தினமணி நாளேட்டில் பாவாணர் பற்றிய கட்டுரை:
http://www.tamilkural.com/tamilkural/index.php?option=com_content&view=article&id=3779:2009-02-15-17-44-10&catid=69:%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%88&Itemid=316
அன்புடன்,
நா. கணேசன்
தமிழ்நாட்டில் ’வாழ்க்கை வரலாறு’ என்பது பஜனை மனப்பான்மையின் வெளியீடு.
துதியைத் தவிற தமிழர்களுக்கு வேறொன்றும் தெரியாதா என உலகம் வியக்கும்
விஜயராகவன்
ஞானமுத்து தேவநேயனை யார் முதலில் பாவாணர் என அழைத்த்னர் , ஏன் அப்படி
அழைத்தனர் என்று உங்களுக்கு தெரியுமா?
விஜயராகவன்
On 1 Nov, 13:15, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
பால், விஜயன், கோபி - ஒருவரும் பழைய புஸ்தகங்கள் படிப்பவர்கள் அல்லர்.
திரு கணேசன்
தேவநேயரின் இன்றைய தாக்கத்தைப் பற்றியும், அவரின் மொழி/சரித்திரம் பற்றிய
கருத்துகள் எவ்வாறு தமிழ் கூறும் நல்லுலகில் கையாளப்படுகின்றது என்பதை
பற்றியும் இங்கே ஒரு கட்டுரை எழுதுங்கள் உங்களிடம் நிறைய விஷயங்கள்
உள்ளன.
விஜயராகவன்
விஜயராகவன்
சென்னை பல்க்லைக் கழக பேரகராதிப் படி
பாவாணர் pā-vāṇar : (page 2634)
பாவாடைவீரன் pāvāṭai-vīraṉ
, n. < id. +. A village deity; ஒரு கிராமதேவதை.
வாணன் vāṇaṉ : (page 3585)
, n. < வாழ்-. 1. Resident; வசிப்பவன். அண்டவாண ரமுதுண நஞ்சுண்டு (தேவா.
644, 6). 2. One who persues a profession or calling; ஏதேனும் ஒரு
தொழிலால் வாழ் பவன். பாவாணன்.
கிராமதேவதை அல்லது ’ஏதேனும் ஒரு தொழிலால் வாழ் பவன்.’ இரண்டும்
கவிவாணனுக்கு சமம் இல்லை.
விஜயராகவன்
On 1 Nov, 16:55, மு இளங்கோவன் <muelango...@gmail.com> wrote:
எதற்கும் இணைய அகராதியை மேற்கோள் காட்டிக் கருத்துரைப்பதைக் குழுமங்களில்
கையாண்டு வருவது குறித்து மகிழ்ச்சி.
ஆயினும் அதுவே இறுதியன்று! கிராமங்களிலே, பண்டைய நூல்களிலே ஆயிரமாயிரம்
சொற்கள் புதைந்து கிடக்கின்றன. ஆகவே,
எதிர்மறைக் கருத்துரைக்கும் போது, இணையத்தில் இருக்கும் அகராதியே இறுதி
நினைத்து விடாதீர்கள். சரி, இனி இங்கே பேசப்படும்
பற்றியத்தைக் காண்ப்போம்.
வாணன் என்றால் குடிகொண்டவன் / உருவானவன். கலை ஒன்றையே மனதில்
குடிகொண்டவன் கலவாணன். மதியே ஆனவன் மதிவாணன்.
அப்படியாக, பா பாடும் திறத்தைக் குடிகொண்டவர், பாவாணர் ஆகிறார்.
பணிவுடன்,
பழமைபேசி.
> > புதுச்சேரி- Hide quoted text -
> அப்படியாக, பா பாடும் திறத்தைக் குடிகொண்டவர், பாவாணர் ஆகிறார்.
>
> பணிவுடன்,
> பழமைபேசி.
ஞானமுத்து தேவநேயன் பா கட்டுவதற்க்கோ, பாடுவதற்கோ புகழ் அடையவில்லை. அவர்
பெயர் கட்டுரை, உரைநடைகளில் பெரிதாகியது. அதனால் பாவாணர் பட்டம் சரியாக
தமிழ் அறிவு புலனாகிறாதா?
http://groups.google.com/group/mintamil/msg/246beb6f17049aa2
அன்புடன்,
நா. கணேசன்
* தேவநேசன் என்னும் இயற்பெயர்கொண்ட பாவாணரின் *
தேசம் என்னும் வடசொல் தமிழில் தேயம் என்றாகும்;
அதுபோல் நேசத்தை நேயம் என்றாக்கினர் போலும் !
பாசம் என்பது வட சொல்; அதை ஏனோ பாயம் என்றாகவில்லை.
அப்படி மாற்றினாலும் ‘தேவ’ என்னும் வடசொல் தீட்டு இன்னும்
ஒட்டிக்கொண்டுள்ளதே; அதை மாற்ற வேண்டாமா ?
உண்மையில் அன்பைக் குறிக்க ‘நேசம்’ எனும் வடசொல் ஒன்று இருப்பதாகத்
தெரியவில்லை. நேசம் வடசொல் என்றும், அதைத் தமிழாக்கியே தீர வேண்டும்
என்னும் நோக்கத்தில் நேயம் என்றாகினர்; தேவ நேசன், நேச மணி போன்ற
பெயர்களைக் கிறித்தவர்கள் வைத்துக் கொண்டனர்; தற்போது அவர்களிடையே
வழக்கில் இல்லை.
சூரிய நாராயண சாஸ்திரியார் பரிதிமாற் கலைஞர் என்று வைத்துக் கொண்டார்;
அதில் பரிதி என்பது ’தா’எனும் வேரின் அடிப்படையிலான வடசொல் என்பதை
மறந்தார் போலும்.
கை அழுக்காகிவிடும் என்று அடிக்கடி சோப் போட்டுக் கழுவிக் கொள்வதைப்
போன்ற உளவியற் கோளாறு இது என்பதற்குமேல் என்ன கூற இருக்கிறது ?
தேவ்
தேவ + நேசன்
நேசன் சமஸ்கிருத ஸ்நேஹாவில் இருந்து வந்தது என நினைக்கிறேன்.
சமஸ்கிருத ஸ் வில் ஆரம்பிக்கும் சொற்கள் பல தமிழில் ஸவை இழக்கிறன.
உதாரணம் ஸ்தலம் > தலம், ஸ்தூலம் > தூலம் , ஸ்தானம் > தானம்
அதனால் ஸ்நேஹம் > நேஹம் > நேயம் அப்படி மாறியது எனப்து என் கருத்து.
தேவ + ஸ்நேஹ என்றால் சமஸ்கிருதத்தில் கடவுளுக்கு பிரியமானவன் என பொருள்
கொடுக்கின்றது. அது தமிழில் தேவநேயன்
சமஸ்கிருத ’தேவ’ ஆங்கில divine என்பதின் cognate
ஸ்நேஹம் என்பதிற்க்கு Indo-european cognate இருக்கா என்பதை ஆராய்ச்சி
செய்து சொல்கிறேன்
விஜயராகவன்
சிவநேசன் என்று சைவத்திலும் உள்ளது;நீங்கள் சொல்வதுபோல் வடசொல் திரிபாக
இருக்கலாம்.
ஸமீபத்தில் 'மனித நேயம்' என்று ஒரு வார்த்தை உலாத்துகிறதாகப்
பார்க்கிறேன். நல்ல வார்த்தைதான். காதுக்குக் கேட்கவும் நன்றாகத்தான்
இருக்கிறது. ஆனாலும், 'மனிதாபிமானம்' என்று இத்தனை நாளாகச் சொல்லி
வந்ததில் 'அபிமானம்' என்ற ஸம்ஸ்கிருத வார்த்தை இருப்பது பிடிக்காமல்தான்
இப்படி மாற்றியிருக்கிறார்கள் என்பதைக் கவனிக்கும் போது பரிஹாஸமாகத்தான்
இருக்கிறது! ஏனென்றால், 'நேயம்' என்பதும் ஸம்ஸ்கிருத 'ஸ்நேஹ'த்தின்
திரிபுதான்!
தெய்வத்தின் குரல் எழாம் பகுதி, வானதி பதிப்பகம்
நெய், நெய்த்தோர் - என்று அரத்தத்திற்கு பெயர். (அரத்தம் : ரத்தம்.
மீண்டு வரும்போது
இரத்தம் என்றாவதாக படித்துள்ளேன்). இணைப்பு, உறவு என்று பொருள்படும்
நெய்- (உ-ம்: நெயவு, நெசவு) நேயம் என்று பாவாணர் கொண்டிருக்கலாம்.
இராமகி, செல்வா, மு. இளங்கோ, ... மேலும் தெரியும் என்று நினைக்கிறேன்.
நா. கணேசன்
deity : deva
NG
நெய்,உய்,பெய்,செய் இவை பெறும் வடிவம் முற்றிலும் வேறானவை.
நெய் நேசம்,நேயம் என்று வடிவம் பெறாது; அப்படி மாறுமாயின் அதே போன்ற
பிறவேர்கள் பெறும் வடிவத்தையும் விளக்க வேண்டும்.
தேவ்
> தேவ்
In Dravidian, vowel length variations, a:aa are quite common.
I recall Bh. Krishnamurti's paper on this subject.
N. Ganesan
இப்படி ஒருத்தரு இருந்தாரா ?
தமிள் படிச்சவுக யாருமே இவுகளப்பத்தி இந்நேரம் வரக்கிச் சொல்லலீங்களே !
நீங்களாவது சொல்லுங்க சாமீ.
ஞானப்பிரகாச அடிகளார்ன்னு போட்டுத் தேடுனா அருட் தந்தை,பங்குத்
தந்தைன்னுல்லா வருது ?
தேவ்
யாழ்ப்பாண இராச்சியத்தின் வரலாற்றைக் கூறும் மூலநூல்களாக கைலாயமாலை,
வையாபாடல், யாழ்ப்பாண வைபவ மாலை ஆகிய மூன்றுங் கருதப்படுகின்றன.
இந்நூல்களின் அடியொற்றியும், இத்துறை சார்ந்த பல்வேறு நூல்களின்
துணைகொண்டும் கல்வெட்டுக்கள், சாசனங்கள், அகழ்வாராய்ச்சியின் பெறுபேறுகள்
என்பனவற்றை ஆதாரமாகக் கொண்டும் காலத்திற்குக் காலம் பல நூல்களும்
கட்டுரைகளும் வெளிவந்திருக்கின்றன. யாழ்ப்பாண வைபவ கௌமுதி (க.
வேலுப்பிள்ளை – 1918),
*யாழ்ப்பாண வைபவ விமர்சனம் (சுவாமி ஞானப்பிரகாசம் - 1928), *
யாழ்ப்பாணச் சரித்திரம் (ஜோன் - 1980), யாழ்ப்பாணச் சரித்திரம் (ஆ.
முத்துத்தம்பிப்பிள்ளை – 1933), யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றம் (கா.
இந்திரபாலா – 1972) ஆகிய நூல்கள் இவ்வகையில் குறிப்பிடத்தக்கன.
http://www.noolaham.net/project/04/380/380.htm
யாழ் வைபவ விமர்சன ஆசிரியர் இவர்தான் என்று தெரிகிறது.
தேவ்
நேயம்:
சென்னைப் பல்கலைப் பேரகராதி நேசம் என்ற சொல்லை நேயம் என்ற
தமிழ்ச் சொல்லில் இருந்து பிறப்புக் காட்டுகிறது. ஸ்நேஹ என்றல்ல.
வெள்ளாளன் - வேளாளன் (கர்நாடக சிரமண வெளகுளம், வெள்- வேளிரைக்
குறிப்பது), பெண்-:பேணு- போல் நெய்-:நேயம் > நேசம் (குயவன் >
குசவன், ...)
---------
நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர்
http://inemai.blogspot.com/2009/01/blog-post_21.html
தமிழ் அமைப்புற்ற வரலாறு (1927/1985)
http://www.tamilheritage.org/old/text/ebook/tamvar/index.html
யாழ்ப்பான வைபவ விமர்சனம் (1928)
http://www.noolaham.net/project/03/257/257.pdf
நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர்
வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்
(எழுத்தாளர் தெளியவத்தை ஜோசப் நூலகப்படி)
http://noolaham.net/project/08/789/789.pdf
நா. கணேசன்
Woderful. You are an expert in using the Tamil Internet as a resource
for Tamil exchanges. Consistently resourceful, knowledgeable and
enterprising.
மின்னல் வேகத்தில் தகவல்களைத் திரட்டி வழங்கும்
வல்லமையைப் போற்றி வணங்குகிறேன்.
இந்த கருத்துப் பறிமாறலுக்கு நான் வரவில்லை. ஆனால்
அக்கறையாகப் படித்துக் கொண்டிருக்கிறேன். இதனை
எவ்வளவு கவனமாகவும் தீவிரமாகவும் நீங்கள் கையாளுகிறீர்கள்
என்று வியந்து பாராட்டைத் தெரிவிக்கவே மூக்கை நுழைத்தேன்.
தொடருங்கள்.
ரெ.கா.
மின்னல் வேகத்தில் வெளிவந்தன தகவல்கள் ;
மரபுச் செல்வருக்குப் பாராட்டுகள்.
இப்பெரியவரின் ‘தமிழ்ச் சொற்பிறப்பாராய்ச்சி’ நூலைப் பற்றியும் அறிஞர்கள்
விரிவாகப் பேசினால் புரிதல் மிகும்.வேர்ச்சொல் ஆராய்ச்சி விவாதங்களில்
பன்மொழிப் புலமை பெற்ற
இவர் பெயர் ஏன் வெளி வருவதில்லை என்று புரியவில்லை.இத்துறையில் இவர்
முன்னோடி என்பதும்
----- Original Message -----
From: "N. Ganesan" <naa.g...@gmail.com>
To: "மின்தமிழ்" <mint...@googlegroups.com>
Cc: <tamil...@googlegroups.com>
சடகோபரந்தாதி ’ நேயத்தோடு கழிந்த போது உனக்கு எவ்வுலகம் நிகரே’ என்று ஆள்கிறது.
இது சுவாரசியமான பாயிண்ட். தொல்தமிழில் பல சொற்கள் பிராகிரதத்தில்
இருந்து எடுக்கப் பட்டன் (உம்: அமைச்சர், அவை, படிகம்). அது பல்லவர்
காலத்திற்க்கு முன்பு.
அதன் பின்னர் நேராக சமஸ்கிருத தாக்கம் வந்தது
கடந்த சில நூறு ஆண்டுகளாக தமிழர்கள் சமஸ்கிருத வார்த்தைகளை நேரடியாகவே -
அதாவது தமிழ் சொல்மாற்ற விதிகளுக்கு உட்பட்டு- வாங்குகிறது என்பது என்
அவதானம் .
உதாரணம் : நேயம் மூல சமஸ்கிருதம் பிராகிருதம் மூலமாக தமிழில் வந்தது. அதே
மூலச்சொல் சிநேகிதன் என்றும் தற்கால தமிழில் வருகின்றது.
விஜயராகவன்
ப³ஹுப்⁴யோ விஷயாந் ஸ்²ருத்வா தேஷு ய: க்ஷேமதா³யக: ।
விம்ரு²ஸ்²ய தஸ்ய நிஸ்²கர்ஷே ஸாத⁴நம்² ஜ்ஞாநமுச்யதே ॥
பஹுப்யோ விஷயாந் ஸ்ருத்வா தேஷு ய: க்ஷேமதாயக: ।
விம்ருஸ்ய தஸ்ய நிஸ்கர்ஷே ஸாதநம் ஜ்ஞாநமுச்யதே ॥
शत्रुमित्रतृतीयेषु न्यायमार्गानुसारिण: ।
निष्पक्षपाततारूपो धर्मे योऽस्य फलं भवेत् ॥
ஸ²த்ருமித்ரத்ரு²தீயேஷு ந்யாயமார்கா³நுஸாரிண: ।
நிஷ்பக்ஷபாததாரூபோ த⁴ர்மே யோ'ஸ்ய ப²லம்² ப⁴வேத் ॥
ஸத்ருமித்ரத்ருதீயேஷு ந்யாயமார்காநுஸாரிண: ।
நிஷ்பக்ஷபாததாரூபோ தர்மே யோ'ஸ்ய பலம் பவேத் ॥
:-)
V
On Nov 4, 8:56 pm, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
> On 11/4/09, N. Ganesan <naa.gane...@gmail.com> wrote:
>
>
>
>
>
> > On Nov 3, 8:48 pm, devoo <rde...@gmail.com> wrote:
> > > * நல்லூர் வண சுவாமி ஞானபிரகாசர்*
>
> > > இப்படி ஒருத்தரு இருந்தாரா ?
> > > தமிள் படிச்சவுக யாருமே இவுகளப்பத்தி இந்நேரம் வரக்கிச் சொல்லலீங்களே !
> > > நீங்களாவது சொல்லுங்க சாமீ.
> > > ஞானப்பிரகாச அடிகளார்ன்னு போட்டுத் தேடுனா அருட் தந்தை,பங்குத்
> > > தந்தைன்னுல்லா வருது ?
>
> > > தேவ்
>
> > நேயம்:
> > சென்னைப் பல்கலைப் பேரகராதி நேசம் என்ற சொல்லை நேயம் என்ற
> > தமிழ்ச் சொல்லில் இருந்து பிறப்புக் காட்டுகிறது. ஸ்நேஹ என்றல்ல.
> > வெள்ளாளன் - வேளாளன் (கர்நாடக சிரமண வெளகுளம், வெள்- வேளிரைக்
> > குறிப்பது), பெண்-:பேணு- போல் நெய்-:நேயம் > நேசம் (குயவன் >
> > குசவன், ...)
>
> > ---------
>
> > நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர்
>
> >http://inemai.blogspot.com/2009/01/blog-post_21.html
>
> >http://jeyachchandrn.wordpress.com/2007/10/03/%E0%AE%A4%E0%AE%AE%E0%A...
ஆம்.
ஆரம்ப காலத்தில் தமிழ் பிராகிருதததின் தாக்கத்திற்கு உட்பட்டு. பிறகு
தான் நேரடி சமஸ்கிருத தாக்கத்திற்கு உட்பட்டிருக்க வேண்டும்.
இன்று தமிழ்ச்சொற்களாக அறியப்படுபவை பல பிராகிருத மூலத்தை கொண்டவை தான்.
நா.கணேசன் அவர்களே கூட , கண்ணனும் (< கண்ஹ < கிருஷ்ண ), கண்ணகி ( <
கர்ணகீ ), மாசாத்துவனும் முதலியவை எல்லாம் கூட பிராகிருத மூலம் கொண்டவை
என்று நிறுவியுள்ளாரே.
V
On Nov 4, 11:23 pm, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
> On 4 Nov, 15:56, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
> wrote:
> இதோ
>
> > நேயம் என்பதற்கு தமிழ் லெக்ஸிகன் பட்டியல் இடும் பொருள்
> > வரிசையும், சொற்பிறப்புக் குறிப்புகளும் ----
>
> > நேயம் -- n <Pkt. nE-am < snEha
> > 1) Love, affection; அன்பு.
>
>
இலக்கணம், இலக்கியம், இலக்கு எல்லாம் கூட பிராகிருத தழுவல்களே.
V
The Tamil Lexicon has skipped the intermediate Prakrit Forms.
Ksh become Kkha in Prakrit
V
தமிழ் ‘இலக்கணம்’ பதஞ்ஜலியிடம் இருந்து எப்படி வரும்? நீங்கள் என்ன தமிழ்
துரோகியா, அல்லது ஆரிய அடிவருடியா ? எப்பத்தான் ஆரிய மாயை போகுமோ??இப்படி
விபீடணர்கள்தான் தமிழை ஒழித்து விட்டார்கள் :))
விஜயராகவன்
On 4 Nov, 11:51, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
> நேயம். நேசம் இரண்டும் தமிழில் வரலாற்று முறைப் பொருள்கள்
> உடையனவாய்க் காணப்படுகின்றன.
>
> நேயத்தை எடுத்துக்கொண்டால் ‘வேக உள்ளத்து வேழம் தெரிந்து நிரந்தன
> காட்டிய நேயம் தோன்ற’ என்று அன்பு என்ற பொருளில் பெருங்கதை (60:
> 195-6 ) யில் ஆளப்படுகிறது. அநேகமாக அதுவே முதல் ஆட்சியாக இருக்கலாம்.
>
ஓ! கொங்குவேளின் பெருங்கதை.
உவேசா இன்னொரு கொங்கு நூலைச் சொல்வார்:
http://www.kalachuvadu.com/issue-85/pathippu08.asp
"கொங்கு மண்டல சதகத்தை முத்துசாமிக் கோனார் பதிப்பித்தபோது உ.வே.சா.
சாற்றுக்கவி அளித்துள்ளார். உ.வே.சா. நூலகக் கையெழுத்துப் பிரதியில்
சிந்தாமணி, சூளாமணி போன்றவற்றையும் கொங்கு நாட்டு இலக்கியங்கள் என்று
உ.வே.சா. குறிப்பிட்டுள்ளார்."
நெய் பொதி நெஞ்சின் மன்னர் (சீவக சிந்தாமணி 3049 )
அன்பு, நட்பு என்னும் ஒருபொருட் சொற்கள் ~ நெய், நேயம்
காணும்போது நேயம் கடன்சொல்லா
என்பதில் பெரும் ஐயம், ஐயா.
நெய் என்னும் தமிழ்ச் சொல் ஸ்நேஹத்தில் இருந்தா?
வரலாற்று முறைத் தமிழ் இலக்கியப் பேரகராதி
நெய் (= அன்பு, நட்பு) என்பவற்றுக்கு வேறு என்ன
உதாஹரணங்களை இலக்கியங்களில் இருந்து காட்டுகிறது?
அன்புடன்,
நா. கணேசன்
அருமையான ஸூக்திகள்.
* நிஷ்கர்ஷே * - இதுதான் சரியான பாடமாக இருக்க வேண்டும்;
மௌனம் கலைந்து வந்ததற்கு நன்றி வினோத்.
தமிழ் பவுத்தர்,சமணர்களால் கையாளப்பட்டதும், அதுபோது பாலி,பாகதச் சொற்கள்
கலந்ததும் இலக்கிய வரலாறு கூறும் உண்மை;அகராதிகளும் இதை ஒளிக்காமல்
தெரிவிக்கின்றன.
விடாமல் இவ்வுண்மையை மறுப்பது மொழிப்பற்றாகாது.
ஆதபம் என்னும் வடசொல்லிலிருந்து தோன்றியது ஆதவன் என்று கூறியதற்காகக்
கடுமையான விமர்சனத்துக்கு ஆளானார் ஈரோட்டைச் சேர்ந்த தமிழறிஞர் ஒருவர்.
இத்தகைய விமர்சனங்களுக்கு அஞ்சியே அறிஞர் பலரும் இதில் ஈடுபடுவதில்லை.
வடமொழி இலக்கியங்களை ஏற்று அவற்றின் நயத்தைப் பாராட்டும் நாம் பெரியோர்
செய்த வடசொற் கலப்பை ஏனோ ஏற்க மறுக்கிறோம்.நம்மைக் காட்டிலும் அவர்கள்
தமிழை அதிகம் நேசித்தனர்.பாஷா ஸ்நேஹம் கட்டாயம் வேண்டும். நடுநிலைமை
என்று ஒன்று இருக்கிறது.
தேவ்
விம்ரு²ஸ்²ய தஸ்ய *நிஸ்²கர்ஷே* ஸாத⁴நம்² ஜ்ஞாநமுச்யதே
அருமையான ஸூக்திகள்.
* நிஷ்கர்ஷே * - இதுதான் சரியான பாடமாக இருக்க வேண்டும்; //
எல்லா நம்ம திருக்குறள் தான். வித்தியாசமா இருக்கட்டுமேன்னு சமஸ்கிருத
அனுவாதத்தை இட்டேன். என்ன குறள்'நு கண்டு பிடியுங்கள் பார்ப்போம் :-))
V
இதெல்லாம் ரொம்ப கேட்டாச்சுங்க..
ஒருத்தர் என்ன பார்ப்பன **&%&^ திட்டிட்டாரு. (அது தப்புங்கறது வேற
விஷயம்..) இதல்லவோ தமிழ்ப்பண்பாடு , தமிழ் கலாச்சாரம், தமிழ் மரியாதை..
ஹைய்யோ.. நான் ஆரியன் இல்ல.. மறந்தே போயிட்டேன் பார்த்தீங்களா...
இதெல்லாம் ஒரு தமிழர் கிட்ட இருந்து நான் எப்படி எதிர்பார்க்கலாம் ?
தப்போன்னோ !!
இதெல்லாம் சகஜம்னு விட்டுடேன் :-)
அவங்களோட கொள்கைக்கு ஒத்துப்போகலைன்னா அவங்க எடுக்கற ஒரே உருப்படாத
ஆயுதம் ஆரியவாத பிரயோகம்தான்.
V
On Nov 5, 1:44 am, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
> On 4 Nov, 19:05, வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com> wrote:
>
> > S. Vaiyapuri Pillai also points Tolkaappiyan2 using the
> > term ilakkaNam < Pkt. lakkhaNa-, Skt. lakSaNa- in the
> > sense of "grammar"; this, he says, was first introduced
> > by PataJjali (cf. HTLL, p. 49)[2];
>
> தமிழ் ‘இலக்கணம்’ பதஞ்ஜலியிடம் இருந்து எப்படி வரும்?
>
> விஜயராகவன்
பிரமாதம்!
ஸ வுக்கும் ஷ வுக்கும் இடைப்பட்ட ஒலியை ஸ்2 ன்னு போட்டு இருக்கிங்க இல்லையா?
எப்பொருள் யார் யார்...
ஹிஹிஹி. அடுத்தது கண்டு பிடிக்க குறள் அறிவு போதாது.
திவாஜி
--
My blogs: [all in Tamil]
http://anmikam4dumbme.blogspot.com/
http://chitirampesuthati.blogspot.com/ photo blog now with english text too!
http://kathaikathaiyaam.blogspot.com/
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
ஐயோ!
சிங்கப்பூரில் ஒரு சம்பவம்.
இப்போது தமிழ் இணைய மாநாட்டை தம் பல்கலைக்கழகத்தில் நடத்திக்காட்டிய
உல்ரிக நிகோலஸ் திருக்குறள் சமிஸ்கிருத தர்மநூல்களின் வழி வந்த நூல்
என்று சொல்லப்போய் 'கோக்குமாக்காக' மாட்டிக்கொண்டார். சும்மா
இருந்திருக்கலாம், பரதநாட்டியம் தெருக்கூத்தின் நீட்சி என்று வேறு
குண்டைத் தூக்கிப் போட்டிவிட்டார்.
நம்ம தமிழ் வேந்தர்களுக்கு குஷிதான்! அடித்து தூள் கிளப்ப ;-)
க.>
On Nov 4, 10:36 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
>> இப்போது தமிழ் இணைய மாநாட்டை தம் பல்கலைக்கழகத்தில் நடத்திக்காட்டிய
> உல்ரிக நிகோலஸ்
இணைய மாநாடு அறிக்கை பற்றி மாலனின் விமரிசனம்:
http://tinypaste.com/a03af
தமிழ் இணைய மாநாட்டு அறிக்கை -ஒரு பார்வை
from என் ஜன்னலுக்கு வெளியே... by மாலன்
2 people liked this
'அரசு என்பது பெரிய விஷயங்களை மோசமாக செய்யும் ஒரு அமைப்பு; சிறிய
விஷயங்களையும்தான்' என்று ஜான் கென்னத் கால்பிரய்த் ஒரு முறை எழுதினார்.
(You will find that the State is the kind of organization which,
though it does big things badly, does small things badly, too)
கால்பிரய்த் ஒரு அமெரிக்கர்.பொருளாதார வல்லுநர் அரசு தூதராகப்
பணியாற்றியவர். (எனவே அவருக்கு அரசு பற்றி நம்மை விட நன்றாகவே
தெரிந்திருக்கும்) வலதுசாரியான அவரது சிந்தனைகளுக்கு நேர் எதிர் திசையில்
பயணம் செய்த மார்க்ஸ் 'அரசாங்கம் என்பது ஒரு நாள் உதிர்ந்து விட
வேண்டும்' என்று விரும்பினார்.
ஆனால் அண்மையில் கொலோனில் நடந்த முடிந்த தமிழிணைய மாநாட்டின் இறுதியில்
வெளியிடப்பட்ட அறிக்கையைப் பார்க்கும் போது உத்தமத்திற்கு அரசுகளை உதற
மனம் வரவில்லை என்றுதான் தோன்றுகிறது.
அந்த அறிக்கை ஆறு பரிந்துரைகளை முன் வைக்கிறது. அதில் ஐந்து அரசின் ஆதரவை
நாடி நிற்கிறது. 2010ல் தமிழிணைய மாநாட்டை நடத்துவது, இதழ் பிரசுரிப்பது,
சென்னையில் செயலகம் நடத்துவது, விருது அளிப்பது, ஒருங்குறி முறையைத்
தரமாக அறிவிப்பது இவை அந்த ஐந்து பரிந்துரைகள் (கோரிக்கைக்கள்?). தமிழக
அரசைப் பொறுத்தவரை அது தமிழ்த் தகவல் தொழில்நுட்பத்தை ஒரு குறுகிய
பார்வையிலேய அணுகி வந்திருக்கிறது. 1999ல் சென்னையில் தமிழக அரசு நடத்திய
மாநாடு டாம் டாப் ஆகிய இரு தரங்களை ஏற்றது. டிஸ்கி என்ற தரத்தை
அங்கீகரிக்கவில்லை. ஆனால் அதுதான் அதிகமாக அன்று மின்னஞ்சல்களிலும்,
இணையப் பயன்பாடுகளிலும் புழங்கி வந்தது. அதில் அயலகத் தமிழர்களின்
பங்களிப்பு அதிகம். மற்ற இரண்டு தரங்களோடு அதையும் ஏற்றுக்
கொண்டிருக்கலாம். ஆனால் அதற்குத் தமிழக அரசிற்கு மனமில்லை. ஆனால் அது
திஸ்கியின் பயன்பாட்டை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. அதைப்
பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வளர்ந்து கொண்டுதான் வந்தது.
பின்னர் ஒருங்குறி வந்தது. யூனிகோட் கன்சார்சியத்தில் தமிழக அரசும்
உறுப்பினராகப் பங்கேற்றது. ஆனால் அது யூனிகோடை இன்றுவரை ஏற்கவில்லை.
மாறாக TUNE என்ற புதுவகைக் குறியீட்டை உருவாக்குவதில் அக்கறை காட்டியது.
மத்தியில் கடந்த அரசிலும், இப்போதைய அரசிலும் தமிழர் ஒருவர்தான்
தகவல்துறை அமைச்சராக இருந்தார்/இருக்கிறார். ஆனால் யூனிகோடை ஏற்கும்
முயற்சி ஏதும் மேற்கொள்ளவில்லை. ஆனாலும் யூனிகோட் பயன்பாடு வளர்ந்து
கொண்டுதான் இருக்கிறது. மின்னஞ்சல், இணையதளங்கள், வலைப்பூக்கள், கைபேசி
சொல்லைப் பேச்சாக்கும் கருவி, எல்லாவற்றிலும் அது இடம் பிடித்து விட்டது.
மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட
மென்பொருள் நிறுவனங்கள் அதற்கு இடமளித்து விட்டன. ஆனாலும் நவீன உலகில்
பயனர்கள்தான் எதிலும் இறுதி முடிவு எடுக்கும் வல்லமை கொண்டவர்கள் என்பதை
மறந்து விட்டு உத்தமம் அரசுகளுக்கு மனுப் போட்டுக் கொண்டிருக்கிறது, அது
செய்ய வேண்டியதெல்லாம் பயனர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதுதான்.
பாத்திரம் சூடானால் பால் தானே பொங்கும்.
இதழ் தேவைதான். ஆனால் அதை நடத்த அரசு தேவையா? என்பதுதான் கேள்வி. தமிழில்
எத்தனையோ இலக்கியச் சிற்றிதழ்கள் ஆண்டுக்கணக்காக அரசின் எந்த உதவியும்
இன்றி தனிமனித முயற்சியின் பலனாக நடந்து கொண்டிருக்கின்றன. போதுமான
சந்தாதாரர்களைத் திரட்ட முடிந்தால் இதழ் நடத்த அரசு தேவையில்லை,
முனைப்புத்தான் வேண்டும்.
செயலகம் நடத்த அரசு உதவ வேண்டும் என்பது வேடிக்கையானது. இன்று காகிதங்கள்
அற்ற அலுவலகங்கள் என்ற கருத்தை நோக்கி உலகம் நடந்து
கொண்டிருக்கிறது.'வீட்டிலிருந்தே அலுவலகப் பணிகளை மேற்கொள்வது'
என்ற கருத்தாக்கம் இந்தியாவில் கூட வந்து விட்டது. அந்தக் கருத்துக்குப்
பெரிதும் துணை நிற்பது தகவல் தொழில்நுட்பம்தான். ஆனால் தகவல்
தொழில்நுட்பத்திற்கான ஓர் அமைப்பு அரசு செலவில் இடம் கேட்கிறது. சரி
இந்த செயலகத்தில் அமர்ந்து என்ன செய்வார்கள்? அதை மின்வெளியிலிருந்து
செய்ய முடியாதா? ஒரு வேளை அரசு, பணியாட்கள் கொடுத்து உதவ வேண்டும் எனக்
கோருகிறார்களா? பகுதி நேரப் பணியாளர்கள் சென்னையில் மாதம் ரூ5000லிருந்து
10000க்குக் கிடைப்பார்கள் அதாவது மாதம் 100 முதல் 200 அமெரிக்க
டாலர்கள். ஆண்டுக்கு 60000. இந்த 60 ஆயிரம் அல்லது லட்ச ரூபாயையா உத்தமம்
அரசிடம் கோருகிறது. இதைச சந்தாவைக் கொண்டு எதிர்கொள்ள முடியாதா?
தனியாரிடம் திரட்ட முடியாதா?
விருது அளிக்கப் பணம் கோருகிறது உத்தமம். கடைத் தேங்காயை எடுத்து
வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது என்பது இதுதான். எந்த ஒரு நாட்டிலும்
மக்கள் வரி மூலம் உருவாகும்அரசுப் பணம் என்பது மக்கள் நலத்
திட்டங்களுக்கும், அந்தந்த நாட்டில் அரசுக்குச் சொத்துகளை
உருவாக்குவதற்கான முயற்சிகளுக்கும் பயன்பட வேண்டும் என்பதுதான்
நியாயமானது. உத்தமம் விருதளிக்க அரசு ஏன் பணம் தர வேண்டும்? தமிழ்க்
கணிமைக்குப் பங்களித்தவர்களை கனப்படுத்த வேண்டும் என உத்தமம்
வ்ரும்பினால், அது நடத்தும் தமிழிணைய மாநாடுகளில் அதற்க்கென ஓர் அமர்வை
ஏற்பாடு செய்து பாராட்டுப் பத்திரம் (citation) அளிக்கலாமே? அரசுப் பணம்
கொடுத்தால் அந்த விருதளிப்பில் அரசியல் தலையீடு இல்லாதிருக்குமா? அந்தத்
தலையீடு எப்படி
இருக்கும் என்பதை அறிந்து கொள்ள வேண்டுமானால் ஆண்டு தோறும்
அறிவிக்கப்படும் கலைமாமணி விருதுகளைப் பார்த்தால் போதும். இந்த ஆண்டு
தமிழக் அரசு அளிக்கும் தமிழ் திரைப்பட விருதுகளில் ஒன்று கலைஞருக்குப்
போகிறது. அண்ணா நூற்றாண்டு விழாவை ஒட்டி திமுக அளித்த விருதும்
அவருக்குத்தான்.
இதன் நீட்சியாகத்தான் செம்மொழி மாநாடும் நடைபெறவுள்ளது என்பது என்
சந்தேகம். சந்தேகத்திற்கான அடிப்படை அந்த மாநாடு அறிவிக்கப்பட்ட
விதம்தான். உலகத் தமிழாரய்ச்சி சங்கத்தினரைக் கலந்தாலோசிக்காமல்
முதல்வர் தன்னிச்சையாக முதலில் உலகத் தமிழ் மாநாடு குறித்த அறிவிப்பை
வெளியிட்டார். அவரது முடிவுக்கு அந்நிறுவனம் இசைவு தெரிவிக்காத நிலையில்,
செம்மொழி மாநாட்டை அறிவித்திருக்கிறார். தமிழாரய்ச்சி
அறிஞர்களின் கருத்துக்கு அவர் வைத்திருக்கும் மதிப்பு அவ்வளவுதான், நீ
இசைவு தெரிவிக்காவிட்டால் என்னால் நடத்த முடியாதா என்ற ஆணவம் அவரது
அறிவிப்பில் இழையோடுகிறது. தமிழின் பெயரால் ஓர் மாநாட்டை
நடத்தியே தீர வேண்டிய ஏதோ ஒரு கட்டாயம் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. மனித
உரிமைகளை அப்பட்டமாகக் காலில் போட்டு மிதித்த மகிந்த ராஜபக்க்ஷே, ஓர்
தமிழ் மாநாட்டை அறிவித்தால் அது அவருக்குத் தமிழ் மீதுள்ள ப்ரியம் என
எடுத்துக் கொள்ள முடியுமா? அதற்குப் பின் தான் தமிழுக்கு எதிரி அல்ல என
உலக அரங்கில் காட்டிக் கொள்ள வேண்டிய கட்டாயம் என்ற உள்நோக்கம்தான்
அதற்குக் காரணமாக இருக்க முடியும். எல்லா நாடுகளிலும் அரசாங்கத்தைக்
கையில் வைத்திருப்போர்கள் தங்கள் அரசியல் நோக்கங்களுக்காக அதைப்
பயன்படுத்தி வருகிறார்கள். அந்த அரசியல் நோக்கம் பெரும்பாலும் வாக்கு
வங்கியாகவோ அல்லது சுய புகழ்ச்சியாகவோ இருக்கிறது என்பதுதான் உணமை. இந்த
அரசியலில் உத்தமம் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டுமா என்பதுதான் சிந்திக்க
வேண்டிய விஷயம்.
அரசு ஆதரவோடு, அதாவது அரசியல்வாதிகளின் கையில் அகப்பட்டபோது, முன்னர்
நடந்த உத்தமம் மாநாடுகளின் நிகழ்ச்சிகள் மனதில் நிழலாடுகின்றன.
நானறிந்த வரையில் முதன்முறையாக ஓர் அரசின் ஆதரவோடு உத்தமத்தால் ஒழுங்கு
செய்யப்பட்ட தமிழிணைய மாநாடு 2001 ஆகஸ்டில் மலேசியாவில் நடந்த
மாநாடுதான். (1999ல் உத்தமம் அமைப்புத் தோன்றியிருக்கவில்லை.
2000ல் சிங்கப்பூரில் நடைபெற்ற மாநாட்டின் போதுதான் உத்தமம் தோன்றியது.
உத்தமத்தின் அமைப்பு விதிகள் ஜூலை 23 2000 அன்று வந்திருந்த
பேராளார்களால் ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்பு மறுநாள், முதல் செயற்குழு
தேர்ந்தெடுக்கப்பட்டது அந்த மாநாட்டிற்கு சிங்கப்பூர் அரசு ஆதரவளித்தது
என்ற போதிலும் அது உத்தமம் ஏற்பாடு செய்த மாநாடு எனக் கருதப்படுவதை விட
உத்தமம் தோன்றிய மாநாடு எனக் கொள்வது சரியாக இருக்கும்)
2001 மலேசிய மாநாட்டின் அமைப்புக் குழுவின் தலைவராக அன்றைய மலேசிய
அமைச்சர் தத்தோ சாமிவேல் இருந்தார். என்ற போதிலும் உத்தமத்தின் சார்பில்
அன்று உத்தமத்தின் துணைத் தலைவராக இருந்த முத்து நெடுமாறன் முன்னின்று
மாநாட்டு ஏற்பாடுகளைச் செய்தார்.மாநாட்டை, ஆகஸ்ட் 26 2001ம் தேதி அன்றைய
மலேசிய பிரதமர் டாக்டர்..மகாதீர் துவக்கி வைத்தார். விழா
மேடையில் மலேசியப் பிரதமர், மலேசிய அமைச்சர், மலேசியரான முத்து நெடுமாறன்
மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். உத்தமத்தின் தலைவராக இருந்த பேராசிரியர்.
டாக்டர். ஆனந்த கிருஷ்ணனுக்கு இருக்கை அளிக்கப்படவில்லை. இதற்கு இதுதான்
அந்நாட்டு நடைமுறை (Protocol) என்று பின்னர் விளக்கமளிக்கப்பட்டது. ஆனால்
தேசியத் தொலைக்காட்சியின் மூலம் நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட அந்தத்
துவக்க விழா நிகழ்ச்சியின் நாயகனாக இருக்க அமைச்சர் சாமிவேலு
விரும்பினார், மற்றவர்கள் முக்கியத்துவம் பெறுவதை அவர்
விரும்பியிருக்கமாட்டார் என்பது இன்றுவரை உலவி வரும் ஓர் ஊகம்.
2003 ஆகஸ்டில், ஜெயலலிதா முதல்வராக இருந்த போது சென்னையில் ஓர் தமிழ்
இணைய மாநாடு நடந்தது. அந்த மாநாட்டை முன்னின்று நடத்தியவர் அன்று தமிழ்
இணையப் பல்கலைக்கழகத்தின் இயக்குநராக இருந்த முனைவர் பொன்னவைக்கோ. ஆனால்
மாநாடு துவங்கிய ஆகஸ்ட் 22ம் தேதி அன்றிலிருந்தே, துவக்கவிழா
நிகழ்ச்சியிலிருந்தே, அவர் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. இணைய வழித்
தமிழ்க் கல்வி என்ற பொருளில் அவர் வழங்கவிருந்த கட்டுரை வேறொருவரால்
வாசிக்கப்பட்டது. அவர் அந்த மாநாட்டில் கலந்து கொள்ள அன்றிருந்த
ஆட்சியாளர்களால் அனுமதிக்கப்படவில்லை, அதற்கு அவர் எதிர்கட்சித் தலைவரான
கருணாநிதிக்கும் அழைப்பிதழ் அனுப்பியிருந்தார் என்பதுதான் காரணம் என
மாநாட்டு அரங்கில் செய்திகள் கசிந்தன. பின்னர் சிறிது நாள்களில் முனைவர்
பொன்னவைக்கோ தமிழ் இணையப் பல்கலைக்கழகப் பொறுப்பில் இருந்து
விடுவிக்கப்பட்டார்.
மாநாட்டின் நிறைவு விழா, சென்னை அண்ணாப் பல்கலைக் கழகத்தில் உள்ள
விவேகானந்தர் அரங்கில் நடைபெற்றது. நிறைவுரை ஆற்றிய சட்டப்பேரவைத் தலைவர்
முனைவர் கா.காளிமுத்துவும், வேறு சில அரசு அதிகாரிகளும் மேடையில் இடம்
பெற்றனர். ஆனால் உத்தமத்தின் தலைவர் முனைவர் ஆனந்த கிருஷ்ணனுக்கு
இடமளிக்கப்படவில்லை. அதைவிடக் கொடுமை, அந்த மாநாடு அம்மாவின் அருளால்
நடந்தேறியதைப் போல காளிமுத்துப் பேசினார். உத்தமம் மேடை அம்மாவின்
புகழ்பாடும் களமாயிற்று.
2002ல் அமெரிக்காவில் நடைபெற்ற மாநாடும் சரி, 2004ல் சிங்கப்பூரில்
நடைபெற்ற மாநாடும் சரி, அரசியல்வாதிகளின் ஆதரவின்றி ஆர்வலர்களின்
அரவணைப்பில் நடைபெற்றன. அவை மற்ற இரு மாநாடுகளோடு ஒப்பிடுகையில் அளவில்
சிறியவை. ஆனால் அந்த மாநாடுகளில் இதைப் போன்ற கசப்பான அனுபவங்கள் இடம்
பெறவில்லை.
இதனால் அறியப்படும் நீதி என்னவென்றால் அரசியல்வாதிகள் தமிழிணைய
மாநாட்டிற்கு ஆதரவளிக்க முன்வரலாம். ஆனால் அங்கு உத்தமத்தின் மரியாதை
காப்பாற்றப்படாது. அது அவர்களின் களமாக அவர்களைத் துதிபாடும் அரங்கமாக
அமையும் என்பதே.
2009 தமிழிணைய மாநாட்டின் இறுதியில் உத்தமம் வெளியிட்டுள்ள குறிப்பில்
கோரியுள்ள, செயலகத்திற்கு பதிலாக, தமிழிணையப் பல்கலைக்கழகத்தில் தொழில்
நுட்பம் சார்ந்த முழு நேர ஆய்வுக்கு ஓர் மையம், அங்கே ஒலியை
பிரதிக்கு மாற்றும் தொழில்நுட்பம் போன்ற பொருள்களில் ஆராய்ச்சி, மதுரைத்
திட்டம் போல, தமிழ் மரபு அறக்கட்டளை போல், நூல்களை இலக்கப்பதிவாக
மாற்றிச் சேமிக்கும் திட்டம், போன்றவைகளைப் பரிந்துரைத்திருந்தால்
சிறப்பாக இருந்திருக்கும். விருதுக்குப் பணம் கோருவதற்குப் பதில் தாலுகா
தோறும்
கணினியில் தமிழ் எழுதப்பழக்கம் பயிலரங்குகள் நடத்தப் புதுவை இளங்கோவன்
போன்றோருக்குப் பொருளதவி எனக் கோரியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
தமிழ் ஊடகங்கள் தங்கள் இணைய தளத்தில் ஒருங்குறியைப் பயன்படுத்த முன் வர
வேண்டும் என அழைப்பு விடுத்திருக்கலாம். தமிழகத்தில் உள்ள இணைய விடுதிகள்
தமிழில் தட்டச்சுச் செய்யும் வசதியைப் பயனர்களுக்கு அளிக்க வேண்டும் எனப்
பரிந்துரைத்திருக்கலாம்.
ஆனால் எனக்கு எனக்கு என, இது வேண்டும் அது வேண்டும் எனக் கேட்கும்
குழந்தையின் தீபாவளி ஷாப்பிங் பட்டியல் போல் அமைந்திருக்கிறது.
சங்ககாலத்துப் பரிசல் வாழ்க்கைக்குப் பக்கமாக போய் நிற்கிறது
உத்தமம்.தமிழ்க் கணிமை குறித்த பரிந்துரைகள் (ஒருங்குறியை அரசு ஏற்க
வேண்டும் என்பதைத் தவிர) அதிகம் இல்லை
இந்தப் பரிந்துரைகளுக்கா 12 நாடுகளில் இருந்து அறிஞர்கள் கூடினர் ?
வருத்தமாக இருக்கிறது.
கணேசன்:
இதை இப்போது இங்கு ஏன் வெளியிடுகிறீர்கள். தொடர்பென்ன?
மாலன் இக்கட்டுரையை தன் பதிவிலிருந்து எடுத்துவிட்டதாக ஒரு
உள்சுற்றறிக்கை விட்டிருக்கிறாரே.
மாலன் உத்தமத்திற்கு தொடர்ந்து ஆக்கபூர்வமாக பங்களித்து வருபவர். இதையொரு
விமர்சனக் கண்ணோடு 'மட்டும்' (சுயதணிக்கை என்பது ஒரு ஒழுக்கம்)
எழுதியிருக்கிறார் என்பதை நாம் பதிவு செய்ய வேண்டும். வருகின்ற
கருத்தரங்களில் அவரின் பங்கு இருக்கும் என்று நம்பலாம்.
கண்ணன்
நேயம். நேசம் இரண்டும் தமிழில் வரலாற்று முறைப் பொருள்கள் உடையனவாய்க் காணப்படுகின்றன.நேயத்தை எடுத்துக்கொண்டால் ‘வேக உள்ளத்து வேழம் தெரிந்து நிரந்தன காட்டிய நேயம் தோன்ற’ என்று அன்பு என்ற பொருளில் பெருங்கதை (60: 195-6 ) யில் ஆளப்படுகிறது. அநேகமாக அதுவே முதல் ஆட்சியாக இருக்கலாம்.
ஜ்ஞாதா - அறிபவன்
ஜ்ஞாநம் - அறிவு
ஜ்ஞேயம் - அதற்கு இலக்காகும் பொருள்
நேயத்திற்கும், ஞேயத்திற்கும் தொடர்பில்லை.
>> துளையை எண்ணுவதிலேயே <<
துளையை எண்ணுவதற்கு Etymology என்னும் துறை ஏற்பட்டுவிட்டதே, அண்ணா.
அதன் வழிகாட்டுதல் தேவையில்லை என்று ஆகுமா?
தேவ்
Nov 5, 2:31 pm, Hari Krishnan
>> நேசம், நேயம், ஞேயம் எல்லாம் ஒரே பொருளை உடையவை<<
>> ஞான *ஞேயம்* ஆம் <<ஜ்ஞாதா - அறிபவன்
ஜ்ஞாநம் - அறிவு
ஜ்ஞேயம் - அதற்கு இலக்காகும் பொருள்
நேயத்திற்கும், ஞேயத்திற்கும் தொடர்பில்லை.
துளையை எண்ணுவதற்கு Etymology என்னும் துறை ஏற்பட்டுவிட்டதே, அண்ணா.
>> துளையை எண்ணுவதிலேயே <<
அதன் வழிகாட்டுதல் தேவையில்லை என்று ஆகுமா?
தேவ்
ஆமாண்ணா! அதை எல்லாம் துளை பொருள் ஆராய்ச்சி கழகத்தாருக்கு விட்டுடலாம். :-))
திவாஜி
> ---
நெய், நெயம்/நயம், அதன் நீட்சி நேயம் பற்றிய
பாவாணர் கட்டுரையை இராமகி ஐயா
தட்டெழுதி அனுப்பியுள்ளார். இந்த அவையில்
பகிர்ந்துகொள்கிறேன்.
திராவிட வேர்ச்சொல் அகராதியைப் பாருங்கள்.
நேயம் (நெய்- ) என நிறுவப்பட்டுள்ளது.
திரு. மு. மணிவண்ணன் விரிவாக எழுதியுள்ளார்:
http://groups.google.com/group/tamilmanram/msg/7f761a2559e29df9
பாவாணர் கட்டுரையும் (1959. 50 ஆண்டுகள் ஆகிவிட்டன),
மணிவண்ணன் மடலும் உங்கள் ஆராய்ச்சிகளுக்குப்
பிரயோஜனப்படலாம்.
மேலும் ஒன்று.
வேதப்பிரகாஷ் ஐயாவின் நீண்ட மடல்களில்
விட்சல் பெயர் வந்ததால் ஒன்றை மேலோட்டமாக
பார்த்தேன். விட்சல், பாக்கிஸ்தான் முஷாரஃப்,
படங்கள் உண்மையா? இன்னும் கணினி கிராபிக்ஸ்
மேம்படுத்த இடம் இருப்பதாகத் தோன்றுகிறது.
வண்பாக்கம், வினோத், உங்களைப் போன்றோரின்
அப்படங்கள் பற்றிய கருத்தறிய ஆவல்.
அன்புடன்,
நா. கணேசன்
---------- Forwarded message ----------
From: iraamaki <p...@giasmd01.vsnl.net.in>
Date: Nov 5, 11:52 pm
Subject: தேவநேயப் பாவாணர்
To: தமிழ் மன்றம்
அன்பிற்குரிய கணேசன்,
பாவாணரின் கட்டுரையைக் கண்டுபிடித்தேன். தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்ட
பாவாணர்
தொகுதியில் “தென்சொற்கட்டுரைகள்” என்ற தலைப்பில் உள்ள பொத்தகத்தில் 9 -
வது
கட்டுரையாக “என்பெயர் என்சொல்?” என்ற தலைப்பில் அது வருகிறது. அந்தக்
கட்டுரை
முன்பு 1959 தென்மொழி இதழில் நவம்பர் மாதம் வெளிவந்தது.
உங்களுக்காக வேலை மெனக்கிட்டுத் தட்டச்சி அனுப்புகிறேன். இது 50
ஆண்டுகளுக்கு
முந்திய கட்டுரை. இப்பொழுது தமிழ்ச் சொற்பிறப்புகளை மேலும் ஆராய்ந்து
அறிந்த
கூடுதற் தெளிவில், பழைய கட்டுரையில் இருக்கும் ஒரு சில நுணவக் (minor)
குறைகளைத் தவிர்த்து, இன்னும் மற்ற சான்றுகளையும் சேர்த்துப் புதிதாக
எழுதலாம்
தான். [தேவன், தெய்வம் பற்றி மிக விரிவாக சென்னைக் கிறித்துவக் கல்லூரிப்
பேராசிரியர் முனைவர் கு.அரசேந்திரன் ஒரு பெருங்கட்டுரை எழுதியுள்ளார்.
மேலும்
எழுத வேண்டுவது நேயம் பற்றி மட்டுமே.] அதே பொழுது, அடிப்படைக் கருத்து
மாறாததால், பாவாணர் தன் பெயரை எப்படிப் புரிந்து கொண்டார் என்று
உரைப்பதற்கு
அவர் கட்டுரையே சாலும் என்று கருதிப் புதிதாய் எழுதாமற் தவிர்க்கிறேன்.
பாவாணர் தம் ஆய்விற் தவறே இழைக்காதவர் என்று யாரும் இந்தக் காலத்திற்
துதி
பாடுவதில்லை. [அவரிடமிருந்து பலவகைகளில் என்னைப் போன்றவர் மாறுபடுவோம்.]
ஆனால்
அவர் முன்னாற் சால் போடவில்லையென்றால், இந்த அளவிற்கு பின் ஏர்கள்
போயிருக்காது; வேர்ச்சொல் ஆய்வு இன்று பெருகியிருக்காது என்பதைத்
தமிழாய்ந்த
பலரும் ஒப்புக் கொள்ளுவார்கள். இற்றைத் தமிழ்நடை மறைமலை அடிகளால்
போடப்பட்டு,
பாவாணர் போன்றவரால் செழுமையாக்கப் பட்டது. அதை அறியாதவர் என்ன
வேண்டுமானாலும்
சொல்லட்டும். அடிப்படையில் “சமஸ்க்ருதாய நமஹ” என்னும் கூட்டம் எதையுமே
ஒப்பாது.
ஏனெனில் அவர்களின் ஏமாற்றை தமிழர்க்குப் புரியவைத்தவர் அவர். அதனால் அவரை
இழிவு
செய்ய இவர்கள் கருவிக் கொண்டே இருப்பார்கள்.
அன்புடன்,
இராம.கி.
---------------------
என்பெயர் என்சொல்?
மொழியைப் பொறுத்தவரையில் நான் மறைமலையடிகளை முற்றும் அடியொற்றிச்
செல்பவனாயிருந்தும், தமிழ்ப் பேராசிரியர் பலரும்
மொழியாராய்ச்சியின்மையானே என்
பெயரையும் வடசொல்லென ஐயுற்றும் வருகின்றனர். அவர் மயக்கறுப்பான்
எழுந்ததிக்
கட்டுரை.
1.தேவன்
எக்காலத்தும் மாந்தர் தெய்வ வழிபாடாற்றுதற்குக் காரணம் நன்மை செய்யும்
பொருளிடத்து அன்பும், தீமைசெய்யும் பொருளிடத்து அச்சமுமே. எல்லாம் வல்ல
இறைவன்
வழிபாட்டில் இவ்விரு மெய்ப்பாடுகளும் கலந்துள்ளன. இறைவன் இறுதியில்
பேரின்பந்
தருவான் என்பது நன்மையும், எரிநிரயத்தில் இடுவான் என்பது தீமையும்,
பற்றிய
உணர்ச்சிகளாகும்.
வெளியொழிந்த நாற்பூதங்களுள் ஒவ்வொன்றும் நன்மையும் தீமையுஞ்
செய்யுமேனும்,
அவற்றுள் தீயே அவற்றைச் சிறப்பாக அல்லது தெளிவாகச் செய்வதாம். அதனால்,
முதற்கால
மாந்தர் அதனையே சிறந்த தெய்வமாகப் போற்றிவந்தனர். அதுபற்றித் தெய்வப்
பொதுப்பெயரும், முழுமுதற் கடவுட்பெயரும் தீப்பெயரினின்று தோன்றியுள்ளன.
கட்புலனைப் பயன்படுவிக்கும் ஒளியும், சமையற்கு வேண்டும் சூடும், குளிரைப்
போக்கும் வெம்மையும், உணவுப் பயிருக்கு வேண்டும் வெப்பமும், தீயினால்
உண்டாகும்
நன்மைகளாம். தீண்டினாற் சுடுவதும், அகப்படின் எரித்துக் கொல்வதும்,
அதனால்
விளையும் தீமைகளாம். நாற்பூதங்களுள்ளும், சிற்றளவிலிருப்பினும்
தீமைசெய்வது
தீயேயாதலின், தீமைப்பெயர் அதனின்றே தோன்றிற்று.
மரத்தொடு மரமும், கல்லொடு கல்லும், உரசும் போதும், நெரியும் போதும்,
நெருப்புண்டாவதைக் கண்ட முதற்கால மாந்தர், அவ்வகையிலேயே
நெருப்புண்டாக்கக்
கற்றுக்கொண்டனர். அதனால் உரசல், நெரிசல், தேய்தல் முதலிய உராய்தற்
கருத்துச்
சொற்களினின்று, தீயைக் குறிக்கும் பெயர்கள் தோன்றியுள்ளன.
உரசு, உராய், உராய்ஞ்சு, உரிஞ், உரிஞு, உரிஞ்சு, உரை, உரைசு, உரைஞ்சு,
உரோசு,
உரோஞ்சு என்பன ஒருவேர்ப் பிறந்த ஒருபொருட் சொற்கள்.
உர்:
உர்>உரு. உருத்தல் = அழலுதல் “ஆகம் உருப்ப நூறி” (புறம் 25:10)
உரு>உரும்>உரும்பு = கொதிப்பு; “உரும்பில் கூற்றத் தன்ன” )பதிற்றுப். 26:
13)
உரு>உருமம் = வெப்பம், நண்பகல்
உரும காலம் = கோடை காலம்
உருமித்தல் = புழுங்குதல்
உரு>உருப்பம் = வெப்பம் “கன்மிசை உருப்பிறக் கனைதுளி சிதறென” (கலித்.
16:7)
உருப்பு>உருப்பம் = வெப்பம் “ கனலும் ........... உருப்பமெழ”
(அரிச்.பு.விவா.104)
உரு>உருகு>உருக்கு>உருக்கம்
உருகுதல் = வெப்பத்தினால் இளகுதல், மனம் இளகுதல் (இரங்குதல்).
உருக்கு = உருகின இரும்பு (எஃகு)
உருக்காங்கல் = உருகிப்போன செங்கல்
உர்>உரி = நெருப்பு (கன்னடம், துளுவம்)
உரி என்னும் வடிவம் தமிழில் வழக்கற்று மறைந்தது.
உரி>எரி = நெருப்பு
நெருப்பைக் குறிக்கும் ‘உரு’ வேர் தமிழ்ச்சொற்கள் பிறமொழிகளிலும் சென்று
வழங்குகின்றன.
இலத்தீன் (Latin) - உர் (to burn)
அர்மீனியம் (Armenian) ஓர் = நெருப்பு
ஆபுக்கானியம் (Afghan) - ஓர், வுர் = நெருப்பு
எபிரேயம் (Hebrew) ஊர் = நெருப்பு, ஓர் = ஒளி
நெர்:
நெர்>நெரி>நெரிதல் = நெருங்குதல், உரசுதல், நொறுங்குதல்
நெர்>நெரு>நெருப்பு. நெருப்பு>நிப்பு (தெலுங்கு)
அரபியம் Arabic - நார் = நெருப்பு, நூர் = ஒளி
தேய்:
தேய்தல் = உரசுதல்
தேய்>தீய்>தீ = நெருப்பு, விளக்கு, நரகம்
தீ>தீமை = தீயின் தன்மை,
தீ>தீய = கொடிய,
தீய்தல் = எரிந்து போதல், கருகுதல், பற்றிப் போதல்
தீதல் = தீய்தல், ஏகாரம் ஈகாரமாய்த் திரிதலை தேன்>தேம்>தீம் என்னும்
திரிபினும்
கண்ண்டுகொள்க.
தேய்>தேயு (சமற்கிருதம்) = நெருப்பு
இத் ‘தேய்’ அடியினின்றே தெய்வப் பெயர் தோன்றிற்று.
தேய்>தேய்வு>தேவு>தேவன்
தேய்வு>தெய்வு>தெய்வம்
தேவு>தே = தெய்வம், தலைவன் “பால்வரை தெய்வம் வினையே பூதம்” (தொல். 541);
“தெய்வம் உணாவே மாமரம் புட்பறை” (தொல்.964); “தெய்வம் அஞ்சல் புரையறந்
தெளிதல்”
(தொல்.1218); “வழிபடும் தெய்வம் நிற்புறங் காப்ப” (தொல்.1367).
யகரவொற்றுள்ள தெய்வப் பெயரே பெரும்பான்மையாகவும், “தேவர்ப் பராஅய
முன்னிலைக்
கண்ணே” (தொல்.1395) என வகரவொற்றுள்ள பின்னை வடிவு அருகியும், இதுபோதுள்ள
தமிழ்நூல்களுள் முந்தியதாகிய தொல்காப்பியத்துள் வருதல் காண்க.
சமற்கிருதம் - deva, daiva
இலத்தீன் - dues = god
கிரேக்கம் (Greek) - theos = god
’தேவ’ என்னும் சொற்குச் சமற்கிருத்திற் காட்டப்படும் div (to be bright,
di,
dip (to shine) என்னும் வேர்ச்சொற்கள் முதற் பொருளன்றி வழிப்பொருளே
கொண்டுள்ளமையின் பொருந்தாமை
காண்க.
பின்வரும் சித்திய (Scythian) ஆரியச் சொற்கள், ‘தீ’ (நெருப்பு) என்னும்
தமிழ்ச்சொற்கு இனமானவை எனக் கால்டுவெல் கண்காணியார் காட்டுவார்.
சித்தியம்:
சாமாயிதே (samoiede) - tu, tui, ti, ty
மஞ்சு (Manchu) - tua
அங்கேரியம் (Hungarian) - tuz
ஓசுத்தியக்கு (Ostiak) - tut
துங்கசு (Tungus) - togo
இலசுக்கியம் (Lesghian) - tze, zi, zie
ஆரியம்:
கேலிக்கம் (Gaelic) - teire
வேலிசு (Welsh) - tan
பாரசீகம் (Persian) - tigh
நேயம்:
நள்:
நள்>நண்>நண்பு>நட்பு; நள்ளுதல் = அடைதல், பொருந்துதல், நட்புக்
கொள்ளுதல்,
செறிதல்
நள்ளார் = பகைவர்
நள்ளி = உறவு (சூடா.)
நள்ளிருள் = செறிந்தவிருள் (திருக்கோ. 156. சிலப். 15:105)
நள்ளுநர் = நண்பர் (திவா.)
நள்>நளி. நளிதல் = செறிதல்
நள்>நெள்>நெய் = ஒட்டும் நீர்ப்பொருள், (oil, ghee), கருப்புக்கட்டிச்
சாந்து
நெய்தல் = இணைத்தல், நூலை இணைத்து ஆடையாகச் செய்தல்
நெய் = குருதி; நெய்த்தோ(நெய்த்துவர்?) = குருதி
அகரம் எகரமாதலை, பரு>பெரு, சத்தான்>செத்தான் என்னும் திரிபுகளிற் காண்க.
ளகரமெய்யீறு யகர மெய்யீறாவதை, கொள்>கொ, தொள்>தொய், பொள்>பொய் முதலிய
திரிபுகளிற் காண்க.
நெய்>(நெய்ஞ்சு)>நெஞ்சு>நெஞ்சம் = விலாஎலும்புகள் இணைக்கப்ப்பட்ட இடம்
அல்லது
அன்பிற்கிடமாகக் கருதப்படும் நெஞ்சாங்குலை (Heart) உள்ள இடம்.
நெய்>நே>நேயம் = அன்பு
ஈரம், பசை முதலிய சொற்கள் ஒட்டும் பொருளையும், அன்மையும் குறித்தல்
காண்க.
அன்பு இருவரை அல்லது பலரை இணைப்பது.
நேய்>நே = அன்பு. நேயம்>நேசம்
ய>ச. ஒ.நோ. ந்யவு>நெசவு
நேசம்>நேசி. நேசித்தல் = அன்பு கடாத்தல், விரும்புதல் “நேசித்து ரசவாத
வித்தைக்
கலைந்திடுவர்” (தாயுமானவர்)
நேயம்>நேயன். நேசம்>நேசன்
நேயம் என்ற தென்சொல் வடநாட்டுத் திரவிடத்தில் வழங்கி, பின்னர்
பிராகிருத்தத்திலும் தொடர்ந்து, இறுதியில் சமற்கிருதத்திற் புகுந்து
‘ஸ்நேஹ’
என்று வழங்குகிறது. இவ்வரலாற்றுமுறை அறியாதோர், பேரன் பாட்டனைப் பெற்றான்
என்பதுபோல், ஸ்நேஹ (சமற்) >நேயம் (ப்ராகிருதம்)>நேயம் (தமிழ்) எனத்
தலைகீழாகத்
திரிப்பர். இங்ஙனமே சென்னைப் பல்கலைக் கழகத் தமிழகராதியிலும், உண்மைக்கு
மாறாகக் காட்டப்பட்டுள்ளது. பகுத்தறிவும் நடுவுநிலையும் உள்ள அறிஞர்
உண்மை
கண்டுகொள்வாராக. நேயம் வடசொல்லாயின் ‘நெய்’ என்பதும், அதன்
அடிவேரான ‘நள்’ என்பதும் வடசொல்லாதல் வேண்டும். அங்ஙனமாகாமை
வெள்ளிடைமலைபோல்
தெள்ளிதே.
வடமொழி ஆயிரக்கணக்கான தென்சொற்களைக் கடன் கொண்டிருப்பதால், மொழிநூன்
முறைப்படி
நடுவுநிலையாய் ஆராய்ந்து உண்மை காணவேண்டுமேயன்றி, வடமொழி தேவமொழியாதலால்
பிறமொழியினின்று கடன்ன்கொள்ளாதென்னும் கருநாட்டுக் குருட்டுக் கொள்ஐயை
அடிப்படையாகக் கொண்டு, தூய தென்சொற்களையும் வடசொல்லென வலிப்பது,
அறிவாராய்ச்சி
மிக்க இக்காலத்திற்கு ஏற்காதென, வடமொழிவாணர் திடமாக அறிவாராக.
.ஆராய்ச்சியில்லாத தமிழ்ப் பேராசிரியரும், வடமொழியிலுள்ள சொல்லெல்லாம்
வடசொல்லெனக்
கருதும் பேதைமை விட்டுய்வாராக. மயிர் என்னும் தென்சொல் ‘ச்மச்ரு (smrsru)
எனச்
சகரம் முதற்கொண்டு வழங்குவது போன்றே, நேயம் என்னும் தென்சொல்லும் ‘ச்நேஹ’
என்னும் ஸகரம் முற்கொண்டு சமற்கிருதத்தில் வழங்குகின்றதென அறிக.
- “தென்மொழி” நவம்பர் 1959.
கணேசன் ஞாநே ’தேவநேயன்’ என்ற பெயரை தமிழ் வேற்சொல்லாகவே “திண்ணமாக
நிருவினார்” என்பதற்கான கட்டுரையை கொடுத்துள்ளார். அது ஞாநேவின்
“ஆராய்ச்சி முறை”களுக்கு நல்ல உதாரணம்..
ஞாநேவின் “ஆராய்ச்சி முறை”யின் முக்கிய கோட்பாடுகள்:
1. உலக மொழி ஆராய்ச்சியை உதாசீனம் செய்.
2. வழக்கமான மொழியியல், மொழி பாகுபாடு சொல்லாட்சிகளை உதரித்தள்
3. ‘சொல் வேர்’ ஆராய்ச்சியின் நோக்கம் எப்படி பிற மொழி , முக்கியமாக
சம்ஸ்கிருதம் எப்படி தமிழ் மொழி வேர்களை உள்வாங்கி, ‘ஆரியம்’ என முத்திரை
கொடுக்கின்றது.
4. நாம் சந்திக்கும் எல்லா சொற்களையும் ‘தமிழ் வேர்’ என்றே நிரூபிக்கலாம்
5. தமிழிலிருந்து பல உலக சொற்கள் வரவில்லை என்பவர்கள் - கெட்ட
எண்ணத்துடன், அதாவது தமிழை தாழ்மைப் படுத்தும் நோக்கத்துடன்,
பேசுகின்றனர்.
6. மேற்கண்ட நோக்கங்களுடன் ‘வேலை’ செய்யும் போது, உண்மை என்பதை மறந்து
விடு. தான் சொன்னதையே திருப்பி, திருப்பி சொல்லி - முக்கியமாக தமிழில்
சொல்லி - மற்ற கருத்துக் காரர்களின் கெட்ட எண்ணத்தை நிருவு
இந்த எல்லா கோட்பாடுகளுக்கும் இந்த கட்டுரை நல்ல உதாரணம். சில முக்கிய
பாயிண்டுகளை மட்டும் அலசியுள்ளேன். ஒரு பானைக்கு ஒரு அரிசி நல்ல உதாரணம்
என்பார்கள்:
1. முதலில் தமிழ் #தேய் என்பது மறுவி , சமஸ்கிருதத்தில் `தேவா`, லத்தீன்
டியூஸ் போன்ற வார்த்தைகள் வந்தது என்கிறார்.
ஆங்கில விகிபீடியா கட்டுரை 200 ஆண்டுகளாக நன்கு அலசப்பட்ட சொல்லை
கொடுக்கின்ரது
http://en.wikipedia.org/wiki/Deva_(Hinduism)
Deva derives from devá-, which in turn derives from Indo-Iranian
*devá-. The Avestan cognate of Vedic devá- is daēva (daēuua), which
has a pejorative connotation. In later Zoroastrianism, daevas are
noxious creatures, but this meaning is not evident in the oldest
texts.
Indo-Iranian *devá- descends from the Proto-Indo-European (PIE) word,
*deiwos, originally an adjective meaning "celestial" or "shining",
which is a PIE (not synchronic Sanskrit) vrddhi derivative from the
root *diw meaning "to shine", especially as the daylit sky. The
feminine form of PIE *deiwos is PIE *deiwih2, which descends into
Indic languages as devi, in that context meaning "goddess".
Also deriving from PIE *deiwos, and thus cognates of deva, are
Lithuanian Dievas (Latvian Dievs, Prussian Deiwas), Germanic Tiwaz
(seen in English "Tuesday") and Latin deus "god" and divus "divine",
from which the English words "divine", "deity", French "dieu", Spanish
"dios" and Italian "dio" are derived.
Related but distinct is the PIE proper name *Dyeus which while from
the same root, may originally have referred to the sky, and hence to
"Father Sky", the chief God of the Indo-European pantheon, continued
in Sanskrit Dyaus.
தேவநேயன் 150 ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான மொழி வல்லுனர்கள் அலசிய சொல்லை
கண்டுக்கொள்ளாமல் இருப்பது , ஆராய்ச்சி முறை என எப்படி சொல்வது.
2. இப்படி ‘நிரூபிக்கும்’ வழியில் சில உளரல்களை பார்க்கலாம் “நெருப்பைக்
குறிக்கும் ‘உரு’ வேர் தமிழ்ச்சொற்கள் பிறமொழிகளிலும் சென்று
வழங்குகின்றன. எ.கா. இலத்தீன் (Latin) - உர் (to burn)”
லத்தீனில் ’உர்’ என்றால் எரிவதா அல்லது நெருப்பா?
http://wiki.answers.com/Q/What_is_the_word_to_burn_in_latin
What is the word to burn in latin? incendo, incendere, incendi,
incendus
எரிவதற்க்கான லத்தீன் சொல் incendere ஆங்கிலத்திலும் புழங்குகிறது
அதே தளம் What is the Latin word for fire? ignis is the word for fire
in latin
தேவநேயன் இலத்தீன் (Latin) - உர் (to burn) எங்கிருந்து பிடித்தார் என
தெரியவில்லை.
மேலும் ”எபிரேயம் (Hebrew) ஊர் = நெருப்பு, ஓர் = ஒளி” என்று
திட்டவட்டமாக சொல்கிறார்.
விகிஆன்சர்ஸ்.காம் தளம் “The Hebrew word for fire is Esh ”
இப்படி நன்றாக தெரிந்த விஷயங்களிலேயெ புருடா விடுகிறார்.
3. பாவானரின் மொழிப் பாகுபாடுகள் எவரும், முக்கியமாக உலக ஆய்வாளர்கள்
பின்பற்றாதவை. மொழிகள் பாகுபாட்டில் தாந்தோன்றித்தனமாக உளரியுள்ளார்.
மொழியியல் மொழி பாகுபாடுகள் ஒர் லாஜிக் மேல் செய்யப்பட்டவை. கடந்த 100
வருடங்களாக அவற்றில் பெரும் மாற்றங்கள் ஏற்படவில்லை.
> சித்தியம்:
>
> சாமாயிதே (samoiede) - tu, tui, ti, ty
> மஞ்சு (Manchu) - tua
> அங்கேரியம் (Hungarian) - tuz
> ஓசுத்தியக்கு (Ostiak) - tut
> துங்கசு (Tungus) - togo
> இலசுக்கியம் (Lesghian) - tze, zi, zi
சித்தியம்: என்பது மொழிக்குடும்பமே இல்லை. http://www.ethnologue.com/family_index.asp
சாமாயிதே என்பது மொழியே இல்லை. அது உராலிக் வகுப்பை சேர்ந்த ஒரு மொழி
உபகுடும்பம்
http://www.yourdictionary.com/samoyede
Samoyed definition 2.any of a group of Uralic languages spoken by the
Samoyeds
மஞ்சு (Manchu) - tua என்ற மொழியே இல்லை, அது சீனத்தை அரசாண்ட ஒரு
வம்சம்.
ஓசுத்தியக்கு : அப்படி ஒரு மொழி இல்லை. http://www.ethnologue.com/language_index.asp?letter=O
துங்கசு (Tungus): அப்படி ஒரு மொழி இல்லை http://www.ethnologue.com/language_index.asp?letter=T
இலசுக்கியம் (Lesghian) அப்படி ஒரு மொழி இல்லை
http://www.ethnologue.com/language_index.asp?letter=L
மேலும் தேவநேயன்படி
> ஆரியம்:
>
> கேலிக்கம் (Gaelic) - teire
> வேலிசு (Welsh) - tan
> பாரசீகம் (Persian) - tigh
ஆரியம் என்பது மொழிக்குடும்பமா? அது 50 வருடங்கள் முன்னால் ‘ஆரிய மொழிக்
குடும்பம்’ என்ற பொருளில் கையாளப்பட்டதா?
அப்படி இருந்தாலும் ஆரிய மொழிக் குடும்பம் - அதாவது தற்காலத்தில் இந்தோ-
ஐரோப்பிய’ மொழி குடும்பத்தை குறிப்பதற்க்கு - என்ற சொல்லை
மொழியியலாளர்கள் கைவிட்டு 100 ஆண்டுகள் ஆகி விட்டன. 19ம் நூற்றாண்டு முன்
பாகத்தில் சில மேற்கத்திய மொழியியலாளர் இந்தியாவில் இருந்து ஐரோப்பா
வரையாவ எல்லா மொழிகளும் சமஸ்கிருதத்திலுருந்து வந்ததது என நினைத்தனர்,
அதனால் அப்படிப்பட்ட எல்லா மொழிகளையும் ‘ஆரிய மொழிகள்’ என அழைத்தனர். அது
பெரும் தவறு என 100 ஆண்டுகளுக்கு மேலேயே கைவிட்டனர். இப்பொழுது ‘ஆரிய
மொழிகள்’ என்று எதையும் குறிப்பதில்லை. வட இந்திய, சிங்கள, பாகிஸ்தான,
பங்களாதேச மொழிகளை ‘இந்தோ-ஆரியன்’ என அழைக்கின்றனர்.
இதிலிருந்து தேவநேயன் ஒரு ஆய்வு புத்தகமும் படிப்பதில்லை போலுள்ளது.
கேலிக்கம் என்பது ஐரோப்பாவின் வடமேற்கு ஓரத்தில் உள்ள (அயர்லாந்து,
வேல்ஸ், ஸ்காட்லாந்து, பிரெஞ்சு ப்ரெட்டான்) மொழிக்குடும்பம். வேலிசு
என்பது மொழி அல்ல, அங்கு பேசப்படுவது ஒரு வகை கேலிக்கம்.
பாரசீகம் என்பது சரியான ப்ரயோகம் இல்லை. ஏனெனில் பாரசீகம் 4000 ஆண்டுகளாக
மாறிக்கொண்டு வருகிறது. தற்கால பார்சீகம் பெரும் அரபு மொழி தாக்கம்
கொண்டது. ஒவ்வொரு கால ‘பாரசீக மொழிக்கும்’ தனி பெயர்கள் உண்டு
’நேயம்’ பற்றி ”நேயம் என்ற தென்சொல் வடநாட்டுத் திரவிடத்தில் வழங்கி,
பின்னர் பிராகிருத்தத்திலும் தொடர்ந்து, இறுதியில் சமற்கிருதத்திற்
புகுந்து ‘ஸ்நேஹ’
என்று வழங்குகிறது. இவ்வரலாற்றுமுறை அறியாதோர், பேரன் பாட்டனைப் பெற்றான்
என்பதுபோல், ஸ்நேஹ (சமற்) >நேயம் (ப்ராகிருதம்)>நேயம் (தமிழ்) எனத்
தலைகீழாகத் திரிப்பர். இங்ஙனமே சென்னைப் பல்கலைக் கழகத் தமிழகராதியிலும்,
உண்மைக்கு
மாறாகக் காட்டப்பட்டுள்ளது.” என்று மொட்டையாக சொல்கிறார்.
மொழிக்கு மொழி வார்த்தை தாவும் போது “Regular sound change" ஆகும் என்பர்
ஆய்வாளர்கள். சமஸ்கிருதத்திலிருது தமிழ் மொழிக்கு தாவும் போது முதல் ஸ்
வழக்கமாக விடுபடும். மேலும் ஒவ்வொரு சொல் வேரும் அதன்
மொழிக்குடும்பத்தில் cognate இருக்கும். உதாரணமாக ஸ்தானம் என்ற சொல்,
மற்ற இந்தொ-ஐரோப்பிய மொழிகளிலும் வரும். பாரசீகத்தில் , பலூசிஸ்தான்,
தாஜிகிஸ்தான் போன்ற நாட்டு மொழிகளிலும் ஆங்கிலத்தில் Bus Stand, Coat
Stand, Band Stand போன்ற வார்த்தைகளிலும் பொருள் ஒற்றுமையை பார்க்கலாம்.
ஏனெனில் Sta என்பது இந்தோ-ஐரோப்பிய வேர்.
தமிழில் இருந்து நேயம்>ஸ்நேஹம் என தாவினால், அதற்கு Regular sound change
களை காண்பிக்க வேண்டும்.
இந்த சிறு கட்டுரைலேயே தேவநேயரின் பல குளறுபடிகளை பார்க்கலாம். வாழ்க்கை
அனுபவிப்பதற்கே அன்றி மற்றவர் குளறுபடிகளை காட்டிக் கொடுப்பதற்க்காக
இல்லையால், அதுவும் தேவநேயரின் குளறுபடிகளை பட்டியல் இட பல வருடங்கள்
ஆகும். அதனால் இதை இப்பொழுது முடித்துக் கொள்கிறேன். அதே சமயம் அரசியல்
புனித் பிம்பங்களின் பொய்களையும் நிதானமாக அலசவேண்டும்
விஜயராகவன்
நமஸ்காரம் சிறீதரன்
அப்படியா, நான் யார் மேலேயும் பெயரை திணிப்பதில்லையே. பேசும்படி
எழுதுவதில் ஒரு திணிப்பும் இல்லை.
புனித பிம்பத்தை விமர்சித்தால், பக்க வாதமா?
Going off in a tangent a typical tactic of the devotees. Focus on
substantive issues.
விஜயராகவன்
மேலும் தேவநேயன் மயிர் > ஸ்மஸ்ரு என சமஸ்கிருதத்தில் ஆகி விட்டது
என்கிறார்.
ஆப்தே சமஸ்கிருத அகராதிப் படி hair என தேடிப்பார்த்தால் 401 சொற்கள்
வருகின்றன. ஆனால் ஸ்மஸ்ரு அல்லது ஸ்ம என ஆரம்பிக்கும் சொல்லே `மயிர்`
என்று இல்லை.
தேவநேயன் வாதம் மயிர்>ஸ்மஸ்ரு (smrsru) ஆகியது போல், நேயம் > ஸ்நேஹம்
ஆகிவிட்டது என்கிறார். ஆனால் மயிர்>‘ஸ்மஸ்ரு(smrsru) என்பதற்கு ஒரு
ஆதாரமும் இல்லை
தேவநேயன் ஸ்மஸ்ரு (smrsru) வை எங்கிருந்து பிடித்தார் என தெரியவில்லை.
விஜயராகவன்
On Nov 6, 4:34 pm, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
> தேவநேயன் ஸ்மஸ்ரு (smrsru) வை எங்கிருந்து பிடித்தார் என தெரியவில்லை.
>
ஶ்மஶ்ரு
http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?p.6:135.apte3
விஜயராகவன்
மயிர் என்னும் தென்சொல் ‘ச்மச்ரு (smrsru) எனச் சகரம் முதற்கொண்டு
வழங்குவது போன்றே, நேயம் என்னும் தென்சொல்லும் ‘ச்நேஹ’ என்னும் ஸகரம்
முற்கொண்டு சமற்கிருதத்தில் வழங்குகின்றதென அறிக//
"श " முதற்கொண்டு வழங்கும் சொற்களுக்குப் பிறகு வருவோம்.
श्मश्रु - ச்மச்ரு இருக்கிறது.
ஸ்கந்திந், ஸ்கம்ப:, ஸ்குந்த், ஸ்குட், ஸ்போடிகா,ஸ்கதநம்,
ஸ்கலநம்,ஸ்தந:,ஸ்தநநம்,ஸ்தநயித்நு:,ஸ்தபகம்,ஸ்தப:,ஸ்தரணம், ஸ்திமிதம்,
ஸ்தீர்வி:, ஸ்துகா, ஸ்துப:, ஸ்துநக:, ஸ்தைமித்யம், ஸ்தேம:,ஸ்தோகக:,
ஸ்தோத்ரிய:, ஸ்த்யாயநம் , ஸ்தவீயஸ் போன்ற பல சொற்கள்.
ஏதோ ஒரு இலக்கண விதி அல்லது Regular sound change என்னும் வழிமுறை நின்று
மேற்கண்ட சொற்களின் தமிழ் வேர்களையும் ஆராய்ந்து தெரிவித்தல் பாவாணர் வழி
ஆய்வாளர்களின் கடமை;இது புரிதலை மேம்படுத்தும் ஒரு சீரிய
தமிழ்த்தொண்டு.
கருவும் நோக்கம் இல்லை ஐயா, அறியும் நோக்கம்.
தேவ்
ஸ்கருவல், ஸ்கறுவுதல் என்று மாற்ற வழி உள்ளதா என ஆலோசித்து வருகிறேன்;
நீங்கள்தான் உதவ வேண்டும்.
“ஸம்ஸ்க்ருதாய நம:”
தேவ்
On Nov 7, 9:42 am, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
>
> "श " முதற்கொண்டு வழங்கும் சொற்களுக்குப் பிறகு வருவோம்.
> श्मश्रु - ச்மச்ரு இருக்கிறது.
>
> ஸ்கந்திந், ஸ்கம்ப:, ஸ்குந்த், ஸ்குட், ஸ்போடிகா,ஸ்கதநம்,
> ஸ்கலநம்,ஸ்தந:,ஸ்தநநம்,ஸ்தநயித்நு:,ஸ்தபகம்,ஸ்தப:,ஸ்தரணம், ஸ்திமிதம்,
> ஸ்தீர்வி:, ஸ்துகா, ஸ்துப:, ஸ்துநக:, ஸ்தைமித்யம், ஸ்தேம:,ஸ்தோகக:,
> ஸ்தோத்ரிய:, ஸ்த்யாயநம் , ஸ்தவீயஸ் போன்ற பல சொற்கள்.
>
> ஏதோ ஒரு இலக்கண விதி அல்லது Regular sound change என்னும் வழிமுறை நின்று
> மேற்கண்ட சொற்களின் தமிழ் வேர்களையும் ஆராய்ந்து தெரிவித்தல் பாவாணர் வழி
> ஆய்வாளர்களின் கடமை;இது புரிதலை மேம்படுத்தும் ஒரு சீரிய
> தமிழ்த்தொண்டு.
श , ஸ இரண்டும் வேறு சப்தங்கள். அதனால் ஞாநே சொல்வது சரி இல்லை.
எல்லாம் தமிழிலிருந்தே உதித்தது என்பது ஞாநேவின் மைய நோக்கம்.
ஜெர்மானிய போர்யுக்தி ஞானி க்ளௌஸ்விட்ஸ் “அரசியலை மறு வழிகளால் தொடர்வது
போர்” என்றானே, அதைப் போல் நம் ஞானி தேவநேயனின் கூற்று “தமிழ் துதியை மறு
வழிகளால் தொடர்வது மொழியியல்”
விஜயராகவன்
ஐயா
யார் எதில் நேரம் செலவிடுகின்றனர் என்பது அவர்கள் தீர்மானம்.
என் தீர்மானம் முடிந்தவரை போலி விஞ்ஞானம், போலி அறிவு, தனிமனிதர்கள்
துதி, சில கலாசார பிம்பஙளின் தீய விளைவு இவற்றை எதிர்ப்பது.
விஜயராகவன்
ம, ர என்னும் இரு எழுத்துகள் இவ்விரு சொற்களிலும் பொதுவாக உள்ளதால்
இரண்டிற்கும் முடிச்சுப் போட்டுவிட்டனர்.
உண்மையில் ‘ச்மச்ரு’ மீசையைக் குறிக்கும் சொல்;
ரோமத்தைக் குறிப்பதற்கு அது பயனாவதில்லை.
ச்மச்ரு தமிழிலிருந்து வந்தால் ச்மீல், ச்மீலநம், ச்யாநம்,
ச்யாமம், ச்யாமாக:, ச்யால:, ச்யாவ:,ச்யேத:,ச்யேந:
போன்றவற்றின் தமிழ் வேர்கள் யாவை ?
தேவ்
ஶ்மஶ்ரு > மசிரு (கன்னடம்), மசிர்/மயிர் என்று மு. ராகவையங்கார்
கட்டுரையில் படித்திருக்கிறேன்.
மயிலாப்பூர் வக்கீல் சாமிநாத ஐயர் (உவேசா அல்லர்)
திராவிட மொழிகள் சம்ஸ்கிருதத்தில் இருந்து வந்தவை
என்ற புத்தகம் எழுதியவர். அவர் ”ஆஶ்ரித” என்றால்
விஸர்க்கத்துக்கு ஒரு பெயர். ஆஶ்ரித > ஆய்தம்
என்று எழுதியுள்ளார். இது ஆராயப்பட வேண்டிய செய்தி.
ஆய்த எழுத்து கல்வெட்டிலே வருவது பல்லவர் காலத்திலேதான்.
ஆஶ்ரிதம் என்றால் ஒரு விஸர்க்கம் என்று எந்த
வடமொழி இலக்கியம் என்று பார்க்கப்பட வேண்டும்.
ஆஶ்ரித = இணைவது, ஒட்டுவது, தஞ்சம் என்பது, ...
என்றெல்லாம் பொருள் இருக்கிறது.
அன்புடன்,
நா. கணேசன்
கன்னடத்தில் தமிழ்ச் சொற்கள் ஒரே ரீதியில் வடிவம் பெறுகின்றன;
ஹாலு, ஹல்லு,ஹெண்ணு, ஹெண்டதி போன்று ’ப’ , ‘ஹ’ ஆகிறது.
தெலுங்கில் ழகரம் டகரமாகும்.பொதுவாக இந்திய மொழிகளுக்கிடையே
மாற்றம் ஒன்றுபோலவே அமையும்.
ச்மச்ருவைப்போல் வடமொழியில் ‘பயிர்’ ச்பச்ரு ஆவதில்லை;
‘தயிர்’ ச்தச்ரு ஆவதில்லை; ’உயிர்’ ச்வச்ரு ஆவதில்லை.
வடமொழி அகராதிகளும் உரிய வேர்களைக் காட்டுகின்றன.
தேவ்
அன்புள்ள
தமிழ்த்தேனீ
http://www.peopleofindia.net
rkc...@gmail.com
http://thamizthenee.blogspot.com
’சென்னைப் பல்கலைப் பேரகராதி நேசம் என்ற சொல்லை நேயம் என்ற தமிழ்ச்
சொல்லில் இருந்து பிறப்புக் காட்டுகிறது.’ என்று முதலில் கருத்துக்
கூறிய கணேசனார், பின்னர் தமிழ் மன்றம் குழுமத்தில் கூறப்பட்ட ‘தமிழ்
மொழியின் வேர்ச்சொற்களை ஆராய்பவர்கள் சென்னைப் பல்கலைப் பேரகராதியின்
சமஸ்கிருதச் சார்புடைமையை கருத்தில் கொண்டு பார்க்க வேண்டும்.’ என்னும்
கருத்துக்கு ஆதரவு தந்ததால் ஏற்பட்ட வியப்பு இன்னும் நீங்காதவனாக
இருக்கிறேன்.
தேவ்
On Nov 8, 8:48 pm, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
> திரு தமிழ்த்தேனியாரே! கட்சி சேர்ந்துட்டீங்களா?
> நம்ம கட்சி இஷ்ட்ராங்கா ஆவுது போல :--)))
>
> (சார் கோவிச்சுக்காம நீங்க கோட் பண்ற பகுதிக்கு தனிக்குறி
> இட்டுக் காண்பியுங்கள். *,< > இப்படி ஏதானும். எது உங்கள் வரி எது
> நீங்கள் மேற்கோள் காட்டும் வரி என்பது குழம்புகிறது. )
>
> On 11/8/09, Tthamizth Tthenee <rkc1...@gmail.com> wrote:
>
>
>
> > இதிலெல்லாம் யார் காலவிரயம் செய்வது? என்னை ஆளைவிடுங்கள்.
> > இந்த விதத்தில் நான் ஹரி, திவாஜி கட்சி
>
> > அடியேனும் உங்கள் கட்சிதான்
>
> > உருப்படியாக வேறு ஏதேனும் நல்ல இலக்கியம் பேசலாம்
>
> > அன்புடன்
> > தமிழ்த்தேனீ
>
> > 7-11-09 அன்று, srirangammohanarangan v <ranganvm...@gmail.com> எழுதினார்:
> >>> rkc1...@gmail.com
> >>>http://thamizthenee.blogspot.com
On Nov 8, 10:29 am, devoo <rde...@gmail.com> wrote:
> யாரையும் வற்புறுத்தவில்லை , ஐயா.
> ஆர்வமுள்ளவர் பங்கு பெறலாம்;
> விடை தெரிந்தவர் விளக்கம் தரலாம்.
> பாவாணர் வழியைப் பின்பற்றுவோர் கடைப்பிடிக்கும்
> Morphology என்ன என்பது வினா. இது போன்ற விவாதங்கள்
> முன்னர் இவ்வரங்கில் இடம் பெற்றுள்ளன.
>
> ’சென்னைப் பல்கலைப் பேரகராதி நேசம் என்ற சொல்லை நேயம் என்ற தமிழ்ச்
> சொல்லில் இருந்து பிறப்புக் காட்டுகிறது.’ என்று முதலில் கருத்துக்
> கூறிய கணேசனார், பின்னர் தமிழ் மன்றம் குழுமத்தில் கூறப்பட்ட ‘தமிழ்
> மொழியின் வேர்ச்சொற்களை ஆராய்பவர்கள் சென்னைப் பல்கலைப் பேரகராதியின்
> சமஸ்கிருதச் சார்புடைமையை கருத்தில் கொண்டு பார்க்க வேண்டும்.’ என்னும்
> கருத்துக்கு ஆதரவு தந்ததால் ஏற்பட்ட வியப்பு இன்னும் நீங்காதவனாக
> இருக்கிறேன்.
>
> தேவ்
>
பல சொற்களை சென்னை லெக்சிகன் காட்டுவதை எதிர்த்திசையில்
மொழிநிபுணர்கள் அறுதியிட்டுவிட்டனர்.
உ-ம்: பர்ரோ/எமெனோ திராவிட வேர்ச்சொல் அகராதி.
நேயம் தமிழ்ச் சொல். நெய்/நயம், நெயம்:நேயம் என்றே குறிக்கிறது,
நெய்/நயம்/நேயம் தமிழ்ச் சொற்கள் என்பர் திராவிட வேர்ச்சொல் அறிஞர்.
இன்னும் ஏராளமான சொற்கள் அவைபோல் உள்ளன.
p. 104: (inside the section "The History of Tamil in a nut-shell").
"Tamil originated in the Lemurian continent at least 50,000 years ago as
a full-fledged language, ..."
p. 105:
"As population increased, people gradually moved in different directions
to distant lands, [....]"
"The Tamils who spread to the north became Dravidians by reason of their
language having changed into Drāvida. A section of the Dravidians, in
their turn, slowly moved towards the north-west upto Scandinavia and
became Aryans and then gradually spread towards the east and north east
of Europe. It was a nomadic horde from the north-east part of Europe,
that entered India through Persia as the Vedic Aryans or as their
ancestors."
"The Vedic Aryans possessed neither a literature nor an alphabet at the
time of their arrival [...]"
Of course, proving all this is a tall order!
It seems some people believe it is possible to give a proof, but I am
not one of them
-- Jean-Luc Chevillard
devoo a écrit :
[....]
Jean, you have company :-)
V
On Nov 8, 10:07 pm, Jean-Luc Chevillard <jeanluc.chevill...@gmail.com>
wrote:
நீங்கள் சொல்வது சரி
http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.1:1:1017.burrow
ஆனால் அதனால் நாம் இன்னும் கன்வின்ஸ் அடையவில்லை.
ஞாதே ’நேயம்’ திராவிட வார்த்தை என சொல்லவில்லை, தமிழ் வார்த்தை
என்கிறார்; நீங்கள் “மொழியியல் குல்லாய்” போட்டால், இவ்விரண்டையும்
தனியாக பார்க்க வேண்டும், பிரயோகிக்க வேண்டும். அது மட்டுமல்ல
நேயம்>ஸ்நேஹம் என்வும் ப்ரூவ் செய்துவிட்டார்.
திவேஅ (திராவிட வேர்ச்சொல் அகராதி) பொதுவாக லெக்சிகானை நம்பியுள்ளது.
திவேஅவில் தமிழ், மற்ற தென்னிந்திய மொழிகளுக்கு ஒரே வேர்ச் சொல்
கொடுத்தால், அதுதான் திராவிட வேர் என நம்பவேண்டாம். ஏனெனில் எல்லா
தென்னிந்திய மொழிகளும் சமஸ்கிருத தாக்கம் கொண்டவை.
அது ப்ரோடோ திராவிட கட்டத்திலும் (வேத) சமஸ்கிருதத்திலிருந்து
கடன்வாங்கியிருக்கலாம். (வேத) சமஸ்கிருதம் ப்ரோடோ திராவிட வேரில் இருந்து
கடன் வாங்கலாம் என்பதை கொள்கை அளவில் ஏற்கிரேன், ஆனால் ஞாதே தர்க்கமற்ற
வழி சரியில்லை.
ஞாநே வழியின் பங்களிப்பு மொழி வெறியை அதிகரித்து, தமிழின் , தமிழ்
உரையின் வளர்ச்சியை பிந்தள்ளியதே தவிற ஆக்கபூர்வமாக ஒன்றும்
செய்யவில்லை.
சரி ‘ஞானமுத்து’ என்பதை ஞாநே கட்சியாளர் எப்படி கையாளப்போகின்றனர் என்பதை
அறிய ஆவல் - அது அறிவை வளர்த்து விடும் என்றல்ல, இன்னும் நகைச்சுவையை
வளர்க்கும் என்று.
இப்பவே சொல்லுகிறேன் - முத்து என்பது சமஸ்கிருத கடன் அல்ல என்பேன் -
திவேஅவில் அதை கண்டுகொள்ளாவிட்டாலும், ஆனால் ஞானம் சமஸ்கிருத வேர் -
அதற்கு இந்தோ-ஐரோப்பிய எதிர்குரல்கள் உண்டு (உதாரணமாக ஆங்கிலத்தில்
Gnostics)
விஜயராகவன்
> நெய்/நயம்/நேயம் தமிழ்ச் சொற்கள் என்பர் திராவிட வேர்ச்சொல் அறிஞர்.
>
> இன்னும் ஏராளமான சொற்கள் அவைபோல் உள்ளன.
>
> அன்புடன்,
> நா. கணேசன்- Hide quoted text -
>
> - Show quoted text -
""The Blackman is the original man. From him came all brown, yellow,
red, and white people. By using a special method of birth control law,
the Blackman was able to produce the white race. This method of birth
control was developed by a Black scientist known as Yakub, who
envisioned making and teaching a nation of people who would be
diametrically opposed to the Original People. A Race of people who
would one day rule the original people and the earth for a period of
6,000 years. Yakub promised his followers that he would graft a nation
from his own people, and he would teach them how to rule his people,
through a system of tricks and lies whereby they use deceit to divide
and conquer, and break the unity of the darker people, put one brother
against another, and then act as mediators and rule both sides." -
Elijah Muhammad[14]"
http://en.wikipedia.org/wiki/Nation_of_Islam
http://en.wikipedia.org/wiki/Beliefs_and_theology_of_the_Nation_of_Islam
Fortunately for the US, NoI is a fringe group, whereas in Tamilnadu GD
is the mainstream
Vijayaraghavan
On 8 Nov, 17:07, Jean-Luc Chevillard <jeanluc.chevill...@gmail.com>
wrote:
> [....]- Hide quoted text -
Tamil scholarship is not 100% scientific yet!
Arm chair speculation is prevalent there.
For example, in order to bring a social/political change in power,
they adopted Aryan Theory. Even the Nazi's didn't meant it ethnically
(the reference was given in MinTamil before) but our Tamil scholars
meant it ethnically beating even the Nazis.
All their world view revolves around Sangam literature which was
documented critically by one of those 'Aryans' (U.V.Swamynatha Iyer)
in early 20th centuary. Tamil scholarship needs evidence from Sangam
and not from real Science.
A long way to go...
Kannan
2009/11/9 வினோத் ராஜன் <vinodh...@gmail.com>:
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
On Nov 3, 1:45 am, devoo <rde...@gmail.com> wrote:
> காஞ்சிப் பெரியவர் கைகொடுக்கிறார் -
>
> ஸமீபத்தில் 'மனித நேயம்' என்று ஒரு வார்த்தை உலாத்துகிறதாகப்
> பார்க்கிறேன். நல்ல வார்த்தைதான். காதுக்குக் கேட்கவும் நன்றாகத்தான்
> இருக்கிறது. ஆனாலும், 'மனிதாபிமானம்' என்று இத்தனை நாளாகச் சொல்லி
> வந்ததில் 'அபிமானம்' என்ற ஸம்ஸ்கிருத வார்த்தை இருப்பது பிடிக்காமல்தான்
> இப்படி மாற்றியிருக்கிறார்கள் என்பதைக் கவனிக்கும் போது பரிஹாஸமாகத்தான்
> இருக்கிறது! ஏனென்றால், 'நேயம்' என்பதும் ஸம்ஸ்கிருத 'ஸ்நேஹ'த்தின்
> திரிபுதான்!
>
> தெய்வத்தின் குரல் எழாம் பகுதி, வானதி பதிப்பகம்
நல்வரவாகுக !
‘ஸம்ஸ்’ என்று ஒரு தனிச் சொல் வடமொழியில் கிடையாது;
‘ஸ’எனும் அவ்யயம் மட்டுமே உண்டு. மூவகை இடங்களில் பயனாகிறது;
ஓரெழுத்தொரு மொழியாகவும் கையாளப்படுகிறது.
பாம்பு,காற்று,பறவை,சிவன்,விஷ்ணு ஆகிய பொருளையும் தருகிறது.
செம்மை திரிந்து எப்படி ’ஸ’ ஆகிறது என்பதை விளக்கினால் நல்லது.
தேவ்
நெய்/நயம், நெயம்:நேயம் என வடிவம் பெறுவதுபோல்
பெய்/பயம், பெயம்:பேயம்
செய்/சயம், செயம்:சேயம்
என்று ஏன் உருமாறுவதில்லை ?
பெயல், செயல் என்னும் சொற்களைப்போல் நெயல்
என்று வடிவம் பெறுவதுதானே முறை
அல்லது எய் எயினன் ஆவதுபோல்
செய் - செயினன், பெய் - பெயினன் என்று மாறாதது ஏன் ?
தேவ்
தேவ், வேந்தன்
இன்னொன்றும் கேட்டிருக்கிறேன்:
ப்ர- என்னும் ஸம்ஸ்க்ருத முன்னொட்டு திராவிடத்தின் பெரு-
என்பதிம் மாற்றமா? pra- என்பதற்கு மற்ற இந்தோ-ஐரோப்பிய
இணைகள் இல்லை.
நா. கணேசன்
On Nov 8, 11:32 pm, devoo <rde...@gmail.com> wrote:
> அல்லது எய் எயினன் ஆவதுபோல்
> செய் - செயினன், பெய் - பெயினன் என்று மாறாதது ஏன் ?
>
செயின், பெயின் இருக்கின்றன. அன் விகுதி சேர்த்தலாம்.
வெள்-/வேள்-, கண்-/காண (வேதத்தில் உள்ள சொல்), ...
நெய்/நயம். இதுபோல், திராவிடச் சொல் செல் என்பது இந்தியில் ”சலோ”
என விட்சல் எழுதியுள்ளார். தெல்- “காற்று” - கடலாடும் திசையானதால்
தெற்குக்குப் பெயர். தென்னை தென்திசை சிறப்பான மரம்.
தெல்-/தல்- தல்லி (தெலுங்கில் அம்மா) தள்ளு வினை - பெற்றவள்
(நெய்-/நய்-, செல்-/சலோ, ...)
வடம் = ஆலம் விழுது. (ஆல் = இந்தியாவின் தேசிய மரம்).
வடக்கு - ஆலமரம் சிறப்பானது. கயிலாயத்தில் கல்லால மரத்தின் கீழ்
இருப்பவர் சிவன்.
வட மீன் - pole star, ஆல மர விழுதுகள் போல மற்ற விண்மீன்களை
இணைப்பன என்று வேதங்கள் பேசுகின்றன. முன்பு எழுதியுள்ளேன்.
கணேசன்
> தேவ்
சென்னை: ஸென்னை ...
(நெய்-) நெயம்:நயம், செல்:சலோ, தெல்-/தல்-, ஞெண்டு,:ஞண்டு (நண்டு)
எதிர்த்திசையில்,
ரெங்கநாதன், செயங்கொண்டார், ஜெயா, லெட்சுமணன், (schwa?)
கணேசன்
On Nov 9, 6:30 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> தேவ்:
>
> > > செம்மை திரிந்து எப்படி ’ஸ’ ஆகிறது என்பதை விளக்கினால் நல்லது.
>
> சென்னை: ஸென்னை ...
>
இன்னொரு உ-ம்: நெல்-/நல்-
முனைவர் இராமகி 2001-ல் எழுதிய மடல்:
http://www.treasurehouseofagathiyar.net/08900/8947.htm
நெல் - மஞ்சள் நிறமானது. மங்கலப் பொருள்,
நெல்லைத் தூவுவது சங்க இலக்கிய திருமணங்களில்.
(அந்தத் தொல்வழக்கின் மாற்றமே அரிசியில் மஞ்சட் பூசி
அட்சதை ஆக்கித் தூவுவது).
நெல்- : நல்- (உ-ம்: நலம்.)
[இந்த நெல்-:நல்- என்னும் சொற்களும்,
நள்-:நாள்- (இருள், கருமை) > நல்- என்னும் சொல்லும்
ஒரோவழி மயங்கும். நளவன் > நலவன் > அலவன் “நண்டு”.
நாளகிரி - புத்தரைக் கொல்ல தேவதத்தன் ஏவிய
அஞ்சனமலை போன்ர யானை. பெருங்கதையிலும்
நாளகிரி யானை உண்டு. நள்ளமலை : நல்லமலை
- பிறக்கும் கரும்பெண்ணை (கிருஷ்ணபெண்ணா, கிருஷ்ணா
நதி). ]
நெகு- (நெகிழ்-) என்னும் வினையில் பிறக்கும்
சொல்: நகை (நகைத்தல் - இதழ் நெகிழும் போது நிகழ்வது).
பொன்னை நெகிழ்த்துச் செய்வதும் நெகை:நகை.
ஒரே திசையில் போவோம்.ரெங்கநாதன், செயங்கொண்டார், ஜெயா, லெட்சுமணன் -
இவற்றை இங்கு தருதல் பொருத்தமற்றது.
தேவ்