மணிமேகலையின் ஜாவா

553 views
Skip to first unread message

செல்வன்

unread,
Nov 30, 2014, 12:16:34 AM11/30/14
to K Selvan
ஜாவா குமார்


ணிமேகலை காப்பியத்தில் ஒரு முக்கியமான கட்டம் சாவகம் எனும் ஜாவாவில் நிகழ்கிறது.

’மணிபல்லவத்திடை
மன்னுயிர் நீத்தோன்
தணியா உயிர் உயச்
சாவகத்து உதித்தனன்’

முற்பிறவியில் தென்மதுரையில் பிறந்து சிந்தாதேவி தந்த அமுதசுரபியென்னும் பாத்திரம் பெற்றுப் பலவுயிர்களைக் காத்துப்பின் மணிபல்லவமெனும் தீவில் இறக்கும் ஆபுத்திரன் பின்பு சாவக நாட்டுள்ள நாகபுரத்தில் உலகுய்ய வேண்டிப் பிறக்கிறான்.

புகார் நகரில் நடக்கும் இந்திரவிழாவைக் காண வரும் மணிமேகலா என்ற தேவதை மணிமேகலையை தூக்கிச் சென்று மணிபல்லவத்தீவில் விட அங்கு தீவதிலகை எனும் தேவதையின் அருளால் முற்பிறவியில் ஆபுத்திரன் கையில் இருந்த அன்னம் குன்றாத அமுதசுரபி மணிமேகலைக்குக் கிட்ட பின்னர் ஊர் திரும்பிச் சென்று அவள் பலரின் பசிப்பிணி தீர்ப்பதாய்ச் சொல்லும் அந்தக்காப்பியம்.

பின்னர் அறவண அடிகளின் மூலம் ஆபுத்திரன் ஜாவாவில் பிறந்திருப்பதை அறிந்து அவனைத் தேடி அங்கு பறந்து வருகிறாள் மணிமேகலை.

நாகபுரத்தின் அருகே சோலை ஒன்றில் வந்திறங்கி அங்கே தருமசாவகன் என்ற முனிவருடன் தங்கியிருக்க அங்குவந்து அவளைச் சந்திக்கிறான் ஆபுத்திரன்.

பூமிசந்திரன் என்ற மன்னனுக்கு மகனாய் புண்ணியராசன் என்று இப்பிறவியில் சாவகத்தின் அரசகுமாரனாய் இருக்கும் ஆபுத்திரனை அவன் முற்பிறவிக் கதையைத் தெரிந்து கொள்ளுமாறு மணிபல்லவத்தீவுக்கு அழைத்துச் சென்று பின்னர் மணிமேகலை அவனுக்கு அறவழியைப் போதித்துச் செல்வதாய்ச் சொல்கிறது அக்காப்பியம்.

இப்படித் தெளிவுபட தமிழகத்துக்கும் இன்று ஜாவா என்று வழங்கப்படும் சாவகத்துக்கும் மணிமேகலை காலத்திலிருந்து இருக்கும் தொடர்புகள் குறித்து முறைப்படி ஆய்வுகள் நடந்துள்ளனவா என்று பார்த்தால் வேதனைதான் மிஞ்சும்.

முதலில் மணிமேகலையின் காலம் எது என்றே பல்வேறு குழப்பங்கள். சிலப்பதிகாரம் பொ.ச. 2’ம் நூற்றாண்டின் இறுதியில் நடப்பதாய்க் கொண்டால் அதன் தொடர்ச்சியான மணிமேகலை?

தமிழ் விக்கிபீடியாவில் காமெடிப்பக்கம் ஒன்று சொல்வது:

//ஆகவே, மணிமேகலை காப்பியமானது பொது சகாப்தம் 1457ஆம் ஆண்டிற்கு முன்னர் இயற்றப்பட்டிருக்க முடியாது.//

(2)

மணிமேகலையின் காலம் பொது சகாப்தம் 2’ம் நூற்றாண்டு வாக்கிலேயே இருக்கும் என்று அருமையான ஆய்வுக் கட்டுரை ஒன்றை மயிலை சீனி.வெங்கடசாமி எழுதியுள்ளார்.

அந்த நீண்ட கட்டுரையிலிருந்து இத்திறக்கில் தொடர்புடைய பகுதியை மட்டும் பார்ப்போம்:

// சாவகத்தீவில் பௌத்த மதம் பெரிதும் பரவியிருந்ததென்பது மணிமேகலையினால் அறியப்படுகின்றது.

‘சாவகம்’ என்பது இப்போதுள்ள் கிழக்கிந்தியத் தீவுகளில் ஒன்றான சுமத்திரா தீவு என்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றார்கள். இந்தச் சுமத்திரா தீவுக்குக் கி.பி. 400 இல் சென்ற ‘பாஹியன்’ (Fa-Hien) என்னும் சீனர், அங்குப் பிராமண மதம் செல்வாக்குப் பெற்றிருக்கிறதென்றும், பௌத்த மதம் தாழ்மையான நிலையில் இருக்கிறதென்றும் எழுதியிருக்கிறார். ஆனால், கி.பி 600 இல் இந்தத் தீவுக்குச் சென்ற ‘இத்-ஸிங்’ (It Sing) என்னும் சீனர் இங்குப் பௌத்த மதம் செழித்தோங்கியிருக்கிறதென்று எழுதியிருக்கின்றார். இதனை ஆதாரமாகச் சுட்டிக்காட்டி மணிமேகலையில் சாவகத் தீவில் பௌத்தம் செல்வாக்குப் பெற்றிருந்ததாகக் கூறியிருப்பதனாலும், இத்ஸிங் என்பவரும் அவ்வாறே கூறியிருப்பதனாலும், பாஹியன் காலத்தில் அஃது இங்குச் செல்வாக்குப் பெறாதிருந்தபடியாலும், கி.பி. 400-600 இடைப்பட்ட காலத்தில் சுமத்திரா தீவில் பௌத்தம் செல்வாக்குற்றிருக்க வேண்டும் என்றும், ஆகவே அதனைக் குறிப்பிடுகின்ற மணிமேகலை இந்தக் காலத்தில் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்றும் சில ஆராய்ச்சியாளர் கூறுவர்.

இஃது ஐயப்பாட்டுக்கிடமான போலிக் காரணம் என்று திரு. V.R. இராமச்சந்திர தீக்ஷிதர் அவர்கள் எழுதியுள்ளதைக் காட்டி விளக்குவோம். இந்தக் கூற்றை இவர் கீழ்வருமாறு மறுக்கிறார்:

முதலாவது, பாஹியான் இந்த விஷயத்தைப் பற்றிச் சரியான செய்தியைத் தரவில்லை. ஒருவேளை, சுமத்திரா தீவில் இவர் சென்ற பகுதியில் பிராமண மதம் செல்வாக்குப் பெற்றிருந்திருக்கலாம்.

இரண்டாவது, ஆபுத்திரன் சுமத்திரா தீவை அரசாண்டபோது, அஃதாவது கிறிஸ்தவ சகாப்தத்தின் தொடக்கத்தில், செல்வாக்குற்றிருந்த பௌத்த மதம் கி.பி. 400 இல் சீன யாத்திரிகர் சென்றபோது, செல்வாக்குக் குன்றியிருக்கக் கூடும். பின்னர், மீண்டும் அதன் செல்வாக்கு நிலைபெற்று, கி.பி 620 இல் சென்ற சீன யாத்திரிகர் காலத்தில் சிறப்படைந்திருக்கக் கூடும்.

மூன்றாவது, மணிமேகலையின் காலத்தைக் கி.பி ஐந்தாம் அல்லது ஆறாம் நூற்றாண்டில் அமைக்கவேண்டும். மூன்றாவது சொல்லிய முடிபு எமக்குப் பொருத்தமாகத் தோன்றவில்லை. மற்ற ஆதாரங்களுக்கும் சான்றுகளுக்கும் இது பொருத்தமாக இருக்கவில்லை. ஆகவே முதலாவது அல்லது இரண்டாவது சொன்ன முடிவுகளில் ஒன்றையே நாம் மேற்கொள்ள வேண்டும்.

இவர் கருத்து என்னவென்றால், கி.பி. 400-க்கும், 600-க்கும் இடைப்பட்ட காலத்தில் மணிமேகலை இயற்றப்பட்டதென்பது ஒப்புக்கொள்ளத் தக்கதல்ல; அது கிறிஸ்து சகாப்தத்தின் (Buddhism in Tamil Literature. Chapter XXVII, Buddhistic Studies: Edited by B.C. Law) தொடக்கத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பது.

பாஹியன் என்னும் சீன யாத்திரிகர், இந்தியாவிலிருந்து சீனாவுக்குப் கப்பல் வழியாகக் கி.பி. 413 இல் சென்றபோது, இடையிலே யவதீவத்தில் தங்கினார் என்றும், அப்போது அந்தத் தீவில் பௌத்த மதம் நன்கு பரவியிருக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார். இவர் கூறுகிற யவதீவம் என்பது ஜாவா தீவு என்பர் சிலர். சிலர் சுமாத்ரா தீவு என்பர். யவதீவம் என்பது சுமாத்ரா தீவும் அன்று ஜாவா தீவும் அன்று; மற்றொரு தீவாகிய போர்னியோ தீவு என்பர் ஆராய்ச்சி வல்லார் //

ஆகவே சாவகத் தீவில் கி.பி 2 ஆம் நூற்றாண்டில் பௌத்த மதம் இருந்ததில்லை என்று இவர்கள் கூறுகிற வாதம் சிறிதும் பொருத்தமற்றது.

மயிலையார் இந்த ஆய்வை மேற்கொண்ட காலத்தில் சில உண்மைகள் வெளிவரவில்லை. எனவேதான் பிற சான்றுகள் வலுவாயிருப்பினும் இதில் மட்டும் சற்றே உறுதிப்படாமல் எழுதியுள்ளார். மணிமேகலையின் ஜாவானியத் தொடர்புகளை ஐயந்திரிபற நிறுவும் ஆதாரங்களை இனிக் காண்போம்.

java_naga_hill

நாகமலையின் வழியே செல்லும் பாதை. இந்தப் படம் நாகபுரத்தையும், தருமசாவகன் சோலையையும் தேடிப்போகையில் எடுத்தது

(3)

ஜாவா என்ற பெயரே இந்தியர் வைத்த பெயர்தான்.

யாவாத்வீபா என்ற சங்கதப்பெயரிலிருந்து மருவி தமிழில் சாவகம் ஆனது. உலகின் தொன்மையான உணவுப்பயிர்களில் ஒன்றான பார்லிப்பயிர் செழித்திருந்த தீவு என்பதால் அப்பெயர்.

http://www.sanskrit-lexicon.uni-koeln.de/cgi-bin/tamil/recherche

32 yava 3 m. barley (in the earliest times , prob. any grain or corn yielding flour or meal ; pl. barley-corns) RV. ; a barley-corn (either as a measure of length = 1/6 or 1/8 of an An3gula VarBr2S. ; or as a weight= 6 or 12 mustard seeds= 1/2 Gun5ja1 Mn. Ya1jn5.) ; any grain of seed or seed corn Bhpr. ; (in palmistry) a figure or mark on the hand resembling a barley-corn (supposed to indicate good fortune) VarBr2S.

35 yavadvIpa m. the island Yava R. (v.l. %{jala-d-}) Buddh.

யாவத்வீபம் என்ற பெயர் ஜாவா நெடுக பல பண்டைய அரசுகளின் கல்வெட்டுகளில் கிட்டுகிறது. காட்டாய் ஒன்று  (விக்கிபீடியாவிலிருந்து):

The Canggal inscription was discovered in Canggal village, Southwest from the town of Magelang. This inscription was written in Pallava letters and in Sanskrit, and tells about the erection of a linga (symbol of Shiva) on the hill in Kunjarakunja area. This area is located at a noble island called Yawadwipa (Java) which is blessed with abundance of rice and gold. This inscription tells that Yawadwipa was reigned by King Sanna, whose long period of reign was marked with wisdom and virtue.

பாரதத்துடன் ஜாவானியத் தொடர்பு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதென்பதை வால்மீகி ராமாயணம் தொடங்கி (சுக்ரீவன் சீதையைத் தேடி நால்திசையிலும் வானரசேனையை அனுப்புகையில் யாவாத்வீபத்தைக் குறிப்பிட்டுச் சொல்வது) பிற நூலாதாரங்களின் மூலமும் அறியலாம். மதுரைக்காஞ்சியிலும், சிலப்பதிகாரத்திலும் சாவகர் பற்றிய குறிப்பிருக்கிறது.

உலகின் மாபெரும் இந்து ஆலய வளாகங்களில் ஒன்றான ப்ரம்பனான் - (Prambanan) மத்திய ஜாவாவில் உள்ளது.

உலகின் மாபெரும் இந்து ஆலய வளாகங்களில் ஒன்றான ப்ரம்பனான் – (Prambanan) மத்திய ஜாவாவில் உள்ளது.

மிக முக்கியமான தாலமியின் குறிப்பு  இங்கே:

Ptolemy, the astronomer of Alexandria who wrote his geography about the middle of the 2nd century A. D, refers to Java as Jabadieu (Yavadvipa) a name which he himself translates as the island of barley. Thus the Sanskrit name of the island was already known to foreigners. Chinese chronicles mention that about 132 A. D.
Tiao Picn (Deva Varman ?), the king of Ye-tiao (Yavadvipa), sent an embassy to China. The Emperor presented to Tiao Pien a seal of gold and a violot ribbon.

According to Ye Tiao, in Yavadvipa the first Chinese contact with a Hinduized Java occurred as early as 132 A.D. On the basis of the above document, G. Ferrand, in a 1919 issue of Journal Asiatique, stated that “Indonesia’s first contact with Hinduism must have occurred before the Christian Era”.

**Indian navigators were highly active in this region from before the Christian Era. They became even more active in the second and third centuries.**

வங்கம் என்னும் பாய்மரக்கப்பல் மூலம் கடல்வழிப் போக்குவரத்து தமிழகத்துக்கும் ஜாவாவுக்கும் இருந்தது என்று மணிமேகலையிலேயே குறிப்பிருக்கிறது:

‘ஒரு தனி வரூஉம் பெருமகன் போல
தானே தமியன் வருவோன் தன்முன்
மாநீர் வங்கம் வந்தோர் வணங்கிச்
“சாவக நல் நாட்டு தண் பெயல் மறுத்தலின்
ஊன் உயிர் மடிந்தது உரவோய்!” என்றலும்
“அமரர் கோன் ஆணையின் அருந்துவோர்ப் பெறாது
குமரி மூத்த என் பாத்திரம் ஏந்தி
அங்கு அந் நாட்டுப் புகுவது என் கருத்து” என
வங்க மாக்களொடு மகிழ்வுடன் ஏறி
கால் விசை கடுகக் கடல் கலக்குறுதலின்’

(4)

மேற்சொன்ன ஆதாரங்களைக் கொண்டு வால்மீகி ராமாயண காலத்திலிருந்து யாவாத்வீபம் என்ற ஜாவாத்தீவே சாவகம் என்று கண்டோம்.

ஆனால் பொதுயுகம் (CE – Common Era) இரண்டாம் நூற்றாண்டில் அங்கு பௌத்தம் பரவியிருந்தமைக்கு ஆதாரம் இல்லையென்று பலர் சொல்வதற்குக் காரணம் மயிலயார் காலத்தில் சரியான சான்றுகள் கிட்டியிருக்கவில்லை என்பதால். ஆபுத்திரன் மறுபிறவி எடுத்தது சுமத்திராவிலா அல்லது போர்னியோவிலா என்றுகூடத் தேடியிருந்தனர்.

சாவகத்தீவில் 2’ம் நூற்றாண்டில் பௌத்தம் இருந்ததில்லை என்ற வாதம் 1997’ல் தெரியவந்த ஒரு முக்கிய ஆதாரத்தில் முழுமையாய் அடிபட்டுப் போனது.

அச்சமயம் நான் ஜாவாவில் இருந்தேன்.

மேற்குஜாவாவில் ’Batujaya’ என்ற இடத்தில் புராதனமான கோயில்நகரம் ஒன்று 1984’ல் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டது. அதில் பல சிதிலமான ஆலயங்கள். கார்பன் டேட்டிங்கில் 2’ம் நூற்றாண்டுக்கு முந்தையவை என்றும் கண்டனர். குறிப்பாய் ‘Candi Jiwa’ என்ற காம்ப்லெக்ஸ் மட்டும் சற்றே வித்தியாசமாய் பௌத்தத்துடன் தொடர்புடையதெனத் தெரியவர உடன் அங்கு சென்றிருந்தேன்.

Kempung Naga பகுதியில் பயணத்தின் போது..

Kempung Naga பகுதியில் பயணத்தின் போது..

ஆம். சிதாரும் என்ற மேற்குஜாவாவின் நதிக்கரையில் அமைந்திருந்த அந்த சண்டி ஜீவா பௌத்த பாணியில் அமைந்திருந்தது.

மேலும் விவரம் தேவையென்றால் கூகிளில் கிடைக்கும்.

http://en.wikipedia.org/wiki/Batujaya_Archaeological_Site

Batujaya is an archeological site located in the village of Batujaya, Karawang in West Java, Indonesia. The site is five square kilometers in area and comprises more than 20 structural remains buried in what Sundanese call hunyur or unur (high mounds of earth consisting of artifacts). Unur is similar to the manapo found at the Muara Jambi archaeological site.

The site was first found and examined by archaeologists from the University of Indonesia in 1984. Excavations have since uncovered 17 unur, of which three are in the form of pools. The structures found are made of bricks composed of a mixtures of clay and rice husks, not volcanic rock which is difficult to find in Batujaya. Two structures recovered are in the form of temples, one of which, known as Jiwa Temple, has been restored. According to Dr Tony Djubiantono, the head of Bandung Archeology Agency, Jiwa was built in the 2nd century.

Candi Jiwa @ Batujaya, West Java, Indonesia

Candi Jiwa @ Batujaya, West Java, Indonesia

மேலும் புகைப்படங்கள் இங்கே  http://www.panoramio.com/photo/34743335

//AREA of SITUS SEGARAN BATUJAYA Blandongan Temple and Jiwa is 2 temple among 24 ” UNUR” ( local resident call to situs) ( Year data 2006),this temple finish restoration in 2010. This Situs spread over to cover in 2 countryside, that is Countryside of Segaran, District of Batujaya and Countryside of Telagajaya, District of Pakisjaya Seen from its for temples here have religion background of Buddha. Pursuant to analysis of carbon dating ( C14 ) indicating that culture here started at century second. //

(5)

மேற்குஜாவாவில் இந்த வளாகத்தைக் கண்டுவந்த நாள்முதலாய் என் தேடல் தீவிரமானது.

மணிமேகலையில் சாவகத்தீவில் வரும் முக்கியப்பாத்திரங்களைப் பற்றிய பெயர் முதலான குறிப்புகளோ, இடங்களோ நிச்சயம் ஜாவாவின் மேற்குப்பகுதியில்தான் இருக்க வேண்டும் என்று என் உள்ளுணர்வு சொல்ல, தேடலைத் தொடங்கினேன்.

நான் அங்கேயே மேற்குஜாவாவில் வசிக்க நேர்ந்ததும் என் நல்லூழ்.

முதலில் அந்தக் காப்பியத்தின் நாயகி மணிமேகலையின் பெயர் எங்கும் இதுவரை கிட்டவில்லை. மேலும் மணிமேகலை மந்திரசக்தியால் ககனமார்க்கமாய் அங்கு சென்றிறங்கி ஆபுத்திரனைச் சந்தித்துவிட்டுச் சின்னாளில் தமிழகம் திரும்பிச் சென்று விடுவதால் ஜாவானியர்களுக்கு அவள் வரலாறு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்ற முடிவுக்கு வந்து பிற சான்றுகளைத் தொடர்ந்தேன்.

அடுத்து ஆபுத்திரன். அவன் முன்கதை சுருக்கமாய்:

ஆபுத்திரன்

ஆபுத்திரன்

எங்கோ ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தென்மதுரையில் பிறந்து கன்னியாகுமரியில் பசுவொன்றின் பராமரிப்பில் அனாதையாய்த் தாய் விட்டுச் செல்ல மறையவர் ஒருவர் தத்தெடுத்து வளர்த்துவர சில கசப்பான சம்பவங்களால் வீட்டைவிட்டு வெளியேறி மதுரைக்கு வந்து ஊரம்பலத்தில் தங்கி பிச்சையெடுத்து அதை வறியவர்க்கும் வழங்கிப் பின்னர் சிந்தாதேவியெனும் வாணியின் அருளால் அவன் கைவரும் அமுதசுரபியால் அள்ள அள்ளக் குறையாத அன்னம் பெருகிவர மதுரையில் வறுமையை அறவே போக்கிய அருளாளன் ஒரு கட்டத்தில் ஆபுத்திரன் சாவகத்துக்குச் செல்ல வேண்டிய சூழல் உருவாகிறது.

உலகியற்கைக்கு முரணாய் ஆபுத்திரன் வழங்கியிருந்த இலவச உணவுத்திட்டம் கண்டு பொறுக்காத இந்திரன் மழைவளைத்தைப் பெருக்கி தக்கணமதுரையில் பஞ்சமே இல்லாது செய்ய ஆபுத்திரன் கடிஞை பயனற்றுப் போகிறது. அந்த நேரத்தில் சாவகத்திலிருந்து திரைகடலோடி வந்தோர் அத்தீவில் மழை பொய்த்துப் பசிப்பிணி சூழ்ந்திருப்பதாய்ச் சொல்ல அதைத் தீர்க்கும் பேராவலில் வங்கமொன்றில் ஏறி சாவகம் நோக்கிப் பயணிக்கிறான் ஆபுத்திரன்.

வழியில் புயலில் சிக்கிய வங்கத்தின் பாய்மரம் கிழிய மணிபல்லவத்தீவில் தங்க நேரிடுகிறது. அவனைத் தவறுதலாய் அத்தீவிலேயே கப்பல் விட்டுச் செல்ல அங்கேயே அமுதசுரபியைத் தக்கோர் வரும் நாளில் அவர் கையில் கிட்டுமாறு தீவதிலகையெனும் தேவதையிடம் வேண்டிக்கொண்டு உண்ணாநோன்பிருந்து உயிர்துறக்கிறான் ஆபுத்திரன்.

சாவகம் செல்லும் இச்சை கொண்டு உயிர் துறந்தமையால் அங்கேயே மறுபிறவி எடுக்கிறான். ஆவின்பால் அன்புகொண்ட ஆபுத்திரன் அங்கே ஒரு பசுவிடமே தோன்றுவதாய்ச் சொல்லும் மணிமேகலை. பிள்ளையில்லாத ஜாவானிய மன்னன் பூமிசந்திரன் அவனைத் தத்தெடுத்து வளர்க்கிறான்.

ஆபுத்திரன் தன் முற்பிறவிக்கதையை மணிமேகலை தேடிவந்து நினைவூட்டியபடி மேற்கு ஜாவாவில் நல்லாட்சி செய்து மக்கள் பசி தீர்த்திருக்க வேண்டும்.

எனவேதான் ஆபுத்ரா என்ற பெயரை மேற்குஜாவாவின் சுந்தானிய இன (Sundanese) மக்கள் அவன் கதையை மறந்து விட்டாலும் இன்றும் பரவலாய் வைத்துக் கொள்கின்றனர். Aputra Indonesia என்று வலையில் தேடிப்பாருங்கள். அதே போல் Bumi Candra (Chandra இல்லை) என்ற பெயரும் சுந்தானிய மக்களிடை வைத்திருக்கக் கண்டேன். நான் தேடியவரை ஆபுத்திரன் கதை எனக்குக் கிட்டவில்லை. ஜாவானிய அரசபரம்பரை வந்தோர் ரகசியமாய்க் காத்திருப்பதாய்ச் சொல்லப்படும் லோந்தார் (Lontar) என்ற பழஞ்சுவடிகளில் மறைந்திருக்கலாம்.

தருமசாவகனைத் தேடும்போதுதான் ஆச்சர்யம் காத்திருந்தது.

(தொடரும்)

சிந்தாதேவி! செழுங் கலை நியமத்து
நந்தா விளக்கே! நாமிசைப் பாவாய்!
வானோர் தலைவி! மண்ணோர் முதல்வி!
ஏனோர் உற்ற இடர் நீ களைவாய்!

(மணிமேகலையில் ஆபுத்திரன் மதுரை அம்பலத்தில் வாணியைத் தொழுதேத்தும் பாடல்)

கையில் அட்சய பாத்திரத்துடன் ஜாவானிய சரஸ்வதி

கையில் அட்சய பாத்திரத்துடன் ஜாவானிய சரஸ்வதி


--

செல்வன்

unread,
Nov 30, 2014, 12:19:27 AM11/30/14
to K Selvan

தொடர்ச்சி..

(6)

மணிமேகலை ஆபுத்திரன் நாடு அடைந்த காதையில் -

வெந்துஉறு பொன்போல் வீழ்கதிர் மறைந்த
அந்தி மாலை ஆயிழை போகி
உலக அறவியும் முதியாள் குடிகையும்
இலகுஒளிக் கந்தமும் ஏத்தி வலம்கொண்டு
அந்தரம் ஆறாப் பறந்துசென்று ஆயிழை
இந்திரன் மருமான் இரும்பதிப் புறத்துஓர்
பூம்பொழில் அகவயின் இழிந்து பொறைஉயிர்த்து

ஆங்குவாழ் மாதவன் அடிஇணை வணங்கி,
இந்நகர்ப் பேர்யாது இந்நகர் ஆளும்
மன்னவன் யார்என மாதவன் கூறும் உரை
நாக புரம்இது நல்நகர் ஆள்வோன்
பூமிசந் திரன்மகன் புண்ணிய ராசன்

ஈங்குஇவன் பிறந்த அந்நாள் தொட்டும்
ஓங்குஉயர் வானத்துப் பெயல்பிழைப்பு அறியாது
மண்ணும் மரனும் வளம்பல தரூஉம்
உள்நின்று உருக்கும் நோய்உயிர்க்கு இல்எனத்
தகைமலர்த் தாரோன் தன்திறம் கூறினன்
நகைமலர்ப் பூம்பொழில் அருந்தவன் தான்என்

- என்ற பகுதியில் வரும் சில குறிப்புகளை ஆய்ந்தேன்.

அட்சயபாத்திரத்துடன் வான் வழியே (அந்தரம் ஆறாப்) பறந்து சென்று சாவகத்தீவில் இந்திரன் வழிவந்தோர் ஆளும் பதியில் ஒரு சோலையில் இறங்கும் மணிமேகலை அங்கு எதிர்ப்படும் தருமசாவகன் என்னும் முனிவரை வணங்கி அந்தநகரின் பெயரையும், அதை ஆளும் மன்னவன் யாரென்றும் வினவ, அந்தப்பதியின் பெயர் நாகபுரம் என்றும் அதை ஆள்வோன் பூமிசந்திரன் மகனான புண்ணியராசன் என்றும் அவன் பிறந்த நாள் முதலாய் வான்மழை பிழையாது பெய்திருக்க மண்செழித்து வளம்பல பெருகி மக்களும் பிணி நீங்கி மகிழ்ந்து வாழ்வதாய்ச் சொல்கிறார் அந்த அருந்தவமுனி தருமசாவகன்.

நாகபுரம், தருமசாவகன்!

நான் கரவாங் (Karawang) என்ற நகரில் சிதாரும் (Citarum) என்ற நதிக்கரையில் வாழ்ந்திருந்தேன்.

அந்த நதியின் பண்டைப்பெயர் ஸ்ரீதர்மநதியென்று தற்செயலாய்த் தெரியவந்தது. அந்த நதியை ஒட்டிய பிரதேசமே முன்னாளில் தருமநகரா என்ற ஹிந்துப்பேரரசாய் இருந்ததையும் அதைப் பொ.ச.நான்காம் நூற்றாண்டு (?) காலத்தில் ஆண்ட பூர்ணவர்மன் என்ற மன்னன் தன்னை விஷ்ணுவின் பிரதிநிதியாய்க் கொண்டு விஷ்ணுபாதம் என்று ஒன்றைச் செதுக்கி நல்லாட்சி செய்த செய்தியெல்லாம் பின்னர் தெரியவந்தது.

http://en.wikipedia.org/wiki/Tarumanagara

தருமசாவகன் நிச்சயம் இந்தப்பகுதியில்தான் வாழ்ந்திருக்க வேண்டும் என்று நாகபுரத்தைத் தேடும் முயற்சியில் பாண்டுங் என்ற மேற்குஜாவாவின் பிரதான நகரின் அருகில் காம்புங் நாகா (Kampung Naga) என்றோர் இடம் இருப்பதாகத் தெரியவந்தது. உடன் புறப்பட்டேன்.

java_manimekalai

மிகமிகத் தொன்மையான பகுதியது. நாகமலை எனும் மலையினூடே வளைந்து செல்லும் பாதை. இயற்கையின் அபரிமிதமான கொடையில் மரகதப்பச்சை அரசாட்சி.

பொது நீரோட்டத்தில் கலக்காமல் தங்களின் தொல்மரபின்படியே அந்த ஊர்மக்கள் இன்றும் தனித்து வாழ்கிறார்கள்.

http://en.wikipedia.org/wiki/Kampung_Naga

அவர்கள் இன்றைய சுந்தானிய மொழியே பேசினாலும், முதியவர் சிலரிடம் துருவிக்கேட்டதில் தங்களின் தொல்மொழி பேசுவோர் மறைந்து விட்டதாகச் சொன்னார்கள். தங்களின் முன்னோர் வகுத்துத்தந்த மரபின் படி வாழ்வதே பெரும்பாடாய் இருப்பதாகச் சொன்னார்கள்.

அவர்களின் குலதேவதைக் கோயில் ஒன்று ஊர் மத்தியில் இருப்பதைக் கண்டேன். சுற்றிலும் துணியால் சுற்றி மறைத்திருந்தனர். அங்கு மட்டும் வெளியார்க்கு அனுமதி இல்லை என்று சொல்ல நான் அவர்களைப் போலவே இன்றும் உயிர்த்திருக்கும் தொல்குடியைச் சேர்ந்தவன், இந்தியாவிலிருந்து வந்திருப்பவன் என்று பணிவாய்க் கேட்டும் மறுக்க, பிரிய மனமின்றித் திரும்பினேன்.

மொழியையே தொலைத்துவிட்ட அவர்களுக்கு ஆபுத்திரன் கதையும் தெரிந்திருக்கவில்லை. சிலகாலம் அவர்களுடன் வாழ்ந்திருந்தால் அவர்கள் நம்பிக்கை பெற்றபின் பல அரியதகவல்கள் தெரியவரலாம். அதற்கு எனக்கு வாய்ப்பும் நேரமும் இல்லாமல் போய்விட்டது.

அடுத்து ‘தவளமால்வரை’ கண்டடைந்த காதை.

(7)

நாகபுரத்தின் சோலையொன்றில் உள்ள தருமசாவகன் குடிலில் மணிமேகலை என்றொரு பெண்துறவி வந்திருக்கும் செய்திகேட்டுத் தேடிவருகிறான் மன்னன் புண்ணியராசன்.

//அரசன் உரிமையோடு அப் பொழில் புகுந்து
தருமசாவகன் தன் அடி வணங்கி
அறனும் மறனும் அநித்தமும் நித்தத்
திறனும் துக்கமும் செல் உயிர்ப் புக்கிலும்
சார்பின் தோற்றமும் சார்பு அறுத்து உய்தியும்
ஆரியன் அமைதியும் அமைவுறக் கேட்டு
பெண் இணை இல்லாப் பெரு வனப்பு உற்றாள்
கண் இணை இயக்கமும் காமனோடு இயங்கா
அங்கையில் பாத்திரம் கொண்டு அறம் கேட்கும்
இங்கு இணை இல்லாள் இவள் யார்? என்ன //

பெருவனப்புடன் கையில் பாத்திரமேந்தி அறவடிவாய் நிற்கும் இந்தப்பெண் யாரென்று வினவ, மணிமேகலை தற்போது தன் கையில் இருக்கும் அந்தப்பாத்திரம் முற்பிறவியில் மன்னன் புண்ணியராசன், ஆபுத்திரன் என்ற பெயரில் பிறந்து மதுரையில் சரஸ்வதி அருளால் பெற்ற அமுதசுரபி என்று சொல்லி, அதைக் கொண்டு ஜாவானியர் பசிதீர்க்க அவன் வங்கமேறி வந்து வழியில் தொலைந்துபோய், அவன் இந்தப்பிறவியிலும் ஆவழித் தோன்றிய கதையையும் சொல்கிறாள் மணிமேகலை.

தவளமால்வரையைத் தேடிச் செல்லும் வழியில் பரந்திருக்கும் ஸ்ட்ராபெர்ரி பண்ணைகள்.

தவளமால்வரையைத் தேடிச் செல்லும் வழியில் பரந்திருக்கும் ஸ்ட்ராபெர்ரி பண்ணைகள்.

மணிபல்லவத் தீவுக்கு உடன் புறப்பட்டு வருவான் எனில் அவன் முற்பிறவிக் கதையனைத்தும் நினைவுக்கு வரும் என்றும் அதன்பின் அவன் பிறவிப்பிணியறுத்து அறவழிச் செல்வதும் எளிதாகும் என்றழைத்துப் பறந்து செல்ல, மன்னன் அமைச்சிடம் ஒரு திங்கள் ஆட்சிப்பொறுப்பை ஒப்படைத்துவிட்டு மரக்கலமேறி மணிபல்லவத்தீவுக்கு சென்று அங்கு தன் முற்பிறவிக் கதையெல்லாம் ஆடியில் தெரிவது போல் கண்டு தெளிய அவனுக்கு நல்லறம் நல்கி மீண்டும் அவனை சாவகம் திரும்பச் சொல்லிவிட்டு வஞ்சிமாநகரம் நோக்கி வான்வழியேறி மீள்கிறாள் மணிமேகலை.

புண்ணியராசன் சாவகம் மீண்டு தன் முற்பிறவிப் பெயரான ஆபுத்திரன் என்ற பெயரிலேயே ஆட்சியைத் தொடர்ந்திருக்க வேண்டும் என்பது இன்னும் அதே பெயரைச் சூட்டிக்கொள்ளும் ஜாவானிய ‘ஆபுத்ரா’க்களால் அறிய வருகிறது.

மன்னன் புண்ணியராசனுக்கு முற்பிறவியில் ஆபுத்திரன் என்று பெயர்வரக் காரணமாயிருந்த, எங்கோ குமரி மாவட்டத்தில் வயனங்கோட்டில் பிறந்த சிசுவை ஏழுநாட்கள் பாலூட்டிக் காத்திருந்த பசுவும் அவனுக்கு முன்னதாகவே ஜாவாவில் ‘தவளமால்வரை’ என்ற குளிர்ந்த மலைப்பகுதியில் ‘மண்முகன்’ என்ற முனியின் ஆசிரமத்தில் தோன்றி அவன் பிறக்கக் காத்திருந்ததாகவும் மணிமேகலை காப்பியத்தால் அறிகிறோம்.

அந்நாள் அவனை ஓம்பிய நல் ஆத்
தண்என் சாவகத் தவள மால்வரை
மண்முகன் என்னும் மாமுனி இடவயின்
பொன்னின் கோட்டது பொன்குளம்பு உடையது
தன்நலம் பிறர்தொழத் தான்சென்று எய்தி
ஈனா முன்னம் இன்உயிர்க்கு எல்லாம்
தான்முலை சுரந்து தன்பால் ஊட்டலும்
மூன்று காலமும் தோன்றநன் குணர்ந்த
ஆன்ற முனிவன் அதன்வயிற் றகத்து

மழைவளஞ் சுரப்பவும் மன்னுயிர் ஓம்பவும்
உயிர்கா வலன்வந் தொருவன் தோன்றும்
குடர்த்தொடர் மாலை பூண்பா னல்லன்
அடர்ப்பொன் முட்டை அகவையி னானெனப்
பிணிநோய் இன்றியும் பிறந்தறஞ் செய்ய//

எங்கிருக்கிறது தண்என் சாவகத் தவளமால்வரை!

(8)

தவளமால்வரை! சங்கதத்தில் தவளம் என்றால் வெண்மை. குளிர்ந்திருக்கும் வெண்குன்றம். தருமநகர மன்னர் ஆண்டது மாலவன் பாதம் கொண்டு என்று முன்னரே கண்டோம்.

இந்தோநேசிய விக்கிபக்கத்தில் கல்வெட்டு ஆதாரங்களைத் தெளிவாகவே தந்திருக்கிறார்கள். இந்தச்சுட்டியில் பாட்டூஜயா (Batujaya) வளாகத்தில் கிட்டிய விஷ்ணு சிலைகளையும் காணலாம்:

http://id.wikipedia.org/wiki/Kerajaan_Tarumanegara

//Kedua (jejak) telapak kaki yang seperti (telapak kaki) Wisnu ini kepunyaan raja dunia yang gagah berani yang termashur Purnawarman penguasa Tarumanagara//

மேலும் மணிமேகலை ‘அந்தரம் ஆறாப் பறந்துசென்று ஆயிழை இந்திரன் மருமான் இரும்பதிப் புறத்துஓர் பூம்பொழில் அகவயின் இழிந்து’ வருமிடத்தில் இந்திரன் வழித்தோன்றல்களே அங்கே அரசாள்பவர் என்பதைச் சுட்டும் வண்ணம் இதுவும் பொறித்து வைக்கப்பட்டிருக்கிறது:

//jayavi s halasya tarumendrsaya hastinah airavatabhasya vibhatidam padadavayam

Located nearby is the Prasasti Kebon Kopi I, also called Telapak Gadjah stone, with an inscription and the engraving of two large elephant footprints. The inscription read: These elephant foot soles, akin to those of the strong Airwata (elephant, which God Indra used to ride), belongs to Tarumanagara King who is successful and full of control.//

விக்கியின் ஆங்கிலப்பதிப்பில் இவ்வளவு விளக்கமாய் இல்லையென்றாலும் இதே குறிப்பிருக்கிறது:

ஆனால் தவளமால்வரை எங்கிருக்கிறது?

மலை என்றால் இந்தோநேசிய மொழியில் குணுங் (Gunung). வெள்ளைமலை – Gunung Putih – என்று எங்கிருக்கிறது என்று தேடத் தொடங்க அந்தப்பெயரில் ஓரிடம் இருப்பது தெரியவந்தது. ஆனால் அது எங்கோ போர்னியோத்தீவில் வடக்கு கலிமந்தனில். சோர்வு தந்தாலும் தொடர்ந்து ஜாவாவின் மேற்குப்பகுதியில் தேடியிருந்தேன்

இந்தத்தேடலில் எனக்குத் துணையாய் இருந்தவன் எனக்குப் பல வருடங்கள் காரோட்டியும், உற்ற நண்பனுமான நூருதீன் என்பான். வலக்கரம் போலிருந்தவன். ஒரு சனியன்று என்னிடம் நீங்கள் தேடியிருக்கும் வெள்ளைமலை எங்கிருக்கிறதென்று தெரியாவிட்டாலும் வெள்ளை மடு (Kawah putih) ஒன்றிருக்கிறது ஒரு மலையுச்சியில் போகலாமா என்றான். உடன் கிளம்பினோம்.

java_kawah_putih_1

பாண்டுங் நகரைத் தாண்டி சிவிதே (Ciwidey) என்ற சிற்றூரின் அருகில் பாதுவா (Gunung Patuha) என்ற பசுமை ததும்பி வழியும் மலைப்பாதையில் பயணிக்கையிலேயே குளிர் தொடங்கிவிட்டது. மேலே செல்லச் செல்ல கடுங்குளிர். கிட்டத்தட்ட பத்துடிகிரிக்குச் சட்டென்று மாறும் வானிலை.

மதியம் 2 மணிக்கு மேல் உச்சியில் மேகம் வந்து மூடி விடும் என்பதால் வேகமாய்ச் சென்றோம்.

வெளியே சரிவிலெங்கும் மானாவாரியாய் ஸ்ட்ராபெர்ரிச் செடிகளைப் பயிரிட்டிருந்தார்கள்.

உச்சியை நெருங்கு முன்னே கந்தகநெடி மூக்கைத் துளைத்துச் செல்ல காரை நிறுத்திவிட்டு இறங்கினால் கல், மண் என்று திரும்பிய பக்கமெல்லாம் வெண்மை போர்த்தியிருந்தது!

java_kawah_putih_2

சற்றுத் தொலைவே இருந்தாலும் அதற்குமேல் உச்சிக்குப்போக தனியே ஜீப்பில் செல்ல வேண்டும். 2400 மீட்டர் உயரமான மலையது. அந்தப் பிரதேசமே சுண்ணாம்புக்கற்கள் நிறைந்து ஒளிவீசியிருக்க அந்த எரிமலையின் வாயை நெருங்கினோம். அதனுள்ளே இளம்பச்சை, வெளிர்நீலம் என்று நிறம் மாறி மாறித் தோன்றும் ஓர் ஆழமான துல்லியமான ஏரி. மூச்சடைக்க நின்றேன். என் வாழ்நாளெல்லாம் மறக்க முடியாத அற்புதக்காட்சியது.

தவளமால்வரை உச்சியில் சகோ நூருதீனுடன்.

தவளமால்வரை உச்சியில் சகோ நூருதீனுடன்.

கண்ணைக் கூச வைக்கும்படி வெள்ளைப்பாறைகளிலிருந்தும், வெள்ளை மணற்படுகையிலிருந்தும் சேர்ந்து ஒளிரும் வெளிச்சம். அதனுடன் வெண்புகைபோல் வருடிப்போகும் மஞ்சுப்பொதிகள் தரும் மயக்கம். உண்மையில் அதுதான் தண்மைமிகு தவளமால்வரை.

அந்த மலையின் பக்கங்களிலிருந்து சுனைநீர் ஓடிச்சென்று சற்றுத் தொலைவில் தருமநகரப் பிரதேசத்தினூடே ஓடியிருக்கும் தருமநதியில் கலக்கிறது.

http://en.wikipedia.org/wiki/Kawah_Putih

அந்த மலையும் அமிலமடுவும் அப்பகுதி மக்களுக்கு மிகப்புனிதமானதும், பல அதிசயங்களும், ரகசியங்களும் கொண்டதென்று அறிய வந்தது. தங்கள் மூதாதையர் இறங்கிவந்து சந்திக்கும் இடமது என்பது அவர் நம்பிக்கை.

java_kawah_putih_3

கீழே இறங்கித் திரும்புகையில் பசீர்ஜம்பு (Pasir Jambu) என்றொரு கிராமத்தைக் கண்டு நிறுத்தி இறங்கினேன். தவளமால்வரை அருகில் மண்முக முனி இருந்த இடமோ!

பசீர் என்றால் மண். ஜம்பு என்றால் பாரதம். யாவத்வீப மண்ணில் ஜம்புத்வீபத்தின் பாரதமண் வந்து கலந்த இடமோ!

ஈராயிரமாண்டுகள் கடந்தும் நினைவூட்டி நிற்கும் பெயர்கள்.

மணிமேகலா தெய்வத்தைத் தொடர்கிறேன்.

(9)


திரை இரும் பௌவத்துத் தெய்வம்

இந்தத் தேடலின் இறுதிப்பகுதியிது. மணிமேகலை காப்பியத்துக்குப்பின் கடந்த ஈராயிரம் ஆண்டுகளில் தமிழகத்தில் பதியப்பெறாத கதையிது என்றும் சொல்லலாம். இன்றவள் பெருமையை என் மூலம் சொல்ல வைப்பதும் அந்தக் கடலம்மையே.

காப்பியத்தின் நாயகி மணிமேகலை வாழ்வினை முற்றாய் ஊழ்வழி நடத்திச் சென்று அந்த அப்பிறவியில் அவள் காமத்தை வென்று துறவுக்கோலமாம் அறக்கோலம் பூணவைப்பதும் மணிமேகலா தெய்வமே.

கோவலனின் குலதேவதை மணிமேகலா என்ற அந்தக் கடலரசி. அவள் திரவியம் தேடித் திரைகடலோடியிருந்த வணிகர்களைக் காக்கும் தெய்வம். மாதவி மூலம் பிறக்கும் குழந்தைக்குத் தன் குலதெய்வத்தின் பெயரையே கோவலன் வைப்பதன் பின்னணிக்கதை சிலப்பதிகாரத்தில் அடைக்கலக் காதையில் வருகிறது:

//இடைஇருள் யாமத்து எறி திரைப் பெரும் கடல்
உடை கலப்பட்ட எம் கோன் முன் நாள்
புண்ணிய தானம் புரிந்தோன் ஆகலின்,
நண்ணு வழி இன்றி, நாள் சில நீந்த,
‘இந்திரன் ஏவலின் ஈங்கு வாழ்வேன்
வந்தேன் அஞ்சல் மணிமேகலை யான்!
உன் பெரும் தானத்து உறுதி ஒழியாது
துன்பம் நீங்கித் துயர்க் கடல் ஒழிக!’ என,
விஞ்சையின் பெயர்த்து, விழுமம் தீர்த்த,
எம் குலதெய்வப் பெயர் ஈங்கு இடுக’ என
அணி மேகலையார் ஆயிரம் கணிகையர்,
“மணிமேகலை” என வாழ்த்திய ஞான்று//

கோவலன் மூதாதை ஒருமுறை கடலோடிச் செல்கையில் மரக்கலம் உடைந்து தத்தளித்திருக்கையில் அவன் செய்த அருந்தவப் பலனால், இந்திரன் ஏவலில் கடல்மிசை வாழ்ந்திருக்கும் மணிமேகலா எனும் அதிதேவதை அவன்முன் வந்து தோன்றி அஞ்சேல் என்று அவனைக் காத்துக் கரைசேர்த்த கதையினை நினைவுகூர்ந்து அந்த மணிமேகலாவின் பெயரே குழந்தைக்கு வைக்கப்படுகிறது. பின்னர் மாதவியின் கனவிலும் அந்தத் தேவதை தோன்றி தம் உருக்காட்டி மறைகிறது.

manimekala_java_3
manimekala_java_2
manimekala_java_1


‘பரப்பு நீர்ப் பவ்வம் (பெருங்கடல்) பலர் தொழக் காப்போள்’ என்றும் ‘திரை இரும் பௌவத்துத் தெய்வம் ஒன்று உண்டு’ என்றும் மணிமேகலை காப்பியத்தில் குறிக்கப்படும் அந்தக் கடலரசி, மணிமேகலையை மயக்கிலாழ்த்திக் கொண்டு சென்று மணிபல்லவத்தீவில் வைத்துத் துயிலெழுப்பி அவள் வாழ்வின் பயனை எடுத்தியம்பிப் பின்னர் ‘வேற்றுருவு எய்தவும், அந்தரம் திரியவும், ஆக்கும் இவ் அருந்திறன் மந்திரம் கொள்க!’ என்றும், ‘மக்கள் யாக்கை உணவின் பிண்டம் ஆதலால் இப் பெரு மந்திரம் இரும்பசி அறுக்கும்’ என்றும் – விரும்பியவண்ணம் உருமாறவும், வான்மிசை ஏறிப்பறக்கவும், பசியை வெல்லவும் வல்ல – மூன்று மந்திரங்களைச் சொல்லித் தருகிறாள்.

manimekala_java_4

இறுதியில்

//வானவன் விழாக் கோள் மா நகர் ஒழிந்தது
மணிமேகலா தெய்வம் மற்று அது பொறாஅள்
அணி நகர் தன்னை அலை கடல் கொள்க என
இட்டனள் சாபம் பட்டது இதுவால்// என்று வானோர்க்குப் பூசனையும் இந்திரவிழாவும் மறந்து போன பூம்புகாரைக் கடற்கோளில் மறைப்பதும் அவளே.

காப்பதும் அழிப்பதும் அந்தக் கடலன்னையே.

இன்றும் ஒட்டுமொத்த ஜாவானியரும் வணங்கியிருக்கும் இந்தோநேசியாவின் காவல் தெய்வம் இந்த மணிமேகலா தெய்வமே!

எப்படி, எந்தப் பெயரில்?

(10)

பரப்பு நீர்ப் பவ்வம் பலர் தொழக் காத்திருக்கும் கடலரசி ராத்து கிடுல்

அவள் பெயர் ராத்து கிடுல் (Ratu Kidul). Ratu என்றால் ராணி Kidul என்றால் கடல். அவளே திரை இரும் பௌவத்துத் தெய்வமமான கடலரசி!

ஆனால் இந்தோனேசியர் எவரும் அவளைக் கடலரசி என்று தவறியும் வேறேதும் அடைமொழியின்றிச் சொல்லிவிட மாட்டார்கள். தேவி ராத்து கிடுல், பெருமதிப்புக்குரிய தலைவி ராத்து கிடுல் (Kyai Kanjeng Ratu Kidul) என்றே மிகமிக அச்சம் கலந்த மரியாதையுடன் அவளை விளிப்பர்.

அவளே தென்கடலாம் ஹிந்துமஹாசமுத்திரத்தின் பேரரசி.

http://en.wikipedia.org/wiki/Nyai_Roro_Kidul

Ratu_kidul_1

பெருங்கடல் சூழ்ந்த தீவுக்கூட்டங்களால் ஆன நாடான (Archipelago) இந்தோநேசியாவுக்கு அவளே காவல் தேவதை. ஜாவாவின் மேற்கு முனையிலிருந்து பாலியின் கிழக்கு முனைவரை அவளை வழிபடாத இடங்களே இல்லை. இன்றும் இந்தோநேசிய அரசகுடும்பத்தினர் அனுதினமும் அவளுக்குப் படையல் வைத்து வணங்காமல் எந்த வேலையும் தொடங்க மாட்டார்கள்.

Ratu_Kidul_deity_and_Sukarnoஇந்தோநேசியாவின் முன்னாள் அதிபர் சுகர்ணோ இந்தக் கடலரசியின் பெரும்பக்தர். ஜாவாவின் தென்மேற்குமுனையில் ‘ப்லாபுவான் ராத்து’ (ராணியின் துறைமுகம்) என்றோர் கடற்கரையோரச் சிற்றூர் இருக்கிறது [ Pelabuhan_Ratu ] இது இந்தக்கடலரசி வந்து ஓய்வெடுக்கும் இடம் என்பது ஜாவானியரின் தொன்னாள் நம்பிக்கை. இங்குதான் அதிபர் சுகர்ணோ ஒரு வாதாமரத்தின் கீழ் கடலரசியின் பல சக்திகள் கைவரப் பெற்றதாய்ச் சொல்வர். அதே இடத்தில் கடற்கரையோரம் ஒரு பிரம்மாண்டமான எட்டடுக்கு மாளிகை ஹோட்டல் (Samudra Beach Hotel) ஒன்றையும் சுகர்ணோவே கட்டி எழுப்பினார்.

இன்றும் இந்த ஹோட்டலில் ஓர் அறை (அறை எண் 308) இந்தக் கடலரசிக்கென்று பிரத்யேகமாய் ஒதுக்கப்பட்டு தினமும் பகலில் தேவிக்குப் பலவித பூஜைகள் செய்யப்பட்டு இரவில் பூட்டப்பட்டுவிடும். அவள் இரவில் வந்து போகும் அடையாளங்கள் இருப்பதை அங்கே பூஜை செய்வோர் நான் போயிருந்தபோது சுட்டிக் காட்டினர். அங்கே சில மணித்துளிகள் விசேட அனுமதி பெற்றுத் தொழுது வந்தேன்.

இந்த அறை குறித்து விவரமாய் வலையில் தேடிப் படிக்கலாம். மாதிரிக்கு ஒன்று இங்கே.

Samudra Beach Hotel, Pelabuhan Ratu, West Java

Samudra Beach Hotel, Pelabuhan Ratu, West Java

இந்தப்பகுதியில் ஆண்டுக்கொருமுறை ஏப்ரல் மாதத்தில் மீனவமக்கள் வந்து கூடி இரண்டு நாள் இந்தக் கடலரசிக்குத் திருவிழா கொண்டாடுவது வழக்கம். எந்த எதிர்ப்பு வந்தாலும் கடலன்னைக்கு நடைபெறும் இந்தத் திருவிழாவை யாரும் தடுக்க முடியாது. இதை விமர்சிக்க முயல்வோரே பேராபத்துகளில் சிக்கிக்கொள்ளும் கதைகள் இருப்பதால் இன்றுவரை இது தொடர்கிறது.

வரும் ஏப்ரலில் கொண்டாடப்பட இருக்கும் இந்த விழாகுறித்த அரசறிக்கை:

Sea offerings ceremony in Pelabuhan Ratu

Ratu_kidul_2பண்டுநாள்முதல் இவளின் காட்சி கிட்டிய ஜாவானியர் இவளை இடையில் மணியொளி வீசும் மேகலை அணிந்த தெய்வமாகவே வர்ணிக்கின்றனர். அதுபோலவே இவளை வரைந்திருப்பதை எல்லாப் படங்களிலும் காணலாம்.

இன்றும் இந்தக் கடலரசியின் உள்ளூர்க்கதைகள் பல பலவிதங்களில் பாடப்படுகின்றன. அவற்றில் குறிப்பாய் நம் காப்பியத்தில் காணும் வண்ணமே வேண்டியபடி உருமாறவல்ல, எங்கும் மனோவேகத்தில் பறக்கவல்ல இவள் வல்லமைகளே புகழ்ந்து பாடப்படுவன. இவளின் தமிழகத் தொடர்புகள் இன்று அறுந்து விட்டாலும் இவளே மணிமேகலா தெய்வம் என்பதில் எனக்கு ஐயமில்லை.

தென்பெருங்கடலின் பேரரசி மணிமேகலையின் கதையை எழுத அருள்புரிந்த தருமமாநகரத்தின் கடைசி மாமன்னன் ப்ரபு சிலிவாங்கியின் (Prabu Siliwangi) திருப்பாதங்களை வணங்கி முடிக்கிறேன்.

சமர்ப்பணம்:

மணிமேகலை காப்பியத்தை அரும்பாடுபட்டுத் தேடிச்சேகரித்து நமக்குத் தந்திருக்கும் தமிழ்த்தாத்தா பெரியார் உ.வே.சா. அவர்களுக்கு.

“அடிக்குறிப்பில் நான் எழுதிய குறிப்புரையோடு, புத்தகம் அச்சாகத் தொடங்கியது. முதல் பாரத்தைப் பார்த்து உத்தரவு கொடுத்த போது என் உள்ளத்தில் இருந்த உவகைப் பெருக்கை இறைவனே உணர்வான்! ‘இந்த நூலையும் நாம் பதிப்பிப்போமா!’ என்று அலந்திருந்தவனாதலின் அதற்கு ஓர் உருவும் ஏற்பட்டதைப் பார்த்து என் உள்ளமும் உடலும் பூரித்தன.

மகா வித்துவான்கள் பலர் இந்த நாட்டில் தேடிப்பார்த்தால் ஒருவேளை கிடைத்தாலும் கிடைப்பார்கள். தங்களைப் போல ஒருவர் அகப்படுவது அரிது” என்று அன்பொழுகக் கூறி வற்புறுத்தவே அந்த மகா மேதாவிகளுடைய வரிசையிலே பணிவோடு அமர்ந்தேன். இரட்டைச்சால்வையும் சம்மானமும் பெற்றேன். மணிமேகலையில் மேற்கொண்டஉழைப்பே அந்தப் பெருமைக்குக் காரணமென்று நான் எண்ணி இறைவன் திருவருளை வாழ்த்தினேன்”

- உ.வே.சா நினைவுக் குறிப்புக்கள்

Suba.T.

unread,
Nov 30, 2014, 3:19:38 AM11/30/14
to மின்தமிழ், Subashini Tremmel
அவசரமாக வாசித்தேன்.. நல்ல கட்டுரை. புக்மார்க் செய்திருக்கின்றேன். பிறகு வாசிக்கிறேன்.
பகிர்வுக்கு நன்றி.

சுபா

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

N. Kannan

unread,
Nov 30, 2014, 3:26:24 AM11/30/14
to mint...@googlegroups.com

On Nov 30, 2014 4:19 PM, "Suba.T." >


> அவசரமாக வாசித்தேன்.. நல்ல கட்டுரை. புக்மார்க் செய்திருக்கின்றேன். பிறகு வாசிக்கிறேன்.
> பகிர்வுக்கு நன்றி.
>
> சுபா
>

அருமையான பகிர்வு. இதைத் தூரக்கிழக்கு/கொரியப்பதிவில் போட்டிருக்கலாம். இல்யோன் சொல்வதைப்பார்த்தால் முதல் நூற்றாண்டிலேயே பௌத்தம் கொரியா போய்விட்டது.

திருமால் வழிபாடு அதற்கும் முந்தியது.

நா.கண்ணன்

Singanenjam Sambandam

unread,
Nov 30, 2014, 10:04:25 AM11/30/14
to mint...@googlegroups.com
அன்பருக்கு நன்றி...நல்ல பதிவு......படித்துப்  பலனடைந்தேன்.......

"ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகள் முன்பு இணைந்திருந்தன.......இப்போது சுந்தா நீரிணை உள்ள பகுதியில், க்ரகட்டோவ் எரிமலை கி.பி.533 இல் வெடித்து சிதறியதில் இவை பிரிந்தன ....." போன்ற செய்திகள் சரியானவையா? ஜாவா அரசர்களைப் பற்றி பேசும் " புஸ்த்தக் ராஜா" எனும் நூல் உள்ளதா..நீங்கள் அதைப் படித்திருக்கிறீர்களா...விரிவாக எழுதுங்களேன்.....

--

Maravanpulavu K. Sachithananthan

unread,
Nov 30, 2014, 5:48:23 PM11/30/14
to mint...@googlegroups.com, hol...@gmail.com

Madurai Koolavaanikan Seeththalai Saathanaar (circa 200 CE) wove imageries around authenticity in his epic, Mamimekali. He had spun his imaginations around the real life story of a teenager. Had he not effectively mixed imageries, his literature would have been an irrecoverable piece of buried record. Creative literary style demands recording authenticity, inter woven with imageries, catering to the taste of readers. Analytical mind will hunt for authenticity in his treatise. Wilhelm Geiger [1908] in his introduction to the translation of Mahavamsa, said, “…our method is simply to eliminate from the tradition all the miraculous stories and consider what is left over as authentic history…..”

Manimeakalai was born to parents irremovably embedded in human history. Her father Koavalan was a merchant of fame. He had a family. In spite of having a dutiful and beautiful wife Kannaki, he fell in love with another woman Maathavi and lived with her. Manimeakalai was born outside wedlock to Koavalan and Maathavi. When Manimeakalai was born, Koavalan had left Maathavi, to rejoin Kannaki and both had left Poompuhaar to Madurai. A fatherless child, growing in the midst of men-less homes, Manimeakalai was inclined towards devotion to discipline and divinely conduct; an attitude in total contradiction to the ancestral tradition of her grandmother, Chithrapathi.

Chozha prince Uthayakumaran tried to win over Manimeakalai. Even though Manimeakalai was attracted towards him, she remained steadfastly resolute to her renunciated life style. She travelled out of Poompukaar and sailed to Manipallavam (Jaffna) crossing the littoral sea to avoid the romantic overtures of Prince Uthayakumaran. At Manipallavam, she learnt more about Buddhism and undertook a missionary life to feed the hungry.

She came back to Poompuhaar as a Buddhist nun and continued to feed the poor and hungry. Lovelorn Prince Uthayakumaran did not give up. At one point of time in his efforts to reach Manimeakalai, Prince Uthayakumaran was killed as a result of a mistaken identity. Manimeakalai was sent to prison even though she had no role in the killing. When it was known that Manimeakalai was innocent, the King set her free.

Wanting to start afresh her missionary life to feed the poor and having heard about a famine in Java, as a teenager, she crossed the ocean by joining a ship, proceeding to the far away island of Java. King Punniyaraasan was the then ruler of Java. With the help of an interpreter, one time a resident of Poompuhaar, the King understood the mission of Manimeakalai. The King provided Manimeakalai the necessary support to her mission. He also learnt from her the elementary principles of Buddhism.

When the King asked her to teach him more on the doctrine, she suggested to him to travel to Manipallavam (Jaffna), a centre of Buddhist learning. She set sail to Manipallavam first. King Punniyaraasan with his retinue followed her in another fleet. King Punniyaraasan and his retinue were provided intensive education on the doctrine. They returned to Java to propagate Buddhism among Javanese.

Manimeakalai was told about tidal waves sweeping away the city of Poompuhaar. She decided to travel by sea from Manipallavam to Thiruvanathapuram where she learnt more on the various religious philosophies from exponents in those fields. From Thiruvanathapuram she travelled to Kaanchipuram and remained attached to a monastery as a Buddhist missionary, feeding the poor, until her death.

Saathanaar adds miraculous powers to Manimeakalai in crossing seas. In all her five crossings of the sea, Saathannar says that she always flew. As pointed out earlier, putting away miracles and imageries, one could easily adduce that there were frequent sailings of cargo cum passenger ships to destinations east and west of Tamilakam, carrying goods and persons. Manimeakalai, travelling in an ocean liner alone as a teenager and as a woman might have been a factor which made Saathanaar to portray her as a flier. Also Saathanaar could have wanted to adduce divine powers to his heroine.

First account of the shipping line to Java was when, Aaputhiran was moving to Java, upon hearing the famine conditions there. The ship, in which he travelled south, made a stop-over at Manipallavam (Jaffna) for a night or two, before proceeding further south east towards Java. Aaputhiran strayed away during transit at Manipallvam and the ship sailed away on schedule to Java leaving him ashore. (14:79-90)

Second account was when King Punniyaraasan travelled in a fleet of ships to travel to Manipallvam (Jaffna) to meet Manimeakalai taking along with him skilled ship builders to attend to repairs in mid-ocean. Javanese were ship builders and were adept at maintaining them. (25:124-127)

In southern Java, near Jogjakarta is the famous Buddhist temple of Borobudur, the largest Buddhist temple in the world. It is one of the Seven Wonders of the World as well. Indonesian historical records say that Buddhism was the second oldest religion in Indonesia after Hinduism, to arrive around the second century, a period during which Manimeakalai was preaching in Java.

She crossed the language barrier in Java through an interpreter, a court official or Kanjukan, an inhabitant of Java who had earlier resided in Poompuhaar for trading. (25:11-20)

Her travel to Java begins few months after the Chithirai festival. Durations of either her period of incarceration (22:1) or the subsequent period of her stays with the queen at the palace (23:1) after the Chithirai festival are not clear from the text, but a wild estimation would place the departure to Java few months after April. Java, being south of the equator, was experiencing the tropical summer because of winter solstice or dhakshinayana. Saathanaar does not mention the period of her stay in Java. Since she was on a mission to spread Buddhism and had the patronage of the king, presumably she stayed for a few months to few years. Also it was the beginning of the era of Buddhist missionary work. She might have joined missionaries or led them.

King of Java, Punniyaraasan delegated his power to his minister for a period of one month (25:123) before undertaking his 4,000 km. (one way) sea journey to Manipallavm. He was expecting to travel to and fro within 30 days. Assuming that his entourage stayed at Manipallavam for one week, the sea journey should have taken two weeks each way.

Extensive knowledge of wind directions and astronomy guided Tamil sailors. Venniyak Kuyaththiyaar (100 BCE), in poem 66 of puranaanooru, praising the Chozha king Karikaal Valavan, says that his ancestors were maritime lords because they knew to use wind directions to venture the oceans; …நளியிரு முன்னீர் நாவாய் ஓட்டி வளிதொழில் கண்ட உரவோன் மருக…

Travel diary / documentary evidences on political, commercial and cultural interactions confirm the ancient lush and lucrative maritime activities of the Tamils during the era of Manimeakalai. (Neelakanta Sastri K. A., 1939)

Kadalan vazhuthi, the marine superintendent of the Paandyan King Nedunchezhiyan donated the cave dwelling, the Tamizhi inscription (dated 200 BCE) of Maankulam along the Madurai – Mealur Road emphasized the maritime strength of the then Paandyan kings. (தமிழ் பிராமிக் கல்வெட்டுகள், 2006) 

Dolmen tombs and urns excavated in Philippines, Malay Peninsula, Java and other parts of Indo-China, along with a large variety of Tamil country made iron weapons, implements, glass beads and bangles provide evidence to the Tamil maritime ventures into the archipelago stretching to Philippines during and preceding the era of Manimeakalai (200 BCE to 200 CE). H. Otley Bayer, R. B. Dixon and M. Coedes concluded from these evidences that Sri Lanka, Malaya, Champa, Java, Sumatra, Bali, Borneo and Philippines were most exposed to Tamil influence for many centuries beginning 500 BCE.

An ocean liner, kappal, more than 30 to 40 meters long, with curved keels, is a floating village in a sense, with a captain, aviaries (for locating terrains), navigators (for wind directions and star positions), sailors, oarsmen, skilled ship repairers, medicos, armed escorts, diary keepers, entertaining artists, interpreters, passengers, merchants, provisions, water, medicines, cargo, mails, treasury of gold, silver and coins of countries along with other paraphernalia associated with court gifts and courtesies.   

rajam

unread,
Nov 30, 2014, 8:26:56 PM11/30/14
to mint...@googlegroups.com, hol...@gmail.com
நன்றி, செல்வன்.

திரு ஜாவா குமார் அவர்களின் பதிவுகளை நெடுநாள் முன்பு தேவ் + ஹரி அனுப்பியிருந்தார்கள். படித்துப் பரவசமடைந்தேன். அங்கே நேரில் போய்ப் பார்க்க மிகவும் ஆவல் கொண்டேன். 

அதோடு ஒரு வியப்பும் -- மதுரையில் இருந்துகொண்டு சீத்தலைச்சாத்தனாரால் எங்கேயோ இருக்கும் ஜாவா நிலப்பகுதியை இப்படி எப்படி நுணுக்கமாக, துல்லியமாக விளக்க முடிந்தது??

[நம்பினால் நம்புங்கள் ... ஒவ்வொரு நாள் இரவிலும் படுக்கையில் படுத்துக்கொண்டே ... தூக்கம் வருமுன் ... சிலப்பதிகாரம், மணிமேகலைக் கதைகள் என் மனத்தில் ஓடும். ஆபுத்திரனின் பிச்சைப்பாத்திரத்தைப் பெறுவதற்காக, புத்த தேவனின் கொள்கையில் மனம் செலுத்தி மணிமேகலையும் தீவதிலகையும் கோமுகிப் பொய்கைக் கரையில் நின்ற கோலத்தைக் கற்பனை செய்வேன்! விசாக பௌர்ணமி இரவு. இரண்டு பெண்கள் தன்னந்தனியாக அந்தத் தீவில் கோமுகிப் பொய்கையின் முன். எனக்கும் அங்கே போக ஆசை வரும். எனக்கென்னவோ ஒரு குருட்டு நம்பிக்கை. அந்தப் பிச்சைப்பாத்திரம் (== அமுதசுரபி) என் கைக்கு வந்து சேரும் என்று!!! கிறுக்குத்தனம்!!! நம் வரலாற்றுப் புதின ஆசிரியர் திவாகர்தான் என் கனவைப் பற்றி ஒரு கதை புனையவேண்டும்!]

rajam

unread,
Nov 30, 2014, 8:27:56 PM11/30/14
to mint...@googlegroups.com, hol...@gmail.com
I'd like to know who wrote the following account. There's a lot of inaccuracies in this account. Such accounts/reports should not be taken for granted or propagated.

Faithfully,
rajam



On Sunday, November 30, 2014 2:48:23 PM UTC-8, Maravanpulavu K. Sachithananthan wrote:

Madurai Koolavaanikan Seeththalai Saathanaar (circa 200 CE) wove imageries around authenticity in his epic, Mamimekali. He had spun his imaginations around the real life story of a teenager. Had he not effectively mixed imageries, his literature would have been an irrecoverable piece of buried record. Creative literary style demands recording authenticity, inter woven with imageries, catering to the taste of readers. Analytical mind will hunt for authenticity in his treatise. Wilhelm Geiger [1908] in his introduction to the translation of Mahavamsa, said, “…our method is simply to eliminate from the tradition all the miraculous stories and consider what is left over as authentic history…..”

Manimeakalai was born to parents irremovably embedded in human history. Her father Koavalan was a merchant of fame. He had a family. In spite of having a dutiful and beautiful wife Kannaki, he fell in love with another woman Maathavi and lived with her. Manimeakalai was born outside wedlock to Koavalan and Maathavi. When Manimeakalai was born, Koavalan had left Maathavi, to rejoin Kannaki and both had left Poompuhaar to Madurai. A fatherless child, growing in the midst of men-less homes, Manimeakalai was inclined towards devotion to discipline and divinely conduct; an attitude in total contradiction to the ancestral tradition of her grandmother, Chithrapathi.

Chozha prince Uthayakumaran tried to win over Manimeakalai. Even though Manimeakalai was attracted towards him, she remained steadfastly resolute to her renunciated life style. She travelled out of Poompukaar and sailed to Manipallavam (Jaffna) crossing the littoral sea to avoid the romantic overtures of Prince Uthayakumaran. At Manipallavam, she learnt more about Buddhism and undertook a missionary life to feed the hungry.

She came back to Poompuhaar as a Buddhist nun and continued to feed the poor and hungry. Lovelorn Prince Uthayakumaran did not give up. At one point of time in his efforts to reach Manimeakalai, Prince Uthayakumaran was killed as a result of a mistaken identity. Manimeakalai was sent to prison even though she had no role in the killing. When it was known that Manimeakalai was innocent, the King set her free.

Wanting to start afresh her missionary life to feed the poor and having heard about a famine in Java, as a teenager, she crossed the ocean by joining a ship, proceeding to the far away island of Java. King Punniyaraasan was the then ruler of Java. With the help of an interpreter, one time a resident of Poompuhaar, the King understood the mission of Manimeakalai. The King provided Manimeakalai the necessary support to her mission. He also learnt from her the elementary principles of Buddhism.

When the King asked her to teach him more on the doctrine, she suggested to him to travel to Manipallavam (Jaffna), a centre of Buddhist learning. She set sail to Manipallavam first. King Punniyaraasan with his retinue followed her in another fleet. King Punniyaraasan and his retinue were provided intensive education on the doctrine. They returned to Java to propagate Buddhism among Javanese.

Manimeakalai was told about tidal waves sweeping away the city of Poompuhaar. She decided to travel by sea from Manipallavam to Thiruvanathapuram where she learnt more on the various religious philosophies from exponents in those fields. From Thiruvanathapuram she travelled to Kaanchipuram and remained attached to a monastery as a Buddhist missionary, feeding the poor, until her death.

...

செல்வன்

unread,
Nov 30, 2014, 9:24:21 PM11/30/14
to rajam, mintamil
ராஜம் அம்மா

ஜாவா குமார் எழுதிய இந்த பதிவு வலையுடன் நின்றுவிடாமல் மேலும் ஆராய்ச்சிக்கு உட்பட வேண்டும் என்பதே என் ஆவல். ஆனால் அது நிறைவேறும் வழி எதுவும் புலப்படவில்லை.

இதுகுறித்து மேலும் தேடியதில் மணிமேகலா தெய்வம் குறித்து வர்ஜினியா பல்கலைகழக பேராசிரியர் ஆன் மோனியஸ் எழுதிய "Imagining a Place for BuddhismLiterary Culture and Religious Community in Tamil-Speaking South India" எனும் நூல் கூகிள் புக்ஸில் படிக்க கிடைத்தது. மணிமேகலா தெய்வம் கீழை நாடுகள் எங்கும் பரவலாக இருந்த தெய்வம் எனவும், தமிழகத்தை மையமாக கொண்டு ஒரு ரீஜனல் கலாசாரம் மணிமேகலா தெய்வத்தை ஒட்டி அமைந்தது எப்படி என்பதையும், ஒருவருக்கொருவர் தொடர்பற்ற கிழக்காசிய பகுதிகள் இப்படி ஒரே கலாசாரத்தில் ஒருங்கிணைந்தது குறித்தும் சுவாரசியமாக ஆசிரியர் விவரிக்கிறார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நூல் முழுமையாக அதில் இல்லை. வர்ல்ட்கேட் நூலக சர்வீஸ் மூலம் நூலை கடன் வாங்க ஒரு விண்ணப்பம் அனுப்பியுள்ளேன். நூல் கிடைத்ததும் அது குறித்து விரிவாக கட்டுரை தொடர் எழுத உள்ளேன்.

Nagarajan Vadivel

unread,
Nov 30, 2014, 9:35:11 PM11/30/14
to மின்தமிழ்
ஜாவாவில் பெண் தெய்வ வழிபாடு பெளத்தம் தழுவியவர்களால் போற்றப்பட்டதாக அங்கு வாழ்பவர்கள் சொல்ல்வதைக் கேட்டிருக்கிறேன்.  ஆயினும் அது மணிமேகாலா என்ற பெயரில் வழங்கியதா என்பது தெரியாது.  பவானி என்ற பெயரில் ஒரு பெண் தெய்வம் இருந்ததாகப் படித்துள்ளேன்.  ஆயினும் இவற்றின் காலம் கி.பி ஏழாம் நூற்றாண்டளவில் இருப்பதாகக் குறிப்பிடப்படுவதால் மணிமேகலா தெய்வத்துடன் தொடர்புடையதா என்பதை அறிய இயலவில்லை


ஜாவா பற்றிய சில மின் நூல்கள் என்னிடம் உள்ளன.  படித்துவிட்டுப் பின்னூட்டம் இடுவேன்

பூனைமுகன்

rajam

unread,
Nov 30, 2014, 10:00:07 PM11/30/14
to mint...@googlegroups.com
Dear Selvan,

God Bless You in your Tamil studies! இதைத் தவிர இப்போதைக்கு என்னால் எதுவும் சொல்ல இயலாதப்பா!

என் அடிப்படைக் கேள்வி … மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச்சாத்தனார் என்பவர் எப்படி ஜாவா போன்ற வெளிநாட்டுப் புறநிலங்களை அவ்வளவு துல்லியமாக விவரித்தார்" என்பதே. இதற்கு யாராவது பொருத்தமான விளக்கம் அளித்தால் மகிழ்வேன்.

மற்றபடி … 

மணிமேகலைக் காப்பியத்தைப் பற்றி ஆய்வு செய்த அமேரிக்கர்களை எனக்கு நன்றாகவே தெரியும்!!! ;-)

அன்புடன்,
ராஜம்


--
--

தேமொழி

unread,
Nov 30, 2014, 10:52:07 PM11/30/14
to mint...@googlegroups.com
அம்மா,  புலவர் சாத்தனாரே  ஒரு வணிகர். அவரே கடற்பயணத்தில் நேரில் பார்த்த இடங்களை வைத்து காப்பியம் படைத்திருக்கலாம்.

இல்லாவிட்டால் அவரிடம் கொள்முதல் செய்ய  வரும் திரைகடலோடும் வணிகர்களுடன் தொடர்பு (இது அவரது உறவினராகவோ, நண்பராகவோ ) இருக்கலாம். சிலர் அருமையாக நேரில் கண்டதை விவரிப்பார்கள்.  அந்தக் கதைகளை உள்வாங்கி எழுதியிருக்கலாம். 

around the world in 80 days எழுதிய ஜூல்ஸ் வெர்ன் அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் தவிர வேறிடம் சென்றதில்லை என்பார்கள்.  

..... தேமொழி

Nagarajan Vadivel

unread,
Dec 1, 2014, 12:16:25 AM12/1/14
to மின்தமிழ்

2014-12-01 9:22 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
அம்மா,  புலவர் சாத்தனாரே  ஒரு வணிகர். அவரே கடற்பயணத்தில் நேரில் பார்த்த இடங்களை வைத்து காப்பியம் படைத்திருக்கலாம்.

​பழந்தமிழர் வாணிகத்தில் பல பிரிவுகள் உள்ளனவே.  மதுரைக் கூலவணிகன் சாதுவப் பிரிவைச் சேர்ந்தவர்.  அவர்கள் உள்நாட்டு வணிகத்தில் மட்டும் ஈடுபட்டவர்கள்.  ஒருவேளை அவர்கள் சமணர்களாக இருந்து கடல்பயணம் செய்யாமல் இருந்திருக்கலாம்.  ​மாநாய்க்கன் என்ற பிரிவு திரைகடலோடித் திரவியம் தேடியவர்கள்.  பெளத்தர்கள் மாநாய்க்கர் என்ற பிரிவு கடலோடிகள்.  ​வெளிநாட்டிலிருந்து கடல்பயணம் தரைப்பயணத்தில் தமிழகத்துக்கு வந்தவர்களும் உண்டு.

நம்மிடையே கிடைக்கு ஆவணங்கள் சங்ககாகத்தை மட்டும் தொட்டுச் சொல்லும் குறிப்புகளையும் தாண்டிக் கடல்வழியில் வந்த/சென்ற பயணிகள் அவர்கள் குறிப்பு தமிழகக் கடற்கரையில் நிறையப் பட்டினங்கள் புரம்கள் உள்நாட்டிலிருந்து பொருட்களைக் கடற்கரையில் உள்ள புரத்துக்கொண்டு செல்ல கடற்கரையிலிருந்து உள்நாட்டுக்குக் கொண்டுசெல்ல நீர்வழிப்பாதைகள் நிலவழிப்பாதைகள் நிறைந்து முகத்துவாரத்துக்கான போக்குவரத்தை செயல்படுத்திய பாதைகள் பற்றிய மேலதிகத் தகவல் தேவை.  காலிகட்டையும் புலிகட்டையும் இணத்த பெருவழிப்பாதை பட்டுப்பாதை மிளகுப்பாதை என்று பலபாதைகளைப்பற்றிய தகவல் தொகுக்கப்பட வேண்டும்.  லண்டனில் இந்தியா அலுவலகத்தில் தமிழ்நாட்டின் ஒவ்வொரு கிராமத்தைப்பற்றியும் வரைபடத்துடன் கூடிய தரவுகள் உள்ளன.  அதைவைத்து தமிழகத்தின் நில நீர் போக்குவரத்துக்கான கணினி வரைபடங்களை அரசின் நிதியுதவிபெற்றுச் செயல்படுத்த ஆட்கள் தேவை
பூனைமுகன்

Maravanpulavu K. Sachithananthan

unread,
Dec 1, 2014, 1:53:48 AM12/1/14
to mint...@googlegroups.com, hol...@gmail.com
QUOTE
I'd like to know who wrote the following account. There's a *lot of
inaccuracies* in this account. Such accounts/reports should not be taken
for granted or propagated.
UNQUOTE
If you are referring to my comments, please pin pont the inaccuracies and help in correcting them.
We are in min tamil to learn.
You will be a great teaher.

Maravanpulavu K. Sachithananthan

unread,
Dec 1, 2014, 2:01:13 AM12/1/14
to mintamil
சாவகம், நக்காவரம், யாழ்ப்பாணம் ஆகிய இடங்களுக்கான கடல் பயணங்கள், அந்த நாட்டு இயற்கை நிலை, மக்கள் நிலை இவை சாத்தனாரின் விளக்கங்கள்.
காந்தாரம், வரணாசி, திருவனந்தபுரம் என இன்றைய தமிழகத்துக்கு அப்பால் உள்ள நிலம் சார் இடங்கள் விளக்கமும் சாத்தனாருடையன.
இலங்கையின் பாதபங்கய மலை அவரது விளக்கத்தில் வருகிறது.
அவரது புவியியல் அறிவு பயண அறிவு புலப்படும் இடங்கள் பல.

2014-12-01 9:22 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/GblHXHvyGPI/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
Maravanpulavu K. Sachithananthan

N. Ganesan

unread,
Dec 1, 2014, 10:21:57 AM12/1/14
to mint...@googlegroups.com, vallamai
Anne Monius is a professor at the Divinity School, Harvard University (for several years now). BTW, her husband is a Tamil. Interesting book is her work
on Buddhism. Also, pl. read two volumes edited by A. Veluppillai & P. Schalk (now both retired). Some good books on Tamil Buddhism is published by
Institute of Asian Studies, Chennai.

N. Ganesan

rajam

unread,
Dec 1, 2014, 12:08:16 PM12/1/14
to mint...@googlegroups.com
மணிமேகலைக் காப்பியம் எழுதிய சாத்தனாரின் பெயரிலிருந்து அவர் உள்நாட்டு வணிகர் என்று தெரிகிறது, தேமொழி. நாகராசன் ஐயாவும் அதைச் சுட்டியிருக்கிறார். 

வங்கக்கடல் கடந்து சென்று வந்த வணிகர்களிடமிருந்தே அவர் பிற நாடுகளைப் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொண்டிருக்கவேண்டும். 

ஆனல், இவர் "கூல வாணிகன்." இவரிடமிருந்தோ பிற "சாத்து" வணிகர்களிடமிருந்தோ பிற நாடுகளுக்குக் கூலம் (== சிறு தானியம்) சென்றதா என்று தெரியவில்லை. 

எதுவானாலும் இவருடைய விவரிப்பு வியக்கத்தக்கது.

rajam

unread,
Dec 1, 2014, 1:26:42 PM12/1/14
to mint...@googlegroups.com, hol...@gmail.com
மதிப்பிற்குரிய ஐயா, வணக்கம்.

என் மறுமொழி, தமிழில், கீழே இடைச்செருகலாக. 



On Sunday, November 30, 2014 10:53:48 PM UTC-8, Maravanpulavu K. Sachithananthan wrote:
QUOTE
I'd like to know who wrote the following account. There's a *lot of
inaccuracies* in this account. Such accounts/reports should not be taken
for granted or propagated.
UNQUOTE
If you are referring to my comments, please pin pont the inaccuracies and help in correcting them.
We are in min tamil to learn.
You will be a great teaher.

On Monday, 1 December 2014 06:57:56 UTC+5:30, rajam wrote:
I'd like to know who wrote the following account. There's a lot of inaccuracies in this account. Such accounts/reports should not be taken for granted or propagated.

Faithfully,
rajam



On Sunday, November 30, 2014 2:48:23 PM UTC-8, Maravanpulavu K. Sachithananthan wrote:

Madurai Koolavaanikan Seeththalai Saathanaar (circa 200 CE) wove imageries around authenticity in his epic, Mamimekali. He had spun his imaginations around the real life story of a teenager. Had he not effectively mixed imageries, his literature would have been an irrecoverable piece of buried record. Creative literary style demands recording authenticity, inter woven with imageries, catering to the taste of readers. Analytical mind will hunt for authenticity in his treatise. Wilhelm Geiger [1908] in his introduction to the translation of Mahavamsa, said, “…our method is simply to eliminate from the tradition all the miraculous stories and consider what is left over as authentic history…..”

Manimeakalai was born to parents irremovably embedded in human history. Her father Koavalan was a merchant of fame.

மணிமேகலையின் தந்தை கோவலன் ஒரு வணிகன் என்ற குறிப்பு இல்லை. உள்நாட்டு வணிகனாகிய மாசாத்துவானின் மகன் என்ற குறிப்பு உண்டு.


 

He had a family. In spite of having a dutiful and beautiful wife Kannaki, he fell in love with another woman Maathavi and lived with her. Manimeakalai was born outside wedlock to Koavalan and Maathavi. When Manimeakalai was born, Koavalan had left Maathavi,


இங்கே தெளிவுபடுத்த வேண்டிய குறிப்பு: மணிமேகலை பிறப்பதற்கு முன்போ பிறந்தவுடனேயோ கோவலன் மாதவியைப் பிரியவில்லை. மாறாக, மணிமேகலையின் பிறப்பைக் கொண்டாட அவன் மாதவியுடன் சேர்ந்து தானம் செய்ததைச் சிலப்பதிகாரம் சொல்கிறது.

 

to rejoin Kannaki and both had left Poompuhaar to Madurai. A fatherless child, growing in the midst of men-less homes, Manimeakalai was inclined towards devotion to discipline and divinely conduct;

இங்கே தெளிவுபடுத்த வேண்டிய குறிப்பு. வயதுக்கு வந்த மணிமேகலையை அவளுடைய தாய் மாதவிதான் "அறவழி"ப் படுத்துகிறாள். அப்போது மணிமேகலையின் விருப்பம் என்ன என்பது யாருக்குமே தெரியாது. அதனால், அவளாக அறவழிப்பட்டாள் என்று சொல்வது சரியில்லை.

 

an attitude in total contradiction to the ancestral tradition of her grandmother, Chithrapathi.

Chozha prince Uthayakumaran tried to win over Manimeakalai. Even though Manimeakalai was attracted towards him, she remained steadfastly resolute to her renunciated life style. She travelled out of Poompukaar and sailed to Manipallavam (Jaffna) crossing the littoral sea to avoid the romantic overtures of Prince Uthayakumaran.

இங்கே தெளிவுபடுத்த வேண்டியது: உதயகுமரனின் இடையூறு இருக்கக்கூடாது என்பதுக்காகவே, மணிமேகலைக்குத் தெரியாமலே, மணிமேகலா தெய்வம் அவளைப் பூம்புகாரின் உவவனத்திலிருந்து மணிபல்லவத்துக்குக் கொண்டு சேர்த்தாள். Of her own accord Manimekalai did not sail to Manipallavam. 

 

At Manipallavam, she learnt more about Buddhism and undertook a missionary life to feed the hungry.

She came back to Poompuhaar as a Buddhist nun

இது தவறான கூற்று. மணிபல்லவத் தீவிலிருந்து மணிமேகலை ஒரு பிக்குணியாகத் திரும்பவில்லை.

பவுத்த பிக்குணியாவது என்பது பல நிலைகளைக் கடக்கவேண்டும். குறிப்பாக, ஆசான் ஒருவரிடமிருந்து பவுத்த கொள்கைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். அதெல்லாம் மணிமேகலைக்கு இன்னும் அமையவில்லை. 

 

and continued to feed the poor and hungry. Lovelorn Prince Uthayakumaran did not give up. At one point of time in his efforts to reach Manimeakalai, Prince Uthayakumaran was killed as a result of a mistaken identity. Manimeakalai was sent to prison even though she had no role in the killing. When it was known that Manimeakalai was innocent, the King set her free.


இங்கே தெளிவு செய்யவேண்டியது: அரசன் மணிமேகலையை விடுதலை செய்யவில்லை. உதயகுமரன் கொலைக்குப்பின் சோழ அரசன் மணிமேகலையைச்  சிறைப்படுத்தினான். மகனை இழந்த சோழ அரசி மணிமேகலையை வஞ்சம் தீர்க்க நினைத்து அரசனிடமிருந்து மணிமேகலையைத் தன் வசத்தில் வாங்கிக்கொண்டு, அவளைப் பலவகையில் துன்புறுத்தினாள். ஆனால், அரசியின் துன்புறுத்தல்களால் அவதிப்படாத மணிமேகலையின் ஆற்றலை அறிந்த அரசி மணிமேகலையுடன் நல்ல உறவு கொண்டு அவளே மணிமேகலையை விடுவித்தாள்.  

 

Wanting to start afresh her missionary life to feed the poor and having heard about a famine in Java,


சாவகத்தில் வறுமை என்று வணிகர்கள் மூலம் கேள்விப்பட்டு அங்கே போக விரும்பி முயன்றவன் ஆபுத்திரன், மணிமேகலை இல்லை! 


as a teenager, she crossed the ocean by joining a ship,


மணிமேகலையோ அவளைப் புரந்த மணிமேகலா தெய்வமோ எந்தக் கப்பலிலும் போகவில்லை. வான்வழியே பறந்து சென்றனர்.


 

proceeding to the far away island of Java. King Punniyaraasan was the then ruler of Java. With the help of an interpreter, one time a resident of Poompuhaar,


புண்ணியராசனின் கஞ்சுக முதல்வன் பூம்புகாருக்குப் போயிருக்கிறான், ஆனால் அங்கே வாழ்ந்தவனில்லை.

 

the King understood the mission of Manimeakalai. The King provided Manimeakalai the necessary support to her mission.


எத்தகையான support????


 

He also learnt from her the elementary principles of Buddhism.

When the King asked her to teach him more on the doctrine, she suggested to him to travel to Manipallavam (Jaffna), a centre of Buddhist learning.


இது காப்பியத்தில் இல்லாத புதுமை! புண்ணியராசன் மணிமேகலையிடம் அப்படிக் கேட்கவேயில்லை! 


 

She set sail to Manipallavam first.


மணிமேகலை கப்பலில் போகவில்லை! விண்வழியே பறந்து போனாள்.

 

King Punniyaraasan with his retinue followed her in another fleet. King Punniyaraasan and his retinue were provided intensive education on the doctrine.


இதுவும் புதுமை! பவுத்த நெறியை அங்கே யாரும் புண்ணியராசனுக்குப் போதிக்கவில்லை. அவனுடைய முற்பிறப்பான ஆபுத்திரனைப் பற்றி அறிந்துகொள்ளும் வாய்ப்பே அவனுக்கு அமைந்தன.
 

They returned to Java to propagate Buddhism among Javanese.


புண்ணியராசனுடன் மணிமேகலை சாவகத்துக்குத் திரும்பவில்லை!!! திரும்பிய புண்ணியராசனும் பவுத்தக் கொள்கையைப் பரப்பவேண்டித் திரும்பவில்லை.
 

Manimeakalai was told about tidal waves sweeping away the city of Poompuhaar. She decided to travel by sea from Manipallavam to Thiruvanathapuram


இதுவும் தெளிவுபடுத்த வேண்டிய கருத்து. மணிமேகலையின் போக்குவரத்து எல்லாமே வான்வழியே. கப்பல், கடல் எதுவுமே அவள் பயணத்தில் இல்லை. மணிபல்லவத்திலிருந்து வஞ்சி நகருக்கு வான்வழிச் செல்கிறாள். 


 

where she learnt more on the various religious philosophies from exponents in those fields. From Thiruvanathapuram she travelled to Kaanchipuram and remained attached to a monastery as a Buddhist missionary,

 
அப்படியெல்லாம் கன்னிமாடக் கருத்து (monastery concept) அங்கே இல்லை. காஞ்சியில் அவளைத் தேடி வந்தவர்கள் அறவண அடிகள் + மாதவி + சுதமதி. அவளுடைய செயல்கள் அனுபவம் அனைத்தையும் அறிந்த அறவண அடிகள் அப்போதுதான் அவளுக்குப் பஞ்சசீல அமைதியைப் போதிக்கிறார்; அவளும் அந்தப் பஞ்சசீல அறிவுரையைக் கேட்டபின்னரே பிக்குணியாகும் நிலைய மேற்கொள்கிறாள். 

தவத்திறம் கொண்டு தருமம் கேட்டு-ப்
பவத்திறம் என-ப் பாவை நோற்றாள் 

என்பது மணிமேகலைக் காப்பியத்தின் கடைசிக் காதையான 30-ஆம் காதையின் கடைசி வரிகள். 

அதுவரை ... மணிமேகலை ஒரு சாதாரணப் பெண்; அவளுடைய தாய் மாதவியால் அறவழியில் செலுத்தப்பட்டவள்; துறவியாகவே இல்லை.

Oru Arizonan

unread,
Dec 1, 2014, 1:34:59 PM12/1/14
to mint...@googlegroups.com
தங்களின் சிலப்பதிகார விளக்கம் அருமை அம்மா.

அது இல்லாவிட்டால், சிலப்பதிகாரத்தை முழுவதும் கற்றறியாத பலரும் ஆங்கில விளக்கத்தையே  மனதில் பதிந்து வைத்திருப்போம்.

வணக்கம், நன்றி.

பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

rajam

unread,
Dec 1, 2014, 6:58:13 PM12/1/14
to mint...@googlegroups.com, hol...@gmail.com
தட்டுப்பிழையை மாற்றி ...

"தவத்திறம் பூண்டு தருமம் கேட்டு-ப்
பவத்திறம் அறுக-எனப் பாவை நோற்றனள்"

என்று படித்துக்கொள்ளவும்.

நன்றி,
ராஜம்

rajam

unread,
Dec 1, 2014, 7:00:06 PM12/1/14
to mint...@googlegroups.com, hol...@gmail.com

N. Ganesan

unread,
Dec 1, 2014, 7:00:07 PM12/1/14
to mint...@googlegroups.com


On Monday, December 1, 2014 10:34:59 AM UTC-8, oruarizonan wrote:
தங்களின் சிலப்பதிகார விளக்கம் அருமை அம்மா.

அது இல்லாவிட்டால், சிலப்பதிகாரத்தை முழுவதும் கற்றறியாத பலரும் ஆங்கில விளக்கத்தையே  மனதில் பதிந்து வைத்திருப்போம்.

மணிமேகலையும் சொல்லியிருக்கிறார்கள் பாருங்கள்.

நா. கணேசன்

rajam

unread,
Dec 1, 2014, 7:04:31 PM12/1/14
to mint...@googlegroups.com
நன்றி, ஐயா! 

அதனால்தான் இயன்ற அளவு மூலநூலைப் படிக்கவேண்டும் என்று நான் பன்னிப்பன்னிச் சொல்வது. அதைச் செய்ய எல்லாராலும் இயலாதுதான். ஆனால், தான் படித்த இரண்டாம் மூன்றாம் நிலையில் கிடைக்கும் புத்தகங்களின் செய்திகளே உண்மை என்று அடம் பிடித்து மூலநூலைப் படித்தவர்கள் சொல்லுவதைப் பழிக்கக்கூடாது. என்ன செய்ய!

அன்புடன்,
ராஜம்
On Monday, December 1, 2014 10:34:59 AM UTC-8, oruarizonan wrote:

Oru Arizonan

unread,
Dec 1, 2014, 7:11:26 PM12/1/14
to mint...@googlegroups.com
//மணிமேகலையும் சொல்லியிருக்கிறார்கள் பாருங்கள்.//

அதுவும்தான், உயர்திரு கணேசன், அவசரத்தில் குறிக்க விட்டுப்போய்விட்டது!
ஒரு அரிசோனன் 

N. Ganesan

unread,
Dec 1, 2014, 7:15:27 PM12/1/14
to mint...@googlegroups.com


On Monday, December 1, 2014 4:11:26 PM UTC-8, oruarizonan wrote:
//மணிமேகலையும் சொல்லியிருக்கிறார்கள் பாருங்கள்.//

அதுவும்தான், உயர்திரு கணேசன், அவசரத்தில் குறிக்க விட்டுப்போய்விட்டது!
ஒரு அரிசோனன் 


முனைவர் செல்வனின் இவ் இழையில் முக்கியம் மணிமேகலை தானே.

Oru Arizonan

unread,
Dec 1, 2014, 7:45:38 PM12/1/14
to mint...@googlegroups.com
எப்போதோ கையைத் தூக்கிவிட்டேன் உயர்திரு கணேசன், இனி தோட்டாக்களை என்மீது பாய்ச்சவேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Dec 1, 2014, 9:58:18 PM12/1/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்


On Monday, December 1, 2014 6:40:40 PM UTC-8, வேந்தன் அரசு wrote:
மணி மேகலை, விருத்தப்பாடல்கள் புழக்கத்துக்கு வருமுன் எழுந்த காப்பியமாக இருக்கும்/ அதனால் சிந்தாமணிக்கு முந்தியதும்  சிலம்புக்கு பிந்தியதும் ஆக இருக்கலாம்.


ஆம். சிலம்பு கி.பி. 4, 5 நூற்றாண்டுகள் என்பர். 5, 6 நூற்றாண்டுகளில் மணிமேகலை ஏற்பட்டிருக்கணும் என்கின்றனர்.
சங்க இலக்கியத்தில் பௌத்தச் செய்திகள் வெகு குறைவு. ஆந்திரரும், சிங்களரும் பௌத்தம் சார்ந்தமையால்,
தமிழ் மூவேந்தர் சமணத்தை ஆதரித்தனர்.  எனவே சங்கம் முடிந்துவிட்ட காலம் மணிமேகலையின் காலம்.
ஈழம் பற்றியும், யாவகம் (> சாவகம். யா = ‘Shorea trees, some 300 species exist in Indonesia'. யா மரங்கள் நிறைந்த தீவு யாவகம்.
இன்றும் சாவகச் சேரி யாழ்ப்பாணத்தில் இருக்கிறது. கடலாடல் மிகுதியான காலத்தில் மணிமேகலை எழுதப்பட்டிருக்கிறது.

நா. கணேசன்



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

N. Kannan

unread,
Dec 2, 2014, 7:49:15 AM12/2/14
to மின்தமிழ்
2014-12-02 10:58 GMT+08:00 N. Ganesan <naa.g...@gmail.com>:

இன்றும் சாவகச் சேரி யாழ்ப்பாணத்தில் இருக்கிறது. கடலாடல் மிகுதியான காலத்தில் மணிமேகலை எழுதப்பட்டிருக்கிறது.

ஜாவா குமார் எழுதியபின் நடந்தாய் வாழி மணிமேகலா! என்று இந்தோனீசியா போக ஆசை வருகிறது. மலேசியாவை விட இந்தோனிசியர் தம் இந்து/பௌத்த பாரம்பரியத்தை  மதித்துப் போற்றுகின்றனர் (உம்.சுகார்தோ).

மணிமேகலை எழுதப்பட்ட காலத்தில் சீராக தென்கிழக்குக்கரைக்கு வியாபாரம் நடந்திருக்க வேண்டும். கலியன் திருமங்கை ஆழ்வானும் வணிகக்கப்பல் நிறைந்த மல்லைக்கடல் பற்றிப் பேசுகிறார். மலேசிய கடா மாநிலத்தின் வரலாறு இதே காலக்கட்டத்தில் புத்த விகாரங்கள் (சண்டி) இருந்ததைக் கூறுகின்றன. எனவே கெடா (கடாரம்) வழியாக தென் சீனக்கடலுக்கும், சுமத்திரா, ஜாவா வழியாக தென் சீனாவிற்கும் கடவழிப் பயணம் தொடர்ந்து நடந்திருக்க வேண்டும். சீத்தலைச் சாத்தனார் இத்தகைய பயணத்தை மேற்கொண்ட பின் காவியம் படைத்திருக்கலாம்.

ஆனால் கொரியப் புராணங்கள் (chronicles) முதலாம் நூற்றாண்டிலேயே பௌத்தம் கொரியா வந்துவிட்டது என்கின்றன. இது ஆராயப்பட வேண்டிய விஷயம். கிரேக்க வணிகர்களின் குறிப்பிலிருந்தும் இம்மாதிரி கடல் வாணிகம் செய்யக்கூடியவர்கள் தமிழர்கள் என்பது ருஜுவாகிறது.

இந்தியாவின் சரிதம் தென்னாசியக் காடுகளுக்குள்ளும், மண்ணிற்கு அடியிலும் மண்டிக்கிடக்கிறது. மோதி அரசாவது நல்ல அறிஞர்கள் குழுவை இங்கெல்லாம் அனுப்பி இந்திய சரிதத்தை முறையாக ஆராய வேண்டும். தமிழக அரசு தென்கிழக்கு/தூரக்கிழக்கு ஆய்வுத்துறையே ஆரம்பிக்க வேண்டும்.

மணிமேகலா தெய்வம் கருணை செய்யட்டும்!

நா.கண்ணன்

N. Ganesan

unread,
Dec 3, 2014, 10:00:08 AM12/3/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, Santhavasantham, housto...@googlegroups.com, panb...@googlegroups.com, thami...@googlegroups.com, Kumar P.N., mozhitrust, Dr. Krishnaswamy Nachimuthu, sirpi balasubramaniam, MarabinMaindan Muthiah, Iravatham Mahadevan, S. V. Shanmukam, மு இளங்கோவன், guna thamizh, Stalin Gunasekaran

தமிழிலே இணையம் வந்த காலம். தமிழ்.நெட், பிறகு அகத்தியர் யாகூ குழுக்கள் எல்லாம் வந்தன. அப்போது ஜாவா குமார் நிறைய மின் தமிழ்க்குழுக்களில் எழுதியுள்ளார். நானும் நிறைய அவரோடு மடலாடியுள்ளேன். முக்கியமாக, திருக்குறள் பற்றி. பல ஆண்டுகளாய் குழுக்களில் அவர் எழுதுவதில்லை. ஆனால், ’தமிழ் ஹிந்து’ தளத்தில் எழுதுகிறார். அவரது கட்டுரையை அறியத் தந்தமைக்கு நன்றி, திரு. செல்வன். படித்துப் பார்க்கிறேன். முன்பெல்லாம், “குமார், யாவகம்” என்று மடல்களை யாகூ குழுக்களில் கையெழுத்திடுவார். (யாவகம் குமார் அவர்களின் ஒளிப்படம் நன்றி: அவரது கூகுள்+ வலைக்கண்).

யாவக த்வீபமும், யா மரங்களும்:
-----------------------------------------------------------

யா மரங்கள் (Shorea robusta) யாவகத்தில் மிகுதி.
தென்னிந்தியாவுக்கு நிறைய இறக்குமதி பல நூற்றாண்டுகளாய் ஆகிறது.
“Ainslie mentions three kinds of resin or dammar as common in the
bazaars of Southern India, but is in doubt as to the sources from
whence the different kinds are obatained. He observes that a great
portion of the dammar used in India is imported from Java, Bornea,
Joanna, and several of the Soloo Islands. ”

மறைந்த காஞ்சி மகாபெரியவர்:
”ஏற்கெனவே நான் சொன்னபடி, மிக நெருங்கிய தொடர்புள்ள சப்தங்கள்தான் இப்படி
ஒன்றுக்கொன்று மாற்ற அநுமதிக்கப்படுகின்றன. 'ஜ'வும் 'ய'வும் கிட்டிய
பந்துக்கள் என்பது தமிழைப் பார்த்தாலும் தெரிகிறது. ஜாவா என்று சொல்கிற
ஜாவகத் தீவை தமிழ் நூல்களில் யாவகம் என்றே சொல்லியிருக்கும். ஸாதாரணமாக,
ஒரு வார்த்தையின் முதல் எழுத்தாக வருகிற 'ஜ'வை 'ச'என்பதே தமிழ்
வழக்கமாயிருந்தாலும், வார்த்தைக்கு நடுவே 'ஜ'வந்தால் அதை'ய' என்றே ஆக்கி
வருகிறோம். 'அஜன்', 'பங்கஜம்'என்பனவற்றை 'அயன்', 'பங்கயம்'என்கிறோம்.”

யாவகம் வடமொழியில் யவ த்வீபம். அங்கெங்கே பார்லி தான்யம் விளைந்தது? பார்லி தானியம் மத்தியகிழக்கு நாடுகளுக்கானது. தென்கிழக்கு ஆசியாவின் ஜாவாவில் யவம் இல்லை. கடம்பு வடமொழியிலே கதம்ப மலர். கடம்பர்கள் கதம்ப குலம் (மேற்குக் கடற்கரை, பதிற்றுப்பத்து). அதுபோல. யாடு > ஆடு) யாடவர் > யாதவர் - யது குலம் (கண்ணபிரானின் யதுகுலத்தான்) என்று உருவாக்கியதுபோல, யவ தீவு என்று சொல்லியுள்ளனர். இன்னொரு உதாரணம் தருகிறேன்:  குதித்தாடுவது தாண்டவம் (< தாண்டுதல் என்னும் வினைச்சொல் தரும் வினைப்பெயர்.) அதிலிருந்து சம்ஸ்க்ருத இலக்கியம் உருவாக்கியது “தண்டு” என்ற பெயர் கொண்ட முனிவர்.
மாமல்லபுரம் பல்லவ சிற்பங்களிலும், பரத முனியின் பரத சாஸ்திரத்திலும் “தண்டு” என்னும் நாட்டியக்கலை சிவபிரானால் போதிக்கப்பெற்ற முனிவனைக் காணமுடியும். தண்டு < தாண்டவம் என்னும் தமிழ்ச் சொல்லில் இருந்து கட்டமைக்கப்பெற்ற கதாபாத்திரம் (நாட்யசாத்திரத்தில்).

யா (> ஆ, ஆச்சா) மரங்கள் மிகுதியானது யாவக (ஜாவா) தீவு.

ஆமை என்பதன் பழந்தமிழ்ச் சொல் - யாமை. யா- (யாத்தல்) என்னும் வினைச்சொல்லில் பிறந்தது யாமை. யாமை சின்னமாக உள்ளது யமுநா நதி. கங்கைக்கு விடங்கர்/இடங்கர் என்ற அங்கே வாழும் முதலை (Gharial) வாகனம் ஆதல் போல, யமுனை இந்தியாவின் சிற்பங்களில் யாமை (ஆமை) வாஹனத்துடனேயே எப்பொழுதும் காட்டப்படுகிறாள். ”பேரா. ப. அருளி தமது யா நூலூள்  'யா' என்ற வேருக்கு சேர்க்கை என்னும் பொருள் தந்து யாமை தன் உடல் உறுப்புகளை தன்னுள் சேர்த்துக் கொண்டு தன்னைக் காத்துக் கொள்ளும் திறம் கொண்டது என்னும் பொருளில் பண்டைத் தமிழர் யாமை என்ற சொல்லைப் புனைந்ததாகச் சொல்கிறார்.” (சேசாத்திரி). பேரா. எமனோ அவர்களுக்கு யாமை என்ற ஆமையின் பெயரையும், அதன் பொருளையும் தமிழ்ப் பேராசிரியர் யாரும் விளக்கவில்லை. அதனால் “சாமை” என்று யாமையின் பழம்பெயராய் எழுதியுள்ளார்! மேலே பட்டை ஒட்டி இருக்கும் மரம் யா அல்லது யாஅம் என இருக்கும். பாலைத் திணைப் பாடல்கள் சங்க
இலக்கியத்தில் நிறைய. அதன் கடவுள் துர்க்கையைப் ‘பழையோள்’ என்பர். அப் பழையோள் அணிவது யா மரத்தின் பூ என்கிறது தேவாரம். பாலைப் பாட்டுகளில் யானை யாஅம் மரப் பட்டைகளை உறிஞ்சித் தின்னும்; வறட்சிக் காலத்திலும் ஈரம் கொண்ட பட்டை யா (>ஆ, ஆச்சா) மரங்களில் உண்டு.

யாவகம் (இன்றைய ஜாவா தீவு) இம் மரங்களால் ஏற்பட்ட பெயர். அது போல், ஓடு மேலே ஒட்டி இருப்பதால்யாமை. இதே யா- (யாப்பு) சொல்லில் பிறந்தது யால்/ஆல் (ஆல மரம் - விழுதுகளால் ஏற்பட்ட பெயர். யாலுதல்/நாலுதல் - தொங்குதல்), யானை என்ற சொல்லும்.

>கல்கத்தாவிலிருந்து வெளிப்படும் "மாடன் ரெவ்யூ" என்ற
>மாதப் பத்திரிகையின் தை - மாசி ஸஞ்சிகையை நேற்றுப்
>பொழுதுபோக்கின் பொருட்டாகத் திருப்பிப் பார்த்துக்
> கொண்டிருந்தேன். அதிலே திருநெல்வேலி ஹிந்து காலேஜ்
> சரித்திர பண்டிதர் ஸ்ரீநீலகண்டையர் ஒரு சிறிய
> கடிதமெழுதியிருக்கிறார். ஏற்கனவே மேற்படி
> பத்திரிகையில் ஸ்ரீ யது நாத ஸர்க்கார் என்ற வித்வான்
> எழுதியிருந்த சில வார்த்தைகளைக் குறித்து ஸ்ரீஐயர் தமது
> கருத்துக்களை வெளியிடுகிறார். (பாரதியார், தென்றலுடன் பிறந்த பாஷை)

யதுநாத ஸர்க்கார் என்னும் பேராசிரியர் பெயர் அவரது வங்காள மொழியில் ஜதுநாத ஸர்க்கார். தமிழர்கள் முதலில் கடலாடி யா மரங்கள் அதிகம் உள்ள தீவுக்கு யாவகம் என்று பெயரிட, அது ஜாவா என்று இன்று அழைக்கப்படுகிறது. மணிமேகலை காப்பியத்தில் சாவகம் என்பது யாவகம்/ஜாவகம்.

யா மரங்கள் நிறைந்த பகுதி யாவகம் இன்று சாவகம் (ஜாவா) ஆகியுள்ளது. எப்பொழுதும்போல், வடமொழியார் யா என்னும் பொருளறியாது யவத்வீபம் என்று புதுக்கதை கட்டிவிட்டனர். அங்கு யவம் (பார்லி தான்யம்) விளைவதில்லை.  காகம், காகந்தி என்னும் துறைமுகங்களின் பேருக்கு ககந்தன் என்னும் சோழமன்னன் கதை மணிமேகலையில் உண்டே, காகம்பி (அ) காகந்தி (Cf. சிலம்பி/சிலந்தி) என்பது துறைமுகங்களுக்கு ஒரு பெயர். பவேரு ஜாதகம், சிந்து முத்திரை இவற்றில் அம்பி (கடற்கரையை ஒட்டிக் கடலாடும் சிறு கப்பல்) காகங்கள் துறைமுகம் கண்டதும் பறந்து கலங்கரைவிளக்கை அடையும். எனவே காகந்தி என்ற பெயர் புகார் நகருக்கு உண்டு. இதை வைத்து பௌராணிகர்கள் ககந்தன் என்ற சோழ மன்னனை சிருஷ்டித்தனர்.  காவிரி நதியை பேச்சில் காவேரி என்று வடநாட்டார் குறிக்க (காவிரி காவெரி என்று பேச்சுவழக்கில் ஆகும். ஆனால், வெ என்னும் குறிலெழுத்து வடக்கே இல்லையே. அதனால் காவேரி ஆகிவிட்டது. கிரேக்க இலக்கியம் காபெரிஸ் என (காவிரி > ) காவேரியைக் குறிக்கிறது. ககந்தன் என்று மணிமேகலை புதினம் (நாவல்) குறிப்பிடும் பௌராணிக கதைபோல, ஏற்பட்ட பௌராணிக கேரக்டர் தான் காவிரிக்கு கவேரமுனி. இதனை மிக அழகாக பேரா. ச. வையாபுரிப்பிள்ளையவர்கள் விளக்கியுள்ளார்கள் - இலக்கிய தீபம் என்னும் நூலிலே:

”காவிரிப்பூம் பட்டினம்

    பூவிரி நெடுங்கழி நாப்பண் பெரும்பெயர்க்
    காவிரிப் படப்பைப் பட்டினத் தன்ன
    செழுநகர்
என்று நக்கீரர் அகநானூற்றில் (205) பாடுகிறார். சங்கப் பாட்டுக்களில் பட்டினப் பாலையைத் தவிர, இது ஒன்றே காவிரிப்பூம் பட்டினத்தை அப் பெயரால் நேர்படக் குறிப்பது. இப்பட்டினத்திற்குரிய பிறிதொரு பெயர் புகார் என்பது. இப்பெயரை
    மருதஞ் சான்ற மலர்தலை விளைவயற்
    செய்யுள் நாரை யொய்யு மகளிர்
    இரவும் பகலும் பாசிழை களையார்
    குறும்பல் யாணர்க் குரவை யயரும்
    காவிரி மண்டிய சேய்விரி வனப்பிற்
    புகார்ச் செல்வ
எனப் பதிற்றுப் பத்தில் (73) அரிசில் கிழாரும்
    பூவிரி யகன்றுறைக் கணைவிசைக் கடுநீர்க்
    காவிரிப் பேரியாற்று அயிர்கொண் டீண்டி......
    ஞாலம் நாறு நலங்கெழு நல்லிசை
    நான்மறை முதுநூல் முக்கட் செல்வன்
    ஆலமுற்றம் கவின்பெறத் தைஇய.....மகளிர்
    கைசெய் பாவைத் துறைக்கண் இறுக்கும்
    மகர நெற்றி வான்தோய் புரிசைச்
    சிகரந் தோன்றார் சேணுயிர் நல்லிற்
    புகாஅர்
என அகநானூற்றில் (181) பரணரும்
    கொடுஞ்சுழிப் புகாஅர்த் தெய்வம் நோக்கிக்
    கடுஞ்சூன் தருகுவென் நினக்கே
என அகநானூற்றில்(110) போந்தைப் பசலையாரும் குறித்துள்ளார்கள். காவிரிப் பேராறு கடலிலே புகுகின்ற இடத்திற்குப் புகாஅர் என்று பெயர். இவ்விரண்டு பெயர்கள் மட்டும்தான் சங்க இலக்கியத்திற் பயின்று வருவன. 8-ம் நூற்றாண்டின் இறுதியிலே காகந்தி என்ற பெயரொன்றும் இதற்கு உளதாயிற்று. இப் பெயர் வரலாற்றைக் குறித்து
    மன்மருங் கறுத்த மழுவாள் நெடியோன்
    தன்முன் தோன்றல் தகாதுஒளி நீயெனக்
    கன்னி யேவலிற் காந்த மன்னவன்
    இந்நகர் காப்போர் யாரென நினைஇ......
    காறை கணிகை தனக்காம் காதலன்
    இகழ்ந்தோர் காயினும் எஞ்சுத லில்லோன்
    ககந்த னாமெனக் காதலிற் கூஉய்
    அரசா ளுரிமை நின்பா லின்மையிற்
    பரசு ராமன்நின் பால்வந் தணுகான்
    அமர முனிவன் அகத்தியன் தனாது
    துயர் நீங்கு கிளவியின் யான்தோன் றளவும்
    ககந்தன் காத்தலின் காகந்தி யென்றே
    இயைந்த நாமம் இப்பதிக்கு இட்டு
என மணிமேகலை(22,25-38) விளக்குகின்றது. ககந்தன் என்பவனால் காக்கப்பட்டமையால் காகந்தி எனத் தத்திதப் பெயர் வழங்கிற்றாம். இவன் தந்தையாகிய காந்த மன்னவனைக் குறித்தேனும், இக் ககந்தனைக் குறித்தேனும், இவ்வரலாறு குறித்தேனும் சங்க இலக்கியங்களில் ஓரிடத்தும் வாராமையால் இது பிற்பட்டெழுந்த ஒரு பௌராணிக வரலாறு என்பது தெளிவு. சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகட்குப் போலும் இக்கதை தெரிந்துள்ள தெனற்க்குச் சான்று இல்லை. ஆனால் கி.பி. 10-ம் நூற்றாண்டளவில் தோன்றிய திவாகரத்தில், இப்பெயர் புகுந்து விட்டது.
    காகந்தி புகார் காவிரிப்பூம்பட்டினம்
    என்பது திவாகரம் (5,111).
இது போன்றதொரு கதை காவிரியாற்றுக்கும் கற்பிக்கப்பட்டுள்ளது. கவேரர் என்ற ரிஷி பிரம தேவரைக் குறித்து அரிய தவஞ்செய்து, அவரருளால் விஷ்ணு மாயையைத் தம் புத்திரியாக அடைந்து முக்தி பெற்றனர். பின்பு அக் கன்னி பிரமதேவர் கட்டளையின்படி நதி வடிவு கொண்டு சென்றமையால் அந்நதி கவேர கன்னியென்றும் காவேரி யென்றும் பெயர் பெற்றதாம். இது காவேரி மாஹாத்மியத்தின் 23-ம் அத்தியாயத்தால் தெரிகிறதென்பர். மணிமேகலையும்
    கவேர கன்னிப் பெயரொடு விளங்கிய
    தவாக்கனி மூதூர் (9,52-53)
எனக் காவிரிப்பூம் பட்டினத்தைக் குறித்துள்ளது. காவிரியென்ற பழம்பெயரை 'சாபெரிஸ்' என டாலமி என்ற யவன ஆசிரியர் குறித்தனர். இப்பெயரையே திரித்துக் காவேரி யென மக்கள் வழங்கினர். இங்ஙனம் திரிந்த பெயரைச் சிலப்பதிகாரமும்
    திங்கள் மாலை வெண்குடையான் சென்னி செங்கோ லது ஓச்சிக்
    கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி! காவேரி!
    கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவா தொழிதல் கயற்கண்ணாய்
    மங்கை மாதர் பெருங்கற்பென் றறிந்தேன் வாழி! காவேரி!
என இனிதாக அமைத்துப் பாடிற்று. பின்னர் இப்பெயரைத் தத்திதமாகக்கொண்டு, நதிகளை மகளிராகவும் தாயராகவும் கூறும் வழக்குப்பற்றிக் காவேரியை ஒரு புத்திரியாக்கி, அவளுக்குத் தந்தையாகக் கவேரர் என்ற மகரிஷியைப் பௌராணிகர்கள் சிருஷ்டித்துவிட்டனர்.”

ககந்தன் - இந்தப் பௌராணிகக் கதையை மணிமேகலையில் சாத்தனார் பாடியுள்ளார். யதுகுல நந்தன் என்று க்ருஷ்ணனுக்கு
குலம் சிருஷ்டிக்கப்பட்டதும் யாடவர் (> யாதவர்) என்னும் தமிழ்ப் பெயருக்கு ஏற்பட்ட பௌராணிக கதைதான் என்று நீங்கள் அறிவீர்கள். யாடு என்ற சொல்லில் இருந்து யாடவர் யாதவர் ஆகியது என்ற குலம் கதையாய் சிருஷ்டிக்கப்பட்டதே அதுபோல் எனக் கொள்க. கிருஷ்ணன் யதுகுல நந்தன் என்னும் புராணம். கடம்ப குல அரசர்கள் கதம்பர் என்று வடமொழி ஆவதும் காண்க. யாவகம் (பௌராணிகப் பெயர்: யவ த்வீபம்) நெல்லின் ஊர், சாலி விளையுமூர் என்றே சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. 

கடுங் கோடை காலத்திலுங்கூட நீர்ப்பசை உள்ளவை யா மரங்கள். இதில் 300 வகைகள் இருப்பது இந்தோனேசியா தீவுகளில் தான்.
யா (> ஆ) = ஆச்சா, இதைச் சொல்வது நச்சினார்க்கினியர். யா என்பது அதன் பட்டை மரத்தோடு சேர்தலால். யாத்தல் = யா. யா மரப் பட்டையை உரித்து பெண்யானைக்கு ஊட்டும் களிறு. பெண் யானையின் தாகத்தை நீக்குவதற்காகப் பெரிய கையையுடைய ஆண்யானையானது, மெல்லிய கிளைகளையுடைய யா மரத்தின் பட்டையை உரித்து, அதன் நீரை அப்பிடி பருகச் செய்யும்.

நசை பெரிது உடையர்; நல்கலும் நல்குவர்;
பிடி பசி களைஇய பெருங் கை வேழம்
மென் சினை யாஅம் பொளிக்கும்
அன்பின-தோழி!-அவர் சென்ற ஆறே.
37. பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ

யா மரம் பற்றி என் பதிவு:

சாவகம் < யாவகம் என்னும் தீவின் பெயர் தமிழ்/திராவிடப்
பெயர் யா மரத்தால் ஏற்பட்டது. யவம் என்னும் பார்லியால்
அல்ல. யது குலம் < யாடவர், ககந்தன்  (புகார் அரசன்) < காகந்தி,
கவேரன் < காவேரி/காவிரி. தண்டு (பரத நாட்யம் சிவனால் கற்றுத் தரப்பட்ட முனி) < தாண்டவம் ...
என்பது போல் யவ த்வீப < யாவகம் த்ராவிடப் பெயர்
பிழையுடன் சம்ஸ்க்ருதப் பெயர்ஆகியுள்ளது.
அஞ்சொலாள் என்னும் அழகான தேவாரப் பெயர்
மாயூரம் அம்பாளுக்கு அபயாம்பிகை என்றானாற்போல்.
அஞ்சொலாள் மதுரவாசகி என்றல்லவா மொழிபெயர்க்கணும்?

சங்க இலக்கியத்தில் யா மரங்கள் வரும். யா மரத்திலிருந்து குங்கிலியம்,
சாம்பிராணி போன்றவை தமிழ்மக்கள் பெற்றனர். இவ்வகை மரங்கள் மிகுதியால் யாவகம் என்று பெயர்
கொடுத்தனர் இன்றைய ஜாவா தீவுதான் அது. கணி நிரலாளர்கள் இரவெல்லாம் கண்விழித்து
பிட்சாவும், ஜாவா குளம்பியும் குடித்து ப்ரோகிராம் எழுதுவர். இதனால், சங்கத் தமிழர் யா
மரத்தின் பெயரால் அழைத்த யாவக த்வீபம் ஜாவா என்ற கணிமொழிக்கும் பேரானது பிரசித்தம்.
யாவகத் தீவின் ராஜாக்கள் தாம் தென்கீழ் ஆசியாவின் நராதிபதிகளாக விளங்கினர்.
யாவக அரைசர்களிடம் விடுதலை பெற்று தமிழரின் மகேந்திர பர்வத மாடலை எடுத்து
தன் ஊரில் அமைத்து இரண்டாம் ஜெயவர்மன் தனிநாடாக்கினான் கி.பி. 804-ல்.
அவன் அமைத்த மகேந்திர பர்வதம் என்னும் சிவபுரிகளும் ஆலயங்களும் பசுமை
அடர்ந்த அடவிகளில் சிக்கியுள்ளது அருமை. சென்ற ஆண்டு மத்திய அமெரிக்காவில் மாயன்
நாகரீகத்தின் நகரங்கள் கண்டுபிடித்த டெக்னாலஜி இப்போது மகேந்திர பர்வதத்தை அடையாளம் காட்டுகிறது.

யா மரம் “shorea robusta", யாவகம் (> ஜாவா தீவு) தொடர்புகள் பற்றி ஒரு கட்டுரை  எழுத ஆவல். பார்ப்போம்.

நா. கணேசன்

Maravanpulavu K. Sachithananthan

unread,
Dec 3, 2014, 10:56:30 AM12/3/14
to mint...@googlegroups.com, hol...@gmail.com
QUOTE

Manimeakalai was born to parents irremovably embedded in human history. Her father Koavalan was a merchant of fame.

மணிமேகலையின் தந்தை கோவலன் ஒரு வணிகன் என்ற குறிப்பு இல்லை. உள்நாட்டு வணிகனாகிய மாசாத்துவானின் மகன் என்ற குறிப்பு உண்டு.
UNQUOTE
பதிகம் வரி14: கோவலன் என்பான் ஓர் வாணிகன் என இயம்பும்.

அரங்கேற்று காதை: வரி 165இல் 1008 கழஞ்சு பொன் கொடுத்தவருக்கு மாலை வாங்குநர் சாலும் நம் கொடிக்கு அறிவிப்பும், வரி 170இல் மாதவி மாலை கோவலன் வாங்கினன் என்றும் வருவது, கோவலனை வருவாய் உள்ள வணிகனாகவே சித்தரிக்கிறது.

கனாத்திறம் உரைத்த காதை: வரி 73-75இல், இச்சிலம்பு முதல் ஆகச் சென்ற கலனொடு உலந்த பொருள் ஈட்டுதல் உற்றேன் என வணிகனாகவே தன்னை அடையாளம் காண்கிறான் கோவலன். முதலீடு செய்து வருவாய் ஈட்டும் செய்தியைச் சொல்கிறான்.

கொலைக்களக் காதை: வரி 91-92இல், சீறடிச் சிலம்பின் ஒன்று கொண்டு யான் போய் மாறி வருவன், எனக் கோவலன் வணிகனாகப் புறப்படுகிறான். 

எனவேதான் Her father Koavalan was a merchant of fame என எழுதினேன்.
இதைப் போலவே பிற செய்திகளையும் என் சிற்றறிவுக்கு எட்டியவாறு எழுதினேன்.
ராசம் அவர்கள் இந்தக் குறிப்பிலும் தவறுகள் இருப்பின் சுட்டுவாராக, திருத்துவேன்.
ராசம் அவர்களின் மற்றக் குறிப்புகளுக்கும் என்
சிற்றறிவுக்கு எட்டியவாறு பின்னர் எழுதுவேன்.
நன்றி

Maravanpulavu K. Sachithananthan

unread,
Dec 3, 2014, 11:44:25 AM12/3/14
to mint...@googlegroups.com, hol...@gmail.com
QUOTE

He had a family. In spite of having a dutiful and beautiful wife Kannaki, he fell in love with another woman Maathavi and lived with her. Manimeakalai was born outside wedlock to Koavalan and Maathavi. When Manimeakalai was born, Koavalan had left Maathavi,


இங்கே தெளிவுபடுத்த வேண்டிய குறிப்பு: மணிமேகலை பிறப்பதற்கு முன்போ பிறந்தவுடனேயோ கோவலன் மாதவியைப் பிரியவில்லை. மாறாக, மணிமேகலையின் பிறப்பைக் கொண்டாட அவன் மாதவியுடன் சேர்ந்து தானம் செய்ததைச் சிலப்பதிகாரம் சொல்கிறது.
UNQUOTE

அரங்கேற்று காதையில் வரி 170, 171, 172 கோவலன் மாதவியைக் கைப்பிடித்து மனை புக்க செய்தி சொல்கிறது.

அந்திமாலைச் சிறப்புச்செய் காதை,
இந்திர விழவு ஊர் எடுத்த காதை,
கடல் ஆடு காதை,
கானல் வரி
எனத் தொடரும் கோவலன் மாதவி உறவு

கானல் வரி, வரி 52இல் மாதவியைக் கோவலன் பிரிந்தமை கூறும்.

வேனிற் காதை, வரி 70 கோவலனிடம் வயந்தமாலை வழி மாதவி கடிதம் அனுப்பும் செய்தி கூறும்.
வேனிற் காதை வரி 73 கோவலனைக் கடைத் தெருவில் வயந்தமாலை வணிகனாகச் சந்திக்கும் செய்தி கூறும்
வேனிற் காதை வரி 74-110 கோவலன் ஓலையை மறுத்தலைக் கூறும்

கனாத்திறம் உரைத்த காதை வரி 65-67இல் கண்ணகியிடம் கோவலன் வருவதைக் கூறும்

காடுகாண் காதை வரி 176-200 வனசாரிணி என்ற தெய்வம் வயந்த மாலையாக வந்து மாதவி துயர் கூறுகையிலும் மாதவி மீதுள்ள வெறுப்பைக் கொட்டும் கோவலனையே காண்கிறோம். 

புறஞ்சேரி இறுத்த காதை வரி 45-101 வரை கோசிகன் வழி மாதவி அனுப்பிய கடிதம் படித்து மாதவி தீது அற்றவள் எனத் தெளிகிறான் கோவலன். அக் கடிதத்தை பெற்றோரிடம் காட்டுமாறு அனுப்பிய கோவலன் கவுந்தி அடிகள் வழிகாட்டக் கண்ணகியுடனும் மதுரை நோக்கிய பயணத்தைத் தொடர்கிறான்.

அடைக்கலக் காதை வரி 21-40 வரை, மதுரையின் புறஞ்சேரியில் கோவலனிடம் மாடலன் கூறும் செய்தியே மணிமேகலையின் பிறப்புப் பற்றி வரும் முதலாவது செய்தி.

இவ்வாறான என் புரிதலே Manimeakalai was born outside wedlock to Koavalan and Maathavi. When Manimeakalai was born, Koavalan had left Maathavi, என எழுதுமாறாயிற்று.
ராசம் அவர்கள் திருத்தம் சொல்வாராயின் தெரிந்து கொள்வேன்.

இதற்குப் பின்னர் வரும் ராசம் அவர்களின் குறிப்புகளுக்கு என் சிற்றறிவுப் புரிதலைப் பின்னர் தருவேன்.

Oru Arizonan

unread,
Dec 3, 2014, 11:49:47 AM12/3/14
to mint...@googlegroups.com
சிலம்புச் செல்வர் என்று புகழப்பட்ட மதிப்பிற்குரிய ம.பொ .சி. அவர்கள் சிலப்பதிகாரத்தைப் பற்றி எழுதிய நூல்கள் ஏதேனும், வலையேற்றம் செய்யப்பட்டுள்ளனவா?  இருந்தால், அறிந்துகொள்ள ஆவலாக உள்ளேன்.

பணிவன்புடன் 
ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Maravanpulavu K. Sachithananthan

unread,
Dec 7, 2014, 7:59:54 PM12/7/14
to mint...@googlegroups.com, hol...@gmail.com

QUOTE

rajam

I'd like to know who wrote the following account. There are a lot of inaccuracies in this account. Such accounts/reports should not be taken for granted or propagated.

Faithfully, Rajam

தங்களின் சிலப்பதிகார விளக்கம் அருமை அம்மா. அது இல்லாவிட்டால், சிலப்பதிகாரத்தை முழுவதும் கற்றறியாத பலரும் ஆங்கில விளக்கத்தையே  மனதில் பதிந்து வைத்திருப்போம். வணக்கம், நன்றி. பணிவன்புடன்,

ஒரு அரிசோனன்

UNQUOTE

Comments by Rajam and the follow-up from Orizonan pointed to inaccuracies in my English text. Also Rajam suggested that such accounts/reports should not be taken for granted or propagated.

I examined my textual content, went through the pages in Silapathikaaram text and explained further on the veracity of the information I provided. I took the first two comments by Rajam.

I am yet to know whether I misled the min-tamil group, whether I gave an inaccurate account, whether my accounts/reports should not be taken for granted or propagated. Rajam is not responding. For her benefit I am repeating below my explanations for the first two comments.


If Rajam do not respond I will assume that my entire text remains reasonably accurate and useful to the readers and members of min-tamil.

 

I am repeating my explanations for the first two responses by Rajam.

QUOTE

Manimeakalai was born to parents irremovably embedded in human history. Her father Koavalan was a merchant of fame.

மணிமேகலையின் தந்தை கோவலன் ஒரு வணிகன் என்ற குறிப்பு இல்லை. உள்நாட்டு வணிகனாகிய மாசாத்துவானின் மகன் என்ற குறிப்பு உண்டு.

UNQUOTE

பதிகம் வரி14: கோவலன் என்பான் ஓர் வாணிகன் என இயம்பும்.

 

அரங்கேற்று காதை: வரி 165இல் 1008 கழஞ்சு பொன் கொடுத்தவருக்கு மாலை வாங்குநர் சாலும் நம் கொடிக்கு அறிவிப்பும், வரி 170இல் மாதவி மாலை கோவலன் வாங்கினன் என்றும் வருவது, கோவலனை வருவாய் உள்ள வணிகனாகவே சித்தரிக்கிறது.

 

கனாத்திறம் உரைத்த காதை: வரி 73-75இல், இச்சிலம்பு முதல் ஆகச் சென்ற கலனொடு உலந்த பொருள் ஈட்டுதல் உற்றேன் என வணிகனாகவே தன்னை அடையாளம் காண்கிறான் கோவலன். முதலீடு செய்து வருவாய் ஈட்டும் செய்தியைச் சொல்கிறான்.

 

கொலைக்களக் காதை: வரி 91-92இல், சீறடிச் சிலம்பின் ஒன்று கொண்டு யான் போய் மாறி வருவன், எனக் கோவலன் வணிகனாகப் புறப்படுகிறான்.

 

எனவேதான் Her father Koavalan was a merchant of fame என எழுதினேன்.

இதைப் போலவே பிற செய்திகளையும் என் சிற்றறிவுக்கு எட்டியவாறு எழுதினேன்.

ராசம் அவர்கள் இந்தக் குறிப்பிலும் தவறுகள் இருப்பின் சுட்டுவாராக, திருத்துவேன்.

ராசம் அவர்களின் மற்றக் குறிப்புகளுக்கும் என் சிற்றறிவுக்கு எட்டியவாறு பின்னர் எழுதுவேன்.

Maravanpulavu K. Sachithananthan

unread,
Dec 15, 2014, 10:22:07 AM12/15/14
to mintamil, K Selvan, Subashini Tremmel
If Rajam do not respond I will assume that my entire text remains reasonably accurate and useful to the readers and members of min-tamil.
It is for Ms Subahsini to raise the matter with Rajam for a quick response.
Reagards

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/GblHXHvyGPI/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.


--

Suba.T.

unread,
Dec 15, 2014, 10:25:32 AM12/15/14
to Maravanpulavu K. Sachithananthan, mintamil, Subashini Tremmel
2014-12-15 16:22 GMT+01:00 Maravanpulavu K. Sachithananthan <tami...@gmail.com>:
If Rajam do not respond I will assume that my entire text remains reasonably accurate and useful to the readers and members of min-tamil.
It is for Ms Subahsini to raise the matter with Rajam for a quick response.
Reagards

​Vanakkam Aiya.
Dr.Rajam has problem with her apple computer - she is struggling to fix the issue. She may not be able to respond to mails immediately due to this problem. 

anbudan
Suba


--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

P.N.Kumar Java

unread,
Jan 5, 2015, 12:46:14 AM1/5/15
to mint...@googlegroups.com
வணக்கம்!

மணிமேகலை காப்பியத்தில் வரும் ஜாவானியப் பகுதிகள் யாவும் அங்கே மெய்யில் நிகழ்ந்தவையே என்று நான் திண்ணமாய் நம்புகிறேன். ஜாவானியர் வணங்கியிருக்கும் கடலரசி ராத்து கிடூலே மணிமேகலா தெய்வம் என்பது நூறு விழுக்காடு உண்மை.

http://en.wikipedia.org/wiki/Nyai_Roro_Kidul
//Another aspect of her mythology was her ability to change shape several times a day.[7] Sultan Hamengkubuwono IX of Yogyakarta described his experience on spiritual encounters with the spirit Queen in his memoire; the queen could change shapes and appearance, as a beautiful young woman usually during full moon, and appear as an old woman at other times.[8]//

மணிமேகலை – 5-100
மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை
இந்திர கோடணை விழா அணி விரும்பி
வந்து காண்குறூஉம் மணிமேகலா தெய்வம்
பதிஅகத்து உறையும் ஓர் பைந்தொடி ஆகி..

மணிமேகலை – மந்திரங் கொடுத்த காதை 10-080
வேற்று உரு எய்தவும் அந்தரம் திரியவும் ஆக்கும் இவ் அருந் திறல்
மந்திரம் கொள்க என வாய்மையின் ஓதி..

 மேற்கு ஜாவாவின் சுந்தானியர் (Sundanese) மன்னர் பூமிச்சந்திரன் பெயரை இன்றும் மிகப்பரவலாய் வைத்துக் கொண்டிருப்பதைப் பாருங்கள். Candra Bumi என்று தேடியில் சொடுக்கவும்.

பிற பின்னர்..

அன்புடன்,

ஜாவா குமார்

N. Kannan

unread,
Jan 5, 2015, 3:33:09 AM1/5/15
to மின்தமிழ்
அன்பின் ஜாவா குமார்

உங்கள் மடல்களைப்படித்த பின் மணிமேகலா தெய்வத்தின் பால் அதிக ஈர்ப்பு வருகிறது. இங்குள்ள சீன பௌத்தம் என்பது மணிமேகலையின் கொடை என்று தனியாக நான் யூகித்தேன். உங்கள் சான்றுகள் அதை ஊர்ஜிதப்படுத்துகின்றன. 

ஆயினும் அன்னை 160 உயிர்களைப் பலி வாங்கிவிட்டாள். இன்னும் அந்தப்பயம், ரணம் போகவில்லை. ஏனிந்தப் பலி?

நா.கண்ணன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
 
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

N. Kannan

unread,
Jan 5, 2015, 3:42:24 AM1/5/15
to மின்தமிழ்
http://en.wikipedia.org/wiki/Nyai_Roro_Kidul
//Another aspect of her mythology was her ability to change shape several times a day.[7] Sultan Hamengkubuwono IX of Yogyakarta described his experience on spiritual encounters with the spirit Queen in his memoire; the queen could change shapes and appearance, as a beautiful young woman usually during full moon, and appear as an old woman at other times.[8]//

கொரியா சென்ற பாண்டிய (?) இளவரசி கடற்சினத்தை தணிக்க கூடவே சில கல் உருண்டைகளை எடுத்துச் சென்றதாக இல் யோன் சொல்கிறார். கடற் சினமென்றால் ராத்து கிடூலே (மணிமேகலா தெய்வம்) யின் அனுமதி பெற்று, அவளது கோப தாபங்களைத் தணிப்பதற்காக என்றும் பொருள் கொள்ளலாம். நம் இராணி கொரியா போனது முதல் நூற்றாண்டு. மணிமேகலை நடந்தது 4ம் நூற்றாண்டு. நம்பிக்கைகள் நூறாண்டு காலமானலும் அழிவதில்லை என்பதற்கு நாம் இன்றும் யாக சாலை அமைத்து யக்ஞம் செய்வதே சாட்சி. எனவே பாண்டிய இளவரசி செல்லும் போது ஏதாவது சடங்குகள் நடத்தி, மந்திரித்த கற்களை அனுப்பியிருக்க வாய்ப்புண்டு. பழைய நம்பிக்கைகளைத் தோண்ட வேண்டும்!

சுநாமி வந்த பின் இலங்கைப் பௌத்த பிட்சுக்கள் மணிமேகலா தெய்வத்திடம் பிரார்த்தனை செய்தது விழியப்பதிவாகியுள்ளது!

நா.கண்ணன்

Seshadri Sridharan

unread,
Jan 5, 2015, 5:46:14 AM1/5/15
to mintamil
நய்யன் என்ற ஆண் பால்பெயர் தமிழில் நய்யை என்றே ஆகும். 


சேசாத்திரி  

--

P.N.Kumar Java

unread,
Jan 6, 2015, 5:16:04 AM1/6/15
to mint...@googlegroups.com
அன்பின் கண்ணன்,

வணக்கம்! நலமா?

கடலரசி சினம் கொள்வதன் காரணம் மணிமேகலை நூலில் சுட்டப்படுகிறதே.
//வானவன் விழாக் கோள் மா நகர் ஒழிந்தது
மணிமேகலா தெய்வம் மற்று அது பொறாஅள்
அணி நகர் தன்னை அலை கடல் கொள்க என
இட்டனள் சாபம் பட்டது இதுவால்//

இந்திரவிழவினை எக்காரணம் கொண்டும் நிறுத்தலாகாது.

இன்று அதன் ஓர் அங்கமாய் இளைஞர்கள் முத்தத்திருவிழாவைத் தொடங்கியுள்ளார்களே!  :)

தொடர்வோம்..

பிகு: பணிப்பளு அதிகம்! உடன் விடையில்லையெனில் மன்னிக்கவும்.

P.N.Kumar Java

unread,
Jan 6, 2015, 5:21:03 AM1/6/15
to mint...@googlegroups.com


On Monday, January 5, 2015 2:12:24 PM UTC+5:30, N. Kannan wrote:
http://en.wikipedia.org/wiki/Nyai_Roro_Kidul
//Another aspect of her mythology was her ability to change shape several times a day.[7] Sultan Hamengkubuwono IX of Yogyakarta described his experience on spiritual encounters with the spirit Queen in his memoire; the queen could change shapes and appearance, as a beautiful young woman usually during full moon, and appear as an old woman at other times.[8]//

கொரியா சென்ற பாண்டிய (?) இளவரசி கடற்சினத்தை தணிக்க கூடவே சில கல் உருண்டைகளை எடுத்துச் சென்றதாக இல் யோன் சொல்கிறார். கடற் சினமென்றால் ராத்து கிடூலே (மணிமேகலா தெய்வம்) யின் அனுமதி பெற்று, அவளது கோப தாபங்களைத் தணிப்பதற்காக என்றும் பொருள் கொள்ளலாம். நம் இராணி கொரியா போனது முதல் நூற்றாண்டு. மணிமேகலை நடந்தது 4ம் நூற்றாண்டு.

பொச. 2 இறுதி / 3’ம் நூற்றாண்டு துவக்கம். சிலம்பைத்தொடர்வதே. 

Maravanpulavu K. Sachithananthan

unread,
Jan 27, 2015, 4:35:14 AM1/27/15
to mint...@googlegroups.com, hol...@gmail.com
I am asking Rajam to respond to my comments, without success for the past two months or so.
I am sure that by now the computer is working!!!


 
If Rajam do not respond I will assume that my entire text remains reasonably accurate and useful to the readers and members of min-tamil.
It is for Ms Subahsini to raise the matter with Rajam for a quick response.
Reagards



rajam

unread,
Jan 27, 2015, 11:18:30 AM1/27/15
to mint...@googlegroups.com, hol...@gmail.com
vaNakkam, aiyaa.

I got my computer fixed a few days ago. Yet there were some glitches in accessing group mails.

I will repsond to your comments pretty soon. 

Thanks for your patience.

rajam

rajam

unread,
Jan 27, 2015, 2:41:03 PM1/27/15
to mint...@googlegroups.com, hol...@gmail.com
என் மறுமொழி கீழே இடைச்செருகலாக ... சிவப்பு நிறத்தில்.


On Wednesday, December 3, 2014 at 7:56:30 AM UTC-8, Maravanpulavu K. Sachithananthan wrote:
QUOTE

Manimeakalai was born to parents irremovably embedded in human history. Her father Koavalan was a merchant of fame.

மணிமேகலையின் தந்தை கோவலன் ஒரு வணிகன் என்ற குறிப்பு இல்லை. உள்நாட்டு வணிகனாகிய மாசாத்துவானின் மகன் என்ற குறிப்பு உண்டு.
UNQUOTE
பதிகம் வரி14: கோவலன் என்பான் ஓர் வாணிகன் என இயம்பும்.

ஆம். இதை ஒரு 'குல அடையாள'மாகக் கொள்கிறேன்; வாழ்க்கையில் செய்த 'தொழில் அடையாள'மாக இல்லை.


அரங்கேற்று காதை: வரி 165இல் 1008 கழஞ்சு பொன் கொடுத்தவருக்கு மாலை வாங்குநர் சாலும் நம் கொடிக்கு அறிவிப்பும், வரி 170இல் மாதவி மாலை கோவலன் வாங்கினன் என்றும் வருவது, கோவலனை வருவாய் உள்ள வணிகனாகவே சித்தரிக்கிறது.

ஆம். இங்கே கோவலனை ஒரு பொருள்-பயனராகவே (consumer) கொள்கிறேன், வாழ்க்கைக்காக வணிகம் செய்தவன் என்று கொள்ளமுடியவில்லை. அதோடு, அவன் என்ன வணிகம் செய்தான் என்ற தெளிவில்லை.
 

கனாத்திறம் உரைத்த காதை: வரி 73-75இல், இச்சிலம்பு முதல் ஆகச் சென்ற கலனொடு உலந்த பொருள் ஈட்டுதல் உற்றேன் என வணிகனாகவே தன்னை அடையாளம் காண்கிறான் கோவலன். முதலீடு செய்து வருவாய் ஈட்டும் செய்தியைச் சொல்கிறான்.
 
கொலைக்களக் காதை: வரி 91-92இல், சீறடிச் சிலம்பின் ஒன்று கொண்டு யான் போய் மாறி வருவன், எனக் கோவலன் வணிகனாகப் புறப்படுகிறான். 

ஆம். ஆனால் அவன் அப்படி வணிகம் செய்யக் கருதினாலும் செய்யவேயில்லை. என்ன வணிகம் செய்தான் என்ற தெளிவில்லை.
 

எனவேதான் Her father Koavalan was a merchant of fame என எழுதினேன்.

எனவேதான் யானும் அவன் தன்னை எப்படிக் கருதிக்கொண்டாலும் தன்னைப் புகழ்படித்த வணிகனாக நிலைநாட்டிக்கொள்ளவேயில்லை என்பது என் கருத்து.  என்ன வணிகம் செய்தான் என்ற தெளிவில்லை.

 
இதைப் போலவே பிற செய்திகளையும் என் சிற்றறிவுக்கு எட்டியவாறு எழுதினேன்.


நமக்கு இருப்பது "சிற்றறிவு" என்று என்னைத் தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை. 

rajam

unread,
Jan 27, 2015, 2:42:51 PM1/27/15
to mint...@googlegroups.com, hol...@gmail.com
என் மறுமொழி கீழே இடைச்செருகலாக ... சிவப்பு நிறத்தில்.

On Wednesday, December 3, 2014 at 8:44:25 AM UTC-8, Maravanpulavu K. Sachithananthan wrote:
QUOTE

He had a family. In spite of having a dutiful and beautiful wife Kannaki, he fell in love with another woman Maathavi and lived with her. Manimeakalai was born outside wedlock to Koavalan and Maathavi. When Manimeakalai was born, Koavalan had left Maathavi,


இங்கே தெளிவுபடுத்த வேண்டிய குறிப்பு: மணிமேகலை பிறப்பதற்கு முன்போ பிறந்தவுடனேயோ கோவலன் மாதவியைப் பிரியவில்லை. மாறாக, மணிமேகலையின் பிறப்பைக் கொண்டாட அவன் மாதவியுடன் சேர்ந்து தானம் செய்ததைச் சிலப்பதிகாரம் சொல்கிறது.
UNQUOTE

அரங்கேற்று காதையில் வரி 170, 171, 172 கோவலன் மாதவியைக் கைப்பிடித்து மனை புக்க செய்தி சொல்கிறது.

அந்திமாலைச் சிறப்புச்செய் காதை,
இந்திர விழவு ஊர் எடுத்த காதை,
கடல் ஆடு காதை,
கானல் வரி
எனத் தொடரும் கோவலன் மாதவி உறவு

கானல் வரி, வரி 52இல் மாதவியைக் கோவலன் பிரிந்தமை கூறும். 

வேனிற் காதை, வரி 70 கோவலனிடம் வயந்தமாலை வழி மாதவி கடிதம் அனுப்பும் செய்தி கூறும்.
வேனிற் காதை வரி 73 கோவலனைக் கடைத் தெருவில் வயந்தமாலை வணிகனாகச் சந்திக்கும் செய்தி கூறும்
வேனிற் காதை வரி 74-110 கோவலன் ஓலையை மறுத்தலைக் கூறும்

கனாத்திறம் உரைத்த காதை வரி 65-67இல் கண்ணகியிடம் கோவலன் வருவதைக் கூறும்

காடுகாண் காதை வரி 176-200 வனசாரிணி என்ற தெய்வம் வயந்த மாலையாக வந்து மாதவி துயர் கூறுகையிலும் மாதவி மீதுள்ள வெறுப்பைக் கொட்டும் கோவலனையே காண்கிறோம். 

புறஞ்சேரி இறுத்த காதை வரி 45-101 வரை கோசிகன் வழி மாதவி அனுப்பிய கடிதம் படித்து மாதவி தீது அற்றவள் எனத் தெளிகிறான் கோவலன். அக் கடிதத்தை பெற்றோரிடம் காட்டுமாறு அனுப்பிய கோவலன் கவுந்தி அடிகள் வழிகாட்டக் கண்ணகியுடனும் மதுரை நோக்கிய பயணத்தைத் தொடர்கிறான்.

ஆம். இதை மறுக்கவில்லை. 
 

அடைக்கலக் காதை வரி 21-40 வரை, மதுரையின் புறஞ்சேரியில் கோவலனிடம் மாடலன் கூறும் செய்தியே மணிமேகலையின் பிறப்புப் பற்றி வரும் முதலாவது செய்தி.

ஆம். இதையும் மறுக்கவில்லை. ஆனால் அதே அடைக்கலக்காதையில் 40-53 வரிகளில் காணும் செய்தி என்னைக் குழப்புகிறதே. மணிமேகலைப் பிறப்புக்காக மாதவியுடன் சேர்ந்துதானே பொன்தானம் செய்திருக்கிறான் கோவலன்? 

"When Manimeakalai was born, Koavalan had left Maathavi," என்ற தங்கள் கூற்று என்னைக் குழப்பியது. இதைத் தமிழில் சொன்னால் எனக்குத் தெளிவு கிடைக்கும்.


...

Maravanpulavu K. Sachithananthan

unread,
Jan 27, 2015, 5:50:03 PM1/27/15
to mint...@googlegroups.com, hol...@gmail.com

Rajam has his/her own interpretation of the lines of Ilakoavadikal, completely varying from the interpreters from Adiyaarkku Nallaar to Puliyoork Keasikan. All of them have interpreted those lines in the manner I have said. I stand by my version.

Accuracy is one thing. Interpretation is another.

To say that I was inaccurate is malicious, and unbecoming of a member in a group discussion.

Moderators should not allow such unhealthy trends in this group. Please check such slanderous tendencies before allowing them to be posted. I request Subashini to act.  

கையில் அட்சய பாத்திரத்துடன் ஜாவானிய சரஸ்வதி

கையில் அட்சய பாத்திரத்துடன் ஜாவானிய சரஸ்வதி

rajam

unread,
Jan 27, 2015, 7:21:31 PM1/27/15
to mint...@googlegroups.com, hol...@gmail.com
மதிப்பிற்குரிய மறவன்புலவு சச்சிதானந்தன் ஐயா, வணக்கம்.

ராஜம் ஆகிய யான் is a 'she' not a 'he.'

///To say that I was inaccurate is malicious, and unbecoming of a member in a group discussion.///

தாங்கள் தமிழில் எழுதினால் தங்கள் உணர்வுகளை என்னால் ஓரளவு புரிந்துகொள்ள முடியும். "malicious" என்ற உணர்வுடன் நான் எதுவுமே எழுதவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறேன். 

அடியார்க்குநல்லார் தொடங்கி ... புலியூர்க்கேசிகன் வரை எல்லாருமே 'கோவலன் ஒரு வணிகன்' என்று சொல்லியதால் நீங்களும் அதைப் பின்பற்றியது இப்போதுதான் புரிகிறது. So ... my usage of the term "inaccurate" applies NOT TO YOU BUT TO அடியார்க்குநல்லார் தொடங்கி ... புலியூர்க்கேசிகன் வரை. 

ஆகவே, இப்போது என் கேள்வி உங்களுக்கில்லை அவர்களுக்கே ...

1. கோவலனை 'வணிகன்' என்று சிலப்பதிகாரப்பதிகத்தில் குறிப்பிடுவது குலத்தின் அடிப்படையிலா அல்லது அவன் செய்த தொழிலின் அடிப்படையிலா?

2. கோவலன் என்ன தொழில்/வணிகம் செய்தான்? 

3. "When Manimeakalai was born, Koavalan had left Maathavi," என்ற தங்கள் கூற்று என்னைக் குழப்பியது. இதைத் தமிழில் சொன்னால் எனக்குத் தெளிவு கிடைக்கும். நீங்கள் உறுதியாகச் சொல்லவேண்டும். 


///Moderators should not allow such unhealthy trends in this group. Please check such slanderous tendencies before allowing them to be posted. I request Subashini to act. ///

யானும் அவ்வாறே எதிர்பார்க்கிறேன்!


With honesty, integrity, and dignity,
--Rajam
...

தேமொழி

unread,
Jan 27, 2015, 7:33:25 PM1/27/15
to mint...@googlegroups.com, hol...@gmail.com
உங்கள் கருத்துகளுக்கு  மிக்க நன்றி மறவன்புலவு ஐயா ...ராஜம் அம்மா, 


ஒரு பதிவின் கருத்தினில்  தவறு இருக்கலாம் என சந்தேகிப்போர் ...

1.
எழுத்தாளரின் கோணத்திற்கு முதலில் சான்று  அல்லது விளக்கம் தருமாறு எழுத்தாளரிடம் கோரிக்கை விடுத்து ... 

அவர் தரும் தகவலுக்குப் பின்னர், பிழையிருப்பின் மறுக்கும் தங்களது மாறுபட்ட கருத்தினை முன் வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். 

(**** அத்துடன் இருசாரரும் விளக்கங்கள் கேட்கப்படும்பொழுது காலம் தாழ்த்துவதைத் தவிர்க்கவும், "விளக்கம்  கேட்கப்பட்ட இழையில்" மட்டும்,  எழுப்பப்பட்ட  வினாவிற்கு நேரிடையாகவும் ... மிகமிகத் தெளிவாக  தக்க விளக்கம் அளிக்கும்படியும் கேட்டுக் கொள்கிறேன்...இதுவே இரு சாராருக்கும் மரியாதை தரும் செயலாக அமையும்...)


2.
மாறாக, முன்னரே தவறு என உறுதியாகத்  தெரிந்திருப்பின் தங்களது சான்றுகளைக் காட்டிய பின்னர், பதிவில் காணும் தவறுகளைச் சுட்டிக் காட்டவும். 


எழுத்தாளரின் கோணத்திற்கு விளக்கம் பெறாமலோ அல்லது தக்க சான்றுகளின்றியோ ஒரு பதிவில் பிழை இருப்பதாகச் சொல்வது ...

பலரும் வாசிக்கும் ஒரு குழுமத்தில் எழுத்தாளரின் படைப்பாற்றலுக்கு மாசு கற்பிக்கும் நடவடிக்கையாக அமைந்துவிடும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.



எனவே  குழும உறுப்பினர்கள் கருத்தாடல்கள்/மறுமொழிகளில் ஆகியவற்றை  பிற குழும உறுப்பினர்களின் மதிப்பினைக் குறைக்காத வகையில் கவனமாக கையாளுமாறு  கேட்டுக் கொள்கிறேன். 



நன்றி.


மிந்தமிழ்க் குழும மட்டுறுத்தர்கள் சார்பில் 
 ..... தேமொழி 



***இது பொதுவான வேண்டுகோள்

rajam

unread,
Jan 27, 2015, 8:12:38 PM1/27/15
to mint...@googlegroups.com, hol...@gmail.com

On Tuesday, January 27, 2015 at 4:33:25 PM UTC-8, தேமொழி wrote:
உங்கள் கருத்துகளுக்கு  மிக்க நன்றி மறவன்புலவு ஐயா ...ராஜம் அம்மா, 

ரொம்பவே நன்றிங்க தேமொழி! 


ஒரு பதிவின் கருத்தினில்  தவறு இருக்கலாம் என சந்தேகிப்போர் ...

1.
எழுத்தாளரின் கோணத்திற்கு முதலில் சான்று  அல்லது விளக்கம் தருமாறு எழுத்தாளரிடம் கோரிக்கை விடுத்து ... 

அவர் தரும் தகவலுக்குப் பின்னர், பிழையிருப்பின் மறுக்கும் தங்களது மாறுபட்ட கருத்தினை முன் வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். 

அப்படியா? சரி சரி, அப்படியே செய்துவிடலாம்.
 

(**** அத்துடன் இருசாரரும் விளக்கங்கள் கேட்கப்படும்பொழுது காலம் தாழ்த்துவதைத் தவிர்க்கவும், "விளக்கம்  கேட்கப்பட்ட இழையில்" மட்டும்,  எழுப்பப்பட்ட  வினாவிற்கு நேரிடையாகவும் ... மிகமிகத் தெளிவாக  தக்க விளக்கம் அளிக்கும்படியும் கேட்டுக் கொள்கிறேன்...இதுவே இரு சாராருக்கும் மரியாதை தரும் செயலாக அமையும்...)

அப்படியா? இது பொதுமொழி. எனக்கில்லை. என் கணினிச்சிக்கலால் இப்போதைய காலத்தாழ்ச்சி. 


2.
மாறாக, முன்னரே தவறு என உறுதியாகத்  தெரிந்திருப்பின் தங்களது சான்றுகளைக் காட்டிய பின்னர், பதிவில் காணும் தவறுகளைச் சுட்டிக் காட்டவும். 

எனக்குத் தெரிந்த தவறுகளைத் தொடக்கத்திலேயே சுட்ட நான் தவறவில்லை; இழை முழுவதையும் கவனமாகப் படித்தால் தெரியும். 
 


எழுத்தாளரின் கோணத்திற்கு விளக்கம் பெறாமலோ அல்லது தக்க சான்றுகளின்றியோ ஒரு பதிவில் பிழை இருப்பதாகச் சொல்வது ...

பலரும் வாசிக்கும் ஒரு குழுமத்தில் எழுத்தாளரின் படைப்பாற்றலுக்கு மாசு கற்பிக்கும் நடவடிக்கையாக அமைந்துவிடும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

இதுவும் பொதுமொழி. 

மிக்க நன்றியுடன்,
ராஜம்
Reply all
Reply to author
Forward
0 new messages