> - பாசுரமடல் 001 - ஆழ்வார்களின்
> அறிமுகம்<http://heritagewiki.org/index.php?title=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E...>
> - பாசுரமடல் 002 - எல்லோரும் எல்லாமும் பெற
> வேண்டும்<http://heritagewiki.org/index.php?title=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E...>
> - பாசுர மடல் 003: பாயிரம் வாயிலாக தமிழ்
> மறுமலர்ச்சி<http://heritagewiki.org/index.php?title=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E...>
> - பாசுர மடல் 004 : ஆழ்வார்கள் அனுபவித்த
> இறைமை.<http://heritagewiki.org/index.php?title=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E....>
> - பாசுர மடல் 005 : காரணன் நீ, கற்றவை நீ, கற்பவை
> நீ.<http://heritagewiki.org/index.php?title=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E....>
> - பாசுரமடல் 006 : விதையாக நற்றமிழை
> வித்திட்டாய்.<http://heritagewiki.org/index.php?title=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E....>
>
> - பாசுர மடல் 007 : சொல்லினால் சுருங்க நின் குணங்கள் சொல்ல யார்
> வல்லரே ?<http://heritagewiki.org/index.php?title=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E...>
>
> - பாசுர மடல் 008 : அதீத காதலும் பக்தி
> இலக்கியமும்.<http://heritagewiki.org/index.php?title=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E....>
> - பாசுர மடல் 009 : சாதிகள் இல்லையடி
> பாப்பா.<http://heritagewiki.org/index.php?title=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E....>
> - பாசுர மடல் 010 : என் அமுதினைக் கண்ட
> கண்கள்.<http://heritagewiki.org/index.php?title=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E....>
> -
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
முதலில் பெருத்த நன்றி. பொதுவாக மக்களுக்கு இறைமை, பக்தி என்பதெல்லாம்
களிக்கும் மற்றொரு பொருளாகிப் போன காலத்தில் என்றோ நான் எழுதிய
பாசுரமடல்களை தாங்கள் சிரமப்பட்டு விக்கியில் ஏற்றி இருப்பதுடன் அதற்கு
விமர்சனம் இங்கு அளிப்பது இறைச்செயல் என்றே தோன்றுகிறது. ஏனெனில் ஆழ்வார்
சொல்வது போல் நம் வாழ்வு, `அத்தைத்தின்று அங்கே கிடக்கும்` என்ற நிலையில்
ஓடிக்கொண்டு இருக்கிறது. ஒரு மாபெரும் பொக்கிஷம் மண்மூடிக்கிடக்க அதன்
மீது உட்கார்ந்து புலம்பும் தரித்திரனாக நாமுள்ளோம்.
நான் வைணவ குடும்பத்தில் பிறந்தாலும் அதன் ஆழமான, தத்துவம் முகிழும்.
நீண்ட தமிழ் மரபை அறிந்தேன் அல்ல. எனவே என் வேர்களைத்தேடி நான் மேற்கொண்ட
ஒரு பயணம்தான் இப்பதிவுகள். கிருஷ்ணன் பாதமென்று கோகுலாஷ்டமியன்று
வைக்கும் சிறுபாதங்கள் போன்றவை அவை. மூழ்க, மூழ்க ஆழம் காண முடியாத
துறையாக இது இருப்பதை அறிகிறேன். ஆயினும் ஓர் திருப்தி, பாற்கடல் இனிப்பு
என்பதை கரையில் கொஞ்சம் தொட்டு வாயில் வைத்துக் கொண்டாலும் உணரலாம்தானே!
அது போல்தான் இதுவும் என்று தெரிகிறது.
திருமங்கை ஆழ்வார் நினைவிற்கு வருகிறார். அவர் கள்ளன். மூர்க்கன்.
காமுகன். ஆனால், அவருக்கு அசாதாரணமான அழகுணர்ச்சி உண்டு. இறைவன் நம்மிடம்
உள்ள குறைகளைவிட கிஞ்சித்து உள்ள நிறைகளைக் கொண்டு தன்னிடம் கவர்கிறான்.
கலியனின் ருசியை தூண்டிலாக வைத்து இறைவன் அவரைத் தடுத்தாண்டு விடுகிறார்.
அதுபோல் என்னிடமுள்ள அறிவியல்/ஆன்மீகம் எனும் அல்ப, சொல்ப ஆசைகளை ஒரு
பொருட்டாகக் கொண்டு தன் விஸ்வரூபத்தைக் காட்டி அருளுகிறான்.
நாலாயிரமும்தான் அந்த விஸ்வசொரூபம். அது தவிர வேறொரு சக்தி பீடம் தேவை
இல்லை. அதனுள் கால் வையுங்கள். You will experience a time warp.
மாறன் பத மலர் வெல்க! எங்கள் கோன் இராமானுச முனி வழி வெல்க!
உங்கள் முயற்சி வெல்க!
அன்புடன்
நா.கண்ணன்
பிகு: இப்போதெல்லாம் தனியாக நடக்காமல் எனக்கொரு உற்ற துணையாக ரங்கனாரை
அனுப்பி வைத்திருக்கிறானே. அதுதானே கருணை.
On Feb 3, 7:04 pm, coral shree <cora...@gmail.com> wrote:
> *ஆழ்வார்க்கடியான் பாசுர மடல்கள் - ஓர் அலசல் - பகுதி - 2. *
>
> *" ஒருமொழியே பலமொழிக்கும் இடங்கொடுக்கும்*
> *
> *
> *ஒருமொழியே மலமொழிக்கும் ஒழிக்கும்” என்ற*
> *
> *
> *ஒருமொழியைக் கருத்தினிலே நிறுத்தும் வண்ணம்*
> * *
> * ஒருமொழி ’நமச் சிவாய’ வென்பர்;*
> *
> *
> *‘ஹரிஹரி’யென் றிடினும்மஃதே ‘ராம ராம’*
> *
> *
> *‘சிவசிவ’வென் றிட்டாலும் அஃதே யாகும்*
> *
> *
> *தெரிவுறவே ‘ஓம்சக்தி’ யென்று மேலோர்*
> *
> *
> *ஜெபம்புரிவ தப்பொருளின் பெயரே யாகும்.*
> * *
> என்று...
>
> read more »
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
காலை எழுந்ததிலிருந்து மாலை முயங்கும்வரை நம் கவனத்தை ஈர்க்க ஆயிரம்
விஷயங்கள் இருக்கும் போது இறைச்சிந்தனை இடையில் எதற்கு? எனும் கலி
காலமிது!
இதில் தாங்கள் இறைச்சிந்தனை தாங்கும் ஒரு அலசலை மேற்கொண்டு இருக்கிறீர்கள்.
பின்னூட்டம் என்பது கூட நுண் அரசியலாகிவிட்ட மடலாடற்குழு அமைப்பில்
தாங்கள் தொடங்கியிருக்கும் தொடருக்கு அதிகமாக யாரும் பதிலிடவில்லையெ என
வருந்த வேண்டாம். கட்சிகள் பெருகிவிடும் அரசியலைப்பில் ஆன்மீகத்திற்கும்
கட்சிகள், தொண்டர்கள், lobbying தேவைப்படுவது ஆச்சர்யமில்லை :-)
ஆன்மீகம் என்றால் கூட அதிலும் நம்மைக் கவரும் விஷயங்கள். ஒதுங்கும்
விஷயங்கள் என்று இருக்கின்றன. எல்லாம் எல்லைக்கட்டி, பாத்திகட்டி
விவசாயம் செய்யப் பழகிவிட்டதன் காரணம் :-) இது `நம்மவர் விஷயம்` இது
`பரவிஷயம்` என்று தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது :-)) இந்த எல்லையை நாம்
எப்படிக் கடப்பது?
நாம் நினைப்பதை விடத்தமிழன் ஒரு 2000 ஆண்டுகளுக்கு முன் sophisticated ஆக
வாழ்ந்திருப்பது ஆச்சர்யத்தைத் தருகிறது. திணைக்கோட்பாடு ஒன்றே போதும்.
எப்படி நாம் வாழும் சூழல் நம்மை மாற்றி அமைக்கிறது எனும் அறிவு. ஏன்
நம்முள் இத்தனை வேற்றுமைகள் எனும் திறனாய்வு!
பக்தி காலத்தில் ஒருங்கிணைந்த, உலகு தழுவிய பார்வையை முன்வைக்கிறான்
தமிழன். எந்த வழியில் உட்புகுந்தாலும் சேரும் இடம் ஒன்றாகத்தான் உள்ளது.
அது ஆழ்வார்கள் வழியாகட்டும், நாயன்மார்கள் வழியாகட்டும். இரண்டு பேரும்
ஒரே விஷயத்தை வெவ்வேறு உருவகங்கள் கொண்டு வெவ்வேறு விதமாக விளக்க
முற்படுகின்றனர். அதுவும் நம் அறிவுவகை வேறுபடுவதால், நம்மிடையே
ருசிபேதம் இருப்பதால் தேவைப்படுகிறது. அல்வா சாப்பிட்டாலும், இட்லி
சாப்பிட்டாலும், கோதுமைக்களி உண்டாலும் இறுதியில் அவை சக்தி ரூபமாக மாறிய
பின்தான் யாக்கையின் செயற்பாடு நடைபெறுகிறது. சிலர் சாகபக்ஷிணி, சிலர்
மாமிச பக்ஷிணி. ஆயினும் உள்ளே நடக்கும் வேதிம மாற்றம் ஒன்றுதான்.
உயிர்சக்தி அடிப்படையாக ஒன்றுதான்.
உங்கள் அலசலில், உங்களுக்குள் தோன்றும் கேள்விகளை இறுதியாகப் பட்டியல்
இடுங்கள். அது ஒருக்கால் வாசகர் ஆர்வத்தைத் தூண்டலாம். பாசுரமடல்கள்
தோன்றிய காலத்தில் பெருத்த சூறாவளிகளைச் சந்தித்து உள்ளது. ஆயினும்
இறுதியில் அது பலரை நன்னெறிக்கு இட்டுச் சென்றுள்ளது. குறைந்த பட்சம்
சிந்திக்க வைத்திருக்கிறது!
இறைச்சிந்தனை இல்லையெனில் ஆரோக்கிய வாழ்வு இல்லை. இறைச்சிந்தனை
இல்லையெனில் முறையான அரசியல் இல்லை, இறைச்சிந்தனை இல்லையெனில் அழகியல்
இல்லை, இலக்கியமில்லை, ஆக்கமில்லை. எல்லாவற்றிற்கும் ஆதாரமாக உள்ள ஒரு
முக்கிய துறை பற்றிய உங்கள் அக்கரை உங்கள் சமூக ஈடுபாட்டைக் காட்டுகிறது.
இம்மடல்கள் கேள்வி கேட்பதன் மூலம், மீள்பார்வை செய்வதன் மூலம் நம் மரபை
அறிந்து கொள்ளத் தோன்றிய ஓர் முயற்சி. இதுவொரு தொடக்கமே! மீண்டுமொரு
ஞானவேள்வியைத் துவக்கியுள்ளீர்கள், எல்லோரும் வந்து குளிர்காயட்டும் :-)
நன்றி,
கண்ணன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
மூன்றாவது ஆள்!
ஒருநாள் ரங்கன் கூப்பிட்டு திட்டிவிட்டார் (அன்புத்திட்டு).
எல்லாவற்றையும் விட்டுவிட்டு கவிதை உலகிற்கு மீண்டும் வாருமென்று.
மலேசியா நயனம் பத்திரிக்கை ஆசிரியர் ‘இணையம்’ இலக்கியத்தைக்
கெடுத்துவிடும், ஓடி வந்துவிடுங்கள் என்று பயமுறுத்திவிட்டார்.
தாங்களும், மீனாவும் கவிதை ஊற்று என்னுள் அடைபட்டுவிடாமல் காக்கும்
தேவதைகள்!
இந்த மின்தமிழுக்கென்று வலுவான மட்டுறுத்தர், ஆசிரியர் குழு
அமைந்துவிட்டால் ‘அக்கடா!’ என்று இலக்கியப்பிரவேசம் செய்யலாம்!
ஆயினும் புதுவருட விடுமுறையில் 3 புத்தக வேலைகள் செய்துள்ளேன். இன்னும்
வெளிவரத்தக்க விஷயங்கள் நிரம்ப உள்ளன. என் கவிதை இன்னும் அச்சுலகம்
காணவில்லை.
தங்கமீன் (சிங்கப்பூர்) பாலு வலிந்து என்னிடமிருந்து ஒரு கட்டுரை
வாங்கிவிட்டார். ‘பிரம்படி’ வாங்கி, பிட்டுக்கு மண் சுமந்த எம் ஆலவாய்
அண்ணல்போல் பிரம்படிக்கு இப்போது இலக்கியம் நடந்துகொண்டுள்ளது :-))
க.>
http://www.kamalagaanam.blogspot.com
தாங்கள் மின்னுலகை நன்றாகப் புரிந்து வைத்திருப்பவர். அதன் செயற்பாட்டு
நுணுக்களைச் சட்டென இனம் காட்டிவிடுகிறீர்கள்.
தமிழின் முதல் மடலாடற்குழு! பல்வேறு பரிசோதனை முயற்சிகள் ஒரே சமயத்தில்
ஓடிக்கொண்டிருந்த காலம்!
என்புருகும் அன்பு என்றால் என்ன என்பது கேள்வி. நான் ஆய்வு செய்து
கொண்டிருந்த காலம். எங்களோடு ஒரு பேராசிரியரும் ஆய்வு செய்தார். நிறைய
வயது வித்தியாசம். அப்போது கல்லூரிப் பேராசிரியர்கள் இப்படி வந்து
முனைவர் பட்ட ஆய்வு செய்வதுண்டு. அவரோடு மதுரை கூடல் அழகர் சந்நிதிக்குப்
போகும் போது பெருமாளைப் பார்த்து கண்ணீர் சொரிந்து கொண்டு இருந்தார்.
அப்போது நான்லெல்லாம் கோயிலுக்குப் போனால் கன்னத்தில் நாலு மாற்றி,
மாற்றி போட்டுக்கொண்டு, சாமிக்கு முன்னால் இறுக்க கண்ணை மூடிக்கொண்டு
வழிபடும் வழக்கம். இவர் வழிபட்டது மிக வித்தியாசமாக இருந்தது. அது
நெஞ்சிலேயே நின்று விட்டது! விடை தெரியாமல்.
உண்மையில் எனக்கு ஆழ்வார்களை அறிமுகப்படுத்தியவர் ஒரு பிரெஞ்சு மாது.
தன்னிடம் இருந்த நாலாயிர திவ்யப் பிரபந்த நூலை என்னிடம் கொடுத்துவிட்டு
பிரான்சு போய்விட்டாள். எத்தனையோ புத்தகங்களை அங்கங்கே விட்டு விட்டுப்
போய்விடுபவன் (ஜே.கே எபெஃக்ட்). ஆனால் இது மட்டும் என்கூடவே வந்து கொண்டு
இருந்தது. சரி, என்னதான் இந்த மாஜிக் பாக்ஸ் குள்ள இருக்குன்னு
ஆரம்பிச்சேன்.
நல்ல சமயம் அப்போது புரோஜெக்ட் மதுரை எனக்குத் தோதாக மின்வடிவ
திவ்யப்பிரபந்தத்தைக் கொடுத்தது. தேடுவது எளிதாக இருந்தது.
அப்போது இருந்த புரிதலில் எதோ தைர்யத்தில் தொடங்கிவிட்டேன். அமோக
வரவேற்புக் கிடைத்தது. அதன் நடை, கருப்பொருள் அன்றைய தமிழ்.நெட்
தீர்மானித்தது. அதுவொரு தேவை அறிந்து கொடுக்கப்பட்ட மருந்து
(நா.கணேசனாருக்கு நினைவில் இருக்கும். அவர் சொல்லி ஒரு
பத்துப்பாசுரத்திற்கு மடல் எழுதி இருக்கிறேன்). பாராட்டு வரும் போது
எதிர்ப்பும் வருதல் சகஜம்தானே! எனவே எனது “வை+நவம்” கொஞ்சம் ஆசாரமாக
இருக்கக்கூடியவர்களுக்கு உறுத்தியது. எனவே ஒவ்வொரு மடலுக்கு அப்புறமும்
சண்டைதான் :-) ஆனால், ஜாலியாக இருக்கும். ஏனெனில் எனக்கு நிறைய
கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அந்த பாராட்டு + எதிர்குரல்களை இங்கே
தொகுத்துள்ளேன் (ஒரு கால ஆவணமாக இருக்கட்டுமென்று):
http://www.subaonline.net/nakannan/articles/comments.html
பரனூர் பெரியவரின் பாதஸ்பரிசம் படும் பாக்கியம் ஒருமுறை கிடைத்தது. அவரது
வைணவ உரைகளைத் தொடர்ந்து கேட்டபோது, “அழுவன், தொழுவன், ஆடிக்காண்பன்”
என்பது போன்ற நிலைகள் என்னவென்று புரிந்தது. அதன் பின் என்
வழிபாட்டுமுறையே முற்றும் முழுவதுமாக மாறிவிட்டது. பாசுரத்தின் ஆழமான
உட்பொருள் விளங்கத்தொடங்கியது.
மிகப்பின்னால் (அதாவது ஆழ்வார்க்கடியான் வலைப்பதிவு நிறைவுற்ற நிலையில்)
ரங்கன் வந்து சேர்ந்தார். அவரது காலக்ஷேபத்தில் நிறைய ஆழம் காண
முடிந்தது. இப்போது எழுதினால் வேறு மாதிரி எழுதுவேன். ஆயினும் அன்று
இருந்த கண்ணன் ஒரு பரிணாம நிலை. அதை மறுதலித்து இப்போது
என்னவாகப்போகிறது? அப்படியே இருக்கட்டுமென்று விட்டுவிட்டேன்.
என்னைத்திட்டியவர்கள் சொல்லிலும் பொருள் உள்ளதே! மரபு என்பது
கோமாளித்தனமா வேஷங்களை மேலே பூசிக்கொண்டு ஆழமாக இருக்கிறது. அதன் இருப்பே
அப்படி! என்ன செய்ய!
இவ்வளவு நாளுக்குப் பிறகு மீண்டும் பவளா இக்கட்டுரைகளை வாசித்து அதனோடு
பயணப்பட்டு, தன் உள அனுபவங்களோடு ஒப்பிட்டு ஒரு புதிய பார்வையை
வைக்கிறார். அதுவும் மகிழ்வே! எதிர்வினை வந்தாலும் மகிழ்வே! முன் போல்
இல்லாமல் இச்சபையில் துணை நிறைய உள்ளது. நல்லது சொல்லி திருத்துவோர்
உள்ளனர். எனவே பயமில்லை. பயமற்று இருப்பதற்கு இன்னொரு காரணம் நம்ம
கேள்விகளை, `ப்பூ` என்று சொல்லும் அளவிற்கு அக்காலத்திலேயே! ஏன்
இராமானுஜர் முன்னிலையிலேயே கேட்டுள்ளனர். வைணவம் பெருமாளை நம்பு என்று
சொல்வதே இல்லை. “பார்” என்றுதான் சொல்கிறது. எனவே கேள்விக்கு பயப்படுபவன்
உண்மையான வைணவனாக இருக்கமுடியாது. கிருமி கண்ட சோழன் மகன் சொன்னானாம்,
“திருவாய்மொழியும், இராமாயணமும் என்ற மிகப்பலமான தூண்களின் மேல்
எழுப்பப்பட்டுள்ள இதற்கு எப்பயமும் இல்லையென்று”. நம் ஆச்சார்ய சீலர்கள்
கோட்டை, கோட்டையாக அரண் அமைத்துவிட்டுப் போயிருக்கின்றனர். எனவே
பயமில்லை. பாசுரமடல்கள் உடைந்து போன வழிகாட்டியாக இருந்தாலும்
கோட்டைக்குள் போய்விட்டால் கவலை இல்லை. திசை காட்டுவதுதான் இதன் வேலை.
இப்போதைக்கு இது போதும்....
நா.கண்ணன்
2011/2/7 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
கிண்ணாரம் - உதாரணம்
கிண்ணாரக்காரன், கிண்ணாரம் வாசிக்கிற வன், --கொட்டுகிறவன், an organist,
a fiddler, one that plays upon an organ or a fiddle.
கிண்ணாரக்காரன், கிண்ணாரம் வாசிக்கிற வன், --கொட்டுகிறவன், an organist,
a fiddler, one that plays upon an organ or a fiddle.
thanks to senthamil.org
க.>
2011/2/12 shylaja <shyl...@gmail.com>:
ஆகா! நம்மைத் தீவிரவாதிகளாக்கும் ஒரு முயற்சி நடக்கிறதே இங்கே!! :-)))
க.>
--
இதுவும் உண்மைதான்; ஆனால் இந்த ‘வைநவம்’ வேணுவை ஏந்தியிருக்கும்
’வைணவ’னான கண்ணபிரானுக்கு உகப்பை அளிப்பது.
’தேனுள பாதமலர்த் திருமாலுக்குத் தித்திக்குமே’ என்னும் மனப்பாங்கோடு
எழுதியுள்ளீர்கள். ’அண்டம் மோழை எழ’ ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தும் பாசுர
மடல், பின் நவீனத்துவம் இழையோடினாலும்
தேவ்
> 2011/2/7 Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>:
>
> > அன்புடைய கண்ணன் அவர்களே
>
> ...
>
> read more »
போகப்போக அவன் உவப்பே முக்கியமாகப் படுகிறது. ஆரம்பத்தில் மழலை மொழியில்
அப்பா சிரிக்கப் பேசினாலும் போகப்போக பேசாமல் கண்ணீர் மல்கவே
ஆசைப்படுகிறது உள்ளம். பாவம்! அவனொரு ஜோக்கரை இழந்துவிட்டான் :-)
க.>
On Feb 17, 11:45 pm, coral shree <cora...@gmail.com> wrote:
> *’ஆழ்வார்க்கடியான் பாசுர மடல் - ஓர் அலசல் - பகுதி - 4*.
> வரும் என்கிறார். கூறை (புடவை) க்கு ஆசைப் பட்டு ...
>
> read more »
--For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
’தில காஷ்ட மஹிஷ பந்தநம்’ என்னுமோர் அரிய நூல் உள்ளது;
அதில்தான் இதுபோன்ற சொற்களுக்குப் பொருள் தேட வேண்டும்
தேவ்
On Feb 18, 7:33 am, Tthamizth Tthenee <rkc1...@gmail.com> wrote:
> ”காசுக்கு ஆசைப் பட்டு பெண்ணிற்கு - "பொண்ணு" "தங்கம்" என்று பெயர்
> வைக்காதீர்கள் என்கிறார். பின் வெள்ளியும், தங்கமும் விழாக்களில்தான் காணவேண்டி
> வரும் என்கிறார். கூறை (புடவை) க்கு ஆசைப் பட்டு குழந்தைக்கு "பட்டு" என்று
> பெயர் வைத்தால் பின் பட்டு மாமி ஆகிப் போகும் போலும். கற்றைக்கு புல், தானியம்
> என்று பொருள் கொண்டால் மண்ணுக்கு ஆசைப் பட்டு "மண்ணாங்கட்டி" என்றோ, புல்
> (அதாவது அரிசி) லுக்கு ஆசைப் பட்டு "கூழு" என்றோ பெயரிடாதீர்கள் என்று
> கிராமத்து வழக்கில் சொல்கிறார் பெரியாழ்வார்.”
>
> சமீபத்தில் ஒரு தம்பதியினர் வந்திருந்தனர் அவர்கள் துபாயில் இருக்கும்
> இந்துக்கள், இந்தியர்
>
> அவர்கள் இருவரும் தங்கள் பெண் குழந்தைக்கு
>
> ”துஹாயா ” என்று பெயரிட்டிருக்கிறார்
>
> துஹாயா என்றால் என்ன பொருள் என்று அவர்களிடம் கேட்டேன்
>
> அவர்கள் சொன்னார்கள்
>
> துஹாயா! நபிகள் நாயகத்தின் இரண்டாவது பெண்ணிற்கு பெயர்
>
> துஹாயா என்னும் சொல்லுக்கு ஆங்கிலத்தில் God Bless என்று பொருள்
>
> துஹாயா என்றால் மஹாலக்ஷ்மி என்றும் பொருளும் வரும் என்றார்
>
> மஹாலக்ஷ்மிக்கு துஹாயா என்னும் சொல் உளதா?
>
> அன்புடன்
> தமிழ்த்தேனீ
>
> 2011/2/18 coral shree <cora...@gmail.com>
தில காஷ்ட மஹிஷ பந்தநம்’ என்னுமோர் அரிய நூல் உள்ளது;
அதில்தான் இதுபோன்ற சொற்களுக்குப் பொருள் தேட வேண்டும்
எருமை கட்டும் கயிறிலா?
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
2011/2/26 coral shree <cor...@gmail.com>:
> ஆழ்வார்க்கடியானின் பாசுர மடல்கள் - ஓர் அலசல் - பகுதி- 5.பவளா! இதுவொரு நல்ல முயற்சி.
> சூடுவேன் பூங் கொன்றை; சூடிச் சிவன் திரள் தோள்
> கூடுவேன் ! கூடி முயங்கி, மயங்கி நின்று,
> ஊடுவேன் ! செவ்வாய்க்கு உருகுவேன் ! உள் உருகித்
> தேடுவேன் ! தேடிச் சிவன் கழலே சிந்திப்பேன் ;
> வாடுவேன் ! பேர்த்தும் மலர்வேன் ; அனல் ஏந்தி
> ஆடுவான் ! சேவடியே பாடுதும் காண் ; அம்மானாய் !
>
இறையனார் களவியலை உருவாக்கியவன் ஆலவாய் அண்ணல். அது கண்டு உருகியவன் அவன்
பிள்ளை கந்தவேள். ஆனால், அதைக் கடத்திக் கொண்டு போய்விட்டவர்கள்
ஆழ்வார்கள். இந்த அதிசயம் ஏன் என்று ஆராயலாம்! சைவ சமயக் குரவர்களில்
ஆழ்வார் எனத்தக்கவர் மாணிக்கவாசகர். எங்க ஊர் பக்கம். இது போல் இன்னும்
நிறைய ஒப்புமை காட்டுங்கள். எனக்கு சைவ சமய இலக்கியப் பரிட்சயம்
மிகக்குறைவு.
பனிசூழும் நாடு என நான் குறிப்பது ஜெர்மனியை. நான் ஜெர்மன் குடிமகன்
என்பதை மறக்க வேண்டாம்! `எம் தந்தையர் நாடு!` (Vaterland) :-))
நா.கண்ணன்
> ’உறவுகளில் உறையும் இறைவன்’, அழகான தலைப்பு..... ஆசிரியர் தான்
வாழும் இடத்தின்
> அபரிமிதமான குளிர் பற்றி மிக யதார்த்தமாக விளக்கும் ஆசிரியர் அந்த நாட்டின்
> பெயரைக் குறிப்பிடாமல் விட்டது வாசகருக்கு அதை அறிந்து கொள்ளும் ஆவலில்
> தொடர்ந்த மடல்களைப் படிக்கும் எண்ணமும் ஏற்படுத்துகிறது.........
2011/2/26 coral shree <cor...@gmail.com>:
அதுவொரு குட்டிக்காவியமன்றோ!
நினைவுறுத்தியதற்கு நன்றி.
க.>
2011/2/26 Innamburan Innamburan <innam...@gmail.com>: