'ஆழ்வார்களும் அடியார்களும்' அல்லது 'திவ்வியப்பிரபந்தமும் பெரியபுராணமும்' (queries)

354 views
Skip to first unread message

rajam

unread,
Jun 27, 2015, 1:52:08 PM6/27/15
to mintamil, ra...@earthlink.net
அன்புள்ள எல்லாருக்கும், வணக்கம். 

'ஶ்ரீராமானுஜர் ஆழ்வாரா அல்லது ஆச்சார்யரா' என்ற இழையிலிருந்து சில பதிவுகளின் கருத்துகளை எடுத்துத் தொடங்கிய இழை இது. 

முதலிலேயே சொல்லிவிடுகிறேன் … பக்தி தத்துவ ஆன்மிகம் எல்லாம் எனக்குப் புரியாதவை, கைவராதவை. 

‘பிதிர்க்கருமம்' என்று தெவசம்/திதி எல்லாவற்றையும் மிகவும் கவனமாக … மரபுப்படிப் பணம் நேரம் எல்லாம் செலவழித்துச் செய்துவிட்டு … எல்லாம் முடிந்த பிறகு … வீட்டுக்கூடத்தில் எள்ளும் தர்ப்பைப்புல்லும் தேங்கியிருக்கும் தண்ணீரைச் சாய்க்கடைக் குழியில் தள்ளுவதற்காக அதைக் காலால் அகற்றி என் அன்னைக்கு வருத்தமளித்தவர் என் தாத்தா!!! ‘பிதுர்க்கார்யம்' செய்த இடத்தைக் காலால் மிதிக்கிறாரே என்பது அன்னைக்குப் பொறுக்காது. அப்பாவோ அறிதுயில் அம்பி! பாட்டி இல்லாக்குறை. அன்னையும் தாத்தாவும் ஒருவருக்கொருவர் முகம் பார்த்துப் பேசியதேயில்லை, அவ்வளவு மரியாதை. 36 வயதே ஆன அப்பா இறந்துகொண்டிருந்தபொழுது அவர் படுக்கையைச் சுற்றி நாங்கள் இருந்தபோது … “கொஞ்ச நேரத்துலே போயிடும், நன்னாப் பாத்துக்கோ” என்றதுவே தாத்தா என் அன்னையிடம் நேருக்கு நேராகச் சொல்லியதாக முதன்முறையாக நான் பார்த்ததும் கேட்டதும். 

இந்தச்சூழலில் வளர்ந்த எனக்கு ஆன்மிகம் புரியாதது வியப்பில்லை.

சைவசித்தாந்த கலாநிதி ஔவை துரைசாமிப் பிள்ளையவர்களிடம் சைவசித்தாந்தம், தேவாரம், திருவாசகம் எல்லாம் படித்தும் ஆன்மிகப்பார்வை கிடைத்ததேயில்லை. 

திரு அ.கி. பரந்தாமனார் அவர்கள் நம்மாழ்வார் ஈடு படிப்பித்தபோது … மொழிநடையைப் புரிந்துகொள்ளக் கடினமாக இருந்தாலும் ‘காதல் உணர்வு’ கவர்ந்தது; அந்த மாதிரி வயது அப்போது! ஆனால் தத்துவம் கித்துவம் ஒன்றும் மண்டைக்குள் புகவில்லை!

அன்றும் இன்றும் … கடவுள் நாமம் சொன்னாலே புல்லரிக்கும் உணர்வும் கிடையாது. என்னைப் பொருத்த அளவில் இசைப்படுத்தப்படும் எதுவுமே மக்களைப் பரவசப்படுத்தும். அவ்வளவே.

மொண மொண என்று அவசர அவசரமாக வீட்டில் ஜபிக்கப்படும் மந்திரங்களில் உணர்வும் பொருளும் புலப்படுவதில்லை. ஆனால், அவற்றையே நிதானமான சூழலில் நிதானமாக உச்சாடனம் செய்யும்போது பொருள் புரியாவிட்டாலும் மனம் அதில் லயித்துவிடுகிறது. அதற்கு முக்கிய காரணம் அதன் இசைத்துவமே. அவ்வளவே. 

நான் மதுரை மீனாளின் கோயிலடியில் வளர்ந்தவள். அவுங்க முகவரி 23 என்றால் எங்க முகவரி 27. எல்லா உற்சவமூர்த்திகளின் ஊர்வலங்களையும் பார்த்தவள். In fact, எங்கள் பள்ளிக்கூடத்து மணற்பகுதியில்தான் அந்த உற்சவமூர்த்திகளின் பல்லக்கு இருக்கும். பல ஆண்டுகளாக எங்கள் பள்ளிப்பிள்ளைகள் அவற்றைத் தொட்டும் பல்லக்கில் ஏறியும் விளையாடியிருக்கிறோம். 

வேத ஒலி, கிறித்துவக்கோயிலில் ப்ரார்த்தனை ஒலி, இஸ்லாமிய மசூதியிலிருந்து வெளிப்படும் தொழுகையொலி, யூதர்களின் torah ஒலி, கருப்பர்களின் தொழுகையொலி, கோவாவில் (Gova உள்ள போர்த்துக்கீசியக் கோயிலில் நடைபெறும் வழிபாட்டொலி …  இவற்றை ரசிக்க மொழி ஒரு தடையில்லை. இசை மட்டுமே போதும்.

நண்பர்கள் யூதர் கோயிலுக்குப் [synagouge] போயிருக்கிறீர்களா? நான் போயிருக்கிறேன். Quakers என்ற நண்பர்களின் குழுவைப் பற்றி நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரியும்? கோவாவில் உள்ள போர்த்துக்கீசியக் கோயில் வழிபாட்டை நான் பார்த்திருக்கிறேன்.

எல்லா இடத்திலும் நான் கண்டு உணர்ந்தது … எங்கேயும் நிறைந்திருக்கும் ஏதோ ஒன்றை ஒருமுகப்படுத்தப் பலரும் பாடுபடுகிறார்கள் என்பதுவே. 

அதனால் 'இவர் சொன்னதுதான் சரி' என்று எதையும் ஏற்றுக்கொள்ள என்னால் முடியவில்லை. 'Hey, my speculation is as good as yours’ என்பதைத்தான் என் அமேரிக்க நண்பர்களுக்கும் சொல்லிவருகிறேன்.

மக்களுக்கு என்னால் ஆன உதவியைச் செய்து தேவையான இடத்தில் அன்புகாட்டுவதே என் வழக்கம்; அது போதும். அதாவது ‘கர்மயோகம்' என்று என் அம்மா சொல்லிக்கொடுத்ததே எனக்கு வாழ்க்கை நெறி.

++++++++++

அங்கே … அந்த 'ஶ்ரீராமானுஜர் ஆழ்வாரா அல்லது ஆச்சார்யரா’ என்ற இழையில் ...

திரு ஒரு அரிசோனன் அவர்களின் பதிவைப் படித்துவிட்டு அதைத் தொடர்ந்த என் பதிவைப் படித்தால்தான் என் பதிவின் context புரியும். 


///தயவுசெய்து பிற சமயத்தைப் பழிக்காமல் வைணவத்தின் பெருமையை எழுதினால் படிக்க ரசனையாக இருக்கும். தேவையில்லாமல் மற்றவர்களை defense mode-உக்குத் தள்ளவேண்டாமே.///

என்று நான் சொன்னது பொதுவாக. அதோடு, அங்கே ‘பிற' சமயம் என்றுதான் சொன்னேன், ‘சைவம்’ என்று குறிப்பிடவில்லை என்பதைச் சுட்டுகிறேன்.

நான் கல்லூரியில் பெரியபுராணம் படிப்பித்த நாட்களில் என் வகுப்பில் சுபா இருக்கவில்லையே என்று ஏங்குகிறேன். அப்போது அவர் பிறந்திருக்கக்கூட மாட்டார்!

சிறுத்தொண்டர் புராணம் நடத்தி முடித்தபிறகு ஒரு கூட்டமே வகுப்பிற்கு அப்புறம் என்னைத் தேடி வந்து “ஏன் மிஸ், ஒங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லையா?” என்று கேட்டது. அந்த அளவுக்குச் சிறுத்தொண்டர் புராணத்தை எனக்குத் தெரியாமலே அலசியிருக்கிறேன். [என் ஆசிரியர் திரு சுப. அண்ணாமலை அவர்களுடைய மகன் பெயர் சீராளன் என்று தெரிந்து அதிர்ந்துபோனேன். இப்படியும் ஒரு குழந்தைக்குப் பெயர் வைப்பார்களா என்பது அதிர்ச்சி.]

அதேபோல இளையான்குடிமாற நாயனார், திருநாளைப்போவார் … புராணங்களையும் அலசியிருக்கிறேன். 

பெரியபுராணத்தின் கதைக்கருத்தே அடியவர்களின் பக்தியைப் பாடுவதுதான். அதில் தீவிரம் காட்டுகிறது. அதைக் கற்பனைக்கதையாகவும் எடுத்துக்கொள்ளலாம்,  வரலாற்றை உட்பொதிந்ததாகவும் எடுத்துக்கொள்ளலாம். படிப்பவரின் விருப்பத்தையும் பின்னணியையும் பொருத்தது. அதைவிட்டுவிட்டு “இது என்ன டேஸ்ட்” என்று கேட்கவும் உரிமை இருக்கிறது.

அதேபோலத்தான் எனக்கும் கோபியர் கொஞ்சும் ரமணனின் லீலைகளப் பற்றிக் கேட்க உரிமை இருக்கிறது. அந்த ரவிவர்மா (?) ஓவியத்தைப் பார்த்திருப்பீர்கள் — குளத்தில் ஆடையின்றி நீரில் இடுப்பை மறைத்துக்கொண்டு ஒரு கையால் மார்பை மறைத்துக்கொண்டு தங்கள் ஆடைகளைத் தா என்று இன்னொரு கையை நீட்டிக் கெஞ்சித் திணறும் கோபியரைப் பார்த்துக் குறும்புப்புன்னகை செய்யும் கண்ணனைப் போற்றுவது என்ன டேஸ்ட் என்று கேட்க எனக்கும் உரிமை இருக்கு. இங்கே அடியவர் வடிவில் கூட வரவில்லை, அவனே வந்திருக்கிறான். அதை விஷமம் என்று கொண்டாடுவது என்ன டேஸ்ட் என்று கேட்க எனக்கும் உரிமை இருக்கு.

இந்தக் கதைகள் எல்லாம் சிலருக்குப் புளகாங்கிதம் தரும் சிலருக்கு அருவருப்புத் தரும். உண்மையில் கண்ணனின் ராஸலீலை எனக்கு அருவருப்பைத் தரும். எல்லாரும் தன்னைப் பெண்ணாகப் பாவித்துக்கொண்டு அவன் ஒருவனையே புருஷன் என்று சொல்லுவதும் எனக்குப் புரியாத டேஸ்ட்! 

++++++++++

என் பார்வையில் … ஶ்ரீக்ருஷ்ண பரமாத்மனின் துதி பாடும் த்ரௌபதி துகிலுரிதல் சருக்கம் ஆண்பிறவிகளின் அடிப்படை வக்ரம உணர்வின் சிகரம். 

ஒரு பெண்ணைத் துகிலுரிப்பது அதிலும் மாதவிடாயில் இருக்கும் ஒருத்தியைத் துகிலுரிப்பது என்பது ஒரு ஆணின் வக்ரமப் பார்வை. ஹிஹி ஹெஹே … இப்படி இன்றைக்கும் இளியும் ஆண்களின் கருத்துக்கு முன்னோடி.

கடைசிவரை ஒன்றும் செய்யாமல் திரௌபதியின் துகிலுரிதலைப் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு … அவள் தன் மானத்தை மறைப்பதைக்கூட மறந்துவிட்டுக் கைகள் இரண்டையும் தலைக்குமேலே தூக்கி ‘இருதயகமலவாசா’ என்று கூப்பிடும்வரை காத்திருந்த கண்ணனின்மேல் எனக்கு என்ன பிடிப்பு வரும்? என் அம்மா சொல்லுவார் … ‘துவாரகாபுரிவாசா’ என்று திரௌபதி கூப்பிட்டபோதும் வராத கண்ணன் ‘ஹ்ருதய கமலவாசா’ என்று அழைத்தவுடன் ஓடோடி வந்துவிட்டானாம். இதைச் சொன்னபோதெல்லாம் அப்படியே உருகிப்போவார் என் அம்மா. வீட்டில் சாமி படங்களின் முன்னால் அவர் தினமும் போட்டது ‘ஹ்ருதயகமலம்’ கோலம்! விளங்கிக்கொள்வதற்காக எதிர்க்கேள்வி கேட்டால் அம்மாவால் பதில் சொல்லமுடியாது. 'பெரியவா சொல்லியிருக்கா' என்ற ஒரே பதில்தான்!

++++++++++

'பக்தன் எப்போதும் என்னையே நினைத்துக்கொண்டிருக்கவேண்டும்’ என்று இறைவன் எதிர்பார்ப்பதாகச் சொல்லுவதும் எனக்குப் புரியவில்லை. 

அந்த ‘நான் நான்’ என்ற எண்ணம் ஒன்றுமற்ற பரம்பொருளுக்கு எப்படி இருக்கலாம்? h2o, water: colorless odorless tasteless என்று கல்லூரியில் படித்த நினைவு. அப்படி நிறம் பொருள் சுவை ஒன்றுமில்லாமல் நீர்க்கடலில் துயில்கொண்டிருக்கிறான் அவனே பரம்பொருள் என்று நினைக்கப்பட்டவனுக்குத் ‘ ான்' என்ற நினைப்பு எப்படி வருமாம்? ஓ, மறந்திட்டேனே … அவன் அறிதுயில் கொண்டிருப்பது பாற்கடலில் உவர்ப்புடைய நீர்க்கடலில் இல்லை! தயிர் கிடைக்காதுங்.

'பக்தன் எனபவன் தன்னைச்சரணடைய வேண்டும்’ என்ற அதே நினைப்பைத்தான் மனைவியையும் பிள்ளையையும் விதைநெல்லையும் கேட்ட பெரியபுராணக் கதைகளிலும் பார்க்கிறேன். 

++++++++++

திவ்வியப்பிரபந்தம், பெரியபுராணம் ஆகிய இரண்டு இலக்கியங்களும் இந்தச் சரணாகதித்வத்தைத்தான் பல வகையில் பேசுகின்றன என்று எடுத்துக்கொள்கிறேன். 

நடுவில் புகுந்து 'அது என்ன டேஸ்ட் இது என்ன டேஸ்ட்' என்று கேட்பதெல்லாம் இந்தக் காலத்து academic discussion, ஒருவர் வார்த்தைக்கு மறுவார்த்தை சொல்லும் முயற்சியே.

சும்மா academic discussion-உக்காகச் சொல்கிறேன். இப்படியும் நினைக்கலாமே — உலகமே அவன் அந்தப் பரந்தாமனே அந்தத் திருமாலே அந்த க்ருஷ்ணனே, சிவதுதியும் அவனுக்கே என்றால் … இன்னொருத்தன் மனைவியைக் கேட்ட அந்தச் சிவனின் திருவிளையாடலும் கண்ணனின் லீலையன்றோ! இறையடியார்க்கு மனைவியைக்கொடுத்தால் அதுவும் க்ருஷ்ணார்ப்பணம் அன்றோ? 

பிள்ளையை, மனைவியை இறையடியார்க்குக் கொடுத்த கதைகள் வெட்கம் தருபவை (embarrassing) தலைகுனியச் செய்பவை என்றால் … ராஸலீலை + கோபியரின் ஆடைகளைத் திருடி அவர்கள் தலையைக்குனியச் செய்தது + ஓர் ஆண் தன்னைப் பெண்ணாகப் பாவிக்கும் நிலை இதெல்லாம் எந்த வகையில் பெருமை தரக்கூடியவையோ, எனக்குப் புரியவில்லை. திருட்டையும் விஷமத்தையும் புகழும் மதம் எதுவானாலும் எனக்கு ஏற்புடைத்தன்று

++++++++++

கண்ணன் பாடல்களில் பாரதியார் ஒரு சாதாரண மனிதப்பிறவியில் இறைத்தத்துவத்தைப் பார்க்கிறார். ஒரு பாடலில் … நான் இன்னின்ன வேண்டும் என்று சொல்கிறேன், அங்ஙனே ஆகுக என்பாய் என்று தன் விருப்பத்துக்கு இறைவனை ‘ஆம்’ கொட்டச்சொல்கிறார். திரௌபதி நிலையில் மக்களை வைத்து மானத்தை மறக்கச்செய்யவில்லை. அங்கேதான் பரம்பொருள் நமக்குள்ளே என்ற உணர்வு கிடைக்கிறது. 

சங்க இலக்கியக் காதலை மேலெடுத்துச் சென்ற திவ்வியப்பிரபந்ததில் 'காதல் காதல், சரணாகதி' என்பது அடிப்படை நாதம்; அடியார் சிறப்பைப் பாடும் பெரியபுராணத்தில் 'சோதனை சோதனை’ என்பது அடிப்படை நாதம் … என்று நான் எடுத்துக்கொள்வதால்   இரண்டு இலக்கியங்களைப் படிப்பதிலும் எனக்குத் தடையில்லை. 

ஆனால் இது என்ன டேஸ்ட் இது embarrassing என்று சொல்ல எனக்கு விருப்பமில்லை.

++++++++++

ஶ்ரீராமானுஜர் ஆழ்வாராக இருந்தாலென்ன ஆச்சாரியராக இருந்தாலென்ன … இன்னிக்கி என் வாழ்வுக்கு அந்த ஆள் என்ன ஒதவி செய்யிறாரு என்பதுவே என் போன்ற சாதாரண மக்களுக்குக் கவலை. மத்த discussion எல்லாம் தந்தக்கோபுரவாசிகளின் பொழுதுபோக்கு.

நான் சொல்வது யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை.


On Jun 27, 2015, at 1:46 AM, Suba.T. <ksuba...@gmail.com> wrote:



2015-06-27 9:32 GMT+02:00 rajam <ra...@earthlink.net>:
///நீங்கள் இந்த அளவுக்கு வந்ததால் நானும் கேட்கிறேன்.

இராதை, கோபியர்கள் கண்ணனின் மனைவியர்களா, மாற்றார்களின் மனைவியர்களா?
///

ஆமா,  நீடாமங்கலம் பாகவதரிடம் கற்றுக்கொண்ட க்ருஷ்ணகானப் பாடல்களைப் பாடினாலும் … எனக்கும் இந்த “ராஸ லீலா” தத்துவம் புரிந்ததேயில்லை! 'எல்லாம் க்ருஷ்ண மயம்’ என்றால் சிவதுதியும் கண்ணனைத் துதிப்பது-போலாம். பக்திப்ரவாகம் அடடா! அதோடு அவன் ஒருத்தன்தான் புருஷ உத்தமனாம். மத்த எல்லாரும் ஸ்தீரிகளாம்! என்ன homosexual concept-ஆ என்று கேட்கத்தோன்றுகிறது.

திரு ஒரு அரிசோனன் அவர்கள் சொன்னது-போல … தயவுசெய்து பிற சமயத்தைப் பழிக்காமல் வைணவத்தின் பெருமையை எழுதினால் படிக்க ரசனையாக இருக்கும். தேவையில்லாமல் மற்றவர்களை defense mode-உக்குத் தள்ளவேண்டாமே.

​ராஜம் அம்மா.. 
இறுதியாக கண்ணன் எழுதிய​ பகுதியை வாசித்தேன்.

// Kannan:
மலர்மங்கை நெஞ்சில் கைவைத்துச் சொல்லுங்கள். நீங்கள் மிக உயர்வாகக் கருதும் ஒரு தெய்வம் வந்து உங்கள் கணவரிடம் மலர்மங்கையை என் மனைவியாக்கிவிடு! என்று கேட்குமா? அது அப்பெருந்தெய்வத்திற்கு புகழ் சேர்ப்பதாக அமையுமா? 
 
​இல்லை உங்கள் பையனைக் கறி சமைத்துக் கொடு, எனக்கு நர மாமிசம் சாப்பிட வேண்டும் போலுள்ளது என்று கேட்குமா? இது என்ன டேஸ்ட்? அந்தக் காலத்திற்கு வேண்டுமானால் ஏதோ பொருந்திவரலாம் (ஏதோதான்! ஏனெனில் சங்ககால அழகியல் என்பது மிக உயர்வானது). ​மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பா வந்து பேசும் சுகி சிவனுக்கே இதுவொரு embarrassment. அவரே சொல்கிறார், என்னிடம் கேட்டால் சிவனை 'உள்ளே தூக்கிப்போட்டுவிடுவேன்" என்று (மீண்டும் கவனிக்க, இது சுகிசிவம் சொன்னது). முதலில் உமையொருபாகனுக்கு உயர்வுதரும் கதைகளா இவை? அடுத்தவன் பொண்ணாட்டியைக் கேட்பது? கொடுத்து வாங்க பெண் என்ன மாடா? ஆடா?

//

இதில் எங்கே சைவர்களைப் பழிக்கின்றார் கண்ணன் என உண்மையில் எனக்குப் புரியவில்லை.
என் மனதிலும் இதே கேள்விகள் எழாமல் இல்லை.
முன்னர் தொடர்ந்து தனது திரு.மோகனரங்கன் நாயண்மார்கள் பதிவில் இதே கேள்விகளைத்தான் வைத்திருந்தார்.
நன்றாக அறிவுப்பூர்வமாக யோசித்துப் பார்க்கும் போது என்ன விடையை தர முடியும் நாம்?

இதற்குத்தான் மீண்டும் வலியுறுத்திச் சொல்ல விரும்புகின்றேன்.
கடவுள் தத்துவங்களை விரும்பி அதில் தீவிரமாக ஈடுபடுபவர்கள் தத்துவங்களை அலுசுவதிலும், இறைத்தன்மையை அலசுவதிலும், உலகை அலசுவதிலும் நேரத்தைக் கழித்தால் அது நல்ல பலனைக் கொடுக்கும். அதனை விடுத்து மனிதர்களுக்கு இறைத்தன்மையை தூக்கிச் சுமத்தி அவர்களையேப் போற்றிக் கோண்டிருந்தால் தெளிவு பிறக்காது. 
எத்தகைய மகானாக இருந்தாலும் சரி.. இவர்கள் அனைவருமே மனிதராகப் பிறந்தவர்களே. சுக துக்கங்களை அனுபவித்தோரே.. ஆக குறை நிறைகள் கொண்டோரே.. ஆக ஒருவருக்கு ஒருவர் மேல் படும் குறை இன்னொருவருக்கு அவர் தம் நிறையை மட்டும் காண்பதால் அது தெரியாமலேயே போய்விடும்.


சுபா



Suba.T.

unread,
Jun 27, 2015, 2:34:28 PM6/27/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-06-27 19:52 GMT+02:00 rajam <ra...@earthlink.net>:


பிள்ளையை, மனைவியை இறையடியார்க்குக் கொடுத்த கதைகள் வெட்கம் தருபவை (embarrassing) தலைகுனியச் செய்பவை என்றால் … ராஸலீலை + கோபியரின் ஆடைகளைத் திருடி அவர்கள் தலையைக்குனியச் செய்தது + ஓர் ஆண் தன்னைப் பெண்ணாகப் பாவிக்கும் நிலை இதெல்லாம் எந்த வகையில் பெருமை தரக்கூடியவையோ, எனக்குப் புரியவில்லை. திருட்டையும் விஷமத்தையும் புகழும் மதம் எதுவானாலும் எனக்கு ஏற்புடைத்தன்று

​இதுவே என் கருத்தும்.
எனக்கு இதில் ஒருதுளியளவும் மாற்றுக் கருத்தில்லை.

​சுபா​


Tthamizth Tthenee

unread,
Jun 27, 2015, 5:35:27 PM6/27/15
to mint...@googlegroups.com, Subashini Tremmel
என்னைப் பொருத்த அளவில் இசைப்படுத்தப்படும் எதுவுமே மக்களைப் பரவசப்படுத்தும். அவ்வளவே.


சகோதரி ராஜம் அவர்களே    நான் அடிக்கடி சொல்வேன்  பக்தியும் ஒரு போதையே என்று

அளவுக்கு மிஞ்சும்போது  பக்தியும் உயிரைக் குடிக்கும்  ஒரு காரணியாகவே ஆகிறது

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net




--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Jun 27, 2015, 9:15:37 PM6/27/15
to mint...@googlegroups.com, ra...@earthlink.net


On Saturday, June 27, 2015 at 10:52:08 AM UTC-7, rajam wrote:
முதலிலேயே சொல்லிவிடுகிறேன் … பக்தி தத்துவ ஆன்மிகம் எல்லாம் எனக்குப் புரியாதவை, கைவராதவை. 

எல்லா இடத்திலும் நான் கண்டு உணர்ந்தது … எங்கேயும் நிறைந்திருக்கும் ஏதோ ஒன்றை ஒருமுகப்படுத்தப் பலரும் பாடுபடுகிறார்கள் என்பதுவே. 
 
மக்களுக்கு என்னால் ஆன உதவியைச் செய்து தேவையான இடத்தில் அன்புகாட்டுவதே என் வழக்கம்; அது போதும். அதாவது ‘கர்மயோகம்' என்று என் அம்மா சொல்லிக்கொடுத்ததே எனக்கு வாழ்க்கை நெறி.
 
பெரியபுராணத்தின் கதைக்கருத்தே அடியவர்களின் பக்தியைப் பாடுவதுதான். அதில் தீவிரம் காட்டுகிறது. அதைக் கற்பனைக்கதையாகவும் எடுத்துக்கொள்ளலாம்,  வரலாற்றை உட்பொதிந்ததாகவும் எடுத்துக்கொள்ளலாம். படிப்பவரின் விருப்பத்தையும் பின்னணியையும் பொருத்தது. அதைவிட்டுவிட்டு “இது என்ன டேஸ்ட்” என்று கேட்கவும் உரிமை இருக்கிறது.
 
என் பார்வையில் … ஶ்ரீக்ருஷ்ண பரமாத்மனின் துதி பாடும் த்ரௌபதி துகிலுரிதல் சருக்கம் ஆண்பிறவிகளின் அடிப்படை வக்ரம உணர்வின் சிகரம். 

திவ்வியப்பிரபந்தம், பெரியபுராணம் ஆகிய இரண்டு இலக்கியங்களும் இந்தச் சரணாகதித்வத்தைத்தான் பல வகையில் பேசுகின்றன என்று எடுத்துக்கொள்கிறேன். 
 
திருட்டையும் விஷமத்தையும் புகழும் மதம் எதுவானாலும் எனக்கு ஏற்புடைத்தன்று

ஶ்ரீராமானுஜர் ஆழ்வாராக இருந்தாலென்ன ஆச்சாரியராக இருந்தாலென்ன … இன்னிக்கி என் வாழ்வுக்கு அந்த ஆள் என்ன ஒதவி செய்யிறாரு என்பதுவே என் போன்ற சாதாரண மக்களுக்குக் கவலை. மத்த discussion எல்லாம் தந்தக்கோபுரவாசிகளின் பொழுதுபோக்கு.


இது என்ன !!!   எல்லாம் என் மனதில் ஓடுவதை பிரதிபலிப்பதாகவே உள்ளதே அம்மா!!!

ஏதோ ஒரு இலக்கியத்தை எடுத்தோம் படித்தோம், ஆகா எப்படி எழுதியிருக்கிறார் இவர்...என இலக்கிய நயம் பாராட்டி மகிழ்ந்தோம் என்றிலாமல், பக்தி என்று உருகி உருகி ஊற்றுவதைக்  கண்டால் நமக்குதான் இந்த  இலக்கியம் ஒன்றும் புரிபடாமல் போகிறதோ என்று நினைத்தேன்.  

ஏதோ என்னிடம்தான் கோளாறு என்று நான் குழம்புவதற்குள் வந்து தடுத்தாட்கொண்டீர்கள்... தாயே ...நீவிர் வாழ்க ..வாழ்க..

இலக்கியத்தை இலக்கியமாகக் கருதி ஆராய்வது எப்படி என்று ஒரு கட்டுரை கொடுங்களேன் அம்மா,  உங்கள் சிறுத்தொண்டர் வகுப்பில்  நீங்கள் ஆராய்ந்த பொழுது வகுப்பில் பங்கு பெற முடியாமல் போனது வருத்தம் தருகிறது.

..... தேமொழி 
 


Nagarajan Vadivel

unread,
Jun 27, 2015, 9:40:09 PM6/27/15
to மின்தமிழ்

2015-06-27 23:22 GMT+05:30 rajam <ra...@earthlink.net>:
[என் ஆசிரியர் திரு சுப. அண்ணாமலை அவர்களுடைய மகன் பெயர் சீராளன் என்று தெரிந்து அதிர்ந்துபோனேன். இப்படியும் ஒரு குழந்தைக்குப் பெயர் வைப்பார்களா என்பது அதிர்ச்சி.]

​என்னுடைய தம்பியின் பெயர் சீராளன் திராவிடப்பற்று அவன் ப்
என்போன்று ஒரு கிறித்துவச்சியை மலைவாசியை மணந்துகொண்டு 38 ஆண்டுகள் - என் மகள் ஒரு வங்காள இந்துவை மணந்துகொண்டு 10 ஆண்டுகள் என்று வாழும் நிலையில் உள்ளவர்களுக்கு இதுபோன்ற அப்பட்டமான சாதிவேற்றுமைகள் அதிர்ச்சி அளிக்கின்றன. என் மனவியின் ஊரில் சாதி என்றால் என்னவென்றே தெரியாது.  இங்கே சாதியின் பெயரால் நடக்கும் கூத்துகளைக் கண்டு அதிர்ச்சி அடைவதுண்டு
சமூகத்தில் பிறப்பின் அடிப்படையில் மேல் கீழ் என்று மக்களைப் பிரித்து பின்னர் அதையே கோவிலுக்குள்ளும் வழிபாட்டில்​ அதே பிறப்பின் அடிப்படையில் பிரித்தும் சிலரைக் கோவிலுக்குள் நுழைவதைத் தடுத்தும் நடந்த சமூக அநீதியை விமர்சிப்பது தவறில்லையே
ஊர்சுத்தி


Tthamizth Tthenee

unread,
Jun 27, 2015, 10:32:49 PM6/27/15
to mint...@googlegroups.com
பார்த்தனவன் பராக்ரமமும் போர்த் தொழிலின் சூக்‌ஷுமமும்
சேர்த்தமைந்த  ஆளுமையால்  சீராளன் ஆதித்தன்

இந்த முறை  நாடி சோதிடராக  நடித்தபோது நான்  ஒலைச்சுவடியிலிருந்து படிப்பதைப் போன்ற பாவனையுடன்   நான் கூறிய வசனம்
ஆதித்த  கரிகாலனை  நான் வர்ணிக்க  பயன்படுத்திய பாடல்

அன்புடன்
தமிழ்த்தேனீ




அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்

rajam

unread,
Jun 27, 2015, 10:50:08 PM6/27/15
to mint...@googlegroups.com, ra...@earthlink.net
எனக்கும் புல்லரிக்கிறது, தேமொழி!

///ஏதோ ஒரு இலக்கியத்தை எடுத்தோம் படித்தோம், ஆகா எப்படி எழுதியிருக்கிறார் இவர்...என இலக்கிய நயம் பாராட்டி மகிழ்ந்தோம் என்றிலாமல், பக்தி என்று உருகி உருகி ஊற்றுவதைக்  கண்டால் நமக்குதான் இந்த  இலக்கியம் ஒன்றும் புரிபடாமல் போகிறதோ என்று நினைத்தேன்.  

ஏதோ என்னிடம்தான் கோளாறு என்று நான் குழம்புவதற்குள்///

நீங்கள் குறிப்பிடும் நிலை நன்றாகவே எனக்குப் புரிகிறது. மேற்கொண்டு பேச நிறைய இருக்கு, நேரமில்லை. எனவே ஒதுங்கிக்கொள்கிறேன். 

நன்றியுடன்,
ராஜம்

Dhivakar

unread,
Jun 28, 2015, 12:56:55 AM6/28/15
to மின்தமிழ், rajam ramamurti
ராஜம் அம்மா,

உங்கள் நீஈண்ட கடிதம் சுவையாக இருக்கின்றது. அதற்கு ஆதரவான பதில்கள் கூட படித்தேன்..

ஆனால் ராஜம் அம்மாவை மறுத்துப் பதில் எழுத ராஜம் அம்மா அனுமதி தந்தால் எழுதுகிறேன்.

இப்போது இல்லை.. உங்கள் ஊரான மதுரை சென்று கொண்டிருக்கிறேன். அப்புறம் உங்களுக்குப் பிடிக்காத ‘சீராளன்’ என்ற பெயரில் உள்ள ஒரு சைவ நண்பர் அறுபதாம் கல்யாணம் செய்து கொள்கிறார். 13 ஆந்தேதி இவரைப் பார்க்க காரைக்குடி சென்று வந்து விட்டு ஊர் திரும்பிய பிறகு பதில் எழுதுகிறேன்..

உடல்நலம் பேணவும்,

அன்புடன்
திவாகர்

rajam

unread,
Jun 28, 2015, 1:43:48 AM6/28/15
to Dhivakar, மின்தமிழ்
அன்புநிறை திவாகர்,

வணக்கம். நலம்தானே.

ஐயகோ … யார் சொன்னது “சீராளன்” என்ற பெயர் எனக்குப் பிடிக்காது என்று? கஷ்டகாலமே … உங்களுக்குப் புரிந்த தமிழ் இம்புட்டுத்தானா? அப்படிக் கறியாய்ச் சமைக்கப்பட்ட குழந்தையின்மேல் உள்ள அளவுகடந்த அன்பல்லவோ என்னை அப்படி எழுதத்தூண்டியது! பயம் அவ்வளவே. அந்தப் பெயரைவைத்தால் அந்தப்பிள்ளை சிறுவயதிலேயே பிறருக்காகத் தன் உயிரை இழக்க நேரிடும் என்ற பயம். அவ்வளவே.

மத்தபடி … ராஜம் அம்மாவை மறுத்துப் பதில் எழுத எல்லாருக்கும் உரிமை உண்டே, என்ன தயக்கம்.

எங்கூருக்குப் போகும்போது அந்த மீனாளைப் பாத்து எனக்காக ஒரு வார்த்தெ கேக்கவும் … ஏன் என்னெ இப்பிடித் தொலைதூரத்துக்கு அனுப்பித் தொலெச்சா-னு கேளுங்க. 33 வருசம் அவ காலே கதி-னு கெடந்தேன். 

அன்புடன்,
ராஜம்

Suba.T.

unread,
Jun 28, 2015, 3:44:39 AM6/28/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-06-28 3:40 GMT+02:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

2015-06-27 23:22 GMT+05:30 rajam <ra...@earthlink.net>:
[என் ஆசிரியர் திரு சுப. அண்ணாமலை அவர்களுடைய மகன் பெயர் சீராளன் என்று தெரிந்து அதிர்ந்துபோனேன். இப்படியும் ஒரு குழந்தைக்குப் பெயர் வைப்பார்களா என்பது அதிர்ச்சி.]

​என்னுடைய தம்பியின் பெயர் சீராளன் திராவிடப்பற்று அவன் ப்
என்போன்று ஒரு கிறித்துவச்சியை மலைவாசியை மணந்துகொண்டு 38 ஆண்டுகள் - என் மகள் ஒரு வங்காள இந்துவை மணந்துகொண்டு 10 ஆண்டுகள் என்று வாழும் நிலையில் உள்ளவர்களுக்கு இதுபோன்ற அப்பட்டமான சாதிவேற்றுமைகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
​அவர்களில் நானும் இணைகின்றேன். உண்மையில் சொல்வதென்றால் நான் மலேசியாவில் வாழ்ந்த காலத்தில் சாதி வேற்றுமை என்ற ஒன்றை அறியேன். என் பெற்றோர் அதிலும் தாயார் சில தமிழக சம்பவங்களை சொல்லியிருந்தாலும் கூட அது எனக்கு மனதில் பதியவில்லை. காரணம் இயல்பான நிலையில் எங்கள் வாழ்க்கை முரை சாதி என்ற தேவையற்ற ஒன்றை அடிப்படையாகக் கொண்டதாகவே இருந்தது.  மலாய், சீன தமிழ் மாணவர்கள் எல்லோரும் இணைந்தே பல நடவடிக்கைகளில் ஈடுபட்ட காலம் அது. ஆனால் மலேசியாவில் நிலை இப்போது மாறி விட்டது. சாதி சங்கங்கள் வளர்ந்து விட்டன.
ஜெர்மனிக்கு வந்த பின்னர் இலங்கைத் தமிழரிடையே உள்ள சாதி வேற்றுமை.. அதன் தொடர்ச்சியாக நான் கண்ணனின் அறிமுகத்துடன் தமிழகம் 1999 முதல் வர ஆரம்பித்தது முதல் என்ற வகையில் தான் தமிழக சாதி எனக்கு அறிமுகமானது. 

நன்றாக நினைவுள்ளது. கண்ணன் ஆழ்வார் திருனகரியில் என்னை ஒரு ஜீயர் மடம் உள்ள பெருமாள் கோயிலுக்கு அழைத்துச் சென்றார். பெண்கள் கருவரை வரைக்கும் வந்து சாமி கும்பிடலாம் சுபா.. தென்கலை சம்பிரதாயம் இது என்று சொன்னவுடன் மகிழ்ச்சியோடு உள்ளே செல்ல முனைந்த என்னை கருவறை கூட இல்லை.. இரண்டு பகுதிகளுக்கு முன்னரே வந்து தடுத்து விட்டார் ஜீயர் சுவாமிகள். பெண்கள் உள்ளே செல்லக்கூடாது என்று சொல்லி. எனக்கு இது வருத்தமளிக்கவில்லை. ஆனால் இவையெல்லாம் என் அனுபவப் படிப்பில் பதிவாக்கிக் கொண்டேன். இன்னொரு மாற்று உதாரணமும் கிடைத்தது. ஒரு முறை பேரூர் சாந்தலிங்க சுவாமிகளுடன் தஞ்சை பேருடையார் ஆலயம் சென்றிருந்த போது உள்ளே என்னையும் என்னோடு வந்திருந்த நண்பர்களையும் அழைத்து கருவரையில் வந்து இறைவனுக்கு மலர்களைத் தூவி அர்ச்சனை செய்ய வைத்தார்.  அந்த அனுபவமும் என் மனதில் அனுபவப் பதிவாக அமைந்திருக்கின்ரது.

கடந்த 16 ஆண்டுகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வருகின்றேன். கோயில் வழிபாடு, அதோடு இணைந்த சாதி தத்துவம், இறைவழிபாட்டில் ஆண் பெண் பாகுபாடு, கிராமிய வழிபாடுகளில் இவை எப்படி உள்ளன.. என்ற வகையில் நான் அவதானித்து வருகின்றேன்.

சாதி மிகத்தீவிரமாக இறை வழிபாட்டு அம்சத்தில் பிரிக்கப்பட முடியாத அம்சமாகவே இருப்பதை என்னால் மறுக்க முடியாது சில விதிவிலக்குகளைத் தவிர.

 
என் மனவியின் ஊரில் சாதி என்றால் என்னவென்றே தெரியாது.  இங்கே சாதியின் பெயரால் நடக்கும் கூத்துகளைக் கண்டு அதிர்ச்சி அடைவதுண்டு
சமூகத்தில் பிறப்பின் அடிப்படையில் மேல் கீழ் என்று மக்களைப் பிரித்து பின்னர் அதையே கோவிலுக்குள்ளும் வழிபாட்டில்​ அதே பிறப்பின் அடிப்படையில் பிரித்தும் சிலரைக் கோவிலுக்குள் நுழைவதைத் தடுத்தும் நடந்த சமூக அநீதியை விமர்சிப்பது தவறில்லையே

​நிச்சயம் தவறில்லை.. அதனைச் செய்ய வேண்டும் என்பதே என் நிலைப்பாடு.

சுபா
 
ஊர்சுத்தி


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
Suba.T.
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

Suba.T.

unread,
Jun 28, 2015, 3:48:31 AM6/28/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-06-28 9:44 GMT+02:00 Suba.T. <ksuba...@gmail.com>:


2015-06-28 3:40 GMT+02:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

2015-06-27 23:22 GMT+05:30 rajam <ra...@earthlink.net>:
[என் ஆசிரியர் திரு சுப. அண்ணாமலை அவர்களுடைய மகன் பெயர் சீராளன் என்று தெரிந்து அதிர்ந்துபோனேன். இப்படியும் ஒரு குழந்தைக்குப் பெயர் வைப்பார்களா என்பது அதிர்ச்சி.]

​என்னுடைய தம்பியின் பெயர் சீராளன் திராவிடப்பற்று அவன் ப்
என்போன்று ஒரு கிறித்துவச்சியை மலைவாசியை மணந்துகொண்டு 38 ஆண்டுகள் - என் மகள் ஒரு வங்காள இந்துவை மணந்துகொண்டு 10 ஆண்டுகள் என்று வாழும் நிலையில் உள்ளவர்களுக்கு இதுபோன்ற அப்பட்டமான சாதிவேற்றுமைகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
​அவர்களில் நானும் இணைகின்றேன். உண்மையில் சொல்வதென்றால் நான் மலேசியாவில் வாழ்ந்த காலத்தில் சாதி வேற்றுமை என்ற ஒன்றை அறியேன். என் பெற்றோர் அதிலும் தாயார் சில தமிழக சம்பவங்களை சொல்லியிருந்தாலும் கூட அது எனக்கு மனதில் பதியவில்லை.
​​
காரணம் இயல்பான நிலையில் எங்கள் வாழ்க்கை முரை சாதி என்ற தேவையற்ற ஒன்றை அடிப்படையாகக் கொண்டதாகவே இருந்தது.
​தவறுதலாக வந்து விட்டது.
காரணம் இயல்பான நிலையில் எங்கள் வாழ்க்கை முறை சாதி என்ற தேவையற்ற ஒன்றை அடிப்படையாகக் கொள்ளாததாகவே இருந்தது.

 மலாய், சீன தமிழ் மாணவர்கள் எல்லோரும் இணைந்தே பல நடவடிக்கைகளில் ஈடுபட்ட காலம் அது. ஆனால் மலேசியாவில் நிலை இப்போது மாறி விட்டது. சாதி சங்கங்கள் வளர்ந்து விட்டன.
ஜெர்மனிக்கு வந்த பின்னர் இலங்கைத் தமிழரிடையே உள்ள சாதி வேற்றுமை.. அதன் தொடர்ச்சியாக நான் கண்ணனின் அறிமுகத்துடன் தமிழகம் 1999 முதல் வர ஆரம்பித்தது முதல் என்ற வகையில் தான் தமிழக சாதி எனக்கு அறிமுகமானது. 

நன்றாக நினைவுள்ளது. கண்ணன் ஆழ்வார் திருனகரியில் என்னை ஒரு ஜீயர் மடம் உள்ள பெருமாள் கோயிலுக்கு அழைத்துச் சென்றார். பெண்கள் கருவரை வரைக்கும் வந்து சாமி கும்பிடலாம் சுபா.. தென்கலை சம்பிரதாயம் இது என்று சொன்னவுடன் மகிழ்ச்சியோடு உள்ளே செல்ல முனைந்த என்னை கருவறை கூட இல்லை.. இரண்டு பகுதிகளுக்கு முன்னரே வந்து தடுத்து விட்டார் ஜீயர் சுவாமிகள். பெண்கள் உள்ளே செல்லக்கூடாது என்று சொல்லி. எனக்கு இது வருத்தமளிக்கவில்லை. ஆனால் இவையெல்லாம் என் அனுபவப் படிப்பில் பதிவாக்கிக் கொண்டேன். இன்னொரு மாற்று உதாரணமும் கிடைத்தது. ஒரு முறை பேரூர் சாந்தலிங்க சுவாமிகளுடன் தஞ்சை பேருடையார் ஆலயம் சென்றிருந்த போது உள்ளே என்னையும் என்னோடு வந்திருந்த நண்பர்களையும் அழைத்து கருவரையில் வந்து இறைவனுக்கு மலர்களைத் தூவி அர்ச்சனை செய்ய வைத்தார்.  அந்த அனுபவமும் என் மனதில் அனுபவப் பதிவாக அமைந்திருக்கின்ரது.

கடந்த 16 ஆண்டுகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வருகின்றேன். கோயில் வழிபாடு, அதோடு இணைந்த சாதி தத்துவம், இறைவழிபாட்டில் ஆண் பெண் பாகுபாடு, கிராமிய வழிபாடுகளில் இவை எப்படி உள்ளன.. என்ற வகையில் நான் அவதானித்து வருகின்றேன்.

சாதி மிகத்தீவிரமாக இறை வழிபாட்டு அம்சத்தில் பிரிக்கப்பட முடியாத அம்சமாகவே இருப்பதை என்னால் மறுக்க முடியாது சில விதிவிலக்குகளைத் தவிர.

 
என் மனவியின் ஊரில் சாதி என்றால் என்னவென்றே தெரியாது.  இங்கே சாதியின் பெயரால் நடக்கும் கூத்துகளைக் கண்டு அதிர்ச்சி அடைவதுண்டு
சமூகத்தில் பிறப்பின் அடிப்படையில் மேல் கீழ் என்று மக்களைப் பிரித்து பின்னர் அதையே கோவிலுக்குள்ளும் வழிபாட்டில்​ அதே பிறப்பின் அடிப்படையில் பிரித்தும் சிலரைக் கோவிலுக்குள் நுழைவதைத் தடுத்தும் நடந்த சமூக அநீதியை விமர்சிப்பது தவறில்லையே

​நிச்சயம் தவறில்லை.. அதனைச் செய்ய வேண்டும் என்பதே என் நிலைப்பாடு.

சுபா
 
ஊர்சுத்தி



​சுபா​
 

--

N. Kannan

unread,
Jun 28, 2015, 6:35:01 AM6/28/15
to மின்தமிழ்
​ராஜம் அம்மாவின் சீர்தூக்கிய இந்த பதில் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அவரொரு உண்மையான ஆய்வாளர். அப்படித்தான் அவரை மணிவண்ணன் எனக்கு அறிமுகப்படுத்தினார். இந்தப்பதிவு உணர்ச்சி குறைவாகவும் அறிவு கூடியும் அமைந்திருக்கிறது. இப்பதிவு பிடித்திருப்பதற்கு பல காரணங்கள்.

1. இதை இன்ன பிற இழையில் போடாமல், தனியிழையாக ஆரம்பித்து இருப்பதால் இன்னும் நிறையச் சொல்ல ஆசைப்படுகிறார் என்று தெரிகிறது. ராஜம் அம்மாவை நான் நேரில் பார்த்ததில்லை. கொஞ்ச நேரம் முன்புதான் பெட்னா தமிழ்விழாவின் பொருட்டு அவர் பேசிய வீடியோ பார்த்தேன். தன்னையொரு தமிழாசிரியை என்றே அறிமுகப்படுத்திக்கொள்கிறார். 

​//நான் கல்லூரியில் பெரியபுராணம் படிப்பித்த நாட்களில் என் வகுப்பில் சுபா இருக்கவில்லையே என்று ஏங்குகிறேன். அப்போது அவர் பிறந்திருக்கக்கூட மாட்டார்!//

இது என்னுள் ஆர்வத்தைக் கிளப்புகிறது. நான் சாலமன் பாப்பையா மாணவன். பியுசி வகுப்பிற்கு திருவாசகம் எடுப்பார்.அப்படியொரு பாவம், அப்படியொரு நெகிழ்வு இருக்கும். ஆனால் உங்கள் முறை வேறாக இருக்கும் என்பது நிச்சயம். எனவே தாங்களே பெரிய புராணத்தை எப்படி நோக்க வேண்டுமென விளக்கினால் புரிந்து கொள்வேன். எனக்கு யாரும் சமய இலக்கியங்கள் போதித்ததில்லை. கேட்க விருப்பம். 

2. //வேத ஒலி, கிறித்துவக்கோயிலில் ப்ரார்த்தனை ஒலி, இஸ்லாமிய மசூதியிலிருந்து வெளிப்படும் தொழுகையொலி, யூதர்களின் torah ஒலி, கருப்பர்களின் தொழுகையொலி, கோவாவில் (Gova உள்ள போர்த்துக்கீசியக் கோயிலில் நடைபெறும் வழிபாட்டொலி …  இவற்றை ரசிக்க மொழி ஒரு தடையில்லை. இசை மட்டுமே போதும்.

நண்பர்கள் யூதர் கோயிலுக்குப் [synagouge] போயிருக்கிறீர்களா? நான் போயிருக்கிறேன். Quakers என்ற நண்பர்களின் குழுவைப் பற்றி நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரியும்? கோவாவில் உள்ள போர்த்துக்கீசியக் கோயில் வழிபாட்டை நான் பார்த்திருக்கிறேன்.//

இதே சூழலில் வளர்ந்தவன் நான். இந்தியாவில் இருந்தவரை சமயத்தைப்பற்றி அறிந்து கொள்ள இயலாத கற்றைத்துடிப்பு. பெற்றோரை இழந்த மாணவன். சகோதரிகளின் அரவணைப்பில் வளர வேண்டிய சூழல். படிப்பு, படிப்பு (அறிவியல்), நிறைய சம்பாதிக்க வேண்டும். இதுவே என்னை வெளிநாட்டிற்குத்தள்ளியது. வெளிநாட்டில்தான் நான் உலகைக் கண்டேன், இந்தியாவையும் தரிசித்தேன். எனது கதைகளில் சொல்லியிருப்பேன், 17 கிர்ஹன் ஸ்ராரஸ (தேவாலயத்தெரு)வின் வாழ்ந்த போது இரட்டை அக்கிரஹார நினைவு வரும். ஜன்னல் வழியாகப் பார்த்தால் கோபுர தரிசனம். வீட்டில் சொல்வேன் 'இதோ மீனாட்சி கோயில் கொபுரம்' என்று. ஜெர்மானியர் பிராடஸ்டண்ட். ஆனால் எனக்கு கத்தோலிக்க திருச்சபை நடத்தும் கிறிஸ்துமஸ் சேவை மிகவும் பிடிக்கும். இதற்காக போலந்து போய் கிறிஸ்துமஸ் திருச்சபையில் கலந்து கொண்டிருக்கிறேன். வாத்திகன் கோயிலுக்கு பலமுறை போயிருக்கிறேன். அச்சூழல் எனக்கு மிகவும் பிடிக்கும். பொதுவாக ஐரோப்பாவில் நான் போகாத சர்ச் குறைவாகவே இருக்கும். துருக்கி போன போது மசூதியில் வணங்கியிருக்கிறேன். எனக்கு யூத நண்பர்களுண்டு. ஔரங்காபாத்தில் தர்க்காவில் தியானம் செய்திருக்கிறேன். இங்கு பலர் எண்ணுவது போல் பட்டைத்திருமண் சார்த்திய பழுத்த வைணவன் நானில்லை. 

3. //சும்மா academic discussion-உக்காகச் சொல்கிறேன். இப்படியும் நினைக்கலாமே — உலகமே அவன் அந்தப் பரந்தாமனே அந்தத் திருமாலே அந்த க்ருஷ்ணனே, சிவதுதியும் அவனுக்கே என்றால் … இன்னொருத்தன் மனைவியைக் கேட்ட அந்தச் சிவனின் திருவிளையாடலும் கண்ணனின் லீலையன்றோ! இறையடியார்க்கு மனைவியைக்கொடுத்தால் அதுவும் க்ருஷ்ணார்ப்பணம் அன்றோ?//

இது என் கண்ணைத்திறந்தது. உண்மையில் நான் causalஆகச் சொன்னது ஒரு ஒப்புமை இவ்வளவு பெரிய பிரச்சனையாக, அதுவும் முனைவர் ராஜம் உணர்ச்சியோடு கலந்து கொள்ளும் அளவிற்கு வெடிக்குமென்று நான் நினைக்கவில்லை. நான் academicalலாகத்தான் அதை அணுகினேன். இது முன்பும் இங்கு பேசப்பட்ட பொருள். கோபத்திற்குக் காரணம் இந்த ஒரு இடுகை மட்டுமல்ல என்று புரிந்தது. பல நாள் கோபம் ஒரு நாள் வெடித்தது :-)) குறையொன்றுமில்லை ;-)

நீங்கள் சொல்வது போல் பெரிய புராணம், அது இருக்கின்ற விதத்தில் இருப்பதுவே சிவனுக்கு உவப்பு என்றால், அது கிருஷ்ண கிருபை என்றே எடுத்துக்கொள்வேன். என் ஆதங்கமெல்லாம், நாம் சொல்லும் கதைகள் நம் பாட்டுடைத்தலைவனுக்கு சிறப்புச் சேர்ப்பதாக இருக்க வேண்டும் என்பதுவே. பள்ளியில் பிள்ளைக்கறி கதை கேட்டபோதே மிரண்டு போனவன். அதிக வன்முறை இருப்பதாகப்பட்டது. பெரிய தயாளுவான சிவன் இப்படியெல்லாம் செய்வானா? எனும் மனக்குறை. அன்பே சிவம் என்கிறோம் அவனது கதைகளோ வன்முறை நிறைந்ததாக இருக்கிறதே எனும் புதிர். மேகலா சொன்னது போல் எனக்கு புரிந்து கொள்ளத்தெரியவில்லை என்று நினைக்கிறேன். தாங்கள் தொடர்ந்து இதற்கு விளக்கமளித்து என் மனக்குறையைப் போக்க வேண்டும். திருப்பூவணத்தில் அநாதரவாக விடப்பட்ட நாராயண ஐயங்கார் குடும்பத்தைக் காத்தவன் அச்சிவன். அப்பா இறக்கும் முன் எழுதிய ஒரு பேரேடில், "கண்ணத்தாள் துணை" என்று எழுதிவிட்டுப் போயிருக்கிறார். இன்றளவும் அந்தப்பேரேடு வீட்டில் இருக்கிறது. நாட்டரசன் கோட்டைக் கண்ணாத்தாள்! சமீபத்தில்தான் போய் தரிசித்துவிட்டு வந்தேன். எனவே சிவபேதம் என்னிடமில்லை. ஆனால், கருத்தளவில் சைவ இலக்கியங்கள் சிவனை முறையாகச் சித்தரிக்கின்றனவா? எனும் கேள்வியுண்டு. அதற்கு உங்கள் தொடர் விளக்கம் பதில் தரலாம். ஏனெனில் உங்கள் வகுப்பில் உணர்ச்சிக்கு இடமிருக்காது என்பது நீங்கள் கொடுத்திருக்கும் பின்புலத்திலிருந்து தெரிகிறது. 

4. //நன்றாக நினைவுள்ளது. கண்ணன் ஆழ்வார் திருனகரியில் என்னை ஒரு ஜீயர் மடம் உள்ள பெருமாள் கோயிலுக்கு அழைத்துச் சென்றார். பெண்கள் கருவரை வரைக்கும் வந்து சாமி கும்பிடலாம் சுபா.. தென்கலை சம்பிரதாயம் இது என்று சொன்னவுடன் மகிழ்ச்சியோடு உள்ளே செல்ல முனைந்த என்னை கருவறை கூட இல்லை.. இரண்டு பகுதிகளுக்கு முன்னரே வந்து தடுத்து விட்டார் ஜீயர் சுவாமிகள். பெண்கள் உள்ளே செல்லக்கூடாது என்று சொல்லி. எனக்கு இது வருத்தமளிக்கவில்லை. ஆனால் இவையெல்லாம் என் அனுபவப் படிப்பில் பதிவாக்கிக் கொண்டேன். இன்னொரு மாற்று உதாரணமும் கிடைத்தது. ஒரு முறை பேரூர் சாந்தலிங்க சுவாமிகளுடன் தஞ்சை பேருடையார் ஆலயம் சென்றிருந்த போது உள்ளே என்னையும் என்னோடு வந்திருந்த நண்பர்களையும் அழைத்து கருவரையில் வந்து இறைவனுக்கு மலர்களைத் தூவி அர்ச்சனை செய்ய வைத்தார்.  அந்த அனுபவமும் என் மனதில் அனுபவப் பதிவாக அமைந்திருக்கின்ரது.//

இது சுபா எழுதியது. எனக்கும் அவருக்கும் நிறையக் கருத்தொற்றுமையுண்டு. இச்சம்பவம் சார்பாக. இது நாங்கள் இணைந்து தமிழ் மரபு அறக்கட்டளை உருவாக்கும் முன் நடந்தது. நான் பெருமையாக ஆழ்வார்திருநகரில் சுபாவை அழைத்துச்செல்ல, "கோஷ்டி நடக்கிறது. இது ஆண்களுக்கு மட்டும். பெண்கள் இதற்கு மேல் வரக்கூடாது" என்று சொல்லிவிட்டனர். கூட வந்த அனந்தகிருஷ்ணன் (அவரும் ஐயங்கார்) கொதிநிலைக்குப் போய்விட்டார். வாரும்! போய் ஜீயரைப் பார்ப்போமென்று. ஜீயர் அன்று இல்லை. தப்பித்தார். மாற்றாக, சாந்தலிங்க அடிகளை சுபாதான் அறிமுகப்படுத்தி வைத்தார். அங்கு போய் இரண்டு வாரம் தங்கியிருக்கிறேன். அன்பே சிவம் என்பதை அங்குதான் நான் கண்டேன். சமீபத்தில் நடந்த செம்மொழி மாநாட்டில் கூட அடிகளாரைச் சந்தித்தேன் எல்லோரும் காலில் விழுவர். நான் கையைப்பிடித்துக்கொண்டு பேசுவன்.

ஒரு சேதி, அனந்தகிருஷ்ணன் ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுதும் ஒரு நல்ல எழுத்தாளர். அவர் எழுதிய ,'புலிநகைக் கொன்றை' எனும் நூல் விமர்சனம் லண்டனில் நடந்தது. என்னை விமர்சிக்கச் சொல்லியிருந்தனர். மனிதர் ஆழ்வார்திருநகரி ஜீயரைக் கிழி, கிழியென்று கிழித்துவிடுகிறார். 

இராமானுஜ தரிசனம் தமிழகத்தில் நடக்காமல் போனதற்கு பிராமணர்களே காரணம். ஏனெனில் அவரது தரிசனம் அவர்களுக்கே வாரிசாக வந்துவிட்டது. உடையவருக்கு இருந்த துணிச்சல், மணவாள மாமுனிகளுக்கு இருந்தது. மற்றவர்களெல்லாம் அகடெமிக்கலாகப் போய்விடுகின்றனர். மேகலா சொல்லும் சமூக சீர்த்திருத்தம் அதன் பின்நடக்கவில்லை. ஶ்ரீவைஷ்ணவத்தைக் காக்க வேண்டுமெனில் அதை முதலில் ஐயங்கார்களிடமிருந்து மீட்டெடுக்க வேண்டுமென்ற கருத்து உள்ளவன். அது எளிதல்ல. தர்மமுமல்ல. ஏனெனில் அந்தச் சொத்தை அவர்களே இதுவரை காத்து வருகின்றனர். இதனால்தான் உடையவரும் கடைசிவரை அந்தணர்களை மனம் மாற்றம் செய்வதிலேயே குறியாக இருந்தார். இனிமேல் அது எப்படிச்சாத்தியப்படும் என்பதை நாம் இங்கு விவாதிக்கலாம்.

5. //பிள்ளையை, மனைவியை இறையடியார்க்குக் கொடுத்த கதைகள் வெட்கம் தருபவை (embarrassing) தலைகுனியச் செய்பவை என்றால் … ராஸலீலை + கோபியரின் ஆடைகளைத் திருடி அவர்கள் தலையைக்குனியச் செய்தது + ஓர் ஆண் தன்னைப் பெண்ணாகப் பாவிக்கும் நிலை இதெல்லாம் எந்த வகையில் பெருமை தரக்கூடியவையோ, எனக்குப் புரியவில்லை. திருட்டையும் விஷமத்தையும் புகழும் மதம் எதுவானாலும் எனக்கு ஏற்புடைத்தன்று. //

இது நல்ல வாதம். ஆனால் இதை அறிவு நிலையில் விளங்கிக்கொள்ள முடியாது. ராஸலீலை என்னவென்று நம் பார்வதி விளக்கும் போது நானும் கலந்து கொள்கிறேன். 

நா.கண்ணன்


rajam

unread,
Jun 28, 2015, 1:56:23 PM6/28/15
to mint...@googlegroups.com
Currently very busy and tied up with other commitments. Will respond to Kannan’s posting in a few weeks.

Thanks,
rajam



--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/HJxTSAe9i_o/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

Dev Raj

unread,
Jun 28, 2015, 2:03:00 PM6/28/15
to mint...@googlegroups.com
On Saturday, 27 June 2015 10:52:08 UTC-7, rajam wrote:
..........அதேபோலத்தான் எனக்கும் கோபியர் கொஞ்சும் ரமணனின் லீலைகளப் பற்றிக் கேட்க உரிமை இருக்கிறது. அந்த ரவிவர்மா (?) ஓவியத்தைப் பார்த்திருப்பீர்கள் — குளத்தில் ஆடையின்றி நீரில் இடுப்பை மறைத்துக்கொண்டு ஒரு கையால் மார்பை மறைத்துக்கொண்டு தங்கள் ஆடைகளைத் தா என்று இன்னொரு கையை நீட்டிக் கெஞ்சித் திணறும் கோபியரைப் பார்த்துக் குறும்புப்புன்னகை செய்யும் கண்ணனைப் போற்றுவது என்ன டேஸ்ட் என்று கேட்க எனக்கும் உரிமை இருக்கு. இங்கே அடியவர் வடிவில் கூட வரவில்லை, அவனே வந்திருக்கிறான். அதை விஷமம் என்று கொண்டாடுவது என்ன டேஸ்ட் என்று கேட்க எனக்கும் உரிமை இருக்கு.
 
நடுவில் புகுந்து 'அது என்ன டேஸ்ட் இது என்ன டேஸ்ட்' என்று கேட்பதெல்லாம் இந்தக் காலத்து academic discussion, ஒருவர் வார்த்தைக்கு மறுவார்த்தை சொல்லும் முயற்சியே.

சும்மா academic discussion-உக்காகச் சொல்கிறேன். இப்படியும் நினைக்கலாமே — உலகமே அவன் அந்தப் பரந்தாமனே அந்தத் திருமாலே அந்த க்ருஷ்ணனே, சிவதுதியும் அவனுக்கே என்றால் … இன்னொருத்தன் மனைவியைக் கேட்ட அந்தச் சிவனின் திருவிளையாடலும் கண்ணனின் லீலையன்றோ! இறையடியார்க்கு மனைவியைக்கொடுத்தால் அதுவும் க்ருஷ்ணார்ப்பணம் அன்றோ? 

பிள்ளையை, மனைவியை இறையடியார்க்குக் கொடுத்த கதைகள் வெட்கம் தருபவை (embarrassing) தலைகுனியச் செய்பவை என்றால் … ராஸலீலை + கோபியரின் ஆடைகளைத் திருடி அவர்கள் தலையைக்குனியச் செய்தது + ஓர் ஆண் தன்னைப் பெண்ணாகப் பாவிக்கும் நிலை இதெல்லாம் எந்த வகையில் பெருமை தரக்கூடியவையோ, எனக்குப் புரியவில்லை. திருட்டையும் விஷமத்தையும் புகழும் மதம் எதுவானாலும் எனக்கு ஏற்புடைத்தன்று

++++++++++


ஆனால் இது என்ன டேஸ்ட் இது embarrassing என்று சொல்ல எனக்கு விருப்பமில்லை.


நடுவில் புகுந்ததற்கு மன்னிக்க வேண்டும்.

பேரிலக்கண நூல் ஒன்றை வழங்கிய பெருமகனார் தொல்காப்பியருக்கு
என்ன டேஸ்ட் என்பதை Dr.ராஜம் அவர்கள் விளக்கினால் தெளிவு பிறக்கும்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

http://www.tamilvu.org/library/libindex.htm 

புறத்திணை இயல்

81    காமப்பகுதி கடவுளும் வரையார்
ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர்.

இது, கடவுள் மாட்டுவருவதொரு பாடாண் பக்கம் உணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்) காமப்பகுதி1 கடவுளும் வரையார் - காமப்பகுதி கடவுள் மாட்டும் வரையார். ஏனோர்பாங்கினும் (வரையார்) என்மனார் புலவர் - ஏனோர்மாட்டும் வரையார் என்பர் புலவர்.

என்றது, கடவுள் மாட்டுத் தெய்வப்பெண்டிர் நயந்த பக்கமும், மானிடப்பெண்டிர் நயந்த பக்கமும் பாடப்பெறும் என்றவாறு.
உதாரணம்

"நல்கினும்2 நாமிசையாள் நோம்என்னும் சேவடிமேல்
ஒல்கினும் உச்சியாள் நோம்என்னும் - மல்கிருள்
ஆடல் அயர்ந்தாற்கு3 அரிதால் உமையாளை
ஊடல் உணர்த்துவதோர் ஆறு."
(புறப்.பாடாண். 48)
இது தெய்வப் பெண்டிர் நயந்த பக்கம்.

"அரிகொண்ட கண்சிவப்ப அல்லினென் ஆகம்
புரிகொண்ட நூல்வடுவாப் புல்லி - வரிவண்டு
பண்நலங்கூட் டுண்ணும் பனிமலர்ப் பாசூர்என்
உண்ணலங் கூட்டுண்டா னூர்."
(புறப்.பாடாண். 49))
இது மானிடப் பெண்டிர் நயந்த பக்கம்.
(23)

1. பகுதி ஆகுபெயர். அது கடவுள்மாட்டுக் கடவுட் பெண்டிர் நயப்பனவும், அவர்மாட்டு மானிடப் பெண்டிர் நயப்பனவும் கடவுள் மானிடப் பெண்டிரை நயப்பனவும் பிறவும் ஆம் (தொல்.புறம். 28) (நச்சி.)

(பாடம்) 2. நல்கெனின்.

3. அமர்ந்தாற்கு.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ 

இலக்கியம் முதலில் , பின்னர் தோன்றியதே இலக்கணம் என்பது
ஆன்றோர் அளித்துள்ள வரையறை. பக்தி இலக்கிய நூல்கள்
தோன்றுவதற்கு முன்னரே இத்தகைய தொன்மையான நூல்கள் 
இருந்தன என்பதைத் தொல்காப்பியம் கல்வெட்டாகக் காட்டியுள்ளது.
தொல்காப்பியர் அம்முறைக்கு ஒப்புதல் அளித்து, நூற்பாவும்
செய்துள்ளார். 

தொல்காப்பியர் காலம் யாது ? இம்மன்றத்தின் அறிஞர்கள் முடிவு செய்து கொள்க.

”அது கடவுள்மாட்டுக் கடவுட் பெண்டிர் நயப்பனவும், 
 அவர்மாட்டு மானிடப் பெண்டிர் நயப்பனவும்,
 கடவுள் மானிடப் பெண்டிரை நயப்பனவும் பிறவும் ஆம்.”

தொன்றுதொட்டு இம்மண்ணின் டேஸ்ட் இப்படியே இருந்துள்ளது 
என்பதற்கு இத்துறைகள் சான்று.


தேவ்

Mohanarangan V Srirangam

unread,
Jun 28, 2015, 2:36:46 PM6/28/15
to min tamil
தேவ் ஐயா! நீங்களும் எப்படிப் பிறர் போல் ஆனீர்? பாவம் தேடித் தேடி தமிழ்வூ தளத்துலேந்து போடுறீங்களே! முன்னர் எழுதிய இந்த இடுகைகளையும் கொஞ்சம் பாருங்கய்யா....  ;-)

***

rajam

unread,
Jun 28, 2015, 2:57:35 PM6/28/15
to mint...@googlegroups.com
தம்பிமார்களின் அன்புப்பொழிவு அமர்க்களம்! தலைக்குளிர்ச்சியில் தடுமம் பிடித்துவிட்டது. சுக்குக்கஷாயம் போட்டுக் குடிக்கவேண்டும், போட்டுத் தரத்தான் ஆளில்லை!


///நீங்களும் எப்படிப் பிறர் போல் ஆனீர்?///

யார் பிறர்? யார் தமர்?


சுருக்கமாக … தொல்காப்பியருக்கும் எனக்கும் ஸ்நானப்ராப்தி இல்லை! அவர் சொன்னதை மீட்டெடுத்துச் சொல்ல எனக்கு என்ன அருகதை?

சரி, இப்போ நேரமில்லை. இன்னும் சில வாரங்களுக்குப் பின் வந்து எல்லாரையும் ஒரு கை பார்க்கிறேன். அதுவரை எல்லாரும் சமத்தா அந்தந்த இலக்கிய/இலக்கணங்களில் மட்டும் கருத்துச்செலுத்திக்கொண்டிருங்கோ!

அன்புடன்,
ராஜம்


செல்வன்

unread,
Jun 28, 2015, 5:25:35 PM6/28/15
to mintamil

2015-06-27 12:52 GMT-05:00 rajam <ra...@earthlink.net>:
உண்மையில் கண்ணனின் ராஸலீலை எனக்கு அருவருப்பைத் தரும். எல்லாரும் தன்னைப் பெண்ணாகப் பாவித்துக்கொண்டு அவன் ஒருவனையே புருஷன் என்று சொல்லுவதும் எனக்குப் புரியாத டேஸ்ட்! 

எல்லாரும் பெண் எனக்கூறுவதை விட உயர்ந்த பெண்ணிய கோட்பாடு உலகில் எதாவது உண்டா? :-)

ஆன்மிகரீதியான திருமணத்தை மனிதர்களின் உடல்ரீதியான திருமணத்துடன் போட்டு குழப்பிக்கொள்ள வேண்டியதில்லை."ஆல் இண்டியன்ஸ் ஆர் பிரதர் அண்ட் சிஸ்டர்" என்றால் கணவனும், மனைவியும் சகோதரர்கள் எனப்பொருள் இல்லை :-) Thats just an analogy.

பக்தி மார்க்கமான கிறிஸ்துவத்திலும் இதே கான்செப்ட் தான்.
கத்தோலிக்க சிஸ்டர்கள் (அன்னை தெரசா உட்பட) நன் ஆக உறுதிபூணும் நாளில் நடப்பது திருமணமே. அன்று அவர்களுக்கு சர்ச்சில் ஜீசஸுடன் திருமணம் நடைபெறுகிறது "கிறிஸ்துவின் மணமகள்கள்" (Brides of Christ) என அவர்கள் அழைக்கபடுகிறார்கள். திருமண மோதிரம், வெட்டிங் கேக் எல்லாமே உண்டு






அதனால் தான் கிறிஸ்துவின் மணப்பெண்களான அவர்கள் அதன்பின் மனிதனை திருமணம் செய்வதில்லை. ஆக கன்யாஸ்திரிகள் எல்லாமே கிறிஸ்துவ ஆண்டாள்களே

--

செல்வன்

unread,
Jun 28, 2015, 5:51:53 PM6/28/15
to mintamil
சிறுத்தொண்டர் புராணம் உட்பட, திருவிளையாடல் புராணம் முழுக்க இருப்பது பக்தியே.

இந்த ஒவ்வொரு அடியார் கதையும் மின் தமிழில் விமர்சிக்கபட்டபோது நான் தான் ஒவ்வொன்றுக்கும் விரிவாக பதில் எழுதி மறுத்தேன்...அப்ப சும்ம இருந்த எல்லாரும் என் கட்சியில் தாமதமாக சேர்ந்து வருகிறீர்களா எனப்பார்த்தால் அப்படி இல்லாமல் தவறுக்கு பதில் இன்னொரு தவறு எனும் கதையாக "திருமால் மட்டும் ஒழுங்கா?" எனும் டாப்பிக்கில் விவாதம் சென்றுகொண்டுள்ளது. ஆத்திகர், நாத்திகர், அக்னோஸ்டிக் என யாருக்கும் இதில் எந்த வித்தியாசத்தையும் காணவில்லை.

"சிவன் கதையில் இந்த இடம் எனக்கு பிடிக்கவில்லை" என சொன்னால் அப்படி சொல்லுவதற்கான காரணங்களை கேட்டு ஆதாரபூர்வமாக அதை பதில் எழுதி மறுக்கவேண்டும். அப்படித்தான் நான் மறுத்தேனே ஒழிய பதிலுக்கு திருமாலை திட்டவில்லை. அது மூத்த பிள்ளையின் கை உடைந்தால் அதன் மனம் புண்படகூடாது என இளையபிள்ளையின் இரண்டு கையையும் உடைப்பது போன்றது. அப்படி சொல்லுபவர் வைணவரா, ஆத்திகரா, நாத்திகரா எனபார்த்து அவரது கொள்கையை அட்டாக் செய்தால் கேள்வி கேட்பவர் "எதுக்கு வம்பு" என ஓடிவிடுவார். ஆனால் அவரது மனதில் உள்ள சந்தேகம் விலகி இருக்குமா என்றால் இருக்காது. அது இங்கே கேட்கபடவில்லை எனில் வேறு மன்றங்களில் கேட்க்கபடும். நாளை நாத்திகர் அதை கேட்பார்கள். அப்ப எல்லாரும் என்ன பதில் சொல்லபோகிறிரிகள்?

அதனால் ஒரு சித்தாந்தத்தை ஒருவர் விமர்சித்தால் அதில் உள்நோக்கம், அவரது பின்புலனை எல்லாம் ஆராயாமல், எழுதிய விமர்சனத்துக்கு நேர்மையாக பதிலிடுவதே நல்ல விவாதமுறை. மின் தமிழுக்கும் ஏற்ற முறை. "வைணவத்தில் ஆபாசம் அதிகமா, சைவத்தில் ஆபாசம் அதிகமா " என ஆத்திகரிடையே நடந்துவரும் இப்பட்டிமன்றங்களை எல்லாம் கேட்டால் "ஆபாசத்தில் சிறந்தது பாரதமா, ராமாயணமா?" என திகவினர் நடத்திய பட்டிமன்றங்கள் தான் நினைவுக்கு வருகின்றன.

Oru Arizonan

unread,
Jun 28, 2015, 8:46:17 PM6/28/15
to mintamil


2015-06-28 14:51 GMT-07:00 செல்வன் <hol...@gmail.com>:
//சிறுத்தொண்டர் புராணம் உட்பட, திருவிளையாடல் புராணம் முழுக்க இருப்பது பக்தியே.

அதனால் ஒரு சித்தாந்தத்தை ஒருவர் விமர்சித்தால் அதில் உள்நோக்கம், அவரது பின்புலனை எல்லாம் ஆராயாமல், எழுதிய விமர்சனத்துக்கு நேர்மையாக பதிலிடுவதே நல்ல விவாதமுறை. மின் தமிழுக்கும் ஏற்ற முறை. "வைணவத்தில் ஆபாசம் அதிகமா, சைவத்தில் ஆபாசம் அதிகமா " என ஆத்திகரிடையே நடந்துவரும் இப்பட்டிமன்றங்களை எல்லாம் கேட்டால் "ஆபாசத்தில் சிறந்தது பாரதமா, ராமாயணமா?" என திகவினர் நடத்திய பட்டிமன்றங்கள் தான் நினைவுக்கு வருகின்றன
.//

தங்கள் கோணத்தை ஒப்புக்கொள்கிறேன், செல்வரே!  ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பதை நினைவுபடுத்தியமைக்கு நன்றி.  தங்கள் கருத்தை நான் நினைவில் கொள்வேன்.

அன்புடன்,
ஒரு அரிசோனன் 

rajam

unread,
Jun 28, 2015, 9:06:18 PM6/28/15
to மின்தமிழ், Dev Raj, Mohanarangan V Srirangam
சற்றே உடல்நலக்குறைவால் மதியம் சற்றுக் கண்ணயர்ந்தேன். காலை உணவுக்கு ரெண்டு பச்சை ஆப்பில்கள். ‘விசித்ர'மான கனவு! நெடு நெடு என்று ஓர் உருவம். தலையும் தெரியலெ காலும் தெரியலே. நீலமும் செவப்புமா ஒடம்பு. (எனக்குப் பிடிச்ச copper suphate blue.) பத்தாயிரம் கைகள் போன்ற உறுப்பமைப்பு. புரியாத மொழிய்லெ என்னவொ சொன்னது. Lip reading முடியலே, அதுதான் தலையைக் காட்டலையே. திரும்பத் திரும்ப நீ யாரு நீ யாரு என்று கேட்டேன். சொன்னது: ‘நான் தொல்காப்பியம். தமிழ்க்கடவுள். இன்னிக்கு நீ பித்தேறி அரற்றும் எல்லாமும் என்னிடமிருந்து கிளைத்தவை. காதலி, காதலி, காதல் செய், ஆணாகட்டும் பெண்ணாகட்டும் அலியாகட்டும் அதுவாகட்டும் கடவுளாகட்டும் மானிடராகட்டும் நரகராகட்டும் … permutation combination கணக்குப்போட்டுக் காதலி, காதல் செய் விரகதாபம் கொள் என்பதே என் கட்டளை. உன் தாபம் தீரவிடமாட்டேன், உன் தாபம் தீர்ந்துவிட்டால் என்னை மறந்துவிடுவாய். நானே யாவும் என்று உணர். ...'

இப்படிச்சொல்லிக்கொண்டே போன அந்த உருவத்தைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியலெ, தலகால் தெரிஞ்சாத்தானே! 

பார்த்துவிட்டேன், பார்த்துவிட்டேன், விசுவரூப தரிசனம் கிடைத்தது! தொல்காப்பியர் என் கனவில் வந்து தீட்சை கொடுத்திருக்கிறார்! இனிக் காதல் செய்யும் வழி என்ன என்று பார்க்கவேணும். யாரை எதைக் காதலிப்பது என்று தெரியவில்லை, புரியவில்லை. 'காதலிப்பார் யாருமில்லை, காதலிக்கும் வழியுமில்லை.’ காதலித்தால்தானே காமப்பகுதி ஒஉரியும், இல்லை காமம் பிடித்தால்தான் காதல் வருமா? ஒண்ணும் புரியலீங்கோ.

வயிறு பசிக்குது. போய்ச் சோறு பொங்கவேணும். செடிகளுக்குத் தண்ணீர் ஊத்தணும். இதுதான் இப்போதைக்கு என்னால் செய்யமுடிந்த காதலும் காமமும்.

இன்னொருநாள் வந்து மீண்டும் கனவுவேன்.


Begin forwarded message:

Tthamizth Tthenee

unread,
Jun 28, 2015, 9:16:44 PM6/28/15
to mint...@googlegroups.com, Dev Raj, Mohanarangan V Srirangam

காமம்- ​​

 

காமத்தை  தூய அன்பாக  ஏன் மாற்றவேண்டும்?

 

மனிதரின் உணர்வுகளில்   பலவகையான உணர்வுகள் உள்ளன,   

நாருசி    நுகரின்பம்,   நோக்கி மகிழ்தல், கேட்டு மகிழ்தல் போன்றவை உள்ளன

 

ஒவ்வொரு உறுப்புக்கு  ஒவ்வொரு வகை    ஒரு ருசியை  அல்லது  மகிழ்ச்சியை  மற்றொன்றாக மாற்ற முடியாது.

 

காமம் என்பது இயல்பான ஒன்று  அதைக் கட்டுப் படுத்தலோ  அல்லது புறக்கணித்தலோ, அல்லது தூய  அன்பாக மாற்றுவதோ  இயலாது. அப்படி மாற்றினால் அதன் விளைவுகளும் சரியாக இராது  என்பது என் எண்ணம்

 

மனக் கட்டுப் பாட்டினால் காமத்தை மட்டுப் படுத்தலாம்,  மருந்துகளால் கட்டுப் படுத்தினால்  அது இன்னொரு விதமாக சீறிக் கிளம்பி  வியாதிகளை ஏற்ப்டுத்தும்.

காட்டாற்று வெள்ளத்தை முறையான அணைகள் மூலமாக கட்டுப் படுத்தலாம் ,அதைவிடுத்து  காகிதத்தினால் அணைகட்டி  நிறுத்த முடியாது

 

ஆகவே காமம் என்பது ஒரு குறிப்பிட்ட பருவத்தை அடைந்த பின் வருவது , அதுதான் இயற்கை .     

 

ஆனால்  இப்போது  சூழ்நிலைகளின் தாக்கத்தால்

 

ஊடகங்கள் பொருள் சேர்க்கும் பேராசையால்

 

சிறார்களுக்கு  மனதில் முறையற்ற  ஆசைகளை வளர்க்கிறது.

 

சிலவற்றை குறித்த காலம் வரையில் மறை பொருளாக வைக்க வேண்டும் 

 

அல்லது   முறையாகப் பாடம் போதித்து  அதிலுள்ள நன்மை தீமைகளை விளக்க வேண்டும்  

 


 

காமம்  என்பது இல்லையென்றால்  ப்ரப்ஞ்ச  வளர்ச்சியே இல்லை

ஆனால் பருவத்தே  பயிர் செய்ய  மறந்து போனோம் நாம்

 

 

அன்பு வேறு  காமம் வேறு . காதல் வேறு  காமம் வேறு  என்பதை உணர்த்த தவறிவிட்டோம்    நாம்

 

இப்போது  இளைஞர்கள்    பருவ ஈர்ப்பை  , காமத்தை  காதல் என்று நினைத்துக் கொள்கிறார்கள். அதனால்தான்  காமத்துக்கும் காதலுக்கும் உள்ள வேறுபாடு திசைமாறி எங்கோ இட்டுச் செல்கிறது

 

ஆனா; மனிதர்  காமம் என்னும் இறுதி நிலைக்கு  அன்பு பாசம்  நேசம்  போன்றவைகளை  உபயோகித்துக் கொள்கிறார்

 

காமமில்லாத  அன்பு உபயோகப் படாது, 

அன்பில்லாத காமமும் உபயோகப் படாது

 

 

 

காதல்  என்பதே  ஒரு ஆண் ஒரு பெண்மேல் கொள்ளும்போதோ

 

அல்லது ஒரு  பெண் ஒரு ஆணின் மேலே கொள்ளும்போதோ அதன் முற்றுதல்  காமமாக மலர்கிறது  காமம்  என்பது காதலின் வடிகாலே

 

ஆனால்  அதே காதல்  இறைவனிடம் ஏற்படும்போது  அது பக்தியாக மலர்கிறது

 

ஆகவே காதல் என்பதே   நோயல்ல  அது ஒரு வகையான உள்ளுணர்வு

 

காமத்தைப் பற்றிய   ஒரு கவிதை  என்  நோக்கில் கீழே

 

 

 

காமம்-      

      

காமம் களவியல் அல்ல

அது ஜீவராஸிகளின்

உளவியல் -உடலியல்

காமம் அது தவறல்ல

தேடலின் முதல்படி

காதலின் வட்டி

அன்பின் தேடல்

ஆசையின் கூடல்

பள்ளியறைப் பாடல்

ஏக்கம்  கறுவறையில்

ருந்து வெளியேற்றப்

பட்டதனால் வந்த ஏக்கம்

மீண்டும் கருவறையைப்

பார்க்கத்  தூண்டும் ஏக்கம்

குடியிருந்த கோயிலைப்

பார்க்க வேண்டுமெனும் நோக்கம்

கருவறையின் தேடல்

றுபடி குடிபுக  நாம்

என்ன கங்காருவா?

காமம் ஆத்மாவின் ங்கமம்

ஜீவாத்மா பரமாத்மாவின்

இருக்கைப்  பரிமாற்றம்

இது  காமம் அல்ல

காதல் !!!!!!!!!!!

  


அன்புடன்

தமிழ்த்தேனீ

 

 

 

 

 

 

 

 


அனைத்து உயிருக்கும் அவனே ஆதி

அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

 

மனிதமும்,உலகமும் காப்போம்

மௌனம் உணர்த்தாத பொருளை

சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net


 


அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net




You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Mohanarangan V Srirangam

unread,
Jun 28, 2015, 10:56:35 PM6/28/15
to min tamil


யார் பிறர் - பரம ரகசியம்

யார் தமர் - ராஜம் அக்கா

***

N. Kannan

unread,
Jun 28, 2015, 11:33:35 PM6/28/15
to mint...@googlegroups.com

மிகவும் மகிழ்வாக உள்ளது. அகம் வேறு யார் எங்களுக்குச் சொல்லித்தர முடியும்?

நா.கண்ணன்.

பிகு: இறையனார் களவியல் உருவான கதை நினைவிற்கு வருகிறது.


You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Dev Raj

unread,
Jun 29, 2015, 8:50:13 AM6/29/15
to mint...@googlegroups.com

தொல்காப்பிய வழியில் மங்கை மன்னரின் மடல்கள்  -
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

தமிழ்  இலக்கணத்தில்   மனிதர் மனிதர் மேல்  கொள்ளுகின்ற   காமம்,  மனிதர்   கடவுளர் மேல் கொள்ளுகின்ற  காமம்,   கடவுளர்  மனிதர் மேல் கொள்ளுகின்ற   காமம் என்று   வகைப்பாடுகளைத்   தெளிவாக    ஆக்கிவைத்துள்ளது. மனிதப் பெண்டிர், மனிதர்களின் மேல்   கொள்ளும்    காமத்தில்தான்  பெண்கள்  மடலேறும் வழக்கம் இல்லை. மடலேறுதல்   என்றால் வீட்டாரின்  இல்செறிப்பைத்  தாண்டிச்  சென்று  சமுதாயத்தின்  உதவியைக்  கோருவது  தங்கள் காதல்  ஈடேற.    மனிதர்களிடையேயான   உறவில்தான்     இந்த   வழக்கமின்மை.   அதுவும் வழக்கமின்மைதான். ஏனெனில்   இலக்கணம் மனித உறவிலும்  காமம்  வெறியாக  வெளிப்படும் தருணங்களைப் பெண்கள் விஷயத்தில் கவனம் கொள்கிறது.   அதற்குப் பெயர்   ’காந்தள்’. 
 
நானாகச்  சொல்கிறேனா?
 
வெறியறி   சிறப்பின்   வெவ்வாய் வேலன்
வெறியாட்டு  அயர்ந்த காந்தளும்.. 
 
(63  தொல்காப்பியம்   புறத்திணை  இயல்) 
 
என்பதற்குப்   பொருள்  உரைக்கும்  இளம்பூரணர், ‘வெறி ஆடுதலை அறியும்   சிறப்பினை உடைய  வெவ்விய   வாயினை   உடைய  வேலன்    வெறியாடிய  காந்தளும்’    என்று      கூறுகிறார்.   
 
அதாவது  காந்தள்  என்பது   எதற்குக்  குறியீடு?    வெறியாடும்  வேலன்   ஆட்டத்திற்கு  மட்டும் காந்தள் என்று பெயரா?
 
மேலும்  தொடர்கிறார்    இளம்பூரணர்.   ‘காந்தள்     என்பதனை    மடலேறுதற்குப்   பெயராகக்   கூறுவார்    உளராகலின்,    வெறியாட்டு  அயர்ந்த    காந்தள்   என்றார்’    
 
எனவே   மடலேறுவதற்கும்     காந்தள்    என்று  சொல்லும்  வழக்கம் இருந்திருக்கிறது.     சரி.    அதனால்  என்ன?    காந்தள்   பெண்களுக்குச்   சொன்னால்தானே   இந்தப் பேச்சு?  பொறுமை :--))) 
 
அடுத்தவரி    தொடர்கிறது,   ‘அன்றியும்  காந்தள்  என்பது  மடலேறுதலான்  அத்துணை ஆற்றாளாகிய     பெண்பால்  மாட்டு    நிகழும்     வெறி    ‘காந்தள்’   எனவும் பெயராம்.    இதனானே  காமவேட்கையின்  ஆற்றாளாகிய  பெண்பால்  பக்கமாகிய  வெறியும்,    அந்நிலத்துள்ளார் வென்றி  வேண்டி  ஆடும்  வெறியும்    கொள்ளப்படும்’     
 
அதாவது   ‘கடலன்ன  காமத்தராயினும்’   என்ற  குறள்    வழக்க   மிகுதியைச்  சுட்ட வந்ததே  அன்றி,    விதி   அன்று.  
 
இவ்வாறு   பெண்ணின்   காம  வேட்கை  ஆற்றாத   தன்மையை     ஒப்புக்கொண்டு   அதற்கு  உரிய இடம்  வகுக்கவில்லையென்றால்  பின்  எப்படித்  தலைவனுடன்   தலைவி  கிளம்பிச் சென்றுவிடும்   உடன்போக்கு,    அருஞ்சுரம் கடத்தல்,  வழிவருகின்ற   முக்கோல் பகவரைக் குறித்து   ‘நடைகொளீ    அந்தணீர்’    என்று  ”என்  மகளையும், தலைவனையும்   வழியில் கண்டீர்களா”  என்று   செவிலித்தாய்    கேட்கமுடியும்?  
 
அடுத்தது  வருவோம். மனிதப்  பெண்டிர் மனித  ஆடவரைக்  காமுறும் காலத்துச்  செல்லுபடியாகும்  வழக்கு  மனிதப் பெண்டிர் கடவுளர்  மாட்டு காமுறும்  போது  எப்படிச்   செல்லுபடியாகும்? மனிதப் பெண்டிர்  கடவுளைக் காமுறுதல் தொல்காப்பியம் சொல்லியதா ?  அவசரப் படேல்.  
 
81) காமப்  பகுதி  கடவுளும்  வரையார் 
     ஏனோர் பாங்கினும்   என்மனார்  புலவர். 
 
இளம்பூரணம் ---  ”காமப்பகுதி   கடவுளும்   வரையார் --  காமப்பகுதி  கடவுள்மாட்டும்   வரையார்,   ஏனோர் பாங்கினும் வரையார்   என்மனார் புலவர்  --  ஏனோர்மாட்டும்  வரையார்  என்பர் புலவர்.” என்றது,    கடவுள்  மாட்டுத்  தெய்வப் பெண்டிர்   நயந்த பக்கமும்,  மானிடப் பெண்டிர் நயந்த  பக்கமும்  பாடப்பெறும்  என்றவாறு.”---   (வரையார்  -- தவிர்க்கமாட்டார்)
 
எனவே    திருமங்கை மன்னன்   பரகால  நாயகியாக   அகநிலை  அடைந்து   திருமடல்  பாடியது    கடவுளரை    மானிடப் பெண்டிர் நயந்த  பக்கமாகப் பாடியது     தொல்காப்பிய  வழியின்  நின்றேயாம். ஆயினும்   திருமடலில்   திருமங்கை மன்னன்  பெண் கூற்றாக  வருங்காலத்து   ‘பெண்   மடலேறுதல்    தமிழ்  வழக்கு  அன்றாயினும் வடமொழி    இலக்கிய    முன்னுதாரணம்   கொண்டு    மடலூர்வேன்’ என்று   தன் நாயகனான    கடவுளை   அச்சுறுத்துகிறாள்.  அந்த இடத்தில்  பாத்திரக்கூற்றின்  நயம்  அறியாதார்   இலக்கியச்  சுவையின்    சுவடறியாதாரே.   
 
மானிடப் பெண்டிர்  மடலேறுவதாகக்  கூறினும் இளம்பூரணர்  காட்டியபடி பெண் மடலேறுவதைக் காந்தள்   என்று  சுட்டும்  வழக்கம் ஒரு  சாராரிடம் இருந்தது  என்று அன்றோ  தெரிகிறது?  
 
இங்கு   மானிடப்   பெண்டிர் மானிடரை  நயந்த  பக்கம் பாடாது , மானிடப்  பெண்டிர் கடவுளரை   நயந்த  பக்கம் பாடும் மானவேல்  பரகாலனை   தமிழுக்குள்   வலிந்தொரு  வழக்கம்  புகுத்தியவராய்ப் பிதற்றுவார்க்  கூற்று  அறியாதார்   செயலென விடுப்போம். 
 


பரகால நாயகியின் பகவத் விரஹம் :
[முதல் திருமொழி]

குன்ற மொன்றெடுத் தேந்தி,
மாமழை அன்று காத்தவம் மான்,
அரக்கரை வென்ற வில்லியார் வீர மேகொலோ,
தென்றல் வந்துதீ வீசு மென்செய்கேன் !


அங்கொ ராய்க்குலத் துள்வ ளர்ந்துசென்று,
அங்கொர் தாயுரு வாகி வந்தவள்,
கொங்கை நஞ்சுண்ட கோயின் மைகொலோ,
திங்கள் வெங்கதிர் சீறு கின்றதே !


பூவை வண்ணனார் புள்ளின் மேல்வர,
மேவி நின்றுநான் கண்ட தண்டமோ,
வீவி லைங்கணை வில்லி யம்புகோத்து,
ஆவி யேயிலக் காக எய்வதே !

[ஐங்கணை வில்லி - மன்மதன்]


குலசேகர நாயகி -

ஏர்மலர்ப் பூங்குழ லாயர்மாதர் எனைப்பல ருள்ளவிவ் வூரில்உன்றன்
மார்வு தழுவுதற் காசையின்மை அறிந்தறிந் தேயுன்றன் பொய்யைக்கேட்டு
கூர்மழை போல்பனிக் கூதலெய்திக் கூசி நடுங்கி யமுனையாற்றில்
வார்மணற் குன்றில் புலரநின்றேன் வாசுதே வாஉன் வரவுபார்த்தே !


பரகால நாயகி -

எங்ஙனேயோ அன்னை மீர்காள்! என்னை முனிவது நீர் ?
நங்கள்கோலத் திருக் குறுங்குடி நம்பியை நான்கண்டபின்,
சங்கினோடும் நேமி யோடும் தாமரைக் கண்களொடும்,
செங்கனிவா யொன்றி னொடும் செல்கின்ற தென்நெஞ்சமே !


நிறைந்த வன்பழி நங்குடிக்கிவள் என்றன்னை காணக்கொடாள்
சிறந்தகீர்த்தித் திருக்கு றுங்குடி நம்பியை நான்கண்டபின்,
நிறைந்தசோதி வெள்ளஞ் சூழ்ந்த நீண்டபொன் மேனியொடும்
நிறைந்தென் னுள்ளே நின்றொழிந்தான் நேமியங் கையுளதே !



தேவ்

Dev Raj

unread,
Jun 29, 2015, 9:03:33 AM6/29/15
to mint...@googlegroups.com

எங்ஙனேயோ அன்னை மீர்காள்! என்னை முனிவது நீர் ?
நங்கள்கோலத் திருக் குறுங்குடி நம்பியை நான்கண்டபின்,
சங்கினோடும் நேமி யோடும் தாமரைக் கண்களொடும்,
செங்கனிவா யொன்றி னொடும் செல்கின்ற தென்நெஞ்சமே !


நிறைந்த வன்பழி நங்குடிக்கிவள் என்றன்னை காணக்கொடாள்
சிறந்தகீர்த்தித் திருக்கு றுங்குடி நம்பியை நான்கண்டபின்,
நிறைந்தசோதி வெள்ளஞ் சூழ்ந்த நீண்டபொன் மேனியொடும்
நிறைந்தென் னுள்ளே நின்றொழிந்தான் நேமியங் கையுளதே !


இப்பாடல்கள் ‘பராங்குச நாயகி’ நம்மாழ்வார் அருளிச்செய்தவை


தேவ் 

Bala Sundara Vinayagam

unread,
Jun 30, 2015, 6:03:53 AM6/30/15
to mint...@googlegroups.com

ஶ்ரீராமானுஜர் ஆழ்வாராக இருந்தாலென்ன ஆச்சாரியராக இருந்தாலென்ன … இன்னிக்கி என் வாழ்வுக்கு அந்த ஆள் என்ன ஒதவி செய்யிறாரு என்பதுவே என் போன்ற சாதாரண மக்களுக்குக் கவலை. மத்த discussion எல்லாம் தந்தக்கோபுரவாசிகளின் பொழுதுபோக்கு.

 

 

 

This is narrow outlook. (For other religions, I can't refer to, but to Srivaishanavism, I may like to, here).  The religion is to help us come out of our individual shells. So, the question as to - What benefits will the so-and-so person, and such-and-such religion, offer me and, if they don't offer me anything, I won't care for them - is presumptuous. That is to say, we have decided the case even before hearing it.  

 

The persons, who are called contemptuously Ivory Tower residents, ask us to enter into religion, wholeheartedly, and experience it. All by ourselves if we can’t get guidance for whatsoever reasons; or would like to go all alone.

 

The experience, by gradual degrees, will pull us out of our shells and tell us more which we have never thought of before. For that, there must be willingness on our part, first of all. Deserve before you desire - the religion says to us.  We must be worthy of the task of experiencing the religion.  

 

Religion is not that which is just written on a piece of paper or books, but that which is experienced. It falls under the realm of spirit, not intellect.  The persons who had experienced make all attempts to tell that to us, in words or songs. like Alwars. But they may baffle us.  We need someone better than us to make them clear to us. Or, better still, we go to religion on our own.  

 

 

Sometimes, more than great people, our own parents pass the experience to us: that is, there is vicarious experience.  It is because we live close to them in our impressionable years.  Such a religion will live with us lifelong. The hand that rocks the cradle rules the religion really. If parents haven't experienced (meaning they took to religion as a duty or as a religious inheritance, not taking any efforts to go into it), they can't pass anything to us. They had led pretentious lives and their children turn out to be persons to call religion sour grapes or raising question like What’s there for me? None, so it is all non-sense.  A sort of lethargy.


Bala Sundara Vinayagam

unread,
Jun 30, 2015, 6:27:53 AM6/30/15
to mint...@googlegroups.com, ra...@earthlink.net

ஏதோ ஒரு இலக்கியத்தை எடுத்தோம் படித்தோம், ஆகா எப்படி எழுதியிருக்கிறார் இவர்...என இலக்கிய நயம் பாராட்டி மகிழ்ந்தோம் என்றிலாமல், பக்தி என்று உருகி உருகி ஊற்றுவதைக்  கண்டால் நமக்குதான் இந்த  இலக்கியம் ஒன்றும் புரிபடாமல் போகிறதோ என்று நினைத்தேன்.  

 

ஏதோ என்னிடம்தான் கோளாறு என்று நான் குழம்புவதற்குள் வந்து தடுத்தாட்கொண்டீர்கள்... தாயே ...நீவிர் வாழ்க ..வாழ்க..

 

இலக்கியத்தை இலக்கியமாகக் கருதி ஆராய்வது எப்படி என்று ஒரு கட்டுரை கொடுங்களேன் அம்மா,  உங்கள் சிறுத்தொண்டர் வகுப்பில்  நீங்கள் ஆராய்ந்த பொழுது வகுப்பில் பங்கு பெற முடியாமல் போனது வருத்தம் தருகிறது.//


Poor thoughts !

 

So far as Alwars’ paasurams are concerned, they are not literature from the religious point of view.  To call them literature is an abachaaram for the certain religious people namely Srivaishnaviites.


But to you, and others, they can be.  You can enjoy reading them, noting their linguistic juggleries, their aesthetic nuances or beauty.  You can glance at them at random, I mean, pick one here from Nammazhvaar, pick one there from Thirumangai alwars, and examine how they serve as glorious literature.  I am just now reading a book "'நாலாயிரத்தில் அக மரபுகள்ஆசிரியர் பேராசிரியர் முனைவர் பு பா இராஜ இராஜேஸ்வரி, எம் ஏ எம் லில் பி எச் டி. தமிழ்த்துறைத்தலைவர் (ஓய்வு) இராணி மேரிக்கல்லூரி.  It is her PhD thesis. I have read many a PhD thesis by Tamil academics on paasurams. It is perfectly ok for them to analyse the paasurams in order to get Phd, MPhill or applause from the crowd. 


At the same time, we shouldn’t come beyond that to heckle those who take these passurams only as a divine outpourings of 12 tormented souls, is bad manners.  They don’t heckle at students or scholars who take these paasurams as literature.  Yours is material plane. Theirs is spiritual. 

 

Bala Sundara Vinayagam

unread,
Jun 30, 2015, 6:30:32 AM6/30/15
to mint...@googlegroups.com, ra...@earthlink.net
ஏதோ ஒரு இலக்கியத்தை எடுத்தோம் படித்தோம், ஆகா எப்படி எழுதியிருக்கிறார் இவர்...என இலக்கிய நயம் பாராட்டி மகிழ்ந்தோம் என்றிலாமல், பக்தி என்று உருகி உருகி ஊற்றுவதைக்  கண்டால் நமக்குதான் இந்த  இலக்கியம் ஒன்றும் புரிபடாமல் போகிறதோ என்று நினைத்தேன்.  

ஏதோ என்னிடம்தான் கோளாறு என்று நான் குழம்புவதற்குள் வந்து தடுத்தாட்கொண்டீர்கள்... தாயே ...நீவிர் வாழ்க ..வாழ்க..

இலக்கியத்தை இலக்கியமாகக் கருதி ஆராய்வது எப்படி என்று ஒரு கட்டுரை கொடுங்களேன் அம்மா,  உங்கள் சிறுத்தொண்டர் வகுப்பில்  நீங்கள் ஆராய்ந்த பொழுது வகுப்பில் பங்கு பெற முடியாமல் போனது வருத்தம் தருகிறது.

..... தேமொழி 

Poor thoughts !


So far as Alwars’ paasurams are concerned, they are not literature from the religious point of view.  To call them literature is an abachaaram for the certain religious people namely Srivaishnaviites.


But to you, and others, they can be.  You can enjoy reading them, noting their linguistic juggleries, their aesthetic nuances or beauty.  You can glance at them at random, I mean, pick one here from Nammazhvaar, pick one there from Thirumangai alwars, and examine how they serve as glorious literature.  I am just now reading a book "'நாலாயிரத்தில் அக மரபுகள்ஆசிரியர் பேராசிரியர் முனைவர் பு பா இராஜ இராஜேஸ்வரி, எம் ஏ எம் லில் பி எச் டி. தமிழ்த்துறைத்தலைவர் (ஓய்வு) இராணி மேரிக்கல்லூரி.  It is her PhD thesis. I have read many a PhD thesis by Tamil academics on paasurams. It is perfectly ok for them to analyse the paasurams in order to get Phd, MPhill or applause from the crowd. 


At the same time, we shouldn’t come beyond that to heckle those who take these passurams only as a divine outpourings of 12 tormented souls, is bad manners.  They don’t heckle at students or scholars who take these paasurams as literature.  Yours is a material plane. Theirs is spiritual. 

Dev Raj

unread,
Jun 30, 2015, 8:47:02 AM6/30/15
to mint...@googlegroups.com
பாண்டிய மன்னன் ஒருவன் பன்னீராண்டு வற்கடத்தின் பின் புலவர்களை அழைத்துக் கேட்டானாம் 
‘தமிழ் அறிந்தார் யாருமுண்டோ?’ என்று. இங்கு ‘தமிழ்’ என்பதற்கு அகப்பொருள் என்றே அர்த்தம். 
தமிழ் என்பது மொழியைக் குறித்ததாயினும் ஒரு காலகட்டத்தில், மொழியின் சிறப்பாகக் கருதப்பட்ட 
பொருளதிகாரம், அதிலும் அகத்திணை இலக்கணம் என்பதைச் சிறப்புப் பெயராகக் குறித்தது  என்று
தெரிகிறது. 

அகத்துறை மாந்தர்க்கு மட்டுமின்றிக் கடவுளர்க்கும் உரியது என்பதைத் தொல்காப்பிய
நூற்பா தெள்ளென விளக்கியதையும் பார்த்தோம்.

தமிழ் இலக்கியத்தின் அகத்துறை நீட்சியை ஆழ்வார்களின் பனுவலில் காண முடிகிறது;
மங்கை மன்னரின் பாக்களின் போக்கைப் பார்த்தோம்.அகத்துறையில் தலைவியின் தாயும், தோழியும் 
அவளது நிலை கண்டுஇரங்குகின்றனர். அதை ஒட்டி ஆழ்வார்களின் பாசுரமும் அமைவதையும் பார்க்கிறோம்.

நம்மாழ்வார் பாசுரத்தில் ஒருவருக்கேற்பட்ட ஐயத்தை ஓர் ஆசாரியர் குறள் / குறுந்தொகை வரிகளைக்
கொண்டு விளக்கியதும் பதிவாகியுள்ளது. அவர் பெயர் ஸ்ரீ பராசர பட்டர்.  ஸ்ரீ பட்டர் 11 - 12ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்.

[திருவாய்மொழி - முதற்பத்து - நான்காந் திருமொழி]

என்நீர்மை கண்டிரங்கி யிதுதகா தென்னாத
என்நீல முகில்வண்ணற் கென்சொலியான் சொல்லுகேனோ
நன்னீர்மை யினியவர் கண் தங்காதென் றொருவச்சொல்
நன்னீல மகன்றில்காள். நல்குதிரோ நல்கீரோ?


என்நீர்மை கண்டிரங்கி யிதுதகா தென்னாத
 என்நீல முகில்வண்ணற் கென்சொலியான் சொல்லுகேனோ”

இவ்வரிகள் ”பிரிவு நேருங்கால் சற்றும் பொறுக்க மாட்டாத எனது இயல்பை நன்கு கண்டிருந்தாலும் ‘இத்தகைய தன்மை பெற்றவளையா
பிரிந்திருப்பது ? கணமும் இவளைப் பிரியத்தகாது’ என நினைக்காத என் கார்முகில் வண்ணருக்கு என்ன செய்தி சொல்வேன் ?” என்று பொருள் 
தருகின்றன.

இவ்வரிகள் தவறென்று ஒருவர் ஸ்ரீ பட்டரிடம் வந்து மறுப்புத் தெரிவித்தாராம் -
இது காதலர் பிரிந்திருக்கும் நிலைமையில் சொல்லுகிற பாசுரமேயன்றிக் 
கூடியிருக்கும் நிலைமையிற் சொல்லுகிற பாசுரமன்று; பிரிவுக்காலத்தில்
தலைவி இருக்கும் நிலையை ஒருவர் கூறக் காதால் கேட்கலாமேயன்றி
காண வழியில்லையே ‘என்னீர்மை கேட்டு இரங்கி’ எனப் பாடல் அமைந்தால்
சரியாக இருந்திருக்கும், என்பது அவரது வாதம்.

பட்டர் அதைக்கேட்டு, ‘அரிஞரே! நன்கு கேட்டீர்; 
புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு.

[பசப்புறுபருவரல்] என்ற திருக்குறளும், 
*ஊருண்கேணியுண்டுறை தொக்கபாசியற்றே பசலை, 
காதலர் தொடுவுழித் தொடுவுழி நீங்கி விடுவுழி விடுவுழிப் பரத்தலானே* 

என்று குறுந்தொகைச் செய்யுளும் உமக்குத் தெரியாதுபோலும்’  என்று சொல்லி 
அவற்றுக்கு விரிவாகப் பொருள் கூறினாராம்.

’புல்லிக் கிடந்தேன்’ எனும் குறள் திருக்குறளின் பசப்புறு பருவரல் என்னுமதிகாரத்தில் 
காணப்படுவது. இது நாயகியின் பேச்சு - முன்பொரு நாள் காதலரை அழுந்தத் தழுவிக்கிடந்தேன்; 
கை மாறுவதற்காகச் சிறிது புடைபெயர்ந்தேன்; ஒரு நொடிப்பொழுது விலகினவாறே
பசலைநிறம் வந்து உடம்பெல்லாம் மூடிக்கொண்டது
 என்பது இதன் கருத்து. 

குறுந்தொகையின்  ’ஊருண்கேணி’ எனும் செய்யுளின் கருத்து -
”ஊரிலுள்ள மக்களால் நீருண்ணப்பெறுகிற கேணியினுள்ளே படர்ந்து கிடக்கின்ற 
பாசியைப்போன்றது பசலை நிறம்; நீரில்  கைவைத்தால் கைபட்ட இடங்களில் பாசி நீங்கும்; 
கையை எடுத்துவிட்டோமாகில் அவ்விடமெல்லாம் பாசி மூடிக்கொள்ளும்: 
அதுபோல, கணவனது கைபடுமிடங்களில் பசலைநிறம் நீங்கும்; அணைத்த கை நெகிழ்ந்தவாறே 
அப்பசலை நிறம் படரும்; ஆதலால் பாசி போன்றது பசலைநிறம் என்பது பொருள். 

[தொடுவுழி தொடுவுழி - தொட்டவிடங்கள்தோறும்; விடுவுழி விடுவுழி - விட்டவிடங்கள்தோறும் ; பரத்தலான்- பரவுவதால்] 

பிரிவாற்றாமையினால் மகளிரின் மேனியில் தோன்றும் நிறவேறுபாடு பசலைநிறமெனப்படும். நாயகனை விட்டுப் பிரிந்தகாலத்தில் நாயகியினுடலில் இந்த நிறவேறுபாடு தோன்றுவது வியப்புக்குரியதன்று; ஒரு படுக்கையிலேயே படுத்துக் கூடியிருக்கும்போதே கணநேரம் கைநெகிழ்ந்தவளவில் இந்தப் பசலைநிறம் படர்கின்றதென்றால் பிரிந்த நிலைமையிற் கேட்க வேண்டியதில்லையன்றோ !

பிரிவு நிலையில் இப்பாடல் சொல்லப்படுவதானாலும், கூடியிருந்த காலத்தில் நிகழ்ந்த நிகழ்வையே நினைப்பூட்டுவதால் கேட்டிரங்கி என்னவேண்டியதில்லை; கண்டிரங்கி என்றே சொல்லத்தகும் என்றதாயிற்று. 

அருளிச்செயலை அளித்தவர்களாகட்டும், அவற்றுக்கு உரை செய்தவர்களாகட்டும், அருளிச்செயலில் முரண்போலத் தோன்றுமிடங்களை நிர்வஹித்தவர்களாகட்டும் அனைவருமே தமிழ் இலக்கண - இலக்கிய மரபுகளை நன்கறிந்தவர்கள் என்பதை நாம் நினைவில் கொள்ளுதல் நன்று


தேவ்

சொ. வினைதீர்த்தான்

unread,
Jun 30, 2015, 1:16:58 PM6/30/15
to mint...@googlegroups.com
அருளிச்செயலை அளித்தவர்களாகட்டும், அவற்றுக்கு உரை செய்தவர்களாகட்டும்,
அருளிச்செயலில் முரண்போலத் தோன்றுமிடங்களை நிர்வஹித்தவர்களாகட்டும்
அனைவருமே தமிழ் இலக்கண - இலக்கிய மரபுகளை நன்கறிந்தவர்கள் என்பதை நாம்
நினைவில் கொள்ளுதல் நன்று
------ தேவ்

அருமை ஐயா.

--
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

Bala Sundara Vinayagam

unread,
Jun 30, 2015, 1:44:32 PM6/30/15
to mint...@googlegroups.com
அருளிச்செயலை அளித்தவர்களாகட்டும், அவற்றுக்கு உரை செய்தவர்களாகட்டும், அருளிச்செயலில் முரண்போலத் தோன்றுமிடங்களை நிர்வஹித்தவர்களாகட்டும் அனைவருமே தமிழ் இலக்கண - இலக்கிய மரபுகளை நன்கறிந்தவர்கள் என்பதை நாம் நினைவில் கொள்ளுதல் நன்று


தேவ்

இன்னொன்றையும் நினைவில் கொளவது நன்று.

ஆழ்வார்கள் தமிழ் இலக்கண, இலக்கியத்தில் கற்றுத்துறை போகாமல் தெள்ளிய தமிழில் பாசுரங்கள் எழுதியிருக்க முடியாது.  அதே வேளையில், அவ்விலக்கிய, இலக்கண ஞானத்தை வைத்துக் கொடுந்தமிழிலும் வீரமாமுனிவர் தேம்பாவணி எழுதியது போல, அல்லது சங்கப்புலவர்கள் எழுதியதைப்போல எழுதியிருந்திருக்கலாம். 

செய்யவில்லை. 

காரணம்: அவர்கள் நோக்கம் இலக்கியமோ, தங்கள் பாண்டியத்தைப் பறைசாற்றிக் கைதட்டல் பெறவோ அன்று.  மொழியும் இலக்கணமும் கருவிகளாகவே கொள்ளப்பட்டன.  இலக்கணத்தை அறிந்து அதற்குட்பட்டு எழுதுவது ஒரு நாகரிகம்.  ஏனோதானோ என்று எழுதுவது அவ்விலக்கணத்தையும் மொழியையும் அவமதிப்பதாகும். எனவே அவர்கள் நல்ல தமிழில் எழுதினார்கள். இருப்பினும் எங்கு மீற வேண்டுமோ அங்கு மரபை மீறினார்கள். பரகாலநாயகி திருக்குறுங்குடி நம்பியின் மேல் மடல் செய்தது போன்று.

பாசுரங்கள் இலக்கிய நயங்களோடு வெளிப்பட்டிருந்தால் அஃதொரு பை ப்ராடக்ட். Not a conscious act.  Suppose it was conscious, we can safeful reject all paasuram as falling below spirtual field and catering to material pleasures.  

ஆழ்வார்களின் நோக்கம் திருமால் பக்தி மட்டுமே. அப்பக்தி தமிழகத்தில் பரவ, அதாவது தான் பெற்ற் இன்பம் இவ்வையகம் பெறவேண்டுமென்று - மக்களிடையே சொன்ன அவர்கள் தேர்ந்தெடுத்ததுதான் எளிய தமிழ்.  இலக்கணத்துடன் கூடி சிறப்பது மொழிக்கு செய்யும் மரியாதை. அன்றைய நிலையில் அப்படியெழுதுவது மரபு. இன்றிருந்தால் இலக்கணத்தை மீறும் வசன கவிதையைதேர்ந்தெடுப்பார்கள். மக்களால் மரபுக்கவிதையை அணுக முடியாது. வசன கவிதைதான் இன்று பாப்புலர்.

ஆச்சாரியர்கள் நிலை வேறு. அவர்கள் அனைவரும் வைதீகபபிராமணர்கள். சிறுபிராயத்திலிருந்து வடமொழியில் ஊறியவர்கள். ஆழ்வார்களின் பாசரங்களைப்பார்த்து திகைத்திருப்பர். இவற்றின் நெளிவு சுளிவுகளையும் உட்பொருள், நுட்பொருள் அனைத்தையும் அறிந்து தெளிய - கண்டிபாக பழந்தமிழ் இலக்கியம், இலக்கணங்களில் absolute mastery தேவையென்று உணர்ந்து தமிழை அணுகி பெரும்புலவர்கள் ஆனார்கள். தேசிகன் - தெரியாத மறை நிலங்கள் தெளிந்தோமே - என்று தமிழில் தான் பாடினார். அவர் தமிழில் எழுதியவை அழகும் எளிமையும் கொண்ட த‌மிழில் இருக்கும். அனைத்து ஆச்சாரியர்களும் masters of Tamil ancient literature and language and grammar.  அன்றிருந்த ஆச்சாரியர்கள் மட்டுமல்ல; இன்றிருக்கும் ஜீயர்களும் அவ்வாறே. அவர்களின் நூல்களே என் தமிழைச்செம்மைப்படுத்தினர். பள்ளிக்கூடத்து ஆசிரியர்களிடம் நான் தமிழ் கற்கவில்லை.

ஆழ்வார்களை அணுக தமிழ் நன்கு தெரியவேண்டும். அதற்க்காக தமிழைத்தூக்கித் தலைமேல் வைக்கமுடியாது. தலைமேல் வைக்கப்பட வேண்டியவை பாசுரங்களே. மொழியன்று. 

தேமொழி

unread,
Jun 30, 2015, 2:21:45 PM6/30/15
to mint...@googlegroups.com, balasundar...@gmail.com, ra...@earthlink.net


On Tuesday, June 30, 2015 at 3:30:32 AM UTC-7, Bala Sundara Vinayagam wrote:
ஏதோ ஒரு இலக்கியத்தை எடுத்தோம் படித்தோம், ஆகா எப்படி எழுதியிருக்கிறார் இவர்...என இலக்கிய நயம் பாராட்டி மகிழ்ந்தோம் என்றிலாமல், பக்தி என்று உருகி உருகி ஊற்றுவதைக்  கண்டால் நமக்குதான் இந்த  இலக்கியம் ஒன்றும் புரிபடாமல் போகிறதோ என்று நினைத்தேன்.  

ஏதோ என்னிடம்தான் கோளாறு என்று நான் குழம்புவதற்குள் வந்து தடுத்தாட்கொண்டீர்கள்... தாயே ...நீவிர் வாழ்க ..வாழ்க..

இலக்கியத்தை இலக்கியமாகக் கருதி ஆராய்வது எப்படி என்று ஒரு கட்டுரை கொடுங்களேன் அம்மா,  உங்கள் சிறுத்தொண்டர் வகுப்பில்  நீங்கள் ஆராய்ந்த பொழுது வகுப்பில் பங்கு பெற முடியாமல் போனது வருத்தம் தருகிறது.

..... தேமொழி 

Poor thoughts !


So far as Alwars’ paasurams are concerned, they are not literature from the religious point of view.  To call them literature is an abachaaram for the certain religious people namely Srivaishnaviites.



இருந்துவிட்டுப் போகட்டும்.  கவலையில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று பிடிக்கும்.   பக்தி இலக்கியம் படிப்பவர்களெல்லாம் உத்தமர்கள் அல்ல என்பதைத்தான் மீண்டும் மீண்டும் பார்க்கிறேன்.   படிப்பதை வாழ்வில் கடைபிடிக்காவிட்டால் அது பொழுதுபோக்கு நிலைக்குத்தான் தள்ளப்படும். அது பக்தி இலக்கியமாக இருந்தாலும் அதே நிலையே என்பதை யாரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. ஏனோ மாயையில் வாழ்ந்து தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ளும் மனநிலை பெரும்பாலான மக்களுக்கு.

மதப்பற்று  கண்ணை மறைத்து, பிறமனிதர்களை தம்மிலும் குறைவாகக் கருதும் மக்கள் செய்வதுதான் உண்மையான இறை அபச்சாரம். எதையும் படிக்காவிட்டாலும், எழுதப் படிக்கத் தெரியாதவர்களாகவுமே இருக்கட்டும், எல்லோரையும் தன்னைப் போல நினைப்பவர்கள்தான் உயர்ந்தவர்கள். தனக்கு ஆரவமில்லாத உரையாடல் என்றால், தொந்தரவு செய்யாமல் இடத்தைக் காலி செய்துவிட்டு வேறிடம் பார்த்துக் கொள்பவர்கள் பிறர் மனிதர் விருப்பத்தை மதிப்பவர்கள் என்று புரிந்து கொண்டாலாவது சரி.




..... தேமொழி



  

rajam

unread,
Jun 30, 2015, 4:34:37 PM6/30/15
to mint...@googlegroups.com, ra...@earthlink.net
On Jun 30, 2015, at 5:47 AM, Dev Raj <rde...@gmail.com> wrote:

பாண்டிய மன்னன் ஒருவன் பன்னீராண்டு வற்கடத்தின் பின் புலவர்களை அழைத்துக் கேட்டானாம் 
‘தமிழ் அறிந்தார் யாருமுண்டோ?’ என்று.

என்னிடம் இருக்கும் இறையனார் களவியலுரை (கழகப்பதிப்பு, 1960, பக்கம் 6-7) அப்படிச் சொல்லவிலையே, தேவ்?

வற்கடத்தின்பின், ‘இனி நாடு நாடாயிற்றாதலின் நூல்வல்லாரைக் கொணர்க’ என்று எல்லாப்பக்கமும் ஆட்போக்கினான் என்பதுவே தெரிகிறது. அதன்பின் எழுத்ததிகாரமும் சொல்லதிகாரமும் யாப்பதிகாரமும் வல்லாரைத் தலைப்பட்டுக் கொணர்ந்தார்கள். பொருளதிகாரம் வல்லாரை எங்கும் தலைப்பட்டிலேம் என்று அவர்கள் வந்தார்களாம். 

இங்கே “தமிழ் அறிந்தார்” என்ற சொல்லுக்கு இடமேயில்லை.

எப்படியோ … தரையில் விழுந்த பனித்தூவல் திரண்டு உருண்டு ஒரு பெரிய பனிப்பந்து/பனிப்பாறையாக உருவானதைப்போலச் சில கருத்துகள் உருவாகியிருக்கின்றன. 

குறிஞ்சிப்பாட்டு என்ற இலக்கியத்தின் அடிக்குறிப்பில் ‘இது ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்பொருட்டுக் கபிலர் பாடியது’ என்று இருக்கும். அதுவே காலப்போக்கில் தமிழ் == காதல் என்ற உருப்பெருக்கமாகியிருக்கிறது.

குறிஞ்சிப்பாட்டின் அடிக்குறிப்பில் உள்ள கபிலர் சொன்ன ‘தமிழ்’ என்பதைக் ‘காதல்’ என்று எடுத்துக்கொள்வது சரியா என்று கேட்கவேண்டும். 

களவு என்பது கற்பில் முடியவேண்டும் என்பதையே குறிஞ்சிப்பாட்டு உணர்த்துகிறது. எனவே அங்கே அந்த அடிக்குறிப்பில் உள்ள ‘தமிழ்' என்பது ‘தமிழ்முறை’ என்று எடுத்துக்கொள்வதுவே பொருத்தம் என்பது என் கருத்து.

வாதாடுவதுக்கு முன்னால், முதலில், பெண்கோடல் பெண்கொள்ளல் என்ற வழிகளில் வைதிக/மறையோர் முறைக்கும் தமிழ்முறைக்கும் இடையே என்ன ஒற்றுமை என்ன வேற்றுமை என்று தெரிந்துகொள்ளவேண்டும். 

தமிழகக்களவுமுறை வடக்கத்திக் கந்தருவ முறையை ஒத்தது என்பதையே தொல்காப்பியனார் முதல் இறையனார் வரை சொல்லியிருக்கிறார்கள். 

ஆனால், தமிழகமுறையின் தனித்துவம் என்னவென்றால் … களவு என்பது கற்பில் முடியவேண்டும் என்ற கோட்பாடே. இதைத்தான் இலக்கணங்களும் கபிலரின் குறிஞ்சிப்பாட்டும் பிற பல அகப்பாடல்களும் உணர்த்துகின்றன. 

இதையே, தமிழ் == காதல் என்று தொடங்கி … பக்திப்பாடல்கள், கைக்கிளை, விரகதாபம், … என்று மேலெடுத்துச் செல்வதெல்லாம் அவரவர் விருப்பம்!

எனக்குப் புரிந்த ஓர் உணர்வைச் சொல்கிறேன் … self pity என்பது பக்திப்பாடல்களில் மேலோங்கியிருக்கிறது.

பிற பின்னர், தேவையானால்.


--

Oru Arizonan

unread,
Jun 30, 2015, 5:37:02 PM6/30/15
to mintamil


2015-06-30 13:34 GMT-07:00 rajam <ra...@earthlink.net>
://தமிழகமுறையின் தனித்துவம் என்னவென்றால் … களவு என்பது கற்பில் முடியவேண்டும் என்ற கோட்பாடே.//

ராஜம் அம்மா,

இதை நிலைநாட்டவே, இராமனும் சீதையும் திருமணத்திற்கு முன்னரே ஒருவரை ஒருவர் பார்த்து, கண்டதும் காதல்கொண்டனர் என்று வால்மீகி இராமாயணத்தில் இல்லாத ஒன்றைச் சொல்லி, இராமயணத்தைத் தமிழ்ப் பண்புக்கு ஏற்ப  கம்பன் அமைத்திருக்கிறான் என்று  எனது "கமபுனும், வால்மீகியும் - இலக்கிய ஒப்பீடு" என்னும் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன்:  கீழே அதைத் தங்கள் பார்வைக்காகக் கொடுத்துள்ளேன்.

"வால்மீகியின் இராமாயணத்தை நன்கறிந்த மகாகவி கம்பர் ஏன் இப்படி மாற்றி எழுதத் துணிந்தார்?  இதற்கு தமிழ் நாட்டின் களவு, கற்பு இவற்றைப் பற்றி சுருக்கமாகக் கூறித்தான் விளக்க வேண்டும்.

செந்நாப் போதாரான வள்ளுவப் பெருமான் உலகுக்கு ஈந்த தனது திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்று மூன்று பிரிவுகளாக(பால்களாக)ப் பிரித்திருக்கிறார்.  இன்பத்துப் பாலையும் களவியல், கற்பியல் என்று இரண்டாகப் பகுத்திருக்கிறார்.

கற்பைப் பற்றி நாம் அனைவரும் நன்கறிவோம். களவு என்றால் என்ன? திருட்டு என்பதுதானே?  அதுவும் எப்படிப்பட்ட திருட்டு? ஒருவர் உள்ளத்தை மற்றொருவர் திருடிக் கொள்வது. நமது இதயத்தில் மற்றொருவர் குடியேற அனுமதிப்பது. நமது உள்ளம் நம்மிடத்தில் இல்லாதபோது, அது களவாடப் பட்டபின்பு, அதை எப்படி இன்னொருவருக்குக் கொடுக்க இயலும்? இன்னொருவரை நாடி மனம் எப்படிச் செல்லும்? இல்லை, திருடப்பட்ட பொருளை மீண்டும் இன்னொருவருக்கு எப்படித் திருட்டுக் கொடுக்க இயலும்? அப்படி ஒருவர் உள்ளத்தை மற்றொருவரிடம் பறிகொடுத்து, அவர் நினைவாக வாழ்வதுதான் கற்பு. ‘

ஒருத்தனுக்கு ஒருத்தி’ என்ற பழமொழி உருவாகக் காரணமே இராமனும், சீதையும்தான். இராமன், சீதை இருவருமே கற்புக்கு இலக்கணமாகத்தான் வாழ்ந்தார்கள், வடிவமைக்கப்பட்டர்கள், அனைவருக்கும் முன்மாதிரியாக விளங்கினார்கள். இதுவே தமிழ்ப் பண்பின் எடுத்துக்காட்டாகக் கம்பராமாயணத்தில் பரிணமித்தது. 

எனவே, இராமகாதையைத் தமிழில் வடித்தெடுக்கும் பொது, கற்பிற் சிறந்த சீதையும், ‘பிறன் மனை நோக்காப் பேரறிவாளனும்’, ஒரு மனைவி உறுதியாளனுமான இராமனும், ஒருவரிடத்தில் மற்றொருவர் உள்ளத்தைப் பறிகொடுத்தால்தான் தமிழ் மரபுப்படி வடிவமைக்க இயலும் என்று களவியலையும், கம்பர் தனது இராமகாதையில் புகுத்தினார்.  

முழுமையான களவு நடந்த பின்னர்தான், மாற்றுக் குறையாத கற்பு இருவரிடமும் நிலைக்கும் என்று கம்பர் முடிவு செய்திருக்க வேண்டும். அதுதான் இராமன்-சீதையின் முதற் சந்திப்பையும், கண்டதும் காதலையும் விவரித்து, இருவரின் கற்புக்கும் அடித்தளம் அமைத்திருக்க வேண்டும். 

மேலும், கடவுளர்களின் அவதாரங்களாகக் கம்பரால் எண்ணப்பட்ட இராமனும், சீதையும், மனித உருவில்தான் காதல் என்ற நுட்பமான உணர்வைப் பெற இயலும் என்ற எண்ணமும் அவருக்கு இருந்திருக்கக் கூடும். அதுவும் இன்னொரு காரணமாக இருந்திருக்கலாம் அல்லவா? 

மாற்றினாலும், கவிச்சக்கரவர்த்தி கம்பன் எந்த உயர்வான எண்ணத்துடன் அவ்வாறு செய்தார் என்று நம்மால் பகுத்து அறிந்து கொள்ள முடிகிறது."

rajam

unread,
Jun 30, 2015, 6:14:05 PM6/30/15
to mint...@googlegroups.com, Oru Arizonan, ra...@earthlink.net
அன்புள்ள திரு ஒரு அரிசோனன் ஐயா, வணக்கம்.

கம்பன் செய்தது reverse engineering என்று சொல்லலாம்படியாகிய ஓர் உத்தி; neverheless contrived.

சுயம்வரம், அசுரம் … என்ற மணமுறைகளுள் எதிலுமே பெண்ணுக்குத் தன் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை கட்டுப்பட்டதே, கந்தருவம்-போல இல்லை. 

Hari Krishnan

unread,
Jun 30, 2015, 10:53:18 PM6/30/15
to mintamil, Oru Arizonan, rajam ramamurti

2015-07-01 3:44 GMT+05:30 rajam <ra...@earthlink.net>:
கம்பன் செய்தது reverse engineering என்று சொல்லலாம்படியாகிய ஓர் உத்தி; neverheless contrived.

அன்புள்ள அக்கா,

தமிழ்நாட்டில் கம்பனுக்கு முன்பேயே இப்படி ஒரு மாற்றம் நிகழ்ந்துவிட்டதில்லையா.  பழைய ஆசிரியப்பா இராமாயணத்தை நச்சினார்க்கினியர்(?) உரையில் மேற்கோள் காட்டியிருக்கும் பகுதியில் இராமன் மிதிலைக்குள் நுழையும் சமயத்திலேயே, சீதையைக் கன்னிமாடத்தில் கண்டு இருவரும் காதல் கொண்ட பகுதி விவரிக்கப்பட்டிருக்கிறதே.  இதை ஒரு மரபின் தொடர்ச்சி என்று நினைத்தேன்.

அகலிகை கல்லாகக் கிடந்த கதையும் அப்படித்தானே.  கன்ட்ரைவ்ட் என்னும்போது செயற்கையான என்ற பொருளில் சொல்கிறீர்களா?


--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

rajam

unread,
Jul 1, 2015, 12:39:26 AM7/1/15
to Hari Krishnan, mintamil, Oru Arizonan
அன்புள்ள ஹரீ + திரு ஒரு அரிசோனன் அவர்களே,


ஆம், கன்ட்ரைவ்ட் (contrived) என்று சொல்லும்போது செயற்கை என்ற பொருளே அடிப்படை. 

அது எப்போது எங்கே எப்படித் தொடங்கினால் என்ன? கம்பனைப் பற்றிய பேச்சு வந்ததால் அதைக் குறிப்பிட்டேன்.

உண்மையில் நான் சொன்னது சற்றே வேறுவகையில் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது!

நான் சொன்னது:

://தமிழகமுறையின் தனித்துவம் என்னவென்றால் … களவு என்பது கற்பில் முடியவேண்டும் என்ற கோட்பாடே.//


இங்கே இரண்டு நிலைகளை நோக்கவேண்டும்.

1. “… கற்பெனப்படுவது களவின் வழித்தே” என்பது இறையனார் களவியல் (#15); வடக்கத்தி முறையில்லை. காந்தருவம் தவிர … பிற எந்த வடக்கத்தி முறையும் தமிழகக் களவுக்கு ஒப்பில்லை.

அதைத்தழுவியே … சீதை + இராமன் கதையில், அசுர விவாக முறையில் ஒரு பணயப் பெண்ணைக் கொள்ளாமல் தமிழ்முறையில் கொண்டதாக ஒருவகையான நெளிவைக் கம்பன் புகுத்தியதாக நினைக்கிறேன்.

2. களவு என்பது கற்பில் முடியவேண்டும். இது தமிழ்மரபு. இதைத்தான் குறிஞ்சிப்பாட்டு சுட்டுகிறது. குறிஞ்சிப்பாட்டுக்கு முன்னோடியாக அகநானூறு 48 அமைந்திருக்கிறது. அப்படியே, நம்மூர்ப் பழைய சொல்லாட்சி ‘அசால்ட்டா’, அகநானூறு 48-இன் விளக்கம் குறிஞ்சிப்பாட்டு. படிச்சுப் பாருங்க. ரெண்டுமே அழகான பாட்டு.

சொ. வினைதீர்த்தான்

unread,
Jul 1, 2015, 12:58:30 AM7/1/15
to mintamil
2015-06-30 23:14 GMT+05:30 Bala Sundara Vinayagam <balasundar...@gmail.com>:
அனைத்து ஆச்சாரியர்களும் masters of Tamil ancient literature and language and grammar.  அன்றிருந்த ஆச்சாரியர்கள் மட்டுமல்ல; இன்றிருக்கும் ஜீயர்களும் அவ்வாறே. அவர்களின் நூல்களே என் தமிழைச்செம்மைப்படுத்தினர். பள்ளிக்கூடத்து ஆசிரியர்களிடம் நான் தமிழ் கற்கவில்லை.

ஆழ்வார்களை அணுக தமிழ் நன்கு தெரியவேண்டும். அதற்க்காக தமிழைத்தூக்கித் தலைமேல் வைக்கமுடியாது. தலைமேல் வைக்கப்பட வேண்டியவை பாசுரங்களே. மொழியன்று. 

 
தனக்குப் பெருமையானவை என்பவை இவைஇவை என்று எண்ணுபவரெல்லாம் அவைஅவையை வெளிப்படுத்திக்கொள்ள அவர்கள் தங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளக்கூடும் என்றும் தன்னை அடையாளப்படுத்த வேண்டுவதில்லையென்றும் அதனால் அறிமுகம் தேவையில்லையென்றும் தொனிக்குமாறு திரு பாலசுந்தர விநாயகம் ஒரு இழையில் எழுதியிருந்தார்.

இப்பொழுது இன்றிருக்கும் ஜீயர்களின் நூல்களும் அவர் தமிழைச்செம்மைப்படுத்தின என்று கூற்று மூலமாக வைணவ ஜீயர் எழுத்துக்களில் தனக்கு இருக்கிற அணுக்கத்தைக் கூறித் தன்னை ஒருவகையில் வெளிப்படுத்தியுள்ளார்!

பாசுரத்தின் பொருளே போற்றப்படவேண்டுமென்பதில் இருவேறு கருத்திருக்கமுடியாது. பாசுரக்கருத்தும் அது பொதிந்திருக்கும் மொழியும் உயிரும் உடலும் போன்றவை. உடல் நலம் போற்றப்பட்டால் உயிர்தளிர்க்கும்; சிந்தனை விரிவுற்றுச் செழுமையடையும் என்பது என்னுடைய எண்ணம்.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

Bala Sundara Vinayagam

unread,
Jul 1, 2015, 4:10:34 AM7/1/15
to mint...@googlegroups.com, balasundar...@gmail.com, ra...@earthlink.net


இருந்துவிட்டுப் போகட்டும்.  கவலையில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று பிடிக்கும்.   பக்தி இலக்கியம் படிப்பவர்களெல்லாம் உத்தமர்கள் அல்ல என்பதைத்தான் மீண்டும் மீண்டும் பார்க்கிறேன்.   படிப்பதை வாழ்வில் கடைபிடிக்காவிட்டால் அது பொழுதுபோக்கு நிலைக்குத்தான் தள்ளப்படும். அது பக்தி இலக்கியமாக இருந்தாலும் அதே நிலையே என்பதை யாரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. ஏனோ மாயையில் வாழ்ந்து தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ளும் மனநிலை பெரும்பாலான மக்களுக்கு.

மதப்பற்று  கண்ணை மறைத்து, பிறமனிதர்களை தம்மிலும் குறைவாகக் கருதும் மக்கள் செய்வதுதான் உண்மையான இறை அபச்சாரம். எதையும் படிக்காவிட்டாலும், எழுதப் படிக்கத் தெரியாதவர்களாகவுமே இருக்கட்டும், எல்லோரையும் தன்னைப் போல நினைப்பவர்கள்தான் உயர்ந்தவர்கள். தனக்கு ஆரவமில்லாத உரையாடல் என்றால், தொந்தரவு செய்யாமல் இடத்தைக் காலி செய்துவிட்டு வேறிடம் பார்த்துக் கொள்பவர்கள் பிறர் மனிதர் விருப்பத்தை மதிப்பவர்கள் என்று புரிந்து கொண்டாலாவது சரி.




..... தேமொழி

நீங்கள் எழுதிய பதில் பொதுக்கருத்து.  நான் சொன்னவை மதவியல் வாழ்க்கை தமிழ்நாட்டில் ஒரு மதவினத்தாருக்கு (சிரிவைணவர்கள்) எப்படி அமைக்கப்பட்டிருக்கிறது என்பதே. அவர்களுக்கு பாசுரங்களை ஆழ்வார்களை வைத்து திருமால் பக்தியை வளர்த்துக்கொள்ளவேண்டுமென்று சொல்லப்பட்டிருக்கிறது. இதைத்தான் நான் சொன்னேன்.

சாமியார்களில் கள்ளச்சாமியார்களும், டாக்டர்களில் போலி மருத்துவர்களும் இருப்பதைப்போல போலிச்சைவர்கள், போலி வைணவர்கள், போலி கிருத்துவர்கள், போலி இந்துக்கள், போலி இசுலாமியர்கள் இல்லாதிருப்பார்களா? அவர்களை வைத்துப்பார்க்கும்போதுதான் நீங்கள் எழுதியவை அப்ளை ஆகும். 
  

Dev Raj

unread,
Jul 1, 2015, 9:33:37 AM7/1/15
to mint...@googlegroups.com
On Jun 30, 2015, at 5:47 AM, Dev Raj <rde...@gmail.com> wrote:

பாண்டிய மன்னன் ஒருவன் பன்னீராண்டு வற்கடத்தின் பின் புலவர்களை அழைத்துக் கேட்டானாம் 
‘தமிழ் அறிந்தார் யாருமுண்டோ?’ என்று.

On Tuesday, 30 June 2015 13:34:37 UTC-7, rajam wrote:
என்னிடம் இருக்கும் இறையனார் களவியலுரை (கழகப்பதிப்பு, 1960, பக்கம் 6-7) அப்படிச் சொல்லவிலையே, தேவ்?


இறையனார் அகப்பொருள் - களவு

அளவினாற் பெயர் பெற்றது: பன்னிருபடலம் என்பது.
சிறப்பினாற் பெயர் பெற்றது: களவியல் என்பது; என்னை, களவு கற்பு என்னுங்
கைகோள் இரண்டனுள் களவினைச் சிறப்புடைத்தென்று வேண்டும்
இவ்வாசிரியன்.

'முற்படப் புணராச் சொல்லின் மையிற்
 கற்பெனப் படுவது களவின் வழித்தே’ (இறை-15)

 
இனி, நுதலியபொருள் என்பது-
நூற்பொருளைச் சொல்லுதல் என்பது. 
இந்நூல் [இறையனார் அகப்பொருள்] என் நுதலிற்றோ எனின், 
*தமிழ் நுதலிற்று*என்பது.

 களவு என்றதன் காரணம்

என்னை ? இது களவியலன்றே இது கற்க வீடுபேறு பயக்குமாறு என்னை ?
களவு கொலை காமம் இணைவிழைச்சு என்பனவன்றோ சமயத்தாரானும் 
உலகத்தாரானும் கடியப்பட்டன. அவற்றுள் ஒன்றன்றாலோ இஃது எனின், அற்றன்று. 

களவு என்னுஞ் சொற்கேட்டுக் களவு தீதென்பதூஉம், காமம் என்னுஞ் சொற்கேட்டுக் 
காமம் தீதென்பதூஉம் அன்று; மற்று அவை நல்ல ஆமாறும் உண்டு; 

[இவ்வாறமைந்த உரையைக் கேட்ட காலம் கடைச்சங்க காலத்து,
உக்கிரப்பெருவழுதி அவைக்களம் எனக் குறிப்பிடப் பெற்றுள்ளதால்,
ஏறக்குறைய இரண்டாயிரம் யாண்டென ஊகிக்கலாம்.]

[ TVA ]


தேவ் 

rajam

unread,
Jul 1, 2015, 11:00:58 AM7/1/15
to mint...@googlegroups.com
அன்புள்ள தேவ்,

வணக்கம். உங்கள் மடலில் சொன்னது: பாண்டிய மன்னன் புலவர்களை அழைத்துக் கேட்டானாம் “தமிழ் அறிந்தார் யாருமுண்டோ என்று.

அரசன் அப்படிக் கேட்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்தவேண்டும்.

நீங்கள் இப்போது சொல்லியிருப்பது நூலின் உட்கருத்து, நூல் நுதலியது: “தமிழ் நுதலிற்று.” இது பாண்டியன் கேட்டதில்லை.

அன்புடன்,
ராஜம்


Dev Raj

unread,
Jul 1, 2015, 12:55:52 PM7/1/15
to mint...@googlegroups.com
   
‘என்னை, எழுத்தும் சொல்லும் யாப்பும் ஆராய்வது
பொருளதிகாரத்தின் பொருட்டன்றே. பொருளதிகாரம் பெறேமேயெனின்,
இவை பெற்றும் பெற்றிலேம்’ 

அக்காலத்துப் பாண்டியனாடு பன்னீரியாண்டு வற்கடஞ் சென்றது.
செல்லவே, பசிகடுகுதலும், அரசன் சிட்டரையெல்லாங் கூவி, வம்மின், யான்
உங்களைப் புறந்தரகில்லேன்; என் தேயம் பெரிதும் வருந்துகின்றது; நீயிர்
நுமக்கு அறிந்தவாறு புக்கு, நாடு நாடாயின ஞான்று என்னை
2யுள்ளிவம்மின் என்றான். என, அரசனை விடுத்து எல்லாரும் போயின
பின்றைக், கணக்கின்றிப் பன்னீரியாண்டு கழிந்தது. கழிந்த பின்னர், நாடு மலிய
மழை பெய்தது. பெய்த பின்னர், அரசன், ‘இனி நாடு நாடாயிற்றாகலின்,
நூல்வல்லாரைக் கொணர்க’ என்று எல்லாப் பக்கமும் ஆட்போக்க,
எழுத்ததிகாரமும், சொல்லதிகாரமும்,யாப்பதிகாரமும் வல்லாரைத் தலைப்பட்டுக் 
கொணர்ந்து, ‘பொருளதிகாரம் வல்லாரை எங்குந் தலைப்பட்டிலேம்’ என்று வந்தார். 
வர அரசனும் புடைபடக் கவன்று ‘என்னை, எழுத்தும் சொல்லும் யாப்பும் ஆராய்வது
பொருளதிகாரத்தின் பொருட்டன்றே. பொருளதிகாரம் பெறேமேயெனின்,
இவை பெற்றும் பெற்றிலேம்’ எனச் சொல்லாநிற்ப, .......

[TVA] 

பொருளதிகாரத்துக்கு உறுப்பாகவே  எழுத்தும் சொல்லும், யாப்பும்
அமைகின்றன. பொருளதிகாரம் சொல்லும் நூல் இல்லாதொழியுமானால் 
மற்றவை இருந்தும் இல்லாததற்கு நிகர்.

இந்நூல் [இறையனார் அகப்பொருள்] என் நுதலிற்றோ எனின், 
*தமிழ் நுதலிற்று*என்பது.

இதனடிப்படையில் மன்னன் ‘தமிழ்அறிவாருண்டோ ? ‘ என 
வினவியிருக்கலாம். 


தேவ்

rajam

unread,
Jul 1, 2015, 1:08:54 PM7/1/15
to mint...@googlegroups.com
துல்லியமாகச் சொல்ல முயலுவோம், தேவ்.

மன்னன் கேட்டது பொருளதிகாரம் பற்றியதே, தமிழ் அறிவார் பற்றியதில்லை! அவனுக்கு இறையனார் களவியல் பற்றித் தெரியாது. அவன் பொருளதிகாரம் பற்றிக்கேட்ட பிறகே இறையனார் இந்த 60+ சூத்திரங்களை எழுதினார் என்பதுவே உண்மையாகச் சொல்லப்பட்ட கருத்து. 

ஆகவே, நூலின் நுதற்பொருள் ‘தமிழ்’ என்பது இறையனாரின் கருத்து. 


///இதனடிப்படையில் மன்னன் ‘தமிழ்அறிவாருண்டோ ? ‘ என 
வினவியிருக்கலாம். ///


நல்ல விளையாட்டா இருக்கே! இந்த “...லாம்” எல்லாம் இங்கே எனக்கு ஒத்துவாராது.


Dev Raj

unread,
Jul 1, 2015, 1:20:27 PM7/1/15
to mint...@googlegroups.com

On Wednesday, 1 July 2015 10:08:54 UTC-7, rajam wrote:

நல்ல விளையாட்டா இருக்கே! இந்த “...லாம்” எல்லாம் இங்கே எனக்கு ஒத்துவாராது.
 

ஒத்துவராவிட்டால் ஒதுக்கி விடுங்கள், பிரச்னை இல்லை :)) 


தேவ்

rajam

unread,
Jul 1, 2015, 1:31:52 PM7/1/15
to mint...@googlegroups.com
;-) ;-) ;-) 

ஆகா! ஆகா! நம்ம தேவ் சொன்னால் மறுக்கமுடியுமா? ஆனாலும் … இல்லாததைச் சொல்லும் பழக்கத்தை ஊக்குவிக்கலாமோஓஓஓஓஒ???

பாண்டிய மன்னன் தமிழ் அறிந்தாரைத் தேடச்சொல்லிக் கேட்கவில்லை. பொருளதிகாரம் அறிந்தாரைத் தேடச்சொல்லித்தான் கேட்டான்.

இங்கே ஒரு சூட்சுமம் இருக்கு. இப்போதைக்கு அதைத்தொட்டு மட்டும் செல்கிறேன் உள்ளே குடைந்துபோக எனக்கு நேரமில்லை.

சில குழுவினரிடையே தமிழ் == காதல் என்ற சமன்பாடு எப்படியோ உருப்பெற்றிருக்கிறது. அதை எப்படியாவது ஆழ்வார் பாசுரங்களோடும் இறையனார் களவியலோடும் இணைத்துப்பார்க்கும் துடிப்பும் இருக்கு. எனவேதான் தமிழ் = காதல் == அகம் == தமிழ் என்ற பொருண்மைக்குழப்பம். 

தமிழில் புறப்பொருளும் இருக்கில்லெ? கொஞ்சம் நேரிய முறையில் நினைத்துப்பார்க்கணுமில்லெ. 


Oru Arizonan

unread,
Jul 1, 2015, 1:56:47 PM7/1/15
to mintamil


2015-07-01 9:55 GMT-07:00 Dev Raj <rde...@gmail.com>:

//அக்காலத்துப் பாண்டியனாடு பன்னீரியாண்டு வற்கடஞ் சென்றது.
செல்லவே, பசிகடுகுதலும், அரசன் சிட்டரையெல்லாங் கூவி, வம்மின், யான்
உங்களைப் புறந்தரகில்லேன்; என் தேயம் பெரிதும் வருந்துகின்றது; நீயிர்
நுமக்கு அறிந்தவாறு புக்கு, நாடு நாடாயின ஞான்று என்னை
2யுள்ளிவம்மின் என்றான். என, அரசனை விடுத்து எல்லாரும் போயின
பின்றைக், கணக்கின்றிப் பன்னீரியாண்டு கழிந்தது. கழிந்த பின்னர், நாடு மலிய
மழை பெய்தது. பெய்த பின்னர், அரசன், ‘இனி நாடு நாடாயிற்றாகலின்,
நூல்வல்லாரைக் கொணர்க’ என்று எல்லாப் பக்கமும் ஆட்போக்க,
எழுத்ததிகாரமும், சொல்லதிகாரமும்,யாப்பதிகாரமும் வல்லாரைத் தலைப்பட்டுக் 
கொணர்ந்து, ‘பொருளதிகாரம் வல்லாரை எங்குந் தலைப்பட்டிலேம்’ என்று வந்தார். 
வர அரசனும் புடைபடக் கவன்று ‘என்னை, எழுத்தும் சொல்லும் யாப்பும் ஆராய்வது
பொருளதிகாரத்தின் பொருட்டன்றே. பொருளதிகாரம் பெறேமேயெனின்,
இவை பெற்றும் பெற்றிலேம்’ எனச் சொல்லாநிற்ப, ..//

ஆகா, ஆகா!  அந்தநாள் ஞாபகம் வந்ததே, வந்ததே!
நான் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும்போது சங்ககாலத் தமிழ் உரைநடை என்ற தலைப்பில், பொதுத்தமிழில் இக்கட்டுரை ஒரு பாடமாக இருந்தது.

தமிழண்ணல் இராம. பெரியகருப்பன் அவர்கள், எங்களைப் பலமுறை இதை வகுப்பில் படிக்கச் சொல்லி, நாங்கள் பொருளறியாது தடுமாறும்போது, சிரித்தவாறே விளக்கம் சொல்வார்.

நாங்கள் அவரிடம், "நாங்கள் செய்யுள்கள்தான் விளங்காது என்று நினைத்தோம்;  உரைநடையைப் பார்க்கும்போது, செய்யுளே எளிதாக இருக்கிறது." என்று பதிலுக்கு அவரிடம் விளையாட்டாகக் கூறுவோம்.  அவரும் சிரிப்பார்.

இன்றும் அது என் நினைவில் பசுமையாக இருக்கிறது.

நன்றி. தேவ் ராஜ் அவர்களே!
ஒரு அரிசோனன் 

Dev Raj

unread,
Jul 1, 2015, 2:00:16 PM7/1/15
to mint...@googlegroups.com
On Wednesday, 1 July 2015 10:31:52 UTC-7, rajam wrote:

சில குழுவினரிடையே தமிழ் == காதல் என்ற சமன்பாடு எப்படியோ உருப்பெற்றிருக்கிறது. அதை எப்படியாவது ஆழ்வார் பாசுரங்களோடும் இறையனார் களவியலோடும் இணைத்துப்பார்க்கும் துடிப்பும் இருக்கு. எனவேதான் தமிழ் = காதல் == அகம் == தமிழ் என்ற பொருண்மைக்குழப்பம். 

தமிழில் புறப்பொருளும் இருக்கில்லெ? கொஞ்சம் நேரிய முறையில் நினைத்துப்பார்க்கணுமில்லெ. 


"இந்நூல் [இறையனார் அகப்பொருள்] என் நுதலிற்றோ எனின், *தமிழ் நுதலிற்று*என்பது"
என எழுதியவர் நேரிய முறையில் நினைத்துப்பார்க்கத் தவறி விட்டார் என்று
கொள்வோம். ஒருகால் அவர் புறப்பொருள் குறித்து  ஒன்றுமே அறியாதவராக 
பொருண்மைக் குழப்பத்தை உருவாக்கி இருக்கலாம்.

இங்கும் “லாம்” தான் :))

தேவ்
 

rajam

unread,
Jul 1, 2015, 2:21:34 PM7/1/15
to mint...@googlegroups.com
என் நெஞ்சம் கவர் கள்வர்களே, ஆழ்வார்களே, ஆழ்வார்க்கடியார்களே, பாசுரப்பிரியர்களே, மாலின்மேல் தீராக்காதல் கொண்டவர்களே … 

பொருளதிகாரத்தின் ஒரு பகுதி மட்டுமே இறையனார் களவியல்; அதுவே / அதுமட்டுமே பொருளதிகாரம் இல்லை, அதுமட்டுமே தமிழும் இல்லை!

குறிஞ்சிப்பாட்டின் அடிக்குறிப்பு எழுதியவரும் 'தமிழ் நுதலிற்று' என்று எழுதிய இறையனாரும் தமிழ் == தமிழ்முறை என்று குறித்திருப்பது எனக்குப் புரிகிறது, இங்கே ‘...லாம்’ எல்லாம் இல்லை!

ஆனாலும் பாண்டிய மன்னன் சொன்னதாகத் தேவரீர் சொன்னது சரியா என்று மீண்டும் பார்க்கவும்.

சரி, இன்னும் 4~5 நாளெக்கி இங்கெ தலைகாட்ட முடியாது.

அதுவரை எல்லாரும் எல்லா உயிர்களையும் காதலிச்சிண்டிருங்கோ; மாயவனே பெரியவன், மாலியமே உண்மை நெறி ஆதிநெறி, … இப்படிச் சொல்லிச் சேவிச்சிண்டிருங்கோ, என்ன! 

அன்புடன்,
ராஜம்


Dev Raj

unread,
Jul 1, 2015, 11:59:18 PM7/1/15
to mint...@googlegroups.com
On Wednesday, 1 July 2015 11:21:34 UTC-7, rajam wrote:
அதுவரை எல்லாரும் எல்லா உயிர்களையும் காதலிச்சிண்டிருங்கோ; மாயவனே பெரியவன், மாலியமே உண்மை நெறி ஆதிநெறி, … இப்படிச் சொல்லிச் சேவிச்சிண்டிருங்கோ, என்ன! 

அனுமதிக்கும், ஆசி மொழிகளுக்கும் மிக்க நன்றி.

ஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறைவு உடையம்? 
மீள்கின்றது இல்லை பிறவித் துயர் கடிந்தோம் 
வாள் கெண்டை ஒண்கண் மடப் பின்னை தன் கேள்வன் 
தாள் கண்டுகொண்டு என் தலைமேல் புனைந்தேனே !

கண்டேன் கமல மலர்ப் பாதம் காண்டலுமே 
விண்டே ஒழிந்த வினையாயின எல்லாம் 
தொண்டே செய்து என்றும் தொழுது வழியொழுக 
பண்டே பரமன் பணித்த பணிவகையே !

வகையால் மனம் ஒன்றி மாதவனை நாளும் 
புகையால், விளக்கால், புது மலரால், நீரால் 
திசைதோறு அமரர்கள் சென்று இறைஞ்ச நின்ற 
தகையான் சரணம் தமர்கட்கு ஓர் பற்றே !    
                                                    - நம்மாழ்வார்  


தேவ்

Dev Raj

unread,
Jul 2, 2015, 7:13:08 AM7/2/15
to mint...@googlegroups.com
On Wednesday, 1 July 2015 11:21:34 UTC-7, rajam wrote:
பொருளதிகாரத்தின் ஒரு பகுதி மட்டுமே இறையனார் களவியல்; அதுவே / அதுமட்டுமே பொருளதிகாரம் இல்லை, அதுமட்டுமே தமிழும் இல்லை!


”பூவின் மணமெனப் புனிதத் தமிழினுக்கு
 ஆவி ஆகும் அகப்பொருள் இயல்பே !”

”தள்ளாப் பொருளியல்பின் தண்டமிழ்”


1.2 ‘அகம்’-பொருளும் பொருத்தமும்

அகம் என்ற சொல்லின் பொருள் உள் - உள்ளே - உள்ளிருப்பது - அகத்துள் இருப்பது என விரியும்.
தலைவனும் தலைவியும் தம் உள்ளத்துள் உணர்ந்து அனுபவிக்கும் இன்பம் இத்தன்மையுடையது எனப் பிறர்க்கு
விளக்க இயலாததாக இருப்பது . தம்முள்ளும் ஒருவர்க்கொருவர் விளக்க இயலாததாக இருப்பது. ஆகவே
காதல் ஒழுக்கத்தை ‘அகம்’ என்றது மிகவும் பொருத்தமாகும். ‘அகம்’ என்பதை ‘ஆகுபெயர்’ என்றார் நச்சினார்க்கினியர். 
அகம் என்பது அகத்தே (உள்ளத்தே) நிகழும் இன்பத்திற்கு ஆகி வந்தது என்பது அவர் கருத்து.

காதலுக்கு  உள்ளமே முதன்மை; உள்ளத்து ‘அவாவே’ (ஆசை) தூண்டுதலாகக் ‘காதல்’ வெளிப்படும்;
உடல் கருவியேனும் உள்ளமே காரணம்; காதலில் மொழியும் செயலும் உள்ளத்தின் வழிச்செல்லும்;     உள்ளத்துள்
நினைக்கும் நினைவும் காதல் நுகர்ச்சிக்குச் சமம். இவையாவும் காதலை - அன்புணர்ச்சியை ‘அகம்’ என்று
வழங்கும்     சொல்லாட்சியின்      பொருத்தத்தைப் புலப்படுத்துவன. தலை மக்கள் தத்தம் உள்ளத்து
உள்ளேயே எண்ணி மகிழும் ஏற்றத்தைக் குறிப்பது அகம். பின்னர்த் தோன்றிய ”தொன்னூல் விளக்கம்”
என்னும் நூலும், ‘அகத்திணை என்பது மனத்தின்ஒழுக்கம்’ என்று வரையறுப்பது குறிப்பிடத்தக்கது.


1.2.1 அகப்பொருளின் தனிச்சிறப்பு

அகப்பொருள் பற்றிய இலக்கண நெறி தமிழுக்கேஉரியது; இது உலகறிய வேண்டிய பேருண்மை! இதற்கான சான்றுகள் பல உள்ளன.

குறிஞ்சிப்பாட்டு :

சங்க இலக்கியங்களில் ஒன்றான குறிஞ்சிப் பாட்டு களவொழுக்கத்தைப் பற்றியது. அது ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குப் பாடப் பெற்றது என்பர். ‘தமிழ் அறிவித்தல்’ என்பதற்குத் தமிழின் அகப்பொருள் சிறப்பை எடுத்துரைப்பது என்பது பொருள். ஆரிய மன்னன் இச்சிறப்பை அறியாதிருந்தான் என்பதிலிருந்து அகப்பொருள் இலக்கண மரபு தமிழுக்கேயுரிய தனிச்சிறப்பு என்பது புலப்படுகிறதல்லவா!

பரிபாடல் :

பரிபாடலில் குன்றம் பூதனார் பாடிய ஒன்பதாம் பாடல் களவொழுக்கம் பற்றியது. அதனுள் ‘தள்ளாப் பொருளியல்பின் தண்டமிழ்’ என்ற தொடர் வருகிறது. அது பொருள் இலக்கணம் தமிழின் தனிச்சிறப்பு என்பதைக் காட்டுகின்றது.

இறையனார் அகப்பொருள் :

இறையனார் அகப்பொருள் உரையில் வரும், ‘இந்நூல் என் நுதலிற்றோ எனின், தமிழ் நுதலிற்று’ (இந்த நூல் என்ன சொல்லுகிறது என்றால் தமிழ் சொல்கிறது.) என்ற பகுதி அகமே தமிழ் என்பதைச் சுட்டி நிற்கிறது.

தமிழ்நெறி விளக்கம் :

அகப்பொருள் இலக்கணத்தைப் பற்றிக் கூறும் பழந்தமிழ் இலக்கண நூல் ஒன்றுக்குத் ‘தமிழ்நெறி விளக்கம்’ என்றே பெயர் அமைந்திருப்பதும் இங்கு எண்ணத் தக்கது.

கலைக் களஞ்சியம் :

கலைக் களஞ்சியத்தில் பேராசிரியர் மு. அருணாசலம், ‘இக் காதல் ஒழுக்கத்தை இலக்கண நெறியால் வரையறுத்துக் கூறுதல் தமிழர்க்கே உரிய தனிப் பெருஞ் சிறப்பாகும்’ (தொகுதி- 1)   என்று வரைந்துள்ள விளக்கமும்  குறிப்பிடத்தக்கது. மேற்காட்டியவற்றுள் ‘தமிழ்’ என்ற சொல் தமிழ் அக இலக்கியம், அக இலக்கணம், தமிழர் அகவாழ்வு நெறி என அனைத்துப் பொருளும் தருவதை உணரலாம்.

தமிழுக்கே உரியது
அகப்பொருட் பாடல்கள் வடமொழி உள்ளிட்ட வேறு பல மொழிகளிலும் உண்டு. எனினும் அகப்பொருள் பாடல்களின் அமைப்புக்கு வழிகாட்டும் இலக்கணப் பாகுபாடுகள்  தமிழில் மட்டு்மே உண்டென்பது உணர்தற்குரியது.

தமிழ் ஆராய்ச்சியி்ன் வளர்ச்சி” என்ற நூலின் ஆசிரியர் ஏ.வி. சுப்பிரமணிய அய்யர் குறிப்பிடும் கீழ்க்காணும் செய்திகள் ஒப்பிட்டு உணரத்தக்கன -   “வடமொழியில் சில பாடல்களையும். பாடல் தொகுதிகளையும் ஊன்றிக் கவனித்தால், அவற்றில் தமிழ் அகப்பொருள் இலக்கணத்தின் இயல்புகள் காணப்படுகின்றன”,     “வடமொழி இலக்கண நூல்களில், பொருள் இலக்கணத்தைப் போல் ஒரு பகுதி இருப்பதாகத் தெரியவில்லை”

இவ்வாறே - “தொல்காப்பிய முதல் சூத்திர விருத்தி” என்ற உரை வரைந்த சிவஞான முனிவர் வடமொழியில் இருந்து பெறப்படாமல் தமிழில் மட்டுமே உள்ளதாகப் பல
இலக்கணக் கூறுகளைப் பட்டியலிட்டுள்ளதைக் குறிப்பிடலாம். அவற்றுள் ஒன்று ‘அகம்-புறம் என்ற பொருட்பாகுபாடு’ என்பதாகும்.


அறுவகை இலக்கணம்” எனும் நூலை இயற்றிய வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அறுதியிட்டு  உரைக்கும் பேருண்மை காண்போம் -
பூவின் மணமெனப் புனிதத் தமிழினுக்கு
ஆவி ஆகும் அகப்பொருள் இயல்பே !
“மலருக்கு நறுமணம் இன்றியமையாதது; அதுபோலத் தூய தமிழுக்கு அகப்பொருள் இலக்கணம் இன்றியமையாதது “ என்பது பொருள்.


Dev Raj

unread,
Jul 2, 2015, 9:26:52 AM7/2/15
to mint...@googlegroups.com
On Wednesday, 1 July 2015 11:21:34 UTC-7, rajam wrote:
பொருளதிகாரத்தின் ஒரு பகுதி மட்டுமே இறையனார் களவியல்; அதுவே / அதுமட்டுமே பொருளதிகாரம் இல்லை, அதுமட்டுமே தமிழும் இல்லை!


களவியல்

 
                                                                                                                      என்ற

 
இறையனார் அகப்பொருள்

rajam

unread,
Jul 2, 2015, 12:21:35 PM7/2/15
to mint...@googlegroups.com

seems out of context for me. Right now I don’t have the time to go into figuring out the context of this text.

++++++

மற்றபடி …. நீங்கள் கொடுத்திருக்கும் துணைநிலை உரைகள் தமிழ் == காதல் என்ற கருதுகோளை நிலைநாட்டுகின்றனவா என்று மீண்டும் பார்க்கவும்.

 
///தமிழ்நெறி விளக்கம் :

அகப்பொருள் இலக்கணத்தைப் பற்றிக் கூறும் பழந்தமிழ் இலக்கண நூல் ஒன்றுக்குத் ‘தமிழ்நெறி விளக்கம்’ என்றே பெயர் அமைந்திருப்பதும் இங்கு எண்ணத் தக்கது.///


இங்கே ‘தமிழ்நெறி’ என்று குறிக்கப்பட்டிருப்பதைக் கவனிக்கவும். வெறும் ‘தமிழ்' அன்று, ‘தமிழ்நெறி.

இதுவே குறிஞ்சிப்பாட்டின் அடிக்குறிப்புமாகும். ஆரிய ஆரசனுக்குத் தமிழ்முறை மணம் பற்றித் தெரியாமல் இருந்திருக்கும், அப்போது தமிழ்முறை மணம் பற்றிக் கபிலர் சொல்லியிருக்கிறார்.

இன்னும் சில சொல்லவேண்டும். பிறகு பார்ப்போம்.

அன்புடன்,
ராஜம்


rajam

unread,
Jul 2, 2015, 12:21:36 PM7/2/15
to mint...@googlegroups.com
இந்த இடுகையின் நோக்கம் எனக்குப் புரியவில்லை, தேவ். 

1960-இல் பதிக்கப்பட்ட கழக வெளியீடு என்னிடம் இருக்கிறது. அதைத்தான் முதுகலை வகுப்பில் படித்தோம். 



Oru Arizonan

unread,
Jul 2, 2015, 4:39:37 PM7/2/15
to mintamil
தமிழ் அகப்பொருளைப்பற்றி இருபெரும் அறிஞர்கள் விவாதிப்பது -- அதைப் படித்து ஆனந்திப்பது மிகவும் சுவையாக  இருக்கிறது.  தொடருங்கள்.

rajam

unread,
Jul 2, 2015, 10:17:24 PM7/2/15
to mint...@googlegroups.com
எல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனாலும் திரும்பத் திரும்ப … எங்கிருந்தோ ஒத்தி/வெட்டி/ஒட்டிப் போடும் இடுகைகள் என்னைக் கவருவதில்லையே, என் செய்வேன்.

எதுக்காக இந்த ஒத்தி/வெட்டி ஒட்டுதல் என்று சுருக்கமாகச் சொன்னாலும் நல்லாருக்கும்.

பிற பின்னர் தேவையானால்.


Mohanarangan V Srirangam

unread,
Jul 2, 2015, 11:46:34 PM7/2/15
to min tamil
தேவ் சார்! ப்ரொஃபஸர் எஸ் என் பாலகங்காதரா, கெண்ட் யுனிவர்ஸிடி, பெல்ஜியம் அவர்களுடைய hipkapi சம்பந்தமான எழுத்துகளைப் படியுங்கள். It will save you a lot of time and efforts. எனக்கு இப்பொழுது நேரம் கிடைப்பதில்லை. இல்லையெனில் ஹிப்கபி என்னும் கருத்துச் சுழல் எத்தகையது என்பதை விளக்கி எழுதியிருப்பேன். அதைப் பற்றி அறிந்ததும் பல மணிநேர மனித உழைப்புக் காலம் எனக்கு மிச்சமானது என்றுதான் சொல்ல வேண்டும். மிகவும் கஷ்டப்பட்டு நீங்கள் தேடித் தெரிந்துகொண்டு கொண்டுவந்து போடும் இடுகைகளைப் பார்த்ததும் இதைச் சொல்லத் தோன்றியது. குறுக்கீடு என்று கருதினால் மன்னித்து விடுங்கள்.

***

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Dev Raj

unread,
Jul 3, 2015, 12:56:43 AM7/3/15
to mint...@googlegroups.com
On Thursday, 2 July 2015 20:46:34 UTC-7, Mohanarangan V Srirangam wrote:
...........மிகவும் கஷ்டப்பட்டு நீங்கள் தேடித் தெரிந்துகொண்டு கொண்டுவந்து போடும் இடுகைகளைப் பார்த்ததும் இதைச் சொல்லத் தோன்றியது. குறுக்கீடு என்று கருதினால் மன்னித்து விடுங்கள். 

பெரிய வார்த்தை. உண்மையில் இந்த விவாதம் ஏற்கெனவே தமிழ் மன்றத்தில் நடந்ததுதான் என்பது
எனக்குப் பின்னரே தெரிய வந்தது. நான் இத்தனை தூரம் தேடலுக்குச் சிரமப்பட்டிருக்க வேண்டாம்
என்பதும் தாமதமாகவே புரிய வந்தது. ஏற்கெனவே நீங்கள் கையாண்ட சான்றுகளைத்தான்
நானும் தந்துள்ளேன்-



பூவின் மணமெனப் புனிதத் தமிழினுக்கு
ஆவி ஆகும் அகப்பொருள் இயல்பே !

வண்ணச் சரபம் சுவாமிகள் சொன்னதற்குமேல் சொல்வதற்கு
வேறெதுவும் இல்லை. ஒத்தி ஒட்டப்பட்ட சான்று எனப்
புறந்தள்ளினாலும் நாம் என்ன செய்ய முடியும் !
 hipkapi மனநிலை பற்றி விவரிப்பதும் நேர விரயமே :(( 

புறப்பொருளுக்கு அறிஞர்கள் இந்த அளவு சிறப்பளித்துள்ளனரா ?


தேவ்


Mohanarangan V Srirangam

unread,
Jul 3, 2015, 1:26:50 AM7/3/15
to min tamil
புறப்பொருளுக்கு அறிஞர்கள் இந்த அளவு சிறப்பளித்துள்ளனரா ?>>>>

ஐயா! புறப்பொருள், பொதுப்பொருள், செய்யுள் இயல், மரபு இயல் என்று அனைத்தையும் உள்வாங்கித்தான் சங்ககாலச் சமய நெறியின் தொடர்ச்சியாகவும் நீட்சியாகவும் வந்து கொண்டிருக்கும் ஆழ்வார்கள் கண்ட திருமால்நெறி விளங்குகிறது. பன்னிருவரில் பிராதனரான சுவாமி நம்மாழ்வார் அருளிய நான்கு பிரபந்தங்களில் தலையாயது திருவாய்மொழி. அதில் உள்ள பத்து பத்துகளும், நூறு திருவாய்மொழிகளுமே முற்றிலும் அகத்திணைப் பாடல்கள் அல்ல. சுமார் 27 சொச்சம் திருவாய்மொழிகள்தாம் அகத்திணைக் கோட்பாட்டில் அமைந்தன. இதில் தோழிப் பாசுரம், தாய்ப்பாசுரம், ஆழ்வார் பெண் தன்மையில் பேசும் பாசுரம் என்பன எல்லாம் அடக்கம். மற்றவை எல்லாம் ஆழ்வார் தாமான தன்மையில் நின்று பேசும் பாசுரங்கள். பக்தியின் பல நிலைகளையும் காட்டி எழுந்த பாடல்கள். சங்ககாலப் புறம் சார்ந்த பாடல்கள், அதாவது மன்னனின் வீரம், வெற்றி, சமுதாயத்தின் அக்கறைகள், புலவர்களுக்கும் மன்னனுக்கும் இருந்த பரஸ்பர அன்பும் இணக்கமும், புலவர்கள் சமுதாயத்திற்கு வழிகாட்டி நடத்தியமை, மக்களின் பரிந்துரையாளர்களாக புலவர்கள் மன்னர்களிடம் செயல் பட்டமை, மன்னனின் பல வாகைகள், பொதுவான உலக இயற்கையின் தெருட்டல்கள் என்று முழுமையான சங்க கால இலக்கிய நுட்பங்களையும் வகைபாடுகளையும் பக்தி மயமாக உள்வாங்கி எழுந்ததுதான் ஆழ்வார்களின் இயக்கம். அதாவது சங்கப் புலவர்களின் பக்தி மயமான வெளிப்பாடுதான் ஆழ்வார்களின் தோற்றம். மன்னர்களைப் பாடிய புலவர்கள் தம் செஞ்சொல் கவிகளுக்கு ஏற்ற இலக்காக சர்வேசுவரனாகிய திருமாலைக் கைக்கொண்டனர். அகத்திணையில் இலட்சிய மனிதக் காதலை வடிவு கொடுத்தவர்கள், அகத்திணைப் பாசுரங்களின் மூலம் திருமாலின்பால் கிளர்ந்தெழும் பிரேமையைப் பொழிந்தார்கள். சங்க காலத்தில் புலவர்களால் கருதப்படாத எதையும் ஆழ்வார்கள் செய்துவிடவில்லை. உட்கிடையாக இருந்த தமிழ்ச்சமயம் உரத்து தனிப்பெரும் தமிழ்நெறியாக திருமாலவன் நெறியாக ஓங்கி வளர்ந்த மலர்ச்சியும் திகழ்ச்சியும்தான் ஆழ்வார்களின் கொடையாக நாம் பெற்ற ஸ்ரீவைஷ்ணவம்.

இதைத் தாங்கள் கேட்டதால் சொன்னேன். மற்றபடி தங்களுடன் வாதம் புரிய வேண்டும், யாரையும் மனம் மாற்ற வேண்டும் என்ற நோக்கம் கிடையாது.

மீண்டும் சொல்கிறேன். ப்ரொஃபஸர் பாலகங்காதரா அவர்களின் ஹிப்கபி தொடர்பான எழுத்துகளைப் படியுங்கள். இல்லையெனில் நெடும் பொழுதை நாம் வீணடிக்க நேரிடும். It is a really time-saver.

***


Dev Raj

unread,
Jul 3, 2015, 1:39:32 AM7/3/15
to mint...@googlegroups.com
நன்றி, ஐயா
மிகுந்த கருத்துச் செறிவுள்ள பதிவு.

தேவ்

N. Kannan

unread,
Jul 3, 2015, 2:22:15 AM7/3/15
to மின்தமிழ்
2015-07-03 13:26 GMT+08:00 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
புறப்பொருளுக்கு அறிஞர்கள் இந்த அளவு சிறப்பளித்துள்ளனரா ?>>>>

அதாவது சங்கப் புலவர்களின் பக்தி மயமான வெளிப்பாடுதான் ஆழ்வார்களின் தோற்றம். மன்னர்களைப் பாடிய புலவர்கள் தம் செஞ்சொல் கவிகளுக்கு ஏற்ற இலக்காக சர்வேசுவரனாகிய திருமாலைக் கைக்கொண்டனர். அகத்திணையில் இலட்சிய மனிதக் காதலை வடிவு கொடுத்தவர்கள், அகத்திணைப் பாசுரங்களின் மூலம் திருமாலின்பால் கிளர்ந்தெழும் பிரேமையைப் பொழிந்தார்கள். 

​அந்த பிரேமப்பிரவாகம் எங்கு பாய்கிறது பாருங்கள்:​


​அமெரிக்கர்களுக்குக் கிடைத்த இன்னொரு காஸ்பல் இது. நெஞ்சைச் சுண்டியிழுக்கும் இசை. அது மாறன் அன்றிசைத்த தமிழிசை!

நா.கண்ணன்​

Bala Sundara Vinayagam

unread,
Jul 3, 2015, 3:52:59 AM7/3/15
to mint...@googlegroups.com


On Monday, 29 June 2015 06:16:17 UTC+5:30, oruarizonan wrote:


2015-06-28 14:51 GMT-07:00 செல்வன் <hol...@gmail.com>:
//சிறுத்தொண்டர் புராணம் உட்பட, திருவிளையாடல் புராணம் முழுக்க இருப்பது பக்தியே.

அதனால் ஒரு சித்தாந்தத்தை ஒருவர் விமர்சித்தால் அதில் உள்நோக்கம், அவரது பின்புலனை எல்லாம் ஆராயாமல், எழுதிய விமர்சனத்துக்கு நேர்மையாக பதிலிடுவதே நல்ல விவாதமுறை. மின் தமிழுக்கும் ஏற்ற முறை. "வைணவத்தில் ஆபாசம் அதிகமா, சைவத்தில் ஆபாசம் அதிகமா " என ஆத்திகரிடையே நடந்துவரும் இப்பட்டிமன்றங்களை எல்லாம் கேட்டால் "ஆபாசத்தில் சிறந்தது பாரதமா, ராமாயணமா?" என திகவினர் நடத்திய பட்டிமன்றங்கள் தான் நினைவுக்கு வருகின்றன
.//

தங்கள் கோணத்தை ஒப்புக்கொள்கிறேன், செல்வரே!  ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பதை நினைவுபடுத்தியமைக்கு நன்றி.  தங்கள் கருத்தை நான் நினைவில் கொள்வேன்.

அன்புடன்,
ஒரு அரிசோனன் 


இதையும் சேர்த்தே ஒத்துக்கொள்ளுங்கள்;  அவர் எழுதுகிறார்:

//ஆனால் அவரது மனதில் உள்ள சந்தேகம் விலகி இருக்குமா என்றால் இருக்காது. அது இங்கே கேட்கபடவில்லை எனில் வேறு மன்றங்களில் கேட்க்கபடும். நாளை நாத்திகர் அதை கேட்பார்கள். அப்ப எல்லாரும் என்ன பதில் சொல்லபோகிறிரிகள்?

அதனால் ஒரு சித்தாந்தத்தை ஒருவர் விமர்சித்தால் அதில் உள்நோக்கம், அவரது பின்புலனை எல்லாம் ஆராயாமல், எழுதிய விமர்சனத்துக்கு நேர்மையாக பதிலிடுவதே நல்ல விவாதமுறை//

இதன் பொருள்: மாற்றுக்கருத்தை வைப்பர் பிற்புலத்தை ஆராயந்து அவரை மிரட்டி அவர் பேசுவதைத் தடுக்கலாம் ஆனால், அவர் வேறிரிடத்துக்க்சென்று அவற்றைச்சொல்லத்தான் போகிறார். தடுக்கமுடியுமா?

எனவே தனிநபர் தாக்குதலில் ஈடுபடாமல் கருத்துக்களை நம்பும்படி எடுத்துவைத்து பிறரை ஒத்துக்கொள்ளவைக்கப்பாருங்கள் என்கிறார். 

இஃதொரு நல்ல பாடம்.

Bala Sundara Vinayagam

unread,
Jul 3, 2015, 4:08:07 AM7/3/15
to mint...@googlegroups.com
//நாளை நாத்திகர் அதை கேட்பார்கள். அப்ப எல்லாரும் என்ன பதில் சொல்லபோகிறிரிகள்?//

இப்படி எழுதுவதில் உள்ள மின் தமிழ் போட்டிருக்கும் வரவேற்பு முன்னுரையைச் சரியாகப்படிக்காத்தால் ஏற்படுகிறது.

பல முரண்களைத் தன்னுள் அடக்கி உள்வாங்கி அதனால் பலம்பெற்றே தமிழ்ச்சமூகம் முன்னேறிவந்திருக்கிறது என்கிறார். அம்முரண்களில் நாத்திகம்-ஆத்திகமும் ஒன்று என்கிறது அவ்வரவேற்புரை.  ஆனால் நீங்கள் இங்கு நாத்திகர்களே இல்லை; இருக்கவும்கூடதென்ற தோரணையில் எழுதுகிறீர்கள்.  மின் தமிழ் என்ன ஆத்திகரின் கூடாரமா? நாத்திகர்களுக்கு இடமில்லையா?

இறைவன் பெயரால் புரட்டுக்களினால் மக்களை ஏமாற்றுபவனை இனங்கண்டு ஒதுக்குங்கள் என்பவன் தன்னை நாத்திகன் என்று சொல்லிக்கொண்டு, கடவுளை மறுத்தாலும், அவனாலே இறை மகிழும் என்பதும் 
கடவுள் உண்டு என்று சொல்லி புரட்டுக்களை எழுதியும் பேசியும் மக்களை மதிமயங்கி தன்னை மேம்படுத்திக்கொள்ளும் ஆத்திகனைக்கண்டு இறை இகழும். அதாவது,  ஆத்திகன்-நாத்திகன் என்ற பிரிவு நமக்குத்தான். இறைவனுக்கு இல்லை.  

உளன் எனில் உளன்: அவன் உருவம் இல் உருவுகள்
உளன் அவன் எனில் அவன் அருவம் இவ் அருவுகள்
உளன் என இலன் என  இவை குணம் உடைமையில்
உளன் இரு தகைமையொடு ஒழிவு இவன் பரந்தே

- திருவாய்மொழி.

இல்லை, உண்டு என்பதும் இறைவனின் இரு குணங்களே என்பதுதான் இப்பாசுரம்.

எனவே நாம், அவர்கள் என்று பேச்சு அழகன்று.



On Monday, 29 June 2015 03:21:53 UTC+5:30, செல்வன் wrote:
சிறுத்தொண்டர் புராணம் உட்பட, திருவிளையாடல் புராணம் முழுக்க இருப்பது பக்தியே.

இந்த ஒவ்வொரு அடியார் கதையும் மின் தமிழில் விமர்சிக்கபட்டபோது நான் தான் ஒவ்வொன்றுக்கும் விரிவாக பதில் எழுதி மறுத்தேன்...அப்ப சும்ம இருந்த எல்லாரும் என் கட்சியில் தாமதமாக சேர்ந்து வருகிறீர்களா எனப்பார்த்தால் அப்படி இல்லாமல் தவறுக்கு பதில் இன்னொரு தவறு எனும் கதையாக "திருமால் மட்டும் ஒழுங்கா?" எனும் டாப்பிக்கில் விவாதம் சென்றுகொண்டுள்ளது. ஆத்திகர், நாத்திகர், அக்னோஸ்டிக் என யாருக்கும் இதில் எந்த வித்தியாசத்தையும் காணவில்லை.

"சிவன் கதையில் இந்த இடம் எனக்கு பிடிக்கவில்லை" என சொன்னால் அப்படி சொல்லுவதற்கான காரணங்களை கேட்டு ஆதாரபூர்வமாக அதை பதில் எழுதி மறுக்கவேண்டும். அப்படித்தான் நான் மறுத்தேனே ஒழிய பதிலுக்கு திருமாலை திட்டவில்லை. அது மூத்த பிள்ளையின் கை உடைந்தால் அதன் மனம் புண்படகூடாது என இளையபிள்ளையின் இரண்டு கையையும் உடைப்பது போன்றது. அப்படி சொல்லுபவர் வைணவரா, ஆத்திகரா, நாத்திகரா எனபார்த்து அவரது கொள்கையை அட்டாக் செய்தால் கேள்வி கேட்பவர் "எதுக்கு வம்பு" என ஓடிவிடுவார். ஆனால் அவரது மனதில் உள்ள சந்தேகம் விலகி இருக்குமா என்றால் இருக்காது. அது இங்கே கேட்கபடவில்லை எனில் வேறு மன்றங்களில் கேட்க்கபடும். நாளை நாத்திகர் அதை கேட்பார்கள். அப்ப எல்லாரும் என்ன பதில் சொல்லபோகிறிரிகள்?
Reply all
Reply to author
Forward
0 new messages