‘இலக்கியம்’ என்பதற்கு இதுவரை எத்தனையோ விளக்கங்கள் காலந்தோறும் இடந்தோறும் தரப்பட்டு வந்துள்ளன. நம் யாவர்க்குமே இலக்கியம் என்றால் என்ன, அது எது என்று தெரியும். ஆனால் யாவரையும் திருப்திப்படுத்தக்கூடிய் அளவில் இதுவரை எந்த விளக்கமும் அமையவில்லை என்றே கூறலாம்.
இதுவரை கூறப்பட்டுவந்த விளக்கங்களை நாம் இரண்டுவகைகளில் பகுக்கலாம்.
1. இலக்கியம் என்பது ஒருவகைப் புனைந்துரைத்தல் (ஃபிக்ஷனலைசேஷன்) என்று கூறுபவை.
2. இலக்கியம் என்பது அழகியல் இன்பம் தரும்வகையில் அமைக்கப்படும் மொழியமைப்புமுறை(ஈஸ்தடிகலி ப்ளீசிங் லாங்வேஜ் ஸ்ட்ரக்சர்) என்று கூறுபவை.
முதல்வகை விளக்கத்தில் புனைந்துரைத்தல் என்பது விரிவான பொருளில் ஆளப்படுகிறது. இதில் பிளேட்டோ கூறிய போலச்செய்தல் (இமிடேஷன்) முதல், கோல்ரிட்ஜ் கூறிய கற்பனை(இமேஜினேஷன்) வரை, அனைத்தையும் அடக்கி விடலாம். இலக்கியம் என்பது சமுதாயத்தின் பிரதிபலிப்பு போன்ற விளக்கங்களும் இதில் அடங்கிவிடும்.
இரண்டாவது வரையறை, மொழியமைப்பு முறைக்கு முதன்மை – வடிவத்திற்கு முதன்மை – தருவது. தமிழில் இலக்கியத்தைக் குறிக்கும் பழைய பெயர்களான செய்யுள், பனுவல், நூல் போன்றவை இக்கருத்தை உட்கொண்டுள்ளன.
முதல்வகை விளக்கம் செயல்படும் முறைக்கு முக்கியத்துவம் தருகிறது. இரண்டாவது விளக்கம், செய்யப்பட்ட விளைவுக்கு முக்கியத்துவம் தருகிறது.
ஒரு கருத்தை, ஒரு பின்னணி தந்து, வடிவம் ஏற்கவைத்து, அர்த்தமுள்ளது ஆக்குவதற்குச் செய்யும் பணிதான் புனைவு என்பது. எனவே புனைவை அடிப்படையாகக் கொண்ட விளக்கத்தில், வரலாறு, தன்வரலாறு, பயண இலக்கியம் போன்றவற்றை அடக்கமுடியாது. இவற்றில் புனைவு இல்லை.
இரண்டாவது வகை விளக்கத்திலோ, துணுக்குகள், சிலேடைகள், கூர்மையாகச் செயல்படுமாறு தயாரிக்கப்பட்ட விளம்பரங்கள் போன்றவையும் அடங்கிவிடும். ஆகவே இந்த விளக்கங்கள் எவ்வகையிலும் இலக்கியம் என்ற ஒன்றை மட்டுமே அடக்கக்கூடிய தன்மை பெற்றிருக்கவில்லை. ஆகவே புது விளக்கம் தேவையா கிறது. பெரும்பாலான இலக்கியவாதிகளும் திறனாய்வாளர்களும் இவ்விரண்டையும் இணைத்தோ, அல்லது இவ்விரண்டிற்கும் நடுநிலை வகித்தோ இவற்றை ஏற்றுவந்துள்ளனர் (எடுத்துக்காட்டு, ரெனி வெல்லக், நார்த்ராப் ஃப்ரை) என்பதும் இவற்றின் போதாமையைக் காட்டுகிறது.
இவ்வாறு இடர்ப்படும் நிலை தேவையில்லை என்கிறது, நவீன திறனாய்வு வளர்ச்சி. இன்றைய திறனாய்வாளரான டேவிட் லாட்ஜ், மொழியியல் அடிப்படையில், இலக்கியம் என்பது ஏற்புடைய ஒழுங்கான முன்புலஆக்கத்தை (அல்லது முன்னணிப்படுத்தலை) உட்கொண்ட ஒன்று என்று விளக்குகிறார். பின்புலம் அல்லது பின்னணி (பேக்கிரவுண்ட்) என்பது நாம் அனைவரும் அறிந்தது. இலக்கியப் படைப்பிலும், பொதுவான பேச்சுமொழி, ஏற்புடைய இலக்கிய மரபு இவை பின்புலமாக அமைந்துள்ளன. பின்புலத்திற்கு மறுதலை முன்புலம் (ஃபோர்கிரவுண்ட்).
முன்புலஆக்கம் (ஃபோர்கிரவுண்டிங்) என்பது பின்புலத்தில் நிறுத்துவதற்கு பதிலாக முன்னணியில் ஒன்றை நிறுத்துவதாகும். இலக்கிய மொழியை இலக்கியமல்லாத மொழியின் பின்னணி கொண்டே அறிகிறோம்.
வழக்கமான முறையில், எதிர்பார்க்கக்கூடிய முறையில் அமையும் மொழியமைப்பில் நம் கவனம் செல்லுவதில்லை. அதன் பொருள் மட்டுமே விரைந்து உணர்கிறோம். இது பின்னணி மொழி. இதற்கு மாறாக, அழகான அல்லது மாறுபட்ட அமைப்பால் நம் கருத்தை உணர்த்தவேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே செய்யப்படும் உருத்திரிபே (இண்டென்ஷனல் டிஸ்டார்ஷன்) முன்புல ஆக்கம் என்பது. முன்புல ஆக்கம், முன்கூறிய இருவகைப் பின்னணிகளுக்கும் மாறுபட்டது மட்டுமன்றி, ஒரு இலக்கியப் படைப்பிலே பொதுநிலையில் உருவான மொழியியல் கூறுகளுக்கும் மாறுபட்டு அமையும்.
முன்புல ஆக்கம்தான் மொழியமைப்பை வேறுபடுத்துகிறது. ஆகவே இதுவும் இலக்கியத்துக்கு மட்டுமே உரிய ஒன்றாகாது. நம்முடைய அன்றாடப் பேச்சிலும், சிலேடைகள், நகைச்சுவைத் துணுக்குகள், அறுவைஜோக்குகள், முரண், அங்கதம் ஆகியவற்றை உண்டாக்குவது இதுவே. ஆனால் இவற்றில் ஒழுங்கான அமைப்பு முறை இல்லை. ஆகவே எங்கே ஒழுங்கான (சிஸ்டமேடிக்), ஏற்புடைய முன்புல ஆக்கம் செய்யப்படுகிறதோ அங்கே இலக்கியம் உருவாகிறது.
அமைப்பியலாளரான ரோமன் யாகப்சன் என்பவரும் இலக்கியத்துக்குப் புதுவிளக்கம் தருகிறார். எந்தக் கலைப்படைப்புமே தன்னைப் பற்றியதுதான் என்பது அவர் கருத்து. கலைப்படைப்பு என்பது ஒருவித தொடர்புமுறை (கம்யூனிகேஷன் ப்ராசஸ்). எந்தத் தொடர்புமுறைக்குமே சொல்பவர், கேட்பவர் என இருவர் வேண்டும். மேலும் இருவருக்கும் பொதுவான ஒரு சூழல் (காண்டெக்ஸ்ட்), பொதுவான ஊடகம் (கோட்), பொதுவான இணைப்பு (காண்டாக்ட்) இவையும் வேண்டும். உணர்த்தப்படும் செய்தி, விஷயம் (மெசேஜ்) ஆகும். இலக்கியமும் ஒருவகை விஷயமே. விஷயங்கள் ஆறுவகையில் அமையலாம் என்கிறார் அவர்.
1. பொருள் அடிப்படையிலான விஷயம் – சூழலை மையமாகக் கொண்டது
2. உணர்ச்சி அடிப்படையிலான விஷயம் – சொல்பவரை மையமாகக் கொண்டது
3. தூண்டல் அடிப்படையிலான விஷயம் – கேட்பவரை மையமாகக் கொண்டது
4. தொடர்பு உண்டாக்கல் அடிப்படையிலான விஷயம் – இணைப்பை மையமாகக் கொண்டது
5. தெளிவுறுத்தல் அடிப்படையிலான விஷயம் – பயன்படுத்தும் மொழிச்சொற்க ளை மையமாகக் கொண்டது
இவை ஐந்திலிருந்தும் மாறுபட்டு தன்னிடமே ஈர்க்கும் சக்தியுள்ள விஷயம் இலக்கியம் என்கிறார் யாகப்சன்.
6. இலக்கிய அடிப்படையிலான விஷயம் – தன்னையே மையமாகக் கொண்டது
இப்படிப்பட்ட விளக்கம், உருவவியல் வாதத்தை அடிப்படையாகக் கொண்டது. சாதாரணநிலையிலிருந்து விலகிய, அசாதாரண அமைப்புக் கொண்டவற்றையே (டீவியண்ட் ஃபார்ம்) இலக்கியமாக ஏற்பது. ஆனால் எல்ல இலக்கியங்களும் அசாதாரண வடிவம் கொண்டவை அல்லவே? நடப்பியல்சார் இலக்கியங்கள் இவ்விளக்கத்தின்கீழ் வருவது கடினம். எனவே இவ்விளக்கமும் பூர்த்தியானதாக இல்லை. டேவிட் லாட்ஜின் விளக்கமே இதைவிடப் பொருந்தியதாக உள்ளது.
அமைப்பியல்சார் விளக்கங்கள் இவற்றின் குறைகளை நீக்குகின்றன. அமைப்பியலில் இலக்கியத்தைப் பிரதி (டெக்ஸ்ட்) என்றும், விஷயம் (டிஸ்கோர்ஸ்) என்றும பிரிக்கிறோம். இலக்கியப் பிரதி என்பது ஒரு இலக்கியப் படைப்பு பெற்றிருக்கும் மொழியடிப்படையிலான வடிவம். அப்படைப்பில், மொழி செயல்படும் முறையை இலக்கிய விஷயம் (லிடரரி டிஸ்கோர்ஸ்) என்கிறோம்.
ஒரு படைப்பு, பிரதி என்ற முறையில் பிறவற்றிலிருந்து வேறுபட்டிருக்கா விட்டாலும், இலக்கிய விஷயம் என்ற முறையில் நிச்சயமாக வேறுபட்டிருக்க வேண்டும் என்பது அமைப்பியலாளர் கருத்து. அதாவது வெளிப்படையான முன்புலஆக்கம் இல்லாவிட்டாலும் உள்ளமைவான முன்புலஆக்கம்தான் இலக்கியப் படைப்பை பிற ஆக்கங்களிலிருந்து வேறுபடுத்துகிறது.
இங்கு இலக்கிய விஷயம் என்பது வெறும் உள்ளடக்கத்தை மட்டும் குறிப்பதன்று. மார்க்சியவியலாளர்கள், பொருளாதாரம் என்ற அடிக்கட்டுமானத்தின் மேலாக உள்ள மேற்கட்டுமானங்களில் ஒன்றே இலக்கியம் என்று கொள்கின்றனர். இப்போது இந்த நிலைப்பாடு கேள்விக்குரியதாக்கப் பட்டுள்ளது. பண்பாடு என்ற அடிக்கட்டுமானத்தின் ஒரு வெளிநிலை (மேனிஃபெஸ்டேஷன்) மொழி என்றும், மொழி என்ற அடிப்படையின் மேற்கட்டுமானமே இலக்கியம் என்றும் கொள்ளலாம். ஆனால் அதேசமயம், ஓர் இலக்கியப் பிரதி ஒரு சமூகச் சூழலின் அழுத்தத்தால் வெளிப்படும் எழுத்துமுறை என்பது இங்கே மறுக்கப்படவில்லை. ஆனால் இலக்கியப் பிரதி என்பது மார்க்சியக் கருத்துருவாக்க நிலையிலிருந்து சற்றே மாறுபட்ட நிலையில் இங்கு ஆளப்படுகிறது.
ஓர் இலக்கியப் பிரதி எழுதப்படட நிலையில் முழுமை பெற்ற ஒன்று என்று மரபான கருத்துகள் சொல்கின்றன. ஆனால் அமைப்பியலாளர் அவ்வாறு கூறுவதில்லை. இலக்கியப் பிரதிகள், இலக்கியமாகப் படித்தல் என்ற செயலுக்கு உட்படும்போதுதான் முழுமை பெறுகின்றன. இச்செயல் இலக்கியமாக ஏற்றுக்கொள்ளுதல் என்பதை உள்ளடக்கியது. இலக்கியமாக ஏற்றுக்கொள்ளுதல் என்பது புனைவாக ஏற்றுக் கொள்ளுதல் என்பதை உட்கொண்டது. அதாவது, உ. வே. சா. வின் மீனாட்சிசுந் தரம் பிள்ளை சரித்திரத்தை, சரித்திர விஷயத்திற்காக அன்றி, இலக்கியமாகப் படித்தல் என்ற நிலைக்குட்படுத்தும்போதுதான் அது இலக்கியம் ஆகின்றது. இலக்கியப் படிப்புக்குட்படாத எந்த நூலும் இலக்கியம் ஆகாது.
இந்த நிலைப்பாடு இலக்கியம் என்ற கருத்தை விளக்கினாலும, வேறு ஒரு புதிய நிலைக்கு அழைத்துச் செல்கிறது. இலக்கியம் என்பது முன்புல ஆக்கம் கொண்டது; படிப்புச் செயலினால் முழுமை அடைகிறது என்றால் முன்புல ஆக்கம் செய்யப்பட்டு, இலக்கியப் படிப்பினை எதிர்நோக்கி வெளியிடப்படும் எந்த நூலும் (தரம் பற்றிய கருத்தின்றி) இலக்கியமாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்றாகிறது. ஆனால் உ. வே. சா. வின் வாழ்க்கைக் குறிப்புகள் போன்ற நூல்கள், வெளிப்படையான முனபுலஆக்கமோ இலக்கியமாகப் படிக்கப்படும் எதிர்பார்ப்போ இன்றி வெளியிடப்பட்டிருப்பினும், அவை இலக்கிய அந்தஸ்தை அடைந்துள்ளன. மேற்கூறிய கருத்தடிப்படையில், இவை முதல்நிலையில் இலக்கியமாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. இந்த நிலை ஒரு தீவிரமான குறையைக் காட்டுகிறது. அதாவது தரமற்ற கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் போன்றவற்றையும் இலக்கியமாக ஏற்றலும், பிற அறிவுத்துறை நூல் கள், சிறந்த இலக்கியத் தரம் பெற்றிருப்பினும அவற்றை இலக்கியப் படிப்புக்கு ஈடுசெய்யும் இரண்டாம் தர நிலையிலேயே இலக்கியமாகக் கொள்ளலும் என்பது அந்தக் குறை. ஆகவே அமைப்பியலாய்வுகளில் தரமதிப்பீடு புறக்கணிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
ஆனால் இந்த பயம் தேவையில்லை என்று தோன்றுகிறது. இலக்கியப் பிரதி முழுமை பெற இலக்கியப் படிப்பு என்பதைப் பூர்த்திசெய்யும் நூல்களே இலக்கியமாக அமையும். இலக்கியப் படிப்பு என்பது நுகரும் அழகியலின் விளைவாக எழுந்துள்ள பொழுதுபோக்குப் படிப்பு அன்று. அல்லது ஒரே ஒரு நூலை மட்டுமே படித்துவிட்டு அபிப்பிராயங்களை உருவாக்குவதன்று. இலக்கியப் படிப்பு முழுமை பெற்றதாக உருவாகாத நிலையில் தவறான மதிப்பீடுகளுக்கு அழைததுச் செல்லும். கல்வித்துறை ஆய்வுகளில் இன்று காணப்படும் தவறான மதிப்பீடுகள் இலக்கியப் படிப்புப் பயிற்சி இன்மையாலும ஏற்படுபவை.
பார்வை நூல்கள்
1. The Modes of Modern Writing-David Lodge, 1977.
2. ஸ்ட்ரக்சுரலிசம்-தமிழவன், 1982
அறிஞர் திரு.க.பூரணச்சந்திரன் அவர்கள், திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீபர் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். வேலூர் ஊரிசுக் கல்லூரியில் இளம் அறிவியல் பட்டமும், தொடர்ந்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் முதுகலைப்பட்டமும், மதுரைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் முதுகலைப்பட்டமும் பெற்றவர். ஜெர்மன், வடமொழி, பிராகிருதம் ஆகியவற்றில் அடிப்படைத் தேர்ச்சி உண்டு. இவை யாவும் அவருடைய ஆய்வுகளுக்குப் பெரும் உதவியாக அமைந்தன. மார்க்சிய சிந்தனையுடன் கூடிய நல்ல திறனாய்வாளர். இலக்கியக் கொள்கையில் மிகுந்த ஆர்வம் காட்டி நூல்கள் பல எழுதியுள்ளார். இதழியல் துறையிலும் பணியாற்றி, அத்துறையிலும் நூல்கள் எழுதியுள்ளார்....
--- பூரணச்சந்திரன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

(1872 — 1970)
எதற்காக நான் வாழ்ந்திருக்கிறேன் ?
மூலம்: பெர்ட்ரெண்டு ரஸ்ஸல்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா
சில புத்தகங்களை பற்றி கேள்விப்படும்போதே நமக்கு அப்புத்தகம் பிடித்து போய்விடும், அதை படிக்க ஆர்வமும் வளர்ந்துவிடும். இதற்கு முக்கிய காரணம் அப்புத்தகத்தை பற்றி நமக்கு கிடைத்த தகவலும் அத்தகவல் தரப்பட்ட விதமும்தான். அப்படி என்னை கவர்ந்த சில புத்தகங்களில் ‘What I have Lived For (Bertrand Russell)’ என்ற புத்தகமும் ஒன்று. இப்புத்தகத்தை நான் இன்னும் வாங்கவுமில்லை படிக்கவுமில்லை. ஆனால் இது எனக்கு மிகவும் பிடித்த புத்தகங்களின் பட்டியலில் இருக்கிறதென்றால் அதற்கு காரணம் திரு.ஜெயபாரதன் எழுதிய ஒரு கட்டுரைதான். அக்கட்டுரை உங்கள் பார்வைக்கும்.
– நதியலை
http://nathiyalai.wordpress.com/2006/12/12/what-i-have-lived-for/
முன்னுரை :
பிரிட்டீஷ் மேதை பெர்ட்ரெண்டு ரஸ்ஸல் [Bertrand Russel (1872-1970)] எழுதிய சுய சரிதையிலிருந்து இக்கட்டுரை எடுக்கப் பட்டது. அவர் ஈடுபட்ட துறைகள் கணிதம், வேதாந்தம், விஞ்ஞானம், மதம், அரசியல், சமூகவியல், கல்வி, வரலாறு, தர்க்கம் ஆகியவை. அவர் போர் எதிர்ப்பாளி. மனித நேயச் சமூக நியாயக் காப்பாளி. இரண்டாம் உலகப் போருக்குப் பின் அணு ஆயுத ஒழிப்புக்கு மக்களைச் சத்தியா கிரகம் செய்யத் தூண்டினார். அணு ஆயுதச் சோதனை, அணு ஆயுதப் பெருக்கத் தடுப்பாளி. 1960 ஆண்டுகளில் வியட்நாம் போரில் பல்லாண்டுகள் ஈடுபட்ட அமெரிக்காவை எதிர்த்துப் பேசிவந்தார். 1963 இல் பெர்ட்ரெண்டு ரஸ்ஸல் உலக அமைதி நிறுவனத்தை ஏற்படுத்தி உலகச் சமாதானத்துக்குப் பாடுபட்டார். 1950 இல் இலக்கிய நோபெல் பரிசு ரஸ்ஸலுக்கு அளிக்கப் பட்டது.
****************
எதற்காக நான் வாழ்ந்திருக்கிறேன் ?
பெர்ட்ரெண்டு ரஸ்ஸல்
மூன்று இச்சைகள் என் வாழ்வை ஆட்கொண்டு என்னை வழிநடத்திச் சென்றன: அவை எளியவை. ஆனால் தீவிரமாய்ப் பொங்கி எழுந்தவை. அன்புக்கு ஏங்கும் பிணைப்பு உணர்ச்சி, மெய்யறிவை தேடும் தாக உணர்ச்சி, இடர்ப்படும் மாந்தர் மீது அடங்காத இரக்க உணர்ச்சி. சூறாவளிப் புயல் போன்று, இந்த மூன்றும் என்னை இங்குமங்கும் அலைத்து ஆழ்ந்த மனக்கசப்புத் துயர்க்கடலின் எல்லையைத் தொடும்படி தள்ளி விட்டன!
காதலை முதலில் தேடிச் சென்றதின் காரணம், மெய்மறந்த இன்பத்தை எனக்கு அது அளித்தது! பேருவகையில் விளைந்த அச்சிறு நேர இன்பத்திற்காக வாழ்வின் மற்றைய காலத்தை எல்லாம் தியாகம் செய்யத் துணிந்தேன். பயங்கரத் தனிமைத் தவிப்பிலிருந்து காதற் பிணைப்பு என்னை விடுவித்தது! நடுங்கும் மனித உணர்ச்சி உலகின் விளிம்பிலிருந்து ஆழங் காண முடியாத, உயிரற்ற பாதாளத்தை நோக்கும் தனிமையிலிருந்து விடுவிப்புக் கிடைத்தது. முடிவாக அதைத் தேடி அடைந்தேன். கருதொருமித்த காதல் இணைப்பில் சித்தர்களும், கவிஞர்களும் மாயச் சிற்றுலகில் சொர்க்கத்தைக் கற்பனித்த காட்சியைக் கண்டேன்! அதைத்தான் தேடினேன்! மனித இனத்திற்கு கிட்டிய பெரும் பேறாகத் தோன்றிய அதனை, இறுதியில் நான் தேடி அடைய முடிந்தது.
முதல் இச்சைக்குச் சமமான வெறியில் அடுத்து மெய்ஞானத்தையும் தேடிச் சென்றேன். மனிதர் இதயத்தைப் புரிந்து கொள்ள விரும்பினேன். அண்டவெளியில் விண்மீன்கள் ஏன் ஒளிவீசுகின்றன வென்று அறிய விழைந்தேன். எண்களின் ஆட்டம் கணிதத் திணிவுக்கு (Numbers holds sway above the flux) மீறிய தென்னும் பித்தகோரஸின் ஆற்றலைப் புரிந்து கொள்ள முயற்சி செய்தேன். எல்லாம் சொற்பந்தான், பெருகிய அளவில் அதைப் பெற்றுக் கொள்ள வில்லை.
காதற் பிணைப்பு, மெய்யறிவு இரண்டும் பெற்றுக் கொள்ள முடிந்தவை. அவை என்னைச் சொர்க்கத்துக்கு ஏற்றிச் சென்றன. ஆனால் மனித இரக்கம் என்னை மீண்டும் பூமிக்கு இழுத்து வந்தது. மனிதர் படும் இடர்ப்பாடுக் கூக்குரல்களின் எதிரொலிகள் நெஞ்சில் அலைமோதி என்னைத் துடிக்க வைத்தன! பஞ்சத்தில் நோகும் பச்சிளம் குழந்தைகள், கொடுமை வர்க்கத்துக்குப் பலியாகும் வலுவற்ற எளிய மக்கள், புத்திரருக்குப் பாரமாகப் போன வயோதிகப் பெற்றோர், தனிமையில் நோகும் ஏழ்மை உலக நாடுகள், வறுமை, வேதனை ஆகியவை எல்லாம் மானிட வாழ்க்கையை ஏளனம் செய்கின்றன! அந்தச் சீர்கேடுகளை நீக்க எனக்குப் பேராவல் உள்ளது. ஆனால் முடிய வில்லையே என்னால்! மனத்துயரில் அதனால் நானும் தவிக்கிறேன்.
இதுவே என் வாழ்க்கை. இந்த வாழ்க்கை வாழத் தகுதியானது எனக் கண்டேன். எனக்கொரு வாய்ப்பு இன்னும் கிடைக்குமாயின், அவ்வாழ்வில் மீண்டும் மகிழ்ச்சியோடு பங்கெடுக்க விருப்பம் உள்ளது.
++++++++++++++++
தகவல்:
“What I have Lived For” By Bertrand Russell [From the Book Autobiography of Bertrand Russel]
S. Jayabarathan (jayaba...@gmail.com) October 2, 2009
வேந்தர் பெருந்தகையே,///மனிதர் படும் இடர்ப்பாடுக் கூக்குரல்களின் எதிரொலிகள் நெஞ்சில் அலைமோதி என்னைத் துடிக்க வைத்தன! பஞ்சத்தில் நோகும் பச்சிளம் குழந்தைகள், கொடுமை வர்க்கத்துக்குப் பலியாகும் வலுவற்ற எளிய மக்கள், புத்திரருக்குப் பாரமாகப் போன வயோதிகப் பெற்றோர், தனிமையில் நோகும் ஏழ்மை உலக நாடுகள், வறுமை, வேதனை ஆகியவை எல்லாம் மானிட வாழ்க்கையை ஏளனம் செய்கின்றன! அந்தச் சீர்கேடுகளை நீக்க எனக்குப் பேராவல் உள்ளது. ஆனால் முடிய வில்லையே என்னால்! மனத்துயரில் அதனால் நானும் தவிக்கிறேன்.///////<ஆனால் முடிய வில்லையே என்னால்! மனத்துயரில் அதனால் நானும் தவிக்கிறேன்.>
அதுக்கு கடவுளை பரவணும்///வறுமை, பஞ்சம், நோய்கள், வயோதிகப் பெற்றோர் கொடுமை, கொடுமை வர்க்கப்பலிகள்,இவற்றை உண்டாக்குவது கடவுள் அல்ல. மனிதருக்குக் கொடுமை இழிக்கும் மனிதரே, ஆட்சியாளரே இவற்றுக்குப் பொறுப்பு.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
இந்தக் கேள்வி எல்லாக் காலத்திலும் அரைகுறைகளால் கேட்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. ‘இதையெல்லாம் யார் தீர்மானிப்பது? ஒவ்வொருவருக்கும் ஒன்று கிளாசிக்’ என்று சொல்லக்கூடிய ஒருவன் , ‘இலக்கியம்னா இன்னதுன்னெல்லாம் சொல்லிட முடியாது. எல்லாமே இலக்கியம்தான்’ என்று சொல்லக்கூடிய ஒருவன், ’நல்லது கெட்டதுன்னெல்லாம் சொல்ல நாம யாரு? காலம் தீர்மானிக்கட்டும்’ என்று சொல்லக்கூடிய ஒருவன் மனித இனம் இதுவரையில் வளர்த்தெடுத்துவந்த சிந்தனை மரபையோ இலக்கியமரபையோ பற்றி எதுவுமே தெரியாத பாமரன்.
இருபது வயதுக்குக் குறைவான ஒருவன் அப்படிச் சொன்னால் அவனுக்கு ஒரு விளக்கம் கொடுக்கலாம். அதற்குமேல் வயதான ஒருவன் சொன்னால் ‘சரிதான் ராசா, நீ போய் கொப்பரை வியாபாரம் செய், அல்லது கம்ப்யூட்டர் தட்டு, அல்லது கல்லூரியில் வகுப்பெடு…நீ அதற்குத்தான் லாயக்கு’ என்று மட்டும்தான் பதில் சொல்லவேண்டும்.
- ஜெயமோகன்http://www.jeyamohan.in/35341#.WphMqejwaUk
| Major forms |
|---|
| Genres |
| Media |
| Techniques |
| History and lists |
| Discussion |
Literature, in its broadest sense, is any single body of written works. More restrictively, literature is writing considered to be an art form, or any single writing deemed to have artistic or intellectual value, often due to deploying language in ways that differ from ordinary usage.
Its Latin root literatura/litteratura (derived itself from littera: letter or handwriting) was used to refer to all written accounts, though contemporary definitions extend the term to include texts that are spoken or sung (oral literature). The concept has changed meaning over time: nowadays it can broaden to have non-written verbal art forms, and thus it is difficult to agree on its origin, which can be paired with that of language or writing itself. Developments in print technology have allowed an evergrowing distribution and proliferation of written works, culminating in electronic literature.
Literature can be classified according to whether it is fiction or non-fiction, and whether it is poetry or prose. It can be further distinguished according to major forms such as the novel, short story or drama; and works are often categorized according to historical periods or their adherence to certain aesthetic features or expectations (genre).
There have been various attempts to define "literature".[1] Simon and Delyse Ryan begin their attempt to answer the question "What is Literature?" with the observation:
Definitions of literature have varied over time: it is a "culturally relative definition".[3] In Western Europe prior to the 18th century, literature denoted all books and writing.[3] A more restricted sense of the term emerged during the Romantic period, in which it began to demarcate "imaginative" writing.[4][5] Contemporary debates over what constitutes literature can be seen as returning to older, more inclusive notions; Cultural studies, for instance, takes as its subject of analysis both popular and minority genres, in addition to canonical works.
The value judgment definition of literature considers it to cover exclusively those writings that possess high quality or distinction, forming part of the so-called belles-lettres ('fine writing') tradition.[6] This sort of definition is that used in the Encyclopædia Britannica Eleventh Edition(1910–11) when it classifies literature as "the best expression of the best thought reduced to writing."[7] Problematic in this view is that there is no objective definition of what constitutes "literature": anything can be literature, and anything which is universally regarded as literature has the potential to be excluded, since value judgments can change over time.[6]
The formalist definition is that "literature" foregrounds poetic effects; it is the "literariness" or "poetic" of literature that distinguishes it from ordinary speech or other kinds of writing (e.g., journalism).[8][9] Jim Meyer considers this a useful characteristic in explaining the use of the term to mean published material in a particular field (e.g., "scientific literature"), as such writing must use language according to particular standards.[1] The problem with the formalist definition is that in order to say that literature deviates from ordinary uses of language, those uses must first be identified; this is difficult because "ordinary language" is an unstable category, differing according to social categories and across history.[10]
Etymologically, the term derives from Latin literatura/litteratura "learning, a writing, grammar," originally "writing formed with letters," from litera/littera "letter".[11] In spite of this, the term has also been applied to spoken or sung texts.[1][1
[Cont'd]
இது இலக்கியம் இது இலக்கியமல்ல என்றெல்லாம் தீர்மானிப்பது யார்?-தேமொழிஇந்தக் கேள்வி எல்லாக் காலத்திலும் அரைகுறைகளால் கேட்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. ‘இதையெல்லாம் யார் தீர்மானிப்பது? ஒவ்வொருவருக்கும் ஒன்று கிளாசிக்’ என்று சொல்லக்கூடிய ஒருவன் , ‘இலக்கியம்னா இன்னதுன்னெல்லாம் சொல்லிட முடியாது. எல்லாமே இலக்கியம்தான்’ என்று சொல்லக்கூடிய ஒருவன், ’நல்லது கெட்டதுன்னெல்லாம் சொல்ல நாம யாரு? காலம் தீர்மானிக்கட்டும்’ என்று சொல்லக்கூடிய ஒருவன் மனித இனம் இதுவரையில் வளர்த்தெடுத்துவந்த சிந்தனை மரபையோ இலக்கியமரபையோ பற்றி எதுவுமே தெரியாத பாமரன்.
இருபது வயதுக்குக் குறைவான ஒருவன் அப்படிச் சொன்னால் அவனுக்கு ஒரு விளக்கம் கொடுக்கலாம். அதற்குமேல் வயதான ஒருவன் சொன்னால் ‘சரிதான் ராசா, நீ போய் கொப்பரை வியாபாரம் செய், அல்லது கம்ப்யூட்டர் தட்டு, அல்லது கல்லூரியில் வகுப்பெடு…நீ அதற்குத்தான் லாயக்கு’ என்று மட்டும்தான் பதில் சொல்லவேண்டும்.
- ஜெயமோகன்http://www.jeyamohan.in/35341#.WphMqejwaUk
‘இதையெல்லாம் யார் தீர்மானிப்பது? ஒவ்வொருவருக்கும் ஒன்று கிளாசிக்’ என்று சொல்லக்கூடிய ஒருவன்‘இலக்கியம்னா இன்னதுன்னெல்லாம் சொல்லிட முடியாது. எல்லாமே இலக்கியம்தான்’ என்று சொல்லக்கூடிய ஒருவன்’நல்லது கெட்டதுன்னெல்லாம் சொல்ல நாம யாரு? காலம் தீர்மானிக்கட்டும்’ என்று சொல்லக்கூடிய ஒருவன்மேலே காட்டப்பட்டதில் . . .
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதம் பிடிக்கும் என்பது உண்மை,
எழுதப்பட்ட எழுத்துகள் படைக்கப்பட்ட இலக்கியங்கள் யாவுமே இலக்கியம்தான் என்பதும் உண்மை,
காலமே தீர்மானிக்கும் என்பதும் உண்மை,
அவரவர் கோணத்தில் அவரவர் சொல்வதே உண்மை, தான் சொல்வதுதான் உண்மை என சிலர் நினைப்பது மாயை.மக்களை மகிழ்விப்பதோ, சித்திக்கச் செய்வதோ எல்லாமே இலக்கியம், வணிக எழுத்தாக இருந்தால் அது இலக்கியத் தகுதி குறைந்தது என்று நினைப்பது அவரவர் விருப்பம்.
உண்மையில் ஒத்த கருத்துடைய கூட்டத்தினர் டி கே சி இலக்கிய வட்டம், க.நா.சு வட்டம், சுந்தர ராமசாமி வட்டம், ஜெயமோகன் வட்டம் என்று கூடிக் கூடி பேசி தங்களுக்குப் பிடித்ததைப் புகழ்ந்து பேசி இதுதான் தரமுள்ள எழுத்து இதுவே இலக்கியம் என்று வரையறை செய்ய நினைப்பது தங்களைப் பற்றி உயர்வாக நினைத்துக் கொள்ளும் மனப்பாங்கு.
Arthur Conan Doyle (Sherlock Holmes), Agatha Christie, Edgar Allan Poe போன்ற துப்பறியும் நூல்கள் ஆங்கில இலக்கியத்தில் செவ்வியல் தகுதி பெற்றுள்ளன.செவ்வியல் என்பதைப் பாமரன் புரிந்து சொல்வது போலக் காலம்தான் தீர்மானிக்கும்.
claasic movies என்று சொல்லும் பொழுதோ, gtreat innovation என்று சொல்லும் பொழுதோ அதன் வெற்றியின் காரணம் என்ன என்று தெரியும்.பல்லாயிரக் கணக்கான படைப்பில் இவை ஒரு திருப்புமுனையை அறிமுகப் படுத்தியது, புதிய பாதையைக் காட்டியது என்ற கோணத்தில் வேறுபட்டு மக்களைக் கவர்ந்திருக்கும்.
இதற்கு பெரும்பாலும் அந்த இடத்தில் ஒரு வெற்றிடம் இருந்திருந்தால் முதன் முதலில் வந்தவை pioneer, trailblazer என்ற முறையில் தானாகவே மறக்கமுடியாத இடத்தில் நிலைத்துவிடும், அது செவ்வியல் அளவுகோலாகவும் கருதப்படும்.இதனை எளிமையாக என் வழியில் சொல்ல விரும்பினால்.
உலகில் பிறந்த மனிதர் யாவரும் மனிதர் தகுதி பெறுகிறார்கள் (படைக்கப்பட்ட யாவும் இலக்கியங்கள்)
இதில் பல வகை மனிதர் இருக்கிறார்கள், சிலர் சிரிக்க சிந்திக்க மகிழ்விக்க என்ற பல கோணங்களை எட்டுகிறார்கள் (நகைச்சுவை, நாடகம், கவிதை, அறிவியல் எனப் பல படைக்கப்பட்ட இலக்கியங்கள்)இதில் மக்களினால் பரவலாகப் பாராட்டப்பட்டும், ஒரு திருப்புமுனையைக் காட்டியவர்கள் என்றும் சிலர் வாழ்கிறார்கள், புத்தர் போன்றவர் (இலக்கியங்கள் மக்களால் விரும்பப்பட்டு, புதிய வழியில் நடத்தி காலம் கடந்து நின்றால் செவ்விலக்கியம்)
இதுதான் இலக்கியம் என்று ஆர்வலர்கள் கூட்டாக முடிவெடுத்துச் சொல்வது அவர்கள் விருப்பம்,ஒவ்வொரு வகைக்கும் ஆர்வலர்கள் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை,
செவ்விலக்கியத் தகுதி மக்களின் தொடர் விருப்பம் மட்டுமே நிர்ணயிக்கும்.
இந்த உண்மையைச் சுட்டிக் காட்ட கொப்பரைத் தேங்காய் வியாபாரம் செய்ய மட்டுமே தகுதியுள்ள பாமரனே போதும்.
ஆளாளுக்கு தனக்குப் பிடித்தவரை உயர்ந்தவர் என்று சொல்லிக் கொண்டிருக்கலாம், இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் என்பதைத்தான் கொப்பரைத் தேங்காய் வியாபாரி சொல்கிறார்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
செவ்விலக்கியம் என்ற சொல் கீழ்க்கண்டவாறு பொதுவாக வரையறை செய்யப்படுகிறது. ஒரு சூழலில் அடிப்படையான முன்னுதாரணமாகவோ அல்லது உச்சக்கட்ட சாதனையாகவோ கருதப்படும் படைப்பு தான் செவ்வியல் படைப்பு .உதாரணமாக ஆங்கிலச் சூழலில் கிரேக்க மற்றும் இலத்தீன் படைப்புகள் அடிப்படையான முன்னுதாரணங்கள். ஷேக்ஸ்பியர் உச்ச கட்ட சாதனை .செவ்விலக்கியம் என்பதற்கான எந்த வரையறையிலும் வா. தி சேராதுஅது வெறும் பொழுதுபோக்கு நாவல் மட்டுமே. எந்த சிறப்பியல்பும் அதற்கு கிடையாது.ஷேக்ஸ்பியருடன் அதை ஒப்பிடுவதெல்லாம் ரொம்ப, ரொம்ப ஓவர் :-)
On Thursday, March 1, 2018 at 2:59:50 PM UTC-8, செல்வன் wrote:செவ்விலக்கியம் என்ற சொல் கீழ்க்கண்டவாறு பொதுவாக வரையறை செய்யப்படுகிறது. ஒரு சூழலில் அடிப்படையான முன்னுதாரணமாகவோ அல்லது உச்சக்கட்ட சாதனையாகவோ கருதப்படும் படைப்பு தான் செவ்வியல் படைப்பு .உதாரணமாக ஆங்கிலச் சூழலில் கிரேக்க மற்றும் இலத்தீன் படைப்புகள் அடிப்படையான முன்னுதாரணங்கள். ஷேக்ஸ்பியர் உச்ச கட்ட சாதனை .செவ்விலக்கியம் என்பதற்கான எந்த வரையறையிலும் வா. தி சேராதுஅது வெறும் பொழுதுபோக்கு நாவல் மட்டுமே. எந்த சிறப்பியல்பும் அதற்கு கிடையாது.ஷேக்ஸ்பியருடன் அதை ஒப்பிடுவதெல்லாம் ரொம்ப, ரொம்ப ஓவர் :-)இலக்கியம் ≠ செவ்விலக்கியம்இரண்டுக்கும் உள்ள வேறுபாடு தெரியாத நீங்கள் கொப்பரை வியாபாரம் செய்வது பற்றி கொஞ்சம் ஆலோசிக்கலாம்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
இலக்கியம் என ஒரு நூல் சொல்லபடவேண்டுமெனில்அதில் சொற்சுவை, மற்றும் சிறிதளவாவது பொருட்சுவை இருக்கவேண்டும். படைப்பாற்றலை காட்டும் உத்திகள் பயனாகியிருக்கவேண்டும்.வெறுமனே படித்தோம், சிரித்தோம் என இல்லாது வாசகனை சிந்திக்கவும் வைக்கவேண்டும். அவனை அடுத்தகட்டத்துக்கு நக்ர்த்தி, அவன் ரசனையை மேம்படுத்தவேன்டும்.ஒரு இலக்கியநூலானது அந்த மொழியிலும், சமூகத்திலும் தாக்கங்களை உருவாக்கவேண்டும். இலக்கியமேடைகளில் விவாதிக்கபட்டு, ஆராய்ச்சி நடந்திருக்கவேன்டும்..எதுவுமே இல்லாமல் சும்மா தொடர்கதையாக வந்த நாவலை இலக்கியம் என சொல்லுவதுக்கு பதில்:அந்த நூலில் இருக்கும் மேற்கண்ட தன்மைகளை விவரித்து ஒரு கட்டுரை எழுதி "அது இலக்கண நூல்தான்" என நிருபிக்கலாம்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
நா. கணேசன்
| 1 | விஷ்ணுபுரம் | ஜெயமோகன் |
| 2 | பின் தொடரும் நிழலின் குரல் | ஜெயமோகன் |
| 3 | புயலிலே ஒரு தோணி | பசிங்காரம் |
| 4 | ஒரு புளிய மரத்தின் கதை |
| சுந்தர ராமசாமி |
| 5 | மோகமுள் | திஜானகிராமன் |
| 6 | பொய்த்தேவு | க நா சுப்பிரமணியம் |
| 7 | ஜெ.ஜெ. சில குறிப்புகள் | சுந்தரராமசாமி |
| 8 | தலைமுறைகள் | நீல பத்மநாபன் |
| 9 | கிருஷ்ணப் பருந்து | ஆமாதவன் |
| 10 | மானுடம் வெல்லும் | பிரபஞ்சன் |
| 1 | பிரதாப முதலியார் சரித்திரம் | மாயூரம் வேதநாயகம் பிள்ளை |
| 2 | கமலாம்பாள் சரித்திரம் | ராஜம் அய்யர் |
| 3 | பத்மாவதி சரித்திரம் | மாதவையா |
| 4 | பொய்த்தேவு | க நா சுப்பிரமணியம் |
| 5 | ஒரு நாள் | கநா சுப்பிரமணியம் |
| 6 | வாடிவாசல் | சிசு செல்லப்பா |
| 7 | மோகமுள் | திஜானகிராமன் |
| 8 | அம்மா வந்தாள் | தி ஜானகிராமன் |
| 9 | ஒரு புளிய மரத்தின் கதை | சுந்தரராமசாமி |
| 10 | ஜெ.ஜெ. சில குறிப்புகள். | சுந்தரராமசாமி |
| 11 | கோபல்ல கிராமம் | கிராஜநாராயணன் |
| 12 | நாகம்மாள் | ஆர் ஷண்முகசுந்தரம் |
| 13 | பிறகு | பூமணி |
| 14 | நாளை மற்றுமொரு நாளே | ஜிநாகராஜன் |
| 15 | புத்தம் வீடு | ஹெப்சிபா ஜேசுதாசன் |
| 16 | தலைமுறைகள் | நீல பத்மநாபன் |
| 17 | பள்ளி கொண்டபுரம். | நீல பத்மநாபன் |
| 18 | கிருஷ்ணப் பருந்து | ஆ மாதவன் |
| 19 | பதினெட்டாவது அட்சக் கோடு | அசோகமித்திரன் |
| 20 | தண்ணீர் | அசோகமித்திரன் |
| 21 | தலைகீழ் விகிதங்கள் | நாஞ்சில்நாடன் |
| 22 | ஒரு கடலோர கிராமத்தின் கதை | தோப்பில் முகமது மீரான் |
| 23 | மானுடம் வெல்லும் | பிரபஞ்சன் |
| 24 | காகித மலர்கள் | ஆதவன் |
| 25 | ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன | இந்திரா பார்த்தசாரதி |
| 26 | அபிதா | லாசரா |
| 27 | ஒரு மனிதன் ஒரு வீடு ஒர் உலகம் | ஜெயகாந்தன் |
| 28 | சில நேரங்களில் சில மனிதர்கள் | ஜெயகாந்தன் |
| 29 | தாகம் | கு சின்னப்ப பாரதி |
| 30 | சாயாவனம் | சா கந்தசாமி |
| 31 | சூரிய வம்சம் | சா கந்தசாமி |
| 32 | வாசவேஸ்வரம் | கிருத்திகா |
| 33 | புயலிலே ஒரு தோணி | பசிங்காரம் |
| 34 | கடலுக்கு அப்பால் | பசிங்காரம் |
| 35 | நினைவுப்பாதை | நகுலன் |
| 36 | பாதையில் படிந்த அடிகள் | ராஜம் கிருஷ்ணன் |
| 37 | சிதறல்கள் | பாவண்ணன் |
| 38 | மற்றும் சிலர் | சுப்ரபாரதி மணியன் |
| 39 | தூர்வை | சோ தருமன் |
| 40 | கோவேறு கழுதைகள் | இமையம் |
| 41 | கள்ளம் | தஞ்சை பிரகாஷ் |
| 42 | ரப்பர் | ஜெயமோகன் |
| 43 | விஷ்ணுபுரம் | ஜெயமோகன் |
| 44 | பின்தொடரும் நிழலின் குரல் | ஜெயமோகன் |
| 45 | உபபாண்டவம் | எஸ் ராமகிருஷ்ணன் |
| 1 | பசித்தமானுடம் | கரிச்சான் குஞ்சு |
| 2 | ஜீவனாம்சம்7 | சிசுசெல்லப்பா |
| 3 | இதயநாதம் | ரசிதம்பர சுப்ரமணியன் |
| 4 | புத்ர | லாசரா |
| 5 | நித்ய கன்னி | எம்விவெங்கட்ராம் |
| 6 | வேள்வித்தீ | எம்விவெங்கட்ராம் |
| 7 | வேரோட்டம் | குபராஜகோபாலன்(முழுமையல்ல) |
| 8 | செம்பருத்தி | திஜானகிராமன் |
| 9 | மலர் மஞ்சம் | திஜானகிராமன் |
| 10 | அன்பே ஆரமுதே | திஜானகிராமன் |
| 11 | கோபாலகிராமத்து மக்கள் | கிராஜநாராயணன் |
| 12 | குழந்தைகள் ஆண்கள் பெண்கள் | சுந்தர ராமசாமி |
| 13 | சட்டி சுட்டது | ஆர் ஷண்முக சுந்தரம் |
| 14 | வெக்கை | பூமணி |
| 15 | குறத்தி முடுக்கு | ஜி நாகராஜன் |
| 16 | புனலும் மணலும் | ஆமாதவன் |
| 17 | உறவுகள் | நீல பத்மநாபன் |
| 18 | கரைந்த நிழல்கள் | அசோகமித்ரன் |
| 19 | கடல்புரத்தில் | வண்ணநிலவன் |
| 20 | மிதவை | நாஞ்சில்நாடன் |
| 21 | என்பிலதனை வெயில் காயும் | நாஞ்சில்நாடன் |
| 22 | சதுரங்க குதிரை | நாஞ்சில்நாடன் |
| 23 | சாய்வு நாற்காலி | தோப்பில் முகமது மீரான் |
| 24 | சமனன் தோப்பு | தோப்பில் முகமது மீரான் |
| 25 | வானம் வசப்படும் | பிரபஞ்சன் |
| 26 | மகாநதி | பிரபஞ்சன் |
| 27 | என் பெயர் ராமசேஷன் | ஆதவன் |
| 28 | தந்திர பூமி | இந்திரா பார்த்தசாரதி |
| 29 | சுதந்திர பூமி | இந்திரா பார்த்தசாரதி |
| 30 | பஞ்சும் பசியும் | ரகுநாதன் |
| 31 | தேனீர் | டி செல்வராஜ் |
| 32 | மலரும் சருகும் | டி செல்வராஜ் |
| 33 | விசாரணை கமிஷன் | சா கந்தசாமி |
| 34 | அவன் ஆனது | சா கந்தசாமி |
| 35 | இடைவெளி | சம்பத் |
| 36 | முப்பது வருஷம் | துராமமூர்த்தி |
| 37 | நேற்றிருந்தோம் | கிருத்திகா |
| 38 | புகைநடுவில் | கிருத்திகா |
| 39 | தர்மஷேத்ரே | கிருத்திகா |
| 40 | மெளனப்புயல் | வாசந்தி |
| 41 | பிளம் மரங்கள் பூத்துவிட்டன. | வாசந்தி |
| 42 | குருதிப்புனல் | இந்திரா பார்த்தசாரதி |
| 43 | திக்கற்ற பார்வதி | ராஜாஜி |
| 44 | ஆத்துக்குப் போகணும் | காவேரி |
| 45 | நல்ல நிலம் | பாவை சந்திரன் |
| 46 | ஈரம் கசிந்த நிலம் | சிஆர்ரவீந்திரன் |
| 47 | மானாவாரி மனிதர்கள் | சூரியகாந்தன் |
| 48 | உப்பு வயல் | ஸ்ரீதர கணேசன் |
| 49 | கொக்கு பூத்த வயல் | மோகனன் |
| 50 | நிழல் முற்றம் | பெருமாள் முருகன் |
| 1 | பொன்னியின் செல்வன் | கல்கி |
| 2 | சிவகாமியின் சபதம் | கல்கி |
| 3 | மன்னன் மகள் |
| சாண்டில்யன் |
| 4 | யவன ராணி |
| சாண்டில்யன் |
| 5 | கடல்புறா |
| சாண்டில்யன் |
| 6 | வீரபாண்டியன் மனைவி | அரு ராமநாதன் |
| 7 | ஆலவாய் அழகன் | ஜெகசிற்பியன் |
| 8 | திருவரங்கன் உலா | ஸ்ரீ வேணுகோபாலன் |
| 9 | வேங்கையின் மைந்தன் | அகிலன் |
| 10 | மணிபல்லவம் | நா பார்த்தசாரதி |
| 1 | பார்த்திபன் கனவு | கல்கி |
| 2 | ஜலதீபம் |
| சாண்டில்யன் |
| 3 | கன்னிமாடம் |
| சாண்டில்யன் |
| 4 | மூங்கில் கோட்டை |
| சாண்டில்யன் |
| 5 | ராஜ முத்திரை |
| சாண்டில்யன் |
| 6 | கயல்விழி | அகிலன் |
| 7 | வெற்றித்திருநகர் | அகிலன் |
| 8 | ரத்தம் ஒரே நிறம் | சுஜாதா |
| 9 | கோபுர கலசம் | SS தென்னரசு |
| 10 | ராணி மங்கம்மாள் | நா பார்த்தசாரதி |
| 11 | ரோமாபுரிப் பாண்டியன் | மு கருணாநிதி |
| 12 | தென்பாண்டி சிங்கம் | மு கருணாநிதி |
| 13 | பத்தினிக் கோட்டம் | ஜெகசிற்பியன் |
| 14 | நந்திபுரத்து நாயகி | விக்ரமன் |
| 15 | திருச்சிற்றம்பலம் | ஜெகசிற்பியன் |
| 1 | தியாகபூமி | கல்கி |
| 2 | பிரேம ஹாரம் | பி எஸ் ராமையா |
| 3 | அலைஓசை | கல்கி |
| 4 | மலைக்கள்ளன் | நாமக்கல் கவிஞர் |
| 5 | தில்லானா மோகனாம்பாள் | கொத்தமங்கலம் சுப்பு |
| 6 | கேட்டவரம் | அனுத்தமா |
| 7 | உயிரோவியம் | நாரணதுரைக்கண்ணன் |
| 8 | அழகு ஆடுகிறது | கு ராஜவேலு |
| 9 | முள்ளும் மலரும் | உமா சந்திரன் |
| 10 | கல்லுக்குள் ஈரம் | ரசு நல்ல பெருமாள் |
| 11 | அணையா விளக்கு | ஆர்வி |
| 12 | கள்ளோ காவியமோ | மு வரதராசன் |
| 13 | கண்கள் உறங்கவோ | மாயாவி |
| 14 | சின்னம்மா | எஸ் ஏ பி |
| 15 | மலர்கின்ற பருவத்தில் | எஸ் ஏ பி |
| 16 | பிறந்த நாள் | எஸ் ஏ பி |
| 17 | கூந்தலிலே ஒரு மலர் | பி வி ஆர் |
| 18 | ஜி. எச் | பி வி ஆர் |
| 19 | குறிஞ்சித் தேன் | ராஜம் கிருஷ்ணன் |
| 20 | வளைக்கரம் | ராஜம் கிருஷ்ணன் |
| 21 | இன்பப் புதையல் | பி எம் கண்ணன் |
| 22 | படகு வீடு | ரா கி ரங்கராஜன் |
| 23 | ப்ரஃபசர் மித்ரா | ரா கி ரங்கராஜன் |
| 24 | ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது | புஷ்பா தங்கத்துரை |
| 25 | குறிஞ்சி மலர் | நா பார்த்தசாரதி |
| 26 | பொன் விலங்கு | நா பார்த்தசாரதி |
| 27 | சமுதாய வீதி | நா பார்த்தசாரதி |
| 28 | பாவைவிளக்கு | அகிலன் |
| 29 | சித்திரப் பாவை | அகிலன் |
| 30 | பெண் | அகிலன் |
| 31 | கல்லும் மண்ணும் | க ரத்னம் |
| 32 | பனிமலை | மகரிஷி |
| 33 | அரக்கு மாளிகை | லட்சுமி |
| 34 | காஞ்சனையின் கனவு | லட்சுமி |
| 35 | தரையிறங்கும் விமானங்கள் | இந்துமதி |
| 36 | பாலங்கள் | சிவசங்கரி |
| 37 | ஒரு மனிதனின் கதை | சிவசங்கரி |
| 38 | நிற்க நிழல் வேண்டும் | வாசந்தி |
| 39 | ஜெய்ப்பூர் நெக்லஸ் | வாசந்தி |
| 40 |
| வாஷிங்டனில் திருமணம் |
| சாவி | ||
| 41 | ஆயிரத்தொரு அப்புசாமி இரவுகள் | பாக்கியம் ராமசாமி |
| 42 | மிஸ்டர் வேதாந்தம் | தேவன் |
| 43 | கரையெல்லாம் செண்பகப்பூ | சுஜாதா |
| 44 | அனிதா இளம் மனைவி | சுஜாதா |
| 45 | பிரியா | சுஜாதா |
| 46 | மெர்க்குரிப் பூக்கள் | பாலகுமாரன் |
| 47 | கரையோர முதலைகள் | பாலகுமாரன் |
| 48 | பந்தயப்புறா | பாலகுமாரன் |
| 49 | அது ஒரு நிலாக்காலம் | ஸ்டெல்லா புரூஸ் |
| 50 | வாழ்வெனும் மகாநதி | கண்ணன் மகேஷ் |
| 1 | விஷ்ணுபுரம் | ஜெயமோகன் |
| 2 | பின் தொடரும் நிழலின் குரல் | ஜெயமோகன் |
| 3 | புயலிலே ஒரு தோணி | பசிங்காரம் |
| 4 | ஒரு புளிய மரத்தின் கதை |
| சுந்தர ராமசாமி |
| 2 | ஜீவனாம்சம் |
| 3 | மன்னன் மகள் |
| சாண்டில்யன் |
| 4 | யவன ராணி |
| சாண்டில்யன் |
| 5 | கடல்புறா |
| சாண்டில்யன் |
| 6 | வீரபாண்டியன் மனைவி | அரு ராமநாதன் |
| 7 | ஆலவாய் அழகன் | ஜெகசிற்பியன் |
| 8 | திருவரங்கன் உலா |
| ஸ்ரீ வேணுகோபாலன் |
| 9 |
| வேங்கையின் மைந்தன் | அகிலன் |
| 10 | மணிபல்லவம் | நா பார்த்தசாரதி |
| 1 | பார்த்திபன் கனவு | கல்கி |
| 2 | ஜலதீபம் |
| சாண்டில்யன் |
| 3 | கன்னிமாடம் |
| சாண்டில்யன் |
| 4 | மூங்கில் கோட்டை |
| சாண்டில்யன் |
| 5 | ராஜ முத்திரை |
| சாண்டில்யன் |
| 40 |
| வாஷிங்டனில் திருமணம் |
| சாவி |
பல இலக்கியங்களை நாம் அறிந்திருக்கிறோம்.
நாடகத்திற்கு ஷேக்ஸ்பியர், இராமாயணத்திற்கு கம்பர், சிலேடைக்கு காளமேகப் புலவர், எழுத்திற்காக வின்ஸ்டன் சர்ச்சில் என்று அடுக்கலாம்.
அப்படி சமகாலத் தமிழில் பட்டயம் தர சிலர் கிளம்பி கொடுத்த பட்டியல் இது.
உரிமை துறப்பு: இந்தப் பட்டங்கள் அனைத்துமே நான் கொடுத்து அல்ல! சிலரால் பலருக்கு அறிவிக்கப்பட்டது என்றறிக!!
1. டூரிஸ்ட் இலக்கியவாதி – தமிழ்நதி
2. அரசியல் இலக்கியவாதி – இரவிக்குமார்
3. நோபல் இலக்கியவாதி – வைரமுத்து
4. மடல் இலக்கியவாதி – கருணாநிதி
5. நடிகர் இலக்கியவாதி – பா விஜய்
6. கவிஞர் இலக்கியவாதி – கமல்ஹாசன்
7. இ.ஆ.ப. இலக்கியவாதி – வெ. இறையன்பு
8. இ.கா.ப. இலக்கியவாதி – ஜி. திலகவதி
9. ஆயிரம் பக்க இலக்கியவாதி – சு. வெங்கடேசன்
10. அன்னியநிதி இலக்கியவாதி – எஸ்.வி.ராஜதுரை
11. பிரமிள் இலக்கியவாதி – விமலாதித்த மாமல்லன்
12. சுந்தர ராமசாமி இலக்கியவாதி – கண்ணன்
13. சுஜாதா இலக்கியவாதி – இரா முருகன்
14. திராவிட இலக்கியவாதி – தமிழ்மகன்
15. வைணவ இலக்கியவாதி – இந்திரா பார்த்தசாரதி
16. பேட்டி இலக்கியவாதி – அசோகமித்திரன்
17. ஆன்மிக இலக்கியவாதி – பாலகுமாரன்
18. டவுன்லோட் இலக்கியவாதி – சாரு நிவேதிதா
19. இந்தியா இலக்கியவாதி – எஸ் ராமகிருஷ்ணன்
20. இந்துத்துவ இலக்கியவாதி – ஜெயமோகன்
21. அரட்டை இலக்கியவாதி – மனுஷ்யபுத்திரன்
---
என் கேள்வியே வேறு. இந்த சொற்கள் தமிழில் முதலில் எப்பொழுது பயனுக்கு வந்தன?? ல-வுக்கு முன்னால் 'இ' வந்துள்ள இவை (ல்க்ஷ்மணன் - இலட்சுமணன், இலக்குவன், லக்ஷ்மி - இலட்சுமி, இலக்குமி, ல்க்ஷயம் - இலட்சியம்) போன்று வடமொழி சொற்கள் வழி வந்தவையா??)
rnk
///வாராவாரம் வாசகர்களை குலுங்கக் குலுங்கச் சிரிக்கச் செய்த இந்தக் கதை, சாவியின் மாஸ்டர் பீஸ் படைப்பாகவே ஆகிவிட்டது. இது பூர்ணம் விஸ்வநாதன் குழு உள்பட பல்வேறு குழுக்களால் நாடகமாக நடிக்கப்பட்டு, ஆயிரம் முறைகளுக்கு மேல் அரங்கேறியிருக்கிறது. அந்தக் காலத்தில், பெரும்பாலான திருமண விழாக்களில், தாம்பூலப் பையில் ‘வாஷிங்டனில் திருமணம்’ புத்தகத்தையும் வைத்துக் கொடுப்பது வழக்கத்தில் இருந்தது.ஆயிரம் தடவைகளுக்கு மேல் பல ஊர்களில் மேடை ஏறி மக்களை மகிழ்வித்திருக்கிறது வாஷிங்டனில் திருமணம்.நா. கணேசன்ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் பெருவாரியாக மக்கள் மனதைக் கவரும் படைப்புகள் காலத்தை வென்று நிலைத்த புகழ் பெறும் என்று சொல்ல இயலாது.இதற்கு நம் இளமைக் காலத்தில் வெற்றி பெற்று இன்று பெருமை இழந்திருக்கும் திரைப்படப் பாடல்கள் நல்ல சான்றுகளாகும்.A.P.நாகராஜன் இயக்கி வெற்றி பெற்ற திருவிளையாடல் திரைப்படத்தில் விறகு விற்கும் சிவபெருமான் ஹேமநாதன் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து பாடும் ' பாட்டும் நானே ;பாவமும் நானே ' என்ற பாடல் நடிகர் திலகம் வாயசைக்க ,T.M.S.குரல் கொடுக்க பெருவெற்றி பெற்ற பாடல்.மார்கழி மாதம் கோயில்களில் அதிகாலைப் பொழுதில் இப்பாடலும் ஒலிக்கும்.ஆனால் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான பூவே உனக்காக என்ற திரைப்படத்தில் அக்குறிப்பிட்ட பாடல் கேலிப்பொருளானது.படத்தின் ஹீரோ விஜய் நன்கு பாடக்கூடியவனாகவும் ;அவனே இப்பாடலை கிண்டலடிப்பவனாகவும் தோன்ற ரசிகர்களிடையே அமோக வெற்றி படத்திற்குக் கிட்டியது.மக்கள் ரசனை மாறக்கூடியது என்ற கொள்கையை இலக்கியத்திற்கும் பொருத்திப் பார்ப்பதில் தவறில்லை.இன்றைய இலக்கிய ஆய்வாளர்கள் இலக்கியங்களை ஒப்பிட உலக இலக்கியங்கள் இன்னின்ன என்று தொகுக்கின்றனர்.இந்திய இலக்கியங்களில் ஒப்பிடக்கூடிய பெருமை மிக்கவை என்று தேசிய இலக்கியங்களைத் தொகுக்கின்றனர்.அப்படிப்பட்ட தொகுப்புகளில் இடம் பெறக்கூடிய தகுதி வா .தி .க்கு இல்லை என்பதே செல்வனின் வாதம் என்று நினைக்கிறேன்.ஆனால் அவ்வாறு தொகுக்கும் போது அதிலும் அரசியல் விளையாடும்;இது தவிர்க்க முடியாதது.நமது ஐம்பெருங் காப்பியங்கள் தொகுப்பில் கூட பெருங்கதைக்கு இடமில்லாமல் போய் விட்டதே.கண்மணி
///தமிழோ, இலக்கண, இலக்கிய அறிவோ ( ஆமாம், இலக்கண, இலக்கியம் என்றால் என்ன???) இல்லாதவன். அதனால் இவ்விழையின் பெரு வாத-விவாதங்களில் நான் வரவில்லை...)
என் கேள்வியே வேறு. இந்த சொற்கள் தமிழில் முதலில் எப்பொழுது பயனுக்கு வந்தன?? ல-வுக்கு முன்னால் 'இ' வந்துள்ள இவை (ல்க்ஷ்மணன் - இலட்சுமணன், இலக்குவன், லக்ஷ்மி - இலட்சுமி, இலக்குமி, ல்க்ஷயம் - இலட்சியம்) போன்று வடமொழி சொற்கள் வழி வந்தவையா??)///"இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பலின் " என்ற தொடர் காலத்தால் முற்பட்ட தொடர் என்று கருதப்படுகிறது.இது தொல்காப்பியத்திற்கு முந்தைய ' அகத்தியம் ' நூலிலிருக்கும் மேற்கோள் என்பர்.இராமன் ,இலக்குவன் முதலிய சொற்கள் போன்றவையல்ல.ஏனெனில் லக்கணம் ,லக்கியம் என்று உச்சரிப்பதில்லை .
இலக்கு என்ற சொல்லிலிருந்து தோன்றியிருக்க வேண்டும்.இலக்கு+இயம் =இலக்கியம்இலக்கு +அணம் =இலக்கணம்இதற்கு மேல் இது பற்றி சிந்தித்தது கிடையாது.கண்மணி
2018-03-03 18:36 GMT+05:30 nkantan r <rnka...@gmail.com>:
தமிழோ, இலக்கண, இலக்கிய அறிவோ ( ஆமாம், இலக்கண, இலக்கியம் என்றால் என்ன???) இல்லாதவன். அதனால் இவ்விழையின் பெரு வாத-விவாதங்களில் நான் வரவில்லை...)
என் கேள்வியே வேறு. இந்த சொற்கள் தமிழில் முதலில் எப்பொழுது பயனுக்கு வந்தன?? ல-வுக்கு முன்னால் 'இ' வந்துள்ள இவை (ல்க்ஷ்மணன் - இலட்சுமணன், இலக்குவன், லக்ஷ்மி - இலட்சுமி, இலக்குமி, ல்க்ஷயம் - இலட்சியம்) போன்று வடமொழி சொற்கள் வழி வந்தவையா??)
rnk
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
தாங்கள் இதைச் சுட்டியதற்கு நன்றி - ஏனென்றால் பயன்பாட்டில் உள்ள பேச்சையும் எழுத்தையும் ஒட்டியே- பின்னரே- ஒரு இலக்கண விதி வருகிறது. அதுமட்டுமின்றி தொல்காப்பிய விதிகளின் மாற்றங்களையும் நன்னூல் காட்டுகிறது - அதாவது இலக்கண விதிகள் மாறாதவையல்ல - காலத்தில் மாறுபடும் - அம்மாற்றத்தாலேயே மொழி உயிர்ப்புடன் இருக்கும் எனும் நற்செய்தியை நாமறிய தருகிறது..
rnk
rnk