திருக்குறள் காட்டும் அடியளந்தான் யார்?

656 views
Skip to first unread message

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Nov 13, 2017, 10:36:31 AM11/13/17
to mintamil

https://thiruththam.blogspot.in/2017/11/blog-post_13.html

திருக்குறள் காட்டும் அடியளந்தான் யார்?



முன்னுரை:

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு. - 610.

திருக்குறளில் மடியின்மை என்னும் அதிகாரத்தில் வருவது மேற்காணும் குறள். ஒரு வேலையைச் செய்யும்போது சோம்பல் இல்லாமல் தொடர்ந்து செய்தால், என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதனைப் பற்றி விளக்கமாகக் கூறும் அதிகாரத்தில் ஒரு மன்னனுக்கான அறிவுரையாக மேற்காணும் குறள் அமைகின்றது. இக்குறளுக்கு விளக்கம் கூறும்போது, அடியளந்தான் என்னும் சொல்லானது 'திருமால்' என்னும் தெய்வத்தைக் குறிப்பதாகப் பொருள்கொண்டுள்ளனர். உண்மையில், இக்குறளில் வரும் அடியளந்தான் என்னும் சொல் திருமாலைத்தான் குறிக்கிறதா என்றும் இக்குறளின் உண்மையான பொருள் எதுவென்பதனையும் இக்கட்டுரையில் விரிவாகக் காணலாம்.

தற்போதைய விளக்க உரைகள்:

கலைஞர் மு.கருணாநிதி உரை: சோம்பல் இல்லாதவர் அடையும் பயன், சோர்வில்லாத ஒரு மன்னன், அவன் சென்ற இடமனைத்தையும் தனது காலடி எல்லைக்குள் கொண்டு வந்ததைப் போன்றதாகும்.

மு.வரதராசனார் உரை: அடியால் உலகத்தை அளந்த கடவுள் தாவிய பரப்பு எல்லாவற்றையும் சோம்பல் இல்லாத அரசன் ஒரு சேர அடைவான்.

சாலமன் பாப்பையா உரை: தன் அடியால் எல்லா உலகையும் அளந்தவன் கடந்த உலகம் முழுவதையும், சோம்பல் இல்லாத அரசு முழுமையாக அடையும்.

பரிமேலழகர் உரை: அடி அளந்தான் தாஅயது எல்லாம் - தன் அடியளவானே எல்லா உலகையும் அளந்த இறைவன் கடந்த பரப்பு முழுதையும்; மடி இலா மன்னவன் ஒருங்கு எய்தும் - மடியிலாத அரசன் முறையானன்றி ஒருங்கே எய்தும். ('அடியளந்தான்' என்றது வாளா பெயராய் நின்றது. 'தாவியது' என்பது இடைக் குறைந்து நின்றது. எப்பொழுதும் வினையின் கண்ணே முயறலின், இடையீடின்றி எய்தும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் மடியிலாதான் எய்தும் பயன் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை: மடியில்லாத மன்னவன் எய்துவன், அடியினால் அளந்தானால் கடக்கப்பட்ட வுலகமெல்லாம் ஒருங்கே. இது மடியின்மையால் வரும் பயன் கூறிற்று.

அடியளந்தான் என்பது திருமால் தெய்வமா?:

மேற்காணும் குறளில் வரும் அடியளந்தான் என்னும் சொல் திருமால் தெய்வத்தைக் குறிக்குமா என்றால் ஒருபோதும் குறிக்காது. இதற்கான காரணங்களைக் கீழே காணலாம்.

1. திருவள்ளுவர் 1330 குறள்களில் எந்தவொரு குறளிலும் எந்தவொரு குறிப்பிட்ட தெய்வத்தையும் சுட்டிக்காட்டிச் சொல்லவில்லை. கடவுள்வாழ்த்தில்கூட ஆதிபகவன், அந்தணன், இறைவன் என்று பொதுவான பெயர்களால்தான் கடவுளைக் குறிப்பிடுகிறாரே ஒழிய சிவன், திருமால், விநாயகர், ரிஷபநாதர், இயேசு என்பதைப்போல எந்தவொரு பெயரையும் குறிப்பால்கூட உணர்த்தவில்லை.

2. அடியளந்தான் என்ற சொல்லினால் மூன்று அடிகளால் உலகம் முழுவதையும் அளந்த தெய்வமாகப் போற்றப்படுகின்ற திருமாலைக் குறிப்பிட வள்ளுவர் உண்மையிலேயே விரும்பியிருந்தால் திருமால் அடியளந்த நிகழ்வினைப்பற்றிக் கண்டிப்பாக வேறு ஒருகுறளில் சிறிய குறிப்பின் மூலமாவது குறிப்பிட்டிருப்பார். ஏனென்றால், அப்படிக் குறிப்பிட்டால்தான் அக்குறளைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியும். இல்லையேல் அடியளந்தான் என்னும் சொல்லினால் மன்னனைத்தவிர வேறுயாரை வள்ளுவர் அக்குறளில் குறிப்பிடுகிறார் என்று மக்களால் புரிந்துகொள்ள முடியாது. இதனை மதிநுட்பம் கொண்ட நம் ஐயன் நன்கு அறிவார். ஆனால் அவரோ வேறு எந்தக்குறளிலும் திருமால் அடியளந்த நிகழ்வினைப் பற்றியோ திருமாலைப் பற்றியோ குறிப்பிடவில்லை.

3. ஏன், 1103 ஆம் குறளில் வரும் தாமரைக்கண்ணான் என்ற சொல்லினால் வள்ளுவர் திருமால் தெய்வத்தைக் குறித்திருக்கிறாரே என்று சிலர் கேட்கலாம். இது தவறான கருத்தாகும். உண்மையில் தாமரைக்கண்ணான் என்பது தாமரைக்கு அண்ணான் என்று விரிந்து தாமரைக்குப் பகைவன் என்ற பொருளில் சந்திரனைக் குறிப்பதாகும். சந்திரனைக் குறிக்கத் திங்கள் என்ற சொல்லை அவர் அக்குறளில் பயன்படுத்தாத காரணம், எதுகைமோனை (தாம்வீழ்வார் - தாமரைக்கண்ணான்) அணிநயம் கருதியே ஆகும். 1103 ஆம் குறளின் கருத்துபற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள தாமரைக்கண்ணான் உலகு என்ற ஆய்வுக்கட்டுரையினை இந்த இணையதளத்திலேயே படிக்கலாம்.

மேற்காணும் கருத்துக்களின் அடிப்படையில், இக்குறளில் வரும் அடியளந்தான் என்னும் சொல் திருமால் தெய்வத்தைக் குறித்து வந்திருக்க வாய்ப்பில்லை என்பது உறுதிசெய்யப்படுகிறது.

தாஅயது என்றால் தாவிய / கடந்த பரப்பு ஆகுமா?

' தாஅயது எல்லாம் ஒருங்கு ' என்பதற்குத் ' தாவிய / கடந்த பரப்பு அனைத்தையும் பெறமுடியும் ' என்று உரையாசிரியர்கள் அனைவரும் பொருள் உரைக்கின்றனர். ஒருமன்னன் சோம்பலின்றி எவ்வளவுதான் முயன்றாலும் உலகம் அனைத்தையும் தனது காலடியின்கீழ் கொண்டுவருதல் என்பது சாத்தியம் தானா?. இத்துணை ஆண்டுகளில் அப்படி யாரேனும் ஒரு மன்னன் செய்திருக்கிறானா?. என்றெல்லாம் எண்ணிப் பார்க்கவில்லை உரையாசிரியர்கள். வள்ளுவர் ஒருவேளை உயர்வுநவிற்சியாக இதனைக் கூறியிருக்கலாம் என்று நினைத்திருப்பார்கள். ஆனால், வள்ளுவரின் உளப்பாங்கோ வேறுவிதமானது. ஒருமன்னன் தனது பகைவர்களை அழிக்கவேண்டி தனது நாட்டினைக் கடந்துசென்று போரின்மூலமாகவோ பிறவழிகளிலோ அவர்களை அழித்துவிட வேண்டும் என்றுதான் பல குறள்களின் வாயிலாகக் கூறியிருக்கிறார். அதில் சில குறள்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேராது இயல்வது நாடு. - 734.

உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார். - 880

ஒருமன்னன் தனது பகைவர்களை அழிப்பதற்காகப் போர்தொடுப்பதை ஆதரிக்கும் வள்ளுவர் தனது ஆட்சிப்பரப்பினை விரிவுபடுத்தவேண்டி ஒரு மன்னன் போர்தொடுக்கலாம் என்று எங்கேயும் ஆதரித்துக் கூறவில்லை. இதைப் பற்றி விரிவாகக் கீழே காணலாம்.

போர்செய்து நாடுபிடித்தலை வள்ளுவர் ஆதரித்தாரா?.

அடியளந்தான் என்னும் சொல் திருமால் தெய்வத்தைக் குறிக்காது என்று மேலே கண்டோம். என்றால், அச்சொல் வேறு யாரைக் குறிக்கும்?. ஐயமின்றி அது மன்னனைத்தான் குறிக்கும். கலைஞர் கருணாநிதியும் கூட தனது விளக்கவுரையில், அடியளந்தான் என்ற சொல்லுக்கு மன்னனைத்தான் பொருள்கொள்ளுகிறார். ஆனால், அடியளந்தான் என்பதற்குத் தனது அடிகளால் நடந்தவன் என்ற வகையில் அது மன்னனைக் குறிப்பதாகப் பொருள்கொள்கிறார். இது தவறாகும். அதுமட்டுமின்றி, கலைஞர் கருணாநிதி உட்பட உரையாசிரியர்கள் அனைவரும் ' ஒரு மன்னன் தனது சோம்பலற்ற முயற்சியினால் இந்த உலகம் முழுவதையும் தனது காலடியின்கீழ்க் கொண்டுவந்து விடலாம். ' என்ற ஒருமித்த கருத்தினையே இக்குறளுக்குக் கூறுகின்றனர். இக்கருத்து வள்ளுவரின் உளப்பாங்குடன் பொருத்தமானதா என்று பார்க்கலாம்.

கலைஞர் கருணாநிதி சொல்வதைப்போல ஒரு மன்னன் தனது காலடிகளால் நடந்துவிட்டால் போதும் அந்த இடமனைத்தையும் அவனது காலடிக்கீழ்க் கொண்டிவந்து விடமுடியுமா?. போர்செய்து வெற்றிபெற வேண்டாமா?. உரையாசிரியர்கள் அனைவரும் கூறுவதைப்போல, உலகம் முழுவதையும் ஒருமன்னன் தனது காலடியின் கீழ்க் கொண்டுவருவது என்றால், எத்தனை போர்களை அம்மன்னன் மேற்கொள்ளவேண்டும்?. இப்போர்களால் எவ்வளவு இயற்கைவளங்கள் அழியும்?. எத்தனை எத்தனை உயிர்கள் பலியாகும்?. ' நீ சோம்பலின்றி முயன்றால் உலகம் அனைத்தையும் உனது காலடியின்கீழ்க் கொண்டுவரலாம் ' என்று ஒரு மன்னனை நோக்கிக் கூறுவது அப்பட்டமாக அவனைப் பலபோர்களைச் செய்யத் தூண்டுவதே ஆகுமன்றோ?. போரின் பின்விளைவுகளை எல்லாம் அறிந்தவரான கருணைக்கடல் ஆகிய திருவள்ளுவர், இப்படிப்பட்ட பொருளில் ஒரு அறிவுரையினை மன்னனுக்குச் சொல்வாரா?. ஒருபோதும் அப்படிச் சொல்லியிருக்க மாட்டார். மாறாக, போரின் பின்விளைவுகளால் பாதிக்கப்பட்ட பிறநாட்டு மக்களையும் தன்நாட்டு மக்களைப் போல அரவணைத்துச் செல்லவேண்டும் என்றே கூறுவார். இதனைக் கீழ்க்காணும் குறளின்மூலம் அவரே உறுதிப்படுத்துவதைப் பாருங்கள்.

பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
இறையொருங்கு நேர்வது நாடு. - 733.

கடும்வறட்சி, கொடுங்கோன்மை, பகையரசு கைப்பற்றல் போன்ற காரணங்களால் வேற்றுநாட்டில் இருந்து குடிப்பெயர்ந்துவரும் மக்கள் மற்றும் அவர்தம் விலங்குகள் ஆகிய பெரும்பாரத்தைத் தாங்கியும், அவ்வாறு புதிதாக வந்தவர்களும் தமது இறைவனாகிய மன்னனுக்கு வேண்டிய இறைப்பொருள் அனைத்தையும் அளிக்கும்வகையில் வளம்மிக்கதுவும் ஆகியதே நாடு என்று மேற்காணும் குறளில் கூறுகிறார் வள்ளுவர். நாடு என்று இடப்பெயரால் குறித்தாலும் அது அரசனின் ஆணைக்குட்பட்ட காரணத்தினால் மறைமுகமாக அந்நாட்டு அரசனைக் குறிப்பதாகவேக் கொள்ளவேண்டும். அதாவது, வேற்றுநாட்டில் இருந்து தன்நாட்டிற்குத் தஞ்சம் என்றுவந்த மக்களையும் ஏற்றுக்கொண்டு அவர்களையும் தன்நாட்டு மக்களைப் போலவே கருதி தன்நாட்டு வளங்களைப் பயன்படுத்தி மகிழ்ச்சியுடன் வாழவே ஒரு மன்னன் வகைசெய்ய வேண்டும் என்பதே இக்குறளில் வள்ளுவரின் உட்கிடையாக இருப்பதை அறியலாம்.

இதிலிருந்து, போர்செய்து நாடுபிடித்தலை வள்ளுவர் ஆதரிக்கவில்லை என்பதும் இக்குறளுக்கு உரையாசிரியர்கள் கூறியுள்ள கருத்துக்கள் அனைத்தும் வள்ளுவரின் உளப்பாங்குடன் பொருந்தாதவை என்பதும் உறுதிசெய்யப்படுகிறது.

திருந்திய பொருள் விளக்கம்:

இக்குறளுக்கான திருந்திய விளக்கத்தினைக் காணும்முன்னர், இக்குறளில் வரும் சில சொற்களுக்கான புதிய பொருட்களை அறிந்துகொள்ளவேண்டும். இக்குறளில் வரும்,

அடி என்ற சொல் செல்வத்தினையும்
அளத்தல் என்ற சொல் கொடையாகக் கொடுத்தலையும்
தாயது என்ற சொல் உரிமையானது என்ற பொருளையும் குறிக்கும்.

மேற்காணும் புதிய பொருட்கள் அனைத்தும் தமிழ் அகராதிகள் கீழே கண்டபடி கூறுவதுதான்.

அடி³ aṭi , n. < அடு¹-. [T. aḍugu, K. Tu. aḍi, M. aṭi.] 1. Foot; பாதம். (பிங்.) 2. Measure of a foot = 12"; அடியளவு. 3. Footprint; காற் றடம். (சம். அக.) 4. Metrical line, of which there are five kinds, viz., குறளடி, சிந்தடி, அளவடி or நேரடி, நெடிலடி, கழிநெடிலடி. அடுத்து நடத்தலி னடியே (இலக். வி. 711). 5. Base, bottom; கீழ். 6. Stand, support, foundation; அடிப்பீடம். புஷ்கரபத்திமடல் அடியோடுமொன்று (S.I.I. ii, 15). 7. Beginning; ஆதி. நடுவின் முடிவினி லடியி னன் றான பொருள் (ஞானவா. சனகரா. 22). 8. Source, root of words or plants, origin of lineage, ancestry, or family; மூலம். (தாயு. தேசோ. 10.) 9. Antiquity; பழைமை. 10. Place; இடம். (பிங்.) 11. Racecourse; வையாளிவீதி. (சூடா.) 12. A conventional term in gambling; சூதாடுவோர் குழூஉக்குறியுளெரன்று. அடியிது பொட்டையீ தென்பர் (கந்தபு. கயமுகனு. 168). 13. Indulgence in intoxicating drinks; மதுபானம். Parav. 14. Riches, wealth; ஐசுவரியம். அடியுடையார்க்கெல் லாம் சாதித்துக்கொள்ளலாமே (ஈடு, 4, 2, 9). 15. Nearness, proximity; சமீபம். கிணற்றடியில் நிற் காதே. Colloq. 16. Plan of action; உபாயம். நல்ல அடி எடுத்தாய். Colloq.

அள-த்தல் aḷa- , [K. M. aḷa.] 12 v. tr. 1. To measure, fathom; அளவிடுதல். அடி யளந்தான் (குறள், 610). 2. To extend to, reach; எட்டுதல். மெளலியண்ட முகட்டினை யளப்ப (கூர்மபு. தக்கன்வேள். 16). 3. To test by the logical modes of proof; பிரமாணங்கொண்டறிதல். (சி. சி. அளவை. 4, சிவஞா.) 4. To consider; கருதுதல். ஊற ளந் தவர்வயின் (கலித். 17). 5. To gossip; வீண்பேச் சுப்பேசுதல். வாயில் வந்தபடியெல்லாம் அளக்கிறான் 6. To limit, define, determine the bounds of; வரையறுத்தல். அவையளந் தறியினு மளத்தற் கரியை (புறநா. 20, 5). 7. To give, render, offer; கொடுத்தல். (பு. வெ 8, 29.)--v. intr. 1. To talk together, hold converse; அளவளாவுதல். (கல்லா. 18, 36.) 2. To mingle, blend; கலத்தல்.

தாயம் tāyam (p. 200) {*}, s. a portion, an inheritance, உரிமை; 2. dice to play with, a kind of backgammon board, கவறு; 3. a relation by the fathers's side; 4. affliction, distress, தவதாயம்; 5. good opportunity, juncture, சமயம்; 6. a play with tamarind stones; 7. a stop, delay, தாக்காட்டு. தாயக்கட்டை, dice, a cubical piece in the play of dice. தாயங்கிடைக்க, to get a good opportunity. தாயதி, தாயத்தனம், kinship. தாயத்தார், paternal kinsman or heirs. தாயபாகம், a division of an estate. தாயமாட, to play dice, to gamble; 2. to be tardy, தாமதஞ் செய்ய. தாயம் போட, to cast dice. தாயம் விழுதல், the lucky falling of dice. தாயவிதைப்பு, seasonable sowing.

தாயம் = உரிமை என்பதிலிருந்தே, தாயது = உரிமையானது என்பதும் பெறப்படுகிறது. தாயாதிகள் என்பது உரிமைக்குரியவர்கள் என்னும் பொருளில் பங்காளிகளைக் குறிப்பதற்கும் இதுவே அடிப்படையாகும். இனி, இப்புதிய பொருட்களின் அடிப்படையில், இக்குறளுக்கான திருந்திய விளக்கம் இதுதான்:

தனக்கு உரிமையான அனைத்துச் செல்வங்களையும் கொடையாகக் கொடுத்தவனாகிய ஒரு அரசன் தனது சோம்பலற்ற முயற்சியினால் அவையனைத்தையும் மீண்டும் பெற்றுவிடமுடியும்.

நிறுவுதல்:

இக்குறளுக்கான புதிய விளக்கம் எப்படிப் பொருந்தும் என்பதனைப் பல விளக்கங்களுடனும் ஆதாரங்களுடனும் விரிவாகக் காணலாம். இதற்கு முதலில் ஒரு அரசனுக்குரிய பல்வேறு பண்புகள் எவையென்று வள்ளுவர் பட்டியலிடுவதைப் பற்றிக் காணவேண்டியது அவசியமாகிறது. இறைமாட்சி என்னும் அதிகாரத்தில் ஒரு மன்னனுக்குரிய பண்புகளைப் பற்றிக் கூறுமிடத்து, கொடை அளித்தலும் ஒரு மன்னனுக்குரிய பண்புகளில் ஒன்றே என்று சில குறள்களின் மூலம் வலியுறுத்துகிறார்.

அஞ்சாமை ஈகை அறிவுஊக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க்கு இயல்பு. - 382.

துணிவு, கொடை, அறிவு, ஊக்கம் ஆகிய நான்கும் ஒரு மன்னனுக்கு நீங்காமல் இருக்கவேண்டிய பண்புகள் என்று இக்குறளில் கூறுகிறார். ஒருநாட்டை ஆளும் மன்னனே ஆனாலும், இல்லை என்று தன்னிடம் வந்தவர்க்குக் கொடையளிக்கும்போது இன்சொற்களைக் கூறியே கொடையளிக்க வேண்டும். அவ்வாறு செய்தால், குடிமக்கள் யாவரும் தன்சொல்லைப் பேணுபவராய் தான்காண விரும்பியவாறே ஒழுகுவர் என்று கீழ்க்காணும் குறளில் கூறுகிறார்.

இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு. - 387.

அதுமட்டுமின்றி, கொடை, அருள், செங்கோன்மை, குடிமக்களைக் காத்தல் ஆகிய நான்கினையும் உடைய அரசனே ஏனை அரசர்களுக்கெல்லாம் ஒளியாக விளங்கி வழிகாட்டுபவன் ஆவான் என்று கீழ்க்காணும் குறளில் கூறுகிறார்.

கொடை அளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க்கு ஒளி. - 390.

இப்படி மேற்காணும் மூன்று குறள்களாலும் ஒரு அரசனுக்குரிய கொடைப்பண்பினைப் போற்றுகின்ற வள்ளுவர், கொடையினால் ஒரு மன்னன் தனது செல்வங்கள் அனைத்தையும் இழந்துவிட்ட போதிலும் தனது சோம்பலற்ற முயற்சியினால் அனைத்தையும் மீண்டும் பெற்றுவிடமுடியும் என்று நமது தலைப்புக் குறளில் இவ்வாறு கூறுகிறார்.

தாஅயது எல்லாம் அடியளந்தான் மடியிலா மன்னவன் ஒருங்கு எய்தும்.

இழந்ததை எப்படி மீண்டும் பெறுவது என்பதனையும் கீழ்க்காணும் குறளின் மூலம் அரசனுக்கு விளக்குகிறார் வள்ளுவர்.

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு. - 385.

பொருள்வரும்வழி உட்பட பல்வேறு சட்டதிட்டங்களை முறைப்படி இயற்றுவதும் அவற்றின் வழியாகப் பொருட்களை ஈட்டுவதும் ஈட்டிய பொருட்களைப் பாதுகாப்பதும் பாதுகாத்து வைத்தவற்றை முறையாக வகுத்துக் கொடை போன்றவற்றுக்குச் செலவுசெய்வதும் ஒரு அரசன் சோம்பலின்றித் திறம்படச் செய்யவேண்டிய பணிகளாகும் என்று மேற்காணும் குறளில் விளக்குகிறார். இப்படி ஒருநாட்டு மன்னன், தனது உலகமாகிய மக்களுக்கான சட்டதிட்டங்களை இயற்றி வழிநடத்திச் செல்வதால் அவனை 'உலகியற்றியான்' என்று கீழ்க்காணும் குறளில் கூறுவார் வள்ளுவர்.

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான். - 1062.

இந்த உலகியற்றியான் ஆகிய மன்னன், சட்டதிட்டங்களைத் தவறாக வகுத்து மக்களிடம் இருந்து அறமற்ற வழிகளில் பொருள் ஈட்டுவானாகில், புரப்பவரின்றி மக்கள் பிச்சையெடுத்துண்ணும் இழிநிலைக்கே தள்ளப்படுவர் அன்றோ?. அப்படி யாரேனும் ஒருநாட்டில் உழைத்துவாழ வழியின்றிப் பிச்சையெடுத்துண்டு வாழ்வரேல், அதற்குக் காரணமான அந்நாட்டு மன்னனும் ஒருநாள் அதைப்போலவே அலைந்துதிரிந்து பிச்சையெடுத்து அழிவதாக என்று மேற்காணும் குறளில் மன்னனுக்குச் சாபம்விடுகிறார் வள்ளுவர். இக்குறளைப் பற்றி மேலதிக தகவல்களை அறிந்துகொள்ள 'உலகியற்றியான் யார்?' என்ற ஆய்வுக் கட்டுரையினைப் படிக்கலாம்.

முடிவுரை:

இதுவரை கண்டதிலிருந்து, ஒரு மன்னன் தனது சோம்பலில்லாத முயற்சியினால் மீண்டும் பெறத்தக்கவையாக வள்ளுவர் இக்குறளில் கூறியிருப்பது பொருட்செல்வங்களேயன்றி நாடு முதலான இடங்களை அன்று என்று தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். அப்படித் திரும்பப் பெறுமிடத்து, அம்மன்னன் அறமற்ற வழிகளைக் கையாண்டால் அந்நாட்டில் பிச்சைக்காரர்களே மிக்கிருப்பர் என்றும் ஒருநாள் அம்மன்னனும் பிச்சைக்காரனைப் போல அலைந்துதிரிந்து கெடுவான் என்றும் வள்ளுவர் சாபம் விடுத்திருப்பதைத் தற்போது நம் நாட்டை ஆள்பவர்கள் கவனித்துச் சிந்தித்துச் செயல்படுவார்களாக !!!

******** வாழ்க தமிழ் ! வளர்க வள்ளுவம் !! *************


--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
எதிரியிடம் நமக்குப் பிடிக்காத பொருள்
எதிர்க்கும் தன்மையே அன்றிஅவர் உயிரல்ல
எதிர்க்கும் தன்மையை மட்டும் நீக்கிவிட்டு
எதிரியையும் வாழவிடுவோம் நண்பனாக !!!
----------------------------------------------------------------
எனது முகநூல் முகவரி: http://www.facebook.com/thiruththam
எனது டுவிட்டர் முகவரி: https://twitter.com/thiruththam
தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.in
திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com
தமிழ்நூல்களுக்கான மதிப்புரைகளைக் காண: http://noolmathippurai.blogspot.in

தேனீ

unread,
Nov 13, 2017, 9:33:58 PM11/13/17
to மின்தமிழ்
திருத்தம் பொன். சரவணன் இவ்விழையில் பதிந்த கருத்துக்களைப் படிக்கும் போது மாற்று கருத்துக் கோணமென்பது கோணங்கித்தனமாக போகின்றதோவென எண்ண வேண்டியுள்ளது.

டாக்டர் கு. மோகனராசுவின் திருக்குறள் ஆய்வு நூல்கள் திருக்குறளுக்குப் பொருள் அறிய ஒரு சிறந்த வழிகாட்டியாகத் திகழும் காரணம் திருக்குறள் ஆய்விற்காகவே அவர்தம் வாழ்நாளில் ஒரு பகுதியைச் செலவிட்டவர்.  

அவர்தம் 'திருக்குறளில் மரபு' என்னும் ஒரு நூலில் திருவள்ளுவர் பல தொண்மக்கதைகளை திருக்குறளில் எடுத்தாண்டுள்ளதைப்  பட்டியலிட்டுள்ளார். 

அவற்றில் ஒன்று 'அடியளந்தான்' என்பது தொண்மக்கதையைக் குறிப்பதாகும் என்று கூறுகின்றார். இன்னும் சில குறள்களுக்கு அவ்வாறான தொண்மக்கதைகள் அடிப்படையாய் இருந்துள்ளதை அறியலாமென்றும் கூறுகின்றார்.

ஆதலால் திருக்குறள் எவ்வொரு சமயத்தையும் குறித்தல்ல என்ற சிந்தனை கடந்த நூற்றாண்டில் வலுபெற்றதால் பற்பல உரைகள் இத்தகு தொண்மக்கதைகளைப் புறந்தள்ளி புத்துருவாக்கத்தைச் செய்தன. அவற்றில் ஒன்றாக திரு. திருத்தம் பொன். சரவணின் கருத்தும் அடங்கும். அந்த அளவே தங்களின் திருத்தம் அமையும்.  

"தாமரைக்கண்ணான்" என்பது "தாமரைக்கு அண்ணான்" என்று பதம் பிரித்தீர்களானால் அச்சொல்லில் 'க்' மிகுந்தது எதனால் என்று இலக்கண விதியின் அடிப்படையில் விளக்காமல் போனதை தமிழ் இலக்கண அறிஞர் ஏற்றுக் கொள்ளமாட்டார்.

'உலகியற்றியான்' என்ற சொல்லுக்கு 'அரசன்' என்று பொருள் கொண்டால் இன்றைய வழக்கில் அச்சொல் ஆட்சி நடத்தும் அரசாங்கத்தைக் குறிக்கும். 

உலகில் இரந்து வாழும் மக்கள் இல்லாத நாடு ஏதேனும் உள்ளதா? நடுத்தெருவில் பிச்சையெடுத்துண்டு வாழ்வது மட்டும் இரத்தலாகாது. கவுரவ பிச்சையாக பல்வேறு நவீன உக்திகளைக் கொண்டு மக்களை ஏமாற்றி இரந்து வாழ்வோரையும் 'இரத்தல்' என்னும் சொல் பரந்த பொருளில் குறிக்கும். .  அவ்வாறாயின் இன்று இருக்கும் எல்லா அரசுகளுமே கெட்டு ஒழிகவென்று திருவள்ளுவர் 'சாபம்' இட்டார் என்று கூறினால் தங்கள் கருத்தைத் திருத்த வேண்டியுள்ளது.

அத்தகைய கோணங்கித்தமான பொருள் கொண்டால் தான் கூறும் அறவொழுத்தையே பேணாதவர் திருவள்ளுவர் என்ற பழிசொல்லுக்கு அவரை  இட்டுச் செல்லும். இதுதானா  திருக்குறளுக்கு தாங்கள் கொடுக்க முயலும் புத்துரை? திருத்தம் என்பது பிழையைத் திருத்துவதாகும். திருத்தம் என்ற பெயரில் பிழை ஏற்படுமாயின் அது திருத்தமாகாது.

தங்களின் கட்டுரையில் கூறிய கருத்துக்களை இன்னும் முழுமையாக ஆராய வேண்டியுள்ளது. 

மு. கமலநாதன்

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Nov 13, 2017, 11:01:53 PM11/13/17
to mintamil
2017-11-14 8:03 GMT+05:30 தேனீ <ipohs...@gmail.com>:
திருத்தம் பொன். சரவணன் இவ்விழையில் பதிந்த கருத்துக்களைப் படிக்கும் போது மாற்று கருத்துக் கோணமென்பது கோணங்கித்தனமாக போகின்றதோவென எண்ண வேண்டியுள்ளது.

டாக்டர் கு. மோகனராசுவின் திருக்குறள் ஆய்வு நூல்கள் திருக்குறளுக்குப் பொருள் அறிய ஒரு சிறந்த வழிகாட்டியாகத் திகழும் காரணம் திருக்குறள் ஆய்விற்காகவே அவர்தம் வாழ்நாளில் ஒரு பகுதியைச் செலவிட்டவர்.  

அவர்தம் 'திருக்குறளில் மரபு' என்னும் ஒரு நூலில் திருவள்ளுவர் பல தொண்மக்கதைகளை திருக்குறளில் எடுத்தாண்டுள்ளதைப்  பட்டியலிட்டுள்ளார். 

அவற்றில் ஒன்று 'அடியளந்தான்' என்பது தொண்மக்கதையைக் குறிப்பதாகும் என்று கூறுகின்றார். இன்னும் சில குறள்களுக்கு அவ்வாறான தொண்மக்கதைகள் அடிப்படையாய் இருந்துள்ளதை அறியலாமென்றும் கூறுகின்றார்.

ஐயா, ஒரு திருக்குறளிலும் தொன்மக்கதை இல்லை. இருப்பதாக நம்பினால் அது உங்கள் பிழை. இருந்தால் காட்டுங்கள் அதன் உண்மைத் தன்மையை ஆராய முற்படுவோம்.


ஆதலால் திருக்குறள் எவ்வொரு சமயத்தையும் குறித்தல்ல என்ற சிந்தனை கடந்த நூற்றாண்டில் வலுபெற்றதால் பற்பல உரைகள் இத்தகு தொண்மக்கதைகளைப் புறந்தள்ளி புத்துருவாக்கத்தைச் செய்தன. அவற்றில் ஒன்றாக திரு. திருத்தம் பொன். சரவணின் கருத்தும் அடங்கும். அந்த அளவே தங்களின் திருத்தம் அமையும்.  

காலத்திற்கேற்ப சிந்தனைகள் மாறத்தான் செய்யும். கேள்விகளும் மறுப்புக்களும் எழத்தான் செய்யும். புதிய ஆய்வுக் கோணங்கள் முகிழ்க்கும். இது எல்லா இலக்கியங்களுக்கும் உரித்தானதே. இப்படித்தான் ஒரு மொழி காலத்திற்கேற்ப தன்னைத் தக்கவைத்துக் கொள்கிறது.
 

"தாமரைக்கண்ணான்" என்பது "தாமரைக்கு அண்ணான்" என்று பதம் பிரித்தீர்களானால் அச்சொல்லில் 'க்' மிகுந்தது எதனால் என்று இலக்கண விதியின் அடிப்படையில் விளக்காமல் போனதை தமிழ் இலக்கண அறிஞர் ஏற்றுக் கொள்ளமாட்டார்.

தாமரைக்கு, அண்ணான் என்ற இரண்டு சொற்களை எப்படிப் புணர்த்து எழுதுவீர்கள்?. தாமரைக்கண்ணான் என்றுதானே. இதில் 'க்' பற்றிய ஐயம் எங்கே எப்படி எழுகின்றது?.
 

'உலகியற்றியான்' என்ற சொல்லுக்கு 'அரசன்' என்று பொருள் கொண்டால் இன்றைய வழக்கில் அச்சொல் ஆட்சி நடத்தும் அரசாங்கத்தைக் குறிக்கும். 

ஐயா, வள்ளுவர் காலத்தில் இருந்தது முடியாட்சி. இப்போது இருப்பது குடியாட்சி. இரண்டையும் ஒப்பிடமுடியாது.
 

உலகில் இரந்து வாழும் மக்கள் இல்லாத நாடு ஏதேனும் உள்ளதா? நடுத்தெருவில் பிச்சையெடுத்துண்டு வாழ்வது மட்டும் இரத்தலாகாது. கவுரவ பிச்சையாக பல்வேறு நவீன உக்திகளைக் கொண்டு மக்களை ஏமாற்றி இரந்து வாழ்வோரையும் 'இரத்தல்' என்னும் சொல் பரந்த பொருளில் குறிக்கும். .  அவ்வாறாயின் இன்று இருக்கும் எல்லா அரசுகளுமே கெட்டு ஒழிகவென்று திருவள்ளுவர் 'சாபம்' இட்டார் என்று கூறினால் தங்கள் கருத்தைத் திருத்த வேண்டியுள்ளது.

இப்போது ஆட்சிசெய்யும் மாங்காமடையர்களைத் திருவள்ளுவர் என்ன, நானும் என்னைப்போல பலரும் ஒழிக என்று நாள்தோறும் சாபம்விட்டுக்கொண்டுதான் இருக்கின்றோம். ஏன் நீங்கள் இந்த ஆட்சியாளர்களை வாழ்த்துவீர்களா?.
 

அத்தகைய கோணங்கித்தமான பொருள் கொண்டால் தான் கூறும் அறவொழுத்தையே பேணாதவர் திருவள்ளுவர் என்ற பழிசொல்லுக்கு அவரை  இட்டுச் செல்லும். இதுதானா  திருக்குறளுக்கு தாங்கள் கொடுக்க முயலும் புத்துரை? திருத்தம் என்பது பிழையைத் திருத்துவதாகும். திருத்தம் என்ற பெயரில் பிழை ஏற்படுமாயின் அது திருத்தமாகாது.

முதலில் பிழை எது என்பதைப் பற்றிய சரியான புரிதல் தேவை. அப்போதுதான் திருத்தத்தின் தேவையும் புரியும்.
 

தங்களின் கட்டுரையில் கூறிய கருத்துக்களை இன்னும் முழுமையாக ஆராய வேண்டியுள்ளது. 

மு. கமலநாதன்




 

Thenee MK

unread,
Nov 14, 2017, 9:36:43 AM11/14/17
to mintamil


திருக்குறளில் தொண்மக்கதைகள்


பரந்த பொருலெல்லாம் பாரறிய வேறு

தெரிந்து திறந்தொரும் சேரச்-சுருங்கிய

சொல்லால் விரித்துப் பொருள்விளங்கச் சொல்லுதல்

வல்லார்ஆர் வள்ளுவரல் லால்   -  (தி.மாலை – அரிசிற்கிழார்)


முப்பாலையும் அதன்வழி வீடுபேற்றையும் உலகோர் அறியும் பொருட்டு வெவ்வேறாகப் பிரித்து அதுவது தனது வகையோடு சேரும்படி சுருக்கமான சொல்லாலே பொருள் விளங்க விரித்துச் சொல்லுதற்கு திருவள்ளுவரல்லாது வேறு யார் உளர்?


திருவள்ளுவர் கூற வரும் கருத்தைச் சுருக்கமானச் சொல்லில் விளங்க வைப்பது திருக்குறளின் தனிச் சிறப்பு.


ஒரு பெரிய கதையைச் சொல்லி தன்கருத்தை விளங்க வைக்க ஏழுசீர் கொண்ட குறளில் இடமில்லை என்பதால் சில குறள்களில் தொண்மக்கதைகளை சுட்டும் வண்ணம் ஒரிரு சொல்லில் சுருங்கச் சொல்லிச் சென்ற குறட்பாக்களை டாக்டர் கு. மோகனராசு அவர்களின் திருக்குறள் மரபுகள் என்னும் நூலில் குறித்ததை இவ்விடம் பதிவு செய்கிறேன்.

 

1.   ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்

  இந்திரனே சாலுங் கரி (25)

  - இந்திரன் கௌதமரால் சாபம் பெற்ற கதை

 

2.   ஏந்திய கொள்கையார் இடைமுரிந்து

  வேந்தனும் வேந்து கெடும் (899)

  - இந்திர பதவியைப் பெற்ற நகுடன் அகத்தியர் சாபத்தால் மலைப்பாம்பானது

 

3.   மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்

  தாஅய தெல்லாம் ஒருங்கு (610)

  -  திருமால் உலகத்தைத் தன் அடியால் அளந்தது

 

மேற்கூறியவையல்லாமல் முதுமுனைவர் சி. அருனை வடிவேலு அவர்கள் குறித்த குறட்பாக்கள்;

 

1.   கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்

  ஆற்றல் தலைபட் டவர்க்கு (269)

  - மார்க்கண்டேயன் யமனை வென்றது

 

2.   பெயக்கண்டும் நஞ்சுஉண்டு அமைவர் நயத்தக்க

   நாகரிகம் வேண்டு பவர் (580)

   - சிவபெருமான் நஞ்சுண்டது

 

எமது கருத்தாக திருக்குறள் ஆய்வு என்னும் இழையில் பதிந்தது.

 

1.   இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து

   கெடுக உலகியற்றி யான் (1062)

  - அறியாமையுடைய மாந்தர் இரந்தும் வாழ்வாரெணின் அவர்தம் அறியாமையை உலகெங்கும் பரந்து நீக்குக என்னும் கருத்துடைய

   சிவபெருமான் பிரம்மாவின் கபாலத்தைக் கொண்டு யாசித்தக்கதை.

 

பொருள் ஆழமிக்க தொண்மக்கதைகள் இருப்பின் அவற்றின் வழி அறிவுறுத்தப்படும் அறத்தையும், ஒழுக்கத்தையும் சுருங்கச் சொல்ல திருவள்ளுவர் அல்லால் வேறு யாரால் முடியும்?

 

மு. கமலநாதன்



--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/1OG76-q96IM/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

nkantan r

unread,
Nov 14, 2017, 11:59:35 AM11/14/17
to மின்தமிழ்
Mythology என்பதைப் புராணக்கதைகள் என்று சொல்லிவந்தவிடத்தில் 'தொன்மக்கதைகள்' நல்ல பயன்பாடு. கதைகள் என்று சொன்னதலான் அவை கற்பனையில் உருவாக்கப்பட்டவை, உண்மையாக நடந்த நிகழ்வல்ல என்பதும் தெளிவு.

இந்தக்கதைகள் மூலம் வரலாற்றையும், புவியியலையும் நிறுவ (நிருவ?) முயலக்கூடாது.

தனக்குவமையி....மாற்ற லரிது எனும் குறள் சிவன் முடி அடி தேடிய கதை யல்லவோ?

rnk

Thenee MK

unread,
Nov 14, 2017, 8:22:41 PM11/14/17
to mintamil
எமது கருத்துக்களில் 'தொண்மம்' என்று தட்டச்சு செய்ததை 'தொன்மம்' என்று திருத்திப் படிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.


திருத்தம் பொன்.சரவணன்

unread,
Nov 14, 2017, 11:08:48 PM11/14/17
to mintamil
தேனீ ஐயா,

வள்ளுவர் எழுதிய எளிமையான கருத்துகளைக் கொண்ட குறள்களுக்குத்தான் எத்தனை எத்தனை கதைகள் ?

எப்படித்தான் இவர்களால் இப்படியெல்லாம் சிந்திக்க முடிகிறதோ என்று என்னால் வியக்காமல் இருக்கமுடியவில்லை. !!!

அதேசமயம், எனக்கு ஏன் இப்படிப்பட்டக் கதைகளை எழுதத் தோன்றமாட்டேன் என்கிறதோ புரியவில்லை. :)))



You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Thenee MK

unread,
Nov 15, 2017, 12:23:59 AM11/15/17
to mintamil
திருக்குறளில் காணும் தொன்மக் கதைகளை மூன்று வகையாகப் பிரிக்கலாமென்று கூறுகின்றார் டாக்டர் கு. மோகனராசு அவர்கள்:

1. சுருக்கக் குறிப்பினால் தோன்றும் கதைகள்;
2. உரை வேறுபாட்டால் தோன்றும் கதை;
3. ஊகத்தினால் அறியலாகும் கதைகள்.

'அடியளந்தான்' என்னும் கதையை அறிந்தால் அந்த குறளில் திருவள்ளுவர் கூற வரும் கருத்தையும் அக்கருத்தில் அடங்கியுள்ள உணர்வையும் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். அதுவே குறளுக்கு உயிரோட்டத்தைக் கொடுக்கும். அதானால்தான் அவ்வகைச் சொற்களை எடுத்தாண்டுள்ளார். இது திருவள்ளுவரின் புலமையைக் காட்டுகின்றது. இவ்வாறு தொன்மக்கதைகளை எடுத்தாண்ட பிற சங்க இலக்கியப் பாடல்களிலும் காணலாம்.

சுருக்கக் குறிப்பினால் தோன்றும் கதைகளாக குறள் 25 மற்றும் 610 குறிப்பிட்டார். உரை வேறுபாட்டால் தோன்றும் கதையாக குறள் 25 மேலும் கூறுகின்றார் காரணம் சமணர் இக்குறளுக்கு ஏத்தவாறு வேற்றொரு பொருளில் இந்திரனையொட்டிய கதையைப் புனைந்து வைத்துள்ளனர்.

ஊகத்தினால் அறியகூடிய கதையாக,

'அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் பிறர்க்கு உரியர் (72)

இக்குறளில் பேரரசர் சிபியின் கதை கருத்தில் கொள்ளப்பட்டதாக பரிமேலழகர் கூறுவதையும் இன்னும் பிற தொன்மக்கதைகள் இரண்டையும் கூட எடுத்துக்காட்டாக கொள்ளலாமென்று டாக்டர் கு. மோகனராசு கூறுகின்றார்.

இவ்வாறு தொன்மக்கதைகளைக் கொண்டு திருக்குறளுக்கானச் சிறந்த கருத்துக்களை அறிவது எவ்வகையிலும் தவறாகாது. இதனால் திருக்குறளுக்கு எவ்வித பங்கமும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. 

மு. கமலநாதன்
   


 



nkantan r

unread,
Nov 15, 2017, 12:45:36 AM11/15/17
to மின்தமிழ்
நான் சுட்டிய 007 குறளை யாரும் யோசிக்கவில்லை?

Rnk

Thenee MK

unread,
Nov 15, 2017, 12:59:47 AM11/15/17
to mintamil
அடிமுடி தேடிய கதை உயிர்குலங்கள் ஆணவச் செருக்கை நீக்க வேண்டியதன் அவசியத்தைக் குறிக்கும். இது நான் எனது என்னும் தற்போதம் நீக்குதல்  வேண்டி கூறப்பட்ட கதை. 

'உவமையிலாதான்' என்னும் சொல் அவனுக்கு நிகர் வேறில்லை என்பதைக் குறிக்கும்.
 

On Wed, Nov 15, 2017 at 1:45 PM, nkantan r <rnka...@gmail.com> wrote:
நான் சுட்டிய 007 குறளை யாரும் யோசிக்கவில்லை?

Rnk

தேமொழி

unread,
Nov 15, 2017, 1:13:35 AM11/15/17
to மின்தமிழ்


On Tuesday, November 14, 2017 at 9:45:36 PM UTC-8, nkantan r wrote:
நான் சுட்டிய 007 குறளை யாரும் யோசிக்கவில்லை?

குறள் 7:
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது. 

அடிமுடி தேடியதில் மனக்கவலை பற்றிய குறிப்பேது?
யார் பெரியவர் என்ற போட்டி அது.

துயரத்தில் இருப்பவர் பொறுப்பை கடவுளிடம் ஒப்படைத்துவிட்டு மனக்கவலையை விட்டுவிடலாம் என்பதை இந்தக்குறள் கூறுகிறது. 

நேரடியான பொருளில் இருந்து விலகுகிறது அடிமுடி தேடல் கதை பொருத்தம் காணும் முயற்சி. வலிந்து பொருள் கூறுவது அது.
கடவுளின் பாதம் பணிவது பற்றி பாடாத சமய இலக்கியம் இருக்கிறதா? ஒப்பற்ற இறைவன் எனக் கூறாத சமய இலக்கியம் இருக்கிறதா?

..... தேமொழி 

ipohsaivite

unread,
Nov 15, 2017, 1:36:06 AM11/15/17
to mint...@googlegroups.com
திரு. காந்தன் அக்கதையைக் குறிப்பிட்டார் அது ஒத்து வராதென்றுதான் குறிபிட்டிருந்தேன். 



Sent from my Samsung Galaxy smartphone.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/1OG76-q96IM/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

ipohsaivite

unread,
Nov 15, 2017, 1:38:03 AM11/15/17
to mint...@googlegroups.com
ஒப்பற்ற இறைவன் என்று கூறாதோர் இறை மறுப்பளர் ஆவார். அவ்வாறான இந்திய மெய்யியல் ஒன்றுக்கு மேல் உண்டு. 

நரசிங்கபுரத்தான்

unread,
Nov 15, 2017, 2:30:47 AM11/15/17
to mintamil

1.   ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்

  இந்திரனே சாலுங் கரி (25)

  - இந்திரன் கௌதமரால் சாபம் பெற்ற கதை


நீத்தார் பெருமையில் பிறன் விழையாமை கதை  வருமா  ?


சுரேஷ்குமார் 

Thenee MK

unread,
Nov 15, 2017, 3:00:48 AM11/15/17
to mintamil
'நீத்தார்' என்பது பற்றுகளை நீக்கியோர் என்பதாகும். மனப்பற்றுகளை நீக்கி ஒழுக்க நெறியில் வாழ்பவர்களே பெருமையுடைவர்களாக வாழ முடியும் -  குறள் 21. அவ்வாறு ஐம்பொறிகளை அவிக்க வல்லவன் இறைவன் ஒருவனே. தேவர் இன்பத்தை மட்டுமே நாடுவர். தேவர்களுக்குத் தலைவனான இந்திரன் அவர்தம் ஐம்பொறிகளை அடக்கியாள இயலாமையைச் சுட்டிக்காட்டி அதற்கு எதிர்மறையாக உள்ளவர் 'நீர்த்தார்' என்னும் பெருமைக்குறியவர் என்பதை இக்குறள் சுட்டிக் காட்ட விழைகிறது. 

ஆகையால் அக்கதையை இவ்வதிகாரத்தில் பயன்படுத்தியதில் தவறில்லை. 

         

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/1OG76-q96IM/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

nkantan r

unread,
Nov 15, 2017, 4:16:34 AM11/15/17
to மின்தமிழ்
சிவனின் அடி (தாள்) முடி தேடி சென்ற கதை; அடி  தேடி சென்றவர் காணமுடியவில்லை என்று உண்மையை ஒப்புக் கொண்டார். முடி காணாதவரோ கண்டதாய்ப் பொய் சொன்னார்! 

அடி சேராமல் சோர்ந்தவரை விட  (அல்லால் ...) முடி காணாமல் பொய் சொன்னவர்க்கு நிச்சயம் மனக்கவலை. உண்மையை சொன்னவர்க்கு மனக்கவலை இல்லை!

அப்படியிருக்க, அடி சேர்ந்தவருக்கு இன்னும் யஉயர்வே; உய்வே!

rnk
(dont take that i am a follower or a believer)

ipohsaivite

unread,
Nov 15, 2017, 5:19:28 AM11/15/17
to mint...@googlegroups.com
தப்புத் தப்பாக திருக்குறளுக்குப் பொருள் சொன்னால் எப்படி?

Thenee MK

unread,
Nov 15, 2017, 8:40:54 AM11/15/17
to mintamil

 

தாமரைக்கண்ணான்

 

‘தாமரைக்கண்ணான்’ என்னும் சொல்லில் ‘க்’ மிகுந்ததற்குக் காரணம் அது இருபெயரொட்டுப் பண்புத் தொகையாகும். தாமரையாகிய கண்ணான் என்று விஷ்ணுவைக் குறிப்பதாக வடமொழி சைவ தொன்மக்கதை ஒன்று கூறும்.

 

சக்ராயுதத்தைப் பெற வேண்டி சிவனின் ஆயிரம் நாமவளிகளைச் சொல்லி ஒவ்வொரு தாமரை மலராகத் தூவி வழிபடுகிறார் விஷ்ணு. சிவபெருமான் விஷ்ணுவின் பத்தியைச் சோதிக்க வேண்டி ஒரு தாமரை மலரை மறைக்க விஷ்ணு மூவுலகிலும் தேடி கிடைக்கப்பெறாமல் தாமரைப் போன்ற தம் கண்ணையே பிடுங்கி அர்ச்சிக்க முயலும்போது சிவபெருமான் அதனைத் தடுத்து வேண்டிய வரத்தைக் கொடுத்தார் என்னும் தொன்மக்கதை உள்ளது.

 

தாமரையாகிய கண்ணுடையவன் என்பதற்கு வைணவ தொன்மக்கதையும் இருக்கக்கூடும்.       

 

ஆகையால் ‘தாமரைக்கண்ணான்’ என்னும் சொல்லை ‘தாமரைக்கு அண்ணான்’ என்று பதம் பிரித்துப் பொருள் காண முயல்வது பொருந்தாது.

 

மு. கமலநாதன்



2017-11-14 22:36 GMT+08:00 Thenee MK <ipohs...@gmail.com>:

Thenee MK

unread,
Nov 15, 2017, 10:21:07 AM11/15/17
to mintamil

முக்காலமும் பயன்தரும் தமிழ்மறை

 

என்றும் புலரா தியாணர்நாட் செல்லுகினு

நின்றலர்ந்து தேன் பிலுற்று நீர்மையதாய்க் – குன்றாத

செந்தளிர்க் கற்பகத்தின் றெய்வத் திருமலர்போன்

மன்புலவன் வள்ளுவன் வாய்ச் சொல். (தி.மாலை) – இறையனார்

 

புலவர்கரசனாகிய வள்ளுவன் வாயிற்பிறந்த திருக்குறளானது எக்காலத்துங் தன் அழகு கெடாமல், நெடுங்காலங் கழியுனும் நிலைபெற்று மலர்ந்து தேனைச் சொரிகின்ற குணமுடையதாய் (விளங்குமாதலால்) குறைவுபடாத செய்ய தளிர்களை கற்பகத்தினது, தெய்வத்தன்மை பொருந்திய உயர்வாகிய மலர்போலும். (பாலவிர்த்தி போதினி அச்சுக்கூடம் – 1909)

 

திருக்குறள் என்றென்றும் அழியாது உலகுக்குக் பயன் தரும் உயர்ந்த நூலாகுமென்பது இறையனார் கருத்து. அவ்வாறு புகழ்பாடிய குறட்பாக்களுக்கு உரை காணும் பொழுது குறுகிய வட்டத்தில் பொருளைக் காண விழைவதை விடுத்து நேற்று, இன்று, நாளையென்று முக்காலத்திற்கும் பயன்படும்படி விரிந்த பொருள் காண்பதே சிறப்பு. இல்லையேல், திருக்குறள் காலம் கடந்த நூலாகி விடும்; இன்று அது பொதுமறை என்னும் சிறப்பை இழந்து விடும்; மறை என்னும் சொல்லுக்கே தகுதியற்றதாகி விடும்.

 

உலகியற்றியான் என்னும் சொல்லுக்கு திரு. சரவணன் அவர்கள் கூறியதுபோல் அரசன் என்று பொருள் கொண்டால் இன்றைய வழக்கில் அச்சொல் ஆட்சி நடத்தும் அரசாங்கத்தைக் குறிக்குமென்று கூறியிருந்தேன். அதற்கு மறுமொழியிடும்போது வள்ளுவர் காலத்தில் இருந்தது முடியாட்சி இப்பொழுது இருப்பதோ குடியாட்சி. ஆகையால் இரண்டையும் ஒப்பிட முடியாது என்று கூறினார்.

 

அவர் கூறவரும் கருத்து உலகியற்றியான் என்பது அக்கால முடியாட்சியுடைய அரசனை மட்டுமே குறிக்கும் மாறாக இக்கால குடியாட்சியைக் குறிக்காது என்பதாகும். இத்தகைய குறுகிய வட்டத்திற் குறளுக்குப் பொருள் கொள்வோமானால் இக்காலத்திற்கு திருக்குறள் பயன்படாது போகும். அத்தகைய விளக்கம் இறையனார் வாழ்த்துக்கும் எதிராகி நிற்கும். ஆகையால் திருக்குறளுக்குப் பொருள் காண விழையும்போது அச்சொற்களுக்குக் காலத்திற்கு ஏற்றவாறு விரிந்த பொருளைக் காண்பதே சிறப்பு.

 

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக உலகியற்றி யான். - 1062.

 

என்னும் குறளுக்கு திரு. சரவணின் விளக்கம்:

 

இந்த உலகியற்றியான் ஆகிய மன்னன், சட்டதிட்டங்களைத் தவறாக வகுத்து மக்களிடம் இருந்து

அறமற்ற வழிகளில் பொருள் ஈட்டுவானாகில், புரப்பவரின்றி மக்கள் பிச்சையெடுத்துண்ணும்

இழிநிலைக்கே தள்ளப்படுவர் அன்றோ?. அப்படி யாரேனும் ஒருநாட்டில் உழைத்துவாழ

வழியின்றிப் பிச்சையெடுத்துண்டு வாழ்வரேல், அதற்குக் காரணமான அந்நாட்டு மன்னனும் ஒரு

நாள் அதைப்போலவே அலைந்துதிரிந்து பிச்சையெடுத்து அழிவதாக என்று மேற்காணும் குறளில்

மன்னனுக்குச் சாபம்விடுகிறார் வள்ளுவர்.’ 

    

உலகியற்றியான் என்பது மன்னன் என்று கூறி அவன் நாட்டில் மக்கள் பிச்சையெடுத்துண்ணும் இழிநிலையில் வாழ்வாரெணின் அந்நாட்டு மன்னனும் ஒரு நாள் அலைந்து திரிந்து பிச்சையெடுத்து அழிவதாகவென்று வள்ளுவர் சாபம் கொடுத்தார் என கூறின், திருவள்ளுவர் அனைத்து மன்னர்களையும் அவ்வாறே சாவாயாக என்று சாபம் விட்டதாகி விடும். ஏன் இவ்வாறு கூறுகிறேன்? எக்காலத்திலும் அனைத்து மன்னராட்சியிலும் இரந்துண்டு வாழ்ந்த மக்கள் இல்லையென்று கூறினால் அது பொய்யாகிவிடும் காரணம் எக்காலத்திலும் இரத்தலென்பது எவ்வொரு நாட்டிலும் எங்காவது ஓர் மூலையில் நடந்து கொண்டிருக்கும் செயலே. இன்றும் அவ்வாறே!

 

ஆகையால் திரு. சரவணன் அவர்கள் கூற்றுப்படி 1062வது குறளுக்குப் பொருள் காண விழைந்தால் திருக்குறள் முக்காலத்திற்கும் ஏற்ற மறை என்னும் இறையனாரின் கூற்றைப் பொய்யாக்கி விடும். மேலும் உலகியற்றியான் என்பது மன்னனைக் குறிக்காது காரணம் அவன்தன் குடிகளை முழுமையாக இயக்கும் தன்மையற்றவனாவான். திருவள்ளுவரே முடியாட்சி மன்னனின் நடவடிக்கைகளை மறுத்தவர்.

 

திருவள்ளுவர் காலத்தில் மன்னர் மது அருந்துவதும், புலால் உண்ணுவதும் மரபாகக் கொண்டிருந்தவர் என்பதை ஔவையாரின் பாடல்கள் வழி அறியலாம். அவ்வகை பண்புகளையுடைய மன்னருக்கு எதிராகவே திருவள்ளுவர் செயல்பட்டாரெனின் அதுபோல இன்னும் எவ்வளவு பேர் திருவள்ளுவரையொட்டி மன்னன் வழி நடவாமல் போயிருக்கக்கூடும்? ஆகையால் உலகியற்றியான் என்பது மன்னனைக் குறித்ததாகாது.

 

அதனால் அத்தகு விளக்கத்தை மறுக்க வேண்டியுள்ளது.  

     

மு. கமலநாதன்


நரசிங்கபுரத்தான்

unread,
Nov 15, 2017, 6:42:59 PM11/15/17
to mintamil
உயர்திரு தேனீ  அவர்களுக்குக

1)


" அவ்வாறு ஐம்பொறிகளை அவிக்க வல்லவன் இறைவன் ஒருவனே." 

தங்கள் கூற்றுபடி உலக உயிர்கள் ஐம்பொறிகளை அவிக்க இயலாது  ?
இறைவன் மட்டுமே முடிந்தவர் ?  நீத்தார் பெருமை என்பது இறைவன் பெருமை தான் ? இந்திரன் கூட ஐந்தவித்தான் இல்லை?

இந்திரவிழா எடுத்ததும்  மருதநிலத்து இறை என்பதும் புரட்டா ?
இந்திரன் கௌதமரால் சாபம் பெற்ற கதை நூலின் மூலம் / காலம் என்ன  ?

2) 2.   ஏந்திய கொள்கையார் இடைமுரிந்து

  வேந்தனும் வேந்து கெடும் (899)

  - இந்திர பதவியைப் பெற்ற நகுடன் அகத்தியர் சாபத்தால் மலைப்பாம்பானது


இந்த கதையில் யாரும் சினம் கொண்டதாக இல்லை ?


நன்றி 

நரசிங்கபுரத்தான்

unread,
Nov 15, 2017, 6:57:05 PM11/15/17
to mintamil
1.   கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
 ஆற்றல் தலைபட் டவர்க்கு (269)

  - மார்க்கண்டேயன் யமனை வென்றது


16 வயதுடைய மார்க்கண்டேயன் தவ வலிமையால் யமனை வென்றதாக கதை இல்லை .

இறைவனிடம் சரணாகதி அடைந்ததால் யமனை வென்றான் . தவத்தின் பெருமை கூற இந்தக் கதை பொருந்தாது 


.   பெயக்கண்டும் நஞ்சுஉண்டு அமைவர் நயத்தக்க

  நாகரிகம் வேண்டு பவர் (580)

   - சிவபெருமான் நஞ்சுண்டது


கண்ணோட்டத்த்திற்கும் / நாகரிகத்திற்கும்  சிவபெருமான் நஞ்சுண்ட கதை எவ்வாறு பொருந்துகின்றது 

மணிவண்ணன்

unread,
Nov 15, 2017, 9:43:22 PM11/15/17
to மின்தமிழ்

On Monday, November 13, 2017 at 9:33:58 PM UTC-5, தேனீ wrote:
திருத்தம் பொன். சரவணன் இவ்விழையில் பதிந்த கருத்துக்களைப் படிக்கும் போது மாற்று கருத்துக் கோணமென்பது கோணங்கித்தனமாக போகின்றதோவென எண்ண வேண்டியுள்ளது.
 
 இப்பொழுது தான் உங்களுக்குத்தோன்றுகிறதா? சுகாத்தியார் மீண்டெழுந்து விட்டாரென்பதென் கருத்து! 


டாக்டர் கு. மோகனராசுவின் திருக்குறள் ஆய்வு நூல்கள் திருக்குறளுக்குப் பொருள் அறிய ஒரு சிறந்த வழிகாட்டியாகத் திகழும் காரணம் திருக்குறள் ஆய்விற்காகவே அவர்தம் வாழ்நாளில் ஒரு பகுதியைச் செலவிட்டவர்.  

அவர்தம் 'திருக்குறளில் மரபு' என்னும் ஒரு நூலில் திருவள்ளுவர் பல தொண்மக்கதைகளை திருக்குறளில் எடுத்தாண்டுள்ளதைப்  பட்டியலிட்டுள்ளார். 

அவற்றில் ஒன்று 'அடியளந்தான்' என்பது தொண்மக்கதையைக் குறிப்பதாகும் என்று கூறுகின்றார். இன்னும் சில குறள்களுக்கு அவ்வாறான தொண்மக்கதைகள் அடிப்படையாய் இருந்துள்ளதை அறியலாமென்றும் கூறுகின்றார்.

ஆதலால் திருக்குறள் எவ்வொரு சமயத்தையும் குறித்தல்ல என்ற சிந்தனை கடந்த நூற்றாண்டில் வலுபெற்றதால் பற்பல உரைகள் இத்தகு தொண்மக்கதைகளைப் புறந்தள்ளி புத்துருவாக்கத்தைச் செய்தன. அவற்றில் ஒன்றாக திரு. திருத்தம் பொன். சரவணின் கருத்தும் அடங்கும். அந்த அளவே தங்களின் திருத்தம் அமையும்.  

"தாமரைக்கண்ணான்" என்பது "தாமரைக்கு அண்ணான்" என்று பதம் பிரித்தீர்களானால் அச்சொல்லில் 'க்' மிகுந்தது எதனால் என்று இலக்கண விதியின் அடிப்படையில் விளக்காமல் போனதை தமிழ் இலக்கண அறிஞர் ஏற்றுக் கொள்ளமாட்டார்.

தாமரைக்கண்ணான் என்பதை தா + மரைக்கு + அண்ணு + ஆன் - தாவும் மரைக்கு கிட்டிய பசுஞ்சானம் - என்று பிரிக்காமல் விட்டாரே! 
 

'உலகியற்றியான்' என்ற சொல்லுக்கு 'அரசன்' என்று பொருள் கொண்டால் இன்றைய வழக்கில் அச்சொல் ஆட்சி நடத்தும் அரசாங்கத்தைக் குறிக்கும். 

உலகில் இரந்து வாழும் மக்கள் இல்லாத நாடு ஏதேனும் உள்ளதா? நடுத்தெருவில் பிச்சையெடுத்துண்டு வாழ்வது மட்டும் இரத்தலாகாது. கவுரவ பிச்சையாக பல்வேறு நவீன உக்திகளைக் கொண்டு மக்களை ஏமாற்றி இரந்து வாழ்வோரையும் 'இரத்தல்' என்னும் சொல் பரந்த பொருளில் குறிக்கும். .  அவ்வாறாயின் இன்று இருக்கும் எல்லா அரசுகளுமே கெட்டு ஒழிகவென்று திருவள்ளுவர் 'சாபம்' இட்டார் என்று கூறினால் தங்கள் கருத்தைத் திருத்த வேண்டியுள்ளது.

அத்தகைய கோணங்கித்தமான பொருள் கொண்டால் தான் கூறும் அறவொழுத்தையே பேணாதவர் திருவள்ளுவர் என்ற பழிசொல்லுக்கு அவரை  இட்டுச் செல்லும். இதுதானா  திருக்குறளுக்கு தாங்கள் கொடுக்க முயலும் புத்துரை? திருத்தம் என்பது பிழையைத் திருத்துவதாகும். திருத்தம் என்ற பெயரில் பிழை ஏற்படுமாயின் அது திருத்தமாகாது.

தங்களின் கட்டுரையில் கூறிய கருத்துக்களை இன்னும் முழுமையாக ஆராய வேண்டியுள்ளது. 

மு. கமலநாதன்



ஒவ்வொரு சொல்லாக அகரமுதலியில் மரபிற்கெதிரான வேறுபொருள் காட்டுகிறதா எனப்பார்க்கவேண்டும். பின் அப்பொருளை வைத்து ஒரு கட்டுரை எழுதி இது தான் உண்மைப்பொருள் எனத்தான் ஆய்ந்துவிட்டதாகவும், தன்னைத்தவிர மற்றவரெல்லாம் மடையர்கள் எனவும் சொல்லிவிடவேண்டும். இதுவல்லோ ஆய்வு! 

ஆய்வென்றால் ஒரு நேர்மை வேண்டும். நான் சொல்லிவிட்டேன்; அதனால் இது தான் சரி என்று சொல்லுவதை என்னவென்று சொல்ல? 

-மணிவண்ணன்
பென்சில்வேனியா

தேனீ

unread,
Nov 15, 2017, 9:46:12 PM11/15/17
to மின்தமிழ்
உயிர் அறியாமையென்னும் தன்மையுடையது. அறிவிக்க அறியுமென்பதால் உயிர் அதுதன் ஐம்பொறிகளின் அனுபவத்தின் வழியே அறியும்.

ஐம்பொறிகளை அடக்கியாள வழி காட்டுவது உயிரினும் வேற்றான ஒரு பொருளே. அப்பொருள் ஆன்மாவன்றி இருத்தல் வேண்டும். இந்திரன் என்னும் தேவர் கோமான் ஆன்ம வர்கம். ஆகையால் இந்திரன் உயிர்களின் அறியாமையைப் போக்க வல்லவன் என்பது முரண். இதனை வடக்கே உள்ள பல தொன்மக்கதைகளின் சாரத்தைக் கொண்டு அறியலாம். 
 
உயிர்குலத்திற்கு வேற்றாயுள்ள ஒருவனான இறைவனை அறியும் நிலையில் உயிர் அதுதன் ஐம்புலன்களை விட்டு பற்றற்ற நிலை கொண்டு அறவழி மேற்கொள்ளும். அவரே நீத்தார் எனப்படுவர். இதனை 23வது குறள்வழி அறிந்து கொள்ளலாம்.

'இருமை வகைதெரிந்து' என்பது பிறப்பு வீடு என்னும் இரண்டனையும் ஆராய்ந்தறிந்து உண்மையை உணர்வாரே ஐம்புலன்களை அடக்கியாளும் தன்மைப் பெறுவார். இதனை உணர்த்துவது வேதாகமங்கள். அவற்றை உணர்ந்து சிவானூபூதி நிலை அடைவாரே ஐம்புலன்களை விட்டு நீங்கும் தன்மைப் பெறுவார்.

இன்பத்தையே வேண்டி வாழும் தேவர் கோமான் இந்நிலை அடைந்தவர் அல்ல.

தென்னகத்தே இந்திரவிழா  எடுத்த காலம் சமண புத்த மதங்கள் கோலோச்சிய காலம். அக்காலத்தில் இந்திரனே மழைத்தெய்வம் என்று அவர்தம் நம்பிக்கையின் அடிப்படையில் மருதநில மக்கள் இந்திர விழாவைக் கொண்டாடினர். சமணம் புத்தம் தென்னகத்தே வீழ்ந்த போது அந்த மரபு ஒழிந்து போயிற்று. தமிழர் அயலார் நெறிவயப்பட்டிருந்த காலத்தில் நடந்த விழா அது என்பதைப் புரிந்து கொண்டால் நாம் உண்மையை அறிய முடியும்.

வானோர், விண்ணோர், சிவலோகத்தோர் என்று உலோகங்களை வகுத்துக் கூறும் சாத்திரங்கள். சாலோத்தை அடைவோர் சிவனடியார், ஏழுலகத்தில் மேலான விண்ணவன் உலகத்தை அடைவோர் வைணவ அடியார் என்று கூறிவிட்ட பிறகு சமணருக்கு வேறு உலகம் இல்லையென்றாகியது. பின் வந்த சமணர், வானோர் தலைவனாகிய இந்திரனே ஐம்புலன்களை அடக்கியாள வழிகோலுவான் என்றொரு கதையைப் புனைந்து வைத்துக் கொண்டனர். இது சமய அரசியல். அதனைப் புரிந்து கொண்டுதான் பரிமேழலகர் மற்றவர் உரையைப் பின்பற்றாது பொருள் உரை கூறினார்.

இதற்கு கொஞ்சம் சமய அறிவு இருந்தால் இத்தகைய கேள்விகளுக்குச் சுலபமாகப் பதில் கூறி விடலாம்.

மற்றவை பின்னர். 

மு. கமலநாதன்

Banukumar Rajendran

unread,
Nov 16, 2017, 1:48:54 AM11/16/17
to மின்தமிழ்
2017-11-16 8:16 GMT+05:30 தேனீ <ipohs...@gmail.com>:
உயிர் அறியாமையென்னும் தன்மையுடையது. அறிவிக்க அறியுமென்பதால் உயிர் அதுதன் ஐம்பொறிகளின் அனுபவத்தின் வழியே அறியும்.

ஐம்பொறிகளை அடக்கியாள வழி காட்டுவது உயிரினும் வேற்றான ஒரு பொருளே. அப்பொருள் ஆன்மாவன்றி இருத்தல் வேண்டும். இந்திரன் என்னும் தேவர் கோமான் ஆன்ம வர்கம். ஆகையால் இந்திரன் உயிர்களின் அறியாமையைப் போக்க வல்லவன் என்பது முரண். இதனை வடக்கே உள்ள பல தொன்மக்கதைகளின் சாரத்தைக் கொண்டு அறியலாம். 
 
உயிர்குலத்திற்கு வேற்றாயுள்ள ஒருவனான இறைவனை அறியும் நிலையில் உயிர் அதுதன் ஐம்புலன்களை விட்டு பற்றற்ற நிலை கொண்டு அறவழி மேற்கொள்ளும். அவரே நீத்தார் எனப்படுவர். இதனை 23வது குறள்வழி அறிந்து கொள்ளலாம்.

'இருமை வகைதெரிந்து' என்பது பிறப்பு வீடு என்னும் இரண்டனையும் ஆராய்ந்தறிந்து உண்மையை உணர்வாரே ஐம்புலன்களை அடக்கியாளும் தன்மைப் பெறுவார். இதனை உணர்த்துவது வேதாகமங்கள். அவற்றை உணர்ந்து சிவானூபூதி நிலை அடைவாரே ஐம்புலன்களை விட்டு நீங்கும் தன்மைப் பெறுவார்.

இன்பத்தையே வேண்டி வாழும் தேவர் கோமான் இந்நிலை அடைந்தவர் அல்ல.

தென்னகத்தே இந்திரவிழா  எடுத்த காலம் சமண புத்த மதங்கள் கோலோச்சிய காலம். அக்காலத்தில் இந்திரனே மழைத்தெய்வம் என்று அவர்தம் நம்பிக்கையின் அடிப்படையில் மருதநில மக்கள் இந்திர விழாவைக் கொண்டாடினர். சமணம் புத்தம் தென்னகத்தே வீழ்ந்த போது அந்த மரபு ஒழிந்து போயிற்று. தமிழர் அயலார் நெறிவயப்பட்டிருந்த காலத்தில் நடந்த விழா அது என்பதைப் புரிந்து கொண்டால் நாம் உண்மையை அறிய முடியும்.

வானோர், விண்ணோர், சிவலோகத்தோர் என்று உலோகங்களை வகுத்துக் கூறும் சாத்திரங்கள். சாலோத்தை அடைவோர் சிவனடியார், ஏழுலகத்தில் மேலான விண்ணவன் உலகத்தை அடைவோர் வைணவ அடியார் என்று கூறிவிட்ட பிறகு சமணருக்கு வேறு உலகம் இல்லையென்றாகியது. பின் வந்த சமணர், வானோர் தலைவனாகிய இந்திரனே ஐம்புலன்களை அடக்கியாள வழிகோலுவான்

”இந்திரே ஐம்புலன்களை அடக்கியாள வழிகோலுவான்” என்ற தங்கள் கூற்று ஆதாரமற்றது. சமண இலக்கியங்களிலிருந்துச்
சான்றுகள் காட்டவும்?

இரா.பானுகுமார்









 
என்றொரு கதையைப் புனைந்து வைத்துக் கொண்டனர். இது சமய அரசியல். அதனைப் புரிந்து கொண்டுதான் பரிமேழலகர் மற்றவர் உரையைப் பின்பற்றாது பொருள் உரை கூறினார்.

இதற்கு கொஞ்சம் சமய அறிவு இருந்தால் இத்தகைய கேள்விகளுக்குச் சுலபமாகப் பதில் கூறி விடலாம்.

மற்றவை பின்னர். 

மு. கமலநாதன்
 








Thursday, November 16, 2017 at 7:42:59 AM UTC+8, நரசிங்கபுரத்தான் wrote:
உயர்திரு தேனீ  அவர்களுக்குக

1)


" அவ்வாறு ஐம்பொறிகளை அவிக்க வல்லவன் இறைவன் ஒருவனே." 

தங்கள் கூற்றுபடி உலக உயிர்கள் ஐம்பொறிகளை அவிக்க இயலாது  ?
இறைவன் மட்டுமே முடிந்தவர் ?  நீத்தார் பெருமை என்பது இறைவன் பெருமை தான் ? இந்திரன் கூட ஐந்தவித்தான் இல்லை?

இந்திரவிழா எடுத்ததும்  மருதநிலத்து இறை என்பதும் புரட்டா ?
இந்திரன் கௌதமரால் சாபம் பெற்ற கதை நூலின் மூலம் / காலம் என்ன  ?

2) 2.   ஏந்திய கொள்கையார் இடைமுரிந்து

  வேந்தனும் வேந்து கெடும் (899)

  - இந்திர பதவியைப் பெற்ற நகுடன் அகத்தியர் சாபத்தால் மலைப்பாம்பானது


இந்த கதையில் யாரும் சினம் கொண்டதாக இல்லை ?


நன்றி 

சுரேஷ்குமார் 


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Banukumar Rajendran

unread,
Nov 16, 2017, 1:59:14 AM11/16/17
to மின்தமிழ்
ஆம் சுரேஷ்!

என்னுடைய வலைப்பதிவைப் படிக்கவும்!

http://banukumar_r.blogspot.in/2008/01/blog-post.htmlஇந்திரனே சாலும் கரி

இரா.பானுகுமார்


 

நன்றி 

சுரேஷ்குமார் 


Banukumar Rajendran

unread,
Nov 16, 2017, 2:05:29 AM11/16/17
to மின்தமிழ்
2017-11-16 5:27 GMT+05:30 நரசிங்கபுரத்தான் <jaisure...@gmail.com>:
1.   கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
 ஆற்றல் தலைபட் டவர்க்கு (269)

  - மார்க்கண்டேயன் யமனை வென்றது


16 வயதுடைய மார்க்கண்டேயன் தவ வலிமையால் யமனை வென்றதாக கதை இல்லை .

இறைவனிடம் சரணாகதி அடைந்ததால் யமனை வென்றான் . தவத்தின் பெருமை கூற இந்தக் கதை பொருந்தாது 


மிகவும் சரி சுரேஷ். மிக சரியான பாதையி வழிப்படுகிறீர்கள்.

எதையும் ஆராய்ந்துப்பார்காமல் எடுத்துக்கொள்ளவேண்டாம். (ஆய்வில் ;-)

இரா.பானுகுமார்


 

.   பெயக்கண்டும் நஞ்சுஉண்டு அமைவர் நயத்தக்க

  நாகரிகம் வேண்டு பவர் (580)

   - சிவபெருமான் நஞ்சுண்டது


கண்ணோட்டத்த்திற்கும் / நாகரிகத்திற்கும்  சிவபெருமான் நஞ்சுண்ட கதை எவ்வாறு பொருந்துகின்றது 


2017-11-16 8:42 GMT+09:00 நரசிங்கபுரத்தான் <jaisure...@gmail.com>:
உயர்திரு தேனீ  அவர்களுக்குக

1)


" அவ்வாறு ஐம்பொறிகளை அவிக்க வல்லவன் இறைவன் ஒருவனே." 

தங்கள் கூற்றுபடி உலக உயிர்கள் ஐம்பொறிகளை அவிக்க இயலாது  ?
இறைவன் மட்டுமே முடிந்தவர் ?  நீத்தார் பெருமை என்பது இறைவன் பெருமை தான் ? இந்திரன் கூட ஐந்தவித்தான் இல்லை?

இந்திரவிழா எடுத்ததும்  மருதநிலத்து இறை என்பதும் புரட்டா ?
இந்திரன் கௌதமரால் சாபம் பெற்ற கதை நூலின் மூலம் / காலம் என்ன  ?

2) 2.   ஏந்திய கொள்கையார் இடைமுரிந்து

  வேந்தனும் வேந்து கெடும் (899)

  - இந்திர பதவியைப் பெற்ற நகுடன் அகத்தியர் சாபத்தால் மலைப்பாம்பானது


இந்த கதையில் யாரும் சினம் கொண்டதாக இல்லை ?


நன்றி 

சுரேஷ்குமார் 



Banukumar Rajendran

unread,
Nov 16, 2017, 2:17:31 AM11/16/17
to மின்தமிழ்
/இதுவரை கண்டதிலிருந்துஒரு மன்னன் தனது சோம்பலில்லாத முயற்சியினால் மீண்டும் பெறத்தக்கவையாக வள்ளுவர் இக்குறளில் கூறியிருப்பது பொருட்செல்வங்களேயன்றி நாடு முதலான இடங்களை அன்றுஎன்று தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்அப்படித் திரும்பப் பெறுமிடத்துஅம்மன்னன் அறமற்ற வழிகளைக் கையாண்டால் அந்நாட்டில் பிச்சைக்காரர்களே மிக்கிருப்பர் என்றும் ஒருநாள் அம்மன்னனும்பிச்சைக்காரனைப் போல அலைந்துதிரிந்து கெடுவான் என்றும் வள்ளுவர் சாபம் விடுத்திருப்பதைத் தற்போது நம் நாட்டை ஆள்பவர்கள் கவனித்துச் சிந்தித்துச் செயல்படுவார்களாக !!!///

அருமையான சிந்தனையைத் தூண்டுமாறு எழுதியிருக்கிறீர்கள் சரவணன்! 

அரசனுக்கு அறிவுறுத்தும் பாட்டு.




பழமொழி நானூறு 161.

இனியாரும் இல்லாதார் எம்மின் பிறர்யார்
தனியேம்யா மென்றொருவர் தாம்மடியல் வேண்டா
முனிவில ராகி முயல்க முனியாதார்
முன்னியது எய்தாமை இல்.

சொல்லவருவதும் இக்கருத்தையே!

அடியளந்தான் = சூரியனின் கதிர்களை உவமைப்படுத்துவர்களும் நம்மிடையே உண்டு. :-)

அவ்வாறு உவமைப்படுத்துவதும் மிக பொருத்தமாகயிருக்கிறது தான்!!

இரா.பானுகுமார்


--

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Nov 16, 2017, 3:25:36 AM11/16/17
to mintamil
2017-11-16 12:46 GMT+05:30 Banukumar Rajendran <banuk...@gmail.com>:
/இதுவரை கண்டதிலிருந்துஒரு மன்னன் தனது சோம்பலில்லாத முயற்சியினால் மீண்டும் பெறத்தக்கவையாக வள்ளுவர் இக்குறளில் கூறியிருப்பது பொருட்செல்வங்களேயன்றி நாடு முதலான இடங்களை அன்றுஎன்று தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்அப்படித் திரும்பப் பெறுமிடத்துஅம்மன்னன் அறமற்ற வழிகளைக் கையாண்டால் அந்நாட்டில் பிச்சைக்காரர்களே மிக்கிருப்பர் என்றும் ஒருநாள் அம்மன்னனும்பிச்சைக்காரனைப் போல அலைந்துதிரிந்து கெடுவான் என்றும் வள்ளுவர் சாபம் விடுத்திருப்பதைத் தற்போது நம் நாட்டை ஆள்பவர்கள் கவனித்துச் சிந்தித்துச் செயல்படுவார்களாக !!!///

அருமையான சிந்தனையைத் தூண்டுமாறு எழுதியிருக்கிறீர்கள் சரவணன்! 

அரசனுக்கு அறிவுறுத்தும் பாட்டு.

நன்றி பானுகுமார் ஐயா. :))
 




பழமொழி நானூறு 161.

இனியாரும் இல்லாதார் எம்மின் பிறர்யார்
தனியேம்யா மென்றொருவர் தாம்மடியல் வேண்டா
முனிவில ராகி முயல்க முனியாதார்
முன்னியது எய்தாமை இல்.

சொல்லவருவதும் இக்கருத்தையே!

அடியளந்தான் = சூரியனின் கதிர்களை உவமைப்படுத்துவர்களும் நம்மிடையே உண்டு. :-)

அவ்வாறு உவமைப்படுத்துவதும் மிக பொருத்தமாகயிருக்கிறது தான்!!

ஐயா, சூரியனின் கதிராகட்டும், திருமாலின் அடியாகட்டும் இரண்டுமே இடப்பரப்புடன் தொடர்புடையவை.

இப்படிப் பொருள்கொண்டால் ஒரு அரசன் போர்செய்து வென்று தனது ஆட்சி எல்லையை விரிவுசெய்ய வேண்டும் என்ற கருத்து உருவாகிறதே.

ஆனால், நாடுபிடிக்கும் எண்ணத்தை வள்ளுவர் ஆதரிக்கவில்லை என்பதையே பல குறள்களுடன் விளக்கி இருக்கிறேன்.

அப்படி வள்ளுவர் எங்கேனும் கூறியிருந்தால் யாரேனும் காட்டுங்கள்.

Thenee MK

unread,
Nov 16, 2017, 4:07:57 AM11/16/17
to mintamil
'திருக்குறளில் மரபுகள்' என்னும் நூலிலிருந்து பக்கம் 121, 122 & 124 இணைத்துள்ளேன்.  

மு. கமலநாதன்
 







You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/1OG76-q96IM/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
KURAL 25.pdf

Banukumar Rajendran

unread,
Nov 16, 2017, 4:56:58 AM11/16/17
to மின்தமிழ்
2017-11-16 14:37 GMT+05:30 Thenee MK <ipohs...@gmail.com>:
'திருக்குறளில் மரபுகள்' என்னும் நூலிலிருந்து பக்கம் 121, 122 & 124 இணைத்துள்ளேன்.  


தாங்கள் எழுதியது என்ன?
யான் எழுப்பிய கேள்வியென்ன?
அதற்கு தாஙக்ள் கூறும் பதிலென்ன?

தெரிந்துதான் பதில் அளிக்கிறீர்களா?

:-))


தாங்கள் எழுதியது:

வானோர் தலைவனாகிய இந்திரனே ஐம்புலன்களை அடக்கியாள வழிகோலுவான்

யான் எழுதியது:

 சமண இலக்கியங்களிலிருந்துச்
சான்றுகள் காட்டவும்?

தங்கள் பதில்:

ஒரு பொத்தகத்தின் சில பக்கங்களை வருடிப்போட்டுவிட்டு, பதிலை நீயே தேடி
எடுத்துக்கொள் என்று சொல்கிறீர்கள். 


இந்த பக்கங்களில் எந்த இடத்தில் “சமண இலக்கியங்களிலிருந்து” சான்றுகள் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று
நூலின் பெயரையும், பாட்டையும் குறிக்கவேண்டாமோ? ;-)

Banukumar Rajendran

unread,
Nov 16, 2017, 5:01:58 AM11/16/17
to மின்தமிழ்
2017-11-16 13:55 GMT+05:30 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:

2017-11-16 12:46 GMT+05:30 Banukumar Rajendran <banuk...@gmail.com>:
/இதுவரை கண்டதிலிருந்துஒரு மன்னன் தனது சோம்பலில்லாத முயற்சியினால் மீண்டும் பெறத்தக்கவையாக வள்ளுவர் இக்குறளில் கூறியிருப்பது பொருட்செல்வங்களேயன்றி நாடு முதலான இடங்களை அன்றுஎன்று தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்அப்படித் திரும்பப் பெறுமிடத்துஅம்மன்னன் அறமற்ற வழிகளைக் கையாண்டால் அந்நாட்டில் பிச்சைக்காரர்களே மிக்கிருப்பர் என்றும் ஒருநாள் அம்மன்னனும்பிச்சைக்காரனைப் போல அலைந்துதிரிந்து கெடுவான் என்றும் வள்ளுவர் சாபம் விடுத்திருப்பதைத் தற்போது நம் நாட்டை ஆள்பவர்கள் கவனித்துச் சிந்தித்துச் செயல்படுவார்களாக !!!///

அருமையான சிந்தனையைத் தூண்டுமாறு எழுதியிருக்கிறீர்கள் சரவணன்! 

அரசனுக்கு அறிவுறுத்தும் பாட்டு.

நன்றி பானுகுமார் ஐயா. :))
 




பழமொழி நானூறு 161.

இனியாரும் இல்லாதார் எம்மின் பிறர்யார்
தனியேம்யா மென்றொருவர் தாம்மடியல் வேண்டா
முனிவில ராகி முயல்க முனியாதார்
முன்னியது எய்தாமை இல்.

சொல்லவருவதும் இக்கருத்தையே!

அடியளந்தான் = சூரியனின் கதிர்களை உவமைப்படுத்துவர்களும் நம்மிடையே உண்டு. :-)

அவ்வாறு உவமைப்படுத்துவதும் மிக பொருத்தமாகயிருக்கிறது தான்!!

ஐயா, சூரியனின் கதிராகட்டும், திருமாலின் அடியாகட்டும் இரண்டுமே இடப்பரப்புடன் தொடர்புடையவை.

இப்படிப் பொருள்கொண்டால் ஒரு அரசன் போர்செய்து வென்று தனது ஆட்சி எல்லையை விரிவுசெய்ய வேண்டும் என்ற கருத்து உருவாகிறதே.


தங்களைச் சீண்ட விளையாட்டுக்காக எழுதியது. நகைப்புப்போட்டுதானே எழுதினேன். ;-))

தங்கள் விளக்கம் குறள் கூறவரும் பொருளுக்கு முற்றாக விலகவில்லை எனவேதான் அருமையான
கட்டுரை என்று முதலில் குறித்தேன் சரவணன்!!



இரா.பானுகுமார்

 

ipohsaivite

unread,
Nov 16, 2017, 5:16:11 AM11/16/17
to mint...@googlegroups.com
பாலர் பள்ளி வகுப்பு நடத்த நான் இங்கில்லை. வாழைப்பழத்தைக் கையில் கொடுத்து உரித்து வாயில் ஊட்டிட எமக்கு நேரமில்லை.

டாக்டர் கு. மோகனராசு மேற்கோள் காட்டியது சமணரின் நூல் கூறும் கருத்துதானே?



Sent from my Samsung Galaxy smartphone.

-------- Original message --------
From: Banukumar Rajendran <banuk...@gmail.com>
Date: 16/11/2017 17:56 (GMT+08:00)
To: மின்தமிழ் <mint...@googlegroups.com>
Subject: Re: [MinTamil] Re: திருக்குறள் காட்டும் அடியளந்தான் யார்?

2017-11-16 14:37 GMT+05:30 Thenee MK <ipohs...@gmail.com>:
'திருக்குறளில் மரபுகள்' என்னும் நூலிலிருந்து பக்கம் 121, 122 & 124 இணைத்துள்ளேன்.  


தாங்கள் எழுதியது என்ன?
யான் எழுப்பிய கேள்வியென்ன?
அதற்கு தாஙக்ள் கூறும் பதிலென்ன?

தெரிந்துதான் பதில் அளிக்கிறீர்களா?

:-))


தாங்கள் எழுதியது:

வானோர் தலைவனாகிய இந்திரனே ஐம்புலன்களை அடக்கியாள வழிகோலுவான்

யான் எழுதியது:

 சமண இலக்கியங்களிலிருந்துச்
சான்றுகள் காட்டவும்?

தங்கள் பதில்:

ஒரு பொத்தகத்தின் சில பக்கங்களை வருடிப்போட்டுவிட்டு, பதிலை நீயே தேடி
எடுத்துக்கொள் என்று சொல்கிறீர்கள். 


இந்த பக்கங்களில் எந்த இடத்தில் “சமண இலக்கியங்களிலிருந்து” சான்றுகள் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று
நூலின் பெயரையும், பாட்டையும் குறிக்கவேண்டாமோ? ;-)

இரா.பானுகுமார்





 

மு. கமலநாதன்
 







2017-11-16 14:48 GMT+08:00 Banukumar Rajendran <banuk...@gmail.com>:
2017-11-16 8:16 GMT+05:30 தேனீ <ipohs...@gmail.com>:
உயிர் அறியாமையென்னும் தன்மையுடையது. அறிவிக்க அறியுமென்பதால் உயிர் அதுதன் ஐம்பொறிகளின் அனுபவத்தின் வழியே அறியும்.

ஐம்பொறிகளை அடக்கியாள வழி காட்டுவது உயிரினும் வேற்றான ஒரு பொருளே. அப்பொருள் ஆன்மாவன்றி இருத்தல் வேண்டும். இந்திரன் என்னும் தேவர் கோமான் ஆன்ம வர்கம். ஆகையால் இந்திரன் உயிர்களின் அறியாமையைப் போக்க வல்லவன் என்பது முரண். இதனை வடக்கே உள்ள பல தொன்மக்கதைகளின் சாரத்தைக் கொண்டு அறியலாம். 
 
உயிர்குலத்திற்கு வேற்றாயுள்ள ஒருவனான இறைவனை அறியும் நிலையில் உயிர் அதுதன் ஐம்புலன்களை விட்டு பற்றற்ற நிலை கொண்டு அறவழி மேற்கொள்ளும். அவரே நீத்தார் எனப்படுவர். இதனை 23வது குறள்வழி அறிந்து கொள்ளலாம்.

'இருமை வகைதெரிந்து' என்பது பிறப்பு வீடு என்னும் இரண்டனையும் ஆராய்ந்தறிந்து உண்மையை உணர்வாரே ஐம்புலன்களை அடக்கியாளும் தன்மைப் பெறுவார். இதனை உணர்த்துவது வேதாகமங்கள். அவற்றை உணர்ந்து சிவானூபூதி நிலை அடைவாரே ஐம்புலன்களை விட்டு நீங்கும் தன்மைப் பெறுவார்.

இன்பத்தையே வேண்டி வாழும் தேவர் கோமான் இந்நிலை அடைந்தவர் அல்ல.

தென்னகத்தே இந்திரவிழா  எடுத்த காலம் சமண புத்த மதங்கள் கோலோச்சிய காலம். அக்காலத்தில் இந்திரனே மழைத்தெய்வம் என்று அவர்தம் நம்பிக்கையின் அடிப்படையில் மருதநில மக்கள் இந்திர விழாவைக் கொண்டாடினர். சமணம் புத்தம் தென்னகத்தே வீழ்ந்த போது அந்த மரபு ஒழிந்து போயிற்று. தமிழர் அயலார் நெறிவயப்பட்டிருந்த காலத்தில் நடந்த விழா அது என்பதைப் புரிந்து கொண்டால் நாம் உண்மையை அறிய முடியும்.

வானோர், விண்ணோர், சிவலோகத்தோர் என்று உலோகங்களை வகுத்துக் கூறும் சாத்திரங்கள். சாலோத்தை அடைவோர் சிவனடியார், ஏழுலகத்தில் மேலான விண்ணவன் உலகத்தை அடைவோர் வைணவ அடியார் என்று கூறிவிட்ட பிறகு சமணருக்கு வேறு உலகம் இல்லையென்றாகியது. பின் வந்த சமணர், வானோர் தலைவனாகிய இந்திரனே ஐம்புலன்களை அடக்கியாள வழிகோலுவான்

”இந்திரே ஐம்புலன்களை அடக்கியாள வழிகோலுவான்” என்ற தங்கள் கூற்று ஆதாரமற்றது. சமண இலக்கியங்களிலிருந்துச்
சான்றுகள் காட்டவும்?

இரா.பானுகுமார்









 
என்றொரு கதையைப் புனைந்து வைத்துக் கொண்டனர். இது சமய அரசியல். அதனைப் புரிந்து கொண்டுதான் பரிமேழலகர் மற்றவர் உரையைப் பின்பற்றாது பொருள் உரை கூறினார்.

இதற்கு கொஞ்சம் சமய அறிவு இருந்தால் இத்தகைய கேள்விகளுக்குச் சுலபமாகப் பதில் கூறி விடலாம்.

மற்றவை பின்னர். 

மு. கமலநாதன்
 








Thursday, November 16, 2017 at 7:42:59 AM UTC+8, நரசிங்கபுரத்தான் wrote:
உயர்திரு தேனீ  அவர்களுக்குக

1)


" அவ்வாறு ஐம்பொறிகளை அவிக்க வல்லவன் இறைவன் ஒருவனே." 

தங்கள் கூற்றுபடி உலக உயிர்கள் ஐம்பொறிகளை அவிக்க இயலாது  ?
இறைவன் மட்டுமே முடிந்தவர் ?  நீத்தார் பெருமை என்பது இறைவன் பெருமை தான் ? இந்திரன் கூட ஐந்தவித்தான் இல்லை?

இந்திரவிழா எடுத்ததும்  மருதநிலத்து இறை என்பதும் புரட்டா ?
இந்திரன் கௌதமரால் சாபம் பெற்ற கதை நூலின் மூலம் / காலம் என்ன  ?

2) 2.   ஏந்திய கொள்கையார் இடைமுரிந்து

  வேந்தனும் வேந்து கெடும் (899)

  - இந்திர பதவியைப் பெற்ற நகுடன் அகத்தியர் சாபத்தால் மலைப்பாம்பானது


இந்த கதையில் யாரும் சினம் கொண்டதாக இல்லை ?


நன்றி 

சுரேஷ்குமார் 


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/1OG76-q96IM/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/1OG76-q96IM/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

Banukumar Rajendran

unread,
Nov 16, 2017, 6:00:49 AM11/16/17
to மின்தமிழ்
2017-11-16 15:33 GMT+05:30 ipohsaivite <ipohs...@gmail.com>:
பாலர் பள்ளி வகுப்பு நடத்த நான் இங்கில்லை. வாழைப்பழத்தைக் கையில் கொடுத்து உரித்து வாயில் ஊட்டிட எமக்கு நேரமில்லை.

பால்மாறா பாலகன் கூற்றை தெய்வ வாக்காக கருதும் தாங்கள், இந்த பாலகன் கேள்விக்கு திணருவது ஏன்? ;-)


 

டாக்டர் கு. மோகனராசு மேற்கோள் காட்டியது சமணரின் நூல் கூறும் கருத்துதானே?

இல்லை. மேற்கோள் காட்டிய நூலில் அவ்வாறில்லை. அதனால்தான் மூலத்திலிருந்துச் சான்றுகள் கொடுக்கவும் என்று
சொன்னேன் ஐயா.



யான் கேட்க வந்தது - சமண இலக்கியங்களிலிருந்து.. நூற்பெயர்... பாடல் எண்..!

அவ்வளவுதான். என்ன புரிந்ததா????????

பதில் கூறமுடியாவிட்டால் கண்டமேனிக்குத் தெரிந்தாற்போல் எழுதாதிர். குழுவில் எப்படி
உரையாடுவது என்று முதலில் தெரிந்துக்கொள்ளுங்கள். பிறகு எழுப்பும் கேள்விக்கு
எப்படி பதிலளிப்பது என்றுத் தெரிந்துக்கொள்ளுங்கள். 

எப்படி பதிலளிக்கவேண்டும் என்று மிந்தமிழின் பழைய இழைகளை படித்தால் தானாகப் புரியும்.

சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னர், தங்களைப்போல்தான் யானும் எழுதிக்கொண்டிருந்தேன்.
”அவர் சொன்னார்; இவர் சொன்னார்” என்று கட்டுரைகளாக எடுத்துப்போட்டுக்கொண்டிருந்தேன். யான்
இவ்வாறு எழுதுவதை கிண்டல் செய்தவர்களுமுண்டு. 

தங்கள் எழுதும் எழுத்து “இங்கிலாந்து மகாராணியார்” எழுத்துபோல இருக்கிறது. முதலில் பன்மையில்
எழுதுவதையும், மறுமொழியிடுவோரை “ இதில்...அறிவில்லாதவர்...அதில் அறிவில்லாதவர்..) என்று
எழுதுவதையும் நிறுத்துங்கள். அப்படியே, சுருங்க சொல்ல பழகுங்கள். பிறர் கட்டுரையை எடுத்துப்போடுவதில்
தவறில்லை. ஆனால், தாங்கள் குறிக்கவரும் கருத்தை அக்கட்டுரையிலிருந்து எடுத்து சுருங்க சொல்லுங்கள்.
இப்படியே எழுதிக்கொண்டு போனால், படிப்பதற்கு போரடிக்கும். என்ன யான் சொல்வது?

kanmani tamil

unread,
Nov 16, 2017, 6:17:24 AM11/16/17
to mintamil
அன்புள்ள சரவணன் 
வாழ்த்துக்கள் .திருக்குறளுக்கு ஒன்றன் பின் ஒன்றாக உரை எழுந்ததன் காரணம் எந்த உரையும் அனைவரையும் திருப்திப்படுத்தவில்லை என்பது தானே.இது திருக்குறளின் பெருமையை மேலும் மேலும் உயர்த்தியது.
அந்த வரிசையில் நீங்களும் சில குறள்களுக்கு புத்துரை கூறுகிறீர்கள்.உங்கள் முயற்சியும் திருக்குறளின் பெருமையை உயர்த்தும்.
நீங்கள் கூறும் உரைக்கு எழும் வாதங்கள் உங்கள் திறமைக்கு சாலும் கரி.
கண்மணி   

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Nov 16, 2017, 6:49:51 AM11/16/17
to mintamil
2017-11-16 16:47 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:
அன்புள்ள சரவணன் 
வாழ்த்துக்கள் .திருக்குறளுக்கு ஒன்றன் பின் ஒன்றாக உரை எழுந்ததன் காரணம் எந்த உரையும் அனைவரையும் திருப்திப்படுத்தவில்லை என்பது தானே.இது திருக்குறளின் பெருமையை மேலும் மேலும் உயர்த்தியது.
அந்த வரிசையில் நீங்களும் சில குறள்களுக்கு புத்துரை கூறுகிறீர்கள்.உங்கள் முயற்சியும் திருக்குறளின் பெருமையை உயர்த்தும்.
நீங்கள் கூறும் உரைக்கு எழும் வாதங்கள் உங்கள் திறமைக்கு சாலும் கரி.
கண்மணி   

மிக்க நன்றி கண்மணி. :)))☺



--

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Nov 16, 2017, 6:52:29 AM11/16/17
to mintamil
2017-11-16 15:31 GMT+05:30 Banukumar Rajendran <banuk...@gmail.com>:


2017-11-16 13:55 GMT+05:30 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:

2017-11-16 12:46 GMT+05:30 Banukumar Rajendran <banuk...@gmail.com>:
/இதுவரை கண்டதிலிருந்துஒரு மன்னன் தனது சோம்பலில்லாத முயற்சியினால் மீண்டும் பெறத்தக்கவையாக வள்ளுவர் இக்குறளில் கூறியிருப்பது பொருட்செல்வங்களேயன்றி நாடு முதலான இடங்களை அன்றுஎன்று தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்அப்படித் திரும்பப் பெறுமிடத்துஅம்மன்னன் அறமற்ற வழிகளைக் கையாண்டால் அந்நாட்டில் பிச்சைக்காரர்களே மிக்கிருப்பர் என்றும் ஒருநாள் அம்மன்னனும்பிச்சைக்காரனைப் போல அலைந்துதிரிந்து கெடுவான் என்றும் வள்ளுவர் சாபம் விடுத்திருப்பதைத் தற்போது நம் நாட்டை ஆள்பவர்கள் கவனித்துச் சிந்தித்துச் செயல்படுவார்களாக !!!///

அருமையான சிந்தனையைத் தூண்டுமாறு எழுதியிருக்கிறீர்கள் சரவணன்! 

அரசனுக்கு அறிவுறுத்தும் பாட்டு.

நன்றி பானுகுமார் ஐயா. :))
 




பழமொழி நானூறு 161.

இனியாரும் இல்லாதார் எம்மின் பிறர்யார்
தனியேம்யா மென்றொருவர் தாம்மடியல் வேண்டா
முனிவில ராகி முயல்க முனியாதார்
முன்னியது எய்தாமை இல்.

சொல்லவருவதும் இக்கருத்தையே!

அடியளந்தான் = சூரியனின் கதிர்களை உவமைப்படுத்துவர்களும் நம்மிடையே உண்டு. :-)

அவ்வாறு உவமைப்படுத்துவதும் மிக பொருத்தமாகயிருக்கிறது தான்!!

ஐயா, சூரியனின் கதிராகட்டும், திருமாலின் அடியாகட்டும் இரண்டுமே இடப்பரப்புடன் தொடர்புடையவை.

இப்படிப் பொருள்கொண்டால் ஒரு அரசன் போர்செய்து வென்று தனது ஆட்சி எல்லையை விரிவுசெய்ய வேண்டும் என்ற கருத்து உருவாகிறதே.


தங்களைச் சீண்ட விளையாட்டுக்காக எழுதியது. நகைப்புப்போட்டுதானே எழுதினேன். ;-))

தங்கள் விளக்கம் குறள் கூறவரும் பொருளுக்கு முற்றாக விலகவில்லை எனவேதான் அருமையான
கட்டுரை என்று முதலில் குறித்தேன் சரவணன்!!



இரா.பானுகுமார்


ஓ! நான்தான் புரிந்துகொள்ளவில்லை. 🤔. மிக்க நன்றி. 😀

ipohsaivite

unread,
Nov 16, 2017, 7:07:56 AM11/16/17
to mint...@googlegroups.com
தங்களுக்கு வேண்டிய கருத்துக்களை மட்டும் சமண நூலிலிருந்து எடுத்துப் பதியும்பொழுது, இக்குறளுக்கான சமணரின் விளக்கத்தைப் பதிந்து சமணர் வாக்கில் இந்திரன் ஐம்புலனை அடக்கியவன் அல்லன் என்ற கருத்தைப் பதியலாமே. அதனைத் தடுப்பார் எவர்?

அப்புறம் எமது மேற்கொண்ட சான்றுகளைப் பதிவேன். 
இரா.பானுகுமார்

 
Sent from my Samsung Galaxy smartphone.

-------- Original message --------
From: Banukumar Rajendran <banuk...@gmail.com>
Date: 16/11/2017 17:56 (GMT+08:00)
To: மின்தமிழ் <mint...@googlegroups.com>
Subject: Re: [MinTamil] Re: திருக்குறள் காட்டும் அடியளந்தான் யார்?

2017-11-16 14:37 GMT+05:30 Thenee MK <ipohs...@gmail.com>:
'திருக்குறளில் மரபுகள்' என்னும் நூலிலிருந்து பக்கம் 121, 122 & 124 இணைத்துள்ளேன்.  


தாங்கள் எழுதியது என்ன?
யான் எழுப்பிய கேள்வியென்ன?
அதற்கு தாஙக்ள் கூறும் பதிலென்ன?

தெரிந்துதான் பதில் அளிக்கிறீர்களா?

:-))


தாங்கள் எழுதியது:

வானோர் தலைவனாகிய இந்திரனே ஐம்புலன்களை அடக்கியாள வழிகோலுவான்

யான் எழுதியது:

 சமண இலக்கியங்களிலிருந்துச்
சான்றுகள் காட்டவும்?

தங்கள் பதில்:

ஒரு பொத்தகத்தின் சில பக்கங்களை வருடிப்போட்டுவிட்டு, பதிலை நீயே தேடி
எடுத்துக்கொள் என்று சொல்கிறீர்கள். 


இந்த பக்கங்களில் எந்த இடத்தில் “சமண இலக்கியங்களிலிருந்து” சான்றுகள் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று
நூலின் பெயரையும், பாட்டையும் குறிக்கவேண்டாமோ? ;-)
இரா.பானுகுமார்





 

மு. கமலநாதன்
 







2017-11-16 14:48 GMT+08:00 Banukumar Rajendran <banuk...@gmail.com>:
2017-11-16 8:16 GMT+05:30 தேனீ <ipohs...@gmail.com>:
உயிர் அறியாமையென்னும் தன்மையுடையது. அறிவிக்க அறியுமென்பதால் உயிர் அதுதன் ஐம்பொறிகளின் அனுபவத்தின் வழியே அறியும்.

ஐம்பொறிகளை அடக்கியாள வழி காட்டுவது உயிரினும் வேற்றான ஒரு பொருளே. அப்பொருள் ஆன்மாவன்றி இருத்தல் வேண்டும். இந்திரன் என்னும் தேவர் கோமான் ஆன்ம வர்கம். ஆகையால் இந்திரன் உயிர்களின் அறியாமையைப் போக்க வல்லவன் என்பது முரண். இதனை வடக்கே உள்ள பல தொன்மக்கதைகளின் சாரத்தைக் கொண்டு அறியலாம். 
 
உயிர்குலத்திற்கு வேற்றாயுள்ள ஒருவனான இறைவனை அறியும் நிலையில் உயிர் அதுதன் ஐம்புலன்களை விட்டு பற்றற்ற நிலை கொண்டு அறவழி மேற்கொள்ளும். அவரே நீத்தார் எனப்படுவர். இதனை 23வது குறள்வழி அறிந்து கொள்ளலாம்.

'இருமை வகைதெரிந்து' என்பது பிறப்பு வீடு என்னும் இரண்டனையும் ஆராய்ந்தறிந்து உண்மையை உணர்வாரே ஐம்புலன்களை அடக்கியாளும் தன்மைப் பெறுவார். இதனை உணர்த்துவது வேதாகமங்கள். அவற்றை உணர்ந்து சிவானூபூதி நிலை அடைவாரே ஐம்புலன்களை விட்டு நீங்கும் தன்மைப் பெறுவார்.

இன்பத்தையே வேண்டி வாழும் தேவர் கோமான் இந்நிலை அடைந்தவர் அல்ல.

தென்னகத்தே இந்திரவிழா  எடுத்த காலம் சமண புத்த மதங்கள் கோலோச்சிய காலம். அக்காலத்தில் இந்திரனே மழைத்தெய்வம் என்று அவர்தம் நம்பிக்கையின் அடிப்படையில் மருதநில மக்கள் இந்திர விழாவைக் கொண்டாடினர். சமணம் புத்தம் தென்னகத்தே வீழ்ந்த போது அந்த மரபு ஒழிந்து போயிற்று. தமிழர் அயலார் நெறிவயப்பட்டிருந்த காலத்தில் நடந்த விழா அது என்பதைப் புரிந்து கொண்டால் நாம் உண்மையை அறிய முடியும்.

வானோர், விண்ணோர், சிவலோகத்தோர் என்று உலோகங்களை வகுத்துக் கூறும் சாத்திரங்கள். சாலோத்தை அடைவோர் சிவனடியார், ஏழுலகத்தில் மேலான விண்ணவன் உலகத்தை அடைவோர் வைணவ அடியார் என்று கூறிவிட்ட பிறகு சமணருக்கு வேறு உலகம் இல்லையென்றாகியது. பின் வந்த சமணர், வானோர் தலைவனாகிய இந்திரனே ஐம்புலன்களை அடக்கியாள வழிகோலுவான்

”இந்திரே ஐம்புலன்களை அடக்கியாள வழிகோலுவான்” என்ற தங்கள் கூற்று ஆதாரமற்றது. சமண இலக்கியங்களிலிருந்துச்
சான்றுகள் காட்டவும்?
இரா.பானுகுமார்









 
என்றொரு கதையைப் புனைந்து வைத்துக் கொண்டனர். இது சமய அரசியல். அதனைப் புரிந்து கொண்டுதான் பரிமேழலகர் மற்றவர் உரையைப் பின்பற்றாது பொருள் உரை கூறினார்.

இதற்கு கொஞ்சம் சமய அறிவு இருந்தால் இத்தகைய கேள்விகளுக்குச் சுலபமாகப் பதில் கூறி விடலாம்.

மற்றவை பின்னர். 

மு. கமலநாதன்
 








Thursday, November 16, 2017 at 7:42:59 AM UTC+8, நரசிங்கபுரத்தான் wrote:
உயர்திரு தேனீ  அவர்களுக்குக

1)


" அவ்வாறு ஐம்பொறிகளை அவிக்க வல்லவன் இறைவன் ஒருவனே." 

தங்கள் கூற்றுபடி உலக உயிர்கள் ஐம்பொறிகளை அவிக்க இயலாது  ?
இறைவன் மட்டுமே முடிந்தவர் ?  நீத்தார் பெருமை என்பது இறைவன் பெருமை தான் ? இந்திரன் கூட ஐந்தவித்தான் இல்லை?

இந்திரவிழா எடுத்ததும்  மருதநிலத்து இறை என்பதும் புரட்டா ?
இந்திரன் கௌதமரால் சாபம் பெற்ற கதை நூலின் மூலம் / காலம் என்ன  ?

2) 2.   ஏந்திய கொள்கையார் இடைமுரிந்து

  வேந்தனும் வேந்து கெடும் (899)

  - இந்திர பதவியைப் பெற்ற நகுடன் அகத்தியர் சாபத்தால் மலைப்பாம்பானது


இந்த கதையில் யாரும் சினம் கொண்டதாக இல்லை ?


நன்றி 

சுரேஷ்குமார் 


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/1OG76-q96IM/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/1OG76-q96IM/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/1OG76-q96IM/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

ipohsaivite

unread,
Nov 16, 2017, 7:22:15 AM11/16/17
to mint...@googlegroups.com
போரட்டிக்குமென்று நினைப்பவருக்காக எமது கருத்தைப் பதியவில்லை மாறாக கூறவரும் கருத்தைப் படிப்போர் முழுமையாக விளங்கிக் கொள்ள வேண்டுமென்பதற்காகவே பதிந்து வருகின்றேன்.

20பது வருடங்கள் கழிந்தும் திருஞானசம்பந்தர் சமணப் பெண்டிரை கற்பழிக்க வழிவேண்டி இறைவனிடம் விண்ணப்பித்ததாக கூறினீர்களே அப்பொழுதே தங்களின் பக்குவத்தை அறிந்து கொண்டேன். 

அதனால் நமக்குள் மனித நேயம் கெட்டு விடக் கூடாதென்ற கருத்துடையவன்.

அதற்கேற்றவாறு கருத்தைப் பதிய கற்றுக் கொண்டால் மின் தமிழ் சிறக்கும். 

ipohsaivite

unread,
Nov 16, 2017, 7:34:29 AM11/16/17
to mint...@googlegroups.com
ஆதாரத்தைக் காட்டுங்கள் என்று கேட்டதால் நூல் ஆதாரத்தை முன் வைத்தேன். 

ஆதாரத்தைக் கேட்டு அதனைக் கொடுக்கும்போது கிண்டலடித்தால் அவர்தம் குணத்தை அவர் கருத்தே  காட்டிடும்.

காட்டிய ஆதாரத்தை மறுக்கத் துணிந்தால் மாற்றுக் கருத்துக்கான ஆதாரத்தை முன் வைக்க வேண்டியது மறுப்போர் கடமையல்லவா.

ஆதலால் மறுப்புக் கூறியதற்கான தரவை முன் வைக்கவேண்டிய கடமை தங்களுடையது.

அதைச் செய்யாமலேயே மற்றவரை குறை கூறுவது மடலாடும் பண்பல்ல.

திருக்குறளில் கூறப்படும் வினைக் கோட்பாடு சமணர் மெய்யியலுக்குப் புறம்பானது என்று சுட்டிக் காட்டியபொழுது அதை மறுக்க முடியாமல் ஒதுங்கிக் கொண்டு பின்னர் இதர இழைகளில் ஒட்டிக் கொண்டு திருக்குறளை சமணர் நூலென்று கூற விழைவது நகைப்புகுறியது. 

சொ. வினைதீர்த்தான்

unread,
Nov 16, 2017, 7:38:13 AM11/16/17
to mint...@googlegroups.com
திருத்தம் என்பது பிழையைத் திருத்துவதாகும். திருத்தம் என்ற பெயரில் பிழை ஏற்படுமாயின் அது திருத்தமாகாது. - மு.கமலநாதன்.

சிறந்த சொல்லாட்சி!

திருத்தம் என்ற பெயரில் என்ன பிழையைச் செய்திருக்கிறார் திரு சரவணன் என்று எழுதினால் சிறபாக இருக்கும்.
நன்றி
சொ.வினைதீர்த்தான்

ipohsaivite

unread,
Nov 16, 2017, 7:49:57 AM11/16/17
to mint...@googlegroups.com
அதற்குப் பிந்தைய கருத்துக்களில் அவற்றைச் சுட்டியுள்ளேன் ஐயா. 
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/1OG76-q96IM/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

Banukumar Rajendran

unread,
Nov 16, 2017, 9:36:50 AM11/16/17
to மின்தமிழ்
2017-11-16 18:04 GMT+05:30 ipohsaivite <ipohs...@gmail.com>:
ஆதாரத்தைக் காட்டுங்கள் என்று கேட்டதால் நூல் ஆதாரத்தை முன் வைத்தேன். 

ஆதாரத்தைக் கேட்டு அதனைக் கொடுக்கும்போது கிண்டலடித்தால் அவர்தம் குணத்தை அவர் கருத்தே  காட்டிடும்.


கிண்டல் செய்யவில்லை ஐயா.

யாரோ எழுதியதை சம்பந்த சம்பந்தமில்லாமல் ஒரு கட்டுரையை இணைக்கிறீர்கள். கேட்டால் அதுதான் ஆதாரம் என்று
சொல்கிறீர்கள். ஆதாரம் என்பது மற்றவர் எழுதியக் கட்டுரையை எடுத்துக்காட்டுவதாகாது. மூல நூலிலிருந்து
எடுத்துக்காட்டுத் தரவேண்டும். அதுதான் முதல்தரமான தரவு. அதைதான் தங்களிடம் எதிர்ப்பார்த்தேன்.

ஞானபாதம் என்ற நூலுக்கு தரவுகள் கொடுத்தீர்களே அதுபோன்றுதான் இக்கதையும்.

ஞானபாதம் என்ற சொல்லாட்சி சங்க இலக்கியம் முதல் தற்கால இலக்கியங்கள்வரை எந்த நூலில் சொல்லியிருக்கிறது 
என்று கேட்டதற்கு இன்றுவரை பதிலில்லை. யாரோ எழுதிய கட்டுரையை எடுத்துப்போட்டு இதோ ஆதாரம் என்று
சொன்னீர்கள். அது முதல்தர சான்றாகுமா?

முதன்மையான சான்றென்பது மூலத்திலிருந்து (மூலநூற்களிலிருந்து) சான்றுக் காட்டவேண்டும் ஐயா. முதலில் இதைப் புரிந்துக்கொள்ளுங்கள்.


மறுபடியும் சொல்கிறேன். குறள் எழுந்த காலத்தில் சைவ சித்தாந்தம் தோன்றவில்லை. சிவன் என்ற சொற்பிரயோகமோ,
சைவம் என்ற சொல்லாட்சியோ தோன்றாத காலம். சிவனை தொழுவோர் இருந்திருக்கலாம். ஆயின் அவர்களுக்கென்று
மெய்யியல் தோன்றவில்லை. ஒரு குறிப்பு கொடுக்கிறேன். தொன்மையான அறுசமயங்களில் சைவமோ, வைணவமோ
எங்கிலும் கூறப்பட்டிருக்கின்றனவா என்று பாருங்கள். எங்கும் இருக்காது. அறுசமயங்கள் என்பது இங்கு சமயத்தைக் குறிக்கா.
மெய்யியலைக் குறிக்கும் என்பதையும் நினைவில் நிறுத்துங்கள்.

(குறளை சொந்தம் கொண்டாட சிரமண சமயங்களுக்குத்தான் உரிமையுண்டு. அறுசமயங்களில் அருகதமும், புத்தமும் உண்டு.)

நா.ரா.கி.காளைராசன்

unread,
Nov 16, 2017, 11:14:01 AM11/16/17
to mintamil, Kalai Email, thiruppuvanam, naga rethinam
கிண்டல் செய்யவில்லை ஐயா.

ஏதேதோ சம்பந்த சம்பந்தமில்லாமல் எழுதுகின்றீர்கள். கேட்டால் இதுதான் ஆதாரம் என்று
சொல்கிறீர்கள். ஆதாரம் என்பது மற்றவர் கட்டுரையை எதிர்ப்பது ஆகாது.  மூலச் சமண நூல்களிலிருந்து
எடுத்துக்காட்டுத் தரவேண்டும். அதுதான் முதல்தரமான தரவு. அதைதான் தங்களிடம் எதிர்ப்பார்த்தேன்.

பிறர் எழுதிய கட்டுரையை மறுப்பது ஆதாரம் என்று சொல்லமுடியாது.  அது முதல்தர சான்றாகுமா?

முதன்மையான சான்றென்பது மூலத்திலிருந்து (மூலநூற்களிலிருந்து) சான்றுக் காட்டவேண்டும் ஐயா. முதலில் இதைப் புரிந்துக்கொள்ளுங்கள்.

மறுபடியும் சொல்கிறேன். குறள் எழுந்த காலத்தில் பௌத்தமும் சமணமும் தோன்றவில்லை. திருக்குறளில் உள்ள “ஆதி, பகவன்“  என்ற இரண்டு சொற்களையும் ஒன்றாக்கி “ஆதிபகவன்“ என்ற புதிய தொரு சொல்லை உருவாக்கி, பகவன் என்ற சொல்லைப் பகவான் ஆக்கித் திருக்குறளுக்குச் சொந்தம் கொண்ட முனைகின்றனர். 
புத்தம் என்ற சொல்லோ சமணம் என்ற சொல்லாட்சியோ தோன்றாத காலம். அருகனை பார்சுவரைதத் தொழுவோர் இருந்திருக்கலாம். ஆயின் அவர்களுக்கென்று
மெய்யியல் தோன்றவில்லை. ஒரு குறிப்பு கொடுக்கிறேன். தொன்மையான சமண நூல்களில் “ஆதி, பகவன்“ எங்கேயேனும்  கூறப்பட்டிருக்கின்றனவா என்று பாருங்கள். எங்கும் இருக்காது. அருகனும் பாசுவநாதரும் மகாவீரரும் சமயங்களைத் தோற்றுவிக்காத காலம் அது.  
அருகனோ, பாசுவநாதரோ, மகாவீரரோ ஆதி அல்ல என்பதையும் நினைவில் நிறுத்துங்கள்.

(குறளை எல்லோரும் கொண்டாடலாம், ஆனால் அது இந்து சமயத்திற்கு உரிமையானது.)

அன்பன்
கி.காளைராசன் 

Thenee MK

unread,
Nov 16, 2017, 11:15:11 AM11/16/17
to mintamil
#யாரோ எழுதியதை சம்பந்த சம்பந்தமில்லாமல் ஒரு கட்டுரையை இணைக்கிறீர்கள். கேட்டால் அதுதான் ஆதாரம் என்று
சொல்கிறீர்கள். ஆதாரம் என்பது மற்றவர் எழுதியக் கட்டுரையை எடுத்துக்காட்டுவதாகாது. மூல நூலிலிருந்து
எடுத்துக்காட்டுத் தரவேண்டும். அதுதான் முதல்தரமான தரவு. அதைதான் தங்களிடம் எதிர்ப்பார்த்தேன்.#

முதல் நிலை இரண்டாம் நிலை தரவு என்று உள்ளது அல்லவா. இந்திரன் ஐம்புலன் அடக்கியவன் என்பதற்கு சமணரின் சான்றைக் கேட்டீர். அதனைக் குறித்து விளக்கவுரை கொண்ட நூலை அடையாளம் காட்டினோம். அந்த விளக்கவுரைக்கு தரவாக இருந்தது ஒரு சமணரின் உரை.


#ஞானபாதம் என்ற நூலுக்கு தரவுகள் கொடுத்தீர்களே அதுபோன்றுதான் இக்கதையும்.#

கற்றது கை மண் அளவு என்பது இப்பொழுதுதான் புரிகின்றது.

வேதத்தில் அறிவு நெறியை (ஞான நெறியை) விளக்குவது உபநிடதங்கள். அதைப்போல சிவாகமத்தில் அறிவு நெறியைக் கூறும் நூலை  வடமொழியில் 'ஞானபாதம்' அல்லது 'வித்தியாபாதம்' என்று கூறுவார்.  இதுவே சிவாகமம் கூறும் சித்தாந்த நெறியாகும் என்பதை அறவாழி அந்தணன் மற்றும் திருக்குறள் ஆய்வு என்னும் இரு இழைகளில் பதிந்துள்ளேன். தமிழர்களுக்குத் தமிழில் சொல்வதை விட வடமொழியிலும் ஆங்கிலத்திலும் கூறினால் நன்றாகவே புரிகின்றது. சிவசிவ.

இதனைப் புரிந்து கொள்ள முடியாததின் காரணமென்ன? தமது சமய நூல்களை மட்டும் படித்து மற்ற மெய்யியல்களை அறியாததின் காரணமே இத்தகைய அறியாமைக்குக் காரணமாகும். 

     
#முதன்மையான சான்றென்பது மூலத்திலிருந்து (மூலநூற்களிலிருந்து) சான்றுக் காட்டவேண்டும் ஐயா. முதலில் இதைப் புரிந்துக்கொள்ளுங்கள்.#

இதைக்கூட அறியாமலா மின் தமிழில் கருத்து எழுதிக் கொண்டிருக்கின்றேன்?

இந்திரன் ஐம்புலன்கள் அவித்தவன் அல்லன் என்று சமணர் கூறும் மூல நூல் ஆதாரத்தை முன் வைக்கலாமே. இன்னும் தயக்கம் ஏன்?


#மறுபடியும் சொல்கிறேன். குறள் எழுந்த காலத்தில் சைவ சித்தாந்தம் தோன்றவில்லை. சிவன் என்ற சொற்பிரயோகமோ,
சைவம் என்ற சொல்லாட்சியோ தோன்றாத காலம்.#

இதற்கு தங்களின் தரவு எங்கே?

Dr. Surendranath Das Gupta எழுதிய 'A History of Indian Philosophy - Vol V பக்கம் 15 - 23 வரை படித்தருள்க.


'The Saivagamas' என்னும் நூல் மேற்கூறிய இணையத் தொடரிலிருந்து தரவிறக்கம் செய்து படியுங்கள். அதில் சைவகாமத்தின் காலத்தை கி.பி. 2 முதல் கி.பி. 3ஆம் நூற்றாண்டைச் சார்ந்தாக பேராசிரியர் Dr. Surendranath Das Gupta  கூறியதாக 8ஆம் பக்கத்தில் குறிதுள்ளதைக்  காண்க.

மேற்கூறிய நூலோடு மேலும் ஒர் ஆய்வு கட்டுரையை 'திருக்குறள் ஆய்வு என்னும் இழையில் பதிந்தேன் அதையும் படியுங்கள்.

சைவாகமத்தின் ஞானபாதம் சித்தாந்தம் எனப்படுவதையும் காண்க.

இன்னூல்களைப் பதிவேற்றிய பொழுது இந்நூல்களின் கருத்தை மறுக்க விரும்புவோர் அதற்கான ஆய்வேடுகளுடன் அவர்தம் கருத்தைப் பதிவிடும்படி கூறியிருந்தேன். இதுவரை மேற்கூறிய நூற்களின் கருத்தை எவரும் மறுக்கவில்லை.

தாங்கள் மறுத்தால் சிவாகமத்தின் காலத்தை ஆராய்ந்து கூறும் நூலை இவ்விடம் பதிவிடவும். எவ்வித தரவும் தங்களிடம் இல்லையேல் யாம் கொடுத்தத் தரவை ஏற்றுக் கொள்வதே அறிவுடைமை. 

மு. கமலநாதன்


   


    

Thenee MK

unread,
Nov 16, 2017, 8:09:28 PM11/16/17
to mintamil

 

 கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்

 ஆற்றல் தலைபட் டவர்க்கு (269)

 - மார்க்கண்டேயன் யமனை வென்றது

 

திரு. சுரேஷ் குமாரின் கருத்து:-

 

16 வயதுடைய மார்க்கண்டேயன் தவ வலிமையால் யமனை வென்றதாக கதை இல்லை.

இறைவனிடம் சரணாகதி அடைந்ததால் யமனை வென்றான் . தவத்தின் பெருமை கூற இந்தக் கதை பொருந்தாது 

 

எமது மறுமொழி


திருக்குறளில் திருவள்ளுவர் காட்டும் தவம் யாது?

 

காட்டிற்குச் சென்று உணவின்றி விரதமிருந்து வழிபாடு செய்வது தவமா அல்லது தமக்குறிய இல்லற கடமைகளைச் செய்து இறைவனை தொடர்ந்து சிந்தித்திருப்பது தவமா? திருவள்ளுவர் கூறுவது இரண்டாம் வகை தவமே. குறள் 3 – மலர்மிசை ஏகினான் மானடி சேர்ந்தார்.... – இறைவனை தொடர்ந்து சிந்தித்திருத்தல் அவன் திருவடி சேர வழிகோலும் – பரிமேழலகர்.

 

மார்கண்டேயன் தொன்மக்கதை காட்டுவதென்ன? தனக்கு வரவிருக்கும் மரணத்தையறிந்து  தந்தை வருந்துவதைக் கண்ட தனையன் தன் தந்தை சொற்படி கேட்டு ஐந்தெழுத்து மந்திரமோதி சிவனை தொடர்ந்து பூசித்து வந்த தவபலமே மார்கண்டேயன் உயிரைக் காப்பாற்றியது.       

 

திருமூலர் தவத்தினால் பெறும்  வீடுபேற்றைக் கூறும்போது உள்ளம் சிவமாதல் ஒன்றே உண்மைத் தவத்தால் பெறும் பயனாகுமென்று 10.6.6-13) கூறுகின்றார் அத்தகைய தவம் செய்தவரே மார்கண்டேயேன். அதன் காரணமாக இறப்பு பிறப்பு அற்ற நிலை பெற்றார். இக்கதை மேற்கூறிய குறளுக்குப் பெரிதும் பொருந்தும்.   


மு. கமலநாதன்  


தேமொழி

unread,
Nov 16, 2017, 10:06:51 PM11/16/17
to மின்தமிழ்


On Thursday, November 16, 2017 at 8:14:01 AM UTC-8, கி. காளைராசன் wrote:
கிண்டல் செய்யவில்லை ஐயா.

ஏதேதோ சம்பந்த சம்பந்தமில்லாமல் எழுதுகின்றீர்கள். கேட்டால் இதுதான் ஆதாரம் என்று
சொல்கிறீர்கள். ஆதாரம் என்பது மற்றவர் கட்டுரையை எதிர்ப்பது ஆகாது.  மூலச் சமண நூல்களிலிருந்து
எடுத்துக்காட்டுத் தரவேண்டும். அதுதான் முதல்தரமான தரவு. அதைதான் தங்களிடம் எதிர்ப்பார்த்தேன்.

பிறர் எழுதிய கட்டுரையை மறுப்பது ஆதாரம் என்று சொல்லமுடியாது.  அது முதல்தர சான்றாகுமா?

முதன்மையான சான்றென்பது மூலத்திலிருந்து (மூலநூற்களிலிருந்து) சான்றுக் காட்டவேண்டும் ஐயா. முதலில் இதைப் புரிந்துக்கொள்ளுங்கள்.

மறுபடியும் சொல்கிறேன். குறள் எழுந்த காலத்தில் பௌத்தமும் சமணமும் தோன்றவில்லை.

///குறள் எழுந்த காலத்தில் பௌத்தமும் சமணமும் தோன்றவில்லை.////

உங்கள் காலவாராய்ச்சியின் படி குறள் எழுதப்பட்ட காலம் என்னவென்று அறியவிரும்புகிறேன்.

..... தேமொழி 

N. Kannan

unread,
Nov 16, 2017, 10:17:30 PM11/16/17
to மின்தமிழ்
I think Valluvar was blown out of proportion by DMK & their decedents. 
வள்ளுவன் அடிப்படையில் ஓர் தேர்ந்த கவி. சிந்திக்கும் உள்ளம் கொண்டவன். புதுமை விரும்பி. கொஞ்சம் கோபக்காரனும் கூட.

ஒரு கவி காலத்தைக் கடந்தவன் அல்ல. ஒவ்வொரு கவியும் அவன் காலத்திற்குத்தான் கவிதை எழுதுகிறான். வாசிப்பவனுக்கு விளங்க வேண்டுமெனில் அவர் காலத்தில் இருந்த தொன்மங்கள், கதைகள், காட்சிகள் இவைகளைத்தான் உவமை கூற முடியும். வள்ளுவனைக் காலத்தை கடந்து பார்ப்பது கவிதை வாசிப்பு அறியாதோர் செய்வது.   வள்ளுவன் முக்காலமும் உணர்ந்தவன் எனில் செல்ஃபி உவமை கொடுத்திருக்க வேண்டும். மொபைல் போஃன் பற்றிப் பேசியிருக்க வேண்டும். Common! Be rational!

வள்ளுவன் அவன் காலத்தைக் காட்டுகிறான் என்பதில் நமக்கென்ன இவ்வளவு சிக்கல். சிங்கபுரத்தார் காட்டும் மேற்கோள் இன்றளவும் புரிந்து கொள்ளப்படுகிறதே. அதுவே சாட்சி இல்லையா?

நா.கண்ணன்

You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
 
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

Thenee MK

unread,
Nov 16, 2017, 10:40:03 PM11/16/17
to mintamil
திருக்குறள் மற்ற கவிஞர் எழுதிய நூல் போல் அன்று. அது எக்காலத்திற்கும் பயன்பட வேண்டிய நோக்கத்துடன் பாடப்பட்டது. அதன்காரணமாகவே அது 'தமிழ் மறை' என்னும் சிறப்புப் பெற்றது. இத்தகைய தனிச்சிறப்பு தமிழில் வேறு எந்த அறநூலுக்கும் கிட்டியதில்லை.   

அதனால் திருக்குறள் தோன்றிய காலத்திற்கு மட்டுமே உடைய நூல் என்று கூறுவது திருவள்ளுவமாலையில் புகழாரம் சூட்டிய பல புலவர்களின் கருத்துக்கு முரணாகிவிடும். அவ்வகை தவற்றைச் செய்வது திருக்குறளின் மான்பை உயர்த்தாது. 


மு. கமலநாதன்
 

Banukumar Rajendran

unread,
Nov 16, 2017, 10:43:38 PM11/16/17
to மின்தமிழ்
2017-11-16 5:27 GMT+05:30 நரசிங்கபுரத்தான் <jaisure...@gmail.com>:
1.   கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
 ஆற்றல் தலைபட் டவர்க்கு (269)

  - மார்க்கண்டேயன் யமனை வென்றது


16 வயதுடைய மார்க்கண்டேயன் தவ வலிமையால் யமனை வென்றதாக கதை இல்லை .

இறைவனிடம் சரணாகதி அடைந்ததால் யமனை வென்றான் . தவத்தின் பெருமை கூற இந்தக் கதை பொருந்தாது 



மிகவும் சரி சுரேஷ்.

வினைகளை அறுக்க -> தவம் -> தவத்தின் பயன் -> பிறவாநிலை!

தவத்தின் வலிமையால் மரணத்தை வென்று பிறவாநிலையடையலாம் என்பது கருத்து.

இக்குறளுக்கும் மார்க்கண்டேயனுக்கும் யாதொரு தொடர்புமில்லை. 

நன்றி!

இரா.பானுகுமார் 






 

.   பெயக்கண்டும் நஞ்சுஉண்டு அமைவர் நயத்தக்க

  நாகரிகம் வேண்டு பவர் (580)

   - சிவபெருமான் நஞ்சுண்டது


கண்ணோட்டத்த்திற்கும் / நாகரிகத்திற்கும்  சிவபெருமான் நஞ்சுண்ட கதை எவ்வாறு பொருந்துகின்றது 


2017-11-16 8:42 GMT+09:00 நரசிங்கபுரத்தான் <jaisure...@gmail.com>:
உயர்திரு தேனீ  அவர்களுக்குக

1)


" அவ்வாறு ஐம்பொறிகளை அவிக்க வல்லவன் இறைவன் ஒருவனே." 

தங்கள் கூற்றுபடி உலக உயிர்கள் ஐம்பொறிகளை அவிக்க இயலாது  ?
இறைவன் மட்டுமே முடிந்தவர் ?  நீத்தார் பெருமை என்பது இறைவன் பெருமை தான் ? இந்திரன் கூட ஐந்தவித்தான் இல்லை?

இந்திரவிழா எடுத்ததும்  மருதநிலத்து இறை என்பதும் புரட்டா ?
இந்திரன் கௌதமரால் சாபம் பெற்ற கதை நூலின் மூலம் / காலம் என்ன  ?

2) 2.   ஏந்திய கொள்கையார் இடைமுரிந்து

  வேந்தனும் வேந்து கெடும் (899)

  - இந்திர பதவியைப் பெற்ற நகுடன் அகத்தியர் சாபத்தால் மலைப்பாம்பானது


இந்த கதையில் யாரும் சினம் கொண்டதாக இல்லை ?


நன்றி 

சுரேஷ்குமார் 



--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---

Banukumar Rajendran

unread,
Nov 16, 2017, 10:47:47 PM11/16/17
to மின்தமிழ்
2017-11-16 5:27 GMT+05:30 நரசிங்கபுரத்தான் <jaisure...@gmail.com>:
1.   கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
 ஆற்றல் தலைபட் டவர்க்கு (269)

  - மார்க்கண்டேயன் யமனை வென்றது


16 வயதுடைய மார்க்கண்டேயன் தவ வலிமையால் யமனை வென்றதாக கதை இல்லை .

இறைவனிடம் சரணாகதி அடைந்ததால் யமனை வென்றான் . தவத்தின் பெருமை கூற இந்தக் கதை பொருந்தாது 


.   பெயக்கண்டும் நஞ்சுஉண்டு அமைவர் நயத்தக்க

  நாகரிகம் வேண்டு பவர் (580)

   - சிவபெருமான் நஞ்சுண்டது


கண்ணோட்டத்த்திற்கும் / நாகரிகத்திற்கும்  சிவபெருமான் நஞ்சுண்ட கதை எவ்வாறு பொருந்துகின்றது 


பொருந்தாது சுரேஷ். இக்குறளுக்கும் சிவபிரானுக்கு யாதொரு தொடர்புமில்லை!

உரையாசிரியர்களின் பார்வை:


மணக்குடவர் உரை: நஞ்சு பெயக்கண்டும் அதனை மாற்றாது உண்டு அமைவர், எல்லாரானும் விரும்பத் தக்க நாகரிகத்தை விரும்புவார்.
நாகரிகம்- அறம் பொருள் இன்பத்திற்கண் நற்குணங்கள் பலவும் உடைமை.

பரிமேலழகர் உரை: நஞ்சு பெயக் கண்டும் உண்டு அமைவர் - பயின்றார் தமக்கு நஞ்சிடக் கண்டுவைத்தும், கண் மறுக்கமாட்டாமையின் அதனை உண்டு பின்னும் அவரோடு மேவுவர்; நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர் - யாவரானும் விரும்பத்தக்க கண்ணோட்டத்தினை வேண்டுபவர். 
(நாகரிகம் என்பது கண்ணோட்டமாதல் 'முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்' (நற் 355 ) என்பதனானும் அறிக. அரசர் அவரை ஒறாது கண்ணோடற்பாலது தம்மாட்டுக் குற்றம் செய்துழி என்பது இவ்விரண்டு பாட்டானும் கூறப்பட்டது.)

நாமக்கல் கவிஞர் உரை: (அதைவிடச் சிறந்த தாட்சண்ணிய குணமுள்ள தியாகிகள் அதனால் நமக்கு அபாயம் வருமென்றாலும் பொருட்படுத்தமாட்டார்கள்.) பலபேருக்கான நன்மை வரும் என்றால் தாட்சண்ணியத்தை விரும்புகின்றவர்கள் விஷத்தை ஊற்றிக் கொடுத்தாலும் அதை உண்டுவிடச் சம்மதிப்பார்கள்.



இரா.பானுகுமார்




 
2017-11-16 8:42 GMT+09:00 நரசிங்கபுரத்தான் <jaisure...@gmail.com>:
உயர்திரு தேனீ  அவர்களுக்குக

1)


" அவ்வாறு ஐம்பொறிகளை அவிக்க வல்லவன் இறைவன் ஒருவனே." 

தங்கள் கூற்றுபடி உலக உயிர்கள் ஐம்பொறிகளை அவிக்க இயலாது  ?
இறைவன் மட்டுமே முடிந்தவர் ?  நீத்தார் பெருமை என்பது இறைவன் பெருமை தான் ? இந்திரன் கூட ஐந்தவித்தான் இல்லை?

இந்திரவிழா எடுத்ததும்  மருதநிலத்து இறை என்பதும் புரட்டா ?
இந்திரன் கௌதமரால் சாபம் பெற்ற கதை நூலின் மூலம் / காலம் என்ன  ?

2) 2.   ஏந்திய கொள்கையார் இடைமுரிந்து

  வேந்தனும் வேந்து கெடும் (899)

  - இந்திர பதவியைப் பெற்ற நகுடன் அகத்தியர் சாபத்தால் மலைப்பாம்பானது


இந்த கதையில் யாரும் சினம் கொண்டதாக இல்லை ?


நன்றி 

சுரேஷ்குமார் 



Banukumar Rajendran

unread,
Nov 16, 2017, 10:57:32 PM11/16/17
to மின்தமிழ்
2017-11-16 5:12 GMT+05:30 நரசிங்கபுரத்தான் <jaisure...@gmail.com>:
உயர்திரு தேனீ  அவர்களுக்குக

1)


" அவ்வாறு ஐம்பொறிகளை அவிக்க வல்லவன் இறைவன் ஒருவனே." 

தங்கள் கூற்றுபடி உலக உயிர்கள் ஐம்பொறிகளை அவிக்க இயலாது  ?
இறைவன் மட்டுமே முடிந்தவர் ?  நீத்தார் பெருமை என்பது இறைவன் பெருமை தான் ? இந்திரன் கூட ஐந்தவித்தான் இல்லை?


சுரேஷ் என் வலைப்பதிவிலிருந்து...

-------------------------------------------------
என் விளக்கம்

ஒரு குறளின் பொருளையறிய அக்குறளின் உரையை மட்டுமில்லாது அது எந்த அதிகாரத்தில் சொல்லப்பட்டது என்பதையும் கருதிற்கொண்டால்தான், அந்த குறளின் உட்கருத்தை தெளிவாகப் புரிந்துக் கொள்ள முடியும். அதுவே சிறப்பாம். பரிமேலழகர் உரையாசிரியர்களில் சிறந்தவர் என்பதில் ஐயமில்லை. இது முற்றிலும் உண்மையும் கூட. ஆனால், இவரிடம் உள்ள ஒரு குறை. காய்த்தல், உவத்தல் அகற்றி உரை செய்யாமைதான். 

காலத்தால் முந்தையது மணக்குடவர் உரை. பரிமேலழகர் இவர் (மணக்குடவர்) உரையையே பெரிதும் தன் உரையில் தழுவி சென்றிருந்தாலும், எந்தெந்த குறளில் தன் சமயத்தைப் புகுத்த முடியுமோ, அங்கெல்லாம் தான் சார்ந்த சமயத்தைப் புகுத்தி உரைக் கண்டிருக்கிறார். அவ்வாறே இந்தக் குறளிலும் புகுத்தியிருக்கிறார் என்பது நிதர்சணம்.

அப்படியென்ன தன்னுடைய சமயத்தை புகுத்தியிருக்கிறார்? எனின்,

இந்த குறள் சொல்லப்பட்ட இடம் ‘நீத்தார் பெருமை”. ‘நீத்தார்’ என்பது ‘முற்றும் துறந்த முனிவர்’களைக் குறிப்பது. அஃதாவது, முற்றும் துறந்தவர்களுடைய பெருமை என்பது பொருள். அவ்வாறே, அந்த கருத்திலேயே அந்த அதிகாரத்தில் உள்ள மற்ற குறள்களும் சொல்லப்பட்டிருக்கின்றன. முற்றும் துறந்தவர் என்றால் யார்?

என்றால்! தன்னுடைய ஐந்து புலன்களால் வரும் நுகர்ச்சியாகிய ஆசையை அடக்கி அல்லது அவித்து, தன்னுடையது என்று ஏதும் இல்லாமல், உற்றாற்கு உடம்பும் மிகை என்பதுபோல் யாரொருவர் இருப்பாரோ அவரே முற்றும் துறந்த முனிவர். இவரிடம் விறுப்பு, வெறுப்பு, காழ்ப்பு போன்ற குணங்கள் அமையா. அப்பேர்ப்பட்டவர்களையே முற்றும் துறந்தவர் என்பது சாலப் பொருந்தும். அப்பேர்ப்பட்டவர்கள் யாருக்காவது சாபம் விடுவார்களா? என்பது முதற் கேள்வி. அப்படி சாபம் விட்டால் தன்னிலை தாழ்ந்தவர்கள் ஆகிறார்கள். அவர்களுக்கு நமக்கும் (இல்லறத்தார்) வித்தியாசம் இல்லாமற்போய்விடும். இல்லையா? 

ஏன்யா? தன்னுடைய பொண்டாட்டியிடம் யாராவது வாலாட்டினால் எவராவதுப் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பார்களா? என்று யாராவது கேட்க கூடும்?

சும்மா இருக்க முடியாதுதான். அதற்கு யான் கூறும் சமாதானம் இதுவே. துறந்தவர் என்று நாம் யாரைச் சொல்கிறோம்? மனைவி, மக்கள், சுற்றம் இவர்களை ஒதுக்கியர்களைத்தான் துறந்தவர்கள் என்கிறோம். அதிலும், தன்னுடைய ஐந்து புலன்களையும் வென்றவர்களை “முற்றும் துறந்தவர்கள்” என்கிறோம் இல்லையா? அப்படி இருக்கும்போது மனைவியுடன் வாழ்ந்த கெளதம முனிவரை எப்படி முற்றும் துறந்தவர் என்று சொல்ல முடியும்? வெறும் ‘துறந்தவர்” என்றும் சொல்லமுடியாத போது முற்றும் துறந்தவர் என்று எப்படி கூறமுடியும்? என்னை?

குறளாசிரியரோ முற்றும் துறந்தவர்கள் பெருமையை சொல்லவருகிறார்? கெளதம முனிவர் துறந்தவரே அல்லர் அப்படியிருக்க கெளதம முனிவருடைய பெருமையை இக்குறள் கூறுகிறது என்பது எங்ஙனம் பொருந்தும்? சிந்திக்கவும்!

ஆதலால், முற்றும் துறந்தவர்கள் யாரையும் சாபம் விடமாட்டார்கள் என்பதம் அப்படி சாபம் விடுபவர்கள் முற்றும் துறந்தவர்கள் ஆகமாட்டார்கள் என்பதும் பெறப்படுகிறது. என்னை? அது நிற்க!

இன்னும் சிலருக்கு சந்தேகம் இருக்கக்கூடும் இல்லையா? கீழே வரும் சில குறட்பாக்கள் மூலம் அந்த சந்தேகங்களை களைய முயற்சிக்கிறேன்.

குறளாசிரியர் “துறவு” என்பதைப்பற்றி கூறுவதைக் காணலாம்.

“அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய எல்லாம் ஒருங்கு” - 343

என்னுடைய உரை: துறவு என்பது என்ன? அடக்க வேண்டும் ஐந்து புலன்களையும் (புலன்களால் வரும் இச்சையை நுகர்ச்சியை), விட்டுவிட வேண்டும் எதையெல்லாம்? எது எது வேண்டும் என்று நினைக்கிறோமோ அவற்றையெல்லாம் விட்டுவிட வேண்டும். இங்கு ‘வேண்டிய’ என்பது மிகுபொருள் பொதிந்ததாம். மனைவி, மக்கள் (பிள்ளைகள்), சுற்றம், உறவினர் முதல் நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் உட்பட அனைத்தையும் குறிக்கும்.

“தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்’ - 348

என்னுடைய உரை: தீரத் துறந்தவரே தலைப்பட்டார். தீர என்பது யான், எனது என்ற யாவற்றையும் துறந்தவரே தலைப்பட்டார். அஃதாவது வீடுபேறு பெறுவர் என்பதும் தீரத் துறக்காதவர்களுக்கு அப்பேறு இல்லையாம் என்பது கருத்து.
எனவே, அக்குறள் முற்றும் துறந்தவர்களின் பெருமை சொல்லவருகிறதே ஒழிய இல்லறத்தானின் பெருமையைச் சொல்ல வரவில்லை என்பதை நன்கறியலாம். இதனற்றான் யான் மணக்குடவர் உரை சிறந்தது என்று கூறலுற்றேன்!

சமணக் கருத்து

சமணக் கொள்கைப்படி இருவினையாகிய நல்வினையையும், தீயவினையையும் அகற்றினால்தான் வீடுபேறு கிட்டும். இறைவனாக விளங்க முடியும். இருவினை சேரா இறைவன் என்பதும் தேவர் வாக்கன்றோ? சமணத்தின்படி, உயிர்கள் தத்தம் வினைகளின்படி நான்கு கதிகளை அடையும். அவை மனிதக்கதி, தேவக்கதி, மிருகக்கதி, நரகக்கதி என்பனவாம். உயிர்கள் முறையே நல்வினை கட்டினால் தேவக்கதி, மனிதக்கதியையும், தீவினை கட்டினால் விலங்குக்கதி, நரகக்கதியையும் அடையும். 

இக்கதிகளில் மனிதக்கதியே சிறந்ததாம்! அரிதரிது மானிடராய் பிறத்தலரிது என்பது சமணப் பிராட்டி அவ்வை வாக்கு. மனிதக்கதியில் இருந்தே “சிவகதி”யடைய முடியும்; அஃதாவது வீடுபேறு அடைய முடியும் என்பது சமணக் கோட்பாடு. (சிலப்பதிக்காரத்தில் “சிவகதி நாயகன்” என்று அருக பகவான் போற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.)

இந்திரன்

தேவக்கதியில் பிறந்தவர்களை தேவர்கள் என்றும் அழைக்கிறது சமணம். இவர்களுக்கு தலைவன் ‘இந்திரன்” எனப்படுபவன். இங்கு இந்திரன் என்பது ஒருவர் அல்லர். தேவர்களில் தலைசிறந்தவர்களை ‘இந்திரப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். ஆதலால், இந்திரப் பதவி என்பது நன்னடத்தை உள்ள ஒருவரே வகிக்க முடியும். இங்கு கூறப்படும் இந்திரன் வைதிக சமயத்தில் கூறப்படும் இந்திரன்போல் அல்லன். “சமண இந்திரன்” நன்னடத்தை உள்ளவன். காமுகன் அல்லன். மொழிக்கு இலக்கணம் படைத்த முனைவன். பேரறிஞன். இதனால் இந்திரன் பதவி என்பது நன்னெறியுள்ள உயிர்களுக்கே கிடைக்கும் பேறு. 

இந்திரன் பணிதல்

சமண மரபுப்படி, எவர் ஒருவர் தம் ஐந்து புலன்களையும் தவமேற்றி “மெய்யுணர்வு” (வாலறிவு) பெறுகிறாரோ அப்போது இந்திரன் தன் அவதி ஞானத்தால் அறிந்து அவர் முன் மண்டியிட்டு வணங்குவான் என்பது கருத்து.

1. தேவக்கதி என்பது கிடைத்தற்கரியக் கதி. அவற்றிலும் இந்திரப் பதவி அடைவதென்பது பெரும்பேறு. 
2. அப்பேற்ப்பட்ட பேறு பெற்ற இந்திரனே மனிதக்கதியில் பிறந்து முற்றும் துறந்துவர்களை வணங்கினான் என்றால் ‘முற்றும் துறந்தவர்” ஆற்றல் எத்தகையது என்பது சொல்லாமல் விளங்கும்!

இது தீர்த்தங்கரர்களுக்கும் பொருந்தும். எப்படியெனின்,

கடை கல்யாணம்

தீர்த்தங்கரர் வாழ்க்கையில் முக்கிய ஐந்து சம்பவங்களை பஞ்ச கலியாணங்கள் என்று பெயரிட்டு அழைக்கிறது சமணம். அவை முறையே, கர்ப்பாவதரண கல்யாணம், ஜன்மபிஷேக கல்யாணம், தீட்சாக் கல்யாணம், வேலாற்பத்தி கல்யாணம் மற்றும் பரிநிர்வாணக் கல்யாணம் என்பனவாம். இதில் தீர்த்தங்கர பகவான் வேலாற்பத்திக் கல்யாணம் என்னும் வாலறிவு பெறும்போது விசும்புலகில் உள்ள இந்திரனுடைய சிம்மாசனம் ஆடுமாம். இதனால், இந்திரன் தீர்த்தங்கர பகவான் வாலறிவு பெற்றதை உணர்ந்து, அவரைக் கண்டு அடிபணிந்து வணங்குவான் என்பதும் ஈண்டு நினைத்தற்பாலது.

எடுத்துக்காட்டாக,

“பயம்பகை பணித்த லார்வஞ் செற்றமே கவர்ச்சி சோகம்
வியந்திடல் வெகுளி சோபம் வேர்த்திடல் விரும்பல் கேதம்
மயங்குதல் தெளிதல் சிந்தை வருந்துதல் களித்தல் மாயம்
இயம்பருந் திறந்த வின்ன யாவையு மெறிந்தி ருந்தார்’
- மேருமந்தர புராணம் (1385)

உரை: இப்பாடல் முற்றும் துறந்தவர் இலக்கணத்தைச் சொல்கிறது. 


“ ஆயிடை யமரர் தங்கண் முடியொடா சனந்து ளங்கப்
பாயநல் லவதி யென்னும் பருதியாற் கண்ட தெல்லாம்
ஆயிரங் கண்ணி னானை யதிபதி யாகச் சூழ்ந்து
மாயிரும் விசும்பும் மண்ணும் மறையவா னவர்கள் வந்தார் 
- மேருமந்தர புராணம் (1386)

உரை: மேலே கூறப்பட்ட இயல்பைக் கொண்ட துறந்தார் முன், ‘ முடியுடன் - கீரிடமுடன், ஆசனமும் - இருக்கையும்’ சனந்து - ஆட அல்லது சலிக்க கண்டு அவதி ஞானத்தால் உணர்ந்து அவரைக் காண வந்தார்கள்.

மேலும்,

“அரம்பையர் நடம்பு ரிந்தா ரம்பர மரங்க மாக
.......
.......
யுரங்கடிந் திருந்த வீர ருறுதுணை யடிப ணிந்தார்”
- மேருமந்தர புராணம் (1388)

உரை: அப்படி அமரர்கள் சூழவந்த இந்திரன் அவர் இரண்டு பாதம் அடி பணிந்தான்.
என்று மேலே காட்டியப் பாடல் உரைக்கிறது.

இன்னுமொரு காட்டு,

“கேவல முற்பத்தி யாமள வேகிளர் பூசனைக் கென்
றேவலி யற்றுமவ் விந்திர னுகுமுன் னெண்குணத்தெங்
காவல னைக்கவிப் பார்வளைப் பார்முளைப் பார்களைப்போல்
மூவுல கத்துள்ள நால்வகைத் தேவரு முன்னுவரே”
- திருநூற்றந்தாதி (11)

உரை: எட்டு குணங்களையுடைய என்னை காப்பவராகிய தலைவருக்குக் கேவல ஞானமானது தோன்றிய பொழுது, நால்வகைத் தேவர்களும், அவர்களுடைய தலைவனான இந்திரனும் அவருக்கு சிறப்பு செய்ய முன்னுவரே - வருவரே என்பது பொருள்.

முடிபு

“ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும் புளார்கோமான்
இந்திரனே சாலும் கரி”

இந்தக் குறளில் இன்னொன்றையும் கவனத்தில் கொள்ளவேண்டும். ‘அகல்விசும் புளார்கோமான் இந்திரனே” என்பது மேலுலகத்தின் கோமானான இந்திரனே என்று இந்திரனை உயர்த்தியே கூறப்பட்டிருக்கிறது. கோமான் என்று சிறப்படை மொழிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. மாற்றான் மனைவியை வஞ்சித்தானுக்கு கோமான் என்று சொல்வரோ? அவன் கயவன், காமுகன் அல்லவா? “அகல்விசும் புளார்கயவன் இந்திரனே” என்று தானே பாடியிருக்கவேண்டும். அவ்வாறில்லாமல் சிறப்பு அடைமொழி கொடுத்து ஏன் கூறவேண்டும்?. குறளாசிரியர் உட்கருத்து யாது என்றால், கிடைதற்கரிய பேறு பெற்ற இந்திரனைவிட, முற்றும் துறந்து, ஐந்து புலன்களை அடக்கியவர்களே சிறந்தவர்கள் என்றுக் காட்டவே, இந்திரனை சான்றுக் காட்டினார் என்றறிக!.


அறம் மறவற்க!
====================================

இரா.பானுகுமார்



 
இந்திரவிழா எடுத்ததும்  மருதநிலத்து இறை என்பதும் புரட்டா ?
இந்திரன் கௌதமரால் சாபம் பெற்ற கதை நூலின் மூலம் / காலம் என்ன  ?

2) 2.   ஏந்திய கொள்கையார் இடைமுரிந்து

  வேந்தனும் வேந்து கெடும் (899)

  - இந்திர பதவியைப் பெற்ற நகுடன் அகத்தியர் சாபத்தால் மலைப்பாம்பானது


இந்த கதையில் யாரும் சினம் கொண்டதாக இல்லை ?


நன்றி 

சுரேஷ்குமார் 


Thenee MK

unread,
Nov 16, 2017, 11:01:54 PM11/16/17
to mintamil
#தவத்தின் வலிமையால் மரணத்தை வென்று பிறவாநிலையடையலாம் என்பது கருத்து#

அதைத்தான் மார்கண்டேயன் தொன்மக்கதை கூறுகின்றது. அதனை முழுமையாகப் படிக்காமலேயே பேசினால் வாதத்திற்கு உதவாது. 

மு. கமலநாதன்
  




You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/1OG76-q96IM/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Banukumar Rajendran

unread,
Nov 16, 2017, 11:18:15 PM11/16/17
to மின்தமிழ்
2017-11-17 9:31 GMT+05:30 Thenee MK <ipohs...@gmail.com>:
#தவத்தின் வலிமையால் மரணத்தை வென்று பிறவாநிலையடையலாம் என்பது கருத்து#

அதைத்தான் மார்கண்டேயன் தொன்மக்கதை கூறுகின்றது. அதனை முழுமையாகப் படிக்காமலேயே பேசினால் வாதத்திற்கு உதவாது. 

:-))))

யான் தங்களுக்கு எழுதவில்லையே. அப்புறம் வாதம்து எங்கே வந்தது. :-)

சுரேஷ் அவர்களுக்கு என்னுடைய பதிலை எழுதினேன். அக்குறள்
மார்கண்டேயனை குறிக்கிறது என்று அவர் எடுத்து கொண்டால் எனக்கு எந்த பிரச்னையுமில்லை. :-)

சரியான உரையை எடுத்துக் காட்டுவதோடு என் பணி முடிந்துவிட்டது.

நரசிங்கபுரத்தான்

unread,
Nov 16, 2017, 11:44:55 PM11/16/17
to mintamil
என் பள்ளியில் மார்க்கண்டேயன் நாடகத்தில் நடித்திருத்திக்கிறேன் .(கதை முழுவதும் காட்சிப் படுத்தினோம் )
தவத்திற்கும் மார்க்கண்டேயணனுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை திருக்குறள் நோக்கில் .

இறைவனடி பற்றி தொழுதலே தவமாக சைவ சித்தாந்தத்தில் இருக்கலாம் .
ஆனால் அதற்கும்  இந்தக் குரலுக்கும் தொடர்பு இல்லை.

இதுவே என் முடிவு .

நன்றி 
சுரேஷ்குமார் 


2017-11-16 8:57 GMT+09:00 நரசிங்கபுரத்தான் <jaisure...@gmail.com>:
1.   கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
 ஆற்றல் தலைபட் டவர்க்கு (269)

  - மார்க்கண்டேயன் யமனை வென்றது


16 வயதுடைய மார்க்கண்டேயன் தவ வலிமையால் யமனை வென்றதாக கதை இல்லை .

இறைவனிடம் சரணாகதி அடைந்ததால் யமனை வென்றான் . தவத்தின் பெருமை கூற இந்தக் கதை பொருந்தாது 


.   பெயக்கண்டும் நஞ்சுஉண்டு அமைவர் நயத்தக்க

  நாகரிகம் வேண்டு பவர் (580)

   - சிவபெருமான் நஞ்சுண்டது


கண்ணோட்டத்த்திற்கும் / நாகரிகத்திற்கும்  சிவபெருமான் நஞ்சுண்ட கதை எவ்வாறு பொருந்துகின்றது 

Banukumar Rajendran

unread,
Nov 17, 2017, 12:56:23 AM11/17/17
to மின்தமிழ், Kalai Email, naga rethinam
காளை ஐயா,


யான் எழுதிய எழுத்துகளை திருத்தி
எழுதவேண்டா.  இது மடலாடல் முறையில்லை. 

தாங்கள் எழுத வந்த கருத்தை தனியாக எழுதுங்கள்.

இரா.பானுகுமார்



நா.ரா.கி.காளைராசன்

unread,
Nov 17, 2017, 11:35:35 AM11/17/17
to mintamil, Kalai Email, thiruppuvanam, naga rethinam, Oru Arizonan

வணக்கம்.


On 17-Nov-2017 8:36 AM, "தேமொழி" <jsthe...@gmail.com> wrote:
>
>
>
> On Thursday, November 16, 2017 at 8:14:01 AM UTC-8, கி. காளைராசன் wrote:
>>>
>>> கிண்டல் செய்யவில்லை ஐயா.
>>>
>>> ஏதேதோ சம்பந்த சம்பந்தமில்லாமல் எழுதுகின்றீர்கள். கேட்டால் இதுதான் ஆதாரம் என்று
>>>
>>> சொல்கிறீர்கள். ஆதாரம் என்பது மற்றவர் கட்டுரையை எதிர்ப்பது ஆகாது.  மூலச் சமண நூல்களிலிருந்து
>>> எடுத்துக்காட்டுத் தரவேண்டும். அதுதான் முதல்தரமான தரவு. அதைதான் தங்களிடம் எதிர்ப்பார்த்தேன்.
>>>
>>> பிறர் எழுதிய கட்டுரையை மறுப்பது ஆதாரம் என்று சொல்லமுடியாது.  அது முதல்தர சான்றாகுமா?
>>>
>>> முதன்மையான சான்றென்பது மூலத்திலிருந்து (மூலநூற்களிலிருந்து) சான்றுக் காட்டவேண்டும் ஐயா. முதலில் இதைப் புரிந்துக்கொள்ளுங்கள்.
>>>
>>> மறுபடியும் சொல்கிறேன். குறள் எழுந்த காலத்தில் பௌத்தமும் சமணமும் தோன்றவில்லை.
>
>
> ///குறள் எழுந்த காலத்தில் பௌத்தமும் சமணமும் தோன்றவில்லை.////
>
> உங்கள் காலவாராய்ச்சியின் படி குறள் எழுதப்பட்ட காலம் என்னவென்று அறியவிரும்புகிறேன்.
>
> ..... தேமொழி

குறளின் காலத்தைக் கண்டறியும்படியான சொற்கள் ஏதும் குறளில் இடம் பெறவில்லை.  ஆதலின் குறள் எழுதப்பட்ட காலம் என்னவென்று அறிய முடியாது.

எடிசன் பல்பு கண்டுபிடித்தார்.  பல்பு இன்றுவரை பயன்பாட்டில் உள்ளது.  உற்பத்தி தேதி குறிப்பிடப்படாத பல்பு எந்தநாளில் செய்யப்பட்டது என்று எப்படிக் கூற முடியும்?

குறளின் பாயிரத்தில் உள்ள நான்கு அதிகாரங்களும் நான்கு வேதங்களின் சாரமாக உள்ளதால், திருக்குறள் வேத காலத்திற்குப் பிந்தியது என்று மட்டும் கூறலாம்.
குறளின் பாயிரத்தில் உள்ள நான்கு அதிகாரங்களும் நான்கு வேதங்களின் சாரமாக உள்ளதால், திருக்குறள் வேத காலத்திற்குப் பிந்தியது என்று கூறலாம்.

அருகர் முதலான யாதொரு தீர்த்தங்கர் பெயரும் திருக்குறளில் இடம்பெறவில்லை.
எனவே


///குறள் எழுந்த காலத்தில் பௌத்தமும் சமணமும் தோன்றவில்லை.////

என்பது உறுதி.

அன்பன்


கி. காளைராசன்

>
>
>  
>>>


>>> திருக்குறளில் உள்ள “ஆதி, பகவன்“  என்ற இரண்டு சொற்களையும் ஒன்றாக்கி “ஆதிபகவன்“ என்ற புதிய தொரு சொல்லை உருவாக்கி, பகவன் என்ற சொல்லைப் பகவான் ஆக்கித் திருக்குறளுக்குச் சொந்தம் கொண்ட முனைகின்றனர். 
>>>
>>> புத்தம் என்ற சொல்லோ சமணம் என்ற சொல்லாட்சியோ தோன்றாத காலம். அருகனை பார்சுவரைதத் தொழுவோர் இருந்திருக்கலாம். ஆயின் அவர்களுக்கென்று
>>>
>>> மெய்யியல் தோன்றவில்லை. ஒரு குறிப்பு கொடுக்கிறேன். தொன்மையான சமண நூல்களில் “ஆதி, பகவன்“ எங்கேயேனும்  கூறப்பட்டிருக்கின்றனவா என்று பாருங்கள். எங்கும் இருக்காது. அருகனும் பாசுவநாதரும் மகாவீரரும் சமயங்களைத் தோற்றுவிக்காத காலம் அது.  
>>>
>>> அருகனோ, பாசுவநாதரோ, மகாவீரரோ ஆதி அல்ல என்பதையும் நினைவில் நிறுத்துங்கள்.
>>>
>>>
>>> (குறளை எல்லோரும் கொண்டாடலாம், ஆனால் அது இந்து சமயத்திற்கு உரிமையானது.)
>>
>>
>> அன்பன்
>> கி.காளைராசன் 
>>

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Thenee MK

unread,
Nov 17, 2017, 11:36:16 AM11/17/17
to mintamil

சிவசிவ


'நீத்தார் பெருமை' என்னும் அதிகாரத்திற்கான முன் விளக்கத்தில் பரிமேழலகர் கீழ்காணுமாறு கூறுகின்றார்:


அஃதாவது முற்றத் துறந்த முனிவரது பெருமை கூறுதல். அவ் அறமுதற் பொருள்களை உலகிற்கு உள்ளவாறு உணர்த்துவார் ஆவர்


இவ்வதிகாரத்தில்,


ஐந்து அவித்தான் ஆற்றல் அகல்விசும்புளார் கோமான்

இந்திரனே சாலும் கரி’ 


குறளுக்கு பரிமேழலகர் உரையாவது:


புலன்களினால் செல்கின்ற அவா ஐந்தனையும் அடக்கினானது வலிக்கு, அகன்ற வானத்துள்ளார் இறைவன் ஆகிய இந்திரனே அமையும் சான்று.


மேலும், தான் ஐந்து அவியாது சாபம் எய்தி நின்று, அவித்தானது ஆற்றல் உணர்த்தினான் ஆகலின், இந்திரனே சாலும் கரி என குறிப்பும் தருகின்றார்.


அவர் அவ்வாறு குறித்தது, கௌதம முனிவரின் மனைவி அகலிகையை தேவர்களின் தலைனாகிய இந்திரன் சூது செய்து புனர்ந்த தொன்மக் கதையாகும். அச்சம்பவத்தை அறிந்த கௌதமர், இந்திரனுக்குக் கொடுத்தச் சாபத்தினால் ஏற்பட்ட இழிவைச் சுட்டிக்காட்டி, இந்திரன் போன்ற தேவர் ஐம்புலன் அவித்தலுக்கு ஆற்றலில்லாதவர் மாறாக உயிர்குலத்தின் ஐம்புலன்களையும் அடக்கவல்ல ஆற்றலுடையவன் இறைவன் ஒருவனே என்பதை அக்கதையின் வழி அறிய முடியுமென்பதை பரிமேலழகர் உணர்த்துகிறார்.


ஆக, நீத்தார் என்பார் ஐம்புலனை அடக்கவல்லவனான இறைவனையறிந்து அவன் நெறிவழி நிற்றலின் இன்றியமையாமையைக் கூறினார் திருவள்ளுவர்.


இக்குறளுக்குச் சமணரின்  பொருள் விளக்கத்தை கே.எம். வேங்கடராமையா அவர்கள் எழுதி சரசுவதி மகால் நூல் நிலையம் வெளியிட்ட (1991) நூலிலிருந்து இவ்விடம் பதிவு செய்கிறேன்.


‘‘ஐம்புலன்களையும் ஆசையின் வழியே போகவொட்டாம லடக்கினவனுடைய வலிமைக்குத் தேவலோகத்திலே தேவர்களுக்கெல்லாம் ராசாவாயிருக்கப்பட்ட தேவேந்திரனே சரி (சாட்சி), பின்னையொருவருஞ் சரியல்ல (சாட்சியல்ல) வென்பதாம்’.


சமணர் ஏன் தேவேந்திரனே ஐம்புலனையும் அடக்கவல்லவனென்று கூறவேண்டும்?    


இதன் பின்புலம் யாதெனில், குறளுக்கு இவ்வாறு விளக்கம் கூற பிந்நாளில் சமணர் ஒரு தொன்மக்கதையைப் புனைந்து அவர்தம் மகாபுராணம் என்னும் நூலில் எழுதி வைத்துக் கொண்டனர். ஏன் இப்புராணம் பிந்நாளில் எழுதப்பட்டதென்று கூறினேன் எணின் அவர்தம் மத போதகரான அருகருகரின் உயர்வினைக் காட்ட அவர்களுக்கும் தொன்மக்கதைகள் பல தேவைப்பட்டன.


அதற்கு ஏதுவாக சமணரின் புராணங்களாகிய மேருமந்த புராணம், ஸ்ரீ புராணம், மகாபுராணம் போன்ற நூல்களில் அவர்தம் மத போதகரான அருகரே விண்ணவன், சிவன் என்பதாகவும் எழுதி வைத்துக் கொண்டுள்ளனர். அதனாலேயே தமிழர்வழி வந்த சமணர் சிவகதி அடைவதைக் கூறுகின்றார்.


சமணர் அல்லாத தமிழருக்கு மேற்கோள் காட்டும் சமணரின் சங்க இலக்கியங்கள் மற்றும் பிற்கால இலக்கியங்களை மட்டும் கண்டு மயக்கமடையாது அவர்தம் மேற்கூறிய புராணங்களையும் கற்றறிந்து யார் எவரைப் பின்பற்றி தொன்மக்கதைகளை எழுதி வைத்துக் கொண்டார் என்பதை அறிந்து கொள்ளலாம்.


அதனால் திருக்குறளுக்கு விளக்கம் காண விழையும் தமிழர் அயலார் நெறிவழி விளக்கம் காண புகுமுன் அவர்களுக்கு இக்கருத்துருவாக்கங்களை ஏற்படுத்தும் அயலார் மொழி நூல்களையும் கற்றறிதல் அவசியம். இல்லையேல், அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் தமிழரின் தொடையில் கயிறு திரித்துக் கொண்டு போவார் இத்தகையோர். சிவசிவ.


மு. கமலநாதன்



You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/1OG76-q96IM/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Thenee MK

unread,
Nov 17, 2017, 11:44:33 AM11/17/17
to mintamil
தங்களின் முடிவை மதிக்கிறேன்.

இவ்வாறான தொன்மக்கதைகள் நேரிடையாகக் கூறப்படவில்லையானாலும் அத்தொன்மக்கதைகளை அறிந்தோர் அக்குறளுக்கான பொருளை சுலுவில் அறிந்து கொள்ளலாம் என்பதே தமிழறிஞர் கருத்து.

மு. கமலநாதன்.


நா.ரா.கி.காளைராசன்

unread,
Nov 17, 2017, 11:54:37 AM11/17/17
to mintamil, Kalai Email, naga rethinam

வணக்கம்.


On 17-Nov-2017 11:26 AM, "Banukumar Rajendran" <banuk...@gmail.com> wrote:
>
> காளை ஐயா,
>
>
> யான் எழுதிய எழுத்துகளை திருத்தி
> எழுதவேண்டா.  இது மடலாடல் முறையில்லை. 
>

அவ்வாறு எழுதுவது எனக்குத் தட்டச்சு செய்ய எளிமையாய் இருந்தது.
நான் எனது கருத்தை உங்களது தொனியில் எழுதினேன். எழுத்தா முக்கியம் கருத்துத்தான் முக்கியம் என்று கருதினேன். 

பொதுமேடையில் அவரவர் அவரவரது கருத்துக்களை முன் வைக்கிறோம். 

உங்களுக்கு விருப்பம் இல்லையென்றால் இனி இவ்வாறு செய்ய மாட்டேன்.

> தாங்கள் எழுத வந்த கருத்தை தனியாக எழுதுங்கள்.
>
> இரா.பானுகுமார்
>

நான் கேட்பது என்ன என்று படித்து விட்டீர்கள்.  எனது அதே கருத்தைத் தனியாக வேறு எதற்காக எழுத வேண்டும். எனது கேள்விகளுக்குப்
பதில் இருந்தால் சொல்லுங்கள் அது போதும்.

அன்பன்
கி. காளைராசன்
>
>
>

> 2017-11-16 21:43 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
>>>
>>> கிண்டல் செய்யவில்லை ஐயா.
>>>
>>> ஏதேதோ சம்பந்த சம்பந்தமில்லாமல் எழுதுகின்றீர்கள். கேட்டால் இதுதான் ஆதாரம் என்று
>>>
>>> சொல்கிறீர்கள். ஆதாரம் என்பது மற்றவர் கட்டுரையை எதிர்ப்பது ஆகாது.  மூலச் சமண நூல்களிலிருந்து
>>> எடுத்துக்காட்டுத் தரவேண்டும். அதுதான் முதல்தரமான தரவு. அதைதான் தங்களிடம் எதிர்ப்பார்த்தேன்.
>>>
>>> பிறர் எழுதிய கட்டுரையை மறுப்பது ஆதாரம் என்று சொல்லமுடியாது.  அது முதல்தர சான்றாகுமா?
>>>
>>> முதன்மையான சான்றென்பது மூலத்திலிருந்து (மூலநூற்களிலிருந்து) சான்றுக் காட்டவேண்டும் ஐயா. முதலில் இதைப் புரிந்துக்கொள்ளுங்கள்.
>>>
>>> மறுபடியும் சொல்கிறேன். குறள் எழுந்த காலத்தில் பௌத்தமும் சமணமும் தோன்றவில்லை. திருக்குறளில் உள்ள “ஆதி, பகவன்“  என்ற இரண்டு சொற்களையும் ஒன்றாக்கி “ஆதிபகவன்“ என்ற புதிய தொரு சொல்லை உருவாக்கி, பகவன் என்ற சொல்லைப் பகவான் ஆக்கித் திருக்குறளுக்குச் சொந்தம் கொண்ட முனைகின்றனர். 
>>>
>>> புத்தம் என்ற சொல்லோ சமணம் என்ற சொல்லாட்சியோ தோன்றாத காலம். அருகனை பார்சுவரைதத் தொழுவோர் இருந்திருக்கலாம். ஆயின் அவர்களுக்கென்று
>>>
>>> மெய்யியல் தோன்றவில்லை. ஒரு குறிப்பு கொடுக்கிறேன். தொன்மையான சமண நூல்களில் “ஆதி, பகவன்“ எங்கேயேனும்  கூறப்பட்டிருக்கின்றனவா என்று பாருங்கள். எங்கும் இருக்காது. அருகனும் பாசுவநாதரும் மகாவீரரும் சமயங்களைத் தோற்றுவிக்காத காலம் அது.  
>>>
>>> அருகனோ, பாசுவநாதரோ, மகாவீரரோ ஆதி அல்ல என்பதையும் நினைவில் நிறுத்துங்கள்.
>>>
>>>
>>> (குறளை எல்லோரும் கொண்டாடலாம், ஆனால் அது இந்து சமயத்திற்கு உரிமையானது.)
>>
>>
>> அன்பன்
>> கி.காளைராசன் 
>>
>> --
>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

>> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>> ---
>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.


>> For more options, visit https://groups.google.com/d/optout.
>
>

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

nkantan r

unread,
Nov 17, 2017, 1:49:36 PM11/17/17
to மின்தமிழ்
மழித்தல் என்றால் (கத்தி கொண்டு) சவரம் செய்தலா (அல்லது) பிடுங்குதலா? நான் கேட்கும் இக்கேள்வியின் நுட்பம் புரிந்து பதில் தரவும்.

rnk

தேமொழி

unread,
Nov 17, 2017, 10:09:45 PM11/17/17
to mint...@googlegroups.com


On Friday, November 17, 2017 at 8:35:35 AM UTC-8, கி. காளைராசன் wrote:

வணக்கம்.
On 17-Nov-2017 8:36 AM, "தேமொழி" <jsthe...@gmail.com> wrote:
>
>
>
> On Thursday, November 16, 2017 at 8:14:01 AM UTC-8, கி. காளைராசன் wrote:
>>>
>>> கிண்டல் செய்யவில்லை ஐயா.
>>>
>>> ஏதேதோ சம்பந்த சம்பந்தமில்லாமல் எழுதுகின்றீர்கள். கேட்டால் இதுதான் ஆதாரம் என்று
>>>
>>> சொல்கிறீர்கள். ஆதாரம் என்பது மற்றவர் கட்டுரையை எதிர்ப்பது ஆகாது.  மூலச் சமண நூல்களிலிருந்து
>>> எடுத்துக்காட்டுத் தரவேண்டும். அதுதான் முதல்தரமான தரவு. அதைதான் தங்களிடம் எதிர்ப்பார்த்தேன்.
>>>
>>> பிறர் எழுதிய கட்டுரையை மறுப்பது ஆதாரம் என்று சொல்லமுடியாது.  அது முதல்தர சான்றாகுமா?
>>>
>>> முதன்மையான சான்றென்பது மூலத்திலிருந்து (மூலநூற்களிலிருந்து) சான்றுக் காட்டவேண்டும் ஐயா. முதலில் இதைப் புரிந்துக்கொள்ளுங்கள்.
>>>
>>> மறுபடியும் சொல்கிறேன். குறள் எழுந்த காலத்தில் பௌத்தமும் சமணமும் தோன்றவில்லை.
>
>
> ///குறள் எழுந்த காலத்தில் பௌத்தமும் சமணமும் தோன்றவில்லை.////
>
> உங்கள் காலவாராய்ச்சியின் படி குறள் எழுதப்பட்ட காலம் என்னவென்று அறியவிரும்புகிறேன்.
>
> ..... தேமொழி

குறளின் காலத்தைக் கண்டறியும்படியான சொற்கள் ஏதும் குறளில் இடம் பெறவில்லை.  ஆதலின் குறள் எழுதப்பட்ட காலம் என்னவென்று அறிய முடியாது.

எடிசன் பல்பு கண்டுபிடித்தார்.  பல்பு இன்றுவரை பயன்பாட்டில் உள்ளது.  உற்பத்தி தேதி குறிப்பிடப்படாத பல்பு எந்தநாளில் செய்யப்பட்டது என்று எப்படிக் கூற முடியும்?

குறளின் பாயிரத்தில் உள்ள நான்கு அதிகாரங்களும் நான்கு வேதங்களின் சாரமாக உள்ளதால், திருக்குறள் வேத காலத்திற்குப் பிந்தியது என்று மட்டும் கூறலாம்.


திருக்குறளின் பாயிரத்தில்  கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை ஆகிய மூன்று அதிகாரங்களும் வள்ளுவரால் அமைக்கப்பட்டவை அல்ல  என்று வ. உ. சிதம்பரம் பிள்ளை கருதுகிறார்.
உங்கள் கோணத்தை தெரிந்து கொள்ள விரும்புகிறேன் 

..... தேமொழி 

 

குறளின் பாயிரத்தில் உள்ள நான்கு அதிகாரங்களும் நான்கு வேதங்களின் சாரமாக உள்ளதால், திருக்குறள் வேத காலத்திற்குப் பிந்தியது என்று கூறலாம்.


அருகர் முதலான யாதொரு தீர்த்தங்கர் பெயரும் திருக்குறளில் இடம்பெறவில்லை.
எனவே
///குறள் எழுந்த காலத்தில் பௌத்தமும் சமணமும் தோன்றவில்லை.////
என்பது உறுதி.

அன்பன்
கி. காளைராசன்

>
>
>  
>>>
>>> திருக்குறளில் உள்ள “ஆதி, பகவன்“  என்ற இரண்டு சொற்களையும் ஒன்றாக்கி “ஆதிபகவன்“ என்ற புதிய தொரு சொல்லை உருவாக்கி, பகவன் என்ற சொல்லைப் பகவான் ஆக்கித் திருக்குறளுக்குச் சொந்தம் கொண்ட முனைகின்றனர். 
>>>
>>> புத்தம் என்ற சொல்லோ சமணம் என்ற சொல்லாட்சியோ தோன்றாத காலம். அருகனை பார்சுவரைதத் தொழுவோர் இருந்திருக்கலாம். ஆயின் அவர்களுக்கென்று
>>>
>>> மெய்யியல் தோன்றவில்லை. ஒரு குறிப்பு கொடுக்கிறேன். தொன்மையான சமண நூல்களில் “ஆதி, பகவன்“ எங்கேயேனும்  கூறப்பட்டிருக்கின்றனவா என்று பாருங்கள். எங்கும் இருக்காது. அருகனும் பாசுவநாதரும் மகாவீரரும் சமயங்களைத் தோற்றுவிக்காத காலம் அது.  
>>>
>>> அருகனோ, பாசுவநாதரோ, மகாவீரரோ ஆதி அல்ல என்பதையும் நினைவில் நிறுத்துங்கள்.
>>>
>>>
>>> (குறளை எல்லோரும் கொண்டாடலாம், ஆனால் அது இந்து சமயத்திற்கு உரிமையானது.)
>>
>>
>> அன்பன்
>> கி.காளைராசன் 
>>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

> To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com


> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Thenee MK

unread,
Nov 18, 2017, 12:24:15 AM11/18/17
to mintamil
திருக்குறளில் அறத்துப்பாலுக்கு விளக்கவுரை எழுதி 1935-ல் ஒரு நூலை வெளியிட்டார் வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்கள்.

அந்நூலுக்கு வ.உ.சி. அவர்கள் வரைந்த முன்னுரையை (9.2.1935) இத்துடன் இணைக்கிறேன்.

அதில் எங்காவது கடவுள் வாழ்த்துவான்சிறப்புநீத்தார் பெருமை ஆகிய மூன்று அதிகாரங்களும் வள்ளுவரால் எழுதப்பட்டவையல்ல என்று வ. உ. சிதம்பரம் பிள்ளை கூறியிருக்கின்றாரா என்று காட்டுங்கள் பார்ப்போம்?

மேற்கூறிய திருக்குறள் அறத்துப்பால் நூலை வெளியிடும் பொழுது அவரே முதல் மூன்று அதிகாரத்திற்கும் விளக்கவுரை எழுதிவிட்டுப் பின்னர் அது இடைசெருகல் என்று கூறினால் தவறு யாருடையது?

தமது சொந்த கருத்தையே பிற்காலத்தில் அவர் மறுத்துக் கூற வேண்டிய காரணமென்ன?

இன்றுபோல அன்றைய சூழ்நிலை இல்லை. அயலார் காலனித்துவ அரசாங்கத்தின் உதவியுடன் அயலார் மொழிக்கு முன்னுரிமைக் கொடுத்துத் தமிழைப்  பிற்படுத்தியால் அக்கால தமிழரிஞரில் ஒரு பகுதியினர் வடமொழியை ஒட்டு மொத்தமாக நிராகரித்தனர். இதனை எதிர்கொள்ள வேண்டி அயலார் மொழிவயப்பட்ட தமிழர் தொடுத்த எதிர்ப்பால், வ.உ.சி. போன்றோர் அத்தகைய மறுப்புக் கொள்கைக்கு உந்தப்பட்டனர். அவரைப் போலவே கா.சு. பிள்ளை அவர்களும் இதில் முழுவீச்சில் இறங்கினார். இப்படி இன்னும் பல தமிழறிஞர் அக்காலத்தில் செயல்பட்டனர். தமிழ் இன்று மறுவாழ்வு பெற்றதற்கு இவர்களே  காரணகருத்தாக்கள்.  

அதனால் அக்காலத்தில் இருந்த சூழ்நிலை அறிந்து ஏன் இத்தகைய போங்குகள் ஏற்பட்டன என்பதை உய்த்தறிவது அவசியமாகின்றது. அவர் சொன்னார், இவர் சொன்னார் என்பதை மட்டும் எழுதினால் போதாது.  எதனால் அவ்வாறு சொன்னார் என்பதையும் ஆய்ந்தறிந்து கூற வேண்டும். அதுவே நடுநிலைமை வேண்டுவோரின் செயலாக இருக்க முடியும்.

வ.உ.சி அவர்கள் அவ்வாறு பிற்காலத்தில் கூறியதால் அம்மூன்று அதிகாரங்களையும் திருக்குறளிலிருந்து நீக்கி விட்டனரா? அல்லது இதர நடுநிலை தமிழறிஞர்தான் வ.உ.சி அவர்களின் கருத்தை ஏற்றுக் கொண்டனரா? இல்லையே. அப்புறம் ஆதாரமற்ற கருத்துக்களை மீண்டும் மீண்டும் மின் தமிழில் பரவவிடுவதின் நோக்கமென்ன?

முதல் மூன்று அதிகாரங்கள் இடைச்செருகல் என்று கூறுவாறின் அதனைச் செய்தது யார்? எவ்வித நோக்கத்துடன் செய்யப் பட்டது என்பதற்கு ஆதாரமென்ன? அவற்றையெல்லாம் கூறாமல் இடைசெருகல் என்று கூறினால் இவ்வாறு கருத்தெழுதுவார்தான் கருத்துக்குருடரோ என்று எண்ணும் நிலைக்கு மின் தமிழார் தள்ளப்படுவார்.

அன்புடன் மு. கமலநாதன்
  

  


2017-11-18 11:09 GMT+08:00 தேமொழி <jsthe...@gmail.com>:


On Friday, November 17, 2017 at 8:35:35 AM UTC-8, கி. காளைராசன் wrote:

வணக்கம்.
On 17-Nov-2017 8:36 AM, "தேமொழி" <jsthe...@gmail.com> wrote:
>
>
>
> On Thursday, November 16, 2017 at 8:14:01 AM UTC-8, கி. காளைராசன் wrote:
>>>
>>> கிண்டல் செய்யவில்லை ஐயா.
>>>
>>> ஏதேதோ சம்பந்த சம்பந்தமில்லாமல் எழுதுகின்றீர்கள். கேட்டால் இதுதான் ஆதாரம் என்று
>>>
>>> சொல்கிறீர்கள். ஆதாரம் என்பது மற்றவர் கட்டுரையை எதிர்ப்பது ஆகாது.  மூலச் சமண நூல்களிலிருந்து
>>> எடுத்துக்காட்டுத் தரவேண்டும். அதுதான் முதல்தரமான தரவு. அதைதான் தங்களிடம் எதிர்ப்பார்த்தேன்.
>>>
>>> பிறர் எழுதிய கட்டுரையை மறுப்பது ஆதாரம் என்று சொல்லமுடியாது.  அது முதல்தர சான்றாகுமா?
>>>
>>> முதன்மையான சான்றென்பது மூலத்திலிருந்து (மூலநூற்களிலிருந்து) சான்றுக் காட்டவேண்டும் ஐயா. முதலில் இதைப் புரிந்துக்கொள்ளுங்கள்.
>>>
>>> மறுபடியும் சொல்கிறேன். குறள் எழுந்த காலத்தில் பௌத்தமும் சமணமும் தோன்றவில்லை.
>
>
> ///குறள் எழுந்த காலத்தில் பௌத்தமும் சமணமும் தோன்றவில்லை.////
>
> உங்கள் காலவாராய்ச்சியின் படி குறள் எழுதப்பட்ட காலம் என்னவென்று அறியவிரும்புகிறேன்.
>
> ..... தேமொழி

குறளின் காலத்தைக் கண்டறியும்படியான சொற்கள் ஏதும் குறளில் இடம் பெறவில்லை.  ஆதலின் குறள் எழுதப்பட்ட காலம் என்னவென்று அறிய முடியாது.

எடிசன் பல்பு கண்டுபிடித்தார்.  பல்பு இன்றுவரை பயன்பாட்டில் உள்ளது.  உற்பத்தி தேதி குறிப்பிடப்படாத பல்பு எந்தநாளில் செய்யப்பட்டது என்று எப்படிக் கூற முடியும்?

குறளின் பாயிரத்தில் உள்ள நான்கு அதிகாரங்களும் நான்கு வேதங்களின் சாரமாக உள்ளதால், திருக்குறள் வேத காலத்திற்குப் பிந்தியது என்று மட்டும் கூறலாம்.


திருக்குறளில் கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை ஆகிய மூன்று அதிகாரங்களும் வள்ளுவரால் எழுதப்பட்டவையல்ல என்று வ. உ. சிதம்பரம் பிள்ளை கருதுகிறார்.
கடவுள் வாழ்த்துப் பகுதிக்கு அவர் தரும் விளக்கங்களை இங்கு காணலாம் >>> https://groups.google.com/d/msg/mintamil/8RBCeH8tuug/L9FnUIu-AgAJ
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/1OG76-q96IM/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
திருக்குறள் அறப்பால் (வ.உ.சி-யின் முன்னுரை).pdf

தேமொழி

unread,
Nov 18, 2017, 1:08:43 AM11/18/17
to mint...@googlegroups.com


On Friday, November 17, 2017 at 9:24:15 PM UTC-8, தேனீ wrote:
திருக்குறளில் அறத்துப்பாலுக்கு விளக்கவுரை எழுதி 1935-ல் ஒரு நூலை வெளியிட்டார் வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்கள்.

அந்நூலுக்கு வ.உ.சி. அவர்கள் வரைந்த முன்னுரையை (9.2.1935) இத்துடன் இணைக்கிறேன்.
 

உங்கள் உதவிக்கு மிக்க நன்றி.

 

அதில் எங்காவது கடவுள் வாழ்த்துவான்சிறப்புநீத்தார் பெருமை ஆகிய மூன்று அதிகாரங்களும் வள்ளுவரால் எழுதப்பட்டவையல்ல என்று வ. உ. சிதம்பரம் பிள்ளை கூறியிருக்கின்றாரா என்று காட்டுங்கள் பார்ப்போம்?


ஐயா நான் படித்த செய்திக்குச் சான்றுகளையும் இணைத்து நான் கொடுத்தேன். அது செப்டம்பர் 1929 முதல் மார்ச் 1931 காலகட்டத்துக் கட்டுரைகள் 

அது போல அதற்கு மாற்றுக் கருத்து கொடுத்து அதே ஆசிரியர் பின்னர் 1935 இல்   வெளியிட்ட நூலென்று நீங்களும் ஒரு சான்று கொடுக்கிறீர்கள்.  

இது மேலதிகத் தகவல்.

இதில் "காட்டுங்கள் பார்ப்போம்"  என்று  எனக்குச் சவால் விடவேண்டிய அவசியமென்ன?

நானாக இருந்தால் அனைவருக்கும் உதவும் என்ற நோக்கில் இதே பதிவை  அந்த இழையிலும் இணைத்து  பின்னர் வ. உ. சி  தனது கோணத்தை மாற்றிக் கொண்டிருக்கலாம் என்பதற்கான விளக்கம் தந்திருப்பேன்.




மேற்கூறிய திருக்குறள் அறத்துப்பால் நூலை வெளியிடும் பொழுது அவரே முதல் மூன்று அதிகாரத்திற்கும் விளக்கவுரை எழுதிவிட்டுப் பின்னர் அது இடைசெருகல் என்று கூறினால் தவறு யாருடையது?

தமது சொந்த கருத்தையே பிற்காலத்தில் அவர் மறுத்துக் கூற வேண்டிய காரணமென்ன?


இது ஆய்வுக்குரியதுதானே? 

உரை எழுதுவதும் ஆய்வுக் கட்டுரை எழுதுவதும் என இரு வேறு கோணத்தில் அவர் அணுகியிருக்கலாம், ஆனால் அவருடைய எழுத்து முழுமையையும் படிக்காமல் அவசர முடிவுக்கு  வர இயலாது. 

 

இன்றுபோல அன்றைய சூழ்நிலை இல்லை. அயலார் காலனித்துவ அரசாங்கத்தின் உதவியுடன் அயலார் மொழிக்கு முன்னுரிமைக் கொடுத்துத் தமிழைப்  பிற்படுத்தியால் அக்கால தமிழரிஞரில் ஒரு பகுதியினர் வடமொழியை ஒட்டு மொத்தமாக நிராகரித்தனர். இதனை எதிர்கொள்ள வேண்டி அயலார் மொழிவயப்பட்ட தமிழர் தொடுத்த எதிர்ப்பால், வ.உ.சி. போன்றோர் அத்தகைய மறுப்புக் கொள்கைக்கு உந்தப்பட்டனர். அவரைப் போலவே கா.சு. பிள்ளை அவர்களும் இதில் முழுவீச்சில் இறங்கினார். இப்படி இன்னும் பல தமிழறிஞர் அக்காலத்தில் செயல்பட்டனர். தமிழ் இன்று மறுவாழ்வு பெற்றதற்கு இவர்களே  காரணகருத்தாக்கள்.  

அதனால் அக்காலத்தில் இருந்த சூழ்நிலை அறிந்து ஏன் இத்தகைய போங்குகள் ஏற்பட்டன என்பதை உய்த்தறிவது அவசியமாகின்றது. அவர் சொன்னார், இவர் சொன்னார் என்பதை மட்டும் எழுதினால் போதாது.  எதனால் அவ்வாறு சொன்னார் என்பதையும் ஆய்ந்தறிந்து கூற வேண்டும். அதுவே நடுநிலைமை வேண்டுவோரின் செயலாக இருக்க முடியும்.

 
ஐயா நடுநிலை குறித்த அறிவுரைக்கு இங்கு அவசியமில்லை. 

நீங்கள் கூறும்  உங்களது இந்தக் கோணத்திற்கு/விளக்கத்திற்குச்  சான்றுகள் உள்ளனவா? அதையும் கொடுக்கவும்.  இல்லாவிட்டால் இதுவும் அவர் சொன்னார் இவர் சொன்னார் என்ற வகையிலேயே அடங்கும். 

நான் படித்தது குறித்து நான் தெரிந்து கொண்டதை  இங்கு வைத்தேன்.  எனக்கு நீங்கள் காட்டும் நூலைப் படிக்கும் வாய்ப்பு  இருந்ததில்லை.  


வ.உ.சி அவர்கள் அவ்வாறு பிற்காலத்தில் கூறியதால் அம்மூன்று அதிகாரங்களையும் திருக்குறளிலிருந்து நீக்கி விட்டனரா? அல்லது இதர நடுநிலை தமிழறிஞர்தான் வ.உ.சி அவர்களின் கருத்தை ஏற்றுக் கொண்டனரா? இல்லையே. அப்புறம் ஆதாரமற்ற கருத்துக்களை மீண்டும் மீண்டும் மின் தமிழில் பரவவிடுவதின் நோக்கமென்ன?


come again, this one really beats me, 

எந்தப் பக்கத்தில்  எந்தச் செய்தி இருக்கிறது என்று சுட்டி கொடுத்து தகவலைத் தருவது ஆதாரமற்ற கருத்துக்களை மீண்டும் மீண்டும் மின் தமிழில் பரவவிடுவதா?

அந்தக் கட்டுரையில் இல்லாத ஒன்றை நான் கூறியுள்ளேனா?

 

முதல் மூன்று அதிகாரங்கள் இடைச்செருகல் என்று கூறுவாறின் அதனைச் செய்தது யார்? எவ்வித நோக்கத்துடன் செய்யப் பட்டது என்பதற்கு ஆதாரமென்ன? அவற்றையெல்லாம் கூறாமல் இடைசெருகல் என்று கூறினால் இவ்வாறு கருத்தெழுதுவார்தான் கருத்துக்குருடரோ என்று எண்ணும் நிலைக்கு மின் தமிழார் தள்ளப்படுவார்.


இது  எழுதியவரிடம்  வைக்க வேண்டிய கேள்வி, என்னிடமல்ல. don't shoot the messenger 

..... தேமொழி



அன்புடன் மு. கமலநாதன்
  

  

2017-11-18 11:09 GMT+08:00 தேமொழி <jsthe...@gmail.com>:


On Friday, November 17, 2017 at 8:35:35 AM UTC-8, கி. காளைராசன் wrote:

வணக்கம்.
On 17-Nov-2017 8:36 AM, "தேமொழி" <jsthe...@gmail.com> wrote:
>
>
>
> On Thursday, November 16, 2017 at 8:14:01 AM UTC-8, கி. காளைராசன் wrote:
>>>
>>> கிண்டல் செய்யவில்லை ஐயா.
>>>
>>> ஏதேதோ சம்பந்த சம்பந்தமில்லாமல் எழுதுகின்றீர்கள். கேட்டால் இதுதான் ஆதாரம் என்று
>>>
>>> சொல்கிறீர்கள். ஆதாரம் என்பது மற்றவர் கட்டுரையை எதிர்ப்பது ஆகாது.  மூலச் சமண நூல்களிலிருந்து
>>> எடுத்துக்காட்டுத் தரவேண்டும். அதுதான் முதல்தரமான தரவு. அதைதான் தங்களிடம் எதிர்ப்பார்த்தேன்.
>>>
>>> பிறர் எழுதிய கட்டுரையை மறுப்பது ஆதாரம் என்று சொல்லமுடியாது.  அது முதல்தர சான்றாகுமா?
>>>
>>> முதன்மையான சான்றென்பது மூலத்திலிருந்து (மூலநூற்களிலிருந்து) சான்றுக் காட்டவேண்டும் ஐயா. முதலில் இதைப் புரிந்துக்கொள்ளுங்கள்.
>>>
>>> மறுபடியும் சொல்கிறேன். குறள் எழுந்த காலத்தில் பௌத்தமும் சமணமும் தோன்றவில்லை.
>
>
> ///குறள் எழுந்த காலத்தில் பௌத்தமும் சமணமும் தோன்றவில்லை.////
>
> உங்கள் காலவாராய்ச்சியின் படி குறள் எழுதப்பட்ட காலம் என்னவென்று அறியவிரும்புகிறேன்.
>
> ..... தேமொழி

குறளின் காலத்தைக் கண்டறியும்படியான சொற்கள் ஏதும் குறளில் இடம் பெறவில்லை.  ஆதலின் குறள் எழுதப்பட்ட காலம் என்னவென்று அறிய முடியாது.

எடிசன் பல்பு கண்டுபிடித்தார்.  பல்பு இன்றுவரை பயன்பாட்டில் உள்ளது.  உற்பத்தி தேதி குறிப்பிடப்படாத பல்பு எந்தநாளில் செய்யப்பட்டது என்று எப்படிக் கூற முடியும்?

குறளின் பாயிரத்தில் உள்ள நான்கு அதிகாரங்களும் நான்கு வேதங்களின் சாரமாக உள்ளதால், திருக்குறள் வேத காலத்திற்குப் பிந்தியது என்று மட்டும் கூறலாம்.


திருக்குறளின் பாயிரத்தில்  கடவுள் வாழ்த்துவான்சிறப்புநீத்தார் பெருமை ஆகிய மூன்று அதிகாரங்களும் வள்ளுவரால் அமைக்கப்பட்டவை அல்ல  என்று வ. உ. சிதம்பரம் பிள்ளை கருதுகிறார்.

Thenee MK

unread,
Nov 18, 2017, 9:22:08 AM11/18/17
to mintamil
வ.உ.சி. அவர்கள் எழுதிய நூலின் முன்னுரை ஏற்கனவே 'திருக்குறள் பொதுநூலா' என்னும் இழையில் பதியப்பட்டதுதான்.

அப்பொழுதே வ.உ.சி அவர்களின் மாற்றுக் கோணம் பிந்நாளில் எழுதிய ஒரு கட்டுரையில் முன் வைக்கப்பட்டிருந்தது என குறிப்பிடப் பட்டது. அது ஆய்வுக் கட்டுரையல்ல மாறாக அவர்தம் கருத்தாக எழுதியிருந்தார். 

மின் தமிழ் மட்டுறுத்தனர் என்ற முறையில் அவரவருக்கு ஒரு வரைமுறையை ஏற்படுத்திக் கொண்டு கருத்துப் பதிவது நல்லது.

முன்பொருமுறை 'சம்பந்தன் யோக்கியனா? என்று கேள்வி கேட்கும் வண்ணம் கூறிய கருத்தை வெட்டியொட்டி 'பெரியார் சொன்ன கருத்தை அவ்வாறே பதிந்தேன்' என்று கூறும்பொழுது மின் தமிழ் மட்டுறுத்தனரிடமிருக்க வேண்டிய நடுநிலைமைத் தன்மையை எவ்வாறு புரிந்து கொள்வது?

மு. கமலநாதன்
 






 






 

2017-11-18 14:08 GMT+08:00 தேமொழி <jsthe...@gmail.com>:


On Friday, November 17, 2017 at 9:24:15 PM UTC-8, தேனீ wrote:
திருக்குறளில் அறத்துப்பாலுக்கு விளக்கவுரை எழுதி 1935-ல் ஒரு நூலை வெளியிட்டார் வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்கள்.

அந்நூலுக்கு வ.உ.சி. அவர்கள் வரைந்த முன்னுரையை (9.2.1935) இத்துடன் இணைக்கிறேன்.
 

உங்கள் உதவிக்கு மிக்க நன்றி.

 

அதில் எங்காவது கடவுள் வாழ்த்துவான்சிறப்புநீத்தார் பெருமை ஆகிய மூன்று அதிகாரங்களும் வள்ளுவரால் எழுதப்பட்டவையல்ல என்று வ. உ. சிதம்பரம் பிள்ளை கூறியிருக்கின்றாரா என்று காட்டுங்கள் பார்ப்போம்?


ஐயா நான் படித்த செய்திக்குச் சான்றுகளையும் இணைத்து நான் கொடுத்தேன். அது செப்டம்பர் 1929 முதல் மார்ச் 1931 காலகட்டத்துக் கட்டுரைகள் 

அது போல அதற்கு மாற்றுக் கருத்து கொடுத்து அதே ஆசிரியர் பின்னர் 1935 இல்   வெளியிட்ட நூலென்று நீங்களும் ஒரு சான்று கொடுக்கிறீர்கள்.  

இது மேலதிகத் தகவல்.

இதில் "காட்டுங்கள் பார்ப்போம்"  என்று  எனக்குச் சவால் விடவேண்டிய அவசியமென்ன?

நானாக இருந்தால் அனைவருக்கும் உதவும் என்ற நோக்கில் இதே பதிவை  அந்த இழையிலும் இணைத்து  பின்னர் வ. வு. சி  தனது கோணத்தை மாற்றிக் கொண்டிருக்கலாம் என்பதற்கான விளக்கம் தந்திருப்பேன்.




மேற்கூறிய திருக்குறள் அறத்துப்பால் நூலை வெளியிடும் பொழுது அவரே முதல் மூன்று அதிகாரத்திற்கும் விளக்கவுரை எழுதிவிட்டுப் பின்னர் அது இடைசெருகல் என்று கூறினால் தவறு யாருடையது?

தமது சொந்த கருத்தையே பிற்காலத்தில் அவர் மறுத்துக் கூற வேண்டிய காரணமென்ன?


இது ஆய்வுக்குரியதுதானே? 

உரை எழுதுவதும் ஆய்வுக் கட்டுரை எழுதுவதும் இரு வேறு கோணத்தில் அவர் அணுகியிருக்கலாம், ஆனால் அவருடைய எழுது முழுமையையும் படிக்காமல் அவசர முடிவுக்கு  வர இயலாது. 
திருக்குறளில் கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை ஆகிய மூன்று அதிகாரங்களும் வள்ளுவரால் எழுதப்பட்டவையல்ல என்று வ. உ. சிதம்பரம் பிள்ளை கருதுகிறார்.
கடவுள் வாழ்த்துப் பகுதிக்கு அவர் தரும் விளக்கங்களை இங்கு காணலாம் >>> https://groups.google.com/d/msg/mintamil/8RBCeH8tuug/L9FnUIu-AgAJ

தேமொழி

unread,
Nov 18, 2017, 1:43:31 PM11/18/17
to மின்தமிழ்


On Saturday, November 18, 2017 at 6:22:08 AM UTC-8, தேனீ wrote:
வ.உ.சி. அவர்கள் எழுதிய நூலின் முன்னுரை ஏற்கனவே 'திருக்குறள் பொதுநூலா' என்னும் இழையில் பதியப்பட்டதுதான்.

 நன்றி. 
 

அப்பொழுதே வ.உ.சி அவர்களின் மாற்றுக் கோணம் பிந்நாளில் எழுதிய ஒரு கட்டுரையில் முன் வைக்கப்பட்டிருந்தது என குறிப்பிடப் பட்டது. அது ஆய்வுக் கட்டுரையல்ல மாறாக அவர்தம் கருத்தாக எழுதியிருந்தார். 

அவர் எழுதியது  ஆய்வுக் கட்டுரையோ அல்லது  கருத்துகளின் தொகுப்போ, ஆனால்  அதுவும் வ உ சி எழுதியது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. 
 

மின் தமிழ் மட்டுறுத்தனர் என்ற முறையில் அவரவருக்கு ஒரு வரைமுறையை ஏற்படுத்திக் கொண்டு கருத்துப் பதிவது நல்லது.

!!! 
மின் தமிழ் உறுப்பினர்/மட்டுறுத்தர்  வ உ சி போன்ற தமிழறிஞர்/சுதந்திர போராட்ட வீரர்  குறித்து  உரையாட  எதற்கு வரைமுறை எனப் புரியவில்லை.  
 

முன்பொருமுறை 'சம்பந்தன் யோக்கியனா? என்று கேள்வி கேட்கும் வண்ணம் கூறிய கருத்தை வெட்டியொட்டி 'பெரியார் சொன்ன கருத்தை அவ்வாறே பதிந்தேன்' என்று கூறும்பொழுது மின் தமிழ் மட்டுறுத்தனரிடமிருக்க வேண்டிய நடுநிலைமைத் தன்மையை எவ்வாறு புரிந்து கொள்வது?

!!! 
மின் தமிழ் உறுப்பினர்/மட்டுறுத்தர்  சம்பந்தர்  என்ற  தமிழறிஞர்,  பெரியார் என்ற பகுத்தறிவு சிந்தனையாளர்  குறித்தும்  உரையாடினால் நடுநிலைமை எவ்வாறு பாதிக்கப் படுகிறது என்பதும் புரியவில்லை. 

சம்பந்தர், வ உ சி,  பெரியார் ஆகியோர்  கருத்துகளை  அவர்கள் சொன்னது சொன்னவாறே மாற்றமில்லாமல் பதிவதற்கு "மின்தமிழில்"தடை போட வழியில்லை,
அவர்கள் எழுத்துகளை ஒட்டியும் வெட்டியும் யாரும் கருத்து பதியலாம்.  ஆனால் அவற்றை  மட்டுறுத்தர் பகிர்ந்தால்   மட்டுறுத்தருக்கு  நடுநிலைமைத் தன்மை இல்லை என்று கூறுவதையும்  எவ்வாறு புரிந்து கொள்வது எனவும் தெரியவில்லை. 

Thenee MK

unread,
Nov 19, 2017, 10:43:17 AM11/19/17
to mintamil

சிவசிவ

 

வேண்டும் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல (4)

 

‘ஒரு பொருளையும் விழைதலும் வெறுத்தலும் இல்லாதவன் அடியைச் சார்ந்தார்க்கு எக்காலத்தும் பிறவித் துன்பங்கள் உளவாக’ என்று பரிமேலழகர் கூறியதன் பொருளை அறிந்து கொள்வதற்கு வ. உ. சிதம்பரம் பிள்ளையவர்கள் சித்தாந்தத்தை ஆழமாக உய்த்தறிந்தாரில்லை. அதனால் மேற்கூறிய குறள் துறவியரைக் குறித்ததென்று அவர்தம் குறையுடைய அறிவினால் கூறினார்.

 

திருக்குறளை மனனம் செய்து கொண்டு மேடை முழுவதும் ஒப்பேற்றி வருவோரில் பெரும்பாலோர் சைவ சித்தாந்தம் பயின்றோரில்லை. அவ்வாறு சைவ சித்தாந்தம் அறிந்த சித்தாந்திகள் அல்லது சைவ குருமார் மின் தமிழ் குழுமத்திலிருந்தும் தக்க விளக்கத்தையளிக்க முன் வராமல் போவது வியப்பும் வேதனையும் அளிக்கின்றது. நமக்கென்ன வந்ததென்று வாளாவிருந்தால் நாளை சைவம் இந்தியாவில் வீழ்ந்த பிறகு எவ்வித கூப்பாடு போட்டாலும் பயனற்றுப் போகும். அத்தகைய எதிர்கால விளைவுகளை  உணர்ந்தோரே அவர்தம் சமூகத் தொண்டாக உண்மையை எடுத்துக்கூற வேண்டியுள்ளது.

 

‘வேண்டும் வேண்டாமை இலான்’ என்னும் இறைவனுக்குறிய சைவ சித்தாந்த விளக்கமாவது பின்வருமாறு:

 

1)   இறைவன் உயிர்களைப் படைக்கவில்லை. உயிர்கள் இறைவனைப் போன்றே அநாதி (தொடக்கமும் இறுதியும் இல்லாதது)

2)   அவை அநாதியே ஆணவம் என்னும் நுண்பொருளால் மறைக்கப்பட்டிருப்பதால் உயிரின் இயல்பாகிய அறிவு, இச்சை, செயல் ஆகிய ஆற்றல்கள் வெளிப்படாமல் இருந்தன.

3)   ஆணவம் என்னும் நுண்பொருளால் உயிருக்கு ஏற்பட்ட மறைப்பை நீக்குவதன் மூலம் உயிரின் அறிவு (ஞானாசத்தி), இச்சை (இச்சாசத்தி), செயல் (கிரியா சத்தி) ஆகியன விளக்கம் பெற்று என்றும் இன்ப வடிவாய் இருக்கும் இறைவனைச் சென்று அடைந்து இன்புற்றிருக்கும்.

4)   இந்த நிலைக்கு உயிர்களை இட்டுச் செல்வதற்கு உயிர்களின் இயல்புக்கு ஏற்பவே இறைவன் செயல்படுகிறான். அவ்வாறு அவன் செயல்படுவதை நாம் இறைவன் திருவருள் என்று கூறுகிறோம்.

5)   உயிர்கள் எதையும் அறிந்தும் மறந்தும் மெதுமெதுவாகவே அறிவு பெறுகின்றன.

6)   உயிர்கள் அறிவு பெறுவதற்குக் கருவிகள் வேண்டும். அக்கருவிகளே மெய், வாய், மூக்கு, கண், செவி என்னும் புறக்கருவிகள். மனம் புத்தி, சித்தம் அகங்காரம் என்னும் அகக்கருவிகள். இவை அனைத்தும் மாயை என்னும் நுண்ணிய மூலப்பொருளிலிருந்து படைத்துத் தரப்படுகின்றன.

7)   உடலில் கருவி கரணங்கள் அமைத்து (மனிதன், விலங்குகள், பறவைகள், புழு பூச்சிகள் தாவரங்கள், நாம் அறியாத பிற உலகங்களில் வாழும் உடலினங்களைக் கொண்ட) உயிர்கள் அனைத்தும் செயல்பட வேண்டுமென்றால் அவற்றுக்கு வினைகள் இருக்க வேண்டும். இப்போது நாம் செய்யும் வினைகள் அனைத்தும் முன்பு நாம் செய்த வினைகளுக்கான பயன்கள் ஆகும். உயிர்களுக்கு முதன் முதலாக உடல் கொடுக்கப்படும்போது அவற்றுக்கு முன்பு செய்த வினைகள் இருக்காது. எனவே புதியதாக ஒரு வினையைச் சேர்க்க வேண்டும். அந்த வினை மூல வினை என்று சொல்லப்படும். அது நல்வினையுமல்லாமல் தீவினையுமல்லாமல் இருக்கும் புது வினையாகும். அதுவே மூல கன்மம் என்று சொல்லப்படும். இதனை உயிருக்குச் சேர்ப்பது இறைவனேயாம்.   

8)   உயிர்கள் செய்த வினைகளுக்கு ஏற்ப உடல்கள் பெற்று இன்ப துன்பங்களை நுகரும்போது உயிர் மெது மெதுவாகப் பக்குவம் அடைகின்றது.

9)   இறைவன் முதல் முதலாக உடல் தரும்போதும் பின்னர் பல பிறவிகளுக்கு உடல், உலகங்கள் தரும்போதும் காரணமின்றித் தன் விருப்பத்திற்காகத் தருவதில்லை. ஒரு விளையாட்டாகவும் தருவதில்லை. முன் பிறவிகளில் உயிர் செய்த வினைக்கு ஏற்பவே உடலும் உலகங்களும் தருகிறான். உயிர்கள் பெறும் எதுவும் இறைவன் தன் விருப்பத்தால் தரப்படுவதல்ல. உயிர் தான் செய்த வினைக்கு வரும் பயனாகத் துய்ப்பதற்குத் தரப்படுவன. அனைத்தும் உயிரின் நல்வினை தீவினையால் வரும் பயன்கள்.

10)  கருணையுள்ளம் கொண்டு உயிரின் அறியாமையை நீக்க வேண்டி ஐந்தொழில்கள் ஆற்றும்போது அவன் உயிர்களிடமிருந்து எதையும் வேண்டுவதில்லை. 

11)  இதன் காரனமாகவே சித்தாந்த சைவம் இறைவனை வேண்டும் வேண்டாமை இலான் என்று கூறுவது.

 

                                         சித்தாந்த செல்வர் முனைவர்

நாகப்பன் ஆறுமுகம்,

தலைவர், மலேசிய சைவ சமயப் பேரவை.                       


இறைவன் வேண்டும் வேண்டாமை இலான் என்பதை இவ்வாறு விளக்க வ.உ.சி அவர்களுக்கு தெரியாது போனது அவர் குற்றமல்ல. அவர் சித்தாந்தத்தை ஆழமாக அறிந்து கூறாத குற்றமே. சிவசிவ

 

மு. கமலநாதன்


நா.ரா.கி.காளைராசன்

unread,
Nov 19, 2017, 11:01:12 AM11/19/17
to mintamil

வணக்கம்.

https://thirukural-kalai.blogspot.in



On Friday, November 17, 2017 at 8:35:35 AM UTC-8, கி. காளைராசன் wrote:

வணக்கம்.
On 17-Nov-2017 8:36 AM, "தேமொழி" <jsthe...@gmail.com> wrote:
>
>
>
> On Thursday, November 16, 2017 at 8:14:01 AM UTC-8, கி. காளைராசன் wrote:
>>>
>>> கிண்டல் செய்யவில்லை ஐயா.
>>>
>>> ஏதேதோ சம்பந்த சம்பந்தமில்லாமல் எழுதுகின்றீர்கள். கேட்டால் இதுதான் ஆதாரம் என்று
>>>
>>> சொல்கிறீர்கள். ஆதாரம் என்பது மற்றவர் கட்டுரையை எதிர்ப்பது ஆகாது.  மூலச் சமண நூல்களிலிருந்து
>>> எடுத்துக்காட்டுத் தரவேண்டும். அதுதான் முதல்தரமான தரவு. அதைதான் தங்களிடம் எதிர்ப்பார்த்தேன்.
>>>
>>> பிறர் எழுதிய கட்டுரையை மறுப்பது ஆதாரம் என்று சொல்லமுடியாது.  அது முதல்தர சான்றாகுமா?
>>>
>>> முதன்மையான சான்றென்பது மூலத்திலிருந்து (மூலநூற்களிலிருந்து) சான்றுக் காட்டவேண்டும் ஐயா. முதலில் இதைப் புரிந்துக்கொள்ளுங்கள்.
>>>
>>> மறுபடியும் சொல்கிறேன். குறள் எழுந்த காலத்தில் பௌத்தமும் சமணமும் தோன்றவில்லை.
>
>
> ///குறள் எழுந்த காலத்தில் பௌத்தமும் சமணமும் தோன்றவில்லை.////
>
> உங்கள் காலவாராய்ச்சியின் படி குறள் எழுதப்பட்ட காலம் என்னவென்று அறியவிரும்புகிறேன்.
>
> ..... தேமொழி

குறளின் காலத்தைக் கண்டறியும்படியான சொற்கள் ஏதும் குறளில் இடம் பெறவில்லை.  ஆதலின் குறள் எழுதப்பட்ட காலம் என்னவென்று அறிய முடியாது.

எடிசன் பல்பு கண்டுபிடித்தார்.  பல்பு இன்றுவரை பயன்பாட்டில் உள்ளது.  உற்பத்தி தேதி குறிப்பிடப்படாத பல்பு எந்தநாளில் செய்யப்பட்டது என்று எப்படிக் கூற முடியும்?

குறளின் பாயிரத்தில் உள்ள நான்கு அதிகாரங்களும் நான்கு வேதங்களின் சாரமாக உள்ளதால், திருக்குறள் வேத காலத்திற்குப் பிந்தியது என்று மட்டும் கூறலாம்.


திருக்குறளில் கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை ஆகிய மூன்று அதிகாரங்களும் வள்ளுவரால் எழுதப்பட்டவையல்ல என்று வ. உ. சிதம்பரம் பிள்ளை கருதுகிறார்.
கடவுள் வாழ்த்துப் பகுதிக்கு அவர் தரும் விளக்கங்களை இங்கு காணலாம் >>> https://groups.google.com/d/msg/mintamil/8RBCeH8tuug/L9FnUIu-AgAJ
உங்கள் கோணத்தை தெரிந்து கொள்ள விரும்புகிறேன் 

..... தேமொழி 

 
சமணநூல்களில் ஏதேனும் ஒன்றிலாவது பாயிரத்தில் இதுபோன்ற அதிகார அமைப்புமுறை உள்ளதா? இல்லையே?
 

குறளின் பாயிரத்தில் உள்ள நான்கு அதிகாரங்களும் நான்கு வேதங்களின் சாரமாக உள்ளதால், திருக்குறள் வேத காலத்திற்குப் பிந்தியது என்று கூறலாம்.



தேமொழி

unread,
Nov 19, 2017, 11:44:58 PM11/19/17
to மின்தமிழ்


On Sunday, November 19, 2017 at 8:01:12 AM UTC-8, கி. காளைராசன் wrote:

வணக்கம்.

https://thirukural-kalai.blogspot.in


On Friday, November 17, 2017 at 8:35:35 AM UTC-8, கி. காளைராசன் wrote:

வணக்கம்.
On 17-Nov-2017 8:36 AM, "தேமொழி" <jsthe...@gmail.com> wrote:

> On Thursday, November 16, 2017 at 8:14:01 AM UTC-8, கி. காளைராசன் wrote:

குறளின் காலத்தைக் கண்டறியும்படியான சொற்கள் ஏதும் குறளில் இடம் பெறவில்லை.  ஆதலின் குறள் எழுதப்பட்ட காலம் என்னவென்று அறிய முடியாது.

எடிசன் பல்பு கண்டுபிடித்தார்.  பல்பு இன்றுவரை பயன்பாட்டில் உள்ளது.  உற்பத்தி தேதி குறிப்பிடப்படாத பல்பு எந்தநாளில் செய்யப்பட்டது என்று எப்படிக் கூற முடியும்?

குறளின் பாயிரத்தில் உள்ள நான்கு அதிகாரங்களும் நான்கு வேதங்களின் சாரமாக உள்ளதால், திருக்குறள் வேத காலத்திற்குப் பிந்தியது என்று மட்டும் கூறலாம்.


திருக்குறளில் கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை ஆகிய மூன்று அதிகாரங்களும் வள்ளுவரால் எழுதப்பட்டவையல்ல என்று வ. உ. சிதம்பரம் பிள்ளை கருதுகிறார்.
கடவுள் வாழ்த்துப் பகுதிக்கு அவர் தரும் விளக்கங்களை இங்கு காணலாம் >>> https://groups.google.com/d/msg/mintamil/8RBCeH8tuug/L9FnUIu-AgAJ
உங்கள் கோணத்தை தெரிந்து கொள்ள விரும்புகிறேன் 

..... தேமொழி 

 
சமணநூல்களில் ஏதேனும் ஒன்றிலாவது பாயிரத்தில் இதுபோன்ற அதிகார அமைப்புமுறை உள்ளதா? இல்லையே?
 

குறளின் பாயிரத்தில் உள்ள நான்கு அதிகாரங்களும் நான்கு வேதங்களின் சாரமாக உள்ளதால், திருக்குறள் வேத காலத்திற்குப் பிந்தியது என்று கூறலாம்.


https://groups.google.com/d/msg/mintamil/1YioOVzRg-w/HvKskCxfAwAJ <<< பாயிர ஆராய்ச்சி இழையில் தொடர்கிறோம். 
 

நா.ரா.கி.காளைராசன்

unread,
Nov 20, 2017, 11:47:30 AM11/20/17
to mintamil

> https://groups.google.com/d/msg/mintamil/1YioOVzRg-w/HvKskCxfAwAJ <<< பாயிர ஆராய்ச்சி இழையில் தொடர்கிறோம். 
>  

ஆமாம்.
நன்று.
நன்றி.

>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

vichan hari

unread,
May 17, 2018, 9:21:05 AM5/17/18
to மின்தமிழ்
மன்னன் உலகை இயற்றியவனில்லை. பரந்த நம்பிக்கை: உலகைப் படைத்தவர் கடவுள் என்பது. அந்தக்கடவுளைச் சபிக்கிறார். திருவள்ளுவர் கடவுளை நம்பவில்லை.

Thenee MK

unread,
May 17, 2018, 9:30:31 AM5/17/18
to mintamil
பிறவிப் பெருங்கல் நீந்துவார் நீந்தார்
இறைவன் அடிசேரா தார் - குறள் 10

திருவள்ளுவர் ஒரு சிறந்த ஞானி. அவர் இறைவனை அடையும் நெறியை உணர்ந்து கூறியதே மேற்கூறிய குறள்.

இவ்வாறு சமய கருத்துக்களைக் கூறும் பல குறள்களை மேற்கோள் காட்டலாம்.

ஆதலால் திருக்குறள் கடவுள் மறுப்பு நூல் என்று கூறுவது அறியாமை. சிவசிவ.





 


பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். 

On Thu, May 17, 2018 at 9:21 PM, vichan hari <vic...@gmail.com> wrote:
மன்னன் உலகை இயற்றியவனில்லை. பரந்த நம்பிக்கை: உலகைப் படைத்தவர் கடவுள் என்பது. அந்தக்கடவுளைச் சபிக்கிறார். திருவள்ளுவர் கடவுளை நம்பவில்லை.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/1OG76-q96IM/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

vichan hari

unread,
May 17, 2018, 9:37:52 AM5/17/18
to மின்தமிழ்
https://m.facebook.com/groups/522674867935240?ref=bookmarks

திருவள்ளுவர் கற்பனையான 'பிறப்பிலாப் பெருவாழ்வு' பற்றி எங்கும் கூறவில்லை.

நா.ரா.கி.காளைராசன்

unread,
May 17, 2018, 12:01:07 PM5/17/18
to mintamil
வணக்கம்.

On 17 May 2018 at 19:07, vichan hari <vic...@gmail.com> wrote:
https://m.facebook.com/groups/522674867935240?ref=bookmarks

திருவள்ளுவர் கற்பனையான 'பிறப்பிலாப் பெருவாழ்வு' பற்றி எங்கும் கூறவில்லை.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும் 
தெய்வத்துள்வைக்கப்படும் - குறள் 5:10  

என்ற குறள் பிறப்பிலாப் பெருவாழ்வு நிலையைக் கூறவில்லையா?

அன்பன்
கி.காளைராசன்

S. Jayabarathan

unread,
May 17, 2018, 12:46:36 PM5/17/18
to mintamil, vallamai, vannan vannan, vaiyavan mspm, Aravindan Neelakandan, Oru Arizonan, Kalairajan Krishnan, Asan Buhari, Anne Josephine, Anna Kannan
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின், பரந்து
கெடுக உலகியற்றி யான். 

திருக்குறள்.

கற்றதனால் பெற்ற பயன் ஏது, படைப்பாளி
நற்படைப்பைக் காணாத போது ?

என் குறள்.
 

Dev Raj

unread,
May 17, 2018, 6:10:15 PM5/17/18
to மின்தமிழ்
On Tuesday, 14 November 2017 21:23:59 UTC-8, தேனீ wrote:
'அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் பிறர்க்கு உரியர் (72)


இந்திரன் கோரியதால் ததீசி முனிவர் யோகத்தில் அமர்ந்து உயிரை விடுக்க,
அவர்தம் உடலின் முதுகெலும்பால் ஆயுதம் செய்து அவன்
அரக்கனை மாய்த்தான் எனும் புராணச் செய்தியை
ஒட்டி அமைவது இக்குறட்பா. 


தேவ்

Thenee MK

unread,
May 18, 2018, 12:55:49 AM5/18/18
to mintamil
அதிக காலத்திற்குப் பிறகு திரு. தேவ் ராஜ் அவர்களின் கருத்தைப் படிப்பதில் மகிழ்ச்சி.

'உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலுந் பிறப்பு' - குறள் 339

இக்குறளின் வழி உறங்குவதும் விழிப்பதும் போன்று உயிருக்குப் பிறப்பும் இறப்பும் மாறி மாறி வருகின்றது என்று உணர்த்தியலிருந்து மறுபிறவிக்  கொள்ளையைத் திருவள்ளுவர் ஏற்றார் என்பது புரியும். ஆதலால் மறுபிறப்பு ஒரு கற்பனை என்பது பிறப்பின் காரணக்காரியங்களைப் பகுத்தறியாது பேசுவோரின் நிலைப்பாடாகும். 




--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/1OG76-q96IM/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages