தமிழ் மொழி காட்டுமிராண்டி மொழியா அல்லது கலல்ப்பு மொழியா

67 views
Skip to first unread message

vnagarajan

unread,
Jul 24, 2012, 3:05:01 PM7/24/12
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
பழந்தமிழர் மொழி தமிழ்.  தமிழ்ப் பேச்சுக் குமுகத்தில் அந்தணர் உட்பட அனைவரும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள்.  மொழியியல் அடிப்படை உணர்ந்தவர்கள் தமிழ்ப் புலவர்கள் கூறும் தொன்மையான இறைவன் தந்தமொழி தமிழ் என்பதை ஏற்றுக்கொள்வது கடினம்.  தமிழ் திராவிடக் குழுவின் பழமையான மொழி
ஆதி திராவிடர்களான பறையர் என்றழைக்கப்பட்ட ஆதிவாசிகள் என்ன மொழி பேசினார்கள், அடுத்துவந்த நாகர்களின் தாய்மொழி என்ன என்பதற்கு உறுதியான விடை இல்லை
தமிழ்மொழிக்கும் சமஸ்கிரிதத்துக்கும் நேரடித்தொடர்பு இருபதாகவும் ஆதாரங்கள் இல்லை
தமிழ் மொழிக்கும் இந்தோ-ஆரிய மொழிகளுக்கும் இலக்கண வேர்ச்சொல் அடிப்படையில் சில ஒப்புமைகள் இருப்பதன் அடிப்படையில் தமிழர்கள் தமிழகத்துக்குப் புலம்பெயர்ந்து வருவதற்குமுன் வடபுலத்து மக்களுடன் சேர்ந்து வாழ்ந்திருக்கவேண்டும் என்று கருத அடிப்படை யூகம் உள்ளது
தமிழ் மொழி என்பது வாழும் மொழி.  நெடிய வரலாறு உள்ளது. எனவே பழங்காலத்திலும் இடைக்காலத்திலும் பிற்காலத்திலும் தமிழ் மாற்றத்துக் உட்பட்டு வளர்ந்தமொழி. கி.மு 2-ஆம் நூற்றாண்டு அளவில் சிறந்த இலக்கணமும் அகம் புறம் என்று நுண்ணிய மன உணர்வுகளை வார்த்தைகளால் வெளிப்படுத்தும் இலக்கியங்களையும் கொண்ட தமிழ் பேச்சு வழக்கில் இருந்த தமிழில் இருந்தும் பேச்சு வழக்கில் இருந்த தமிழ் கொடுந்தமிழில்  இருந்தும் வேறுபட்டு விளங்கியது
ஒலியன் அடிப்படையில் தமிழ் ஒரு முழுமைபெற்ற மொழி என்று கருத முடியாத மொழி என்றாலும் வேறெந்த மொழியிலும் இல்லாத ஆயுதம், ற, ழ என்ற எழுத்துக்கள் அம்மொழிக்கு ஒரு தனித்தன்மையை அளித்தது. கண்ணெழுத்துக்கள் என்றழைக்கப்படும் எழுத்து வடிவம் அல்லது வரிவடிவம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வழக்கில் இருந்தது. அது இன்றுள்ள எழுத்துரு வரிவடிவ அமைப்பிலிருந்து முற்றீலும் மாறுபட்டது
அக்காலத்தில் எழுத்துவடிவில் இருந்த தமிழ் வட்டெழுத்து என்றழைக்கப்பட்டது.  வட்டெழுத்து தமிழகத்துக்கு வெளியே போனீஸியாவிலிருந்து கி.மு 6-ஆம் அல்லது 7-ஆம் நூற்றாண்டு அளவில் வணிகர்களால் தமிழகத்துக்குக் கொண்டுவரப்பட்டிருக்கக்கூடும்  என்று கருதலாம்
இந்தப் பழைய எழுத்துமுறை கி.பி 9-ஆம் அல்லது 10-ஆம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட தமிழ்-கிரந்த எழுத்துமுறையோடு இணைந்து புதிய கண்னெழுத்து கி.பி 10-ஆம் நூற்றாண்டுக்குப்பின் வழக்கில் இருந்திருக்கக்கூடும்
எனவே இன்றைய வழக்கில் இருக்கும் தமிழ் பண்டைய தமிழிலிருந்து கண்னெழுத்து அடிப்படையில் மாற்றம்பெற்று வழங்கும் மொழியாகக் கருதவேண்டும்
தமிழுக்கும் சமஸ்கிரிதத்துக்கும் இலக்கண அடிப்படையில் வேறுபாடு உள்ளதால் தமிழ் சமஸ்கிரிதத்தில் இருந்து தோன்றியதாகக் கருத இடமில்லை
இந்தோ-ஆரிய மொழிக் குழுமத்தில்  பலூச்சி மொழியுடன் நெருங்கிய தொடர்புடையதாகச் சில ஆராய்ச்சித் தகவல் சுட்டிக்காட்டுகிறது
மேலே சொன்ன செய்திகளின் அடிப்படையில் உற்று நோக்கும்போது தமிழ் நாட்டில் தொடக்கத்தில் வாழ்ந்த மலையகக் காடுறை பழங்குடிகளின் அதன்பின் வந்த நாகர்களின் மொழி என்று நிறுவத் தகுந்த ஆதாரங்கள் இல்லை.  திராவிடர்கள் என்றழைக்கப்படும் வேளிர்கள் ஆசியா மைனரில் இருந்து வடமேற்குப் பகுதிவழியாகத் தமிழகம் வந்தவர்கள் பேசிய மொழியின் வளர்ச்சியாகத் தமிழ் உருவாகியிருக்கலாம் என்று அனுமானம் கொள்ள வாய்ப்புள்ளது
இன்றுள்ள நடைமுறைச் சிக்கல் திராவிடம், தமிழ், தமிழ்நாடு, தமிழர்கள் என்ற அடிப்படைக் கருத்துருக்களை ஆய்வுலகம் ஏற்றுக்கொள்ளும்விதமாக நிறுவ ஆய்வுப்பணிகள் நிகழவில்லை
நாகராசன்










வேந்தன் அரசு

unread,
Jul 24, 2012, 10:49:39 PM7/24/12
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com


24 ஜூலை, 2012 3:05 pm அன்று, vnagarajan <radius.co...@gmail.com> எழுதியது:

சிந்து நாகரிகம் என ஒன்றும் அங்கு மக்கள் வாழ்ந்தார்கள் அவர்கள் ஒரு மொழி பேசினார்கள்  என்பது எல்லாம் மறந்து விட்டு விட்டீங்க

இந்தியாவில்தான் முதலில் வேர் தேடணும்


வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

seshadri sridharan

unread,
Jul 25, 2012, 12:10:33 PM7/25/12
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
//தமிழ் திராவிடக் குழுவின் பழமையான மொழி ஆதி திராவிடர்களான பறையர் என்றழைக்கப்பட்ட ஆதிவாசிகள் என்ன மொழி பேசினார்கள், அடுத்துவந்த நாகர்களின் தாய்மொழி என்ன என்பதற்கு உறுதியான விடை இல்லை//

இவர்கள் மொழி வேறுபட்டதாக இருக்கும் என்ற ஊகத்தினால் எழுப்பப்படும் கேள்வி தான் அது. ஆமால் இன்றளவும் தமிழிலேயே  பேசுபவர்கள் இனற்ளவும் பேச்சி மொழியால் தமிழ் சாகாமல் காத்து வருபவர்கள் பறையர்கள் உள்ளிட்ட ஒட்க்கப்பட்ட மக்களே.


//அக்காலத்தில் எழுத்துவடிவில் இருந்த தமிழ் வட்டெழுத்து என்றழைக்கப்பட்டது.  வட்டெழுத்து தமிழகத்துக்கு வெளியே போனீஸியாவிலிருந்து கி.மு 6-ஆம் அல்லது 7-ஆம் நூற்றாண்டு அளவில் வணிகர்களால் தமிழகத்துக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கக்கூடும்  என்று கருதலாம்//

வட்டெழுத்துக்கும் போனீசியருக்கும் என்ன தொட்ர்பு. வட்டெழுத்து  கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் தான் பிராமியில் இருந்து திரிந்தது என்பது அண்மைக் கால தொல்லியல் கல்வெட்டுகளின் படி உறுதி செய்யப்பட்டு உள்ளது. அது கி.பி. 6 ஆம் நூற்றாண்டில் தான் அது முழுமையும் தனித்த அடையாளம் பெற்றது. பிராமி எழுத்தை தவறாக வட்டெழுத்து என்று குறிப்பிட்டு விட்டதாக கூறுவீர்களானால். பிராமி எழுத்து கி.மு. 7 - 8 ஆம் நூற்றாண்டிலேயே இருந்தது என்பதற்கு கொற்கையில் கிடைத்த பானை ஓட்டு எழுத்து சான்று பகர்கின்றது. படம் இதோ:

Inline image 1

//நாகர்களின் மொழி என்று நிறுவத் தகுந்த ஆதாரங்கள் இல்லை.  திராவிடர்கள் என்றழைக்கப்படும் வேளிர்கள் ஆசியா மைனரில் இருந்து வடமேற்குப் பகுதிவழியாகத் தமிழகம் வந்தவர்கள் பேசிய மொழியின் வளர்ச்சியாகத் தமிழ் உருவாகியிருக்கலாம் என்று அனுமானம் கொள்ள வாய்ப்புள்ளது//

நாகர் தமிழர் அல்லர் என்பது ஒரு ஊகமே. ஏனெனில் தென் ஆசியா முழுமையிலும்  நாகர் பரவி இருந்துள்ளனர் என்ற கருத்து ஒன்றே இதற்கு ஆதாரம். நீலமலையில் வாழும் இருளர் இளைஞர் ஒருவரிடம் 5 ஆண்டுகள் முன் நான் உரையாடிய போது சில தமிழ் வாக்கியங்களை குறிப்பிட்டு உங்கள் இருளர் மொழியில் என்னென்பீர் என்றேன்.  அவர்  அதைச் சொன்ன போது அதுவும் தமிழின் பண்டைய வழக்காறு தான் என்பதைத் தெரிந்து கொண்டேன். என்ன! இன்று இலக்கியங்களில் மட்டுமே ஆளப்படும் பல பழந் தமிழ்ச் சொற்கள் அவர்களுடைய அன்றாட்டு பேச்சில் இன்றும் வழங்குகின்றது.   இத்உ தான் இனறைய தமிழையும் அவர் மொழியையும் வேறுபடுத்துகின்றது. வேளிர் என்போர் ஒரு சிறு கூட்டமே. அவர் தமிழகம் வந்தனர் என்பதும் உண்மையே. அதை வைத்து தமிழர்  எல்லோரும் அவர்களிடம் இருந்து தான் தமிழை கற்றனர் என்பது சான்று இல்லாதக் கருத்து. தமிழ்நாட்டில் உள்ளோர் அனைவரும் வேளிர் வழிவந்தோர் அல்லர் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். தமிழர் எனபோர் பண்டு கசாகத்தான் முதல் இந்தியப் பெருங்கடல் தீவுகள் வரை வாழ்ந்த பெரு மொழி இனத்தவர்.  வட வேங்கடம் தென் குமரி என்ற தொல்காப்பியப் பாயிரப் பாடலுக்கு  இந்த யூடியூபில் அருகோ விளக்கம் தருகின்றார் பாருங்கள்

korkai 785 BCE brahmi portsherd.jpg

Innamburan Innamburan

unread,
Jul 25, 2012, 10:23:33 PM7/25/12
to mint...@googlegroups.com
இவ்விழையை பலமுறை படித்தும்,  மூவரும் சொல்ல வருவது யாது என்பது தெளிவாகப் புலப்படவில்லை. அதுவும், இதுவுமாக கலந்துரைத்தால் எதுவும் விளங்கவில்லை. தற்பொழுது, இரு வரிகளை மட்டும் எடுத்துக்கொண்டால்...

1. தமிழ்மொழிக்கும் சமஸ்கிரிதத்துக்கும் நேரடித்தொடர்பு இரு(ப்)பதாகவும் ஆதாரங்கள் இல்லை.

~மொழிகளுக்குள் நேரடித்தொடர்பு எது, அவ்வாறு இல்லாத தொடர்பு எது என்பதை முதலில் தெளிவு படுத்த வேண்டும் அல்லவா. சும்மா வளையவந்தால், என்ன பிரயோஜனம்?

~~~~  ‘...And indeed, Chomsky and other generative linguists like him have shown that the 5000 to 6000 languages in the world, despite their very different grammars, do share a set of syntactic rules and principles. These linguists believe that this “universal grammar” is innate and is embedded somewhere in the neuronal circuitry of the human brain. And that would be why children can select, from all the sentences that come to their minds, only those that conform to a “deep structure” encoded in the brain’s circuits...’ (மேலதிக விவரங்களுக்கு:

அதாவது: ‘நோம் சோம்ஸ்கி போன்ற மொழியியல் வல்லுனர்கள், உலகின் 5000~6000 மொழிகளின் இலக்கணங்களின் அடிப்படை இலக்கண விதிகளில், கோட்பாடுகளில், ஒரு ஒற்றுமை காணக்கிடைக்கிறது. அது மூளையில் பதிந்து விட்ட வழிமுறை எனலாம்...’ என்கிறார்கள்.

2. தமிழ் மொழிக்கும் இந்தோ-ஆரிய மொழிகளுக்கும் இலக்கண வேர்ச்சொல் அடிப்படையில் சில ஒப்புமைகள் இருப்பதன் அடிப்படையில் தமிழர்கள் தமிழகத்துக்குப் புலம்பெயர்ந்து வருவதற்குமுன் வடபுலத்து மக்களுடன் சேர்ந்து வாழ்ந்திருக்கவேண்டும் என்று கருத அடிப்படை யூகம் உள்ளது.

~ முதல் வாக்கியத்திற்கும், அடுத்ததிற்கும் தொடர்பில்லை. ‘யூகம்’ ! யுகம் யுகமாக யூகம் செய்தே காலத்தைக் கழிக்கிறோம்.

~~~~நாம் கையில் வெண்ணைய் வைத்துக்கொண்டு நெய்க்கு அழும் ரகம். 

‘அன்றொரு நாள் ஜூன் 3’ பதிவின் கதாநாயகர் ஜார்ஜ் கார்டோனா அவர்கள் பாணினியின் ஸமஸ்கிருத இலக்கணத்தைக் கரைத்துக் குடித்த பேராசிரியர். (‘...பாணினி, பதஞ்சலி, ... என்ன வேண்டுமென்றாலும் கேளுங்கள் ... இவரிடமிருந்து மிகச் சரியான விடை கிடைக்கும்...’ -ராஜம்:ஜூன் 3, 2012) அவரிடம் சிஷ்யையாக இருந்த ராஜம் என்ற அந்த வீரவநல்லூர் பொண்ணு தமிழ் இலக்கண/இலக்கிய/உரை நுட்பங்களை, நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமாக முன்னிறுத்தி, அவருடம் வாதாடவே. ஒரு ஆய்வு நூல் பிறந்தது: A COMPARATIVE STUDY OF TWO ANCIENT INDIAN GRAMMATICAL TRADITIONS: THE TAMIL TOLKAPPIYAM COMPARED WITH THE SANSKRIT RK-PRATISAAKYA, TAITTRIYA-PRA


ராஜமும் முனைவர் ராஜம் ஆனாளே- 1981.


'மொத மொதல்லெ நான் கார்டோனாவெ அட்வைசராத் தேர்ந்து எடுத்தப்போ (இந்த நாட்டுலெ அப்பிடித்தான்; படிக்கிறவங்கதான் ஆசான்களத் தேர்ந்து எடுப்பொம்!) ... நெறயப்பேர் சொன்னாங்க ... அவரு (கார்டொனா) யாரெயும் Dr அல்லது Professor அடைமொழி இல்லாமச் சொல்றதெயோ கூப்புடறதையோ விரும்ப மாட்டாரு. Dissertation எழுதி முடிச்சி ... ஒரு தகுதி வந்த அப்றம்தான் - George-ன்னு சொன்னாலோ கூப்ட்டாலோ அவருக்குப் பிரியம். அது நல்லா மனசுலெ பதிஞ்சு போச்சு! சரி, Dissertation எழுதி முடிச்சி, பட்டம் வாங்கி, வேலையும் பாத்து, அதுக்கப்புறம் ஒரு தடவெ அவரெப் பாத்தப்பொ ... வழக்கப்படி ... Dr. கார்டோனா-ன்னு மதிப்பா சொன்னப்பொ ... எனக்கு அனுமதி கெடச்சுது அமோகமா, "இனிமே நீ என்னெ George-னெ சொல்லலாம்-னு." ராஜம் 12 11 10)


சரி. விஷயத்துக்கு வருகிறேன். ராஜத்தின் படைப்பாற்றலை, ஆய்வுத்திறனை, சொல்லாட்சியை, கவின் ஆளுமையை அன்றாடம் கண்டு நான் வியக்காத நாள் கிடையாது. அவரது படைப்புகளை பொக்கிஷமாக போற்றிக்காக்க வேண்டும்.


சரி. பாயிண்டுக்கு வருகிறேன். ஆய்வு நூல்களுக்கு ஒரு ரத்ன சுருக்கம் உண்டு. DISSERTATION ABSTRACTS INTERNATIONAL: Volume 42, Number 3, 1981l அவர் கூறுகிறார்:

'...தொல்காப்பியத்துக்கும் சம்ஸ்க்ருத இலக்கண நூல்களுக்கும் உள்ள உறவு பற்றிய தெளிவு இல்லை...அந்த இலக்கை நோக்கிய விவரமான, பாரபக்ஷமற்ற ஒரு இடத்து ஆய்வுகள் இது வரை வர இல்லை. இது அந்த இலக்கை நோக்கிய ஆய்வு முயற்சி... ஆய்வு சொல்வது யாதெனில்: தொல்காப்பியத்துக்கும்,ஆய்வில் எடுத்துக்கொள்ளப்பட்ட சம்ஸ்க்ருத இலக்கண நூல்களுக்கும் ஒற்றுமை பல; வேற்றுமை பல. வடமொழி நூல்களுக்குள்ளே பல வேற்றுமைகள் தென்படுகின்றன... இந்த பின்னணியில், இந்த ஆய்வு நக்ஷத்ர மண்டல அணுகுமுறையை பின்பற்றுகிறது. புகழ்பெற்ற இலக்கணாசிரியர்கள் பெரிய சொன்னப்பொ ... எனக்கு அனுமதி கெடச்சுது அமோகமா, "இனிமே நீ என்னெ George-னெ சொல்லலாம்-னு." ராஜம் 12 11 10

இந்த மாதிரியான ஆய்வுகளுக்கு ரத்ன சுருக்கம் ஒன்று இருக்கும். அதில் (DISSERTATION ABSTRACTS INTERNATIONAL: VOLUME 42, NUMBER 3, 1981) ல் முனைவர் ராஜம் கூறியிருப்பதின் சாராம்சம்:

  1. தொல்காப்பியத்திற்கும், சம்ஸ்கிருத இலக்கண நூல்களுக்கும் உள்ள உறவு சரியாக புலப்படவில்லை;
  2. இது வரை அது பற்றிய விவரமான, திட்டமிட்ட, பாரபக்ஷமற்ற, ஒரே கோர்வையான ஆய்வு வெளிவரவில்லை;
  3. இது அந்த இலக்கை நோக்கிய முயற்சி;
  4. என் ஆய்வு முறை நக்ஷத்ர மண்டல அணுகுமுறை; பிரபல இலக்கணாசிரியர்கள் பெருந்தலை நக்ஷத்ரங்கள். மற்றவை சிறிய நக்ஷத்ரங்கள்.
  5. ஆய்வு கூறுவது: (1) தொல்காப்பியத்திற்கும், நான் எடுத்துக்கொண்ட சம்ஸ்கிருத இலக்கண நூல்களுக்கும் ஒற்றுமைகள் பல; (2) வேற்றுமைகள் பல. (3) சம்ஸ்கிருத நூல்களுக்குள் வேற்றுமைகள் பல.


என் துணிபு: 

1. நோம் சோம்ஸ்கி, இந்த ஆய்வு நூலை படித்திருக்கலாம். நம்மவர்கள் எட்டிக்கூட பார்த்திருக்க மாட்டார்கள்.

2. 1981க்கு பின் இதற்கு ஈடான ஆய்வு ஒன்று கூட வெளி வரவில்லை.


நீண்ட பதில். எனவே, திசை மாறாமல் இருக்க, இதை வைத்து ஒரு புதிய இழையை தொடங்கி இருக்கிறேன். தமிழ் மரபு அறக்கட்டளை ரக்ஷது.

இன்னம்பூரான்

25 07 2012 






Geetha Sambasivam

unread,
Jul 26, 2012, 1:07:32 AM7/26/12
to mint...@googlegroups.com
அருமையான கருத்துகள் கொண்ட இழை.  இதில் கருத்தெல்லாம் சொல்லும் அளவுக்குத் தமிழறிவோ, சம்ஸ்கிருத அறிவோ இல்லை, என்பதால் அறிஞர்களின் பகிர்வைத் தள்ளி இருந்து பார்த்துக் கொள்கிறேன்.  நன்றி.  வணக்கம். 

2012/7/26 Innamburan Innamburan <innam...@gmail.com>
இவ்விழையை பலமுறை படித்தும்,  மூவரும் சொல்ல வருவது யாது என்பது தெளிவாகப் புலப்படவில்லை. அதுவும், இதுவுமாக கலந்துரைத்தால் எதுவும் விளங்கவில்லை. தற்பொழுது, இரு வரிகளை மட்டும் எடுத்துக்கொண்டால்...

நீண்ட பதில். எனவே, திசை மாறாமல் இருக்க, இதை வைத்து ஒரு புதிய இழையை தொடங்கி இருக்கிறேன். தமிழ் மரபு அறக்கட்டளை ரக்ஷது.

இன்னம்பூரான்

25 07 2012 






--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Vij

unread,
Jul 26, 2012, 2:32:56 AM7/26/12
to mint...@googlegroups.com
தமிழில் துல்லியமாக, கறாராக சிந்திக்கும் உடைநரையும், சிந்தனைப்போக்கும் தோராயமாக இல்லை என சொல்லி விடலாம். அதைத்தான் இது நிரூபிக்கிரது.
 
வகொவி

Innamburan Innamburan

unread,
Jul 26, 2012, 3:58:17 AM7/26/12
to mint...@googlegroups.com
வகொவி சொல்வது உரைநடையை பற்றி என்று எடுத்துக்கொண்டேன், தட்டச்சுப்பிழை எங்கும் அதிகம் என்பதால். துல்லியமாக சிந்தித்து, ஏற்புடைய உரைநடையை பயிலுவது, இரண்டுமே எளிது. 
இன்னம்பூரான்

2012/7/25 Vij <vcv...@hotmail.com>
--

விஜயராகவன்

unread,
Jul 26, 2012, 4:23:10 AM7/26/12
to மின்தமிழ்
On Jul 26, 9:58 am, Innamburan Innamburan <innambu...@gmail.com>
wrote:

> வகொவி சொல்வது உரைநடையை பற்றி என்று எடுத்துக்கொண்டேன், தட்டச்சுப்பிழை
> எங்கும் அதிகம் என்பதால்.


நான் எழுத்துப் பிழைகளை பற்றி சொல்லவில்லை. ஒருவர் “சிந்தனை” என்பது
ஒருவர் மணையில் நடக்கிறது; அது என்ன , எப்படி நடக்கிரது என நாம் அறிய
முடியாது. ultimately, நாம் ஒருவர் சிந்தனையை பார்ப்பது எழுத்தில், உரை
நடையில்தான். For practical purposes சிந்தனை = உரைநடை.


துல்லியமாக சிந்தித்து, ஏற்புடைய உரைநடையை பயிலுவது,
> இரண்டுமே எளிது.
> இன்னம்பூரான்


இந்த நற்செய்தியை கொடுத்ததற்க்கு நன்றி. தமிழ் கூரும் நல்லுலகில்
இச்செய்தி பரவவில்லை.


வகொவி


விஜயராகவன்

unread,
Jul 26, 2012, 4:24:11 AM7/26/12
to மின்தமிழ்
On Jul 26, 10:23 am, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
> On Jul 26, 9:58 am, Innamburan Innamburan <innambu...@gmail.com>
> wrote:
>
> > வகொவி சொல்வது உரைநடையை பற்றி என்று எடுத்துக்கொண்டேன், தட்டச்சுப்பிழை
> > எங்கும் அதிகம் என்பதால்.
>
> நான் எழுத்துப் பிழைகளை பற்றி சொல்லவில்லை. ஒருவர் “சிந்தனை” என்பது
> ஒருவர் மணையில் நடக்கிறது;


மேலே மணையில் என்பதை மண்டையில் என படிக்கவும்


வகொவி

Reply all
Reply to author
Forward
0 new messages