தேனார் கமழ்தொங்கல் மீனவன்கேட்பத் தெண்ணீர் அருவிக்
கானார் மலயத்து அருந்தவன் சொன்ன கன்னித் தமிழ்நூல்
யானா நடாத்துகின்றேன் என்றுஎனக்கே நகைதருமால்
ஆனா அறிவின் அவர்கட்கு என்னாம்கொல் என்ஆதரவே
குமரி கற்றாழை கன்னி கொற்றவை காளிக்கும் பேர்
(சூடாமணி நிகண்டு 135)
கன்னி பெண், அழிவிலாமை, கட்டிளமைக்கும் பேரே
(சூடாமணி நிகண்டு 298)
குமரி அழிவில் கன்னியைக் கூறும்
(பிங்கள நிகண்டு 937)
கன்னி விடலை காளை மீளி
இன்நகை எயிற்றி எயினர் எயிற்றியர்
மறவர் மறத்தியர் புறவு பருந்து எருவை
கழுகு செந்நாய் கல்கெழுகுறும்பு
குழிஅறும்கூவல் குரா அமராஅ
உழிஞ்சில் பாலை ஓமை இருப்பை
வழங்குகதிக்கொண்டன செழும்பதிகவர்ந்தன
பகைத்துடி பாலையாழ் பஞ்சுரம் வெஞ்சமம்
பகல்சூறைஆடல் பாலைக் கருப்பொருளே
21 அகப்பொருள்விளக்கம் -
பாலைக் கருப்பொருட்க ளை நிரலிடும்கால்
பெண்பால் பெயர்தனை கன்னி என்னே வைக்கின்றது
மற்ற இன்நகை எயிற்றி மறத்தியர்
கனைக்கும் அதிகுரல் கார்வானம் நீங்க
பனிப்படு பைதல் விதலைப் பருவத்து 75
ஞாயிறு காயா நளிமாரிப் பின்குளத்து
மாஇருந் திங்கள் மறுநிறை ஆதிரை
விரிநூல் அந்தணர் விழவு தொடங்க
புரிநூல் அந்தணர் பொலம்கலம் ஏற்ப
வெம்பா தாக வியல்நில வரைப்(பு)என 80
அம்பா ஆடலின் ஆய்தொடிக் கன்னியர்
முனித்துறை முதல்வியர் முறைமை காட்ட
பனிப்புலர்பு ஆடி பருமணல் அருவியின்
ஊதை ஊர்தர உறைசிறை வேதியர்
நெறிநிமிர் நுடங்கு அழல்பேணிய சிறப்பின் 85 பரிபாடல் 11
- - - - - - - - - - - - - - - - - - - -
இன்ன பண்பின் நின் தைந் நீராடல்
மின் இழை நறு நுதல் மகள் மேம்பட்ட 135
கன்னிமை கனியாக் கைக்கிளைக் காம
இன் இயல் மாண் தேர்ச்சி இசை பரிபாடல்
முன் முறை செய் தவத்தின் இம் முறை இயைந்தேம்
மறு முறை அமையத்தும் இயைக
நறு நீர் வையை நயத் தகு நிறையே
- - - - - - - - - - - - - - - - - - - - 140 பரிபாடல் 11
- - - - - - - - - - - - - - - - - - - -
மலிவுடை உள்ளத்தான் வந்து செய் வேள்வியுள்
பல் மணம் மன்னு பின் இருங் கூந்தலர்
கன்னிமை கனிந்த காலத்தார் நின்
கொடி ஏற்று வாரணம் கொள் கவழ மிச்சில்
- - - - - - - - - - - - - - - - - - - - 90 பரிபாடல் 19
கன்னி விடியல் கணக்கால் ஆம்பல்
தாமரை போல மலரும் ஊர
பேணா ளோநின் பெண்டே
யாந்தன் அடங்கவும் தான்அடங் கலளே 68 ஐங்குறுநூறு
மயில்கொல் மடவாள்கொல் மாநீர்த் திரையுள்
பயில்வதோர் தெய்வம்கொல் கேளீர் குயில்பயிலும்
கன்னி இளஞாழல் பூம்பொழில் நோக்கிய
கண்ணின் வருந்தும்என் நெஞ்சு 48 திணை மொழி 50
யானை குதிரைபொன் கன்னியே ஆணிரையோடு
ஏனை ஒழிந்த இவையெல்லாம் - ஆன்நெய்யால்
எண்ணனாய் மாதவர்க்கு ஊண்ஈந்தான் வைசிர
வண்ணனாய் வாழ்வான் வகுத்து 48 ஏலாதி
ஈன்றெடுத்தல் சூல்புறஞ் செய்தல் குழவியை
ஏன்றெடுத்தல் சூலேற்ற கன்னியை - ஆன்ற
அழிந்தானை இல்வைத்தல் பேரறமா ஆற்ற
மொழிந்தார் முதுநூலார் முன்பு 71 சிறு பஞ்சமூலம்
கொடுத்தலும் துய்த்தலும் தேற்றா இடுக்குடை
உள்ளத்தான் பெற்ற பெருஞ்செல்வம் இல்லத்து
உருவுடைக் கன்னியரைப் போலப் பருவத்தால்
ஏதிலான் துய்க்கப் படும் 274 நாலடியார்
அருந்தொழில் ஆற்றும் பகடும் திருந்திய
மெய்ந்நிறைந்து நீடிருந்த கன்னியும் - நொந்து
நெறிமாறி வந்த விருந்தும் இம்மூன்றும்
பெறுமா றரிய பொருள் 70 திரிகடுகம்
- - - - - - - - - - - - - - - - - - - -
மன்னும் மாலை வெண்குடையான்
வளையாச் செங்கோல் அதுஓச்சிக்
கன்னி தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி
கன்னி தன்னைப் புணர்ந்தாலும்
புலவாது ஒழிதல் கயல்கண்ணாய்
மன்னும் மாதர் பெருங்கற்(பு)என்று
அறிந்தேன் வாழி காவேரி 3 சிலம்பு
- - - - - - - - - - - - - - - - - - - - 7 கானல் வரி
- - - - - - - - - - - - - - - - - - - -
கணம்கொள் வண்டுஆர்த்து உலாம்கன்னி
நறுஞாழல் கையில் ஏந்தி சிலம்பு 7
- - - - - - - - - - - - - - - - - - - - கானல் வரி
- - - - - - - - - - - - - - - - - - - -
பொலங்கொடி மின்னிற் புயலைங் கூந்தல்
கடிமலர் அவிழ்ந்த கன்னிகாரத்துத் 110
தொடிவளைத் தோளி ஒருத்தி தோன்றி சிலம்பு
- - - - - - - - - - - - - - - - - - - - 11 காடுகாண் காதை
- - - - - - - - - - - - - - - - - - - -
எட்டுஇரு நாளில் இவ்இராகுலன் தன்னைத்
திட்டிவிடம் உணும் செல்உயிர் போனால்
தீஅழல் அவனொடு சேயிழை மூழ்குவை 9-50
ஏது நிகழ்ச்சி ஈங்குஇன்(று) ஆதலின்
கவேர கன்னிப் பெயரொடு விளங்கிய
தவாக்களி மூதூர்ச் சென்றுபிறப்பு எய்துதி
அணிஇழை நினக்குஓர் அருந்துயர் வருநாள் மணிமேகலை
மணிமே கலாதெய்வம் வந்து தோன்றி பீடிகை கண்டு
- - - - - - - - - - - - - - - - - - - - பிறப்புணர்ந்த காதை
- - - - - - - - - - - - - - - - - - - -
தங்கா வேட்கை தனைஅவண் தணித்ததூஉம்
கேட்டும் அறிதியோ வாள்திறல் குருசில்
கன்னிக் காவலும் கடியின் காவலும்
தன்உறு கணவன் சாவுறின் காவலும் மணிமேகலை
நிறையின் காத்துப் பிறர்பிறர்க் காணாது 18-100 உதயகுமரன்
- - - - - - - - - - - - - - - - - - - - அம்பலம் புக்க காதை
- - - - - - - - - - - - - - - - - - - -
மன்மருங்கு அறுத்த மழுவாள் நெடியோன் 25
தன்முன் தோன்றல் தகாதுஒழி நீஎனக்
கன்னி ஏவலின் காந்த மன்னவன்
இந்நகர் காப்போர் யார்என நினைஇ
- - - - - - - - - - - - - - - - - - - -
நற்றாய் தனக்கு நல் திறம் சாற்றி
மற்று அவள் கன்னி மாடத்து அடைந்த பின் 100
தருமதத்தனும் தந்தையும் தாயரும் மணிமேகலை
- - - - - - - - - - - - - - - - - - - - 22. சிறை செய் காதை
- - - - - - - - - - - - - - - - - - - -
மன்னிய வனத்திடை மலர்ந்து நீண்டபோல்
கன்னியர் கைவிளக்(கு) ஏந்தக் காவலன்
பொன்இயல் வளநகர் பொலியத் தோன்றினார்
- - - - - - - - - - - - - - - - - - - - சூளாமணி
- - - - - - - - - - - - - - - - - - - -
அன்னமெல் நடையவர் பரவ வால்துகில்
கன்னியர் கவரிகால் எறியக் காவலன்
முன்னிய நெடுங்கடை முற்ற முன்னினான்
- - - - - - - - - - - - - - - - - - - - சூளாமணி
- - - - - - - - - - - - - - - - - - - -
ஆகு பொன்அறை மேல்அரு வித்திரள்
நாக கன்னியர் ஆடலின் ஞால்கைம்மா
வேக மும்மத வெள்ளம் அளாவிய
- - - - - - - - - - - - - - - - - - - - சூளாமணி
- - - - - - - - - - - - - - - - - - - -
கேசவ னார்திறங் கிளப்பின் வெண்மலை
காசறு வனப்பினோர் கன்னி ஏதுவால்
ஆசர வச்சுவக் கிரீவ னாவியும்
- - - - - - - - - - - - - - - - - - - - சூளாமணி
- - - - - - - - - - - - - - - - - - - -
பொன்நகர் புக்கனன் பொழுதும் சென்றது
கன்னிதன் பெருமையும் கருமச் சூழ்ச்சியும்
அன்னமென் நடையவட்(கு) அறியக் கூறினான்
- - - - - - - - - - - - - - - - - - - - சூளாமணி
- - - - - - - - - - - - - - - - - - - -
மின்அவிர் மணிமுடி வேந்தர் வேந்தவிக்
கன்னிநின் அருளினே கருதப் பட்டனள்
மன்னவர் அருளிலர் ஆயின் மக்களும்
- - - - - - - - - - - - - - - - - - - - சூளாமணி
அண்டம் ஈன்றுஅளித்த கன்னி முனிவாக கல்லாடம் 4
அண்டப்பெருந்திரன்அடைவுஈன்றுஅளித்த கல்லாடம் 6
சென்னி மலைஈன்ற கன்னி விற்பிடிப்ப கல்லாடம் 26
தொய்யில் ஆடும் கடனுடைக் கன்னியர் கல்லாடம் 27
அடைவு ஈன்றளித்த பிறைநுதல் கன்னியடும் கல்லாடம் 28
அளவாக் கன்னியர் அவருள் கல்லாடம் 29
கவைத்தலை மணிவேல் பிறைத்தலைக் கன்னி கல்லாடம் 42
சூரரக் கன்னியர் உடல்பனி செய்யும் கல்லாடம்42
கன்னிசெங் கோட்டம் கரியோன் திருவுறை கல்லாடம் 61
பொருநைஅம் கன்னிக்கு அணிஅணி பூட்டும் கல்லாடம் 68
குலமலைக் கன்னியென்(று) அருள்குடி இருக்கும் கல்லாடம் 69
நீரர மகளிர் பாந்தள்அம் கன்னியர்க்கு கல்லாடம் 76
கன்னித் தளிரறுகின் காப்பணிந்து - முன்னை 41 விக்கிரமசோழனுலா
- கன்னி 136 விக்கிரமசோழனுலா
மடநோக்கந் தான்வளர்த்த மானுக் களித்து
மடநடை அன்னப் பெடைபெறக் கன்னி 140 விக்கிரமசோழனுலா
கன்னியும் நன்மதையும் கங்கையும் சிந்துவும் 215 விக்கிரமசோழனுலா
பொன்னி வளநாடு பூஞ்சிலையும்-கன்னித் 337 விக்கிரமசோழனுலா
கடப்பன கன்னி மானேக்கியும் அன்னம் 272 குலோத்துங்கசோழனுலா
கன்னிப் பனந்தோடு காதிற்கும்-சென்னி 339 குலோத்துங்கசோழனுலா
கன்னிக்கும் கங்கைக்கும் காவலனைச்-சென்னியை 232 இராசராசசோழனுலா
இராசேந்திரசோழனுலா
கன்னி மனக்கோயில் கைக்கொள்ளச்-சொன்னமயில் 32 நளவெண்பா
அன்னம்போய்க் கன்னியர் அருகணைய-நன்னுதலும் 46 நளவெண்பா
மேவுமிளம் கன்னிபால் மீண்டேகும்-பாவில் 76 நளவெண்பா
காவல் கடந்தெங்கள் கன்னிமாடம் புகுந்தாய் 84 நளவெண்பா
கன்னியான் ஆகில் கடிமாலை-அன்னந்தான் 149 நளவெண்பா
கன்னி மணமாலை கைக்கொண்டான்-உன்னுடைய 156 நளவெண்பா
காராரும் மெல்லோதிக் கன்னியவள் காதலெனும் 166 நளவெண்பா
கன்னியர்தம் வேட்கையே போலுங் களிமழலை 187 நளவெண்ப
கன்னி இளமேதிக் கால்குளம்பு-பொன்னுரைத்த 201 நளவெண்பா
கந்தனையும் கன்னியையும் கண்டாயினும் சிறிது 311 நளவெண்பா
கன்னிப் பெடையுண்ணக் காத்திருக்கும் 334 நளவெண்பா
கன்னி நறுந்தேறல் மாந்திக் கமலத்தின் 363 நளவெண்பா
கண்டவேந்தர் கொண்மின்கள் என்னும்
கன்னிக் கடுவாயே 5 நந்திக்கலம்பகம் // கடுவாய் =ஒர்பறை
காலைப் பொழுதின்எழு கன்னியர்தம் 80 நந்திக்கலம்பகம்
இயம்பிடும் எம்கன்னி செஞ்சொல் 85 நந்திக்கலம்பகம்
தூவடிவேல்மன்னன் கன்னித்துறை சுரும்பார்குவளை 3 பாண்டிக்கோவை
அரண்கொண்டதென்னன்கன்னிப்பெருமான் வரோதயன்37 பாண்டிக்கோவை
மன்ஏர்அழிய மணற்றிவென்றான் கன்னிஆர்துறைவாய்43 பாண்டிக்கோவை
ஒளிமன்னும்முத்தக்குடைமன்னன்கன்னிஉயர்பொழிலே44பாண்டிக்கோவை
ஒன்னாரைவெண்மாத்துவென்றான்கன்னிவீழ்பொழில்வாய்46 பாண்டிக்கோவை
கழல்நெடுமாறன்கன்னிக் கொந்தாடுஇரும்பொழில்வாய் 74 பாண்டிக்கோவை
குலமன்னன் கன்னிக்குலை வளர்பெண்ணை 82பாண்டிக்கோவை
ஓடும்திறம் கொண்டகோன் கன்னிக்கானல் உறை 96 பாண்டிக்கோவை
வென்றான் வியன்கன்னி அன்னம்தன் மென்பொடை 97 பாண்டிக்கோவை
வெறிகமழ் பூம்கன்னிக்கானல் விளையாட்டு 109 பாண்டிக்கோவை
தோணிதானை சிதைவித்தகோன் கன்னித்தென்துறை 112 பாண்டிக்கோவை
அவியவைவேல் கொண்டகோன் கன்னிவார்துறைவாய்128 பாண்டிக்கோவை
இலங்குஇலைவேல் மன்னன் கன்னிஅம்கானலின்வாய் 137 பாண்டிக்கோவை
அடைகுன்றம் ஏறஎன்றோன் கன்னிஈர்ம் பொழில்வாய் 168 பாண்டிக்கோவை
வேல்மன்னன் கன்னிஅன்னாள் பொன்அணிவான் 169 பாண்டிக்கோவை
புகலேபுரியஎன்றான் கன்னிஅன்னாய் புலம்புஉறுநோய் 210 பாண்டிக்கோவை
பரவும் கழல்மன்னன் கன்னியம்கானல் பகலிடம்நீ 230 பாண்டிக்கோவை
சினத்து உரும்ஏந்தியகோன் கன்னித் தாழ்துறைவாய் 234 பாண்டிக்கோவை
படுத்தான் பராங்குசன் கன்னிஅம்கானல் பறவைகளே 239 பாண்டிக்கோவை
ஏமாண்சிலையவன் கன்னிநல்நீர் கொண்ட ஈர்முகிலே 246 பாண்டிக்கோவை
கண்ணிவேந்தரைஆற்றுக்குடி கன்னிவாகைகொண்டே 259 பாண்டிக்கோவை
கழுதுபடியக்கண்டான் கன்னிஅன்னமின்நேரிடையாய் 276 பாண்டிக்கோவை
புடைமணியானையினான் கன்னிஅன்னாள்பொருகயல் 278 பாண்டிக்கோவை
கைஆர்சிலைமன்னன்கன்னிநல்நீர்கொடைகார்முகிலே306 பாண்டிக்கோவை
கன்னிக்கு சிவானந்தக் கனிக்கு முத்துக் கம்பைக்கும் 2 திருநள்ளாற்றுப்புராணம்
கன்னிமதி நிடதநாடாள்வைஎன நளற் குறுதிக் கழறி 11 திருநள்ளாற்றுப்புராணம்
மிக்கதோர் கன்னியீச்சரமு(ம்) மேவியே 120 திருநள்ளாற்றுப்புராணம்
அம்புசை நேத்திரவதி சீர்அடையே கன்னி 173 திருநள்ளாற்றுப்புராணம்
கன்னியர்ஆகிய மாயையில் அவர்கடப்பாரே 224 திருநள்ளாற்றுப்புராணம்
கன்னித் திங்கள் பிதிர்கள்தம் காலமாம் 281 திருநள்ளாற்றுப்புராணம்
கன்னிவிடலை காளை மீளி இன்நகைஎயிற்றிஎயினர் 21 அகப்பொருள்விளக்கம்
கறைவேல் காளையும் கன்னியும் காண்ப 119 அகப்பொருள்விளக்கம்
குமரி கற்றாழை கன்னி கொற்றவை காளிக்கும் பேர் 135 சூடாமணி நிகண்டு
கன்னி பெண்ணழிவிலாமை கட்டிளமைக்கும் பேரே 298 சூடாமணி நிகண்டு
கன்னிப் புன்னை அன்னம் துன்னும் தொல் நச்சி. உரை
கன்னிஞாழல் கமழ்பூங் கானல் யான்கண்ட தொல் நச்சி. உரை
பன்னிரு திருமுறை திவ்யப் பிரபம்ந்தம் 22 K+ பாடல்களைப்
(சூடாமணி நிகண்டு 135)
$
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
திருவாட்டி இராஜம் உங்கள் கேள்விகளை பார்த்தால், பதில் சொல்லலாம். அது
நிற்க, இது பொது அரங்கானதால் உங்கள் கருத்துகளை அலசுகிறென்
>On Dec 7, 8:49 pm, N D Logasundaram <selvindl...@gmail.com> wrote:
> மேலும் தாங்கள் நினைப்பது போல் இச்சொல் தமிழுக்கு புறம்பானது இறக்குமதி யானது
> அல்ல
>
> நான் பலயிடங்களில் நேரத்தில் நடுவு நிலைமையிளுந்தும் பார்க்க நினைத்தாலும்
> மனதிற்குப்படுவது
> வடமொழினுக்காக வாதிடுபவர்கள்
> இச்சொல் வடமொழியில் உள்ளது என சொல்லிவிட்டால் போதும் அதுதான் பழமையனது
> ஏற்றுக்கொள்ளவேண்டும்
> என்னும் மேதாவித் தனத்தை வற்புறுத்துவது காரணங்களைக் காட்டுவது இல்லை இச்சொல்
> எங்கே இப்பொருளில்
> வந்துஉள்ளது அதன் கால கட்டம் என்ன என்பதி எல்லாம் வைப்பதில்லை கேட்கக் கூடாது
> என்று போலிச் ஆன்மீக
> தலைவர்கள் சாமியார்கள் சொல்வதைப்போ; இதைச் சொன்னால் உங்களுக்குப் புரியாது என
> பச்சையாகவே தப்பித்துக்
> கொண்டு ஓட நினைப்பார்கள் காரண காரியங்களால் உறுதிப் படுத்தாமல் வேதாந்தமகவே
> கொள்ளவேண்டும்
> சிதாந்தம்மாக அள வையின் படி (logic) நிற்க மாட்டார்கள் ஏனெனில் அவர்களுக்கே
> உறுதியாகத் ஏதும் தெரியாது ஆனால்
> வடமொழிக்காக தங்கள் DNA உந்துதலால் வாதிடுவார்கள்
கன்னி என்பது நீங்கள் சொல்வது போல் பல இடங்களில் பல பொருள் கொண்டு
இருக்கலாம்.
கன்னி என்பதன் பரவலான , பாமரருக்கும் அறிந்த அர்த்தம் ; பெண், இளம்பெண்,
கல்யாணமாகாதவள், ஆணுடன் உடல் உறவு இல்லாதவள். இந்த அர்தத்தில் வரும்
கன்னிதான் சமஸ்கிருத கன்யா என்பதன் திரிதல். உதாரணமாக கன்னியப்பன்,
கன்னியாக்குமரி, கன்னித்தமிழ் போன்ற சொற்களில் இந்த ( பெண், இளம்பெண்,
கல்யாணமாகாதவள், ஆணுடன் உடல் உறவு இல்லாதவள்) என்ற பொருளில்தான்
வருகிறது.
மெட்ராஸ் லெக்சிகானில் கொடுக்கப்பட்டுள்ள பொருள்கள்::
8. கன்று kaṉṟu : (page 829)
tree; இளமரம். கருப்புரக்கன்று (சீவக. 1267). 3. Anything insignificant,
trifle, particle; சிறுமை. (திவா.) 4. Bracelet; கைவளை. கன்றணிகரத்தெம்
மன்னை (சீகாளத். பு. கன்னி. 147).
கன்றுக்குட்டி kaṉṟu-k-kuṭṭi
, n. < கன்று +. Calf; பசு எருமைகளின்
--------------------------------------------------------------------------------
9. கன்னி kaṉṉi : (page 832)
kaṉṉāṉ
, n. < கன்¹. [M. kannān.] Brazier, bell-metal worker, one of the
divisions of the Kammāḷa caste; செம்புகொட்டி. (திவா.)
கன்னி kaṉṉi
, n. < kanyā. [T. K. kanne, M. kanni.] 1. Virgin, maiden, young
unmarried woman; குமரி. கன்னிதன்னைப் புணர்ந்தாலும் (சிலப். 7,
மன்னுமாலை.).
--------------------------------------------------------------------------------
10. கன்னி kaṉṉi : (page 832)
(சிலப். 7, மன்னுமாலை.). 2. Youthfulness, tenderness, juvenility,
virginity; இளமை. கன்னிப் புன்னை (திருக்கோ. 177). 3. Freshness; புதுமை.
கன்னிநீலக்கட் கன்னி (சீவக. 900). 4. State of being earliest in time;
முதன்முதலான நிகழ்ச்சி. கன் னிப்போர். 5. Imperishable state; அழிவின்மை.
கன்னிமா மதில்சூழ் கருவூர்
--------------------------------------------------------------------------------
11. கன்னிக்காய்ச்சல் kaṉṉi-k-kāyccal : (page 832)
17. Mussell-shell creeper. See காக்கணம். (திவா.)
கன்னிக்காய்ச்சல் kaṉṉi-k-kāyccal
, n. < கன்னி +. [M. kannikāccal.] Scorching rays of the September sun;
hot September; புரட் டாசிமாதத்தில் காயும் வெயில்மிகுதி.
--------------------------------------------------------------------------------
12. கன்னிகழி-தல் kaṉṉi-kaḻi- : (page 832)
, n. Black nightshade. See மணித்தக்காளி. (மலை.)
கன்னிகழி-தல் kaṉṉi-kaḻi-
, v. intr. < கன்னி +. To pass from maidenhood to married state;
மணம்புரியப்பெறுதல்.
கன்னிகாதானம் kaṉṉikā-tāṉam
--------------------------------------------------------------------------------
13. கன்னிகாதானம் kaṉṉikā-tāṉam : (page 832)
கன்னிகாதானம் kaṉṉikā-tāṉam
, n. < kan- yakādāna. Giving away a virgin in marriage, one of
muppattiraṇṭaṟam, q.v.; கன்னி யை ஆடவனுக்கு மணம்புரிந்து கொடுக்கும்
அறம். (பிங்.)
கன்னிகாமடம்
--------------------------------------------------------------------------------
14. கன்னிகுமரி kaṉṉi-kumari : (page 832)
கன்னிகாரத்து ... ஒருத்தி தோன்றி (சிலப். 11, 110).
கன்னிகுமரி kaṉṉi-kumari
, n. < கன்னி +. See கன்னயாகுமரி. கன்னி குமரிமுதற் றீர்த்தமெல் லாம்
(திருக்காளத். பு. கடவுள்வா. 16).
--------------------------------------------------------------------------------
15. கன்னிகுமரி kaṉṉi-kumari : (page 832)
தோன்றி (சிலப். 11, 110).
கன்னிகுமரி kaṉṉi-kumari
, n. < கன்னி +. See கன்னயாகுமரி. கன்னி குமரிமுதற் றீர்த்தமெல் லாம்
(திருக்காளத். பு. கடவுள்வா. 16).
கன்னிகை¹
--------------------------------------------------------------------------------
16. கன்னிச்சவ்வு kaṉṉi-c-cavvu : (page 833)
the lotus; தாமரைக்கொட்டை. 2. Flower bud; பூவின்மொட்டு.
கன்னிச்சவ்வு kaṉṉi-c-cavvu
, n. < கன்னி +. Virginal membrane stretched across the external
orifice of the vagina, hymen; கன்னிமை நீங்குதற்குமுன் யோனியை மூடியுள்ள
சவ்வு. (W.)
--------------------------------------------------------------------------------
17. கன்னிப்பிடி kaṉṉi-p-piṭi : (page 833)
bluish-green, attaining at least 1 ft. in length, Caranx atropus;
கடல்மீன்வகை.
கன்னிப்பிடி kaṉṉi-p-piṭi
, n. < கன்னி +. Ball of coloured food thrown to feed crows by women
praying for the welfare of their brothers on the day following makara-
caṅkirānti; சங்கி ராந்திக்கு அடுத்தநாள் பெண்கள் தம்
--------------------------------------------------------------------------------
18. கன்னியாபுத்திரன் kaṉṉiyā-puttiraṉ : (page 834)
கன்னியாபுத்திரன் kaṉṉiyā-puttiraṉ
, n. < id. +. Son of an unmarried woman; கன்னி பெற்ற மகன்.
கன்னியாமடம் kaṉṉiyā-maṭam
, n. < id. +. Convent, nunnery. See
=========================================
”வடமொழினுக்காக வாதிடுபவர்கள்..” என்ற சொல்லாடல்கள் சிரிப்பைதான்
வரவழிக்கின்றது. எந்த மொழிக்கும் அதற்காக “வாதிடுபவர்கள்” தேவையில்லை.
நீங்கள் உலகை ”வடமொழினுக்காக வாதிடுபவர்கள்..” “தமிழுக்காக
வாதிடுபவர்கள்..” என பிரிப்பதில் கொஞ்சம் கூட உண்மை இல்லை.
பல சொற்கள் பிராகிருதம் வழியாக தமிழுக்கு வந்துள்ளன. சமஸ்கிருத ந்யா ,
ஶ்யா போன்ற கூட்டொலிகள் பிராகிருத / தமிழில் ன்னி , ச்சி என மாறுகிரன.
இது ஒரு சிறிய சாம்பிள்தான். இப்படி பல இருக்கிறன. இதை மொழியியலாளர்
regular sound change என்பர். சொற்கள் ஒரு மொழியில் இருந்து இன்னொரு
மொழிக்கு போகும் போது regular மாற்றங்களுடன் செல்கிறன, அதனால்
சம்ஸ்கிருதத்தில் இரு நகரங் கள் இல்லை என்பது இவ்விடத்தில் சரியில்லை.
(தற்போது தமிழில் இரு நகரங் கள் இல்லை என்பது வேறு விசயம்).
உங்கள் கருத்தான கன்னி சமஸ்கிருத மூலம் என சொல்வது DNA உந்துதலால்
ஏற்படுவது இன்னும் வேடிக்கையாக உள்ளது. இந்த புரட்சிகரமான கருத்தை எந்த
விஞ்ஞானியும் வைத்ததில்லை, நீங்கள் முதல் முதலாக DNA க்கும்,
“மொழிக்காக” வாதிடுவதையும் ஒரே கோட்டில் பார்ப்பது பெரும் விஞ்ஞான
புரட்சி. நிச்சயம் நோபல் பரிசு தகுதியுள்ள கருத்து.
வகொவி
On Dec 7, 5:15 pm, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
> இந்த அர்தத்தில் வரும்
> கன்னிதான் சமஸ்கிருத கன்யா என்பதன் திரிதல். உதாரணமாக கன்னியப்பன்,
> கன்னியாக்குமரி, கன்னித்தமிழ் போன்ற சொற்களில் இந்த ( பெண், இளம்பெண்,
> கல்யாணமாகாதவள், ஆணுடன் உடல் உறவு இல்லாதவள்) என்ற பொருளில்தான்
> வருகிறது.
>
மாரியப்பன், காளியப்பன் என்பதுபோல் கன்னியப்பன்.
கன்னி - குமரிக்கு அன்பன், சத்த மாதர் கன்னிமார் அடியார் எனப் பொருள்.
ஆயிமுத்து, மாரிமுத்து, காளிமுத்து, கன்னிமுத்து - அம்மன் பெயர்கள்.
நா. கணேசன்
On Dec 7, 2:09 pm, Jean-Luc Chevillard <jeanluc.chevill...@gmail.com>
wrote:
> *(2)*
> Is not the Cūṭāmaṇi Nikaṇṭu quotation (see below)
> a strong argument
> for the geographical interpretation
> to be preferred to the theological/mystical interpretation?
> <QUOTE>
> *குமரி கற்றாழை* *கன்னி* *கொற்றவை காளி*க்கும் பேர்
>
> (சூடாமணி நிகண்டு 135)
>
> </quote>
>
> Cheers
>
> -- jlc (Paris)
>
கன்னி கொற்றவை காளிக்கும் பேர்.
கன்னி துர்க்கை பழையோள் என்கிறது திருமுருகு.
கொஞ்சம் பழமையைப் பார்ப்போம்.
ஒரு 4200 வருஷம் தான் ஆச்சு.
http://nganesan.blogspot.com/2008/01/eru-tazuval.html
கன்னிநாடு எந்தக் கன்னி பேரால் ஏற்பட்டது? என்பதை
ஆராயவும்.
நா. கணேசன்
--
பரோ & எமனோவின் திராவிட எடிமாலஜிகல் டிக்ஷனரியின் அடிப்படை உறுதுணை
சென்னை லெக்சிகாந்தான். உலக அலவில் தமிழ் பற்றிய ஆய்வுகளில் செ.லெ. பேர்
அடிபடாமல் போகாது.
“தமிழ் பேச்சுக் குழுவால் பயன்படுத்தப்பட்ட பட்டியல் மட்டுமே“ என்பது
இன்னும் புதிராக பேசுகிறீர்கள்.
லெக்சிகானை விட மிகச்சிறந்த அகராதி வரும்வரை லெக்சிகாந்தான் தமிழ்
சொற்களில் அதாரிடி - உங்களுக்கு அந்த உண்மை எவ்வளவு கசப்பாக இருந்தாலும்.
வகொவி
On Dec 8, 3:50 am, N D Logasundaram <selvindl...@gmail.com> wrote:
> திரு N கணேசன்
> கன்னிநாடு பற்றி
>
கன்னி சொற்கள் பற்றி நான் தொகுத்தது இங்கே:
http://groups.google.com/group/mintamil/msg/a48915e885789485
பார்த்தீர்களா? என அறிய அவா.
அவ்விழையில், கன்னிநாடு என்பது யாரால் என்றும் விளக்கியுள்ளேன்.
வடுகப்பிள்ளை என்பது மாணிக்கவாசகர் என்று முடிவு செய்துவிட்டீர்களா?
கிரந்தம் தேவநாகரி பிளாக்கில் தான் இருக்க வேண்டும் என்று
அண்மையில் யுனிகோட் குழுவில் எழுதிக்கொண்டிருந்தீர்கள்.
தேவ் சார் உடன்படுகிறாரா? என்று கேட்கணும்.
அன்புடன்,
நா. கணேசன்
On Dec 8, 3:50 am, N D Logasundaram <selvindl...@gmail.com> wrote:
> ஒரே ஒரு பகுதி மட்டும் பெரிய புராணம் ழான் அவர்கள்
> குறிப்பிட்டதால் கன்னி நாடு ஈங்கு *கன்னிநாடு பாண்டிய
> **நாட்டைதான்* தெளிவாகக் குறிக்கின்றது
> இதனில் கன்னி மீண்டும் அழிவின்மை என்னும்
>பொருளிலேயே வருகின்றது எனலாம்.
Not really, when we look at Tamils' history or the genesis of
Indian religion in Indus valley. Kanni worship has a hoary
tradition in India and in Pandya country. All the pAvai poems
- whether it's Jaina, Vaishnava, Shaiva, ... - they all worship
this Kanni only. See Bhagavatha puranam.
N. Ganesan
இன்னும் தமிழ் அறிஞர்கள் இச்சொல்லைப் பார்க்கணும்.
வினோத் ராஜன் கொடுத்த ஹிந்தி வலைவரியின் செய்தி அரதப் பழசு.
Uhlenbeck டிக்ஷனரியில் 1899-ல் எழுதிய செய்தி. அதை மெய்ர்காப்ர் ஏற்று
எழுதினார். மறுத்து இந்தோ-இரானியன் வார்த்தை. அதற்கு மேல்
வேறெங்கும் இல்லாச் சொல் எனப் பேராசிரியர் பர்ரோ 1983-லிலேயே
கட்டுரை எழுதிவிட்டார்.
மாயா, தந்து போன்ற சம்ஸ்க்ருத-பாரசீக வார்த்தைகளுடன் சேர்த்த
வேண்டிய சொல் கன்யா என்பது எனக் கருதுகிறேன். இது ஒரு
ஸ்பெஷல் ஸெட். கன்- “little, small" இப்பொருள்கள்தான்
இந்தோ-இரானியனில். அது ஏன்? தமிழோடு இருந்த தொடர்பா?
என விளங்கவில்லை.
மாயை (மயங்கு), தந்து (தனது), கன் (<கல்-) - தமிழ்.
பாரசீகத்திலும், அதனால் சம்ஸ்க்ருதத்தில் உள்ளது புதிர்தான்.
Early Persian interaction with India (i.e., Indus)
some thing like crocodile word in Baloch of Iran
a borrowal from Sindh??
முதலில் இந்த ஸெட்டில் அடங்கிய வார்த்தைகள் என்ன?
எனத் தொகுக்கணும். முக்கியமான ஒன்று: கன்னி:கந்யா
என அடியேன் எண்ணுகிறேன்.
கன்னி தமிழில் சம்ஸ்க்ருதத்தில் இருந்து பெற்ற சொல்
அல்ல என்பது தெளிவு. கல்- ‘ஸ்மால், லிட்ல்’ தமிழின்
வேர். உதாரணம்: சிறு தாழை = கல்தாழை (கற்றாழை)
- சமணர் தொகுத்த சூடாமணி நிகண்டு. அந்தக்
கல்(=சிறு)தாழைக்கும் கன்னி (< கல்-) எனப் பெயர்.
போர்மகள் கொற்றி கன்னி = சிறுமி, மகள்.
அச் சின்னஞ் சிறுபெண்ணை, கன்னியை 4200 வருஷம்
முந்தைய இந்தியக் கலையில் காணலாம்:
http://nganesan.blogspot.com/2008/01/eru-tazuval.html
போர்மறவர் ஈட்டியால் சண்டையிடும் போது (இரட்டைக்
கொண்டை மறவர் எனக் காட்டும். மெஸோபோடாமிய
கலையில் இது உண்டு) இடையில் நிற்கிறாள் சின்னஞ்சிறு
சிறுமியாய் கொற்றவை/துர்க்கை.
http://4.bp.blogspot.com/_TqVEWBx7H0U/SZWJUkj6WvI/AAAAAAAAAUo/qkOadGTWhak/s1600-h/Indus2.gif
எனக்கு யுட்யூபில் சீர்காழியார் பாடல் ‘சின்னஞ்சிறு பெண்போலே’
பெற்றுத்தாருங்கள். தில்லைக்காளி பற்றி அவர் சகலை
உளுந்தூர்ப்பேட்டையார் இயற்றியது என நினைக்கிறேன்.
அவளோடு தொடர்புடைய சத்தகன்னியரையும்
தங்க வண்ணத்தில் கொடுத்துள்ள 4000+ யாண்டு இந்திய
கலையுன்னதத்தில் கண்டருளுக.
கன்னிமார் எழுவர் - கீழ் அணியில்:
http://3.bp.blogspot.com/_TqVEWBx7H0U/R49YuA3ByyI/AAAAAAAAACU/eZnNDQdDZdM/s1600-h/seal.jpg
தென்னிந்தியாவிலே அவளைக் குமரி முனையிலும்,
மதுரையிலும் காணலாகும். அவள் நாடு கன்னிநாடு
என்று தமிழ் இலக்கியமெங்கும் படிக்க முடியும்.
சிலப்பதிகாரத்தில் காவிரி கங்கையுடனும், கன்னியாற்றுடனும்
ஒப்பிடப்படுகிறாள். கன்னியாறு = கன்னிநாட்டு வையை
எனக் கருதலாம்.
மேலும்,
http://groups.google.com/group/mintamil/msg/a48915e885789485
நா. கணேசன்
பன்றி, பஃறி - மூலவேர் பல்- ‘தந்தம்’.
அதுபோல் கன்னி, கன்று(கன்னுக்குட்டி) - இவையெல்லாம் < கல்-/கரு.
சின்னஞ்சிறு கொப்புளம் கன்றுவதை/கன்னுவதை/கந்துவதை (= புடைப்பதை)
பார்க்கிறோம்.
கல்தாழை (கற்றாழை) = சிறுதாழை.
கன்னிமதில் = கல்களால் செய்த வலிமை வாய்ந்த மதில். இதில் கன்னி (<கல்- )
= ஸ்டோன்.
திருவாளர் வகொவி அவர்களே
உங்களைப்போன்றோரைதான் வடமொழிக்காக வாதிடுபவர்கள் என்றேன்
கன்னி எனும் சொல்லை வடமொழியிலி ருந்து வந்ததா எனக் யாராவது கேட்டார்களா?
>
> > திருவாளர் வகொவி அவர்களே
>
> உங்களைப்போன்றோரைதான் வடமொழிக்காக வாதிடுபவர்கள் என்றேன்
நூதலோசு ஐயா
நான் ஒரு மொழிக்கும் வாதாடவில்லை; மொழிக்கு வாதாடுவது என்பது என்னைப்
பொருத்த வரை ஒரு பொருளும் இல்லாதது.
இங்கு நாம் ஒரு சில சொற்களை அலசுகிறோமே தவிர “மொழிக்காக” இல்லை. எந்த
மொழிக்கும் யாரும் வாதாட தேவையில்லை.
நான் தமிழில் எழுதுவதால் (நான் எழுதுவது உங்களுக்கு பிடிக்காவிட்டாலும்)
நான் தமிழை “ஆதரிக்கிறேன்” என கூருவதில் பொருள் உண்டு.
ஒரு மொழியை “ஆதரிக்கும்” ஒரே வழி அதை பயன்படுத்துவது.
>
> > கன்னி எனும் சொல்லை வடமொழியிலி ருந்து வந்ததா எனக் யாராவது கேட்டார்களா?
>
> ஏன் வடமொழிச்சொல் பற்றி மடலில் இணைக்க நினைகின்றீர்கள் ?? அதைத் தான்
> வடமொழினுக்காக வாதிடுபவர்கள் என்றேன் அய்யா
அதைத்தான் சொல்கிறீர்களா??? ஏதோன்னு நினைச்சேன். உங்கள் சிந்தனை கோடு
புரியுது.
கன்னி என்பதன் பொருளை virgin , unmarried girl என தமிழர்கள் பொதுவாக
புரிந்து கொண்டுள்ளனர் என்பது நிதர்சனம். அது சமச்கிருதத்திலேயும் அதே
பொருளில் வருது. அதனால் அப்படி இணைப்பதில் தவறில்லை.
>
> कन्य: (கந்யஃ) எனும் சொல் பற்றி
> பேசுபவர்கள் அதிலிருந்து வந்தது இதிலிருந்து
> திரிந்தது என வெறும் மடல் சொற்களாக வைத்துவிடாமல் எதாவது ஒரு அல்லது பல
> நூலில் நூற்களில் இப்படி உள்ளது இப் பொருள்களில் உள்ளன இந்த நுல்கள் இந்த
> காலத்தைச் சேர்ந்தவை மற்றும் அச்சொல் பார்த்துதான் இவ்வகையில்
> வந்துள்ளது
> என விளக்கவேண்டுமே அன்றி வகொவி சொல்கிறார் என்றால் போதுமா அய்யா ??
> சான்று களைப் பற்றி தூரதேநின்று காட்டுதல் போதாது கண்முன் வைக்கவேண்டும்
> அல்லவா ??
ஒரு முக்கிய சான்று அகராதி - அதைத்தான் முன்வைத்தேன் . அகராதியாளர்கள் -
மெட்ராஸ் லெக்சிகான் - ஏற்கனெவே நீங்கள் சொல்லும் பணியை செய்து
விட்டனர். நான் ஒரிஜினல் தமிழ் ஆய்வாளன் இல்லை , அகராதி அல்லது மற்ற
ஆய்வாளர்களை நம்பிக்கொண்டு இருக்கிறேன். அதே சமயம் நல்ல ஆய்வுகளையும்,
போலி ஆய்வுகளையும் என்னால் பிரிக்க முடியும்.
> (தற்போது தமிழில் இரு நகரங் கள் இல்லை என்பது வேறு விசயம்).
> அது என்ன வேறு விஷயம்
> இது இ து இதைதான் குசும்பு என்பார்கள் பிராமணர்கள் மிக அதிகமாக வாழும்
> பகுதியாகிய எங்கள் மயிலையில் சீண்டிவிட்டு என்ன செய்கிறான் பார்ப்போமே
> என்னும் ஒருவிதக் கள்ளத்தனம் இது .
இதில் என்ன கள்ளத்தனம் இருக்கு????? நீங்கள் சம்ஸ்கிருதத்தில் தான் ந / ன
மாறுதல் இன்மை போலவும், தமிழில் வேற்றுமை இருக்கின்ரதாகவும்
சொல்கிறீர்கள். ”தமிழ்” என்பது ஒரு லேபல் , அது தொல்தமிழ், தற்கால
எழுத்துத்தமிழ், பேச்சுத்தமிழ் போன்ற பல தனி மொழிகளை போர்த்தி ஒன்றாக
மாயம் காட்டுகிரது. தற்கால பேச்சுத்தமிழில் ந / ன வேற்றுமை இல்லை; இதை
பல ஆய்வாளர்கள் சொல்லிவிட்டார்கள், இங்கேயே பல இதழ்களில் பார்த்துள்ளோம்.
உண்மையை சொல்வது கள்ளத்தனத்தின் நேர் எதிர்.
>
> இம்மாத்திரி விளையாட்டுப் பிள்ளைபோல் எதையோ எழுதி திரு வாட்டி ராஜம்
> அம்மையாரை வெளி ஏற்றி னீர்கள்
இதில் ஒரு உண்மையும் இல்லை. ராஜம் தான் ஆரம்பித்த இதழ்/ கேள்விகளுக்கு
தொடர்பாக சீரியஸ் பதில் வராமல் இருந்ததால் எழுத நிறுத்தி விட்டார்.
நான்தான் அவர் கேள்விகளை சீரியசாக எடுத்து பதில் சொல்ல பார்த்தேன்.
தமிழ் பற்றி மடலாடலில் பலரும் தத்தம் கருத்தை
> எழுதி வைப்பதி எப்படியாவது தடுத்துவிடும் முயற்சியில் இருக்கிறீர்கள் எனத்
> தோன்றுகிறது
நான் எப்படி எவர் எழுதுவதையும் தடுக்கமுடியும், நான் இந்தக் குழு
மாடரேடர் கூட இல்லை.
இனிமேல் தடுத்த நிறுத்த வேண்டும் என்றால் Virtual Auto வைத்தான்
சிந்திக்க வேண்டும்.
> நாகராஜன் அவர்களை ஒர்குழுவாக சேர்ந்து விளையடிநீர்கள் சேஷாத்ரி என்பவரியும்
> இதே சூத்திரத்தை பயன் படுதிநீர் கணேசன் அவர்களையும் விடவில்லை
நாகராஜன் யார் சூத்திரத்திற்க்கும் மசிபவர் அல்ல. சேஷாத்ரி யார் என
எனக்கு தெரியாது. கணேசன் - குழுவையே சுண்டு விரலில் ஆட்டுகிறார் , யாரும்
கணேசரை எந்த விதத்திலும் பாதிக்க முடியாது.
>
> உங்கள் கருத்தான கன்னி சமஸ்கிருத மூலம் என சொல்வது DNA உந்துதலால்
> ஏற்படுவது இன்னும் வேடிக்கையாக உள்ளது. இந்த புரட்சிகரமான கருத்தை எந்த
> விஞ்ஞானியும் வைத்ததில்லை, நீங்கள் முதல் முதலாக DNA க்கும்,
> “மொழிக்காக” வாதிடுவதையும் ஒரே கோட்டில் பார்ப்பது பெரும்
> விஞ்ஞான புரட்சி. நிச்சயம் நோபல் பரிசு தகுதியுள்ள கருத்து =. வகொவி
> குழந்தைகளைப் போல் வேடிக்கை பார்க்காமல் DNA என்றால் என்ன எனத்
> தெரிந்துகொண்டு பிறகு பதில் அளியுங்களேன் பிறகுதான் பரிசு பற்றி பேச தகுதி
> ஏற்படும்.
>
> நூ த லோ சு
> மயிலை
உங்கள் அறிவுரைக்கு நன்றி
வகொவி
கன்னி பெ. 1: திருமணமாகாத இளம் பெண்; unmarried young woman; maiden. 2:
கன்னிகழியாத பெண்; virgin. 3: திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்பவள்;
spinster. 4: (சோதி.) கன்னியின் உருவத்தைக் குறியீடாக உடைய ஆறாவது ராசி;
sixth constellation of the zodiac having the figure of a maiden as its
sign; Virgo.
கன்னிகழி வி. (-கழிய, -கழிந்து) (ஒரு பெண் கணவனுடன் கூடித் தன்) கன்னித்
தன்மை நீங்குதல்; consummate (a marriage, said of women.).
கன்னிகாதானம் பெ. பெண்ணை ஒருவருக்கு (தாரைவார்த்துக் கொடுத்து) திருமணம்
செய்வித்தல்; giving one's daughter in marriage.
கன்னிகாமடம் பெ. (அ.வ.) கிறித்தவப் பெண் துறவிகள் வசிப்பதற்கான இடம்;
nunnery; convent for nuns.
கன்னிகாஸ்திரீ பெ. (அ.வ.) கிறித்தவப் பெண் துறவி; nun.
கன்னிகை பெ. (அ.வ.) காண்க: கன்னி, 1.
கன்னித் தன்மை பெ. (கன்னியின்) உடலுறவு கொள்ளாத தன்மை; virginity.
கன்னிமாடம் பெ. (அ.வ.) அரச குலத்தைச் சேர்ந்த கன்னிப் பெண்கள் வசிக்கும்
மாளிகையின் பகுதி; part of the palace where the royal maidens live.
கன்னி முயற்சி பெ. (ஒரு துறையில் ஒருவருடைய) முதல் முயற்சி; maiden
attempt. இந்தக் கட்டுரை என் கன்னி முயற்சி.
கன்னிமை பெ. (அ.வ.) கன்னித் தன்மை; virginity; maidenhood.
மேடைகளிலோ, தற்கால எழுதிலோ `கன்னித்தமிழ்’` என சொல்லும்போது virgin
Tamil அதாவது மத்த மொழிகளால் தாக்கம் செய்யப்படாத தமிழ், என்ற
பொருளில்தான் சொல்கிறனர்.
இதைத்தான் திருவாட்டி ராஜம் விவாதிக்கப்பார்த்தார்கள்.
வகொவி
On Dec 8, 6:55 am, devoo <rde...@gmail.com> wrote:
> கன்னித் தமிழே வருக !
> உன் வருகையை முன்னரே எதிர்பார்த்தேன்.
>
> சீர்காழியாரின் பாடல் -
http://www.youtube.com/watch?v=bEH4G1A8P8I
>
> கன்னி எனும் சொல்லின் பரவலான ஆளுமை
> வியக்க வைக்கிறது
>
> தேவ்
>
நனிநன்றி ஐயா! பாவித்துக் கொள்ள அவா.
கீதா அம்மா சொல்வதுபோல் உங்கள் மடல்கள்
பல செய்திகளைத் தருவன. நன்றி.
இந்த நூற்றாண்டு, தமிழறிஞர்கள் குறிப்பிட்ட
வீரமாமுனிகள் எத்தனை காவியம்
தரமுடியும் என்று காட்டவல்லது.
கன்னித்தமிழ் அர்ச்சனை 2012-ல் குறைந்துவிடும் போல
தெரிகிறதே. தனித்தமிழ் நாட்டாரிடம் தெரிந்துகொள்வோம்.
வேண்டும் தமிழ்க்கன்னி அருள்!
நா. கணேசன்
>>> கன்னித்தமிழ் அர்ச்சனை 2012-ல் குறைந்துவிடும் போல
தெரிகிறதே.<<<
கணேசர் உண்மையில் கவலைப்படுகிறாரா ?
அல்லது கவன ஈர்ப்புச் செய்கிறாரா ?
தனித்தமிழ் குறைந்து விடுமோ என்று இப்போது கவலைப்படும் கணேசர்
ஒரு முறை க்ரந்தம் பரவலாகி எல்லா சாதியினரும் வள்ளுவம் காட்டும் வழியில்
அர்ச்சகர் ஆக வேண்டும் என்றும் அழுத்தமாகச் சொன்னவர்.
அப்போது அவர் தமிழ் அர்ச்சனை பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
அன்றாடம் ஏதாவது டாபிக் கிடைத்தால் போதும் எனும் நோக்கமாகவும்
இருக்கலாம். தமிழ் இணையம் எனும் ஸர்வகலாசாலையின்
பீடாதிபதியான அவரை யார் கேள்வி கேட்க முடியும் ?
தேவ்
On Dec 9, 4:28 am, "naa.gane...@gmail.com" <naa.gane...@gmail.com>
wrote:
ஸ்ரீ தேவ் ஸார்,
இணைய முதலி என்றீர்கள். நான் முதலியா என்று எல்லோருக்கும் தெரியும் :)
கன்னித்தமிழ் அர்ச்சனை இணையத்தில் எப்படி
இருக்குமோ எதிர்காலத்தில்? பொறுத்திருந்து
பார்க்க வேண்டிய சமாச்சாரம்.
கன்னித்தமிழ் அர்ச்சனைக்கு தேவைப்படும்
ஓர் எழுத்தை தமிழுக்கு அளிக்க உதவியது
கடையேன் பெற்ற பேறு. தமிழுக்கு கிடைத்த
ஒரு கன்னியெழுத்து அஃது.
http://nganesan.blogspot.com/2008/01/sha.html
http://nganesan.blogspot.com/2009/05/tamil-om-windows7.html
தமிழ் (இன்றும் யாழ்ப்பாணத்தார் தமிழில் உள்ளது) ஓம்
எவ்வாறு வைதிகம், சமணம், பௌத்தம், சீக்கியம்
என்று எல்லா சமயங்களிலும் சென்றது என விளக்கும்
ஸம்ஸ்க்ருத அறிஞர் கட்டுரை. இதை எழுதியபோது
எத்தனை இன்னல்கள் வெள்ளை சம்ஸ்க்ருத அறிஞர்
கொடுத்தனர் என்று என்னிடம் சொல்லியிருக்கிறார்.
தமிழ்/த்ராவிட வார்த்தை ஒன்று சம்ஸ்க்ருதம் பெற்றது
என்று நிறுவுவது அத்தனை சுலபம் அன்று எனக்
கற்றுக்கொண்டேன்.
http://www.scribd.com/doc/15050686/Parpola-Om
கந்- என்ற வேருக்கு small, little என்ற பொருள்தான்.
அது இந்தியா-பாரசீகம் தவிர வேறெங்குமில்லை.
எனவே தமிழோடு தொடர்புடையது என்று சொல்ல
முடியும் அறிஞரவையில் என எண்ணுகிறேன்.
இதுவரை யாரும் இக்கருத்தை முன்வைத்ததில்லை,
ஏனெனில் வெள்ளை சம்ஸ்க்ருதவாதிகள் தமிழறியார்.
கன்னித்தமிழ் அர்ச்சனை உதாரணம்,
உங்களைப் போல எனக்கு சம்ஸ்க்ருதம் விளக்கம்
சொல்லும் மதுரை ராஜரத்னபட்டர் Alzhemer's வந்து
போய்விட்டார். எனக்கு பெரிய இழப்பு. அவரது அண்ணன்
தங்கம் பட்டர்தான் எனக்கு தெரிந்த மூத்தவர்.
இவர்கள் வீடுகளில் இருந்து சைவாகமங்கள்
பாண்டிச்சேரி நிறுவனம் சென்றன. சிவாச்சார்யர்களே
ராமேஷ்வரத்தில் இருந்து தாய்லாந்துபோய்
திருவெம்பாவை, திருப்பாவை க்ரந்தத்தில் எழுதினோர்.
தங்கம் பட்டர் இப்போது மறவன்புலவு ஐயா மேற்கொண்ட
முயற்சி பற்றிக் கேட்டு வாழ்த்து தெரிவித்தார்.
த்ராவிட எழுத்துக்கள் எ, ஒ, ற, ழ,ன எழுதலாமா ஐயா
என்றபோது ’அத்னால் என்ன? நிச்சயமாகச் செய்யலாம்’
என்றார். எதிர்காலத்தில் ஆர்ய-த்ராவிட பாஷைகளை
தங்கம் பட்டர் போன்றோர் ஆசியால் நல்லபடி செய்ய
முடியும் என்று தோன்றுகிறது. கன்னித்தமிழ் அன்னை
அருள் வேண்டும்!
தமிழ்க்கன்னிக்கு கன்னித்தமிழ் அருச்சனை:
http://nganesan.blogspot.com/2011/04/meenakshi-tamil-archanai.html
ழான் பிள்ளையார்சுழி பற்றிக் கேட்டார். எழுதுங்களேன்.
நா. கணேசன்
> On Dec 9, 4:28 am, "naa.gane...@gmail.com" <naa.gane...@gmail.com>
'முதலி' ஓர் அழகிய வைணவ பரிபாஷை.
'உடையவர் ஶ்ரீபாதத்தில் ஆச்ரயித்த முதலிகள்'
என்றால் அச்செயலில் மூதலித்த அந்த பாக்யவான்கள் என்று பொருள்.
நம் துர்பாக்யம் அன்பர் மோகனரங்கன் 'பரிபாஷை'
தொடரை நிறுத்தும்படி ஆகிவிட்டது.
தமிழ் இணையச் செயல்பாடுகளில் மூதலித்துவரும் தங்களை
அச்சொல்கொண்டு அழைப்பதில் தவறில்லை என நினைக்கிறேன்.
உங்கள் எழுத்தைப் பலரும் கூர்ந்து படித்துவருவதாக
நீங்களே எழுதியுள்ளீர்கள்.
தமிழ் அர்ச்சனை பற்றி நீங்கள் எழுதியவற்றில் உடன்படுவதோ,
மாறுபடுவதோ ஒருபுறம் இருக்கட்டும். தமிழ் அர்ச்சனையில் பல
நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. ஆலய வழிபாட்டில்
ஈடுபடும் பக்தர்களின் விருப்பமே நிறைவேறும்
என்பதிலும் ஐயமில்லை; தனித்தமிழ் என்று
கொடி உயர்த்துவதில் பலனில்லை.
ஈரோடு 'ஆர்த்ர கபாலீச்வரர்' ஆலயத்தில் வழிபாடு முழுவதும்
தமிழில். மகிமாலீசுவரர் ஆலய வழிபாட்டை நான் உன்னித்துக்
கவனித்ததில்லை. அதிலும் அப்படியே என நினைக்கிறேன்.
இங்கும் ஈரோடு அன்பர்கள் உள்ளனர்.
சென்னை கபாலீசுவரர் ஆலயத்தில் அர்தஜாம பூஜை
முடிந்ததும் தமிழ் முழக்கம்தான்; அன்பர்கள் மனமொன்றி
ஈடுபடுகின்றனர்.
எதுவும் இயல்பாக நடைபெற்றால்தான் நிலைபெற்று
நிற்கும். புரட்சி என்று தொடங்கினால் புஸ்வாணமாகும்;
மலர்ச்சியாக முகிழ வேண்டும்.
அம்பிகைக்கான அழகிய தமிழ்ப்பெயர்களை நான்
வியந்தே வந்துள்ளேன்; 'அஞ்சொலாள்' அபயாம்பிகை
ஆனதை நான் ஒப்பவில்லை. 'ஆர்க்காடு' ஆற்காடாகி
ஷடரண்யமானதையும் ஒப்பவில்லை, அது வ மொ
என்னும் காரணத்துக்காக. மயிலை லோகசுந்தரம் அவர்கள்
அதில் ஒரு தெளிவைத் தந்தார்.
சாயம் பூசுவதற்கும், பட்டி மன்றத்திற்கும் மட்டுமே தலைவர்கள்
நம்மைப் பழக்கி விட்டனர்; உங்களைப் போன்ற
இணைய முதலிகளாவது வீண் கவன ஈர்ப்புகளில் ஈடுபடாமல்
அப்போக்கை மாற்ற முயல வேண்டும் என்பதே எம் பேரவா.
இதையும் இப்போது புதிதாகச் சொல்லவில்லை.
தவறாக எழுதியிருப்பின் மன்னிக்க
தேவ்
On Dec 9, 6:38 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> On Dec 8, 11:21 pm, DEV RAJ <rde...@gmail.com> wrote:
>
>
>
>
>
>
>
>
>
> > On Dec 9, 4:28 am, "naa.gane...@gmail.com" <naa.gane...@gmail.com>
> > wrote:
>
> > >>> கன்னித்தமிழ் அர்ச்சனை 2012-ல் குறைந்துவிடும் போல
>
> > தெரிகிறதே.<<<
>
> > கணேசர் உண்மையில் கவலைப்படுகிறாரா ?
> > அல்லது கவன ஈர்ப்புச் செய்கிறாரா ?
>
> > தனித்தமிழ் குறைந்து விடுமோ என்று இப்போது கவலைப்படும் கணேசர்
> > ஒரு முறை க்ரந்தம் பரவலாகி எல்லா சாதியினரும் வள்ளுவம் காட்டும் வழியில்
> > அர்ச்சகர் ஆக வேண்டும் என்றும் அழுத்தமாகச் சொன்னவர்.
> > அப்போது அவர் தமிழ் அர்ச்சனை பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
>
> > அன்றாடம் ஏதாவது டாபிக் கிடைத்தால் போதும் எனும் நோக்கமாகவும்
> > இருக்கலாம். தமிழ் இணையம் எனும் ஸர்வகலாசாலையின்
> > பீடாதிபதியான அவரை யார் கேள்வி கேட்க முடியும் ?
>
> > தேவ்
>
> ஸ்ரீ தேவ் ஸார்,
>
> இணைய முதலி என்றீர்கள். நான் முதலியா என்று எல்லோருக்கும் தெரியும் :)
>
> கன்னித்தமிழ் அர்ச்சனை இணையத்தில் எப்படி
> இருக்குமோ எதிர்காலத்தில்? பொறுத்திருந்து
> பார்க்க வேண்டிய சமாச்சாரம்.
>
> கன்னித்தமிழ் அர்ச்சனைக்கு தேவைப்படும்
> ஓர் எழுத்தை தமிழுக்கு அளிக்க உதவியது
> கடையேன் பெற்ற பேறு. தமிழுக்கு கிடைத்த
> ஒரு கன்னியெழுத்து அஃது.http://nganesan.blogspot.com/2008/01/sha.htmlhttp://nganesan.blogspot.com/2009/05/tamil-om-windows7.html
>
> தமிழ் (இன்றும் யாழ்ப்பாணத்தார் தமிழில் உள்ளது) ஓம்
> எவ்வாறு வைதிகம், சமணம், பௌத்தம், சீக்கியம்
> என்று எல்லா சமயங்களிலும் சென்றது என விளக்கும்
> ஸம்ஸ்க்ருத அறிஞர் கட்டுரை. இதை எழுதியபோது
> எத்தனை இன்னல்கள் வெள்ளை சம்ஸ்க்ருத அறிஞர்
> கொடுத்தனர் என்று என்னிடம் சொல்லியிருக்கிறார்.
> தமிழ்/த்ராவிட வார்த்தை ஒன்று சம்ஸ்க்ருதம் பெற்றது
> என்று நிறுவுவது அத்தனை சுலபம் அன்று எனக்
> கற்றுக்கொண்டேன்.http://www.scribd.com/doc/15050686/Parpola-Om
வின்ஸ்லோ
> > ஒரு கன்னியெழுத்து அஃது.http://nganesan.blogspot.com/2008/01/sha.htmlhttp://nganesan.blogspot...
>
> > தமிழ் (இன்றும் யாழ்ப்பாணத்தார் தமிழில் உள்ளது) ஓம்
> > எவ்வாறு வைதிகம், சமணம், பௌத்தம், சீக்கியம்
> > என்று எல்லா சமயங்களிலும் சென்றது என விளக்கும்
> > ஸம்ஸ்க்ருத அறிஞர் கட்டுரை. இதை எழுதியபோது
> > எத்தனை இன்னல்கள் வெள்ளை சம்ஸ்க்ருத அறிஞர்
> > கொடுத்தனர் என்று என்னிடம் சொல்லியிருக்கிறார்.
> > தமிழ்/த்ராவிட வார்த்தை ஒன்று சம்ஸ்க்ருதம் பெற்றது
> > என்று நிறுவுவது அத்தனை சுலபம் அன்று எனக்
> > கற்றுக்கொண்டேன்.http://www.scribd.com/doc/15050686/Parpola-Om
>
> > கந்- என்ற வேருக்கு small, little என்ற பொருள்தான்.
> > அது இந்தியா-பாரசீகம் தவிர வேறெங்குமில்லை.
> > எனவே தமிழோடு தொடர்புடையது என்று சொல்ல
> > முடியும் அறிஞரவையில் என எண்ணுகிறேன்.
> > இதுவரை யாரும் இக்கருத்தை முன்வைத்ததில்லை,
> > ஏனெனில் வெள்ளை சம்ஸ்க்ருதவாதிகள் தமிழறியார்.
>
> > கன்னித்தமிழ் அர்ச்சனை உதாரணம்,
> > உங்களைப் போல எனக்கு சம்ஸ்க்ருதம் விளக்கம்
> > சொல்லும் மதுரை ராஜரத்னபட்டர் Alzhemer's வந்து
> > போய்விட்டார். எனக்கு பெரிய இழப்பு. அவரது அண்ணன்
> > தங்கம் பட்டர்தான் எனக்கு தெரிந்த மூத்தவர்.
> > இவர்கள் வீடுகளில் இருந்து சைவாகமங்கள்
> > பாண்டிச்சேரி நிறுவனம் சென்றன. சிவாச்சார்யர்களே
> > ராமேஷ்வரத்தில் இருந்து தாய்லாந்துபோய்
> > திருவெம்பாவை,
>
> ...
>
> read more »
On Dec 9, 9:39 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
> ஐயா
> கணேசனார் இணைய முதலி மட்டுமல்ல. ஓம் குறியீட்டை அறிமுகப்படுத்தி கணேசர் கணினி
> எழுத்துக்கும் முதலி.
> நாகராசன்
தேவ் ஸார்,
என் போன்ற தமிழ் மாணவர்களுக்கு தமிழ் ஐ.டி., யுனிகோட், எப்படி தமிழ்
எழுத்தை கணினியில் எழுதணும் என்பதெல்லாம் இங்கும், இண்பிட்டிலும்
சொல்லித் தருபவர்கள் நாகராஜ் போன்ற பேராசிரியர்கள் ஆவர்.
2011-ல் கன்னித்தமிழ் அர்ச்சனை நன்கு நடைபெற்றதைக் காணும்
பாக்கியம். 2012-ஐ எதிர்நோக்கி வாழ்வோம்.
யாரும் வகுத்தற்கரிய பிராயத்தள்
ஆயினு மேயெங்கள் தாய்! - இந்தப்
பாருள் எந்நாளும் ஓர் கன்னிகை என்னப்
பயின்றிடு வாளெங்கள் தாய்! - மகாகவி பாரதியார்
வாழி அக் கன்னித்தமிழ்!
நா. கணேசன்
>
> >http://nganesan.blogspot.com/2008/01/sha.htmlhttp://nganesan.blogspot...
> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
ஆம் ஐயா,
கணேசரின் ஆர்வமும், ஆய்வு முனைப்பும் பாராட்டத்தக்கவை.
இலக்கியம் தவிரப் பிற துறைகளிலும் ஆர்வம் கொண்டவர்.
அவர் 'மரபுச் செல்வர்' பட்டம் பெற்றபோதும் அவ்வைபவத்தில்
பங்கேற்று மனநிறைவடைந்தேன்.
எனது எழுத்துப் பிழைகளை அவர் சுட்டிக்காட்டியதை
இன்றும் நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.
'கட்டாயம்' எனும் சொல்லின் நுட்பத்தை அவர்
அழகாக எடுத்துக் காட்டினார். அவர்தம்
அருந்தொண்டு தொடர்வதாக.
சில முரண்களை ஒப்புக்கொள்ளாமல் அவர் விடாப்பிடியாகக் குழுமங்களில்
முற்செலுத்துவது மனச் சோர்வைத்தருகிறது. அவரைக் குறித்து எழுதியதில்
பிற அறிஞர்களும் தேவையின்றி மனம் வருந்த நேர்ந்தது.
அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவரையும் 'மூவர் முதலிகள்' அல்லது
'தேவார முதலிகள்' என்பர்
தேவ்