ஒரே திருப்புகழ் இரு வேறு தலங்கள் உரிமை கொண்டாடுகின்றன!

140 views
Skip to first unread message

N. Kannan

unread,
Jan 10, 2013, 12:57:07 PM1/10/13
to மின்தமிழ்
ஒரு சந்தேகம்.

திருப்பூவணம் காளைராஜன், “பந்தப்பொற் பாரப யோதர” எனும் திருப்புகழ்
திருப்பூவணத்தில் உறையும் முருகன் மேல் பாடியதாகக் கூறுகிறார்.


ஒருகோடி
சந்தத்திக் காளுநி சாசரர்
வெந்துட்கத் தூளிப டாமெழ

சண்டைச்சொற் றார்பட வேவயில் விடுவோனே
தங்கச்சக் ராயுதர் வானவர்
வந்திக்கப் பேரரு ளேதிகழ்
தம்பப்பொற் பூவண மேவிய பெருமாளே!


ஆயின் இதே திருப்புகழ், “கௌமாரம்”
(http://www.kaumaram.com/thiru_uni/tpun0944.html) தளத்தில் கொங்கு
நாட்டு திருப்பதியில் (அவிநாசி) அமரும் முருகன் மேல் பாடப்பட்டுள்ளதாகச்
சொல்கிறது!


ஒருகோடிச்

சந்தச்செக் காளநி சாசரர்
வெந்துக்கத் தூளிப டாமெழ
சண்டைக்கெய்த் தாரம ராபதி ...... குடியேறத்

தங்கச்செக் கோலசை சேவக
கொங்கிற்றொக் காரவி நாசியில்
தண்டைச்சிக் காரயில் வேல்விடு ...... பெருமாளே.


இதில் எது உண்மை?

திருப்புகழின் கடைசி வரிகளை மாற்றியது யார்?

எத்திருப்பதியின் மீது பாடப்பட்டது என்று எப்படி உறுதியிட்டுச் சொல்வது?

அன்புடன்
நா.கண்ணன்

--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

கி.காளைராசன்

unread,
Jan 11, 2013, 5:04:00 AM1/11/13
to mint...@googlegroups.com
வணக்கம்.

2013/1/10 N. Kannan <navan...@gmail.com>
திருப்பூவணம் காளைராஜன், “பந்தப்பொற்   பாரப    யோதர” எனும் திருப்புகழ்
திருப்பூவணத்தில் உறையும் முருகன் மேல் பாடியதாகக் கூறுகிறார்.
இதில் எது உண்மை?

அறிந்தோர் கூறி உதவிடுமாறு அன்புடன் நானும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

அன்பன்
கி.காளைராசன்

N. Kannan

unread,
Jan 11, 2013, 6:12:46 AM1/11/13
to mint...@googlegroups.com
2013/1/11 கி.காளைராசன் <kalair...@gmail.com>:
> வணக்கம்.

> அறிந்தோர் கூறி உதவிடுமாறு அன்புடன் நானும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
>

திருப்புகழ் ‘திருத்திய பதிப்பு’ (Critical Edition) என்று உண்டா?

கம்ப இராமாயணம், திருமந்திரம் திருத்திய பதிப்புகள் 20ம்
நூற்றாண்டில்தான் வெளி வருகின்றன. பாரதி திருத்திய பதிப்பு இன்னும்
வரவில்லை என்பது டாக்டர் விஜயபாரதியின் கணிப்பு.

நா.கண்ணன்

Hari Krishnan

unread,
Jan 11, 2013, 6:30:19 AM1/11/13
to mintamil

2013/1/11 N. Kannan <navan...@gmail.com>

கம்ப இராமாயணம், திருமந்திரம் திருத்திய பதிப்புகள் 20ம்
நூற்றாண்டில்தான் வெளி வருகின்றன. பாரதி திருத்திய பதிப்பு இன்னும்
வரவில்லை என்பது டாக்டர் விஜயபாரதியின் கணிப்பு.

நா.கண்ணன்

சீனி விசுவநாதன் பதிப்பு அதை நிறைவேற்றிவிட்டது. 

திருப்புகழுக்கு ‘தணிகைமணி’ டாக்டர் வ சு செங்கல்வராய பிள்ளையின் பதிப்பும், வரிசைமுறையும்தான் பெரிதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று.  திருப்புகழ் மதாணி என்று சொல்வார்கள்.  திருப்புகழ் (1324), கந்தரலங்காரம் (107), கந்தரந்தாதி (100), கந்தரநுபூதி (51), திருவகுப்பு (25), வேல் (10), மயில் (11), சேவல் (11) விருத்தங்கள், திருஎழுகூற்றிருக்கை ஆகிய ஒன்பது நவரத்னங்களின் தொகுப்பு மதாணி.

திருமுருக கிருபானந்த வாரியார் தொகுத்து வானதி வெளியிட்டிருக்கும் பதிப்பும் இதே வைப்பு முறையைப் பின்பற்றியிருக்கிறது.  அவருடைய உரை சுமார் 750 திருப்புகழ்ப் பாடல்களுக்கு, ஆறு தொகுதிகள் (ஐந்து புத்தகங்கள்), வானதி வெளியிட்டிருக்கிறது.  இதைத் தவிர கந்தர் அந்தாதி, அனுபூதி, அலங்காரம் எல்லாவற்றுக்கும் உரை எழுதியிருக்கிறார்.  தமிழ் இணையப் பல்கலையில் கிடைக்கிறது.

இந்தப் பதிப்புகள் வெளியாதன் பிறகு ஆறு திருப்புகழ் பாடல்கள் கிடைத்தன.  இவற்றையும் சேர்த்து, சேலத்தைச் சேர்நத சுவாமி குஹாநந்தா சபை வெளியிட்டிருக்கிறது.  இதில் வைப்புமுறை சற்றே மாறுபட்டிருக்கிறது.  சில தெளிவில்லாத பாடங்களும்  காட்டப்பட்டுள்ளன.  பாடபேதங்களும் தரப்பட்டுள்ளன.

முருகன் இவ்வளவு க்ரிடிக்கலா ஆனா போறுமா, இன்னும் க்ரிட்டிக்கல் ஆகணுமா? :)




--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

Hari Krishnan

unread,
Jan 11, 2013, 6:49:14 AM1/11/13
to mintamil

2013/1/10 N. Kannan <navan...@gmail.com>

திருப்பூவணம் காளைராஜன், “பந்தப்பொற்   பாரப    யோதர” எனும் திருப்புகழ்
திருப்பூவணத்தில் உறையும் முருகன் மேல் பாடியதாகக் கூறுகிறார்.


ஒருகோடி
சந்தத்திக் காளுநி  சாசரர்
வெந்துட்கத் தூளிப  டாமெழ

சண்டைச்சொற்   றார்பட  வேவயில் விடுவோனே
தங்கச்சக் ராயுதர் வானவர்
வந்திக்கப்   பேரரு  ளேதிகழ்
தம்பப்பொற்  பூவண  மேவிய பெருமாளே!


ஆயின் இதே திருப்புகழ், “கௌமாரம்”
(http://www.kaumaram.com/thiru_uni/tpun0944.html) தளத்தில் கொங்கு
நாட்டு திருப்பதியில் (அவிநாசி) அமரும் முருகன் மேல் பாடப்பட்டுள்ளதாகச்
சொல்கிறது!


ஒருகோடிச்

சந்தச்செக் காளநி சாசரர்
     வெந்துக்கத் தூளிப டாமெழ
          சண்டைக்கெய்த் தாரம ராபதி ...... குடியேறத்

தங்கச்செக் கோலசை சேவக
     கொங்கிற்றொக் காரவி நாசியில்
          தண்டைச்சிக் காரயில் வேல்விடு ...... பெருமாளே.


இதில் எது உண்மை?

திருப்புகழின் கடைசி வரிகளை மாற்றியது யார்?

எத்திருப்பதியின் மீது பாடப்பட்டது என்று எப்படி உறுதியிட்டுச் சொல்வது?


திருமுருக கிருபாநந்த வாரியார் பதிப்பிலும், சேலம் குஹாநந்தா திருப்புகழ்ச் சபை பதிப்பிலும் அவிநாசி என்ற பாடம்தான் இருக்கிறது.  

வல்லக்கோட்டைக்கு, கோடைநகர் என்பது பழைய பெயர்.  கோடைநகர் திருப்புகழ்ப் பாக்கள் ஏழு என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.  ஆனால் கோவிலுக்குள் போய்ப் பாருங்கள்.  எட்டுப் பாக்களை கோடைநகர் திருப்புகழ் என்று சுவரில் பொறித்திருக்கிறார்கள்.  ஏழு, கோடை நகரை மையப்படுத்தப்பட்டவை; எட்டாவதில், மற்ற தலங்களோடு கோடை நகரும் இடம் பெறுகிறது.

இப்போது இந்த எட்டாவது பாட்டை, வல்லக்கோட்டை தன்னுடைய தலப் பாடல்களில் ஒன்றாகச் சேர்த்திருக்கிறது.  அதற்கு நியாயமும் இருக்கிறது.

அழகுதரித் திடுநீப சரவணவுற் பவவேல
     அடல்தருகெற் சிதநீல ...... மயில்வீரா 

அருணைதிருத் தணிநாக மலைபழநிப் பதிகோடை
     அதிபஇடைக் கழிமேவு ...... பெருமாளே.

என்று பாடல் பேசுகிறது.  கோடை நகரும் பாடலில் இடம் பெற்றிருக்கிறது.  ஆனால் பிரதானப்படுத்தப்பட்டுள்ளது, திருவிடைக்கழிதானே?  இப்போது இந்தப் பாடலை எந்தத் தலத்துக்கு உரியது என்று சொல்வது?

திரு காளைராஜன் அவர்கள் பின்பற்றுவது எந்தப் பதிப்பை என்று தெரிந்தால் அதன் பிறகு பாடத்தைப் பற்றி சிந்திக்கலாம்.

முருகனுக்குத் தலமாவது இதயத் தலம் ஒன்றே.  அதுதான் ஒவ்வொரு தலத்திலும் பிரகாசிக்கிறது; அங்கிருந்து இதயத் தலத்துக்குள்ளும் தாவுகிறது.  

முருகனடியார்களுக்குத் தலவேறுபாடு கிடையாது.

Hari Krishnan

unread,
Jan 11, 2013, 6:55:45 AM1/11/13
to mintamil

2013/1/11 Hari Krishnan <hari.har...@gmail.com>

இந்தப் பதிப்புகள் வெளியாதன் பிறகு ஆறு திருப்புகழ் பாடல்கள் கிடைத்தன.  இவற்றையும் சேர்த்து, சேலத்தைச் சேர்நத சுவாமி குஹாநந்தா சபை வெளியிட்டிருக்கிறது.  இதில் வைப்புமுறை சற்றே மாறுபட்டிருக்கிறது.  சில தெளிவில்லாத பாடங்களும்  காட்டப்பட்டுள்ளன.  பாடபேதங்களும் தரப்பட்டுள்ளன.

குஹாநந்த சபையின் வெளியீட்டில் இடம் பெற்றிருப்பவை 1330 பாடல்கள்.  கௌமாரம்.காமில் இடம்பெற்றுள்ளவை 1328 பாடல்கள்; தணிகைமணி, திருமுருக கிருபாநந்த வாரியார் சுவாமிகள் பதிப்பில் இடம் பெற்றுள்ளவை 1326 பாடல்கள்.  ஒரு ஏழெட்டு வருடங்களுக்கு முன்னால், கனடாவின் பேராசிரியர் பசுபதி அவர்கள் (கௌமாரம்.காமில் திருப்புகழ் உரை இயற்றிருப்பவரின் மூத்த சகோதரர்) புதிதாகக் கிடைத்த திருப்புகழ் பாடலுக்கு உரை ஒன்று எழுதும்படிச் சொல்லி, நான் எழுதியது இருக்கிறது.  இது மிக அண்மையில் கிடைத்த பாடல்.  (பாடலையும் உரையையும் தேடிப் பார்க்கிறேன்.  எனக்குதான் டிஸிப்ளின் போறாதாச்சே!)

Hari Krishnan

unread,
Jan 11, 2013, 11:36:18 AM1/11/13
to mintamil

2013/1/11 Hari Krishnan <hari.har...@gmail.com>

குஹாநந்த சபையின் வெளியீட்டில் இடம் பெற்றிருப்பவை 1330 பாடல்கள்.  கௌமாரம்.காமில் இடம்பெற்றுள்ளவை 1328 பாடல்கள்; தணிகைமணி, திருமுருக கிருபாநந்த வாரியார் சுவாமிகள் பதிப்பில் இடம் பெற்றுள்ளவை 1326 பாடல்கள்.  ஒரு ஏழெட்டு வருடங்களுக்கு முன்னால், கனடாவின் பேராசிரியர் பசுபதி அவர்கள்

2003-2005 காலகட்டத்தில் பேராசிரியர் பசுபதி அவர்கள், ஒரு புதிய திருப்புகழ் என்று சந்த வசந்தத்தில் இந்தப் பாடலை இட்டார்கள், யாராவது உரை எழுதவேண்டும் என்ற கோரிக்கையுடன்.  நானும் இலந்தையும் ஏறத்தாழ ஒரே சமயத்தில் எழுதி அனுப்பியது நினைவிருக்கிறது.  இப்போது நாங்கள் இருவரும் எழுதியவை அவரிடமும் இல்லை என்னிடமும் இல்லை.  பாடல் கிடைத்தவரையில் பெரிய மகிழ்ச்சி.  இதோ அந்தப் பாடல்:

===================================================

வம்புங் கோபமு மேவசு ராதிகள்
. வந்தஞ் சாமலும் வானவர் பாலினில்
. மண்டும் போர்செயும் வேளையன் னோரைவெல் வடிவேலா
தம்பம் போலுறு மூடர்கள் மீதுக
. ரும்புந் தேனிகர் பாவுரை யாதுள
. தஞ்சம் பாரென வோதுவ நீஅருள் புரிவாயே
அம்பென் றேவிழி சேர்குற மாதுதன்
. இன்பந் தேடிமுன் னோர்கணி யாகவும்
. மன்றுன் பால்வர மோகம தாவுற வனைவோனே 
செம்பொன் மாமதில் வானுற வாவிகள்
. எங்குந் தாமரை மாமலர் சூழ்தரு 
. செங்குன் றாபுரம் வாழ்கும ராவெனு முருகோனே.


திருவனந்தபுரம் பல்கலைக் கழக நூலகத்தில் இருக்கும் 
14 சுவடிகளைப் பரிசோதித்து, திருப்புகழ் ஆய்வாளர் வலையப்பேட்டை
கிருஷ்ணன் அண்மையில் கண்டுபிடித்து, அச்சேற்றிய  ஒரு திருப்புகழ்.

(சுவடிகளில் இன்னும் சில புதிய பாடல்கள் உள்ளன; ஆனால், ஓலைகள்
சிதைவுற்றதால், அவை முழுமையாக இல்லை.இங்குள்ளது முழுமையாகக் கிடைத்த
ஒன்று.)

"செங்குன்றாபுரம்" என்பது கேரளாவில் கோட்டயம் அருகில் உள்ள செங்கனூர்
என்பது என்கிறார் கிருஷ்ணன்.

பசுபதி

===================================================

1330 பாக்கைளக் கொண்ட சேலம் பதிப்பிலும் இடம் பெறாத பா இது.  திருப்புகழ் எவ்வளவு கிரிட்டிகலான முறையில் அணுகப்படுகிறது என்பது புரிகிறதல்லவா?

கி.காளைராசன்

unread,
Jan 11, 2013, 5:20:55 PM1/11/13
to mint...@googlegroups.com
vanakkam Iyaa,
2013/1/11 Hari Krishnan <hari.har...@gmail.com>

திரு காளைராஜன் அவர்கள் பின்பற்றுவது எந்தப் பதிப்பை என்று தெரிந்தால் அதன் பிறகு பாடத்தைப் பற்றி சிந்திக்கலாம்.
I have received copied these songs related to Thiruppuvanam form a book 14 years  back.  A private edition.  I will try to trace the copy soon.

thanking you for your kindness
yours
kalairajan


முருகனுக்குத் தலமாவது இதயத் தலம் ஒன்றே.  அதுதான் ஒவ்வொரு தலத்திலும் பிரகாசிக்கிறது; அங்கிருந்து இதயத் தலத்துக்குள்ளும் தாவுகிறது.  




--

N. Kannan

unread,
Jan 12, 2013, 12:04:25 PM1/12/13
to mint...@googlegroups.com
2013/1/11 Hari Krishnan <hari.har...@gmail.com>:

> முருகனுக்குத் தலமாவது இதயத் தலம் ஒன்றே. அதுதான் ஒவ்வொரு தலத்திலும்
> பிரகாசிக்கிறது; அங்கிருந்து இதயத் தலத்துக்குள்ளும் தாவுகிறது.
>
> முருகனடியார்களுக்குத் தலவேறுபாடு கிடையாது.
> --

அன்பின் ஹரிகி.

காளைராஜனின் ஒருங்கிணைந்த திருப்பூவணப் புகழ்மாலைக்கு இப்பாடல்
தேவைப்படுகிறது. திருப்பூவனத்தில், ‘கழுவேற்றும் பொட்டல்’ ஒன்று உள்ளது.

//இவ்வாறு சமணர்கள் கழுவேறிய இடம் "கழுவர்படைவீடு" என்று அழைக்கப்பட்டது,
இப்பொழுது "கழுகேர்கடை" என்று அழைக்கப்படுகிறது, இவ்வூர்
திருப்பூவணத்திற்கு அருகே உள்ளது, இவ்வூர்
திருவிளையாடற்புராணத்திலும். திருப்புகழிலும் திருப்பூவணத்துடன் இணைத்தே
பாடப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும், மேலும். திருப்பூவணத்தில்
10நாள் திருவிழாவில் கழுவேறுதல் 6ஆம்நாள் திருவிழாவாகக்
கொண்டாடப்படுவதும் கருத்திற் கொள்ள வேண்டியதாய் உள்ளது,// (காளைராஜன்)

இதையெல்லாம் கொள்ளும் போது அப்பாடல் திருப்பூவணம் சுப்ரமணியர் மேல்
பாடியதாக இருக்க வாய்ப்புள்ளது.

ஆனால் எந்தப்பதிப்பில் இப்பாடல் உள்ளது என்பது இப்போது முக்கியத்துவம்
பெறுகிறது. திருப்புகழ் பதிப்புகள் பற்றிய உங்கள் இடுகை முக்கியமானது.
இன்னும் புதிய திருப்புகழ்கள் வந்த வண்ணம் இருப்பது நமது தேடல்
முற்றுப்பெறவில்லை என்பதைச் செவ்வனே சுட்டுகிறது.

நா.கண்ணன்

DEV RAJ

unread,
Jan 12, 2013, 12:34:53 PM1/12/13
to mint...@googlegroups.com
On Friday, 11 January 2013 22:06:18 UTC+5:30, Hari wrote:
>> "செங்குன்றாபுரம்" என்பது கேரளாவில் கோட்டயம் அருகில் உள்ள செங்கனூர் <<


ஸ்ரீமுஷ்ணம் போன்ற விஷ்ணு ஸ்தலங்களையும்
முருகன் உறையும் தலங்களாக அருணகிரிநாதர்
பாடுவார். ஆழ்வார் பாடிய  திருச்செங்குன்றூரும்
அவ்வகையில் சேர்கிறது -


எங்கள்செல் சார்வு யாமுடை அமுதம் இமையவர் அப்பனென் அப்பன்,
பொங்குமூ வுலகும் படைத்தளித் தழிக்கும் பொருந்துமூ வுருவனெம் அருவன்,
செங்கயல் உகளும் தேம்பணை புடைசூழ் திருச்செங்குன் றூர்த்திருச் சிற்றாறு
அங்கமர் கின்ற, ஆதியான் அல்லால் யாவர்மற் றெனமர் துணையே ?


மலைநாட்டுத் திருப்பதி - திருச்செங்குன்றூர்  [செங்கனூர்]
 


The Mahavishnu Temple, Thrichittatt, Chengannoor is one of the five Vishnu temples associated with the five Pandava brothers,.....

http://en.wikipedia.org/wiki/Thrichittatt_Maha_Vishnu_Temple




தேவ்

N. Ganesan

unread,
Jan 12, 2013, 2:22:51 PM1/12/13
to மின்தமிழ், Santhavasantham, vall...@googlegroups.com

On Jan 11, 8:36 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2013/1/11 Hari Krishnan <hari.harikrish...@gmail.com>


>
> > குஹாநந்த சபையின் வெளியீட்டில் இடம் பெற்றிருப்பவை 1330 பாடல்கள்.
> >  கௌமாரம்.காமில் இடம்பெற்றுள்ளவை 1328 பாடல்கள்; தணிகைமணி, திருமுருக
> > கிருபாநந்த வாரியார் சுவாமிகள் பதிப்பில் இடம் பெற்றுள்ளவை 1326 பாடல்கள்.
> >  ஒரு ஏழெட்டு வருடங்களுக்கு முன்னால், கனடாவின் பேராசிரியர் பசுபதி அவர்கள்
>
> 2003-2005 காலகட்டத்தில் பேராசிரியர் பசுபதி அவர்கள், ஒரு புதிய திருப்புகழ்
> என்று சந்த வசந்தத்தில் இந்தப் பாடலை இட்டார்கள், யாராவது உரை எழுதவேண்டும்
> என்ற கோரிக்கையுடன்.

திரு. பசுபதி செங்குன்றூர் திருப்புகழை சந்தவசந்தத்தில் இட்ட நாள், ஜனவரி
2, 2007 [1]
https://groups.google.com/group/santhavasantham/msg/446176d625b19f85?hl=en

அதற்கொருநாள் முன்னம், அகத்தியரில் அவரது ஈடு இது:
http://www.treasurehouseofagathiyar.net/41500/41595.htm

இந்தியா, (ஐரோப்பாவிலும் ஏதாவது சுவடி இருக்கலாம்) - எல்லா திருப்புகழ்
சுவடிகளில் தேடினாலும் சில புதிய திருப்புகழ்கள் கிடைக்கும்.
இதுபற்றி மு. அருணாசலம் எழுதியுமிருக்கிறார்கள்.

அன்புடன்,
நா. கணேசன்

[1] ஜனவரி 2007-ல் சந்தவசந்தம் திஸ்கியில் யாஹூகுழுவாக இயங்கிக்
கொண்டிருந்தது,
தமிழ்மணம் காசி நிரல் எழுதி சந்தவசந்தம் கூகுகுழுவை நிழற்குழ்வாக
தானியங்கியாக நடத்தியபோது இட்ட அரிய திருப்புகழிது.
பின்னர் சில மாதங்கள் கழிந்தபின் சந்தவசந்தக் கவிஞர்கள் யுனிகோடில்
கவிமழை கூகுள்குழுவிலே பொழியத் தொடங்கினர். 6 ஆண்டுகள் பூர்த்தி.

Hari Krishnan

unread,
Jan 12, 2013, 8:05:48 PM1/12/13
to vallamai, மின்தமிழ், Santhavasantham

2013/1/13 N. Ganesan <naa.g...@gmail.com>

திரு. பசுபதி செங்குன்றூர் திருப்புகழை சந்தவசந்தத்தில் இட்ட நாள், ஜனவரி
2, 2007 [1]
https://groups.google.com/group/santhavasantham/msg/446176d625b19f85?hl=en

கண்டுபிடிப்புத் திலகங்களுக்கு:

இந்தப் பாடல் அவர் தவராகப் புரிந்துகொண்டு அனுப்பிய பாடல்.  என்னிடமும் நான் எழுதிய உரை எங்கேயிருக்கிறது என்பதற்கான தெளிவு இல்லாததால் இந்தப் பாடல்தான் போலிருக்கிறது என்று நினைத்தேன்.  இதற்கு சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு, நான் கொடுத்த சில அடையாளங்களை வைத்து, அது 2004ல் இட்ட  இன்னொரு பாடல் என்று அதையும் அனுப்பினார்.  அதன் பிறகு, திஸ்கி வடிவில் என் கணினியில் சேமித்து வைத்துள்ள அந்த மற்றொரு பாடலைக் கண்டறிந்தேன்.

காலையில் பார்த்தால் சந்தவசந்தத்துக்கு இந்த மடல் என் பெயரைக் குறிப்பிடாமல் வந்து விழுந்திருக்கிறது--ஏதோ சொந்தக் கண்டுபிடிப்பு போல.  இந்த துரோகம் இங்கேயும் தொடர்வதற்கு முன்னால், 2004ல் என் உரையுடன் வந்த அந்தப் பாடலை இங்கே இடுகிறேன்:

=============================================

வறுமைப்பாழ்பிணி ஆற்றப்படாதுளம் உருகிப்போனது தேற்றப்படாதினி
மகிமைக்கேடுகள் பார்க்கப்படாதென அழையாயோ?
வலியப்போயுடல் கூச்சப்படாமையும்  இடியப்பேசிய நாச்சிக்கலாமையும்
மறுசொற்காதுகள் கேட்கப்படாமையும் வரலாமோ
கறுவிப்பாய்புலி வேட்டைக்குளேவரு பசுவைப்போல்மிடி யாற்பட்டபாடெழு
கதையைப்பாரினி லார்க்குச்சொல்வேனினம் அறியாயோ 
கவலைச்சாகர நீச்சுக்குளேயுயிர் தவறிப்போமேன ஓட்டத்திலோடியெ
கருணைத்தோணியி லேற்றிக்கொள்வாயினி அலையாதே
குறைபட்டேயுயிர் காத்துக்கொள்வாய் என முறையிட்டோர்கரி கூப்பிட்டநாளொரு
குரலிற்போயுயிர் காத்துக்கொள்வோர்திரு மருகோனே
குளிர்முத்தாலணி மூக்குத்தியோடணி களபப்பூண்முகை பார்த்துப்பெண்மோகினி
குவளைப்பார்வையில் மாட்டிக்கொளாதருள் குருநாதா
நிறையத்தேன்விழு பூக்கொத்திலேகனி கிழியத்தான்விழு காய்கொத்திலேமயில்
நடனக்கால்படு தோப்புக்களேவயல் கயலூடே
நதியைக்காவிரி யாற்றுக்குளேவரு வளமைச்சோழ நன் நாட்டுக்குளேரக
நகரிற்சீர்பெறு மோட்சத்தையேதரு பெருமாளே.  


'குறைபட்டேயுயிர் காத்துக்கொள்வாய் என முறையிட்டோர்கரி கூப்பிட்டநாளொரு குரலிற்போயுயிர் காத்துக்கொள்வோர்திரு மருகோனே' - (காலை முதலை பற்றியது என்று) குறைபட்டு, என் உயிரைக் காத்து என்னை ஏற்றுக் கொள்வாய் என்று ஒரு யானை கூப்பிட்ட நாளில், அதன் குரலுக்கு இசைந்து போய், அதன் உயிரைக் காத்து, கொள்பவனுடைய மருமகனே!

'குளிர்முத்தாலணி மூக்குத்தியோடணி களபப்பூண்முகை பார்த்துப்பெண்மோகினி குவளைப்பார்வையில் மாட்டிக்கொளாதருள் குருநாதா' - குளிர்ச்சியான முத்து பதிக்கப்பட்ட மூக்குத்தியை அணிந்து, மார்பகங்களின் மீது வாசனைக் கலவைச் சாந்து பூசிய பெண்ணாகிய மோகினியின் கருங்குவளை மலர்கள் போன்ற விழிகள் வீசும் பார்வையில் அகப்படாமல் என்னைக் காத்தருள வேண்டும் என் குருநாதா.  (முதலைப் பிடியிலிருந்து யானையை உன் மாமன் காத்ததைப் போல் இந்த மோகப்பிடியிலிருந்து என்னை நீ காக்க வேண்டும்.)

'நிறையத்தேன்விழு பூக்கொத்திலேகனி கிழியத்தான்விழு காய்கொத்திலேமயில் நடனக்கால்படு தோப்புக்களேவயல்' - தேன் பொங்கித் ததும்பும் மலர்க்கொத்துகள் தரையெல்லாம் உதிர்ந்திருக்க, அவற்றின் மீது கனிகள் விழுந்து, விழுகின்ற வேகத்தால் சதைப் பகுதி கிழிபட்டுப் போக, அப்படிப்பட்ட காய் கனிகளின் கொத்துகளின் மீது கால் படுமாறு மயில் நடனமாடும் தோப்புகள், வயல்களில் 

'கயலூடே
நதியைக்காவிரி யாற்றுக்குளேவரு வளமைச்சோழ நன் நாட்டுக்குளேரக நகரிற்சீர்பெறு மோட்சத்தையேதரு பெருமாளே' மீன்கள் (கிழித்துக் கொண்டு பாய்கிற) காவிரியின் பாய்ச்சலுக்குள்ளே வருகின்ற, வளம் நிறைந்த சோழ நன்நாட்டில், திருவேரகத்தில் (சுவாமி மலையில்) சீர்மையான மோட்சத்தைத் தருகின்ற பெருமாளே, முருகா,

'வறுமைப்பாழ்பிணி ஆற்றப்படாதுளம் உருகிப்போனது தேற்றப்படாதினி மகிமைக்கேடுகள் பார்க்கப்படாதென அழையாயோ?' - வறுமையாகிய பாழானதொரு பிணிக்கு ஆற்றாமல் என் மனம் உருகிப் போனது.  அது தேற்றப்படாது இருக்குமேயானால் அது உன் மகிமைக்குக் கேடல்லவா?  அப்படிப்பட்ட கேடுகள் நேரக்கூடாதல்லவா?  ஆகவே, என் வறுமை தொடருமேயானல் உன் மகிமைக்கு நேரக்கூடிய கேடுகளை இந்த உலகம் பார்க்கக் கூடாது என்று என்னை வறுமையிலிருந்து விடுவிக்குமாறு அழைக்க மாட்டாயா?

'வலியப்போயுடல் கூச்சப்படாமையும்  இடியப்பேசிய நாச்சிக்கலாமையும் மறுசொற்காதுகள் கேட்கப்படாமையும் வரலாமோ' - முருகா!  உன்னையன்றி நான் யாரிடம் போய்க் கேட்பேன்!  மற்றவர்களிடம் வலியப் போய்க் கேட்பதனால் எனக்கு உடல் கூச்சம் உண்டாகிறதே!  இடிபோல் பேசக்கூடிய என் நாவில் சொற்கள் சிக்குவதில்லையே!  நான் பேசும் பேச்சுக்கு (யாரிடம் போய் இரக்கிறேனோ அவரிடமிருந்து) மறுமொழிகள் ஏதும் என் காதில் கேட்கப்படுவதில்லையே!  இந்த நிலை எனக்க வரலாமோ!

(சந்த பந்த முந்து விஞ்சை செஞ்சொலிற் பிரபந்த நந்து
சங்க மங்கலம் பொருந்து தமிழ்பாடியே
தஞ்சமென்று சென்று சென்று நஞ்சை விஞ்சு நெஞ்ச வஞ்சர்
தங்கள் முன்பு நின்று நின்று மெலிவோதியே
சிந்தை நொந்து நொந்து நைந்து நைந்து வெம்பி வெம்பி அங்கி
சிந்த இந்த வெங்குடம்பை அழிபோதுமா
சிங்க முன்பு குந்த தந்தி யின்குலங் கலங்கு பண்பொ
சிந்த துன்ப மென்றொழிந்து கரையேறுவேன்...)
--திருச்செந்தில் வகுப்பு)

'கறுவிப்பாய்புலி வேட்டைக்குளேவரு பசுவைப்போல்மிடி யாற்பட்டபாடெழு கதையைப்பாரினி லார்க்குச்சொல்வேனினம் அறியாயோ' - தன்னுடைய வேட்டையின் எல்லைக்குள் வருகின்ற பசுவின் மீது கோபத்துடன் உறுமிக்கொண்டு பாய்கின்ற புலியைப் போல் என் மீது பாய்கின்ற வறுமையால் நான் படுகின்ற பாடுகளையும், என் துன்பக் கதையையும் இனிமேலும் உலகத்தில் யாரிடம் போய்ச் சொல்வேன்?  நீ இன்னும் அறிய மாட்டாயா?

'கவலைச்சாகர நீச்சுக்குளேயுயிர் தவறிப்போமேன ஓட்டத்திலோடியெ கருணைத்தோணியி லேற்றிக்கொள்வாயினி அலையாதே' - நீச்சுப் பரப்பான கவலைக் கடலுக்குள் கிடந்துழன்று உழன்று என் உயிர் தவறிப் போய்விடும் போலல்லவா இருக்கிறது!  என்னை இனிமேலும் அலைய விடாதே.  வேகமாக உன் கருணைத் தோணியின் ஓட்டத்தில் ஏற்றிக் கொள்வாய்.

வாக்கு அமிர்தமாய் இருக்கிறது.  முதலில் சொன்னதை மாற்றிக் கொள்கிறேன்.  இந்தப் பாடலை விரிக்க விரிக்க அருணகிரி நாதரின் ஆட்சி துலங்கக் காண்கிறேன்.  இப்படி ஒரு உருக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வாக்கு அவர் வாக்காகத்தான் இருக்க வேண்டும்.

அன்புடன்,
ஹரி கிருஷ்ணன்.

==========================

பேரா பசுபதி, கௌமாரம்.காமில் உரை எழுதியிருக்கும் திரு நடராஜனுடைய இளைய சகோதரர்.  இந்த உரையைப் பார்த்ததும் அவர் நேற்று எனக்கு அனுப்பியிருக்கும் மடல்:


2013/1/12 Pas Pasupathy <pas.pa...@gmail.com>
Excellent! 
The point is: for these 4(?) songs , there are no urai-s by Chengalvaraya Pillai. So nice to do for all of them.... 

Can I publish this in my Blog....one of these days?

Pas

இந்த உரையைத் தன் வலைப்பூவில் வெளியிட முன் அனுமதி கேட்பவர் எங்கே, மற்ற அநாகரீகங்கள் எங்கே! 

Hari Krishnan

unread,
Jan 12, 2013, 8:17:09 PM1/12/13
to vallamai, மின்தமிழ், Santhavasantham

2013/1/13 N. Ganesan <naa.g...@gmail.com>

தமிழ்மணம் காசி நிரல் எழுதி சந்தவசந்தம் கூகுகுழுவை நிழற்குழ்வாக
தானியங்கியாக நடத்தியபோது இட்ட அரிய திருப்புகழிது.
பின்னர் சில மாதங்கள் கழிந்தபின் சந்தவசந்தக் கவிஞர்கள் யுனிகோடில்
கவிமழை கூகுள்குழுவிலே பொழியத் தொடங்கினர். 6 ஆண்டுகள் பூர்த்தி.

சந்தவசந்தம் யுனிகோட் குழுவாக மாறியதற்கு ராஜ தியாகராஜனின் உழைப்பு காரணம்.  

உழைப்புக்கான க்ரெடிட்டைக் கொடுக்காத உதாரகீர்த்தி இன்றா நேற்றா... எத்தனை வருடமாக இருக்கிறது!

N. Ganesan

unread,
Jan 12, 2013, 8:54:43 PM1/12/13
to மின்தமிழ், vall...@googlegroups.com
அன்பு ஹரிகி,

உங்கள் மடலுக்குத் தானே பதில் இட்டுள்ளேன். இப்பாடலை அனுப்பிய
தேதி குறிப்பிட்டிருக்கிறேனே.

இங்கே பார்க்கவும்:
https://groups.google.com/group/santhavasantham/msg/56e96b8de0019fec

நா. கணேசன்

On Jan 12, 5:05 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2013/1/13 N. Ganesan <naa.gane...@gmail.com>


>
> > திரு. பசுபதி செங்குன்றூர் திருப்புகழை சந்தவசந்தத்தில் இட்ட நாள், ஜனவரி
> > 2, 2007 [1]

> >https://groups.google.com/group/santhavasantham/msg/446176d625b19f85?...

> மறுசொற்காதுகள்...
>
> read more »

N. Ganesan

unread,
Jan 12, 2013, 8:57:31 PM1/12/13
to மின்தமிழ், vall...@googlegroups.com

On Jan 12, 5:17 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2013/1/13 N. Ganesan <naa.gane...@gmail.com>
>

> > தமிழ்மணம் காசி நிரல் எழுதி சந்தவசந்தம் கூகுகுழுவை நிழற்குழ்வாக
> > தானியங்கியாக நடத்தியபோது இட்ட அரிய திருப்புகழிது.
> > பின்னர் சில மாதங்கள் கழிந்தபின் சந்தவசந்தக் கவிஞர்கள் யுனிகோடில்
> > கவிமழை கூகுள்குழுவிலே பொழியத் தொடங்கினர். 6 ஆண்டுகள் பூர்த்தி.
>
> சந்தவசந்தம் யுனிகோட் குழுவாக மாறியதற்கு ராஜ தியாகராஜனின் உழைப்பு காரணம்.
>

அன்பு ஹரிகி,

நானும் உழைத்திருக்கிறேன். தங்களுக்குத் தெரியாது போலும்.
இலந்தை, ராஜ தியாகராஜனை கேட்டால் தெரிந்துகொள்ள முடியும்.

நா. கணேசன்

Reply all
Reply to author
Forward
0 new messages