில் மின்மிகை நாடாகவே மாறலாம். தற்பொழுது கூட தமிழகத்தில் தான் அதிகளவு காற்றாலை மின்சாரம் இருக்கிறது.

ஐயா, நீங்கள் பயம் காட்ட வங்கதேசத்தை ஏன் பிச்சைக்காரனாக மாற்றுகிறீர்கள்?? அமிர்தியா சென் தனிநாடானால் தெற்காசிய நாடுகளில் தலைசிறந்த நாடுகளில் வரும் என சொல்ல, நீங்கள் இந்த கருத்துடன் மாறுபட்டால் அதற்கு தகுந்த புள்ளிவிவரங்களுடன் மாறுபட வேண்டும்.  


@Seshadri
//
ஆம் பாட்டிவாசகம் போலத் தான் உமது கருத்துள்ளது. ஐ நா தொடங்கியபோது இருந்த உறுப்பு நாடுகளை விட இன்று அதிக உறுப்பபு நாடுகள் உள்ளன. எப்படி? எல்லாம் பிரிவினை தான் காரணம். பிரிந்த நாடுகள் மறுபடி ஒன்று சேரவேயில்லை செருமனி தவிர. இது தான் ஆழ்ந்த படிப்பினை. 1935 கு முன் பர்மாவும் இலங்கையும் இந்தியாவில் இணைந்து இருந்தன.//
இப்படி பார்த்தால் ஆங்கிலேயர் வருகைக்கு முன் இந்தியாவே இல்லை ஐயா :)
ஆங்கிலேயன் அடிமையாக்க வசதியாக இருக்க எல்லாவற்றையும் இணைத்து ஒரே நாடு என அறிவித்தான். 

//
இந்தியாவிலேயே INdex குறி அதிகம் பெற்ற மாநிலம் தமிழ்நாடு.  இந்திய நடுவணரசு தமிழகத்தில் இருந்து பெரும் வருமானத்தில் ஒரு சிறு பகுதியைத்தான் திரும்பப்பெறுகிறது. அசாமில் எடுக்கப்படும் கண்ணெய்க்கு (petrol) இந்திய நடுவணரசு royalty தருகிறது ஆனால் நறுமணத்தில் எடுக்கும் கண்ணெய்க்கு அப்படி ஏதும் தராமல் கொள்ளை அடிக்கிறது. இந்தியாவில் தமிழகம் ஒரு அடிமை தேசம்.  இந்திய நடுவணரசு பெற்றுத் தராத ஆற்றுநீரை ஐ நா தனித்த தமிழ்நாட்டிற்கு பெற்றுத் தரும்.//
 
பன்னாட்டு சட்டப்படி தானாகவே இந்தியா கொடுக்கும். கொடுக்க மறுக்கும் மாநிலங்களுக்கு இந்திய போர்ப்படை சென்று கொடுக்க வைக்கும்; இல்லையென்றால் தான் ஐ.நா நுழையும். இந்தியாவில் இருப்பதால் தமிழகம் இழந்ததே அதிகம். நீங்கள் சொல்வது போல, தமிழகம் முன்னேறிய மாநிலம் என சொல்லி-பின்தங்கிய மாநிலங்களுக்கு நிதி கொடுக்கவேண்டும் என 70 ஆண்டுகளாக முன்னேறாத மாநிலங்களுக்கே கொடுப்பார்கள்.

இந்த மாநிலங்களில் இருந்து வரும் மக்கள், தொடர்வண்டியில் பயணச்சீட்டு வாங்கவே மாட்டார்கள்;வரி கட்டவே மாட்டார்கள்; மின்சாரத்திற்கு கூட கட்டணம் கொடுக்கமாட்டார்கள்;இதெல்லாம் தமிழகம் போன்ற ஒருசில மாநில மக்களின் தலையில் விழும் சுமை தான். 

7 ஜனவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 3:09 அன்று, Seshadri Sridharan <ssesh...@gmail.com> எழுதியது:
2017-01-06 20:18 GMT+05:30 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:
////தாலிகட்டிவிட்டால் கல் ஆனாலும் கணவன் புல் ஆனாலும் புருஷன் என்பது போல் உள்ளது உமது மேலது கருத்து.//// 

இது பாட்டி வாசகம்.  படித்தவர், அனுபவம் பெற்றவர் வாசகமில்லை

ஆம் பாட்டிவாசகம் போலத் தான் உமது கருத்துள்ளது. ஐ நா தொடங்கியபோது இருந்த உறுப்பு நாடுகளை விட இன்று அதிக உறுப்பபு நாடுகள் உள்ளன. எப்படி? எல்லாம் பிரிவினை தான் காரணம். பிரிந்த நாடுகள் மறுபடி ஒன்று சேரவேயில்லை செருமனி தவிர. இது தான் ஆழ்ந்த படிப்பினை. 1935 கு முன் பர்மாவும் இலங்கையும் இந்தியாவில் இணைந்து இருந்தன.
   

///இந்தியாவில் ஒவ்வோர் மாநிலமும் தனி வரலாறு, பண்பாடு, பழக்க வழக்கம், மொழி கொண்ட வேறுபட்ட  நிலப்பகுதிகளாகவே உள்ளன. ஐரோப்பாவே பல வகையில் ஒற்றுமை கொண்டிருந்தாலும் நாடுகள் பிரிந்து தான் உள்ளன. இத்தனைக்கும் அவர்கள் எல்லோரும் புரோதசுதந்து மதம் தான் பின் ஏன் பிரிந்துள்ளார்கள்? நாடு,  தனி நாடு, இறையாண்மை பெற்ற நாடு என்று எப்படி அழைத்தாலும் அது ஒரு நிருவாக அமைப்பு தான் அதனினும் வேறல்ல என்ற தெளிந்த புரிதல் அவர்களுக்கு உள்ளது நமக்கு அது இல்லை.////

இந்த கணக்குச் சமன்பாடு வெறும் ஏட்டுச் சுரைக்காய்.  பாகிஸ்தான் பிரிவினைப் புலப் பெயர்ச்சியில் எத்தனை இந்து முஸ்லீம் மக்கள் வீடு, நிலம், உயிரிழந்தனர் என்று எண்ணிப் பார்க்க வேண்டும், நீரும் எரிசக்தியும் குன்றிய தனித் தமிழ்நாடு வேலையில்லா திண்டாட்டத்தில் பங்களா தேசம்போல் பிச்சை நாடாகப் போகும். - சி. ஜெயபாரதன்.

மத அடிப்படையில் பிரிந்த நாட்டமைப்பு அது. இசுலாமியர் தான் இந்துக்களை துன்புறுத்தினர் இந்தியாவில் இந்துக்களால் இசுலாமியர் துப்புறுத்தப்படவில்லை. இந்தியாவிலேயே Index குறி அதிகம் பெற்ற மாநிலம் தமிழ்நாடு.

இந்திய நடுவணரசு தமிழகத்தில் இருந்து பெரும் வருமானத்தில் ஒரு சிறு பகுதியைத்தான் தமிழகம் திரும்பப்பெறுகிறது. அசாமில் எடுக்கப்படும் கண்ணெய்க்கு (petrol) இந்திய நடுவணரசு royalty தருகிறது ஆனால் நறுமணத்தில் எடுக்கும் கண்ணெய்க்கு அப்படி ஏதும் தராமல் கொள்ளை அடிக்கிறது. இந்தியாவில் தமிழகம் ஒரு அடிமை தேசம்.  இந்திய நடுவணரசு பெற்றுத் தராத ஆற்றுநீரை ஐ நா தனித் தமிழ்நாட்டிற்கு பெற்றுத் தரும்.

காத்தன் தொன்னன்  

சி. ஜெயபாரதன்

unread,
Jan 7, 2017, 12:07:20 PM1/7/17
to mintamil, vallamai, tamilmantram, Seshadri Sridharan, Thenee MK, வேந்தன் அரசு, iraamaki, dorai sundaram, Raju Saravanan, Jalasayanan Chellappa, Mukunthan Pathmanesan, Krishnan S, nkantan r, Anbu Jaya, திருத்தம் பொன்.சரவணன், rajalakshmi paramasivam, Banukumar Rajendran, மதம் கடந்த நேயம், Shrinivasan T, mani muthu, Pandiyaraja Paramasivam, Senguttuvan K, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, Malarvizhi Mangay, Innamburan S.Soundararajan, Kalairajan Krishnan, Krishnamachary Rangaswamy, bala subramani, V. Dhivakar, N D Logasundaram, Megala Ramamourty, பெருமாள் தேவன், coral shree, Geetha Sambasivam, Satish Kumar Dogra, N. Kannan, rajam ramamurti, Aravindan Neelakandan, satha sivam, Rathinam Chandramohan, Neduchezhian T. Chezhian, S NEELAKANTAN, Vetha Nayagy, நா. கணேசன், Gowthama Sanna, Nagarajan Vadivel, Parvathy ramanathan, Subashini Tremmel
தமிழ்நாடு தனிநாடாக ஆயின், பிராமணர் துரத்தப்படுவார் [இப்போதே பலர் வெளிநாட்டுக்கு ஓடிவிட்டார்].  ஜாதீய மேல்தட்டு ஆதிக்கம் ஓங்கும். தாழ்த்தப்பட்டோர் வீழ்த்தப்படுவார். வெளி மாநிலத் தமிழர்கள் விரட்டப்படுவார்.  தமிழ்நாட்டு தயாரிப்புப் பொருட்கள் விற்கப் பிரச்சனைகள் எழும்.  அண்டை நாட்டுப் பகைமை [கேரளா, ஆந்திரா, கர்நாடகா] அதிகரிக்கும். ஈரோப் மாதிரி [ஈரோ] ஒரே நாணயம் வைத்துக் கூட்டு வாணிபம் இந்தியத் தனி மாநிலங்களில் நடப்பது கடினம். ஈரோப் நாடுகள் தொழிற்துறையில் முன்னேறியது போல் தமிழகம் இன்னும் முன்னேற வில்லை.

பங்களா தேச மக்களுக்கு தையல் வேலைப் பிச்சை அளிப்பது வால்மார்ட் போன்ற வெளிவர்த்தகக் கம்பேனிகள்.  

தனித் தமிழ்நாடு தண்ணீர் இல்லாத கிணற்றுத் தவளை ஆகிவிடும். 

சி. ஜெயபாரதன்     

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Jan 7, 2017, 12:25:59 PM1/7/17
to வல்லமை, மின்தமிழ்


On Saturday, January 7, 2017 at 9:07:19 AM UTC-8, ஜெயபாரதன் wrote:
தமிழ்நாடு தனிநாடாக ஆயின், பிராமணர் துரத்தப்படுவார் [இப்போதே பலர் வெளிநாட்டுக்கு ஓடிவிட்டார்].  ஜாதீய மேல்தட்டு ஆதிக்கம் ஓங்கும். தாழ்த்தப்பட்டோர் வீழ்த்தப்படுவார். வெளி மாநிலத் தமிழர்கள் விரட்டப்படுவார்.  தமிழ்நாட்டு தயாரிப்புப் பொருட்கள் விற்கப் பிரச்சனைகள் எழும்.  அண்டை நாட்டுப் பகைமை [கேரளா, ஆந்திரா, கர்நாடகா] அதிகரிக்கும். ஈரோப் மாதிரி [ஈரோ] ஒரே நாணயம் வைத்துக் கூட்டு வாணிபம் இந்தியத் தனி மாநிலங்களில் நடப்பது கடினம். ஈரோப் நாடுகள் தொழிற்துறையில் முன்னேறியது போல் தமிழகம் இன்னும் முன்னேற வில்லை.

பங்களா தேச மக்களுக்கு தையல் வேலைப் பிச்சை அளிப்பது வால்மார்ட் போன்ற வெளிவர்த்தகக் கம்பேனிகள்.  

தனித் தமிழ்நாடு தண்ணீர் இல்லாத கிணற்றுத் தவளை ஆகிவிடும். 

சி. ஜெயபாரதன்     


தனித்தமிழ்நாடு என்பது விரல்விட்டு எண்ணக்கூடியவர்களின் மின்னஞ்சல்களில் இருக்கிறது. தனித்தமிழ்நாடு அமைக்க தமிழ்நாட்டில் பேசுவாரே இல்லை. எனவே, இப் பின்விளைவுகளுக்கு அஞ்சத் தேவையில்லை.

தமிழ்தேசிய இயக்கம் சீமான், மணியரசன், .... போன்றோர் தனித்தமிழ்நாடு அமைப்போம் எனப் பேசுவதில்லை. வன்முறை இந்தியாவில் இருந்து பிரிவோம் என்ற காரணத்தினால் காணோம். பொதுவாழ்வில் பதவி, பணம் என்பதே குறிக்கோளாக இருப்பதைப் பார்க்கிறோம். தேர்தல் வழியான அமைதிப்பூங்காவை திராவிடக் கட்சிகள் அமைத்துள்ளன. எல்லா சமயத்தவர்களும் அமைதியுடன் வாழ்வதும், தங்கள் சமயங்களைப் பரப்புவதும், பல மாநிலங்களில் இருந்து தொழில்கள் நடத்துவதும், அரசியலில் தமிழரை ஆள்வதுமாக இருப்பது தொடர்ந்து நடக்கும்.

நா. கணேசன் 

N. Ganesan

unread,
Jan 7, 2017, 12:44:14 PM1/7/17
to வல்லமை, மின்தமிழ்
On Saturday, January 7, 2017 at 1:06:35 AM UTC-8, நச்சோணன் wrote:

இந்த கணக்குச் சமன்பாடு வெறும் ஏட்டுச் சுரைக்காய்.  பாகிஸ்தான் பிரிவினைப் புலப் பெயர்ச்சியில் எத்தனை இந்து முஸ்லீம் மக்கள் வீடு, நிலம், உயிரிழந்தனர் என்று எண்ணிப் பார்க்க வேண்டும், நீரும் எரிசக்தியும் குன்றிய தனித் தமிழ்நாடு வேலையில்லா திண்டாட்டத்தில் பங்களா தேசம்போல் பிச்சை நாடாகப் போகும். - சி. ஜெயபாரதன்.

மத அடிப்படையில் பிரிந்த நாட்டமைப்பு. இசுலாமியர் தான் இந்துக்களை துன்புறுத்தினர் இந்தியாவில் இந்துக்களால் இசுலாமியர் துப்புறுத்தப்படவில்லை. இந்தியாவிலேயே Index குறி அதிகம் பெற்ற மாநிலம் தமிழ்நாடு.  இந்திய நடுவணரசு தமிழகத்தில் இருந்து பெரும் வருமானத்தில் ஒரு சிறு பகுதியைத்தான் தமிழகம் திரும்பப்பெறுகிறது. அசாமில் எடுக்கப்படும் கண்ணெய்க்கு (petrol) இந்திய நடுவணரசு royalty தருகிறது ஆனால் நறுமணத்தில் எடுக்கும் கண்ணெய்க்கு அப்படி ஏதும் தராமல் கொள்ளை அடிக்கிறது. இந்தியாவில் தமிழகம் ஒரு அடிமை தேசம்.  இந்திய நடுவணரசு பெற்றுத் தராத ஆற்றுநீரை ஐ நா தனித் தமிழ்நாட்டிற்கு பெற்றுத் தரும்.


ஐ,நா. சபை ஈழப் போரின்போது தமிழர்க்கு இலங்கையைப் பிரித்து தமிழர்க்கு தனிநாடு அமைக்க உதவி ஒன்றும் செய்யவில்லை. எனவே, ஐ. நா. கேரளா, கர்நாடகாவில் இருந்து தண்ணீர்
பெற்று தனித்தமிழ்நாட்டுகு அளிக்கும் என்று நம்பவேண்டாம். இப்பொழுது, அமெரிக்காவில் ஐ.நா. சபைக்கு கொடுக்கும் பணத்தை நிறுத்தவேண்டும் என அரசியல் தலைவர்கள் பேசிவருகின்றனர்.
அமெரிக்கா பணம் அளிக்காவிட்டால், ஐ.நா. இருக்குமா என்பதே கேள்விக்குறி.


கண்ணெய் என எழுதுகிறீர்கள். கண்+நெய் எனப் பிரியும். கண்ணில் நெய் ஏதும் கிடைப்பதில்லை.

கல்நெய் = கன்னெய் = பெற்றோல். எள்+நெய் = எண்ணெய். தமிழ்நாட்டில் நறுமணத்தில் கன்னெய் மிகக் குறைவு.
அஸ்ஸாம், குஜராத், ராஜஸ்தான் உற்பத்தியுடன் ஒப்பிட்டால்.

நா. கணேசன்

 
நச்சோணன்    

N. Ganesan

unread,
Jan 7, 2017, 2:43:36 PM1/7/17
to மின்தமிழ், vall...@googlegroups.com, minT...@googlegroups.com

சி. ஜெயபாரதன்

unread,
Jan 7, 2017, 2:57:33 PM1/7/17
to mintamil, வல்லமை
///இந்தியாவில் தமிழகம் ஒரு அடிமை தேசம்.///

கண்ணை மூடிக் கொண்டு உலகைப் பார்த்தால், எல்லாம் இருட்டுமயமாய்த் தெரியும்.  இந்திய மக்கள் நிதி அளிப்பில் கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்து தமிழகத்தின் கூடங்குளத்தில் நிறுவப்பட்ட [1500 கோடி + 1500 கோடி] இரண்டு ரஷ்ய அணுமின்நிலையங்கள் 2200 மெகாவாட் மின்னாற்றலைப் பரிமாறி வருகின்றன. இன்னும் இரண்டு ரஷ்ய அணுமின் நிலையங்கள் நிறுவகம் ஆகப் போகின்றன. இவற்றால் சுமார் 5000 - 10000 பேருக்கு வேலையும் கிடைக்கிறது.

ஆசியாவிலே பெரிய இந்திரா காந்தி அணுவியல் ஆய்வு மையம் தமிழகக் கல்பாக்கத்தில் ஆயிரக் கணக்கான தமிழருக்கும் / இந்தியருக்கும் மேலை கொடுத்து வருகிறது. 

தமிழகத்துக்கு உன்னத இடம் அளித்துள்ளது இந்திய மத்திய அரசு.

சி. ஜெயபாரதன்
  

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Jan 7, 2017, 3:12:09 PM1/7/17
to மின்தமிழ், vallamai


On Friday, January 6, 2017 at 1:48:04 AM UTC-8, மாயோன் wrote:

//இன்றைக்கும் பெரியார் ஈவேரா வழியில் வந்த கக்ஷிகள் என்று திமுக, அதிமுக தமிழ்நாட்டின் பெரும்பான்மைக் 
கட்சிகளாக விளங்கிவருகின்றன. தமிழ்தேசியம் போலில்லாமல் தமிழ்நாட்டுக்கு வந்தோர், வருவோர்
அனைத்தையும் அரவணைத்து ஆட்சிபீடத்தில் இருந்து சமரசம் செய்து, வருமானத்தைப் பங்கி,
டாஸ்மாக் போன்றன அளித்து ஆட்சி பல ஆண்டு செய்யும் திறன் அதிமுக, திமுக கட்சிகளுக்கே இருக்கின்றன.//
 
அப்புறம் ஏன் வைக்கோ நாயுடு இப்படி அலறுகிறார் ஐயா🤔🤔?


வைகோ, பழ. நெடுமாறன், ம. நடராஜன், ... எல்லோரும் தேர்தல்வழி ஆட்சி நடத்த மக்களைச் செலுத்துவார்கள். 

 



























நடராசனுக்கு நன்றியோடு இருப்பேன்!   - வைகோவின் புதிய பாதை!

விஞர் காசி ஆனந்தன் எழுதிய ‘தம்பி ஜெயத்துக்கு (கடிதம் 2)’ நூலின் வெளியீட்டு விழாவில் பேசிய வைகோ, “இந்த நூலை நான் வெளியிட, அதைப் பெற்றவர் ம.நடராசன். நன்றி உணர்வோடு நான் இதைப் பார்க்கிறேன். ‘தமிழர்களின் சுவடே இல்லாமல் போகட்டும்’ என்று இந்திய அரசு அழித்ததே ஈழத்தை, எந்தப் புலிக்கொடியை புலிகள் தங்கள் கொடியாகப் பயன்படுத்தினார்களோ, அதே கொடிதான் சோழனின் ஆட்சியிலும், அருள்மொழித்தேவனின் ஆட்சியிலும் பறந்த கொடி. அந்தப் புலிக்கொடி சோழமண்டலத் தலைநகரான தஞ்சையிலே பறந்தது என்று அந்தத் தஞ்சையிலே முள்ளிவாய்க்கால் முற்றம் அமைத்து, காலத்தால் அழியாத சாட்சியாக அதை உருவாக்க பழ.நெடுமாறனுக்குத் துணை நின்று அந்த இடத்தையும்  அளித்த ம.நடராசனுக்கு தமிழ்ச்சமூகம் நன்றிக்கடன் பட்டிருக்கிறது. நான் நடராசனைப் புகழ்ந்து பேசியதை நாளை ஊடகங்கள் ஆயிரம் அர்த்தங்கள் பொதித்து எழுதுவார்கள். நான் அதைப் பற்றிக் கவலைப் படவில்லை. நான் ரோஜாவை ரோஜா என்று அழைப்பேன். முட்களை முட்கள் என்று அழைப்பேன். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவர் தலைவனாக இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தலைமையேற்று நின்ற அந்த நடராசன் என் மனதில் நிற்கிறான். குற்றாலத்தில் நடைபெற்ற எனது திருமணத்துக்காக மூன்று நாட்கள் அங்கு தங்கி துணையாக இருந்து திருமணம் நடைபெற உதவிசெய்த அந்த நடராசனை நான் மறக்க மாட்டேன். நன்றியோடு இருப்பேன்” என்று நடராசனுக்குப் புகழ் மாலை சூட்டினார்.

----------

NG


N. Ganesan

unread,
Jan 7, 2017, 10:53:20 PM1/7/17
to மின்தமிழ், vallamai
தகவலுக்கு நன்றி. அரணமுறுவல் என்பது பொதுவாக தமிழர் அறிந்த எந்தவார்த்தையின் தனித்தமிழ் ஆக்கம்? அரண- வடசொல் என நினைக்கிறேன்.
பேரா. தெய்வசுந்தரத்திடம் பிஎச்டி எனப் பார்த்தேன். சிறப்பாகச் செய்திருப்பார். 

ஆங்கிலத்தை தமிழ்நாட்டில் இருந்து நீக்கவேண்டும் என்ற இயக்கத்தில் ஈடுபட்டவர் அரணமுறுவல் எனப் படித்தேன். இப்பொழுதே அறிவியல்,
தொல்லியல், பிராமியின் தமிழ்நாட்டு வருகை, குமரிக்கண்ட கற்பனை, திராவிடம் = தமிழ், Dravidian = Tamil-like என கால்ட்வெல் பாதிரியார் ஒப்பிலக்கணம், தமிழ் உலக எல்லா மொழிகளுக்கும் தாய், ...
 பற்றி ஃபேஸ்புக் போன்றவற்றில் ஆய்வுச்செய்திகள் குறைவு. அரணமுறுவல் இயக்கத்தால் ஆங்கிலமும் எடுக்கப்பட்டுவிட்டால் என்னாகும் என நினைக்கிறேன். மருத்துவம், பொறியியல், ... இப்பொழுதே வேலை கிடைக்க கஷ்டம். தமிழில் இந்த விஞ்ஞான படிப்புகளை படித்தால் மற்ற மாநிலங்களில், வெளிநாடுகளில் வேலை கிட்டுமா? இன்றைய ஆய்வுச் செய்திகள் தமிழுக்கு வருகின்றனவா?

பேராசிரியர்கள் நிறைய எழுதவேண்டும். முதலில் தெய்வசுந்தரம், அரணமுறுவல், ... ஆய்வேடுகள் பிடிஎப் ஆனால் மக்கள் படித்து தெரிந்துகொள்வார்கள். பேரா. சி. இலக்குவனார் நூல்கள் பிடிஎப் வடிவில் கிடைக்க வேண்டும். கிடைக்கச் செய்வோம் என்றார் திரு. திருவள்ளுவனார்.

நா. கணேசன்

Seshadri Sridharan

unread,
Jan 8, 2017, 12:31:05 AM1/8/17
to mintamil, ipohs...@gmail.com, வேந்தன் அரசு, p...@giasmd01.vsnl.net.in, doraisu...@gmail.com, ras...@gmail.com, jalas...@gmail.com, muku...@gmail.com, krishna...@gmail.com, rnka...@gmail.com, anbuja...@gmail.com, திருத்தம் பொன்.சரவணன், rajis...@gmail.com, Banukumar Rajendran, yesura...@gmail.com, Shrinivasan T, mani muthu, Pandiyaraja Paramasivam, Senguttuvan K, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, Malarvizhi Mangay, Innamburan S.Soundararajan, Kalairajan Krishnan, Krishnamachary Rangaswamy, bala subramani, V. Dhivakar, N D Logasundaram, Megala Ramamourty, பெருமாள் தேவன், coral shree, Geetha Sambasivam, Satish Kumar Dogra, N. Kannan, rajam ramamurti, aravindan....@gmail.com, satha sivam, rathinam.c...@gmail.com, tamil...@gmail.com, sneelak...@gmail.com, vet...@gmail.com, ts.m...@gmail.com, நா. கணேசன், g.sa...@gmail.com, Nagarajan Vadivel, praman...@gmail.com, Subashini Tremmel
2017-01-06 20:18 GMT+05:30 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:
////தாலிகட்டிவிட்டால் கல் ஆனாலும் கணவன் புல் ஆனாலும் புருஷன் என்பது போல் உள்ளது உமது மேலது கருத்து.//// 

இது பாட்டி வாசகம்.  படித்தவர், அனுபவம் பெற்றவர் வாசகமில்லை

ஆம் பாட்டிவாசகம் போலத் தான் உமது கருத்துள்ளது. ஐ நா தொடங்கியபோது இருந்த உறுப்பு நாடுகளை விட இன்று அதிக உறுப்பபு நாடுகள் உள்ளன. எப்படி? எல்லாம் பிரிவினை தான் காரணம். பிரிந்த நாடுகள் மறுபடி ஒன்று சேரவேயில்லை செருமனி தவிர. இது தான் ஆழ்ந்த படிப்பினை. 1935 கு முன் பர்மாவும் இலங்கையும் இந்தியாவில் இணைந்து இருந்தன.
///இந்தியாவில் ஒவ்வோர் மாநிலமும் தனி வரலாறு, பண்பாடு, பழக்க வழக்கம், மொழி கொண்ட வேறுபட்ட  நிலப்பகுதிகளாகவே உள்ளன. ஐரோப்பாவே பல வகையில் ஒற்றுமை கொண்டிருந்தாலும் நாடுகள் பிரிந்து தான் உள்ளன. இத்தனைக்கும் அவர்கள் எல்லோரும் புரோதசுதந்து மதம் தான் பின் ஏன் பிரிந்துள்ளார்கள்? நாடு,  தனி நாடு, இறையாண்மை பெற்ற நாடு என்று எப்படி அழைத்தாலும் அது ஒரு நிருவாக அமைப்பு தான் அதனினும் வேறல்ல என்ற தெளிந்த புரிதல் அவர்களுக்கு உள்ளது நமக்கு அது இல்லை.////

இந்த கணக்குச் சமன்பாடு வெறும் ஏட்டுச் சுரைக்காய்.  பாகிஸ்தான் பிரிவினைப் புலப் பெயர்ச்சியில் எத்தனை இந்து முஸ்லீம் மக்கள் வீடு, நிலம், உயிரிழந்தனர் என்று எண்ணிப் பார்க்க வேண்டும், நீரும் எரிசக்தியும் குன்றிய தனித் தமிழ்நாடு வேலையில்லா திண்டாட்டத்தில் பங்களா தேசம்போல் பிச்சை நாடாகப் போகும். - சி. ஜெயபாரதன்.

மத அடிப்படையில் பிரிந்த நாட்டமைப்பு அது. இசுலாமியர் தான் இந்துக்களை துன்புறுத்தினர் இந்தியாவில் இந்துக்களால் இசுலாமியர் துப்புறுத்தப்படவில்லை. இந்தியாவிலேயே Index குறி அதிகம் பெற்ற மாநிலம் தமிழ்நாடு.

இந்திய நடுவணரசு தமிழகத்தில் இருந்து பெரும் வருமானத்தில் ஒரு சிறு பகுதியைத்தான் தமிழகம் திரும்பப்பெறுகிறது. அசாமில் எடுக்கப்படும் கண்ணெய்க்கு (petrol) இந்திய நடுவணரசு royalty தருகிறது ஆனால் நறுமணத்தில் எடுக்கும் கண்ணெய்க்கு அப்படி ஏதும் தராமல் கொள்ளை அடிக்கிறது. இந்தியாவில் தமிழகம் ஒரு அடிமை தேசம்.  இந்திய நடுவணரசு பெற்றுத் தராத ஆற்றுநீரை ஐ நா தனித் தமிழ்நாட்டிற்கு பெற்றுத் தரும்.

காத்தன் தொன்னன்  

Seshadri Sridharan

unread,
Jan 8, 2017, 3:32:11 AM1/8/17
to mintamil, ipohs...@gmail.com, வேந்தன் அரசு, p...@giasmd01.vsnl.net.in, doraisu...@gmail.com, ras...@gmail.com, jalas...@gmail.com, muku...@gmail.com, krishna...@gmail.com, rnka...@gmail.com, anbuja...@gmail.com, திருத்தம் பொன்.சரவணன், rajis...@gmail.com, Banukumar Rajendran, yesura...@gmail.com, Shrinivasan T, mani muthu, Pandiyaraja Paramasivam, Senguttuvan K, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, Malarvizhi Mangay, Innamburan S.Soundararajan, Kalairajan Krishnan, Krishnamachary Rangaswamy, bala subramani, V. Dhivakar, N D Logasundaram, Megala Ramamourty, பெருமாள் தேவன், coral shree, Geetha Sambasivam, Satish Kumar Dogra, N. Kannan, rajam ramamurti, aravindan....@gmail.com, satha sivam, rathinam.c...@gmail.com, tamil...@gmail.com, sneelak...@gmail.com, vet...@gmail.com, ts.m...@gmail.com, நா. கணேசன், g.sa...@gmail.com, Nagarajan Vadivel, praman...@gmail.com, Subashini Tremmel
 2017-01-07 22:36 GMT+05:30 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:
தமிழ்நாடு தனிநாடாக ஆயின், பிராமணர் துரத்தப்படுவார் [இப்போதே பலர் வெளிநாட்டுக்கு ஓடிவிட்டார்].  ஜாதீய மேல்தட்டு ஆதிக்கம் ஓங்கும். தாழ்த்தப்பட்டோர் வீழ்த்தப்படுவார். வெளி மாநிலத் தமிழர்கள் விரட்டப்படுவார்.  தமிழ்நாட்டு தயாரிப்புப் பொருட்கள் விற்கப் பிரச்சனைகள் எழும்.  அண்டை நாட்டுப் பகைமை [கேரளா, ஆந்திரா, கர்நாடகா] அதிகரிக்கும். ஈரோப் மாதிரி [ஈரோ] ஒரே நாணயம் வைத்துக் கூட்டு வாணிபம் இந்தியத் தனி மாநிலங்களில் நடப்பது கடினம். ஈரோப் நாடுகள் தொழிற்துறையில் முன்னேறியது போல் தமிழகம் இன்னும் முன்னேற வில்லை.

இது தேவையற்ற கற்பனையான பீசல். நீங்கள் இன்றைய நிகழ்வுகளின் நோக்கில் பிரச்சனைகளை அணுகுகிறீர்கள் என்பது புரிகிறது. வெளிநாட்டிற்கு போகும் பிராமணர்கள் துரத்தப்பட்டு போவதில்லை. மொழி, மதம், பண்பாடு எது போனாலும் போகட்டும் என்ற பொருள்நோக்குடையவர் (materialist) பிராமணரே வெளிநாட்டு ஓடுகின்றனர். ஓடுபவரை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. 20 - 30 ஆண்டுகள் முன் அயல் நாடுகளில் குடியேறிய பிராமணர்களின் பிள்ளைகள் எந்த மொழி, மதம், பண்பாடு கைக்கொள்கின்றனர்.

அரசியல் கட்சிகள் தான் சாதிய மேல்தட்டு ஆதிக்கத்தை தூண்டுகின்றன. ஊழலை தூண்டுகின்றன. அதனால் தான் 20 ஆம் நூற்றாண்டின் மாபெரும் ஓகியும் சுபாசு சந்திரர்,  சரத்து சந்திர போசின் அக்காள் மகனுமான பிராபத்து ரஞ்சன் சர்க்கார் கட்சி அரசியல் முறையை தடை செய்யவேண்டும் என்கிறார். அவரது இந்த கனவு நனவாக நம்மால் இயன்றதை செய்வோம். தமிழ்நாட்டில் தமிழ் நாட்டு பொருள்கள் மட்டுமே விற்றால் போதும் அதுவே தற்சார்பு தன்னிறைவு தரும். அதே நேரம் நம் பொருளை பிற இடங்களில் விற்கவேண்டும் என்ற கொள்கையை கைவிடுவோம். ஏற்றுமதியும் நமக்கு வேண்டாம் இறக்குமதியும் நமக்கு வேண்டாம். இந்த ஏற்றுமதி இறக்குமதியால் தான் இன்று முதலாளியம் உயிர்வளி (oxygen) பொருத்திய நிலைக்கு வந்துவிட்டது.  அண்டை நாட்டு பிரச்சனை அவர்களுக்கும் ஏற்படும் அதனால் அவர்கள் ஒரு ஒத்துறவுக்கு வந்துவிடுவர்.     ஐரோப்பா மாதிரியான தொழிற் செயற்பாடுகள் தோல்விகண்டு வருகின்றன. 
 
பங்களா தேச மக்களுக்கு தையல் வேலைப் பிச்சை அளிப்பது வால்மார்ட் போன்ற வெளிவர்த்தகக் கம்பேனிகள்.  


கண்டிப்பாக நாம் பங்களா தேசம்போல் இருக்கப்போவதில்லை. அதே நேரம் தமிழகம் சவுளித்துறை தோல்பதனிடும் தொழில் தவிர பொருள்களை பிற மாநிலங்களில் இருந்தே இறக்குமதி செய்கிறது. எனவே கவலை வேண்டாம் நாம் இறக்குமதி செய்யும் பொருட்களை நாமே உற்பத்தி செய்வோம். 

தனித் தமிழ்நாடு தண்ணீர் இல்லாத கிணற்றுத் தவளை ஆகிவிடும்.  சி. ஜெயபாரதன்   

இப்போது மட்டும் என்ன வாழ்கிறது? அதற்கு தனித்து இருந்து எல்லா துறையிலும் வெற்றி நடை போடலாம். அஞ்சற்க!!


 ///இந்தியாவில் தமிழகம் ஒரு அடிமை தேசம்.///

கண்ணை மூடிக் கொண்டு உலகைப் பார்த்தால், எல்லாம் இருட்டுமயமாய்த் தெரியும்.  இந்திய மக்கள் நிதி அளிப்பில் கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்து தமிழகத்தின் கூடங்குளத்தில் நிறுவப்பட்ட [1500 கோடி + 1500 கோடி] இரண்டு ரஷ்ய அணுமின்நிலையங்கள் 2200 மெகாவாட் மின்னாற்றலைப் பரிமாறி வருகின்றன. இன்னும் இரண்டு ரஷ்ய அணுமின் நிலையங்கள் நிறுவகம் ஆகப் போகின்றன. இவற்றால் சுமார் 5000 - 10000 பேருக்கு வேலையும் கிடைக்கிறது.

ஆசியாவிலே பெரிய இந்திரா காந்தி அணுவியல் ஆய்வு மையம் தமிழகக் கல்பாக்கத்தில் ஆயிரக் கணக்கான தமிழருக்கும் / இந்தியருக்கும் மேலை கொடுத்து வருகிறது. 

தமிழகத்துக்கு உன்னத இடம் அளித்துள்ளது இந்திய மத்திய அரசு. - சி. ஜெயபாரதன்

சொர்னோபிள் ஒன்று ஏற்பட்டால் சாவது தமிழனாக இருக்கட்டும் என்ற எண்ணம் தான்.  நெய்வேலி மின்சாரம் அனைத்தும் நமக்கே தரட்டும்

தேமொழி

unread,
Jan 8, 2017, 3:41:48 AM1/8/17
to மின்தமிழ்


On Sunday, January 8, 2017 at 12:32:11 AM UTC-8, காத்தன் தொன்னன் wrote:
 2017-01-07 22:36 GMT+05:30 சி. ஜெயபாரதன் <jayabarathans@gmail.com>:
தமிழ்நாடு தனிநாடாக ஆயின், பிராமணர் துரத்தப்படுவார் [இப்போதே பலர் வெளிநாட்டுக்கு ஓடிவிட்டார்].  ஜாதீய மேல்தட்டு ஆதிக்கம் ஓங்கும். தாழ்த்தப்பட்டோர் வீழ்த்தப்படுவார். வெளி மாநிலத் தமிழர்கள் விரட்டப்படுவார்.  தமிழ்நாட்டு தயாரிப்புப் பொருட்கள் விற்கப் பிரச்சனைகள் எழும்.  அண்டை நாட்டுப் பகைமை [கேரளா, ஆந்திரா, கர்நாடகா] அதிகரிக்கும். ஈரோப் மாதிரி [ஈரோ] ஒரே நாணயம் வைத்துக் கூட்டு வாணிபம் இந்தியத் தனி மாநிலங்களில் நடப்பது கடினம். ஈரோப் நாடுகள் தொழிற்துறையில் முன்னேறியது போல் தமிழகம் இன்னும் முன்னேற வில்லை.

இது தேவையற்ற கற்பனையான பீசல். நீங்கள் இன்றைய நிகழ்வுகளின் நோக்கில் பிரச்சனைகளை அணுகுகிறீர்கள் என்பது புரிகிறது. வெளிநாட்டிற்கு போகும் பிராமணர்கள் துரத்தப்பட்டு போவதில்லை. மொழி, மதம், பண்பாடு எது போனாலும் போகட்டும் என்ற பொருள்நோக்குடையவர் (materialist) பிராமணரே வெளிநாட்டு ஓடுகின்றனர். ஓடுபவரை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. 20 - 30 ஆண்டுகள் முன் அயல் நாடுகளில் குடியேறிய பிராமணர்களின் பிள்ளைகள் எந்த மொழி, மதம், பண்பாடு கைக்கொள்கின்றனர்.

1952 பராசக்தி வசனம்: 
தமிழ்நாட்டிலே இத்திருவிடத்திலே பிறந்தவன் நான். பிறக்க ஒரு நாடு பிழைக்க ஒரு நாடு. தமிழர்களின் தலையெழுத்துக்கு நானென்ன விதிவிலக்கா? ரங்கூன்! அது உயிரை வளர்த்தது. என்னை உயர்ந்தவன் ஆக்கியது. திருமணக் கோலத்தில் இருந்த என் தங்கையைக் காண வந்தேன்.  



பிழைக்க வழிதேடி தமிழர் உலகம் அளவிலுமே பரவியுள்ளனர்.

கீழுள்ளவர்கள், மேற்காசியாவில் வசிக்கும் தமிழர்கள்  துரத்தப் பட்டவர்களா?  

இவர்களில் பிராமணர் விழுக்காடு என்னவாக இருக்கும்?

West Asia[edit]

The Middle East is home to thousands of migrants from Tamil Nadu and Sri Lanka, and over 75.000 migrants immigrated to the Middle East in 2012 alone.[19] However, statistics on the numbers of migrants are scarce.

Qatar[edit]

Qatar is the home for about 4,000 Tamils mostly from Tamil Nadu.[1] In December 2000, the "Qatar Tamil Sangam" was inaugurated for conducting Tamil cultural programmes, teaching of Thirukkural and for conducting Tamil elocution contests for Tamil children.

United Arab Emirates[edit]

There are about 450,000 Tamilians in the United Arab Emirates having come from Tamil Nadu as professionals and workers in many sectors.[20] [1] Pongal and New Year are celebrated on a grand scale in Dubai and in a few other states. The first Tamil newspaper from the Middle East region was launched from Dubai on December 10, 2014. Tamil 89.4 FM radio is a tamil radio broadcasting from Dubai UAE.

Other countries[edit]

Bahrain is home for over 7000 Tamils mostly professionals and workers.[1] Saudi Arabia and Kuwait are also home for a substantial number of Tamils who are recent migrants.

தேமொழி

unread,
Jan 8, 2017, 3:45:03 AM1/8/17
to மின்தமிழ்

விக்கி கொடுத்த தகவல் 

Seshadri Sridharan

unread,
Jan 8, 2017, 3:55:33 AM1/8/17
to mintamil, ipohs...@gmail.com, வேந்தன் அரசு, p...@giasmd01.vsnl.net.in, doraisu...@gmail.com, ras...@gmail.com, jalas...@gmail.com, muku...@gmail.com, krishna...@gmail.com, rnka...@gmail.com, anbuja...@gmail.com, திருத்தம் பொன்.சரவணன், rajis...@gmail.com, Banukumar Rajendran, yesura...@gmail.com, Shrinivasan T, mani muthu, Pandiyaraja Paramasivam, Senguttuvan K, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, Malarvizhi Mangay, Innamburan S.Soundararajan, Kalairajan Krishnan, Krishnamachary Rangaswamy, bala subramani, V. Dhivakar, N D Logasundaram, Megala Ramamourty, பெருமாள் தேவன், coral shree, Geetha Sambasivam, Satish Kumar Dogra, N. Kannan, rajam ramamurti, aravindan....@gmail.com, satha sivam, rathinam.c...@gmail.com, tamil...@gmail.com, sneelak...@gmail.com, vet...@gmail.com, ts.m...@gmail.com, நா. கணேசன், g.sa...@gmail.com, Nagarajan Vadivel, praman...@gmail.com, Subashini Tremmel
2017-01-07 22:55 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
தனித்தமிழ்நாடு என்பது விரல்விட்டு எண்ணக்கூடியவர்களின் மின்னஞ்சல்களில் இருக்கிறது. தனித்தமிழ்நாடு அமைக்க தமிழ்நாட்டில் பேசுவாரே இல்லை. எனவே, இப் பின்விளைவுகளுக்கு அஞ்சத் தேவையில்லை.

தமிழ்தேசிய இயக்கம் சீமான், மணியரசன், .... போன்றோர் தனித்தமிழ்நாடு அமைப்போம் எனப் பேசுவதில்லை. வன்முறை இந்தியாவில் இருந்து பிரிவோம் என்ற காரணத்தினால் காணோம். பொதுவாழ்வில் பதவி, பணம் என்பதே குறிக்கோளாக இருப்பதைப் பார்க்கிறோம். தேர்தல் வழியான அமைதிப்பூங்காவை திராவிடக் கட்சிகள் அமைத்துள்ளன. எல்லா சமயத்தவர்களும் அமைதியுடன் வாழ்வதும், தங்கள் சமயங்களைப் பரப்புவதும், பல மாநிலங்களில் இருந்து தொழில்கள் நடத்துவதும், அரசியலில் தமிழரை ஆள்வதுமாக இருப்பது தொடர்ந்து நடக்கும். - நா. கணேசன் 


சி. ஜெயபாரதன்

unread,
Jan 8, 2017, 10:34:15 AM1/8/17
to mintamil, vallamai, tamilmantram
///பிழைக்க வழிதேடி தமிழர் உலகம் அளவிலுமே பரவியுள்ளனர்.

கீழுள்ளவர்கள், மேற்காசியாவில் வசிக்கும் தமிழர்கள்  துரத்தப் பட்டவர்களா?  

இவர்களில் பிராமணர் விழுக்காடு என்னவாக இருக்கும்?////

நான் தனித்தமிழ்நாடு பற்றிச் சொல்கிறேன்.

தமிழ்நாட்டில் குறிப்பாகப் பொது வேலைப் போட்டிகளில் இப்போது பிராமணர் இனம் ஒதுக்கப்படுகிறது.  திறமை மிக்க பிராமணர் தமிழகத்தில் பிழைக்க வழியின்றி, வெளிமாநிலங்களுக்கோ, வெளிநாடுகளுக்கோ ஓடுகிறார்.  

தமிழ்நாட்டில் இப்போது பெரியாரிசம் மீண்டும் உயிர்த்துத் தலைதூக்குகிறது.  ஆகவே தனித் தமிழ்நாட்டில் ஆரியர் / திராவிடர் பிரிவினை வலுக்கும் என்பது என் முன்னறிவிப்பு.

சி. ஜெயபாரதன்

--

N. Ganesan

unread,
Jan 8, 2017, 10:40:25 AM1/8/17
to வல்லமை, மின்தமிழ்


On Sunday, January 8, 2017 at 2:49:24 AM UTC-8, இன்னம்பூரான் wrote:
தேர்தல் வழியான அமைதிப்பூங்காவை திராவிடக் கட்சிகள் அமைத்துள்ளன.
~சிரித்து மாளலை . நான் நாட்தோறும் பல படிநிலை தமிழர்களை சந்தித்து வருகிறேன். அவர்கள் அறுபது வருடங்களாக காணாத அமைதிப்பூங்கா, உங்கள் கற்பனையில்!


அன்பின் இன்னம்பூரான்,

தமிழ்நாடு அமைதிப்பூங்காதான். ஜெயலலிதா இறந்து எம்ஜிஆர் சமாதியில் புதைக்கப்பட்ட நாளில் எந்த வன்முறையும் சென்னையிலோ, தமிழகத்திலோ இல்லை
என இந்தியா முழுதும் பாராட்டப்பட்டது.


 
 எல்லா சமயத்தவர்களும் அமைதியுடன் வாழ்வதும்,

 ~ ஓ !

கிறித்துவ சமயம், இசுலாம் சமயம் பின்பற்றுவோர் பள்ளிகள், கல்விநிலையங்கள், மருத்துவமனைகள், தேவாலயங்கள், மசூதிகள் என எப்பொழுதும் அமைதியாக இருப்பது
தமிழ்நாடு மாநிலம். எனவே தான், கருணாநிதி தமிழ்நாட்டை அமைதிப்பூங்கா என்று வருணிப்பார்.
 
தங்கள் சமயங்களைப் பரப்புவதும், பல மாநிலங்களில் இருந்து தொழில்கள் நடத்துவதும், அரசியலில் தமிழரை ஆள்வதுமாக இருப்பது தொடர்ந்து நடக்கும். - நா. கணேசன்
~ உங்கள் கனவு பலிக்கட்டும், ஒரு நூற்றாண்டுக்குள்.


அமைதிப் பூங்காவாக எந்த சமயத்தவர் ஆனாலும், வெளிநாட்டுப் பணம் வந்தாலும் தமிழ்நாடு விளங்கவேண்டும். தமிழ்தேசியம் வளர்ச்சி பெறும் காலத்தில் - இப்போது மிகச்சிறு நிலையில்
இணையத்தில் மட்டிலும் இருக்கிறது. தமிழ்நாட்டு மக்களிடை தெரியாத நிலை - தேர்தல், ... அமைதிப்பூங்கா நிலை தொடரவேண்டும். தொடரவைப்பர் தமிழர்கள் என்ற நம்பிக்கையுண்டு.
டில்லியிடம் உரிமைகளைப் பெற தமிழ்தேசியம் முக்கியமான உந்துசக்தி ஆதல் வேண்டும்.

பாரதமாதாவை உருவாக்கி, தமிழ்நாட்டுக்குக் கொணர்ந்தோரில் பரலி. சு. நெல்லையப்பர் சோதரர் (வந்தேமாதரம் பிள்ளை), வ.உ.சி., பாரதியார், ... எண்ணற்றோர் உழைப்பு முக்கியம்.
பொருளாதாரம் நன்கு இந்தியாவுடன் தமிழ்நாட்டைப் பிணைத்துவிட்டது. தண்ணீர் ஆதாரங்களுக்கு எப்போதும் சிக்கல் போல டில்லியும், மேலதிகாரிகளும் பார்த்துக்கொண்டனர் எனவும்
கேள்விப்பட்டுள்ளேன். ஆனால், இந்தியா என்னும் அமைப்புக்கு வரலாற்றிலும் சரி, இப்போதும் தமிழ்நாடு ஆர்ச்சில் கீஸ்டோன் போல. 

ஊழல் அற்ற, உரிமைகளைப் போராடிப் பெறும் தமிழகமாக வாழ்க.

திருவள்ளுவர் திருநாள் வாழ்த்துக்கள்!
நா. கணேசன்
 
அன்புடன்,
இன்னம்பூரான் 
 

2017-01-08 14:30 GMT+05:30 seshadri sridharan <ssesh...@gmail.com>:
2017-01-08 14:26 GMT+05:30 seshadri sridharan <ssesh...@gmail.com>:
2017-01-07 22:55 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

தனித்தமிழ்நாடு என்பது விரல்விட்டு எண்ணக்கூடியவர்களின் மின்னஞ்சல்களில் இருக்கிறது. தனித்தமிழ்நாடு அமைக்க தமிழ்நாட்டில் பேசுவாரே இல்லை. எனவே, இப் பின்விளைவுகளுக்கு அஞ்சத் தேவையில்லை.

தமிழ்தேசிய இயக்கம் சீமான், மணியரசன், .... போன்றோர் தனித்தமிழ்நாடு அமைப்போம் எனப் பேசுவதில்லை. வன்முறை இந்தியாவில் இருந்து பிரிவோம் என்ற காரணத்தினால் காணோம். பொதுவாழ்வில் பதவி, பணம் என்பதே குறிக்கோளாக இருப்பதைப் பார்க்கிறோம். தேர்தல் வழியான அமைதிப்பூங்காவை திராவிடக் கட்சிகள் அமைத்துள்ளன. எல்லா சமயத்தவர்களும் அமைதியுடன் வாழ்வதும், தங்கள் சமயங்களைப் பரப்புவதும், பல மாநிலங்களில் இருந்து தொழில்கள் நடத்துவதும், அரசியலில் தமிழரை ஆள்வதுமாக இருப்பது தொடர்ந்து நடக்கும். - நா. கணேசன் 

 தமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம்   http://www.kannotam.com/

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Jan 8, 2017, 11:04:23 AM1/8/17
to மின்தமிழ், vall...@googlegroups.com


On Sunday, January 8, 2017 at 7:34:15 AM UTC-8, jayabarathans wrote:

நான் தனித்தமிழ்நாடு பற்றிச் சொல்கிறேன்.

          
     தனித்தமிழ்நாடு என்று உலகில் எங்கும் இல்லை.  பல மொழிகள், லிபிகள், பல தாய்மொழி பேசும் மக்கள், பல சமயத்தவர்கள், ... என்று தான் தமிழ்நாடு மாநிலத்தில் வாழ்கின்றனர்.
     பாரத நாடு பழம்பெரும் நாடு நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்... என்ற தேசியகவி பாரதியார் வாக்கை வேதமாகக் கொண்டாடுவது தமிழ்நாடு.
    
    பாரதமாதாவை உருவாக்கி, தமிழ்நாட்டுக்குக் கொணர்ந்தோரில் பரலி. சு. நெல்லையப்பர் சோதரர் (வந்தேமாதரம் பிள்ளை), வ.உ.சி., பாரதியார், ... எண்ணற்றோர் உழைப்பு முக்கியம்.
பொருளாதாரம் நன்கு இந்தியாவுடன் தமிழ்நாட்டைப் பிணைத்துவிட்டது. தண்ணீர் ஆதாரங்களுக்கு எப்போதும் சிக்கல் போல டில்லியும், மேலதிகாரிகளும் பார்த்துக்கொண்டனர் எனவும்
கேள்விப்பட்டுள்ளேன். ஆனால், இந்தியா என்னும் அமைப்புக்கு வரலாற்றிலும் சரி, இப்போதும் தமிழ்நாடு ஆர்ச்சில் கீஸ்டோன் போல. 

தமிழகத்தில் பாரதியார் செய்த பாரதமாதா:

ஊழல் அற்ற, உரிமைகளைப் போராடிப் பெறும் தமிழகமாக வளரவேண்டும். இயற்கை வளங்களை அரசியல்வாதிகள் விற்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.


தமிழ்நாட்டில் குறிப்பாகப் பொது வேலைப் போட்டிகளில் இப்போது பிராமணர் இனம் ஒதுக்கப்படுகிறது.  திறமை மிக்க பிராமணர் தமிழகத்தில் பிழைக்க வழியின்றி, வெளிமாநிலங்களுக்கோ, வெளிநாடுகளுக்கோ ஓடுகிறார்.  


இதற்கு ஆதாரம் உண்டா? தமிழ்நாட்டு பொது வேலைப் போட்டிகளில் யார் தடுக்கிறார்கள்? ஜெயலலிதா தலைமை பூண்ட அ.தி.மு.க அரசா? ஐ.டி. சம்பளத்திற்கு தமிநாட்டு தாலூக்கா
ஆபீஸ் சம்பளம் மேட்ச் ஆகுமா?  அதனால்தான் சேசாத்திரி ஏன் போகிறார்கள் என எழுதியுள்ளார். மைக்ரோசாப்ட்டும், ஆப்பிள் கம்பெனியும் கொடுக்கும் சம்பளத்திற்கு
தமிழ்நாட்டு அரசாங்க சம்பளம் இணையில்லை. இப்போதெல்லாம் நன்கு படிக்கும் நகர்ப்புற மாணவர்கள், ஐஐடி, ஐஐஎம்  மானில, கார்ப்பரேசன் வேலை பெரிது எனக் கருதுவதில்லை.
இது பிராமணர் மட்டுமல்ல, எல்லா ஜாதியினரிலும் பார்க்கலாம். தொழில்முனைவர்களாக ஆகிவிடுகின்றனர். கொங்குநாட்டில் எப்போதுமே அரசாங்க வேலைக்குத்தான் போகணும்
என்ற நிலை இல்லை. கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், சேலம், ... 
 
தமிழ்நாட்டில் இப்போது பெரியாரிசம் மீண்டும் உயிர்த்துத் தலைதூக்குகிறது.  ஆகவே தனித் தமிழ்நாட்டில் ஆரியர் / திராவிடர் பிரிவினை வலுக்கும் என்பது என் முன்னறிவிப்பு.


??

பெரியாரிசம் எங்கே தலைதூக்குகிறது? தமிழ் தேசியம் பெரியாரிசத்துக்கு எதிர்ப்பாக இருக்கிறது. திராவிடக் கட்சிகள் - திமுக, அதிமுகவில் ஸ்டாலின், சசிகலா, ஓபிஎஸ் யாரும்
பெரியாரிசம் எனப் பேசுவதோ, நடைமுறைப்படுத்தவோ காணோமே. பெரியாரிசம் என்றால் என்ன? அவ்வாறு உயிர்த்து தலைதூக்குகிறது? - என விளக்கி எழுதுங்கள்.

நா. கணேசன்
 
சி. ஜெயபாரதன்

2017-01-08 3:41 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:


On Sunday, January 8, 2017 at 12:32:11 AM UTC-8, காத்தன் தொன்னன் wrote:
 2017-01-07 22:36 GMT+05:30 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:
தமிழ்நாடு தனிநாடாக ஆயின், பிராமணர் துரத்தப்படுவார் [இப்போதே பலர் வெளிநாட்டுக்கு ஓடிவிட்டார்].  ஜாதீய மேல்தட்டு ஆதிக்கம் ஓங்கும். தாழ்த்தப்பட்டோர் வீழ்த்தப்படுவார். வெளி மாநிலத் தமிழர்கள் விரட்டப்படுவார்.  தமிழ்நாட்டு தயாரிப்புப் பொருட்கள் விற்கப் பிரச்சனைகள் எழும்.  அண்டை நாட்டுப் பகைமை [கேரளா, ஆந்திரா, கர்நாடகா] அதிகரிக்கும். ஈரோப் மாதிரி [ஈரோ] ஒரே நாணயம் வைத்துக் கூட்டு வாணிபம் இந்தியத் தனி மாநிலங்களில் நடப்பது கடினம். ஈரோப் நாடுகள் தொழிற்துறையில் முன்னேறியது போல் தமிழகம் இன்னும் முன்னேற வில்லை.

இது தேவையற்ற கற்பனையான பீசல். நீங்கள் இன்றைய நிகழ்வுகளின் நோக்கில் பிரச்சனைகளை அணுகுகிறீர்கள் என்பது புரிகிறது. வெளிநாட்டிற்கு போகும் பிராமணர்கள் துரத்தப்பட்டு போவதில்லை. மொழி, மதம், பண்பாடு எது போனாலும் போகட்டும் என்ற பொருள்நோக்குடையவர் (materialist) பிராமணரே வெளிநாட்டு ஓடுகின்றனர். ஓடுபவரை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. 20 - 30 ஆண்டுகள் முன் அயல் நாடுகளில் குடியேறிய பிராமணர்களின் பிள்ளைகள் எந்த மொழி, மதம், பண்பாடு கைக்கொள்கின்றனர்.

1952 பராசக்தி வசனம்: 
தமிழ்நாட்டிலே இத்திருவிடத்திலே பிறந்தவன் நான். பிறக்க ஒரு நாடு பிழைக்க ஒரு நாடு. தமிழர்களின் தலையெழுத்துக்கு நானென்ன விதிவிலக்கா? ரங்கூன்! அது உயிரை வளர்த்தது. என்னை உயர்ந்தவன் ஆக்கியது. திருமணக் கோலத்தில் இருந்த என் தங்கையைக் காண வந்தேன்.  



பிழைக்க வழிதேடி தமிழர் உலகம் அளவிலுமே பரவியுள்ளனர்.

கீழுள்ளவர்கள், மேற்காசியாவில் வசிக்கும் தமிழர்கள்  துரத்தப் பட்டவர்களா?  

இவர்களில் பிராமணர் விழுக்காடு என்னவாக இருக்கும்?

West Asia[edit]

The Middle East is home to thousands of migrants from Tamil Nadu and Sri Lanka, and over 75.000 migrants immigrated to the Middle East in 2012 alone.[19] However, statistics on the numbers of migrants are scarce.

Qatar[edit]

Qatar is the home for about 4,000 Tamils mostly from Tamil Nadu.[1] In December 2000, the "Qatar Tamil Sangam" was inaugurated for conducting Tamil cultural programmes, teaching of Thirukkural and for conducting Tamil elocution contests for Tamil children.

United Arab Emirates[edit]

There are about 450,000 Tamilians in the United Arab Emirates having come from Tamil Nadu as professionals and workers in many sectors.[20] [1] Pongal and New Year are celebrated on a grand scale in Dubai and in a few other states. The first Tamil newspaper from the Middle East region was launched from Dubai on December 10, 2014. Tamil 89.4 FM radio is a tamil radio broadcasting from Dubai UAE.

Other countries[edit]

Bahrain is home for over 7000 Tamils mostly professionals and workers.[1] Saudi Arabia and Kuwait are also home for a substantial number of Tamils who are recent migrants.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

சி. ஜெயபாரதன்

unread,
Jan 8, 2017, 11:05:22 AM1/8/17
to vallamai, tamilmantram, மின்தமிழ், vannan vannan


///But today, Tamil Nadu is facing many crises. Alcohol income-based welfare handouts cannot continue anymore. No one in the state wants low-end jobs; these are taken up by migrants from other states. But the locals do not have the skills required to take up high paying jobs. The focus in the last three decades was in setting up more and more engineering colleges, not polytechnics. The graduating engineers are not good enough to code, nor operate a lathe. Their English is not good enough to get them a call centre job either.

School education is in a crisis of its own.Every village has a government school but the parents don't want their children to go there. The private English school system is a mess as well. These failures are hidden by the liberal marks given in the public exams.The pass rate in 10th and 12th is over 90% in Tamil Nadu.

Andhra Pradesh and Telangana are aggressively competing to take Tamil Nadu's industries away by offering sops and clean administration. Tamil Nadu has still not woken up to this.

People aspire to become middle class and expect reasonable job growth and amenities like clean water, roads and electricity. But the Dravidian parties do not have a solution to offer them. They are too engrossed in sorting out their own leadership problems.

Over the last fifty years, the two Dravidian parties have taken over the entire political space. There is no alternative emerging in the fringes. Now that the main parties themselves are collapsing, the state is in danger of a complete political vacuum. This can set the state back by many decades.

(Reported by Badri Seshadri)////


To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Jan 8, 2017, 11:08:10 AM1/8/17
to வல்லமை, minT...@googlegroups.com, vanna...@gmail.com


On Sunday, January 8, 2017 at 8:05:19 AM UTC-8, ஜெயபாரதன் wrote:

:-) I mentioned Badri's article in this thread:

NG

சி. ஜெயபாரதன்

unread,
Jan 8, 2017, 1:51:25 PM1/8/17
to vallamai, mintamil, vannan vannan
////பெரியாரிசம் எங்கே தலைதூக்குகிறது? தமிழ் தேசியம் பெரியாரிசத்துக்கு எதிர்ப்பாக இருக்கிறது. திராவிடக் கட்சிகள் - திமுக, அதிமுகவில் ஸ்டாலின், சசிகலா, ஓபிஎஸ் யாரும்
பெரியாரிசம் எனப் பேசுவதோ, நடைமுறைப்படுத்தவோ காணோமே. பெரியாரிசம் என்றால் என்ன? அவ்வாறு உயிர்த்து தலைதூக்குகிறது? - என விளக்கி எழுதுங்கள்.

நா. கணேசன்/////

 
////தமிழ்நாட்டில் இப்போது பெரியாரிசம் மீண்டும் உயிர்த்துத் தலைதூக்குகிறது.////  

பெரியாரைப் பற்றிய திரைப்படம் திமுக / அதிமுக காலத்தில் ஏன் வர வேண்டும் ??? 
 
////ஆகவே தனித் தமிழ்நாட்டில் ஆரியர் / திராவிடர் பிரிவினை வலுக்கும் என்பது என் முன்னறிவிப்பு.////

தமிழ்நாடு திராவிட நாடாகத்தானே இருக்கிறது !!!  பெரியாரிசம் என்றால் ஆரிய - திராவிடப் பிரிவினை, பிளவு, பிணக்கு, வெறுப்பு.  

இன்னொன்று :  தனித்தமிழ்நாட்டில் ஆங்கில மொழி ஒழிக்கப்படும் என்பது என் முன்னெச்சரிக்கை.

சி. ஜெயபாரதன்.


+++++++++++++++++++



To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

தேமொழி

unread,
Jan 9, 2017, 12:57:58 AM1/9/17
to மின்தமிழ்


On Sunday, January 8, 2017 at 10:51:25 AM UTC-8, jayabarathans wrote:
////பெரியாரிசம் எங்கே தலைதூக்குகிறது? தமிழ் தேசியம் பெரியாரிசத்துக்கு எதிர்ப்பாக இருக்கிறது. திராவிடக் கட்சிகள் - திமுக, அதிமுகவில் ஸ்டாலின், சசிகலா, ஓபிஎஸ் யாரும்
பெரியாரிசம் எனப் பேசுவதோ, நடைமுறைப்படுத்தவோ காணோமே. பெரியாரிசம் என்றால் என்ன? அவ்வாறு உயிர்த்து தலைதூக்குகிறது? - என விளக்கி எழுதுங்கள்.

நா. கணேசன்/////

 
////தமிழ்நாட்டில் இப்போது பெரியாரிசம் மீண்டும் உயிர்த்துத் தலைதூக்குகிறது.////  

பெரியாரைப் பற்றிய திரைப்படம் திமுக / அதிமுக காலத்தில் ஏன் வர வேண்டும் ??? 
 
////ஆகவே தனித் தமிழ்நாட்டில் ஆரியர் / திராவிடர் பிரிவினை வலுக்கும் என்பது என் முன்னறிவிப்பு.////

தமிழ்நாடு திராவிட நாடாகத்தானே இருக்கிறது !!!  பெரியாரிசம் என்றால் ஆரிய - திராவிடப் பிரிவினை, பிளவு, பிணக்கு, வெறுப்பு.  


பெரியாரிசம் என்றால் ஆரிய - திராவிடப் பிரிவினை, பிளவு, பிணக்கு, வெறுப்பு.   

பெரியாரிசம் என்றால் இவ்வளவுதானா ஐயா!!!! 
பல்கலைக்கழகங்களில் பெரியாரிசம் பாடங்களே உள்ளன.
காந்தி எதிர்த்துப் போராடிய அனைத்தையுமே பெரியாரும் எதிர்த்துப் போராடினார்.

இருவரும்  கொண்ட அடிப்படை வேறுபாடு.... காந்தி வர்ணாசிரம தர்மத்தைப் போற்றினார்...
போற்றிக் கொண்டே சாதியை எதிர்த்த மதநம்பிக்கையாளர் அவர்.

பெரியார் மக்களிடைய உயர்வுதாழ்வு எழுப்பப்பட்டதன் காரணம் மதம், மதம் அதன் கடமையான நன்மையை, நீதியை  செய்யத் தவறிவிட்டது என்று  அடிப்படைக் காரணத்தை எதிர்த்தவர்.

காந்தியம் என்றால் என்னவென்று கேட்டால்... 
அது ஆங்கிலேயரை எதிர்த்த இனவாதம் 
என்பது போல இருக்கிறது, பெரியாரிசம் குறித்து நீங்கள் தந்திருக்கும் விளக்கம்.

..... தேமொழி

 

Seshadri Sridharan

unread,
Jan 9, 2017, 1:45:20 AM1/9/17
to mintamil, ipohs...@gmail.com, வேந்தன் அரசு, p...@giasmd01.vsnl.net.in, doraisu...@gmail.com, ras...@gmail.com, jalas...@gmail.com, muku...@gmail.com, krishna...@gmail.com, rnka...@gmail.com, anbuja...@gmail.com, திருத்தம் பொன்.சரவணன், rajis...@gmail.com, Banukumar Rajendran, yesura...@gmail.com, Shrinivasan T, mani muthu, Pandiyaraja Paramasivam, Senguttuvan K, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, Malarvizhi Mangay, Innamburan S.Soundararajan, Kalairajan Krishnan, Krishnamachary Rangaswamy, bala subramani, V. Dhivakar, N D Logasundaram, Megala Ramamourty, பெருமாள் தேவன், coral shree, Geetha Sambasivam, Satish Kumar Dogra, N. Kannan, rajam ramamurti, aravindan....@gmail.com, satha sivam, rathinam.c...@gmail.com, tamil...@gmail.com, sneelak...@gmail.com, vet...@gmail.com, ts.m...@gmail.com, நா. கணேசன், g.sa...@gmail.com, Nagarajan Vadivel, praman...@gmail.com, Subashini Tremmel
2017-01-08 21:03 GMT+05:30 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:
///பிழைக்க வழிதேடி தமிழர் உலகம் அளவிலுமே பரவியுள்ளனர்.
கீழுள்ளவர்கள், மேற்காசியாவில் வசிக்கும் தமிழர்கள்  துரத்தப் பட்டவர்களா?  
இவர்களில் பிராமணர் விழுக்காடு என்னவாக இருக்கும்?////
நான் தனித்தமிழ்நாடு பற்றிச் சொல்கிறேன்.
 
இந்திய அரசின் இன்றைய அதிகாரக் குவிப்பு, மாநிலங்களின் உரிமைகளை புறக்கணித்தல், பறித்தல் போன்ற அணுகுமுறையின் காரணத்தால் இயற்கையாகவே தனிநாடு கோரிக்கை எழுகின்றது. தமிழகம் அதில் பின் தங்கக் கூடாது என்பதற்கே தமிழ்த் தேசியம் முன்காலை வைக்கின்றது. இந்த நிலையை ஏற்படுத்தியதே இந்திய நடுவணரசு தான். இது முதலாளிய வீழ்ச்சிக்கு அமெரிக்காகவே சுதந்திர பொருளாதார கொள்கையை பிற நாடுகளின் மீது திணித்தது எதைப்போன்றதோ  அதை போன்ற ஒரு வீழ்சசியை நோக்கித் தான் இந்திய நடுவணரசு காய்நகர்த்தல் இருக்கிறது. உங்களால முடிந்தால் நீங்கள் உழைத்து வராத, உழைத்து பெறாத தனிநாடு உங்கள் கண்பட ஒருநாள் வந்துவிட்டால் அதை எதிர்க்காதீர்கள்! வரவேற்றிடுங்கள்!!  எதையும் காலத்தின் தேவை தான் தீர்மானிக்கிறது.

தமிழ்நாட்டில் குறிப்பாகப் பொது வேலைப் போட்டிகளில் இப்போது பிராமணர் இனம் ஒதுக்கப்படுகிறது.  திறமை மிக்க பிராமணர் தமிழகத்தில் பிழைக்க வழியின்றி, வெளிமாநிலங்களுக்கோ, வெளிநாடுகளுக்கோ ஓடுகிறார்.  

 முன்னெல்லாம் பிராமணர்கள் அரசுப்பணியாளர் தேர்விற்கு என்று நூல்களை வாங்கிப்படிப்பர். கோவில்களில் தூணுக்கு தூண் உட்கார்ந்து படிப்பர். இதெல்லாம் 2000கு முன் 2003 கு பிறகு நிகழ்ந்த தகவல் தொழில்நுட்ப செழிப்பில் உருண்டு வாழ்வின் செழுமிய பக்கங்களை நுகரத் தொடங்கிய பின் அரசுப்பணி, வைப்பகப்பணி என்று எதையும் பிராமணர்கள் நாடுவதில்லை. ஏனென்றால் அவற்றில் 25,000 உரூபாவுக்குமேல் சம்பளம் இல்லை. இன்றைய காலகட்டத்தில் நகர வாழ்வை மேற்கொள்ளும் ஒரு குடும்பத்திற்கு மாதம் உரூ 40,000/- தேவைப்படுகிறது.  அதனால் பிராமணர்கள் அப்பணிகளை விரும்புவதில்லை. அவ்வளவு ஏன் உரூ 50,000/ - சம்பளம் உள்ள மாப்பிள்ளையை எந்த பிராமணப் பெண்வீட்டாரும் ஏறெடுத்து பார்ப்பதில்லை. குறைந்தது உரூ 70,000/ மாவது மாதம் சம்பாதித்தால் தான் ஜாதகத்தையே வாங்குகிறார்கள். பிராமணர்கள் ஒதுக்கப்படுவதில்லை அவர்களாகவே ஒதுக்கித்தள்ளி விட்டார்கள் என்பதே உண்மைக்கே உண்மை.
 
தமிழ்நாட்டில் இப்போது பெரியாரிசம் மீண்டும் உயிர்த்துத் தலைதூக்குகிறது.  ஆகவே தனித் தமிழ்நாட்டில் ஆரியர் / திராவிடர் பிரிவினை வலுக்கும் என்பது என் முன்னறிவிப்பு. - சி. ஜெயபாரதன்

40 அகவைக்கு கீழ் உள்ள இளந்தலைமுறையர் எந்த சாதி, மதமமானாலும் அவர்கள் ஆரியர் திராவிடர் என்ற கருத்தையே அறியாதவர்களாவே உள்ளனர். அவர்களிடம் பெரியார், அண்ணா காலத்து வெறுப்பு ஏதும் இல்லை. ஆனால் அவர்கள் காலத்தில் வாழ்ந்த பல பிராமணர் உங்களைப்போன்ற அச்சத்தையே கொண்டுள்ளனர். நான் இதுவரை பேசிய பிராமணர் பலரும் தனிநாடு, தனித் தமிழ் என்றாலே தமக்கு ஏதோ கேடு சூழ்கிறது என்றே கருதுகின்றனர். இத்தகைய அச்சம் ஏற்படாமல் நடந்துகொள்ளவேண்டியது தமிழ்த் தேசியர் கடமை. ஏனென்றால் இன்று பிராமணர் பலர் இந்தியா மட்டுமல்ல அமெரிக்கா போன்ற நாடுகளிலும் மிக உயரிய பதவிகளை ஏற்று அதிகாரம் பெற்றவர்களாக உள்ளனர். அவர்களுடைய உதவியும் ஒத்துழைப்பும் தமிழ்த் தேசியத்திற்கு தேவை. ஆதலால் பெரியார் அண்ணா காலத்து பிராமணர் வெறுப்பு கொள்கையை கைக்கொள்ளாமல் இருப்பதே அறிவுடைமையாகும்.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jan 9, 2017, 2:12:21 AM1/9/17
to mintamil

வணக்கம்.


On 09-Jan-2017 11:28 AM, "தேமொழி" <jsthe...@gmail.com> wrote:
>
>
>
> On Sunday, January 8, 2017 at 10:51:25 AM UTC-8, jayabarathans wrote:
>>
>> ////பெரியாரிசம் எங்கே தலைதூக்குகிறது? தமிழ் தேசியம் பெரியாரிசத்துக்கு எதிர்ப்பாக இருக்கிறது. திராவிடக் கட்சிகள் - திமுக, அதிமுகவில் ஸ்டாலின், சசிகலா, ஓபிஎஸ் யாரும்
>> பெரியாரிசம் எனப் பேசுவதோ, நடைமுறைப்படுத்தவோ காணோமே. பெரியாரிசம் என்றால் என்ன? அவ்வாறு உயிர்த்து தலைதூக்குகிறது? - என விளக்கி எழுதுங்கள்.
>>
>> நா. கணேசன்/////
>>
>>  
>>>
>>> ////தமிழ்நாட்டில் இப்போது பெரியாரிசம் மீண்டும் உயிர்த்துத் தலைதூக்குகிறது.////  
>>
>>
>> பெரியாரைப் பற்றிய திரைப்படம் திமுக / அதிமுக காலத்தில் ஏன் வர வேண்டும் ??? 
>>  
>>>
>>> ////ஆகவே தனித் தமிழ்நாட்டில் ஆரியர் / திராவிடர் பிரிவினை வலுக்கும் என்பது என் முன்னறிவிப்பு.////
>>>
>> தமிழ்நாடு திராவிட நாடாகத்தானே இருக்கிறது !!!  பெரியாரிசம் என்றால் ஆரிய - திராவிடப் பிரிவினை, பிளவு, பிணக்கு, வெறுப்பு.  
>
>
>
> பெரியாரிசம் என்றால் ஆரிய - திராவிடப் பிரிவினை, பிளவு, பிணக்கு, வெறுப்பு.   
>
> பெரியாரிசம் என்றால் இவ்வளவுதானா ஐயா!!!! 
> பல்கலைக்கழகங்களில் பெரியாரிசம் பாடங்களே உள்ளன.
> காந்தி எதிர்த்துப் போராடிய அனைத்தையுமே பெரியாரும் எதிர்த்துப் போராடினார்.
>
> இருவரும்  கொண்ட அடிப்படை வேறுபாடு.... காந்தி வர்ணாசிரம தர்மத்தைப் போற்றினார்...
> போற்றிக் கொண்டே சாதியை எதிர்த்த மதநம்பிக்கையாளர் அவர்.
>
> பெரியார் மக்களிடைய உயர்வுதாழ்வு எழுப்பப்பட்டதன் காரணம் மதம், மதம் அதன் கடமையான நன்மையை, நீதியை  செய்யத் தவறிவிட்டது என்று  அடிப்படைக் காரணத்தை எதிர்த்தவர்.
>
> காந்தியம் என்றால் என்னவென்று கேட்டால்... 
> அது ஆங்கிலேயரை எதிர்த்த இனவாதம் 
> என்பது போல இருக்கிறது, பெரியாரிசம் குறித்து நீங்கள் தந்திருக்கும் விளக்கம்.
>
> ..... தேமொழி
>

காந்தியம் காந்தியின் சுயமுன்னேற்றிக்கானதல்ல, தேச அடிமை விடுதலைக்கானது.

பெரியாரிசம்

பெரியாரின் சுயமுன்னேற்றிக்கானது, சாதி அடிமை விடுதலைக்கானதல்ல.

அன்பன்
கி. காளைராசன்


> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---

> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Jan 9, 2017, 2:28:49 AM1/9/17
to மின்தமிழ், kalair...@gmail.com
இருவருமே ஆட்சிப் பதவிகளைப் புறக்கணித்தவர்கள்.


பெரியார் சுயமுனேற்றம் கண்டதை விளக்கவும்.


செல்வந்தராக இருந்தும் மணம் போனபடி வாழ்ந்து பொழுதைக் கழிக்காமல் சமூக அநீதியை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்ததும், சிறையில் அடிபட்டது போன்றவை சுய முன்னேற்றம்  ஆகுமா?

விளக்குக.
..... தேமொழி

 

>>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.


>>> For more options, visit https://groups.google.com/d/optout.
>>
>>
> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

> To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com


> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

தேமொழி

unread,
Jan 9, 2017, 2:32:25 AM1/9/17
to மின்தமிழ், kalair...@gmail.com
தட்டுப்பிழைகளை நீக்கி ...மீண்டும் ஒருமுறை....

இருவருமே ஆட்சிப் பதவிகளைப் புறக்கணித்தவர்கள்.

பெரியார் சுயமுன்னேற்றம் கண்டதை விளக்கவும்.

செல்வந்தராக இருந்தும் மனம் போனபடி வாழ்ந்து பொழுதைக் கழிக்காமல் 
சமூக அநீதியை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்ததும், சிறையில் அடைபட்டது போன்றவை 
சுய முன்னேற்றம்  ஆகுமா?

விளக்குக.

.....தேமொழி

Innamburan S.Soundararajan

unread,
Jan 9, 2017, 2:37:43 AM1/9/17
to mintamil, kalairajan krishnan
காந்திஜிக்கும் பெரியாருக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்,










இன்னம்பூரான்

--

Jaisankar Jaganathan

unread,
Jan 9, 2017, 3:40:00 AM1/9/17
to mintamil
அப்படியென்றால் காந்தி மடு என்றால் பெரியார் மலை என்கிறீரா தோழர்
--
regards,
jaisankar jaganathan

Innamburan S.Soundararajan

unread,
Jan 9, 2017, 4:02:28 AM1/9/17
to mintamil
என்னை எவ்வளவு கேலி செய்தாலும் பொறுத்துக்கொள்வதில் பிரச்னை இல்லை.
ஆனாலும், என்னை கேலி செய்கிறேன் பேர்வழி என்று காந்திஜியை கேலி செய்வது தகுமோ? ஐயா? ஜய சங்கர! ஜய சங்கர! ஹரிஹி ஓம்! ஜகன்னாதா! அடைக்கலம் தர வாரும், ஐயா!

Seshadri Sridharan

unread,
Jan 9, 2017, 4:18:10 AM1/9/17
to mintamil, ipohs...@gmail.com, வேந்தன் அரசு, p...@giasmd01.vsnl.net.in, doraisu...@gmail.com, ras...@gmail.com, jalas...@gmail.com, muku...@gmail.com, krishna...@gmail.com, rnka...@gmail.com, anbuja...@gmail.com, திருத்தம் பொன்.சரவணன், rajis...@gmail.com, Banukumar Rajendran, yesura...@gmail.com, Shrinivasan T, mani muthu, Pandiyaraja Paramasivam, Senguttuvan K, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, Malarvizhi Mangay, Innamburan S.Soundararajan, Kalairajan Krishnan, Krishnamachary Rangaswamy, bala subramani, V. Dhivakar, N D Logasundaram, Megala Ramamourty, பெருமாள் தேவன், coral shree, Geetha Sambasivam, Satish Kumar Dogra, N. Kannan, rajam ramamurti, aravindan....@gmail.com, satha sivam, rathinam.c...@gmail.com, tamil...@gmail.com, sneelak...@gmail.com, vet...@gmail.com, ts.m...@gmail.com, நா. கணேசன், g.sa...@gmail.com, Nagarajan Vadivel, praman...@gmail.com, Subashini Tremmel
2017-01-09 14:09 GMT+05:30 Jaisankar Jaganathan <jaisa...@gmail.com>:
அப்படியென்றால் காந்தி மடு என்றால் பெரியார் மலை என்கிறீரா தோழர்

காந்தியின் தலைமையை ஏற்று காந்தி, நேருவின் இந்தி இந்தியாவின் தேசிய மொழி என்ற கருத்து திணிப்பை கொள்கையளவில் மட்டுமல்லாமல் அதை செயற்படுத்திக் காட்டியவர் தான் இந்த ஈரோடை இராமசாமி என்றால் மலை யார் என்பது விளங்கிவிடும்.செய்சங்கர். இராசாசிக்கு முன் தமிழகத்தில் இந்திய திணித்த ஆரியர் பெரியார் தான்.

காத்தன் தொன்னன் 


 

Innamburan S.Soundararajan

unread,
Jan 9, 2017, 5:34:08 AM1/9/17
to Seshadri Sridharan, mintamil, Thenee MK, வேந்தன் அரசு, Krishnan Ramasamy, dorai sundaram, Raju Saravanan, Jalasayanan Chellappa, Mukunthan Pathmanesan, Krishnan S, nkantan r, anbujaya2005, திருத்தம் பொன்.சரவணன், rajalakshmi paramasivam, Banukumar Rajendran, yesu rajan, Shrinivasan T, mani muthu, Pandiyaraja Paramasivam, Senguttuvan K, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, Malarvizhi Mangay, Kalairajan Krishnan, Krishnamachary Rangaswamy, bala subramani, V. Dhivakar, N D Logasundaram, Megala Ramamourty, பெருமாள் தேவன், coral shree, Geetha Sambasivam, Satish Kumar Dogra, N. Kannan, rajam ramamurti, Aravindan Neelakandan, satha sivam, Rathinam Chandramohan, Neduchezhian T. Chezhian, S NEELAKANTAN, Vetha Nayagy, ts.m...@gmail.com, நா. கணேசன், G Sannah, Nagarajan Vadivel, Parvathy ramanathan, Subashini Tremmel
சேசாத்திரி ஐயா போல் எழுதும் ஆற்றல் எனக்கு கிடையாது. தன் முதல் மனைவி ஞாபகார்த்தமாக ஈரோடில் ஹிந்தி வகுப்புக்கள் துவக்கிய பெருமை பெரியாருக்கு சாரும். அதற்கு தலைமை தாங்க அவர் அழைத்தது வந்தது திரு.வி.க. அவர்களை. ஹிந்தியை கொணர்ந்த ராஜாஜி, பிற்காலம் திராவிடக்கட்சிகளுக்கு மேலான ஆவேசத்துடன் அதை எதிர்த்தார். காந்திஜியின் அறிவுரை படி பள்ளி மாணவனாகிய நான் ஹிந்தி படித்ததும், பிற்காலம் Hindi Cheating Scheme (தட்டச்சு பிழையிருந்தால் மன்னிக்க வேண்டாம்!) பொருட்டு ஊழியத்தின் போது, பிரதமரின் ஹிந்தி ஆலோசகரும், பிரபல கவிஞரும், என்னை அபிமான புத்திரனாக பாவித்தவருமான ராம்தாரி ஸின்ஹா 'தின்கர்' அவர்கள் தலைமையில் நடந்த டில்லி ஆலோசனை மன்றத்தில், அழைப்பின் பேரில் சென்ற நான்,'ஹிந்தியெல்லாம் சரி தான். கட்டாயப்படுத்தி , வவுத்தில் அடித்தால், கற்ற ஹிந்தியை மறந்து விடுவேன்' என்று ஹிந்தியில் சொன்னதும் நடந்த சமாச்சாரம் தான்.

Jaisankar Jaganathan

unread,
Jan 9, 2017, 7:14:34 AM1/9/17
to mintamil
தோழர் இன்னம்பூரான்,

சும்மா காமடிக்கு. 

பெரியாரின் சீர்திருத்தம் இல்லையென்றால் தமிழர்கள் ஒடுக்கப்பட்டு இருப்பார்களே. ஒரு தலைவன் இடத்தை பூர்த்தி செய்தவர் பெரியார். ஆனால் காந்திஜி தென்னாப்பிரிககாவிலும் இந்திய சுதந்திரத்திலும் தமிழர்களை பயன்படுத்திக்கொண்டவர். காந்தியால் தமிழனுக்கு என்ன நன்மை என்றும் பெரியாரால் என்ன நன்மை என்றும் யோசித்தால் பெரியாரே முன்னிற்கிறார் எனக்கு

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jan 9, 2017, 7:59:53 AM1/9/17
to mintamil

வணக்கம்.
எனது ஊர்த் தெரு மக்களுக்கு நான் செய்த அளவிற்குப் பெரியாரோ காந்திஜியோ ஏதும் செய்துவிடவில்லை :)

--
It is loading more messages.
0 new messages