கம்பகாவியத்தின் கடைசிப்பகுதி யுத்தகாண்டம்!
‘கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ?’ என்னும்நம்மாழ்வாரின் திருவாய்மொழி பணித்த வண்ணம் இராமபிரானைக்கற்கத்தொடங்கிய கம்பன் வால்மீகியின் வழியில் இராமாயணத்தைப் பாடத்துவங்கினான். வால்மீகியை ஏற்றும் தழுவியும் சற்றே மாற்றியும் மெருகூட்டியும் கதைப்போக்கு, கற்பனை, வருணனை ,பாத்திரப்படைப்பு ,காட்சி அமைப்பு போன்றவற்றில் புதுமை செய்து பாடலானான். ஆழ்வார்களின் அருளிச்செயலில் அவன் கொண்டிருந்த ஈடுபாடு எல்லையற்றதாகவே தோன்றுகிறது.
கம்பனின் பிரபலமான பாடலான ’மைவண்ணத்து அரக்கி போரில் மழைவண்ணத்து அண்ணலே உன். கைவண்ணம் அங்கு கண்டேன் கால்வண்ணம் இங்கு கண்டேன்”.
என்பதின் தாக்கம் அவன் ஆழ்ந்து நேசித்த ஆழ்வார்பெருமானின்
முன்னை வண்ணம் பாலின் வண்ணம் முழுதும் நிலைநின்ற *
பின்னைவண்ணம் கொணடல்வண்ணம் வண்ணமெண்ணுங்கால்*
பொன்னின்வண்ணம்மணியின் வண்ணம் புரையுந்திருமேனி*
இன்னவண்ணமென்றுகாட்டீர் இந்தளூரிரே!
என்கிறபாடலை நினைக்கவைக்கிறது.
இனி யுத்தகளத்தை பார்க்கலாம்.
. இராம- இராவண யுத்தம் ஆரம்பமாகிவிட்டது.. இராவணன் சரமாரியாக அம்புகளை அண்ணல்மீதுவிடுகிறான். இராமரும் எதிரி தளர்ச்சி அடையும்வரை பாணங்களை செலுத்துகிறார்.
இராவணன் தலை கடலில் விழும்போது தேவர்கள் நிலையை கம்பன் இப்படிச்சொல்கிறான்.
குதித்தனர் பாரிடைக்குன்று கூட்டற
மிதித்தனர் வடகமும் தூசும் வீசினர்
துதித்தனர் பாடினர் ஆடித்துள்ளினர்
மதித்தனர் இராமனை வானுளோர் எலாம்..
(வடகம் என்றால் மெல்லிய ஆடையாம்! தூசு-=அரையாடை)
ஒருகட்டத்தில் இராமபாணங்களால் இராவணன் தேரில் மூர்ச்சித்து விழுந்துவிட இராமனின் தேரோட்டி மாதலி சொல்கிறான்.”உணர்வு தெளிந்துவிட்டால் இவனை ஒன்றும் செய்யமுடியாது இதுதான் சமயம் இப்போதே இவனை அழித்திடுங்கள் ஐயனே” என்கிறான்.
‘அது நீதியல்ல’என்கிறான் இராமன்.
உணர்வு மீண்ட இராவணன் மறுபடி இராமரைத்தாக்குகிறான். கடைசியில் இராமன் பிரும்மாஸ்திரத்தை எடுத்து இராவணன் மார்பில் செலுத்தவும் அவன் நிலைகுலைந்து வீழ்கிறான்.இராவண வதம் இறுதியாக முடிவடைகிறது.
இராகவன் தன்புனித வாளி உடல்புகுந்துதடவியதால் மனச்சிறையில் சுரந்த காதற்பித்து நீங்க அவன் முகங்கள் மாசு நீங்கி பொன்போல பொலிந்தன என்பதை கம்பன் இப்படி சொல்கிறார்.. அடங்க அடங்க என்று வரிக்குவரி சொல்லி நம்மை வியப்பில் வாய் அடங்க(அடைக்க) வைக்கிறார்!
வெம்மடங்கல் வெகுண்டனைய சினம் அடங்க
மனம்அடங்க வினையும் வீயத்
தெம்மடங்கப் பொருதடக்கைச் செயல் அடங்க
மயல்அடங்க ஆற்றல் தேயத்
தம்அடங்கு முனிவரையும் தலை அடங்க
நிலை அடங்கச் சாய்த்த நாளின்
மும்மடங்கு பொலிந்தன அம் முறைதுறந்தான்
உயிர்துறந்த முகங்கள் அம்மா.
வீரமும், சினமும் அவனுக்கு தவறாகப் பயன்பட்டமையால் அவனது மேன்மைமிகு ,அனைத்து முனிவர்களின் தலைமைத் தன்மை கொண்ட தவக் களையை அவன் முகம் இழந்திருந்தது. இன்று அத்தனை சினமும்,வீரமும் அடங்கிப் போனதால் ,தவக் களை உயிர் பெற்று முன்ன தன் நிலை மாறி மூன்று பங்கு பொலிவுற்று இன்று காணப் படுகிறது.
…
இராவணன் சிரத்தைக்கொய்ததை திருமங்கை ஆழ்வார் இப்படிச்சொல்லுவார்
. …… இலங்கைக்கோனை
பானுநேர் சரத்தால்பனங்கனிபோலப்
பருமுடி உதிரவில் வளைத்தோன்..’
பனங்கனிபோல என்னும் உவமை அரக்கனின் பத்துதலைகளையும் கொத்தாகப்பறித்து உதிர்த்த எளிமையைக்காட்டுகிறது. ஆழ்வாரின் இந்த உவமையை அப்படியே ஏற்றுக்கொண்டு கம்பன் இடத்தைமட்டும் மாறி இருக்கிறான்,கதை மாந்தரிலும் மாற்றம் செய்திருக்கிறான்
சடாயு உயிர்நீத்த படலத்தில் இப்படி ஒரு பாடலை கம்பன் அளிக்கிறான்.
…தத்து உற்று அயரேல்தால பலத்தினேலும்
கொத்தப்பன கொண்டிவன் கொண்டன வெற்றி வாசை
பத்திற்கு மின்றே பலியீவது பார்த்தியென்றான்’
.’’ அழாதே சீதை.பனப்பழங்களின் கொத்துபோல ஒரு நிரையாக அடர்ந்துள்ள இவனது பத்துதலைகளையும் நான் அறுத்து பத்துதிக்குகளுக்கும் பலிகொடுக்கிறேன் பார் ‘என்று ஜடாயு வை பேசவைத்த சிறப்பு கம்பனுக்கே உரியது.
ராவணவதத்தை ஆழ்வார்பெருமக்கள் ராவண வதத்தை புகழ்ந்து பாடினதுபோல ஆண்டாளும்
மாதலிதேர்முன்பு கோல்கொள்ள
மாயன் இராவணன்மேல்
சரமாரி தாய்தலை
அற்றற்று வீழத்தொடுத்த
தலைவன் வரவெங்கும் காணேன்
என்பதாக குயிலைநோக்கி நாச்சியார் திருமொழியில் பாடுகிறாள்..
இராமன் இரதமிருந்துகீழிறங்கி இறந்துகிடக்கும் இராவணனைப்பார்க்கிறானாம்..
பொல்லா அரக்கனைக்கிள்ளிக்களைந்தவன் இராமன்.சினத்தினால் தென்னிலங்கைகோமானைச்செற்ற மனதுக்கினியானாகிய இராமனுக்கு இராவணனை வென்றமை தனக்கு சிறப்பைத்தராதென்று தோன்றுகிறதாம்! புன்சிரிப்புடன் கூறுகிறான்.
திகைப்பாகத்தான் இருக்கிறது நமக்கு! இராமனின் இந்த மனநிலைக்குக்காரணம் என்ன?
(அடுத்த கம்பராமாயண வகுப்பில் இதை அறிந்து பிறகுவிளக்கும்வரை காத்திருக்கவும் அல்லது அறிந்தவர்கள் தொடர்ந்தால் மகிழ்ச்சியே!)
அன்புடன்
ஷைலஜா
வெற்பெடுத்து வேலைநீர் கலக்கினாய் ,அதன்றியும்
வெற்பெடுத்து வேலைநீர் வரன்புகட்டி ,வேலைசூழ்--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
| மலைபோர்த்தன; இமையோர் |
| கண்போர்த்தன; கடல் போர்த்தன; |
| படிபோர்த்தன; கலையோர் |
| எண்போர்த்தன; எரிபோர்த்தன; |
| இருள்போர்த்தன; ‘என்னே |
| திண்போர்த்தொழில்? ‘என்று ஆனையின் |
| அல்லன்; திருமாலாம் |
| அவனோ? அல்லன்; மெய்வரம் |
| எல்லாம் அடுகின்றான்; |
| தவனோ என்னின், செய்து |
| முடிக்கும் தரன் அல்லன்; |
| இவனோதான் அவ் வேதமுதல் |
| நண்ணலார்க் காண்கிலாமல், |
| பீடு உள குன்றம் போலும் |
| பெருந்திசை எல்லை யானைக் |
| கோடு உள தனையும் புக்குக் |
| கொடும்புறத்து அழுந்து புண்ணின் |
| பாடு உளது அன்றி, தெவ்வர் |
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
இறந்தபின் இராவணனுடைய முகம் மும்மடங்கு பொலிந்ததுபோல் ஷைலுவின் எழுத்தில் யுத்த காண்டமும் மும்மடங்கு பொலியக் காண்கிறேன்!
Very good narration Shylu; I thoroughly enjoyed this article. Congrats! :-)>>ரொம்பபுகழ்ந்தால் நிஜமா 'shy'லஜா ஆகிறேன் அவ்வளவுக்கு தகுதி இல்லை மேகலா .. எல்லாப்புகழும் எங்கள் குருநாதர் ஹரிகிஜீக்கே!!!
இராவணன் வதம் செய்யப்பட்டு யுகங்கள் கடந்தபின்னும் அவனைப் பற்றிய (வி)வாதங்களுக்கு ஓய்வில்லை; இராமன் (பெயர்) உள்ளளவும் இராவணனும் நினைவுகூரப்படுவான் இல்லையா? :-)
யுத்தகாண்டத்திலுள்ள சுவையான பாடல்கள் சில...
இராம இராவண யுத்தத்தில் இராமனுக்குச் சளைக்காமல் போர் செய்த பெருவீரன் இராவணன். அவன் விட்ட அம்புகளின் குவியல், விண்ணையும் திசைகளையும், கடலையும் காண்போர் கண்களையும் மறைத்தனவாம்; ”அடடா எப்படிப்பட்ட போர் வீரமிது!” என்று ஆனையின் தோலைப்போர்த்த சிவபிரானே இராவணனின் வீரம்கண்டு வியந்துபோனானாம்! :-)
விண்போர்த்தன; திசை போர்த்தன;
மலைபோர்த்தன; இமையோர்
கண்போர்த்தன; கடல் போர்த்தன;
படிபோர்த்தன; கலையோர்
எண்போர்த்தன; எரிபோர்த்தன;
இருள்போர்த்தன; ‘என்னே உரி போர்த்தவன் திகைத்தான்.
திண்போர்த்தொழில்? ‘என்று ஆனையின்
அதுபோல் யுத்தத்தில் இராமனின் வீரம் கண்டு சிலிர்த்த இராவணன் ”இவன் யாராக இருக்கக்கூடும்?” என்று சிந்திக்கிறான். ”சிவனோ?” என்ற எண்ணியவன் ”இல்லையில்லை” என்று தனக்குள் மறுத்து, ”திருமாலோ?” “இல்லை அவனாகவும் இருக்கமுடியாது!” என்று முடிவுசெய்து, ”வேறு யாராக இருக்கக்கூடும்?” என்று மீண்டும் ஆழ்ந்து சிந்தித்துவிட்டு ”ஒருவேளை இவன்தான் அந்த வேதமுதல் காரணனோ?” என்று ஐயுறுகின்றான்.
சிவனோ? அல்லன்; நான்முகன்
அல்லன்; திருமாலாம்
அவனோ? அல்லன்; மெய்வரம்
எல்லாம் அடுகின்றான்;
தவனோ என்னின், செய்து
முடிக்கும் தரன் அல்லன்;
இவனோதான் அவ் வேதமுதல்
காரணன்? ‘என்றான்.>>>எளிமையும் அழகுமாய் வார்த்தைகள் எப்படி விழுகின்றன பாருங்கள்!
(இவ்வாறு ஒரு நபரை தெய்வங்கள் ஒவ்வொருவரொடும் பொருத்திப்பார்த்து... பின்பு ”இல்லை” என்று தெளிவடையும் பகுதி ஒன்று சிலப்பதிகாரத்திலும் வரும்; அதனைக் கண்டுபிடிப்போர்க்கு (கூகுளிலிருந்து) எடுக்கப்பட்ட ஒரு பழக்கூடை பரிசளிக்கப்படும் டும் டும் டும்!) :-)))<<பழக்கூடையை பெறப்போகிறவருக்கு வாழ்த்து இப்போதே! சிலப்பதிகாரம் மிகச்சிறிய அளவில் தெரிந்திருப்பதால் பரிசு எனக்கில்லை:) சிலம்பின் செல்வி மேகலா வாழ்க!
//சினத்தினால் தென்னிலங்கைகோமானைச்செற்ற மனதுக்கினியானாகிய இராமனுக்கு இராவணனை வென்றமை தனக்கு சிறப்பைத்தராதென்று தோன்றுகிறதாம்! புன்சிரிப்புடன் கூறுகிறான். திகைப்பாகத்தான் இருக்கிறது நமக்கு! இராமனின் இந்த மனநிலைக்குக்காரணம் என்ன? அடுத்த கம்பராமாயண வகுப்பில் இதை அறிந்து பிறகுவிளக்கும்வரை காத்திருக்கவும் அல்லது அறிந்தவர்கள் தொடர்ந்தால் மகிழ்ச்சியே//
அப்பகுதியைச் சுருக்கமாக இங்கே விளக்கியிருக்கிறேன்; நீங்கள் பின்பு விரிவாக எழுதுங்கள் ஷைலு! :-)
இராவண வதத்தின் இறுதிப்பகுதி...
இராமன் இராவணனைக் கொன்றுவிடுகின்றான். பிறகு இராவணனின் உடலைப் பார்க்கிறான்; அவன் முதுகில் வடுக்கள் தெரிகின்றன; ”சே! ஏற்கனவே புறமுதுகிட்டுப் புறப்புண்கள் சுமந்த கோழை ஒருவனையா நான் கொன்றேன்? இஃது எனக்குப் பெருமை தராதே!” என்று வருத்தத்தோடு பேசுவதை அருகில் நின்றுகொண்டிருந்த வீடணன் கேட்கிறான். அவனுக்கு பெருவருத்தம் ஏற்படுகின்றது (என்னதான் கருத்துவேறுபாடு இருந்தாலும் இராவணன் அவனுடைய அருமை அண்ணன் அல்லவா?).
தமையனை இராமன் இகழ்ந்து பேசியது பொறாத வீடணன், ”ஐய! என்ன வார்த்தை சொல்லுகிறீர்? என் தமையனாவது புறப்புண் படுவதாவது? உலகிலுள்ளோர் அனைவரையும் வென்ற அந்த மாவீரன் ”இனி வெல்வதற்கு யாருமில்லையே!” என்று கோப பரவசனாய்த் திசையானைகளோடு (அவற்றின் தந்தங்கள் தன் உடலில் பாய்ந்து முதுகுப்புறம் வெளிவருமாறு) அழுந்தப் பொருததால் ஏற்பட்டவையே இவ்வடுக்கள்! இவை புறப்புண்கள் அல்ல...அண்ணன் பெற்ற புகழின் கண்கள்! என்று உவகைக் கலுழ்ச்சியோடு பேசுகின்றான்.
நாடு உளதனையும் ஓடி
நண்ணலார்க் காண்கிலாமல்,
பீடு உள குன்றம் போலும்
பெருந்திசை எல்லை யானைக்
கோடு உள தனையும் புக்குக்
கொடும்புறத்து அழுந்து புண்ணின் படைக்கலம்பட்டு என் செய்யும்?
பாடு உளது அன்றி, தெவ்வர் இச்செய்திகளைக் கேட்ட இராமன் தான் இராவணனை இகழ்ந்ததற்கு வருந்துகின்றான்.
இப்படி இராவணனின் புகழ்கூறும் அருமையான பாடல்கள் பலவற்றை ’இராவண வதத்தில்’ படைத்ததன் வாயிலாய் இராமனுக்கு இணையான வீரன்தான் இராவணன் என நிறுவியுள்ளார் கல்வியில் பெரியவரான கம்பர்!
>>>அழகாக விரிவாக கம்பனை ஆழ்ந்து ரசித்து எழுதிய மேகலாவுக்குப்பாராட்டும் நன்றியும்!!
அன்புடன்,மேகலா
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
//காரைக்குடி கம்பன் கழகத்தின் இந்த மாதக்கூட்டத்தில் 5.9.2015 அன்று “கம்பனில் மக்கள் தொடர்புக்கலை” என்ற பொருளில் உரை நிகழ்த்துகிறேன் என்பதனை நண்பர்களுக்குத்தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.//
இராமன் இரதமிருந்துகீழிறங்கி இறந்துகிடக்கும் இராவணனைப்பார்க்கிறானாம்..
பொல்லா அரக்கனைக்கிள்ளிக்களைந்தவன் இராமன்.சினத்தினால் தென்னிலங்கைகோமானைச்செற்ற மனதுக்கினியானாகிய இராமனுக்கு இராவணனை வென்றமை தனக்கு சிறப்பைத்தராதென்று தோன்றுகிறதாம்! புன்சிரிப்புடன் கூறுகிறான்.
திகைப்பாகத்தான் இருக்கிறது நமக்கு! இராமனின் இந்த மனநிலைக்குக்காரணம் என்ன?
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
-இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ இராவண வதம்!கம்பகாவியத்தின் கடைசிப்பகுதி யுத்தகாண்டம்!

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
ஆஹா அருமை! இப்படியும் எழுத திறமையும் நுண்ணறிவும் வேண்டும் என்றால் அது மிகையாகாது. இன்னும் வரும் என நம்புகிறேன்!
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
உங்களுடைய எழுத்தும் மிளிர்ந்து காண்கின்றன மேகலா டீச்சர்..
On Wednesday, September 2, 2015 at 7:54:05 AM UTC+5:30, megala.ramamourty wrote:இறந்தபின் இராவணனுடைய முகம் மும்மடங்கு பொலிந்ததுபோல் ஷைலுவின் எழுத்தில் யுத்த காண்டமும் மும்மடங்கு பொலியக் காண்கிறேன்!
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
மேகலா டீச்சர்..
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
தாங்கள் தந்த படங்கள் அருமையாக இருக்கின்றன, துரை அவர்களே!ஒரு அரிசோனன்

இராவணன் குப்புற வீழ்ந்து கிடக்க, அவன் முதுகில், காயத்தின் தழும்புகள் தெரிகின்றன. அவனுக்கு இராவணனின் மீது, அவன் வீரம் மீது இகழ்ச்சித் தோன்றுகிறது.
| வாலியும் அரிதின் ஐய! |
| மேயின வென்றி விண்ணோர் |
| சாபத்தின் விளைந்த மெய்ம்மை |
| தாயினும் தொழத் தக்காள் மேல் |
| தங்கிய காதல் தன்மை |
| நோயும் நின்முனிவும் அல்லால் |
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
ஐய! ஆயிரம் தோள்கள் கொண்ட கார்த்தவீரியனும் வாலியும் என் அண்ணனை வென்று பெற்ற வெற்றிகள் மிகவும் அரிதின் முயன்று பெற்றவையே; அவையும் தேவர்கள் என் அண்ணனுக்கு இட்ட சாபத்தின் விளைவே. தாயினும் தொழத்தக்காளான சீதையின் மீது கொண்ட ஆசையும், உன்னுடைய சீற்றமுமே அவனை வீழ்த்தின; இல்லையேல் அவனை வெல்ல வல்லார் யாருளர் இங்கே?” என்று இராமனுக்குச் சுடச்சுட பதிலளிக்கிறான் வீடணன்.
ஆயிரம் தோளினானும்,
வாலியும் அரிதின் ஐய!
மேயின வென்றி விண்ணோர்
சாபத்தின் விளைந்த மெய்ம்மை
தாயினும் தொழத் தக்காள் மேல்
தங்கிய காதல் தன்மை வெல்வரோ நுவலற்பாலார்? (யுத்த காண்டம்: இராவண வதைப் படலம் - 10054)
நோயும் நின்முனிவும் அல்லால் ஹரிகி ஐயா, இராவணனுக்குத் தேவர்கள் இட்ட சாபமாக வீடணன் இங்கே குறிப்பிடுவதன் விளக்கத்தைத் தர இயலுமா? கம்பர் தன் காப்பியத்தில் இதுபற்றி ஏதேனும் குறிப்பிட்டுள்ளாரா என அறிய ஆவல். :-)
ஆயிரம் தோளினானும்,
வாலியும் அரிதின் ஐய!
மேயின வென்றி விண்ணோர்
சாபத்தின் விளைந்த மெய்ம்மை
தாயினும் தொழத் தக்காள் மேல்
தங்கிய காதல் தன்மை வெல்வரோ நுவலற்பாலார்? (யுத்த காண்டம்: இராவண வதைப் படலம் - 10054)
நோயும் நின்முனிவும் அல்லால் ஹரிகி ஐயா, இராவணனுக்குத் தேவர்கள் இட்ட சாபமாக வீடணன் இங்கே குறிப்பிடுவதன் விளக்கத்தைத் தர இயலுமா? கம்பர் தன் காப்பியத்தில் இதுபற்றி ஏதேனும் குறிப்பிட்டுள்ளாரா என அறிய ஆவல். :-)
அன்னதோ?' என்னா, ஈசன் ஐயமும் நாணும் நீங்கி,
தன்ன தோள் இணையை நோக்கி, 'வீடணா! தக்கது அன்றால்;
என்னதோ, இறந்துளான் மேல் வயிர்த்தல்? நீ இவனுக்கு, ஈண்டச்
சொன்னது ஓர் விதியினாலே கடன் செயத் துணிதி' என்றான்.--
// சிரிப்பில் ஏளனக் குறிப்பு தெரிகிறது. //இல்லவேயில்லை ஐயா. உங்கள் விடையை எதிர்பார்க்கும் ஆவலில் நானிட்ட சிரிப்புக்குறி அது! தங்களை நான் ஏன் ஐயா ஏளனம் செய்யவேண்டும்? தங்களின் வார்த்தைகள் என்னை மிகவும் வருத்துகின்றன.
--
2015-09-04 8:24 GMT+05:30 Satish Kumar Dogra <dogra...@gmail.com>:பாடல் எண் 10054 ல் எவ்வளவு தான் ஒருவனுக்கு ஞானமும், வீரமும், திறமைகளும் இருந்தாலும் தவறான நடத்தையினால் அவன் பலவீனம் அடைகிறான் என்கிறார் கம்பர். யாராலும் வென்றிட முடியாத ராவணன் தன் தவறுகளால் தேவர்களின் சாபத்திற்கு ஆளாகிறான். பலவீனம் அடைகிறான். பிறகு, உலகமே தாயாக போற்றும் சீதையை தவறராக நோக்குகிறான். அதன் விளைவாக ராமரின் கோபத்தை தூண்டுகிறான்.ஐயா,தாங்கள் பயன்படுத்தும் பதிப்பு எது? எந்தப் பதிப்பாக இருந்தாலும் பாடல் 10054 இந்தப் பொருளில் வரமுடியாது. ஏனெனில் இந்த எண்ணுடைய பாடல் மீட்சிப் படலத்தில் அக்னி பிரவேசத்துக்கெல்லாம் பிறகு வருகிறது. அந்த இடத்தில் அக்கினிப் பிரவேசம், இன்னபிற செய்திகளைத்தான் பேசமுடியுமே தவிர, இராவணனுடைய வீழ்ச்சி பற்றி பேச இயலாது. அப்படி ஏதும் இருந்தால் அந்தப் பாடலை அறிந்துகொள்ள விரும்புகிறேன்.அசஞா அவர்களுடைய பதிப்பில் இந்த 10054ம் பாடல் இது:
'என்னைத்தான் முதல் ஆகிய உருவங்கள் எவையும்
முன்னைத் தாய் தந்தை எனும் பெரு மாயையில் மூழ்கி,
தன்னைத் தான் அறியாமையின், சலிப்ப; அச் சலம் தீர்ந்து,
உன்னைத் தாதை என்று உணர்குவ, முத்தி வித்து, ஒழிந்த. 10054.பாடல் எண்ணில் ஏதோ தவறு இருக்கிறது. பாடலின் முதல் சீரையோ சொல்லையோ தந்துதவ முடியுமா? எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்பதைச் சரிபார்த்துக் கொள்ள உதவும்.நன்றி.
--அன்புடன்,
ஹரிகி.நட்பும் சுற்றமும் நலமே என்பதைமட்டும் கேட்க வாணி அருள்கவே.God bless all of us. May we hear from everyone in our life that they are good and prosperous.
இயலுமானால் எது சரியான எண் என்று தெளிவுபடுத்துங்கள்.
(உரை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.)
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
tamilvu.org யையே நம்பிவிடலாமா? அல்லது பெட்டியை திறப்பது அவசியமா?
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
இதுக்கு யாரும் பதில் சொல்லிட்டாங்களா ? இழை முழுசா படிக்கல.வாரணம் பொருத மார்பும்,வரையினை எடுத்த தோளும்,நாரத முனிவற்கு ஏற்பநயம்பட உரைத்த நாவும்,தார் அணி மவுலி பத்தும்,சங்கரன் கொடுத்த வாளும்,வீரமும் களத்தே போட்டு,வெறும் கையோடு இலங்கை புக்கான்இப்படியாகச் சென்றவன் தானே இராவணன்... ஆனால் பின்பு தேவர்களே அச்சமுறுவகையில் அவன் போர் புரிகிறான்..
‘தோற்றனனே இனி ‘என்னும் தோற்றத்தால்ஆற்றலர் அமரரும் அச்சம் எய்தினார்வேற்றவர் ஆர்த்தனர்; மேலும் கீழரும்காற்று இயக்கு அற்றது கலங்கிற்று அண்டமே.இராவணனின் வலிமை இராமனையும் வருத்தியது என்பதையும் நாம்காண்கிறோம்.நீல்நிற நிருதர்கோன் எய்த நீதியின்சால்புடை மாதலி மார்பில் தைத்தவெங்கோலினும் இலக்குவன் கோல மார்பின் வீழ்வேலினும் வெம்மையே விளைத்த வீரற்கும்.
அத்தோடா ? இராமன் இராவணனின் தலையை அறுத்தப் பின்னும் அவை மீண்டும் முளைத்து எழுந்து, இராவணன் இன்னும் வலியுடன் போர் புரிகிறானே ? இராவணனை கடைசியில் பிரம்மாத்திரம் கொண்டல்லவா இராமனால் வீழ்த்த முடிந்தது. அப்படியானால் இராமன், இராவணனைக் குறித்து இப்படி ஏன் நினைக்க வேண்டும் ?
இராவணன் குப்புற வீழ்ந்து கிடக்க, அவன் முதுகில், காயத்தின் தழும்புகள் தெரிகின்றன. அவனுக்கு இராவணனின் மீது, அவன் வீரம் மீது இகழ்ச்சித் தோன்றுகிறது.
இராவணனை இதற்கு முன் தோற்கடித்தவன் கார்த்தவீரியார்ச்சுனன். அதை கேள்வியுற்ற போதே இராமனுக்கு அவமானமாக இருந்ததாம், இவனைப் போய் எதிர்க்கிறோமே என்று. ஒரு வேளை அவனிடம் தோற்று ஓடிய போது ஏற்பட்ட புறமுதுகுப் புண்களோ என்று இராமனுக்கு ஐயம் தோன்றுகிறது. இப்போது இப்படி புறமுதுகிட்டு ஓடிய ஒருவனிடமா நான் சண்டையிட்டேன் என்று இராமன் நாணுகிறானாம்.இதை விபீடணனிடம் கூற, அதற்கு விபீடனன் தன் அண்ணனி வீரத்தை, அவன் வாரணம் பொருத மார்பன் என எல்லாம் கூற, அவனிடம் இராமன் மன்னிப்பு கேட்க...இராமன்.. ஒரு சிறந்த அரசன், சிறந்த வீரன்.ஒளிகளில் நான் ஞாயிறு,புலன்களில் மனம்,தளபதிகளில் நான் முருகன்,அசுரர்களில் நான் பிரகலாதன்ஆயுதம் ஏந்திய வீரர்களுள் இராமன்என்று கண்ணபிரான் கூறியது இதனால் அல்லவா ?அன்புடன்ஐயப்பன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
தமிழால் கம்பகாவியம் அழகானதா . கம்பகாவியத்தால் தமிழ் அழகானதா என்று பரவசப்படுகிற மனம்
கம்பருடைய காப்பியத்தின் சுவைகளை எல்லாம் திரட்டி ‘கம்பராமாயண சாரம்’ என்று நூல் இயற்றினார் வெ.ப. சுப்ரமண்யமுதலியார்.கம்பனின் காவியத்தைபோற்றிபுகழ்வதற்கென்றே வாழ்நாளை அர்ப்பணம் செய்தவர் ரசிகமணி டிகேசி. கம்பனின் பெருமையை ஆங்கிலத்திலும் அகிலம் அறியப்பரப்பியவர் வவேசு ஐயர். அரசியல் மேடைகளில் தமிழைத்தென்றலாகத்தவழவிட்ட சீவானந்தம் கம்பனைப்போற்றியவர். காரைக்குடி கம்பன் கழகம் ஆண்டுதோறும் கம்பனுக்கு விழா எடுக்கிறது.இன்னும் பலப்பல சான்றோர்கள் கம்பகாவியத்தை வாழவைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இன்று மனம் கவர்கிறவர்கள்:கம்பன் அடிசூடி பழ.பழநியப்பன்.சரசுவதி இராமநாதன்நெல்லை ஜெயராஜ்நண்பர் திரு ஹரிகிநண்பர் திரு அந்தமான் கிருஷ்ணமூர்த்திசொ.சொ.மீ.சுந்தரம்அம்பத்தூர் கம்பன் கழக நிர்வாகிகள்
நாளை கம்பனைக் கற்க வழிகாட்டப்போவது:நண்பர் திரு ஹரிகி வழிகாட்டுதலில் பெங்களூரில் நண்பர்கள் பங்கேற்ற கம்பராமாண முற்றோதல் நிகழ்வு பதிவுசெய்யப்பட்ட காணொலிகள்.
இந்தச் சமயத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் சொக்கன் தெரிவித்த செய்தியைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.இந்தப் பதிவுகளால் சில ஐஏஎஸ் மாணவர்கள் பயன்பெற்றதைச் சொல்லியிருந்தேன். பாங்காக்கில் ஒரு குழுவினர் கம்பராமாயணம் முழுவதும் ஓதப் போகிறார்களாம். சொல்லித்தர யாரும் கிடைக்கவில்லை என்று தேடியதில் இந்தப் பதிவுகள் சிக்கியிருக்கின்றன. 'நீங்கள் முடிக்கப் போகும் சமயத்தில் நாங்கள் தொடங்குகிறோம். புத்தகத்தை வைத்துக்கொண்டு, உங்கள் பதிவுகளைப் பெரிய திரையில் போட்டுப் பார்த்தபடி உங்களைப் போலவே வாராவாரம் தொடரப் போகிறோம். எங்களுக்கு வரும் ஐயங்களைக் குறித்து வைத்துக் கொண்டு உங்களுக்கு அனுப்பினால் உதவுவீர்களா' என்று சொக்கனிடம் தொலைபேசி மூலமாக அந்தக் குழுவினரி ஒருவர் கேட்டாராம். இதைச் சொக்கன் என்னிடம் தெரிவித்ததும், 'ஐயம் களைவதில் நம் உதவி எப்போதும் உண்டு என்று தெரிவிக்கவும்' எனச் சொன்னேன்.
போட்ட விதை முளைக்கலாம் என்ற அறிகுறி தெரியத் தொடங்கிவிட்டது. இதுபோதும்.