தொல்காப்பியர் சமயம்

278 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Oct 17, 2009, 11:44:56 AM10/17/09
to மின்தமிழ்
வள்ளுவர், தொல்காப்பியர் போன்ற பழந்தமிழ் அறிஞர்கள்
சமண சமயம் சார்ந்தவர்கள் என்று 20-ஆம் நூற்றாண்டில்
தமிழை ஆழ ஆராய்ந்த வையாபுரிப்பிள்ளை போன்றோர்
விவரமாக எழுதியுள்ளார்கள்.

ஆமாச்சு போன்ற கணிநுட்பியலாளருக்கு இது
புதிய செய்தி ஆகத் தெரிகிறது.
http://groups.google.com/group/mintamil/msg/d1cb5b5b9d4d5cb5

தொல்காப்பியர் மரபு, குலம், சமயம் பற்றிப் பலர் ஆய்ந்துள்ளனர்.
மு. ராகவையங்கார், சு. வையாபுரிப் பிள்ளையவர்கள், ....
அவற்றை எல்லாம் தொகுக்க வேண்டும்.

உ-ம்: க. கைலாசபதி, ஒப்பியல் இலக்கியம்
http://www.tamilnation.org/literature/eelam/unicode/mp0102.htm
”சமண சமயத்தவராகிய தொல்காப்பியர் மரபியலிலே தந்திரவுத்திகளை விரித்துக்
கூறுமிடத்து, ஒப்பக்கூறல், தன்கோட்கூறல், பிறனுடம்பட்டது தானுடம்படுதல்
என்பனவற்றை சமயஞ் சார்ந்த ஒப்பியலின் வழிவந்த தருக்கத்திலிருந்தே
எடுத்தாள்கிறார். இவையாவும் சமயக் கணக்கரின் மதி வழிவந்த ஒப்பியலுக்கு
உதாரணங்கள்.”

தந்திர யுக்தி பற்றி ஓர் அரிய கட்டுரை வெளிவந்துள்ளது.
எனக்குக் கிடைத்த அதனை நவம்பரில்தான் படிக்கணும்.

பாரதிதாசன் அகத்தியர் கட்டுக்கதைகளைப் பாடினார்.

நா. கணேசன்

Vedaprakash

unread,
Oct 17, 2009, 11:49:16 AM10/17/09
to மின்தமிழ்
பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப - என்பதற்கு
என்ன விளக்கம்?

N. Ganesan

unread,
Oct 17, 2009, 12:11:04 PM10/17/09
to மின்தமிழ்

தொல்காப்பியர் சமணர் என்பதற்கு ஒரு ஆய்வாதாரம் காட்டுவர்.
சைவம் தழைத்தபோது அகத்தியர் தமிழ் இலக்கணம் தந்தார்
என்ற கதையைச் சைவர்கள் சிருஷ்டித்தனர் என்ப.
அகத்தியரைத் தொல்காப்பியனின் குருவாகக் கதைகட்டி,
அவர்கள் இருவருக்கும் இடையே பூச்சல் எழுந்ததாகவும்
இதனால் தான் அதங்கோட்டு ஆசானிடம் தொல்காப்பியன்
போனார் என்றும் கதை போகும். இதனை
நச்சினார்க்கினியர் குறிப்பிடுகிறார்.

நல்ல கட்டுரையாக (நம் பழைய சிறுகதை?) கிவாஜ
எழுதியுமிருக்கிறார்.

அகத்தியருக்கு 12 சிஷ்யர்கள் என்பது புறப்பொருள் வெண்பாமாலை.
இது ஜோதிர்லிங்க தலங்கள் 12 என்று சைவர்கள்
நிர்ணயம் செய்த காலத்தில் ஏற்பட்ட கதை. ஏகாதச உருத்திரர் 11
ஆக இருக்க, ஒன்றைக் கூட்டி 12 எண் அகத்தியர் சீடர்கள்,
இராமேசுவரம் உள்ளிட்ட கி.மு. நூற்றாண்டுகளின்
இலிங்க வழிபாட்டுத் தலங்களை ஜோதிர்லிங்கங்கள்
என்று கோர்த்தபோது 12 எண் முக்கியம் பெற்றது.

பின்னர் 19-ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணம் ஆறுமுக
நாவலர் சைவம் காக்கத் தோன்றினார். முதன்முதலாக,
நாவலர் தான் அகத்தியரின் மாணவர்கள் இன்னின்னார்
என்று பெயர் 12 பேருக்கும் கொடுக்கிறார் (பழைய
ஆதாரங்களை உபயோகித்து - ஆறுமுக நாவலரின்
“தமிழ்” என்ற கட்டுரையை வலையேற்றணும்.
அதைப் பார்த்து சைமன் காசி செட்டி ஆங்கிலத்தில்
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் அளித்த பேர்ப்பட்டியலை
காசிச் செட்டி தருகிறார்.

காசிச் செட்டி கொழும்புச் செட்டியார்கள் எனப்படுவர்.
ஜெயவர்த்தனா கொழும்புச் செட்டி முன்னோர்கள்
சிங்களர் ஆனவர்களில் பிறந்தவர்:
http://en.wikipedia.org/wiki/Colombo_chetties
பிரபல நாவலாசிரியர், மைக்கேல் ஒந்தாச்சி
தஞ்சையில் இருந்து போன வணிகரே:
http://www.rootsweb.ancestry.com/~lkawgw/gen7000.html

நாவலர் பெர்சீவல் பாதிரியிடம் வேலைபார்த்தவர்.
ஹிந்து சமயத்தில் வழங்கும் நல்ல தமிழ், வடமொழிச்
சொற்களைத் தக்க இடத்தில் வைத்து பைபிளைத்
தமிழ் ஆக்கித் தந்தார். இது எட்டையபுரத்தில்
கடிகை (நாழி) முத்துப்புலவர் மாணவர் ஆன உமறுப் புலவர்
இசுலாமை தமிழ்ப்படுத்தியதை ஒத்தது.
தமிழ்ச் சமயமாக இசுலாமைச் செய்த உமறு
பற்றிய விமரிசனம் இங்கே கண்டேன்:

இந்தியாவில் இருந்த பழைய சூபி சமயம்
இந்து சமயத்தோடு மிகத் தொடர்புடையது.
இன்று அந்த மத நல்லிணக்கம் அதிகம் ஆகிறதா?
குறைவுபடுகிறதா? என்ர கேள்வியை அறிந்தோர்
சொன்னால் கேட்டுக்கொள்கிறேன்.

இயேசுநாதருக்கு 12 பேர் இருக்க, பழுத்த சைவர்
நாவலர் பெருமான் நம் அகத்தியருக்கு 12 சீடர்
பெயர்களும் கொடுத்து பட்டியல் இட்டார் என்பதாக
எண்ண இடமுண்டு.

இவையெல்லாம் பற்றி முனைவர் செவ்வியார்
ஆய்வுக்கட்டுரை பதிப்பாகியுள்ளது. ஆறுமுக
நாவலர் பட்டியலை நானளித்ததைக் குறித்துள்ளார்கள்.
அவருக்கு என் நன்றி. நன்கு படித்தபின் விரிவாக சிடமிலில்
எழுதவேண்டும்.

பிற பின்.

அன்புடன்,
நா. கணேசன்


N. Ganesan

unread,
Oct 17, 2009, 12:20:02 PM10/17/09
to மின்தமிழ்

சிராசு அப்துல்லா மடல்களின் தொடுப்பு:
http://groups.google.com/group/mintamil/browse_thread/thread/def54096ec34cba6/9a696e309b32f118?#9a696e309b32f118

N. Ganesan

unread,
Oct 17, 2009, 12:21:14 PM10/17/09
to மின்தமிழ்

On Oct 17, 10:49 am, Vedaprakash <vedamvedaprak...@yahoo.com> wrote:
> பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப - என்பதற்கு
> என்ன விளக்கம்?

திரு, ராமகிருஷ்ண ராவ்,

நீங்களே சொல்லுங்கள்,

Vedaprakash

unread,
Oct 17, 2009, 12:21:56 PM10/17/09
to மின்தமிழ்
நான் கேட்டத்ற்கு பதிலா?

அல்லது மேலே, நீங்கள் எழுதிகிறீர்களா?

N. Ganesan

unread,
Oct 17, 2009, 3:03:18 PM10/17/09
to மின்தமிழ்

தொல்காப்பிய முதல் உரைகாரர், சமணர் இளம்பூரணர் உரை அளித்தமைக்கு நன்றி.


On Oct 17, 12:38 pm, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
> இந்த  நூற்பாவிற்கு    10ஆம்  நூற்றாண்டில்  உரைவகுத்த   ‘அந்தணன்   துறவோன்
> அருமறை    உணர்ந்த    இளம்போதி   பயந்த   புனிதன்    இளம்பூரணன்’    உரை
> வருமாறு:--
>
> ”கரணம்  என்பது  வதுவைச்  சடங்கு”   (பக்  ௨௪௯)
>
> “இதன்பொருள் -- பொய்கூறலும்   வழூஉப்பட   வொழுகலும்  தோன்றியபின்னர்   முனைவர்
> கரணத்தைக்  கட்டினார்   என்று  சொல்வர்   என்றவாறு.
>
> “இரண்டும்  தோன்றுவது    இரண்டாம்  ஊழியின்  கண்ணாதலின்,   முதல்  ஊழியில்
> கரணமின்றியே    இல்வாழ்க்கை   நடந்தது  என்பதூஉம்   இவை  தோன்றிய  பின்னர்க்
> கரணம்  தோன்றியது  என்பதூஉம்   கூறியவாறாயிற்று.
>
> பொய்யாவது  செய்ததனை  மறைத்தல்.   வழுவாவது   செய்ததன்கண்  முடிய
> நில்லாது   தப்பி  ஒழுகுதல்.   கரணத்தொடு    முடிந்த  காலையின்   அவை
> இரண்டும்     நிகழாவாம்  ஆதலால்   கரணம்   வேண்டுவதாயிற்று”    (பக்  ௨௫௧)

amachu

unread,
Oct 18, 2009, 12:23:50 AM10/18/09
to mint...@googlegroups.com
On Sat, 2009-10-17 at 08:44 -0700, N. Ganesan wrote:
> வள்ளுவர், தொல்காப்பியர் போன்ற பழந்தமிழ் அறிஞர்கள்
> சமண சமயம் சார்ந்தவர்கள் என்று 20-ஆம் நூற்றாண்டில்
> தமிழை ஆழ ஆராய்ந்த வையாபுரிப்பிள்ளை போன்றோர்
> விவரமாக எழுதியுள்ளார்கள்.
>
> ஆமாச்சு போன்ற கணிநுட்பியலாளருக்கு இது
> புதிய செய்தி ஆகத் தெரிகிறது.
> http://groups.google.com/group/mintamil/msg/d1cb5b5b9d4d5cb5
>
> தொல்காப்பியர் மரபு, குலம், சமயம் பற்றிப் பலர் ஆய்ந்துள்ளனர்.
> மு. ராகவையங்கார், சு. வையாபுரிப் பிள்ளையவர்கள், ....
> அவற்றை எல்லாம் தொகுக்க வேண்டும்.


சில அடிப்படையான கருத்துக்கள் இங்கிருக்கும் அனைவருக்கும் ஏற்புடையதாக
இருக்கும் என நம்புகிறேன்,

நல்லவை என்று நிலைநாட்டப்பட்டவை உலகின் அனைத்து மூளைகளிலும் பெரும்பாலும்
ஒன்றாகவே இருந்து வந்துள்ளன.

அதனால் தான் ஒரு கிறிஸ்துவருக்கு திருக்குறளை வாசிக்கும் போது அது
போதிக்கும் நெறிகள் தனது நெறிகளோடு ஒத்துப் போவது கண்டு வள்ளுவருக்கும்
கிறிஸ்துவிற்கும் தொடர்பேற்படுத்த துடிக்கிறது.

அதாவது எல்லாவற்றையும் தன் கண்ணாடி கொண்டு பார்க்கும் மனோபாவம். இது எல்லா
சமயத்தவர்க்கும் பொது.

பலரும் பின்பற்றுகிறார்கள் என்கிற காரணத்துக்காகவே தனித்தன்மை நாடும் சிலர்
அவற்றை சாடத் தொடங்கி தனக்குப் பின்னால் அடையாளங்களையும்
பழக்கவழக்கங்களையும் உருவாக்கிவிட்டுப் போவர். கடைசியில் அவர் சாடிய
வழக்கங்களை ஒத்தே அவர் ஏற்படுத்தியதும் இருக்கும்.

ஆராய்ந்து பார்க்கிற போது அடிப்படை நன்னெறி என்று தாமாக யோசித்து-முட்டி
மோதி இறுதியாக முடிவுக்கு வந்தாலும் சரி, காலங்காலமாக சமயப் பழக்கவழங்களை
கடைப்பிடிப்பதால் ஏற்படும் நற்பழக்கங்களும் சரி பெரும்பாலும் ஒத்துப் போகவே
செய்யும்.

நாம் எதற்கு முதலில் ஆட்படுகிறோம் - சமண நூல்களுக்கு முதலில் பழக்கப்பட்டு,
அதன் கருத்துக்கள் நம்முள்ளே மேலோங்கி, பின்னர் திருக்குறளை வாசிக்கப்
புகும்போது - நன்னெறிகளின் பொதுவான பொருத்தம் காரணமாக திருக்குறள் சமண
நூலாகத் தோன்றும்.

அப்பறமா..

--

ஆமாச்சு





Hari Krishnan

unread,
Oct 18, 2009, 3:02:10 AM10/18/09
to mint...@googlegroups.com


2009/10/17 srirangammohanarangan v <ranga...@gmail.com>
இந்த  நூற்பாவிற்கு    10ஆம்  நூற்றாண்டில்  உரைவகுத்த   ‘அந்தணன்   துறவோன்   அருமறை    உணர்ந்த    இளம்போதி   பயந்த   புனிதன்    இளம்பூரணன்’    உரை   வருமாறு:--


அட நீங்க வேற மோகனரங்கன்!  இதுக்கெல்லாம் நாங்க பயந்துருவமா என்ன?  நீங்க கொடுத்த பட்டப் பெயரிலேயே ‘இளம்போதி பயந்த புனிதன்’ என்ற பகுதியை எடுத்துக்கொண்டால்,

போதி மரத்தடியில் ஞானம் பெற்றவர் யார் என்பது எல்லோருக்கும் தெரியும்.  அதை விட்டுட்டு புளியமரத்தடிக்குப் போகாதீரும்.  இளம்போதி பயந்த அப்படின்னா, (ஒரிஜினல் போதிக்கு அடுத்ததாக வந்த காரணத்தால்) சின்ன போதி (மரம்) ஞானம் வழங்கிய அப்படின்னு அர்த்தம். 

இல்லாட்டி, இளம்போதி baயந்த அப்படின்னு படிச்சா, இளம்போதி, அதாவது, புத்த பிட்சுக்கள் எல்லாரும் பாத்து பயந்துபோயிட்ட ‘பேர்சொல்லாதவர்’ அப்படின்னும் அர்த்தம் சொல்லலாம்.

இதெல்லாம் தெரியாமா நீங்கபாட்டுக்கு இளம்பூரணருக்கு திருநீற்றைப் பூசுகிறீர்கள்.  (நீறு என்றால் பற்பமும்தானே....சை-வை எல்லாம் சேத்துதான் சொல்றேன்... :P)

--
அன்புடன்,
ஹரிகி.

Tirumurti Vasudevan

unread,
Oct 18, 2009, 4:16:41 AM10/18/09
to mint...@googlegroups.com
2009/10/18 srirangammohanarangan v <ranga...@gmail.com>:

>
> (குய்ப்பு -- டி வி சதா ~ திரு  டி வி சதாசிவ பண்டாரத்தார் )
>

அதானே பாத்தேன்! நாம ஒண்ணும் வாய தெறக்கலியே, இன்னாடாதுன்னு பயந்து பூட்டேன் சாமி!
;-)
திவாஜி
--
My blogs: [all in Tamil]
http://anmikam4dumbme.blogspot.com/
http://chitirampesuthati.blogspot.com/ photo blog now with english text too!
http://kathaikathaiyaam.blogspot.com/

BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!

Hari Krishnan

unread,
Oct 18, 2009, 4:48:11 AM10/18/09
to mint...@googlegroups.com


2009/10/18 srirangammohanarangan v <ranga...@gmail.com>

“ஒல்காப்  புலமை   தொல்காப்பியத்துள்   உளங்கூர்   கேள்வி   இளம்பூரணர்  எனும்  ஏதமில்   மாதவர்   ஓதிய   உரை”   ந்னு   சொல்லிக்கினே   கீராரு.  
 


அட தோடா.

ஓலைச்சுவடியில புள்ளி குத்த மாட்டாங்கண்ற பேசிக் நாலு எட்ஜ் இல்லாகாட்டி உம்மை எப்படி ‘சதுரர்‘னு சொல்றது விதுரரே!

ஏதமில் மாதவர் ஓதிய உரை அப்படின்னு படிச்சீரே... அதுல புள்ளி குத்தவேண்டிய இடத்தில புள்ளி குத்தி படிச்சுப்பாரும் தெரியும் உண்மை.   மாத்வர்.  ஆம்மா சொல்லிப்புட்டேன்.  இளம்பூரணர் ஒரு மாத்வராக்கும்.   

Chandar Subramanian

unread,
Oct 18, 2009, 4:51:40 AM10/18/09
to mint...@googlegroups.com
ஆக, ஒருத்தர் புள்ளி வைக்க, மற்றொருவர் கோலம் போடறீங்களோ?


 
2009/10/18 Hari Krishnan <hari.har...@gmail.com>
--
அன்புடன்
சந்தர் சுப்ரமணியன்
www.MovingMoon.com

Message has been deleted

N. Ganesan

unread,
Oct 18, 2009, 6:02:31 AM10/18/09
to மின்தமிழ்

On Oct 18, 4:00 am, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:

> நானும்    திரு  வையாபுரிப்பிள்ளை  நூல்கள்,  தமிழ்ச் சுடர்மணிகள்,
>  அவருடைய   History  of   Tamil  Language   and  Literature   எல்லாம்
> தேடிப்பார்க்கிறேன்.   ஒரு  இடத்துலயும்    இளம்பூரணர்  சமணர்னு    சொல்லி
> திரு  வையாபுரிப்பிள்ளை    எழுதவில்லையே.!!!      கணேசன் தான்    உதவணும்.

நீங்கள் காட்டிய மேற்கோட்பாடல் மிக அண்மைக்காலப் பாடல்.
~ 100 வருஷம் தான் ஆச்சு. 'செங்கோன் தரைச்செலவு' என்ற புத்தகம் எழுதி
பழைய
சங்கப் பாடற் புத்தகம் என்று சொன்ன சொர்ணம்பிள்ளை யாத்த புதுச்செய்யுள்
அது.

சதாசிவ பண்டாரத்தார் ஏமாந்த கதையைப் பலர் எழுதியுள்ளனர்.

உரையாசிரியர் என்று போற்றப்படும் இளம்பூரண அடிகள் சமண
சமயத்தவர். அவரது உரை முழுதும் கிட்டவில்லை. சு. வையாபுரிப்பிள்ளை
பல்வகையில் உதவி உரையில்லா இடங்களில் நச்சினார்க்கினியத்தை
வைத்து ’கப்பலோட்டிய தமிழர்’ வ.உ.சி. 1936-ல் இரு பாகங்களாக அச்சிட்டார்.

மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு (வையாபுரியார் மாணவர்),
அரவிந்தனின், உரையாசிரியர்கள், .... போன்ற நூல்களைப் பார்க்கவும்.

அபிதான சிந்தாமணி பார்க்கவும். பிரசிடென்சி காலேஜில் தமிழ்
பண்டிதராக இருந்த சிங்காரவேலருக்குக் கூட கிட்டாப்
போலிச் செய்யுள் நீங்கள் மேற்கோள் காட்டினது.

விரிவாக, பின்னர் எழுதுகிறேன்.

நா. கணேசன்

> ஆமாச்சு   உதவினாலும்  சரி.

N. Ganesan

unread,
Oct 18, 2009, 6:08:20 AM10/18/09
to மின்தமிழ்

On Oct 18, 3:48 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2009/10/18 srirangammohanarangan v <ranganvm...@gmail.com>


>
>
>
> > “ஒல்காப்  புலமை   தொல்காப்பியத்துள்   உளங்கூர்   கேள்வி   இளம்பூரணர்
> > எனும்  ஏதமில்   மாதவர்   ஓதிய   உரை”   ந்னு   சொல்லிக்கினே   கீராரு.
>

இளம்பூரணர் என்னும் தன் சமயத் துறவியை மயிலைநாதர் என்னும் சமணர்
போற்றியுள்ளார். மயிலாபுரி தீர்த்தங்கரரின் திருப்பாதம் விளங்கிய பள்ளி
கொண்ட மயிலாப்பூரா, அல்லது மயிலாபுரி என்றழைக்கப்பட்ட ஈரோடா
- இரண்டனுள் ஒன்று.

நா. கணேசன்


Vedaprakash

unread,
Oct 18, 2009, 7:24:02 AM10/18/09
to மின்தமிழ்
கொடிநிலை கந்தழி வள்ளி என்ற
வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே [புறத்.33]

இது என்ன?

இதற்கும் சமணத்திற்கும் என்ன சம்பந்தம்?

முன்பு கேட்ட கேள்வி:

http://groups.google.com/group/mintamil/browse_thread/thread/69fcfad913d92beb

"தீபாவளியும் சமண சமயத் தொடர்பும்..............." இந்த தலைப்பைப்
பார்த்ததுடன், ஏதோ அதைப் பற்றிய விஷயம் இருக்கும் எனப் படித்துப்
பார்த்தேன்.


1. ஜைனத்திற்கும் தீபாவளிக்கும் என்ன சம்பந்தம்?

2. முதன் முதலில் ஜைனர்கள் -
எப்பொழுது,
எதற்காக,
ஏன்,
எங்கு,
எவ்வாறு
கொண்டாடினர்?

3. அத்தகைய பாரம்பரியம், சரித்திர ஆதாரங்கள் உண்டா?

4. விஷயங்களைத் தெரிந்து கொள்ள ஆசைப் படுகிறேன்.

srirangammohanarangan v

unread,
Oct 18, 2009, 9:21:20 AM10/18/09
to mint...@googlegroups.com
திரு  கணேசன்,    முதலில்  திரு  வையாபுரிப்பிள்ளை   எங்கும்  இவ்வாறு   இளம்பூரணரின்   சமயத்தைக்  குறிப்பிடவில்லை   என்பது  உறுதி  என்று நினைக்கிறேன்.
 
சரி   அடுத்த  விஷயத்திற்கு  வருவோம்.   மேற்கோள்  காட்டியது     ஹரியாருக்கு   அது  நான்  கொடுத்த  பட்டமன்று  எனத்  தெரிவிக்கவே.  மற்றபடி  அதையும்    அதற்கு மேல் நானும்   கையாளவில்லை.
 
மு  அருணாசலமும்   இதுதான்   என்று   அறுதியிடவில்லை.  அரவிந்தனும் அவ்வாறே.   தொல்காப்பியத்தின் நூற்பாவிற்கு    அவர்  தரும் விளக்கத்தை  வைத்து    அவர்  சமணராக  இருக்கலாம்   என்று   மேம்போக்கான  ஒரு   யூகம்  அவ்வளவே.    தொல்காப்பியர்  விஷயத்தில்  திரு  வையாபுரிப்பிள்ளை   அவர்கள்    தெரிவித்த   அறுதிப்பாட்டை     திரு  பிள்ளை  அவர்களோ,  மற்றவரோ   இளம்பூரணர்   விஷயத்தில்    கொள்ளவில்லை.

 
--~--~---------~--~----~------------~-------~--~----~

N. Kannan

unread,
Oct 18, 2009, 9:28:28 AM10/18/09
to mint...@googlegroups.com
சில நேரங்களில் இம்மாதிரி ஆய்வுகளால் என்ன பயனென்று யோசிக்கிறேன். இந்திய
மெய்யியல் வானில் ஒரு பெரும் ஜோதி வரும் போது கூடவே எல்லோரும்
போகின்றனர். ஜோதி மறைந்த சில காலம், பழக்க தோஷத்தில் ஓடிய திசையில்
ஓடுகின்றனர். பிறகு இன்னொரு ஒளி. இன்னொரு பக்கத்தில். கூட்டம் உடனே அங்கே
திரும்பிவிடுகிறது. விட்டில் பூச்சி போன்ற வாழ்வில் ஒருவரின்
பூர்வாச்சிரமம் தெரிந்து கொண்டு என்ன ஆகப்போகிறது? (ஏதோ அலுப்பு!)

க.>

2009/10/18 srirangammohanarangan v <ranga...@gmail.com>:

srirangammohanarangan v

unread,
Oct 18, 2009, 9:30:30 AM10/18/09
to mint...@googlegroups.com
அதே   அதே   சபாபதே!

--~--~---------~--~----~------------~-------~--~----~

Innamburan Innamburan

unread,
Oct 18, 2009, 9:38:52 AM10/18/09
to mint...@googlegroups.com
ஒத்து ஊதுகிறேனே, கேட்கிறதா?

2009/10/18 srirangammohanarangan v <ranga...@gmail.com>



--
இன்னம்பூரான்

N. Ganesan

unread,
Oct 18, 2009, 9:47:33 AM10/18/09
to மின்தமிழ்

On Oct 18, 8:21 am, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:

> மு  அருணாசலமும்   இதுதான்   என்று   அறுதியிடவில்லை.  அரவிந்தனும் அவ்வாறே.

அவர்கள் வாக்கியங்களை அப்படியே இடலாமே.
புத்தகம் பார்த்தீர்களா?

நா. கணேசன்

N. Ganesan

unread,
Oct 18, 2009, 9:52:07 AM10/18/09
to மின்தமிழ்

On Oct 18, 8:21 am, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
>


> தொல்காப்பியர்  விஷயத்தில்  திரு  வையாபுரிப்பிள்ளை   அவர்கள்    தெரிவித்த
> அறுதிப்பாட்டை    

என்ன அறுதிப்பாடு தருகிறார்?

கட்டுரையை வெளியிட்டால் பல வாதங்களுக்கு பிரயோஜனமாயிருக்கும்.

திருமந்திரமும் ஆமாச்சு தருவார் என்று நினைக்கிறேன்.

நா. கணேசன்

srirangammohanarangan v

unread,
Oct 18, 2009, 9:55:23 AM10/18/09
to mint...@googlegroups.com
இப்ப  புரிந்தது  கணேசன்.   கண்ணன்   சொல்வது  சரிதான்.   இந்த   விளையாட்டிற்கு   எனக்கு  நேரமில்லை.  (ஏதோ  அலுப்புதான்)
   

 
On 10/18/09, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:

N. Ganesan

unread,
Oct 18, 2009, 9:59:36 AM10/18/09
to மின்தமிழ்

எனக்கும் நேரமில்லைதான். ரூட்ஸ் பக்கம் இன்னும் போகவே இல்லை.
அறிஞர்கள் எழுதுவதை பார்க்க. பலமடல்கள் இங்கும் படிப்பதில்லை,

அன்புடன்,
நா. கணேசன்


On Oct 18, 8:55 am, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:


> இப்ப  புரிந்தது  கணேசன்.   கண்ணன்   சொல்வது  சரிதான்.   இந்த
> விளையாட்டிற்கு   எனக்கு  நேரமில்லை.  (ஏதோ  அலுப்புதான்)
>

N. Ganesan

unread,
Nov 5, 2009, 1:34:40 AM11/5/09
to மின்தமிழ்

On Oct 18, 3:28 am, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
> ”மேவிய   சிறப்பின்   ஏனோர்   படிமைய  என்பது   நால்வகை  நிலத்தினும் மேவிய
> சிறப்பையுடைய  மக்களையல்லாத   தேவரது  படிமையவாகிய    பொருள்கள்   என்றவாறு.
>
> படிமை   என்பது   ப்ரதிமா   என்னும்  வடமொழித்  திரிபு.   அது   தேவர்க்கு
> ஒப்புமையாக   நிலத்தின்கண்   செய்து    அமைத்த   தேவர்மேல்    வந்தது.
> அவருடைய  பொருளாவன     பூசையும்   விழாவும்  முதலாயின.”
>


சமணர்களின் பக்தி, பூசை, விழா - தமிழ் இலக்கியங்களில் இருந்து
ஆராயும் கட்டுரை:
Bhakti in the Early Jain Tradition: Understanding Devotional Religion
in South Asia
John E. Cort
History of Religions, Vol. 42, No. 1 (Aug., 2002), pp. 59-86

இளம்பூரணர் மேல் அண்மைக் காலப் போலிச்செய்யுள் பற்றி:
http://groups.google.com/group/mintamil/msg/eac7f9c8ec5ea159

நா. கணேசன்

வி. சு.

unread,
Nov 5, 2009, 2:12:07 AM11/5/09
to மின்தமிழ்
On Oct 18, 9:23 am, amachu <ramada...@amachu.net> wrote:
...

> நல்லவை என்று நிலைநாட்டப்பட்டவை உலகின் அனைத்து மூளைகளிலும் பெரும்பாலும்
> ஒன்றாகவே இருந்து வந்துள்ளன.
>
> அதனால் தான் ஒரு கிறிஸ்துவருக்கு திருக்குறளை வாசிக்கும் போது அது
> போதிக்கும் நெறிகள் தனது நெறிகளோடு ஒத்துப் போவது கண்டு வள்ளுவருக்கும்
> கிறிஸ்துவிற்கும் தொடர்பேற்படுத்த துடிக்கிறது.
>
> அதாவது எல்லாவற்றையும் தன் கண்ணாடி கொண்டு பார்க்கும் மனோபாவம். இது எல்லா
> சமயத்தவர்க்கும் பொது.
...

தொல்காப்பியர் அல்லது திருவள்ளுவர் நினைத்திருந்தால் ஒரு சொல்லிலே தனது
மதத்தை / சமயத்தை சொல்லியிருக்கலாம். அவர்களெல்லாம், மதத்தை / சமயத்தை
எங்கே வைக்க வேண்டுமோ அங்கே வைத்தனர். மதிய உணவு என்ன சாப்பிட்டீர்கள்
என்று கேட்டால், மாங்காய் ஊறுகாய் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். அது
போலத்தான் திருவள்ளுவரும் தொல்காப்பியரும் எந்த சமயம் என்ற ஆய்வு. :-)

Banukumar Rajendran

unread,
Nov 5, 2009, 10:30:48 AM11/5/09
to mint...@googlegroups.com
என்னுடைய கட்டுரை. 2007ல் எழுதியது!
 
 
இரா.பா

2009/11/5 N. Ganesan <naa.g...@gmail.com>
Reply all
Reply to author
Forward
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
0 new messages