Re: Hiragana, Kathakana, ... & Tamil diacritic

30 views
Skip to first unread message

Vinodh Rajan

unread,
Nov 29, 2009, 12:36:43 AM11/29/09
to mintamil
சித்தம் - Siddham

பார்த்தீர்களா, நம்மூர் சமஸ்கிருதத்தை எழுதவும் ஆங்கிலத்தின் உதவி தேவைப்படுகிறது :-(

திராவிட லிபியில் எழுத வேண்டுமென்றால்:

?ui=2&view=att&th=1253e420d14ff68b&attid=0.1&disp=attd&realattid=ii_1253e420d14ff68b&zw

8ஆம் நூற்றாண்டின் வாக்கில், தாந்திரீக பௌத்தம் இந்தியாவில் செழிப்புடன் இருந்த காலத்தில் சீனர்கள் இந்தியா வந்து தந்திர சாஸ்திரங்களையும் சூத்திரங்களையும் மந்திரங்கள் மற்றும் தாரணிகளை அவர்கள் நாட்டுக்கு மொழிப்பெயர்த்து எடுத்துச்சென்றனர்.

அவ்வாறு மொழிப்பெயர்க்கும் போது மந்திரங்களை மொழிப்பெயர்க்க இயலாது என்பதால், அதை அப்படியே ஆவணப்படுத்த ”சித்தம்” எழுத்துக்களை பயன்படுத்தினர். அக்காலக்கட்டத்தில் இவ்வெழுத்துக்களே சமஸ்கிருதத்தை எழுத பயன்படுத்தப்பட்டு வந்தது.

இந்தியாவில் சித்தம், சரியாக கூறவேண்டுமெனில், ”சித்தமாத்ருகா” உருமாறி அதில் இருந்து பல்வேரு எழுத்துமுறைகள் தோன்றிவிட்டன. தேவநாகரி கூட ஒரு வகையில் சித்தத்தில் இருந்து தோன்றியது தான்.

ஆனால்,  சீனாவில் சித்தம் எழுத்துக்கள் ஒரு தெய்வீக அந்தஸ்தை பெற்றது. அவை மங்களகரமானதாகவும் தெய்வீகம் நிறைந்ததாகவும் கருதப்பட்ட்ன. ஆகையால், சீனத்தில் சித்தம் எந்த மாற்றமும் பெற வில்லை.It was preserved as such. சீனாவில் இருந்து ஜப்பான் இதை பெற்றதும் அதே நிலையில் தான்.

மங்களகரகமானதும் பவித்ரமானதும் ஆக சித்தம் கருதப்படுகிறது.

ஒரு ஜப்பானியர் வஜ்ரதாது மண்டலத்தில் மஹாவைரோசன புத்தரின் பீஜமான ஆம்ஹ் என்ற எழுத்தை எப்படி சித்தத்தில் எழுதுவது என்று விளக்குகிறார்.


அசல வித்யாராஜரின் பீஜமான ஹம்மாம்.


சீனர்கள், ஜப்பானியர்கள் (ஒரு வியாட்னாமியர் கூட) சித்தம் எழுத்துக்கு பல வலைத்தளங்களை நடத்தி அதை போற்றி பாதுகாத்து வருகின்றனர்.


(இதில் கவனிக்கவேண்டியது, யாரும் அதை இந்திய திணிப்பாகாகவோ, இந்திய ஆதிக்கத்தின் அடையாளமாகவோ அதை கருதுவதில்லை.  தங்களின் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகவே கருதுகின்றனர். 

துவேஷத்தை விதைத்து அதை அறுவடை செய்வதில் நம் மக்கள் வல்லவர்கள் :-( )

இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும்..

தாந்திரீக பௌத்த ஆச்சார்யர்களில் முக்கியமானவர் வஜ்ரபோதி. இங்கிருந்து சீன தேசம் சென்று தாந்திரீக பௌத்ததை பரப்பியவர். வஜ்ரபோதி எழுதியதாக பல மந்திரங்கள் தாரணிகள் சீன திரிபிடகத்தில் சித்தம் எழுத்துக்களில் உள்ளன.

வஜ்ரபோதி தமிழ் நாட்டவர் என்பது கூடுதல் செய்தி :-)

ஆக, தமிழ் நாட்டவரும் சித்தம் பயின்றிருக்கிறார்கள் !

V
siddham_gra.PNG

வினோத் ராஜன்

unread,
Nov 29, 2009, 12:41:46 AM11/29/09
to மின்தமிழ்
//பீஜமான ஆம்ஹ் //

வாம்ஹ் என்று வாசிக்கவும்.

V

> http://www.siddham.org/http://www.siddham-sanskrit.com/http://www.mandalar.com/


>
> (இதில் கவனிக்கவேண்டியது, யாரும் அதை இந்திய திணிப்பாகாகவோ, இந்திய
> ஆதிக்கத்தின் அடையாளமாகவோ அதை கருதுவதில்லை.  தங்களின் கலாச்சாரத்தின் ஒரு
> பகுதியாகவே கருதுகின்றனர்.
>
> துவேஷத்தை விதைத்து அதை அறுவடை செய்வதில் நம் மக்கள் வல்லவர்கள் :-( )
>
> இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும்..
>
> தாந்திரீக பௌத்த ஆச்சார்யர்களில் முக்கியமானவர் வஜ்ரபோதி. இங்கிருந்து சீன
> தேசம் சென்று தாந்திரீக பௌத்ததை பரப்பியவர். வஜ்ரபோதி எழுதியதாக பல மந்திரங்கள்
> தாரணிகள் சீன திரிபிடகத்தில் சித்தம் எழுத்துக்களில் உள்ளன.
>
> வஜ்ரபோதி தமிழ் நாட்டவர் என்பது கூடுதல் செய்தி :-)
>
> ஆக, தமிழ் நாட்டவரும் சித்தம் பயின்றிருக்கிறார்கள் !
>
> V
>

>  siddham_gra.PNG
> 2KViewDownload

வினோத் ராஜன்

unread,
Nov 29, 2009, 12:44:04 AM11/29/09
to மின்தமிழ்
ஜிமெயில் இருந்து அனுப்பியதால் என்னவோ இழை உடைந்து விட்டது.

மூல் இழையின் இணைப்பு:

http://groups.google.com/group/mintamil/browse_thread/thread/09fb797e58496c21/abecf16b28451871?lnk=raot#abecf16b28451871

(நா. கண்ணனின் கடைசி இடுகைக்கு பதிலாக இருக்க வேண்டியது இது )

> >http://www.siddham.org/http://www.siddham-sanskrit.com/http://www.man...

N. Kannan

unread,
Nov 29, 2009, 2:03:17 AM11/29/09
to mint...@googlegroups.com
வினோத்!
 
அபாரமான செய்திகளைத் தருகிறீர்கள்.
 
Invading the Sacred! இழையில் நால் சொல்ல வந்த கருத்தையும் விளக்கியுள்ளீர்கள். ஒரு இந்தியன் என்ற அளவில் ஆசியா முழுவதிலும் நமக்கு நல்ல பேருதான். நம்மைக் கருணையுடன் பார்க்கின்றனர்.
 
போன வாரம் காய்கறி வாங்கும் கிழவியோட ஒரு நிகழ்வு. அவள் முதலில் என்னைக் கொரியன் என்று எண்ணிவிட்டாள். பிறகுதான் ஏதோ பொறி தட்ட, `நீ வெளிநாட்டுக்காரன் இல்லையா?` என்றாள். ஆமாம், `இந்தியன்` என்றேன்.
 
அவ்வளவுதான், கோயிலில் சொல்லும் மந்திரங்களையெல்லாம் ஒப்பிக்க ஆரம்பித்தாள். கேட்டுக் கொண்டிருந்தேன். இப்படித்தானே உங்க ஊரிலும் சொல்லுவீர்கள் என்றாள். கொஞ்சம் `ஙே` என்று விழித்துவிட்டு, கொஞ்சம் வித்தியாசம்! ஏறக்குறைய இது போல்தான் என்று சொல்லி வைத்தேன். ஆனால், அவள் கண்களில் நொடிப்பொழுதில் தோன்றிய அந்நியோன்யம்!  புத்தம் சரணம் கச்சாமி!!
 
இங்கு வரும் எல்லா இந்தியர்களும் (சீக்கியர், ஹிந்துக்கள்) கோயிலுக்குப் போவோம். இங்கு கோயில் என்றால் அது புத்த ஆலயம். மற்றது சர்ச். போனால் வழிபாடுகளில் கலந்து கொள்வதுண்டு. 108 முறை வணங்கி எழும் ஒரு முறை இருக்கிறது. இடுப்பு வலி உள்ளவர்கள் முயன்று பார்க்கக்கூடாதது ;-) செய்திருக்கிறேன். எப்போது போனாலும், மதியச் சாப்பாடு இலவசமாகக் கிடைக்கும். சுத்த மரக்கறி உணவு.
சங்கம் சரணம் கச்சாமி!
 
எல்லாம் ஒரே வயிற்றுப் பிள்ளைதாங்க!  தம்மம் சரணம் கச்சாமி!
 
கண்ணன்
 


 
2009/11/29 Vinodh Rajan <vinodh...@gmail.com>

வினோத் ராஜன்

unread,
Nov 29, 2009, 2:16:22 AM11/29/09
to மின்தமிழ்
//அவ்வளவுதான், கோயிலில் சொல்லும் மந்திரங்களையெல்லாம் ஒப்பிக்க

ஆரம்பித்தாள்.
கேட்டுக் கொண்டிருந்தேன். //

:-)

கிழக்காசியர்கள் சமஸ்கிருதத்தை உச்சரிக்கும் விதமே அலாதி தான்.

கூர்ந்து கவனித்தால் தான் அது சமஸ்கிருதம் என்று புலப்படும் :-))

http://www.youtube.com/watch?v=puhzLkiCtDo&feature=rec-LGOUT-exp_fresh+div-HM
(ஜப்பானிய சமஸ்கிருதம்)

ஓம் அமோக வைரோசன மஹாமுத்ர மணிபத்ம ஜ்வால ப்ரவர்த்தய ஹூம்

http://www.youtube.com/watch?v=itAbF3DPIWM (சீன சமஸ்கிருதம்)

நமோ பகவதே பைஷஜ்யகுரு வைடூர்ய ப்ரபராஜாய ததாகதாய அர்ஹதே
சம்யக்சம்புத்தாய...

தத்யதா

ஓம் பைஷஜ்யே பைஷஜ்யே பைஷஜ்ய சமுத்கதே ஸ்வஹா

கொரிய சமஸ்கிருத இணைப்புகள் இருந்தால் ஏதாவது இடுங்களேன். ரொம்ப நாளாக
தேடிக்கொண்டு இருக்கிறேன். அகப்பட மாட்டேங்கிறது !

V

On Nov 29, 12:03 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> வினோத்!
>
> அபாரமான செய்திகளைத் தருகிறீர்கள்.
>
> Invading the Sacred! இழையில் நால் சொல்ல வந்த கருத்தையும் விளக்கியுள்ளீர்கள்.
> ஒரு இந்தியன் என்ற அளவில் ஆசியா முழுவதிலும் நமக்கு நல்ல பேருதான். நம்மைக்
> கருணையுடன் பார்க்கின்றனர்.
>
> போன வாரம் காய்கறி வாங்கும் கிழவியோட ஒரு நிகழ்வு. அவள் முதலில் என்னைக்
> கொரியன் என்று எண்ணிவிட்டாள். பிறகுதான் ஏதோ பொறி தட்ட, `நீ வெளிநாட்டுக்காரன்
> இல்லையா?` என்றாள். ஆமாம், `இந்தியன்` என்றேன்.
>
> அவ்வளவுதான், கோயிலில் சொல்லும் மந்திரங்களையெல்லாம் ஒப்பிக்க ஆரம்பித்தாள்.
> கேட்டுக் கொண்டிருந்தேன். இப்படித்தானே உங்க ஊரிலும் சொல்லுவீர்கள் என்றாள்.
> கொஞ்சம் `ஙே` என்று விழித்துவிட்டு, கொஞ்சம் வித்தியாசம்! ஏறக்குறைய இது
> போல்தான் என்று சொல்லி வைத்தேன். ஆனால், அவள் கண்களில் நொடிப்பொழுதில் தோன்றிய
> அந்நியோன்யம்!  புத்தம் சரணம் கச்சாமி!!
>
> இங்கு வரும் எல்லா இந்தியர்களும் (சீக்கியர், ஹிந்துக்கள்) கோயிலுக்குப்
> போவோம். இங்கு கோயில் என்றால் அது புத்த ஆலயம். மற்றது சர்ச். போனால்
> வழிபாடுகளில் கலந்து கொள்வதுண்டு. 108 முறை வணங்கி எழும் ஒரு முறை இருக்கிறது.
> இடுப்பு வலி உள்ளவர்கள் முயன்று பார்க்கக்கூடாதது ;-) செய்திருக்கிறேன்.
> எப்போது போனாலும், மதியச் சாப்பாடு இலவசமாகக் கிடைக்கும். சுத்த மரக்கறி உணவு.
> சங்கம் சரணம் கச்சாமி!
>
> எல்லாம் ஒரே வயிற்றுப் பிள்ளைதாங்க!  தம்மம் சரணம் கச்சாமி!
>
> கண்ணன்
>

> 2009/11/29 Vinodh Rajan <vinodh.vin...@gmail.com>

srirangammohanarangan v

unread,
Nov 29, 2009, 2:16:37 AM11/29/09
to mint...@googlegroups.com
On 11/29/09, N. Kannan <navan...@gmail.com> wrote:
வினோத்!
 
அபாரமான செய்திகளைத் தருகிறீர்கள்.
 
Invading the Sacred! இழையில் நால் சொல்ல வந்த கருத்தையும் விளக்கியுள்ளீர்கள். ஒரு இந்தியன் என்ற அளவில் ஆசியா முழுவதிலும் நமக்கு நல்ல பேருதான். நம்மைக் கருணையுடன் பார்க்கின்றனர்.
 
 ஓரிரு  வாரங்கள்  முன்னர்தான்   நூலகத்தில்    பார்த்தேன்.    யாரோ  ஒரு    ஐரோப்பியரோ  அமெரிக்கரோ     புத்த  மததைப்  பற்றி    அதன்   வளர்ச்சி  வரலாற்று  அம்சங்களைப்  பற்றி    அதே   அந்த   இத்துப்போன    வழியான     ப்ராய்டு   கொள்கைகளைப்  பயன்படுத்தி     ஆராய்ச்சி  நூல்  ஒன்று  எழுதியிருக்கிறார்.     சில  நாட்களில்    அந்த  நூலைப்  பற்றியும்    நூலிலிருந்தும்     தகவல்களைத்  தர  முனைகிறேன்.     என்ன  இது  ஒரு  நோய்  போல்   பரவிக்கொண்டிருக்கும்  போக்கு !      ஆரோக்கியமான    விமரிசனங்கள்    என்பதே     மனிதர்  அறியாதவாறு    செய்து  விடுவார்கள்  போலிருக்கிறதே! 
 
ஹிந்துப்  பண்பாட்டுப்    புலத்தில்   மண்பற்றோடு  கிளர்ந்த    எந்த   மரபையும்     குலைத்துக்   கோணல்  சித்திரமாக்கிக்  காட்டுவது   என்று   தீர்மானமா?

வினோத் ராஜன்

unread,
Nov 29, 2009, 2:39:24 AM11/29/09
to மின்தமிழ்
http://www.youtube.com/watch?v=uw6hEx4xnKU&feature=related

நெற்றியில் பொட்டாக இருப்பது ”ஸ” - அவலோகிதேஸ்வரரின் பீஜம்.

நிறைய சித்தம் எழுத்துக்களை காணலாம். அவை வேகமாக போவதால் படிக்க
இயலவில்லை.

சித்தம் என்றாலே அதீத மந்திரசக்தி வாய்ந்தது என்று சீனர்கள்
எண்ணுகிறார்கள் போலும் :-)

V

On Nov 29, 12:16 pm, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:

> > 2009/11/29 Vinodh Rajan <vinodh.vin...@gmail.com>

karthi

unread,
Nov 29, 2009, 3:17:49 AM11/29/09
to mint...@googlegroups.com
வினோத்,

புத்தர் கோயில்களுக்குப் போகும் போதெல்லாம் - அல்லது சில வேளைகளில் கடந்து
போகும்பொதெல்லாம் -
தற்செயலாக இது போன்ற மந்திர உச்சாடனங்களைக் கேட்டிருக்கிறேன். ஆனால் அவை
சமஸ்கிருதமாக
இருக்கக் கூடும் என்பது தோன்றியதில்லை. விளக்கேற்றி வைத்ததமைக்கு நன்றி.

நீங்கள் காட்டிய இந்த இரு மந்திரங்களுக்கான மொழிபெயர்ப்புக் கொடுங்கள். என் சீன
நண்பர்களைக்
கேட்டுப் பார்க்கிறேன். அவர்கள் புதிய செய்திகள் சொல்லக் கூடும்.
இல்லையென்றாலும்
அசந்து போவார்கள்.

ரெ.கா.

வினோத் ராஜன்

unread,
Nov 29, 2009, 3:45:51 AM11/29/09
to மின்தமிழ்
> புத்தர் கோயில்களுக்குப் போகும் போதெல்லாம் - அல்லது சில வேளைகளில் கடந்து
> போகும்பொதெல்லாம் -
> தற்செயலாக இது போன்ற மந்திர உச்சாடனங்களைக் கேட்டிருக்கிறேன். ஆனால் அவை
> சமஸ்கிருதமாக
> இருக்கக் கூடும் என்பது தோன்றியதில்லை

இந்தியாவின் பிரதிபிம்பத்தை ஆசியா முழுக்க காணலாம். !

ஆசியாவின் பல கலாச்சார விழுமிய்ங்களுக்கு ஆதி காரணம் இந்தியா தான்.

நம்மூர் கோவில்களில் சமஸ்கிருதம் உச்சரிக்கக்கூடது என்பவர்கள், சீனா,
ஜப்பான் கோவில் போனால் என்ன் செய்வார்கள் என்று யோசித்ததுண்டு. அங்கேயும்
குதித்து போராட்டம் நடத்துவார்களோ :-)

முதல் மந்திரம் சீனர்கள் அறிய வாய்ப்பில்லை. அது ஜப்பானிய தாந்திரீக
பௌத்தத்துடன் தொடர்புடையது. அதை முறையாக உச்சாடனம் செய்ய குருவிடம்
இருந்து அதிஷ்டானம் பெற்றிருக்க வேண்டும்.

இரண்டாவது மந்திரம், ஒரு புத்தருடையது.

இவர் பெயர் பைஷஜ்யகுரு (Bhaisajyaguru). இவருடைய புத்த க்ஷேத்திரம்
வைடூர்ய நிர்பாசம். சீனப்பெயர் அறியேன் ஆங்கில விக்கியில் தேடினால்
கிட்டும். நோய்களை தீர்ப்பதற்காக இவரை வழிபடுவது உண்டு.

இவர் பன்னிரண்டு பிரதிஜ்ஞைகள் (புத்த மதத்தில் இதை பிரணிதானம் என்று
கூறுவார்கள்) எடுத்துக்கொண்டு, அதனால் புத்தப்பதவி அடைந்ததாக இவரை
குறித்த சூத்திரமான “பைஷ்ஜ்யகுரு வைடூர்ய பிரபராஜ சூத்திரம்” கூறுகிறது.

http://www.uwest.edu/sanskritcanon/dp/index.php?q=node/35&textID=9d71429071205b71da

அதில் தன் பெயரை உச்சரித்த/கேட்ட மாத்திரத்தில் அனைத்து பிணிகள்
தீரவேண்டும் என்ற பிரணிதானமும் அடங்கும்.

பைஷஜ்யம் என்றால்- மருந்து/பிணி தீர்க்கும் சக்தி.

மந்திரங்களை மொழிப்பெயர்க்கக்கூடாது அது தவறு. பௌத்த ஆச்சார்யர்கள்
செய்யத்துணியாதவற்றை நாம் செய்தல் தகாது :-))

---

பி.கு:
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81

தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதிய கட்டுரை.

பங்களிப்பாளர்களுக்கு அதீத மரியாதை தருபவர்களும், அவர்தம் பங்களிப்புகளை
கண்போல் மதிப்பவர்களுமான தமிழ் விக்கிப்பீடியர்கள் அதை “பைசையகுரு” என்ற
தலைப்புக்கு மாற்றிவிட்டனர். யாரை கேட்டார்கள், எப்போது கேட்டார்கள்
என்றெல்லாம் தெரியாது.

விக்கிப்பீடியா அடாவடித்தனத்தின் ஒரு வெளிப்பாடு இது. நீங்கள் யாராவது
ஏதேவது எழுதிவிட்டு போங்கள். நாங்கள் புறவாசல் வழியே, கூட்டம் கூடி பேசி,
பிறகு மாற்றிக்கொள்வோம் என்பதே அவ்ர்கள் கொள்கை .இதற்காக்த்தான் தேனொழுக
பேசி பங்களிப்புகளை எதிர்ப்பார்க்கின்றார்கள் போலும்.

V

On Nov 29, 1:17 pm, "karthi" <karthige...@gmail.com> wrote:
> வினோத்,


>
. விளக்கேற்றி வைத்ததமைக்கு நன்றி.
>
> நீங்கள் காட்டிய இந்த இரு மந்திரங்களுக்கான மொழிபெயர்ப்புக் கொடுங்கள். என் சீன
> நண்பர்களைக்
> கேட்டுப் பார்க்கிறேன். அவர்கள் புதிய செய்திகள் சொல்லக் கூடும்.
> இல்லையென்றாலும்
> அசந்து போவார்கள்.
>
> ரெ.கா.
>
>
>
> ----- Original Message -----
> From: "வினோத் ராஜன்" <vinodh.vin...@gmail.com>
> To: "மின்தமிழ்" <mint...@googlegroups.com>
> Sent: Sunday, November 29, 2009 3:16 PM
> Subject: [MinTamil] Re: Hiragana, Kathakana, ... & Tamil diacritic
>
> > //அவ்வளவுதான், கோயிலில் சொல்லும் மந்திரங்களையெல்லாம் ஒப்பிக்க
> > ஆரம்பித்தாள்.
> > கேட்டுக் கொண்டிருந்தேன். //
>
> > :-)
>
> > கிழக்காசியர்கள் சமஸ்கிருதத்தை உச்சரிக்கும் விதமே அலாதி தான்.
>
> > கூர்ந்து கவனித்தால் தான் அது சமஸ்கிருதம் என்று புலப்படும் :-))
>

> >http://www.youtube.com/watch?v=puhzLkiCtDo&feature=rec-LGOUT-exp_fres...


> > (ஜப்பானிய சமஸ்கிருதம்)
>
> > ஓம் அமோக வைரோசன மஹாமுத்ர மணிபத்ம ஜ்வால ப்ரவர்த்தய ஹூம்
>

> >http://www.youtube.com/watch?v=itAbF3DPIWM(சீன சமஸ்கிருதம்)

விஜயராகவன்

unread,
Nov 29, 2009, 4:31:46 AM11/29/09
to மின்தமிழ்
வினோத்

உங்கள் புத்த படிப்புகள் அபாரம். பல மொழிகள் நடுவில் போய், உங்களுக்கு
வேண்டியதை தோண்டியிருக்கின்றீர்கள்.

10 வருடம் முன்பு, ஜப்பானில் ‘ஓம் ஷுக்ரியோ’ என்ற அமைப்பு தோக்கியோ
பாதாளரயிலில் சாரின் விஷ வாயுவை வைத்து, பலரை கொல்லுவதாக அதிகாரிகளிடம்
மாட்டிக் கொண்டது.

அப்போதுதான் தெரியும் ஜப்பானியர்களுக்கு ஓம் நல்ல பரிச்சயம் என்று


விஜயராகவன்

On 29 Nov, 08:45, வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com> wrote:
> > புத்தர் கோயில்களுக்குப் போகும் போதெல்லாம் - அல்லது சில வேளைகளில் கடந்து
> > போகும்பொதெல்லாம் -
> > தற்செயலாக இது போன்ற மந்திர உச்சாடனங்களைக் கேட்டிருக்கிறேன். ஆனால் அவை
> > சமஸ்கிருதமாக
> > இருக்கக் கூடும் என்பது தோன்றியதில்லை
>
> இந்தியாவின் பிரதிபிம்பத்தை ஆசியா முழுக்க காணலாம். !
>
> ஆசியாவின் பல கலாச்சார விழுமிய்ங்களுக்கு ஆதி காரணம் இந்தியா தான்.
>
> நம்மூர் கோவில்களில் சமஸ்கிருதம் உச்சரிக்கக்கூடது என்பவர்கள், சீனா,
> ஜப்பான் கோவில் போனால் என்ன் செய்வார்கள் என்று யோசித்ததுண்டு. அங்கேயும்
> குதித்து போராட்டம் நடத்துவார்களோ :-)
>
> முதல் மந்திரம் சீனர்கள் அறிய வாய்ப்பில்லை. அது ஜப்பானிய தாந்திரீக
> பௌத்தத்துடன் தொடர்புடையது. அதை முறையாக உச்சாடனம் செய்ய குருவிடம்
> இருந்து அதிஷ்டானம் பெற்றிருக்க வேண்டும்.
>
> இரண்டாவது மந்திரம், ஒரு புத்தருடையது.
>
> இவர் பெயர் பைஷஜ்யகுரு (Bhaisajyaguru).  இவருடைய புத்த க்ஷேத்திரம்
> வைடூர்ய நிர்பாசம். சீனப்பெயர் அறியேன் ஆங்கில விக்கியில் தேடினால்
> கிட்டும். நோய்களை தீர்ப்பதற்காக இவரை வழிபடுவது உண்டு.
>
> இவர் பன்னிரண்டு பிரதிஜ்ஞைகள் (புத்த மதத்தில் இதை பிரணிதானம் என்று
> கூறுவார்கள்) எடுத்துக்கொண்டு, அதனால் புத்தப்பதவி அடைந்ததாக இவரை
> குறித்த சூத்திரமான “பைஷ்ஜ்யகுரு வைடூர்ய பிரபராஜ சூத்திரம்” கூறுகிறது.
>

> http://www.uwest.edu/sanskritcanon/dp/index.php?q=node/35&textID=9d71...


>
> அதில் தன் பெயரை உச்சரித்த/கேட்ட மாத்திரத்தில் அனைத்து பிணிகள்
> தீரவேண்டும் என்ற பிரணிதானமும் அடங்கும்.
>
> பைஷஜ்யம் என்றால்- மருந்து/பிணி தீர்க்கும் சக்தி.
>
> மந்திரங்களை மொழிப்பெயர்க்கக்கூடாது அது தவறு. பௌத்த ஆச்சார்யர்கள்
> செய்யத்துணியாதவற்றை நாம் செய்தல் தகாது :-))
>
> ---
>

> பி.கு:http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9A%E0%AF%88%E0%...

> ...
>
> read more »- Hide quoted text -
>
> - Show quoted text -

devoo

unread,
Nov 29, 2009, 4:52:55 AM11/29/09
to மின்தமிழ்

Nov 29, 1:45 pm, வினோத் ராஜன்

>>பைஷஜ்யம் என்றால்- மருந்து/பிணி தீர்க்கும் சக்தி <<

பைஷஜ்யம் - பேஷஜம் என்பதிலிருந்து பிறந்தது, பிஷஜ்,பிஷக் - மருத்துவர்
வடமொழி அறிவுபெற பௌத்த, ஜைன நூல்களைப் படித்தாலே போதும்.

தேவ்

வினோத் ராஜன்

unread,
Nov 29, 2009, 5:01:16 AM11/29/09
to மின்தமிழ்
//அப்போதுதான் தெரியும் ஜப்பானியர்களுக்கு ஓம் நல்ல பரிச்சயம் என்று //

ஓம் குறித்து ஏற்கனவே எழுதியுள்ளேன். ஓங்காரம் புத்தரின் திரிகாய
ஸ்வரூபமானது.

அகரம் - தர்மகாயம்
உகரம் - சம்போககாயம்
மகரம் - நிர்மாணகாயம்.

பௌத்தத்தின் பெரும்பாலான மந்திரங்களில் ஓங்காரம் உண்டு.

எனினும் பிரதான பீஜமாக ஓங்காரம் புத்த மதத்தில் பிரசித்தி பெறவில்லை.
புத்த பிரணவமாக “அ”கரம் உருக்கொண்டது. வெவ்வேறு புத்தர்களின் பீஜங்கள்
அவர்களை சார்ந்த பிரிவுகளில் பிரசித்தி பெற்றன.

சீனத்தில் ஏற்பட்ட உச்சரிப்பு மாற்றத்தால், ஓம் என்பது “ஆன்” என்று
ஒலிக்கும். மேற்கண்ட ஜப்பானிய வீடியோவில் சித்த ஓம் க்கு பக்கத்தில்
“ஒன்” என்று ஹிரகனாவில் எழுதியுள்ளார்.

மேற்கண்ட வீடியோக்களை இன்னொரு முறை கேட்டுப்பாருங்கள். !

V

> ...
>
> read more »

N. Kannan

unread,
Nov 29, 2009, 5:21:54 AM11/29/09
to mint...@googlegroups.com
ஓகோ!

ஓம் எனும் தேவநாகரி எழுத்து பல கொரியர் வீடுகளிலும், கோயில்களிலும் நான்
தினம் காணும் காட்சி. முன்பு படமெடுத்து இருக்கிறேன்.

கூகுளில் தேடினால் எளிதில் கிடைக்கும்.

வினோத் போட்டு `குட்டை` உடை, உடை என்று உடைக்கிறார்.

சமிஸ்கிருந்தம் தென்கிழக்காசியா, தூரகிழக்கு என்று ஆசியா முழுவதும் பரவி
நிற்பது வெள்ளிடை மலை. நம்மவர் ஜாதீய வெறியால் ”நமது அடையாளங்களை”
நம்மையே புறக்கணிக்கச் சொல்வது, மலேசிய முஸ்லிம் அரசுகள் செய்வதை விடக்
கொடுமை!

வேறு என்ன சொல்ல?

க.>

2009/11/29 விஜயராகவன் <vij...@gmail.com>:

N. Kannan

unread,
Nov 29, 2009, 5:25:12 AM11/29/09
to mint...@googlegroups.com
இதோ நமது ஸ்வஸ்திகா!

ஓம் கிடைத்துவிடும்!

கண்ணன்

2009/11/29 N. Kannan <navan...@gmail.com>:

lantern.jpg

வினோத் ராஜன்

unread,
Nov 29, 2009, 5:29:10 AM11/29/09
to மின்தமிழ்
//ஓம் எனும் தேவநாகரி எழுத்து பல கொரியர் வீடுகளிலும், கோயில்களிலும்
நான்
தினம் காணும் காட்சி. முன்பு படமெடுத்து இருக்கிறேன். //

கண்ணன் அது தேவநாகரி அல்ல.

சித்தம் :-)

ஓகாரத்தின் மீது அனுஸ்வாரத்தை அல்லது சந்திரபிந்துவை இட்டிருப்பர்.

கொரிய சித்தம் வேறு மாதிரி இருக்கும் என்று படித்திருக்கிறேன். கொரிய
சித்தம் எழுத்துக்களின் படங்கள் வேறு ஏதேனும் இருப்பினும் இடுங்கள். நான்
உங்களுக்கு தன்யன் ஆவேன் !

V

On Nov 29, 3:25 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> இதோ நமது ஸ்வஸ்திகா!
>
> ஓம் கிடைத்துவிடும்!
>
> கண்ணன்
>

> 2009/11/29 N. Kannan <navannak...@gmail.com>:


>
>
>
> > ஓகோ!
>
> > ஓம் எனும் தேவநாகரி எழுத்து பல கொரியர் வீடுகளிலும், கோயில்களிலும் நான்
> > தினம் காணும் காட்சி. முன்பு படமெடுத்து இருக்கிறேன்.
>
> > கூகுளில் தேடினால் எளிதில் கிடைக்கும்.
>
> > வினோத் போட்டு `குட்டை` உடை, உடை என்று உடைக்கிறார்.
>
> > சமிஸ்கிருந்தம் தென்கிழக்காசியா, தூரகிழக்கு என்று ஆசியா முழுவதும் பரவி
> > நிற்பது வெள்ளிடை மலை. நம்மவர் ஜாதீய வெறியால் ”நமது அடையாளங்களை”
> > நம்மையே புறக்கணிக்கச் சொல்வது, மலேசிய முஸ்லிம் அரசுகள் செய்வதை விடக்
> > கொடுமை!
>
> > வேறு என்ன சொல்ல?
>
> > க.>
>
>
>

>  lantern.jpg
> 138KViewDownload

N. Kannan

unread,
Nov 29, 2009, 5:32:42 AM11/29/09
to mint...@googlegroups.com
இதோ தேவநாகரி ஓம்!

க.>

2009/11/29 N. Kannan <navan...@gmail.com>:

--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

OM.JPG

N. Kannan

unread,
Nov 29, 2009, 5:33:50 AM11/29/09
to mint...@googlegroups.com
உங்கள் ‘சித்தம்’ எங்கள் பாக்கியம்!! :-)

க.>

2009/11/29 வினோத் ராஜன் <vinodh...@gmail.com>:

வினோத் ராஜன்

unread,
Nov 29, 2009, 5:35:04 AM11/29/09
to மின்தமிழ்
> இதோ நமது ஸ்வஸ்திகா!

இதில் இன்னொரு கொடுமை கண்ணன்.

இந்தக்குறியீடு நம் சொத்து. இந்தியாவுக்கு உரியது.

நம் இந்திய அரச புத்திரர்கள் அதை இந்திய மொழிகளின் யூனிகோடில்
சேர்க்கவில்லை. வசதியாக மறந்துவிட்டனர்.

ஆனால் சீன யூனிகோடில் ஸ்வஸ்திகம் உள்ளது.

卐 卍 (சீன எழுத்துருக்கள் வேண்டும்.)

இது போன்ற கொடுமைகள் எல்லாம் இங்கு தான் நடக்கும். :-((

V

On Nov 29, 3:25 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:

>
> ஓம் கிடைத்துவிடும்!
>
> கண்ணன்
>

> 2009/11/29 N. Kannan <navannak...@gmail.com>:


>
>
>
> > ஓகோ!
>
> > ஓம் எனும் தேவநாகரி எழுத்து பல கொரியர் வீடுகளிலும், கோயில்களிலும் நான்
> > தினம் காணும் காட்சி. முன்பு படமெடுத்து இருக்கிறேன்.
>
> > கூகுளில் தேடினால் எளிதில் கிடைக்கும்.
>
> > வினோத் போட்டு `குட்டை` உடை, உடை என்று உடைக்கிறார்.
>
> > சமிஸ்கிருந்தம் தென்கிழக்காசியா, தூரகிழக்கு என்று ஆசியா முழுவதும் பரவி
> > நிற்பது வெள்ளிடை மலை. நம்மவர் ஜாதீய வெறியால் ”நமது அடையாளங்களை”
> > நம்மையே புறக்கணிக்கச் சொல்வது, மலேசிய முஸ்லிம் அரசுகள் செய்வதை விடக்
> > கொடுமை!
>
> > வேறு என்ன சொல்ல?
>
> > க.>
>
>
>

>  lantern.jpg
> 138KViewDownload

N. Kannan

unread,
Nov 29, 2009, 5:39:25 AM11/29/09
to mint...@googlegroups.com
வினோத்:

‘நெஞ்சு பொறுக்குதில்லையே’ என்று பாரதி சும்மாவா பாடினான்.

இன்னும் இரண்டு படங்கள்.

என்ன ஆச்சர்யமெனில். பௌத்தம் கிறிஸ்து நூற்றாண்டிற்கு முன்பே கொரியா
போய்விட்டது என்பதைச் சுட்டும் கோயில் அறிக்கை. இங்குள்ள புத்தர் சிலை
கிமு என்கிறது குறிப்பு.

ஷில்லா பேரரசு காலத்தில் கட்டிய ஒரு கோயிலில் இருக்கும் சிலை ‘கட்டிக்
கொஞ்சத்தோன்றும் அழகு சிலை’. அதற்கு அடுத்த சுட்டி!

க.>

2009/11/29 வினோத் ராஜன் <vinodh...@gmail.com>:

--

BC_buddha_small.jpg
BC_small.jpg

வினோத் ராஜன்

unread,
Nov 29, 2009, 5:40:48 AM11/29/09
to மின்தமிழ்
ஆம்.

இதே தான்.

ஓகாரத்தின் மீது சந்திரபிந்து.

புத்தர் உங்களுக்கு அருள் புரிவாராக ;-))

V

On Nov 29, 3:32 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> இதோ தேவநாகரி ஓம்!
>
> க.>
>

> 2009/11/29 N. Kannan <navannak...@gmail.com>:


>
>
>
>
>
> > இதோ நமது ஸ்வஸ்திகா!
>
> > ஓம் கிடைத்துவிடும்!
>
> > கண்ணன்
>

> > 2009/11/29 N. Kannan <navannak...@gmail.com>:


> >> ஓகோ!
>
> >> ஓம் எனும் தேவநாகரி எழுத்து பல கொரியர் வீடுகளிலும், கோயில்களிலும் நான்
> >> தினம் காணும் காட்சி. முன்பு படமெடுத்து இருக்கிறேன்.
>
> >> கூகுளில் தேடினால் எளிதில் கிடைக்கும்.
>
> >> வினோத் போட்டு `குட்டை` உடை, உடை என்று உடைக்கிறார்.
>
> >> சமிஸ்கிருந்தம் தென்கிழக்காசியா, தூரகிழக்கு என்று ஆசியா முழுவதும் பரவி
> >> நிற்பது வெள்ளிடை மலை. நம்மவர் ஜாதீய வெறியால் ”நமது அடையாளங்களை”
> >> நம்மையே புறக்கணிக்கச் சொல்வது, மலேசிய முஸ்லிம் அரசுகள் செய்வதை விடக்
> >> கொடுமை!
>
> >> வேறு என்ன சொல்ல?
>
> >> க.>
>
> --
> வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
> கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
> கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
>
> Tamil Heritage Foundation -http://www.tamilheritage.org/
>

>  OM.JPG
> 78KViewDownload

N. Kannan

unread,
Nov 29, 2009, 5:46:16 AM11/29/09
to mint...@googlegroups.com
இங்கே பாருங்க அழகு புத்தர்:

http://www.allposters.com/-sp/Statue-of-Sakyamuni-Buddha-in-Seokguram-Sokkuram-Grotto-Bulguksa-South-Korea-Posters_i4371718_.htm

பேரும் அழகுதான் `சொக்கு ராம்`! சொக்க வைக்கும் அழகு!

Statue of Sakyamuni Buddha in Seokguram (Sokkuram) Grotto, Bulguksa, South Korea

கண்ணன்

2009/11/29 வினோத் ராஜன் <vinodh...@gmail.com>:

வினோத் ராஜன்

unread,
Nov 29, 2009, 5:59:05 AM11/29/09
to மின்தமிழ்
நாம் இந்தியர்கள் என்று எப்போதும் பெருமைப்பட வேண்டும் என்பதையே இவை
அனைத்தும் சுட்டுகின்றன.

இந்நாட்டில் பிறக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.....

ஹ்ம்ம்ம்ம்..................

V

On Nov 29, 3:46 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> இங்கே பாருங்க அழகு புத்தர்:
>

> http://www.allposters.com/-sp/Statue-of-Sakyamuni-Buddha-in-Seokguram...


>
> பேரும் அழகுதான் `சொக்கு ராம்`! சொக்க வைக்கும் அழகு!
>
> Statue of Sakyamuni Buddha in Seokguram (Sokkuram) Grotto, Bulguksa, South Korea
>
> கண்ணன்
>

> 2009/11/29 வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com>:

devoo

unread,
Nov 29, 2009, 6:04:02 AM11/29/09
to மின்தமிழ்
ஒரு துப்பறியும் நவீனம் போல் இருக்கிறது !!

தேவ்

விஜயராகவன்

unread,
Nov 29, 2009, 6:17:45 AM11/29/09
to மின்தமிழ்
On 29 Nov, 11:04, devoo <rde...@gmail.com> wrote:
> ஒரு துப்பறியும் நவீனம் போல் இருக்கிறது !!
>
> தேவ்


டாவின்சி கோட் போல் `சந்திரபிந்து சமிஞ்ஞை` என்ற நாவலை யாராவது
எழுதணும். 8ம் நூற்றாண்டு பின்னணியில், அல்லது 21 நூற்றாண்டு
பின்புலத்திலேயும் இருக்கலாம்.


விஜயராகவன்

வினோத் ராஜன்

unread,
Nov 29, 2009, 6:26:31 AM11/29/09
to மின்தமிழ்
டைட்டில் நல்லா இருக்கு..

காப்பிரைட் செய்து வைத்துக்கொள்ளலாம். மூட் வரும்போது ஒரு நாவல் பிற்பாடு
எழுத வசதியாக இருக்கும் :-))

V

N. Kannan

unread,
Nov 29, 2009, 6:33:18 AM11/29/09
to mint...@googlegroups.com
உண்மை! உண்மை!
சத்தியமான உண்மை!
ஐரோப்பியக் கலாச்சாரத்திற்கு ஏசுவின் பிறப்பு எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு
முக்கியம் சாக்யமுனி புத்தனின் பிறப்பு ஆசியாவிற்கு.
உலகம் புத்தன் வழியில் திரும்பிக்கொண்டு இருக்கிறது.
காலம் மாறும். காணத்தான் போகிறோம்.

க.>

2009/11/29 வினோத் ராஜன் <vinodh...@gmail.com>:

N. Ganesan

unread,
Nov 29, 2009, 9:26:15 AM11/29/09
to மின்தமிழ்

On Nov 29, 2:17 am, "karthi" <karthige...@gmail.com> wrote:
> வினோத்,
>
> புத்தர் கோயில்களுக்குப் போகும் போதெல்லாம் - அல்லது சில வேளைகளில் கடந்து
> போகும்பொதெல்லாம் -
> தற்செயலாக இது போன்ற மந்திர உச்சாடனங்களைக் கேட்டிருக்கிறேன். ஆனால் அவை
> சமஸ்கிருதமாக
> இருக்கக் கூடும் என்பது தோன்றியதில்லை. விளக்கேற்றி வைத்ததமைக்கு நன்றி.
>
> நீங்கள் காட்டிய இந்த இரு மந்திரங்களுக்கான மொழிபெயர்ப்புக் கொடுங்கள். என் சீன
> நண்பர்களைக்
> கேட்டுப் பார்க்கிறேன். அவர்கள் புதிய செய்திகள் சொல்லக் கூடும்.
> இல்லையென்றாலும்
> அசந்து போவார்கள்.
>
> ரெ.கா.
>

ரெ. கா.

சீனர்கள் வடமொழி புத்த சுலோகங்கள்
(இவை கலப்பான சம்ஸ்கிருதம் - ஒரிஜினல் அல்ல.
ஹைப்ரிட் ஸான்ஸ்க்ரிட் எனப்ர்) கொண்டு சென்ற
ஏடுகளை தம் எழுத்தில் மொழிபெயர்த்து எழுதிகி
கொண்டனர்.

பின்னர், இந்தியாவில் இருந்து வந்த (கலப்பட) சம்ஸ்கிருத
பௌத்த சுலோகங்களை எரித்து சாம்பர் ஆக்கி
தாயத்து முதலியவைகளிலும், தீர்த்தம் ஆக்கியும்
குடித்துவிட்டனர்.

இருப்பவை அனேகமாக சீன மொழிபெயர்ப்புகள்.
சம்ஸ்கிருத மூலங்கள் அனேகமான
பௌத்த சுலோகங்களுக்கு இன்றும் கிடைப்பதில்லை.

எரித்து சாம்பல் ஆக்கியதன் விளைவுகள் இவை.

இவ்விழையில் இதுபற்றி பேசப்பட்டிருக்காது.
யாராவது இங்கே சொல்லியுள்ளனரா?

சீனர்கள் இந்தியாவை திபெத், அருணாசல் பிரதேஷ்,
காஷ்மீர், ... மதிக்கும் நிலை நீங்கள் அறிந்ததுதான்.

நா. கணேசன்


>
>
> ----- Original Message -----
> From: "வினோத் ராஜன்" <vinodh.vin...@gmail.com>
> To: "மின்தமிழ்" <mint...@googlegroups.com>
> Sent: Sunday, November 29, 2009 3:16 PM
> Subject: [MinTamil] Re: Hiragana, Kathakana, ... & Tamil diacritic
>
> > //அவ்வளவுதான், கோயிலில் சொல்லும் மந்திரங்களையெல்லாம் ஒப்பிக்க
> > ஆரம்பித்தாள்.
> > கேட்டுக் கொண்டிருந்தேன். //
>
> > :-)
>
> > கிழக்காசியர்கள் சமஸ்கிருதத்தை உச்சரிக்கும் விதமே அலாதி தான்.
>
> > கூர்ந்து கவனித்தால் தான் அது சமஸ்கிருதம் என்று புலப்படும் :-))
>

> >http://www.youtube.com/watch?v=puhzLkiCtDo&feature=rec-LGOUT-exp_fres...


> > (ஜப்பானிய சமஸ்கிருதம்)
>
> > ஓம் அமோக வைரோசன மஹாமுத்ர மணிபத்ம ஜ்வால ப்ரவர்த்தய ஹூம்
>

> >http://www.youtube.com/watch?v=itAbF3DPIWM(சீன சமஸ்கிருதம்)

> >> > மொழிப்பெயர்த்து எடுத்துச்சென்றனர்.- Hide quoted text -

N. Ganesan

unread,
Nov 29, 2009, 9:42:14 AM11/29/09
to மின்தமிழ்

On Nov 29, 4:35 am, வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com> wrote:
> > இதோ நமது ஸ்வஸ்திகா!
>
> இதில் இன்னொரு கொடுமை கண்ணன்.
>

ஸ்வஸ்திகா உலகம் முழுக்க இருக்கிறது.
அமெரிக்க இந்தியர்கள் வரைந்த பாறைச் சித்திரங்களில்
பல்லாயிரம் ஆண்டுகளாக இருக்கிறது.

பல புத்தகங்கள் 80- 100 ஆண்டுகளுக்கு முன்னமே
வெளியாகி உள்ளன.

தொல்பொருள் ஆய்வாளர்கள் பலரும் சிந்து சமவெளிநாகரீகம்
ஆரியருக்கு முற்பட்டது என்று விளக்கிவருகிறார்கள்.

அதனில் ஸ்வஸ்திகா உள்ளது. இதுபோல பல
நாகரீகங்களில் உள்ள சின்னம் ஸ்வஸ்திகா.
இந்தியா மாத்திரம் கண்டுபிடித்ததல்ல.

ஹிட்லர் கூட ஸ்வஸ்திகா சின்னம் வைத்திருந்தார்.

நா. கணேசன்


> > 138KViewDownload- Hide quoted text -

N. Ganesan

unread,
Nov 29, 2009, 9:51:56 AM11/29/09
to மின்தமிழ்

On Nov 29, 5:33 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> உண்மை! உண்மை!
> சத்தியமான உண்மை!
> ஐரோப்பியக் கலாச்சாரத்திற்கு ஏசுவின் பிறப்பு எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு
> முக்கியம் சாக்யமுனி புத்தனின் பிறப்பு ஆசியாவிற்கு.
> உலகம் புத்தன் வழியில் திரும்பிக்கொண்டு இருக்கிறது.
> காலம் மாறும். காணத்தான் போகிறோம்.
>

அம்பேத்கார் புத்தர் வழியில் ஞானம் காணச் சொல்கிறார்.

நம் ஆழ்வார்களும், நாயன்மார்களும் ஆரம்பித்து
துரத்திவிட்டார்கள். நிச்சயம் சீனர்கள் சாம்பல் ஆக்கிகசாயம் போட்டுக்
குடித்த, தாயத்தில் மொழிபெயர்த்த (சீன எழுத்தில், சீனமொழியில்)
வடமொழி சுலோகங்களை மீட்டெடுப்போம்.

சீன தாயத்துகளை திறந்து வெகு ஆராய்ச்சிகள் நடக்கின்றன.

நா. கணேசன்

Vinodh Rajan

unread,
Nov 29, 2009, 10:11:45 AM11/29/09
to mintamil
தேவைக்கும் அதிகமான பௌத்த மந்திரங்கள் சித்தம் வடிவில் சீன திரிபிடகத்தில் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. மொழி தெரியாதவர்கள் காலங்காலமாக பல நூறாண்டுகளாக நகலெடுத்த காரணத்தினால் சுலோகங்கள் கொஞ்சம் திரிந்துவிட்டன என்பது உண்மைதான். சமஸ்கிருத மந்திரப்பகுதிகள் சில சீனத்தில் இல்லாது போயினும் திபெத்திய மொழியில் இருக்கும் வாய்ப்புகள் அதிகம். அப்படியே இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது நேபாளம் :-) அங்கு எங்காவது இருக்கக்கூடும். சீன திரிபிடகத்தில் இருந்து பெறப்படும் (சித்தம் எழுத்துமுறையில் உள்ள) பௌத்த சமஸ்கிருத சுலோகங்களை வைத்து ஒரு வலைத்தளத்தையே நடத்துகின்றனர். http://www.dharanipitaka.net/ (சீன வலைத்தளம் - கூகிள் மொழிமாற்றியை பயன்படுத்தினால் உலாவலாம்... ) CBETA (Chinese Buddhist Electronic Text Society) முழு சீன திரிபிடகத்தையும் மின்னாக்கம் செய்துள்ளனர் (சித்தம் எழுத்துக்களையும் சேர்த்து. ரொம்ப நல்லவ்ர்கள் சித்தம் பலருக்கு தெரியாதென்று ரோமன் எழுத்துக்களிலும் தந்துள்ளனர்). அவர்களுடைய CBETA Readerஐ தரவிறக்கம் செய்து, மூல சித்தம் எழுத்துக்களில் உள்ள பௌத்த சுலோகங்களை காணலாம்.

ஸ்க்ரீன் ஷாட் கீழே

ஆக, சாம்பலில் இருந்து எழுந்த ஃபீனிக்ஸ் பறவை மாதிரி, எரிச்ச சாம்பலை புனருத்தாரனம் செஞ்சு எல்லாம் ரொம்ப கஷ்டப்பட வேணாம் :-)) ..சீன திரிபிடகத்தை கொஞ்சம் ஆராய்ந்தால் போதும் மூல சம்ஸ்கிருத மந்திரங்களை பெறலாம். 

தாரணிபிடகம் வலைத்தளத்தினர் ஏற்கனவே அதை செய்தும் விட்டனர் !!!

V


CBETA- Screenshot.JPG

srirangammohanarangan v

unread,
Nov 29, 2009, 10:24:22 AM11/29/09
to mint...@googlegroups.com
திரு வினோத்,    திபெத்திய  மொழி    இன்னும்   முழுதும்   திறக்கப்படாத   சுரங்கம்.     இங்கு   லுப்தம்  என்று  ஆகிவிட்ட    சம்ஸ்க்ருத     நூல்கள்  சிலவற்றைக்கூட     திபெத்திய   மொழியிலிருந்து    பெற்று  விடலாம்   என்கின்றார்    S C Vidhyabhushana      நியாய   சாஸ்திர   வரலார்றை   ஆங்கிலத்தில்  எழுதியவர்.

N. Ganesan

unread,
Nov 29, 2009, 10:24:46 AM11/29/09
to மின்தமிழ்

அன்பின் ரெ. கா.,

வினோத் சொல்லும் அளவுக்கு சம்ஸ்கிருதம்
சீனாவில் போற்றப்பட்டதில்லை.
சீன பௌத்தம் பற்றிப் பல்கலைக்கழக
நூல்களும், ஆய்வுக் கட்டுரைகளும்
படித்தால் தெளிவடையலாம்.
Pl. take with grain of salt.

அவர் இந்தியா பரப்பளவு குறைந்து வருவதை
அடிக்கடி :( போட்டு எழுதுவதை காணலாம்.

தமிழ்ப் பேராசிரியர்களும் திராவிட மொழிகளின்
பரப்பும் இப்படியே மதம், மந்திரம், ...
என்று குறைக்கப்பட்டதை மொழியியல்
அறிஞர்களும் சுட்டிக்காட்டியிருப்பது
தாங்கள் அறியாததன்று.

தமிழல்லாத பிறமொழி எழுத்துக்கள் பல
- இந்தி, கிரந்தம், தெலுங்கு, ஆங்கிலம், ...
நம்மிடையே இருக்கிறது.
கலப்பட வடமொழியில் எழுதிய மந்திரங்களை
சீனாவில் தோண்டி எடுப்போம்.

அன்புடன்,
நா. கணேசன்

நான் பல குழுக்களில் எழுதுவது பற்றிச் சிலர்
சிரமப்படுகிறார்கள் போல. அவர்களிடம் எந்த
உதவியும் பெறாமல் தான் நான் அங்கு எழுதுகிறேன்.
தமிழும், இலக்கணமும், இலக்கியமும் அறிந்த
பல அறிஞர்கள் இருக்கிறார்கள். பல்லாண்டுகளாய்
பரிச்சயமுண்டு.


வினோத் ராஜன்

unread,
Nov 29, 2009, 11:10:20 AM11/29/09
to மின்தமிழ்
உண்மை தான் மோகனரங்கன்..

திபெத் ஒரு அரிய போக்கிஷம்..

V

On Nov 29, 8:24 pm, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:


> திரு வினோத்,    திபெத்திய  மொழி    இன்னும்   முழுதும்   திறக்கப்படாத
> சுரங்கம்.     இங்கு   லுப்தம்  என்று  ஆகிவிட்ட    சம்ஸ்க்ருத     நூல்கள்
> சிலவற்றைக்கூட     திபெத்திய   மொழியிலிருந்து    பெற்று  விடலாம்
> என்கின்றார்    S C Vidhyabhushana      நியாய   சாஸ்திர   வரலார்றை
> ஆங்கிலத்தில்  எழுதியவர்.
>

> On 11/29/09, Vinodh Rajan <vinodh.vin...@gmail.com> wrote:
>
>
>
>
>
> > தேவைக்கும் அதிகமான பௌத்த மந்திரங்கள் சித்தம் வடிவில் சீன திரிபிடகத்தில்
> > பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. மொழி தெரியாதவர்கள் காலங்காலமாக பல
> > நூறாண்டுகளாக நகலெடுத்த காரணத்தினால் சுலோகங்கள் கொஞ்சம் திரிந்துவிட்டன என்பது
> > உண்மைதான். சமஸ்கிருத மந்திரப்பகுதிகள் சில சீனத்தில் இல்லாது போயினும்
> > திபெத்திய மொழியில் இருக்கும் வாய்ப்புகள் அதிகம். அப்படியே இல்லையென்றால்
> > இருக்கவே இருக்கிறது நேபாளம் :-) அங்கு எங்காவது இருக்கக்கூடும். சீன
> > திரிபிடகத்தில் இருந்து பெறப்படும் (சித்தம் எழுத்துமுறையில் உள்ள) பௌத்த
> > சமஸ்கிருத சுலோகங்களை வைத்து ஒரு வலைத்தளத்தையே நடத்துகின்றனர்.

> >http://www.dharanipitaka.net/(சீன வலைத்தளம் - கூகிள் மொழிமாற்றியை

Vinodh Rajan

unread,
Nov 29, 2009, 11:27:28 AM11/29/09
to mintamil
//வினோத் சொல்லும் அளவுக்கு சம்ஸ்கிருதம் சீனாவில் போற்றப்பட்டதில்லை. //

சீன திரிபிடகத்தில் காணப்படுவதெல்லாம் என்னவாம் ?

சமஸ்கிருதத்தை போற்றாதவர்கள், சமஸ்கிருதத்தை அப்படியே ஆவணப்படுத்த ஏன்
மெனக்கெட்டு கஷ்டப்பட்டு தங்களுடைய பாரம்பிய சீன லிபிக்கு தொடர்பில்லா
ஒரு முற்றிலும் புதிய அந்நிய லிபியை கற்று, அதில் மந்திரங்களை எழுத
வேண்டும் ??

சமஸ்கிருதத்தை படிக்காமலா சீனத்துக்கு சூத்திரங்களை மொழிப்பெயர்த்திருப்பார்கள்.

சமஸ்கிருதத்தில் இருந்த பல சொற்கள் சீன மொழி சென்றுள்ளன.

பண்டைய சீனத்தை விடுங்கள். இன்றைய சீனத்துக்கு வாருங்கள்....

மஹா கருணா தாரணியையும், தச சுல தாரணிகளையும் பக்தி சிரத்தையுடன் தினமும்
உச்சரித்துக்கொண்டிருக்கும் சீனர்களை இந்த கேள்வி கேளுங்கள்.

சீன வம்சாவளியை சார்ந்த மலேசியர் ஒருவர் பௌத்த சமஸ்கிருத மந்திரங்களை இசை
வடிவமாக்கி - பாவம் அநியாயத்துக்கு கஷ்டப்பட்டு ஓரளவு சமஸ்கிருதத்தை
சரியாக - உச்சரித்து இசைத்து வருகிறார்.

இணையத்தில் இருக்கும் பற்பல பௌத்த மந்திர தந்திர சாஸ்திரங்கள் சீன மொழி
வலைத்தளங்களிலேயே அதிகம் காணப்படுகின்றன. சித்தம் எழுத்துமுறையை போற்றும்
கிழக்காசியர்களுக்கு நிறைய உதாரணம் தந்துவிட்டேன்.

//தமிழல்லாத பிறமொழி எழுத்துக்கள் பல


- இந்தி, கிரந்தம், தெலுங்கு, ஆங்கிலம், ...

நம்மிடையே இருக்கிறது. //

The usual non-sequitur comment as expected, to parrot personal agenda
in an completely unrelated thread.

V

N. Ganesan

unread,
Nov 29, 2009, 11:35:16 AM11/29/09
to மின்தமிழ்

இன்றைய சீனர்களோடு, சீனாவோடு நிறையப் பழகுகிறேன்.

ஒருவருக்கும் கூட சம்ஸ்கிருதம் தெரியாமால் இல்லை,
விடிந்தால் கலப்பட சம்ஸ்கிருத சுலோகம், சாப்பாட்டிலும்
ஒரே பௌத்தம் தான்.

கணேசன்

devoo

unread,
Nov 29, 2009, 11:50:31 AM11/29/09
to மின்தமிழ்
கணேசர் ஐயா,
நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் ?

// இந்தியாவில் இருந்து வந்த (கலப்பட) சம்ஸ்கிருத பௌத்த சுலோகங்களை


எரித்து சாம்பர் ஆக்கி

தாயத்து முதலியவைகளிலும், தீர்த்தம் ஆக்கியும் குடித்துவிட்டனர்.//
//அன்பின் ரெ. கா., வினோத் சொல்லும் அளவுக்கு சம்ஸ்கிருதம்
சீனாவில் போற்றப்பட்டதில்லை // என்று கூறிவிட்டுக் கடைசியில்
//இன்றைய சீனர்களோடு, சீனாவோடு நிறையப் பழகுகிறேன். ஒருவருக்கும் கூட
சம்ஸ்கிருதம் தெரியாமல் இல்லை, விடிந்தால் கலப்பட சம்ஸ்கிருத சுலோகம்,


சாப்பாட்டிலும்

ஒரே பௌத்தம் தான்.//
என்று கூறி முடிக்கிறீர்கள்; அதைத்தானே வினோத் கூறுகிறார் !

தேவ்

N. Ganesan

unread,
Nov 29, 2009, 11:54:14 AM11/29/09
to மின்தமிழ்

On Nov 29, 10:50 am, devoo <rde...@gmail.com> wrote:
> கணேசர் ஐயா,
> நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் ?
>
> // இந்தியாவில் இருந்து வந்த (கலப்பட) சம்ஸ்கிருத பௌத்த சுலோகங்களை
> எரித்து சாம்பர் ஆக்கி
> தாயத்து முதலியவைகளிலும், தீர்த்தம் ஆக்கியும்  குடித்துவிட்டனர்.//
> //அன்பின் ரெ. கா., வினோத் சொல்லும் அளவுக்கு சம்ஸ்கிருதம்
> சீனாவில் போற்றப்பட்டதில்லை // என்று கூறிவிட்டுக் கடைசியில்

நீங்கள் இருமடல்களை மேற்கோள் இடுகிறீர்கள்.

> //இன்றைய சீனர்களோடு, சீனாவோடு நிறையப் பழகுகிறேன். ஒருவருக்கும் கூட
> சம்ஸ்கிருதம் தெரியாமல் இல்லை, விடிந்தால் கலப்பட சம்ஸ்கிருத சுலோகம்,
> சாப்பாட்டிலும்
> ஒரே பௌத்தம் தான்.//
> என்று கூறி முடிக்கிறீர்கள்; அதைத்தானே வினோத் கூறுகிறார் !
>

ஆமாம். சீனா போய் பார்த்தீர்கள் என்றால் ஒரே சம்ஸ்கிருத மயமாக


இருக்கிறது.

வினோத் சொல்வதுபோல :)


> தேவ்
> ்

வினோத் ராஜன்

unread,
Nov 29, 2009, 12:01:51 PM11/29/09
to மின்தமிழ்
சீனாவிலும் ஜப்பானிலும் பல்கலைக்கழகம் நடத்தி சமஸ்கிருதத்தை போற்றினர்
என்று இங்கு யாரும் சொல்லவில்லை.

அந்த அளவு யாரும் இங்கு பில்டப் தரவில்லை. "வினோத்" சொல்லும் அளவுக்கு
சமஸ்கிருதம் போற்றப்படவில்லை என்றால், வினோத் என்ன சொன்னான் என்று அறிய
ஆவல்.

இங்கு விவாதிக்கப்பட்ட விஷயம்.. கிழக்காசிய அளவிலான சமஸ்கிருதத்தின்
தாக்கம். அது கலப்பட சம்ஸ்கிருதமாக இருந்தாலும் சரி. தூய
சமஸ்கிருதமாகவும் இருந்தாலும் சரி.. சமஸ்கிருத லிபியின் பயன்பாடாக
இருந்தாலும் சரி.. அனிமே/திரைப்பட பயன்பாட்டில் இருந்தாலும் சரி.

ஏதோ ஒரு விதத்தில் சமஸ்கிருத தாக்கம் கிழக்காசிய முழுவதும்
காணப்படுகிறது. அவ்வளவே...

V

On Nov 29, 9:35 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:

N. Ganesan

unread,
Nov 29, 2009, 12:34:14 PM11/29/09
to மின்தமிழ்

நா. கண்ணன் எழுதினார்:

> அவ்வளவுதான், கோயிலில் சொல்லும் மந்திரங்களையெல்லாம் ஒப்பிக்க ஆரம்பித்தாள்.
> கேட்டுக் கொண்டிருந்தேன். இப்படித்தானே உங்க ஊரிலும் சொல்லுவீர்கள் என்றாள்.
> கொஞ்சம் `ஙே` என்று விழித்துவிட்டு, கொஞ்சம் வித்தியாசம்! ஏறக்குறைய இது
> போல்தான் என்று சொல்லி வைத்தேன். ஆனால், அவள் கண்களில் நொடிப்பொழுதில் தோன்றிய
> அந்நியோன்யம்! புத்தம் சரணம் கச்சாமி!!

அன்பினால் ஆம் இதுதான் எங்கள் சுலோகம் என்று பதில் கொடுப்பது மனிதநேயம்.

கொரிய காய்கறிக்காரிகளின் மந்திரங்களை ஆடியோ அல்லது வீடியோ
வலையில் பதிந்து வைக்க வேண்டுகிறேன்.

அவை அவர்கள் மொழிகளில் இருக்குமே ஒழிய, சம்ஸ்கிருதத்தில் இருக்காது.

மரபு ஆராய்ச்சிக்கு உதவும். செய்யுங்கள்.

N. Ganesan

unread,
Nov 29, 2009, 12:40:10 PM11/29/09
to மின்தமிழ்

On Nov 29, 11:01 am, வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com> wrote:
> ஏதோ ஒரு விதத்தில் சமஸ்கிருத தாக்கம் கிழக்காசிய முழுவதும்
> காணப்படுகிறது. அவ்வளவே...
>

வெளியிலிருந்து வந்தவர்கள் வெளி எழுத்தில் எழுதினார்கள்.

ஆனால், பெரும்பான்மையான சீனர்கள் ஒருவருக்கும் இது தெரியாது.
சீன எழுத்தில் சீன மொழிக்கு பெயர்த்துக் கொண்டார்கள்.
புத்தருக்கு ஃபோ எனு எழுதுகிறார்கள்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Nov 29, 2009, 12:41:48 PM11/29/09
to மின்தமிழ்

On Nov 29, 4:35 am, வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com> wrote:
> > இதோ நமது ஸ்வஸ்திகா!
>
> இதில் இன்னொரு கொடுமை கண்ணன்.
>
> இந்தக்குறியீடு நம் சொத்து. இந்தியாவுக்கு உரியது.
>

இல்லை.

நா. கணேசன்

> நம் இந்திய அரச புத்திரர்கள் அதை இந்திய மொழிகளின் யூனிகோடில்


> சேர்க்கவில்லை. வசதியாக மறந்துவிட்டனர்.
>
> ஆனால் சீன யூனிகோடில் ஸ்வஸ்திகம் உள்ளது.
>
> 卐 卍 (சீன எழுத்துருக்கள் வேண்டும்.)
>
> இது போன்ற கொடுமைகள் எல்லாம் இங்கு தான் நடக்கும்.  :-((
>
> V
>
> On Nov 29, 3:25 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
>
>
>
>
>
> > ஓம் கிடைத்துவிடும்!
>
> > கண்ணன்
>
> > 2009/11/29 N. Kannan <navannak...@gmail.com>:
>
> > > ஓகோ!
>
> > > ஓம் எனும் தேவநாகரி எழுத்து பல கொரியர் வீடுகளிலும், கோயில்களிலும் நான்
> > > தினம் காணும் காட்சி. முன்பு படமெடுத்து இருக்கிறேன்.
>
> > > கூகுளில் தேடினால் எளிதில் கிடைக்கும்.
>
> > > வினோத் போட்டு `குட்டை` உடை, உடை என்று உடைக்கிறார்.
>
> > > சமிஸ்கிருந்தம் தென்கிழக்காசியா, தூரகிழக்கு என்று ஆசியா முழுவதும் பரவி
> > > நிற்பது வெள்ளிடை மலை. நம்மவர் ஜாதீய வெறியால் ”நமது அடையாளங்களை”
> > > நம்மையே புறக்கணிக்கச் சொல்வது, மலேசிய முஸ்லிம் அரசுகள் செய்வதை விடக்
> > > கொடுமை!
>
> > > வேறு என்ன சொல்ல?
>
> > > க.>
>
> >  lantern.jpg

N. Ganesan

unread,
Nov 29, 2009, 12:47:39 PM11/29/09
to மின்தமிழ்

On Nov 29, 1:16 am, வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com> wrote:
> //அவ்வளவுதான், கோயிலில் சொல்லும் மந்திரங்களையெல்லாம் ஒப்பிக்க


> ஆரம்பித்தாள்.

> கேட்டுக் கொண்டிருந்தேன். //
>
> :-)
>
> கிழக்காசியர்கள் சமஸ்கிருதத்தை உச்சரிக்கும் விதமே அலாதி தான்.
>
> கூர்ந்து கவனித்தால் தான் அது சமஸ்கிருதம் என்று புலப்படும் :-))
>

கொரிய காய்கறிக்காரி பாட்டை விடியோ ஆடியோ மரபு விக்கியில்
தாருங்கள். கூர்ந்து கேட்போம்.

சமஸ்கிருதமாக இருக்காது.

கணேசன்

Innamburan Innamburan

unread,
Nov 29, 2009, 8:00:16 PM11/29/09
to mint...@googlegroups.com
வினோத், இந்த இழையை எடிட் செய்து, படங்களுடன், ஒரு கட்டுரை வரைக, ஆங்கில பொழிபெயர்ப்புடன், சுபாஷிணி பெட்டகத்தில் வைப்பார். பிறகு, நீங்கள் இதை பிரசுரமும் செய்யவேண்டும். இது மற்ற சில இழைகளுக்கும் பொருந்தும்.
இன்னம்பூரான்

2009/11/29 Vinodh Rajan <vinodh...@gmail.com>
சித்தம் - Siddham

பார்த்தீர்களா, நம்மூர் சமஸ்கிருதத்தை எழுதவும் ஆங்கிலத்தின் உதவி தேவைப்படுகிறது :-(

திராவிட லிபியில் எழுத வேண்டுமென்றால்:

?ui=2&view=att&th=1253e420d14ff68b&attid=0.1&disp=attd&realattid=ii_1253e420d14ff68b&zw

8ஆம் நூற்றாண்டின் வாக்கில், தாந்திரீக பௌத்தம் இந்தியாவில் செழிப்புடன் இருந்த காலத்தில் சீனர்கள் இந்தியா வந்து தந்திர சாஸ்திரங்களையும் சூத்திரங்களையும் மந்திரங்கள் மற்றும் தாரணிகளை அவர்கள் நாட்டுக்கு மொழிப்பெயர்த்து எடுத்துச்சென்றனர்.

அவ்வாறு மொழிப்பெயர்க்கும் போது மந்திரங்களை மொழிப்பெயர்க்க இயலாது என்பதால், அதை அப்படியே ஆவணப்படுத்த ”சித்தம்” எழுத்துக்களை பயன்படுத்தினர். அக்காலக்கட்டத்தில் இவ்வெழுத்துக்களே சமஸ்கிருதத்தை எழுத பயன்படுத்தப்பட்டு வந்தது.

இந்தியாவில் சித்தம், சரியாக கூறவேண்டுமெனில், ”சித்தமாத்ருகா” உருமாறி அதில் இருந்து பல்வேரு எழுத்துமுறைகள் தோன்றிவிட்டன. தேவநாகரி கூட ஒரு வகையில் சித்தத்தில் இருந்து தோன்றியது தான்.

ஆனால்,  சீனாவில் சித்தம் எழுத்துக்கள் ஒரு தெய்வீக அந்தஸ்தை பெற்றது. அவை மங்களகரமானதாகவும் தெய்வீகம் நிறைந்ததாகவும் கருதப்பட்ட்ன. ஆகையால், சீனத்தில் சித்தம் எந்த மாற்றமும் பெற வில்லை.It was preserved as such. சீனாவில் இருந்து ஜப்பான் இதை பெற்றதும் அதே நிலையில் தான்.

மங்களகரகமானதும் பவித்ரமானதும் ஆக சித்தம் கருதப்படுகிறது.

ஒரு ஜப்பானியர் வஜ்ரதாது மண்டலத்தில் மஹாவைரோசன புத்தரின் பீஜமான ஆம்ஹ் என்ற எழுத்தை எப்படி சித்தத்தில் எழுதுவது என்று விளக்குகிறார்.


அசல வித்யாராஜரின் பீஜமான ஹம்மாம்.


சீனர்கள், ஜப்பானியர்கள் (ஒரு வியாட்னாமியர் கூட) சித்தம் எழுத்துக்கு பல வலைத்தளங்களை நடத்தி அதை போற்றி பாதுகாத்து வருகின்றனர்.


(இதில் கவனிக்கவேண்டியது, யாரும் அதை இந்திய திணிப்பாகாகவோ, இந்திய ஆதிக்கத்தின் அடையாளமாகவோ அதை கருதுவதில்லை.  தங்களின் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகவே கருதுகின்றனர். 

துவேஷத்தை விதைத்து அதை அறுவடை செய்வதில் நம் மக்கள் வல்லவர்கள் :-( )

இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும்..

தாந்திரீக பௌத்த ஆச்சார்யர்களில் முக்கியமானவர் வஜ்ரபோதி. இங்கிருந்து சீன தேசம் சென்று தாந்திரீக பௌத்ததை பரப்பியவர். வஜ்ரபோதி எழுதியதாக பல மந்திரங்கள் தாரணிகள் சீன திரிபிடகத்தில் சித்தம் எழுத்துக்களில் உள்ளன.

வஜ்ரபோதி தமிழ் நாட்டவர் என்பது கூடுதல் செய்தி :-)

ஆக, தமிழ் நாட்டவரும் சித்தம் பயின்றிருக்கிறார்கள் !

V





--
இன்னம்பூரான்

N. Kannan

unread,
Nov 30, 2009, 1:34:07 AM11/30/09
to mint...@googlegroups.com
என்ன கணேசன்!

நாம மட்டும் சேக்ஸ்பியரை செகப்பிரியர் எனலாம், இன்னும் ஆங்கிலத்தை
எவ்வளவு சொதப்ப முடியுமோ அவ்வளவு சொதப்பலாம் (இந்தியர்களின்
ஆங்கிலப்பலுப்பல் பல ஆங்கிலப்படங்களில் வேடிக்கையாக
சித்தரிக்கப்பட்டுள்ளன). ஆனால், ஒரு தாய்லாந்து, இந்தோனீசிய, வியட்நாமிய,
கொரிய, ஜப்பானிய மக்கள் அப்படியே அட்சர சுத்தமாகச் சொல்ல வேண்டும் என்று
எப்படி எதிர்பார்க்கமுடியும்? நம்மவரே சமிஸ்கிருதத்தை முறையாக
பலுப்புவதில்லையே!

தய்ய்லாந்து, இந்தோனீசிய உதாரணங்கள் நான் நிறைய இங்கு தந்துள்ளேன்.

கொரிய பலுப்பல் நிச்சயம் அந்நியப்பட்டு ஒலிக்கும். கொரிய பௌத்த
மந்திரங்கள் கூகுளில் தேடினால் கிடைக்கும். இங்கு சிடியாக விற்கிறார்கள்.
தனி டிவி சேனலே இங்குண்டு.

சாக்யமுனி, பிக்குணி இவை உடனே கண்டுகொள்ளப்படும் வகையில் ஒலிக்கிறார்கள்.

க.>

2009/11/30 N. Ganesan <naa.g...@gmail.com>:

--

Innamburan Innamburan

unread,
Nov 30, 2009, 5:22:29 AM11/30/09
to mint...@googlegroups.com
ராஜாஜியே, தாம் ஸாக்ரெடீஸ்ஸை பற்றி எழுதிய நூலை, 'சோக்ரதர்' என்றார். இந்த பலுப்பல்களைப் பற்றி தீவிர வாதங்களால், பயனில்லை.


2009/11/30 N. Kannan <navan...@gmail.com>

Hari Krishnan

unread,
Nov 30, 2009, 6:23:16 AM11/30/09
to mint...@googlegroups.com


2009/11/30 Innamburan Innamburan <innam...@googlemail.com>

ராஜாஜியே, தாம் ஸாக்ரெடீஸ்ஸை பற்றி எழுதிய நூலை, 'சோக்ரதர்' என்றார். இந்த பலுப்பல்களைப் பற்றி தீவிர வாதங்களால், பயனில்லை.


அதெல்லாம் சரி.  இவ்வளவு மொழிச்சுத்தம் பேசுபவர்கள், பலுக்கல், பலுக்குதல், பலுப்பல் என்பதையெல்லாம் எப்படித் தமிழ்ச் சொற்களாக ஏற்றுக்கொண்டார்கள்?  வின்ஸ்லோ வலையகராதியில் இந்தச் சொல் இல்லை.  ஓடிஎல்லைப் பார்த்தால் இப்படி ஒரு நுழைவு இருக்கிறது:

பலுக்கு-தல் 01 1. to be pronounced clearly; 2. to boast; 3. to speak

ஆனால் பல சமயங்களில் ஓடிஎல் மிக லேசான ரெஃபரன்ஸாகத்தான் பயன்படுகிறது.  எனவே, அச்சுப் பதிப்பான சென்னைப் பல்கலைக்கழக லெக்சிகனை எடுத்துப் பார்த்தால், மேற்படி விளக்கங்களுடன், <T paluku என்ற குறிப்பும் தரப்பட்டுள்ளது.  தெலுங்கிலிருந்து வந்த சொல் என்பது இதன் பொருள்.  பலுகே பங்கார மாயனா என்ற (சங்கராபரணம் திரைப்படத்தில் இடம்பெற்ற) பாடலில் உள்ள வரிக்கு ‘பேசினால் பொன் உதிர்ந்துவிடுமா’ என்று பொருள்.

எனக்குத் தெரிந்து மதுரகவியாழ்வாரின் அஷ்டப் பிரபந்தத்தில் இந்தச் சொல்லைப் பார்த்திருக்கிறேன்.  லெக்சிகன் தேவாரத்தில் (262, 7) கண் பலுக்க என்ற பயன்பாடு இருப்பதைக் குறிப்பிடுகிறது.  எனக்கு இந்தப் பாடல் கிட்டவில்லை.

ஆனாலும், லெக்சிகன் இது தெலுங்கிலிருந்து கிளைத்த சொல் என்று சொல்கிறது.  இணையத்தில் எல்லோருமே கூட்டமாகப் பலுக்குகிறார்கள்.  உச்சரிக்க மறந்தே போய்விட்டார்கள்.  வடசொல் கூடாது, திசைச்சொல் பரவாயில்லையா?  (பரவாயில்லை என்பதே ஒரு திசைச்சொல்தான்.  பரவாயில்லைக்கு எதிர்ப்பதம் என்ன?)


--
அன்புடன்,
ஹரிகி.

devoo

unread,
Nov 30, 2009, 6:39:56 AM11/30/09
to மின்தமிழ்
Nov 30, 4:23 pm, Hari Krishnan

>> எனக்குத் தெரிந்து மதுரகவியாழ்வாரின் அஷ்டப் பிரபந்தத்தில் இந்தச் சொல்லைப்
பார்த்திருக்கிறேன் <<

ஹரி அண்ணா,
அஷ்டப் பிரபந்தத்தின் ஆசிரியர் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்;
மதுரகவி ஆழ்வார் இல்லை; பரவாயில்லை,
ஏதோ ஒரு வைணவத் துறை சார்ந்த நூல் என்று வைத்துக் கொள்வோம். பர்வா நஹி

தேவ்

Innamburan Innamburan

unread,
Nov 30, 2009, 6:44:05 AM11/30/09
to mint...@googlegroups.com
சோட் தீஜியேகா, தேவ்

2009/11/30 devoo <rde...@gmail.com>

Hari Krishnan

unread,
Nov 30, 2009, 6:52:29 AM11/30/09
to mint...@googlegroups.com


2009/11/30 devoo <rde...@gmail.com>
ஆமாம் தலைவரே.  பிள்ளைப் பெருமாள் ஐயங்காருடைய திருவரங்கத்து அந்தாதி (யமகம்) பிரித்துப் பொருள் எழுதிக் கொண்டிருந்தேன்.  அஷ்டப் பிரபந்தத்தில் சுமாரான பயிற்சு உண்டு.  புத்தக ப்ரஷரில் இதையும் அதையும் போட்டுக் குழப்பிவிட்டேன்.  பிள்ளைப் பெருமாள் ஐயாங்காருடைய யமகப் பாடலுக்கு என் உரையிலிருந்து ஒரே ஒரு பாடலை சாம்பிளுக்குப் போடுகிறேன்.  

<><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><>
செய்ய வளைக்குரு வின்னரு ளாற்றிருத் தாள்வணங்கிச்
செய்ய வளைக்குலஞ் சூழரங் கேசன் சிறிதமுது
செய்ய வளைக்கும் புவிக்குமங் காந்தசெவ் வாய்முகுந்தன்
செய்ய வளைக்குஞ் சிலம்பணி பாதங்கள் சேர்ந்தனமே.

கட்டளைக் கலித்துறைக்கு (மேலே) சொல்லியிருக்கும் இலக்கணங்கள் பொருந்துகின்றனவா?  ஒவ்வொரு அடியிலும் வெண்டளை பிறழாத ஐந்து சீர்கள்.  'செய்ய' என்று நேரசையில் தொடங்கி இருப்பதால், ஒற்றெழுத்தை விட்டுவிட்டு எண்ணினால் ஒவ்வோர் அடியிலும் பதினாறு பதினாறு எழுத்துகள்; கடைசிச் சீர்கள் முறையே கூவிளங்காய் (தாள்வணங்கி), கருவிளங்காய் (சிறிதமுது), கூவிளங்காய் (வாய்முகுந்தன்) கூவிளங்காய் (சேர்ந்தனமே) என்று முடிகின்றன.

சரி.  சீர் பிரிக்கலாமா?  யார் முதலில்?

சீர் பிரித்து: 

செய்யவளைக் குருவின் அருளால் திருத் தாள் வணங்கி,
செய்ய வளைக் குலம் சூழ் அரங்கேசன்; சிறிது அமுது
செய்ய, அளைக்கும் புவிக்கும் அங்காந்த செவ் வாய் முகுந்தன்;
செய்ய வளைக்கும் சிலம்பு அணி பாதங்கள் சேர்ந்தனமே.

இப்ப பொருளுக்கு வருவோம்.

செய்யவளைக் குருவின் அருளால் திருத்தாள் வணங்கி.  இரண்டு விதமாகப் பொருள் சொல்லலாம்.  செய்ய என்றால் சிவந்த.  வளை என்றால் சங்கு.  சிவந்த (கரத்தில்) என்று 'கரம்' என்ற சொல்லை வருவித்துக் கொண்டால், சிவந்த கையில் சங்கத்தை ஏந்தியவனை என்று சொல்லலாம்.  பாஞ்சசன்யத்தை உடையவனை என்று பொருள் தரும்.  அப்படியானால், 'செய்யவளைக் குருவின் அருளால்' என்னும் போது 'குரு யார்?' என்ற கேள்வி எழும்.  ஆசார்யன் நாராயணனே என்றொரு சம்பிரதாயம் உண்டு.  அதன்படி 'செய்யவளைக் குருவின் அருளால் திருத்தாள் வணங்கி' என்றால், நாராயணனை, அவனருளால் அவன் தாள் வணங்கி என்று பொருள் கொள்ள முடியுமா?

இந்தப் பொருள் பொருத்தமானது போலத்தான் தோன்றுகிறது.  ஆனால், கவிஞர் சொல்ல நினைக்கும் பொருள் இதுவன்று என்பது பளிச்சென்றே தெரிகிறது.  எப்படி?  அங்கே பாருங்கள்.  'செய்யவளைக்' என்று ஒரு 'க்'கன்னாவை அழுத்தமாகப் போட்டிருக்கிறார்.  நாம் சொல்வது போல் பொருள் சொல்லவேண்டுமானால் 'செய்ய(தாகிய கரத்தில்) வளையை (ஏந்திய)' என்று விரிக்க வேண்டியிருக்கும்.  'வளையை ஏந்திய குருவின்' என்பது 'வளைக் குருவின்' என்று குறுகினால் அதை என்னவென்று சொல்வார்கள்? இரண்டாம் வேற்றுமைத் தொகையா, இல்லாட்டி உருபும் பயனும் உடன்தொக்க தொகையா?  அதென்னது அது?  அதுவாயிடும்.  அப்படியானால், 'க்'கன்னா வராது.  

அப்படியானால், செய்யவளை என்பதற்கு வேறு என்னவோ பொருள் இருக்கிறது. கொஞ்சம் முடியப் பிச்சுக்கறோம்னு வைங்க.  

மங்கலை, செங்கலசம் முலையாள், மலையாள், வருணச் 
சங்கு அலை செங்கைச் சகல கலாமயில் தாவு கங்கை 
பொங்கு அலை தங்கும் புரிசடையோன் புடையாள், உடையாள் 
பிங்கலை, நீலி, செய்யாள், வெளியாள், பசும் பெண்கொடியே.

என்று அபிராமி அந்தாதி நினைவுக்கு வரலாம்.  'என்றும் மங்கலம் உடையவளே, செவ்விய கலசம் போன்ற தனங்களைக் கொண்டவளே, மலைமகளே, அலையில் உதித்ததும் வெண்மையானதுமான சங்கு வளையல்களை அணிந்தவளே, சகலகலா வல்லியே, கங்கை தாவிக் குதிக்கின்ற வண்ணம் அதனைச் சடையில் தரித்தவனின் இடது பக்கத்தில் இருப்பவளே, என்னை அடிமையாக உடையவளே, பொன் நிறம் உடைய பிங்கலையே, கரு நிறம் உடைய நீலியே, செய்யவளே, எந்த நிறமும் வடிவமும் இல்லாத அண்ட வெளியாக, வெட்ட வெளியாக இருப்பவேள, பசிய பெண்கொடியே' என்றெல்லாம் சொல்கிறார் பட்டர்.  அங்கே பாருங்கள் ஒரு செய்யாள் இருக்கிறாள்.

ஆனால் இவர் பாட்டுக்கு பூந்து விளாசறாரு.  அப்படின்னா 'செய்யாள்' யாருன்னு புரியல.  செய்யாள் யாரு, அபிராமியா?  இன்னும் கொஞ்சம் முடியப் பிச்சுக்கறோம்னு வைங்க.  

அகன்அமர்ந்து செய்யாள் உறையும்; முகன்அமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்

அப்படின்னு நம்ம தாடிக்காரர் ஒரு போடு போடுவார்.    'தலிவா, புரீது தலிவா.  செய்யாள்னா லச்சுமின்னு' சொல்றீங்கன்னு புரீது.  ஆனா, செய்யாளும், செய்யவளும் ஒண்ணா தலிவா?' அப்படின்னு மண்டயச் சொறிஞ்சோம்னு வைங்க, 'ஏண்டா, படிக்கும் போது ஒழுங்காப் படின்னு எவ்வளவு தடவ சொல்றது?  அழுக்காறாமை அதிகாரத்தைப் புரட்டுடா மூதேவி,' என்று செல்லமாகத் திட்டுவார்.

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் 
தவ்வையைக் காட்டி விடும். 

அடுத்தவன் முன்னேறுவதைப் பார்த்து அடிவயிறு தீஞ்சு போறவன் கிட்ட இருந்து லச்சுமி அம்மா போய்டுவாங்களாம்.  போறதோட சும்மா இருக்க மாட்டாங்களாம்.  அவங்க அக்காவை (மூதேவியைக்) கொணாந்து பத்திரமா அந்த வீட்டுல இருக்க வச்சுடுவாங்களாம்.

செய்யவள்.  இலக்குமி.  புரிந்தது.  

'செய்யவளைக் குருவின் அருளால் திருத்தாள் வணங்கி,' இலக்குமியின் திருப்பாதங்களைக் குருவின் அருளால் வணங்கி.  'செய்ய வளைக் குலம் சூழ் அரங்கேசன்.'  செய்ய என்றால் சிவந்த என்று பார்த்தோம்.  'வளை' என்றால் கையில போட்டுக் கொள்ளும் ஆபரணம்.  தெரியும்.  சங்குகளால் அதைச் செய்த காரணத்தால், 'வளை' என்றால் 'சங்கு' என்றும் பொருள் உண்டு.  சங்கின் இனமான நத்தை முதலியவற்றையும் சொல்லலாம்.  அதாவது molluscous என்று சொல்வாங்க பாருங்க, கூட்டை முதுகில் சுமந்தலையும், முதுகெலும்பு இல்லாத (அட கோழை இல்லீங்க...) உயிரினம், அது அத்தனைக்கும் 'வளை' என்று சொல்லலாம்.  அதாவது, 'சிவந்த சங்கினங்கள் சூழ்ந்து காணப்படும் (காவிரியாற்றின் நடுவே விளங்கும்) அரங்க ஈசன்.  

அரங்கம் என்றாலே அராவப்பட்டது என்று பொருள்.  இரண்டு பக்கமும் ஆற்றின் நீர் அராவிக் கொண்டு போன காரணத்தால், ஆற்றுக்கு நடுவே காணப்படும் நிலப் பகுதி, அரங்கம்.  இறைவன் திருக்கோவில் இருக்கின்ற காரணத்தால், திருஅரங்கம்.  சரி.  ஸ்ரீரங்கம்.  அதுவும் மாணாமா? சீரங்கம்.  (இதுக்கு மேல மாத்தி எழுதினேன்னு வய்யி, என்னப் போட்டுச் சாத்த ஜெயஸ்ரீ, ஷைலஜா, பெப் சுந்தர்னு ஒரு சீரங்கத்துப் பட்டாளமே காத்திருக்கு...)

இது வரைக்கும் பாட்டில் என்ன பொருள் பார்த்தோம்?  குருவருளால் இலக்குமியின் பாதத்தை வணங்கி, சங்கினங்கள் நிறைந்த காவிரியால் சூழப்பட்டிருக்கும் அரங்கத்தில் விளங்கும் ஈசனை... செமிகோலன் போட்டு நிப்பாட்டி இருக்காரு.  அடுத்தது என்ன சொல்றாரு?

'சிறிது அமுது செய்ய அளைக்கும், புவிக்கும் அங்காந்த செவ்வாய் முகுந்தன்;' என்று இன்னொரு வாட்டி செமிகோலன் போட்டாரு.  

அமுது செய்ய.  அது தெரிது.  சாப்பட.  அதான் செய்யறோமே மூணு வேளை.  இல்ல?  அளைக்கும் புவிக்கும்னா?  மதுரைக்காரங்க மாதிரி இவருக்கும் 'ழ'கரம் தகராறோ?  'ழ'கரத்தை 'ள'கரமாக்குவாங்களோ?  (தெர்துபா தெர்து.  மெட்ராஸ்காரன் இன்னா வாயுதுன்ற.  நாங்க ஒன்னியும் அந்த மேரி ஸொல்மாட்டோம். 'ய'வ 'ய'ன்னுதான் ஸொல்வோம்.  புர்தா?)  'அழைக்கும் புவிக்கும்' என்பதைத்தான் அப்படிச் சொல்கிறாரோ?

இல்லை.  நிச்சயமாக இல்லை.  சிறிது அமுது செய்ய அழைக்கும் புவிக்கும்.  பொருள் உதைக்குதே.  அப்ப இந்த 'ம்' என்னா 'ம்'மா இருக்குன்ற?  கொஞ்சம் மறுபடியும் முடியப் பிச்சுக்குவோம்.  எண்ணும்மைன்னு சொல்வாங்க, இல்ல?  இதுக்கும், அதுக்கும், அதுக்கும், அதோ அந்த அதுக்கும், இதோ இந்த இதுக்கும் என்று ஒண்ணு, ரெண்டு, மூணு என்ற எண்ணிக்கொண்டே போகும்போது ஒரு 'ம்' போடறோமே அந்த உம்மை.  இதுக்கும் அதுக்கும்னு எதையோ சொல்றாரு.  'சிறிது அமுது செய்ய (என்னவோ ஒண்ணு.  புரில.  ஒரு ---- போட்டுக்குவோம்) புவிக்கும் அங்காந்த செவ்வாய் முகுந்தன்.   போச்சுரா.  அங்காந்த.  அதென்னது அது?  மறுபடியும் மு. பி.  இந்த முறை பாரதி நினைவுக்கு வறாரு.

தீராத விளையாட்டுப் பிள்ளைன்னு ஒரு பாட்டு எழுதியிருக்காரா?  அதுல சொல்றாரு பாருங்க.  'அங்காந்திருக்கும் வாய் தனிலே - கண்ணன் - ஆறேழு கட்டெறும்பைப் போட்டு விடுவான்.'  எப்ப?  அவன் புள்ளாங்குழல் கொண்டு வருவான்.  அமுது பொங்கித் ததும் நல் கீதம் படிப்பான்.  இவங்கள்ளாம் கள்ளால் மயங்குவது போலே கண்மூடி, வாய் திறந்தே கேட்டிருப்பாங்க.  இவங்க கிறங்கிப் போயி வாயத் தொறந்துட்டு உக்காந்திருக்காங்க.  போதும் போதாதற்கு கண்ண வேற மூடிட்டிருக்காங்க.  தொறந்திருக்கிற வாயில் ஆறேழு கட்டெறும்பைப் போட்டு விட்டு ஓடிடுவானாம் போக்கிரிப் பையன்.  

அப்ப என்ன புரியுது?  அங்காந்து என்றால், 'வாயத் திறந்து'.  சாப்பிடுவதற்காக (நம்ம டேஷ் டேஷ் டேஷுக்கும்) புவிக்கும் வாயத் தொறப்பாராம் தொர.  சிவந்த வாயை உடைய முகுந்தனாம் அவுரு.  அப்ப, 'அளை'ன்னா என்ன?  மறுபடி மு. பி.

கார்ப்பெய றலைஇய காண்பின் காலைக்
களிற்றுமுக வரியிற் றெறுழ்வீ பூப்பச்
செம்புற் றீயலின் இன்அளை புளித்து....

இதுங்க, வந்துங்க புறநானூறுங்க.  இந்த 'பாரி பாரின்னு' ஒருத்தன் இருந்தான்ல, அவனைக் கபிலர் பாடியது.  மத்த வார்த்தைங்களுக்கு அர்த்தம் இன்னொரு நாள் பாத்துக்கலாம்.  இங்க இன்அளை புளித்து அப்படின்னு சொல்றாரு இல்ல?  தித்திப்பா இருப்பது புளித்தது என்கிறார் இல்ல?  அது எது அது அப்படி தித்திப்பா இருந்து புளிப்பா மாறும்?  பால்?  தயிர்?  மோர்? வெண்ணெய்?  அளைன்னா இது எல்லாமே தாங்க.  

அதாவது, வாயத் தொறப்பாராம், சிவந்த வாயை உடைய முகுந்தன்.  எதுக்கு?  சாப்பிடறத்துக்கு.  என்ன சாப்பிட?  வெண்ணெய் சாப்பிட.  அப்புறம் மண்ணைச் சாப்பிட.  'வெண்ணெய் உண்ட கண்ணனாம், மண்ணை உண்ட கண்ணனாம்.'  புரிஞ்சிட்சி.  'சிறிது அமுது செய்ய அளைக்கும் புவிக்கும் அங்காந்த செவ் வாய் முகுந்தன்' என்றால், 'உண்பதற்காக சிறிதளவே வாயைத் திறக்கின்ற, சிவப்பான உதடுகளை உடைய முகுந்தன்.'  சரி.  அவர் எதனை உண்பாரு?  'எதை வேண்ணா.'  அப்படின்னா?  'வெண்ணெய் தின்னாலும் தின்னுவாரு, மண்ணைத் தின்னாலும் திம்பாரு.'  மண்ணைத் தின்னுப்புட்டு, புவியையே வாய்க்குள்ள காட்டுவாரு.  

அ, படா சோக்கா கீதுப்பா.  அப்ப கடோசி லைனுக்கு என்ன அர்த்தம்?

'செய்ய வளைக்கும் சிலம்பு அணி பாதங்கள் சேர்ந்தனமே.' 

'வளைக்கும் சிலம்பணி செய்ய பாதங்கள்' என்று தூக்கி அந்தால போட்டுக்கணும்.  சிவந்த பாதங்கள்.  சும்மா இல்ல.  சிலம்பு அணிந்த சிவந்த பாதங்கள்.  எப்படிப்பட்ட சிலம்பு?  பாதங்களைச் சுற்றி வளைத்துப் பிடித்திருக்கும் சிலம்பு.  சுற்றி வளைத்துப் பிடித்திருக்கும் சிலம்புகளை அணிந்த சிவந்த பாதங்களைச் சேர்ந்தோம்.

மறுபடி.  சுருக்கமா மொத்தப் பொருளையும் பார்க்கலாம்.

குருவின் அருளால், இலக்குமியின் திருப்பாதங்களைப் பணிந்து, சங்குகள் நிறைந்த காவிரியால் சூழப்பட்ட அரங்கத்தின் ஈசனும்; வெண்ணைக்கும் மண்ணுக்கும் (தின்பதற்காக) திறந்த சிவந்த வாயை உடைய முகந்தனும் ஆனவனுடைய, சிலம்புகளால் வளைக்கப்பட்ட சிவந்த பாதங்களை அடைந்தோம்.

ஙையோ.  கையெல்லாம் முடி.  மண்டைல ஒண்ணுத்தியும் காணும்.  ஆனா மனசெல்லாம் நிறஞ்சு போச்சு.  உங்களுக்கு?

*****

நல்லா இருந்தா ரசிங்க.  இல்லாட்டி (இலக்கிய அலர்ஜிக்காரர் திட்டட்டும் இல்லாட்டி மண்ணாஷ்ட்டு உட்டுடட்டும். தொந்துரு பண்ண மாட்டேன்.)  திட்டுங்க.  வாங்கிக்கறேன்.  

என்னவோ குழப்பத்தில் இரண்டுபேரையும் போட்டு ஒண்ணா பிசைஞ்சுட்டேன்.  உருப்படாத கேசு எத்தனையோ இருக்கில்லையா...அதுல ஒண்ணு அப்படின்னு விட்டுடுங்க.:-))

shylaja

unread,
Dec 1, 2009, 2:22:55 AM12/1/09
to mint...@googlegroups.com


2009/11/30 Hari Krishnan <hari.har...@gmail.com>



2009/11/30 devoo <rde...@gmail.com>
Nov 30, 4:23 pm, Hari Krishnan

>> எனக்குத் தெரிந்து மதுரகவியாழ்வாரின் அஷ்டப் பிரபந்தத்தில் இந்தச் சொல்லைப்
பார்த்திருக்கிறேன் <<

ஹரி அண்ணா,
அஷ்டப் பிரபந்தத்தின் ஆசிரியர் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்;
மதுரகவி ஆழ்வார் இல்லை; பரவாயில்லை,
ஏதோ ஒரு வைணவத் துறை சார்ந்த நூல் என்று வைத்துக் கொள்வோம். பர்வா நஹி


ஆமாம் தலைவரே.  பிள்ளைப் பெருமாள் ஐயங்காருடைய திருவரங்கத்து அந்தாதி (யமகம்) பிரித்துப் பொருள் எழுதிக் கொண்டிருந்தேன்>>>>>>
 
நன்றாக   அழகாக  எழுதிக்கொண்டு இருந்ததை திடும் என நிறுத்தியும்விட்டீர்கள்!
 
.  அஷ்டப் பிரபந்தத்தில் சுமாரான பயிற்சு உண்டு.  புத்தக ப்ரஷரில் இதையும் அதையும் போட்டுக் குழப்பிவிட்டேன்.  பிள்ளைப் பெருமாள் ஐயாங்காருடைய யமகப் பாடலுக்கு என் உரையிலிருந்து ஒரே ஒரு பாடலை சாம்பிளுக்குப் போடுகிறேன்.  

<><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><>
செய்ய வளைக்குரு வின்னரு ளாற்றிருத் தாள்வணங்கிச்
செய்ய வளைக்குலஞ் சூழரங் கேசன் சிறிதமுது
செய்ய வளைக்கும் புவிக்குமங் காந்தசெவ் வாய்முகுந்தன்
செய்ய வளைக்குஞ் சிலம்பணி பாதங்கள் சேர்ந்தனமே.

கட்டளைக் கலித்துறைக்கு (மேலே) சொல்லியிருக்கும் இலக்கணங்கள் பொருந்துகின்றனவா?  ஒவ்வொரு அடியிலும் வெண்டளை பிறழாத ஐந்து சீர்கள்.  'செய்ய' என்று நேரசையில் தொடங்கி இருப்பதால், ஒற்றெழுத்தை விட்டுவிட்டு எண்ணினால் ஒவ்வோர் அடியிலும் பதினாறு பதினாறு எழுத்துகள்; கடைசிச் சீர்கள் முறையே கூவிளங்காய் (தாள்வணங்கி), கருவிளங்காய் (சிறிதமுது), கூவிளங்காய் (வாய்முகுந்தன்) கூவிளங்காய் (சேர்ந்தனமே) என்று முடிகின்றன.

சரி.  சீர் பிரிக்கலாமா?  யார் முதலில்?>>>>
 
நாங்க   தப்பாவோ சரியாவோ கொஞ்சம் பிரிச்சி செய்தோம் செய்யாதவளாக இல்லாமல் என நினைக்கிறேன்:):)

சீர் பிரித்து: 

செய்யவளைக் குருவின் அருளால் திருத் தாள் வணங்கி,
செய்ய வளைக் குலம் சூழ் அரங்கேசன்; சிறிது அமுது
செய்ய, அளைக்கும் புவிக்கும் அங்காந்த செவ் வாய் முகுந்தன்;
செய்ய வளைக்கும் சிலம்பு அணி பாதங்கள் சேர்ந்தனமே.

இப்ப பொருளுக்கு வருவோம்.

செய்யவளைக் குருவின் அருளால் திருத்தாள் வணங்கி.  இரண்டு விதமாகப் பொருள் சொல்லலாம்.  செய்ய என்றால் சிவந்த.  வளை என்றால் சங்கு.  சிவந்த (கரத்தில்) என்று 'கரம்' என்ற சொல்லை வருவித்துக் கொண்டால், சிவந்த கையில் சங்கத்தை ஏந்தியவனை என்று சொல்லலாம்.  பாஞ்சசன்யத்தை உடையவனை என்று பொருள் தரும்.  அப்படியானால், 'செய்யவளைக் குருவின் அருளால்' என்னும் போது 'குரு யார்?' என்ற கேள்வி எழும்.  ஆசார்யன் நாராயணனே என்றொரு சம்பிரதாயம் உண்டு.  அதன்படி 'செய்யவளைக் குருவின் அருளால் திருத்தாள் வணங்கி' என்றால், நாராயணனை, அவனருளால் அவன் தாள் வணங்கி என்று பொருள் கொள்ள முடியுமா?

இந்தப் பொருள் பொருத்தமானது போலத்தான் தோன்றுகிறது.  ஆனால், கவிஞர் சொல்ல நினைக்கும் பொருள் இதுவன்று என்பது பளிச்சென்றே தெரிகிறது.  எப்படி?  அங்கே பாருங்கள்.  'செய்யவளைக்' என்று ஒரு 'க்'கன்னாவை அழுத்தமாகப் போட்டிருக்கிறார்.  நாம் சொல்வது போல் பொருள் சொல்லவேண்டுமானால் 'செய்ய(தாகிய கரத்தில்) வளையை (ஏந்திய)' என்று விரிக்க வேண்டியிருக்கும்.  'வளையை ஏந்திய குருவின்' என்பது 'வளைக் குருவின்' என்று குறுகினால் அதை என்னவென்று சொல்வார்கள்? இரண்டாம் வேற்றுமைத் தொகையா, இல்லாட்டி உருபும் பயனும் உடன்தொக்க தொகையா?  அதென்னது அது?  அதுவாயிடும்.  அப்படியானால், 'க்'கன்னா வராது.  

அப்படியானால், செய்யவளை என்பதற்கு வேறு என்னவோ பொருள் இருக்கிறது. கொஞ்சம் முடியப் பிச்சுக்கறோம்னு வைங்க.  

மங்கலை, செங்கலசம் முலையாள், மலையாள், வருணச் 
சங்கு அலை செங்கைச் சகல கலாமயில் தாவு கங்கை 
பொங்கு அலை தங்கும் புரிசடையோன் புடையாள், உடையாள் 
பிங்கலை, நீலி, செய்யாள், வெளியாள், பசும் பெண்கொடியே.

என்று அபிராமி அந்தாதி நினைவுக்கு வரலாம்.  'என்றும் மங்கலம் உடையவளே, செவ்விய கலசம் போன்ற தனங்களைக் கொண்டவளே, மலைமகளே, அலையில் உதித்ததும் வெண்மையானதுமான சங்கு வளையல்களை அணிந்தவளே, சகலகலா வல்லியே, கங்கை தாவிக் குதிக்கின்ற வண்ணம் அதனைச் சடையில் தரித்தவனின் இடது பக்கத்தில் இருப்பவளே, என்னை அடிமையாக உடையவளே, பொன் நிறம் உடைய பிங்கலையே, கரு நிறம் உடைய நீலியே, செய்யவளே, எந்த நிறமும் வடிவமும் இல்லாத அண்ட வெளியாக, வெட்ட வெளியாக இருப்பவேள, பசிய பெண்கொடியே' என்றெல்லாம் சொல்கிறார் பட்டர்.  அங்கே பாருங்கள் ஒரு செய்யாள் இருக்கிறாள்.

ஆனால் இவர் பாட்டுக்கு பூந்து விளாசறாரு.  அப்படின்னா 'செய்யாள்' யாருன்னு புரியல.  செய்யாள் யாரு, அபிராமியா?  இன்னும் கொஞ்சம் முடியப் பிச்சுக்கறோம்னு வைங்க.  

அகன்அமர்ந்து செய்யாள் உறையும்; முகன்அமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்

அப்படின்னு நம்ம தாடிக்காரர் ஒரு போடு போடுவார்.    'தலிவா, புரீது தலிவா.  செய்யாள்னா லச்சுமின்னு' சொல்றீங்கன்னு புரீது.  ஆனா, செய்யாளும், செய்யவளும் ஒண்ணா தலிவா?' அப்படின்னு மண்டயச் சொறிஞ்சோம்னு வைங்க, 'ஏண்டா, படிக்கும் போது ஒழுங்காப் படின்னு எவ்வளவு தடவ சொல்றது?  அழுக்காறாமை அதிகாரத்தைப் புரட்டுடா மூதேவி,' என்று செல்லமாகத் திட்டுவார்.

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் 
தவ்வையைக் காட்டி விடும். 

அடுத்தவன் முன்னேறுவதைப் பார்த்து அடிவயிறு தீஞ்சு போறவன் கிட்ட இருந்து லச்சுமி அம்மா போய்டுவாங்களாம்.  போறதோட சும்மா இருக்க மாட்டாங்களாம்.  அவங்க அக்காவை (மூதேவியைக்) கொணாந்து பத்திரமா அந்த வீட்டுல இருக்க வச்சுடுவாங்களாம்.

செய்யவள்.  இலக்குமி.  புரிந்தது.  

'செய்யவளைக் குருவின் அருளால் திருத்தாள் வணங்கி,' இலக்குமியின் திருப்பாதங்களைக் குருவின் அருளால் வணங்கி.  'செய்ய வளைக் குலம் சூழ் அரங்கேசன்.'  செய்ய என்றால் சிவந்த என்று பார்த்தோம்.  'வளை' என்றால் கையில போட்டுக் கொள்ளும் ஆபரணம்.  தெரியும்.  சங்குகளால் அதைச் செய்த காரணத்தால், 'வளை' என்றால் 'சங்கு' என்றும் பொருள் உண்டு.  சங்கின் இனமான நத்தை முதலியவற்றையும் சொல்லலாம்.  அதாவது molluscous என்று சொல்வாங்க பாருங்க, கூட்டை முதுகில் சுமந்தலையும், முதுகெலும்பு இல்லாத (அட கோழை இல்லீங்க...) உயிரினம், அது அத்தனைக்கும் 'வளை' என்று சொல்லலாம்.  அதாவது, 'சிவந்த சங்கினங்கள் சூழ்ந்து காணப்படும் (காவிரியாற்றின் நடுவே விளங்கும்) அரங்க ஈசன்.  

அரங்கம் என்றாலே அராவப்பட்டது என்று பொருள்.  இரண்டு பக்கமும் ஆற்றின் நீர் அராவிக் கொண்டு போன காரணத்தால், ஆற்றுக்கு நடுவே காணப்படும் நிலப் பகுதி, அரங்கம்.  இறைவன் திருக்கோவில் இருக்கின்ற காரணத்தால், திருஅரங்கம்.  சரி.  ஸ்ரீரங்கம்.  அதுவும் மாணாமா? சீரங்கம்.  (இதுக்கு மேல மாத்தி எழுதினேன்னு வய்யி, என்னப் போட்டுச் சாத்த ஜெயஸ்ரீ, ஷைலஜா, பெப் சுந்தர்னு ஒரு சீரங்கத்துப் பட்டாளமே காத்திருக்கு...)<<>>>>>>>>>>><>>>>>>>
 
 
ஹரி அண்ணா!!!!! அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே! யமகம்  நீங்கள்  விளக்கம் சொல்ல அதை விரும்பிப்படித்தவர்களில் நானும் ஒருத்தி!  சாத்தறதாவது?  ! போற்றினோமே  மறந்திட்டீங்களா?!
 
 
 
 

இது வரைக்கும் பாட்டில் என்ன பொருள் பார்த்தோம்?  குருவருளால் இலக்குமியின் பாதத்தை வணங்கி, சங்கினங்கள் நிறைந்த காவிரியால் சூழப்பட்டிருக்கும் அரங்கத்தில் விளங்கும் ஈசனை... செமிகோலன் போட்டு நிப்பாட்டி இருக்காரு.  அடுத்தது என்ன சொல்றாரு?

'சிறிது அமுது செய்ய அளைக்கும், புவிக்கும் அங்காந்த செவ்வாய் முகுந்தன்;' என்று இன்னொரு வாட்டி செமிகோலன் போட்டாரு.  

அமுது செய்ய.  அது தெரிது.  சாப்பட.  அதான் செய்யறோமே மூணு வேளை.  இல்ல?  அளைக்கும் புவிக்கும்னா?  மதுரைக்காரங்க மாதிரி இவருக்கும் 'ழ'கரம் தகராறோ?  'ழ'கரத்தை 'ள'கரமாக்குவாங்களோ?  (தெர்துபா தெர்து.  மெட்ராஸ்காரன் இன்னா வாயுதுன்ற.  நாங்க ஒன்னியும் அந்த மேரி ஸொல்மாட்டோம். 'ய'வ 'ய'ன்னுதான் ஸொல்வோம்.  புர்தா?)  'அழைக்கும் புவிக்கும்' என்பதைத்தான் அப்படிச் சொல்கிறாரோ?

இல்லை.  நிச்சயமாக இல்லை.  சிறிது அமுது செய்ய அழைக்கும் புவிக்கும்.  பொருள் உதைக்குதே.  அப்ப இந்த 'ம்' என்னா 'ம்'மா இருக்குன்ற?  கொஞ்சம் மறுபடியும் முடியப் பிச்சுக்குவோம்.  எண்ணும்மைன்னு சொல்வாங்க, இல்ல?  இதுக்கும், அதுக்கும், அதுக்கும், அதோ அந்த அதுக்கும், இதோ இந்த இதுக்கும் என்று ஒண்ணு, ரெண்டு, மூணு என்ற எண்ணிக்கொண்டே போகும்போது ஒரு 'ம்' போடறோமே அந்த உம்மை.  இதுக்கும் அதுக்கும்னு எதையோ சொல்றாரு.  'சிறிது அமுது செய்ய (என்னவோ ஒண்ணு.  புரில.  ஒரு ---- போட்டுக்குவோம்) புவிக்கும் அங்காந்த செவ்வாய் முகுந்தன்.   போச்சுரா.  அங்காந்த.  அதென்னது அது?  மறுபடியும் மு. பி.  இந்த முறை பாரதி நினைவுக்கு வறாரு.

தீராத விளையாட்டுப் பிள்ளைன்னு ஒரு பாட்டு எழுதியிருக்காரா?  அதுல சொல்றாரு பாருங்க.  'அங்காந்திருக்கும் வாய் தனிலே - கண்ணன் - ஆறேழு கட்டெறும்பைப் போட்டு விடுவான்.'  எப்ப?  அவன் புள்ளாங்குழல் கொண்டு வருவான்.  அமுது பொங்கித் ததும் நல் கீதம் படிப்பான்.  இவங்கள்ளாம் கள்ளால் மயங்குவது போலே கண்மூடி, வாய் திறந்தே கேட்டிருப்பாங்க.  இவங்க கிறங்கிப் போயி வாயத் தொறந்துட்டு உக்காந்திருக்காங்க.  போதும் போதாதற்கு கண்ண வேற மூடிட்டிருக்காங்க.  தொறந்திருக்கிற வாயில் ஆறேழு கட்டெறும்பைப் போட்டு விட்டு ஓடிடுவானாம் போக்கிரிப் பையன்.  

அப்ப என்ன புரியுது?  அங்காந்து என்றால், 'வாயத் திறந்து'.  சாப்பிடுவதற்காக (நம்ம டேஷ் டேஷ் டேஷுக்கும்) புவிக்கும் வாயத் தொறப்பாராம் தொர.  சிவந்த வாயை உடைய முகுந்தனாம் அவுரு.  அப்ப, 'அளை'ன்னா என்ன?  மறுபடி மு. பி.

கார்ப்பெய றலைஇய காண்பின் காலைக்
களிற்றுமுக வரியிற் றெறுழ்வீ பூப்பச்
செம்புற் றீயலின் இன்அளை புளித்து....

இதுங்க, வந்துங்க புறநானூறுங்க.  இந்த 'பாரி பாரின்னு' ஒருத்தன் இருந்தான்ல, அவனைக் கபிலர் பாடியது.  மத்த வார்த்தைங்களுக்கு அர்த்தம் இன்னொரு நாள் பாத்துக்கலாம்.  இங்க இன்அளை புளித்து அப்படின்னு சொல்றாரு இல்ல?  தித்திப்பா இருப்பது புளித்தது என்கிறார் இல்ல?  அது எது அது அப்படி தித்திப்பா இருந்து புளிப்பா மாறும்?  பால்?  தயிர்?  மோர்? வெண்ணெய்?  அளைன்னா இது எல்லாமே தாங்க.  

அதாவது, வாயத் தொறப்பாராம், சிவந்த வாயை உடைய முகுந்தன்.  எதுக்கு?  சாப்பிடறத்துக்கு.  என்ன சாப்பிட?  வெண்ணெய் சாப்பிட.  அப்புறம் மண்ணைச் சாப்பிட.  'வெண்ணெய் உண்ட கண்ணனாம், மண்ணை உண்ட கண்ணனாம்.'  புரிஞ்சிட்சி.  'சிறிது அமுது செய்ய அளைக்கும் புவிக்கும் அங்காந்த செவ் வாய் முகுந்தன்' என்றால், 'உண்பதற்காக சிறிதளவே வாயைத் திறக்கின்ற, சிவப்பான உதடுகளை உடைய முகுந்தன்.'  சரி.  அவர் எதனை உண்பாரு?  'எதை வேண்ணா.'  அப்படின்னா?  'வெண்ணெய் தின்னாலும் தின்னுவாரு, மண்ணைத் தின்னாலும் திம்பாரு.'  மண்ணைத் தின்னுப்புட்டு, புவியையே வாய்க்குள்ள காட்டுவாரு.  

அ, படா சோக்கா கீதுப்பா.  அப்ப கடோசி லைனுக்கு என்ன அர்த்தம்?

'செய்ய வளைக்கும் சிலம்பு அணி பாதங்கள் சேர்ந்தனமே.' 

'வளைக்கும் சிலம்பணி செய்ய பாதங்கள்' என்று தூக்கி அந்தால போட்டுக்கணும்.  சிவந்த பாதங்கள்.  சும்மா இல்ல.  சிலம்பு அணிந்த சிவந்த பாதங்கள்.  எப்படிப்பட்ட சிலம்பு?  பாதங்களைச் சுற்றி வளைத்துப் பிடித்திருக்கும் சிலம்பு.  சுற்றி வளைத்துப் பிடித்திருக்கும் சிலம்புகளை அணிந்த சிவந்த பாதங்களைச் சேர்ந்தோம்.

மறுபடி.  சுருக்கமா மொத்தப் பொருளையும் பார்க்கலாம்.

குருவின் அருளால், இலக்குமியின் திருப்பாதங்களைப் பணிந்து, சங்குகள் நிறைந்த காவிரியால் சூழப்பட்ட அரங்கத்தின் ஈசனும்; வெண்ணைக்கும் மண்ணுக்கும் (தின்பதற்காக) திறந்த சிவந்த வாயை உடைய முகந்தனும் ஆனவனுடைய, சிலம்புகளால் வளைக்கப்பட்ட சிவந்த பாதங்களை அடைந்தோம்.

ஙையோ.  கையெல்லாம் முடி.  மண்டைல ஒண்ணுத்தியும் காணும்.  ஆனா மனசெல்லாம் நிறஞ்சு போச்சு.  உங்களுக்கு?>>>>>
 
 
மனசு நிறைஞ்சதை  அன்னிக்கும் சொன்னோம் இன்னிக்கும் சொல்றோம்  ஆனா  இதனால அநியாயமா அன்னிக்குப்போன உங்க
மண்டைமுடி  மீண்டதா இல்லையாண்ணா?:)

*****

நல்லா இருந்தா ரசிங்க.  இல்லாட்டி (இலக்கிய அலர்ஜிக்காரர் திட்டட்டும் இல்லாட்டி மண்ணாஷ்ட்டு உட்டுடட்டும். தொந்துரு பண்ண மாட்டேன்.)  திட்டுங்க.  வாங்கிக்கறேன்.  

என்னவோ குழப்பத்தில் இரண்டுபேரையும் போட்டு ஒண்ணா பிசைஞ்சுட்டேன்.  உருப்படாத கேசு எத்தனையோ இருக்கில்லையா...அதுல ஒண்ணு அப்படின்னு விட்டுடுங்க.:-)) >>>>
 
ஐயே என்ன இப்போ  பிபெ ஐயங்கார் கூட மதுரமான  கவிதை எழுதினதால மதுரகவியாகிறார்  ! இதுக்குப்போயி உருப்படாத கேசுன்னு சொல்லிக்கினா  நானெல்லாம்  கைநாட்டு,எங்க போய் முட்டிக்கினு புலம்பறதாம்?:)(மெட்ராஸ்பாஷை  அவ்வளவா வராது மன்னிக்க:)))


--
அன்புடன்,
ஹரிகி.

அழுகை யுமஞ்சி நோக்குமந் நோக்கும்  அணிகொள் செஞ்சிறு வாய்நெளிப் பதுவும்*
தொழுகை யுமிவை கண்ட அசோதை  தொல்லை யின்பத் திறுதிகண் டாளே//

குலசேகர ஆழ்வார்.
Reply all
Reply to author
Forward
0 new messages