--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/66f4314d-b98f-4680-972c-31de1733ac49n%40googlegroups.com.
|
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/9f105549-581d-45fd-826a-0e906ab54547n%40googlegroups.com.
As informed earlier, Peravaiyin Anbudai Nenjam portal is up now and registrations started coming in. Please share with your Tamil Sangam members to help them find the matches for their children of age. Below is the link for registration. |
சிறுகதைப் போட்டி - சிறப்பு இலக்கியக் கூட்டம்"அமெரிக்கக் கதைகள்" - சிறுகதைப் போட்டி 2022பேரவையின் இலக்கியக் குழு சார்பாக ஒருங்கிணைக்கப்படும் சிறுகதைப் போட்டி இது. இப்போட்டிக்காக “புலம்பெயர் தமிழர்களின் படைப்புலகமும், சிறுகதைகளும்” எனும் தலைப்பில் சிறப்பு இலக்கியக் கூட்டம் வரும் சனிக்கிழமை மார்ச் 5 ஆம் நாள் இரவு 8:30 மணி ( EST கிழக்கு நேரம்) நடைபெற உள்ளது. கவிஞர். சாம்ராஜ் அவர்கள் இந்நிகழ்வில் சிறப்புரை வழங்க உள்ளார். வட அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தக் களம் அமைத்துக் கொடுக்கும் முயற்சி இது. இப்போட்டிக்கான கதைக் களம் வட அமெரிக்க வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டதாக அமைந்திருக்க வேண்டும். சிறுகதைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 31 மார்ச் 2022 போட்டி முடிவுகள் அறிவிப்பு : மே 2022 சிறுகதைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ilakkiy...@fetna.org நடுவர் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த ஐந்து சிறுகதைகளுக்கு முறையே $250 (அமெரிக்க வெள்ளி) வெகுமதி அளிக்கப்படும். மேலும் ஊக்கப் பரிசாக ஐந்து சிறுகதைகளுக்குச் சிறப்புப் பரிசு உண்டு. போட்டியில் பங்கேற்க விருப்பம் இருப்பவர்கள் தங்கள் விபரங்களை இந்த கூகுள் படிவத்தில் உடனடியாக பதிவு செய்யவும். https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdAsuGlMJOTVpUWjtUCdRKmFOC7irJqUYCRVK2xSgBxQ-T2sA/viewform போட்டி குறித்த மேலதிக விபரங்களை https://fetna.org/ilakkiya-kulu/pottigal/#Potti இணையதளத்தில் காணலாம் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு நிகழ்வு 2022FeTNA Special Needs Event 2022 |
-------------------------------
பேரவை இலக்கியக் குழு வழங்கும் மகளிர் நாள் சிறப்பு நிகழ்ச்சிஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவி லோங்கி இவ் வையம் தழைக்குமாம் பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப் போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்; நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்; ஞான நல்லறம் வீர சுதந்திரம் பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்; பெண்மைத் தெய்வத்தின் பேச்சுகள் கேட்டீரோ! என்ற கூற்றுப்படி பாரதி கண்ட கனவினை உண்மையாக்க உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களை இந்தச் சிறப்பு இலக்கியக் கூட்டத்தின் வழியாக சந்திக்கவிருக்கிறோம். பெண் என்னும் பெரும் சக்தியை ஆண்டுதோறும் பெண்கள் நாளன்று கொண்டாடுகிறோம். இவ்வாண்டும் பெண்களின் ஆற்றலை, அறிவை, மேன்மையை கொண்டாடும் வகையில் இந்த நாளினைச் சிறப்பிக்க மூன்று ஆற்றல் பொருந்திய சாதனைப் பெண்களை நம்மிடையே உரையாற்ற அழைத்திருக்கிறோம். "பெண்ணின் பெருந்தக்க யாவுள" என்று வள்ளுவர் பெருந்தகை பெண்மையைக் கொண்டாடுகிறார். மலைவாழ், சிற்றூர் மற்றும் ஒடுக்கப்பட்ட பெண்களின் வாழ்வியல் சூழல் மற்றும் அவர்களின் முன்னேற்றம் குறித்து "மனிதரில்" என்னும் தலைப்பில் தனது கருத்துக்களை வழங்க கவிஞர் திருமிகு வைகைச்செல்வி அவர்கள் வருகிறார். சுற்றுச்சூழல் பாதிப்பு என்பது இன்று எல்லா மனிதர்களையும் அச்சுறுத்தும் ஒரு பிரச்சனை. தமிழகத்தில் நிலவும் சுற்றுசூழல் குறித்த பார்வையைப் பகிர்ந்து கொள்ள நீலகிரி மாவட்டத்தின் முன்னாள் ஆட்சித் தலைவர் திருமிகு இன்னசென்ட் திவ்யா ஐ.ஏ.எஸ் அவர்கள் நம்முடன் இணையவுள்ளார். முன்களப் பணியாளராக அவர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த தன்னுடைய எண்ணங்களை பகிரவும், பெண்கள் மட்டுமன்றி ஒட்டுமொத்த சமுதாயமும் இயற்கை பாதுகாப்பிற்கு ஆற்ற வேண்டிய பணிகளைப் பற்றியும் "மண்ணில்" என்ற தலைப்பில் நம்முடன் உரையாற்றவிருக்கிறார். பெண்கள் பலர் உயர்கல்வி பெற்று பல துறைகளில் சிறந்து விளங்கினாலும், விண்வெளித்துறை என்பது பல பெண்களுக்கு குறிப்பாக சிற்றூரிலுள்ள பெண்களுக்கு இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளது. இந்தத் துறையில் உள்ள சவால்களை எதிர்கொள்ள நாளைய தலைமுறையை தயார் செய்யும் விதமாக "விண்ணில்" என்ற தலைப்பில், தனது கருத்துக்களை பகிர்ந்து கொள்ள, இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தின் மேனாள் துணை இயக்குனர் திருமிகு ந.வளர்மதி அவர்கள் வருகை தரவிருக்கிறார். தமிழகத்தின் எடுத்துக்காட்டுப் பெண்களாக வலம் வந்து, சிறந்த களப்பணியாளர்களாக மிளிரும் இவர்களை உங்களுக்கு அறிமுகம் செய்வதில் பேரவை இலக்கியக் குழு மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறது. வாருங்கள் எங்களோடு கலந்துகொண்டு வாழ்வை வென்றெடுத்த இந்தப் பெண்கள் கூறுவதை கேளுங்கள்! நிகழ்ச்சி நடைபெறும் நாள்:
அமெரிக்க நேரம்:
சனிக்கிழமை மார்ச் 12 2022
இந்திய நேரம்:
ஞாயிற்றுக்கிழமை மார்ச் 13 2022 சூம் நேரலை – Zoom Live: https://tinyurl.com/FeTNA2021ik |
அன்புடையீர் ,நமது தமிழ்ச்சங்க நிர்வாகிகளுக்கும், தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்கும் நன்றி கலந்த வணக்கங்களோடு இந்த மடலை அனுப்புகிறோம். வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) *தமிழ் கூறும் தலைமுறை நிகழ்ச்சிக்காகச் சிறந்த பேச்சாளர்களை* இந்த மாபெரும் போட்டியில் பங்கு பெற அன்புடன் வரவேற்கிறோம். அமெரிக்க அளவில் தமிழ் பேச்சில் சிறந்து விளங்குபவர்கள் உலக அரங்கில் நிறுத்த வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கம். இதற்காகத் தமிழ்ச்சங்க அளவில், வட்டார அளவில், நாடு தழுவிய பேச்சுப் போட்டிகளைச் சென்ற வருடம் முதல் முறையாக நடத்தியதில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். தமிழ் கூறும் தலைமுறை சார்பாக நடத்தப்பட்ட பல்வேறு பயிற்சிப் பட்டறைகளில் நம் மாணவர்கள் மெருகேற்றப்பட்டார்கள். கடந்த வருட வெற்றியின் உற்சாகம் குறையுமுன்பே இந்த வருடப் போட்டிகளிலும் பயிற்சிகளிலும் உங்கள் ஆதரவுடன் இறங்குகிறோம். இதற்காக உங்கள் அமைப்புகளில் போட்டிகள் நடத்தி அல்லது உரிய முறையைப் பின்பற்றித் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பெயர்களைக் கீழ்க்கண்ட படிவத்தை நிரப்பி எங்களுக்கு அனுப்பவும். பேச்சாளர்களைத் தேர்ந்தெடுக்கும் வழிமுறையை இங்கே காணலாம்: https://docs.google.com/document/d/1VdF5tdphj1-Il02L7xzC-9Bakj5Uo0huHbj95EpUaMI/edit?usp=sharing இந்த போட்டியின் முக்கியத்துவத்தை உணர்த்தக் குறைந்த கட்டணமாக உறுப்பினர் சங்கங்கள்/ATA/ITA பள்ளி குழந்தைகளுக்கு 10 வெள்ளிகளை அறிமுகப்படுத்தியுள்ளோம். சங்கம்/பள்ளி அல்லாது பொது நுழைவு (Open Category) குழந்தைகளுக்கு கட்டணம் 30 வெள்ளிகளாகும். மற்ற விதிகளில் மாற்றம் இல்லை. தமிழ்ச் சங்கம்/பள்ளி சார்பாக *சிறுவர்கள் (Junior) இரண்டு பேச்சாளர்களையும் இளைஞர்களில் (Senior) இரண்டு பேச்சாளர்களையும்* தேர்ந்தெடுக்க வேண்டுகிறோம். *சங்கம்/பள்ளி அல்லாது பொது நுழைவு (Open Category)* மூலம் பங்கேற்க இருக்கும் போட்டியாளர்கள் படிவத்தில் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றி படிவத்தை நிரப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
Junior:
Senior: Registration Link: tinyurl.com/tkt2022 *படிவத்தை அனுப்ப இறுதி நாள்: மார்ச் மாதம் 31-ம் 11:59 PM EST (கூடிய விரைவில் அனுப்பவும்)* உங்கள் ஆதரவுடன் நமது வெற்றி பயணம் அமெரிக்க மண்ணில் தொடரும். எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு ! அன்புடன், பேரவை தமிழ் கூறும் தலைமுறை அணியினர் தலைமை: கிங்ஸ்லி சாமுவேல் துணைத் தலைமை: மீனா சுந்தரபாண்டியன்’ |
அன்புடையீர் வணக்கம்
மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் மூலம் ISSN 2581-9712 பதிவு பெற்ற “உலகத்தமிழ்” எனும் பன்னாட்டுத் தமிழாய்வு மின்னிதழ் ஏப்பிரல்(மாத) 2022 காலாண்டு இதழுக்கான ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. பேராசிரியர்கள், அயலகத் தமிழ் அறிஞர்கள், அனைத்துத் துறைசார்ந்த வல்லுநர்கள் மற்றும் ஆய்வு மாணவர்களிடமிருந்து கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.
அனுப்பவேண்டிய முகவரி: uts...@gmail.com
உலாச் செல்ல: ulagatamil.in
🦚ஆய்வுக் கட்டுரை வழங்கும் தமிழ் அறிஞர்கள், ஆர்வலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் தங்கள் கட்டுரையை தமிழில் வழங்க வேண்டும்.
🦚ஆய்வாளர்கள் தங்கள் சொந்தச் சிந்தனையில் உருவான கட்டுரைகளையே அனுப்ப வேண்டும்.
🦚கட்டுரைகளுக்குத் தேவையான துணைத்தலைப்புகள், அடிக்குறிப்புகளுடன் பெயர், பணி மற்றும் படிப்பு, நிறுவனம், முகவரி ஆகியவற்றுடன் அனுப்பி வைக்க வேண்டும்.
🦚இரண்டு பேர் சேர்ந்து எழுதிய ஆய்வுக் கட்டுரைகள் ஏற்கப்படமாட்டாது.
🦚கட்டுரைகளில் தேவையான மாற்றங்களைச் செய்யவும் முரண்பாடான பகுதிகளை நீக்கவும் கட்டுரைகளை நிராகரிக்கவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.
🦚ஆய்வுக் கட்டுரைகளின் முன்னுரை, முடிவுரை ஒருபத்தி அளவில்(5வரிகளில்) அமைதல் வேண்டும்.
🦚ஆய்வுக் கட்டுரைகளுக்குப் பக்க வரையறை இல்லை.
🦚அச்சு ஊடகங்கள், இணையதளங்கள் ஆகியவற்றில் இதற்கு முன்பாக இடம் பெற்றிருக்கக் கூடாது.
🦚ஆய்வுக் கட்டுரையை ஒருங்குறி (Unicode) எழுத்துருவில் தட்டச்சு செய்து வேர்டு (Word) கோப்பாக uts...@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புதல் வேண்டும்.
🦚ஆய்வுக் கருத்துகள் அனைத்திற்கும் கட்டுரையாளரே பொறுப்பாளர் ஆவார்.
🦚 ஆண்டு முழுவதும் கட்டுரை வழங்கலாம்.
🦚அந்தந்த காலாண்டு இதழ்களில் பதிவேற்றம் செய்யப்படும்.
🦚சனவரி, ஏப்ரல், சூலை, அக்டோபர் ஆகிய காலாண்டிதழில் வெளியிடப்படும்.
🦚கட்டணம் கிடையாது.
🦚தமிழ் அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து கட்டுரையாக வழங்கலாம்.
நன்றி
காந்தி கல்வி நிலையத்தின் புதன் வாசகர் வட்டத்தில் 30.03.2022 அன்று (மாலை 6.45-7.45)
பேசுபவர்:
எழுத்தாளர் K.R.A. நரசய்யா
புத்தகம்:
“Tagore and Gandhi:
Walking Alone, Walking Together”
ஆசிரியர்:
Rudrangshu Mukherjee
(குறிப்பு: இந்நிகழ்வு காந்தி கல்வி நிலையத்தில் நடைபெறும். வெளியூர் நண்பர்கள் GoogleMeet வழியே நேரலையில் பங்கேற்கலாம். லிங்க்: https://bit.ly/2YvRcd9 நிகழ்ச்சி நடைபெறும் நாள் அன்றும் மற்றும் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னரும் லிங்க் மீண்டும் வழங்கப்படும்)
பேச்சாளர் பற்றி:
திரு K.R.A. நரசய்யா அவர்கள் இந்திய கப்பற்படையின் ஐ.என்.எஸ். சிவாஜி போர்க்கப்பலில் பணியாற்றியவர். இந்தியாவின் முதல் விமானம் தாங்கி கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்தி்ல் உருவாக்கத்தில் பங்கேற்று, அதன் விமானத் தளத்தின் தலைமைப் பொறுப்பையும் வகித்துள்ளார். இந்திய - பாகிஸ்தான் போர்களில் பங்கேற்றவர். விசாகப்பட்டினத் துறைமுகத்தின் தலைமைப் பொறியாளராகவும் பணியாற்றியிருக்கிறார். உலக வங்கியின் அழைப்பின் பேரில் 1994-ஆம் ஆண்டு கம்போடிய அவசர மறுவாழ்வுத் திட்டப் பணிக்குழுவில் இடம்பெற்று பணியாற்றியவர். தன்னுடைய படைப்புகளுக்காக நான்கு முறை தமிழக அரசினால் விருதுகளை வழங்கி கெளரவிக்கப் பட்டிருக்கிறார். பல்வேறு சிறுகதைகளையும், "சொல்லொணாப் பேறு" "கடல்வழி வணிகம்" "மதராசப்பட்டினம்" "கம்போடியா நினைவுகள்" மற்றும் “எந்தையும் தாயும்” என பல புகழ்பெற்ற நூல்களையும் எழுதியவர். 1972-ஆம் ஆண்டில் வெளியான "கடலோடி (ஒரு கப்பலோட்டியின் நினைவலைகள்)" என்னும் இவரது நூல் அமெரிக்க நூலகங்களின் தொகுப்பு நூல் பட்டியலில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் புதன் வாசகர் வட்டத்தில் “The Nonviolent Struggle For Indian Freedom, 1905-1919”, “Subramania Bharati Poems”, “Gandhi Illustrated Biography”, “The Sino-Indian War of 1962: New perspectives” மற்றும் “விடுதலை வீராங்கணை ருக்மிணி லட்சுமிபதி” உள்ளிட்ட நூல்களை அறிமுகம் செய்து பேசியிருக்கிறார்.
நூல் பற்றி:
உலகமே கொண்டாடும் இந்திய தேசத்தின் இரு அற்புதத் தலைமகன்களான காந்தியடிகள் மற்றும் ரபீந்திரநாத் தாகூர் ஆகிய இருவரும் தாங்கள் பங்காற்றிய துறைகளில் உச்சம் தொட்டவர்கள். சத்தியம் என்னும் ஒரே லட்சியத்தை அடைவதற்கான பயணத்தில் வெவ்வேறு பாதையில் பயணித்தாலும், அவ்விருவருக்குமிடையே நிலவிய ஆழ்ந்த நட்பை, மரியாதையை, அக்கறையை, அற்புத உறவை பேராசிரியர். ருத்ராங்க்சு முகர்ஜி அவகள் மிக அழகாக இந்நூலில் பதிவு செய்திருக்கிறார். நூலின் விலை ரூ.699/-. இந்நூலை Aleph Book Company வெளியிட்டுள்ளது.
ஆசிரியர் பற்றி:
பேராசிரியர் ருத்ராங்க்ஸு முகர்ஜி அவர்கள் ஹரியானாவிலுள்ள அசோகா பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும், வரலாற்றுத் துறை பேராசிரியராகவும் இருக்கிறார். உலகின் பல்வேறு புகழ்பெற்ற பலகலைக்கழகங்களில் பணியாற்றிய இவர் தி டெலிகிராப் பத்திரிகையின் தலையங்கப் பகுதியின் ஆசிரியராகவும் பணியாற்றி இருக்கிறார். “ Nehru & Bose: Parallel Lives”, “Twilight Falls on Liberalism” மற்றும் “Jawaharlal Nehru: A Short Introduction” ஆகிய நூல்கள் இவரது படைப்புகளாகும். 1857-ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய்க் கலகம் குறித்து ஐந்து முக்கிய வரலாற்று நூல்களையும் எழுதியுள்ளார்.
தொடர்புக்கு:
காந்தி கல்வி நிலையம்,
தக்கர் பாபா வித்யாலயா வளாகம்,
58 வெங்கட் நாராயணா சாலை, தி.நகர்,
சென்னை – 600017
தொடர்புக்கு: 9790740886 (ம) 9952952686தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், அறம் கிளை 2022 -ஆம் ஆண்டிற்கான புதிய உறுப்பினர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்ட தகவல்: தமுஎகச, அறம் கிளையில் ( இணையவழி – டெலிகிராம் இலக்கிய சமூக செயற்பாட்டுக்குழு) இதுவரை அக்கு ஹீலர்கள் மட்டுமே உறுப்பினர்களாக இருந்து வந்துள்ளோம். நமது உறுப்பினர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களில் பலர் இணைய ஆர்வம் காட்டிய போதும் இதுவரை அவர்களை இணைக்கவில்லை.
மாநில நிர்வாகிகளின் வழிகாட்டுதலில், இந்த ஆண்டிலிருந்து அறம் கிளை செயல்பாடுகளில் (வாசிப்பு, நேரடி நிகழ்வுக ளில்) பங்கேற்கும் ஆர்வமுள்ள குடும்ப உறுப்பினர் களையும், நண்பர்களையும் இணைத்துக் கொள்ள நிர்வாகக் குழு முடிவு செய்துள்ளது.
இணைய விரும்பும் தோழர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பி னை அனுப்பி, தற்காலிகக் குழுவில் இணையுமாறு வழிகாட் டுங்கள். உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ₹300 செலுத்திய பிறகு, தமுஎகச அறம் கிளையின் இலக்கிய சமூக செயற் பாட்டுக் குழுவில் (இணையவழி – டெலிகிராம்) இணைக்கப்படுவார்கள். https://t.me/+hNsbd5ke7cBiMTg9
அன்புடையீர் வணக்கம்
மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் மூலம் ISSN 2581-9712 பதிவு பெற்ற “உலகத்தமிழ்” எனும் பன்னாட்டுத் தமிழாய்வு மின்னிதழ் சூலை(மாத) 2022 காலாண்டு இதழுக்கான ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. பேராசிரியர்கள், அயலகத் தமிழ் அறிஞர்கள், அனைத்துத் துறைசார்ந்த வல்லுநர்கள் மற்றும் ஆய்வு மாணவர்களிடமிருந்து கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.
அனுப்பவேண்டிய முகவரி: uts...@gmail.com
உலாச் செல்ல: ulagatamil.in
ஆய்வுக் கட்டுரை வழங்கும் தமிழ் அறிஞர்கள், ஆர்வலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் தங்கள் கட்டுரையை தமிழில் வழங்க வேண்டும்.
ஆய்வாளர்கள் தங்கள் சொந்தச் சிந்தனையில் உருவான கட்டுரைகளையே அனுப்ப வேண்டும்.
கட்டுரைகளுக்குத் தேவையான துணைத்தலைப்புகள், அடிக்குறிப்புகளுடன் பெயர், பணி மற்றும் படிப்பு, நிறுவனம், முகவரி ஆகியவற்றுடன் அனுப்பி வைக்க வேண்டும்.
இரண்டு பேர் சேர்ந்து எழுதிய ஆய்வுக் கட்டுரைகள் ஏற்கப்படமாட்டாது.
கட்டுரைகளில் தேவையான மாற்றங்களைச் செய்யவும் முரண்பாடான பகுதிகளை நீக்கவும் கட்டுரைகளை நிராகரிக்கவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.
ஆய்வுக் கட்டுரைகளின் முன்னுரை, முடிவுரை ஒருபத்தி அளவில்(5வரிகளில்) அமைதல் வேண்டும்.
ஆய்வுக் கட்டுரைகளுக்குப் பக்க வரையறை இல்லை.
அச்சு ஊடகங்கள், இணையதளங்கள் ஆகியவற்றில் இதற்கு முன்பாக இடம் பெற்றிருக்கக் கூடாது.
ஆய்வுக் கட்டுரையை ஒருங்குறி (Unicode) எழுத்துருவில் தட்டச்சு செய்து வேர்டு (Word) கோப்பாக uts...@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புதல் வேண்டும்.
ஆய்வுக் கருத்துகள் அனைத்திற்கும் கட்டுரையாளரே பொறுப்பாளர் ஆவார்.
ஆண்டு முழுவதும் கட்டுரை வழங்கலாம்.
அந்தந்த காலாண்டு இதழ்களில் பதிவேற்றம் செய்யப்படும்.
சனவரி, ஏப்பிரல், சூலை, அக்டோபர் ஆகிய காலாண்டிதழில் வெளியிடப்படும்.
கட்டணம் கிடையாது.
தமிழ் அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து கட்டுரையாக வழங்கலாம்.
நன்றி
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/68caf060-82ff-4ca2-a6e7-bedfb7026d0an%40googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAAioigzn%2Bj5YCYmCZke1hjZVtMCGPEt5YXeKrs%3Di_BNWq_Ktwg%40mail.gmail.com.