மயங்கிய கலி

40 views
Skip to first unread message

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Oct 18, 2014, 12:35:31 PM10/18/14
to mint...@googlegroups.com
மயங்கிய கலி
================================================ருத்ரா

தண்டுளி இரங்கும் கருவி வானம்
மண்ணிய முழவு அன்ன அதிர்ப்ப‌
கைக்கொண்டு மறைதரு வேழம் வாங்க‌
நழுவிய துகிலாய் மஞ்சு பிசிர் காட்ட‌
பிளிறிய ஓதையின் வெங்கான் வெரூஉய்
கடுவனும் மந்தியும் கொடுஞ்சினை கொழுவ‌
விழுது விட்டு விழுது பற்றி
வள்ளிய வேர் பரி நெடுவியன் நிலத்து
புரள்தரு களிப்பின் வெறியாட்டு கொள்ளும்.
விரிகதிர் வாங்கி வெள்ளருவி உலர்த்தும்
புல்லிய நுரை அவிழ் பொறிகிளர் கூந்தல்
பரப்பக்காட்டும் நீரின் பேரெழில்
நீற்றிப் பரக்கும் நெய்சுடு நினைவின்
நித்திலம் கோக்கும் விழிநீர்க்கடையில்.
பிரிவின் ஆற்றா பெருந்தீ ஞாழல்
கரை தொறும் கீற்றிய அடைசேர் ஆங்கு
எரிக்கும் உரிக்கும் உயிர் இழை பறிக்கும்
என்று வருங்கொல் அவன் கழைவில் மார்பு
கவிழ்த்து சாய்க்கும் தடமென் தொள்கொடு
அவிழ்த்து மேய்க்கும் ஆம்பல் செம்புயல்
நாணுடை புதை கண் பெய்யும் பெய்யும்
அடர்மழை ஒற்றி அவன் அகலம் தோஒய் தர‌
மள்ளன் கைப்பட மயங்கிய கலியில்
ஆர்த்தே அவியும் என் மாவின் பசலை.

=================================================

Venkatachalam Dotthathri

unread,
Oct 18, 2014, 11:39:27 PM10/18/14
to mintamil
ஓம்
ஒரு புறநானூற்றின் வழியாக உதித்த பாடலா? என்னைப் போன்றோருக்கு அதன் விளக்கவுரையும் தந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி.
அன்புடன் வெ.சுப்பிரமணியன் ஓம்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Oct 19, 2014, 11:30:45 AM10/19/14
to mint...@googlegroups.com
நன்றி திரு வி.தோத்தாத்ரி அவர்களே

இதோ என் தெளிவுரை (மயங்கிய கலி) எனும் என் கவிதைக்கு.

அன்புடன் ருத்ரா

("மயங்கிய கலி" கவிதைக்கு தெளிவுரை)


தெளிவுரை
=============================================ருத்ரா

தண்ணிய துளி இரங்கும் கருமுகில் திரண்ட வானம் மண்ணால் துடைக்க‌ப்பட்ட முழவு எனும் பறை அதிர்ந்தாற்போல் அதிர 
அதனை ஒரு யானை தன் தும்பிக்கை கொண்டு மறைக்க முயல‌
மங்கையர் நழுவ விட்ட மேலாடை போல் மேகப்பஞ்சுகள் அங்கும் இங்கும் திரிய 
வெறிகொண்ட யானை ஓசையிட அதனால் வெறுமையில் தனித்து தோன்றும் காடே அஞ்ச‌
ஆண்குரங்கும் பெண்குரங்கும் அக்காட்டில் மரத்தின் வளைந்த கிளையைப்பிடித்து குழைந்து ஆடுகையில்
விழுது விட்டு விழுது தாவி அவை ஊஞ்சல் ஆட‌
அந்த நீண்ட நிலப்பரப்பில் வள்ளிக்கொடி வேர் ஊடிக்கிடக்க‌
அந்த பொலிவின் களிப்பில் அக்குரங்குகள் புரண்டு விளையாடும்.
சூரியஒளியின் விரிந்து பரந்த கதிர்களில் அங்கே
வெள்ளிய அருவி தன் நுண்ணிய நுரைகளை கிளர்ந்த ஒளிப்புள்ளிகளுடன் கூந்தல் விரித்தாற்போன்று உலர்த்தும்.
அந்த பரப்பிய நீரின் பேரெழில் தலைவியை உள்ளம் மயங்கச்செய்கிறது.
சுட்டெரித்து சாம்பல் பூத்தாற்போன்று அந்த (தலைவனைப்பிரிந்த) வேதனை கொதிக்கும் நெய்போல் அவள் நினவைச்சுடும்.அது முத்துக்கள் கோர்த்தது போல் அவள் விழியோரம் கண்ணீர் கோக்கும்.அவள் படும் பிரிவுத்துயர வேதனை தீக்கீற்றுகள் போல் அந்த ஆற்றங்கறைத்திட்டின்
நாணல்கூட்டங்களாய் காட்சி தந்து அவளை எரிக்கும்.அவள் உணர்வுகளை உரித்துக்காட்டும்.அவள் உயிரை உறிஞ்சும்.
அந்த வில் போன்ற விறைத்த மூங்கில் போன்று திரண்ட மார்பை உடைய என் தலைவன் என்று வருவான்? அவன் வந்தால் போதும்.
என் மெல்லிய தடந்தோளினை அவன் மார்பில் கவிழ்த்து சாய்த்துக்கொள்வேன்.என் ஆம்பல் விழிகள் ஒரு செழுமையான புயல் பார்வையை நாணத்தைக்கொண்டு புதைத்து அவன் மீது பொழிந்து கொண்டே இருப்பேன்.அணை கட்டிய என் கண்ணீர் உடைந்து அவன் மீது அடை மழை பெய்யும்.கண்ணீரால் அவன் மார்பு (அகலம்)முழுதும் தோய்ந்து ஒற்றி எடுப்பேன்.வலிமை மிக்க அவன் கைகளில் நான் அகப்பட்டு துள்ளி துள்ளி மகிழும் துள்ளலில்(கலி) மயங்கும் என் உள்ளம் என் உடம்பின் மாமரத்து தளிர் இலை போன்ற பசலை நோயை
அதிகரிக்கச்செய்யும்.அப்புறம் அது இனிமையாய் அடங்கும்.

(தலைவியின் ஏக்கம் நிறைந்த காத்திருப்பு இது)

========================================================================

On Saturday, October 18, 2014 9:38:23 AM UTC-7, ருத்ரா wrote:
- show quoted text -

N. Ganesan

unread,
Oct 20, 2014, 10:20:46 AM10/20/14
to mint...@googlegroups.com, vallamai, thami...@googlegroups.com, housto...@googlegroups.com, Santhavasantham
On Sunday, October 19, 2014 8:30:45 AM UTC-7, ருத்ரா இ.பரமசிவன் wrote:
நன்றி திரு வி.தோத்தாத்ரி அவர்களே

இதோ என் தெளிவுரை (மயங்கிய கலி) எனும் என் கவிதைக்கு.

அன்புடன் ருத்ரா

("மயங்கிய கலி" கவிதைக்கு தெளிவுரை)


நன்றி, இ. பரமசிவன் அவர்களே. படித்துப் பார்த்தேன்.
உங்கள் சங்கயாப்புக் கவிதை முயற்சிகள் மிக நன்று.
தொடருங்கள். தூய தமிழில் இயற்கையை அழகாகச்
சொல்லலாம் என்று இளைஞர்களுக்கு வழிகாட்டும்.
இந்தியாவிலும், மூன்றாம் உலக நாடுகளிலும்,
இயற்கை - மடம், செடி, கொடி, மணல், செம்மண், குன்று,
கருங்கல், பாலூட்டிகள், பறவைகள், தவளைகள், பூச்சிகள்,
மீன்கள், முதலைகள், .... எல்லாமும் பேரிடருக்கு உட்பட்டு
வரும் ஆண்டுகள் இவை. உயிர்பிழைத்து வாழுமா? - என்றே
அறியாத நிலையில். அவற்றின் தொகை ஏற்கெனவே இந்த
40 ஆண்டுகளில் பாதியாகக் குறைந்துவிட்டனவாம். பல இனங்கள்
மீள முடியாத சிறு எண்ணிக்கையில்தாம் உள்ளன என்று
உயிரியியல் விஞ்ஞானிகள் அறிவிக்கிறார்கள். அணுங்கு
(அழுங்கு என்று பிற பகுதிகளில்) என்று சொல்லும் எறும்புதின்னியை
சிறுவயதில் மலசர்கள் பிடித்துவருவார்கள். இன்று அவை எங்கே?

-----------

ஞாழல் = நாணல் என்று விளக்கம் தந்துள்ளீர்கள். ஆனால், ஞாழல்
என்பது ஒரு மரம். நாணல் அன்று.

ஞாழல் என்பது புலிநகக்கொன்றை என்று உவேசா எழுதிவிட்டார்கள்.
அது பிழை. பின்னர் அவரது மாணவர் இ.வை. அனந்தராமையர்
கலித்தொகைப் பதிப்பில் ஞாழல் என்பது என்ன மரம் என்று விளக்கமாக
எழுதியுள்ளார்கள். இ.வை. அ. கலித்தொகை உரை படிக்கவும். 
தமிழ்ப் பல்கலையில் வ.ஐ.சு காலத்து மறுஅச்சு ஆனது. வாங்கலாம்.
இணையப் பல்கலையிலும் சில மாதங்களாக இருக்கிறது.

நேர்ந்த பிழையால், பி. ஏ. கிருஷ்ணன் (பட்சிராஜையங்கார் அனந்த கிருஷ்ணன்)
டைகர்-க்லா ட்ரீ என்று ஆங்கிலத்தில் நாவல் எழுதிவிட்டார்.
கரிஞ்சம் (> க்ரௌஞ்சம்) என்னும் அன்றில் ஐபிஸ் பற்றிச் சொன்னேன் அல்லவா?
- அது ஐபிஸ் என தெரியாமல் சாருஸ் நாரை என்று ஜூலியா லெஸ்லி
எழுதப்போக, ஜூலியா எபக்ட்டால் (effect, like Raman effect) இணையத்தில்
ஆங்கிலத்தில் கரிஞ்சத்தைப் பிழையாக சாருஸ் க்ரேன் என எழுதுகின்றனர்.
அதைப் பார்க்கும் தமிழர்கள் சிலரும் கரிஞ்சத்தை சாருஸ் என்று எழுதுவதும் காண்கிறோம்.

17-ஆம் நூற்றாண்டில் கேரளம், தமிழ்நாடுகளில் உள்ள தாவரங்களைப்
பற்றி அறிஞர்கள் ஆய்ந்துள்ளனர்:

அதில் ஞாழல் பற்றி விரிவாக எழுதியிருக்கின்றனர். அதிசயம் என்னவென்றால்
இ.வை. அனந்தராமையரும் ஞாழல் பற்றி ’ஐடென்ண்டிஃபை’ அதனையே சரியாகச்
சொல்லியுள்ளார். 

வாஞ்சிநாதன் இணையத்தின் முதற்காலங்களில் ஞாழல் பற்றிக் கேட்டார்.
அதற்கான விடையை விரிவாகக் கட்டுரை வாயிலாய்ச் சொல்தல் கடன்.
சங்கநடைக் கவிஞர் உங்கட்கும் உதவும்.

கி.பி. 1683-ல் ஞாழல் பற்றி விளக்கியுள்ளனர்.
அதையே, 250 வருஷம் கழித்து இ.வை.அ சொல்லியுள்ளார்.
Aglaia elaeagnoidea (A.Juss.) Benth. [as niálel]
Rheede tot Drakestein, H.A. van, Hortus Indicus Malabaricus, vol. 4: t. 16 (1683)

Here is E. Vai. A's identification of ஞாழல் as Phalinii (=Pryangu, A.  elaeagnoidea) tree.
Footnote 6, pp. 787-788.

 "ஞாழல் - நெய்தனிலத்துக்கு உரித்தாகக் கூறப்படுவதொரு பூமரம்; (அ) அது “ஊர்க்கா னிவந்த பொதும்பரு ணீர்க்காற், கொழுநிழன் ஞாழன் முதிரிணர்கொண்டு, கழுமமுடித்துக் கண்கூடு கூழை” (கலி. 56 : 1 - 3) என்பதன் விசேடவுரையில் ‘ஞாழன் முடித்தாளென நெய்தற்றலைவிபோலவும், ஊர்க்கா னிவந்த பொதும்பரென்றதனான் மருதத்துக்கண்டான் போலவுங்கூறி” என்றும் (ஆ) நெய்தற்கு, ‘மரம், புன்னையும் ஞாழலும் கண்டலும்’ (தொல். அகத். சூ. 18, உரை.) என்றும் இவ்வுரையாசிரியர் எழுதியிருத்தலானும் (இ) நெய்தற்றிணைக் கருப்பொருளுக்கு, “நறுஞாழல் கையினேந்தி என்பதனாற் பூவுங் கூறினார்” (சிலப். பதி. விசேடவுரை) என்று அடியார்க்குநல்லார் எழுதியிருத்தலானும் (ஈ) பரிபாடலும் புறநானூறு மொழிந்த மற்றைத் தொகை நூல்களினும் சீவக. சிலப். மணி முதலிய நூல்களிலும் நாற்கவி 24 - ஆம் சூத்திரத்திலும் இது நெய்தற்கே உரித்தாகக் கூறப் பட்டிருத்தலானும் அறியலாகும். இம்மரம் எக்கரிற்செழித்துவளர்வது; (உ) அது ஐங்குறுநூற்று ஞாழற்பத்தால் அறியலாகும். இதன் அரையும் கொம்பும் கருநிறமுடையன; அவற்றை (ஊ) “ஏனோன்போ னிறங்கிளர்பு கஞலிய ஞாழலும்” (கலி. 26 : 4) என்பதும் (எ) ‘ச்யாமா’ என வடமொழியிலுள்ள பெயரும் (ஏ) “செவ்வீ ஞாழற் கருங்கோட்டிருஞ்சினை” அகம். 240 : 1. என்பதும் வலியுறுத்தும். அவ்வரை பொரிந்திருப்பது; அது (ஐ) ‘பொரியரை ஞாழலும்’ சீவக. 515 என்பதனால், அறியப்படும். நெய்தனிலத்து மகளிர் இதன்குழை கொய்தும் இதனாலாக்கிய தழையுடுத்தும் இதிற்றூக்கிய ஊசலாடியும் இன்புறுவரென்பதுமரபு; அவற்றை (ஒ) “ஞாழன் மலரின் மகளி, ரொண்டழை யயருந் துறைவன்” ஐங். 147. (ஓ) “கொய்குழை யரும்பிய குமரி ஞாழல்” நற். 54 : 9. (ஒள) “கானன் ஞாழற் கவின்பெறு தழையள்” ஐங். 191. (ஃ) “ஞாழ லோங்குசினைத் தொடுத்த, தாழைவீழ் கயிற்றூசல்” அகம். 20 : 5 - 6. என்பவை வலியுறுத்தும். இது செறிந்தபூங் கொத்தினது; (அஅ) “இணர்ததைஞாழல்” பதிற். 30 : 1. என்பதனால் உணர்தற்பாலது. இது பசிய அரும்புள்ளது; (ஆஆ) “பசுநனைஞாழல்” குறுந். 81. என்பதனாற் பெறப்படும். இதன்பூ, பொன்னிறமும் சிறிய உருவமும் நன் மணமும் வண்டினமொய்த்தலுமுடையது; அவற்றை (இஇ) “பொன்னிணர் ஞாழல்” ஐங். 169. (ஈஈ) “ஐயவி யன்ன சிறுவீ ஞாழல்” குறுந். 50. (உஉ) “நறுவீ ஞாழல்” நற். 96 : 1. (ஊஊ) “கணங்கொள்வண் டார்த்துலாங் கன்னி நறுஞாழல்” என்பவற்றால் அறிக. இப்பூ பசப்புக்கும் சுணங்குக்கும்உவமையாதல் இந்நூல் 131 : 11 - ஆம் அடிக்குறிப்பிற் காட்டப்படும். ஞாழலென்பது குங்குமம், ஒருவகைக் கொன்றை, கோங்கு, பலினி முதலிய பலமரத்துக்கும் பெயராமாயினும் நெய்தற் கருப்பொருளில் அது பலினியையே குறித்து வருமென்ப; பலினி யென்பது வடமொழிச் சிதைவு."

ஞாழல் (njAzal) has been identified since 1683 AD in Europe. Its name was used until 17th century.
ஞாழல்'s name was transcribed into Latin language, as "niAlel", see the 17th century
Malayalam writing also.

Aglaia elaeagnoidea (A.Juss.) Benth. [as niálel]
Rheede tot Drakestein, Hendrik van, Hortus Indicus Malabaricus, vol. 4: t. 16 (1683)
http://plantillustrations.org/illustration.php?id_illustration=122852&height=750
http://plantillustrations.org/species.php?id_species=29676

Aglaia elaeagnoidea has several synonyms:


njAzal is called zyAma in Sanskrit, obviously because
its fruits are dark. It has an abundance of these zyAma fruits
so another name is phalinii.

நன்றி.

நா. கணேசன் 

N. Ganesan

unread,
Oct 20, 2014, 10:26:13 AM10/20/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, thami...@googlegroups.com, housto...@googlegroups.com, santhav...@googlegroups.com

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Oct 20, 2014, 2:37:38 PM10/20/14
to mint...@googlegroups.com
அன்புக்குரிய முனைவர் திரு.கணேசன் அவர்களே

தங்கள் நுட்பமும் செறிவும் நிறைந்த சான்றுகள் படித்து மகிழ்ச்சி உற்றேன்.இது போன்ற சொல் வழக்கு பிழைகள் வராமல் இருக்க தங்கள் வழிகாட்டல் மிகவும் உதவும்.

மிக்க நன்றி.

அன்புடன் ருத்ரா

On Saturday, October 18, 2014 9:35:31 AM UTC-7, ருத்ரா இ.பரமசிவன் wrote:
Reply all
Reply to author
Forward
0 new messages