மறை ஓதல்

2,053 views
Skip to first unread message

Bala Sundara Vinayagam

unread,
Jul 5, 2015, 7:18:33 AM7/5/15
to mint...@googlegroups.com
வடமொழி வேதங்களை மறைகள் என்பார்கள்.  நான்கு வேதங்களை நான்மறை என்றார்கள்.  பழந்தமிழ் நூல்களில் சுட்டப்படும் நான்மறை வட்மொழி வேதங்கள் என்போரும் இல்லை தமிழகத்தில் அன்று நின்று நிலவிய நான்கு தமிழ் மறைகளத்தான் தொல்காப்பியர் குறிப்பிடுவார் என பிள்ளைகளும் பேசுவது காணலாம்.

எஃதெப்படியாகினும் வேதங்கள் மறை என்றால், அவற்றின் பொருட்களை நாமறிவது சுலபமன்று என்றெடுக்கவேண்டும் . ஏனெனில் அப்பொருட்கள் உள்ளுறை இறைச்சி. எனவே வேதங்களுக்கு வேதறிஞர்களும் ஞானிகளும் விளக்கவுரைகள் எழுதினார்கள். மறைபொருட்கள் எனவே அவரவருக்குத் தோன்றியபடி எழுத அவை பலசில மாற்றங்களைக் கொண்டவாயின‌.  தமிழகத்திலும் வடவிந்தியாவிலும் இவ்வுரைகாரர்கள் அக்காலத்திலிருந்தே தோன்றினர்.  ஆங்கிலேயரும் ஐரோப்பியரும்கூட உரைகள் எழுதி அசத்திவிட்டார்கள்.

வேதமறைபொருட்களை அவ்வுரைகளைப் படிக்கவியலாதோர் அறிந்து கொள்ள புராணக்கதைகளும் இதிகாசங்களும் எழுதப்பட்டன.  அவைகள் காலட்சேபங்களாக அன்று கூறப்பட்டன. 

தமிழில் ஆழ்வார்ப்பாசுரங்கள் வேதங்களின் மறைபொருட்களை விளக்கித் தமிழில் பாமரமக்களுக்குச் சொலலவே எழுந்தனவெனறும்; எனவே அவை திராவிட வேதமென்றும் அறுதியிட்டார்கள் ஆச்சாரியர்கள். அவர்களுள் பேரிடத்தில் வைக்கப்பட்டு போற்றப்படும் தூப்புல் தேசிகன், தான் வேதங்களில் படித்துத் தெளிய முடியாதவை ஆழ்வார்ப் பாசுரங்களில் படித்துத் தெளிந்ததாகச் சொல்லி விட்டார். //தெளியாத மறைநிலங்கள் தெரிந்தோமா//  

ஆக, மறை என்றால் மறைந்திருக்கும் பொருட்களைக் கொண்ட நூல். நேரடியாக புலனாகவதில்லை. பிற உதவியில்லாமல் முடியாது.

இப்படியாக யான் நினைத்துக்கொண்டிருக்கும் காலை,  //அமெரிக்க சுதந்திரதின வாழ்த்துகள். திருக்குறள் மறை ஓதல்// என்று மின் தமிழில் படித்தவுடன் அதிர்ந்து விட்டேன்.  அமெரிக்கவில் ஒரு நகரத்தில் தமிழர்கள் ஒன்றுகூடி திருக்குறள் என்ற தமிழ் மறையை ஓதினார்களாம். அப்படி ஓத நிகழ்ச்சி நிரல் வைத்து அழைத்திருக்கிறார்கள்.

திருக்குறள் மறையா? அஃதில் உட்பொருட்கள் மறைந்து கிடக்கின்றனவா/ பல்லுடைக்கும் பண்டிதர் தமிழில் எழுதப்பட்டதா?  குறட்பாக்களுக்கு உரையெழுதியோர் அவை மறைபொருட்கள்; யாம் அவற்றை படிக்காத - படித்தவருக்கும் புரியா - எனவே கற்ற, கல்லா இருமாந்தருக்கும் - கொண்டுசேர்போமென்று எழுதினரா?

தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப்படும்.  எப்பொருள் எவர்வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு; கற்க கசடற; கற்றபின் நிற்க அதற்குத் தக; அகரமுதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு - ஊடுதல் காமத்திற்கு இன்பம்; அதற்கின்பம் கூடி முயங்கப்பெறின் என்று பட்டவர்த்தனாம காமத்தைப்பற்றிச் சொன்ன இன்னபிற - இவையெல்லாம் மறைபொருட்களா?  அல்லது, இவை போக மற்றவைகள் மறைபொருட்களைக்கொண்டனவா?  Is Thirukkural all things to all men? or different thing to different men? ஆதிபகவன் என்று ஆரைச்சொல்கிறாரென்றுதான் சச்சரவே தவிற, அக்குறளில் மையப்பொருளான - All knowlede emanates from the Lord God - எனறு புரிவதில் ஏதேனும் வேறுபாடு  எழுந்ததுண்டா?  அக்காலத்தில் நிலவிய ஒரு சில சொற்களை குறட்பாக்கள் கொண்டிருக்க அவை இக்காலத்தில் வழக்கொழிய படிக்கப் புரியவதில்லை. அவற்றுக்கு அறிஞர்கள் விளக்கம் கொடுப்பார்கள். மற்றபடி, பயமுறுத்தும்படி ஒன்றுமில்லை குறளில்.

மேலும் திருக்குறள் -- தமிழ்மக்கள் - சாதி, இனம், ஊர், மதம் - போன்றவைகளுக்கப்பால் சென்று, தமிழால் ஒன்றானோம் யாம் தமிழர் என்று பேசி உணர்ந்து படிக்கத்தகுதியுள்ள‌ பொதுப்பனுவலா -- அல்லது -- பொது நீதிநூலா அல்லது ஹிந்துக்கள் மட்டும் ஓதி துதிக்கவா?

திருவள்ளுவரை பல மதமக்கள் தங்கள்தங்கள் மதத்தவரே என்று வாதமிட்டு மகிழ்ந்தாலும், ஆனால் அவரோ இன்றும் ஒரு பொதுஜன நாயகனாகத்தானே வைக்கப்பட்டு வாழ்த்தப்படுகிறார்.

தமிழனைப்பிரிக்கச்செய்யும் சூழ்ச்சி இஃதென்றால் மிகையில்லை/ திருக்குறளாம் அதை மறை ஓதுகிறாராம்!  It is stabbing at the heart of Tamil society !  புலம்பெயர்ந்து சென்று வாழும் தமிழரை விட இங்கு வாழும் தமிழர் பெட்டர். எவ்வளவுதான் அடிச்சிக்கிட்டாலும் திருவள்ளுவரை இசுலாமியரும் கிருத்துவரும் ஹிந்துக்களும் - அட நம் கேலிக்குள்ளாகும் பகுத்தறிவாளரும் - பொது நாயகனாக ஏற்றுக்கொண்டு வாழ்கிறார்கள். THANK GOD FOR SMALL MERCIES.  

Seshadri Sridharan

unread,
Jul 5, 2015, 8:40:25 AM7/5/15
to mintamil
சைமினியின் காலம் கி.பி. 7 ஆம் நூற்றாண்டு. இவரே பூர்வ மீமாம்சம் என்ற நூலை இயற்றினார். இவரது ஆசான் வாதராயண வியாசர் உத்தர மீமாம்ச நூலை இயற்றினார். இந்த மீமாம்ச கும்பல் தான் உபநிடதங்களை இயற்றின.  சைமினி தான் சாம வேதத்தை தொகுத்தார். அதற்கு முன் வேதங்கள் 3 தான் இருந்தன.

The Jaiminiya Upanishad Brahmana (JUB) (Sanskritजैमिनीय उपनिषद्-ब्राह्मणJaiminīya Upaniṣad Brāhmaņa) or the Talavakara Upanishad Brahmana (Sanskritतलवकार उपनिषद्-ब्राह्मणTalavakāra Upaniṣad Brāhmaņa) is a Vedic text associated with theJaiminiya or the Talavakara shakha of the Samaveda. It is considered as an Aranyaka


தொல்காப்பியம் உரைக்கும் நான்மறை ஏதென்று ஆராயப்படவேண்டும்.

நம்பன் 

Suba.T.

unread,
Jul 5, 2015, 4:20:53 PM7/5/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-07-05 13:18 GMT+02:00 Bala Sundara Vinayagam <balasundar...@gmail.com>:
வடமொழி வேதங்களை மறைகள் என்பார்கள்.  நான்கு வேதங்களை நான்மறை என்றார்கள்.  பழந்தமிழ் நூல்களில் சுட்டப்படும் நான்மறை வட்மொழி வேதங்கள் என்போரும் இல்லை தமிழகத்தில் அன்று நின்று நிலவிய நான்கு தமிழ் மறைகளத்தான் தொல்காப்பியர் குறிப்பிடுவார் என பிள்ளைகளும் பேசுவது காணலாம்.

எஃதெப்படியாகினும் வேதங்கள் மறை என்றால், அவற்றின் பொருட்களை நாமறிவது சுலபமன்று என்றெடுக்கவேண்டும் . ஏனெனில் அப்பொருட்கள் உள்ளுறை இறைச்சி. எனவே வேதங்களுக்கு வேதறிஞர்களும் ஞானிகளும் விளக்கவுரைகள் எழுதினார்கள். மறைபொருட்கள் எனவே அவரவருக்குத் தோன்றியபடி எழுத அவை பலசில மாற்றங்களைக் கொண்டவாயின‌.  தமிழகத்திலும் வடவிந்தியாவிலும் இவ்வுரைகாரர்கள் அக்காலத்திலிருந்தே தோன்றினர்.  ஆங்கிலேயரும் ஐரோப்பியரும்கூட உரைகள் எழுதி அசத்திவிட்டார்கள்.

வேதமறைபொருட்களை அவ்வுரைகளைப் படிக்கவியலாதோர் அறிந்து கொள்ள புராணக்கதைகளும் இதிகாசங்களும் எழுதப்பட்டன.  அவைகள் காலட்சேபங்களாக அன்று கூறப்பட்டன. 

தமிழில் ஆழ்வார்ப்பாசுரங்கள் வேதங்களின் மறைபொருட்களை விளக்கித் தமிழில் பாமரமக்களுக்குச் சொலலவே எழுந்தனவெனறும்; எனவே அவை திராவிட வேதமென்றும் அறுதியிட்டார்கள் ஆச்சாரியர்கள். அவர்களுள் பேரிடத்தில் வைக்கப்பட்டு போற்றப்படும் தூப்புல் தேசிகன், தான் வேதங்களில் படித்துத் தெளிய முடியாதவை ஆழ்வார்ப் பாசுரங்களில் படித்துத் தெளிந்ததாகச் சொல்லி விட்டார். //தெளியாத மறைநிலங்கள் தெரிந்தோமா//  

ஆக, மறை என்றால் மறைந்திருக்கும் பொருட்களைக் கொண்ட நூல். நேரடியாக புலனாகவதில்லை. பிற உதவியில்லாமல் முடியாது.

இப்படியாக யான் நினைத்துக்கொண்டிருக்கும் காலை,  //அமெரிக்க சுதந்திரதின வாழ்த்துகள். திருக்குறள் மறை ஓதல்// என்று மின் தமிழில் படித்தவுடன் அதிர்ந்து விட்டேன்.  அமெரிக்கவில் ஒரு நகரத்தில் தமிழர்கள் ஒன்றுகூடி திருக்குறள் என்ற தமிழ் மறையை ஓதினார்களாம். அப்படி ஓத நிகழ்ச்சி நிரல் வைத்து அழைத்திருக்கிறார்கள்.

திருக்குறள் மறையா? அஃதில் உட்பொருட்கள் மறைந்து கிடக்கின்றனவா/ பல்லுடைக்கும் பண்டிதர் தமிழில் எழுதப்பட்டதா?  குறட்பாக்களுக்கு உரையெழுதியோர் அவை மறைபொருட்கள்; யாம் அவற்றை படிக்காத - படித்தவருக்கும் புரியா - எனவே கற்ற, கல்லா இருமாந்தருக்கும் - கொண்டுசேர்போமென்று எழுதினரா?
திரு.பால சுந்தர விநாயகம்,​

​தங்களது வருத்தம் திருக்குறளை இந்த அமெரிக்க மக்கள் மறை என்று குறிப்பிட்டு விட்டார்கள் என்பதுவா அல்லது அமெரிக்க சுதந்திர தினத்தில் இவர்கள் ஓதினார்கள் என்பதுவா?
 


மேலும் திருக்குறள் -- தமிழ்மக்கள் - சாதி, இனம், ஊர், மதம் - போன்றவைகளுக்கப்பால் சென்று, தமிழால் ஒன்றானோம் யாம் தமிழர் என்று பேசி உணர்ந்து படிக்கத்தகுதியுள்ள‌ பொதுப்பனுவலா -- அல்லது -- பொது நீதிநூலா அல்லது ஹிந்துக்கள் மட்டும் ஓதி துதிக்கவா?

திருவள்ளுவரை பல மதமக்கள் தங்கள்தங்கள் மதத்தவரே என்று வாதமிட்டு மகிழ்ந்தாலும், ஆனால் அவரோ இன்றும் ஒரு பொதுஜன நாயகனாகத்தானே வைக்கப்பட்டு வாழ்த்தப்படுகிறார்.

தமிழனைப்பிரிக்கச்செய்யும் சூழ்ச்சி இஃதென்றால் மிகையில்லை/ திருக்குறளாம் அதை மறை ஓதுகிறாராம்!  It is stabbing at the heart of Tamil society !  புலம்பெயர்ந்து சென்று வாழும் தமிழரை விட இங்கு வாழும் தமிழர் பெட்டர். எவ்வளவுதான் அடிச்சிக்கிட்டாலும் திருவள்ளுவரை இசுலாமியரும் கிருத்துவரும் ஹிந்துக்களும் - அட நம் கேலிக்குள்ளாகும் பகுத்தறிவாளரும் - பொது நாயகனாக ஏற்றுக்கொண்டு வாழ்கிறார்கள். THANK GOD FOR SMALL MERCIES.  

​உண்மையில் தாங்கள் வருந்த இங்கு ஒரு பிரிவினை வாதமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. காரணம் அயலகத்தில் வாழும் தமிழர்களின் நிலை என்பது வேறு. அவர்கள் தமிழ் இலக்கியங்கள் நூல்கள் ஆகியவற்றை தம் சந்ததியினருக்கு கொண்டு செல்ல செய்யும் முயற்சிகள் சற்று வித்தியாசமாக அச்சூழலுக்கு ஏற்பவே இருக்கும். இங்கு திருக்குறள் மறை ஓதுதல் என்பது அனைவருமா சேர்ந்து திருக்குறளை வாசித்தல் என்பது மட்டுமே. 
நிகழ்ச்சியில் என்ன உண்மையில் நடந்ததென்று எனக்கு மேலும் விபரம் தெரிந்தால் தாங்கள் உண்மையில் வருந்துவதற்கான காரணம் பற்றி மேலும் பேசலாம்.

சுபா

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
Suba.T.
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

Nagarajan Vadivel

unread,
Jul 5, 2015, 8:10:45 PM7/5/15
to மின்தமிழ்
வேதங்கள் தொகுக்கப்பட்ட வளங்கள்.  நாலாயிர திவ்யப்பிரபந்தம் வடபுல வேதங்களின் தொகுப்போ மொழி மாற்றமோ அல்ல.  அவை இரண்டு இதிகாசங்கள் புராண அடிப்படையில் திருமாலை அவதாரங்களாகக் கருதி படைக்கப்பட்டவை
நம்மாழ்வாரின் நால்வகைப் பிரபந்தங்கள் நான் மறையாகவும் திருமங்கையாழ்வாரின் ஆறு வகையான படைப்புகள் வேதாங்கங்கள் என்றும் அமைக்கப்பட்டதாக வைணவம்பற்றிய ஆய்வுக்குறிப்புகள் தெரிவிக்கின்றன
இணையமுனி


2015-07-05 16:48 GMT+05:30 Bala Sundara Vinayagam <balasundar...@gmail.com>:

--

ponmudivadivel Ponmudi

unread,
Jul 5, 2015, 8:39:45 PM7/5/15
to mint...@googlegroups.com
ஐயா,

திருக்குறளுக்கு 'உலகப்பொதுமறை' என்னும் ஒரு பெயர் உண்டு. அன்றோ? அதன்படி அவர்கள் அதை மறையெனச்சொன்னதில் குற்றமேதுமில்லையே!

மேலும் 'மறை' என்பது 'மறைபொருள்' என்றபொருளைக்கொண்டதுதானாவென்பதை அறிஞர்கள் இன்னும் ஆய்ந்து அதுபற்றி தெளிவுபடுத்தினால் நன்றாயிருக்கும்.

2015-07-05 16:48 GMT+05:30 Bala Sundara Vinayagam <balasundar...@gmail.com>:

--

Oru Arizonan

unread,
Jul 5, 2015, 8:46:45 PM7/5/15
to mintamil
2015-07-05 17:39 GMT-07:00 ponmudivadivel Ponmudi <dr.pon...@gmail.com>:
//'மறை' என்பது '' என்றபொருளைக்கொண்டதுதானாவென்பதை அறிஞர்கள் இன்னும் ஆய்ந்து அதுபற்றி தெளிவுபடுத்தினால் நன்றாயிருக்கும்.//

அன்பார்ந்த பொன்முடி ஐயா,

நான் அறிஞனல்லேன்;  ஓரறிவிலியே ஆவேன்.

"அணுவைத் துளைத்தேழ் கடலைப்புகுத்தி குறுகத்தரித்த குறள் ." என்று ஔவை அறிவித்துச்சென்றிருக்கிறாள்.
அப்படியானால்,ஒரு குறளினுள்ளே எத்துணை   பொருள் புதைந்திருக்கவேண்டும்?  இதனையே ஆன்றோர்/அறிஞர் "மறை"யெனக் குறிப்பிட்டுள்ளர்களெனக் கொள்வதில் தவறிருக்கிறதா?

அன்புடன்,
ஒரு அரிசோனன் 

Banukumar Rajendran

unread,
Jul 6, 2015, 1:41:37 AM7/6/15
to mint...@googlegroups.com
2015-07-05 16:48 GMT+05:30 Bala Sundara Vinayagam <balasundar...@gmail.com>:
வடமொழி வேதங்களை மறைகள் என்பார்கள்.  நான்கு வேதங்களை நான்மறை என்றார்கள்.  பழந்தமிழ் நூல்களில் சுட்டப்படும் நான்மறை வட்மொழி வேதங்கள் என்போரும் இல்லை தமிழகத்தில் அன்று நின்று நிலவிய நான்கு தமிழ் மறைகளத்தான் தொல்காப்பியர் குறிப்பிடுவார் என பிள்ளைகளும் பேசுவது காணலாம்.

எஃதெப்படியாகினும் வேதங்கள் மறை என்றால், அவற்றின் பொருட்களை நாமறிவது சுலபமன்று என்றெடுக்கவேண்டும் . ஏனெனில் அப்பொருட்கள் உள்ளுறை இறைச்சி. எனவே வேதங்களுக்கு வேதறிஞர்களும் ஞானிகளும் விளக்கவுரைகள் எழுதினார்கள். மறைபொருட்கள் எனவே அவரவருக்குத் தோன்றியபடி எழுத அவை பலசில மாற்றங்களைக் கொண்டவாயின‌.  தமிழகத்திலும் வடவிந்தியாவிலும் இவ்வுரைகாரர்கள் அக்காலத்திலிருந்தே தோன்றினர்.  ஆங்கிலேயரும் ஐரோப்பியரும்கூட உரைகள் எழுதி அசத்திவிட்டார்கள்.

வேதமறைபொருட்களை அவ்வுரைகளைப் படிக்கவியலாதோர் அறிந்து கொள்ள புராணக்கதைகளும் இதிகாசங்களும் எழுதப்பட்டன.  அவைகள் காலட்சேபங்களாக அன்று கூறப்பட்டன. 

வேதத்தில் இருக்கும் சாரத்திற்கும், பின்னாளில் எழுதப்பட்ட புராணக்கதைகளும் எந்த சம்பந்தமும் இருப்பதாகத் தெரியவில்லை. வேதத்தில் முழுமுதற் கொள்கையில்லை. இந்திரனும், அவனைச் சார்ந்தவர்களும்தான் (அக்னி, வருணன்  போன்றோர்கள்) பெறும்பான்மையாகப் பாடப்பட்டவர்கள். சிறு தெய்வங்களான இருத்திரனும், விஷ்ணுவையும் பாடப்பட்ட பாடல்கள் சிலவையே. உண்மை நிலை இவ்வாறிருக்க.....

பின்னாளில் எழுதப்பட்ட புராணக்கதைகளில், விஷ்ணுவையும், சிவனாரையும் முழுமுதற் தெய்வங்களாக முன்னிருத்துவதுடன் இல்லாமல், இந்திரனை இழித்து, முதன்நிலையிலிருந்து, கீழ்நிலைக்குக் கொண்டும் வரப்படுகிறது. இதுவும் இவ்வாறு இருக்க.....

வேதமறைபொருட்களை அவ்வுரைகளைப் படிக்கவியலாதோர் அறிந்துக் கொள்ள புராணக்கதைகளும் இதிகாசங்களும் எழுதப்பட்டன என்று சொல்லி செல்வது யாங்ஙனம்??

 

தமிழில் ஆழ்வார்ப்பாசுரங்கள் வேதங்களின் மறைபொருட்களை விளக்கித் தமிழில் பாமரமக்களுக்குச் சொலலவே எழுந்தனவெனறும்; எனவே அவை திராவிட வேதமென்றும் அறுதியிட்டார்கள் ஆச்சாரியர்கள்.


இதுவும் தவறான கருத்து. வைஷ்ணவம் (சத்தியார்த்த பிரகாசம்) பின்னாளில் தோன்றிய ஒரு கருத்துரு. விஷ்ணுவை முழுமுதற் தெய்வமாகக் கொண்டு, மற்ற தெய்வங்களை அவருக்கு அடங்கியனவராகக் கொண்டு எழுந்த ஒரு நெறி. வேதத்தின் மறைபொருட்களை விளங்கித் தமிழில் பாமரமக்களுக்குச் சொல்லவே எழுந்தனவென்று எவ்வாறு கூறுதல் முடியும்??

கடைச்சிறு தெய்வமான விஷ்ணு, பெருந்தெய்வமாக மாறியப்பின்னர் எழுந்ததே தற்போதுள்ள வைஷ்ணவம். (பெயர்க்கூட தமிழில் இல்லை. இதில் தமிழர்களின் ஆதிமதம் என்ற பிரசாரம் வேறு! :-))
வைணவம் ஆங்காங்கு வேதத்தைத் தொட்டுச் செல்கிறது என்று வேண்டுமானால் கூறிக் கொள்ளலாம்.



இரா.பா.

 
அவர்களுள் பேரிடத்தில் வைக்கப்பட்டு போற்றப்படும் தூப்புல் தேசிகன், தான் வேதங்களில் படித்துத் தெளிய முடியாதவை ஆழ்வார்ப் பாசுரங்களில் படித்துத் தெளிந்ததாகச் சொல்லி விட்டார். //தெளியாத மறைநிலங்கள் தெரிந்தோமா//   

ஆக, மறை என்றால் மறைந்திருக்கும் பொருட்களைக் கொண்ட நூல். நேரடியாக புலனாகவதில்லை. பிற உதவியில்லாமல் முடியாது.

இப்படியாக யான் நினைத்துக்கொண்டிருக்கும் காலை,  //அமெரிக்க சுதந்திரதின வாழ்த்துகள். திருக்குறள் மறை ஓதல்// என்று மின் தமிழில் படித்தவுடன் அதிர்ந்து விட்டேன்.  அமெரிக்கவில் ஒரு நகரத்தில் தமிழர்கள் ஒன்றுகூடி திருக்குறள் என்ற தமிழ் மறையை ஓதினார்களாம். அப்படி ஓத நிகழ்ச்சி நிரல் வைத்து அழைத்திருக்கிறார்கள்.

திருக்குறள் மறையா? அஃதில் உட்பொருட்கள் மறைந்து கிடக்கின்றனவா/ பல்லுடைக்கும் பண்டிதர் தமிழில் எழுதப்பட்டதா?  குறட்பாக்களுக்கு உரையெழுதியோர் அவை மறைபொருட்கள்; யாம் அவற்றை படிக்காத - படித்தவருக்கும் புரியா - எனவே கற்ற, கல்லா இருமாந்தருக்கும் - கொண்டுசேர்போமென்று எழுதினரா?

தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப்படும்.  எப்பொருள் எவர்வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு; கற்க கசடற; கற்றபின் நிற்க அதற்குத் தக; அகரமுதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு - ஊடுதல் காமத்திற்கு இன்பம்; அதற்கின்பம் கூடி முயங்கப்பெறின் என்று பட்டவர்த்தனாம காமத்தைப்பற்றிச் சொன்ன இன்னபிற - இவையெல்லாம் மறைபொருட்களா?  அல்லது, இவை போக மற்றவைகள் மறைபொருட்களைக்கொண்டனவா?  Is Thirukkural all things to all men? or different thing to different men? ஆதிபகவன் என்று ஆரைச்சொல்கிறாரென்றுதான் சச்சரவே தவிற, அக்குறளில் மையப்பொருளான - All knowlede emanates from the Lord God - எனறு புரிவதில் ஏதேனும் வேறுபாடு  எழுந்ததுண்டா?  அக்காலத்தில் நிலவிய ஒரு சில சொற்களை குறட்பாக்கள் கொண்டிருக்க அவை இக்காலத்தில் வழக்கொழிய படிக்கப் புரியவதில்லை. அவற்றுக்கு அறிஞர்கள் விளக்கம் கொடுப்பார்கள். மற்றபடி, பயமுறுத்தும்படி ஒன்றுமில்லை குறளில்.

மேலும் திருக்குறள் -- தமிழ்மக்கள் - சாதி, இனம், ஊர், மதம் - போன்றவைகளுக்கப்பால் சென்று, தமிழால் ஒன்றானோம் யாம் தமிழர் என்று பேசி உணர்ந்து படிக்கத்தகுதியுள்ள‌ பொதுப்பனுவலா -- அல்லது -- பொது நீதிநூலா அல்லது ஹிந்துக்கள் மட்டும் ஓதி துதிக்கவா?

திருவள்ளுவரை பல மதமக்கள் தங்கள்தங்கள் மதத்தவரே என்று வாதமிட்டு மகிழ்ந்தாலும், ஆனால் அவரோ இன்றும் ஒரு பொதுஜன நாயகனாகத்தானே வைக்கப்பட்டு வாழ்த்தப்படுகிறார்.

தமிழனைப்பிரிக்கச்செய்யும் சூழ்ச்சி இஃதென்றால் மிகையில்லை/ திருக்குறளாம் அதை மறை ஓதுகிறாராம்!  It is stabbing at the heart of Tamil society !  புலம்பெயர்ந்து சென்று வாழும் தமிழரை விட இங்கு வாழும் தமிழர் பெட்டர். எவ்வளவுதான் அடிச்சிக்கிட்டாலும் திருவள்ளுவரை இசுலாமியரும் கிருத்துவரும் ஹிந்துக்களும் - அட நம் கேலிக்குள்ளாகும் பகுத்தறிவாளரும் - பொது நாயகனாக ஏற்றுக்கொண்டு வாழ்கிறார்கள். THANK GOD FOR SMALL MERCIES.  

--

Banukumar Rajendran

unread,
Jul 6, 2015, 1:47:06 AM7/6/15
to mint...@googlegroups.com
2015-07-05 18:10 GMT+05:30 Seshadri Sridharan <ssesh...@gmail.com>:
சைமினியின் காலம் கி.பி. 7 ஆம் நூற்றாண்டு. இவரே பூர்வ மீமாம்சம் என்ற நூலை இயற்றினார். இவரது ஆசான் வாதராயண வியாசர் உத்தர மீமாம்ச நூலை இயற்றினார். இந்த மீமாம்ச கும்பல் தான் உபநிடதங்களை இயற்றின.  சைமினி தான் சாம வேதத்தை தொகுத்தார். அதற்கு முன் வேதங்கள் 3 தான் இருந்தன.

பாயிண்ட் மேட் நம்பன்! வேதங்கள் எக்காலத்திலும் மூன்றுதான். தமிழில் வரும் நான்மறை வைதிக வேதத்தைக் குறிக்காது. அப்படித்தான் குறித்தென்றால், அதில் ஒரு பிணக்குண்டு.

சங்கப் பாடல்களை மிக பிறப்பட்டனவென கொள்ள நேரிடும். வைதிக வேதங்கள் நான்காக மாறியது பின்னாளில், நிச்சயம் கி.பி. ஆறாம் நூற்றாண்டிற்கு முன் இருந்திருக்கமுடியாது.


இரா.பா





 

The Jaiminiya Upanishad Brahmana (JUB) (Sanskritजैमिनीय उपनिषद्-ब्राह्मणJaiminīya Upaniṣad Brāhmaņa) or the Talavakara Upanishad Brahmana (Sanskritतलवकार उपनिषद्-ब्राह्मणTalavakāra Upaniṣad Brāhmaņa) is a Vedic text associated with theJaiminiya or the Talavakara shakha of the Samaveda. It is considered as an Aranyaka


தொல்காப்பியம் உரைக்கும் நான்மறை ஏதென்று ஆராயப்படவேண்டும்.

நம்பன் 

2015-07-05 16:48 GMT+05:30 Bala Sundara Vinayagam <balasundar...@gmail.com>:
வடமொழி வேதங்களை மறைகள் என்பார்கள்.  நான்கு வேதங்களை நான்மறை என்றார்கள்.  பழந்தமிழ் நூல்களில் சுட்டப்படும் நான்மறை வட்மொழி வேதங்கள் என்போரும் இல்லை தமிழகத்தில் அன்று நின்று நிலவிய நான்கு தமிழ் மறைகளத்தான் தொல்காப்பியர் குறிப்பிடுவார் என பிள்ளைகளும் பேசுவது காணலாம்.

எஃதெப்படியாகினும் வேதங்கள் மறை என்றால், அவற்றின் பொருட்களை நாமறிவது சுலபமன்று என்றெடுக்கவேண்டும் . ஏனெனில் அப்பொருட்கள் உள்ளுறை இறைச்சி. எனவே வேதங்களுக்கு வேதறிஞர்களும் ஞானிகளும் விளக்கவுரைகள் எழுதினார்கள். மறைபொருட்கள் எனவே அவரவருக்குத் தோன்றியபடி எழுத அவை பலசில மாற்றங்களைக் கொண்டவாயின‌.  தமிழகத்திலும் வடவிந்தியாவிலும் இவ்வுரைகாரர்கள் அக்காலத்திலிருந்தே தோன்றினர்.  ஆங்கிலேயரும் ஐரோப்பியரும்கூட உரைகள் எழுதி அசத்திவிட்டார்கள்.

வேதமறைபொருட்களை அவ்வுரைகளைப் படிக்கவியலாதோர் அறிந்து கொள்ள புராணக்கதைகளும் இதிகாசங்களும் எழுதப்பட்டன.  அவைகள் காலட்சேபங்களாக அன்று கூறப்பட்டன. 

தமிழில் ஆழ்வார்ப்பாசுரங்கள் வேதங்களின் மறைபொருட்களை விளக்கித் தமிழில் பாமரமக்களுக்குச் சொலலவே எழுந்தனவெனறும்; எனவே அவை திராவிட வேதமென்றும் அறுதியிட்டார்கள் ஆச்சாரியர்கள். அவர்களுள் பேரிடத்தில் வைக்கப்பட்டு போற்றப்படும் தூப்புல் தேசிகன், தான் வேதங்களில் படித்துத் தெளிய முடியாதவை ஆழ்வார்ப் பாசுரங்களில் படித்துத் தெளிந்ததாகச் சொல்லி விட்டார். //தெளியாத மறைநிலங்கள் தெரிந்தோமா//  

ஆக, மறை என்றால் மறைந்திருக்கும் பொருட்களைக் கொண்ட நூல். நேரடியாக புலனாகவதில்லை. பிற உதவியில்லாமல் முடியாது.


Oru Arizonan

unread,
Jul 6, 2015, 3:36:36 AM7/6/15
to mintamil
2015-07-05 22:47 GMT-07:00 Banukumar Rajendran <banuk...@gmail.com>:
2015-07-05 18:10 GMT+05:30 Seshadri Sridharan <ssesh...@gmail.com>:
சைமினியின் காலம் கி.பி. 7 ஆம் நூற்றாண்டு. இவரே பூர்வ மீமாம்சம் என்ற நூலை இயற்றினார். இவரது ஆசான் வாதராயண வியாசர் உத்தர மீமாம்ச நூலை இயற்றினார். இந்த மீமாம்ச கும்பல் தான் உபநிடதங்களை இயற்றின.  சைமினி தான் சாம வேதத்தை தொகுத்தார். அதற்கு முன் வேதங்கள் 3 தான் இருந்தன.

பாயிண்ட் மேட் நம்பன்! வேதங்கள் எக்காலத்திலும் மூன்றுதான். தமிழில் வரும் நான்மறை வைதிக வேதத்தைக் குறிக்காது. அப்படித்தான் குறித்தென்றால், அதில் ஒரு பிணக்குண்டு. //

The Atharvaveda (Sanskrit: अथर्ववेदः, atharvaveda, a tatpurusha compound of Atharvan, an ancient Rishi, and veda, meaning "knowledge") is a sacred text of Hinduism and one of the four Vedas, often called the "fourth Veda". The bulk of the text dates from c. 1500 BC[1] - 1000 BC.

According to the tradition, the Atharvaveda was mainly composed by two groups of rishis known as the Atharvanasand the Angirasa, hence its oldest name is Ātharvāṅgirasa. In the Late Vedic Gopatha Brahmana, it is attributed to the Bhrigu and Angirasa. Additionally, tradition ascribes parts to other rishis, such as Kauśika, Vasiṣṭha andKaśyapa. There are two surviving recensions (śākhās), known as Śaunakīya (AVS) and Paippalāda (AVP). 

The Sama VedaSamveda, or Samaveda ( sāmaveda, from sāman "melody" and veda "knowledge"), is the third of the four Vedas, the ancient core Hindu scriptures, along with the Rig VedaYajur Veda, and Atharva Veda. It ranks next in sanctity and liturgical importance to the Rigveda. It consists of a collection (samhita) of hymns, portions of hymns, and detached verses, all but 75 taken from the Sakala Sakha of the Rigveda, the other 75 belong to the Bashkala Sakha, to be sung, using specifically indicated melodies called Samagana, by Udgatar priests at sacrifices in which the juice of the Soma plant, clarified and mixed with milk and other ingredients, is offered in libation to various deities.

While its earliest parts are believed to date from as early as 1700 BCE (the Rigvedic period), the existing compilation dates from the post-Rigvedic Mantra period of Vedic Sanskrit, c. 1200 or  1000 BCE,in the early Kuru Kingdom, roughly contemporary with the Atharvaveda, the Yajurveda, and the Rigvedic Khilani.[1][2][3]

ஆக, கடைசியில் வந்ததாகச் சொல்லப்படும் அதர்வ வேதமே 1000 BCE என்று சொல்லப்படுகிறது.  எனவே, நான்மறைகள் ரிக், யஜுர், சாம, அதர்வ வேதங்கள்தாம்.  பிணக்கிருந்தால், இருக்கட்டுமே!

ஜைமினியின் பூர்வ மீமாம்ச சூத்திரங்கள் 300 BCE என்று சொல்லப்படுகிறது.அதற்கு முன்பே வேதங்கள் நான்கும் வேதவியாசரால் தொகுக்கப்பட்டுவிட்டன.  வேண்டும் என்றே ஜைமினியின் காலத்தை ஏழாம் நூற்றாண்டு என்பது ஆதாரமற்றது.

https://en.wikipedia.org/wiki/Jaimini

Purva Mimamsa Sutras[edit]

Jaimini is most known for his great treatise Purva Mimamsa Sutras (“First Reflection”), or Karma-mimamsa (“Study of Ritual Action”), a system that investigates the nature of Vedic injunctions. The text founded the Purva-Mimamsa school of Ancient Indian philosophy, one of the six Darsanas or schools of Ancient Indian philosophy.

Dated to ca. the 3rd century BC, the text contains about 3,000 sutras and is the foundational text of the Mimamsaschool. The text aims at an exegesis of the Vedas with regard to ritual practice (karma) and religious duty (dharma), commenting on the early Upanishads. Jaimini's Mimamsa is a ritualist counter-movement to the mysticist Vedantacurrents of his day. He was commented upon by Śābara in the early centuries CE.[1]

Bala Sundara Vinayagam

unread,
Jul 6, 2015, 3:37:49 AM7/6/15
to mint...@googlegroups.com


On Monday, 6 July 2015 01:50:53 UTC+5:30, Suba.T. wrote:
2015-07-05 13:18 GMT+02:00 Bala Sundara Vinayagam <balasundar...@gmail.com>:
வடமொழி வேதங்களை மறைகள் என்பார்கள்.  நான்கு வேதங்களை நான்மறை என்றார்கள்.  பழந்தமிழ் நூல்களில் சுட்டப்படும் நான்மறை வட்மொழி வேதங்கள் என்போரும் இல்லை தமிழகத்தில் அன்று நின்று நிலவிய நான்கு தமிழ் மறைகளத்தான் தொல்காப்பியர் குறிப்பிடுவார் என பிள்ளைகளும் பேசுவது காணலாம்.

எஃதெப்படியாகினும் வேதங்கள் மறை என்றால், அவற்றின் பொருட்களை நாமறிவது சுலபமன்று என்றெடுக்கவேண்டும் . ஏனெனில் அப்பொருட்கள் உள்ளுறை இறைச்சி. எனவே வேதங்களுக்கு வேதறிஞர்களும் ஞானிகளும் விளக்கவுரைகள் எழுதினார்கள். மறைபொருட்கள் எனவே அவரவருக்குத் தோன்றியபடி எழுத அவை பலசில மாற்றங்களைக் கொண்டவாயின‌.  தமிழகத்திலும் வடவிந்தியாவிலும் இவ்வுரைகாரர்கள் அக்காலத்திலிருந்தே தோன்றினர்.  ஆங்கிலேயரும் ஐரோப்பியரும்கூட உரைகள் எழுதி அசத்திவிட்டார்கள்.

வேதமறைபொருட்களை அவ்வுரைகளைப் படிக்கவியலாதோர் அறிந்து கொள்ள புராணக்கதைகளும் இதிகாசங்களும் எழுதப்பட்டன.  அவைகள் காலட்சேபங்களாக அன்று கூறப்பட்டன. 

தமிழில் ஆழ்வார்ப்பாசுரங்கள் வேதங்களின் மறைபொருட்களை விளக்கித் தமிழில் பாமரமக்களுக்குச் சொலலவே எழுந்தனவெனறும்; எனவே அவை திராவிட வேதமென்றும் அறுதியிட்டார்கள் ஆச்சாரியர்கள். அவர்களுள் பேரிடத்தில் வைக்கப்பட்டு போற்றப்படும் தூப்புல் தேசிகன், தான் வேதங்களில் படித்துத் தெளிய முடியாதவை ஆழ்வார்ப் பாசுரங்களில் படித்துத் தெளிந்ததாகச் சொல்லி விட்டார். //தெளியாத மறைநிலங்கள் தெரிந்தோமா//  

ஆக, மறை என்றால் மறைந்திருக்கும் பொருட்களைக் கொண்ட நூல். நேரடியாக புலனாகவதில்லை. பிற உதவியில்லாமல் முடியாது.


​தங்களது வருத்தம் திருக்குறளை இந்த அமெரிக்க மக்கள் மறை என்று குறிப்பிட்டு விட்டார்கள் என்பதுவா அல்லது அமெரிக்க சுதந்திர தினத்தில் இவர்கள் ஓதினார்கள் என்பதுவா?
 
​உண்மையில் தாங்கள் வருந்த இங்கு ஒரு பிரிவினை வாதமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. காரணம் அயலகத்தில் வாழும் தமிழர்களின் நிலை என்பது வேறு. அவர்கள் தமிழ் இலக்கியங்கள் நூல்கள் ஆகியவற்றை தம் சந்ததியினருக்கு கொண்டு செல்ல செய்யும் முயற்சிகள் சற்று வித்தியாசமாக அச்சூழலுக்கு ஏற்பவே இருக்கும். இங்கு திருக்குறள் மறை ஓதுதல் என்பது அனைவருமா சேர்ந்து திருக்குறளை வாசித்தல் என்பது மட்டுமே. 
நிகழ்ச்சியில் என்ன உண்மையில் நடந்ததென்று எனக்கு மேலும் விபரம் தெரிந்தால் தாங்கள் உண்மையில் வருந்துவதற்கான காரணம் பற்றி மேலும் பேசலாம்.

சுபா

Reply:
 
 
எனது ஆதங்கம் என்றில்லை. தமழகத்தில் இப்படி சொல்ல அதைத் தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ள பள்ளிச்சிறார்களுக்கு அப்படியே வள்ளுவர் என்று சொல்ல தங்கள்தங்கள் மதங்களைத்தாண்டி வள்ளுவரை ஒரு சார்புநிலையில்லா எல்லாருக்கும் பொதுவான ஆசிரியராக எடுத்துக்கொள்ள, குமரியில் நெடிதுயர்ந்த சிலையொன்றை எழுப்பி எங்கள் ஐயன் இவர் தமிழர் அனைவருக்குமானவர் என மற்றவருக்கு எடுத்துக்காட்டி பெருமையடைய,  

ஆனால் அங்கே அவரின் நூலை மறை ஓதல் என்று சொல்லி, பிரபந்தம் ஓதல், வேதம் ஓதல், தேவாரமுற்றோதல் என்று ஒரு மதத்தின் சொல்லாடலை வைத்து தொடங்கினால் எங்கே போய்விடும்? என்பதுதான் என் கேள்வி. 

ஒரு பக்கம் இ.பா போன்றோர் வள்ளுவர் சமணர் என்று சொல்லட்டும். வைணவர்கள் பெருமாள் வழிபாட்டாளர் எனட்டும். சைவர்கள் சிவன்டியார் எனடட்டும். திருச்சி பிஷப் கணேச அய்யரிடம் பணம் கொடுத்து வள்ளுவர் கிருத்துவர் என்று சொல்லவைக்கட்டும்; (He took the money but couldn't prove it, so he returned it to the Bishop - I heard about in BBC Tamilosai) இசுலாமியர் ஏக இறைவனையே வள்ளுவர் தொழுதார் திருக்குறள அவ்விறைவனைப்போற்றவே எனட்டும் இவர்கள் ஆசையில் மண்ணைப்போட நாமார்?

நம்மைப்பொறுத்தவரை இந்த ஒரு நூலாவது தமிழ்மக்களை ஒன்று சேர்க்கட்டும் எனபதுதான்.

மறை என்ற சொல்லில் மட்டுமன்று; ஓதல் என்ற சொல்லும் தவறங்கே என்பதுதான் என் கருத்து. தமிழ்மக்களை ஒன்று சேர்க்கும் ஒரு நற்கருவியை நாடப்படுத்தி அவர்களைப்பிளவு படுத்துவது. இதைத்தமிழகத்தில் நீங்கள் செய்திருந்தால் எதிர்ப்பு கிளப்பியிருக்கும்.

அமெரிக்கா என்றால் கேட்பாருண்டோ?

Tசூழ்நிலைக்கேறப்த்தான் எல்லாம் என்பது தெரிந்தவொன்றே.  நாம் நமது இலக்கியத்தைப்பற்றி வாழ்ந்து மடியும் தலைமுறைக்குச் சொல்லமுடியாது. ஏனெனில் அது பழமையில் ஊறி அப்படியே மடிவது.  எனவே புதிதாக வரும் தலைமுறைக்கு, நாம் வள்ளவர் ஒரு மதத்தவர் அன்று. அவர் தமிழ்மக்களுக்குப் பொது நீதிநூலையே கொடுத்தார் என்றுதான் சொல்லவேண்டும். Catch them young. தொடக்கத்திலே சொன்னால் பின்னர் அது நிலைக்கும். அப்படியே சிலர் அதை மாற்றச்சொன்னாலும் - அவர் சமணரே, வைதீகப்பார்ப்பனரே (பரிமேலழகர் முடிபு) போன்று - புதுத்தலைமுறை உடனே ஏற்காமலும் நிராகரிக்காமலும் - சிந்தித்து ஆராயும்.

சொல்லாடல்கள் வலிமை வாய்ந்தவை என்பார் மொழியிய்லாளர். இன்றைய மோடி அரசு அஃதை உணர்ந்து எல்லா திட்டங்களுக்கும் இந்தியில் பெயர்களைச்சூட்டி இந்திய மக்கள் அனைவர் நாவுகளிலும் அம்மொழி புரளுமானால், ஆங்கில ஆதிக்கத்தை ஒழித்துவிடலாமென நினைத்துச் செயல்படுவது இம்மொழியியலாளர் சொன்னதை நம்பியே.

அஃது உண்மைதான். மூளைச்சலவை மொழியாடல்கள் மூலம் பணண் முடியும்.

அமெரிக்கவில் உருவாகும் இளைய தமிழ் தலைமுறையை, நாம் திருக்குறளை என்ற் மறையை முற்றோதல் என்று சொல்லிவிட்டால், அவர்கள் இஃதொரு இந்து மறை; இந்துத்தமிழருக்கே என்று சொல்லி, அமைதி அடைவர்.

We must mind our language when we propogate; wrong usage will lead to unintended results. Of course if the intention is to make them believe that it is one of the Hindu scriptures, it won't be unintended results but premeditated result. 

Bala Sundara Vinayagam

unread,
Jul 6, 2015, 3:54:09 AM7/6/15
to mint...@googlegroups.com
திருவள்ளுவமாலை என்ற சில புலவர்கள் திருக்குறளை வியந்தெழுதிய‌ தொகுப்பில் அவ்வை என்ற பெயர்கொண்ட புலவரும் எழுதியிருக்கிறார்.  அவ்வை என்பது பெண் புலவர்கள் பலர் காலத்துக்குக்காலம் சூட்டிக்கொண்ட பெயர். சங்ககால அவ்வையும் ஆத்திச்சூடி அவ்வையும் வெவ்வேறு புலவர்கள். 

திருவள்ளுவமாலை வள்ளுவருக்கப்புறம் பல நூற்றாண்டுகளுக்குப்பின்னர் எழுதப்பட்டது என்பது என் கேள்வி. வள்ளுவர் காலத்தில்தான், அல்லது உடனேதான் என்பது ஆதாரங்களோடு சொன்னால் ஏற்கலாம்.

புகழாரத்தில் இப்படிப்பட்ட மிகைப்படுத்தல் கட்டாயம்.  இல்லாவிட்டால் அதன் பெயர் புகழாரம் என்று எப்படிச் சொல்வது? திருவள்ளுவமாலையில் இன்னொரு புலவர் வள்ளுவரை ஹிந்து மத்ததவ்ர் என்றும் எழுதியிருக்கிறார்.

அவ்வை சொன்னதன் பொருள் சரியாகப்புரியப்படவில்லை.

ஈரடியில் சொல்லப்பட்ட கருத்துக்கள் நீதிகள். அவைகள் பலபல சிந்தனையைத் தூண்டுபவை.  பலபல அதிர்ச்சியை உருவாக்கக்கூடியவை (இறைவனைச் சபித்தல்); பலபல அன்று நிலவிய சமூகப்பழக்கவழக்கங்களை சாட்டையால் அடித்தல். ஆல் இல் ஆல், இந்நூல் ஒரு பத்தோடு பதினொன்று; அத்தோடு இஃதொன்று என்றில்லை. அதன் கருத்துக்கள் எளிய சிந்தனையில் தோன்றா. நன்கு மனித வாழ்க்கையயிம் சமூக வாழ்க்கையும் மனிதர்கள் சுபாவங்களையும் உய்த்துணர்ந்த ஒருவரே இப்படிப்பட்ட நூலை யாக்க முடியும். ஆங்கிலத்தில் இப்படிப்பட்ட நபரை ஜீனியஸ் என்ப. வள்ளுவர் ஒரு ஜீனியஸ் என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியா.

ஈரடிகளுக்குள் இப்படி சாத்தியமா? என்ற் வியப்பை வெளிப்படுத்தவே அவ்வையின் அவ்வரிகள். மாறாக, ஈரடிகளுக்குள் கருத்துக்கள் மறைந்து கிடைக்கின்றன. அணுவைப் பிளப்பது போல நமக்கு ஒரு கருவியிருந்தாலன்றி முடியாதென்பதெல்லாம் defence for defence sake. 

Nagarajan Vadivel

unread,
Jul 6, 2015, 4:15:02 AM7/6/15
to மின்தமிழ்

​நான்மறை பற்றிய வைணவக் கருத்து
இணையமுனி

Bala Sundara Vinayagam

unread,
Jul 6, 2015, 4:17:56 AM7/6/15
to mint...@googlegroups.com
ஆம்...அப்படிப்பெயருண்டு. அதைச் சூட்டியவர்கள் மறை என்றால் மறைந்திருப்பது என்று சிந்தித்தார்களாஎன்பது ஐயமே.

நீங்கள் கேட்ட இரண்டாவது கேள்விக்கு இங்கு உள்ள தமிழறிஞர்கள் பதில் சொல்லவேண்டும்.  மறை என்றால் பொருட்கள் விளக்கமில்லாமல் தெரியவராது என்றேன். இதற்கு மாற்றுக்கருத்துண்டா என்ற கேள்விக்குப் பதில் தேவை. 

குறட்பாக்கள் தெளிவானவையே. ஆழ்வார்ப்பாசுரங்களில் பல உள்ளுறை பொருட்களைக் கொண்டவை. விளக்கங்கள் தேவை.  சில பாசுரங்களில் WORD ORDER ஐ மாற்றிப்போட்டால்தான் ஒழுங்கான பொருள் கிடைக்கும். சிலேடை வெண்பாக்கள் உண்டு. அவற்றைப்படிப்போருக்கு விளக்கினால் மட்டுமே இரசிக்க முடியும்.

வள்ளுவர் திருக்குறளை பொதுமக்களுக்காகவே எழுதினார்.அஃதொரு நீதிநூல், பண்டித சிகாமணிகளுக்கும் தமிழ்ப்புலவர்களுக்கும் மட்டுமன்றி. இப்படி எழுதப்பட்ட நூலில் பொருட்களை மறைத்து என்னபயன்? இஃதென்ன செக்ஸா? இலைமறைகாயகளாகச் சொல்லி கிளுகிளுப்பூட்ட?  காமத்துப்பாலிலும் (இன்பத்துப்பால்) இலைமறைகாயகளாகச் சொல்லவில்லை.  சொல்பவை காமமாக இருந்தாலும் மறைகக்வில்லை அவர். மலரினும் மெல்லியது காமம் என்பதே தமிழ்ப்புலவர்களின் நிலை. வள்ளுவர் விதிவிலக்கன்று.

திருக்குறள் திறந்த ஒரு பொத்தகம். அதன் பொருட்களும்  திறந்தவையே.

ஏற்கனவே சொன்னது போல ஒரு சில பாக்களில் சொற்கள் இன்று வழக்கொழிந்துவிட்டதாலும்,  சிலவற்றில் இலக்கணத்தில் பரவலாக அறியப்படா உறுப்புக்களுடன் யாக்கப்பட்டிருத்தலாலும், அறிந்து தெளிய விளக்கம் தேவை. தமிழாசிரியர்களுக்கு வேலை கொடுக்கவேண்டுமே?  இவர்களுக்கு எம்பளாய்மென்ட் கொடுக்க வள்ளுவர் அங்கங்கே கொஞ்சூண்டு பொடி வைத்து (மறையாக) எழுதிவிட்டாரெனலாம். மற்றபடி யாதொன்றுமில்லை.

தமிழ் பழந்தமிழ் இலக்கியத்தில் மிகவும் எளிய தமிழில் பொருட்களை நேரடியாகக் காட்டும் ஒரே நூல இதுவே.

Oru Arizonan

unread,
Jul 6, 2015, 4:21:43 AM7/6/15
to mintamil
//நன்கு மனித வாழ்க்கையயிம் சமூக வாழ்க்கையும் மனிதர்கள் சுபாவங்களையும் உய்த்துணர்ந்த ஒருவரே இப்படிப்பட்ட நூலை யாக்க முடியும். ஆங்கிலத்தில் இப்படிப்பட்ட நபரை ஜீனியஸ் என்ப. வள்ளுவர் ஒரு ஜீனியஸ் என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியா.

ஈரடிகளுக்குள் இப்படி சாத்தியமா? என்ற் வியப்பை வெளிப்படுத்தவே அவ்வையின் அவ்வரிகள். மாறாக, ஈரடிகளுக்குள் கருத்துக்கள் மறைந்து கிடைக்கின்றன. அணுவைப் பிளப்பது போல நமக்கு ஒரு கருவியிருந்தாலன்றி முடியாதென்பதெல்லாம் defence for defence sake. //

வள்ளுவரை ஜீனியஸ்  என்று வியந்து விட்டு [நான் எழுதியதை வேறுவிதமாகச சொல்லிவிட்டு],அதையே எதிர்ப்பது --  ஆக்கபூர்வமாகச் சான்று ஒன்றும் வைக்காமல்,  மறுத்துப்பேசுவதே வழக்கம்போலச் செய்திருக்கிறீர்கள்.

 தங்களது உள்நோக்கத்தை வெளிப்படுத்தாது சொல்லாடுவதே பழக்கம் என்றால், அப்படிப்பட்டவருடன் வாதிட்டுப்பயனில்லை.

வள்ளுவர் இந்து சமயத்தவர்தான் [அவர்காலத்தில், அச்சமயம் எப்பெயரில் அழைக்கப்பட்டதோ அச்சமயம்].  அவரது கருத்துக்கள் இந்து சமயத்ததுதான்.  

உங்களுக்கு இந்துசமத்தின்மீதுள்ள காழ்ப்புணர்ச்சியைத்  திரையிட்டு,// புதிதாக வரும் தலைமுறைக்கு, நாம் வள்ளவர் ஒரு மதத்தவர் அன்று. அவர் தமிழ்மக்களுக்குப் பொது நீதிநூலையே கொடுத்தார் என்றுதான் சொல்லவேண்டும். Catch them young.//  என்று இளம்தலைமுறையினரை  மூளைச் சலவை செய்யச் சொல்கிறீர்கள். அதாவது, இந்துசமய நீதிகளைப் பொதுநீதி என்று பெயர்மாற்றம் செய்யச் சொல்கிறீர்கள்.

தங்கள் கருத்துக்கு எந்தவிதமான சான்றும் வைக்காமல், மற்றவர் கருத்தைச் சொல்லாடல் செய்து தாக்குவதை ஒரு தொழிலாகக் கொண்டு, இங்குள்ளவர்களிடம் உங்கள் உள்நோக்கத்தைச் சொல்லாமல், அயர்ச்சி அடையச் செய்கிறீர்கள்.

பயனுள்ள விஷயங்களை, தமிழுக்கோ, தமிழருக்கோ உயர்வு தரும் விஷயங்களை இதுவரை நீங்கள் பகிர்ந்துகொண்டதாகத் தெரியவில்லை.

அதை முதலில் செய்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

Seshadri Sridharan

unread,
Jul 6, 2015, 5:43:31 AM7/6/15
to mintamil
On Mon, Jul 6, 2015 at 1:06 PM, Oru Arizonan <oruar...@gmail.com> wrote:

Jaimini is most known for his great treatise Purva Mimamsa Sutras (“First Reflection”), or Karma-mimamsa (“Study of Ritual Action”), a system that investigates the nature of Vedic injunctions. The text founded the Purva-Mimamsa school of Ancient Indian philosophy, one of the six Darsanas or schools of Ancient Indian philosophy.

Dated to ca. the 3rd century BC, the text contains about 3,000 sutras and is the foundational text of the Mimamsaschool. The text aims at an exegesis of the Vedas with regard to ritual practice (karma) and religious duty (dharma), commenting on the early Upanishads. Jaimini's Mimamsa is a ritualist counter-movement to the mysticist Vedantacurrents of his day. He was commented upon by Śābara in the early centuries CE.[1]


 இந்த மீமாம்சம் எழுதிய சைமினி கி.மு 3 ஆம் நூற்றாண்டு என்றால் அவரால் தொகுக்கப்பட்ட சாமவேத (கேன உபநிடதம்)  அதே  3 ஆம் நூற்றாண்டு தானே ஆகும். ஆனால் அது கி.மு 1500 - 1000 என்பது ஏற்புடையது தானா? இடிக்கிறதே கணக்கு. ஐயா மீமாம்சம் கி.பி. 7 ஆம் நூற்றாண்டினது என்பது ஆதிசங்கரரின் ஆசானுக்கு ஆசான் கௌடபாதரை வைத்து முடிவு கட்டப்பட்டது. கௌடபாதர் பதஞ்சலியின் மாணவர். பதஞ்சலி 7 ஆம் நூற்றாண்டினர். 


"தன்னுடைய 7 யோக நண்பர்களுடன் நந்தி தேவரிடம் இருந்து நேரடியாக யோகக் கலையக் கற்றவர். இதைப் பற்றித் திருமூலர் என்ன சொல்கிறார் என்றால்:
"நந்தி அருள் பெற்ற நாதரை நாடினோம்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மறு தொழுத பதஞ்சலி, வியாக்ரபர்
என்றிவர் என்னோடு எண்மருமாம்

எனவே ஆங்கில அறிஞர்கள் மனம் போனபடி கணக்கிட்டு சொன்ன கால அளவுகள் யாவும் கற்பனையானவை.

நம்பன் 

தேமொழி

unread,
Jul 6, 2015, 5:48:24 AM7/6/15
to mint...@googlegroups.com, balasundar...@gmail.com


On Monday, July 6, 2015 at 12:37:49 AM UTC-7, Bala Sundara Vinayagam wrote:
புதிதாக வரும் தலைமுறைக்கு, நாம் வள்ளவர் ஒரு மதத்தவர் அன்று. அவர் தமிழ்மக்களுக்குப் பொது நீதிநூலையே கொடுத்தார் என்றுதான் சொல்லவேண்டும்.

அந்த முறையில்தான்  ... வள்ளுவர் எழுதியது மதசார்பற்ற நூல் என்பதுதான்  "இன்றும்" சொல்லிக் கொடுக்கப்படுவது.

அவர் தனது  மதத்தை பற்றிக் கூறாவிட்டாலும் அதை யூகிக்க விரும்புவது ஆய்வாளர்கள் ஆர்வத்துடன் மேற்கொள்ளும் ஒரு  ஆய்வு விளையாட்டு...simply a gussing game...ஆனால் திருக்குறள்  பொது நூல் என்பதைப் "புரியாதவர்" தமிழில் இருக்க வாய்ப்பில்லை. 

மேலும் "மறை" என்பதன் இக்காலப் பொருளாக விளங்கிக் கொள்ளப் படுவது  ஒரு மதத்தின் நல்லொழுக்கம் கற்பிக்கும் ஒரு நூல் என்பது மட்டுமே

இதை உணரும் இளைய தலைமுறையினரும், தமிழர் அந்நாட்களிலேயே மதசார்பற்ற நன்னெறி நூலின் தேவை பற்றிய தொலை நோக்கு கொண்டிருந்தாலும் , பிற்கால மக்கள் அதன் பெருமை உணர்ந்தார் இல்லை என்பதையும் புரிந்து கொள்வார்கள். 

அதற்கு மேல் அதை இந்து நூலாகவோ, சமண நூலாகவோ, பௌத்த நூலாகவோ யாரும் பார்க்கப்போவதில்லை.

அதனால் இந்தக் கவலையும் இந்த இழையுமே  ...

'Chicken Little' லையும்   "The sky is falling" கையும்  நினைவூட்டுகிறது 

.... தேமொழி

Suba.T.

unread,
Jul 6, 2015, 5:51:13 AM7/6/15
to மின்தமிழ், Subashini Tremmel


2015-07-06 10:21 GMT+02:00 Oru Arizonan <oruar...@gmail.com>:
​..

பயனுள்ள விஷயங்களை, தமிழுக்கோ, தமிழருக்கோ உயர்வு தரும் விஷயங்களை இதுவரை நீங்கள் பகிர்ந்துகொண்டதாகத் தெரியவில்லை.

அதை முதலில் செய்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

​அன்புள்ள திரு.அரிசோணன்,
திரு.பாலசுந்தர வினநாயகம் இதுவரை தமிழருக்கோ தமிழுக்கோ அளித்ததில்லை என இப்படிக் கூறுவது எனக்கு சரியாகப் படவில்லை. ​
 
​அவரது எழுத்துக்களில் பல வகைப்பட்ட வாசிப்பின் பிரதிபலிப்பு தெரிகின்றது. பலர், மாற்று சிந்தனை கூட இல்லாமல் 
சொன்னதையே சொல்லிக்கொண்டிருக்கும் நிலையிலிருந்து மாறுபட்டு மாற்றுக் கோணத்தை முன் வைக்கும் எழுத்தாக இவரது எழுத்துக்களை நான் காண்கின்றேன். எல்லா தரவுகளும் சரியாக  எப்போதும் யாராலும் சொல்ல முடிவதில்லை என்பதை நாம் மறந்து விடக் கூடாது. 
சு
​பா​

ஒரு  அரிசோனன் https://tamizhtharakai.wordpress.com/ -- தாரகை 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Dev Raj

unread,
Jul 6, 2015, 6:11:09 AM7/6/15
to mint...@googlegroups.com
On Sunday, 5 July 2015 22:41:37 UTC-7, இரா.பா wrote:
கடைச்சிறு தெய்வமான விஷ்ணு, பெருந்தெய்வமாக மாறியப்பின்னர் எழுந்ததே தற்போதுள்ள வைஷ்ணவம். (பெயர்க்கூட தமிழில் இல்லை. இதில் தமிழர்களின் ஆதிமதம் என்ற பிரசாரம் வேறு! :-))

மநோந்மணீயம், சிந்தாமணி - பெயர்கள் கூடத் தமிழில் இல்லை :
அதற்கு என்ன செய்யலாம் ?


தேவ்

Banukumar Rajendran

unread,
Jul 6, 2015, 6:20:10 AM7/6/15
to mint...@googlegroups.com
அன்பின் ஐயா,

தமிழருக்கென்று ஒரு சமயத்தை கூறமுடியாது. ஆதி தமிழர்கள் இயற்கையோடு வாழ்ந்திருக்கிறார்கள் என்பது சங்க
பாடல்கள் மூலம் தெரிகிறது. அதே ஆதி தமிழர்கள், தங்கள் எல்லைக்குள் வந்த வெளி மதங்களை, ஒவ்வொரு காலகட்டங்களிலும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதே வரலாறு நமக்கு சொல்லும் பாடம்!

1. அருகம்/சமணம் - பெயர் தமிழ் இல்லை - வெளியிலிருந்து வந்ததுதான்!
2. பெளத்தம்/புத்தம் - பெயர் தமிழ் இல்லை - வெளியிலிருந்து வந்ததுதான்!
3. ஆசிவகம் - பெயர் தமிழ் இல்லை - வெளியிலிருந்து வந்ததுதான்!
3. சைவம் - பெயர் தமிழ் இல்லை - வடமொழி - வெளியிலிருந்து வந்ததுதான்
4. வைஷ்ணவம் - பெயர் தமிழ் இல்லை - வெளியிலிருந்து வந்ததுதான்!
5. இஸ்லாம் - பெயர் தமிழ் இல்லை - வெளியிலிருந்து வந்ததுதான்!
6. கிருத்துவம் - பெயர் தமிழ் இல்லை - வெளியிலிருந்து வந்ததுதான்!

தமிழகத்தில் தோன்றிய மதங்கள் என்றால், தூயத் தமிழில் அதுவும், பொருள் நிறைந்ததாகவும்
இருக்கவேண்டும்!

சிந்தாமணி என்ன, மனோண்மணியம் என்ன, எல்லா பெயர்களும் வடமொழி சார்ந்தனவைகள்தான்!

:-)

இரா.பா





 


தேவ்

Dev Raj

unread,
Jul 6, 2015, 6:28:57 AM7/6/15
to mint...@googlegroups.com
ஆசு + ஈவு + அகம் என்று பிரித்துப் பொருள் கூறினர்;
ஆசீவகம் தமிழர் சமயமா தெரியாது.
கொடிநிலை, கந்தழி, வள்ளி - திறக்கில் 
பேசி வருகின்றனர்; ஆனால் தெளிவில்லை.
தெளிவான தொடர்ச்சி கொண்ட மாலியத்தை
ஏற்க மனமில்லை பெரும்பாலருக்கு :((

தேவ்

Banukumar Rajendran

unread,
Jul 6, 2015, 6:42:21 AM7/6/15
to mint...@googlegroups.com
2015-07-06 15:58 GMT+05:30 Dev Raj <rde...@gmail.com>:
ஆசு + ஈவு + அகம் என்று பிரித்துப் பொருள் கூறினர்;
ஆசீவகம் தமிழர் சமயமா தெரியாது.

ஐயா. தெரியாது என்று தாங்கள் சொல்லலாமா? :-)

வைதிகத்தை எதிர்த்தவர்கள் சமணத்திற்கும்/பெளத்தத்திற்கும் ஆதரவாக பேசியும், எழுதியும்
கொண்டிருந்தார்கள். அறிவாளிகளில் சிலர், தமிழருகென்று சமயம் ஏதுமில்லையா? என்று கேட்டவுடன்,
ஆகா, தமிழர்கென்று ஒரு சமயம் வேண்டாவா? என்று அஜீவகத்தை பிடித்தார்கள்!

ஏன் அஜீவகம்? உலகில் தற்போது இக்கோட்பாட்டை நடைமுறையில் கடைப்பிடிப்பவர் யாரும் இல்லை.
கேட்பாரின்றி, கொள்வாரின்றி இறந்துப்போன ஒரு கோட்பாடு. இதை தமிழனோடு இயையவைத்தால்
கேட்பாரும் யாரும் இல்லை. அப்படி சில அறிஞர்களின் எண்ணத்தில் மீள்ளுருவாக்கம் செய்யப்பட்ட
ஒன்றுதான் ஆசு ஈவு அகம் என்ற அஜீவகம். இது தமிழர் சமயம் என்று சொல்ல எத்தனை எத்தனை வாதங்கள், பொத்தகங்கள் எழுதித் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். ஒன்றேனும் நிலைக்குமா? அறியேன்.
காலம் பதில் சொல்லலாம்.




 
கொடிநிலை, கந்தழி, வள்ளி - திறக்கில் 
பேசி வருகின்றனர்; ஆனால் தெளிவில்லை.
தெளிவான தொடர்ச்சி கொண்ட மாலியத்தை
ஏற்க மனமில்லை பெரும்பாலருக்கு :((


பெரும்பாலருக்கு என்று ஏன் சொல்கிறீர்கள்! அதுவும் இக்குழுமத்தில்! அப்படி, இப்படி பார்த்தால்
இன்னும் சிலபேர் தேறுவார்கள். சிறுபாலோர்தான்!!

வைணவர்கள் நிறைந்த குழுமம் அல்லவா இது! பெரும்பாலோருக்கு ஏற்க மனமில்லை என்று
எப்படி சொல்லமுடியும்? :-)


Bala Sundara Vinayagam

unread,
Jul 6, 2015, 6:51:02 AM7/6/15
to mint...@googlegroups.com, balasundar...@gmail.com
நீதி நூல்களை மறைகள் என்று தமிழர் சொல்வதில்லை. நாலடியார், சிறுபஞ்சமூலம், ஏலாதி, நானமணிக்கடிகை, திரிகடுகம் என்பனவெல்லாம் நீதிநூல்கள். இவை நல்லொழுக்கம் கற்பிக்கவே. ஆயினும் மறைகளென்றழைப்பாரில்லை.

மறை எனற சொல்லுக்கு மறைந்த பொருட்களைக்கொண்டது என்று எடுக்காமல் போனாலும் நல்லொழுக்கம் கற்பிக்கும் நூலென்று பொருள் எடுப்பதில்லை.   மதத்தைப்ற்றியும் மதச் சிந்தாந்தகளைப் பகரும் மத நூல்களே மறைகள் என்று பேசப்படுகிறது.  ஆங்கிலத்தில் scriptures  சொல்வார்கள். Hindu scriptures. Islamic scriptures. Christian scriputures, Buddhist and Jaina Scriptures. Sikh scriptures. 

தமிழில் -

பன்னிரு திருமுறைகள் (சிவன் மேல் பாடப்பட்டவை) 
சந்தாணக்குரவர் பாடிய சைவசிந்த்தாந்த நூல்கள்.  (சந்தாணக்குரவர் நால்வர்)
வடமொழி வேதங்கள்
ஆழ்வார்ப் பாசுரங்கள்

இவை மறைகள் - தெயவ்த்தையும் தெய்வ சிந்தாந்தங்களையும் பற்றிப்பேசுவதால். அதே சமயம், இவை மக்களுக்கு நற்போதனைகளையும் தரலாம். தருகின்றன.

ஆக, மறை என்பதற்கு - மறைந்திருக்கும் பொருட்களைக்கொண்டிருப்பது என்று பொருளெடுக்க மனமில்லையாயினும் - தெயவத்தைப் பரவும் நூல்களே மறைகள் என்பது தெளிவாகும்.

திருக்குறளை மறை என்று அழைத்தால் மதத்தோடு இணைக்கப்படுகிறது.  எந்த மதமது?

இ.பாவு போன்றோருக்குச் சமணம்;
பரிமேலழகருக்கு வைதீக இந்துமதம்.
சைவருக்கு ஒரு திரும‌றை
கிருத்துவருக்கு இன்னொரு விவிலியம்
இசுலாமியருக்கு ஏக இறைத் தத்துவத்தை ஓங்கியுரைக்கும் நூல்.

இப்படி எடுத்தால் திருக்குறளை மறை ஓதல் என்று தாராளமாகச் சொல்லலாம்.  பொது நீதிநூல் என்றால் முடியாது.

கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்பது போலல்லவா இருக்கிறது இப்படிப்பட்ட விபரீத சிந்தனைகள்?

தயைசெயது திருக்குறளை மத நூலாக - தெரிந்தோ தெரியாமலோ ஆக்காதீர்கள்.  ஏற்கனவே செயததைச் சுட்டிக்காட்டிய பின்னர், அதைச் சரியென்று வாதிக்காமல், இனி நடக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்பது நல்லோர் விண்ணப்பமாகவும் இருக்கும் என்பது என் நம்பிக்கை.

வரும் தலைமுறையாவது நம்மைப்போல மதம், ஜாதிகளால் பிளவுபட்டு ஒருவரையொருவர் அடித்துக்கொண்டு வாழாமல் இருக்கட்டும்.

The sky will indeed fall on Tamilnadu and Tamilars lives if we remove the Thirukkural from the list of secular books common to all Tamils.  It is not therefore bad to protest strongly against any attempt - knowing or unknowingly - to tarnish the book with the brush of religious terminology like  Marai Othal. 

Dev Raj

unread,
Jul 6, 2015, 6:59:19 AM7/6/15
to mint...@googlegroups.com
2015-07-06 15:58 GMT+05:30 Dev Raj <rde...@gmail.com>:
ஆசு + ஈவு + அகம் என்று பிரித்துப் பொருள் கூறினர்;
ஆசீவகம் தமிழர் சமயமா தெரியாது.

 

On Monday, 6 July 2015 03:42:21 UTC-7, இரா.பா wrote:
ஐயா. தெரியாது என்று தாங்கள் சொல்லலாமா? :-)

வைதிகத்தை எதிர்த்தவர்கள் சமணத்திற்கும்/பெளத்தத்திற்கும் ஆதரவாக பேசியும், எழுதியும்
கொண்டிருந்தார்கள். அறிவாளிகளில் சிலர், தமிழருகென்று சமயம் ஏதுமில்லையா? என்று கேட்டவுடன்,
ஆகா, தமிழர்கென்று ஒரு சமயம் வேண்டாவா? என்று அஜீவகத்தை பிடித்தார்கள்!

:))
 

ஏன் அஜீவகம்? உலகில் தற்போது இக்கோட்பாட்டை நடைமுறையில் கடைப்பிடிப்பவர் யாரும் இல்லை.
கேட்பாரின்றி, கொள்வாரின்றி இறந்துப்போன ஒரு கோட்பாடு. இதை தமிழனோடு இயையவைத்தால்
கேட்பாரும் யாரும் இல்லை. அப்படி சில அறிஞர்களின் எண்ணத்தில் மீள்ளுருவாக்கம் செய்யப்பட்ட
ஒன்றுதான் ஆசு ஈவு அகம் என்ற அஜீவகம். இது தமிழர் சமயம் என்று சொல்ல எத்தனை எத்தனை வாதங்கள், பொத்தகங்கள் எழுதித் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். ஒன்றேனும் நிலைக்குமா? அறியேன். காலம் பதில் சொல்லலாம். 


ஆகா, ஒரு வரலாற்றையே வரைந்து தள்ளி விட்டீர்கள் :)) நல்ல எக்ஸ்பீரியன்ஸ்


தேவ்

Banukumar Rajendran

unread,
Jul 6, 2015, 8:03:40 AM7/6/15
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com
சார். முழுபார்மில் வந்திருக்கின்றீர்களோ! ஒரே கல்லில் பல மாங்காய்கள் அடிக்கிறீர்கள்!

குறளாசிரியர் உள்ளங்கண்ட பரிமேலழகர் உரை சாதிப் பற்றி பேசுகிறது! குறளில்
சாதி என்ற சொற்பிரயோகம் இல்லை. ஆனால், பரிமேலழகர் உரை அவ்வாறுக் கூறுகிறது.

இதை எவ்வாறு புரிந்துக் கொள்வது?

சங்க காலத்தில் சாதி இல்லை, எனில் சங்கம் மருவியக் காலத்தில் சாதியை வைத்துக் குறள்
கருத்து அமைந்ததாக பரிமேலழகர் எழுதுகிறார். எப்படி?

ஏதாவது ஒன்றுதானே சரி. பரிமேலழகர் உரை சரியில்லையென்றால், அவர் குறளாசிரியர் உள்ளம்
கண்டவர் என்று எப்படி சொல் முடியும்? :-)

ஆனாலும்....சங்க காலத்தில், கன்னடம்/தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழிகள் உண்டாகவில்லை
அல்லது பிரியவில்லை! அவ்வாறிருக்கும்போது, கன்னடத்திலும், தெலுங்கு மொழிகளில் புலையன்
என்று இருக்கிறதா? அப்படியிருந்தால் அங்கு அதற்கு என்ன பொருள் கொள்கிறார்கள்?

இப்படி நிறைய..கேள்விகள்.....??

(இங்கே கவனிக்க... தாழ்ந்த சாதி.. சங்க காலத்தில் இருந்தார்கள் என்றும் இருக்கவில்லை என்றும் யான்
சொல்லவில்லை. நடுநிலைமை கடைப்பிடிக்க நினைக்கிறேன். பரிமேலழகர் உரைமேல் தான் என்
சந்தேகங்களை எழுப்புகிறேன். அதனால்.. என்னிடல் யாரும் சண்டைக்கு வரவேண்டாம்.... :-)))))))


இரா.பா


இரா.பானுகுமார்

 அது தவறென்றால், குறள்




2015-07-06 17:13 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:


On Monday, July 6, 2015 at 3:51:02 AM UTC-7, Bala Sundara Vinayagam wrote:
நீதி நூல்களை மறைகள் என்று தமிழர் சொல்வதில்லை. நாலடியார், சிறுபஞ்சமூலம், ஏலாதி, நானமணிக்கடிகை, திரிகடுகம் என்பனவெல்லாம் நீதிநூல்கள். இவை நல்லொழுக்கம் கற்பிக்கவே. ஆயினும் மறைகளென்றழைப்பாரில்லை.

மறை எனற சொல்லுக்கு மறைந்த பொருட்களைக்கொண்டது என்று எடுக்காமல் போனாலும் நல்லொழுக்கம் கற்பிக்கும் நூலென்று பொருள் எடுப்பதில்லை.   மதத்தைப்ற்றியும் மதச் சிந்தாந்தகளைப் பகரும் மத நூல்களே மறைகள் என்று பேசப்படுகிறது.  ஆங்கிலத்தில் scriptures  சொல்வார்கள். Hindu scriptures. Islamic scriptures. Christian scriputures, Buddhist and Jaina Scriptures. Sikh scriptures. 

தமிழில் -

பன்னிரு திருமுறைகள் (சிவன் மேல் பாடப்பட்டவை) 
சந்தாணக்குரவர் பாடிய சைவசிந்த்தாந்த நூல்கள்.  (சந்தாணக்குரவர் நால்வர்)

சந்தானகுரவர்.

தமிழ் இலக்கிய வரலாற்றை ஆராயும் அறிஞர்கள் குறள் தரும் சமண சமயத்தை
விளக்கியுள்ளார்கள்.

தமிழ் மறை என குறள் பலகாலமாகக் கூறப்படுகிறது. சமணர்கள் “எம் ஓத்து”
(= Our Veda) பல நூற்றாண்டுகளாய் திருக்குறளைக் கொண்டாடி வருகின்றனர்.
ஜைநர்கள் பாடும் பழைய வாழ்த்து வெண்பா பாருங்கள்:
> சைநர் வாழ்த்து என்று வெண்பா திருவள்ளுவருக்கு இருக்கிறது.
> அபிதான சிந்தாமணி, பக்கம் 850.
>
> முப்பாலு முண்டோ முலைப்பா லினிநுகரோம்
> எப்பாலுக் கப்பாலும் ஆயினோம் - எப்பொருளும்
> உள்ள படியுணர்ந்தோம் ஓதிக் குறைதீர்ந்தோம்
> வள்ளுவனார் வைப்பெமக்கு வாய்த்து.
>
பெருந்தொகை 1999 - பாட வேறுபாடு (2-ம் அடியில்).
இது அபிதான சிந்தாமணி பாடத்தை விடச் சிறப்பு.

முப்பாலு முண்டோம் முலைப்பா லினிநுகரோம்
அப்பாலுக் கப்பாலு மாயிருக்கும் - எப்பொருளும்
உள்ள படியுணர்ந்தோ மோதிக் குறைதீர்ந்தோம்
வள்ளுவனார் வைப்பெமக்கு வாய்த்து.

 
வஞ்சத்தால் ஏமாற்றி மாவலியின் நாட்டை கவர்ந்தார் விஷ்ணு என்பது அவதாரக் கதை. பல ஆழ்வார் பாசுரங்கள்
இதனை வலியுறுத்திப் பாடுபவை. ஆனால், வள்ளுவர் அவ்வாறு உலகைக் கைக்கொண்டு ஆள தமிழ்மறையில்
அறிவுறுத்தவில்லை என்பது தெளிவு. இங்கே உரை தந்துள்ளேன்:

சங்க கால வாழ்க்கை நெறிமுறைகளான பலதார மணம், மது, பரத்தையர் ஒழுக்கம், சாதி, .... போன்றவற்றின்
தீங்குகளைப் போக்கி, மறுத்து தமிழர்க்கு நன்னெறி காட்ட எழுந்தது சமண ஆசிரியர் திருவள்ளுவர்
எல்லா சமயத்தவர்க்கும் பொதுமறையாய் செய்து அருளியது திருக்குறள். இவ்வளவு நீதிபோதனைகளை
அழகாகவும், சுருக்கமாகவும் உரைத்த நூல் குறள் ஒன்றே.

மேல்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்துங் 
கற்றா ரனைத்திலர் பாடு.


பரிமேலழகர் உரை
கல்லாதார் மேற்பிறந்தார் ஆயினும் - கல்லாதார் உயர்ந்த சாதிக்கண் பிறந்தாராயினும், கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்துப் பாடு இலர் - தாழ்ந்த சாதிக்கண் பிறந்து வைத்தும் கற்றாரது பெருமை அளவிற்றாய பெருமையிலர். (உடலோடு ஒழியும் சாதி உயர்ச்சியினும் , உயிரோடு செல்லும் கல்வி உயர்ச்சி சிறப்புடைத்து என்பதாம். இதனான் அவர் சாதி உயர்ச்சியால் பயனின்மை கூறப்பட்டது.)

நா. கணேசன்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Jul 6, 2015, 8:09:26 AM7/6/15
to mint...@googlegroups.com, vallamai


On Monday, July 6, 2015 at 3:51:02 AM UTC-7, Bala Sundara Vinayagam wrote:
நீதி நூல்களை மறைகள் என்று தமிழர் சொல்வதில்லை. நாலடியார், சிறுபஞ்சமூலம், ஏலாதி, நானமணிக்கடிகை, திரிகடுகம் என்பனவெல்லாம் நீதிநூல்கள். இவை நல்லொழுக்கம் கற்பிக்கவே. ஆயினும் மறைகளென்றழைப்பாரில்லை.

மறை எனற சொல்லுக்கு மறைந்த பொருட்களைக்கொண்டது என்று எடுக்காமல் போனாலும் நல்லொழுக்கம் கற்பிக்கும் நூலென்று பொருள் எடுப்பதில்லை.   மதத்தைப்ற்றியும் மதச் சிந்தாந்தகளைப் பகரும் மத நூல்களே மறைகள் என்று பேசப்படுகிறது.  ஆங்கிலத்தில் scriptures  சொல்வார்கள். Hindu scriptures. Islamic scriptures. Christian scriputures, Buddhist and Jaina Scriptures. Sikh scriptures. 

தமிழில் -

பன்னிரு திருமுறைகள் (சிவன் மேல் பாடப்பட்டவை) 
சந்தாணக்குரவர் பாடிய சைவசிந்த்தாந்த நூல்கள்.  (சந்தாணக்குரவர் நால்வர்)

Nagarajan Vadivel

unread,
Jul 6, 2015, 8:39:35 AM7/6/15
to மின்தமிழ்
2015-07-06 17:13 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
சமண ஆசிரியர் திருவள்ளுவர்

​சமணர்கள் தங்களுடைய பள்ளிகளில் அனைத்து சமயத்துக்கொம் பொதுவான நீதிநெறிகளை மாணவர்களுக்குக் கற்பித்தனர்.  திருவள்ளுவர் கருத்துக்களைத் தொகுத்தவரா அல்லது தொகுக்கப்பட்ட நீதிநெறிகளைக் கற்பித்தவரா என்ற கேள்விக்கு விடை கிடைத்தால் குழப்பம் தீர்ந்துவிடும்
திருக்குறள் ஒருவரால் எழுதப்பட்டதா அல்லது பலரால் எழுதப்பட்டதை ஒருவர் தொகுத்ததா
சங்கம் மருவிய காலக்த்தில் கி.பி முதலாம் நூற்றாண்டில் சைவமும் வைணவமும் தழைக்காத காலத்தில் பழந்தமிழர் மரபின் அடிப்படையில் உருவானதைப் பிற்காலத்தில் தொகுத்தவர்கள் ஒரு அஜென்டாவுடன் தொகுத்ததை அடிப்படையாகக் கொண்டு அவர் சைவர்/சமணர் என்று கூறுவது சரியாக இருக்குமா?
இணையமுனி ​

தேமொழி

unread,
Jul 6, 2015, 12:47:20 PM7/6/15
to mint...@googlegroups.com, balasundar...@gmail.com
ஒரு தமிழ்ச்சொல் ஒவ்வொரு காலத்திலும் வேறு வேறு பொருள் கொள்ளப்படுவது என்பது புரிந்தால் இது புரிவதில் சிரமம் இருக்காது உங்களுக்கு.

காதல் என்ற ஒரு சொல் போதும் காலப் போக்கில் எப்படி அது பொருள் கொள்ளப்படுகிறது என்பதைக் காட்ட.

தமிழர்களுக்கு  மதம் சாராமலே படிக்க நன்னெறி வழிகாட்டுதல் இருந்தது என்பதை, நல்வழியில் நடப்பதை பற்றிய அறிவுரைக்கு மதம் என்ற ஒன்றே தேவையில்லை என்பதைக் கூடவா புரிந்து கொள்ள  முடியாது போகும் இக்கால இளைய தலைமுறைக்கு.

..... தேமொழி

Suba.T.

unread,
Jul 6, 2015, 2:34:31 PM7/6/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-07-06 9:37 GMT+02:00 Bala Sundara Vinayagam <balasundar...@gmail.com>:


On Monday, 6 July 2015 01:50:53 UTC+5:30, Suba.T. wrote:


2015-07-05 13:18 GMT+02:00 Bala Sundara Vinayagam <balasundar...@gmail.com>:
வடமொழி வேதங்களை மறைகள் என்பார்கள்.  நான்கு வேதங்களை நான்மறை என்றார்கள்.  பழந்தமிழ் நூல்களில் சுட்டப்படும் நான்மறை வட்மொழி வேதங்கள் என்போரும் இல்லை தமிழகத்தில் அன்று நின்று நிலவிய நான்கு தமிழ் மறைகளத்தான் தொல்காப்பியர் குறிப்பிடுவார் என பிள்ளைகளும் பேசுவது காணலாம்.

எஃதெப்படியாகினும் வேதங்கள் மறை என்றால், அவற்றின் பொருட்களை நாமறிவது சுலபமன்று என்றெடுக்கவேண்டும் . ஏனெனில் அப்பொருட்கள் உள்ளுறை இறைச்சி. எனவே வேதங்களுக்கு வேதறிஞர்களும் ஞானிகளும் விளக்கவுரைகள் எழுதினார்கள். மறைபொருட்கள் எனவே அவரவருக்குத் தோன்றியபடி எழுத அவை பலசில மாற்றங்களைக் கொண்டவாயின‌.  தமிழகத்திலும் வடவிந்தியாவிலும் இவ்வுரைகாரர்கள் அக்காலத்திலிருந்தே தோன்றினர்.  ஆங்கிலேயரும் ஐரோப்பியரும்கூட உரைகள் எழுதி அசத்திவிட்டார்கள்.

வேதமறைபொருட்களை அவ்வுரைகளைப் படிக்கவியலாதோர் அறிந்து கொள்ள புராணக்கதைகளும் இதிகாசங்களும் எழுதப்பட்டன.  அவைகள் காலட்சேபங்களாக அன்று கூறப்பட்டன. 

தமிழில் ஆழ்வார்ப்பாசுரங்கள் வேதங்களின் மறைபொருட்களை விளக்கித் தமிழில் பாமரமக்களுக்குச் சொலலவே எழுந்தனவெனறும்; எனவே அவை திராவிட வேதமென்றும் அறுதியிட்டார்கள் ஆச்சாரியர்கள். அவர்களுள் பேரிடத்தில் வைக்கப்பட்டு போற்றப்படும் தூப்புல் தேசிகன், தான் வேதங்களில் படித்துத் தெளிய முடியாதவை ஆழ்வார்ப் பாசுரங்களில் படித்துத் தெளிந்ததாகச் சொல்லி விட்டார். //தெளியாத மறைநிலங்கள் தெரிந்தோமா//  

ஆக, மறை என்றால் மறைந்திருக்கும் பொருட்களைக் கொண்ட நூல். நேரடியாக புலனாகவதில்லை. பிற உதவியில்லாமல் முடியாது.


​தங்களது வருத்தம் திருக்குறளை இந்த அமெரிக்க மக்கள் மறை என்று குறிப்பிட்டு விட்டார்கள் என்பதுவா அல்லது அமெரிக்க சுதந்திர தினத்தில் இவர்கள் ஓதினார்கள் என்பதுவா?
 


​உண்மையில் தாங்கள் வருந்த இங்கு ஒரு பிரிவினை வாதமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. காரணம் அயலகத்தில் வாழும் தமிழர்களின் நிலை என்பது வேறு. அவர்கள் தமிழ் இலக்கியங்கள் நூல்கள் ஆகியவற்றை தம் சந்ததியினருக்கு கொண்டு செல்ல செய்யும் முயற்சிகள் சற்று வித்தியாசமாக அச்சூழலுக்கு ஏற்பவே இருக்கும். இங்கு திருக்குறள் மறை ஓதுதல் என்பது அனைவருமா சேர்ந்து திருக்குறளை வாசித்தல் என்பது மட்டுமே. 
நிகழ்ச்சியில் என்ன உண்மையில் நடந்ததென்று எனக்கு மேலும் விபரம் தெரிந்தால் தாங்கள் உண்மையில் வருந்துவதற்கான காரணம் பற்றி மேலும் பேசலாம்.

சுபா

Reply:
 
 
எனது ஆதங்கம் என்றில்லை. தமழகத்தில் இப்படி சொல்ல அதைத் தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ள பள்ளிச்சிறார்களுக்கு அப்படியே வள்ளுவர் என்று சொல்ல தங்கள்தங்கள் மதங்களைத்தாண்டி வள்ளுவரை ஒரு சார்புநிலையில்லா எல்லாருக்கும் பொதுவான ஆசிரியராக எடுத்துக்கொள்ள, குமரியில் நெடிதுயர்ந்த சிலையொன்றை எழுப்பி எங்கள் ஐயன் இவர் தமிழர் அனைவருக்குமானவர் என மற்றவருக்கு எடுத்துக்காட்டி பெருமையடைய,  

​வள்ளுவருக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் சிலையின் வடிவம் அவரது உண்மையான் அஎண்ண ஓட்டத்தை பிரதிபலிப்பதில்லை என்ற எண்ணம் எனக்கு தனிப்பட்ட வகையில் உண்டு. 


ஆனால் அங்கே அவரின் நூலை மறை ஓதல் என்று சொல்லி, பிரபந்தம் ஓதல், வேதம் ஓதல், தேவாரமுற்றோதல் என்று ஒரு மதத்தின் சொல்லாடலை வைத்து தொடங்கினால் எங்கே போய்விடும்? என்பதுதான் என் கேள்வி. 

​புரிகின்றது. மறை நூல் என்ற சொல்பயன்பாடு இந்து மதம் சார்ந்த மத நூல்கள் மட்டுமன்றி இஸ்லாம் கிறிஸ்துவ மத நூல்கள் குறிப்பிடுவதில் பயன்பாட்டிலும் இருப்பதை நான் காண்கின்றேன். ஒரு வகையில் தற்காலத்தில் மறை என்ற சொல்லுக்கு அதன் முந்தைய பொருளோடு 'ஒரு புனித நூல்'  என்ற   பார்வை கிட்டியிருப்பதாக நான் பார்க்கின்றேன். அதே கோணத்தில் புனிதத்தன்மை ஏற்றப்பட்டு இங்கு திருக்குறளும் மறை என்று சொல்லப்படுவதாக் இருக்க வாய்ப்புண்டு என்பது என் கருத்து.

 

ஒரு பக்கம் இ.பா போன்றோர் வள்ளுவர் சமணர் என்று சொல்லட்டும். வைணவர்கள் பெருமாள் வழிபாட்டாளர் எனட்டும். சைவர்கள் சிவன்டியார் எனடட்டும். திருச்சி பிஷப் கணேச அய்யரிடம் பணம் கொடுத்து வள்ளுவர் கிருத்துவர் என்று சொல்லவைக்கட்டும்; (He took the money but couldn't prove it, so he returned it to the Bishop - I heard about in BBC Tamilosai) இசுலாமியர் ஏக இறைவனையே வள்ளுவர் தொழுதார் திருக்குறள அவ்விறைவனைப்போற்றவே எனட்டும் இவர்கள் ஆசையில் மண்ணைப்போட நாமார்?

நம்மைப்பொறுத்தவரை இந்த ஒரு நூலாவது தமிழ்மக்களை ஒன்று சேர்க்கட்டும் எனபதுதான்.

மறை என்ற சொல்லில் மட்டுமன்று; ஓதல் என்ற சொல்லும் தவறங்கே என்பதுதான் என் கருத்து. தமிழ்மக்களை ஒன்று சேர்க்கும் ஒரு நற்கருவியை நாடப்படுத்தி அவர்களைப்பிளவு படுத்துவது. இதைத்தமிழகத்தில் நீங்கள் செய்திருந்தால் எதிர்ப்பு கிளப்பியிருக்கும்.

அமெரிக்கா என்றால் கேட்பாருண்டோ?

Tசூழ்நிலைக்கேறப்த்தான் எல்லாம் என்பது தெரிந்தவொன்றே.  நாம் நமது இலக்கியத்தைப்பற்றி வாழ்ந்து மடியும் தலைமுறைக்குச் சொல்லமுடியாது. ஏனெனில் அது பழமையில் ஊறி அப்படியே மடிவது.  எனவே புதிதாக வரும் தலைமுறைக்கு, நாம் வள்ளவர் ஒரு மதத்தவர் அன்று. அவர் தமிழ்மக்களுக்குப் பொது நீதிநூலையே கொடுத்தார் என்றுதான் சொல்லவேண்டும். Catch them young. தொடக்கத்திலே சொன்னால் பின்னர் அது நிலைக்கும். அப்படியே சிலர் அதை மாற்றச்சொன்னாலும் - அவர் சமணரே, வைதீகப்பார்ப்பனரே (பரிமேலழகர் முடிபு) போன்று - புதுத்தலைமுறை உடனே ஏற்காமலும் நிராகரிக்காமலும் - சிந்தித்து ஆராயும்.

​நல்ல, ஏற்றுக்கொள்ளத்தக்க பார்வையே.


சொல்லாடல்கள் வலிமை வாய்ந்தவை என்பார் மொழியிய்லாளர். இன்றைய மோடி அரசு அஃதை உணர்ந்து எல்லா திட்டங்களுக்கும் இந்தியில் பெயர்களைச்சூட்டி இந்திய மக்கள் அனைவர் நாவுகளிலும் அம்மொழி புரளுமானால், ஆங்கில ஆதிக்கத்தை ஒழித்துவிடலாமென நினைத்துச் செயல்படுவது இம்மொழியியலாளர் சொன்னதை நம்பியே.

​இங்கெ என்ன குறிப்பிட வருகின்றீர்கள் என்று புரியவில்லை.  மோடி அரசு செய்வது தேவையானது என்ற கருத்திலா அல்லது தேவையில்லாதது என்ற கருத்திலா?
 

அஃது உண்மைதான். மூளைச்சலவை மொழியாடல்கள் மூலம் பணண் முடியும்.

​உண்மை.​
 

அமெரிக்கவில் உருவாகும் இளைய தமிழ் தலைமுறையை, நாம் திருக்குறளை என்ற் மறையை முற்றோதல் என்று சொல்லிவிட்டால், அவர்கள் இஃதொரு இந்து மறை; இந்துத்தமிழருக்கே என்று சொல்லி, அமைதி அடைவர்.

​இல்லை என்றே கருதுகின்றேன். ஏனெனில் நான் மேலே குறிப்பிட்டவாறு இஸ்லாம் கிறிஸ்துவ மத நூல்களுக்கும் மறை என்ற சொல்​
 
​ நீண்ட காலமாகவே வழக்கில் உள்ளது. மலேசியாவில் 20 ஆண்டுகளுக்கு முன்னிருந்தே வானொலி நிகழ்ச்சிகளில் நான் கேட்டிருக்கின்றேன். இஸ்லாமிய விளக்க நிகழ்ச்சிகளில் புனித நூலை மறை என்ற சொல்லில் குறிப்பிடுவது ஒரு வழக்கமே.

We must mind our language when we propogate; wrong usage will lead to unintended results. Of course if the intention is to make them believe that it is one of the Hindu scriptures, it won't be unintended results but premeditated result. 

​இது நல்ல வரவேற்க்கத்தக்க கருத்தே.

Suba.T.

unread,
Jul 6, 2015, 2:42:21 PM7/6/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-07-06 12:42 GMT+02:00 Banukumar Rajendran <banuk...@gmail.com>:


வைணவர்கள் நிறைந்த குழுமம் அல்லவா இது! பெரும்பாலோருக்கு ஏற்க மனமில்லை என்று
எப்படி சொல்லமுடியும்? :-)
​சமயம் பற்றிய பல்வேறு சிந்தனை கொண்டவர்கள் நிறைந்த குழுமம் இது. அமைதியாக வாசிப்போர் 90%.  எழுதுவோர் ஏனையோர். அதில் எழுதுவோர் வைணவத்தைப் பற்றி விரிவாக எழுத ஆர்வம் கொண்டு எழுதுகின்றார்கள் என்பதுவே உண்மை.  அதிலும் தற்சமயம் தொலைகாட்சியில் ராமானுஜர் சீரியல் வந்து விட்டதல்லவா.. அதுவும் ஒரு சுவாரசியமான விசயமாக இருப்பதால் இந்த நிலை.. ஏனைய சமயக் கருத்துக்களில், அல்லது சமயமற்ற கருத்துக்களில் ஆர்வம் உள்ளோரும் எழுத வேண்டும் என்பதுவே எனது தனிப்பட்ட விருப்பமும். ஆனால் பலர் தங்கள் எண்ணங்களை வெளிப்படையாக எழுதத் தயங்கிக் கொண்டே இருக்கின்றனர். ​

சுபா

Banukumar Rajendran

unread,
Jul 7, 2015, 12:32:46 AM7/7/15
to mint...@googlegroups.com
அம்மையீர், என் பதில் தேவ் ஐயாவிற்காக எழுதியது. தவறாக எழுதவில்லை. யான் என்ன சொல்லவருகிறேன் என்று தேவ் ஐயாவிற்குத் தெரியும். :-)


இரா.பா








 

சுபா

 


இரா.பா




 

தேவ்

-- 

--

Dev Raj

unread,
Jul 7, 2015, 5:45:41 AM7/7/15
to mint...@googlegroups.com
On Monday, 6 July 2015 21:32:46 UTC-7, இரா.பா wrote:
அம்மையீர், என் பதில் தேவ் ஐயாவிற்காக எழுதியது. தவறாக எழுதவில்லை. யான் என்ன சொல்லவருகிறேன் என்று தேவ் ஐயாவிற்குத் தெரியும். :-)

அம்மையார் சரியாகத்தான் எழுதியுள்ளார்.
நான் வைணவம் குறித்தும் எழுதியுள்ளேன்;
சமணச் சிறப்புகளையும் சொன்னேன்;
சைவச் சிறப்புகளையும் சொல்லியுள்ளேன்.
வேளாண்மை குறித்தும் எழுதினேன்.
பலரும் அப்படியே.

ஏனோ வைணவம் மட்டுமே கண்ணில்
படுகிறது என்றால் என்ன செய்ய முடியும் ? 
hipkapi என்று விட்டுவிட வேண்டியதுதான் :))


தேவ்




செல்வன்

unread,
Jul 7, 2015, 10:16:15 AM7/7/15
to mintamil

2015-07-06 0:47 GMT-05:00 Banukumar Rajendran <banuk...@gmail.com>:
பாயிண்ட் மேட் நம்பன்! வேதங்கள் எக்காலத்திலும் மூன்றுதான். தமிழில் வரும் நான்மறை வைதிக வேதத்தைக் குறிக்காது. அப்படித்தான் குறித்தென்றால், அதில் ஒரு பிணக்குண்டு.

மறை எனும் சொல்லின் பெயர்க்காரணம் ஹிந்து வேதங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

அந்தணரிடம் மறைந்து கிடப்பதால் அது மறை.."அந்தணர் மறைத்தே.." என தமிழின் மிகதொன்மையான நூலான சிலம்பு கூறுகிறது

ஸ்ருதி எனும் செங்கிருதபொருளுக்கேற்ப எழுதாக்கிளவி (காதால் ஓதபடுவது. எழுதக்கூடாதது) எனும் தமிழ்ச்சொல் வழங்கப்படுகிறது

நான்மறை பிரம்மனின் வாயில் பிறந்தது என பரிபாடல் கூறுகிறது...இவை வடமொழி வேதம் அல்ல என்றால் பிரம்மனின் நாவில் தோன்றிய வேதங்கள் யாவை?

பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த
நான்மறைக் கேள்வி நவில் குரல் எடுப்ப
ஏம ஆன் துயில் எழிதல் அல்லதை,
வாழிய வஞ்சியும் கோழியும் போலக்
கோழியின் எழாது, எம் பேர் ஊர் துயிலே. பரிபாடல்-திரட்டு 8:7-12



--

செல்வன்

unread,
Jul 7, 2015, 10:17:17 AM7/7/15
to mintamil

2015-07-07 9:15 GMT-05:00 செல்வன் <hol...@gmail.com>:
அந்தணரிடம் மறைந்து கிடப்பதால் அது மறை.."அந்தணர் மறைத்தே.." என தமிழின் மிகதொன்மையான நூலான சிலம்பு கூறுகிறது

தட்டச்சுப்பிழை..மன்னிக்கவும்..தொல்காப்பியம்


--

Bala Sundara Vinayagam

unread,
Jul 7, 2015, 3:30:13 PM7/7/15
to mint...@googlegroups.com
Here is one point to place before here. Not knowing where to insert, as I am not computer saavy, I am doing it here.

In English intellectual sphere, there is an ancient tradition - which is followed wherever British English is in practice.

Words do lend themselves to different meanings and people will quibble over the meanings, as we do here, according to their convenience, in some case, perversion or to win browny points.

English people do face such pandemoniums too. So, their god is OED.  What OED defines is final. OED defintions are relied upon and quoted in judgements by Supreme Courts and High Courts, lower courts too.

For e.g. if a word in a notification on levy of duty on an item, is argued in court by both parties interpreting the meaning of the word, in order to evade or levy, the Judge decide the meaning of the word solely relying upon OED.

இதைப்போலவே தமிழிலிலும் வேண்டும்.  ஓர் அகராதி இருத்தல் வேண்டும். 

ஓதல் என்றால் என்ன பொருள்? மறை என்றால் என்ன பொருள்? என்ற சச்சரவுகளை அவ்வகராதி தீர்க்க வேண்டும். கழகத்தமிழ் அகராதி இருக்கிறது. ஆனால் இன்னும் நிறைய அகராதிகளும் உள. எஃதை எடுப்பது?

இங்கு மறை என்பதற்கு பொதுவாக நான் கேட்ட பொருளைச்சொன்னேன். அது போல ஓதலும். இவ்விரு சொற்களையும் நான் கேட்ட அப்பொதுப்பொருளிலே பிறமத்ததவரும் எடுத்துக்கொண்டுவருகிறார்கள்.  இந்துமதத்தில் அநாதிகாலமாகப் புழங்கும் இவற்றை, இன்று இசுலாமியர், திருக்குரான் ஓதல் என்கிறார்கள். மறை ஓதல் என்கிறார்கள்.  கிருத்துவர்களும் வேதத்தை ஓதுகிறார்கள்.

ரெகுலேஷனில்ல்லாவிட்டால் தடியெடுத்தவென்ல்லாம் தண்டல்காரனாகிவிடுகிறான். 

ஆங்கிலேயரைப் பின்பற்றி தமிழர்கள் ஒரு முடிவுக்கு வரவேண்டும்.  பூனைக்கு மணி கட்டுவது யார்?

ராம் காமேஸ்வரன்

unread,
Jul 7, 2015, 4:01:30 PM7/7/15
to mint...@googlegroups.com
//இன்று இசுலாமியர், திருக்குரான் ஓதல் என்கிறார்கள். மறை ஓதல் என்கிறார்கள்.  கிருத்துவர்களும் வேதத்தை ஓதுகிறார்கள்.//
 
இச் சொற்களுக்கு இதுதான் பொருள் என்று காப்பிரைட்டா போட முடியும்? விவிலியத்தையும் குரானையும் "வேதம்" என்று அழைப்பது வேதத்தின் புராதனத்தையும் பெருமையையும் பறைசாற்றுவதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது.

On Tuesday, July 7, 2015 at 3:30:13 PM UTC-4, Bala Sundara Vinayagam wrote:
 

Megala Ramamourty

unread,
Jul 7, 2015, 4:12:15 PM7/7/15
to மின்தமிழ்
’மறை ஓதுதல்’ என்ற சொல்லைத் திருக்குறள் படிப்பதற்குப் பயன்படுத்தியதில் எந்தத் தெய்வக் குற்றமும் நிகழ்ந்துவிடவில்லை திரு. பாலசுந்தர விநாயகம் அவர்களே. வீணாக விசனப்படாதீர்கள்!  :-)

திருக்குறளை நாம் ’மறை’ என்று அழைப்பது அது மறைபொருள் உடையது என்ற கருத்தில் அன்று. வேதங்கள் என்றாலே உயர்ந்தவை என்றொரு கொள்கை நம் மக்களிடம் (குறிப்பாக அந்தணர்களிடம்) இருக்கின்றதல்லவா? ஒரு குடும்பத்தில் நாம் யார் சொல்லைத் தட்டாமல் நடக்கிறோமோ அவர்கள் சொல்லை ’வேத வாக்கு’ என்று குறிப்பதில்லையா?

வேதங்களினும் உயர்ந்தது திருக்குறளும் அதில் உள்ள கருத்துக்களும். அந்த அடிப்படையில் சூட்டப்பட்ட பெயரே ’தமிழ்மறை’ என்பது. மறைந்திருந்து  படிக்கவேண்டும் என்றோ, மறைபொருள் உடையது என்றோ அதனை வீணாகக் குழப்பிக்கொள்ளத் தேவையில்லை.  :-)

ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியர் தன் இலக்கண நூலில்,

நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப"
என்கிறார்.

ஆம்! அறிவிற்சிறந்த அறிஞர்களின் மொழி மந்திரம்தான். அவை மறைபொருள் கொண்டிருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. அப்படிப்பார்த்தால் திருக்குறளை மறை என்று சொல்வதில் எந்தத் தவறுமில்லை. :-)

அதுபோல், ’திருக்குறள் ஓதுதல்’ என்ற சொற்பயன்பாட்டிலும் தவறேதுமில்லை என்பேன்.

ஓதுதல் என்றால் என்ன ஐயா?
திரும்பத் திரும்பப் படித்தல்தானே! (recitation).

வேதங்களைத்தான் திரும்பத் திரும்பப் படிக்கவேண்டும்; மற்ற நூல்களைப் படிக்கக்கூடாது என்று சட்டம் ஏதும் இருக்கிறதா என்ன?

திருக்குறளைத் திரும்பத் திரும்பப் படித்தல் நற்செயல் தானே? அதைத்தான் அயலகத் தமிழ்க் குழந்தைகள் செய்திருக்கிறார்கள். இதில் ஏன் தங்களுக்கு ஆற்றொணாத் துயரம்?! 

சொல்லப்போனால், திருக்குறளுக்குத் தமிழ்மறை என்று பெயர் சூட்டிய பெருந்தகையாளர்களே தமிழகத் தமிழர்கள்தான்! நீங்கள் பாய்வதனால் அவர்கள் மீதுதானே பாயவேண்டும்!  :-)

அன்புடன்,
மேகலா

செல்வன்

unread,
Jul 7, 2015, 4:12:29 PM7/7/15
to mintamil

2015-07-07 15:01 GMT-05:00 ராம் காமேஸ்வரன் <ram.kam...@gmail.com>:
இச் சொற்களுக்கு இதுதான் பொருள் என்று காப்பிரைட்டா போட முடியும்? விவிலியத்தையும் குரானையும் "வேதம்" என்று அழைப்பது வேதத்தின் புராதனத்தையும் பெருமையையும் பறைசாற்றுவதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது.

அரபி மொழியில் உள்ள பைபிளில் கர்த்தரை அல்லா எனத்தான் எழுதியிருக்கிறார்கள். காரணம் அரபுமொழியில் அல்லா என்றால் கடவுள் எனப்பொருள். கீதையை அரபியில் எழுதினால் கிருஷ்ணனை கூட அல்லா எனத்தான் குறிப்பிடமுடியும்.

இதில் இருந்து நமக்கு தெரிவது என்னவெனில் அரபுமொழியில் கடவுள் என்ற கருத்தாக்கம் பிறந்தபோதே அல்லா அன்றி வேறு கடவுள் அம்மண்ணில், அம்மொழியில் இல்லை என்பதே.

அதேபோல தமிழ்மொழியில் புனிதநூல்களைக்குறிக்க மறை, எழுதாக்கிளவி எனும் சொற்றொடர் மட்டுமே இருப்பது தமிழ்மண்ணில் புனிதநூல் எனும் கருத்தாக்கம் பிறக்கையில் வடமொழி வேதங்களையன்றி வேறொரு புனிதநூல் தமிழ்மண்ணில் அன்று இருக்கவில்லையென்பதே

கர்த்தரை அரபியில் அல்லா எனக்கூறுவது போல இங்கே விவிலியத்தையும், குரானையும் மறைநூல் என இன்று கூறலாம். காரணம் அம்மொழியில் இவை பொதுச்சொற்கள் ஆகிவிட்டன. ஆனால் துவக்கத்தில் அப்படி இல்லை என்பதுக்கும் இதுவே சான்று


--

செல்வன்

unread,
Jul 7, 2015, 4:16:53 PM7/7/15
to mintamil

2015-07-07 15:12 GMT-05:00 Megala Ramamourty <megala.r...@gmail.com>:
நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப"
என்கிறார்.

ஆம்! அறிவிற்சிறந்த அறிஞர்களின் மொழி மந்திரம்தான். அவை மறைபொருள் கொண்டிருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. அப்படிப்பார்த்தால் திருக்குறளை மறை என்று சொல்வதில் எந்தத் தவறுமில்லை. :-)


குறள் எழுதப்பட்ட காலத்தில் மறை எனும் சொல் பொதுவான பெயர்ச்சொல்லாக ஆகிவிட்டது. இன்று குரானையும், விவிலியத்தையும் மறை, வேதம் என கூறுகிறோம். அதற்காக வேதம் எனும் சொல் இந்நூல்களை ஆதியில் குறித்தது எனப்பொருள் இல்லை. ஜெராக்ஸ் என்பது முதலில் ஒரு கம்பனியை குறித்து பின்னாளில் போட்டோகாபியிங் என்பதற்கே பொதுவான பெயர்ச்சொல்லாக மாறியதைக்காண்கிறோம். இதுவும் அவ்வாறே!

--

N. Ganesan

unread,
Jul 8, 2015, 4:54:19 AM7/8/15
to mint...@googlegroups.com, vallamai


On Monday, July 6, 2015 at 11:34:31 AM UTC-7, Suba.T. wrote:

 
 
எனது ஆதங்கம் என்றில்லை. தமழகத்தில் இப்படி சொல்ல அதைத் தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ள பள்ளிச்சிறார்களுக்கு அப்படியே வள்ளுவர் என்று சொல்ல தங்கள்தங்கள் மதங்களைத்தாண்டி வள்ளுவரை ஒரு சார்புநிலையில்லா எல்லாருக்கும் பொதுவான ஆசிரியராக எடுத்துக்கொள்ள, குமரியில் நெடிதுயர்ந்த சிலையொன்றை எழுப்பி எங்கள் ஐயன் இவர் தமிழர் அனைவருக்குமானவர் என மற்றவருக்கு எடுத்துக்காட்டி பெருமையடைய,  

​வள்ளுவருக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் சிலையின் வடிவம் அவரது உண்மையான் அஎண்ண ஓட்டத்தை பிரதிபலிப்பதில்லை என்ற எண்ணம் எனக்கு தனிப்பட்ட வகையில் உண்டு. 

மயிலை திருவள்ளுவர் கோவிலில் 1940-களுக்கு முன்பிருந்தது வள்ளுவர் திருவடிகளே. இப்போதுள்ள சித்தர் உருவம் இல்லை.
பின்னர் கொண்டுவந்து நாட்டப்பட்டது. ஏதோ சைவக் கோவிலில் இருந்த சைவ சித்தர் சிலை என்று இந்த மாற்றம் பார்த்தவர்கள்
பதிவு செய்துள்ளனர். உ-ம்: ஜீவபந்து டி. எஸ். ஸ்ரீபால். இதுவே பின்னர் வள்ளுவர் கோட்டம், குமரி வள்ளுவருக்கு
மாதிரியாக விளங்கும் சைவசித்தர். திராவிட இயக்க கட்சிகள் பூணூலையும், திருநீற்றையும் அகற்றிவிட்டன.

இந்தியாவின் தொன்மை வரலாற்றை அறிய ஆர்க்கியாலஜியில் சிந்துவெளிக் கண்டுபிடிப்பையும்,
மொழியியலில் இந்தோ-ஆரிய குடும்பம், திராவிட மொஇழிகளின் குடும்பம் பற்றிய கண்டுபிடிப்பையும்
சொல்வர். திராவிட மொழிக்குடும்பம் பற்றி ஆராய்ந்து தேற்றம் தந்தவர் பிரான்சிஸ் எல்லிஸ்.
அவர் திருவள்ளுவரைச் சமணர்கள் வழிபடும் திருவுருவை பொற்காசாக வெளியிட்டுள்ளார்.
அதன் ஓவியம் இங்கே. திருக்குறளில் உள்ள செய்திகளுக்கு இப் பழைய உருவம் பொருந்துகிறது.

நா. கணேசன்

 









 





 
ஆனால் அங்கே அவரின் நூலை மறை ஓதல் என்று சொல்லி, பிரபந்தம் ஓதல், வேதம் ஓதல், தேவாரமுற்றோதல் என்று ஒரு மதத்தின் சொல்லாடலை வைத்து தொடங்கினால் எங்கே போய்விடும்? என்பதுதான் என் கேள்வி. 

Dev Raj

unread,
Jul 8, 2015, 10:17:42 AM7/8/15
to mint...@googlegroups.com
On Sunday, 5 July 2015 22:47:06 UTC-7, இரா.பா wrote:
......வேதங்கள் எக்காலத்திலும் மூன்றுதான். தமிழில் வரும் நான்மறை வைதிக வேதத்தைக் குறிக்காது. அப்படித்தான் குறித்தென்றால், அதில் ஒரு பிணக்குண்டு. 
சங்கப் பாடல்களை மிக பிறப்பட்டனவென கொள்ள நேரிடும். வைதிக வேதங்கள் நான்காக மாறியது பின்னாளில், நிச்சயம் கி.பி. ஆறாம் நூற்றாண்டிற்கு முன் இருந்திருக்கமுடியாது.



தொல்காப்பியப் பாயிரத்திற்கு உரை எழுதிய பனம்பாரனார் தமது சிறப்புப் பாயிரத்தில்

நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து
அறங்கரை நாவின் நான்மறை முற்றிய
அதன்கோட்டாசாற்கு அகில் தபத்தெரிந்து

பாண்டியனுக்கும் அவையோர்க்கும் ஆசான் உயர்ந்தோன் என்பது தோன்ற அவர்க்குக் கூறிய போக்கறு பனுவல் என்னும் அடை கூறாமல் அறங்கரை நாவின் நான்மறை முற்றிய ஆசான் என அடையினை வேறு கூறினார்.

அறங்கரை நாவினான் என்றமையானே ஆசானது நா அறம் அல்லன வழுக்கியும் உரையாமை பெறப்பட்டது. பாண்டியன் அவையத்துத் தலைமை வாய்ந்தமையானே. தமிழ்ப் புலமை கூறாமையே பெறப்படலின், வடமொழிப் புலமையும் மறையும் நிரம்பிய அந்தணனாம் என்பது விளங்க நான்மறை முற்றிய ஆசான் என்றார்.

நான்கு கூறுமாய் மறைந்த பொருளும் உடைமையான் நான்மறை என்றார். அவை தைத்திரியமும், பௌடிகமும், தலவாகாரமும், சாமவேதமும் ஆம்.

இனி இருக்கும் யசுவும் சாமமும் அதர்வணமும் ஆகாவோ எனின், அவை அதங்கோட்டாசிரியர்க்கும் தொல்காப்பியனார்க்கும் பிற்காலத்தினராகிய வியாசமுனிவரால் சில்வாழ்நாள் பல்பிணிச் சிற்றறிவினோர்க்குப் பயன்படுமாறு முன்னுள்ள மறையுள் சிலவற்றை நான்கு கூறாகச் செய்யப்பட்டமையான் ஆகா என்பது.

[tvu]

பனம்பாரனார் :

Dev Raj

unread,
Jul 8, 2015, 10:24:29 AM7/8/15
to mint...@googlegroups.com
மறை என்பது நான்கு தான்.
வேள்வித் தேவைகளுக்குப் பயனாகும் தன்மையால்
முதல் மூன்று வேதங்களின் தொகுதியை ‘த்ரயீ’ என
மொழிவர், ‘பாரத: பஞ்சமோ வேத:’ எனும் கணக்கில்
மறை ஐந்து என்றும் சொல்லலாம்.

எல்லாக் கூறுகளையும் பிற சமயங்களோடு ஒப்பிட்டே ஆக வேண்டும்
என்று கட்டாயமில்லை. 


தேவ்

Dev Raj

unread,
Jul 8, 2015, 12:11:08 PM7/8/15
to mint...@googlegroups.com
On Tuesday, 7 July 2015 07:16:15 UTC-7, செல்வன் wrote:
மறை எனும் சொல்லின் பெயர்க்காரணம் ஹிந்து வேதங்களுக்கு மட்டுமே பொருந்தும்.


உண்மைதான் செல்வன். மறை , சந்தஸ் எனும் பெயர்கள் எழுதாக்கிளவிக்கு
உரிய சிறப்புப் பெயர்கள்; ஆனால் காலப்போக்கில்  சிறப்புப் பெயர்கள் 
பொதுப் பெயர்களாவதும், பொதுப்பெயர்களைச் சிறப்புப் பெயர்களாக
மக்கள் எண்ணத் தொடங்குவதும்  இயற்கையே.

ஆழ்வார், நாயனார், வள்ளலார் , அருக, புத்த - இவை பொதுப் பெயர்கள்;
ஒரு குறிப்பிட்ட குழுவினரின் நீடித்த பயன்பாட்டின் மிகுதியால் இவை
சிறப்புப் பெயர்களாகி விடுகின்றன.


தேவ்

Bala Sundara Vinayagam

unread,
Jul 9, 2015, 2:16:00 PM7/9/15
to mint...@googlegroups.com
I shall reply to you later. Now only this:

நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப" 

இக்குறள் மந்திரம் என்ற வடமொழிச்சொல்லை உடையது.  வள்ளுவர் பலவடமொழிச்சொற்களைக் கையாண்டவர். அவரின் மறை என்ற சொல் பிராமணரர்கள் ஓதும் வேதத்தையே குறிப்பது. வேதங்கள் மந்திரங்கள். மந்திரங்கள் மறைபொருட்களே. 

பார்ப்பான் குலவொழுக்கம் கெடும் என்று முடியும் குறட்பாவில், தனிநபர் ஒழுக்கத்தை மேலே வைத்து மதவழிச்சடங்குகளைப்பின் தள்ளுகிறார். மறைகள் ஓதும் பார்ப்ப்னர் அப்படி ஓதும்போது செய்யும் தவ்றுகளைத் திருத்திக்கொள்ளலாம். வாழ்க்கை ஒழுக்கஙங்களைத் தவிற்விட்டால், பார்ப்ப்னரின் பிறப்பு ஒழுக்கமே கெடுமென்கிறார். பிறப்புடன் ஒழுக்கத்தை இணைத்தவர் இவர். பிறப்புடன் கல்வியை இணைத்தவர் அவ்வையார். குலவித்தை கல்லாமல் பாகம்படும் என்றார்.

அனைவருக்கும் தெரியா புரியா  மந்திரங்களுக்கு சக்திகள் உள என்பது வைதீக மதம்.  ஓம் என்ற மந்திர்த்தின் பொருள் மக்களுக்குத் தெரியாது. பிராமணருக்கே தெரியும். ஆனால் அதற்கு பெரும் சக்தி உண்டு என்பது தெரியும். அம்மந்திரம் சரியாக ஓதப்பட்டால் இறைவனைச்சென்ற்டையும் என்பது வைதீகரின் நம்பிக்கை. 

அச்சக்திகளைக்கொண்ட மந்திரங்களுக்கு நிறைமொழி மாந்தர் ஆணையிற்கிளந்த் மொழிகளை ஒப்பிடுகிறார்.

எனவே மறை என்றால் மறைந்திருக்கும் மந்திரங்களைக்குறிப்பிடுகிறது. 

Suba.T.

unread,
Jul 9, 2015, 3:33:59 PM7/9/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-07-09 20:15 GMT+02:00 Bala Sundara Vinayagam <balasundar...@gmail.com>:
I shall reply to you later. Now only this:

நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப" 

இக்குறள் மந்திரம் என்ற வடமொழிச்சொல்லை உடையது.  வள்ளுவர் பலவடமொழிச்சொற்களைக் கையாண்டவர். அவரின் மறை என்ற சொல் பிராமணரர்கள் ஓதும் வேதத்தையே குறிப்பது. வேதங்கள் மந்திரங்கள். மந்திரங்கள் மறைபொருட்களே. 

பார்ப்பான் குலவொழுக்கம் கெடும் என்று முடியும் குறட்பாவில், தனிநபர் ஒழுக்கத்தை மேலே வைத்து மதவழிச்சடங்குகளைப்பின் தள்ளுகிறார். மறைகள் ஓதும் பார்ப்ப்னர் அப்படி ஓதும்போது செய்யும் தவ்றுகளைத் திருத்திக்கொள்ளலாம். வாழ்க்கை ஒழுக்கஙங்களைத் தவிற்விட்டால், பார்ப்ப்னரின் பிறப்பு ஒழுக்கமே கெடுமென்கிறார். பிறப்புடன் ஒழுக்கத்தை இணைத்தவர் இவர். பிறப்புடன் கல்வியை இணைத்தவர் அவ்வையார். குலவித்தை கல்லாமல் பாகம்படும் என்றார்.

அனைவருக்கும் தெரியா புரியா  மந்திரங்களுக்கு சக்திகள் உள என்பது வைதீக மதம்.  ஓம் என்ற மந்திர்த்தின் பொருள் மக்களுக்குத் தெரியாது. பிராமணருக்கே தெரியும். ஆனால் அதற்கு பெரும் சக்தி உண்டு என்பது தெரியும். அம்மந்திரம் சரியாக ஓதப்பட்டால் இறைவனைச்சென்ற்டையும் என்பது வைதீகரின் நம்பிக்கை. 

அச்சக்திகளைக்கொண்ட மந்திரங்களுக்கு நிறைமொழி மாந்தர் ஆணையிற்கிளந்த் மொழிகளை ஒப்பிடுகிறார்.

எனவே மறை என்றால் மறைந்திருக்கும் மந்திரங்களைக்குறிப்பிடுகிறது. 

​திரு.பாலசுந்தர விநாயகம்

தங்களது பதிவுகளை பார்க்கின்றேன்.
தமிழகத்தில் தமிழர்கள் வலிந்து பேசும் ஆங்கிலம் கலந்த நடைமுறை பேச்சு போன்ற ஒரு நடைமுறையை  பயன்படுத்துகின்றீர்கள். 
நான் மொழித்தூய்மைவாதம் பேசும் நபர் அல்ல. ஆயினும் இந்தப் போக்குச் சரியானதொன்றாக என்னால் காண முடியவில்லை.

ஒன்று .. பதிவு முழுதும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும். 
இல்லையேல் பதிவு முழுதும் தமிழில் இருக்க வேண்டும். 

இதனை விட்டு ஆங்காங்கே ஆங்கிலத்தை சேர்ப்பது என்பது ஒரு குழப்ப நிலை போன்றும்.. வலிந்து தன்னை தனிப்படுத்திக் காட்டிக் கொள்ள செய்யும் முயற்சி போலவும் உள்ளது.

மட்டுறுத்துனர் நிலையிலிருந்து சொல்லவில்லை. தனி வாசகராகச் சொல்கின்றேன். எனக்கு இவ்வகை பதிவுகளை வாசிக்கும் போது மனதில் ஒரு வித சங்கடமான உணர்வே தோன்றுகின்றது.

டோய்ச் பேசினால் அதனை முழுதாகச் சரியாகப் பேச வேண்டும்
ஆங்கிலம் பேசினால் அதனை முழுதாகச் சரியாகப் பேச வேண்டும்
தமிழ் பேசினால் அதனை முழுதாகச் சரியாகப் பேச வேண்டும்
ப்ரென்ச் பேசினால் அதனை முழுதாகச் சரியாகப் பேச வேண்டும்

​என

இப்படி ஒரு போக்கை கடைபிடிக்கும் எனக்கு இப்படி கலந்து செய்யும் போக்கு ஒரு விதத்தில் அக்கறையில்லா போக்கின் வெளிப்பாடு போல தெரிகின்றது.

உங்களுக்கு தமிழும் ஆங்கிலமும் நன்கு எழுத வரும் என்பதில் எனக்கு ஒரு சிறிதும் சந்தேகமில்லை.  ஆனால் இந்த கலந்து போடும் பதிவுகள் பார்க்க சங்கடமாகவே உள்ளது. தமிழகத்து டிவி சேனல்களைப் பார்த்துமனம் சங்கடப்படுவது போன்றே பல வேளைகளில் உங்கள் எழுத்தை வாசிக்கும் போது உணர்கின்றேன்.

மீண்டும் சொல்கின்றேன்.. மட்டுறுத்துனர் நிலையிலிருந்து சொல்லவில்லை. தனி வாசகராக இந்த போக்கை விமர்சிக்கிறேன் அவ்வளவே. 

சுபா

Hari Krishnan

unread,
Jul 9, 2015, 10:03:18 PM7/9/15
to mintamil

2015-07-09 23:45 GMT+05:30 Bala Sundara Vinayagam <balasundar...@gmail.com>:
நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப" 

இக்குறள் மந்திரம் என்ற வடமொழிச்சொல்லை உடையது.  வள்ளுவர் பலவடமொழிச்சொற்களைக் கையாண்டவர். அவரின் மறை என்ற சொல் பிராமணரர்கள் ஓதும் வேதத்தையே குறிப்பது. வேதங்கள் மந்திரங்கள். மந்திரங்கள் மறைபொருட்களே.

இப்படி ஒரு திருக்குறள் எந்த அதிகாரத்தில் வருகிறது ஐயா?  கற்றுக் கொள்ள ஆவலாக இருக்கிறேன்.


--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

Banukumar Rajendran

unread,
Jul 9, 2015, 11:46:42 PM7/9/15
to mint...@googlegroups.com
2015-07-10 7:33 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:

2015-07-09 23:45 GMT+05:30 Bala Sundara Vinayagam <balasundar...@gmail.com>:
நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப" 

இக்குறள் மந்திரம் என்ற வடமொழிச்சொல்லை உடையது.  வள்ளுவர் பலவடமொழிச்சொற்களைக் கையாண்டவர். அவரின் மறை என்ற சொல் பிராமணரர்கள் ஓதும் வேதத்தையே குறிப்பது. வேதங்கள் மந்திரங்கள். மந்திரங்கள் மறைபொருட்களே.

இப்படி ஒரு திருக்குறள் எந்த அதிகாரத்தில் வருகிறது ஐயா?  கற்றுக் கொள்ள ஆவலாக இருக்கிறேன்.


:-))))


 


--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

--

Nagarajan Vadivel

unread,
Jul 9, 2015, 11:55:38 PM7/9/15
to மின்தமிழ்

2015-07-10 9:16 GMT+05:30 Banukumar Rajendran <banuk...@gmail.com>:
இப்படி ஒரு திருக்குறள் எந்த அதிகாரத்தில் வருகிறது ஐயா?  கற்றுக் கொள்ள ஆவலாக இருக்கிறேன்.

​எதோ ஒரு பேச்சுக்குச் சொன்னா குறுட்டாம்போக்கில் அப்படி ஒரு குறள் வள்ளுவர் எழுதாமலா விட்டிருப்பார் என்ற நம்பிக்கையில் எழுதுனா இப்படியெல்லாம் குடச்சல் கொடுக்கலாமா.  திருவிளையாடல் தருமி கணக்குமாதிரி பிழைக்கு வேண்டியதைச் குறைச்சுக்காம நக்கீர தர்பார் நடதுனா எங்கமாதிரியானவர்கள் பிழைப்பு எப்புடி நடக்கும்
கொஞ்சம் கருணை காட்டுங்கய்யா நல்லயிருப்பீங்க

இணையமுனி

இணையமுனி​

துரை.ந.உ

unread,
Jul 9, 2015, 11:57:06 PM7/9/15
to Groups
2015-07-10 9:16 GMT+05:30 Banukumar Rajendran <banuk...@gmail.com>:


2015-07-10 7:33 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:

2015-07-09 23:45 GMT+05:30 Bala Sundara Vinayagam <balasundar...@gmail.com>:
நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப" 

இக்குறள் மந்திரம் என்ற வடமொழிச்சொல்லை உடையது.  வள்ளுவர் பலவடமொழிச்சொற்களைக் கையாண்டவர். அவரின் மறை என்ற சொல் பிராமணரர்கள் ஓதும் வேதத்தையே குறிப்பது. வேதங்கள் மந்திரங்கள். மந்திரங்கள் மறைபொருட்களே.

இப்படி ஒரு திருக்குறள் எந்த அதிகாரத்தில் வருகிறது ஐயா?  கற்றுக் கொள்ள ஆவலாக இருக்கிறேன்.


:-))))

​:)​


 


--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

தேமொழி

unread,
Jul 10, 2015, 12:26:48 AM7/10/15
to mint...@googlegroups.com, vce.pr...@gmail.com
அவர் எழுதிய நேரம்... அவர் ஊரில் உறங்கச் செல்லும் நேரமாக இருந்திருக்கலாம்.

அதிகாரம்: நீத்தார் பெருமை குறள் 
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும். (குறள்: 28)


என்பது 

"நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப". (தொல்காப்பிய நூற்பா: 1484 )


Hari Krishnan

unread,
Jul 10, 2015, 12:43:26 AM7/10/15
to mintamil, துரை. ந. உ
2015-07-10 9:56 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
அவர் எழுதிய நேரம்... அவர் ஊரில் உறங்கச் செல்லும் நேரமாக இருந்திருக்கலாம்.

அதிகாரம்: நீத்தார் பெருமை குறள் 
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும். (குறள்: 28)

மிக்க நன்றி அம்மணி.  மிகமிக அரிய தகவல். 


என்பது 

"நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப". (தொல்காப்பிய நூற்பா: 1484 )

ஓ.... அப்படியா...  அப்ப பாலசுந்தர வினாயகம் அய்யா


இக்குறள் மந்திரம் என்ற வடமொழிச்சொல்லை உடையது.  வள்ளுவர் பலவடமொழிச்சொற்களைக் கையாண்டவர். அவரின் மறை என்ற சொல் பிராமணரர்கள் ஓதும் வேதத்தையே குறிப்பது. வேதங்கள் மந்திரங்கள். மந்திரங்கள் மறைபொருட்களே.

அப்படின்னு விலாவாரியா விளக்கியிருக்காருங்களே, மந்திரம் அப்படிங்கற சொல்லு எந்தக் குறள்ள வருதுங்க அம்மிணி?  

அறியாமையைப் போக்கியுதவ வேண்டும்.

Hari Krishnan

unread,
Jul 10, 2015, 12:46:07 AM7/10/15
to mintamil

2015-07-10 9:25 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
திருவிளையாடல் தருமி கணக்குமாதிரி பிழைக்கு வேண்டியதைச் குறைச்சுக்காம நக்கீர தர்பார் நடதுனா எங்கமாதிரியானவர்கள் பிழைப்பு எப்புடி நடக்கும்
கொஞ்சம் கருணை காட்டுங்கய்யா நல்லயிருப்பீங்க

நான் கேக்க வேண்டியத ஐயா கேக்கறீங்க.  ஏதோ நீளநீளமா விளக்கியிருக்காரே நாம கேள்விப்படாததா இருக்கேன்னு ஒரு சந்தேகத்த கேக்க வந்தேன்.  எப்பல்லாம் இப்படி சந்தேகம் கேக்கறேனோ அப்பல்லாம் குடைச்சல் கொடுக்கறேன்னு சொல்லிக்கிட்டிருந்தா நான் எப்பத்தான் கத்துக்குறதுங்க ஐயா.

தேமொழி

unread,
Jul 10, 2015, 1:34:20 AM7/10/15
to mint...@googlegroups.com, hari.har...@gmail.com
திரு. ஹரிகி உங்களுக்குத் தெரியாது என்பது போல நினைத்து நான் பதில் சொல்லவில்லையே  

benefit of the doubt கொடுத்து,  அவர் அந்த தொல்காப்பிய வரிகளையும் திருக்குறள் வரிகளையும் குழப்பிக் கொண்டிருக்கிறார் போலிருகிறது என்று காட்டுவது மட்டுமே என் நோக்கம்.

தெரியாதவர்களும் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாகவும்  அமையும்.

ஐயா குழப்பிக் கொள்கிறீர்களே, இதுவே நீங்கள் கூற நினைத்த குறள் என்று சொல்வதும் கருத்து சொல்வதில் மற்றொரு வகை  அல்லவா.  

தவறுவது மனித இயல்புதானே .  

..... தேமொழி 

Hari Krishnan

unread,
Jul 10, 2015, 2:00:58 AM7/10/15
to mintamil

2015-07-10 11:04 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
தெரியாதவர்களும் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாகவும்  அமையும்.

ஐயா குழப்பிக் கொள்கிறீர்களே, இதுவே நீங்கள் கூற நினைத்த குறள் என்று சொல்வதும் கருத்து சொல்வதில் மற்றொரு வகை  அல்லவா.  

தவறுவது மனித இயல்புதானே .  

ஆமாமுங்க.  இப்ப பாருங்க....


2015-07-08 1:42 GMT+05:30 Megala Ramamourty <megala.r...@gmail.com>:
ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியர் தன் இலக்கண நூலில்,

நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப"
 என்கிறார். 

ஆம்! அறிவிற்சிறந்த அறிஞர்களின் மொழி மந்திரம்தான். அவை மறைபொருள் கொண்டிருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. அப்படிப்பார்த்தால் திருக்குறளை மறை என்று சொல்வதில் எந்தத் தவறுமில்லை. :-)

அப்படின்னு மேகலா அம்மிணி எட்டாந் தேதியன்னிக்கு எழுதியிருக்காங்க.  அதுக்கு பதில் சொல்றப்பதான் பாலசுந்தர வினாயகமய்யா--

I shall reply to you later. Now only this:
நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப" 
இக்குறள் மந்திரம் என்ற வடமொழிச்சொல்லை உடையது.  வள்ளுவர் பலவடமொழிச்சொற்களைக் கையாண்டவர். அவரின் மறை என்ற சொல் பிராமணரர்கள் ஓதும் வேதத்தையே குறிப்பது. வேதங்கள் மந்திரங்கள். மந்திரங்கள் மறைபொருட்களே. 

ஒனக்கு அப்பறமா பதில் சொல்றேன், இப்ப இது மட்டும்னு சொல்லிட்டு, திருத்தமா இது திருக்குறள்னு விளக்கியிருக்கார்னா, மேகலா அம்மிணி தப்பா சொல்லியிருக்காங்க, அய்யா திருத்தியிருக்காங்கன்னுதானுங்களே அம்மிணி அர்த்தமாவுது?

அதான் சந்தேகம் கேட்டேனுங்க  இப்ப பாருங்க, இத பெரிய எடத்துல தவற வுட்டுட்டீங்களோ?  இதுவும் இயற்கைதானுங்கோ.

Nagarajan Vadivel

unread,
Jul 10, 2015, 3:27:57 AM7/10/15
to மின்தமிழ்
முன்னர் இருமுறை அவரிடம் நீங்கள் கேட்டதுபோல் (இவ்வளவு அவையடக்கத்துடன் அல்ல) கேட்டேன்.  அவர் விடை கூறாமல் தாண்டிச் சென்றுவிட்டார்.  நானும் எனக்கு இவ்வளவுதான் மரியாதை என்று அடங்கிவிட்டேன்.  அவர் விலாவாரியாக தமிழர்களைப்பற்றி அவர்களின் குறபாடுகளைப்பற்றி பட்டியலிட்டு எழுதுகிறார்.  ஆண்டாளைக்கொன்றது அவரது தந்தையே என்று அடித்து எழுதியபின் அவரைப் பார்த்தாலே எனக்கு ஒரு அச்ச உணர்வு வருகிறது
அவர் தான் எழுதுவ்தைப் படித்து அமைதிகொள் என்று சொல்லாமல் சொல்லுகிறார்போல் தோன்றுகிறது.
உங்கள் ஐயத்துக்கு அவர் விடையளித்தால் உங்களைவிட ஃதிக்ம் மகிழ்ச்சிகொள்பவன் நானாகத்தான் இருப்பேன்
இணையமுனி

--

Bala Sundara Vinayagam

unread,
Jul 10, 2015, 2:38:06 PM7/10/15
to mint...@googlegroups.com
//டோய்ச் பேசினால் அதனை முழுதாகச் சரியாகப் பேச வேண்டும்
ஆங்கிலம் பேசினால் அதனை முழுதாகச் சரியாகப் பேச வேண்டும்
தமிழ் பேசினால் அதனை முழுதாகச் சரியாகப் பேச வேண்டும்
ப்ரென்ச் பேசினால் அதனை முழுதாகச் சரியாகப் பேச வேண்டும்//

நீங்கள் சொல்லவந்த கருத்து ஓரிரு வரிகளில் முடித்திருக்கலாம். 

தமிழில் மட்டுமே எழுதவும். ஆங்கிலமும் தமிழும் கலந்த நடை உவப்பன்று.

இதைத்தானே சொல்ல வந்தீர்கள்? ஆனால் நீங்கள் கீழே எழுதியதைப் பாருங்கள்

டோய்ச் பேசினால் அதனை முழுதாகச் சரியாகப் பேச வேண்டும்
ஆங்கிலம் பேசினால் அதனை முழுதாகச் சரியாகப் பேச வேண்டும்
தமிழ் பேசினால் அதனை முழுதாகச் சரியாகப் பேச வேண்டும்
ப்ரென்ச் பேசினால் அதனை முழுதாகச் சரியாகப் பேச வேண்டும்

நான்குவரிகளில் என்ன தெரிகிறது? தமிழில் பேசினால் முழவதும் தமிழிலும்; ஆங்கிலத்தில் என்றால் முழுவதும் ஆங்கிலத்தில்,  பிரெஞ்சி மொழியில் பேசினால் முழுவது பிரெஞ்சிலும் பேசவேண்டும்.

எனக்கு இது சரியாகத்தோன்றவில்லை.  காரணம்: தமிழில் மட்டுமே இங்கெழுத வேண்டுமென்பதே சரி. ஆங்கிலத்திலும் எழுதலாம்; ஆனால் சரியாக எழுதவேண்டுமென்பது போல இருக்கிறது.  ஆங்கிலத்திலோ வேறெந்த மொழியிலோ எழுதக்கூடாது. ஆனால் மேற்கோள்கள் காட்டலாம்.

//சரியாகப்பேசவேண்டுமெனப்தும்// எனக்கு உதைக்கிறது. காரணம்: பலருக்குத் தமிழ் சரியாக வராது. அவர்கள் இங்கெழுதக்கூடாதென்பதைப்போல இருக்கிறது.  

ஒரு தடவை நான் ஒரு ஆங்கிலப்பத்திரிக்கையில் வேலைபார்த்த போது, ஒரு பள்ளிச்சிறுமியில் கடிதம் வந்தது. லெட்டர் டு த எடிட்டர்.  இலக்கணப்பிழைகள் இருந்தன. குழந்தை 5 ஆம் வகுப்பு மாணவி.  ஆசிரியர் அக்கடிதத்தை அப்படியே வெளியிடச்சொல்லி அப்படியே வந்தது. வாசகர்கள் பாராட்டினார்கள். கடிதத்தில் கூறப்பட்ட விண்ணப்பம் அரசுக்கு வைக்கப்பட்டிருந்தது. குடிப்பழக்கத்தை எதிர்த்து. உணர்ச்சிகளும் கருத்துக்களுக்குமே முதலிடம்.

ஆக, திருமதி சுபா அவர்களே, நான் திமிராக பேசியதான நினைக்கவேண்டா.  தமிழில் எழுதவேண்டும். முடிந்தவரை சரியாக என்று முடித்து விட்டால் வெகுநன்று. காரணம்: எனக்கு இலக்கணம் அவ்வளவு வராது. சரியாக என்றால் நான் அவுட் !

நான் இங்கு எழுதப்போவது இன்னும் சில நாட்களே. என் சபாட்டிக்கல் முடிவுக்கு வர ஒரு பத்துநாட்கள் இருக்கலாம். பின்னர் என்னால் தமிழ் நூல்கள் படிக்கமுடியாது. எங்கே விவாதம் பண்ணமுடியும்?

Suba.T.

unread,
Jul 10, 2015, 3:14:37 PM7/10/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-07-10 20:38 GMT+02:00 Bala Sundara Vinayagam <balasundar...@gmail.com>:
//டோய்ச் பேசினால் அதனை முழுதாகச் சரியாகப் பேச வேண்டும்
ஆங்கிலம் பேசினால் அதனை முழுதாகச் சரியாகப் பேச வேண்டும்
தமிழ் பேசினால் அதனை முழுதாகச் சரியாகப் பேச வேண்டும்
ப்ரென்ச் பேசினால் அதனை முழுதாகச் சரியாகப் பேச வேண்டும்//

நீங்கள் சொல்லவந்த கருத்து ஓரிரு வரிகளில் முடித்திருக்கலாம். 

தமிழில் மட்டுமே எழுதவும். ஆங்கிலமும் தமிழும் கலந்த நடை உவப்பன்று.

இதைத்தானே சொல்ல வந்தீர்கள்? ஆனால் நீங்கள் கீழே எழுதியதைப் பாருங்கள்

டோய்ச் பேசினால் அதனை முழுதாகச் சரியாகப் பேச வேண்டும்
ஆங்கிலம் பேசினால் அதனை முழுதாகச் சரியாகப் பேச வேண்டும்
தமிழ் பேசினால் அதனை முழுதாகச் சரியாகப் பேச வேண்டும்
ப்ரென்ச் பேசினால் அதனை முழுதாகச் சரியாகப் பேச வேண்டும்

நான்குவரிகளில் என்ன தெரிகிறது? தமிழில் பேசினால் முழவதும் தமிழிலும்; ஆங்கிலத்தில் என்றால் முழுவதும் ஆங்கிலத்தில்,  பிரெஞ்சி மொழியில் பேசினால் முழுவது பிரெஞ்சிலும் பேசவேண்டும்.

எனக்கு இது சரியாகத்தோன்றவில்லை.  காரணம்: தமிழில் மட்டுமே இங்கெழுத வேண்டுமென்பதே சரி. ஆங்கிலத்திலும் எழுதலாம்; ஆனால் சரியாக எழுதவேண்டுமென்பது போல இருக்கிறது.  ஆங்கிலத்திலோ வேறெந்த மொழியிலோ எழுதக்கூடாது. ஆனால் மேற்கோள்கள் காட்டலாம்.

//சரியாகப்பேசவேண்டுமெனப்தும்// எனக்கு உதைக்கிறது. காரணம்: பலருக்குத் தமிழ் சரியாக வராது. அவர்கள் இங்கெழுதக்கூடாதென்பதைப்போல இருக்கிறது.  

ஒரு தடவை நான் ஒரு ஆங்கிலப்பத்திரிக்கையில் வேலைபார்த்த போது, ஒரு பள்ளிச்சிறுமியில் கடிதம் வந்தது. லெட்டர் டு த எடிட்டர்.  இலக்கணப்பிழைகள் இருந்தன. குழந்தை 5 ஆம் வகுப்பு மாணவி.  ஆசிரியர் அக்கடிதத்தை அப்படியே வெளியிடச்சொல்லி அப்படியே வந்தது. வாசகர்கள் பாராட்டினார்கள். கடிதத்தில் கூறப்பட்ட விண்ணப்பம் அரசுக்கு வைக்கப்பட்டிருந்தது. குடிப்பழக்கத்தை எதிர்த்து. உணர்ச்சிகளும் கருத்துக்களுக்குமே முதலிடம்.

ஆக, திருமதி சுபா அவர்களே, நான் திமிராக பேசியதான நினைக்கவேண்டா.  தமிழில் எழுதவேண்டும். முடிந்தவரை சரியாக என்று முடித்து விட்டால் வெகுநன்று. காரணம்: எனக்கு இலக்கணம் அவ்வளவு வராது. சரியாக என்றால் நான் அவுட் !

நான் இங்கு எழுதப்போவது இன்னும் சில நாட்களே. என் சபாட்டிக்கல் முடிவுக்கு வர ஒரு பத்துநாட்கள் இருக்கலாம். பின்னர் என்னால் தமிழ் நூல்கள் படிக்கமுடியாது. எங்கே விவாதம் பண்ணமுடியும்?

 
​ஓ அப்படியா?
சபாட்டிக்கல் முடிந்து இயல்பான நிலைக்கு செல்ல என் வாழ்த்துக்கள்.

உங்களது தமிழும் ஆங்கிலமும் ​மிக நன்றாகவே இருக்கின்றது. எனக்குத் தெரிந்த ஒருவரது எழுத்தை ஒத்திருக்கின்றது.

நான் பதிவில் குறிப்பிட்ட படி.. இது என் தனி நபர் விருப்பம். அதனை தெரிவித்தேன்.
பலருக்கு ஆங்கிலத்தில் ஓரிரு வரிகளை பேச்சிலும் சரி எழுத்திலும் சரி..இணைத்து விட்டால் அது இயல்பான வெளிப்பாடு போல தோன்றுகின்றது போல.. அவரவர் விருப்பம்.

சுபா



--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Bala Sundara Vinayagam

unread,
Jul 10, 2015, 3:40:51 PM7/10/15
to mint...@googlegroups.com
மறை என்று திருக்குறளை அழைக்கலாம்.  வேதங்களைவிட உயர்ந்தது என்று புதிய காரணம்.  மறை என்றால் மறைந்திருக்கும் பொருட்கள் உள்ளது என்று குழப்பிக்க வேண்டியதில்லை. ஓதல் என்றால் வேதங்களையோ, திருக்குரானையோ விவிலியம் போன்ற மதநூல்களை ஓதுதல் இல்லை. மீண்டும் மீண்டும் படித்தல் மட்டுமே.

இவையெல்லாம் திருமதி மேகலா இராமமூர்த்தி திருக்குறள் மறை ஓதல் எனபதை நியாயப்படுதத. அபபடி நியாயப்படுத்துவோரிடம் இப்படிச்சொல்லலாகாது என்றால் அவர்கள் மீது பாய்கிறார்க்ள்.

ஓ கே.

ஏற்கனவே ஒருவர் இங்கெழுதிவிட்டார்.  சொற்கள் காலத்துக்குக்காலம் தன் பொருட்களை உருமாற்றம் செய்யும். அப்படிப்பார்த்தால், மறை என்ற சொல்லும் ஓதல் என்ற சொல்லும் உருமாற்றங்கள் செய்து, மறை என்றால் எந்த நூலையும் குறிக்கும் அந்நூல் விசிறிகள் விரும்பினால். ஓதல் என்ற எதைப்படித்தாலும் அது அதன் விசிறிகளைப்பொருத்தது.

போகட்டும். மறை என்ற சொல்லும் ஓதல் என்ற சொல்லும் நான் காட்டிய பொருளில் இல்லாமல், உயர்ந்த கருத்துக்களைச் சொல்லும் நூல், ஓதல் என்றால் கல்வி கற்றல் என்ற பொருளிலும் வழங்கப்பட்டிருக்கலாம்.

இருந்தாலும், பொதுவாக எப்படிபபட்ட பொருளில் தற்போது எடுக்கப்படுகிறது என்பதை வைத்தே நம் செயலகள் இருக்க வேண்டும்.

அதன்படி, ஓதல் என்பதும் மறை என்பதும் மதத் தொடர்பை உடையவை. திருக்குறளை மறை ஓதல் என்றழைத்தால் தவறான பாதையில் தமிழர்களை இட்டுச்செல்லும். அதுபொது நூலாக இருக்காமல் ஏதோ ஒரு ம்தத்தாருக்கு மட்டும் என்று வைக்கப்படும் அபாயம் இருக்கிறது. அந்த அபாய ஒலியை எழுப்புவது என் கடமை. அதை நான் செய்துவிட்டேன். பின்னர், அமெரிக்க வாழ் தமிழர்களின் தலையெழுத்தே எல்லாம் என்று விடுகிறேன். ஆனால் தமிழகத்தில் இது செல்லாது. நானே எங்கு விழா ஏற்பாடு செய்கிறார்க்ளோ அங்கு வந்து போராடுவேன். 

//கடத்தாதே கடத்தாதே திருக்குறளை ஒரு மதத்துக்குள் கடத்தாதே. 
திருக்குறள் தமிழரனைவரின் பொதுச்சொத்து. அபகரிக்கப்பார்க்காதே 

என்று என் பதாகைகள் அங்கு முழங்கும்.

On Wednesday, 8 July 2015 01:42:15 UTC+5:30, megala.ramamourty wrote:

Bala Sundara Vinayagam

unread,
Jul 10, 2015, 3:47:42 PM7/10/15
to mint...@googlegroups.com
ஆண்டாளைக்கொன்றவர்  பற்றி எழுதியது இன்னொருவர்.

நான் எழுதியது இராஜாஜி ஆண்டாள் என்பவர் பெண்ணில்லை. பெரியாழ்வார் போட்டுக்கொண்ட பெண்பாவனையே என்று சொன்னதாக எழதினேன்.

அவலை நினைத்து உரலை இடித்தால் இப்படியெல்லாம் தவறு செய்யத்தோன்றும்.

Bala Sundara Vinayagam

unread,
Jul 10, 2015, 3:56:36 PM7/10/15
to mint...@googlegroups.com
ஓ அப்புறமா பதில் சொல்றேன்னு சொல்லியதைச்செய்தாயிற்று. திருக்குறளை மதநூலாக அமெரிக்கவில் ஆக்கிக்கொள்ளலாம் என்பதே அப்பதில். நீங்கள் படித்து திருக்குறளை மதநூலாக்கலாமா என்று சொல்லலாம்.

இப்போது:  தொல்காப்பியரும் குறளும் உங்களுக்கு. கேள்வி கேட்டவர் நீங்கள்தானே?

//நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டிவிடும்” //

இதுதான் குறள்.  

நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப”       
'
இது திருமதி மேகலா இராமமூர்த்தி சுட்டிய தொல்காப்பியம்.

தொல்காப்பியத்திலும் குறளிலும் ஒரே சொல் மட்டுமன்று; பொருளும் ஓவர்லேப் பண்ணுவதால் குழபபம். ஆனால் இவையிரண்டும் நிறைமொழி மாந்தர் என்பதோடு மறைமொழியையும் இணைக்கிறது.


தொல்காப்பியர் சொல்வது:--  நிறைமொழியினையுடைய மாந்தர், தனது ஆணையால் சொல்லப்படும் மறைமொழிதான் மந்திரம் என்று அறிஞர்கள் கூறுவார்கள்.

 
குறட்பா உரை:

நிறைந்த மொழிகளையுடைய துறந்தாரது பெருமையை, நிலவுலகத்தின்கண் அவராணையாகச் சொல்லிய மந்திரங்களே கண்கூடாகக் காட்டும்.நிறைமொழி என்ற பதத்துக்கு -  அருளிக்கூறினும் வெகுண்டு கூறினும் அவ்வப்பயன்களைப் பயந்தேவிடும் மொழி. -- (பரிமேலழகர் உரை). 

பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்கள் மறை மொழிகளே காட்டி விடும். (மு வரதராசன்)

பரிமேலழகர் வைதிக்கருத்துக்களை அடிப்படையாக வைத்தே குறளுக்கு உரையெழுதியதால், நிறைமொழி மாந்தர் என்பார் துறவிகள் என்கிறார். வரதராசன் சான்றோர்கள் என முடிக்கிறார். தொல்காப்பியத்தில் அச்சான்றோர்கள் விட்டுச்சென்ற சொற்கள் மந்திரங்களுக்கு என்ன உயர்வான இடம் அளிக்கப்படுகிறதோ அதைப்போல இடத்தில் மக்களால் வைக்கப்படும்.  ஆக, மந்திரம் என்பது ஒரு உவமை மட்டுமே. மந்திரம் என்ற வடமொழிச்சொல் வேதயொலிகளுக்கே.  அவை பாமரர்களால் புரிய தெரியப்படாதவை. இறைவனிடம் செல்லும் வலைமை படைத்த்வை.  குறளில் மந்திரம் என்ற சொல் இல்லை. மறைமொழி என்பது சான்றோர் விட்டுச்சென்ற  கருத்துக்கள். அவை மக்களால் ஏத்தப்படும்.   

நீங்க சொல்லுங்க. இவ்விரு நூற்பாக்களும் தொடர்புடையனவா? 

நிறைமாந்தர் என்றால், மறைமொழி என்றால், மந்திரம் என்றால், என்னென்ன பொருட்களை எடுக்கிறீர்கள். ஐயா அவர்களின் அறிவார்ந்த வழிநடத்துதல் தேவை.

Bala Sundara Vinayagam

unread,
Jul 10, 2015, 4:04:59 PM7/10/15
to mint...@googlegroups.com


Oசபாட்டிக்கல் என்றால் ஒரு நோயின் பெயரனறு. இயல்பற்ற நிலை இயல்பு நிலை திரும்புதல் என்ற பேச்சுக்கே இடமில்லை. சபாட்டிக்கல் என் இயல்பு நிலையை மாற்றிவிட்டது என்று கற்பனை பண்ணிவிட்டீர்கள்.

//பலருக்கு ஆங்கிலத்தில் ஓரிரு வரிகளை பேச்சிலும் சரி எழுத்திலும் சரி..இணைத்து விட்டால் அது இயல்பான வெளிப்பாடு போல தோன்றுகின்றது போல.//

வெளிநாட்டில் இருப்பதால் தமிழ்நாட்டைப்பற்றித்தெரியவில்லை.  பலர் அல்ல, ஒட்டுமொத்த தமிழகமும் இப்படித்தான் இருக்கிறது. அம்மாவும் அப்பாவும் செத்துப்போய் 50  ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன. இப்போதெல்லாம் எங்கும் மம்மிதான் டாடிதான். தங்கிலீசே தமிழரின் தாய்மொழியாகப்போச்சு.

Bala Sundara Vinayagam

unread,
Jul 11, 2015, 7:03:13 AM7/11/15
to mint...@googlegroups.com


On Friday, 10 July 2015 12:57:57 UTC+5:30, இணையமுனி wrote:
முன்னர் இருமுறை அவரிடம் நீங்கள் கேட்டதுபோல் (இவ்வளவு அவையடக்கத்துடன் அல்ல) கேட்டேன்.  அவர் விடை கூறாமல் தாண்டிச் சென்றுவிட்டார்.  நானும் எனக்கு இவ்வளவுதான் மரியாதை என்று அடங்கிவிட்டேன்.  அவர் விலாவாரியாக தமிழர்களைப்பற்றி அவர்களின் குறபாடுகளைப்பற்றி பட்டியலிட்டு எழுதுகிறார்.  ஆண்டாளைக்கொன்றது அவரது தந்தையே என்று அடித்து எழுதியபின் அவரைப் பார்த்தாலே எனக்கு ஒரு அச்ச உணர்வு வருகிறது
--

ஆண்டாளைக் கொன்றது பெரியாழ்வாரா என்பது அவ்விழை. அதன் ஆசிரியர் ராம் காமேஸ்வரன் என்பவர்.  

ஒரு வைணவர் அப்படியே ஆண்டாள் எப்படி இறுதியானார் என்ற கேள்வியை எழுப்ப விரும்பினாலும், இப்படி கொன்றாரா என்ற சொல்லைப்போட்டு அவருக்கு மனம் வராது. ஏனெனில் ஆழ்வார்களில் தாயுள்ளம், தந்தையுள்ளம் இவைகளுக்காக பெரிதும் போற்றப்படும் பெரியாழவாருடன் இணைத்து இச்சொல்லைப்போட மனம் வரவே வராது.  

நான் வேறோரிடத்தில் வைணவரான இராஜாஜி ஏன் ஆண்டாள் கற்பனைப் பாத்திரம் என்றார் என்பதற்கு காரணங்களாக என் சில கருத்துக்களைச் சொன்னேன்.  எவர் எதைச் சொன்னார் என்பதைத் நன்கு தெரிந்த பின்பே எழுதினால் வீண்பழி சுமத்தி, நிரபராதி தூக்கிலிடுப்படுவதைத் தடுக்கலாம்.

தமிழர்களைப்பற்றிய மட்டுமன்று, தமிழர் வரலாற்றைப்பற்றியும் குறைபாடுகள் ஒருவருக்குத் தோன்றவில்லையென்றால், அவருக்கு வெளுத்தெல்லாம் பால் என்ற குழந்தை மனது இருக்கிறது அல்லது அக்குறைப்பாடுகள் இருப்பதால் ஆதாயங்கள் இருக்கலாம்.  மக்களை முட்டாள்களாக வைத்துக்கொண்டிருப்பதில் அரசியல்வாதிகள் ஆதாயங்கள் பெறுவதைப்போலவே இதுவும். பொதுமக்களும் அரசியல்வாதிக்குணத்தை எங்கு வேண்டுமோ அங்கு பயன்படுத்திக் கொள்வர்.

இன்றைய தமிழகத்தில் வாழம் ஒருவன் அப்படி தமிழர்கள் நிறைவாழ்க்கை வாழ்கிறார்கள். எங்கெங்கும் எல்லாரும் சவுக்கியமாக இருக்கிறார்கள் என்ற புனைவை நம்ப முடியாது. ஏன் அப்படி வாழ்க்கை ஆகிறது என்ற கேள்விக்கு விடைகளை அவன் பட்டியலிட்டுத்தான் தீரவேண்டும்.

வரலாற்றைப்பற்றி நான் நிறைய எழுதிவிட்டேன்.  நான் முன்னோர் எழுதியவைகளை முழுவதும் நம்புவதில்லை. சமயவியலாரும் இலக்கியவாதிகளும் சொன்னவற்றை வரலாற்றாராய்ச்சியாளர் ஏற்றுக்கொண்டாலொழிய நான் சட்டை பண்ணுவதேயில்லை. என கல்வி எனக்குச் சொன்னது இது. அதே சமயம் அவ்வாராய்ச்சியாளர்கள் அனைத்தையும் தள்ளி விடுவதுமில்லை. எதை என்ன செய்யவேண்டுமென்பதே அவருக்கு வரலாற்று பயிற்சி சொல்லித்தந்தது.   அவர்கள் எழுதியவைகளை எச்சரிக்கை கண்களைக்கொண்டே ஆராய்வார்கள்.  

உங்கள் கொள்கைப்படி நீங்கள் எதையும் ஏற்கலாம். எதிர்க்கலாம். ஆனால் மற்றவர் வரலாற்று ஆய்வாளர்களே எமக்கு முதல்வர்கள்; சமயவாதிகள் அல்ல என்று கருதும்போது அவர்களை நாம் பகடி பண்ணுவது நாகரிமன்று.

என்னிடம் எங்கே எதைக்கேட்டீர்கள் என்று எனக்குத்தெரியாது. காரணம்.  மின் தமிழின் அமைப்பு அப்படி. ஒரு தலைப்பின் கீழ் பதிவுகள் போய்க்கொண்டிருக்கும்போது இருபது தலைப்புககள் ஒன்றுக்கொன்று உரசுகின்றன. முன்பு எழுதியது எங்கே என்று தேட எந்நாளும் உருட்டிக்கொண்டேயிருக்கவேண்டும்.  சின்னாட்கள் கழித்துவந்தால் ரொம்பவும் தொல்லை. நாட்கழித்து வரும்போது எது பட்டெனத்தெரிகிறதோ அதற்கே என் பதில்.  நீங்கள் என்ன கேட்டீர்கள் எனத் தெரியாது. விரும்பினால் குறிப்பு தாருங்கள். 

Bala Sundara Vinayagam

unread,
Jul 11, 2015, 2:24:27 PM7/11/15
to mint...@googlegroups.com, balasundar...@gmail.com

தமிழர்களைப் பற்றி ரொமப் உயர்வாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.  அறிவுரைகளை மதம் இல்லாமல் ஏற்பார்கள் என்று ரொம்ப நம்பிக்கை. 

 

தமிழர்கள் மட்டுமல்ல, பொதுவாக மக்கள் அறிவுரைகளை ஏற்பதில்லை.  இதைச் சாப்பிடாதீர்கள்: அதைச்சாப்பிடாதீர்கள் என்று எவர் சொன்னாலும் நீங்கள் கேட்க மாட்டீர்கள்; ஆனால் மருத்துவர் சொன்னால் கேட்பீர்கள்.  உயிர்ப் பயம் வந்துவிடுகிறதல்லவா?

 

அதைப்போலவே தெயவத்தைப் பற்றிய பயமும்.  தெய்வம் சொன்னது என்றால் கேட்பார்கள். சும்மா எவரேனும் சொன்னால் - வள்ளுவரே யாயினும் - கேட்க மாட்டார்கள்.  எனவே மதம் மிக மிக அவசியாமாகிறது  

 

மதத்தையும் சட்டைபண்ணாதவருக்கு சட்டம்போட்டு நிறுத்துகிறோம். ஒரு பெண்ணை கெட்ட நோக்கத்துடன் பார்த்தாலோ நினைத்தாலோ மட்டுமே ஒருவன் பாவம் செய்தவனாகிறான் என்றார் இயேசு.  ஆனால் கிருத்துவர்கள் இயேசு இப்படிச் சொன்னாரென்று ஒழுகிவாழ்கிறார்கள் என்று நாம் வாளா இருந்துவிடுகிறோமா? ஒரு பெண்ணுக்குப் பாதுகாப்பு சட்டங்களே. 

 

ஆக, மதமும் சட்டங்களும் இருந்தால்தான் அறிவுரைகளைச் செயல்படுத்த முடியும். வள்ளுவர் சொன்னார் சொன்னார் சொன்னார் என்று 2000 வருடங்களாக தமிழர்கள் சொல்லிச்சொல்லி வாழ்கிறார்கள். ஆனால் திருந்திவிட்டார்களா/ ;பிற்ப்பொக்கும் எல்லாவுயிருக்கும் என்று ஏற்றுக்கொண்டனரா?  உயிர்க்கொலைகள் சாதிக்கலவரங்கள் நடக்க கொலை பண்ணுவோரும் தூண்டுவோருக்கும் வள்ளுவர் சொன்னது தெரியாதா? இல்லை சொன்னாலும் கேட்பாரா? முன்னால் முதல்வர், இன்னால் துணை முதல்வர் ஓ பி பன்னீர்செல்வத்தின் தம்பியே மதுரை கோர்ட்டில் சரண்டைந்தார் போன வாரம். ஒரு தலித்து சிறுவன் கோயில் ;பூஜாரி வேலைபார்த்ததால் ஒரு கீழ்சாதிக்கு அத்தகுதி கிடையாதென அவன் மிரட்டப்பட்டு தற்கொலை ஆன வழக்கில் 7 பேர் மீது வழக்கு. எங்கே போனார் வள்ளுவர்? கழித்துப்போன காகிதம் வியாபாரிக்கு எடையை கூட்ட மட்டுமே உதவுவார் தமிழனைப்பொறுத்தவரை.

 

தமிழில் நீதி நூல்கள் ஏராளம். அறம் செய்ய விரும்பு என்று ஆத்திச்சூடியைப் படித்துவிட்டுத்தான் வெளிவருகிறார்கள். அறனெனப்பட்டதே வாழ்க்கையென்றுதான் தேர்வில் வள்ளுவர் சொன்னாரென்று எழுதுகிறார்கள்.

 

சான்றோர்களும் ஆன்றோர்களும் சொல்லிச்சென்ற அறிவுரைகள் ஏராளம். ஆனால், படித்தவன் படிக்காதவன் எல்லோருமே செய்த தவற்றை மகிழ்ச்சியாக தொடர்ந்து செய்து சமூக அமைதியைக் கெடுத்து வாழ்கிறார்கள். குடிக்காதே என்ற சொன்ன வள்ளுவர் நாட்டில் பாதையோரங்களில் படுத்துக் கிடக்கிறார்கள்.  விலப்பெண்டிரைத் தழுவுதல இருட்டறையில் பிணத்தைத் தழுவுவது ஜாக்கிரதை என்று எச்சரித்த வள்ளுவர் நாட்டில்தான், எய்ட்ஸ் அதிகமாக இருக்கிறது. புதுச்சேரி, மதுரை, சென்னை, நாமக்கல்.  பிறன்மனை நோக்கா பேராண்மை என்று ஆண்களுக்கு அறிவுரை சொன்ன தமிழ்நாட்டில்தான் கள்ளக்காதல்களும் கொலைகளும் அன்றாடம் ஏற்படுகின்றன. வைப்பாட்டிக் கலாச்சாரம் ஒரு ஆணுக்குப் பெருமை என்ற நிலை பல ஜாதிகள் வழக்கமாக இருப்பது தெரியாதா? அறத்தால் வருவதே இன்பம் மற்றெல்லாம் புறத்த புகழும் இல என்ற வள்ளுவர் நாடுதான் போலிச்சாமியார்கள். போலி மருத்துவர்கள் போலி ஃப்னான்ஸ் கம்பெனிகள் கல்வி வியாபாரிகள் என்று நிரம்பி வழிகிறது. மழித்தலும் நீட்டலும் வேண்ட உலகம் பழித்தது ஒழித்துவிடின் என்ற அறிவுரை சொல்லப்பட்ட நாட்டில்தான் மக்கள் மதம் மதம் என்று மாய்ந்து போகிறார்கள்.  கள்ளுணணாமை, கொலை செய்யாமை, அறனெனப்பட்டதே வாழ்க்கை, பொது மக்களூக்கு, தனிநபருக்கு, சமூக வாழ்க்கைக்கு, அரசியலாருக்கு என்று அறிவுரைகளுக்குப் பஞ்சமே இல்லை. கேட்கும் மனங்களுக்குத்தான் பஞ்சம்.   

 

இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். இன்னும் நீளமாகப் பட்டியல் போட்டு விடுவோனோ என்று பயப்படுகிறார்கள். எனவே இத்துடன் விட்டுவிடலாம்.  சுருக்கமாக, வள்ளுவரை நம்பி நாம் வாழவில்லை பாதுகாப்பாக, சட்டங்களையும் அச்சட்டங்களை அமல் படுத்தும் அர்சு எந்திரங்களாலும் வாழ்கிறோம். வெளியில் சென்று பத்திரமாக வீடு வந்து சேர்கிறோம்.  வள்ளுவர் தன் பங்கைச்செய்து விட்டுப்போய் விட்டார். அவ்வளவுதான். தேர்வில் மதிப்பெண்கள் எடுக்க திருக்குறளை மனனம் செய்து கோனார் நோட்சைப் படித்து நன்கு எழுதினால் போதும்.  எனக்கு நல்ல மதிப்பெண்கள் தமிழ்த்தாளில் கிடைத்தன. வள்ளுவருக்கு நன்றி. அவாள் சிம்பிளா எழுதி எனக்கு ரொம்ப ஹெல்ப் பண்ணினார்.

 

ரொம்ப எதிர்பார்க்காதீர்கள். பரிதாபமாக ஏமாந்து போவீர்கள்.

 


On Monday, 6 July 2015 22:17:20 UTC+5:30, தேமொழி wrote:
ஒரு தமிழ்ச்சொல் ஒவ்வொரு காலத்திலும் வேறு வேறு பொருள் கொள்ளப்படுவது என்பது புரிந்தால் இது புரிவதில் சிரமம் இருக்காது உங்களுக்கு.

காதல் என்ற ஒரு சொல் போதும் காலப் போக்கில் எப்படி அது பொருள் கொள்ளப்படுகிறது என்பதைக் காட்ட.

தமிழர்களுக்கு  மதம் சாராமலே படிக்க நன்னெறி வழிகாட்டுதல் இருந்தது என்பதை, நல்வழியில் நடப்பதை பற்றிய அறிவுரைக்கு மதம் என்ற ஒன்றே தேவையில்லை என்பதைக் கூடவா புரிந்து கொள்ள  முடியாது போகும் இக்கால இளைய தலைமுறைக்கு.

..... தேமொழி

தேமொழி

unread,
Jul 12, 2015, 4:54:06 AM7/12/15
to mint...@googlegroups.com, balasundar...@gmail.com


On Saturday, July 11, 2015 at 11:24:27 AM UTC-7, Bala Sundara Vinayagam wrote:

தமிழர்களைப் பற்றி ரொமப் உயர்வாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.  அறிவுரைகளை மதம் இல்லாமல் ஏற்பார்கள் என்று ரொம்ப நம்பிக்கை. 


தமிழர்களுக்கு மதத்தைத் தவிர மாற்று வழியும் இருக்கிறது/மாற்று கோணமும் இருக்கிறது என்பதை  புரியவைக்க திருக்குறள் உதாரணமாக இருக்கும் என்பது நான் சொல்லியது.

 

தமிழர்கள் மட்டுமல்ல, பொதுவாக மக்கள் அறிவுரைகளை ஏற்பதில்லை.  இதைச் சாப்பிடாதீர்கள்: அதைச்சாப்பிடாதீர்கள் என்று எவர் சொன்னாலும் நீங்கள் கேட்க மாட்டீர்கள்; ஆனால் மருத்துவர் சொன்னால் கேட்பீர்கள்.  உயிர்ப் பயம் வந்துவிடுகிறதல்லவா?

 

அதைப்போலவே தெயவத்தைப் பற்றிய பயமும்.  தெய்வம் சொன்னது என்றால் கேட்பார்கள். சும்மா எவரேனும் சொன்னால் - வள்ளுவரே யாயினும் - கேட்க மாட்டார்கள்.  எனவே மதம் மிக மிக அவசியாமாகிறது  

 

மதத்தையும் சட்டைபண்ணாதவருக்கு சட்டம்போட்டு நிறுத்துகிறோம். ஒரு பெண்ணை கெட்ட நோக்கத்துடன் பார்த்தாலோ நினைத்தாலோ மட்டுமே ஒருவன் பாவம் செய்தவனாகிறான் என்றார் இயேசு.  ஆனால் கிருத்துவர்கள் இயேசு இப்படிச் சொன்னாரென்று ஒழுகிவாழ்கிறார்கள் என்று நாம் வாளா இருந்துவிடுகிறோமா? ஒரு பெண்ணுக்குப் பாதுகாப்பு சட்டங்களே. 

 

ஆக, மதமும் சட்டங்களும் இருந்தால்தான் அறிவுரைகளைச் செயல்படுத்த முடியும்.


யார் சொல்வதையாவது கேட்டால்தான் உலகில் மாறுதல்கள் இருக்குமே, மதத்தின் வழி நடப்பவர், அந்த வழி நடக்காதவர், அரசின் சட்டம்  இவற்றையெல்லாம் யார்தான் சரியாகப் பின்பற்றுகிறோம்.  

அவரவர் தனக்கு பிடித்த பகுதியை எடுத்துக் கொண்டு தன்னில் மாறுபட்டவரை வெறுப்பதும், சிக்காத வரை நல்லவர் வேடம் போடுவதும், வாய்ப்பு கிடைக்கும் பொழுது சத்தமில்லாமல் குற்றம் செய்வதுதான் மனித இயல்பு.  

நான் யாரவது சொல்லி ஒருவர் கேட்பார் என்று நம்புவதில்லை, தனக்கு ஒரு ஆதாயம் இல்லை என்றால் யாருமே எதையுமே கேட்கப் போவதில்லை.  
 

வள்ளுவர் சொன்னார் சொன்னார் சொன்னார் என்று 2000 வருடங்களாக தமிழர்கள் சொல்லிச்சொல்லி வாழ்கிறார்கள். ஆனால் திருந்திவிட்டார்களா/ ;


காலம் காலமாக மதச் சான்றோர்கள் சொல்லியதைஎல்லாம் கேட்டுதான் மக்கள் நடக்கிறார்களா ?
 

பிற்ப்பொக்கும் எல்லாவுயிருக்கும் என்று ஏற்றுக்கொண்டனரா?  உயிர்க்கொலைகள் சாதிக்கலவரங்கள் நடக்க கொலை பண்ணுவோரும் தூண்டுவோருக்கும் வள்ளுவர் சொன்னது தெரியாதா? இல்லை சொன்னாலும் கேட்பாரா? முன்னால் முதல்வர், இன்னால் துணை முதல்வர் ஓ பி பன்னீர்செல்வத்தின் தம்பியே மதுரை கோர்ட்டில் சரண்டைந்தார் போன வாரம். ஒரு தலித்து சிறுவன் கோயில் ;பூஜாரி வேலைபார்த்ததால் ஒரு கீழ்சாதிக்கு அத்தகுதி கிடையாதென அவன் மிரட்டப்பட்டு தற்கொலை ஆன வழக்கில் 7 பேர் மீது வழக்கு. எங்கே போனார் வள்ளுவர்? கழித்துப்போன காகிதம் வியாபாரிக்கு எடையை கூட்ட மட்டுமே உதவுவார் தமிழனைப்பொறுத்தவரை.

 

தமிழில் நீதி நூல்கள் ஏராளம். அறம் செய்ய விரும்பு என்று ஆத்திச்சூடியைப் படித்துவிட்டுத்தான் வெளிவருகிறார்கள். அறனெனப்பட்டதே வாழ்க்கையென்றுதான் தேர்வில் வள்ளுவர் சொன்னாரென்று எழுதுகிறார்கள்.

 

சான்றோர்களும் ஆன்றோர்களும் சொல்லிச்சென்ற அறிவுரைகள் ஏராளம். ஆனால், படித்தவன் படிக்காதவன் எல்லோருமே செய்த தவற்றை மகிழ்ச்சியாக தொடர்ந்து செய்து சமூக அமைதியைக் கெடுத்து வாழ்கிறார்கள். குடிக்காதே என்ற சொன்ன வள்ளுவர் நாட்டில் பாதையோரங்களில் படுத்துக் கிடக்கிறார்கள்.  விலப்பெண்டிரைத் தழுவுதல இருட்டறையில் பிணத்தைத் தழுவுவது ஜாக்கிரதை என்று எச்சரித்த வள்ளுவர் நாட்டில்தான், எய்ட்ஸ் அதிகமாக இருக்கிறது. புதுச்சேரி, மதுரை, சென்னை, நாமக்கல்.  பிறன்மனை நோக்கா பேராண்மை என்று ஆண்களுக்கு அறிவுரை சொன்ன தமிழ்நாட்டில்தான் கள்ளக்காதல்களும் கொலைகளும் அன்றாடம் ஏற்படுகின்றன. வைப்பாட்டிக் கலாச்சாரம் ஒரு ஆணுக்குப் பெருமை என்ற நிலை பல ஜாதிகள் வழக்கமாக இருப்பது தெரியாதா? அறத்தால் வருவதே இன்பம் மற்றெல்லாம் புறத்த புகழும் இல என்ற வள்ளுவர் நாடுதான் போலிச்சாமியார்கள். போலி மருத்துவர்கள் போலி ஃப்னான்ஸ் கம்பெனிகள் கல்வி வியாபாரிகள் என்று நிரம்பி வழிகிறது. மழித்தலும் நீட்டலும் வேண்ட உலகம் பழித்தது ஒழித்துவிடின் என்ற அறிவுரை சொல்லப்பட்ட நாட்டில்தான் மக்கள் மதம் மதம் என்று மாய்ந்து போகிறார்கள்.  கள்ளுணணாமை, கொலை செய்யாமை, அறனெனப்பட்டதே வாழ்க்கை, பொது மக்களூக்கு, தனிநபருக்கு, சமூக வாழ்க்கைக்கு, அரசியலாருக்கு என்று அறிவுரைகளுக்குப் பஞ்சமே இல்லை. கேட்கும் மனங்களுக்குத்தான் பஞ்சம்.   

 

இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். இன்னும் நீளமாகப் பட்டியல் போட்டு விடுவோனோ என்று பயப்படுகிறார்கள். எனவே இத்துடன் விட்டுவிடலாம்.  சுருக்கமாக, வள்ளுவரை நம்பி நாம் வாழவில்லை பாதுகாப்பாக, சட்டங்களையும் அச்சட்டங்களை அமல் படுத்தும் அர்சு எந்திரங்களாலும் வாழ்கிறோம்.


இங்கு எந்த நாட்டைப் பற்றிக் குறிப்பிடுகிறீர்கள்  என்பதையும் சொல்லலாமே.  
 

வெளியில் சென்று பத்திரமாக வீடு வந்து சேர்கிறோம்.  வள்ளுவர் தன் பங்கைச்செய்து விட்டுப்போய் விட்டார். அவ்வளவுதான். தேர்வில் மதிப்பெண்கள் எடுக்க திருக்குறளை மனனம் செய்து கோனார் நோட்சைப் படித்து நன்கு எழுதினால் போதும்.  எனக்கு நல்ல மதிப்பெண்கள் தமிழ்த்தாளில் கிடைத்தன. வள்ளுவருக்கு நன்றி. அவாள் சிம்பிளா எழுதி எனக்கு ரொம்ப ஹெல்ப் பண்ணினார்.

 

ரொம்ப எதிர்பார்க்காதீர்கள். பரிதாபமாக ஏமாந்து போவீர்கள்.


மனித இயல்பைப் புரிந்தவர்களுக்கு ஏமாற்றங்களும்  குறைவு  ...

Bala Sundara Vinayagam

unread,
Jul 12, 2015, 7:54:06 AM7/12/15
to mint...@googlegroups.com, balasundar...@gmail.com
இந்தியாவையும், தமிழ்நாட்டையும் பற்றித்தான் குறிப்பிட்டேன்.  நீங்கள் எழுதிய மறுபதில்கள் நான் எழுதிய கருத்துக்களையே சொன்னது போல இருக்கின்றன. 

அரசின் சட்டங்கள் என்று சொன்னபோது நான் குறிப்பிட்டவை குற்ற்ச்சட்டங்கள். சிவில் அல்ல. வரி ஏய்க்கக்கூடாது என்பது சிவில் சட்டம். அதை திறமையாக கடந்து போகிறார்கள். போகலாம். டாக்ஸ் எவேசன் என்று வரும்.

குற்றச்சட்டங்களில் பிடிபடுதல், தண்டனை என்று வரும். ஓடிவிடலாம். ஆனால் தேடப்படுவீர். டாக்ஸ் எவேசனில் ஓட வேண்டிய அவசியமில்லை. பிடிபடாமல் இருக்க உங்கள் ஆடிட்டர் சொல்லித் தருவார்.

தமிழ் இலக்கியத்தில் வரும் நீதிநூல்கள் - திருக்குறள் போன்று - படித்து மேடைகளிலும் தேர்விலும்தான் பேச/எழுத‌ மட்டுமே என்பதே என் கருத்து. வெறும் இலக்கியம் அவை. மனிதர்களிடம் நன்னடத்தையை எப்படி மதங்கள் கொண்டுவர இயலாமல் போனதுவே அப்படி நீதிநூலகளால் முடியவில்லை.

எனினும் திருக்குறளை மறை ஓதல் என்று அட்டகாசமான பெயரைப்போட்டு இளம்பிள்ளைகளைச் செய்தல், அவர்களுக்கு இப்படி ஓர் உயரிய இலக்கியம் இருக்கிற்து என்று தெரியத்தான். ஹெரிட்டேஜ் வகையில் வரும்.

தமிழ், தமிழ்நாடு, தமிழ்பாரம்பரியம், தமிழ்க்கலாச்சாரம் என்று ஒருமித்த‌ அடையாளப்பெருமிதம் ஏற்படுவதற்காகத்தான் திருக்குறள் மறை ஓதல், பாரதியார் பாட்டுப்போட்டி, பாரதிதாசன் பற்றி கட்டுரைப்போட்டி, மக்கள் கவிஞர் பற்றி பேச்சுப்போட்டி என்று ஏற்பாடு செய்கிறோம்.  

ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது என்பதை இக்காலத்தவர் மிகவிரைவில் புரிகிறார்கள்.லேட்டாகப் புரிந்தால் அவர்கள் வாழ்க்கையில் சிரமப்படுவார்கள்.

எனினும் வாழ்த்துக்கள். இதற்கு மேல் உங்கள் செயலைப் போட்டுத்தாக்க மனம் வரவில்லை. ஜமாய்ங்க!

rnka...@gmail.com

unread,
Jul 13, 2015, 12:17:31 PM7/13/15
to mint...@googlegroups.com
it is a good thing; if tamils in tamil nadu and erstwhile start reciting thirukkural and give the status of marai, I hope we ( I mean tamils) can get away from the restriction of caste and religion and move towards a casteless human society!

I read the discussions and points of various more knowledgeable members; my knowledge of vedas is very limited ( like in Ayn rand book, I am thus more qualified to talk about vedas as I am not knowledgeable or acclaimed to know vedas and so I am impartial!);

now coming to the numbers, the vedas are differently mentioned as three, four and five; this confusion is obvious as many stanzas in Atharva and sama are reproduced / recreated verses of Rig; and since the spread of vedas is by oral tradition where no real compilation is done, it is straight forward acceptable to have confusion about the numbers: three, four, five...

based on the language patterns, the chronology of the vedas is obviously rig, yajur , sam, and atharva; funnily enough, my VATHIYAR, the great Chandrasekhara and Patanjali of Chidamabarm, once told my brother (and me, though I remained an outsider in these discussions) that YAJUR veda (our clan veda) has some stanzas which are much simpler than atharva; So language difficulty alone may not decide the age,

Coming to the word MARAI, it is correct to say it was called so as the language was (old) vedic Sanskrit and not easily understandable by tamil speaking; even now many Brahmins (like me  are reciting them without knowing the meaning; so it still remains "marai" nde)

and finally one important thing is that Rig veda is supposed to give two meanings, Yajur and Sama veda are supposed to give one or two meanings and Atharva veda is supposed to give three meanings;

to end: there is a verse in rig veda, restated in atharva veda, which says that the power of sun's horses are so much that they cross 2240 yojans in 9 nimish (not minutes); based on Vedic mathematics, it turns out as approximately 300000 kms/sec, the speed of light

regards
rnkantan


On Sunday, July 5, 2015 at 4:48:33 PM UTC+5:30, Bala Sundara Vinayagam wrote:
வடமொழி வேதங்களை மறைகள் என்பார்கள்.  நான்கு வேதங்களை நான்மறை என்றார்கள்.  பழந்தமிழ் நூல்களில் சுட்டப்படும் நான்மறை வட்மொழி வேதங்கள் என்போரும் இல்லை தமிழகத்தில் அன்று நின்று நிலவிய நான்கு தமிழ் மறைகளத்தான் தொல்காப்பியர் குறிப்பிடுவார் என பிள்ளைகளும் பேசுவது காணலாம்.

எஃதெப்படியாகினும் வேதங்கள் மறை என்றால், அவற்றின் பொருட்களை நாமறிவது சுலபமன்று என்றெடுக்கவேண்டும் . ஏனெனில் அப்பொருட்கள் உள்ளுறை இறைச்சி. எனவே வேதங்களுக்கு வேதறிஞர்களும் ஞானிகளும் விளக்கவுரைகள் எழுதினார்கள். மறைபொருட்கள் எனவே அவரவருக்குத் தோன்றியபடி எழுத அவை பலசில மாற்றங்களைக் கொண்டவாயின‌.  தமிழகத்திலும் வடவிந்தியாவிலும் இவ்வுரைகாரர்கள் அக்காலத்திலிருந்தே தோன்றினர்.  ஆங்கிலேயரும் ஐரோப்பியரும்கூட உரைகள் எழுதி அசத்திவிட்டார்கள்.

வேதமறைபொருட்களை அவ்வுரைகளைப் படிக்கவியலாதோர் அறிந்து கொள்ள புராணக்கதைகளும் இதிகாசங்களும் எழுதப்பட்டன.  அவைகள் காலட்சேபங்களாக அன்று கூறப்பட்டன. 

தமிழில் ஆழ்வார்ப்பாசுரங்கள் வேதங்களின் மறைபொருட்களை விளக்கித் தமிழில் பாமரமக்களுக்குச் சொலலவே எழுந்தனவெனறும்; எனவே அவை திராவிட வேதமென்றும் அறுதியிட்டார்கள் ஆச்சாரியர்கள். அவர்களுள் பேரிடத்தில் வைக்கப்பட்டு போற்றப்படும் தூப்புல் தேசிகன், தான் வேதங்களில் படித்துத் தெளிய முடியாதவை ஆழ்வார்ப் பாசுரங்களில் படித்துத் தெளிந்ததாகச் சொல்லி விட்டார். //தெளியாத மறைநிலங்கள் தெரிந்தோமா//  

ஆக, மறை என்றால் மறைந்திருக்கும் பொருட்களைக் கொண்ட நூல். நேரடியாக புலனாகவதில்லை. பிற உதவியில்லாமல் முடியாது.

இப்படியாக யான் நினைத்துக்கொண்டிருக்கும் காலை,  //அமெரிக்க சுதந்திரதின வாழ்த்துகள். திருக்குறள் மறை ஓதல்// என்று மின் தமிழில் படித்தவுடன் அதிர்ந்து விட்டேன்.  அமெரிக்கவில் ஒரு நகரத்தில் தமிழர்கள் ஒன்றுகூடி திருக்குறள் என்ற தமிழ் மறையை ஓதினார்களாம். அப்படி ஓத நிகழ்ச்சி நிரல் வைத்து அழைத்திருக்கிறார்கள்.

திருக்குறள் மறையா? அஃதில் உட்பொருட்கள் மறைந்து கிடக்கின்றனவா/ பல்லுடைக்கும் பண்டிதர் தமிழில் எழுதப்பட்டதா?  குறட்பாக்களுக்கு உரையெழுதியோர் அவை மறைபொருட்கள்; யாம் அவற்றை படிக்காத - படித்தவருக்கும் புரியா - எனவே கற்ற, கல்லா இருமாந்தருக்கும் - கொண்டுசேர்போமென்று எழுதினரா?

தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப்படும்.  எப்பொருள் எவர்வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு; கற்க கசடற; கற்றபின் நிற்க அதற்குத் தக; அகரமுதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு - ஊடுதல் காமத்திற்கு இன்பம்; அதற்கின்பம் கூடி முயங்கப்பெறின் என்று பட்டவர்த்தனாம காமத்தைப்பற்றிச் சொன்ன இன்னபிற - இவையெல்லாம் மறைபொருட்களா?  அல்லது, இவை போக மற்றவைகள் மறைபொருட்களைக்கொண்டனவா?  Is Thirukkural all things to all men? or different thing to different men? ஆதிபகவன் என்று ஆரைச்சொல்கிறாரென்றுதான் சச்சரவே தவிற, அக்குறளில் மையப்பொருளான - All knowlede emanates from the Lord God - எனறு புரிவதில் ஏதேனும் வேறுபாடு  எழுந்ததுண்டா?  அக்காலத்தில் நிலவிய ஒரு சில சொற்களை குறட்பாக்கள் கொண்டிருக்க அவை இக்காலத்தில் வழக்கொழிய படிக்கப் புரியவதில்லை. அவற்றுக்கு அறிஞர்கள் விளக்கம் கொடுப்பார்கள். மற்றபடி, பயமுறுத்தும்படி ஒன்றுமில்லை குறளில்.

மேலும் திருக்குறள் -- தமிழ்மக்கள் - சாதி, இனம், ஊர், மதம் - போன்றவைகளுக்கப்பால் சென்று, தமிழால் ஒன்றானோம் யாம் தமிழர் என்று பேசி உணர்ந்து படிக்கத்தகுதியுள்ள‌ பொதுப்பனுவலா -- அல்லது -- பொது நீதிநூலா அல்லது ஹிந்துக்கள் மட்டும் ஓதி துதிக்கவா?

திருவள்ளுவரை பல மதமக்கள் தங்கள்தங்கள் மதத்தவரே என்று வாதமிட்டு மகிழ்ந்தாலும், ஆனால் அவரோ இன்றும் ஒரு பொதுஜன நாயகனாகத்தானே வைக்கப்பட்டு வாழ்த்தப்படுகிறார்.

தமிழனைப்பிரிக்கச்செய்யும் சூழ்ச்சி இஃதென்றால் மிகையில்லை/ திருக்குறளாம் அதை மறை ஓதுகிறாராம்!  It is stabbing at the heart of Tamil society !  புலம்பெயர்ந்து சென்று வாழும் தமிழரை விட இங்கு வாழும் தமிழர் பெட்டர். எவ்வளவுதான் அடிச்சிக்கிட்டாலும் திருவள்ளுவரை இசுலாமியரும் கிருத்துவரும் ஹிந்துக்களும் - அட நம் கேலிக்குள்ளாகும் பகுத்தறிவாளரும் - பொது நாயகனாக ஏற்றுக்கொண்டு வாழ்கிறார்கள். THANK GOD FOR SMALL MERCIES.  

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jul 13, 2015, 12:29:11 PM7/13/15
to mintamil

வணக்கம்.
ரிக் = கடவுள் வாழ்த்து
யசூர் = வான்சிறப்பு
சாம = நீத்தார் பெருமை
அதர்வன = அறன்வலியுறுத்தல்

On 05-Jul-2015 4:48 pm, "Bala Sundara Vinayagam" <balasundar...@gmail.com> wrote:
வடமொழி வேதங்களை மறைகள் என்பார்கள்.  நான்கு வேதங்களை நான்மறை என்றார்கள்.  பழந்தமிழ் நூல்களில் சுட்டப்படும் நான்மறை வட்மொழி வேதங்கள் என்போரும் இல்லை தமிழகத்தில் அன்று நின்று நிலவிய நான்கு தமிழ் மறைகளத்தான் தொல்காப்பியர் குறிப்பிடுவார் என பிள்ளைகளும் பேசுவது காணலாம்.

எஃதெப்படியாகினும் வேதங்கள் மறை என்றால், அவற்றின் பொருட்களை நாமறிவது சுலபமன்று என்றெடுக்கவேண்டும் . ஏனெனில் அப்பொருட்கள் உள்ளுறை இறைச்சி. எனவே வேதங்களுக்கு வேதறிஞர்களும் ஞானிகளும் விளக்கவுரைகள் எழுதினார்கள். மறைபொருட்கள் எனவே அவரவருக்குத் தோன்றியபடி எழுத அவை பலசில மாற்றங்களைக் கொண்டவாயின‌.  தமிழகத்திலும் வடவிந்தியாவிலும் இவ்வுரைகாரர்கள் அக்காலத்திலிருந்தே தோன்றினர்.  ஆங்கிலேயரும் ஐரோப்பியரும்கூட உரைகள் எழுதி அசத்திவிட்டார்கள்.

வேதமறைபொருட்களை அவ்வுரைகளைப் படிக்கவியலாதோர் அறிந்து கொள்ள புராணக்கதைகளும் இதிகாசங்களும் எழுதப்பட்டன.  அவைகள் காலட்சேபங்களாக அன்று கூறப்பட்டன. 

தமிழில் ஆழ்வார்ப்பாசுரங்கள் வேதங்களின் மறைபொருட்களை விளக்கித் தமிழில் பாமரமக்களுக்குச் சொலலவே எழுந்தனவெனறும்; எனவே அவை திராவிட வேதமென்றும் அறுதியிட்டார்கள் ஆச்சாரியர்கள். அவர்களுள் பேரிடத்தில் வைக்கப்பட்டு போற்றப்படும் தூப்புல் தேசிகன், தான் வேதங்களில் படித்துத் தெளிய முடியாதவை ஆழ்வார்ப் பாசுரங்களில் படித்துத் தெளிந்ததாகச் சொல்லி விட்டார். //தெளியாத மறைநிலங்கள் தெரிந்தோமா//  

ஆக, மறை என்றால் மறைந்திருக்கும் பொருட்களைக் கொண்ட நூல். நேரடியாக புலனாகவதில்லை. பிற உதவியில்லாமல் முடியாது.

இப்படியாக யான் நினைத்துக்கொண்டிருக்கும் காலை,  //அமெரிக்க சுதந்திரதின வாழ்த்துகள். திருக்குறள் மறை ஓதல்// என்று மின் தமிழில் படித்தவுடன் அதிர்ந்து விட்டேன்.  அமெரிக்கவில் ஒரு நகரத்தில் தமிழர்கள் ஒன்றுகூடி திருக்குறள் என்ற தமிழ் மறையை ஓதினார்களாம். அப்படி ஓத நிகழ்ச்சி நிரல் வைத்து அழைத்திருக்கிறார்கள்.

திருக்குறள் மறையா? அஃதில் உட்பொருட்கள் மறைந்து கிடக்கின்றனவா/ பல்லுடைக்கும் பண்டிதர் தமிழில் எழுதப்பட்டதா?  குறட்பாக்களுக்கு உரையெழுதியோர் அவை மறைபொருட்கள்; யாம் அவற்றை படிக்காத - படித்தவருக்கும் புரியா - எனவே கற்ற, கல்லா இருமாந்தருக்கும் - கொண்டுசேர்போமென்று எழுதினரா?

தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப்படும்.  எப்பொருள் எவர்வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு; கற்க கசடற; கற்றபின் நிற்க அதற்குத் தக; அகரமுதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு - ஊடுதல் காமத்திற்கு இன்பம்; அதற்கின்பம் கூடி முயங்கப்பெறின் என்று பட்டவர்த்தனாம காமத்தைப்பற்றிச் சொன்ன இன்னபிற - இவையெல்லாம் மறைபொருட்களா?  அல்லது, இவை போக மற்றவைகள் மறைபொருட்களைக்கொண்டனவா?  Is Thirukkural all things to all men? or different thing to different men? ஆதிபகவன் என்று ஆரைச்சொல்கிறாரென்றுதான் சச்சரவே தவிற, அக்குறளில் மையப்பொருளான - All knowlede emanates from the Lord God - எனறு புரிவதில் ஏதேனும் வேறுபாடு  எழுந்ததுண்டா?  அக்காலத்தில் நிலவிய ஒரு சில சொற்களை குறட்பாக்கள் கொண்டிருக்க அவை இக்காலத்தில் வழக்கொழிய படிக்கப் புரியவதில்லை. அவற்றுக்கு அறிஞர்கள் விளக்கம் கொடுப்பார்கள். மற்றபடி, பயமுறுத்தும்படி ஒன்றுமில்லை குறளில்.

மேலும் திருக்குறள் -- தமிழ்மக்கள் - சாதி, இனம், ஊர், மதம் - போன்றவைகளுக்கப்பால் சென்று, தமிழால் ஒன்றானோம் யாம் தமிழர் என்று பேசி உணர்ந்து படிக்கத்தகுதியுள்ள‌ பொதுப்பனுவலா -- அல்லது -- பொது நீதிநூலா அல்லது ஹிந்துக்கள் மட்டும் ஓதி துதிக்கவா?

திருவள்ளுவரை பல மதமக்கள் தங்கள்தங்கள் மதத்தவரே என்று வாதமிட்டு மகிழ்ந்தாலும், ஆனால் அவரோ இன்றும் ஒரு பொதுஜன நாயகனாகத்தானே வைக்கப்பட்டு வாழ்த்தப்படுகிறார்.

தமிழனைப்பிரிக்கச்செய்யும் சூழ்ச்சி இஃதென்றால் மிகையில்லை/ திருக்குறளாம் அதை மறை ஓதுகிறாராம்!  It is stabbing at the heart of Tamil society !  புலம்பெயர்ந்து சென்று வாழும் தமிழரை விட இங்கு வாழும் தமிழர் பெட்டர். எவ்வளவுதான் அடிச்சிக்கிட்டாலும் திருவள்ளுவரை இசுலாமியரும் கிருத்துவரும் ஹிந்துக்களும் - அட நம் கேலிக்குள்ளாகும் பகுத்தறிவாளரும் - பொது நாயகனாக ஏற்றுக்கொண்டு வாழ்கிறார்கள். THANK GOD FOR SMALL MERCIES.  

--

rnka...@gmail.com

unread,
Jul 14, 2015, 12:34:28 AM7/14/15
to mint...@googlegroups.com
dear mr kalai

not able to comprehend the context of your post/reply; you mean to say the content of four vedas as listed by you? or are you equating these chapters of thirukkural with these four vedas?

regards
rnkantan

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jul 14, 2015, 1:30:12 AM7/14/15
to mintamil
வணக்கம்.


2015-07-13 20:34 GMT-08:00 <rnka...@gmail.com>:
dear mr kalai

not able to comprehend the context of your post/reply;
சிரமத்திற்கு மன்னிக்கவும் ஐயா.
மிகச்சிறிய ஆன்டிராய்ட்போனில் விரைவாகத் தட்டச்சு செய்ய இயலாமல், சுருக்கமாகக் கூறிவிட்டேன்.
 
you mean to say the content of four vedas as listed by you? or are you equating these chapters of thirukkural with these four vedas?
மிகவும் சரி.
ரிக் = கடவுள் வாழ்த்து
யசூர் = வான்சிறப்பு
சாம = நீத்தார் பெருமை
அதர்வன = அறன்வலியுறுத்தல்

நான்கு வேதங்களும், பாயிரத்தில் உள்ள நான்கு இயல்களும் திசைதெய்வங்களை வணங்கி இயற்றப் பெற்றுள்ளன.  எனவே திருக்குறள் பாயிரத்தில் அமைந்துள்ள நான்கு இயல்களும் நான்கு வேதங்களின் சாரம்.  எனது இக் கருத்தின் அடிப்படையில், திருக்குறளின் பாயிரத்தில் உள்ள 40 குறள்களையும் ஓதினால், நான்மறைகளையும் ஓதியதாகும் என்றே கருதுகிறேன் ஐயா.

அன்பன்
கி.காளைராசன்

Suba.T.

unread,
Jul 14, 2015, 4:47:26 AM7/14/15
to mint...@googlegroups.com

இரண்டு விசயங்களைக் குறிப்பிட விரும்புகின்றேன்.
1.ஏன் வேதம் போல திருக்குறளை ஒத வேண்டும் என்ற கருத்தை முன் வைக்கின்றீர்கள்? இந்த ஒப்பீடு தவறானது. 40 குறளை ஓதிவிட்டால் திருக்குறளை அறிந்ததாகுமா? இது மிக மேம்போக்கான ஒரு கருத்தாகவே காண்கின்றேன். என்னை தவறாக நினைக்க வேண்டாம். நூல்களை வாசிக்க அலுப்புப்படும் சமூகமாக நம் சமூக்ம் இருக்கின்றது. இதில் இவ்வகை பிரச்சாரம் செய்தால் பல இளம் தலைமுறையினரும் 40 செய்யுட்களை வாசித்து விட்டு திருக்கிறளை வாசித்து விட்டதாக நினைத்துக் கொள்வர்.

2. நூல்கள் என்பன வெறுமனே ஓதி பாடிவிட்டு செல்வதற்காக அல்ல. அவை வாசித்து அதில் சொல்லப்படும் கருத்துக்கள் ஒவ்வொன்றும் மீண்டும் அலசப்பட வேண்டியவை. பல வேளைகளில் இசைக்காகவும் தெய்வீகத்தன்மை இருப்பதாகவும் சொல்லப்படுவதால் நம் மூளைக்கு சிறிதும்  வேலை கொடுக்காமல் ஒரு பாவனைக்குள் புகுந்து பாடி\ ஓதி மன நிறைவு அடைகின்றோம். இது ஒரு நூலை அறிந்து கொள்ளும் சரியான முறையல்ல.
ஒவ்வொரு நூலும் அதன் ஒவ்வொரு வாசிப்பிலும் அலசப்படவேண்டும்.ஆராயப்பட வேண்டும்.

சுபா

--

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jul 14, 2015, 5:08:33 AM7/14/15
to mintamil
வணக்கம்.

2015-07-14 14:17 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:

இரண்டு விசயங்களைக் குறிப்பிட விரும்புகின்றேன்.
1.ஏன் வேதம் போல திருக்குறளை ஒத வேண்டும் என்ற கருத்தை முன் வைக்கின்றீர்கள்?

திருக்குறள் நூலில் உள்ள பாயிரத்தை மட்டுமே நான் வேதத்துடன் ஒப்பீடு செய்கிறேன்.
திருக்குறள் நூலை அல்ல. 

என்னை தவறாக நினைக்க வேண்டாம்.

ஆகா.
இதில் தவறாக நினைக்க என்ன இருக்கிறது.

நூல்களை வாசிக்க அலுப்புப்படும் சமூகமாக நம் சமூக்ம் இருக்கின்றது. இதில் இவ்வகை பிரச்சாரம் செய்தால் பல இளம் தலைமுறையினரும் 40 செய்யுட்களை வாசித்து விட்டு திருக்கிறளை வாசித்து விட்டதாக நினைத்துக் கொள்வர்.

அப்படி யாரேனும் செய்தால் அது தவறு. 
திருக்குறள் நூல் முழுமையையும் படிக்க வேண்டும்.

2. நூல்கள் என்பன வெறுமனே ஓதி பாடிவிட்டு செல்வதற்காக அல்ல.

1) திருக்குறள் பாயிரம் ஓதுவதற்கானது.  அதில் கற்பதற்கோ, கடைப்பிடிப்பதற்கோ ஏதும் இல்லை.

2) திருக்குறள் (பாயிரம் நீங்கிய ) நூல் கற்பதற்கும், கற்றனவற்றைக் கடைப்பிடிப்பதற்குமானது. 

ஒவ்வொரு நூலும் அதன் ஒவ்வொரு வாசிப்பிலும் அலசப்படவேண்டும்.ஆராயப்பட வேண்டும்.

அன்பன்

Malarvizhi Mangay

unread,
Jul 14, 2015, 7:36:45 AM7/14/15
to mint...@googlegroups.com

சுபாவுக்கு ஒரு தகவல் தமிழகத்தில் சைவர்கள் நிகழ்த்தும்
திருவாசக முற்றோதல் போல.,திருக்குறள் முற்றோதல்களும்
நடந்து வருகின்றன.மதுரைத் திருவள்ளுவர் கழகத்தினதுணைத் தலைவரான என்தந்தை வழி நின்று உறுதிபடவே இச்செய்தியை  வழங்குகிறேன்.போன வாரம்
தினமணியில் திருவள்ளுவர் மதம் என உருவாக்கப்பட்டு
கேரளாவில் 2000 த்திற்கும் மேற்பட்ட குடும்பத்தார் பின்பற்றி
்வருவதாகவும் செய்தி வந்திருந்தது.

--

சொ. வினைதீர்த்தான்

unread,
Jul 14, 2015, 8:35:20 AM7/14/15
to mint...@googlegroups.com, malarmangay64, தேமொழி, N. Kannan
On 7/14/15, Malarvizhi Mangay <malarm...@gmail.com> wrote:
> சுபாவுக்கு ஒரு தகவல் தமிழகத்தில் சைவர்கள் நிகழ்த்தும்
> திருவாசக முற்றோதல் போல.,திருக்குறள் முற்றோதல்களும்
> நடந்து வருகின்றன.மதுரைத் திருவள்ளுவர் கழகத்தினதுணைத் தலைவரான என்தந்தை வழி
> நின்று உறுதிபடவே இச்செய்தியை வழங்குகிறேன்.


பெண்ணாடத்தில் நிகழ்ந்த திருக்குறள் முற்றோதல் நிகழ்வைக்குறித்த என்னுடைய
28.1.2015 தேதியிட்ட பதிவினைக் குழுமத்தில் காணவேண்டுகிறேன் திருமிகு
மலர்விழி மங்கை
தலைப்பு...
திருக்குறள் முற்றோதல் - பெண்ணாடம் திருக்குறள் ஆய்வு மையம் -பேரறிவாளர்
சம்பந்தனார். இந்தப்பதிவில் நம் பெரும்பாலான நன்பர்கள் ஆர்வம்
காட்டியுள்ளார்கள். திரு கண்ணன் மிகுந்த ஈடுபாடுகொண்டு எழுதினார். .
திருமிகு தேமொழி இயன்றால் சுட்டி தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.

பல இடங்களில் ஆரவாரமில்லாமல் பணிகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
பேரறிவுக் கருணையாளர்கள் இயன்றதைச்செய்துகொண்டு இருக்கிறார்கள். அவர்கள்
தொகை வளரவேண்டுவோம். நம்மால் இயன்ற வகையில் செயலாற்றுவோம்.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

Hari Krishnan

unread,
Jul 14, 2015, 8:50:21 AM7/14/15
to mintamil, malarmangay64, தேமொழி, N. Kannan

2015-07-14 18:05 GMT+05:30 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>:
பெண்ணாடத்தில் நிகழ்ந்த திருக்குறள் முற்றோதல் நிகழ்வைக்குறித்த என்னுடைய
28.1.2015 தேதியிட்ட பதிவினைக் குழுமத்தில் காணவேண்டுகிறேன் திருமிகு
மலர்விழி மங்கை

இந்த சந்தர்ப்பத்தில் ஒன்றைக் குறிப்பிடுவது பொருந்தும் என்று நினைக்கிறேன்.  திருக்குறள் முற்றோதல் என்பது ஒருபுறமிருக்க.  திருக்குறளை ஒவ்வொரு குறளாக வாசித்து விரிவாகப் பொருளும் சொல்லி வருகிறார் கவிமாமணி குணசேகரன் அவர்கள்.  இவர் பதின்கவனகர் இராமையா அவர்களுடைய மாப்பிள்ளை; பதினாறு கவனகர் கனகசுப்புரத்தினம் இவருக்கு மாப்பிள்ளை.

சென்னை வாணுவம்பேட்டை திருவள்ளுவர் மன்றத்தின் சார்பில் இந்தத் தொண்டைச் சுழல் முறையில் செய்து வருகிறார் கவிமாமணி குணசேகரன் அவர்கள் (80 வயதுக்கு மேல்).  கடந்த சுமார் 30/40 வருடங்களாக இந்தப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  2003 வரையில் நங்கநல்லூரில் நான் குடியிருந்த சமயத்திலேயே மூன்றாவது சுழற்சியாக ஓதலும் பொருளும் நடைபெற்றுக் கொண்டிருந்தது.  தற்போது மேலும் ஓரிரு சுழற்சிகள் நடந்திருக்கலாம்.  நங்கநல்லூர் வாசியாக இருந்த சமயத்தில் இந்த வகுப்புகளில் தொடர்ந்து கலந்து கொண்டிருக்கிறேன்.

உயர்திரு மோகனரங்கன் அவர்களால் இதுபற்றி விசாரித்துச் சொல்லமுடியும் என்றெண்ணுகிறேன். அவரால் கூடுமானால்.  

அதற்கு மேலும் கூடுமானால் இன்னொன்று.  கவிமாமணி குணசேகரனுடைய இந்தத் தொடரும் தொண்டுக்காக அவரை வல்லமையாளர் விருதுக்குப் பரிந்துரைக்கிறேன்.  

Pasupathi Selvam

unread,
Jul 14, 2015, 11:40:09 AM7/14/15
to mint...@googlegroups.com
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.

The original verse is all different great Twister he is!

On Friday, July 10, 2015 at 12:03:18 PM UTC+10, Hari wrote:

2015-07-09 23:45 GMT+05:30 Bala Sundara Vinayagam <balasundar...@gmail.com>:
நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப" 

இக்குறள் மந்திரம் என்ற வடமொழிச்சொல்லை உடையது.  வள்ளுவர் பலவடமொழிச்சொற்களைக் கையாண்டவர். அவரின் மறை என்ற சொல் பிராமணரர்கள் ஓதும் வேதத்தையே குறிப்பது. வேதங்கள் மந்திரங்கள். மந்திரங்கள் மறைபொருட்களே.

இப்படி ஒரு திருக்குறள் எந்த அதிகாரத்தில் வருகிறது ஐயா?  கற்றுக் கொள்ள ஆவலாக இருக்கிறேன்.

Pasupathi Selvam

unread,
Jul 14, 2015, 11:40:09 AM7/14/15
to mint...@googlegroups.com
ஏனோ இந்த அங்கலாய்ப்பு இன்றைய இளைஞர்களை பற்றி!
இதைப் படித்தால் இளைய தலைமுறை சீர் கேட்டு பெண்களை நாள் தோரும் வதைப்பதைப்போல இருக்கிறது.

எனக்கு தெரிந்த வகையில் இன்றைய இளைய சமூகம் வாழ்க்கைத்தரத்தில் உயர்ந்து தான் போய்க்கொண்டிருக்கிறது.- அது விஞானத்துறையோ, பொறியியலோ, கணினி சம்பந்தப் பட்டதோ, அல்லது விண்  வெளியோ எல்லாமே ஒரு புதுமையை நாளும் அறிவித்துக்கொண்டுதானிருக்கிறது.
Please, please for God sake இந்த ஓலத்தை நிறுத்தவும். Very depressing.

Bala Sundara Vinayagam

unread,
Jul 14, 2015, 12:29:29 PM7/14/15
to mint...@googlegroups.com
நூலின் பெயர்: திருக்குறள் தெளிவுரை 
ஆசிரியர் முனுசாமி வரதராசன் (முன்னட்டையில் டாக்டர் மு வரதராசனார்) 
இரண்டாம் பதிப்பு: 1988.  
வெளியிட்டோர்: திருநெல்வேலி சைவசிந்தாந்த நூற்பதிப்பு கழகத்தார்.  
பக்கம் 7 
அதிகாரம்: நீத்தார் பெருமை: 
குறள் எண்ணம் 28வருமாறு:

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.

இதுதான் என்னிடம் உள்ள நூல். 

திரு பசுபதி செல்வம் சொல்வது: The original verse is all different great Twister he is!

ஆக, பசுபதி செல்வத்திடம் இருப்பது ஒரிஜனல். கழக வெளியீட்டில் உள்ளது போலி. ஆக, ட்விஸ்டர்கள் கழக வெளியீட்டாளர்கள்.

என்னை ஏமாற்றிவிட்டார்கள் கழக வெளியீட்டாளர்கள்.  திரு பசுபதி செல்வம் அவர்கள் ஒரிஜனல் குறள் 28 ஐ வெளியிடுமாறு விண்ண்ப்பிக்கிறேன்..

நன்றி. வணக்கம்.

Bala Sundara Vinayagam

unread,
Jul 14, 2015, 12:50:44 PM7/14/15
to mint...@googlegroups.com
அதை சைவர்கள் நடாத்துகிறார்களா? திருவாசகம் ஓதும் அதே சமயத்தில் அதே மேடையில் ஓதுகிறார்களா?

ஆம் அப்படியென்றால் இந்து மத நூலா? தயை செய்து என் ஐயத்தை நீக்குங்கள்.

அங்கொரு கால் இங்கொரு கால் தமிழர்கள் வைக்க முடியாது. ஒன்று, திருக்குறள் பொதுமறை. அல்லது இந்துக்களுக்கான மறை.  

Bala Sundara Vinayagam

unread,
Jul 14, 2015, 1:19:19 PM7/14/15
to mint...@googlegroups.com, kalair...@gmail.com
தொல்காப்பியத்துக்கு பாயிரம் பனம்பாரனார் எழுதினார். அது தொல்காப்பியத்தோடு வெளியாகிறது. திருக்குறளுக்குத் திருவள்ளுவமாலை இருக்கிறது. திருவள்ளுவ மாலை பல பாவலர்கள் திருக்குறள் நூலில் மேல் காதல் முற்றி எழுதிய புகழாரங்கள். இலக்கியம் மிகைப்படுத்தலில் திளைப்பது. அதனால் புகழாரங்கள் அப்படித்தான் இருக்கும். செகப்பிரியரின் மேல் பலர் வைத்தவை போல. அணுவைத்துளைத்து ஏழ்கடலைத்துளைத்து...நினைவுக்கு வருகிற்தா?

இத்திருமாலை பல பாவலர்கள் பல்வேறு காலகட்டங்களில் எழுதியவைகளில் தொகுப்பு. இதைப் பாயிரம் என்கிறாரா/?இப்பாமாலைகள் வேதங்களுக்கு ஈடானவை என்கிறாரா? இல்லை..பாயிரம் என்றவொன்று இருக்கிறது என்றால் அஃது எங்கே இருக்கிறது?  சொன்னால் நானும் படிப்பேன். தான் பெற்ற இன்பம் பிறரும் பெருக என்று திரு காளிராசன் அவர்கள் அப்பாயிரத்தை இங்கு எடுத்தியம்புவாராக என்பது என் விண்ணப்பம். இல்லையென்றால் எங்கிருக்கிறது என்று சொன்னால் போதும்.  வேதங்களுக்கு நிகரானவை என்ற போது எனனால் தாங்க முடியவில்லை. கண்டிப்பாகப் படித்தே ஆக வேண்டும் !  Please tell me where it is. 

தேமொழி

unread,
Jul 14, 2015, 1:19:57 PM7/14/15
to mint...@googlegroups.com, karu...@gmail.com, malarm...@gmail.com
On Tuesday, July 14, 2015 at 5:35:20 AM UTC-7, சொ.வினைதீர்த்தான் wrote:

பெண்ணாடத்தில் நிகழ்ந்த திருக்குறள் முற்றோதல் நிகழ்வைக்குறித்த என்னுடைய 
28.1.2015 தேதியிட்ட பதிவினைக் குழுமத்தில் காணவேண்டுகிறேன் திருமிகு 
மலர்விழி மங்கை 

இதோ இங்கே ...பார்க்கவும் 

திருக்குறள் முற்றோதல் - பெதிருக்குறள் முற்றோதல் - பெண்ணாடம் திருக்குறள் ஆய்வு மையம் -பேரறிவாளர் 
சம்பந்தனார். 

Bala Sundara Vinayagam

unread,
Jul 14, 2015, 1:32:51 PM7/14/15
to mint...@googlegroups.com
//ஒவ்வொரு நூலும் அதன் ஒவ்வொரு வாசிப்பிலும் அலசப்படவேண்டும்.ஆராயப்பட வேண்டும்.//

மன்னிக்கவும். இவ்வாசை போகாத ஊருக்கு வழிதேடுவதைப்போல.

ஒருவர் நான்கு வேதங்களின் சாரம் என்கிறார். இன்னொருவர் பொருட்கள் மறைந்துகிடக்கும் வேதங்களைப்போலவே திருக்குறளும் என்கிறார். இன்னொருவர் மதுரைச்சைவர்கள் திருவாசகத்தோடு திருக்குறளையும் ஓதுகிறார்கள் என்று திருக்குறள் பன்னிரு திருமறைகளோடு பதிமூன்றாவது என்று பொருள் படச்சொல்கிறார். இன்னொருவர் நங்கநல்லூரில் ஓதப்படுகிறது என்கிறார். இன்னொருவர் இன்னொரு இடத்தையும் சுட்டுகிறார். அப்படி ஓதும் ஆட்களையும் காட்டுகிறார்.
மற்றுமொருவரோ, இந்நூல சமணத்தத்துவங்களைக்கொண்ட் சமணருக்கான நூலென்கிறார். 

இப்படி அனைவரும் ஒரு முகமாக திருக்குறளை ஒரு மதநாலாக தமிழர்களுக்குக் காட்டி நம்பவைக்கும் செயலில் இறங்கி விட்டார். அதற்கு மின் தமிழ் நிலைக்களனாகிற்து. பிற தளங்களிலும் இதே காட்சி அரங்கேற்றப்படுகிறது சைவர்களால், வைணவர்களால், சமணர்களால்.  இந் நூல் உலகப்பொதுமறை என்று சொன்னோரைப் பொயயர்கள் என்கிறார்கள் இவர்கள் சொல்லாமல் சொல்லி.

இப்படி மதவாதிகளில் கைகளில் சிக்கிக்கொண்டிருக்கும் நூலை அலச விடுவரோ? மத நூல்கள் அலசப்படா. அவைகளின் மறைபொருட்கள் மட்டுமே விளக்கப்படும். பாசுரங்களை எவ்வைண்வரும் கேள்வி கேட்க மாட்டார். அலசவும் மாட்டார். அவைகளுக்கு வியாக்யாணம் வரைவார். ஏற்கனவே வரையப்பட்டால் அதூ போதுமவருக்கு.

ஆக, திருக்குறள் மத நூலென்றால், ஒவ்வொரு நூலும் அதன் ஒவ்வொரு வாசிப்பிலும் அலசப்படவேண்டும்.ஆராயப்பட வேண்டும். என்பது நடக்காது.

இப்படியாக திருக்குறளை இந்து நூலென்று நிலைநாட்டும் இவர்கள் தமிழ்க்கிருத்துவரையும் இசுலாமியரையும் நினைத்துப்பார்த்தாரா?

திண்ணை இணைய இதழில் மலேசியா வாழ் மருத்துவர் எழுதியதை இங்கு போடுகிறேன் படியுங்கள்:

//நாங்கள் யாரும் வள்ளுவரை கிறிஸ்த்துவர் என்று கொண்டாடவில்லை. என்னைப்போன்றவர்கள் பள்ளி பருவத்திலிருந்தே திருக்குறளைப் படித்து வருகிறோம். அதை எழுதியவர் ஒரு இந்துவோ அல்லது புத்த மதத்தினரோ என்று எண்ணிப்பார்த்ததில்லை. இப்போது நீங்கள் சொல்லித்தான் வள்ளுவர் ஒரு இந்து என்பதும், ஒரு இந்துவை ஏன் பொதுவானவர் என்று சொல்கிறீர்கள் என்ற குற்றச்சாட்டை உணர முடிகிறது. நீங்கள் கூறுவதைப் பார்த்தால் ஒரு இந்து எழுதிய திருக்குறளை கிறிஸ்துவரும் இஸ்லாமியரும் ஏன் படிக்கிறீர்கள் அவர் எழுதியுள்ள குறள்கள் பற்றி கூற உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது என்று கேட்பது போன்று உள்ளது.
திருவள்ளுவர் கடவுள் வாழ்த்தில் எந்த ஒரு இந்துக் கடவுளையும் குறிப்பிட்டு எழுதவில்லை என்று நான் சொன்னதற்கு நீங்கள் திருமந்திரத்தையும் இராமயணத்தையும் மகாபாரத்தையும் உதாரணம் கூறுகிறீர்கள்.திருக்குறள் அவை போன்று ஒரு இதிகாச காவியமா? அவற்றிலும் கடவுள் வாழ்த்து பொதுவாக இருந்தாலும் அவற்றினுள் உள்ளதெல்லாம் இந்து மத இதிகாசகங்கள்தானே? திருக்குறள் ஒரு நீதி நூல் என்பதக்காகவே அவர் கூறும் நீதி நெறிமுறைகளை விரும்பி நாங்கள் படிக்கிறோம். நாங்கள் என்று கூறும்போது என்னைப்போன்ற தமிழ் மீது பற்று கொண்ட கிறிஸ்த்துவர்களைக் குறிப்பிடுகிறேன். திருக்குறளை வேதாகமத்தைப் படிப்பதைப்போன்று படிக்கும் உலக தமிழ் கிறிஸ்துவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அவர்களையும் படிக்கவேண்டாம் என்று கூறுகிறீர்களா? இதுபோன்றே எத்தனை இஸ்லாமிய அன்பர்கள் புனித குரானைப் படிப்பதுபோல் திருக்குறளை படிக்கிறார்கள் என்பது கேள்விக்குறியே! என் இவ்வளவு தூரம்? திருவள்ளுவர் ஒரு பழுத்த இந்து முனிவர் என்று உரிமைகொண்டாடும் தமிழ் நாட்டு வெளி நாட்டு தமிழ் இந்துக்களில் எத்தனை பேர்களின் இல்லங்களில் திருக்குறள் நூல் உள்ளது? எத்தனை இந்து பிள்ளைகளுக்கு வள்ளுவர் கூறும் குறள்கள் போதிக்கப்படுகிறது? திருக்குறள் பற்றி பேசும் பலரது இல்லங்களில் திருக்குறள் இருக்காது. இங்கு பல ஆண்டுகளுக்கு முன் ஒரு பத்திரிக்கை விற்கும் கடையில் ” இங்கு திருக்குறள் கிடைக்குமா? ” என்று கேட்டேன். அங்கு அமர்ந்திருந்த நவநாகரிக தமிழ்ப் பெண், ” அப்படீனா என்னாங்க? ” என்று கேட்டார்! இது கற்பனையல்ல! உண்மை அனுபவம்! மறக்க முடியாத அனுபவம்!
ஆகவே வள்ளுவர் ஈடு இணையற்ற ஓர் தமிழ்ப் புலவர் என்பதை தமிழர்களாகிய நாம் ஏற்று, திருக்குறள் கூறும் நன்நெறிகள் எல்லாருக்கும் ( எல்லாருக்கும் என்பது மதம், ஜாதி , அரசியல் கட்சி வேற்றுமைகள் உட்பட ) பொதுவானது என்பதை உணர்ந்து ஒன்றுபடுவோம் வாருங்கள்! 

.அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.//

தேமொழி

unread,
Jul 14, 2015, 1:46:31 PM7/14/15
to mint...@googlegroups.com, hari.har...@gmail.com, megala.r...@gmail.com, vallamai editor, hari.har...@gmail.com, Anna Kannan
பரிந்துரைக்கு நன்றி திரு. ஹரிகி 


..... தேமொழி

செல்வன்

unread,
Jul 14, 2015, 1:48:46 PM7/14/15
to mintamil

2015-07-14 0:29 GMT-05:00 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
நான்கு வேதங்களும், பாயிரத்தில் உள்ள நான்கு இயல்களும் திசைதெய்வங்களை வணங்கி இயற்றப் பெற்றுள்ளன.  எனவே திருக்குறள் பாயிரத்தில் அமைந்துள்ள நான்கு இயல்களும் நான்கு வேதங்களின் சாரம்.  எனது இக் கருத்தின் அடிப்படையில், திருக்குறளின் பாயிரத்தில் உள்ள 40 குறள்களையும் ஓதினால், நான்மறைகளையும் ஓதியதாகும் என்றே கருதுகிறேன் ஐயா.

உண்மை. வண்ணக்கன் சாத்தனார் அவ்வண்னமே குறிப்பிடுகிறார்

ஆரியமும் செந்தமிழும் ஆராய்ந்து இதனின் இனிது
சீரியது ஒன்றைச் செப்பல் அரிதால் – ஆரியம்
வேதம் உடைத்து; தமிழ் திருவள்ளுவனார்
ஓது குறட்பா உடைத்து.


"சமஸ்கிருதம், தமிழ் இரண்டும் உயர்தனிச்செம்மொழிகள். இரண்டையும் ஆராய்ந்து "இதில் ஒன்று மேல், ஒன்று கீழ்" என சொல்லமுடியாத வண்ணம் சிறப்புவாய்ந்தவை. ஆனால் வடமொழியில் தமிழில் இல்லாத சிறப்பாக நான்மறைகள் இருந்தன. அக்குறையை தமிழில் வந்த திருக்குறள் நீக்கியது..ஆக இம்மொழிகள் மீண்டும் மேல்,கீழ் கூற முடியாத சிறப்புடையவையாகின" என்கிறார்

ஆக இங்கே நான்மறைகளுக்கும் நிகரான நூலாக திருக்குறளை முன்வைக்கிறார். இந்திய நூல்கள் வேறு எதற்கும் கிட்டாத சிறப்பு இது. ஆக குறள் தமிழ்மறையே


ஏன் தமிழும், செங்கிருதமும் சமமான சிறப்புடையவை? காரணம் இரண்டும் சிவனின் டமருக்கு ஒலியில் இருந்து பிறந்தவை. தமிழ் சிவபெருமான் உலகிற்கு தந்த கொடை என்கிறான் கம்பன்

உழக்கும் மறை நாலினும் உயர்ந்து உலகம் ஓதும்
வழக்கினும் மதிக்கவியினும் மரபின் நாடி
நிழற்பொலி கணிச்சி மணி நெற்றி உமிழ் செங்கண்
தழற்புரை சுடர்க் கடவுள் தந்த தமிழ் தந்தான் — (கம்ப ராமாயணம்)

ஆக பிள்ளையாரும், முருகனும் எப்படி சிவனின் இரு பிள்ளைகளோ அதுபோல தமிழும், செங்கிருதமும் சிவனின் இரு குழந்தைகள். பாரதத்தின் இருபெரும் சொத்துக்கள். பாரதத்தின், தமிழகத்தின் கலாசார விழுமியங்கள் அனைத்தும் இவ்விருமொழிகளிலுமே உள்ளன.




--

செல்வன்

unread,
Jul 14, 2015, 1:58:59 PM7/14/15
to mintamil
குறளும், வேதமும்

செய்யா மொழிக்குந் திருவள் ளுவர்மொழிந்த
பொய்யா மொழிக்கும் பொருளொன்றே-செய்யா
வதற்குரிய ரந்தணரே யாராயி னேனை
யிதற்குரிய ரல்லாதா ரில்- வெள்ளிவீதியார்

செய்யாமொழியாகிய வேதத்துக்கும், பொய்யாமொழியாகிய குறளுக்கும் பொருள் ஒன்றே. ஆனால் வேதமோ அந்தணர்க்கு மட்டுமே உரியது. குறளோ உலகுக்கே பொதுவானது

வேதப்பொருளாய் நிற்கும் குறள்

ஓதற் கெளிதா யுணர்தற் கரிதாகி
வேதப் பொருளாய் மிகவிளங்கித் - தீதற்றோ
ருள்ளாதோ றுள்ளுதோ றுள்ள முருக்குமே
வள்ளுவர் வாய்மொழி மாண்பு.

வள்ளுவனாய் வந்து குறளை உரைத்தது தாமரை மேலமர்ந்த அயன் (பிரம்மன்)


ஐயாறு நூறு மதிகார மூன்றுமா
மெய்யாய வேதப் பொருள்விளங்கிப் - பொய்யாது.
தந்தா னுலகிற்குத் தான்வள் ளுவனாகி
யந்தா மரைமே லயன்.-

காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்

 பெருஞ்சித்திரனார்

ஏதமில் வள்ளுவ ரின்குறள்வெண் பாவினா
லோதிய வொண்பொரு ளெல்லா- முரைத்ததனாற்
றாதவிழ் தார்மாற தாமே தமைப்பயந்த
வேதமே மேதக் கன.

திருவள்ளுவர் வேதங்களின் சிறந்தபொருளை யெல்லாம் குறள்வெண்பாவாற் கூறிவிட்டமையால், இவற்றுள் எவை மேம்பட்டவை?

மதுரைப் பெருமருதனார்

அறமுப்பத் தெட்டுப் பொருளெழுப தின்பத்
திறமிருபத் தைந்தாற் றெளிய - முறைமையால்
வேத விழுப்பொருளை வெண்குறளால் வள்ளுவனா
ரோதவழுக் கற்ற துலகு.

  திருவள்ளுவர் வேதப் பொருளைக் குறள் வெண்பாவாற் கோவைபடக் கூறியதால், உலகம் தீயொழுக்கத்தினின்றும் தீர்ந்தது.

செயலூர்க் கொடுஞ்செங்கண்ணனார்

வேதப் பொருளை விரகால் விரித்துலகோ
ரோதத் தமிழா லுரைசெய்தா - ராதலா
லுள்ளுந ருள்ளும் பொருளெல்லா முண்டென்ப
வள்ளுவர் வாய்மொழி மாட்டு.

திருவள்ளுவர் ஆரிய வேதப்பொருளைத் தமிழுலகம் அறிதற்பொருட்டுத் தமிழில் விரித்துரைத்தார். ஆதலால், திருக்குறளில் மக்கள் கருதும்பொருள்களெல்லாம் உள்ளன.


தேமொழி

unread,
Jul 14, 2015, 2:07:36 PM7/14/15
to mint...@googlegroups.com, hol...@gmail.com


On Tuesday, July 14, 2015 at 10:58:59 AM UTC-7, செல்வன் wrote:

தந்தா னுலகிற்குத் தான்வள் ளுவனாகி
யந்தா மரைமே லயன்.-


எக்காலத்திலும் அடாவடி ஆட்களுக்குப் பஞ்சமில்லை என்பது தெரிகிறது 

..... தேமொழி

 

செல்வன்

unread,
Jul 14, 2015, 2:28:20 PM7/14/15
to mintamil

On Tue, Jul 14, 2015 at 1:07 PM, தேமொழி <jsthe...@gmail.com> wrote:
எக்காலத்திலும் அடாவடி ஆட்களுக்குப் பஞ்சமில்லை என்பது தெரிகிறது 

தமிழ்புலவர்கள் அடாவடி ஆட்கள் என்பதை புரிந்துகொண்டேன் :-)

காரணம் அவர்களுக்கு இன்னும் ஆயிரம் ஆண்டு கழித்து வரும் பாலிடிக்ஸ் எல்லாம் தெரியாது. வள்ளுவர் மேலுள்ள அன்பால் அவரை தான் தெய்வமாக கருதும் நான்முகனுடன் ஒப்பிட்டால் உடனே அவர் அடாவடி ஆள். மதவெறியர். மதசார்பற்றவர் :-)

அந்தந்தகாலகட்ட நூற்களை அந்தந்தகால அளவீடுகள் கொண்டு மதிப்பிடுவதே முறை.


--

Bala Sundara Vinayagam

unread,
Jul 15, 2015, 2:03:06 AM7/15/15
to mint...@googlegroups.com
கடைசிவரி ரொம்பச்சரி. அந்தக்கால நூல்க;ளை அந்தக்கால அளவீடுகள் கொண்டே மதிப்பீடுகள் செய்வது முறை.

இதை நான் எடுத்துக்கொண்டு ஏன் இப்போது செயல்படுத்தவேண்டும்?

அந்தக்காலத்தில் புலவர்களிடையே ஆரியர்-திராவிடர் என்று வேறுபாடில்லை.  ஆரிய தர்மங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன எதிர்ப்பேயில்லாமல்.  எதிர்ப்புக்கள் இருந்திருக்கலாம் ஆனால், அவை வரலாற்றிலிருந்து நீக்கப்பட்டிருக்கப்பட்டிருக்கின்றன என்று துணியலாம்..

இன்று காலம் வேறு. தனித்தமிழாளரும் வடமொழிகலந்த தமிழே வேண்டுமென்போரும், வைதீக மதத்தாரும், கலந்த மதமுடையாரும், வெறும் நாட்டார் தெயவ் வழிபாடும், மரபுக்கவிதையும் மரபை மீறிய கவிதையும் - என்று முரண்பாடுகளைக்கொண்டு தமிழகம் நடைபோடுகிறது என்பதை மிந்தமிழ் வரவேற்பு உரையில் படிக்கலாம்.

ஆனால், இவ்வுண்மையை நீங்கள் மறுத்து,. திருக்குறளை இந்துக்களுக்கான நூல் என்று அக்காலப்புலவர்கள் கருத்தையே காட்டுகிறீர்கள்.

ஆக, நீங்கள் செய்வதும் தவறாகப்படுகிறதே. 

திருக்குறள் அக்கால நூல் என்றால், அதையேன் இன்று ஆராய வேண்டும்? அலசவேண்டும்?  

ஏன் மு வ, உரையெழுத வேண்டூம்/ மணக்குடவர், பரிமேலழகர் எழுதிவிட்டார்களே? அவற்றையேன் அப்படியே பயன்படுத்தக்கூடாது? மு வ போன்றவர்கள் உரையெழுதக்காரணம் பரிமேலழகரின் சுயநலமிக்க திருத்த உரைகளேதானே காரணம் என்றறியாதவர் இருக்க முடியுமா?

மு வ எழதிய பின் ஏன் சாலமன் பாப்பையா எழத வேண்டும்? பழகு தமிழில் இருந்தால் நல்லது என்பதற்காக.

எனவே காலத்துக்குத்தக்காவாறு நூல்களும் கணிக்கப்படும். அக்கால நூல் இக்கால அளவீடுகள் கொண்டே ஆராயப்படவேண்டும்.  இல்லையென்றால் என்னவாகும்? 

இப்படி விபரீதமாகும் ---

கொழுநனைத்தொழுதெழுது என்பதை பெண்களின் பத்தினித்தன்மையை விளக்கவே என்று அக்காலத்தில் உரை சொன்னார்கள். அக்கால அளவீடுகள் பெண்ணடிமைத்தனத்தைப்போற்றின. பாதுக்காத்தன எனவே அக்காலத்து உரை சரி. இன்று? அப்படி செய்யலாமா?  அதே அளவீட்டை வைத்து திருக்குறளைப் பெண்ண்டிமைத்தனத்தைப் போற்றும் நூலெனலாமா?

ஆம் எதற்கு அந்நூல்? குப்பையில் தூக்கியெறியவேண்டியதுதானே? பெண்ணை அடிமை செய்யச்சொன்னவன் நமக்கெதற்கு என்ற கேள்விதானே எழுகிறது !

செல்வன்

unread,
Jul 15, 2015, 2:22:33 AM7/15/15
to mintamil

2015-07-15 1:03 GMT-05:00 Bala Sundara Vinayagam <balasundar...@gmail.com>:
ஆனால், இவ்வுண்மையை நீங்கள் மறுத்து,. திருக்குறளை இந்துக்களுக்கான நூல் என்று அக்காலப்புலவர்கள் கருத்தையே காட்டுகிறீர்கள்.

நல்ல கருத்து எம்மத நூலில் இருந்தாலும் எடுத்துக்கொள்வதே சிறப்பு. அது பைபிள், குரான், குறள் எதுவாக இருப்பினும்...பைபிள் க்றிஸ்டியன் நூல், அதில் உள்ள கருத்து எனக்கு பொருந்தாது என நினைக்கும் இந்து ஒரு மடையன். அதே போல குறள் ஒரு இந்து எழுதிய நூல், அதில் திருமாலும், இலக்குமியும் வருவதால் அதில் உள்ள நற்கருத்துக்களை பின்பற்ரமாட்டேன் என நினைக்கும் முஸ்லிமோ, கிறிஸ்துவரோ, நாத்திகரோ கோமாளிகள்

எனவே காலத்துக்குத்தக்காவாறு நூல்களும் கணிக்கப்படும். அக்கால நூல் இக்கால அளவீடுகள் கொண்டே ஆராயப்படவேண்டும்.  இல்லையென்றால் என்னவாகும்? 

தவறு...நூலை ஒருவர் ஒரு பொருளில் எழுதியபின் அதை மாற்றும் உரிமை வேறு யாருக்கும் கிடையாது. 


கொழுநனைத்தொழுதெழுது என்பதை பெண்களின் பத்தினித்தன்மையை விளக்கவே என்று அக்காலத்தில் உரை சொன்னார்கள். அக்கால அளவீடுகள் பெண்ணடிமைத்தனத்தைப்போற்றின. பாதுக்காத்தன எனவே அக்காலத்து உரை சரி. இன்று? அப்படி செய்யலாமா?  அதே அளவீட்டை வைத்து திருக்குறளைப் பெண்ண்டிமைத்தனத்தைப் போற்றும் நூலெனலாமா?


அக்கால மாந்தர்களை இக்கால விதிகளை கொண்டு மதிப்பிடுவதில் பலனில்லை.

ஆம் எதற்கு அந்நூல்? குப்பையில் தூக்கியெறியவேண்டியதுதானே? பெண்ணை அடிமை செய்யச்சொன்னவன் நமக்கெதற்கு என்ற கேள்விதானே எழுகிறது !

இப்படி சொல்லித்தான் தலிபான்கள் புத்தர் சிலையை இடித்து தள்ளினார்கள்.

"நாமே உருவ வழிபாட்டை மறுப்பவர்கள், நமக்கெதுக்கு புத்தர் சிலை" என்பதுதான் அவர்கள் கேள்வியும்.

இன்று நம் கொள்கை, கோட்பாடு என்னவாக இருந்தாலும் நம் பாரம்பரியத்தை மதிப்பதும், போற்றுவதும் நம் கடமை. குறள் நம் பாரம்பரியம், வரலாறு. வரலாற்றை திருத்த முயல்வதும், ஒழிக்க முயல்வதும் சரியல்ல

--

தேமொழி

unread,
Jul 15, 2015, 2:37:12 AM7/15/15
to mint...@googlegroups.com, hol...@gmail.com


On Tuesday, July 14, 2015 at 11:22:33 PM UTC-7, செல்வன் wrote:

2015-07-15 1:03 GMT-05:00 Bala Sundara Vinayagam <balasundar...@gmail.com>:
ஆனால், இவ்வுண்மையை நீங்கள் மறுத்து,. திருக்குறளை இந்துக்களுக்கான நூல் என்று அக்காலப்புலவர்கள் கருத்தையே காட்டுகிறீர்கள்.

நல்ல கருத்து எம்மத நூலில் இருந்தாலும் எடுத்துக்கொள்வதே சிறப்பு. அது பைபிள், குரான், குறள் எதுவாக இருப்பினும்...பைபிள் க்றிஸ்டியன் நூல், அதில் உள்ள கருத்து எனக்கு பொருந்தாது என நினைக்கும் இந்து ஒரு மடையன். அதே போல குறள் ஒரு இந்து எழுதிய நூல், அதில் திருமாலும், இலக்குமியும் வருவதால் அதில் உள்ள நற்கருத்துக்களை பின்பற்ரமாட்டேன் என நினைக்கும் முஸ்லிமோ, கிறிஸ்துவரோ, நாத்திகரோ கோமாளிகள்

மீண்டும்....மீண்டும்....மீண்டும்....

 

..... தேமொழி 

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jul 15, 2015, 2:53:49 AM7/15/15
to mintamil, Bala Sundara Vinayagam
வணக்கம்.

2015-07-15 11:33 GMT+05:30 Bala Sundara Vinayagam <balasundar...@gmail.com>:
கொழுநனைத்தொழுதெழுது என்பதை பெண்களின் பத்தினித்தன்மையை விளக்கவே என்று அக்காலத்தில் உரை சொன்னார்கள். அக்கால அளவீடுகள் பெண்ணடிமைத்தனத்தைப்போற்றின. பாதுக்காத்தன எனவே அக்காலத்து உரை சரி. இன்று? அப்படி செய்யலாமா?  அதே அளவீட்டை வைத்து திருக்குறளைப் பெண்ண்டிமைத்தனத்தைப் போற்றும் நூலெனலாமா?

ஆம் எதற்கு அந்நூல்? குப்பையில் தூக்கியெறியவேண்டியதுதானே? பெண்ணை அடிமை செய்யச்சொன்னவன் நமக்கெதற்கு என்ற கேள்விதானே எழுகிறது !
கணவனுடன் படுத்திருந்து எழும் பெண்ணின் நிலையை இக்குறள் விளக்குகிறது http://thirukural-kalai.blogspot.in/2014/01/55.html
அன்பன்

Bala Sundara Vinayagam

unread,
Jul 15, 2015, 6:52:07 AM7/15/15
to mint...@googlegroups.com, kalair...@gmail.com, balasundar...@gmail.com
இக்குறள் காலநிலை தனித்துக் காட்டப்படவில்லை.  முக்காலமும் சேர்ந்த பொதுவான காலம் மட்டுமே குறிப்பிடப்படுகிறது.  நீங்கள் சொல்லும் காலம், இரவு முடிந்து மறுநாள் விடிகாலை.  அக்காலத்தை மட்டுமே குறிக்காமல் பொதுவான காலம். எப்போதுமே பெண் எப்படி இருக்கவேண்டுமென்ற விதியே இக்குறள் காட்டுகிறது. இன்னொரு விபரீதப்பொருளையும் காட்டுகிறீர்கள். கணவன்-மனைவி இரவுப்புணர்ச்சியில் தூய்மை இழப்பது பெண்ணே. எனவே அவள் இறைவனை நேரடியாகச் சென்று தொழத்தகுதியை இழந்தவளாகிறாள்.  (குளிச்சாப்போச்சு என்று தோனவில்லை உங்களுக்கு ;_) அதே நேரத்தில் அதே புணர்ச்சியில் கணவன் தன் உடல் தூய்மையை இழக்கவில்லை. உனக்கும் தூயமைப்போச்சுடா. போய் உன் பொண்டாட்டியைக் கும்பிடு. இறைவனை நேரடியாகத் தொழ தகுதியில்லை உனக்கு என்று சொல்லப்படவில்லை.  மேலும், பெண் எனபவன் இயறகையினால் சின்னாட்கள் பூஜை அறைக்குட்செல்வதில்லை இந்துமதத்தில். அதையும் சேர்த்தல்லவா உங்கள் புது உரை சொல்லியிருக்கவேண்டும். ஓ பெண்ணே இரவு உன் கணவனோடு சேர்ந்த்தனால் உன் தூயமையை இழந்தவாகி விட்டாள். அப்போது கணவனையே தொழவேண்டும். அதே போல இயற்கையினால் நீ பூஜை அறையிலிருந்து விலகப்படும் நாட்களிலும் உன் கணவனையே தொழ வேண்டுமென்று ஏன் திரு காளிராசன் உரை பேசவில்லை. ஒருவேளை மறந்துவிட்டாரே? 

அதன்படி, ஒரு பெண்ணுக்குத் தெய்வம் முதலில் தன் கணவனே. கணவனைப்புறக்கணித்துவிட்டு அவள் கோயில் சென்று தெயத்தை வணங்கமுடியாது. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்று எல்லாருக்கும் பொதுவாகச்சொன்னார்கள். முன்னறி தெய்வம் என்பதற்கு பொருள்; தெயவம் எது என்று காட்டவேண்டிய கடமை பெற்றோருக்கு. அவ்ர்கள் மூலமாக நாம் நம் தெய்வத்திற்குப்போகிறோம் என்றும், பொருள். மற்ற பொருள்; தெயவத்தைவிட மேலானவர்கள் இவர்களே; இவர்கள் இல்லாவிட்டால் நாமில்லை (இதுநாத்திகத்தில் கொண்டு போய்விடும். பெற்றோரையே படைத்தவன் ஆண்டவன் அன்றோ? வைணவத்தில் பெற்றதாயைவிட தந்தையைவிட பெருமாளின் கருணையே அளப்பற்றது; கலப்படமில்லாததது என்ற பொருளில் //பெற்றதாயினும் ஆயின செய்யும் ஓம் நமோ நாராயாண என்னும் நாமம்// என்றார்.)

இது கிடக்க. வள்ளுவருக்கு வருவோம. இக்குறளை பெண்ணுக்கு எழுதியவர் கணவன் மனைவியோடு ஒன்று சேர்ந்து அன்பும் அறனும் உடைத்த இல்வாழ்க்கை வாழவேண்டுமென்றும் செக்ஸ் விசயத்தில் மனைவியைத்தவரி வேறு பெண்டிருடன் சேராததே பேராண்மை என்றெல்லாம் ஆணுக்கு இலக்கணம் சொன்ன இவர், அவனை உன் மனைவியை இறைவனுக்கும் மேலாக வைத்து வணங்கு; அப்படிசெய்வாயாயின் நீ சொன்னவுடன் மழை பெய்யும் என்று சொல்லவில்லை. காரணம்: ஆணும் பெண்ணும் சமமல்ல. ஆணுக்கே இறைவன்; இறைவனை பெண் ஆணின் மூலமாக அடையலாம்.  என்கிறார். இஃது ஆங்கிலக்கவிஞர் மில்டன் சொன்னதுதான். அப்படி சொன்னதற்காக ஆங்கிலேயர் எவருமே அவன் எழுதியதை உலகப்பொதுமறையென்று தூக்கிவைத்துப் பாராட்டாமல், அவன் ஒரு ஆணாதிக்கவாதி என்று குறிப்பிட்டு விடுவார்கள். நாம் அந்நிலையை இன்று அடையவில்லை.

Not equal as their sexes not equal seemed
For contemplation he and valor formed
For softness she and sweet attractive grace
He for God only; she for God in Him.

கணவனே கண்கண்ட தெய்வம்; கல்லானாலும் புருஷன்; புல்லானாலும் புருஷன். மணாளனே மங்கையின் பாக்கியம்.  என்ற கருத்தை நிலைநாட்ட எழுதப்பட்டது இக்குறள்.  பெண்ணடிமைத்தனம் என்பது நேருக்கு நேர் சொல்லப்படுவதில்லை. அது மறைமுகமாக திணிக்கப்படுவது. இறைவன் பெயரால் எழுதப்படும் மறைகள் அதை நன்கு செய்யும். பெண்கள் இன்டர்லைஸ் பண்ணி விடுவார்கள். இப்படி/, பெரியவா சொன்னா...//   பெரியவா நல்லது சொன்னா ஓகே. கெட்டதை நல்லது போல சுகர் கோட்டட் பில்லாகி விழுங்கச்சொன்னால்?  ஒருவன் கீழானவன் என்பதை இப்படி மூளைச்சலவை செய்தால் அவன் என்றுமே நிம்மதியாக இருப்பான். தமிழ்ப்பெண்ணுக்கு நிம்மதி தந்ததற்கு வள்ளுவருக்கு ஒரு ஓ போட்டுவிடுவோம்.

(இதன் தொடர்ச்சி திரு செல்வனுக்குப் போடும் மறுமொழியில்)

N. Ganesan

unread,
Jul 15, 2015, 9:10:40 AM7/15/15
to mint...@googlegroups.com, kalair...@gmail.com


On Monday, July 13, 2015 at 9:29:11 AM UTC-7, kalai wrote:

வணக்கம்.
ரிக் = கடவுள் வாழ்த்து
யசூர் = வான்சிறப்பு
சாம = நீத்தார் பெருமை
அதர்வன = அறன்வலியுறுத்தல்


அன்பின் காளைராசன்,

இது உங்கள் கருத்தா? முன்னோர் கருத்தாய்க் காணோமே.

யஜுர், அதர்வண - சரியான பெயர்கள்.

நா. கணேசன்
 

N. Ganesan

unread,
Jul 15, 2015, 10:25:32 AM7/15/15
to mint...@googlegroups.com


On Tuesday, July 14, 2015 at 11:28:20 AM UTC-7, செல்வன் wrote:

On Tue, Jul 14, 2015 at 1:07 PM, தேமொழி <jsthe...@gmail.com> wrote:
எக்காலத்திலும் அடாவடி ஆட்களுக்குப் பஞ்சமில்லை என்பது தெரிகிறது 

தமிழ்புலவர்கள் அடாவடி ஆட்கள் என்பதை புரிந்துகொண்டேன் :-)

காரணம் அவர்களுக்கு இன்னும் ஆயிரம் ஆண்டு கழித்து வரும் பாலிடிக்ஸ் எல்லாம் தெரியாது. வள்ளுவர் மேலுள்ள அன்பால் அவரை தான் தெய்வமாக கருதும் நான்முகனுடன் ஒப்பிட்டால் உடனே அவர் அடாவடி ஆள். மதவெறியர். மதசார்பற்றவர் :-)

அந்தந்தகாலகட்ட நூற்களை அந்தந்தகால அளவீடுகள் கொண்டு மதிப்பிடுவதே முறை.


நூல்களை என்பது சரி.

நூற்களை என்பது hypercorrection. தேவையில்லை.

 

N. Ganesan

unread,
Jul 15, 2015, 10:31:19 AM7/15/15
to mint...@googlegroups.com, vallamai


On Tuesday, July 14, 2015 at 10:58:59 AM UTC-7, செல்வன் wrote:
குறளும், வேதமும்


குறள் 4 (அ) 5 நூற்றாண்டில் எழுந்தது.

ஆனால், திருவள்ளுவமாலை 14-ஆம் நூற்றாண்டு. இரண்டுக்கும் 800 ஆண்டு இடைவெளி.

சங்கத் தமிழ்ப் புலவர்கள் 49 பேர் என்பது இடைக்காலச் சைவ இலக்கிய மரபு. முதலில் இம் மரபை திருவள்ளுவமாலையில் காண்கிறோம். 49 என்னும் எண் வடமொழியின் எழுத்தெண்ணிக்கை ஆகும். இந்த எண்ணைக் கொண்டு கற்பனையான புலவர் பெயர்களைத் தருகிறது திருவள்ளுவமாலை. இப் புராணக்கதையின் வளர்ச்சியைத் திருவிளையாடல் புராணத்தில் ‘சங்கப் பலகை அளித்த படலம்’ அழகாகப் பாடுகிறது. ந. மு. வேங்கடசாமி நாட்டார் ஐயா உரையுடன் மேலும் ஆராய விரும்புவோருக்காக என் வலைப்பதிவில் தந்துள்ளேன் 
மதுரையிலே தமிழ்ச் சங்கப் பலகையில் கவிபாடும் மனிதராய் இடம்பெற்றவை 49 சம்ஸ்கிருத எழுத்துக்கள் என்று பாடியுள்ளார். தமிழ்ப் புலவோராய் வீற்றிருந்த 49 ஸம்ஸ்க்ருத எழுத்துக்கள் யாவை? என்று அறிவோம்:

" உயிரும் மெய்யுமாக ஸம்ஸ்கிருத நெடுங்கணக்கு மொத்தம் 49 எழுத்துக்களைக் கொண்டது என்பர். ஆனால் தமிழ் நாட்டிலோ அதிகப்படியான எழுத்துக்களைக் கொண்டு 51 எனவும், 52 எனவும் இருவிதமாகக் கொள்ளப்படுகிறது. நாற்பத்தொன்பதுடன் ள, க்ஷ ஆகிய இரண்டையும் சேர்த்து 51-ஆகக் கருதுவர். “ஷ்ப” என்ற எழுத்தையும் சேர்த்து ஐம்பத்திரண்டாகவும் கருதுவர்.” (Thirty Pallava copper Plates, The Tamil Varalatru Kazhakam, Page 34.)
மேலும்,
நா. கணேசன்

Suba.T.

unread,
Jul 15, 2015, 11:52:51 AM7/15/15
to mint...@googlegroups.com

படுத்திருந்து எழும் பெண் எவ்வகையில் அசுத்தமாவார்?

உடலுறவு கொள்வதால் என்று குறிப்பிகிடுகின்றீர்களா..?

அப்படி அதுவே காரணமானாலும் ஆணும் பெண்ணும் இருவருமே அல்லவா நீங்கள் குறிப்பிடும் தூய்மை இழக்கின்றார்கள்.

உடலுறவிற்குப்பின் எல்லோருமே தன்னை தூய்மை செய்து கொள்வர்.  அப்படிப்பார்த்தாலும் இந்த விளக்கம் பொருந்தவில்லை.

முற்றிலும் தவறான கருத்தாகவே காண்கின்றேன்.

திருக்குறளில் இருக்கும் ஒரு ஆணாதிக்க சிந்தனை கொண்ட ஒரு செய்யுள் இது என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.

சுபா

Oru Arizonan

unread,
Jul 15, 2015, 6:38:18 PM7/15/15
to mintamil
இக்குறள் பற்றி  இழையில் நான் விளக்கம் அளித்திருக்கிறேன்.  உயர்திரு தேமொழி அவர்களும் நான் என்ன விளக்கம் அளித்தேன் என்பதை அறிவார்கள்.  ஏனெனில் அவர்கள் இதே குறளைப் பற்றி கேள்வி எழுப்பியபோது, அவரது கேள்விக்குப் பதிலாக ஒரு பதிவைச் செய்தேன். 

இக்குறள் பெண்ணடிமை நோக்கத்துடன் எழுதப்பட்டதல்ல, ஆண்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதற்கான துவக்கமே இது என்றும் குறிப்பிட்டுள்ளேன்.  அதற்கு வேறொரு குறளான,

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்தில் வைக்கப் படும்."

என்ற குறளையும் சேர்த்துப் படித்துப் பொருள்கொள்ளவேண்டும் என்றும் பதிந்து உள்ளேன்.  அதற்கு அவர்கள் நடிகர் வடிவேல் தலையில் அட்டித்துக்கொள்ளும் விழியத்தைக்கூட பதிலாகத் தந்திருந்தார்கள். 

என்னிடம் அந்த இழை இல்லை.  எனவே, உயர்திரு தேமொழி அவர்கள் அருள்கூர்ந்து அவ்விழையில் இருக்கும் எனது பதிவைக் கொடுத்தால் மிகவும் நன்றி  உள்ளவனாக இருப்பேன்.

பணிவன்புடன்,
ஒரு அரிசோனன்

செல்வன்

unread,
Jul 15, 2015, 7:02:16 PM7/15/15
to mintamil
இக்குறளுக்கு ஏன் இப்படித் தவறான விளக்கங்கள் எழுதப்படுகின்றன என்பது எனக்கு விளங்கவில்லை

பிற தெய்வங்களை தொழாது கணவனை தொழுதெழுவது, அதிலும் குறிப்பாக அதிகாலையில் விழிக்கையிலேயே கணவனை தொழுது எழுவதையே இது குறிக்கிறது.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த கணவனை மட்டும் தொழுவதை எல்லாம் இது குறிப்பது கிடையாது. பதிவிரதா தர்மம் என்பது கணவனை மட்டுமே தொழுதல். அவ்விரதத்தையே வள்ளுவர் இங்கே கூறுகிறார். அதை முக்திக்கு மார்க்கமாக அவர் கூறுவதில்லை. அத்தகையவள் "பெய்யென பெய்யும் மழை" அவ்வளவுதான். முக்திக்கான மார்க்கத்தை அவர் கடவுள் வாழ்த்தில் குறிப்பிடுகிறார். இல்வாழ்க்கைசிறப்பும், பதிவிரதா தருமமும் இக்குறளில் குறிப்பிடபடுகின்றன.

இன்று இத்தகைய தருமங்களில் இருந்து சமூகம் வெகுவிரைவில் நகர்ந்து வந்துவிட்டது. அதற்காக வரலாற்றை மாற்றி எழுத முனைதல் கூடாது.

செல்வன்

unread,
Jul 15, 2015, 7:14:26 PM7/15/15
to mintamil
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.


ஒப்பிடுக:

வறன் ஓடின் வையகத்து வான்தரும் கற்பினாள் (கலித்தொகை)

வான்தரு கற்பின் மனையறம் பட்டேன் (மணிமேகலை)

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுவாளைத்
தெய்வம் தொழுந்தகைமை திண்ணிதால்- தெய்வமாம்
மண்ணக மாதர்க்கு அணியாய கண்ணகி
விண்ணக மாதர்க்கு விருந்து (சிலம்பு)


ஆக பதிவிரதா தருமமும், கற்புடை மாதரின் பெருமையும் சங்கதமிழ் இலக்கியங்களில் சிறப்பிக்கபட்ட கருத்தாக்கம். வேண்டுமெனில் சங்க இலக்கியங்களை முழுவதும் புறக்கணித்து, ஆணாதிக்க முத்திரை குத்தி ஒதுக்கிவிடலாம். ஆனால் அப்படிசெய்வது இலக்கியநோக்குக்கும், வரலாற்று நோக்குக்கும் முரண்பட்ட விஷயம். உலகில் எந்த மொழியினரும் அவ்வாறு செய்வது கிடையாது. ஷேக்ஸ்பியரின் யூத வெறுப்பியலை அறிந்து, அதைகடந்து தான் அவரை ஆங்கிலத்தின் ஒப்பற்ற கவியாக போற்றுகிறார்கள். வரலாற்றை மாற்றி எழுத முனைவதில்லை

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jul 15, 2015, 7:23:26 PM7/15/15
to mintamil

வணக்கம்.

விரிவான எனது பதிலை விரைவில் எழுதுகிறேன்.

Oru Arizonan

unread,
Jul 15, 2015, 9:05:18 PM7/15/15
to mintamil
2015-07-15 16:01 GMT-07:00 செல்வன் <hol...@gmail.com>:
//இக்குறளுக்கு ஏன் இப்படித் தவறான விளக்கங்கள் எழுதப்படுகின்றன என்பது எனக்கு விளங்கவில்லை//

 செல்வரே,

சிலசமயம்  காலத்திற்குத் தகுந்தபடி விளக்கங்கள் கொடுக்கவேண்டும்.  இல்லாவிடில் அனைத்தும் இக்காலாத்திற்குப் பொருத்தமற்றவை எனத் தூக்கி எறியப்படும்.  எனவேதான் நான் மாண்டூக்கிய உபநிஷத்திற்கும் அறிவியல் விளக்கமும் அவ்வப்போது கொடுத்தே எழுதியிருக்கிறேன். ஒரே வேதத்திற்கு ஆதி சங்கரரும், இராமானுஜாச்சாரியாரும், மாத்வாச்சாரியாரும், அத்துவைதம்,விஷிஷ்டாத்துவைதம், துவைதம் என்று பொருள்கொள்ளவில்லையா?

பிற தெய்வங்களை தொழாது கணவனை தொழுதெழுவது, அதிலும் குறிப்பாக அதிகாலையில் விழிக்கையிலேயே கணவனை தொழுது எழுவதையே இது குறிக்கிறது.
//

தெய்வங்களையும், பெரியோர்களையும் கீழே விழுந்து தொழுகிறோம்.  அப்படித தொழுதால் எழவேண்டும்.  எனவே, "தொழுதேழு" என்றால் காலையில் எழும்போது தொழுவது என்றுமட்டுமே பொருள் செய்துகொள்ளக்கூடாது.

//வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த கணவனை மட்டும் தொழுவதை எல்லாம் இது குறிப்பது கிடையாது. //

திருவள்ளுவர் எப்படிச் சொன்னாலும், ஒரு பெண் தனது கணவனைத் தெய்வத்திற்கு நிகராக மதிக்கவேண்டும் என்றால், அவனும் வையத்துள் வாழ்வாங்கு வாழவேண்டும்.  அதை அனைத்து ஆண்களும் உணரவேண்டும்.  எனவே, செந்நாப்போதார் வேறு இடத்தில் ஆண்களுக்கும் அறிவுரை கூறுகிறார்.  
 
//பதிவிரதா தர்மம் என்பது கணவனை மட்டுமே தொழுதல். அவ்விரதத்தையே வள்ளுவர் இங்கே கூறுகிறார். அத்தகையவள் "பெய்யென பெய்யும் மழை" அவ்வளவுதான்.//

கற்பு பெண்களுக்கு மட்டுமல்ல, அது பொது என்றால்தான், பெண்டிர் கற்புடன் இருப்பர். "பெய்யெனப் பெய்யும் மழை" என்பது மிகைப்படுத்தல் என்பது என் துணிபு.   

//இன்று இத்தகைய தருமங்களில் இருந்து சமூகம் வெகுவிரைவில் நகர்ந்து வந்துவிட்டது. அதற்காக வரலாற்றை மாற்றி எழுத முனைதல் கூடாது. //

திருக்குறளை நாம் ஒரு இலக்கியமாக நோக்கினால், உங்கள் வாதம் சரியே!

இங்கு நாம்  குறளை இங்கு நாம் வரலாறாக நோக்கவில்லை.  

அறநெறியாக நோக்கி, அது இக்காலத்திற்கு எப்படிப் பொருந்தும் என்றே நோக்குகிறோம்.  

"இந்தக் குறள் இக்காலத்திற்குப் பொருந்தாது, இது பெண்ணடிமை செய்யவே எழுதப்பட்டது, இதைத் தூக்கி எறியவேண்டும், அல்லாது இக்குறளை நீக்கவேண்டும்", என்று எழும் வாதத்திற்கு வைக்கும் பதில், அவர்கள் ஆமோதிக்கும் வண்ணம் இருக்காவிட்டால் திருக்குறளும் புறக்கணிக்கப்படும்   குறள் பொதுநீதி என்று சொல்பவர்களே அதை முதலில் தூக்கி எறிவார்கள்.

ஒரு அரிசோனன் 

தேமொழி

unread,
Jul 15, 2015, 9:26:08 PM7/15/15
to mint...@googlegroups.com, oruar...@gmail.com


On Wednesday, July 15, 2015 at 6:05:18 PM UTC-7, oruarizonan wrote:
2015-07-15 16:01 GMT-07:00 செல்வன் <hol...@gmail.com>:
//இக்குறளுக்கு ஏன் இப்படித் தவறான விளக்கங்கள் எழுதப்படுகின்றன என்பது எனக்கு விளங்கவில்லை//

 செல்வரே,

சிலசமயம்  காலத்திற்குத் தகுந்தபடி விளக்கங்கள் கொடுக்கவேண்டும்.  இல்லாவிடில் அனைத்தும் இக்காலாத்திற்குப் பொருத்தமற்றவை எனத் தூக்கி எறியப்படும்.  எனவேதான் நான் மாண்டூக்கிய உபநிஷத்திற்கும் அறிவியல் விளக்கமும் அவ்வப்போது கொடுத்தே எழுதியிருக்கிறேன். ஒரே வேதத்திற்கு ஆதி சங்கரரும், இராமானுஜாச்சாரியாரும், மாத்வாச்சாரியாரும், அத்துவைதம்,விஷிஷ்டாத்துவைதம், துவைதம் என்று பொருள்கொள்ளவில்லையா?

பிற தெய்வங்களை தொழாது கணவனை தொழுதெழுவது, அதிலும் குறிப்பாக அதிகாலையில் விழிக்கையிலேயே கணவனை தொழுது எழுவதையே இது குறிக்கிறது.
//

தெய்வங்களையும், பெரியோர்களையும் கீழே விழுந்து தொழுகிறோம்.  அப்படித தொழுதால் எழவேண்டும்.  எனவே, "தொழுதேழு" என்றால் காலையில் எழும்போது தொழுவது என்றுமட்டுமே பொருள் செய்துகொள்ளக்கூடாது.

//வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த கணவனை மட்டும் தொழுவதை எல்லாம் இது குறிப்பது கிடையாது. //

திருவள்ளுவர் எப்படிச் சொன்னாலும், ஒரு பெண் தனது கணவனைத் தெய்வத்திற்கு நிகராக மதிக்கவேண்டும் என்றால், அவனும் வையத்துள் வாழ்வாங்கு வாழவேண்டும்.  அதை அனைத்து ஆண்களும் உணரவேண்டும்.  எனவே, செந்நாப்போதார் வேறு இடத்தில் ஆண்களுக்கும் அறிவுரை கூறுகிறார்.  

வள்ளுவர் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்கரிங்களே... அங்கதான் கண்ணு கோட்டை விட்டுட்டாரு நம்ம வள்ளுவரு...
வாழ்க்கைத் துணைநலம் அப்படின்னு சொல்லும் பொழுது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொருந்துவது போல எழுதணும்னு  தெரியாமப் போச்சே மனிதருக்கு.!!!!

..... தேமொழி
It is loading more messages.
0 new messages