அசோதை பெற்றெடுத்த பூவைப் புதுமலர் வண்ணன் கொல்லோ!!!

34 views
Skip to first unread message

தேமொழி

unread,
Sep 1, 2015, 11:45:02 PM9/1/15
to மின்தமிழ்
///
ஒரு நபரை தெய்வங்கள் ஒவ்வொருவரொடும் பொருத்திப்பார்த்து... பின்பு  ”இல்லை” என்று தெளிவடையும் பகுதி ஒன்று சிலப்பதிகாரத்திலும் வரும்; அதனைக் கண்டுபிடிப்போர்க்கு  (கூகுளிலிருந்து) எடுக்கப்பட்ட ஒரு பழக்கூடை பரிசளிக்கப்படும் டும் டும் டும்!)    :-)))
///


கோவலன்:
இம் மதுரைக்கண் ஆயர் பாடியில் நல்ல அமுதினை யுண்ணும் நம்பியாகிய கோவலன் அம் மதுரைக்கண் ஆயர்பாடியில் அசோதை என் பாள் பெற்றெடுத்த அந்த நல்லமுதமுண்ணும் புதிய காயாம் பூப்போலும் நிறத்தினையுடைய கண்ணனோதான், 

கண்ணகி:
இவன் துயர் தீர்த்த இப் பலவாகிய வளையலை அணிந்த தோளினையுடையாளும், முன்னர் நம் குலத்துத் தோன்றிய தூய நீலமணி போலும் நிறமுடைய மாயோனைக் காளிந்தி யாற்றின்கண் துயர் தீர்த்த நப்பின்னை என்னும் விளக்கோதான் 



"ஐயையும் மாதரியும் கோவலனையும் கண்ணகியையும் பாராட்டுதல்"




50
‘ஆங்கு, ஆயர் பாடியின் அசோதை பெற்றெடுத்த
பூவைப் புதுமலர் வண்ணன் கொல்லோ,
நல் அமுது உண்ணும் நம்பி! ஈங்கு,
பல் வளைத் தோளியும் பண்டு நம் குலத்து,
தொழுனை யாற்றினுள் தூ மணி வண்ணனை 
விழுமம் தீர்த்த விளக்குக்கொல்!’ என;
ஐயையும் தவ்வையும் விம்மிதம் எய்தி,
‘கண் கொளா நமக்கு, இவர் காட்சி, ஈங்கு’ என-
http://www.tamilvu.org/slet/l3100/l3100pd5.jsp?bookid=50&pno=18


_____ 

ref :  https://groups.google.com/d/msg/mintamil/OJ_p428wYF8/r4ljM80DCAAJ

On Tuesday, September 1, 2015 at 7:24:05 PM UTC-7, megala.ramamourty wrote:
இறந்தபின் இராவணனுடைய முகம் மும்மடங்கு பொலிந்ததுபோல் ஷைலுவின் எழுத்தில் யுத்த காண்டமும் மும்மடங்கு பொலியக் காண்கிறேன்! 

Very good narration Shylu; I thoroughly enjoyed this article. Congrats!   :-)

இராவணன் வதம் செய்யப்பட்டு யுகங்கள் கடந்தபின்னும் அவனைப் பற்றிய (வி)வாதங்களுக்கு ஓய்வில்லை; இராமன் (பெயர்) உள்ளளவும் இராவணனும் நினைவுகூரப்படுவான் இல்லையா?   :-)

யுத்தகாண்டத்திலுள்ள சுவையான பாடல்கள் சில...

இராம இராவண யுத்தத்தில் இராமனுக்குச் சளைக்காமல் போர் செய்த பெருவீரன் இராவணன். அவன் விட்ட அம்புகளின் குவியல், விண்ணையும் திசைகளையும், கடலையும் காண்போர் கண்களையும் மறைத்தனவாம்; ”அடடா எப்படிப்பட்ட போர் வீரமிது!” என்று ஆனையின் தோலைப்போர்த்த சிவபிரானே இராவணனின் வீரம்கண்டு வியந்துபோனானாம்!  :-)

விண்போர்த்தன; திசை போர்த்தன;
    மலைபோர்த்தன; இமையோர்
கண்போர்த்தன; கடல் போர்த்தன;
    படிபோர்த்தன; கலையோர்
எண்போர்த்தன; எரிபோர்த்தன;
    இருள்போர்த்தன; ‘என்னே
திண்போர்த்தொழில்? ‘என்று ஆனையின்
    உரி போர்த்தவன் திகைத்தான்.

அதுபோல் யுத்தத்தில் இராமனின் வீரம் கண்டு சிலிர்த்த இராவணன் ”இவன் யாராக இருக்கக்கூடும்?” என்று சிந்திக்கிறான். ”சிவனோ?” என்ற எண்ணியவன் ”இல்லையில்லை” என்று தனக்குள் மறுத்து, ”திருமாலோ?”  “இல்லை அவனாகவும் இருக்கமுடியாது!” என்று முடிவுசெய்து, ”வேறு யாராக இருக்கக்கூடும்?” என்று மீண்டும் ஆழ்ந்து சிந்தித்துவிட்டு ”ஒருவேளை இவன்தான்  அந்த வேதமுதல் காரணனோ?” என்று ஐயுறுகின்றான். 

சிவனோ? அல்லன்; நான்முகன்
    அல்லன்; திருமாலாம்
அவனோ? அல்லன்; மெய்வரம்
    எல்லாம் அடுகின்றான்;
தவனோ என்னின், செய்து
    முடிக்கும் தரன் அல்லன்;
இவனோதான் அவ் வேதமுதல்
    காரணன்? ‘என்றான்.

(இவ்வாறு ஒரு நபரை தெய்வங்கள் ஒவ்வொருவரொடும் பொருத்திப்பார்த்து... பின்பு  ”இல்லை” என்று தெளிவடையும் பகுதி ஒன்று சிலப்பதிகாரத்திலும் வரும்; அதனைக் கண்டுபிடிப்போர்க்கு  (கூகுளிலிருந்து) எடுக்கப்பட்ட ஒரு பழக்கூடை பரிசளிக்கப்படும் டும் டும் டும்!)    :-)))

//சினத்தினால் தென்னிலங்கைகோமானைச்செற்ற மனதுக்கினியானாகிய  இராமனுக்கு இராவணனை  வென்றமை தனக்கு சிறப்பைத்தராதென்று தோன்றுகிறதாம்! புன்சிரிப்புடன்  கூறுகிறான். திகைப்பாகத்தான் இருக்கிறது நமக்கு!  இராமனின் இந்த மனநிலைக்குக்காரணம் என்ன? அடுத்த கம்பராமாயண வகுப்பில் இதை அறிந்து  பிறகுவிளக்கும்வரை காத்திருக்கவும் அல்லது அறிந்தவர்கள் தொடர்ந்தால் மகிழ்ச்சியே//

அப்பகுதியைச் சுருக்கமாக இங்கே விளக்கியிருக்கிறேன்; நீங்கள் பின்பு விரிவாக எழுதுங்கள் ஷைலு!  :-)

இராவண வதத்தின் இறுதிப்பகுதி...

இராமன் இராவணனைக் கொன்றுவிடுகின்றான். பிறகு இராவணனின் உடலைப் பார்க்கிறான்; அவன் முதுகில் வடுக்கள் தெரிகின்றன; ”சே! ஏற்கனவே புறமுதுகிட்டுப் புறப்புண்கள் சுமந்த கோழை ஒருவனையா நான் கொன்றேன்? இஃது எனக்குப் பெருமை தராதே!” என்று வருத்தத்தோடு பேசுவதை அருகில் நின்றுகொண்டிருந்த வீடணன் கேட்கிறான். அவனுக்கு பெருவருத்தம் ஏற்படுகின்றது (என்னதான் கருத்துவேறுபாடு இருந்தாலும் இராவணன் அவனுடைய அருமை அண்ணன் அல்லவா?).

தமையனை இராமன் இகழ்ந்து பேசியது பொறாத  வீடணன், ”ஐய! என்ன வார்த்தை சொல்லுகிறீர்? என் தமையனாவது புறப்புண் படுவதாவது? உலகிலுள்ளோர் அனைவரையும் வென்ற அந்த மாவீரன்  ”இனி வெல்வதற்கு யாருமில்லையே!” என்று கோப பரவசனாய்த் திசையானைகளோடு (அவற்றின் தந்தங்கள் தன் உடலில் பாய்ந்து முதுகுப்புறம் வெளிவருமாறு) அழுந்தப் பொருததால் ஏற்பட்டவையே இவ்வடுக்கள்! இவை புறப்புண்கள் அல்ல...அண்ணன் பெற்ற புகழின் கண்கள்! என்று உவகைக் கலுழ்ச்சியோடு பேசுகின்றான்.

நாடு உளதனையும் ஓடி
    நண்ணலார்க் காண்கிலாமல்,
பீடு உள குன்றம் போலும்
    பெருந்திசை எல்லை யானைக்
கோடு உள தனையும் புக்குக்
    கொடும்புறத்து அழுந்து புண்ணின்
பாடு உளது அன்றி, தெவ்வர்
    படைக்கலம்பட்டு என் செய்யும்?

இச்செய்திகளைக் கேட்ட இராமன் தான் இராவணனை இகழ்ந்ததற்கு வருந்துகின்றான். 

இப்படி இராவணனின் புகழ்கூறும் அருமையான பாடல்கள் பலவற்றை ’இராவண வதத்தில்’ படைத்ததன் வாயிலாய் இராமனுக்கு இணையான வீரன்தான் இராவணன் என நிறுவியுள்ளார் கல்வியில் பெரியவரான கம்பர்!

அன்புடன்,
மேகலா

Megala Ramamourty

unread,
Sep 2, 2015, 12:05:24 AM9/2/15
to மின்தமிழ்
//ஆயர் பாடியின் அசோதை பெற்றெடுத்த

பூவைப் புதுமலர் வண்ணன் கொல்லோ
நல் அமுது உண்ணும் நம்பி! ஈங்கு,
பல் வளைத் தோளியும் பண்டு நம் குலத்து,
தொழுனை யாற்றினுள் தூ மணி வண்ணனை 
விழுமம் தீர்த்த விளக்குக்கொல்//

தேமொழி,
இப்பாடலில் கோவலனைக் கண்ணனோடும் கண்ணகியை நப்பின்னையோடும் ஒப்பிட்டு மகிழ்கிறார்கள் மாதரியும் ஐயையும்.  அவ்வளவே!
ஆனால் நான் குறிப்பிடும் ’பாத்திரம்’ ஒவ்வொரு தெய்வத்தோடும் ஒப்பீடு செய்யப்பட்டு பின்பு ’அல்ல அல்ல’ என்று மறுக்கப்பட்டு வேறு வேறு தெய்வங்களோடு ஒப்பிடப்படும்.  :-)

விடைக்கு ரொம்ப பக்கத்தில வந்துட்டீங்க! மீண்டும் முயல்க!
வெற்றி உமதே பழக்கூடையும் உமதே!  :-))


அன்புடன்,
மேகலா

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Sep 2, 2015, 12:28:33 AM9/2/15
to மின்தமிழ்
மதுரைக் காண்டம் - 10. வழக்குரை காதை

அடர்த்து எழு குருதி அடங்காப் பசுந் துணிப் 

பிடர்த் தலைப் பீடம் ஏறிய மடக்கொடி, 
வெற்றி வேல் தடக்கைக் கொற்றவை, அல்லள்; 
அறுவர்க்கு இளைய நங்கை, இறைவனை 
ஆடல் கண்டருளிய அணங்கு, சூர் உடைக் 
கானகம் உகந்த காளி, தாருகன் 
பேர் உரம் கிழித்த பெண்ணும், அல்லள்; 
செற்றனள் போலும்; செயிர்த்தனள் போலும்; 
பொன் தொழில் சிலம்பு ஒன்று ஏந்திய கையள்; 
கணவனை இழந்தாள் கடைஅகத்தாளே; 
கணவனை இழந்தாள் கடைஅகத்தாளே’ என

பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக்கொடி வெற்றி வேல் தடக்கைக் கொற்றவை அல்லள்.
வென்றி தரும் வேலினைப் பெரிய கையின் கண் தாங்கிய கொற்றவையும் அல்லள், 
கன்னியர் எழுவருள் இளையாளாகிய பிடாரியும்
இறைவனை நட்ட மாடச் செய்த பத்திரகாளியும்
அச்சம் விளைக்கும் காட்டினிடத்தைத் தனக்கு இடமாக விரும்பிய காளியும்
தாருகனுடைய அகன்ற மார்பினைப் பிளந்த துர்க்கையும் ஆகிய அவர்களும் அல்லள்

என வாயிற்காப்போன் கண்ணகியைக் குறித்து சொல்வது ...
சரியா மேகலா? சொல்லுங்க...சொல்லுங்க...

..... தேமொழி

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Megala Ramamourty

unread,
Sep 2, 2015, 12:53:36 AM9/2/15
to மின்தமிழ்
ஆகா... தேமொழி கலக்கிட்டீங்க! மிகச் சரியான விடை!  👍

பிடியுங்கள் பழக்கூடையை!  




(தேமொழி, உங்களுக்கு ஒன்று தெரியுமா? நான் சற்றுமுன்புதான் தூங்கஆரம்பித்தேன்...வழக்கம் போலவே செல்போனைத் தலைமாட்டில் வைத்துக்கொண்டு! :-)
திடீரென்று மூளைக்குள் ஒரு ஃப்ளாஷ் அடித்தது. இந்நேரம் விடையைத் தேமொழி கண்டுபிடித்திருக்கவேண்டுமே என்று. செல்போனைத் திறந்துபார்த்தேன்; உங்கள் விடை கண்டேன்; மகிழ்ச்சியில் துள்ளினேன். மூடிய கணினியை ஓடிவந்து திறந்து...இதோ பரிசளிப்பும் முடித்தாயிற்று. இனி நிம்மதியாகத் தூங்குவேன்! )  :-)))

அன்புடன்,
மேகலா

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Nagarajan Vadivel

unread,
Sep 2, 2015, 1:14:36 AM9/2/15
to மின்தமிழ்
கண்ணகியைக் கொற்றவை என்று தமிழ்ச் சமூகம் ஏற்றுக்கொள்ளவில்லை.  தமிழ்க் கொற்றவை உயிர்வதையும் குருதியை எடுப்பதும் இல்லை
அ.த
Reply all
Reply to author
Forward
0 new messages