இளங்கோ அடிகள் சிலை பாருங்கள்.
இளங்கோ *அடிகள்* தன் காப்பியத்தில் ஹீரோவைச்
சமணராகப் படைத்துள்ளார். அந்த நாவலில்,
ஹீரோ கோவலனைக் கொலைதண்டனை
பெறச் செய்வது ஏன்? நடைமுறையில் இருக்கும்
கொலைத்தண்டனை தவறு என்று காட்டுதற்காக.
http://nganesan.blogspot.com/2011/09/kural-550-and-deathsentence.html
செந்தமிழ் மரபில் வள்ளுவர் போல இன்னொரு பெரிய சமண ஆசிரியர் இளங்கோ
அடிகள். இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரத்தில் குற்றம் ஒன்றும் செய்யாத
கோவலன் அரசனது ஆணை மேற்கொண்டு பொற்கொல்லனால் கொலைத்தண்டனை அனுபவிப்பதில்
நிரபராதிகள் கொல்லப்படுவதைக் காட்டி உள்ளார். தூக்குதண்டனைக்கு எதிராகக்
குரலெழுப்பவே கோவலன் அநியாயமாகக் கொல்லப்படுவதாகத் தாம் எழுதிய
காப்பியத்தில் படைத்துள்ளார். கொலைத்தண்டனை அக்காலத்தில் இருந்தது
என்பதற்காக, இளங்கோ அடிகள், திருவள்ளுவர் போன்றவர்கள் அதனை ஆதரித்துப்
பரிந்துரை செய்தார்கள் என்பது அவர்களில் மனிதநேயத்தைக் குறைத்து
மதிப்பிடுவதாகும். இளங்கோவின் குரல் தூக்கு தண்டனையின் அபாயத்தைக் காட்ட
எழுந்த குரல்
கோவலனைச் சமணன் என்று கொலைக்களக் காதையில் பாடுகிறார் இளங்கோ அடிகள்.
”சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின்
நாத்தூண் நங்கையொடு நாள்வழிப் படூஉம்
அடிசி லாக்குதற் கமைந்தநற் கலங்கள்
நெடியா தளிமின் நீரெனக் கூற” - கொலைக்களக் காதை (சிலம்பு)
சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின் - அடிகள் சாவக நோன்புடையராகலான்,
நாத்தூண் நங்கையொடு நாள் வழிப்படூஉம் அடிசில் ஆக்குதற்கு - நாத்தூணாகிய
ஐயையொடு பகற்பொழுதே உண்ணும் உணவினைச் சமைப்பதற்கு, அமைந்த நற்கலங்கள்
நெடியாது அளிமின் நீர் எனக் கூற - பொருந்திய நல்ல கலங்களை நீட்டியாது
நீவிர் அளிமின் என்று சொல்ல ;
சாவகநோன்பி - துறவாது விரதங்காப்போர். அடிகள் என்றது ஈண்டுக்
கோவலனை. நாத்தூண் - கணவனுடன் பிறந்தாள். நாத்தூணாகிய நங்கை. இனி,
நாத்தூணும் நங்கையும் எனலுமாம் ; ஈண்டு நாத்தூண் - ஐயை ; நங்கை - கண்ணகி,
நாள்வழிப்படூஉ மடிசில் - காலத்திலே ஆக்கும் அடிசில் எனலுமமையும். நற்கலம்
- புதுக்கலம். அமைந்த நற்கலம் என்றது தாங்கள் ஆளும் கலமன்றி
மேன்மக்களாளும் கலத்தினை. நெடித்தல் - நீட்டித்தல்
இடைக்குலமடந்தை ஆய்ச்சியர் தம்மொடு மனைப்படுத்துக் கூடி
நீராட்டித் தொழுது (என்று) அளிமின் எனக் கூற என்க. (பெருமழைப் புலவர்
உரை).
------
விரிவாக, இளங்கோ அடிகள் தந்த காப்பியத்தில் சமணம் பற்றி அறிய:
http://www.tamilvu.org/courses/degree/p202/p2023/html/p2023l21.htm
&
http://banukumar_r.blogspot.com/2011/01/blog-post.html
நா. கணேசன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
இன்றைய காலத்திலும் இது நிகழ்கிறது:
தைவான் சீனாவில் ஒறுத்தல் நாகரீகமடைய
இது போன்ற நிகழ்வுகள் உதவும். ஏற்கெனவே,
ஐரோப்பாவின் நாடுகள் ஏற்றுக்கொண்டுவிட்டன.
Death penalty dilemma dividing Taiwan
http://www.bbc.co.uk/news/world-asia-18202396
பொதுமறை தந்தவர்கள் சமணர்கள்.
சமணம் உலகத்தின் மிகப் பழைய சமயம்
என்பார்கள் மேலைநாட்டின் சமயவியல் வரலாற்றறிஞர்கள்.
நா. கணேசன்
https://groups.google.com/group/vallamai/msg/fa344f87ae48626c
உண்மை. விவசாயி வள்ளுவருக்கு தேனில் வகைகள் பல தெரியும்.
3 உதாரணம் தருகிறேன். பூத் தேன், பனைத் தேன், கரும்புத் தேன்.
(1) இதில் வள்ளுவர் கரும்பின் தேனைச் சொல்லியிருக்கலாம் என்பதற்குச்
சங்கச் சான்றோர் செய்யுளில் ஆதாரம் இருக்கிறது. வள்ளுவர் வாக்கு
குறுந்தொகைச் செய்யுளைப் பிரதிபலிக்கிறது எனலாம்.
”பாலொடு தேன் கலந்து அற்றே பணிமொழி
வால் எயிறு ஊறிய நீர்” (1121)
இதைப் பாடுதற்கு முன்னரே தமிழில் கரும்புத் தேனுடன் ஒப்பிடும்
செய்யுள் குறுந்தொகையில் காண்க.
”கரும்பின் காலெறி கடிகைக் கண் அயின்று அன்ன -
வால் எயிறு ஊறிய வசை இல் தீ நீர்க் கால் அமை
குறுந்தொடிக் குறுமகள்” - காலெறி கடிகையார், குறுந்தொகை 267.
அதாவது, கரும்பின் அடிப்பகுதியை வெட்டும் இரும்பு மழு
கரும்புத் தேனைச் சுவைத்தது போல, காதலியின் எச்சில்
தேனாய்ச் சுவைத்தது என்கிறான் தலைவன்.
சேக்கிழார் பெரியபுரானத்தில் கரும்பின் தேன் பற்றிப்
பாடுகிறார்:
விரும்பு மென்கணுடையவாய் விட்டுநீள்
கரும்பு தேன்பொழி யுங்கண மங்கலம்
விரும்புதற்குரிய மெல்லிய கணுக்களைக் கொண்டு,
நீளமாக வளர்ந்தும் இருக்கிற கரும்புகள் பொழியும்
தேன் வளப்பம் கொண்ட கணமங்கலம் - என்பது பொருள்.
முட்டில்பல் போகத் தொருதனி நாயகன் மூவுல குக்குரிய,
கட்டியைத் தேனை அமுதைநன் பாலைக் கனியைக் கரும்புதன்னை,
மட்டவிழ் தண்ணந்து ழாய்முடி யானை வணங்கி அவன்திறத்துப்
பட்டபின்னை,இறை யாகிலும் யானென் மனத்துப் பரிவிலனே.
வெல்லத்தின் பின்னால் வரும் தேன் கரும்பினது என்றும் சொல்லலாம்.
அந்த அடியின் கடைசியில் கரும்பைத்தான் சொல்கிறார் ஆழ்வார்.
(2) மலர்த் தேன் எடுத்தல் பிரபலம். இதனைச் சீவ இம்சை
எனச் சமணத் துறவியர் உண்ண மாட்டார்கள்.
(3) பனைத் தேன். இதனை கிராமங்களில் பனந்தேன் என்பது பெருவழக்கு.
கருப்பங்கட்டி - வெல்லம். ஆனால் பாகாக இருப்பது பனைத் தேன்
(அ) பனந்தேன்.
http://www.manaosai.com/index.php?option=com_content&view=article&id=341:2009-12-30-22-46-05&catid=29:2009-07-02-22-33-23&Itemid=70
”பாலொடு தேன் கலந்து அற்றே பணிமொழி
வால் எயிறு ஊறிய நீர்” (1121)
ஆக, பொதுமறை தந்த வள்ளுவப் பெருமான் பனந் தேனையோ, கருப்பன் தேனையோ
பாடியிருக்கிறார். சங்கச் சான்றோர் வழியில் (காலெறி கடிகையார் செய்யுள்
காண்க),
கரும்புத் தேன் குறள் 1121 எனக் கருதுகிறேன்.
நா. கணேசன்
http://groups.google.com/group/tiruvalluvar/msg/6b1cbc66b1fc7a5f
(சம்பந்தர் சமணர்களைக் கழுவேற்ற உழைத்தவர். அவர் பல்துலக்காதவர்
சமணர்கள் என்று பாடுகிறார். ஆனால் வாலெயிறு எனப்
பாடும் வள்ளுவர் காதலர் intimacy-ல் பல்விளக்கா விட்டால்
பாக்டீரியா உற்பவிக்கும் துர்நாற்றமும், 30 வயதில் பொக்கைவாய்
ஆகும் என்பதை அறிந்தவர்.)
சமணம் உலகத்தின் மிகப் பழைய சமயம்
என்பார்கள் மேலைநாட்டின் சமயவியல் வரலாற்றறிஞர்கள்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ஆதியில் தமிழன் தமிழனாகத்தான் இருந்தான் நாகரிகத்தின் வளர்ச்சியில் அவன் வணங்கியது கதிரவனை பின்புதான் பஞ்ச பூதங்களைஅதன் அழகிய பரிணாமம் தான் சைவம்.ஈழத்தில் இன்றும் தமிழன் தமிழனாகவும் அதன் வழி வந்த சைவமுமாகத்தான் நிமிர்ந்து நிற்க்கின்றனர்.சமனமாக அல்ல!
தமிழனை கறையான் அரிப்பது போன்று ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஆரியர்கள் அறுவடை செய்தார்கள்
ஆதியில் தமிழன் தமிழனாகத்தான் இருந்தான் நாகரிகத்தின் வளர்ச்சியில் அவன் வணங்கியது கதிரவனை பின்புதான் பஞ்ச பூதங்களைஅதன் அழகிய பரிணாமம் தான் சைவம்.ஈழத்தில் இன்றும் தமிழன் தமிழனாகவும் அதன் வழி வந்த சைவமுமாகத்தான் நிமிர்ந்து நிற்க்கின்றனர்.சமனமாக அல்ல!
> நீங்கள் என்ன சொல்லவருகிறீர்கள்? தமிழனை ஆரியர்கள் அழித்தார்கள் என்று
> சொல்லவருகிறீர்களா? அல்லது வாழ்வித்தார்கள் என்று சொல்லவருகிறீர்களா?
> :-)
ரங்கன்! இந்துக்கள் எங்கெல்லாம் சென்றார்களோ அங்கெல்லாம் வர்ணாசிரம்
பரவியதாகச் சொல்கிறார்கள். அதற்கு ஒரு குறையும் இல்லாமல் கழகத்தினர்
பரப்பிய இந்த ஆரிய மாயை தமிழ்கூறும் நல்லுலகம் எங்கும் நீக்கமற
பரவியுள்ளது! இலங்கையும் இதற்கு விதிவிலக்கல்ல :-)
க.>
2012/6/13 Prakash Sugumaran <praka...@gmail.com>
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
On Tuesday, 12 June 2012 12:52:52 UTC-7, Prakash Sugumaran wrote:
>>> நெடுமால்,செய்யாள், முகடி, இந்திரன், ஊழ், இருவினை, அளறு, உலகியற்றிய இறை,
வேள்வி, அவியுணவு, அதை ஏற்கும், அமரர்கள், அதை அளிப்போர், எழுதா மறை (மறை
ஓத்து), தென்புலத்தார், வானோர்க்கு உயர்ந்த உலகம், பிறவிப் பெருங்கடல்,
மற்றீண்டு வாரா நெறி........ //
தேவ் சார், கேள்வியை பொருள் மாற்றி கேட்டேனா அல்லது புரிந்து கொல்லப்பட்டதா எனத் தெரியவில்லை. துறவிகள் வாயை துணியால் மூடுவது, பாதையை பெருக்குவது எல்லாம் தமது சமய கொள்கைகளை வெளிக்காட்டும் புற அடையாளங்கள் மட்டுமே. இல்லத்தவர்கள் அப்படி வாழ்வதில்லை.ஸத்யம், அஸ்தேயம், அஹிம்ஸை, அபரிக்ரஹம் போன்ற அறங்களை//ஹிந்து சமயம் மட்டுமல்லாமல் எல்லா சமயங்களும் அழுத்தமாக வலியுறுத்துகின்றன. கூடுதல் அழுத்தம் கொடுத்ததாலேயே சமண சமயம் போட்டியில் நிற்க முடியாமல் பின்னால் போனது.நெடுமால்,செய்யாள், முகடி, இந்திரன், ஊழ், இருவினை, அளறு, உலகியற்றிய இறை, வேள்வி, அவியுணவு, அதை ஏற்கும், அமரர்கள், அதை அளிப்போர், எழுதா மறை (மறை ஓத்து), தென்புலத்தார், வானோர்க்கு உயர்ந்த உலகம், பிறவிப் பெருங்கடல், மற்றீண்டு வாரா நெறி........ //இவை இந்து சமயத்துக்கு மட்டுமே பொருந்தும் என எப்படி கருத முடியும் ? சீக்கிய மதம் பற்றி சரியாகத் தெரியவில்லை. மற்றபடி மீதமுள்ள எல்லா இந்திய மதங்களுக்கும், சமயங்களுக்கும் பொருந்தும்.
2012/6/13 கி.காளைராசன் <kalair...@gmail.com>
வணக்கம்.2012/6/8 N. Ganesan <naa.g...@gmail.com>
சமணம் உலகத்தின் மிகப் பழைய சமயம்
என்பார்கள் மேலைநாட்டின் சமயவியல் வரலாற்றறிஞர்கள்.சமணத்திற்கு முன்னர் என்ன சமயம் இருத்ததாம்?மேலைநாட்டின் சமயவியல் வரலாற்றறிஞர்கள் இது குறித்து என்ன கூறுகின்றனர்?அன்பன்கி.காளைராசன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ரொம்பக் கஷ்டப்படாதீங்க!
இலங்கைத்தமிழர்களின் சமய அறிவு குறைவு. அவர்கள் அறிந்தது நாவலர் பரப்பிய
சைவ சமயம். அது தமிழ்ச்சமயம். மற்றதெல்லாம் ஆரிய சமயம் என்று
சொல்லுவார்கள் :-) ஆனால் உலகெங்கிலும் சைவ சமயம்தான் சங்கதத்தை
(வடமொழியை) முதன்மைப்படுத்தி கருவறையில் வைத்திருப்பதை அவர்கள் கண்டு
கொள்வதில்லை :-). மெய்கண்ட சாஸ்திரம் 100% தமிழ்மறை என்றுதான்
சொல்வார்கள். அதன் தோற்றம் பற்றிய தெளிவின்மையால். ஆகமங்கள் முதன்மை
என்பார்கள். அது காஷ்மீரத்திலிருந்து வந்தது என்பதை அறியார். அவர்கள்
மனோநிலை கிணற்றுத்தவளை நிலை. பரிதாபம் தான் படமுடியும்!
நா.கண்ணன்
2012/6/14 DEV RAJ <rde...@gmail.com>:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
கொலையிற் கொடியாரை வேந்துகொல்தல் பைங்கூழ்
களைகொல் லலோடு நேர்.
திருக்குறளில் வடசொல் காணப்படும் 17 குறட்பாக்களையும் எடுத்து அச்சொற்களின் இடத்தில் தமிழை இட்டு நிரப்பி அப்போதும் குறளின்பொருள் மாறாமல் படைத்துக் காட்டினார் பாவாணர்எனவே திருவள்ளுவர் ஒரு தமிழ் மரபில் வந்த ஆதி தமிழன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
ஈழத்தின் பாடத்திட்டத்தில் சைவசமயம் என்ற பாடம் உள்ளதுஒவ்வொரு ஈழத்தமிழனுக்கும் தேவாரம் தொடங்கி சிவபுராணம் வரை சாதாரணமாகப் பண்ணிசையுடன் பாடத் தெரியும்ஆனால் தங்களின் வகுப்பறை மாணவர்களுக்கு எத்தனை பேருக்குத் தெரியும் ?சமய அறிவு பற்றிக்கூறும் தங்களின் நாட்டில் அப்படி ஒரு சைவசமய பாடம் பாடத்திட்டத்தில் உள்ளதாகத் தெரியவில்லை?அறிவு பற்றி அகந்தைப்பட வேண்டாம் .கற்றது கையளவு கல்லாதது உலகளவு .........அன்புடன்கோ.உதயகுமார்
நேரடித் தாக்குதலைக் குறைத்துக் கொண்டால் நலம்.
நீங்கள் கூறுவது உண்மை. தமிழகத்தில் சமயப்பாடங்கள் கிடையாது.
நீங்கள் சைவ சமயம் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளுங்கள் என்பதே
வேண்டுகோள். அவசரப்பட்ட முடிவுகள் நம் சமய அன்பவங்களுக்குத் தடையாக
அமையும்.
மற்றபடி எனக்கு எந்த அகந்தையுமில்லை. அதுவொரு அவதானம் மட்டுமே!
நா.கண்ணன்
2012/6/15 Uthayakumar Gopalasingam <utha...@gmail.com>:
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
| கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே செற்றார் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய முற்றா வெண்டிங்கண் முதல்வன் பாதமே பற்றா நின்றாரைப் பற்றா பாவமே. |
> தேவாரங்களைப் பாடத்திட்டத்திலேயே படித்த உங்கள் நண்பர் எதன்வழி வந்த
> சைவத்தைப் பற்றிப் பேசுகிறார்?.
>
> இவர் படித்ததாகச் சொல்லும் தேவாரம் எங்கும், சைவத் திருமுறை எங்கும், சைவ
> சாத்திரம் பதினான்கிலும், மாபாடியம் முழுக்கவும், சைவ ஆகமங்கள் ஒன்பதைக்
> குறித்துக் காட்டி, தமிழில் ஆகமம் விளக்க வந்ததாகக் கூறும் திருமூலரின்
> திருமந்திரம் தொடக்கம், இடையில், முடிவில் என்று முழுதும் இவர் கருத்துப்படிப்
> பார்த்தால் ஒரே ’ஆரிய அரித்தல்’களாகவும், ‘ஆரிய அறுவடைகளாகவும்’ இருக்கும்
> பொழுது தேவார முதலிகள் மூவரைப் பற்றியும், அதன்வழி வந்த சைவத்தைப் பற்றியும்
> இவர் என்ன செய்யலாம் என்கிறார்.
>
> மரபுக்கு ஆக்க பூர்வமான பங்களிக்க முன்மாதிரியான இவர்களைத் தேடிக் கண்டடையச்
> சிலரால்தான் முடியும். :-)
>
இதுதான் எனக்கும் புரிவதில்லை. எங்கிருந்து இவர்கள் சைவத்தைப் பற்றி
இப்படித்தப்பு, தப்பாகப் படித்தார்கள் என்று. நான் முன்பே சுட்டியபடி
இந்த ஆரியம், பார்ப்பனீயம் என்பதால் இந்தியாவில் குப்பை கொட்ட வந்த
இந்தியச் சரக்குகள். அது எப்படி இலங்கைச் சைவத்துடன் தோள் கோர்த்து
நடக்கிறது? முரண்படும் கருத்தாக்கங்களின் கூட்டுமுயற்சியாக/குழப்பமாக
உள்ளதே!
க.>
க.>